PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

Russelldvt
12th October 2015, 03:11 AM
http://i59.tinypic.com/2a83vvt.jpg

Russelldvt
12th October 2015, 03:12 AM
http://i57.tinypic.com/o0vvy0.jpg

Russelldvt
12th October 2015, 03:13 AM
http://i59.tinypic.com/w1bin4.jpg

Russelldvt
12th October 2015, 03:13 AM
http://i58.tinypic.com/9gk102.jpg

Russelldvt
12th October 2015, 03:14 AM
http://i62.tinypic.com/n6ds01.jpg

Russelldvt
12th October 2015, 03:15 AM
http://i60.tinypic.com/2aiwsw.jpg

Russelldvt
12th October 2015, 03:16 AM
http://i59.tinypic.com/be7mkg.jpg

Russelldvt
12th October 2015, 03:16 AM
http://i62.tinypic.com/33nkzzr.jpg

Russelldvt
12th October 2015, 03:17 AM
http://i57.tinypic.com/2ldwnlj.jpg

Russelldvt
12th October 2015, 03:18 AM
http://i61.tinypic.com/34rdguv.jpg

Russelldvt
12th October 2015, 03:19 AM
http://i62.tinypic.com/27y9gj.jpg

Russelldvt
12th October 2015, 03:19 AM
http://i57.tinypic.com/rlgsaq.jpg

Russelldvt
12th October 2015, 03:20 AM
http://i60.tinypic.com/34hz1gg.jpg

Russelldvt
12th October 2015, 03:21 AM
http://i61.tinypic.com/5mlmoj.jpg

Russelldvt
12th October 2015, 03:22 AM
http://i57.tinypic.com/eq1f9e.jpg

Russelldvt
12th October 2015, 03:23 AM
http://i62.tinypic.com/2qxq1vo.jpg

Russelldvt
12th October 2015, 03:24 AM
http://i62.tinypic.com/1zdsu52.jpg

Russelldvt
12th October 2015, 03:25 AM
http://i57.tinypic.com/mjzms.jpg

Russelldvt
12th October 2015, 03:26 AM
http://i60.tinypic.com/2nh3jb9.jpg

Russelldvt
12th October 2015, 03:28 AM
http://i61.tinypic.com/azavcy.jpg

http://i62.tinypic.com/20aezom.jpg

Russelldvt
12th October 2015, 03:29 AM
http://i62.tinypic.com/10fpbfk.jpg

Russelldvt
12th October 2015, 03:30 AM
http://i57.tinypic.com/so7im9.jpg

goldstar
12th October 2015, 06:43 AM
http://i60.tinypic.com/34hz1gg.jpg

தினந்தோறோம் நடிகர் திலகத்தின் காட்சிகளை வாரி வாரி வழங்கி எங்களை எல்லோரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் திரு முத்தையன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி.

RAGHAVENDRA
12th October 2015, 07:23 AM
http://timesofindia.indiatimes.com/photo/49311522.cms

மனோரமா பெண் நடிகர் திலகம்... முதலமைச்சர் ஜெயலலிதா அஞ்சலி...

https://www.youtube.com/watch?v=oaopEP6sJr0

RAGHAVENDRA
12th October 2015, 07:26 AM
மனோரமா அவர்களின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அஞ்சலி

https://www.youtube.com/watch?v=DmUcQ9WBu3o

vasudevan31355
12th October 2015, 07:33 AM
தம்பி செந்தில்வேல்,

அதிகம் பேசப்படாத 'கல்தூண்' படத்தின் 'சிங்காரச் சிட்டுத்தான் எண்ட புள்ள' பாடலை எடுத்து அலசி சந்தோஷப் படுத்தியுள்ளீர்கள். நிஜமாகவே அருமையான பாடல் அது. நம் மண்ணின் கலாச்சாரத்தையும், கொங்கு நாட்டின் பெருமையையும் பறை சாற்றும் இப்பாடலுக்கு சரியான அங்கீகாரம் எதிர்பார்த்த மாதிரி கிடைக்காதது பெரும் வருத்தமே. நாம் நேற்று கூட இது பற்றி செல்லில் பேசும்போது ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தோம். அது போலத்தான் நான் கொஞ்ச நாட்களுக்கு முன் எழுதிய பரமேஸ்வர கவுண்டரின் வேல் சரித்திரப் பாடல். பின்னாளில் வந்த நடிகர் திலகத்தின் நிறையப் பாடல்கள் இது போன்ற விஷயங்களும், இனிமையும் உடையவை. ஏனோ பழைய படங்களின் அளவிற்கு நம்மில் சிலர் கூட இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ரொம்ப சுமாரான 'தர்மராஜா' படத்தில் கூட 'ஜெயித்துக் கொண்டே இருப்பேன்...இந்த தேசத்தின் பெயர் காக்க' என்ற நல்ல தேச பக்தியை ஊட்டும் பாடல் ஒன்று உண்டு. படங்கள் அப்படி இப்படி எந்தக் காலத்திலேயும் உண்டு. ஆனால் காட்சிகள், பாடல்கள் என்று நடிகர் திலகம் முத்திரை என்பது ஒவ்வொரு படத்திலும் எப்போதுமே உண்டு. அவற்றை அனைவரும் இணைந்து வெளிக்கொணர்வோம்.

தங்களின் நடிகர் திலக படங்களின் ரிலீஸ் விளம்பர ஆவணங்கள் அருமை என்பது மட்டுமல்ல. வெரி நீட். அழகாக இருந்தது. என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

நேற்று 'பாக்கியவதி' திரைப்படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ராகவேந்திரன் சாரிடம் கூட அடிக்கடி அந்தப் படத்தைப் பற்றிப் பேசுவேன். அந்தப் படத்தின் டிவிடி வராத காலத்தில் ஒரு சமயம் பல்வேறு சிரமங்களுக்கிடையில் ஜெயா மூவீஸ் சானலில் ஒருமுறை அந்தப் படத்தைப் போட்டபோது பதிவு செய்தேன். மிக அருமையான படம். நீங்கள் கூட நேற்று முன் தினம் பார்த்ததாகக் கூறினீர்கள்.

பழைய படங்களிலும் எடுத்து அலச வேண்டிய முத்துக்கள் நிறைய உண்டு. அதில் பாக்கியவதி, வாழ்விலே ஒரு நாள் போன்ற படங்கள் நிச்சயம் உண்டு. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

தங்கள் உழைப்புக்கு என் இனிதான வாழ்த்துக்கள்.

இதோ சிங்கார சிட்டுத்தான் பாடல் வீடியோவாக.



https://youtu.be/HtI2WuwCvyI

RAGHAVENDRA
12th October 2015, 08:16 AM
வாசு சார்
தாங்கள் கூறியதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
தம்பி செந்தில்வேல் போன்றவர்கள், நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்களால் ஈர்க்கப்பட்டு ரசிகர்களானவர்கள். இதிலேயே நடிகர் திலகத்தின் ஆளுமை புலனாகும். எந்த வயதினரையும் எந்தக் காலத்திலும் எந்தப் படத்தின் மூலமும் ஈர்க்கும் வல்லமை படைத்தவர் நடிகர் திலகம் என்பதற்கு இது சரியான சான்று. பின்னாளைய படங்களில் எந்தெந்த படங்களில் நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பு அலசப்படவில்லை என்பதைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றிய சரியான அணுகுமுறையை நமது ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செவ்வனே செய்ய தாங்களே பொருத்தமானவர். இதில் தங்களுடன் சேர்ந்து நானும் கலந்து கொள்கிறேன்.

அவருடைய நடிப்பு இறுதி வரை முழுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாக்கியவதி படத்தில் திருடனாக, பெண்ணின் பெருமை படத்தில் வில்லனாக, திரும்பிப்பார் படத்தில் ஸ்த்ரீலோலனாக என்று நெகடிவ் பாத்திரங்களில் இமேஜ் பார்க்காமல், இமேஜ் என்கிற வளையத்திற்குள் சிக்காமல், நடித்தவர் நடிகர் திலகம்.

விரைவில் இப்பணியைத் தாங்கள் தொடர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

vasudevan31355
12th October 2015, 09:43 AM
'நடப்பது சுகமென நடத்து'

https://i.ytimg.com/vi/svRAEAfMiwk/hqdefault.jpg

'மூன்று தெய்வங்கள்'

படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.

கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.

மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.

நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.

'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.

அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.

அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.

இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.

சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.

இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.

http://i.ytimg.com/vi/9YiNDzAL3P4/hqdefault.jpg

காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.

குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.

கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.


முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!

பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.

நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.

சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச்
சான்றுகள்.

ச்சும்மா ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.


நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.

முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.

ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.

அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.

http://i57.tinypic.com/23ickex.jpg

ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ

டி.எம்.எஸ்

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

பாலா

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா

போதாது நீ கண்ட ராஜாங்கம்

பாலா

பேசாதே போலி வேதாந்தம்

சாய்பாபா

பாராதே வெறும் பஞ்சாங்கம்

டி.எம்.எஸ்

உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து

பாலா

சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே

டி.எம்.எஸ்

சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே

மூவரும்

நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு

டி.எம்.எஸ்

நடப்பது சுகமென நடத்து

பாலா

வரும் நாளை உனதென நினைத்து

டி.எம்.எஸ்

வாழ்வே பெரிதென மதித்து

பாலா

நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

டி.எம்.எஸ்

கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்

பாலா

பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்

சாய்பாபா

கண் போடு மெல்லக் கை போடு

டி.எம்.எஸ்

சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே

பாலா

அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு

டி..எம்.எஸ்

அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு

மூவரும்

செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்

நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து


https://youtu.be/ZQABO4Dk7hQ

Russellsmd
12th October 2015, 10:04 AM
அருமை..வாசு சார்.

விமர்சனம், விளக்கம்,வர்ணனை.. இதற்கெல்லாம்
பொருள்,உங்கள் எழுத்தில்தான்
இருக்கிறது எனலாம்.

நன்றி.

Sent from my GT-S6312 using Tapatalk

sivaa
12th October 2015, 10:28 AM
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

சூப்பர்

Russellxor
12th October 2015, 02:28 PM
வாசு சார்
மூன்று தெய்வங்கள் பாடல் அலசல் அருமை.கன்டினியுட்டி கோட்டை விட்டது பற்றி தாங்கள் கவனம் கொண்டு குறிப்பிட்டது
வியக்க வைக்கிறது.நம்மில் பெரும்பாலோர் tmsகுரலில் மட்டுமே கவனம் கொள்வோம்.
தாங்கள் அதைத் தாண்டி எல்லாவற்றையும் அப்சர்வேசன் செய்து எழுதுவது ஆச்சர்யமான விஷயம்.
நன்றி.

Russellxor
12th October 2015, 04:44 PM
Sivaji Rasigan
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565464131_zpspvzkhogf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565464131_zpspvzkhogf.jpg.html)

Russellxor
12th October 2015, 04:45 PM
பொம்மை http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565447349_zpsczvpxery.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565447349_zpsczvpxery.jpg.html)

Russellxor
12th October 2015, 04:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565444136_zpskioexkpt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565444136_zpskioexkpt.jpg.html)

Russellxor
12th October 2015, 04:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565440792_zpsk3dz3iga.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565440792_zpsk3dz3iga.jpg.html)

Russellxor
12th October 2015, 04:47 PM
Sivaji Rasigan http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565363447_zpsn33ssbuz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565363447_zpsn33ssbuz.jpg.html)

Russellxor
12th October 2015, 04:48 PM
பொம்மை
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565359959_zpsmn1a8bvw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565359959_zpsmn1a8bvw.jpg.html)

Russellxor
12th October 2015, 04:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565356415_zpswgyhw1cw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565356415_zpswgyhw1cw.jpg.html)

Russellxor
12th October 2015, 04:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565343630_zpsybillesu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565343630_zpsybillesu.jpg.html)

Russellxor
12th October 2015, 04:50 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565339901_zpseikmlbbp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565339901_zpseikmlbbp.jpg.html)

Russellxor
12th October 2015, 04:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565335728_zpsy8canovy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565335728_zpsy8canovy.jpg.html)

Russellxor
12th October 2015, 04:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565318090_zpslotk6xkh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565318090_zpslotk6xkh.jpg.html)

Russellxor
12th October 2015, 04:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565314870_zps6sbkfcjb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565314870_zps6sbkfcjb.jpg.html)

Russellxor
12th October 2015, 04:54 PM
இரண்டு உருவங்களுக்கும் எத்தனை வித்தியாசம் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565306233_zpsms6d5ins.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565306233_zpsms6d5ins.jpg.html)

Russellxor
12th October 2015, 04:54 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565297495_zpsm2rmljjy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565297495_zpsm2rmljjy.jpg.html)

Russellxor
12th October 2015, 04:55 PM
சிவாஜி ரசிகன்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565293468_zpszzaeyljf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565293468_zpszzaeyljf.jpg.html)

Russellsmd
12th October 2015, 05:23 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/kavithai_zps5qvvr3ae.jpeg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/kavithai_zps5qvvr3ae.jpeg.html)

திருச்சியைச் சேர்ந்த அன்புச்
சகோதரர்.திரு. பொன்.ரவிச்சந்திரன் அவர்கள் எழுதி,
எனக்கு அனுப்பி வைத்த கவிதை இது.

"நான் சுதந்திர இந்தியாவின் சொத்து"
-ஆரம்ப உண்மையே அமர்க்களப்படுத்துகிறது.

"நான் ஆனைகள் வழங்கி ஆலயம் தொழுதவன்."
-நிஜமான நிஜம் நெகிழ வைக்கிறது.

"அந்நியன் எனக்கு அநீதி இழைத்தது கயத்தாறில்"
-என்று கட்டபொம்மன் கவலை பேச..
"என் மக்களே எனக்கு அநீதி
இழைத்தது திருவையாறில்."
-என்று நம்மவர் சொல்வதாய்
வரும் இடத்தில் கண்களின்
ஓரத்தில் கண்ணீர் துளிர்க்கிறது.

"கட்டபொம்மனாக மட்டுமே
நான் வாழ்ந்தேன்"என கட்டபொம்மன் மார்தட்ட..

"கட்டபொம்மனாகவும் நான்
வாழ்ந்தேன்"என நம்மவர் பூர்த்தி செய்யும் போது நாம்
அனுபவிக்கும் ஆனந்தக் காற்று
அந்தக் கண்ணீரை உலர வைக்கிறது.

நல்ல கற்பனை.
அது,மிகையாகப் போய்விடாமல் அழகான கவி வடிவத்திற்குள் அடக்கிய் திறமை.

நன்று.

அவருக்கெனது வாழ்த்துகளும், நன்றிகளும்.
--------
கொஞ்ச நேரத்துக்கு முன்
என்னோடு அன்போடு அலைபேசியில் உரையாடிய்
திரு.பொன் .ரவிச்சந்திரன் அவர்கள், திருச்சியில் நேற்று நடிகர் திலகத்தின் பிறந்த தின விழா சிறப்புடன் நிகழ்ந்ததை
மகிழ்வுடன் தெரிவித்தார்.

நடிகர் திலகத்திற்கென நேரம் ஒதுக்கி, அவர் புகழ் பரப்ப நாமெல்லாம் கடமைப்பட்டவர்கள் என்று
பெருமிதப்பட்டு பேசினார்.

"இரண்டு கைகள் நான்கானால்"
என்கிற தலைவரின் உத்வேகப்
பாடல் உள்ளத்தில் ஓடுகிறது.

எங்களால் இயன்ற வகையில்
தலைவனின் புகழ் பரப்பும் பணியினைச் சிறப்புறச்
செய்வோமெனும் நம்பிக்கை
பிறக்கிறது.
----------
"அமுத சுரபி"கட்டுரை குறித்த
எனது பதிவிற்குப் பேருதவி
புரியும் விதத்தில்..
நடிகர் திலகத்திற்காக அமரர்.
மலேஷியா வாசுதேவன் பாடிய
மேலும் மூன்று பாடல்களை
சிபாரிசு செய்திருக்கிறார்.

1. ஒரு கூட்டுக் கிளியாக..
-படிக்காதவன்.

2. மாடப்புறாவோ-இமைகள்.

3. யாவும் நீயப்பா-வாழ்க்கை.

"யாவும் நீயப்பா"-பாடலை
எழுத வேண்டும் என்கிற ஆவலை அதிகமாக்கி விட்டார்.
நன்றிகள் அவருக்கு.



Sent from my GT-S6312 using Tapatalk

Russellxor
12th October 2015, 05:26 PM
பேசும்படம் இதழில் வந்த கட்டுரை http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444650725895_zpsuoop4lnc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444650725895_zpsuoop4lnc.jpg.html)

Contd...

Russellxor
12th October 2015, 05:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444650712046_zpsdy5ifxd5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444650712046_zpsdy5ifxd5.jpg.html)

Contd...

Russellxor
12th October 2015, 05:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444650722655_zpsuengn7xm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444650722655_zpsuengn7xm.jpg.html)




http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444650715404_zps2hzhypkg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444650715404_zps2hzhypkg.jpg.html)
Contd...

Russellxor
12th October 2015, 05:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444650719229_zpsxn5xu0s2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444650719229_zpsxn5xu0s2.jpg.html)

KCSHEKAR
12th October 2015, 06:17 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/IMG_201510285_0833_zpsjec0jinz.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/IMG_201510285_0833_zpsjec0jinz.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/88thBirth%20Day%20-2015/IMG_201510285_0832_zpswqzlji01.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/88thBirth%20Day%20-2015/IMG_201510285_0832_zpswqzlji01.jpg.html)

vasudevan31355
12th October 2015, 06:31 PM
தம்பி செந்தில்வேல்,

என்னவென்று சொல்வது உங்கள் அருமைப் பதிவுகளை? லட்டு மாதிரி எடுத்துக் கொண்டேன். குறிப்பாக 'மூன்று தெய்வங்கள்' பாடலுக்கேற்ற விளம்பரப் பதிவு ஜோர். எல்லாமே அற்புதம். அதுவும் என் மனம் கவர்ந்த 'ராமன் எத்தனை ராமனடி'காவிய விளம்பரங்கள் ரகளை. நன்றிகள் ஆயிரம் தங்களுக்கு. 'நடப்பது சுகமென நடத்து' பாடல் பாராட்டிற்கும் சேர்த்து.

Russelldvt
12th October 2015, 06:32 PM
இரண்டு உருவங்களுக்கும் எத்தனை வித்தியாசம் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444565306233_zpsms6d5ins.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444565306233_zpsms6d5ins.jpg.html)

செந்தில் சார் அபாரம்..உங்கள் உழைப்புக்கு ஈடு எதுவும் கிடையாது..நடிகர் திலகத்தின் படங்களின் விளம்பர பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது..நான் போடும் ச்டில்ல்கள் உங்களது ஒரு பதிவுக்கு ஈடு ஆகாது..மனமார்ந்த வாழ்த்துக்கள்..

vasudevan31355
12th October 2015, 06:34 PM
தம்பி செந்தில்வேல்,

பேசும் படம் 'எல்லாம் வல்லவர்' கட்டுரை அற்புதம். 'நடிகர் திலகம்' பட்டம் தந்தற்கு பெருமைப்பட்ட 'பேசும்படம்' என்றும் நம் நெஞ்சில் நிரந்தரக் குடியிருக்கும். அருமையான பதிவிற்கு நன்றி.

vasudevan31355
12th October 2015, 06:37 PM
செந்தில் சார் அபாரம்..உங்கள் உழைப்புக்கு ஈடு எதுவும் கிடையாது..நடிகர் திலகத்தின் படங்களின் விளம்பர பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது..நான் போடும் ச்டில்ல்களை விட உங்களது ஒரு பதிவுக்கு ஈடு ஆகாது..அடுத்து நான் பதிவிடும் நடிகர்திலகத்தின் படத்தின் விளம்பரபடுதியதிர்க்கு என் நன்றி நண்பா..

முத்தையன் அம்மு சார்,

உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு சிறு உதாரணம் உங்கள் பதிவு. உங்களுடைய 'எங்கிருந்தோ வந்தாள்' படக் காட்சிப் பதிவுகளை துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தது போல் மறந்து விட முடியாது. அருமை. தங்கள் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங். நன்றி!

vasudevan31355
12th October 2015, 06:44 PM
1500 விலை மதிக்க முடியாத பொக்கிஷப் பதிவுகளை அளித்த செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களின் சார்பாக மனமுவந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

தங்களுக்கு என் அன்புப் பரிசு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-68.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/3-68.jpg.html)

Russelldvt
12th October 2015, 07:11 PM
Now Running KTV Ple. Watch My NT Fr.

http://i57.tinypic.com/3446r12.jpg

http://i62.tinypic.com/98ftog.jpg http://i59.tinypic.com/vpxiqc.jpg http://i59.tinypic.com/261ltt4.jpg

Russellxor
12th October 2015, 07:18 PM
முத்தையன் அம்மு அவர்களே
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!
மேலும்.
தங்களுடைய உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.
இது போன்று தொடர்ச்சியான படப்பதிவுகளை தொடர்ச்சியாக
பதிவு செய்யும் நபர் நீங்கள் ஒருவரே.அதிலும் நேர்த்தியான பதிவுகள்.ஏற்கெனவே கோபால் சார் சொன்னதுபோல் (நான் என்ன ஸ்டில்லை மனதில் நினைக்கிறேனோ அந்த ஸ்டில் தவறாமல் வந்து விழும் )அதே
எண்ணமும் தான் எனக்கும்.
உங்கள் முயற்சி தொடரட்டும்.
உங்களுக்காக இதோ...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656849336_zpsmp43hmj5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656849336_zpsmp43hmj5.jpg.html)

Russellxor
12th October 2015, 07:22 PM
வாசு சார்
உங்களுக்காக

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656823605_zpsmqnylyxc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656823605_zpsmqnylyxc.jpg.html)




ஒரு திரைப்படத்திற்கு உண்டான வர்ணனையை இந்த ஒரு படம் சொல்கிறதே.எழுதுங்கள் உங்கள் பாணியில்.,

Russellxor
12th October 2015, 07:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656903577_zpscpjegzbt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656903577_zpscpjegzbt.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656906850_zpsdktz9c5d.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656906850_zpsdktz9c5d.jpg.html)

Russellxor
12th October 2015, 07:24 PM
அது தான் சிவாஜி
சவாலே சமாளி சூட்டிங் ஸ்பாட் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656894018_zpsogzlw9xz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656894018_zpsogzlw9xz.jpg.html)

Russellxor
12th October 2015, 07:25 PM
மன்னவன் வந்தானடி
சூட்டிங் ஸ்பாட் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656891081_zpshwwxcu7p.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656891081_zpshwwxcu7p.jpg.html)

Russellxor
12th October 2015, 07:27 PM
சத்தியவான் சாவித்திரி நாடக மேடை
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656887923_zpsbbcmzsuv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656887923_zpsbbcmzsuv.jpg.html)

Russellxor
12th October 2015, 07:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656883807_zpsvjkq6toe.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656883807_zpsvjkq6toe.jpg.html)

Russellxor
12th October 2015, 07:29 PM
இரு துருவம் படப்பிடிப்பு http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656879003_zpskfvcrtxa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656879003_zpskfvcrtxa.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656868315_zpseunbeeww.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656868315_zpseunbeeww.jpg.html)

Russellxor
12th October 2015, 07:30 PM
சொர்க்கம்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656875486_zpslfgzk7bh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656875486_zpslfgzk7bh.jpg.html)

Russellxor
12th October 2015, 07:32 PM
குமாரி பத்மா நாட்டிய அரங்கேற்றத்தின் போது
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656871524_zps9layth7h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656871524_zps9layth7h.jpg.html)

Russellxor
12th October 2015, 07:36 PM
வியட்நாம்வீடு
பட பூஜை
எவ்வளவு சிம்பிள்?

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656865121_zpsz3nkdpou.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656865121_zpsz3nkdpou.jpg.html)

Russellxor
12th October 2015, 07:37 PM
பள்ளிசிறுவர் சிறுமிகளின்நாடக விழா ஒன்றில்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656861840_zps5xosflzj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656861840_zps5xosflzj.jpg.html)

Russellxor
12th October 2015, 07:39 PM
NT AND ACT
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656858486_zpshclutgpl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656858486_zpshclutgpl.jpg.html)

Russellxor
12th October 2015, 07:41 PM
ராகவேந்திரா சார்
இவர்களில் எவரையேனும் தெரியுமா?
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656853842_zpsmkcea23q.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656853842_zpsmkcea23q.jpg.html)

Russellxor
12th October 2015, 07:43 PM
இருமலர்கள் படமாக்கலின்போது http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656831219_zpsiprpdot3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656831219_zpsiprpdot3.jpg.html)

Russellxor
12th October 2015, 07:47 PM
தர்த்தி ஷூட்டிங் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656842795_zpsawsws8va.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656842795_zpsawsws8va.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656838729_zps2h1fmm6w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656838729_zps2h1fmm6w.jpg.html)

Russellxor
12th October 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656827061_zpspwo0n4n1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656827061_zpspwo0n4n1.jpg.html)

Russellxor
12th October 2015, 07:54 PM
நடிகர்திலகத்தின் பின்னால் நிற்கும் சிறுமியைப் பாருங்கள்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656819894_zpsmdkysfyj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444656819894_zpsmdkysfyj.jpg.html)

Russellsmd
12th October 2015, 08:58 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151012203441643_zpspvozikod.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151012203441643_zpspvozikod.jpg.html)

அரங்கம் ஆலயமாக..
அன்றொருநாள் ஒலித்தது இந்த
ஆன்மிகக் குரல்.

கலை தெய்வத்தை தரிசிக்கப்
போன இடத்தில், காது குளிர்வித்தது இந்த தெய்வீக
கானம்.

பாடும் திறமையுடைய என்
நண்பனுடைய பக்திப் பாடல்
தொகுப்பிற்காக நான் எழுதிக்
கொடுத்த ஒரு பாடலினூடே
எழுதியிருந்தேன்.

"கல்லுக்குள்ள சாமிய வச்சது
நம்பிக்கைதானம்மா!"-என்று.

ஆழ்ந்து மனம் ஒன்றி இறை
வணங்கும்போதெல்லாம்,
இந்த நம்பிக்கையை நான்
உணர்ந்தேன்.
..கிறேன்.
...வேன்.
------
"எங்கும் இனிதாக,
எல்லாமும் நலமாக,
பொங்கும் அருட்கடலே..
புண்ணியனே அருள்புரிவாய்.

கண்ணுள் ஒளியானாய்.
கனிவின் வடிவானாய்.
ஹரிசிவன் மகனே நீ
கரையேற வரம் தருவாய்."

-அருளே வடிவான அய்யப்பனில் கரைந்துருகி ஒரே ஒரு முறை நானும் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றதுண்டு.

களைக்கக் களைக்கக் கல்லிலும்,முள்ளிலும் நடந்து
சென்று கடவுள் அய்யப்பனைக்
கண்ட போது அடைந்த பேரின்பத்தை விட, மாலை அணிந்த நாள்தொட்டு தினமும்
கோயிலில் மாலை நேரத்தில்
நடக்கும் பஜனையின் போது
நானடைந்த பரவசம் அதிகம்.

இறைவனை அடைய செல்லும்
வழிகளில் இசையின் வழியே
சிறப்பென்றுணர்ந்த சிலிர்ப்பான
தருணங்கள் அவை.

"வாழ்க்கை" திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்கவும், பார்க்கவும் நேர்ந்த
தருணங்களிலும் அது மாதிரியான சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறேன்.

காவி வேஷ்டியும், கருப்புச் சட்டையும், இடை இறுக்கிய
சிவப்புத் துண்டுமாய்..

நம் நடிகர் திலகம்-

கடவுளை வணங்கும் கடவுள்
போல் ஒரு கம்பீர அமர்வு.

முன்னே துணி விரித்து, முடியாத பிள்ளையைக் கிடத்தியிருக்க..
சேர்த்த கரம் பிரிக்காது சேவித்திருப்போர் கூட்டத்தின்
இசை உருக்கம்...

இதயத்துள் இறை நிறுவும்
இசைஞானி...

பாட்டு வரிகளால் மனம்
நிறைகிற அய்யா.பஞ்சு.அருணாசலம்..

அய்யா நடிகர் திலகத்தின் இசைக் குரலாகவே மாறி நின்ற
அமரர். மலேஷியா வாசுதேவன்
...
எல்லோரும்..
மறக்க முடியாதவர்கள்.
மறக்கக் கூடாதவர்கள்.
---------
"சும்மா ஒரு வாயசைப்புதானே"
என்கிற அசட்டை கிடையாது.
கதைச் சூழலைத் தாண்டிய
சுய திறமை வெளிப்பாடு
கிடையாது..நம்மவரிடம்.

நன்றாகக் கவனித்தால் தெரியும்.

கதைப்படி அத்தனை
மருத்துவர்களும் கைவிட்டு விட்ட தன் பிஞ்சு மகனின்
உயிர் பிழைப்பை கடவுளிடம்
மட்டுமே எதிர்நோக்கியிருக்கிற
ஒரு அபாய சூழல். அம்மாதிரிச்
சூழலில் ஒரு அழுத்தமான சோகம் ஒரு தகப்பனைக் கவ்விக் கொள்வது தவிர்க்கவே
முடியாதது.

பாடலை முழுமையாக கவனித்துப் பாருங்கள்.

கண்களில் நிரந்தரமாய்ப்
படிந்திருக்கும் கவலையும்,
ஆண்டவனை இறைஞ்சிப்
பாடும் அவரது முகத்தில்
சூழலின் இறுக்கமும்..

அழுது வீறிட்டுக் குழந்தை பிழைக்கும் வரைக்கும் மாறவே
மாறாது.
------
நமக்குப் பழகிய கலையின்
தெளிவு விரவிய முகம் பக்கவாட்டில் பிரம்மாண்டமாய்
காட்டப்பட ..நம் நடிகர் திலகம்
வாயசைத்துப் பாடிக் கொண்டிருக்கிறார்.

அவரை வியக்கும் நம் உள்ளமோ..அந்தப் பாடலின்
வரிகளைக் கொண்டே அவரைப் பாடிக் கொண்டிருக்கிறது.

"உயிருக்குள் உயிராக
விளையாடும் ஜோதி.

உலகத்தின் அசைவுக்கு
நீதானே ஆதி."

(நல்ல சமயத்தில் பாடலை நினைவூட்டிய, நட்புமிகு திருச்சி.திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
நன்றி.)

https://youtu.be/Bahd1mbA5SQ

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
12th October 2015, 09:23 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/10985656_454511994708127_4376531061013957812_n_zps b345iusn.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/10985656_454511994708127_4376531061013957812_n_zps b345iusn.jpg.html)


"கலியுக நந்தி
முத்துராக்கண்ணன்
ஒரு தவிலு."-என்றதும்
மேள முழக்கத்துடன்
காட்டப்படும்
அமரர் பாலையாவின்
குலுங்கும் மார்புகள் தவிர
படத்தில் வேறு
கவர்ச்சி கிடையாது.

அர்த்தமற்ற
மசாலாக்கள் கிடையாது.

அழகழகாய் பெண்களுண்டு.
அணுவளவும்
ஆபாசம் கிடையாது.

இசையுண்டு.
காதுகளுக்கு
ஆபத்து கிடையாது.

காதல் உண்டு.
காமம் கிடையாது.

இதில் வரும்
நாகேஷ் போல
சிரிப்பு மூட்டுகிற
வில்லன்
எந்தப் படத்திலும்
கிடையாது.

நம்பியார் இருக்கிறார்.
கை பிசைந்து,
முகம் உருட்டும்
கெட்டதனம் கிடையாது.

நாட்டியப் பேரொளியின்
நடனப் பாதங்கள்
வேறெவர்க்கும்
கிடையாது.

நடிகர் திலகம்-
நாதஸ்வரம் போல.
அவரின்றி
இந்தப் படமே
கிடையாது.

நம்
இதயத் திரையில்
அடிக்கடி ஓடும்
"தில்லானா
மோகனாம்பாள்"
திரைப்படத்தை,
இன்று
இன்னுமொருமுறை
ஓட விட்ட
கே. டி.வி.க்கு
நன்றி சொல்லாவிடில்..
எனக்கு
மோட்சமே
கிடையாது.

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
12th October 2015, 09:54 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015101221441189 8_zpswhyvjc5h.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2015101221441189 8_zpswhyvjc5h.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Jeev
13th October 2015, 04:00 AM
Wonderful comedy by three great stars of the Tamil film industry.

https://www.youtube.com/watch?v=WT_NBeBMDHA

These three legendary actors are irreplaceable.

RAGHAVENDRA
13th October 2015, 06:24 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/senthilvel1500grtgs_zpscuqt5vrh.jpg

டியர் செந்தில்வேல்
தங்களின் அபார உழைப்பும், பெருந்தன்மையான குணமும், நடிகர் திலகத்தின் மேல் வைத்துள்ள ஆழமான பக்தியும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய அளவில் வெற்றியையும் புகழையும் தேடித் தரும். தங்களுடைய ஆயிரத்து ஐநூறு பதிவுகளுமே ஒன்றுக்கொன்று மிஞ்சும் சிறப்பு வாய்ந்தவை.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th October 2015, 06:26 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656853842_zpsmkcea23q.jpg




நினைவில் இல்லை செந்தில்வேல். அதில் ஒருவர் சித்ரா பௌர்ணமி தயாரிப்பாளரான புவனேஸ்வரி மூவீஸ் சீனிவாசன் என எண்ணுகிறேன். உறுதியாக சொல்ல முடியாது. வலது கோடியில் இருப்பவர் இரு துருவம் வசனகர்த்தா எம்.கே.ராமுவைப் போல் தெரிகிறது.

RAGHAVENDRA
13th October 2015, 06:38 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444656891081_zpshwwxcu7p.jpg

மேற்காணும் நிழற்படம் தர்மம் எங்கே படப்பிடிப்பில் எடுத்ததாகும்.

eehaiupehazij
13th October 2015, 08:04 AM
hearty congrats arima senthilvel for crossing 1500 mark of remarkable postings singing the fame of NT, the one and only one of His kind!
senthil

RAGHAVENDRA
13th October 2015, 08:57 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/q81/s720x720/12074811_991494264234579_3343379339629602032_n.jpg ?oh=3bb1e058deeda57d60b7ef29119a8452&oe=5695BC43

From Pesum Padam magazine

JamesFague
13th October 2015, 08:59 AM
Great Work Mr Arima Senthil. Congratulation for your superb postings.






S Vasudevan

RAGHAVENDRA
13th October 2015, 09:17 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/12119042_991499874234018_3013147326713024128_n.jpg ?oh=286f3ecd7223aa6e7ef1d304133ac922&oe=56928A6E

From Pesum Padam magazine

RAGHAVENDRA
13th October 2015, 09:36 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/12112163_991503690900303_4088496162043909531_n.jpg ?oh=fa142a5d118feff0e6bce0538fb552a1&oe=569B2BBE

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தந்த மாபெரும் கொடை வள்ளல் கர்ணன் நடிகர் திலகம். இதோ இந்தப் படத்தில் வெளியாகியுள்ள தகவலை மற்ற எத்தனை பத்திரிகைகள் அந்தக் காலத்தில் வெளியிட்டன.

நிழற்படத்தில் ஜாட்டி அவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் இடையில் நிற்பவர் சக்தி கிருஷ்ணசாமி. ந.தி.க்கு இடப்புறம் பி.ஆர்.பந்துலு

RAGHAVENDRA
13th October 2015, 09:45 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12108736_991503607566978_1260367633388580401_n.jpg ?oh=1f2338234895829b8afae535a86d75b3&oe=56C4D3F2

vasudevan31355
13th October 2015, 10:12 AM
//"உயிருக்குள் உயிராக
விளையாடும் ஜோதி.

உலகத்தின் அசைவுக்கு
நீதானே ஆதி."//

உண்மைதானே ஆதவன் ரவி சார்! தங்கள் கவிதையில் 'வாழ்க்கை' பாடல் வாழ்வாங்கு வாழும். வாழ்க்கைக்குப் பாதை அமைத்துக் கொடுத்தவருக்கு எங்கள் ஆதவனார் சூட்டும் பாமாலைகள் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டவை. திரிக்குக் கிடைத்த தித்திப்புகள் உங்கள் திகட்டாத 'திலக'க் கவிதைகள்.

உங்கள் கவிதைகளுக்கும் சேர்த்து ரசிகன் ஆனேன். பாராட்டுக்கள்.

'யாவும் நீயப்பா
சரணம் சிவாஜியப்பா'.

vasudevan31355
13th October 2015, 10:14 AM
ராகவேந்திரன் சார்,

அற்புத நடிகர் திலகத்தின் நிழற்படங்களுக்கு நன்றி! இதுவரை காணாதவை. தலைவர் பற்றிய பொக்கிஷங்களை அள்ளித்தரும் பொக்கிஷங்கள் நீங்கள், பம்மலார் மற்றும் தம்பி செந்திவேல்.

vasudevan31355
13th October 2015, 12:58 PM
நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொடர்-14

http://i.ytimg.com/vi/T8uX0hsestI/0.jpg

படம்: ராணி லலிதாங்கி

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RaniLalithangi-Dinamani21957_zps52720dc6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RaniLalithangi-Dinamani21957_zps52720dc6.jpg.html)

வெளியான வருடம்: 1957

ஸ்டன்ட் இயக்குனர்

http://i59.tinypic.com/14k8bpt.jpg

பட இயக்கம்: டி.ஆர்.ரகுநாத்

நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொடர் நடுவில் நீண்ட நாட்களாக நின்று போய் விட்டது.

இனி அது தொடரும்.

http://i62.tinypic.com/iw508i.jpghttp://i57.tinypic.com/bffer5.jpg

அழகாபுரிக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதை மனதில் கொண்டு, சினந்து, சதித்திட்டத்தோடு அங்கு நடைபெறும் வீரப் போட்டியில் தன் நாட்டு வீரர்களோடு கலந்து கொள்கிறான் மதிகெட்ட மலை நாட்டு மன்னன் காண்டீபன் (பி.எஸ்.வீரப்பா). மல்யுத்தம், வால்யுத்தம், வேல் யுத்தம் என்று பல போட்டிகள். அழகாபுரி ஆர்ப்பரிப்பு வெற்றி கொள்கிறது அனைத்திலும். அவமானம் தாங்கமாட்டாமல் சபையில் அறைகூவல் விடுக்கிறான் மலைநாட்டான்.

'வாளுக்கு வாள்... தோளுக்குத் தோள்... என்னுடன் எவரேனும் போரிடத் தயாரா?' என்று கொக்கரிக்கிறான். ஆனால் அனல் கக்கும் அவன் கோபம் முன்பு அவனை எதிர்க்கத் துணிவின்றி அமைதி காக்கின்றனர் அனைவரும்.

யாருமே தன்னுடன் போரிட வராததால் இறுமார்ந்து எக்காள இளிப்பு இளிக்கிறான் காண்டீபன். 'நானே வெற்றி வீரன்' என்று மார்தட்டிக் கொள்கிறான் தனக்குத்தானே.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டல்லவா!

அழகாபுரியின் அழகு இளவரசன் அழகேசன் (நடிகர் திலகம்) அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து அமைதியாகவே எழுந்திருக்கிறான். காண்டீபனின் காட்டுக் கூச்சல் சவாலை சந்தோஷமாக எதிர் கொள்கிறான். காண்டீபன் காட்டாறாய் சீறுகிறான் என்றால் அழகேசன் அவனிடன் அனல் பொங்கும் நெருப்பாய் மாறிப் போரிடுகிறான்.

இறுதியில் அழகேசன் காண்டீபனின் கர்வத்தை தன் ஒப்பற்ற வீரத்தால் ஒடுக்குகிறான். தாய் நாட்டிற்கு பெருமை தேடித் தருகிறான்.

'ராணி லலிதாங்கி' படத்தில் வரும் வாள் சண்டைக் காட்சிக்கான முன் கதை இது.

வீரப்பா சபையில் 'நானே வெற்றி வீரன்' என்று வெற்று சவால் விட்டதும், 'நடிகர் திலகம்' ராஜ உடை தரித்து, அழகு இளவரசன் அழகேசனாக தொடை தட்டி, லேசான புன்முறுவலோடு இருக்கையிலிருந்து சவாலை எதிர்கொள்ள எழுந்திருப்பது நம்மை இருக்கையிலிருந்து எழ வைத்து விடும். பின் அங்கிருந்து வீரப்பா இருக்கும் இடம் நோக்கி ஒரு அருமையான அமைதி வீர நடை. (படிக்கட்டிலிருந்து சரியாக 17 ஸ்டெப்ஸ் வைத்து நடந்து வருவார்.) பின்னணி ஒலி எதுவுமே இல்லாமல் அரங்கமே நிசப்தமாய் இருக்க, வீரப்பாவை சில வினாடிகள் ஒரு அலட்சியப் பார்வை பார்ப்பார் கைகளை வீரமாக இடுப்பில் வைத்தபடி. உடலை லேசாக அசைத்தபடி.

'மலைநாட்டானுக்கு அழகாபுரியான் எந்த வகையிலும் இளைத்தவனல்ல'

என்று மக்களைப் பார்த்து வெண்கலக் குரலில் முழங்கி, சிறிது இடைவெளி தந்து,

'வாயால் வீரம் பேசுவதை விடுத்து காரியத்தில் இறங்கலாம். எந்த ஆயுதமானாலும் சரி!

(கண்கள் ஒரு நொடி ஆர்வத்தில் வெளிவந்து பின் உள்வாங்கும். கண்களிலாலேயே எந்த ஆயுதத்தையும் எதிர் கொள்ளத் தயாராய் இருப்பதைக் காட்டி விடுவார். பின் கண்களில் ஒன்றிரண்டு அழகான அலட்சிய சிமிட்டல்களை செய்து காண்பிப்பார்.)

பிறகு ஆயுதத்தைக் கொண்டுவரச் சொல்லி 'ம்' என்று காட்டும் கை செய்கை கைதட்டல்களை அள்ளும்.

http://i57.tinypic.com/5wje2r.jpghttp://i60.tinypic.com/8wf85y.jpghttp://i62.tinypic.com/t51xdz.jpghttp://i57.tinypic.com/9kxcg9.jpg

ஆயதங்களை ஆட்கள் கொண்டுவந்து கொடுத்ததும் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஒரு கையில் உள்ள வாளுக்கு முத்தம் தந்து, இன்னொரு கையில் உள்ள முட்குண்டு போன்ற ஆயுதத்துடன் வீரப்பாவுடன் மோதுவார். வலது கை கத்தி எதிரியின் கத்தியுடன் மோத, அப்படியே பக்கவாட்டில் வந்து ஒரு காலை லேசாக அழகாக உயர்த்தி, கண்கள் பக்கவாட்டில் வீரப்பா மீது பக்காவாகப் பதிந்திருக்க, மறுபடி ஒரு சிறு துள்ளலை எள்ளலாகக் காண்பித்து, தன் முட்குண்டு ஆயுதத்தால் வீரப்பாவின் அதே ஆயதத்துடன் ஒரு தட்டு தட்டுவார். பின் வீரப்பா கத்தியை ஆக்ரோஷமாக நடிகர் திலகத்தின் மீது வீச, வெகு லாவகமாக இலகுவாக அதைத் தடுத்து, இரு ஆயுதங்களையும் தலைக்கு மேல் ஓங்கி எதிர்தாக்குதல் நடத்துவார். இரு கைகளாலும் ஒரு கை தேர்ந்த வீரனாக அவர் வீரப்பாவின் ஆயுதங்களின் தாக்குதல்களை தாங்கி கத்திக்குக் கத்தி... முட்குண்டு ஆயுதத்திற்கு அதுவென்று அனாயாசமாக மோதுவார். ஆயதங்களின் அழுத்தங்களைத் தாங்கியவாறே பின்பக்கமாக சுழன்று சென்று, முழங்காலிட்டு அமர்ந்து, வீரப்பாவின் கத்தி வீச்சை தடுத்தாள்வார். அடுத்த காட்சியில் வீரப்பா தாவி இந்தப் பக்கமாக சுழல, நடிகர் திலகம் அதற்கு இணையாக அந்தப் பக்கம் கால் தூக்கிய அலட்சியமான ஒரு அரைவட்ட சுழலில் அமர்க்களம் புரிவார். (ரொம்ப அழகாக சைடு வாங்கி வருவார். அற்புதம்.) வீரப்பா கத்தி வீச, இவர் பதிலுக்கு தடுப்பதற்காக வீச, வினாடி நேரத்தில் கத்தி வீச்சு மிஸ் ஆவது கூட அழகாகவே இருக்கும். இயற்கையும் அதுதானே! பின் கைகளில் உள்ள ஆயதங்களால் தலைக்கு மேலும், பின் கீழிறக்கி உள்பக்கம் வாங்கியவாறும் வீரப்பாவுடன் மோதுவது கொள்ளை அழகு. நீள் மேஜையில் படுத்தவாறு வீரப்பாவின் மார்புகளில் கால்கள் வைத்து உதைத்துத் தள்ளி, பின் அவரை பின்னுக்குத் துரத்தியபடியே பக்கவாட்டுகளில் கத்திகளை வீசிச் சென்று பின் ஓங்கி வீசுவார்.

(வாட்போரைப் பார்த்துக் கொண்டிருக்கும் 'சித்ரபுரி' மகாராணி பானுமதி இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு 'அட!' என்று ஆச்சர்யப்படும் பாணியில் அலட்சியமாய்த் சிரித்துத் தரும் எக்ஸ்பிரஷனும் எக்ஸலென்ட்.)

பின் வீரப்பாவின் ஆயுதங்களைத் தட்டிவிட்டு, அவரை நிராயுதபாணியாக்கி, தன் கைவசம் உள்ள ஆயுதங்களை ஓங்கி நிற்பது அருமை.

சில லாங் ஷாட்களில் அப்போதைய வழக்கம் போல 'டூப்'கள் சண்டைக் காட்சிக்கு பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். மற்ற காட்சிகளில் குளோஸ்-அப், மற்றும் மிடில் ஷாட்களில் நடிகர் திலகம் வெகு லாவகமாக இந்த சண்டையை செய்திருப்பார். அதில் முக்கியமானது வாள் பயற்சியில் சிறந்த வீரப்பாவின் முரட்டுத் தாக்குதல்களை தடுத்து ஆட்கொள்வது. அவ்வளவு அழகாகத் தடுப்பார். கத்திகளை தலைக்கு மேல் ஓங்கியவாறு மோதும் போதும் பழுத்த அனுபவசாலி போல கைகள் பேசும்.

http://i57.tinypic.com/35aljzk.jpg

பின் வெற்றி வீரனாக சபையோர் முன்னும், மக்களின் முன்னும் அவர் வலது கையை உயர்த்தி, வாகை சூடிய சிரிப்புடன் நடந்து வருவது கொள்ளை அழகு.

நம்மில் பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்திருப்போம். இப்போது நினைவு படுத்திக் கொள்வோம். இதுபோன்ற நடிகர் திலகத்தின் நிறைய சண்டைக் காட்சிகளுடன் சண்டை சச்சரவுகள் இல்லாமல் தொடர்வோம்.

இதோ உங்களுக்காக இன்று 'youtube' ல் தரவேற்றி.


https://youtu.be/atsL-duJvdI

JamesFague
13th October 2015, 02:25 PM
Mr Neyveliar


I am extremely happy to hear from you that the series of NT's Fighting qualities started with Rani Lalithangi. Kindly

start the other series of NT's Dressing that you have stopped.



Regards

vasudevan31355
13th October 2015, 02:37 PM
Mr Neyveliar


I am extremely happy to hear from you that the series of NT's Fighting qualities started with Rani Lalithangi. Kindly

start the other series of NT's Dressing that you have stopped.



Regards

thanks vasu. but time???????

Russellxor
13th October 2015, 03:26 PM
பதிவுகளின் எண்ணிக்கைக்காக
பாராட்டிய நல் இதயங்கள்
ராவேந்திரா அவர்கள்
வாசு அவர்கள்
சிவாஜி செந்தில் அவர்கள்
ஆதவன் அவர்கள்
மற்றும்
திரி நண்பர்கள் அனைவருக்கும்
என்
நன்றிகள்

Russellxor
13th October 2015, 03:57 PM
வாசு சார்
ராணி லலிதாங்கி சண்டைக்காட்சியை இனி எப்போது பார்த்தாலும் உங்கள் எழுத்துக்கள் மனதில் வந்து நிற்கும்.
அருமை.

Gopal.s
13th October 2015, 05:43 PM
வாசு,



ஒவ்வொரு முறை சவாலுக்கு இழுக்கப்படும் சண்டை காட்சிகளில் , முதலில் அவர் நடந்து வரும் முறை,reaction ,ஸ்டைல் எப்படி வேறு படும்? ராணி லலிதாங்கி,காத்தவராயன்,என் தம்பி,கர்ணன் என்று. ஜெயித்ததும் நடக்கும் முறை வேறு.



ராஜசுலோச்சனாவிற்கு ஐந்தாறு close up கிடைத்தும் நீ சொன்ன மாதிரி ஜெயித்தது 2 சான்ஸ் கிடைத்த பானுமதியே.



என்னவொரு ரசனை தோய்ந்த எழுத்து? என்னை திருப்பி எழுதும் ஆசை இருந்தாலும் ,வர விடாமல் இப்படி பதிவால் மிரட்டுகிறாயே,படவா ...ராஸ்கல்....



நண்பன் சாகலாம்.நட்பு சாகாதப்பா. என்ன படம் தெரியுதா....CLUE கொடுத்தாச்சி ல்ல ..

RAGHAVENDRA
13th October 2015, 05:46 PM
வாசு சார்

http://i33.photobucket.com/albums/d90/crycon69/welldone.gif

சண்டை நடுவிலே கொஞ்சம் ஓய்ந்திருந்தது.. இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்டது..

ஆனால் இந்த சண்டை

http://www.animatedimages.org/data/media/707/animated-welcome-image-0291.gif

நடிப்பில் நடிகர் திலகத்தின் அத்தனை பரிமாணங்களையும் இத்திரியில் கொண்டு வர வேண்டும். எந்தத் துறையிலும் முதன்மையானவர் என்பதை அடுத்த தலைமுறை மட்டுமின்றி நம் ரசிகர்களுக்கே கூட தெரிவிக்க வேண்டியுள்ளது. இதனை செய்யும் பணியில் தங்கள் பங்கு தலையாயதாகும்.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

Russelldvt
13th October 2015, 06:26 PM
1500 பதிவுகள் செய்த என் அன்பு நண்பர் செந்திலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

http://i62.tinypic.com/6zo3ti.jpg

adiram
13th October 2015, 08:19 PM
“நடப்பது சுகமென நடத்து”
டியர் வாசு சார்,

இந்தப்பாடல் பற்றிய தங்கள் ஆய்வுக்கு போவதற்கு முன், முரசு தொலைக்காட்சிக்கு நன்றி. இப்படத்தின் எல்லா பாடல்களையும் ( இது போன்ற பல்வேறு படங்களின் அபூர்வ பாடல்களையும்) அடிக்கடி ஒளிபரப்பி, 'இப்படியும் அருமையான பாடல்கள் தமிழ்படங்களில் வந்துள்ளன' என்பதை மக்களுக்கு காண்பித்து வருவதற்காக.

முன்னமும் சேனல்கள் பாடல்களை ஒளிபரப்பினர். ஆனால் அவைகளைபொருத்தவரை ‘மூன்று தெய்வங்கள்’ படத்தில் ஒரேஒரு பாடல்தான். அது “வசந்தத்தில் ஓர் நாள்” மட்டும்தான் என்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக இருந்துவந்தனர். வருஷத்துக்கு ஒருமுறை தீபாவளிக்கு மட்டும் “தாயெனும் செல்வங்கள்” பாடலை தேடிஎடுத்து ஒளிபரப்புவர். மற்ற பாடல்கள் அம்போ.

ஆனால் தற்போது முரசு தொலைக்காட்சியில் இப்படத்தின் எல்லா பாடல்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. அவற்றில் ராட்சசி கலக்கியிருக்கும் “நீயொரு செல்லப்பிள்ளை” பாடலில் (சரணம் மெட்டு அட்டகாசம்) சிவகுமார், சந்திரகலா காதலை விட நான் ரசிப்பது வெண்ணிற ஆடை மூர்த்தியின் சேட்டைகளையே.

தற்போது நீங்கள் ஆய்ந்திருக்கும் “நடப்பது சுகமென நடத்து” பாடல் செம்மையான பாடல். மூவரும் நன்றாக என்ஜாய் பண்ணி ஆடியிருப்பார்கள். சொன்னால் நம்பவே மாட்டீர்கள். இந்த பாடலை உங்களை ஆய்வு செய்யச்சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். நீங்கள் உங்களை ரொம்ப வருத்திக்கொள்வீர்கள் என்பதால் கோரிக்கையை கைவிட்டேன். இப்போது சொலாமலே உங்களை வருத்திக்கொண்டுள்ளீர்கள்..

ஆய்வு படு சூப்பர். அழகாக, அருமையாக, அற்புதமாக, அட்டகாசமாக அமைந்துள்ளது. வழக்கம்போல ஆழ்ந்த, கூர்ந்த கவனிப்பு. பாலு, சாய்பாபா குரல் மாற்றத்தை நானும் கவனித்ததுண்டு. (இதேபோல ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் “பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா”' பாடலில் ஜெயலலிதாவுக்கு சுசீலாவும், லக்ஷ்மிக்கு ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். ஆனால் ஒரு பல்லவியில் சுசீலாவின் குரலுக்கு லக்ஷ்மி வாயசைத்துக் கொண்டிருப்பார்.).

‘நடப்பது சுகமென நடத்து’ பாடலில் மூவரும் அருமையாக செய்திருந்தாலும் நம்ம தலைவர் ரொம்ப டாப். சிறிய பொம்மை சாக்சபோனைக்கூட எவ்வளவு சிரத்தையாக பாவத்தோடு வாசிப்பார்.

இன்னொரு சர்ப்ரைஸ் நாகேஷை விட முத்துராமன் நன்றாக ஆடியிருப்பார். பெரும்பாலான படங்களின் பாடல் காட்சிகளில் அட்டென்ஷன் பொசிஷனில் நிற்கும் முத்துவா இந்த அளவுக்கு ஸ்டைல் நடை போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவோம். முகத்தில் சிரிப்பும் அப்படியே. இப்பாடலில் நாகேஷுக்கு மூன்றாவது இடமே.

பார்க், பீச் என்று போகாமல் சூப்பரான லொக்கேஷன் செலக்ட் பண்ணியிருப்பார்கள். படத்தின் முதல் விளம்பரமே இந்த பாடல் காட்சியுடன் கூடிய கேள்விக்குறி விளம்பரம்தான் (நண்பர் செந்தில்வேல் அழகாக தந்துள்ளார். அவருக்கு நன்றி).

தொடரை தொடருங்கள். நடப்பது அனைத்தும் சுகமென நடத்துங்கள்.
வாழ்த்துக்கள்.

Russellsmd
13th October 2015, 10:47 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151013211640698_zpsohdxnh4c.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20151013211640698_zpsohdxnh4c.jpg.html)


படகு.

ஒரு சின்னப் பழுதுமின்றி பல கோடி உள்ளங்களை வெகுகாலமாய் சுமந்து செல்லும் படகு.

இசைப் படகு.

ரசனை சமுத்திரம் தாண்டி நம்மை இன்பக் கரையேற்றும்
படகு.

பத்து தினங்களுக்கு முன் மதுரையின் திரையரங்கொன்றில் மக்களின்
உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பாட்டமாய் நீந்தி வந்த
ஆனந்தப் படகு.
----------
நடந்து செல்லும் பொருட்டு இறைவன் கொடுத்த கால்களின் கீழ் சக்கரம் கட்டிக்
கொண்டு விரைந்து வரும்
நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன், வருஷத்துக்குப் பத்துப்படம் நடித்து, காலில்
சக்கரம் கட்டிக்கொண்டு
வெற்றிப் பாதையில் விரைந்தோடியவர்தானே இவர்
என்று மனதில் தோன்றுகிறது.

கண்கள் இடுக்கிச் சிரித்து வரும்
அந்தச் சிரிப்பு..

"படகு..படகு" என்று சொல்லச்
சொல்ல முகத்தில் காட்டும்
அந்தச் சிலிர்ப்பு..

இருக்கையை மறந்து எழுந்து
ஆட்டம் போட்டு, உடலில் உள்ளே காற்றையெல்லாம்
சீழ்க்கையடித்துச் செலவழிக்கும் ரசிகனுக்கு இது
போதாதா?
---------
போதாது என்கிற முடிவெடுத்து
மஜ்னுவாக மாறுகிறார் அடுத்த
நிமிஷமே.

பாலைக் காற்றில் முடி பறக்க,
பல்லக்கில் அழுது செல்லும்
பிரியமானவளை நினைந்துருகிப் பாடுகையில்
அந்த காதல் பித்தனை கண்முன் நிறுத்துகிறார்.
காதலென்றால் இதுதான் என
நம் உள்ளம் உற்சாகமாய்
நிச்சயிக்கிறது.
---------
"இது மட்டுந்தானா காதல்..
இன்னும் பார் " என்று மெத்தை யிட்ட கட்டிலில் அமர்ந்து
கொண்டு மேன்மைக்குரிய காதல் இதுதானெனக் காட்டுகிறார்..சலீமாக மாறி.

"அனார் என்றால் மாதுளம்"
எனப் பாடுகையில், வலக்கையை ஒயிலாய் உயர்த்தி, தலையை ஒருபுறமாய் அசைத்து, வலது
தொடை மெல்ல உயர்த்தி,அதில் அழகாய்த் தாளமிட்டு
அவர் செய்யும் பாவனையைப்
பார்த்து பாடத் தோன்றுகிறது..

"உங்கள் அழகுக்கு சலாமு
அய்யா!"
---------
"அனார்.."

அடித்தொண்டையிலிருந்து
சலீமுக்காக எஸ்.பி.பி.
சொல்வதை, ஒலி வடிவமாய்க் கேட்டாலும் மனக்கண்ணில்
ஒரு நொடி நடிகர் திலகம் வந்து போவார்.
--------
படகு...

நம்மைச் சுமந்து கொண்டு
ஆனந்தமாய் மிதந்து கொண்டே
இருக்கும்..

ஆயுசுக்கும்.


https://youtu.be/ruUSzvl1TME

Sent from my GT-S6312 using Tapatalk

JamesFague
14th October 2015, 12:24 PM
Courtesy: Tamil Hindu

சினிமா எடுத்துப் பார் 30: சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?

எஸ்பி.முத்துராமன்



நானும் நடிகை பிர மிளாவும் அண் ணன் சிவாஜி வீட் டுக்குச் சென்றோம். எங் களைப் பார்த்ததும் ‘‘என்ன முத்து நாளைக்கு பெங்களூர்ல படப்பிடிப்பு இருக்கு. இந்த நேரத்துல பிரமிளாவை அழைச்சுட்டு வந்திருக்கியே, என்ன விஷ யம்?’’ என்று கேட்டார் சிவாஜி. வேறொரு படப்பிடிப்பின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரமிளா நடிக்க வேண்டியிருப்பதையும், அவரால் பெங்களூர் வர முடியாத நிலைமையையும் எடுத்துச் சொன்னேன்.

‘‘எப்படிப்பா... நானும், பிரமிளாவும், குழந்தையும் நடிக்க வேண்டிய பாடல் காட்சியாச்சே. பிரமிளா இல்லாம எப்படி எடுப்பது?’’ என்றார். அப்போது நான், ‘‘ஒரு யோசனை சொன்னால் திட்ட மாட்டீங்களே…’’ என்று தயக்கத் தோடு கேட்டேன்.

‘‘என்ன சொல்லு!’’ என்றார்.

‘‘உங்களையும் குழந்தையையும் மட்டும் வைத்து ஐம்பது சதவீத படப் பிடிப்பை பெங்களூர்ல எடுத்துப்போம். மீதமுள்ள காட்சியை சென்னையில் அதுக்கு மேட்ச் ஆகிற இடமாப் பார்த்து தனியாக பிரமிளாவையும், குழந்தை யையும் வைத்து ஷூட் பண்ணிக்கிறேன். பெங்களூர்ல எடுக்கிற காட்சிகள்ல சில இடங்களுக்கு மட்டும் பிரமிளாவுக்கு டூப் போட்டுக்கிறேன். இதுக்கு நீங்க சம்மதிக்கணும்’’ என்றேன்.

அண்ணன் சிவாஜி அவர் கள் பெருந்தன்மையோடு ‘‘உன்னை நம்பி வர்றேண்டா... ஆக வேண்டிய வேலையைப் பாரு’’ என்றார்.

அசோஸியேட் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனிடம் சொல்லி ஒரு டூப் நடி கையை மட்டும் ஏற்பாடு செய் யச் சொல்லிவிட்டுப் படப் பிடிப்புக்கு பெங்களூர் கிளம்பினோம். படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி, பிரமிளாவுக்காக போட்டிருந்த டூப் நடிகையைப் பார்த்துவிட்டு ‘‘யாருப்பா இந்த டூப்பைத் தேர்ந்தெடுத்தது. இந்த உருவமும், பிரமிளா உருவமும் சரியா இருக்குமா?’’ என்று கேட்டார். அதனால் டூப்பைத் தவிர்த்துவிட்டு அப்பா(சிவாஜி)விடமிருந்து குழந்தை அம்மா(பிரமிளா)விடம் ஓடி வருவதைப் போலவும் அம்மாவிடமிருந்து அப்பா விடம் ஓடிவருவதைப் போலவும், அம்மா தூரத்தில் நிற்பதுபோல வைத்துக்கொண்டு நடன இயக்குநர் ஏ.கே.சோப்ராவை வைத்து மேனேஜ் செய்து அந்தப் பாட்டை படமாக்கி முடித்தோம். சினிமா எடுக்கும்போது இப்படியெல்லாம் பல பிரச்சினைகள் வரும். சமாளிக்க வேண்டும்.

சென்னை வந்ததும் பிரமிளாவையும், குழந்தையும் வைத்து தோட்டக்கலை பூங்காவில் பெங்களூருக்கு மேட்ச் செய்து படப்பிடிப்பை எடுத்தோம்.

எடிட்டர் விட்டல் சார் பெங்களூரில் சிவாஜியையும் குழந்தையையும் வைத்து எடுத்த காட்சியையும், சென்னையில் பிரமிளாவையும் குழந்தையையும் வைத்து எடுத்த காட்சியையும் சிறந்த முறையில் எடிட் செய்து பாட்டை முழுமையாக்கினார்.

ஒருநாள் அண்ணன் சிவாஜிகணேசன் அவர்கள் ஷூட்டிங் வந்திருந்தபோது, ‘ ‘‘முத்து… பெங்களூர்ல போய் ஒரு பாட்டு எடுத்தோமே. அதை பிரமிளாவோடு மேட்ச் செய்து ஷூட்டிங் பண்ணிட்டியா? அதை நான் பார்க்கணும்’’ என்றார். அவரை அழைத்துக்கொண்டு போய் அந்தப் பாட்டை போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்த சிவாஜி, ‘‘அடப்பாவி! என்னமா மேட்ச் செய்திருக்கே. ஹீரோ, ஹீரோயின் பாடுற டூயட் பாட்டைக் கூட தனித்தனியா எடுத்து நீ மேட்ச் பண்ணிடுவே’’ என்று பாராட்டினார்.

‘கவரி மான்’ படத்தில் ஒரு திருப்பமான காட்சி. சிவாஜி தன் மனைவி பிரமிளாவிடம் சொல்லிக்கொண்டு வெளிநாடு புறப்பட்டுச் செல்வார். விமான நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய அந்த விமானம் பழுது காரணமாக கேன்சல் செய்யப்படுவதாக அறிவிக்கப்படும். உடனே, சிவாஜி அங்கிருந்து வீட்டுக்குத் திரும்புவார். கதவை தட்டினால் வேலைக்காரப் பெண் கதவைத் திறப்பார். மனைவி (பிரமிளா) எங்கே என்று கேட்க, வேலைக்காரப் பெண் பதில் சொல்லாமல் பதற்றத்துடன் ஓடிவிடுவார்.

அப்போது மாடியில் பெட் ரூமிலிருந்து பிரமிளாவும், ஓர் ஆணும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்கும். சந்தேகத்துடன் மாடிப் படிகளில் ஏறுவார் சிவாஜி. பிரமிளாவின் சிரிப்புச் சத்தமும் ஆணின் சிரிப்புச் சத்தமும் அதிகமாகிக் கொண்டேபோகும். ஒவ்வொரு படி ஏறும்போதும் சிவாஜியின் கோபம் மேலும் மேலும் அதிகரிக்கும். பெட்ரூம் கதவருகே வந்து கதவை திறந்தால் பிரமிளாவுடன், ரவிச்சந்திரன் விளையாடிக்கொண்டிருப்பார். அதை பார்த்ததும் சிவாஜியின் கோபம் உச்சத்தைத் தொடும். ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிடுவார். பிரமிளா திகைத்துப் போய் நிற்பார்.

இந்தக் காட்சிகளை எடுத்ததும் சிவாஜி அவர்களிடம் ‘‘உங்கள் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டுங்கள். கேமரா உங்கள் முகத்தை நோக்கி வரும். உங்கள் முகபாவங்களில் கொலை வெறி தெரிய வேண்டும்’’ என்று விவரித்தேன்.

சிவாஜி ‘‘மனைவி இப்படி ஒரு தவறு செய்யும்போது கணவனுக்கு ஆத்திரம் வரும்தான். நான் ரெடி’’ என்றார். ஷாட் ஆரம்பித்தோம். சிவாஜியின் முகத்தை நோக்கி கேமரா சென்றது. அவருடைய கன்னம், நெற்றி, புருவம் எல்லாம் துடித் தன. வெள்ளையாக இருந்த அவருடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிவப் பாக மாறி… விழி பிதுங்கும் அளவுக்கு நடித்தார். அதைப் பார்த்து நாங்கள் அசந்துபோய்விட்டோம். அதுதான் நடிகர் திலகத்தின் நடிப்பு!

அந்தக் கோப வெறியோடு அருகில் இருந்த ஃப்ளவர் வாஸை எடுத்து பிரமிளாவின் தலையில் அடிப்பார் சிவாஜி. பிரமிளா மயங்கி கீழே விழுந்து உயிரைவிடுவார். அவர்களுடைய ஏழு வயது மகள் (சின்ன தேவி) இதனைப் பார்த்துவிடுவார். அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டார் என்று அதிர்ச்சி அடையும் அந்தக் குழந்தை. அன்று முதல் அப்பா மீது மகளுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

கூட்டுக் குடும்பமாக வாழும் அந்த வீட்டில் ஒரு பெரிய விரிசல் விழுகிறது. மனைவி தவறான நடத்தை காரணமாகத்தான் இவ்வளவும் நடந்தது என்பது தெரிந்தால், குடும்ப கவுரவம் கெட்டுப்போகுமே என்று யாரிடமும் சொல்லாமல் சிவாஜிகணேசன் அதை மறைத்துவிடுவார். சிவாஜியின் அண் ணன் (மேஜர் சுந்தர்ராஜன்), தந்தை (கொல்கத்தா விஸ்வநாதன்) எல்லோரும் கூடி மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டில் அந்த சம்பவத்துக்குப் பிறகு கலகலப்பு போய் சலசலப்பு ஏற்படுகிறது. சிவாஜியின் அப்பா கொல்கத்தா விஸ்வநாதன் ‘தன் மகன் காரணம் இல்லாமல் இப்படி செய்திருக்க மாட்டான்’ என்கிற தனது நினைப்பை டைரியில் எழுதி வைப்பார்.

மகள் வளர்ந்த பிறகும் சிவாஜியைக் ‘கொலைகார அப்பா’வாகத்தான் பார்ப்பார். வளர்ந்த மகளாக தேவி நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவி இந்தியாவின் சிறந்த நட்சத்திரமாக வளர்ந்து தனது நடிப்பின் மூலம் பெயர் வாங்கியிருந்தார்.

இந்தச் சூழலில் மகள் தேவிக்குப் பிறந்த நாள் வரும். மகளின் பிறந்த நாளுக்காக ஆசை ஆசையாக பட்டுப் புடவையும், பரிசுகளும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா சிவாஜி. தான் கொடுத்தால் வாங்க மாட் டார் என்பதற்காக, மாடியில் இருக் கும் மகளிடம் அந்தப் பொருட்களைக் கொடுக்குமாறு கொடுத்தனுப்புவார்.

தேவி அந்தப் பரிசுப் பொருளை வாங்கி கோபத்தோடு குப்பைத் தொட்டியில் எறிவார். அதைக் கண்டு சிவாஜி அதிர்ச்சி அடைவார். அந்தக் காட்சியைப் பார்த்த சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?

HARISH2619
14th October 2015, 01:05 PM
Dear senthilvel sir,
congratulations for crossing another milestone of 1500 valuable posts.

JamesFague
14th October 2015, 02:46 PM
BLACK DAY IN THE HISTORY OF WORLD CINEMA


As per the flash news the High Court in their verdict told the govt for the removal of ACTING GOD STATUE.

sankara1970
14th October 2015, 03:24 PM
தமிழா தலை குனிவு

Subramaniam Ramajayam
14th October 2015, 03:57 PM
Kadavul ivargalai nichayam mannikka maatar. Fate of tamils and tamilnadu
vetkam vetkam vetkam

Harrietlgy
14th October 2015, 05:25 PM
Very bad news for us.

Russellbpw
14th October 2015, 05:41 PM
Already we do not have proper rain during rainy season. Now it is going to be much worse. Long live the juriadiction of the pathetic barbarian fraudulent state tamilnadu.

adiram
14th October 2015, 05:52 PM
அதிர்ச்சி... அதிர்ச்சி....அதிர்ச்சி... அதிர்ச்சி.... அதிர்ச்சி.....

(இதற்கும் கூட சப்பைக்கட்டு கட்ட நம்ம திரியிலேயே ஆட்கள் இருக்கிறார்கள். பூசிமொழுகிய ஸ்டேட்மெண்டோடு வருவார்கள் பாருங்கள்).

joe
14th October 2015, 05:54 PM
Long live the juriadiction of the pathetic barbarian fraudulent state tamilnadu.

அடேங்கப்பா ! இடையூறா இருக்கிறதா ? நீக்கலாமா வேண்டாமாண்ணு அரசாங்கத்திடம் கேட்கப்படுகிறது .. ஆம் ..இடையூறாக இருக்கிறது ..நீக்கலாம் என அரசாங்கம் சொல்கிறது .. பின்னர் நீதிமன்றம் வேறென்ன செய்யும் ?

சிலையை அகற்றிய நீதிமன்றம் ஒழிக !
மணிமண்ட புரூடா அறிவிப்பு வெளியிட்ட புரட்சித்தலைவி வாழ்க !

joe
14th October 2015, 05:58 PM
வழக்கம் போல அதிமுக அடிபொடிகள் இங்கேயே பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாமே

vasudevan31355
14th October 2015, 06:54 PM
மிக மிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி. காரணத்துக்குரியவர்கள் யாராக இருந்தாலும் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். சிலை மீது கை வைப்பவர்கள் நாசமாகத்தான் போவார்கள். அவர் பாவம் பொல்லாது.

Gopal.s
14th October 2015, 07:05 PM
அருவருக்க முறையில் தமிழகம் செல்கிறது. யாரோ ஒரு ஊர் பேர் தெரியாத அனாமதேய மனிதன், 6 கோடி தமிழர்களை ,தமிழகத்திலேயே அவமான படுத்தியுள்ளான். வழக்கு எதற்காக தொடர பட்டது,அரசின் நிலை எல்லாமே குழப்ப மயம்.தமிழகத்தில் மட்டும்தான் ,தமிழர்களுக்கே அவமானம் தொடர்ந்து இழைக்க படுகிறது. யாராவது appeal செய்து நிறுத்த இயலாதா இந்த தீர்ப்பை?வழக்கம் போல சந்திர சேகர சாமிகள்தான் கதி நமக்கு. ஏதாவது செய்யுங்கள் ஐயா. இங்கே வாய்பேச்சு ஜால்ராக்கள்தான் அதிகம்.(ஜோ சொல்வது போல)



இதற்கு மாறாக மற்ற நாடுகளில் அவருடைய சிறப்பு செல்கிறது. ஜகர்தா நகரில் (இந்தோனேசிய தலை நகர்)ஞாயிறன்று சிபுத்ரா என்ற லோட்டே திரையரங்கில் திரையிட பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், மீண்டும் இன்று அர்த்தகாடிங் என்ற இடத்தில் திரையிட பட்டது. பழைய படம் திரையிட படுவது ,சரித்திரத்தில் முதல் முறை.

பல பருவத்தில் ,வயதில் ரசிகர்கள். திரையரங்கு கிட்டத்தட்ட நிரம்பி வழிந்தது.நான் வெளியில் நின்று படத்தின் பின்னணி,இதை பற்றி ஏற்கெனெவே எழுதிய விவரங்கள் இவற்றை விவரித்து பலருக்கு ஆவலை தூண்டும் பணி செய்தேன். இரண்டு முறையும் பார்த்து ரசித்தேன். ஜகார்த்தா நகருக்கு புதிதாக வந்த எனக்கு,இதை விட சிறந்த வரவேற்ப்பும் வேண்டுமோ?

RAGHAVENDRA
14th October 2015, 08:43 PM
மிக மிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி. காரணத்துக்குரியவர்கள் யாராக இருந்தாலும் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். சிலை மீது கை வைப்பவர்கள் நாசமாகத்தான் போவார்கள். அவர் பாவம் பொல்லாது.

Cent Percent True.

எல்லோருடைய மனதிலும் ஓடும் எண்ணம் இதுதான். இதற்கு மறு பேச்சில்லை.

joe
14th October 2015, 09:47 PM
4546

சென்னை கடற்கரை சாலையில் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலை நவம்பர் 16 ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் உத்தரவு....
இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி சிலையை அகற்ற முழு நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிவாஜி குடும்பம் அன்றே நேரில் சென்று வாழ்த்தியது....
நல்லா வருவீங்கடே.....

(Thanks - facebook)

ifohadroziza
14th October 2015, 09:51 PM
மிக அருமையான 1500 பதிவுகள் செந்தில் சார் .வாழ்த்துக்கள்

ifohadroziza
14th October 2015, 10:11 PM
ஒரு கபோதி சிவாஜி சிலை காந்தி சிலையை மறைக்கிறது என்று நீதி மன்றத்தில் வழக்கு போட்டால் ,அரசு, சாலை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று வாதாடுகிறது.என்ன நீதியோ என்ன தர்மமோ .நாட்டில் இவர் ஒருவர் சிலை தான் இடையூறு என்று நீதி அரசர்களுக்கே புரிந்து விட்டது .நமக்கு தான் புரியாமல் புலம்புகிறோம்.யார் பெற்ற பிள்ளைகளோ?

J.Radhakrishnan
14th October 2015, 10:12 PM
மிக மிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி. காரணத்துக்குரியவர்கள் யாராக இருந்தாலும் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும். சிலை மீது கை வைப்பவர்கள் நாசமாகத்தான் போவார்கள். அவர் பாவம் பொல்லாது.


சத்தியமான உண்மை!

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்க முடியுமா?

Russellxor
14th October 2015, 10:34 PM
Balae Pandiyaa Yaarai Engae: http://youtu.be/Gy3DN7wDX14

Harrietlgy
15th October 2015, 12:21 AM
From today's Tamil The Hindu,

சிவனும் நக்கீரனும் - சிவாஜி தரும் வியப்பு

திருவிளையாடல்' திரைப்படத்தில் வந்த சிவனையும் தருமியை நம்மால் மறக்கமுடியாது. அதற்குக் காரணம் சிவாஜியும் நாகேஷும்தான். தங்களது தெறிப்பான நடிப்பில் தமிழ் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தவர்கள் அவர்கள்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், தருமி கதை வந்தது திருவிளையாடல் படத்தில்தான் என்று. உண்மையில், அதற்கும் பல ஆண்டுகள் முன்பே ஒரு திரைப்படத்தில் இக்காட்சி வந்துவிட்டது என்பது தெரியுமா?

தருமி, நக்கீரனுடனான சிவனின் திருவிளையாடலை தமிழ் சினிமா முன்னமே கண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல; அதிலும் சிவாஜி கலக்கியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

இங்கு வீடியோவில் இடம்பெற்றுள்ள 'நான் பெற்ற செல்வம்' என்ற பழைய திரைப்படத்தில் வரும் இந்த ஒரு காட்சியில் நீங்கள் காணப்போவது ஒன்றல்ல... இரண்டு ஆச்சரியங்கள்!


https://youtu.be/QLq1LoabFiY

Russelldvt
15th October 2015, 12:53 AM
Today 3.00pm Watch Mega Tv

http://i62.tinypic.com/wgur7p.jpg

ifohadroziza
15th October 2015, 07:31 AM
சுனாமியால் சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு (2006 ல் ).நல்லவேளை கடலை அகற்ற சொல்லவில்லை

JamesFague
15th October 2015, 09:02 AM
The trial will start in the Supreme Court next month. The fate of the present govt leadership will be known shortly and

they will pay heavy price by touching the Acting God statue once again.

adiram
15th October 2015, 11:35 AM
எலியைப்பிடிக்க எலிப்பொறியில் வைக்கப்பட்ட தீனிதான் மணிமண்டப அறிவிப்பு என்பதை நம்மவர்கள் புரிந்துகொண்டால் போதும்.

மேல்முறையீட்டுக்கு போனால் என்ன மாற்றம் வந்துவிட போகிறது?. இதே அரசு, இதே வக்கீலைக்கொண்டு, இதே பாயின்ட்களோடு வாதாடப் போகிறது. பிறகென்ன இதே தீர்ப்புதான் உறுதி செய்யப்பட போகிறது.

குடும்பத்தோடு போய் காலில் விழுந்தவர்களுக்கு மத்தியில், தனியொருவராக நின்று வாதாடிய சந்திரசேகர் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

சிலையை நிறுவி நடிகர்திலகத்தை அவமானப்படுத்தியவர் ஒழிக.
சிலையை அகற்றி நடிகர்திலகத்தை பெருமைப்படுத்துபவர் வாழ்க.

('தென்னிந்திய தடியர் சங்கம்' இது பற்றி கருத்து எதுவும் உளறவில்லையா?)

Russellxor
15th October 2015, 11:54 AM
"அவள் பறந்து போனாளே"

மாடிப்பட்டுக்களில் இறங்கி வரும் நடிகர்திலகத்தின் பூட்ஸ்கால்களைமட்டும் காட்டும் அந்த ஆரம்ப காட்சியே வித்தியாசமானதுதான்.. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் கதாநாயகனின் அறிமுக காட்சிக்கு
மட்டுமே காட்டப்பட்டு வந்த உத்தியை படத்தின் சோக பாடலுக்கு பயன்படுத்திய சிறப்பு இப்பாடலுக்கு உண்டு.
பூட்ஸ் கால் ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி மெல்ல வரும்.அப்படியே காமிரா மெல்ல உயர்ந்து இடுப்பு,நெஞ்சு, முகம்னு நடிகர்திலகத்தின் உருவம் காட்டப்படும் என்று நெஞ்சு நிமிர உட்கார......
பின்னர் பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.
இறங்கி வருகிற பூட்ஸ் கால்களோட தொடர்ச்சியா ,டீப்பாய் மேல வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற வேற ஒரு கால்களை காண்பிப்பார்கள்.அந்தக் கால்களை தூக்கி நிலத்தில் நிற்கும் உருவத்தை காட்டும் காமிரா...
அது முத்துராமன் .
நடிகர்திலகத்தின் கால்களை மட்டும் காண்பித்து முகத்தை காட்டாமல் அதனின் தொடர்ச்சியாக வேறு கால்களை காண்பித்து அப்படியே முத்துராமனை காட்டுவது ஒரு வித சாதுர்யமான டெக்னிகல் உத்தி. இப்படி காட்டுவதால் அது ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பின் சற்று ஏமாற்றத்தையும் அளிக்கும்.அதே சமயம் தேர்ந்த திறமை வாய்ந்த டைரக்டர் அந்த காட்சியை காண்பிக்கிறார் என்றால் பின்வரும் காட்சிகள் ஏதோ ஒரு பிரளயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கும் என்பதுதான் அந்த உத்தியின் மூல காரணமாக இருக்கலாம்.

என்ன ஒரு டெக்னிகலான காட்சியமைப்பு.கறுப்பு வெள்ளை காலகட்டத்தில் உதித்த அந்த ஐடியா
பாராட்டப்பபவேண்டிய அம்சம்.சரி பீம்சிங் காரணமில்லாம இந்த ஷாட்டுகளை காண்பிக்கமாட்டாருன்னு நமக்கு நாமே அப்போது தேற்றிக்கொண்டோம் என்பதே உண்மை
முத்துராமனுமஅவள் பறந்து போனாளே பாடலின் பல்லவியைவீட்டிற்குள் பாடுவது போல் காட்சி.

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே

அந்தப் பல்லவியும் முடிஞ்சு இப்ப பிண்ணணி இசை ஓடிக்கொண்டு இருக்கும்.இப்ப இடம் வேற.பாறைகள் நிரம்பிய இடத்தில் நுரைகள் பொங்க
நீர் பெருக்கெடுத்து ஓடும் இடம்.பயத்தையும்,ஆச்சரியத்தையும்,ரசிப்பையும் கொண்ட இடம் அது.
"சந்திராராராரா"
ஓர் உரத்த கணீரெண்ற குரல் மட்டும் தான் இப்போது கேட்கும்.
அட TMS குரல் கேட்டாச்சு. தலைவரோட அதகளம் ஆரம்பிக்குப்போகுதுன்னு நிமிர்ந்து உட்காருவோம். திரும்பி நிற்கும் உருவ அமைப்பும் ஸ்டைலும் மறுபடியும் ஏமாற்றத்தை தரும்.
ஆனாலும் அதன் பின் வரும்காமிரா பதிவுகள் அசத்தல்.
அணைகட்டு நீரில் அலைகளாட,
அதில் முத்துராமனும் விஜய குமாரியும் ஆடும் காட்சி மிக்ஸிங்செய்யப்பட்டு DOUBLE EXPOSE'பாணியில் படமாக்கப்பட்டிருக்கும்.


முத்துராமன் நடந்து செல்லும் பாலைவன காட்சி யில் ஒளிப்பதிவு பிரமாதம்.
முத்துவோட நிழலைக் காண்பித்து அந்த நிழலிருந்து நிஜத்திற்கு மாறும் ஷாட் பிரமாதமாயிருக்கும்.
அப்போது திரையில் ஒலிக்கும் வரிகள்.
"என் நிழலுக்கு உறக்கமில்லை"
முத்துவின் பக்கமிருந்துஅப்படியே லாங்சாட்டுக்கு மாறி பாலைவனத்தை
காட்டுவது சிறப்பான ஒளிப்பதிவு.
பீம்சிங் படங்களில் ஒளிப்பதிவு தனி அம்சமாக விளங்கும்.
பல்லவி ,முதல் சரணம் முத்துராமனின் நடிப்பில் நிறைவு பெறுகிறது.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/30-1419906016-volcano-600-jpg_zpsi3gosmon.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/30-1419906016-volcano-600-jpg_zpsi3gosmon.jpg.html)


திடீரென்று எரிமலை வெடித்துச் சிதறுவதை விட அந்த எரிமலை இப்ப வெடிக்கும் அப்பறம் வெடிக்கும் என்று பார்த்திருந்து,பார்த்திருந்து,
காத்திருந்து,காத்திருந்து ,ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெடித்துச்சிதறும் எரிமலை போல்
தான் இந்தக் காட்சியை இன்றும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

மாடிப்படிக்கட்டுகளில் நிற்கும் நடிகர்திலகம் இந்த வீட்டுக்கு விளக்கில்லை என்று முதல் வரியை பாடி திரும்பி நிற்பார்.அப்போது வீட்டின் விளக்குகள்அணைந்து இருட்டில்
சில் ஹவுட்டாகநடிகர்திலகத்தின் உருவம் தெரியும்.
திரும்பிநிற்கும் நடிகர்திலகத்தைஅடுத்த ஷாட்டில் முன்பக்கம் காண்பிக்கும் அந்தக்கணம்எல்லா விளக்குகளும் எரியும்.அப்பொழுதே இது போன்ற டெக்னிகல் உத்திகளில் அதுவும் கறுப்பு வெள்ளையில் தெளிவான காட்சிகள் படம் பிடிக்கப்படிருப்பது பெருமையான விஷயம்.தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்த பிற்காலங்களில் சில திரைப்படங்கள் இந்தப்பாடலில் வருவது போன்ற காட்சிகள் அமைந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.ஆனால் பழமையான அந்தக்காலகட்டத்திலேயே கறுப்பு வெள்ளைகளில் சிறப்பான ஒளிப்பதிவுகள் தமிழ்சினிமாவில் கையாளப்படிருக்கிறது என்கிற வரலாற்றைத்தான் பிற்கால ரசிகர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.

நடிகர்திலகத்தை காட்டும்விதம்
ஒன்று போதும்.அந்தப்பாடலின்
சிறப்புக்கு.லைட்டிங் டெக்னாலஜியைப்பொறுத்தமட்டில் அந்தக்காலகட்டத்திலேயே இந்த மாதிரி டெக்னிகல் எபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டு விட்டதால்
பிற்காலத்தில் வந்த சில படங்களை
சொல்வதில் புதுமையில்லை.

இல்லை என்பதில் முடியும் இரண்டாவது சரணத்தின் வரிகள்.
அதுபி.பி.எஸ்க்கு.
மூன்றாவது சரணத்தின் வரிகளும்
இல்லை என்ற வார்த்தையில் முடியும்
இது TMSக்கு.

இல்லை இல்லை என்று சொன்னாலும் அதில் இல்லாதது எதுவும் இல்லை.
சிறந்த நடிப்பு சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு சிறந்த லொகேஷன்
சிறந்த உடையமைப்புசிறந்த குரல்.etc...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/BTWP02_zpsxmpn7iuy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/BTWP02_zpsxmpn7iuy.jpg.html)



மறுபடியும் அந்த பாலைவனத்தில் அடுத்த சரணம்.முத்துராமன் பாடுவதாக இருக்கும்.சூறைக்காற்று வீச,புழுதிப்படலத்தின் பிண்ணணியில் அந்தக் காட்சி செல்லும்.இப்படியொரு பாடல் பாலைவனத்தில் எடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமான யோசனை. புதுமையும் கூட.

.....தன் சிறகை விரித்தாளே.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/TEMJ03_zpsafgrndam.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/TEMJ03_zpsafgrndam.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/NAPN02_zpskgdjvbna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/NAPN02_zpskgdjvbna.jpg.html)



(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜி ரசிகனே...
நீ
நினைத்ததை
உன் தலைவன்
நிறைவேற்றாத
காட்சி
எதிலேனும்
உண்டா?)

(எது நடக்க வேண்டும் என்று சிவாஜி ரசிகன் நினைத்தானோ அது நன்றாகவேநடந்திருக்கும் பாடலின் முடிவில்.)

நடிகர்திலத்தின் விழிகளை பார்த்து பேசுவது பெரும் கலைஞர்களுக்கே
சிரமம் என்று சொல்வதுண்டு.அவருடைய இந்த விழிகளைப் பார்த்தால் அதை என்னவென்று சொல்வது?
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு விழிகள் மேல் நோக்கி நிலைத்த நிலையில்
எந்த அசைவையும் காட்டாமல்
உட்கார்ந்திருக்கும் அந்தப் போஸ்
பார்ப்பவர்களை மிரளவே செய்யும்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/AFQB03_zpsry7yyu3t.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/AFQB03_zpsry7yyu3t.jpg.html)


"அவள் எனக்கா மகளானாள்"
"நான் அவளுக்கு மகனானேன்"
"என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்."
என்று முடியும் பாடல்.

ட்ரிக்ஷாட்டில் எடுக்கப்பட்ட கடைசி வரிகளுக்கான படப்பதிவுகள்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/HCNU03_zpsnfib7017.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/HCNU03_zpsnfib7017.jpg.html)







(பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே


பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

Aval Paranthu Ponale: http://youtu.be/utaMgFouiF4

vasudevan31355
15th October 2015, 12:58 PM
விலையே இல்லாத சிலையை
நிலையில்லாமல் செய்து
நிர்மூலமாக்க்க நினைக்கும் நீசர்களே!
கலைத் தெய்வமாம் கடவுளுக்கு
மலையளவு புகழ் கொண்ட
மனித தெய்வத்திற்கு தமிழன்
தரும் மரியாதை இதுதானா?
தலைமகனின் சிலை தொட்டால்
உங்கள் தலை வெடித்துச் சிதறாதோ!
தமிழினம் வெட்கித் தலைகுனியாதோ!
தரங்கெட்ட தறுக்கர்களே!
தமிழனுக்குத் தமிழனே துரோகியா?
சிங்கத்தின் சிலையை சீண்டிப் பார்க்கவும் துணிவு வந்ததோ?
அகற்றினால் அசிங்கப்படுவது நீங்களே! அவரல்ல!
கழற்றினால் களங்கப்படுவது நீங்களே! அவரல்ல!
சிலை சாய்த்து சந்தோஷப்படப் போகும்
சிறுமதியாளர்களே!
பின்னால் உங்கள் நிலையென்ன
என்று நீங்கள் அறிவீர்களோ!
சிவன் சொத்து குலநாசம்
எங்கள் சிவாஜி சிலை தொட்டால் சர்வமும் நாசம்
அகற்ற அகற்ற அன்புதான் பெருகும்
எடுக்க எடுக்க எண்ணம்தான் வளரும்
மாசற்ற மனிதனின் மாபெரும் கூட்டத்திற்கு
மானங்கெட்ட மாந்தர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டமே!
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
தெருக்குப் பத்து சிலை உரு இருக்க
கருவான சிலையை மட்டும் கணக்கில் கொண்டதேன்?
உருக்குலைக்க எண்ணுவதேன்?
கேட்பார் இல்லையென்றுதானே?
கேள்விமுறையற்ற இந்த ஆட்டம்
ஆடுங்கள் ஆடுங்கள்
ஆகட்டும் பார்க்கிறோம்
ஆட்டத்தின் முடிவிலே
சிலையை சிதறடிக்கலாம்
சிவாஜி மேல் கொண்ட
எங்கள் சிந்தையை எங்கள் அன்பை
சிதறடிக்க முடியுமோ?
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு விடுமா?
பூச்சாண்டி காட்டியவர்களெல்லாம்
ஓட்டாண்டிதான் ஆகியிருக்கிறார்கள்
ஒடுங்கித்தான் போய் இருக்கிறார்கள்
நயவஞ்சகம் புரிந்தவர்கள் எல்லாம்
நடுங்கி நாசமாகித்தான் இருக்கிறார்கள்
தொட்டுப் பாருங்கள் தொட்டுப் பாருங்கள்
தொட்ட மறுகணமே பலனை
அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள்
அது சிலையல்ல சிம்மம்
சிறு நரிகளின் ஓலத்திற்கா
சிவாஜியின் சிறுத்தைகள் அஞ்சும்
சிலை தொட்டால் பாழாகிப் போவீர்கள்
கூழாகிப் போவீர்கள்
இது பத்தினி சாபமல்ல
சிவாஜி பக்தர்களின் சாபம்
சிவாஜி வெறியர்களின் கோபம்
பத்தினிகள் சாபம் பலித்ததோ என்னவோ
உண்மை ரசிகனின் சாபம் உடனே பலிக்கும்
பார்க்கத்தானே போகிறோம்
நீங்கள் அனைவரும் பரிதவித்து நிற்பதை

Russellbpw
15th October 2015, 01:23 PM
தமிழகத்தை பிடித்திருக்கும் தரித்திர ஆட்சி முடிய இன்னும் சில மாதங்கள் ! இறைவனிடம் வேண்டுவதெல்லாம்...இந்த தரித்திர ஆட்சி நடைபெறும் இந்த ஆட்டத்தோடு ஒரேடியாக ஒழிந்து தொலைந்து மறைந்து நசித்து போகவேண்டும் !

Russellbpw
15th October 2015, 02:22 PM
நேற்று பாண்டியில் இருந்து பஸ் பயணம் மேற்கண்ட்போது இருவர் பேசிகொண்டது - ஏம்பா இந்த ஊர்ல இருக்கற சிவாஜி சிலைய எடுக்க சொல்லலியா ?

பதில் உரைப்பவர் - யோவ் அதுக்கு இந்த ஊர்ல ஒரு நாணயமான முதலமைச்சர் இருகாருய்ய. மக்கள் பிரச்சன என்னதோ அததான் மொதல்ல கவனிப்பாரு, இங்க நம்ம ஊரு மாதிரி கெடயாது பா ! சிலைய எடுகரதாய முக்கிய பிரச்சன இப்போ நம்ம ஊருல ?

கேள்வி கேட்டவர் - கரீட்டு பா ...எதுக்கு சிவாஜிக்கு மொதல்ல சில வெச்சாங்க ?

பதில் உரைப்பவர் - எதுக்கு அண்ணாவுக்கு சிலை வெச்சாங்க ? எதுக்கு mgr உக்கு வெச்சாங்க ? எதுக்கு பெரியாருக்கு வெச்சாங்க சொல்லேன் பாப்போம் ?

கேள்வி கேட்டவர் : அவங்க தமிழ்நாட்ட ஆண்டாங்க இல்லியா...?

பதில் உரைப்பவர் : பெரியார் எப்போய ஆண்டாரு?

கேள்வி கேட்டவர் : இல்லியா ? அப்போ ஆள்லியா அவரு ? சரி விடுப்பா வயசான ஒருத்தரு போயிட்டு போவுது...

பதில் உரைப்பவர் : யோவ்...( தூ ...) அவங்கோ முதலைமசரு...இவரு பகுத்தறிவு தந்தை ...!

கேள்வி கேட்டவர் : பகுத்தறிவு நா ?

பதில் உரைப்பவர் : தலையில் அடித்தவாறு ....சாயங்காலம் ஆச்சுனா கோட்டர் உடற பாரு ....அதுதான் அது ! யோவ் !

கேள்வி கேட்டவர் : சிரித்துக்கொண்டே....எனக்கு தெரிஞ்சு போச்சுயா எதுக்கு சிலைய எடுகராங்கன்னு ...

பதில் உரைப்பவர் : அவ்ளோ பெரிய அப்பா டக்கரா நீ...எதுக்கு சொல்லேன் ?

கேள்வி கேட்டவர் : இவங்கோ பூட்ட கேஸ் ஆனவுடனே ....அந்த இடத்துல இவங்க சிலைய கட்சிகாரங்க வேக்காலம்ல ....சூப்பர் எடம் அது ! அதுல இவங்க சில இருந்தா எவ்ளோ சூப்பர் எ இருக்கும் அதுக்குதான் இந்த பிளான் !

பதில் உரைப்பவர் : அதானே பாத்தேன்...! ஆனா ஒன்னு கவுனிச்சிய ? என்னிக்குமே சிவாஜி கடிச்சு துப்பின மிச்சம் இருக்கற எச்சிதான் இவங்க எடுத்து துன்றாங்கோ ! அந்தாளே செத்தா கூட நிம்மதியா இருக்க வுடமாடாங்க போலியே !

கேள்வி கேட்பவர் : அம்மாவ கொக்கா ! (பெருமையுடன் )

பதில் உரைப்பவர் : நீ தான் மெச்சிக்கணும் ! ஆனா மவனே....ஒன்னு நிச்சயம் மாமு ......இத்தோட உங்க ஆட்சி....உங்க கட்சி ..ரெண்டயுமே ஏற கட்டபோறாங்க பாதுனே இரு வேடிகைய !

இருவரும் கல்பாக்கம் வந்தவுடன் இறங்கி சென்றனர் !

adiram
15th October 2015, 02:27 PM
சென்னை உயர்நீதி மன்றத்திலும் ஒரு குமாரசாமியா..!!!!!!!

இறைவா... காப்பாற்று.

ஏற்கெனவே ஒரு குமாரசாமி 'கணக்கில்' செய்த தப்பு எங்கெல்லாம் வந்து 'இடிக்கிறது'.

adiram
15th October 2015, 02:55 PM
" சரி, தமிழ்நாட்டுல மத்த எடத்துல இருக்குற சிவாஜி செலையெ ஏன் எடுக்கலே?"

"அதுகள்ள கருணாநிதி பேரு இல்லையே"

"அப்படீன்னா மதுரை செலைக்கு கீழே மு.க.அழகிரி பேரு இருக்கே"

"அவங்களோட அடுத்த டார்கெட் அதுதான்"

Russellxor
15th October 2015, 04:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Photo%20Art_zpsftcstiw7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Photo%20Art_zpsftcstiw7.jpg.html)

Russellxor
15th October 2015, 04:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/IMG-20151014-WA0002_zpsw1zxidnm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/IMG-20151014-WA0002_zpsw1zxidnm.jpg.html)

Russellxor
15th October 2015, 04:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905786830_zpsigvnkcfg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905786830_zpsigvnkcfg.jpg.html)

Russellxor
15th October 2015, 04:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905783345_zps8nr82twf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905783345_zps8nr82twf.jpg.html)

Russellxor
15th October 2015, 04:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905779598_zpsb7xw0blp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905779598_zpsb7xw0blp.jpg.html)

Russellxor
15th October 2015, 04:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905776224_zps0l0cz1q0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905776224_zps0l0cz1q0.jpg.html)

Russellxor
15th October 2015, 04:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905772729_zpshik2hvw8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905772729_zpshik2hvw8.jpg.html)

Russellxor
15th October 2015, 04:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905768667_zps6vhhsgoo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905768667_zps6vhhsgoo.jpg.html)

Russellxor
15th October 2015, 04:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905764346_zpswzeskjm1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905764346_zpswzeskjm1.jpg.html)

Russellxor
15th October 2015, 04:45 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905761214_zpshs1bkgr2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905761214_zpshs1bkgr2.jpg.html)

Russellxor
15th October 2015, 04:47 PM
Bommai magazines

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444906052764_zpskpevdg44.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444906052764_zpskpevdg44.jpg.html)

Russellxor
15th October 2015, 04:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444906049700_zpsy3w98i5s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444906049700_zpsy3w98i5s.jpg.html)

Russellxor
15th October 2015, 04:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905757327_zps2g16d9h1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905757327_zps2g16d9h1.jpg.html)

Russellxor
15th October 2015, 04:50 PM
பொம்மை பத்திரிக்கை

சிவந்தமண் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பொம்மையில் ஸீரீதர் எழுதியது..

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905751205_zpsjnjvumon.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905751205_zpsjnjvumon.jpg.html)

Russellxor
15th October 2015, 04:51 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905748068_zpsdc4lokre.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905748068_zpsdc4lokre.jpg.html)

Russellxor
15th October 2015, 04:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905738836_zpsdgeueb1n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905738836_zpsdgeueb1n.jpg.html)

Russellxor
15th October 2015, 04:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444908292029_zpssxlmtfep.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444908292029_zpssxlmtfep.jpg.html)

Russellxor
15th October 2015, 04:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905713968_zpsibfc8mlz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905713968_zpsibfc8mlz.jpg.html)

Russellxor
15th October 2015, 05:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905711095_zpsz5vvbfvo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905711095_zpsz5vvbfvo.jpg.html)

Russellxor
15th October 2015, 05:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905699242_zpsjulnrmqf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905699242_zpsjulnrmqf.jpg.html)

Russellxor
15th October 2015, 05:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905695931_zpsr17309fn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905695931_zpsr17309fn.jpg.html)

Russellxor
15th October 2015, 05:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905692231_zpslaqx2onp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905692231_zpslaqx2onp.jpg.html)

Russellxor
15th October 2015, 05:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905680780_zpskia1lwhi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905680780_zpskia1lwhi.jpg.html)

Russellxor
15th October 2015, 05:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905677193_zpsnr7boxvk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905677193_zpsnr7boxvk.jpg.html)

Russellxor
15th October 2015, 05:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905745036_zpsanadnmkt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905745036_zpsanadnmkt.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905741982_zpsgkqkkouu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905741982_zpsgkqkkouu.jpg.html)

Russellxor
15th October 2015, 05:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905708207_zpsputv2oua.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905708207_zpsputv2oua.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905702479_zps91exclqb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905702479_zps91exclqb.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905705378_zps3bgpnkuf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905705378_zps3bgpnkuf.jpg.html)

KCSHEKAR
15th October 2015, 06:42 PM
நடிகர்திலகம் சிவாஜி சிலை விவகாரம் :

சென்னை கடற்கரையில் காமராசர் சாலை – இராதாகிருட்டிணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதென்று கூறி தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கில் , தமிழ்நாடு அரசு, சிவாஜி சிலையை எடுத்து அடையாற்றில் புதிதாக கட்ட இருக்கும், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அதை வைத்திட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.. மணி மண்டபம் கட்ட அவகாசம் தேவை என்றும், 2017க்குள் மணிமண்டபம் கட்டப்பட்டுவிடும் அதில் அப்பொழுது சிவாஜி சிலையை அகற்றி அங்கு வைத்துவிடலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் கூறினார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ்குமார் அக்னிகோத்திரி மற்றும் கே.கே. சசிதரன் ஆகியோர் வரும் நவம்பர் 16ஆம் நாளுக்குள், சிவாஜி சிலையை அப்புறப்படுத்திடும் முடிவை எடுத்திடவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு அவசரப்பட்டு உடனடியாக நடிகர் திலகம் சிலையை அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளது ஏன் என்பதுதான் தெரியவில்லை. நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, பிற்பகலில் அவர் வந்த போது பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் இரண்டு மணி நேரத்தில் அகற்றிவிடுகிறார்கள், உங்களால் இத்தனை மாதங்களில் சிவாஜி சிலையை அப்புறப்படுத்த முடியவில்லையா என நீதிபதிகள் கேட்டார்கள்.

இவ்வாறு, நீதிபதி கேட்கும்போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் தமிழர்களின் கலைச்சின்னம் என்பதையோ, தமிழர்களின் கடந்த கால கலைப்படைப்பின் அடையாளம் என்பதையோ அவர் சிறிதும் சட்டை செய்யவில்லை.

இரண்டு மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அப்புறப்படுத்திவிடலாம் என்று அவர் சொல்வதில், நடிகர் திலகம் சிவாஜி சிலையை வெறும் கட்டுமானமாக மட்டுமே பார்க்கிறார் என்று புரிகிறது.

தமிழ்நாடு அரசு, நடிகர் திலகம் சிவாஜி சிலை சிக்கலில் உறுதியான நிலையெடுக்காமல், சிலையை அகற்ற ஒப்புக் கொண்டது சரியான நடவடிக்கையல்ல.

நடிகர் திலகம் சிவாஜி சிலையை இப்பொழுதுள்ள இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது, தமிழினத்தின் பெருமைக்குரிய கலைச் சின்னத்தை இழிவுபடுத்துவதாக அமையும். உண்மையில், இப்பொழுதுள்ள இடத்தில் நடிகர் திலகம் சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு எதுவும் கிடையாது.

ஒருவேளை, வாதத்திற்காக ஓரளவு இடையூறு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், தங்கள் இனத்தின் மாபெரும் அடையாளச் சின்னத்தை தகுந்த இடத்தில் மக்கள் முன் வைத்திருப்பதற்காக அந்த இடையூறைப் பொறுத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும். அப்படித்தான், இந்தியா உட்பட உலகெங்கும் பழம்பெரும் கலைச் சின்னங்களை மக்களும் அரசுகளும் பாதுகாக்கின்றனர்.

அண்ணா, பசும்பொன் தேவர், பெரியார், எம்.ஜி.ஆர் என்று இவர்களுடைய பிறந்தநாட்களுக்கெல்லாம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எல்லாக் கட்சிகளும், சமுதாய அமைப்புகளுமாகச் சேர்ந்து மாலையிட வரும்போதெல்லாம், கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் சில நேரங்களில் போக்குவரத்தையே வேறு சாலையில் மாற்றம் செய்வது நடக்கிறது. அதெல்லாம் யாருக்கும் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

தமிழ்நாடு அரசு நடிகர்திலகத்திற்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்கிறோம். அதற்காக இப்பொழுதுள்ள இடத்திலிருந்து நடிகர் திலகம் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதில்லை.

இச்சிலையால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்று தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தையே நீதிபதிகள் கருத்தில் கொண்டுள்ளனர். தமிழக அரசும் தாங்களாக சிலையை அகற்றவில்லை, கோர்ட் உத்தரவினால்தான் அகற்றவேண்டியதாயிற்று என்று சொல்லிக்கொள்ளும் விதத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது.

நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவையும் நீதிபதிகள் எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கலையின் சின்னமாக விளங்கும் நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்படாமலிருக்க, என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Russellxor
15th October 2015, 07:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905726662_zps5bvrgg1e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905726662_zps5bvrgg1e.jpg.html)

Russellxor
15th October 2015, 07:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905723476_zpsmnonhahj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905723476_zpsmnonhahj.jpg.html)

Russellxor
15th October 2015, 07:47 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905720439_zpspqy3sngk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905720439_zpspqy3sngk.jpg.html)

Russellxor
15th October 2015, 07:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905717240_zpsfsdjrxuv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905717240_zpsfsdjrxuv.jpg.html)

Russellxor
15th October 2015, 07:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444906046898_zpssggfh45p.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444906046898_zpssggfh45p.jpg.html)

Russellxor
15th October 2015, 07:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905689253_zpsspxpovgo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905689253_zpsspxpovgo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1444905686223_zpsqdqbz2lv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1444905686223_zpsqdqbz2lv.jpg.html)

Russellxor
15th October 2015, 08:04 PM
கள்ளம் இல்லை
நெஞ்சில் கபடம் இல்லை
நாம்
பொறுமை கொள்வோம்
அதில்
சத்தியம் உண்டு
காலம் வரும்
நல்ல நேரம் வரும்
இன்ப நாளும் வரும்

அந்த திருநாளை அவர் கொடுப்பார்
யாவரும் உணர்வர்.

Subramaniam Ramajayam
15th October 2015, 08:11 PM
HATS OFF KC SI FOR YOUR UNTIRING EFFORTS TO KEEP NT FLAG VERY HIGH ALWAYS
We salute you sir.

Russellsmd
15th October 2015, 09:30 PM
"பட்டிக்காடா பட்டணமா".

படம் துவங்கி கொஞ்ச நேரத்தில் வரும் காட்சி.

நடிகர் திலகம்,
மாட்டுவண்டியில் மாமன் மகளை அருகில் அமர்த்திக் கொண்டு வருகிறார்.

தனக்குச் சொந்தமான நிலபுலன்களை மிக ஆர்வமாய்
முறைப்பெண்ணுக்கு காட்டி வருகிறார்.

இடதும்,வலதுமாய்த் திரும்பித்
திரும்பி அந்தப் பக்கங்களில் பரந்து விரிந்திருக்கும் தனது நிலத்தைக் காட்டிச் சொல்கிறார்..

"அ......தோ.. அது வரைக்கும்
அம்ம இடந்தான்".

அந்த "அ...தோ" சும்மா உச்சரிக்கப்பட்ட வார்த்தையல்ல. வெகுதூரம்
வரைக்கும் பரவிக் கிடக்கும்
தனது நிலத்தை சுட்டிக்காட்டும்
பொருட்டு அவர் இழுத்துச்
சொல்லும் அந்த "அ...தோ"-
அவர், நடிப்பை ஒரு செயலாக
அல்ல.. ஒரு தவமாகச் செய்வதன் ஒரு நொடி உதாரணம்.

நடிப்பதற்கென்று வந்து விட்ட
எவனும் தொட்டு விட முடியாத உயரம்..அது.

சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிற இன்றைய நாளில்.. இந்தக் காட்சியைப்
பார்க்கிறேன்.

பாமர ரசிகனாகப்பட்டவன்
போகிறபோக்கில் மறந்து விடச்
சாத்தியமுள்ள ஒரு சிறிய
தமிழ்ச் சொல்லை உச்சரிப்பதில்
கூட கலையைப் பெருமைப்படுத்திய அந்த மகாகலைஞனுக்கு இங்கே
மரியாதையில்லை.

வாரி,வாரிக் கலை வழங்கியவர் வருஷக்கணக்கில் அவமானப்
படுத்தப்படுவது குறித்த
நம் வருத்தம் உணர
ஆளில்லை.

ஆயிற்று..!
ஒரு வாரமோ..
ஒரு மாசமோ..

"இடைஞ்சல்" இல்லாத அகன்று
பரந்த வீதிகளில் சுகமான "போக்குவரத்து" மேற்கொள்ளப்
போகிற நல்லவர்களுக்கும்,
நாளைப் பின்னே அதிநிச்சயமாய் நடக்கவிருந்த
மிகப்பெரிய விபத்துகளில்
இருந்து அதிர்ஷ்டவசமாய்ப்
பிழைத்துக் கொண்ட இனியவர்களுக்கும் நல்வாழ்த்துகளைச் சொல்வோம்.

வாழ்க!



Sent from my GT-S6312 using Tapatalk

joe
15th October 2015, 10:00 PM
- திரு முருகவிலாஸ் நாகராஜன், இணைச் செயலாளர், அகில இந்திய சிவாஜி மன்றம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...

சிவாஜிக்காக ஒரு சாதி அமைப்பு தட்டிக் கேட்க வேண்டும் என விளைபவர் சிவாஜி மன்ற இணை செயலர் ..வெளங்கிடும் :(

RAGHAVENDRA
15th October 2015, 11:08 PM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12108953_992654377451901_4128915235637834500_n.jpg ?oh=0f3ec0d74cd60a74d9e3a65eb741f5f5&oe=56C81810

Image from Pesum Padam magazine.

Ungal Nanban was a short film screened during early 60s to bring police closer to the society. Nadigar Thilagam made a Special Appearance in the movie.

RAGHAVENDRA
15th October 2015, 11:11 PM
சிவாஜிக்காக ஒரு சாதி அமைப்பு தட்டிக் கேட்க வேண்டும் என விளைபவர் சிவாஜி மன்ற இணை செயலர் ..வெளங்கிடும் :(

Post under reference deleted.

RAGHAVENDRA
16th October 2015, 01:13 AM
செந்தில்வேல்
தங்களுடைய ஒவ்வொரு பதிவுமே சிகரமான பதிவுகளாக வந்து கொண்டுள்ளது. அதில் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் புகுத்தி தங்கள் கருத்தை வெளியிடும் நேர்த்தி, மிகச் சிறப்பாக உள்ளது, தேர்ந்த எழுத்தாளனுடைய உத்தி நன்கு புலப்படுகிறது.

உதாரணத்திற்கு பட்டிக்காடா பட்டணமா பற்றிய பதிவில் தாங்கள் புகுத்தியுள்ள இடைஞ்சல்.

பார் மகளே பார் அவள் பறந்து போனாளே பாடலைப் பற்றிய தங்கள் அலசல் மிகவும் வித்தியாசமாயுள்ளது. காமிரா கோணங்களும் நிழலும் நிஜமும் என ஒவ்வொரு நுணுக்கத்தையும் விடாமல் தாங்கள் எழுதுவதைப் பார்க்கும் போது,,

வாசு சார் ... உங்களுக்கு வாரிசு உருவாயிற்று...என நிச்சயமாக என்னால் கூற முடியும்.

தொடர்ந்து எழுதுங்கள் செந்தில்வேல் சார்.

அதே போல சிவந்த மண் உள்பட பொம்மையின் பக்கங்கள் அந்த நாட்களை எங்கள் நெஞ்சின் பக்கங்களாய்க் கொண்டு சென்று அமர்த்தி விடுகின்றன.

பாராட்டுக்கள்.

Russelldvt
16th October 2015, 02:12 AM
http://i60.tinypic.com/a3jpj4.jpg

Russelldvt
16th October 2015, 02:13 AM
http://i57.tinypic.com/npoqcz.jpg

Russelldvt
16th October 2015, 02:14 AM
http://i57.tinypic.com/2rdgf21.jpg

Russelldvt
16th October 2015, 02:14 AM
http://i57.tinypic.com/fjdb7r.jpg

Russelldvt
16th October 2015, 02:15 AM
http://i61.tinypic.com/qn7ok3.jpg

Russelldvt
16th October 2015, 02:16 AM
http://i58.tinypic.com/a3kowk.jpg

Russelldvt
16th October 2015, 02:16 AM
http://i60.tinypic.com/1z1a1ld.jpg

Russelldvt
16th October 2015, 02:17 AM
http://i62.tinypic.com/2zewm5d.jpg

Russelldvt
16th October 2015, 02:18 AM
http://i58.tinypic.com/35hrbqw.jpg

Russelldvt
16th October 2015, 02:18 AM
http://i59.tinypic.com/veocww.jpg

Russelldvt
16th October 2015, 02:19 AM
http://i58.tinypic.com/28atfz5.jpg

Russelldvt
16th October 2015, 02:20 AM
http://i62.tinypic.com/wwkhec.jpg

Russelldvt
16th October 2015, 02:21 AM
http://i57.tinypic.com/33de04m.jpg

Russelldvt
16th October 2015, 02:21 AM
http://i61.tinypic.com/2r6ocx3.jpg

Russelldvt
16th October 2015, 02:23 AM
http://i58.tinypic.com/15fg6fr.jpg

Russelldvt
16th October 2015, 02:24 AM
http://i58.tinypic.com/111pb1u.jpg

Russelldvt
16th October 2015, 02:24 AM
http://i61.tinypic.com/k4blow.jpg

Russelldvt
16th October 2015, 02:25 AM
http://i58.tinypic.com/2hcgfvl.jpg

Russelldvt
16th October 2015, 02:28 AM
http://i60.tinypic.com/2nv5bsw.jpg

Russelldvt
16th October 2015, 02:29 AM
http://i57.tinypic.com/ng8zk0.jpg

Russelldvt
16th October 2015, 02:29 AM
http://i61.tinypic.com/wrhoxi.jpg

Russelldvt
16th October 2015, 02:30 AM
http://i62.tinypic.com/51vw2a.jpg

Russelldvt
16th October 2015, 02:31 AM
http://i57.tinypic.com/2mwuonc.jpg

Russelldvt
16th October 2015, 02:32 AM
http://i62.tinypic.com/28vev42.jpg

Russelldvt
16th October 2015, 02:32 AM
http://i57.tinypic.com/im0xu1.jpg

Russelldvt
16th October 2015, 02:34 AM
http://i62.tinypic.com/2rpw83n.jpg

Russelldvt
16th October 2015, 02:35 AM
http://i58.tinypic.com/28s4rnl.jpg

Russelldvt
16th October 2015, 02:36 AM
http://i58.tinypic.com/2u7nmmt.jpg

Russelldvt
16th October 2015, 02:37 AM
http://i61.tinypic.com/2ajdopk.jpg

Russelldvt
16th October 2015, 02:37 AM
http://i60.tinypic.com/j9yrec.jpg

Russelldvt
16th October 2015, 02:39 AM
http://i60.tinypic.com/210m885.jpg

Russelldvt
16th October 2015, 02:40 AM
http://i60.tinypic.com/2a5hnxk.jpg

Russelldvt
16th October 2015, 02:41 AM
http://i58.tinypic.com/ao3m0z.jpg

Russelldvt
16th October 2015, 02:42 AM
http://i57.tinypic.com/108b5g6.jpg

Russelldvt
16th October 2015, 02:43 AM
http://i61.tinypic.com/5fes90.jpg

Russelldvt
16th October 2015, 02:44 AM
http://i58.tinypic.com/opohv6.jpg

Russelldvt
16th October 2015, 02:45 AM
http://i57.tinypic.com/5mzwhx.jpg

Russelldvt
16th October 2015, 02:46 AM
http://i58.tinypic.com/23it0eq.jpg

Russelldvt
16th October 2015, 02:46 AM
http://i59.tinypic.com/21mwww3.jpg

Russelldvt
16th October 2015, 02:47 AM
http://i59.tinypic.com/23liqrm.jpg

Russelldvt
16th October 2015, 02:49 AM
http://i58.tinypic.com/30kra6s.jpg

Russelldvt
16th October 2015, 02:50 AM
http://i60.tinypic.com/1zou39c.jpg

Russelldvt
16th October 2015, 02:51 AM
http://i59.tinypic.com/2wprm02.jpg

Russelldvt
16th October 2015, 02:52 AM
http://i61.tinypic.com/153vinq.jpg

Russelldvt
16th October 2015, 02:53 AM
http://i60.tinypic.com/flx1qg.jpg

Russelldvt
16th October 2015, 02:54 AM
http://i61.tinypic.com/117cro4.jpg

Russelldvt
16th October 2015, 02:55 AM
http://i61.tinypic.com/2wdttl4.jpg

Russelldvt
16th October 2015, 02:55 AM
http://i61.tinypic.com/acg1f.jpg

Russelldvt
16th October 2015, 02:56 AM
http://i60.tinypic.com/2i6krqa.jpg

Russelldvt
16th October 2015, 02:57 AM
http://i58.tinypic.com/bhkhkx.jpg

Russelldvt
16th October 2015, 02:57 AM
http://i61.tinypic.com/2llkiuh.jpg

Russelldvt
16th October 2015, 02:58 AM
http://i57.tinypic.com/256fuzd.jpg

Russelldvt
16th October 2015, 02:58 AM
http://i57.tinypic.com/2z5rfjb.jpg

Russelldvt
16th October 2015, 02:59 AM
http://i60.tinypic.com/jtvx51.jpg

Russelldvt
16th October 2015, 03:00 AM
http://i59.tinypic.com/n2yged.jpg

Russelldvt
16th October 2015, 03:00 AM
http://i62.tinypic.com/2sbojg4.jpg

Russelldvt
16th October 2015, 03:01 AM
http://i60.tinypic.com/qy8x2s.jpg

http://i57.tinypic.com/xe0dqr.jpg

Russelldvt
16th October 2015, 03:05 AM
http://i60.tinypic.com/2jfzv2g.jpg

Russelldvt
16th October 2015, 03:05 AM
http://i61.tinypic.com/2cprd08.jpg

Russelldvt
16th October 2015, 03:07 AM
http://i62.tinypic.com/21ae98n.jpg

http://i60.tinypic.com/2hwfpye.jpg

Russelldvt
16th October 2015, 03:08 AM
http://i62.tinypic.com/2jbve2w.jpg

Russellxor
16th October 2015, 08:11 AM
http://i57.tinypic.com/2z5rfjb.jpg
முத்தையன் அம்மு அவர்களே
எங்க ஊர் ராஜா பதிவுகள் ஜோர்.

RAGHAVENDRA
16th October 2015, 08:25 AM
https://www.youtube.com/watch?v=6ftl1v1T4PA

Mr. Mahendra, dubbed in Tamil from Telugu movie Nivvuru Kappina Nippu.

For those who have not seen either of them.

ifohadroziza
16th October 2015, 08:35 AM
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்ம தாயின் மடியிலே போர் போர் போர்

ifohadroziza
16th October 2015, 08:46 AM
பரத நாட்டு கலைமகனே வா
பச்சை ரத்த திலகமிட்டு வா
நீதியை நிலை நாட்ட வா
நீ கலை அளந்த மண் அளக்க வா வா வா வா வா

Russellsmd
16th October 2015, 08:47 AM
http://i59.tinypic.com/21mwww3.jpg
வெகு துல்லியமான பதிவு .. நாக்கைத் துருத்திக் கொண்டு நாற்காலியை விட்டுத் துள்ளி
எழுந்து,இதோ..அய்யா ஆடப்
போகிறார் எனத் தோன்றும்
அளவிற்கு.

முத்தையன் அம்மு சார்..
எமது வாழ்த்துகளும், நன்றிகளும்.

Sent from my GT-S6312 using Tapatalk

ifohadroziza
16th October 2015, 08:50 AM
மக்களுக்கு புத்தி சொல்ல வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்கு தாள் பணிந்து வா
பேர் அடுக்க போர் முடிக்க வா வா வா வா வா

ifohadroziza
16th October 2015, 08:57 AM
மறுபடியும் வீழ்வதில்லை வா
மரணமேனும் பெறுவதென்று வா
வீர நெஞ்சை முன்னிறுத்தி வா
பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா வா வா வா வா

Russellbpw
16th October 2015, 02:32 PM
சிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மனதிலிருந்து முடியாது!

சினிமா என்று சொன்னவுடன் சிவாஜியின் நடிப்பு நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல உலக சினிமா வரலாறில் நடிப்பு என்றால் சிவாஜியையும், அவர் தமிழினத்தின் அடையாளமாக இருப்பதையும் யாராலும் மாற்ற முடியாது.

சிவாஜி சினிமா உலகின் சிகரம். பாரதியார், கட்டபொம்மன், திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரம் பற்றி இன்றைக்குள்ள இளைய சமுதாயத்தினருக்கு தெரிகிறது என்றால், அதற்கு சிவாஜியின் நடிப்பும் ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

கடந்த 2006-ல் சிவாஜி சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் சிலையை நவம்பர் 16-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் கருத்தில் கொண்டு சிலையை அகற்றச் சொல்லும் நீதிமன்றம், அரசியல்வாதிகளின் 100 வகையான கார்களின் அணிவகுப்பால், விளம்பர ப்ளெக்ஸ் போர்டு, நடு ரோட்டில் பொதுக்கூட்டம் என்று பல வகையில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு முடிவு கட்டுமா? அரசியல்வாதி விமானத்தில் பறக்கும் வரையிலும், தரையில் கால் வைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்ற பெயரில் நிறுத்தப்படும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அன்றாடம் அலுவலகம், வீடு திரும்ப முடியாத பல லட்சம் பேரின் உள்ளக் குமுறலை நீதிமன்றம் கண்டுகொள்ளுமா?

சென்னையில் காரில் சிவப்பு விளக்கு சுழலும்போதெல்லாம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பல தெருக்களை சுற்றி வீடு வந்து சேரும் அப்பாவிகளின் கதை தெரியுமா? தெருவிற்குத் தெரு டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, டாஸ்மாக் கடை முன் எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க முடியுமா? டாஸ்மாக் குடிகாரர்களால் ஏற்படும் விபத்தின் தன்மையையாவது அரசு சொல்ல முடியுமா?

சிவாஜி சிலையால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு என்பதை நினைத்துப் பார்க்கும் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மோசமான சாலையால் வண்டி ஓட்டுபவர்களின் அன்றாட அவல நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு சிலையால் போக்குவரத்து நெரிசலுக்காகக் கவலைப்படும் நீதிமன்றம், தமிழகத்தின் பிற பகுதிகளின் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்களை பற்றி கவலைப்படாமல் போய் விட்டது.

அரசின் ஆதரவு பெற்ற சாலை போடும் ஒப்பந்த வேலைகளின் தரம் பற்றி நீதிமன்றம் கணக்கு கேட்க முடியாமல் போய் விட்டது. இதுவரை சாலைகளுக்கு செலவு செய்த தொகையை, தரச் சான்றை நீதி மன்றம் அறிக்கையாக கேட்டுப்பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும், ஆண்டுக்கு பல கோடிகள் சாலை போட்டதாகச் சொல்லும் சாலையில், நடக்கக் கூட முடியாத அவலத்திற்கு என்ன காரணம்?

சிவாஜி சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்று இப்போது வழக்கும் போட்டு பரபரப்பாக வாதம் செய்யும் நாகராஜன், சிலை வைக்கும்போதே தடை கோராதது ஏன்? சிலை ஒன்றும் ஒரு சில மணி நேரத்தில் வைக்கவில்லை. பல மாதங்கள் அரசின் ஒப்புதல் பெற்றுதானே திறந்தார்கள். அப்போது காவல் துறை ஆணையர், சிலை போக்குவரத்திற்கு இம்சையாக இல்லை என்றுதானே சொன்னார். கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர், கடந்த 9 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை.

சிலையால் போக்குவரத்து பாதிப்பு என்று சொல்லும் சட்டம், வருங்காலத்தில் எந்த ஒரு நபருக்கும் சிலை வைக்கத் தடை என்று உத்தரவிட முடியுமா? சிவாஜி சிலையை அகற்ற ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசு, இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் சாலையில் ஆர்ச்சுகள், ப்ளெக்ஸ் போர்டுகள், விளம்பரப் பலகைகள், கொடிகள், தோரணங்கள் கட்ட மாட்டோம் என நீதிமன்றத்திடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு அமைப்பும் மாநாடு, கட்சிக்கூட்டம், சாதனை விளக்கக் கூட்டம், கண்டனக் கூட்டம் நடத்தவும் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இது போன்ற கூட்டங்கள் நடத்த கண்மாய், ஏரிகள், சுடுகாட்டை பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

சிவாஜி சிலையை அகற்றுவதால் அவரது புகழ் அழிந்து விடாது. சிலை இடமாறுதலால் தமிழகத்தில் நடக்கும் சாலை ஊழல்கள் குறையாது, தமிழகத்தின் குடிகார சமூகம் திருந்தி விடாது. சிவாஜி நிரந்தரமாக மக்கள் மனதில் குடியேறி விட்டார். அவரை மனதில் இருந்து இட மாற்றம் செய்ய முடியாது.

போக்குவரத்து, வாகன விபத்தை தவிர்க்க நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது, வாகன அனுமதியை முறைப்படுத்த வேண்டும். ஷேர் ஆட்டோக்களை நகருக்குள் காலை 10 மணி முதல் மலை 6 வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மதுக்கடைகளின் முன் குவியும் வாகனத்திற்கு தடை வேண்டும். சாலையின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். கட்சி, இதர பிரிவினர் நகருக்குள் ஆர்ப்பாட்டம், சாதனை விளக்க கூட்டம், சோதனை முழக்கப் பிரசாரம் செய்ய தடை வேண்டும். ப்ளெக்ஸ் போர்டு, கம்பம், ஆர்ச்சுகள் வைக்க தடை செய்தால் மட்டுமே விபத்து, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.

இந்த காட்டாட்சி ...கண்ணொளி கோமா ஆட்சி....உலகத்திலயே மக்களை அடிமைகளாக நடத்தும் இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களில் மக்கள் தூக்கி ஏறிய போகிறார்கள் ! இதுதான் நடக்கப்போகும் உண்மை.

தன்னுடைய கேவலமான அரசியல் காழ்புணர்ச்சி ...சிலையை வைத்தவர் மீது கொண்ட மட்டமான ஒரு காம்ப்ளெக்ஸ் இதுதான் இதற்க்கு மூல காரணம் ! நந்தனம் தேவர் சிலை, மாம்பலம் பெரியார் சிலை , அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை .....இந்த மூன்று சிலைகள் அருகிலயே நடக்காத விபத்தா...அல்லது மரணங்களா சிவாஜி சிலை அருகே நடந்தது ? புளுகு மூட்டை பண்டிதர்கள் !

அந்த காலம் தொட்டே நம்முடைய நடிகர் திலகம் மீது கொண்டுள்ள வயிதேரிச்ச்சலும், காழ்புணர்ச்சியும் சொல்லில் அடங்கா ! இவர்கள் என்றுமே நடிகர் திலகத்தை இப்படிதான் பேடித்தனம் கொண்ட அரசியல் செய்து பெருமை குன்ற செய்யும் முயற்சியை மேற்கொள்கின்றனர் !

ஒன்று மட்டும் இவர்கள் உணரவேண்டும்...!

நடிகர் திலகம் போட்ட பிச்சை...நடிகர் திலகம் சுவைத்து போட்ட எச்சில் ...இதை தான் இவர்கள் என்றுமே அடைந்துள்ளனர் !

நாளை இந்த இடத்தில் நடிகர் திலகம் சிலை தவிர மற்ற எவளின் / எவனின் சிலை நிறுவினாலும் இது பொருந்தும் !

தகுதி இல்லாதவர்க்கு தமிழ் தரணியை தாரைவார்த்த தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் !

adiram
16th October 2015, 04:40 PM
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் நடிகர்திலகத்தை மேடையேற்றி கௌரவப்படுத்தியவர் ஒழிக.

கட்டபொம்மன் தபால்தலை வெளியீட்டின்போது நடிகர்திலகத்தை மேடையேற்றி, கட்டபொம்மன் உருவப்படத்தை நடிகர்திலகத்தை கொண்டு திறக்கவைத்து கௌரவப்படுத்தியவர் ஒழிக.

தன்னுடைய பெயரில் அரசு திரைப்படநகரை திறக்கும்போது நடிகர்திலகத்தை மேடையேற்றாமல் கீழேயே அமரவைத்து அவமானப்படுத்தியவர் வாழ்க.

(மூன்றாவது மட்டுமல்ல, மூன்றுமே அரசு விழாக்கள்தான்).

Russellbpw
16th October 2015, 04:58 PM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12108953_992654377451901_4128915235637834500_n.jpg ?oh=0f3ec0d74cd60a74d9e3a65eb741f5f5&oe=56C81810

Image from Pesum Padam magazine.

Ungal Nanban was a short film screened during early 60s to bring police closer to the society. Nadigar Thilagam made a Special Appearance in the movie.

Super Sir !

The Jurisdiction which our Nadigar Thilagam showcased with Pride and Proud, the same jurisdiction is now STABBING HIS BACK !!!

So unfortunate !!!!

RKS

Harrietlgy
16th October 2015, 04:58 PM
From Mr. Sudhangan's facebook

ஒரு பேனாவின் பயணம் – 26

அடுத்து என்ன நடந்தது ?
திரை விலகியது!
பளிச்சென்ற ஒரு பிறாமணக் குடும்ப அமைப்பில் மேடையில் ஒரு வீடு!
அது `செட்’ தான்!
திரை விலகியதுமே அரங்கத்தில் பலத்த கைதட்டல்!
முன்னாடி வரிசையில் இருந்த இசைக் கலைஞர்களில் ஒருவர்,பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
`மாமா! நார்த்தை விட செளத்தில் தலைவருக்கு நல்ல வரவேற்பு’ என்று அவர் சொல்லும்போதே!
திரையை விலக்கி பிரஸ்டிஜ் பத்மநாபனாக சிவாஜி உள்ளிருந்து திரையை விலக்கி வெளியே வருவார்!
`சாவித்திரி’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வருவார்!
அதுவும் கண்ணாடியை கழட்டி வலது கையில் வைத்திருப்பார்!
அப்போது தொலைபேசி மணி அடிக்கும்!
அவரே எடுப்பார்!
`பிரஸ்டிஜ் பத்மநாபன் ஹீயர்!’ என்பார்!
மறுமுனையில் ஏதோ பேசுவார்கள்!
`ஹலோ! ராங் நம்பர்!
அவர்களை திட்டிவிட்டு போனை வைப்பார்!
அந்த குரல் ஏற்ற இறக்கங்களை கேட்ட அடுத்த நிமிடம், சிவாஜி ஏதோ ஒரு வசனத்தை கேட்கவே முடியவில்லை!
அரங்கமே எழுந்து கைதட்டிக் கொண்டிருந்தது!
திரும்பி பார்த்தேன்!
ஆண்களும், பெண்களுமாக எழுந்து நின்று கைதட்டிக்கொண்டிருந்தார்கள்!
மேடையில் இருந்த வெளிச்சம் பாதி அரங்கத்தில் பாய்ந்து கூட்டத்தை காட்டிக்கொண்டிருந்தது!
வானில் இருந்து நிலா பொழிந்த வெளிச்சம், மீதி இருட்டு பகுதியிலிருந்த மக்களை காட்டிக்கொண்டிருந்தது!
பின்னால் காலரி மாதிரி இருந்த பகுதியின் மக்களை அங்கே இடது பக்க கேட்டுக்கு எதிரே இருந்த முருகன் கோவில் விளக்கின்வெளிச்சன் காட்டிக்கொண்டிருந்தது!
அந்த முருகன் கோவில் இருந்த தெருவிற்கு பெயர் `இருசப்ப கிராமணி தெரு’!
அந்தத் தெருவில் அந்த முருகன் கோவிலுக்கு இடது பக்கத்தில் நான்கைந்து வீடுகளைத் தாண்டித் தான் சிலம்புச் செல்வர்ம.பொ.சியில் வீடு இருந்தது!
அதை விடுங்கள்!
சிவாஜி இங்கே அடுத்த வசனம் பேச ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!
அடுத்து சிவாஜி , மேடையில் அந்த அந்தணர் வேடத்தில் தன் மனைவியை ` சாவித்திரி’ என்றழைத்ததும்!
மடிசார் உடையில் வருவார் அவர் மனைவி சாவித்திரி!
அவர் நான் ஏற்கெனவே `அதே கண்கள்’ படத்தில் பார்த்த ஜி.சகுந்தலா!
அந்த வயதில் எனக்கு எப்படி எனக்கு அத்தனை நடிகர், நடிகைகளின் பெயரும் தெரியும் என்கிற சந்தேகம் வரலாம்!
எனக்குத்தான் படிப்பை விட சினிமாவும், சினிமா சார்ந்த பத்திரிகைகளும் மிகவும் மனப்பாடமாச்சே!
நாடகம் அந்த வயதில் புரிந்தும், புரியாமலும் இருந்தது என்பதுதான் உண்மை!
ஆனால் சிவாஜி கணேசனை நேரில் முதல் வரிசையில் இருந்து பார்த்த எனக்கு அந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
கூட்டம் கலைய ஆரம்பித்தது!
நான் அங்கிருந்து நகரவில்லை!
அப்படியே அந்த இசைக்கலைஞர்கள் எல்லோரும் மேடைக்குப் போனார்கள்!
நானும் சிறுவனாக அந்த மேடைக்கு அவர்கள் பின்னால் போனேன்!
அப்போதுதான் சிவாஜி தன் மேக்கப்பை கலைத்துவிட்டு ஒரு வெள்ளை சட்டை, வேட்டியுடன், அந்த பிரஸ்டிஜ் பத்மநாபன்வேடத்திலிருந்த நெற்றி வீபூதியை கலைத்துவிட்டு, சாதாரணமாக வெளியே வந்தார்!
அப்போது என் பக்கத்திலிருந்த இசைக் கலைஞரை அழைத்தார்!
` என்ன அந்த அம்மா படத்தைப் பார்த்து நான் அழுத இடத்தில் சரியா வாசிக்கலை! உன் ம்யூசிக் வரும்னு காத்திருந்தேன்! நான்ஏதோ கோளாறு பண்ணிட்டேன்னு தெரிஞ்சு நான் சமாளிச்சேன்! நாளைக்கு இந்தத் தப்பு நடக்கக்கூடாது தெரிஞ்சுதா!’ என்றுஅவரை தட்டிக்கொடுத்துவிட்டு, மேடைக்கருகில் வந்து நின்ற அவர் காரில் ஏறிப் போய்விட்டார்!
நான் இப்போது எல்லோரையும் மறந்து, அதாவது அந்த முதல் வரிசையில் என்னை சேர்த்துக்கொண்டஇசைக்கலைஞர்களையெல்லாம் மறந்து விட்டு அந்த காரின் பின்னால் ஒடினேன்!
கார் ஒடியே போனது!

RAGHAVENDRA
16th October 2015, 06:52 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/12112183_992981280752544_5895951311280996154_n.jpg ?oh=26ce3c32044812871f2a1e7bea997c4a&oe=56C482BA

சில ஆயிரம் அடிகள் படம் பிடிக்கப்பட்டு ஏதோ காரணங்களால் நின்று போன நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்று நடமாடும் தெய்வம்.

நிழற்படம் நன்றி பேசும்படம்

Russellsmd
16th October 2015, 08:09 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/k_zpszfrnevfd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/k_zpszfrnevfd.jpg.html)


இருபது வருடங்களுக்கு முன்பு
ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் படித்த நகைச்சுவைத் துணுக்கு இது.

மணமாகி,புருஷன் வீடு வந்த
மனைவி தனது அன்பான கணவனுக்குத் தன் கையால்
வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து தர வேண்டுமென்று
ஆசைப்பட்டாள்.

கணவனுக்கு"அல்வா"என்றால்
மிக விருப்பமென்று தெரிந்து
கொண்டு, அன்றிரவே அல்வா
தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத்
துவங்கினாள்.

மறுநாள் வேலைக்குக் கிளம்பிய கணவனின் காதில்
கிசுகிசுத்தாள்.."என்னாங்க..
சாயங்காலம் சீக்கிரமா வந்திடுங்க..உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச "அல்வா" செஞ்சு வைக்கிறேன்."

கணவன் உற்சாகமாய்க் கிளம்பிப் போனான். சொன்னது
போலவே மாலையில் சீக்கிரம்
வந்து விட்டான்.

ஆர்வமாய் வந்த கணவனின்
கையில் மனைவி அல்வாக் கிண்ணத்தை ஆசையாய்த்
தந்தாள்.

அவன் ஆசையின் வேகத்திற்கு
அல்வா வரவில்லை. சீக்கிரம்
செய்து விட வேண்டும் என்கிற
பதட்டத்தில் மனைவிக்காரியின் செய்முறையில் ஏதோ பக்குவம் தவற..அல்வா, கோந்து போல் ஆகி கிண்ணத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டது.

கணவன் அல்வாக் கிண்ணத்தோடு போராடுவதைப்
பார்த்து மனைவி கவலையாய்க் கேட்டாள்.

"ஏங்க..அல்வா நல்லா இல்லையா?"

"சேச்சே.. யார் சொன்னா?
நீ செஞ்ச அல்வா,நம்ம "நடிகர்
திலகம்" மாதிரி இருக்கு."
என்றான்.

குஷியான மனைவி,"எப்படி
சொல்றீங்க?"என்று கேட்டாள்.

"ஆமா.. நடிகர் திலகம் மாதிரியே 'பாத்திரத்தோட பாத்திரமா' ஒன்றீருச்சு இல்ல".
-------
அந்த கணவன் நடிகர் திலகத்தின் ரசிகனாகத்தான்
இருக்க வேண்டும். தவறைச்
சுட்டிக் காட்டும் போது கூட
அடுத்தவர் மனதை நோகடிக்காத அந்த நல்ல குணம் வேறு யாருக்கு வரும்?

RAGHAVENDRA
16th October 2015, 08:25 PM
ஸ்வாதி ப்ரொடக்ஷன்ஸ் என்ற ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் 60களின துவக்கத்தில் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் துவக்கியது. இரு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்தப் படம் கடைசியில் வளராமல் நின்று போனது. ஒரு முறை பச்சை விளக்கு என்ற பெயரிலும் மற்றோர் முறை தங்க சுரங்கம் என்ற பெயரிலும் தயாரானது. பின்னாளில் இந்த இரு பெயர்களுமே நடிகர் திலகத்தின் வேறு படங்களுக்கு சூட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது வரலாறு. அந்த படத்தின் இரு ஸ்டில்கள் நம் பார்வைக்கு.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xal1/v/t1.0-9/10455444_993012684082737_7784226142242069579_n.jpg ?oh=a7699d24af2cfdc3d463ce3ec4450ab7&oe=56C76FF9&__gda__=1452637614_6851167d52fbe3cc7631a02125beb9c f

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/12118670_993012660749406_2929654702443261464_n.jpg ?oh=039b76c658b9df5b22054bdce9525d47&oe=569555B4

Russelldvt
17th October 2015, 01:34 AM
http://i61.tinypic.com/2ic9y8o.jpg

Russelldvt
17th October 2015, 01:35 AM
http://i60.tinypic.com/2nvs9c0.jpg

Russelldvt
17th October 2015, 01:37 AM
http://i58.tinypic.com/34qvk7d.jpg

Russelldvt
17th October 2015, 01:38 AM
http://i62.tinypic.com/xprd3n.jpg

Russelldvt
17th October 2015, 01:39 AM
http://i62.tinypic.com/33m5p38.jpg