PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

eehaiupehazij
27th May 2015, 07:01 PM
Gap Filler : தரை டிக்கட்டுகளுடன் அரை டிக்கட்டாக நடிப்பின் படிக்கட்டு ! ராமன் எத்தனை ராமனடி நினைவுகள்!

என்னதான் நாம் வளர்ந்து பேண்ட் போட்டாலும் பள்ளிப் பருவ அரை டிக்கட் ஹால்ப் பேண்ட் நிஜாரே நமக்கு அணிவதில் ஆனந்தம் !! எடுப்பான நிஜாரில்
நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=cLqkI1ijrjY

ஆனாலும் அந்த அரை நிஜார் காக்கியானால் ...எங்கிருந்து வந்தது இந்த கம்பீரம்?

https://www.youtube.com/watch?v=qDA_jZYLN1Q

Russellxor
27th May 2015, 07:10 PM
திரு .ராகவேந்திரா அவர்களுக்கு

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PicsArt_1432733599031_zpspjbvx84x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PicsArt_1432733599031_zpspjbvx84x.jpg.html)

vasudevan31355
27th May 2015, 07:45 PM
எனக்கு எப்போதும் அவரின் நீண்ட அழகாக வடிவைக்கமப்பட்ட கிருதாவின் மேல் ஒரு தனி மோகம்.



மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்.:-D அதில் எனக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. இன்னும் பலரும் உரிமை கேட்டு போராட்டம் நடத்தலாம்.:-D

முரளி சார்,

நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/VTS_01_3.VOB.001_20150527_194626.974.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/VTS_01_3.VOB.001_20150527_194626.974.jpg.html)

உலகத்தில் எந்த ஒருவருக்கும் இந்த நீள்கிருதா இவருக்கு அமைவது போல யாருக்கும் அமையாது. கோபாலும், நானும் போனில் உரையாடும் போது இதைப் பற்றிப் பேசாமல் இருந்தது இல்லை. அதுவும் என் பிரிய ராஜா, சவாலே சமாளி படங்களின் சைட் கிருதா போஸ்கள் கில்லி அடித்து கிறங்கடிக்க வைத்தவை. அவருடைய உடம்பின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொருவிதமான, அபரிமிதமான அழகைக் கொண்டவை. உலக ஸ்டைல்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட முதலாளி அவர். குறிப்பாக 72-இல் அவர் முகம் அத்தனை கண்டங்களையும் கவர்ந்த காந்த சக்தியை தன்னகத்தே கொண்டிருந்தது. ஆரியம் திராவிடம் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அகிலம் வியந்த ஆணழகர் அவர் ஒருவரே! அந்த வசீகர வலையில் சிக்காதவர் என்று எவரும் இல்லை.

Russellxss
27th May 2015, 07:58 PM
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு கண்மணி ( நமது தலைவர் அன்பு மிகுதியானால் ரசிகர்களை அழைப்பது இப்படித் தானே) திரு.ராகவேந்திரா அவர்களே தாங்கள் நடத்தி வரும் நடிகர்திலகம்.காம் 100000 பார்வையாளர்களை கடந்து மாபெரும் இமாலய வெற்றியை எட்டியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
நமது தலைவர் உயிரோடு இருந்த போதே அவரது புகழை மறைக்க பலர் முயற்சித்த போது, அவர் இல்லாத போது எப்படி அவர் புகழை காக்க போகிறோம் என்ற நினைத்த போது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இணையதளத்தை பற்றி யாரும் அவ்வளவாக அறியாத போது தலைவர் பெயரில் இணையதளத்தை துவக்கி அவரின் புகழ் உலகெங்கும் பரவச் செய்த பெருமை தங்களையே சாரும்.
பிறந்த நாள் காணும் தாங்கள் மக்கள் தலைவரின் ஆசியுடன் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளைப் பெற்று நீடூழி வாழ நான் வணங்கும் தெய்வம் சிவாஜி அவர்களை வேண்டுகிறேன்.


தங்களுக்காக என்னுடைய சிறிய காணிக்கை.



https://www.youtube.com/watch?v=VWdU0cmshTk&feature=youtu.be


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

uvausan
27th May 2015, 08:40 PM
திரு ராகவேந்திரா சார் - உங்கள் பிறந்த நாளில் நீங்கள் ஆரோக்கியமாகவும் , எங்கள் எல்லோருக்கும் சிறந்த வழிக்காட்டியாகவும் பல யுகங்கள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . எங்களுக்கு உங்கள் பிறந்த நாளைத் தெரிவித்த திரு வினோத் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி

Russellxor
27th May 2015, 10:05 PM
எழுத்துலகத்தால்
வர்ணிக்க
இயலுமா
உந்தன்
இந்த
கண் அசைவை
அல்லது
உந்தன்
இந்த
தோரணையை?

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1432738229982_zpsrdazlqf6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1432738229982_zpsrdazlqf6.jpg.html)

Russelldwp
27th May 2015, 10:49 PM
திரு.ராகவேந்திரன் சார் அவர்களே பிறந்தநாள் காணும் தாங்கள் மலரும் மணமும் போல நிலவும் வானும் போல இதயதெய்வம் சிவாஜியும் நடிப்பும் போல எல்லா வளமும் பெற்று நோயற்ற வாழ்வுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Russelldwp
27th May 2015, 11:14 PM
திரு. செந்தில்வேல் சார் தங்களின் அரிமா ஆப்டிகல்ஸ் சிவாஜியின் புகழ் போல் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்

திரு.ராகவேந்திரன் சார் , திரு.முரளி சார் அவன்தான் மனிதன் மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சி தொகுப்பு அருமை. விழாவிற்கு நான் வருவதாக நினைத்திருந்தேன் அலுவல் காரணமாக டெல்லி சென்றதால் வரமுடியவில்லை.

திரு. முத்தையால் அம்மு சார் எங்கள் இதயம் கவர்ந்த காவியம் அவன்தான் மனிதன் படங்களை போட்டு அசத்தி விட்டீர்கள்

Harrietlgy
27th May 2015, 11:23 PM
Wish you Happy Birthday wishes to Mr. Ragavendra sir.

RAGHAVENDRA
28th May 2015, 06:49 AM
பிறந்த நாள் வாழ்த்துக்களை அளித்த அன்பு நெஞ்சங்கள்
வினோத்,
தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன பம்மலார், மற்றும் முரளி சார்,
சிவாஜி செந்தில், [ தங்களுடைய உவமான வாழ்த்து அருமை]
செந்தில்வேல் - வசந்த மாளிகை ஸ்டில் சூப்பர்,
ஹைதராபாத் ரவி,
திருச்சி ராமச்சந்திரன்,
பரணி,
மற்றும் வாழ்த்தளிக்க உள்ள அன்பு நெஞ்சங்கள்..

அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
மக்கள் தலைவரின் ஆசியுடன் அவர் தொண்டாற்றும் பேறு எனக்கு மேலும் கிட்ட வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

நன்றி

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
28th May 2015, 06:56 AM
சுந்தரராஜன்
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் புகழ் தமிழ் உள்ளவரைக்கும், அதற்கு மேல் சினிமா உள்ள வரைக்கும், அதற்கும் மேல் கலை உள்ள வரைக்கும், அதற்கும் மேல் கடைசி கலையார்வலர் உள்ள வரைக்கும் வாழும். நமக்கெல்லாம் அந்த உன்னதமானவருக்கென உழைக்கவும் அவர் காலத்தில் வாழவும் வரம் கொடுத்த இறைவனுக்கு உளமார்ந்த நன்றி. இப்பணி மேலும் தொடர வேண்டுவதே என் விருப்பம். தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருக்கும் போது அதற்கான உத்வேகம் சற்றும் குறையாது. வயது மட்டுமே மாறலாம், மனது மாறாது.. நடிகர் திலகத்தை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆயுள் கூடும்.

எனவே தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருக்கும் போது நூறு வயது என்ன ஆயிரம் வயது கூட வாழலாம்.

தங்களுடைய சிறப்பான காணொளிக்கு என் உளமார்ந்த நன்றி.

குறிப்பாக என் தமிழ் என் மக்கள், என மக்களைக் கொண்டாடிய மக்கள் தலைவரின் சிறப்பைப் பாடும் ஆரம்பிச்சு வெச்சவரு அண்ணன் தான், ஆயிரம் தான் சொல்லு அவர் மன்னன் தான் பாடலையெல்லாம் மறக்கவே முடியாது. என் மனதில் ஆழமாகக் குடி கொண்ட இப்பாடலை அளித்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
28th May 2015, 06:57 AM
முரளி சார்
பாலும் பழமும் அருந்திய ஆனந்தம்..
நடிகர் திலகம் திரைப்படத்தினால் மட்டுமல்ல..
தங்கள் எழுத்தினாலும் தான்..

RAGHAVENDRA
28th May 2015, 06:59 AM
முத்தையன் அம்மு
நாளுக்கு நாள் இங்குள்ள ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் தங்களுக்கென தனியிடத்தைப் பெற்று வருகிறீர்கள். அவன் தான் மனிதன் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

vasudevan31355
28th May 2015, 09:48 AM
Happy Birth day Raghavendran sir.

http://thumbnails103.imagebam.com/26605/dcd94e266041328.jpg

http://www.jucoolimages.com/images/birthday_cakes/birthday_cakes_01.gif

abkhlabhi
28th May 2015, 09:54 AM
Happy birthday raghavendra sir, many many happy returns of the day

sss
28th May 2015, 10:16 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வீயார் சார்...எல்லா நலமும் வல்லமையும் நடிகர் திலகம் உங்களுக்கு வழங்கட்டும்...

http://www.dhool.com/gifs/9682.jpg

JamesFague
28th May 2015, 10:19 AM
Wish you many more happy returns of the day Mr Raghavendra.

KCSHEKAR
28th May 2015, 10:21 AM
திரு. ராகவேந்திரன் சார்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள், பூரண உடல் ஆரோக்கியத்துடன்,, இதுபோல் மேலும் பல பிறந்தநாட்கள் கண்டு, நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

vasudevan31355
28th May 2015, 10:38 AM
முரளி சார்!

அருமையான தகவல்களை அளித்து அசர வைத்து விட்டீர்கள். நீங்கள் 'பாலும் பழமும்' மட்டும் தரவில்லை. பழரசத்தையும் சேர்த்து பருக வைத்து விட்டீர்கள்.


//அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி.//

உண்மை முரளி சார்,

யாராக இருந்தாலும் விழுங்கி ஏப்பம் விடும் ராதாவையே தன் சொக்காய் பைக்குள் செருகி வைத்துக் கொள்வார். ("மாமா அவர்களே! ஒன்றே சாட்சி)

'பாலும் பழமும்' படத்தில் மிக அழகாக நீங்கள் சொல்வது போல் ராதாவை தலைவர் டீல் செய்யும் ஒரு காட்சி.

ராதா செய்யும் அட்டகாசமும் நம் வயிற்றை பதம் பார்க்கும்.

"டாக்டரா இருக்குறவங்க நர்ஸைதான் கட்டிக்கணும்...:)

இஞ்சினியர் வேலை பாக்குறவங்க சித்தாள் வேலை செய்யுற பொம்பளையதான் கட்டிக்கணும்...:)

ஆபிஸ்ல வேலை செய்ற மேனேஜர் அங்க டைப் அடிக்கிற பொம்பளையதான் கட்டிக்கணும்...:)

அப்பத்தான் தொழில் வளரும்":)

தியேட்டரே குலுங்கும்.

அப்படிப்பட்டவரை மிக அழகாக சமாளித்து ஜெயிப்பார் திலகம்.

"ஆமாம் உன் கல்யாணத்துக்கு அவுங்கல்லாம் ஒருத்தரும் வரலியே" என்று ராதா நைஸாக எகத்தாளம் விடும் போது நடிகர் திலகம் சற்றே குனிந்து மிக அடக்கத்துடன் அமர்ந்திருப்பார். ராதா சொல்வதிலும் நியாயம் இருப்பது போல அவருடைய உடல் மொழி அந்த சமயத்தில் இருக்கும். அதே சமயம் கல்யாணத்திற்கு அவர்கள் வரவில்லையே என்ற ஞாபகப்படுத்தலில் லேசான சோகம் கலந்த வருத்தம் மிளிர்வதையும் அந்த அமர்விலேயே காணலாம்.

தேவாங்கு ராக்கெட் லேகியத்திற்கு ராதா இவரிடம் சர்டிபிகேட் கேட்கும் போது

"லேகியத்தை எங்கிட்ட கொடுங்க.. நான் லேபுக்கு கொண்டு போய் டெஸ்ட் பண்றேன்"

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355025/AVSEQ01.DAT_20150528_104001.915.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355025/AVSEQ01.DAT_20150528_104001.915.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355026/AVSEQ01.DAT_20150528_103949.429.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355026/AVSEQ01.DAT_20150528_103949.429.jpg.html)

என்று கொஞ்சமும் அலட்டாமல் தலைவர் கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து சிரித்தபடியே (சிரிப்பை விட மாட்டார். இந்த மாதிரி சிரிப்பை வேறு எந்தப் படத்திலும் பார்க்க முடியாது) சொல்வார்.

ராதா பேசப் பேச சிறு தலையாட்டல்களில் அதை கேட்டுக் கொண்டு ராதாவுக்கு கொஞ்சமும் பிடி கொடுக்காமல் "அப்புறம் வேற என்ன விஷயம்?" என்பாரே ராதா சொன்னதை காதில் வாங்காத மாதிரி. கிரேட்.

ராதாவைப் பாருங்கள்.

"வேற என்ன விஷயன்னா இதுல கையெழுத்து போட மாட்டேன்னு அர்த்தமா?":)

என்று 'டபக்'கென்று கற்பூரமாய் பாய்ன்ட்டை பிடிப்பார் மனுஷர்.

'மாட்டேன்' என்று அழகாக, அதே சமயம் ஆணித்தரமாக தலைவர் கூறுவது டாப். மறுபடியும் ராதா 'மாட்டியா?' என்றவுடன் 'ஆங்' என்று மறுப்பது டாப்போ டாப்.

எவ்வளவு அழகாக கொஞ்சமும் அலட்டாமல் ராதாவின் அலட்டலை எதிர் கொள்வார்! அதுவும் அதிகம் பேசாமலேயே. அமைதியும், அழுத்தமும், பின் கோபமும், கண்டிப்பும் வெகு அழகாக அவரிடமிருந்து வெளிப்படும்.

அப்படியே இதே இருவரும் 'பலே பாண்டியா'வில் பண்ணும் கூத்துக்களை கண் முன்னே கொண்டு வந்து இப்போது நிறுத்திப் பாருங்கள். அது வேறு விதம். அது சரவெடி. இது ஒற்றை சரஸ்வதி வெடி.

எப்படிப்பட்ட மாமேதை! இந்த மாமேதையுடன் கை கோரத்த பிற மேதை நடிகர்கள் பூமாலையில் சேர்ந்த பூக்களாக இவருடன் சேர்ந்து மணம் வீசினார்கள்.

தானும் புகழ் பெற்று மற்றவர்களையும் புகழ் அடையச் செய்து பார்த்த தன்னிகரில்லா தானைத் தலைவர் அல்லவோ அவர்.

sss
28th May 2015, 11:33 AM
பாலும் பழமும் - நன்றி டாக்டர் சாந்தாராம் அவர்கள் கொடுத்த சில துளிகள்... உங்கள் பார்வைக்கு...

‘பாகப் பிரிவினை, பாவ மன்னிப்பு, பாச மலர் அடுத்து...... " பாலும் பழமும் " !
https://www.filepicker.io/api/file/BwxXQgmNQdOdm64TjcVZ+DSC06930.JPG



இந்த படத்திற்கும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பார்ப்பு ! " சரவணா பிலிம்ஸ் " ஜி வேலுமணி யின்

இரண்டாவது தயாரிப்பு ! இந்த படம் தயாரிப்பில் இருந்த போதுபடத்திற்கு பெயரையே வைக்கப்பட வில்லை !


கடைசி நேரத்தில் : " பாலும் பழமும் " என்கிற பெயர் வைக்கப்பட்டது .
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முற்றிலும் நூதனமான வேடம் ! " டாக்டர் ரவி " !

புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்யும் டாக்டராக : மாறுபட்ட " விக்" மற்றும் உடையுடன் தோன்றினார் , நடிகர் திலகம்
https://www.filepicker.io/api/file/895YgCtQAGOW7hl4WVQQ+sg010.jpg


அவரது, சிறு அங்க அசைவுகளைக் கூட கவனித்து கைதட்டும் ரசிகர் குழாம் கால கட்டத்தில் உயர் மட்டத்து விஞ்ஞானி தோற்றத்தில்

சிவாஜியின் அளவான நடிப்பைக்கண்டு பலர் மெய் மறந்து ரசித்தனர் !

அதே சமயத்தில்...

உயிருக்குயிராய் காதலிக்கும் தன் இலட்சிய மனைவியின் மேல் அவர் அன்பை வெளிப்படுத்தும் அன்பு கணவனாகவும் நடிகர் திலகம் ' வெளுத்துக்" கட்டினார் !

சரோஜாதேவி : அழகுக்கு அழகு, நடிப்புக்கு நடிப்பு ! இரண்டிலும் சரோஜாதேவி , தன் திறமையைக் காட்டின படம் " பாலும் பழமும் " !
அதிலும் 60 களில் கொடுமையான நோயாக விளங்கிய ' காச நோய் " பாதிக்கப்பட்ட நோயாளியாக சரோஜாதே அற்புதமாக நடித்தார் !
இதற்காக அவர் பல நாட்கள் பட்டினி கிடந்து தன் முகப் பொலிவை இழந்தவராக , ' டி பி ' யில் வாடும் பெண்ணாக தன் முகத்தை மாற்றிக் கொண்டு அற்புதமாக சரோஜாதேவி நடித்தார்.

எம் ஆர் ராதா.

" டாக்டர் ஆக இருப்பவன் ஒரு நர்ஸ் ஐத் தான் கல்யாணம் கட்டிக்கணும் !
ஒரு என் ஜினீயர், சித்தாளைத்தான் கட்டிக்கணும் !
ஒரு ஆபிஸர் ஆக இருப்பவன் , ஒரு 'டைப்பிஸ்ட்' த்தான் கட்டிக்கணும் !
அப்போத்தான் தொழில் வளரும் ! "

என்கிற எம் ஆர் ராதாவின் 'ஜோக்' புகழ் பெற்றது !

இன்னொரு கட்டத்தில் , படத்தில் ஒருவர் - நாகய்யாவோ அல்லது பாலய்யாவோ , எம் ஆர் ராதாவுக்கு :
" ஆசிர்வாதம் " என்று சொல்லும்போது, எம் ஆர் ராதா ' டக் ' என்று " ஆசி " எனக்கு, " வாதம் " உனக்கு ! "
என்று சொல்வது தமாஷ் !

இப்படி ஒரு சில காட்சிகளே எம் ஆர் ராதா இந்த படத்தில் வந்தாலும் இவர் வரும் போது கலகலப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம் !

இயக்குனர் ஏ பீம்சிங் :

மனித உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து படங்களை இயக்குவது / எடுப்பது இவருக்கு வழக்கம் !
இவரது படங்களில் " மசாலா" இருக்காது ! சண்டைக் காட்சிகள் இருக்காது !
" Muscle Dance " அல்லது " ஐட்டம் " நடனங்கள் இருக்காது !
இவர் படம் எடுப்பதை இப்போது ' பீல்ட்' இல் உள்ள மக்களைக் கேட்டால்....." Sentimental Feelings " என்று அலட்சியமாக பேசுவர் !
இந்த " Sentimental Touch " உடன் இவர் படங்களை இயக்கியதால்..... 53 வருடங்களுக்குப் பிறகும் இந்த படத்தைப் பற்றி இப்படி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் !

" பாலும் பழமும் " ஏன் வெற்றி பெற்றது - கணவன் - மனைவி உறவு :

'அண்ணன் -தங்கை உறவை " பாச மலர்' நல்ல முறையில் எடுத்துச் சொன்னதைப் போலவே....
கணவன் - மனைவியின் உறவை - அன்பின் வெளிப்பாடு - பாசப்பிணைப்பு - மனைவியைப் பிரிந்தால் கணவன் படும் பாடு....
கணவனைப் பிரிந்த மனைவி படும் வேதனை.......


இதனை : சிவாஜி கணேசன், சரோஜா தேவி, மெல்லிசை மன்னர்கள்,டி எம் எஸ் - பி சுசீலா மற்றும் கவிஞர் கண்ணதாசன் இவர்களைக் கொண்டு இயக்குனர் பீம்சிங்.....

மிகச் சிறந்த முறையில் படமாக்கியிருந்தார் !


" வாழ்ந்தால் இலட்சிய தம்பதிகள் : டாக்டர் ரவி - நர்ஸ் சாந்தி போல் வாழவேண்டும் ! " என்று அந்த கால இளம் தம்பதியர்கள் உறுதி பூண்டனர் என்றே சொல்லலாம் !
பொதுவாக நடிகர் - நடிகையர்களின் பெயர்களை தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு வைக்கும் இந்த நேரத்தில்...." பாலும் பழமும் " படம் வந்த போது நிறைய குழந்தைகளுக்கு " ரவி" , " சாந்தி " என்றே பெயர்களை வைத்து மகிழ்ந்தனர் !

பாச மலர் " " சிவாஜி - சாவித்திரி " நிஜமான அண்ணன் -தங்கை !
" பாலும் பழமும் " சிவாஜி - சரோஜாதேவி நிஜமான கணவன் மனைவி!
இவர்கள் இப்படித்தான் நடித்தனர் !

" கதையின் போக்கு அப்படித்தான் இருக்கிறது.....எனவே இவர்கள் இப்படி நடித்தது ஒன்றும் புதுமையா ? " என்று சிலர் கேட்கலாம் !
கதை அப்படித்தான் இருக்கிறது....ஆனால் கதைக்கு ' உயிரோட்டம் " கொடுத்தது யார் ?
இவர்களின் நடிப்பு / அர்ப்பணிப்பு!!!

" பாலும் பழமும் " படமும் , அந்த படத்தின் வெற்றியும் அதன் விளைவுகளும் !

" பாலும் பழமும் " படம் சென்னையிலும் மற்றும் பல இடங்களிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியது !
ஆனால் , அந்த படம் நம் தமிழ் நாட்டு மக்களை எவ்வாறு பாதித்தது ?

'பாலும் பழமும் ' சேலைகள்! அதென்னப்பா, " பாலும் பழமும் சேலைகள் ?
" பாலும் பழமும் " படத்தில் சரோஜாதேவி அணிந்து வந்த சேலையா ? ................இல்லையா !
அந்த காலத்தில் மக்களைக் கவர்ந்த பெயர்களில் " புடவை டிசைன்" களை புதிதாக அறிமுகப் படுத்தியதுண்டு !


" பாலும் பழமும் " என்கிற பெயர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்ததால்...ஒரு புடவையின் டிசைன் ஐ " பாலும் பழமும் ' என்று வைத்தனர் !

" பாலும் பழமும் " சேலைகள் எப்படி இருக்கும் ?

https://www.filepicker.io/api/file/3KtL9yU2RXKftKejjmlz+DSC_2266.jpg

" பாலும் பழமும் " படத்தில் சிவாஜி கணேசனுக்கு மேக் அப் போட்ட ஒப்பனையாளர், தன் கற்பனைத்திறனால் சிவாஜிக்கு மிக அழகான " கெட் அப் " இல் மேக் அப் போட்டார் ! இந்த கால கட்டத்தில் அவரின் துணையாருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது ! அந்த குழந்தையின் பெயர் : ரவி ! அவர் இப்போது ஒரு புகழ் பெற்ற டாக்டர்...

Russellxor
28th May 2015, 12:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1432795635470_zpsbjps8lph.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1432795635470_zpsbjps8lph.jpg.html)

Russellxor
28th May 2015, 12:41 PM
இளையதிலகத்தின்வெளிவராத படம்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1432795960990_zpsho2gje5n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1432795960990_zpsho2gje5n.jpg.html)

Russelldvt
28th May 2015, 12:44 PM
http://i60.tinypic.com/28tgq5k.jpg

Russelldvt
28th May 2015, 12:45 PM
http://i61.tinypic.com/sg2u4x.jpg

Russelldvt
28th May 2015, 12:45 PM
http://i58.tinypic.com/9h6lqx.jpg

Russelldvt
28th May 2015, 12:46 PM
http://i62.tinypic.com/166karr.jpg

Russelldvt
28th May 2015, 12:47 PM
http://i60.tinypic.com/2yxkeus.jpg

Russelldvt
28th May 2015, 12:47 PM
http://i61.tinypic.com/2lbngbl.jpg

Russelldvt
28th May 2015, 12:48 PM
http://i57.tinypic.com/w0ow7q.jpg

Russelldvt
28th May 2015, 12:48 PM
http://i60.tinypic.com/2iibtj8.jpg

Russelldvt
28th May 2015, 12:49 PM
http://i57.tinypic.com/9s4i05.jpg

Russelldvt
28th May 2015, 12:49 PM
http://i58.tinypic.com/qp1oix.jpg

Russelldvt
28th May 2015, 12:50 PM
http://i60.tinypic.com/2jdi8wh.jpg

Russelldvt
28th May 2015, 12:50 PM
http://i59.tinypic.com/2880b3s.jpg

Russelldvt
28th May 2015, 12:51 PM
http://i61.tinypic.com/15yafeh.jpg

Russelldvt
28th May 2015, 12:52 PM
http://i62.tinypic.com/2u6i6wx.jpg

Russelldvt
28th May 2015, 12:52 PM
http://i57.tinypic.com/i1mys7.jpg

Russelldvt
28th May 2015, 12:53 PM
http://i61.tinypic.com/2m29m4n.jpg

Russelldvt
28th May 2015, 12:53 PM
http://i57.tinypic.com/2e3d4lv.jpg

Russelldvt
28th May 2015, 12:54 PM
http://i62.tinypic.com/2z58vt5.jpg

Russelldvt
28th May 2015, 12:55 PM
http://i57.tinypic.com/2lkr674.jpg

Russelldvt
28th May 2015, 12:56 PM
http://i58.tinypic.com/acsn7s.jpg

Russelldvt
28th May 2015, 12:56 PM
http://i62.tinypic.com/dxn0ue.jpg

Russelldvt
28th May 2015, 12:57 PM
http://i60.tinypic.com/33b35uo.jpg

Russelldvt
28th May 2015, 12:58 PM
http://i57.tinypic.com/1zmcqwy.jpg

Russelldvt
28th May 2015, 12:58 PM
http://i61.tinypic.com/30u8ku9.jpg

Russelldvt
28th May 2015, 12:59 PM
http://i58.tinypic.com/2aioswi.jpg

Russelldvt
28th May 2015, 01:00 PM
http://i58.tinypic.com/iz84s3.jpg

Russelldvt
28th May 2015, 01:00 PM
http://i61.tinypic.com/1448suu.jpg

Russelldvt
28th May 2015, 01:02 PM
http://i62.tinypic.com/2psltnb.jpg

Russelldvt
28th May 2015, 01:25 PM
http://i61.tinypic.com/34zgfnt.jpg

Russelldvt
28th May 2015, 01:25 PM
http://i59.tinypic.com/1zxmi5x.jpg

Russelldvt
28th May 2015, 01:26 PM
http://i58.tinypic.com/2i1mpsi.jpg

Russelldvt
28th May 2015, 01:27 PM
http://i57.tinypic.com/2vvq3y1.jpg

Russelldvt
28th May 2015, 01:27 PM
http://i58.tinypic.com/w89dw4.jpg

Russelldvt
28th May 2015, 01:28 PM
http://i59.tinypic.com/etyxcx.jpg

Russelldvt
28th May 2015, 01:28 PM
http://i58.tinypic.com/2ytp7ra.jpg

Russelldvt
28th May 2015, 01:30 PM
http://i57.tinypic.com/21biucx.jpg

Russelldvt
28th May 2015, 01:30 PM
http://i59.tinypic.com/20tgwgj.jpg

Russelldvt
28th May 2015, 01:31 PM
http://i61.tinypic.com/30w5sms.jpg

Russelldvt
28th May 2015, 01:31 PM
http://i62.tinypic.com/v4xt0p.jpg

Russelldvt
28th May 2015, 01:32 PM
http://i62.tinypic.com/2dtn4o5.jpg

Russelldvt
28th May 2015, 01:32 PM
http://i57.tinypic.com/2wn4aro.jpg

Russelldvt
28th May 2015, 01:33 PM
http://i62.tinypic.com/2iapk48.jpg

Russelldvt
28th May 2015, 01:34 PM
http://i60.tinypic.com/3097jgj.jpg

Russelldvt
28th May 2015, 01:40 PM
அன்பு நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு என் சார்பிலும் மக்கள்திலகம் எம்ஜியார் திரியின் பக்தர்களின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://i60.tinypic.com/vhrcle.jpg

http://i60.tinypic.com/2roqi6t.jpg

Russellbpw
28th May 2015, 02:40 PM
DEAR FRIENDS,

HAPPY TO MEET ALL OF YOU AFTER A LONG GAP IN THIS THREAD !

MANY MORE HAPPY RETURNS OF THE DAY RAGHAVENDRA SIR !!

CONGRATS FOR THE NTFANS PROGRAMME WITH STUPENDOUS SUCCESS OF RELEASE OF BOOK ON NADIGAR THILAGAM's CHARITY GESTURES & SCREENING OF AVAR DHAAN MANIDHAR !!!!

VERY VERY HAPPY THAT NEYVELIYAAR IS BACK IN ACTION WITH HIS ACTION SERIES....!

CONGRATS TO GOPAL SIR's SON ACHIEVEMENT !!

CONGRATULATION TO KOVAI SENTHIL SIR for his NEW SHOWROOM @ COIMBATORE !!!

At this Juncture, am happy to share to all of you the following :

FROM 30th MAY 2015, TRICHY GAIETY SCREENS - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's DOUBLE ACTION DHAMAKKA " ENNAI POL ORUVAN"

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ep_zpsvvtorep7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ep_zpsvvtorep7.jpg.html)

ENDRUM UNGAL ANAIVARIN
RKS

parthasarathy
28th May 2015, 02:48 PM
Dear Raghavender Sir,

Wish you many more happy returns of the day (adhukkum Thalaivar pattu dhaen!)

Also, hearty congratulations of great feat of Nadigarthilagam.com

Regards,

R. Parthasarathy

Russellzlc
28th May 2015, 04:34 PM
காவிரியை கமண்டலத்தில் அடக்கிய குறுமுனி அகத்தியர் போலே, நற்பண்புகளையும் உயர் குணங்களையும் தன்னுள் அடக்கியிருக்கும் பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellxor
28th May 2015, 05:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_05282015164319_zpsuu5cozqk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_05282015164319_zpsuu5cozqk.jpg.html)

Russellxor
28th May 2015, 05:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_05282015164942_zpsignxfdno.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_05282015164942_zpsignxfdno.jpg.html)

Russellxor
28th May 2015, 05:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_05282015171546_zpsmykmifey.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_05282015171546_zpsmykmifey.jpg.html)

Russellxor
28th May 2015, 05:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_05282015171710_zpsvlmvg3tm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_05282015171710_zpsvlmvg3tm.jpg.html)

eehaiupehazij
28th May 2015, 06:26 PM
குழந்தை வளர்ப்பில் நடிகர்திலகம் ...அம்மையப்பராக !!


குழந்தை வளர்ப்பில் வல்லவர்கள் பொதுவாக பெண்டிரே !
ஆனால் தாயற்ற குழந்தைகளுக்கு ?...தாயும் தந்தையுமாகி குழந்தைகளை நடிகர்திலகம் பேணும் அழகைக் காண்போமே!


அழும் குழந்தையும் ஆட்கொள்ளப் படுமே.... பூவாய் மலர்ந்து புன்னகைக்குமே நடிப்புத் தந்தையின் வாஞ்சையான பிணைப்பிலே !

https://www.youtube.com/watch?v=OlE0EAbVZcY

பெற்றவர் யாராயினும் உற்றவன் நானே !
பாடல் காட்சியில் சிறுசிறு சுறுசுறு விறுவிறு குறுகுறு நடன அசைவுகளில் நடிகர்திலகத்தின் ஆளுமை!!

https://www.youtube.com/watch?v=C4I9JefCoRU

செல்வத்துள் செல்வம் மழலை செல்வமே !
இப்பாடல் காட்சியில் க்ளோசப் முகபாவங்கள் நூறு சதம் பொருத்தமான பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப உதட்டசைவுகள் உடல்மொழி.....சிலிர்ப்பே!

https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM

அந்த இறைவன் ....அவனும் அன்னை இல்லாதவன்! அவனிடத்தில் நானிருப்பேன் குழந்தைகளே உங்களை மகிழ்விக்க!

https://www.youtube.com/watch?v=jtOxjwwp-h0

RAGHAVENDRA
28th May 2015, 08:13 PM
பிறந்தநாள் வாழ்த்துக்களில் தங்கள் அன்பைப் பொழிந்த அன்பு உள்ளங்கள்,
நெய்வேலி வாசுதேவன், பெங்களூர் பாலகிருஷ்ணன் சுந்தரபாண்டியன், சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், முத்தையன் அம்மு, ரவிகிரண் சூர்யா,
பார்த்தசாரதி, கலைவேந்தன், வரதகுமார் சுந்தரம், ரவிச்சந்திரன், எம்ஜிஆர் ரூப் கண்ணன், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறையருளால் தாங்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்.

eehaiupehazij
28th May 2015, 11:31 PM
Guest Role of Inanimate Objects in NT movies!
Part 1 : Staircase Steps!


நடிகர்திலகத்தின் பாதப் பதிவில் மெய்மறந்த படிக்கட்டுகள்
நடிப்புப் புரட்சியின் சாட்சிகள் !


திரைக்கு வெளியேயிருந்து நடிகமன்னரின் நடிப்பாற்றலில் சொக்கும் போது நமது உணர்வு உந்துதல்களை அலப்பரையாக வெளிப்படுத்தி மகிழ்கிறோம்
ஆனால் திரைக்குள்ளேயிருந்து அவர் பொற்பாதங்களைத் தாங்கி அவர் நடிப்பின் கணம் சுமக்கும் படிக்கட்டுகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல் மெய்மறந்து போகின்றனவோ ?!

ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்வின் உருவகமே நாம் தினந்தோறும் ஏறி இறங்கும் படிக்கட்டுகள்
அந்தப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி தனது காந்த ஈர்ப்பான உடல்மொழி முகபாவங்கள் மூலம் நம்மை எப்படிக் கட்டிப் போடுகிறார் நடிகர்திலகம் !!


https://www.youtube.com/watch?v=JK3XMj44Vv8

https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g

https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M


உயர்ந்த மனிதனில் வாணிஸ்ரீ மறைவுக்குப் பின் சௌகார் ஜானகியை மணமுடிக்க ராமதாஸ் வற்புறுத்தும் போது சோகத்துயரை மறைத்துக்கொண்டு தளர்ந்த
நடையுடன் அவர் மாடிப்படிகளில் ஏறும் காட்சி இன்னும் மனத்திரையை விட்டு அகலவில்லை
அவ்வாறே தெய்வமகனில் அப்பா சிவாஜி வயதான பின் பண்டரிபாயை நோக்கி மாடிப்படிகளில் நளினமாக ஒருவிதமான குதூகலம் பொங்க படிப்படியாக இறங்கி வரும் காட்சியும் ....

ம் ம் ம் .....கொடுத்து வைத்த படிக்கட்டுகள்....நடிப்பிமயத்தின் பாதம் தாங்கிட!!

vasudevan31355
29th May 2015, 07:37 AM
செந்தில் சார்,

அருமை. விதவிதமான கான்செப்ட்களில் கடவுள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

http://i.ytimg.com/vi/utaMgFouiF4/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/ZC_id4YWEYQ/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/0IneKq_c9Pw/hqdefault.jpg

'தேவகி எங்கே?' என்று கண் இமைப்பதற்குள் மாடி ஏறி, அங்கு அவளைத் தேடி காணாமல், பின் 'சரசர' வென புயலை விட வேகமாக இறங்க வைக்கும் படிக்கட்டுகள். (இவருடைய வேகம் தாளாமல்தான் படிக்கட்டுகள் வளைந்து விட்டனவோ!)

பல வருடங்களுக்குப் பிறகு பிரிந்த தன் மனைவியைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் 'சுமதி! காஷ்மீருக்கு வர்றியா?' என்று உள்ளத்தில் ஆனந்தப் பொங்கலிட்டு படிக்கட்டுகளின் மீது ஏறி இறங்கிக் குதூகலிக்கும் குழந்தை மனநிலை சந்தோஷ 'திரிசூல' ஓட்டம்.

போலி வேடமிட்டிருக்கும் மகனை உண்மை விளங்காமல் சொந்த மகனென்று தெரிந்து, (ஜெய்கணேஷின் இரு கைகளையும் பிடித்து, பாசத்தை பதுக்கி, பலமுடன் ஆட்டி, தட்டிப் பார்த்து பரவசம் காண்பார். பின் அதே போலத் தன் கையைத் தடவிப் பார்த்தும்.) அவன் போன பின்பு 'என் வாரிசு உயிரோடு' என்ற உற்சாகத்தில் படிக்கட்டுகளில் ஏறும் வயதான தந்தையின் வாலிப ஓட்டம்.

'தெய்வ மகனி'ல் பண்டரிபாய் மூத்தவனை கோவிலில் மகனென்று புரியாமல் பார்த்து, இனம் புரியா தாய்மை உணர்ச்சி கொண்டு, அடி வயிறு கலங்கி, உடல் தள்ளாடி வீடு வருகையில் தகப்பன் மாடியில் கோட்டின் கீழ் பட்டனைப் போட்டவாறே கீழே வரும் மனைவிக்கு 'என்ன ஆனதோ தெரியவில்லையே' என்று விறுவிறுவென படிக்கட்டுகளில் கம்பீரமாக இறங்கும் தோரணையை மரித்தாலும் மறக்க இயலாது. (மாடிப்பட்டு இறங்கியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பண்டரிபாயை நோக்கி நடை வேகத்தைக் கூட்டுவார்)

'இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்குக் குயில் இல்லை'

என்று மகளைப் பிரிந்த தகப்பனின் சோகம். படிக்கட்டுகளின் வலதும் இடதுமாக ஓடி கைப்பிடியைப் பிடித்து சாய்ந்து புலம்பும் துயரம்.

மகன் தனக்கெதிராக வாதாடப் போகிறான் என்று அதிர்ந்து, சரக்கு அடித்து விட்டு, கீழே உள்ள செல்லம்மாவை நோக்கி படிக்கட்டுகளில், பக்கவாட்டுகளில் (சைடில்) தள்ளாடி பாடியபடியே, ஆனால் நிமிர்ந்து வீரம் காட்டி வரும் திமிர்த்தனம் கொண்ட கௌரவ பாரிஸ்டர்.

அதே போல கேஸ் பாதகமாகி விட்டது என்று உணர்ந்து தீர்ப்பும் அவ்வளவுதான் என்பதை படிக்கட்டுகளில் பைப் பிடித்தபடி காட்டி, விரக்தியாக அமர்ந்திருக்கும் அம்சம். அப்போதும் திமிர் போகாது. மடிசார் அணிந்திருக்கும் பண்டரிபாயிடம் ("என்னடி இது? டிபிகல் அம்மாமி மாதிரி! என்ன வேஷம்?) நக்கல். (ஆனால் வலுவிழந்ததால் வழக்கமான வலு இருக்காது.) உட்கார்ந்திருக்கும் போஸ் உலக டாலர்களை அள்ளிக் கொடுத்தாலும் அதற்கெல்லாம் ஈடாகாது.

ம்ம்...எவ்வளவோ இருக்கிறது இந்த நடமாடும் (படிக்கட்டுகளில் மட்டுமல்ல... நம் உள்ளக் கட்டிலிலும்தான்) அதிசயத்தைப் பற்றி எழுத. நேரம்தான் இல்லை செந்தில்.

JamesFague
29th May 2015, 11:09 AM
In Nallathoru Kudumbam also where he meets his wife after 25 years at that time when he climbs down from the

steps with a joy in his face as well as with his unique style which is unmatchable.

JamesFague
29th May 2015, 11:16 AM
In Nallathoru Kudumbam also where he meets his wife after 25 years at that time when he climbs down from the

steps with a joy in his face as well as with his unique style which is unmatchable.

Russellxor
29th May 2015, 01:00 PM
வெள்ளை ரோஜவில் இந்த


அட்டகாசமான காட்சி தொடக்கமும்
அதன்பின் ஆரம்பிக்கும்
ஆரவாரமான சண்டைக்காட்சியும் முடிவில்
சாந்தமான முகபாவங்களில் நடிகர்திலகமும்
அற்புதம்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_2402_zpsheklosta.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_2402_zpsheklosta.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_6514_zpsfdnndaxj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_6514_zpsfdnndaxj.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_8254_zpstjom0duj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_8254_zpstjom0duj.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_3507_zpszic7qeif.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_3507_zpszic7qeif.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_6798_zpsxadcnqxv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_6798_zpsxadcnqxv.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_0191_zpsmvpwttsx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Prema%20Mayam%20%201983%20%20-%20%20Sivaji%20Ganesan%20-%20Ambika%20-%20Radha%20-%20Prabhu%20Rescues%20Ambika%20-%20480P_0191_zpsmvpwttsx.jpg.html)

HARISH2619
29th May 2015, 01:57 PM
Dear raghavendra sir,
many many happy returns of the day,may god and nt bless you

HARISH2619
29th May 2015, 01:58 PM
Dear vasu sir,
going in full form,kalakkungal

eehaiupehazij
29th May 2015, 02:07 PM
செந்தில் சார்,

அருமை. விதவிதமான கான்செப்ட்களில் கடவுள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.
by Vasudevan Sir


இதுதான் உங்கள் ஸ்டைலில் அமையும் ஒப்பிட முடியாத முத்திரைப் பதிவு வாசுதேவன் சார் !
எனக்குத் தெரிந்தது ஒரு சின்ன கான்செப்ட் அதை சுற்றி ஒரு தூக்கணாங்குருவிக்கூடு சில பொருத்தமான பதிவுரைகள் மற்றும் வீடியோக்கள் அவ்வளவே !
உங்களது விவரிப்புத் திறன் எனக்கு வர யுகங்கள் போதாது நண்பரே !! ஹேண்ட்ஸ் அப்....நான் சரண்டர்!!
ஊக்கம் தரும் ஆக்கபூர்வமான பாராட்டுதல்களுக்கு நன்றிகள் !!

https://www.youtube.com/watch?v=54HL4BSefHA

Russellxor
29th May 2015, 11:21 PM
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் இடம் பெறாத இளமைக்காலம் எங்கே என்ற பாடல்.
இளையராஜாவின் பாடல்களை இணையத்தில் இப்போது டவுண்லோடு செய்ய முடியாதநிலையில் இந்த பாடலை சவுண்டு ரெக்கார்டர் மூலம் பதிவு செய்து பின் படத்தில் வரும்வேறுவீடியோபாடலை யூடீயூப் மூலம் பதிவிறக்ககம் செய்து அதை பிக்சர் கிளிப்புகளாக சேர்த்து பின் ஆடயோவைமிக்ஸ் செய்து அதன்பின் யூடியூப்பில்தரவேற்றம் செய்து ....

இப்போது உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும்

https://youtu.be/HLJeCRmZYnY

eehaiupehazij
30th May 2015, 07:20 AM
நடிகர்திலகம் அசத்திய மேற்கத்திய பாணி நடனக் காட்சிகளின் அணிவகுப்பு!

ஒரு அமைதியான மனமகிழ் மன்ற இரவு சூழல் மெல்லிய இசை வருடலில் காதல் ஜோடிகள் தம்பதியர் தங்களை மறந்து மிதமான அணைப்பில் ஒரு கை கோர்த்து மறுகை தோளிலிட்டு நாயகர் நெஞ்சில் நாயகி முகம் புதைத்து முறையான ஸ்டெப்களில் சுழன்றாடும் ஆட்ட நகர்வுகளோடு எண்ணப் பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் அமைந்தவை மேற்கத்திய பாணி நடனங்கள் தமிழ் திரைப்படங்களிலும் கலாசார வேறுபாடுகளின்றி தவறாமல் இவ்வகை நடனங்களும் மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்காக புகுத்தப் பட்டு ரசிக்கப்படுகின்றன

நடிகர்திலகம் கண்களை உறுத்தாத கம்பீரமான உடையலங்காரங்களில் நாயகியருடன் ஸ்டைலிஷாக நம்மை மகிழ்வித்த நடனக் காட்சிகள் !!

https://www.youtube.com/watch?v=BGH5slqQG60

https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA

https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito

https://www.youtube.com/watch?v=XuxO6eafsiY

Bonus from western Bond movie

https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc

https://www.youtube.com/watch?v=sefBHwijZng

vasudevan31355
30th May 2015, 09:03 AM
நடிகர்திலகம் அசத்திய மேற்கத்திய பாணி நடனக் காட்சிகளின் அணிவகுப்பு!



உங்களுக்கு அருமையாக எழுதத் தெரியாது என்று யார் சொல்ல முடியும்? நான்கே வரிகள் என்றாலும் நச். பாராட்டுக்கள். தொடருங்கள்.

RAGHAVENDRA
30th May 2015, 09:33 AM
டியர் செந்தில் (பெங்களூரு),
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
30th May 2015, 09:41 AM
சிவாஜி செந்தில் சார்
விதவிதமான கண்ணோட்டத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பினை அலசும் தங்கள் பாணி சூப்பர்...மாடிப் படிக்கட்டுகள், மேற்கத்திய நடனம், குழந்தை வளர்ப்பு என்று எத்தனை விதங்களில் அணுக முடியுமோ அத்தனை விதங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினை ஆய்ந்து வருகிறீர்கள்.
தங்களின் வித்தியாசமான சிந்தனை தொடரட்டும்.. அதன் மூலம் நம் இதய தெய்வத்தின் பல்வேறு பரிமாணங்களில் அவர் எடுத்த அவதாரங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.

RAGHAVENDRA
30th May 2015, 09:43 AM
கோவை செந்தில்
தாய்க்கு ஒரு தாலாட்டு ..
தங்களுடைய காணொளி அருமை. இதைப் போன்று திரையில் இடம் பெறாத நடிகர் திலகத்தின் பாடல்களை மேலும் தாங்கள் தொகுத்து வழங்க வேண்டும் என்பது இங்குள்ள அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
கர்ணன் படத்தில் மகாராஜன் உலகை ஆளலாம் பாடல், ஞாயிறும் திங்களும் பட்டினும் மெல்லிய பெண்ணிது,, இவையெல்லாம் வீடியோக்களின் தொகுப்பாக இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
30th May 2015, 09:46 AM
வாசு சார்
பாலும் பழமும், பார் மகளே பார், என தங்களுடைய பதில் பதிவுகளிலும் கூட தங்களின் அபார உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. தங்களைப் போல் பதில் பதிவெழுத நானும் பழக வேண்டும்.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
30th May 2015, 09:47 AM
சுந்தரபாண்டியன் சார்
மருத்துவர் சாந்தாராம் பாலும் பழமும் படத்தைப் பற்றி எழுதியதை மீள்பதிவிட்டு அவருடைய எழுத்தின் சிறப்பை இங்குள்ளோருக்கு எடுத்துரைத்த விதம் அருமை. அவரும் இங்கு வந்து பங்கு கொள்ள வேண்டும் என எல்லோரோடும் நானும் இங்கே விரும்புகிறேன்.

sss
30th May 2015, 11:02 AM
வீயார் சார்.

டாக்டர் சாந்தாராம் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து அவன் தான் மனிதன் விழாவுக்கும் அழைத்தேன் ... வருவதாக சொன்னார்..
அவரை இங்கு கொண்டு வந்து சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்... நன்றி

vasudevan31355
30th May 2015, 03:04 PM
'அக்னி புத்ருடு' (1987)

https://i1.ytimg.com/vi/h_TWmSyA-f8/hqdefault.jpg

ஏழைகளின் ஏந்தலாக, புரட்சி வீரன் சைதன்யாவாக நடிகர் திலகம் சில நிமிடத் துளிகளே வந்தாலும் புழுதி பறக்கிறது. ஜமீந்தார் (சத்யநாராயணா) ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய அரிசியை லாரியில் கடத்துவதை மலை உச்சியில் இருந்து கண்காணித்து, அலட்சியமாகத் துப்பாக்கி பிடித்தபடி, மூட்டைகளைச் சுட்டு அரிசியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், ஜமீந்தார் தன் குடும்பத்தையே நிர்மூலமாக்கி அழித்ததும் கொதித்தெழுந்து ('சிவந்தமண்' மலைப்பாறை காட்சி நினைவுக்கு வரும்) ஆவேசம் கொள்வதும் இந்த சிங்கத்திற்கு புதிதா என்ன? ஆனால் நமக்குப் புதிதாகத்தானே தோன்றும்!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355028/3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355028/3.jpg.html)

வீண் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தண்டனை பெறும்போது, ஒன்றுமே அறியாத இளைஞன் காளிதாஸ் (நாகார்ஜுனா) அதே ஜமீன்தாரால் சிறையில் வஞ்சகமாக தள்ளப்பட்டு, போலீஸால் சித்ரவதை செய்யப்படும்போது வாஞ்சையாக அவனிடம் பரிவு காட்டி, அவனை ஆசீர்வதித்து, அவன் "யார் நீங்கள்"" என்று கேட்டதும் 'மனுஷன், மனசுள்ள மனுஷன்' என்று பதிலளித்து, "விந்தையாக இருக்கிறது உங்கள் பேச்சு..நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?" என்றவுடன் ஹிடலர், முசோலினியைக் காரணம் காட்டி படிப்புக்கு விளக்கம் கொடுக்கும் இந்த படிக்காத மேதையை பாருங்கள். (தாடியும் மீசையுமாக ஜெயில் கைதி உடையில் இடுப்பில் கைவைத்து நாகார்ஜுனனிடம் உரையாடும் போது காமெராவின் டாப் ஆங்கிளில் அம்சமாக இருப்பார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355027/2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355027/2.jpg.html)

1987-இல் வெளிவந்த பலரும் காணத் தவறிய 'அக்னி புத்ருடு' தெலுங்குப் படத்தில் 'சைதன்யா' வாக சிறையில் நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சி. பின்னணிக் குரல்தான் இடிக்கிறது. சிம்மத்திற்கு எலி குரல் கொடுத்தது போல. ஆனால் நடிப்பு? வயதானாலும் அதே துடிப்பு. அதே ஸ்டைல். மலையில் துப்பாக்கியுடன் நிற்கும் தோரணை. ஒரு காலை மடக்கி ஒரு காலை நேராக வைத்து குறி பார்க்கும் பழகிய பக்குவம். 25வயது இளைஞன் போல. சத்யநாராயணா மீது கோபம் கொண்டு பாய்கையில் கால்களும், கைகளும் காட்டும் அபார ஸ்டைல்.

மன்றத்தில் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியவுடன் கொக்கரிப்பு சிரிப்பு. நாகர்ஜுனன் மேல் கருணை வைக்க நீதிபதியிடம் கம்பீரக் கோரிக்கை.

பாயசத்தில் முந்திரிப்பருப்பு போல முக்கியத்துவம். ஆனால் ஒரு சில நிமிடங்களே. கௌரவ ரோல். ஆனால் கம்பீரமானது. தன் ஆத்ம நண்பன் நாகேஸ்வரராவின் அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிப்பிற்காக பங்களித்தது. நிஜமாகவே 'அக்னி'தான் நடிப்பில்.

http://i.ytimg.com/vi/cOgqQn6vfoc/mqdefault.jpg

இதோ அறிமுகக் காட்சி. அன்னபூர்ணா ஸ்டுடியோவே தரவேற்றியிருக்கிறது. பெருமைதானே நமக்கு. கண்டு களியுங்கள்.


https://youtu.be/h_TWmSyA-f8

eehaiupehazij
30th May 2015, 05:24 PM
Guest Role of Inanimate Objects in NT movies!
Part 2 : Mirror Miracles!

நவரச நடிப்பின் உருவ(க)ம் பிரதிபலித்த நிலைக் கண்ணாடிகள் : கண்ணாடி முன்னாடி நடிப்பின் முன்னோடிப் பண்ணாடி!!


நிலைக்கண்ணாடி நாகரிக மனித வாழ்வியலில் அழகுணர்ச்சிக்கான ஒரு தவிர்க்க முடியாத அங்கமே!
மனித இனத்தவர் மதம் மொழி இனங்களைக் கடந்து ஏதோ ஒரு வகையில் அழகானவர்களே அழகு என்பது தோற்றமும் தோலின் நிறமும் மட்டுமே அலகாகக் கொண்டு கணிக்கப்படுவது பேதமையே!! என்றாலும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை 'நாம் அழகாக இரு க்கிறோமா.....?!' என்ற சந்தேகத்தில் (Beauty Conscious) நிலைக்கண்ணாடி முன் நின்று ஒருகணமேனும் அழகு பார்க்காத பெண்டிரோ ஆடவரோ இவ்வுலகில் உளரோ ?

நடிப்பின் முன்னோடியும் கண்ணாடிக்கு முன்னாடி அழகு பார்க்கும் காட்சிகள் ரசனைக்குரியவையே !!!



வசந்த மாளிகை காவியத்தில் ஹோட்டலில் வாணிஸ்ரீ முன்னிலையில் ராமதாசுடன் போடும் அதிரடி சண்டைக் காட்சியில் பஞ்ச்களுக்கு நடுவே கண்ணாடி முன் அழகு பார்த்து கலைந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிவிடும் காட்சி தியேட்டரையே கிடுகிடுக்க வைக்கும் ரசிக அலப்பரைக் காட்சியே !!

watch from 17 : 55

https://www.youtube.com/watch?v=m33YNkPGGfw


அழகின்மை காரணமாக குழந்தையிலேயே கைவிடப்பட்ட தெய்வமகன் தனது அருவருப்பான புறமுகத்தின் பிரதிபலிப்பை நிலைக்கண்ணாடியில் நோக்கி 'ச்சே' இதற்காகத்தானா பெற்றோர் என்னை ஒதுக்கிக் கைகழுவினீர்கள்' என்று கழிவிரக்கம் மிக காறி உமிழும் நிலைக்கண்ணாடிக் காட்சியும், மூன்று சிவாஜிகளும் சங்கமிக்கும் உணர்வலைகளின் உச்சகட்டத்தில் தந்தை சிவாஜி தனக்களித்த காசோலையை தம்பிக்கே தந்துவிடுமாறு நிலைக்கண்ணாடி பின்னாடியிருந்து வேண்டும் காட்சியிலும் கண்ணாடியும் நம் கண்களுக்கு ஒரு குணசித்திரமாக காட்சி தருகிறதே!!

நிலைக்கண்ணாடியில் இளையமகனின் கோணங்கித்தனங்களை மனத்துக்குள் ரசித்துக் கொண்டே அப்பா சிவாஜி பண்டரிபாயிடம் கலாய்க்கும் காட்சிகளும் (என்ன...ராஜாவுக்கு ராணி ரோஜா கொடுத்து தாஜா பண்றாங்க?..பையன் காலையிலேயே பணத்துக்கு மணியடிச்சுட்டானா?) ரசிக்கத்தகுந்ததே!!


https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

Raman Eththanai Ramanadi!

விஜயா வீட்டுக்குள் வந்ததும் தலைகால் புரியாமல் NT கண்ணாடியில் அவசர அழகு பார்க்கும் சீன் அள்ளுகிறது!!

https://www.youtube.com/watch?v=bG3d2LGTsLw


Nine reflections of NT in Navaraaththiri...Mirror scene!!

https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M


bonus from Enter the Dragon! the most famous mirror room fight!!

https://www.youtube.com/watch?v=WoMVfvS8rSo


But ... both these multiple mirror image scenes were adapted from Charlie Chaplin's Circus (Mirror Maze) long time back...1928 !

https://www.youtube.com/watch?v=MMBU5gk9HC4

eehaiupehazij
30th May 2015, 08:49 PM
Gap filler : Double Damaakka on Deivamagan!

Enjoy the song Kaathalikka katruk kollungal both in tamil (1969) and in telugu dubbed Koteeswarudu (1970), as a monotony breaker!!


https://www.youtube.com/watch?v=AD1Ouc1r0zA

Language change...no barrier to enjoy NT's performance!

https://www.youtube.com/watch?v=95ngjcNuSXg

Russellisf
30th May 2015, 10:01 PM
Ragahvendra sir wish u happy birthday sir sorry for the delay




டியர் செந்தில் (பெங்களூரு),
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

Russellisf
30th May 2015, 10:08 PM
raghavendra sir for ur birthday treat


அவன் ஒரு சரித்திரம் 008.
வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு இந்த தொடரை தொடர்கிறேன்.
தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிந்தையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் பலரை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசனே.
காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார். சிவாஜியின் மூலமாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம். அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.
பாத்திரங்களை சித்தரிக்கும் தன்மையிலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது. மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.
சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - 'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேற அவரோடு உடன் நடிக்கும் மற்ற பாத்திரங்கலின் பங்கும் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் பெருந்தன்மை பிறரை நடிக்கவிட்டு தான் அதற்கு எதிர்மறையாற்றுவது. தானே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் எண்ணியது இல்லை.
இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் , சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே. தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.
சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது அவரது தெளிவான வசன உச்சரிப்பிலும் இருந்தது.
இந்த ஆற்றல் அவருக்கு ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம். சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.
சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.
நாடக மரபின் நாயகராக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் சக்கரவர்த்தியானார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது கலாச்சாரத்தின் ஒரு உருவமாகவே சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.
அவர் மறைவுதான் அவரின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று. தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு. வாழ்க அவரது புகழ், வளர்க அவர் வளர்த்த கலை.
ஜெய்ஹிந்த்!
(சில குறிப்புகள் வலைத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை)

Russellisf
30th May 2015, 10:08 PM
திருவிளையாடல் 50 ஆண்டுகள் நிறைவு
ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.
1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.
அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!
வெற்றி ரகசியம்
பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.
ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.
பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.
நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.
கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும்.
போற்றப்படும்.
நன்றி: தி இந்து..22.5.2015

RAGHAVENDRA
31st May 2015, 12:03 AM
வீயார் சார்.

டாக்டர் சாந்தாராம் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து அவன் தான் மனிதன் விழாவுக்கும் அழைத்தேன் ... வருவதாக சொன்னார்..
அவரை இங்கு கொண்டு வந்து சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்... நன்றி

மிக்க நன்றி சுந்தரபாண்டியன் சார்

RAGHAVENDRA
31st May 2015, 12:04 AM
யுகேஷ் பாபு சார்,
தங்களுடைய வாழ்த்திற்கும் சிறப்புப் பதிவுகளுக்கும் என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
31st May 2015, 01:09 AM
வாசு சார்
தங்களின் கைங்கரியத்தில் அக்னி புத்ருடு முழுப்படத்தையும் இங்கே அளித்து விட்டீர்கள்.. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அதுவும் நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி காணொளி, அதைப் பற்றிய தங்கள் வர்ணனை, அப்படத்தில் சைதன்யராக நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு, சற்றும் பொருந்தாத குரலை மீறி வெளிப்பட்ட அவருடைய நடிப்பின் தாக்கம், என அமர்க்களமாக சித்தரித்துள்ளீர்கள்.

தங்களுக்கு உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
31st May 2015, 01:10 AM
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 23

குலமகள் ராதை

பொதுவாகவே தமிழ்த் திரையுலகில் ஆண்களைத் திரும்பத் திரும்பத் திரைப்படத்திற்கு வரவழைக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. அதை விட அதிகம் அதன் தோல்விக்கு உண்டு... வயது வித்தியாசமின்றி ஆண் இனம் சினிமாவில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி உள்செலுத்திக் கொண்டு ஆறுதல் தேடுவது காதல் தோல்விக் காட்சிகளிலும் அதனையொட்டிய பாடல்களிலும் தான். இது சினிமாவின் வெற்றிக்கு ஒரு ரகசியமாகக் கூட கொள்ளலாம்.

அப்படி ஆணினத்தை வரவழைக்கும் சக்தி காதல் தோல்விப் பாடல்களுக்கு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். அவர்களின் மனதில் தனக்கெனத் தனியிடத்தை கவியரசர் பெற்றார் என்றால் அதில் பெரும் பங்கு காதல் தோல்விப் பாடல்களையே சாரும்.

இதற்குப் பெரிதும் உதாரணமாக விளங்குவது இரண்டு பாடல்களைச் சொல்லலாம். நூற்றாண்டுத் தமிழ்த்திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் கொடிகட்டிய காலத்திலும் சரி, அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள் படைத்த காதல் தோல்விப் பாடல்களைப் போல் அமரத்துவம் பெற்ற பாடல்களை யாராலும் படைக்க முடியவில்லை என்பதே உண்மை.

அதுவும் இந்த இரண்டு பாடல்கள் -

குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
மற்றும்
வானம்பாடி படத்தில் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் ..

இந்த இரண்டு பாடல்களும் அந்தக் கால இளைஞர்களை மட்டுமின்றி எக்கால இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய சிரஞ்சீவித்துவமான வரிகளைக் கொண்டு அமைந்தவை. இந்த அளவிற்கு காதல் தோல்வியின் வலியை ஆழமாக வேறு எந்தப் பாடலும் சித்தரிக்கவில்லை என்பது நிதர்சனம். எத்தனையோ பாடல்களை பதிலாக கூற முற்படலாம். ஆனால் தாக்கம் என்பது இந்த இரு பாடல்களுக்குப் பிறகே எனக் கூற முடியும்.

குறிப்பாக வெளியான நாள் தொட்டு இன்று வரை திரையரங்கில் ரசிகர்கள் தங்களை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வது குலமகள் ராதை படப்பாடலில் தான். ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியடைந்தவர்கள் தங்கள் உள்மனதை வெளிப்படுத்தும் வகையில் உணர்ந்து பாடலோடு ஐக்கியமாகி விடுவதே இப்பாடலின் இமாலய வெற்றிக்குக் காரணம்.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல் இரு திலகங்களின் சங்கமத்தின் சிகரம் எனலாம். எவ்வாறு நடிகர் திலகம் மெல்லிசை மன்னர்கள் இணைந்த எங்கே நிம்மதி இறவாப் புகழ் பெற்றதோ அதற்குச் சற்றும் குறையாத பெருமை வாய்ந்த பாடல் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல்

நடிகர் திலகத்தின் நடை..
இதைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இப்பாடலில் காதல் தோல்வியைத் தன் நடையிலேயே சித்தரிக்கும் உன்னதத்தை என்னென்பது. அந்த மேட்டில் ஏறும் போதே அவருடைய நடையில் அந்த்த் துயர் தெரிய ஆரம்பிக்கிறது. அசரீரியில் அவருடைய குரல் அவளைப் பற்றிக் கூற நடையில் மெல்ல மெல்ல அதன் வீச்சு அதிகமாகிறது. அந்த அசரீரி முடியும் தருவாயில் வலது காலை வைத்த பின்னர் இடது காலை சற்றே தாமதித்து எடுத்து வைக்கும் போது அவர் வெளிப்படுத்தும் உணர்வு...
கோபம் கொப்பளிக்க பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. ராதா ராதா... என ஒலிக்க அந்த இடி மின்னலுடன் துவங்குகிறது பாடல் காட்சி..
அந்த இடி மின்னலில் எவ்வளவு தான் உரத்த குரல் கொடுத்தாலும் காதில் கேட்காது என்பது நாயகனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனுடைய ஆற்றாமை அவள் காதில் விழவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறான். அந்த ராதா என்கின்ற குரலுக்கு தன் உதட்டசைவில் அழுத்தம் அளித்து தன் நடிப்பு ராஜ்ஜியத்தைத் துவக்குகிறார் நடிகர் திலகம்.,
அக்கார்டின் இசை, இடி ஓசை, கண்ணைப் பறிக்கும் மின்னல் இவற்றினூடே சற்றும் கவலைப் படாமல் அந்த இடி மின்னலை நோக்குகிறார் நடிகர் திலகம். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பல்லவியை துவக்குகிறார். இரண்டாம் முறை பாடும் போது பாடலின் வரிகளுக்கேற்ப தன் முகத்தை சுழற்றும் போது அதில் அந்த விரக்தி வெளிப்படுவதைப் பாருங்கள்.

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி வரிகளின் போது இரு கைகளையும் விரித்துப் பின் வலது கைகை மேலே தூக்கி கடவுளைச் சுட்டிக் காட்டி அவரைக் குற்றம் சாட்டும் போது அந்த கோபம் கடவுளின் மீதே வெளிப்படுத்துவதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டு வருவதைப் பாருங்கள்.

இப்போது முதல் சரணத்தின் பின்னணி இசை துவங்குகிறது. மெல்ல அந்த மண்டபத்தை நோக்கிச் செல்கிறார். ஆஹா.. தொடர்வது கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அந்த அற்புத போஸ்...
மின்னல் பளிச்சிட உடனே ஸ்டைலாகத் திரும்பி மின்னலை நோக்கியவாறு, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என அந்த மின்னலுக்கே சவால் விடும் அலட்சியமான பார்வை,

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/DOSKMR01_zpsncglrh7v.jpg

உடனே திரும்பி நடை.. இரண்டு மூன்று ஸ்டெப்புகள்.. மண்டபத்தில் கால் வைக்கிறார். உடனே மின்னல்.. இன்னும் அதிக அளவில் அந்த அலட்சிய நோக்கு..

இப்போது வலது கையைத் தூணின் மீது வைத்து ஒரு கோபமான நிற்றல். நின்று பார்ப்பதிலும் ஒரு ஜீவனைக் கொணடு வருவது நடிகர் திலகம் மட்டுமாகத் தான் இருக்க முடியும்.

மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை..

திரையரங்கை அதிர வைக்கும் வரிகள்... அதைப் பாடும் போது பாடகர் திலகத்தின் குரலில் வெளியாகும் கோபம்...அதைச் சொல்லும் போது இவர் முகத்தில் வெளிவரும் உணர்வு...

இதற்கு அடுத்த வரிகள் கொட்டகையின் கூரையை உடைத்து சீறிட்டுக கிளம்பும் வகையில் கரகோஷத்தை உருவாக்கும்..

நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை..

இந்த வரியை இரண்டாம் முறை கூறும் போது தன் வலது கை சுட்டு விரலால் அனாயாசமாக கடவுளைச் சாடும் உடல் மொழி...

இப்போது பல்லவியில் காலம் செய்த கோலமடி வரிகளின் போது இரு கைகளையும் அகல விரித்து இரண்டையும் மேலே தூக்கும் போது கடவுளின் மீதுள்ள கோபத்தை இரு மடங்காக சித்தரிக்கிறார் நாயகன்.

அந்த கோபத்தைப் பாருங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/DOSKMR02_zpsquhw500v.jpg

இப்போது கோபத்தைக் கொட்டிய பிறகு மனம் உடைகிறது. விரக்தி திரும்புகிறது. நடை தளர்கிறது.

இப்போது மின்னலைக் காண கண்ணும் மனதும் கூசுகின்றன. கை தன்னையறியாமல் கண்ணை மூடுகிறது.. மெல்ல கண்களின் அந்த ஒளி வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக விரல்களால் கண்களைத் துடைத்துக் கொண்டே வர, நடை சற்றே வேகம் பிடிக்கிறது... இந்த நடையைப் பாருங்கள்..
இதில் தளர்வு, விரக்தி வெளிப்படுகிறது...

இப்போது அந்த சூழலை சற்றே மாற்றும் வகையில் திரை இசைத் திலகம் தன் மேதைமையை வெளிப்படுத்துகிறார். மழை நீர் சொட்டும் ஓசைக்காக அவர் பயன் படுத்தும் இசைக் கருவியின் ஒலியோடு இணைந்து ஒளிப்பதிவாளர் அந்த்த் தண்ணீர்ப் பரப்பை அப்படியே நகர்த்திச் செல்வது ... ஆஹா.. என்ன கவிதைத்துவம்... கருப்பு வெள்ளையில் காவயமே படைத்து விடுகிறார்கள் இந்த இடத்தில்...
இப்போது ஒலிக்கிறது அந்த வைர வரிகள்..

உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்...

அந்த மழை நீரின் வீச்சையும் தாண்டி அந்தக் குளிரான சூழலிலும் கண்களில் அனல் தெறிக்கிறது நாயகனின் முகத்தில்.. அதைப் பாருங்கள்.. நடிகர் திலகத்தின் கண்கள் அந்த சூழலிலும் கோபத்தையும் உஷ்ணத்தையும் வெளிப்படுத்துவதையும் அதை அவ்வளவு அருமையாக ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளதையும்.. அவருக்கு ஒரு சபாஷ்...

அந்த வரிகள்.. கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி..

ஆஹா கவியரசின் வரிகள் அண்டம் முழுதும் எதிரொலிக்கும் ஆரவார கரகோஷத்தைத் திரையரங்கில் பெறுகின்றனவே...

http://tamilnation.co/images/hundredtamils/kannadasan2.jpg

மழையென்றும் வெயிலென்றும் பாராமல் நாயகன் தவிக்க, காதலியோ தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள்.. இந்த இடத்தில் திரை இரண்டாகப் பிரிக்கப் பட்டு நாயகன், நாயகி இருவரையும் சித்தரிக்கிறது..

இருவர மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி..

கடவுளை நேரடியாக அட்டாக் செய்து விடுகிறார் கவியரசர்.
அதை தீர்க்கமாகத் தன் குரலில் கொண்டு வருகிறார் பாடகர் திலகம்.

http://images.mathrubhumi.com/english_images/2013/May/26/03082_190285.jpg

தன் சுட்டு விரலின் வேகமான அசைவுகளால் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து இறைவன் மீது காதலர்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறார் நடிகர் திலகம் தன் நடிப்பின் மூலம்..

காதல் தோல்விக்கு கடவுளைச் சாடும் இரு பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல் சாகா வரம் பெற்றதில் வியப்பென்ன..
குலமகள் ராதை எப்போது மறுவெளியீடு கண்டாலும் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி காதல் வயப்பட்டு தோல்வியுற்ற ஆண்களையும் திரளாக வரவழைக்கும் உன்னதத் திரைக்காவியமாக விளங்கி மாபெரும் வெற்றி காண்பதின் ரகசியம் புலப்படுகின்றதல்லவோ..

இறுதியில் நமக்குத் தோன்றும் வரிகள்..

நீ ஏன் எப்போது பார்த்தாலும் சிவாஜி சிவாஜி என்று அலைகிறாயோ தெரியவில்லை. என சிலர் கூறுவதோடு,, செல்லமாக, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கடவுள் செய்த குற்றம் என கடவுளையும் திட்டும் அளவிற்கு ரசிகர்களை உருவாக்கிய பாடல்...

பாடலைப் பாருங்கள்.. அணுஅணுவாக ரசியுங்கள்..
கவியரசரின் வரிகளை, திரை இசைத் திலகத்தின் உயிரோட்டமான இசையை. பாடகர் திலகத்தின் ஜீவனுள்ள குரலை..
http://1.bp.blogspot.com/-N3Bj0rfFCWk/Ut4uTMdizaI/AAAAAAAALeY/zPjVLiiZysk/s1600/KV+Mahadevan.JPG

பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி ஏன் இன்னும் ரசிகர்களை நடிகர் திலகம் பெறுகிறார் என்பதற்கு அத்தாட்சியான பாடலை...

https://www.youtube.com/watch?v=rMHD71WSkqg

RAGHAVENDRA
31st May 2015, 01:31 AM
அபூர்வமான காணொளி..

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடலை பாடகர் திலகம் மேடையில் பாடி நடிக்க, திரையிசைத்திலகம் இயக்கும் காட்சி..

https://www.youtube.com/watch?v=wVvekJW2omk

Gopal.s
31st May 2015, 04:44 AM
Dear Ragavendra,

Belated Wishes for your peaceful,prosperous ,healthy and Happy long life. As I was travelling ,I couldnt wish you earlier.

Gopal.s
31st May 2015, 05:20 AM
வாசுவிற்காக, தன்னிச்சையாக நான் நீக்கி விட்டேன்.

vasudevan31355
31st May 2015, 07:58 AM
கோ, உங்கள் கோபம் நியாயமானது.

நான் ஹிந்து விமர்சனம் படிக்கவில்லை.. படிப்பதுமில்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒரு நபர் இதன் பின்னணியில் இருக்கிறார் என்று தாங்கள் கூறுவது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் நீங்கள் 'கலை' பித்தரகவே மாறி விட்டீர்களோ என்று தோன்றுகிறது.:) சதா சர்வ காலமும் உங்களுக்கு எல்லோரையும்விட ' கலை' நினைப்புதான்.:) எழுந்தால் 'கலை'...நடந்தால் 'கலை'... கதைத்தால் கலை'... உட்கார்ந்தால் 'கலை'... நிமிர்ந்தால் 'கலை'.:)... பேசினால் 'கலை'.:) அதனால் 'கலை'யைப் பற்றி நீங்கள்தான் 'க(வ)லை'ப் பட வேண்டுமே ஒழிய நாங்கள் இல்லை. ஆனால் 'கலை'தான் உங்களை சீண்டுவேனா என்கிறது. 'கலை'க்கு உங்கள் நினைப்பு துளியும் இல்லை. ஆனால் உங்களுக்குக் 'கலை'யை தவிர வேறு கவலையே கிடையாது . ஐயோ பாவமாக இருக்கிறது.

இதற்கு மேல் எழுதினால் உங்களை விட எனக்கு 'கலைப்' பித்து அதிகம் பிடித்தது போல ஆகிவிடும்.:) இந்த விஷயத்தில் நீங்கள் தோற்கவே கூடாது. நான் உங்களை வெற்றி கொள்ளவே கூடாது.:) அதுதான் உண்மையான பிரண்ட்ஷிப்.

இன்னொன்று. இங்கு முதுகு சொரிந்து யாருக்கும் ஒன்றும் ஆகப் போவதில்லை. பதிவர் அவர்களால் முடிந்த பதிவைப் போட்டால் மற்றவர்கள் அதைப் பாராட்டுவதோ அல்லது 'லைக்' தருவதோ முதுகு சொரியும் அர்த்தம் ஆகாது. இது அந்தக் 'கலை'யின் மேல் ஆணை.:)

'மதுர கானம்' பொதுத் திரி. இதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் பங்கு கொள்ளலாம். அது ஒரு ரிலாக்ஸ் செய்து கொள்ளும் திரி. இங்கு இருப்பது போல் அங்கு சண்டை போட்டுக் கொள்ள முடியாது.
ஒருதலைப் பட்சத்தைக் காட்ட முடியாது. 'கலை'க்கு வேறுபாடு கிடையாது.

ஆனால் ஒன்று. ஹிந்துவின் சிவாஜி மறைப்பு முகமூடி கிழிக்கப்பட வேண்டிய ஒன்றே. அதில் உங்களுடன் 100 சதம் ஒத்துப் போகிறேன். ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு நடிகர் திலகத்தை விட நாகேஷ்தான் டாப் என்று அள்ளிவிடும் அறிவிலிகளுக்கு அரிச்சுவடி பால பாடம் நாம் நடத்த வேண்டிய தேவை இல்லை. அப்படி அவசியமும் இல்லை. அப்படி பாடம் எடுத்தால் நம்மைப் போல அறிவிலிகள் யாரும் இல்லை.

நடிகர் திலகத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவன் சிவாஜியை விட எல்லோருமே சிறந்தவர்கள் என்று பிதற்றுவான். சண்டை என்றால் சரிசமமானவர்களுடன் மோத வேண்டும் கோ. இப்போது நான் உங்களுடன் மோதுவதைப் போல.

உங்களின் அற்புதமான திருவிளையாடல் பதிவே மூடர்களுக்கு, உண்மையை மறைப்பவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து விடுமே! அது ஒன்று போதுமே. அப்புறம் ஏன் எல்லோரும் கத்தி எடுத்துக் கொண்டு போருக்குப் போக வில்லையென்று கோபம்?

ரிலாக்ஸ் கோ. முதலில் 'கலை'ப் பைத்தியத்திலிருந்து தெளியுங்கள்.:) அவ்விடத்தில் கோபால் பைத்தியம் பிடித்து யாருமே அலையவில்லை.:) புரியுதா கண்ணா?:)

vasudevan31355
31st May 2015, 08:04 AM
யாருப்பா அது? என்னுடைய முந்தைய பதிவிற்கு தெரியாத்தனமாக் கூட யாரும் லைக், தேங்க்ஸ் போட்டுடாதீங்க.:) அப்புறம் தொலைஞ்சீங்க. கபர்தார்...:)

Gopal.s
31st May 2015, 08:50 AM
வாசுவிற்காக, தன்னிச்சையாக நான் நீக்கி விட்டேன்.

vasudevan31355
31st May 2015, 09:19 AM
குறுகிய நோக்கம் கொண்டிருந்தால் நான் ஏன் இங்கு திரும்ப வருகிறேன்? சொல்லி விடுங்கள். இன்றோடு போய் விடுகிறேன். மதுர கானத்தை மட்டுமே உங்கள் எதிரிகளோடு அதாவது நீங்கள் சொல்வது போல என் உயிர் நண்பர்களோடு சேர்ந்து நாங்கள் அனைவரும் முதுகு சொறிந்து கொண்டு நடத்திக் கொள்கிறோம்.

போய் விட்டால் குறுகிய நோக்கம் என்பீர்கள். வந்தால் வம்பு வளர்ப்பீர்கள். எனக்கும் மான அவமானங்கள் உண்டு. நீங்கள் நண்பர் என்பதால் எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போக முடியாது.

திரும்ப வந்த சில நாட்களில் என் மனதார என் தெய்வத்துக்கு எவ்வளவு உண்மையான சேவை செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டிருக்கிறேன். இதில் குறுகிய நோக்கம் என்ன?

சரி! நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். நான் வரவில்லை. ஆனால் நான் விலகவில்லை. உங்கள் குறுகிய நோக்கிய வார்த்தை விஷம். கக்கியதை எடுங்கள். திரும்ப வருவது பற்றி யோசிக்கிறேன்.
இது பயமுறுத்தல் இல்லை. தன்மான ரோஷம். நான் இல்லையென்றால் லட்சம் பேர் நடிகர் திலகத்திற்கு.

போவதற்கு முன்..

தலைவரின் பதிவு ஒன்றை செந்தில் சாரின் பதிவுக்கு பதில் பதிவாக ரெடி செய்து கொண்டிருந்தேன் இன்று காலையில். இதற்கே ஒரு நிமிடம் கூடத் தூங்காமல் கண் விழித்து நைட் ஷிப்ட் முடித்து வந்து டீ கூட அருந்தாமல் பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். நீங்கள் சொன்னபடி குறுகிய நோக்கத்துடனே.

அதை பதிவு செய்து விட்டு கிளம்புகிறேன்.

பொசுக்கென்று கோபித்துக் கொண்டெல்லாம் கிளம்பவில்லை. குறுகிய நோக்கம் நெடிய நோக்கமான பிறகு வருகிறேன்.

நடிகர் திலகம் திரியில் நல்ல பதிவாளர்கள் எவரும் நிலைத்து நிற்கவே முடியாது. இதுதான் சத்தியமான உண்மை. இது இந்தத் திரியின் சாபக் கேடு போலும்.

vasudevan31355
31st May 2015, 09:50 AM
செந்தில் சார்,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355029/VTS_06_1.VOB_20150530_190303.532.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355029/VTS_06_1.VOB_20150530_190303.532.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355029/VTS_06_1.VOB_20150530_190457.226.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355029/VTS_06_1.VOB_20150530_190457.226.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355029/VTS_06_1.VOB_20150530_190451.626.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355033/VTS_06_1.VOB_20150530_190401.514.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355033/VTS_06_1.VOB_20150530_190401.514.jpg.html)

'குலமகள் ராதை'யில் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி' பாடலில் தலைவர் நிலைக் கண்ணாடி முன் அமர்ந்திருக்கும் சரோஜாதேவியின் பின் நின்று, அவரது இரட்டை ஜடையை பிடித்து இழுத்து வம்பு செய்து, பின் தேவி எழுந்திருக்க எத்தனிக்கும் போது அவரது உச்சந்தலையில் தன் முகவாய்க் கட்டையை அழுத்தி மீண்டும் அவரை அமர வைப்பார் பாருங்கள். அள்ளிக் கொண்டு போகும்.

காதலர்களின் ஆபாசக் கலப்பில்லாத அன்னியோன்ய நெருக்கத்தை, செல்லச் சீண்டல்களை, வெறும் ஜடையைப் பற்றி இழுக்கும் இந்த ஒரு காட்சியின் மூலமே அற்புதமாக அனைவருக்கும் உணர்த்தி விடுவார் தலைவர். கொள்ளை கொள்ளும் இயல்பான அழகு வேறு.

இப்போது ஸ்டில் பாருங்கள். எனக்கும், முரளி சாருக்கும் மிக மிக பிடித்தமான ஸ்டில் இது.


அடுத்து 'தங்கமலை ரகசியம்' படத்தில் கண்ணாடி காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191259.217.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191259.217.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191308.272.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191308.272.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191310.636.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191310.636.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191311.303.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355032/VTS_03_2.VOB_20150530_191311.303.jpg.html)

ஜமுனா காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது நமது 'டார்ஜான்' அங்கு வந்து, அங்கு வரும் வீரகளை துவம்சம் செய்து பந்தாடி விட்டு, பின் ஜமுனா அறைக்குள் நுழைந்து அட்டகாசம் பண்ணுவார்.

சுழல் நாற்காலியில் அமர்ந்து சுற்றிப் பார்த்து வியப்பார்.

பின் அங்கிருக்கும் நிலைக்கண்ணாடி முன் நின்று அது உருவம் காட்டும் என்று தெரியாமல் முதன் முதலாக தன் முழு உருவத்தையும் பார்த்து, முரட்டுத்தனமாக, தன்னைப் போலவே இன்னொருவன் எதிர் இருக்கிறான் என்று எண்ணி தன் பிம்பத்தைக் காட்டும் அந்தக் கண்ணாடியை மூர்க்கத்தனமாக உடைத்து நொறுக்கி சுக்குநூறாக்கி விடுவார். உடைத்துவிட்டு ராட்சஸ சிரிப்பொன்றை சிரிப்பார்.

நன்றாகக் கவனியுங்கள்.

நிலைக் கண்ணாடி மேலும் கீழுமாக லேசாக வேறு ஆடிக் கொண்டிருக்கிறது. அதில் தன் உருவத்தை பார்க்கிறார் தலைவர். அப்படியே கோபம் கொண்டு இரு கைகளையும் வலுவுடன் மடக்கி, டார்ஜான் ஸ்டைலில் மார்புகளை குத்திக் கொண்டு பின் வலது கை முஷ்ட்டியை மடக்கி (கையில் எந்த ஆயுதமும் இருக்காது. வெறும் கையாலேயே) கண்ணாடியை ஓங்கி ஒரு குத்து விட்டு நொறுக்குவார். நிஜமாக. உண்மையாக. சத்தியமாக. எந்த மாய்மால வேலையும் இருக்காது.)

நான் ஒரு தடவைக்கு பல தடவை பார்த்து விட்டேன். வெறும் கையால் கண்ணாடியை உடைப்பது சுலபமல்ல. கைகளைக் கிழித்து காயப்படுத்தி பதம் பார்த்து விடும். பயிற்சி எடுத்தவர்கள்தான் அதை திறம்படச் செய்ய முடியும். ஆனால் தலைவர் படுஅலட்சியமாக, சர்வ சாதரணமாக இந்த ஆபத்தான காரியத்தை அசால்ட்டாக செய்து காட்டுவார். பார்த்து நிஜமாகவே ஆடிப் போய் விட்டேன் தெரியுமா!

வீடியோ இருந்தால் மறுபடி பாருங்கள். மூக்கின் மேல் விரல்கள் வைத்து விடுவீர்கள்.

வீரம் என்றால் இதுவல்லவோ வீரம்.

வெறும் லைக்குகளால் நன்றிகளால் பயனில்லை. அந்தக் காட்சிகளைப் பார்த்து தாங்கள் ரசித்தவற்றை இங்கு நண்பர்கள் பதிந்து அதைப் பற்றிய கருத்தையும் பதிந்தால் பதிவுகள் முழுமை பெறும். இல்லையென்றால் சலிப்புதான் ஏற்படும்.

செந்தில் உங்களுக்கு மறுபடி நன்றி!

நீங்கள் இப்படி எடுத்துக் கொடுப்பதினால்தான் வெளியே வராத, அதிகம் அறியப்படாத, பேசப்படாத, தலைவரின் அரிய திறமைகளை இங்கே என்னால் முடிந்த மட்டும் வெளிக் கொணர்ந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவோ அல்லது மீண்டும் ஞாபகப்படுத்தவோ முடிகிறது.

ஆனால் தொடர முடியாமல் போவது துரதிருஷ்டமே! வருகிறேன்.

நன்றி செந்தில்.

Gopal.s
31st May 2015, 10:09 AM
சரி! நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். நான் வரவில்லை. ஆனால் நான் விலகவில்லை. திரும்ப வருகிறேன். இது பயமுறுத்தல் இல்லை. தன்மான ரோஷம். நான் இல்லையென்றால் லட்சம் பேர் நடிகர் திலகத்திற்கு.

போவதற்கு முன்..

தலைவரின் பதிவு ஒன்றை செந்தில் சாரின் பதிவுக்கு பதில் பதிவாக ரெடி செய்து கொண்டிருந்தேன் இன்று காலையில். இதற்கே ஒரு நிமிடம் கூடத் தூங்காமல் கண் விழித்து நைட் ஷிப்ட் முடித்து வந்து டீ கூட அருந்தாமல் பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன்.

அதை பதிவு செய்து விட்டு கிளம்புகிறேன்.

பொசுக்கென்று கோபித்துக் கொண்டெல்லாம் கிளம்பவில்லை. குறுகிய நோக்கம் நெடிய நோக்கமான பிறகு வருகிறேன்.



I take back my word which is intended to be different. (I meant the end result not your intention) Pl.Continue and Go ahead.

Gopal.s
31st May 2015, 10:20 AM
நானும் மதுர கானம் திரியில் 500 க்கு மேற்பட்ட பதிவுகள் இட்டுள்ளேன். ராகங்கள், இசை பற்றி, அபூர்வ பாடல்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர் பற்றி அந்த திரிக்கு சம்பந்தமாக. அதில் நடிகர்திலகம் பற்றி ஒரு பதிவு கூட இல்லை. நாம் நோக்கம் புரிந்து செயல் படுவது போல ,நீங்கள் நண்பர்கள் என்று குறிப்பிடுவோர் செயல் பட்டார்களா?

உங்கள் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தந்தவன். திசை மாறி சென்றதால் நான் அதை குறிப்பிட்டேனே தவிர, தங்கள் உயர் நோக்கத்தை நான் குறை சொல்லவில்லை.

நான் பதிவிடுவதே உங்களை போன்ற,ராகவேந்தர் போன்ற, முரளி போன்ற,சாரதி போன்ற,கார்த்திக் போன்ற, கல்நாயக் போன்ற, சின்ன கண்ணன் போன்ற,வெங்கி ராம் போன்ற, நம்பி போன்ற,ஜோ போன்ற நண்பர்களை முன்னிட்டே.

இப்போது, ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல வரும் போது ,அது திரும்ப நம் மோதலாக வேண்டாமே ப்ளீஸ். விஷயத்தின் தீவிரத்திலிருந்து ,மற்றவர்களை திசை திருப்பி விடும்.

நான் சிறிது காலம் திரியில் பதிவிட இயலாது. நாடு மாற்றும் பணிகள். மற்றும் இரு நாடுகளிலும் செயலாற்ற வேண்டிய பணி சுமை.

இன்று வந்தது வேந்தரை வாழ்த்த. மீண்டும் ஜூலை 21 இல் சிந்திப்போம்.

Russellbpw
31st May 2015, 11:40 AM
Deleted.

Russellzlc
31st May 2015, 02:52 PM
http://i60.tinypic.com/2me94ya.jpg



திரு.கோபால்,

நீங்கள் ‘கலை’ என்று குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை கூறுவது என்னைத்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களது குற்றச்சாட்டு அர்த்தமற்றது, அபத்தமானது, கற்பனையானது. கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்கள் கற்பனையைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் ராகவேந்திரா சாரை அவரது பிறந்த நாளுக்காக அவரது நற்குணத்தை குறிப்பிட்டு வாழ்த்தினேன். அது உங்களுக்குப் பொறுக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால்தான் ராகவேந்திரா சாரை நீங்கள் குறிப்பிடும்போது மிரட்டுகிறார் என்றும், அடைப்புகுறிக்குள் பண்பு சிகரம் என்றும் கிண்டலடிப்பதிலிருந்தே புரிகிறது. உங்களைக் கூட கடந்த வாரம் திருமண நாளுக்காக வாழ்த்தினேன். உங்களை மட்டுமே வாழ்த்த வேண்டும். உங்கள் எழுத்துக்களை மட்டுமே புகழ வேண்டும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?

‘கலை’யை ரசிக்கலாம், அதன் மீது பற்று இருக்கலாம். வாசு சார் கூறியது போல கலைப் பைத்தியமாக மாறிவிடக் கூடாது. அப்புறம் எதையும் ரசிக்க முடியாது. நல்ல ரசிகரை இழக்க நான் விரும்பவில்லை. ஏன் இப்படி என் மீது மூர்க்கத்தனமாக, சண்டை போடும் மனோநிலையில் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, பவுராணிகர்கள் பாஷையில் சொன்னால் என் ஜாதகம் போலும். ஆனாலும், ஒரு மகிழ்ச்சி. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் சாமானியனான என்னை நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களே?

‘நாக்கில் தேனையும் உள்ளே விஷத்தையும் வைத்துக் கொண்டு’ என்று ஏற்கனவே என்னைப் பற்றி குறிப்பிட்டீர்கள். இப்போதும் சொல்லியிருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகள், ரசனை மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக மற்றவர்களை வெறுக்கும் பழக்கமோ அல்லது கடுமையாக பேசும் பழக்கமோ எனக்கில்லை. எல்லாரிடமும்.... குறிப்பாக தீய குணமும் பொறாமையும் வயிற்றெரிச்சலும் கொண்டோரிடம் கூட அன்போடு பழகுபவன் நான்.

நானே கேட்க வேண்டும் என்றிருந்தேன்....உங்கள் மூத்த மகனின் திருமணம் குறித்து சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். திருமண ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போகிறது? நீங்கள் பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் அதிகம் வேலையிருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீர்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 02:54 PM
வாசு சார்,

உங்கள் புரிதலுக்கு நன்றி சார். உங்கள் எழுத்துக்களை, ராகவேந்திரா சார் எழுத்துக்களை ரசித்துப் படிக்கிறேன். என்னைப் போல ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு உண்டு. அதற்காக மட்டுமின்றி, யாரையும் காயப்படுத்தாமல் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழை மட்டுமே பாடும் உங்களைப் போன்றோர் இந்த திரியில் இருந்தால்தான் நமது இரு திரிகளிடையே நட்புணர்வு வளரும். சமீபத்தில் நீங்கள் திரும்பி வந்தபோது கூட இதைக் குறிப்பிட்டு வாழ்த்தினேன். அதற்காகவாது நீங்கள் இங்கே தொடர வேண்டும்.

இன்று குலமகள் ராதை பற்றிய உங்கள் மற்றும் ராகவேந்திரா சாரின் கட்டுரைகளில் என்ன ஒரு உழைப்பு, ரசிகத்தன்மை. பிரமாதம். இருங்கள் கை வலிக்கிறது. சீப்பு எடுத்து வருகிறேன், முதுகு சொறிய.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldwp
31st May 2015, 03:02 PM
திருச்சியில் நடிகர்திலகம் இரு வேடங்களில் ஜொலிக்கும் என்னைப்போல் ஒருவன் வரலாறு காணாத வரவேற்புடன் தற்போது கெய்டியில் வீரநடை போடுகிறது. இன்று ஞாயிறு மாலை காட்சியில் வானவேடிக்கை முழங்க பாலபிஷேகம் தீப ஆராதனையுடன் தலைவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதுசமயம் சென்ற வசந்த மாளிகை படத்தின் போது ஹவுஸ் புல் ஆகியும் போர்டு இல்லாமல் தவித்த திரையரங்கத்திற்கு இன்று மாலை ரசிகர்கள் முன்னிலையில் தலைவர் படம் போட்ட HOUSEFULL BOARD திரை அரங்கத்திற்கு வழங்க படுகிறது. அதன் புகைப்படம் உங்கள் பார்வைக்கு

இன்று மாலை காட்சியில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும் நாளை இத்திரியில் பதிவிடப்படும்
சமீபத்தில் கிடைத்த தகவலின் படி முதல் இரண்டு நாட்களில் வசந்த மாளிகையை வசூலில் முறியடிக்கும் நிலை உள்ளது.

https://pbs.twimg.com/media/CGRCAaqUQAA1S3L.jpg:large



https://pbs.twimg.com/media/CGRB3pNVIAAeFkt.jpg:large

eehaiupehazij
31st May 2015, 07:08 PM
செந்தில் உங்களுக்கு மறுபடி நன்றி!

நீங்கள் இப்படி எடுத்துக் கொடுப்பதினால்தான் வெளியே வராத, அதிகம் அறியப்படாத, பேசப்படாத, தலைவரின் அரிய திறமைகளை இங்கே என்னால் முடிந்த மட்டும் வெளிக் கொணர்ந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவோ அல்லது மீண்டும் ஞாபகப்படுத்தவோ முடிகிறது.

ஆனால் தொடர முடியாமல் போவது துரதிருஷ்டமே! வருகிறேன்.

நன்றி செந்தில்.

Respected and Dear Vasu Sir

This is only an interaction mode by way of which we want to cull out all minute details related to NT and attributed to his name and fame! You are quite right to have understood my interior objective and thanks a lot for the encouragement and follow up for the betterment of the proceedings of this thread. Ragavendhar sir too interacts in a very appropriate manner and my thanks to him too. Thank you sir for your addendum to my conceptual postings on NT!!

But....A Lion never shows its back....U roar like this! This is your concrete jungle where u are also a king! why retreat....roar continuously like MGM starter so that we can continue to follow your footsteps in singing the pride of NT!!

https://www.youtube.com/watch?v=OVCxJ1aT24A

Even a steel teethed villain Jaws can be dispatched in a Mo(o)re Bondian way!

https://www.youtube.com/watch?v=7wmZrU6VQzE

Or a cool disposal of Ernst Stavro Blofeld in to a chimney if he intrudes the duty of Bond!! But...one has to plug off some vital cable for that!! For Your Eyes Only Vaasu Sir!!

https://www.youtube.com/watch?v=515lZbvqQwo

eehaiupehazij
31st May 2015, 09:16 PM
நடிகர்திலகம் வீற்றிருந்த ராஜ சிம்மாசனங்கள் ! அவர் சிரம் தாங்கி பெருமை அடைந்த நடிப்பு வைரம் (பாய்ந்த) பதித்த தங்க கிரீடங்கள்!!


என்னதான் நடிப்புலக சக்கரவர்த்தியாக மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு முடி சூட்டப் பட்டிருந்தாலும் நடிகர்திலகத்தை ஒரு மன்னர்மன்னனாக பொன்முடி
தரித்து கால்மேல் கால் போட்டு சிம்மாசன கோலத்தில் பார்க்கும் பரவசமே தனி அனுபவம் !!

https://www.youtube.com/watch?v=5PrE-z1IuwA

https://www.youtube.com/watch?v=13yjtz_S3pk

https://www.youtube.com/watch?v=EjZyt7X2Zu8

In line with Vasu Sir I do feel more and more such scenes can be churned and extracted by way of an interaction mode participation by our hubber friends!!

Russellxor
31st May 2015, 09:42 PM
கர்ணன் படத்தில் இடம் பெறாத மகாராஜன் உலகை ஆளலாம் பாடல்.இதில் கர்ணன் படம் டிஜிட்டலில் வந்தபோது வெளியான திரைப்பட வெளியீட்டு (பேப்பர்) விளம்பரங்கள்முதல் 150 நாள் வரைவந்த விளம்பரங்களை வைத்து இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

்https://youtu.be/C-6xKoxthh0

Russellxor
31st May 2015, 09:46 PM
இப்பாடலை அனைவரும் பாருங்கள்.
தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.



https://youtu.be/cD150TWza-8

Russellxor
31st May 2015, 09:48 PM
(வசந்தமாளிகை) அடியம்மா ராசாத்தி பாடல்


https://youtu.be/sO5LapH8csg

Russellxor
31st May 2015, 09:53 PM
திரைக்கு வராத ஞாயிறும் திங்களும் படத்திற்காக இசையமைக்கப்பட்ட பட்டினும் மெல்லிய பாடல்.


https://youtu.be/HFl1k4ekFGs

eehaiupehazij
31st May 2015, 10:14 PM
இப்பாடலை அனைவரும் பாருங்கள்.
தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.



Excellent and timely metamorphosis of NT images to console ourselves for the vacuum felt!!

Subramaniam Ramajayam
1st June 2015, 03:11 AM
Excellent and timely metamorphosis of NT images to console ourselves for the vacuum felt!!
Excellent senthil, one more melodius duet song alo there can you just check.
SONG zyayiru enbathu pennaga thingal enbathu kannaga....
thanks.

Gopal.s
1st June 2015, 04:31 AM
நண்பர்களே,

நமது நடப்பு திரியின் 246 ஆவது பக்கம் பதிவுகள் 2452(ஹிந்து),2453 (எனது 1 1/2 வருட முந்திய பதிவின் மீள் பதிவு)

1)எனது பதிவில் உள்ள மக்களுக்கு நெருங்கிய புராண படம் என்ற கருத்தாக்கம் அப்படியே கையாள பட்டுள்ளது.ஆனால் நடிகர்திலகம்தான் இந்த படத்தின் மூலவர் என்ற எனது குறிப்புக்கள் வசதியாக இருட்டடிப்பு செய்ய படுகிறது.திருவிளையாடலில் ,நடிகர்திலகம் பங்கு பெறாமல் இருந்திருந்தால்,படம் என்னவாகி இருக்கும்?

2)பதிவை(தமிழ் ஹிந்து) உன்னிப்பாக கவனித்தால், நடிகர்திலகம் பற்றி செய்திகள் இருட்டடிப்பு அல்லது நிலை தாழ்த்துதல் என்பது செய்ய படுவது புலனாகும்.

3)ராமா நாய்டு மறைவு குறிப்பில் ,சம்பந்தமில்லாத ஒரு படம் (அதன் கதாநாயகர் பட்டத்துடன் குறிப்பிட பட்டு) அது எங்கே எவ்வளவு ஓடியது என்ற இதயக்கனி குறிப்புகள். திருவிளையாடல் பதிவில் சிவாஜிக்கு பட்டங்கள் இல்லை. ஏ.பீ.என் கதாநாயக அந்தஸ்து தரபடுகிறார். கூட்டு பங்களிப்பில் முத்துராமன்(இவருக்கு இதன் வெற்றியில் என்ன பங்கு?) உட்பட பலரை உயர்த்தி பிடித்து செயற்கையான ஒரு சித்திரிப்பு.நாகேஷ் பற்றி எழுதும் போது ,நாகேஷே குறிப்பிட்ட சிவாஜி பெருந்தன்மை பற்றி குறிப்பில்லை.

4)சிவாஜி படத்தை பற்றி எழுதுவதை தவிர்க்க முடியாது. ஆனால் எழுதும் போது சிவாஜியை பற்றி போகிற போக்கில் குறித்தால் போதும் என்ற போக்கு.


இதனை ராகவேந்தர்,வாசு,முரளி,கல்நாயக்,ஆதிராம்,ரவி போன்றோர் கூட கவனித்து உணராதது எனக்கு ஆச்சர்யமே.

பிரச்சினை எனது சில அனுமானங்கள் ,கோபங்களால் திசை திரும்பி விட்டது. நிதானமாக யோசித்தால் வாசுவிற்கு நான் சொல்ல விழைவது புரியும். முக்கிய பிரச்சினை அப்படியே உள்ளது. நடிகர்திலகம் பற்றி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ் ஹிந்துவில் எழுத படுவதற்கு , ஒரு தலை பட்சமாக ,ரசனை குறைபாடு உள்ள ஒருவர் அங்கு சினிமா பகுதியில் பணி புரிவதே காரணம் என்பது என் யூகம்.

இதே போல சில காலம் முன்பு thats tamil .com (one india )செயல் பட்ட போதும் ,அங்கு தலையிட்டு ஓரளவு நிலைமை சரியாகிறது.

நம் ரசிகர்கள் விழிப்புடன் இருந்து தலையிட்டால் ,இதனை சரி செய்ய முடியும். இந்த மாதிரி பத்திரிகையில் வெளியாகும் அபத்தங்களெல்லாம் சரித்திரமாகும் வாய்ப்புக்கள் உள்ளதால், ராகவேந்தர் போல சந்திர சேகர் போன்று அமைப்பில் ஈடுபாடு கொண்டவர்கள், இடையீடு செய்து , சரி செய்தல் அவசியம்.

இதனை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன். நான் ஏற்கெனவே கூறிய படி ஜூலை 21 முதல் ,மீண்டும் வருவேன்.

eehaiupehazij
1st June 2015, 07:07 AM
Today is the Birthday of Nargis, the unreigned queen of North Indian movies....remembered for her ace performance in Mother India that uplifted our image in foreign countries too...the film was remade in Tamil as Punniya Poomi starring NT with Vanishree!

From the Rajkapoor starrer Awara!

https://www.youtube.com/watch?v=GVyJ0lK-wvY


https://www.youtube.com/watch?v=oXLzfldeDcM

Mother India

https://www.youtube.com/watch?v=XCxl-wguiKU

Punniya boomi starring NT! NT donned both the roles of Raajkumar and Sunil Dutt!!

https://www.youtube.com/watch?v=BM1O4eF4Oa4

DHANUSU
1st June 2015, 10:22 AM
Today is the Birthday of Nargis, the unreigned queen of North Indian movies....remembered for her ace performance in Mother India that uplifted our image in foreign countries too...the film was remade in Tamil as Punniya Poomi starring NT with Vanishree!

From the Rajkapoor starrer Awara!

https://www.youtube.com/watch?v=GVyJ0lK-wvY


https://www.youtube.com/watch?v=oXLzfldeDcM

Mother India

https://www.youtube.com/watch?v=XCxl-wguiKU

Punniya boomi starring NT!

https://www.youtube.com/watch?v=BM1O4eF4Oa4


The birthday of Nargis reminded me of an incident which clearly demonstrates the intimacy and bonding (mutual) NT had with his counterparts in Bombay, which I read long ago.

During one of his visits to Bombay, NT called on Sunil Dutt and Nargis in their residence. While having lunch, NT had asked for a particular dish, which he had tasted during his previous visit. Unfortunately, the hosts could not offer this time, since the dish required some pre-preparational job (like our idli, dosa etc.), which would take a couple of hours. NT left it at that and returned home.

The next day Nargis landed at NT's residence with the same dish, he had asked for!!

eehaiupehazij
1st June 2015, 11:24 AM
Gap filler : Enjoy the climax of Oru Yaathraa mozhi starring NT with Mohanlal! NT gives life to his roles irrespective of who co-stars him or with whom he has to justify the situation even in honorary roles he had been invited for!

நடிகர் திலகன் நடிகர்திலகத்தின் பரம ரசிகர் ! கிட்டத்தட்ட நடிகர்திலகத்தின் புதல்வர் பிரபு போலவே காட்சியளிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலோ நடிகர்திலகத்தின் மாபெரும் அபிமானியாவார்!!

ஒரு யாத்ரமொழி நடிகர்திலகத்தின் உடல்மொழி !

https://www.youtube.com/watch?v=acZtbuhIZ10

RAGHAVENDRA
1st June 2015, 01:39 PM
http://sim05.in.com/65dc65cfd680c8b267a754df33cc0391_m.jpg

Dear (SSS) Sundara Pandian,
Many happy returns of the day. May God bless you with health and prosperity.
Raghavendran.

RAGHAVENDRA
1st June 2015, 01:46 PM
வாசு சார்
டூப் போடாமல் உயிருக்கு பயப்படாமல் தைரியமாக சண்டைக்காட்சிகளிலும் ஆபத்தான காட்சிகளிலும் நடிப்பதில் நடிகர் திலகத்திற்கு ஈடில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், யாருக்குமே அதிகம் தெரிந்திராத அல்லது யாருமே அதிகம் கவனித்திராத தங்கமலை ரகசியம் கண்ணாடி உடைக்கும் காட்சியை உன்னிப்பாக கவனித்து, நடிகர் திலகத்தின் வீரப் பிரதாபத்தை மிகச் சிறந்த முறையில் எடுத்துரைத்துள்ளீர்கள். இதற்காகவே தங்களுக்கு ஸ்பெஷல்

http://3.bp.blogspot.com/-NHetle5xl1c/TeuwyO7xv-I/AAAAAAAAAJs/zJ_YH5yLgQo/s1600/tamil+thanks.gif

மாற்றி மாற்றி விவாதங்கள் நடத்துவதை விட இது போன்ற ஆக்கபூர்வமான பதிவின் மூலம் நாமளிக்கும் பதிலே சிறந்த முறையிலும் ஆணித்தரமாகவும் நடிகர் திலகத்தின் புகழை நிலைக்கச் செய்யும். இந்த வகையில் தங்களுக்கு இங்குள்ள ஒவ்வொருவரும் கோடான கோடி நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள்.

என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்குப் பின்னால் உள்ள தங்களின் உழைப்பிற்குத் தலைவணங்குகிறேன்.

RAGHAVENDRA
1st June 2015, 01:48 PM
சிவாஜி செந்தில் சார்
தங்களின் புதுப்புதுக் கோணங்களில் நடிகர் திலகத்தை அணுகும் முறை பாராட்டத் தக்கது.
குறிப்பாக புண்ணியபூமி பாடல் காட்சி.
என்ன வேகமாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். இதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
தங்களுக்கு பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
1st June 2015, 01:50 PM
கோபால்
பிறந்த நாள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றி.

eehaiupehazij
1st June 2015, 01:58 PM
Happy returns of the day SSS sir, in line with Raghavendhar Sir.
senthil

eehaiupehazij
1st June 2015, 02:17 PM
சிவாஜி செந்தில் சார்
தங்களின் புதுப்புதுக் கோணங்களில் நடிகர் திலகத்தை அணுகும் முறை பாராட்டத் தக்கது.
குறிப்பாக புண்ணியபூமி பாடல் காட்சி.
என்ன வேகமாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். இதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
தங்களுக்கு பாராட்டுக்கள். by Raghavendar

உங்கள் மனதின் குரலுக்கு நன்றிகள் ராகவேந்தர் சார்


Mind Voice of NT! மனதின் குரல்: Pudhiya Paravai!


சமீப கால தமிழ் திரைப் படங்களில் '"மனதின் குரல்'' என்பது Mind Voice என்ற போர்வையில் தம்பி ராமையா போன்ற நகைச்சுவை நடிகர்கள் சீனை இழுக்க உதவி வருகிறது !!
ஆனால் புதிய பறவை திரைக்காவியத்தில் இந்த கான்செப்டை நடிகர்திலகம் தனது ஒப்பிட இயலாத உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எப்படி சாதித்திருக்கிறார் !

https://www.youtube.com/watch?v=CJ0pm7hOJHI

அதேபோல் நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்'முழுப்பாடலும் நடிகர்திலகத்தின் குளோசப் முன்னிறுத்தி அவரது மனதின் குரலாகவே ஒலிக்கும் வண்ணம் காட்சியமைக்கப் பட்டிருக்கும்

https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk

படிக்காத மேதை திரைக் காவியத்தில் ரங்காராவின் Mind Voice பாடலான எங்கிருந்தோ வந்தான்.....நடிகர்திலகத்தின் புகழுக்கு உரைகல்லே!!

https://www.youtube.com/watch?v=tDU7NB440bs

இவை எல்லாவற்றிக்கும் உச்சமாக சார்லி சாப்ளின் மவுனப் பட காலத்தை நினைவு கூறும் வண்ணம் தில்லானா மோகனாம்பாள் திரைக் காவியத்தில் இடம் பெற்ற கல்வெட்டுக் காட்சி !! மனதின் குரல்கள் நமது செவிகளில் பாய்கின்றனவே!!

https://www.youtube.com/watch?v=3YmfXL5zIg8

போனஸ் !!

கண்பார்வை இல்லாத போது தனது பரதேசிக் கோலம் தெரியாது தன்னை ஒரு கனவானாக எண்ணி காதலித்த மலர் மங்கை தன்னாலேயே அவள் பார்வை மீண்ட பிறகு தன்னை உணர்ந்து காதலை தொடர்வாளா என்று பரிதவிக்கும் சாப்ளினின் Mind Voice நடிப்போவியம்
The City Lights

https://www.youtube.com/watch?v=LHBHdYgg9fI

JamesFague
1st June 2015, 03:29 PM
Wish you many more happy returns of the day Mr Sundara Pandian (SSS)




Regards

Russellxor
1st June 2015, 05:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_3921_zpslkdtnven.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_3921_zpslkdtnven.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_1928_zpsjogcejoi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_1928_zpsjogcejoi.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_8633_zpslthibrld.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_8633_zpslthibrld.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_2650_zps3f1nuxzw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_2650_zps3f1nuxzw.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_1595_zps3ip21nkr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_1595_zps3ip21nkr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_0467_zps4c3qrg2j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_0467_zps4c3qrg2j.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_4404_zpshgcrroup.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fkOuQWEGxts_X%201%201_4404_zpshgcrroup.jpg.html)

Russellxor
1st June 2015, 06:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_3802_zps1hi0bcsd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_3802_zps1hi0bcsd.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_0131_zpsse20fqqp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_0131_zpsse20fqqp.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_4258_zpszeijmolx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_4258_zpszeijmolx.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_2027_zpsmrvrmhqr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_2027_zpsmrvrmhqr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_9042_zpsnrpkdh94.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_9042_zpsnrpkdh94.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_7912_zpstpwqlckq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/9oCR6E9LRgY_X_7912_zpstpwqlckq.jpg.html)

Murali Srinivas
1st June 2015, 07:13 PM
அனைவருக்கும் வணக்கம்,

நான்கு நாட்கள் ஊரில் இல்லை. ஹப் access பண்ண முடியவில்லை. இங்கே வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன.

கோபால்,

உங்களின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியதற்கு நன்றி. ஆனால் ஒரு சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த திரியை ஒரு நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். உங்களுக்கும் வாசுவிற்கும் உள்ள நட்பு மற்றும் புரிதல் பற்றி மிஞ்சிப் போனால் ஒரு 10 பேருக்கு தெரியும். மீதம் உள்ள ஆயிரம் பேரும் உங்களை நேரிடையாக அறியாதவர்கள். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவே உங்களை பரிச்ச்யப்பட்டவர்கள். உங்கள் எழுத்துக்களில் இருக்கும் முதிர்ச்சி சில நேரங்களில் உங்கள் செயல்களில் இல்லையே என்று பலரும் [எனக்கு தெரிந்த திரியின் வாசகர்கள்] சொல்கிறார்கள். நான் பல முறை உங்களிடம் சொல்லியிருப்பது போல் அனைவருமே நீங்கள் எடுக்கும் நிலைப்பாட்டையே எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தில் எதிர்வினையாற்ற வேண்டும் என்று தோன்றினால் அதை செய்யுங்கள். நான் செய்தது போல் ஏன் முரளி செய்யவில்லை? x,y,z செய்யவில்லை என்ற கேள்வி எதற்கு? எதை சொன்னாலும் அடுத்தவர் மனம் புண்படும்படியான வார்த்தைகள், வாசகங்கள் இவற்றை தவிருங்கள் என்று எத்தனை முறை உங்களுக்கு சொல்லியிருப்பேன்? வார்த்தைகள் ஏற்படுத்தும் வலி வாள்முனை உருவாக்கும் வலியை விட வேதனை மிகுந்தது என்பது உங்களைப் போன்றோர் உணராதது வருத்தத்துக்குரியது.

கோபால், உங்களுக்கே உரித்தான அந்த unique ஸ்டைலில் நடிகர் திலகத்தைப் பற்றி அவர் படங்களைப் பற்றி எழுதுவதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். இந்த controversiesஐ avoid பண்ணலாமே!

வாசு,

உங்கள் மன வருத்தம் புரிகிறது. அந்த உணர்வுகளில் நானும் பங்கு கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் [உரிமையோடு கேட்கலாம் என நினைக்கிறேன்]. நேற்று நிகழ்ந்தவற்றை மறந்துவிட்டு மீண்டும் பழைய உற்சாகத்தோடு வாருங்கள். கோபால் தன பதிவையும் நீக்கி வார்த்தைகளையும் திரும்ப பெற்றிருக்கிறார். ஆகவே உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் எழுத்துக்களை ரசித்துப் படிப்பவர்கள் ஏராளமானோர். [உங்களுக்கு தெரியாத ஆனால் எனக்கு தெரிந்த வாசகர்கள்] உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்க விரும்புகிறார்கள். இதை உங்களை திருப்திப்படுத்துவதற்காக சொல்லவில்லை. உண்மையை சொல்லுகிறேன். ஆகவே நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து பங்களியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பங்கு பெறுவீர்கள் என நம்புகிறேன்.

கோபால் சர்ச்சைக்குரிய தன் பதிவை நீக்கிவிட்டபடியால் உங்கள் பதிவிலிருந்தும் அந்த பகுதிகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது சம்மந்தப்பட்ட நண்பர் ஆர்கேஎஸ் பதிவைப் நான் நீக்கி விடுகிறேன்.

அன்புடன்

Murali Srinivas
1st June 2015, 07:14 PM
வாசு,

"நமக்குப்" பிடித்த அந்த குலமகள் ராதை ஸ்டில்க்கு நன்றிகள் பல. [சிவாஜி சரோஜா ஜோடி நல்ல பொருத்தம் மட்டுமல்லாமல் பல அருமையான படங்களையும் நமக்கு வழங்கிய ஒரு combination].. தங்கமலை ரகசியம் படத்தில் வரும் கண்ணாடி உடைக்கும் அந்த ஆவேசக் காட்சிக்கு நன்றி. "நம்முடைய" கிருதா மோகம் தொடர்பான பதிவையும் ரசித்துப் படித்தேன். இது போன்ற சுவைகளுடன் தொடருங்கள்!

ராகவேந்தர் சார்,

உன்னை சொல்லிக் குற்றமில்லை பாடலைப் பற்றிய விளக்கமும் நடிகர் திலகத்தின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் இசை மற்றும் பாடல் வரிகள் பற்றிய சிறப்புகள் வெகு பிரமாதமாக வந்திருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல் திலக சங்கம தொடருக்கே இது ஒரு சிகரமான பாடல் என்பதில் ஐயமில்லை. நமது NT FAnS அமைப்பின் சார்பாக இந்த படம் திரையிட்டபோது இந்த பாடல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை நினைத்துப் பார்க்கிறேன். அது போல் தியேட்டர்களில் மறு வெளியீடு கண்ட போதெல்லாம் இந்த பாடல் காட்சிக்கு அலப்பரை தாங்க முடியாது! மீண்டும் நன்றி சார்!

அன்புடன்

Dhanusu, Welcome Back!

Murali Srinivas
1st June 2015, 07:14 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுந்தரபாண்டியன் சார்!

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Murali Srinivas
1st June 2015, 07:15 PM
மலைகோட்டை மாநகரில் கலைகுரிசலின் என்னைப் போல் ஒருவன் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது என்ற தகவலை நேற்றே திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் பகிர்ந்துக் கொண்டார். வசந்த மாளிகைக்கு பிறகு மீண்டும் ஒரே மாத இடைவெளியில் இரண்டாம் முறையாக கெயிட்டி திரையரங்கம் ஹவுஸ் புஃல் ஆகி இருக்கிறது. நமது ரசிகர்களின் ஆரவார ஆர்பாட்ட அலப்பரைகளை பல்வேறு தனியார் தொலைக்கட்சிகள படம் பிடித்துச் சென்றிருக்கின்றார்கள். அரங்கத்தின் உள்ளே நடந்த அலப்பரைகளையும் ஒரு தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்திருக்கிறார்கள். பல பத்திரிக்கை நண்பர்களும் வந்திருந்ததாக நண்பர் தெரிவித்தார்.

ஏதோ வசந்த மாளிகை என்பதனால் தியேட்டர் புஃல் ஆகிவிட்டது என்று சென்ற மாதம் சிலர் ஏகடியம் பேசினார்களாம். அதற்கு மூன்று வாரங்களுக்கு முன் [ஏப்ரல் முதல் வாரம்] இதே கெயிட்டியில் தங்கைக்காக படமும் கிட்டத்தட்ட புஃல் ஆனதை மறந்துவிட்டு பேசினார்கள். [10 அல்லது 15 டிக்கெட்டுகள் மட்டுமே மிஞ்சிப் போனது] இப்போது என்னைப் போல் ஒருவனும் அந்த சாதனையைப் புரிந்திருக்கிறது. இரண்டே மாதங்களில் மூன்று படங்கள் இந்த சாதனையை புரிந்திருக்கிறது என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர். சாதனை சாத்தியமானதற்கு காரணமாக இருந்த திருச்சி வாழ் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நமது மனம் நிறைந்த நன்றிகள்! பட வெளியிட்டாளர்களுக்கு வாழ்த்துகள்!

அன்புடன்

eehaiupehazij
1st June 2015, 07:19 PM
நடிகர்திலகத்தின் ஆங்கிலம் பேசும் ஸ்டைல் !! (சில சமயம் பீட்டர் விடுதலும்தான்!!)


எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பீட்டர் விடுதல் நமக்குப் பிடித்தமான தவிர்க்க முடியாத தமிழர் வாழ்வியல் முறையாக மாறிவிட்டதே!!
முறையான பள்ளிவழி ஆங்கிலக் கற்றல் இல்லையெனினும் நடிகர்திலகம் தன்னுடைய அசாத்தியமான கூர்நோக்குதல் மற்றும் அபார ஞாபக சக்தி விடா முயற்சி காரணமாக ஆங்கில உச்சரிப்பையும் தன்வசப்படுத்தி வரவேற்பு பெற்றார்

What a development from a simple Petering to Speaking English with a commanding dialect!!

Vilayaattu Pillai 1976

Watch 1 :52 :30 onward (could not get exact clip range)

https://www.youtube.com/watch?v=L6nBNSlN6ck

Pasamalar Mill Owner Rajasekaran!! Watch 27:51

https://www.youtube.com/watch?v=zsnGIVXddEg

Gowravam Baaristar Rajanikanth!!

https://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

Murali Srinivas
1st June 2015, 07:20 PM
கோபால் குறிப்பிட்ட ஹிந்துவில் வந்த திருவிளையாடல் பற்றிய கட்டுரையை நானும் படித்தேன். இங்கே கோபால் பதிவிட்டிருந்தது online பதிப்பில் வந்தது. நான் தினசரி நாளிதழிலேயே படித்தேன். கோபால் இங்கே அதை சொன்னவிதம் தவறாக போய்விட்டதேயன்றி அதில் உள்ள உண்மையை புறந்தள்ளுவதற்க்கில்லை. Print எடிஷனில் எழுதியவர் பெயர் மானா. பாஸ்கரன் என்று இருக்கிறது. இவர் ஏற்கனவே தன்னை சிவாஜி ரசிகன்(?) என்று சொல்லிக் கொண்டு சைக்கிளில் பயணம் செய்து சிவாஜி படங்களை பார்த்த நினைவுகளை எழுதியிருந்ததாக நினைவு. பாபு படம் பார்த்தது பற்றியும் எழுதியிருந்தார்.

அப்படி எழுதிய ஒருவர் நடிகர் திலகம் பற்றி குறிப்பிடும்போது அன்றைக்கு பிரபலமாக இருந்த கதாநாயகன் என்று எழுதியிருப்பதே ஒரு முரணாக தோன்றுகிறது. அதற்கு பிறகோ அல்லது இப்போதோ நடிகர் திலகம் பிரபலம் இல்லை என்ற தொனி அதில் நுழைக்கப்பட்டிருப்பது விஷ்மத்தனமானது. திருவிளையாடல் படத்தில் அனைவரும் தங்கள் பங்கை செவ்வனே செய்திருந்தனர் என்று குறிப்பது வேறு. வெற்றியில் எல்லோருக்கும் சம பங்கு என்பதும் விஷ்மத்தனமானது. சிவாஜி என்ற ஆளுமையை நாகேஷ் மிஞ்சி விட்டார் என்பது, இவையெல்லாம் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.

இதைவிட வேறு ஒரு அபத்தமும் அதில் வந்திருக்கிறது. அது படத்தின் இயக்குனர் அருட்செல்வர் பற்றி. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே அவர்களின் பெயர்களின் முன்னாள் உள்ள இனிஷியல்ஸ் [Initials] மூலமாக பிரபலமானவர்கள் என்று எடுத்தால் அதில் அருட்செல்வர் பெயரும் அடங்கும். அவரது இனிஷியலை விட்டு விட்டு நாகராஜன் என்று சொன்னால் பெரும்பாலானோருக்கு நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதே புரியாது. ஏ.பி. என்ற இனிஷியலை சேர்த்து ஏ.பி. நாகராஜன் என்று சொன்னால்தான் தெரியும். அப்படிப்பட்ட ஒருவரை கே.பி. நாகராஜன் என்றே அந்த கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள். ஒரு இடத்தில அல்ல பல இடங்களில்.

மறுநாள் வரபோகும் நாளிதழில் என்னென்ன கட்டுரைகள் செய்திகள் இடம் பெற வேண்டும் என்பதை ஆசிரியர் குழு [Editorail Board] கூடி முடிவு செய்து அந்த பட்டியல் பத்திரிக்கை ஆசிரியருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதலளித்த பின்னரே pirint -ற்கு போகும் சீரிய நடைமுறை கொண்ட ஒரு நிறுவனத்தில் இப்படிப்பட்ட பிழைகள் வருகின்றது என்றால் அதற்கு மேல் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

சம்மந்தப்பட்ட நபர்கள் இனியாவது இதையெல்லாம் கவனித்தால் பத்திரிக்கைக்கு நல்லது!

அன்புடன்

RAGHAVENDRA
1st June 2015, 08:39 PM
டியர் முரளி சார்
திலக சங்மம் தொடரில் குலமகள் ராதை பாடலைப் பற்றிய பதிவிற்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி.

Russelldwp
1st June 2015, 09:25 PM
திருச்சியில் மீண்டும் நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டு சரித்திரத்தில் சந்தன மலர்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை முத்து. சென்ற மாதம் வெளிவந்து பத்து வருடத்திற்கு பிறகு HOUSEFULL ரிக்கார்டை கெயிட்டி திரை அரங்கில் ஏற்படுத்திய வசந்த மாளிகைக நிகழ்வு நம் மனதை விட்டு நீங்காத நிலையில் சனிக்கிழமை வெளியான தலைவரின் என்னைப்போல் ஒருவன் புதிய தலைமுறை, செவன்த் நியூஸ் ஊடங்களின் முன்னிலையில் மக்களின் பேராதரவோடு ரசிகர்களின் அளப்பறை ஆரவரத்திற்கு நடுவில் சரியாக 6 மணி 45 நிமிடத்திற்கு மீண்டும் HOUSEFULL சாதனை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது. மீடியாக்களின் கண் முன்னே நடந்த இந்த சாதனை அனைத்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது. இன்று வரை மக்கள் ஆதரவு சிறிதும் குறையாமல் வெற்றி நடை போடுகிறது.. இந்நிகழ்ச்சி பற்றி இன்றைய மலை முரசில் வெளிவந்த செய்தி உங்கள் பார்வைக்கு

https://pbs.twimg.com/media/CGbRO6SVAAAWhBr.jpg:large

sss
1st June 2015, 10:01 PM
பிறந்த நாள் வாழ்த்துகள் இணையத்தில் , முக நூலில் , தொலை பேசியில் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

சனிக்கிழமை அம்பிகாபதி, ஞாயிறு வைர நெஞ்சம், தேவர் மகன், மருமகள் , இன்று லக்ஷ்மி கல்யாணம், நாளை ரத்தப் பாசம் என கொண்டாடி வருகிறேன்....

நன்றி
சுந்தர பாண்டியன்

sss
1st June 2015, 11:38 PM
இன்று ரஜினி அவர்களின் புது பட அறிவிப்பின் போது வெளிவந்த புகைப் படத்தில் நடிகர் திலகத்துடன் ரஜினி இருக்கும் புகைப் படம் சுவரில் மாட்டபட்டுள்ளது.....
அவரது வீடு அல்லது அலுவலகமாக இருக்கலாம்...


https://pbs.twimg.com/media/CGaHWElUYAAbIHN.jpg
மனதார நமது நடிகர் திலகத்தை நேசிப்பது தெரிகிறது...

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11393114_377040449161807_1899908570057346268_n.png ?_nc_eui=AWg8xwrYRV_Lh6YftE_r00fFq8EG1e-ll9_PjQ&oh=60e67a9a1db17c2f29d1f79e9620c2b1&oe=55F7E40C

RAGHAVENDRA
2nd June 2015, 07:06 AM
https://www.youtube.com/watch?v=b8WQV6YmI5A

கவியரசரின் வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வளர்பிறை பாடல், பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம், வாமனன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

KCSHEKAR
2nd June 2015, 11:15 AM
செலுலாய்ட் சோழன் – 76
(From Mr.Sudhangan's Face Book)
`பச்சை விளக்கு’ படத்திற்குப் பிறகு 1964ம் ஆண்டு வந்த படம் ` கை கொடுத்த தெய்வம்’
`பாசமலர்’ படத்தின் பாதிப்பு ரசிகர்கள் மனதிலிருந்து நீங்காமல் இருந்த காலம் அது! சிவாஜியையும், சாவித்திரியையும் ஜோடியாக பார்க்கவே ரசிகர்கள் விரும்பவில்லை! `பாசமலர்; அண்ணன் தங்கை அவர்கள் மனதில் அப்படியே பதிந்து போயிருந்தார்கள்! ஆனால் அதே சாவித்திர் சிவாஜியை ஜோடியாக வைத்து வெற்றி கண்ட படம் கை கொடுத்த தெய்வம்! படத்தின் சிவாஜியும் சாவித்திரியும் இரண்டு காட்சிகளில்தான் சந்தித்து கொள்வார்கள்!
படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது! டி.எஸ்.மகாதேவன் என்பரின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! கமல்ஹாசன் சொல்வார் திரைக்கதை எழுதும் கலையை கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பார்!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!
சாரதா 1962ல் வந்தது ! எஸ்.எஸ். ஆர் – விஜயகுமாரி நடித்த படம்! ஆண்மையிழந்த கணவன் தான் படத்தின் கதாநாயகன்! இந்த படத்தின் கதையைக் கேட்டு அந்த நாளில் பயந்தவர்கள் ஏராளம்! தன் மனைவிக்கு தானே மறுமணம் செய்ய முன்வருவான் கதாநாயகன்! பல பயமுறுத்தல்களுக்கு பிறகு வெளி வந்து வெற்றி கண்ட படம் `சாரதா ‘ இந்த படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனுவாசன்! 1963 ம் வருடம் இவர் எடுத்த படமான `கற்பகம்’ படத்தில் தான் கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தினார்1 மாபெரும் வெற்றிப் படம் இது!
இந்தப் படத்தின் வெற்றியினால் தான் `கற்பகம்’ ஸ்டுடியோவே வாங்கினார் கோபாலகிருஷ்ணன்!

அதே போல் 1964 ல் இவர் தந்த வெற்றிப் படம்தான் ` கை கொடுத்த தெய்வம் ‘
இவர் இயக்குனர் ஸ்ரீதரின் உதவியாளர்! சரவணா யூனிட்டி பிக்சர்ஸ் படம் தயாரிக்க பல கதைகளிலிருந்து தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். பரீசீலனையின் முடிவில் இரண்டு கதைகள் தேர்வானது 1. எதிர்பாராதது. 2. தம்பி. பதினைந்து நாட்கள் விவாதத்திற்குப் பிறகு எதிர்பாராதது கதை தேர்வானது1 அந்த படத்தில் ஸ்ரீதருக்கு உதவியாளர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! `எனக்கு பாட்டும் எழுத வரும்’ என்று ஸ்ரீதரிடம் சொன்னார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! உடனே எதிர்பாராதது படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார் ஸ்ரீதர்!
`காதல் வாழ்வினிலே நான் காயாகிப் போனேன்’ என்ற பாடலை எழுதினார் கே.எஸ். ஜி.! பாடலை பாடியவர்கள் ஜிக்கி- ஏ.எம்.ராஜா! இசை: பாண்டுரங்கன்! பாடல் பிரபலமானது! உடுமலை நாராயண கவியின் உதவியாளராக இருந்தவர் கே.எஸ்.ஜி.! குள்ளமாக இருந்ததால் இவரை குட்டைக் கவி என்பார்கள் பிறகு இயக்குனராக இருந்த போது இவரை குட்டை கோபாலகிருஷ்ணன் என்றே அழைப்பார்கள்! `தின்னுப் பாத்து சொல்லுங்க’ என்று தள்ளு வண்டியில் `கத்திரிக்கா பஜ்ஜி முதல் காரம் இனிப்பு எல்லாத்தையும்’ விற்பவனின் பாட்டு ஒன்றையும் எதிர்பாராதது படத்திற்காக எழுதினார் கே.எஸ். ஜி.! இவரை பிரபல இயக்குனராகத்தான் எல்லோருக்கும் தெரியும்!
இவருடைய கவிப்புலமை சினிமாவிலேயே பலருக்கும் தெரியாது1 இவரது காதல் பாட்டுக்கள் வெற்றியடைந்தாலும், நாட்டு பாடல்களையே அதிகம் எழுதினார் கே.எஸ்.ஜி. ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய படம் சிவாஜி நடித்த ` அமர தீபம்’ இதில் ` நாணயம் மனுஷனுக்கு அவசியம்; என்றார்! அதே படத்தில் ` கொட்டை கட்டி, காவி கட்டி’ என்று ஒரு பாடலை எழுதினார்! துன்பம் சூழும் நேரம் என்று ஜிக்கி பாடும் பாடலையும் எழுதினார்! இதே வகையில் தான் உத்தமபுத்திரன் படத்தில் ஜி.ராமனாதன் இசையில் ` உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே! உள்ளமெல்லாம் உன் வசமாய ஆனதினாலே! பாடலை எழுதினார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

அறுபதுகளில் இயக்கம், தயாரிப்பு என்று இவர் இறங்கியபிறகுதான் தன் படங்களுக்கு வேறு கவிஞர்களை பாடல் எழுத வைத்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! கை கொடுத்த தெய்வம் படத்தில் எல்லா பாடல்களுமே கண்ணதாசன் ஒரே ஒரு பாடல் `சிந்து நதியின் மிசை நிலவினிலே’ பாடல் மட்டும் பாரதியார்! இவர் இயக்கிய `கற்பகம்’ படத்தில் நான்கு பாடல்கள், நான்கு பாடல்களுமே சுசீலா பாடியது! நான்கு பாடல்களையும் எழுதியவர் வாலி! இவருடைய ஸ்வாதி நட்சத்திரம் படத்திற்கு எல்லாப் பாடல்கலும் மருதகாசி எழுதினார் பிறகு 1985ம் வருடம் இவர் இயக்கி சிவாஜி நடித்த படம் படிக்காத பண்ணையாரில் மீண்டும் பாட்டெழுதினார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! இவருடைய கதைக் களங்களே வித்யாசமாக இருக்கும்! அப்படி ஒரு படம் தான் ` கை கொடுத்த தெய்வம்’

மிகப் பெரிய பணக்கார வீட்டு பெண் சாவித்திரி ! ஆனால் வெகுளி! இவருடைய வெகுளித்தனத்தை வைத்தே இவருடம் தனக்கு தொடர்பு உண்டு என்று வதந்தி கிளப்பி விடுவார் எம்.ஆர். ராதா அதனால் அந்தப் பெண்ணிற்கு கல்யாணமே நடக்காது! ஊரெல்லாம் அந்தப் பெண்ணை தப்பாக பேசுவார்கள்! வருகிற வரனெல்லாம் தட்டிப் போகும்!
சாவித்திரியின் அண்ணன் எஸ்.எஸ். ராஜேந்திரன்! அவமானம் தாங்க முடியாமல் வடநாட்டுக்கு ஒடிப்போவார்!
அங்கே பசியால் சாலையில் மயங்கி கிடந்த இவரை அங்கிருந்த சிவாஜி தன் வீட்டுக்கு கொண்டு போவார்!
இப்படித்தான் படமே ஆரம்பமாகும்! எதற்காக இந்த ஊருக்கு வந்தாய் ?’ என்று சிவாஜி கேட்பார்!
`தற்கொலை செய்து கொள்ள வந்தேன்’ என்பார் எஸ்.எஸ். ஆர்! இப்படியாக அவர்கள் நட்பு துவங்கும்!
பிறகு தான் ப்யூனாக வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே பட்டதாரியான எஸ்.எஸ். ஆருக்கு மானேஜர் வேலை வாங்கிக் கொடுப்பார் சிவாஜி! அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பஞ்சாபி பெண் கே.ஆர். விஜயா!
அவருக்கு எஸ்.எஸ். ஆருக்கும் காதல் ஏற்படும்! சிவாஜி கே.ஆர். விஜயாவிற்கு அண்ணனாக இருந்து திருமணம் நடத்தி வைப்பார்! அந்தத் தம்பதிகள் வீட்டிலேயே சிவாஜி தங்கி இருப்பார்! ஊரே சிவாஜியையும் ே.ஆர்.விஜயாவையும் தவறாக பேசும்! அப்போது அந்த வீட்டை விட்டு கிளம்புவார்!
அப்போது சிவாஜிக்கும், எஸ்.எஸ். ஆருக்கும் வீட்டை விட்டுப் போவது பற்றி கைகலப்பே நடக்கும்.
நட்பின் ஆழத்தில் நடக்கும் அந்த சண்டையை கண்டு கொட்டகையில் பெண்கள் கண்ணீர் சிந்துவார்கள்!
`எதற்காக வெளியே போகிறாய் ?’ என்று கேட்பார் எஸ்.எஸ்.ஆர் `ஊரே தப்பா பேசுது ‘ என்பார் சிவாஜி!
` நீ வீட்டை விட்டு போனால் இந்தப் பெண்ணின் கணவனான நானே தப்பாக பேசுவேன்’ என்பார் எஸ்.எஸ். ஆர்
அப்போது நடக்கும் அந்த கைகலப்பு!?????

( தொடரும்)

KCSHEKAR
2nd June 2015, 12:17 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் தமிழக முதல்வருக்கு (மீண்டும்) கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/LetterToCMOff28May20151_zpsg1bddsac.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/LetterToCMOff28May20151_zpsg1bddsac.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/LetterToCMOff28May20152_zpsvmpfvlvm.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/LetterToCMOff28May20152_zpsvmpfvlvm.jpg.html)

KCSHEKAR
2nd June 2015, 12:19 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற ஜூலை 21 ஆம் நாள் சென்னையில் ஒருநாள் கோரிக்கை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன.
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற ஜூலை 21 ஆம் நாள் சென்னையில் ஒருநாள் கோரிக்கை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன.
THANJAVUR
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/DinathanthiThanjai_zpsalee7yod.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/DinathanthiThanjai_zpsalee7yod.jpg.html)

TRICHY
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/DinamaniTrichy_zpsrqsnvqhz.png (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/DinamaniTrichy_zpsrqsnvqhz.png.html)

TIRUPUR
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ManimandapamFasting2015July21/DinamaniTirupur_zpsm3tuei9s.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ManimandapamFasting2015July21/DinamaniTirupur_zpsm3tuei9s.jpg.html)

Russellxor
2nd June 2015, 01:05 PM
ஒரே உறையில் இரண்டு கத்திகள்

ஒரே பிரேமில் இரண்டு சிங்கங்கள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/lf04shivaji2_493216f_zpsmwm4jp6g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/lf04shivaji2_493216f_zpsmwm4jp6g.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/mqdefault_zpsnbmqiutu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/mqdefault_zpsnbmqiutu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-12-43-17_zpstly2cdwg.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-12-43-17_zpstly2cdwg.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-12-50-52_zpsdhwjubsv.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-12-50-52_zpsdhwjubsv.png.html)

Russellxor
2nd June 2015, 01:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-12-40-18_zps6vxukpcv.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-12-40-18_zps6vxukpcv.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/hqdefault-2_zps0jqb0zgz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/hqdefault-2_zps0jqb0zgz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/hqdefault_zpsv0es5emu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/hqdefault_zpsv0es5emu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-11-10-45_zpswchr1kh9.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-11-10-45_zpswchr1kh9.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-01-19-41-59_zpsb6g6umys.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-01-19-41-59_zpsb6g6umys.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/maxresdefault_zps944u6t9f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/maxresdefault_zps944u6t9f.jpg.html)

eehaiupehazij
2nd June 2015, 02:14 PM
The Crocodile Park/Junction முதலைகள் பூங்காவில் நடிகர்திலகம்!!


நல்ல குணம் கொண்ட மனிதர்கள் முதலை குணம் கொண்ட தீயவர்களிடம் / (சொந்தங்களும்விதிவிலக்கல்ல) மாட்டிக் கொள்வது எவ்வளவு வேதனையான நிகழ்வு ! சேரிடம் அறிந்து சேர் என்று சும்மாவா சொன்னார்கள்?! கூடா நட்பும் முதலைக் கூட்டத்தில் சிக்கிக் கொள்வதற்கு சமமே!! திருடன், திரிசூலம், புதிய பறவை, கர்ணன்...என் மகன்.....எண்ணற்ற படங்களில் இவ்வேதனையை உருவகப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=KQCxcg5MDBo

இதுவரை தன்னை சுற்றி இருந்தவர்கள் வடித்தது முதலைக் கண்ணீரே என்று உணர்ந்த தருணத்தில் ...... ஏமாற்றத்தின் விளிம்பில்..... முதலைகளின் வாயில்..... சூழ்ச்சி வலை தெரியாது வாண்டட் ஆக மாட்டிக்கொண்டார்!

https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ

ஆனால் முதலைகளிடமிருந்து சாதுர்யமாக லாவகமாக அவற்றின் மேலேயே ஏறி தப்பிக்கும் வித்தையை கற்றுத்தருகிறார் Moore/Bond!!

https://www.youtube.com/watch?v=kmH0PP_zAKo

RAGHAVENDRA
2nd June 2015, 04:29 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/TRICHYGALAPRESSCOVER010615_zps8aajrure.jpg

picture enlarged for reading convenience.

thank you Ramachandran

Russellbpw
2nd June 2015, 06:36 PM
குத்து பாடல்களின் தந்தை ! அடி என்னடி ராக்கம்மா....அடேயப்பா...இப்படி ஒரு குத்து கண்டதுண்டோ கண்கள் !

https://www.youtube.com/watch?v=qXm3lopuhXs


சிலம்பமாக இருந்தால் என்ன சுருள்பட்டவாக இருந்தால் என்ன ?

எங்கள் அய்யா சுழற்றும் அழகே தனிதானே !

https://www.youtube.com/watch?v=PKTdBPeueH8

இதுபோல வில்லன் அடியாட்களுக்கு சம பலம் கொடுத்து சண்டைகாட்சி தமிழ் படவுலகில் எடுக்கப்பட்டுள்ளதா அந்தகாலத்தில் என்பது கேள்விக்குறியே ! வில்லன்களை பலசாலிகளாக நடிகர் திலகம் படங்களில் நாம் எப்போதும் பார்க்கலாம்...தத்ரூபமான சண்டை காட்சி !

https://www.youtube.com/watch?v=KjE_NDePJGw

kalnayak
2nd June 2015, 07:12 PM
Belated birthday wishes to SSS (Sundara Pandiyan)!!!!

Russelldwp
2nd June 2015, 09:34 PM
திருச்சியை திணறடித்துக் கொண்டிருக்கும் சிவாஜியின் மறு வெளி யீட்டு படங்களும் ரசிகர்களின் ஆரவாரங்களும் அதற்கு மக்கள் தரும் ஆதரவும் நடிகர் திலகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டிருக்கின்றன.

என்னைப்போல் ஒருவன் படத்திற்கு ஞாயிறு அன்று நடந்த ஆரவாரத்தின் ஒரு பகுதி படங்கள்

https://pbs.twimg.com/media/CGgWq-sUcAAYx2m.jpg
https://pbs.twimg.com/media/CGgXUx8UQAA-PyH.jpg

https://pbs.twimg.com/media/CGgXCSuUAAEPYf_.jpg

https://pbs.twimg.com/media/CGgW4F5UQAA2V53.jpg
https://pbs.twimg.com/media/CGgWyNjUkAAa3ME.jpg
https://pbs.twimg.com/media/CGgXJaQUQAAWA-F.jpg

https://pbs.twimg.com/media/CGgW8qmUQAAbSL8.jpg
https://pbs.twimg.com/media/CGgXOVZUAAQBwqo.jpg
https://pbs.twimg.com/media/CGgdlc_UgAANhRK.jpg
https://pbs.twimg.com/media/CGgd1gTUQAArJVk.jpg

eehaiupehazij
2nd June 2015, 09:46 PM
சித்திரமும் பேசிடுமே நடிப்போவியரின் கை வண்ணத்தில் !!


இந்தக் காலத்து செல்பி புள்ளைகளான காதலிகள் போலல்லாது அந்தக் காலத்துக் கதாநாயகர்கள் நாயகியர் மனம் கவர தமது ஓவியத் திறமையை வெளிப்படுத்தி குதூகலிப்பர்!! நடிகர்திலகமும் இப்பாதையில் காலடி வைத்த வரலாற்று சுவடுகள்!!

https://www.youtube.com/watch?v=H7sASaWTrac

https://www.youtube.com/watch?v=gLiZFaAbWb8

ஆனால் கர்ண மகாராஜாவைப் பொறுத்தமட்டில் நிலைமை தலைகீழே !!

https://www.youtube.com/watch?v=67Xvl_2dZwQ

Russellxor
2nd June 2015, 10:11 PM
வாக்கிங் ஸ்டிக்குடன்
வாக்கிங் கிங்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-14-52-49_zpsdh4khrsy.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-14-52-49_zpsdh4khrsy.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150602_170143_zpsmoyucvkh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150602_170143_zpsmoyucvkh.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-15-03-15_zps5j8mita7.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-15-03-15_zps5j8mita7.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9362_zpssw3nv7jm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9362_zpssw3nv7jm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-15-42-43_zpsqpsbd7nu.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-15-42-43_zpsqpsbd7nu.png.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2015-06-02-15-45-13_zpsylzgkxbm.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2015-06-02-15-45-13_zpsylzgkxbm.png.html)

Russellxor
2nd June 2015, 10:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6855_zpsdcp8l3cv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6855_zpsdcp8l3cv.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6248_zps54phb7v1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6248_zps54phb7v1.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6530_zpstvuhavii.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6530_zpstvuhavii.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_7031_zpscio8zzri.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_7031_zpscio8zzri.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_0331_zpsgy3v04gm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_0331_zpsgy3v04gm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3182_zpsrxiajjda.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3182_zpsrxiajjda.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3779_zpsbtjgdwp7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3779_zpsbtjgdwp7.jpg.html)

Russellxor
2nd June 2015, 10:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9362_zpssw3nv7jm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9362_zpssw3nv7jm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_5501_zpsccbh3ofl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_5501_zpsccbh3ofl.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_2214_zpsyfrcu8h7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_2214_zpsyfrcu8h7.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_8021_zpsxjewjisw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_8021_zpsxjewjisw.jpg.html)

Russellxor
2nd June 2015, 10:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6423_zpsiefe9dpo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_6423_zpsiefe9dpo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3456_zpseu1pzdiv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3456_zpseu1pzdiv.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_4928_zpswg75dbxh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_4928_zpswg75dbxh.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3662_zpsnvmy69en.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_3662_zpsnvmy69en.jpg.html)

Russellxor
2nd June 2015, 10:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9119_zpshkoid20y.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9119_zpshkoid20y.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9624_zpssocqujhb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_9624_zpssocqujhb.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_0689_zps8flfczvm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_0689_zps8flfczvm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_7219_zpskccfm8i4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_7219_zpskccfm8i4.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_0835_zpsx7h3wpn5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_0835_zpsx7h3wpn5.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_7022_zpsrfnujzoj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Anbulla%20Appa%20-%20Anbulla%20Appa%20Song%20-%20480P_7022_zpsrfnujzoj.jpg.html)

RAGHAVENDRA
3rd June 2015, 06:53 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01836/11FR-MAHENDRA_1836709g.jpg

Y.Gee.Mahendra in his FB page:




Happened to see DEEPAM on TV after a long time...This is one of the 33 movies I had the good fortune and honor of acting with the great Sivaji sir. Aha what a controlled performance in this movie...emotions kept under control like a coiled spring...voice hardly rising but the face displaying a galaxy of emotions. Ivarukka subtle acting theriyathu. ? Sathyama solren..Nadippatharkku mattume intha bhoomiyil avatharam Eduthavar Sivaji. Nadigan endru Evanavathu thannai indru solli kondal Oru murai antha Boag Roadi mannil nadanthuvittu varungal.. varatha nadippu thaanaga varum. ..14 years since he attained immortality..yet not a day has gone by that I dont think of him and cry myself to sleep . I ASK GOD ONLY ONE FAVOR. THE DAY YOU TAKE ME BACK UNTO YOU ...PROMISE ME O LORD THAT U WILL PLACE ME ALONGSIDE WHEREVER U HAVE KEPT SIVAJI. THAT WILL BE MY SALVATION..ONLY THEN MY SOUL WILL R.I.P.

AVAR NINAIVE EN SWASAM. YGEEM



My reply:

Sir, Tears roll down on my eyes on reading your post. A true and devoted fan of Sivaji will be able to bring tears and move others on sharing about NT and this is ample proof of it.

Russellxor
3rd June 2015, 11:21 AM
https://youtu.be/0HjezY9DQNU

eehaiupehazij
3rd June 2015, 12:18 PM
Gap filler :NT teaching Sarojadevi Golf in Pudhiya Paravai!


After the stupendous success of the James Bond flick Goldfinger it became customary to most Indian particularly the Tamil films to adapt scenes liberally from this Bench Mark OO7 epic!
One such scene is the famous Golf scene between the villain Goldfinger and Connery/Bond! In Tamil films like NT's Pudhiya Paravai followed by MGR's Anbe Vaa too teaching Golf to heroines was inserted!!

But...unable to upload the NT golf scene from Pudhiya Paravai! If any one has that clipping...kindly upload for our thread! Senthilvel Sivaraj Sir's store?


https://www.youtube.com/watch?v=7GMzNJNDmdM

Russellbpw
3rd June 2015, 02:11 PM
கடந்த வாரம் திருச்சி கெய்டியில் வெளிவந்து சக்கைபோடு போட்ட என்னை போல் ஒருவன் திரைப்படம் பற்றி
நேற்றைய மாலை மலரில் பெரிய அளவு செய்தி வந்துள்ளது. முரசில் வெளிவந்த செய்தி முக்காலும் மற்ற கால் வாசி செய்தி அதிகமாகவும்
எடுத்து பதிவு செய்துள்ளது மாலை மலர் .

திரு சௌதிரி அவர்கள் செய்தியை ஸ்கேன் செய்து பதித்தால் நன்றாக இருக்கும் .

நன்றி
rks

eehaiupehazij
3rd June 2015, 02:12 PM
நடிகர்திலகத்தின் மின்னல் வேக முகபாவ மாற்றங்கள் ! NT's facial flashes Vs Lightnng!!


ஒரு தேர்ந்த நடிகருக்கு தனது பாத்திரப் படைப்புக்கு ஏற்ற பல்வேறு முகபாவனைகளை உறுதி செய்யவே ஏகப்பட்ட ஒத்திகைகள் தேவைப்படும்
நடிப்பின் பிதாமகருக்கோ முகபாவ மாற்றங்கள் மீன்குஞ்சு தண்ணீரில் நீந்துவது போல !! மகிழ்ச்சி/வருத்தம், சிரிப்பு/அழுகை, கோபம்/தாபம், வேதனை/வேடிக்கை.....எல்லாமே குளோசப்பில் பிரித்து மேய்ந்திட...உலகின் ஒரே நடிகர் நமது நடிப்புக்கடவுளே!!

பகுதி 1 : ஒரே ஷாட்டில் மாறுபட்டு ஜொலிக்கும் முகபாவ மின்னல் கீற்றுகள்! : புதிய பறவை


கடந்தகால மர்மங்கள் மனதில் பொதிந்த நிலையில் மனைவி இறந்து விட்டாள் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த சூழலில் இறந்த மனைவி போலவே ஒரு
மாது கண்முன்னே வந்து நின்று தானே அவள் என்று குட்டையைக் குழப்பும்போது அவளை வசமாக சிக்க வைக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து
அயர்ச்சி காண்கிறார் நடிகர்திலகம் !
கட்டுக்கடங்காத கோபமும் வெறுப்பும் முகத்தில் நிழலாடினாலும் உண்மையை வெளிக்கொணர போலி சௌகாரை மீண்டும் விரும்பி காதலிப்பது போன்ற முகபாவத்தை ஒரு நொடியில் அவர் மாற்றிக் காட்டும்போது தியேட்டரே நிசப்தத்தில் உறைந்து இது போல் நடிப்பு வெளிப்பாட்டை இனி எவரால் சாதிக்க முடியும் என்ற பிரமை நிலைக்குப் போகிறதே !


சித்ரா ...யார் நீ....?!!!!

https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE

Russellxor
3rd June 2015, 02:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/d117b582-51e3-4c6d-8388-b7f1d6525e43_zpsv6gbz012.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/d117b582-51e3-4c6d-8388-b7f1d6525e43_zpsv6gbz012.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/451c020a-1f4b-400e-ba22-66b4bc44713a_zpsberywfg0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/451c020a-1f4b-400e-ba22-66b4bc44713a_zpsberywfg0.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/dbe9880c-d26f-4c1f-87f8-77d68402b3a7_zpsi9m8qwwp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/dbe9880c-d26f-4c1f-87f8-77d68402b3a7_zpsi9m8qwwp.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/d164ebc7-7f62-43f3-ad95-e1be82128d18_zpsdl1ljbas.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/d164ebc7-7f62-43f3-ad95-e1be82128d18_zpsdl1ljbas.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/991495bf-539a-4aa8-af64-32e77f3fd60d_zpss5oqfky4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/991495bf-539a-4aa8-af64-32e77f3fd60d_zpss5oqfky4.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/87332fd3-c4a5-4ee4-bdfc-48e75ba9bd52_zpsflkp6jej.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/87332fd3-c4a5-4ee4-bdfc-48e75ba9bd52_zpsflkp6jej.gif.html)

Russellxor
3rd June 2015, 02:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/61081c4e-5002-4eff-9e22-7e18e98f463b_zps4utkdn93.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/61081c4e-5002-4eff-9e22-7e18e98f463b_zps4utkdn93.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/de8616bf-6f36-4b35-9151-599cb49adee3_zpslkbq1u4n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/de8616bf-6f36-4b35-9151-599cb49adee3_zpslkbq1u4n.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/5da3d349-bcf1-4d66-aec1-65c89887d9b5_zpsiv3pewaf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/5da3d349-bcf1-4d66-aec1-65c89887d9b5_zpsiv3pewaf.jpg.html)

Russellxor
3rd June 2015, 02:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/5d2f7961-ccad-49ac-817d-a33030dab311_zpshphdx2mb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/5d2f7961-ccad-49ac-817d-a33030dab311_zpshphdx2mb.jpg.html)

Russellxor
3rd June 2015, 03:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/6877d2a9-92ef-413b-b179-65d595cfcc1c_zpsoi1eka46.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/6877d2a9-92ef-413b-b179-65d595cfcc1c_zpsoi1eka46.jpg.html)

Russellxor
3rd June 2015, 03:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3750e643-6b84-476f-b698-da5d669f6ee4_zpsh4mhwkom.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/3750e643-6b84-476f-b698-da5d669f6ee4_zpsh4mhwkom.jpg.html)

Russellxor
3rd June 2015, 04:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/422fd738-4496-4abc-89b2-ab4e180968bd_zpsnrutevdj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/422fd738-4496-4abc-89b2-ab4e180968bd_zpsnrutevdj.jpg.html)

Russellxor
3rd June 2015, 04:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/54af895e-4474-4b06-aef4-d5591d4b58af_zpsfqy5eynn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/54af895e-4474-4b06-aef4-d5591d4b58af_zpsfqy5eynn.jpg.html)

Murali Srinivas
3rd June 2015, 05:08 PM
நண்பர் திரு C S குமார் அவர்களுக்கு,

இன்றைய தினம் உங்கள் பதிவுகளில் ஒன்றில் 1980 பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நடைபெற்ற சில சம்பவங்களை விவரிக்கும் நேரத்தில் துள்ளி வருகுது வேல் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். அதில் ஒரு தகவல் பிழை இருக்கிறது. பொதுவாக திமுக அதிமுக பற்றிய பதிவுகள் இடம் பெறும்போது அதில் தகவல் பிழைகள் இருந்தாலும் அதை சுட்டிக் காட்ட நான் விரும்புவதில்லை. ஆனால் இன்றைய பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள துள்ளி வருகுது வேல் படத்தில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருந்ததால் இதை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு சற்றே பின்னோக்கி போனோமென்றால் அதாவது 1979 ஜூன் மாதம். தஞ்சை நாகை மக்களவை தொகுதிகளான இடைத்தேர்தல் நடைபெற்ற நேரம். 1978-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிக்மகளூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை இந்திராகாந்தி அவர்கள் அன்றைய ஜனதா அரசால் impeachment என்ற முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் போட்டியிட அவர் தஞ்சை தொகுதியை தேர்வு செய்ததும், முதலில் ஆதரவு தருவதாக சொன்ன எம்ஜிஆர் அவர்கள் பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்திராகாந்தி அவர்கள் வேட்பாளராவதற்கு தருவதாக சொன்ன ஆதரவை விலக்கி கொள்ள பிறகு சிங்காரவடிவேலு போட்டியிட்டது பற்றியெல்லாம் இங்கே நிறைய பேசியிருக்கிறோம்.

பிறகு மொரார்ஜி தலைமையிலான ஜனதா அரசுக்கு அதிமுக ஆதரவு தந்து பிறகு அந்த ஆட்சி கவிழ்ந்தவுடன் சரண்சிங் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்க அந்த ஆட்சியும் பாராளுமன்றத்தை சந்திக்காமலே ராஜினாமா செய்தது. மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முந்திய காலகட்டம். அன்றைக்கு ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும் ஒரிசா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து பின்னர் பெருந்தலைவர் கொண்டு வந்த K பிளான் காரணமாக 1963-ல் பதவி விலகியவரும் பின்னர் 1989-ல் மீண்டும் முதல்வரானவருமான [இந்தியாவிலேயே ஒரே மாநிலத்தில் மிக நீண்ட இடைவெளியில் 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்கும் உரியவர்] பிஜு பட்நாயக் [இன்றைய ஒரிசா அல்லது ஓடிஸா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையும் ஆவார்] இரண்டு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு 1979 செப்டம்பர் மாதம் 11 அல்லது 12 -ந் தேதி [என்று நினைவு] சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் எம்ஜிஆர் அவர்களையும் கருணாநிதி அவர்களையும் சந்தித்து பேச வைத்தார்.

ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி வெற்றியடையாமல் போகவே செப்டம்பர் 13 அன்று [நினைக்கிறேன்] திமுக தலைவர் டெல்லி சென்று இந்திரா காந்தி அம்மையாரை சந்தித்து பேசி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலை காங்கிரஸ் திமுக கூட்டணியாக சந்திக்கும் என்று முடிவு செய்து அறிவித்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சஞ்சய் காந்தி அவர்கள் ஒரு நாள் பயணமாக சென்னை வந்து அன்றைய தினம் கொட்டும் மழையிலும் நனைந்துக் கொண்டே தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது ஊழியர் கூட்டத்தில் பேசுவது போன்றவற்றில் ஈடுபட்டார். அதன் பிறகு செப்டம்பர் 30 ஞாயிறு அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இந்திரா அம்மையாரும் கருணாநிதி அவர்களும் கலந்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்திற்கு துவக்கமிட்டனர். அன்றைய பொதுக்\கூட்ட மேடையிலே அதற்கு மறுநாள் பிறந்த நாள் கொண்டாடவிருந்த நடிகர் திலகம் அவர்களுக்கு அன்னை இந்திரா அவர்கள் வாழ்த்து சொன்னார்.

இந்த கூட்டம் நடந்து சுமார் ஒரு வாரத்திற்கு பின்பு சென்னையில் கர்ணன் கணேசன் ரசிகர் மன்றம் சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா உடலாண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்டு அதற்கு சிறப்பு விருந்தினராக திரு கருணாநிதி அவர்கள் கலந்துக் கொண்டார். அங்கே இருவரும் தங்களின் பழைய நட்பான நாட்களை அசை போட அப்போதுத் அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் வருமா என்ற கேள்வி எழுப்ப அதற்கு உறுதியாக பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்று சொன்னார் திமுக தலைவர்.

அதன் பிறகு சில நாட்களிலேயே தினத்தந்தி நாளிதழில் முழுப்பக்க விளம்பரமாக எழுத்தின் வேந்தரும் நடிப்பின் வேந்தரும் இணைந்து வழங்கும் என்ற அடைமொழியோடு துள்ளி வருகுது வேல் விளம்பரம் இடம் பெற்றது அதன் பிறகு மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்த படம் தயாராகி வெளிவருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது தேர்தல் முடிந்த பிறகே வெளிவரும் என பதிலளித்தார் கருணாநிதி.

மக்களவை தேர்தல் முடிந்த பிறகு என்ன காரணங்களினாலோ துள்ளி வருகுது வேல் திரைப்படம் ஆரம்பிக்கப்படாமல் அதற்கு மாற்றாக பூம்புகார் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மாடி வீட்டு ஏழை என்ற படம் தொடங்கப்பட்டு அதற்கு திரு கருணாநிதி அவர்கள் வசனம் எழுத நடிகர் திலகம் தந்தை மகன் இரட்டை வேடங்களில் நடித்து அந்தப் படம் 1981 ஆகஸ்ட் 22 அன்று வெளியானது.

ஆகவே நீங்கள் குறிப்பிட்டது போல் 1980 மக்களவை தேர்தலுக்கு பின் துள்ளி வருகுது வேல் அறிவிக்கப்படவில்லை. 1979 அக்டோபரிலேயே அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு முறை விளம்பரம் வந்ததுடன் சரி. பின்னர் வேறு எந்த விளம்பரமோ செய்தியோ 1980 மக்களவை தேர்தலுக்கு பின் வரவில்லை என்பதுதான் உண்மை.

பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் திமுக அதிமுக அறிக்கைப் போரில் உள்ளே நுழைய விரும்பவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிடும் தகவலில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பதனால்தான் அந்த தகவல் பிழையை சுட்டிக் காட்ட இத்துணை விளக்கமாக சொல்ல வேண்டியதாகிப் போயிற்று.

நான் எழுதியவற்றை சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

Russellxor
3rd June 2015, 07:41 PM
துள்ளி வந்ததது துப்பாக்கியா?
நடிகர்திலகத்தின் விழிகளே!

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1d4c5afa-ee7d-4904-8e61-dd7d01f67c6d_zpski7wiofu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1d4c5afa-ee7d-4904-8e61-dd7d01f67c6d_zpski7wiofu.jpg.html)

Russellxor
3rd June 2015, 07:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/300a1251-af66-4630-8158-1798e46c1a20_zpsaxfv0xhn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/300a1251-af66-4630-8158-1798e46c1a20_zpsaxfv0xhn.jpg.html)

Russellxor
3rd June 2015, 07:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/0db44213-597b-47ab-9e49-700908c18d0e_zpsrkz23yjz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/0db44213-597b-47ab-9e49-700908c18d0e_zpsrkz23yjz.jpg.html)

Russellxor
3rd June 2015, 07:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3f49c218-4fef-4190-8dfb-3a545f69d7db_zpsdnqe0ryb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/3f49c218-4fef-4190-8dfb-3a545f69d7db_zpsdnqe0ryb.jpg.html)

Russellxor
3rd June 2015, 07:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/13d28a3d-cab1-4791-b5fb-771832776e85_zps02fkbuiv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/13d28a3d-cab1-4791-b5fb-771832776e85_zps02fkbuiv.jpg.html)

Russellxor
3rd June 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3ac8a920-b40c-4495-b072-687d5f39b21d_zpsu7ckwjbz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/3ac8a920-b40c-4495-b072-687d5f39b21d_zpsu7ckwjbz.jpg.html)

Russellxor
3rd June 2015, 07:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/d5329ccf-40fa-45f1-b538-f0d17b0219dd_zpsx6jvkady.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/d5329ccf-40fa-45f1-b538-f0d17b0219dd_zpsx6jvkady.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:28 PM
எந்த காலத்திற்கும்
எந்த உருவத்திற்கும்
ஏற்ற
முக அமைப்பை பெற்றவர்
நடிகர்திலகம்.
இப்போது ஹாலிவுட் முதற்கொண்டு கோலிவுட் வரை
செய்யப்படும் மேக்கப்
விஷயங்கள்
யாரை வேண்டுமானாலும்
மாற்றலாம்.
ஆனால்
முகப்பொருத்தமும்
நடிப்பும் எப்படி என்பதேகேள்வி.
அதற்காகவே
இந்த
படங்கள்.
நண்பர்கள்
தங்களின்
கருத்துக்களை
தெரிவிக்கவும்.

Russellxor
3rd June 2015, 08:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/b7d0d530-c1c7-4a96-9f5e-01daf99ce4f6_zpspmai3rq5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/b7d0d530-c1c7-4a96-9f5e-01daf99ce4f6_zpspmai3rq5.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3fec200c-8a8c-4363-bfc8-8c0563fdd2d4_zpsosrgxnmn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/3fec200c-8a8c-4363-bfc8-8c0563fdd2d4_zpsosrgxnmn.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/99a12b01-7782-4931-b1e2-bfdc2d002147_zpsz8g1qckr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/99a12b01-7782-4931-b1e2-bfdc2d002147_zpsz8g1qckr.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/51c24868-f165-4a1d-8a4c-4dc9cadaddcf_zpswvrbiwro.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/51c24868-f165-4a1d-8a4c-4dc9cadaddcf_zpswvrbiwro.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/5ec4b40d-ad50-4ad6-8c4e-9fffb9d56d7f_zpsayxzwtdm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/5ec4b40d-ad50-4ad6-8c4e-9fffb9d56d7f_zpsayxzwtdm.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/825b0883-1701-4293-9d00-ac9286349da1_zpsmrpgfpce.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/825b0883-1701-4293-9d00-ac9286349da1_zpsmrpgfpce.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/dee88443-8f68-4574-a184-a9dc5827404c_zpstkr6d6g0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/dee88443-8f68-4574-a184-a9dc5827404c_zpstkr6d6g0.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/8bc658b4-3aa3-48ab-8db9-338fa88f66ae_zps8b98ycw6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/8bc658b4-3aa3-48ab-8db9-338fa88f66ae_zps8b98ycw6.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/32b6c67a-b95f-4c66-8e3e-ed3473655639_zpsb6llnvfv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/32b6c67a-b95f-4c66-8e3e-ed3473655639_zpsb6llnvfv.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/8a1ebcff-d4be-42e9-a1a5-2bd1d5b056f3_zps9kr2a6pz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/8a1ebcff-d4be-42e9-a1a5-2bd1d5b056f3_zps9kr2a6pz.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/795c6d22-0965-4e5c-9d71-f8b6cbdfc640_zpsa4vzqbgx.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/795c6d22-0965-4e5c-9d71-f8b6cbdfc640_zpsa4vzqbgx.gif.html)

Russellxor
3rd June 2015, 08:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/d38b5499-30c2-4842-892f-bc7426c3c23f_zpsblhglsjr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/d38b5499-30c2-4842-892f-bc7426c3c23f_zpsblhglsjr.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/ca135710-6763-47c4-92bf-4eb81780a1fb_zpsqf33gpil.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/ca135710-6763-47c4-92bf-4eb81780a1fb_zpsqf33gpil.jpg.html)

Russellxor
3rd June 2015, 08:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/12be98ff-3549-4281-ab40-e44815ccd7e0_zpshtqhj30i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/12be98ff-3549-4281-ab40-e44815ccd7e0_zpshtqhj30i.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/d2fbfa67-e1a2-4dd1-ab5c-9f6b3752a655_zpste0bz5fw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/d2fbfa67-e1a2-4dd1-ab5c-9f6b3752a655_zpste0bz5fw.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/b1765a1c-109a-4572-bcad-6842a5242a7c_zpssgkoloz7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/b1765a1c-109a-4572-bcad-6842a5242a7c_zpssgkoloz7.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/7d6c0d6b-beff-4ad5-be00-23ce85d8bedb_zpsm4qc9mat.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/7d6c0d6b-beff-4ad5-be00-23ce85d8bedb_zpsm4qc9mat.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/ac5386c5-11d5-4a8a-b094-07e5dc850eca_zpshjceho5f.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/ac5386c5-11d5-4a8a-b094-07e5dc850eca_zpshjceho5f.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/2af7ef22-b807-4ca3-aeaf-9c2b7b735377_zpsvptqdrq0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/2af7ef22-b807-4ca3-aeaf-9c2b7b735377_zpsvptqdrq0.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/239d07aa-9320-4346-8168-aaefd767bbdc_zpsqcr2hubd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/239d07aa-9320-4346-8168-aaefd767bbdc_zpsqcr2hubd.jpg.html)

uvausan
3rd June 2015, 09:08 PM
திரு செந்தில்வேல் - உங்கள் உழைப்பு சுனாமியின் வேகத்தைவிடவும் , பூகம்பத்தின் அதிர்வுகளை விடவும் அழுத்தமாகவும் , ஆழமாகவும் , அருமையாகவும் இருக்கின்றது - உங்கள் "அரிமா " இன்னும் வேகமாக செல்ல வாழ்த்துக்கள்

Russellxor
3rd June 2015, 09:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/8e999c96-52c2-4ecb-9a52-3bc90720809e_zpsjquwtrvk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/8e999c96-52c2-4ecb-9a52-3bc90720809e_zpsjquwtrvk.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/f973882a-c309-47b5-adf0-f56fe034e0f9_zpsoobsyf9i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/f973882a-c309-47b5-adf0-f56fe034e0f9_zpsoobsyf9i.jpg.html)

Russellxor
3rd June 2015, 09:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1433328582429_zpss0dk6lna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1433328582429_zpss0dk6lna.jpg.html)

Russellxor
3rd June 2015, 10:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/a1204c4a-35cb-48b6-b57e-90e639f668b7_zpskhfw0q3m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/a1204c4a-35cb-48b6-b57e-90e639f668b7_zpskhfw0q3m.jpg.html)

Russellxor
3rd June 2015, 10:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/02bccf2f-6cd8-4e6f-a64e-726410f068d8_zpsqbnyznm3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/02bccf2f-6cd8-4e6f-a64e-726410f068d8_zpsqbnyznm3.jpg.html)

Russellxor
3rd June 2015, 10:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cd67f3e7-d162-4ce5-aa66-3a48799e073e_20150603221702807_zpsotdoqhl8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cd67f3e7-d162-4ce5-aa66-3a48799e073e_20150603221702807_zpsotdoqhl8.jpg.htm l)

Russelldwp
3rd June 2015, 10:34 PM
திருச்சியில் நடிகர் திலகத்தின் மறு வெளியீட்டு தொடர் சாதனையாக என்னைப்போல் ஒருவன் ஹவுஸ்புல் சாதனை செய்தி நேற்றைய மாலை மலரில் வெளியானது
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11391511_1603363866546955_1112663730695657462_n.jp g?oh=da8bc6637df7381043c9b2017f0f48e7&oe=55E98BAC&__gda__=1442577101_2f8c2638b3aecc116f45998118238e9 4https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11108228_1603364086546933_187065983690928929_n.jpg ?oh=4cb3044a03cd7f9e95dd83f67c39d789&oe=5605D5FB&__gda__=1442475680_6854c3e7d67bbf746b98aa6d73de0db 6

Russellxor
3rd June 2015, 10:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/5557962a-79fc-41db-9c17-fc59116f2301_zpsnahzfiqb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/5557962a-79fc-41db-9c17-fc59116f2301_zpsnahzfiqb.jpg.html)

Russellxor
3rd June 2015, 10:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3ea8c823-3009-4430-97d7-1da7ebca03c2_zps0pdyetcf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/3ea8c823-3009-4430-97d7-1da7ebca03c2_zps0pdyetcf.jpg.html)

Russelldwp
3rd June 2015, 10:39 PM
செந்தில்வேல் சார் பலவித பரிமாணங்களில் தலைவரின் படங்கள் ஜொலிக்கிறது. தங்களின் உழைப்பிற்கு இணையில்லை. கற்பனைக்கு அளவே இல்லை சூப்பர்

Russellxor
3rd June 2015, 10:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/23d1f897-fcee-43d3-9e3a-0cf9180e6f20_zpsutvlgmd7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/23d1f897-fcee-43d3-9e3a-0cf9180e6f20_zpsutvlgmd7.jpg.html)

Russellxor
3rd June 2015, 10:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/7fd57e87-c9be-416e-8f82-897cf4d2bc83_zpsg4ghhpgv.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/7fd57e87-c9be-416e-8f82-897cf4d2bc83_zpsg4ghhpgv.gif.html)

Russellxor
3rd June 2015, 10:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3263a30b-7aab-4547-bc68-ff5466ca04e8_zpschoo0mtb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/3263a30b-7aab-4547-bc68-ff5466ca04e8_zpschoo0mtb.jpg.html)

Murali Srinivas
3rd June 2015, 11:45 PM
செந்தில்வேல் அவர்களே,

உங்கள் கற்பனை வளம் அபாரம். புதுமையான பல கோணங்களில் நடிகர் திலகத்தை present செய்கிறீர்கள்! அனைத்தையும் ஒரே நேரத்தில் பதிவிடாமல் சற்று இடைவெளி கொடுத்து செய்தால் இன்னமும் கூடுதலாக ரசிக்க முடியும்!

அன்புடன்

Murali Srinivas
3rd June 2015, 11:46 PM
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களே,

என்னுடைய பதிவிற்கு யார் பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களிடமிருந்து பதில் வரும் என நிச்சயம் எதிர்பார்த்தேன். அதே போல் உங்களிடமிருந்து வந்து விட்டது. இனி நீங்கள் குறிப்பிட்ட விஷயம். என்னுடைய பதிவு துள்ளி வருகுது வேல் பற்றி. அந்த படம் ஆரம்பிக்கப்பட இருந்த சூழல் பின்னணி என்னவென்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்தவே அன்றைய அரசியல் களம் பற்றி எழுத நேர்ந்தது. அன்றைய காலகட்டம் பற்றி [1978 நவம்பர் முதல் 1979 ஜூலை வரை] நானே இரண்டு மூன்று தடவை எழுதியிருக்கிறேன் என்பதனால் அதை மீண்டும் விவரிக்க வேண்டாம் என நினைத்து சுருக்கமாக அப்படி எழுதினேன்.

அதே நேரத்தில் அப்படி ஒரு முடிவை எம்ஜிஆர் அவர்கள் ஏன் எடுத்தார் என்பதற்கு நீங்கள் ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறீர்கள். நான் அந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன் ஆனால் அதைப் பற்றிய விவாதம் இடம் பெற வேண்டிய களம் இந்த திரியல்ல என்பதனாலும் என் பதிவின் மய்யப் புள்ளியான துள்ளி வருகுது வேல் படத்திற்கும் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள விஷயத்திற்கும் தொடர்பு இல்லை என்பதனாலும் நான் இதைப் பற்றிய விவாதத்திலிருந்து விலகி நிற்கிறேன்.

மற்றபடி பதிவை படித்ததற்கும் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
4th June 2015, 12:13 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/3f49c218-4fef-4190-8dfb-3a545f69d7db_zpsdnqe0ryb.jpg


Simply superb Senthil. All your posts take NT to the Next Generation.

RAGHAVENDRA
4th June 2015, 12:15 AM
திலக சங்கமம் தொடரில் அடுத்து..

நம்மையெல்லாம் இரவும் பகலும் தூங்காமல் பண்ணியவரின் சூப்பர் பாடல்...

Gopal.s
4th June 2015, 03:25 AM
கலைவேந்தன்,



முரளியின் அரசியல் எழுத்துக்கள் நூல் பிடித்தாற் போல உண்மை பேசும். தாங்களோ சப்பை கட்டு கட்டி, உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பாக எழுதுவதில் கோயபல்ஸ் அவர்களை தூக்கி பிடிக்கிறீர்கள். இந்திராகாந்தி உண்மையை புரிந்து கொண்டு சமாதானமாகியிருந்தால் , மணியனுடன் சந்திப்புக்கு போன போது ,இந்திரா அவர்களை நடத்திய விதம் பற்றி வார தொடரில் எழுதினாரே? அதை தாங்கள் படித்ததில்லையா? ஜனதா அரசின் வற்புறத்தல், இந்த பின் வாங்கலில் உண்டு என்று ,அப்போதைய ஆதரவாளர்களே எழுதியிருந்தனர்.



உங்களின் எழுத்துக்களில் உண்மை தன்மை குறைந்து வருவது வருந்த தக்கது.எனக்கு கை வராத ஒன்று. முரளிக்கு அறவே வராத ஒன்று.

RAGHAVENDRA
4th June 2015, 07:07 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/FESTIVITYCOLLAGEfw_zpsvespe1ea.jpg

adiram
4th June 2015, 12:16 PM
செந்தில்வேல் சார்,

உங்கள் அபார உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள். ஒவ்வொரு பிரேமுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நடிகர்திலகத்தின் நிழற்படங்கள் அட்டகாசம். குறிப்பாக துப்பாக்கி சுடும் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஆக்ரோஷமான முக பாவங்கள் அற்புதம்.

இருப்பினும் நமது முரளி சார் சொன்னதுபோல, பதிவுகளுக்கிடையே இடைவெளி தேவை. இவ்வளவு வேகமோ, அவசரமோ தேவையில்லை. உங்கள் ஒவ்வொரு படத்தையும் ரசிக்க மக்களுக்கு அவகாசம் தேவை. (அருமையான படங்களை தயாரித்து, போதிய இடைவெளி விடாமல் வெளியிட்டு அனுபவப்பட்ட அணி நம்முடையது). அந்த அவசரம் நம் பதிவுகளில் வேண்டாம்.

தொடருங்கள்..... நிதானமாக.

தங்களின் அரிமா நிறுவனம் கோவையின் சிறந்த வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக திகழ வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
4th June 2015, 02:43 PM
திலக சங்கமம் & Sivaji Ganesan Definition of Style 24

குங்குமம்

வணங்காமுடி மிக உயரமான கட்அவுட்டின் மூலம் தமிழ் சினிமா விளம்பர வரலாற்றிலும் சிவாஜி ரசிகர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் மோகன் ஆர்ட்ஸ் மோகன். நடிகர் திலகத்தின் மேல் உயிரையே வைத்திருந்தார். அது இன்னும் அவருடயை குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வரையிலும் தொடர்வது சிறப்பு.

அவருடைய சொந்த பேனரான ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த பாசமலர் உலகப் புகழ்பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. அதனுடைய பிரம்மாண்டமான வெற்றி அந்நாட்களில் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதனுடைய தொடர்ச்சியாக நடிகர் திலகத்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கத் திட்டமிட்டார் மோகன். இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்க, விறுவிறுப்பான மர்ம நாவலாக அமைந்த கதை படமாக்கப்பட்டு குங்குமம் என்று பெயரிட்டு வெளிவந்த்து. படத்தில் பல சிறப்புகள் அமைந்தன.

1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று நடிகர் திலகம் அமெரிக்க விஜயம் மேற்கொண்டபோது அங்கு பல இடங்களுக்கு சென்று திரையுலக, நாடக மற்றும் வானொலி அறிவியல்களைப் பற்றி கண்டும் கேட்டும் அறிந்து கொண்டார். அவ்வாறு அங்கு அவர் சென்ற பல இடங்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அணிவகுக்க குங்குமம் படத்தின் டைட்டில் காட்சிக்காகவே மக்கள் திரையரங்கைப் படமெடுத்தனர். அது மட்டுமின்றி சென்டிமென்டாக குங்குமம் பாடலும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்று சொல்வது போல், நடிகர் திலகம் பெண் வேடமிட்டு நடித்ததும் இப்படத்தில் தான். இதுவும் இன்று வரை ரசிகர்களால் சிலாகிக்கப் படும் காட்சியாக உள்ளது.

http://i1.ytimg.com/vi/spkV_Gbhs2w/0.jpg

குங்குமம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம், ஆங்கிலத்தில் -
விக்கிபீடியா இணையதளத்தில் - http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)

குங்குமம் திரைப்படத்தைப் பற்றி NOV அவர்களின் அருமையான கருத்துரை -

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1134167&viewfull=1#post1134167

இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறிப்பாக ஸ்டைல் மிகவும் பிரசித்தி பெற்றது. பூந்தோட்டக் காவல்காரா பாடல் காட்சியில் அவர் இரு கைகளையும் சொடுக்குப் போட்டவாறே நடந்து வரும் காட்சி ரசிகர்களின் பேராதரவை எப்போதும் பெறும், பலத்த கரகோஷம் விண்ணை முட்டும்.

விஜயகுமாரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்தாலும் புதுமுகம் சாரதாவின் இளமைத் தோற்றமும் ஈடு கொடுத்து நடித்த சிறப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவ்வாறு பல சிறப்புகளைத் தன்னுள் அடக்கியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது அந்த நடிப்புக் கடவுளின் வித்தியாசமான நடிப்பும் மேனரிஸமும்.


பாடல்களைப் பொறுத்தவரையில் ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியவை.

ஒரே ஒரு பாடல் ... கே.வி.எம். என்ற பெயர் இருக்கும் வரை பாடப்படும் பாடல்... எஸ்.ஜானகி அவர்களுக்கு, சிங்கார வேலனே பாடலுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் புகழ் தேடித்தந்த பாடல்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் பாடல்.. தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்களால் தவறாமல் பாடக்கூடிய பாடல்.. இப்படி பல சிறப்புப் பெற்ற பாடல் ... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ... இப்பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இன்று நாம் காண இருக்கும் இப்பாடல் காட்சி.

https://www.youtube.com/watch?v=gvBo0RVbInY

பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி சுசீலா இவர்கள் இணைந்து பாடி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் காலத்தை வென்று நிற்கும் அட்டகாசமான பாடல் தூங்காத கண்ணென்று ஒன்று. இந்தப் பாடலின பாதிப்பில் ஒரு படத்திற்கு தலைப்பாகவே இப்பல்லவி பயன்பட்டதிலிருந்தே இதனுடைய சிறப்பை உணரலாம்.

வித்தியாசமான ஒலியில் இனிமையாக ஒலிக்கும் வீணையுடன் தொடங்குகிறது பாடல். பின் வயலின் தொடரும் போது மாருதி ராவின் கேமிரா மெல்ல நாயகியை நோக்கிச் செல்கிறது. இயக்குநர்களின் இசை ரசனை இப்பாடல் முழுதும் தெரிகிறது. அதற்கு உதாரணமாக, கிடாரின் தாள லயத்திற்கேற்ப நாயகி ஊஞ்சலாடுவதாக அமைத்திருக்கிறார்கள். நாயகி பல்லவியைப் பாடுகிறாள், தூங்காத கண்ணென்று ஒன்று. நாயகியின் பல்லவி முடிகிறது. ரசிகர்களின் ஆரவாரம் ஆரம்பிக்கிறது.
பக்கவாட்டில் பார்த்தவாறு பாடத்துவங்குகிறார் நடிகர் திலகம். பாடியவாறே மிகவும் நளினமாக மெதுவாக முகத்தை இடப்புறம் திருப்பி நேர் பார்வையில் பாடுகிறார். கைகள் கட்டிக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். தான் மாறுவேடத்தில் நடிப்பதற்காக ஏற்றிருக்கும் அந்த ஆசிரியர் வேடத்திற்குரிய மரியாதையை அந்த கைகட்டுதலில் கொண்டு வருகிறார். தந்தாயே நீ என்னைக் கண்டு என்ற வரிகளின் போது காலைக் கீழிறக்கி மீண்டும் இடப்புறம் திரும்பும் ஒய்யாரம். கை கட்டுதல் அப்படியே உள்ளது. இப்போது நாயகி பாட, இவர் பார்வையாளர் திசையில் நம்மைப் பார்த்த கோணத்தில் நடந்து வரும் கம்பீரம்... ஆஹா... உடனே உதட்டைப் பிரிக்காமல் ஒரு புன்முறுவல்.. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... வினாடி 1.04. ல் இந்த வசீகரம் ... இடம் பெறுகிறது. இப்போது அவர் முன்னால் அதே கம்பீரத்துடன் நடக்க, காமிரா பின் தொடர்கிறது, நாமும் தான். கதவைத் திறக்கிறார். ... கட்...

இப்போது இந்த 1.11 விநாடியில் அந்த ராட்சஸ ஸ்டைல் களேபரம் துவங்குகிறது.. கதவைத் திறக்கிறார்.. முற்றாத இரவொன்றில் நான் வாட என்ற வரிகளைப் பாடும் போது அந்த உடம்பை ஸ்டைலாக ஆட்டியவாறு நடந்து வரும் அழகு, முடியாத கதையொன்றை நீ பேச,, இந்த வரிகளின் போது குனிந்து கைகளை கட்டை மேல் வைத்து அவளைப் பார்க்க முற்படும் போது ,, எதற்கு தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக கொள்கிறாய், விட்டு விடு எனச் சொல்லும் பொருளில் தன் பார்வையை வீசுவது, ஸ்டைலின் உச்சகட்டமாய் இடது கையை முகவாய்க்கட்டை அருகில் கொண்டு செல்லும் அழகு, பூவோடு சேர்ந்து மணக்கும் நாரைப் போல், புதுமுகம் என்ற பதட்டம் சிறிதும் இன்றி நாயகி சாரதா அதே ஸ்டைலில் அட்டகாசமாக தன் உணர்வை இசையரசியின் ஜீவனுள்ள குரலில் வெளிப்படுத்துகிறார். அடுத்த பல்லவி தொடங்க, நாயகிக்கு பதிலாக இவர் பாடுகிறார், தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி நாம் காணும் உலகிங்கு ஒன்று இந்த வரிகளில் உள்ள உள்ளர்த்தத்தைக் கூட தன் விழிகளிலேயே அதுவும் அந்தக் கண்ணாடியைத் தாண்டி நமக்கு உணர்த்தும் உச்சகட்ட நடிப்பினை அளிக்க இவர் ஒருவரால் தான் முடியும். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களுக்கு இந்த இடத்தில் சிறப்பு சபாஷ்.

இப்பாடலில் திரை இசைத் திலகத்தின் உத்தி மிகவும் பாராட்டுக்குரியது, புதுமையானதும் கூட, பாடலின் இனிமை, பாடல் வரிகளில் உள்ள ஆழம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரணத்திற்கும் பல்லவிக்கும் இடையே மிகச் சிறிய நேரமே , சில வினாடிகளே, இடையிசை இடம் பெறுகிறது, அதுவும் பெரும்பாலும் வீணை வயலின் புல்லாங்குழல் மட்டுமே...

அடுத்து.. சூப்பரோ சூப்பர்..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் என்று முதன் முறை பாடும் போது ஸ்டைலாக நடந்து வந்து அமர்வது, கண்ணாடியைக் கழட்டுவது, கண்ணைத் துடைப்பது, இரண்டாம் முறை பாடும் போது அதே உணர்வு, வேகத்துடன் அப்படியே ஒருக்களித்து சாய்வது, வலது கை படுக்கையில் ஊன்றிக் கொள்ள, இடது கை ஒரு ஃப்ரேமை மட்டும் பிடித்துக் கொள்கிறது. இதைத் தொடர்வது இன்னும் அட்டகாசம். ஒரு கையில் அந்த ஒரு ஃபிரேமைப் பிடித்து ஸ்டைலாக ஆட்டியவாறு, ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த போஸில் அவர் பாடும் போது நாம் எங்கோ போய் விடுகிறோம். அதுவும் அந்த விழிமட்டும் தனியாக வந்தாலும் என்கிற வரியைப் பாடும் போது கண்ணாடி இப்படியும் அப்படியும் அசையும் போது, அந்தக் கண்ணாடியைக் கூட ரசிக்க வைத்து விடுகிறார் மனிதர். கண்ணாடிக்கும் உயிர் கொடுக்கும் மனிதர் இவர் மட்டும் தான்.. தொடர்ந்து நாயகி சரணத்தை முடித்து வைக்க, இறுதியாக பல்லவி தொடங்குகிறது. ஒருக்களிப்பில் இருந்து எழுகிறார்.. மேஜைக்கருகில் செல்கிறார். விக்கைக் கழட்டுகிறார்.
விக்கைக் கழட்டினால் பார்க்க சகிக்காது என்பார்கள். .. ஆனால் இவரோ ... விக்கைக் கழட்டிய பிறகு இன்னும் அழகாக அல்லவோ காட்சியளிக்கிறார்.

பாடல் முடிகிறது.. ஆனால் நாம் .. இன்னும் அதிலிருந்து மீளவில்லையே..
கை தானாக இந்தப் பாடல் காட்சியை REPLAY செய்யும் வகையில் க்ளிக் செய்கிறதே...

Russellxor
4th June 2015, 03:14 PM
Delete

Russellxor
4th June 2015, 03:33 PM
பாராட்டிய திரி நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.ரசிகர்மன்ற ப்ளக்ஸ் வைப்பவர்களுக்குஇது போன்ற வித்தியாசமான டிசைன் தேவைப்பட்டால் சுலபமாக எடுத்துக்கொள்ளவும் இதிலிருந்து வேறு டிசைன்களை உருவாக்க ஐடியா கிடைக்கலாம் என்பதாலும்
அப்போது ஒவ்வொரு பக்கமாக தேடுவது சில சிரமங்களை கொடுக்கும் என்பதாலும் ஒரே சீராக பதிவிட்டேன்.இந்த பக்கத்தை குறித்து வைத்துக்கொண்டால் அப்போது தேடுவது சுலபமாக இருக்கும்.

வித்தியாசமான ப்ளக்ஸ் போர்டுகள் தயார் செய்து அதிலும்முன்னோடிகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெயர் வாங்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_06042015143024_zpsa8tv8qon.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_06042015143024_zpsa8tv8qon.jpg.html)

eehaiupehazij
4th June 2015, 06:46 PM
நடிக வேந்தரின் அதிரடி அறிமுகக் காட்சிகள் NT's Intro Scenes!


உலகதிரைப்படங்களில் கதாநாயகனின் அறிமுகம் பரபரப்பாக பேசப்படுவது இரண்டே இரண்டு படங்கள்தான் !
1952ல் வெளியான பராசக்தியில் நடிகர்திலகம் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது ஒரு எதிர்கால நடிப்பின் சிம்மம் தனது சிம்ம சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்ததற்கு ஒப்பானதே !

அதன்பின் 1962ல் டாக்டர்நோ திரைப்படத்தில் ஷான்கானரியின் மறக்க முடியாத பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட் அறிமுகம்!!

பெரும்பாலான நடிகர்திலகத்தின் காவியங்களில் அவர் தோன்றும் முதல் காட்சி அதிரடியாகவும் பரபரப்பாகவும் இருக்கும்படி இயக்குனர்கள் காட்சிகளை அமைத்திட்ட மெனக்கெடல் உழைப்பு நமக்கு பரவசம் ஏற்படுத்தும் !
இத்தகைய காட்சிகளின் மாட்சியின் சிறு தொகுப்பு
1 : கௌரவம்
பாரிஸ்டராக பட்டையை கிளப்பிய காவியத்தில் அவரை அங்குலம் அங்குலமாக பாதத்திலிருந்து காட்டி DrNo பரபரப்பை ஏற்படுத்திவிட்டு அமைதியான கண்ணன் சிவாஜியை முதலில் அறிமுகப்படுத்துவார்கள்!
அதன் பின்னரே பாரிஸ்டர் குணாதிசயத்தை பட்டென்று புரியும் வண்ணம் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப் படுவார் நடிகர்திலகம் !!

I am Rajanikanth....Baristar Rajanikanth..NT's intro...

https://www.youtube.com/watch?v=jtIn6RQfVmE

The Name is Bond....James Bond...Intro of Connery/Bond!!
The way Connery majestically walks to the tune of the Bond theme music reminds us the walking style of NT in many movies like Uththama Puththiran, VPKB, Pasamalar.... even before the release of DrNO in 1962!!

https://www.youtube.com/watch?v=0xDj3NRYTU8

Russellxss
4th June 2015, 07:20 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/t31.0-8/s720x720/11412043_1481265482165673_258373534745927815_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Murali Srinivas
4th June 2015, 07:49 PM
நண்பர் கலை,

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சின்ன விஷயம் அதை ஏதோ மிகப் பெரிய குற்றசாட்டை நாங்கள் சொன்னது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி உங்கள் நண்பரையும் உங்கள் அபிமானத்துக்குரியவரையும் நீங்கள்தான் பாதுகாப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.

நண்பர் குமார் ஒரு தகவலை சொல்கிறார். அதில் ஒரு பிழை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அதை அவருமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை [என்றே நினைக்கிறேன்]. அதோடு அது முடிந்து விட்டது. அதன் பிறகு நீங்கள் உள்ளே நுழைந்து கொடுத்த விளக்கம் தேவையற்றது. காரணம் நான் ஏதேனும் உள்நோக்கம் கற்பித்தோ அல்லது குற்றம் சாட்டும் தொனியில் சொல்லியிருந்தாலோ நீங்கள் பதில் சொல்லலாம். அப்படி எதுவும் இல்லாதபோது எதற்கு ஒரு விளக்கம்? என்னுடைய பதிவை எவர் படித்தாலும் அதில் எந்த விமர்சனமும் இல்லை என்பதை உணர்வார்கள்.

அது போல் 1977 அக்டோபர் முதல் 1978 நவம்பர் வரை நடந்த நிகழ்வுகளை நான் என்னவோ நடக்கவேயில்லை என்று சொன்னது போல் எழுதியிருப்பதும் உண்மைக்கு மாறான ஒன்றாகும். நண்பரே, நீங்கள் 2015 ஜூனில் பதிவிடும் இந்த நிகழ்வுகளை பல வருடங்களுக்கு முன்பே இந்த ஹப்பில் பதிவு செய்தவன் நான்.

நான் எதாவது எழுதினாலே உங்களுக்கு பிரச்சனை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. என் பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள். அதை விடுத்து நீங்கள் என்ன எழுதினாலும் நான் தலையிடுவேன் என்று சொன்னால் பிறகு உங்கள் விருப்பம். இதற்கு மேல் என்னிடமிருந்து இந்த விஷயத்தில் எந்த எதிர் வினையும் வராது.

அன்புடன்

Russelldwp
4th June 2015, 08:48 PM
சென்ற மாதம் திருச்சி கெய்டியில் வரலாற்று சாதனை படைத்த சின்ன ஜமீன் திரையுலக மன்மதன் ஜொலிக்கும் வசந்த மாளிகை ஸ்ரீரங்கம் ரெங்கராஜா தியேட்டரில் நாளை வெள்ளி முதல் qube சிஸ்டம்ல் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது.
​https://pbs.twimg.com/media/B4P0J8sCYAAhZpc.jpg


https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1517549_1435746123308731_537471510_n.jpg?oh=eefedf 3dc7d6963d60c01a9897ef7f80&oe=55FA29E8

Murali Srinivas
5th June 2015, 01:04 AM
ராகவேந்தர் சார்,

குங்குமம் பட பாடல் பற்றிய அலசலை வெகு நேர்த்தியாக செய்திருகிறீர்கள். தூங்காத கண்ணென்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு தோன்றிய பாடல். சிறு வயதில் இந்தப் படத்தை பார்த்திருந்த நான் சற்றே விவரம் தெரிந்தவுடன் பார்த்தபோது இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். நீங்கள் பாடல் பற்றி முழுவதும் எழுதி விட்டதால் அதைப் பற்றி நான் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.

படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு அன்று நான் வெகு நாட்களாக வீட்டில் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒருவரை அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். பகலில் அதை முடித்து விட்டு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் .படத்திற்கும் நடந்தது.

பூந்தோட்ட காவல்காரா மற்றும் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல்களுக்கு பெரிய அலப்பரை என்றால் தூங்காத கண்ணொன்று உண்டு பாடலுக்கு உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 36 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.

ஆனால் நீங்கள் குறிக்காமல் விட்ட பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?

திரை மூடிய சிலை நான்

துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்

என்ற வரிகளுக்கும்

நானே எனக்கு பகையானேன்

என் நாடகத்தில் நான் திரை ஆனேன்

தேனே உனக்கு புரியாது அந்த

தெய்வம் வராமல் விளங்காது

போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!

கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!

பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி ராகவேந்தர் சார்!

அன்புடன்

RAGHAVENDRA
5th June 2015, 10:00 AM
ஆனால் நீங்கள் குறிக்காமல் விட்ட பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?

மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி

பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

தெரியும் முரளி சார். அதுவும் நீங்கள் அதைப் பற்றி எழுதுவீர்கள் என்று உள்ளுக்குள் ஓர் யூகம் வந்தது. அதனால் தான் அந்தப் பாடலைக் குறிப்பிடவில்லை. பாருங்கள். உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டது.

தாங்கள் குறிப்பிட்ட காலையும் நீயே மாலையும் நீயே படப் பாடல் காட்சி. இளைய திலகம் பிரபு மற்றும் ஜெயஸ்ரீ நடித்து மேடைப் பாடலாக இடம் பெறுகிறது.

https://www.youtube.com/watch?v=udFRoz4X6xM

Russellbpw
5th June 2015, 10:24 AM
பொன்மொழிகளின் புதுமொழிகள் - படித்ததில் ரசித்தவை

பொன்மொழி : தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ....மீண்டும் தர்மமே வெல்லும்...!

புதுமொழி : இடியாப்பத்தின் வாழ்வுதனை நூடில்ஸ் கவ்வும்....மீண்டும் இடியாப்பமே வெல்லும்

மேற் கூறிய பொன்மொழி தொன்றுதொட்டு காலம் காலமாக கஷ்டம் வரும்போது நம்பிக்கையூட்ட கூறப்படுவது....ஆனால் இன்றோ..... அனைவரிடமும் இந்த பொன்மொழி படாத பாடுபடுகிறது !

குறிப்பாக அனைத்து அவரசியல்வாதிகள் தங்களை யோகியர்கள் என்று தாங்களே பொய்யான மானியம் விட்டுக்கொள்ள இந்த பொன்மொழியை உபயோகபடுத்துவது காலத்தின் கேவலமான ஒரு கோலம் !

Rks

Russellbpw
5th June 2015, 11:09 AM
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் - திருச்சி மாவட்ட நாளிதழில் -

சென்ற வாரம் திரையிட்டு மிகச்சிறந்த வரவேற்ப்பை பெற்ற என்னை போல் ஒருவன் திரைப்படத்தை பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.

அனைத்து நல்லுங்களின் பார்வைக்கும் இதனை சமர்பிக்கின்றேன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ep1_zps09t1rbc7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ep1_zps09t1rbc7.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ep2_zpsuuonaiyh.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ep2_zpsuuonaiyh.jpg.html)

RKS

Raajjaa
5th June 2015, 01:01 PM
நடிகர் திலகத்தின் 13ம் பாகத்தை காணோமே?

kalnayak
5th June 2015, 02:08 PM
நடிகர் திலகத்தின் 13ம் பாகத்தை காணோமே?

Please refer Raghavendra's thread for NT's threads:

http://www.mayyam.com/talk/showthread.php?10922-List-of-Topics-Threads-on-Nadigar-Thilagam-Sivaji-Ganesan

JamesFague
5th June 2015, 02:34 PM
The Box Office Emperor of Indian Cineme started by Mr Pammalar has been treated as Part 13

sss
5th June 2015, 05:12 PM
http://a1.s6img.com/cdn/0026/p/12332379_1052723_i.jpg
by J Jasper Daniel

Russellxor
5th June 2015, 05:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/%20%20Picture%202_zpsssvnrguh.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/%20%20Picture%202_zpsssvnrguh.png.html)

நடிகர்திலகம்

Russellxor
5th June 2015, 05:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/file20150604_214949_zpscs3uzhle.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/file20150604_214949_zpscs3uzhle.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/file20150604_215213_zpstdnxwm63.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/file20150604_215213_zpstdnxwm63.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/file20150604_215805_zpsqunlmkvw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/file20150604_215805_zpsqunlmkvw.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/file20150604_223130_zpsklpnz5o3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/file20150604_223130_zpsklpnz5o3.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/file20150604_223306_zpsdfz9yoyp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/file20150604_223306_zpsdfz9yoyp.jpg.html)