PDA

View Full Version : Makkal thilagam mgr part 14



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellail
2nd February 2015, 06:44 AM
http://i60.tinypic.com/2r2m96u.jpg

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் திருவள்ளுவர். மனித நேய பண்பெல்லாம் மக்கள் திலகம் அருள் கொடையாகும். "மன்னாதி மன்னன் புகழ் எல்லாம், மெய்யோர், நல்லோர் நெஞ்சின் இறைவடிவாகும்" என விளம்பி மக்கள்திலகம் திரியில் பாகம் 14 துவங்க எனக்கு வாய்ப்பு அளித்த மக்கள்திலகம் திரியின் நண்பர்களுக்கும் மற்றும் மையம் அங்கத்தினர்களுக்கும் எனது நன்றிகள். மேலும், இத்திரியின் பதிவு பதினான்கு தொடங்க வாய்ப்பு வந்தது பெரும் மகிழ்ச்சி எனக்கு தந்தது. எனது ராசி எண் 14. எனக்கு வேலை கிடைத்து அலுவலகத்தில் சேர்ந்த நாள் 14.3.1979, என்னுடைய அலுவலக தொடக்க கூட்டு எண்ணிக்கை எண்ணும் 14 (2039), எனக்கு பதவி உயர்வு கிடைத்து, பதவி ஏற்று கொண்ட நாளும் 14.9.2013, என்னுடைய வீட்டு எண்ணும் 356/14 (356=14) இவ்வாறு 14வது திரியினை தொடங்க எனக்கு வந்த வாய்ப்பு மக்கள் திலகம் தந்த அருள்மாட்சி.
http://i58.tinypic.com/9s9u83.jpg

வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுபடை, திருபுகழ்,
கந்த புராணம், மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் போற்றி வழிபாடபட்டவனாம் பாட்டுடைத் தலைவன் என்றும் நிலைத்திருக்கும் தமிழ் கடவுள் முருக பெருமானின் மறு வடிவே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முருகு என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் எம்.ஜி.ஆர். என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் ஒன்றாக இருப்பதே இதற்க்கு சான்றாகும். (M)மு - முகுந்தன் (விஷ்ணு ), (R)ரு-ருத்ர, (சிவன் ) (G)கா-கமலன் (பிரம்மா ). தமிழ் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு தொன்றுதொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டு வரும் தெய்வம். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்களும் பல்வேறு நாம கரணங்களால் மக்களால் அழைக்கப்பட்டவர் என்றும். அவருடைய வாழ்க்கை பயணம் ஆராய்ச்சிக்குரியது. அறிஞர்களாலும், கவிஞர்களாலும், கலைஞர்களாலும், கலை விற்பன்னர்களாலும், நல்லோர்களாலும், ஏழை எளிய மக்களாலும், நடுத்தர மக்களாலும், உயர்தர இனத்தோராலும் புகழப்பட்ட, நேசிக்கப்பட்ட, வணக்கத்திர்க்குஉரியவன் புரட்சி தலைவன் எம்.ஜி.ஆர்.

siqutacelufuw
2nd February 2015, 06:56 AM
மக்கள் திலகம் திரி பாகம் 14 ஐ துவக்கி வைத்திருக்கும் திரு,. தெனாலி ராஜன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள்.

http://i58.tinypic.com/xat3jm.jpg

siqutacelufuw
2nd February 2015, 07:01 AM
கடந்த 64 வருடங்களுக்கு முன்பு, 02-02-1951 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “மர்மயோகி” பற்றிய சிறப்புக்கள் : :

1. தமிழ்த்திரையுலகில், முதன் முதலில் பஞ்ச் டயலாக் (PUNCH DIALOGUE) இடம் பெற்றது இந்த காவியத்தில்தான். அந்த பஞ்ச் டயலாக் : குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமாயின் குறி வைக்க மாட்டேன் .



2. முதன் முதலில், திகில் காட்சிகளுக்காக மட்டுமே (வன்முறை, ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவும்) வயது வந்தவ ர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைக்காவியம்.



மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி :

போட்டிகள் பலவற்றில் வெற்றி பேற்ற வீராங்கனுக்கு (எஸ். வி. சகஸ்ரநாமம்) ராணியாக வரும் அஞ்சலிதேவி பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட, “ வேண்டாம்” என்ற குரல் கணீரென்று ஒலிக்கும். அவையினர் அனைவரும் குரல் வந்த திசையில், ஆச்சரியத்துடன், அதிசயத்துடன் பார்க்க அங்கே குதிரை மீது வேகமாக சவாரி செய்தபடி அரண்மனை மைதானத்துக்குள் நுழைவார் நம் மக்கள் திலகம். இந்த அறிமுக காட்சியில் ரசிகர்களின் பலத்த கைதட்டல் எதிரொலிக்கும். பின், யார் நீ என்று அரசன் வினவ, அதைப்பற்றி உங்களுக்கென்ன என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் திரும்ப பதிலளிக்க, திரையரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புதான். வேண்டுமானால், வீராங்கன் என்னோடு போட்டியிடட்டும் என்று சவால் விட்டு, பின்பு போட்டியில் வெற்றி பெற்ற கரிகாலனாகிய நம் மக்கள் திலகத்தை ராணியின் கரங்களால் பரிசு வாங்க அழைக்கப்படும் போது, “ ராணி, என்று அலட்சியமாக கூறி. மனதிலே ஈரமின்றி மக்களை கசக்கி பிழியும் இவள் கையால் பரிசு வாங்க மாட்டேன்” என்று, கரிகாலனாக நடிக்கும் நம் கலைப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் கூறிய பின், ராணி “பிடியுங்கள் அவனை” என்று கூக்குரலிடும் பொழுது, நம் நடிகமன்னன், தனக்கே உரிய இயல்பான நடிப்பால், குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியை, கூடியிருக்கும் மக்கள் கூட்டம் கரிகாலனுக்கு ஜே என்று முழங்கும் போது, படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் ஜே என்று முழங்குவதை மறக்க முடியாது.

நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள் பட்டத்து ராணியை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசும் வசனக்காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். பின்னாளில் இது போன்ற கதையமைப்பு கொண்ட படங்களுக்கு, நம் இதய தெய்வத்தின் இந்த காவியம் தான் முன்னோடி என்றே கூறலாம். அரண்மனை அவைக்குள் தனி ஒரு நபராக, சாரவிளக்கு ஊஞ்சலை பிடித்தபடி நுழைந்து சவால் விட்டு பேசி மீண்டும் திரும்பும் போது புரியும் சண்டைக்காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இப்படத்தில் நம் மக்கள் திலகம் அவர்கள்; காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும், எவர் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார். கணீர் என்று ஒலிக்கும் குரல், பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தப்படும். .குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் அற்புதமானவை.

மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்புக்கும், அட்டகாசமான சாகச சண்டை காட்சிகளுக்கும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த எழுச்சி மிகு ஆரவாரமும், வரவேற்பும், கைதட்டல்களும், நம் பொன்மனசெம்மலை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் தன்னிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இதய வேட்கையை தணிக்கும் வண்ணம் தனக்கென்று ஒரு பார்முலாவை வகுத்து கொண்டது இந்த காவியத்தின் வெற்றி மூலம்தான்.

ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிக்கும் காட்சிகளை தவிர்ப்பார் என்று சிலர் கதை விட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் லாவகமாக அதே நேரத்தில் மிக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும், குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து சண்டை செய்யும் காட்சியும் மிக அருமை. (பின்னாளில், ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா உட்பட பல படங்களில் குதிரையேற்றத் திறமையை வெகு அழகாகக் காட்டி அற்புதமாக நடித்திருப்பார். .

கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது என்றும் கூறலாம்.

பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான, ஆழமான நடிப்பு, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடி பட்ட பின்பு பேசும் வசனக்காட்சிகளை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் இந்த காவியத்தில் இடம் பெறும் வசனக் காட்சிகளை மிமிக்ரி செய்ய முடியாமல் திண்டாடுவர் என்பது நிச்சயம்.

என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது.

நம் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும், அவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்றும் நிருபித்த காவியம்.

மொத்தத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் காந்தம் போல் கவர்ந்திழு க்கும் காவியம் “மர்மயோகி” என்று சொன்னால் அது மிகையாகாது.

இதே கதை தெலுங்கு மொழியில் பின்னர் என்.டி.ராமாராவ் அவர்களை கதாநாயகனாக கொண்டு தயாரிக்கப்பட்டு, 1964ல் வெளியிடப்பட்டது. .


புரட்சித்தலைவரின் 2 3 வது காவியம் "மர்மயோகி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்த்கத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i57.tinypic.com/21dpxjl.jpg

பின் அட்டையில் ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "ராணி" விளம்பரம். விளம்பரத்தில், நடிகை பானுமதி மற்றும் சந்திரபாபு ஆகியோர் தோற்றமளிக்கின்றனர். எனவே, பின் அட்டை தோற்றம் பதிவிடப்படவில்லை.

Scottkaz
2nd February 2015, 07:14 AM
மக்கள்திலகம் பகுதி 14 துவங்கிய இனிய நண்பர் திரு தெனாலிராஜன் என்ற தியாகராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i60.tinypic.com/6sxppy.jpg

Russellwzf
2nd February 2015, 07:44 AM
http://i62.tinypic.com/33da3gm.jpg

Russellwzf
2nd February 2015, 07:46 AM
http://i62.tinypic.com/33wtwy9.jpg

Russellwzf
2nd February 2015, 07:47 AM
http://i61.tinypic.com/281hs44.jpg

Russellwzf
2nd February 2015, 07:48 AM
http://i57.tinypic.com/6qfwqb.jpg

Russellwzf
2nd February 2015, 07:49 AM
http://i59.tinypic.com/2r6isut.jpg

Russellwzf
2nd February 2015, 07:49 AM
http://i61.tinypic.com/2hi55dt.jpg

Russellwzf
2nd February 2015, 07:50 AM
http://i59.tinypic.com/6hjmn5.jpg

Russellwzf
2nd February 2015, 07:58 AM
http://i60.tinypic.com/mtl2ki.jpg

Richardsof
2nd February 2015, 08:13 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 13 சிறப்பாக நடத்தி சென்ற திரு முத்தையன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -14 திரியை துவக்கி இருக்கும் திரு தியாகராஜன் அவர்களுக்குஇனிய வாழ்த்துக்கள் .

Richardsof
2nd February 2015, 08:18 AM
THE HINDU -REVIEW

Perhaps the most historically significant film of 1951 was K. Ramnoth’s Marmayogi, a Jupiter Pictures’ production made at Central Studios in Coimbatore. This film, a folkloric tale of kings, royal mistresses and rebellious princes was written by A. S. A. Sami who had planned it specially for M. G. Ramachandran.

MGR who made his debut as hero in Sami’s Rajakumari was aware that the success of that film was due to reasons other than himself. It had action, trick scenes, entertainment, sexy dances and the hero was only an auxiliary cause and nothing more. So MGR persuaded Sami to write a script built around him to boost his image as a social rebel, do-gooder, and a fearless fighter for the underprivileged. MGR was an ardent filmgoer and a fan of Hollywood action heroes such as Douglas Fairbanks and Errol Flynn. Fairbanks fascinated him more and he modelled himself after this famous American idol of the Silent Era. Sami worked on a script, a mix of literary and classical elements, for MGR. Inspiration was drawn from the novel “Vengeance” by Marie Correlli and the legend of Robin Hood! MGR was cast as the younger prince who rebels against a woman who usurps his father’s kingdom and lets loose a reign of terror. The king pushed off a boat by his mistress, and presumed to have drowned, escapes and lives in disguise as a mysterious saint (hence the title Marmayogi) and also parades as a ‘ghost’ at nights. The hero turns into a Robin Hood and leads the masses to victory. The name of the hero — Karikalan –— was deliberately chosen to impress and exploit the new feeling of ‘Tamilness’ among the people.

In films of this genre, names of heroes are mostly Sanskrit derivatives such as Veerasimhan and Pratapan. But Sami went for a typical Tamil name, after the name of the famousTamil king, Karikala Chozhan.

Initially the title of this film was Karikalan. Later it was changed so that people don’t mistake it for a historical film. Ramnoth revealed his talents with his technically slick direction. Sama as the king, Anjali Devi as the power-crazy mistress and Sahasranamam as the elder prince performed their roles well. But the movie belonged to MGR. Every word of his dialogue was planned and written to build a special image for him and the lines had multi-layered meanings. One of the lines summed up MGR’s ambitions, personal, and political … “Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten!” This dialogue became popular and was greeted with gleeful screams in cinema houses. Strangely the Censors gave Marmayogi an ‘Adults Only’ certificate. Why? The film had a ‘ghost’ and hence the ‘A’ certificate!

Marmayogi’ received a warm welcome from the masses, especially the rapidly increasing rank and file of the MK party. With this film MGR’s image brightened and his career as a political figure was established. Soon he acquired a prefix to his name “Puratchi Nadigar”!

Remembered for The film that established MGR’s image of a rebel and do-gooder.

RANDOR GUY

Richardsof
2nd February 2015, 08:19 AM
"மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

Richardsof
2nd February 2015, 08:22 AM
சென்னை நியூ குளோப்,

(முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும்

ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த,

"மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன.

இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள்,

எழுந்துகூச்சல் போட்டனர்.


எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார்

என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து

வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்

பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'

என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல்

அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக்

காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும்


கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.


நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக

நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும்

குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை


அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பது தான் உண்மை.


மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என

கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட

ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே

கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம்,

அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன்,

நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள்

அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே

அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி


பெற்றுக் கொள்வது... நம்புவது?


கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால்

தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து

விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு

முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது.

கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.


சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும்

முடிவு!

ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின்


தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத்

தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த

உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன்

தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல்


உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.


கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது ..

Richardsof
2nd February 2015, 08:24 AM
ஜனவரி -2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் மாதமாக நிறைவு பெற்றது மிக்க மகிழ்ச்சி . உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கோ
அல்லது ஒரு நடிகருக்கோ கிடைக்காத பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்துள்ளது .
2015 ஜனவரியில் நிகழ்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் .
1. உலகமெங்கும் வாழும் அனைத்து எம்ஜிஆர் ரசிகர்கள்,மற்றும் பொது மக்கள் 17.1.2015 அன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் .
2. அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா கட்சி தலைவர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு புகழ் மாலை சூடினார்கள் .
3. எல்லா ஊடகங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் எம்ஜிஆர் படங்கள் ஒளிபரப்பினார்கள் .
4. விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி 16.1.2015 அன்று ஒளி பரப்பினார்கள் . மீண்டும் 10நாட்களில் 4 முறை ஒளிபரப்பினார்கள் . யூ டூபில் பதிவேற்றிய மன்னாதி மன்னனை 14 நாட்களில் 69,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் .
5. ராஜ் டிவி ,ஜெயா டிவி , தந்தி டிவி புதிய தலைமுறை டிவி - எம்ஜிஆர் பற்றிய சிறப்பு பேட்டிகள்
6. மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகள் கடந்தாலும் அவருடைய தாக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது
நிதர்சனமான உண்மை . காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Richardsof
2nd February 2015, 08:39 AM
இனிய நண்பர்கள்

திரு முத்தையன்
திரு ராமமூர்த்தி
திரு செல்வகுமார்
திரு ரவிச்சந்திரன்
திரு சைலேஷ்
திரு லோகநாதன்
திரு சத்யா
திரு சி எஸ் .குமார்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு கலியபெருமாள்
திரு ரூப்குமார்
திரு ஜெய்சங்கர்
திரு தெனாலி ராஜன்
திரு பிரதீப் பாலு
திரு சுஹராம்
திரு ராஜ்குமார்
மற்றும் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி இனிதே பயணிக்க வேண்டுகிறேன் .

மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற்படங்கள் , அவரை பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , புதுமையான பதிவுகள் , அன்றாட மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்வுகள் , விழாக்கள் பற்றிய
தகவல்கள் , எம்ஜிஆர் நினைவலைகள் என்று நம்முடைய கருத்துக்களை பதிவிடலாம் .

Russellrqe
2nd February 2015, 09:02 AM
திரு தெனாலி ராஜன் சார்

நீங்கள் மிகவும் அதிகமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கவிதைகள் எழுதி உள்ளீர்கள் .
மிக்க மகிழ்ச்சி . நீங்கள் துவக்கி உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 14 வெற்றி பெறவாழ்த்துக்கள் .

வங்க கடலோரம் துயிலும் மன்னவனே
தங்க நிறம் கொண்டவனே - எம்மை பிரிந்து
நீங்கள் சென்றாலும் - உங்கள் நினைவுகள் இந்த மண்ணில் மறையுமோ
சூரியனும் - சந்திரனும் இரவு பகல் என்று பிரிந்தாலும்
எம்ஜியார் என்றுமே பிரியமாட்டார் .
24x 7x 365 ... எம்ஜிஆர் புகழ் -மக்கள் தீர்ப்பு .
எம்ஜிஆர் அலை ..
மையம் கண்டதோ இன்று 14வது நிலை
தியாகராஜனின் வெற்றி வலை
வாழ்த்துவோம் ...வரவேற்போம் ..வரலாறு படைப்போம் ..

Scottkaz
2nd February 2015, 09:44 AM
மக்கள்திலகம் பாகம் 14 தொடங்கிய சில மணி நேரங்களிலேயே திரிக்கு
5 ஸ்டார் அந்தஸ்து வழங்கிய மையம் அங்கத்தினர்களுக்கு திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
http://i62.tinypic.com/53jkar.jpg

Russellisf
2nd February 2015, 09:47 AM
CONGRATULATIONS TENALI RAJAN SIR FOR STARTING OUR GOD THREAD NO 14




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsfae97688.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsfae97688.jpg.html)

Russellisf
2nd February 2015, 09:48 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpscac013da.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpscac013da.jpg.html)

Russellisf
2nd February 2015, 09:50 AM
THANKS to ALL OUR TEAM MEMBERS FOR COMPLETING our GOD THREAD NO 13 within SHORT PERIOD




http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/C_zps200c49fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/C_zps200c49fa.jpg.html)

Russellail
2nd February 2015, 10:53 AM
http://i58.tinypic.com/21b5egw.jpg

பொன் தைத்திங்கள் மங்கலதிருநாளாம்
மகிழ்ந்தனரே மாதோர்குலமும், மக்களுமே;
தரணியிலே ஒளிவெள்ளம், தங்க திருமகனின் பிறப்பாலே
தாயோரின் மகிழ்ச்சி உள்ளம்; தர்மத்தின் தலைவனை
தாலாட்டி பாடுகின்றார் எங்க வீட்டு பிள்ளை இவனென்று;.
மாதவம் செய்தனரோ, நோன்பு வளர்த்தனரோ
மன்னாதி மன்னனின் வருகைக்காக, மன்னவனின்
அருளுக்காக, ஆட்சிக்காக, இணையில்லா ஈகைக்காக.
மக்களின் துயர் நீக்க வந்த நாடோடி மன்னனுக்காக.

இறைவன் வந்தானே இன்னிசை இசைப்பிரே;
துள்ளியோடி, துதிபாடி இசை பாடுங்கடி, ஆடுங்கடி,
தூயோன் வரவுதனை, புரட்சி தலைவன் வந்தானே.
சிங்கம் வளர்த்த எங்கவீட்டுபிள்ளை அவன்தானே
ஏழையின் சிரிப்பினில் இறைவனை கண்டானே
எட்டாவது வள்ளலின் ஏற்றமிகு எழில்தானே
சிந்தையில் வைப்போமே தெய்வதாய் திருமகனின் திருப்புகழை
கதிர்காம கந்தனோ, கண்டியில் பிறந்தானே, காவிய தலைவனே,
காலத்தை வென்றவனே, கடமையின் உயர்கோன் அரசனே.

பொன்னொளிர் மேனியன், தன்னோளிர் துயவன்,
மாயோன், மக்களின் காவலன், மக்கள் திலகம் -
புவிபுகழும் மாதவன் - மேய்ப்பன் - மறையோன்.
ஆனந்த ஜோதியாம் அருள் மழைஜோதியே,
மக்களின் ஒளிவிளக்கே, மாலை நாம் அணிந்தே-அவன்
திருப்புகழை நாம் வளர்ப்போம் ஆண்டாள் அவள்போலே;
அவன் திருநாமம் தான் உரைத்து, திருப்புகழை ஏற்றி வைப்போம்.

ஏழையின் இறைவன் அவன் எங்கவீட்டுபிள்ளை வரம்
மறையாத புகழ் கொண்ட மன்னாதி மன்னன் அமரன்
மக்களின் அருள் விளக்கே, மாற்றாரும் மனம் விரும்பும்
அன்னமிட்ட ஆலயமே;சீலோர்கள் வணங்கும் சக்ரவர்த்தி திருமகனே.
மறை ஆளும் மக்கள் திலகமே, திரை ஆண்ட தென்னவனே;
நல்ஆட்சிக்கோர் நாயகன், வெற்றிகோர் விண்எட்டும் வாமனன்.

Russellail
2nd February 2015, 11:05 AM
http://i57.tinypic.com/fcplat.jpg




[FONT=Arial Black]அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
பொன்மனம் எம்.ஜி.ஆர், பொன்மனம் எம்.ஜி.ஆர்.

சத்யஅருளாலே தரணிக்கு வந்தவன்,
தத்துவ சோலையிலே தவமாக பூத்தவன்;
தவமாக பூத்தவன்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
பொன்மனம் எம்.ஜி.ஆர்,
பொன்மனம் எம்.ஜி.ஆர்,/FONT]


காவிய தலைவன் அவன்,
கருணையின் வடிவம் அவன்;
மன்னாதி மன்னன் அவன்,
மக்களின் திலகம் அவன்,
மக்களின் வேந்தன் அவன்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
பொன்மனம் எம்.ஜி.ஆர்,
பொன்மனம் எம்.ஜி.ஆர்.


அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
பொன்மனம் எம்.ஜி.ஆர்.

Russellail
2nd February 2015, 11:21 AM
http://i62.tinypic.com/315g87c.jpghttp://i60.tinypic.com/dokoep.jpghttp://i58.tinypic.com/2d9cpl4.jpghttp://i58.tinypic.com/dnni90.jpg

கடவுள், இறைவன், ஆண்டவன், தெய்வம், கோவில், என்ற சொல்லை தனது பாடல்களில் அதிகமான அளவில் புகுத்தி, தெய்வ உணர்வினை எளிதாக மக்கள் மனதில் வலியுறுத்தி, நிலை நிறுத்தி "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்" "வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்" என்று நிரூபித்து, மெய்ப்பித்து காட்டிய தலைவன் பொன்மன செம்மல், புரட்சி தலைவன், எங்க வீட்டு பிள்ளை, வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.



காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்.

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...


வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே.

கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்.

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா.

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை.

ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்.

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்.

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை.

உள்ளமென்றொரு கோவிலிலே
தெய்வம் கண்டேன்
அன்பே வா.

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்.

காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது.

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு


ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...
(ஆண்டவனே)


பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
(ஆண்டவனே)


மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு
இறைவா....இறைவா....இறைவா....


சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.

தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை.

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

கருணை கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும்.

என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்

என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ.

காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க.

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்.

கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே.

Russellsui
2nd February 2015, 03:50 PM
அண்ணாவின் நினைவுநாள் போஸ்டர்
இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் இணைந்து நினைவு நாள் ஏற்பாடுகளை செய்கிறது
http://i62.tinypic.com/25zt2bq.jpg

Stynagt
2nd February 2015, 05:35 PM
http://i62.tinypic.com/5kn89h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
2nd February 2015, 05:57 PM
http://i58.tinypic.com/9s9u83.jpg

மக்கள் திலகம் திரி பாகம் 14 ஐ தொடங்கி வைத்திருக்கும் கவிஞர் திலகம் திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பாகம் 13 ஐ 34 நாட்களில் முடித்து (திரு.எஸ்.வி.சார் சொல்லியிருப்பது போல) என்னை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கும் சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நம்பவே முடியவில்லை. என்ன ஒரு ஆச்சரியம். நேற்று இரவு நான் கடைசியாக பார்த்தபோது கடந்த திரி 369வது பக்கத்தில் இருந்தது. நிறைவடைய இன்னும் ஓரிரு நாட்களாவது ஆகும் என்று நினைத்திருந்தேன். இன்று பார்த்தால் அதற்குள் பக்கங்கள் நிறைவடைந்து புதிய திரியே ஆரம்பிக்கப்பட்டு சாதனை படைத்து விட்டது.

குறுகிய காலத்தில் இந்த சாதனை நிகழ்த்த காரணமான அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நேற்று ஒரே இரவில் விடிய விடிய கண் விழித்து 30 பக்கங்களுக்கும் மேல் பதிவிட்ட திரு. ராமமூர்த்தி, திரு.வி.பி.சத்யா, திரு.முத்தையன் அம்மு ஆகியோருக்கு நன்றிகள்.

‘தோன்றிற் புகழோடு தோன்றுக....’ என்ற குறளுக்கேற்ப புகழோடு தோன்றியவர் புரட்சித் தலைவர். அவர் பெயரால் தொடங்கப்பட்டுள்ள திரியின் 14ம் பாகமும் தோன்றிய இரண்டு மணி நேரத்திலேயே 5 நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டது. ஏற்கனவே, சமீபத்தில் 12 மற்றும் 13ம் பாகங்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

ஏதேது? இனி மையம் தளத்தில் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் திலகம் பெயரால் திரி தொடங்க வேண்டும் போலிருக்கிறது. இந்த சாதனைக்கு காரணமாக விளங்கும் சகோதரர்கள் அனைவருக்கும், பதிவர்களுக்கும், திரியை பார்வையிட்டு ஆதரவு அளிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக, மையம் இணைய நிர்வாகிகளுக்கும் பணிவான நன்றிகள்.

இந்த சாதனைகள் போதாதென்று மன்னாதி மன்னன் விஜய் டி.வி. நிகழ்ச்சியை யூ டியூபில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 13 நாட்களில் 70,000த்தை நெருங்கி விட்டது.

விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் நம் சாதனை மன்னனை வியந்து போற்றி பதம் பணிவோம். பலம் பெறுவோம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
2nd February 2015, 05:59 PM
கடந்த 64 வருடங்களுக்கு முன்பு, 02-02-1951 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “மர்மயோகி” பற்றிய சிறப்புக்கள் : :

1. தமிழ்த்திரையுலகில், முதன் முதலில் பஞ்ச் டயலாக் (PUNCH DIALOGUE) இடம் பெற்றது இந்த காவியத்தில்தான். அந்த பஞ்ச் டயலாக் : குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமாயின் குறி வைக்க மாட்டேன் .



2. முதன் முதலில், திகில் காட்சிகளுக்காக மட்டுமே (வன்முறை, ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவும்) வயது வந்தவ ர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைக்காவியம்.



மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி :

போட்டிகள் பலவற்றில் வெற்றி பேற்ற வீராங்கனுக்கு (எஸ். வி. சகஸ்ரநாமம்) ராணியாக வரும் அஞ்சலிதேவி பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட, “ வேண்டாம்” என்ற குரல் கணீரென்று ஒலிக்கும். அவையினர் அனைவரும் குரல் வந்த திசையில், ஆச்சரியத்துடன், அதிசயத்துடன் பார்க்க அங்கே குதிரை மீது வேகமாக சவாரி செய்தபடி அரண்மனை மைதானத்துக்குள் நுழைவார் நம் மக்கள் திலகம். இந்த அறிமுக காட்சியில் ரசிகர்களின் பலத்த கைதட்டல் எதிரொலிக்கும். பின், யார் நீ என்று அரசன் வினவ, அதைப்பற்றி உங்களுக்கென்ன என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் திரும்ப பதிலளிக்க, திரையரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புதான். வேண்டுமானால், வீராங்கன் என்னோடு போட்டியிடட்டும் என்று சவால் விட்டு, பின்பு போட்டியில் வெற்றி பெற்ற கரிகாலனாகிய நம் மக்கள் திலகத்தை ராணியின் கரங்களால் பரிசு வாங்க அழைக்கப்படும் போது, “ ராணி, என்று அலட்சியமாக கூறி. மனதிலே ஈரமின்றி மக்களை கசக்கி பிழியும் இவள் கையால் பரிசு வாங்க மாட்டேன்” என்று, கரிகாலனாக நடிக்கும் நம் கலைப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் கூறிய பின், ராணி “பிடியுங்கள் அவனை” என்று கூக்குரலிடும் பொழுது, நம் நடிகமன்னன், தனக்கே உரிய இயல்பான நடிப்பால், குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியை, கூடியிருக்கும் மக்கள் கூட்டம் கரிகாலனுக்கு ஜே என்று முழங்கும் போது, படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் ஜே என்று முழங்குவதை மறக்க முடியாது.

நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள் பட்டத்து ராணியை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசும் வசனக்காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். பின்னாளில் இது போன்ற கதையமைப்பு கொண்ட படங்களுக்கு, நம் இதய தெய்வத்தின் இந்த காவியம் தான் முன்னோடி என்றே கூறலாம். அரண்மனை அவைக்குள் தனி ஒரு நபராக, சாரவிளக்கு ஊஞ்சலை பிடித்தபடி நுழைந்து சவால் விட்டு பேசி மீண்டும் திரும்பும் போது புரியும் சண்டைக்காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இப்படத்தில் நம் மக்கள் திலகம் அவர்கள்; காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும், எவர் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார். கணீர் என்று ஒலிக்கும் குரல், பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தப்படும். .குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் அற்புதமானவை.

மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்புக்கும், அட்டகாசமான சாகச சண்டை காட்சிகளுக்கும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த எழுச்சி மிகு ஆரவாரமும், வரவேற்பும், கைதட்டல்களும், நம் பொன்மனசெம்மலை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் தன்னிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இதய வேட்கையை தணிக்கும் வண்ணம் தனக்கென்று ஒரு பார்முலாவை வகுத்து கொண்டது இந்த காவியத்தின் வெற்றி மூலம்தான்.

ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிக்கும் காட்சிகளை தவிர்ப்பார் என்று சிலர் கதை விட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் லாவகமாக அதே நேரத்தில் மிக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும், குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து சண்டை செய்யும் காட்சியும் மிக அருமை. (பின்னாளில், ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா உட்பட பல படங்களில் குதிரையேற்றத் திறமையை வெகு அழகாகக் காட்டி அற்புதமாக நடித்திருப்பார். .

கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது என்றும் கூறலாம்.

பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான, ஆழமான நடிப்பு, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடி பட்ட பின்பு பேசும் வசனக்காட்சிகளை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் இந்த காவியத்தில் இடம் பெறும் வசனக் காட்சிகளை மிமிக்ரி செய்ய முடியாமல் திண்டாடுவர் என்பது நிச்சயம்.

என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது.

நம் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும், அவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்றும் நிருபித்த காவியம்.

மொத்தத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் காந்தம் போல் கவர்ந்திழு க்கும் காவியம் “மர்மயோகி” என்று சொன்னால் அது மிகையாகாது.

இதே கதை தெலுங்கு மொழியில் பின்னர் என்.டி.ராமாராவ் அவர்களை கதாநாயகனாக கொண்டு தயாரிக்கப்பட்டு, 1964ல் வெளியிடப்பட்டது. .


புரட்சித்தலைவரின் 2 3 வது காவியம் "மர்மயோகி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்த்கத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i57.tinypic.com/21dpxjl.jpg

பின் அட்டையில் ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "ராணி" விளம்பரம். விளம்பரத்தில், நடிகை பானுமதி மற்றும் சந்திரபாபு ஆகியோர் தோற்றமளிக்கின்றனர். எனவே, பின் அட்டை தோற்றம் பதிவிடப்படவில்லை.

ஆரம்பமே அமர்க்களம். மர்மயோகி விமர்சனம் சூப்பர். நன்றி திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
2nd February 2015, 07:13 PM
http://i57.tinypic.com/11tlliv.jpg தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே..இந்த திரியில் 13ஆம் பகுதியை தொடங்க சொன்னபோது மிகவும் பயந்துவிட்டேன்..
காரணம் எனக்கு கம்புட்டரை பற்றி ஒன்றும் தெரியாது..
மிகப்பெரிய பொறுப்பு இது..
ஆனால் தலைவரின் பக்தர்களான நீங்கள் இந்த பதிவினை ஒவொருவரும் பங்களிப்பு செய்து பூர்த்தி செய்துளீர்கள்..
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி..
14ஆம் பாகத்தை துவக்கி வைத்துள்ள நண்பர் தெனாலி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மட்டுமல்ல..
எனது பதிவுகள் உங்கள் பாகத்தில் அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்..முத்தையன்..
வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்

Russelldvt
2nd February 2015, 07:21 PM
http://i59.tinypic.com/e14znd.jpg

Russelldvt
2nd February 2015, 07:22 PM
http://i58.tinypic.com/ev6eef.jpg

Russelldvt
2nd February 2015, 07:25 PM
http://i57.tinypic.com/e87v3d.jpg

Russelldvt
2nd February 2015, 07:26 PM
http://i62.tinypic.com/2gte0wi.jpg

Russelldvt
2nd February 2015, 07:27 PM
http://i59.tinypic.com/28cpnol.jpg

Russelldvt
2nd February 2015, 07:28 PM
http://i62.tinypic.com/4x6p.jpg

Russelldvt
2nd February 2015, 07:29 PM
http://i62.tinypic.com/21d1xtk.jpg

Russelldvt
2nd February 2015, 07:30 PM
http://i62.tinypic.com/b3vckm.jpg

Russelldvt
2nd February 2015, 07:31 PM
http://i62.tinypic.com/35i0xkw.jpg

Russelldvt
2nd February 2015, 07:32 PM
http://i57.tinypic.com/2d14kt1.jpg

Russelldvt
2nd February 2015, 07:33 PM
http://i58.tinypic.com/oqws1w.jpg

Russelldvt
2nd February 2015, 07:34 PM
http://i61.tinypic.com/2dw8ccg.jpg

Russelldvt
2nd February 2015, 07:35 PM
http://i58.tinypic.com/acg5c3.jpg

Russelldvt
2nd February 2015, 07:36 PM
http://i60.tinypic.com/nv19oj.jpg

Russelldvt
2nd February 2015, 07:37 PM
http://i58.tinypic.com/30m37up.jpg

Russelldvt
2nd February 2015, 07:38 PM
http://i58.tinypic.com/sgr380.jpg

Russelldvt
2nd February 2015, 07:39 PM
http://i58.tinypic.com/qnwllj.jpg

Russelldvt
2nd February 2015, 07:40 PM
http://i58.tinypic.com/fcrwgy.jpg

Russelldvt
2nd February 2015, 07:41 PM
http://i62.tinypic.com/2rcyasw.jpg

Russelldvt
2nd February 2015, 07:44 PM
http://i60.tinypic.com/3094vbt.jpg

Russelldvt
2nd February 2015, 07:45 PM
http://i58.tinypic.com/30m5mk1.jpg

Russelldvt
2nd February 2015, 07:46 PM
http://i58.tinypic.com/21ox1kz.jpg

Russellail
2nd February 2015, 08:08 PM
http://i61.tinypic.com/23kf7o1.jpg

ஞானமுகம் ஆனகுரு பார்மகிழ தர்மம் எனவந்தாய்
அழகன்இவன் எம்.ஜி.ஆர் எனும் இனிய பெயர் கொண்டாய்
உயர்யாகமகள் பெற்றமகன் தவயோகமுகம் வாழ்க
கொடைவள்ளல்என மக்கள்திலகம் எனவந்தமுகம் வாழ்க.

தரணிஎல்லாம் புகழ்ந்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் ஒளிஎடுத்து தந்தருளும்முகம் ஒன்று
பொன்னிறமும் புகழ்குணமும் பதிந்துவந்த கந்தமுகம் ஒன்று
பாவலர்கள் நாடிவரும் வெண்பளிங்குமுகம் ஒன்று
கூர்வடிவில் விழிஇரண்டும் கனிந்தமுகம் ஒன்று
தங்கரதம் போலவரும் புகழ்வெற்றிதரும் முகம்ஒன்று.

பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்

உன்னை வாழ்த்தியவர் வளமும்/நலமும் பெற்றார்
உன்னைத் தாழ்த்தியவர் உன் அருள் உணர்ந்து பண்பட்டார்
உன்னை போற்றியதால் உன்னருள் அடைந்தார்
உன்னைத் தூற்றியவர் என்றும் தோல்வி காண்பார்.

oygateedat
2nd February 2015, 08:24 PM
http://s4.postimg.org/jja3wt64d/A_zps7ec8799f.jpg (http://postimage.org/)

oygateedat
2nd February 2015, 08:40 PM
http://i61.tinypic.com/23kf7o1.jpg

ஞானமுகம் ஆனகுரு பார்மகிழ தர்மம் எனவந்தாய்
அழகன்இவன் எம்.ஜி.ஆர் எனும் இனிய பெயர் கொண்டாய்
உயர்யாகமகள் பெற்றமகன் தவயோகமுகம் வாழ்க
கொடைவள்ளல்என மக்கள்திலகம் எனவந்தமுகம் வாழ்க.

தரணிஎல்லாம் புகழ்ந்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் ஒளிஎடுத்து தந்தருளும்முகம் ஒன்று
பொன்னிறமும் புகழ்குணமும் பதிந்துவந்த கந்தமுகம் ஒன்று
பாவலர்கள் நாடிவரும் வெண்பளிங்குமுகம் ஒன்று
கூர்வடிவில் விழிஇரண்டும் கனிந்தமுகம் ஒன்று
தங்கரதம் போலவரும் புகழ்வெற்றிதரும் முகம்ஒன்று.

பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
inspired by : மக்கள் திலகம்

உன்னை வாழ்த்தியவர் வளமும்/நலமும் பெற்றார்
உன்னைத் தாழ்த்தியவர் உன் அருள் உணர்ந்து பண்பட்டார்
உன்னை போற்றியதால் உன்னருள் அடைந்தார்
உன்னைத் தூற்றியவர் என்றும் தோல்வி காண்பார்.

nice - thank u mr.tenali rajan

regds

s.ravichandran

oygateedat
2nd February 2015, 08:55 PM
http://s12.postimg.org/orlzongl9/ccc.jpg (http://postimg.org/image/npbt63xrt/full/)

Russellzlc
2nd February 2015, 09:22 PM
http://i59.tinypic.com/6hjmn5.jpg

அருமை திரு.சத்யா சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
2nd February 2015, 09:24 PM
ஜனவரி -2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் மாதமாக நிறைவு பெற்றது மிக்க மகிழ்ச்சி . உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கோ
அல்லது ஒரு நடிகருக்கோ கிடைக்காத பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்துள்ளது .
2015 ஜனவரியில் நிகழ்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் .
1. உலகமெங்கும் வாழும் அனைத்து எம்ஜிஆர் ரசிகர்கள்,மற்றும் பொது மக்கள் 17.1.2015 அன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் .
2. அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா கட்சி தலைவர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு புகழ் மாலை சூடினார்கள் .
3. எல்லா ஊடகங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் எம்ஜிஆர் படங்கள் ஒளிபரப்பினார்கள் .
4. விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி 16.1.2015 அன்று ஒளி பரப்பினார்கள் . மீண்டும் 10நாட்களில் 4 முறை ஒளிபரப்பினார்கள் . யூ டூபில் பதிவேற்றிய மன்னாதி மன்னனை 14 நாட்களில் 69,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் .
5. ராஜ் டிவி ,ஜெயா டிவி , தந்தி டிவி புதிய தலைமுறை டிவி - எம்ஜிஆர் பற்றிய சிறப்பு பேட்டிகள்
6. மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகள் கடந்தாலும் அவருடைய தாக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது
நிதர்சனமான உண்மை . காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .


காலத்தை வென்றவர் மக்கள் திலகம் என்பது சத்தியமான உண்மை எஸ்.வி. சார். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
2nd February 2015, 09:29 PM
http://i57.tinypic.com/2u5dz6c.jpg

திரி அன்பர்கள் பலரின் தொடர் விருப்பத்துக்கும், வேண்டுகோளுக்கும் இணங்கி, மீண்டும் PONMANACHEMMAL FILMOGRAPHY NEWS & EVENTS திரியினில் பதிவுகளை தொடங்கவிருக்கிறேன்.

இத்திரியினியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டு வந்துள்ளன. கடைசியாக "குலேபகாவலி" காவியத்தை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளேன். மீண்டும், மக்கள் திலகத்தின் அடுத்த காவியமாகிய "அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " காவியத்திலிருந்து பதிவுகள், விரைவில் தொடரும்.

திரி அன்பர்கள் அந்தந்த காவியத்தை பற்றிய செய்திகள் மட்டுமே இதில் பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Russellzlc
2nd February 2015, 09:30 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpscac013da.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpscac013da.jpg.html)

ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பில் மக்கள் தலைவர். நன்றி. திரு. யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
2nd February 2015, 09:32 PM
அண்ணாவின் நினைவுநாள் போஸ்டர்
இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் இணைந்து நினைவு நாள் ஏற்பாடுகளை செய்கிறது
http://i62.tinypic.com/25zt2bq.jpg

அறிவுலக மேதைக்கு அஞ்சலி

ஆசிய ஜோதி நேரு பண்டிதர், காஷ்மீரின் பெரிய பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர் . லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவரது சிறுவயதில் ஆனந்த பவனம் மாளிகையின் வாயில்களில் ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு கார் நிற்கும். எந்தக் காரில் நேரு பள்ளிக்கு செல்வார் என்று தெரியாது. அந்த அளவு செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். சுதந்திரப் போரட்டத்தில் சிறையில் இருந்தபோது, தன் அருமை மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மூலம் உலக வரலாற்றையே விளக்கியவர்.

அப்பேற்பட்ட நேரு பெருமான், பிரதமராக இருந்தபோது ஒரு புத்தகத்தை படிக்க விரும்பினார். பிரதமர், அதுவும் நேரு பிரான் ஒரு புத்தகத்தை கேட்கிறார். ஆள், அம்பு நாலாபுறமும் பறந்தது. அந்த புத்தகம் எங்கேயும் கிடைக்கவில்லை. புத்தகக் கடைகளில் இல்லை. டெல்லி நூலகத்தில் இல்லை.

சொல்லப் போனால் நேரு தெரிவித்த அந்த நூலின் பெயரையே யாரும் கேள்விப் பட்டதில்லை. இருந்தாலும் கிடைக்காமல் விடுவதா?கேட்டவர் நேரு அல்லவா? விடாமல் சல்லடை போட்டுத் தேடியதில் கடைசியில் சென்னை கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் இருப்பது தெரிந்தது. தேடியவர்களுக்கு திருப்தி. நிம்மதிப் பெருமூச்சு. ஆனால், அங்குதான் முளைத்தது சிக்கல்.

கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் உள்ளது. ஆனால், இப்போது இல்லை. அதைப் படிப்பதற்காக ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்தார் நூலகர். நூலைத் தேடிச் சென்றவர்களுக்கு வியப்பு. நேரு பண்டிதர் படிக்க இருந்த நூலை..... இதுவரை அவர் படிக்காமல் இருந்த நூலை... ஒருவர் எடுத்துச் சென்றிருக்கிறாரா? பரபரப்பும் ஆத்திரமுமாய் அவர்கள் மண்டையில் உதித்த கேள்வி..... யார் அது?

எப்படியும் அவரிடம் இருந்து உடனடியாக வாங்கி (பிடுங்கி) நேரு பெருமானிடம் சேர்க்க வேண்டுமே. அவசர அவசரமாக பதிவேட்டை கொண்டு வரச் செய்து நூலை எடுத்துச் சென்றவர் யார் என்று பார்க்கும் ஆவல். அதிகாரம் தூள் பறக்க, பதிவேட்டை பவ்யமாய் எடுத்து வந்தார் பணியாளர். பக்கங்களை புரட்டி நேரு பிரான் தெரிவித்த அந்த நூலை எடுத்துச் சென்றவரின் பெயரைப் பார்த்தால், சென்றவர்களுக்கு தலைசுற்றியது. எடுத்துச் சென்றவர் என்ற இடத்தில் நிரப்பப்பட்டிருந்த பெயர்...

சி.என். அண்ணாதுரை.

அறிவுலக மேதைக்கு அஞ்சலி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
2nd February 2015, 09:46 PM
http://i62.tinypic.com/23moill.jpg




மக்கள் திலகம் பாகம் 12 நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் கரங்களால் துவ ங்கப்பட்டு குறுகிய காலத்தில் முடிந்தது ஒரு சாதனை.



மக்கள் திலகம் பாகம் -13 நண்பர் திரு.முத்தையன் அவர்களின் கரங்களால்
தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்து முந்தைய சாதனையை
முறியடித்துள்ளது.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர். தான். அவருடைய திரையுலக
மற்றும் அரசியல் சாதனைகளை வெல்ல அவரால்தான் முடியும் என்பதற்கு
இது மற்றுமொரு சான்று.



மக்கள் திலகம் பாகம் 13 இந்த சாதனையை படைக்க காரணமாயிருந்த
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.



மக்கள் திலகம் பாகம் -14 , இனிதே துவக்கியுள்ள நண்பர் திரு. தெனாலி ராஜன்
என்கிற திரு. தியாகராஜன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
தங்களின் கவிதை நடை , புரட்சி தலைவரின் அழகு, கம்பீரம், நடை, நடிப்பு,
தாய்மை, கொடைத்தன்மை , வீரம், காதல், தலைவருக்குண்டான தகுதிகள் ,
மனித நேயம் , அன்பு, பண்பு , போன்றவற்றை போற்றும் வகையில் இலக்கிய,
இலக்கண நயத்தோடு எழுதும் பாங்கு மிகவும் சூப்பர். பாராட்டுக்கள்.


ஆர். லோகநாதன்.

Russellzlc
2nd February 2015, 09:48 PM
http://i57.tinypic.com/2u5dz6c.jpg

திரி அன்பர்கள் பலரின் தொடர் விருப்பத்துக்கும், வேண்டுகோளுக்கும் இணங்கி, மீண்டும் PONMANACHEMMAL FILMOGRAPHY NEWS & EVENTS திரியினில் பதிவுகளை தொடங்கவிருக்கிறேன்.

இத்திரியினியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டு வந்துள்ளன. கடைசியாக "குலேபகாவலி" காவியத்தை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளேன். மீண்டும், மக்கள் திலகத்தின் அடுத்த காவியமாகிய "அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " காவியத்திலிருந்து பதிவுகள், விரைவில் தொடரும்.

திரி அன்பர்கள் அந்தந்த காவியத்தை பற்றிய செய்திகள் மட்டுமே இதில் பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

தலைவரின் புகழ் பரப்பும் தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் திரு.செல்வகுமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
2nd February 2015, 09:51 PM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்தி மலர் - ஜனவரி 2015
இதழின் முன்புற தோற்றம் .

தகவல் உதவி :பேராசிரியர் திரு. செல்வகுமார்.
http://i59.tinypic.com/20kc0ep.jpg

fidowag
2nd February 2015, 10:08 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 13ல் அற்புதமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களின் வடிவங்களை , கண்ணைக்கவரும் வகையில் , பல வண்ணங்களில்
ஜோடனைகளோடு பதிவு செய்த நண்பர் திரு. சத்யா அவர்களின் உழைப்பிற்கு
ஈடு இணையில்லை.



வேலூர், குடியாத்தம், ஆற்காடு, ராணிபேட்டை, காட்பாடி, சத்துவாச்சாரி,மற்றும்
பல இடங்களுக்கு சென்று, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நிகழ்சிகளை
நேரில் காணும் வண்ணம் பதிவிட்ட திரு. ராமமூர்த்தி அவர்களின் கடின
உழைப்பிற்கு நன்றி.! நன்றி! நன்றி!




அனைத்து நண்பர்களின் பதிவுகளை அவ்வப்போது விமர்சித்தும், பாராட்டியும்
பதிவுகள் இட்டு உற்சாகப்படுத்தும் நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு
நன்றி.




பல அரிய புகைப்படங்கள் பதிவு, மர்மயோகி பட விமர்சனம் , சக நண்பர்களின்
பதிவுகளை ஊக்கப்படுத்தும் தன்மை ,ஆகியவற்றிற்காக நண்பர் திரு. செல்வகுமார்
அவர்களுக்கு நன்றி.




மக்கள் திலகம் திரியை வழி நடத்திச் செல்லும் நண்பர் திரு. வினோத் அவர்களின்
புள்ளி விபரங்கள், சாதனை விவரங்கள் , ஆலோசனைகளுக்கு நன்றி.



ஆர். லோகநாதன்.

fidowag
2nd February 2015, 10:58 PM
தின இதழ் -02/02/2015
http://i60.tinypic.com/auz9ki.jpg

http://i62.tinypic.com/2gt1c1z.jpg
http://i62.tinypic.com/104gcpi.jpg
உணர்வை புரிந்து கொண்டாய் பிரதமரும், மக்கள் திலகம் கேட்டது போல் ஆவண
செய்தார் . இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்காக பயன் படக்கூடிய
http://i58.tinypic.com/142tuo3.jpg


நுழைந்துவிட முடியாது. பெரிய நடிகர் என்பதாலும், முகராசி படத்தில் சேர்ந்து நடித்த பழக்கம் இருந்ததாலும், விறுவிறுவென்று படப் பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தவரை யாரும் தடுக்கவில்லை. திடீரென்று மக்கள் திலகம் முன்நின்று,
அண்ணே வணக்கம்

http://i59.tinypic.com/16c8bnq.jpg

fidowag
2nd February 2015, 11:00 PM
http://i57.tinypic.com/2gx30yh.jpg

http://i60.tinypic.com/vktnt.jpg

http://i60.tinypic.com/2i6ko5h.jpg

fidowag
2nd February 2015, 11:13 PM
இந்த வார குங்குமம் இதழில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------

http://i58.tinypic.com/103ftkm.jpg

http://i62.tinypic.com/ev7ts2.jpg

http://i60.tinypic.com/ztslcy.jpg
பார்த்த நினைவை இப்போதும் மறக்க முடியவில்லை.

Richardsof
3rd February 2015, 05:31 AM
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்.

எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமாய் தவமிருந்து...
திங்களாய்! செங்கதிராய்! திருநாட்டின் ஒளிவிளக்காய்!
வள்ளுவன் குரல் போல, வடிவமோ சிறிதாக!
அவர் உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக....
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்....
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்! அண்ணாவென்றேல்லோரும் அழைக்கவந்தார்!
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார். அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.

Richardsof
3rd February 2015, 05:34 AM
http://youtu.be/3Y80pP5bJFE

Richardsof
3rd February 2015, 05:52 AM
http://youtu.be/LJ-qP8pbxaE

Russellwzf
3rd February 2015, 07:24 AM
http://i60.tinypic.com/2r2m96u.jpg

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் திருவள்ளுவர். மனித நேய பண்பெல்லாம் மக்கள் திலகம் அருள் கொடையாகும். அதே முறையில் இப்போது நாம் சொல்ல வேண்டும் என்று உரைத்து, மேலும் "மன்னாதி மன்னன் புகழ் எல்லாம், மெய்யோர், நல்லோர் நெஞ்சின் இறைவடிவாகும்" என விளம்பி மக்கள்திலகம் திரியில் பாகம் 14 துவங்க எனக்கு வாய்ப்பு அளித்த மக்கள்திலகம் திரியின் நண்பர்களுக்கும் மற்றும் மையம் அங்கத்தினர்களுக்கும் எனது நன்றிகள்
http://i58.tinypic.com/9s9u83.jpg

வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுபடை, திருபுகழ்,
கந்த புராணம், மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் போற்றி வழிபாடபட்டவனாம் பாட்டுடைத் தலைவன் என்றும் நிலைத்திருக்கும் தமிழ் கடவுள் முருக பெருமானின் மறு வடிவே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முருகு என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் எம்.ஜி.ஆர். என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் ஒன்றாக இருப்பதே இதற்க்கு சான்றாகும். மு - முகுந்தன் (விஷ்ணு ), ரு-ருத்ர, (சிவன் ) கா-கமலன் (பிரம்மா ). தமிழ் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு தொன்றுதொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டு வரும் தெய்வம். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்களும் பல்வேறு நாம கரணங்களால் மக்களால் அழைக்கப்பட்டவர் என்றும். அவருடைய வாழ்க்கை பயணம் ஆராய்ச்சிக்குரியது. அறிஞர்களாலும், கவிஞர்களாலும், கலைஞர்களாலும், கலை விற்பன்னர்களாலும், நல்லோர்களாலும், ஏழை எளிய மக்களாலும், நடுத்தர மக்களாலும், உயர்தர இனத்தோராலும் புகழப்பட்ட, நேசிக்கப்பட்ட, வணக்கத்திர்க்குஉரியவன் புரட்சி தலைவன் எம்.ஜி.ஆர்.

ஆரம்பமே அசத்தலா இருக்கு சார் !!

Russellwzf
3rd February 2015, 07:31 AM
இன்று தைப்பூச திருநாள்
http://i60.tinypic.com/2dbnwwo.jpg

Russellisf
3rd February 2015, 08:17 AM
super sathya sir




இன்று தைப்பூச திருநாள்
http://i60.tinypic.com/2dbnwwo.jpg

Russellisf
3rd February 2015, 08:18 AM
https://www.youtube.com/watch?v=0_50SyAAraY


thanks sailesh sir

ainefal
3rd February 2015, 08:30 AM
https://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

Russellwzf
3rd February 2015, 08:52 AM
இன்று தைப்பூச திருநாள் முன்னிட்டு....TMS அவர்கள் பாடிய முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் நாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக பாடி இருந்தால்...

https://www.youtube.com/watch?v=qb2rwalrAkU&feature=youtu.be

Russellisf
3rd February 2015, 09:09 AM
அண்ணா அவர்கள் நம் மக்கள் திலகத்தின் பாடல்கள் மற்றும் கொள்கைகள் மூலமாக என்றும் வாழ்கிறார்



என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

Russellisf
3rd February 2015, 09:10 AM
எம்.ஜி.ஆர் பற்றி கருணாநிதி பாடிய கவிதை ....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!
கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !
தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.
-கலைஞர் மு.கருணாநிதி

Russellisf
3rd February 2015, 09:11 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps3a3f6eb0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps3a3f6eb0.jpg.html)

Russellisf
3rd February 2015, 09:13 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8a229e33.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8a229e33.jpg.html)

Russellisf
3rd February 2015, 09:16 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2cfde67c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2cfde67c.jpg.html)

Russellisf
3rd February 2015, 09:17 AM
அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மணவிழாவில்
அறிஞர் அண்ணா , நடிப்பிசைப் புலவர்
கே.ஆர்.ராமசாமி , பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி ,
மக்கள் திலகம் எம்ஜியார் மற்றும் முன்னணியினர் !

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps5d537f1d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps5d537f1d.jpg.html)

Russellisf
3rd February 2015, 09:23 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsaabf5a0a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsaabf5a0a.jpg.html)

Russellrqe
3rd February 2015, 09:53 AM
http://i62.tinypic.com/2drf1o6.jpg

Russellrqe
3rd February 2015, 09:58 AM
http://i61.tinypic.com/dorvie.jpg

Russellrqe
3rd February 2015, 10:02 AM
http://i61.tinypic.com/122gh05.jpg

Russellrqe
3rd February 2015, 10:10 AM
http://i57.tinypic.com/2dvs6pu.jpg

Russellisf
3rd February 2015, 10:12 AM
இன்று 46-வது நினைவு நாள்: தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணாவின் நினைவலைகள்..!

தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ‘மாலை மலர்.டாட் காம்’ பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சீபுரத்தில், மத்தியத் தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த நடராசன்-பங்காரு அம்மையார் தம்பதியரின் அன்பு மகனாக 15-09-1909 அன்று பிறந்த தமிழ்நாட்டின் தலைமகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும்.

காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை என்ற முழுப்பெயரின் சுருக்கமாக சி.என்.அண்ணாதுரை என்று அறியப்பட்ட அவர், ஆரம்ப கல்வியை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமக்கையார் ராசாமணி அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்த அண்ணா, மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்தார்.

கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தை தவிர்த்து பிறமொழிகளில் பேசக்கூடாது என்ற ஆங்கில மோக மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் அதிகம் இருந்தது.

ஆங்கிலத்தில் பேசுவதே கவுரவம் என்று எண்ணம் மேலோங்கியிருந்த அந்த காலகட்டத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா, ஒரு விடுமுறையின்போது அவரது பாட்டியின் வீட்டுக்கு வந்தார்.

பிரியமான பேரனை அருகில் அழைத்து உச்சி முகர்ந்த பாட்டியார், ‘காலேஜ் படிப்பெல்லாம் படிக்கிறியே துரை.. பாட்டிக்கு கொஞசம் இங்கிலீஷ்லே பேசிக் காட்டேன்...?’ என்று பாசத்துடன் கேட்டார். அவர் எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்ததுடன் ‘ஆங்கிலத்தில் பேசினால் உனக்கென்ன புரியும்? தேவையில்லாமல் வேண்டாம்’ என்று கூறி மறுத்து விட்டார்.

பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தபோதிலும், போலித்தனமான கவுரவத்துக்காக, தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.

ஒருமுறை அண்ணாவின் ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நினைத்த சில இங்கிலாந்து மாணவர்கள் ‘because’ (ஏனெனில்) என்ற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருவது போன்றதொரு ஆங்கில சொற்றொடரை கூற முடியுமா? என்று அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர், "No sentence can begin with because because, because is a conjunction.” (எந்த வாக்கியமும் ஏனெனில் என்ற வார்த்தையை கொண்டு துவங்காது ஏனெனில், ‘ஏனெனில்’ என்பது ஒர் இணைப்புச் சொல்.) என்று மின்னல் வேகத்தில் பதிலளித்தார்.

1934-ல் இளங்கலை (பி.ஏ.) பட்டமும் அதனைத் தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடப்பிரிவுகளில் முதுகலை (எம்.ஏ.) பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று, தான் ஆரம்பக் கல்வி பயின்ற அதே பச்சைப்பன் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப் பணியை இடைநிறுத்தி பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.

பகுத்தறிவுத் தந்தை ஈ.வெ.ரா.பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அண்ணா, ஜஸ்டிஸ் பார்ட்டி என்றும் அழைக்கப்பட்ட நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று பாடுபட்டார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் சரளமாக உரையாற்றூம் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அண்ணா, பல முற்போக்கு, சீர்திருத்த கருத்துக்களை கொண்ட நாடகங்களை எழுதி, இயக்கி அவற்றில் நடித்தும் உள்ளார்.

நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பொறுப்பேற்றிருந்தபோது அக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த அண்ணா, பின்னர், விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார். பிறகு, சொந்தமாக ‘திராவிட நாடு’ என்ற தனி நாளிதழைத் (தனி திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார்.

1944-ல் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றிய தந்தை பெரியார், தனது கட்சி ஓட்டுமுறை அரசியலில் (தேர்தலில்) பங்கேற்காது என்று அறிவித்தார்.

பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949-ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தி.மு.க.வின் கொள்கைகள் தாய்க்கட்சியான திராவிடக் கட்சியின் கொள்கைகளை தழுவியே அமைந்திருந்தது.

இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரது கோட்பாடுகள் சமயம் சாராதவையாகவே இருந்து வந்தன. "கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்", "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கோட்பாட்டில் அவர் இறுதி வரை உறுதியாக இருந்தார். தனது தம்பிமார்களும் இதனைத் தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும் என பல தருணங்களில் அவர் வலியுறுத்தியும் வந்தார்.

மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களை பலமாகச் சாடிய அண்ணா, அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் என்றுமே தலையிட்டதோ, எதிர்த்ததோ கிடையாது.

“பொதுவாழ்வில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட வாழ்முறையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய தாரக மந்திரங்களை தீவிரமாக கடைப்பிடிக்கவேண்டும்” என்று வற்புறுத்திய அண்ணா, மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதித்துப் போற்றும் அரசியல் நாகரிகத்துக்கான புத்தகராதியாக விளங்கினார்.

அண்ணாவின் நாவன்மை, வாதத் திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு ஆதாரமாக ஏராளமான சான்றுகள் பல நூல்களில் பரவலாக சிதறிக் கிடக்கின்றன.

குறிப்பாக, தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழக மக்கள் தொடர்பான உரிமைகள் முடக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பேருரைகளும் முன்வைத்த வாதங்களும் மேலை நாட்டு அறிஞர்களால் இன்றளவும் வெகுவாக போற்றி சிலாகிக்கப்படுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியுடன் இணைந்த மும்மொழி கொள்கையை சட்டமாக்க மத்திய அரசு முனைப்பு காட்டியபோது, பாராளுமன்றத்தில் அண்ணா ஆற்றிய அற்புத உரையை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அந்தப் பேருரையின் சிறு சுருக்கம் இதோ... ‘இந்தியாவில் வாழ்ந்து பல்வேறு மொழிகளை பேசிவரும் மக்களின் தாய்மொழியுடன் பிற மக்களின் தொடர்பு மொழியாக ஏற்கனவே ஆங்கிலம் இருந்து வருகிறது. உலக நாடுகளில் உள்ள மக்களுடன் எல்லாம் ஆங்கிலம் என்ற ஒரு மொழியின் மூலமாகவே தொடர்பு கொள்ள முடியும் என்பது பல நூற்றாண்டு காலமாக நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த நிலையில், ஏற்றுக்கொள்ள விரும்பாத மக்களின் தலையில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியானது, ‘பூனையின் தலை நுழையும் அளவுக்கு பெரிய ஓட்டை கொண்ட ஒரு சுவரில், வால் நுழைவதற்கென்று சிறிய துவாரம் போடும்’ மடமையான உவமைக்கு ஒப்பானதாகும்” என்று முழங்கியதன் மூலம் வட இந்திய அரசியல் ஜாம்பவன்களின் கவனத்தை அண்ணா ஈர்த்தார்.

1962- தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டு 50 உறுப்பினர்களுடன் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்தபோதிலும், ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் அண்ணா ஆற்றிய பணி சிறந்ததாகவே கருதப்படுகிறது. கண்ணியம் தவறாத அவரது பேச்சுத்திறன் எதிர்த்து கேள்வி கேட்டவர்களை சிந்திக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுத்தவர்கள் வெட்கித் தலைக்குனியவும் வைத்தது.

ஒரு சமயம், சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ‘அண்ணாவால் நல்ல எதிர்க்கட்சி தலைவராக இயங்கத் தெரியவில்லை’ என்று ஆளுங்கட்சியினர் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து பதிலுரைத்த அண்ணா, “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் இப்போது உள்ள இடத்தில் நாங்கள் ஒரு காலத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் இதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தீர்க்கதரிசனத்துடன் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பேசப்பட்டு வந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த அண்ணா திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்ற கொள்கையில் பிடிவாதமாக நின்றார்.

இந்திய-சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்க மத்திய அரசு முன்வந்தது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக பிரிவினைவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் இந்த சட்டம் முன்வைக்கப்பட்டபோது அண்ணா எம்.பி.யாக இருந்தார். இந்த சட்டத்தை பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அண்ணாவால் தடுக்க இயலவில்லை. அதன் விளைவாக தி.மு.க.வினர் அந்த கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர்.

1963-ல் தனது தனித்திராவிட நாடு கொள்கையை கைவிட்ட அண்ணா, (அன்றைய) ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராக பல்வேறு காலகட்டங்களில் பல போராட்டங்களில் ஈடுபட்டு காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார்.

மத்திய அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்.

மாநில சுயாட்சி கொள்கையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அண்ணா, ‘திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளை அறிந்து கைவிட்டு விட்டோம்’ என்று விளக்கம் அளித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக தமிழக மக்களின்... குறிப்பாக மாணவ சமுதாயத்தின் பேராதரவு தி.மு.க.வுக்கு கிடைத்தது.

1967-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத திராவிடக் கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற லட்சிய முழக்கத்துடன் அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்ற உன்னத திட்டத்தை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் பசியை போக்கினார்.

சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய (காங்கிரஸ்) அரசின் மும்மொழித் திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும், மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தின் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்ற புதிய பெயரினை சூட்டிய அண்ணா, தமிழக வரலாற்றில் இருந்து என்றென்றும் நீங்காத வகையில் சிறப்பிடம் பெற்றார்.

தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சராக முதன்முறை அரியாசனம் ஏறிய அண்ணாவால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியை வகிக்க முடிந்தது. புற்றுநோய் என்ற மாறுவேடத்தில் வந்த காலன், காலத்தை கடந்த-இறவாப் புகழுக்குரிய அந்த பேரறிஞரின் பூத உடலை 3-2-1969 அன்று நம்மிடம் இருந்து கவர்ந்து சென்று விட்டான்.

கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் அவரின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு தமிழக மக்கள் மரியாதை செலுத்தினர். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவராகவும் தமிழக மக்களால் அவர் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

திரையுலகில் அண்ணாவின் பங்களிப்பு :-

1. 1949 - வேலைக்காரி - கதை, திரைக்கதை, வசனம்

2. 1949 - நல்லதம்பி - கதை, திரைக்கதை, வசனம்

3. 1951 - ஓர் இரவு - கதை, வசனம்

4. 1954 - சொர்க்க வாசல் - கதை, திரைக்கதை, வசனம்

5. 1956 - ரங்கோன் ராதா - கதை

6. 1959 - தாய் மகளுக்குக் கட்டிய தாலி - கதை

7. 1961 - நல்லவன் வாழ்வான் - கதை, வசனம்

8. 1978 - வண்டிக்காரன் மகன் - கதை

கின்னஸ் சாதனை படைத்துள்ள நடிகை மனோரமா, அண்ணாவைப் பற்றி பகிர்ந்த நிணைவலைகளின் சிறு துளி...

“பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில் நான் கதாநாயகி இந்துமதியாக நடித்தேன்.

இதே நாடகத்தில் ஈ.வெ.கி. சம்பத் சிவாஜியாகவும், கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் எனது நடிப்பைப் பற்றி அண்ணா அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

முரசொலி சொர்ணம் எழுதிய 'விடை கொடு தாயே' நாடகத்தில் நான்தான் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தேன். இந்த நாடகத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை தலைமை வகித்து என் நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஒருசமயம் சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் (சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே) நடந்த நாடகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது. தொடர்ந்து எனக்கு சினிமா படப்பிடிப்பு இருந்து வந்ததால் என்னால் இனி நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

அதனால், வேறு ஒரு நடிகையை கதாநாயகியாகப் போட்டு அந்த நாடகத்தை நடத்தினார்கள். இந்த நாடகத்திற்கும் அண்ணா தலைமை வகித்துள்ளார். வழக்கம்போல் நாடகத்தைப் பாராட்டிப் பேசிய அண்ணா, வீட்டுக்குப் போகும்போது சொர்ணத்திடம் "நாளைக்கு என்னை வீட்டில் வந்துபார்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

மறுநாள் சொர்ணம் அண்ணாவை சந்தித்துள்ளார்.

‘நாடகத்தினால்தான் நடிகர் - நடிகைகளுக்குப் பெருமை என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகு நடிகர் - நடிகைகளினால் தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது! இனிமேல், மனோரமா இந்த நாடகத்தில் நடிக்காவிட்டால் நாடகத்தை நிறுத்திவிடு. தொடர்ந்து போடாதே’ என்று அண்ணா தன்னிடம் சொன்னதாக பின்பொரு சந்தர்ப்பத்தில் சொர்ணமே என்னிடம் தெரிவித்தார்.” என்ற தகவலை ஒரு பேட்டியில் மனோரமா பதிவு செய்துள்ளார்.

பார்வதி பி.ஏ., செவ்வாழை, சிலந்தியும் சிவனும், நமது நாடு, கல்வி நீரோடை, வண்டிக்காரன் மகன், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், திராவிடர் நிலை: தமிழரின் தனிப் பன்பு, ஏ! தாழ்ந்த தமிழகமே!, தீ பரவட்டும் உள்ளிட்ட சில நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள அண்ணாவின் பல உரைகள், ‘தம்பிக்கு..’ என்ற தலைப்பில் அவர் தொடர்ந்து எழுதிய கடிதங்கள் போன்றவற்றையும் பல்வேறு பதிப்பகங்கள் புத்தகங்களாக வெளியிட்டுள்ளன.

அவரது 46-வது நினைவு தினமான இன்று ‘மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்ற அரசியல் மேதையான அறிஞர் அண்ணா வலியுறுத்தி வந்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ ஆகியவற்றை நாமும் பொது வாழ்வில் நிலை நிறுத்தி நன்மக்களாய் வாழ உறுதியேற்போம்!

Russellail
3rd February 2015, 10:56 AM
இன்று தைப்பூச திருநாள் முன்னிட்டு....TMS அவர்கள் பாடிய முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் நாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக பாடி இருந்தால்...

https://www.youtube.com/watch?v=qb2rwalrAkU&feature=youtu.be

எம்.ஜி.ஆர். திருப்புகழ்.

மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
இவ்வையம் உள்ளவரை புகழ்பாட;
சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
அவன்தன் அடிசேர.

எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட;
உயர்வெற்றி திருமகள் நின்சுற்றம் விளம்பினை
உன்கொற்றம் வழிபாட.

வெட்டிகுணத்தவர், கயமைகள்வர்கள்
கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
வெட்கித்தலைகுனியும் (நாணும்)
வித்தைபல கற்ற பெறுவீரா;
வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.

மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு;
புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தம்
உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.

நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.

கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை;
பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோட.

பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
இயற்கை பொன்குணம் - பெருமானே;
கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
நின்பெற்றன்னை வானுலகில்.


பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.

Russelldvt
3rd February 2015, 12:00 PM
http://i62.tinypic.com/w8xelh.jpg

Russelldvt
3rd February 2015, 12:01 PM
http://i61.tinypic.com/2r59kih.jpg

Russelldvt
3rd February 2015, 12:03 PM
http://i60.tinypic.com/27y66ie.jpg

Stynagt
3rd February 2015, 12:05 PM
http://i61.tinypic.com/15dkmmx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd February 2015, 12:05 PM
http://i61.tinypic.com/2wlvip1.jpg

Stynagt
3rd February 2015, 12:06 PM
http://i61.tinypic.com/2gwglua.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:07 PM
http://i62.tinypic.com/24kwdvd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd February 2015, 12:08 PM
http://i57.tinypic.com/mh56iq.jpg

Stynagt
3rd February 2015, 12:08 PM
http://i58.tinypic.com/8wdx7l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd February 2015, 12:09 PM
http://i58.tinypic.com/e6pno7.jpg

Stynagt
3rd February 2015, 12:09 PM
http://i60.tinypic.com/wa0cg2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd February 2015, 12:10 PM
http://i58.tinypic.com/2yo8yz5.jpg

Stynagt
3rd February 2015, 12:10 PM
http://i58.tinypic.com/4ggmms.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd February 2015, 12:10 PM
http://i59.tinypic.com/2ufvv4i.jpg

Russelldvt
3rd February 2015, 12:11 PM
http://i61.tinypic.com/16ay353.jpg

Russelldvt
3rd February 2015, 12:13 PM
http://i59.tinypic.com/alm2y1.jpg

Stynagt
3rd February 2015, 12:13 PM
http://i58.tinypic.com/jubr06.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russelldvt
3rd February 2015, 12:14 PM
http://i59.tinypic.com/n1uyyr.jpg

Stynagt
3rd February 2015, 12:16 PM
http://i57.tinypic.com/dz8lj7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:17 PM
http://i62.tinypic.com/2rnyp81.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:19 PM
http://i61.tinypic.com/4vftht.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:21 PM
http://i57.tinypic.com/2rzxk5l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:22 PM
http://i59.tinypic.com/o69uf5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:39 PM
http://i62.tinypic.com/2f0abtz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:56 PM
http://i60.tinypic.com/28iajpv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:57 PM
http://i62.tinypic.com/xohbih.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:58 PM
http://i58.tinypic.com/axiutx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 12:59 PM
http://i62.tinypic.com/11w7k00.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 01:03 PM
http://i59.tinypic.com/33xvmuf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
3rd February 2015, 01:08 PM
http://i62.tinypic.com/6j13jt.jpg

Stynagt
3rd February 2015, 01:09 PM
http://i57.tinypic.com/2d0i3w8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
3rd February 2015, 01:10 PM
http://i59.tinypic.com/33xvmuf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

நம் இதய தெய்வத்தின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் புரட்சித்தலைவர் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இந்த நாளில் நினைவு கூர்ந்த சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு
மிக்க நன்றி !

Stynagt
3rd February 2015, 01:13 PM
http://i60.tinypic.com/fxt79g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 01:16 PM
http://i58.tinypic.com/1zzwuf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
3rd February 2015, 01:20 PM
http://i59.tinypic.com/o69uf5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

பொன்மனச்செம்மல் போற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா !

உருவாக்கிய கட்சி கொடியில் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவம்.

உருவாக்கிய கட்சியின் பெயரோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

கொண்ட அரசியல் கொள்கைக்கு வைத்த பெயரோ அண்ணாயிசம்

ஆற்றும் உரையின் முடிவில் "அண்ணா நாமம் வாழ்க"

இப்படி, தான் ஏற்றுக்கொண்ட தலைவரின் பெயரை எங்கும் பதிய வைத்த நமது மக்கள் திலகத்தின் பெருமைகளை எவரும் அடைய முடியாது !

siqutacelufuw
3rd February 2015, 01:26 PM
http://i58.tinypic.com/1zzwuf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அரிய புகைப்படத்தை பலரும் அறிய, " என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது" - என்ற நம் மக்கள் திலகத்தின் காவியப் பாடலின் படி பதிவுகள் தொடர்ச்சியாக வழங்கி வரும் அருமை சகோதரர் கலியபெருமாள் அவர்களுக்கு மீன்டும் என் நன்றி !

Russellisf
3rd February 2015, 01:29 PM
jayalalitha earlier days cutout alongwith our god



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsec935f60.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsec935f60.jpg.html)

oygateedat
3rd February 2015, 01:51 PM
From 13.02.2015 at coimbatore shanmuga theatre
navarathinam

ainefal
3rd February 2015, 02:46 PM
Lookalikes add colour to campaign

Whenever there are elections, lookalikes of popular leaders hog the limelight. The Srirangam constituency, which goes to poll on February 13, is no exception either as the former Chief Minister M.G.Ramachandran’s clones on the streets of Srirangam constituency would tell you.

The AIADMK has taken the lead by bringing in lookalikes of its founder from different parts of the State.

Donning the iconic fur cap, dark sunglasses, and wrist watch of the late superstar, the lookalikes adopt various ingenious strategies to capture the attention of the voters. While some of them are artistes, most others are diehard fans of the yesteryear tinsel king.

The lookalikes with a rich make-up try to connect with the voters by waving and folding hands – just as their leader used to. Some of them deliver short speeches and sing popular songs from the films of MGR. Campaign managers also take them for door-to-door canvassing. “Though more than two decades have passed since his death, the image of MGR continues to remain strong among the people of the State. He unfailingly fetches us votes,” says a campaign manager of AIADMK in Srirangam.

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/lookalikes-add-colour-to-campaign/article6850688.ece

Russellisf
3rd February 2015, 02:56 PM
அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர் என்று தலைவரின் பொற் கையின் ரேகை பார்த்து சொல்கிறாரா தேவர் அவர்கள் ?


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps93d09bb1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps93d09bb1.jpg.html)

ainefal
3rd February 2015, 02:59 PM
எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்கு சுவாரஸ்யம் கூட்ட சிலபல நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.

அந்த வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கையாண்டுவரும் யுக்தி வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்க, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்ற ஒருமித்த தோற்றம் கொண்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் சென்றால், ஆங்காங்கே கருப்புப் கண்ணாடி, தொப்பி, பெரிய கைக் கடிகாரம் என மேக்-அப் போட்டு வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள், எம்.ஜி.ஆர். கையசைப்பது போலவே வாக்காளர்களைப் பார்த்து கையசைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். சிலர், எம்.ஜி.ஆர். குரலில் பேசவும், அவரது திரைப்படங்களில் இருந்து பிரபல பாடல்களைப் பாடியும் கவனத்தை ஈர்க்கின்றனர்.

எம்.ஜி.ஆர் மறைந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு உள்ள மதிப்பு சற்றும் குறையவில்லை. எனவே, இதுபோன்ற பிரச்சாரங்கள் எங்களுக்கு நிச்சயம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என கூறுகிறார் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக பிரச்சாரக் குழு மேலாளர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து காலியான அத்தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%A E%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2% E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%A E%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%A E%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4% E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%A E%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%A F%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6852097.ece?ref=omnews

Russellisf
3rd February 2015, 03:04 PM
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் இது பழமொழி

இன்று புரட்சி தலைவர் இருந்தாலும் கோடி பொன் இறந்தாலும் கோடி பொன் இது புது மொழி




எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்கு சுவாரஸ்யம் கூட்ட சிலபல நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.

அந்த வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கையாண்டுவரும் யுக்தி வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்க, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்ற ஒருமித்த தோற்றம் கொண்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் சென்றால், ஆங்காங்கே கருப்புப் கண்ணாடி, தொப்பி, பெரிய கைக் கடிகாரம் என மேக்-அப் போட்டு வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள், எம்.ஜி.ஆர். கையசைப்பது போலவே வாக்காளர்களைப் பார்த்து கையசைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். சிலர், எம்.ஜி.ஆர். குரலில் பேசவும், அவரது திரைப்படங்களில் இருந்து பிரபல பாடல்களைப் பாடியும் கவனத்தை ஈர்க்கின்றனர்.

எம்.ஜி.ஆர் மறைந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு உள்ள மதிப்பு சற்றும் குறையவில்லை. எனவே, இதுபோன்ற பிரச்சாரங்கள் எங்களுக்கு நிச்சயம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என கூறுகிறார் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக பிரச்சாரக் குழு மேலாளர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து காலியான அத்தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%A E%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2% E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%A E%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%A E%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4% E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%A E%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%A F%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6852097.ece?ref=omnews

siqutacelufuw
3rd February 2015, 03:19 PM
Lookalikes add colour to campaign

Whenever there are elections, lookalikes of popular leaders hog the limelight. The Srirangam constituency, which goes to poll on February 13, is no exception either as the former Chief Minister M.G.Ramachandran’s clones on the streets of Srirangam constituency would tell you.

The AIADMK has taken the lead by bringing in lookalikes of its founder from different parts of the State.

Donning the iconic fur cap, dark sunglasses, and wrist watch of the late superstar, the lookalikes adopt various ingenious strategies to capture the attention of the voters. While some of them are artistes, most others are diehard fans of the yesteryear tinsel king.

The lookalikes with a rich make-up try to connect with the voters by waving and folding hands – just as their leader used to. Some of them deliver short speeches and sing popular songs from the films of MGR. Campaign managers also take them for door-to-door canvassing. “Though more than two decades have passed since his death, the image of MGR continues to remain strong among the people of the State. He unfailingly fetches us votes,” says a campaign manager of AIADMK in Srirangam.

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/lookalikes-add-colour-to-campaign/article6850688.ece

IT IS QUITE TRUE. THESE WORDS ARE GOLDEN WORDS. 90% OF THE VOTES SECURED BY AIADMK, IN THE ELECTIONS, AFTER THE DEATH OF OUR BELOVED GOD M.G.R. IS ONLY BECAUSE OF HIS UNSHAKEN GLORY.

Thanks to 'THE HINDU' for publication of this News and to Mr. Sailesh Basu, who posted the message in this Thread.

Richardsof
3rd February 2015, 03:20 PM
MAKKAL THILAGAM WITH CHENNA REDDY

http://i60.tinypic.com/2qcnw9g.jpg

Richardsof
3rd February 2015, 03:21 PM
TOMORROW SPECIAL REMEMBRANCE
4.2.1966- 50TH ANNIVERSARY
http://i57.tinypic.com/2a5b2uo.jpg

Richardsof
3rd February 2015, 03:23 PM
TOMORROW SPECIAL REMEMBRANCE
4.2.1972- 44TH ANNIVERSARY

http://i57.tinypic.com/2d92r9k.jpg

Richardsof
3rd February 2015, 03:25 PM
TOMORROW SPECIAL REMEMBRANCE
MARU PIRAVI KANDA MAAKKAL THILAGAM MGR AT CHENNAI

4.2.1985- 30TH ANNIVERSARY

http://i60.tinypic.com/20frfxj.gif

Russellisf
3rd February 2015, 03:29 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zpsa93a76fb.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zpsa93a76fb.jpg.html)





TOMORROW SPECIAL REMEMBRANCE
4.2.1966- 50TH ANNIVERSARY
http://i57.tinypic.com/2a5b2uo.jpg

Stynagt
3rd February 2015, 03:46 PM
http://i59.tinypic.com/2h6uern.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 03:48 PM
http://i62.tinypic.com/14dk2sw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 03:49 PM
http://i58.tinypic.com/294qema.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 03:51 PM
http://i60.tinypic.com/11jufr5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 03:52 PM
http://i61.tinypic.com/2mi5f6s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 03:53 PM
http://i59.tinypic.com/i26mj5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 03:54 PM
http://i57.tinypic.com/34ga808.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
3rd February 2015, 04:08 PM
http://i62.tinypic.com/2jxxmq.jpg

siqutacelufuw
3rd February 2015, 04:10 PM
http://i61.tinypic.com/5ujvqq.jpg

siqutacelufuw
3rd February 2015, 04:11 PM
http://i59.tinypic.com/126d6xd.jpg

PERARINGAR ANNA AT HIS YOUTH STAGE, DURING GRADUATION

siqutacelufuw
3rd February 2015, 04:13 PM
http://i57.tinypic.com/jg1frc.jpg

PERARINGAR ANNA, AS DRAMA ARTIST

Stynagt
3rd February 2015, 04:15 PM
http://i59.tinypic.com/2wf8daf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:18 PM
http://i58.tinypic.com/qn5mp3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:26 PM
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிட்சைக் கேட்க போவதில்லே .

http://i61.tinypic.com/2d8f4if.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:28 PM
புதுவைக்குயில் பாரதிதாசனுடன் பேரறிஞர்

http://i62.tinypic.com/no64ib.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:29 PM
வெள்ளை உள்ளங்கள்
http://i57.tinypic.com/2nkubtu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:47 PM
jayalalitha earlier days cutout alongwith our god



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsec935f60.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsec935f60.jpg.html)

புதுச்சேரியில் 1998ம் ஆண்டு அதிமுகவில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட திரு. லக்கி பெருமாள் அவர்களால் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்ட கட்அவுட். தற்போது இது போன்ற தலைவரின் கட்அவுட்களைப் பார்ப்பது அரிதாகிவிட்ட நிகழ்ச்சி வேதனைக்குரியதாகும். இந்தப் பதிவினைப் பதிவிட்டு பழைய நினைவுகளை அசைபோட வைத்த திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:53 PM
http://i59.tinypic.com/316b874.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 04:57 PM
காஞ்சித்தலைவன்
http://i62.tinypic.com/330w754.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2015, 05:12 PM
இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்
http://i60.tinypic.com/209pyx0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellzlc
3rd February 2015, 05:59 PM
http://i62.tinypic.com/2jxxmq.jpg

அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்..

டாக்டர் அப்துல் கலாம்



அது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம்.. தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டிருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும் தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்புபோல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.


அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. இரு நாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம்.

மிக எளிமையான வீட்டில் ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.


ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்த அண்ணா, 'இப்போதைக்கு என்னால் அங்கே வர முடியாது' என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக 'கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தோம்.

மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் 'சரி, திருவையாருக்குச் சுற்றுப்பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக்கொண்டதோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.


அண்ணாவிடமிருந்து ஒருநாள் நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன் என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரியரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட்காமல் எப்படி அவரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.


அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது.

அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து 'நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள் அதில் பேசுகிறேன்' என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாக பேசி முடிவெடுத்து 'நதிகள்' என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.


மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணிநேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார்.

நாங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நதிகளின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இன்றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும் எழுதும் கட்டுரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.


ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ்நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்பதில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.

courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
3rd February 2015, 06:01 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/jjlp8o.jpg

மக்கள் திலகத்துக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் :

1. "புரட்சி நடிகர்" என்ற பட்டம் உறந்தை உலகப்பன் என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் கலைஞர் கருணாநிதியால்,05-06-1952 அன்று வழங்கப்பட்டது.

2. "மக்கள் திலகம்" என்ற பட்டம் தமிழ் வாணன் அவர்களால் 1961ல் வழங்கப்பட்டது.

3. "நடிக மன்னன்" என்ற பட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியன் அவர்களால் 1958ல் வழங்கப்பட்டது.

4. "நடிகப்பேரரசர்" என்ற பட்டம் "நாடோடி மன்னன்" பட வெற்றி விழாவில், 1959ல் அளிக்கப்பட்டது.

5. "கலைச்சுடர்" என்ற பட்டம் மதுரை நவீன தேகப் பயிற்சி கலை மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.

6. "வாத்தியார்" என்ற பட்டம் நெல்லை மாவட்ட நகராட்சி மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.

7. ";கலையரசர்" என்ற பட்டம் விழுப்புரம் முத்தமிழ் மன்றத்தினரால், பேராசிரியர் சிதம்பரநாதர் மூலம், 1960ல் வழங்கப்பட்டது.

8. "வெற்றி வீரன்" என்கின்ற பட்டம் 1961ம் ஆண்டு திருச்செங்கோடு இடைத் தேர்தலின் போது, பொது மக்கள் அன்புடன் வழங்கினர்.

9 ."பொன்மனச்செம்மல்" என்கின்ற பட்டம், திரு. முருக கிருபானந்த வாரியார் அவர்களால், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 1968ல் வழங்கப்பட்டது.

10. " கலைமன்னர் " என்ற பட்டம், அப்போதைய பிரதம நீதிபதி பி.வி. ராஜ மன்னார் அவர்களால், 1964ல் வழங்கப்பட்டது.

11. "கலியுகப்பாரி" என்ற பட்டம் மதுரை ஜெமினி கணேஷ் கலைக் குழுவினர் 1962ம் ஆண்டு வழங்கி சிறப்பித்தனர்.

12. "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்புடன் 1967ல் அழைத்து கவுரவித்தார்.

13. "புரட்சித் தலைவர்" என்ற பட்டம் 1972ல் சென்னை மெரீனா கடற்கரையில், திரண்ட லட்சக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்களால் அளிக்கப்பட்டது.

14. "கலை வேந்தன்" என்கின்ற பட்டம் மலேசிய அரசாங்கம் 1972ல் அளித்து கவுரவித்தது.

15. "பாரத்" என்ற இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்திய அரசாங்கம், 1972ல் வழங்கி சிறப்பு செய்தது.

16. " டாக்டர்" பட்டம், முதலில் அமெரிக்க அரிசோனா பல்கலை கழகம், 1979ல் வழங்கி கவுரவித்தது.

17. பின்னர், மீண்டும், "டாக்டர்" பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மூலம் 1983ல் பெற்றார்.

18. "கொள்கை வேந்தன்" (CHAMPION OF PRINCIPLS) என்ற பட்டம், மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் ரசிகர்கள் 1971ம் ஆண்டு நம் மன்னவனுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

19. "பாரத ரத்னா" என்ற நமது இந்திய நாட்டின் உயரிய விருது 1988ல் அவரது மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது.

20. "நிருத்திய சக்கரவர்த்தி" என்ற பட்டம், இலங்கை அரசாங்கத்தால் 1966ல் வழங்கப்பட்டது.

21. "மக்கள் நடிகர்" என்ற பட்டம், 1960ல் நாகர் கோவிலில் நடைபெற்ற கலைவாணர் பிறந்த நாள் நிகழ்சியீல் வழங்கப்பட்டது.

22, "வசூல் சக்கரவர்த்தி" என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

இவைகளை தவிர, மக்கள் உவகையுடன் உன்னத தலைவருக்கு சூட்டி மகிழ்ந்த பட்டங்கள் வருமாறு :

1. வசூல் பேரரசர்
2. ஏழைப் பங்காளன்
3. கலியுகக் கடவுள்
4. ஆலயம் கண்ட ஆண்டவன்
5. தரணி கண்ட தனிப்பிறவி
6. முத்தமிழைப் போற்றிய முதல்வன்
7. முப்பிறவி கண்ட முதல்வர்
8. கொடை வள்ளல்
9. மனிதப்புனிதர்
10, மக்கள் தங்கம்
11. மக்கள் தலைவர்
12. நாட்டுப்பற்று நாயகன்
13. குணக்குன்று
14. எழில் வேந்தன்
15. உலகத் தமிழர்களின் உன்னத தலைவன்
16. கலியுகக் கர்ணன்
17. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல்
18. சத்துணவு தந்த சரித்திர நாயகன்
19. இதய தெய்வம்
20. சம தர்ம சமுதாயக் காவலன்
21. எட்டாவது அதிசயம்
22. புரட்சிப் புரவலர்

முதன் முதலில் "மக்கள் திலகம்" என்று TITLE ல் காண்பிக்கப்பட்டது 1961ல் வெளியான "சபாஷ் மாப்பிள்ளே" படத்தில்தான்.

Russellail
3rd February 2015, 06:30 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். மக்கள் திலகத்தின் மாட்சிமை கருத்துக்கள்

http://i59.tinypic.com/12499om.gifhttp://i59.tinypic.com/2znzhno.gifhttp://i62.tinypic.com/2czsdhf.jpghttp://i58.tinypic.com/2j4vqft.jpg
https://www.youtube.com/watch?v=fA7vsW4MSOg
http://i58.tinypic.com/dnni90.jpghttp://i57.tinypic.com/wksakx.jpghttp://i57.tinypic.com/9pv1fk.jpghttp://i57.tinypic.com/qr0vbq.jpg
http://i61.tinypic.com/2ps1t02.jpghttp://i62.tinypic.com/65v788.jpg

Russellail
3rd February 2015, 06:32 PM
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.மக்கள் திலகத்தின் மாட்சிமை கானங்கள் / கருத்துக்கள் / காட்சிகள்

http://i62.tinypic.com/315g87c.jpghttp://i60.tinypic.com/dokoep.jpghttp://i59.tinypic.com/2cf9lis.jpghttp://i59.tinypic.com/j839fq.jpghttp://i60.tinypic.com/28lt4yo.jpghttp://i57.tinypic.com/ih4m7o.jpghttp://i57.tinypic.com/i74ihk.jpghttp://i58.tinypic.com/2dw6osm.jpghttp://i60.tinypic.com/jh7x2e.jpghttp://i60.tinypic.com/2vmhreo.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:49 PM
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி 29-09-1963 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. பொது மக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் நிதி திரட்டி தென்னாட்டு காந்தி அண்ணா அவர்களுக்கு பரிசாக அளித்தனர். (வழக்கம் போல் புரட்சித்தலைவரின் பெரும்பான்மையான பங்கும் இதில் உண்டு).

இதற்கான விழாவில் காஞ்சி கரிபால்டி அண்ணா அவர்களிடம் கார் சாவியை வழங்கும் நல்வாய்ப்பு நம் மக்கள் திலகத்துக்கு கிடைத்தது. அவ்விழாவில், நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் ஆற்றிய உரை கட்டுரை வடிவில் கீழேதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை,

http://i60.tinypic.com/nzi0d5.jpg

என்ற புத்தகத்திலிருந்து பதிவு செய்யப்படுகிறது.

siqutacelufuw
3rd February 2015, 06:49 PM
http://i58.tinypic.com/2nqt8ol.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:50 PM
http://i57.tinypic.com/2ep0h7t.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:51 PM
http://i57.tinypic.com/2znokex.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:51 PM
http://i58.tinypic.com/1zfpydi.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:53 PM
http://i61.tinypic.com/2sacldh.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:57 PM
http://i60.tinypic.com/312h368.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:58 PM
http://i62.tinypic.com/2pouvtk.jpg

siqutacelufuw
3rd February 2015, 06:59 PM
http://i61.tinypic.com/143f02q.jpg

siqutacelufuw
3rd February 2015, 07:01 PM
http://i61.tinypic.com/ehejas.jpg

Richardsof
3rd February 2015, 07:05 PM
Ponmanachemmal m.g.r. Filmography news & events
இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களால் துவங்கப்பட்ட திரியில் மீண்டும் ''அலிபாபாவும் 40 திருடர்களும் ''பட முழு தொகுப்புடன் தொடர உள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

c.s.kumar & s.vinod

siqutacelufuw
3rd February 2015, 07:12 PM
http://i62.tinypic.com/2v7xcoz.jpg

oygateedat
3rd February 2015, 08:21 PM
http://s7.postimg.org/3swl4lv4b/Untitled_4.jpg (http://postimage.org/)

oygateedat
3rd February 2015, 08:23 PM
http://s4.postimg.org/orpijuebh/Untitled_13.jpg (http://postimage.org/)

oygateedat
3rd February 2015, 08:23 PM
http://s4.postimg.org/7xowrzzst/Untitled_12.jpg (http://postimage.org/)

oygateedat
3rd February 2015, 08:28 PM
http://s24.postimg.org/5j0hvzmg5/image.jpg (http://postimg.org/image/b76smvqsh/full/)

oygateedat
3rd February 2015, 08:35 PM
http://s9.postimg.org/7l4z5utsv/alt_Ah_Dl8l_QHjhfk_Jif_OHie_HN9_Hr_Fv_Z199_QGqkz.j pg (http://postimage.org/)

SOON AT COIMBATORE SHANMUGAA

oygateedat
3rd February 2015, 08:59 PM
http://s13.postimg.org/3ug4fdh07/alt_As_Szgz_GK66_XKy_RM_vf_MQa_As64j_AUMa_ZHeo_U.j pg (http://postimage.org/)

FROM 13.02.2015 ONWARDS AT COIMBATORE SHANMUGAA THEATRE

oygateedat
3rd February 2015, 09:31 PM
http://s24.postimg.org/6b9jl4pv9/bvff.jpg (http://postimg.org/image/46p6k1o8h/full/)

Russellwzf
3rd February 2015, 09:46 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.


http://i61.tinypic.com/jjlp8o.jpg

மக்கள் திலகத்துக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் :

1. "புரட்சி நடிகர்" என்ற பட்டம் உறந்தை உலகப்பன் என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் கலைஞர் கருணாநிதியால்,05-06-1952 அன்று வழங்கப்பட்டது.

2. "மக்கள் திலகம்" என்ற பட்டம் தமிழ் வாணன் அவர்களால் 1961ல் வழங்கப்பட்டது.

3. "நடிக மன்னன்" என்ற பட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியன் அவர்களால் 1958ல் வழங்கப்பட்டது.

4. "நடிகப்பேரரசர்" என்ற பட்டம் "நாடோடி மன்னன்" பட வெற்றி விழாவில், 1959ல் அளிக்கப்பட்டது.

5. "கலைச்சுடர்" என்ற பட்டம் மதுரை நவீன தேகப் பயிற்சி கலை மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.

6. "வாத்தியார்" என்ற பட்டம் நெல்லை மாவட்ட நகராட்சி மன்றத்தினரால் 1960ல் வழங்கப்பட்டது.

7. ";கலையரசர்" என்ற பட்டம் விழுப்புரம் முத்தமிழ் மன்றத்தினரால், பேராசிரியர் சிதம்பரநாதர் மூலம், 1960ல் வழங்கப்பட்டது.

8. "வெற்றி வீரன்" என்கின்ற பட்டம் 1961ம் ஆண்டு திருச்செங்கோடு இடைத் தேர்தலின் போது, பொது மக்கள் அன்புடன் வழங்கினர்.

9 ."பொன்மனச்செம்மல்" என்கின்ற பட்டம், திரு. முருக கிருபானந்த வாரியார் அவர்களால், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 1968ல் வழங்கப்பட்டது.

10. " கலைமன்னர் " என்ற பட்டம், அப்போதைய பிரதம நீதிபதி பி.வி. ராஜ மன்னார் அவர்களால், 1964ல் வழங்கப்பட்டது.

11. "கலியுகப்பாரி" என்ற பட்டம் மதுரை ஜெமினி கணேஷ் கலைக் குழுவினர் 1962ம் ஆண்டு வழங்கி சிறப்பித்தனர்.

12. "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்புடன் 1967ல் அழைத்து கவுரவித்தார்.

13. "புரட்சித் தலைவர்" என்ற பட்டம் 1972ல் சென்னை மெரீனா கடற்கரையில், திரண்ட லட்சக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்களால் அளிக்கப்பட்டது.

14. "கலை வேந்தன்" என்கின்ற பட்டம் மலேசிய அரசாங்கம் 1972ல் அளித்து கவுரவித்தது.

15. "பாரத்" என்ற இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்திய அரசாங்கம், 1972ல் வழங்கி சிறப்பு செய்தது.

16. " டாக்டர்" பட்டம், முதலில் அமெரிக்க அரிசோனா பல்கலை கழகம், 1979ல் வழங்கி கவுரவித்தது.

17. பின்னர், மீண்டும், "டாக்டர்" பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மூலம் 1983ல் பெற்றார்.

18. "கொள்கை வேந்தன்" (CHAMPION OF PRINCIPLS) என்ற பட்டம், மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் ரசிகர்கள் 1971ம் ஆண்டு நம் மன்னவனுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

19. "பாரத ரத்னா" என்ற நமது இந்திய நாட்டின் உயரிய விருது 1988ல் அவரது மறைவுக்குப் பின் அளிக்கப்பட்டது.

20. "நிருத்திய சக்கரவர்த்தி" என்ற பட்டம், இலங்கை அரசாங்கத்தால் 1966ல் வழங்கப்பட்டது.

21. "மக்கள் நடிகர்" என்ற பட்டம், 1960ல் நாகர் கோவிலில் நடைபெற்ற கலைவாணர் பிறந்த நாள் நிகழ்சியீல் வழங்கப்பட்டது.

22, "வசூல் சக்கரவர்த்தி" என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

இவைகளை தவிர, மக்கள் உவகையுடன் உன்னத தலைவருக்கு சூட்டி மகிழ்ந்த பட்டங்கள் வருமாறு :

1. வசூல் பேரரசர்
2. ஏழைப் பங்காளன்
3. கலியுகக் கடவுள்
4. ஆலயம் கண்ட ஆண்டவன்
5. தரணி கண்ட தனிப்பிறவி
6. முத்தமிழைப் போற்றிய முதல்வன்
7. முப்பிறவி கண்ட முதல்வர்
8. கொடை வள்ளல்
9. மனிதப்புனிதர்
10, மக்கள் தங்கம்
11. மக்கள் தலைவர்
12. நாட்டுப்பற்று நாயகன்
13. குணக்குன்று
14. எழில் வேந்தன்
15. உலகத் தமிழர்களின் உன்னத தலைவன்
16. கலியுகக் கர்ணன்
17. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல்
18. சத்துணவு தந்த சரித்திர நாயகன்
19. இதய தெய்வம்
20. சம தர்ம சமுதாயக் காவலன்
21. எட்டாவது அதிசயம்
22. புரட்சிப் புரவலர்

முதன் முதலில் "மக்கள் திலகம்" என்று TITLE ல் காண்பிக்கப்பட்டது 1961ல் வெளியான "சபாஷ் மாப்பிள்ளே" படத்தில்தான்.

Nice Compilation Sir, Thank you !!

ainefal
3rd February 2015, 09:51 PM
http://i60.tinypic.com/2r2m96u.jpg

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் திருவள்ளுவர். மனித நேய பண்பெல்லாம் மக்கள் திலகம் அருள் கொடையாகும். "மன்னாதி மன்னன் புகழ் எல்லாம், மெய்யோர், நல்லோர் நெஞ்சின் இறைவடிவாகும்" என விளம்பி மக்கள்திலகம் திரியில் பாகம் 14 துவங்க எனக்கு வாய்ப்பு அளித்த மக்கள்திலகம் திரியின் நண்பர்களுக்கும் மற்றும் மையம் அங்கத்தினர்களுக்கும் எனது நன்றிகள். மேலும், இத்திரியின் பதிவு பதினான்கு தொடங்க வாய்ப்பு வந்தது பெரும் மகிழ்ச்சி எனக்கு தந்தது. எனது ராசி எண் 14. எனக்கு வேலை கிடைத்து அலுவலகத்தில் சேர்ந்த நாள் 14.3.1979, என்னுடைய அலுவலக தொடக்க கூட்டு எண்ணிக்கை எண்ணும் 14 (2039), எனக்கு பதவி உயர்வு கிடைத்து, பதவி ஏற்று கொண்ட நாளும் 14.9.2013, என்னுடைய வீட்டு எண்ணும் 356/14 (356=14) இவ்வாறு 14வது திரியினை தொடங்க எனக்கு வந்த வாய்ப்பு மக்கள் திலகம் தந்த அருள்மாட்சி.
http://i58.tinypic.com/9s9u83.jpg

வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுபடை, திருபுகழ்,
கந்த புராணம், மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் போற்றி வழிபாடபட்டவனாம் பாட்டுடைத் தலைவன் என்றும் நிலைத்திருக்கும் தமிழ் கடவுள் முருக பெருமானின் மறு வடிவே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முருகு என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் எம்.ஜி.ஆர். என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் ஒன்றாக இருப்பதே இதற்க்கு சான்றாகும். (M)மு - முகுந்தன் (விஷ்ணு ), (R)ரு-ருத்ர, (சிவன் ) (G)கா-கமலன் (பிரம்மா ). தமிழ் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு தொன்றுதொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டு வரும் தெய்வம். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்களும் பல்வேறு நாம கரணங்களால் மக்களால் அழைக்கப்பட்டவர் என்றும். அவருடைய வாழ்க்கை பயணம் ஆராய்ச்சிக்குரியது. அறிஞர்களாலும், கவிஞர்களாலும், கலைஞர்களாலும், கலை விற்பன்னர்களாலும், நல்லோர்களாலும், ஏழை எளிய மக்களாலும், நடுத்தர மக்களாலும், உயர்தர இனத்தோராலும் புகழப்பட்ட, நேசிக்கப்பட்ட, வணக்கத்திர்க்குஉரியவன் புரட்சி தலைவன் எம்.ஜி.ஆர்.

Best wishes Tenali Rajan Sir.

Russellwzf
3rd February 2015, 10:22 PM
Courtesy : Facebook
http://i60.tinypic.com/k315kj.jpg

orodizli
3rd February 2015, 10:38 PM
மக்கள்திலகம் - என்றெண்டும் திரையுலக சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்., பாகம் 13 இனிதே நிறைவடைந்து, புதிய பாகம் 14 அமர்களமாக தொடங்கியுள்ளது மனதில் மகிழ்ச்சி பிரவாகமாக பாய்கிறது... எல்லா மக்கள்திலகம் அபிமானிகளும் இனிப்பான தகவல்களை பதிந்து எல்லோரும் பயனடைய வாழ்த்துகிறோம்!!!

Russellwzf
3rd February 2015, 10:52 PM
http://i59.tinypic.com/15p4rra.png

Russellwzf
3rd February 2015, 10:52 PM
அரசியல் ஆசான், தன்னை இதயக்கனி என்று புகழாரம் சுட்டிய
அறிஞர் அண்ணாவின் மறைவால், கதறி அழுதார் மக்கள் திலகம்..
http://i57.tinypic.com/21juiwx.jpg

Russellwzf
3rd February 2015, 10:59 PM
http://i59.tinypic.com/e0kjn9.png

Russellwzf
3rd February 2015, 11:00 PM
http://i57.tinypic.com/20s7ew0.jpg

Russellwzf
3rd February 2015, 11:17 PM
http://i57.tinypic.com/2m2jpqa.jpg

Richardsof
4th February 2015, 05:10 AM
4.2.1966

மக்கள் திலகத்தின் ''நான் ஆணையிட்டால் '' முற்றிலும் மாறுபட்ட சமூக சீர்திருத்தப்டம் .அருமையான கதை .நடிகப் பேரசரின் நடிப்பு , துடிப்பான வசனங்கள் , இனிய பாடல்கள் , புதுமையான சண்டை காட்சிகள் என்று விறுவிறுப்பாக
ரசிகர்களுக்கு விருந்து தந்த காவியம் .


http://youtu.be/y3piyh1HT6c

Richardsof
4th February 2015, 05:24 AM
4.2.1972

சங்கே முழங்கு
மக்கள் திலகம் எம்ஜிஆர் முருகன் - கிருபால் சிங் என்ற கதாபாத்திரத்தில் அபாரமாக நடித்த படம் .கோர்ட் காட்சிகளில்
மக்கள் திலகத்தின் வாதங்கள் , குறுக்கு விசாரணை காட்சிகள் படத்தின் ஹை லைட்.
பொம்பளை சிரிச்சா போச்சு - லக்ஷ்மியை கிண்டல் செய்து பாடும் பாடல்
தமிழில் அது ஒரு இனிய கலை - இனிமையான காதல் பாடல்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் - புதுமையான காதல் பாடல்
சிலர் குடிப்பது போலே நடிப்பார் - சூப்பர் ஹிட் பாடல்
உள்ளத்தில் உள்ளதெல்லாம் .உணர்ச்சி .கரமான பாடல்
[/COLOR][/SIZE]
http://youtu.be/GUL62HGORoghttp://youtu.be/pt2-8n47umQ

Richardsof
4th February 2015, 05:24 AM
http://youtu.be/pt2-8n47umQ

Richardsof
4th February 2015, 05:27 AM
http://youtu.be/6wRx8Z_oa-o

Richardsof
4th February 2015, 05:42 AM
4.2.1985.

1984 அக்டோபரில்தமிழக முதல்வர் மக்கள் திலகத்தின் உடல் நிலை பாதிக்கபட்டது .பல்வேறு யூகங்கள் ,வதந்திகள் பரவியது .மக்கள் எல்லோரும் அவரின் உடல் நலன் பூர்ணகுணமடைய நாடெங்கும் பிராத்தனைகள் நடத்தினார்கள் .சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார்கள் . மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கை , மக்களின் பேராதரவு , மருத்துவர்களின் மகத்தான சேவை , மத்திய அரசாங்கத்தின் உரிய நேரத்தில் ,உரிய சேவைகள் , மாநில அரசின் மின்னல் வேக நடவடிக்கைகள் ,மூலம் உடனுக்குடன் மாற்றங்கள் நிகழ்ந்தது . மத்திய மாநில பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்கள் நடந்தது . . மூன்றாவது முறை மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தின் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி கண்ட மக்கள் திலகம் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தமிழக முதல்வராகவே தாயகம் திரும்பிய நாள் 4,2.1985.

fidowag
4th February 2015, 10:14 AM
http://i58.tinypic.com/14lsscl.jpg

Stynagt
4th February 2015, 11:32 AM
அரசியல் ஆசான், தன்னை இதயக்கனி என்று புகழாரம் சுட்டிய
அறிஞர் அண்ணாவின் மறைவால், கதறி அழுதார் மக்கள் திலகம்..
http://i57.tinypic.com/21juiwx.jpg

உயிரோட்டமுள்ள பதிவு. ஆயிரமாயிரம் உணர்வுகளை நம் உள்ளத்தில் எழச்செய்யும் புகைப்படம். நன்றி திரு. சத்யா

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellrqe
4th February 2015, 12:38 PM
நான் ஆணையிட்டால் & சங்கே முழங்கு படங்கள் வெளிவந்த அந்த நாட்களை நினைவு படுத்திபதிவுகள் வழங்கிய திரு வினோத் அவர்களுக்கு நன்றி .ப்ரூக்ளின் மருத்துவ மனையிலிருந்துசென்னை திரும்பிய மக்கள் திலகத்தின் நினைவூட்டலுக்கும் நன்றி .

Russellrqe
4th February 2015, 12:46 PM
http://i57.tinypic.com/20s7ew0.jpg

super. Thanks sathya

Richardsof
4th February 2015, 01:44 PM
வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயல் வீரரும் , மூத்த ரசிகருமான திரு a.கோபால்
அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .
தகவல் . திரு வேலூர் ராமமூர்த்தி .

Russellisf
4th February 2015, 02:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps932604bf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps932604bf.jpg.html)

Russellisf
4th February 2015, 02:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps917d53b8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps917d53b8.jpg.html)

Scottkaz
4th February 2015, 03:42 PM
வேலூர் கே.கே.நகர் முள்ளிபாலயம் பகுதியை சேர்ந்த மக்கள்திலகத்தின் தீவிரபக்தர் மற்றும் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு எம்ஜிஆர் பித்தன் A.கோபால் அவர்கள் நேற்று இறைவன் அடி சேர்ந்தார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இன்று அவருடைய இறுதிசடங்கில் கலந்து கொள்கிறேன் என்ற செய்தி நமது திரியின் நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன்
http://i62.tinypic.com/kdang2.jpg

Scottkaz
4th February 2015, 03:43 PM
http://i61.tinypic.com/33krlea.jpg

Scottkaz
4th February 2015, 03:44 PM
http://i58.tinypic.com/2uq0jmd.jpg

Russellzlc
4th February 2015, 03:44 PM
வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயல் வீரரும் மூத்த ரசிகருமான திரு.ஏ.கோபால் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Scottkaz
4th February 2015, 03:44 PM
http://i61.tinypic.com/2qnz252.jpg

Russellzlc
4th February 2015, 04:06 PM
http://i61.tinypic.com/2hi55dt.jpg

மன்னாதி மன்னன் - 6

துயர் துடைப்பவர்


தலைவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவாறே இங்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராகி, முப்பிறவி எடுத்து தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்த நன்னாள் இன்று.

நான் ஆணையிட்டால், சங்கே முழங்கு திரைப்படங்களின் வெளியீட்டு தினமும் இன்றுதான். நான் ஆணையிட்டால் படத்தில் ‘நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன்..’ பாடலில் தலைவர் என்ன சுறுசுறுப்பு. அதிலும் பாடலின் முடிவில் சறுக்கலான மேடையில் சின்னச் சின்னதாய் ஸ்டெப்ஸ் வைத்து வேகமாக இறங்கும் லாவகம்.. அந்த ஸ்டைலும் .... ஸ்பீடும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

தலைவர் உயிர் பிழைத்து தாயகம் திரும்பிய இதே நாளில் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் ... ‘நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன் ...’பாடல் எவ்வளவு பொருத்தம்.

-----
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் முதல்வராக மன்னாதி மன்னன் தமிழகம் திரும்பிய இந்த நாளில் விஜய் டி.வி. மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை யூ டியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 75,000.

மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் அனைவரையும் கவர்ந்தவர் பேராசிரியர் இளங்கோவன். இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். (டி.வி.யில் பெயரைப் போடாததால் இதே போல எல்லாரும் பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்று தோன்றியது.)

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இவர் ஒரு சயின்டிஸ்ட். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு ஜூனியர். இவர் கூறிய கருத்து முக்கியமானது. இவர் சிறுவயதில் தலைவரின் ரசிகராக இருக்கும்போது அவரைச் சேர்ந்தவர்கள் ‘எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உருப்பட்டதில்லை. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள், ரிக்க்ஷாக்காரர்கள்தான்’ என்று கூறியிருக்கின்றனர்.

அவர்கள் அவ்வாறு கூறியதே, எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்து நாமும் படித்து முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற உணர்வைத் தந்ததாகக் கூறினார். படித்து வாழ்க்கையில் முன்னேறி இன்று ஏரோநாட்டிக்கல் துறையில் 3 நாடுகளில் ஹெச்.ஓ.டி.யாக இருப்பதாகவும் முன்னேற வேண்டும் என்ற உணர்வை அளித்தது தலைவர்தான் என்றும் குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் முன்னேற நேரடியாக மட்டுமின்றி எவ்வளவு பேருக்கு மறைமுகமாக ஊக்கசக்தியாகவும் தலைவர் விளங்கியிருக்கிறார் என்பதை நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. திரு.இளங்கோவன் குறிப்பிட்டதைப் போன்ற அனுபவம் எனக்கும் உண்டு. என் உறவினர்களிலே பலர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உருப்பட்டதில்லை என்று என்னிடமே கூறியுள்ளனர். இன்று நானும் வாழ்வில் முன்னேறி என் உழைப்பில் என் குடும்பத்தை காப்பாற்றி கவுரவமாக வாழ்ந்து வருகிறேன். இதே அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

தலைவரின் கருணை உள்ளத்துக்கு எடுத்துக்காட்டாக துயரமான நேரத்தில் அவரை நேரில் பார்த்த இளுங்கோவனே சாட்சி. தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்டபோது தலைவர் அங்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுவனாக இருந்த திரு.இளங்கோவன், கூட்டத்தில் புகுந்து தலைவரைப் பார்த்ததை வர்ணித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைவர் ஆறுதல் கூறியிருக்கிறார்.

அப்போது, தலைவரின் கண்ணீல் இருந்து நீர் பெருகியதாக திரு.இளங்கோவன் தெரிவித்தார். எந்த அளவுக்கு ஒரு மனிதன் மக்களின் துன்பத்தை தனது துன்பமாக நினைத்து வேதனைப்பட்டிருந்தால் இப்படி கண்ணீர் பெருகியிருக்கும்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1 லட்சம் நிதியுதவியும் தலைவர் அளித்து அவர்களின் துயர் துடைக்க உதவியதையும் திரு. இளங்கோவன் குறிப்பிட்டார்.

சங்கே முழங்கு படத்தில் நாலு பேருக்கு நன்றி பாடலில், ‘வார்த்தையின்றி போகும்போது மவுனத்தாலே நன்றி சொல்வோம்’ என்று வரும். மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மக்கள் திலகத்துக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் ஏது? அவருக்கு மவுனத்தாலே நன்றி சொல்வோம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
4th February 2015, 05:32 PM
எங்கள் மன்னாதி மன்னன் மூன்றாவது பிறவி எடுத்து தமிழ்நாட்டிற்கு வந்த நாள்

இன்று Febrauray 4.. என் வாழ்க்கையில் மறக்கமுடியாத , ஒரு நாள்....1985. பிப்.4. அன்று ..,மக்கள் திலகம், பொன்மன செம்மல், , புரட்சித்தலைவர்,,தமிழக முதல்வர், எம்.ஜி.ஆர். அவர்கள், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, , மறு பிறவி எடுத்து, , சென்னை திரும்பிய நாள்...அன்றைய தினம், அதிகாலையிலேயே,, நான், உட்பட, அனைத்து பத்திரிகையாளர்கள், பரங்கிமலை மைதானத்தில் , காத்திருந்தோம்.. பாதுகாப்பு அதிகாரிகள், எங்களிடம் பாஸ் இருந்தும், பத்திரிகையாளர்களை ,100 அடி தூரம் தள்ளி நிறுத்திவிட்டனர்...சூரியன் உத்யமாகும் நேரம், , எம்.ஜி.ஆர். அவர்கள் வந்த 4777 எண்ணுள்ள கார், ,படியில்லாமல், அமைத்திருந்த, ,சறுக்கு பாலம் வழியாக ,மேடைக்கு வந்ததும், ,தமிழகம் முழுவதிலுமிருந்து, வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் ," புரட்சி தலைவர் வாழ்க," என்று போட்ட கோஷம், வானமே அதிர்ந்தது...
மேடைக்கு காரிலிருந்த இறங்கிய எம்.ஜி.ஆர். வழக்கம்போல் கை அசைத்து , சிரித்துக்கொண்டே, தள்ளி நிறுத்தி வைக்கப்பட்ட எங்களை (நிருபர்களை) பார்த்து சைகையில், ஏன் அங்கே, இருக்கிறீர்கள், வாருங்கள் முன்னே,..என்று கை அசைத்தவுடன், எங்களுக்குள் கேமராவுடன், முட்டி மோதிக்கொண்டு , மேடை அருகே சென்றுவிட்டோம்..நூற்றுக்கணக்கான புகைப்பட நிருபர்களோடு, போட்டி ,போட்டுக்கொண்டு நான் தினமலருக்காக, எடுத்த பிலிம் ரோலுடன், மீனம்பாக்கம்,, விமானநிலையம் சென்று, 9 மணி விமானத்தில் ஏறி மதுரை வந்தேன்.....அன்றைய தினம் காலை 11 மணிக்கே...எம்.ஜி.ஆர். சென்னை வந்தார், என்ற தலைப்பில் நான் எடுத்த படங்களுடன், தினமலர் ,விசேஷ பதிப்பு வந்து , அதை மக்கள் வாங்கி மகிழ்ச்சியுடன் பார்த்த நிகழ்ச்சியை, எப்படி மறக்க முடியும்.! ..(இப்போது போல் கணினி மூலம் படம் அனுப்ப வசதி இல்லாத நேரம் .)
Face book நண்பர்களுக்காக நான் சிரமப்பட்டு எடுத்த படங்களில் சிலவற்றை, பதிவு செய்துள்ளேன்...எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்.,Madurai

Russellisf
4th February 2015, 05:32 PM
பு[SIZE=7புகை படங்கள் உதவி -திரு தினமலர் ராமகிருஷ்ணன் முகநூல் பக்கம் [/SIZE]

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps82b71a0c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps82b71a0c.jpg.html)

Russellisf
4th February 2015, 05:33 PM
புபுகை படங்கள் உதவி -திரு தினமலர் ராமகிருஷ்ணன் முகநூல் பக்கம்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps82b71a0c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps82b71a0c.jpg.html)

Russellisf
4th February 2015, 05:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps010810d4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps010810d4.jpg.html)

Russellisf
4th February 2015, 05:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpse74bcf46.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpse74bcf46.jpg.html)

Russellisf
4th February 2015, 05:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps04bf082f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps04bf082f.jpg.html)

Russellisf
4th February 2015, 05:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/d_zps0154238e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/d_zps0154238e.jpg.html)

Russellisf
4th February 2015, 05:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zpscf43f73f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zpscf43f73f.jpg.html)

Russellisf
4th February 2015, 05:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zpsf9ecadc2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zpsf9ecadc2.jpg.html)

Russellisf
4th February 2015, 05:39 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsf245efa5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsf245efa5.jpg.html)

Russellisf
4th February 2015, 05:41 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/g_zps530cb029.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/g_zps530cb029.jpg.html)

siqutacelufuw
4th February 2015, 06:06 PM
http://i61.tinypic.com/33krlea.jpg

மக்கள் திலகத்தின் மூத்த அபிமானி - பக்தர் கோபால் அவர்களின் மறைவுக்கு, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சாரப்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்திற்கு அளித்திட நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா புரட்சித்தலைவர் அவர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.

siqutacelufuw
4th February 2015, 06:10 PM
04-02-1966 அன்று வெளியான மக்கள் திலகத்தின் காவியம் " நான் ஆணையிட்டால் ". ஒரு சிறு தொகுப்பு :

வழக்கமாக, கதை மற்றும் காட்சியமைப்பு பற்றிதான் நாம் அலசுவோம் . சற்று வித்தியாசமாக, ஒரு மாறுதலுக்காக இம்முறை ஒவ்வொரு பாடல் காட்சி பற்றி எழுதினால் என்ன என தோன்றியதின் காரணமாக, கீழ்கண்ட தொகுப்பினை பதிவிடுகிறேன்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, கொள்ளைக் கூட்டத்தை சாந்திருந்தாலும், சிறை தண்டனை பெற்று, விடுதலையாகும் போது, ஒரு புதிய மனிதராக, புடம் போட்ட தங்கமாக மாறி, தான் சார்ந்திருந்த கொள்ளைக்கூட்டத்தினரும், திருந்தி மனம் மாற வேண்டும் என்ற எண்ணதில், நம் மக்கள் திலகம் அவர்கள் "இரு ட்டினில் வாழும் இதயங்களே ! கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள், நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் " என்று கருத்துக்குருடர்களின் கண்களை திறக்க, அழைக்கும்போது, அந்த கொள்ளை கூட்டத்தினரில் சிலர் மட்டுமா திருந்தியிருப்பர், நாட்டின் சில சமூக விரோத கும்பலையும் அல்லவா சிந்திக்க வைத்து திருத்த வைத்திருப்பார். இந்த பாடலின் அடுத்த பத்தியில், எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி யில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை என்ற வரிகள் , ஒவ்வொரு மனி தனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை நிர்ணயித்து வெற்றி பெற ஊக்கமளித்தது என்றே கூறலாம். எவர் எதை வேண்டுமானாலும் போதிக்கலாம் , ஆனால், அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்வது, அதை யார் அறிவுறுத்துவது என்பதை பொருத்தே. அந்த வ கையில், நம் புரட்சித்தலைவர் அவர்கள் திரைப்படங்களில் கூறிய நற் போதனைகளை, மக்கள் அங்கீகரித்து முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர்.

அடுத்தபடியாக, பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக, உன் திருவடி தாமரை தொடந்கிய பாதையில், தேசம் நன்மை பெறுக என்ற பாடல் திரைக்கதையை யொட்டி இந்த காவியத்தில் இடம் பெற்றிருந்தாலும், நிஜ வாழ்வில், சரியாக 19 வருடங்கள் கழித்து, அதே பிப்ரவரி 4ம் தேதி, 1985ம் வருடத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள் உடல் நலம் பெற்று, அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய போது , தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. தீர்க்கதரிசனமாக இந்த பாடல், இக்காவியத்தில் இடம் பெற்றது ஒரு தனிச் சிறப்பு.

அடுத்த பாடல் .... பாட்டு வரும், உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் ..... இந்த இனிய பாடலின் காட்சிகளில் நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் உடை மற்றும் நடைய ழகு தோற்றம், கண் கொட்டாமல், இமை மூடாமல், பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆகா, என்ன ஒரு அழகன், உலகத்திலேயே இப்படி ஒரு அழகான நடிகரை காண முடியாது என்றே கூற வைக்கிறது. ஆடியோவில் இடம் பெறாமல் போன "மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன், அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன், என்று நம் தலைவர் பாட, பதிலுக்கு, அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள், ஏந்திய கைகளில் இருப்பவள் நானே, இறைவனை நேரில் வரவழைத்தேனே என்று பாடும்போது, இறைவா இறைவா என்று ரசிகர்கள் நம் பொன்மனசெம்மலை பார்த்து கூக்குரலிட, திரையரங்கமே அதிர்கிறது.

தொடர்ந்து வரும் பாடல் : "நல்ல வேளை, நான் பிழைத்துக் கொண்டேன்" இந்த பாடல் காட்சியின் இடையில் வரும் ' மடி மேல் துயிலும் கொடி போல் துவளும் பேரழகை படம் பிடித்தேன் அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால் - தொட்டுப்பார்க்கையிலே உயிர் துடித்தேன் ' என்ற வரிகள் இடம் பெறும் காட்சியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வித்தியாசமான உடையலங்ககாரமும்,, வேகமாக , செட்டிங் மேடையின் மீது, வேகமாக, அதுவும் பக்கவாட்டில் பக்கா (PUCCA) வாக, ஸ்டைலாக (STYLE) ஏறிச்செல்லும் காட்சியிருக்கிறதே, அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நம் தலைவர்தான் ஸ்டைல் மன்னர்களுக்கெல்லாம் மன்னர், ஸ்டைல் சக்கரவர்த்தி. (ஏற்கனவே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மற்றும் நிருத்தய சக்கரவர்த்தி பட்டங்கள்) பாடலின் ஆரம்பக்காட்சியில் உடுத்தியிருக்கும் வெள்ளை பாண்ட் மற்றும் வெள்ளை சட்டையுடன் அருமையான தொப்பி வேறு - WHITE & WHITE, ALWAYS BRIGHT.

http://i62.tinypic.com/28jdroj.jpg

பாடல் காட்சியின் பிற்பகுதியில், உடுத்தியிருக்கும் கருப்பு உடையை பார்த்து, அதே போன்று தைத்துக் கொண்டு திரிந்த இளைஞர்கள் ஏராளம்.

பின்னர், இடம் பெற்ற பாடல் " ஓடி வந்து மீட்பதற்கு என்ற பல்லவியுடன் தொடங்கும் "மேகங்கள் இருண்டு வந்தால், அதை மழையென சொல்வதுண்டு, மனிதர்கள் திருந்தி வந்தால், அதை பிழையென சொல்வதுண்டோ ? என்ற பாடல் காட்சியில், நம் நிருத்தய ச்க்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் காவல் துறை ஜீப்பில் அழைத்து செல்லப்படும் போழ்து, வெளிபடுத்தும் முக பாவனை இருக்கிறதே ! மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு காட்சிக்கு இது ஒன்றே போதும், உதாரணமாக காட்டுவதற்கு.

இறுதிப்பாடலாகிய "நான் உயர உயரப் போகிறேன், நீயும் வா" காட்சி படமக்கப்பட்ட விதமும், காமிரா கோணமும் வெகு அருமை. இந்த பாடல் காட்சி , விளம்பரத்தில் கையாளப்பட்டிருப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம், அதன் தன்மை குறித்து. கொள்கைப்பாடல்களும், காதல் பாடல்களும் இடம் பெற்றால் மட்டும் போதாது, சற்று வித்தியாசமாக ஒரு போதைப்பாடலும்
(இதே பிப்ரவரி 4ம் தேதி வெளியான 1972ம் ஆண்டு காவியம் "சங்கே முழங்கில்" வரும் சிலர் குடிப்பது போலே நடிப்பார் போன்ற பாடல் காட்சி) இருக்க வேண்டும் என எண்ணியிருப்பார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. ,

" நான் ஆணையிட்டால் " காவியத்தில் இடம் பெறாமால் விடுபட்ட அருமையான காதல் பாடல், வித்வான் வே. இலட்சுமணன் இயற்றி எ.ம். எஸ். வி. மற்றும் சுசீலா பாடியது. :

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே !- ஹஹா .... ஹஹா - என்னைத்
தடு த்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே .... உன்னை
நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே (கொடுக்க)

நினத்தேன், உடன் பார்த்தேன் ... மனம்
மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன் - கதை
படித்தேன் என்னை மறந்தேன் - என்னை மறந்தேன்

பாலும், புதுத்தேனும் பனிபோல் என்மேலே
படர்ந்தோட இடந்தேட அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன், என்னைக் கொடுத்தேன், (கொடுக்க)


சிரித்தாய், முகம் சேர்த்தாய் - வலை
விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை
அளித்தாய் - உடல் சிலிர்த்தேன் -- என்னை மறந்தேன்

சேரும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச, இசை பாட, தமிழ் போலவே சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன், என்னைக் கொடுத்தேன், (கொடுக்க) ,


இந்த காவியத்தின் இதர சிறப்புக்கள் :

1. வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை கண்டு வருகிறது.

2. தமிழகத் திரையரங்குகளில், இன்றும் வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறது. சமீ பத்தில் கூட
(23-01-2015 முதல்), கோவை ராயல் திரையரங்கில் வெளியிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது.

3. ஒரு பாடல் காட்சியில் மற்றொரு திரைப்படம் வெளிவருவதை விளம்பரமாக காட்டப் பட்ட பெருமை (நல்ல வேளை , நான் பிழைத்துக் கொண்டேன் பாடல் காட்சியில், வருகிறது - "அடிமைப்பெண்" என்ற மின்னொளி விளம்பரம்)

4. மக்கள் திலகத்தின் காவியம் ஒன்றில் இடம் பெற்ற பாடலின் வார்த்தையை, படத் தலைப்பாக கொண்டு வெளிவந்த காவியம். ( "எங்க வீட்டு பிள்ளை " காவியத்தில் இடம் பெற்ற 'நான் ஆணையிட்டால்' என துவங்கும் பாடல்)

5. 21 ரீல்கள் கொண்ட காவியம்.

6. அனைத்து பாடல்கலும் தெவிட்டாத தேன் விருந்து.

7. 'எங்க வீட்டு பிள்ளை' காவியத்தை தொடர்ந்து, சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த காவியம்.

siqutacelufuw
4th February 2015, 06:16 PM
" நான் ஆணையிட்டால் " வெளியான முதல் நாள், திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i60.tinypic.com/687tcz.jpg

siqutacelufuw
4th February 2015, 06:23 PM
04-02-1972 வெளியான மக்கள் திலகத்தின் காவியம் "சங்கே முழங்கு" - முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/2cxsq6g.jpg

siqutacelufuw
4th February 2015, 06:25 PM
04-02-1972 வெளியான மக்கள் திலகத்தின் காவியம் "சங்கே முழங்கு" - முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/29cro6t.jpg

Russelldvt
4th February 2015, 06:34 PM
http://i58.tinypic.com/2mn13r9.jpg

Russelldvt
4th February 2015, 06:36 PM
http://i57.tinypic.com/2rr5ukh.jpg

Russelldvt
4th February 2015, 06:37 PM
http://i62.tinypic.com/mre25x.jpg

Russelldvt
4th February 2015, 06:38 PM
http://i61.tinypic.com/24v33t5.jpg

Russelldvt
4th February 2015, 06:40 PM
http://i61.tinypic.com/1r6zqg.jpg

Russelldvt
4th February 2015, 06:41 PM
http://i57.tinypic.com/2ahw7wx.jpg

Russelldvt
4th February 2015, 06:43 PM
http://i57.tinypic.com/10gwimv.jpg

Russelldvt
4th February 2015, 06:44 PM
http://i60.tinypic.com/2mecpw9.jpg

Russelldvt
4th February 2015, 06:45 PM
http://i61.tinypic.com/2j43ou1.jpg

Russelldvt
4th February 2015, 06:46 PM
http://i62.tinypic.com/245g64n.jpg

Russelldvt
4th February 2015, 06:47 PM
http://i61.tinypic.com/2rf4j7p.jpg

Russelldvt
4th February 2015, 06:49 PM
http://i61.tinypic.com/xvgv8.jpg

Russelldvt
4th February 2015, 06:50 PM
http://i58.tinypic.com/2ihnkf9.jpg

Richardsof
4th February 2015, 07:01 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/e_zps04bf082f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/e_zps04bf082f.jpg.html)

Dear Yukesh

4.2.1985 MAKKAL THILAGAM MGR'S CHENNAI ARRAIVAL PICS SUPERB .

THANKS THIRU RAMAKIRISHNAN
THANKS YUKESH

Richardsof
4th February 2015, 07:03 PM
Selvakumar sir

excellent write up about nan anaiyittal songs scenes and song books .

Richardsof
4th February 2015, 07:04 PM
04-02-1972 வெளியான மக்கள் திலகத்தின் காவியம் "சங்கே முழங்கு" - முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/29cro6t.jpg

superb .thanks selvakumar sir

Russellzlc
4th February 2015, 07:08 PM
04-02-1966 அன்று வெளியான மக்கள் திலகத்தின் காவியம் " நான் ஆணையிட்டால் ". ஒரு சிறு தொகுப்பு :

வழக்கமாக, கதை மற்றும் காட்சியமைப்பு பற்றிதான் நாம் அலசுவோம் . சற்று வித்தியாசமாக, ஒரு மாறுதலுக்காக இம்முறை ஒவ்வொரு பாடல் காட்சி பற்றி எழுதினால் என்ன என தோன்றியதின் காரணமாக, கீழ்கண்ட தொகுப்பினை பதிவிடுகிறேன்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, கொள்ளைக் கூட்டத்தை சாந்திருந்தாலும், சிறை தண்டனை பெற்று, விடுதலையாகும் போது, ஒரு புதிய மனிதராக, புடம் போட்ட தங்கமாக மாறி, தான் சார்ந்திருந்த கொள்ளைக்கூட்டத்தினரும், திருந்தி மனம் மாற வேண்டும் என்ற எண்ணதில், நம் மக்கள் திலகம் அவர்கள் "இரு ட்டினில் வாழும் இதயங்களே ! கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள், நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் " என்று கருத்துக்குருடர்களின் கண்களை திறக்க, அழைக்கும்போது, அந்த கொள்ளை கூட்டத்தினரில் சிலர் மட்டுமா திருந்தியிருப்பர், நாட்டின் சில சமூக விரோத கும்பலையும் அல்லவா சிந்திக்க வைத்து திருத்த வைத்திருப்பார். இந்த பாடலின் அடுத்த பத்தியில், எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி யில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை என்ற வரிகள் , ஒவ்வொரு மனி தனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை நிர்ணயித்து வெற்றி பெற ஊக்கமளித்தது என்றே கூறலாம். எவர் எதை வேண்டுமானாலும் போதிக்கலாம் , ஆனால், அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்வது, அதை யார் அறிவுறுத்துவது என்பதை பொருத்தே. அந்த வ கையில், நம் புரட்சித்தலைவர் அவர்கள் திரைப்படங்களில் கூறிய நற் போதனைகளை, மக்கள் அங்கீகரித்து முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர்.

அடுத்தபடியாக, பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக, உன் திருவடி தாமரை தொடந்கிய பாதையில், தேசம் நன்மை பெறுக என்ற பாடல் திரைக்கதையை யொட்டி இந்த காவியத்தில் இடம் பெற்றிருந்தாலும், நிஜ வாழ்வில், சரியாக 19 வருடங்கள் கழித்து, அதே பிப்ரவரி 4ம் தேதி, 1985ம் வருடத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள் உடல் நலம் பெற்று, அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய போது , தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. தீர்க்கதரிசனமாக இந்த பாடல், இக்காவியத்தில் இடம் பெற்றது ஒரு தனிச் சிறப்பு.

அடுத்த பாடல் .... பாட்டு வரும், உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் ..... இந்த இனிய பாடலின் காட்சிகளில் நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் உடை மற்றும் நடைய ழகு தோற்றம், கண் கொட்டாமல், இமை மூடாமல், பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆகா, என்ன ஒரு அழகன், உலகத்திலேயே இப்படி ஒரு அழகான நடிகரை காண முடியாது என்றே கூற வைக்கிறது. ஆடியோவில் இடம் பெறாமல் போன "மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன், அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன், என்று நம் தலைவர் பாட, பதிலுக்கு, அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள், ஏந்திய கைகளில் இருப்பவள் நானே, இறைவனை நேரில் வரவழைத்தேனே என்று பாடும்போது, இறைவா இறைவா என்று ரசிகர்கள் நம் பொன்மனசெம்மலை பார்த்து கூக்குரலிட, திரையரங்கமே அதிர்கிறது.

தொடர்ந்து வரும் பாடல் : "நல்ல வேளை, நான் பிழைத்துக் கொண்டேன்" இந்த பாடல் காட்சியின் இடையில் வரும் ' மடி மேல் துயிலும் கொடி போல் துவளும் பேரழகை படம் பிடித்தேன் அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால் - தொட்டுப்பார்க்கையிலே உயிர் துடித்தேன் ' என்ற வரிகள் இடம் பெறும் காட்சியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வித்தியாசமான உடையலங்ககாரமும்,, வேகமாக , செட்டிங் மேடையின் மீது, வேகமாக, அதுவும் பக்கவாட்டில் பக்கா (PUCCA) வாக, ஸ்டைலாக (STYLE) ஏறிச்செல்லும் காட்சியிருக்கிறதே, அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நம் தலைவர்தான் ஸ்டைல் மன்னர்களுக்கெல்லாம் மன்னர், ஸ்டைல் சக்கரவர்த்தி. (ஏற்கனவே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மற்றும் நிருத்தய சக்கரவர்த்தி பட்டங்கள்) பாடலின் ஆரம்பக்காட்சியில் உடுத்தியிருக்கும் வெள்ளை பாண்ட் மற்றும் வெள்ளை சட்டையுடன் அருமையான தொப்பி வேறு - WHITE & WHITE, ALWAYS BRIGHT.

http://i62.tinypic.com/28jdroj.jpg

பாடல் காட்சியின் பிற்பகுதியில், உடுத்தியிருக்கும் கருப்பு உடையை பார்த்து, அதே போன்று தைத்துக் கொண்டு திரிந்த இளைஞர்கள் ஏராளம்.

பின்னர், இடம் பெற்ற பாடல் " ஓடி வந்து மீட்பதற்கு என்ற பல்லவியுடன் தொடங்கும் "மேகங்கள் இருண்டு வந்தால், அதை மழையென சொல்வதுண்டு, மனிதர்கள் திருந்தி வந்தால், அதை பிழையென சொல்வதுண்டோ ? என்ற பாடல் காட்சியில், நம் நிருத்தய ச்க்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் காவல் துறை ஜீப்பில் அழைத்து செல்லப்படும் போழ்து, வெளிபடுத்தும் முக பாவனை இருக்கிறதே ! மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு காட்சிக்கு இது ஒன்றே போதும், உதாரணமாக காட்டுவதற்கு.

இறுதிப்பாடலாகிய "நான் உயர உயரப் போகிறேன், நீயும் வா" காட்சி படமக்கப்பட்ட விதமும், காமிரா கோணமும் வெகு அருமை. இந்த பாடல் காட்சி , விளம்பரத்தில் கையாளப்பட்டிருப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம், அதன் தன்மை குறித்து. கொள்கைப்பாடல்களும், காதல் பாடல்களும் இடம் பெற்றால் மட்டும் போதாது, சற்று வித்தியாசமாக ஒரு போதைப்பாடலும்
(இதே பிப்ரவரி 4ம் தேதி வெளியான 1972ம் ஆண்டு காவியம் "சங்கே முழங்கில்" வரும் சிலர் குடிப்பது போலே நடிப்பார் போன்ற பாடல் காட்சி) இருக்க வேண்டும் என எண்ணியிருப்பார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. ,

" நான் ஆணையிட்டால் " காவியத்தில் இடம் பெறாமால் விடுபட்ட அருமையான காதல் பாடல், வித்வான் வே. இலட்சுமணன் இயற்றி எ.ம். எஸ். வி. மற்றும் சுசீலா பாடியது. :

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே !- ஹஹா .... ஹஹா - என்னைத்
தடு த்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே .... உன்னை
நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே (கொடுக்க)

நினத்தேன், உடன் பார்த்தேன் ... மனம்
மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன் - கதை
படித்தேன் என்னை மறந்தேன் - என்னை மறந்தேன்

பாலும், புதுத்தேனும் பனிபோல் என்மேலே
படர்ந்தோட இடந்தேட அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன், என்னைக் கொடுத்தேன், (கொடுக்க)


சிரித்தாய், முகம் சேர்த்தாய் - வலை
விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை
அளித்தாய் - உடல் சிலிர்த்தேன் -- என்னை மறந்தேன்

சேரும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச, இசை பாட, தமிழ் போலவே சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன், என்னைக் கொடுத்தேன், (கொடுக்க) ,


இந்த காவியத்தின் இதர சிறப்புக்கள் :

1. வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை கண்டு வருகிறது.

2. தமிழகத் திரையரங்குகளில், இன்றும் வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறது. சமீ பத்தில் கூட
(23-01-2015 முதல்), கோவை ராயல் திரையரங்கில் வெளியிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது.

3. ஒரு பாடல் காட்சியில் மற்றொரு திரைப்படம் வெளிவருவதை விளம்பரமாக காட்டப் பட்ட பெருமை (நல்ல வேளை , நான் பிழைத்துக் கொண்டேன் பாடல் காட்சியில், வருகிறது - "அடிமைப்பெண்" என்ற மின்னொளி விளம்பரம்)

4. மக்கள் திலகத்தின் காவியம் ஒன்றில் இடம் பெற்ற பாடலின் வார்த்தையை, படத் தலைப்பாக கொண்டு வெளிவந்த காவியம். ( "எங்க வீட்டு பிள்ளை " காவியத்தில் இடம் பெற்ற 'நான் ஆணையிட்டால்' என துவங்கும் பாடல்)

5. 21 ரீல்கள் கொண்ட காவியம்.

6. அனைத்து பாடல்கலும் தெவிட்டாத தேன் விருந்து.

7. 'எங்க வீட்டு பிள்ளை' காவியத்தை தொடர்ந்து, சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த காவியம்.



திரு.செல்வகுமார் சார். அற்புதமாக அலசி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இன்று மதியம் நான் போட்ட பதிவிலும் நல்லவேளை... பாட்டில் சறுக்கு மேடையில் தலைவர் வேகமாக ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போட்டு வரும் காட்சியை கூறியிருந்தேன். அதைவிட விரிவாக அலசியுள்ளீர்கள். கடந்த தீபாவளியன்று மதுரையில் நான் ஆணையிட்டால் வெளியாகி 9 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஒரிஜினல் பாட்டுப்புத்தகங்களும் சூப்பர். தொடர்ந்து உங்களிடம் இருந்து இதுபோன்று எதிர்பார்க்கிறேன். நன்றி சார்.

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
4th February 2015, 07:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/h_zpsf245efa5.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/h_zpsf245efa5.jpg.html)

meendum vara mattaaraa makkal thilagam ?

Richardsof
4th February 2015, 07:22 PM
http://i62.tinypic.com/2dvpg2b.jpghttp://i60.tinypic.com/28it2td.jpg

30 YEARS AGO....

siqutacelufuw
4th February 2015, 07:31 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/f_zpscf43f73f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/f_zpscf43f73f.jpg.html)

அன்னை ஜானகியுடன் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், உண்மைத்தலைவர், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் தோன்றும் அற்புத காட்சியை பதிவிட்ட திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி !

Russelldvt
4th February 2015, 08:08 PM
http://i59.tinypic.com/2bvade.jpg

Russelldvt
4th February 2015, 08:10 PM
http://i62.tinypic.com/j0fl1x.jpg

Russelldvt
4th February 2015, 08:11 PM
http://i62.tinypic.com/io3goj.jpg

Russelldvt
4th February 2015, 08:12 PM
http://i57.tinypic.com/2iqy9fq.jpg

Russelldvt
4th February 2015, 08:13 PM
http://i59.tinypic.com/27xecn7.jpg