PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

Russellxor
17th July 2015, 10:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150237393_zps8znesvdg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150237393_zps8znesvdg.jpg.html)

Russellxor
17th July 2015, 10:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150233697_zpsoxug6wcn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150233697_zpsoxug6wcn.jpg.html)

Russellxor
17th July 2015, 10:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150229746_zpspfufpskf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150229746_zpspfufpskf.jpg.html)

Russellxor
17th July 2015, 10:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150226399_zpsofvuagkc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150226399_zpsofvuagkc.jpg.html)

Russelldvt
18th July 2015, 04:11 AM
தர்மம் எங்கே படத்தின் தொடர்ச்சி...

http://i57.tinypic.com/2qkus77.jpg http://i59.tinypic.com/2jfzihe.jpg

Russelldvt
18th July 2015, 04:16 AM
http://i57.tinypic.com/330zi0x.jpg http://i60.tinypic.com/2lu97k6.jpg

Russelldvt
18th July 2015, 04:18 AM
http://i59.tinypic.com/2qce1bb.jpg http://i59.tinypic.com/mr7412.jpg

Russelldvt
18th July 2015, 04:20 AM
http://i61.tinypic.com/2qnyzoz.jpg http://i58.tinypic.com/ztgh79.jpg

Russelldvt
18th July 2015, 04:22 AM
http://i61.tinypic.com/23sjgbk.jpg http://i62.tinypic.com/15nojv6.jpg

Gopal.s
18th July 2015, 04:54 AM
நினைத்தால் போதும் பாடுவேன்.

மெல்லிசை மன்னரின் சாதனை துளிகளில் முக்கியமானது நெஞ்சிருக்கும் வரை.இறுதி காட்சிக்கு முன்போ அல்லது இறுதி காட்சியிலேயோ பாடல் வைக்கும் தைரியம் ஸ்ரீதருக்குத்தான் உண்டு.அதுவும் சற்று சறுக்கினாலும் ,நகைப்புள்ளாக்கி விடும்.காதலிக்க நேரமில்லை நெஞ்சத்தை அள்ளி போல லகுவான படமல்ல. intense emotion with compelling climax scene .முதல் மேதைமை ஹம்சாநந்தி ராகத் தேர்ந்தெடுப்பு.டெம்போ கூட்ட கூடியது.அடுத்தது arrangement of multi -layered archestration with sharp transition counter -points .
அடுத்தது எனக்கு பிடித்த கீதாஞ்சலி. அருமையான நாட்டிய கவர்ச்சி பாவை.இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் fast movements ,துப்பாக்கியை மனதில் கொடுத்து விடும்.அவர் தன் Grace சற்று துறந்து பாடலின் டெம்போ வுடன் இணைவார்.(choreographer யார்?)சிவாஜி ஓடி வருவதில் ,இசையின் வேகத்திற்கேற்ப கட் பண்ணி ஸ்ரீதர் கொஞ்சம் fast motion கொடுத்திருக்கலாமோ என்று தோன்றும்.(அந்த கோப உக்கிரம் அந்த ஓட்டத்தில் register ஆகவில்லை ,விஸ்வநாதனின் இசை உக்கிரத்திற்கு தக்க).கண்ணதாசனை கேட்க வேண்டுமா?

பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

இறுதியாக பாடகி.ஜானகியை விட்டு வேறு பாடகியை இந்த பாடலுக்கு நினைத்தே பார்க்க முடியாது.(இத்தனைக்கும் கிளாஸ் என்று பார்த்தால் சுசிலாவின் கண்ணன் வரும் தான்)இந்த situation க்கு ஏற்ற பரபரப்பு ,ஆரம்பமே உச்சம் தொடும்,பாவமுள்ள ஜீவனுள்ள பாடும் முறை.

எனக்கு இன்றும் கூச்செறிய செய்யும் பாடல்.ஸ்ரீதர் மட்டும் இன்னும் கொஞ்சம் திரைகதையை செதுக்கி இருந்தால் ,மெல்லிசை மன்னர் பட்ட பாட்டிற்கு நெஞ்சிருக்கும் வரை எங்கோ சென்றிருக்க
வேண்டிய படம். என்னவோ ...ஏதோ....ஒரு பீம்சிங்,பந்துலு,நாகராஜன் சிவாஜியுடன் கூட்டணி கண்டது போல ஸ்ரீதர்,பாலசந்தரால் காண முடியாதது அவர்களுக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே.

https://www.youtube.com/watch?v=a7vKsW8W69U

Gopal.s
18th July 2015, 05:28 AM
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா

நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே

ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc&feature=endscreen

Russelldvt
18th July 2015, 05:37 AM
Still from Dharmam enke..

http://i58.tinypic.com/nlqzig.jpg http://i60.tinypic.com/25ur2tz.jpg http://i57.tinypic.com/vwsx81.jpg

Still from Shivaji..

http://i62.tinypic.com/263dhtd.jpg http://i60.tinypic.com/301j9ex.jpg http://i62.tinypic.com/2dv4nsj.jpg

RAGHAVENDRA
18th July 2015, 07:42 AM
Yesterday, 17th July, 2015, I was fortunate to chat with my long time ... nearly 40 years friend... Kudanthai Sadagopan Srinivasagopalan. What a time we had recollecting our golden period spending our times for Nadigar Thilagam. Ours was "THENNAGA SIVAJI KOLGAI PARAPPUM KUZHU" that was a group of pen friends & sivaji fans, who would share all the information regarding the release of Sivaji films in his / her respective town / village, how it performed at the box office, share collection details, etc. Pollachi Kirubakaran, Umaithurai Palanisamy, Madurai Jaihindpuram Kannan, Kovilpatti Rajasekaran, Ugene Rayan, Rajapalayam Engal Sivaji Vijayan, Bangalore Ulsoor Jeyakumar of Neethi Sivaji Ganesan Kalai Kuzhu, Mayavaram Sekar, Mukunthan of Ilaiya Thalaimurai Sivaji Ganesan Rasikar Mandram, Kandi Kathirkaman who used to send copies of Simmakural magazine from Sri Lanka, Haji Mohamad (now in Arab country I learn), His handwriting was exemplary and would be very catchy to the eyes...

Oh God, we can't get those days. We will write the matter that would normally run to 5 to 6 pages in a postcard. தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதுவோம். வெளிநாட்டு நண்பர் ஏர்மெயில் கடிதத்தில் எழுதுவார். அந்தக் காலங்கள் வராதா என மனம் நிச்சயம் ஏங்கும். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு 1970 களின் மத்தியிலிருந்து 1980களின் மத்தி வரை மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில். இதில் பம்பாயிலிருந்து நண்பர் ஆறுமுகம் அவர்களும் எழுதுவார்கள். மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊரிலிருந்து நாங்கள் அஞ்சல் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் விவரங்கள், மக்களிடம் வரவேற்பு, போஸ்டர்கள், நோட்டீஸ்கள் என அவரவரிடமிருக்கக் கூடியவற்றை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.

நடிகர் திலகத்திற்கு ரசிகனாய் இருந்தது மட்டுமின்றி இவ்வளவு பெரிய நட்பு வட்டாரத்தை அந்த காலத்திலேயே எங்களால் உருவாக்கி இன்று வரை அதைப் பேண முடிகிறது என்றால் அதுவே நடிகர் திலகத்தின் மகிமை எனலாம்.

தங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி சீனிவாச கோபாலன் அவர்களே. இது போன்று நம்முடைய மற்ற நண்பர்களும் இணைந்து விரைவில் சந்தித்து மகிழ வேண்டும் என்பது என் ஆவல்.

RAGHAVENDRA
18th July 2015, 09:46 AM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/s720x720/10509640_481899975274813_7353208630160107208_n.jpg ?oh=9b9e2a086d11eac44b45b90e5f918318&oe=56122C9A

அனைவருக்கும் உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். மத நல்லிணக்கத்தை நடிகர் திலகத்தின் படங்கள் வலியுறுத்த என்றைக்குமே தவறி்யதில்லை. தனது இறுதி வரையில் தேசபக்தி, மத நல்லிணக்கம், இறையாண்மை இவற்றைப் பேணி வந்தார் நடிகர் திலகம். அந்த வகையில் பாவ மன்னிப்பு, இமைகள், எழுதாத சட்டங்கள் என பல திரைப்படங்களில் இஸ்லாமிய கதாநாயகனாக நடித்து மனிதம் மட்டுமே நிரந்தரம், மனித நேயம் மட்டுமே உண்மையானது என நிரூபித்தார்.

இந்த நாளில் மணநாள் கொண்டாடும் மக்களுக்கும் சேர்த்து இந்த இனிய பாடலை நினைவுறுத்தி வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

எழுதாத சட்டங்கள் திரைப்படத்திலிருந்து இளைய ராஜா இசையில் அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=QMLsCevbK1w

Russellbpw
18th July 2015, 12:14 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/unnamed_zpsfwgrb791.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/unnamed_zpsfwgrb791.jpg.html)

Russellxss
18th July 2015, 01:57 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/t31.0-8/s720x720/11703259_672312579566884_8070481246839756666_o.jpg


https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11059688_672312722900203_4176638733443493178_n.jpg ?oh=063c6ba3669932141527389bc9152121&oe=561D70DE



சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th July 2015, 01:58 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/s720x720/905943_672312592900216_877824971350233339_o.jpg



சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellisf
18th July 2015, 03:42 PM
சிவாஜிக்கு அரசு ஏன் மணிமண்டபம் கட்ட வேண்டும்... அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே!'

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட அரசு இடம் அளித்தும் மண்டபத்தை கட்டாமல் நடிகர் சங்கம் ஏமாற்றி வருவதாக சிவாஜி சமூக நலப்பேரவை குற்றம்சாட்டி, உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுதான் இலவசமாக நிலம் கொடுத்துவிட்டதே. மணிமண்டபத்தையும் அரசே கட்ட வேண்டுமா... அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே, என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Social activists strongly condemned Sivaji Manimandapam request இது குறித்து சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி மறைவுக்கு பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிதர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு தமிழக அரசு அடையாறு சத்தியா ஸ்டியோ எதிரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை நடிகர் சங்கத்திற்கு ஒதுக்கியிருப்பதாக அறிவித்தது. அரசு இலவசமாக அளித்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி இதுகுறித்து பேசுவார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் இருக்காது. மணிமண்டபம் வரும் என்று நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதன் பின்னர் நடிகர் சங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து எந்த பணியும் நடைபெறவில்லை. தொடர்ந்து நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது. தன்னுடைய கலைத்திறனால் நடிப்பாற்றலால் உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிகர் சங்கமோ தனிப்பட்ட அமைப்போ மணிமண்டபம் அமைப்பதைவிட தமிழக அரசே அமைப்பது அவருக்கு பெருமைசேர்ப்பதாக அமையும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும், நடிகர்களையும் அழைத்துள்ளோம்," என்றார். கடும் எதிர்ப்பு இந்த கோரிக்கை மற்றும் உண்ணாவிரத அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "ஏன் இதை அரசு கட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இடத்தைக் கேட்டு வாங்கிய நடிகர் சங்கமே கட்டுவதுதானே முறை? நடிகர் சங்கத்தை எதிர்த்தல்லவா இவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அதுவும் இல்லாவிட்டால், நல்ல செழிப்பான நிலையில் உள்ள சிவாஜி குடும்பமே இதைக் கட்டலாமே? சிவாஜியின் பேரன் இப்போது பல கோடி சம்பளம் பெறும் முன்னணி நடிகர்தானே?", என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்து வருகிறது.

Read more at: http://tamil.filmibeat.com/news/social-activists-strongly-condemned-sivaji-manimandapam-request-035767.html
COURTESY ONE INDIA

Russellxor
18th July 2015, 03:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437214321487_zpsb28mfm7a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437214321487_zpsb28mfm7a.jpg.html)

Russellxor
18th July 2015, 03:57 PM
Delete

joe
18th July 2015, 05:37 PM
சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

:rotfl:

eehaiupehazij
18th July 2015, 05:37 PM
மடிந்து விட்ட மனசாட்சி ......
நடிகர்திலகத்தின் மாண்பு அறியாத பேதைமை.....
அமரனே !! எம் இதயத்தில் பதிந்த உன் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நனைப்பதே எம்மால் இயன்ற மனமண்டப அஞ்சலி!!

http://mlife.mtsindia.in/nd/?pid=420190&rgn=tn

உலகப் பொதுமறை திருக்குறள்
உலக நடிப்பிலக்கணம் நடிகர்திலகமே ! தமிழ் மண்ணின் பெருமை உலகெங்கும் பரப்பிய செம்மலுக்கு தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசானுக்கு தமிழகத்தில் சொந்த மண்ணில் மணி மண்டப அஞ்சலி மறுக்கப்படுவது .....ஆறாத ரணமே!

Russellxor
18th July 2015, 07:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150222909_zpsk03sapvi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150222909_zpsk03sapvi.jpg.html)

Russellxor
18th July 2015, 07:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150218568_zpsijmwlkoy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150218568_zpsijmwlkoy.jpg.html)

Russellxor
18th July 2015, 07:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150214816_zpsl9xv6ouc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150214816_zpsl9xv6ouc.jpg.html)

Russellxor
18th July 2015, 07:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437150210786_zpsynaacisg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437150210786_zpsynaacisg.jpg.html)

Russelldwp
18th July 2015, 09:43 PM
நாளை ஞாயிறு 19.07.2015 மாலை 6 மணிக்கு திருச்சி தமிழ் சங்க கட்டிடத்தில் சிவாஜி ரசிகர்கள் சார்பில் பெருந்தலைவர் காமராஜ் பிறந்தநாள் விழாவும் சிவாஜி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p526x296/11011222_1616939915189350_2755633160107472123_n.jp g?oh=494cff8c2dcf7715a8e2fffa57127962&oe=56158544
https://pbs.twimg.com/media/CKNY9zcUsAAaRMv.jpg

Russelldwp
18th July 2015, 09:46 PM
திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்கும் விதமாக வெளியிட்டுள்ள போஸ்டர்
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p235x350/11704820_1616939691856039_2661899684552418170_n.jp g?oh=6d91c197f7f95c78a2ddce73b457b34c&oe=561FD676

Russelldwp
18th July 2015, 09:50 PM
சிவாஜி அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் வெளியிட்டுள்ள போஸ்டர்

https://pbs.twimg.com/media/CKNaEY8UsAAsjB7.jpg


சிவாஜி அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு புதுகோட்டை மாவட்ட சிவாஜி ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்

https://pbs.twimg.com/media/CKNaWrYUwAAQHXG.jpg

https://pbs.twimg.com/media/CKNajCKUcAE7C2j.jpg

Russellxss
18th July 2015, 10:01 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/t31.0-8/s720x720/11703251_845107765573829_6644710982671004301_o.jpg

Russellxor
18th July 2015, 11:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Apples_18072015224410284_zpshtbqwh1z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Apples_18072015224410284_zpshtbqwh1z.jpg.html)

Russellxor
18th July 2015, 11:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Spring_memories_18072015224556737_zpsds51drvo.j pg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Spring_memories_18072015224556737_zpsds51drvo.j pg.html)

Russellxor
18th July 2015, 11:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Vintage_Table_18072015224725587_zpshrdshq3h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Vintage_Table_18072015224725587_zpshrdshq3h.jpg .html)

Russellxor
18th July 2015, 11:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Vintage_Frame_18072015224950605_zpsdbyqnyk7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Vintage_Frame_18072015224950605_zpsdbyqnyk7.jpg .html)

Russellxor
18th July 2015, 11:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Rounded_Billboard_18072015225417617_zpscusatrgl .jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Rounded_Billboard_18072015225417617_zpscusatrgl .jpg.html)

Russellxor
19th July 2015, 03:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437300481185_zpsqatbedqu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437300481185_zpsqatbedqu.jpg.html)

Russellxor
19th July 2015, 03:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437300477190_zpsszdvn2ct.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437300477190_zpsszdvn2ct.jpg.html)

Russellxor
19th July 2015, 03:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437300473803_zpsqiid9wpe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437300473803_zpsqiid9wpe.jpg.html)

Russellxor
19th July 2015, 03:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437300469480_zpsaci5ibl2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437300469480_zpsaci5ibl2.jpg.html)

Russellxor
19th July 2015, 03:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150719121231_zpsn1noyksy.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150719121231_zpsn1noyksy.gif.html)

Russellxor
19th July 2015, 03:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437300589607_zpsa69gprmt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437300589607_zpsa69gprmt.jpg.html)

Russellxor
19th July 2015, 04:03 PM
சி.. க.. சிவா ஜி

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437300465742_zpsk8jypgtp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437300465742_zpsk8jypgtp.jpg.html)

Russellxor
19th July 2015, 04:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1437300460529_zpscsrxxnb9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1437300460529_zpscsrxxnb9.jpg.html)

Russellxor
19th July 2015, 06:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150719174151_zpsc9ptxt20.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150719174151_zpsc9ptxt20.gif.html)

J.Radhakrishnan
19th July 2015, 10:12 PM
முக நூலில் படித்தது

கலையுலகத் தந்தை.. !
நடிகர் திலகம்..சிவாஜி

தந்தை வேடம் ஏற்பது வேறு தந்தையாகவே நடிப்பில் வாழ்ந்து காட்டுவது வேறு. திரையுலகில் தந்தை... என்ற பாத்திரப் படைப்பையே மையமாக வைத்து பல படங்கள் தமிழில் ஏராளம். மற்ற மொழிகளில் இந்த அளவிற்கு இருக்குமா ?.... சந்தேகமே. யோசித்துப் பார்த்தால்.. சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்புத் திறமை நம்பியே இவை எடுக்கப்பட்டிருக்குமோ. ..? என்று ஐயுற வேண்டியுள்ளது.

என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு படம்...பார் மகளே பார்... செல்வச் செருக்கையும் காண்பித்து ... பின்னர் பாசத்தில் துடிக்கும் அன்புத் தந்தையாக...எப்படி அப்படி ஒரு பரிமாணம் அவரால் காட்ட முடிந்தது.
அடுத்து எங்க ஊர் ராஜா... பெற்ற பிள்ளைகள் தந்தையின் தன்மானத்தை மதிக்கத் தெரியாத போது...வைராக்கியம் மிகுந்த தகப்பனாய்... யாரை நம்பி நான் பிறந்தேன்.போங்கடா போங்க... அன்று அது எத்தனை பேர் வாழ்க்கையில் தாரக மந்திரம் ஆனது !
மோட்டார சுந்தரம் பிள்ளை... இரு தாரம் கொண்ட மணவாழ்க்கையில் பிள்ளைகள் பிரச்சனைகள்.. நயமாக யதார்த்த வாழ்வு வாழ்ந்திருப்பார். வியட்னாம் வீடு...பிரஸ்டிஜ் பத்மனாபன்...பிள்ளைகளுக்காக...தன் கடமை ...என்றே உத்தியோகம் காத்து தனக்கென வாழ மறந்த வேதனை...பிள்ளைகள் தந்த ஏமாற்றங்கள்... மனிதர்கள் நிஜத்தில் சுதாரிக்க ஆரம்பித்தது உண்மை.

தங்கப்பதக்கம்.... பொறுப்புள்ள கண்ணியமிக்க தந்தைக்கு மகன் அயோக்கியனாய் இருக்க கடைக்கும் பாசத்திற்கு ம் இடையே அற்புத போராட்டம் நடத்தியிருப்பார். ஞானஒளி... அவசர புத்தியில் ..மகள் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி...தப்பித்த குற்றவாளியாக...பாசத்தை வெளிக்காட்ட
முடியாது தவித்து போராடும் நடிப்பு இவர ஒருவராலேயே முடிந்தது.

கிராமத்துக் கதைகளில் கம்பீரம் காட்டி.. கல்தூண்.. பிள்ளைகளுடனே ரோஷம் காட்டி .. பண்பான மனத்தராய் நடிப்பு...எப்படி மறக்க முடியும் ? தேவர் மகன் ..வெகு இயல்பாக கிராமத்து கண்ணியம் , பொறுப்பு மிகுந்த தோரனை கள்.... தெய்வமகன்...வித்தியாசமான...மேற்செபெருமைக்குத் துணை போகும் செருக்குள்ள.. பின்னர் ..விட்டுக்கொடுக்காத தந்தை பாசம்....ம்ம்ம்ம் எல்லாம் இன்னும் நம் கண்முன்னே நிழலாடுகிறது.... உணர்வுகளின் நாயகன் அவரே.

கோதைதனபாலன்.

RAGHAVENDRA
20th July 2015, 12:44 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/KUNKUMAMINVITEJULY2015c_zpsy37zm5sm.jpg

RAGHAVENDRA
20th July 2015, 07:43 AM
http://www.sivajiganesan.in/Images/own%20stand.jpg

சுந்தரராஜன்,
அற்புதமான நிழற்படம், அபூர்வமானதும் கூட. நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் நல்லிதயங்களின் தொண்டு என்றைக்குமே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதற்கு சான்றாக விளங்குகிறது தங்கள் www.sivajiganesan.in இணைய தளத்தின் முகப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நடிகர் திலகத்தின் ஆசியுடன் தங்கள் முயற்சிகளில் மென்மேலும் வெற்றியடைய உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
20th July 2015, 07:48 AM
செந்தில்வேல்
தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள சிகரங்களைக் கடந்த சிவாஜி தொடர் மிகவும் அபூர்வமானதாகும். இது மறு வெளியீடு கண்டாலும் கூட முழுமையாக வருமா என்பது நமக்குத் தெரியாது. இருந்தாலும் பல அபூர்வ தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. நான் வணங்கும் தெய்வம் படம் தான் கஷ்டப்பட்டு நடித்ததாக நடிகர் திலகம் கூறியிருப்பதாக அதில் நடிகர் திலகம் கூறியிருக்கிறார். இத்திரைப்படத்தைப் பற்றி, குறிப்பாக அந்த பியானோ காட்சியைப் பற்றி முன்னரே நான் எழுதியுிருக்கிறேன்.
இந்நாளில் வெளிவந்த ஓர் பிரம்மாண்டமான படத்திற்கு மூலக் கரு இத்திரைப்படமாகவும் இருந்திருக்கலாம்.

நினைவூட்டல் அளித்த பதிவிற்கு உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
20th July 2015, 08:03 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/senthilvel1000grtgs_zpsxfsem8j6.jpg

Murali Srinivas
20th July 2015, 10:50 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சி பார்த்த அனுபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? ஒரு முறை 2007-ல் இங்கே சென்னை அபிராமியில் வசந்த மாளிகை பார்த்தபோது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஆரவாரத்தை விவரித்தது நினைவிற்கு வருகிறது. அது போன்றே முதன் முதலில் பார்த்தபோதும் நிகழ்ந்தது.

பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.

ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல் புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.

ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்துவது, ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் குறிப்பாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது,

இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.

படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.

நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.

அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் ம்தார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. பால்கனி வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

(தொடரும்)

அன்புடன்

Russellxor
20th July 2015, 11:13 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/tumblr_nlg38rccY61upolueo1_400_zpsx8qcvoqm.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/tumblr_nlg38rccY61upolueo1_400_zpsx8qcvoqm.gif.htm l)


கொங்கு தமிழ் விளையாடும் கோவை பாஷையில்
சிறுத்தையும அஞ்சும்
சிங்கத்தமிழனின்

கௌ
********ர
************வ
*****************ம்


மொத சீனே பட்டைய கெளப்புது.அந்த மொத சீனிலும் அவரு நடிக்கிறத எங்க காமிக்கிறாங்க?அவுரு பூட்ஸ் காலு நடிக்கிறததான காமிச்சாங்க?அதே அவ்வளவு அட்டகாசம் போ!
பெரிய வக்கீலு,நல்லாப் படிச்சவரு,
அப்பிடித்தேன் சீனுகளும
இ ருக்கும்னுநினைச்சா அடுத்த சீனே பகீர்னு ஆயிடுச்சு.ஏன்னா அடுத்த சீனே தீர்த்தம் சாப்பிட்டுட்டு இருப்பாரு.அதுவும் வீட்டுக்குள்ளையே.பத்தாதுக்கு ஹரே ராமா ஹரே ராமா ன்னு பஜனை பாட்டெல்லாம் பாடுவாரு.ஆனா
அ தெல்லாம்அவுரு குடுக்குற ஆக்டடுலவைச்ச கண்ண விலக்க தோணாது.



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/maxresdefault_zpsyuybxdnt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/maxresdefault_zpsyuybxdnt.jpg.html)

அந்த ரெண்டாவது சீனூலேயே நல்லா தெரிஞ்சு போச்சு.மனுஷன்
நல்லா தெனாவட்டான ஆளு. எதுக்குமே பயப்படமாட்டாருனு.அப்பிடியோரு குணம்னு.பேப்பரு படிக்கிற சீனு வரும் பாரு.அந்த பேப்பர்ல இருக்குற விஷயத்தைஎன்னா ஒரு ஏத்த இறக்ககத்தோட பேசுவாரு பாருங்க.இன்னும் கொஞ்சம் அப்பிடியே படிச்சுட்டு இருக்கமாட்டாரா?நாமளும் அத கேட்டுக்கிட்டே இருக்கலாமேன்னு தோணும்.படிச்சு முடிச்சுக்குங்கூட இருக்க மாட்டாரு.
டேய்ய்ய் கண்ணா
அப்பிடின்னு ஒரு சவுண்டு விடுவாரு பாருங்க. சும்மா தியேட்டரா கப்சிப்னு ஆயிடும்.கண்ணன் வந்து (அதாங்க சின்ன சிவாஜி)ஏதோ சொல்ல வருவாரு.அவுரு அடுத்த வார்த்தைங்ககூட சொல்லியிருக்க மாட்டாரு.அதுக்குள்ள இங்கிலூசுல கத்துவாரு.அடேயப்பா! என்னா ஒரு, கோவம் மனுஷனுக்கு.பத்தாயிரம் வெடி வெடிச்ச மாதிரி இருக்கும்தியேட்டருக்குள்ள.
அப்புறமாசுந்தரராஜனை கூப்பிட்டு விசாரிக்கிற சீனு.உக்கார்ந்து இருக்குற போசும்.,பைப் புடிக்குற ஸ்டைலும்.,
பயங்கர பந்தாவா இருக்கும்.சுந்தராஜன் எல்லாத்தையும் சொல்லி முடிச்ச பின்னாடி.எங்கிட்ட சொல்லிட்டியல்ல நான் பார்த்துக்கிற போடாம்பாரு. அதுல என்னா ஒரு அசால்ட்டாஅந்த மனுஷன் ஏக்ட்பண்ணியீருக்கிறாருப்பா. நெம்பர் ஒண்ணு ஏக்ட்டு. அப்புறமா,
வீட்டுக்குள்ளையே அந்தக் கேஸை விசாரிக்கிறமாதிரிசீன் வெச்சுருப்பாங்க.சீனா அது? சீனா வெடிகுண்டு.அப்படியொரு சீனை உலத்துலய எங்கயும் யாராலயும் எடுக்க முடியாதுய்யா!
தீர்ப்புக்கு அப்புறம் , என்னடா கண்ணாஇந்தக் கேஸை ஜெயிக்கவே முடியாதுன்னியே? அப்படிம்பாரு பாருங்க.அதுலதான் என்ன ஒரு கெத்து.உடனே கொஞ்சம் மெதுவா
ஜ ஸ்டீஸ் வைப் என்னா சொல்லறா?ன்னு ஒரு கேள்வி.ஜஸ்டீஸே இல்லைன்னு சொல்லறா ன்னு பதில் வரும்.அப்ப எல்லாம்அவரோட அந்த பந்தா அவுரு விடுற அந்த புகையிலேயே தெரியும்.அவுரு விடுற அந்தப் புகை கூட ரவுண்டு கட்டி அடிக்கும்.
சுந்தரராஜன் வைக்கிற பார்ட்டிக்கு போவாரு.அப்ப ஒரு பாட்டு. கிளப் பாட்டு மாதிரி. அட இவரு இருக்குற சீனுல எதுக்குடா இப்படி ஒரு பாட்டுன்னு நெனப்பு போகும்.ஆனாஅந்தப் பாட்டுல அவுரு பண்ற ரவுசு அது ஆகாசத்திற்கும் மேல.உக்காந்து கிட்டே ரெண்ட கையையும்அப்பிடி இப்பிடின்னு ஆட்டுவாரு. சாமி ! அது பின்னியெடுக்க ற ஸ்டைல்லுப்பா

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/maxresdefault-1_zpsng6z1zfy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/maxresdefault-1_zpsng6z1zfy.jpg.html)

அப்புறமா அதே மாதிரி வம்புல மாட்டிட்டு வந்து நிப்பாரு சுந்தராஜன்.
அப்பவும் அவனுக்கு சப்போட்டு பண்ணுவாரு.சின்ன சிவாஜிக்கு இது புடிக்காம பிரச்சனை ஆக,வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லிடுவாரு.

அய்யோ சாமி!கொப்புரானே!பாலூட்டி வளர்த்த கிளின்னு ஒரு பாட்டுஙக.கொன்னுப்புட்டாரு.எந்தப் பயலும் எதுக்க நிக்கவே யோசிக்கனும்.அப்படி ஒரு மொறைப்பு.அப்படி ஒரு ஆக்ரோஷம்.
இதெல்லாம் நிஜமா?இப்புடியல்லாம் ஆக்ட்டு குடுக்க முடியுமா?ன்னு எல்லாரையும் யோசிக்க வைக்குற பாட்டு சீனுங்க.செல படங்கள்ல்ல பாட்டு நல்லா இருக்கும்.அந்தப் பாட்டுங்களில் யார் வேணாமுனாலும் நடிச்சு பேர் வாங்க முடியும்.ஆனா இந்த மாதிரி பாட்டுகள்ள எல்லாம் எவனுமே எட்டடி இல்ல பதினாறு அடி தள்ளி நின்னு யோசிக்கனும்.

சின்ன சிவாஜி கோட்டு எடுக்க வீட்டுக்கு வருவாரு.பெரியம்மாகிட்ட பேசிட்டு இருப்பாரு.சித்த நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டே எதார்த்தமா திரும்புவாங்க.மாடியிலிருந்துஒரு புகை மேகக்கூட்டமா தவழ்ந்துட்டுஇருக்கும்.காமிராவைக்
கொண்டு போவான் பாரு.என்னா
ஒரு அட்டகாசமா!வலது காலைத் தூக்கி இடது கால் பக்கத்துல சாச்சு இடது கையால பைப் புடிச்சுகிட்டு
எங்க வந்தே?ன்னு பைப் புடிச்சிருக்கிற
இடது கைய ஆட்டி சைகை செஞ்சுகிடே கேப்பாரு.அவரோட அந்த தோரணைகதி கலங்க வைச்சுடும். அந்தஒரு சீனைப்பத்திஅவுரு நடிச்சிருக்குற அளவுக்கு விலாவாரியா எழுதனும்னு நினைச்சா எவனா இருந்தாலும் கஷ்டம்தான்.அப்பிடி ஒரு ஜம்பமான ஆக்டடுப்பா.

அப்புறமா கண்ணா நீயும் நானுமா?ன்னு பாட்டு.இந்தப் பாட்டுல அவுரோட ஏக்ட்டசொல்ல ஆரம்பிச்சா நாள் பூராவும் சொல்லிட்டேதான் இருக்கணும்.பிச்சு உதறியிருப்பாரு.அந்தப்பாட்டுலபடில இருந்து இறங்கி வர்ற சீனு வரும்.ரெண்டு மூணுபடி மொள்ள (மெதுவாக)இறங்கி வருவாரு.மிச்சப்படிகளையும் அதே மாதிரி தான் மொள்ள நடந்து வருவாருன்னு பார்த்தா தீடீர்னு தளந்த(தளர்ந்த)மாதிரி ஒரு ரெண்டு ஸ்டெப் நடை மறுபடி நெஞ்ச நிமித்திட்டு கெத்தா ஒரு நட அப்பிடின்னு மாறி மாறி நடந்து பொளந்து கட்டியிருப்பாரு.ராஜாமேக்கப் போட்டுகிட்டு வர்ற சீனெல்லாம் உடம்புல உயிர் இல்லாமப் பண்ணிடும்.
நம்மளுக்கே இப்படின்னா சூட்டிங் எடுத்தப்போ அவுகளுக்கு (அவர்களுக்கு)எல்லாம் எப்புடி இருந்திருக்கும்.தெனாவட்டான பாட்டுன்னா இதுதான்யா.tms அய்யா உங்கோளுக்கோரு சல்யூட்டு.

கோர்ட்டு சீனெல்லாம் முடிஞ்ச பின்னாடி தீர்ப்பு நாளன்னிக்கு வீட்டுல, படிக்கட்டுலஉட்கார்ந்திருப்பாரு.
உக்காந்து இருக்குற போசு இருக்குதே.அதைப் பாத்தா, கொலவெறியோட வர்ற புலி கூட பயந்து ஓடிடும்.அப்புடி இருக்கும்யா.
பண்டரிபாய்கிட்ட கேசுகள்ள(கேஸ்கள்) படிப்படியா ஜெயிச்ச விதத்தைபுட்டு புட்டு வைப்பாரு பாருங்கோ.அடிவயிரு கலங்கிடும்.காலைத்தூக்கி ஸ்டுலு மேலவச்சு சடார்னு தலையத் திருப்பி
பைப் வச்சுருக்கிற இடது கைய தூக்கி ஒரு லுக் விடுவாருப்பா.அந்த இடத்துலய நாம செத்தம் போ!
அவரோட சாதாரண நடிப்பே மிரட்டலாஇருக்கும்.இது பயங்கரம்.





இவ்வளவெல்லாம் பார்த்துட்டு அந்தக் கடைசி சீனை நம்மனால சொல்ல முடியாதுப்பா.திராணி இல்ல.அது ரொம்ப உருக்கிடும்.

சுந்தரம் அய்யா உங்களுக்கு இந்த ஒரு படமே போதும்யா.

அடடா!சின்ன சிவாஜியப்பத்தி ஒரு வரி கூட சொல்லலியேப்பா.
அவரோட அந்த பிம்பமே கண்ண விட்டு மறைய மாட்டேங்குது.என்ன பண்றது?இன்னொரு நாளு பாப்பம்.(பார்ப்போம்)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG_33423989618209_zpshfal28b3.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG_33423989618209_zpshfal28b3.jpeg.html)

தன்நிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்,உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.
இதுதான் கௌரவம்.

eehaiupehazij
20th July 2015, 12:13 PM
21/07

நினைவில் நிலைத்த நடிகர்திலகம் ....
அவரது நினைவு நாள் மன அஞ்சலி ...



https://www.youtube.com/watch?v=MmYciykHXMM

https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

https://www.youtube.com/watch?v=SriIJv8p47Q

Russelldvt
20th July 2015, 01:17 PM
http://i61.tinypic.com/2qatppd.jpg

Russelldvt
20th July 2015, 01:17 PM
http://i61.tinypic.com/30scd54.jpg

Russelldvt
20th July 2015, 01:18 PM
http://i60.tinypic.com/2mq54t3.jpg

Russelldvt
20th July 2015, 01:19 PM
http://i60.tinypic.com/296m96p.jpg

Russelldvt
20th July 2015, 01:20 PM
http://i57.tinypic.com/2lifpxc.jpg

Russelldvt
20th July 2015, 01:21 PM
http://i62.tinypic.com/j5ld7q.jpg

Russelldvt
20th July 2015, 01:22 PM
http://i57.tinypic.com/wrargp.jpg

RAGHAVENDRA
20th July 2015, 07:26 PM
https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/11742755_1051901498161499_7296859713198419256_n.jp g?oh=f539f63027367312259c2b2bdd26af5c&oe=564A2465

RAGHAVENDRA
20th July 2015, 07:27 PM
https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s720x720/11701065_1474940702819307_7797484551181014192_n.jp g?oh=8e9d7f4539a29bb5837ab5f0a33ade6d&oe=56176614

Gopal.s
20th July 2015, 07:54 PM
சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். one india தமிழ் தளத்தில், ஷங்கர் என்ற ஒருவர் (கலைக்கு எத்தனை வேந்தர்களோ)தொடர்ந்து சிவாஜியை இருட்டடிப்பு செய்வது, அல்லது தாக்கி செய்தி வெளியிடுவது (கர்ணன் ரிலீஸ் போது ,மணி மண்டபம் உதாரணம்)என்பதை தொடர்ந்து செய்து ,தான் கொண்ட தொழிலுக்கு துரோகம் செய்கிறார். உடனடியாக அந்த பெங்களூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு,ஸ்ரீராம் என்ற அதன் தலைமை நிர்வாகியிடம், புகாரை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நாமெல்லாம் படித்து நல்ல நிலைக்கு சென்று விட,இம்மாதிரி
வேலைகளில் இவர்களை நுழைய விட்டு விட்டோம்.

Gopal.s
20th July 2015, 08:02 PM
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .

Gopal.s
20th July 2015, 08:15 PM
அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.





பாடல்

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

உரை

தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.




பாடல்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது



உரை

எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்

ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.




பாடல்
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்



உரை

சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.


பாடல்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே




உரை.

இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு

கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.



பாடல்
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே



உரை.

தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)

பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.




பாடல்
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்



உரை

சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து

செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.

பாடல்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது



உரை.

தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல

நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு

ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.

தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.



பாடல்.
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை



உரை

பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.

காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.

பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.

வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.



பாடல்
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே



உரை

தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது

ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு

பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து

உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.




பாடல்
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்



உரை

தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை

மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .

தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை

இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.

பாடல்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.



உரை

உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி

அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி

உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து

மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.




பாடல்


நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க


வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்


நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ


இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை



உரை

ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை



பாடல்


எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு


ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை


நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்


இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை



உரை

எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.


பாடல்


வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க


விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது


உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல


கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு



உரை

எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.




பாடல்


ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்


தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக



உரை

ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .



பாடல்


தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்


மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை


ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து


மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே



உரை

human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்

அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..




பாடல்


தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்


காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்


வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து


இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .



உரை.

உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்

உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,

எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.

Murali Srinivas
20th July 2015, 08:35 PM
வாசு,

பாடல் காட்சிகளை வர்ணிப்பதில் இரண்டு பேர்தான் ராஜா. ஒன்று சாரதி. மற்றொன்று நீங்கள். ஆனால் உங்கள் இரண்டு பேர் பாணியும் வெவ்வேறு வகை. ஆகையால் உங்கள் பாணியில் நீங்கள்தான் தனிக்காட்டு ராஜா.

எனவே தன்னந் தனிக்காட்டு ராஜா பற்றி நீங்கள் எழுதுவது பொருத்தம்தான். உற்சாக துள்ளல் மிகுந்த இளமை ஆர்ப்பாட்டம். டிஎம்எஸ் அதற்கேற்றாற்போல் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பார். [ராஜ்ஜா - ரோஜ்ஜா]. நம்முடைய பாட்டுடை தலைவனோ இதை விட handsome முகம் உண்டா என்று சவால் விடுவார். அருமையான ட்யூன். இந்த பாடலில் அந்த back projection மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படமாக்கத்தில் ஏசிடி அழகாய் பண்ணியிருப்பார்

படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள அனைத்தும் சூப்பர் ஹிட். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். ஸ்டைல் சக்கரவர்த்தி கலக்கோ கலக்கல் சொர்க்கம் பக்கத்தில், செல்லக் கிளிகளாம், என்னங்க சொல்லுங்க இவையெல்லாம் அலப்பறைக்கு என்றால் நம்மைப் போன்றவர்களை எப்போதும் கட்டிப் போடும் பாடலாக எல்லோரும் நலம் வாழ பாடல். White கோட்டில் பியானோ முன் உட்கார்ந்து காட்டும் அந்த பாவங்கள்! ஒவ்வொரு சரணமும் பிரமாதப்படுத்தும். கண் சிவந்து விழி நீர் கண்களில் அணை கட்டி நிற்க

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்; அது
கடனாக வந்தாலும் தடை போடுவேன்

நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்.

எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்; நான்
எப்போதும் நீ வாழ இசை பாடலாம்.

என்ற வரிகளின்போதெல்லாம் ஒரு underplay அற்புதத்தையே நிகழ்த்துவார்.

வாழ்க்கையில் முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்தை வெளியான அன்றே (முதல் நாள்) பார்த்த படம். மதுரை தங்கம் தியேட்டரில் நைட் ஷோ. அலப்பரை என்றால் அப்படி ஒரு அலப்பரை.

மதுரை தங்கத்தில் முதல் வார வசூலில் ஒரு சாதனை புரிந்து [Rs 57 ஆயிரத்தி சொச்சம்], இரண்டு வாரங்களில் ரூபாய் 1 லட்சத்தை நெருங்கியது. அந்த ரிகார்டை [நீதி அதை சற்றே அசைத்துப் பார்த்தது] 78-ல் என்னைப் போல் ஒருவன் வரும்வரை தக்க வைத்துக் கொண்டு இருந்தது.

வெகு நாட்களாயிற்று பெரிய திரையில் பார்த்து. இருந்தாலும் அன்றைய 70-ம் வருட பொங்கல் தினத்தில் கோடிஸ்வரனை பார்த்தது என்றைக்கும் மறக்காது.

அந்த நாட்கள் தந்த இன்பமே தனிதான்!

நன்றி வாசு!

அன்புடன்

Russellbpw
20th July 2015, 09:35 PM
சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். one india தமிழ் தளத்தில், ஷங்கர் என்ற ஒருவர் தொடர்ந்து சிவாஜியை இருட்டடிப்பு செய்வது, அல்லது தாக்கி செய்தி வெளியிடுவது (கர்ணன் ரிலீஸ் போது ,மணி மண்டபம் உதாரணம்)என்பதை தொடர்ந்து செய்து ,தான் கொண்ட தொழிலுக்கு துரோகம் செய்கிறார்.

ஆண்மையற்ற செயல்களை செய்கின்ற இதுபோல ஆணும் பெண்ணும்கெட்டவர்களை பற்றி நாம் எதற்கு கவலை படவேண்டும் சார் ...! இன்று நேற்ற இந்த ஆண்மையற்ற செயலை இவரை போன்றவர்கள் இதுபோல ஒரு புலம்பலை செய்கிறார்கள், வயிற்றெரிச்சல் கொள்கிறார்கள் ?

அடுத்தவர் பெருமைகளை தம்முடையது என்று திருட, தம்முடைய சிறுமைகளை அடுத்தவர்களுடயது என்று விளம்பர படுத்ததான் இவர்களுக்கு தெரியும் எந்தகாலத்திலும் !

இதுபோன்ற ஈன செயல்களில் ஈடுபடும் பேடிகள் எந்தகாலத்திலும் நம்மை வென்றதும் இல்லை ....எந்த காலத்திலும் இனி வெல்லப்போவதும் இல்லை.

இவர்கள் இருப்பது மாயா உலகம் ...மாயையில் வாழ்பவர்கள்...விட்டுவிடுங்கள்...அவர்கள், அவர்கள் கனவுலகதிலயே சீரழியட்டும் !

Whatever such insane sadists write is just out of sheer inferiority complex that THEY ARE UNABLE TO ACHIEVE...DREAM TO ACHIEVE EVEN 0.001% of NADIGAR THILAGAM's ACHIEVEMENT.

இவர் எழுதி இருப்பது ...விக்ரம் பிரபு கோடிகளாக சம்பாதிக்கிறார் என்று..ஆகையால் இவர்களே கட்டவேண்டியதுதானே என்று ...இந்த கோமானை நான் ஒன்று கேட்கிறேன்...ஊரை அடித்து உலையில் ஒருபக்கம் ஆட்சியாளர்கள் அவர் அவர்கள் ஆட்சியில் போட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.நேற்றும் சரி...இன்றும் சரி...இனி நாளையும் சரி.....ஒரு சில கோடி ருபாய் செலவு செய்து மணிமண்டபம் கட்டினால் இவர்கள் அப்பன் வீட்டு காசா குறையும் ? லஞ்சம் வாங்கும் பல நூறு கோடி ரூபாயில் ஒரு சில கோடி எடுத்து செய்ய வேண்டியது தானே..? சினிமா வில் இருந்து வரும் 30% வரி மட்டும் இவர்கள் அதிகார பிச்சை எடுக்கதானே செய்கின்றனர் ...அன்று 50% வரை அதிகார பிச்சை எடுத்தனர் ...நடிகர் திலகத்தின் 305 திரைப்படங்களில் 250 எடுத்துக்கொண்டால் கூட ...நடிகர் திலகத்தால் இந்த அரசாங்கம் பல நூறு கோடி ருபாய் வரிப்பணம் பிச்சையாக பிடுங்கிகொண்டதே ..அதில் இருந்து ஒரு சில கோடி ருபாய் எடுத்து கட்டவேண்டியதுதானே ?

சினிமாகாரன் காசுமட்டும் இவர்களுக்கு வேண்டும் ...ஆனால் தமிழ் சினிமாவை உலக சினிமா அரங்கில் கொண்டுசென்று விருதும் பாராட்டும் பட்டமும், பெருமையும் பெறச்செய்த தமிழ் திரை உலகின் முதல் உலக நாயகனுக்கு ஒரு மணிமண்டபம் வைக்க வக்கு இல்லை இவர்களுக்கு...!

அதை இந்த கோமான் எழுத தவறுகிறான்...ஆனால் நடிகர் திலகத்தை பற்றி நொட்டை எழுத இந்த சிகண்டி எங்கிருந்தோ வருகிறான் ஒவ்வொரு ஆண்டும் !

மனதில் நல்ல விஷயங்களை கொண்டு செல்வதற்கும், நல்லவற்றை அரவனைப்பதர்க்கும், நல்லவைகளை ஒத்துகொள்வதர்க்கும் ஒன்று மனிதனாக இருக்கவேண்டும் அல்லது ஒரு சுத்த ஆண் மகனாக இருக்கவேண்டும்...! அது அல்லாத பட்சத்தில் இவரை போன்றவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

தோல்விகள் மற்றும் பயங்களின் பிதாமகர்கள் இவர்கள் ...ALLOW THEM TO JUST F*** O**

Russelldwp
20th July 2015, 10:21 PM
https://scontent-bru2-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11703047_1617499205133421_453054782695609148_n.jpg ?oh=2d0f54fabfa9ec6031012d5a5219fa01&oe=565C64AE

Russellxor
20th July 2015, 10:21 PM
1000பதிவுகள்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437412665520_zpsyc3crgvs.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437412665520_zpsyc3crgvs.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437384816694_zpsmhiealny.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437384816694_zpsmhiealny.jpg.html)

Russellxor
20th July 2015, 10:27 PM
பழனி-இதயம் இருக்கின்றதே...


குழிமேட்டில் இருந்து இதயம் இருக்கின்றதே என்று பாடிக்கொண்டே தலையைத்தூக்கி அவர் பாடுவது சோக ராகம் என்றாலும் அதிலும் கூட பிரமிப்பூட்டும் முக பாவனைகளில் சாகசம் செயயும் நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அடக்க முடியாத சோகங்களைதன் அடக்கியாளும் நடிப்பினால்அடக்கிக் காட்டும் நடிப்புச்சித்தன்இந்தப் பழனியாய் வாழ்ந்த நடிகர்திலகம்.அந்த இடத்திலிருந்து அவர் மெல்ல எழுந்துவரும்போது அவர் காட்டும் உணர்வுகள்அரை நூற்றாண்டு வாழ்ந்து கெட்டஒரு மனிதனின் சரித்திரத்தை அரை நொடியில் காட்டி விடும் நடிப்பல்லவா அந்த நடிப்பு.முதல்முறை வரும்"தம்பி "
என்கிற வார்த்தையின் போது வெளிப்படுத்தும்தலையாட்டல் இரண்டாம் முறை"தம்பி"என்று பாடும் போது வேறு. விதமாய் இருக்கும்.அதே "தம்பி"மூன்றாம்முறை இன்னொரு விதம்.இதே மூன்று வேட நடிப்பாகி விட்டது.இதெல்லாம் மீறினால்20 செகண்டுகளுக்குள் நடந்து விடும் மாயாஜாலம்.இந்த நடிப்புகளை நாம் கிரகித்து வியக்கும் காலகட்டங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதனால்தான்அவை அதிசயங்கள்.அதிசயங்கள் எல்லா காலங்களிலும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பதைப் போல்தான் இதுவும்.
வாழ்வின் உறவுகளை அதன் இழப்புகளை
வலிய பாடல்வரிகளையும் தாண்டி
பாவங்கள் காட்டிஅவர் நடித்த நடிப்பு கற்காலம் முதல் நிகழ்காலம் வரை மனிதன் பார்த்தறியாத உணர்ச்சிப் பிளம்புகளாகத்தான் இருக்கும்.

உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்

துண்டை தோளில் தூக்கிபோட்டு" ஓடிடும் ஏழையர்க்கும்" எனும்போது நெஞ்சத்து குமுறல்களைமென்மையாகத்தான்வெளிப்படுத்துவார்.ஆன ால் அந்த வெளிப்பாடு எரிமலையின் சீற்றம்உள்ளே அடங்கி இருப்பதுபோல் காட்டும் மறைமுகநடிப்பின் வெளிப்பாடு.கிராமத்து விவசாயிகளின் துயரங்களையும்,இயாலாமைகளையும்
சில நிமிடங்களில் சாட்சியப்படுத்தும் பாடலுக்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.எல்லாம் அறுந்து இனி பிடிப்புக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் , தரையில் மெதுவாக அவர் அமரும் காட்சி ஒன்றே அதை விளக்கிவிடும்.
எளியவர்களின் வலிய சோகங்களை துல்லியமாய் காட்டும் அந்த நடிப்பு அசாத்தியமானது.எந்த எழுத்து அதை வடிக்க இயலும்?


தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!.


தானாட மறந்தாலும் என்பதற்கு முன் ஒரு நடை வரும்.உடம்பை ஒடுக்கி,குறுகி நடந்து வரும்நடை.அந்த நடையே அந்தப்பாத்திரத்தின் தன்மையை விளக்குவதாக இருக்கும்.சோகத்தை கூட சொர்க்கமாக்கும் அவருடைய நடிப்பு.


ஒரு மரத்துக்கிளிகள் ஒன்றைவிட்டு
எங்கோ பறக்கின்றதே
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்,
பிரிவுகளை.,பிரிவுகளின் வருத்தங்களை
விளக்கும் வரிகள்.இந்த வரிகளுக்கு ஒரு கையைத் தூக்கி நடித்தே வரிகளை வரலாறு ஆக்கி விட்டார்.ஜீவனுள்ள நடிப்பு.நெஞ்சையறுக்கும் படப்பதிவுகள்.


பழனி யின் இந்தப்பாடல் கிராமத்து பாமரனின் நெஞ்சகுமுறல்.அந்தக் குமுறல்
அவனின்சாதாரண புலம்பல் அல்ல.
அதில் மண்ணின் பாரம்பரியமுமம்,
உறவுகளின் சங்கமும்,அவற்றின் தன்மையையும் உணர்த்தும் பாடல்.



நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகர்கள் பழனியைப் பாருங்கள்.
பழனி ...வாழ்கைப் போராட்டங்களின் பாடம்



இதயம் இருக்கின்றதே - தம்பிஇதயம் இருக்கின்றதே!வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்... (இத)உறவினில் நீராகி பிரிவினில் நெருப்பாகும்உணர்வும் இருக்கின்றதே! - தம்பிஉணர்வும் இருக்கின்றதே!... (இத)தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் 4!...தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!... (இத)ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்றுஎங்கோ பறக்கின்றதே! - தம்பிஎங்கோ பறக்கின்றதே!... (இத)கூடப் பிறந்து விட்ட கொடுமையினால் மேனிகனலாய்க் கொதிக்கின்றதே! - தம்பிகனலாய்க் கொதிக்கின்றதே!
- Kannadasan

Russelldwp
20th July 2015, 10:32 PM
ஆயிரம் பதிவுகளை கண்ட அன்பு நண்பரே செந்தில்வேல் அவர்களே - இத்திரியின் புதுமை வேந்தரே - பார் போற்றும் நடிகர் திலகத்தை பல பரிமாணங்களில் காட்டியவரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

Russellxor
20th July 2015, 10:43 PM
ஆயிரம் பதிவுகளை கண்ட அன்பு நண்பரே செந்தில்வேல் அவர்களே - இத்திரியின் புதுமை வேந்தரே - பார் போற்றும் நடிகர் திலகத்தை பல பரிமாணங்களில் காட்டியவரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
தங்களின் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல

Russellbpw
20th July 2015, 11:30 PM
JULY 21 - தமிழ் திரை உலகின் தலைமகன், தமிழ்த்தாயின் கலைமகன், தமிழ் திரை உலகின் முதல் உலக நாயகர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நினைவுதினம் -

தமிழகத்தில் இன்றும் ஓரளவிற்கு மக்களிடம் அன்பும், பாசமும் நேசமும் இறை உணர்வும், தேசிய உணர்வும் இருக்க ஒரு காரணமாக இருந்த இருக்கின்ற இருக்கபோகின்ற அசல் தமிழ் வித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

தமிழை தமிழாக பேச கற்றுகொடுத்த கலை கடவுள், திரை உலக சித்தர் நடிகர் திலகம் என்றும் அனைவரின் மனத்திலும் வாழ்வார் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsg9ibyqeh.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsg9ibyqeh.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4005a_zps6b21ffac.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4005a_zps6b21ffac.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4007a_zps30e585cb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4007a_zps30e585cb.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:40 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4017aa_zps47b37e10.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4017aa_zps47b37e10.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4008a_zpsd3e97fc7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4008a_zpsd3e97fc7.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:43 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4012a_zps7edb01b1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4012a_zps7edb01b1.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:44 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4013a_zpsfa64c254.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4013a_zpsfa64c254.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:45 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4014a_zps8ea8ba04.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4014a_zps8ea8ba04.jpg.html)

Russellbpw
20th July 2015, 11:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4010a_zpse4c547c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4010a_zpse4c547c1.jpg.html)

eehaiupehazij
21st July 2015, 12:09 AM
Hearty congratulations Senthilvel for crossing 1K mark of your postings in this esteeemed thread of NT!! Keep going up!!
senthil

RAGHAVENDRA
21st July 2015, 12:25 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTSITRIB01fw_zpsej8t2il7.jpg

நீங்கள் மறையவில்லை.. உங்கள் உடலால் மட்டுமே பிரிந்துள்ளீர்கள்.. ஏராளமான அவதாரங்கள் காத்திருக்கின்றன எங்களோடு, தங்கள் வருகைக்காக..
எங்கள் பயணத்திற்கு வழிகாட்டி...
அன்னை இல்லத்தின் அன்பு உள்ளங்கள்...

Richardsof
21st July 2015, 06:00 AM
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினமான இன்று அவருடைய திரை உலக ஆளுமைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம் .

Subramaniam Ramajayam
21st July 2015, 06:08 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/NTSITRIB01fw_zpsej8t2il7.jpg

நீங்கள் மறையவில்லை.. உங்கள் உடலால் மட்டுமே பிரிந்துள்ளீர்கள்.. ஏராளமான அவதாரங்கள் காத்திருக்கின்றன எங்களோடு, தங்கள் வருகைக்காக..
எங்கள் பயணத்திற்கு வழிகாட்டி...
அன்னை இல்லத்தின் அன்பு உள்ளங்கள்...

BLAK DAY IN OUR LIFE. We salute you and your ninaivugal engal NENJIRKKUM VARAI nilaithirukkum.

Russellxor
21st July 2015, 07:56 AM
இன்றையதினதந்தி

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437445461175_zps0qju8jst.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437445461175_zps0qju8jst.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437445477667_zps1xhkif7o.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437445477667_zps1xhkif7o.jpg.html)

Russellxor
21st July 2015, 08:11 AM
(Now )sun TV


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437446332187_zpsact7vqak.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437446332187_zpsact7vqak.jpg.html)

vasudevan31355
21st July 2015, 08:33 AM
http://i59.tinypic.com/dyxcol.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_005384921.jpg

நடிப்புக்கு மட்டுமல்ல
வாழ்வியல் நெறிமுறைகளுக்கும்
ஆசானே!

இன்று உன் நினைவு நாள்.

நினைவிலேயே கலந்தவருக்கு
நினைவு நாளா?
இறைவனுக்கு ஏது இறப்பு?
நீ தெய்வத்தின் பிறப்பு

எம் அகம் புறம் அத்தனையும்
ஆண்டதால்
என் ஆண்டவன் நீ

நான் தொழும் முழு முதற் கடவுளே
கணேச நாமம் தவிர வேறு ஒன்றும் நானறியேன்

என் ஐம்புலன்களும் என் வசமில்லை
அது நான் பிறந்த போதே உன் வசமானது

மாதா பிதா குரு தெய்வம் உலகிற்கு
அனைத்தும் நீ ஒருவனே எனக்கு

அங்க அசைவுகள் மூலம் அமிர்ததைத்
தெளித்தவனே

அழகு எதுவென உலகிற்கு அடையாளம்
காட்டியவனே

உன்னால் அகிலம் அன்பைக் கற்றது
பாசத்தைப் பயின்றது

காலன் உன்னை அழைத்துக் கொண்டாலும்
காலம் உன்னை மறவாது

என் தேவனே என்னைப் பாருங்கள்
பாவிகளின் பாவங்களை வாங்கிக் கொள்ளுங்கள்

உன்னை இயக்கிய இயக்குனர்கள்
எத்தனையோ பேர் இருக்க
என்னை இயக்குபவன் நீ மட்டுமே

என் உயிரின் அணு ஒவ்வொன்றும்
உனக்கு மட்டுமே

சிவ பூஜை சிவனடியார்களுக்கு
சிவாஜி பூஜை இந்த அடியேனுக்கு

துன்பம் நேர்கையில் யாழ் நீ எனக்கு
இன்பம் தருவதில் இன்னிசை நீ எனக்கு

இன்பதுன்பம் எது வந்தாலும்
எனக்கு நீதான் உலகம்

வினாடி கூட உன்னை மறவாத
விந்தைக் கூட்டத்தில் நானும் ஒருவன்

என்றும் நீதான் என் இறைவன்.

உடலால் மட்டுமே நீ மறைந்த
இந்நாளில்

உயிராய் உணர்வாய் உன்னை
என்றும் போல் இன்றும் வணங்குகிறேன்.

எங்களைக் காத்தருள்வாய்.

Russellxss
21st July 2015, 08:42 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/p480x480/11208640_846277308790208_4914245221016580990_n.jpg ?oh=1d4d49e6bc33f246026aac3385369336&oe=565073BD


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
21st July 2015, 08:43 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11753682_846271892124083_5290737058259761795_n.jpg ?oh=04d0b3ab74b7ff3818480866c1ae3189&oe=5619516A&__gda__=1443865946_e735f75d478a39ee1f93e103e69676e a



சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
21st July 2015, 08:44 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/s720x720/11221670_846273225457283_2444350757739007752_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
21st July 2015, 08:50 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150721084801_zpsynnidopr.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150721084801_zpsynnidopr.gif.html)

Russellxss
21st July 2015, 08:52 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/l/t1.0-9/s720x720/1610971_500288523461592_3124307938766126010_n.jpg? oh=af4ac0936272d8e78a6d78b10f08640d&oe=561370BA


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

JamesFague
21st July 2015, 08:58 AM
Nadigar Thilagam Maraium Thilagamalla Endrum Makkal Manathil Nilaithu Nirkum Thilagam.

JamesFague
21st July 2015, 08:59 AM
Mr Senthilvel,


Congratulation for your 1000 wonderful posts. Keep the momentum going.



Regards

sivaa
21st July 2015, 09:02 AM
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xpf1/v/t1.0-1/p50x50/281928_1500935526828709_890218569886709285_n.jpg?o h=4fa15a77e5cb5dc3791e25d71e9db8d4&oe=565699E7&__gda__=1447775144_fa635873abe42eb934ca7e375cc114a b (https://www.facebook.com/malaimurasu.murali?fref=nf)
Malai Murasu Murali (https://www.facebook.com/malaimurasu.murali) added 2 new photos (https://www.facebook.com/malaimurasu.murali/posts/1613874435534817).


# ஜூலை 21 - சிவாஜி கணேசன் நினைவு நாள்...!
சமீபத்தில் நடந்தது அது....
“வீரபாண்டிய கட்டபொம்மன்” மறு வெளியீட்டுக்கான , டிரைலர் வெளியீட்டு விழா என நினைக்கிறேன்.. .
பிரபு மேடையில் அமர்ந்திருக்கிறார்......
வைரமுத்து பேசுகிறார் :
“சிவாஜியின் மரணத்தைப் பார்த்தபோது நினைத்தேன்...
இறந்து கிடப்பவன் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் மட்டும்தானா..?
ஒரு உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி கணேசன்...
இந்த உடம்புக்குள் அப்பர் இறந்து கிடக்கிறார்...
இந்த உடம்புக்குள் ராஜ ராஜ சோழன் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் கரிகால் பெருவளத்தான் சேரன் செங்குட்டுவன் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் ஜூலியஸ் சீசர் இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இறந்து கிடக்கிறான்...
இந்த உடம்புக்குள் வீரபாண்டியகட்டபொம்மன் இறந்தும் இறவாமல் கிடக்கிறான் என்றுதான் நினைத்துக் கொண்டேன்...
யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?
சிவாஜி என்ற நடிகனுக்கு சாவே கிடையாது..”
# வைரமுத்து பேசப் பேச பிரபு கண்களில் கண்ணீர் வழிந்தோடியது....
பிரபுவுக்கு மட்டும்தானா..? பார்த்துக் கொண்டிருந்த என் கண்களும் பனித்துப் போனது....!
உண்மைதானே ...? அந்த உண்மைக் கலைஞன் , உன்னத நடிகனுக்கு ஏது இறப்பு..?
ஜான் ஆசீர்



https://scontent-ord1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s480x480/11707815_1613873895534871_4350119909933750878_n.jp g?oh=bdb8647b3f047d28b396ecfc8c59740e&oe=561B438E
(https://www.facebook.com/photo.php?fbid=1613873895534871&set=pcb.1613874435534817&type=1)https://scontent-ord1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p240x240/11692660_1613874188868175_4495411511180822622_n.jp g?oh=54b3e42ca1b2bbf339e6a722be56e08a&oe=5613DBA4
(https://www.facebook.com/photo.php?fbid=1613874188868175&set=pcb.1613874435534817&type=1)

sivaa
21st July 2015, 09:08 AM
நடிகர் திலகமே உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு
எப்பொழுதும் உங்கள் நினைவுதான்

உலகம் உங்களை என்றும் மறவாது

sivaa
21st July 2015, 09:11 AM
ஆயிரம் பதிவுகளை கண்ட அன்பு நண்பர் செந்தில்வேல்
மேலும் பல ஆயிரம் பதிவுகள் காண வாழ்த்துக்கள்

sivaa
21st July 2015, 09:22 AM
Vikatan EMagazine (https://www.facebook.com/vikatanweb?fref=nf)

ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..
இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...

https://scontent-ord1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p480x480/11745635_961934903865300_6447754311716751736_n.jpg ?oh=c9e855134e8c637e1a9ca27ee237dffe&oe=5610F706
(https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/961934903865300/?type=1)

sivaa
21st July 2015, 09:32 AM
மன்னவன் சென்றானடி! இன்று சிவாஜி கணேசன் நினைவு தி



21 ஜூலை
2015
06:09

பதிவு செய்த நாள்
ஜூலை 21,2015 00:31

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1300530.jpg

காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் 'சக்சஸ்' என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். 'சிவாஜி கண்ட இந்து ராஜியம்' என்ற நாடகத்தில் நடித்ததைக் கண்டு இவருக்கு 'சிவாஜி' என்ற பட்டத்தை பெரியார் கொடுத்தார். காதல், வீரம், சோகம் என்ற அனைத்து கதாபாத்திரத்திலும் தனது முத்திரையை பதித்தவர். நடிப்பில் இவரை மிஞ்சியவரை காண்பது அரிது என்று நேருவால் பாராட்டப் பெற்றவர்.நடிகர் திலகம், நவரசத் திலகம், சிம்மக்குரல் கணேசன், கலைகுரிசல் கணேசன், பத்மஸ்ரீ கணேசன் என சிவாஜி கணேசனை அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பெற்றவர்.
'பராசக்தி' முதல் 'பூப்பறிக்க வருகிறோம்' என 288 படங்கள் வரை நடித்துள்ளார். இதில் 100 க்கும் மேற்பட்டவை வெள்ளி விழா படங்கள். நடிக்கும் போது அந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது இவரது சிறப்பு.1959 ல் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியதால், 1962 ல் உலகத் திரைப்பட விழாவிற்கு எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பு பெற்றது.காமராஜரின் விசுவாசியாக இருந்ததால் காங்கிரசின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். 1967 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டியவர் சிவாஜி கணேசன். தமிழக ஜனதா தள தலைவராகவும் சிவாஜி கணேசன் இருந்தார்.
எல்லோரிடமும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். நவரச திலகமாக ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாசமலர், செக்கிழுத்த செம்மலாக நடித்த கப்பலோட்டிய தமிழன், புரட்சி வீரனாக நடித்த சிவந்தமண் போன்ற எண்ணற்ற படங்கள் சிவாஜி கணேசனின்பெருமையை எடுத்துக் கூறும். காலத்தால் மறக்க முடியாத அந்த மாபெரும் நடிகர் மண்ணை விட்டுமறைந்தாலும், மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்றிருப்பார்.- ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், மதுரை

தினமலர்

vasudevan31355
21st July 2015, 10:10 AM
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்.

Gopal.s
21st July 2015, 10:34 AM
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்

J.Radhakrishnan
21st July 2015, 11:57 AM
நான் மறக்க நினைக்கும் கருப்பு தினம்

என் உயிரில் கலந்த உறவே, நான் மறந்தால் தானே நினைப்பதற்கு?
இறக்கும் வரை என்றும் தங்களின் நினைவுகளுடன்.

sss
21st July 2015, 12:46 PM
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்....எந்நாளும் எங்கள் உயிரோடு கலந்த உன்னை எப்படி மறப்பது...
எங்களை வாழ்வின் எல்லா செயல்பாட்டிலும் வியாபித்துள்ள நினைவோடு நாளை கழிக்கும் ஒரு சாமானியனின் மன ஓட்டம் இது...

சுந்தர பாண்டியன்

Murali Srinivas
21st July 2015, 01:29 PM
பதினாலு வருடம் வனவாசம் போனான் கோசலை மைந்தன்

பாதுகா பட்டாபிஷேகம் நடத்தி அரியணை காத்தான் கைகேயி குமாரன்

பதினாலு வருடம் முன்பு விண்வாசம் போனான் ராஜாமணி புதல்வன்; அவன்

(திரைப்)படங்களையே பட்டாபிஷேகம் செய்து சிம்மாசனம் காத்தோம் ரசிக கண்மணிகள்.

சீதாராமன் திரும்பி வந்தான் சீரும் சிறப்புமாய் ஆட்சி செய்தான்.

கணேசமூர்த்தியே! கமலாமணாளனே!

உன் மீள்வரவு எப்போது?

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நடிகர் திலகமே! யுக கலைஞனே

யுகங்கள்தோறும் காத்திருப்போம்!

கலையுலக சாம்ராஜ்ஜிய சிம்மாசனத்தை உனக்காக பாதுகாத்திருப்போம்!

என்றும் உன் நினைவில்

HARISH2619
21st July 2015, 01:41 PM
என்றென்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் நடிப்புலக மாமன்னனுக்கு 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி

HARISH2619
21st July 2015, 01:42 PM
Dear senthilvel sir,
my heartiest congratulations for completing 1000 valuable and unique postings in this thread.

adiram
21st July 2015, 01:58 PM
இன்று உங்கள் நினைவு நாள், இன்று மட்டும் உங்களை நினைக்கும் பத்திரிகைகளுக்கு, ஊடகங்களுக்கு, மற்றவர்களுக்கு

எப்போதும் உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்திருக்கும் எங்களுக்கல்ல.

நடிப்பில் நவரசம் என்று வகுத்தனர் நீங்கள் பிறக்கும் முன்னர். அதைப் பொய்ப்பித்து ரசங்கள் ஒன்பதாயிரம் என்று வகுத்தவர் நீங்கள்.

அவற்றை அணுஅணுவாக ரசித்து மகிழ்வது நாங்கள். ரசித்து முடிப்பதற்குள் எங்கள் ஆயுள் முடிந்திடுமே. அதுதான் நீங்கள் புரிந்த விந்தை.

நூறு முறை பார்த்த காட்சியை நூற்றி ஒன்றாவது முறை பார்க்கும்போதும் அதில் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க முடிகிறதே அதுதான் உங்கள் மாயாஜாலம்.

உலகம் உள்ளவரை உங்கள் நினைவு போற்றப்படும்.

adiram
21st July 2015, 02:08 PM
யார் அந்த சமூக ஆர்வலன்கள்..?.

அரசாங்க செலவில் யார் யாரோ ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் மணிமண்டபம், நினைவிடம் என்று அமைக்கப் படும்போது பொத்திக் கொண்டிருப்பவன்களுக்கு, அயல்நாடுகளிலும் தமிழனின் பெருமைகளை தலைநிமிர செய்த நடிகர்திலகத்துக்கு அமைக்கச் சொல்லும்போது மட்டும் எதிர்த்து வாய் கிழிகிறதே எப்படி?.

நடிகர்திலகத்தை எது சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம்தானே?.

தெருவில் இழுத்துப்போட்டு நாலு சாத்தினால் தெரியும்.

sss
21st July 2015, 04:35 PM
என்னைப் போய் சிவாஜி ரசிகன் என்று சொல்கிறார்களே ?
இவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று சிவாஜி கணேசன், நடிகர்த் திலகம் என்ற பெயரை கேட்டிருக்கேன்?

அகில உலக நடிகராமே? எனக்குத் தெரியாது நான் அறிந்து பழகினது ஒரு
சாதாரண நாடக நடிகன் வி சி கணேசன்

அவன் சரஸ்வதி தேவியை வணங்கினான்
தேவி பெருமாளிடம் (முருகப் பெருமானும், வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளும் ,அருணகிரி நாதர் இருண்டு பேரையும் பெருமாள் என்று குறிப்பிடுவான்) சிபாரிசு செய்து, சினிமா உலகில் அதே பேரில் இருக்கும் பெருமாளிடம் கூட்டி சென்று கணேசனுக்கு சான்சு கேட்டார்

அப்பொழுது மாதா பராசக்தியும் தன் மகன் கணேசனுக்கு ஒரு அறிய வாய்ப்பு கேட்க,

பெருமாள் யோசித்தார, காரணம்?
பலர் கணேசனுக்கு எதிராக கொடி தூக்கினார்கள் பெருமாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்?

யார் பேச்சையும் நான் கேட்கப் போவதில்லை?

குழந்தையின் பால் வடியும் முகத்தை நன்றாக பார்த்தேன்,
கண்கள,ஆக,என்னமா கதை சொல்கிறது,
ஒரு வாய் அசைப்பில் ஒரு காவியமே சொல்லத் துடிக்கிறதே,
யசோதா பாக்கியம் செய்தாளோ தெரியாது, நான் கொடுத்து வைத்தவன்

இவன்
உயர்நத மனிதன்,
ஏன் இவன் தான் மனிதன் ,

படிப்பு எதற்கு? இவன் தான் படிக்காத மேதையே?

இப்படியாக என்னவெல்லாமோ நினைத்து படத்தில் கதாநாயகனாக நடை,( ஆகா என்ன நடை என்று பலரும் வியந்த வண்ணம் ) போட வைத்தான்

பெருமாள் தேவிகள் இருவரும் இரண்டு பேரை கூப்பிட்டு நீங்களும் எப்போதும் எங்கள் செல்லக் குழந்தை கணேசனுடன் இருந்து மூன்று பேரும் சேர்ந்து கலை உலகில் பேரும் புகழுடன் வாழுங்கள் என்று வாழத்தினாள்

அவர்கள் கண்ணதாசனும் விசுவநாதனும் தான் இவர்களைத் தான் நான் அறிவேன்


நன்றி: திரு கல்யாணம் முகநூல் (https://www.facebook.com/kalyanam.iyer1?fref=nf)

vasudevan31355
21st July 2015, 05:31 PM
'நெஞ்சிருக்கும் வரை'

http://musiclounge.in/wp-content/uploads/2015/05/Nenjirukkum-Varai.jpg

தெய்வமே!

என் 'நெஞ்சிருக்கும் வரை' உங்கள் நினைவிருக்கும்.

இதோ உங்கள் நினைவு நாளில் உங்களுக்கு நான் செலுத்தும் நினைவாஞ்சலி.

தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களுக்காக வழக்குப் போட்டு அது வெற்றி பெறும் கட்டத்தை அடைகிறான் ஏழை சிவராமன் என்கிற சிவா. அவனுக்கு ஆதரவு கொடுத்த ஆருயிர் நண்பன் ரகுவிற்கோ செய்தி கேட்டு தாளாத மகிழ்ச்சி. இன்னொரு ஃபிரெண்ட் பீட்டருக்கோ பீறிட்ட உற்சாகம்.

எல்லாவற்றுக்கும் மீறிய எல்லை தாண்டிய அமைதி, சந்தோஷம் அந்த ஏழைப் பெண் ராஜிக்கு. ஏனென்றால் அவளின் காதல் தெய்வம் சிவா அல்லவா!

வறுமையைத் தவிர வேறு ஒன்றும் அறியாத அந்தக் குடிசையே குதூகலிக்கிறது சிவாவுக்குக் கிடைக்கப் போகும் சீர்மிகு வாழ்வை நினைத்து. கள்ளம் கபடமில்லாத அன்பு ஆத்மாக்கள். தூய உள்ளங்கள்.
ராஜியின் அப்பா உட்பட. (அந்த பழைய வீட்டின் ஓனர்.)

அனைவரிடமும் விடை பெற்று வழக்கின் முடிவுக்காக ஊருக்குக் கிளம்புகிறான் சிவா தன் உயிருக்குயிரான காதலியை நண்பன் ரகுவின் கண்காணிப்பில் விட்டுவிட்டு. ரகு முன்னம் ராஜியை உள்ளூர ஒருதலையாய்க் காதலித்தவன் என்றாலும் ராஜியின் விருப்பம் சிவா மீதுதான் என்பதைத் தெரிந்து கொண்டு, உணர்ந்து கொண்டு, குழம்பாமல் தெளிந்து விட்டவன். மனதை சமநிலைப் படுத்திக் கொண்டவன். ஆனால் நோயாளி நண்பன் பீட்டரின் இ(ழ)றப்பு இன்னொரு தாங்க முடியாத இன்னலாய், இடியாய் அவன் நெஞ்சில் இறங்கியது

இப்போது ராஜியும் தன் தந்தையை இழந்து தவிக்கும் போது ரகு மட்டுமே அவளுக்கு உற்ற துணையாய், அவளுடைய உடன்பிறவா சகோதரனாய், அவளை தன் தங்கையாக நினைத்தே அவளைப் பாதுகாக்கிறான். ஊருக்குச் சென்றிருக்கும் சிவா திரும்ப வந்து ராஜியைக் கல்யாணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையோடு அந்த அண்ணன் தங்கையின் வாழ்க்கை நகர்கிறது. சிவாவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள் ராஜி.

ஊருக்குச் சென்ற சிவா கேஸில் ஜெயித்து பெரிய நிலைக்கு உயர்கிறான். அவனுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் லட்சக்கணக்கில் திரும்ப கிடைக்கின்றன. கிளாஸ் பாக்டரி, எஸ்டேட், ஆபீஸ், வேலை ஆட்கள் என்று எட்டாத உயர் நிலை அடைகிறான்.

ஆனால் சிவா ராஜியை மறந்தவன் இல்லை. ராஜியைப் பார்க்க, அவளை மணக்க, அவளுக்கு வாழ்க்கை தர பெங்களூரில் இருந்து சென்னைக்குக் காரில் பறக்கிறான். தன்னை ஆதரித்த அந்தக் குடிசையை, அந்தக் குடிசையில் உள்ள அன்பு இதயங்களைக் காணச் சென்றால்? விளைவு வேறுவிதமாக மாறிப் போகிறது.

அங்கிருக்கும் காலிகளாலும், தேவையற்ற வதந்திகளாலும் ரகு, ராஜியை சந்தேகப்படும் சூழ்நிலை சிவாவுக்கு ஏற்படுகிறது. சூழல்கலும் அதற்கு சாதகமாய் பொருந்த, சந்தேகப் பேய் சந்தர்ப்பம் பார்த்து அவனுள்ளே வசதியாக நுழைந்து கொள்ள, தான் ரகுவாலும், ராஜியாலும் ஏமாற்றப்பட்டோம், வஞ்சிக்கப்பட்டோம் என்ற தவறான முடிவெடுத்து, மனப்புழக்கத்துடன் திரும்ப பெங்களூரே சென்று விடுகிறான் சிவா ராஜியை சந்திக்காமலேயே.

இங்கே சென்னையில் ரகு சிவாவிடமிருந்து எந்த பதிலும் இல்லையே என்று தவித்து ஊர்க் காலிகளின் பொய் பிரச்சாரங்களில் மனம் நொந்து, அவர்களை அடித்து நொறுக்கி, அங்கிருக்கப் பிடிக்காமல் ராஜியை அழைத்துக் கொண்டு சிவாவை சந்திக்க பெங்களூர் வருகிறான்.

சிவாவோ ராஜி, ரகு இருவரும் தனக்கு துரோகம் செய்வதாக தப்புக் கணக்குப் போட்டு, தாள முடியாத ஆத்திரத்திலும், துயரத்திலும் மூழ்கி இருக்க, ராஜியை லாட்ஜில் அறை எடுத்துத் தங்க வைத்துவிட்டு, சிவாவின் ஆபிஸைக் கண்டு பிடித்து அவனைச் சந்திக்க வருகிறான் ரகு.

இப்போது ரகு, சிவா என்ற பெயர்களை மறந்து விடுங்கள். நடிகர் திலகம், முத்துராமன் இருவரையும் அந்தப் பெயரில் வைத்துப் பாருங்கள்.

இனி நெஞ்சம் நிறைந்தவரின் நெற்றியடி அசைவுகள்.

ஆபீஸில் பிஸியாக பிஸினஸ் பேசிக் கொண்டிருக்கும் முத்துராமனிடம் நடிகர் திலகம் அவரைச் சந்திக்க வந்திருப்பதாக ஆபிஸ் பாய் வந்து சொல்ல, முத்துராமன் முகத்தில் அதிர்ச்சி. மேனேஜர் மாலி சந்திக்க மறுக்கும்படி சொல்ல, எதிர்பாராமல் 'வணக்கம் சார்' என்று சொல்லியபடி நடிகர் திலகம் அங்கு வந்து நிற்பார்.

மாலி 'ஏன் உள்ளே வந்தே?' என்று மிரட்டியவுடன் கைகளால் சைகை செய்து நிறுத்தி, நடிகர் திலகம் அவரைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் 'நான் ஐயாவுடன் பேச வந்தேன்' என்று அலட்சியமாக நடந்து முத்துவிடம் வருவார்.

சொந்த விஷயம் பேசப் போவதாகக் கூறி அங்கிருப்பவர்களை வெளியே போகும்படிக் கேட்டுக் கொள்வார். எல்லோரும் போய் விட்டவுடன் டைப் மிஷின் மட்டும் அடிக்கப்படும் சப்தம் கேட்டு நேராக டைப்பிஸ்ட்டை நோக்கிச் சென்று,

'Madam! Will you kindly go out for five miniutes?'

என்று வெகு அழகாக ஆங்கிலத்தில் போகச் சொல்லிக் கேட்பார். டைப்பிஸ்ட் எழுந்தவுடன் 'தேங்க் யூ' என்று அழகாகக் கைகளை நீட்டியபடி அவரை வெளியே அனுப்புவார். முகத்தில் எந்தச் சலனமும் இருக்காது. பின் கதவைத் தாளிட்டுவிட்டு, அப்படியே அங்கிருந்து மகிழ்ச்சிக் கைகொட்டி, முகம் மாற்றி, நிறைய சிரிப்புடன், நட்போடு ஓடிவந்து, முத்துராமனின் டேபிளின் மீது 'ஜம்'மென்று சந்தோஷமாக உட்காருவார். முத்துராமனின் நிலை சொல்லி பெருமையுடன் சந்தோஷப்பட்டு கொள்வார். ('டேய் சிவா! உண்மையிலேயே எதிர்பார்க்கவே இல்லைடா!) உடலைக் குறுக்கி, கைகளை விரத்த நிலைகளில் வைத்து, முத்துவின் முன்னேற்றம் கண்டு, அதைச் சொல்லி பூரித்துப் போகும் உடல்மொழி காட்டுவார்.

http://i59.tinypic.com/6tizdd.jpg

'பட்ணத்துல உன்னைப் பார்த்ததுக்கும், இப்ப உன்னைப் பார்க்குறதுக்கும்'

என்று சொல்லி கைகளைக் கொட்டி,

'ஓ...மை குட்லக்! ஆளே கம்ப்ளீட்டா மாறிட்டடா' (முத்துராமன் மார் மீது ஒரு அலட்சிய செல்லத் தட்டு தட்டுவார்.)

என்று வலதுகால் மேல் தூக்கிப் போட்டிருக்கும் இடது கால் முட்டி மீது கைகளை அணைத்துக் கட்டிக் கொள்வார். (வலதுபுற தோள்பட்டையில் ஷர்ட் கிழிந்திருக்கும்) உதடுகள் கடித்து சிரிப்பை சிறகடிக்க வைப்பார். முத்துராமனின் ஏகபோக நிலை கண்டு பூரிப்பும், அவர் முன்னேற்றம் கண்டு பெருமிதமும், வியப்பும், ஆச்சரியமும், சந்தோஷமும், அது தவிர அவர் மீது கொண்ட நட்பும் ஒரே சேர தன் அங்கங்களில் அங்கே சங்கமிக்க வைத்து சரித்திரம் படைப்பார் நடிப்புலக சாதனை சக்கரவர்த்தி.

வந்த விஷயத்தை சொல்லுமாறு முத்துராமன் முகம் கொடுத்துப் பேசாமல் கடுகடுக்க,

அப்படியே கையை விசிறி,

'டேய்! என்னடா பணக்கார பாணியிலே பேசி என்னை பயமுறுத்தப் பாக்குற?

உன்னுடைய நடிப்புல நான் ஒன்னும் ஏமாற மாட்டேன் தம்பி!' (கட்டை விரல் ஆடி அப்படியே சவால் விடும் சவால்.)

என்று போடுவாரே ஒரு போடு பார்க்கலாம்!

(நடிப்பிலே அவரை ஏமாற்ற இன்னொருத்தரா? முடியுமா? செம டைமிங் டயலாக்)

'கொஞ்சம் இறங்கி பழைய நிலைமைக்கு வாடா ஃ பூல்' (இரண்டு கைகளையும் 'அடங்கு' என்பது போல மேலிருந்து கீழாக அசைத்துக் காட்டுவார்)

அப்படியே கண்கள் அலைபாயும். விழிக்கும். முழிக்கும். சுருங்கும். விரியும். மிரட்டும். அடக்கும். கெஞ்சும். கொஞ்சும்.

'முதல்ல இந்த இடத்தை விட்டு இறங்கு கீழே'

என்று முத்துராமன் அதட்டியவுடன்,

சிரிப்பு அப்படியே அடங்கி கொஞ்சமாக இவரின் முகம் மாறும். அமைதி அதிர்தலில் பணிவாகவே எழுந்திருப்பார்.

'சிவா! என்னடா?'

குரல் அப்படியே உள்ளே போகும்.

கே.ஆர் விஜயாவைப் (ராஜி) பற்றி பேச்சு வரும். ஞாபகப்படுத்துவார்.

'யாரையும் ஏத்துக்க நான் தயாரா இல்ல... ராஜியை நான் மறந்தாச்சு... மறந்தாச்சு'

முத்துராமன் சொன்னவுடன் 'காரணம்?' என்று தீர்க்கமாகப் பார்ப்பார்.

'உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை' இது முத்துராமன்.

அடுத்த செகண்ட் வினாடி கூட தாமதியாமல்

http://i60.tinypic.com/2u5yg7r.jpg

'தப்ப முடியாது' என்று நிறுத்தி (ஆட்காட்டி விரல் சுட்டி மிரட்டும் தொனி காட்டுவார்)

'காரணத்தை சொல்லித்தான் தீரணும்'

என்பார்.

'அவளை நான் வெறுக்கிறேன்' என்பார் முத்துராமன்.

உடனே,

'இம்பாஸிபிள்'

என்று அழுந்தத் திருந்த சொல்வார் நடிகர் திலகம்.

இடி போல வார்த்தை இப்போது வந்து இறங்கும்.

"அது அவ்வ்வளவு சுலபமில்லே! ஒரு பெண்ணைக் காதலிக்கிறது.... அவ உள்ளத்தில ஆசையை வளர்க்கிறது... ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறது... இதெல்லாம் சில பணக்கார வாலிபர்களோட பெர்மனெண்ட் விளையாட்டுகள்டா... அந்தக் கூட்டத்துல நீயுமா சேர்ந்துட்டே?!"

ஆத்திரமாய் வார்த்தைகள் வந்து விழும். கைகள் இரண்டையும் மூடியபடி வைத்திருப்பார். பார்வை முத்துராமன் மேல் கோபமாய் ஏறி இறங்கியபடியே இருக்கும்.

அப்படியே சற்று அடங்கி ராஜி நிலை குறித்து அமைதியாக விளக்குவார்.

'இப்போ உன்னை நம்பித்தான் அவ இங்கே வந்திருக்கா'

என்ன சொல்லப் போகிறான் தன் ஆருயிர் நண்பன்? என்று முத்துராமனை நோக்கியபடி அவரிடமிருந்து பதிலை பரிதாபமாக ஆவல்மிக எதிர்பார்ப்பார்.

ராஜியின் பரிதாப நிலையை அந்தக் கைகள் முத்துராமனுக்கு விளக்கப் பாடுபடும். முகத்தில் அந்த சமயம் இரக்க நிலை மேலோங்கும். அதில் ராஜியின் நல்வாழ்வு வேண்டி போராட்டம் துவங்க ஆரம்பித்திருப்பது தெரியும்.

'என்னை நம்பியா? என் பணத்தை நம்பியா?'

என்று முத்துராமன் ஏகத்துக்கும் ஆரம்பிக்க,

'சட்'டென்று கொஞ்சமும் தாமதியாமல் அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காதவராய்

'டோன்ட் டாக் ரப்பிஷ்'

என்று முழங்கி,

முத்துராமன் பின் புறம் நிற்பவர் அவரின் இடது பக்கம் வந்து, தன் கைகளால் அவர் தோளைத் திருப்புவார். முறைப்பு அநியாயத்துக்கு இருக்கும்.

'அப்படியெல்லாம் வாய் கூசாம பேசாதே!' (ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பார்)

தாங்க மாட்டாமல் அடங்கிப் பொங்குவார்.

அடுத்த கணம் சிங்கம் தன் ஒரிஜினல் கர்ஜிப்பைக் காட்டும். குரல் உச்சத்தில் கம்பீரத்தை அங்கு கொண்டு வந்து நிறுத்தும். குலை நடுங்க வைக்கும்.

"என்னடா பெரிய பணம்?! இந்தப் பணத்தை வச்சுகிட்டு என்னடா சாதிச்சிடப் போற?... மெட்ராஸுக்கு வரும் போது நீ எப்படிடா வந்தே?.. இந்த பணத்தையெல்லாம் எதிர்பார்த்துதான் அவ உன்னைக் காதலிச்சாளா? கொஞ்சம் மனிதத் தன்மையோடு சிந்திச்சிப் பாரு"

(கைகளைக் குறுக்கி இதயம் சுட்டிக் காட்டுவார்)

என்று கோபத்துடன் பதறுவார்.

அடடா! என்ன மாடுலேஷன்! குரல் ஏற்ற இறக்கங்கள் யாரும் வர்ணிக்க முடியா விந்தைகள். சட்டென்று தென்றல் வீசும். படாரென புயல் உருவாகும். வார்த்தைகள் மென்மையாகும். அப்படியே சடாரென தடித்து எழும்பும். இவை அனைத்திற்கும் முகமும் சரிசமமாக இணைந்து கை கொடுக்கும். எங்கே எந்த சமயம் எது நடக்கும் என்று கடவுளுக்குக் கூடத் தெரியாது.

முத்துராமன் சற்று முன்னாடி வர, சைட் போஸில் அங்கேயே நின்றபடி நடிகர் திலகம் அவர் பக்கம் திரும்புவார். முகம் வெறுப்பின் உச்சம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கும். மீசை தோதாய் அதை உணர்த்தும்.

'நல்லா சிந்திச்ச பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரகு! என்னோட நேரத்தை வீணாக்காதே!"

என்று முத்துராமன் சொன்னதுதான் தாமதம்...

அடுத்த வினாடி அப்படியே நடிப்புப் பிரளயம் நடத்துவார்.

சட்டென்று,

'ஏய் லுக்'.

இடது கை ஆட்காட்டிவிரல் முத்துவின் இடது புற நெஞ்சில் அப்படியே துப்பாக்கி போலப் பதியும். கண்களை ஒரு செகண்ட் மூடியிருப்பார்.

'எனக்குத் தேவை உன்னுடைய ஒரே நிமிஷம்
உன்னுடைய ஒரே பதில்'

இறுதியாக உறுதி நிலைக்கு வந்து விடுவார் இனி வேலைக்கு ஆகாது என்று. .

நண்பன் மேல் பார்வையைத் தீர்க்கமாக வைத்தபடி, விழிகள் முரட்டுத்தனம் புரிந்தபடி, ஆட்காட்டி விரலை அவன் நெஞ்சில் வைத்தபடி அடுத்த கேள்வி ஒன்று கேட்பார்.

ஸ்டைல் என்பது பொதுவாக சந்தோஷத்தின் போது அனைவரும் செய்வது.

ஆனால் இந்த மனிதர் கேட்கும் கேள்வியிலேயே... அதுவும் கோபத்தின் போது ஸ்டைலைக் காட்டும் விதம் எவர் நினைத்துப் பார்க்க முடியும்?

அதுவும் இப்போது கேள்வி ஆங்கிலத்தில்.

'ஆர் யூ கோயிங் டு மேரி ராஜி ஆர் நாட்?'

'ராஜியைக் கல்யாணம் செய்துக்கப் போறியா இல்லையா?'

விழிகள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இப்போது இன்னும் பெரிதாகி அகன்றிருக்கும். (என்ன கண்கள் சாமி அது! கோலி குண்டு போல, வெண்ணெய் உருண்டை போல் உருண்டு, திரண்டு). வன்மம் கொப்புளிக்கும். உறுதி பாம்பன் பால சங்கர் சிமெண்ட்டை விடவும் அதிகமாய் இருக்கும். எண்ணி வந்த செயலை முடிக்காமல் போகக் கூடாது என்ற வெறி ஓங்க ஆரம்பித்திருக்கும். ('இனி 'மயிலே மயிலே' என்றால் இறகு போடாது' என்ற முடிவுக்கு வந்திருப்பார்.)

'முடியாது'----- முத்துராமன்.

இவர் ஆணித்தரமாக,

'முடியும்... ராஜியை நீ கல்யாணம் செய்துக்கத்தான் போற!'

முத்துராமன் முடிவெடுக்கும் முன் இவர் முடிவெடுத்து விடுவார்.

'மிரட்டலா?'

என்று முத்துராமன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,

"இல்லை... உன்னுடைய அயோக்கியத்தனத்துக்கு சவால்"

பதில் பட்டென்று வந்து விழும்.

'இந்த அறையை விட்டு வெளியே போறியா இல்லையா?'

என்று முத்துராமன் கத்தியவுடன்

http://i61.tinypic.com/21dfndi.jpg

அதுவரை வாய் மூலம் வாக்குவாதங்களை நிகழ்த்தியவர் அப்படியே செய்கை மூலம் முத்துராமனின் கோட்டைக் கொத்தாக பிடித்துத் தூக்கி அருகில் உள்ள டேபிளில் கிடத்துவார் முரட்டுத்தனமாக.

'போறேன்..உன்னை இதே இடத்துல பிணமாக்கிட்டு நான் நேரா தூக்கு மேடைக்குப் போறேன். நான் எதுக்கும் துணிஞ்சவன்னு உனக்குத் தெரியுமில்லே!

டேய் சிவா!

(கொத்தாக கோட்டைப் பிடித்திருந்தவர் வலது கையை விடுத்து முத்துராமனின் கன்னத்தில் ஒரு குத்து குத்தி திரும்ப கோட்டைப் பிடிப்பார்)

சாவைப் பார்த்து சிரிக்கிறவண்டா நான். உன்னுடைய பணம், அந்தஸ்து, செல்வாக்கு, அடியாட்கள் யார் வந்தாலும் சரி! (தலையை பக்கவாட்டில் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்புவார் எவன் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்ற அர்த்தத்தில்)

'இந்தப் பிடியிலிருந்து நீ தப்பவே முடியாது. (பிடியை இறுக்குவார்) இப்ப நீ சரின்னு சொல்லல?' ....

ஆத்திரத் தாண்டவம் ஆடி விடுவார்.

"ஓ..அந்த அளவுக்குத் துணிஞ்சிட்டியா நீ?" என்று முத்துராமன் ஒரு முடிவுக்கு வந்து எழுந்தவுடன், கோட்டிலிருந்து 'விருட்'டென்று கைகளை எடுப்பார் வேகமாக. செம ஸ்பீட்.

முத்துராமன் சற்று முன்வந்து நிற்பார். தலைவர் தலையைத் திருப்பியபடி முறைத்தவாறு அங்கேயே நிற்பார்.

'இப்போ நான் என்ன சொல்லணும்?'

முத்துராமன் கேள்வி இது.

'ராஜியைக் கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லணும் '.

தலைவர் கட்டளை இது.

சொல்லும்போது இடது கையை இடுப்பில் செம கம்பீரமாக வைத்தபடி சொல்வார்.

"அவ்வளவுதானே!'----முத்துராமன்.

'அடுத்த வாரத்துக்குள்ள அது நடக்கணும்'

நடிப்பின் ஆண்டவர் ஆணையிடுவார். கட்டளையிடுவார்.

'பிறகு?'

அதே போஸில்,

"அவ சந்தோஷமா வாழறத நான் பார்க்கணும்"

என்று அப்படியே நிற்பார்.

'உன் இஷ்டப்படியே செய்யிறேன். நவ் யூ கேன் கெட் அவுட்'

முத்து சொன்னவுடன்

அப்படியே ஒரு சிறிய வெறிச் சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, எதிர்பார்த்த பதில் வந்ததே என்ற சிறு திருப்திச் சிரிப்பு இவர் முகத்தில் வந்து படர்ந்து போகும்.

இடுப்பில் கைவைத்தபடியே அதே போஸில் பின்னோக்கி நகர்ந்து வருவார். முத்துராமனின் முகத்திற்கு நேராக பக்கவாட்டில் நின்றபடி,

'இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காதே?!'

என்று முறைத்தபடி கேட்பார்.

முத்துராமன் இவர் நிலைமை புரிந்து,

"மாற்றத்தான் விட மாட்டியே?"

என்று நிர்க்கதியாய் நின்று, விரக்தியாய் வெறுப்பு உமிழ,

அப்படியே இந்த மனிதர்... இல்லை இல்லை...தெய்வம்

http://i57.tinypic.com/6edvud.jpg

நாக்கால் கீழுதட்டின் இடது ஓரத்திலிருந்து வலது ஓரம் வரை துழாவி, வெறி காட்டி

'நௌ யூ ஆர் ரியலைஸ்'

என்று மறுபடி முத்து மார்பில் விரல் குத்தி,

'இப்ப உணர்ற! இல்ல!'

என்று வன்முறை காட்டி நண்பனை உணரச் செய்த பெருமையோடு சற்றே தலையாட்டி,

'வர்றேன்' என்று செல்பவர்

முத்துராமன் சற்று யோசித்து,

"ஆனா ஒரு நிபந்தனை"

என்று குரலிட்டவுடன்

http://i57.tinypic.com/20u7587.jpg

அப்படியே 'சர்'ரென்று, 'சரக்'கென்று திரும்பி, இடது காலை தள்ளி வைத்து, வலது முழங்காலை சற்று மடக்கி, கைகளை லூஸாக ஆடவிட்டு, காமெராவின் கீழ் ஆங்கிளிலிருந்து என்னையும், முரளி சாரையும், இந்த உலகத்தையும் வாய்பிளக்க வைத்த அந்த அற்புத போஸ் கொடுப்பாரே!

என் இதய தெய்வம், மனித தெய்வம், எங்கள் குலவிளக்கு, எங்கள் சாமி, எங்கள் உயிர்

எங்களை விட்டுப் பிரிந்த தினம். நினைக்க நினைக்க மனம் ஆறுதல் அடையவில்லை. அழுகையும், ஆத்திரமும், துக்கமும் பெருகுகிறதே தவிர காலையில் இருந்து குறைந்தபாடில்லை.

கலைக் கடவுளே!

நீ இல்லாமல் நாங்கள் இல்லை.

தெய்வமே! உங்களுடன் எங்களையும் அழைத்துக் கொள்.

இதற்கு மேல் எழுத திராணியோ, சக்தியோ, தெம்போ எனக்கு மனதிலும் இல்லை... உடலிலும் இல்லை.

மன்னிக்கவும்.

sss
21st July 2015, 05:42 PM
வாசு சார் ... கடைசி வரிகள் படிக்கும் போது கண்கள் பனிக்கிறது...மனதாலும் நினைவாலும் ஆறுதல் அடைய முடியவில்லை...

sss
21st July 2015, 05:49 PM
அன்புள்ள திரு செந்தில்வேல் சார்,

நடிகர் திலகத்தின் புகழ் பாடல் பல ஆயிரம் விஷயம் இருக்கிறது ... ஓராயிரம் கடந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...

சுந்தர பாண்டியன்

JamesFague
21st July 2015, 06:19 PM
நடிகர் திலகம் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு ரசிகர்கள் இனி வேறு எந்த நடிகருக்கும் அமைவதும் இல்லை இனி அமையபோவதும் இல்லை. வாசு அவர்களே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அந்த மகானுக்கே நாம் ரசிகர்களாக வேண்டும். மனதை நெருடும் மகத்தான பதிவு உங்களுடியது. மிக்க நன்றி சார்.

Gopal.s
21st July 2015, 06:34 PM
அதன் ஆசிரியர் திரு ஸ்ரீராம் அவர்களுடன் பேசிய பிறகு thats tamil .com அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. திரு ஸ்ரீராம் அவர்கள் உடனே கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்து காப்பாற்றினார். அவருக்கு நம் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.

http://tamil.filmibeat.com/news/sivaji-ganesan-memorial-day-035815.html

http://tamil.oneindia.com/news/tamilnadu/sivaji-fans-hunger-strike-on-memorial-231566.html

http://tamil.oneindia.com/news/tamilnadu/sivaji-fans-hunger-strike-on-memorial-231566.html

JamesFague
21st July 2015, 06:54 PM
Courtesy: Tamil Hindu


திருச்சியில் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சிவாஜி கணேசன் சிலை: விரைவில் திறக்க ரசிகர்கள் வலியுறுத்தல்



திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசனின் சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1928-ம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் நுழைந்து ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவரது உணர்ச்சித் ததும்பும் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.

தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். உயரிய விருதான செவாலியே விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் 2001-ஜூலை 21-ல் மறைந்தார்.

இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை துணியால் மூடப்பட்டது. சிலை திறப்பு கிடப்பில் போடப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் இடம்பிடித்துள்ள சிவாஜி கணேசன் திருச்சியில் தங்கி, நாடகங்களில் நடித்து வந்த சங்கிலியாண்டபுரம் பகுதி அருகிலேயே சிலை அமைக்க முழு முயற்சி எடுத்த அவரது ரசிகர்கள், சிலை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் மன வருத்தத்துடன் உள்ளனர். இந்த சிலையை திறக்க வேண்டுமென வேண்டுமென திருச்சி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த விஷயத்தில் அரசு எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியபோது, “செவாலியே விருது பெற்ற சிவாஜி கணேசன் பெயர் சென்னையில் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் முழு உருவச்சிலை அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் அவரது சிலை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் சிலை திறக்கப்படவில்லை. இந்த சிலையை விரைந்து திறக்க வேண்டும் என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை” என்றார்.

parthasarathy
21st July 2015, 07:26 PM
என் வாழ்வின் நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை முழுவதுமாக ஆக்கிரமித்த நடிகர் திலகமே, இந்த கணம் வரை உன்னை நினைக்காமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. இனி மேலும் கடக்கப்போவதில்லை.

உன்னை மறந்தால் தானே நினைக்க!

இரா. பார்த்தசாரதி

ScottAlise
21st July 2015, 07:26 PM
Awesome Post Vasu sir ,

tacinema
21st July 2015, 07:45 PM
'நெஞ்சிருக்கும் வரை'

தெய்வமே!

என் 'நெஞ்சிருக்கும் வரை' உங்கள் நினைவிருக்கும்.

இதோ உங்கள் நினைவு நாளில் உங்களுக்கு நான் செலுத்தும் நினைவாஞ்சலி.

http://i57.tinypic.com/20u7587.jpg

அப்படியே 'சர்'ரென்று, 'சரக்'கென்று திரும்பி, இடது காலை தள்ளி வைத்து, வலது முழங்காலை சற்று மடக்கி, கைகளை லூஸாக ஆடவிட்டு, காமெராவின் கீழ் ஆங்கிளிலிருந்து என்னையும், முரளி சாரையும், இந்த உலகத்தையும் வாய்பிளக்க வைத்த அந்த அற்புத போஸ் கொடுப்பாரே!

இதற்கு மேல் எழுத திராணியோ, சக்தியோ, தெம்போ எனக்கு மனதிலும் இல்லை... உடலிலும் இல்லை.

மன்னிக்கவும்.

Dear Vasu,

An expressive pose from Acting God - the body language says all. ஒரு மனிதனின் அனைத்து உணர்ச்சிகளையும் அவரின் இந்த ஒரு pose சொல்கிறது. இது போதும், நாம் அடித்து சொல்ல மற்ற அனைத்து நடிகர்களும் இவரின் கால் தூசிக்கு சமம்.

NT might have left us... but he still lives with us thru his extraordinary movies. Long live NT fame.

I thank you for your wonderful writing...please keep writing.

Regards.

RAGHAVENDRA
21st July 2015, 08:05 PM
வாசு சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடிய போது, நடிகர் திலகத்தைப் பற்றி ஓர் பதிவு தயார் பண்ணுவதாகவும் அப்போது நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டீர்கள் எனவும் கூறினீர்கள். தங்களுடைய தழுதழுத்த குரலில் அதைக் கேட்கும் போது நான் சொன்னேன், எழுதும் போது தாங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள், படித்த பின்பு நாங்கள் அப்படியாகி விடுவோம் எனக் கூறினேன். அது அப்படியே நடந்து விட்டது.

நெஞ்சை நெக்குருகும் எழுத்தைத் தரவல்லது நடிகர் திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இல்லை.

தங்களுக்கு என் உளமார்ந்த நெஞ்சம் நெகிழ்ந்த பாராட்டுக்கள்.

பி.கு.
தங்களையும் முரளியையும் சேர்த்து என்னை விட்டு விட்டீர்களே.. ஓ.. நாம் இருவரும் ஒன்றல்லவோ.. தனியே குறிப்பிடத் தேவையில்லை என எண்ணியுிருப்பீர்கள். அதுதனே உண்மை

RAGHAVENDRA
21st July 2015, 08:06 PM
கோபால்
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.


அதன் ஆசிரியர் திரு ஸ்ரீராம் அவர்களுடன் பேசிய பிறகு thats tamil .com அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. திரு ஸ்ரீராம் அவர்கள் உடனே கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்து காப்பாற்றினார். அவருக்கு நம் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
21st July 2015, 08:15 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/11751444_10204557132594975_3979805957097233090_n.j pg?oh=d518ad8f8907e4e464a3f6f9a1262e6d&oe=561A0EB5&__gda__=1444340045_cdc4fd68eb09de47bfa1ab76abaf725 9

அருமை நண்பர் குடந்தை சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...

RAGHAVENDRA
21st July 2015, 08:48 PM
தினமலர் இணைய தளம் சார்பாக இன்று காலை சிவாஜி ரசிகர்களின் எண்ண அலைகளைப் பேட்டியெடுத்து அவற்றைத் தொகுத்து இணைய தளத்தில் காணொளியாக வெளியிட்டிருக்கிறார்கள்.

My views included in this video

http://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=41206&ta=V

eehaiupehazij
21st July 2015, 09:29 PM
அன்புள்ள திரு சிவாஜி செந்தில் சார்,

நடிகர் திலகத்தின் புகழ் பாடல் பல ஆயிரம் விஷயம் இருக்கிறது ... ஓராயிரம் கடந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...

சுந்தர பாண்டியன்

Dear Sundhara Pandiyan Sir. You are mistaken for Senthilvel with Sivaji Senthil!! Kovai Senthilvel Sivaraj has just completed 1000!I convey your greetings to him!

sss
21st July 2015, 10:23 PM
Dear Sundhara Pandiyan Sir. You are mistaken for Senthilvel with Sivaji Senthil!! Kovai Senthilvel Sivaraj has just completed 1000!I convey your greetings to him!இன்று ஒரே குழப்பம் தான்.... மனம் ஒன்று நினைக்க செயல் ஒன்றாக உள்ளது... வாழ்த்து செந்தில் வேல் சாருக்கே...

eehaiupehazij
21st July 2015, 11:01 PM
A fitting tribute to NT!

http://mlife.mtsindia.in/nd/?pid=428436&rgn=tn

Gopal.s
22nd July 2015, 05:26 AM
கலைஞர் டீவீயில் ,19/7/2015 ,மானாட மயிலாட ,நடன நிகழ்ச்சி எம்.எஸ்.வீ ஸ்பெஷல் என்று சொல்லபட்டாலும் ,அவரோடு பிரிக்க இயலாத பந்தம் கொண்ட நடிகர்திலகம் ஸ்பெஷல் ஆகவும் அமைந்து விட்டது.

சரோஜாதேவியின் இதயத்தில் இன்றும் ஆக்கிரமிப்பது, பாலும் பழமும்,புதிய பறவைதான். (டெலிபோன் பேச்சில் 1979 என்று நினைவு.தன் பிரிய நடிகராக நடிகர்திலகத்தையே குறித்தார்)

சி.ஐ.டீ சகுந்தலா, மாலையிட்ட மங்கை பட பாடலில் குரூப் டான்சர் ஆக
இருந்ததை குறிப்பிட்டு விட்டு ,தவ புதல்வன் love is fine darling பற்றி சிலாகித்தார்.

முத்தாய்ப்பாக ஏ.எல்.எஸ் புதல்வி (மருமகள்???) ஜெயந்தி ,ஒன்றை குறிப்பிட்டார். எம்.எஸ் .வீ -டி.கே .ஆர் இணைந்தது ,நடிகர்திலகத்தின் பணம்(1952) என்கிற ஏ.எல்.எஸ் தயாரிப்பு. கடைசியில் பிரியும் முன் போட்ட கடைசி பாடல் யார் அந்த நிலவு.சாந்தி(1965) என்ற நடிகர்திலகம் நடித்த ஏ.எல்.எஸ் தயாரிப்பில் வந்த படமே.

நடிகர்திலகத்தின் 14 பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

RAGHAVENDRA
22nd July 2015, 07:09 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201501_zpsypcempep.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201502_zpsuu0u7lcx.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201503_zpsicnrjjb5.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201505_zpslo77tfaz.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201506_zpsj6m3hjuw.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201504_zpsvohrnwhu.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTRemembranceDay/TANTRD201507_zpskdhgtysq.jpg

திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் நினைவு நாள், திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம் அவர்களால் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு. நன்றி திரு அண்ணாதுரை.

sivaa
22nd July 2015, 09:20 AM
Vikatan EMagazine (https://www.facebook.com/vikatanweb?fref=nf)


Yesterday at 23:30 ·





நடிகர் சிவாஜி நினைவுகள்....பொக்கிஷ பகிர்வு
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
... * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
மானா பாஸ்கரன்
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..
இன்று நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினம்



https://scontent-ord1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s526x296/11745799_961950993863691_8146529829233172311_n.jpg ?oh=2cc0d8701ea6acefe9e64b08bbb52da3&oe=56141DBD
(https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/961950993863691/?type=1)

sivaa
22nd July 2015, 09:52 AM
கனடாவில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில்
நடிகர் திலகத்தின் 14ம் ஆண்டு நினைவு நாளையொட்டி
பிரசுரிக்கப்பட்ட கட்டுரை

http://i58.tinypic.com/xfukhj.jpg


http://i62.tinypic.com/2rf9deo.jpg
http://i61.tinypic.com/2zoys06.jpg

Gopal.s
22nd July 2015, 10:13 AM
சில விஷயங்கள்.



சோவும் ,கலைஞரும் இரு துருவங்கள் என்றாலும், மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருக்கும் மகளை காண சென்ற கலைஞர், அங்கே தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சோ வை காண சென்று அரசியல் மனிதம் வளர்த்து,தான் ராஜாஜி,காமராஜ்,அண்ணா கால நாகரிக அரசியல்வாதி என்று நிறுபித்துள்ளார். தலை வணங்குகிறோம்.



கலைஞர் தான் உண்டாக்கிய மது கேட்டை.,தானே களைய முற்பட்டது பாராட்டுக்குரியது.இதில் அரசியலை புகுத்தாமல்,எல்லோரும் பாராட்டலாம். தவறில்லை.



நடிகர்திலகத்தின் மணிமண்டபம் குறித்து சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சங்கர் என்ற பத்திரிகையாளர் அநாகரிகத்தின் எல்லை மீறியிருக்கிறார். தமிழர்கள் என்றாலே இளப்பம் என்று ஆகிவிட்டது போலும். மணி மண்டபத்தை குடும்பத்தினர் கட்ட வேண்டுமாம். பல பிரபல அரசியல்வாதிகளுக்கு சமாதியும்,சிலைகளும் வைத்தது குடும்பமா.அவர்களால் பலன் பெற்றவர்களா அல்லது அரசாங்கமா?பத்து கோடி தமிழர்களின் பெருமை,சொத்து நமது நடிகர்திலகம். அவர் தனது மக்களை மகிழ்வித்து,உயர்விக்கும் கலையில், தன்னை வருத்தி,உழைத்து,தன்னுடைய பிறவி மேதைமையை மக்களுக்கு அர்பணித்த மகான். அவர் மகனுக்கும்,பேரனுக்குமா அவர் நடித்தார்?இன்று பல மொக்கைகளுக்கு கோடி கணக்கில் அள்ளி கொடுக்கும் திரையுலகம்,அன்றைய சோசியலிஸ்ட் இந்தியாவில் நியாயமான ஊதியமே கடினம். எவ்வளவு கடின உழைப்பு,அதுவும் சிவாஜி மாதிரி உண்மையான ஈடுபாடுள்ள உலக நடிகர்களுக்கு? எதற்கு குடும்பத்தை இழுக்கிறீர்கள்?நாங்கள் இருக்கிறோம். பத்து கோடி தமிழர்களும் தங்களால் இயன்றதை தந்து கட்டி விடுவோம். நாம்தானே அவரால் பலன் பெற்றோம்? நாமே செய்வோம்.



பம்மலார் ,புத்தக விஷயத்தை இழு இழு என்று இழுப்பது மிக சோர்வையும் ,வேதனையையும் தருகிறது,oct 2013,jan 2014,july 2014,jan 2015 என்று போக்கு காட்டி இன்னும் நேரம் குறிக்க காணோம். ரசிகராக இதை நாம் கேட்கவில்லை. நமக்கு பிடிக்காததில் முன்னுரிமை கொடுத்து,நம் விஷயத்தை நேரம் தராமல் ஒத்தி வைப்பது மிக கண்டிக்க தக்கது. அவர் நண்பர்,சக ரசிகன் என்பது வேறு. இது வேறு. தயவு செய்து அவரும் இந்த வேறுபாட்டை உணர்வார் என நம்பி, அவர் புத்தகத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு பம்மலார் ரசிகன். சிங்கப்பூர் ,இந்தோனேசியா,ஹாங்காங்,இவற்றில் மட்டும் நூறு பிரதி விற்று கொடுக்க நானாயிற்று. இனிமேலும் எங்களை சோதிக்காதீர்கள் பம்மலாரே .ஒரு ரசிகராக ,இங்கு வந்து நினைவு நாள் பதிவு கூடவா போட கூடாது?

RAGHAVENDRA
22nd July 2015, 10:21 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/s720x720/11737923_10202943192539509_7703857266904613151_n.j pg?oh=d30f3b7e296bb2cf5aa776dba1a08e97&oe=564FC39E&__gda__=1448631147_3714f274237f7ae71d3a0be36492baa f

Courtesy: FB friend Easwaralingam

RAGHAVENDRA
22nd July 2015, 12:51 PM
ஓர் அபூர்வ நிகழ்வு..

தந்தை-மகன்-பேரன்..

மூவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சிறப்பு ..

ஜூலை 31, 2015 அன்று நிகழ உள்ளது..

நடிகர் திலகத்தின்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11760228_1629392257303881_4793390147438883641_n.jp g?oh=29991956894688f1d43446e6e47ef380&oe=56570025&__gda__=1447972498_26e135c9308e0fa5bd9011b37486cb1 0

இளைய திலகம் பிரபு அவர்களின்

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/s720x720/11760239_1629392330637207_1152267339883619985_n.jp g?oh=c5ebd6384ad8057ecb046921e7a2d1dd&oe=560F53F4&__gda__=1448465590_541e7f631b47fb87b4805a537bd90b1 8

விக்ரம் பிரபு அவர்களின்

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11207365_1629392413970532_1386656181885555734_n.jp g?oh=4c5fe3dfde3e3ef4e190727bc506a26a&oe=56459170

இது உத்தேசமானது. அப்படி நிகழ்ந்தால் இது தமிழ் சினிமா வரலாற்றில் அபூர்வமான ஒன்றாகும். ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று தலைமுறை நாயகர்கள் நடித்த வெவ்வேறு படங்கள் வெளியாவதும் அபூர்வமே. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே வெளியீடு கண்ட படமென்றாலும் வடிவம் மாறி வெளிவருவதாலும் மறு தணிக்கைக்கு உட்படுவதாலும் புதிய படமாகவே வெளியீட்டு விழாவைக் காண இருப்பதாலும் மூன்று வெளியீடுகளாக அமைகின்றன.

RAGHAVENDRA
22nd July 2015, 01:04 PM
நமது நண்பர், நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர், ராஜபாளையம் திரு திருப்பதி அவர்களின் நினைவாஞ்சலி நிழற்படங்கள்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11222177_952724794778193_4938107080107588356_n.jpg ?oh=897020b61402d7cf96c444740d3cd3d6&oe=5646B503

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11705221_952724798111526_9126186422805818087_n.jpg ?oh=7f7a838baac9f07ea49ec8b238c5ce20&oe=564B70B7&__gda__=1448255361_464a0d734a7c497cc62ef9818d70178 4

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11709643_952724828111523_8054513201388513946_n.jpg ?oh=d4f2d5c60b6f552dde830226ab785436&oe=561265B5&__gda__=1448768945_8ad8a57bcbd27e65fec639d0699a1c1 d

RAGHAVENDRA
22nd July 2015, 01:05 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11737857_952724861444853_6288385706728026561_n.jpg ?oh=44b4808a748cc100c08d818a87425936&oe=56178424

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/10401942_952725024778170_152894218735915326_n.jpg? oh=3999e030188de976fa48cab1047e0373&oe=560F6DBD

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11751853_952725034778169_3688394280707097098_n.jpg ?oh=fb3b35fc9e5ac60f089efbd9b79570ba&oe=560F5343&__gda__=1447728073_af7a8aa1b867fd3fdbc6a0bcf8e6070 a

RAGHAVENDRA
22nd July 2015, 01:06 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/l/t1.0-9/11781689_952725051444834_9211415341224748642_n.jpg ?oh=5219e3fc4203b5aa55588d65fef7b830&oe=56490F29

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11753743_952725088111497_4285483831395139464_n.jpg ?oh=77c92c4bf5e63eb3d33eba7a5d80950b&oe=56573229&__gda__=1447411501_be9beceac656fbf348f92ead6a71392 8

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11745920_952725074778165_6721961370104268472_n.jpg ?oh=78a53bfca5425cbc9f8444bba83672fc&oe=5648D2B2

RAGHAVENDRA
22nd July 2015, 01:07 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11745901_952725104778162_98780002513379467_n.jpg?o h=e2bf6c039e3f20c5376eca1f5877679d&oe=5657F203

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11760110_952725154778157_6153027030739369625_n.jpg ?oh=1c36b8d28471bd22efff5d113f4d5402&oe=561023FD

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10985305_952725141444825_5366101210233161786_n.jpg ?oh=9adddbb3134b8ef0432843b0a2e787dc&oe=5649AEC6

RAGHAVENDRA
22nd July 2015, 01:09 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/1517520_952725151444824_8523580597154091560_n.jpg? oh=a81f60b473251fe59a5f0205abe4bc6e&oe=56198ECC&__gda__=1444304983_6be22f06541687612d7283dcbff2497 8

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11202890_952725171444822_4370800821474865061_n.jpg ?oh=b054724cc48d0bac2951c213e62fb516&oe=565483D6

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11751461_952725194778153_3480388362531656164_n.jpg ?oh=15f8de8f3c633d543f14583dab272f6c&oe=56128812

RAGHAVENDRA
22nd July 2015, 01:10 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11760159_952725224778150_5840451300815087779_n.jpg ?oh=293f02e9f543ba2598966ab953347de4&oe=560F16D6&__gda__=1448389735_1c04eacc599bc306030e548b1164a1b 5

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11745721_952725248111481_8260618123393843655_n.jpg ?oh=9154c60b4ad9fd31f256f9f6970298f0&oe=5618DD90&__gda__=1447576724_3ff8a143366de75dea59078dc50c23d 1

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11745594_952725261444813_18169560819371838_n.jpg?o h=3ea5a6efe1d686a30195db713eb776d7&oe=560DD26E

RAGHAVENDRA
22nd July 2015, 01:11 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11705332_952725284778144_1056552420910947345_n.jpg ?oh=0966a0a7c920a090c7fdc5a09ee05d00&oe=5655DAA2

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11750685_952725294778143_5011966210203939408_n.jpg ?oh=057f0e198c92e9ba21e391460744f9c4&oe=5617189D

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11745806_952725308111475_3059071617262833251_n.jpg ?oh=33249d618f3adde521532b7bd5de9251&oe=56507663&__gda__=1444714985_962010fa049ac66a1f5494cd13b924a 3

RAGHAVENDRA
22nd July 2015, 01:12 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11742958_952725378111468_4955173094293679623_n.jpg ?oh=dda33e40120e9737b2f01bba01330f8a&oe=56486F81&__gda__=1444720136_e80c9fa10008cc112ca257a4334047f b

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10410816_952725384778134_5574350460886675000_n.jpg ?oh=4b192ff3143887c3f191e39d1edb87ee&oe=5610E85C&__gda__=1444413568_c7165c33fe7818ea41931b0067013b1 6

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11178350_952725428111463_2789321485001801488_n.jpg ?oh=b1130aa402f1da86345a0b6464915979&oe=564D728A&__gda__=1447999185_dd1d6734af545804d6191554f18cf60 3

RAGHAVENDRA
22nd July 2015, 01:13 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11178350_952725428111463_2789321485001801488_n.jpg ?oh=b1130aa402f1da86345a0b6464915979&oe=564D728A&__gda__=1447999185_dd1d6734af545804d6191554f18cf60 3

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11745553_952725448111461_3948044592768404101_n.jpg ?oh=2ef341fb79b3f72224fb78229819bd58&oe=564AFE1E&__gda__=1444351045_67f9e1493a6c39ec049ab76fb807885 5

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11202606_952725464778126_5619865294271251234_n.jpg ?oh=0c4603c46f678031e83320ccb7f1cceb&oe=56513FE0

RAGHAVENDRA
22nd July 2015, 01:14 PM
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/10403283_952725488111457_3858214966776983880_n.jpg ?oh=8ba635a483708dcb8016ffac574f3d0b&oe=5611F504&__gda__=1444242573_c9fd75f21e4aeb26d75be0b39d98571 5

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11751927_952725531444786_2779640090415579693_n.jpg ?oh=d839a6227a433ff251fae39f14b808bf&oe=56133C5D&__gda__=1447724500_1d89be0030c4b41472672b7ed747027 6

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11760136_952725521444787_1482039381797925971_n.jpg ?oh=4b78df499d6563cc3152cd71540c9f8d&oe=564C1220

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/1901654_952725561444783_5215943664711243684_n.jpg? oh=3d0a63c3dfcdc37ace8382e7c1af074c&oe=560F9A0F

RAGHAVENDRA
22nd July 2015, 02:18 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s720x720/1503362_864524890237147_1884575724490008751_n.jpg? oh=438b43dd6db9165306fe4581b2c8b27c&oe=5653F098&__gda__=1447589489_42eed4a95eddce31f08e50feadd3c9d c

from Chithra Lakshmanan's FB page.

RAGHAVENDRA
22nd July 2015, 02:20 PM
From the FB page of Chitra Lakshmanan

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/10929228_858007814222188_3619588970104698503_n.jpg ?oh=eb7a6ba3c066234c20a2a2e0f8d010dd&oe=56161516

Russellbpw
22nd July 2015, 05:25 PM
அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுகோள் !

நமது திரை உலக சக்ரவர்த்தி நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் 1959இல் வெளிவந்து அனைத்து திரையுலகமும் திரும்பி பார்க்கும் வகையில் பெருவெற்றி கண்டு முதன் முதலாக ஒரு இந்திய திரைப்படம் உலக படவிழாவான ஆசிய ஆப்ப்ரோ பிலிம் பெஸ்டிவல் பங்குகொண்டு ஆசிய ஆப்ரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் என்று நமது நடிகர் திலகத்திற்கு பட்டம் கொடுத்து, அவரை இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் என்று அடையாளம் காட்டிய திரைப்படம் வீர பாண்டிய கட்டபொம்மன்.

தற்போது டிஜிடல் முறையில் திரைப்படத்தை உலக தரத்திற்கு மாற்றி ஜூலை 31 முதல் தமிழகம் எங்கும் வெளியிட விளம்பரம் வந்துள்ள நிலையில், இன்று தினத்தந்தியில் நடிகர் திலகம் அவர்களின் பேரனும் திரு பிரபு அவர்களின் மகனுமான திரு விக்ரம் பிரபு அவர்கள் நடிப்பில் படபிடிப்பு முடிந்து என்றோ வெளிவர வேண்டிய திரைப்படம், நமது நடிகர் திலகம் அவர்கள் மணிமண்டபம் அமைவதை வேண்டுமென்றே தாமதபடுத்தும், அந்த என்னத்தை தவிர்த்துவரும், அதற்க்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நடிகர் சங்க தலைவர் நடிகர் சரத்குமார், திருமதி ராதிகா பட கம்பெனி தயாரிப்பில் "இது என்ன மாயம்" திரைப்படம் வெளிவரும் விளம்பரம் வந்துள்ளது !

பல்வேறு பிரச்னையில் விற்காமல் இவ்வளவு காலம் இருந்த இந்த திரைபடம் நமது நடிகர் திலகம் அவர்களின் திரைப்படமான வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவரும் அதே தினம் ஜூலை 31ஆம் தேதி வெளிவர இருப்பதாக இன்று விளம்பரம் வந்துள்ளது.

நடிகர் திலகத்தின் நிழலில் இந்த திரைப்படம் அதே தேதியில் வெளியிட்டு, நடிகர் திலகம் ரசிகர்களை எந்த திரைப்படத்திற்கு செல்வது என்ற குழப்ப நிலைக்கு தள்ளபார்க்கின்றனர் இந்த வியாபாரிகள் !

இவ்வளவு நாள் வெளியீடு தள்ளி தள்ளி சென்ற இது என்ன மாயம் திரைப்படம், திடீரென ஜூலை 31 அன்று வெளியிட காரணம் என்ன ?
நமது நடிகர் திலகம் ரசிகர்களை தங்களுடய சுய நலத்திற்கு பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தால் தான் என்று இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் !

காரணம் இன்றுவரை திரு விக்ரம் பிரபு அவர்களின் திரைப்படங்கள் சிறந்ததொரு ஒபெநிங் கிடைப்பதற்கு நமது நடிகர் திலகம் அவர்களின் ரசிகர்களே முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

அப்படி இருக்க கட்டபொம்மன் திரைப்படத்திற்கு சிறந்த ஒபெநிங் கிடக்க கூடாது என்று நினைத்து செயல்படும் சதிவேலையா அல்லது நடிகர் திலகம் ரசிகர்கள் நிழலில் வழக்கம் போல குளிர் காயலாம் என்ற எண்ணமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவு படுத்தவேண்டும்.

நடிகர் திலகம் மீது உண்மையான மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் வைத்திருக்கும் " எனதருமை பிள்ளைகளே " என்று நடிகர் திலகம் அன்புபொங்க அழைக்கும் அவரது ரசிக கண்மணிகள், திரு விக்ரம் பிரபு அவர்கள் நடிப்பில், நமது நடிகர் திலகம் மணிமண்டபம் கட்டுவதை வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் நடிகர் சங்க தலைவர் திரு சரத்குமார் கம்பெனி தயாரிப்பில் வெளிவரும் "இது என்ன மாயம்" படத்தை முதல் நான்கு வாரம் வரை பார்க்காமல் தவிர்க்கவேண்டும் என்றும்

நம்முடைய முக்கியத்துவத்தை வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு தான் முன் உரிமை கொடுக்கவேண்டும் என்று நடிகர் திலகம் அவர்களின் உண்மையான ரசிகர்கள் அனைவரையும் நான் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்...!

அப்படி ஒரு வேளை இது என்ன மாயம் திரைபடம் வரும்பட்சத்தில், நமது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்க சம்பந்தப்பட்டவர்கள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ நிர்பந்திக்கப்படும் நிலையில், அனைத்து நடிகர் திலகம் ரசிகர்கள், இந்த இது என்ன மாயம் திரைப்படத்தை ஒட்டுமொத்தமாக பார்க்க போவதை தவிர்பதோடு மட்டும் அல்லாமல் "நிராகரித்து " அந்த திரைப்படத்திற்கு "ஒரு ருபாய்" கூட செலவு செய்யாமல் நமது ஒட்டு மொத்த எதிர்ப்பை காட்டவேண்டும் என்று அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களிடமும் கேட்டுகொள்கிறேன்.

இதுதான் நமது தமிழ் இன தலைவன் தமிழகத்தின் அசல் வித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...!

eehaiupehazij
22nd July 2015, 06:07 PM
மன்னிக்க வேண்டும் ரவிகிரண் சார்!!
விக்ரம் பிரபு அவர்கள் நடிகர்திலகத்தின் பேரர் எனினும் அவர் ஒருக்காலும் நடிகர்திலகம் ஆகி விட முடியாதே !! அவர் படம் ஒரு போட்டிப் படமே அல்ல!!
தனது தனித்தன்மையையும் கூட்டமீர்க்கும் காந்தப் புலத்தையும் காலங்களை வென்ற கட்டபொம்மர் நிரூபிப்பார்!

eehaiupehazij
22nd July 2015, 06:36 PM
Cloud o' Nine songs Vs Passing Cloud songs
ஒன்பதாம் அடுக்கு மேகப் பாடல்களும் கடந்து செல்லும் மேகப் பாடல்களும் !

குறுந்தொடர் பகுதி 1 கர்ணன்!

உள்ளத்தில் நல்ல உள்ளம் Vs போய் வா மகளே போய் வா !


நாம் பார்த்து ரசிக்கும் மதுர கானங்களில் பல நமது மனதிலேயே நங்கூரமிட்டு உறக்கத்தில் கூட மனச்செவிகளில் ரீங்காரமிடுகின்றன!! காரணம்....
இசைக்கோர்ப்பு நம்மை ஆகர்ஷித்து ஏதோவொரு இனம் புரியாத பரவச நிலைக்கு நம்மை உட்படுத்துவதே !!
பாடல் காட்சியமைப்பும் நன்கு அமைந்து இசையும் மதுரமாகப் பொருந்தினால் ஒன்பதாம் மேகத்தின் Cloud o' 9 கூரை மேல் அமர்ந்திருப்பது போன்ற சிலிர்ப்பே !!
பல பாடல்கள் இவ் வண்ணம் அமையாமல் கடந்து செல்லும் மேகங்களாகவும் Passing Clouds இருப்பதுண்டு !!


கர்ணன் திரைக்கவியத்தில் இறுதிக்கட்ட தெய்வீகப் பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் மனதை ஈர்க்கும் சீர்காழியாரின் குரல் வளத்தாலும் MSV பொருத்தமான இசைக் கோர்ப்பினாலும், இதயத்தைப் பிழியும் நடிகர்திலகத்தின் வசனமற்ற உடல்மொழி முகபாவ வேதனை வெளிப்பாடுகளாலும், என் டி ஆரின் விசுவரூப தெய்வீக உருவகத்தாலும், பிரம்மாண்டத்தின் அடையாளமான காட்சியமைப்பாலும், இந்த நூற்றாண்டின் மறக்கவொன்னாத சிறந்த பாடலாக என் மனதில் சிம்மாசனமிட்டு என்னை ஒன்பதாம் அடுக்கு மேகத்தின் மேல் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை தந்து கொண்டேயிருக்கிறது !!

https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k

ஆனால் அதே காவியத்தில் இடம் பெற்ற போய் வா மகளே போய் வா எனும் பாடல் குரலினிமையால் காட்சியின் பிரம்மாண்டத்தால் படம் பார்க்கும்போது ரசிக்க வைத்தாலும் மனதில் தங்காமல் கடந்து செல்லும் மேகமாகி விட்டதே!



https://www.youtube.com/watch?v=3LwFGJSX1h8

sss
22nd July 2015, 06:40 PM
அன்புள்ள வாசு சார் ,

நீங்கள் எழுதிய நெஞ்சிருக்கும் வரை பதிவை எனது சின்ன மாமியார் திருமதி மருதம் வேலன் அவர்கள் கேட்டு கொண்டதால் எனது முக நூலில் பதிவு செய்தேன்..
உங்களுக்கு மிக்க நன்றி...

அதற்கு அவர்கள் கொடுத்த பின்னுட்டம் :

Marutham Velan நெஞ்சிருக்கும் வரை படத்தை மனக்கண்முன் ஓட வைத்து விட்டீர்கள் .மிக்க நன்றி .பெரிய வேலை .ஆனால் நடிப்புலக மா ,மா( எத்தனை மா போட்டாலும் பற்றாத )மேதைக்கு இதுவெல்லாம் எளிமையான புகழ்ச்சி .அவர் நம்மோடு வாழ்கிறார் .சாதாரண மனிதர்களுக்குத்தான் இறப்பு என்பதெல்லாம் .அவர் நம்மோடு வாழ்ந்தார் ,வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ,வாழ்வார் ,என்றென்றும் ,நம்மோடு ......

vasudevan31355
22nd July 2015, 07:09 PM
முரளி சார்,

'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடல் அலசல் பாராட்டிற்கு நன்றி!

கோடீஸ்வரனின் முதல்வார, இரண்டாம் வார மதுரை தங்க(ம்) வசூல் வாயடைக்க வைத்துவிட்டது.

எல்லோரும் நலம் வாழ பாடிய நம் நாயகனை எந்நாளும் கொண்டாடுவோம்.

vasudevan31355
22nd July 2015, 07:24 PM
'நெஞ்சிருக்கும் வரை' நாயகரின் பதிவைப் பாராட்டிய சுந்தர பாண்டியன் சார், வாசுதேவன் சார், தம்பி ராகுல்ராம் (ராகுல்! எவ்வளவு நாட்களாயிற்று தங்கள் பதிவுகளைக் கண்டு! நலம்தானே!) ராகவேந்திரன் சார், பதிவுகளைப் படித்து தொலைபேசி வாயிலாக தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அன்பு 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் சார், வினோத் சார், மற்றும் 'லைக்'குகள் அளித்த ஆதிராம் சார், செந்தில்வேல் சார், கோபால் சார், கோபு சார், ராதாகிருஷ்ணன் சார், சின்னக்கண்ணன் சார் மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

vasudevan31355
22nd July 2015, 07:29 PM
அன்பின் சுந்தரபாண்டியன் சார்,

'நெஞ்சிருக்கும் வரை' பதிவை தங்கள் முக நூலில் பதித்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் சின்ன மாமியார் திருமதி மருதம் வேலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர் சொல்வது முற்றிலும் உண்மை. கடலை கைக்குள் அடக்க இயலுமா? அது போலத்தான் நடிகர் திலகத்தின் நடிப்பை முழுமையாகப் புகழ்ந்து புரிந்து எவராலும் எழுதிவிடத்தான் முடியுமா?

நன்றி சார்.

Russelldvt
22nd July 2015, 07:40 PM
http://i59.tinypic.com/2928fmd.jpg

RAGHAVENDRA
22nd July 2015, 07:46 PM
முத்தையன் அம்மு சார்
வசந்த மாளிகை ஆனந்த் மலர்களின் நடுவே அளிக்கும் வசீகரம் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகிறது.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
22nd July 2015, 11:28 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/q82/s720x720/10955303_1475305022783822_9074651691937932747_n.jp g?oh=fcf9027a6c4e8b4ea86b85a0598f015d&oe=564C2F25&__gda__=1447839413_cb914afded0b992acf6dc0e8e582ccb 9

அன்னை இல்லத்தில் நமது மய்ய உறுப்பினர் திரு சுப்ரமணியம் ராமஜெயம்

Russelldvt
23rd July 2015, 03:33 AM
http://i60.tinypic.com/2di5939.jpg

Russelldvt
23rd July 2015, 03:34 AM
http://i60.tinypic.com/2el6vky.jpg

Russelldvt
23rd July 2015, 03:35 AM
http://i62.tinypic.com/2mpa0xv.jpg

Russelldvt
23rd July 2015, 03:36 AM
http://i57.tinypic.com/2505nad.jpg

Russelldvt
23rd July 2015, 03:37 AM
http://i60.tinypic.com/2w1wr6d.jpg

Russelldvt
23rd July 2015, 03:38 AM
http://i62.tinypic.com/24e5i1i.jpg

Russelldvt
23rd July 2015, 03:39 AM
http://i61.tinypic.com/2mwxm3q.jpg

Russelldvt
23rd July 2015, 03:40 AM
http://i61.tinypic.com/2ibch9x.jpg

Russelldvt
23rd July 2015, 03:46 AM
http://i62.tinypic.com/oaq0ph.jpg

Russelldvt
23rd July 2015, 03:47 AM
http://i60.tinypic.com/s66bma.jpg

Russelldvt
23rd July 2015, 03:47 AM
http://i61.tinypic.com/1olvs6.jpg

Russelldvt
23rd July 2015, 03:48 AM
http://i60.tinypic.com/k3vwk3.jpg

Russelldvt
23rd July 2015, 03:49 AM
http://i61.tinypic.com/15xa0c1.jpg

Russelldvt
23rd July 2015, 03:50 AM
http://i58.tinypic.com/2vifl2x.jpg

Russelldvt
23rd July 2015, 03:51 AM
http://i59.tinypic.com/1zch6x0.jpg

Russelldvt
23rd July 2015, 03:52 AM
http://i62.tinypic.com/2dqn3nq.jpg

Russelldvt
23rd July 2015, 03:53 AM
http://i58.tinypic.com/bi6veo.jpg

Russelldvt
23rd July 2015, 03:54 AM
http://i61.tinypic.com/20zda9e.jpg

Russelldvt
23rd July 2015, 03:55 AM
http://i62.tinypic.com/14bqkjt.jpg

Russelldvt
23rd July 2015, 03:55 AM
http://i59.tinypic.com/10ifbcg.jpg

Russelldvt
23rd July 2015, 03:56 AM
http://i58.tinypic.com/anm2x2.jpg

Russelldvt
23rd July 2015, 03:57 AM
http://i57.tinypic.com/11u7qt0.jpg

Russelldvt
23rd July 2015, 03:58 AM
http://i62.tinypic.com/20kbsdu.jpg

Russelldvt
23rd July 2015, 03:59 AM
http://i62.tinypic.com/2s78byv.jpg

Russelldvt
23rd July 2015, 04:00 AM
http://i61.tinypic.com/2la3jft.jpg

Russelldvt
23rd July 2015, 04:01 AM
http://i59.tinypic.com/91fj84.jpg

Russelldvt
23rd July 2015, 04:02 AM
http://i60.tinypic.com/23tl8w1.jpg

Russelldvt
23rd July 2015, 04:03 AM
http://i62.tinypic.com/3499q4i.jpg

Subramaniam Ramajayam
23rd July 2015, 05:50 AM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/q82/s720x720/10955303_1475305022783822_9074651691937932747_n.jp g?oh=fcf9027a6c4e8b4ea86b85a0598f015d&oe=564C2F25&__gda__=1447839413_cb914afded0b992acf6dc0e8e582ccb 9

அன்னை இல்லத்தில் நமது மய்ய உறுப்பினர் திரு சுப்ரமணியம் ராமஜெயம்

Thanks mr raghavender for the honour given to me. The other person wearing stripped rose color shirt is KUDANTHAI SEKHAR my close friend and a well known person in NT circles and morethan that an ardent bakthar of NADIGARTHILAM. THANKS.

RAGHAVENDRA
23rd July 2015, 07:06 AM
முத்தையன் அம்மு சார்
நீதி நிழற்படங்கள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளன. உளமார்ந்த நன்றி.

joe
23rd July 2015, 07:09 AM
I believe they released Trailer for VPK ,why it is not available in net ,unlike Karnan Trailer?
Are these guys going towards a sothappal release like Thiruvilayadal?
No promotion , No hype.

RAGHAVENDRA
23rd July 2015, 07:17 AM
ஆனால், பால் எது நீர் எது என்று பிரித்தரிய முடியாத பாமர மக்கள் சிவாஜியின் நடிப்பை புறந்தள்ளி இவர் அவரது உண்மையான வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பாரோ என சிந்திக்க தொடங்கியதன் விளைவு தான் அவரது அரசியல் தோல்விக்கு ஒரே காரணம் என்பதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம்.

ஆனால் அது தான் உண்மை.


நன்றி மித்ரன் இணைய தளம்.

மேலும் படிக்க - http://mithiran.lk/article.php?category=cinema&num=487

Russellxor
23rd July 2015, 01:11 PM
கோவை

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635576924_zpsfevqyfqz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635576924_zpsfevqyfqz.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635561518_zpsdcubgxym.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635561518_zpsdcubgxym.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635570957_zps5ucargp8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635570957_zps5ucargp8.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635564406_zpsst8wjriu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635564406_zpsst8wjriu.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635582269_zpsnobncjjk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635582269_zpsnobncjjk.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635573879_zpszydndp0n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635573879_zpszydndp0n.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635579610_zpsjzsrmdwf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635579610_zpsjzsrmdwf.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150714_185200_zpso0g0jovf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150714_185200_zpso0g0jovf.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1437635567233_zpsebn01cdc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1437635567233_zpsebn01cdc.jpg.html)

HARISH2619
23rd July 2015, 01:53 PM
திரு ரவிகிரன் சூரியா சார்,
இதை பற்றியெல்லாம் ரசிகர்களாகிய நமக்கு இருக்கும் ஆதங்கத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத அவரது குடும்பத்தினரை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.என்ன செய்வது ? நமது கொடுப்பினை அப்படி.14 ஆண்டுகளாகியும் அவரது மணிமண்டபத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாத அவரது குடும்பத்தினர் தனி ஒரு ரசிகனாக திரு சந்திரசேகரன் அவர்கள் முயற்சி செய்து பெரும்பாலான கட்சிகளை சேர்ந்தர்வர்களை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதத்தை நேரில் கூட வேண்டாம் ஒரு அறிக்கை மூலமாக வாழ்த்தக்கூட மனமில்லாதவர்களை பற்றி என்ன சொல்வது ? இதை பற்றியெல்லாம் நமது மன வேதனையை பதிவு செய்தால் நமது திரியிலேயே தேவையில்லாத மனக்கசப்புகள் வர வாய்ப்பிருப்பதால் இத்துடன் முடிக்கிறேன் .யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்

adiram
23rd July 2015, 03:11 PM
டியர் செந்தில்வேல் சார்,

கோவையில் நடிகர்திலகம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட நிழற்படங்களை பதிவிட்டதற்கு நன்றி.

எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் இத்தனை மன்றங்களும் அவரது நடிப்பைப் போற்றுவதற்காக இவ்வளவு உயிர்ப்புடன் இயங்கிவருவது அதிசயிக்க வைக்கிறது.

மன்ற மறவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

KCSHEKAR
23rd July 2015, 04:41 PM
ONE INDIA NEWS

http://tamil.oneindia.com/news/tamilnadu/unfogettable-shivaji-ganesan-231557.html

Murali Srinivas
23rd July 2015, 05:05 PM
Dear Sivaji Senthil Sir,

It is time for the next edition to start. Will you step forward and do the honours please? Kindly confirm.

Regards

eehaiupehazij
23rd July 2015, 06:54 PM
Dear Murali Sir

I feel honored and deem it a great pleasure to comply with your invitation and confirm my acceptance. Kindly inform me Sir as what I need to do!

regards, senthil

Russellxor
23rd July 2015, 07:08 PM
அந்த அறையில் பெரிய மேஜை ஒன்று உள்ளது.அறை பார்ப்பதற்கு உயர்ந்த வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது போல்பார்ப்பதற்கு இருந்தாலும் எளிமையாகவே இருக்கிறது.மேஜையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அந்த மனிதர் அமர்ந்திருக்கிறார்.அவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.தலையை மெல்ல அசைத்து பக்கத்தை புரட்டுவதில் அவரின்அந்த செய்கையை நாம் பாக்கும்போது நம்மையும் அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தியால்ர்ஈர்க்கப்படுவதை நம்மால் உணர முடிகிறது.அப்போது கதவின் கைப்பிடி திருப்பப்பட்டு,கதவை உள்ளே தள்ளிக்கொண்டுஒரு வர் உள்ளே நுழைகிறார்.மெதுவாக நடந்து வருகிறார்.நெஞ்சை நிமிர்த்தியும் ஒரு விதமாக உடம்பை அசைத்து அசைத்தும்நளினமா க நடந்து வரும் அந்த நடையைபார்க்கும் எவருக்கும் அந்த நடை பிடிக்கும். இப்போது மேஜையில் அமர்ந்திருக்கும் மனிதர் வரும் நபரை பாக்கிறார்.இப்போது இரண்டு பேரின் முகமும் நன்றாக தெரிகிறது.இருவரின்முகத்திலுமஒரு பக்கம் மட்டும் தீயினால் கருகியதைப் போன்ற தோற்றம் உள்ளது.இருவரும் பெருமளவு ஜாடையில் ஒத்துப் போகின்றனர்.முதலில்பார்த்த அந்த மனிதரை நன்றாக கவனிக்கமுடிகிறது கறுத்த கேசத்துடன் நரையும் கலந்த சிகை.சற்றே வித்தியாசமாய் புருவங்கள். அது அவரின் கம்பீரத்தை உயர்த்திக்காட்டும்படி உள்ளது.நன்றாக அமைந்த நாசி.கண்கள வசீகரம்.நேர்த்தியான உடை.அச்ச உணர்வைத் தரும் தோற்றம்.உள்ளே வந்த நபருக்குஅருமையான உடற்கட்டு.அவர் நடந்து வருவதில் ஒரு மென்மை தெரிந்தாலும்
நெஞ்சுரத்தில் பலம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இப்போது இருவரும் நேருக்கு நேர் பார்க்கின்றனர்.முதல் நபர் சற்று வயதுடையவர் என்பதால் அவரை பெரியவர் என்று வைத்துக்கொள்வோம்.அறைக்குள் வந்தவரை சின்னவர் என்று வைத்துக்கொள்வோம்.
இருவரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருந்தாலும் இருவரின் பார்வைகளிலும்வித்தியாசத்தை நன்றாக உணர முடிகிறது.சின்னவரின் பார்வை ஏக்கத்தையும் ஏளனத்தையும் கலந்த து போல் உள்ளது.பெரியவரின் பார்வைஎப்படி உள்ளது என்றால் நல்ல குடியில் பிறந்த ஒருவர்தவறு செய்த பின்னால் அதை எண்ணி வருத்தப்படுபவதைப் போன்றும் அதனுடன் தர்மசங்கடமான நிலைமையில் வெளிப்படும் உணர்வுகளையும் கலந்த பார்வையை வெளிப்படுத்துகிறார்.இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளும் போது அவர்களின் முக பாவனைகள்உலகில் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கிறது.இருவருக்குள்ளும் ஏதோ தயக்கம் இருக்கிறதுஎன்பதை அவர்களின்முகங்கள் காட்டுகின்றன.தயக்கத்தை சற்று ஒதுக்கிவிட்டு
சின்னவர் பேசுகிறார்:
"தேவையில்லையென்று நினைத்த தந்தையும்அவரை தேடி அலைந்த தந்தையும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான காட்சி"

அப்படியானால் பெரியவர் தந்தை.சின்னவர் மகன்.இருவரும் சந்திக்கும் முதல் கட்டம்.அதனால்தான் இப்படிப்பட்ட உணர்வுகளை காட்டினரோ!
என்ன ஒரு செம்மையான வெளிப்பாடு.ஊடகமாக இருந்தாலும் நிஜத்தையும் மிஞ்சுகிறதே!.
இப்படி சின்னவர் கேட்டதும் பெரியவரின் மு க மாறுதல பிரமாதம்.பேச்சு வராமல் என்ன சொல்வது என்று தயங்கும்போது,
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டுவதும்,எச்சில் தொண்டையில் இறங்குவதும் போன்ற நடிப்பா? இல்லை நிஜமா?
அடுத்தது...
சின்னவர்:
ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?எதைப் பேசுவது என்று உங்களுக்கு தயக்கம்?என்ன பேசுவதுஎன்று எனக்கு கலக்கம்?

மென்மையாக உச்சரிக்கப்பட்டாலும்
என்னே ஒரு கணீரெண்ற குரல்.

சின்னவர்:என்னை யாரென்று உங்களுக்கு தெரியுமா?
பெரியவர்;(தெரியும் என்பது போல் ஆமோதிப்பு )
சின்னவர்:என் பேர் கண்ணன்.நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை.
பெரியவர்:(தவற்றை உணர்ந்தது போலவும்
பிராயச்சித்தம் கேட்பது போலவும் பாவனையை வெளிப்படுத்துகிறார்)
சின்னவர்; ((சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு)நான் உங்களை அப்பா என்று கூப்பிடட்டுமா?ஒரே ஒரு தடவை...

அதைக்கேட்கும்போது அந்தக் குரலில் உள்ள ஏக்கமும்,கெஞ்சலும் கல்மனதைக்கூட கரைத்து விடுமே.அடிவயிற்றில்ஏதோ ஒரு உணர்வு தாக்குவதை உணர்கிறேன்.பெரியவரின் விழிகள் விழிகள் விரிகின்றன.பின் சுருங்குகின்றன.என்ன ஒரு ஆச்சரியம்!விரியும்போது வராத கண்ணீர் கண் சுருக்கலில் அணை கட்டித் தேங்கி நிற்கின்றதே.உடலே சிலிர்த்து விட்டதே.
பெரியவர்::கண்ணா...(கட்டியணைக்க ஓடி வருகிறார்.பாசத்தை காட்டும் வேகம்
நெஞ்சுக்குழி அடைப்பது போல் இருக்கும்.)

அணை உடைந்து விட்டது.

கட்டிப்பிடித்தலில் பாசம் காட்டுகின்றது.இரண்டின் தழுவல்களும்
போட்டி போடுகின்றன.
சின்னவர் என்ன நினைத்தாரோ தீடீரென்று விலகுகிறார்.விலகியபின் காரணத்தை முகம் பிதிபலிக்கின்றது.இத்தனை நாள் இல்லாத உறவு இப்போது எங்கே வந்தது?தான்அதற்கு உரிமை காட்டுவது சரியா?காட்சிகள் உணர்வுகளால் தான் இங்கே விளக்கப்படுகின்றன.எழுது கோலால் வர்ணிக்க இயாலாது.

தான் வந்த காரணத்தை கூறுகிறார்சின்னவர்.பெரியவர் காசோலை கொடுத்ததை திருப்பிக் கொடுக்கவந்தாய் சொல்லப்படுகிறது.காசோலையை இரு விரல்களால்சுண்டும் அந்த ஸ்டைலில்
பணத்தை மதிக்காத குணம்வார்த்தைகளின்றி வெளிப்படுத்தப்படுகின்றது.எந்த நடிப்பும்
பக்கம் வர அச்சமே கொல்லும் அதிரடி ஸ்டைல் அது.

பெரியவர்:கண்ணா! அது உனக்காக.உன் எதிர்காலத்திற்காக.



சின்னவர்:கடந்தகாலம் எதிர்காலம் என்று எனக்கு எதுவும்கிடையாது.
இதை வாங்குவதற்குத்தான் எனக்கு என்ன உரிமை இருக்கு?கொடுப்பதற்குத்தான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?

துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டாவின் வேகம் தோற்கும் என்பது போல் வெளிப்படும் வசன வீச்சு.
வீரியமான வார்த்தைகள்.
உச்சரிப்பு அதிர வைக்கிறது.

பெரியவர்:கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லாவிட்டாலும்,வாங்கிக் கொள்வதற்கு உனக்கு உரிமை இருக்கிறது.நீ என் பிள்ளை. நான் உன் அப்பா.
சின்னவர்:நீங்க என் அப்பாவா?
நான் உங்க பிள்ளையா?இதுவரைக்கும் நாம் அப்படியா உறவு கொண்டாடினோம்.
தொடையில் அடிக்கிறார்.அப்படி அடிப்பதிலேயே கோபம் தெரிந்து விடுகிறது.பீரோவில் இருக்கும் கண்ணாடியில் தன் முகம் பார்க்கிறார். இந்த விகாரம் தானா இவ்வளவுக்கும் காரணம்?என்று யோசிப்பது புரிகிறது.திரும்பி வருகிறார்.

.சின்னவர்:உங்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?
பெரியவர் சரி என்று தலையசைக்கிறார்.
சின்னவர்:வீட்டுக்கு முதல் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை மீது அளாவு கடந்த பாசம் பெத்தவங்க வெச்சுருப்பாங்கன்னு சொல்வாங்களே. அது உண்மையா?
பெரியவர்:ஆமா.
சுரத்தில்லாமல் வரும் பதில்.
சின்னவர்:இல்லை. பொய்.நான் பிறக்கும்போதும் நீங்கள் பணக்காரராகத்தானே இருந்தீர்கள்?
பெரியவர்:ம்ம்ம்.
சின்னவர்:நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரு காரணத்திற்காக தானே வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில் தூக்கி எறியற மாதிரி என்னைஎரிஞ்சீங்க.நீங்க பொறந்த போது உங்க அப்பாவும் இதைப்போலத்தானே செய்தாரா?
பெரியவர்:இல்லை
சின்னவர்:ஏன்?
பெரியவர்:அவர் அனாதை.இந்த வேதனையை புரிஞ்சுக்க முடியாதவர்.
சின்னவர்:இல்லை. உங்கப்பா ஏழை.அதனாலதான் அவருக்கு இதயம் இரக்கம் பாசம் எல்லாம் இருந்துச்சு.எங்கப்பா பணக்காரர்.அவர்கிட்ட இரும்பு பீரோமட்டும் தான் இருக்கு.அதுக்குள்ள்பணத்தையும்,
கௌரவத்தையும் மட்டும்தான் பூட்டி வைச்சாரு.அதனாலதான் சொந்தப்பிள்ளையையே வேண்டாம்னு சொல்லிட்டாரு.

நெத்திஅடி.இதுக்கு மேலும் தாங்க முடியுமா?செய்த பாவம் வினையாகி கேள்வி கேட்கின்றது.என்ன பேசினாலும்" தவறாகவே படும்.பூட்டி வைச்சாரு எனும்போது அவர் செய்யும் சைகை என்ன ஆக்ரோஷமான வெளிப்பாடு.

பெரியவர்:கண்ணா...
(நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கும்)

சின்னவர்:அப்பா.
என் விகாரத்துக்கு காரணமே நீங்கள்தான் என்பதை மறந்துட்டு என்னை வெறுத்து ஒதுக்கிட்டு அனாதை மாதிரி தவிக்க விட்டுட்டீங்களே!இதைவிட நான் பொறந்த அன்னிக்கே என்னை கொன்னுருக்கலாம் இல்ல.


பெரியவர்:அய்யோ!அதத்தாண்டாஅன்னிக்கு செய்யச்சொன்னேன்.அதத்தான் செய்யச் சொன்னேன்.அந்த முட்டாள் அதைச் செய்யல.நீ உயிரோட இருந்து இப்படி வந்து கேள்வி கேட்பேன்னு நினைச்சு நீ பிறந்தப்பவே உன்னை கொன்னுடச் சொன்னேன்.

பெரியரின் வாயிலிருந்துசடாரென்று: வெளிப்படுகின்றதுஇந்தப் பதில்.அவரின் இந்த வேகம் எப்படா இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்த்திருந்தது போல்
இருக்கிறது.

இடி போன்ற வார்த்தைகள்.ஆனாலும் அதைக்கெட்டு கலங்காத மனம்.இதைவிட அவமானங்களைசந்தித்திருந்தால் மட்டுமேஅதை தாங்குவதுசாத்தியம்.சின்னவரின் மனம் அது போல் இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் அந்த
பதிலை கேட்டபின்னும் அப்படியொரு அலட்சிய முகபாவத்தைகாட்ட முடியுமா?

பெ.ரியவர்:
நீ உயிரோட இருக்கிற விஷயம் சமீபத்தில் தான் எனக்கு தெரிஞ்சுது.இல்லேன்னா...
சின்னவர் :இல்லேன்னா,நீங்களேஒரு வழியா என்னைக் கொல்லுறதுக்கு முயற்சி செஞ்சிருப்பீங்க .இல்ல.
பெரியவர்:கண்ணா! நான் இப்போ குற்றவாளிக்கூண்டுல.கடந்தகாலம் சாட்சிக்கூண்டுல.நீ நீதிபதி ஸ்தானத்தில.என் குற்றங்களுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்கிறேன்.நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.

சின்னவர்:மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம எவ்வளவு ஈஸியா சொல்லிடீங்க.ஏம்ப்பா இந்த விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியாதில்ல.

பெரியவர்:(இல்லை யென்பது போல் தலையசைப்பு)தெரியனும்னு நீ விரும்பறியா?
சின்னவர்:வேண்டாம்.அழகான எங்க அம்மாவுக்கு இப்படி ஒரு அவலட்சணமான மகன் இருப்பதே தெரிய வேண்டாம்.

பெரும் யுத்தத்தை பார்த்தால் கூட இந்தளவு சிலிர்ப்பை தர முடியாது.இந்த நடிப்பின்ஆழம் யாராலும் சொல்ல முடியாது.
படைத்தலுக்கு பிரம்மன்
காத்தலுக்கு விஷ்ணு
அழித்தலுக்கு சிவன்
என்றால்
நடிப்புக்கு இவரே.

*********************திரை**********************
எந்த நாட்டுக்கும் எந்த மொழிகளுக்கும்
எந்த மக்களுக்கும் இந்தப்படம் பெரும்
பிரமிப்பையே தரும்.உலக சினிமா உலக சினிமா என்கிறார்களே அந்த உலக சினிமாக்கள் எல்லாம் இந்த படத்திற்கு முன் எந்த மூலை?

https://youtu.be/yb2gzvrNhXs

Russellxor
23rd July 2015, 07:21 PM
டியர் செந்தில்வேல் சார்,

கோவையில் நடிகர்திலகம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட நிழற்படங்களை பதிவிட்டதற்கு நன்றி.

எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் இத்தனை மன்றங்களும் அவரது நடிப்பைப் போற்றுவதற்காக இவ்வளவு உயிர்ப்புடன் இயங்கிவருவது அதிசயிக்க வைக்கிறது.

மன்ற மறவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
கோவையில் 12க்கும் அதிகமான டிசைன்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.உண்ணா விரதம்,கட்டபொம்மனின் வருகை இருந்தும் இவ்வளவுபோஸ்டர்கள்.நகரைத் தாண்டிய பகுதிகளில் எவ்வளவுஎன்று விவரம் தெரியவில்லை.
நன்றி...

J.Radhakrishnan
23rd July 2015, 08:09 PM
டியர் செந்தில்வேல் சார்,

எனக்கு மிகவும் பிடித்த தெய்வமகன் காவியத்தில் இருந்து ஒரு அற்புதமான காட்சியை மிக அருமையாக படைத்தது உள்ளீர்கள்.

மிக்க நன்றி!

Russelldwp
23rd July 2015, 09:56 PM
திரு ரவிகிரன் சூரியா சார்,
இதை பற்றியெல்லாம் ரசிகர்களாகிய நமக்கு இருக்கும் ஆதங்கத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத அவரது குடும்பத்தினரை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.என்ன செய்வது ? நமது கொடுப்பினை அப்படி.14 ஆண்டுகளாகியும் அவரது மணிமண்டபத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாத அவரது குடும்பத்தினர் தனி ஒரு ரசிகனாக திரு சந்திரசேகரன் அவர்கள் முயற்சி செய்து பெரும்பாலான கட்சிகளை சேர்ந்தர்வர்களை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதத்தை நேரில் கூட வேண்டாம் ஒரு அறிக்கை மூலமாக வாழ்த்தக்கூட மனமில்லாதவர்களை பற்றி என்ன சொல்வது ? இதை பற்றியெல்லாம் நமது மன வேதனையை பதிவு செய்தால் நமது திரியிலேயே தேவையில்லாத மனக்கசப்புகள் வர வாய்ப்பிருப்பதால் இத்துடன் முடிக்கிறேன் .யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்


கதை கேளு கதை கேளு எங்கள் சிவாஜி புகழை கெடுக்கும் கூட்டத்தின் கதை கேளு
பத்து நாளைக்கு முன்னாடி விளம்பரம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தியேட்டர் தர மறுப்பர்ரகளாம்
இன்று விளம்பரம் செய்த படத்திற்கு தியேட்டர் கொடுப்பர்ரகளாம்
ஊரெங்கும் தெருவெங்கும் சொந்த காசை போட்டு ரசிகன் போஸ்டர் அடித்து ஒட்டுவாநாம்
இவர்கள் தலைவராக இருந்தாலும் ஒரு பிட் நோட்டிஸ கூட அடிக்க மாட்டர்களாம்
பிறந்தநாள் நினைவு நாளில் ஆங்காங்கே ரசிகர்கள் அன்னதானம் வழங்குவார்களாம்
இவர்கள் நமக்கு தேவையில்லாத வேலை என இருந்து விடுவார்களம்
அரசு இடம் கொடுத்தாலும் மணி மண்டபம் கட்ட முயற்சி செய்ய மாட்டார்களாம்
முயற்சி செய்பவர்களுக்கும் முட்டுக்கட்டை போடுவார்களாம்
ஆயிரம் ஊர்களில் ஆபரண மாளிகை திறந்து வைப்பார்களாம் ஆனால்
துணி போட்டு மூடிய சிலை திறக்க முயற்சி செய்ய மாட்டர்களாம்
யார் யாரோ இந்த கலை தெய்வத்திற்கு சிலை வைத்து பெருமை தேடுவார்களாம்
ஆனால் இவர்களோ சொந்த திரைஅரங்கில் கூட ஒரு மார்பளவு சிலை வைக்க மாட்டர்களாம்

அரசியல் பலமின்றி பணபலமின்றி சிவாஜி புகழ் ஒன்றே நோக்கமென்று உறுதியான உணர்வுடன்
பல ஊர்களில் இருந்து வந்து உண்ணாநோன்பு மேற்கொண்ட ரசிகர்கள் எங்கே இவர்கள் எங்கே
ஆண்டவா இத்தனை நாள் எங்கள் தலைவன் இந்த தமிழகத்தில் பிறந்ததுதான் பாவம் என்று நினைத்தோம் அனால் இப்போதுதான் தெரிகிறது இந்த குடும்பத்தில் பிறந்ததும் பாவம் என்று

uvausan
23rd July 2015, 10:32 PM
திரு செந்தில்வேல் , உங்கள் 1000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் - ஒவ்வொரு பதிவுக்கு பின்பும் உங்கள் பற்றுதல் , உழைப்பு கண் கூடாக தெரிகின்றது . தெய்வ மகன் - மூன்று nt யும் சந்திக்கும் அழகை மிகவும் ஆத்மார்த்தமாக உங்கள் எளிய நடையில் எழுதியுள்ளீர்கள் . எல்லோருக்கும் பிடித்த , என்றுமே நெஞ்சை விட்டு நீங்காத காட்சி இது .

Russelldvt
24th July 2015, 02:30 AM
வசந்தமாளிகை தொடர்ச்சி..

http://i60.tinypic.com/2lidcli.jpg

Russelldvt
24th July 2015, 02:31 AM
http://i59.tinypic.com/1zyvfyv.jpg

Russelldvt
24th July 2015, 02:32 AM
http://i58.tinypic.com/1z33vw1.jpg

Russelldvt
24th July 2015, 02:34 AM
http://i58.tinypic.com/2mp0g9z.jpg

Russelldvt
24th July 2015, 02:36 AM
http://i61.tinypic.com/2ynp0zk.jpg

Russelldvt
24th July 2015, 02:38 AM
http://i62.tinypic.com/1zwkoi9.jpg

Russelldvt
24th July 2015, 02:39 AM
http://i60.tinypic.com/tajvhz.jpg

Russelldvt
24th July 2015, 02:40 AM
http://i61.tinypic.com/2wce2wg.jpg

Russelldvt
24th July 2015, 02:41 AM
http://i62.tinypic.com/2vt1elv.jpg

Russelldvt
24th July 2015, 02:42 AM
http://i62.tinypic.com/vx1c9f.jpg

Russelldvt
24th July 2015, 02:43 AM
http://i59.tinypic.com/30mslt0.jpg

Russelldvt
24th July 2015, 02:44 AM
http://i62.tinypic.com/20tothv.jpg

Russelldvt
24th July 2015, 02:45 AM
http://i59.tinypic.com/30kdsw5.jpg

Russelldvt
24th July 2015, 02:46 AM
http://i57.tinypic.com/xe0n7d.jpg

Russelldvt
24th July 2015, 02:48 AM
http://i59.tinypic.com/295ct5e.jpg

Russelldvt
24th July 2015, 02:48 AM
http://i58.tinypic.com/1op3ev.jpg

Russelldvt
24th July 2015, 02:49 AM
http://i61.tinypic.com/2enxl38.jpg

Russelldvt
24th July 2015, 02:50 AM
http://i62.tinypic.com/2m6lsn9.jpg

Russelldvt
24th July 2015, 02:52 AM
http://i59.tinypic.com/5lc6zs.jpg

Russelldvt
24th July 2015, 02:52 AM
http://i60.tinypic.com/fbma8y.jpg

Russelldvt
24th July 2015, 02:53 AM
http://i57.tinypic.com/67tc3n.jpg

Russelldvt
24th July 2015, 02:54 AM
http://i62.tinypic.com/maex46.jpg

Russelldvt
24th July 2015, 02:56 AM
http://i61.tinypic.com/2rmtikz.jpg

Russelldvt
24th July 2015, 02:57 AM
http://i62.tinypic.com/2wqz8kl.jpg

Russelldvt
24th July 2015, 02:57 AM
http://i57.tinypic.com/soc0e8.jpg

Russelldvt
24th July 2015, 02:58 AM
http://i57.tinypic.com/fng36t.jpg

Russelldvt
24th July 2015, 03:00 AM
http://i60.tinypic.com/29via1z.jpg

Russelldvt
24th July 2015, 03:01 AM
http://i57.tinypic.com/2n8tque.jpg

Russelldvt
24th July 2015, 03:01 AM
http://i62.tinypic.com/kda8lk.jpg

Russelldvt
24th July 2015, 03:02 AM
http://i59.tinypic.com/2hd5nk7.jpg

Russelldvt
24th July 2015, 03:03 AM
http://i62.tinypic.com/ybrp.jpg

Russelldvt
24th July 2015, 03:04 AM
http://i57.tinypic.com/ftmqeu.jpg

Russelldvt
24th July 2015, 03:05 AM
http://i57.tinypic.com/xgbcj9.jpg

Russelldvt
24th July 2015, 03:06 AM
http://i58.tinypic.com/2lsce45.jpg

Russelldvt
24th July 2015, 03:09 AM
http://i60.tinypic.com/16ne3m.jpg http://i59.tinypic.com/2w66qki.jpg

Gopal.s
24th July 2015, 03:14 AM
சிவாஜி செந்தில்,

தாங்கள் ,நடிகர்திலகம் திரி16 தொடங்க பொருத்தமானவரே. உங்களை வழி மொழிந்து வாழ்த்துகிறேன்.

பாகம் 11 ஐ தொடங்கிய போது ,நடிகர்திலகம் பற்றி எழுதியவை எனக்கு நிழலாடுகிறது.

சிவாஜி என்ற மாமனிதர்.

ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.

நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.


வாழ்த்துக்கள் செந்தில்.

Russelldvt
24th July 2015, 03:16 AM
http://i62.tinypic.com/f43gx.jpg

Russelldvt
24th July 2015, 03:17 AM
http://i59.tinypic.com/xelvgi.jpg

Russelldvt
24th July 2015, 03:17 AM
http://i62.tinypic.com/27a5l.jpg

Russelldvt
24th July 2015, 03:18 AM
http://i62.tinypic.com/mwqtsk.jpg

Russelldvt
24th July 2015, 03:19 AM
http://i57.tinypic.com/2hqvz9x.jpg

Russelldvt
24th July 2015, 03:20 AM
http://i59.tinypic.com/2ih4jn6.jpg

Russelldvt
24th July 2015, 03:20 AM
http://i58.tinypic.com/35beff6.jpg

Russelldvt
24th July 2015, 03:21 AM
http://i58.tinypic.com/2yvw9s7.jpg

Russelldvt
24th July 2015, 03:21 AM
http://i58.tinypic.com/2yl7j1z.jpg

Russelldvt
24th July 2015, 03:22 AM
http://i58.tinypic.com/2ng7ub9.jpg

Russelldvt
24th July 2015, 03:23 AM
http://i60.tinypic.com/35icgi9.jpg

Russelldvt
24th July 2015, 03:24 AM
http://i61.tinypic.com/10cvzx1.jpg

Russelldvt
24th July 2015, 03:24 AM
http://i57.tinypic.com/1gnf3q.jpg

Russelldvt
24th July 2015, 03:25 AM
http://i58.tinypic.com/8yf6op.jpg

Russelldvt
24th July 2015, 03:26 AM
http://i61.tinypic.com/5b7kgi.jpg

Russelldvt
24th July 2015, 03:27 AM
http://i61.tinypic.com/2v2w5mc.jpg

Russelldvt
24th July 2015, 03:27 AM
http://i58.tinypic.com/2a1et0.jpg