PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

KCSHEKAR
22nd August 2015, 11:49 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு குறித்த ஒரு அருமையான கவிதை.
(திரு.ஆதவன் ரவி அவர்களின் முகநூலிலிருந்து)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kattapomman/Pudhupadam_zpsemhsmj8v.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kattapomman/Pudhupadam_zpsemhsmj8v.jpg.html)

புதுசாக்கப்பட்டதா..?

இல்லை..இல்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன்
புதுசுதான் எப்பவும்.
-----------------
ஆடம்பரத்திற்கென இல்லாமல்
அர்த்தமுள்ளதாய் நாமுணரும்
இந்தப் படத்தின்
பிரம்மாண்டம் புதுசு.

சராசரி மனிதர்களால்
செய்யவியலாத சாகசங்களை
செய்து காட்டும் நாயகர்களையே
காட்டிப் பழகிய
நம்மூர்த் திரைகளுக்கு
இந்த சரித்திர நாயகனின்
வேக வாழ்க்கை
காட்டுதல் புதுசு.

புகழ்,சம்பாத்தியம்,கௌரவம்
இவற்றோடு மட்டுமே
தன்னைப் பொருத்திக் கொள்ளும்
நடிகர்களுக்கு மத்தியில்..
சிவாஜி என்கிற கலைஞன்
தன்னை
இலட்சியத்தோடு
பொருத்திக் கொண்டது புதுசு.

எதிர் நின்று பார்க்கையிலே
நம்மைப் போலவே
இயல்புத் தோற்றம் காட்டுகிற
ஒரு நடிப்புக் கலைஞன்,
வேஷங்கட்டிய விநாடியே
வீரபாண்டிய கட்டபொம்மனாக
மாறிப் போனது புதுசு.

நம்மில் எவரும் பார்த்திராத
அந்த மாவீரனை,
தன் வடிவில்
எல்லோரையும்
பார்க்க வைத்தது புதுசு.

உருவிப் பிடித்த
வாளின் வீச்சை
கண்களினாலும்..
வெடித்துப் பயங்காட்டும்
பீரங்கிச் சத்தத்தை
குரலினாலும்
அந்த மகாகலைஞன்
காட்டியது புதுசு.

"இருந்தோம்..போனோம்"
என்றிருந்த சாதாரணர்களுக்கிடையே
சுள்ளென்று
தன்னை நிரூபித்துப் போன
கட்டபொம்மன் மட்டுமல்ல..
திரையில்
வந்து போனவர்களுக்கிடையே
வாழ்ந்து போன
நடிகர் திலகமும் புதுசு.

சினிமாதானே என்று
தன் நடிப்புக் கடமையினின்று
தப்பிக்காமல்..

வாய் பேசும் வசனந்தானே என
மனப்பாடம் பண்ணி
ஒப்பிக்காமல்..

ஒட்டுதலாய்,
உணர்வுப்பூர்வமாய்,
உண்மையாய்...
ஓர் வீரபுருஷனின்
சரித்திரத்தை
ஒரு திரைக் கலைஞன்
விளங்க வைத்தது புதுசு.

இதுவரை
எவரும், எதிலும்
தொடாத உயரங்களை
எங்கள் சிவாஜி
தொட்டது புதுசு.

தன் திறமை நெருப்பெடுத்து
நம் கவலைப் பொழுதுகளை
சுட்டது புதுசு.

அரை நூற்றாண்டு காலம்
தாண்டின பிறகும்
அரங்கங்கள் நிரப்புகிற
அதிசயம் புதுசு.

ஆகாயம், நீலம் தவிர்த்து
நிறம் மாறிக் கொண்டாலும்,
ஆதவன், கிழக்கிற்கு
முதுகு காட்டி உதித்தாலும்,
மாறி விடாத
அய்யா நடிகர் திலகம் மீதான
அன்புள்ளங்களின் பாசம்...
எல்லாக் காலங்களிலும்
புதுசு.
---------------
வீரபாண்டிய கட்டபொம்மன்
புதுசுதான் எப்பவும்.
---------------
புதுப்படம் பார்போம்.. எல்லோரும்.
---------------

KCSHEKAR
22nd August 2015, 11:51 AM
INDIAN EXPRESS - 22-08-2015
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kattapomman/IndianExpressP2_zpsh2b5vm3t.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kattapomman/IndianExpressP2_zpsh2b5vm3t.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kattapomman/IndianExpressP1_zpsnpcejm6y.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kattapomman/IndianExpressP1_zpsnpcejm6y.jpg.html)

KCSHEKAR
22nd August 2015, 11:52 AM
TIMES OF INDIA - 22-08-2015

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kattapomman/TimesOfIndia_zpswmgqlo7q.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kattapomman/TimesOfIndia_zpswmgqlo7q.jpg.html)

joe
22nd August 2015, 12:38 PM
சந்திரசேகர் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு நிலை குறித்த பல்வேறு தகவல்களுக்கு நன்றி ..நீங்களாவது தொடர்ந்து இந்த செய்திகளை கொடுத்து வாருங்கள்.
நம் மண்ணில் இல்லாமையால் பங்குக்கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு இவை மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.

sss
22nd August 2015, 12:44 PM
திரு வீயார் சார்

தங்கள் மன கவலையை மறக்கடிக்கும் சக்தி நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரிடமும் இல்லை என்பது கண்கூடு.
இருப்பினும் உங்கள் பங்களிப்பில் என்றும் ஒரு மாய சக்தி உண்டு அதை மிகவும் ரசித்து... ரசிகன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என நிறைய முறை எண்ணி வியந்துள்ளேன்...

தற்போது விஜயம் செய்து நம்மை மகிழ்விக்கும் கட்டபொம்மன் உங்களை மீண்டும் இங்கு கொண்டு வந்து உங்கள் பங்களிப்பைத் தர ஆவன செய்வார் என நம்பி காத்திருக்கும்...

சகோதரன் சுந்தர பாண்டியன்

sss
22nd August 2015, 12:51 PM
வீர பாண்டிய கட்டபொம்மன் ஹிந்தி வடிவம் :


http://i39.photobucket.com/albums/e153/balebale5/11896181_749047728574968_6258530191429263448_n_zps jocjtto5.jpg

orodizli
22nd August 2015, 12:51 PM
மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் .

Russellbpw
22nd August 2015, 02:10 PM
22 -08-2015 ( SATURDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2208sathyam_zpsmjxrxds8.jpg[/URL]"]


23 -08-2015 ( SUNDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/23_zpsltza2ice.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/23_zpsltza2ice.jpg.html)

22 -08-2015 ( SATURDAY )- ESCAPE CINEPLEX - VEERAPANDIYA KATTABOMMAN - 12.30PM - FULL HOUSE


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vpk23esc_zpsbqtcjxon.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vpk23esc_zpsbqtcjxon.jpg.html)

JamesFague
22nd August 2015, 02:26 PM
From Face Book



மிகவும் உணர்வு பூர்வமான சோகப்பாடல் அது!

நடிகர் சிவாஜி கணேசன் பாடுவதாக வரும் அப்பாடலை வழக்கம் போல் டி.எம்.சவுந்தர்ராஜனைப் பாட வைக்காமல், வேறொரு பாடகரை பாட வைத்தார் எம்.எஸ்.விஸ்நாதன்.
அதை ஏற்றுக் கொண்டார் சிவாஜி.
பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின், அதை திரையில் போட்டு பார்த்த போது, பாடகரின் குரல் மற்றும் சிவாஜியின் நடிப்பு இரண்டுமே நன்றாக இருந்தும், ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது. அதனால், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்பாடல் காட்சியை போட்டு காட்டினர். அதை பார்த்த எம்.எஸ்.வி., ‘சிவாஜியின் செழுமையான நடிப்போடு, அக்குரல் ஒட்டவில்லை...’ என்றார்.
‘பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே... இனி என்ன செய்வது...’ என்று எல்லாருக்கும் குழப்பம். திடீரென, எம்.எஸ்.வி.,க்கு ஒரு எண்ணம் தோன்றியது.
உடனே, டி.எம்.சவுந்திரராஜனை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார். சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடச் சொன்னவர், சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, அப்பாடலை பாடும்படி டி.எம்.எஸ்.,சிடம் வேண்டுகோள் விடுத்தார். மிகவும் சவாலான வேலை இது.
அக்காலத்தில், இன்றைக்கு இருப்பதை போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இருப்பினும், சிவாஜியின் வாய் அசைவையும், முக பாவங்களையும் நன்கு கவனித்து, அப்பாடலை பாடி முடித்தார் டி.எம்.எஸ்.,
டி.எம்.எஸ்.,சை கை கொடுத்து பாராட்டினார் எம்.எஸ்.வி., அப்பாடல், அவர்கள் இருவருக்கும் ஒரு சவாலான அனுபவம் மட்டுமல்ல, வித்தியாசமான அனுபவமும் கூட!
வழக்கமாக, டி.எம்.எஸ்., பாடிய பாடலுக்கு ஏற்ப, வாய் அசைப்பார் சிவாஜி. ஆனால், இதில் அப்படியே தலைகீழாகி, சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, டி.எம்.எஸ்., பாடினார்.
டிஜிட்டல், ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதிநவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில், திறமையையும், தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி, இச்சாதனையை படைத்த இவ்விருவரும், தமிழ்த்திரை இசையின் அதிசயங்கள். இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அப்பாடல் எது என்று கேட்கிறீர்களா?
கவுரவம் படத்தில் இடம் பெற்ற, பாலுாட்டி வளர்த்த கிளி... என்ற பாடல் தான்!
‘நீங்காத நினைவுகள்’ நுாலிலிருந்து:

Harrietlgy
22nd August 2015, 02:46 PM
To day's Tamil The Hindu,
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02519/veera_2519944f.jpg


திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் நேற்று திரையிடப்பட்டது. இதனால் சிவாஜி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். நடிகர் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 1959-ம் ஆண்டு வெளியானது. அப்போது தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு, பெரும் வெற்றியைப் பெற்றது.

திரைப்படத் துறையில் தொழில்நுட்பங்கள் பிரபலமாகாத காலத்திலேயே மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி கலையரங்கம் திரையரங்கில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர், திரையங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஃஃபிளக்ஸ் பேனரில் உள்ள சிவாஜி கணேசனின் படத்துக்கு மலர்கள் தூவியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் எஸ்.அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியது: ஏற்கெனவே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது, அதில் வரும் சப்தங்களும், வசன உச்சரிப்புகளும் தெளிவாக உள்ளன. ஃபிலிமில் படம் பார்க்கும்போது இடையிடையே கோடுகள் வரும். ஆனால், புதிய தொழில்நுட்பத்தால் தற்போது காட்சிகள் தெளிவாக உள்ளன. இது வித்தியாசமான அனுபவமாக உள்ளதால் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



நாம் இன்று சுதந்திர இந்தியாவில் வசித்து வருகிறோம். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடனும், தீரத்துடன் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவாஜி கணேசன் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி, கட்டபொம்மனாகவே மாறி நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் மீது பற்றுதல் அதிகமாகும் என்றார்.

Russellxor
22nd August 2015, 04:31 PM
இன்றைய மாலைமலர்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440240791935_zpsnhmww6bj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440240791935_zpsnhmww6bj.jpg.html)

Murali Srinivas
22nd August 2015, 05:46 PM
சந்திரசேகர் சார் பதிவிட்ட கட்டபொம்மன் பற்றிய கவிதைக்கு சொந்தக்காரரும் இது போன்ற பல அற்புதமான கவிதைகளை தினமும் முகநூலில் அரங்கேற்றும் கவிஞரும், பிரிக்கப்படாத எங்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவகங்கையை சொந்த ஊராக கொண்டவருமான நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஆதவன் ரவி இப்போது நம்முடைய நடிகர் திலகம் திரியிலும் இணைந்திருக்கிறார். நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி உங்கள் கவிதைகளையும் அனுபவங்களையும் இங்கேயும் பதிவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு அனைவர் சார்பிலும் வரவேற்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
22nd August 2015, 05:48 PM
மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் .

சுகராம்,

டிஜிட்டல் பாசமலர் வெளியான நேரத்தில் நடிகர் திலகம் திரியில் இணைந்து "சென்ற ஞாயிறன்று சென்னை சாந்தியில் நமது ரசிகர்களுடன் படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்" என்றெல்லாம் எழுதி விட்டு சில நாட்களுக்கு பின் மாற்று முகாம் சென்று நான் எம்ஜிஆர் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு பதிவிட ஆரம்பித்த நீங்கள் ஆதிராம் பற்றி பேசுவது வேடிக்கையாக இல்லை?

இங்கே யார் யார் என்னென்ன பெயரில் பதிவிடுகிறார்கள் என்பதைப் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்போது நீங்கள் ரெகுலராக பங்களிக்கும் திரியில் பல பெயர்களில் பதிவிட்டவர்களைப் பற்றி நான் சொல்லவா? யாரையும் காயப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் அமைதி காக்கிறேன். அங்கே இருப்பவர்கள் என்னை வேண்டாதவர் பட்டியலில் வைத்திருந்தாலும் கூட நான் அப்படி நினைக்கவில்லை என்பதனால்தான் உங்களைப் போன்றோர் இந்த வேண்டாத வேலையை செய்யும்போதுகூட நான் மெளனமாக இருக்கிறேன்.

இனி மேலாவது எவரும் இது போல் இந்த பெயரில் எழுதுபவர் அவரா? அந்த பெயரில் எழுதுபவர் இவரா என்பது போன்ற யாருக்கும் பயனில்லாத வாதங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு உருப்படியாக பதிவிட ஆரம்பித்தால் நல்லது.

அன்புடன்

Murali Srinivas
22nd August 2015, 06:02 PM
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

இரண்டு திரிகளுக்கிடையே இணக்கமான உறவும் நட்புணர்வும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் பதிவிட்டதற்கு பதிலாக முரளியை தவிர அனைவரும் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாக சொல்லியிருந்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாயிருக்கும். ஒரு வேளை என் பெயரை சொல்ல உங்களுக்கு விருப்பமில்லையோ என்னவோ!

எப்படியிருப்பினும் இங்கே வந்ததற்கும் நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் பெரும்பாலானோரை பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி!

அன்புடன்

tacinema
22nd August 2015, 06:15 PM
how is our kattabomman in Madurai? dear Murali, any updates from Madurai?

HARISH2619
22nd August 2015, 06:39 PM
முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் இருக்கும் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி விலாவரியாக திங்களன்று காலை அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக எழுதுவதுதான் நம் முரளி சாரின் பாணி .அதனால்தான் நான் அதைப்பற்றி இன்னும் அவரிடம் கேட்காமல் திங்கள்வரை காத்திருக்கலாம் என இருக்கிறேன்.சரிதானே முரளி சார் ?

joe
22nd August 2015, 06:58 PM
முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் இருக்கும் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி விலாவரியாக திங்களன்று காலை அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக எழுதுவதுதான் நம் முரளி சாரின் பாணி .அதனால்தான் நான் அதைப்பற்றி இன்னும் அவரிடம் கேட்காமல் திங்கள்வரை காத்திருக்கலாம் என இருக்கிறேன்.சரிதானே முரளி சார் ?

absolutely .. நானும் காத்திருக்கிறேன்.

tacinema
22nd August 2015, 07:08 PM
Evergreen Kattabomman has got infinite energy to attract everyone, especially youth in today's internet age. We should take it to Facebook, Twitter to attract youths to this magnum opus. kattabomman 100 theater release across TN: http://tamil.filmibeat.com/news/veerapandia-kattabomman-re-release-100-plus-theaters-036338.html

This time too, as always, there is a great interest in VPKB. Hopefully, the theater count will go up in the coming days.

Any plans of releasing the movie in overseas, especially US?

Regards.

tacinema
22nd August 2015, 07:09 PM
என் படங்கள் மட்டுமே என்றும் தமிழனின் ஜீவநதி என்று மீண்டும் ஒரு முறை NT prove செய்துள்ளார். எந்த காலத்திலும் பார்த்து, ரசிக்க, அனுபவிக்க, பணம் அள்ள முடியும் என்றால் அது எங்கள் தங்க ராஜா நடிகர் திலகம் படங்களே. என்றுமே NT மட்டுமே ஹீரோ,

Russellxor
22nd August 2015, 09:55 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440259346644_zpsmimp2pjq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440259346644_zpsmimp2pjq.jpg.html)
இன்று மாலைக்காட்சி க்கு நல்ல கூட்டம்.கர்நாடிக்கில் இரண்டு காட்சிகள்.11AM.6PM.காட்சிகள் மாறி மாறிதிரையிடுவது சிறிது குழப்பத்தை தருகிறது.ஏனெனில் இரவுக்காட்சி இருக்கும் என்று வந்து திரும்பிப் போனவர்கள் சுமார் 50பேர்களுக்கு மேல் இருக்கும்.9மணிக்கு நான் நான் தியேட்டரில் இருந்து பார்த்தது.திரும்பிப் போனவர்களில் சில பேர்குடும்பத்துடன் வந்திருந்தனர்.படம் இந்தக்காட்சிபார்க்கமுடியவில்லைஎன்று பெரிதும் சங்கடத்துடனே திரும்பிச் சென்றனர்

Murali Srinivas
22nd August 2015, 10:02 PM
Dear tac,

Let's not talk about anybody else here and especially on a comparative mode. Let's refrain from that and maintain the decorum which is our hallmark. Let's dwell on NT, VPKB and related happenings.

Thanks for your understanding

Regards

Russellbpw
22nd August 2015, 10:21 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/23escape_zps521txaxn.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/23escape_zps521txaxn.jpg.html)

SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - SATHYAM CINEPLEX - STUDIO 5 - 3PM - HOUSE FULL
SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - ESCAPE CINEMAS - KITES - 12.30PM - HOUSE FULL


SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - ESCAPE CINEMAS - CARVE - 9.20 AM - 10 Tickets Pending as of now, SATURDAY 10:25pm

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/239_zps2xtwpchz.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/239_zps2xtwpchz.jpg.html)

Russellbpw
22nd August 2015, 10:30 PM
SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - SHANTHI CINEMAS - 6.45pm - HOUSE FULL

SUNDAY NEWS FLASH

23-08-2015 ESCAPE KARVE 9.20am MORNING SHOW HAS DRAWN FULL HOUSE.

THE ONLY TAMIZH FILM TO HAVE DRAWN FULL HOUSE TODAY FOR 9.20am SHOW AMIDST 5 OTHER FILMS.
Updated time 9.30am, 23-08-2015

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/shan_zpsmo0hnerc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/shan_zpsmo0hnerc.jpg.html)

Russellbpw
22nd August 2015, 10:53 PM
https://www.youtube.com/watch?t=127&v=Tp5LGkbqEXs
THANKYOU ADHAVAN SIR !!!

EXCELLENT PRESENTATION

Harrietlgy
22nd August 2015, 11:08 PM
Another video from Aadavan. From you tube


https://www.youtube.com/watch?v=-guKPzVMqkk

Russellxss
22nd August 2015, 11:13 PM
http://epaper.maalaimalar.com/2282015/epaperimages/2282015/2282015-md-hr-10/8234257_1.jpg

அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் சிவாஜி.

Russellbpw
23rd August 2015, 09:34 AM
News Flash - Today 9.20am - Escape Cineplex Karve - Full House - 15 mins before Show time.

Update - Kathir - Escape Cinemas

Russelldwp
23rd August 2015, 01:54 PM
திருச்சி கலைஅரங்கம் தியேட்டரில் சிங்கத்தமிழனின் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்கும் விதமாக ரசிகர்களின் அலங்காரம் உங்கள் பார்வைக்கு

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/11949486_110231089328797_8143274802218107062_n.jpg ?oh=ebde034598f6a92b69cd22ec24136f62&oe=566E2AFC

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/10422348_110229745995598_741424500884499266_n.jpg? oh=92645fed41c959791fa75323bf020c33&oe=567667D6

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11898546_110228582662381_6523974546928253798_n.jpg ?oh=de1d321f4d550623357723be84713da3&oe=56370124

Russelldwp
23rd August 2015, 02:39 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11137158_110619289289977_2885534231771718786_n.jpg ?oh=7e09e668fa2794b756d397d4bfb41655&oe=568407A2&__gda__=1450626603_9533f29c6e9113ec510a13661394a72 e

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xlf1/v/t1.0-9/11953288_110618762623363_3244750999553018407_n.jpg ?oh=5c9c0b9bb0ee7f8ee8bbcd0c0719ff9b&oe=563ADD2E&__gda__=1450365009_7f6736df04a32c709a002945c349f32 8

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11866250_110618449290061_538005919637640226_n.jpg? oh=fdfdfd48e0f6e3ae7a37718eb34ef7ec&oe=5641812F&__gda__=1450274825_cffecff527becfbf1e4622eeb1c3e63 9

https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11951157_110620149289891_917393725494056201_n.jpg? oh=bd2441d3e204e1f4181b93a7c38740c4&oe=563F1A91

Russelldwp
23rd August 2015, 02:48 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/r270/11902257_110627255955847_3997127143085082973_n.jpg ?oh=dcf3c159aa5ac8d95ace25e692a18afe&oe=5671023C

orodizli
23rd August 2015, 03:03 PM
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!

joe
23rd August 2015, 03:12 PM
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும்

மறைமுகமாக அதுவும் உங்கள் அனுமானம் எனும் போதே குற்றம் சாட்டும் நீங்கள் நேரடியாக இருபுறமும் தாக்குபவர்களை திருத்தி விட்டு முரளி-க்கு அறிவுரை சொல்லலாமே ?

நாங்க இப்போ வீரபாண்டிய கடபொம்மன் உலா நேரத்தில் இருக்கிறோம் .. கொஞ்சம் காலம் கழித்து இந்த பஞ்சாயத்துகளை வைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

siqutacelufuw
23rd August 2015, 11:52 PM
Dear tac,

Let's not talk about anybody else here and especially on a comparative mode. Let's refrain from that and maintain the decorum which is our hallmark. Let's dwell on NT, VPKB and related happenings.

Thanks for your understanding

Regards

VERY GOOD ADVICE. THANK YOU - My Dear Brother Mr. Murali Srinivas.

Murali Srinivas
24th August 2015, 12:08 AM
இன்று தமிழகமெங்கும் கட்டபொம்மனுக்கு படு உற்சாக வரவேற்பு. சென்னையில்

எஸ்கேப் - 2 காட்சிகள் (ஒரு சிறப்பு காலைக்காட்சி உள்பட) ஹவுஸ் புல்

சத்யம் - மதியம் 3 மணிக் காட்சி ஹவுஸ் புல்

சாந்தி - மாலைக்காட்சி ஹவுஸ் புல்

PVR , AGS வில்லிவாக்கம், S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.

பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

மதுரை

Inox - புல் - மாலை

அண்ணாமலை - 520 டிக்கெட் மாலை

சினிப்ரியா - 280 [மதியம்]

சோலைமலை - 210 - மாலை

மதுரை மாநகரின் புறநகர் பகுதி என்று சொல்லப்படக்கூடிய திருநகர் கலைவாணியில் வெள்ளி முதல் ஒரு ஒரு புதிய படம் வெளியாகி இரண்டு நாட்களில் தூக்கப்பட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இன்று முதல் கட்டபொம்மன் திரையிடப்பட்டு இன்றைய மாலைக்காட்சிக்கு மிக கணிசமான அளவில் மக்கள் வந்திருக்கின்றனர்

கோவை

சத்யம் - புல்

பல்லவி - புல்

கர்நாடிக் - 750 டிக்கெட் - ரோடு ப்ளாக், band இசை, வாண வேடிக்கை, போலீஸ் விரட்டல் எல்லாம் நடந்திருக்கிறது.

சேலம்

முதலில் ARAS (?) மல்டிப் ப்ளெக்ஸ் -ல் மட்டும் வெளியான படம் இன்று முதல் சுப்ரகீத் திரையரங்கிலும் திரையிடப்பட்டு இரண்டிலும் மாலைக்காட்சி ஹவுஸ் புல். அது தவிர இன்று முதல் நாமக்கல் K .S அரங்கிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

திருச்சி, நெல்லை மற்றும் நாஞ்சில் மாநகரிலும் நல்ல response என்று கேள்வி.

கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்

tacinema
24th August 2015, 12:23 AM
இன்று தமிழகமெங்கும் கட்டபொம்மனுக்கு படு உற்சாக வரவேற்பு. சென்னையில்

எஸ்கேப் - 2 காட்சிகள் (ஒரு சிறப்பு காலைக்காட்சி உள்பட) ஹவுஸ் புல்

சத்யம் - மதியம் 3 மணிக் காட்சி ஹவுஸ் புல்

சாந்தி - மாலைக்காட்சி ஹவுஸ் புல்

PVR , AGS வில்லிவாக்கம், S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.

பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

மதுரை

Inox - புல் - மாலை

அண்ணாமலை - 520 டிக்கெட் மாலை

சினிப்ரியா - 280 [மதியம்]

சோலைமலை - 210 - மாலை

மதுரை மாநகரின் புறநகர் பகுதி என்று சொல்லப்படக்கூடிய திருநகர் கலைவாணியில் வெள்ளி முதல் ஒரு ஒரு புதிய படம் வெளியாகி இரண்டு நாட்களில் தூக்கப்பட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இன்று முதல் கட்டபொம்மன் திரையிடப்பட்டு இன்றைய மாலைக்காட்சிக்கு மிக கணிசமான அளவில் மக்கள் வந்திருக்கின்றனர்

கோவை

சத்யம் - புல்

பல்லவி - புல்

கர்நாடிக் - 750 டிக்கெட் - ரோடு ப்ளாக், band இசை, வாண வேடிக்கை, போலீஸ் விரட்டல் எல்லாம் நடந்திருக்கிறது.

சேலம்

முதலில் ARAS (?) மல்டிப் ப்ளெக்ஸ் -ல் மட்டும் வெளியான படம் இன்று முதல் சுப்ரகீத் திரையரங்கிலும் திரையிடப்பட்டு இரண்டிலும் மாலைக்காட்சி ஹவுஸ் புல். அது தவிர இன்று முதல் நாமக்கல் K .S அரங்கிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

திருச்சி, நெல்லை மற்றும் நாஞ்சில் மாநகரிலும் நல்ல response என்று கேள்வி.

கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்

Dear Murali,

ரொம்ப சந்தோஷமான நியூஸ். போட்ட முதல் ஏற்கனவே அள்ளியச்சி போல இருக்கு .... இனி வருவது எல்லாம் லாபம் தான்... கர்ணன் போல, கட்டபொம்மனும் இந்த வார Tamil film weekly collection report வருவார் என நினைக்கிறேன்.

Again NT proves he is the real BO king, ever mass BO power engine. Collection King of Tamil Films. Waiting for more wonderful news.

Regards.

PS: அடுத்த NT டிஜிட்டல் movie எது?

sivaa
24th August 2015, 04:46 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i60.tinypic.com/66hp8m.jpg

http://i62.tinypic.com/5wbcav.jpg

sivaa
24th August 2015, 04:47 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/xcvg61.jpg

http://i62.tinypic.com/2vi1a3n.jpg

sivaa
24th August 2015, 04:49 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/2zrqijb.jpg


http://i60.tinypic.com/143jf45.jpg

sivaa
24th August 2015, 04:51 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/208i5ud.jpg

http://i57.tinypic.com/21kice0.jpg

sivaa
24th August 2015, 04:52 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i58.tinypic.com/akvjf7.jpg

http://i61.tinypic.com/2en0x8o.jpg

sivaa
24th August 2015, 04:54 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i62.tinypic.com/9gg1mr.jpg

http://i59.tinypic.com/2nvcv44.jpg

sivaa
24th August 2015, 04:55 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i57.tinypic.com/6p9sif.jpg

http://i62.tinypic.com/4s083r.jpg

sivaa
24th August 2015, 04:57 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i62.tinypic.com/34tep9h.jpg

http://i59.tinypic.com/20f3tqh.jpg

sivaa
24th August 2015, 04:58 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i57.tinypic.com/kcx7iv.jpg

http://i62.tinypic.com/292nxo0.jpg

sivaa
24th August 2015, 05:00 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/24o8y6s.jpg

http://i61.tinypic.com/28hoig4.jpg

sivaa
24th August 2015, 05:01 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i59.tinypic.com/8x25g6.jpg

http://i59.tinypic.com/4qgbcg.jpg

sivaa
24th August 2015, 05:03 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து


http://i59.tinypic.com/k2erle.jpg

http://i58.tinypic.com/bjh5zd.jpg

sivaa
24th August 2015, 05:05 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/2n1ylxh.jpg

http://i58.tinypic.com/2j1rera.jpg

sivaa
24th August 2015, 05:07 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/eu205t.jpg

http://i60.tinypic.com/2n6ddoj.jpg

sivaa
24th August 2015, 05:08 AM
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து

http://i61.tinypic.com/2q08tpl.jpg

http://i57.tinypic.com/24l05kh.jpg

http://i58.tinypic.com/2mq0pi9.jpg

RAGHAVENDRA
24th August 2015, 07:27 AM
நண்பர்களே,
அருமை சகோதரர் திருச்சி பாஸ்கரின் கருத்துக்களால் நான் மட்டுமின்றி பல நண்பர்கள் மனம் புண்பட்டிருப்பதாக என்னிடம் முகநூல் தனியஞ்சல் மூலமும் நேரிலும் பகிர்ந்து கொண்டார்கள். இருந்தாலும் நமது மக்கள் தலைவரின் புகழ் பரப்பும் பணியில் அடியேனுடைய தொடர்களைத் தொடர்ந்து படிப்பதாகவும் அவற்றைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் மிகவும் வற்புறுத்தியுள்ளார்கள். இதன் மூலம் நமது மய்யம் இணையதளமும் அதில் நடிகர் திலகம் இழைகளும் எந்த அளவிற்கு நம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இருக்கிறது. மேலும் நம்முடைய தொடர்களை நிழற்படங்களுடனும் ஆவணங்களுடனும் படிக்கும் பொழுது ஒரு புத்தகத்தைப் படிக்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதற்கு மய்யம் வடிவமைப்பைத் தான் நாம் பாராட்ட வேண்டும். அந்த வகையில் நமது மய்யம் இணைய தளத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புச் சகோதரர் திருச்சி பாஸ்கர் மட்டுமல்ல அனைவருக்குமே நான் தாள் பணிந்து ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

நடிகர் திலகத்தின் முடிவுகள் தவறானவை என்று சில நண்பர்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்த மட்டில் அவர் என்றுமே தர்மம், நியாயம், நேர்மை வழியே பயணித்திருக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டிருக்கலாமே தவிர தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.

என்றாலும் நடிகர் திலகத்தின் சமுதாயப்பணி, அரசியல் தொண்டு, பெருந்தலைவருக்கும் தேசிய இயக்கங்களுக்கும் அவருடைய பங்களிப்பு,அதன் மூலம் சமூகத்தில் அவற்றின் தாக்கங்கள் இவையெல்லாவற்றையும் மக்களிடம் மிகப் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டியது சிவாஜி ரசிகர்களின் கடமையாக நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் நானும் பாஸ்கரின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். அதாவது நடிகர் திலகத்தை வெறும் நடிகராகப் பார்க்காமல் மக்கள் தலைவராக எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையென நான் எண்ணுகிறேன். மற்றவர்கள் எப்படியோ என்னுடைய நிலைப்பாடு அதுவே.

அவர் மறைந்து விட்டாலும் கூட மக்களிடம் வரலாற்றில் அவருடைய தூய்மையான, உண்மையான, நேர்மையான பொது வாழ்வு, சமுதாயத்தொண்டுகளில் அவருடைய பங்களிப்பு, முக்கியமாக மக்களுக்கு அவர் கொடை வள்ளலாக அளித்துள்ள புரிந்துள்ள ஏராளமான உதவிகள், இவற்றைக் கொண்டு சென்று, அவருடைய சிறந்த மனிதாபிமானத்தை, தொண்டர்களிடம் அவரின் எளிமையான அன்பான அணுகுமுறைகள் இவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொள்ள நம்முடைய பங்களிப்பு அமைய வேண்டும்.

வரலாற்றில் நடிகர் திலகம் என்ற மாபெரும் நடிகர் இருந்தார் என்பதோடு நிற்காமல், சிவாஜி கணேசன் என்கின்ற மாபெரும் மனிதர், மாபெரும் தலைவர் இருந்தார் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.

இதுவே ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் என் வேண்டுகோள்.

என்னுடைய பங்களிப்பும் இந்த அடிப்படையிலேயே இருக்கும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

தொடர்ந்து மக்கள் தலைவரின் புகழ் பாட அன்புச் சகோதரர் திருச்சி பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து நண்பர்களையும் அழைக்கிறேன்.

RAGHAVENDRA
24th August 2015, 07:39 AM
நண்பர்களே,
மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வர எண்ணுவதால், சில சமயம் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நமக்காக மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதாக இருந்தால், அதுவும் எழுத்திலே திறமை வாய்ந்தவர்கள் எழுதிக் கொடுப்பதாக இருந்தால் நம்முடைய பதிவுகள் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் அல்லாமல் என் மனதில் தோன்றும் எண்ணங்களை நானே எழுத முயற்சிப்பதால் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இந்நேரம் திருவிளையாடலின் இக்காட்சி தான் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

https://www.youtube.com/watch?v=NRjpSeIkYq4

Harrietlgy
24th August 2015, 08:43 AM
Today' Dinamalar
பதிவு செய்த நாள்
24ஆக
2015
04:30
சென்னை:நடிகர் சிவாஜி கணேசன் நடித்து, 56 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம், மீண்டும், 100 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் படத்தை விரும்பி பார்ப்பதாக, தியேட்டர் நிர்வாகிகள் கூறினர்.சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி நடிப்பில், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம், 1959ல் வெளிவந்தது.

இப்படம், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மன்னன் கட்டபொம்மனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதால், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. வசனம், பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகின. இந்த படம், அப்போது, 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.இளைய தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில், இப்படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு, 70 எம்.எம்., திரைப்படமாக, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் வண்ண மாற்றத்துடன், வசனம், பாடல்கள் நவீன ஒலிப்பதிவு மூலம் மெருகேற்றப்பட்டும், சென்னையில், 12 தியேட்டர் உட்பட, தமிழகம் முழுவதும், 100 தியேட்டர்களில் தற்போது திரையிடப்பட்டு உள்ளது.
'படத்தை, இளைய தலைமுறையினர் அதிகம் பார்க்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் பெற்றோருடன் வந்து பார்த்து மகிழ்கின்றனர். நவீன தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, புதிதாக படத்தை பார்ப்பது போல உள்ளதாக, குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் கூறுகின்றனர்' என, சென்னையில் படத்தை திரையிட்டுள்ள, தியேட்டர் நிர்வாகிகள் கூறினர்.

vasudevan31355
24th August 2015, 09:12 AM
அதிர்ந்தது அரங்கம்

குலுங்கியது சாந்தி

http://i62.tinypic.com/2ni1mbm.jpg

http://i62.tinypic.com/2yzj33k.jpg

நேற்று மதியம் மூன்று மணிக்கெல்லாம் நானும், என் மகனும் சாந்திக்கு சென்று விட்டோம். மதியம் மேட்னிக்கு நல்ல கும்பல். நான்கு மணியிலிருந்து சாந்தி திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது. கடலூரில் இருந்து ரசிகர்கள், பெங்களூருவிலிருந்து ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் என்று கூட்டம் கூட்டமாகத் திரள ஆரம்பித்தார்கள். 5 மணி வாக்கில் தியேட்டர் வாயிலில் நிற்க இடமில்லை. இதற்கே ஈவ்னிங் ஷோ ஆன்லைன் புக்கிங்கில் ஏற்கனவே ஃபுல். ஆனால் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்.

கர்நாடகாவிலிருந்து ரசிகர்கள் ஏராளாமான மாலைகள் கொண்டு வந்திருந்தனர். சாந்தி தியேட்டர் வாயிலில் இருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்று, அங்கிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, மாலைகளை அனைவரும் பிடித்தபடி ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஊர்வலமாக வந்தார்கள். மாலைகளை தியேட்டரின் முன் பிரம்மாண்டமாய் பேனரில் நிற்கும் நம் கட்டபொம்மனுக்கு ஒவ்வொன்றாக அணிவித்து அழகு பார்த்தார்கள். ரசிகர்களின் கரகோஷமும், கூச்சலும், அலம்பல்களும் அலப்பரைகளும் எல்லை மீறியது. பேண்டு வாத்தியங்கள் 'என்னடி ராக்காம்மா'வை முழங்க சும்மா பெரியவர், சிறியவர் என்றில்லாமல் அனைவரும் ஆட்டம் போட்டு அதகளம் பண்ணி விட்டனர்.

எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். குழுமம் குழுமமாக ஆட்டம். 'தலைவர் வாழ்க' கோஷம். 'சிவாஜி எங்கள் உயிர்' என்ற உயிர்த் துடிப்பான குரல்கள். படம் பார்க்க வந்திருந்த திரளான பெண்கள் இந்த உற்சாகக்
களியாட்டாத்தைக் கண்டு ரசித்தனர். இளைஞர்கள் பட்டாளமும் அதிகம்.

வெளியே மவுண்ட் ரோட்டில் போலீஸ் வந்திருந்தது. வாயிலின் நுழைவில் இருக்கும் பேனருக்கு மாலைகள் போடப்பட்டன. 1000 வாலாக்கள் வெடித்துச் சிதறின. ஹெல்மெட் தலைகளில், அட்டைப் பெட்டிகளில் கற்பூரம் கொளுத்தப்பட்டு ஆராதனை நடைபெற்றது. மவுன்ட்ரோட் ஸ்தம்பித்தது ஒருகணம்.

நேரமாக ஆக ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அமர்க்களம் பண்ண ஆரம்பித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் டான்ஸ்தான். பின் தொடர் அதிர்வேட்டுகள் முழங்க ஆரம்பித்தன. வானில் ஒவ்வொன்றும் வெடித்துச் சிதறி மத்தாப்புகள் அங்கிருக்கும் கட்டபொம்மனின் பேனரில் பூக்கள் போலச் சிதறி விழுந்தது கண்கொள்ளாக் காட்சி.

நமது அன்பு ஹப்பர்கள் முரளி சார், ராகவேந்திரன் சார், பம்மலார், சித்தூர் வாசுதேவன் சார், ராதாகிருஷ்ணன் சார், பார்த்தசாரதி சார், சிவாஜி தாசன் சார் என்று அனைவரும் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரையும் சந்தித்ததில் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. கிரிஜா மேடம், எம்.எல்.கான் அனைவரிடமும் அளவளாவி மகிழ்ந்தேன்.

நமது அருமை நண்பர் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் சார் குடும்பத்துடன் வந்திருந்து படத்தைக் கண்டு களித்தார். அவரிடமும் பேசியதில் மகிழ்ச்சி.

அரங்கத்தினுள் நுழையும் போது அனைவருக்கும் ஜாங்கிரி இனிப்பு வழங்கப்பட்டது. உள்ளே ஒரே ஆரவாரம். கட்டபொம்மனின் அறிமுகக் காட்சியில் சாந்தியே குலுங்கியது. ஸ்க்ரீனை விட்டு மக்கள் நகரவேயில்லை. படம் முழுதும் கைத்தட்டல்களும் விசிலும்தான். கட்டபொம்மனின் ஒவ்வொரு அசைவிற்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர். முக்கியமாக ஜாக்ஸனுடன் மோதும் அந்த உலகப் புகழ் பெற வீர 'வரி' வசனம், தானாபதிப் பிள்ளையிடம் நெல் கிடங்கு கொள்ளை சம்பந்தமாய் கொட்டித் தீர்க்கும் ஆத்திரம், திருச்செந்தூர் கோவிலிலே பறங்கியரின் படையெடுப்பு பற்றிக் கேட்டவுடன் மிருதுவான குரலில் ஆரம்பித்து படிப்படியாக சிங்க மிருகத்தின் குரலில் நாட்டோரை போருக்குத் தயாராக்க முழங்குவது, போருக்கு செல்லுமுன் ஜக்கம்மாவிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகள் (எதைச் சொல்வது எதை விடுவது) என்று ஒவ்வொரு காட்சியும் ஆரவாரப் பொறி பறந்தது. அதுவும் அந்த 'அசல் வித்து' வசனத்திற்கு கூரை இடிந்து விழாத குறைதான்.

அதே சமயம் ஒவ்வொருவரும் கட்டபொம்மனோடு ஒன்றி, அந்த நடிப்பில் மெய்மறந்து, தங்களை அவனோடு இணைத்துக் கொண்டு, அனைவரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருந்ததும் நிஜம். கண்கூடு. அதுதான் அந்தக் கட்டபொம்மக் கடவுளுக்குக் கிடைத்த நிஜ வெற்றி. அந்தக் கட்டபொம்மன் துரதிருஷ்டவசமாக ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் வீரமாகத் தோற்றுப் போனான். இந்த பொம்மனோ தன் அங்க அசைவுகளால் அகிலத்தில் உள்ள மனங்கள் அனைத்தையும் வென்றான்.

கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதும் அசாத்தியமான மௌனம் நிலவியது அரங்கில். அரங்கே சோக முகத்துடன், வாட்ட முகத்துடன்தான் திரும்பியது. அதுவரை பண்ணிய ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அரை நொடியில் காணாமல் போயின.

இன்னொரு கூத்து. இடைவேளை விட்டாலும் கூட நம் ரசிகப் பிள்ளைகள் திரையை விட்டு அகலவே இல்லை. அதற்கேற்றார் போல் 'உத்தமனி'ன் 'கனவுகளே... கனவுகளே' பாடலையும், 'தெய்வ மகனி'ன் 'காதல் மலர்க் கூட்டம்' ஒன்று பாடலையும் இடைவேளை சமயத்தில் டைமிங்காகப் போட்டு விட்டுவிட, சும்மா ரசிகர்கள் என்னஆட்டம்! என்ன அபிநயம்! என்ன உற்சாகம்! அடேயப்பா! ஒவ்வொருவரும் தங்களை நடிகர் திலகமாக நினைத்துக் கொண்டு அவரைப் போலவே நடித்துப் பார்த்து, நடந்து பார்த்து, ஆடிப் பார்த்து மகிழ்ந்து. அதையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது போங்கள்.

முரளி சாரும், நானும் அருகருகே அமர்ந்து தெய்வத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்த்தோம். 'முரளி சார் பக்கத்தில் இருக்கிறாரே... கை தட்டாமல் சமாளிப்போம்' என்று முடிவெடுத்துதான் தியேட்டரில் அவருடன் அமர்ந்தேன். ஆனால் முதல் காட்சியிலயே என் வாட்ச்சைக் கழற்றி பையனிடம் கொடுத்துவிட்டேன். ஆரம்பக் காட்சியிலேயே எடுத்த முடிவு அம்பேல்.

படம் பிரமாதமாக ரீ-ஸ்டோர் செய்யப்பட்டிருக்கிறது மிகப் பிரம்மாண்டமாய். ஆடியோ அருமை. சங்கீதங்களின் சங்கதிகள் அருமையாய் காதில் வந்து விழுகின்றன. படம் போவதே தெரியவில்லை. 'ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி' வெட்டி விடப்பட்டு விட்டது. ஆனால் பத்மினி, ஜெமனி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கை வைத்திருக்கலாம். ஜெமினி காளை மாட்டுச் சண்டையை இப்போது பார்க்கையில் சற்று நீளமாகத் தெரிகிறது. அந்தக் காட்சியை விட்டுவிட்டேனே! உட்கார்ந்தபடியே காளையுடன் மோதும் கட்டபொம்மனுக்கு கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தது.

இதைவிடயெல்லாம் பெரிய சந்தோஷம் எனக்கு என்ன தெரியுமா?! அருகில் அமர்ந்து படம் பார்த்த கல்லூரி படிக்கும் என் மகனிடம் இடைவேளையின் போது அவன் காதைக் கடித்தேன்.

'எப்படிடா இருக்கு?'

அவன் சொன்ன பதில்...

'இப்பதான் ரொம்ப ரசிச்சி ரசிச்சி பார்க்கிறேன். அடுத்த வாரம் என் நண்பர்களையெல்லாம் கூட்டிகிட்டு 'சத்யத்'தில் போய் மறுபடியும் கட்டபொம்மனைப் பார்க்கப் போகிறேன். எல்லார்கிட்டேயும் சொல்லப் போறேன். நீங்களும் தம்பியை மறக்காம கூட்டிகிட்டு போய் காண்பிச்சிடுங்க'

இதைவிட வேறு சந்தோஷம் வேற என்னங்க வேணும்? எத்தனை தலைமுறையானாலும் தவிர்க்கவே முடியாதவர்தானே நடிகர் திலகம்? அந்த பாக்கியம் அவரைத் தவிர வேறு எவருக்கு உண்டு?

சாந்தி 'கட்டபொம்மன்' அமர்க்களங்கள் புகைப்படங்களாகவும், வீடியோ வடிவிலும் விரைவில். தரவேற்ற நாழியாகும். அதுவரை பொறுக்க.

vasudevan31355
24th August 2015, 10:02 AM
சாந்தி திரையரங்கு கொண்டாட்டங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00115.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00115.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00112.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00112.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00102.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00102.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00101.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00101.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00100.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00100.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:04 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00098.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00098.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00097.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00097.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00096.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00096.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00095.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00095.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00090.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00090.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:06 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00089.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00089.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00088.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00088.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00087.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00087.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00086.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00086.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00085.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00085.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:08 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00084.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00084.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00083.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00083.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00081.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00081.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00079.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00079.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00078.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00078.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:09 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00077.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00077.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00076.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00076.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00075.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00075.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00074.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00074.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00073.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00073.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:10 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00071.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00071.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00070.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00070.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00069.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00069.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00068.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00068.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00067.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00067.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:11 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00066.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00066.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00065.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00065.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00064.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00064.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00056.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00056.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00054.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00054.jpg.html)

vasudevan31355
24th August 2015, 10:27 AM
http://i62.tinypic.com/sdjmle.jpg

http://i60.tinypic.com/34do67t.jpg

vasudevan31355
24th August 2015, 10:36 AM
வீடியோ 1

இதோ!

நம் கட்ட பொம்மன் கிஸ்தி, திரை, வரி, வட்டி என்று முழங்கும்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கு ரெண்டுபடுவதை வீடியோவாகக் கண்டு மகிழுங்கள்.


https://youtu.be/PJnxHFz-kjc

vasudevan31355
24th August 2015, 10:54 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355041/VID_20150823_161901.3gp_20150824_102113.240.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355041/VID_20150823_161901.3gp_20150824_102113.240.jpg.ht ml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355041/VID_20150823_172922.3gp_20150824_090441.863.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355041/VID_20150823_172922.3gp_20150824_090441.863.jpg.ht ml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355041/VID_20150823_173012.3gp_20150824_102645.175.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355041/VID_20150823_173012.3gp_20150824_102645.175.jpg.ht ml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355041/VID_20150823_170710.3gp_20150824_102449.641.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355041/VID_20150823_170710.3gp_20150824_102449.641.jpg.ht ml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355041/VID_20150823_170710.3gp_20150824_102356.779.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355041/VID_20150823_170710.3gp_20150824_102356.779.jpg.ht ml)

vasudevan31355
24th August 2015, 11:12 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355042/M4H00105.MP4_20150824_110428.349.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355042/M4H00105.MP4_20150824_110428.349.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355042/M4H00108.MP4_20150824_110318.440.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355042/M4H00108.MP4_20150824_110318.440.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355042/VID_20150823_165542.3gp_20150824_110056.969.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355042/VID_20150823_165542.3gp_20150824_110056.969.jpg.ht ml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355042/VID_20150823_172623.3gp_20150824_105939.671.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355042/VID_20150823_172623.3gp_20150824_105939.671.jpg.ht ml)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355042/VID_20150823_172623.3gp_20150824_105931.163.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355042/VID_20150823_172623.3gp_20150824_105931.163.jpg.ht ml)

vasudevan31355
24th August 2015, 11:45 AM
வீடியோ 2

குதூகலம். உச்ச நடிகரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடும் உற்சாகக் கூட்டம்.

பட்டாசு கொளுத்தி பரவசமடையும் பொம்மனின் ரசிகர் பட்டாளம்.

வீடியோவைக் கண்டு களியுங்கள்



https://youtu.be/piX_JW1HNAA

vasudevan31355
24th August 2015, 12:22 PM
வீடியோ 3

ரசிகர்கள் ஆட்டம்... பாட்டம்.


https://youtu.be/POOG0yPDyvw

Russellbpw
24th August 2015, 12:33 PM
THIS PART OF THE PROGRAM WAS SPONSORED BY - NEYVELIYIN NILAKARI NAAYAGAR VASUDEVAN SIR...!


OLIYUM OLIYUM - INDHA INBAMAANA NERATHTHAI THANGALUKKU VAZHANGIKONDIRUPPAVAR - THALAIVARIN THANMAANA THONDAR THIRU NEYVELIYAAR !

RKS :goodidea:

vasudevan31355
24th August 2015, 12:52 PM
வீடியோ 4

தொடரும் உற்சாக ஆடல்


https://youtu.be/hRu8ItaDqOM

vasudevan31355
24th August 2015, 01:06 PM
வீடியோ 5

மவுண்ட் ரோட்டில் வெடித்துச் சிதறும் 1000 வாலாக்கள்


https://youtu.be/sOf4OjFi30k

Murali Srinivas
24th August 2015, 01:10 PM
சற்று முன் கிடைத்த செய்தி.

மதுரையில் இயங்கி வரும் புகழ் பெற்ற கல்விக்கூடங்களில் ஒன்றான மகாத்மா பள்ளி தனது மாணவர்கள் 450 பேரை இன்று காலைக் காட்சிக்கு சினிபிரியா திரையரங்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இதன் மூலம் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியையும் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர்களின் தியாக வரலாற்றையும் கற்றுக் கொடுக்க செயல்படும் மகாத்மா பள்ளி நிறுவனத்தை மனமார பாராட்டுகிறோம். இது போல் அனைத்து பள்ளி நிர்வாகமும் முடிவெடுத்தால் இளம் தலைமுறையினர் தேசப்பற்றோடு வளர்வர்.

அன்புடன்

vasudevan31355
24th August 2015, 01:54 PM
வீடியோ 6

மாலைகள், ஆராதனை, அன்பின் உச்சம்... வாழ்க கூக்குரல்கள். பாசத் தலைவனுக்கு எதையும் எதிர்பாராத, தன் நிலை மறந்த ரசிகர்களின் வெறித்தனமான அன்பு


https://youtu.be/IxIigFBY2qg

Russellzlc
24th August 2015, 02:21 PM
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

ஒரு வேளை என் பெயரை சொல்ல உங்களுக்கு விருப்பமில்லையோ என்னவோ!

அன்புடன்

அருமை நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

தாமதத்துக்கு மன்னிக்கவும். தங்கள் பெயரை சொல்ல எனக்கு விருப்பம் இல்லாமலோ, வெறுப்போ இல்லை.

முரளி ஸ்ரீனிவாஸ்,முரளி ஸ்ரீனிவாஸ்,முரளி ஸ்ரீனிவாஸ்,முரளி ஸ்ரீனிவாஸ்......

பார்த்தீர்களா? என்னோடு ஒத்த கருத்து கொண்டவர்களை மட்டுமல்ல, உடன்படாதவர்களையும் நண்பர்களாகவே மதிக்கிறேன். உடன்படாதவர்களை மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்கள் என்று கருதுவேன். அவ்வளவுதான். மற்றபடி, எல்லாரும் எனக்கு நண்பர்களே, நீங்கள் உட்பட. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th August 2015, 02:24 PM
அனைவரின் வேண்டுகோளை ஏற்று பெருந்தன்மையுடன் மீண்டும் திரியில் பங்கேற்றுள்ள அன்புநிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

உயிர் பிரியும் நேரத்தை விட உறவு பிரியும் நேரம் துயரமானது என்று சொல்வார்கள். நண்பர் திருச்சி பாஸ்கர் அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டு திடீரென இனி வரமாட்டேன் என்று சென்றதும் வருத்தமளிக்கிறது. அவரும் மீண்டும் வரவேண்டும். எல்லாரும் மகிழத்தக்க பதிவுகளை இட வேண்டும் என்று அன்புடன் கோருகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th August 2015, 02:28 PM
Quote Originally Posted by joe View Post
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .

நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .

இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்

http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)

கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.


-------------------------------------


நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு,

நியாயமான பேச்சு. இதைத்தான் நானும் விரும்புகிறேன். பலமுறை வலியுறுத்தியும் இருக்கிறேன். தங்களது கருத்து எனக்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது.

‘கை நீட்டி பேச உனக்கு உரிமை உண்டு. ஆனால், உன் விரல் என் மூக்கை தொடக்கூடாது’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதுதான் உரிமையின் எல்லை. நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை சொல்வதை தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. குறுகிய காலத்தில் அவர் அதிக படங்களில் நடித்தார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால், இந்த எண்ணிக்கையை கடைசிவரை மக்கள் திலகம் எம்ஜிஆரால் வெல்ல முடியவில்லை என்று கூறும்போதுதான், நண்பர்களையும் மனதில் கொண்டு தர்மசங்கடத்துடன் பதிலளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் ஏற்படுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய தங்களின் ஆலோசனையை நடிகர் திலகம் திரியிலும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

திருவாரூர் அருகே வடபாதிமங்கலம் என்று ஒரு ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார். பெருநிலக்கிழார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தக்காராக இருந்தவர்.

1940-களின் இறுதியில் அந்தக் கோயிலில் ஒரு பவுராணிகர் உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்கு வந்து, திராவிட இயக்க கருத்துக்களை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை பக்தர்களுக்கு விநியோகித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

உபந்யாசகர், ‘கோயிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் வரவேண்டும். அப்போதுதான் அவர்களின் உடலில் சில விசேஷ கதிர்கள் பாயும்’ என்று கூறியபோது அந்த இளைஞர் குறுக்கிட்டு, ‘அப்படியானால், பெண்களும் அப்படி வரலாமா?’ என்று அதிரடியாய் கேட்க, உபந்யாசகர் தனது கையில் அணிந்திருந்த தோடாவை திருகி விட்டுக் கொண்டு பதில் சொல்லாமல், மேற்கொண்டு பிரவசனத்தை தொடர்ந்தார்.

‘மாமிச உணவு கூடாது. உயிர் கொலை பாவம். தாவரங்களில் கிடைக்கும் காய்கறி நமது நகங்கள் போன்றது. அவற்றை பறித்து உண்பது அவற்றைக் கொல்வதாகாது...’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘கீரையை வேரோடு பறித்து உண்கிறோமே? தாவரங்களுக்கும் உயிர் உண்டே? அது கொலைதானே?’ என்று இளைஞர் மடக்க, அருகே உள்ள வெள்ளிச் சொம்பில் இருந்த பாலை எடுத்து மிடறு விழுங்கினார், உபந்யாசகர்.

நிலைமை மோசமடைவதைப் பார்த்ததும், தக்கார் தியாகராஜ முதலியார் தனது ஆட்கள் மூலம் அந்த இளைஞரையும் அவரது நண்பர்களையும் வெளியே அனுப்பினார். காலச் சக்கரம் சுழன்றது. அந்த சுழற்சியில் தமிழக முதல்வராகி விட்ட அந்த இளைஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

பொறுப்பும் பதவியும் வந்து சேர, தீ விபத்து காரணமாக பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த அதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தேரை புதுப்பித்து, ஓடாத தேரை ஓடச் செய்தவர் கலைஞர் கருணாநிதி.

உபந்யாசகரை மடக்கி கேள்விகளால் திணறடித்தார் என்றேனே. அந்த உபந்யாசகர் யார் தெரியுமா? நாளை கூட அவரது பிறந்த தின விழா. புரட்சித் தலைவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் அவர்.

2000-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது, ஒரு காலத்தில் தான் கேள்வி கேட்டு மடக்கிய மடக்கிய வாரியார் சுவாமிகளின் சிலையை காங்கேய நல்லூரில் திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் கூட பக்குவமும் முதிர்ச்சியும் நிறைந்த இந்த அணுகுமுறைதான் நான் விரும்புவது. அதைத்தான் நீங்களும் வலியுறுத்தியுள்ளீர்கள்.

இதை ஏன் சொன்னேன் என்றால், நீங்கள் திமுக ஆதரவாளர், கலைஞரைப் பிடிக்கும் என்று தெரியும். கலைஞரை மட்டுமல்ல, தேங்காய் போட்டு உங்கள் தாயார் சமைக்கும் வெறும் குழம்பும் பிடிக்கும் என்று கடற்புறத்தான் கருத்துக்களில் படித்த நினைவு.

அரசியல் ரீதியாக அவருடைய செயல்பாடுகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கடும் உழைப்பு, தோல்வியில் துவளாமை, நகைச்சுவை உணர்வு போன்ற பன்முக ஆற்றல்கள் எனக்கும் பிடிக்கும். இதை பல பதிவுகளில் தெரிவித்தும் இருக்கிறேன்.

அரசியல் ரீதியாக எதிர்நிலையில் உள்ளவன் நான் என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் பிரித்து பேசுகிறீர்கள்? நீங்கள் திமுகவாக இருந்தாலும் கூட, அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாமெல்லாம் ஒரே நிலையில் உள்ளவர்கள்தான்.

இங்கே உள்ள எல்லா நண்பர்களையும் வேண்டுகிறேன்.

அவரவர் அபிமானத்துக்குரியவர்களின் புகழை பாடுவது நமது கடமை, அதில் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நடப்போம்.

பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
24th August 2015, 02:33 PM
5. VEERAPANDIYA KATTABOMMAN
Previous
Movie
Veerapandiya Kattabomman
Next
Movie
Ranking based on Chennai Box Office Collections from Aug 17th 2015 to Aug 23rd 2015
Week : 1
Total collections in Chennai : Rs. 5,53,905
Chennai city verdict: Average Opening
No. Shows in Chennai (Weekend): 39
Collection in Chennai (Weekend): Rs. 5,53,905

Sivaji sir has mesmerized the audiences yet again with the remastered version of Veerapandiya Kattabomman. The opening has been low-key though.
CAST AND CREW
1 of 2
Production: B. R. Panthulu
Cast: Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, Sivaji Ganesan, V. K. Ramasamy
Direction: B. R. Panthulu
Screenplay: Ma. Po. Sivagnanam
Story: Sakthi T. K. Krishnasamy
Music: G. Ramanathan
Background score: G. Ramanathan
Cinematography: W. R. Subbarao Karnan
Editing: R. Devarajan

Veerapandiya Kattabomman Review

From January 2014's releases, the rankings will be based on box-office collections only from theaters in the Chennai City trade area:
Theaters which fall under the Chennai City trade area are - Udhayam complex, Kamala complex, PVR Multiplex, Inox Multiplex Mylapore, Escape Cinemas, Sathyam Cinemas, Devi Cineplex, Shanti complex, Anna, Pilot, Woodlands complex, Casino, Albert complex, Abirami Mega Mall, Motcham complex, Sangam Cinemas, Ega Cinemas, Bharath, Maharani, Agasthya, IDream, AVM Rajeswari, Sri Brindha, S2 Perambur, Ganapathyram and MM
Box office collection is calculated taking into account the number of shows and theater occupancy in theaters falling under the Chennai City trade area. These are details not shared by the producers, distributors or theater owners who cannot be held responsible for the collection figures listed. There might be variations from the exact collection details.


courtesy behindwoods





இன்று தமிழகமெங்கும் கட்டபொம்மனுக்கு படு உற்சாக வரவேற்பு. சென்னையில்

எஸ்கேப் - 2 காட்சிகள் (ஒரு சிறப்பு காலைக்காட்சி உள்பட) ஹவுஸ் புல்

சத்யம் - மதியம் 3 மணிக் காட்சி ஹவுஸ் புல்

சாந்தி - மாலைக்காட்சி ஹவுஸ் புல்

PVR , AGS வில்லிவாக்கம், S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.

பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

மதுரை

Inox - புல் - மாலை

அண்ணாமலை - 520 டிக்கெட் மாலை

சினிப்ரியா - 280 [மதியம்]

சோலைமலை - 210 - மாலை

மதுரை மாநகரின் புறநகர் பகுதி என்று சொல்லப்படக்கூடிய திருநகர் கலைவாணியில் வெள்ளி முதல் ஒரு ஒரு புதிய படம் வெளியாகி இரண்டு நாட்களில் தூக்கப்பட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இன்று முதல் கட்டபொம்மன் திரையிடப்பட்டு இன்றைய மாலைக்காட்சிக்கு மிக கணிசமான அளவில் மக்கள் வந்திருக்கின்றனர்

கோவை

சத்யம் - புல்

பல்லவி - புல்

கர்நாடிக் - 750 டிக்கெட் - ரோடு ப்ளாக், band இசை, வாண வேடிக்கை, போலீஸ் விரட்டல் எல்லாம் நடந்திருக்கிறது.

சேலம்

முதலில் ARAS (?) மல்டிப் ப்ளெக்ஸ் -ல் மட்டும் வெளியான படம் இன்று முதல் சுப்ரகீத் திரையரங்கிலும் திரையிடப்பட்டு இரண்டிலும் மாலைக்காட்சி ஹவுஸ் புல். அது தவிர இன்று முதல் நாமக்கல் K .S அரங்கிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

திருச்சி, நெல்லை மற்றும் நாஞ்சில் மாநகரிலும் நல்ல response என்று கேள்வி.

கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்

Russellisf
24th August 2015, 02:33 PM
why murali sir abirami mall reduced the shows

Veera Pandiya Kattabomman - Tamil Online Booking
Date

24 Mon
25 Tue
26 Wed
27 Thu

Seats
Abirami Mega Mall

3:30 PM

courtesy behindwoods

Russellisf
24th August 2015, 02:38 PM
S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.

tomorrow onwards s2 cinemas, sathyam and escape screened one show only


Tickets
2
Date

Mon 24 Tue 25 Wed 26 Thu 27 Fri 28 Sat 29 Sun 30 Mon 31 Tue 01 Wed 02

Cinema
Experience
ShowTime
Sathyam STUDIO-5

3:00 PM

Escape KITES

12:30 PM

S2 Perambur SCREEN-3

12:45 PM

Russellisf
24th August 2015, 02:46 PM
பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.


yesterday i am watching vaalu movie in albert theater in baby albert 70 50 tikets available both shows

vasudevan31355
24th August 2015, 02:52 PM
வீடியோ 7

தொடரும் உற்சாகம்


https://youtu.be/fFkTvuOtU-g

Russellxor
24th August 2015, 05:03 PM
கோவையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரையிடப்பட்டிருக்கும் கர்நாடிக் தியேட்டர் மாலைக்காட்சிக்கு சிவாஜி ரசிகர்படை3.30 மணியில் இருந்தே திரள ஆரம்பித்தது.நேரம் செல்லச்செல்ல கூட்டம் பிரமாண்டம் ஆனது.பாலாபிசேகம்,பட்டாசு,ஜமாப்(மேளம்)அமர்களமா க நடந்தன.ரசிகர்கள்போட்ட ஆட்டத்தை பார்த்து பொதுமக்கள் பிரமித்துப்போயினர். தெருவில் சென்ற இளைஞர்கள் பலர்,அங்கு நடந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு இப்பொழுது இருக்கும் பெரியநடிகர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் ரசிகர்கள் கூட இப்படி இருக்க முடியுமா?என்று கூறினர்.
நடிகர்திலகம் தோன்றும்போதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.சுருங்கக்கூறின்,நேற்றைய அலப்பரை பிரமாண்டம்.

கர்நாடிக் 6.30மணிக்காட்சி ஹவுஸ்புல்.
கே.ஜி.சினிமாஸ் 3.30மணிக்காட்சி மதியம் 1மணிக்கே புல்.
புருக்பீல்ட்ஸ் ஹவுஸ்புல்.

Russellxor
24th August 2015, 05:05 PM
கோவை கொண்டாட்டங்கள்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_7341_zpsxeniplcd.jpg[/URL]

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3220_5872_zpszzqotlea.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3220_5872_zpszzqotlea.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_6787_zpsiqnoryzo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_6787_zpsiqnoryzo.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3220_2369_zpsogimuof7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3220_2369_zpsogimuof7.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_5872_zpsvd60irn8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_5872_zpsvd60irn8.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_4472_zps6kcqabr0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_4472_zps6kcqabr0.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_8303_zps9haat5tr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_8303_zps9haat5tr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_0150_zpszwvutsea.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_0150_zpszwvutsea.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_6419_zpsqm8ctici.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_6419_zpsqm8ctici.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_9704_zps2hqpwknn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_9704_zps2hqpwknn.jpg.html)

Russellxor
24th August 2015, 05:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_2974_zps3ffihsvn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_2974_zps3ffihsvn.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_6383_zps7s9qjcgn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_6383_zps7s9qjcgn.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_5816_zpsmdqmdo2v.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_5816_zpsmdqmdo2v.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3217_1055_zpspkjpi07z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3217_1055_zpspkjpi07z.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3217_9714_zpsfgc7mzb6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3217_9714_zpsfgc7mzb6.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_6505_zpsqwvotofx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_6505_zpsqwvotofx.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_3906_zpsszfenlux.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_3906_zpsszfenlux.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_5424_zps8imht1kk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_5424_zps8imht1kk.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_7597_zpsptar1wtx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_7597_zpsptar1wtx.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_1285_zpsawwpr0gf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_1285_zpsawwpr0gf.jpg.html)

Murali Srinivas
24th August 2015, 05:37 PM
யுகேஷ்,

பதிவுகளுக்கு நன்றி.

சக்தி அபிராமி அரங்கம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். நானே அதை பற்றி மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களை பற்றியும் எழுத நினைத்திருந்தேன். அதை பற்றி பிறகு எழுதுகிறேன். இப்போது நீங்கள் கேட்ட சக்தி அபிராமி பற்றி.

கட்டபொம்மன் வெளியிடுவதற்கு அணுகியபோது உடன் ஒப்புக் கொண்டு விளம்பரங்களில் தங்கள் அரங்கத்தின் பெயரையும் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்தார் திரு அபிராமி ராமநாதன். இரண்டு மூன்று முறை வெளியீடு தேதி மாறியபோது கூட அரங்கம் தருகிறேன் என்று சொன்னதில் இருந்து அவர் மாறவில்லை. ஆனால் முதலில் சொன்ன இரண்டு ஷோக்களை ஒன்றாக குறைத்தார்.

இந்த நேரத்தில் சங்கம் சினிமாஸ் நிர்வாகத்தினர் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு எங்கள் திரையரங்கில் வெளியிட்டுக் கொள்கிறோம் என்று கேட்டார்கள். 2012-ல் கர்ணன் வெளியானபோது அபிராமியில் திரையிட்டார்கள். படம் வெளியாவதற்கு முதல் நாள் இதே போல் சங்கம் நிர்வாகம் கேட்க திரு சொக்கலிங்கம் சங்கத்திலும் படத்தை வெளியிட்டார். ஆனால் அபிராமி மெகாமால் நிர்வாகம் தங்களை கேட்காமல் சங்கத்தில் வெளியிட்டது தங்களுக்கு ஏற்புடையதாய் இலை என்ற காரணத்தை சொல்லி கர்ணன் படத்தை அவர்கள் ஒரே வாரத்தில் எடுத்து விட்டார்கள்.

இந்த பின்னணி தெரிந்த காரணத்தினால் கட்டபொம்மன் விநியோகஸ்தர் இந்த விஷயத்தை திரு ராமநாதன் அவர்களிடம் கொண்டு செல்ல அவர் சங்கத்தில் வெளியிடக் கூடாது என்று சொல்லி அதை ஈடு செய்யும் வண்ணம் அவர் திரையரங்கில் 3 காட்சிகள் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொடுத்தார். ஆகையால் சங்கத்தில் வெளியாகவில்லை.

ஆனால் இப்போது 3 நாட்களுக்கு பிறகு ஒரு ஷோ ஆக்குவதன் காரணம் கடந்த வெள்ளியன்று [ஆகஸ்ட் 21] வெளியாகியிருக்கும் ஜிகினா என்ற திரைப்படத்தை சென்னை மற்றும் nsc ஏரியாவில் அபிராமி மெகாமால் நிறுவனம்தான் வெளியிட்டுருக்கின்றனர். அதை மீதம் உள்ள இரண்டு காட்சிகளில் வெளியிடுவதற்காக கட்டபொம்மன் படத்தின் இரண்டு காட்சிகளை குறைத்திருக்கிறார்கள்.

இது போன்ற புதுப் படங்களுக்கு ஒரு காட்சிக்கு 20 பேர் கூட வருவதில்லை. ஆனாலும் இது போன்ற படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் அரங்க உரிமையாளர்கள் நல்ல கூட்டம் வரும் கட்டபொம்மன் போன்ற பழைய படங்களுக்கு தியேட்டர் கொடுக்க தயங்குகிறார்கள்.

முதல் மூன்று நாட்கள் கணிசமான ஆட்கள் வந்து விட்டனர். அது ஒரு லாபம். சங்கத்திலும் போட விடவில்லை. இப்போது தங்கள் விநியோகிக்கும் படத்தையும் திரையிடுகிறார்கள்.

என்ன செய்வது இப்போது அதிகாரம் எல்லாம் அரங்க உரிமையாளர்கள் கையில்.

அன்புடன்

tacinema
24th August 2015, 07:42 PM
பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.


yesterday i am watching vaalu movie in albert theater in baby albert 70 50 tikets available both shows


Dear Yukesh,

NT movie success has always been unique and unmatched; plus, it cannot be replicated. It is unanimous VPKB is a massive success across the state. This is a victory for NT and TN people. This is a natural victory, achieved by die-hard fans with their hard earned money, sweat and blood. NT's fan base is trust worthy and it shows here that the re-release is successful without any strings of politics attached.

As this is VPKB season, we would like to enjoy these moments. So, do not interrupt. I hope you understand.

Regards.

HARISH2619
24th August 2015, 07:47 PM
Dear murali sir,
weekend collection data includes sunday or not?

sss
24th August 2015, 08:18 PM
நேற்று ஞாயிறு மதியம் எஸ்கேப் திரை அரங்கம் ... நிரம்பி வழிகிறது...
ஆபிசில் வேறு வேலை போய்க்கொண்டுள்ளது (ஞாயிறு எல்லாம் எங்களுக்கு ஏது ... ??)

காலையில் தலையைக் காட்டி விட்டு காரை பார்க் செய்து உள்ளே செல்லும் போது வெற்றி வடிவேலனே ... குரல் கேட்கிறது ... எட்டு நிமிடம் லேட் ..
முழுவதும் இளைஞர் பட்டாளம் ஆண் பெண் என குடும்பத்துடன் ... மிக ஆச்சரியம் ..
சாந்தி மாதிரி ஆரவாரமில்லை... அமைதியாக ரசித்தனர்

ஜாக்சன் காட்சியில், இறுதியில் ஜாவர் சீதாராமன் உடன் வீர வசனம், தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை என கூறி விட்டு நடுக்கும் வீர நடை.... கைதட்டல் .... ஒரு விசில் சத்தம்...

கண்ணை விட்டு அகலாத தூக்கு கயிறு முத்தம்.... கண்களில் கண்ணீர் மொத்தம்...

டிஜிட்டல் துல்லியம்... முக பாவங்கள் அற்புதம்... அவ்வளவு உணர்ச்சிகளையும் நேரில் பார்த்த அனுபவம்...
சிலிர்ப்பு அடங்க வெகுநேரமானது ... மீண்டும் ஆபீஸ் ... இரவில் வீடு....

நேற்று சாந்தியில் பார்க்க கொடுத்து வைக்க வில்லை ..... மற்றும் ஒரு சந்தர்ப்பம் வரும்

உலகில் ஆதவன் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என வரலட்சுமி பேசும் வசனம் நிஜம்...

tacinema
24th August 2015, 08:56 PM
கட்டபொம்மனின் வசூல் சாதனை பாரீர்: Top 5 from Aug 21-23, as per sify report.

http://www.sify.com/movies/boxoffice.php?id=15059396&cid=13525926

Aug 21 வெள்ளி வெளியான புது தமிழ் படங்களை ஓரம் கட்டி விட்டார் எங்கள் கட்டபொம்மன். தமிழ் திரை உலகின் நிரந்தர வசூல் மன்னர் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

regards

Russellxor
24th August 2015, 09:02 PM
கோவைகலக்கல்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_9325_zpshsdsxmh4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_9325_zpshsdsxmh4.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3220_0562_zpsrvz1z7zr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3220_0562_zpsrvz1z7zr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_1502_zpsc6oqf9je.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_1502_zpsc6oqf9je.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3220_3929_zpsnrxjwzgp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3220_3929_zpsnrxjwzgp.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3219_3575_zpsw8xtcpov.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3219_3575_zpsw8xtcpov.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_9108_zpshi6unmf7.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_9108_zpshi6unmf7.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_4178_zpsgvzwzq7u.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_4178_zpsgvzwzq7u.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/SAM_3215_1703_zpsezl2dm3z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/SAM_3215_1703_zpsezl2dm3z.jpg.html)

sss
24th August 2015, 09:37 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் - செம்மீன் - Veerapandiya Kattabomman -Chemmeen.
_______________________________________________

https://upload.wikimedia.org/wikipedia/en/e/e3/Veerapandiya_Kattabomman_songs.jpg

சில நாட்களாக ஏடுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் செம்மீன் திரைப்படங்கள் பற்றிய செய்திப் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத வெள்ளித்திரை படைப்புகள் ஆகும்.

துரோகங்கள் நிகழ்த்தப்படும்போதும், சோதனைகளும், தோல்விகளும் வந்தடையும் போதும், சோர்வடையாமலிருக்க நான் பார்த்து ரசிப்பது வீரபாண்டிய கட்டபொம்மனைத் தான்.

போர் குணத்தை அள்ளித் தெளிக்கின்ற எங்கள் தெற்குச் சீமையின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் பகிர்கின்ற இத்திரைப்படத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா? என்ன வசனங்கள்!

அன்றைய தொழில்நுட்பத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்த வண்ணத் திரைப்படம். மறைந்த சிவாஜிகணேசன் கட்டபொம்மனாகவே மாறிவிட்டார்!

வீரபாண்டிய கட்டபொம்மன்
_______________________________
https://upload.wikimedia.org/wikipedia/en/4/41/Kattabomman1959.jpg

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1959ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் வெளியானது. இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கிய இத்திரைப்படத்தில், சிவாஜியோடு, ஜெமினி கணேசன், பத்மினி, குலதெய்வம் ராஜகோபால், ஜாவர் சீதாரமன், வி.கே. ராமசாமி,
எஸ். வரலட்சுமி, ஓ.ஏ.கே. தேவர் போன்றோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

இத்திரைப்படத்தை சிவாஜி நாடக மன்றம் மூலமாக 116 தடவைக்கும் மேலாக நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.

இந்தத் திரைப்படம் தென்மண்டலமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்பே இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவும், அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் பங்கேற்றார்கள்.

1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் இப்படத்தின் மூலம் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்.

இரண்டு பெரிய கண்டங்கள் (ஆசியா, ஆப்ரிக்கா) கலந்துகொள்ளும் இவ்விழாவில் விருது வாங்கிய முதல் ஆசியத்திரைப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல் தமிழ் திரைப்படமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன் முத்திரை பதித்தது.

அன்றைக்கு கெய்ரோவில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கெய்ரோ மாநகராட்சி நடிகர் திலகத்தை அந்நகருக்கு வரவேற்றுக் கொண்டாடியது மட்டுமில்லாமல் அந்நகர மேயர் நகரத்தின் “சாவியை” சிவாஜி கணேசன் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார் என்பது பெருமையான செய்தி.

பின்னர் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது, பிரதமர் நேருவின் அனுமதியோடு, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் (அப்போது பாலர் அரங்கம்) அவரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார்.

அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் எகிப்து அதிபர் நாசரை சென்னைக்கு அழைத்து சிறப்பித்ததோடு தன் வீட்டிலே விருந்தும் அளித்தார். இந்தப்பெருமை பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனையே சேரும்.

தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு, அவர் தூக்கிலிடப்பட்ட பகுதியான ஒருங்கிணைந்த நெல்லைமாவட்டம் கயத்தாரில் 1971ம் ஆண்டு 47 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். அந்தச் சிலையை குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

வீரபாண்டியனின் வாரிசான குருசாமி நாயக்கர் தூக்குதண்டனையிலிருந்து சஞ்சீவரெட்டி அவருடைய கருணை மனுவை பரிசீலித்து இடைக்கால தடையும் வை.கோ அவர்கள் முயற்சியால் வழங்கியதும் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றிய வழக்கை நடத்தியவன் என்ற பெருமையோடு நினைவு கொள்கிறேன்.

1999 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை முறைப்படி தமிழக அரசிடம் ஒப்படைத்தார் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் புதுபொலிவுடன், புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது.

செம்மீன்.
_____________

1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படம் வெளியானது. நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் எழுதிய “செம்மீன்” நாவலை ராமு காரியாட் என்ற இயக்குனர் திரைப்படமாக்கியிருந்தார். பல நல்ல நாவல்கள் நல்ல திரைப்படங்களாக அமைவதில்லை. அப்படியான நிலையில் மலையாளத்தின் முதல் வண்ணப்படமாக செம்மீன் வெளியாகி இருந்தது. அதன் 50வது ஆண்டு நிறைவு விழாவை கேரள மாநிலமே கொண்டாடி வருகின்றது.

உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட செம்மீன் நாவலின் ஆசிரியர், படத்தில் நடித்த நட்சத்திரங்கள், இயக்குனர் என்று தனி இதழே வெளியிட்டது கேரளாவின் மாத்ருபூமி நாளிதழ்.

அந்த காலகட்டத்தில் சிறந்த படத்துக்கான விருதுகள் பெரும்பாலும் வங்கத் திரைப்படங்களுக்கே கொடுக்கப்பட்டுவந்தது. சிறந்த படங்களுக்கான தேர்வில் இடம்பெற்ற இருபது படங்களுக்குள் செம்மீன் முதலில் இடம்பெறவில்லை. தென் இந்தியாவிலிருந்து சிறந்த படம் செம்மீன் என்று பரிந்து பேச யாரும் இல்லாத சூழலில் அன்றைக்கு தேர்வுக்குழுவில் இருந்த பாரதி மணி பரிந்துரையின் பேரில் முதல்முறையாக தங்கத் தாமரை விருது தென்னிந்திய சினிமாவுக்கு செம்மீன் திரைப்படம் மூலம் கிடைத்தது.

மார்க்ஸ் பார்தலே ஒளிப்பதிவு அற்புதமாக அமைந்தது. அவர் ஒரு ஜெர்மானியர். இருந்தும், கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்வின் வியத்தகு கோணங்களை அவர் தம் ஒளிப்பதிவில் காட்டியதும் செம்மீனின் வெற்றிக்கு இன்றியமையாத இன்னொரு காரணம். மேஜர் சத்யன் அப்பாவி பளனியாகவே மாறியிருப்பார்.

சத்யனும் ஷீலாவும் நடிப்பில் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு மிஞ்சியிருப்பார்கள். பரீக்குட்டியாக வரும் மது கதாப்பாத்திரம் மனதைக் கரைக்கும். செம்பன் குஞ்ஞுவாக வரும் கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சக்கியாக நடித்த அடூர் பவானி, பஞ்சமியாக வரும் லலா, சி. ஆர். ராஜகுமாரி, அடூர் பங்கஜம், கோட்டயம் செல்லப்பன், பறவூர் பரதன், பிலோமின, ஜெ.எ.ஆர். ஆனந்த் , கோதமங்கலம் அலி ஆகியோர் தாங்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் மூலம் கேரள மக்களின் வாழ்வியலை கண்முன் காட்சியாகக் கொண்டுவந்திருப்பார்கள்.

இத்திரைப்படத்தினை பாபு இஸ்மயில் சேட்டு தயாரிக்க, மார்கஸ் பார்ட்லி, யு. ராஜகோபால் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்தனர். இசை சலில் சௌத்ரி. இயக்குனர் ராமு காரியாட் நடிகர்களுக்கு ஈடாகக் கடலலைகளையும் நடிக்க வைத்திருந்தார்.
கடல் அலைகளின் சீற்றம், கோபம், சிரிப்பு, புன்முறுவல், முணுமுணுப்பு, நாணம், கெஞ்சல், கொஞ்சல், பிடிவாதம் எல்லாம் காட்சியமைப்பில் ரசிக்கும்படியாகக் கையாண்டிருப்பார்.

இன்றைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனும், செம்மீனும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-08-2015.
https://www.facebook.com/ksradhakrish

Russelldwp
24th August 2015, 09:37 PM
திருச்சியில் கலைஅரங்கம் தியேட்டரில் நேற்று ஞாயிறு மாலை காட்சி மக்களின் பேராதாரவோடும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆரவாரத்தோடும் வானவேடிக்கை முழங்க இனிப்பு வழங்க பாலபிஷேகம் என ஸ்தம்பித்துவிட்டது. திருச்சியில் மட்டும் வெள்ளி சனி ஞாயிறு வரை 3 லட்சம் வசூல் செய்துள்ளது. ஞாயிறு மாலை காட்சி வசூல் மட்டும் கலைஅரங்கம் அரங்கில் 72000 ரூபாய்

https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/s480x480/11951930_111221475896425_2392833508164424563_n.jpg ?oh=da9eb890b179a32bf66efe3e8cc2c859&oe=563D3359
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/11953280_111238102561429_9198117744187258692_n.jpg ?oh=68fbc71f7b83ede41702bdf8f32bf6eb&oe=5673E649&__gda__=1450153547_becc87e925deaa43a72148c3081d92a 3

https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11899779_111239135894659_6556638005474343564_n.jpg ?oh=85fc582d050c089da34b0157593147cc&oe=563B7B55

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11934977_111243542560885_4803554124086848851_n.jpg ?oh=8aec12d83b150dc7ebf619d3bdf4f069&oe=563E5E33&__gda__=1450401881_3dc4537d25c7df89d1fed1b331c5e97 4

Russelldwp
24th August 2015, 10:22 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11905385_110228329329073_1898897549734139549_n.jpg ?oh=a2b763a0d5b57213e494a561284e382a&oe=56784BD9&__gda__=1451244624_9c2c39aede8662aedb8bda18379ae5e 7

Russellbpw
24th August 2015, 11:24 PM
Dear yukesh sir,
Right from day one this is what was screened ie., Sathyam 3pm, Escape 12.30pm, S2 Perambur 12.45pm. Only for Saturday and Sunday, they screened additional screens. Till Sunday Sathyam Escape has recorded all shows full including 9.20am. I think you did not see my posts.
Please check the screen shot images.

Russellbpw
24th August 2015, 11:51 PM
Yukesh Sir
There is something wrong in that figure. Shanti Collection alone till Sunday evening was 3,53,780 .
Studio 5 total seats avg 100*120 12000*5
Escape same as above..................12000*5
120000

The above 3 theater itself is coming to 473780.
Besides this, PVR has collected 184360 till Sunday. The total of 4 theaters itself is app 6,57,xxx. I have not collected the other theater collections. You can be assured of one thing sir. VPKB collection is better in all places when compared to the previous digital movies released across South India. Some movies halls had even Cancelled 2nd day show itself and returned back the cash to viewers for some movies. None of Nadigar Thilagam Digital Films had faced such incidents. That speaks volume on NT and his BOX Office Strength.
Regards
RKS

sss
25th August 2015, 12:36 AM
பாகுபலி காலத்திலும் பந்துலுக்கு மவுசு...

தினமலரே... எதுகை மோனைக்கு இப்படியா எழுதுவது...
http://cinema.dinamalar.com/tamil-news/36534/cinema/Kollywood/Veerapandiya-Kattabomman-got-good-response.htm?device=fb


சினிமா உள்ள வரை சிவாஜிக்கு மவுசு என்று எழுத வேண்டியது தானே....

Russelldvt
25th August 2015, 03:16 AM
'குலமா குணமா ' ச்டில்ல்ஸ் தொடர்கிறது..

http://i58.tinypic.com/16icg7p.jpg

Russelldvt
25th August 2015, 03:17 AM
http://i59.tinypic.com/vrdow8.jpg

Russelldvt
25th August 2015, 03:18 AM
http://i60.tinypic.com/2ntg20o.jpg

Russelldvt
25th August 2015, 03:19 AM
http://i61.tinypic.com/2j4eb6a.jpg

Russelldvt
25th August 2015, 03:19 AM
http://i62.tinypic.com/2elv3he.jpg

Russelldvt
25th August 2015, 03:20 AM
http://i62.tinypic.com/2lkbtaa.jpg

Russelldvt
25th August 2015, 03:20 AM
http://i62.tinypic.com/2z6ryf6.jpg

Russelldvt
25th August 2015, 03:21 AM
http://i62.tinypic.com/2ntaczb.jpg

Russelldvt
25th August 2015, 03:22 AM
http://i62.tinypic.com/2zggaz7.jpg

Russelldvt
25th August 2015, 03:23 AM
http://i59.tinypic.com/ajt7c7.jpg

Russelldvt
25th August 2015, 03:23 AM
http://i58.tinypic.com/v8ify8.jpg

Russelldvt
25th August 2015, 03:24 AM
http://i60.tinypic.com/4uxo2b.jpg

Russelldvt
25th August 2015, 03:24 AM
http://i57.tinypic.com/b5n0gm.jpg

Russelldvt
25th August 2015, 03:25 AM
http://i57.tinypic.com/zmxg1h.jpg

Russelldvt
25th August 2015, 03:26 AM
http://i61.tinypic.com/28tjdl4.jpg

Russelldvt
25th August 2015, 03:27 AM
http://i62.tinypic.com/344xqb4.jpg

Russelldvt
25th August 2015, 03:27 AM
http://i62.tinypic.com/2isjtrs.jpg

Russelldvt
25th August 2015, 03:28 AM
http://i59.tinypic.com/2n0uc3.jpg

Russelldvt
25th August 2015, 03:29 AM
http://i58.tinypic.com/33l1jc6.jpg

Russelldvt
25th August 2015, 03:29 AM
http://i59.tinypic.com/t96ydx.jpg

Russelldvt
25th August 2015, 03:30 AM
http://i62.tinypic.com/2v9rt5f.jpg

Russelldvt
25th August 2015, 03:31 AM
http://i58.tinypic.com/a26o05.jpg

Russelldvt
25th August 2015, 03:31 AM
http://i57.tinypic.com/30jtuuv.jpg

RAGHAVENDRA
25th August 2015, 06:21 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamHouse1-1.jpg

24 ஆகஸ்ட்.. அன்னை ராஜாமணியின் நினைவு நாள்..

கட்டபொம்மன் நினைவலைகளில் நீந்தி விட்டதால், நேற்றே போட்டிருக்க வேண்டிய நினைவேந்தல் பதிவினை, ஒரு நாள் தாமதமாக இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

vasudevan31355
25th August 2015, 06:58 AM
திருச்சி களேபரங்கள்

புகைப்படங்களை மெயிலில் அனுப்பி வைத்த அண்ணாதுரை நண்பருக்கு நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2_1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%203.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%203.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/14_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/14_1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2010.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2010.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2011.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2011.jpg.html)

vasudevan31355
25th August 2015, 06:58 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%206.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%206.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%207.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%207.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2014.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2014.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%204.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%204.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2013.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2013.jpg.html)

vasudevan31355
25th August 2015, 06:59 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2012.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2012.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2016.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2016.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/unnamed%2015.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/unnamed%2015.jpg.html)

RAGHAVENDRA
25th August 2015, 07:10 AM
வாசு சார்
வர வர நீங்கள் சோம்பேறிகளை உருவாக்குகிறீர்கள்..
என்ன கோபம் வருகிறதா..
ஆமாம்... தங்களுடைய நிழற்படங்கள், வீடியோக்கள், வர்ணனைகள்.. இவற்றையெல்லாம் பார்த்தும் படித்தும் ஆஹா.. நேரில் பார்க்கும் உணர்வை அப்படியே கொண்டு வருகிறாரே... என்று திளைத்து, கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரயத்தனம் செய்யாமல் இருக்கும் மனப்பாங்கை கொண்டு வந்து விடுகிறீர்களே... டீவியில் நேரலை ஒளிபரப்பு செய்வது போல அவ்வளவு அருமையாக இருக்கின்றன..தங்களைப் பாராட்ட வார்த்தைகளே தெரியவில்லை..
அருமை அருமை..

Russellbpw
25th August 2015, 07:43 AM
Dear sss
We know about Dinamalar. The idiotic editor and the content writer can any day go and ask any student as to Do they know who Bandhulu is and Who Nadigar Thilagam is? The response they would get is We Dont know who Bandhulu is But Sivaji is an Actor.

They also, know that but deliberately doing.
They are unable to digest and that's why they write this way.
RKS

tacinema
25th August 2015, 09:08 AM
VPKB maalaimalar review: http://cinema.maalaimalar.com/2015/08/24104012/Veerapandiya-kattapomman-movie.html

தென்னிந்தியாவில் இருந்து சுதந்திர போராட்டத்துக்கு முதன்முதலில் குரல் கொடுத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். தமிழகத்து கிராமங்களில் நாடகமாக நடத்தப்பட்டு வந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை இயக்குனர் பி.ஆர்.பந்துலு திரைப்படமாக தயாரித்தார்.

1959–ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியானது. சிவாஜி இதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக வீர வசனங்கள் பேசி நடித்து உலக அளவில் பாராட்டு பெற்றார். எகிப்து பட விழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாகவும், சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தது.

கட்டபொம்மனின் படை தளபதி வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன், தம்பி ஊமத்துரையாக ஓ.ஏ.கே.தேவர், வெள்ளையம்மாளாக பத்மினி, எட்டப்பனாக வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி ராகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாவர் சீதாராமன் ஜாக்சன் துரையாக நடித்து இருந்தனர்.

1959–ம் ஆண்டு மே 10–ந்தேதி தமிழகத்தில் வெளியான அதே நாளில் லண்டனிலும் திரையிடப்பட்டது. சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் கதைக்கு ம.பொ.சிவஞானம் திரைக்கதை அமைத்து இருந்தார். ஜி.ராமநாதன் இசையில் இனிமையான பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது.

அந்தக் காலத்திலேயே போர்க்காட்சிகள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டு இருந்தது. பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு படத்தை தயாரித்து இயக்கினார். படம் வெளியான காலத்தில் தொடர்ந்து 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதே பெயரில் தெலுங்கிலும் ‘அமர் ஷாகீத்’ என்ற பெயரில் இந்தியிலும் மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடப்பட்டது.

காலத்தால் அழியாத திரைக்காவியமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்த தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில் 70 எம்.எம். திரைப்படமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வண்ணக் கலரும், டி.டி.எஸ்.ஒலி கலவையுடன் வசனங்களும் இசையும் மாற்றம் பெற்றுள்ளது.

ஜாக்சன் துரையின் நாற்காலியை இழுத்துப் போட்டு கட்டபொம்மன் உட்காரும்போதும், ‘மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? என்று சிவாஜி உச்சரிக்கும் விதத்திலும், அவர் அந்த வார்த்தைகளுக்கு ஏற்றவாறு சைகையால் அரைக்கும் கிண்டலுக்கும் இன்றைக்கும் கைதட்டல் குறையாமல் ஒலிக்கிறது. கிஸ்தி திரை வரி வட்டி வசனத்தை சிவாஜி பேசும்போது கூடவே பலரும் சொல்கிறார்கள்.

அதேபோல், வரலட்சுமியை கையில் பிடித்துக்கொண்டு ‘நீல வானிலே செந்நிறப் பிழம்பு’ என்று ஆரம்பித்து, செந்தமிழை சரளமாய் பேசிக்கொண்டு காதலும் வீரமுமாய் சிவாஜி கம்பீர நடை நடக்கும்போது, அரங்கமே சிலையாக அமர்ந்து சிலிர்த்தபடி பார்க்க வைக்கிறது. வி.கே. ராமசாமியின் எட்டப்ப நடிப்பு உற்சாகமாக ரசிக்கப்படுகிறது.

சக்தி கிருஷ்ணசாமியின் வசனம் இன்றைக்கும் பொருந்தும் அளவு அவ்வளவு நவீனமாக இருக்கிறது. 35 எம் எம் படத்தை சினிமாஸ்கோப் ஆக மாற்றி இருக்கும் விதம் அசத்தல். எந்த ஃபிரேமிலும் தலை கழுத்து கட் ஆகாமல் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக சண்டைக்காட்சிகளில் சிரமம் எடுத்து நடிக்காத சிவாஜி, சிலம்பு சண்டையையும், குதிரை சவாரியையும் எவ்வளவு சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதையும் சினிமாஸ்கோப்பில் உணர முடிகிறது.

மொத்தத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் - இளைய தலைமுறை பார்க்க வேண்டிய படம்

tacinema
25th August 2015, 09:38 AM
நடிகர் திலகம் எனும் வரலாறு!!

தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் பார்க்க வேண்டிய படம் வீர பாண்டிய கட்டபொம்மன். ஓவ்வொரு தமிழனும் பெருமையோடு நானும் தமிழனே என சொல்ல முக்கிய காரணம் நடிகர் திலகமே!!

வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - http://www.dinamani.com/cinema/2015/08/20/%E2%80%98%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%A E%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%A F%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D% E2%80%99-%E0%AE%A4/article2982636.ece

Enjoy Reading... Scroll down to the end and see why Nadigar Thilagam is so unique and unmatched in Tamil Films

வீரபாண்டிய கட்டபொம்மன் படம், 1959-ம் ஆண்டு பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. இந்தத் திரைப்படத்துக்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் வருகிற 21-ம் தேதி வெளிவரவுள்ளது. அதை முன்னிட்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் திரையில் உருவான வரலாறு பற்றி எழுத்தாளர் பா. தீனதயாளன் இங்கே விவரிக்கிறார்.

***

விழுப்புரம் சின்னையா கணேசனின் நடிப்பாற்றல் இந்திய எல்லைகளையும் கடந்து எகிப்தில் எதிரொலித்தது.

கட்டபொம்முவின் சுதந்தர தாகம், விடுதலை உணர்வை மட்டுமல்லாது, ஆசியாவிலேயே மிகச்சிறந்த நடிகர் என்கிற கவுரவத்தை வி.சி. கணேசன் பெறவும் விதை ஊன்றியது.

அதோடு நின்றதா. அவருக்கு மத்திய சர்க்காரின் பத்மஸ்ரீ, பத்மபூஷண், தமிழ்த்திரை உலகில் முதல் தாதா சாஹிப் பால்கே விருது, பிரெஞ்சு அரசின் மிக உயரிய செவாலியே போன்ற பரிசுகளையும் பெற்றுத் தந்தது.

தென்னக பயாஸ்கோப் வரலாற்றில், எண்ணற்ற விதங்களில், வெற்றிகரமாகப் பிள்ளையார் சுழி போட்டவை நடிகர் திலகத்தின் படங்கள். அவற்றில் மிக முக்கியமானது, தமிழகத்தின் முதல் சரித்திரப் படைப்பான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

அதுமட்டுமல்ல, மூவேந்தர்களில் (எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்) இரண்டு கணேசன்களுக்கும் அதுவே முதல் வண்ணச்சித்திரம்! தமிழில் இரண்டாவது கலர் ஃபிலிம். லண்டனில் வண்ணப் பிரதி எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய சினிமா. ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் டாக்கி. ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா...’ என்று ஜெமினி கணேசனுக்கு, பி.பி.ஸ்ரீனிவாஸ் முதன்முதலில் பின்னணி பாடியதும் கட்டபொம்மனில் ஒலித்தது.

ராஜராஜ சோழன் போன்றோ, அவரது மகன் ராஜேந்திர சோழன் மாதிரியோ, வாழும்போதே வரலாறாகி, உலகப் புகழ் பெற்றத் தமிழ்ச் சக்கரவர்த்தி அல்ல கட்டபொம்மு. கம்பள நாயக்கர்களின் பரம்பரையில் வந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.

விடுதலைப் போரில், தமிழ் மண்ணிலிருந்து ஓங்கி ஒலித்த முதல் முழக்கம் கட்டபொம்முவுடையது. குறு நில மன்னர் என்றுகூடச் சொல்ல முடியாது. வெள்ளையனுக்குக் கப்பம் கட்டாமல், பாஞ்சாலங்குறிச்சியைத் தன்னிச்சையாக ஆள நினைத்த மிகச் சிறிய பாளையக்காரர்.

மொழி பேதமற்ற சென்னை ராஜதானியில், வீதிதோறும் நடைபெற்றது கட்டபொம்மு தெருக்கூத்து. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அதைப் பார்த்த ஒரு சிறுவன், மெய்சிலிர்த்து சில நொடிகளில் அரிதாரம் பூசும் ஆர்வம் கொண்டான்.

‘பிஞ்சு மூளை - அதில் எழுந்த அந்த எண்ணம், அப்படியே என்னை அடிமையாக்கிக் கொண்டது. வெறிபிடித்த குரங்குக்கு ஒரு புண்ணும் உண்டாகிவிட்டால் என்ன கதியாகுமோ, அதேபோல் நான் பார்த்த கட்டபொம்மன் தெருக்கூத்து, என்னை கலைத் தொழிலுக்கே இழுத்து வந்துவிட்டது’ - சிவாஜி கணேசன்.



கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன், கட்டபொம்மு குறித்து, அவதூறாகப் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். ரா.வே.யின் உதவியோடு டி.கே.எஸ். சகோதரர்கள் ‘முதல் முழக்கம்!’ என்ற பெயரில் கட்டபொம்முவின் கதையை நாடகமாக நடத்தினர். மிகக் குறுகிய காலம், சில ஊர்களில் மட்டும் முதல் முழக்கம் கேட்டது.

எஸ்.எஸ்.வாசன், ஆனந்தவிகடனில் கட்டபொம்மன் வாழ்க்கைத் தொடரை எழுதி வந்தார். ஜெமினியில் கட்டபொம்மனை சினிமாவாகத் தயாரிக்க ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய சூழ்நிலையில், சிவாஜி நாடக மன்றம் உதயமானது. அவர்களது முதல் படைப்பு, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

‘கோவில்பட்டியில் நாடகம் ஒன்றை நடத்திவிட்டு, நானும் எனது ஆசான் சக்தி கிருஷ்ணசாமியும், கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய கயத்தாறு வழியாக திருநெல்வேலிக்கு காரில் போய்க்கொண்டிருந்தோம்.

ஆசானிடம் எனது வெகு நாளைய ஆசையைக் கூறி, கட்டபொம்மன் சரித்திரத்தை ஒரு சிறந்த நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன். ஒரு மாதத்தில் அவர் எழுதி முடித்ததும் உற்சாகமாக வாசித்தேன்.

நாடக அமைப்பு புதுமையாகவும், எழுத்து தரமாகவும் இருந்தது. எனது நீண்டகாலத் துடிப்புக்கு இரட்டிப்பு ஊக்கம் ஏற்பட்டது. நாடகம் உருவாக ஐம்பதாயிரம் செலவானது’ - நடிகர் திலகம்.

ம.பொ.சி.க்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படைப்பாக்கத்தில் மிக உன்னதப் பங்கு உண்டு. கட்டபொம்மன் நாடக அரங்கேற்றம், தமிழ் அறிஞர் மு.வரதராசனார் தலைமையில், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி, புதன்கிழமை, சேலம் பொருட்காட்சியில் நடைபெற்றது.

எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, 1961 வரையில் நூறு முறைகளுக்கு மேல் நடைபெற்றது. அதன் மொத்த வசூல், கிட்டத்தட்ட 32 லட்சங்கள். அந்தத் தொகை, தமிழ்நாட்டின் கல்விப் பணிக்காக, ஏராளமான ஆரம்பப் பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் நடிகர் திலகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மூவேந்தர்களில் முதல் மரியாதைக்குரிய நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன், சுமார் இரண்டு டஜன் சினிமாக்களில், பல்வேறு புத்தம் புது மாறுபட்ட வேடங்களை இரவு பகலாக ஏற்று நடித்த நேரம் அது. தொடர்ந்து, கட்டபொம்மனாகவும் மேடையில் முரசு கொட்டித் தன்னை மிகவும் வருத்திக்கொண்டார்.

‘கட்டபொம்மன் நாடக வெறியினால் என் உடல் நிலையைக்கூடச் சரியாகக் கவனிக்காமல் நடித்து வந்தேன். வசனம் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சமயம் வாயில் இருந்து ரத்தம் குபுக் குபுக்கென வந்துகொண்டே இருக்கும். அதையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொண்டே இருப்பேன். மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு, ஜனங்கள் ஐயோ ஐயோ என்று பதறுவார்கள்.

‘கட்டபொம்மனாக என்னுள் இருந்து வரும் சத்தமானது, அடி வயிற்றிலிருந்து வருகிறதா? இல்லை இதயத்திலிருந்து வருகிறதா என்று எனக்கே தெரியாது. சில சமயம், நாடகம் முடிந்தவுடன்கூட ரத்தம் கக்குவேன்’

நாடகத்துக்கு ஆனந்த விகடன் அளித்த விமரிசனம்:

‘வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்துக்கு சிவாஜி கணேசன் ஒருவரே பொருத்தமானவர் என நினைக்கும்படியாக அமைந்துவிட்டது அவர் நடையும், பேச்சும், எடுப்பான தோற்றமும். அவர் வாயால் ‘வீரவேல்! வெற்றிவேல்!’ என்று முழக்கம் செய்யும்போது, நாடகத்தைப் பார்க்கும் அத்தனை தமிழ் மக்களும் வீராவேசம் கொள்கின்றனர். நாடகம் முழுவதும் சிவாஜி கணேசனின் நடிப்பே உயிராக விளங்குகிறது.

கட்டபொம்முவுக்கு சிலை எங்கே, சிலை எங்கே என்று எல்லோரும் கேட்கும் இந்நாளில், சிலையை ஓரிடத்தில்தான் நாட்டலாம்; இதோ நான் கட்டபொம்மனை எல்லோருடைய சிந்தையிலும் நாட்டுகிறேன் என சிவாஜி கணேசன் எழுந்து விட்டார். ’

நடிகர் திலகத்தையும் கட்டபொம்மனையும் ஒரு சேர விண்ணில் உயர்த்தியது, ஆனந்த விகடன் விமரிசனம்.

*

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூதுகூரு என்கிற சிற்றூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணய்யா பந்துலு. சுருக்கமாக பி.ஆர்.பந்துலு. சென்னை, தம்பு செட்டித் தெருவில் ஆர்ய பாடசாலாவில் பயின்றவர்.

அங்கு, மகாகவி பாரதியாரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பந்துலுவுக்கு. பின்னாளில், தேசபக்தியூட்டும் சினிமாக்களை எடுக்க அவை தூண்டின. பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றியவர். நாடக ஆசை துரத்த, பிரம்பையும் சாக்பீஸையும் தூர வீசிவிட்டு, ஒப்பனை உலகுக்குள் நுழைந்தார்.

சென்னை சவுந்தர்ய மஹால். ‘சம்சார நவுகா’ நாடகம். அதில், தினந்தோறும் பி.ஆர்.பந்துலுவின் நடிப்பைப் பார்த்து பித்துப் பிடித்து நின்றார் ஓர் இளைஞர். அவரது மனசெல்லாம் மேடையிலேயே லயித்தது. சம்சார நவுகாவுக்கு நிரந்தர ரசிகராக மாறினார். அந்த இளைஞர், வி.சி.கணேசன்!

திண்டுக்கல்லில் சக்தி கிருஷ்ணசாமியின் ‘தோழன்’ நாடகம். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு அப்போது மவுசு அதிகம். அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டால், வசூல் குவியும் என்கிற சூழல். அவரை நாடகம் பார்க்க அழைத்தார் சக்தி கிருஷ்ணசாமி. மகாலிங்கம் மறுத்துவிட்டார்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் நாடகப் பொறுப்பாளர் மற்றும் காரியதரிசியாக இருந்தவர் பி.ஆர்.பந்துலு. பந்துலுவை அன்போடு அண்ணா என்பார் அம்பி என்கிற மகாலிங்கம். பந்துலு கிழித்த கோட்டைத் தாண்டாதவர். பந்துலு அவரை அரும்பாடுபட்டு வற்புறுத்தி, திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றார்.

தோழனில் நடித்த வி.சி.கணேசனின் நடிப்பு, நடை, வசன உச்சரிப்பின் பேராற்றலைக் கண்டு மெய் மறந்தார்கள் இருவரும். பந்துலு எடுத்துக்கொடுக்க, வி.சி.கணேசனின் திறமையை மகாலிங்கம் மெச்சிப் பேசினார்.

சம்சார நவுகா கன்னடத்தில் படமானபோது, மிகச் சுலபமாக சினிமாவுக்குள் முத்திரை பதித்தார் பந்துலு. நீண்டகால அவஸ்தைகளுக்குப் பின், ‘பராசக்தி’யில் எடுத்த எடுப்பிலேயே கணேசனும் உச்சிக்குச் சென்றார். இருவரும் சினிமாவில் புகழ் பெற்றதும், தமிழில் கணேசனுக்காகவே பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் உருவானது. அங்கு உருவான பல படங்களின் கன்னட மூலங்களில் பந்துலு நாயகன். கணேசன், பந்துலுவை பி.ஆர்.பி. என்பார். பந்துலு, சிவாஜியை பிரதர் என்று அழைப்பார்.

‘தோழன் நாடகத்தில் கணேசனின் நடிப்பைப் பார்த்தது முதல், அவரையே என் சொந்தப் பட ஹீரோவாக தொடர்ந்து நடிக்கவைக்க முடிவு செய்துவிட்டேன். பத்மினி பிக்சர்ஸின் முதல் படைப்பு, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. ராகினிக்கும் அதுவே முதல் படம்.

ஏவி.எம்.மின் ‘வாழ்க்கை’யால் டி.ஆர்.ராமச்சந்திரனுக்குப் பெரும் புகழ் இருந்ததால், சிவாஜியைவிட அவருக்கு அதிகச் சம்பளம் கொடுத்தேன்.

நான் எவ்வளவு கொடுத்தாலும் கணேசன் திருப்தியாக ஏற்றுக்கொள்வார். இவ்வளவு தந்தாக வேண்டும் என அவர் என்னிடம் ஒருபோது கண்டித்துக் கேட்டதே கிடையாது.

‘தங்கமலை ரகசியம்’ படத்தின் பாதியிலேயே ப.நீலகண்டன் விலக, வேறு வழியின்றி அதில் நான் ஏராளமான பயத்தோடு முக்கால் பங்கு சினிமா டைரக்டர் ஆனேன்’ - பி.ஆர்.பந்துலு.

தோழன் நாடகம் ஏற்படுத்திய வலுவான அன்பு அஸ்திவாரத்தின் நல்விளைவே, செலுலாய்டில் கட்டபொம்மன் பதியக் காரணம்.

அநேக பிரம்மாண்டங்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மனை, பந்துலு படமாக்க வேண்டும் என்பது சிவாஜி கணேசனின் தீராத ஏக்கம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் கட்டபொம்மன் நாடகம் பார்க்க, பந்துலுவை சிறப்பு விருந்தினராக சிவாஜி அழைத்தார். தன் துணைவன் சிங்கமுத்துவோடு கட்டபொம்மனைப் பார்த்து மிரண்டார் பந்துலு.



நிஜ கட்டபொம்மனாகவே நடிகர் திலகம் கூடு விட்டு கூடு பாய்ந்திருந்ததைக் கண்டு, பரவசத்தின் உச்சிக்குச் சென்றார் பந்துலு.

மறுநாளே,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்

பத்மினி பிக்சர்ஸ்

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

கேவா கலர்



என்கிற முழுப்பக்க விளம்பரம் தினசரிகளில் வெளியானது. தமிழ்த் திரை உலகம் பரபரப்பில் வாயைப் பிளந்தது.

***

உடனடியாக, 1957 நவம்பர் 10-ம் தேதி, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ துவக்க விழா!

வெள்ளையனை விரட்டி அடித்ததிலும், தமிழக அரசியலிலும், திரைப்படத் தயாரிப்பிலும், பதிப்பகத் துறையிலும் பிரபலமானவர் சின்ன அண்ணாமலை. பி.ஆர்.பந்துலுவையும் ம.பொ.சி.யையும் தோழமை கொள்ளவைத்த பெருமை அவருக்கே உண்டு.

‘இந்தப் படம் உருவாக என்னைத் தூண்டியவர் நீங்கள்! இப்போது உங்கள் கரங்களால் குத்து விளக்கேற்ற வேண்டும். வாருங்கள்’ என்று சின்ன அண்ணாமலைக்கு பூரிப்போடு மாலை அணிவித்து வரவேற்றார் பந்துலு.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மிக்க பெருந்தன்மையோடு பந்துலுவை பாராட்டிப் பேசினார். ‘நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்; அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்’.

கோல்டன் ஸ்டுடியோவில், ‘வெற்றி வடிவேலனே...’ என்ற பாடல் காட்சி முதன்முதலாகப் படமாக்கப்பட்டது.

பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ டூ இஸட் - சிங்கமுத்து. இயக்கத்தில், பந்துலுவின் முதல் சகா. சிங்கமுத்துவைக் கலந்து பேசாமல், பந்துலு கணப்பொழுதும் பணியாற்றியது கிடையாது.

எம்.ஜி.ஆரே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது தொழில் நெருக்கம் இருந்தது. தன்னிடம் வந்துவிடுமாறு எம்.ஜி.ஆர். அழைத்தும், பந்துலுவின் மீது கொண்ட மாறாத பாசத்தின் காரணமாக, பந்துலுவின் நிழலாகக் கடைசி நொடி வரை வாழ்ந்தவர் சிங்கமுத்து. பந்துலுவின் ஒவ்வொரு நகர்விலும் சிங்கமுத்துவின் தீர்மானமும், வியர்வையும், கடின உழைப்பும் உயிராகக் கலந்திருக்கும்.

கட்டபொம்மன் குறித்த சிங்கமுத்துவின் பரவசமூட்டும் அனுபவங்கள் -

‘கட்டபொம்மனில் முதல் வசனக் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.

ஏ.கருணாநிதி, ‘வெள்ளைக்காரர்களிடம் எட்டப்பன் நம்மைக் காட்டிக்கொடுக்கிறான்’ என்பது மாதிரியாக டயலாக் சொல்வார்.

அதற்கு சிவாஜி, ‘அமுதமும் விஷமும் ஒரே இடத்தில்தான் விளைகிறது. கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள்’ என்று வசனம் பேசிவிட்டு, போர்... போர்... என முழக்கமிடுவார்.

நடிகர் திலகத்தை ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘முதல் தேதி’, ‘சபாஷ் மீனா’, ’தங்கமலை ரகசியம்’ போன்று பல படங்களில் பார்த்துக் கூடவே இருந்து பழகியவன் நான். அதுவரையில் நான் பார்த்த சிவாஜி வேறு.

கணேசன் உணர்ச்சிகரமாக வசனம் பேசி போர் முழக்கமிட்டபோது நான் ஆடிப்போய்விட்டேன். ஏ.கருணாநிதி, பிரளயம் வந்ததுபோல் உணர்ந்தார். செட்டில் பரிபூரண அமைதி. நிஜமாகவே போர் முரசு கொட்டி, கோல்டன் ஸ்டுடியோவுக்குள்ளேயே சண்டை துவங்கிவிட்டது போன்ற பிரமை.

அப்படிக்கூட ஒரு மனிதரால் நடிக்கமுடியுமா...!’

*

பரணி ஸ்டுடியோவில் கட்டபொம்மனின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி தூக்கிலிடப்படும் காட்சி. அப்போதும் கம்பீரமாக கணேசன் நடந்துவந்ததைக் கண்டு, துணை நடிகர்கள் வாய் விட்டு அழுதார்கள்.

தமிழின் முதல் கலர் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் பணியாற்றிய கேமராமேன் சுப்பாராவ். பந்துலுவின் பால்ய நண்பர். தோழமையோடு, அவரையே கட்டபொம்மனுக்கும் அழைத்துவந்தார் பந்துலு.

பந்துலு எப்போதும் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை முன்னமே அறிவித்துவிடுவார். கட்டபொம்மனுக்கும் அப்படியே நடந்தது. ஆனால், இந்தியாவில் கலர் ஃபிலிம் ஸ்டாக் இல்லை என்றார்கள். பந்துலு உடனே தனது பங்குதாரரான சித்ரா கிருஷ்ணசாமியை லண்டனுக்கு அனுப்பி, கட்டபொம்மனுக்கு பிரிண்ட் போட்டு, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டார்.

‘முழு நீள கேவா கலரில் தயாரித்து, டெக்னிக் கலராக ஆக்கப்பட்டிருக்கிறது’ என்ற வாசகத்தை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ரிலீஸ் விளம்பரங்களில் காணலாம்.

மேக் அப் ரூமிலேயே முழு கேரக்டராக வெளிப்பட்டு, செட்டுக்கு போகும் உன்னதமான கலைஞன், சிவாஜி. சிவாஜியோடு இதிகாச, வரலாற்றுப் படங்களின் சகாப்தம் முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம்.

பி.ஆர்.பந்துலு, நேருக்கு நேர் நின்று பார்த்து மெய் சிலிர்த்த அனுபவம் இதோ -

கட்டபொம்மு குதிரை மீது ஏறி, வெள்ளையர்களை எதிர்த்து சமர் புரியும் தன் வீரர்களுக்கு உற்சாகமளித்து, உடன் போரிடும் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.

ஒரு வெள்ளைக் குதிரை மீது நடிகர் திலகம் உட்கார்ந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உண்மையிலேயே சில வெடிகளை வெடிக்கச் செய்ய இருந்தோம். எனவே, ‘சண்டை நடக்கும் மையமான இடத்துக்குப் போய்விடாதீர்கள். ரொம்ப ஆபத்து அது’ என்று அவரிடம் கூறினோம்.

என்ன காரணமோ தெரியவில்லை. சிவாஜி ஏறிவந்த குதிரை, நிஜமாகவே நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார் கணேசன். அந்தச் சமயத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும்தான் தாமதம், குதிரை தலை கால் புரியாமல், நாங்கள் எங்கு போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தோமோ அங்கேயே சிவாஜியைக் கொண்டு நிறுத்திவிட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவாஜி சிக்கிக்கொண்டாரே என்று என் மனம் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. குதிரையிலிருந்து அவர் உருண்டு விழுந்துவிட்டார் என்றே நினைத்தோம். நானும் மற்றவர்களும் கணேசன் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கை கால்கள் எல்லாம் ரத்தம் வழிய வழிய, ‘ஷாட் நன்றாக வந்ததா’ என்று கேட்டார் நடிகர் திலகம்.

‘இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் காட்சி; என் ஒருவனால் ஷாட் வீணாகக்கூடாது; மறுபடியும் எடுப்பதென்றால் எவ்வளவு சிரமம்?’ என்றார்.’

கோட்டைகளும் மிகப்பெரிய மாளிகைகளும் நிறைந்த ஜெய்ப்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஷூட்டிங் நடந்தது. ஹோட்டலாக மாறிவிட்ட ஜெய்ப்பூர் சமஸ்தான ‘ராம்வாக்’ மாளிகையில், பொதுமக்களுக்குக் கட்டபொம்மன் பேட்டி அளிப்பதையும், ஜாக்ஸன் துரையைப் பார்க்கக் கிளம்புவதையும் படமாக்கினார்கள்.

கட்டபொம்மன் படத்துக்கு லண்டன் - பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் விசேஷக் காட்சி நடைபெற்றது. அதில் அப்போதைய இந்தியத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

*

ஆனந்த விகடன் (மே 24, 1959) தனது விமரிசனத்தில், கட்டபொம்மனுக்கு வரலாறு காணாத பாராட்டை வாரி வழங்கியது. கத்திரி வெப்பத்தைத் தணிக்கும் பன்னீர்த் தெளிப்பு அதன் ஒவ்வொரு பத்தியிலும்.

‘மாணிக்கம் - என்னிக்கி கட்டபொம்மன் படமாக வரும் என்று காத்திருந்தேன் அண்ணே. முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். முதல் காட்சியிலேயே அதை நான் பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே...

முனுசாமி - ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணிக்கம் - ஏன் அண்ணே?

முனுசாமி - அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவரே ஒரு தனிப்பிறவி தம்பி.

மாணிக்கம் - அண்ணே, இந்தப் படத்தில் இரண்டு மூணு இடங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியாது! உள்ளத்தை உருக்குது. கண்ணீரைப் பெருக்குது. வீர உணர்ச்சி பொங்கி ஆவேசம் வருது. கட்டபொம்மன் பிறந்த நாட்டிலே நாமும் பிறந்திருக்கிறோம்னு பெருமை உண்டாகுது.

கட்டபொம்மன் பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம்.

tacinema
25th August 2015, 09:52 AM
VPKB times of india review: http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Veerapandiya-Kattabomman/movie-review/48609800.cms

Subramaniam Ramajayam
25th August 2015, 09:59 AM
dEAR VASU SIR your lively pictures and shanthi theatre sunday celebrations took my mind to the days of original release of the picture which I saw at crown theatre mint are with my cusin who is also a NT fan during first week. As i was out of station I could not respond immediately.
What raghavender says is really true NO WORDS IN THE DICTIONARY to praise you.
simply great coverage.

Russellxor
25th August 2015, 11:19 AM
வீரபாண்டிய கட்டபொம்மனை கொண்டாடிய கோவை சிவாஜி ரசிகர்கள்
Veerapandiyakattabomman: http://youtu.be/vlZY9NDtWZM

Russellxor
25th August 2015, 11:20 AM
Coimbatore karnatic theatre

Veeapandiyakatabomman ...coimbatore: http://youtu.be/2XAFndwo5W8

Russellxor
25th August 2015, 11:40 AM
Veerapandiya kattabomman ..covai sivaji fans: http://youtu.be/UtRolHzvcLY

vasudevan31355
25th August 2015, 12:57 PM
http://tamilcinema.com//wp-content/gallery/veerapandiya-kattabomman-movie-stills/veerapandiya-kattabomman-movie-stills-7.jpg

vasudevan31355
25th August 2015, 12:57 PM
http://tamilcinema.com//wp-content/gallery/veerapandiya-kattabomman-movie-stills/veerapandiya-kattabomman-movie-stills-3.jpg

vasudevan31355
25th August 2015, 12:58 PM
http://tamilcinema.com//wp-content/gallery/veerapandiya-kattabomman-movie-stills/veerapandiya-kattabomman-movie-stills-2.jpg

vasudevan31355
25th August 2015, 01:00 PM
http://home.mykollywood.com/wp-content/uploads/2015/07/veerapandiya-kattabomman-movie-poster_143703863080.jpg

vasudevan31355
25th August 2015, 01:02 PM
Veerapandiya Kattabomman 'Conquered' Land of Pyramids

http://www.newindianexpress.com/cities/chennai/Veerapandiya-Kattabomman-Conquered-Land-of-Pyramids/2015/08/22/article2987210.ece

tacinema
25th August 2015, 05:13 PM
dear murali, please post madurai celeb pictures. madurai celebrations should easily beat other district celebrations!!!??

regards.

Russellbpw
25th August 2015, 05:23 PM
Ayyo Paavam.....! Adhu illai....Idhu illai...Adhuvum illai....Idhuvum illai......
Verum 350 poster Mattume Ottappattadhu...idhellaam oru vilambaramaaa.....Aanaal VPKB kko miga periya vilambaramaaga 225 poster ottappattadhu...Digital undu, neenda ideiveli undu....Evvalavu Periya Vilambaram...!

Vetrigaramaaga Pulambal Thodangivittadhu !!!!!!...Innum nirayya varum...kaathiruppom !!!

Russellsmd
25th August 2015, 05:48 PM
பெரியோர் கூட்டத்தில் சேர
வந்திருக்கிற நான்...
எறும்பு போல சிறியவன்.

எறும்புக்கு இங்கே என்ன வேலை என்கிற கேள்வி
எல்லோர்க்கும் எழலாம்.

இதயவேந்தர் சிவாஜி என்கிற
மகாகலைஞரை,மாமனிதரைப்
பற்றி நல்லோரெல்லாம்
இனிக்க,இனிக்கப் பேசும் இடமல்லவா இது?

இனிப்பு சிந்திய இடம் நோக்கிய
இந்த எறும்பின் வருகை
வியப்பில்லையே..!?

பதினாறாம் திரியில் பண்பாளர் நடிகர் திலகமெனும் ஒளிச்சுடர் ஏற்றியிருக்கிற திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கும்,
அன்புடன் என் படைப்புகளுக்கு
வழிகாட்டி வரும் அய்யா.திரு.ராகவேந்திரா அவர்களுக்கும்,
என் முயற்சிகளைக் கூட
படைப்புகளென்று அங்கீகரித்து
என்னை ஊக்குவித்து வளர்க்கும் அய்யா திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்..

எல்லோருக்கும்...

எனது நன்றி கலந்த
முதல் வணக்கம்.

-ஆதவன் ரவி-

Harrietlgy
25th August 2015, 06:02 PM
Dinamani Part-2
http://media.dinamani.com/2015/08/19/veera_6.jpg/article2982645.ece/alternates/w460/veera_6.jpg
http://media.dinamani.com/2015/08/19/veera_4.jpg/article2982643.ece/binary/original/veera_4.jpg

கு.மா.பாலசுப்ரமணியம் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில் அத்தனையும் சூப்பர் ஹிட். சிவாஜியின் ஜோடியாக முதலும் கடைசியுமாக எஸ்.வரலட்சுமி நடித்தார். சொந்தக்குரலில் அவர் பாடிய ‘சிங்காரக் கண்ணே...’ இன்றைக்கும் தேன் வார்க்கும்.

சக்தி கிருஷ்ணசாமியின் புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனம், கொலம்பியா ரெக்கார்டுகளில் ஆறு செட்களாக வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது.

*

கட்டபொம்மனை நம் கண் முன் நிறுத்திய வி.சி.கணேசனின் மனக்கூட்டிலிருந்து பாய்ந்து வரும் வார்த்தை அருவி உங்களுக்காக -

‘கம்பளத்தார் கூத்தில் கட்டபொம்மனைப் பார்த்துவிட்டு, என்றாவது ஒருநாள் கட்டபொம்மனாக நடிப்போம் என்ற நம்பிக்கையில், நான் அநாதை என்று சொல்லிக்கொண்டு நாடகக் கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். ஆகவே, கட்டபொம்மனை நான் இறந்தாலும் மறக்கமாட்டேன்.

கட்டபொம்மன் நாடக, திரைப்பட நினைவுகளெல்லாம் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது. ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி, கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துவிட்டு, இடைவேளையின்போது மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்.

நான் உடனே அவர் அருகே ஓடிச்சென்று, என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, கவலைப்படாதே! ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொண்டு வா’ என்றார். கொடுத்தேன், குடித்தார். ‘நாடகத்தை நடத்துங்கோ’ என்றார். கட்டபொம்மனை முழுவதுமாகப் பார்த்து ரசித்துவிட்டு,

‘சிவாஜி, கட்டபொம்மனாக நன்றாக நடிக்கிறான். நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை இந்த நாடகம் மூலம் எடுத்துக் கூறுகின்றான். இதையெல்லாம் ஜீரணிப்பதற்கு உங்களுக்குத் திராணி இருக்கிறதா...?’ என்றார். அதை என்னால் மறக்கவே முடியாது.

வீரபாண்டிய கட்டபொம்மன் கதையில் வெள்ளையத்தேவன் என்றொரு ரோல் உள்ளது. அதில் முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது.

கட்டபொம்மன் தெலுங்கன்; மருது சகோதரர்கள் தமிழர்கள் என்று பேதம் காட்டி, ‘சிவகெங்கைச் சீமை’ படம் ஆரம்பமானதாக அப்போது பேசிக்கொண்டார்கள். ஆகவே, கட்டபொம்பனில் நடிக்க முடியாது என்று எஸ்.எஸ்.ஆர். கூறிவிட்டார்.

உடனே நான் ஒரு யோசனை செய்தேன். நடிகை சாவித்ரி அப்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவர்களிடம் சென்று,

‘ஜெமினி கணேசனை இந்தப் படத்தில் நடிக்க என்னுடன் அனுப்பு. ஒரு அண்ணனுக்கு தங்கை ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால், இதுபோன்ற நேரத்தில்தான் செய்ய வேண்டும்’ என்று சொன்னேன்.

சாவித்ரி எனக்குத் தங்கைபோல். தங்கமான மனசு! அப்போது பேறுகால நேரமாக இருந்தாலும்கூட, அதைப் பெரிதாகக் கருதாமல், தன் கணவன் ஜெமினி கணேசனை என்னுடன் அனுப்பிவைத்தார்கள்.

1959, மே 16-ல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியானது. நான் ஏழு வயதில் கண்ட கட்டபொம்மன் கனவு, என்னுடைய முப்பது வயதில் பூர்த்தியானது.



கட்டபொம்மனை ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விருதுக்காக இந்திய அரசு தேர்வு செய்தது. அதிலும், சில முக்கியமான ஆட்கள் நுழைந்து, ‘போட்டியில் கட்டபொம்மன் கலந்துகொள்ளக்கூடாது’ என்று தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். வேறு ஒரு படத்தையும் நகல் எடுத்து அனுப்பினார்கள். ஆனால், கட்டபொம்மன் மட்டுமே தகுதி உடையது என்று அதனையே அனுப்பிவைக்குமாறு சர்க்கார் கூறிவிட்டது.

அந்த விழாவுக்காக நான், பி.ஆர்.பந்துலு, பத்மினி ஆகியோர் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றோம். கட்டபொம்மன் திரையிடப்பட்டது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு பெஸ்ட் ஹீரோ, பெஸ்ட் மியூசிக் டைரக்டர், பெஸ்ட் டான்ஸர், பெஸ்ட் ஸ்டோரி அவார்டுகள் கிடைத்தன.

என்னை மேடைக்கு அழைத்தார்கள். எழுந்து சென்றேன். படத்தில் கட்டபொம்மனைப் பார்த்து, நான் ஆறடி அல்லது ஏழடி இருப்பேன் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் நான் ஐந்தடிதான் இருந்தேன்.

நான் மேடைக்குப் போனவுடன் எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கை தட்டினார்கள். எனக்கு அப்போது திடீரென்று மயக்கமே வந்துவிட்டது. கீழே விழ இருந்தேன். பக்கத்தில் நின்ற பத்மினி என்னைப் பிடித்துக்கொண்டார்.

அதிகக் குளிராக இருந்ததால், குளொஸ் கோட் அணிந்திருந்தேன். அதையும் மீறி பக்கெட்டிலிருந்து தண்ணீர் ஊற்றுவதுபோல் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது.

அவ்வளவு இன்ப அதிர்ச்சி! அத்தனை பெரிய பெருமை கிடைக்குமென்று நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது. எவ்வளவு ஆர்ட்டிஸ்டுகள் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கிடைத்ததென்பது ஆண்டவன் அருளல்லவா? இப்பெருமை எல்லாம் என் குருவைத்தான் சேரும்.

விருது வழங்கும் விழாவில், எகிப்து அதிபர் நாசர் கலந்துகொள்ளவில்லை. சிரியா போயிருந்தார். விழா முடிந்ததும், நாசர் அவர்களின் வீட்டுக்குப் போனேன். நாசரின் மனைவியைச் சந்தித்தேன்.

‘அவர் கையால் விருது கொடுப்பதற்கு அவகாசம் இல்லை. நாசர் அவசர அவசரமாக சிரியா போய்விட்டார். அதிபரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் அம்மையார்.

‘மன்னிப்பு எதற்கு அம்மா. இந்தியாவுக்கு மிஸ்டர் நாசர் வந்தாரென்றால், என்னுடைய விருந்தாளியாகக் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதை மட்டும் அவரிடம் கூறி நிறைவேற்றி வையுங்கள்’ என்றேன்.

இறைவன் செயலால், எகிப்து அதிபர் நாசர் இந்தியாவுக்கு வந்தார். உடனே நான் நேருஜிக்குக் கடிதம் எழுதினேன். ‘மிஸ்டர் நாசர் சென்னை வரும்போது சிறிது நேரம் என்னுடனும், என் குடும்பத்துடனும் விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று வேண்டினேன்.

சென்னையில் சில்ரன் தியேட்டர் (கலைவாணர் அரங்கம்) முழுவதும் அழகாக அலங்காரம் செய்தோம். மகாத்மா காந்தியின் ஃபோட்டோக்களை ஒட்டினோம். ஒரு ஃபர்லாங் தூரம் ரெட் கார்பெட் போட்டோம். மூன்றரை லட்ச ரூபாய் செலவில் வெள்ளியில் ஒரு ஷீல்டை உருவாக்கினோம்.

சிதம்பரம் நடராஜர் சிலைக்கு இருபுறமும் எகிப்து நாட்டு பிரமிட் வடிவமும், தஞ்சாவூர் கோபுரத்தின் எழில் உருவமும், அவற்றின் இரு பக்கத்திலும் ஒரு யானை மற்றும் ஒட்டகச் சிற்பமும் வைத்தோம். ஆங்கிலத்தில் திருக்குறள் மற்றும் டெல்லியில் இருந்து ஒரு மவுல்வியை வரவழைத்து, அவர் எழுதித் தந்த அரபு மொழி வாசகங்களும் பொறிக்கப்பட்ட தங்கத் தகட்டையும் ஷீல்டில் பதித்து, நாசருக்குப் பரிசாக வழங்கினேன்.

அரசு அதிகாரிகள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, நாசரை என்னுடன் விருந்தினராக அனுப்பிவைத்தனர். ஆனால் நாசர், என்னுடன் மூன்றரை மணி நேரம் இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனை கவுரவித்ததற்காக என் சார்பிலும், நம் நாட்டின் சார்பிலும் அவருக்கு நன்றியைத் தெரிவித்தோம்.’

*

ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவுக்கு, பந்துலு தலைமையேற்று தன் சொந்த செலவில் நடிகர் திலகம் - பத்மினி ஆகியோரை அழைத்துச் சென்றார். பரிசு பெற்றுத் திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, 1960, மார்ச் 12-ல் சென்னை விமான நிலையத்தில் மாபெரும் கோலாகல வரவேற்பை வழங்கியது கலை உலகம்.

வெளிநாட்டில் விருது பெற்றுத் திரும்பிய முதல் தமிழ்ப்படமான கட்டபொம்மனுக்கு, நமது டெல்லி சர்க்கார் வழங்கியது வெறும் நற்சான்றிதழ் பத்திரம்! அந்த ஆண்டுக்கான வெள்ளிப் பதக்கம், சிவாஜி கணேசனின் ‘பாகப்பிரிவினை’ படத்துக்குக் கிடைத்தது.

கயத்தாறில் கணேசன்!

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பகுதி கயத்தாறு. அங்கு, 1971 ஜூலையில், எங்கிருந்து பார்த்தாலும் தெரியுமாறு, மிக உயர்ந்த ஒரு பீடத்தில், கட்டபொம்மனுக்கு மிகப் பிரம்மாண்ட சிலை ஒன்றை அமைத்தார் நடிகர் திலகம். அதற்காக, தன் சொந்தப் பணத்தில் அங்கு 47 சென்ட் நிலம் வாங்கினார்.

சிலைத் திறப்பு விழா, நீலம் சஞ்சீவ ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கட்டபொம்மனின் சிலையை காமராஜர் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்று ஓரிருவர் தவிர, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகும் கயத்தாறில் கூடி, கட்டபொம்மனின் பெருமை பேசியது.

1999, அக்டோபர் 16-ல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு புகழாஞ்சலி விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கட்டபொம்மன் தபால் தலை வெளிவரக் காரணமாக இருந்த வை.கோ. அதனைப் பெற்றுக்கொண்டார்.

அவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சிவாஜி கணேசன். அவர் பேசியதிலிருந்து -

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற மாபெரும் வீரன் தூக்கிலிடப்பட்ட இடம், தற்போது எனது சொத்தாகும். அந்த நிலத்தை என் நண்பராகிய கலைஞரிடம் கொடுக்கிறேன். அவர், தமிழக அரசு மூலம் அதைச் செம்மைப்படுத்தி, அதில் வருடந்தோறும் விழா நடத்த வேண்டும் என்று பணிவாகக் கேட்கிறேன்’.



தமிழக முதல்வர், தன் உரையில் -

‘இங்கே நம்முடைய செவாலியர் சிவாஜி விடுத்த வேண்டுகோளை, அருமைச் சகோதரரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இந்த விழாவை அரசின் சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். கயத்தாறிலே சிவாஜியால் வைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை இருக்கின்ற அந்த இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்று தந்தார். பெற்றுக்கொண்டேன்.

வறண்டு காட்சி தருகின்ற அந்த இடத்தில் சிவாஜி எழுப்பியிருக்கின்ற, அந்த நீண்டு உயர்ந்த கம்பத்தின் உச்சியில் அமைந்திருக்கின்ற கட்டபொம்மன் சிலைக்கு மேலும் அழகு ஊட்டுகின்ற வகையில், அவர் தந்துள்ள அந்த இடத்தில், ஒரு அழகான பூஞ்சோலை அமைக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்’.

*

பத்மினி பிக்சர்ஸின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உள்ளிட்ட அநேக படைப்புகளின் நெகடிவ் உரிமையைக்கூட பந்துலு தன் வசம் வைத்திருக்கவில்லை. பிரம்மாண்டத் தயாரிப்புகளுக்கு ஆகும் செலவினங்களுக்காக, அவற்றையும் சேர்த்தே விற்றுவிட்டார். கட்டபொம்மனின் ஒரிஜினல் நெகடிவ் சேதமாகிப் போனது.

பின்னர், பூனா திரைப்படக் கல்லூரியின் ஆவணக் காப்பகத்தில் இருந்த கட்டபொம்மனின் ஹிந்தி டப்பிங் பிரின்ட்டில் இருந்து (ஒலி நீக்கிய) டூப் நெகடிவ் போட்டு, இங்கிருந்த தமிழ்ப் படத்தின் நெகடிவ்வில் இருந்து ஒலி சேர்த்தார்கள்.

நாடகமாகவும் சினிமாவாகவும் கட்டபொம்மனை மக்கள் முன் சிவாஜி கணேசன் கொண்டுசெல்லாமல் இருந்திருந்தால், கட்டபொம்முவுக்கு இத்தகைய உலக வெளிச்சம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். மக்களால் நிறைய விடுதலை வீரர்கள் மறக்கப்பட்டதுபோல், கட்டபொம்முவும் காலாவதி ஆகியிருக்கக்கூடும்.

இரு வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த கட்டபொம்மனையும் கணேசனையும் பிரிக்க இயலாதபடி, காலம் அவர்களை ஒரு சேரக் கட்டிப் போட்டுவிட்டது. இருவரின் புகழும் ஒரு கொடியில் இரு மலர்களாக என்றும் இணைந்தே வாசம் வீசும்!

ஒன்று நிஜம்! மற்றது நிழல். நிழலால் நிஜம், கலைக் கரூவூலம் ஆனது.

*

1984, ஆகஸ்டு 15-ல், மறு வெளியீட்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பல ஊர்களில் வெற்றிகரமாக 50 நாள்களைக் கடந்து ஓடியது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு, கட்டபொம்மனுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்தது. பல கோடி மக்கள், மிக மலிவான கட்டணத்தில் கண்டுகளிக்க வழி அமைத்தது.

ஒரு வேண்டுகோள்: மாவீரன் அழகு முத்துக்கோன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், ம.பொ.சி. என, எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைநகர் சென்னையில் சிலை அமைந்துள்ளது. ஆனால், முதல் சுதந்தர முழக்கம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்குச் சிலை இல்லாதது வியப்பைத் தருகிறது; ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், பட்டொளி வீசிப் பறக்கும் நமது தேசியக் கொடியின் நிழலில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தல் பொருத்தம். ஒவ்வோர் ஆண்டும் சுதந்தர தின விழாவில், கட்டபொம்மனுக்கு முதல் மாலை அணிவித்து விழாவைத் தொடங்குதல் சிறப்பாகும்.

மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

eehaiupehazij
25th August 2015, 06:17 PM
ஆதவன் ரவி அவர்களே!
நடிகர்திலகம் புகழ் பரப்பலே உயிர்மூச்சான இத்திரியில் தங்களின் பங்களிப்புக்கள் நிறைந்து அவர் காலடியில் காணிக்கைகளாகிட வாழ்த்தி வரவேற்கிறேன்!
செந்தில்

vasudevan31355
25th August 2015, 06:49 PM
என் ஆண்டவன் புகழ் பாட வரும்
ஆதவனே வருக! வருக!

vasudevan31355
25th August 2015, 06:52 PM
எல்லாத் திசைகளிலும் கட்டபொம்மன் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. வெற்றிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

Russellxor
25th August 2015, 07:02 PM
ஆதவன் ரவி அவர்களே
வருக வருக...

sss
25th August 2015, 08:41 PM
ஹரிபாபு மேக்கப்மேன் மகன்...ஷன்முகம் (நடிகர் திலகம் தம்பி) உடன் சிவாஜி பிலிம்ஸ் ஆபிஸ அப்ப அப்ப வருவார்.
அவர் Bengali .Dr Nihar guptha எழுதிய நாடகமோ writer நாவலோ...

சிவாஜி uncle இடம் சொல்ல...

பெரியண்ணண் தயாரிப்பில் எடுக்கபட்டது..

நல்ல கதையோ அல்லது படமோ யார் சொன்னாலும் அதை ஏற்று கொள்ளும் குணம் நடிகர் திலகத்திடம் இருந்தது,

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p720x720/11231204_10206597993722207_6877956490751557898_n.j pg?oh=0c0f5e6040f6446813784b05ec104a8b&oe=567B7BD1

https://www.facebook.com/photo.php?fbid=10206597993722207&set=p.10206597993722207&type=1

Russellsmd
25th August 2015, 08:43 PM
காத்திருப்பு
சுகமானது.

முற்றிய இரவுகளில்,
நம்பிக்கையோடு
கண்ணுறங்காது
காத்திருக்கும் மனிதர்களுக்கு
நல்ல விடியல்கள்
கிடைக்கின்றன.

விருப்பத்திற்குரியவள்
சொன்ன இடத்தில்
வெகுநேரம் காத்திருக்கும்
ஆடவனுக்கு
காதலியின் கரிசனம்
கிடைக்கிறது.

நல்லவிதமாய் தேர்வெழுதிக்
காத்திருக்கும் மாணவனுக்கு
மகிழ்வளிக்கும் தேர்ச்சி முடிவு
கிடைக்கிறது.

உண்மை பக்தியுடன்
உருகி அழுது
காத்திருக்கும் பக்தனுக்கு
கடவுளின் கருணை
கிடைக்கிறது.

அலுப்பு,சலிப்பின்றி
அல்லும் பகலும்
உழைத்துக் காத்திருப்பவனுக்கு
அமோகமாய்
வெற்றி கிடைக்கிறது.

காத்திருப்பு சுகமானது.
-------------------------------
நெஞ்சத் திரையில்
எப்போதும் ஓடும்
வீரபாண்டிய கட்டபொம்மனை
வெள்ளித்திரையில் காண
நாங்கள் ஆவலோடு
காத்துக் கொண்டிருந்தோம்.

இத்தனை நாட்கள்
நாங்கள் செய்த
காத்திருப்பு தவத்திற்கு..

இதோ..

மூன்று மணி நேரத்தில்
எங்களுக்கு
மோட்சமே
கிடைக்கிறது.

காத்திருப்பு சுகமானது.

-ஆதவன் ரவி-

sss
25th August 2015, 08:48 PM
மாவீரன் சிவாஜியின் வசனம் கேளுங்கள்!!.

https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/11145164_476931982483175_3463175883227643810_n.jpg ?oh=0bbebfcfa67cdb40011998a6259701f8&oe=56818EE7

சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்!
யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு
தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா?
மன்னர் குலத்தில் பிறக்காதவன்,
பரம்பரை உரிமை இல்லாதவன்,
மானம் காக்கும் குடியானவன்,
மகுடம் தாங்க முடியாதா?

தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து
ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு
நாட்டுக்குடைய நல்லவனென்றும்
போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும்
ஆரத்தியெடுத்த மக்களேங்கே?
ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும்
அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று
காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே?

உறையிருந்த வாளெடுத்து
ஒவ்வொரு முறையும், மராட்டியம்
என்றே முழங்கி இரையெடுக்கத்
துடித்த வேங்கை போல்
எங்கே பகைவர் எங்கே பகைவர்
என்று தேடி கறை படியாத என்
அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்!
என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு
. இந்த மக்கள் என் சொந்த மக்கள்,
உயிரினும் இனிய என் மக்களுக்காக
ஓடினேன். பகைவரைத் தேடினேன்.
வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன்
. பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம்
. முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.

அரசியலை நான் அறியாதவனா? ஹ…
அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ…
எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு
நொந்து போக நான் நோயாளி அல்ல!
என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா?

ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு
நாமேதான் நாடொன்று தலைதூக்கித்
திரியும் அந்த புல்லுருவிகள் எனது
முடியைத் தடுக்கிறார்களா அல்லது
தங்கள் முடிவைத் தேடுகிறார்களா?


thanks: https://www.facebook.com/photo.php?fbid=476931982483175&set=gm.1639087266316014&type=1

sss
25th August 2015, 08:57 PM
இந்த புகைப்படம் பற்றி ஏதாவது தகவல்கள் :

http://i39.photobucket.com/albums/e153/balebale5/11904659_978619282159026_4281094265207258511_n_zps nrvsrh3u.jpg

sivajidhasan
25th August 2015, 08:59 PM
மீண்டும் சிவாஜி தாசன்!

கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

நட்புடன்
சிவாஜிதாசன்

RAGHAVENDRA
25th August 2015, 09:20 PM
https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/s720x720/11889499_968306563220016_4192040966796509848_n.jpg ?oh=84d88343ca28fb9356d4df45ee7c150d&oe=5636034C

Russellsmd
25th August 2015, 10:09 PM
கண்களில்
பக்தியும், பண்பும் நீந்த,
கந்தக் கடவுளுக்கு முன்
கைகூப்பி நிற்கிற
கம்பீரத்தை..

மக்களின் குறை கேட்க
ஓட்டமும், நடையுமாய்
விரைந்தோடும் எழிலை..

தம்பி மகள்
வாள் சுழற்றும்
அழகை ரசிக்கையில்,
வாளோடு வாளாகச்
சுழலும் அந்தக் கண்களை..

திருடனைப் பிடித்து
விட்டால்
அவன் குடும்பம் என்னாகும்?
என குழந்தை வினவ,
அந்த அக்கறையை வியக்கும்
அய்யாவின் பாவனையை..

சிறு தொகையாவது
வரியாகச் செலுத்தக் கோரும்
ஆங்கில அதிகாரியிடம்,
மறுத்து அவர்
நியாயம் உரைக்கும்
தோரணையை..

வேறு வேடத்தில் வந்த
எட்டப்பனைப் புரிந்து கொண்டு
மடக்கும் வீராவேசத்தை..

அவனைப் புரிந்து
கொண்டாலும், காட்டிக்
கொள்ளாமல்
கிண்டலாகச்சொல்லும்
'அதாவது'களை..

பாம்பிடமிருந்து
காதலர்களைக் காப்பாற்றி,
"நான்கு நாட்கள்
பொறுக்க முடியுமா?"
எனக் கேட்டுச் சிரிக்கும்
தெய்வீகச் சிரிப்பை..

வந்து பேட்டி காணும்படி
கர்வமாய் w.c.ஜாக்ஸன் எழுதிய
கடிதம்
வாசிக்கப்படும் போது,
"பார்த்தீர்களா?"என்பது போல்
அய்யா முகம் கேட்கும்
கேள்வியை..

அளிக்கப்படாத ஆசனத்தை
தனதாக்கிக் கொள்கிற
ஆண்மையை..

அமர்ந்த ஆசனத்தின்
கைப்பிடியில் இடக்கை ஊன்றி
விரல் நுனிகளைத்
தொட்டு உருட்டும் அழகை..

கொள்ளையையும்,
கொலையையும்
தடுக்க வேண்டிய மந்திரியே
கொள்ளைக்கும்,கொலைக்கும்
காரணமானது கண்டு
வெகுண்டு,
ஆத்திரமும், ஆவேசமும்,
அர்த்தமுள்ள
உள்ளப் பொருமலுமாய்
அவரை வாங்கு, வாங்கென்று
வாங்குவதை..

முருகக் கடவுளை
வணங்கி நிற்கையில்,
எட்டப்பர் உளவு சொல்லி,
அன்றிரவே ஆங்கிலேயர்
படையெடுத்து வரப் போகும்
தகவல் வர,
உடல் திருகி, விழி உருட்டி,
கை பிசைந்து
அடி வயிற்றிலிருந்து
சொல்லும்
வெற்றி வேல்..வீரவேலை..

வெள்ளையத் தேவனும்,
ஊமைத்துரையும்
அவரவர் மனைவியரிடம்
பக்கம்,பக்கமாய்ப் பேசும்
வசனத்திலிருக்கும் வீரத்தை,

உருவிய குறுவாளை
மீண்டும் உறைக்குள்ளிடும்
ஒரே விஷயத்தில்
காட்டுகிற திறமையை..
நாடு விட்டு
வந்திருக்கலாகாது
எனக் காட்டும்
குற்ற உணர்வுக்கான
குரல் கரகரப்பை..

பிடிக்க ஆளனுப்பிய
புதுக்கோட்டை மன்னருக்கு
எள்ளலுடன் போடும்
"ராஜ..ராஜ.."-வை..

கொக்கரிக்கும்
இரும்புத் தலையருக்கு,
கோபத் தமிழால் கொடுக்கும்
வசனச் சாட்டையடிகளை..

அணிவகுத்து நின்று
அழுது கதறும்
மனிதப் பெருங்கூட்டத்தின்
நடுவே,
ஒரு சிங்கமென
நடந்து செல்லும்
பேரழகை..

நான் போவது
வருத்தமெனினும்
நாடு காக்க
ஒரு கூட்டம் வருமென்று,
தூக்குக் கயிறை
முத்தமிட்டுத் தரும்
கடைசி நம்பிக்கையை..

விழிகளிளெல்லாம்..
மனங்களிலெல்லாம்..
நீக்கமற நிறைந்திருக்கிற
நம் நடிகர் திலகத்தின்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
எனும்
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய தொழில் நுட்பம்
அணிந்து வந்த
புரட்சிக் காவியத்தை..

பார்த்தேன்.

பார்த்தீர்கள்.

பார்ப்போம்..!
பார்ப்போம்..!
பார்ப்போம்..!


-ஆதவன் ரவி-

eehaiupehazij
25th August 2015, 10:11 PM
மீண்டும் சிவாஜி தாசன்!

கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

நட்புடன்
சிவாஜிதாசன்

அன்பு நண்பர் சிவாஜிதாசன் அவர்களே
நமது அன்னை இல்லத்துக்குள் நாம் நுழைய எந்த பார்மாலிடியும் தேவையில்லை.
வாடி உதிர்கின்ற இலைகளாக இன்றி துளிர்த்து வளர்கின்ற கிளைகளாக உங்கள் பதிவுகள் அமைந்து நடிகர்திலகத்தின் புகழாலமரத்தின் விழுதுகளாக வேரூன்ற வேண்டும்! ! வருக வருக!!
அன்புடன் செந்தில்

vasudevan31355
25th August 2015, 10:20 PM
அன்பு சிவாஜி தாசன் சார்,

மிக்க நன்றி!

தாங்கள் மீண்டும் புது உத்வேகத்துடன் திரியில் பங்களிப்பது குறித்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களுடன் அமர்ந்து நம் தெய்வத்தை சாந்தியில் தரிசித்தது மறக்க முடியாதது.

இன்னும் அடிக்கடி வர முடியாத நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக திரியில் சற்று சிரமம் பாராமல் பங்கு கொண்டார்களானால் நமது திரி இன்னும் எங்கோ சென்று விடும்.

எனவே உறுப்பினராக இருக்கும் அனைத்து நண்பர்களும் தினம் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி திரியில் பங்கு கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதுவும் இந்த நேரம் கட்டபொம்மன் வெற்றி மகிழ்ச்சியின் பொன்னான தருணம். இந்த நேரம் அதை எல்லோரும் பகிர்ந்து கொண்டால் அதை விட சந்தோஷம் ஏது?

வருடம் ஒருமுறை அல்லது இருமுறை அதாவது பிறந்த தினம், நினைவு தினம் மட்டும் வந்து ஓரிரு வரிகளில் பதிவுகள் இட்டுச் செல்வது மாற வேண்டும். இதற்காக சிரமப்பட்டு உறுப்பினராக ஆக வேண்டியிருக்கவே வேண்டாமே! பல பேர் இன்னும் உறுப்பினராக நெடுநாள் வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள். உறுப்பினர் ஆவதே சிரமம் ஆகும் பட்சத்தில் உறுப்பினரகளாக இருப்பவர்கள் இனி தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவெடுக்கலாமே!

எல்லோருக்குமே வேலைகள் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. ஆனால் எல்லோரும் பங்கு கொண்டால் எப்படி இருக்கும் நமது திரி என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

எனவே அனைத்து உறுப்பினர்களும் பார்வையாளர்களாய் இருப்பதை கொஞ்சம் தவிர்த்து முனைப்பாக இங்கு பங்களிக்க விழையுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

eehaiupehazij
25th August 2015, 10:23 PM
ஆதவன் ரவியா ?
அதிரடி கவியா ?!
மாதவம் செய்திட்டோம்
நடிகர்திலகத்தின் புகழ் விழுதுகள்
துளிர்விடத் தொடங்கிவிட்டன
அரிமா செந்தில்
சுந்தராஜன்
சிவாஜி தாசன்
ஆதவன் ரவி .......
கட்டபொம்மரின் வெற்றிப் பவனி
வாசு சாரின் மீள் விசுவரூபம்
துளிர்களின் மூலம் வெற்றிக்கனி
நெஞ்சம் நிறைந்து விட்டது
வாழ்த்துக்கள் வரவேற்புக்கள்
அன்புடன் செந்தில்

Russellsmd
25th August 2015, 10:46 PM
அலைச்சல்..

அசதி..

பெருமூச்சில் அனல்..

பெருஞ்சோர்வு..

அத்தனையையும்
ஓட ஓட விரட்டிற்று..
உங்கள்
குரல் வழியே பாய்ந்த
"வெற்றிவேல்..வீரவேல்.."

Russellsmd
25th August 2015, 11:01 PM
திரையரங்கத்திற்குள்ளேதான்
போனோம்.

படம் முடிந்த பின்..

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து
வெளியே வருகிறோம்.

Russellsmd
25th August 2015, 11:19 PM
குழந்தை மீனா
கேட்கிறாள்..
"ஏம்ப்பா..ஒரு மாதிரி
இருக்கே..
சண்டையிலே தோத்துட்டியா?

அவசரமாய் மறுத்து விட்டுச்
சொல்கிறீர்கள் ...

"இல்லையம்மா..
நான் ஜெயிக்கிறேன்..!"

உண்மைதான்..

56 வருடங்களுக்குப் பிறகும்
நீங்கள்தான்
ஜெயிக்கிறீர்கள்.

tacinema
25th August 2015, 11:41 PM
BO news: VPKB tomorrow 4.00pm show at PVR: Amba Skywalk, Chennai Normal is already SOLD OUT.

http://in.bookmyshow.com/buytickets/pvr-ampa-skywalk-chennai/cinema-chen-PVCH-MT/20150826

சிங்க தமிழன் வசூலில் சாதனை படைக்கிறார். ஆதவன் ரவி அவர்கள் சொல்வது போல் 56 வருடங்கள் கழித்தும் அவரே வசூல் மன்னராக திகழ்கிறார். A gem of accomplishment from one and only NT.

RAGHAVENDRA
25th August 2015, 11:41 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/adhavanwelcomefw_zpslpltnrox.jpg

RAGHAVENDRA
25th August 2015, 11:45 PM
அன்புமிக்க சிவாஜி தாசன் அவர்களே
தங்கள் மீள்வரவிற்கு நம் அனைவரின் சார்பில் நல்வரவு.
இதன் மூலம் பெருகட்டும் நம் உறவு..

வருக வருக

Russellsmd
26th August 2015, 12:23 AM
ஒரு சிங்கம்,
குதிரை மீது
எறி வருவதை
எல்லோரும்
வியப்புடன்
பார்க்கிறார்கள்.

sivaa
26th August 2015, 07:33 AM
ஆதவன் ரவி அவர்களே
வருக வருக...

sivaa
26th August 2015, 07:37 AM
மீண்டும் சிவாஜி தாசன்!

கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

நட்புடன்
சிவாஜிதாசன்

வாருங்கள் வந்து நம் திரியை மெருகேற்றுங்கள்

Russellsmd
26th August 2015, 07:46 AM
கற்றும் கொடுக்கும் இனம்
தமிழனம்.

நடிப்பென்றால்
இதுதானென்று,
கற்றுக் கொக்கும்
தமிழனத்திற்கே
கற்றுக் கொடுத்தவர்...
நீங்களன்றோ..?

sivajidhasan
26th August 2015, 07:58 AM
அதிரடி கவி, ஆதவன் ரவி அவர்களுக்கு, வாழ்த்துக்கள்!

அழகான பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட எல்லா ஆண்களும் மட்டுமின்றி நடிகர் திலகம் அவர்களை ரசிக்கின்ற ஒவ்வொருவரும் கவிஞர்கள் தான் என்பதை நிருபித்திருக்கின்றீர்கள்.

நட்புடன்
சிவாஜிதாசன்

sivajidhasan
26th August 2015, 08:07 AM
கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி lic முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சி மையத்தின் சார்பாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் கலந்து கொண்டு உரையாடினேன். அதில் நடிகர்திலகம் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளேன். அதனுடைய கானொளி விரைவில் உங்கள் பார்வைக்கு...

நட்புடன்,
சிவஜிதாசன்

vasudevan31355
26th August 2015, 08:26 AM
கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி lic முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சி மையத்தின் சார்பாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் கலந்து கொண்டு உரையாடினேன். அதில் நடிகர்திலகம் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளேன். அதனுடைய கானொளி விரைவில் உங்கள் பார்வைக்கு...

நட்புடன்,
சிவஜிதாசன்

அருமை சிவாஜி தாசன். ஆவலுடன் காத்திருக்கிறேன். காத்திருக்கிறோம்.

JamesFague
26th August 2015, 09:02 AM
Welcome Mr Athavan Ravi Sir to this wonderful & glorious thread of ACTING GOD as well as EMPEROR OF BOX OFFICE OF

WORLD CINEMA.

vasudevan31355
26th August 2015, 09:35 AM
தமிழன் கடமை

http://www.apnewstimes.com/wp-content/uploads/2015/03/Sivaji-Ganesan-Veerapandiya-Kattabomman-Movie-Photos-5.jpg

ஒரு விஷயம்.

'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அது ஒரு உலகப் பொதுமறை போல. திருக்குறள் போல. அவர் இவர் என்றில்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை உடையது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போற்றி வைத்துக் கொண்டாடப்படுவது. கொண்டாடப்படவும் வேண்டியது.

நடிகர் திலகம் ரசிகளுக்கென்று பல படங்கள் உள்ளன. தெய்வ மகன், ராஜா, திரிசூலம் இப்படிப் பல. இவைகளும் பொது மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றாலும் சிவாஜி ரசிகன் என்பவன் இந்தப் படங்களின் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வான். சொந்தமும் கொண்டாடுவான்.

கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் படங்களெல்லாம் அப்படி அல்ல. சிவாஜி ரசிகர்களையும் மீறி உலகமே கொண்டாடப்பட வேண்டிய உன்னதங்கள். கொண்டாடிய உன்னதங்களும் கூட.

உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின் படம் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். 'திரிசூலம்' நடிகர் திலகம் நடித்த படங்களில் வசூலில் முதன்மையானது. கட்டபொம்மனை விடவும் கூட. இது அனைவரும் அறிந்தது. இப்போது ஒரே நேரத்தில் கட்டபொம்மனும், திரிசூலமும் மறுவெளியீடு காண்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தின் பொதுவான தந்தையாக ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி குழந்தைகளை முதலில் கட்டபொம்மன் படத்திற்குதான் அழைத்துச் செல்வான். பிறகு சிவாஜி ரசிகனாக தான் மட்டுமோ அல்லது குடும்பத்தோடு சேர்ந்தோ திரிசூலம் பார்ப்பான். வசூலில் கொடிகட்டியது என்பதற்காக திரிசூலம் கட்டபொம்மனுக்கு இணையாகி விடாது.

வசூல், ஓட்டம் இதையெல்லாம் தாண்டி ஒரு தமிழனால், அவன் சிந்திய ரத்தத்தால் நம் தமிழ்ப் பட உலகை உலக அளவில் தலை நிமிரச் செய்த ஒரு படம். உலகையே நம்மை திரும்பிப் பார்க்க வைத்த படம். இப்படி ஒரு நடிகன் ஒருவன் இருக்கிறானா என்று அனைத்து நாடுகளும் வியந்து வியந்து பார்த்த படம். விருதுகளை தமிழனுக்கு அள்ளித் தந்த படம். அந்த உன்னத நடிகனை 'இங்கு வந்து எங்கள் நாட்டுக்கு பெருமை சேர்' என்று அவரை அழைத்து அழைத்து மரியாதை அளிக்க வைத்த படம். இது யாருக்குப் பெருமை? தமிழராய்ப் பிறந்த நம் அனைவருக்கும்தானே! இந்தியனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்தானே!

ஜாதி, மத, இன, மொழி, ரசிக வேறுபாடுகளையெல்லாம் வேரறுத்து நம் பெருமையை அந்நியர் உணர வழிவகை செய்த படமல்லவா? இந்தப் படத்தின் வெற்றியில் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமையடைய வேண்டுமல்லவா? நம் தேச பக்தியை மீண்டும் நாம் வெளிப்படுத்த நமக்குக் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பமல்லவா?

பிள்ளைகளிடம் கட்டபொம்மன் கதையைக் காட்டி, பாடுபட்டு எப்படியெல்லாம் சுதந்திரம் பெற்றோம் என்று சுதந்திர உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டிய படமல்லவா? ஒரு அருமையான வாய்ப்பு அல்லவா?

தாய், தந்தை, மனைவி மக்கள் என்று குடும்பத்துடன் சென்று தலை நிமிர்ந்து, நெளியாமல், வளையாமல் பார்த்து, ஆணி அடித்தாற் போன்று அமர்ந்து கட்டபொம்மனோடு வாழ்ந்து கண்ணீரோடு திரும்பும் கௌரவத்தை இது போன்ற ஒரு சில காவியங்கள் மட்டும்தானே அளிக்க முடியும்? இன்றும் கூட குடுமபம் குடும்பமாக அரங்குகளில் கட்டபொம்மனைக் காண்கிறார்கள் என்றால் அது யாருக்குப் பெருமை? கட்டபொம்மனை சிறுமைப்படுத்துவதால் அது யாருக்கு இழிவு? தமிழர்களாகிய நமக்கேதானே? வசூல், இத்தனை நாட்கள் ஓடியதா... கூட்டம் கூடியதா... இல்லையா என்றெல்லாம் விவாதிப்பதற்கு அப்பாற்பட்ட ஒரு அற்புதக் காவியமல்லவா இது! பேதங்கள் மறந்து ஒவ்வொருவரும் அந்த வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த வீரனின் பெருமையை பறை சாற்ற வேண்டிய நேரமல்லவா? பாகுபாடுகளுக்கும், வேறுபாடுகளுக்கும் இடம் தராமல், பழி உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் நீ பெரியவன்..நான் பெரியவன் என்ற அற்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அனைவரும் உண்மையான தமிழர்களாக கட்டபொம்மனை கண்டு அவனை நினைவு கூர்வது ஒன்றே நாம் தமிழன் என்பதை உணர்த்தும். பறை சாற்றும். அதுவே கட்டபொம்மனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும், கடமையும் ஆகும்.

சிவாஜியின் புகழ் பரப்பவோ அல்லது இந்தப் படம் வசூலில் எல்லாப் படங்களையும் முந்த வேண்டும் என்ற சொற்ப சந்தோஷங்களுக்காகவோ இந்தப் பதிவை நான் இட வில்லை. உலகம் முழுதும் என்றோ மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட காவியம்தான். இப்போது ஒவ்வொரு தமிழனும் இந்தப் படத்திற்கு அளிக்க வேண்டிய பங்கைப் பற்றித்தான், முக்கியத்துவத்தைப் பற்றிதான் நட்பு ரீதியாக நினைவுபடுத்துகிறேன். அதுவே அன்றி வேறு எந்த நோக்கமும் என் பதிவில் இல்லை.

இப்போதைய இளையதலைமுறைகளுக்கு நம் கட்டபொம்மனைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஏற்றார் போல டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு புதுப் பொலிவுடன் வந்திருப்பதால் பெரியவர்களாகிய நமக்கு இன்னொரு அருமையான சந்தர்ப்பம். பழைய படம்தானே என்று அவர்கள் சலிக்கக் கூடும். ஆனால் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்னவென்றால் அவர்களை அழைத்து சென்று அந்த மாவீரனின் வீர வரலாற்றை அவர்களின் நெஞ்சில் பதிய வைப்பதே ஆகும். அவர்கள் மனதில் சிவாஜி என்ற நடிகன் பதிவதைவிட கட்டபொம்மன் என்ற கருஞ்சிறுத்தைதான் பதிவான். அவர்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டுவான். அறிவை ஊட்டுவான். வீரத்தை ஊட்டுவான். நல்ல தமிழை ஊட்டுவான். தன்மானத்தை ஊட்டுவான். அடிமைத்தனத்தை விரட்டுவான்.

அப்படிப்பட்ட பெருமை தரக் கூடிய விஷயத்தை நாம் தவற விடலாமா?

எனவே அனைவரும் மனமாச்சரியங்கள் மறந்து அந்த மாபெரும் வீரனை குடும்பத்துடன் சென்று கண்டு தரிசித்து வாருங்கள். ஒரு தகப்பனாக பிள்ளைகளுக்குத் தன் இன்னொரு கடமையைச் செய்யுங்கள். பெருமை தானாக உங்களை வந்து அடையும்.

இது ஒன்றே அனைவரிடமும் நான் வேண்டுவது.

Russellsmd
26th August 2015, 09:48 AM
தம்பியின் ஒற்றனை
அவசரப்பட்டு
தவறாகக் கருதி
சாட்டையால் அடித்து..

பின் தனது தவறுணர்ந்து
அவனிடமிருந்தே
சாட்டையடி தண்டனை
பெற்றுக் கொள்ளத்
தயாராகும் போது..

அந்த நல்ல ஒற்றன்,
மாறுவேடத்திலிருப்பது
மன்னன் என்பதறியாமல்
மாளாத ஆத்திரத்துடன்
மன்னனின்
மடி பிடித்து இழுக்கிறான்.
---------
பேட்டி காணப்
போன இடத்தில்,
வீரனின் விழி நெருப்பில்
பொசுக்கப்பட்ட அவமானத்தில்,
ஜாக்ஸன் துரையும்
மடி மீது
கை வைத்திழுக்கிறான்.
----------
தவறுணர்ந்து
தனக்கான தண்டனையாக
அந்த முதல் மடியிழுப்பைப்
புன்னகையோடு
ஏற்றுக் கொள்ளும்
நடிப்பின் வெளிப்பாடு...

அதிகார போதையும்,
ஆணவமும் கூடிப் போய்
ஆற்றல் மிக்க வீரனை
அவமதிக்கும் நோக்கத்தில்
செய்யப்படும்
இரண்டாம் மடியிழுப்புக்கு
வெடிக்கும் கோபத்தின்
வெளிப்பாடு..

எங்கள் நடிகர் திலகம் போல்
இரண்டையும்
வித்தியாசப்படுத்த
எவரால் இயலும்..?

Russellsmd
26th August 2015, 09:49 AM
இனிய காலை வணக்கம்...

Sent from my ASUS_T00J using Tapatalk

HARISH2619
26th August 2015, 09:56 AM
Second week confirmed in sathyam studio 5. 80% of the seats already booked for sunday 3.45 pm

Subramaniam Ramajayam
26th August 2015, 10:37 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/adhavanwelcomefw_zpslpltnrox.jpg

hearty warm wecome to aadhavan ravi and sivajidasan to this gloriuus thiri along with kattabomman.
Waiting for your articles soon.

uvausan
26th August 2015, 10:40 AM
வாசு - உங்கள் இந்த பதிவு இங்கு இருக்கும் எல்லா திரிகளிலும் பதிவிட வேண்டிய ஒன்று . உங்களுக்கு நினைவிருக்கலாம் - இப்படிப்பட்ட கருத்துக்களை நான் திரு கலை வேந்தன் அவர்களிடமும் , திரு வினோத் அவர்களிடமும் , பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் . உங்களிடமும் இதைப்பற்றி பேசினேன் . இவர்கள் நல்ல கருத்துக்களை , பாரபட்ச்சம் இல்லாத இப்படிப்பட்ட கருத்துக்களை வரவேற்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு - இன்னும் பல நல்ல இதயங்கள் அங்கும் இருக்கின்றன - இப்படிப்பட்ட கருத்துக்கள் அங்கும் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் . இந்த படம் திரு சிவாஜி கணேசன் நடித்த படமே இல்லை .. ஒரு கட்டபொம்மனை நிஜமாகவே உயிர்ப்பித்து இங்கு கூட்டிக்கொண்டு வந்த படம் . இருவருக்கும் வேண்டுமென்றால் சில உருவ ஒற்றுமைகள் இருந்திருக்கலாம் . இந்த தேசத்தில் இன்னும் தமிழ் வாழ்கிறது , இனிமேலும் வாழும் என்று நம்புவர்கள் , தேச பக்தி அழிந்து விடவில்லை - இன்னும் பலர் மனதில் வீரத்தழும்புகள் இருக்கின்றது என்று சொல்லிக் கொள்பவர்கள் , யாரும் சொல்லாமலே இந்த படத்தை மீண்டும் பார்க்க வருவார்கள் . நம் தலைமுறைக்கு மட்டும் அல்ல , இனி வரும் தலை முறைகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு படம் வரப்பிரசாதம் . இப்படியும் இனி ஒருவன் வரப்போவதில்லை - எவரும் இப்படிப்பட்ட படமும் எடுக்கப்போவதில்லை , தமிழை இனி எந்த ஒரு தமிழனும் இவ்வளவு அழகாக பேசி நாம் கேட்க்கப்போவதும் இல்லை .

KCSHEKAR
26th August 2015, 11:11 AM
தமிழன் கடமை
ஒரு விஷயம். 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அது ஒரு உலகப் பொதுமறை போல. திருக்குறள் போல. அவர் இவர் என்றில்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை உடையது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போற்றி வைத்துக் கொண்டாடப்படுவது. கொண்டாடப்படவும் வேண்டியது.
வாசு சார்,
தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமான உண்மை.

KCSHEKAR
26th August 2015, 11:17 AM
திரு.ஆதவன் ரவி அவர்களே,

வருக. தங்களுடைய கவிதைகளை முகநூல் மூலமாகப் படித்து மகிழ்ந்திருக்கிறோம். சில கவிதைகள் இந்தத் திரியிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தங்களின் நேரடிப் பங்களிப்பில் இத்திரியில் தங்களின் பாமாலைகள் மூலம் நடிகர்திலகத்தின் புகழ்ப் பரணி ஒலிக்க வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
26th August 2015, 11:17 AM
வாசு சார்
தங்களுடைய அருமையான தெளிவான பதிவின் மூலம் இங்குள்ள அனைவர் உள்ளத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளீர்கள்.
நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரத விலாஸ், திருவிளையாடல் போன்ற திரைக்காவியங்கள், தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவை. இவற்றையெல்லாம் அவர்கள் வெறும் வசூலுக்காகவோ, சாதனைகளுக்காகவோ செய்யவில்லை. ஒரு தவம் போல் பணியாற்றி மக்களிடம் உன்னதமான விஷயங்களைச் சொல்வதற்கென்று மெனக்கெட்டார்கள். அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பொறுத்த மட்டில் உலக அளவில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இசை என மூன்று பிரிவுகளில் உலகப்பட விழாவில் வென்று தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற சூளுரையை நிரூபித்தது.

இவையெல்லாம் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய கொண்டாட வேண்டிய உன்னதத் திரைக்காவியங்கள். அதுவும் தங்களுடைய வீட்டில் உள்ள ஒவ்வொரு தலைமுறையினரையும் பார்க்க வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு சிலர் இவற்றின் தோல்வியில் மகிழ்ச்சியடைவதும் அதில் இன்பம் காணுவதும் உண்மையிலேயே அவர்கள் மனசாட்சியுடன் தான் செயல்படுகிறார்களா என்றோர் எண்ணத்தைத் தோற்றுவிப்பதை மறுப்பதற்கில்லை.

மனக்கசப்புகள், மனமாச்சரியங்கள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து ஒவ்வொருவரும் இதுபோன்ற உன்னதத் திரைக்காவியங்களை உளமார வரவேற்று ஆதரித்தால், தமிழனின் பெருமை மேலும் மேலும் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் சென்று சேரும்.

படம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சமாக இவற்றைத் தோல்விப்படமாக சித்தரிப்பதில் இன்பம் காணுவதும் ஈடுபடுவதும் தவிர்த்தாலே இது தமிழனின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும்.

JamesFague
26th August 2015, 11:23 AM
Mr K C Sir,


Wish you many more happy returns of the day.

KCSHEKAR
26th August 2015, 11:24 AM
சற்றுமுன் வந்த செய்தி

நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்தை தமிழக அரசே கட்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்.

RAGHAVENDRA
26th August 2015, 11:24 AM
Many happy returns of the Day Chandra

ScottAlise
26th August 2015, 11:24 AM
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் மணிமண்டபம் - Chief Minister of Tamilnadu #Jayalalithaa

Breaking News


Hope this becomes true , Very Happy Moment

RAGHAVENDRA
26th August 2015, 11:25 AM
Birth Day Gift to Chandrasekar

http://newsalai.com/wp-content/uploads/2014/09/24.01.2014-cm.jpg

விதி எண் 110ன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அரசே மணிமண்டம் கட்டும் என உறுதியளித்துள்ளீர்கள். தங்கள் மீது என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக, இது வெறும் மணிமண்டபமாக இல்லாமல் நடிகர் திலகத்தின் நினைவினை என்றென்றும் நினைவு கூறும் வகையில் கேலரி, ஆய்வுக்கூடம், நூலகம், முன்னோட்டத் திரையரங்கு போன்றவை அமைந்தால் மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாயும் இருக்கும். காலம் தோறும் தங்கள் பெயர் சொல்லும்.

நடிகர் திலகம் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற அறிவிப்பு உண்மையிலேயே தங்களுக்கு அவர் மேல் இருக்கும் மதிப்பையும் காட்டுவதோடு, தங்கள் மேல் மக்களுக்கு இருக்கும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
மணிமண்டப அறிவிப்பு செயல்படும் நாளைஆவலுடன் எதிர்பார்த்து, தங்களுக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

JamesFague
26th August 2015, 11:45 AM
What a wonderful B'day gift to Mr KC Sir.

vasudevan31355
26th August 2015, 11:47 AM
சந்திரசேகர் சார்!

உங்கள் நல்ல மனது போலவே எல்லாம் நன்றாக நடக்கிறது. உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

vasudevan31355
26th August 2015, 11:48 AM
முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

vasudevan31355
26th August 2015, 11:58 AM
கட்டபொம்மனின் கர்ஜனை வெற்றி, மணிமண்டப அரசாங்க அறிவிப்பு என்று சந்தோஷ நிகழ்வுகள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. நம் ரசிகர்களுக்கு இதைவிட மகிழ்ச்சி தருணம் ஏது?

ScottAlise
26th August 2015, 12:00 PM
நான் ரசித்த கட்டபொம்மன்

நடிகர் திலகம் படம் re ரிலீஸ் அதுவும் டிஜிட்டல் முறையில் என்று அறிவிப்பு வந்த உடன் இருந்த குஷி படம் பார்த்து முடிக்கும் வரை இருந்தது

அதுவும் கடந்த சண்டே மாலை காட்சிக்கு அட்வான்ஸ் booking செய்த பொது நண்பர்கள் சிரித்தார்கள் , பாவம் அவர்களுக்கு தெரியாது அரங்கு நிறைந்து விடும் என்று , கடைசியில் நான் அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இருந்தது தனி கதை

6.45 காட்சிக்கு நான் 4.30 மணிக்கு சென்று விட அப்போதே அரங்கம் களைகட்ட அதை காண கண் கோடி வேணும் .
ஒரு பக்கம் 10000, வாளா வெடிக்க , மக்கள் ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்த்து படத்தை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள் , அதுவும் படத்தின் சாதனைகள் பற்றி பேச , அந்த வளாகமே சந்தோசம் நிறைந்து இருந்தது . பட்டாசு வெடித்த பொது டிராபிக் ஜாம் வேறு , ஆனால் மக்களுக்கு இடையுறு இல்லாமல் இருந்தது , ரசிகர் மன்றத்தினர் சிலர் இனிப்பு கொடுக்க , சிலர் மலர் தூவ , பலர் தியேட்டர் அலங்காரத்தை பார்த்து கொண்டு உள்ளே சென்றார்கள்

படம் ஆரம்பிக்கும் பொது மீண்டும் கரகோஷம் , நடிகர் திலகம் திரையில் தெரிந்த உடன் அரங்கம் முழுவதும் கிளாப்ஸ் ,whistle , etc

ஒரு பக்கம் நான் என் நண்பர்கள் , மற்றும் என் தந்தை உடன் இதை அனைத்தும் பார்த்து ரசித்து கொண்டு இருந்தோம் .

அரங்கம் 90 % புல். ஜாக்சன் துரை உடன் பேசும் காட்சிக்கு கிடைத்த reception பற்றி சொல்ல தேவை இல்லை ,
இடைவேளையில் சில ரசிகர்கள் , மற்றும் மக்கள் பேசி கொண்டு இருந்தத பொது அவர்கள் சாய்ஸ் APN படங்கள் , குறிப்பாக தில்லானா மோகனம்பாள் , சிவந்த மண் , தெய்வ மகன் , ராஜா ராஜா சோழன் , நவராத்திரி

இடைவேளை முடிந்த உடன் மீண்டும் படம் துவங்கி கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு

பிரிண்ட் நன்றாக இருந்தது , இருந்தும் சில காட்சிகள் , பாடல்களை ட்ரிம் செய்து இருக்கலாம்
முக்கியமான , நடிகர் திலகத்தின் படங்களை இப்பிடி re ரிலீஸ் செய்தால் அந்த படத்தின் நெகடிவ் பாதுகாக்க படும் , மேலும் வசூலிலும் சாதனை படைக்கும்

படம் கர்நாடிக் அரங்கில் 2 காட்சிகள் மட்டும் , SPI சினிமாஸ் 1 காட்சி , யமுனாவில் 2 காட்சி , கக் 1 காட்சி
ஒரு அரங்கில் 4 காட்சி இருந்தால் மக்கள் படத்தை இன்னும் அதிகம் ரசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை

RAGHAVENDRA
26th August 2015, 12:15 PM
ராகுல்
கட்டபொம்மன் வெளியீடும் மணிமண்டபமும் தங்களை வரவழைத்து விட்டது பார்த்தீர்களா..
தொடர்ந்து பங்கு பெறுங்கள்.

JamesFague
26th August 2015, 12:51 PM
Courtesy: Tamil Hindu


சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு



சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "சிவாஜி கணேசன் நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவர்.

'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியார் அவர்களால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவர்.

'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.

'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவர்.

மறைந்த சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று உத்தரவிடப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.

சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று தமிழக அரசே அமைத்தது.

தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கப்பட்டிருக்கும்.

சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை.

அந்த இடத்தில் தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Russellxor
26th August 2015, 12:55 PM
நாள்

26ஆக
2015*
12:16

பதிவு செய்த நாள்
ஆக 26,2015 11:35

சென்னை: சென்னை சட்டசபை கூட்டத்தொடரில், தமிழகஅரசு சார்பில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது எழுந்த காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார். விஜயதாரணியின் பேச்சுக்கு பதிலளித்த ஜெ., சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார். இதனால் அதிமுக மற்றும் காங்., உறுப்பினர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி காங்கிரஸ்காரர் இல்லை. அவர் காங்., கட்சியே வேண்டாம் என்று சென்று, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கியவர் என்றார்.

adiram
26th August 2015, 01:00 PM
நடிகர்திலகம் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு மனதில் தேன் பாய்ச்சுகிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு மிக விரைவில் செயல் வடிவம் பெறும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

அயராது பாடுபட்ட சகோதரர் சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

HARISH2619
26th August 2015, 01:07 PM
Dear k c s sir,
many many happy returns of the day.what a memorable gift to you on your birthday.

HARISH2619
26th August 2015, 01:09 PM
Dear aadhavan sir,
a warm welcome to the glorious thread of nadigar thilagam

HARISH2619
26th August 2015, 01:13 PM
Yesterday 3.30 show sathyam 90% full as per the status at 2.15pm
today 3.30 show sathyam 80% full as per the status at 1.00pm

JamesFague
26th August 2015, 01:19 PM
Courtesy: Daily Thanthi



மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு




முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகவும், உரிமைக்காகவும் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்து வதிலும், அவர்களது பெருமை களை வருங்கால சந்ததியி னர் அறிந்து பின்பற்றும் வகை யில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்கள் எழுப்பி மரியாதை செய்வ திலும் எனது தலைமை யிலான அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கு கிறது.

அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், பொறியியல் அற்புதமான கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன், தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆகியோருக்கு மணி மண்டபங்களும் தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியா தைச் சுடரொளி ஜீவரத்தினம், மனு நீதிச் சோழன், சுவாமி சகஜானந்தா, ஹைதர் அலி - திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்க வும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்ப வும் என்னால் ஆணையிடப் பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவரும், 'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப் படுத்தியதன் காரணமாக தந்தை பெரியாரால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவரும், 'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரரும், 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று நான் உத்தர விட்டேன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசனுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்ட தன் பேரில் நான் இந்த உத்தரவை வழங்கினேன். அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக் கப்பட்டது.

அவ்வாறு ஒப்படைக்கப் பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்பு களுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.

சிவாஜி கணேசன் மணி மண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது. தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் நான் அப்போதே வழங்கியிருப்பேன்.

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனது அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத் தில் தமிழக அரசே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Russellbpw
26th August 2015, 01:22 PM
இனிமையான, மகிழ்சிகரமான செய்தி - உலக தமிழர்க்கு உண்மையான தமிழர்க்கு !

நமது நடிகர் திலகம் அவர்களுக்கு உண்மையான ரசிகர்களுக்கு, அவர் மீது பற்றும் அன்பும் கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கு மிக நல்ல செய்தியாக இது இப்போதாவது வந்தது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsqlflpf3g.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsqlflpf3g.jpg.html)

சட்டசபையில் நடிகர் சங்கத்தின் கையாலாகாதனத்தை முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டு பேசியது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம். எங்களுக்கு அதை கட்டுவதற்கு எங்களுக்கு வழியில்லை என்று அப்போதே நடிகர் சங்கம் கூறியிருந்தால் மணிமண்டபத்தை என்றோ நான் கட்டியிருப்பேன் என்று கூறிய முதல்வர் செல்வி ஜெயலலிதா, "நாங்களே கட்டுகிறோம்" என்று வாய் சவடால் விட்டு வாய்தா வாங்கிய நடிகர் சங்கத்தின் இப்போதைய தலைவர் சரத்குமார் மற்றும் கும்பலுக்கு மிக பெரிய குட்டு கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.

CONGRESS இன் INSTANT சதி !
CONGRESS அமைச்சர் ஒருவர் நடிகர் திலகம் CONGRESS ஐ சேர்ந்தவர் என்று ஒரு EGO முதல்வருக்கு கிளப்பி அதன் மூலம் மணிமண்டபம் கட்டுவதை தடை செய்யலாம் என்று மனப்பால் குடித்து சதியை சட்டசபையில் கட்டவிழ்த்தார்.

அந்த அமைச்சர் முகத்தில் அறைந்தாற்போல, தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் உடனே இடைமறித்து நடிகர் திலகம் என்பவர் எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல ! அவர் இந்தியாவுக்கு, இன்னும் சொல்லபோனால் உலக தமிழர்களுக்கு சொந்தமானவர் என்று புகழுரை கூறியது அனைவரயும் மெய் சிலிர்க்கவைத்து மிகுந்த ஆரவாரத்தை கைதட்டல் மூலம் சட்டசபையில் ஏற்படுத்தியது !

முதல்வர் அவர்கள் நமது நடிகர் திலகத்துடன் சுமார் 17 படங்கள் நடித்துள்ளார். அதில் முக்கால் வாசி SUPERHIT ரக படங்கள், நடிகையாக இருந்த காலத்தில் FORMALITY க்கு மட்டும் கதாநாயகியாக இல்லாமல் நடிகர் திலகம் திரைப்படங்களில் மிக சிறந்த நடிகையாகவும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது !

https://www.youtube.com/watch?v=PgBAx_bl1YE


https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8



முதல்வருக்கு எங்கள் நன்றி !

MOST IMPORTANTLY -

SIVAJI SAMUGA NALA PERAVAI FOUNDER Mr. CHANDRASEKHAR Sir !

What can i say about the time at which you started the KOARIKKAI UNNA VIRADHAM !!
GURU HORAI ! SUBAMUGOORTHTHAM ! PATTOLI VEESIDUM VETRI !!

YOUR REQUEST HAS BEEN FAVOURABLY CONSIDERED..! THANKYOU SIR...

NADIGAR THILAGAM's SOUL is With You by all means is what this announcement indicates !

ATLEAST NOW, WE WISH, THE DIFFERENCE OF OPINION BETWEEN GROUPS VANISH & STAY UNITED FOREVER !!!

RKS

JamesFague
26th August 2015, 01:25 PM
Atleast now, we wish, the difference of opinion between groups vanish & stay united forever !!!



Exactly.

JamesFague
26th August 2015, 01:31 PM
Courtesy: Tamil Hindu

நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்


நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகm சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல.

இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர். ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

adiram
26th August 2015, 01:42 PM
என்றென்றைக்கும் புத்தம்புது பொலிவுடன் திகழும் நடிகர்திலகத்தின் வரலாற்றுக்காவியமான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியத்தின் மெருகேற்றப்பட்ட வடிவத்தின் கோலாகல வெளியீட்டையும், அதன் இமாலய வெற்றியையும் தாங்கள் அனுபவித்தது மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் என்னைப்போன்ற பல்லாயிரக் கணக்கான ரசிகர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் எழுத்து வடிவத்திலும், நிழற்படங்களாகவும், வீடியோ வடிவமாகவும் அளித்து மகிழ்வுற வைத்த அனைத்து நண்பர்களுக்கும், ரசிக நெஞ்சங்களுக்கும் நன்றி.

வீரபாண்டிய கட்டபொம்மன் ரசிகர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் காண வேண்டிய காவியம் என்று கட்டுரை வாயிலாக வடித்த சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

Subramaniam Ramajayam
26th August 2015, 01:42 PM
Courtesy: Tamil Hindu

நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்


நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகm சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல.

இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர். ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
great great news GOLDEN MOMEMENTS IN MY-OUR LIFE kattabomman really made us to remember him for ever.
THANK YOU AMMA AMMA FOR YOUR MAGNAMIOUS GENEROCITY,
aS RAGHAVENDER mentioned it should a milestone in all aspects AND NOT A SIMPLE MADAPAM
VALGA VALRGA NADIGARTHILAGAM PUGAL.

Russellbpw
26th August 2015, 01:51 PM
இதில் ஒரு விஷயம் நாம் கவனிக்கவேண்டியது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsqlflpf3g.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsqlflpf3g.jpg.html)

நடிகர் திலகம் அவர்களது தாயாரின் சிலையை பரந்தமனதுடன் நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க திறந்துவைக்க சம்மதித்து, அதனை திறந்து வைத்து சிறப்பித்தவர் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் M G R அவர்கள்.

இன்று நடிகர் திலகம் அவர்களது மணிமண்டபத்தை, நடிகர் சங்கம் எந்த காலத்திலும் அவர்களது காழ்புணர்ச்சியால் திறக்கமாட்டார்கள் என்பதை ஊர்ஜிதபடுத்திகொண்டு, அந்த மணிமண்டபத்தை தாமே தமது அரசால் கட்டப்படும் என்று அறிவித்தவர் மக்கள் திலகம் வழிவந்த அதிமுக வின் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் !

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அந்நாளில் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி !

https://www.youtube.com/watch?v=nlwqwn793Xk


நடிகர் திலகம் அவர்கள் கலையை பொருத்தவரை கலைவாணி அருள் பெற்றவர் !


https://www.youtube.com/watch?v=uubrCumAOvk

அவர் ஆசியால்தான் திரை உலகில் மிகபெரிய ROUND கலைச்செல்வி அவர்கள் வந்தார் என்றால் அது சத்தியமான, தத்துவமான விஷயம் !

RKS

Russellxor
26th August 2015, 02:05 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150826135828_zpsb6m6qjon.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150826135828_zpsb6m6qjon.gif.html)

ScottAlise
26th August 2015, 03:23 PM
கட்டபொம்மன் படம் உருவான பொது நடந்த சம்பவங்கள் , படத்தை பற்றிய சில விஷயங்கள் ,படத்தின் வெற்றியின் வீச்சு , என்று என்னால் முடிந்த அளவு எழுதி உள்ளேன்
கட்டபொம்மன் நாடகத்தின் ரிஷிமூலம் :

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சின்ன வயசில் அவர் வசித்த ஊரில் கம்பளத்தார் கூத்து என்று நடத்துவார்கள் , அதில் கட்டபொம்மன் நாடகம் தான் நடத்துவார்கள் , கம்பலத்தாரில் 47 வது தலைமுறையில் வந்தவர் தான் கட்டபொம்மன் . நடிகர் திலகத்தின் தந்தை நாட்டு பற்று அதிகம் உள்ளவர் அதனால் கட்டபொம்மன் நாடகம் அடிகடி பார்க்க தன் மகனை அழைத்து சென்று விடுவாராம் சிவாஜியின் தந்தை . அந்த கூத்தில் முக்கிய வேஷங்கள் போடுபவரை தவிர பிற வேஷங்களுக்கு குழந்தைகளை மேடையில் நடிக்க விடுவார்கள்


முதல் நாடக அனுபவம் :

சிறுவனாக இருந்த கணேசன் இப்படி தான் முதல் முதலில் மேடை ஏறினார் . சரி கட்டபொம்மனாக நம் மனதில் வாழந்த , வாழ்ந்து கொண்டு இருக்கும் சிவாஜி சாருக்கு அந்த நாடகத்தில் கொடுக்க பட்ட வேஷம் என்ன ?

வெள்ளைகார பட்டாளத்தில் ஒருவனாக நடித்தார் நம் நடிகர் திலகம்

அடி கிடைத்தது நடிப்பு ஆசை வந்தது , ஒரு நடிகர் பிறந்தார் :

நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் கணேசன்க்கு தந்தையிடம் இருந்து அடி கிடைத்து . காரணம் தான் யாரை எதிர்த்து சிறை சென்றாரோ அந்த வெள்ளைகாரன் படையில் ஒருவனாக தன் மகன் நடித்ததின் விளைவு. சிவாஜியின் தந்தை அடிக்க சிவாஜிக்கு மேடையில் கிடைத்த கைதட்டல் காதில் ஒலிக்க நடிகராக தீர்மானித்து நாடக குழுவில் இணைந்தார் .

சிவாஜி நாடகம் மன்றத்தின் கட்டபொம்மன் நாடகம் உருவான விதம் :

ஒரு நாடகம் நடத்தி விட்டு திருநெல்வேலி வழியாக வந்து கொண்டு இருந்த பொது சிவாஜி சாருக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது , கட்டபொம்மன் நாடகத்தை முதலில் பார்த்து அதில் ஈர்க்க பட்ட சம்பவங்களை அசை போட்டு கொண்டு வந்தார் . அந்த நினைவுகளில் இருந்து உதயமானது தான் கட்டபொம்மன் நாடகம் . சக்தி கிருஷ்ணசாமியிடம் தன் ஆசையை வெளி படுத்த கட்டபொம்மன் வாழ்கை வரலாற்றை அடிபடையாக கொண்டு நாடகத்துக்கு தகுந்த சம்பவங்களை தொகுத்து நாடகத்துக்கான கதையை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி .

எனது சுயநலத்தில் பொது நலமும் கலந்து இருக்கிறது :

கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்பது சிவாஜி சாரின் பல நாள் ஆசை , ஆனால் அதை நாடகமாக எடுக்க வேறு ஒரு காரணமும் இருந்தது . சிவாஜி நாடக மன்றத்தில் சுமார் 60 நபர்கள் இருந்தார்கள் , இவர்களில் பல பேர் நாடகத்தின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தார்கள் , எனவே அடிகடி நாடகம் நடத்துவது அவசியம் , சரித்திர நாடகத்தை நடத்தும் பொது huge ஸ்டார் cast இருக்கும் , அதனால் அனைவருக்கும் வேலை , ஊதியம் இரண்டும் கிடைக்கும் , இது கட்டபொம்மன் நாடகத்தை நடத்த இரண்டாவது காரணம்

கட்டபொம்மன் நாடகத்தின் கதை முடிவான உடன் 1 வருடம் pre production வேலைகள் நடந்தது . இதற்க்கு செலவு 50,000 ரூபாய்கள்

நாடகம் வந்த காலத்தில் இந்த cost மிகவும் அதிகம்

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் அரங்கேற்றமும் , அதை தொடர்ந்து நடந்த சுவையான சம்பவங்களும்

இந்த நாடகம் நடக்க சிவாஜி சார் மற்றும் கிருஷ்ணசாமி சார் இருவரையும் தவிர நாம் இந்த நேரத்தில் நினைக்க வேண்டிய இரு நபர்கள் நாடக குழுவின் இயக்குனர் SA கண்ணன் மற்றும் சண்முகம் என்ற efficient , meticulous organiser

1957 ல் கட்டபொம்மன் நாடகம் சேலத்தில் அரங்கேற்றம் . தலைமை
மு.வ. 9 நாட்கள் நடந்த இந்த நாடகம் சொல்லும் ஒரே செய்தி அரங்கேற்றம் செய்த புது நாடகம் மக்கள் ஆதரவினால் bumper ஹிட் என்பது தான் அது
ஒரு முறை ராஜாஜி அவர்கள் நாடகத்தின் இடைவேளையில் மயங்கி விழந்து விட்டார் , சிவாஜி சார் பதறி போய் வந்த உடன் அவரிடம் strong ஆக காபி வாங்கி குடித்து விட்டு மேற்கொண்டு நாடகத்தை நடத்த சொன்னவர் சிவாஜி சாருக்கு ஒரு சால்வை அணிவித்து சிறிது நேரம் நாடகத்தை பற்றி பேசினார் .

பிறகு மேடையில் இருந்து கிழே இறங்கியவர் மீண்டும் மக்களை பார்த்து சிவாஜி கட்டபொம்மன் ஆக நன்றாக நடிக்கிறான் , நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறி இருக்கிறார் , இதை ஜீரணிக்க உங்களுக்கு திராணி இருக்கா என்று கூறி சென்று விட்டார்

ராஜாஜியின் பாராட்டு கோடி ருபாய்க்கு சமம்



கட்டபொம்மன் கிட்ட தட்ட 100 தடவைகள் நடந்தது , அந்த நாடகம் நடந்த சமயத்தில் நடிகர் திலகம் ஒரு பிஸியான நடிகர் இருந்தாலும் நாடகம் தாமதம் இன்றி நடந்தது . நாடகம் 6 மணி என்றால் நாடகம் சரியான நேரத்துக்கு தொடங்கி விடும்
நாடகத்தில் நடித்துகொண்டு இருக்கும் பொது ரத்தம் குபுக் என்று வந்து கொண்டு இருக்கும் , எதற்கும் கவலைபடாமல் இவர் நடித்து கொண்டே இருப்பார் , நாடகத்தில் வசனம் பேசும் பொது நாடகத்தின் வசனம் அடிவயிற்றில் இருந்து வருகிறதா இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா என்றே அறியமுடியாமல் நடித்து கொண்டே இருப்பார் நடிகர் திலகம்

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் படமானது :

நாடகத்தின் வெற்றி திரு பந்தலு அவர்களை கட்டபொம்மன் கதையை படமாக எடுக்க தூண்டியது , அதன்படி உருவானது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் 1959 ல் வெளிவந்தது

இந்த படத்துக்கு research work தலைவராக ம .பொ . சிவஞானம்
அங்கத்தினாராக
சக்தி கிருஷ்ணசாமி , பந்துலு , கணேசன் , P. A. குமார் , K. சிங்கமுத்து and S. கிருஷ்ணசுவாமி என்று பலரும் பங்கேற்று படத்தின் கதைகருவுக்கு வலு சேர்த்தார்கள்

வெள்ளையதேவனாக திரு SSR நடிப்தாக இருந்தது , சிவகங்கை சீமை படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் அவரால் அந்த commitment ல் இருந்து வரமுடியாமல் போகவே ஜெமினி கணேசன் அந்த பாத்திரத்தில் நடித்தார் . அப்போது திரு சாவித்ரி கர்பமாக இருந்ததால் ஜெமினி வர தயங்க நடிகர் திலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி சாவித்ரி ஜெமினி கணேசனை நடிக்க ஜெய்பூர் அனுப்பி வைத்தார் . தினமும் ஜெய்பூர் ல் இருந்து சென்னைக்கு trunk call செய்து சாவித்ரியின் உடல் நலம் குறித்து விசாரிபாரம் ஜெமினி கணேசன்

படம் வெளி வந்தது பெரும் வெற்றி பெற்றது , இது அனைவருக்கும் தெரிந்தது .

கட்டபொம்மன் பெற்ற விருது , கெளரவம் :

ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழா :

1960 ல் ஆப்ரிக்க ஆசிய திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தேர்வு செய்ய பட்டது ,அங்கும் அரசியல் செய்ய பார்த்து வேறு ஒரு படத்தை ணைபின்னர்கள் , ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தான் தேர்வு செய்யப்பட்டது . இந்த விழாவில் பங்கேற்க பந்தலு , பத்மினி , சிவாஜி எகிப்து சென்றார்கள் . விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் திரைட பட்டது , இங்கே நம் ஊரில் கை தட்டி ரசித்ததை போலே , அங்கேயும் ரசிக்க பட்டது
பெஸ்ட் ஹீரோ விருது நம்மவருக்கு , விருது அறிவித்ததும் ஒரு வித பரபரப்பில் மயங்கி விழுந்து விட்டார் நடிகர் திலகம் , பிறகு மேடைக்கு சென்ற உடன் 5 நிமிடம் standing ovation மரியாதை கிடைத்தது நம்மவருக்கு
மேலும் சிறந்த இசை , டான்ஸ் , கதை இந்த category ல் கட்டபொம்மன் விருது கிடைத்தது

அதிபர் நாசர் சென்னை வருகை :
எகிப்து விழாவில் அதிபர் நாசர் பங்கேற்கவில்லை , காரணம் அவர் சிரியா சென்று இருந்தார் , அதிபர் வீட்டுக்கு சென்ற பட குழு அதிபரின் மனைவி உடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசும் பொது அதிபர் வரமுடியாமல் போன காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்டார் அதிபர் மனைவி .

நாசர் இந்திய வருவது அறிந்த நடிகர் திலகம் பிரதம மந்திரி நேருவிடம் அதிபர் சென்னை வரும் பொது சிறிது நேரம் தன்னுடைய விருந்தாளியாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள 2 மணி நேரம் அதிபர் நாசர் சிவாஜியின் விருந்தாளியாக இருந்து சிறப்பித்தார்

அதிபரை வரவேற்க சில்ரன் தியேட்டர் முழுவதும் தேச தந்தை காந்திஜியின் படங்கள் மற்றும் இந்திய நாட்டின் பெருமையை எடுத்து கூறும் படங்களால் அலங்கரித்தார்கள் , மேலும் RED CARPET வரவேற்பு அளிக்க பட்டது . வெள்ளியில் ஷீல்ட் , ல் நடராஜர் சிலைக்கு இருபக்கமும் பிரமிட், மற்றும் தஞ்சாவூர் கோபுரம் , மேலும் யானை , ஒட்டகம் வடிவமும் செய்து அதிபருக்கு வழங்க பட்டது . இதற்க்கு சிகரம் வைத்தது போல் ஆங்கிலத்தில் திருக்குறள் பொரிக்க பட்ட தங்க தகடும் கொடுக்க பட்டது , அதற்க்கு ஒரு மொள்வியை வரவழைத்து அரபு மொழி வாசகங்களை பொரித்து அதையும் பரிசாக வழங்கி நாசர் அவர்களை கௌரவித்தார்கள்


SSR சிவகங்கை சீமையில் நடித்தால் தான் கட்டபொம்மன் படத்தில் நடிக்க வில்லை என்பது அனைவரும் அறிந்தது ,

வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தின் துவக்க விழாவுக்கு கவிஞர் கண்ணதாசன் சென்று இருந்தார் அப்படி இருக்கும் பொது

சிவகங்கை சீமை கட்டபொம்மன் படத்துக்கு போட்டியாக எடுக்க பட்ட படமா ?
சிவகங்கை சீமை மருதுபாண்டியர் கதை , கட்டபொம்மன் படமும் , சிவகங்கை சீமை படமும் ஒரே கதை என்று கதை கட்டி விட்டார்கள் . ஆனால் உண்மையில் அப்படி இல்லை

கட்டபொம்மன் இறந்த பிறகு , ஊமைத்துரை சிறையில் அடைக்க படுகிறார் , அத்துடன் முடிவது வீர பாண்டிய கட்டபொம்மன்

ஆனால் ஊமை துறை தப்பித்து வருவதில் இருந்து தொண்டங்குவது தான் சிவகங்கை சீமை கதை . sequel (கட்டபொம்மன் படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பார்த்தல் ஒரு பெரிய novel படித்தது போல். இருக்கும் .

படத்தின் preview பார்த்த AVM கட்டபொம்மன் வெளிவந்து 2-3 மாதம் கழித்து சிவகங்கை சீமை படத்தை ரிலீஸ் செய்தால் பணம் பார்க்கலாம் என்று சொல்ல அதை செய்யாமல் படத்தை கட்டபொம்மன் வெளிவந்து 2 வாரத்தில் அவசரமாக படத்தை ரிலீஸ் செய்ததால் படம் தோல்வியை தழுவியது


காரணம் கட்டபொம்மன் படத்தின் grandeur , சிவாஜியின் வசனம், நடிப்பு சகலமும் படத்தின் + points

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் முதல் டெக்னி கலர் படம் மேலும் ஜெய்பூர் அரண்மனையில் படம் பிடிக்க பட்டது . நடிகர் திலகம் கட்டபொம்மன் அவர்களுக்கு சிலை , நினைவு சின்னம் எழுபின்னர் , இந்த நாடகத்தின் வசூல் பல பொது காரியங்களுக்கு தானமாக கொடுக்க பட்டது .

joe
26th August 2015, 03:27 PM
நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
அதே நன்னாளில் அவர் அரும்பாடு பட்டு வலியுறுத்தி வந்த நடிகர் திலகம் மணிமண்டப அறிவிப்பு வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

Russellisf
26th August 2015, 03:58 PM
சிவாஜிக்கு மணி மண்டபம்... ஜெயலலிதாவுக்கு பிரபு நன்றி! Posted by: Shankar Published: Wednesday, August 26, 2015, 14:21 [IST] Share this on your social network: Facebook Twitter Google+ Comments (0) Mail மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்ததற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சிவாஜி மகன் பிரபு. ADVERTISEMENT ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு கூறுகையில்: Manimandapam for Sivaji: Prabhu Thanked Jayalalithaa எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அம்மா அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள். எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/manimandapam-sivaji-prabhu-thanked-jayalalithaa-234295.html

JamesFague
26th August 2015, 05:25 PM
Courtesy: Tamil Hindu

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகூரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி.

அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்'' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Harrietlgy
26th August 2015, 05:38 PM
Wish you Happy Birthday to Mr. Chandra sekhar and congrats for Mani mandapam news also.

joe
26th August 2015, 05:41 PM
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .

ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள் :)

Harrietlgy
26th August 2015, 06:07 PM
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .



எனக்கும் அந்த சந்தேகம் வந்துள்ளது. ஜோ உங்கள் பதிவை பார்த்த பின்.

Russellxor
26th August 2015, 06:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440582984219_zpsfvrdkuck.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440582984219_zpsfvrdkuck.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/VPKB/FB_IMG_1440583017423_zpseijnmmwc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/VPKB/FB_IMG_1440583017423_zpseijnmmwc.jpg.html)

eehaiupehazij
26th August 2015, 06:22 PM
அன்பிற்கினிய நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
தங்களுடைய இடைவிடாத முயற்சி திருவினையாகி நடிகர்திலகத்தின் மணி மண்டபக் கனவு நனவாகியுள்ள இத்தருணத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் விண்ணதிரும் வெற்றியும் நம்மை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியுள்ள இவ்வேளையில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு திரிசார்ந்த நன்றியறிதல்கள் !!
அன்புடன் செந்தில்

sivajidhasan
26th August 2015, 06:24 PM
திரு. சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நடிகர் திலகம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்கிற செய்தி காதில் தேன் பாய்கிறது. அதற்காக தொடர்ந்து உழைத்த திரு. சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்!

நட்புடன்,
சிவாஜிதாசன்

Subramaniam Ramajayam
26th August 2015, 06:29 PM
HAPPY BIRTHDAY MR CHANDRASEKAR On this day MANIMANDAPAM NEWS HASCOME
Your untired efforts has fetched good results to all of us.
blessings

joe
26th August 2015, 06:32 PM
Deleted - Joe

Murali Srinivas
26th August 2015, 07:10 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர் சார்!

இன்றைய தினம் போலவே பல சிறந்த பிறந்த நாட்களும்

இன்றைய பரிசு போலவே மிக சிறந்த பரிசுகளும்

என்றும் கிடைத்திட வாழ்த்துகள்!

(பின்) எக்காலத்தும் இணையாதவர்கள் முதலும் கடைசியுமாக இணைந்த நாள்!

(பின்) எக்காலத்தும் பிரியாதவர்கள் முதன் முறையாக் இணைந்த நாள்!

தாய் நாட்டை உயிராய் நேசித்த கலைஞன் தாயே உனக்காக என்று முழங்கிய நாள்!

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் தவப்புதல்வனாக திரையில் அவதரித்த் நாள்!

ஆகஸ்ட் 26 -க்கு இப்படி பல சிறப்புகள் ஏற்கனவே இருந்தாலும்

மணிமண்டபம் அறிவிக்கப்பட்ட நாள் என்ற பெருமையையும் சேர்க்கிறது!

லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தை தமிழக அரசே அமைக்கும் என்று அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

அன்புடன்

Russellbpw
26th August 2015, 07:14 PM
Dear Joe,
What they sow is what they will reap if that's the case, if at all if it is hidden agenda.!!!. I think one experience is enough when such plan was tried.

They can't remove one statue. All statues in main roads need to be removed if that's the case. There is a case already filed to that.

Let us believe such dirty things will not be handled as strategy to remove statue.
Regards
RKS

Russellxor
26th August 2015, 07:51 PM
திரு சந்திரசேகர் அவர்களுக்கு

வாழ்க வளமுடன் !
என் இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150826194133_zps88kirbzf.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150826194133_zps88kirbzf.gif.html)

adiram
26th August 2015, 08:11 PM
இந்த நேரத்தில் அரசியல் பேசி குறை சொல்லக் கூடாது என்றாலும் .. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் கடற்கரை சிலையை அகற்றுவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் , சிலையை அகற்றலாம் என சொன்னால் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ..மணிமண்டபம் என அறிவிப்பு வரும் முன்னே , சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்படும் என அறிவிப்பு வரும் பின்னே .

ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள் :)

ஜோ சார்,

சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் வயிற்றில் புளியைக்கரைக்கிறீர்களே.

சிலை அகற்றும் விஷயமாக கோர்ட் விதித்த கெடு நெருங்குவதால் அவசரமாக விதி 110-ன் கீழ் நினைவு மண்டபத்தை அறிவித்து நிலைமையை சற்று சமாதானப் படுத்திக்கொண்டு, பின்னர் சிலையை அகற்றும்போது "இதை நினைவு மண்டபத்தில் வைக்கவே அகற்றப்படுகிறது" என்று சமாதானம் சொல்லி, தேர்தல் வரை நினைவு மண்டபத்தை அறிவிப்பிலேயே கொண்டுபோய்....

சிலை அகற்றலை நிஜமாகவும், மணிமண்டபத்தை அறிவிப்போடும் நிறுத்திவிடும் திட்டமாக இருக்குமோ என்ற பயம் இப்போது ஆரம்பித்து விட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த ராஜதந்திரி.

மதுவுக்கு எதிரான அத்தனை எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்பினர், மாணவர்கள் அனைவரின் போராட்டங்களையும், இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஒன்றுமில்லாமல் ஆக்கிக் காட்டியவராயிற்றே. இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் மக்கள் வெறுப்பை பெற்றுவிடக்கூடாது என்ற நிலை வந்ததும் ஒரே அறிக்கையில் அந்தப் போராட்டத்தையும் நிறுத்திக் காட்டியவர்.

திடீரென்று நடிகர்திலகம் மணிமண்டபம் குறித்து அதுவும் 110 விதியின் கீழ் அறிக்கை படிக்கிறாரென்றால், நீங்கள் எழுப்பும் சந்தேகம் வலுப்பெறுகிறது.

அப்படி எதுவும் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம்.

Russellzlc
26th August 2015, 08:32 PM
வாழ்த்துக்கள்

பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் சிறப்பாக நடித்தது நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அந்த நாடகத்தில் நடித்ததற்காக தந்தை பெரியாரால் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி’ பட்டம் வழங்கப்பட்டது.

கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்காக கெய்ரோவில் நடந்த விழாவில் சிறந்த நடிகர் பட்டம் பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், தமிழகம் திரும்பியபோது அவரது கழுத்தில் விழுந்த முதல் மாலை புரட்சித் தலைவருடையது.

பின்னர், மக்கள் திலகம் தலைமையில் அவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

1984-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டது. அப்போது, எல்லா தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் கட்டபொம்மன் படத்தை காண வேண்டும் என்பதற்காக, படத்துக்கு வரிவிலக்கு அளித்தவர் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்.

தனது தாயார் ராஜாமணி அம்மையார் அவர்களின் சிலையை திறக்க, தாய் பக்தி கொண்ட புரட்சித் தலைவரே தகுதியானவர் என்று கருதி, அவரை வைத்தே சிலையை திறக்க வைத்தார் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன்.

தஞ்சையில் சாந்தி-கமலா திரையரங்குகளையும் புரட்சித் தலைவரைக் கொண்டே திறப்பு விழா நடத்தச் செய்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதும் அப்போதும் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்களின் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

சென்னையில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் வசித்த சவுத்போக் ரோடுக்கு செவாலியே சிவாஜிகணேசன் சாலை என்று பெயர் வைக்கப்படும் என்று அறிவித்து அதை செயல்படுத்தியவர் செல்வி. ஜெயலலிதா அவர்கள்.

திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட அடையாறு பகுதியில் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை ஒதுக்கி 2002ம் ஆண்டு உத்தரவிட்டவர் அப்போதும் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள்.

2004ம் ஆண்டில், அந்த நிலத்தின் ஊடே நீதிபதிகள் குடியிருப்புக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால் நீதிபதிகள் குடியிருப்புச் செல்ல தனியே சாலை அமைப்பதற்காக, நடிகர் சங்கம் கொடுத்த ரூ.2 லட்சம் தொகை போக மீதி தொகையான ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்து, மணிமண்டபம் கட்ட கொடுக்கப்பட்ட நிலத்துக்கு இடையூறு ஏற்படாதபடி, தனிச் சாலை அமைத்தவர் அப்போதும் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள்.

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிலத்தைச் சுற்றிலும் அன்றைய முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசின் சார்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடற்கரை சாலையில் சிலை அமைத்தவர் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள்.

இப்போது, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபத்தையும் தமிழக அரசே அமைக்கும் என்று முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

‘அவர் தாய் வேறல்ல, என் தாய் வேறல்ல, சத்யா அம்மையாரும் எனக்கு தாய்தான்...’ என்று புரட்சித் தலைவரின் தாயாரான சத்யா அம்மையாரைப் பற்றி பெருமிதத்துடன் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் கூறியதற்கேற்ப, ‘சத்யா’ ஸ்டூடியோவுக்கு எதிரிலேயே அவரது மணிமண்டபம் அமைய இருப்பது சிறப்பு.

கடைசி வரை தேசியவாதியாக திகழ்ந்த திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு, தொடர்ந்து சிறப்புகள் செய்து வருவது திராவிட இயக்கங்களும் அதன் தலைவர்களும்தான் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அதிலும் புரட்சித் தலைவர் தோற்றுவித்த அண்ணா திமுக கட்சியின் தலைமையிலான அரசு, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்திருப்பது மேலும் மகிழ்ச்சி.

நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbzy
26th August 2015, 09:00 PM
சென்னை காமராஜர் சாலையான கடற்கரை சாலையில் கம்பீரத்துடன் நிற்கும் சிங்கத்தமிழன் சிவாஜி சிலைக்கு பாதகம் இல்லாத பட்சத்தில், தமிழக
முதல்வரின் சிவாஜி மணிமண்டப அறிவிப்பு வரவேற்புக்கும், நன்றிக்கும் உரியதே!
நண்பர் joe வின் கருத்தே என் கருத்துமாகும் !

Russellbzy
26th August 2015, 09:12 PM
ரவிகிரன் சார், மாற்று கருத்துள்ள நண்பர் professor sir,
சிவாஜி அரசியல் குறித்த என் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை கண்டேன்! அதற்கு பதில் அளிக்கும் சூழல் இப்போது இல்லை!
அடுத்த வாரம் என் பதிலை தெரிவிக்கிறேன் !
நன்றி !

Subramaniam Ramajayam
26th August 2015, 09:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150826135828_zpsb6m6qjon.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150826135828_zpsb6m6qjon.gif.html)

Just to celebrate my 500 postings/ thanksto senthilvel
blessings to all

sivajidhasan
26th August 2015, 09:20 PM
https://youtu.be/aqOCP2rtks4?t=590

sivajidhasan
26th August 2015, 09:36 PM
நண்பர்களே!

உங்கள் பார்வைக்காக இந்த கானொளி. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

Russellbpw
26th August 2015, 10:04 PM
ரவிகிரன் சார், மாற்று கருத்துள்ள நண்பர் professor sir,
சிவாஜி அரசியல் குறித்த என் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை கண்டேன்! அதற்கு பதில் அளிக்கும் சூழல் இப்போது இல்லை!
அடுத்த வாரம் என் பதிலை தெரிவிக்கிறேன் !
நன்றி !

Dear Sir,

It was only a posting from my end and Am sure, Professor sir also shared ONLY his experiences.

The objective of the post is to ONLY share some information and DEFINITELY not to receive a reply in context of my post.

Please share your views. Am Ok with it. It is only individual view. But, Let it not invoke a Fresh Debate or Argument Sir..!

We would love to read your views and your experience during that period.

Regards
RKS

ifohadroziza
26th August 2015, 10:05 PM
அன்பு நண்பர் திரு சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எங்களுடன் சேர்ந்து உங்கள் கணவும் மெய்ப்படபோகிரது.ஒன்றே ஒன்று மட்டும்தான் சிலை அக்ற்றபடாமல் இருக்கவெண்டும்.அவ்வாறு இருப்பின் தமிழக முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உலகம் முழுவதும் உள்ள எல்லோருக்கும் சொந்தமானவர் என்று அவர் அடிமனதிலிருந்து
சொல்லிய வார்த்தைகளை மறக்க முடியாது.நமக்கு ஒன்று கூட ஒரு கூடாரம் கிடைக்க
போகிறது என்பதை நினைக்கும் போதே மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.மீண்டும் ஒருமுறை நன்றியை காணிக்கையாக்குவோம்.

uvausan
26th August 2015, 10:12 PM
சிவாஜிதாசன் சார் - அருமை , மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு - மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது . பயிற்சி , திறமை , நேர்மை , நேரம் தவாறமை , பிறர் தன்னால் துன்பம் அடையக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் - இப்படி இன்னும் பல நற்குணங்களுக்கு இன்றும் , என்றுமே ஒரு உதாரணப் புருஷராக விளங்குபவர் நடிகர் திலகம் ஒருவரே - இனி ஒருவன் அப்படி பிறக்கப்போவதில்லை - அவரை அன்று மாலை போட்டு கெள்ரவித்ததனால் , அப்படி செய்தவர்களுக்கு பெருமை கிடைத்தது , அந்த கட்சிக்கு உயர்வு கிடைத்தது - இன்றும் அதே நிலைமை தொடர்கிறது - அவருக்கு மரியாதைகள் செய்த ஒவ்வொருவரும் அப்படி செய்ததற்காக பெருமைப்படவேண்டும் . கர்வப்படவேண்டும் . அவர்கள் புகழ் அதிகரித்ததற்க்காக இறுமார்ப்பு அடைய வேண்டும் .

ifohadroziza
26th August 2015, 10:12 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் - கமல்ஹாசன் அறிக்கை ( நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகோரியதில் அரசு, நடிகர் இனத்திற்க்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன .
Real words thiru. Kamal sir.

ifohadroziza
26th August 2015, 10:15 PM
Welcome thiru. Athavn ravi sir
sivaji daasan sir.
Lot of people should participate in our thread like you the talented peoples

eehaiupehazij
26th August 2015, 10:18 PM
NT's Numerology : Part 2 / Number Two

எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் உள்ளத்தின் கண்களே !
பகுதி 2 : ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகத்தின் உருவகம்!

பகுத்து தொகுத்து ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகம் உருவகப் படுத்திய ஈசனின் குணாதிசயங்களை முறைப்படுத்தி அவ்வையாராக முத்திரை பதித்த கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் அம்மையார் எப்படிக் கணீரென்று நமது மனங்களில் மணி மண்டபம் எழுப்புகிறார் !!!!

https://www.youtube.com/watch?v=FmMeyulf0Ec

Russellbzy
26th August 2015, 10:28 PM
மீண்டும் திரிக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பர் சிவாஜி தாசனுக்கும், புதிதாக இணைந்திருக்கும் அன்பு நண்பர் ஆதவன்ரவி அவர்களுக்கும்
நல்வரவு கூறி வரவேற்கிறேன் ! வாழ்க! வளர்க!

Russellbzy
26th August 2015, 10:34 PM
சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் அன்பு நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ! எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

Russelldwp
26th August 2015, 10:34 PM
தலைவர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைப்பதென அறிவித்த தமிழக அரசின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சென்ற மாதம் தலைநகர் சென்னையில் திரு.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பு தான் இந்த அறிவிப்புக்கு மிக முக்கிய காரணமாக கருதுகிறேன். எனவே ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.


சந்திரசேகர் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்புக்கு உடனே பலன் கிடைத்து விட்டது உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளும் வளமான உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறேன்


என்றும் உங்கள் முயற்சிக்கு சிவாஜி ரசிகர்கள் துணையிருப்பார்கள்


இன்று நீங்கள் அனுபவிப்பதோ முப்பெரும் விழா - வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றி - மணிமண்டப அறிவிப்பு - உங்கள் பிறந்த நாள் விழா

Russelldwp
26th August 2015, 10:36 PM
இத்திரிக்கு மகுடம் சேர்ப்பது போல் கவிதை மழை பொழியும் திரு.ஆதவன் அவர்களையும் திரு. சிவஜிதாசன் அவர்களையும் அன்போடு வரவேற்கிறேன்

Russelldwp
26th August 2015, 10:40 PM
கடற்கரை சிவாஜி சிலையையும் பாதுகாத்து மணிமண்டபமும் அமைக்கப்போகும் உலக சிவாஜி ரசிகர்களின் இதயங்களை குளிர்வித்து கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றிகள் கோடி

eehaiupehazij
26th August 2015, 10:52 PM
மணி மண்டபம் கட்டுபவருக்காக சித்திர மண்டபத்தில் முத்துக்களைக் கோர்க்கிறார் நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=ig46cl5coVo

Russellxss
26th August 2015, 11:10 PM
திரு.சந்திரசேகர் சார், தங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்கள் பிறந்தநாளன்று மணிமண்டபம் அரசு சார்பில் கட்டப்படும் என்ற செய்தியைத் தவிர தங்களுக்கு வேறொன்றும் பெரிதல்ல என்பது ஒவ்வொரு உண்மையான சிவாஜி ரசிகனுக்கும் தெரியும். நான் தங்களிடம் முன்பே கூறியது போல் உங்கள் உழைப்பு அதுவும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்பரப்ப தாங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் வீண்போகாது.
தாங்கள் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என் உள்மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது என்னவெனில் நாளையோ அல்லது என்றோ நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அரசு கட்டும் பட்சத்தில் அந்த விழாவிற்கு என்னை அழைப்பார்களோ இல்லையோ ஆனால் நமது அண்ணன்மார்கள் தளபதி ராம்குமார் மற்றும் இளையதிலகம் பிரபு அவர்களை நிச்சயம் அழைப்பார்கள் அது போதும் எனக்கு, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து நான் விழாவை ரசிப்பேன் என்று கூறினீர்களே. அப்படியே நடந்தாலும் தங்கள் பிறந்தநாளன்று மணிமண்டபம் அரசே கட்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு நமது நடிகர்திலகமே தங்களுக்கு பரிளித்து விட்டார்.
அன்புள்ள சிவாஜி அவர்களால் உண்மையான அன்பு உள்ளவர்களே தங்களால் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு புகழ் சேர்க்க முடியாவிட்டாலும் புகழைக் காப்பவர்களின் செயலுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள்.
நீங்கள் என்னதான் செய்தாலும் நாங்கள் வணங்கும் நடிகர்திலகமே எங்கள் நண்பா் சந்திரசேகர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்து விட்டார்.
நண்பர் சந்திரசேகர் அவர்களே மற்றவர்கள் ஆசியைப் பற்றி கவலைப்படாதீர்கள், நடிகர்திலகத்தின் ஆசி அனைவரையும் விட உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கும்.


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

Russellxss
26th August 2015, 11:13 PM
அன்பு நண்பர் கவிஞர் ஆதவன் ரவி மற்றும் சிவாஜிதாசன் இருவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

chinnakkannan
26th August 2015, 11:36 PM
அன்பின் சந்திர சேகர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

KCSHEKAR
27th August 2015, 04:34 AM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மணிமண்டப அறிவிப்பிற்கான பாராட்டுக்களை, அலைபேசியிலும், திரியிலும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது எண்ணமெனும் நானெடுத்து வண்ண மலர்ப் பூத்தொடுத்து நன்றியெனும் மாலைதனை காணிக்கையாக்குகிறேன்.

KCSHEKAR
27th August 2015, 04:42 AM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மணிமண்டப அறிவிப்பிற்கான பாராட்டுக்களை, அலைபேசியிலும், திரியிலும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது எண்ணமெனும் நானெடுத்து வண்ண மலர்ப் பூத்தொடுத்து நன்றியெனும் மாலைதனை காணிக்கையாக்குகிறேன்.

முதலில் நான் ஏற்கனவே இத்திரியில் கடந்த வருடங்களில் குறிப்பிட்ட மாதிரி, குறிப்பாக நான் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் இணைந்த பிறகுதான் கடந்த சில வருடங்களாக, நண்பர்களால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படும்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன்.

அவற்றில் இந்த வருடப் பிறந்தநாள் என்பது எனக்கு, என் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாளாக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை. நேற்று காலையிலிருந்து, நள்ளிரவு வரை வந்த அலைபேசி அழைப்புகளைப் பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இரவு தூக்கமும் இல்லை. ஏதேதோ நடிகர்திலகம் பற்றிய பல நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டே இருந்தது. இன்னும் பல அலைபேசி அழைப்புகளுக்கு (missed calls ) (திரு.நெய்வேலி வாசு சார் உள்பட) பதிலலளிக்கவில்லை . நான் எடுத்து பேசவில்லை என்ற வருத்தமும் சிலருக்கு இருக்குமே என்ற கவலை எனக்கு.

இதற்கெல்லாம் யார் காரணம்? நடிகர்திலகத்திற்கு சேவை செய்ய, அவர் புகழ் பரப்ப, என்னைவிட மிகவும் மூத்த ரசிகர்கள் பலர் இருக்க, விண்ணிலிருந்து நடிகர்திலகத்தால் எனக்கிடப்பட்ட உத்தரவா? அல்லது நான் முற்பிறவியில் செய்த பாக்கியமா?

நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம் கோரி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கடந்த ஜூலை 21 ஆம் நாள், சென்னையில், நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு இக்கோரிக்கைக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள், நமது ரசிகர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதத்தில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் பணி தொடங்கப்பட்டு, மணிமண்டபம் விரைவில் அமையவேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விழைகிறேன்.

மனதில் தோன்றும் பலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உணர்ச்சி மிகுதியால் வார்த்தைகள் வரவில்லை.

எதுவாக இருந்தாலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட எனக்கு இறைவன் சக்தியை அளிக்கவேண்டும், நண்பர்களின் தொடர் ஆதரவும் வேண்டும் என்பதே இப்பிறந்தநாளில் நான் விடுக்கும் கோரிக்கை, வேண்டுகோள், பிரார்த்தனை.

மீண்டும் அனைவருக்கும் நன்றி.

tacinema
27th August 2015, 07:58 AM
Dear CHANDRASEKARAN,

Happy Birthday. God bless you.

Regards.

Russellsmd
27th August 2015, 08:06 AM
எந்த தேவதையின் குரலோ?

"நீதி "
-நீங்கள் சொல்லும்
"புளியா மரம்" உச்சரிப்புக்கு
அடுத்தவன் தொடையிலடித்துச்
சிரித்திருக்கிறோம்.

அம்மா..!

அந்த மாதிரியான
உற்சாகச் சிரிப்பை
மீண்டும் தந்தீர்கள்..இன்று!
------
"கலாட்டா கல்யாணம்"
-பொம்மை போலவே ஆடி
புருவம் உயர்த்த வைத்தீர்கள்.

அம்மா..
பூரித்து, உங்களை வியந்து
மீண்டும்
புருவம் உயர்த்த வைத்தீர்கள்..
இன்று.
--------
"அன்பைத் தேடி"
- சாவிலா வீட்டின்
சாம்பல் கொணரக் கிளம்புகிற
பெண்ணாக
எங்கள் இதயம் நெகிழ்த்தினீர்கள்.

அம்மா..!
மீண்டுமெங்களை
நெகிழச் செய்தீர்கள்..இன்று.
-------
"அவன்தான் மனிதன்"
-அழகாய் இசை பாடி,
புன்னகை முகத்துடன்
எம் தலைவனை
ஆட வைத்ததீர்கள்.

அம்மா..!
தலைவனின் ரசிகர்களை
சந்தோஷமாய்
ஆட வைத்தீர்கள்..இன்று.
---------
அந்த உன்னதக் கலைஞனுக்கு
நீங்கள் செய்யவிருக்கிற
கௌரவம் மகத்தானது.

அந்த கலைஞன்
உயிரோடும்,உயிர்ப்போடும்
வாழ்ந்த நிமிஷங்களில்..
கலை செய்யும் மும்முரத்தில்
கணப் பொழுதும்
ஓய்வு கொண்டதில்லை.

அரசு கட்டப் போகும்
அந்தப் புது வீட்டிலாவது
அய்யன்
புகழ் உறக்கம் கொள்ளட்டும்.

அம்மா..!
உங்களின் அறிவிப்புக்குப் பின்
சட்டசபை மேசைகளில்
எழுப்பப்பட்ட
அந்த சத்தம்..
எங்களின் நன்றிப் பாடலுக்கான
தாளமாகிறது.
--------
அம்மா..!
இனியது தந்த உங்களை
இதயம்
நன்றியுடன் நினைக்கும்.

இன்றிரவு
எங்கள் தலையணைகளை
ஆனந்தக்கண்ணீர் நனைக்கும்.












Sent from my GT-S6312 using Tapatalk

sivajidhasan
27th August 2015, 09:03 AM
அருமையான கவிதை திரு. ஆதவன் ரவி அவர்களே! இதை நீங்கள் முதல்வருக்கே அனுப்பி வைக்கலாம்!

நட்புடன்,
சிவாஜிதாசன்

anm
27th August 2015, 09:18 AM
நண்பர்களே, திரு சந்திரசேகர் அவர்களே, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!! நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அரசே கட்டித்தரும் என்ற செய்தி நமது கத்தில் ஒலிக்கிறது!!!

ஆனால், தினமலர் இந்த செய்தியின் அடியில் சில அறிவு கெட்ட ஜீவிகள் அதைக் குறித்து தரம் தாழ்ந்து விமரிசனம் செய்திருக்கிறார்கள், தயவு செய்து நமது நண்பர்கள் அங்கு சென்று தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

KCSHEKAR
27th August 2015, 11:28 AM
இன்று (27-08-2015) இரவு 9 மணி முதல் 10 மணி வரை, மக்கள் தொலைக்காட்சியில் "அச்சமில்லை" என்ற விவாத நிகழ்ச்சியில் - நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம் குறித்த விவாதத்தில் பங்கேற்கிறேன்.

eehaiupehazij
27th August 2015, 12:22 PM
NT's Numerology : Part 3 / Number Two

எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு

இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !

நடிகர்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !

காதல் என்பது சுகானுபவமே ..காதலர்கள் கருத்தொருமித்து காத்திடும் வரை...கருத்து விரிசலில் காதல் சுவர் ஆட்டம் கண்டால் ...மனித மனமும் விரிசல் கண்டு...இரண்டாகிறதே!
காதலியை நினைத்து வாழ்ந்திட ஒரு மனம் ....அவளை மறந்து வாழ்ந்திட இன்னொரு மனம்....Dr Jekyll and Mr Hyde போல!!

இரண்டின் முதலிடம்: இரண்டாட்டத்தில் திண்டாடும் வசந்த மாளிகை வேந்தர் !!

https://www.youtube.com/watch?v=Z2VHhYADomI

Place 2 : Raja / இரண்டிலொன்று நீ என்னிடம் சொல்லு ..பூவா தலையா...காயா பழமா...உண்டா இல்லையா....

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

இரண்டு கைகள் நான்கானால் ....இருவருக்கேதான் எதிர்காலம்!!

[url]https://www.youtube.com/watch?v=G8U1ACU5Hdk

Russellxor
27th August 2015, 01:17 PM
நமது நண்பர் ஒருவர்அடிக்கடி ஒரு காட்சியை வியந்து சொல்லிக்கொண்டே இருப்பார்.அது சுமதி என் சுந்தரி படத்தில் வரும் ஒரு ஆலயமாகும் மங்கை மனது பாடல் தான்.அவசரப்பட்டு வேறு சிந்தனைக்கு ஓடி விடாதீர்கள்.விஷயம் பாடலைப் பற்றியதல்ல.பாடல் நல்ல பாடல்தான்.
நண்பர் குறிப்பிடும் காட்சி ....?

பாடலின் ஆரம்பம் இசையில் துவங்கும்.சரியாக ஏழு அல்லது எட்டு விநாடிகள் சென்றபின் அந்தக்காட்சி காண்பிக்கப்படும்.
நண்பர் சொல்கிறார்...
"பெட்டுல படுத்து தூங்கிட்டிருக்கிற மாதிரி தலைவரை காட்டுவாங்க பாருங்க.சும்மா ரெண்டு மூணு செகண்ட் தான்யா அந்த சீன் இருக்கும்.என்ன ஒரு தெளிவு ,என்ன ஒரு பொலிவு அந்த முகத்தில்.கள்ளம் கபடம் தெரியாத குழந்தையைப் பார்க்கும்போது என்ன இன்பம் கிடைக்குமோ அது போல இருக்கும் அந்த முகம்.எனக்கு அந்த ஒரு சீனு போதும்.

இன்னும் சொல்லிக்கொண்டே போவார்.நான் எழுத வந்தது வீரபாண்டிய கட்டபொம்மனின் நித்திரையைப்பற்றி.

தனது அவசர முடிவால்ஒற்றனை தவறாக சந்தேகிக்க நேர்வது,மேலும் கோபத்தில் அவனை சாட்டையால் விளாசுவது,மறுநாள் ஊமைத்துரையின் மூலம் உண்மை உணர்வது,தவறுக்கு பிராயச்சித்தமாக சவுக்கடி வாங்குவது என்ற பல கோர்வையான காட்சிகளை அடுத்து...

சவுக்கடியால் ஏற்பட்ட காயங்களினால் சிரமப்படும் மன்னரைசாந்தப்படுத்த பாடல் ஒன்று பாடப்படுகிறது.பாடல் துவங்கும்போது வலது கையால் தலையைத் தாங்கி ஒருக்களித்துப் படுத்திருக்கும் அந்தகாட்சி சிலிர்க்க வைக்குமே.
பாடல் முடியும் முன்னரே மன்னர் உறங்கி விடுகிறார்.இப்போது பார்க்க வேண்டுமே நடிகர்திலகத்தை. அவர் முகத்தை.என்ன ஒரு சாந்த சொரூபம்?
அப்போது மந்திரி வருகிறார்.ஆங்கிலேய அதிகாரிஒருவர் மன்னரை பார்க்கவிரும்புவதாக சொல்ல ராணியார் மன்னருக்கு சுகமில்லை நாளை பார்க்கலாம் என்று சொல்ல அந்த சமயம் விழித்துக் கொள்ளும் மன்னர் சற்றுப் பொறுங்கள் வந்து விடுகிறேன் என்று சொல்வார்.நல்ல காட்சி.
அடுத்து வரும் அவர் நடைக்கு அசராதவர்கள் உண்டோ?

parthasarathy
27th August 2015, 01:22 PM
Dear Shri. Chandrasekaran,

Belated happy returns of the day.

Your monumental efforts have finally yielded result.

Great day and great news!

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
27th August 2015, 03:08 PM
http://www.dailythanthi.com/News/State/2015/08/27002609/On-behalf-of-the-Government-of-Sivaji-Ganesan-manimantapam.vpf