PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

sivaa
25th March 2015, 11:30 PM
Hi Friends

My name is Jeyakumar. Am from Chennai, Porur.

I have heard a lot about Nadigar Thilagam Thread in Mayyam.

Being one of his very ardent devotee, I would like to participate as and when time permits.

I will also post about Nadigar Thilagam regarding his films, social activities etc.,

I had witnessed the grand success of trailer release function of Veera Pandiya Kattabomman, Historical Blockbuster of Nadigar Thilagam.

Mr. VCS of Madurai knows me and so is Mr. Sunderrajan.

This film should be taken in the right perspective to the today's youth and younger generation so that they understand the difficulties that we underwent in getting our freedom.

Thanks and Regards
Jeyakumar

வணக்கம் திரு ஜெயகுமார்

நடிகர் திலகம் திரியில் புதியவராக
இணைந்திருக்கும் தங்களை வருக வருக வென
அன்புடன் வரவெற்கின்றேன்

நடிகர் திலகம் திரி மேலும் சிறப்புற
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

RAGHAVENDRA
25th March 2015, 11:50 PM
Hi Friends

My name is Jeyakumar. Am from Chennai, Porur.

I have heard a lot about Nadigar Thilagam Thread in Mayyam.

Being one of his very ardent devotee, I would like to participate as and when time permits.

I will also post about Nadigar Thilagam regarding his films, social activities etc.,

I had witnessed the grand success of trailer release function of Veera Pandiya Kattabomman, Historical Blockbuster of Nadigar Thilagam.

Mr. VCS of Madurai knows me and so is Mr. Sunderrajan.

This film should be taken in the right perspective to the today's youth and younger generation so that they understand the difficulties that we underwent in getting our freedom.

Thanks and Regards
Jeyakumar

வாழ்க சிவாஜி
வருக ஜெய்குமார்..
தங்களின் வருகையின் மூலமாக நடிகர் திலகத்தின் ரசிகர்களி்ன் பங்களிப்பில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தில் நம் இறைவனின் சாதனைகளும் சரித்திரங்களும் எடுத்துச் செல்லப்படும் என்பதில் ஐயமில்லை.
நல்வரவு..

https://www.youtube.com/watch?v=hW3ttn2hqfU

Murali Srinivas
26th March 2015, 12:19 AM
அனைவருக்கும் வணக்கம்.

இரண்டு மூன்று நாட்கள் ஹப்பிற்கு வர முடியவில்லை. நமது நடிகர் திலகம் திரி மிக அழகாக முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த பெருமைக்குரியவர் செந்தில்வேல் அவர்கள்தான். வாழ்த்துகள் செந்தில்வேல்! வாசுகி மாதம் இருமுறை பருவ இதழில் வெளியான நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் கட்டுரை அப்போது நானும் படித்திருக்கிறேன். ஆனால் 20 வருடங்களுக்கு பிறகு இப்போது படிக்கும்போதும் வெகு சுவையாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை தொடரை எழுதி வந்த பேராசிரியர் ராமு அவர்கள் எதிர்பாராதவிதமாக திடீரென்று காலமாகி விட இந்த அருமையான கட்டுரை தொடர் பாதியில் நின்றது. நடிகர் திலகத்தை வைத்து ஒரு டாகுமெண்டரி படம் ஒன்றையும் இந்த (மாநிலக் கல்லூரி?) பேராசிரியர் தொடங்கியிருந்தார். அதுவும் வெளிவராமல் போனது. தாய் வார இதழிலும் நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்றை இவர்தான் எழுதியதாக நினைவு. தொடர்ந்து நடிகர் திலகம் எழுதிய நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா தொடர் நீங்கள் பதிவிடப் போகிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

சந்திரசேகர் சார்,

சுதாங்கனின் செல்லுலாய்ட் சோழன் கட்டுரையும் சரி, நீங்கள் மாலை மலர் நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையும் சரி நன்றாகவே வந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ள அனைத்துப் பாத்திரங்களுக்கும் பொருத்தமாக நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஸ்டில்ஸ் பிரமாதம்.

ஆர்கேஎஸ்,

சேலத்தை சேர்ந்த அந்த மனிதர் சொன்ன சம்பவம் உண்மையிலே மிக நெகிழ்வான சம்பவம் மட்டுமல்ல நடிகர் திலகம் என்பவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவர் என்பது மட்டுமல்ல நெருங்கி பழகியவர் அனைவரும் சொல்வது போல் மிகச் சிறந்த மனிதன் [A Great Human being].

வெள்ளை ரோஜாவின் போஸ்டர்கள் அட்டகாசம்! ஒரு சிறிய இடைவெளிக்கு பின் கோவை ராயலில் வெளியாகும் நடிகர் திலகத்தின் இந்தப் படம் கோவையை கலக்கும் என்பது திண்ணம். மிகச் சரியாக ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் வெளியாகிறது இந்தப் படம்.

ரவி,

இப்படி எப்போதாவது வராமல் அடிக்கடி வாருங்கள்!

அன்புடன்

Murali Srinivas
26th March 2015, 12:20 AM
நடிகர் திலகம் திரியில் இன்று இணைந்திருக்கும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் ஜெயகுமார் அவர்களை நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என்று சொல்லி இங்கே உங்கள் பங்களிப்பு அமோகமாக விளங்கட்டும் என வாழ்த்துகிறேன்.

அதே போல் நமது நண்பர் சிவாஜி செந்தில் அவர்களின் முயற்சியால் திரியில் இணைந்து பங்களிப்பு செய்ய தயாராகும் Dr. ரமேஷ் பாபு அவர்களையும் வரவேற்கிறேன். மூத்த ரசிகர் திரு சுவாமி துரைவேலு அவர்களையும் பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
26th March 2015, 12:22 AM
எம்ஜிஆர் அவர்களின் திரியில் முக்கிய பங்களிப்பாளர் சகோதரர் லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் சார்பிலும் நமது நடிகர் திலகத்தின் திரி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!

அன்புடன்

Murali Srinivas
26th March 2015, 12:25 AM
ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் இளைய சகோதரர் யுகேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துகள்!

யுகேஷ், தூத்துக்குடியிலிருந்து நடிகர் திலகத்தின் மூத்த ரசிகர் திரு நடராஜன் அவர்கள் [பராசக்தியை அது முதன் முதலில் வெளியான 1952-ம் ஆண்டே பார்த்தவர்] நீங்கள் நடிகர் திலகம் திரியில் பதிவேற்றம் செய்த நடிகர் திலகத்தின் பல அரிய புகைப்படங்களுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க சொன்னார்!

அன்புடன்

Russellxor
26th March 2015, 10:22 AM
Different effects video

Veerapandiya kattabomman: http://youtu.be/PAFrDQYlvGc

kalnayak
26th March 2015, 11:08 AM
வாங்க பெருமாள் ஜெய்குமார் வாங்க.

நடிகர் திலகம் திரிக்கு மேலும் வலுக்கூட்ட வந்திருக்கும் தங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.

JamesFague
26th March 2015, 11:12 AM
Warm Welcome to Mr Perumal Jai to this glorious and wonderful thread of Acting God.



Mr Senthilvel


Your dedication and hardwork is amazing. Please continue the good work.


Regards

Russellxor
26th March 2015, 03:03 PM
சிவாஜி கணேசன் 01\10\12: http://youtu.be/vbMHm6eEzRE

Russellxor
26th March 2015, 09:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427385419015_zpsmptmshk2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427385419015_zpsmptmshk2.jpg.html)

RAGHAVENDRA
26th March 2015, 09:33 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/sivajistatuenenjirukkumsongfw_zpsyzxf3nnn.jpg

நிழற்படம் ...
நினைவுகளை மீட்டும்...
காலத்தைக் காட்டும்..
நேரத்தை ஓட்டும்...
உறவுகளைக் கூட்டும்...
எல்லாம் வல்லது..
ஆனால்..
நிழற்படம்..
மனிதனை அழ வைக்குமா...
ஆம்.. அழ வைக்கும்...
நிழற்படம்...
மனிதனை உணர்ச்சி வசப்படுத்துமா..
ஆம்.. உணர்ச்சி வசப்படுத்தும்..
நிழற்படம்..
உயிர் பெறுமா...
ஆம்... உயிர் பெறும்...
நிழற்படம்...
நம்மை ஓ..வென்று கதற வைக்குமா..
நிச்சயம் செய்யும்...
செய்வீர்கள்...
தான் காலடி பதித்து ஆடிப்பாடிய
தலத்தில்..
தானே சிலையாய் நிற்கும்..
அந்த உன்னதக் கலைஞனை
நினைத்தால்...
இந்த நிழற்படம்...
இதையெல்லாம் செய்ய வைக்கும்...
இதோ ...
நம் கண்ணீர் இந்த சிலையை
நனைப்பதும்..
அதில் அந்த சிலையும் உருகுவதும்..
அதில் உள்ள அந்த உயிர்
ஓடி வந்து நம்மைத் தேற்றுவதும்..
இதெல்லாம் நடக்கத்தானே செய்கின்றன...
இந்த வறண்ட பூமி
இந்தக் கோடையில்
தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்கின்றது..
நம்முடைய கண்ணீரால்...

Russelldwp
26th March 2015, 10:16 PM
Hearty Welcome to Mr.Jayakumar and request you to give more news about our Great Nadigar thilagam in this thread

C. Ramachandran

eehaiupehazij
27th March 2015, 06:44 AM
Hearty welcome to newbee Mr. Perumal Jai for his initiative and enthusiasm to participate and to contribute for the cause of NT in the days to come
senthil

eehaiupehazij
27th March 2015, 09:17 AM
Congrats Yukesh Babu. Almighty's blessings on your baby be showered.
senthil

Gopal.s
27th March 2015, 10:19 AM
Yugesh Babu,

Our Hearty Blessings to the new born. Congrats.

Dear Loganathan,

Pl.Accept my condolence for your irrepairable loss.

Our Hearty welcome to Jaykumar.

JamesFague
27th March 2015, 11:15 AM
There is an article by Crazy Mohan in The Hindu - Tamil about his experience in watching the

movie of Nitchaya Tamboolam in Eros Theatre in Adyar as well as the award he received for the

movie of Aboora Sahaodarargal from NT.

Could anyone have the facility can reproduce the same here.



Regards

Russellxss
27th March 2015, 11:51 AM
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11030851_451512941672484_2407872968187298410_n.jpg ?oh=6b74ec9140beb21056c24a306d0a0883&oe=557705BC


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
27th March 2015, 12:02 PM
நமது மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் ரசிகரும் மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் சரவணன் அவர்கள் நடித்து வெளிவரும் இரண்டாவது திரைப்படம் சரித்திரம் பேசு படத்திற்கு மதுரை மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்.


https://scontent.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/p480x480/11091261_451515165005595_8858025001036565295_n.jpg ?oh=6b457c1e3fec1f0be6f42bf463b67351&oe=5576577B

eehaiupehazij
27th March 2015, 12:04 PM
For Vasu as well as everyone


http://tamil.thehindu.com/cinema/cinema-others/கிரேசியைக்-கேளுங்கள்-26-சிவாஜி-கையால்-விருது/article7039111.ece

eehaiupehazij
27th March 2015, 12:58 PM
Gap filler Nostalgia : Aandavan Kattalai

The single most song sequence that has multiple answers to life's complications, egos and intricacies....the Poathimaram to Budhdhaa? The end point of color change in a titration process?
Pattinaththaar's karumbu?

Life ends ultimately as a groundnut peel?! Watch and perceive the moral taught by NT's superb action depiction at the end when he just peels off groundnuts....and pooh-poohs the husks!!

https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc

Russellxor
27th March 2015, 01:52 PM
இன்னொரு பக்கம் என்ற தலைப்பில் வாசுகி இதழ் வாரம் ஒரு பிரபலத்தைப்பற்றி கட்டுரை வெளியிட்டது.அதில் நடிகர்திலகத்தைப்பற்றி அந்த இதழில் வந்த கட்டுரை

Paga1
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427443475935_zps7mzh9vy8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427443475935_zps7mzh9vy8.jpg.html)

Contd...

Russellxor
27th March 2015, 01:53 PM
Page2

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427443479631_zpshctqqvx9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427443479631_zpshctqqvx9.jpg.html)

Russellxor
27th March 2015, 01:55 PM
Page3

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427443483296_zps7fhw8naw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427443483296_zps7fhw8naw.jpg.html)

Russellxor
27th March 2015, 01:56 PM
Page4

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427443486775_zpse3lv72up.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427443486775_zpse3lv72up.jpg.html)

Russellxor
27th March 2015, 01:57 PM
Page5

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427443490357_zpsrx5sxz5d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427443490357_zpsrx5sxz5d.jpg.html)

Russellxor
27th March 2015, 02:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427443883915_zpsag3uvhka.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427443883915_zpsag3uvhka.jpg.html)

Russellxor
27th March 2015, 02:17 PM
செவாலியே விழாவில் நடிகர்திலகத்தின் பேச்சு


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427445660814_zpscyemu3fu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427445660814_zpscyemu3fu.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427445669005_zpsxjtjbgtz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427445669005_zpsxjtjbgtz.jpg.html)

Russellxor
27th March 2015, 02:20 PM
[emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574] [emoji574]


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427445615387_zpscuveca6e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427445615387_zpscuveca6e.jpg.html)
[emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571] [emoji571]

Russellxor
27th March 2015, 02:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427447111420_zpseecad3br.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427447111420_zpseecad3br.jpg.html)

Russellxor
27th March 2015, 02:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427447107123_zpse8tdovfz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427447107123_zpse8tdovfz.jpg.html)

Harrietlgy
27th March 2015, 04:01 PM
சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தைப் பற்றி கூறுங்களேன்?

சிறு வயதில் எனக்குப் பிடித்த விளை யாட்டு, எந்தப் பேப்பரைப் பார்த்தாலும் எந்தக் காலி சுவரைப் பார்த்தாலும் முதல் காரியமாக அதில் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்கிற சதுரத்தை எழுதுவது தான். இந்த விநோத சதுரத்தை நீளவாக் கில், அகலவாக்கில் என்று எப்படி வாசித்தாலும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்றுதான் வரும்.

பெரியவனானதும் இந்த விளையாட்டு வேறு விதமாக தீவீர மானது. இரண்டு வாரங்கள் அடையார் ஈராஸ் தியேட்டரில் ஓடிய நடிகர் திலகம் சிவாஜியின் ‘நிச்சயத் தாம்பூலம்’படத்தை ‘மோகன் வந்தாச்சா... படம் ஆரம் பிக்கலாமா?’ என்று தியேட்டர் ஆப் பரேட்டர் கேட்கும் அளவுக்கு அத்தனை ஷோக்களையும் பார்த்தேன்.

‘படைத்தானே…’ என்று சிவாஜி சாரின் சோலோ பாடலை சக மாணவர்களு டன் விசிலடித்தபடி கண்டு மகிழ்ந்திருக் கிறேன். ஆமாம்! சிவாஜி சார் வாய் வழி யாக பாட்டோ, வசனமோ… வந்தால் அது ஜிலேபி போலத்தானே இனிக்கும்!

என் நண்பன் என்னை சீண்டுவதற்கா கவே ‘சிவாஜி ரொம்ப Over Acting’ என்பான். அதற்கு நான் ‘சிவாஜிக்குப் பிறகு Actin Over’ என்பேன். இதைப் பின்னாளில் பல இடங்களில் சொல்லி ‘கிளாப்ஸ்’ வாங்கியிருக்கிறேன்.

சிவாஜி பேசினாலும், சிவாஜியைப் பற்றிப் பேசினாலும் கிளாப்ஸ் வரும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த நடிகர் திலகம் கையால் ஒருநாள் நானும் விருது வாங்குவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. எப்போதுமே நினைக்காத கனவுதானே பலிக்கும்!

கமல் சாரின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் வெள்ளி விழா வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. எதையும் வித்தியாசமாக செய்யும் கமல் சார், தெலுங்கில் இருந்து நாகேஸ்வர ராவ், மலையாளத்தில் இருந்து மது, தமிழில் இருந்து சிவாஜி என்ற மூவர் அணியை மேடையில் கவுரவ விருந்தினர்களாக உட்கார வைத் தார். தோட்டாதரணி, பி.சி.ராம், பி.லெனின், வசனம் எழுதிய அடியேன்… இப்படி எல்லோருக்கும், சிறப்பு விருந்தினர்கள் தலா 6 பேர் என்கிற கணக்கில் விருது வழங்கினார்கள்.

‘நிச்சயத் தாம்பூலம்’ சிவாஜி சார் கையால் விருது வாங்க மனசுக்குள் திடமாக ‘நிச்சயித்து’ வாயில் போட்டிருந்த ‘தாம்பூலத்தை’ துப்பாமல் முழுங்கி டென்ஷனாக அமர்ந்திருந்தேன். கமல் சார் ‘குள்ள’ அப்புவாக வந்து கலைஞரிடம் தனக் கான விருதை வாங்கிச் சென்றார். பிறகு, நிகழ்ச்சியைத் தொகுத்தவர் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்களைத் தொடர்ந்து படிக்க, ஒவ்வொருவராக மேடையேறி அந்த மூவரில் ஒருவரிடம் விருதினை வாங்கிச் சென்றார்கள்.

‘கைக்கு எட்டிய சிவாஜி, ஜிலேபியாக விருது வழங்கி என் வாய்க்கு எட்டுவாரா?’ என்ற கனவில் வசனகர்த்தாவான அடியேன் விசனகர்த்தாவானேன். எந்த தெய்வத்தை வேண்டினால் என்னுடைய நேயர் விருப்பம் நிறைவேறும் என்று எண்ணியபடி மேடையில் அமர்ந்த கலைஞரைப் பார்த்ததும், ‘பராசக்தி’ நினைவுக்கு வந்தாள். அவளிடம் வேண்டிக்கொண்டேன். அப்புறமென்ன சிவாஜியை அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ சிவாஜிக்கு என்னை அறிமுகப் படுத்தினாள். அந்த சிங்கத்தின் கையால் அன்று விருது வாங்கியது என் அதிர்ஷ்டம்!

பிறகு சிவாஜியின் மைந்தர் பிரபுவுக்காக ‘சின்ன மாப்ளே’, ‘சின்ன வாத்யார்’, ‘வியட்னாம் காலனி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியபோது சிவாஜி சாரின் போக் ரோடு அன்னை இல்லத்துக்குச் செல்லும் பாக்யம் கிடைத்தது. அப்போது சிவாஜியை சந்தித்து சகஜமாக உரையாடு வேன். ஒவ்வொருமுறையும் பேச்சு முடியும்போது மறக்காமல் ‘தம்பி… நாடகத்தை விட்டுறாதீங்க!’ என்பார் நடிகர் திலகம். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... இந்துவே இந்துவே… தமிழ் இந்துவே..!’

eehaiupehazij
27th March 2015, 05:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427447107123_zpse8tdovfz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427447107123_zpse8tdovfz.jpg.html)

This is not only a statement from the inner heart core of Malayaalam actor de facto NT on our acting demigod but also the verdict and endorsement by global cine goers who have grown up watching NT films!!

Madhu had taken to the footsteps of NT in many a Malayalam movies and he graced the NT film Bharatha Vilas as a token of respect to NT in the song sequence Indhiya Nadu en veedu!! He had also reproduced the acting style of NT in the Malayalam version of Vaazhkkai as Jeevitham!

https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4

Watch youthful Madhu with Sheela in the evergreen national award movie Chemmeen!

https://www.youtube.com/watch?v=b7JIfXxw6OU

RC
28th March 2015, 08:37 AM
கழுகார் பதில்கள்!

டி.பிரேம்குமார், கோயம்புத்தூர்6.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் உயர்ந்த விருதுகள் அளிக்காதது வேதனைக்குரிய விஷயம்தானே?
நடிகர் திலகம் என்ற பாராட்டைவிட சிவாஜிக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும். ரசிகர்கள் அளிக்கும் பட்டத்துக்கு இணையானது அல்ல, அரசாங்கம் அளிக்கும் பட்டங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருக்கிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்.’ அவரது குரலைக் கேட்கும்போது காது அதிர்கிறது. பார்க்கும்போது கண்கள் துடிக்கின்றன.

sivaa
28th March 2015, 11:27 AM
http://i59.tinypic.com/14lty5c.jpg

sss
28th March 2015, 01:19 PM
Thanks : Astrologer Krishnamoorthi

நான் படிக்கும் காலங்களில் சுமார் இருபது வயது வரைக்கும்,நடிகர் திலகம் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன்.வேறு யார் படமும் அதிகம் போகமாட்டேன்.

இப்போது நாப்பது வருடமாக சினிமா போவதில்லை

எதற்கு சொல்லுகிறேன் என்றால், அனுபவம் தெரிந்துகொள்ளவேண்டும். தாமரையில் நீர் எப்படி பட்டும் படாமலும் இருக்கிறதோ அதுபோல் நாம்,. இந்த உலகத்தில் பட்டும் படாமலும் இருந்தால் நமக்கு மன நிம்மதி வந்துவிடும்.

அந்த காலத்தில் குடும்ப பாங்கான சினிமா நடிகர் திலகம் அதுதான் ஒரு மனிதனை பல அனுபவத்தில் கொண்டு விடும். குடும்பம் பிரியாது. இப்ப உள்ள படங்களை பார்ஹ்தால் குடும்பம் பிரிந்துவிடும் அன்பர்களே.

ஆகவே, எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்ட தில்தான் இருக்கிறது.

எதையும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நாமதான் தவறாக வாழ்கிறோம் என்பதனை நாம் எப்போது புரிந்துகொள்கிறோமோ அப்போதே நமக்கு வெற்றிதான்..

https://www.facebook.com/tkmoorthiOnline
https://www.facebook.com/tkmoorthiOnline/posts/712026185561211

eehaiupehazij
28th March 2015, 02:26 PM
கழுகார் பதில்கள்!

டி.பிரேம்குமார், கோயம்புத்தூர்6.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் உயர்ந்த விருதுகள் அளிக்காதது வேதனைக்குரிய விஷயம்தானே?
நடிகர் திலகம் என்ற பாராட்டைவிட சிவாஜிக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும். ரசிகர்கள் அளிக்கும் பட்டத்துக்கு இணையானது அல்ல, அரசாங்கம் அளிக்கும் பட்டங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருக்கிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்.’ அவரது குரலைக் கேட்கும்போது காது அதிர்கிறது. பார்க்கும்போது கண்கள் துடிக்கின்றன.




For our satisfaction ....we resort to say so many consoling statements as to why NT has not been conferred with any higher awards of Indian Government. Even as admirers and followers of NT like Sanjeev Kumar or Kamalahasan or Saaradha...were honoured multiple times...the thesaurus of global acting...the dictionary of acting traits...NT was ignored and insulted during his life time for obvious reasons that are open secrets. Even now our eyes got dried up...shameful people...shameless actions and horse-trades lobbies...digging in his own soil .... even though he had emerged out from his Heaven like a Phoenix proving his success and rerun value through the pride of Tamil Cinema KARNAN....do you expect these vision less eyes searching in darkness the existence of a black cat...can do justice to NT? NT deserves even though posthumous, a Bharath Rathna for having made this nation proud with his VPKB winning accolades abroad and for his indelible characterization of roles which cannot even be thought of by these so called Oscar winners hitherto. We all perish as mortals, but NT remains forever as an immortal icon towards whose feet these awards or honours should line up to get honoured in turn!!


Even to understand the strength of ahimsa taught by our Mahaathmaa we needed a foreigner Attenborough to unearth the facts and figures culminating into an Oscar winning Movie Gandhi!! I am sure one day some one from a foreign soil will come to our solace to retrieve the latent talents of NT for a global projection leading to a life time Oscar for a foreign actor who is incomparable to any of his predecessors or footsteppers!! Hopes make us live!!! At that time these cats will also come out shamelessly!!

senthil's personal opinion only

Gopal.s
28th March 2015, 05:39 PM
Today,I watched Iruvar Ullam in Kalaignar TV for the 36 th time. But it absorbs me totally even today .Even New Movies can not do this magic. Kudos to nadigarthilagam-Sarojadevi-Kalaignar-Prasad- K.V.Mahadevan-kannadasan-Lakshmi. Wah!!! What a masterpiece!!!



இருவர் உள்ளம்- 1963

நடிகர்திலகத்தின் நடிப்பில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.

சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.

இருவர் உள்ளத்தின் கதை-

மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.

ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.

மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.

முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?

அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.

ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.

சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)

பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.

கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.

பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.

Russellbpw
28th March 2015, 08:55 PM
மலைகோட்டை திருச்சியில் அண்ணனின் வருகை.

APRIL 3rd ONWARDS - GAIETY - DAILY 4 SHOWS

ஏப்ரல் 3 ( GOOD FRIDAY ONWARDS ) முதல் திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா, லக்ஷ்மி, நாகேஷ், பாலையா, எம் என் நம்பியார் மற்றும் பலர் நடித்த இனிய பாடல்கள், சஸ்பென்ஸ் காட்சிகள் அடங்கிய சிறந்த குடும்ப சித்திரம் "தங்கைக்காக" திரையிடப்பட்ட உள்ளது.


1) அங்கமுத்து தங்கமுத்து பள்ளிக்கு போனாளாம்

2) உன்னை தேடிவரும் எதிர்காலம்

3) தாயின் முகம் இங்கு நிழலாடுது

4) அழகே நீ ஒரு கதைசொல்லடி

5) வெள்ளிகிழமை

6) எதையும் தாங்குவேன் தங்கைக்காக

ஆகிய இனிய பாடல்கள் நிறைந்த திரைப்படம்.

APRIL 3rd ONWARDS - GAIETY - DAILY 4 SHOWS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/30x40%20final%20mail_zpscatozqzx.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/30x40%20final%20mail_zpscatozqzx.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/cc_zpsit1bnymm.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/cc_zpsit1bnymm.jpg.html)


POSTER DESIGN - "DESIGN KING" MADURAI SUNDERRAJAN

Russellbpw
28th March 2015, 09:13 PM
தொடர்ந்து நடக்கும் கொலைகள்.....செய்வது யார்....?

உண்மை அறிய முயற்சிக்கும் FATHER ......அவரும் கொல்லபடுகிறார் !

கொலைகாரனின் அடுத்த இலக்கு யார் ?

கொங்கு மண்டலம் கோவை நகரில் ராயல் திரை அரங்கில் APRIL 3 onwards....விசாரிக்க வருகை தருகிறார் நமது சிறப்பு புலனாய்வு அதிகாரி திரு ஜான் !!


FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vr1_zpsyfm3fbkv.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vr1_zpsyfm3fbkv.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vellair1_zpsfbuve3bw.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vellair1_zpsfbuve3bw.jpg.html)


விடாதே....பிடி......!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vr2_zpsmfnuvzem.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vr2_zpsmfnuvzem.jpg.html)

uhesliotusus
29th March 2015, 05:30 PM
என்னவோ போங்க. மறுபடி மறுபடி....

அவர் நினைத்தால் சிவாஜியின் உயரத்தைத் தொடலாம்....

இவர் நினைத்தால் சிவாஜியை நெருங்கலாம்.....

இவர்தான் சிவாஜியின் வாரிசு....

அவர்தான் சிவாஜியின் பெயரைக் காப்பாற்ற வந்தவர்.....

இன்னும் கொஞ்ச காலத்தில் சிவாஜியை பீட் செய்து விடுவார்....

மறுபடி மறுபடி புலம்பல்களுடன் கூடிய அலம்பல்கள்.

எத்தனை முறைதான் சொல்வது.

எவரும் எட்ட முடியா எவரெஸ்ட் சிவாஜி.

அந்த எவரெஸ்ட்டை.. யாருப்பா அது... டென்சிங் தொட்டான்.

இந்த நடிப்பு எவரெஸ்ட்டை எவர்தான் நெருங்க முடியும்.

அட நெருங்க வேணாம்பா... அண்ணாந்தாவது பார்க்க முடியுமா? எந்த அண்ணாத்தையாவது பார்க்க முடியுமாங்கிறேன்.

ஒரு பிரகஸ்பதி சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் ஒரு படத்துல அழுது அசத்தி இருப்பதாக எழுதுகிறார்.

அழுகைன்னா இன்னான்னு இவருக்கு தெரியாது போல இருக்கு.

அதைப் படிச்சுட்டு உண்மையாலுமே எனக்கு அழுகை வந்துடுச்சி

வெள்ளைக்காரன் கெடுத்து நிர்மூலமாகி உயிர் விட்ட தங்கையை தூக்கி வைத்து மடியில் கிடத்தி ஒரு அழுகை

தாயின் மடியில் மகனே என்று கூப்பிடச் சொல்லி ஆனந்தத்துடன் உயிர் விடும் போது ஒரு அநாதை அழுகை

தங்கையோடு சாகும் போது கை வீசம்மா என்று மெதுவாக ஆரம்பித்து குமுறி வெடிக்கும் அழுகை

ஓடிப் போன மகளின் புகைப்படத்தை நெஞ்சில் அணைத்து மனம் புழுங்கி அழும் அழுகை

மகள் கற்பை கயவர்களிடம் இழந்து கட்டாந்தரையில் கவிழ்ந்து உயிர் விட பனைமரம் ஏறி சாமுண்டி பகாசூரனாய் மாறி பதறி அழும் அழுகை

தங்கை கற்பிழந்து சுயநினைவிழந்து மருத்துவ மனையில் கிடக்க மருத்துவ அண்ணனாய் அவள் செய்த குறும்புகளை சக டாக்டரிடம் சொல்லி சொல்லி அழும் சிங்கார அழுகை

தம்பியின் காதலுக்கு தடை போட்டு அவனை சாய்த்த பண்ணையார் கும்பலை சுட்டு வீழ்த்திய கதை சொல்லி அழும் கம்பீரக் கதறல் அழுகை

வாழ்விழந்து வந்த தங்கை வாழாவெட்டியாய் உயிர்விட்டுவிட வாயில் துண்டை வைத்து அடக்கி அழும் ராஜபார்ட்டின் மௌன அழுகை

மனைவி இறந்தவுடன் காக்கி உடுப்பைக் கழற்றி வெறும் பனியனுடன் கதறி கலங்கி நம்மைக் கலக்கி வைக்கும் அழுகை

மாமா இறந்து போனதை மாலையுடன் புகைப்படத்தில் பார்த்து விட்டு அத்தையுடன் அழுது துடிக்கும் அய்யய்யோ அழுகை

25 வருடம் மனைவியைப் பிரிந்து அவள் வரைந்த ஓவியத்தை எதிர்பாராவிதமாகப் பார்த்து அவள் உயிரோடு இருக்கிறாள் என்றெண்ணி ஆனந்தத்தோடு அழும் திரிசூல அழுகை

துப்பு துலக்கும் அதிகாரி கன்வர்லால் வேடமிட்டு கயவர் கும்பலில் உள்ளே நுழைந்து அவர்கள் நம்பிக்கையைப் பெற அங்கு அந்தக் கும்பல் தன தங்கையை ஆட்டம் ஆடச் சொல்லி துன்புறுத்த ஒன்றுமே செய்ய முடியாமல் விழிகளை உருட்டி உள்ளூர அழும் அழுகை

செல்லமான தந்தையை வில்லன் பத்திரிக்கை கொடுக்கும் போது சுட்டுக் கொன்றுவிட பதறி அழுது பின் தாளாமல் அவர் நினைவுகளிலூம் மூழ்கி பழி வாங்கத் துடிக்கும் பயங்கர அழுகை

கௌரவம் போய் விட்டதே என்று மனைவியும் கூந்தலில் உள்ள பூக்களை ஒவ்வொன்றாக பிய்த்துப் போட்டுவிட்டு தன் முடிவைத் தெரிவிக்கும் சூசகமாக உள்ளார்ந்த அழுகை


அடப் போங்கய்யா...

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்காணும் ...நீங்கல்லாம் எத்தனை அழுகை அழுதிருக்கேள்?

சிவாஜியை நெருங்குகிறார்களாம்...அவர் சாதனையைத் தொட்டு விடுவார்களாம்.

நீங்களெல்லாம் அழுதா எவன் பார்ப்பான்? முகத்தை நேரே காட்டி அழ எந்த நடிகருக்காவது தில் இருக்கா?

அந்த மனுஷன் அழுதா அத்தனை பேரும் கதறுவான்யா.... கதறுவான்....மொத்த உலகமுமே கதறும்.

மத்த எந்த நடிகன் அழுதாலும் பாக்கிறவன் சிரிப்பான்யா...

அதான்யா சிங்கம்...

என்னவோ பெரிசா பேச வந்துட்டீங்க....

உங்களுக்கே என்னவோ போல இல்லை? சிவாஜியோட மத்தவங்கள இணைச்சி பேசறதுக்கு?

அவரை மாறி நடிக்க வேணாம்.. அவரை மாதிரி சும்மா நின்னு காட்டுங்க. நான் பீல்டுல நிக்கறதை சொல்லல... காட்சியில நிக்கறதை சொன்னேன்.

முடியாதுங்கறேன்...

இதுல சரிக்கு சமமா அவரோட இணைச்சி கம்பாரிசன் வேற.

உலக மகா நடிகருங்க எல்லாம் அவர் காலைத் தொட்டு வணங்கி பெருமை தேடிகிட்டாங்க.

'உன்னை மாதிரி என்னால நடிச்சுட முடியும் சிவாஜி... ஆனா அந்த கட்டபொம்மன்ல பொண்டாட்டிகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு சண்டைக்குப் போவியே! அப்போ கண்ணால தடவாம வாளை உறைக்குள் விருட்டுன்னு ஸ்டைலா போடுவியே.. அதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால செய்ய முடியாதுப்பா'...

அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட ஆஸ்கார் அவார்டு வாங்கின மார்லன் பிராண்டோ இவர் பாதம் பணிந்தானே... அந்த ஆளே எங்களுக்கு ஜூஜுபி...நீங்கல்லாம் எந்த மூலைக்கு.

வீண் ஆசை எல்லாம் வச்சி உடம்பைக் கெடுத்துக்காதீங்க. என்ன நான் சொல்றது?

முரளி! இதிலயாவது கை வைக்காம இருங்க. நான் யாரயும் குறிப்பிட்டு சொல்லல. பொத்தம் பொதுவாத்தான் சொல்லி இருக்கேன். அதுக்குள்ளே கத்தரிக்கோலை எடுத்து சாணை பிடிச்சி வைக்காதீங்க.

என்ன சரியா?

Russellbpw
29th March 2015, 06:18 PM
என்னவோ போங்க. மறுபடி மறுபடி....

அவர் நினைத்தால் சிவாஜியின் உயரத்தைத் தொடலாம்....

இவர் நினைத்தால் சிவாஜியை நெருங்கலாம்.....

இவர்தான் சிவாஜியின் வாரிசு....

அவர்தான் சிவாஜியின் பெயரைக் காப்பாற்ற வந்தவர்.....

இன்னும் கொஞ்ச காலத்தில் சிவாஜியை பீட் செய்து விடுவார்....

மறுபடி மறுபடி புலம்பல்களுடன் கூடிய அலம்பல்கள்.

எத்தனை முறைதான் சொல்வது.

எவரும் எட்ட முடியா எவரெஸ்ட் சிவாஜி.

அந்த எவரெஸ்ட்டை.. யாருப்பா அது... டென்சிங் தொட்டான்.

இந்த நடிப்பு எவரெஸ்ட்டை எவர்தான் நெருங்க முடியும்.

அட நெருங்க வேணாம்பா... அண்ணாந்தாவது பார்க்க முடியுமா? எந்த அண்ணாத்தையாவது பார்க்க முடியுமாங்கிறேன்.

ஒரு பிரகஸ்பதி சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் ஒரு படத்துல அழுது அசத்தி இருப்பதாக எழுதுகிறார்.

அழுகைன்னா இன்னான்னு இவருக்கு தெரியாது போல இருக்கு.

அதைப் படிச்சுட்டு உண்மையாலுமே எனக்கு அழுகை வந்துடுச்சி



திரு பட்டா அவர்களே...

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள். ஆயிரமும் உண்மையாகிவிடுமா என்ன ?

நடிகர் திலகம் அவர்களின் உயரத்தை முதலில் கணிக்க முடியுமா இவர்களால் ?

தன்னடக்கம் உள்ளவர்கள் நடிகர் திலகம் நிழலை பார்க்க நினைக்கிறன் என்று வேண்டுமானால் கூறலாம். நடிகர் திலகத்தின் சாதனையில் ஒரு சதவிகிதத்தில் ஒரு சதவிகிதம் கூட கனவிலும் எவராலும் நினைக்கவோ நெருங்கவோ முடியாது ! இப்பொழுது இருப்பவர்கள் எல்லாரும் ஜால்ராக்கள் ..தங்கள் பொழைப்பை ஓட்டுவதற்கு இப்படி ஏதாவது அபத்தமாக காமெடியாக பேசுவார்கள்...!

அழுதுனடிக்கறவன் எல்லாம் சிவாஜி மாதிரி அசத்தி இருக்கார்னு சொன்னா......லொடுக்கு பாண்டி கூட ஒரு படத்துல அழுது நடிச்சுருக்காரு...அதுக்காக ?

Rks

Russellbpw
29th March 2015, 08:41 PM
இப்பொழுது சன் லைப் தொலைகாட்சியில்
இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

மாறுபட்ட மூன்றுவேட நடிப்பில் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி சிறந்த வெற்றிகண்ட

தமிழ் திரையுலகின் முதன் முதலில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட திரை காவியம்

"தெய்வ மகன்" ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4497a-1_zpsjglurlqt.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4497a-1_zpsjglurlqt.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4493a-1_zpsbpbnqv05.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4493a-1_zpsbpbnqv05.jpg.html)

rks

Russellbpw
29th March 2015, 09:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427447111420_zpseecad3br.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427447111420_zpseecad3br.jpg.html)


இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று...நடிகர் திலகம் அவர்கள் பிரெஞ்சு அரசாங்க தூதுவருடன் கை குலுக்கும் முறை.

நாம் பொதுவாக பார்க்கும் கைகுலுக்கல் முறையல்ல இது. இந்த விருது கொடுப்பவரும் பெறுபவரும் மாவீரன் நெப்போலியன் கை குலுக்கும் முறையில் கை குலுக்குகிறார்கள் !

மன்னர் கை குலுக்கும் பாணி கூட தெரிந்து வைத்திருக்கும் நமது நடிகர் திலகம் !

eehaiupehazij
30th March 2015, 12:02 PM
தான் அழாமல் பார்ப்பவரை கதற வைப்பதிலும் நடிகர்திலகத்திற்கு ஈடு இணையில்லையே!

https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA

https://www.youtube.com/watch?v=rR3CCJRjA2U

Russellxor
30th March 2015, 09:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427447111420_zpseecad3br.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427447111420_zpseecad3br.jpg.html)


இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று...நடிகர் திலகம் அவர்கள் பிரெஞ்சு அரசாங்க தூதுவருடன் கை குலுக்கும் முறை.

நாம் பொதுவாக பார்க்கும் கைகுலுக்கல் முறையல்ல இது. இந்த விருது கொடுப்பவரும் பெறுபவரும் மாவீரன் நெப்போலியன் கை குலுக்கும் முறையில் கை குலுக்குகிறார்கள் !

மன்னர் கை குலுக்கும் பாணி கூட தெரிந்து வைத்திருக்கும் நமது நடிகர் திலகம் ! !

இது போன்ற சிறு விஷயங்களையும் கூர்ந்து கவனித்து எழுத பேச முடிவதை பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களிடம் மட்டுமே காணமுடிகிறது.

Russellxor
30th March 2015, 09:37 PM
Shooting Spot....

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427624834302_zpsw6yqv5xe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427624834302_zpsw6yqv5xe.jpg.html)

Russellxor
30th March 2015, 09:39 PM
நடையழகு

Sivaji style: http://youtu.be/raZFhvVItI0

Russellbpw
31st March 2015, 08:17 AM
மக்களை முட்டாளாக்கிய திராவிட கட்சிகளின் நாத்திக கொள்கையை நிர்மூலமாக்கிய நடிகர் திலகத்தின் திருவிளையாடல் !

http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/thiruvilaiyadalpart2_zps7440feaa.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/thiruvilaiyadalpart2_zps7440feaa.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:21 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_7483_zps8475991c.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_7483_zps8475991c.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:21 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_7481_zpsf5b2f837.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_7481_zpsf5b2f837.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:23 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_7461_zps94e89a77.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_7461_zps94e89a77.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:23 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_7460_zps472fc282.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_7460_zps472fc282.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:24 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_7459_zps07623300.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_7459_zps07623300.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:24 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/thiruvilaiyadalpart1_zps9e71940b.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/thiruvilaiyadalpart1_zps9e71940b.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:26 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_1557_zps015e4768.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_1557_zps015e4768.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:27 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_1556_zpsa5721a36.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_1556_zpsa5721a36.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:27 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/IMG_1555_zpsecd63a65.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/IMG_1555_zpsecd63a65.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:31 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/Page1_zps8bff8651.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/Page1_zps8bff8651.gif.html)

Russellbpw
31st March 2015, 08:32 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page2_zpse0bd1c39.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page2_zpse0bd1c39.gif.html)

Russellbpw
31st March 2015, 08:33 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page3_zpsfc41628b.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page3_zpsfc41628b.gif.html)

Russellbpw
31st March 2015, 08:34 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page4_zps6d5ac392.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page4_zps6d5ac392.gif.html)

Russellbpw
31st March 2015, 08:34 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page5_zps5d8ec073.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page5_zps5d8ec073.gif.html)

Russellbpw
31st March 2015, 08:35 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page6_zps7474de6d.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page6_zps7474de6d.gif.html)

Russellbpw
31st March 2015, 08:36 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page7_zps955f27bc.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page7_zps955f27bc.gif.html)

Russellbpw
31st March 2015, 08:36 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page8_zpsf348dd0e.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page8_zpsf348dd0e.gif.html)

Russellbpw
31st March 2015, 08:37 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page9_zps07ad455b.gif (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Life%20and%20Times%20of%20a%20DMK%20Film/page9_zps07ad455b.gif.html)

Russellbpw
31st March 2015, 08:38 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Ultimate%20Goddess/parasakthi1_zps02b04949.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Ultimate%20Goddess/parasakthi1_zps02b04949.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:39 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Ultimate%20Goddess/parasakthi2_zpsf4819295.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Ultimate%20Goddess/parasakthi2_zpsf4819295.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:40 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Parasakthi%20-%20Ultimate%20Goddess/parasakthi3_zps33dac973.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Parasakthi%20-%20Ultimate%20Goddess/parasakthi3_zps33dac973.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:41 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Thillana%20Mohanambal/thillanamohanambalpart1_zpsf7ab69bb.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Thillana%20Mohanambal/thillanamohanambalpart1_zpsf7ab69bb.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:42 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Thillana%20Mohanambal/thillanamohanambalpart2_zpseb2d3648.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Thillana%20Mohanambal/thillanamohanambalpart2_zpseb2d3648.jpg.html)

Russellbpw
31st March 2015, 08:42 AM
http://i1303.photobucket.com/albums/ag149/kailash29792/Thillana%20Mohanambal/thillanamohanambalpart3_zpsf4526e31.jpg (http://s1303.photobucket.com/user/kailash29792/media/Thillana%20Mohanambal/thillanamohanambalpart3_zpsf4526e31.jpg.html)

Russellxor
31st March 2015, 10:19 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427777219979_zpsko1rst1t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427777219979_zpsko1rst1t.jpg.html)

Russellxor
31st March 2015, 10:33 AM
நக்கீரனில் நடிகர்திலகம் எழுதிய தொடர்




http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427777639464_zps7u1wbuer.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427777639464_zps7u1wbuer.jpg.html)

Russellxor
31st March 2015, 10:37 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427777643196_zpsfuludvwq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427777643196_zpsfuludvwq.jpg.html)

Russellxor
31st March 2015, 10:38 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427777646741_zps4coixduu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427777646741_zps4coixduu.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427777650249_zpsouj9ngux.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427777650249_zpsouj9ngux.jpg.html)

Russellxor
31st March 2015, 10:43 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427778644476_zpsbium967e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427778644476_zpsbium967e.jpg.html)

Russellxor
31st March 2015, 10:55 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427778648273_zpsdfjcsda7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427778648273_zpsdfjcsda7.jpg.html)

Russellxor
31st March 2015, 10:59 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427778651317_zpsyemxafmp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427778651317_zpsyemxafmp.jpg.html)

Russellxor
31st March 2015, 11:00 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427778654670_zpstlbk1d82.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427778654670_zpstlbk1d82.jpg.html)

Russellxor
31st March 2015, 11:05 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427779961905_zpswmflxqzp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427779961905_zpswmflxqzp.jpg.html)

Russellxor
31st March 2015, 11:07 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427779965489_zps2hwgddpb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427779965489_zps2hwgddpb.jpg.html)

Russellxor
31st March 2015, 11:09 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427779969196_zps1krsts2j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427779969196_zps1krsts2j.jpg.html)

Russellxor
31st March 2015, 11:10 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427779972862_zpsybaxd6re.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427779972862_zpsybaxd6re.jpg.html)

Russellxor
31st March 2015, 11:17 AM
நடிகர்திலகத்தின் தெய்வ வாக்கு

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427780631084_zpstphy345t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427780631084_zpstphy345t.jpg.html)




END

Gopal.s
1st April 2015, 07:48 AM
கலைவேந்தன்,



அன்னை மடியை விரித்தாள் பதிவில் ,கண்ணதாசன் அல்லவோ இடம் பெற வேண்டும்? நீங்கள் போட்ட படத்திலிருப்பவர் அந்த வரியை மாற்ற சொன்னவராயிற்றே?(கண்ணதாசன் பிடிவாதமாய் சேர்த்தாராம்)



நல்ல பதிவு.எளிய முறையில் எழுத பட்ட அனைவருக்குமான பதிவு. இது போல சிந்தனைகளை சில பொது திரிகளில் பதித்தால் அனைவரும் படிப்பார்களே? பலர் முகவரிக்காக பயந்து சிதறியோடும் விபத்து நடக்காமல், அனைவருக்கும் போய் சேருமே?



உங்கள் புனை பெயரே சற்று ஒரு மூன்றாந்தர கவிஞர் அல்லது நாலாந்தர அரசியல் வாதியின் முதல் தேர்ந்தெடுப்பு போல உள்ளது. இயற்பெயரிலேயே எழுதலாமே? மடியை விரித்த அன்னையிட்ட பெயரை விடவா நாம் தேர்ந்தெடுப்பவை உயர்வு?அன்னை ஆசி பெற்ற திரு நிறை பெயர்களல்லவா நம் இயற்பெயர்கள்?

2050 இல் உலக மக்கள் தொகை 9 பில்லியன் இருக்குமாம்!!!(900 கோடி) வரும் இந்தியா ,சீனா மட்டும் 320 கோடி . எங்கே போவோம் வாழ்விடங்களுக்கு,விவசாய நிலங்களுக்கு ,காடுகளுக்கு,தண்ணீருக்கு,மருத்துவத்துக்கு,பள்ளிகளு க்கு,இன்னும் இரண்டு பூமிகள் வேண்டுமே?எல்லோரும் வாழ்நிலையை முன்னேற்றி கொள்கிறோம் என்று இயற்கையை உறிஞ்சி,கொழுப்பு சேர்த்து ,வீணும் அடிக்கிறோம்.



ஆனாலும் ,அரசியல்வாதிகளை , பூர்ஷ்வா வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளின் மக்களின் பேராசையாலேயே உலகம் அழிவின் விளிம்பில். மண்குடம் செய்து உபயோகித்து மண்ணிலேயே உடைத்து சேர்த்து, சோற்றை வீணாக்காமல் பழைய சோறாக்கி ,இயற்கையும் காத்து ,ஆரோக்யமும் காத்த இனங்கள், ஆங்கில தனியார் பள்ளிகளுக்கு அலைந்து, நேற்றைய செல் தொலைபேசிகளுக்கு வரிசை கட்டி, துரித உணவுகளை துரத்தும் போது ,நம்மை மட்டும் புனிதர்களாக காட்டி கொள்ள முடியாது.



நான் சொல்வது புரிய வேண்டுமானால் seigfried Lenz எழுதிய நிரபராதிகள் காலம் படியுங்கள்.

Russellxor
1st April 2015, 08:31 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427856913293_zpszebqrrk9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427856913293_zpszebqrrk9.jpg.html)

FB

Russellxor
1st April 2015, 08:58 AM
Courtesy :FACEBOOK

கெளசிக் ராமையாஅவர்கள் வரைந்த ஓவியங்கள்



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857737067_zpshl7ft9d2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857737067_zpshl7ft9d2.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857632369_zpsf70yh9ha.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857632369_zpsf70yh9ha.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857591555_zpsizaygyoa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857591555_zpsizaygyoa.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857769740_zpsp1gujuey.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857769740_zpsp1gujuey.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857763640_zps2o8nankc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857763640_zps2o8nankc.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857712800_zpszjrcrn4j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857712800_zpszjrcrn4j.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857663952_zpsmtrdchfx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857663952_zpsmtrdchfx.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857727237_zpsmmb4ntuv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857727237_zpsmmb4ntuv.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857614127_zps4pvjl2mq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857614127_zps4pvjl2mq.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427857719058_zpsuzzmdrvn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427857719058_zpsuzzmdrvn.jpg.html)

Gopal.s
1st April 2015, 10:32 AM
நடிகர்திலகத்தின் படங்களில் பல திறமையாளர்கள் மிக நன்றாக ஒளி வீசி ,அவரால் சிறப்பான இடத்தையே அடைந்துள்ளனர்.(கலைஞர் முதல் கலைஞானி வரை)



ஆனால் எனக்கு ஏமாற்றம் தந்த சில திறமையாளர்கள்

கண்ணதாசன்,ஸ்ரீதர், பாலசந்தர்.



கண்ணதாசன் - இல்லற ஜோதி 1954, நானே ராஜா 1956,தெனாலிராமன் 1956,ரத்த திலகம் 1963,லட்சுமி கல்யாணம் 1968- ஒரு பாடலாசிரியராக நடிகர்திலகம் படங்களுக்கு ஒளியூட்டிய கண்ணதாசன், வசனகர்த்தாவாக அவர் புலமைக்கும், சிவாஜியின் திறமைக்கும் ஏற்ப இயங்கவில்லை.




ஸ்ரீதர்- ஒரு வசனகர்த்தாவாக எதிர்பாராதது ,அமரதீபம்,உத்தம புத்திரன் என்று தூள் கிளப்பியவர் , இயக்குனராக சுமாரான படங்களையே தந்தார்.(ஊட்டி வரை உறவு -நகைசுவை,சிவந்த மண் -பொழுது போக்கு இரண்டு தவிர ) மற்ற படி வசனகர்த்தாவாக புனர்ஜென்மம்,சித்தூர் ராணி பத்மினி ,இயக்குனராக விடிவெள்ளி,நெஞ்சிருக்கும் வரை,வைரநெஞ்சம்,மோகன புன்னகை ஸ்ரீதர்-சிவாஜி இணைவுக்கேற்ப அமையாதது ஏமாற்றமே.




பாலசந்தர்- நீலவானம் ,எனக்கு பிடித்த படம். ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அமையாதது வருத்தமே.எதிரொலி ,அவ்வப்போது சிவாஜி ,கே.பீ திறமையை வெளிச்சமிட்டாலும் ,ஏமாற்றமே. நூற்றுக்கு நூறில் ,சிவாஜியை உபயோகித்து இமாலய வெற்றி கண்டிருக்கலாம்.

Russellxor
1st April 2015, 11:56 AM
திப்புசுல்தான் வரலாற்றை சினிமாவாக்கும் முயற்சியில் நடிகர்திலகத்திற்கு ஏற்பட்ட தடங்கல்களை சினிமா எக்ஸ்பிரஸில் பத்திரிக்கையாளர் ராமமூர்த்திஎழுதியது.பல வாரங்கள் வந்த தொடரில்என்னிடம் உள்ளவை இரண்டு பகுதிகள் மட்டுமே.அதை பதிவிடுகிறேன


். http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427868523025_zpsgjkvpb6m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427868523025_zpsgjkvpb6m.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427868526318_zpso13lj1ao.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427868526318_zpso13lj1ao.jpg.html)

Russellxor
1st April 2015, 12:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427868529969_zpsiw1non6x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427868529969_zpsiw1non6x.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1427868533571_zps3rmo6c8c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427868533571_zps3rmo6c8c.jpg.html)

Russellbpw
1st April 2015, 01:56 PM
ஏப்ரல் மாதத்தில் வெளியான நடிகர் திலகம் திரை காவியங்கள்

1) இல்லற ஜோதி
2) அந்தநாள்
3) கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி
4) தாயை போல பிள்ளை நூலை போல சேலை
5) உலகம் பலவிதம்
6) வணங்காமுடி
7) சம்பூர்ண ராமாயணம்
8) தெய்வபிறவி
9) புனர்ஜென்மம்
10)படித்தால் மட்டும் போதுமா
11) நான் வணங்கும் தெய்வம்
12) ஸ்கூல் மாஸ்டர்
13) பச்சை விளக்கு
14) சாந்தி
15) பேசும் தெய்வம்
16) கலாட்ட கல்யாணம்
17) விஎட்னாம் வீடு
18) ஹரிச்சந்திரா
19) ப்ராப்தம்
20) சுமதி என் சுந்தரி
21) வாணி ராணி
22) கிரகப்ரவேசம்
23) கவரிமான்
24) நட்சத்திரம்
25) தர்மராஜா
26) அமரகாவியம்
27) சங்கிலி
28) இமைகள்
29) வாழ்கை
30) நீதியின் நிழல்
31) விடுதலை
32) வீரபாண்டியன்
33) பசும்பொன்
34) படையப்பா

Russellxor
1st April 2015, 09:45 PM
Sivaji Ganesan: Tamil cinema’s versatile actor par excellence

Posted by*Administrator*on*7 August 2014, 11:37 pm

[http://dbsjeyaraj][http://dbsjeyaraj][http://dbsjeyaraj][http://dbsjeyaraj][http://dbsjeyaraj]

By

D.B.S. Jeyaraj

The first Tamil film which impacted on me greatly during childhood was ‘Veera Pandiya Kattabomman’. It was a kind of bio-picture about a ‘Paalayakkaaran’ or Polygar (feudal chieftain) who defied the British during the last decade of the 18th Century and paid the supreme penalty. Kattabomman whose full name was Veera Pandiya Kattabomma Karuthaiyya Nayakkar governed an area known as Paanchaalankurichi which is in the Thoothukkudi District of Tamil Nadu state in India.

[http://dbsjeyaraj]

Sivaji Ganesan (1 October 1928-21 July 2001) in “Veera Pandiya Kattabomman”

I was five years old when I first saw the film with my parents at Elphinstone Theatre. The upper portions of the theatre were encased in hardboard, resembling the structure of a fortress. There were two cut-outs on either side of two men with upraised swords on horses. In the middle was another cut-out of a man literally taking a bull by its horns. The two horsemen were Kattabomman played by the actor Sivaji Ganesan and his brother Kumaraswamy alias Ommaithurai played by OAK Devar. The man taming the bull was Vellaiyhathevan, the commander of Kattabomman’s forces. The actor was Gemini Ganesan.

My family was living in Hulftsdorp then. The film which played at Elphinstone, Maradana moved on to Gaiety, Kotahena. I can recall seeing the film four times at Elphinstone and twice at Gaiety.

This was because several relatives and family friends took me along when they went to see the film as those in our family circle knew how crazy I was about this particular film Kattabomman. Even in later years I never missed seeing it when an old print was screened in a theatre. Nowadays in Canada I have a DVD of the film which I view occasionally if not regularly.

The magic of the movie

The magic of the movie to me at that time was the portrayal of Kattabomman by the doyen of Tamil actors, Sivaji Ganesan. The highlight of that performance was the powerful delivery of fiery dialogue by the film hero Kattabomman played by Sivaji. I memorised the dialogue (written by Sakthi T.K. Krishnasamy) from ‘Veera Pandiya Kattabomman’ in those days and repeated them with appropriate mannerisms to entertain family, relatives, classmates and friends.

Veera Pandiya Kattabomman

Two remarkable passages lingering in memory still are the verbal duels between Kattabomman and Jackson (played by C.R. Parthiban) and Kattabomman and Bannerman (played by Javer Seetharaman). Unlike most of the actors seen in the Tamil films of today, Sivaji Ganesan spoke Tamil on screen the way the mellifluous, vibrant language should be spoken. It is no exaggeration to say that he was the role model for many of my generation in pronouncing Tamil dialogue in dramas.

It is in this context of reviving memories about the first Tamil film to impact upon me greatly that I focus the*‘Spotlight’*this time on its hero Sivaji Ganesan, about whom I have written extensively in the past. The man regarded as the greatest thespian of post-Independence Tamil cinema passed away on 21 July 2001, three months short of his 73rd birthday. Though known as Sivaji, that was not his real name. It was a name bestowed upon him for playing the role of Sivaji in a popular drama.

No stranger to Sri Lanka

Sivaji was no stranger to Sri Lanka. His movies ran to packed houses in the island. Several of his films were adapted and remade in Sinhala. Substantial portions of the films ‘Pilot Premnath’ and ‘Mohanapunnagai’ starring Sivaji were shot in Sri Lankan locales with Sri Lankan artistes Malani Fonseka and Geetha Kumarasinghe in the lead female roles.

Pilot Premnath ♥ Malani Fonseka ♫ ‘Ilankayin Ilankuyil’

‘Pilot Premnath’ in 1978 was an Indo-Sri Lankan co-production directed by A.C. Trilokachander. Shot in many scenic places in Sri Lanka, the film had a lively Baila type song ‘Udarata Menike’ sung in lilting tones by L.R. Easwari and A.E. Manoharan, which had audiences’ foot-tapping in India and Sri Lanka. But the most popular song was ‘Ilankayin Ilankuyil’ (the young cuckoo of Sri Lanka) with Vani Jayaram lending her voice to Malani, and T.M. Soundararajan voicing for Sivaji. Music was by M.S. Viswanathan. Shot in Eastman colour, this film was about an Air Ceylon pilot and his family. It ran for more than 100 days both in Tamil Nadu and Sri Lanka.

‘Mohana Punnagai’ starring Sivaji Ganesan and Geetha Kumarasinghe was made in 1981. The film directed by C.V. Sridhar did well in Sri Lanka but had an average run in Tamil Nadu despite the fact that it had Sivaji in the lead. The beautiful song sequence picturised on Geetha bathing in a waterfall-stream with Sivaji taking photos from different angles was unforgettable. The song ‘Thennilankai Mangai’ (south Sri Lanka maiden) is sung by S. Janaki to music composed by M.S. Viswanathan.

P.K. Balachandran, the ‘New Indian Express’ Correspondent in Colombo, in a recent article interviewed both Malani and Geetha about Sivaji Ganesan. Here are excerpts:

“Sivaji Ganesan was a great actor and a great human being too,” enthused Malani Fonseka, who was his leading lady in the 1978 Tamil blockbuster Pilot Premnath. “It was Sivaji who urged me to become a producer. He would say ‘Malani, you should make a No. 1 Sri Lankan creation,’” Malani disclosed. “A warm and friendly man, Sivaji introduced me to his wife and children and invited me for dinner at his house. I was very happy to work with him. In fact, it was an honour to work with him,” Malani said in a fulsome tribute to the thespian, who is no more.

“Thennilangai Mangai” ♥ Geetha Kumarasinghe ♫ Mohana Punnagai

Geetha Kumarasinghe, the Lankan leading lady of yore, who was paired with the Tamil thespian in Mohana Punnagai (1981) directed by C.V. Sridhar, said Sivaji was a thorough gentleman. “We got along very well even though he was in his fifties and I was only 26. He was very knowledgeable, not just on film making, but about many other subjects, though he had not gone to any university,” Geetha recalled. Geetha said she got offers from Madras film makers after Mohana Punnagai but could not take them because she got married.

Sivaji Ganesan’s acting career

[http://dbsjeyaraj]

Vizhuppuram Chinniah Ganesan-as thespian Sivaji Ganesan

Sivaji Ganesan’s acting career, which began at the age of eight, could be divided into three phases – 1936 to 1952, when he acted only on stage; 1952 to 1974, when he acted for the big screen and also gave stage performances; and 1974 to 1999, when he acted only in films. Despite achieving stupendous success on the screen, Sivaji remained faithful to his first love, the stage, and acted in plays for decades. With more than 300 film roles to his credit, he inspired a whole generation of artistes, virtually creating a new school of acting.

Essentially a creature of the stage when he entered films, Sivaji Ganesan brought that baggage with him and superimposed it effectively on the film medium. Yet his brilliant acting made this so-called violation of screen norms the accepted norm of film acting. Generations of Tamils learnt to appreciate the beauty and power of the Tamil language because Sivaji Ganesan breathed new life into it.

Vizhuppuram Chinniah Ganesan, or V.C. Ganesan, was born on 1 October 1928, in Vizhuppuram, which was then in the Arcot District of the former Madras Presidency. His parents were Chinnaiapillai Mandrayer, a railway employee and freedom fighter, and Rajamani, in whose name he was to launch later a successful film company, Rajamani Pictures. Ganesan belonged to the Kallar division of the Mukkulathor caste. His ancestors hailed from Soorakkottai in Thanjavoor district.

Smitten by a street drama about Kattabomman, the feudal Polagar of Panchalan-kurichi who fought the British, young Ganesan became enamoured of acting and abandoned school when he was in Class Two. Forsaking home, he along with his boyhood chum “Kaka” Radhakrishnan (veteran comedian who passed away in 2012) joined the Madurai-based Bala Gana Sabha drama troupe first, and later the troupe run by Ethaartham Ponnusamipillai.

From child roles he graduated to female roles and then on to the “raja part,” the role of the hero, as it was known then. The first landmark in his career was his portrayal of the Maratha warrior Sivaji in the drama ‘Sivaji Kanda Indhu Rajyam’ written by Dravida Kazhagham and later Dravida Munnetra Kazhagam Leader C.N. Annadurai, who went on to become the Tamil Nadu Chief Minister. E.V. Ramaswamy, the patriarch of the Dravidian movement, acclaimed his stellar performance and referred to Ganesan as ‘Sivaji’ Ganesan. This was in 1946. The sobriquet stuck.

Big break

The big break in Sivaji’s career came in 1952, when he acted as the hero in ‘Parasakthi,’ a film directed by Krishnan-Panju. The dialogue, written by DMK Leader and former Chief Minister M. Karunanidhi in fiery and flowery prose with a surfeit of alliterations, the hallmark of Karunanidhi’s style, came powerfully alive in a stunning performance by Sivaji, unparalleled in Tamil cinema. The monologue uttered as an address to Tamil Nadu in the earlier scenes and the courthouse speech in the closing stages of the film were classic instances of delightful oratory. A star had arrived in Tamil cinema.

Court scene: Parasakthi

Song in Parasakthi ♫ rendered by C.S. Jayaraman ♫ Desa Gnanam Kalvi

The Karunanidhi-Sivaji combination made an explosive impact. The writer’s rich prose, brimming with vitality, was given emotive and impressive expression by the actor. Every film in which they collaborated was a success. Notable among them were Thirumbi Paar, Manohara, Kuravanji and Iruvar Ullam.

Sivaji had an extraordinary flair for dialogue delivery. He pioneered an exquisite style, diction, tone and tenor. Later other scriptwriters, such as Solaimalai, Sakthi Krishnaswamy, Aroor Das, and ‘Vietnam Veedu’ Sundaram, were to provide dialogue that tapped his diction, which rendered the Tamil language euphonious.

There were many notable films where his remarkably resonating dialogue delivery delighted and enthralled fans. Starting from his brilliant debut in ‘Parasakthi,’ film after film made indelible impressions in this regard.

Thirumbipaar, Manohara, Thookkuthookki , Illara Jyothi, Anbu, Rajarani, Ethirpaaraathathu, Annayin Aanai, Kuravanji, Maruthanaatu Veeran, Ambikapathy, Veera Pandiya Kattabomman, Kappalotiya Thamizhan, Paasamalar, Aalayamani, Karnan, Thiruvilaiyaadal, Saraswathi Sabatham, Kandan Karunai, Thirumaal Perumai, Sivantha Mann, Gauravam, Rajaraja Chozhan, Thangapathakkam, etc., are but some of the films remembered still for the Sivaji’s sparkling ‘vasanam’.

A generation of actors and aspirants modelled themselves on his style. Despite this mass attempt to imitate and emulate him there was no replicating or duplicating the veteran. This stylish, dramatic presentation was essentially considered to be a feature suitable for the stage rather than the screen.

In drama as Socrates in “Raja Rani”

Akbar’s son Salim ♥ Drama in “Iillara jothi”

Akbar’s son Salim ♫ song sequence in “Uthaman”

Emperor Asoka

A device used frequently in his earlier films to give an outlet to his histrionic talents was the inclusion of short historical dramas – on the Chera King Senkuttuvan, Akbar’s son Salim or Jahangir, Socrates, Emperor Asoka among others – within the main plot, often dealing with a social theme. His acting ability received maximum exposure in the bantering arguments Veerapandiya Kattabomman has with his British adversaries in the eponymous film. Sivaji received the best actor award for this role at the Afro-Asian film festival held in Cairo in 1960.

Sivaji’s talents were by no means restricted to his oratorical prowess and powerful dialogue delivery. He could emote all the nine moods (navarasas) realistically. This skill found scope in all his films but came out into full play in his 100th film Navarathri in 1964, in which he played nine different characters signifying wonder, fear, compassion, anger, gentleness, revulsion, romantic passion, courage and happiness. His other commendable multi-role performances were in Uthama Puthiran and Enga Oor Raja in dual roles, and Thrishoolam, Deiva Magan and Bale Pandiya in which he did three roles each.

Nalandana Nalandana ♫ Sivaji Ganesan, Padmini ♥ Thillaanaa Mohanambal

From god and king to commoner

Sivaji Ganesan played a wide range of characters, from god and king to commoner. Whether it was the mercurial Chola emperor Raja Raja Cholan, Lord Siva, Lord Muruga, Saivite saint Appar, Vaishnavite saint Periyaalvar or Tamil poet Ambigapathy, Sivaji was always at his scintillating best. He was equally splendid in contemporary roles and stereotypes making every performance a memorable one. Superb among them are his roles as Bharatha in Sampoorna Ramayanam, the patriotic lawyer Chidambaram Pillai in Kappalottiya Thamizhan, the nagaswaram player Sikkal Shanmugasundaram in Thillana Mohanambal, Prestige Padmanadha Aiyer in Vietnam Veedu, Barrister Rajanikanth in Gauravam and Police Superintendent Chaudhury in Thangapadhakkam.

Patriotic lawyer Chidambaram Pillai in Kappalottiya Thamizhan ♥ Voice of Seerkazhi Govindarajan ♫ for Bharathiyar Song

♫ ‘Yaaradi Nee Mohini’ ♥ Uttama Puthiran

Scenes from some of his films remain etched in memory: the ‘Yaaradi Nee Mohini’ song sequence in Uttama Puthiran, where Sivaji’s mannerisms would remind present day movie-goers of Rajnikanth’s style; the physically challenged Ponniah in Bhagapirivinai, the inimitable gait as the fisherman in Thiruvilayadal and the clash with Tamil scholar Nakkeeran in the same film; his duel over artistic superiority with Padmini in Thillana Mohanambal; particularly during the ‘Nalanthaana?’ song sequence; and the Othello drama sequence in English with Savithri as Desdemona in Iratha Thilakam.

T.M. Soundarajan’s voice for Sivaji ♫ “Malligai Mullai”

Sivaji had an astounding capacity to synchronise lip and body movements to playback renditions making it appear as if he was actually rendering these songs. Singers Chidambaram Jeyaraman,’ Seerkazhi Govindarajan and A.M. Raja in the earlier days and T.M. Soundararajan later gave voice to his songs, making the singing and speaking voices blend as an indivisible entity. T.M. Soundarajan’s voice suited Sivaji most. Sivaji’s own voice was woven into songs at times. Two memorable songs are ‘Vannathamizh Pennoruthi Vandhaal’ by C.S. Jayaraman in Paavai Vilakku and ‘Thendrolodu Udan Piranthaal Senthamizh Pennaal’ by T.R. Mahalingam in Rajarajachozhan. There is also ‘Poatrippaaradi Pennae in “Devar Magan’.


‘Vannathamizh Pennoruthi Vandhaal’ ♥ by C.S. Jayaraman

Several directors, among them Krishnan-Panju, T.R. Sundaram, L.V. Prasad, B.R. Panthulu, T. Prakash Rao, A. Bhim Singh, K. Shankar, A.P. Nagarajan, A.C. Tirulokchandar, Sridhar, P. Madh-avan, K.S. Gopalakrishnan and K. Vijayan, directed Sivaji in vastly different roles, bringing out his versatility. Sivaji himself paid tribute to L.V. Prasad saying it was Prasad who taught him the rudiments of acting for the camera.

Sivaji’s chief lead actor contemporaries were “puratchi nadigar” M.G. Ramachandran (MGR), his namesake Gemini Ganesan (kadhal Mannan) and “ilatchiya nadigar” S.S. Rajendran (SSR). The only film he acted together with MGR was the controversial ‘Koondukkili’ by T.R. Ramanna. With Gemini he acted in many hits like Pennin Perumai, Pathi Bhakthi, Veerapandiya Kattabomman, Paarthaal Pasi Theerrum, Paasamalar, Pandha Pasam, Kappalottiya Thamizhan, Saraswathy Sabatham, Thiruvarutselvar and Unakkaaha Naan. He also acted with SSR in films like Parasakthi, Rajarani, Aalayamani, Shanthi, Pachai Vizhakku, Pzhani, Kaikodutha Deivam, etc

His younger son Prabhu known as “Ilaya Thilagham” has also made his mark in films as an actor. Prabhu was a very successful hero in the eighties and nineties with many of his movies breaking box office records. Sivaji’s elder son Ramkumar keeps the home production company Sivaji films ticking. The box-office record breaking ‘Chandramukhi’ starring Rajnikanth was their production. Now Prabu’s son and Sivaji’s grandson Vikram Prabu too has begun acting and done well in films like ‘Kumki’ and ‘Arima nambi’.

Sivaji’s tragedy

[http://dbsjeyaraj]

Sivaji Ganesan in Devar Magan

It was Sivaji’s tragedy that, as the years progressed, opportunities for him to display his acting talent became scarce. But he did act in cameo roles, often stealing the scenes, as in Thevar Magan, which won him the National Awards Jury’s Special Jury award in 1993. (Sivaji, incidentally, declined the award.)

Ironically, the man hailed as the greatest actor of Tamil cinema never won an Indian national award for best actor. He was conferred the Dadasaheb Phalke lifetime achievement award for meritorious service to Indian cinema in 1997.The Tamil film journal Pesum Padam gave him the honorific ‘Nadigar Thilagam’ (doyen of actors).

Sivaji was honoured with the titles Padma Shri and Padma Bhushan and the Tamil Nadu Government conferred on him the Kalaimamani award. The French Government honoured him with Chevalier in the Order of Arts and Literature. In Sri Lanka he received the title ‘Kalaikkurusil’ from the then Radio Ceylon.

Sivaji’s singing in Devar Magan ♥ Potripadadi Ponne ♫

Sivaji Ganesan passed away at a Chennai hospital on 21 July 2011.

Although the brightest star in the Tamil film firmament is no more, Sivaji Ganesan’s films are there to provide pleasure to his fans and keep his memory alive.

[http://dbsjeyaraj]

JamesFague
2nd April 2015, 11:17 AM
javascript:void(0);

NT's all time favourite Thillana Mohanambal in Sun TV on coming Sunday at 6.30 pm.

This shows that prime time slot in today's world will be for our NT's movies.

KCSHEKAR
2nd April 2015, 04:59 PM
02-04-2015, வியாழக்கிழமை அன்று, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி, தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நீர்மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு சமோசா, மோர், ரஸ்னா ஆகியன வழங்கப்பட்டன.
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG-20150402-WA0007_zpsuuwttz8k.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG-20150402-WA0007_zpsuuwttz8k.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/IMG-20150402-WA0013_zps7zypq9yp.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/IMG-20150402-WA0013_zps7zypq9yp.jpg.html)

RAGHAVENDRA
2nd April 2015, 10:56 PM
Sivaji Ganesan - Definition of Style 18

சத்திய சுந்தரம்

ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் என்ற அறிமுகத்தோடு தொடங்கிய அந்த அமர்க்களம், படம் முடியும் வரை பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் கட்டிப் போட்டு, தங்களையும் கூடவே தாளம் தட்டி ஆட வைத்து, தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக ஓடி மாபெரும் வெற்றி கண்ட திரைக்காவியம் சத்திய சுந்தரம்.

படம் முழுதும் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் சோகத்தை வெளிக்காட்டாமல் அந்த அனுபவத்தின் அடிப்படையில் மற்றவர்களின் துன்பங்களை முடிந்த வரையில் தீர்க்க முயலும் ஒரு தம்பதியின் கதை.

சத்தியவதி சுந்தரமூர்த்தி இருவரின் குடும்ப வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சோகத்தை படம் முழுதும் Undercurrent ஆகக் கொண்டு அதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி பெற வேண்டிய அனுதாபத்தை அந்தப் பாத்திரங்கள் பெற வைத்து இயக்குநர் வெற்றி பெற்ற படம். அப்படி ஓர் முயற்சியில் ஈடுபடும் போது அந்த இளம் பெண்ணின் நாகரீக மோகத்தைப் பற்றியும் அதிலிருந்து அவளை மீள வைக்க வேண்டியும் அந்த தம்பதி அந்த இளம்பெண் வழியிலேயே சென்று திருத்த முற்படும் முயற்சியில் ஓர் அங்கம் தான் இந்த விடுதி ஆட்டமும் பாட்டும்.

https://www.youtube.com/watch?v=TFaQ_NhxvUc


மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமான பின்னணி இசை பாடலின் இனிமையை சற்றும் கெடுக்காமல் ஒலிப்பது இப்பாடலின் சிறப்பம்சம். பாடல் நன்றாக அமைந்ததென்றால் அதை மேலும் மேலும் சூப்பர் ஹிட்டாக்கியது நடிகர் திலகத்தின் அனாயாசமான நளினமான நடன அசைவுகள்.

தொலைக்காட்சி அறிமுகமாகி சில ஆண்டுகள் ஆன காலகட்டம், சேட்டிலைட் சேனல்கள் என்றால் என்ன எனத் தெரியாத கால கட்டம், ஒரு பக்கம் திட்டமிட்டு பரப்பப் பட்ட விமர்சனங்களை நடிகர் திலகம் சந்தித்து வந்த நேரம்.

அப்போது வந்தது சத்திய சுந்தரம்.. முதல் நாள் முதல் காட்சியில் பிடித்த சூடு கடைசி நாள் கடைசி காட்சி வரை அணையவேயில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல்... இதே மாதிரி மெல்லிசை மன்னரின் இசையில் வெளிவந்த வேறோர் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பைப் பார்த்து அந்தக் கால ஊடகங்கள் வானுக்கும் விண்ணுக்கும் எகிறிக்குதித்த கால கட்டம்.

வந்தார் பாருங்கள் சுந்தரமூர்த்தி... இந்தப் பாடலைப் பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் சிலாகித்து எழுதலாம். இந்தப் படம் வரும் போது நடிகர் திலகத்தின் வயது 52. ஆனால் பாடல் காட்சியில் அவருடைய வேகமும் ஸ்டைலும் நடனமும் 50ல் ஓர் உத்தம புத்திரன் என்று பலர் அந்தக் காலத்தில் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது. மை நேம் ஈஸ் சுந்தரமூர்த்தி என்று அறிமுகமாகும் போது தலையை ஸ்டைலாக அந்த வயோதிகர் கோதி விடும் பாணியைக் காட்டுவார், ராமன் எத்தனை ராமனடி படத்தில் அம்மாடி பாடலின் சோக வடிவில் தலையைக் கோதி விரக்தியுடன் சிரிப்பதற்கும், இந்தப் பாடலில் உற்சாகமாக தலையை க் கோதி சிரிப்பதற்கும் அம்மம்மா... எத்துணை வேறுபாடுகள்...

அந்த டிரம்பெட் ஒலிக்கும் போது ஒரு காலை மட்டும் உயர்த்தி ஆடும் ஸ்டைலைச் சொல்வதா...
என் எண்ணம் கொண்டது பூர்த்தி என்று சொல்லும் போது அந்த வாக்கிங் ஸ்டிக்கை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றும் ஸ்டைலைச் சொல்வதா...
உடனே தொடையைத் தட்டி இடது கையை மேலே தூக்கியவாறு மீண்டும் மை நேம் ஈஸ் சுந்தர மூர்த்தி என்று சொல்லும் ஸ்டைலைச் சொல்வதா...
பல்லவி முடியும் போது விரல்களால் சொடுக்கிக் கொண்டே பின்னால் செல்லும் ஸ்டைலைச் சொல்வதா...
...சரணத்தில் மிச்சம் என்ன மீதி என்ன என்று பாடிக்கொண்டே ஒவ்வோரு ஜோடியையும் தாண்டி வந்து அந்த ஸ்டிக்கை அனாயாசமாக தூக்கிப் போடும் அந்த ஸ்டைலைச் சொல்வதா...
இமேஜைப் பார்க்காமல் அந்த இடத்தின் தன்மையைப் பற்றி இடித்துக் கூறும் வகையில் நையாண்டியாக சிரித்துக் கொண்டே அந்த பாட்டிலை கன்னத்தில் வைத்துக் கொள்ளும் ஸ்டைலைச் சொல்வதா...
கலையில் சிறந்த கண்கள் என்று கூறும் போது புருவத்தையும் கண்களையும் சற்றே ஒரு 45 டிகிரி கோணத்தில் உயர்த்திப் பார்த்துச் சிரிக்கும் ஸ்டைலைச் சொல்வதா...
உடனே வேகமாக அந்த Rampல் ஏறியவாறே கைகளை உயர்த்தி சுற்றி மை நேம் ஈஸ் சுந்தரமூர்த்தி என்று தன் பெருமையை நிலைநாட்டும் ஸ்டைலைச் சொல்வதா...
அடுத்த சரணம் துவங்கும் போது, ஏழு பிள்ளை என்று சொல்லும் போது அந்த தாளத்திற்கேற்றவாறு இரண்டு கைகளையும் மாறி மாறி உயர்த்தும் ஸ்டைலைச் சொல்வதா..
உடனே ஒரு ட்விஸ்ட் செய்யும் அழகு.. அந்த ஸ்டைலைச் சொல்வதா...
அடுத்த சரணத்திற்கு முந்தைய பின்னணி இசையின் போது... சூப்பரோ சூப்பர் எனக் கூறும் அளவிற்கு Foot Tapping செய்யும் அழகைச் சொல்வதா...
தேதி ஒன்று மாறுமென்றால் என்ற வரிகளின் போது ஒரு கையை உயர்த்தி மறு கையால் ஆணித்தரமாக கருத்தைக் கூறும் ஸ்டைலைச் சொல்வதா...
மேல்நாட்டுக் கலையானதே என்ற வரியின் போது வலது கையை உயர்த்தியவாறே நடந்து வரும் ஸ்டைலைச் சொல்வதா...
அந்த சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது..
திரையில் இரு பிம்பங்களாக... தன் வலது கையால் தலையைக் கோதியவாறே சிரிக்கும் ஸ்டைலைச் சொல்வதா...
மூன்று பிம்பங்களாக மாறி ... வந்தாளே அன்று என்ற வரிகளின் போது தன் இடது கையை உயர்த்தும் ஸ்டைலைச் சொல்வதா...

பல்லவியை முடிக்கும் போது அவர் கூறும் வரிகள்...

மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று...

ஆம்.. இதனைத் தொடர்ந்து வரும் அந்த CLAPPING ஸ்டைல் அதை ஆணித்தரமாகக் கூறி விட்டதே...

....

இதையெல்லாம் ரசிக்க முடியாதவர்கள் அல்லது மனமில்லாதவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் நாம் தொடர்வோம்...
சத்திய சுந்தரம் காட்டிய வழியில் நாமும் தொடர்வோம்...

sivaa
3rd April 2015, 08:01 AM
5.04.2015 . ஞாயிற்று கிழமை
மாலை 6.30 மணிக்கு சண் டீவியில்

தில்லானா மோகனாம்பாள்

12.01 .1970ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்ட பொழுது
100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது

கொழும்பு....கெப்பிட்டல்......104 .நாட்கள்

கொழும்பு....பிளாசா..............61...நாட்கள்

கொழும்பு....சபையர்.............04...நாட்கள்

கொழும்பு.....மைலன்............03..நாட்கள்

யாழ்நகர்......வெலிங்டன்.......91..நாட்கள்


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kdvd_thillanamohanambal_zps3e6b849e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kdvd_thillanamohanambal_zps3e6b849e.jpg.html)

sivaa
3rd April 2015, 08:09 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Thillana100_zps4f16fb6a.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/Thillana100_zps4f16fb6a.jpg.html)

RAGHAVENDRA
3rd April 2015, 10:03 AM
சிவாஜி ரசிகர் மன்ற இளைஞர்களுக்கு, கட்சிப் பதவி கொடுக்க மறுத்து, கிண்டலடித்த காங்கிரஸ், இன்று,
குஷ்புவுக்கு கோவில் கட்டிய ரசிகர்களுக்கு, கட்சிப் பதவி வழங்க பட்டியல் தயாரிக்கிறது.


from the dinamalar webpage.

To read the full article : http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67

Irene Hastings
3rd April 2015, 11:11 AM
A suggestion to those friends who have the reach with movie Directors - People like Mr.Murali Srinivas, Mr.Raghavendran and others. Why cant we interview VVS and get the best out of him . Probably, we can get all points from members here and meet VVS . I wish to know some answers from VVS :

1. How the theme was conceived
2. Screen play
3. Characterisation
4. Choice of co stars
5. That our idol himself should play both Father and Son . who decided . whose idea was this
6. Any special moments while directing
7. Dress code for NT. The Dad's dressing was superb! The son's was mild
8. Whether shots were taken immediately whenever Father-Son scenes come
9. Kavignar's reaction when the song situations were explained . How much time he took to write
10. MSV's BGM in particular and of course the tunes
11. The special scene - Chess board with Barrister being shown like an Emperor. Whose idea was this ?
12. Why should the character of Dad had so many inconsistencies ! ( I am referring to Mr.Gopal's analysis . Pls use it as reference point )
13. Work of Cameramen
14. Make up plays a special role . How the 2 characters were thought of
15. The virtual Court arguments presented through dummy run with Nagesh-Neelu etc. Whose idea was this !

Many more.

We can extend this type of interviews for other great movies of Thilagam . Today, very few Directors and artists who were with NT are alive . So, lets do this before its too late.

RAGHAVENDRA
3rd April 2015, 12:51 PM
Irene,
VVS has extensively shared his experience on Gauravam in many tv shows. Particularly the one which Mr YGM and myself participated in VASANTH TV a few years back in the series "Mahendravin Parvaiyile". I do not know if it's available in youtube. He has in many shows has answered almost all of your points.

Characterisation ... NT himself has told, based on a real life character, conceived by VVS and NT. Choice of co-stars .. almost VVS's choice. NT hardly intervenes except where it is needed.

Playing both Father and Son .. This has also been explained. Even in the recent series (later as a book) entitled 'Naan Swasikkum Sivaji". Pls go through the series in NT's thread.

Special moments in directing... The notable one is the song "Neeyum Naanuma".. where KING George was intercepted. The statue which was situated at the entrance of Rajaji Hall was the role model and the one near the War Memorial was used for the other King character.

Almost each and every diehard fan of Nadigar Thilagam knew all these points even from during the release period of this movie.

The mock court scene was already there in the play too (Kannan Vanthan), about this also YGM has narrated.

Russellxor
3rd April 2015, 09:14 PM
Itho Enthan Deivam Munnale இதோ எந்தன் தெய்வம் - B…: http://youtu.be/k3YN6RCZHs0

NOV
4th April 2015, 06:38 AM
Ravi Kiran Surya, I was astounded on your posts from the book "Autobiography of an Actor."
Where can I get that book - I will be in Chennai towards the end of the year.
Please let me know. Thanks.

Russellbpw
4th April 2015, 07:35 AM
Ravi Kiran Surya, I was astounded on your posts from the book "Autobiography of an Actor."
Where can I get that book - I will be in Chennai towards the end of the year.
Please let me know. Thanks.

Dear Sir,

This is available in Higginbothams. I do have a copy of the same. Even if it is not available on shelf at that point in time, I shall give my copy to you when we meet during your arrival.

Regards
RKS

RAGHAVENDRA
4th April 2015, 07:39 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/ShantiApril2015FW_zpsazpwrvqr.jpg

NOV
4th April 2015, 07:51 AM
This is available in Higginbothams. I do have a copy of the same. Even if it is not available on shelf at that point in time, I shall give my copy to you when we meet during your arrival. Thank you very much for your kindness.
I will ask my friends in Chennai to buy and keep it for me.

:ty:

Gopal.s
4th April 2015, 07:55 AM
சாந்தி- 1965

ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.

பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.

கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.

உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது?

எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான் ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.

மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.

பார்க்க கூடிய படம் .

KCSHEKAR
4th April 2015, 02:43 PM
http://www.dinamani.com/junction/kanavukkannigal/2015/04/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%A E%A9%E0%AE%BF---2.-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A E%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article2741728.ece

Dinamani
Saturday, April 04, 2015

பத்மினி - 2. பத்தில் ஒரு படம்!

By பா. தீனதயாளன்

1955-ம் ஆண்டு பொங்கல் வெளியீடான காவேரி, ராஜாராணி கதை. அந்நாளில் ஏவிஎம்மைவிடப் பிரபலமான லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பு. காவேரியும் சிவாஜி - பத்மினி நடிப்பில் 100 நாள்கள் ஓடியது. கிருஷ்ணா பிக்சர்ஸ், பத்மினியின் சொந்த வீடுபோல. அவர் நடிக்க, தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் படங்களைத் தயாரித்தது.

'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு. திடீர்னு ஏன் இப்படி’ என வடிவேலு காமெடியாகச் சொல்லும் வசனத்தை, அன்றைக்குத் திரையுலகில் எல்லோரும் சீரியஸாகப் பேசினார்கள். காரணம், டைரக்டர் எல்.வி.பிரசாத். அவர் இயக்கிய மங்கையர் திலகம் படத்தில் தாயாரை அறியாத, அண்ணியையே தெய்வமாகப் போற்றும் வாசுவாக சிவாஜி. அண்ணி சுலோசனாவாக பத்மினி. அண்ணன் கருணாகரனாக எஸ்.வி.சுப்பையா. அண்ணிக்கும் மைத்துனனுக்கும் உள்ள பாசப்பிணைப்பைப் புரிந்துகொள்ள மறுக்கும் மனைவி பிரபாவாக எம்.என்.ராஜம் நடித்தார்கள். இந்த நான்கு கேரக்டர்களின் உணர்ச்சிக் குமுறல்களே திரைக்கதை. கே.ஏ.தங்கவேலு - ராகினி காமெடி இருந்தாலும், படம் ரொம்ப சீரியஸ். வாஹினியின் வளையல்கள் என்கிற மராட்டிய சினிமாவின் மறு வடிவம்.

நிஜத்தில், இயக்குநருக்கு மிகப்பெரிய சவால். டஜன் கணக்கில் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடித்து வந்த சூழல். மங்கையர் திலகத்தில் நிகழ்ந்த மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி, நிச்சயம் தமிழ் சினிமா வணிகத்தைப் பாதிக்கக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள், கோலிவுட் பண்டிதர்கள்.


பிரசாத் புத்திசாலி. சிவாஜியும் பத்மினியும் தனியாகச் சேர்ந்து நிற்கும் காட்சியே வராமல், படத்தை இயக்கினார். 21 வயதுகூட நிறைவு பெறாத பத்மினிக்கு மிகப்பெரிய லைஃப் டைம் ரோல். முக்கியமான காட்சிகளில், சிவாஜியும் பிரசாத்தும் பத்மினிக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்தனர். ஆகஸ்ட் 26, 1955-ல் படம் வெளியானபோது, ரசிகர்களால் திரையில் பத்மினியைப் பார்க்க முடியவில்லை. சுலோசனாவைத்தான் கண்டார்கள்.

நாயகியின் மேக் அப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்திருந்தார் பிரசாத். பத்மினியின் அழகும் யவ்வனமும் எளிதில் வெளிப்பட்டுவிடாதபடி, சேலைகளில் பத்மினியை மிக கௌரவமாகக் காட்டினார். பத்மினியிடம் அவ்வளவு மெச்சூரிட்டியான மிக இயல்பான நடிப்பு. கடைசியில் அவர் இறந்துவிடுவார். கதறி அழுத சிவாஜியோடு சேர்ந்து ஜனங்களும் கண்ணீர் விட்டனர். திரை முழுக்க முழுக்க பத்மினியின் சுய ராஜ்ஜியம். சிவாஜி ஸ்கிரீனில் வர ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிடும். அதுவரை சின்ன சிவாஜியாக வரும் பொடி நடிகனின் அற்புதமான நடிப்பு நெஞ்சை அள்ளும். இன்றும் 21 வயதில் நிறைய அழகான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பத்மினிகூட நிச்சயம் அகப்படமாட்டார்.

பத்மினிக்குப் பிறகு அறிமுகமாகி, நடிப்பில் அவரையும் முந்திக்கொண்டு, 'நடிகையர் திலகம்’ எனப் பட்டம் பெற்றவர் சாவித்ரி ஒருவரே. ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிகளை விடாது குவித்தவர். ரூபாவாக பத்மினியும், அருணாவாக சாவித்ரியும், அசோக்காக சிவாஜியும் நிறைவாக நடித்த படம், வீனஸ் பிக்சர்ஸ் அமரதீபம்.


இளமை வழிந்தோடிய அந்தக் காதல் சித்திரம், டைரக்டர் ஆவதற்கு முன்பாகவே கதாசிரியர் ஸ்ரீதரை வெற்றிகரமான பட முதலாளியாக ஆக்கியது. கையில் நயா பைசா முதல் போடாமல், நட்சத்திரங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும் தரவும் வாய்ப்பு இல்லாத நிலை. ஸ்ரீதரின் எழுத்தின் மேல் உள்ள நம்பிக்கையில், அன்றைய பெரிய நட்சத்திரங்கள் மூவரும் உடனடியாக கால்ஷீட் தந்தனர். பத்மினி - சாவித்ரி இருவரும் சிவாஜியோடு ஜோடி சேர்ந்து நடிப்பதாக தினசரிகளில் பட விளம்பரங்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீதரிடம் கோலிவுட் சீமான்கள் லட்சக்கணக்கில் கொண்டு வந்து கொட்டி விநியோக உரிமை பெற்றனர். நட்சத்திர செல்வாக்கு என்பதன் முழுமையான அர்த்தம் அது. அந்த நொடி முதலே ரசிகைகளின் உள்ளத்துக்குள் பத்மினியா, சாவித்ரியா? யார் அமரதீபம் என்ற ஆர்வத்தீ. க்ளைமாக்ஸில், தன் தங்கை அருணாவுக்காக அசோக்கை தியாகம் செய்துவிட்டு, நாடோடிப் பெண் ரூபாவாக வரும் பத்மினி இறந்துவிடுவார். அமரதீபம் மகத்தான சக்ஸஸ். உடனடியாக இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியிலும் ரூபாவாக பத்மினி. அருணா வேடத்தில் வைஜெயந்திமாலா. ஹீரோ தேவ் ஆனந்த்.

இன்றைய அனேகன் தனுஷின் டங்கா மாரி ஊதாரிக்கெல்லாம் பிள்ளையார் சுழி, அமரதீபத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல். ஜிப்ஸி பெண்ணான பத்மினி, தெருவில் ஆடுவதற்காக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய அர்த்தம் நிறைந்த பாட்டு! இப்போதும் பெரிசுகள் அதைக் கேட்டவுடன், பப்பியை எண்ணிக் கனவு காண்பார்கள். பத்மினியின் சக்கைப் போடு போட்ட 'ம' வரிசைப் படங்கள்போல், வசூலில் நிறைவை தராவிட்டாலும், ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த படம், கலைஞரின் புதையல். துரையாக சிவாஜி, பரிமளமாக பத்மினி, துக்காராமாக சந்திரபாபு. மூவரும் முற்றிலும் மாறுபட்டு நடித்தார்கள்.

நட்சத்திரங்கள், செட்டுக்குள் காகிதப்பூக்களுக்கு நடுவே பொய்க் காதல் பேசி நடித்ததே வாடிக்கை. அதை மீறி, சிவாஜி - பத்மினி ஜோடியை, கடற்கரையில் 'விண்ணோடும் முகிலோடும்...’ என தங்களை மறந்து இயற்கையோடு ஐக்கியப்படுத்தி, ஆடிப்பாட வைத்தனர், டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.

எல்லா டிவி சேனல்களிலும் அடிக்கடி இடம்பெறும் அந்தப் பாடல் காட்சியில், சிவாஜியின் அந்தர் பல்டியும், பத்மினியுடனான கொஞ்சலும் எப்போது பார்த்தாலும் புதிதாகவே தோன்றும். காதல் வசனங்களை பத்மினிக்காக எழுதுகிறோம் என்பதில் கலைஞருக்கும் குஷி போலும். புதையல் படத்தில் ஹைலைட் அவை.

'லவ் சீன் நியூ ஸ்டைல்! சிவாஜி, பத்மினி மூக்கைப் பிடிச்சுண்டு விளையாடறதும், தலை மயிரைப் பிடிச்சி இழுக்கறதும் பிரமாதம்! ஓரணா நாணயத்தின் விளிம்புபோல் அழகு உன் கூந்தல் என்கிறான். காதல் சீன் டயலாக் எல்லாம் கல்கண்டாட்டமா இருக்கு’ என மனம் திறந்து பாராட்டியது ஆனந்த விகடன் விமரிசனம்.

தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.

தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.


கலைஞர் வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் மீண்டும் கண்ணகியை திரையில் காட்ட முயற்சி நடந்தது. கோவலனாக கணேசன், கண்ணகியாக பத்மினியை நடிக்க வைக்கத் திட்டம் உருவானது. தங்கப்பதுமையும் ஏறக்குறைய பத்தினிப் பெண் ஒருவரின் பரிதவிப்பு. அதை பத்மினி பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவே போதும் என செட்டியார் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்.

தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.

உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.

திருமணத்துக்குப் பிறகு பத்மினி திரும்பவும் நடிக்க வந்த வேளையில், தமிழ் சினிமா தேவிகாவுக்கு மாறி இருந்தது. பத்மினியின் இடத்தில் சிவாஜிக்குப் பக்கத்தில் தேவிகாவின் அன்புக்கரங்கள். தமிழில் தலை தூக்க பத்மினி ரொம்பவே சிரமப்பட்டார். 1966 பொங்கலுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சித்தி வரும் வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜாவாக தனித்து வாடினார்.


சித்தியில் எம்.ஆர்.ராதாவின் கெடுபிடிக்கு ஆளாகும் மனைவி மீனாட்சியாக ஜொலி ஜொலிப்பான நடிப்பு. பி.சுசிலாவின் தாய்மை சிந்தும் குரலில் 'பெண்ணாகப் பிறந்தவருக்கு கண் உறக்கம் இரண்டு முறை’ என்கிற கண்ணதாசனின் ஆறு நிமிடத் தாலாட்டுப் பாடல், பத்மினிக்குப் புது வாழ்வை உறுதிப்படுத்தியது. அட்டகாசமாக 100 நாள்கள் ஓடி, பெண்களிடையே பத்மினியின் மதிப்பு மீண்டும் உயர்ந்தது. சித்தியில் பத்மினியின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகள் கிடையாது.

சித்தியின் உச்சகட்டப் பெருமிதம், ஜெமினி ஸ்டூடியோ அதை ஹிந்தியில் தயாரித்தது. அவ்ரத் என்ற அந்தப் படத்தில், நாயகி பத்மினிக்குத் தம்பியாக, முத்துராமன் வேடத்தில் வந்தவர் புதுமுகம் ராஜேஷ் கன்னா.

ஏ.பி.நாகராஜனின் சரஸ்வதி சபதத்தில் பார்வதியாக பத்மினி தோன்றினார். 1967-ல், சிவாஜி கணேசனோடு மறுபடியும் ஜோடி சேரும் வாய்ப்பை, பேசும் தெய்வத்தில் கே.எஸ்.ஜி. அளித்தார். மீண்டும் வசந்தம்!

மார்க்கெட் போனால் அம்மா, அக்கா வேஷம்தான் என்பதை, முதன் முதலில் முறியடித்தவர் பத்மினி! நாற்பதை நெருங்கியும், கனவுக்காட்சிகளில் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ’ என்று சிவாஜியை பத்மினியுடன் டூயட் பாடவைத்தார் கே.எஸ்.ஜி.

கோபாலகிருஷ்ணனின் இன்னொரு மறக்கமுடியாத படைப்பு, கண் கண்ட தெய்வம். அதில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் பத்மினிக்கும் பலத்த நடிப்புப் போட்டி. தமிழகத்தின் மண்வாசனை வீசும் பண்பாட்டுக் காட்சிகளில், பத்மினியின் புகழ் கூடுதலாயிற்று. அதைத் தொடர்ந்து, 1967 தீபாவளிக்கு வெளியான இருமலர்களில் ஒரு மலர் பத்மினி. 100 நாள்கள் ஓடியது. விடா முயற்சியோடு போராடி வெற்றிக்கோட்டைச் சீக்கிரத்தில் தொட்டு விட்டார் பத்மினி.


எந்த ஹீரோவும் இல்லாமல், 1968 இறுதியில் பத்மினி நடித்த படம் குழந்தைக்காக. கொலைக்கார வில்லன்களுடன் போராடி, பேபி ராணியைக் காப்பற்ற வேண்டி, இரும்புப் பெண்மணியாக, காட்சிக்கு காட்சி பதற்றம் காட்டி பப்பி தனி ஆவர்த்தனம் புரிந்தார். 100 நாள்கள் ஓடியது. அதே படம் ஹிந்தியில் உருவானபோதும் பத்மினியே நாயகி.

1969-ல் பத்மினி நடித்து வெளியான ஒரே படம் குருதட்சணை. புராணப் படங்கள் தயாரித்து வந்த ஏ.பி.நாகராஜனின் சமூகச் சித்திரம். சிவாஜி, கல்வி கற்க விரும்பும் கிராமத்தானாகவும், பள்ளி ஆசிரியையாக பத்மினியும் நடித்தனர். தன் படிக்கும் ஆசையை சொல்லி பத்மினியின் கால்களில் விழுவார் சிவாஜி. அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. நிஜத்தில் மாறுபட்ட கதையாக இருந்தாலும், படம் படுதோல்வி.

1970-ல் கணேசனோடு இரண்டு வெற்றிப்படங்கள். 1. ஜெமினியின் விளையாட்டுப்பிள்ளை, 2. சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு வியட்நாம் வீடு. விளையாட்டுப்பிள்ளையில் நடிக்கும்போது ஒரு விபரீதம் எதிர்பாராமல் நடந்தது. எமோஷனல் சீனில் தன்னை மறந்து, பாசாங்கு இன்றி பத்மினியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார் சிவாஜி. அதன் விளைவு, பத்மினியின் கம்மல் கழன்று அடுத்த ஃப்ளோரில் போய் விழுந்தது. காட்சி ஓகே.

ஷாட் முடிந்ததும் பத்மினியைக் காணோம். அடுத்த சீனுக்காக தேடிப் போய்ப் பார்த்தால், ஓர் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பத்மினி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கி, அழுது அழுது கண்களும் முகமும் சிவந்து, 'ஸாரி ஒண்ணுமில்ல. வலி தாங்கல. அஞ்சு நிமிஷம் கழிச்சி முழுசா அழுதுட்டு வரேன். ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’ என்றார்.

வியட்நாம் வீடு நாடகத்தில், கணேசனின் ஜோடியாக சாவித்ரி மாமியாக பிரமாதப்படுத்தியவர் ஜி.சகுந்தலா. டிராமா சினிமா ஆகிறது என்றதும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கண்டார். ஆனால், சிவாஜியின் சாய்ஸ் பத்மினி. 'அவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. சினிமா வெற்றி பெற மார்க்கெட் உள்ள ஆர்ட்டிஸ்ட் ரொம்ப முக்கியம்’ என்று சகுந்தலாவுக்கு சந்தர்ப்பம் தரவில்லை. வேதனையோடு வீடு திரும்பினார் சகுந்தலா. பத்மினி அவருக்குப் பிராண சிநேகிதி. அவர் தனக்காக சிவாஜியிடம் சிபாரிசு செய்யாமல் போய்விட்டாரே என்கிற தீராத காயம், சகுந்தலாவுக்கு அவர் மறையும் வரையில் நீடித்தது.


சாவித்ரி மாமியாக பத்மினி, மடிசார் புடவை கட்டிக்கொண்டு 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வுக்காகப் பாடி ஆடினார். வித்தியாசமாக, பிராமண பாஷை பேசி வியட்நாம் வீடு படத்தில் வலம் வந்தார். ஆனால், ஜி.சகுந்தலா அவரை விடச் சிறப்பாக நடித்ததாக, ரசிகர்கள் சிலர் பத்திரிகைகளில் எழுதினர்.

கணவர் ராமச்சந்திரனின் மருத்துவப் படிப்பு லண்டனில் முடிந்தது. அடுத்து அவரோடு பத்மினி அமெரிக்காவுக்குக் குடி போக வேண்டிய நிர்ப்பந்தம். கே.பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகனிலும் தொடர்ந்து நடிக்க இயலாமல் போனது.

1971-ல் சிவாஜி - பத்மினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பி.எஸ்.வீரப்பாவின் இருதுருவம். திலீப்குமார் - வைஜெயந்தி மாலா நடித்த ஹிந்தி சூப்பர் டூப்பர் கங்கா ஜமுனாவின் தமிழ் வடிவம். பொங்கலுக்கு வெளியாகி ஏனோ வெற்றிபெறாமல் போனது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குலமா குணமா, சிவாஜி - பத்மினி ஜோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அவர்களின் கடைசி 100 நாள் படம் அது. அதற்குப் பிறகு வெளியான தேனும் பாலும் படமும் வசூலாகியது. பத்மினியும் சரோஜா தேவியும் சிவாஜியோடு முதலும் கடைசியுமாக தேனும் பாலுமாகத் தோன்றினார்கள்.

1986-ல், சிவாஜியுடன் நிறைவாக தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு என கை கோர்த்தார். புதிய பறவையில் ஒலித்தது விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் 'உன்னை ஒன்று கேட்பேன்’ பாடல். அதே மெட்டில், இசைஞானியின் கைவண்ணத்தில் 'பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என டிஎம்எஸ் - பி.சுசிலா குரல்களில், தாய்க்கு ஒரு தாலாட்டில் சிவாஜி - பத்மினி ஜோடி வாயசைத்துப் பாடியது. அதுவே அவர்களின் கடைசி டூயட்!

ஏறக்குறைய 40 சினிமாக்களில் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்துவிட்ட, சிவாஜி - பத்மினி ஜோடியின் ஒப்பற்ற ஆற்றலை, தினந்தோறும் சின்னத்திரைகளில் பார்க்கலாம்.

Russelldwp
5th April 2015, 09:55 AM
Trichy District Sivaji Fans Meet at Gaiety Theatre at 4.30 pm today. Here Special pooja for our Great Nadigarthilagam's arrival on Screen. Here Fans are going to discuss about DIGITAL RELEASE OF VEERA PANDIYA KATTABOMMAN. Todays photos will be displayed in this thread by tomorrow


https://pbs.twimg.com/media/CBzPREfUEAEq0bb.jpg:large

RAGHAVENDRA
5th April 2015, 12:07 PM
eagerly waiting Ramachandran Sir for the coverage

Russellxor
5th April 2015, 03:06 PM
கோவை மாவட்டம்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428223379529_zpstvtaa1xl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428223379529_zpstvtaa1xl.jpg.html)

மாவட்ட அனைத்து சிவாஜி ரசிகர் மன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்குகோவை வ.உ.சி.பார்க்கில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்டபொம்மனுக்கு அனைவரும் ஒருங்கிணைந்துசிறப்பாக செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.வருகிற வாரத்திலிருந்து வாரம் ஒரு ரசிகர்மன்றம்போஸ்டர் அடிப்பது

மற்றும் மக்களை சென்றடையும் வகையில்வித்தியாசமான விளம்பர உத்திகளை செய்வது

பள்ளி மாணவர்களை வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்வது

கர்ணன் படத்திற்கு செய்ததை விட பலமடங்கு ரசிகர்மன்ற பேனர்கள் வைப்பது உள்ளிட்டமற்றும்
பல முடிவுகள் எடுக்கப்பட்டது

Russellxor
5th April 2015, 03:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428207853274_zpsgqkpec5d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428207853274_zpsgqkpec5d.jpg.html)


fb

Russellisf
5th April 2015, 03:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpssayt7zz7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpssayt7zz7.jpg.html)

Russellisf
5th April 2015, 03:19 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsn0foflr0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsn0foflr0.jpg.html)

Russelldwp
5th April 2015, 10:14 PM
Today Evening Show at Trichy Gaiety Theatre had 95% occupancy and today all shows THANGAIKAGA got good response. Also our sivaji fans sticked lot of paper cuttings and 100 days cuttings in all around theatres and yesterday night all cuttings were removed and damaged by MGR fans. We are not going to his films but they are coming to NT's films and doing this kind of idiotic silly things



https://pbs.twimg.com/media/CB13XYgUgAE0j0b.jpg:large

https://pbs.twimg.com/media/CB13cJ1VEAA6dxA.jpg:large

https://pbs.twimg.com/media/CB13g0KUsAAR1lA.jpg:large

https://pbs.twimg.com/media/CB13lsxUkAA81Xt.jpg:large

https://pbs.twimg.com/media/CB13rU-VIAE-zef.jpg:large
https://pbs.twimg.com/media/CB13xI_UIAAmz1i.jpg:large

joe
6th April 2015, 08:54 AM
நேற்று சன் தொலைக்காட்சியில் தில்லானா மோகனாம்பாள் ஒளிபரப்பப்பட்டதாக தெரிகிறது . இது எப்போதும் இல்லாத அளவுக்கு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது .. பலரும் தில்லானா மோகனாம்பாள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டது பார்க்க மிக மகிழ்வாய் இருந்தது .

KCSHEKAR
6th April 2015, 09:56 AM
மீண்டும் தில்லானா மோகனாம்பாள்

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதிய திரைப்படங்கள்தான் ஸ்பெஷல் திரைப்படமாக ஒளிபரப்பப்படும். ஆனால், இந்த ஞாயிறன்று தில்லானா மோகனாம்பாள் சிறப்புத் திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. முகநூல் மற்றும் வலைத் தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இன்று காலை நடைப்பயிற்சியின்போதும் நண்பர்கள் மத்தியில் இதுவே விவாதப் பொருளாக அமைந்தது.

என்றென்றும் நடிகர்திலகத்தின் evergreen திரைப்படங்களுள் ஒன்று என்பதை தில்லானா மோகனாம்பாள் மீண்டும் நிரூபித்துள்ளது.

JamesFague
6th April 2015, 02:47 PM
காலை முதல் மாலை வரை ஒரு நடிகரின் ஒரே படம் 3 தொலைகாட்சிகளில் ஒளி பரப்பிய ஒரே படம் ஞான ஒளி. இது வேறு எந்த நடிகரும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இந்த சாதனையை செய்யும் ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான்

JamesFague
6th April 2015, 02:58 PM
The one & only Brahamasthram of Sun TV is Thillana Mohanamabal. Whenever they wants to improve their

rating the ultimate choice will be of TM. This will help them to increase their viewership.

sss
6th April 2015, 04:15 PM
மறுபடியும் தில்லானா..
-----------------------
மறுபடியும் ஓர் நன்றிப் பதிவு..

https://www.facebook.com/photo.php?fbid=454511994708127&set=a.110048225821174.18946.100004479911407&type=1


"கலியுக நந்தி,கோடையிடி
முத்துராக்கண்ணன்
ஒரு தவிலு."-என்றதும்
மேள முழக்கத்துடன்
காட்டப்படும்
அமரர் பாலையாவின்
குலுங்கும் மார்புகள் தவிர
படத்தில் வேறு
கவர்ச்சி கிடையாது.

அர்த்தமற்ற
மசாலாக்கள் கிடையாது.

அழகழகாய் பெண்களுண்டு.
அணுவளவும்
ஆபாசம் கிடையாது.

இசையுண்டு.
காதுகளுக்கு
ஆபத்து கிடையாது.

காதல் உண்டு.
காமம் கிடையாது.

இதில் வரும்
நாகேஷ் போல
சிரிப்பு மூட்டுகிற
வில்லன்
எந்தப் படத்திலும்
கிடையாது.

நம்பியார் இருக்கிறார்.
கை பிசைந்து,
முகம் உருட்டும்
கெட்டதனம் கிடையாது.

நாட்டியப் பேரொளியின்
நடனப் பாதங்கள்
வேறெவர்க்கும்
கிடையாது.

நடிகர் திலகம்-
நாதஸ்வரம் போல.
அவரின்றி
இந்தப் படமே
கிடையாது.

நம்
இதயத் திரையில்
அடிக்கடி ஓடும்
"தில்லானா
மோகனாம்பாள்"
திரைப்படத்தை,
இன்று
இன்னுமொருமுறை
ஓட விட்ட
"சன்" தொலைக்காட்சிக்கு
நன்றி சொல்லாவிடில்..
எனக்கு
மோட்சமே
கிடையாது.

Thanks: https://www.facebook.com/aathavan.svga

joe
7th April 2015, 06:46 AM
முகநூலில் நான் பதிந்தது ... :)

சன் டிவியில தில்லானா மோகனாம்பாள் பார்த்தோமா . சும்மா பாமரத்தனமா சிவாஜி கணேசன் சூப்பரா நடிச்சிருக்கார்ன்னு சொல்லக்கூடாது . சொல்லிட்டா பாமரனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும் . அதனால ரூம் போட்டு யோசிச்சு ., சிவாஜி கணேசன் வாசிக்கும் போது மூணாவது வரிசையில் நாலாவது உக்கார்ந்து காது குடைஞ்ச ஒருவரின் உடல் மொழி அபாரம் . சிவாஜியெல்லாம் அப்புறம் தான் -ண்னு அள்ளிவிட்டா அவனவன் என்ன ஒரு நுண்ணிய ரசனையடா என மெர்சலாயிடுவான் :)

uhesliotusus
7th April 2015, 09:03 AM
ஒரு பதிவை புரிந்துக் கொள்ளாமல் பதில் சொல்வது என்பது வேறு. ஆனால் புரிந்துக் கொண்டும் தனக்குப் பிடிக்காத நபர் எழுதியிருக்கிறார் என்ற காரணத்திற்க்காக அதை திரித்து வேறு அர்த்தம் வரும்படி வியாக்கியானம் செய்வது என்பதெல்லாம் ரொம்ப பழைய டெக்னிக். அதை இங்கே முயற்சிக்க வேண்டாம்.

இந்த திரியில் தங்களுடைய hidden agenda-வை பிரயோகிக்க நினைக்கும் அனைவருக்கும் இது பொருந்தும். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

அன்புடன்

முரளி

Irene Hastings
7th April 2015, 10:25 AM
Tamil explorer.com



'தில்லானா மோகனாம்பாள்'' படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள்.
அவர்களில் இளையவரான பொன்னுசாமியை பத்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது எடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
''தில்லானா மோகனாம்பாள் ' படத்திற்கு நாங்கள் தான் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறோம் என்று முடிவானதும் ஒன்றைத் தீர்மானமாகச் சொன்னார். ''நாதஸ்வர இசை ரிக்கார்டிங் நான் இல்லாம நடக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி. நாதஸ்வரத்தை
நாங்கள் வாசிக்கிறபோது எங்களுடைய முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் பிடிக்கிற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். படத்தைப் பிறகு பார்த்தபோது தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது.
சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம்.
ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம் நாங்கள். இன்னொரு புறம் சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,பாலையா, சாரங்கபாணி குழுவினர்.
நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள் வாசிக்கிற மாதிரி அபிநயிக்க வேண்டும்.
''எப்படி இருக்கு?'' என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.
'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த நாங்கள் நகல்ன்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க'' என்று நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி.
பிளாட்டிங் பேப்பர் மாதிரி எங்களுடைய முகபாவங்களைப் பார்வையிலேயே உறிஞ்சிவிடுவார். நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும்போது கழுத்து நரம்பு புடைப்பதைக் கூட அழகாகப் பண்ணியிருப்பார்.
பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில்காரரிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு தவிலை எங்களுக்கு வாசித்தே காண்பித்தார். படத்திலும் அமர்க்களப்படுத்திவிட்டார்.
அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!''
லைக் செய்யுங்கள் Tamilexplorer.com
நன்றி என்.சொக்கன் .
Visit :Tamilexplorer.com

Russellxor
7th April 2015, 12:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428388800715_zpsjeipeeql.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428388800715_zpsjeipeeql.jpg.html)

eehaiupehazij
7th April 2015, 01:44 PM
நடிகர்திலகத்தின் பாத்திரமொன்றிய அபார நடிப்பிற்கும் நாட்டிய பேரொளியின் நடன திறமைக்கும் நடுவே நமது மனதில் ஊடுருவும் துணைப்பாத்திரங்களில் மனோரமாவின் வெகுளித்தனம் மிக்க ஜில்ஜில் ரமாமணி பாத்திரம் குறிப்பிடத்தகுந்ததே. அவர் தோன்றும் காட்சிகளில் நடிகர்த்திலகமே சற்று ரிலாக்ஸ் மூடுக்கு வருவதுபோல் தோன்றுகிறது. கள்வனின் காதலி திரைக் காவியத்தில் சுறுசுறுப்பாக பட்டையை கிளப்பிய தனது சதாரம் நாடக ஆடல் பாடலை மனோரமா மீள்பதிவு செய்வதை எப்படி ரசிக்கிறார் நடிகமாமன்னர்!!
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CDwQuAIwAg&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DVey D4L30yiQ&ei=qZIjVaPZKIuwuQS1w4DgDw&usg=AFQjCNGhQwvs6wMRoGYhw72HfL10d0B8Ew

https://www.youtube.com/watch?v=glDHl9njdtk

goldstar
7th April 2015, 06:45 PM
Friends,

Yesterday was watching Enga Mama songs and enjoying each scene of NT, what a fresh look and after watching so many times still these songs look so fresh and enjoyable. I will be posting the NT clips which I always enjoy watching infinity times.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM22_zpsovanuuuv.png

goldstar
7th April 2015, 06:47 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM19_zpsmcjcuxwt.png

goldstar
7th April 2015, 06:48 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM16_zpsdedh0psz.png

goldstar
7th April 2015, 06:49 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM17_zps5a59dzlt.png

goldstar
7th April 2015, 06:50 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM18_zpsqehkvjbz.png

goldstar
7th April 2015, 06:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM21_zpsjgx19u9i.png

goldstar
7th April 2015, 06:51 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM20_zpskyw10dhs.png

goldstar
7th April 2015, 06:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM1_zpsymqdhezg.png

goldstar
7th April 2015, 06:52 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM2_zpsigz0d5tu.png

goldstar
7th April 2015, 06:53 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM4_zpswrvtu1dx.png

goldstar
7th April 2015, 06:54 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM3_zpsgtf5cpzy.png

goldstar
7th April 2015, 06:54 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM5_zpsxzneqg1x.png

goldstar
7th April 2015, 06:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM6_zpsptm8r9is.png

goldstar
7th April 2015, 06:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM7_zpsdvv7u5m3.png

goldstar
7th April 2015, 06:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM8_zps44hrsx5x.png

goldstar
7th April 2015, 06:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM9_zpse8m05llm.png

goldstar
7th April 2015, 06:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM12_zpswvuuhmcc.png

goldstar
7th April 2015, 06:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM11_zpsweufln6i.png

goldstar
7th April 2015, 06:59 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM10_zps2rfifgaf.png

goldstar
7th April 2015, 06:59 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM14_zpshnpncle8.png

goldstar
7th April 2015, 07:00 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM13_zpsseoqbqu8.png

goldstar
7th April 2015, 07:00 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM15_zps5he0mh5o.png

goldstar
7th April 2015, 07:09 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM23_zpsi5lxxjp2.png

Gopal.s
8th April 2015, 05:22 AM
இதை விட அழகாக ,ஒருவனை பிரம்மா படைக்கவே முடியாது. திராவிட மன்மதனின் எங்கமாமா எழில் தோற்றங்களுக்கு நன்றி சதீஷ்.

sss
8th April 2015, 12:09 PM
http://i39.photobucket.com/albums/e153/balebale5/11150197_10153228338306810_8698777564298781686_n_z psswrnpstj.jpg

eehaiupehazij
8th April 2015, 03:02 PM
Immense thanks to SSS for his impressive array of NT's Enga Mama stills!

when movies are remade in tamil from other languages, some would hit the bull's eye more than the original and most others fall below expectations even if the quality is maintained in terms of acting or music or story line....Enga Mama a remake of Hindi Brammachchaari starring Shammi Kapoor was by all means an equally impressive movie in which NT had improvised many of the acting scenes better than Shammi. Also, of all the NT movies this movie brought out a very slim and handsome NT who excelled in style in the song sequences and exhibited a very impinging and exemplary performance in close-up drama scenes, the area that was not so comfortable for Shammi. Besides a fitting physique for a lad, the dress sense of NT was amazing and pleasing to the eyes...a real visual feast for fans!!

In the climax scene Shammi sports a white coat-suit-tie get up in line with the style of Rock Hudson in 'Come September' while NT preferred the dinner jacket get up of Sean Connery/Bond in Goldfinger/Thunderball! Though Shammi had given an impressive performance in this piano scene, NT proves his mettle of timing and tuning sense to the situation far better than Shammi saab!

https://www.youtube.com/watch?v=vo00ogHbydI

https://www.youtube.com/watch?v=9eeIYoAAxgg

sss
8th April 2015, 04:12 PM
http://s2.dmcdn.net/IouK6/1280x720-aLh.jpg

........................ஒரு சகாப்தம் நிசப்தமாய்!!...........................

ஒரு நடிகன் இறக்கவில்லை
“நடிப்பு” இறந்து விட்டது!!

மூன்று பக்க வசனத்தை
மூச்சு விடாமல் பேசும் நீ
இன்று
மூச்சு விடாமல்....

உன் புகழை எழுதுவதற்கு
சுவர்கள் தேடிப் போனால்
சீனச் சுவரும்
சின்னதாகத்தான் இருக்கும்
சிங்கமே!!

காலை ஒன்பது மணிக்கு
படப்பிடிப்பு என்றால்
8.30க்கே காத்திருக்கும்
கண்ணியம் உனக்கு!
மரணநிமிஷம் கூட உனக்கு
8.00க்குத்தான் குறிக்கப்பட்டிருக்கும்
நீதான் 7.30க்கே போய்விட்டாய்!!

மரண தண்டனையை எழுதிவிட்டு
பேனா முனையை ஒடித்து விடுவது
நீதிபதிகளின் வழக்கம்!
உன் மரணத்தை எழுதி விட்டு
காலன் தன்
விரலையே
ஒடித்துக் கொண்டிருப்பான்
என்ற சிந்தனைதான் எனக்கும்!!

நீ தூங்குவதைப் போலவே
இறந்திருக்கிறாய் என்றார்கள்.
எனக்கென்னவோ
நீ இறந்ததைப் போலவே
நடித்துக் கொண்டிருக்கிறாய்
என்றே தோன்றியது

எனக்குத் தெரிய
நீ வசனம் பேசாமல் நடித்த
ஒரே நடிப்பு
இந்த இறுதி நடிப்புத் தான்.

நடிகர் திலகமே!
உன் நினைவிடத்தில்
இப்படி எழுதி வைக்கலாம் --
“இந்தியாவின் தேசிய விருது
இங்கே உறங்குகிறது!”.

..........................வித்தகக் கவிஞர் பா.விஜய்!!.

thanks: https://www.facebook.com/photo.php?fbid=420386561471051&set=a.118398451669865.22583.100004991317557&type=1&fref=nf

Murali Srinivas
8th April 2015, 06:46 PM
மிக மிக அற்புதமான ஆணழகின் உச்சங்களை தொட்டு விடும் நடிகர் திலகத்தின் ஸ்டில்களை எங்க மாமா படத்தில் வரிசைக்கிரமமாக வரும் பாடல்களிலிருந்து எடுத்து தரவேற்றிய சதிஷுக்கு நன்றி!நன்றி!நன்றி!

என்னங்க சொல்லுங்க பாடலில் வரும் அந்த half sleeve checked ஷர்ட்-ம் வெளிர் நிற நீல கலர் trousers-ம் எல்லாவற்றையும் தாண்டி முதலிடம் பிடிக்கிறது.

அதே போல் எனக்கு தெரிந்து பா. விஜய் எழுதிய பாடல்கள்/கவிதைகளிலேயே நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட இந்த அஞ்சலி கவிதைதான் மிகச் சிறந்தது என்பதும் மறுக்கப்பட முடியாத ஒன்று! நன்றி சுந்தர பாண்டியன் அவர்களே!

அன்புடன்

Subramaniam Ramajayam
9th April 2015, 06:04 AM
http://s2.dmcdn.net/IouK6/1280x720-aLh.jpg

........................ஒரு சகாப்தம் நிசப்தமாய்!!...........................

ஒரு நடிகன் இறக்கவில்லை
“நடிப்பு” இறந்து விட்டது!!

மூன்று பக்க வசனத்தை
மூச்சு விடாமல் பேசும் நீ
இன்று
மூச்சு விடாமல்....

உன் புகழை எழுதுவதற்கு
சுவர்கள் தேடிப் போனால்
சீனச் சுவரும்
சின்னதாகத்தான் இருக்கும்
சிங்கமே!!

காலை ஒன்பது மணிக்கு
படப்பிடிப்பு என்றால்
8.30க்கே காத்திருக்கும்
கண்ணியம் உனக்கு!
மரணநிமிஷம் கூட உனக்கு
8.00க்குத்தான் குறிக்கப்பட்டிருக்கும்
நீதான் 7.30க்கே போய்விட்டாய்!!

மரண தண்டனையை எழுதிவிட்டு
பேனா முனையை ஒடித்து விடுவது
நீதிபதிகளின் வழக்கம்!
உன் மரணத்தை எழுதி விட்டு
காலன் தன்
விரலையே
ஒடித்துக் கொண்டிருப்பான்
என்ற சிந்தனைதான் எனக்கும்!!

நீ தூங்குவதைப் போலவே
இறந்திருக்கிறாய் என்றார்கள்.
எனக்கென்னவோ
நீ இறந்ததைப் போலவே
நடித்துக் கொண்டிருக்கிறாய்
என்றே தோன்றியது

எனக்குத் தெரிய
நீ வசனம் பேசாமல் நடித்த
ஒரே நடிப்பு
இந்த இறுதி நடிப்புத் தான்.

நடிகர் திலகமே!
உன் நினைவிடத்தில்
இப்படி எழுதி வைக்கலாம் --
“இந்தியாவின் தேசிய விருது
இங்கே உறங்குகிறது!”.

..........................வித்தகக் கவிஞர் பா.விஜய்!!.

thanks: https://www.facebook.com/photo.php?fbid=420386561471051&set=a.118398451669865.22583.100004991317557&type=1&fref=nf

GOLDRNWORDS TO BE INCORPORATED IN THE HISTORY OF indian cine field records and NT memorials.
thanks to pa vijay

eehaiupehazij
9th April 2015, 11:14 AM
Another youthful slim trim get up of NT in the lighter vein comedy Anjal Petti 520!

https://www.youtube.com/watch?v=mCQqhg3bo4A

https://www.youtube.com/watch?v=jGMZOJH8LPQ

So also,these song sequences from Thirudan

https://www.youtube.com/watch?v=m9wlwwfNZgw

https://www.youtube.com/watch?v=LPK9D4lYHaU

Murali Srinivas
9th April 2015, 12:29 PM
ஜேகே என்ற ஜெயகாந்தன்

ஜேகே என்ற ஜெயகாந்தன். தமிழ் இலக்கிய உலகம் என்றுமே மறக்க முடியாத நபர். தமிழ் இலக்கிய செழுமைக்கு அவரது பங்களிப்பு அபாரமானது. யாரும் தொட முடியாத உயரங்களை வெகு இலகுவாக அடைந்தவர். தன்னுடைய அக்கினிப் பிரவேசம் என்ற ஒரே கதையின் மூலம் தமிழ் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கியவர். 60-களிலும் 70-களிலும் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக வலம் வந்தவர். ஒரு சிவப்பு சிந்தனையாளனாக தொடக்கத்தில் இருந்தவர் பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெருந்தலைவர் மீதும் அன்னை இந்திரா அவர்களின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மீதும் நேசம் கொண்டவராகவே வாழ்ந்தார். சோவியத் யூனியன் உடைவதற்கு முன் இந்தியாவில் அதன் கலாச்சார தூதுவராகவே விளங்கிய ஜேகே ரஷ்யாவில் பெரிதும் மதிக்கப்பட்ட இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். அதன் காரணமாகவே சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாச்சார மய்யத்தோடு இறுதிவரை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

60-களில் உன்னைப் போல் ஒருவன் மற்றும் யாருக்காக அழுதான் போன்ற தன் நாவல்களை திரைப்படமாக்கினார். ஆனால் அவை வெற்றி பெறாமல் போனபோது திரையுலகை விட்டு விலகி இருந்த அவர் 1977-ல் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலமாக மீண்டும் உள்ளே நுழைந்தார். பிறகு 1978-ல் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படமும் வெளி வந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார். ஒரு படைப்பாளிக்கே உரிய ஈகோவினால் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டிய வேடத்தில் பிடிவாதமாக ஸ்ரீகாந்தை நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பின்னாட்களில் அவர் வருத்ததுடன் நினைவு கூர்ந்தார்.

என்னவென்றால், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இயக்குனருக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஷூட்டிங் பார்க்க வந்திருக்கிறார்கள். ஜேகேயும் அங்கே இருந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் லட்சுமி சம்மந்தப்பட்ட ஒரு உணர்ச்சிமயமான காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இயக்குனர் பீம்சிங் எதிர்பார்க்கும் output கொடுக்க ஸ்ரீகாந்த் சிரமப்பட [அதே நேரத்தில் லட்சுமி அனாயாசமாக செய்கிறார்] ஷூட்டிங் பார்க்க வந்த குடுமபத்தில் ஒருவர் இதே இடத்தில சிவாஜியாக இருந்திருந்தால் பிச்சு உதறியிருப்பார் என்று கமண்ட் அடிக்க சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஜேகேயின் காதுகளில் அது விழுந்து விடுகிறது. அவரின் ஈகோ துள்ளி எழ அந்த குடும்பத்தினரைப் பார்த்து சத்தம் போட்டு கத்தி விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் செட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

பல வருடங்களுக்கு பிறகு இதை நினைவு கூர்ந்த ஜேகே அன்று தான் நடந்துக் கொண்டது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த நபர் சொன்னது உண்மைதான் என்றும் அந்த வேடத்தில் சிவாஜி நடித்திருந்தால் படம் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்கும் என்ற உண்மையை பதிவு செய்கிறார். இப்போது அந்தப் படத்தை பார்க்கும்போது அந்த உண்மை பளிச்சென்று தெரிகிறது என்பதையும் மறைக்காமல் சொன்னார். பீம்சிங் என்ற இயக்குனர் எத்தகைய திறமை வாய்ந்தவர் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொன்ன படம் என்ற முறையிலும் லட்சுமி என்ற நடிகையின் அபார திறமைக்கு தீனி போட்ட முறையிலும் அதன் காரணமாக அவருக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது பெற்று தந்த படம் என்ற முறையிலும் தமிழ் சினிமாவில் ஒரு யதார்த்த படத்தை கொடுத்து வெற்றி பெற வைக்க முடியம் என்பதை நிரூபித்த வகையிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் அடிமட்ட நிலையில் வாழும் மனிதர்களின் மன ஓட்டத்தை சினிமா என்ற ஊடகம் அவர்களை எப்படி பாதிக்கிறது குறிப்பாக பெண்களின் மனதை குறிப்பாக ஆண்களோடு ஏற்படும் உறவை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மனோதத்துவ முறையில் அலசிய வகையில் சினிமாவிற்கு போன சித்தாளு மிக முக்கியமான ஒன்று. அதே போல் 1976-ல் வந்த ஜய ஜய சங்கரா குறு நாவல் ஆன்மிகத்தை குறிப்பாக சங்கர மடத்தின் செயல்பாடுகளை உள்ளடக்கிய கவனம் ஈர்த்த ஒன்று. ஆனால் இரண்டாவது சராசரி வாசகனுக்கு சற்றே அன்னியப்பட்ட நடையில் அமைந்திருந்து என்றே சொல்ல வேண்டும்.

சிவப்பு சிந்தனையாளர்களுக்கு அவர்கள் மறைந்து விட்டால் கூட ஆன்மா சாந்தியடையட்டும் என்ற சம்பிரதாய வார்த்தை ஒரு ஒவ்வாமையாகவே தோன்றும். ஆகையால் தமிழ் இலக்கிய தலையாய முன்னோடிகளில் ஒருவரான ஜேகே என்ற ஜெயகாந்தனுக்கு லால் சலாம்!

அன்புடன்

Russellxor
9th April 2015, 03:12 PM
ஒரு சிறிய ஷாட்
அதில் தான்
இவ்வளவு அதிசயங்களும்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3072_zpsll dvjpsg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3072_zpsll dvjpsg.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._5388_zpsng xmvyop.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._5388_zpsng xmvyop.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3642_zpsma ou6cgu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3642_zpsma ou6cgu.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._7405_zpsxu iq4uxy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._7405_zpsxu iq4uxy.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._4424_zpsmv ksab3a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._4424_zpsmv ksab3a.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3167_zpsz2 nwhdty.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3167_zpsz2 nwhdty.jpg.html)

Russellxor
9th April 2015, 03:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428504362660_zpsbfdhhjwc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428504362660_zpsbfdhhjwc.jpg.html)

Russellxor
9th April 2015, 03:22 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428548611772_zps3avewcqd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428548611772_zps3avewcqd.jpg.html)

Gopal.s
10th April 2015, 03:16 AM
சமீபத்தில் எனது மாமா (அத்திம்பேர்) பாலன் மறைந்த போது அவரது நண்பர் எழுதியது."வீட்டுக்கு வாங்கோ என்றார்.மீண்டும் சந்திப்போம் என்றார். அடடா ,ஓர் அழைப்பை ஆயுள் முழுதும் அலட்சிய படுத்தி விட்டோமே என்று இருக்கிறது இப்போது. எல்லோரும் இங்கேதானே இருக்க போறோம் என நினைத்து விட்டேன். அதுதான் வருத்தமாக இருக்கிறது பாலு".

அந்த உயிர் நண்பர் தன,தன்னுடைய எழுத்துக்கள் பட்டி தொட்டியெல்லாம் சேர உதவிய தன நண்பனை காண மறு உலகம் கண்டு விட்டாரோ.??

எனக்கு ஏழு வயதில் பரிச்சயமானவர் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் மூலம். எனக்கு என்னவோ மொண்ணையான வெகுஜன தமிழ் எழுத்தாளர்களை பிடிக்கவே பிடிக்காது. கல்கி,நா.பார்த்தசாரதி,மு.வ ,ஜெகசிற்பியன்,அகிலன் இவர்கள் ஆகவே ஆகாது. புதுமை பித்தன், லா.ச.ரா,கு.ப.ரா, கு.அழகிரி சாமி, தி.ஜானகிராமன்,கரிச்சான் குஞ்சு,ரா.கி.ரங்கராஜன்,பாக்கியம் ராமசாமி,தேவன்,சாண்டில்யன் ,,இவர்களே என் சிறு வயது முதலான ஆதர்ஷங்கள். (பிஞ்சிலே பழுத்தாயிற்றா என சி.க முறுவலிப்பது புரிகிறது)ஜெயகாந்தன் எழுத்துக்கள் நான் பார்த்த அடிப்படை மனிதர்களோடு பரிச்சயம் தந்ததோடு மட்டுமின்றி ,எனது எழுத்து வேள்விகளுக்கு அஸ்திவாரம் இட்டது. இந்த வகையில் ஜெயகாந்தன் எனக்கொரு ஞான தந்தை.பிறகு அசோக மித்திரன்,நீல.பத்மநாபன்,அம்பை,ஆதவன்,இந்திரா பார்த்தசாரதி,பிரபஞ்சன்,என வேறு திசை கண்டது.

எப்போதுமே எனக்கு பிடித்த முதல் ஐந்து கதைகளாக நான் பட்டியலிடுபவை அசோக மித்திரனின் தண்ணீர், ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம்,தி.ஜா வின் மோகமுள், இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால்.

அவருடைய ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்ற ப்ராயிட் சித்தாந்தத்தை மூலமாக வைத்த ரிஷி மூலம் அந்த வயதில் என்னை பொட்டில் அறைந்த மனோதத்துவ கதையாகும்.அவருடைய முன்னுரைகள் என்னை மிக பாதித்தவை.

இவர் சிவப்பு சாயத்தில் நின்று அண்ணா,கருணாநிதி முதல், அப்போது படவுலகை சீரழித்து கொண்டிருந்த ,ஏழை மக்களை பொழுது போக்கு என்ற அபினில் ஆழ்த்தி ,அவர்களை தன் நிலையில் இருந்து சுய முனைப்பில் முன்னேற்றி கொள்ள பிரயத்தனம் செய்ய விடாமல், என்னை ஆதரியுங்கள் ,எல்லார் வீட்டிலும் பாலும் தேனும் ஓடும் என்ற ரீதியில் பொய் பிராச்சாரம் நிகழ்த்தி கொண்டிருந்த சில நடிகர்களை மூர்க்கமாக எதிர்த்தார்.

நடிகர்திலகத்தின் மீது நல்ல மதிப்பு கொண்டவர். எந்தவொரு மனிதனும் வாழ்வின் ஏதாவது கணத்தில் சிவாஜி ரசிகனாக இருந்தே தீருவான். அவர் எனது எழுத்துக்களை படித்தால் எனக்கு பெருமை என்று சொன்னார். அதே போல அப்போது மாறி கொண்டிருந்த சிவாஜி நடிப்பு முறையை ,இப்படி வேண்டாமே ,மிதமாக இருக்கலாமே என்று விமர்சனமும் செய்தார்.

இவருடைய மடம் என்று அழைக்க படும் இடத்திற்கு இரு முறை சென்றிருந்தேன் பரீக்ஷா உறுப்பினராக உள்ள போது . அப்போது என் ரசனை அசோக மித்திரனை ஞான தந்தையாக வரித்திருந்த நேரம். கணையாழி,கசட தபற என்று பரிச்சயம் கண்டவுடன் ,ஜெயகாந்தன் இலக்கியத்தில் ரொம்ப ஓவர் ஆக எழுதி ரொம்ப பந்தா பண்ணுகிறார். ஒரு கீழ் ரசனைக்கும், உயர் ரசனைக்கும் கண்ணியாக மட்டுமே இருப்பவர் என கண்டு தெளிந்து விட்டிருந்தேன். 1977 முதலே பெருங்காய டப்பா .பிறகு இரண்டாயிரமாவது ஆரம்பங்களில் ஞான பீடம் பெற்றதும், அகிலன் என்பவருக்கு கொடுத்து அசிங்க பட்ட விருது சிறிதே களங்கம் துடைத்தது. ஆனால் அசோக மித்திரனுக்கு ஞான பீடம் மட்டுமல்ல ,நோபெல் விருதும் கிடைக்க வேண்டும் என்பது எனது அவா.(சிவாஜிக்கு வாழ்நாள் ஆஸ்கர் போல ). உண்மையாகவே சொல்கிறேன். ஆரம்ப காலம் முதல் இன்று வரை நோபெல் பரிசு பெற்ற அத்தனை இலக்கியங்களையும் மூல வடிவில் அல்லது மொழி பெயர்ப்புகளில் படித்தவன் என்ற வகையில் நோபெல் பரிசு பெற தகுதியான ஒரே இந்திய எழுத்தாளர் அசோக மித்திரனே.

இவர் தான் பரிசு பெற்றதற்கு தன்னை கண்டு வாழ்த்த விரும்பிய கலைஞரை அவமான படுத்திய விதமும், பின்னானில் தன வாரிசுகளின் நலனுக்காக வளைந்து கொடுத்து தன் நிலை தாழ்ந்து எல்லோரையும் சங்கட படுத்தியதும் மறக்க விரும்பும் நிகழ்வுகள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது மனபூர்வமான கண்ணீர் அஞ்சலி.

sivaa
10th April 2015, 07:48 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/EM13_zpsseoqbqu8.png

அண்ணனின் மிகவும் அழகான படங்களை பதிவிட்டுள்ளீர்கள் சதீஷ் நன்றி நன்றி
தொடருங்கள்

sivaa
10th April 2015, 07:50 AM
ஜேகே என்ற ஜெயகாந்தன்

ஜேகே என்ற ஜெயகாந்தன். தமிழ் இலக்கிய உலகம் என்றுமே மறக்க முடியாத நபர். தமிழ் இலக்கிய செழுமைக்கு அவரது பங்களிப்பு அபாரமானது. யாரும் தொட முடியாத உயரங்களை வெகு இலகுவாக அடைந்தவர். தன்னுடைய அக்கினிப் பிரவேசம் என்ற ஒரே கதையின் மூலம் தமிழ் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கியவர். 60-களிலும் 70-களிலும் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக வலம் வந்தவர். ஒரு சிவப்பு சிந்தனையாளனாக தொடக்கத்தில் இருந்தவர் பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெருந்தலைவர் மீதும் அன்னை இந்திரா அவர்களின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மீதும் நேசம் கொண்டவராகவே வாழ்ந்தார். சோவியத் யூனியன் உடைவதற்கு முன் இந்தியாவில் அதன் கலாச்சார தூதுவராகவே விளங்கிய ஜேகே ரஷ்யாவில் பெரிதும் மதிக்கப்பட்ட இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். அதன் காரணமாகவே சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாச்சார மய்யத்தோடு இறுதிவரை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

60-களில் உன்னைப் போல் ஒருவன் மற்றும் யாருக்காக அழுதான் போன்ற தன் நாவல்களை திரைப்படமாக்கினார். ஆனால் அவை வெற்றி பெறாமல் போனபோது திரையுலகை விட்டு விலகி இருந்த அவர் 1977-ல் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலமாக மீண்டும் உள்ளே நுழைந்தார். பிறகு 1978-ல் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படமும் வெளி வந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார். ஒரு படைப்பாளிக்கே உரிய ஈகோவினால் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டிய வேடத்தில் பிடிவாதமாக ஸ்ரீகாந்தை நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பின்னாட்களில் அவர் வருத்ததுடன் நினைவு கூர்ந்தார்.

என்னவென்றால், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இயக்குனருக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஷூட்டிங் பார்க்க வந்திருக்கிறார்கள். ஜேகேயும் அங்கே இருந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் லட்சுமி சம்மந்தப்பட்ட ஒரு உணர்ச்சிமயமான காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இயக்குனர் பீம்சிங் எதிர்பார்க்கும் output கொடுக்க ஸ்ரீகாந்த் சிரமப்பட [அதே நேரத்தில் லட்சுமி அனாயாசமாக செய்கிறார்] ஷூட்டிங் பார்க்க வந்த குடுமபத்தில் ஒருவர் இதே இடத்தில சிவாஜியாக இருந்திருந்தால் பிச்சு உதறியிருப்பார் என்று கமண்ட் அடிக்க சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஜேகேயின் காதுகளில் அது விழுந்து விடுகிறது. அவரின் ஈகோ துள்ளி எழ அந்த குடும்பத்தினரைப் பார்த்து சத்தம் போட்டு கத்தி விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் செட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

பல வருடங்களுக்கு பிறகு இதை நினைவு கூர்ந்த ஜேகே அன்று தான் நடந்துக் கொண்டது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த நபர் சொன்னது உண்மைதான் என்றும் அந்த வேடத்தில் சிவாஜி நடித்திருந்தால் படம் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்கும் என்ற உண்மையை பதிவு செய்கிறார். இப்போது அந்தப் படத்தை பார்க்கும்போது அந்த உண்மை பளிச்சென்று தெரிகிறது என்பதையும் மறைக்காமல் சொன்னார். பீம்சிங் என்ற இயக்குனர் எத்தகைய திறமை வாய்ந்தவர் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொன்ன படம் என்ற முறையிலும் லட்சுமி என்ற நடிகையின் அபார திறமைக்கு தீனி போட்ட முறையிலும் அதன் காரணமாக அவருக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது பெற்று தந்த படம் என்ற முறையிலும் தமிழ் சினிமாவில் ஒரு யதார்த்த படத்தை கொடுத்து வெற்றி பெற வைக்க முடியம் என்பதை நிரூபித்த வகையிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் அடிமட்ட நிலையில் வாழும் மனிதர்களின் மன ஓட்டத்தை சினிமா என்ற ஊடகம் அவர்களை எப்படி பாதிக்கிறது குறிப்பாக பெண்களின் மனதை குறிப்பாக ஆண்களோடு ஏற்படும் உறவை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மனோதத்துவ முறையில் அலசிய வகையில் சினிமாவிற்கு போன சித்தாளு மிக முக்கியமான ஒன்று. அதே போல் 1976-ல் வந்த ஜய ஜய சங்கரா குறு நாவல் ஆன்மிகத்தை குறிப்பாக சங்கர மடத்தின் செயல்பாடுகளை உள்ளடக்கிய கவனம் ஈர்த்த ஒன்று. ஆனால் இரண்டாவது சராசரி வாசகனுக்கு சற்றே அன்னியப்பட்ட நடையில் அமைந்திருந்து என்றே சொல்ல வேண்டும்.

சிவப்பு சிந்தனையாளர்களுக்கு அவர்கள் மறைந்து விட்டால் கூட ஆன்மா சாந்தியடையட்டும் என்ற சம்பிரதாய வார்த்தை ஒரு ஒவ்வாமையாகவே தோன்றும். ஆகையால் தமிழ் இலக்கிய தலையாய முன்னோடிகளில் ஒருவரான ஜேகே என்ற ஜெயகாந்தனுக்கு லால் சலாம்!

அன்புடன்


வாதத்திற்கோ தர்க்கத்துக்காகவோ அல்ல
ஜெயகாந்தன் பெண்களின் கற்பு விடயத்தில்
இழிவான கருத்து எழுதியதாக ஞாபகம்

அன்னாரின் மறைவுக்கு எனது இரங்கல்கள்

sivaa
10th April 2015, 07:52 AM
ஒரு சிறிய ஷாட்
அதில் தான்
இவ்வளவு அதிசயங்களும்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3072_zpsll dvjpsg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3072_zpsll dvjpsg.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._5388_zpsng xmvyop.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._5388_zpsng xmvyop.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3642_zpsma ou6cgu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3642_zpsma ou6cgu.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._7405_zpsxu iq4uxy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._7405_zpsxu iq4uxy.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._4424_zpsmv ksab3a.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._4424_zpsmv ksab3a.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3167_zpsz2 nwhdty.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/Oonjalukku%20Poochooti%20Oorvalathil..._3167_zpsz2 nwhdty.jpg.html)



பறவைகள் பலவிதம
ஒவ்வொன்றும் ஒருவிதம்

(மன்னனின்)
தோற்றங்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

காணக் கண் கோடி வேணும்

நண்பர் செந்தில்வேல் அண்ணனின்
அழகான தோற்றங்களை பதித்த தங்களுக்கு
நன்றி சொல்ல வார்த்தை இல்லை

தொடருங்கள்

Gopal.s
10th April 2015, 10:49 AM
சிலருக்கு ரசனை குறைவு, மந்த தன்மை இருக்கும் என எதிர்பார்த்ததே. ஆனால் தமிழ் திறமையாளர்களை கண்டாலே அலர்ஜி. ஏனென்று தெரிவதில்லை.ஜெயகாந்தனை பற்றி சொல்ல விஷயமா இல்லை?



தன் புகழ் ஒன்றுக்காக , சங்கத்தமிழும், திருக்குறளும் ,கம்பனும் ,பாரதியும் பிறந்த மண்ணில் திருடாதே,தூங்காதே, ஏமாற்றாதே (பண்ணியதேன்னவோ அதைத்தான்) என்று அரிச்சுவடி பாடல்களை பாடி மயக்கத்தில் ஆழ்த்தி,நானிருக்கிறேன் நீ எதுவும் செய்ய வேண்டாம் என சோம்பேறிகளாக்கி, ஓசி பழக்கத்தை கொடுத்து பிச்சை பழக்கமும் செய்து ,முன்னேற விடாமல் அடித்தவர்களையே பிடிக்கிறது.



காங்க்ரஸ் இருந்து திராவிடம் தாவி,இடையில் காமராஜருக்கு தாவ முனைந்து, பதவிக்காக திராவிட கட்சியை கூறு போட்டு ,இந்திராவிடம் தமிழகத்தை அடகு வைத்தது கொள்கை பிடிப்பா?

KCSHEKAR
10th April 2015, 12:08 PM
ஜெயகாந்தன்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JK_zpskq1md4f7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JK_zpskq1md4f7.jpg.html)

(சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூலில் பதிவு செய்யப்பட்டது)

Murali Srinivas
10th April 2015, 12:23 PM
ஜெயகாந்தன் பற்றிய என்னுடைய பதிவை படித்து விட்டு இரண்டு மூன்று அழைப்புகள். நடிகர் திலகம் - ஜெயகாந்தன் பற்றி சொல்லும்போது காவல் தெய்வம் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள். நான் சொன்னேன். வேண்டுமென்றுதான் விட்டு விட்டேன். காரணம் அதைப் பற்றி சிறப்பாக எழுத வாசு, ராகவேந்தர் சார், கார்த்திக் போன்றவர்கள் இருக்கிறார்கள். முன்பொருமுறை வாசு படத்தின் உயிர்நாடியான காட்சியைப் பற்றி மிக அற்புதமாக எழுதியிருந்தார். ஆகவே அவர்கள் வந்து அந்தப் படத்தைப் பற்றி எழுதட்டும் என்பதற்காகவே அப்படி செய்தேன் என்று சொன்னேன். ராகவேந்தர் சார் நிச்சயம் எழுதுவார். அவரது கம்ப்யூட்டர் சற்றே பழுதுப்பட்டிருப்பதால் அவரால் கடந்த 3, 4 நாட்களாக எழுத முடியவில்லை. வாசுவும் கார்த்திக்கும் வரவேண்டும்.

அன்புடன்

கோபால்,

உங்களுக்கே உரித்தான பாணியில் ஜெயகாந்தன் பற்றிய பதிவு நன்று!

siqutacelufuw
10th April 2015, 12:56 PM
சிலருக்கு ரசனை குறைவு, மந்த தன்மை இருக்கும் என எதிர்பார்த்ததே. ஆனால் தமிழ் திறமையாளர்களை கண்டாலே அலர்ஜி. ஏனென்று தெரிவதில்லை.ஜெயகாந்தனை பற்றி சொல்ல விஷயமா இல்லை?



தன் புகழ் ஒன்றுக்காக , சங்கத்தமிழும், திருக்குறளும் ,கம்பனும் ,பாரதியும் பிறந்த மண்ணில் திருடாதே,தூங்காதே, ஏமாற்றாதே (பண்ணியதேன்னவோ அதைத்தான்) என்று அரிச்சுவடி பாடல்களை பாடி மயக்கத்தில் ஆழ்த்தி,நானிருக்கிறேன் நீ எதுவும் செய்ய வேண்டாம் என சோம்பேறிகளாக்கி, ஓசி பழக்கத்தை கொடுத்து பிச்சை பழக்கமும் செய்து ,முன்னேற விடாமல் அடித்தவர்களையே பிடிக்கிறது.



காங்க்ரஸ் இருந்து திராவிடம் தாவி,இடையில் காமராஜருக்கு தாவ முனைந்து, பதவிக்காக திராவிட கட்சியை கூறு போட்டு ,இந்திராவிடம் தமிழகத்தை அடகு வைத்தது கொள்கை பிடிப்பா?

திரு. கோபால் அவர்களுக்கு.

ஜெயகாந்தன் இறந்து விட்டால் அவரை நினைவு கூர்ந்து செய்திகள் பதிவிடுவதை விட்டு விட்டு, தேவையில்லாமல், வாந்தி எடுத்துள்ளீர்கள்.

முதலில் உங்கள் வாயில் "dettol' ஊற்றி சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.

எங்கள் புரட்சித்தலைவரை சீண்டும் விதத்தில் உங்கள் பதிவுகள் இனி இருக்குமாயின், இதே திரியில் ஒருவர் பின் ஒருவராக வந்து தக்க பதிலடியை கொடுப்போம் என எச்சரிக்கிறோம்.

உங்களுக்கு மட்டும்தான் எழுத தெரியும் என்று நினைத்து கொண்டு தங்கள் அதி மேதாவி தனத்தை காட்டாதீர்கள்.

எழுத்து நாகரீகம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன்.

Russellxor
10th April 2015, 02:49 PM
இன்றுமுதல்


கோவை டிலைட்டில்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/trisoolam_zps5ltkrest.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/trisoolam_zps5ltkrest.jpg.html)

Russellxor
10th April 2015, 05:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428598164935_zpsl5s4ermj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428598164935_zpsl5s4ermj.jpg.html)

Russellxor
10th April 2015, 05:49 PM
Picture Collages

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428597657136_zpsodrvjwh8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428597657136_zpsodrvjwh8.jpg.html)

Russellxor
10th April 2015, 05:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428597661958_zpsngeviwjv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428597661958_zpsngeviwjv.jpg.html)

Russellxor
10th April 2015, 06:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428598137167_zpsxxasyhsy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428598137167_zpsxxasyhsy.jpg.html)

Russellxor
10th April 2015, 06:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428666734925_zpswl2k3q19.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428666734925_zpswl2k3q19.jpg.html)

Russellxor
10th April 2015, 06:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428668073140_zpsyikkikea.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428668073140_zpsyikkikea.jpg.html)

Russellxor
10th April 2015, 06:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428668135245_zpsgzuuhgwj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428668135245_zpsgzuuhgwj.jpg.html)

Russellxor
10th April 2015, 06:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428669480040_zpsfg6k1ox7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428669480040_zpsfg6k1ox7.jpg.html)

Russellxss
10th April 2015, 06:18 PM
சமீபத்தில் பாவமன்னிப்பு திரைப்படம் பார்த்தேன். படம் பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகம் நினைவுக்கு வந்தது அப்பொழுது உறுதிமொழி படபிடிப்பு தேக்கடியில் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட பிரபு ரசிகர் மன்ற பொருளாளர் அழகர் அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த இளையதிலகம் பிரபு அவர்கள் என்னையும், ரமேஷ்பாபு அவர்களையும் தேக்கடி வரும்படி சொன்னார். இருவரும் இரண்டு நாள் கழித்து தேக்கடி சென்றோம்.
அண்ணன் பிரபு அவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். அண்ணனுடைய ஷாட் வரவும் அவர் ஏரியின் நடுவில் படகுக்குள் படபிடிப்பு நடந்ததால் அருகில் இருந்த சிவகுமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நங்கள் சிவகுமார் அவர்களிடம் எங்களை நாங்கள் சிவாஜி மற்றும் பிரபு அவர்களின் ரசிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டோம்.
உடனே அவருடைய முகத்தில் ஒரு பிரகாசம் காரணம் அவரே சொன்னார் நல்லவேளை நீங்கள் சிவாஜி ரசிகர், நான் சிவாஜி வெறியர் என்னை விட சிவாஜி வெறியர் யாரும் இருக்கமாட்டார்கள் என்று. நாங்கள் சிவாஜி அவர்கள் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்று கேட்டோம். அவர் சொன்னார் சிவாஜி படங்களில் ஒரு படம் தேர்ந்தெடுக்க சொன்னால் எப்படி முடுயும் பாசமலரை சொன்னால் பாகபிரிவினை வந்து நிற்கும் படிக்காதமேதையை சொன்னால் பார் மகளே பார் வந்து நிற்கும் என்று சொல்லிக்கொண்டே போனாரே அன்றி ஒரு படத்தை மட்டும் அவரால் சொல்லமுடியவில்லை.
அப்பொழுது நாங்கள் கேட்டோம் நீங்கள் கருப்பு வெள்ளை படங்களையே சொல்லுகின்றீர்களே வசந்த மளிகை, சிவகாமியின் செல்வன், தீபம் போன்ற கலர் படங்கள் வரிசையில் ஏதும் சொல்லவில்லையே என்றோம், உடனே, அவருக்கே உண்டான ஸ்டைலில் அட போங்கப்பா... என்னால் 60க்குள் வந்த படங்களை விட்டே வரமுடியவில்லை என்றார். அப்பொழுது நடிப்பு என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் இருவரும் நன்றாக தெரியும் என்று சொன்னோம். உடனே அவர் எங்களை திருப்பி உங்களுக்கு சிவாஜியின் எந்த நடிப்பு பிடிக்கும் என்று கேள்வி கேட்டார்,
நாங்கள் சிவாஜி அவர்கள் சிரித்துகொண்டே அழுவார் அந்த நடிப்பு பிடிக்கும் என்றோம்.
அவர் எங்களை கோயம்பதூர்காரர்களுக்கே சொந்தமான நையாண்டி பார்வையால் எங்களை பார்த்தார். பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார் தம்பி நடிப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாவமன்னிப்பு படத்தில் ஒரு காட்சியை சொல்லுகிறேன். அந்த படத்தில் தனது தந்தை ராதா அவர்கள் தாய் ராஜம்மா அவர்கள் என்பதை தெரிந்து கொள்வார். தனது தாயிடம் பேசும்போது கண்களில் தண்ணீர் தெப்பம் போல் தேங்கி நிற்கும் ஆனால் ஒரு துளி கண்ணீர் கூட வெளியே வராது. அந்த கண்ணீரே சிவாஜி அவர்கள் சொன்னால் தான் வெளிவரும். உலகத்தில் கண்ணீரையும் தன நடிப்பால் கட்டிபோட கூடிய ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது சிவாஜி ஒருவரை தவிர வேறு யர்ரும் கிடையாது என்று ஒரே போடு போட்டார் . இப்பொழுது பாவமன்னிப்பு படம் பார்த்தபோது சிவகுமார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது நண்பர்களே நீங்களும் பார்த்து மகிழ விரைவில் தமிழகமெங்கும்


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/p180x540/1559790_457190647771380_4267444175580250944_n.jpg? oh=f14ef4259e58cd18e1dd3788511ecf66&oe=55A21B05&__gda__=1437589920_4ddc6d04037d39ee2ddd61fa1e80749 d

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/11141195_457190817771363_7920589367311872884_n.jpg ?oh=42fb0d6f184c0acac85b1ed47103b60e&oe=55A6D858

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11095243_457191137771331_4360329149402950130_n.jpg ?oh=2ecca03d9901da6a0c2afb10e3ebcd40&oe=55B1FB70&__gda__=1436046144_1d022dd294d3a594ff1044fe5f32c25 9

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p180x540/11026221_457191187771326_5391116868846449894_n.jpg ?oh=74d4122a2a32a3d43e4bdd67393a1db3&oe=559AB0C3&__gda__=1441071486_48a432e94f23d26910dd899a4201a73 9

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/p180x540/11150907_457191624437949_6118443022599878878_n.jpg ?oh=5392614379acc4fba63ffc0b844678df&oe=559DC0FC&__gda__=1436013449_20b08ca31bc6e4e9aca44d32054b53b d

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/p180x540/10408700_457191657771279_9136052888782060768_n.jpg ?oh=dcb892529a40f4de946b671cd76e64bf&oe=55B01B1A

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p180x540/10003915_457192024437909_6722655162554870668_n.jpg ?oh=14dd5233a2a1254668ff15e3919fadb6&oe=55E49B1B


https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11011670_457192457771199_4439041817978780665_n.jpg ?oh=f146bbf638862d26c79030692746e6b3&oe=55E006CF&__gda__=1437864447_c61aa5f68523a45347162ccb8cc0389 c

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/l/t1.0-9/p180x540/10500301_457192147771230_5492935898102033122_n.jpg ?oh=a1f94514061bb5fe02fd20f66a1d0b43&oe=55B4EC27

உயிருள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxor
10th April 2015, 07:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428675695050_zps7itobbzb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428675695050_zps7itobbzb.jpg.html)

Russellxor
10th April 2015, 08:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428676211229_zpsymvdmfn7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428676211229_zpsymvdmfn7.jpg.html)

Russellxor
10th April 2015, 08:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428676231055_zpsl27qk7qw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428676231055_zpsl27qk7qw.jpg.html)

Russellxor
10th April 2015, 08:55 PM
புதியபார்வை இதழில் வெளிவந்த கட்டுரை


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428679038833_zpsrnsydqdu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428679038833_zpsrnsydqdu.jpg.html)

Russellxor
10th April 2015, 09:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428679043328_zpsbxqq2o5h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428679043328_zpsbxqq2o5h.jpg.html)

Russellxor
10th April 2015, 09:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428679046426_zpsfmh3fgdm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428679046426_zpsfmh3fgdm.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428679049497_zpsqdivrova.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428679049497_zpsqdivrova.jpg.html)

Gopal.s
11th April 2015, 09:31 AM
நண்பர்களே,

மாற்றுதிரி நண்பர்களாவது என் பதிவை படிக்கிறார்கள் ஆனால் அறையும் குறையுமாக. ஜெயகாந்தன் பல கட்சிகள் மாறினார் என்ற பதிவுக்கு போட்ட பதில். யாருமே ஒரே கட்சியில் ,ஒரே கொள்கையில் இருந்ததில்லை என்று அவர்களுக்கு தெரிந்த ஒரே உதாரணம் கொண்டு விளக்கினேன் அவ்வளவே.

நான் காங்கிரஸ் என்று எப்போது சொன்னேன்? எனக்கு பெரியார் பெண்ணுரிமை, சுயமரியாதை கருத்துக்கள் பிடிக்கும். காமராஜரின் நல்லெண்ண ஆட்சி பிடிக்கும்.அண்ணாவின் தலைமை குணம் பிடிக்கும்.ராஜாஜியின் தீர்க்க தரிசனம் பிடிக்கும்.கலைஞரின் போர்குணம் ,அனுபவ ஆற்றல்,எழுத்து திறன் பிடிக்கும்.இவையெல்லாம் மீறி உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் நடிப்பின் தெய்வத்தை மிக மிக மிக மிக மிக பிடிக்கும்.

கட்சி என்று எதுவுமே ரொம்ப பிடித்ததில்லை.சிவாஜிக்காக மாணவ பருவத்தில் இரண்டாண்டு காங்கிரஸ் .சில கம்யூனிஸ்ட் தலைவர்களின் அர்பணிப்பு சில காலம் இடது சாரியாக்கியது. ஓரிரு ஆண்டுகள் வீ.பீ.சிங் ஈர்த்தார். நரசிம்ம ராவ், வாஜ்பாய் கொஞ்சம் பிடிக்கும்.

உலக அளவில் என்னை ஈர்த்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள்.

1)கலீபா உமர்.
2)ஷேர் ஷா
3)அக்பர்.
4)ஹிட்லர் (முதல் பத்தாண்டு)
5)ஜார்ஜ் வாஷிங்டன்.
6)களப்பிரர் ஆட்சி(நில சீர்திருத்தம்).
7)மாசே துங்.
8)லீ க்வான் யூ
9)சுகார்த்தோ
10)சீசர்.

Gopal.s
11th April 2015, 11:38 AM
Gopal,

Let us concentrate on NT.

Regards

Murali

Russellbpw
11th April 2015, 12:23 PM
எந்த காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற சிறந்த பாடல் !

பாடலுக்கு முன் வரும் வசனம் - வில்லன் நம்பியாருக்கு நடிகர் திலகம் கொடுக்கும் பதில் பிரமாதம் !


https://www.youtube.com/watch?v=RABmwdzsOYw

Russellbpw
11th April 2015, 12:33 PM
நாம் இருவருமே நடித்தோம்....பாவம் நீங்கள்.......!

https://www.youtube.com/watch?v=hu8matpsKk8

Russellbpw
11th April 2015, 12:46 PM
NAAN VAAZHA VAIPPEN - Nadigar Thilagam Film CELEBRATIONS !! - DISTRIBUTOR's INTERVIEW, PUBLIC VIEWS, FANS VIEW, THEATER OWNER COMMENTS and more..........Trailer courtesy : Neyveli Vasudevan sir

https://www.youtube.com/watch?v=KPGALWi4WeI

Russellxor
11th April 2015, 01:12 PM
நடிகர் திலகத்தின் படங்களால் ஆன பிக்சர் கொலாஜ்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428736745963_zpsjxzpb93s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428736745963_zpsjxzpb93s.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428736753620_zpsqpha4eyf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428736753620_zpsqpha4eyf.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428736749774_zps2bvcqpc0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428736749774_zps2bvcqpc0.jpg.html)

Russellxor
11th April 2015, 01:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428736983239_zpsskr07v7y.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428736983239_zpsskr07v7y.jpg.html)

Russellxor
11th April 2015, 01:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428736988968_zpsbrryx9iq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428736988968_zpsbrryx9iq.jpg.html)

Russellxor
11th April 2015, 01:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428737745710_zpsctt4lfim.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428737745710_zpsctt4lfim.jpg.html)

Murali Srinivas
11th April 2015, 03:14 PM
சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.

ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.

இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?

இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்

இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!

நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

Russellbpw
11th April 2015, 09:12 PM
கலைஞர் குழுமத்தின் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகம் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய இமாலய வெற்றி சித்திரம் சந்திப்பு தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC6271-1_zpsxbjw8xtq.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC6271-1_zpsxbjw8xtq.jpg.html)

சந்திப்பு திரைப்படத்தை பற்றி கூறுகையில் ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்துகொள்ள நினைக்கிறன். சந்திப்பு வெளியான நேரத்தில் ஒரு சிலர் சிவாஜிக்கு ஜோடி ஸ்ரீதேவியா ...அவர் மகள் வயது ..எதற்கு ஸ்ரீதேவியுடன் ஜோடி எல்லாம் என்று கிண்டல் செய்தனர்.

அதாவது...நடிகர் திலகத்திற்கு மட்டுமே சட்ட திட்டங்களை எப்போதும் போதிக்கும் கூட்டம் எல்லா காலத்திலும் உள்ளனர்.

இவர்கள் இதர நடிகர்கள் தொங்குவதற்கு ஒரு இடம் கூட பாக்கியில்லாமல் அத்தனை இடங்களிலும் அதுவும் ஒரு ரப்பர் பேண்ட் வைத்து சதை தொங்குவதை கட்டிவிடலாம்..அந்தளவிற்கு சதை தொங்கிய நடிகர்கள் கொள்ளுபேத்திகளுடன் ஜோடி போட்டு நடித்ததையும் பார்த்தவர்கள். ஆனால் அதை பற்றி மட்டும் எந்த விமர்சனமும் கூறமாட்டார்கள் !

முடிந்தால் வர்ணிப்பார்களே அல்லாமல் எந்த மாற்று விமர்சனம் கூற கூறமாட்டார்கள் மற்ற நடிகர்களை பொருத்தவரை. ஆனால் நடிகர் திலகம் ஸ்ரீதேவியுடன் நடித்தவுடன்..உடனே....ஞ்யாய தர்மம் பற்றி வாய் கிழிய பேசினார்கள்.

ஆனால் நடந்தேறியது மற்றொன்று...சந்திப்பு திரையிட்ட இடம் அனைத்தும் திருவிழா கோலம் கண்டு பிரம்மாண்ட வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கொண்டாடியது !

இறக்கும் வரை ஒரு நடிகருக்கு மார்க்கெட் இருப்பது வினோதம். அப்படி ஒரு சிலரே இருந்தனர். அவர்களில் நடிகர் திலகம் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. உடல் நலம் சரி இல்லை என்றாலும் சரி...உடல் நிலை தெரிய நிலையிலும் சரி...நடிகர் திலகம் அவர்கள் இல்லத்து வாயிலில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டம் மொய்த்தபடி இருந்தார்கள் !

உடல் நிலை கருத்தில் கொண்டு அவராக நடிப்பதை வெகுவாக குறைத்துகொண்டார். திரை உலகின் பீஷ்மர் அல்லவா ....ஆகையால்தான் அவரது விருப்பம் போல திரை வாழ்க்கை அமைந்தது..!

கலைவாணியின் பிறப்பல்லவா...சொல்வாக்கும் செல்வாக்கும் இல்லாமலா இருக்கும் !

RKS

Russellbpw
11th April 2015, 10:04 PM
WATCH FROM 13:00 mins

https://www.youtube.com/watch?v=X97vFCHeHY0&feature=youtu.be

Russellbpw
11th April 2015, 10:20 PM
WATCH from 00:35.......See how the Calm Face Changes to Red one - Heights of Anger


https://www.youtube.com/watch?v=aGo6fJM3WgY

siqutacelufuw
12th April 2015, 09:27 AM
சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.

ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.

இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?

இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்

இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!

நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

திரு. முரளி சீனிவாஸ் அவர்களுக்கு :

திரு. கோபால் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்த 2 வேறு பதில்கள் குறித்து தங்களுக்குள் எந்த வித கேள்விகளும் எழுவதற்கு நியாயமில்லை.

அப்படியே அது குறித்து வினாக்கள் தோன்றினாலும், அதற்காக திரு. கோபால் அவர்களிடம்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஜெயகாந்தன் மறைவுக்கான இரங்கற் செய்தியில் சம்பந்தமே இல்லாமல் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி அவதூறாக விமர்சித்து இந்த சர்ச்சையை துவக்கி வைத்தவரே அவர்தான்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை “ஞானசூனியம்” என்றும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை ‘பெண் பித்தன்’ என்றும், 1972க்கு பின் வெளியான படங்களில் தங்களின் அபிமான நடிகர் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பினை ரசிக்க முடியவில்லை என்றும், ஒரு தேர்தல் தோல்விக்காக கடையை (கட்சியை) மூடிக்கொண்டு சென்ற மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை ஆபிரகாம் லிங்கன் ரேஞ்சுக்கு பேசுவதா என்றும் நடிகர் திலகம் திரியில் தங்களின் மகத்தான பங்களிப்புகளையும், அவ்வப்போது மக்கள் திலகம் திரியில் வந்து பங்களித்து நற்கருத்துக்களை கூறி வரும் சகோதர அன்பர்கள் திருவாளர்கள் ராகவேந்திரா, ரவிகிரண் சூரியா, ஹைதராபாத் ரவி, சிவாஜி செந்தில் உள்ளிட்ட சிலரை சகட்டு மேனிக்கு, தரக்குறைவாக வசை பாடிய திரு. கோபால் அவர்களை, அந்த சமயத்தில் கண்டிக்காமல், தற்போது தாங்கள் வக்காலத்து வாங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மகன் செத்தாலும் கவலை யில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற ரீதியில். அதாவது நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களை கேவலமாக விமர்சித்தாலும் பரவாயில்லை, எவருடனும் ஒப்பிட முடியாத எட்டாத உயரத்துக்கு சென்று விட்ட எட்டாவது அதிசயம் எங்கள் எட்டாவது வள்ளல் மக்கள் திலகத்தின் அழியாப் புகழை தாங்கி கொள்ள முடியாத எரிச்சல்தான் மேலோங்கி நிற்கிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் திரு. கோபால் அவர்கள் தேவையில்லாமல் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுத்தமைக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன் ?

சரி எதோ எழுதி விட்டீர்கள். இனி விஷயத்துக்கு வருவோம் :

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை என்ற உண்மை எனக்கும் நன்கு புலப்பட்டிருந்தாலும், கிறுக்குத்தனமாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜீரணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. வேடிக்கையும் பார்த்து கொண்டிருக்க முடியாது.
ஒரு திரைப்படகலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறியதற்கு நன்றி ! தங்களின் கருத்துப்படியே நானும் வருகிறேன். திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே என்று பாடியதும் திரைப்படங்களில் தானே ! அதை ஏன் அரசியலுடன் ஒப்பிட்டார் என்று முதலில் சகோதரர் திரு. கோபால் அவர்களை தாங்கள் கேட்டிருக்கலாமே.

அரசியல் பற்றிய விவாதங்களுக்கென்று CURRENT AFFAIRS என்கின்ற தனியான Section ஒன்று இருப்பதை நான் அறியாமல் இல்லை. ஆனால் அந்த பகுதியில், திரு. கோபால் அவர்கள் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கலாம் அல்லவா ? அதனை ஏன் சுட்டிக் காட்ட வில்லை. அவருக்கு, தாங்கள் அறிவுரை வழங்க தவறி விட்டீர்கள் என்றுதான் நான் கூறுவேன்.

அரசியலில், எங்கள் பொன்மனசெம்மலின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதார பூர்வமான தகவல்களை அவ்வப்போது முன்வைத்து, மறுப்பு தெரிவித்து, அதனை தவிடு பொடியாக்கி வருவதும் தாங்கள் அறிந்ததே !

சகோதரர் கலைவேந்தன் அவர்க;ள் மட்டுமல்ல, மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களும், ரசிகர்களும், விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி வருபவர்களே ! எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், அவரைப்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்தான் எங்களை பெருமையுடன் உயர் நிலையில் வைத்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், மக்கள், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி வழங்கிய எங்கள் புரட்சித்தலைவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து, அவர் இறக்கும் வரை அவர்தான் முதலவர் என்று தீர்மானித்து வாக்களித்து மகிழ்ந்தனர். மேலும், எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தனது சொந்த பலத்திலும், மக்களின் மகத்தான தொடர் ஆதரவினாலும் தான் ஆட்சியை பிடித்தாரே யன்றி, எதிரிகளின் பலவீனத்தால் அல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
என்னைப் பொருத்தவரை, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களை வம்புக்கிழுத்தால் நான் பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன் என்பதையும் தாங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


மக்கள் திலகம் திரியில், திரு. கருணாநிதி அவர்களை விமர்சனம் செய்து பதிவுகள் இடப்படுவதை தாங்கள் விரும்ப வில்லையாயின் அதற்கு தக்க ஆதாரத்துடன் பதிலை அளித்து விட்டு செல்லுங்களேன். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். நாங்களும் எங்கள் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தவரை அவர் தோற்றுவித்த பேரியக்கத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள் தான். தற்போது, எந்த ஒரு கட்சியையும் சர்ந்துள்ளவர்கள் அல்ல என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட விறிம்புகிறேன்.

அது போன்று, காங்கிரஸ் கட்சியை கடந்த காலத்தில் ஆதரித்து வந்ததும், இனி ஆதரிப்பதோ அல்லது ஆதரிக்காமல் இருப்பதோ தங்களின் தனிப்பட்ட விருப்பம்.

தற்காலத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் நடுநிலை தவறும் பட்சத்தில், இந்த திரியும் நடுநிலையிலிருந்து விலகிச் செல்கின்றதோ என்று ஐயம் கொள்ள நேரிடுகிறது.

Russellxss
12th April 2015, 10:36 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s720x720/11150291_1458399587785596_6702755747979577699_n.jp g?oh=b26bb3fe4b1fa1d560d7d6862ca22a3e&oe=55A7BE77&__gda__=1437290834_3ba352c25fdb598c73c6fc816db9958 7

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:37 AM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/s720x720/11133980_457334124425914_5176315792347296791_n.jpg ?oh=0b83ab4c6f81c4aeb417adba233ed7ca&oe=55A767B9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:38 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11011670_457294271096566_1405397962571869847_n.jpg ?oh=86f264fda1af27f49db601ac2fdf7d42&oe=55A32983&__gda__=1436983273_2e1c21dded564c88e90c9e0dd75e88b 5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:39 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/s851x315/10407019_457302594429067_1274485852241747886_n.jpg ?oh=2885569cd7036dcf13fafb8b1cb745ad&oe=55A2C24E&__gda__=1437203625_93aa4a6c3a463e7cdc677478fe358a4 5

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:43 AM
அவன் ஒரு சரித்திரம் 001:
பிறந்தது முதலே தான் ஒரு அநாதை என்று நம்பி வரும் ஒரு இளைஞனுக்கு தனக்கும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் என்ன உணர்ச்சிகள் தோன்றும்? அதிலும் தனது குடும்பத்தாரைக் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் உணர்ச்சி வெள்ளத்தை நடிகர் திலகம் வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் தனது தம்பியைக் கண்டவுடன் பாசத்துடன் அவனை நெருங்க அவன் இவரை தாக்கியது குறித்து அவர் கூறும் வரிகள் அற்புதம். பிறந்தது முதலே தான் ஒரு அநாதை என்று நம்பி வரும் ஒரு இளைஞனுக்கு தனக்கும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் என்ன உணர்ச்சிகள் தோன்றும்? அதிலும் தனது குடும்பத்தாரைக் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் உணர்ச்சி வெள்ளத்தை நடிகர் திலகம் வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் தனது தம்பியைக் கண்டவுடன் பாசத்துடன் அவனை நெருங்க அவன் இவரை தாக்கியது குறித்து அவர் கூறும் வரிகள் அற்புதம்.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:45 AM
அவன் ஒரு சரித்திரம் 002:

தங்கை மீது மட்டற்ற பாசத்தை வெளிப்படுத்தும் வேடம் என்றால் நடிகர் திலகத்தை மிஞ்ச வேறு எந்த நடிகரும் கிடையாது. அண்ணன் ஒரு கோயில், தங்கை, தங்கைக்காக போன்ற படங்களில் அவர் இத்தகைய வேடங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இவற்றிற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்த படம் பாசமலர். சிறு வயது முதலே தங்கைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசத்துடன் வளர்த்து, தங்கையே தனது உலகம் என்று வாழ்ந்திருந்தவருக்கு, சூழ்நிலையின் காரணாமாக தங்கையை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர், அவர்கள் தன மீது தன மீது எவ்வளவு பாசத்துடன் இருந்தனர் என்பதை தனது குழந்தைகளிடம் கூறுமாறு அமைந்த பாடல். பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைத்து விடும். அண்ணன் தங்கை பாசத்துக்கு இது வரை இந்தப் படத்தை மிஞ்ச வேறு படம் வரவே இல்லை என்பதே உண்மை.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10006339_1092395560787407_4035527518943734380_n.jp g?oh=db7bb65189ad81485ad444073375a309&oe=559D0A22&__gda__=1436744733_f692a15fd05e3f323fc39a36b759e24 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:49 AM
அவன் ஒரு சரித்திரம் 003:

பிரஸ்டிஜ் பத்மநாபன் - எந்த நிலையிலும் ஒரு மனிதன் தனது கௌரவத்தை இழக்கக் கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர். வேலையிலிருந்து ஒய்வு பெற்றதும் தனக்கு அந்த வீட்டில் மெல்ல மதிப்பு குறைவதை உணர்ந்து தனது ஒரே ஆறுதலான மனைவியிடம் மனம் வெதும்பி பாடும் பாடல். கவிஞரின்
"ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன,
வேரென நீயிருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்"
என்ற வரிகளில் அவர் மனைவியின் மீது கொண்டிருக்கும் மட்டற்ற அன்பும், மற்ற சொந்தங்களின் நிலையும் நன்கு புலப்படுகிறது. 60தைக் கடந்த ஒவ்வொரு கணவனுக்கும் தனக்கு இது போல ஒரு மனைவி இல்லையே என்று ஏங்க வைக்கும் ஒரு பாடல்.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10325213_1093520017341628_8668935943087179498_n.jp g?oh=b64db34b3cb0566b5d1eecf0d22c1ba9&oe=55E5D890&__gda__=1436340416_c85927d7406cbbf809fb53a6e825f73 0


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Gopal.s
12th April 2015, 10:51 AM
இது ஒரு தன்னிலை விளக்கமே . முரளியின் பார்வையில்.

மிக நெருங்கிய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி .உன்னை மாதிரி சிவாஜியை வாழ்வின் முக்கியமாய் ,தெய்வ ஸ்தானத்தில் கொண்டாடும் நபரையும் பார்த்ததில்லை, விமர்சிப்பவனையும் பார்த்ததில்லை என்று ஏன் இதை செய்கிறாய் என்று.இதை எதிர் அணியினர் மேற்கோள் பேச ஏதுவாகி விடுமே. பிடிக்கவில்லையென்றால் மூடி கொண்டு இரேன் என்று.என் விளக்கம்.

1)நாம் எப்போதுமே உன்னதம் என்று கொண்டாடி தொழும் ஒன்றின் நிலை தாழ்வில் சமநிலை குலைவோம். அதிர்ச்சி அடைவோம்.நம் கோபமும் பல மடங்கு உக்கிரம் பெறும் .இடித்து சொல்லும் உரிமை கொண்டாடுவோம்.

2)என்னை பொறுத்த வரை நடிப்பின் உன்னதம் ,கலையின் உன்னதம் சிவாஜியே. ஆனால் அவர் எந்த காரணங்களுக்காகவும் ,அந்நிலை பிறழ்ந்தால் ,அதனால் சமக்குலைவு அடைந்து மன உளைச்சல் அடைவது, அதை உக்கிரமாக வெளியிடுவது ஞாயமே. இதுதானே ஐய்யா உரிமை,ஈடுபாடு,பக்தி,உண்மையான காப்புணர்வு.

3)உலகிலேயே ஆண்மைக்கு,அழகிற்கு சிவாஜிக்கு நிகராய் இன்னொருவனை நான் கண்டதில்லை.அது கடவுள் அவருக்கு அளித்த முக்கிய வரம் .அதை போற்றி பாதுகாத்து ,இளமையை உடலை பேணி காக்க தவறியதால் , ஆஹா நாம் போற்றும் திராவிட மன்மதன் தன்னை பேணி ,போற்றி கொண்டிருக்கலாமே என்று ஆதங்கம் .

4)இந்த உணர்வு ,அவருக்கு எந்த விதத்திலும் சமமாகா மனிதர்களை பற்றி ,அவர்கள் எப்படி புகழ் அடைந்திருப்பினும் நமக்கு எழாது .எப்படி போனால் என்ன என்ற உதாசீனம் மட்டுமே மிஞ்சும்.(சிலசமயம் பரபரப்புக்காக உதவுலாம்)

5)மாற்றணியினர் மகிழ்ந்து என் எழுத்தை மேற்கோள் காட்டுவரே என ஒரு சிலர் வருந்துவார். விமர்சகர்களுக்கும், பஜனை கோஷ்டிக்கும் வித்யாசம் தெரியாத இவர்கள் தங்களுக்கு வசதியான பகுதிகளை மட்டுமே சம்பந்தமில்லாமல்,பொருட்படுத்தி மேற்கோள் காட்டுவதன் மூலம் ,என்னை மறைமுகமாக அங்கீகரித்து , நான் எழுதிய அனைத்தையுமே ஒப்பு கொள்கிறார்கள் என்ற ஒப்புதல் வாக்கு மூலமே ,நம் நோக்கத்தை நிறைவேற்றி விடுமே?

Russellxss
12th April 2015, 10:51 AM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/s720x720/11146232_1629874337244514_7255280282756549727_n.jp g?oh=19fc56ef1ca615b14586abd2fad0273c&oe=55B4ABF0&__gda__=1436794203_d20377707f4b8506819154bf67492d5 e

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:53 AM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/q81/p235x350/11036796_1629872163911398_4130720799587811509_n.jp g?oh=294e0952b268b2d0eeba58f19ce62896&oe=5597E510

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/q82/s720x720/11137097_1629873290577952_9009609418930873521_n.jp g?oh=30a926c5f3e14758612806bec4cc9258&oe=55E3D2DF&__gda__=1437809233_e6e89d0a3ec2b9c9130d36c37e6c832 d

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:54 AM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11149472_1629873840577897_4243364322925325241_n.jp g?oh=e8352fad8c2d016a1883e0055333374e&oe=559D9054

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Subramaniam Ramajayam
12th April 2015, 10:54 AM
அவன் ஒரு சரித்திரம் 002:

தங்கை மீது மட்டற்ற பாசத்தை வெளிப்படுத்தும் வேடம் என்றால் நடிகர் திலகத்தை மிஞ்ச வேறு எந்த நடிகரும் கிடையாது. அண்ணன் ஒரு கோயில், தங்கை, தங்கைக்காக போன்ற படங்களில் அவர் இத்தகைய வேடங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இவற்றிற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்த படம் பாசமலர். சிறு வயது முதலே தங்கைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசத்துடன் வளர்த்து, தங்கையே தனது உலகம் என்று வாழ்ந்திருந்தவருக்கு, சூழ்நிலையின் காரணாமாக தங்கையை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர், அவர்கள் தன மீது தன மீது எவ்வளவு பாசத்துடன் இருந்தனர் என்பதை தனது குழந்தைகளிடம் கூறுமாறு அமைந்த பாடல். பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைத்து விடும். அண்ணன் தங்கை பாசத்துக்கு இது வரை இந்தப் படத்தை மிஞ்ச வேறு படம் வரவே இல்லை என்பதே உண்மை.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10006339_1092395560787407_4035527518943734380_n.jp g?oh=db7bb65189ad81485ad444073375a309&oe=559d0a22&__gda__=1436744733_f692a15fd05e3f323fc39a36b759e24 9

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

excellent excellent your above taraga mandram superb sunderajan sir

Russellxss
12th April 2015, 10:55 AM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s720x720/11130188_1629874597244488_6307825571715022386_n.jp g?oh=127bf4a9016be456539ce0e2bb9d0f6d&oe=55AE773A

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:56 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/q82/p235x350/11016837_1629874913911123_906433329045636685_n.jpg ?oh=36104232f88a8e5dd9b03c9435202013&oe=55B446F7&__gda__=1436851681_a50d0b6c8cc117274104e6c226ec1a1 b

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:56 AM
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/q81/s720x720/11050262_1629874810577800_5315368951871887612_n.jp g?oh=075112eb63f7d192b4d248eff63c7d05&oe=55A4A4B2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellxss
12th April 2015, 10:57 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11059771_1629875037244444_8251088134824917335_n.jp g?oh=6cc9bd8ec3adc497bc9cf0e79867d2ab&oe=5597A243&__gda__=1437031826_6d7bb77d3eab1cfea06914ffdc46842 2

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Russellbpw
12th April 2015, 11:25 AM
அரசியல் ..அரசியல்வாதிகள் அதுவும் குறிப்பாக இந்திய அரசியல் இதனை விமர்சிக்க இந்த நாட்டு பிரஜை என்ற முறையில் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

தேவையான இடத்தில் தேவையான தருணத்தில் அது நடைபெற்றால் யாருக்கும் எந்த எதிர்கருத்தும் வராது. அதே சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேவையற்ற தருணத்தில் சம்பந்தம் இலாத இடத்தில் பதிவு செய்வது தவறான ஒரு செயல்தான். அதில் மாற்று கருத்து கிடையாது. அந்த வகையில் திரு கோபால் அவர்கள் இந்த தருணத்தில் அவர் அவருடைய தனிப்பட்ட கருத்தை பதித்தது சரியா தவிர்க்ககூடியதா என்பது கேள்விக்குரிய ஒரு தனியான சர்ச்சயாகிவிடுகிறது.

நடிகர் திலகம் திரியில் பயணிக்கும்போது அரசியல் கருத்து அரசியல்வாதிபற்றிய கருத்து எதற்கு ? நடிகர் திலகம் அவர்களை தாக்கி ஏதேனும் கருத்து வந்தாலோ அது நேரிடையாகவோ மறைமுகமாகவோ தாகும்பட்சதிலோ, கருத்து நடுநிலயில்லாத கருத்தாக இருக்கும் பட்சத்தில் நம் கருத்தை கூறுவதில் தவறில்லை என்றும் ஒரு சாரர் நினைக்க வாய்ப்புண்டு !

எந்த வகையிலும் ஊழல் செய்யாத அரசியல்வாதி இந்த உலகத்தில் கிடையாது.

இன்றுவரை மட்டுமல்ல...இனி வரும்காலங்களிலும் மக்கள் பயன் அடையும் வகையில் திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் அல்லாமல் அதை வெற்றிகரமாக அதிக அளவில் செயல்படுத்தி மக்கள் பயனடைய வைத்த தமிழகத்தின் ஒரே முதல் அமைச்சராம் உண்மையான பொற்கால ஆட்சி கொடுத்த கர்ம வீரர் காமராஜர் அவர்கள் மீதுகூட இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை promote செய்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. விமர்சனத்திற்கு அவரும் ஆளானார்.

சமூகத்தை எந்த விதத்திலும் காமராஜர் ஆட்சிகாலம் பாதிப்படயவைக்கவில்லை பாதிப்படையவும் இல்லை. காமராஜர் என்பது காங்கிரஸ் அல்ல...காமராஜர் காமராஜரே...!

தமிழகம் எந்த அளவிற்கு இன்று பாதித்து உள்ளது என்பதற்கு சான்று திராவிடம் என்று கூறிக்கொண்டு ஆட்சிகட்டிலில் புகுந்த "திராவிட" என்று கூறிக்கொண்டு அமர்ந்த கட்சிகளின் ஆட்சி அவலம் என்று இன்றும் மக்கள் புலம்பிகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் கொடுக்கும் காசையும் வாங்கிகொண்டு ஒசியும் அனுபவித்துக்கொண்டு...!

கர்ம வீரரை குறிசொன்ன வாய்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தை ஒன்றும் சொர்க்கபுரியாக மாற்றிவிடவில்லை, மாறாக அதிக அவலங்களுடன் தரித்திர பூமியாக மாற்றியதுமட்டும் அல்லாமல் பூரண நிலையில் சாராய உற்பத்தி, மக்களை குடிமகன்களாகி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, காலாச்சார சீரழிவை (சமீபத்திய திராவிட முட்டாள்தனத்தின், காலச்சார சீரழிவை உறுதிபடுத்தும் தாலி அறுப்பு விழா உட்பட ) தமிழகத்திற்கு தங்களுடைய அன்புபரிசாக தந்துள்ளனர். இது எவனும் மறுக்க முடியாது...மறைக்கவும் முடியாது !

இந்துக்கள் அதிகம் இருக்கும் தமிழகத்தில்தான் ஒரு முதுபெரும் அரசியல்வாதி ராமர் எந்த ENGINEERING கல்லூரியில் படித்தார் பாலம் அமைய என்று நக்கல் விடுத்தார் ! அதையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம் ..!

யாராவது ஒருவர் ஆமாம் அய்யா...ராமருக்கும் உங்களுக்கும் அடிப்படயிலயே ஒத்துபோகாது..உங்கள் கொள்கை வேறு அவர் கொள்கை வேறு ...அவர் ஏக பத்தினி விரதன்....என்று யாரவது ஒருவர் கூறினார்களா ? இல்லையே ..? இதை நாம் சொன்னால் அது அவரது சொந்த விஷயம் அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்பார்கள்....அதே சமயத்தில் ராமரை கிண்டல் செய்தால் அது பொதுவிஷயம் என்று நம்மை மௌனம் காக்க எதிர்பார்ப்பார்கள் ....இதுதான் திராவிட ஞாயம்...!

ஜாதி அடிப்படையில் ஏமாந்த ஒரே சாதியம் பிராமண ஜாதியை சாடும் இவர்கள்...ஜாதி வெறி கொண்ட அதற்காக வெட்டு குத்து வரை போகும் ஜாதிகளை சாடமாட்டார்கள்...காரணம் தமக்கும் வெட்டு விழுமோ என்ற பயம்...அகவே, பயந்து ஒதுங்கும் ஜாதியை பின்தொடர்ந்து இவர்கள் தாகும் வழக்கம் ! இதுவும் திராவிட ஞாயமே..!

ஒரு முன் உதாரணமாக இருக்கும் தகுதி இவர்களுக்கு அடிப்படையிலேயே கிடையாது...! இருந்தும் தமிழகம் இவர்களை இன்றுவரை காசுவாங்கிக்கொண்டு ஓசி வாங்கிகொண்டு தாங்கிகொண்டுதான் இருக்கிறது...!

தேச துரோக செயல் கூட இவர்கள் ஈடுபட்டிருப்பார்கள் பண்டித நேரு மட்டும் தக்க சமயத்தில் தலையிட்டிருக்காவிட்டால்...! இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்...!

இதற்க்கு முழுபொறுப்பு இந்த திராவிட சம்பந்தம் கொண்ட கட்சிகள் மட்டுமே !

இந்த திரியில் மேற்கூறிய விஷயங்கள் சம்பந்தம் உள்ளவா என்றால் இல்லை. ஆனால் இதுவும் வந்த பதிவுகளுக்கு பதில் உரைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு conscious impact . அவ்வளவே..!

எந்த அரசியல்வாதியையும் அவர்கள் 100% யோகியம் உள்ளவர்களாக இல்லாத பட்ச்சத்தில் விமர்சனம் செய்ய குடிமக்களுக்கு உரிமை நிச்சயம் உண்டு...ஆனால் இந்த திரியில் அது தேவையா என்று ஒரு கேள்வியும் கூடவே எழுகிறது !

Rks

eehaiupehazij
12th April 2015, 11:43 AM
அரசியல் என்றுமே நடிகர்திலகத்தின் விருப்பமாக இருந்ததில்லை அதையும் தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து நெஞ்சங்களிலும் நடிகர்திலகமாக
வாழ்ந்து கொண்டிருப்பவரின் புகழ் பாடும் இத்திரியில் அரசியல் வட்டத்திற்குள் அவரை சிறை பிடித்து கொச்சைப் படுத்த வேண்டாமே!!

நடிகர்திலகம் பற்றிய விமர்சனங்களும் தற்போதைய சூழலில் காலம் கடந்தவையே ....ஒருவர் புகழை ஒருவர் மறைத்து வளரும் வரலாறில்லை என்றுரைத்த நடிக மாமன்னர் .........காலத்தை வென்று வளரும் நடிகர்களுக்கும் கலையார்வம் கொண்ட எதிர்கால சந்ததியினருக்கும் கல்வெட்டாய் திகழும் காவியங்களின் நாயகனை போற்றுவது அவர்தம் புகழ் பரப்புவது மட்டுமே இத்திரி வாயிலாக நமது குறிக்கோளாக இருப்பதே மனதுக்கு இதம்.

பதிவர்களிடையே கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். பதிவுகளின் நோக்கம் தமிழ் திரை வரலாற்றை சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என்ற நிலைக்கு உயர்வடைய நடிப்பு பரிமாணங்களை தனது சுவாசமாகக் கொண்டிருந்த நடிகர்திலகத்தை பெருமைப்படுத்துவதாக மட்டுமே இருத்தல் நம்மை மகிழ்வித்தவருக்கு நாம் செலுத்தும் உண்மையான இதய அஞ்சலி!

He remains the invincible emperor in our hearts!

https://www.youtube.com/watch?v=p36pPEucSyo

joe
12th April 2015, 03:00 PM
ஆரம்பிச்சுட்டார்யா .. பெரியார் / அண்ணா / கலைஞர் / எம்.ஜி.ஆர் மீது அரசியல் காழ்ப்புணர்வு இருந்தால் வேறெங்கோ போய் வாந்தி எடுக்கலாமே .. எதற்கு மீண்டும் மீண்டும் நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து இவர் வாந்தி எடுக்க அனுமதிக்கப்படுகிறார் என தெரியவில்லை .

என்னமோ பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக்கொண்டு ஏன்பா இப்படி மரண மொக்கை போடுறார் இந்த rks ?
என்னமோ நாட்டுல உள்ளவனெல்லாம் முட்டாள் மாதிரியும் இவர் மட்டுமே அனைத்தும் தெரிந்த அறிவாளி போல .

இது பெரியார் பூமி ..இப்படியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான் .

Russellzlc
12th April 2015, 03:22 PM
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

புரட்சித் தலைவர் பற்றி ஏதாவது வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார் என்று என்னைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். புரட்சித் தலைவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்குதான் நான் பதில் அளிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி எங்கள் திரியில் தவறாக விமர்சனம் செய்வோம்.(அரசியல் ரீதியிலேயே எடுத்துக் கொள்வோம்) ஆனால், நீங்கள் யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அது நியாயமாகுமா?

திரு. முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி வெளியாகும் என்று சகோதரர் திரு.செல்வகுமார் சில மாதங்களுக்கு முன் கூறினார். ‘எதிர்மறையாக இருந்தால் அதை தவிருங்களேன்’ என்று நீங்களே கோரினீர்கள். இதை ஏற்றுக் கொண்டு அவர் அந்தப் பேட்டியை பதிவிடுவதை தவிர்த்தாரே? அதேபோன்ற கோரிக்கையைத்தான் நாங்களும் வைக்கிறோம்.

அரசியல் ரீதியாக புரட்சித் தலைவர் பற்றிய விமர்சனங்கள் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எதிர்மறையான விமர்சனத்தை தவிர்க்கலாமே? என்றுதான் கூறுகிறோம். அப்படி உங்களுக்கு புரட்சித் தலைவரின் குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கை சரியில்லை என்று தோன்றினால், தாராளமாக அதைப் பற்றி நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கலாம். நானும் விளக்கம் அளிக்கத் தயார். அதை விட்டு, மதுரை திமுக மாநாட்டில் புரட்சித் தலைவர் ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார் என்று குறிப்பிட்டால், ஊழலுக்கு வக்காலத்து வாங்கியவர்களை எல்லாம் நாங்களும் பட்டியலிட முடியுமே? அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே கரண்ட் அஃபேர்ஸ் என்ற பிரிவு இருக்கிறது என்றால் நீங்களும் உங்கள் அரசியல் கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கலாமே? நானும் வந்து கலந்து கொள்கிறேன். எனக்கும் நீங்கள் ஆதரித்த 1975 அக்டோபர் 2 வரையிலான காங்கிரஸ் பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவோம்.

அதை விடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையே, ரஷ்ய மையால் கிடைத்த வெற்றி என்று சிவாஜி கணேசன் அவர்களின் திரியிலேயே கருத்து கூறுகிறீர்கள். அப்படி சொன்னவர்களை ‘‘நாம நல்லா தோத்துட்டோம். அதை முதல்ல புரிஞ்சுக்கங்க. அப்போதுதான், அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறுவோம்’’ என்று கூறி பெருந்தலைவர் காமராஜரே கண்டித்தார் என்று திரு.சோ அவர்களும், நவசக்தி நாளிதழ் ஆசிரியராக இருந்த திரு.பி.சி.கணேசன் அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

திரு.செல்வகுமார் சார் சொல்வது போல, எங்களுக்கும் நண்பர்களான திரு.ராகவேந்திரா சார், திரு.ரவி சார் போன்றவர்களை திரு.கோபால் அவர்கள் கடுமையாக விமர்சிக்கும்போதும், நீங்கள் கூறினீர்களே எகிப்து அதிபர் நாசர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வீடு தேடி வந்தார் என்று. ஆனால், நாசர் விசாரித்த பிறகுதான் நேருவுக்கே திரு.சிவாஜி கணேசன் அவர்களை தெரியும் என்று திரு.கோபால் கூறுகிறார். அதையெல்லாம் கேட்காமல், திரு.செல்வகுமாரை கேட்கிறீர்களே? நியாயமா?

நான் கடந்த வாரம் மதுரகானம் திரியிலேயே திரு.கோபால் அவர்களை கேட்டேன். ‘திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா?’ உடனுக்குடன் பதில் சொல்லாதீர்கள், நேரம் எடுத்துக் கொண்டு, மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களுக்கு கைகொடுக்கும். எழுத்தாற்றல் மிக்க நீங்கள் நல்ல கட்டுரைகள் எழுதினால் பாராட்டுக்கள் குவியும், நாங்களும் மகிழ்வோம்’ என்று நட்பு ரீதியில் ஆலோசனையும் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டார். ‘எனக்கும் சண்டை போடுவதில் விருப்பமில்லை’ என்று கூறினார். நானும் மகிழ்ச்சி தெரிவித்தேன்.

ஆனால், 3 நாட்களில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ‘தூங்காதே, திருடாதே, ஏமாற்றாதே என்று பாடிய புரட்சித் தலைவர் செய்ததென்னவோ அதைத்தான் என்று கூறுகிறார். என்ன இது? மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இருக்கிறதே? என்று வெறுத்துப் போய்விட்டேன். நீங்களும் கேட்க மாட்டீர்கள். நாங்களும் எதிர்வினை ஆற்றக் கூடாது என்று கூறுவது நியாயமா? என்பதை நீங்களே சொல்லுங்கள் திரு. முரளி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

joe
12th April 2015, 03:55 PM
நேரடியாகவே கேட்கிறேன் ..இந்த திரியில் சிலரின் நோக்கம் நடிகர் திலகம் என்னும் கலைஞனை பற்றி பேசுவதா இல்லை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதா ?

இவர்களின் அஜெண்டாவுக்கு காமராஜர் ஊறுகாய் .. என்னமோ இவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காமராசருக்கு நாம எதிரி போல ஒரு பிம்பத்தை உருவாக்குவது அபத்தம்.

காமராஜரின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய நிலமையில் எங்களைப் போன்ற திராவிட இயக்க ஆதரவாளர்கள் இல்லை .. தன்னுடைய சீடர்களுக்கு எதிராக காமராஜரை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் எங்கள் தலைவன் தந்தை பெரியார். என்னமோ தமிழக மக்கள் காமராஜரை தூக்கி வீசி விட்டு அண்ணாவை கொண்டுவந்தது போல அள்ளி விடுவது இன்னொன்று .. காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டதுக்கு யார் காரணம் என இ.வி.கே.எஸ் இளங்கோவனே சமீபத்தில் தெளிவாக சொன்னாரே.


அப்புறம் காமராசரை திராவிட இயக்கத்தார் அப்படித் திட்டினார்கள் ..ஐயகோ ..நாகரீகம் என்றெல்லாம் இவர்கள் அழுது புலம்புவார்கள் .. பேரறிஞர் அண்ணா பற்றி இவர்கள் பாடாத வசையா .. அரசியல் களத்தில் எதிர்வரிசையில் நின்றால் இரு புறமும் வரம்பு மீறுவது இயல்பு தான் , தவிர்க்கப்பட வேண்டியதென்றாலும் . இந்திரா காந்திக்காக காமராஜரை அம்போவென விட்டுட்டு ஓடினவனெல்லாம் இப்போது காமராஜர் காமராஜர் என கூப்பாடு போடுவதை விட , அரசியல் ரீதியாக எதிர்த்தாலும் அவரது இறுதி காலத்திலும் , அவர் மறைவிலும் கலைஞர் காட்டிய முதிர்ச்சிக்கு முன் இந்த காரியக்கார காங்கிரஸ் காரர்களின் விசுவாசம் ஒரு தூசிக்கு சமமாகாது .

அப்புறம் திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழகம் நாசமாய் போய்விட்டது ஐயகோ புலம்பல்கள் .. தேசிய கட்சிகள் தொடர்ந்து கிழித்த மாநிலங்களை விட தமிழகம் ரொம்ப நல்லாவே எல்லா துறையிலும் முன்னேறித்தான் இருக்கு .. அதனால இந்த குஜராத் மாடல் போட்டோ ஷாப் பருப்பெல்லாம் இங்கு வேகாது . பலருக்கு எல்லா தரப்பும் முன்னேறி விட்டார்களே என அரிப்பு இருக்கத்தான் செய்யும் ..அதற்கு ஒன்றும் செய்ய முடியாது .


இது நடிகர் திலகம் திரி .. அவர் பற்றி பேசுங்கள் ..உங்கள் திராவிட இயக்க எதிர்ப்பு வன்மத்துக்கு இது இடமல்ல .. தொடர்ந்தால் நான் பார்க்க நேர்ந்தால் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் . கேட்க ஆளில்லைன்னு ரொம்ப ஆட வேண்டாம் நண்பர்களே.

eehaiupehazij
12th April 2015, 04:03 PM
பாடல் காட்சிகளில் பார்வையாளராக நடிகர்திலகம் / NT as silent Spectator in Song Sequences

பெரும்பாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் திரைக்கதாநாயகர்கள் தனக்கு முக்கியத்துவம் இல்லாத பாடல் காட்சிகளில் தலை காட்டவே தயங்குவார்கள்
கதையோட்டத்துக்கும் காட்சியமைப்புக்கும் தேவையெனில் சாதாரணமாக வந்து போவதில் நடிகர்திலகம் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை
இதற்கு நல்ல உதாரணம் நான் பெற்ற செல்வம் திரைக்காவியத்தில் குழந்தைகள் பாடி நடிக்கும் ஒரு காட்சியமைப்பில் ஒரே ஒரு சீன் தலை காட்டுகிறார் நடிப்பின் பரம்பொருள்

https://www.youtube.com/watch?v=ZuByC_rcf_w

joe
12th April 2015, 04:23 PM
ஆமாம் ..இது பெரியார் பூமி தான் ..முடிந்தால் மாற்றிப் பார் ..

Russellbpw
12th April 2015, 04:29 PM
.......

Russellzlc
12th April 2015, 04:41 PM
திரு.ஆர்.கே.எஸ்.

ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிகளை, பெரியாரையும் அண்ணாவையும் தயவு செய்து மோசமாக தாக்க வேண்டாமே. காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டு மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்ன மந்திரிமார்களைக் கொண்டது காங்கிரஸ் ஆட்சி.

‘1967 தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்யச் சென்றபோது, தாய்மார்கள் தங்களைக் கண்டதும் அரிசியை மறைத்து எடுத்துச் சென்றனர்’ என்று அர்த்தமுள்ள இந்துமதம் தொடரிலே கவியரசர் கண்ணதாசன் கூறியுள்ளார். அது புத்தகமாகவும் வந்துள்ளது. காங்கிரசின் பெருமை இது.

1967 தேர்தலில் திமுகவோடு தனது சுதந்திரா கட்சியை கூட்டணி அமைத்து, ஒரு கையில் பூணுலை பிடித்துக் கொண்டு மறுகையால் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிராமண சமூகத்தினரை மூதறிஞர் ராஜாஜியே கேட்டுக் கொண்ட அளவுக்கு மோசமான ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
12th April 2015, 05:02 PM
திரு.ஆர்.கே.எஸ்.

ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிகளை, பெரியாரையும் அண்ணாவையும் தயவு செய்து மோசமாக தாக்க வேண்டாமே. காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டு மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்ன மந்திரிமார்களைக் கொண்டது காங்கிரஸ் ஆட்சி.

‘1967 தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்யச் சென்றபோது, தாய்மார்கள் தங்களைக் கண்டதும் அரிசியை மறைத்து எடுத்துச் சென்றனர்’ என்று அர்த்தமுள்ள இந்துமதம் தொடரிலே கவியரசர் கண்ணதாசன் கூறியுள்ளார். அது புத்தகமாகவும் வந்துள்ளது. காங்கிரசின் பெருமை இது.

1967 தேர்தலில் திமுகவோடு தனது சுதந்திரா கட்சியை கூட்டணி அமைத்து, ஒரு கையில் பூணுலை பிடித்துக் கொண்டு மறுகையால் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிராமண சமூகத்தினரை மூதறிஞர் ராஜாஜியே கேட்டுக் கொண்ட அளவுக்கு மோசமான ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன்

நான் அதற்க்கு congress அனுதாபி அல்லவே.

காமராஜர் - அவரை நான் congress காரராக கருதவில்லை எந்தகாலத்திலும்.

எவர் என்ன சொன்னாலும் 1950 முதல் 1967 ஜூன் வரை அதாவது சுதந்திரம் பெற்று 17 வருடங்களில் தமிழகம் கண்ட முன்னேற்றம் (இன்னும் சரியாக சொல்லப்போனால் ஏப்ரில் 1954 முதல் 1957 வரை )அதன் பின்னர் தமிழகம் கண்டதில்லை. காரணம் பலர் வக்காலத்து வாங்கும் திராவிடர்களை 67 ஜூலை முதலே முட்டாளாக்கும் கழகங்கள் ஆண்டதால்தான் !

ஊழல் என்ற வார்த்தையை பெருமளவு புழக்கத்தில் கொண்டுவந்து அரசுத்துறைகளில் சரளமாக புழக்கத்தில் விட்டு பிரபலபடுத்திய கட்சிகள்தானே இவை...!

எலிக்கறி வசனம் ....கண்ணதாசன்...கண்ணதாசன் அவர்கள் இதுபோல பல புத்தகங்களை எழுதியுள்ளார், பலரை பற்றியும் எழுதியுள்ளார்...கட்சிகளின் அவலம் பற்றி, மனிதர்களின் குனங்கள்பற்றி இப்படி பல புத்தகங்கள் ...இவர் எழுதி வெளிவந்துள்ளது..அவை சான்றாக, ப்ரூபாக, உத்தரவாதமாக எடுத்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. !

மறைந்த மேதைகள் திரு கண்ணதாசன், திரு வாலி, மற்றும் உயிருடன் உள்ள திரு ஆரூர்தாஸ்..கிட்டத்தட்ட ஒரே குண நலன்கள் கொண்ட கலைஞர்கள் என்பதே என்னுடைய முடிவான கருத்து !

எலிக்கறி வசனத்தால், கண்ணதாசன் எழுதிய விஷயத்தினால் இதனால் தமிழகத்திற்கு அதன் வளர்ச்சிக்கு பாதிப்பு இருந்துள்ளதா என்று தெரியவில்லை..ஆனால் லஞ்ச லாவண்யம் இவர் ஒருகாலத்தில் போற்றி புகழ்ந்த கட்சிகள் கொண்டுவந்தது எந்தளவிற்கு தனிமனிதன் பாதிப்பிற்கு உள்ளானான் என்பதை நாம் அறிவோம் நாடும் அறியும் !

Rks

joe
12th April 2015, 05:16 PM
.

பரவாயில்லை..அந்த அளவுக்காவது தெளிவு இருக்கே ..

joe
12th April 2015, 05:21 PM
.நல்ல கேட்டுடுவேன்...தயவு செஞ்சு உங்க வரைக்கும் நீங்க எப்படியோ அப்படி இருந்துட்டு போங்க...முட்டாள்தனமான விஷயங்கள கொள்கை நு சொல்லாதீங்க....தயவு செஞ்சு தூக்கத்திலேர்ந்து அல்லது தூங்கறா மாதிரி நடிக்கரதுலேர்ந்து முழிசுக்குங்க....!

..உன்னை மாதிரி எத்தனையோ பேரை பார்த்தாச்சு .. வெற்று புலம்பல் பேர்வழிகள் ..இந்த டகால்டியெல்லாம் நுனிப்புல் மேயுற எலைட் கூட்டத்துகிட்ட வச்சுக்கோ தம்பி .. இது அடிமட்டத்துல இருந்து வந்த கூட்டம் .. நிமிர்ந்து ரொம்ப நாளாச்சு.

eehaiupehazij
12th April 2015, 05:22 PM
நண்பர்கள் ரவிகிரண் மற்றும் ஜோ அவர்கள்
பெரும்பாலும் முகமறியா நண்பர்களாகவே நாமிருக்கிறோம். எங்கோ இருக்கும் நாம் நடிகர்திலகம் குறித்த நமது எண்ணங்களின் பரிமாறல் வாயிலாகவே இத்திரியில் இணைகிறோம். ஏகவசனம் தவிர்த்து பரஸ்பர மரியாதைகளுக்குப் பங்கம் வராது நமது திரிக்கு பெருமை சேர்ப்போமே!

வேண்டுதல்களுடன்
செந்தில்

joe
12th April 2015, 05:24 PM
இந்தி உனக்கு தேவையுண்ணா இந்தி பிரசார சபாவுல போய் படிச்சுக்கோ .. எங்க மேல திணிக்குறதுக்கு எப்போதும் நடக்காது ..நடக்கவும் விட மாட்டோம் ..இந்தி தெரிஞ்சவனவை விட நாங்க நல்ல நலமா தான் இருக்கோம் .. இந்த முதலைக் கண்ணீரெல்லாம் அடையாளம் காணப்பட்டு நாளாச்சு .

joe
12th April 2015, 05:31 PM
நண்பர்கள் ரவிகிரண் மற்றும் ஜோ அவர்கள்
பெரும்பாலும் முகமறியா நண்பர்களாகவே நாமிருக்கிறோம். எங்கோ இருக்கும் நாம் நடிகர்திலகம் குறித்த நமது எண்ணங்களின் பரிமாறல் வாயிலாகவே இத்திரியில் இணைகிறோம். ஏகவசனம் தவிர்த்து பரஸ்பர மரியாதைகளுக்குப் பங்கம் வராது நமது திரிக்கு பெருமை சேர்ப்போமே!

வேண்டுதல்களுடன்
செந்தில்

நண்பரே ! இந்த நபர் சிவாஜி பற்றி பேசுகிறேன் பேர்வழி என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை வசை பாடுவதற்கே இந்த திரியை பயன்படுத்துவது உங்களுக்கு ஒப்புதலா ? குறைந்த பட்சம் "திராவிட இயக்க எதிர்ப்பு வாந்தி' என தனியாக ஒரு திரி அமைத்துக் கொடுத்தால் இவரும் இவரைப் போல வாந்தி எடுக்க விரும்புபவர்களும் சூடாகும் போது அங்கே சென்று வாந்தி எடுக்க வசதியாக இருக்குமே என பல காலமாக நான் கோரிக்கை வைத்து வருகிறேன் ..நீங்களும் இணைந்து குரல் கொடுத்தால் நல்லது ..இந்த எழவையெல்லாம் இந்த திரியில் பார்க்காமல் இருக்கலாம் .

Russellzlc
12th April 2015, 05:42 PM
கவியரசர் கண்ணதாசனை நீங்கள் நம்ப வேண்டாம் திரு.ஆர்.கே.எஸ்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டதும் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னதும் மூதறிஞர் ராஜாஜியே காங்கிரசை ஒழிக்க, திமுகவோடு கூட்டணி அமைத்து உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னதும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
12th April 2015, 05:56 PM
அன்பு நண்பர் ரவிகிரண்/ஜோ.
நடிகர்திலகம் திரியில் வரலாற்று சிறப்பு மிக்க அவர் புகழ்பாடும் ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு நீங்கள் இருவருமே சொந்தக்காரர்கள். எங்களைப் போன்ற
வளர்ந்துவரும் பதிவர்களுக்கு வழிகாட்டிகள்
இந்த விவாதத்தை இப்படியே நிறுத்தி விட்டு சற்று இளைப்பாறி நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் வைரங்களை பதிக்க வரவேண்டுமென்று இறைஞ்சுகிறேன்
செந்தில் , வணக்கங்களுடன்

Gopal.s
12th April 2015, 06:37 PM
ஜோ வோடு நான் உடன் படுகிறேன். ஹிந்தி தெரிந்தவர்களோடு ஒப்பிடும் போது ,நாங்கள் ஒன்றும் குறைந்து விடவில்லை. எங்களில் யாராவது ஒருவர் மிச்சம் உள்ள வரை ஹிந்தி தமிழகத்தில் நுழைய முடியாது. பெரியார் என்ற ஒருவர் இல்லாவிட்டால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது.

கலை- பஞ்சத்திற்கு காங்கிரஸ் காரணமல்ல. பல போர்கள், நிறைய இயற்கை பேரிடர். இதனை தி.மு.க நன்கு உபயோகித்து கொண்டது.
ஆனால் பக்தவத்சலத்திடம் ,காமராஜ் ஆட்சியை ஒப்படைத்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவானது.

செல்வகுமார்- உங்கள் பதிவு நன்றாக இருந்தது மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியருக்கணும் நல்ல உதாரணம். இப்போது தாலியறுக்கும் வைபவமாயிற்றே தமிழகம் முழுதும்.

ரவிகிரண் - உங்களுடையது பயங்கர எதிர்ப்பு பார்வை. எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது . எல்லா கட்சிகளும் பிடிக்கும்.(உங்களுக்கு புரிய முடியாது)

பி.கு- கலை ,கட்சிகளுக்கு மட்டுமே. இது பொருந்தும். private ownership அறவே ஒவ்வாது.

சிவாஜிக்கு அத்தனை கட்சிகளுடன் தொடர்பு உண்டு. அதனால் அரசியல் ஒன்றும் இங்கு தோஷம் இல்லை.

Gopal.s
12th April 2015, 06:51 PM
கலை,

எலிக்கறி விஷயம்,திராவிட கட்சிகள் சொன்ன படி ,காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளல்ல. ஒரு scientific Report ஒன்று
எலிகறியில் நிறைய சத்து உள்ளது. அபாயமற்றது . மலிவான ஒன்று .என்று சொன்னது. இதைத்தான் உணவு பதிலியாக ,அரசால் சிபாரிசு செய்ய பட்டது. ஆனால் இதை பயங்கர sensation ஆக்கியது திராவிட சாமர்த்திய அரசியல் சாதுர்யம்.

Russellbpw
12th April 2015, 07:44 PM
கவியரசர் கண்ணதாசனை நீங்கள் நம்ப வேண்டாம் திரு.ஆர்.கே.எஸ்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டதும் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னதும் மூதறிஞர் ராஜாஜியே காங்கிரசை ஒழிக்க, திமுகவோடு கூட்டணி அமைத்து உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னதும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன் அவர்களே

மூதறிஞர் ராஜாஜி சொன்னால் என்ன ...யார் சொன்னால் என்ன.

முதற்க்கண் நான் காங்கிரஸ் அனுதாபி அல்ல...ஆகையால் அது யார் சொன்னாலும் எனக்கு அக்கறை இல்லை.

காமராஜர் ஆண்ட வருடங்களில் நடந்த தமிழக வளர்ச்சி ....செயல் படுத்தப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் அதன் வளர்ச்சி விகிதம் ..அவர்களது ஆட்சியை குற்றம் சொன்ன வாய்களால் இன்றுவரை கால் வாசி கூட செய்யமுடியவில்லை. செய்து காட்டவில்லை. இது வரலாற்று உண்மை ! அவருடைய அணுகுமுறையும் சரி...அவரது ஆற்றலும் சரி...அதில் எள்ளளவு கூட congressism இருந்தது இல்லை !

ஒரு செயல் வீரன் இருக்கும் இடத்தில் அந்த செயல் வீரரின் மீது கொண்ட பொறாமைகளும் வயிதேரிச்சல்காரர்களுக்கும் பஞ்சம் எள்ளளவும் இருந்ததில்லை என்பதும் வரலாற்று உண்மை !

Rks

eehaiupehazij
12th April 2015, 07:48 PM
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

புரிதலும் விட்டுக் கொடுத்தலும்



புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்


பகுதி 2 : திருவருட்செல்வர் (கருத்து உபயம் : நண்பர் சின்னக்கண்ணன்....ஜெமினி திரியிலிருந்து...)

திருவருட்செல்வரை விட்டு விட்டீர்களே..கதறக் கதற சுந்தரமூர்த்தி நாயனார் சிவாஜியை ஜெமினி படுத்தும் பாடு..ஜெமினி காரெக்டர் அது தான் என ப் புரிந்து உள்ளாழ்ந்து எதிர்க்கும் சுந்தர ந.தி..கடைசியில் இத்தனையும் உன்பாட்டைக் கேட்கத் தான் வந்தேன் என சிவ ஜெமினி சிரித்துவிட்டுக் கருவறையில் புகுவது.. சி. ஜெ காம்பினேஷனில் கொஞ்சம் ஓஹோ சீன் சி.செ

https://www.youtube.com/watch?v=pbte64aTKPA

eehaiupehazij
12th April 2015, 07:52 PM
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்

பகுதி 3 : வீரபாண்டிய கட்டபொம்மன்


புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தன்னுடைய திரை ஜோடி பத்மினி ஜெமினியுடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்கும்போது இறுதியில் ஒரே ஒரு
காட்சியில் தலை காட்டி புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் உதாரணமாக திகழ்ந்திருப்பார் நடிகர்திலகம் அவ்வண்ணமே பாசமலர் திரைப்படத்தில் மயங்குகிறாள் ஒரு மாது பாடல் காட்சியில் வெறுமனே வீணை வாசித்துக்கொண்டு தனது புரிதலை வெளிப்படுத்தியிருப்பார் காதல் மன்னர்

https://www.youtube.com/watch?v=UamHWAa6xGk

https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY

Russellbpw
12th April 2015, 08:12 PM
ஜோ வோடு நான் உடன் படுகிறேன். ஹிந்தி தெரிந்தவர்களோடு ஒப்பிடும் போது ,நாங்கள் ஒன்றும் குறைந்து விடவில்லை. எங்களில் யாராவது ஒருவர் மிச்சம் உள்ள வரை ஹிந்தி தமிழகத்தில் நுழைய முடியாது. பெரியார் என்ற ஒருவர் இல்லாவிட்டால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது.

ரவிகிரண் - உங்களுடையது பயங்கர எதிர்ப்பு பார்வை. எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது . எல்லா கட்சிகளும் பிடிக்கும்.(உங்களுக்கு புரிய முடியாது)

பி.கு- கலை ,கட்சிகளுக்கு மட்டுமே. இது பொருந்தும். Private ownership அறவே ஒவ்வாது.

சிவாஜிக்கு அத்தனை கட்சிகளுடன் தொடர்பு உண்டு. அதனால் அரசியல் ஒன்றும் இங்கு தோஷம் இல்லை.


கோபால் சார்

எதற்கு இனியும் இந்த ஏமாற்று சொற்கள் ? வேறு மொழி கற்பதில் தவறு இல்லை என்பதே எனது வாதம் !

உங்களுடைய STATEMENT "பெரியார் இல்லை என்றால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது"...இது ஒரு மாயை ! அந்த மாயையை நீங்கள் கூறி வேண்டுமானால் த்ருப்திபட்டுகொள்ளுங்கள் !

சிவாஜி அவர்கள் சிவாஜியாக வலம் வரவில்லை என்றாலும் "கட்டபொம்மன்" கணேசனாக நிச்சயம் வலம் வந்திருப்பார் ! ஆகவே இந்த, உங்கள் கற்பனை கதை எல்லாம் எடுபடாது.

என் இறைவனின் நடிப்பு ...உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஊடுருவி உங்கள் மதியை மயக்கியதால் உங்கள் வாயே அவரை "சிவாஜி" என்ற பட்டம் கொடுத்து வாழ்த்தியது...! விஷயம் இவ்வளவுதான் ! ஆனால் வென்றது அங்கும் என் இறைவனே !

மேலும் நீங்களோ மற்றவரோ யார் நுழைய விடுவதற்கும் நுழைய விடாமல் இருப்பதற்கும்...உங்கள் உத்தரவை யார் கேட்டார்கள் சிரிப்பு தான் வருகிறது எனக்கு உங்கள் எழுத்தை படிக்கும்போது.

நீங்கள் கூறுபவை எல்லாம் மக்கள் உருப்படாமல் போகும் வழிகள்....உங்களுக்கு "வாழ்க" போட்டே அடித்தட்டில் இருப்பவன் அடங்கி ஒடுங்கி போகவேண்டும்...அவன் வாழ்வை வளமாக்க ஒரு வழியும் காண வக்கில்லாமல் அவன் வாழ்வாதாரத்தை பல வழிகளில் சுரண்டுவது அதனை இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்திகொண்டிருப்பது பச்சை அயோக்யத்தனம்.

அதை படிக்காதே...இதை படிக்காதே என்று கூற எவனுக்கும் எந்த கட்சிகாரனுக்கும் அருகதையோ உரிமையோ இல்லை ! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !

மத்தியில் கூட்டணி ஆட்சியுடன் முக்கிய பதவி வகித்தவன் என்ன தமிழா அங்கு பேசினான் ? தெரிந்த வரையில் ஹிந்தியோ அல்லது ஆங்கிலமோ தானே ...அப்புறம் என்ன இந்த வீம்பு பேச்சு ஏமாற்று வித்தை ? யாரை ஏமாற்றபார்கிரீர்கள் இனியும்...!

முழு பௌர்ணமி முற்றிலும் முடிந்து தேய்பிறை காலம்....இது போல அனர்த்தங்கள் புரிபவர்களுக்கு ....அமாவாசை வர இன்னும் சிறிது காலம்தான் ! கவலை வேண்டாம் !

நடிகர் திலகம்....அவரை பற்றி பேசவோ ...அந்த பேரை உச்சரிக்கவோ மேற்கூறிய எண்ணம் கொண்ட எவருக்கும் யோக்யதை கிடையாது....!

நடிப்பு தொழிலை செய்பவனை ஏளனமாக கூத்தாடி என்று கூறிய காலம் உண்டு. கூத்தாடி என்று ஏளனம் செய்த அதே வாயால் "சிவாஜி" என்ற பட்டம் கொடுக்க வைத்தவர் எங்கள் இறைவன் !

பலவருடம் சும்மா சினிமாவில் உட்கார்ந்து கதை வசன வாய்ப்புக்காக ஏங்கியவர்கள் மத்தியில் ஒரு படம் ..."பராசக்தி" அதன் பிறகு , எங்கு திரும்பினாலும் எட்டுதிக்கும் சிவாஜி...சிவாஜி என்ற ஒரே பெயர் தான் !

அந்த காழ்புணர்ச்சியில் எங்கே இவன் நம்முடன் இருந்தால் நம்மை விழிங்கிவிடுவானோ என்ற பயத்தில் கோழைத்தனமாக சில வேலைகளை கையாண்டு அதனை அரசியல் சாதுர்யம் என்று தற்பெருமையுடன் மானியம் விட்டுக்கொண்டு....மற்றொரு நடிகர் நிழலில் தஞ்சம் கொண்டு ...தொடர்ந்து நடிகர் திலகத்தை அவர் அடைந்த பல உலக பெருமைகளை ஜீரணிக்க முடியாமல் ...தொடர்ந்து அவரை முதுகில் குத்திக்கொண்டு...தள்ளாத வயதில் அந்த இறைவன் ...இவர்கள் செய்த துரோகத்தையும் மறந்து தனது விஞ்சியுள்ள ஆயுளின் 2 தருகிறேன் வாங்கிகொள்ளுங்கள் என்று கூர ...அந்த வயதிலும் துளி கூட மனசாட்சி இல்லாமல் ...நீ தரவேண்டாம்..நான் தருகிறேன் என்று கூறாமல்...நல்லவேளை நமக்கு இன்னும் ஆயுள் கூடும் என்று நினைப்பில் அதையும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ....இப்போது அதற்க்கு பிராயச்சித்தமாக அதுவும் பாண்டியில் ரங்கசாமி முந்திக்கொண்டு செய்துவிட்டார் என்ற ஒரே காரணத்தால் , அரையும் குறையுமாக அரசாங்க formality முற்றிலும் முழுமை செய்யாமல் ...அங்கங்கே ஒரு சிலை திறந்து பிராயச்சித்தம்..! - இது அரசியல் சாதுர்யமா ?

எத்தனை கட்சிகள் வேண்டுமானால் சிவாஜியுடன் பெருமைக்காக தொடர்பு வைத்திருந்திருக்கலாம்....ஆனால் அவரை முதுகில் குத்தியது முதலில் நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் ஆட்கள்தான். தமிழனை மண்ணின் மைந்தனை முதுகில் குத்தி வசைபாடியது உங்களுடைய .....வாழ்க தமிழ்...தமிழ் வளர்ப்போம் ...தமிழனை வாழவைப்போம் என்று இன்றளவும் ஏமாற்றுபவர்கள் தான் ! அந்த வழியைத்தான் பின்னாளில் வந்தவர்கள் பின்பற்றினார்கள், VP SINGH தவிர !

நடிகர் திலகம் ஏதோ உங்கள் நல்ல காலம் ...1953 முதல் 1987 வரை பசியின் உச்சத்தில் இருந்ததால் பிழைத்தீர்கள் ! ஆகவே....அதை உங்கள் பாக்கியமாக கருதி .பிழைத்துபோங்கள்...வம்பு பண்ணாதீர்கள் !

joe
12th April 2015, 08:32 PM
உனக்கு தேவையிண்ணா இந்தி என்ன சீன மொழியே கூட படிச்சுக்கோ ..யாரு கைய பிடிச்சு இழுத்து ..உன் பொருட்டு நாங்க எல்லோரும் கண்டிப்பா படிக்கணும்-ன்னு திணிக்கணும்-ன்னு கேட்டா அதைக் கூட புரிஞ்சுக்க முடியாம என்ன கைய பிடிச்சு இழுத்தியா என்ன மொக்கைத்தனமான வாதம் வைக்கிற எதுவும் புரியும்ணு நான் நினைக்கல்ல .

நான் கேக்குறது ஒண்ணே ஒண்ணு தான் . திராவிட இயக்கம் பற்றி உனக்கு அரித்தல் இருந்தால் போய் சொறிய வேறு இடம் இருக்கிறது .. தொடர்ந்து நடிகர் திலகத்தின் திரியில் உன் சொந்த அரசியல் வாந்தி எடுப்பது தேவையா ? வேறென்ஹ்காவது போய் வாந்தி எடுத்து தொலைக்க வேண்டியட்து தானே என்பது மட்டுமே என் கேள்வி .இதிவும் புரியுமென்ன்று நம்பிக்கை இல்லையென்றாலும் சொல்ல வேண்டியட்து அவசியம் என்பதால் சொல்லி முடிக்கிறேன்.

joe
12th April 2015, 08:35 PM
இறுதியாக ஒன்று . சிவாஜி என்னும் மகா கலைஞனின் மீது எனக்குள்ள அபிமான்த்தை நிரூபிக்க இது போன்ற சான்றிதழ் தேவையில்லை

eehaiupehazij
12th April 2015, 08:48 PM
இறுதியாக ஒன்று . சிவாஜி என்னும் மகா கலைஞனின் மீது எனக்குள்ள அபிமான்த்தை நிரூபிக்க இது போன்ற மடையர்களின் , தற்குறிகளின் சான்றிதழ் தேவையில்லை

டயமண்டு ஹப்பர் என்னும் ஸ்டேடசில் உள்ள தங்களின் நடிகர்திலகம் அபிமானம் என்றும் போற்றத் தகுந்ததே

Russellxor
12th April 2015, 08:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428851858485_zpsl7mmawms.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428851858485_zpsl7mmawms.jpg.html)

Russellxor
12th April 2015, 08:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1428851862491_zps1d7agglq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1428851862491_zps1d7agglq.jpg.html)

eehaiupehazij
12th April 2015, 09:13 PM
Dear friends. Let us resume our duty on NT's service. Mudslinging won't help. It is really an unfortunate development across the smooth flow of our Thread's proceedings even as VPKB is due for its rerelease.

eehaiupehazij
12th April 2015, 09:23 PM
திராவிடம் என்ற பெயரில் நாட்டை இனத்தை கலாசாரத்தை துண்டாடும்...அதனை ஆதரிக்கும் நடிகர் திலகத்தை அவரது ரசிகர்களுக்கு எந்த certificate கொடுக்க முயல வேண்டாம்...அதில் கூட விஷ திராவிடம் கலந்து கலப்படமாக இருக்கும் !

Ravikiran sir. Kindly break this ice. When we are on the anvil of promoting VPKB rerelease should we have confusions like this? Are we all not going to meet atleast once in our lifetime? Why unnecessary mudslinging among fans?Kindly put an end to such convoluting discussions that are not going to bring any laurels to our demigod NT. It is my personal request. All are observing us and the happenings.....unfortunate sir.

joe
12th April 2015, 09:32 PM
யோவ்...ஹிந்தி படிக்ககூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா...நீ படி..படிக்காம போ...அது உன் இஷ்டம் மதத்தவன சொல்ல நீ யாருய்யா .

:rotfl:

இதுக்கு பேரு தான் ..என்ன கைய புடிச்சு இழுத்தியா காமெடி



நீ இந்தி படிக்கக் கூடாதுண்ணு யாருல தடுத்தது .. எல்லோரும் கண்டிப்பா படிச்சாகணும் ..அப்ப தான் நானும் படிப்பேன்னு ஏன் அடம் பிடிக்குற ? . நானும் கண்டிப்பா படிக்கணும்-ன்னு சொல்ல நீ யார்?
கண்டிப்பா படிச்சாகணும்கிறத தான் நாங்க எதிர்த்தோம் ..எப்பவும் எதிர்ப்போம் ..முடிஞ்சா திணிச்சுப் பாரு.. ஓட ஓட விரட்டுவோம்,

திராவிடம் விஷப்பூச்சி தான் .. தொடர்ந்து கடிப்போம் ..ஆக வேண்டியத பார்

joe
12th April 2015, 09:49 PM
சரி ..சரி ..ரொம்ப முத்திருச்சு :rotfl:

Russellxor
12th April 2015, 09:56 PM
Courtesy:Chennai tamilula 2013

ஆங்கிலத்தின் அக்டோபர் முதலாம் திகதியில் பிறந்த நடிகர் திலகம் அமரர்*
சிவாஜிகணேசன் அவர்களின் நினைவலைகளை*


அலைகளில் (http://www.alaikal.com) அவர்பிறந்த மாதத்திலே*
வெளிக்கொண்டுவருவதில் மகிழ்ச்சி ,*
அலைகளின் சிவாஜி இரசிகர்களுக்கு இந்தக்கட்டுரை நிச்சயம் இனிக்கும் )*


ஒரு மனிதன் தான் சார்ந்த தொழிற்துறையில் அதீத சக்தியுடையவனாக திகழ்வது*
ஒரு சிலருக்கே கிட்டிய பேறாகும்


தான் ஏற்றுக்கொண்ட நடிப்புத்துறையில் பேராற்றலுடன் விளங்கியவர் அமரர்*
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்


பெரியவர்களானதும் ஆற்றப்போகும் தொழிலுக்கு பலம் சேர்க்க மாணவர்கள்*
இளமையிலிருந்தே கல்வியினை கற்பார்கள்


ஆனால் நடிகர்த்திலகமோ இளமையிலிருந்தே நடிப்பினை கற்று வந்தார் ஆம்*
குடும்பத்தின் வறுமை நிலையால் வீட்டை


தாண்டி நாட்டை மகிழவைத்த நாடக மேடைக்குள் காலை வைத்தார் , கலைமகள்*
கண்திறந்து வாமகனே என்றாளோ என


நாமெல்லாம் எண்ணும் வகையில் நடிப்புக்கு கடவுள் என்று சொல்லும் விதம்*
நடித்து காட்டி இரசிகர்களின் அத்தனை உணர்வுகளுக்கும் நன்றாகவே நிறைவினை*
கொடுத்தார்,*


பேசிய வசனங்களின் பொருளுக்கு ஏற்ப கண்கள் உருண்டன கால்கள் நடந்தன கைகள்
அசைந்தன தோள்கள் நிமிர்ந்தன


முதுகு குலுங்கியது மொத்தத்தில் உச்சிமுதல் உள்ளங்கால்வரை தான்*
எடுத்துக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ப*


நூற்றுக்கு நூறு சரியாக நேர்த்தியாக உடலை நடிப்புக்கு*
வடிவமாக்கினார்,ஆம் தமிழ் தெரியாத அந்நியன் அவரின்


உடலசைவை வைத்தே காட்சியின் சூழல் என்னவென்று கண்டுகொள்வான் என்றால்*
மிகையில்லை , சிவாஜி கர்ச்சித்தால் இரசிகனின் தோள்கள் நிமிரும் அவர்*
அழுதால் இரசிகனின் தோள்கள் ஒடுங்கும் நடிகர் திலகம் சிரித்தால் இரசிகனின்*
முகம் மலரும்*


அழுதால் இரசிகனின் முகமும் வாடும் , தனது உணர்வுடனேயே இரசிகர்களை*
அழைத்து செல்வது அவரின் அளவற்ற*


ஆற்றலின் நுட்பமாகும்,இதற்கு இப்படித்தான் இது இன்னவாறே என்று*
எடுத்துகொள்ளும் காட்சியின் சூழலுக்கும்*


தனது பாத்திரத்துக்கும் குறுகிய நேரத்தில் நிறைவான முடிவினை கற்பனை*
செய்து நடித்து காட்டுவதில்*


நடிகர்திலகம் போல் உலகில் வேறு யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே,


பாத்திரத்துக்கான ஆடைகளை தெரிவு செய்வதிலும் ஆபரணங்களை அணிந்து*
கொள்வதிலும் அவரும் நன்றாகவே*


ஈடுபாடு காட்டியிருப்பார் என்பதனை அவர் அணிந்து கொண்டிருக்கும்*
எடுப்பில் வைத்து நாம் மதிப்பிடமுடியும்


இராஜா வேடத்துக்கு கம்பீரம் காட்ட ஒருநடை பணக்கார பிரமுகர் என்றால்*
அதற்கொரு நடை ஏழையானால்*


அதற்கு


ஒரு நடை களியாட்ட விழாவுக்கு ஒருநடை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஐயாவின்*
நடையழகு விடைபெறாமல்


தொடர்ந்திருந்தது ,எத்தனை படங்கள் எத்தனை வசனங்கள் எத்தனை எத்தனை*
பாத்திர மாற்றங்கள் அத்தனையும்*


அவரொருவருக்கே படைக்கப்பட்டதுவோ என எண்ணி எண்ணி வியக்கின்றேன்,*


ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நடிகர்திலகத்தின் நாக்கு*
உச்சரித்த பொழுதே அழகு பெற்றது*


என்றால்


மிகையில்லை,அவருடைய குரலினிமையால் உச்சரிக்கும் வேக அளவால் வசனங்கள்*
உயிர்பெற்று ஊஞ்சலாடி*


கல்வெட்டுக்கள் போல் தமிழர்கள் உள்ளமெல்லாம் பதிந்தது,*


ராஜா என்று குறுக்கி சொல்லும் பொழுது காதில் விழுந்த அவரின் தேன்*
குரல் இதயத்தை தொட்டு*


இன்பத்தை தந்தது (ஓ ஓ ராஜா என்ற “ராஜா “படப்பாடலில் ) காதலியாக*
மனைவியாக நடிக்கும் பாத்திரத்தின்*


பெயரை*


எத்தனை அழகாக அதில் அன்பும் கலந்து நுட்பமாக*
உச்சரித்திருப்பார்,”பாலும் பழமும்”படத்தில் சாந்தி என்ற*


மனைவியின் பெயரை எத்தனை அழகாக உருக்கமாக பல விதமாகவெல்லாம்*
உச்சரித்திருந்தார், சீதா,*


பார்வதி,செல்லம்மா ,என்று பல பெயர்களை அடுக்கிகொண்டே போகலாம் ,


,அதேபோல்*


தனக்கு எதிரான பாத்திரத்தின் பெயரையும் அழகாகவே ஆத்திரம் கலந்திருந்த*
சூழ்நிலையிலும் உச்சரித்திருப்பார்*


“திருடன்” படத்தில் ஜெகன்னாதன்*


நீ ஒரு கோழை என்பார், சோகத்திலும் ஜெகன் என்று நீட்டி அழகாய்*
கத்தியிருப்பார்*


“தங்கப்பதக்கம்”


படத்தில் , ஒரு பெயரை அன்றில் வார்த்தையை எந்தச்சூழ்நிலைக்காட்சியிலும்*
அழகாக பேசியிருப்பார் மட்டுமின்றி*


வட்டார வழக்கு பேச்சினையும் அதுபோலவே பிசகின்றி பேசி*
வல்லமையைகாட்டினார்,”வியட்னாம் வீடு”படத்தில்*


பிராமணர்களின் பேச்சுவழக்கு , “நவராத்திரி” படத்தில் ஏழைக்குடியான*
கமக்காரர்களின் பேச்சு , அகம்பாவம்


பிடித்த தொழிலதிபர் பேச்சினை “பாட்டும் பரதமும்” படத்தில்,என்று*
இன்னும் பற்பல ,


பாடல் காட்சிகளில் அவரைப்போல் கச்சிதமாக வாயசைத்தவர்கள் கிடையாது,*
சிவஜியாரின் பாடல்கள் பற்றி*


எழுதவேண்டின் முக்கியமான ஒருவரை சேர்த்தே ஆகவேண்டும் அவர்தான் பாடகர்*
திலகம் டி.எம்.சௌந்தரராஜன்*


திலகத்துக்கென்றே பிறந்த திலகம் குரல்கொடுக்க இறைவனால் படைக்கப்பட்டவரோ*
என எண்ண வைக்கும்


குரலதிசயம் பாடகர்திலகம் டி. எம்.எஸ் என்றால் யாரும்*
மறுக்கமாட்டார்கள்.”பாவாடைதாவணியில்” என்று இதமாக*


பாடியவரே “படைத்தானே” என்று பதறியும் பாடி நடிகர்திலகத்தின்*
நடிப்புக்கு குரலால் உணர்ச்சி கூட்டி


பாடிக்கொடுத்திருந்தார், “நீயும் நானுமா” என்று அவர் ஓங்கிப்பாடும்*
பொழுது ஆத்திரத்தை கொப்பளித்திருப்பார் குரலில்


அவரின் அசாத்திய திறமைக்கு ஒலிவாங்கியின் தரம் போதாதோ என்று எண்ண*
தோன்றியது,அந்தளவிற்கு அவரது*


குரல்வன்மை இனிமையை கலந்து தமிழருக்கு காதுகளில் கனலாக*
விழுந்தது,”அம்மாடி ” என்று இழுத்த பொழுது*


வானத்தை ஒருக்கா முத்தமிட்டு தொட்டு வந்தது அவரின் பண்பட்ட*
கம்பீரக்குரல் ,நடிகர்திலகத்துக்கு கிடைத்த*


மிகப்பெரிய பலமானது அவரின் கலை வாழ்வுக்கு பாடகர்திலகத்தின்*
குரல்என்றால் மிகையில்லை .


நடிகர்திலகம் ஒரு மாபெரும் விருட்சத்துக்கு சமமானவர் அவரின் அத்தனை*
விடயங்களையும் ஒரு கட்டுரைக்குள் எழுதி


முடிப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல ஆதலினால் இம்மட்டில்*
உங்களிடமிருந்து தற்போதைக்கு


விடைபெறுகின்றேன்.

Russellbpw
12th April 2015, 09:58 PM
உருண்டு பொறண்டு சிரிகிறத பாத்தாலே தெரியுதே .....போய் அட்மிட் ஆகவேண்டியதுதானே...அப்புறம் என்ன இங்க பேச்சு வேண்டிகிடக்கு ! ஓஹோ...இததான் நான் கடிப்பேன்...அப்புடின்னு சொன்னதா ...:smile2:

Russellbpw
12th April 2015, 09:59 PM
Ravikiran sir. Kindly break this ice. When we are on the anvil of promoting VPKB rerelease should we have confusions like this? Are we all not going to meet atleast once in our lifetime? Why unnecessary mudslinging among fans?Kindly put an end to such convoluting discussions that are not going to bring any laurels to our demigod NT. It is my personal request. All are observing us and the happenings.....unfortunate sir.

Dear Sir,

It was not a discussion ...in this tone initiated by me.

I was only sharing my view and observation on what was happening since yesterday with reference to Mr. Gopal's statement here.

Mr. Joe had no business to poke his nose in my home by the way of attacking or abusing my comment ! And, the tone of this conversation in particular is set and started by him and not me if you notice.

His inferiority complex cannot demand interference unnecessarily. He is not doing this for the first time especially with reference to my views.

Anyway, i do understand the crux of your message. Am stopping here. Even if am going to be provoked by any distilled idiot, i would not react or respond. I shall treat them as stray dog barking unwanted on people.

Regards
RKS

eehaiupehazij
12th April 2015, 10:16 PM
Dear Ravikiran Sir. The crux of my request is only to pacify you two as hardcore fans of NT with of course some difference of opinion on some matters that are not relevant to drag in here lest NT's name and fame gets a dig. We the NT fans have to uphold our prestige at this crucial juncture of VPKB rerelease.

Dear Joe Sir. We have never met but I can perceive your pains being a diamond hubber who is complacent with his postings hitherto. Kindly help and guide our thread to grow in as much as lot of freshers like senthilvel, sundrajan...have started pouring in an incessant array of NT's nostalgia in tune with modern IT developments. Should we get trapped in such unwanted discussions and descriptions?

I too stop at this stage sirs, since I do not know much about the genesis of these problems that are offshoot to our icon's legacy. Perhaps Murali sir may be right solution provider.

regards, senthil