PDA

View Full Version : Makkal Thilagam MGR -PART 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

mgrbaskaran
13th September 2015, 06:04 PM
http://i57.tinypic.com/24qvkzp.jpg

நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே

இந்த

நாடு முழுதும்
மலர வேண்டும்

புரட்சி மலர்களே

Russelldvt
13th September 2015, 06:04 PM
http://i59.tinypic.com/3449h0g.jpg

mgrbaskaran
13th September 2015, 06:07 PM
http://i57.tinypic.com/2inrjt.jpg

வெள்ளிப் பனியிடை

வெள்ளை பரி ஆர்ப்பரிக்க

வெண்ணிலவாய் வந்த

வேந்தனே

ainefal
13th September 2015, 06:09 PM
பத்தாவது நினைவூட்டல்- after 22 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 7:30 என்று நினைத்து படிக்கவும்]

]"மீண்டும் மகாபாரதம்" [பாண்டவர்கள் பாணி]. இந்த திரியில் உள்ளவர்களுக்கு தெரியும் நான் இன்று வரை கல்யாணம் செய்துகொள்ளவில்லை [ 100% Bachelor till date]. இந்த சவாலுக்கு வேண்டிய திருமணம் செய்து [ 20-25 வயது பெண்]. வெற்றி பெற்ற நபருக்கு எனது வரும் கால மனைவி மற்றும் அவர் வழி சொத்துக்கள் அனைத்தும் தருகிறேன். அடுத்த பதிவுகள் இந்திய சொத்துக்கள் பந்தயத்தில் வைக்கபடும்

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.

பந்தயத்தில் வைத்துள்ளேன்

பதினொன்றாவது நினைவூட்டல்- after 32 hours - தொகை கூடுகிறது

சென்னை நௌரோஜி சாலையில் [Nowroji Road] உள்ள எனது வீடு அதையும் தருகிறேன்.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு

பந்தயத்தில் வைத்துள்ளேன்

mgrbaskaran
13th September 2015, 06:18 PM
http://i62.tinypic.com/33ur03m.jpg

காலச் சக்கரம் உருண்டோடினாலும்

கால தேவன் வந்து அழைத்திட்டாலும்

காவிய நாயகனே

என்றும் இருப்பாய் எம்முடனே

mgrbaskaran
13th September 2015, 06:26 PM
பதினொன்றாவது நினைவூட்டல்- after 32 hours - தொகை கூடுகிறது

சென்னை நௌரோஜி சாலையில் [Nowroji Road] உள்ள எனது வீடு அதையும் தருகிறேன்.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு

பந்தயத்தில் வைத்துள்ளேன்



நேருக்கு நேராய் வரட்டும்நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்


என்ற தலைவரின் பாடல் வரிகள் தான் சார் நினைவுக்கு வருகின்றது

இதோடு நிறுத்தி விடுங்கள் சார்

mgrbaskaran
13th September 2015, 06:57 PM
http://i59.tinypic.com/2lmvv5u.jpg

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை

இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ அதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ

adiram
13th September 2015, 07:13 PM
நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது.

அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.

இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.

mgrbaskaran
13th September 2015, 07:25 PM
http://i61.tinypic.com/2cdhcvl.jpg

மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு
சங்கமம் கண்ட கவித்திற நாடு
எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு
இன்னிசை தென்றல் காவியம் பாட
புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட
பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க
அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட
அறமே வாழ்க
தென்னை செழித்திட கன்னல் தழைத்திட
திருவே வாழ்க
தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட
கலையே வாழ்க
நெஞ்சு மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளி
தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க
பரத கலையே வாழ்க

Russellzlc
13th September 2015, 07:29 PM
அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.

இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.

இருக்கலாம் சார். ஆனால், தர்மராஜா போல நஷ்டம் இல்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
13th September 2015, 07:30 PM
நேருக்கு நேராய் வரட்டும்நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்


என்ற தலைவரின் பாடல் வரிகள் தான் சார் நினைவுக்கு வருகின்றது

இதோடு நிறுத்தி விடுங்கள் சார்

Evening Sir,

On my way back to home driving. Thanks

Russellrsv
13th September 2015, 07:39 PM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்-----அது எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1fwf40.jpg

Russellzlc
13th September 2015, 08:26 PM
திருச்சி பாஸ்கர் அவர்களே,

சிவந்த மண் படம் ஸ்ரீதருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது’ என்று நான் சொன்னதை நிரூபிக்க முடியுமா?

நான் கூறியது போல, ஸ்ரீதருக்கு மக்கள் திலகம் செய்த உதவிகளை அந்தப் புத்தகத்தில் இருந்து பதிவிடுங்களேன். நான் ஏற்கனவே கூறியது உண்மை என்று எல்லாருக்கும் தெரியும்.


‘‘ஸ்ரீதர் அதை எழுதவே இல்லை. எழுத்தாளர் சந்திரமெளலி பொய் சொல்லி மாற்றி எழுதியுள்ளார். தர்த்தியும் நன்றாகப் போனது என்றுதானே தகவல்’’ என்றெல்லாம் கூறிய ஆகாசப்புளுகை பதிவிட்ட நீங்கள் இப்போது அந்தர் பல்டி அடித்து விட்டது தெரிந்து விட்டதே என்ற கோபத்தில் பேசுகிறீர்கள். பரவாயில்லை. படிப்பவர்களுக்கு உண்மை புரியும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
13th September 2015, 08:39 PM
உண்மை விளம்பி திருச்சி பாஸ்கர் அவர்களே,

‘திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சிவந்த மண் திரைப்படத்தால் ஸ்ரீதருக்கு நஷ்டம்’ என்று நான் கூறியதை நிரூபிக்க முடியுமா? இதிலிருந்தே நீங்கள் பொய் பேசுவது தெரியவில்லையா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
13th September 2015, 09:00 PM
திரு.எஸ்.வி. சார்,

பம்மலார் அவர்களிடம் தான் பேசியதாகவும் நம்நாடு வசூல் சிவந்தமண்ணை விட அதிகம் என்று உங்களுக்கு கிடைத்த தகவலை, நீங்கள் கூறியதை தவறு என்றும் பம்மலார் அப்படி சொல்லவே இல்லை என்று தன்னிடம் சொன்னதாகவும் திரு.ஆர்.கே.எஸ். கூறுகிறார்.

நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

திரு.ஆர்.கே.எஸ்.,
பொய் தகவலை சொல்ல வேண்டிய அவசியமோ அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
13th September 2015, 09:21 PM
இனிய நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு,

"நேற்று இன்று நாளை" பற்றி தாங்கள் நடிகர் திலகத்தின் திரியில் ஒரு பதிவு செய்தீர்கள். சில விஷயங்கை தெளிவு படுத்த இந்த பதிவு:

https://www.youtube.com/watch?v=YnX6YHsbwUU
https://www.youtube.com/watch?v=ozekgM7YVzo

"எந்த விதத்திலும்" நஷ்டம் இல்லை

https://www.youtube.com/watch?v=qOWLh1U0OtM

இந்த விவாதமும் இத்துடன் முடியும் என்று நம்புகின்றேன்

நன்றி

ainefal
13th September 2015, 09:27 PM
ஏழ்மை - வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.

- புரட்சித்தலைவர்

ainefal
13th September 2015, 09:28 PM
சாதிக்கு தீண்டாமை சொந்தம்
சடுதியில் களைந்தால் வசந்தம்
தீயசாதி ஒழித்திடும் எம்.ஜி.ஆர்
தீந்தமிழ் நாட்டுக்குச் சொந்தம்

ainefal
13th September 2015, 09:40 PM
பனிரண்டாவது நினைவூட்டல் - தொகை கூடுகிறது

சென்னையில் " VGN அடுக்ககம் " நான்கு அதையும் தருகிறேன்.

இதுவரை சொன்னதை நிருபித்தால்:

1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின் பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு

பந்தயத்தில் வைத்துள்ளேன்

வணக்கம் பாஸ்கர் சார்,

நான் வெற்றி பெற்றால் [அதில் எனக்கு சந்தேகமும் இல்லை] இதுவரையில் நான் பந்தயத்தில் வைத்த ஏதாவது ஒன்று [except No.10] தந்தால் கூட எனக்கு போதும்.


பந்தயத்தில் வைத்துள்ளேன்

ainefal
13th September 2015, 09:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/12TH%20SEPTEMBER%202015_zps3d3iahnl.jpg

http://dinaethal.epapr.in/586081/Dinaethal-Chennai/12.09.15#page/15/1

ainefal
13th September 2015, 09:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/13TH%20SEPTEMBER%202015_zpsrvydpxkj.jpg

http://dinaethal.epapr.in/586914/Dinaethal-Chennai/13.09.2015#page/15/1

Dr.H.V.Hande's speech during Aayirathil Oruvan Ponvizha Function.

Russellbpw
13th September 2015, 09:57 PM
[QUOTE=saileshbasu;1250725]


[except No.10] :rotfl:

Russellbpw
13th September 2015, 10:03 PM
திரு.எஸ்.வி. சார்,

பம்மலார் அவர்களிடம் தான் பேசியதாகவும் நம்நாடு வசூல் சிவந்தமண்ணை விட அதிகம் என்று உங்களுக்கு கிடைத்த தகவலை, நீங்கள் கூறியதை தவறு என்றும் பம்மலார் அப்படி சொல்லவே இல்லை என்று தன்னிடம் சொன்னதாகவும் திரு.ஆர்.கே.எஸ். கூறுகிறார்.

நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

திரு.ஆர்.கே.எஸ்.,
பொய் தகவலை சொல்ல வேண்டிய அவசியமோ அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்




திரு கலைவேந்தன் அவர்களே

நான் எழுதியதை நன்றாக படியுங்கள் முதலில்.

சும்மா குருட்டான்போக்கில் ஏதாவது தவறு..தவறாக பதிவிடாதீர்கள்....!

பம்மலார் அவர்கள் என்னிடம் சொன்னார் என்று நான் எங்கு கூறினேன் ....சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம் ?

ஏன் சார் இப்படி பதிவு, JUST FOR THE HECK OF IT பதிவு செய்கிறீர்கள்?

பதிவு செய்து அதன் பிறகு எனக்கு அவசியமோ ஞ்யயபடுத்தவேண்டிய அவசியம் எங்களுக்கோ என்று நீங்கள் பதிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா...

சம்பந்தப்பட்டவர் என்று நான் கூறியுள்ளதை நீங்கள் தவறாக அர்த்தம் கற்பித்து நான் என்னமோ பம்மலார் அவர்களிடம் பேசியதாக எதற்கு கூறுகிறீர்கள் சார்..!

நான் எழுதியுள்ள வாக்கியத்தை முழுதாக பொறுமையாக படியுங்கள் சார் ...ப்ளீஸ்....!

சம்பந்தப்பட்டவர் ....SINGULAR <------- This means Pammalar !

சம்பந்தப்பட்டவர்கள் ....PLURAL <-------This is what i have mentioned !

முதலில் பொறுமையாக படியுங்கள்...ப்ளீஸ்.....!

Regards
RKS

ainefal
13th September 2015, 10:03 PM
நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.

- புரட்சித்தலைவர்

ainefal
13th September 2015, 10:39 PM
அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.

இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.

ஆதிராம் அவர்களுக்கு,

"இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்"

ஆங்கிலத்தில் பள்ளிபாடத்தில் ஒன்று முன்பு "who said to whom" இருந்தது . இதை சொன்னவர் பெரியவர் சக்ரபாணி அவர்களா அல்லது புரட்சித்தலைவர் அவர்களா அல்லது ஏதேனும் பத்திரிகையில் வந்ததா?

இந்த விவரங்களும் இருந்தால் அது தங்களது பதிவுக்கு வலிமை சேர்க்கும்.

நன்றி.

ainefal
13th September 2015, 10:44 PM
ஊக்கத்தை நெஞ்சில் ஊட்டும் கொடி தேச
ஏக்கத்தை நாளும் நாட்டும் கொடி
ஆக்கத்தை தேடியசேர்க்கும்கொடி நம்
அன்னலாம் எம்.ஜி.ஆர் தந்த கொடி

orodizli
13th September 2015, 10:47 PM
ரசிகர் மன்ற நோட்டீஸ் - தவறான தகவல்களுடன் இருக்குமாம், அதை நம்ப முடியாதாம்... ஆனால் நாளிதழ்களில் விளம்பரம், தகவல்கள் வந்தால் நம்பலம்மாம்...அதெப்படி? கேரளாவில் 5 சென்டர்களில் 50- நாளாம் ... இதை எப்படி நம்புவது? ஏனெனில் அந்த நாட்களில் 20- 25 நாட்கள்தான் கேரள பகுதிகளில் தமிழ் படங்கள் ஓடும் எனவும் இந்த விளம்பரமும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சார்பில் மற்றையோரை நம்ப வைக்க நடந்த நாடகமாக ஏன் கருத கூடாது?...மற்றபடி தமிழ்நாட்டில் மக்கள்திலகம் வசூலில் கலக்கிய நம்நாடு தானே அதிக அரங்குகளில் 50 நாட்கள் கடந்துள்ளது...☺☺

orodizli
13th September 2015, 11:03 PM
அன்பு சகோதரர் திரு கலைவேந்தன் சார், எந்த காவியதோடு எந்த படத்தின் செய்தியை சம்பந்தபடுத்துவது ?! அன்றும், இன்றும், என்றும் திரை உலக சக்கரவர்த்தியாக விளங்கும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் நாடோடிமன்னன் - வெள்ளிவிழா வெற்றியை பிரமாண்டமான வெற்றியாக சுவைத்து கொண்டிருக்கும்போதே அப்பொழுதே மறு வெளியீடு கண்டு, வசூலை அள்ளி, அள்ளி குவித்து புரட்சி நடிகருக்கு மிகுந்த லாபம் உண்டு பண்ணியதே சார், அடுத்து இந்த காவியம் அவர் முதன் முதலாக இயக்கி, தயாரித்து, இரட்டை வேடத்திலும் நடித்து அவர்தம் வாழ்விலும், அரசியல் களத்திலும் இணையே இல்லா வெகுமதியை பெற்று தந்ததே, இப்பொழுதும் தந்து கொண்டிருக்கிறதே சார்... எதனை எதோடு ஒப்பிடுவது நண்பரே ...

ainefal
13th September 2015, 11:18 PM
https://www.youtube.com/watch?v=JEa6iKEfUOE

orodizli
13th September 2015, 11:21 PM
நண்பர்களே! நாம் யாரையும் கால்புணற்சியோ , மட்டம் தட்டவோ ,வைதெரிச்சலோ, நினைக்கவோ அவசியமில்லை, தேவையில்லை...அந்த பவுண்டரி கோட்டை எல்லாம் என்றோ தாண்டி வந்து விட்டாகிவிட்டது...சக நடிகர்களோடு சரி- சமமாக பாவிப்பதே பெரிய விஷயம்...தேவையில்லாமல் இன்றைய முதல்வரை இந்த விஷயத்தில் வம்புக்கு இழுப்பது ---வேறு பல இடர்பாடுகளை உண்டாக்க முயல வேண்டாம்...அப்புறம் ஊரை அடித்து உலையில் போட்டு... எனும் வம்பு, வீம்பு வாசகங்கள் வேண்டாம்...இந்த பதவி, அதிகாரம் - காரணமாகதானே உங்கள் நடிகர் வசித்த தெருவுக்கு உங்க பெயர், மணிமண்டப நிலம், கட்டிட அறிவிப்பு எல்லாம்...சிந்தித்து எழுதுங்கள்...

ainefal
13th September 2015, 11:24 PM
https://www.youtube.com/watch?v=ESLE_JSy3d0

ainefal
14th September 2015, 12:38 AM
https://www.youtube.com/watch?v=5SldRVSC1dA

mgrbaskaran
14th September 2015, 12:41 AM
http://i58.tinypic.com/rmphu1.jpg


நண்பர்களுக்கு வணக்கம்,


நமது மய்யம் திரிக்கு நான் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் தட்டுத் தடுமாறி இன்றோடு 1,000 பதிவுகளை நிறைவு செய்கிறேன். இப்போது பதிவிடும் இந்த பதிவை போலவே ஒவ்வொரு பதிவையும் இடவே எனக்கு விருப்பம். நமக்கு பிடித்தவரை ரசிக்கும்போதே சமூக பிரச்சினைகளையும் கலந்து சொல்வது என் பாணி. என்றாலும், மற்றவர்களும் இதேபோல, சமூக நிகழ்வுகளை குறிப்பிட்டு பதிவுகள் போட வேண்டும் என்று விரும்புகிறேன்.

உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய நிலையில், நாம் சொல்லித்தான் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆனாலும், ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அதுவும் நமக்கு பிடித்தவருடன் ஒப்பிட்டு சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சமூக அவலங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவலாகும், வலுப்படும் என்பது என் எண்ணம்.

ஒரு நாளைக்கு திரியை சராசரியாக 1,000 பேர் பார்த்தால், பார்ப்பவர்கள் ஒரு நபரிடம் இதைப்பற்றி பேசினால் கூட, அது 2,000 பேரை சென்றடையும். அப்படியே கருத்து பரவலாகும். அதனால் என்னவாகி விடப் போகிறது? என்று கேட்கத் தோன்றும். 6 மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் மதுவிலக்கு வரும் என்று யாராவது சொன்னால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பதில் சொல்லியிருப்போம். ஆனால், இன்று.... தேர்தலுக்கு முன் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பேச்சுக்கள். மக்கள் கருத்து பரவலாகி வலுப்பெற்றதுதான் இந்த நிலை ஏற்படக் காரணம்.

அந்த வகையில், மக்களை பாதிக்கும் சமூக அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரவ, நியாயம் நிலைத்திட, நல்லவை நடந்திட, நீதி வென்றிட நம்மாலான முயற்சியை செய்வோமே என்ற எண்ணம்தான் இதுபோன்ற என் பதிவுகளுக்கு காரணம். அதோடு, நம்மால் தீயவைகளை தடுக்க முடியாமல் போனால் கூட, அதற்கு எதிராக குரல் கொடுத்தோம் என்ற திருப்தியாவது மிஞ்சும். மேலும், 25 ஆண்டுகள் கழித்து நாம் இருப்பது சந்தேகம். 50 ஆண்டுகள் கழித்து நிச்சயம் இருக்க மாட்டோம். ஆனால், நாம் இங்கு எழுதியது இருக்கும்.

மக்களை பாதிக்கும் அக்கிரமங்களை கண்டித்திருக்கிறார்கள் என்று எதிர்காலத் தலைமுறையினர் நம்மை பாராட்ட வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நாமே இல்லாதபோது பாராட்டினால் என்ன? திட்டினால் என்ன? நமக்கு தெரியவா போகிறது? இதுபோன்ற திரிகள் மூலம் கூட, சமூக அநியாயங்களுக்கு எதிராக குரலெழுப்பியிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அநீதியை தட்டிக் கேட்க முன்வந்தால் நமது சந்ததிகளுக்கு நல்லதுதானே?

ஆயிரம் பதிவுகளை நான் இடுவதற்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதோடு, சர்ச்சைகளை தவிர்த்தால் பயனுள்ள பதிவுகளை எல்லாரும் இடலாம் என்று கூறி, அதற்கு பாரபட்சமில்லாமல் அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டு, பொறுமையாக படிப்பவர்களுக்கு நன்றி நவின்று, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் உரிமைக்குரல் எழுப்புவோம் என்று சொல்லி .....

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம், சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.....

...என்று திரையில் பாடியபடி வரலாற்றை உருவாக்கியதோடு, அதற்கும் மேலே சென்று வரலாறாகவே மாறிவிட்ட சரித்திர நாயகர், பொன்மனச் செம்மலின் பொற்பாத கமலங்களில் எனது இந்த ஆயிரமாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

--------------------------------------------------

‘என் உரிமைக்குரல்...........’

சோழவள நாடு சோறுடைத்து.. என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட தஞ்சை தரணி இப்போதே போதுமான அளவு விவசாயம் நடக்காமல் விளைச்சல் இல்லாமல் காய்ந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை முற்றிலும் பாலைவனமாக்காமல் போகமாட்டோம் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாய் தோன்றுகிறது.

ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பா.ஜ. அரசும் தொடர முயற்சித்தது. அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு எல்லாம் நடத்தினர்.தமிழக அரசும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வரை பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர், மீத்தேன் வாயு திட்டம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்தது. பரவாயில்லையே, மத்திய அரசுக்கு தொலைநோக்கும் நல்லெண்ணமும் இருக்கிறதே என்று நினைத்தால், அந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்யாததால் திட்டம் ரத்து என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்தது. ஆக, நிலைமைகளை ஆராய்ந்து திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்பது தெளிவு.

சரி போகட்டும், தஞ்சையை வறண்டபூமியாக்கும் திட்டம் போய்த் தொலைந்தால் சரி என்று விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்குள் மீத்தேன் திட்டமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் என்று அடுத்த அணுகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை விட ஷேல் எரிவாயு திட்டம் மேலும் ஆபத்தானது. முதலில் மீத்தேன் வாயு, ஷேல் எரிவாயு என்றால் என்னவென்று பார்ப்போம்.

பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த பொருட்கள் வேதியியல் மாற்றங்களால் நிலக்கரியாக மாறும். நிலத்தடி நீரின் அழுத்தத்தால் மேலே வரமுடியாமல் நிலக்கரி படுகையின் மீது படிந்திருப்பதுதான் மீத்தேன் வாயு (Methane Gas)

அதுபோலவே, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்த பொருட்கள் கால மாற்றத்தில் மக்கிப்போய், வேதிமாற்றம் அடைந்து பூமியில் 3 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள படிம வடிவில் உள்ள அடுக்குப் பாறை இடுக்குகளில் எரிவாயுவாக தங்குகின்றன. இந்த பாறை எரிவாயுதான் ஷேல் வாயு (Shale Gas) என்று வழங்கப்படுகிறது.

பொதுவாக பூமியில் துளைபோட்டு நீரை உள்ளே செலுத்தி அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த வாயுக்களை வெளியே கொண்டு வரும் முறை பின்பற்றப்படுகிறது. 200 அடி ஆழத்துக்கு துளைகள் ஏற்படுத்தி அதில் வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்தி மீத்தேன் வாயு எடுக்கப்படுகிறது.

ஆனால், பூமியில் 15,000 அடி வரை ஆழ்குழாய் துளை ஏற்படுத்தப்பட்டு, பக்கவாட்டில் நான்குபுறமும் குழாய்கள் மூலம் வெடிபொருட்கள் செலுத்தப்பட்டு பாறைகள் பிளக்கப்படும். பின்னர், குழாய் வழியே தண்ணீரும் அபாயகரமான வேதிப்பொருட்களும் செலுத்தப்பட்டு பாறைகள் முழுமையாக உடைக்கப்பட்டு ஷேல் வாயு வெளியே எடுக்கப்படுகிறது.

இந்த முறையில் பாறைகள் பிளக்கப்படுவதை, ஷேல் வாயுவை வெளியே எடுப்பதற்காக தண்ணீர் மூலம் பாறைகள் முழுதாக உடைக்கப்படுவதை தமிழில் நீரியல் முறிவு என்று சொல்கின்றனர். ஆங்கிலத்தில் ஃப்ராக்கிங் (Fracking) என்கிறார்கள். இதுபோன்ற ஃப்ராக்கிங் முறையால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் இணையதளத்தின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.


http://www.dangersoffracking.com/


அமெரிக்காவிலே ஃப்ராக்கிங் முறையை எதிர்த்து இயக்கமே நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் என்று சூற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்த விவரங்களுக்கான இணைப்பு கீழே:

http://www.americansagainstfracking.org/get-the-facts/

வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், அபாயகரமான வேதிப்பொருட்களும் பூமிக்குள் செலுத்தப்படுவதால் அந்த நிலமே தரிசாக போய்விடும்.

தமிழகத்தின் காவிரிப்படுகையில் 9 பகுதிகளில் 35 இடங்களில் ஷேல் வாயு பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஓ.என்.ஜி.சி. (எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) கடிதம் எழுதியுள்ளது.

இந்த அபாயகரமான திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயமே அழிந்துபோய்விடும். சுற்றுச் சூழல் மாசுபடும். விவசாயம் மட்டுமல்ல, நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் கிடைக்காத அபாயம் ஏற்படும்.

ஏற்கனவே, நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக மத்திய அரசால் 3 முறை கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியாகி விட்ட நிலையில், அவசர சட்டம் மீண்டும் நீட்டிப்பு இல்லை என்றுதான் பிரதமர் சமீபத்தில் வானொலி உரையில் கூறியிருக்கிறார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கவில்லை. இதற்கு பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்க உள்ள தேர்தலும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே, நஷ்டம், கடன், வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லாருக்கும் நினைவிருக்கலாம். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், விவசாயத்தையே அழிக்கும் வகையில் ஷேல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தால் நலன் விளையும் என்றால் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற ‘புண்ணிய பூமி’களில், விவசாய நிலங்களில் முதலில் அதை பரிட்சார்த்த ரீதியில் செயல்படுத்தி பார்க்கட்டுமே. விலங்குகளுக்கு மருந்து கொடுத்து பரிசோதிப்பது போலே, தமிழன் தலையில்தான் கைவைப்பார்கள்.

இது ஏதோ விவசாயிகளை பாதிக்கும் திட்டம் மட்டுமே அல்ல. விவசாயமே அழிந்து விட்டால் நாம் சோற்றுக்கு என்ன செய்வோம்? நம்மையும் பாதிக்கும் திட்டம் இது. கேட்டால், இதுபோன்ற திட்டங்களால் இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அறிவு ஜீவிகள் கூறுகின்றனர்.

ஏன்யா, சோறும் தண்ணியும் இல்லாதபோது கோட்டும் சூட்டும் எதுக்குய்யா?

மண்ணை நேசிக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலம் அபகரிக்கப்படுவதையோ, தரிசாவதையோ விரும்பமாட்டான்.

தலைவர் நடித்து சுனாமியாய் வசூலை சுருட்டி வெள்ளி விழா கண்ட உரிமைக்குரல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் தலைவரின் குடும்ப சொத்தான நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க திரு. நம்பியார் முயற்சிப்பார். கடனுக்காக நம்பியார் குடும்பத்திடம் அடமானம் வைத்திருந்த தலைவரின் நிலம் ஏலத்துக்கு வரும். ஏலம் முடிவதற்கு முன்பே தலைவர் கடனை திருப்பிக் கொடுத்தும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று நம்பியார் அடம் பிடிப்பார்.

நெருக்கடிகளுக்கு நடுவே பணத்தை திரட்டி கடைசி விநாடியில் ஏலம் நடக்கும் இடத்துக்கு வந்து, ரேக்ளாவில் இருந்தபடியே நோட்டுக் கட்டை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது தலைவர் வீசும் ஸ்டைலும் வேகமும் அழகும்...... சொல்ல வார்த்தைகள் இல்லை.

தனக்கு சொந்தமான நிலத்தில் தலைவர் உழும்போது அடியாட்களுடன் வந்து தடுப்பார் நம்பியார். அப்போது, மின்சாரமே மனித உருவெடுத்து வந்ததுபோல சுற்றிச் சுழன்று மோதும் தலைவரின் வேகத்தை என்னென்பது? அந்த சண்டைக்கு முன் உணர்வுபூர்வமாக தலைவர் பேசும் வசனம் பிரபலம்.

தனது உயிரைக் கொடுத்தாவது நிலத்தை காப்பாற்றப் போராடும் விவசாயியின் ஆக்ரோஷம் தலைவரின் நடிப்பிலும் வசனத்திலும் தெரியும். இது ஏதோ, புகழ்ச்சிக்காகவோ உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

‘ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான்’ என்று சொல்லும்போது, ‘வந்தவன்டா நான்’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது நெஞ்சில் வேகமாக தட்டியபடியே சொல்லுவார். முகத்தில் கோபமும் பெருமிதமும் கொப்பளிக்கும். அப்போது வாய்ஸ் பிரேக் ஆகி விட்டு விட்டு வரும். ஆக்ரோஷமாக, வேகமாக நெஞ்சில் தட்டிக் கொண்டால்தான் குரல் இப்படி விட்டு விட்டு வரும். லேசாக தட்டிக் கொண்டால் வராது. அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக நடித்துள்ளார் தலைவர்.

‘இந்த மண்ணுல இருந்து என்னை பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்’ என்று தலைவர் கூறும்போது கங்கையின் பெருக்கை போன்ற கண்களுடன் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்துதான் போகும். விவசாயியுடைய ஆக்ரோஷம் மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் தன் மீதான கொலை முயற்சிகளுக்கும் தலைவர் பதில் சொல்வது போல இருக்கும்.

டேய், துரைசாமி (நம்பியாரை) என்று அழைத்து வசனத்தை பேசுவார் தலைவர். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, திரைப்படத்திலும் கூட பெரும்பாலும் யாரையும் வாடா, போடா என்று தலைவர் பேசமாட்டார். அடிமைப் பெண்ணில் மனோகரிடம், ஆசைமுகத்தில் நம்பியாரிடம் என்று காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்பின் பெட்டகமான தலைவரே ‘டா’ போட்டு பேசுகிறார் என்றால் எதிராளி எவ்வளவு மோசமான குற்றத்தை செய்திருக்க வேண்டும்? அதையும் இந்த ‘டா’ என்ற ஒரு சொல்லிலேயே விளக்கி விடுவார் தலைவர்.

வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத்தானே சொல்கிறார் ? என்று கேட்கலாம். தலைவர் அனுமதியில்லாமல் அவர் படத்தில், அதுவும் அவரே பேசும் வசனத்தை ஒரு வசனகர்த்தா தன்னிச்சையாக எழுத முடியாது. அது சர்வாதிகாரம் அல்ல. படத்தில் எல்லாமே சிறப்பாக வரவேண்டும், தனக்காக படம் பார்க்க வரும் தனது ரசிகர்கள், படத்தை பார்த்து விட்டு முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதில் தலைவருக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடு அது.

விவசாயத்தை முடக்கி வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் திட்டத்துக்கு எதிராக தலைவர் பேசுவது போல இருக்கும் உணர்ச்சிகரமான அந்த வசனத்தை அப்படியே கீழே தருகிறேன்.

--------------------------------------


‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.

ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.

ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல் இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


well done and congrats

Richardsof
14th September 2015, 04:42 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

என்னுடைய பதிவின் மூலம் நண்பருக்கு தர்ம சங்கடம் உருவாகுவதை விரும்பவில்லை .உண்மைகள் நமக்கு தெரியும். இத்துடன் திரியில் நடக்கும் விவாதங்களுக்கு முற்று புள்ளி வைத்து ,தொடர்ந்து நம்முடைய திரியின் பயணத்தை தொடர்வோம்

Richardsof
14th September 2015, 04:45 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அருமையான பதிவுகளை வழங்கி வரும் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் . தொடர்ந்து தங்களிடமிருந்து மக்கள் திலகம் ஆவணங்களை எதிர்பார்க்கிறேன்

Richardsof
14th September 2015, 04:57 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''அன்னமிட்ட கை 15.9.1972

இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம் .

எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

“அன்னமிட்ட கை” எம்ஜிஆரின் தத்துவப் பாட்டுக்களில் ஒன்று. டிஎம்எஸ்ஸின் குரலில் நல்ல உற்சாகம் இருக்கும். பாட்டைக் கேட்டவுடன் வாலி எம்ஜிஆருக்காக எழுதியது என்று சொல்லிவிடலாம்.
“ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு” ஒரு சுமாரான பாட்டு. டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் கோட்டு சூட்டு டையுடன் பாடுவார். எம்ஜிஆர் தன் டூயட்டுக்களுக்கு ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். செட் போட்டு எடுத்தால் ஒன்று கோட்டு சூட்டு டை. இல்லாவிட்டால் ராஜ ராணி உடை. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் கோட்டு சூட்டு. அப்போதுதான் ரிச்சாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
“மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு” பாரதியும் எம்ஜிஆரும் பாடும் டூயட். டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் தன் ரசிகர்களை கவர்வதற்காக ராஜா உடையில் வந்து பாடுவார்.
“அழகுக்கு மறு பெயர் கண்ணா” நல்ல பாட்டு. இந்த ஒரு பாட்டு மட்டும் டிஎம்எஸ் எஸ். ஜானகி குரலில். ஜெ அப்போதெல்லாம் இன்று இருப்பது போல் குண்டாக இல்லை.
“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” என்றும் ஒரு பாட்டு உண்டு. சுசீலா.
எம்ஜிஆர் நடித்த கடைசி கறுப்பு வெள்ளை படம் என்று ஞாபகம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. சில காட்சிகள் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டவை. அவரது குரல் மாறுபாடு தெரிகிறது. நினைக்கிறேன்.
கதை வழக்கம் போல் முதல் காட்சியிலேயே யூகிக்கக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் மக்கள். எம்ஜிஆர் உரிமை உள்ள (இளைய) வாரிசு. அப்பாவின் தவறான பழக்கங்களால் எம்ஜிஆர் அவரை பிரிந்து தாத்தா வீட்டில் வளர்வார். நம்பியார் எங்கோ ஓடிப்போய் வளர்வார். எம்ஜிஆர் எப்படி வளர்ந்திருப்பார், நம்பியார் எப்படி வளர்ந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தமிழனே அல்ல. (கலைஞர் terminologyயில் “அவாள்”ஆக கூட இருக்கமுடியாது) வளர்ந்த இருவரும் தற்செயலாக சந்தித்து ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வார்கள். தியாகச் சுடரான எம்ஜிஆர் தன் அண்ணனை வாரிசாக நடிக்க சொல்வார். முதலாளியாக எப்போதுமே இருக்க விரும்பும் நம்பியாருக்கு தியாகியான எம்ஜிஆரிடம் கொஞ்சம் பயம் இருக்கும். கைவிடப்பட்ட நம்பியாரின் அம்மா பண்டரிபாய் குருடி. இறந்துபோனதாக கருதப்படும் அப்பா உயிரோடுதான் காடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார். மனோகரின் சூழ்ச்சி, பாரதியின் ஒரு தலை காதல், நம்பியாரின் பணத்தாசை எல்லாவற்றையும் சமாளித்து ஜெயை காதலித்து எஸ்டேட் தொழிலாளர்களின் தலைவனாகி, பெரியம்மா பண்டரிபாய்க்கு மீண்டும் கண் கொடுத்து, நம்பியாரை திருத்தி அப்பப்பா! புரட்சித் தலைவரால்தான் முடியும்!
பாரதி அழகாக இருக்கிறார். “அவளுக்கென்று ஒரு மனம்” படத்திலும் நன்றாக இருப்பார்.
எம்ஜிஆரின் அப்பாவாக வருபவர் பேர் முத்தையாஅவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழில் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கிறது!
படத்தில் சிம்பாலிக் டயலாக் ஜாஸ்தி. உதாரணத்துக்கு ஒன்று. எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக நினைக்கும் பாரதி அடுப்பங்கரையில் கன்னத்தில் கொஞ்சம் கரியோடு இருக்கும் ஜெயிடம் எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக சொல்வார். அதை கேட்டவுடன் ஜெ கையில் இருக்கும் பாத்திரத்தை தவறவிட்டுவிடுவார். அப்போது டயலாக்குகள்.
பாரதி: என்னாச்சு?
ஜெ: கை தவறிடுச்சு.
பாரதி: நீ ஜாக்கிரதையா வச்சிருந்திருக்கணும்
ஜெ: ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன், அப்படியும் தவறிடுச்சு.
பாரதி: பரவாயில்லே, நான் எடுத்துக்கிறேன்.
ஜெ: எனக்கு அடுப்பில் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்.
பாரதி: முகத்திலே கரி, துடைச்சுக்கோ!
மொத்தத்தில் எம்ஜிஆர் ரசிகர்களின் படம் .
COURTESY - NET


courtesy - RV - NET.

Russellwzf
14th September 2015, 06:56 AM
http://i62.tinypic.com/904xau.jpg

திரு. கோவிந்தராஜ் அவர்களுக்கு, தங்களின் பதிவுகள் மிகவும் அருமை, தொடர்ந்து பதிவிடுங்கள்.

Russellwzf
14th September 2015, 07:27 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .

நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் பற்றி நம் நண்பர்கள் பதிவிட்டு வரும் வேளையில் , கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சில நண்பர்கள் தங்களது அதி மேதாவி தனத்தை எதிர் மறையான வார்த்தகைளை கிண்டலாகவும் , ஆத்திரமான பதிவுகளையும் உடனுக்குடன் பதிவிட்டு சாந்தி அடையும் அவர்களின் உண்மையான நோக்கம்தான் என்ன ? இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைக்கும் , ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடு வெற்றி குறித்த கிண்டலும் , நடிகர் அசோகன் பற்றிய பதிவுகளையும்பதிவிட்டு மகிழும் நண்பர்களுக்கு அவர்கள் அபிமான திரியில் அபிமான நடிகரை பற்றி எழுதவோ அல்லது தங்களது படங்கள் தோல்விகளுக்கான காரணத்தை ஆராய நேரமில்லை என்று எண்ணுகிறேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் , அரசியல் வெற்றிகள் உலகமறிந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழும் பெருமைகளும் இப்புவி உள்ளவரை உலகம் புகழ் .பாடும் . நமது பயணத்தில் சில குறுக்கீடுகள் பற்றி கொள்ளாமல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆசியோடு நம்முடைய வெற்றி பயணத்தை தொடருவோம் .

நம்நாடு - 1969

1969 தீபாவளி அன்று வந்த படங்களில் முதல் 6 மாதங்களில் அதிக வசூல் பெற்று முதலிடம் வகிப்பது
மக்கள் திலகத்தின் நம்நாடு என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெற உள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 துவக்கிட நம் இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களை கேட்டு கொள்கிறேன் .
.

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 தொடங்க இருக்கும் திரு. சுஹராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Russelldvt
14th September 2015, 07:32 AM
TODAY 3.00PM WATCH POLIMER TV

http://i58.tinypic.com/2ch6oo.jpg

http://i59.tinypic.com/17eio2.jpg http://i60.tinypic.com/2l3tie.jpg http://i58.tinypic.com/2ypf58h.jpg

Russellwzf
14th September 2015, 07:33 AM
உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்!

http://i59.tinypic.com/r0ccop.jpg

‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.

சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.

ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.

‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!

இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.

‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.

விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.

படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?

Courtesy : The Hindu

Russellisf
14th September 2015, 07:35 AM
welcome hussain sir

Russellwzf
14th September 2015, 07:35 AM
http://i58.tinypic.com/21o1mx.jpg

‘அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.

போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.

சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.

அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.

எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.

அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.

என்னுடைய தந்தை காரைக்குடி இராம.சுப்பையாவிடம் சுயமரியாதை கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞராக அந்நாட்களில் அறிமுகமானார் ஆர்.எம்.வீ. தந்தை பெரியார் ஒருமுறை காரைக்குடி பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, பெரியாருக்கு துணையாக ஆர்.எம்.வீ அவர்களைத்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். 4 நாட்கள் பெரியாருக்கு எல்லா உதவிகளையும் செய்தார் ஆர்.எம்.வீ. திருச்சியில் பெரியாரை ரயில் ஏற்றிவிடும்போது 4 நாட்களுக்கான செலவு கணக்கை எழுதி, மீதி பணத்தையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.

ஆர்.எம்.வீயின் பொறுப்புணர்ச்சியையும், நேர்மையையும் கண்ட பெரியார் ‘‘குடியரசு பத்திரிகையில் வேலை செய்ய வர்றீயா?’’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆர்.எம்.வி. சம்மதம் என்று கூறியிருக்கிறார். இதுதான் ஆர்.எம்.வீ அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி. அதன் பிறகு அரசியல் தலைவர்களின் பழக்கம், நாடக கம்பெனி நிர்வாகி, சத்யா பிலிம்ஸ் நிர்வாகி, எம்.ஜி.ஆரின் வலது கரம், அமைச்சர் என வளர்ந்தார். இன்று அருளாளர் ஆர்.எம்.வீ அவர்கள் கம்பன் கழகத்தின் தலைவர்.

ஆர்.எம்.வீ அவர்களுக்கு இன்று 90-வது பிறந்த நாள். இலக்கிய மங்கள விழாவாக கொண்டாடப்படும் இந்த இனிய விழாவில் என் தந்தை இராம.சுப்பையா அவர்களின் பெயரில் ஒரு விருதினை உருவாக்கியிருக்கிறார். அந்த விருதை அவர் மகனான எனக்கு வழங்குகிறார். இதில் ஆர்.எம்.வீ அவர்களின் நன்றி உணர்வு தெரிகிறது.

- எஸ்பி.முத்துராமன்

Courtesy : The Hindu

Russellwzf
14th September 2015, 07:36 AM
http://i61.tinypic.com/33vhgfa.jpg

Russellisf
14th September 2015, 07:36 AM
ஈழ மண் வாசம்
1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.

அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.

அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.

கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.

“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.

“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?

ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.

அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!

தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!

கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

தன்னை விமர்சித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த பெரும் வள்ளல் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.


Courtesy net

Russellrqe
14th September 2015, 08:13 AM
விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் 17 ம் பாகத்தை துவக்க இருக்கும் திரு சுஹராம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .

Russellrqe
14th September 2015, 08:14 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

என்னுடைய பதிவின் மூலம் நண்பருக்கு தர்ம சங்கடம் உருவாகுவதை விரும்பவில்லை .உண்மைகள் நமக்கு தெரியும். இத்துடன் திரியில் நடக்கும் விவாதங்களுக்கு முற்று புள்ளி வைத்து ,தொடர்ந்து நம்முடைய திரியின் பயணத்தை தொடர்வோம்

you are correct vinod

ainefal
14th September 2015, 08:51 AM
[QUOTE=Sathya VP;1250779]http://i58.tinypic.com/21o1mx.jpg

‘அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.

போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.

சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.

அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.

எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.

அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.

என்னுடைய தந்தை காரைக்குடி இராம.சுப்பையாவிடம் சுயமரியாதை கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஓர் இளைஞராக அந்நாட்களில் அறிமுகமானார் ஆர்.எம்.வீ. தந்தை பெரியார் ஒருமுறை காரைக்குடி பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, பெரியாருக்கு துணையாக ஆர்.எம்.வீ அவர்களைத்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். 4 நாட்கள் பெரியாருக்கு எல்லா உதவிகளையும் செய்தார் ஆர்.எம்.வீ. திருச்சியில் பெரியாரை ரயில் ஏற்றிவிடும்போது 4 நாட்களுக்கான செலவு கணக்கை எழுதி, மீதி பணத்தையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.

ஆர்.எம்.வீயின் பொறுப்புணர்ச்சியையும், நேர்மையையும் கண்ட பெரியார் ‘‘குடியரசு பத்திரிகையில் வேலை செய்ய வர்றீயா?’’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆர்.எம்.வி. சம்மதம் என்று கூறியிருக்கிறார். இதுதான் ஆர்.எம்.வீ அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி. அதன் பிறகு அரசியல் தலைவர்களின் பழக்கம், நாடக கம்பெனி நிர்வாகி, சத்யா பிலிம்ஸ் நிர்வாகி, எம்.ஜி.ஆரின் வலது கரம், அமைச்சர் என வளர்ந்தார். இன்று அருளாளர் ஆர்.எம்.வீ அவர்கள் கம்பன் கழகத்தின் தலைவர்.

ஆர்.எம்.வீ அவர்களுக்கு இன்று 90-வது பிறந்த நாள். இலக்கிய மங்கள விழாவாக கொண்டாடப்படும் இந்த இனிய விழாவில் என் தந்தை இராம.சுப்பையா அவர்களின் பெயரில் ஒரு விருதினை உருவாக்கியிருக்கிறார். அந்த விருதை அவர் மகனான எனக்கு வழங்குகிறார். இதில் ஆர்.எம்.வீ அவர்களின் நன்றி உணர்வு தெரிகிறது.

- எஸ்பி.முத்துராமன்

Sathya Sir,

I am trying to recall from memory some article in the early 1980's. In that it was mentioned something like AVM said they will give money [Rs.50,000.00 correct] to Thalaivar and he should sign. But RMV said no it is not "Thalaivar [?] movies but it is Thalaivar Pictures and I am the ............... what other things which follow is the same which I read some 33 years ago [ getting old and then medicines [LSD], not able to remember and repeat word by word]. If seniors have that particular article please post it over here.

Thanks

Russellbpw
14th September 2015, 10:53 AM
ரசிகர் மன்ற நோட்டீஸ் - தவறான தகவல்களுடன் இருக்குமாம், அதை நம்ப முடியாதாம்... ஆனால் நாளிதழ்களில் விளம்பரம், தகவல்கள் வந்தால் நம்பலம்மாம்...அதெப்படி? கேரளாவில் 5 சென்டர்களில் 50- நாளாம் ... இதை எப்படி நம்புவது? ஏனெனில் அந்த நாட்களில் 20- 25 நாட்கள்தான் கேரள பகுதிகளில் தமிழ் படங்கள் ஓடும் எனவும் இந்த விளம்பரமும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சார்பில் மற்றையோரை நம்ப வைக்க நடந்த நாடகமாக ஏன் கருத கூடாது?...மற்றபடி தமிழ்நாட்டில் மக்கள்திலகம் வசூலில் கலக்கிய நம்நாடு தானே அதிக அரங்குகளில் 50 நாட்கள் கடந்துள்ளது...☺☺


ரசிகர் மன்ற நோட்டீஸ் - தவறான தகவல்களுடன் இருக்குமாம், அதை நம்ப முடியாதாம்... ஆனால் நாளிதழ்களில் விளம்பரம், தகவல்கள் வந்தால் நம்பலம்மாம்...அதெப்படி? கேரளாவில் 5 சென்டர்களில் 50- நாளாம் ... இதை எப்படி நம்புவது? ஏனெனில் அந்த நாட்களில் 20- 25 நாட்கள்தான் கேரள பகுதிகளில் தமிழ் படங்கள் ஓடும் எனவும் இந்த விளம்பரமும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சார்பில் மற்றையோரை நம்ப வைக்க நடந்த நாடகமாக ஏன் கருத கூடாது?...மற்றபடி தமிழ்நாட்டில் மக்கள்திலகம் வசூலில் கலக்கிய நம்நாடு தானே அதிக அரங்குகளில் 50 நாட்கள் கடந்துள்ளது...☺☺

thiru சுஹராம்

ரசிகர் மன்ற நோட்டீஸ் ஆதார ஆவணம் அல்ல ! அனைவருக்கும் தெரியும் உங்களுக்கு லைக் போட்டுள்ள திரு எஸ்வி உட்பட.

உங்கள் சமாதானத்திற்கு வேண்டுமானால் நீங்கள் கூறிகொள்ளுங்கள். எனக்கு அதுபற்றி கவலையே இல்லை.

ஆனால் அந்த காலத்தில் பேப்பரில் வந்த விளம்பரம் நமகதன்மை இல்லாதது என்று கூறும் ஒருவரை இந்த புவி இப்போதுதான் காண்கிறது !

நீங்கள் கூறுவது போல எடுத்துகொண்டால் பெங்களுருவில் ஓடியதாக நீங்களும் பதிவு செய்த பல விளம்பரங்களில் உள்ளது ...அது மட்டும் உண்மையாக மற்றவர் எடுத்துக்கொள்ளவேண்டுமோ ? என்ன ஞ்யாயம் சார் ?

உங்கள் கணக்கு படி பார்த்தால் கூட....சிவந்த மண், அதற்க்கு சில நாட்களுக்கு முன் வெளியான திருடன்...அதற்க்கு சில நாட்கள் முன்பு வெளியான தெய்வ மகன் இப்படி ...திரும்பும் திசை எல்லாம் தமிழகம் முக்கால்வாசிக்கு மேல் எங்கள் படங்கள் தான் !

ஆகையால் நாங்களும் உங்களை போல articulate செய்ய முடியும்...யாரையோ திருப்தி படுத்த சிவந்தமண் விளம்பரம் என்கிறீர்கள் நீங்கள் ....இதில் இருந்தே உங்களுடைய பொது அறிவும், நல்ல எண்ணமும் வெளிவருகிறது !

Bad show...! Better luck next time !

Rks

Russellbpw
14th September 2015, 10:59 AM
அன்பு சகோதரர் திரு கலைவேந்தன் சார், எந்த காவியதோடு எந்த படத்தின் செய்தியை சம்பந்தபடுத்துவது ?! அன்றும், இன்றும், என்றும் திரை உலக சக்கரவர்த்தியாக விளங்கும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் நாடோடிமன்னன் - வெள்ளிவிழா வெற்றியை பிரமாண்டமான வெற்றியாக சுவைத்து கொண்டிருக்கும்போதே அப்பொழுதே மறு வெளியீடு கண்டு, வசூலை அள்ளி, அள்ளி குவித்து புரட்சி நடிகருக்கு மிகுந்த லாபம் உண்டு பண்ணியதே சார், அடுத்து இந்த காவியம் அவர் முதன் முதலாக இயக்கி, தயாரித்து, இரட்டை வேடத்திலும் நடித்து அவர்தம் வாழ்விலும், அரசியல் களத்திலும் இணையே இல்லா வெகுமதியை பெற்று தந்ததே, இப்பொழுதும் தந்து கொண்டிருக்கிறதே சார்... எதனை எதோடு ஒப்பிடுவது நண்பரே ...

நாடோடி மன்னன் -

இதனுடன் எதனையும் முதலில் ஒப்பிடவில்லை அன்பரே ...!

உங்களுக்கு உபரி தகவல் நண்பரே....

மக்கள் திலகம் அவர்களின் முதல் வெள்ளிவிழா படம் "மதுரை வீரன்"

சென்னையில் முதல் வெள்ளிவிழா படம் "எங்க வீட்டு பிள்ளை"

தாராளமாக விசாரியுங்கள் நண்பரே...!

Rks

Russellisf
14th September 2015, 11:01 AM
நண்பர் rks போன் wire பின்ச்சு ஒரு வாரம் ஆச்சு சார் போதும் எங்களே வேற postings போடா விடுங்க சார் உங்கள் திரிக்கு போக மனசு இல்லையா ?

Russellisf
14th September 2015, 11:08 AM
ஒப்பிடுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் எங்கள் குலதெய்வம் . எங்கள் கடவுள் நாடகம் , திரைப்படம் ,(இன்று வரை தமிழக மக்களால் வசூல் சக்ரவர்த்தியாக ஏற்றுக்கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார் ) முதல்வர் பதவி உயர்ந்த பட்டங்கள் ,யாராலும் நினைத்து பார்க்க முடியாத அரசியல் வெற்றி பொது வாழ்வு இறுதியாக தெய்வத்தோடு தெய்வமாக ஐக்கியமாக மாறிவிட்டு இன்றைக்கு அவருடைய ரசிகர்கள் எல்லாம் அவரை தெய்வமாக ஏற்றுக்கொண்டு தெய்விக வழிகளில் அவருக்கு தொண்டு ஆற்றிக்கொண்டு வரும் இந்த வேளையில் இன்னும் 1960-70 காலங்களில் திரைப்பட வசூலை தவிர வேற எதுவும் பேச இயலாத வர்களிடம் நாம் ஏன் பேசி நமது தலைவரின் புகழ் பரப்பும் நேரத்தை குறைக்க வேண்டும்

Russellisf
14th September 2015, 11:18 AM
தலைவரின் திரைப்பட வசூலுக்கு அளவு உண்டு - அவர்

அள்ளி கொடுத்த பொருளுக்கு என்றும் அளவே இல்லை

Russellbpw
14th September 2015, 11:20 AM
நண்பர்களே! நாம் யாரையும் கால்புணற்சியோ , மட்டம் தட்டவோ ,வைதெரிச்சலோ, நினைக்கவோ அவசியமில்லை, தேவையில்லை...அந்த பவுண்டரி கோட்டை எல்லாம் என்றோ தாண்டி வந்து விட்டாகிவிட்டது...சக நடிகர்களோடு சரி- சமமாக பாவிப்பதே பெரிய விஷயம்...தேவையில்லாமல் இன்றைய முதல்வரை இந்த விஷயத்தில் வம்புக்கு இழுப்பது ---வேறு பல இடர்பாடுகளை உண்டாக்க முயல வேண்டாம்...அப்புறம் ஊரை அடித்து உலையில் போட்டு... எனும் வம்பு, வீம்பு வாசகங்கள் வேண்டாம்...இந்த பதவி, அதிகாரம் - காரணமாகதானே உங்கள் நடிகர் வசித்த தெருவுக்கு உங்க பெயர், மணிமண்டப நிலம், கட்டிட அறிவிப்பு எல்லாம்...சிந்தித்து எழுதுங்கள்...


திரைப்படத்தை பற்றி எழுதும்போது வார்டு கவுன்சிலோர் பதவி பற்றி எழுதியது நீங்கள்தான் திரு சுகாராம்.

உங்களில் சிலர் ...திரைத்துறையை பற்றி எழுத முடியாவிட்டால் நடிகர் திலகத்தின் அரசியல் பற்றி இழுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளீர்கள்.

உங்களுக்கு சிவாஜி அரசியல் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் நான் பதில் உரைத்தால் மட்டும் உங்களுக்கு சுடுகிறதோ ?

திரைப்படத்தை பற்றி எழுதும்போது எதற்கு தேவையில்லாமல் அரசியல் பற்றிய வரிகள் ? முதலில் நீங்கள் ஒழுங்காக எழுதுங்கள் திரு சுகாராம் பிறகு உங்கள் அறிவுரைகள் / கௌரவ மிரட்டல்கள் செய்யுங்கள்.

அவர் இல்லம் இருந்தது தெருவில் அல்ல ! சாலையில் ! தெருவுக்கும் சாலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன...அதை உணர்ந்துகொள்ளுங்கள் !

இப்போது இருக்கும் சாலையின் பாரம்பர்யம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? இந்த இல்லத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா ? தெரிந்துகொள்ளுங்கள் ....அன்னை இல்லத்திற்கு முன் அதன் பெயர் boag palace . பிரிட்டிஷ் அதிகாரி திரு boag அவர்கள் வசித்த மாளிகை அது ! பின்னர் அது விற்பனைக்கு வந்தபோது நடிகர் திலகம் அவர்கள் வாங்கினார் ! அதன் பிறகு அது அன்னை இல்லம் ஆனது ! நடிகர் திலகம் செவாலியர் பட்டம் பெரும் வரை அந்த சாலையின் பெயர் boag road .....!

ஐரோப்பா நாடு நடிகர் திலகத்தை கௌரவித்ததுடன் உலக நாடுகள் அனைத்தும் முறையாக கௌரவித்த ஒரே இந்திய நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆகிவிட்டார்.

ஒரு தமிழ் நடிகர் உலகில் உள்ள அனைத்து திரை மற்றும் அரசாங்கங்களாலும் முறையாக கௌரவிக்கபட்டதை நினைவு கோரும் வகையில் தான் boag road செவாலியர் சிவாஜி கணேசன் சாலையாக தமிழக அரசால் பெயர் பதிக்கப்பட்டது. ! இந்த பெயர் வரவில்லை என்றாலும் கூட அந்த சாலையில் அன்னை இல்லம் மிக பிரசித்தம் 30-35 ஆண்டுகளுக்கு மேலாக மிக பிரசித்தம் !

பிறகு section 110 விதியின் கீழ் கூறப்பட்ட மணிமண்டபம் . முதலில் board, செங்கல் வந்து இறங்கட்டும் பிறகு பார்ப்போம் ! சிலையை அகற்ற இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சி என்று உலக தமிழர்கள் அனைவரும் ஏற்கனவே பொருமி கொண்டு இருக்கிறார்கள் ! காரணம் section 110 விதியின் கீழ் வரும் திட்டம் என்றாலே எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பல மீடியாக்கள், தொலைகாட்சிகள், அரசியல் விமர்சகர்கள், விற்பன்னர்கள் பல பட்டிமண்டபங்கள் வைத்து ஆதாரத்துடன் பேசிக்கொண்டு இன்றுவரை இருக்கிறார்கள்.

உபரி தகவல் : சட்டசபையில் மணிமண்டபம் கூறியபிறகும் கூட எனக்கு தெரிந்து நேற்று வரை வரைமுறையில் இருக்கும் முறைப்படி ஒரு பதிவு பலகையில் அந்த இடத்தில் " கட்டுமான விளக்கங்கள் - அதாவது மணிமண்டபம் சம்பந்தப்பட்ட project name project cost - date of beginning - date of completion - project in-charge - architect - போன்ற விளக்க பலகை கூட வைக்கவில்லை என்றால் ...அதன் பொருள் என்ன என்று அனைவருக்கும் விளங்கும் !

எனக்கு அறிவுரை கூறுவது இருக்கட்டும் ..அதனை நான் ஏற்றுகொள்ளவும் செய்வேன் ..முதலில் நீங்கள் அப்படி நடந்துகொள்ளுங்கள் !

Russellisf
14th September 2015, 11:23 AM
முதல் முதலில் தமிழகத்தில் ஒரு நடிகர் நாடாண்டார் என்ற பெருமை எங்களுக்கு கிடைத்தது போல வேற எந்த ரசிகனுக்கும் கிடைத்திராத பாக்கியம்

மூன்று முறை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமை உலகில் எந்த நடிகரின் ரசிகனுக்கும் இனி கிடைத்திராத பாக்கியம்

அவருடைய நூறாவது படம் இன்றும் கூட திரையரங்கில் பவனி வந்து விநியோகஸ்தர்களுக்கு அமுத சுரபியாக இருபது உலகில் எந்த நடிகரின் ரசிகனுக்கும் கிடைத்திராத பாக்கியம்

இன்னும் நெறைய சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம் இன்னும் பல கோடி திரி வேண்டும் இந்த ஒரு திரி பத்தாது

Russellbpw
14th September 2015, 11:26 AM
ஒப்பிடுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் எங்கள் குலதெய்வம் . எங்கள் கடவுள் நாடகம் , திரைப்படம் ,(இன்று வரை தமிழக மக்களால் வசூல் சக்ரவர்த்தியாக ஏற்றுக்கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார் ) முதல்வர் பதவி உயர்ந்த பட்டங்கள் ,யாராலும் நினைத்து பார்க்க முடியாத அரசியல் வெற்றி பொது வாழ்வு இறுதியாக தெய்வத்தோடு தெய்வமாக ஐக்கியமாக மாறிவிட்டு இன்றைக்கு அவருடைய ரசிகர்கள் எல்லாம் அவரை தெய்வமாக ஏற்றுக்கொண்டு தெய்விக வழிகளில் அவருக்கு தொண்டு ஆற்றிக்கொண்டு வரும் இந்த வேளையில் இன்னும் 1960-70 காலங்களில் திரைப்பட வசூலை தவிர வேற எதுவும் பேச இயலாத வர்களிடம் நாம் ஏன் பேசி நமது தலைவரின் புகழ் பரப்பும் நேரத்தை குறைக்க வேண்டும்

என்னுடைய எண்ணமும் அதுவே ! அவர் மக்களுக்காக கொண்டுவந்த பல அறிய திட்டங்கள் , மக்களுக்காக ஆற்றிய அரும் பணிகள், சட்டம் ஒழுங்கு சீரடைய கொண்டுவந்த வழிமுறைகள் ( eg operation naxalites ) ஒவ்வொரு இனத்தவருக்கும் அவர் கொண்டுவந்த சலுகைகள் ...இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன..சினிமா...சினிமா...சினிமா...இது மட்டும் அல்ல மக்கள் திலகம் என்பது தான் எனது கருத்தும் ! ஒரு கேள்விகனை கொண்ட பதிவு வரும்போது அதற்க்கு பதில் கூறும் நிர்பந்தத்திற்கு நானும் ஆளாகிறேன் ரசிகன் என்ற முறையில் அவ்வளவுதான் !

Russellisf
14th September 2015, 11:27 AM
உபரி தகவல் : சட்டசபையில் மணிமண்டபம் கூறியபிறகும் கூட எனக்கு தெரிந்து நேற்று வரை வரைமுறையில் இருக்கும் முறைப்படி ஒரு பதிவு பலகையில் அந்த இடத்தில் " கட்டுமான விளக்கங்கள் - அதாவது மணிமண்டபம் சம்பந்தப்பட்ட project name project cost - date of beginning - date of completion - project in-charge - architect - போன்ற விளக்க பலகை கூட வைக்கவில்லை என்றால் ...அதன் பொருள் என்ன என்று அனைவருக்கும் விளங்கும் !

ஒரு வேளை அக்டோபர் 1 அன்றைக்கு அடுத்த அறிவிப்பு வரலாம்

Russellrqe
14th September 2015, 11:30 AM
https://youtu.be/0Daa00DQxHs

Russellbpw
14th September 2015, 11:34 AM
உபரி தகவல் : சட்டசபையில் மணிமண்டபம் கூறியபிறகும் கூட எனக்கு தெரிந்து நேற்று வரை வரைமுறையில் இருக்கும் முறைப்படி ஒரு பதிவு பலகையில் அந்த இடத்தில் " கட்டுமான விளக்கங்கள் - அதாவது மணிமண்டபம் சம்பந்தப்பட்ட project name project cost - date of beginning - date of completion - project in-charge - architect - போன்ற விளக்க பலகை கூட வைக்கவில்லை என்றால் ...அதன் பொருள் என்ன என்று அனைவருக்கும் விளங்கும் !

ஒரு வேளை அக்டோபர் 1 அன்றைக்கு அடுத்த அறிவிப்பு வரலாம்

DEAR YUKESH SIR

உங்கள் வாக்கு சத்திய வாக்காக அப்படியே பலிக்கட்டும் !

நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு நான் முறைப்படி உங்களை சந்தித்து உங்களுக்கு பொன்னாடை போர்த்தி, உங்களுக்கு நமது நட்பின்பால் பரிசளித்து, நீங்கள் கூறும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து (காரணம் அன்னதானம் வழுங்குவது மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் பிடித்த அடிக்கடி அவர் கடைபிடித்த ஒரு விஷயம் என்று நான் கேள்விபட்டிருக்கிறேன் ) உங்களுக்கு இனிப்பு நிச்சயம் வழங்குவேன் !

இது நடிகர் திலகம் அவர்கள் மீது சத்தியம் !

Regards
RKS

Russelldvt
14th September 2015, 12:22 PM
http://i58.tinypic.com/4hwehe.jpg

Russelldvt
14th September 2015, 12:25 PM
Page No.97

http://i60.tinypic.com/15ciu4k.jpg

Russelldvt
14th September 2015, 12:27 PM
Page No.98

http://i60.tinypic.com/2w7o787.jpg

Russelldvt
14th September 2015, 12:28 PM
Page No.99

http://i58.tinypic.com/nohwqr.jpg

oygateedat
14th September 2015, 01:51 PM
http://s12.postimg.org/4ntx7vnu5/WP_20141102_020.jpg (http://postimage.org/)
SOON AT COIMBATORE SHANMUGA THEATRE

mgrbaskaran
14th September 2015, 04:25 PM
http://i61.tinypic.com/33vhgfa.jpg

beautiful post

ainefal
14th September 2015, 05:38 PM
Page No.98

http://i60.tinypic.com/2w7o787.jpg

அற்புதம் முத்தையன் சார்,

இதையே தான் நான் இன்று காலை திரு.சத்யா அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னேன். இந்த விவரம் நான் சுமார் முப்பத்திமூன்று வருடம் முன்பு படித்து.

என்ன செய்வது வயது ஆகிறது, மருந்து மாத்திரை வேறு, வார்த்தைக்கு வார்த்தை நினைவில் நிற்பதில்லை.

அடுத்தது 65 பைசே[paise] விவகாரம், கொஞ்சம் நேரம் கழித்து பதிவு செய்கிறேன். இன்று விருந்தின்கர்கள் அதிகம். அகவே பதிவில் கால தாமதம்.

நன்றி.

ainefal
14th September 2015, 06:23 PM
When Rajini watched an MGR film for 65 paise

Rajinikanth went on nostalgic mode at the birthday celebrations of producer R.M.Veerapan held recently. The actor recalled a time when he watched a film of yesteryear matinee idol M.G.Ramachandran, produced by Veerapan, for just 65 paise!

I remember watching MGR’s Naan Aanaiyittal the first day it was released. The ticket rates were 65 paise and Rs 1.10 and Rs 2.10. I realised that 65 paise was what I could afford,” he told on stage.

Rajinikanth added that he stood in queue at 5.30 am for the show at Karnataka. “There were limited tickets for the 65 paise section, but I somehow wanted to get in. I sweated profusely, but somehow, got a ticket.”

The producer of that MGR film was R.M.Veerapan, who later went on to team up with Rajinikanth when he became a big hero. “I was reminded of this 65-paise incident when I acted in Raanuva Veeran, which he produced later,” recalled the actor.

http://www.thehindu.com/entertainment/rajinikanth-bought-a-ticket-for-65-to-watch-view-mgr-movie/article7636948.ece



ஒரு சிறு விளக்கம் உள்ளது [ இரண்டு தினங்கள் முன்பே தர வேண்டியது [ இனமும் சூழ்நிலை செரியில்லை ஆகையால் கால தாமதம் வேண்டும் என்றும் எண்ணி.....]

புரட்சிதலைவர், நடிகர்திலகம் இவர்களுக்கு அதுத்தபடியாக நான் விரும்பும்/மதிக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் தான் [ பஹுபாலி தவிர்த்து பலகாலமாய் நான் திரைஅரங்கம் சென்று பார்க்கும் பாடம் இவர்தது படம் மட்டுமே.

1) திரு. அமிதாப் பச்சன் பாராட்டு விழா ஒன்றில் நான் இன்று வரை யாரிடமாவது கையொப்பம் வாகியது என்றல் அது இவர் மட்டும் தான் என்றார். இதையே தான் சில வருடங்களுக்கு முன்பு நான் இன்று வரை யாரிடமாவது கையொப்பம் வாகியது என்றல் அது கன்னட நடிகார் ராஜ்குமார் மட்டும் தான் என்றார்! இவை எல்லாம் முகநூல் நண்பர்கள் சொன்னது.

2) 70பதுகலில் [late 70's] ஒரு கட்டூரை வெளிவந்தது "நான் ஆணையிட்டால்" டிக்கெட் கிடவவில்லை என்றும் ரேஷன் வாங்க வீட்டில் கொடுத்த ரூபாய் 15தை கொடுத்து கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் வாங்கி பார்தேன். மற்றும் வீடு சென்ற பின் நாள் அடி உதை கிடைத்தது என்றும் அதில் சொல்லப்பட்டது.

ஆக, அன்று பத்திரிகையில் வந்ததற்கும் இன்று அவர் சொல்லுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இரு தினகளுக்கு முன்பு வந்தது "திருத்தப்பட்டவை" என்று நினைக்கிறன்

siqutacelufuw
14th September 2015, 07:15 PM
http://i58.tinypic.com/4hwehe.jpg

பெரியவர் ஆர். எம். வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து, சில பதிவுகள் மேற்கொண்ட, சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
14th September 2015, 07:16 PM
11-09-15 தேதியிட்டு வெளியான "ஜனனம்" பத்திரிகையில் பிரசுரமான செய்தி : திரி அன்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் :

http://i60.tinypic.com/1z3s8jo.jpg

நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள், தனது காவியத்தின் மூலம், சொல்லப்பட்ட நற்கருத்துக்கள் சமுதாயத்தில் எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் உன்னதமான செய்தி இது :

siqutacelufuw
14th September 2015, 07:19 PM
http://i60.tinypic.com/ej752h.jpg

புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டி இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு. இராம கோபாலன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ::

கடந்த 12-09-15 அன்று தின இதழில் பிரசுரமான செய்தி :

siqutacelufuw
14th September 2015, 07:24 PM
http://i61.tinypic.com/ogx8js.jpg

ainefal
14th September 2015, 07:30 PM
சற்று முன் கிடைத்த தகவல்

புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.

நன்றி

siqutacelufuw
14th September 2015, 07:35 PM
பேரறிஞர் அண்ணா அவர்களை, மேலும் பெருமைப்படுத்தும் விதமாக அவரது 64வது பிறந்த நாளில் (15-09-1972 அன்று) வெளியிடப்பட்ட "அன்னமிட்ட கை' காவியத்திலிருந்து ஒரு காட்சி :

http://i61.tinypic.com/2nqqhch.jpg

siqutacelufuw
14th September 2015, 07:55 PM
http://i61.tinypic.com/t5r7kk.jpg

நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் காவியங்களில், மூட நம்பிக்கைகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையினை அவர் கொச்சைப்படுத்தவில்லை. எவருடைய மனதையும் புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் காட்சிகள் அமைந்திருக்கும்.

இங்கே, புகைப்படத்தில், கே. பி. சுந்தராம்பாள் அவர்களுக்கு சொந்தமான கே. பி. எஸ். திரையரங்கை திறந்து வைக்க நமது மக்கள் திலகம் அவர்கள் கரூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள "கொடுமுடி" என்ற பேரூருக்கு வருகை தந்த போது, அவருக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்கும், அரிய காட்சி !

தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தாலும், மற்றவர்கள் மனதை புண்படுத்த நினைக்காத பொன்மனச்செம்மல், இறுதி வரை அந்த திலகத்துடனேயே காட்சி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனேவே, நமது திரியில், மக்கள் திலகம் (நெற்றியில் பொட்டுடன்) மற்றும் மறைந்த கே. பி. சுந்தாராம்பாள் அவர்கள் அமர்ந்திருக்கும் நிழற்படம், பதிவிடப்பட்டுள்ளது என்பது அறிந்ததே !

siqutacelufuw
14th September 2015, 08:00 PM
சற்று முன் கிடைத்த தகவல்

புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.

நன்றி

]VERY GLAD NEWS. SUCH GREAT ACHIEVEMENTS CAN BE MADE POSSIBLE ONLY WITH THE MOVIES OF OUR BELOVED GOD M.G.R. AGAIN AND AGAIN HE PROVES THAT HE IS STILL 'COLLECTION KING" AND THE EMPEROR OF TAMIL CINE FIELD.

Thanks for the information given by Mr. Mayilraj of Madurai and for having posted the message by you Sir.

ainefal
14th September 2015, 08:03 PM
]VERY GLAD NEWS. SUCH GREAT ACHIEVEMENTS CAN BE MADE POSSIBLE ONLY WITH THE MOVIES OF OUR BELOVED GOD M.G.R. AGAIN AND AGAIN HE PROVES THAT HE IS STILL 'COLLECTION KING" AND THE EMPEROR OF TAMIL CINE FIELD.

Thanks for the information given by Mr. Mayilraj of Madurai and for having posted the message by you Sir.

Evening Professor Sir,

One small correction. Thalaivar is still the "COLLECTION EMPEROR".

Thanks Sir, balance posting after reaching home.

Richardsof
14th September 2015, 08:07 PM
15.9.2015

நமது இதய தெய்வம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் .

பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய கட்சியின் ஆட்சி நடை பெறும் இந்த இனிய நாளில் 2016ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவங்க உள்ள நேரத்தில் மீண்டும் மக்கள் திலகத்தின் ஆட்சி தொடரவும் , நூற்றாண்டு விழா சிறப்பாக நடை பெறவும் பாடுபடுவோம்

Russellwzf
14th September 2015, 08:10 PM
I took this snap in a marriage hall
http://i61.tinypic.com/29qocg1.jpg

Russellwzf
14th September 2015, 08:11 PM
http://i59.tinypic.com/2up4kjk.jpg

Russellwzf
14th September 2015, 08:11 PM
http://i62.tinypic.com/52xvcw.jpg

Russellwzf
14th September 2015, 08:13 PM
http://i57.tinypic.com/2cooqyc.jpg

Russellwzf
14th September 2015, 08:35 PM
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் பாகம் - 16ல் சிறப்பான பதிவுகள் வழங்கி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
http://i58.tinypic.com/122l1ds.jpg

Russellbpw
14th September 2015, 08:36 PM
11-09-15 தேதியிட்டு வெளியான "ஜனனம்" பத்திரிகையில் பிரசுரமான செய்தி : திரி அன்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் :

http://i60.tinypic.com/1z3s8jo.jpg

நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள், தனது காவியத்தின் மூலம், சொல்லப்பட்ட நற்கருத்துக்கள் சமுதாயத்தில் எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் உன்னதமான செய்தி இது :


செல்வகுமார் சார்

வணக்கங்கள் !

இதே திரைப்படத்தின் ஒரு கருதான் நடிகர் திலகம் அவர்கள் மற்றும் சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படமும்.

ஆனால் பாருங்கள் மக்கள் திலகம் அவர்களுடைய திரைப்படத்தை தயாரித்தவர்கள் dho ankein bhaaraah haath திரைப்படத்தின் கருத்தை அப்படியே வைத்திருந்தார்கள் !

காலபோக்கில் அதே கருத்தை நல்ல முறையில் எடுக்காமல் மசாலா என்ற வட்டத்திற்காக பழிவாங்குவதற்கு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஜட்ஜ் குற்றவாளியை பயன்படுத்துவது போல கதையை கையாண்டார்கள்..!

முன்னதில் கைதிகள் திருந்தி நல்லபடியாக வாழ்கின்றனர் என்ற படிப்பினை ! பின்னதில் .ஜட்ஜ் மற்றும் கைதி இருவருமே ஜெயில் செல்கிறார்கள் ..........தவறான உதாரணம் படிப்பினை என்பது 0 !

விளக்கால் பிரகாசத்தை ஏற்படுத்தி அதை வைத்து படிக்கவும் முடியும் ...அதே விளக்கால் குடிசையை எரிக்கவும் முடியும்.....யார் கையில் விளக்கு போகிறது என்பது தான் முக்கியம் !

பல்லாண்டு வாழ்க திரைப்படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு ஐந்து வருடங்கள் முன்பாக எடுத்திருந்தால் அதன் range ஏ தனி என்பது எனது எண்ணம் !

Rks

Russellwzf
14th September 2015, 08:40 PM
September 15th - Arignar Anna Birthday

September 17th - Thanthai Periyar Birthday

http://i57.tinypic.com/6gl8w2.jpg

ainefal
14th September 2015, 08:44 PM
September 15th - Arignar Anna Birthday

September 17th - Thanthai Periyar Birthday

http://i57.tinypic.com/6gl8w2.jpg

விநாயகர் மற்றும் அவரது "தீவீர" ரசிகருக்கும் இந்த வருடம் ஒரே நாளில் பிறந்தநாள்

ainefal
14th September 2015, 08:52 PM
11-09-15 தேதியிட்டு வெளியான "ஜனனம்" பத்திரிகையில் பிரசுரமான செய்தி : திரி அன்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் :

http://i60.tinypic.com/1z3s8jo.jpg

நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள், தனது காவியத்தின் மூலம், சொல்லப்பட்ட நற்கருத்துக்கள் சமுதாயத்தில் எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் உன்னதமான செய்தி இது :


திரு. சாந்தாராம் இந்த படத்தின் [ மற்ற மொழிகளில் தயாரிக்கும்] உரிமையை "புரட்சித்தலைவர்" அவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொன்னார் என்று சொன்னதாக பல ஆதாரங்கள் உள்ளது. புரட்சிதலைவர் "லட்சியம்" என்றும் தோற்பதில்லை.

ainefal
14th September 2015, 09:00 PM
கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும். நியாமில்லாத கோபம் ஒரு தவறு.

- புரட்சித்தலைவர்

ainefal
14th September 2015, 09:05 PM
11.09.15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரை அரங்கம் நிரம்பி வழிகிறது......
13.09.15 ஞாயிறு அன்று மாலை காட்சிக்கு எக்ஸ்ட்ரா சேர்கள் போட்டு
சேர்களுக்கு இடமில்லாமல் 37 நபர்கள் முழு படமும் நின்று கொண்டே பார்த்தார்கள்....... நான் சொல்வது பால்கனியில் மட்டும் கீழே எவ்வளவு நபர்கள் என்று நமது இதயக்கனி எம்.ஜி.ஆருக்கே தெரியும்...... எனக்கு தெரியாது......
இந்த படத்தின் கதை அமைப்பில் உள்ள புதுமை.... திரைக்கதையில் உள்ள முடிச்சுகள்.... படப்பிடிப்பில் நடந்த சுவாரஷ்யங்கள்...... இப்பட இயக்குனர் திரு.A . ஜெகநாதன் அவர்களே மனம் திறந்தார்..... என்னிடம்..... ஓர் இன்நாளில்.....
விபரம் விரைவில்ல்ல்ல்........ Sri.Mayilraj.

ainefal
14th September 2015, 09:30 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/14TH%20SEPTEMBER%202015_zpskblmugc1.jpg

http://dinaethal.epapr.in/587655/Dinaethal-Chennai/14.09.2014#page/15/1

ainefal
14th September 2015, 09:41 PM
ஆதிராம் அவர்களுக்கு,

"இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்"

ஆங்கிலத்தில் பள்ளிபாடத்தில் ஒன்று முன்பு "who said to whom" இருந்தது . இதை சொன்னவர் பெரியவர் சக்ரபாணி அவர்களா அல்லது புரட்சித்தலைவர் அவர்களா அல்லது ஏதேனும் பத்திரிகையில் வந்ததா?

இந்த விவரங்களும் இருந்தால் அது தங்களது பதிவுக்கு வலிமை சேர்க்கும்.

நன்றி.

ஆதிராம் அவர்களுக்கு,
முதல் நினைவூட்டல்


கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது. தங்களது பதில் இல்லை. "உண்டு என்றல் அது உண்டு இல்லை என்றல் அது இல்லை" என்று நடிகர் திலகம் பாணியில் சொன்னால் இந்த தேவியாட்ட்ற விவாதமும் ஒரு முடிவுக்கு வரும்.

https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU


நன்றி

Russellwzf
14th September 2015, 10:07 PM
http://i57.tinypic.com/16p5c3.jpg

Russellwzf
14th September 2015, 10:09 PM
http://i57.tinypic.com/51wkqv.jpg

ainefal
14th September 2015, 10:22 PM
என்ன தர்மசங்கடம். வேண்டாம் நான் சொன்னதாக இருக்கவேண்டாம். அதர்க்குஎல்லம் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் டோய் . RKS சார் இதுவும் உங்களுக்கு இல்லை [ I hope you understand for whom it is]:

https://www.youtube.com/watch?v=XnBzv78vNEM

ஆனால் எனக்கு என்றுமே முக்கியம்:

https://www.youtube.com/watch?v=irW-aSl_Txg

Russellwzf
14th September 2015, 10:24 PM
http://i59.tinypic.com/30mabs0.jpg

orodizli
14th September 2015, 10:24 PM
மக்கள்திலகம் பாகம் 17 - துவங்க நமது திரியின் பாசமிகு சகோதரர்கள் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி...பாரத், மக்கள்திலகம் திரியை தொடங்க அடியேனுக்கு தகுதி இருப்பதாக கருதவில்லை...மறு, மறு வெளியீடுகளில் இலக்கணம் படைத்து கொண்டேயிருக்கும் பெருமகனார் மன்னர்களின் மன்னன் எம்.ஜி.ஆர்., வழங்கும் "இதயக்கனி"- அரங்கு நிறைந்து பற்பல சாதனைகளை கண்டு நம்மையெல்லாம் உற்சாகமாக்குகிறது ...என்றும் இதுவே சாதனை கோட்டைகளின் சிகரம்...வாழ்க ...மதுரை வாழ் மக்கள்...

ainefal
14th September 2015, 10:38 PM
லாபம்/profit என்றல் என்ன யாராவது சொல்ல முடியுமா? எனக்கு அவளவாக தெரியாது!!!!!

[நான் எதை ஏன் கேட்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் உண்டு - அதற்க்கும் நம் நாடு/சிவந்தமண் படங்களுக்கும் சம்பந்தம் இல்லை]

orodizli
14th September 2015, 10:40 PM
நம் சகோதரர்கள் ஏதும் நினைக்க வேண்டாம்... தர்த்தி பல இடங்களில் 200 நாட்கள் ஓடியது...என தகவல் எழுதினர், அவர்களுடைய சமீபத்திய டிஜிட்டல் வெளியீடு 100 அரங்குகளில் என்று மாலையில் வெளிவரும் நாளிதழில் தான் செய்தியும் வெளியிட்டனர்...அதெல்லாம் அப்படியே உண்மையா? அதுவும் ஒரு ஆவணம்தானா? என்று சராசரி வாசகர்/ பார்வையாளர்/ படிப்பவர்கள் கேட்டால் அதற்கு பதில் என்ன? நாம் அது போன்று மக்கள்திலகம் சம்பந்தப்பட்ட செய்திகளில் சொல்லவில்லைye...

Russellbpw
14th September 2015, 10:55 PM
Mr. Suharaam
I pity you.

Please read the paper properly. Count the number of theaters on the release day of the movie. The advertisement is the Aavanam . and the paragraph is not aavanam.

I cannot teach you tamizh now sir..and then make you understand.

Please do not roll up and down on the area you have fell.

Regards
RKS.

oygateedat
14th September 2015, 11:08 PM
http://s30.postimg.org/l4rnitk5d/IMG_20150902_WA0005.jpg (http://postimage.org/)
மக்கள் திலகம் 17 ஆம் பாகத்தை துவக்கி வைக்கவிருக்கும் அன்பு சகோதரர் திரு சுஹாராம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

ainefal
14th September 2015, 11:37 PM
சற்று முன் கிடைத்த செய்தி

திருச்சியில் ஒரு வயதான நபர் உரிமைக்குரல் ஆசிரியரை நேற்று காலை தொடர்பு கொண்டு தங்காத வார்த்தைகள் பேசி நமது ஆயிரத்தில் ஒருவன் குறித்தும் " எங்கும் ஓட வில்லை....... " என்று பலதும் பேசினார். இன்று நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.சார்.சங்கம் தலைமையில் புரட்சித்தலைவர் பக்தர்கள், திருச்சி நண்பர்கள் அவர் விட்டுக்கு சென்று "மரியாதையுடன்" நடந்துகொண்டனர். [b]அவர் தன தவறை உணர்ந்து மனிப்பும் கேட்டார். இனி இது போல செயல்களின் இடுபடமட்டேன் என்று கூறியதால் மற்றும் அவரது வயதை மதித்து மனித்து விடப்பட்டார்.

இருந்தும் அவருக்கு "உரிய எச்சரிக்கை" கொடுக்கப்பட்டது. மனிப்போம் மறப்போம்.

- பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், திருச்சி கிளை.

இது தகவலுக்கு மட்டுமே . இதை வைத்துகொண்டு மேலும் விவாதம் தேவையில்லை I do not want to give his contact details so that this Senior Citizen is not in trouble for the issue which is over now.

fidowag
14th September 2015, 11:48 PM
TIMES OF INDIA -

http://i59.tinypic.com/21kgh6r.jpg

fidowag
14th September 2015, 11:52 PM
பாக்யா செய்திகள் -18/09/2015
http://i57.tinypic.com/1voyf.jpg
http://i61.tinypic.com/2lbgidh.jpg
http://i57.tinypic.com/1eq3qc.jpg
http://i61.tinypic.com/f2u1rl.jpg

fidowag
14th September 2015, 11:55 PM
இந்த வார பாக்யா இதழில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். " தனிப்பிறவி " திரைப்பட
கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.

http://i60.tinypic.com/2r3866w.jpg
http://i57.tinypic.com/30lca5c.jpg
http://i57.tinypic.com/20rjmzr.jpg

fidowag
14th September 2015, 11:57 PM
http://i57.tinypic.com/28wcxhy.jpg
http://i60.tinypic.com/24zg5md.jpg
http://i57.tinypic.com/2rmy6w6.jpg

fidowag
15th September 2015, 12:04 AM
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.

மாற்று முகாம் நண்பர்களுக்கு தகுந்த விளக்கங்களுடன், சளைக்காமல் பொறுமையுடன் நீண்ட வாதங்களுடன், அதிரடி பதில் அளித்த தங்களின் பாங்கு, கேள்விக் கணைகள், தங்களுக்கே உரித்தான பாணியில் இட்ட பதிவுகள் அனைத்தும் பாராட்டத்தக்கவை.

ainefal
15th September 2015, 12:05 AM
https://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

ainefal
15th September 2015, 12:12 AM
https://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

fidowag
15th September 2015, 12:13 AM
அன்பு நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களே,

மெக்கா என்கிற புனித தலத்திற்கு விளக்கம் அளித்து தவறான பதிவுகளை நீக்கமற
செய்ய வைத்த தங்களின் பதிவுகள், செயல்பாடுகள் மிக பிரமாதம்.
அசத்தலான பதில்கள் பதிவு செய்து தக்க பதிலடி அவ்வப்போது அளித்து , எதிரணி
நண்பர்களை சிந்திக்க வைத்ததற்கு தங்களுக்கு ஒரு சபாஷ்.

ainefal
15th September 2015, 12:14 AM
https://www.youtube.com/watch?v=41t6DNDIo50

fidowag
15th September 2015, 12:17 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 17 -ஐ விரைவில் துவக்க இருக்கும் நண்பர் திரு. சுஹாராம் அவர்களுக்கு இதயங்கனிந்த பாராட்டுக்கள் / நல்வாழ்த்துக்கள்.



ஆர். லோகநாதன்.

ainefal
15th September 2015, 12:17 AM
https://www.youtube.com/watch?v=ZL_fPgv9Ojo

siqutacelufuw
15th September 2015, 12:38 AM
பே ரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த பொன்னாளில் அவரின் பெருமைகளை பறை சாற்றும் விதத்தில்,பல நிழற்படங்களையும், புகைப்படங்களையும், தகவல்களையும், செய்திகளையும் பதிவிடுவதில் உவகை அடைகிறேன் !

http://i62.tinypic.com/2nl77ed.jpg

தகவல்கள் சில, திரு. அ மறைமலையான் எழுதிய "பேரறிஞர் அண்ணாவின் பெரு வாழ்வு" , திரு. கள்ளிப்பட்டி சு. குப்புசாமி எழுதிய "காலத்தை வென்று காவியமான அண்ணா", திரு. அழகிய பாண்டியன் எழுதிய " பேரறிஞர் அண்ணா " ஆகிய புத்தகங்களிருந்து திரட்டப்பட்டவை. அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
15th September 2015, 12:40 AM
http://i61.tinypic.com/1zzm2bc.jpg

siqutacelufuw
15th September 2015, 12:46 AM
http://i60.tinypic.com/2qvw46c.jpg

siqutacelufuw
15th September 2015, 12:47 AM
http://i61.tinypic.com/2l6jwj.jpg

siqutacelufuw
15th September 2015, 12:48 AM
http://i61.tinypic.com/xl9yqq.jpg

siqutacelufuw
15th September 2015, 12:49 AM
http://i57.tinypic.com/110k4dg.jpg

siqutacelufuw
15th September 2015, 12:50 AM
http://i57.tinypic.com/2rhxqj5.jpg

siqutacelufuw
15th September 2015, 12:52 AM
http://i62.tinypic.com/2rz721f.jpg

siqutacelufuw
15th September 2015, 12:53 AM
http://i60.tinypic.com/i5rw2d.jpg

siqutacelufuw
15th September 2015, 12:55 AM
http://i61.tinypic.com/1z3qsmv.jpg
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் பேரறிஞர் அண்ணா

siqutacelufuw
15th September 2015, 12:56 AM
http://i59.tinypic.com/2dtah01.jpg

siqutacelufuw
15th September 2015, 12:57 AM
http://i57.tinypic.com/anbm38.jpg

siqutacelufuw
15th September 2015, 12:58 AM
http://i59.tinypic.com/okrbs2.jpg

siqutacelufuw
15th September 2015, 12:59 AM
http://i60.tinypic.com/25k75ns.jpg

siqutacelufuw
15th September 2015, 12:59 AM
http://i61.tinypic.com/riyjpk.jpg

siqutacelufuw
15th September 2015, 01:00 AM
http://i57.tinypic.com/2reprnc.jpg

siqutacelufuw
15th September 2015, 01:02 AM
http://i62.tinypic.com/35n7p5e.jpg

With the students of YALE UNIVERSITY, U.S.A., our beloved God's God PERARINGAR ANNA

siqutacelufuw
15th September 2015, 01:03 AM
http://i60.tinypic.com/2s6sjh4.jpg

siqutacelufuw
15th September 2015, 01:04 AM
http://i59.tinypic.com/2yjtqjb.jpg

siqutacelufuw
15th September 2015, 01:06 AM
http://i57.tinypic.com/2ns4dvk.jpg

siqutacelufuw
15th September 2015, 01:07 AM
http://i59.tinypic.com/259hc3k.jpg

http://i59.tinypic.com/2jan9s0.jpg

On assuming Office as Chief Minister of Tamil Nadu, on 6th March 1967. The then Governor UJJAL SINGH was present, during the Oath.

siqutacelufuw
15th September 2015, 01:09 AM
http://i62.tinypic.com/rrpirp.jpg

siqutacelufuw
15th September 2015, 01:10 AM
http://i57.tinypic.com/24lsy7m.jpg

siqutacelufuw
15th September 2015, 01:11 AM
http://i62.tinypic.com/vhg9py.jpg

siqutacelufuw
15th September 2015, 01:12 AM
http://i60.tinypic.com/9zx5j4.jpg

siqutacelufuw
15th September 2015, 01:13 AM
http://i61.tinypic.com/1118l04.jpg

siqutacelufuw
15th September 2015, 01:14 AM
பேரறிஞர் அண்ணா :

அறிவின் உருவம் ! அன்பின் சின்னம் !
உயர்ந்த எழுத்தாளர் ! ஒப்பற்ற நாடகாசிரியர் !
சிறந்த ஓவியர் ! செந்தமிழ் சொல்லாளர் !
நல்ல நடிகர் !

நல்லவர்க்கு நல்லவர் ! அல்லவர்க்கு நல்லவர் !
காஞ்சியில் பிறந்தவர் !
கன்னித்தமிழ் வளர்த்தவர் !

siqutacelufuw
15th September 2015, 01:16 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் புனைப்பெயர்கள் :

1. சௌமியன்,
2. வீரன்
3. பரதன்
4. சமதருமன்
5. ஒற்றன்
6. சம்மட்டி
7. காலன்
8. பேகன்
9. நக்கீரன்
10. தமிழ் தொண்டன்
11. வாதன்
12. குறிப்போன்
13. வழிப்போக்கன்
14. தமிழன்பன் கொழு
15. பாரதி
16. குயில் பாரத்
17. வீனங்
18. மணி மொழி

siqutacelufuw
15th September 2015, 01:17 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் புனைப்பெயர்கள் :

1. சௌமியன்,
2. வீரன்
3. பரதன்
4. சமதருமன்
5. ஒற்றன்
6. சம்மட்டி
7. காலன்
8. பேகன்
9. நக்கீரன்
10. தமிழ் தொண்டன்
11. வாதன்
12. குறிப்போன்
13. வழிப்போக்கன்
14. தமிழன்பன் கொழு
15. பாரதி
16. குயில் பாரத்
17. வீனங்
18. மணி மொழி

siqutacelufuw
15th September 2015, 01:18 AM
பேரறிஞர் அண்ணா பணி புரிந்த நாளேடுகள் :

1. 1936 : பாசுதேவ் அவர்கள் நடத்திய :பால பாரதி" இதழ் ஆசிரியர்.
2. 1936 : காஞ்சி மணிமொழியார் நடத்திய "நவயுகம்" வார இதழ் ஆசிரியர்.
3. 1936 : நீதிக்கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட "ஜஸ்டிஸ்" இதழ் துணை ஆசிரியர். !
4. 1937 : தந்தை பெரியார் அவர்கள் நடத்திய "குடியரசு" மற்றும் "விடுதலை" துணை ஆசிரியர்.
5. 1942-1963 : பே ரறிஞர் அண்ணா அவர்களே நடத்திய "திராவிட நாடு " ஆசிரியர்.
6. 1949 : மாலைமணி - நாளிதழ் ஆசிரியர்.
7. 1953 : "நம் நாடு" (தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது) நாளிதழ் ஆசிரியர்
8. 1957 "home land" இதழ் ஆசிரியர்.
9. 1953 "காஞ்சி" வார இதழ் ஆசிரியர் (இந்த பத்திரிகை பேரறிஞர் அண்ணா அவர்களின் மகன் இளங்கோ நடத்தியது)
10. 1966 : " HOME RULE " ஆங்கில இதழ் ஆசிரியர்.

siqutacelufuw
15th September 2015, 01:22 AM
பேரறிஞர் அண்ணா அவர்கள் அலங்கரித்த பதவிகள் :

1931-32 ..... கல்லூரி பேரவைத்தலைவர்
1932-33 கல்லூரி பொருளியல் பேரவைத்தலைவர்
1939 நீதிக்கட்சி அமைப்பாளர்
1940 திராவிட கழக பொது செயலாளர்
1949 திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்
1957-62 காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
1962-67 மாநிலங்களவை உறுப்பினர்
06-03-1967 முதல் 02-02-1969 வரை .... தமிழக முதல்வர் !.

siqutacelufuw
15th September 2015, 01:23 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் சமூக நாடகங்கள் :

1.. ஒர் இரவு
2. வேலைக்காரி
3. நல்ல தம்பி
4. காதல் ஜோதி
5. சொர்க்க வாசல்
6. பாவையின் பயணம்
7. இரக்கம் எங்கே ?
8. நீதி தேவன் மயக்கம்
9. சந்திரோதயம்
10. இன்ப ஒளி

siqutacelufuw
15th September 2015, 01:25 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் வரலாற்று நாடகங்கள் :

1. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்
2. சந்திரமோகன்
3. நீதி தேவன் மயக்கம்

siqutacelufuw
15th September 2015, 01:26 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஓரங்க நாடகங்கள் :

1. அவன் பித்தனா ?
2. இரக்கம் ஒரு பயணம்
3. இளங்கோவின் சபதம்
4. இன்ப நாளில் இதயம்
5. எத்தகை திருவிளையாடல்
6. கடவுளர் உலகில்
7. கண்ணாயிரத்தின் உலகம்
8. கண்ணீர் துளி
9. கல் சுமந்த கசடர்
10. களத்தின் வென்றான்
11. கறை போக வில்லை
12. காசூரார் கருணை
13. சன்மானம்
14. சுயேட்சையாகி விடுவேன்
15. செலும் இடந்தோறும்
16. செல்லப்பிள்ளை
17. சோணாசலம்
18. நன்கொடை
19. நீதிபதி
20. தங்கத்துளிகள்
21. தர்மம் தலை காக்கும்
22. துரோகி கப்ளான்
23. தேவ லோகத்தில்
24. பாகிரதியின் பந்தயம்
25. பக்தியின் பேரால்
26. பாங்கர் பணம் பேருத்தான்
27. பாங்காங் பங்கஜா
28. பாரதம்
29. புதிய மடாதிபதி
30. ராகவாயணம்
31. ரோம் எரிகிறது
32. வழக்கு வாபஸ்
33. விலை ஏறி விட்டது

siqutacelufuw
15th September 2015, 01:29 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புக்கள் :

1. தம்பிக்கு மடல்கள் .... 315
2. கட்டுரைகள் .... 560
3. நாடகங்கள் 13
4. குறு நாடங்கங்கள் 19
5. புதினங்கள் 6
6. சிறு கதைகள் 118
7. கவிதைகள் 77
8. பத்திரிகை உரைகள் 1000க்கும் மேல்

siqutacelufuw
15th September 2015, 01:30 AM
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அமெரிக்காவின் அறிஞர் ஆபிரகாம் லிங்கனுக்கும் உள்ள ஒற்றுமைகள் :

1. 1809ம் ஆண்டில் பிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். 1909ல் பிறந்தவர் பேரறிஞர்
2. இருவரும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள்
3. இருவரும் இரவு முழுவதும், கண் விழித்து புத்தங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள்.
4. இருவரும் ஆடம்பரம் இல்லாதவர்கள்.
5. இருவரும், சினம், ஆத்திரம் சிறிதளவும் கொள்ளாதவர்கள்.
6. நகைச்சுவை சொட்ட பேசி எதிரியின் வாயை மூட வைப்பதில் வல்லவர் லிங்கன்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அவரது தத்துவத்தின் அடிப்படையில், மாற்றுக்க்கட்சியினரும் போற்றும் அளவுக்கு மேடைப்பேச்சுக்களில் இலக்கணம் வகுத்தவர் அறிஞர் அண்ணா
7. எல்லோருடனும் நன்கு பழகுபவர் லிங்கன். தனிமையில் நாட்டம் கொள்ளாமல், எப்போதும் தம்மைச் சுற்றிலும் நண்பர் குழாம் சூழ்ந்திருக்க உரையாடல்களை கவனித்து வந்தவர் பேரறிஞர் அண்ணா
8. ஒடுக்கபட்ட நீக்ரோ இன மக்களின் விடுதலைக்காக பாடு பட்டவர் லிங்கன். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட திராவிட இன மக்களின் எழுச்சிக்காக உரக்க குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
9. இருவரும் முதன் முதலில் சந்தித்த தேர்தல்களில் வெற்றி பெற முடியாதவர்கள் ஆயினர்.
10. எல்லாவற்றுக்கும் மேலாக, இருவருமே மக்களாட்சி மரத்தின் ஆணி வேறாக வாக்குச்சீட்டின் வலிமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர்.

siqutacelufuw
15th September 2015, 01:33 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மை :

சம்பவம் 1

ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவரை சூழ்ந்து கொண்ட மக்கள், "நீங்கள் எம். ஜி. ஆர். கட்சியை சார்ந்தவரா" என்று கேட்டனராம். அதற்கு, நமது இத்யக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள், புன்முறுவலுடன், "ஆம்" என்று சொன்னாராம். மக்கள் பெரும் மரியாதை செய்தனராம். தன கட்சியில் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர் கட்சியை சார்ந்தவரா என்று கேட்ட அந்த மக்கள் மீது கோபம் கொள்ளாமல், அந்த புன்னகை மன்னன் ஆம் என்று பதிலளித்தாரே இந்த பெருந்தன்மை எவருக்கு வரும் வே று எந்த தலைவராவது, இது போன்ற கேள்விகள் எதிர் கொண்டிருந்தால், மூட் அவுட்டாகி, ஓரங்கட்டும் முயற்சியில் தான் இறங்கியிருப்பர்.

சம்பவம் 2

மற்றொரு சந்தர்ப்பத்தில், மாநாடு ஒன்றில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் சல சலப்பு. மக்கள் திலகம் உள் ளே நுழைகிறார். உடனே, பேரறிஞர் அண்ணா அவர்களிடம், நம் மக்கள் திலகம் வேண்டும் என்றே, கூடத்தின் கவனத்தை திசை திருப்ப, அவ்வாறு தாமதமாக வந்தாதாக கலகம் மூட்டினர். அதற்கு, நம் இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களிடம், தம்பி ராமச்சந்திரன் பற்றி நான் நன்கறிவேன். அவர் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவரல்ல. மேலும், தம்பி ராமச்சந்திரன் ஒரு சினிமா நடிகர். தம்பியின் தொழில் அப்படி. அவருக்கென்று ஒரு மாபெரும் ரசிக கூட்டம் ஒன்று உண்டு. அது மட்டுமல்லாது, நம் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வாக்களிக்கும் கூட்டமும் கூட. அவரது பணி நம் கழகத்துக்கு தேவை. அவர் முகத்தை காட்டினால் போதும், பல லட்சம் வாக்குகள் நம் கழகத்துக்கு கிட்டும். ,எனவே, கழகத்தின் ஒற்றுமையை பேணிக்காக்கும் முயற்சியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி, அவர்களின் வாயை அடைத்தார்.


சம்பவம் 3

தேர்தல் நிதி திரட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களிடம்,, நம் மக்கள் திலகம் தேர்தல் நிதியாக பெருந்தொகை (இலட்சக்கணக்கில்) அளிக்க முற்பட்ட போது, " தம்பி இராமச்சந்திரா ! நீ அளிக்கும் இந்த லட்சங்கள் பெரிதல்ல, உன் திரு முகத்தை காட்டினாலே போதும், பல லட்ச வாக்குகள் கிடைக்கும், நம் கழகத்துக்கு " என்று வெளிப்படையாக கூறி, பொன்மனசெம்மலின் பலத்தை தமிழ் நாட்டிற்கு உணர்த்தினார்.

இவ்வாறு சம்பவங்கன் பல கூறிக்கொண்டே போகலாம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மைக்கு !

siqutacelufuw
15th September 2015, 01:34 AM
அறிஞர் பட்டம் கிடைத்த நிகழ்வு :

தமிழ் இலக்கியத்துறையில் முதன் முதல் வரலாற்று புதினங்கள் படைத்த வழிகாட்டி கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்தில், அண்ணா அவர்களும், வேறு பலரும் அழைக்கப்படிருந்தனர்.
குறிப்பிட்ட நேரம் கடந்தும், அண்ணா அவர்களை தவிர வேறு பேச்சாளர்கள் எவரும் வரவில்லை. அதனால், கூடியிருந்த கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது. அதனை குறிப்பால் உணர்ந்த அண்ணா அவர்கள், ஓர் உத்தியை கையாண்டார். அக்கூட்டத்தில், பிறர் பேச வேண்டிய தலைப்புக்களை தாம் எடுத்துக் கொண்டு, முன் குறிப்பு ஏதுமின்றி, சிறிதும், பிசிறில்லாமல், ஒவ்வொரு தலைப்பையுமொட்டி மிக அற்புதமாகவும், அழகாகவும் பேசிக் கொண்டிருந்தார். அது சமயம் வந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எவ்வித முன் தயாரிப்பின்றி பல்வேறு தலைப்புக்களை மிக சரளமாக பேசிய இவரல்லவா அறிஞர் என்று எண்ணினார்.

தமது எண்ணத்தினை அவ்விழாவில், பொது மக்கள் மற்றும் பெரியோர்களின் முன்னிலையில், 'அறிஞர்" என்னும் பட்டத்தினை சூட்டி மகிழ்ந்தார்.

கூடியிருந்த மக்களின் கர கோஷத்துக்குக் கேட்கவா வேண்டும் !

siqutacelufuw
15th September 2015, 01:35 AM
நாவலர் - பேராசிரியர் சந்திப்பு :

நீதிக்கட்சியோடு, தொடர்பு கொண்டிருந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை , சிதம்பரத்தில் உள்ள "அண்ணாமலை பல்கலை கழகம் " சென்றார். "ஆற்றோரம்" என்ற தலைப்பில் அழகுத்தமிழில் அற்புதமாக பேசினார். "உலகம் பழையதும், புதியதும்" ( the world old and new) என்னும் தலைப்பில், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அவருடைய சொற்பொழிவு திறனை கண்டு எங்கு குழுமியிருந்த மாணவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சொற்போழிவுகள் முடிந்த பின்னர், இரு மாணவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களை தனிமையில் சந்தித்து, தங்கள் பாராட்டினை தெரிவித்தனர். அதே சமயத்தில், ஒரு ஐயப்பாட்டினையும் எழுப்பினர். ",உங்கள் சொற்பொழிவில் சமதர்மம் காணப்படுகிறது. ஆனால், நீங்கள் ஏன், அந்த பதவி வேட்டையாடும் பிற்போக்கான பணக்கார கட்சியாகிய "நீதிக்கட்சியில்" இருக்க வேண்டும்" என்று கேட்டனர். .

அதற்கு பேரறிஞர் அண்ணா, அவர்களிடம், "அந்தக்கட்சியில் நான் ஏன் இருக்கிறேன் என்றால், அந்தப் பணக்கார கட்சியை ஜனநாயக, சமதர்ம கட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்" என்று வேடிக்கையாக பதிலளித்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பேச்சினால் கவரப்பட்ட அந்த இரு மாணவர்கள் தான், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், பேராசிரியர் அன்பழகன் அவர்களும்.

siqutacelufuw
15th September 2015, 01:38 AM
மீண்டும், புகைப்பட அணிவகுப்பு தொடர்கிறது :

http://i58.tinypic.com/2e0ttvd.jpg

siqutacelufuw
15th September 2015, 01:38 AM
http://i61.tinypic.com/qr17w6.jpg

siqutacelufuw
15th September 2015, 01:40 AM
http://i61.tinypic.com/wik22h.jpg

siqutacelufuw
15th September 2015, 01:40 AM
http://i57.tinypic.com/27xj8xw.jpg

siqutacelufuw
15th September 2015, 01:41 AM
http://i59.tinypic.com/qsjx28.jpg

siqutacelufuw
15th September 2015, 01:43 AM
http://i59.tinypic.com/2n1w0fm.jpg

siqutacelufuw
15th September 2015, 01:44 AM
http://i59.tinypic.com/2iia2c0.jpg

தம் இனிய குடுமபத்துக்கு வறுமையை தந்த பேரறிஞர் அண்ணா அவர்களுடன் குடும்பத்தினர் !

siqutacelufuw
15th September 2015, 01:47 AM
பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது மனைவி தெய்வத்திரு ராணி அம்மாளுடன். கீழே, அவர்களின் திருமண பத்திரிகை:

http://i62.tinypic.com/wurp4w.jpg

siqutacelufuw
15th September 2015, 01:49 AM
http://i57.tinypic.com/vja13.jpg

முதற்படம் : பேரறிஞர் அண்ணா அவர்கள், விழா ஒன்றில் கவுரவிக்கப்படுகிறார்.

2வது படம் : உதகை மலை வாழ் - ஆதி வாசி மக்களுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள்,.

3வது படம் : இளம் பிரயத்தில் - தமது கல்லூரி சக மாணவர்களுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள்,

siqutacelufuw
15th September 2015, 01:54 AM
http://i58.tinypic.com/of2hcy.jpg

Richardsof
15th September 2015, 04:43 AM
http://i59.tinypic.com/qsjx28.jpg

இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

2000 - சிறப்பான பதிவுகளை வழங்கிய தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை மலரும் நினைவுகளை மிக சிறப்பாக பதிவிட்ட உங்களுக்கு நன்றி .

Richardsof
15th September 2015, 04:49 AM
நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
courtesy - era.chezhiyan

Richardsof
15th September 2015, 05:21 AM
இனிய நண்பர் திரு சத்யா

தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெறும்நிலையில் உள்ளது .
71 நாட்களில் இந்த திரி 70 ,000 பார்வையாளர்களுடன் பயணித்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவரின் சிறந்த ஒத்துழைப்புடன் பதிவுகள் வந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் --17 துவங்க உள்ளது. அறிந்து மிக்க மகிழ்ச்சி . மீண்டும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .

Russellsui
15th September 2015, 06:36 AM
http://i60.tinypic.com/2qvw46c.jpg

தங்களின் 2000 மதிப்பு மிக்க பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்

Russellsui
15th September 2015, 06:43 AM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்-----அது எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1fwf40.jpg

வருக வருக திரு Hussain Ar அவர்களே

Russellsui
15th September 2015, 06:44 AM
அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://i59.tinypic.com/2jic08.jpg

Russellsui
15th September 2015, 06:45 AM
அறிஞர் பட்டம் கிடைத்த நிகழ்வு :

தமிழ் இலக்கியத்துறையில் முதன் முதல் வரலாற்று புதினங்கள் படைத்த வழிகாட்டி கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்தில், அண்ணா அவர்களும், வேறு பலரும் அழைக்கப்படிருந்தனர்.
குறிப்பிட்ட நேரம் கடந்தும், அண்ணா அவர்களை தவிர வேறு பேச்சாளர்கள் எவரும் வரவில்லை. அதனால், கூடியிருந்த கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது. அதனை குறிப்பால் உணர்ந்த அண்ணா அவர்கள், ஓர் உத்தியை கையாண்டார். அக்கூட்டத்தில், பிறர் பேச வேண்டிய தலைப்புக்களை தாம் எடுத்துக் கொண்டு, முன் குறிப்பு ஏதுமின்றி, சிறிதும், பிசிறில்லாமல், ஒவ்வொரு தலைப்பையுமொட்டி மிக அற்புதமாகவும், அழகாகவும் பேசிக் கொண்டிருந்தார். அது சமயம் வந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எவ்வித முன் தயாரிப்பின்றி பல்வேறு தலைப்புக்களை மிக சரளமாக பேசிய இவரல்லவா அறிஞர் என்று எண்ணினார்.

தமது எண்ணத்தினை அவ்விழாவில், பொது மக்கள் மற்றும் பெரியோர்களின் முன்னிலையில், 'அறிஞர்" என்னும் பட்டத்தினை சூட்டி மகிழ்ந்தார்.

கூடியிருந்த மக்களின் கர கோஷத்துக்குக் கேட்கவா வேண்டும் !



நன்றி சார்

Russellwzf
15th September 2015, 07:12 AM
இனிய நண்பர் திரு சத்யா

தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெறும்நிலையில் உள்ளது .
71 நாட்களில் இந்த திரி 70 ,000 பார்வையாளர்களுடன் பயணித்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவரின் சிறந்த ஒத்துழைப்புடன் பதிவுகள் வந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் --17 துவங்க உள்ளது. அறிந்து மிக்க மகிழ்ச்சி . மீண்டும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .

நன்றி சார்

Russellail
15th September 2015, 07:38 AM
http://i57.tinypic.com/51wkqv.jpg

நின் சிறப்பான புகழ்பெற்ற தங்கநிதி வார்த்த
திருமேனியும், பொன் திருமுகமும், வேழம் மிக்க
மிகுந்த வலிமை பொருந்திய தோள்களும் தாங்கி
மக்களுக்கு நல்லதை செய்த நினைத்ததை முடிக்கும்
வெற்றி முழக்கமும் பொருந்திய அருள் சத்ய தாயின்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

Russellwzf
15th September 2015, 07:45 AM
Congratulations Prof.Selvakumar sir for completing more than 2000+ postings..
http://i59.tinypic.com/u63b4.jpg

ainefal
15th September 2015, 08:19 AM
http://i58.tinypic.com/of2hcy.jpg

Morning Professor Sir,

Fantastic 2000 postings:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/PT6_zpsjj12x5vo.png
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ptv_zpsq8pmdqrd.jpg

Russellisf
15th September 2015, 08:44 AM
2000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் professor சார்

Russelldvt
15th September 2015, 08:48 AM
http://i57.tinypic.com/2gt93wh.jpg

Russelldvt
15th September 2015, 08:50 AM
http://i60.tinypic.com/2zewj2b.jpg

Russellisf
15th September 2015, 08:50 AM
எனது தெய்வத்தின் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று

Russellisf
15th September 2015, 08:53 AM
எதிரிகளின் சூழ்ச்சியை
முறியடித்த முதல் நடிகர்!

தன் கால் முறிவு காரணமாக 4 மாத ஓய்வில் இருந்த புரட்சி தெய்வத்தை சில துரோகிகள் திரையுலகில் இவருடைய வரலாறு இத்துடன் முடிந்தது என பொய்யுரையை அள்ளி தெளித்து ஓலமிட்டனர்.சிலர் இவர் இனி ஸ்டுடியோ பக்கமே தலைகாட்ட முடியாத என இகழ்நதனர்.
சில நடிகர்கள் இனி நாம் தான் திரையுலகில் என முழக்கமிட்டனர்.
இந்த கொடுமதியர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து பொய்யர்களின் விமர்சன பிரசாரத்தை
உடைத்தெறிந்த மீண்டும் கலையுலகில் புது மனிதராக புத்துணர்ச்சி பெற்ற நல் மனிதராக ஏற்கெனவே இருந்த துணிவோடு மேலும் பல தாண்டி துள்ளி வரும்
, மானாக,
கொள்கையை முழங்கும்,
சிங்கமாக அடியெடுத்து
வைத்தார்..
முப்பிறவி வேந்தர்.

Russelldvt
15th September 2015, 08:53 AM
TODAY 1.00PM WATCH JMOVE

http://i57.tinypic.com/11tom87.jpg

http://i61.tinypic.com/2aj9m1.jpg http://i60.tinypic.com/9sw36o.jpg http://i59.tinypic.com/rveni1.jpg

Russellisf
15th September 2015, 08:53 AM
https://www.youtube.com/watch?v=0_50SyAAraY


THANKS SAILESH SIR

Russellisf
15th September 2015, 08:55 AM
https://www.youtube.com/watch?v=kUdXd4xvJbo


THANKS SAILESH SIR

mgrbaskaran
15th September 2015, 01:56 PM
அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://i59.tinypic.com/2jic08.jpg

அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Scottkaz
15th September 2015, 01:58 PM
அனைவருக்கும் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://i60.tinypic.com/2zewj2b.jpg

mgrbaskaran
15th September 2015, 01:58 PM
http://i57.tinypic.com/vja13.jpg

முதற்படம் : பேரறிஞர் அண்ணா அவர்கள், விழா ஒன்றில் கவுரவிக்கப்படுகிறார்.

2வது படம் : உதகை மலை வாழ் - ஆதி வாசி மக்களுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள்,.

3வது படம் : இளம் பிரயத்தில் - தமது கல்லூரி சக மாணவர்களுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள்,
2000 and many more

congras sir

Scottkaz
15th September 2015, 02:04 PM
sunday சென்னையில் நடைபெற்ற மக்கள்திலகத்தின் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
http://i59.tinypic.com/23t1ua1.jpg

Scottkaz
15th September 2015, 02:05 PM
http://i60.tinypic.com/1zwhmbd.jpg

Scottkaz
15th September 2015, 02:06 PM
http://i58.tinypic.com/2556wc4.jpg

Scottkaz
15th September 2015, 02:07 PM
http://i58.tinypic.com/flycnc.jpg

Scottkaz
15th September 2015, 02:08 PM
http://i60.tinypic.com/244qlfm.jpg

Scottkaz
15th September 2015, 02:09 PM
http://i62.tinypic.com/2v2gyo7.jpg

Scottkaz
15th September 2015, 02:09 PM
http://i60.tinypic.com/312b5sn.jpg

Scottkaz
15th September 2015, 02:11 PM
http://i62.tinypic.com/2qw22qw.jpg

ainefal
15th September 2015, 02:11 PM
ஆதிராம் அவர்களுக்கு,

"இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்"

ஆங்கிலத்தில் பள்ளிபாடத்தில் ஒன்று முன்பு "who said to whom" இருந்தது . இதை சொன்னவர் பெரியவர் சக்ரபாணி அவர்களா அல்லது புரட்சித்தலைவர் அவர்களா அல்லது ஏதேனும் பத்திரிகையில் வந்ததா?

இந்த விவரங்களும் இருந்தால் அது தங்களது பதிவுக்கு வலிமை சேர்க்கும்.

நன்றி.

இரண்டாவது நினைவூட்டல்

வணக்கம் அதிராம் சார்,

தங்களது பதில் இன்னமும் வரவில்லை அதிராம் சார். இதற்குபிரங்கு இன்னும் ஒரே ஒரு "நினைவூட்டல் - மூன்றாவது நினைவூட்டல்", அதற்க்கு அப்புறம் கேட்கமாட்டேன் சார்:

https://www.youtube.com/watch?v=7FZvzZNDzUI

நன்றி.

Scottkaz
15th September 2015, 02:14 PM
http://i62.tinypic.com/2nv9mib.jpg

Scottkaz
15th September 2015, 02:15 PM
http://i60.tinypic.com/oig9ph.jpg

Scottkaz
15th September 2015, 02:16 PM
http://i62.tinypic.com/25iafeu.jpg

Scottkaz
15th September 2015, 02:17 PM
http://i62.tinypic.com/1gg5ms.jpg

Scottkaz
15th September 2015, 02:18 PM
http://i57.tinypic.com/34s1cgn.jpg

Scottkaz
15th September 2015, 02:19 PM
http://i62.tinypic.com/2429x93.jpg

Russellzlc
15th September 2015, 03:01 PM
http://i61.tinypic.com/t5r7kk.jpg

நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் காவியங்களில், மூட நம்பிக்கைகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையினை அவர் கொச்சைப்படுத்தவில்லை. எவருடைய மனதையும் புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் காட்சிகள் அமைந்திருக்கும்.

இங்கே, புகைப்படத்தில், கே. பி. சுந்தராம்பாள் அவர்களுக்கு சொந்தமான கே. பி. எஸ். திரையரங்கை திறந்து வைக்க நமது மக்கள் திலகம் அவர்கள் கரூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள "கொடுமுடி" என்ற பேரூருக்கு வருகை தந்த போது, அவருக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்கும், அரிய காட்சி !

தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தாலும், மற்றவர்கள் மனதை புண்படுத்த நினைக்காத பொன்மனச்செம்மல், இறுதி வரை அந்த திலகத்துடனேயே காட்சி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனேவே, நமது திரியில், மக்கள் திலகம் (நெற்றியில் பொட்டுடன்) மற்றும் மறைந்த கே. பி. சுந்தாராம்பாள் அவர்கள் அமர்ந்திருக்கும் நிழற்படம், பதிவிடப்பட்டுள்ளது என்பது அறிந்ததே !

நன்றி திரு.செல்வகுமார் சார். இதுவரை நமது திரியில் இடம் பெறாத படம் என்று நினைக்கிறேன். மிக அரிய புகைப்படம். மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 03:02 PM
சற்று முன் கிடைத்த தகவல்

புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.

நன்றி

வசூல் சக்ரவர்த்தியின் இதயக்கனி மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிவரும் தகவலை தெரிவித்ததற்கு நன்றி திரு.சைலேஷ் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 03:04 PM
http://i59.tinypic.com/30mabs0.jpg

நன்றி திரு.சத்யா. அருமையான ஒர்க். பாராட்டுக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 03:05 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது மனைவி தெய்வத்திரு ராணி அம்மாளுடன். கீழே, அவர்களின் திருமண பத்திரிகை:

http://i62.tinypic.com/wurp4w.jpg


அரிய பொக்கிஷங்களை பதிவிடும் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 03:07 PM
http://i58.tinypic.com/122l1ds.jpg

நண்பர்களுக்கு,

சிவந்தமண் - நம்நாடு பிரச்சனையை நாம் ஆரம்பிக்கவில்லை. அவர்கள்தான் ஆரம்பித்தனர். சிவந்த மண் திரைப்படம் நஷ்டம் என்று நாம் சொல்லவில்லை. தோல்வி என்றும் சொல்லவில்லை. நன்கு வசூல் ஆகியிருக்கிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. நம்நாடு படத்தை விட குறைவாகத்தான் ஆகியிருக்கிறது என்றுதான் சொல்லி வந்தோம்.

அதுவும் கூட, நண்பர்கள் திரு.ஆதிராமும் திருச்சி பாஸ்கர் அவர்களும் ஒப்பீடு செய்ததால்தான் இதை நாம் சொல்ல வேண்டி வந்தது. நமது ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும், சிவாஜி ரசிகர்களால் ஆவணத் திலகம் என்று போற்றப்படும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களே திரு.எஸ்.வி.யிடம் இதை (சிவந்த மண்ணை விட நம்நாடு வசூல் அதிகம் என்பதை) ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்துதான் இதை நாம் சொன்னோம்.

ஆனால், நாம் பொய் சொல்வதாக தவறான பிரசாரம். எப்போதுமே நாம் பொய் சொல்கிறோம் என்று திட்டமிட்ட பிரசாரம் நடக்கிறது. ஆனால், திரு.டிஏ சினிமா என்பவர் நமது திரிக்கு வந்து கூறிய பொய்யான தகவலை நிரூபிக்குமாறு திரு.சைலேஷ் அவர்கள் 12 முறை நினைவூட்டியும் அவரிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், அவர் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார். கொடுமை.

இதேபோல ,நேற்று இன்று நாளை படம் எந்த விதத்திலும் நஷ்டம் இல்லை என்று திருச்சி பாஸ்கர் அவர்களுக்கு திரு.சைலேஷ் ஆதாரத்தோடு பதில் கூறியிருந்தார். இதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், நாம் பொய் சொல்கிறோம் என்று தவறான பிரசாரம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

எனவேதான், இன்று நான் சவால் விடுத்திருக்கிறேன். நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உண்மையை விளக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன் 22-ம் தேதி வரை அவகாசமும் அளித்திருக்கிறேன். நான் பொய் சொல்வது நிரூபணமானால் மன்னிப்பு கோருவதுடன் திரியில் இருந்தும் விலகுகிறேன் என்றும் கூறியிருக்கிறேன். அதுவரை, 22ம் தேதி வரை பதிவிட மாட்டேன்.

நிச்சயம் நான் பொய் சொல்லவில்லை, என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், 22ம் தேதி வரை நான் பதிவுகள் இடமாட்டேன்.

இன்னும் ஓரிரு நாளில் மக்கள் திலகம் திரி பாகம் 17-ஐ தொடங்க இருக்கும் நண்பர் சுஹராம் அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாகம் 16ஐ வெற்றிகரமாக நிறைவு செய்யப்போகும் திரு.சத்யா அவர்களுக்கும் நன்றிகள்.

23-ம் தேதியன்று மீண்டும் திரியில் தலைவரின்

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே...’

என்ற பாடல் வரிகளுடன் மீண்டும் எனது பதிவுகள் தொடங்கும் என்பதை என் மீதும் உண்மையின் மீதும் உள்ள நம்பிக்கையால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellail
15th September 2015, 04:31 PM
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் பெருமானே
விருதுகவி விதரணவி நோதக் காரப் பெருமானே.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.



http://i59.tinypic.com/30mabs0.jpg

Scottkaz
15th September 2015, 05:34 PM
http://i59.tinypic.com/v43ts4.jpg

Scottkaz
15th September 2015, 05:36 PM
http://i62.tinypic.com/3134u2f.jpg

Scottkaz
15th September 2015, 05:36 PM
http://i60.tinypic.com/ilymc2.jpg

Scottkaz
15th September 2015, 05:38 PM
http://i57.tinypic.com/21exm2s.jpg

Scottkaz
15th September 2015, 05:41 PM
http://i62.tinypic.com/vpc10m.jpg

Scottkaz
15th September 2015, 05:45 PM
http://i60.tinypic.com/2hejbfa.jpg

Scottkaz
15th September 2015, 05:47 PM
http://i61.tinypic.com/2lwpwno.jpg

Scottkaz
15th September 2015, 05:53 PM
http://i61.tinypic.com/34snn7d.jpg

Scottkaz
15th September 2015, 05:54 PM
http://i60.tinypic.com/1zxb9f6.jpg

Scottkaz
15th September 2015, 05:57 PM
http://i61.tinypic.com/13zn6ki.jpg

Scottkaz
15th September 2015, 05:58 PM
http://i58.tinypic.com/28gqz4l.jpg

Scottkaz
15th September 2015, 06:01 PM
http://i58.tinypic.com/23r2zgj.jpg

Scottkaz
15th September 2015, 06:03 PM
http://i57.tinypic.com/2hzr0cx.jpg

siqutacelufuw
15th September 2015, 06:04 PM
http://i62.tinypic.com/jubnm0.jpg

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளாகிய இன்று முதல் , "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், ஒரு தொடர் எழுதவுள்ளேன். இத்தொடரானது, புதிய திரி ஒன்று துவக்கப்பட்டு, அதில் இடம் பெறும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

siqutacelufuw
15th September 2015, 06:05 PM
தலை சிறந்த சட்ட மன்ற சொற்பொழிவாளர் பேரறிஞர் அண்ணா

27-01-1766 அன்று அயர்லாந்து நாட்டை சார்ந்த 'எட்மண்ட் பர்க்' நிகழ்த்திய முதல் பாராளுமன்ற சொற்பொழிவே அவரை தலை சிறந்த அரசியால் அறிஞராக உயர்த்தியது. அது போல், 30-04-1957 அன்று இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை, அவரை தேர்ந்த சட்டமன்ற வாதியாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது.

அவரது விரிவான சட்டமன்ற உரை, "திரவிடர் இயக்க வரலாறு" என்று நான் துவக்கும் புதிய திரியில் எழுதவுள்ளேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

Scottkaz
15th September 2015, 06:05 PM
http://i61.tinypic.com/2qd7qc0.jpg

siqutacelufuw
15th September 2015, 06:06 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை திரைப்படங்களான பட்டியல் :

1. ஓர் இரவு
2. சொக்க வாசல்
3. நல்ல தம்பி
4. நல்லவன் வாழ்வான்
5. எதையும் தாங்கும் இதயம்
6. ரங்கோன் ராதா
7. தாய் மகளுக்கு கட்டிய தாலி
8. காதல் ஜோதி
9. வண்டிக்காரன் மகன்

siqutacelufuw
15th September 2015, 06:07 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்னேட்டில் பொறிக்கத்தக்க உரை :

1962ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், தமிழகத்தில் நடைபெற்ற மூன்றாவது சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் இந்த தேர்தலில் 142 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 18 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களும், முன்பு போலவே (1957 சட்ட மன்ற தேர்தலில் காஞ்சி மாநகரில் போட்டியிட்டது போலவே) வேட்பாளராக நின்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்களை எதிர்த்து போட்டியிட்டவன் - என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ளக்கூடிய பெருமை ஒன்றை தவிர, அரசியல் வாழ்வில் வேறு எவ்வித ஆர்வமோ, செல்வாக்கோ இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியினர், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எதிராக நிறுத்தினர்.

அப்போது முதலமைச்சராக இருந்த காமராசரும், இதர அமைச்சர்களும் பேரறிஞர் அண்ணாவை வீழ்த்துவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். போதாக்குறைக்கு, தந்தை பெரியார் அவர்களும், அந்த கூட்டத்தினருடன் இணைந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க வரிந்து கட்டினார்.

அந்த மூன்றாவது தேர்தலின் முடிவுகள் , தி,.மு. க. தன்னுடைய அரசியல் பயணத்தில், கணிசமான அளவுக்கு, முன்னேறியிருப்பதை உலகுக்கு பறை சாற்றின. 50 சட்ட மன்ற தொகுதிகளும், 7 பாராளுமன்ற தொகுதிகளும், கழகத்தின் வசமாயின. கழகம் ஆரம்பித்து, இந்த குறுகிய காலத்தில், பெற்ற இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டு உள்ளூர அதிர்ச்சி அடைந்து மருட்சியுற்றனர்.

ஆயினும், அந்தோ...... கழக் காவலர் நம் பேரறிஞர் அண்ணா அவர்கள் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டார். பெற்ற வெற்றி கழகத்தவர் , பேரறிஞர் அண்ணா அவர்களின் தோல்வி யினால் துவண்டு போயினர். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களோ, "எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் அல்லவா ? தம் அடைந்த தோல்வியால், அவர் துவண்டு போய் படுத்து விட வில்லை. சோகம் தாளாமல், நெஞ்சு விம்ம நின்ற தம் தம்பியர்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அக்கறையோடு மேற்கொண்டு செயல்களில் ஈடுபட்டார்.

04-03-1962 அன்று நடைபெற்ற தி. மு. க. தேர்தல் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், உற்சாக உரையாற்றிய உரை பொன்னேட்டில் பொறிக்கத்தக்கதாகும்

அந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையில்,.

"ஐரோப்பா கண்டத்தில் இசுலாமியருக்கும், கிரிஸ்தவருக்கும் , இடையே புனிதப்போர் நிகழ்ந்தது. இயேசு பிறந்த ஜெருசலம் நகருக்குள், கிறிஸ்தவர்கள் நுழையக்கூடாது என்று இசுலாமியர்கள் கூறியதாலேயே அந்த போர் நிகழ்ந்தது.

சாலடி மன்னன், இசுலாமியருக்கு தலைமை வகிதது போர் நடத்தினான். ரிச்சர்டு என்பவன் கிறிஸ்தவருக்கு தலைமை தாங்கினான். ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லாக் கிறிஸ்தவர்களும் ஜெருசலம் நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நிபந்தனை என்றான் சாலடி மன்னன். அதாவது,
கிறிஸ்தவர்களின் தலைவன் ரிச்சர்டு மட்டும் உள்ளே வரக்கூடாது என்பது தான் அந்த போர் நிறுத்த நிபந்தனையின் முக்கிய அம்சம்.

அது போல், நான் வெளியே நிற்கிறேன்; என் தம்பியரின் படை உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாத அணிவகுப்பு அமைக்க முடியும். ஆனால், அணிவகுப்பு இல்லாது தலைவைனை அமைக்க முடியாது. என் தோல்வியை பற்றி வருந்துவபர்களுக்கு நான் இதைத்தான் சொல்லிக் கொள்ளுவேன். கழகம் பெற்றுள்ள இந்த வெற்றி குறித்து நீங்கள் அடைய வேண்டிய மகிழ்ச்சியை இன்றே அடைந்து விடுங்கள். நாளை முதல், இதை விட மிகக் கடுமையான கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் மிக்க பணிகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

என்று பலத்த கரவொலிக்கிடையே, பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.

Scottkaz
15th September 2015, 06:07 PM
http://i57.tinypic.com/4j2jy9.jpg

Scottkaz
15th September 2015, 06:11 PM
http://i58.tinypic.com/2n24oj7.jpg

Scottkaz
15th September 2015, 06:14 PM
2000 முத்தான பதிவுகள் வழங்கிய பேராசிரியர் திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Scottkaz
15th September 2015, 06:15 PM
http://i60.tinypic.com/13z5tg7.jpg

Scottkaz
15th September 2015, 06:16 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள் அலங்கரித்த பதவிகள் :

1931-32 ..... கல்லூரி பேரவைத்தலைவர்
1932-33 கல்லூரி பொருளியல் பேரவைத்தலைவர்
1939 நீதிக்கட்சி அமைப்பாளர்
1940 திராவிட கழக பொது செயலாளர்
1949 திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்
1957-62 காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
1962-67 மாநிலங்களவை உறுப்பினர்
06-03-1967 முதல் 02-02-1969 வரை .... தமிழக முதல்வர் !.


சூப்பர் சார்

Scottkaz
15th September 2015, 06:19 PM
http://i58.tinypic.com/2v16k9d.jpg

Scottkaz
15th September 2015, 06:27 PM
மிகவும் வெற்றிகரமாக மக்கள்திலகம் பகுதி 16 நிறையு செய்யம் நண்பர் திரு v p சத்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Scottkaz
15th September 2015, 06:28 PM
http://i61.tinypic.com/2zs1wyw.jpg

Scottkaz
15th September 2015, 06:38 PM
http://i62.tinypic.com/34ysqrd.jpg

oygateedat
15th September 2015, 06:46 PM
Congrats Prof selvakumar sir for crossing 2000 postings.

oygateedat
15th September 2015, 06:50 PM
Welcome Mr.Hussain Ar

oygateedat
15th September 2015, 06:53 PM
http://s3.postimg.org/bli2crp2r/IMG_20150915_WA0001.jpg (http://postimage.org/)

oygateedat
15th September 2015, 06:57 PM
http://s16.postimg.org/534f2vhs5/Annadurai_a.jpg (http://postimage.org/)

oygateedat
15th September 2015, 07:14 PM
அறிஞர் அண்ணாவின் அரிய புகைப்படங்களையும் அவரைப்பற்றி பல செய்திகளையும் பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

Scottkaz
15th September 2015, 07:36 PM
http://s3.postimg.org/bli2crp2r/IMG_20150915_WA0001.jpg (http://postimage.org/)

அருமை திரு இரவிச்சந்திரன் சார்

Scottkaz
15th September 2015, 07:41 PM
நமது திரியின் 17 வது பாகத்தை துவக்கி வைக்க திரு suharaam அவர்களை அழைக்கிறேன்

ainefal
15th September 2015, 07:41 PM
இரண்டாவது நினைவூட்டல்

வணக்கம் அதிராம் சார்,

தங்களது பதில் இன்னமும் வரவில்லை அதிராம் சார். இதற்குபிரங்கு இன்னும் ஒரே ஒரு "நினைவூட்டல் - மூன்றாவது நினைவூட்டல்", அதற்க்கு அப்புறம் கேட்கமாட்டேன் சார்:

https://www.youtube.com/watch?v=7FZvzZNDzUI

நன்றி.

மூன்றாவது நினைவூட்டல்,

வணக்கம் ஆதிராம் சார்,

இந்த மூன்றாவது நினைவூட்டளுடன் இந்திய விவாதம் முடிகிறது.

இனி இதை குறித்து தங்காளிடம் எனக்கு "வினா" இல்லை சார். வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/watch?v=ys9IuzHoW5U

நன்றி

fidowag
15th September 2015, 07:50 PM
அனுதாபச் செய்தி.
----------------------------

மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பக்தர் திரு. எஸ். குமார்
அவர்களின் அன்பு தந்தையார் திரு. க. ந. சூரிய நாராயணன் ஐயர் -வயது 82
அவர்கள் இன்று (15/09/2015) காலை 11 மணியளவில் மதுரை, வடக்கு மாசி வீதி மற்றும் தானப்ப முதலி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்
என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது பூத உடல் நாளை (16/09/2015) காலை 10 மணியளவில் அருகில் உள்ள
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று திரு. எஸ். குமார் கண்ணீர் மல்க
தெரிவித்தார்.

தன் தந்தையை இழந்து வாடும் திரு. எஸ். குமார். மற்றும் அவரது குடும்பத்தினர்,
உற்றார் உறவினர் அனைவருக்கும் சென்னை மாநகர அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகள் சார்பாகவும் , என் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எஸ். குமார் அவர்களின் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கட்டும்.


ஆர். லோகநாதன்.

Scottkaz
15th September 2015, 07:52 PM
https://youtu.be/mJwYL23j42Y

Scottkaz
15th September 2015, 07:57 PM
ஆழ்ந்த அனுதாபங்கள் திரு மதுரை எஸ்.குமார் சார்

Scottkaz
15th September 2015, 07:59 PM
நமது நண்பர்கள் அனைவரும் 17 வது பாகத்தில் பயணிக்கவும்
http://www.mayyam.com/talk/showthread.php?11532-Makkalthilagam-mgrpart-17

http://i60.tinypic.com/11lsrbl.jpg

fidowag
15th September 2015, 08:21 PM
http://i62.tinypic.com/63ubfc.jpg

ainefal
15th September 2015, 08:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/vlcsnap-2014-11-02-22h26m08s117_zpsfnxxqizf.png

http://www.mayyam.com/talk/showthrea...gam-mgrpart-17

fidowag
15th September 2015, 08:42 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 16ஐ செவ்வனே துவக்கி வீறு நடை போட்டு வெற்றிகரமாக முடிவடைய காரணமாக திகழ்ந்த நண்பர் திரு. வி.பி.சத்யா
அவர்களுக்கும், இந்த பாகம் குறுகிய காலத்தில் நிறைவு பெற நம்நாடு/சிவந்த மண்
வசூல் சாதனைகள்/புள்ளி விவரங்கள் அடங்கிய வாதங்கள், (இந்த பாகத்துடன்
முடியட்டும் ) நிறைந்த பதிவுகள் பதிவு செய்த நடிகர் திலகம் நண்பர்களுக்கும்
மனமார்ந்த நன்றி.! நன்றி ! நன்றி!.

ஆர். லோகநாதன்.

fidowag
15th September 2015, 08:49 PM
http://i60.tinypic.com/34guc6r.jpg




மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -17 ஐ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெருமையுடன் தொடங்கிய அருமை நண்பர் திரு. சுகாராம் அவர்களுக்கு
அண்ணாவின் இதயக்கனி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியோடு , அமர்க்களமாக
அனைத்து வகைகளிலும் பதிவுகள் இட்டு , இந்த பாகம் அசுர வேகத்தில் பயணிக்க
என்னுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குவேன் என்று நல்வாழ்த்துக்களோடு
வரவேற்கிறேன் .


ஆர். லோகநாதன்.

fidowag
15th September 2015, 08:50 PM
சென்னை பெரம்பூரில் வசிக்கும் நண்பர் திரு. ஹுசேன் அவர்களின் வரவு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -17 ல் நல்வரவு ஆகுக. பல அரிய செய்திகள் /புகைபடங்கள் அள்ளித் தருக.


ஆர். லோகநாதன்.

fidowag
15th September 2015, 08:51 PM
http://i58.tinypic.com/4s1z6d.jpg

oygateedat
15th September 2015, 08:55 PM
மக்கள் திலகத்தின் பக்தர் திரு குமார் (மதுரை) அவர்களின் அன்பு தந்தை மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

fidowag
15th September 2015, 08:59 PM
தமிழ் இந்து -15/09/2015
http://i61.tinypic.com/jl2ero.jpg

fidowag
15th September 2015, 09:03 PM
பேரறிஞர் அண்ணாவின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் /விழாக்கள் குறித்த புகைப்படங்கள் பதிவிடுவதில் மகிழ்ச்சி.

புகைப்படங்கள் உதவி :திரு. சி.எஸ். குமார், பெங்களுரு.

http://i59.tinypic.com/sddwfr.jpg