PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

mgrbaskaran
28th August 2015, 01:43 PM
முத்தைய்யன் சார்,

உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி இது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்தே வாய்த்த கொடும. நமக்கு [ புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு] தெரிந்ததுஎல்லம் ஒரு ஜாதி "மனித ஜாதி" தான்.

நன்றி.

திரு முத்தையன் சார்

கடமையை செய் பலனை எதிர்பாராதே

என்ற தலைவனின் வாக்குப்படி


கடமையை செய்யுங்கள்


தானாகவே புகழ் உங்களை வந்து சேரும்

ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று சொல்லுவோம்


மக்கள் திலகத்தின் வாசகர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதாலும் வேலை நேரங்கள் மாறுபடுவதாலும்

உங்களுக்கு உடனே வாழ்த்து சொல்லமுடியாமல் போயிருக்கலாம்

நீங்கள் பதிவு செய்த அத்தனையும் பொக்கிஷம்

வாழ்த்துக்கள்

orodizli
28th August 2015, 04:14 PM
நமது மக்கள்திலகம் ரசிகர்கள் செய்ய துணியாத, இல்லாத விளம்பரங்களை அவர்கள் செய்கிறார்கள்களே -என கூற தோன்றுகிறது...ஆம்...திருச்சி பதிப்பில் nt நடித்த vpkb படம் 2-வது வாரம் - என்று போனவாரம் திரையிட்ட அரங்குகள் பெயரே நாளிதழில் இன்று வந்து அதை நம்பி, சில நண்பர்கள், ரசிகர்கள் அந்த அரங்குக்கு சென்று பார்த்தால் - இன்று வேறு புது படம் ஓடுகிறது... இது போல தேவையில்லாமல் - ஏன் பொதுவான நம்பகத்தன்மையை கெடுத்து கொள்கிறார்கள்?...

orodizli
28th August 2015, 04:34 PM
தோழர்களே... நமது பதிவு யாரையும் மன புண்படவோ, விமர்சனம் எனவோ கருத வேண்டாம்... நாம் அறிந்த சிறு தகவலை இங்கே பகிருதல் ஒன்றே... திருச்சியில் ஒரு வாரத்திற்கு 250000 ரூபாய் கிட்டத்தட்ட வசூல் எனவும், கும்பகோணத்தில் 100000 ஆகவும் வசூல் ஆனதாகவும் -மற்றபடி மாயவரம், நாகபட்டினம் -பகுதிகளில் 4 நாட்களில் எடுக்கப்பட்டதாக திரையரங்க மேலாளர் மூலமாக தெரிந்தது...தஞ்சையில் முதல் நாள் மட்டுமே 4 காட்சிகள் நடைபெற்றதாகவும் மறுநாளிலிருந்து 1காட்சி , 2 காட்சிகள் என ரத்து செய்யப்பட்டு 40000 அளவில் வசூலும், புதுகோட்டையில் 60000 வசூலும் ஆனதாக தெரிவித்துள்ளனர்...

Russellzlc
28th August 2015, 04:39 PM
திரு.முத்தையன் அம்மு சார்,

மிகக் குறுகிய காலத்தில் இரவு பகல் பாராமல் அயராத உழைப்பால் 6,000 பதிவுகள் இட்டு, தனது அற்புதமான ஸ்டில்களால் தலைவருக்கு புகழ் மாலை சூட்டியிருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட, தலைவரின் தீவிர பக்தரான தங்களுக்கு நன்றி.

திரு. ரவி சார்,

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் நீங்கள், தங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் சுவைபடக் கூறியுள்ள பசு கதையை ரசித்து சிரித்தேன். நன்றி. தங்களின் ஓணம் விருந்துக்கும் நன்றி. திரு.ரூப்குமார் அவர்கள் கூறியிருப்பதை போல, சோற்றைக் காணோமே?

திரு. சிவாஜி செந்தில் சார்,

தங்களின் எண்கள் அடிப்படையிலான பாடல்களுக்கு மிக்க நன்றி. இரண்டுக்கு சிறப்பு சேர்த்த மக்கள் திலகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது, இரட்டை இலை சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுத்தது நினைவுக்கு வந்தது. நன்றி.

திரு.ஜெய்சங்கர் சார்,

இதயம் நிறைந்த எம்ஜிஆர் தொடருக்கு தனித்திரி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். பேராசிரியர் கொடுத்த திரை உலகம் இதழ்களை விரைவில் பதிவிடுவேன் என்று நீங்கள் கூறியிருப்பது குதூகலிக்க வைக்கிறது. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellwzf
28th August 2015, 05:02 PM
Congratulations muthaiyan ammu sir for completing more than 6000+ postings

Sent from my HM NOTE 1LTE using Tapatalk

uvausan
28th August 2015, 05:18 PM
Thank you sir, but I cant see rice here.

Sorry sir, rice was overcooked . Arranging a bowl of basmati rice . Your home address please .

Russellbpw
28th August 2015, 05:33 PM
தோழர்களே... நமது பதிவு யாரையும் மன புண்படவோ, விமர்சனம் எனவோ கருத வேண்டாம்... நாம் அறிந்த சிறு தகவலை இங்கே பகிருதல் ஒன்றே... திருச்சியில் ஒரு வாரத்திற்கு 250000 ரூபாய் கிட்டத்தட்ட வசூல் எனவும், கும்பகோணத்தில் 100000 ஆகவும் வசூல் ஆனதாகவும் -மற்றபடி மாயவரம், நாகபட்டினம் -பகுதிகளில் 4 நாட்களில் எடுக்கப்பட்டதாக திரையரங்க மேலாளர் மூலமாக தெரிந்தது...தஞ்சையில் முதல் நாள் மட்டுமே 4 காட்சிகள் நடைபெற்றதாகவும் மறுநாளிலிருந்து 1காட்சி , 2 காட்சிகள் என ரத்து செய்யப்பட்டு 40000 அளவில் வசூலும், புதுகோட்டையில் 60000 வசூலும் ஆனதாக தெரிவித்துள்ளனர்...

Dear Suharaam Sir,

PLEASE DONOT WORRY !

WE ARE AWARE OF YOUR INTEREST BUT WE ARE WELL ABOVE YOUR INTENTIONS !

PLEASE CARRY ON...WE WILL NEVER FEEL SAD (or) WORRIED SEEING AT YOUR FAKE FIGURES !!

ALL ARE AWARE THAT SUHARAAM FIGURES = FAKE FIGURES !!!

ATLEAST YOU FEEL HAPPY ABOUT WHAT YOU ARE DOING & GET SATISFIED !

LET YOU COMPLETE THE LIST ....THEN I SHALL REPLY IN TOTAL !

BEST REGARDS
RKS

Russellzlc
28th August 2015, 05:37 PM
http://i57.tinypic.com/sww801.jpg

‘‘இந்த தத்துவத்தை தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?’’

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத் பற்றி எரிகிறது. 6 உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளன. கலவரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஊரடங்கு.

குஜராத்தில் கணிசமாக உள்ளவர்கள் படேல் சமூகத்தினர். முன்னேறிய வகுப்பினரான இவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவுதான் முதலில் சொன்ன களேபரங்களுக்கு காரணம். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் இளைஞர் ஹர்திக் படேல். இவருக்கு வயது 22 தான்.

இதே குஜராத் மாநிலத்தில் 1980களில் காங்கிரசைச் சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி முதல்வராக இருந்தபோது இடஒதுக்கீட்டை எதிர்த்து இதே படேல் சமூகத்தினர்தான் போராட்டம் நடத்தினர். அதை பா.ஜ.கவும் ஆதரித்தது. இப்போது, தங்களுக்கே இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். பா.ஜ.வுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு.அமித் ஷா அவர்கள் சமீபத்தில் மதுரை வந்து தேவேந்திர குலத்தினர் மாநாட்டில் கலந்து கொண்டபோது, கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்று கோரினர். ‘ஆஹா, இடஒதுக்கீடு தேவையில்லை என்று இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டுகிறது’ என்று புகழ்ந்தார் திரு. அமித்ஷா. இப்போது, அவரது மாநிலத்திலேயே (அவரும் குஜராத்) இடஒதுக்கீடு கோரி போராட்டம். அதுவும் முற்பட்ட வகுப்பினரே நடத்துகின்றனர் என்பது வகுப்பு வாரி இடஒதுக்கீட்டின் தேவையை உணர்த்துகிறது.

இடஒதுக்கீடு தேவைப்படாத அளவுக்கு இன்னும் எல்லா தரப்பு மக்களும் உயர்ந்து விடவில்லை. 1921-ம் ஆண்டில் இருந்தே இடஒதுக்கீட்டை தமிழகம் பின்பற்றி வருகிறது. சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. இதை உணர்ந்துதான் புரட்சித் தலைவர் இடஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதமாக உயர்த்தினார். செல்வி ஜெயலலிதா அவர்கள் 69 சதவீதமாக உயர்த்தி, அதை பாதுகாத்திட பின்னர் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

குஜராத்தில் 1980களில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை பா.ஜ. ஆதரித்தது. பின்னர், முன்னாள் பிரதமர் சமூக நீதிக்காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரைப்படி கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியையே கவிழ்த்தது.

இப்போது, ‘‘இடஒதுக்கீடு தேவையில்லை என்று தாழ்த்தப்பட்ட மக்களே சொல்கிறார்கள்’’ என்று அதுவும் சமூக நீதிக் கொள்கையின் தாய் வீடான தமிழகத்திலேயே திரு.அமித் ஷா அவர்கள் அறிவித்த நிலையில், குஜராத்தில் இடஒதுக்கீடு விவகாரம் பாஜ.வை பூமராங்காய் தாக்குகிறது.

தலைவன் படத்தில் தலைவர் பாடுவார். தெய்வப் பாடகரின் குரலில் திரு. வாலியின் கருத்தாழம் மிக்க வரிகள்.

அறிவுக்கு வேலை கொடு....பகுத்தறிவுக்கு வேலை கொடு...மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும், நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அதுதன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர்மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்த தத்துவத்தை தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?

பா.ஜ.கவுக்கு தலைவர் சொல்வது போல இல்லை?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
28th August 2015, 06:11 PM
Dear Sailesh Sir !

NANNI UNDU SAARE !

NEENGALKKUM NINGALDE MADATHILE EVARKKUM PINNE IVIDAE ULLA ELLA SUHURTHUGALUKKUM ENDE ONAASAMSAGAL !

https://www.youtube.com/watch?v=wVzG4EHyKSE

RKS

Richardsof
28th August 2015, 08:11 PM
தாலி பாக்கியம் 27.8.1966 ..... பொன் விழா ஆண்டு துவக்கம் .
கலங்கரை விளக்கம் . 28.8.1965 பொன் விழா ஆண்டு நிறைவு.
தேடி வந்த மாப்பிள்ளை . 29.8.1970 45 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள்.இனிய பாடல்கள் நிறைந்த படங்கள் . மறக்க முடியாத படங்கள் .

eehaiupehazij
28th August 2015, 08:28 PM
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் மதுர கானங்களில் படு(த்து)ம் பாடு !!
எண் நான்கு


நான்கு திசைகள் நாலடியார்...நான்குதலை பிரம்மா....பெண்டிரின் நான்கு குணங்களாம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு....நான்கு கால் விலங்கினங்கள்...நான்கு மறைகள் தரும் தீர்ப்பை நம்பினார் கெடுவதில்லை ....நாலுபேர் நாலுவிதமாப் பேசுவாங்களே என்னும் அச்சப் பக்கத்தின் மிச்சங்கள்......நாலும் தெரிந்தவரே மேதை....நாலு தட்டுத் தட்டுனா சரியாப் போயிடும் ....நாலு காசு சம்பாதிக்கிறவழியைப் பார்க்கணும்.....காருக்கு நாலு சக்கரங்கள்.....ஒரு படம் அந்தக் காலத்தில் குறைந்தது நான்கு வாரம் ஓடினால்தான் ஹிட்!.... இப்படி நாலாபக்கமும் நாலாதிக்கம் நீளுகிறது!


எண் நான்கினை அதிகம் சிலாகித்துக் கைப்பற்றுகிறார் மக்கள்திலகம் MGR!

நாலு பக்கம் சுவரு நடுவுலே பார் இவரு .....ஜாலியாகத் தேடி ஓடி பாடி ஆடி வருகிறார் மாப்பிள்ளை!!
https://www.youtube.com/watch?v=vUU290sVlpg

நாலு காலு சார் ....நடுவுலே ஒரு வாலு சார்.....சொர்க்கம்..

https://www.youtube.com/watch?v=dE2ED9yYiV4

நாலு பேருக்கு நன்றி ......

https://www.youtube.com/watch?v=tg-V4PcCJK4

.

eehaiupehazij
28th August 2015, 08:58 PM
திரு. சிவாஜி செந்தில் சார்,

தங்களின் எண்கள் அடிப்படையிலான பாடல்களுக்கு மிக்க நன்றி. இரண்டுக்கு சிறப்பு சேர்த்த மக்கள் திலகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது, இரட்டை இலை சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுத்தது நினைவுக்கு வந்தது. நன்றி.Kalaivendhan

Dear Kalaivendhan Sir
உங்கள் பதில் கண்ணுற்றதும் மக்கள் திலகம் வெற்றியைக் கொண்டாட இருவிரல்களை V போல விரிப்பதும் நினைவுக்கு வருகிறது

Richardsof
28th August 2015, 09:09 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 100 படங்களின் நெகடிவ் பத்திரமாக தமிழக அரசின் பெட்டகத்தில உரிய பாதுகாப்புடன் வைக்கப்படும் .
.
1957 முதல் 1987 வரை மக்கள் திலகம் பங்கேற்ற அரசியல் கூட்டங்களின் நிழற் படங்கள் , கலந்து கொண்ட விழாக்களின் நிழற் படங்கள் அனைத்தும் பிரமாண்ட ஸைசில் டிஜிட்டல் படங்களாக மாற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .

தமிழக அரசின் செய்தி துறை வசம் உள்ள மக்கள் திலகத்தின் 11 ஆண்டு அரசியல் விழாக்கள் வீடியோ பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு மக்களுக்கு காணொளியாக காண்பிக்கப்படும் .

மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் பொது மக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும் .

அதி நவீன வசதிகள் கொண்ட ''மக்கள் திலகம் எம்ஜிஆர் ''இலவச மருத்துவ மனை 234 சட்ட மன்ற தொகுதிகளிலும்
நிறுவப்படும் .

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா சிறப்பு மலர் வெளியிடப்படும் , நினைவு தூண் , எம்ஜிஆர் வளைவு அமைக்கபடும்.

இப்படிப்பட்ட அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு நாளே மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவு நிறைவேறும் நாள் .

கனவு நிறைவேறுமா ?

ainefal
28th August 2015, 09:28 PM
வதந்தி எந்த நேரத்திலும் பரப்பகூடாத ஒரு ஆபத்தான பயங்கர விஷவாயு ஆகும்.

- புரட்சித்தலைவர்

Russelldwp
28th August 2015, 10:39 PM
திரு. சுஹர்ரம் அவர்களே

நாங்கள் ஒன்றும் படம் 2வது வாரம் ஓடுகிறது என்று சொல்லவில்லை தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரத்தை பத்திரிகை காரர் தியேட்டர் எடுக்காமல் கொடுத்து விட்டார். மேலும் திருச்சி கலை அரங்கில் ஒரு வார ஓடி முடிய வசூல் 3,65,800 ரூபாய் மொத்தம் 28 காட்சிகள் டிக்கட் விலை ரூபாய் 100. இதில் ஞாயிறு மாலை காட்சியில் 650 ஆடியன்ஸ் மற்றும் மேட்னி 313 ஆடியன்ஸ் பார்த்திருக்கிறார்கள். படத்தை 2 வது வாரம் ஓட்டியிருக்கலாம் புது படம் போடவேண்டும் என்பதற்காக எடுத்து விட்டார்கள். இதில் பாதி வசூலை வைத்து 2 வாரம் தாண்டி பல புது படங்கள் ஓடியிருக்கிறது. மேலும் எங்கள் ரசிகர்கள் 28 காட்சிகளிலும் திருச்சி கலை அரங்கில் இருந்து படத்தை கவனித்திருக்கிறார்கள். எனவே தவறான செய்தியை போட்டு குழப்பம் செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன்


தங்களுக்காக திருச்சி பழைய பட சாதனை நிலவரம்

1. கர்ணன் - திருச்சி ரம்பா - 28 நாட்கள் - வசூல் 21 லட்சம்
2. ஆயிரத்தில் ஒருவன் - காவேரி - 7 நாட்கள் - 2 லட்சத்து 28 ஆயிரம்
3. வசந்த மாளிகை - சோனா - 7 நாட்கள் - 2 லட்சத்து 52 ஆயிரம்
3. வீரபாண்டிய கட்டபொம்மன் - கலைஅரங்கம் -7 நாட்கள் - 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்

fidowag
28th August 2015, 10:58 PM
மிக குறுகிய காலத்தில் 6000 முத்தான பதிவுகள் முடித்த நண்பர் திரு.முத்தையன்
அம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.


ஆர். லோகநாதன்.

fidowag
28th August 2015, 11:02 PM
இன்று முதல் (28/08/2015) சென்னை சரவணாவில் இந்த ஆண்டில் 20 வது இணைந்த
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வாரம்.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள்.


இணைந்த 2 வது வாரம். கடந்த வாரம் பாட்சாவில் (மினர்வா ) திரையிடப்பட்டது.

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.

fidowag
28th August 2015, 11:04 PM
நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர். அனைவரின்
இதயங்களை கவரும் என்கிற நம்பிக்கையில் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

ஆர். லோகநாதன்.

eehaiupehazij
28th August 2015, 11:05 PM
(கல)கலப்புத் தமிழ் தேனிசை மதுரங்கள் ! Honey spilling HYBRID TAMIL harmonies!!


உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு அதன் கலப்படமும் இனிமையாக ரசிக்கப் படுவதுதான்! தொலைக்காட்சிகளில் சில பெண் அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சியாளர்களும் பேசும் லகர ளகர ழகர பேதமற்ற தமிழைக் கேட்கக் கொடுமையாக இருந்தாலும் அதையும் நாம் குழந்தைகளின் மழலைக்கு அப்புறம் கைதட்டி ரசிக்கிறோமே! உல்லம் கொல்லை கொல்லுது போங்க! இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மரத்(துப் போன)தமிளர்கலாகவே இருக்கிறோமே !!

சுக்வீந்தர் சிங்கு, உதித் நாராயணர்.... தமிழ்சேவையில் நொந்து நெஸ்லே நூடுல்ஸாகி நிற்கிறோமே! பத்தாதற்கு லூஸ் மோகனாரின் காப்புரிமையானஷோக்கான சிங்காரச் சென்னைத் திமிழ் , தெலுங்கு டப்பிங் டோங்கரே தமிழ், ஆங்கிலோ இந்தியர்களின் அலுவலக டமில், சௌகார்பேட்டை ஹிந்தமில், ...தமிங்கிலம்...தங்கிலீஷ்.........நம்ஸின் மச்சான்ஸ் தமிழ், திருக்கோயில் தெருக்கோயிலாகும் மலைத்தமிழு ஈசன் ஈஷனாகும் பாகவதத் தமிழ், வெற்றிலைக் குதப்பும் அம்பாலே பேஷிய தமிழ்..!

எப்படிக்.கேட்டாலும் தமிழ் இனிமையே! கலப்புத் திருமணங்களை வரவேற்கும் நாம் கலப்புத் தமிளுக்கும் ஆலவட்டம் குலுக்குவோமே!!

நம்பர் 1 : நம்பள்கி நிம்பள் மேலே மஜா......சௌகார்பேட்டை செந்(தேள்/ன்) தமிழில் ஒரு தூக்கு தூக்கி கலகலக்கும் பாலையா.....

https://www.youtube.com/watch?v=JQC9do1vrDc

நம்பர் 2 : இன்னா மேன் பொம்பிளே நான்....யாரிந்த லெக்கிங்க்ஸ் போட்ட சட்டைக்காரி!? சாட்டைக்கார சேட்டைக்கார வேட்டைக்காரரேதான்!!

https://www.youtube.com/watch?v=DvvMUixAu20

orodizli
28th August 2015, 11:37 PM
நண்பர்களே! தயவு செய்து என்றும் எப்பொழுதும் திரை உலக சக்கரவர்த்தி யாக விளங்கும் மக்கள்திலகம் அவர்களோடு வேறு யாரையும் ஒப்பிடு தந்து பதிவுகள் இட வேண்டாம் என பலமுறைகள் சொல்லியாகிவிட்டது... இரண்டாவது, திரைப்பட வசூல் கணக்கிடுகளில் - எல்லாம் அந்த நிலைமைகளை என்றோ கடந்து யாவரும் அண்ணாந்து நோக்குகின்ற அந்தஸ்தில் இருக்கிறார்...திருச்சியில் உண்மையான நிலவரம் கூடிய விரைவில் அறியதானே போகிறீர்கள் திரு ராம்...

orodizli
28th August 2015, 11:54 PM
திரு rks நாங்கள் யாரும் எதற்கும் கவலைப்படவில்லை... எதனாலும் சந்தோஷம் படவில்லை...அதற்கு அவசியமும் இல்லை... பட விநியோகஸ்தர்கள், திரைஅரங்க உரிமையாளர்கள், உண்மை பேசும் ரசிகர்களும் எந்த இடத்திலும் வரவேற்பு etc இல்லை --- என்ற விஷயத்தை கேள்விப்பட்டு கூறினேன்...பொதுவாக எப்பவும் பந்தாவாக --- உண்மை செய்தியினை திரித்து சொல்ல வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்... 47 அரங்குகளில் வெளியாகி இன்று 3 அரங்குகளில் ஓடுகிறது - தகவலை நண்பர்கள் சொல்லியபின் இந்த பதிவு...

Russellbpw
29th August 2015, 12:07 AM
Dear Suharaam sir
Poi thavira edhuvume ezhudha theriyaadha neengal bandhaavaana collection patriya oru pulugai avizhka muyalavendaam endru naanum koorugiren.

Varaverppu irukka illayaanu naanga photovoda potrukkom. People are seeing it. Neengaldhaan alandhu vittukondu, vaayaal vadai suttukondu irukkireergal.

Yenamo...distributor sonnaaraam ....theater owner sonnaaraam....unmayaana rasigar sonnaaramm...! Andha khadhayai ingu vidaadheergal sir.

Ivvlo sonna andha distributor alladhu theater owner or manager Mobile Number ingu padhivu seiyungal.

Naangal therindhu kolgirom avaridam irundhu.

If you are so genuine, do it , let me see ! If you can't then just keep quiet than posting FAKE news.

RKS

Russellbpw
29th August 2015, 12:09 AM
Dear Suhaaram sir
First you practise what you expect from others.Mr. Ram has only replied to your FAKE News..! He has mentioned true figures in terms of collection. Do you want theater numbers to check it? Let me know and I will get that for you..!
You can audit by bringing even Pricewater coopers..! They are experts and professionals.!

Rks

ainefal
29th August 2015, 01:01 AM
https://www.youtube.com/watch?v=8YkyeAuBnvs

Russelldvt
29th August 2015, 06:02 AM
TODAY 7.00PM WATCH SUNLIFE TV

http://i61.tinypic.com/1zdpvmq.jpg

http://i60.tinypic.com/15mfclt.jpg http://i58.tinypic.com/rumdjr.jpg http://i61.tinypic.com/2zqv1ua.jpg

Richardsof
29th August 2015, 06:32 AM
MAKKAL THILAGAM MGR's SUPERB ACTION ''THALI BAKKIYAM''
https://youtu.be/RSS9R_3pb3g

Russelldvt
29th August 2015, 07:05 AM
TODAY 12.00PM WATCH MEHA TV

http://i62.tinypic.com/aadlhk.jpg

http://i59.tinypic.com/ra9d82.jpg http://i60.tinypic.com/2132gcm.jpg http://i58.tinypic.com/2lliqo4.jpg

Russellbpw
29th August 2015, 09:00 AM
Dear Sailesh Sir,
Good morning.
:-)

That's exactly what is happening. I liked your timing and situational explanation through some good features that most of the time I get to watch for the first time.

Thanks once again sir. You have become an expert in this.

Regards
RKS

Russellrqe
29th August 2015, 09:59 AM
திரு முத்தையன்
உங்களின் 6000 பதிவுகளுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் . பல்லாண்டு வாழ்க படத்தின் ஸ்டில் பதிவுகள் அனைத்தும் சூப்பர் .

Russellrqe
29th August 2015, 10:01 AM
திரு ஜெய் சங்கர்
நீங்கள் புதியதாக துவங்கியுள்ள ''இதயம் நிறைந்த எம்ஜிஆர் '' தொடர் ஆரம்பமே அருமையாக உள்ளது. தொடர்ந்து பதிவுகள் வழங்கவும். வாழ்த்துக்கள் .

Russellrqe
29th August 2015, 12:20 PM
சிந்திக்க வேண்டிய நேரம் .

[ஏராளமான செலவுகள் செய்து பழைய படங்களை புதுப்பிக்கும் தயாரிப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது .இன்றைய தொழில் நுட்பத்தில் அசூர வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் பழைய படங்களின் டிவிடி விற்பனை , ஊடகங்களின் தொடர் ஒளிபரப்பு என்ற எல்லைகளை மீறி இன்றையபுதுப்படங்களுடன் போட்டி போட்டு கொண்டு திரை அரங்கில் வெளியாகும் நேரத்தில் படம் பார்க்கரசிகர்கள் செய்ய வேண்டிய செலவுகள் குறைந்த பட்சம் ஒரு டிக்கெட் விலை ,மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ 300 மேல் ஆகிறது . பழைய படங்கள் எல்லா தகுதிகள் பெற்று இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் விரும்பி திரை அரங்கில் காண விரும்புவதில்லை .இனி வர இருக்கும் பழைய படங்களின் நிலைமை ஒரு கேள்வி குறியாக உள்ளது .பொறுத்திருந்து பார்ப்போம் ]

Russellrqe
29th August 2015, 12:28 PM
நாளை உலகை ஆளவேண்டும்



கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் .

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது!

உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்..

நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே!

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே

ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா

கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

ஏருழவன் சேற்றில் கை வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள்!

அவர்தம் ஏழ்மைநிலை நீங்கி.. உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயம் புலவரின் பொதுவுடைமை நோக்கம் எல்லாம் பாடலின் வரிகளாய்!!

புரட்சிக்கு வித்திடும் போராட்டங்கள்! அப் போராட்டங்கள் உருவாகக் காரணம் ஏற்றத்தாழ்வுகள்!!
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் கூட்டுறவு சங்கங்கள்!!

நாளைய விடியல் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு வெளிவரட்டும்!!

courtesy-கவிஞர் காவிரிமைந்தன்

ainefal
29th August 2015, 01:43 PM
https://www.youtube.com/watch?v=UD_qMBwK4UA

Russellbpw
29th August 2015, 02:29 PM
சிந்திக்க வேண்டிய நேரம் .

[ஏராளமான செலவுகள் செய்து பழைய படங்களை புதுப்பிக்கும் தயாரிப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது .இன்றைய தொழில் நுட்பத்தில் அசூர வளர்ச்சி கண்டுள்ள நேரத்தில் பழைய படங்களின் டிவிடி விற்பனை , ஊடகங்களின் தொடர் ஒளிபரப்பு என்ற எல்லைகளை மீறி இன்றையபுதுப்படங்களுடன் போட்டி போட்டு கொண்டு திரை அரங்கில் வெளியாகும் நேரத்தில் படம் பார்க்கரசிகர்கள் செய்ய வேண்டிய செலவுகள் குறைந்த பட்சம் ஒரு டிக்கெட் விலை ,மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ 300 மேல் ஆகிறது . பழைய படங்கள் எல்லா தகுதிகள் பெற்று இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் விரும்பி திரை அரங்கில் காண விரும்புவதில்லை .இனி வர இருக்கும் பழைய படங்களின் நிலைமை ஒரு கேள்வி குறியாக உள்ளது .பொறுத்திருந்து பார்ப்போம் ]



சிந்திக்க வேண்டிய நேரம் - சிந்திக்க வேண்டிய விஷயம் பற்றி சிந்திக்கவேண்டிய நேரம்

மக்கள் எந்த திரைப்படத்தையும் பார்க்க தயாராக உள்ளார்கள். காரணம், பழைய படங்களின் நிலை புதிய படங்களை விட பாதுகாப்பாகவே உள்ளது என்பது எனது கருத்து.

புதிய படங்கள் வெளியிட்ட அடுத்தநாளே TORENT இல் பதிவிறக்கம் செய்ய தயார் நிலையில் உள்ளது. அதனை மக்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கவும் செய்கிறார்கள்...DVD யும் போலியானதாக இருந்தாலும் MARKET இல் விற்பனைக்கு இரெண்டாம் நாளே உள்ளது...ரயிலில், பஸ் பிரயாணத்தில் நாம் அதனை கண்கூடாக பார்க்கிறோம்.

சில உண்மைகளை நாம் உணரவேண்டியது அவசியமாகிறது

ஒரு பழையபடம் புதுப்பித்து புதிய வடிவு பெற்று வெளிவரும் முன்னர், நமக்கு கிடைக்கும் தகவல் யாதெனில் ...இதற்க்கு 40 லட்சம் செலவு செய்துள்ளோம், 30 லட்சம் செய்துள்ளோம், நெகடிவ் பழுதடைந்துள்ளது, AUDIO TRACK சரியில்லை , காட்சிகள் தரம் சரியாக இருக்கவில்லை..மற்றும் பல...! ஆகவே இதனை நல்ல முறையில் மக்களிடம் கொண்டுசேர்க்க 30 லட்சம் செலவு என்று கூறுகின்றனர்.

உதாரணமாக ஒரு திரைப்படத்தை DIGITAL வடிவில் வெளியிட கீழ்கண்டவை தேவை...

1) திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமம் அல்லது எந்த ஏரியா விநியோகம் செய்ய விரும்புகிறார்களோ...அந்த ஏரியா விநியோக உரிமை.

திரைப்படத்தின் NEGATIVE உரிமம் வைத்திருப்பவரிடம் இருந்து ஒரு சான்று தேவை படுகிறது..அதாவது இந்த திரைப்படத்தினை DIGITAL முறையில் திரையிட தனக்கு பூரண சம்மதம் என்ற எழுத்து வடிவ மடல். இது இருந்தால் மட்டுமே DIGITAL வெளியீடு செய்ய இயலும்.

2) உரிமம் மற்றும் கடிதம் வாங்கிய பிறகு...திரைப்படத்தின் NEGATIVE இருக்கவேண்டும்...அல்லது மிக சிறந்த தரமுள்ள POSITIVE அதாவது திரையரங்கில் திரையிடும் பிரிண்ட். இது இரெண்டும் இல்லாத பட்சத்தில் DIGITAL பீட்டா இருக்கவேண்டும் . 95% படங்களுக்கு BETA வும் 80% திரைப்படங்களுக்கு DIGITAL பீட்ட வும் உள்ளது.

இந்த டிஜிட்டல் பீட்டா வில் இருந்து, DIGITAL INTERMEDIATE அதாவது பெரிய திரையில் திரையிடுவதற்கு தயார் படுத்த படுகிறது. இதில் அகன்ற திரையாக மாற்றவும் வசதி உள்ளது. ( CINEMASCOPE )

ஒரு சாதாரண மசாலா படம் டிஜிட்டல் வடிவில் வெளியிட ( DIGI பீட்டா என்ன தரத்தில் உள்ளதோ அதே தரத்தில் அப்படியே பெரிய திரைக்கு மாற்ற ) கிட்டத்தட்ட 2 லட்சம் செலவாகிறது. 2 லட்சம் மட்டுமே செலவாகிறது..!!!!

இதன் பிறகு DTS 5.1 அல்லது 7.0 முறையில் திரைப்படத்தின் ஒலியை மாற்றியமைக்க சுமார் 2 லட்சம் முதல் கையில் காசு இருப்பு இருக்கும் வரை செலவு செய்யலாம். இதை செய்தால் தான் திரையில் நன்றாக இருக்கும் என்பது எல்லாம் வியாபார யுக்தியே அன்றி COMPULSORY கிடையாது !

அதே போல COLOR CORRECTION ! இதுவும் COMPULSORY கிடையாது DIGITAL BETA வில் இருந்து மாற்றியமைத்தால். ஆனால் PRINT அல்லது NEGATIVE முறையில் செய்தால் இது அவசியம் தேவைப்படும் ஒரு சில இடங்களில். அப்படி செய்ய தனி காசு !

பிறகு பெரிய திரையில் திரையிடுவதற்கு DI செய்த படத்தின் HARD DISK QUBE SYSTEM வைத்துள்ள ரியல் இமேஜஸ் நிறுவன திடம் கொடுத்துவிட அவர்கள் அவர்களுடைய QUBE இல் மாற்றி கொடுத்துவிடுவார்கள். 50,000 ருபாய் அட்வான்ஸ் கொடுத்தால் ஒரு இலவச QUBE LICENSE கொடுத்துவிடுவார்கள். இது LIFE RIGHTS எவ்வளவு வருடம் உள்ளதோ அவ்வளவு வருடம் நாம் திரைப்படத்தை திரையிட்டு கொள்ளலாம் ஒவ்வொரு திரை அரங்கிலும் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக.

இனி விஷயத்துக்கு வருவோம் - எனக்கு தெரிந்த வரையில் கர்ணன், பாசமலர், ஆயிரத்தில் ஒருவன், மற்றும் இப்போது வந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படங்கள் 30, 40, 50 என்று லட்சங்கள் செலவு செய்துள்ளதாக கூரிகொள்கின்றனர். இப்படி ஒரு தொகையை கூறினால்தான் அவர்களால் அதில் பாதிவிலைக்காவது விற்க முடியும் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.
மேற்கூறிய படங்கள் அனைத்தும் 8 -12 லட்சம் வரைதான் அதிகபட்சமாக 17 லட்சம் தான் இதன் BUDGET !!!

இதுதவிர போஸ்டர் செலவு, முன்னோட்ட வெளியீட்டு விழா, பேப்பர் விளம்பரம் என்று அவர் அவர்கள் வசதிகேற்ப இதர செலவுகள் உண்டு.

ஆக, ஒரு LIFE RIGHTS வைத்துள்ளவர் 20 லட்சத்திற்குள் எல்லாவற்றையும் GRAND ஆக முடித்துகொள்ளலாம்.

மேற்கூறியவை அனைத்தும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு செலவுகள் அடங்கியவை.

எந்த திரைப்படமும் இவர்கள் AREA OUTRIGHT விற்றுவிட்டால் நஷ்டம் வரவைப்பே இருக்காது ....யாருக்கும்...! காரணம், திரையிட்ட பிறகு, வாரத்திற்கு வசூல் ஆகும் பணத்தில் TERMS முறையில் தான் 99% திரையரங்கங்கள் திரையிடுகின்றனர். அதாவது ஆகும் வசூலில் 40 - 50% டெர்ம்ஸ் என்ற முறையில் SHARE கொடுக்கப்படுகிறது.

Contd........

Russellbpw
29th August 2015, 02:51 PM
Continuation.......

TRICHY & THANJAVUR DISTRICT

கட்டபொம்மன் திரைப்படத்தை பொருத்தவரை வெளியிட்டவர்க்கு 40% ஷேர் !

அதாவது திருச்சி கலையரங்கத்தில் கட்டபொம்மன் ஒருவார வசூல் ருபாய் 3,65,000 அதில் 40 சதவிகிதம் விநியோகஸ்தர் பங்கு கொடுக்க சம்மதம் செய்து அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது. கலையரங்கம் திரை அரங்கிலிருந்து படத்தை வெளியிட்டவர்க்கு ருபாய் 1,46,000 பங்காக காசோலை கொடுக்கப்படும்.

இதே போல தான் மற்ற ஏரியாக்களும் !


முதல் மூன்று நாள் கட்டபொம்மன் திரைப்படம் சராசரி 120 ( சிறிய திரை அரங்குகள் ) முதல் 275 ( 500 இருக்கைகள் மேல் கொண்டது )பேர் ஒரு காட்சியினை கண்டுகளித்துள்ளனர் . மாலை காட்சி மதிய காட்சிகள் 120 முதல் 375 - 642 வரை கண்டு கழித்துள்ளனர். மாலை காட்சி 250 முதல் 784 வரை கண்டுகளித்துள்ளனர் !

மதுரை ஏரியா எடுத்துகொண்டால் ஒரு வார வசூல் 8 லட்சத்திற்கும் கூடுதல் என்கிறது தகவல் ! தனி ஒருவன், அதிபர், தாக்க தாக்க மற்றும் ஒரு சில படங்கள் திரையிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதால், கலைமதி பிலிம்ஸ் கட்டபொம்மனை இரெண்டாவது வாரம் திரையிட மறுத்துவிட்டனர். இவர்கள்தான் கமிஷன் அடிப்படையில் மேற்கூறிய படங்களுக்கு திரை அரங்கு CONFIRMATION செய்கிறார்கள் !

திரை அரங்கின் வசூல் CHART காண்பித்தும் கூட அவர்கள் இரெண்டாம் வாரம் தொடர சம்மதிக்கவில்லை. எங்களிடம் 5 வருட உரிமம் உள்ளது, நாங்கள் டிசம்பர் வாக்கில் மீண்டும் வெளியிடுவோம்...இது வியாபார விஷயம் நீங்கள் தலையிடாதீர்கள் என்று கூறிவிட்டனர் !

Russellbpw
29th August 2015, 03:00 PM
இன்றைய காலகட்டத்தில் நடிகர் திலகம் அவர்கள் படங்களைத்தான் மக்களும் சரி இளைய தலைமுறையினரும் சரி காண விரும்புகின்றனர் என்பது நேற்று, இன்று, நாளை அரங்கு நிறைவு நேற்றே கண்டுள்ளதிளிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம் !

ஒரு சிலர் அது சிறிய திரை அரங்கு தானே என்று உடனே கேட்கலாம்...சிறிய திரை அரங்காக இருந்தாலும் எத்தனை படங்கள் அரங்கு நிறைவு கண்டன அல்லது காண்கின்றன ?

பெரிய திரை அரங்காக இருந்தாலும் குறைந்தது 200 - 350 AUDIENCE நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வடிவில் திரையிடப்படும் திரைப்படங்களை ஒரு காட்சிக்கு காண வருகை புரிகின்றனர்..! இது அவருக்கு மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் !

விநியோகஸ்தர்களும் சரி, தயாரிப்பாளரும் சரி....இரெண்டாம் வாரம் QUBE license வாங்க போதிய நிதி இல்லாதபோது யார் என்ன செய்வது...? அதற்க்கு திரைப்படத்தை குற்றம் கூற முடியாது அல்லவா ?

இன்னும் சொல்லப்போனால் இவர்கள் தான் நல்ல திரைப்படங்களை மக்களுக்கு பார்க்க கிடைக்காமல் பிரச்சனை செய்பவர்கள் ! குறைந்தது 25 நாட்களுக்கு QUBE LICENSE வாங்க பணம் தனியாக ஒதுக்கி வைத்து அதன்படி பாருங்கள்....எல்லா நல்ல படமும் மிக சிறந்த முறையில் ஓடும் !

RULE OF THE GAME : கையில் காசில்லாமல் இதுபோல PROJECT கையில் எடுக்க கூடாது !

Russellisf
29th August 2015, 03:50 PM
பெரிய திரை அரங்காக இருந்தாலும் குறைந்தது 200 - 350 AUDIENCE நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வடிவில் திரையிடப்படும் திரைப்படங்களை ஒரு காட்சிக்கு காண வருகை புரிகின்றனர்..! இது அவருக்கு மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் !


it is 100% correct oh MAKKALTHILAGAM ONLY POLITICIAN HE IS NOT CINEMA ARTIST OK OK

ROMBA THANKS SIR

Russellisf
29th August 2015, 03:55 PM
CONGRATULATIONS MUTHAIYAN SIR FOR COMPLETING 6000 POST IN OUR GOD AND OTHER ACTOR THREAD

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps0sig53ve.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps0sig53ve.jpg.html)

Russellisf
29th August 2015, 03:58 PM
CONGRATULATIONS KALAIVENTHA SIR CROSSING 1000 POSTS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zpsac977031.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zpsac977031.jpg.html)

Russellbpw
29th August 2015, 04:20 PM
பெரிய திரை அரங்காக இருந்தாலும் குறைந்தது 200 - 350 AUDIENCE நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வடிவில் திரையிடப்படும் திரைப்படங்களை ஒரு காட்சிக்கு காண வருகை புரிகின்றனர்..! இது அவருக்கு மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் !


it is 100% correct oh MAKKALTHILAGAM ONLY POLITICIAN HE IS NOT CINEMA ARTIST OK OK

ROMBA THANKS SIR

Dear Sir,

We do not see Makkal Thilagam as Politician. He is Chief Minister. Politician has got different meaning..!

Regards
RKS

Russellisf
29th August 2015, 04:24 PM
உலக சினிமா வரலாற்றில் என்றுமே ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் ஒருவர் தான் உங்களை போல எங்களுக்கு எல்லாம் பொய் எழுத வராது சார்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsw0wedx6f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsw0wedx6f.jpg.html)




திரு. சுஹர்ரம் அவர்களே

நாங்கள் ஒன்றும் படம் 2வது வாரம் ஓடுகிறது என்று சொல்லவில்லை தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரத்தை பத்திரிகை காரர் தியேட்டர் எடுக்காமல் கொடுத்து விட்டார். மேலும் திருச்சி கலை அரங்கில் ஒரு வார ஓடி முடிய வசூல் 3,65,800 ரூபாய் மொத்தம் 28 காட்சிகள் டிக்கட் விலை ரூபாய் 100. இதில் ஞாயிறு மாலை காட்சியில் 650 ஆடியன்ஸ் மற்றும் மேட்னி 313 ஆடியன்ஸ் பார்த்திருக்கிறார்கள். படத்தை 2 வது வாரம் ஓட்டியிருக்கலாம் புது படம் போடவேண்டும் என்பதற்காக எடுத்து விட்டார்கள். இதில் பாதி வசூலை வைத்து 2 வாரம் தாண்டி பல புது படங்கள் ஓடியிருக்கிறது. மேலும் எங்கள் ரசிகர்கள் 28 காட்சிகளிலும் திருச்சி கலை அரங்கில் இருந்து படத்தை கவனித்திருக்கிறார்கள். எனவே தவறான செய்தியை போட்டு குழப்பம் செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன்


தங்களுக்காக திருச்சி பழைய பட சாதனை நிலவரம்

1. கர்ணன் - திருச்சி ரம்பா - 28 நாட்கள் - வசூல் 21 லட்சம்
2. ஆயிரத்தில் ஒருவன் - காவேரி - 7 நாட்கள் - 2 லட்சத்து 28 ஆயிரம்
3. வசந்த மாளிகை - சோனா - 7 நாட்கள் - 2 லட்சத்து 52 ஆயிரம்
3. வீரபாண்டிய கட்டபொம்மன் - கலைஅரங்கம் -7 நாட்கள் - 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்

Russellisf
29th August 2015, 04:34 PM
COLOR="#800080"][SIZE=5]oh appadiya nalla velai thalaivar cm edru othu kondatharkku enna pirkalathil mgr appadi oru manithar cinemavil matrum arasiyalil irunthara endra kelvi ungalai pola aatkal ketpargal sir





Dear Sir,

We do not see Makkal Thilagam as Politician. He is Chief Minister. Politician has got different meaning..!

Regards
RKS

Russellbpw
29th August 2015, 04:46 PM
யுகேஷ் பாபு சார்

நாம் பரஸ்பரம் கருத்து பரிமாறாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறன்.

காரணம்....வழக்கத்தில் சந்தேகம் வரலாம் ...ஆனால் சந்தேகமே வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது !

என் வரையில் எனக்கு தெரியும் எனக்கு காமாலை இல்லை ஆகவே பார்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதில்லை.

நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்...! உண்மையாக இருக்கும்பட்சத்தில் யார் சொன்னாலும் நான் ஒத்துகொள்வேன்....உண்மைக்கு புறம்பாக இருக்கும்பட்சத்தில் எவ்வளவு agressive ஆக பதிவிட்டாலும் நான் ஒத்துகொள்ளமாட்டேன்...! அதில் உறுதியாக இருக்கிறேன், இருப்பேன் என்றும் !

அன்றே கூறியதை போல....உங்கள் நம்பிக்கை உங்களுக்கு....எங்கள் நம்பிக்கை எங்களுக்கு !

நன்றி !

Russellbpw
29th August 2015, 05:04 PM
COLOR="#800080"][SIZE=5]oh appadiya nalla velai thalaivar cm edru othu kondatharkku enna pirkalathil mgr appadi oru manithar cinemavil matrum arasiyalil irunthara endra kelvi ungalai pola aatkal ketpargal sir




யுகேஷ் பாபு சார்

உங்கள் எண்ணம் தவறு சார்...காலம் கனியும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்னை. அதுவரை என்னை பற்றி நீங்கள் இரு எண்ணம் கொண்டவராகவே இருக்கலாம்.

நிச்சயமாக மக்கள் திலகத்தை பற்றி அப்படி எல்லாம் வரும்காலத்தில் நான் கேட்கவோ, கூறவோ மாட்டேன் சார்......காரணம் நான் நடிகர் திலகத்தின் ரசிகன்...உண்மையை மறைக்கும் மறுக்கும் பழக்கம் எந்த ஒரு உண்மையான சிவாஜி ரசிகனுக்கும் கிடையாது !

நான் அரசியலிலும் இல்லை...கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. நாங்கள் மக்கள் திலகம் அவர்களை பற்றி பேச்சு வரும்போது அவரின் மதிப்பினை மாண்பினை பெருமையினை அறிந்துதான் பேசுகிறோம், பேசுவோம்..!

ஆனால் நீங்கள் கூறினீர்களே சற்று முன் " மக்கள் திலகம் என்று ஒருவர் இருந்தாரா என்று பிற்காலத்தில் உங்களை போன்றவர்கள் கேட்பார்கள் என்று..." அதனை செய்பவர்கள் இப்போதைய ஆட்சியாளர்கள் தான் சார்.....எந்த ஒரு ஆளும்கட்சி சுவரொட்டி அல்லது BANER பார்த்தால் பூதகண்ணாடி வைத்து பார்க்கும் அளவிற்கு மக்கள் திலகம் அவர்கள் புகைப்படத்தை ஸ்டாம்ப் சைஸ் அளவிற்கு மட்டுமே பயன்படுத்துவது நான் சொல்லிதான் தெரியவேண்டுமா ? பிற்காலத்தில் அவர்கள் வேண்டுமானால் கூறலாம் !

அப்படி பிற்காலத்தில் ஒரு சம்பவம் நடக்கும் பட்சத்தில்கூட உங்களுக்கு எள்ளளவும் சந்தேகமே வேண்டாம்...உங்களுடன் முதல் வரிசையில் நாங்களும் உண்மையை ஸ்தாபிக்க முழுவீச்சில் போராடுவோம் !! அப்படி ஒன்று பிற்காலத்தில் அரசியல் ரீதியாக நடந்தால்....அப்போது நாங்கள் இயற்க்கை எய்தாமல் இருந்தால் !

ஒரு சாதாரண எவருக்குமே பயன் இல்லாத வசூல் சமாசாரத்தை வைத்து இப்படி என்னை எடை போட்டுடீங்களே யுகேஷ் பாபு சார் !

I do not know what made you to think that I will stoop down to that low level ! It really pains the way you are making a wrong judgement always, about me, JUST for the simple reason that I am responding whenever there is a debatable point raised !!

I leave it to you sir !

Only time has to heal things and make you understand and then change your opinion !

Regards
RKS

Russellisf
29th August 2015, 05:06 PM
நானும் அதே தான் சொல்கிறேன் எங்களுக்கு தெரிந்த ஒரே நடிகர், ஒரே வசூல் மன்னர் ஒரே முதல்வர், ஒரே மனித நேயர், ஒரே நிர்வாகி , ஒரே பேச்சாளர் , ஒரே கடவுள் எங்கள் மக்கள் திலகம் தான்




யுகேஷ் பாபு சார்

நாம் பரஸ்பரம் கருத்து பரிமாறாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறன்.

காரணம்....வழக்கத்தில் சந்தேகம் வரலாம் ...ஆனால் சந்தேகமே வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது !

என் வரையில் எனக்கு தெரியும் எனக்கு காமாலை இல்லை ஆகவே பார்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதில்லை.

நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்...! உண்மையாக இருக்கும்பட்சத்தில் யார் சொன்னாலும் நான் ஒத்துகொள்வேன்....உண்மைக்கு புறம்பாக இருக்கும்பட்சத்தில் எவ்வளவு agressive ஆக பதிவிட்டாலும் நான் ஒத்துகொள்ளமாட்டேன்...! அதில் உறுதியாக இருக்கிறேன், இருப்பேன் என்றும் !

அன்றே கூறியதை போல....உங்கள் நம்பிக்கை உங்களுக்கு....எங்கள் நம்பிக்கை எங்களுக்கு !

நன்றி !

Russellisf
29th August 2015, 05:08 PM
எவருக்கும் பயன் இல்லாத வசூல் விஷயம் தான் ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான்




யுகேஷ் பாபு சார்

உங்கள் எண்ணம் தவறு சார்...காலம் கனியும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்னை. அதுவரை என்னை பற்றி நீங்கள் இரு எண்ணம் கொண்டவராகவே இருக்கலாம்.

நிச்சயமாக மக்கள் திலகத்தை பற்றி அப்படி எல்லாம் வரும்காலத்தில் நான் கேட்கவோ, கூறவோ மாட்டேன் சார்......காரணம் நான் நடிகர் திலகத்தின் ரசிகன்...உண்மையை மறைக்கும் மறுக்கும் பழக்கம் எந்த ஒரு உண்மையான சிவாஜி ரசிகனுக்கும் கிடையாது !

நான் அரசியலிலும் இல்லை...கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. நாங்கள் மக்கள் திலகம் அவர்களை பற்றி பேச்சு வரும்போது அவரின் மதிப்பினை மாண்பினை பெருமையினை அறிந்துதான் பேசுகிறோம், பேசுவோம்..!

ஆனால் நீங்கள் கூறினீர்களே சற்று முன் " மக்கள் திலகம் என்று ஒருவர் இருந்தாரா என்று பிற்காலத்தில் உங்களை போன்றவர்கள் கேட்பார்கள் என்று..." அதனை செய்பவர்கள் இப்போதைய ஆட்சியாளர்கள் தான் சார்.....எந்த ஒரு ஆளும்கட்சி சுவரொட்டி அல்லது BANER பார்த்தால் பூதகண்ணாடி வைத்து பார்க்கும் அளவிற்கு மக்கள் திலகம் அவர்கள் புகைப்படத்தை ஸ்டாம்ப் சைஸ் அளவிற்கு மட்டுமே பயன்படுத்துவது நான் சொல்லிதான் தெரியவேண்டுமா ? பிற்காலத்தில் அவர்கள் வேண்டுமானால் கூறலாம் !

ஒரு சாதாரண எவருக்குமே பயன் இல்லாத வசூல் சமாசாரத்தை வைத்து இப்படி என்னை எடை போட்டுடீங்களே யுகேஷ் பாபு சார் !

I do not know what made you to think that I will stoop down to that low level ! It's really pains the way you are making a wrong judgement about me !

I leave it to you sir ! Only time has to heal things !

Regards
RKS

Russellbpw
29th August 2015, 05:19 PM
எவருக்கும் பயன் இல்லாத வசூல் விஷயம் தான் ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான்

ஆரம்பித்தது திரு சுஹராம் அவர்கள் சார் ! நான் அல்ல !

Russellbpw
29th August 2015, 05:32 PM
நானும் அதே தான் சொல்கிறேன் எங்களுக்கு தெரிந்த ஒரே நடிகர், ஒரே வசூல் மன்னர் ஒரே முதல்வர், ஒரே மனித நேயர், ஒரே நிர்வாகி , ஒரே பேச்சாளர் , ஒரே கடவுள் எங்கள் மக்கள் திலகம் தான்


யுகேஷ் சார்
உங்களை போல தான் நாங்களும்
எங்களுக்கு தெரிந்த ஒரே கலை உலக சித்தரும் ,
கலை அவதாரமும் ,
கலைத்துறை செழிப்புற தம்மை அற்பணித்தவரும்
மறந்துபோகவிருந்த சுதந்திரபோராட்ட த்யாகிகளை, மறவர்களை, சைவ வைணவ சித்தாந்த வேதாந்திகளை என்றும் தமிழகம் நினைவில் கொள்ளும்வண்ணம் தேசிய தெய்வீக எண்ணம் கெடாமல் காத்த கடவுளும் ,
தமிழர்களை, தரனியெங்கும் தலை நிமிர வைத்தவரும்,
இந்தியாவை அடக்கியாண்ட வல்லரசர்களை தமிழகம் தேடி ஓடி வரவைத்து உலகறிய மரியாதை செய்யவைத்த , கலைவாணியால் அருள் பெற்ற எங்கள் நடிகர் திலகம் தான் !

Rks

Richardsof
29th August 2015, 06:52 PM
29.8.1970
flash back.

முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .

டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போதுரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .

மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .

தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை அமைந்தது

Russellisf
29th August 2015, 07:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpspr3xcztp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpspr3xcztp.jpg.html)

Richardsof
29th August 2015, 07:47 PM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”


அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”


சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’


ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’



‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.



”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!
COURTESY - rprajanayahem.blogspot.com

Russellisf
29th August 2015, 07:55 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1pbnp6pz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1pbnp6pz.jpg.html)

ainefal
29th August 2015, 08:39 PM
நம்முடைய குழந்தை முக்கு வடித்துக்கொண்டு நின்றால் நாம் துடைக்கிறோம். ஆனால், அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.

- புரட்சித்தலைவர்

ainefal
29th August 2015, 09:36 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/29TH%20AUGUST%202015_zpsvoq5kpee.jpg

http://dinaethal.epapr.in/575509/Dinaethal-Chennai/29.08.2015#page/14/1

eehaiupehazij
29th August 2015, 09:48 PM
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!


வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில்37 வருடங்கள். கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!

திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்

Russellbpw
29th August 2015, 09:59 PM
இன்று ரக்ஷா பந்தன் - அண்ணன் தங்கை உறவுமுறை செழித்து சகல சொவ்க்யங்களுடன் வாழ இறைவனை வேண்டி அண்ணனாக நினைப்பவரை, அண்ணனை தங்கை பாசம் கொண்ட சரடால் வலது கரத்தில் அன்பால் கட்டிபோடுவதுதான் ரக்ஷா பந்தன் .

திரை துறையில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரது படங்களிலும், தாய்மை, தங்கை பாசம் இரெண்டும் இடைவெளி இல்லாமல் இருந்துகொண்டே இருக்கும்..! இவர்கள் அளவிற்கு மற்றவர்கள் தங்கள் படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்ததுண்டா என்றால் இல்லை என்றே கூறலாம் !

என் தங்கை - 1952

https://www.youtube.com/watch?v=oIFVcdYtTic


1952 இல் வெளிவந்து தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமாம் பராசக்தி திரைப்படமும் அண்ணன் தங்கை பாசத்தை சமுதாய சிந்தனையோடு பின்னப்பட்ட கதையை கொண்ட படம் !

மறக்க முடியுமா .....பராசக்தி கோர்ட் காட்சியை ! முதல் படத்தில் இப்படி ஒரு சிம்ம கர்ஜனை, லாவக நடிப்பு, முதன் முறையாக தமிழின் உயிர்நாடி கண்டுபிடித்து அதனை முருக்க வேண்டிய இடத்தில் முறுக்கி, குருக்கவேண்டிய இடத்தில் குறுக்கி...சறுக்கவேண்டிய இடத்தில் சறுக்கி தளுக்க வேண்டிய இடத்தில் தளுக்கி - உலக திரை இதுவரை கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை !

என்ன ஒரு ஒற்றுமை இருதிலகங்களுக்கும் -

என் தங்கை 1952 & பராசக்தி 1952 வெளியீடு

https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI

இதன் தொடர்ச்சியாக

பாசமலர்,

என் அண்ணன்,

நினைத்ததை முடிப்பவன்,

விடிவெள்ளி,

அன்புக்கரங்கள்,

பச்சை விளக்கு,

தங்கை,

லட்சுமி கல்யாணம்,

தங்கைக்காக,

எங்கள் தங்கம்,

இதயவீணை ,

அண்ணன் ஒரு கோவில்,

இப்படி பல காவியங்கள் இரு திலகங்களும் அண்ணன் தங்கை பாசபினைப்பை திரையில் வாழ்ந்து காட்டினார்கள் !

https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M

https://www.youtube.com/watch?v=OJ3xtZIHFxY

https://www.youtube.com/watch?v=hJ7GdrID5LI

https://www.youtube.com/watch?v=JEHN6Beyg7A

https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k

https://www.youtube.com/watch?v=qk6Ru8lPBww

https://www.youtube.com/watch?v=08JYpCpNGfw

https://www.youtube.com/watch?v=CXtjNlLAH8E

https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos

https://www.youtube.com/watch?v=VLMjv8LzMHY

ainefal
29th August 2015, 10:25 PM
நிதியின் வித்தே

தங்கமகன் நீ
அன்னை சத்யா
தந்த மகன் நீ
தந்த மகன் நீ
சத்யாவும் கோபாலும்
தந்த மகன் நீ
தந்த புகழ் நீ
என்றும் தாங்கும் புகழ் நீ
பொங்கு புகழ் நீ
இன்பம் பொங்கும் புகழ் நீ
எங்கள் உயிர் நீ
என்றும் உயிர் நீ
முள்ளில்லா ரோசா நீ...உயிர்
மோகனப் புன்னகை ராசா நீ
சிங்க மனம் நீ
சீற்றமதில் நின்றிடிலோ
சிங்கம் என நீ
சிந்தித்துப் பார்த்தால்
தங்கம் என நீ
ஆண் தங்கம் மனம் நீ
வாங்க கடல் நீ ஆம்
வற்றாத உள்ளடக்கும் தன்மையலே
வங்கக்கடல் நீ
வற்றி விட்டால் கோபமது
அற்புதமாய் பாசம் பொங்கும்
தங்க கடல் நீ அம அன்பி
தங்கும் கடல் நீ
யாழ்ப்பாணம் தந்த ஒரு பரிசு தமிழ்
யாழினையே இன்று மீட்டும் பரிசு
வாழ்வங்கு வாழ்ந்த ஒரு வழியில் - உலகில்
வந்தவரை நமது அன்பு முரசு

நீதியின் வித்து நீ - ஆம்
நீதியை வாழ்ந்தே சிறந்த
நிதிபதியம் கோபால் தந்த
நிதியின் வித்து தமிழ்
சாதியின் சொத்து.

ainefal
29th August 2015, 10:29 PM
சிவாஜி கணேசன் தலைவராக இருக்கும் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எம்.ஜி.ஆர் செயல்படுவாரா? என்று சிலர் சந்தேகப்படுகிறார்கலாம். சிவாஜி என்னைவிட இளைஞ்சராக இருந்தாலும், அவர் சங்கத்தின் தலைவராக இருக்கும்போது அவர் என்ன திட்டங்களைக் தருகிறாரோ, அதற்க்கு ஏன் முழு ஒத்துழைப்பும், நிச்சயம் இருக்கும்.

சிவாஜி கணேசன் இந்த நடிகர் சங்கப் பதிவிக்காக காத்துக் கிடக்கவில்லை. அந்த பதவிதான் அவருக்காக காத்திருந்தது. இந்த சங்கத்தின் தலைவராக தொடர்ந்து சிவாஜி கணேசன் இருக்க வேண்டும். அவர் இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் வரை அவர்தான் இதற்க்கு தலைவர். அவர் தலைமையில் பனியாட்ட்ற நாங்கள் தயார்.

புரட்சித்தலைவர் 30-7-1972 அன்று ஆற்றிய உரை.

siqutacelufuw
29th August 2015, 10:39 PM
http://i60.tinypic.com/f1i1pe.jpg

http://i61.tinypic.com/2lke1s9.jpg

இன்றுடன் (29-08-1970), மக்கள் திலகத்தின் "தேடி வந்த மாப்பிள்ளை" வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.

சனிக்கிழமையன்று இந்த காவியம் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். காரணம், பொதுவாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் தமிழ் திரைப்படங்களின் வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டு பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று வெள்ளித்திரையில் மின்னியதுதான்.

இந்த சமயத்தில், முதல் நாள், இந்த காவியத்தை பார்த்த என்னுடைய திரைப்பட அனுபவத்தை நான் திரி அன்பர்களுடன் பகிரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 9வது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது, பொன்மனசெம்மலின் இந்த பொற்காவியம் வெளியானது. எனது பள்ளித்தோழர்கள் ரங்கராஜன், பார்த்தசாரதி, ரவிக்குமார், ஆகியோருடன், சென்னை பாரகன் அரங்கில் 61 பைசா டிக்கெட்டுக்காக, காலையிலே சென்று, வரிசையில் நின்று கொண்டிருந்தேன். 1970ம் ஆண்டு நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் மாட்டுக்கார வேலன் வெளியாகி வெள்ளி விழா கண்டது,, தொடர்ந்து "என்.அண்ணன்" வெற்றி, (அன்று தான் 101வது நாள்), அதனை தொடர்ந்து கலைச்சுடர் எம். ஜி. ஆர். பணம் வாங்காமல், கலைஞர் குடும்பத்துக்கு இலவசமாக நடித்து கொடுத்த "எங்கள் தங்கம்" சிறப்பாக தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிச்செய்தி போன்றவைகளை பேசிக்கொண்டே இருந்ததால் நேரம் போனதே தெரிய வில்லை.

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்கமால், எல்லா டிக்கெட் கவுண்டர்களிலும், அலை மோதியது. டிக்கெட் கொடுக்கும் நேரம் நெருங்க நெருங்க, ஒரே படபடப்பு. கூட்ட நெரிசலில் மூச்சு திணறியது. இறுதியாக, டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் திறக்கப்பட்டவுடன், திடீரென்று பெருங்கூட்டம் முண்டியடித்த காரணத்தால், நண்பர்கள் நாங்கள் அனைவரும் மூலைக்கொருவராக பிரிய நேரிட்டது.

நிலை தடுமாறி, நான் கீழே விழுந்து விட்டேன். என்னை பலரும் மிதித்தபடி சென்றதால், சிறுவனான நான் மூச்சு திணறினேன். மயக்கம் வரும் நிலைக்கு ஆளானேன். மக்கள் திலகத்தின் ஒரு அன்பர், கூட்டத்தை மேலும் முன்னேற விட முடியாதபடி தடுத்து, தண்ணீர் கொண்டு வரச் செய்து முகத்தில் தெளித்து, என்னை எழச் செய்து, டிக்கெட் கவுண்டர் வரை பத்திரமாக அழைத்து சென்றார். கவுண்டரில் என் கையை நீட்டி டிக்கெட் வாங்கிய பொழுது நான் ஆகாயத்தில் பறந்தது போன்ற ஒரு மகிழ்ச்சி ! ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேன். அது வரை நான் பட்ட அவஸ்தை அனைத்தும் காணமல் போனது. என்னை காப்பாற்றிய அந்த அன்பர் எனக்கு அப்பொழுது கடவுள் மாதிரி தெரிந்தார்.

என் பள்ளித் தோழர்கள் ரங்கராஜன், பார்த்த சாரதி ஆகியோர் கூட்ட நெரிசலை சமாளிக்கும் அளவுக்கு உடல் வலிமை பெற்றிருந்த படியால், அவர்களுக்கு டிக்கெட் எடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால், என்னைப்போன்ற மெல்லிய தேகம் கொண்ட ஜி. கே. ரவிக்குமார், கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், வரிசையிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு, டிக்கெட் எடுக்க முடியாமல் போனது. எங்கள் மூவருக்கும் டிக்கெட் கிடைத்து, தோழன் ரவிக்குமாருக்கு டிக்கெட் கிடைக்காமல் போனது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமே !

ஆனாலும்,எங்கள் அனைவரின் கையில் மிச்சமிருந்த பணத்தை கொண்டு பிளாக்கில் அவனுக்கும் டிக்கெட் வாங்கி, அரங்கத்தில் நுழைந்த போது, ஒரு பெரிய சாதனை படைத்து விட்டது போன்று ஓர் உணர்வு !

திரையில் நம் மக்கள் திலகம் வரும் முதல் காட்சியில் வழக்கம் போல் திரையரங்கம் அதிர்ந்தது. " வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் " என்ற பாடல் காட்சியில், நம் தங்கத் தலைவன் அங்கும் இங்கும் ஓடும் சுறுசுறுப்பில், ரசிகர்களின் ஆரவாரம், பலத்த கை தட்டல்.

சொர்க்கத்தை தேடுவோம் சுந்தரி என்ற பாடலில் நம் திரையுலக மன்னன் நடிகை விஜயஸ்ரீயுடன் ஆடும் ஆட்டம் மறக்க முடியாதது.

நாலு பக்கம் சுவரு, நடுவிலே பார் இவரு, நடந்து போச்சு தவறு" என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கும் "இடமோ சுகமானது, ஜோடியோ பதமானது " என்ற பாடல் காட்சியிலும், அசத்தியது நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர் . அவர்களே !

தலைவரின் மாறு வேடப் பாடல் "தொட்டுக் காட்டாவா காட்டவா" பாடல் காட்சியில், கர கோஷம் விண்ணைப் பிளந்தது. அப்பொழுது, சார்லி சாப்ளின் என்ற நடிகரை நாங்கள் அறியாத வயதினராக இருந்தோம் . பின்னாளில்தான், சார்லி சாப்ளின் பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். நடிகர் கமலஹாசன் "புன்னகை மன்னன்" திரைப்படத்தில், நம் பொன்மனசெம்மலை பின்பற்றி அதே "சார்லி சாப்ளின்" வேடத்தை நினைவு படுத்தி நடித்தது பலரும் அறிந்ததே !

வயதான முதிய தோற்றத்தில், எதிரிகளுடன் சண்டை போடும் வீரத்தை நடிகை ஜெயலலிதா பார்த்து திகைப்பதும், பின்னர் அவர் முதியவர் அல்ல என்ற உண்மை புலப்பட்டு, "அட ஆறுமுகம் இது யாரு முகம்" என்ற பாடல் காட்சியில், தாடியை வைச்சா வேறு முகம், தாடியை எடுத்தா தங்க முகம் என்ற வரிகள் வரும்போது, ரசிகர்களின் கை தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

மாணிக்கத் தேரில் மரகத கலசம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் வெகு அருமை. இரவில் எடுக்கப்பட்ட மின்னொளி காட்சிகள் பிரகாசித்தது, இன்றும் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நல்ல கதையமைப்பு, செவிக்கினிய அருமையான பாடல்கள், மக்கள் திலகத்தின் மகோன்னதமான நடிப்பு, இவையனைத்தும் நிறைந்த அற்புதமான பொழுது போக்கு காவியத்தை பார்த்த திருப்தியில் எனக்கு ஏற்பட்ட அசதியும், உடல் வலியும் பறந்தே போயிற்று !

மறு பிறவி எடுத்த நான் அன்று தனிப்பிறவி எம். ஜி. ஆர். அவர்களை திரையில் தரிசித்த, மறக்க முடியாத நாள் (29-08-1970)

ainefal
29th August 2015, 10:41 PM
https://www.youtube.com/watch?v=8A11dUyUips

ainefal
29th August 2015, 10:44 PM
https://www.youtube.com/watch?v=qHp9dF_Ui3E

ainefal
29th August 2015, 10:45 PM
https://www.youtube.com/watch?v=BYI-pDbsNVY

ainefal
29th August 2015, 10:48 PM
https://www.youtube.com/watch?v=0oRJ9HB4GIM

ainefal
29th August 2015, 10:49 PM
https://www.youtube.com/watch?v=_1cZRRGhQg4

ainefal
29th August 2015, 10:49 PM
https://www.youtube.com/watch?v=Va12xpbjMrw

ainefal
29th August 2015, 10:50 PM
https://www.youtube.com/watch?v=Zqvk5Vtw3Ts

ainefal
29th August 2015, 10:50 PM
https://www.youtube.com/watch?v=u_4h2U5eQMo

fidowag
29th August 2015, 10:51 PM
நாளை (30/08/2015) இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் தேவரின் " தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாக உள்ளது.
http://i60.tinypic.com/2isgyzd.jpg

ainefal
29th August 2015, 10:52 PM
ALL IN ONE

https://www.youtube.com/watch?v=to_yN0_PhVU

siqutacelufuw
29th August 2015, 11:01 PM
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!



திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்

Dear Sivaji Senthil Sir,

WISHING YOU IN ADVANCE FOR A PEACEFUL AND HAPPY RETIRED LIFE. WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. I ALSO CONVEY MY WISHES TO YOU AND YOUR FAMILY FOR A HEALTHY AND WEALTHY LIFE. HOPE YOUR CONTRIBUTION IN BOTH THE THREADS, WILL HENCEFORTH, BE MORE.

fidowag
29th August 2015, 11:03 PM
தற்போது வெற்றிநடை போடுகிறது

http://i57.tinypic.com/2qsp1qx.jpg

siqutacelufuw
29th August 2015, 11:05 PM
http://i61.tinypic.com/nqsm4p.jpg

CONGRATULATIONS ! - Dear MUTHAIYAN AMMU on SUCCESSFUL COMPLETION OF 6,000 POSTS. WISHING YOU WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD AND ANNAI JANAKI FOR MORE NUMBER OF ATTRACTIVE POSTS IN OUR THREAD.

fidowag
29th August 2015, 11:05 PM
http://i57.tinypic.com/efky78.jpg

fidowag
29th August 2015, 11:12 PM
கடந்த வார பாக்யா இதழில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நாடோடி " யாக வாழ்ந்து
காட்டிய திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i57.tinypic.com/k3amut.jpg

http://i58.tinypic.com/r0bcxt.jpg
http://i57.tinypic.com/2cs9zk9.jpg

fidowag
29th August 2015, 11:14 PM
http://i58.tinypic.com/2wml8ib.jpg
http://i60.tinypic.com/s6qcle.jpg
http://i59.tinypic.com/20us4ko.jpg

Russelldvt
30th August 2015, 02:49 AM
http://i62.tinypic.com/1z71oqx.jpg

Russelldvt
30th August 2015, 02:49 AM
http://i60.tinypic.com/eqnipf.jpg

Russelldvt
30th August 2015, 02:50 AM
http://i57.tinypic.com/wme1yp.jpg

Russelldvt
30th August 2015, 02:51 AM
http://i61.tinypic.com/2elw0aq.jpg

Russelldvt
30th August 2015, 02:52 AM
http://i62.tinypic.com/4huwia.jpg http://i62.tinypic.com/sxjhp1.jpg

Russelldvt
30th August 2015, 02:53 AM
http://i57.tinypic.com/qoso6x.jpg

Russelldvt
30th August 2015, 02:53 AM
http://i61.tinypic.com/10ej8sp.jpg

Russelldvt
30th August 2015, 02:54 AM
http://i60.tinypic.com/25fr7rk.jpg

Russelldvt
30th August 2015, 02:55 AM
http://i60.tinypic.com/400eo.jpg

Russelldvt
30th August 2015, 02:55 AM
http://i61.tinypic.com/24qtr14.jpg

Russelldvt
30th August 2015, 02:57 AM
http://i62.tinypic.com/16gg280.jpg

Russelldvt
30th August 2015, 02:58 AM
http://i58.tinypic.com/2im2tly.jpg

Russelldvt
30th August 2015, 02:59 AM
http://i60.tinypic.com/16galoy.jpg http://i60.tinypic.com/2i056c7.jpg

Russelldvt
30th August 2015, 03:01 AM
http://i60.tinypic.com/sotrpj.jpg

Russelldvt
30th August 2015, 03:02 AM
http://i57.tinypic.com/103bxhy.jpg

Russelldvt
30th August 2015, 03:03 AM
http://i61.tinypic.com/a3h5xx.jpg

Russelldvt
30th August 2015, 03:03 AM
http://i58.tinypic.com/2e1aijp.jpg

Russelldvt
30th August 2015, 03:04 AM
http://i59.tinypic.com/euhjkm.jpg

Russelldvt
30th August 2015, 03:04 AM
http://i57.tinypic.com/33wxifc.jpg

Russelldvt
30th August 2015, 03:05 AM
http://i61.tinypic.com/ei4nc2.jpg

Russelldvt
30th August 2015, 03:05 AM
http://i57.tinypic.com/zwn8fn.jpg

Russelldvt
30th August 2015, 03:06 AM
http://i61.tinypic.com/126eobd.jpg

Russelldvt
30th August 2015, 03:07 AM
http://i59.tinypic.com/eimcjm.jpg

Russelldvt
30th August 2015, 03:07 AM
http://i61.tinypic.com/20t5537.jpg

Russelldvt
30th August 2015, 03:08 AM
http://i61.tinypic.com/ta6li1.jpg

Russelldvt
30th August 2015, 03:08 AM
http://i57.tinypic.com/2lbfk3c.jpg

Russelldvt
30th August 2015, 03:09 AM
http://i61.tinypic.com/2q3prv5.jpg

Russelldvt
30th August 2015, 03:09 AM
http://i61.tinypic.com/v61y7d.jpg

Russelldvt
30th August 2015, 03:10 AM
http://i58.tinypic.com/1zyeq0x.jpg

Russelldvt
30th August 2015, 03:11 AM
http://i60.tinypic.com/2ni04eo.jpg

Russelldvt
30th August 2015, 03:12 AM
http://i57.tinypic.com/1g67m1.jpg

Russelldvt
30th August 2015, 03:12 AM
http://i57.tinypic.com/300ejd3.jpg

Russelldvt
30th August 2015, 03:13 AM
http://i62.tinypic.com/vhdeol.jpg

Russelldvt
30th August 2015, 03:14 AM
http://i62.tinypic.com/nl4eg0.jpg http://i59.tinypic.com/245jwo4.jpg

Russelldvt
30th August 2015, 03:15 AM
http://i57.tinypic.com/2lth8jn.jpg

Russelldvt
30th August 2015, 03:16 AM
http://i62.tinypic.com/24ux0uu.jpg

Russelldvt
30th August 2015, 03:17 AM
http://i61.tinypic.com/2w5lmdk.jpg

Russelldvt
30th August 2015, 03:17 AM
http://i62.tinypic.com/zioz1x.jpg

Russelldvt
30th August 2015, 03:18 AM
http://i57.tinypic.com/im2ycg.jpg

Russelldvt
30th August 2015, 03:19 AM
http://i62.tinypic.com/2vbslrd.jpg http://i57.tinypic.com/rc0oy8.jpg

Russelldvt
30th August 2015, 03:20 AM
http://i59.tinypic.com/246syg4.jpg

Russelldvt
30th August 2015, 03:21 AM
http://i62.tinypic.com/2luceia.jpg http://i57.tinypic.com/160vor6.jpg

Russelldvt
30th August 2015, 03:22 AM
http://i58.tinypic.com/2v1ntsp.jpg

Russelldvt
30th August 2015, 03:22 AM
http://i60.tinypic.com/2uj2r9h.jpg

Russelldvt
30th August 2015, 03:23 AM
http://i58.tinypic.com/a15v1v.jpg

Russelldvt
30th August 2015, 03:24 AM
http://i61.tinypic.com/2vbot5j.jpg

Russelldvt
30th August 2015, 03:24 AM
http://i62.tinypic.com/2ibj220.jpg

Russelldvt
30th August 2015, 03:25 AM
http://i58.tinypic.com/r87adg.jpg

Russelldvt
30th August 2015, 03:26 AM
http://i58.tinypic.com/zx60k4.jpg

Russelldvt
30th August 2015, 03:26 AM
http://i57.tinypic.com/2a9pb2g.jpg

Russelldvt
30th August 2015, 03:27 AM
http://i57.tinypic.com/o89mhv.jpg

Russelldvt
30th August 2015, 03:28 AM
http://i60.tinypic.com/21kmizb.jpg

Russelldvt
30th August 2015, 03:28 AM
http://i62.tinypic.com/15xraly.jpg

Russelldvt
30th August 2015, 03:29 AM
http://i60.tinypic.com/2j4ccck.jpg

Russelldvt
30th August 2015, 03:30 AM
http://i58.tinypic.com/m7575d.jpg

Russelldvt
30th August 2015, 03:30 AM
http://i58.tinypic.com/w8t7v9.jpg

Russelldvt
30th August 2015, 03:31 AM
http://i62.tinypic.com/smtzrq.jpg

Russelldvt
30th August 2015, 03:31 AM
http://i58.tinypic.com/1z6xjk7.jpg

Russelldvt
30th August 2015, 03:32 AM
http://i58.tinypic.com/10f7rqr.jpg

Russelldvt
30th August 2015, 03:33 AM
http://i57.tinypic.com/2ue5rw0.jpg

Russelldvt
30th August 2015, 03:33 AM
http://i62.tinypic.com/2mnexjl.jpg

Russelldvt
30th August 2015, 03:34 AM
http://i60.tinypic.com/1zwi1ye.jpg

Russelldvt
30th August 2015, 03:35 AM
http://i60.tinypic.com/j64dqc.jpg

Russelldvt
30th August 2015, 03:35 AM
http://i57.tinypic.com/33dcmx4.jpg

Russelldvt
30th August 2015, 03:36 AM
http://i62.tinypic.com/6pntdv.jpg

Russelldvt
30th August 2015, 03:37 AM
http://i57.tinypic.com/ke7r47.jpg

Russelldvt
30th August 2015, 03:37 AM
http://i59.tinypic.com/33lpkkp.jpg

Russelldvt
30th August 2015, 03:40 AM
http://i59.tinypic.com/1zd1xg6.jpg

Russelldvt
30th August 2015, 03:45 AM
http://i62.tinypic.com/2e1umma.jpg

Russelldvt
30th August 2015, 03:46 AM
http://i62.tinypic.com/359z4tc.jpg

Russelldvt
30th August 2015, 03:47 AM
http://i58.tinypic.com/aucj68.jpg

Russelldvt
30th August 2015, 03:48 AM
http://i59.tinypic.com/6zbjew.jpg

Russelldvt
30th August 2015, 03:48 AM
http://i57.tinypic.com/2vmx02f.jpg

Russelldvt
30th August 2015, 03:50 AM
http://i57.tinypic.com/10o4dn6.jpg http://i57.tinypic.com/zk6fer.jpg

Russelldvt
30th August 2015, 03:50 AM
http://i62.tinypic.com/15po3f7.jpg

Russelldvt
30th August 2015, 03:51 AM
http://i59.tinypic.com/r9e4u9.jpg

Russelldvt
30th August 2015, 03:52 AM
http://i62.tinypic.com/e9d6rq.jpg

Russelldvt
30th August 2015, 03:52 AM
http://i57.tinypic.com/14ug6m8.jpg

Russelldvt
30th August 2015, 03:54 AM
http://i58.tinypic.com/oa8bx3.jpg http://i58.tinypic.com/2unze6s.jpg

Russelldvt
30th August 2015, 03:55 AM
http://i58.tinypic.com/2j5c7lz.jpg

Russelldvt
30th August 2015, 03:55 AM
http://i62.tinypic.com/30lfga1.jpg

Russelldvt
30th August 2015, 03:56 AM
http://i57.tinypic.com/27zx4sg.jpg

Russelldvt
30th August 2015, 03:56 AM
http://i61.tinypic.com/20ha9p0.jpg

Russelldvt
30th August 2015, 03:57 AM
http://i57.tinypic.com/24y1eki.jpg

Russelldvt
30th August 2015, 03:58 AM
http://i57.tinypic.com/nr10s1.jpg

Russelldvt
30th August 2015, 03:58 AM
http://i57.tinypic.com/slra1i.jpg

Russelldvt
30th August 2015, 03:59 AM
http://i61.tinypic.com/fk8tis.jpg

Russelldvt
30th August 2015, 03:59 AM
http://i58.tinypic.com/x3z3q.jpg

Russelldvt
30th August 2015, 04:00 AM
http://i59.tinypic.com/zk3k13.jpg

Russelldvt
30th August 2015, 04:01 AM
http://i60.tinypic.com/203xjp.jpg

Russelldvt
30th August 2015, 04:01 AM
http://i57.tinypic.com/ao0414.jpg

Russelldvt
30th August 2015, 04:02 AM
http://i61.tinypic.com/fk85zd.jpg

Russelldvt
30th August 2015, 04:02 AM
http://i60.tinypic.com/10wpjwp.jpg

Russelldvt
30th August 2015, 04:06 AM
TODAY 1.30PM WATCH JAYA TV

http://i58.tinypic.com/acfsdt.jpg

http://i62.tinypic.com/2ep0svd.jpg http://i57.tinypic.com/2iuzw9y.jpg http://i61.tinypic.com/1zn8jk5.jpg

Richardsof
30th August 2015, 07:07 AM
இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில்

முதலில் தங்களின் 60 வயது நிறைவிற்கு என்னுடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .
உங்களின் கௌரவ பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் .
உடல் நலன் ஆரோக்கியத்துடன் தங்கள் குடும்பத்தில் இன்பம் நிறைந்திட விழைகிறேன் .
மையம் திரியில் 2012 முதல் இன்று வரை பொற்கால சிற்பிகளின் சாதனைகளை வீடியோ வடிவில் அருமையான
பாடல்களை பதிவிட்டு எல்லா திரி நண்பர்களையும் மகிழ்வித்த உங்களை மறக்கவே முடியாது .
சற்று ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் . தங்கள் கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் புது பொலிவுடன் பொற்கால சிற்பிகளின் புகழ் சேவைகள் தொடரட்டும் .
உங்களுக்காக இந்த பாடல் .
https://youtu.be/ctzt3ViZZF4

Richardsof
30th August 2015, 07:13 AM
http://i62.tinypic.com/30lfga1.jpg

இனிய நண்பர் திரு முத்தையன் சார்
நான் ஆணையிட்டால் - முழு படத்தையும் பார்த்த திருப்தி தந்தது .மக்கள் திலகத்தின் அத்தனை ஸ்டில் களும் அருமை .மனம் நிறைந்த பாராட்டுக்கள் .

Richardsof
30th August 2015, 07:23 AM
http://i62.tinypic.com/nl4eg0.jpg http://i59.tinypic.com/245jwo4.jpg

இனிய நண்பர்கள்
திரு பேராசிரியர் செல்வகுமார் - தேடிவந்த மாப்பிள்ளை முதல் நாள் படம் பார்த்த அனுபவ கட்டுரை .
திரு ரவி கிரணின் திலகங்களின் தங்கை - படங்கள் பற்றிய பதிவு .
திரு லோகநாதன் - குமரி கோட்டம் மற்றும் பாக்யா இதழின் கட்டுரை .
திரு சைலேஷ் - தேடிவந்த மாப்பிள்ளை எல்லா பாடல்களின் வீடியோ பதிவுகள்
திரு முத்தையனின் நான் ஆணையிட்டால் -பட காட்சிகளின் முழு தொகுப்பு
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

oygateedat
30th August 2015, 07:56 AM
திரு முத்தையன் அவர்களுக்கு

தங்களின் இடைவிடாத
உழைப்பின் பயன் 6000 பதிவுகள்.

எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்

தொடரட்டும் தங்கள் பதிவுப்பணி

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
30th August 2015, 08:22 AM
விரைவில்

கோவை ராயல் திரை
அரங்கில்

மக்கள் திலகத்தின்

'நான் ஆணையிட்டால்'

oygateedat
30th August 2015, 08:28 AM
திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கு

தாங்கள் பணி ஓய்வு பெற்ற செய்தியை மையம் திரி நண்பர்களிடம்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

மையம் திரியில் தங்களின் பங்களிப்பு போற்றத்தக்கது.

தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளங்களுடன், நலன்களுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

Russellrqe
30th August 2015, 09:28 AM
http://i58.tinypic.com/10f7rqr.jpg

thanks muthayan sir . Excellent makkal thilagam mgr stills.

Russellrqe
30th August 2015, 09:29 AM
Dear Senthil Sir
wish you a Happy Retired Life.

Russellrqe
30th August 2015, 09:37 AM
KALAIVANAR -NINIAVU NAL...30.8.1957

http://i58.tinypic.com/15ch5dc.jpg

MGR's help to Kalaivanar's family
It is common knowledge that MGR is known for his humanism. He extended his magnanimity to his friends and artistes who had fallen into bad times. So, one may not be greatly surprised by his gesture towards Kalaivanar's family after his death. But theirs was a unique relationship surpassing the physical and temporal.

After Kalaivanar's death, MGR was a like a godfather to Kalaivanar's family. If he undertook the responsibility of the marriages of all of Kalaivanar's children - ie. Kittapa, Shanmugam Nallathambi, Kumaran, Vadiva, Kasthuri and Padmini, it reveals the deep affection he had for Kalaivanar. Not only did he conduct the marriages but was also involved as if they were his own family weddings. He warmed the hearts of Kalaivanar's family with his emotional involvement. He gave the feeling that they need not feel obliged, but they deserved to be treated well because they were Kalaivanar's descendants. An unfathomable depth of love indeed!

MGR undertook to educate Nallathambi, son of Kalaivanar. MGR is said to have advised Nallathambi that his father (NSK) earned in crores and paid taxes in crores, but ultimately left nothing for his family. So it is only education that can be inseparable from one. Following his words Nallathambi went on to become a successful engineer later on.
Still form the movie 'Madurai Veeran'
MGR continued to give financial support every month and whenever there was a pressing need.

When Mathura Bhavanam, constructed by Kalaivanar in the year 1941, was auctioned due to unpaid debts, MGR stepped into the scene. He recovered the property with his own money and handed it over to the family, who still have possession of the house.

MGR also had great respect and regard for Kalaivanar. In 1977 MGR became the chief minister of Tamil Nadu. On Kalaivanar's death anniversary function in 1978, MGR said that Kalaivanar had contributed a lot towards society. He made special mention of the fact that it was Kalaivanar who had taught him the subtilties of politics when he was just 17. He said that it was unfortunate that Kalaivanar was no more. For, if he had been alive, Kalaivanar would have been the Chief Minister and he (MGR) would have served him.

Russellrqe
30th August 2015, 09:59 AM
PROF.SELVAKUMAR SIR

http://i57.tinypic.com/6dwtom.jpg
THEDI VANTHA MAPPILLAI - FIRST DAY - FIRST SHOW.. YOUR EXPERIENCE ARTICLE IS VERY NICE.

fidowag
30th August 2015, 02:30 PM
சென்னை சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
சுதந்திர தினத்தன்று வைக்கப்பட்ட பேனர்.

http://i59.tinypic.com/29ygkyu.jpg

fidowag
30th August 2015, 02:35 PM
நக்கீரன் வார இதழ் -26/08/2015

http://i62.tinypic.com/28uu1ki.jpg

fidowag
30th August 2015, 02:38 PM
http://i58.tinypic.com/2v7x9q9.jpg
http://i62.tinypic.com/2h49vk5.jpg
http://i57.tinypic.com/1128pdk.jpg

fidowag
30th August 2015, 02:41 PM
வண்ணத்திரை வார இதழ் -31/08/2015
http://i59.tinypic.com/2ah8kr4.jpg

http://i57.tinypic.com/2qx13zd.jpg
சேர்த்தன.

siqutacelufuw
30th August 2015, 03:10 PM
கலைவாணரின் நினைவு நாளில், அவரை போற்றும் விதத்தில், நம் இதயக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் அவர் தோன்றும் இந்த புகைப்படத்தை பதிவிடுகிறேன்.

http://i60.tinypic.com/260qx42.jpg

fidowag
30th August 2015, 03:23 PM
இந்த வார பாக்யா இதழில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "சந்திரோதயம் " திரைப்பட கதையை சுவைபட பிரசுரம் செய்துள்ளனர்
http://i58.tinypic.com/2ljoqyr.jpg
http://i61.tinypic.com/2cnw6pw.jpg
http://i62.tinypic.com/2ylv250.jpg
http://i62.tinypic.com/zx5t75.jpg

http://i59.tinypic.com/27ymc8.jpg

fidowag
30th August 2015, 03:28 PM
http://i60.tinypic.com/6zbo05.jpg

http://i61.tinypic.com/2vnorvd.jpg
http://i62.tinypic.com/nh1fuq.jpg
http://i57.tinypic.com/15hyavm.jpg

fidowag
30th August 2015, 03:38 PM
தமிழ் இந்து -புதன் திரை -26/08/2015
http://i59.tinypic.com/qs8fmx.jpg
http://i58.tinypic.com/2nk1j5l.jpg
http://i61.tinypic.com/hsrv4o.jpg

http://i57.tinypic.com/2z4k4sh.jpg
http://i62.tinypic.com/303ftw9.jpg

fidowag
30th August 2015, 03:41 PM
http://i58.tinypic.com/15mielv.jpg
http://i60.tinypic.com/143zx2r.jpg

fidowag
30th August 2015, 03:42 PM
http://i60.tinypic.com/2zibs4x.jpg

Richardsof
30th August 2015, 04:17 PM
THANKS MUTHAIYAN SIR
NAAN ANAIYITTAL ALIDE SHOW
https://youtu.be/JHCiAu6Iz0c.

fidowag
30th August 2015, 04:22 PM
இதயக்கனி -ஆகஸ்ட் 2015- செய்திகள் தொடர்ச்சி..........

http://i60.tinypic.com/1z3mipf.jpg

fidowag
30th August 2015, 04:24 PM
http://i61.tinypic.com/efpjmc.jpg
http://i57.tinypic.com/2iw25o2.jpg

fidowag
30th August 2015, 04:25 PM
http://i58.tinypic.com/md0g9j.jpg

fidowag
30th August 2015, 04:26 PM
http://i62.tinypic.com/5007b9.jpg

fidowag
30th August 2015, 05:29 PM
உரிமைக்குரல்- ஆகஸ்ட் 2015-செய்திகள் /புகைப்படங்கள்.
http://i61.tinypic.com/n1ulba.jpg

fidowag
30th August 2015, 05:30 PM
http://i60.tinypic.com/octqp.jpg

fidowag
30th August 2015, 05:31 PM
http://i58.tinypic.com/1xxow7.jpg

fidowag
30th August 2015, 05:31 PM
http://i59.tinypic.com/29w7q0o.jpg

fidowag
30th August 2015, 05:32 PM
http://i61.tinypic.com/119xwtx.jpg

fidowag
30th August 2015, 05:33 PM
http://i60.tinypic.com/6jq521.jpg

fidowag
30th August 2015, 05:33 PM
http://i61.tinypic.com/2nv6wbp.jpg

fidowag
30th August 2015, 05:34 PM
http://i59.tinypic.com/2d91dtx.jpg

fidowag
30th August 2015, 05:35 PM
http://i57.tinypic.com/zoezyc.jpg

fidowag
30th August 2015, 05:36 PM
http://i57.tinypic.com/2il1lqo.jpg

fidowag
30th August 2015, 05:37 PM
http://i57.tinypic.com/4ggp4n.jpg

fidowag
30th August 2015, 05:38 PM
http://i62.tinypic.com/33vkcnd.jpg

fidowag
30th August 2015, 05:40 PM
http://i62.tinypic.com/27ycp3k.jpg

fidowag
30th August 2015, 05:40 PM
http://i57.tinypic.com/2uf6kbc.jpg

fidowag
30th August 2015, 05:41 PM
http://i58.tinypic.com/2empqps.jpg

fidowag
30th August 2015, 05:42 PM
http://i61.tinypic.com/eske8p.jpg

fidowag
30th August 2015, 05:43 PM
http://i62.tinypic.com/20r6a8p.jpg

fidowag
30th August 2015, 05:44 PM
http://i58.tinypic.com/29bftqo.jpg

fidowag
30th August 2015, 05:45 PM
http://i59.tinypic.com/2ebwk69.jpg

fidowag
30th August 2015, 05:50 PM
http://i61.tinypic.com/29ca1bp.jpg

fidowag
30th August 2015, 07:21 PM
காட்சிப் பிழை - ஆகஸ்ட் 2015- தமிழ் திரைப்பட ஆய்விதழ்.
-----------------------------------------------------------------


பாடல் பெறாத பாடலாசிரியர்கள் .
------------------------------------------------------






மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மருதகாசி , சபாஷ் மாப்பிள்ளை, மாடப்புறா என
நிறையப் படங்களுக்கு பாடல்கள் எழுதினார் .

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நாடோடி மன்னன், திருடாதே, அரசிளங்குமரி
போன்ற படங்களுக்கு பாடல்கள் இயற்றினார்.

திருடாதே படத்தில் , கண்ணதாசன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்,கு.சா.கிருஷ்ணமுர்த்தி ,கு.மா. பாலசுப்ரமணியம், முத்துக்கூத்தன் ,எம்.கே. ஆத்மநாதன், பழனிச்சாமி என்று பலர் பாடல்கள்
எழுதியுள்ளார்கள்.

தொழிலாளி படத்தில் , "கலை வந்த வேதம் கேளு கண்ணே " பாடல் எழுதியவர்
திரு.கூத்தன் பூண்டி சுந்தரம்.

குடியிருந்த கோயில் படத்தில் , "குங்கும பொட்டின் மங்கலம் " பாடலை பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதினார் .


மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற , "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் " பாடலை எழுதியவர் கோவை ஆனைமுத்து. ஆனால் படத்தில் இவர் பெயர் இடம்பெறவில்லை.

நாடோடிமன்னன் படத்தில் , " உழைப்பதில்லா உழைப்பில் " பாடலை எழுதியவர்
கவி. இலக்குமணதாஸ் . இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக, பிரமாதமாக எழுதுங்கள் என எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அண்ணே , இதுக்கு மேல். என்னால் எழுத முடியாது என்று சொல்லும் அளவிற்கு எழுத வைத்தாராம்.
பாடல் திருப்தியாக வந்ததும், கவிராயர் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர்
மல்க நின்றாராம். அவரே, " நாடோடி மன்னன் " வெற்றி விழா மலரில் இதைச்
சொல்லி இருக்கிறார். நாடோடி மன்னனை வாழ்த்திப் பாடும், திராவிடப் பாடலான
நான்கு மொழிப் பாடலில் மலையாளம் பாஸ்கரன், தெலுங்கு நாராயண பாபு,
கன்னடம் விஜயராகவலு , தமிழ் சுரதா ஆகிய கவிஞர்கள் எழுதி இருப்பார்கள்.

நீரும் நெருப்பும் படத்தில் வரும் பல மொழிப் பாடல்களில் முறையே வயலார்,
கொசராசு, விஜய நரசிம்ஹா ஆகியோர் எழுதி உள்ளார்கள்.

தமிழ் நாட்டின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை
எழுதிய பாடல் , மலைக்கள்ளன் படத்தில் "தமிழன் என்றொரு இனம் உண்டு "

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அணுக்கமானவரான வித்வான் வே. லட்சுமணன்
சத்யா மூவிஸ் படங்களுக்கு உரையாடலும், பாடலும் எழுதி உள்ளார். அதைவிட
எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான ஜோசியரும் கூட

புதிய பூமி படத்தில், "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை " பாடல் எழுதியவர் பூவை
செங்குட்டுவன்.

நடிகர்களில் பாடல்கள் எழுதியதில் கே.டி.சந்தானம் என்பவர்."ரகசிய போலிஸ் 115"
நினைவில் நிற்கும் படம்.

ராண்டார் கய் , இதயக்கனி படத்தில் " ஹலோ மிஸ்டர் " என்கிற ஆங்கிலப் பாடலை பாடகி உஷா உதூப் பாடும் வகையில் எழுதி இருந்தார்.

ஆலங்குடி சோமு, தொழிலாளி படத்தில் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி "
பாடலையும், குடியிருந்த கோயில் படத்தில் " ஆடலுடன் பாடலை கேட்டு " பாடலையும் எழுதி புகழ் பெற்றார்.

---------------------------------------

Richardsof
30th August 2015, 07:23 PM
31.8.1961
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நல்லவன் வாழ்வான் - 54 ஆண்டுகள் நிறைவு .
https://youtu.be/Xu3FIaYF1RY
video courtesy- sailesh sir
31.8.1962
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த பாசம் - 53 ஆண்டுகள் நிறைவு .
https://youtu.be/soyB-Lnpwa8
இரண்டு படங்களிலும் மக்கள் திலகம் மாறு பட்ட நடிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் .

fidowag
30th August 2015, 07:23 PM
http://i57.tinypic.com/34tcvoo.jpg

fidowag
30th August 2015, 07:26 PM
காட்சியும், கற்பனையும்.
----------------------------

கல்கி, சாண்டில்யன் எழுத்துக்களால்
http://i57.tinypic.com/67jshu.jpg

http://i60.tinypic.com/2ng8xau.jpg

ainefal
30th August 2015, 08:53 PM
ஒரு சமயம் எகிப்து நாட்டுக்கு என் நாடோடி மன்னன் படத்தை அனுபசொல்லி இந்திய வெளிவிவகாரத்துறை மந்திரியிடமிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. டெல்லியில் போட்டுக்காட்டினேன். நாடோடி மன்னன் ஆக்ஷ்ன் படம். அதனால் அதுதான் வேண்டும் என்றும் படத்தின் நீளத்தை மட்டும் குறைத்து தர வேண்டும் என்றார். 12 ஆயிரம் அடி குறைத்து தந்தேன். ஆனால் என்ன நடந்ததோ அது தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அதுபற்றி நான் பேசியிருக்கிறேனா?

1971 புரட்சித்தலைவர் பாராட்டுவிழாவில் பேசியது.

The above is for info. only. Please do not start another disgusting argument.

ainefal
30th August 2015, 08:56 PM
கலை எப்போதும் இருக்கும். ஆனால், கலைஞ்ர்கள் இருக்கமாட்டார்கள்.

- புரட்சித்தலைவர்

ainefal
30th August 2015, 09:01 PM
நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....
அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ... நாங்க பேசிக்க மாட்டோம்...சண்டைக்கி நான் தான் காரணம் ரொம்ப சின்ன புள்ள மாதிரி எதுக்காச்சும் நான் சண்ட போட்டுக்கிட்டே இருப்பேன்..... ஆனா படத்துல அது தெரியாம பாத்துக்கிட்டோம்.... அதுக்கும் எம்.ஜி.ஆர் தான் காரணம் என் உதவியாளர் கிட்டே அவர் சொல்லி விட்டார்.... "
உங்க மேடத்தோட கோபத்த ஷூட்டிங் ஸ்பாட்ல காமிக்க வேணாம்னு சொல்லுங்க......" என்று சொல்லி விட்டார்.... அதே போல நானும் நடந்து கொண்டேன்.....
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...
அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....
"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....
எனக்கு அது கூட அப்போ பெருசா தெரியல...... ஆனா நான் என்னோட அடுத்த தெலுங்கு சூட்டுக்கு போய் இருக்க அங்கே இதே போல ப்ராப்லம்... அந்த ஹீரோ குழந்தையை திட்டி அந்த பேபியை மாத்த சொல்லீட்டார்..... எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,
"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....
நான் தெலுங்கு மேட்டரை சொன்னேன்..... வியப்போடு கேட்டார்.... கூடவே இன்னொரு விஷயம் சொன்னார்....
"நீ இதை எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காதே..... அப்புறம் உனக்கு பட வாய்ப்பு இல்லாம போய்டும்" னு சொன்னார்..... என்னோட பட வாய்ப்பு பற்றியும் கவலைப்பட்டார் அவர்..... அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!

Thanks to Sri. Mayil Raj

ainefal
30th August 2015, 09:04 PM
30/8/1971 black day.

uvausan
30th August 2015, 09:09 PM
ஒரு அபூர்வ பாடல் - வெளிவராத படம் - மாடி வீட்டு ஏழை - மக்கள் திலகத்தின் பாடல் - கேட்டு மகிழ

https://www.youtube.com/watch?v=RcNGg7mEk8c

ainefal
30th August 2015, 09:14 PM
எம்.ஜி.ஆர் என்ற
சொற்கேட்டால் காதினிக்கும் அந்த பேரை ஒருவர்
சொல்ல்கேட்டல் உளமிணிக்கும் மீண்டும் மீண்டும்.

ainefal
30th August 2015, 09:23 PM
ஒரு அபூர்வ பாடல் - வெளிவராத படம் - மாடி வீட்டு ஏழை - மக்கள் திலகத்தின் பாடல் - கேட்டு மகிழ

https://www.youtube.com/watch?v=RcNGg7mEk8c

Thanks very much for the Video. This song is from the "unreleased movie" - VELU THEVAN. This song was first shown in the movie "Kaalathai Vendravan"

ainefal
30th August 2015, 09:38 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/10th%20standard%20test%20book_zpsuhxmvf0v.jpg

A chapter about MGR in 10th std Tamil Textbook... Happy that Future generation will also know about him... Thanks to Government of Tamil Nadu... !!

Russellbpw
30th August 2015, 10:02 PM
30/8/1971 black day.

Dear Sailesh Babu Sir,

I got the information from one of our hubber. Thankyou..!

Regards
RKS

Russellsui
30th August 2015, 10:32 PM
அனைவருக்கும் வணக்கம் அதிக வேலையினால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரியில் வருகிறேன்
http://i57.tinypic.com/6jlswn.jpg

ainefal
30th August 2015, 10:33 PM
https://www.youtube.com/watch?v=ldlJgJDbcpg

ainefal
30th August 2015, 10:43 PM
https://www.youtube.com/watch?v=6ceI-RKq44I

Russellsui
30th August 2015, 10:48 PM
பிரபல சினிமா பத்திரிகையாளர் " குமுதம்" S .தேவாதிராஜன் என்கிற மேஜர்தாசன்-செண்பகலட்சுமி தம்பதியின் மகள் D .அனுஷா விற்கும்
கோவை S .ஸ்ரீனிவாசன்--S .சுந்தரி தம்பதியின் மகன் SV .வனமாலிதேவ் விற்கும் கடந்த 21-8-2015 வெள்ளிக்கிழமை அன்று சென்னை குரோம்பேட்டையில் திருமணம் நடந்தது..முதல்நாள் 20-8-2015 அன்று நடந்த வரவேற்பு நிகழ்சிக்கு ஏராளமான திரையுலகப்பிரமுகர்களும்,பத்திரிகையாளர்களும்,கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.வந்தவர்களில் பழம் பெரும் நடிகர் ஏவிஎம்.ராஜன்,குமாரி சச்சு,வெண்ணிறஆடை நிர்மலா, A.R.S என்கிற A.R..ஸ்ரீனிவாசன்,Yee.G. மகேந்திரன்,ரமேஷ்கண்ணா,உதயா, பாண்டு,பிரமிட் நடராஜன்,,பிரபலஜோதிடர் A.M.R .என்கிற A.M.ராஜகோபால், நக்கீரன் கோபால்,ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்,டாக்டர் அமுதகுமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,லேனாதமிழ்வாணன், பாமாகோபாலன்,வேதாகோபாலன்,இயக்குநர்கள் முக்தாஸ்ரீநிவாசன்,S .P.முத்துராமன், ,T.P. கஜேந்திரன்,லிங்குசாமி,...முக்தாசுந்தர்,மேஜர்சுந்தர ்ராஜன் குடும்பத்தினர், ரவிச்சந்திரன் குடும்பத்தினர்,உபன்யாசகர் நாகைமுகுந்தன்,கவிஞர் முத்துலிங்கம்,கவிஞர் பூவைசெங்கூட்டுவன்,,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,சிவாஜி ரசிகர்கள்,நண்பர்கள்,உறவினர்கள்,..என்று ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
-

மக்கள் திலகம் எம்,. ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், வண்ண பதாகைகள் வைக்கப்பட்டன. பொன்மனசெம்மலின் பக்தர்கள் நான் உட்பட, பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. ஏ. ஹயாத், திரு. பாபு, திரு. நாகராஜன், மின்னல் பிரியன் மற்றும் இதர அன்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அது தொடர்பான நிழற் படங்கள், திரி நண்பர்கள் பார்வைக்கு :
http://i59.tinypic.com/nci8vq.jpg

Russellsui
30th August 2015, 10:49 PM
http://i57.tinypic.com/2gxdyzp.jpg

Russellsui
30th August 2015, 10:51 PM
http://i57.tinypic.com/skw4y1.jpg

Russellsui
30th August 2015, 10:52 PM
மணமக்களுக்கு, மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், அவர் வாழ்த்தும் மிகப்பெரிய அளவிலான புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
http://i62.tinypic.com/egztrn.jpg

Russellsui
30th August 2015, 10:52 PM
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த கவிஞர்கள் திரு. பூவை செங்குட்டுவன் மற்றும் திரு. முத்துலிங்கம் அவர்களுடன் மக்கள் திலகத்தின் பக்தர்கள்
http://i61.tinypic.com/23wo01f.jpg

Russellsui
30th August 2015, 10:55 PM
திருமண வரவேற்புக்கு வருகை தந்த திரு. நக்கீரன் கோபாலுடன், மக்கள் திலகத்தின் பக்தர்கள் !
http://i61.tinypic.com/15g8c5i.jpg

ainefal
30th August 2015, 11:02 PM
Wish you a very happy and peaceful retired Life Sivajisenthil Sir:

https://www.youtube.com/watch?v=4AByGEZD5UM

https://www.youtube.com/watch?v=mCKd-TMaJgQ

fidowag
30th August 2015, 11:06 PM
அந்தி மழை - ஆகஸ்ட் 2015
http://i61.tinypic.com/1037q6x.jpg
http://i61.tinypic.com/o0w5qu.jpg
முடியாது
http://i62.tinypic.com/6gk093.jpg
http://i61.tinypic.com/ehdqpx.jpg

fidowag
30th August 2015, 11:13 PM
அமுத சுரபி - ஆகஸ்ட் 2015
http://i58.tinypic.com/21ccldt.jpg

http://i62.tinypic.com/20rpy6u.jpg
http://i59.tinypic.com/11r6jo6.jpg

http://i57.tinypic.com/20thyso.jpg

fidowag
30th August 2015, 11:14 PM
http://i60.tinypic.com/ndneix.jpg
http://i59.tinypic.com/v7uxe9.jpg

fidowag
30th August 2015, 11:34 PM
காலச்சுவடு - ஆகஸ்ட் 2015
http://i62.tinypic.com/2epjc0l.jpg
http://i61.tinypic.com/34nmh5c.jpg
http://i58.tinypic.com/v9ron.jpg
http://i58.tinypic.com/im7az6.jpg

fidowag
30th August 2015, 11:37 PM
http://i59.tinypic.com/2jfgkrk.jpg
http://i60.tinypic.com/im8ak1.jpg
http://i62.tinypic.com/2mgw1hw.jpg
http://i60.tinypic.com/2zsz9c7.jpg

Russelldvt
31st August 2015, 04:32 AM
fade in, fade out முறையில் அருமையாக நான் ஆணையிட்டால் படத்தின் எனது பதிவுகளை வீடியோ மூலம் பதிவு செய்த எஸ்வி சார் அவர்களுக்கு என் நன்றி..super...

mgrbaskaran
31st August 2015, 04:54 AM
http://i60.tinypic.com/10wpjwp.jpg

நவரச தோற்றங்களில் எங்கள் நவரத்ன நாயகன்

வள்ளலின் படம் தந்த வள்ளல் முத்தையன்

ரசிக்க ரசிக்க என் மனம் துள்ளுகின்றது

ரசிக மணியின் எண்ணற்ற தோற்றங்கள்

mgrbaskaran
31st August 2015, 04:59 AM
THANKS MUTHAIYAN SIR
NAAN ANAIYITTAL ALIDE SHOW
https://youtu.be/JHCiAu6Iz0c.

super

ainefal
31st August 2015, 01:51 PM
கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார்"மக்கள் திலகம் " எம்.ஜி.ஆர். .....heart emoticon
சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
"எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
[நன்றி :மாலைமலர்]

Richardsof
31st August 2015, 08:18 PM
செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்


பைத்தியக்காரன்

சர்வதிகாரி

தாய்க்கு பின் தாரம்

ராஜ தேசிங்கு

தொழிலாளி

கன்னித்தாய்

தனிப்பிறவி

காவல்காரன்

ஒளிவிளக்கு

அன்னமிட்ட கை

ainefal
31st August 2015, 08:38 PM
நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான், அது உண்மையில் நபிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.

- புரட்சித்தலைவர்

ainefal
31st August 2015, 09:07 PM
தமிழுக்கு எம்.ஜி.ஆர் சொந்தம்
தருகின்றார் நாளும் வசந்தம்.
அமிழ்திறனும் உயரிய எம்.ஜி.ஆர்
ஆம், இந்த நாட்டின் சொந்தம்.

ainefal
31st August 2015, 09:28 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/31st%20august%202015_zpsksrddaek.jpg

http://dinaethal.epapr.in/576318/Dinaethal-Chennai/31.08.2015#page/15/1