PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

Russellxor
14th September 2015, 05:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218531754_zps2whyu9dj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218531754_zps2whyu9dj.jpg.html)

Russellxor
14th September 2015, 05:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218453699_zpsdxnotv5x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218453699_zpsdxnotv5x.jpg.html)

Russellxor
14th September 2015, 05:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218448232_zpsemihpczc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218448232_zpsemihpczc.jpg.html)

Russellxor
14th September 2015, 05:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218445698_zpsb9r8vd9x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218445698_zpsb9r8vd9x.jpg.html)

Russellxor
14th September 2015, 05:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218442230_zpscwuegi5c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218442230_zpscwuegi5c.jpg.html)

RAGHAVENDRA
14th September 2015, 05:30 PM
டியர் செந்தில்வேல்
காலம் காலமாக தாங்கள் காத்து வரும் அபூர்வ ஆவணங்கள் அந்நாளைய நினைவுகளைத் தட்டி எழுப்புகின்றன. மக்கள் தலைவருடன் அந்நாளைய அகில இந்திய சிவாஜி மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை காட்சி தரும் அபூர்வமான புகைப்படம். மிக்க நன்றி.

ஒரு வேண்டுகோள்.

தாங்கள் பதிவிடும் அபூர்வ ஆவணங்கள் நிழற்படங்கள் யாவற்றிலும் தங்களுடைய பெயர் அல்லது ஏதாவது watermark பொறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் இப்படிப்பட்ட அபூர்வ ஆவணங்களை சிலர் பல்வேறு தளங்களில் மீள் பதிவு செய்யும் போது மறந்தும் கூட அதற்கு நன்றி கூறுவதில்லை, பெயர் கூட குறிப்பிடுவதில்லை. மாறாக தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து அளிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கவும் தயங்காத கலிகாலமிது,

தாங்கள் இதற்கு பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பீர்கள் என்பது தெரியும் என்றாலும் என் மனது கேட்காத காரணத்தால் தங்களிடம் இக்கருத்தைக் கூற விரும்பினேன்.

Russellxor
14th September 2015, 05:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218081880_zpshwlhpawu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218081880_zpshwlhpawu.jpg.html)

Russellxor
14th September 2015, 05:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218061827_zpsd8fokjna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218061827_zpsd8fokjna.jpg.html)

Russellxor
14th September 2015, 05:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217803511_zpswr7vnusr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217803511_zpswr7vnusr.jpg.html)

RAGHAVENDRA
14th September 2015, 05:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218448232_zpsemihpczc.jpg

சென்னை சாந்தி திரையரங்கில் இருக்கும் இப்படம் இரு பரிமாணங்களில் அந்தக் காலத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்காகவே தினமும் வந்து பார்த்து விட்டுப் போனதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்.

Russellxor
14th September 2015, 05:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217800693_zpshkffoxiv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217800693_zpshkffoxiv.jpg.html)

Russellxor
14th September 2015, 05:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217797370_zpsxl4mj2yn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217797370_zpsxl4mj2yn.jpg.html)

Russellxor
14th September 2015, 05:35 PM
புரொஜெக்டர் ரூமில்நின்றுஎடுத்த போட்டோ

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218064904_zpshqbj1qoh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218064904_zpshqbj1qoh.jpg.html)

Russellxor
14th September 2015, 05:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217817438_zpsossfmuse.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217817438_zpsossfmuse.jpg.html)

Russellxor
14th September 2015, 05:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442232614077_zpsaortys0w.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442232614077_zpsaortys0w.jpg.html)

Russellbpw
14th September 2015, 06:09 PM
டியர் செந்தில்வேல்
காலம் காலமாக தாங்கள் காத்து வரும் அபூர்வ ஆவணங்கள் அந்நாளைய நினைவுகளைத் தட்டி எழுப்புகின்றன. மக்கள் தலைவருடன் அந்நாளைய அகில இந்திய சிவாஜி மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை காட்சி தரும் அபூர்வமான புகைப்படம். மிக்க நன்றி.

ஒரு வேண்டுகோள்.

தாங்கள் பதிவிடும் அபூர்வ ஆவணங்கள் நிழற்படங்கள் யாவற்றிலும் தங்களுடைய பெயர் அல்லது ஏதாவது watermark பொறித்து பதிவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் இப்படிப்பட்ட அபூர்வ ஆவணங்களை சிலர் பல்வேறு தளங்களில் மீள் பதிவு செய்யும் போது மறந்தும் கூட அதற்கு நன்றி கூறுவதில்லை, பெயர் கூட குறிப்பிடுவதில்லை. மாறாக தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து அளிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கவும் தயங்காத கலிகாலமிது,

தாங்கள் இதற்கு பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பீர்கள் என்பது தெரியும் என்றாலும் என் மனது கேட்காத காரணத்தால் தங்களிடம் இக்கருத்தைக் கூற விரும்பினேன்.

இனிய நண்பர் திரு ராகவேந்தர் அவர்களே..


நீங்கள் கூறுவது மிக சரியே !

உதாரணமாக நான் இங்கு பதிவு செய்ததுகூட இணையதளத்தில் இருந்து எனக்கு மாறி...மாறி....ஷேர் செய்து வந்ததுதான்...எனக்கு கடைசியாக ஷேர் செய்த நபர் இதுபோல படங்களை பதிவிடாதவர் என்ற காரணத்தால் அதான் முக நூல் என்று மட்டும் குறிப்பிட்டு பதிவு செய்தேன்...காரணம் ஆவணம் யாருடையதோ அவர்களுக்குதான் அந்த credit பூரணமாக போகவேண்டும்.

உதாரணமாக தனியார் தொலைகாட்சியில் வந்த உரையாடல் திரு சேகர் பரசுராம் என்று நினைக்கிறன்..முகநூளில் பதிவு செய்து இருந்தார்...அவர் பதிவு செய்ததை சில வாக்கியங்கள் நீக்கிவிட்டு அவரது பெயருடன் பதிவு செய்துள்ளேன்..நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.

பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.

மேலும்....ஆவணத்தில் வாட்டர்மார்க் செய்வது நல்ல விஷயம் என்றாலும் அதில் கூட கேள்விகேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்விகேட்கலாமே ? உங்களிடம் உள்ள ஆவணம் வாட்டர்மார்க் போடுவதால் உங்களுடயதாகிவிட முடியாதல்லவா என்று யாராவது கேட்டால் ? காரணம் உண்மையான அதாரம் போட்டாலே நம்பகத்தன்மை இல்லை என்று கூறுகிற காலம் இது !

ஆகவே....இளைய திலகம் பிரபு கூறுவது போல...நம்பிக்கை.....அதுதானே எல்லாம் !

Rks

RAGHAVENDRA
14th September 2015, 06:26 PM
என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.

பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.

ஆர்கேஎஸ்,
பழமொழி, தத்துவம் இவையெல்லாம் மேம்போக்கான வாக்கியங்கள் அல்ல, அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதில் உண்மை புதைந்திருக்கிறது. நான் பலமுறை கூறியிருக்கிறேன். அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கும் மின்னணு ஊடகத்தில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. என்ன எழுதுவதாக இருந்தாலும் ஆவணங்களின் அடிப்படையில் தான் நாம் இங்கு பேச வேண்டும், அதுவும் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் வசூல் விவரங்களோடு விளம்பரம் கொடுத்திருந்து அது நம்மிடம் பிரதி இருந்தால் நம்மால் ஆணித்தரமாகக் கூற முடியும். அது இருந்தால் வாதம் எதற்கு என்று ஒரு குதர்க்கமான கேள்வியும் உங்களிடமிருந்து வரலாம். ஆனால் அது தேவையற்ற கேள்வி.

விவரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி ரசிகனானவன். அப்போதிலிருந்து பத்திரிகை விளம்பரங்களை சேகரித்தவன். பல நாட்களில் உணவு உண்ணக் கிடைத்த காசைக் கூட பத்திரிகை விளம்பரத்திற்காக வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தவன். காலப்போக்கில் என்னை மீறிய காரணங்களால் அவற்றில் பெரும்பகுதியை என்னால் பராமரிக்க முடியவில்லை.

லாஜிக் என்பது ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டும் தான் பேச முடியும். அதை ஏற்க மாட்டேன் என்பவர்களிடம் ஆதாரம் மட்டுமே தான் பதிலாகத் தந்து பேச முடியும்.

ஏனோ தானோ என்று உணர்ச்சி வசத்தில் ஆவேசப்பட்டு வசூல் விவரம் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. உங்களுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் திலகத்தின் படங்கள் மக்களிடம் சென்று சேருவதற்கு அயராது உழைத்தவர்கள் நாங்கள். எனவே தங்களுடைய சான்றிதழுக்காகவோ அல்லது இங்கே என்னைக் குறை கூறும் மற்ற நண்பர்களுக்காகவோ நான் சிவாஜியை ரசிக்கவில்லை. உங்களையெல்லாம் இங்கு வந்த பின் தான் எனக்குத் தெரியும். இணையம் என்ற ஒன்று கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அவர் புகழைப் பாட அவருக்காக உழைத்த என்னைத் தாங்கள் குறை கூறுவதால் எனக்கு எந்த இழிவும் ஏற்பட்டு விடாது. அதனால் நான் குறைந்து விடவும் மாட்டேன்.

வாசு சார் போட்ட பதிவில் இருந்த விஷயம் எனக்கு உடன்பாடாக இருந்ததால் நான் அவர் கூறுவதை ஆமோதித்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. அது மட்டுமின்றி தர்த்தி படத்தைப் பற்றி நஷ்டம் என்று விவாதம் வந்த பின்னரே நான் அது பற்றிய என் விளக்கத்தை அளித்தேன். இந்த தர்த்தி ஹிந்தி வெற்றிப் படம் என்பதை நானும் வாசுவும் முன்னரே மய்யத்தில் கூறியுள்ளோம். இது ஒன்றும் புதிய விஷயமில்லை.

தயவு செய்து என்னைக் குறை கூறுவதில் தங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

அதே போல தங்களிடமிருந்து பாராட்டை எதிர்பார்த்தும் நான் பதிவுகள் இடவில்லை.

RAGHAVENDRA
14th September 2015, 06:33 PM
ஆவணத்தில் வாட்டர்மார்க் செய்வது நல்ல விஷயம் என்றாலும் அதில் கூட கேள்விகேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்விகேட்கலாமே ? உங்களிடம் உள்ள ஆவணம் வாட்டர்மார்க் போடுவதால் உங்களுடயதாகிவிட முடியாதல்லவா என்று யாராவது கேட்டால் ?

ஆவணம் என்கின்ற போதே அதுவும் இணையத்தில் அது மீள் பதிவாகிறது என்கிற போது. அந்த ஆணவம் யாரால் முதலில் தரவேற்றப்பட்டது என்பதற்கான அடையாளமாகத் தான் வாட்டர் மார்க் போடப்படுகிறது. அது மீள் பதிவு செய்யப்படும் போது அது பற்றிய குறிப்பு இடம் பெறுவதால் படிப்பவர்கள் அதனைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். எனவே வாட்டர் மார்க் போட்டவர் தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தார் என்பதாக யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் வாட்டர்மார்க் மட்டுமே உரிமையாளரை அடையாளம் காட்டும். இது இன்றைய இணைய உலகில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

adiram
14th September 2015, 07:00 PM
ஆவணங்களை மட்டுமல்ல ஆய்வு கட்டுரைகளை கூட அப்படியே அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, மூளையைக்கசக்கி எழுதியவன் பெயரை குறிப்பிடாமல் அம்போவென்று விட்டு விடுவார்கள். இங்குள்ள பலருடைய கட்டுரைகளை பல்வேறு வலைத்தளங்களில் அவர்களுடைய சொந்த உழைப்பு போல பதித்திருப்பதை பார்த்திருக்கிறேன். என் கண்டனத்தையும் பதிவிட்டு இருக்கிறேன். ("இந்த வேலை செய்வதைவிட....." என்கிற ரேஞ்சுக்கு இறங்கி)

adiram
14th September 2015, 07:07 PM
செந்தில்வேல் சார்,

சாந்தி தியேட்டர் உட்புறம் எடுக்கப்பட்ட நிழற்பட பதிவுகள் அனைத்தும் மிக அருமை. அப்படியே மலரும் நினைவுகளில் மனம் சுழல்கிறது.

இதோடு நில்லாமல் அங்குள்ள 'ஷீல்டு காலரி'யையும் படமெடுத்து பதியுங்கள், ப்ளீஸ்.

Russellbpw
14th September 2015, 08:19 PM
ஆர்கேஎஸ்,


தயவு செய்து என்னைக் குறை கூறுவதில் தங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

.

ராகவேந்தர் சார்

உங்கள் மீது எனக்கு சிறு கோபம் உள்ளது உண்மைதான் மறைப்பதற்கில்லை. ஒரு நல்ல விஷயத்திற்காக அதுவும் உண்மை விஷயம் பொய்யாக திரிக்கபடுகையில் உங்களை போன்ற நடிகர் திலகம் அவர்களுடன் மிக மிக நெருங்கி பழகியவர் தான் ஆதரவு தரவேண்டும்.

நீங்களே யோசித்து பாருங்கள், எனக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவேனும் நீங்கள் செய்திருப்பீர்களா. உங்களை போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்ப்பது தவறா சொல்லுங்கள் சார் ?

Rks கூறும் தகவல்கள் சரியே...அல்லது...rks கூறும் தகவல் தவறு..இப்படி ஏதாவது கூட நீங்கள் பதில் எழுதியிருக்கலாமே. பம்மளார் அவர்கள் சுத்தமாக எதுவுமே எழுத வருவதில்லை அவர் தினசரி மையம் படித்தாலும் கூட...அவருக்கு வேலை பளு இருந்தாலும் இது போன்ற சந்தர்பங்களில் மட்டுமாவது வரமாட்டாரா..வந்து உண்மையை உரைக்க மாட்டாரா என்ற ஏக்கம் எனக்கு இருக்காதா ? அல்லது நம் மற்ற ரசிகர்களுக்கு இருக்காதா ? நீங்களாவது தகவலை அவரிடம் கேட்டு பதிவு செய்யலாமே என்று உங்களிடம் ஒரு சிறு கோபம் இருந்தது உண்மைதான்.

உங்களை தாழ்த்த வேண்டிய எண்ணம் என் தாயின் மீது ஆணையாக இல்லை. எல்லோருக்கும் அவர் அவரின் தாய் எவ்வளவு உயர்வானவர் என்பது உங்களுக்கு தெரியும். அந்த தாய் மீது ஆணையிட்டு கூறுகிறேன். உங்கள் மீது கோபம் சிறிது இருந்ததே தவிர உங்களை தாழ்த்தும் எண்ணம் எனக்கு சிறிதும் கிடையாது சார் !


இதை நான் தனியாக மினஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பி இருக்க முடியும். அப்படி செய்யாமல் இங்கு பகிரங்கமாக பதிவு செய்வதன் காரணம் என் மீதி தவறு உள்ளது என்பதால் மேலும் நான் பதிவு செய்தது இங்கு என்பதால். எனக்கு EGO கிடையாது ஆகவே தான் இந்த பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் !

மக்கள் திலகம் திரியிலும் அப்படிதான் இதுவரை இருந்துள்ளேன். என்மீது தவறு இருப்பின் நிச்சயம் நான் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோர தயங்கியதே இல்லை. அந்த பக்தர்களும் அதை அறிவார்கள் !

உங்கள் மனம் வேதனை அடைந்துள்ளதை புரிந்து கொள்கிறேன். தங்கள் காலில் நான் சாஷ்டாங்கமாக
நமஸ்காரம் செய்வதாக நினைத்துகொள்ளுங்கள் , நினைத்து , மூத்த சஹோதரர் நிலையில் இருந்து என்னை மன்னித்து விடுங்கள்..ப்ளீஸ் !

தங்கள் மனம் வருத்தப்ப்படுமாறு இனி நான் எழுதமாட்டேன். I promise on my mother !

rks

Subramaniam Ramajayam
14th September 2015, 08:36 PM
Senthilvel sir
usually we nt fans does not visit shanthi theatre on sundays only when some NT movies screening takes place we vit on sundays. please see my pm

tacinema
14th September 2015, 09:18 PM
Sivantha Mann profit records: Great show, particular bhaskar tiruchy, who brought in Sivantha mann profit proof.

I totally agree with Goldstar. Kalaiventhan from other thread should tender unconditional apology to NT and his fans and feel sorry for defaming and tweaking the history of Sivantha mann success. That is a decent thing to do. Will it happen? We hope that in the future, the other gang will behave as a good citizens and avoid defaming NT.

class and mass சேர்த்து திரைப்படங்கள் தர முடியம் என பல முறை சாதித்து கட்டியவர் எங்கள் நடிகர் திலகம். தமிழ் திரை உலகின் ஒரே நடிகன் and வசூல் மன்னர் NT புகழ் வாழ்க!!

Regards





Ragavendran sir,

I strongly suggest and wish Mr. Kalai Vendar should apologies to all NT fans for again and again defaming and giving false and in-correct information to park this topics. I have seen how Sivantha Maan made huge collections in so many re-run in our Madurai theaters....

Long live NT fame....

tacinema
14th September 2015, 09:42 PM
குளோப் தியேட்டரில் வெள்ளி விழாவை மிக எளிதாக கடந்திருக்கக் கூடிய சிவந்தமண் படத்தை ஓட்டக்கூடாது என்று திரையரங்கை நிர்பந்தித்ததெல்லாம் அந்நாளைய வரலாறு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறை சொல்லவரவில்லை. ஆனால் அவர் தங்களிடம் இருக்கிறார் என்பதற்காக நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ, நல்ல வசூல் செய்தும் அவர் படத்தைத் தோல்வி என்று எந்த அளவிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் சார்ந்த இயக்கத்தினர் செய்தும் அதனையெல்லாம் சந்தித்து வெற்றி கொண்டு தான் இறந்தும் 14 ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைவன் இறவாப்புகழுடன் இருக்கிறார்.

என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.

Dear Raghavendra,

what bothers me is the first part of your above post. sounds like a well planned motive to defame Sivantha Mann in its original release itself. சிவந்த மண் அழகான படம். மிக நன்றாக ஓடியுள்ள இந்த படத்தை அவர்கள் திசை திருப்பி உள்ளனர் - இப்போதும் செய்து கொண்டே தான் உள்ளனர். அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். இந்த முறை நாம் அதை செய்துள்ளோம்; மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். Hope they will stop defaming NT commercial success in the future.

One thing that I may differ with most of NT fans here and agree with Tiruchi Baskar is that we should focus more on NT unmatched commercial success. The reason is that everyone knows about NT acting versatility; so, no point in focusing on this aspect instead we should direct our energy into highlighting NT's commercial success.

Regards.

Harrietlgy
14th September 2015, 10:10 PM
Courtesy Mr. Sudhangan' Facebook

செலுலாய்ட் சோழன் – 89
பேசும் தெய்வம் வித்யாசமான கதைக் களத்தைக் கொண்டது!
இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசைமையைத்திருதார்!
இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்!
இது ஒரு புறமிருக்க!
1965 ம் வருடம் வந்த `திருவிளையாடல்’ திரைப்படத்தை பற்றி எழுதாமல் சிவாஜியின் சரித்திரமே நிறைவு பெறாது!
புராணப் படங்களில் ` திருவிளையாடல் தமிழகத்தையே புரட்டிப் போட்டது!
அதுவும் அந்த படம் வந்த கால கட்டம் மிகவும் முக்கியமானது!
அப்போது தமிழகத்தில் பகுத்தறிவும் பிரசாரம் தீவிரமடைந்திருந்த சமயம்!
கடவுள் மறுப்பு என்பது தீவரமாகிக்கொண்டிருதது!
திமுக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது!
அந்த சமயத்தில் வந்த புராண படம் தான் ` திருவிளையாடல்’
படத்தின் பிரும்மாண்டம், படத்தின் இசை, திரைக்கதை அமைப்பு, மிக அருமையான வசனங்கள்!
படத்தின் இயக்குனர் ஏ.பி நாகராஜன் தமிழக மக்கள் மனதில் மிகபபெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார்!
அவருக்கு அந்த சிம்மாசனத்தை போட்டுத்தந்தவர் நடிகர் திலகம் தான்!
அந்தப் படம் வந்த பிறகு சிவபெருமான் இப்படித்தான் இருப்பார் என்று மக்கள் நம்ப ஆரம்பிக்கிற அளவிற்கு சிவாஜி அப்படியே சிவனாக வாழ்ந்திருந்தார்!
கண்ணதாசன் தன் தமிழை வைத்து பாடல்களில் விளையாடியிருந்தார்!
என் தாயாருக்கு அந்த படத்தை பார்க்க ஏக துடிப்பு!
அதனால் முதல் நாளே அழைத்துப் போயிருந்தார்!
தியேட்டரில் திருவிழாக் கூட்டம்!
இந்தப் புராணப்படங்களையெல்லாம் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன் மகள் விஜயலட்சுமி பெயரில் துவக்கிய விஜயலட்சுமி பிக்சர்ஸ் பேனிரில் தான் வெளியிட்டார்!
படம் துவங்கும்போது திருமகளான லட்சுமி ஒரு தாமரை மலரில் அமர்ந்திருப்பாள்!
அதன் கீழே நிறுவனத்தின் பெயர் வரும்!
அந்த காட்சி அப்படியே இருக்கும்போது ஒரு பின்னனிக் குரல் ஒலிக்கும்1
அது அந்த படத்தைப் பற்றிய ஒரு அறிமுகமாகவே இருக்கும்!
அந்த குரலுக்குச் சொந்தக்காரர்!
அப்படித்தான் `திருவிளையாடல்’ படமும் துவங்கும்!
பேரன்புமிக்க ரசிக பெருமக்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம்!
ஆண்டவன் அன்பர்களுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் என்கிற பழம்பெரும் இதிகாசத்திலிருந்து சில படலங்களை ஈசன் விளையாட்டெல்லாம் திருவிளையாட்டு என்ற கருத்தினை மற்றும் சில இதிகாசங்களிலிருந்து சிலவற்றை தொகுத்து திருவிளையாடல் என்கிற தலைப்பில் உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்!
என்று படம் ஆரம்பிக்கும்!
படத்தின் ஆரம்பம் கைலாயத்திலிருந்து துவங்கும்!
பூதகனங்களும், முனிவர்களூம், ஒம் நமசிவாய என்று குழுவாக ஈசனை வணங்குதல் போல் படம் துவங்குபோது தியேட்டரை சுற்றி கண்ணை சுழலவிடவேண்டும்!
பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள்!
அவர்களுக்கு தாங்கள் பார்ப்பது சினிமா என்கிற நினைப்பே இல்லை!
ஒம் நமசிவாய முடிந்ததும், தாரை தப்பட்டை ஒலிகள்!
ஏ.பி.நாகராஜன் படத்திற்கு மிகப்பெரிய பலமே அரங்க அமைப்புகள்தான்!
அந்த நாளில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்ட் டைரக்டர் கங்கா!
சொர்க்கத்தை கூட ஸ்டுடியோவிற்குள் கொண்டு வந்துவிடுவார்!
கைலாயம் என்றால் கைலாயமாகவே இருக்கும்!
பல வேத விற்பன்னர்களை கேட்டு,ஸ்தபதிகளோடு பேசித்தான் அவர் புனிதமான அரங்குகளை அமைப்பார்!
அப்படிப்பட்ட ஒரு கைலாய அரங்கில் பல்வேறு வாத்யங்களை வாசித்தபடியே படம் துவங்கும்!
சிவனுக்கு பிரதானமே நந்தி!
அந்தி நந்தி மிருதங்கம் வாசிக்கும்!
நந்திக்கு வேட்டி கட்டி, அந்த நந்தி அமர்ந்தபடி வாத்யத்தை வாசிக்கும்போதே பிருமிப்பாக இருக்கும்!
அப்போது நாரதர் வருவார்!
சீர்காழியின் குரல் கம்பீரத்தில் ` சம்போ மகாதேவா’ பாடல் கணீரென்று ஒலிக்கும்!
அடுத்து பெண்கள் வீணை மீட்டு, யாழிசைத்து, குழுவாக நடனமாடுவார்கள்!
இவையெல்லாம் முடிந்ததும் உமையவளாக படத்தில் நடித்த சாவித்திரிக்காக சுசீலாவின் குரல் ஒலிக்கும்!
நமச்சிவாய! நாதன் தாழ் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாழ் வாழ்க!
ஈசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி!
ஆராத இன்பமருளும் மலை போற்றி!
இந்தப் பாட்டை உமையவள் பாடி முடித்ததும் புலித்தோல் உடையுடன் தத்ரூபமாக சிவனாக சிவாஜி வருவார்!
ஒரு பத்து நிமிடம் அடுத்த வசனம் காதில் விழாது!
நான்காவது முறை படம் பார்த்தபோதுதான் அடுத்து கைலாயத்திற்கு வந்திருக்கும் நாரதர் என்ன பேசினார் என்பஹே காதில் விழும்!
சிவாஜி மக்கள் சிவனாகவே கண்டதன் விளைவு அது!
அடுத்து நாரதர் துவக்குவார்
`உமா மகேஸ்வரே!உலகக் காக்கும் பரம்பொருளே! திருவருள் புரியுங்கள் சுவாமி!
உடனே சிவன் பேசுவார்!
`உமையவளே! என் உள்ளம் கவர்ந்த மலைமகளே!
தாய்க்குலத்தின் தலைமகளே!
உலகத்தவர் போற்றும் வடிவாம்பிகையே!
வருக அமர்க! என்றதும் உமையவள் ஈசனுக்கு பக்கத்தில் சென்று அமர்வாள்!
`சக்தி பூதகனங்களின் வாத்ய ஒலியும்,சப்தரிஷிகளின் வேதம்,நந்தியின் மத்தளம்,நாரதகானம்,வாணியின் வீணை,சப்தகன்னிகளின் ஆட்டம், கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தோம்!உள்ளம் குளீர்ந்திருக்கிறது! வேண்டுவன கேள் தேவி!
`எங்கும் நிறைந்த எம்பரம்பொருளே என் நாயகா !எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று எண்ணுவதை தவிர,வேறென்ன கேட்க போகிறேன்! திருவருள் புரியுங்கள் ஸ்வாமி!
`எங்கும் எதிலும் வெற்றியே பெற்று எண்ணங்கள் யாவும் சித்தி பெற என் இதயம் கனிந்த நல்லாசிகள்!நலமடைவீர்களாக!
இப்போது நாரதர் துவங்குவார்!
`சம்போ மகாதேவா!சர்வேஸ்வரா! சமூகத்தை நாடி ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!
`ம் ( என்றபடி சிவன் ஒரு நமுட்டுச் சிரிப்பை சிரிப்பார்)
`நாரதா! புரிகிறது! இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?’
`சிவசிவ! அப்படி எண்ண வேண்டாம்! உண்மையாகவே ஒரு நன்மையான காரியத்திற்காகவே வந்தேன்!
இப்போது உமையவள் சிரித்தபடியே!
`நாரதனின் கலகம் நன்மையில் முடியும் என்றுதானே கூறுவார்கள்! விஷயத்தை சொல்!
`சர்வேஸ்வரா! எவருக்குமே கிடைக்காத பழம் ஒன்று எனக்கு கிடைத்தது! இது சாதாரண பழமல்ல! ஞானப்பழமென்று சான்றோர்கள் கூறினார்கள்! இதை நான் அருந்துவதை விட உலகையே காத்து ரட்சிக்கும் தாங்கள் அருந்தினால் பலனுண்டு என்று கொண்டு வந்திருக்கிறேன்!
`பழத்தை கொண்டு வந்து நாடகத்தை துவங்குகிறாய்?’ நடத்து!
`உண்மையாகவே சொல்கிறேன்! வேறு எந்த நோக்கத்தோடும் அல்ல! நீங்கள் உண்ணவேண்டுமென்ற எண்ணத்தோடுதான் கொண்டு வந்திருக்கிறேன்! ஏற்றுக்கொள்ளுங்கள்!
நாரதர் பழத்தை சிவனிடம் கொடுப்பார்!
`பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டாயா! சரி! உன் சார்பாக நானே அதை துவக்குகிறேன்!
`என்ன ஸ்வாமி! பாசத்தோடு நாரதன் பழத்தை கொண்டு வந்திருக்கிறான்! அதை அருந்தாமல் அவனை பரிகாசம் செய்கிறீர்களே!
சிவனின் அடுத்த வார்த்தையிலிருந்தே திருவிளையாடல் துவங்கும்!

RAGHAVENDRA
14th September 2015, 10:25 PM
நண்பர்களே,
நான் மீண்டும் மீண்டும் சொல்லுவதாக எண்ண வேண்டாம்.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் மின்னணு ஊடகங்களின் பெருக்கத்தில் தகவல் தொடர்பு என்பது மிக மிக எளிதாகி விட்டது. தகவல் தொடர்பு என்ற வகையில் இது நமக்கு நன்மை பயக்கும் என்றாலும் கருத்துப் பரிமாற்றங்கள் வரும் போது கருத்துரிமைகள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாத சூழலும் உள்ளது. அதாவது நாம் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்ல முடியாத அளவிற்கு ஊடகங்களின் தாக்கங்கள் உள்ளன.

முழுதும் காகித யுகத்தில் இருந்த போது தகவல்கள் அச்சு வடிவில் இருந்த கால கட்டத்தில் நமக்கு நாளிதழ்களும் பருவ இதழ்களும் ஆளுமை பெற்ற ஊடகங்களாக இருந்து வந்தன. இதன் மூலம் சினிமா உலகம் மிகப் பெரிய பலன் பெற்று இன்றைக்கு நூற்றாண்டு விழா காணும் நிலையில் உள்ளது.

நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த விளம்பரங்கள் செய்திகள் போன்றவை அனைவராலும் பாதுகாத்து வைக்கப்படக்கூடிய சூழல் அன்றைய கால கட்டத்தில் குடும்பங்களில் கிடையாது. சினிமா என்றாலே பெற்றோர் விரட்டி அடிக்கும் கால கட்டத்தில் ரசிகர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்களுடைய கஷ்டமான பொருளாதார சூழலிலும் விளம்பரங்களை சேமித்து வந்துள்ளனர். அது எல்லோராலும் முடிந்ததில்லை, சமுதாயத்தில் 0.5 சதம் அளவிற்கு மேல் அவை இருந்திருக்க வாய்ப்பில்லாத கால கட்டம்.

அந்தக்காலத்தில் விநியோகஸ்தர்கள் தரக்கூடிய விளம்பரங்களில் பெரும்பாலும் வசூல் விவரங்கள் இருக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் மிகச் சில தயாரிப்பாளர்களே வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ஆவலுடன் தகவல் சேகரித்து அவரவர் நடிகர்களுக்கான மலர், நோட்டீஸ் என வெளியிடுவதன் மூலமாகவே ஓரளவிற்கு உண்மையான வசூல் வந்துள்ளது. இதில் தவறு என்பது அதிகபட்சம் ஐந்து சதம் வரையில் இருக்கலாமே தவிர முழுமையாகப் புறக்கணிக்க முடியாதவையாகும். இது சிவாஜி, எம்.ஜி.ஆர். என அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் பணமா பாசமா படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் போது தமிழக மெங்கும் புதியதாக ஜெமினி மன்றங்கள் முளைத்தன. ஆளாளுக்கு அங்கங்கே ஜெமினி பெயரில் மன்றம் ஆரம்பித்து அவர்களும் தங்கள் பங்கிற்கு வசூல் விவரங்களை வெளியிட்டு மூவரில் ஜெமினி தான் சாதனைச் சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி என்றெல்லாம் கூறிக் கொண்டனர்.

ஆனால் காலப்போக்கில் மின்னணு யுகத்தில் திரையரங்குகளும் தப்பவில்லை. பல திரையரங்குகள் வசூல் விவரங்களடங்கிடய டிசிஆர் என்கிற ஆவணத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வைத்துக் கொண்டு அதற்குப் பின்னர் உள்ள விவரங்களை மட்டுமே பராமரிக்கத் தொடங்கின. அதற்கு முந்தைய ஆண்டுகளின் டிசிஆர் போன்ற விவரங்களை அவர்கள் பாதுகாத்ததாகத் தெரியவில்லை, அவை பற்றிய விவரங்கள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இது ஒரு பக்கம்.

இன்னொரு பரிமாணம், தயாரிப்பாளர்கள் தரப்பு. பல தயாரிப்பாளர்கள் புதிய தயாரிப்பாளர்களாயிருப்பர், அவர்களுக்கு டிசிஆர் விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. அல்லது அதனை வெளியிட தயங்கியிருப்பார்கள். இதற்கு வருமான வரி போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்க்லாம். இது போன்ற சூழலில் தயாரிப்பாளர்கள் தங்கள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் கூட அதைத் தோல்விப் படம் என்று அவர்களாகவே சித்தரித்திருக்க வாய்ப்புண்டு.

இது போன்ற பல காரணங்களால் நம்மால் பழைய படங்களின் வசூல் விவரங்களை சரிபார்க்க முடியாது. நம்முடைய ரசிகர் மன்ற நோட்டீஸில் உள்ள விவரங்கள் உண்மை என்றாலும் கூட அவையும் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என்கிற அவசியம் வந்தால் அதற்கான விவரங்களை சம்பந்தப்பட்ட திரையரங்குகளோ அல்லது தயாரிப்பாளரோ தான் உதவ வேண்டும். இந்த இரு தரப்பிலும் தகவல் பெற நமக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை.

பத்திரிகை விளம்பரத்திலும் கூட ஒரு சில அபூர்வமான சந்தர்ப்பங்கள் தவிர பெரும்பாலும் வசூல் விவங்கள் இடம் பெறாது, திரையரங்குகளிலும் விவரம் பெற முடியாது, தயாரிப்பாளர் தரப்பிலும் விவரம் கிடைக்காது என்கிற போது எந்த அடிப்படையில் நாம் வசூல் விவரங்களைப் பற்றி விவாதிக்க முடியும்.

அனுமானங்களும் கணக்கீடுகளும் ஏட்டளவில் எழுதும் போது நன்றாக இருக்கலாமே தவிர ஆதாரமாக பயன்படுத்த முடியாது.

சாதனைகளை நிரூபிக்க வேண்டுமென்றால் ஓடிய நாட்கள் தான் சிறந்த அளவுகோலாக இருக்கும். அதற்கு நிச்சயமாக விளம்பரங்கள் கை கொடுக்கும். அவை ஓரளவிற்கு கிடைத்து வருகின்றன. அதுவும் நம் பம்மலாரின் ஆவணப் பதிவுகள் மூலம் இவற்றிற்குத் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் தங்களிடம் இருக்க்க் கூடிய பல பழைய பிரதிகளின் நகல்களுக்கே நல்ல கட்டணம் வசூலித்து சம்பாதிக்கின்றன. எனவே இந்த விளம்பரங்களை வைத்து நாம் நூறு நாட்கள், வெள்ளி விழா என ஒரு படத்தின் ஓட்டத்தின் கால அளவை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதில் அனுமானங்களும் கணக்கீடுகளும் நிச்சயமாக சரியான தீர்வை அடைய உதவும்.

இன்றைய கால கட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் யாவுமே ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே நடக்கின்றன. நம்முடைய இந்த்த் திரிகளின் விவாதங்களும் அவ்வாறே. எனவே எந்த விதமான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்க்க் கூடும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப நம் வாதங்களை அமைத்துக்கொண்டால் அதில் அர்த்தமிருக்கும்.

எனவே மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் வசூல் விவரங்களைப் பற்றிய விவாதங்களை, குறிப்பாக ஒப்பீடு விவாதங்களை முற்றிலுமாக தவிர்க்குமாறு நமது நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்..

RAGHAVENDRA
14th September 2015, 10:51 PM
டியர் ஆர்கேஎஸ்
பொதுவான விஷயத்திற்கு, அதுவும் யூனிவர்சல் ட்ரூத் எனப்படும் நிரூபிக்கப்பட்ட விஷயத்திற்கு, யாராவது ஒருவர் சொன்னாலே போதுமானது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சிவந்தமண் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் என்பதை எந்த சிவாஜி ரசிகனும் மறுக்கப்போவதில்லை. தங்களுக்கு நான் ஆதரவாக பதிவிடவேண்டுமென்றால் புதியதாக ஏதாவது சொல்லவேண்டும். அதற்கு அவசியமே இல்லை.

நான் ஒப்பீடுகளைத் தவிர்க்கிற காரணத்தால் அந்த விவாதத்தில் நான் நுழைய விரும்பவில்லை. அதற்காக சிவந்தமண் படத்தின் வெற்றியைப்பற்றி திரு பாஸ்கர் கூறிய கருத்திலிருந்து நான் மாறுபடவில்லை. அது வேறு படத்துடன் ஒப்பீடு செய்யப்படுவதைத் தான் நான் தவிர்க்கிறேன். அதற்காக நான் மாற்று முகாமின் அன்பைப் பெறுவதற்காக அமைதியாக இருக்கிறேன் என்று காரணமும் கற்பிக்கப்பட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை.

ஒப்பீடுகளைக் கடந்து சிவந்தமண் படத்தின் வெற்றியே கேள்விக்குறியாக சித்தரிக்கும் சூழல் வந்தபோது தான் நான் என் கருத்தைக் கூற வந்தேன். நண்பர் ஸ்ரீராம் அவர்கள் கோபுவின் புத்தகத்திலிருந்து அனுப்பிய நிழற்படத்தை மேற்கோள் காட்டி நேற்று என் கருத்தைக் கூறினேன். அதைத் தொடர்ந்து இன்று காலை நண்பர் வாசு அவர்களும் மிகச்சிறப்பாக சிவந்த மண் திரைப்படத்தின் வெற்றியைப் பற்றிய கருத்தைக் கூறினார். தர்த்தி ஹிந்திப் படம் தோல்விப்படமே என ஸ்ரீதர் அவர்களின் நூலிலும் சரி, கோபு அவர்கள் எழுதிய நூலிலும் குறிப்பிட்டிருந்ததற்குத் தான் என்னுடைய கருத்தினைக் கூறினேன்.

என்னுடைய நிலைப்பாட்டில் நான் புதியதாக எந்த மாற்றமும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கோ அல்லது மற்ற நண்பர்களுக்கோ நான் ஆதரவு தருவதில்லை என்று நான் எந்த நிலைப்பாட்டையும் எடுத்து என் கருத்தினைத் தீர்மானிப்பதில்லை.

இந்த அடிப்ப்டையில் என் பதிவுகளைப் படித்திருந்தீர்களானால் என் மேல் எந்தத் தவறுமில்லை என்பதைத் தாங்கள் மட்டுமல்ல இங்கு அனைவருமே புரிந்து கொள்வீர்கள்.

அதே போல புதிய தலைமுறை இதழின் தலையங்கத்தைக் கண்டித்து எழுதியது மட்டுமின்றி நடிகர் திலகத்தின் சமூதாயத்தொண்டிற்கோர் சான்றாக அவர் நடத்திய பாரதி விழாவைப் பற்றிய பேசும்படம் பத்திரிகை பக்கம் ஒன்றையும் இங்கே பகிர்ந்து கொண்டேன். அதை இங்கே எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. காரணம் அதைப் பற்றிய பதிவு ஏதும் இங்கு வரவில்லை. ஆனால் முகநூலில் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.

மன்னிப்புக் கேட்பது என்பதெல்லாம் நண்பர்களுக்குள் அறவே தேவையற்ற ஒன்று. கருத்துப் பரிமாற்றங்களில் கோபம் வரும். எனக்கு அதிகமாகவே வரும். அதை நான் நேரடியாகவே வெளிப்படுத்தி விடுவேன். அவ்வளவு தான். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறு பேசுவதோ எழுதுவதோ என்னிடம் கிடையாது. அதைப் புரி்ந்து கொண்டால் போதும்.

ifohadroziza
14th September 2015, 11:22 PM
அன்பு நண்பர்களே
தங்களால் கஷ்டப்பட்டு மூளையை கசக்கிப்ளிநது எழுதிய அற்புதமான கட்டுரைகளை copy செய்துபதிவிட்டிருக்கிறோம். நமது இதயதெய்வம் புகழ் மற்றும் அவரைப்பற்றிஉண்மையான செய்திகள் எல்லோரிடமும் கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறொன்றும் கிடையாது.சமிபத்தில் எங்களது வங்கி whatsapp இல் மிக பெரிய வாக்குவாத த்திற்கு திரு.ராகவேந்திரா சார் பதிவிட்ட பாரதி விழா தான் எனக்கு கைகொடுத்தது.சிவாஜி என்ற மாபெறும் கலைஞன் சமூகத்தில் எவ்வளவு அக்கறையுடன் எத்தனை திறமைசாலிகளுக்கு விழா எடுத்திருக்கிறார் எனபதை இன்றைய
தலைமுறைக்கு பறைசாற்றவே. தயவு செய்து ஒரு வேண்டுகோள் whatsapp மூலமும் பகிரவும்.நன்றி.

ifohadroziza
14th September 2015, 11:27 PM
dear ravikiran
நக்கீரன் பதிவை whatsapp மூலம் பகிரவும்

Russellxor
14th September 2015, 11:42 PM
செந்தில்வேல் சார்,

சாந்தி தியேட்டர் உட்புறம் எடுக்கப்பட்ட நிழற்பட பதிவுகள் அனைத்தும் மிக அருமை. அப்படியே மலரும் நினைவுகளில் மனம் சுழல்கிறது.

இதோடு நில்லாமல் அங்குள்ள 'ஷீல்டு காலரி'யையும் படமெடுத்து பதியுங்கள், ப்ளீஸ்.

ஆதிராம் சார்
நான் ஞாயிறு அன்று விக்ரம்பிரபுவை சந்தித்து விட்டு மாலை சாந்திக்கு சென்று திரு. வேணுகோபால் அவர்களிடம் அனுமதி பெற்று எடுத்த போட்டோக்கள் தான் அவை.அன்று மாலையே கோவை திரும்ப வேண்டி இருந்ததாலும்,நண்பர்களின் வருகைக்காக காத்திருக்க வேண்டி இருந்ததாலும்....
சாந்தியை இடிப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற காரணத்தாலும்.,,

சாந்தி இடிப்பதற்குமுன்
இனி சென்னை வரும் வாய்ப்பு கிடைத்தால் தங்களின் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.அது என் ஆசை மட்டுமல்ல,எல்லாருடைய ஆசையாகவும் இருக்கும்.

RAGHAVENDRA
15th September 2015, 07:44 AM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Anna1.jpg

திராவிட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுடன் நடிகர் திலகம்.

இன்று அண்ணாவின் பிறந்த நாள். அண்ணா அவர்களின் இதயத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டு விட்டவர் நடிகர் திலகம். அரசியல் அவர்களைக் கொள்கை ரீதியாகப் பிரித்தாலும் நட்பு ரீதியாகப் பிரிக்க முடியவில்லை. எத்தனையோ சூழ்ச்சிகளை இருவருமே அடையாளம் கண்டு கொண்டு தங்களுடைய பரஸ்பர நட்புணர்வைப் பேணி வந்தனர். அண்ணா இறுதியாகப் பங்கேற்ற உயர்ந்த மனிதன் விழாவில் அவரைக் கலந்து கொள்ளாமல் செய்ய சதித்திட்டங்களை முறியடித்து பிடிவாதமாக கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை நடிகர் திலகத்திற்கு அளித்தார்.

அண்ணா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய கடைசி அதிகார பூர்வமான நிகழ்ச்சி நடிகர் திலகத்தின் 125வது படமான உயர்ந்த மனிதன் விழாவேயாகும்.

அன்பு நண்பர் ஆவணத்திலகம் பம்மலாரின் உபயத்தால் பொம்மை மாத இதழில் வெளியான கட்டுரையின் நிழற்படங்கள் நம்முடைய பார்வைக்கு.



நடிகர் திலகத்தின் 125வது படவிழா

["உயர்ந்த மனிதன்" விழா : 15.12.1968 : சென்னை]

வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1969

முதல் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4589a.jpg

மூன்றாவது பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4591a-1.jpg

நான்காம் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4592a-1.jpg

ஐந்தாம் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4593a-1.jpg

ஆறாம் பக்கம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4595a-1.jpg

[இந்த விழாத் தொகுப்புக் கட்டுரை மொத்தம் ஆறு பக்கங்களைக் கொண்டது.]

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th September 2015, 07:55 AM
திரு முத்தையன்
மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படத்தின் நிழற்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. இப்படத்தின் இவ்வளவு தெளிவான நிழற்படங்கள் இணையத்தில் இதுவே முதன் முறை. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

Russellzlc
15th September 2015, 02:14 PM
கலை சார்,

பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.

இதற்கெல்லாம் மேலே ஒன்று.

'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.

அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.

'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.

திரு.வாசு சார்,

நேற்று நான் திரியை பார்க்க முடியவில்லை. அதனால், பதில் அளிக்க முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும்.

சிவந்த மண் திரைப்படத்தை தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை சார். நன்கு வசூல் ஆன படமும் கூட. ஆனால், முதலீடு அதிகம் என்பதால் எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. சொல்லப்போனால் நம்நாடு திரைப்படத்தை விட வசூல் குறைவுதான். அதுவும் கூட நாங்களாக ஆரம்பிக்கவில்லை. திருச்சி பாஸ்கர் அவர்களும், ஆதிராம் அவர்களும் தேவையின்றி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்ததால்தான் இந்த பதிலை அளிக்க வேண்டி வந்தது.

அதிலும் கூட சிவந்த மண்ணை விட நம்நாடு அதிகம் வசூல் என்பதற்கு எங்கள் நண்பர்கள் வெளியிடும் ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றாலும் சிவாஜி ரசிகர்களால் ஆவணத் திலகம் என்று போற்றப்படும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களே சிவந்தமண்ணை விட நம்நாடு திரைப்படம்தான் (ஓவர் ஆல் தமிழ்நாடு) அதிகம் வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சிவாஜி ரசிகரே சொல்லிவிட்டாரே, அதுவும் ஆவணங்களை வைத்திருப்பவர் என்ற அடிப்படையில்தான் துணிந்து தைரியமாக சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் சிவந்தமண்ணை விட நம்நாடு வசூல் அதிகம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றுதான் எனக்கு தகவல். ஆனால், சில மணி நேரங்களில் திரு.ஆர்.கே.எஸ்.பதிவை பார்த்ததும் இதென்ன புதுக்குழப்பம்? என்று நினைத்தேன். எங்கோ தவறு நடந்திருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை.

பொய் சொல்வது மனசாட்சிக்கு விரோதம் என்பது இருக்கட்டும். ஒரு முறை பொய் சொன்னோம் என்று தெரிந்து விட்டால், நமது முகம் தெரியாவிட்டாலும் கூட, அதன் பிறகு நமது எழுத்துக்கு என்ன மரியாதை கிடைக்கும்?

இனி நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது. ஒரே வழி, திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உண்மையை வெளியிடுவதுதான். இதற்காக அவர் திரிக்கு வரவேண்டும் என்று அவசியம் இல்லை. செப்டம்பர் 21ம் தேதி அன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு எல்லாரும் வாழ்த்து தெரிவிப்போம். அதற்கு நன்றி சொல்ல அவர் வருவார். கடந்த ஆண்டு நான் பிறந்த நாள் வாழ்த்து சொன்னபோது எங்கள் திரிக்கு வந்து எனக்கு நன்றி தெரிவித்தார். 22ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன்.

தங்கள் மீதும் திரு.ராகவேந்திரா சார் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. உங்கள் இருவருக்கும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்.

நம்நாடு படம் சிவந்தமண்ணை விட அதிகமாக வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் எனக்கு கிடைத்தது. அதனால்தான், துணிந்து அதை நான் பகிர்ந்து கொண்டேன். நானாக கற்பனை செய்து சொல்லவில்லை. அப்படி நான் பொய் சொல்வது உறுதியானால், மக்கள் திலகம் திரியிலும், மதுரகானம் திரியிலும், இங்கும் வந்து ‘நான் பொய் சொல்லிவிட்டேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று பகிரங்கமாக கோரி அத்துடன் திரியில் இருந்தும் வெளியேறி விடுகிறேன். நன்றி.

திரு.ராகவேந்திரா சார், நண்பர்களுக்குள் மன்னிப்பு கோருவது தேவையில்லை என்று கூறியுள்ள உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி சார். இருந்தாலும் தவறு செய்தால் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன். வாசு சாருக்கு அளித்துள்ள வாக்குறுதியை உங்களுக்கும் நான் அளிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்த பிறகாவது நீங்கள் கூறியுள்ளதை போல திரு.பாஸ்கர் அவர்களும் திரு.ஆதிராம் அவர்களும் தேவையற்ற ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 02:17 PM
நண்பர் கலை,

சிவந்த மண் நம் நாடு பற்றிய வசூல் சர்ச்சையில் அதே போல் நீங்களும் தகவல் சரிதானா என்று தெரியாமல் சுவாமி இதை வினோத்திடம் பிஎம் மூலமாக தெரிவித்தார் என்று சொல்லியிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல கண்டனக்குரியதும் கூட. நீங்கள் இதுவரை நேரில் சந்திக்காத அலைபேசியில் கூட உரையாடாத ஒருவரைப் பற்றி ஒரு தவறான தகவலை பரப்புவது எந்த விதத்தில் சரி? இதன் மூலம் ஒரு சிவாஜி ரசிகர் எங்கள் படம்தான் அதிக வசூல் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஒரு விளம்பர தேடல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இல்லை சிவாஜி ரசிகர்கள் மத்தியில் அவர் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா? நண்பர் சுவாமி நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளினால் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்.


அன்புடன்

நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

நான் ஏற்கனவே எனது முந்தைய பதிவில் கூறியிருந்தபடி, தங்களுக்கு பதில் அளித்து விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், பிஎம். சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறீர்கள். அதனால் பதில் அளிக்கிறேன். தாங்களும் ஒவ்வொரு பதிவிலும் உண்மைக்கு மாறாக எதையாவது சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது சேறு வீச வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நியாயம் எல்லாம் எங்கே தெரியப் போகிறது?

இருந்தாலும் உண்மை புரிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம். நான் கூறியிருந்தது இது.

//திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.//

இதில் பம்மலார் எஸ்.வி.க்கு பி.எம்.அனுப்பினார் என்று எங்கு நான் சொல்லியிருக்கிறேன்? திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் ஒப்புக் கொண்டதை பிஎம் தகவல்கள் மூலம் நான் அறிந்தது கொண்டேன். அவ்வளவுதான். நானும் எஸ்.வி.யும் பிஎம்.மூலம் அவ்வப்போது தொடர்பு கொள்வது உண்டு.

திரு.வாசு சாருக்கும் திரு.ராகவேந்திரா சாருக்கும் சொன்ன பதிலை பார்த்திருப்பீர்களே. அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை உங்களுக்கும் அளிக்கிறேன். 22ம் தேதி வரை காத்திருக்கிறேன். அதுவரை பதிவுகள் இடமாட்டேன். 23ம் தேதி பதிவிடுவேன்.

சாதனை சிகரங்களில் இடம் பெற்றுள்ள ராஜா, ராஜராஜசோழன், திருவருட்செல்வர் ஆகிய படங்கள் பற்றிய உங்கள் தவறான தகவலை நான் சுட்டிக்காட்டியிருப்பதை மறுக்காததற்கும் நன்றி. இதை நண்பர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கவனிக்கட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 02:18 PM
நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு,

21-ம் தேதி தங்களுக்குப் பிறந்தநாள். கடந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் திரிக்கு வந்து நன்றி தெரிவித்தீர்கள். இங்கே நான் விட்டிருக்கும் சவாலால் இந்த ஆண்டு அந்த தேதியில் திரிக்கு வந்து உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாத நிலைமை.

எனவே, இப்போதே முன்னதாகவே தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாக திரு.முரளி தெரிவித்துள்ளார். மன்னிக்க வேண்டும். மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்று மனதால் கூட நான் நினைக்க மாட்டேன். ஆனால், நீங்கள் திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாகத்தான் எனக்கு தகவல். என்ன நடந்தது என்ற உண்மையை விளக்க வேண்டும் என்று அன்போடு கோருகிறேன். 22-ம் தேதி வரை உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.

தங்களுக்கு மீண்டும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
15th September 2015, 02:19 PM
என்னை மன்னிப்புகோர சொல்லியுள்ள நண்பர் திரு.டிஏ சினிமா அவர்களுக்கு,

நான் சொல்வது பொய் என்றால் நிச்சயம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன் வாசு சாருக்கும் ராகவேந்திரா சாருக்கும் வாக்குறுதி அளித்தபடி திரியில் இருந்தும் விலகுகிறேன்.

அப்புறம்..... நீங்கள் எங்கள் திரிக்கு வந்து சொன்ன பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு திரு.சைலேஷ் அவர்கள் உங்களுக்கு பல முறை (12 முறை) நினைவூட்டல் செய்துள்ளார். உண்மையை வெளியிட்டு அவர் அறிவித்துள்ள பரிசுகளை பெற்றுக் கொள்ளலாமே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

adiram
15th September 2015, 03:55 PM
அதுவும் கூட நாங்களாக ஆரம்பிக்கவில்லை. திருச்சி பாஸ்கர் அவர்களும், ஆதிராம் அவர்களும் தேவையின்றி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்ததால்தான் இந்த பதிலை அளிக்க வேண்டி வந்தது.

இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்த பிறகாவது நீங்கள் கூறியுள்ளதை போல திரு.பாஸ்கர் அவர்களும் திரு.ஆதிராம் அவர்களும் தேவையற்ற ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

அன்புள்ள நண்பர் கலை அவர்களுக்கு,

முதலில் நீங்கள் 'இன்ன தேதி வரை பதிவிடுவதில்லை', 'அந்த தேதி வரை பதிவிடுவதில்லை' என்பதுபோன்ற விரதங்களை கைவிடுங்கள். உங்கள் நீல வண்ண பதிவுகளால் திரிகள் களைகட்டுகின்றன என்பதோடு, விவாதப்பொருளும் கிடைக்கிறது. திரிகள் என்பதே விவாதிப்பதற்குத்தான் என்பதை நம்புபவன் நான்.

அடுத்து நண்பர் திருச்சி பாஸ்கர் அவர்களும் நானும் ஒப்பீடு விவாதத்தை துவங்கியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
என்னைப்பொருத்தவரை இந்த வசூல் விவரங்களை எப்போதும் விவாதிக்க விரும்பாதவன்.
ஆனால் படம் ஓடிய நாட்கள் பற்றியும் அதுபற்றிய செய்தித்தாள் விளம்பரங்களையும் அதிகம் விரும்புபவன். நம்புபவன். காரணம் அவை தயாரிப்பாளர்களால், விநியோகஸ்தர்களால் கொடுக்கப்பட்டவை என்பதால். இப்போது வரக்கூடிய சிற்சில தியேட்டர் பெயர் தவறுகள் கூட அப்போதைய செய்தித்தாள் ஆவணங்களில் இருக்காது.
ஆனால் வசூல் விபரம் பற்றிய நோட்டீஸ்கள் ரசிகர் மன்றங்களால் வெளியிடப்படுபவை. ஆர்வம் காரணமாக தங்கள் தரப்பு நடிகர்களின் வசூலை கூட்டி சொல்வது சகஜம். (எல்லா தரப்பு ரசிகர்களிடம் உள்ள நடைமுறை வழக்கம்) என்பதால் அதிகம் நம்பகத்தன்மை அற்றவை.

இப்போதும் சொல்கிறேன் சிவந்த மண், நம்நாடு குறித்து வசூல் ஒப்பீட்டை துவங்கியது நான் அல்ல. இரண்டு படங்களின் 100-வது நாள் விளம்பரங்கள் பற்றியே நான் குறிப்பிட்டேன்.

முதலாவது சிவந்தமண் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்பது (இது 100 சதவீதம் உண்மை).

இரண்டாவது நம்நாடு 100-வது நாள் விளம்பரத்தில் தியேட்டர் பெயர்கள் இல்லை. நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர்கள் மட்டுமே உள்ளன என்பது (இது 200 சதவீதம் உண்மை)

இது ஏன்?. சிவந்தமண்ணை விட நம்நாடு குறைவான தியேட்டர்களிலேயே 100 நாள் ஓடியுள்ளது என்ற உண்மை தெரிந்துவிடக்கூடாது என்பதற்கா என்றும் கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் மிகக்குறைவான விவாதத்தில் ஈடுபட்ட என்னை, இந்த விவாதத்தை துவக்கியதாக நீங்கள் சித்தரிப்பது புரியவில்லை. உண்மையில் வசூல் விவாதத்தை நான் துவக்கியிருந்தால் அதை மனப்பூர்வமாக, தைரியமாக, நேர்மையாக ஒப்புக்கொள்வேன். பின்வாங்க மாட்டேன்.

எப்படியோ நண்பர்களின் இடைவிடாத வாதங்களுக்குப்பின், "சிவந்த மண் தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை. நன்றாக வசூலாகவில்லை என்று சொல்லவில்லை. தயாரிப்பு செலவு அதிகமாகிவிட்டது" என்பது வரையில் நீங்களாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

vasudevan31355
15th September 2015, 09:22 PM
ராகவேந்திரன் சார்,

நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து)

http://i60.tinypic.com/1zx8a55.jpghttp://i60.tinypic.com/167m93p.jpg
http://i58.tinypic.com/xd8gsz.jpghttp://i59.tinypic.com/mta6nd.jpg

RAGHAVENDRA
15th September 2015, 09:28 PM
சைலேஷ் பாசு சார்,
மத நம்பிக்கையைப் புண்படுத்துவதை யார் செய்தாலும் நாம் வரவேற்பதில்லை. எம்.ஜி.ஆர். அவரையே கடவுளாக வழிபடும் நீங்கள், அவருடைய உருவத்தை இன்னோர் கடவுளின் உருவத்தில் பொருத்துவது சரியாகப் படவில்லை. இது நிச்சயம் மதநம்பிக்கை உள்ளோர்க்கு மன வருத்தம் உண்டாக்கும். எம்.ஜி.ஆர். அவர்களும் இதை விரும்ப மாட்டார்.
இதைப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
அன்புடன்

RAGHAVENDRA
15th September 2015, 09:30 PM
வாசு சார்
அட்டகாசம், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் திருடன் நடிகர் திலகம் மட்டுமல்ல தாங்களும் தான். அவர் நடிப்பாலும் ஸ்டைலாலும் நம் மனதைக் கொள்ளையடிக்கிறார். தாங்கள் அவற்றின் ஸ்டில்களை அளித்து நம் மனதைக் கொள்ளையடிக்கிறீர்கள்.

தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

Russellbpw
15th September 2015, 10:09 PM
Dear Vasudevan Sir,
This thief is not a usual thief. His style is different and will try always to justify the reason for doing theft.

But, in this movie particularly, Police is also equally smart and powerful with law points to arrest the thief.

In this film thief will try all his stunts, sentiments, to escape from being convicted.

The beauty of the film is police will also equally play mind-games quite tactfully. The viewers themself will appreciate the police and say, it is high time police should catch the thief. Screenplay is excellent with lot of twist and turn.

All together it is an interesting subject on thief. Olden days film, they have not shown police taking money and leave the thief free..!

Thief - in Style !

Rks

Russellbpw
15th September 2015, 10:21 PM
Vasu sir,
Am using mobile to write now.
ANYHOW I have to reply for few lies that is still circulating as if they are truth. I have to expose those lies and it is possible only if I write in Tamizh.

I will write a review of Thirudan Tomorrow.

RKS

Russellsmd
15th September 2015, 10:39 PM
"ஆ..ஆஆ"...

சுசீலாம்மாவின் தேன் குரல்
செய்யும் ராக ஆலாபனையோடு துவங்கும்
இந்தப் பாடல்...

என் சிறு வயது ஆச்சரியம்.

பாட்டு,இசை, வரிகளின் அர்த்தம் என்று எதுவும் தெரியாது போனாலும், இனிமையால் மட்டுமே
இதயம் குடியேறிய ஆச்சரியப் பாட்டு.

விபரமறிந்த வயசில் கேட்ட
போது, இன்னும் வியப்பு
கூடிற்று.

அருமையான இந்தக் காதற்
பாடலின் வரிகளில் சூசகமாய்
நுழைந்திருக்கிற காமம்,
காட்சிப்படுத்தலில் காணாமலே
போயிருப்பது வியப்பு.

"மாப்பிள்ளை,பெண்ணுக்கு"
என கண் சுழற்றி, கலைச்செல்வி பாடிக் காட்ட
அப்படியே ,அசத்தலான
அதே பெண் பாவத்தில் நடிகர்
திலகம் செய்து காட்டுவது
வியப்பு.

காலங்களைக் கடந்து இன்று வீசுகிற புதிய காற்றிலும் இந்தப்
பாடல் இனித்தொலிப்பது
வியப்பு.

ஆடிப் பாடித்தான் ஒரு பாடலை
வெற்றியடையச் செய்ய வேண்டுமென்பதில்லை.
கதாநாயகியுடன் செய்யும்
குறும்புகளைக் கூட ஒரு பாடலின் வெற்றிக்குக் காரணியாக்கலாம் என்று நம்
நடிகர் திலகம் நிரூபித்திருப்பது
வியப்பு.

ஒரு குழந்தையின் ஈரமான முத்தம் போல காலகாலமாய்
இந்தப் பாடல் நினைவில் நிற்பது வியப்பு.


https://youtu.be/PgBAx_bl1YE

Russellsmd
15th September 2015, 10:43 PM
"ரசத்தில் உப்பில்லை..
கணவன் அடித்தான்.
மனைவி அழுதாள்.
அவள் கண்ணீரில் இருந்தது..
ரசத்தில் இல்லாதது".

-புரிதலற்ற கணவனிடம்
சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி மனைவியின் கண்ணீர் குறித்த எனது பழைய கவிதை,அது.
---------
இதோ..

நான் பகிர்ந்துள்ள
இந்தப் பாடலிலும்
ஒரு கணவன் உண்டு.

மனைவி சிந்தும்
கண்ணீர் உண்டு.

அந்தக் கவிதை காட்டிய
பெண்ணின் கண்ணீருக்குப் பின்
ஒரு புரியாத்தனமிருக்கிறது.

இந்தப் பாடலின் நாயகி சிந்தும் கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
ஒரு தெளிவிருக்கிறது.
-----------
நம்பிய உறவுகளால்
வஞ்சிக்கப்பட்டு,
வாழ்க்கை தந்த வெறுமைத் தனிமையில் கலங்கி நிற்கும்
அகவை முதிர்ந்த கணவனும்,மனைவியும் தோன்றுமிந்தப் பாடல்..

ஒரு நல்ல தம்பதி
இப்படித்தானிருக்க வேண்டும்
என்று போதிக்கிறது.
----------
"பேருக்குப் பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு
சொந்தம் உண்டு.
என் தேவையை யாரறிவார்?"
-தள்ளாடி,தளர்ந்து நடந்து
வந்து,தனக்கென விரிந்த
மனைவியின் மடி கிடந்து,
அந்தக் கிழவர் விரக்தி வினா எழுப்ப,
அதிர்ந்து போகும்அந்தக் கிழவியின் முகத்தில் தோன்றும் சோகக் குறிகள் துடைத்து..

"உன்னைப் போல்
தெய்வமொன்றே அறியும்"

-என்று அவரே பாடி முடிக்கையில், ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அந்தக் கிழவி சிந்தும் கண்ணீரை,நம் இதயப் பாத்திரங்கள் இன்னும்
சேமித்துக் கொண்டேதான்
இருக்கின்றன.

https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg&feature=youtube_gdata_player

Russellsmd
15th September 2015, 10:48 PM
ஆர்வமாய் தேடித் தேடி...

ஓடி ஓடி...

அய்யா நடிகர் திலகத்தின்
படங்களாய்ப் பார்த்த காலமது.

(இன்னமும்தான் என்பது
வேறு விஷயம்.)

வழக்கமாக, ஒரு படத்துக்கு
நான்கு இடைவேளைகள் விடும் அந்த டூரிங் திரையரங்கில், பழைய
படங்களெனில் ஏழெட்டு இடைவேளைகள் விடப்படும்..
படம் அறுந்து போவதால்.

அங்கே அதிசயமாக நல்லவிதமாக முழுசாய்ப்
பார்த்த படம் "தூக்கு தூக்கி".

பழைய பாடல்களே மூன்று
நிமிஷத்தில் முடிந்து விடுபவை. மோசமான பிரிண்டுகளாயிருந்தால், அந்த
ஒரு பாடலிலேயே முந்நூறு
வெட்டு விழும்.

இந்தப் பாடல் திரையில் வந்த
போதும், ஒரு ஓரத்தில் மின்னல் போல் வெட்டத் துவங்கிற்று.

புள்ளிப் புள்ளியாய் மழை போல,
நட்சத்திரங்கள் போல பாடல்
காட்சி முழுதும் படம் அறுந்து
விடுவதற்கான அபாய அறிவிப்புகள் நிறைய இருந்தாலும், தெய்வாதீனமாக
அறுந்து போகவில்லை.

"கண் வழி புகுந்து
கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?"

அய்யா மருதகாசியின் பாடல்
வரிகளில் மட்டும் கேள்வி இல்லை.

இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்கள் அமைத்த இந்த மெட்டே ஒரு கேள்வி போல்
இருப்பதை உணர்ந்தேன்.

பாடல் பிடித்துப் போயிற்று.

அந்தப்புர நந்தவனத்தில் அன்பு
மனைவியைக் கொஞ்சிப்
பாடும் அழகுப் பேருருவமாய்
நம் நடிகர் திலகம்.

நடையிலும், பாடும் பாணியிலும் புன்னகைப்பதிலும், கரும்பு, குறும்பு என மனையாளைக்
கொஞ்சி விளையாடுவதிலும்,
அமுதமெனத் தான் எண்ணியிருக்கும் இவள்
விஷம் என்பதறியாத அந்த
அப்பழுக்கற்ற முகம் அழகு
பாவங்கள் காட்டுவதிலும்
லயிக்காதிருப்ப்வனை அந்தப்
பாடலின் இரண்டாம் வரியே
கேலி செய்கிறது..

"வேறெதிலே உந்தன் கவனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?"

https://youtu.be/hadECUynFsE

Russellsmd
15th September 2015, 10:52 PM
அன்பு-
இந்தப் பாடலின்
ஆதார ராகம்.

பரிவு-
பாடலின் மொழி.

உள்ளம் புகும் பாட்டு
வெளிக் கொணரும்
உருக்கம்-
பாடலின் தாளம்.

நிமிர்த்தி வைத்த
துப்பாக்கி போல
கம்பீரமாயிருந்த கணவன்,
நேசமிகு மனைவியின்
நலிவு கண்டு
நனைத்த துணியாய்த்
தளர்கிறான்.

குடும்பம் விளங்க
வளைய வந்தவள்,
கை ,கால் விளங்காமல்
திண்டாடும் நிலை கண்டு
துயருறுகிறான்.

கலைந்த கூந்தல்
காணப் பொறுக்காமல்,
வாரி, பொட்டிட்டுப்,பூச்சூடி
பணிவிடை புரிகிறான்.

கணவனின் முகஞ்சுளியாப்
பணிவிடைக்குக் கூசிக் குறுகும் நடிப்பில் புன்னகை அரசியின் திறமை ராஜாங்கம்
விரிகிறது.

கடமையில் விறைத்த
மனசுக்குள்ளிருக்கும் கனிவு அத்தனையும் வெளிப்படுத்தும்
நம் நடிகர் திலகத்தின்
கண்களுக்கு,
இயற்றி,இசை தந்து,
பாடவெல்லாம் தெரிகிறது.

ஆணென்கிற மமதை கொண்டு
பெண்ணை இம்சிக்கிறவர்களுக்காக,
இந்தப் பாட்டு ரகசிய சாட்டை
வைத்திருக்கிறது.

அவர்களை..

இந்தப் பாட்டு, அடிக்கும்.

அன்பான ஆண்களுக்கும்,
கனிவு மிகுந்த பெண்களுக்கும் என்றும் இந்தப் பாட்டு...

பிடிக்கும்.


https://youtu.be/9XIGbiMx0ck

Georgeqlj
15th September 2015, 11:07 PM
அக்டோபர் 1 ம்தேதிவர முடிந்தால்சந்திக்கிறேன்சார்

Russellxor
15th September 2015, 11:11 PM
Delete

Gopal.s
16th September 2015, 03:22 AM
நண்பர்களே,

கடைசி பதிவு போட்டுவிட்டு ஒதுங்கி இருந்தேன். வேலை நிமித்தம் அலைச்சல். வியட்நாம் கோபால்,இந்தோனேசிய கோபால் ஆகி விட்டேன்.

திரியில் மோசமாக நடிகர்திலகத்தை பற்றி அவதூறு பரப்பி ,பொய் சொல்லி திரியும் கலைவேந்தன் ,எஸ்.வீ ஆகியோரின் முகமூடி கிழிக்க பட்டே ஆக வேண்டும் ,கலைவேந்தனை வனவாசம் அனுப்பும் பொன்னான வாய்ப்பு வந்து விட்டது.

நடிகர்திலகம் திரி பாகம்-9 ,தேதி 9 ஏப்ரல் 2012 இல் பக்கம் 269இல் பதிவு எண் 2688 இல் என் பதிவையும் , அதற்கு பம்மலாரின் திருத்தமாக 10 ஏப்ரல் 2012 பக்கம் 270 பதிவு எண் 2699 இல் வந்த விஷயத்தையும் பாருங்கள்.

பம்மலார் ,விஷயங்களை புரட்டி பேசும் வழக்கம் கொண்டவரல்ல.

நான் இதற்கும் மேல் விளக்க அவசியமில்லை.

நன்றி.

பம்மலார் அவர்களுக்கு ,என் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மீண்டும் அக்டோபர் ஒன்றில் நடிகர்திலகம் ஜெயந்தி கொண்டாட்டத்தில் சந்திக்கலாம்.இனி திரியில் சந்திக்கவே வாய்ப்பில்லாத கலை வேந்தனுக்கு எனது பிரியா விடைகளை தெரிவித்து கொள்கிறேன்.

Russellbpw
16th September 2015, 10:42 AM
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள் !

வருக...வருக..என்று வரவேற்கிறோம்.

அக்டோபர் 1 சிவாஜி ஜெயந்தி - அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களின் வழிபாட்டு திருத்தலமான திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் கூறுவது போல "நம்முடைய தென்னாட்டின் மெக்கா" அன்னை இல்லம் மற்றும் சாந்தி வளாகத்தில் சந்திக்க வாய்பிருக்கும் என்று நம்புகிறேன்.

விநாயக சதுர்த்தி நாளை - நம்முடைய தெய்வத்தின் பெயரே கணேச மூர்த்தி ஆஹா என்ன பொருத்தம் ...! நல்ல விஷயங்கள் தொடங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வது வழக்கம் அல்லது விநாயக பூஜை செய்வது நிலவில் உள்ள ஒன்று.

திரை துறையை பொருத்தவரை நடிப்பு என்ற ஒரு கலைக்கு முதல் முதல் வித்தாக வந்தவர் வழிகாட்டியாக வந்தவர் நம்முடைய மூலவர் கணேச மூர்த்தி என்பது உலகமே ஒப்புக்கொண்டுள்ள விஷயம். நடிப்பு மட்டும் அல்லாமல் ஒரு வசனத்தை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேசுவது, தமிழை வலிமையுடன் எப்படி நாடி நரம்புகளில் முறுக்குற செய்வது என்பது போன்ற பல வித்தைகளை தத்ரூபமாக உணர்த்தியவர் உணர்த்திகொண்டிருப்பவர்...உணர்த்தபோகிறவர் நம்முடை கணேச மூர்த்தி மட்டுமே !

இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில் அனைவரும் நம்முடைய விநாயக பெருமான் கணேச மூர்த்தியின் அருள் பெற்று சர்வ சௌகர்யங்களையும் பெற்று பேரு வாழ்வு வாழ நம் தெய்வம் கணேச மூர்த்தியாரை வேண்டுகிறேன் !

யார் எப்படி பொய் பேசினாலும் ...விழுந்த இடத்தில் இருந்துகொண்டே புரண்டாலும்...பொய் பொய் தானே தவிர மெய் கிடையாது என்பது உலக நடுநிலயாலர்களுக்கு தெரியும்.

எப்படி நடிகர்திலகத்தை பற்றி ...கழித்து....களித்து........திரித்து ...மறைத்து...மறுத்து ......சரித்து ...விரித்து...மரித்து யார் எழுதினாலும் உண்மையை நாம் உரிய விதத்தில் உரித்து எழுதினால் பொய் என்பது பல்லை இளித்து ...புளித்து ...போய்விடும் !

Rks

adiram
16th September 2015, 10:53 AM
சாந்தியை இடிப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற காரணத்தாலும்.,,

இந்த வரிகளைப் படிக்கும்போதே மனது வலிக்கிறது.

Russellbpw
16th September 2015, 11:07 AM
இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு

உங்களுக்கு திரு. கலைவேந்தன் அவர்கள் விடுக்கப்பட்டிருக்கும் கௌரவ விண்ணப்ப சவால் மடலை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

திரு கோபால் அவர்கள் உரைத்துள்ள பதிவில் வருடவாரியாக அதிக வசூல் படங்களை எழுதிய நிலையில், எந்தெந்த வருடத்தில் தவறு உள்ளதோ...அந்த தவறை மட்டும் சரி செய்து (மீதம் சரியே என்ற தோரணையில்) தங்கள் பதிவு செய்துள்ளது பார்த்தோம்.

இருந்தாலும், திரு கலைவேந்தன் அவர்கள் பதிவில் தங்களை திரியில் சிவந்தமண் நம்நாடு வசூல் விபரங்களை பற்றிய உண்மையை பதிவு செய்ய சொல்லி அறைகூவல் விடுத்துள்ளார் !

அந்த அறைகூவல் உண்மையான அறைகூவலா, அரை கூவலா...அல்லது பொருள் இல்லாத வெறும் கூவலா என்பது உங்களுடைய பதிலை பொருத்துதான் அமையும்.

இது எங்களுக்கோ...உங்களுக்கோ ...அவர்களுக்கோ இடப்போகும் பதிவு அல்ல. நடிகர் திலகம் அவர்களின் கௌரவமும் இதில் அடங்கியுள்ள விஷயம் காரணம் ...

முதலில் திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்தமண், தர்தி, வைர நெஞ்சம், கேகரி சால் திரைப்படங்கள் தயாரிப்பு மூலம் பெரும் பொருள் நஷ்டம் அடைந்தார் என்றும் ....(பிறகு 4 வருடம் நஷ்டத்தை பொறுத்துக்கொண்டு இருந்தபிறகு )
ஹிந்தி நடிகர் அறிவுரையின் பேரில் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலையை உரைத்து, உடனே மக்கள் திலகம் அவர்கள் கால்ஷீட்டில் உரிமைக்குரல் எடுத்து தனது 4 படங்கள் மற்றும் காற்றினிலே வரும் கீதம்...ஒ மஞ்சு போன்ற படங்களால் வந்த நஷ்தம் ஆகமொத்தம் 6 - 8 படங்களால் வந்த நஷ்டத்தை என்ற பொருள் பதியும் வாக்கியத்துடன் ....உரிமைக்குரல் என்ற ஒரே மக்கள் திலகம் படத்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டார் (( உரிமைக்குரல் அவருக்கு உதவியதா இல்லையா என்பது இங்கு பிரச்சனையை அல்ல ! )என்பதை பொய்யான ஒரு இணைப்பை கொண்ட இணையதள இணைப்பை திரு கலைவேந்தன் பதிவிட்டு அதனை பிடித்தபடியே பதிவு செய்தது மையம் படிக்கும் நடுநிலையாளர்கள் உட்பட தாங்களும் அறிததே.

திரும்பி பார்க்கிறேன் என்று திரு ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தின் நகலை தாங்கள் தயவு கூர்ந்து உண்மையை ஆணித்தரமாக அறைந்து பதிவேற்ற திரு ராமஜயம் அவர்கள் மூலம் திருச்சி பாஸ்கர் அவர்களுக்கு அளித்து பேர்உதவி செய்துள்ளீர்கள் ! அதன்மூலம் ஸ்ரீதர் சிவந்தமண், வைர நெஞ்சம் (தமிழ் மற்றும் ஹிந்தி வடிவங்கள் ) மூலம் நஷ்டம் அடையவில்லை என்ற உண்மை வெளிக்கொண்டுவந்து , சிவந்தமண் திரைப்படம் ஓஹோ என்று ஓடியது என்ற உண்மையும் வெளிக்கொண்டு வர உதவியது !

.....திரு கலைவேந்தன் அவர்கள் பதிவு செய்த இணைப்பு பொய் தகவலை கொண்டது என்பது உங்கள் ஆதாரத்தின் உதவியால் மட்டுமே மக்களுக்கு புரியவைத்து தெளிவுபடுத்தப்பட்டது !

இப்போது அவர் முன்பு கூறியதை கூறவில்லை என்றும் ....வசூல் பொருத்தவரை சிவந்தமண் திரைப்படத்தை விட நம்நாடு அதிகம் என்றும் மட்டுமே கூறியதாக ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார் ! அடித்ததோடு மட்டும் அல்லாமல் உங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது நீங்கள் திரு எஸ்வி அவர்களுக்கு கூறிய தகவலை PM முறையில் திரு ஈஸ்வீயிடம் கேட்டு அறிந்துகொண்டதாக பதிவு செய்துள்ளார்.

திரு எஸ்வி அவர்களும் அவருடைய முந்தைய பதிவில் உங்கள் பெயரை குறிப்பிடாமல் ...நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று மிக சாதுர்யமாக பெயரை கூறாமல் பதிவு செய்துள்ளார். நண்பர் என்று அவர் உரைத்தது உங்களையா ...அல்லது திருச்சி பாஸ்கரா....அல்லது அதிரம் அவர்களா...அல்லது என்னையா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம் !

ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து இதற்க்கு உண்மையை தெரிவிக்கவேண்டும். இனியும் மௌனம் காப்பது முறையோ அல்லது அறமோ அல்ல !

உண்மை தகவலை வெளியிட உங்கள் மனதில் வேறு ஏதாவது எண்ணங்கள் தடுக்கிறது என்றால் அதனை இங்கே " எனக்கு இதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை" என்றாவது தெரிவிக்கவும் ! இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் திரு கலைவேந்தனும் மற்றவர்களும் மௌனம் சம்மதம் , அங்கீகரிப்பு என்று மீண்டும் எழுதி பொய்யை உண்மையாக்கும் அபாயம் உள்ளது ! இது நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதை மட்டும் தயவு செய்து புரிந்துகொண்டு உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை சற்று தள்ளிவைத்து உண்மை தகவல் என்னதோ அதனை எழுதவும் !

இதற்க்கு மேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறன் !

Regards
RKS

JamesFague
16th September 2015, 12:34 PM
Yesterday I had a chat with Mr Pammalar and he vehemently denied the so called movie surpassed the

collection of Sivandha Mann. It is a utter lie of these people doing it for years to defame NT's Film.

NT - the real Vasool Chakkaravathi.

adiram
16th September 2015, 01:06 PM
முதல் ஸ்டேட்மென்ட் :
"சிவாஜியை வைத்து அதிக செலவில் சிவந்தமண் எடுத்து ஸ்ரீதர் நஷ்ட்டமடைந்தார். பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து உரிமைக்குரல் எடுத்து அந்த நஷ்ட்டத்தை ஈடு செய்தார்".

பிறகு பல்வேறு வாத, விவாத, ஆவணப்பதிவுகளுக்குப் பின்னர்

"சிவந்தமண் தோல்விஎன்று சொல்லவில்லை. வசூலாகவில்லையென்றும் சொல்லவில்லை. ஆனால் வசூலில் நம்நாடு படத்தை விட குறைவு என்றுதான் சொல்கிறோம்". (இதுவும் பம்மலார் அவர்களின் ஆதாரம் மூலம் தகர்க்கப்படப் போகிறது என்பது வேறு விஷயம்)

அப்படியென்றால் முதலில் சொன்ன 'சிவந்த மண் நஷ்ட்டம், உரிமைக்குரல் ஈடுகட்டல்' வாதம் என்னவாயிற்று?.

ஸ்ரீதர் கடனாளியாக இருந்திருக்கலாம். அதை உரிமைக்குரல் ஈடு செய்திருக்கலாம். ஆனால் அந்தக்கடன்கள் நடிகர்திலகத்தின் படங்களால் ஏற்பட்டவை அல்ல. சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா படங்களின் வெற்றிகளுக்குப்பின் ஸ்ரீதர் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள், ஓ..மஞ்சு மேலும் சில இந்திப்படங்கள் போன்ற பல படங்களின் தோல்வியால் கடனாளியானார் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்கு நடிகர்திலகத்தின் படங்கள் காரணமல்ல.

ஸ்ரீதர், நடிகர்திலகத்தை வைத்து தயாரித்த படங்கள் மூன்று. நெஞ்சிருக்கும்வரை, சிவந்தமண், வைரநெஞ்சம் ஆகியவை (ஊட்டிவரை உறவு கோவை செழியனின் தயாரிப்பு) . தமிழில் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இருபது படங்களை பட்டியலிட்டால் அவற்றில் நெஞ்சிருக்கும்வரை, வைரநெஞ்சம் படங்கள் இடம்பெறும். அந்த அளவுக்கு சிக்கனமாக எடுக்கப்பட்டவை. அதனால் சுமாரான வசூலிலும் ஸ்ரீதருக்கு லாபம் தந்தவை. சிவந்த மண் படத்தின் இமாலய வெற்றி பற்றி வேண்டிய அளவுக்கு இங்கே விவாதிக்கப்பட்டு விட்டது.

adiram
16th September 2015, 03:54 PM
அன்புள்ள நண்பர் சைலேஷ் சார் அவர்கள் எனக்கு மூன்றாவது இறுதி நினைவூட்டல் விட்டிருக்கிறார். (என்னவோ தெரியவில்லை மற்றொரு நண்பருக்கு விட்ட நினைவுட்டலில் ஒவ்வொரு நினைவூட்டலுக்கும் கார், பங்களா, வில்லா, சொத்து, சுகம், நகை, நட்டு என்று கூட்டிக்கொண்டே வந்தவர் எனக்கு "வெறும் நினைவூட்டலோடு" விட்டுவிட்டார்).

நான் என்ன நிரூபிக்க வேண்டுமாம்?. "உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு செலவும் அதிகம், வசூலும் அதிகம்" என்று நான் சொன்னதற்கு யார், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் வேண்டுமாம்.

இதில் அவர் எதை மறுக்க விரும்புகிறார்?. உலகம் சுற்றும் வாலிபன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதையா?. அல்லது அதிக வசூல் பெற்ற படம் என்பதையா?. இரண்டையுமே அவரால் மறுக்க முடியாதே. அதிலும் இரண்டாவதை அவர் கனவிலும் மறுக்க விரும்ப மாட்டார்.

உ.சு.வா. 1970-ல் தொடங்கி பல்வேறு கிழக்காசிய நாடுகளில் அதிக பொருட்செலவிலும் அதிக சிரமத்திலும் தயாரான படம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே எழுதிய தொடர் கட்டுரை வாயிலாகவும், பல்வேறு பத்திரிகை வாயிலாகவும் அனைவரும் அறிந்ததே. அத்துடன் தயாராகி பல ஆண்டுகள் வெளியிடாமலும் இருந்தது. அவரது அரசியல் எதிரிகள் அந்தப்படம் வராது என்று செய்திகளைப் பரப்பும் அளவுக்கு தாமதம் ஆனது. (எம்,ஜி,ஆரின் தீவிர அரசியல் பணி காரணமாகவும்).

பூஜை போடப்பட்ட அன்றைக்கே படம் விற்பனையானதால், விநியோகஸ்தர்களிடம் மீண்டும் அதிகப்படியாக பணம் பெற முடியவில்லை. வழக்கமாக தான் நடிக்கும் பிற படங்களையே சென்னை நகரில் எம்ஜியார் பிக்சர்ஸ் மூலமாக வெளியிடும் மக்கள்திலகத்துக்கு தன சொந்தப்படமான உ.சு.வாலிபனையே வேறொரு விநியோகஸ்தரான துர்கா பிலிம்ஸ் மூலமாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் படம் நன்றாக ஓடியும் விநியோகஸ்தர்கள் பலனடைந்தனரே தவிர தயாரிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிக பலடையவில்லை. நாடோடி மன்னன் வெற்றி பற்றி பெரியவர் சக்ரபாணி சொன்ன விஷயம் இந்தப்படத்துக்கும் ஏற்பட்டது. இந்த விவரங்கள் அப்போதே சில பத்திரிகைகளிலும் வந்தன. ஆனால் இப்போது அவசரத்துக்கு எந்தப் பத்திரிகைஎன்று தேடுவது?. முடிகிற காரியமா?.

Gopal.s
16th September 2015, 05:52 PM
சைலேஷ் பாபு ,

நீங்கள் ஆயிரத்தில் ஒருவனுக்காக செலவழித்தது போக ,பாக்கி இவ்வளவா இருக்கிறது? அப்பாடா ,மலைப்பே ஏற்படுகிறது.

goldstar
16th September 2015, 06:34 PM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11056057_538146433001026_855221810364199168_n.jpg? oh=12e2f8293118b82658cd7b8f4df6e18a&oe=56AA8D60

From friend's FB page....

Russellxor
16th September 2015, 09:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1442417244308_zpsqillznm6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1442417244308_zpsqillznm6.jpg.html)

Russellsmd
16th September 2015, 10:35 PM
"அம்மாவுடன்
கோயிலுக்குப் போனேன்.
கோயிலில் தெய்வம்
என் எதிரில் இல்லை.
என் கை பிடித்து
அருகில் நின்றது."

-அன்னையைக் குறித்த
என் கவிதை இது.
------------
"செக்கச் செவேலென
அழகான பெண் குழந்தை..
எங்கள் தெருமுனை
குப்பைத் தொட்டிக்கு."

-இதுவும் என்னுடையதுதான்.
-----------
ஒரு ஒப்புமைக்காகக் கூட இந்த இரண்டையும் பொருத்திப் பார்க்க மனம் அஞ்சுகிறது.
தன்னைத் தெய்வமென்று
பிள்ளையைச் சொல்ல வைத்தவளும்,தொட்டிலிலிட வேண்டிய செல்வத்தைக்
குப்பையில் வீசிப் போனவளும்
தாய்மை பொங்கும்
பெண்ணினத்தவர்தானே?

கோயிலுக்குப் போன குழந்தைக்குக் கிட்டிய நல்ல அன்னை,அந்த குப்பைத்தொட்டிக் குழந்தைக்கு
ஏன் கிடைக்காமல் போனாள்?

கேள்விகள்-

வேறு வேறு வடிவங்களில்
இறைவனை நோக்கிப்
போய்க் கொண்டே
இருக்கின்றன.

கோயில்களுக்கும்,
குப்பைத் தொட்டிகளுக்குமாய்
குழந்தைகள் போய்க் கொண்டே
இருக்கின்றன.
------------
குற்றமற்ற
குழந்தைப் பூக்களை,ஒரு பாசத் தோட்டமமைத்துப் பராமரிக்கிறவராய்
நடிகர் திலகம் தோன்றிப் பாடுமிந்த "எங்க மாமா" பாடல்,
கவியரசர் வழியாக காற்றில் வந்த கடவுளின் அறிக்கை.

அன்பென்கிற விஷயம் உள்ள வரை யாரும் இங்கே
அனாதையில்லை என்கிற நம்பிக்கை.
----------
இந்த
செல்லக் கிளிகளாம்
பாடல் கேட்டு,
குழந்தைகளோடு,
குழந்தைகளாய்..
நாமும் உறங்குகிறோம்-
நிம்மதியாக.

https://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs&feature=youtube_gdata_player

RAGHAVENDRA
16th September 2015, 11:32 PM
Sivaji Ganesan statue to be shifted to memorial in two years, TN govt tells Madras HC


CHENNAI: The Tamil Nadu government has told the Madras high court that it will take two years to build a manimandapam (memorial) for legendary actor Sivaji Ganesan on the banks of the Adyar river here. The statue of the actor -- erected at the Radhakrishnan Salai-Kamarajar Salai junction near the Marina Beach by the DMK government -- would remain at the spot till then, it said.

The work on the manimandapam will commence in October 2015, and it will be completed in October 2017. The statue would be shifted to the memorial thereafter, the government said.

Advocate-general of Tamil Nadu A L Somayaji made a submission to this effect before a division bench of Justice Satish K Agnihotri and Justice K K Sasidharan on Wednesday when a contempt petition relating to the delay in relocation of the statue came up further for hearing.

The matter relates to a PIL seeking relocation of the statue on the ground that it posed traffic risk to road users. The Chennai police admitted that the statue was indeed a hazard for vehicles, especially those taking the right turn from Kamararajar Salai.

As there was delay in shifting the statue, even after the high court asked the government to take a decision on the matter expeditiously in 2014 itself, the present contempt petition was filed.

Earlier this month, chief minister Jayalalithaa announced in the assembly that the government would construct the manimandapam near Andhra Mahila Sabha on the banks of the Adyar river. She said 67 cents of land was allotted by the government for this purpose in 2002.

The bench had then asked the authorities to submit its project schedule. Accordingly, Somayaji submitted the schedule on Wednesday. When judges sought to know as to why it would take two years for the government to complete the memorial, Somayaji reminded the court that the government had been asked only to take a decision on the matter.



from:http://timesofindia.indiatimes.com/india/Sivaji-Ganesan-statue-to-be-shifted-to-memorial-in-two-years-TN-govt-tells-Madras-HC/articleshow/48983424.cms

தற்காலிக நிவாரணம்... அரசின் இந்த வாதம் உறுதியாக இருந்தால் நடிகர் திலகத்தின் சிலை அதே இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது மணி மண்டபம் கட்டும் வரையிலும் சிலை அவ்விடத்தை விட்டு நகராது என்று தெரிகிறது.

நம்முடைய கோரிக்கை அந்த சிலை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே. மணிமண்டபத்திற்கு வேறு சிலை செய்து கொள்ளட்டும்.

நடிகர் திலகத்தின் POWER என்ன என்பதற்கான சான்று.

Russellbpw
16th September 2015, 11:51 PM
Dear Friends,
This govt is approaching this in vedic way. That is the power of the soul will be submersed or immersed, taken control and it will be left in a compounded or water centric place. Nadigar thilagam natchathiram Thiruvadhirai, adhu eesanin natchathiram. Uggra thanmai kondadhu. Aagayaal andha silayin sakthi alladhu adhil padhindhulla Aanmaavai aavaaganam seidhu matroru idam thayaar seidhu angu pradishtai seiyum murai. Aanaal ivargal ariyaadha oru vishayam miga mukkiyamaana vishayam ivargal kannai maraithulladhu. Adhu saasthirapadi dharmappadi enna enbadhu enakku vilangivittadhu. INI nadakkappogum sambavangal neengale paarungal nadigar thilagaththin aanmaavin sakthiyinai. Theeyille irangivittaar...thirumbavandhu thaazhpanivaar...sathiyam idhu sathiyam..!

Aagave, nammudaya Silai andha idaththai vittu ORU INCH kooda nagaraadhu. Kavalai Vendaam.

goldstar
17th September 2015, 02:30 AM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/s720x720/12019931_1008608569159709_5689965775561551905_n.jp g?oh=177b53ab4be3ecefbd3579dee8d19407&oe=56A4B3E7

RAGHAVENDRA
17th September 2015, 03:13 AM
Nadigar Thilagam Film Appreciation Association..

Next Programme...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/KOTINVITESEP2015Bfw_zpss7j4yvvk.jpg

Hilarious movie. Don't miss it.

Russellbpw
17th September 2015, 07:25 AM
TODAY's DAILY THANTHI ADVERTISEMENT CARRYING OUR NEXT DIGITAL VENTURE ! THE EVERGREEN CLASSIC RAJAPART RANGADURAI !!!!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rr_zps8yxvtvuz.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rr_zps8yxvtvuz.jpg.html)

eehaiupehazij
17th September 2015, 07:28 AM
பிரணவப் பொருளே ஐங்கரனே அனைத்து திரிகளிலும் சகோதரத்துவமும் நேசமும் நிலவி அன்பான பண்பான பதிவுகள் நிறைந்திட முதல்வனே அருள்வாய் !
நடிப்புப் பிரபஞ்சத்தின் முழுமுதல் கணேசரின் திரி சார்ந்த விநாயகர் சதுர்த்தி வேண்டுதல்களும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் !

https://www.youtube.com/watch?v=UjbH5oqWMac

https://www.youtube.com/watch?v=juVSazxOH8c

RAGHAVENDRA
17th September 2015, 08:03 AM
https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/s720x720/12019931_1008608569159709_5689965775561551905_n.jp g?oh=177b53ab4be3ecefbd3579dee8d19407&oe=56A4B3E7

இந்த வாசகங்கள் உண்மையிலேயே அவர்கள் தந்துள்ள விளம்பரங்களில் உள்ளதா தெரியவில்லை. நண்பர்கள் விளக்க வேண்டுகிறேன்.

Russellbpw
17th September 2015, 08:17 AM
அனைத்திற்கும் மூலவராக முதன்மையானவராக விளங்கும் விநாயக பெருமானின் சதுர்தியாம் விநாயக சதுர்தி வைபவம் காணும் இன்று, உதயமாகும் இந்த எண்ணம் ஸ்ரீ கணேச மூர்த்தி அருள் கொண்டு இனிதே வெற்றியுடன் அமைய எல்லாம் வல்ல விநாயக பெருமானை வேண்டி, இந்த முயற்சிக்கு அனைவரின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.

திரை உலகின் விநாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்ததினமான அக்டோபர் 1இல் அவர்தம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் செப்டம்பர் 30 2016, டிஜிடல் (DIGITAL ) தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில் ( CINEMASCOPE ) வெளியீடு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vrc_zpsj5m8ytpm.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vrc_zpsj5m8ytpm.jpg.html)

Russellbpw
17th September 2015, 08:18 AM
இந்த வாசகங்கள் உண்மையிலேயே அவர்கள் தந்துள்ள விளம்பரங்களில் உள்ளதா தெரியவில்லை. நண்பர்கள் விளக்க வேண்டுகிறேன்.

இல்லை சார் இந்த வாசகங்கள் இல்லை !

பதிப்பாளர் நீக்கிவிட்டதாக செய்தி !

Russellbpw
17th September 2015, 10:07 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/vs_zpssobh1leu.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/vs_zpssobh1leu.jpg.html)

RAGHAVENDRA
17th September 2015, 12:26 PM
இல்லை சார் இந்த வாசகங்கள் இல்லை !

பதிப்பாளர் நீக்கிவிட்டதாக செய்தி !

இன்றைய தினகரன் நாளிதழில் மேற்படி விளம்பரம் வந்துள்ளதாக நமது நண்பர் தெரிவித்துள்ளார்.

siqutacelufuw
17th September 2015, 12:41 PM
[QUOTE=RAGHAVENDRA;1251153]http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Anna1.jpg

திராவிட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுடன் நடிகர் திலகம்.

நான் வணங்கும் எங்கள் குல தெய்வத்தின் தெய்வம் அதாவது என் தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவரது பெருமையை பறை சாற்றும் விதத்தில் புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்வித்த தங்களுக்கு என் பணிவான நன்றி !

Russellbpw
17th September 2015, 01:43 PM
இன்றைய தினகரன் நாளிதழில் மேற்படி விளம்பரம் வந்துள்ளதாக நமது நண்பர் தெரிவித்துள்ளார்.

Dear Sir

I did not check in Dinakaran. I checked with the Dailythanthi Agent who did this. He said, Thandhi did not accept this wordings regarding NT

Regards
RKS

Russellbpw
17th September 2015, 02:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rou_zpsvi6mrfne.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rou_zpsvi6mrfne.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rou1_zpsfikfe0r3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rou1_zpsfikfe0r3.jpg.html)

Russellbpw
17th September 2015, 02:18 PM
PILOT PREMNATH - SILVER JUBILEE ADVERTISEMENT - SHAKTHIVEL CBE FACEBOOK


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/pilot_zpsrfljsoiy.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/pilot_zpsrfljsoiy.jpg.html)

Murali Srinivas
17th September 2015, 02:21 PM
Dear Friends,

I am out of town and been travelling for the past 2 days and would continue to do so till Sunday. Even posting this in a hurry from a friend's place. Could not go through the thread as connectivity is poor. Request all to maintain decorum and dignity and please avoid controversies.

Expecting everybody's cooperation.

Regards

sivajidhasan
17th September 2015, 04:56 PM
இந்த வாசகங்கள் உண்மையிலேயே அவர்கள் தந்துள்ள விளம்பரங்களில் உள்ளதா தெரியவில்லை. நண்பர்கள் விளக்க வேண்டுகிறேன்.

ஆமாம்! இன்றைய தினகரனில் வந்துள்ளது. இப்போது பேப்பர் வாங்கி பார்த்துவிட்டு பதிவிடுகிறேன். ஆனால் காலையில் நான் பார்த்த தந்தியில் இல்லை.

Russellxss
17th September 2015, 05:19 PM
சற்று முன் கிடைத்த தகவல்

புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.

நன்றி


உயர்திரு சைலேஷ்பாபு அவர்களுக்கு மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி திரைப்படம்
ஞாயிறன்று மாலைக் காட்சி மொத்த வசூல் 12,300 ரூபாய்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட உரிமைக்குரல் மற்றும் நம்நாடு படத்தின் ஞாயிறு மாலைக் காட்சி வசூல் 14,500 ரூபாய். இதில் ஞாயிறன்று மாலைக் காட்சி அரங்கு நிறைந்தது என்ற தவறான தகவலை பதிவிட்டு உள்ளீர்கள். தங்களுக்கு சந்தேகம் இருந்தால் தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி தியேட்டர் மேலாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கேட்க சொல்லலாம்.
இப்படிப்பட்ட தகவல் வரும்போது தாங்கள் நன்றாக விசாரித்து எழுதவும். இல்லையென்றால் வசூல் சொல்பவர்களிடம் இது உண்மைதானா, இந்த வசூல் யாரிடம் கேட்டீர்கள் என்பதையும் சொன்னவர் உண்மையான தகவல் சொல்பவரா என்பதைக் கேட்கவும். நன்றி சார்.
தங்களுக்கு வேண்டுமானால் உண்மையான ஒரு வார வசூல் நாளை எழுதுகிறேன்.
வெள்ளிக்கிழமை வசூல் - 17000.00
சனிக்கிழமை வசூல் - 12000.00
ஞாயிறு மொத்த வசூல்- 20.000 த்தில் இருந்து 21.000க்குள்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th September 2015, 09:18 AM
இனிய நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு,

தங்கள் பதிவு என் 470 படித்தேன் நன்றி. எனது பதிவு "சற்று முன் கிடைத்த தகவல்
புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ். " முகநூல் நண்பர். அது ஏனோ தெரியவில்லை "இதயக்கனி" என்றவுடன் தகவல் சரியாக இருப்பது இல்லை சார்.

ஆனால் தங்களுது கருத்தை/நம் நாட்டின் "உரிமைக்குரலை" முழுமையாக நான் வரவேற்கிறேன் சார். சம்பந்தப்பட்ட நண்பரிடம் இந்த தகவலையும் தெரிவிக்கிறேன். உண்மை, எந்த தகவலாக இருந்தாலும் "நன்றாக விசாரித்து விசிரித்து தான் பதிவு செய்ய வேண்டும்".

ஒரு அன்பு வேண்டுகோள், இதுவரை 5309 பதிவுகள் செய்துவிட்டேன் என் பெயரில் எந்த மாற்றமும் இல்லை சார். அது இன்றும் "சைலேஷ் பாசு" தான் சார். இனி வரும் பதிவுகளில் தாங்கள் "நன்றாக கவனித்து கவனித்து பதிவு செய்யவும்" சார்.

தங்களது பதிவுக்கு நான் உடனடியாக பதில் சொல்லிவிட்டேன் [சாக்கு போக்கு எனது வழக்கம் இல்லை சார்] எனது இந்த "பெயர்" பதிவுக்கும் தங்களது பதில் நடிகர் திலகம் திரியில் வரும் என்ற நம்பிக்கையுடன்....

நன்றி.

தங்களது பெயரை மாற்றி எழுதியதற்கு சைலேஷ் பாசு சார் மன்னிக்கவும், எனக்குத் தெரிந்த உண்மையான தகவலைத் தந்தேன். தனக்குத் தவறான தகவல் வந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி, முதலில் இதற்கு பெரிய மனது வேண்டும்.
மேலும் என்னைப் பொறுத்த வரையில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படம் என்பதற்காக வசூலை அதிகப்படுத்தியோ மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படம் என்பதற்காக வசூலை குறைத்தோக் கூறமாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.
தாங்கள் உடனடியாக பதிலுரைத்ததற்கு நன்றி சார்.
இதே போல் என்றும் உங்களிடம் அன்பான பதிலை எதிர்பாா்க்கும் அன்பன் சுந்தராஜன்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th September 2015, 09:23 AM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xat1/l/t31.0-0/p240x240/12022519_875102869240985_3234432139730568528_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
18th September 2015, 10:46 AM
https://www.youtube.com/watch?v=6r_nBE-Rnr4

அபிமான நடிகர், சிறந்த நடிகர் என பல்வேறு கோணங்களில் 1980 வரையிலான கால கட்டம் வரை தந்தி டிவி கருத்துக் கணிப்பு

A.R.S. Sir
Hats Off and Salute to You Sir.

vasudevan31355
18th September 2015, 12:23 PM
8000 ஆவது சிறப்புப் பதிவு

'பொட்டு வைத்த முகமோ'

'சுமதி என் சுந்தரி'

http://thumbnails107.imagebam.com/26605/c3bc38266041325.jpg

8000 ஆவது சிறப்புப் பதிவாக, ஸ்பெஷலாக வருவது 'சுமதி என் சுந்தரி' படப் பாடல். தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று பாலா பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் பாலா பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.

இதற்கு பாலா மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன் இளமை பொங்கும் பாலா வாய்ஸுடன் அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் அதுவும் என்னால் முடியும் இதுவும் என்னால் முடியும் என்று சூளுரைக்க சூரக்கோட்டையாரைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.

http://thumbnails104.imagebam.com/26605/4ba340266040796.jpghttp://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/08/Sumathi-En-Sundari-500x500-300x300.jpg

1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் பாலாவுக்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.

இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் பாலாவிற்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.

சரி வருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் பாலா உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் பாலா புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக நடிப்பின் சர்வாதிகாரி சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.

இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.

ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.

மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?

http://i.ytimg.com/vi/NaeKkH0hPus/hqdefault.jpghttp://i60.tinypic.com/2vtpmci.jpg

'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?

'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது) காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)

அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.

http://i62.tinypic.com/15hhcte.jpg

மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.

'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.

இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.

பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.

கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.

பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.

'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.

படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.

பாலா நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.

http://2.bp.blogspot.com/_78rwGPFYej0/SjO5YK3AdmI/AAAAAAAAARg/pK9c7KyKV_Y/s1600/2.jpg

பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்

பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ஆஆஆஆஆஆஆஅ………

மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைபோடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

என்னுடன் கலந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா

மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

நிழல் போல் மறைந்தாள்

லலலா லலலா லலலா லால்லா

பொட்டு வைத்த முகமோ

ஓஓஓஓஓ….

கட்டி வைத்த குழலோ

ஓ...ஓஓஒ

பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ

லலலா லலலா லலலா லால்லா

அந்தி மஞ்சள் நிறமோ

லலலா லலலா லலலா லால்லா


https://youtu.be/NaeKkH0hPus

goldstar
18th September 2015, 01:06 PM
Vasu sir,

1000 , no 10000 no 100000 no infinity kisses to you for your writing and narration about NT, NT every seconds poses.... You reflect my (no) our feelings of our NT...

Within few seconds so many expression and styles. Style's guru NT....

Week end songs going to be this song only, countless.....

JamesFague
18th September 2015, 01:23 PM
Congrats Mr Neyveliar for reaching another landmark.



Regards

Gopal.s
18th September 2015, 01:35 PM
வாசு ,

எண்ணிக்கைக்காக பாராட்டுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எவ்வளவு முறை பேதியானது என எண்ணி ,ஒரு மனிதனை பாராட்டுவது போன்றது.(இதில் நான் முரளி,வேலன் கட்சியாக்கும்) எத்தனை அதில் தரத்துடன், மற்றோருக்கு புதிய செய்திகளை சொன்னது என்று பார்த்தால், என்னை தவிர கார்த்திக் ,முரளி, நீ, ஓரளவு ராகவேந்தர்,பார்த்தசாரதி,சாரதா,பம்மலார், முத்தையன் அம்மு, கலைவேந்தன்,இவ்வளவுதான் தேறும்.ரவி,சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். நான் மிக ரசிக்கும் பதிவாளர்கள் வெங்கி ராம்,பிரபுராம் முதலியோர் காண்பதேயில்லை.

இதில் உன் பாணி அலாதி. தரத்துடன்,மற்றவர் ரசனையையும் கணித்து,புது புது கான்செப்ட் பிடித்து, அதற்காக மெனக்கெட்டு உழைத்து,உன் தேகத்தையும் ,நேரத்தையும் தியாகம் செய்து இவ்வளவு சுவாரஸ்யத்துடன் ரசனை குழைத்து நீ நடத்திய இந்த 8000 குட யாகத்திற்கு எனது தலையாய தலை வணக்கங்கள்.

Russelldvt
18th September 2015, 01:50 PM
http://i58.tinypic.com/3517p82.jpg

Russelldvt
18th September 2015, 01:58 PM
வாசு ,

எண்ணிக்கைக்காக பாராட்டுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எவ்வளவு முறை பேதியானது என எண்ணி ,ஒரு மனிதனை பாராட்டுவது போன்றது.(இதில் நான் முரளி,வேலன் கட்சியாக்கும்) எத்தனை அதில் தரத்துடன், மற்றோருக்கு புதிய செய்திகளை சொன்னது என்று பார்த்தால், என்னை தவிர கார்த்திக் ,முரளி, நீ, ஓரளவு ராகவேந்தர்,பார்த்தசாரதி,சாரதா,பம்மலார், முத்தையன் அம்மு, கலைவேந்தன்,இவ்வளவுதான் தேறும்.ரவி,சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். நான் மிக ரசிக்கும் பதிவாளர்கள் வெங்கி ராம்,பிரபுராம் முதலியோர் காண்பதேயில்லை.

இதில் உன் பாணி அலாதி. தரத்துடன்,மற்றவர் ரசனையையும் கணித்து,புது புது கான்செப்ட் பிடித்து, அதற்காக மெனக்கெட்டு உழைத்து,உன் தேகத்தையும் ,நேரத்தையும் தியாகம் செய்து இவ்வளவு சுவாரஸ்யத்துடன் ரசனை குழைத்து நீ நடத்திய இந்த 8000 குட யாகத்திற்கு எனது தலையாய தலை வணக்கங்கள்.

நன்றி கோபால் சார்..நீங்கள் சொல்லிய பட்டியலில் என் பெயரும் உள்ளது..சந்தோசம்..என் பதிவுகள் தொடரும்..

http://i57.tinypic.com/16056cg.jpg

KCSHEKAR
18th September 2015, 02:17 PM
8000 ஆவது சிறப்புப் பதிவு [/size]
'பொட்டு வைத்த முகமோ'[/size]
'சுமதி என் சுந்தரி'
வாசு சார்,

தங்களின் ஒவ்வொரு பதிவுமே என்னைபோன்றவர்களுக்கு சிறப்பான பதிவுதான். அதிலும் 8000 ஆவது சிறப்புப் பதிவாக "சுமதி என் சுந்தரி"யை, பாடல் வர்ணனை, புகைப்படம், பாடல் இணைப்புடன் அளித்து பிரமாதப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

J.Radhakrishnan
18th September 2015, 02:20 PM
வாசுதேவன் சார்
தங்களின் 8000வது பதிவு சுமதி என் சுந்தரி அருமை. தொடரட்டும் தங்கள் தொண்டு

parthasarathy
18th September 2015, 03:16 PM
Dear Vasudevan Sir (Neyveli),

Amazing write-up on "Pottu vaitha mugamo" song, especially about various signature styles of NT. You exactly captured the various nuances/poses of NT (as I and of course most of the fans would have captured), with your very very special and scintillating writing style.

Hats off!

Regards,

R. Parthasarathy

sivajidhasan
18th September 2015, 04:49 PM
வாசுதேவன் சார்!
8000 பதிவுகளை சிரமம் பார்க்காமல் பதிவிட்டமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

நட்புடன்
சிவாஜிதாசன்

Russellisf
18th September 2015, 05:19 PM
DEAR FRIENDS RARE VIDEO OF SIVAJI SUITING SPOT FILM THILANA MOGANAMBAL FROM YOUTUBE

https://www.youtube.com/watch?v=O-jyzcFLYXo

Russellxor
18th September 2015, 06:08 PM
To
MR.VASU SIR

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150918172456_zpsucklwtpb.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150918172456_zpsucklwtpb.gif.html)

Russelldvt
18th September 2015, 06:34 PM
8000 பதிவுகள் என்பது சாதாரனமான விசயம் கிடையாது..வாசு சாருக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்கள் ..தொடருங்கள்..

http://i60.tinypic.com/2nu642h.jpg

Russelldvt
18th September 2015, 06:35 PM
http://i62.tinypic.com/s1t2is.jpg

Russelldvt
18th September 2015, 06:36 PM
http://i59.tinypic.com/2q097w8.jpg

Russellxss
18th September 2015, 06:58 PM
அன்பு நண்பர்களே, மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த சான்றே போதுமானது. இது சிவாஜி ரசிகர்கள் எடுத்த கருத்துக் கணிப்புக் கிடையாது. தந்தி டி.வி.மக்களிடையே வாக்கெடுப்புப் போல் நடத்தி வெளியிட்ட கருத்துக் கணிப்பு.
மக்கள்தலைவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் 1980 வரை சிறந்த நடிகர் சிவாஜி என்று வாக்களித்து உள்ளனர் மக்கள்.
மேலும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு பெண் ரசிகைகளை விட ஆண் ரசிகர்களே அதிகம் என்பதும் கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ளது.

https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12042641_526350037522107_4956642742190003883_n.jpg ?oh=494c847236eac1b90a458ba53cf00a07&oe=56A454E4

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
18th September 2015, 07:05 PM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12002044_526351654188612_6525112585084222924_n.jpg ?oh=baa56a72ace9d225a41666739409b059&oe=56A66D60

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellsmd
18th September 2015, 07:22 PM
எவரும் எட்டாததை எட்டிய
நம் நடிகர் திலகத்திற்கென
எட்டாயிரம் பதிவு தந்த
அய்யா வாசுதேவனாரை
வணங்கி வாழ்த்துகிறேன்.

Russellsmd
18th September 2015, 07:28 PM
தொலைக்காட்சியில் எஸ்.பி.பி
தோன்றி "பொட்டு வைத்த
முகமோ" பாடிக் கொண்டிருக்கிறார்.

பாட்டி சொல்கிறாள்..
"சிவாஜி மாதிரியே பாடுறாரே..
இவரு?"

அய்யா..!

இவ்வளவு தத்ரூபமாகவா
வாயசைப்பது?

( பழைய முகநூல் பதிவு .)

Russellsmd
18th September 2015, 07:33 PM
ஒளிரும் கண்களில்
இளமையுடன்..

பாடலுக்கு வாயசைப்பதில்
பழகிய புலமையுடன்..
அய்யா நடிகர் திலகம்.

வடிவான உடலழகை
மேலும் அழகாக்கும்
அவரின் மிடுக்கான கால்சட்டை.

ஒரு துளி கசங்கலின்றி
அதனுள் உள் நுழைத்த
எடுப்பான மேல்சட்டை.

நடிகர் திலகத்தின் வழியாக
யாரும் அதுவரை கேட்டறியாத
துள்ளலான அந்தப் புதுக்குரல்.

புதுக் குரலென்பதால்
அதற்கேற்றாற் போல்
அய்யா அள்ளித் தெளித்த
புதுப் பாவனைகள்.

முகம் முன் நீட்டி,
உடல் பின் தள்ளி,
கையை ஒயிலாய் வளைத்து,
உதடுகள் துடிக்க அவர்
உச்சரித்துப் பாடும்
"புன்னகை புரிந்தாள்."

பச்சை கொஞ்சும்
தேயிலைத் தோட்டத்தின்
குறுகலான பாதைகளில்
மின்னல் போல்
ஓடியாடும் கலைச் செல்வி.

காட்சி காட்டும்
சந்தோஷத்தை
இசையாலும் நிச்சயித்த
அய்யா எம்.எஸ்.வி.

"பாடும் நிலா"வின்
அந்த நாளைய
வெளிச்சக் குரல்.

இன்னும் என்னென்ன
சொல்ல..?

"பொட்டு வைத்த முகமோ?"
ரொம்பப் பிடிக்கும்.

( 27.12.2013 நாளில் என்
முகநூல் பதிவு.)

Russellbpw
18th September 2015, 08:59 PM
Dear Neyveli Vasudevan Sir,

My heart felt congratulations for your 8000th Special Post.

Pottu Vaiththa Mugamo - One of the best song of SPB.

If you notice, In Pottu Vaiththa Mugamo , when SPB sung the voice of the young SPB was little bold. SO, Nadigar Thilagam will also equally mime inline with the voice of SPB.

In films like Raja, SPB voice was little more matured and Nadigar Thilagam if you notice would have changed his style of Miming inline with SPB's matured Voice.

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY


In Thirisoolam Era, SPB voice became more refined and Nadigar Thilagam would have mimed in a totally different way inline with the soothing voice of SPB....

https://www.youtube.com/watch?v=qbCqgaC3ZfQ


At all stages, Nadigar Thilagam has clearly noticed the voice change of SPB and would have equally matched miming of SPB.

That's the greatness of NT.

Excellent workings vasudevan sir . Advance Congrats for your 10,000 post.

Regards
RKS

Russellsmd
18th September 2015, 09:01 PM
கலையரசரும்,கவியரசரும்
கைகோர்த்து ஜெயித்த
எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.

விறகுவெட்டியாக மாறி வரும்
இறைவன், வீதியில் வந்து
பேசும் எளிமைத் தத்துவம்
இப்பாடல்.

மனிதர்களை வாழ்விக்கிற
மகேசன், மனிதர்களின் உலகத்தில் கலக்கிற அதிசயம்
பேசுகிறது, இந்தப் பாடல்.

ஒன்றில் சந்தன வாசனை,
ஒன்றில் ஜவ்வாது வாசனை
என்று தலைவர் தலை சுமந்து வரும் விறகுகள் போலே பாடல் வரிகளும், ஒன்றில் சிந்தனை வாசனை,ஒன்றில்
தத்துவ வாசனையென்று
மணக்கின்றன.

"பத்துப் பிள்ளை பெத்த
பின்னும் எட்டு மாசமா?
இந்தப் பாவி மகளுக்கெந்த
நாளும் கர்ப்ப வேஷமா?"

-பிரசவ வலி காணுதலே தொழிலெனக் கொண்டோர்..
குறும்பான இந்தப் பாடல் வரிகள் தரும் ரகசிய வலியையும் தாங்கித்தான்
தீர வேண்டும்.

தன்னுடன் ஆடும் இளமங்கை, பாடல் முடியும் தருவாயில் கை
பிடித்திழுத்து காதலுங்
காமமுமாய்ப் பார்க்க...

பாடல்வரிகளிலிருந்து கவனம்
மாறாமல், "எனக்கு மணமாகி
இரண்டு மனைவியருண்டு.
என்னை விட்டு விடம்மா" என
சைகையிலேயே நடிகர் திலகம்
சொல்வாரே..

அதற்காகவே இந்தப்பாடலை
ஆயிரம் முறை காண வேண்டும்.

இந்தப் பாடல் -ஆணி.

நம் இதயம்- பசுமரம்.

https://youtu.be/3Fu0546rs1g

RAGHAVENDRA
18th September 2015, 10:26 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR1SIVAJI_zpsfgfscnf1.jpg

ஒப்பீடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது பெரும்பாலும் சார்பு நிலைக் கோட்பாட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் இந்தக் கணிப்பினைப் பார்த்த பின் என்னுடைய நிலைப்பாடு இன்னும் நியாயமாகிறது. இவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பிற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் என்ன, அல்லது கேட்கப்பட்ட கேள்விகள் என்ன போன்ற விவரங்கள் முழுதும் தெரிய வேண்டும். நடிகர் திலகத்தின் சதவீதத்திற்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் கிடைத்துள்ள சதவீதம் இவ்வளவு அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பே இல்லை. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகளுக்கு மேல் இருக்கக்கூடிய வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இல்லை. 50-50 தான் உண்மையான அந்தக் கால நிலவரம். இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகள் மட்டுமே FLUCTUATION எனப்படும் ஊசலாட்டத்தில் இருந்திருக்க முடியும். ஒரேயடியாக 14 விழுக்காடு வித்தியாசம் என்றால் மனம் ஏற்க மறுக்கிறது. அப்படியே அதிகம் என்றால் கூட அது 48-52 அல்லது 47-53 என்ற அளவிற்கு மேல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இது 1980வரை என்பதையும் ஏற்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் 1980ல் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படிப்பார்த்தால் 1980ல் சிவாஜி-எம்.ஜி.ஆர். அபிமானத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டுமானால் 1980ல் சுமார் 20 வயதாவது நிரம்பியவர்களால் தான் தெளிவாக சொல்ல முடியும்.

அப்படி இருக்கும் போது 1980 கால ஹீரோக்களைப் பற்றிச் சொல்லியிருக்கக் கூடியவர்கள் 1960ல் அல்லது அதற்கு முன்போ பின்போ தான் பிறந்திருக்க முடியும். அந்த பிராயத்தில் இருவருக்குமே ரசிகர்களின் அளவு மிகத் துல்லியமாக யூகிக்க வேண்டுமென்றால் 50-50 அளவில் தான் இருக்க வேண்டும்.

மணிமண்டபம் அரசு செலவில் கட்டக் கூடாது என்ற விவாதத்திற்கும் இந்த கருத்துக்கணிப்பிற்கும் ஏனோ மனம் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது. அப்படி இருக்கக் கூடாது என மனம் விரும்புகிறது.

இதில் இன்னோர் விஷயமும் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு சமமாக மூவேந்தராக ஜெமினியும் சேர்த்து தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர் என பல பத்திரிகைகள் எழூதின. அப்படியென்றால் அந்தக் காலத்தில் ஜெமினிக்கு அபிமானம் மிகவும் குறைவு 9 சதம் என கருத்துக் கணிப்புக் கூறுகிறதே.

இதில் எது உண்மை. ஜெமினி மூவேந்தரில் ஒருவராக விளங்கினார் என்பதா அல்லது அப்படியில்லை, சிவாஜி-எம்.ஜி.ஆர். இருவர் மட்டுமே கோலோச்சினர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை.

நண்பர்களே இது ஒரு தனிப்பட்ட எண்ணமாகத்தான் கூறுகிறேன். எந்த ஒரு கருத்து மோதலுக்காகவும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

RAGHAVENDRA
18th September 2015, 11:05 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/vasu8000grtgs_zpsagg8ppgw.jpg

RAGHAVENDRA
18th September 2015, 11:13 PM
வாசு சார்
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுப்படம், ஒவ்வொரு கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு ஒரு கனவுப்படம் என்று, திரையுலகைப்பொறுத்த மட்டில் ஒவ்வொரு பாலருக்கும் ஒரு கனவுப்படம் ஒன்று உண்டு. அப்படி ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு கனவுப்படம் உண்டென்று ஒரு நியதி வகுத்தால் அதில் என்னுடைய கனவுப்படமாக நான் நினைத்துச் சுட்டிச்சொல்லக் கூடியது

சுமதி என் சுந்தரி

திரைக்காவியமே..

எண்ணற்ற முறைகள், சில நூறுகளைத் தொட்டிருக்கும் அளவிற்கு இப்படத்தைப் பார்த்து அதில் மூழ்கிப் போனவன் என்ற வகையில் தங்களுடைய 8000வது பதிவினை எனக்காக தாங்கள் வழங்கியதாகவே நான் நினைக்கிறேன்.

தங்களுடைய அட்டகாசமான விளக்கவுரை இப்படத்தின் மேல் மக்கள் ஏன் இவ்வளவு வெறித்தனமான மோகம் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகத்துல்லியமாக எடுத்துரைத்துள்ளது.

தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Subramaniam Ramajayam
19th September 2015, 08:05 AM
EXCELLENT WORK S SUNDARI PHOTOGRAPHS AND ALL YOUR 8000 PLUS POSTINGS
VASU SIR No words to describe your hardwork continue and all the best
nlessings
ramajayam

ScottAlise
19th September 2015, 08:26 AM
Dear Vasudevan Sir,

CONGRATULATIONS FOR AMAZING 8000 POSTS and Amazing write-up on "Pottu vaitha mugamo" song, especially about various signature styles of NT.

Hats off!

vasudevan31355
19th September 2015, 08:36 AM
'சுமதி என் சுந்தரி' படத்தின் 'பொட்டு வைத்த முகமோ' பாடல் பதிவைப் படித்துப் பாராட்டிய திரு. கோடல் ஸ்டார், வாசுதேவன் சார், கோபால் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார், பார்த்தசாரதி சார், சிவாஜி தாசன் சார், செந்தில்வேல் சிவராஜ் சார், முத்தையன் அம்மு சார், அருமைக் கவிஞர் ஆதவன் ரவி சார், ரவிகிரண் சூர்யா சார், ராகவேந்திரன் சார், பெரியவர் ராமஜெயம் சார், தம்பி ராகுல்ராம், மற்றும் 'லைக்'குகள் அளித்த பரணி சார், சுந்தரபாண்டியன் சார், சைலேஷ்பாசு சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

vasudevan31355
19th September 2015, 08:52 AM
முத்தையன் அம்மு சார்,

தங்களது பாராட்டுக்கு நன்றி. அது போலவே படத்தின் ஸ்டில்களை எடுத்து அவற்றிலிருந்து தேவையானவற்றை செலெக்ஷன் செய்து பின் ஒவ்வொன்றாக tiny pic-ல் அப்லோட் செய்வதும் சாதாரண காரியமல்ல. பல நாட்களில் இரவெல்லாம் தூங்காமல் நீங்கள் நடிகர் திலகத்தின் படஸ்டில்களை தரவேற்றுவதை நான் அடிக்கடி கண்டதுண்டு. மிகவும் கஷ்டமான வேலை. நீங்கள் அதை எங்களுக்காகச் செய்யும் போது மனம் மகிழ்கிறது. தங்கள் உடல்நலனையும் பேணுங்கள். தூக்கம் ரொம்ப முக்கியம். அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதுமே தங்களது ரசனையான நடிகர் திலகத்தின் ஸ்டில்களை ரசிப்பவர்கள் மத்தியில் நானும் ஒருவன்.நன்றி!

vasudevan31355
19th September 2015, 08:57 AM
சிவராஜ் சார்,

தாங்கள் அளித்த யுவராஜாவின் பச்சை,ரோஸ் நிறங்களில் மாறும் gif ஸ்டில்லை அப்படியே அள்ளிக் கொண்டேன். நன்றிகள்.

vasudevan31355
19th September 2015, 08:59 AM
ராகுல்,

வாருங்கள்...வந்து எழுதுங்கள்.

vasudevan31355
19th September 2015, 09:23 AM
ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி! பாராட்டு ஸ்டில் அருமை.சுமதி என் சுந்தரி தங்களுடைய பேவரைட் என்று அனைவருக்குமே தெரியும். உங்களைப் போலவே என்னுடைய பள்ளித் தோழன் வேல்முருகன் என்று பெயர் அவன் சுமதி என் சுந்தரி படத்தை எத்தனை முறை பார்த்தான் என்று கணக்கே இல்லை. அவனாலேயே நான் பலமுறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அவன் எப்படியும் 300 தடவைகளாவது பார்த்திருப்பான். அவன் வாயில் கணேசன்-லலிதா என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே ஒலிக்காது. அந்த அளவிற்கு நடிகர் திலகம் ஜெயலலிதா ஜோடி என்றால் பைத்தியம். படத்தின் வசனக் காட்சிகளின் ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடமாகச் சொல்வான். ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளோ அத்தனை காட்சிகளையும் விடாமல் பார்ப்பான். இந்த ஊர் அந்த ஊர் என்ற கணக்கெல்லாம் இல்லை. தமிழ் நாட்டின் எந்த மூலையில் இந்தப் படத்தைப் போட்டாலும் அங்கு அவனைப் பார்க்கலாம். அவ்வளவு வெறித்தனம் இந்தப் படத்தின் மேல் அவனுக்கு. உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு அவன் நினைவு வந்து விட்டது.

adiram
19th September 2015, 11:52 AM
டியர் வாசு சார்,

எவரும் எட்டாத தரத்தில் எட்டாயிரம் பதிவுகளைத்தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அதில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சுமதி என் சுந்தரி பாடலைப் பதித்து எட்டாயிரம் அடிகள் உயரத்தில் தூக்கி நிறுத்தி விட்டீர்கள்.

எப்படியாவது பதிவுகள் இட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பது ஒருவகை. எத்தனை பதிவுகள் இட்டோம் என்பதைவிட, எப்படிப்பட்ட பதிவுகள் இட்டோம் என்பது இரண்டாவது வகை இந்த இரண்டாவது வகையில் கூட அதிக பதிவுகள் இட்டு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நீங்களே சான்று.

ஒவ்வொரு பதிவுக்கும்தான் எப்படிப்பட்ட உழைப்பு. அப்பப்பா மலைக்க வைக்கிறது. எந்த ஒரு சீரீஸை எடுத்துக்கொண்டாலும் அதை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்பதில் உங்கள் மெனக்கெடல் அற்புதம். பதிவர் என்றால் இப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் நீங்கள். உங்கள் துளிவிஷம் பதிவை 'பாட்ஷா' பார்த்திருந்தால் "இந்த ஒரு பதிவு நூறு பதிவு மாதிரி ஹா.ஹா.ஹா." என்று பாராட்டியிருப்பார்.

எட்டாயிரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயப்பதிவுகள். மக்களே மறந்துபோன பழைய படங்கள், பழைய பாடல்கள், பழைய (வெளிச்சத்துக்கு வராத) நடிகர் நடிகைகள், பாடகர் பாடகிகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள். நினைத்தால் நிச்சயம் தலைசுற்றும். அத்தனை உழைப்பும் இந்த ஒல்லியான உடம்புக்குள்ளிருந்து.

பாலா நடிகர்திலகத்துக்காக பாடிய பாடல்களை ஒதுக்கி வைத்திருந்தபோதே ஒரு எண்ணம், ஏதோ ஒரு காரணத்துக்காக என்று நினைத்தேன். ஆனால் எட்டாயிரம் என்ற லேண்ட் மார்க்குக்காக என்று நினைக்கவில்லை. ஒளித்துவைத்து சமயம் பார்த்து பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.

'இரண்டில் ஒன்று' பாடலை ஒன்பதாயிரம் என்ற லேண்ட்மார்க்குக்காக ஒளித்து வைக்காமல் உடனே தாருங்கள்.

சலியாத உழைப்புக்கு பாராட்டுக்கள்,
எங்களை பரவசத்தில் ஆழ்த்தியதற்கு நன்றிகள்,
மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

வாசுவின் பத்தாயிரமாவது பதிவுக்கு எப்படி வாழ்த்துச்சொல்லலாம் என்ற சிந்தனையுடன்.... உங்கள் ஆதி.

Russellbpw
19th September 2015, 12:24 PM
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/mgr1sivaji_zpsfgfscnf1.jpg

ஒப்பீடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது பெரும்பாலும் சார்பு நிலைக் கோட்பாட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் இந்தக் கணிப்பினைப் பார்த்த பின் என்னுடைய நிலைப்பாடு இன்னும் நியாயமாகிறது. இவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பிற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் என்ன, அல்லது கேட்கப்பட்ட கேள்விகள் என்ன போன்ற விவரங்கள் முழுதும் தெரிய வேண்டும். நடிகர் திலகத்தின் சதவீதத்திற்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் கிடைத்துள்ள சதவீதம் இவ்வளவு அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பே இல்லை. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகளுக்கு மேல் இருக்கக்கூடிய வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இல்லை. 50-50 தான் உண்மையான அந்தக் கால நிலவரம். இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகள் மட்டுமே fluctuation எனப்படும் ஊசலாட்டத்தில் இருந்திருக்க முடியும். ஒரேயடியாக 14 விழுக்காடு வித்தியாசம் என்றால் மனம் ஏற்க மறுக்கிறது. அப்படியே அதிகம் என்றால் கூட அது 48-52 அல்லது 47-53 என்ற அளவிற்கு மேல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இது 1980வரை என்பதையும் ஏற்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் 1980ல் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படிப்பார்த்தால் 1980ல் சிவாஜி-எம்.ஜி.ஆர். அபிமானத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டுமானால் 1980ல் சுமார் 20 வயதாவது நிரம்பியவர்களால் தான் தெளிவாக சொல்ல முடியும்.

அப்படி இருக்கும் போது 1980 கால ஹீரோக்களைப் பற்றிச் சொல்லியிருக்கக் கூடியவர்கள் 1960ல் அல்லது அதற்கு முன்போ பின்போ தான் பிறந்திருக்க முடியும். அந்த பிராயத்தில் இருவருக்குமே ரசிகர்களின் அளவு மிகத் துல்லியமாக யூகிக்க வேண்டுமென்றால் 50-50 அளவில் தான் இருக்க வேண்டும்.

மணிமண்டபம் அரசு செலவில் கட்டக் கூடாது என்ற விவாதத்திற்கும் இந்த கருத்துக்கணிப்பிற்கும் ஏனோ மனம் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது. அப்படி இருக்கக் கூடாது என மனம் விரும்புகிறது.

இதில் இன்னோர் விஷயமும் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு சமமாக மூவேந்தராக ஜெமினியும் சேர்த்து தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர் என பல பத்திரிகைகள் எழூதின. அப்படியென்றால் அந்தக் காலத்தில் ஜெமினிக்கு அபிமானம் மிகவும் குறைவு 9 சதம் என கருத்துக் கணிப்புக் கூறுகிறதே.

இதில் எது உண்மை. ஜெமினி மூவேந்தரில் ஒருவராக விளங்கினார் என்பதா அல்லது அப்படியில்லை, சிவாஜி-எம்.ஜி.ஆர். இருவர் மட்டுமே கோலோச்சினர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை.

நண்பர்களே இது ஒரு தனிப்பட்ட எண்ணமாகத்தான் கூறுகிறேன். எந்த ஒரு கருத்து மோதலுக்காகவும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தந்தியின் கணக்குப்படி மக்கள் விரும்பிய சிறந்த நடிகர் இப்படி படித்திருக்கவேண்டும் - மக்கள் திலகம் அபிமான நடிகர் என்று உள்ள 14% அதிக சதவிகிதம் ஞாயப்படி மக்கள் விரும்பிய சிறந்த நடிகர் என்பதில் நடிகர் திலகம் அவர்கள் 41% உடன் 14% கூட்டி 55% என்பதே சரியான ஒரு சதவிகிதமாகும் என்பது எனது கருத்து காரணம் 1991 குமுதம் கருத்துகநிப்பும் அதுவே !

நடிப்பு என்பது கலையை சார்ந்தது - அபிமானம் என்பது அரசியலும் சார்ந்துள்ளது காரணம் திரு mgr அவர்கள் நடிகர் மட்டும் அல்ல..நாட்டை ஆண்ட முதல்வர் அவர் கட்சி இன்றும் ஆண்டுகொண்டிருக்கிறது. ஆகவே அபிமானம் என்பது வரைதான் செய்யும் அதிக சதவிகிதம் அரசியல் சார்ந்து அதனால் அதிகரித்துள்ள ஒரு விஷயம் கூட என்பது மறுக்கமுடியாத விஷயம்.

தந்தி கூரியிருக்கவேண்டியது மக்கள் தலைவராக அபிமானத்துடன் ஏற்றுகொண்ட நடிகர் யார் என்பதே சரியான கேள்வியாகும்.

சிறந்த நடிகர் என்று வரும்போது உலகம் அறிந்த ஏற்றுக்கொண்ட உண்மை...ஒரே ஒரு நடிகர் தான் என்பது ..அது நடிகர் திலகம் அவர்கள் தான் என்பது...இதற்க்கு ஒரு சதவிகிதமும் எவரும் கணிக்க முடியாதது !

எதற்கு இப்படி எல்லாம் இப்போது செய்கிறார்களோ தெரியவில்லை...சிலை...மணிமண்டபம்....என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்...நடக்கக்கூடாதது நடந்தால் ....நடக்ககூடாததேல்லாம் நடக்கவும் செய்யும் !

இது எனது பார்வையில் ...விவாதத்திற்கு அல்ல !

Rks

JamesFague
19th September 2015, 12:36 PM
A writeup on Pazhani in The Tamil Hindu on the occasion of 50 years.


பழனி (1965)

விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் காலம் இது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலகங்களை அமைக்க விவசாய நிலங்களையே விழுங்குகின்றன. இந்த நிகழ்கால அவலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் போதுமான அளவுக்கு சமீபகாலத் தமிழ் சினிமாவில் வெளிவராதது பெரும் சோகம்.

விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய நாயகர்கள் நினைக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை. சிவாஜி எளிய விவசாயியாக, கள்ளம் கபடமற்ற அப்பாவியாக நடித்த பல படங்களில் அவருக்கு மகுடமாக அமைந்த படம் 1965-ல் வெளியான ‘பழனி’.

தியாக தீபம்

கிராமத்து விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நகரத்தில் வாழ்பவன் சோற்றில் கை வைக்க முடியும் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட விவசாயியும் விவசாயம் சார்ந்த கிராம வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பழனி படத்தின் கதை.

மனைவியை இழந்த கிராமத்து விவசாயி பழனி (சிவாஜி). இவருக்கு வேலு ( ராம்), ராஜூ (எஸ்.எஸ். ரேஜேந்திரன்), முத்து (முத்துராமன்) ஆகிய மூன்று தம்பிகள். இவர்களுடன் நிராதரவான அவர்களது அக்காள் மகள் காவேரியும் (தேவிகா) வசிக்கிறார். கிராமத்துப் பண்ணையார் சொக்கலிங்கத்தின் ( பாலையா) நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து, ஒற்றுமைக்குப் பேர்போன அண்ணன் தம்பிகளாக வசித்துவருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்த எமிலி (புஷ்பலதா) அருகிலுள்ள மதுரை நகருக்கு மிதிவண்டியில் சென்று கல்லூரியில் படித்துவருகிறாள். பழனியின் குடும்பத்தினருடன் நட்புடன் பழகிவருகிறாள். பழனியின் மூத்த தம்பியான வேலுவின் மனைவி நாகம்மா கூட்டுக் குடும்பத்தில் பிடிப்பில்லாமல் இருக்கிறாள். சமயம் பார்த்து சண்டையிட்டுத் தன் கணவனைத் தனியே பிரித்துச் சென்று தனிக்குடித்தனம் நடத்துகிறாள். பாம்பு கடித்து வேலு இறந்துவிட நாகம்மா கைம்பெண்ணாகிறாள்.

ஏழை விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட பண்ணையார், எமிலியைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் தனது தாயாருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு சென்னை நகருக்குச் சென்றுவிடுகிறாள் எமிலி.

இதற்கிடையில் வினோபா பாவேவின் பூமி தான இயக்கம் பழனியின் கிராமத்துக்கு வருகிறது. பழனியின் விவசாய ஈடுபாட்டைக் கண்டு அவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தைப் பண்ணையார் சொக்கலிங்கத்திடமிருந்து தானமாகப் பெற்றுத்தருகிறது. ஆனால், அது கடும் பாறை நிலம். அதைச் சீர்திருத்தி விளைநிலமாக மாற்ற 2,000 ரூபாயை பழனிக்குக் கடனாகத் தருகிறார் பண்ணையார். ஆனால், பழனி ரூ. 12,000 கடன் வாங்கியதாக ஊரை நம்ப வைத்து நிலத்தையும் பிடுங்கிக்கொள்கிறார். அண்ணனின் ஏமாளித்தனத்தைக் கண்டு குமுறும் தம்பிகள் ராஜு, முத்து இருவரும் அவரைப் பிரிந்து சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கே எமிலி அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். ஆனால், நகர வாழ்க்கை ராஜூவைச் சிறையில் தள்ளுகிறது. தம்பிகளைக் காண சென்னை வரும் பழனி ராஜூவின் நிலையை எண்ணித் துடித்துப்போகிறார்.

கிராமத்திலோ பண்ணையாரின் கொடுமைகள் உச்சத்தை எட்டுகின்றன. தன் இச்சைக்கு இணங்காத நாகம்மாள் மீது அவர் இழிபெயர் சுமத்த, சாதுவாக இருந்த பழனி கொதித்தெழுகிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் ராஜூ நடந்ததை அறிந்து சொக்கலிங்கத்தைத் தாக்குவதற்காகத் துரத்த, அவருடன் மொத்த கிராமமும் சேர்ந்துகொள்கிறது. உயிருக்கு பயந்து ஊர்க்கோயிலில் ஓடி ஒளியும் சொக்கலிங்கத்தை பழனி காப்பாற்றுகிறார். பழனியின் நல்ல குணத்தால் வெட்கித் தலைகுனியும் பண்ணையார் தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைகிறார்.

இறுதியில் பண்ணையாரின் கைவசம் இருந்த பெரும் பகுதி நிலம் அவருடையது அல்ல என்பது தெரியவர, நிலத்தைக் கூட்டுறவுச் சங்கம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்குப் பிரித்துத் தருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்கிறது. அறுவடையின் முழுப் பலனும் உழுத விவசாயிக்கே கிடைக்கின்றன. பழனியும் சகோதரர்களும் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வசிக்கிறார்கள்.

ஒரு பொங்கல் இரு திலகங்கள்

1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை என்கிற வலுவான கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றிபெற்றன.

ஆனால், பழனி படத்தில் சிவாஜியுடன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஸ்ரீ ராம், தேவிகா, புஷ்பலதா ஆகியோர் இணைந்தனர். வில்லன்களாக டி.எஸ். பாலைய்யாவும் எம்.ஆர். ராதாவும் நடித்தனர். வில்லன்களோடு வளையவந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நகைச்சுவையாளராக நாகேஷ் நடித்திருந்தார். சின்னக் கணக்குப்பிள்ளை சந்தானமாக நாகேஷ் செய்யும் கதா கலாட்சேபம் படத்தில் சிரிப்பு மழையைப் பொழிந்து, சிந்திக்கவும் வைத்தது.

விவசாயத் தொழிலின் மேன்மையையும் சகோதர பாசத்தின் உன்னதத்தையும் உயர்வாகப் பேசிய இந்தப் படத்தில் தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய கூட்டுக் குடும்ப முறையையும் முன்னிறுத்தியது பழனி படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி. ஐயர். படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கியவர் ‘குடும்பப் படங்களின் பிதாமகன்’ பீம்சிங். தமிழ் கிராமியத்தைக் கண்முன் நிறுத்திய வசனங்களை எழுதியவர் எம்.எஸ். சோமசுந்தரம்.

விருதும் தாக்கமும்

படத்தில் நடித்த அனைவருமே குறைவான நாடகத்தனத்துடன் நடித்திருந்த படம் இது. தனது குடும்பத்தின் நலனுக்காகத் தியாக தீபமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன் பழனியாக சிவாஜியின் நடிப்பும், தீமையை எதிர்க்கும் அவரது தம்பி ராஜூவாக எஸ்.எஸ். ராஜேந்திரனின் நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டன.

சிறந்த படத்துக்கான நற்சான்றிதழை (தேசிய விருது) பழனி படம் வென்றது. படிக்காதவர்கள் நகரத்துக்கு வந்தால் பிழைக்க முடியாது என்ற எண்ணத்தை எடுத்துக் காட்டியது பிற்போக்கான கருத்தென்று விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்பட்டது. அதேபோல் கிராமத்து வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்புகளில் வில்லன்கள் பெண் இச்சையோடும், ஏமாற்றுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பதும் வழக்கமான சித்தரிப்பாக இருந்ததை மறுக்க முடியாது.

மறக்க முடியாத பாடல்கள்

இந்தப் படத்தில் கிராமத்து வாழ்க்கையைப் பாடல் காட்சிகள் வழியே சித்தரித்த விதம் இயக்குநர் பீம்சிங்குக்கே உரிய தனித்துவம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘ஆறோடும் மண்ணில் இன்றும் நீரோடும்’ பாடல் இன்றும் ஏர் உழும் காட்சியையும் நடவு நடும் காட்சியையும் நம் கண்முன் கொண்டுவரும். ஹரி காம்போதி ராகத்தில் சாயலில் அமைந்த இந்தத் தெம்மாங்குப் பாடல் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களும் மறக்க முடியாத கதைப் பாடல்களாக அமைந்தன. இன்றைய சூழ்நிலையில் மறுஆக்கம் செய்யப்பட வேண்டிய படம் பழனி என்பதில் ஐயமில்லை.

adiram
19th September 2015, 04:44 PM
A writeup on Pazhani in The Tamil Hindu on the occasion of 50 years.

ஒரு பொங்கல் இரு திலகங்கள்

1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள்.

தமிழ் ஹிண்டு நாளிதழில் தொகுப்பாளர் தவறான தகவலைத் தந்திருக்கிறார்.

'பழனி' வெற்றிப்படமல்ல. 50 நாட்களைக் கடந்ததற்கு கூட ஆதாரங்கள் இல்லை.

தமிழன் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

ScottAlise
20th September 2015, 08:08 AM
பார்த்ததில் பிடித்தது -52

தெனாலிராமன் , 1956 ல் தமிழ் , தெலுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவான திரைப்படம் , தமிழில் நடிகர்திலகமும் , தெலுங்கு பதிப்பில் நாகேஸ்வர ராவ் தெனாலிரமனாகவும் நடிக்க, இரு மொழிகளிலும் மன்னராக NTR .

நம்மில் பலருக்கு தெனாலிராமன் கதைகள் தெரிந்து இருக்கும் , ஆனால் அதே சமயம் தெனலிராமனின் ஆரம்பகால வாழ்கை தெரியாமல் இருக்கும் , இந்த திரைபடம் தெனாலிராமன் ஆரம்பகாலத்தில் பட்ட பொருளாதார நெருக்கடி , காளிமாதா அருளில் அவருக்கு வந்த வாழ்வை பற்றி அழகாக விவரிக்க படுகிறது . படத்துக்கு , தெனலிராமனின் துடுக்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த முதல் 30 நிமிடங்கள்

தெனாலிராமன் கதைகள் மட்டுமே கேட்டு வளந்தவர்களுக்கு இந்த 30 நிமிடங்கள் கொஞ்சம் மெதுவாக தான் நகரும் , ஆனால் இதை கடந்து வந்தால் படம் முழுவதும் சிரிப்பு , சிலிர்ப்பு , மதியுகம் அனைத்தும் கலந்த அழகான பூமாலை

வாழ்க்கையில் சோதனையை , எப்படி அணுக வேண்டும் என்று அழகாக விவரித்து இருப்பார் இயக்குனர் BS ரங்கா .

17 யானைகளை முன்று பேருக்கு பங்கு போடும் காட்சி , யானை கால்களால் நசுக்க படும் பொது சாதுர்யமாக தப்பித்து கொள்ளும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சி , நான் மிகவும் ரசித்த காட்சிகள்

தெனலிராமனாக சிவாஜி கணேசன் : பராசக்தி , மனோகரா போன்ற படங்களில் angry young man , திரும்பிப்பார் , நானே ராஜா படத்தில் வில்லன் என்று படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நடிகர் திலகம் , நகைச்சுவை படங்களில் அழகாக கலக்கி இருப்பார் ,
உதாரணம் : கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி , சபாஷ் மீனா , கலாட்ட கல்யாணம்
ஆனால் தெனாலிராமன் completely different ,எப்படி என்றால் , தெனாலிராமன் என்பவர் புத்திசாலி , சவால்களை எதிர்கொண்டு ஜெயித்து விடுவர் , அதே சமயம் முகத்தில் அப்பாவி தோற்றம் இருக்க வேண்டும் , மேலே சொன்ன படங்களில் situation காமெடி என்றால் , இந்த படத்தில் solutions மட்டுமே காமெடி , ஆனால் வர போகும் ஆபத்து மிகவும் பெரியது , இந்த மாதிரி சத்தமே இல்லாமல் அழகாக பொரிந்து விடுவார் நடிகர் திலகம் ,
நாகையையும் -சிவாஜியும் கலக்கும் நாட்டு ஜனங்க பாடல் இன்றும் பொருந்தும் , அதில் அவர் தோற்றம் அசல் மாறுவேடம் - அடையாளம் கண்டுபிடிப்பது மிகுவ்ம் கடிதம்

காளி அறிவு , செல்வம் இரண்டையும் கொடுத்து எதை வேண்டுமோ எடுத்துகொள் என்று சொல்லும் பொது இரண்டையும் எடுத்து கொண்டு கண்களில் ஒரு twinkle உடன் காரணம் சொல்லும் பொது அவர் மீது ஈர்ப்பு அதிகம் ஆகிறது

மலையாள ஜோதிடராக மலையாளம் கலந்த தமிழில் சம்சாரிக்கும் பொது , அதே காட்சியில் அவர் சிகைஅலங்காரம், மீசை அனைத்தும் பொருத்தமாக அமைந்து இருப்பதில் அவர் எடுத்து கொண்ட அக்கறை அழகாக தெரிகிறது . பானுமதி உடன் அவர் உரையாடல் கண்ணதாசன் அவர்களின் trademark வசனங்கள் இனிமையான தமிழ்

இந்த படத்தின் அடுத்த ஆச்சர்யம் நம்பியார்

இவர் தான் வில்லன் என்று நினைத்து பார்க்கும் பொது , இவர் செய்கையும் அதை உறுதி படுத்த , அங்கே இருக்கும் ஒரு திருப்பம் , நம் எதிர்பாராத ஒன்று ,அவர் சாந்தமான முகம் அவர் மீது சந்தேகத்தை அதிக படுத்தும் ஒரு factor

பானுமதி :

traitor பாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்

NTR :

படத்தில் இவர் பாத்திரம் வரும் கொஞ்ச நேரத்தில் இவர் தோற்றத்தில் நம்மளை இவர் ராஜா என்றே தோன்ற வைத்து விடுகிறார்


இந்த படம் இன்னும் அதிகமாக கொண்டாட படவில்லை என்றே தோன்றுகிறது

vasudevan31355
20th September 2015, 11:09 AM
ஆதிராம் சார்!

தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தலைவர் பாடல் ஏன் தாமதமானது என்று அழகாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!

//பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.//

கண்டிப்பாக சார். நிச்சயம் அது ஒரு குறைதான். பாலா தொடரில் ஒளிப்பதிவாளர்களையும், இயக்குனர்களையும், இதர டெக்னீஷியன்களையும் பெரும்பாலும் குறிப்பிடாமல் இருந்தது கிடையாது. இதில் குறிப்பிடவில்லை. காரணம் இரண்டு.

ஒன்று

நம் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அங்க அசைவுகளிலேயே மைண்ட் செட் ஆகி இருந்தது. வேறு எதையுமே நினைக்கத் தோன்றவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் அவரது ஸ்டைல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

இரண்டு

நம் அனைவருக்கும் 'சுமதி என் சுந்தரி' பற்றி புள்ளி விவரமாகத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல... நம் ஒட்டுமொத்த நடிகர் திலகம் ரசிகர்களின் 'டார்லிங்' சி.வி.ஆர் தானே! ஒளிப்பதிவு இயக்குனர் தம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.


இப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்து டைட்டில் கார்டையே போட்டால் போயிற்று மூலவரையும் சேர்த்து.

அப்புறம் இன்னொரு சின்ன உரிமை வருத்தம். திடீரென்று அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் காணமல் போய் விடுகிறீர்கள். அலுவலகப் பணி அதிகமோ? பதிவுகளுக்கு தோதான துணைப் பதிவுகளையும் இணைப் பதிவுகளையும் சப்போர்ட்டாக அளிக்க உங்களை விட்டால் வேறு யார்? அதனால் நிறைய உங்களையும், நீங்கள் அளிக்கும் அற்புதமான விஷயங்களையும் மிஸ் செய்கிறோம். பாகம் 4 இல் நிறைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டப் பதிவுகள் இல்லாமல் முழுமை பெறவில்லை. நல்லது கெட்டது என்று நடுநிலைமையுடன் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுவதில் வல்லவர் தாங்கள். அதனால் திரியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.

அதே போல 'உங்கள் ஆதி'யை அதே உரிமையுடன் ஆனந்தமாய் அனுபவித்தேன். நன்றி!

http://i59.tinypic.com/2mrbkw1.jpg

http://i61.tinypic.com/11vpqfp.jpg

http://i59.tinypic.com/2cd7ehw.jpg

vasudevan31355
20th September 2015, 11:28 AM
ராகுல்,

எனக்கு மிக மிகப் பிடித்த 'தெனாலி ராமன்' படத்தைப் பற்றி எழுதி சந்தோஷப் படுத்தியுள்ளீர்கள். இந்தப் படத்தைப் பற்றி காட்சி காட்சியாக எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. என் உயிரினில் கலந்த படம் என்றும் கூட கூறலாம். பானுமதியை மிரட்டும் காட்சி ஒன்று போதும். இந்தப் படத்தில் தலைவர் ஆக்டிங் பற்றி துண்டு துண்டாக அங்கங்கே எழுதியுள்ளேன். மனம் நிறைவு பெறவில்லை. கண்டிப்பாக எழுத வேண்டும்.

சுருக்கமாக அழகாக பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் சமுத்திரத்தை பானைக்குள் அடைக்க முடியாதல்லவா? மதியூகி, விதூஷுகன், தேசப் பற்றாளன், குடும்பத் தலைவன், ராயர் நேசன், கலாட்டா விற்பன்னன் என்று ஏகப்பட்ட முகங்கள் தெனாலிராமனுக்கு. அதைவிட அதிக முகங்கள் நம் தானைத் தலைவருக்கு. அறிவு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'அறிவாளி' நடித்த காவியப் படம் இது. 1956-ல் வெளிவந்த படம். தலைவருக்கு வயது 28 தான். மிகச் சிறிய வயது. ஆனால் தெனாலிராமன் கதாபாத்திரம் வலியது. சிறிது தப்பினாலும் வேறு மாதிரி நகைச்சுவை கேலிக் கூத்து ஆகிவிடும். நகைச்சுவைக்கு நகைச்சுவை, சதிக்கு சதி, போட்டிக்குப் போட்டி, அறிவுக்கு அறிவு, சமயோசிதம் என்று ஒவ்வொன்றையும் கவனமாகக் கையாள வேண்டும். அந்த இளம் வயதில் நம் நடிகர் திலகக் குருவி இந்த பனங்காய் ரோலை அப்படியே தன்னந்தனியே அலட்சியமாய் சுமந்து பறந்தது. இத்தனைக்கும் அவரது 29 ஆவது படமே. 2000 படங்களில் நடித்து முடித்தது போன்ற அனுபவத்தை இந்த ஒரு படத்தில் அவரிடம் நாம் காணலாம். தெரியாதவர்கள் ஒரு முறை பார்த்தாலே நடிப்பின் நுணுக்கங்களை, பரிணாமங்களைக் கற்றுக் கொள்ளலாம். எந்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரியும் தேவை இல்லை. 'தெனாலி ராமன்' ஒன்று போதும்.

Russellbzy
20th September 2015, 12:27 PM
அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன் சார் ,
தாங்கள் 8000 பதிவுகள் கடந்தமைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
office work மற்றும் சொந்த வேலைகளினால் தாமதமான வாழ்த்துக்கு sorry sir!
சுமதி என் சுந்தரி உங்கள் எழுத்து நடை as usual மிகவும் பிரமாதம். உங்கள் எழுத்துக்கள் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? keep it up sir!
அந்த படத்தில் வாணிஸ்ரீ அல்லது காஞ்சனா நடித்திருந்து அந்த பாடல் காட்சியை கற்பனை செய்து பாருங்கள் !
கற்பனை செய்து பார்த்தாலே கற்கண்டாய் இனிக்கிறதே!
நன்றி வாசு சார்!

Russelldvt
20th September 2015, 08:12 PM
http://i58.tinypic.com/29oiq0x.jpg

Thanks Facebook

Russellbpw
20th September 2015, 10:10 PM
1990 இல் குமுதம் பத்திரிகை மக்கள் அபிமானம் பெற்ற நடிகர் யார் என்ற கருத்துகணிப்பு நடத்தியது.

மக்களிடம் அரசியல் கலக்காமல் சினிமாத்துறை பற்றி மட்டுமே கொண்ட கேள்விகளை கேட்டு அன்று முதல் இன்று வரை மக்கள் அதிகம் விரும்பும் நடிகர் யார் என்ற கருத்துகணிப்பு நடத்தி அதன் முடிவை இப்படி பதிவிட்டது !

1990 இல் இந்த கருத்துகணிப்பு தமிழகத்தின் பெருவாரியான நகரத்தில் பிப்ரவரி மாதம் நடத்தி முடிவை வெளியிட்டனர்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ntkumudham%201990-_zps6jfy1iee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ntkumudham%201990-_zps6jfy1iee.jpg.html)

காலங்கள் உருண்டோடினாலும் எத்துனை எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும், புதிது புதிதாக வந்தாலும் நடிகர் திலகம் அவர்கள் எந்தளவிற்கு ஒரு அசைக்க முடியாத ஒரு தூணாக திரையில் இருந்துள்ளார் என்பதற்கு இந்த சான்று !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/LionTiger_zps93242399.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/LionTiger_zps93242399.jpg.html)


Even in 1990, 58.76% சதவிகிதம் பெற்று PEOPLE's MOST FAVOURITE HERO வாக இருந்துள்ளார் என்பதற்கு 1990 இல் கருத்துகணிப்பு செய்து பிப்ரவரி மாதம் 1990, முடிவு வெளியிட்ட குமுதம் பத்திரிகை ஆவணம் ! .

இந்த நிலையில் 2015 இல் தினத்தந்தியின் மக்கள் அபிமானம் 1980 வரை பெற்ற நடிகர் யார் என்று கூறி அபிமான நடிகரில், நடிகர் திலகத்திற்கு எவ்வளவு DELIBERATE அக சதவிகிதம் குறைத்துள்ளனர், குறைத்து BIASED ஆக பதிவு செய்துள்ளனர் என்பது இதன் மூலம் விளங்கும்.

RKS

Russellbpw
20th September 2015, 10:56 PM
திரு சுந்தர்ராஜன் சார்

2015 இல் தினத்தந்தியின் 1980 வரை என்ற CONDITION மிக மிக தவறு. காரணம் STATISTICS & REASONING அவர்களுக்கு பூரணமாக நேர்மையான ஒத்துழைப்பை தராது. ஏனென்றால் கிட்டத்தட்ட 35 வருட இடைவெளி எனும்போது எப்படி இவர்களுடைய STATISTICAL SAMPLING & REASONING சரியாக அமையும் ?

இதோ...குமுதம் பத்திரிகை 1990 ஆம் வருடம் FEBRUARY யில் நடத்திய கருத்துகணிப்பு, அதன் முடிவை பாருங்கள் :

மக்கள் மனதில் பிரபலமான பிடித்தமான கதாநாயகன் யார் என்று கேள்வியை முன் நிறுத்தி அதில் அரசியல் ஆட்சி கட்சி என்று எந்த விஷயமும் கலக்காமல் சினிமா மட்டுமே சார்ந்த கேள்விபதில் கொண்டு எடுக்கப்பட்ட கருத்துகநிப்பும் அதன் முடிவு பிப்ரவரி மாதம் குமுதத்தில் ப்ரசூரித்தது ! உங்கள் பார்வைக்கு

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ntkumudham%201990-_zps6jfy1iee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ntkumudham%201990-_zps6jfy1iee.jpg.html)

1990 இல் 58.76 சதவிகிதம் பெற்று முதல் நிலையில் உள்ள நடிகர் திலகம்....2015 இல் தந்தி தொலைகாட்சியின் " 1980 வரை" என்ற கருத்துகணிப்பில், 1980 இல் நடிகர் திலகம் 34% அபிமானம் பெற்றிருந்தார் என்று கூறுவது எப்படி சரியான கருத்துகணிப்பு என்று ஏற்றுக்கொள்ளமுடியும் ?

RKS

Russellbpw
20th September 2015, 11:15 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/64748545593081610972-1_zps1efe3c47.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/64748545593081610972-1_zps1efe3c47.png.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps6b21cd38.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps6b21cd38.jpg.html)

RAGHAVENDRA
20th September 2015, 11:16 PM
இந்தப பத்திரிகையை சாடுவதற்கென்றே ஒரு திரைப்படமும் அந்தக் காலத்தில் வெளிவந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்கள் ஆரம்ப காலத்தில் அதாவது 60களிலிருந்தே நடிகர் திலகத்திற்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. விளம்பரங்களில் இடம் பெற்றதோடு சரி. இன்றும் இந்தப் பத்திரிகையின் அணுகுமுறை அவ்வாறே தொடர்வதாகத்தான் தெரிகிறது. இத்தனைக்கு இவர்களுடைய சமுதாயத்தின் தலைவரான பெருந்தலைவர் காமராஜரைத் தான் நடிகர் திலகம் தன் தலைவராக ஏற்றுக் கொண்டார். அதற்கான விளைவும் அவருக்குத் தான் நேர்ந்தது. தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அபிமானம் பெற்று விளங்கி இன்று வரையிலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் அவரே அசைக்க முடியாத தமிழ்த்திரையுலக கல்தூணாக விளங்கி வருகிறார். இவருடைய தூண் பலத்தில் தான் தமிழ் சினிமா என்ற கட்டிடமே நிமிர்ந்து நிற்கிறது.

தமிழ் சினிமாவின் விளம்பரத்தாலேயே இன்று விற்பனையில் முன்னணியில் இருக்கும் பத்திரிகை, அந்த திரையுலக பிதாமகனுக்கே மணிமண்டபம் கட்டக்கூடாது என்று சொல்வதிலிருந்தே நடிகர் திலகத்திற்கென அந்த ஊடகம் தனி அணுகுமுறை வைத்துள்ளது என்பது புலனாகிறது.

உண்மையை வெகு நாள் மூடி மறைக்க முடியாது. 1967 கால கட்டத்தில் எப்பேர்ப்பட்ட பெரும் சுனாமியிலிருந்து தேசிய இயக்கத்தையும் பெருந்தலைவரின் மாண்பையும் நடிகர் திலகம் கட்டிக்காத்தார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதும், 1971லிருந்து பெருந்தலைவரும் நடிகர் திலகமும் விளைத்து வளர்த்து வைத்திருந்த ஆளும் கட்சி எதிர்ப்பலை என்கிற பயிர் யாருக்கு அறுவடையாகியது, அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் வரலாறு.

மீண்டும் கூற விரும்புகிறேன்.

கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது. அது பலனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.

Russellbpw
20th September 2015, 11:26 PM
கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது. அது பலனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.

நீங்கள் கூறும் TAG லைன் மிக பிரபலமாக உள்ளது சார் .
ஒரு சிலர் இதே போல TAG லைன் எழுத தொடங்கியுள்ளனர் !

Only a Good Follower can become a Good Leader - A very true statement ! :-D

Russellbpw
21st September 2015, 12:05 AM
Leading ladies of Sinhala cinema fondly remember Sivaji Ganesan

http://www.ceylontoday.lk/90-51252-news-detail-leading-ladies-of-sinhala-cinema-fondly-remember-sivaji-ganesan.html

RAGHAVENDRA
21st September 2015, 01:16 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/pamalarbdgrtgs2015_zpstq3j1hst.jpg

Russelldvt
21st September 2015, 02:57 AM
http://i60.tinypic.com/4kusz9.jpg

Russelldvt
21st September 2015, 02:57 AM
http://i60.tinypic.com/33tqnh2.jpg

Russelldvt
21st September 2015, 02:58 AM
http://i60.tinypic.com/2d2dcvp.jpg

Russelldvt
21st September 2015, 02:59 AM
http://i61.tinypic.com/2z4n7fr.jpg

Russelldvt
21st September 2015, 02:59 AM
http://i60.tinypic.com/10pms6d.jpg

Russelldvt
21st September 2015, 03:00 AM
http://i59.tinypic.com/3443vx4.jpg

Russelldvt
21st September 2015, 03:00 AM
http://i62.tinypic.com/vo38sn.jpg

Russelldvt
21st September 2015, 03:01 AM
http://i62.tinypic.com/2afkg8o.jpg

Russelldvt
21st September 2015, 03:02 AM
http://i59.tinypic.com/op4mlw.jpg

Russelldvt
21st September 2015, 03:02 AM
http://i62.tinypic.com/30sfrya.jpg

Russelldvt
21st September 2015, 03:03 AM
http://i60.tinypic.com/qrkdp5.jpg

Russelldvt
21st September 2015, 03:04 AM
http://i58.tinypic.com/11hgqxy.jpg

Russelldvt
21st September 2015, 03:04 AM
http://i61.tinypic.com/sdcqxj.jpg

Russelldvt
21st September 2015, 03:05 AM
http://i59.tinypic.com/2h81zbn.jpg

Russelldvt
21st September 2015, 03:06 AM
http://i61.tinypic.com/24mua0o.jpg

Russelldvt
21st September 2015, 03:06 AM
http://i62.tinypic.com/2h8a147.jpg

Russelldvt
21st September 2015, 03:07 AM
http://i61.tinypic.com/2iibeix.jpg

Russelldvt
21st September 2015, 03:07 AM
http://i58.tinypic.com/a5lpk.jpg

Russelldvt
21st September 2015, 03:08 AM
http://i58.tinypic.com/t0qmog.jpg

Russelldvt
21st September 2015, 03:09 AM
http://i59.tinypic.com/2w66jyh.jpg

Russelldvt
21st September 2015, 03:10 AM
http://i62.tinypic.com/33oqzas.jpg

Russelldvt
21st September 2015, 03:10 AM
http://i60.tinypic.com/25r18wy.jpg

Russelldvt
21st September 2015, 03:11 AM
http://i60.tinypic.com/2hrk4so.jpg

Russelldvt
21st September 2015, 03:12 AM
http://i57.tinypic.com/2m61v1d.jpg

Russelldvt
21st September 2015, 03:12 AM
http://i58.tinypic.com/1zx9pk.jpg

Russelldvt
21st September 2015, 03:13 AM
http://i62.tinypic.com/doqmnl.jpg

Russelldvt
21st September 2015, 03:14 AM
http://i60.tinypic.com/o9lqvc.jpg

Russelldvt
21st September 2015, 03:15 AM
http://i61.tinypic.com/2v2fngh.jpg

Russelldvt
21st September 2015, 03:15 AM
http://i57.tinypic.com/j9wua9.jpg

Russelldvt
21st September 2015, 03:16 AM
http://i57.tinypic.com/xdgj68.jpg

Russelldvt
21st September 2015, 03:17 AM
http://i57.tinypic.com/5b3fhd.jpg

Russelldvt
21st September 2015, 03:17 AM
http://i59.tinypic.com/2ufgk9c.jpg

Russelldvt
21st September 2015, 03:18 AM
http://i59.tinypic.com/25k1z4l.jpg

Russelldvt
21st September 2015, 03:18 AM
http://i59.tinypic.com/smawdu.jpg

Russelldvt
21st September 2015, 03:20 AM
http://i59.tinypic.com/108clug.jpg

Russelldvt
21st September 2015, 03:20 AM
http://i57.tinypic.com/eagxm1.jpg

Russelldvt
21st September 2015, 03:21 AM
http://i60.tinypic.com/2u47p7o.jpg

Russelldvt
21st September 2015, 03:22 AM
http://i61.tinypic.com/2ypgm6x.jpg

Russelldvt
21st September 2015, 03:23 AM
http://i58.tinypic.com/2ro6fte.jpg

Russelldvt
21st September 2015, 03:24 AM
http://i58.tinypic.com/wu1p4i.jpg

Russelldvt
21st September 2015, 03:24 AM
http://i58.tinypic.com/33tozef.jpg

Russelldvt
21st September 2015, 03:25 AM
http://i57.tinypic.com/2h49hfm.jpg

Russelldvt
21st September 2015, 03:25 AM
http://i60.tinypic.com/fy1mq9.jpg

Russelldvt
21st September 2015, 03:26 AM
http://i60.tinypic.com/28jl5jm.jpg

Russelldvt
21st September 2015, 03:27 AM
http://i58.tinypic.com/2n903v8.jpg

http://i61.tinypic.com/20auoe8.jpg

Russelldvt
21st September 2015, 03:28 AM
http://i58.tinypic.com/fwioev.jpg

Russelldvt
21st September 2015, 03:29 AM
http://i57.tinypic.com/4v456a.jpg

Russelldvt
21st September 2015, 03:34 AM
தமிழ் சினிமாவில் முதன் முதலாக ZOOM LENS பயன்படுத்த பட்ட காட்சி. இதில் பத்மினி அவர்கள் அந்த லென்சின் வழியாக பார்ப்பதை போல் அபிநயம் காட்டியிருப்பது குறிபிடத்தக்கது..

http://i59.tinypic.com/343m5io.jpg

http://i59.tinypic.com/2lay36b.jpg

http://i62.tinypic.com/2d0ku50.jpg

http://i62.tinypic.com/9ib5sx.jpg

Russelldvt
21st September 2015, 03:39 AM
http://i62.tinypic.com/r1zntd.jpg

Russelldvt
21st September 2015, 03:40 AM
http://i58.tinypic.com/20krjuo.jpg

Russelldvt
21st September 2015, 03:46 AM
http://i58.tinypic.com/by3wj.jpg

Russelldvt
21st September 2015, 03:47 AM
http://i58.tinypic.com/291i3px.jpg

Russelldvt
21st September 2015, 03:48 AM
http://i59.tinypic.com/ftjvom.jpg

Russelldvt
21st September 2015, 03:48 AM
http://i58.tinypic.com/2ufrgyf.jpg

Russelldvt
21st September 2015, 03:49 AM
http://i58.tinypic.com/rwnnn6.jpg

Subramaniam Ramajayam
21st September 2015, 06:15 AM
pammalar sir HAPPY BIRTHDAY GREETINGS Pl continue to make your valuable contribitions every now and then.
blessings

KCSHEKAR
21st September 2015, 06:22 AM
இன்று (21-09-2015) பிறந்தநாள் காணும் நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

sivaa
21st September 2015, 08:01 AM
இன்று (21-09-2015) பிறந்தநாள் காணும் நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

http://i57.tinypic.com/xbe04p.jpg

sivaa
21st September 2015, 08:09 AM
ஶ்ரீதர் தயாரிப்பதாக இருந்த ஒருபிடி மண் ஸ்டில்
முக நூல் ஒன்றில் இருந்து

http://i57.tinypic.com/qqwfq0.jpg

உத்தம புத்திரன்(சண்டை காட்சி)

http://i58.tinypic.com/2u3wc37.jpg
அமரதீபம் படத்தில்
இருந்து ஒரு காட்சி



http://i57.tinypic.com/2dcei51.jpg

Russellbzy
21st September 2015, 08:57 AM
இன்று 21/09/2015 பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
எல்லா வளங்களும் பெற்று நலமுடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் !

RAGHAVENDRA
21st September 2015, 08:58 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/12049152_152362615109566_1530060049886918717_n.jpg ?oh=7a21d0e6a2e81fdd8ccaf8e1ef8e0d56&oe=56A7302E

மறுவெளியீட்டிலும் சாதனை படைத்து அதற்கும் ஒரு மறு வெளியீடு காணும் வரலாற்றைப் படைக்க எம் இறைவன் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

நிழற்படம் நன்றி திவ்யா ஃபிலிம்ஸ் திரு சொக்கலிங்கம். முகநூல் மூலமாக.

RAGHAVENDRA
21st September 2015, 09:00 AM
முத்தையன்
உத்தமபுத்திரன் நிழற்படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். அதுவும் முதன் முதலாக ஜூம் லென்ஸ் போட்டு எடுத்த காட்சியின் நிழற்படம் அற்புதம்.

Russellsmd
21st September 2015, 09:04 AM
அய்யா நடிகர் திலகத்தின் புகழ் காக்கும் ஆவணங்கள் திரட்டியவரும், நம் ஏக்கங்கள்
விரட்டியவருமான பம்மலாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Russellbpw
21st September 2015, 11:03 AM
MANY MORE HAPPY RETURNS OF THE DAY

MAYYAM THIRIYIN MUDHAL MUZHUMAYAANA "AAVANA THILAGAM " PAMMALAR AVARGAL !

LONG LIVE YOUR CONTRIBUTION....! MAY OUR THALAIVAR's SOUL BLESS YOU WITH ALL PROSPERITY !!

HAPPY BIRTHDAY SIR !

RKS

sss
21st September 2015, 11:20 AM
இன்று பிறந்தநாள் காணும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் நலமும் நடிகர் திலகம் புகழ் மூலம் உங்களுக்கு கிடைக்கட்டும்...

adiram
21st September 2015, 11:24 AM
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

என்றும் குன்றாத வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

தங்களின் இனிய பங்களிப்பை நடிகர்திலகம் திரியில் முன்போல ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

eehaiupehazij
21st September 2015, 11:54 AM
நடிகர்திலகத்தின் புகழார்வலப் பணியில் அவர்தம் தகவல் காமதேனுவாக விளங்கும் பம்மலார் அவர்களுக்கு மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
அன்புடன் செந்தில்

vasudevan31355
21st September 2015, 02:26 PM
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா வளமும் பெற்று நடிகர் திலகத்தின் நல்லாசியினால் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

http://tamil.oneindia.com/img/2013/09/28-1380353523-thiruvilayadal-sivaji22-600.jpg

parthasarathy
21st September 2015, 02:39 PM
Dear Pammalar,

Wishing you many more happy returns of the day,

Regards,

R. Parthasarathy

Harrietlgy
21st September 2015, 09:22 PM
Wish you happy birth day to Mr. Pammalar

Russellsmd
21st September 2015, 09:45 PM
அகத்தின் சாயல் கொண்டு
அசத்தும் முகம்...
இந்த அழகு முகம்.

ஆயிரமாயிரம்
கதைகள் பேச வல்ல
அந்த விழிகள் இரண்டும்
ஆசைப்பட்டு வசிக்குமிடம்...
அந்த அழகு முகம்.

கோடிக் கோடி
மனித முகங்களில்
மலர்ச்சியைக்
கொண்டு வந்த முகம்..
இந்த அழகு முகம்.

கொட்டி வைத்த வைரமென
மின்னும் முகம்...
இந்த அழகு முகம்.

காத்திருக்கும் கனவுகளை
அழகாக நிரப்புமிந்த
அழகு முகம்.

கண்ணாடிகள்
பெருமிதமாய்க்
காட்டும் முகம்...
இந்த அழகு முகம்.

பார்த்துக் கொண்டே
இருக்கச் செல்லும் முகம்...
இந்த அழகு முகம்.

பரம ஏழைக்கும்,
பணக்காரனுக்கும்
பிடித்த முகம்
இந்த அழகு முகம்.

இதயத்தோடு இன்பத்தை
இணைத்த முகம்...
இந்த அழகு முகம்.

இன்னும்...
இன்னும்...
இன்னும்...
பேச வைக்கும்
அழகு முகம்.

https://youtu.be/PECnWGMNa3A

J.Radhakrishnan
21st September 2015, 10:11 PM
பிறந்தநாள் காணும் இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கு உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

Russellbpw
22nd September 2015, 12:04 AM
FROM 24th SEPTEMBER KOVAI ROYAL THEATER DAILY 4 SHOWS, 87th BIRTHDAY SPECIAL, NADIGAR THILAGATHIN " GOWRAVAM"

Russelldvt
22nd September 2015, 02:03 AM
http://i59.tinypic.com/bdwitk.jpg

Russelldvt
22nd September 2015, 02:04 AM
http://i62.tinypic.com/4q556u.jpg

Russelldvt
22nd September 2015, 02:04 AM
http://i62.tinypic.com/2nvb9mr.jpg

Russelldvt
22nd September 2015, 02:05 AM
http://i58.tinypic.com/6r1wyu.jpg

Russelldvt
22nd September 2015, 02:06 AM
http://i58.tinypic.com/esq9nm.jpg

Russelldvt
22nd September 2015, 02:06 AM
http://i57.tinypic.com/aku629.jpg

Russelldvt
22nd September 2015, 02:07 AM
http://i62.tinypic.com/2hcg2md.jpg

Russelldvt
22nd September 2015, 02:08 AM
http://i61.tinypic.com/2yw8h8p.jpg

Russelldvt
22nd September 2015, 02:08 AM
http://i61.tinypic.com/2cy5jkm.jpg

Russelldvt
22nd September 2015, 02:09 AM
http://i61.tinypic.com/1621dt4.jpg

Russelldvt
22nd September 2015, 02:10 AM
http://i60.tinypic.com/dr3vpf.jpg

Russelldvt
22nd September 2015, 02:10 AM
http://i58.tinypic.com/egv4wl.jpg

Russelldvt
22nd September 2015, 02:11 AM
http://i60.tinypic.com/vpf1a1.jpg

Russelldvt
22nd September 2015, 02:12 AM
http://i60.tinypic.com/t6yxau.jpg

Russelldvt
22nd September 2015, 02:13 AM
http://i59.tinypic.com/2n6f19f.jpg

pammalar
22nd September 2015, 03:04 AM
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் பணிவன்புடன் கூடிய வணக்கங்கள்..!!

ஆருயிர் அண்ணலின் வான்புகழ் ஓங்க ஒவ்வொரு பதிவையும் அளித்துக் கொண்டிருக்கும் பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வளமான வாழ்த்துக்கள்..!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/7f15c9f3-dd59-46d2-85f7-70a198462c0e.jpg

இந்த சாதாரண சுவாமிநாதனின் பிறந்த நாளுக்காக இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை, ஆசி மலர்களை நல்கிய கலைவேந்தன் சார், அன்பு அடிகளார், ரசிகவேந்தர் சார், மூத்த ரசிகர் சுப்ரமணியம் ராமஜெயம் சார், சிகர ரசிகர் செயல்வீரர் சந்திரசேகரன் சார், கனடா சிவா சார், இனியவர் பாஸ்கர் சார், கவிஞர் ஆதவன் ரவி அவர்கள், அதிரடி சரவெடி ஆர் கே எஸ், SSS சார், ஆதிராம் சார், மூவேந்தர் ரசிகர் சிவாஜிசெந்தில் சார், ஆருயிர்ச் சகோதரர் என்னுயிர் நெய்வாசு, ஆய்வுச் செம்மல் சாரதி சார், பரணி அவர்கள், அருமை நண்பர் ஜேயார் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
22nd September 2015, 05:08 AM
அலைபேசி மூலம் அன்பான வாழ்த்துக்களை அளித்த

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/202b23c4-52d7-47a6-902d-ce65d2ecedf0.jpg

மூத்த சகோதரர் ராகவேந்திரர், சித்தூர் வேலூர் சென்னை (தென்னகம் சுற்றும் வாலிபன்) வாசு சார், பெங்களூரு கண்ணன் சார், போரூர் நடராஜன் சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு அவர்கள், ராஜபாளையம் திருப்பதி ராஜா அவர்கள், தூத்துக்குடி வக்கீல் பேரன்புக்கும், மரியாதைக்கும் உரிய பெரியவர் பண்பாளர் நடராஜன் சார், திறனாய்வுத் திலகம் மை டியர் முரளி சார், அருமைச் சகோதரர் சீனிவாசன் அவர்கள், சிவாஜி பேரவைத் தலைவர் சந்திரசேகரன் சார், அருமைச் சகோதரர் திருவல்லிக்கேணி பாஸ்கரன் அவர்கள், ஜென்டில்மேன் ராமஜெயம் சார், கோவை மாணிக்கம் சார், மதுரை சந்திரசேகரன் சார், கண்ணனூர் சிவசுந்தரம் சார், நேரில் வாழ்த்திய உடன்பிறவா சகோதரர் அம்பத்தூர் சுப்ரமணியன் உள்ளிட்ட அனைவருக்கும் மற்றும் இந்த எளியவனை என்றென்றும் வாழ்த்திக் கொண்டிருக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கும் எனது உளப்பூர்வமான உன்னத நன்றிகள்..!!

பாசத்துடன்,
பம்மலார்.

Russellbpw
22nd September 2015, 09:39 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gowrv_zpsfhqbig3s.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gowrv_zpsfhqbig3s.jpg.html)

sivajidhasan
22nd September 2015, 09:52 AM
Belated birthday wishes to "aavana thilagam" pammalar

yours friendly
sivajidhasan

sivajidhasan
22nd September 2015, 09:57 AM
Belated birthday wishes to "aavana thilagam" pammalar

yours friendly
sivajidhasan

RAGHAVENDRA
22nd September 2015, 10:22 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12002797_982917905092215_8212262384310983194_n.jpg ?oh=ef5d3edafb8ac5ba423b3ce39c9feba3&oe=5692E88B

Russellbpw
22nd September 2015, 12:00 PM
வரும் வியாழகிழமை அதாவது பக்ரித் தினம் முதல் 24-09-2015 கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நமது நடிகர் குல சாம்ராட் நடிகர் திலகம் இரு வேடங்களில் பட்டையை கிளப்பிய கெளரவம் திரைப்படம் திரயிடபடுகிறது.

]https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12002797_982917905092215_8212262384310983194_n.jpg ?oh=ef5d3edafb8ac5ba423b3ce39c9feba3&oe=5692E88B

வெகுவிரைவில் அதனை தொடர்ந்து கோவை ராயல் திரை அரங்கம் மற்றும் கோவை டிலைட் திரை அரங்கங்களில் கீழ் கண்ட திரைப்படங்கள் திரையிட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4sheet-design2_zps75856727.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4sheet-design2_zps75856727.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/upld_zpscaedd8a1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/upld_zpscaedd8a1.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSJADfw_zps21763e16.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSJADfw_zps21763e16.jpg.html)

Russellbpw
22nd September 2015, 12:28 PM
சங்கம் வளர்த்த மதுரையில் நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்ட்ரல் திரை அரங்கில் நடிகர் குல சாம்ராட்டின் உத்தமன் திரைப்படம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/maxresdefault_zps3kfh62yp.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/maxresdefault_zps3kfh62yp.jpg.html)


October 2 முதல் திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சிபொங்க தெரிவித்து கொள்கிறேன்

RELEASING WITH PRIDE by MADURAI SIVA MOVIES !

Russellxor
22nd September 2015, 03:02 PM
சிவாஜி ரசிகன்


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/marina3_2265480g_zpsw4mhqgqa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/marina3_2265480g_zpsw4mhqgqa.jpg.html)


ஒரு நடிகனின்படம் வந்து அது சிறப்பான பேரைப் பெற்றுமேலும் சில படங்கள் வந்து அதுவும் நல்ல பெயரைப் பெற்றும் அந்த நடிகனின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு ஒருவன் அந்த நடிகனின் நடிப்புக்கு ரசிகனாகிறான்.ஒரு நடிகனுக்கு ரசிகனாக ஒருவன் ஆகும் நிலை பொதுவாக இப்படித்தான் இருக்கும்.
முதல் படத்திலேயே படம் பார்ப்பதற்கு முன் பொதுப்பார்வையாளனாக தியேட்டருக்குள் நுழைந்துபடம் முடிந்து வெளியே வரும் போது ஒரு நடிகனின் ரசிகனாய் வந்த அதிசயம் நடிகர்திலகத்திற்கு மட்டுமே இருந்திருக்கும்.பராசக்தி ரிலீஸான முதல் காட்சியிலேயே உருவான சிவாஜி ரசிகர்கள் எத்தனைபேரோ?
அன்று தொடங்கிய ரசிப்பு இன்று வரை மாறவில்லை.சொல்லப்போனால் அந்த ரசிப்பு இன்னும்பல மடங்கு அதிகரித்தே உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத நடிப்பு அவருடைய நடிப்பு.
ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு அனுபவம் அவரது படங்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கிடைக்கிறது.அது போக,20வயதில் ரசித்த நடிப்பு 30வயதில் வேறொரு கோணத்தில் வியக்க வைக்கிறது.40வயதில் அதுவே வேறொரு கோணத்தில் ரசிக்க வைக்கிறது. 50வயதில் மற்றொரு பார்வையில் ரசிப்பை மேம்படுத்துகிறது.இப்படியே இறுதிவரை யோசிக்க வைத்துக்கொண்டே வைத்திருக்கும்.

அவருடைய படங்களை 20வயதில் பார்க்கும்போது அவருடைய நடிப்பை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அந்த நடிப்பை மற்றவர்களின் ரசனையோடு நம்முடைய ரசனையையும் சேர்த்துப் பார்த்து பரவசம் அடைவோம்.அப்போது நாம் சுயமாக சம்பாதிக்க தொடங்காத காலகட்டங்கள்.அந்த வயதில்பெரும்பாலும் பிறரைச் சார்ந்தே இருப்போம்.மற்றவர்கள் சொல்லக்கேட்டும் விமர்சனங்கள் படித்தும்நம்முடைய ஈடுபாடும் சேர்ந்து அந்த நடிப்பு வியக்க வைத்திருக்கும்.
பின் 30வயது எனும் போது நாம் சம்பாதிக்க ஆரம்பித்திருப்போம்.நமக்கு என்று ஸ்டேட்டஸ் வந்து விடும்.அப்போது நமக்கு சுய சிந்தனை 20வயதை விட மேம்படிருக்கும்.அந்த காலகட்டங்களில் அவருடைய நடை உடை பாவனை களில் மனம் லயிக்கும்.நமக்குள்ளும் அவரைப் போன்றே ஆடைகள் உடுத்திக்கொள்ளவும்,அங்க அசைவுகளை வெளிப்படுத்தவும் ஆசை வரும்.அதை செய்கையிலும் எத்தனையோ ரசிகர்கள் பின்பற்றியுள்ளனர்.
40வயதில் குடும்ப உறவுகள் அதிகரித்த காலகட்டம்.மேலும் பக்குவப்பட்ட மனது.உள்ளத்து உணர்ச்சிகள்,முக பாவனைகளைஉணர நம்முடைய அனுபவங்கள்கை கொடுக்கும்.
பல படங்களில் கணவன் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவருடைய நடிப்பை பாருங்கள்.அந்த அந்நியோன்யமான நடிப்பு திருமணத்திற்கு முன்பு விடதிருமணமாகிய பின்புநாம் ரசிக்கும் ரசனையை அதிகமாக்கி விட்டிருக்கும்.நுணுக்கமான அவரின் நடிப்பு பாவனைகள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
"பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே "பாடலைஅப்போதும்,இப்போதும்
எப்படி உணர்ந்தீர்கள் நினைத்துப் பாருங்கள்
இது போன்ற விஷயங்கள் மற்ற நடிகர்களுக்கும் பொருந்தும் தானே? என்று கேள்வி எழலாம்.ஆனால் இது போன்ற நடிப்புகளை யார் செய்திருக்கின்றனர் என்று அடுத்த
கேள்வியும் வருகின்றதே.



ரசிகர்களில் கடவுள் பற்று கொண்டவர் இல்லாதவர்என்று இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும்இருக்கலாம்.கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட நாத்திகவாதிகளையே தன் கடவுள் வேட நடிப்பை ரசித்து ஏற்றுக்கொள்ளச்செய்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே உண்டு.
சிவாஜியை ஒருவர் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நிலையிலிருந்து சற்றும் இறங்கி வந்ததாக எந்த சிவாஜி ரசிகரும்
சரித்திரத்தில் இல்லை

சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்,பெரும் பதவியில் இருப்பவர்கள்,மெத்தப்படித்தவர்கள்,கல்வி போதிப்பவர்கள,அரசுத்துறைகள் போன்று பல உயர்ந்த துறைகளிலும் இருப்பவர்கள்சிவாஜியின் நடிப்புக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.சிவாஜியின் படங்கள் பாச உணர்வுகளையும், பண்பாட்டையும்,தாய்நாட்டின் மீது பக்தியையும் ஊட்டுகின்றன என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் சொல்ல தயங்குவதில்லை.சிவாஜி ரசிகர்கள் என்பதிலே பெருமை கொள்கின்றனர்.
பாசமலர் படம் எத்தனை அண்ணண்களை தங்கைககளிடம் பாசத்தை அதிகரித்தது.காவல்துறையில் பணிபுரிந்த எத்தனை யோ பேருக்கு
தங்கப்பதக்கம் spசௌத்ரீ முன்னுதாரணமாக விளங்கினார்.பல பிராமண குடும்பங்கள்தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு
பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரை உதாரணம் காட்டி அறிவுரை
செய்தவைகள் ஏராளம்.இவையெல்லாம் ஒரு சிறு துளியே.

எனது நடிப்புக்கு ஒருவர் ரசிகரானால்
அவர் இறுதி வரை எனக்கு மட்டுமே ரசிகராகவே இருப்பார்-
இது நடிகர்திலகத்தின் வேதவாக்கு.
கர்ணனுக்கும்,கட்ட பொம்மனுக்கும்இன்றும்பழைய
திரைப்படங்களுக்கு வரும் கூட்டங்களே இதற்கு சாட்சி.எந்தவித பிரதிபலன்கள் இன்றியும் கட்சி, அதிகாரங்கள் எதுவுமின்றியும்சொந்தபணத்தில் செலவுகள் செய்து இன் றும் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் பெரும் ஆளுமை செய்து வருகிறார்கள்.
63 வருடங்களாக இந்த ஆளுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இனிமேலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

சிவாஜி ரசிகர்கள் எல்லா வகையிலும் சிறந்தவகையில் செயல்பட்டு வருகிறார்கள்.இப்போது வரும் இளைஞர்கள் கணிணி,இன்டர்நெட் போன்ற துறைகளில் படிக்கும்போதே
அனுபவங்கள் பெற வாய்ப்பிருக்கிறது.ஆனால் உத்தேசமாக 1970 க்கு மேல் பிறந்த ரசிகர்களுக்கு அந்த பயிற்சி எப்படி கிடைத்திருக்கும்?ஆனாலும் 60 வயதிற்கு மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள் கூடஇன்றும் இன்டர்நெட்,போட்டோ ஷாப்,போன்றவைகளில் வியக்கத்தக்க செயல்களை செய்து வருகின்றனர்.
ஒரு சிவாஜி ரசிகன் மற்ற நடிகர்களின்பத்து ரசிகர்களுக்கு சமம்.

சமுதாய பங்களிப்புகள் மட்டுமல்ல விவாதங்கள்,பட்டிமன்ற பேச்சுகள்,
மேடைப்பேச்சுகள்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றிலும்
சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டுவெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.
63வருடங்களாக எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும்,சோதனைகள் வந்தாலும்
அரசியல் கட்சிகளால் ஆதாயம் கிடைக்கா விட்டாலும்ஏறு முன்னேறு என காட்டாற்று வெள்ளமாய் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிவாஜியையும் சரி,சிவாஜி ரசிகர்களையும் சரி எத்தனையோ பேர் ஏமாற்றினாலும்,
சிவாஜியும்.,சிவாஜி ரசிகர்களும் யாரையும் ஏமாற்றியதில்லை.

சிவாஜி ரசிகன் காரணம் இன்றி எந்த நடிகரையும் அவரின் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய விரும்புவதில்லை.முதல் கல் எதிரணியிடம் இருந்து வந்தாலொழிய.உலகத்திலேயே சிறந்த நடிப்புக்கு நாம் ரசிகனாக இருக்கிறோம்,அந்த நடிப்பை உள் வாங்கவே இந்த ஜென்மம் போதாது, ,அதையே சதா சிந்திக்கும் மனம், பிறகெப்படி அடுத்தவரின் கல்லடிகளை கவனத்தில் கொள்வது என்ற சிந்தனையே காரணம்.

சிவாஜி ரசிகர்களின் சாதனைகள் பெரும்பாலும் உலகிற்கு தெரிவதில்லை.சிவாஜிக்கு செய்யும் செயல்களை அவன் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றிஆத்ம திருப்தியுடன் செய்து அவற்றிலே ஆத்மதிருப்தியும் அடைந்து விடுதலே காரணம்.அந்த நடிப்புக்கு அவன் செய்யும் மரியாதை வேறு யாரையும் பெரிதாக எண்ணவிரும்புவதில்லை.

கடவுளை வணங்கிணாலும்,சிவாஜி என்று வரும்போது கடவுளை விட சிவாஜியை வணங்கும் ரசிகர்கள் ஏராளம்.

சிவாஜிக்கு அவமரியாதை யை மற்றவர்கள் செய்யும்போது கூட தங்களின் எதிர்ப்பை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில்அறவழியில் ஊண்ணாவிரதம்.,வன்முறையில்லாத போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.அதனால்தான் சிவாஜி ரசிகர்களுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் உள்ளது.



சிவாஜி ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.எந்த ஒரு செயலானாலும் இறுதி வரை போராடும் குணம் கொண்டவர்கள்.

சிவாஜி ரசிகன் என்று கூறிக்கொள்வதில் சிவாஜி ரசிகர்கள்
பெருமை கொள்கின்றனர்.

RAGHAVENDRA
22nd September 2015, 03:28 PM
De-Addiction சிகிச்சை தேவையில்லாத ஒரே Addiction சிவாஜி மட்டுமே...

Gopal.s
22nd September 2015, 05:19 PM
முத்தையன் அம்மு,

நான் எந்த புகைப்படத்தை மனதில் கற்பனை பண்ணுவேனோ ,அவை நிஜமாகவே வந்து விழும்.உங்கள் கற்பனை,எடிட்டிங் நேர்த்தி,உழைப்பு அலாதி. நான் உங்கள் ரசிகன். 7000 கடந்ததற்கு என் மனபூர்வ வாழ்த்துக்கள்.

Russellxss
22nd September 2015, 05:24 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கூடல்மாநகர் மதுரையில் வசூல்சக்கரவர்த்தி நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக அக்டோபர் 2 முதல் மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது. அனைவரும் வருக - மக்கள்தலைவரின் ஆசி பெறுக.

https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12046942_877274855690453_5707520653807945829_n.jpg ?oh=e6dae1d92171d5603c3422f725aef9eb&oe=5664BE59

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

JamesFague
22nd September 2015, 07:41 PM
Mr Senthilvel


It is true that Sivaji Rasigan will die as Sivaji Rasigan only.

Russellsmd
22nd September 2015, 07:58 PM
அருமை...செந்தில்வேல் சார்.

திரு.ராகவேந்திரா சார் இதே திரியில் கொஞ்ச காலத்துக்கு
முன் சொல்லியிருந்ததைப்
போலவே உங்கள் எழுத்தின்
மேன்மை கூடிக் கொண்டே
போகிறது.

காலகாலமாய் தனக்கு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிற மாபெரும்
கலைஞன் நம் நடிகர் திலகம்.

தலைவனின் புகழ் காக்கும்
பல கோடி சிவாஜி ரசிகர்களின்
இதயத்தில் இதம் சேர்க்கும்
உன்னதமான பதிவு...உங்களுடையது.

"என்னை ரசிப்பவன்,இறுதி வரை எனக்கே ரசிகனாயிருப்பான்" என்று
அய்யன் உரைத்த சொல்
எத்தனை சத்தியமானது!?

பார்த்த படத்தையே கொஞ்சகாலம் கழித்து திரும்பப்
பார்க்கையில் வேறு விதமான
பரவசங்கள் கிடைப்பது..

பழைய வயசில் நமக்கிருந்த
ரசனை, காலம் செல்லச் செல்ல
மேம்படுவது...

இவையெல்லாம் ஒவ்வொரு
சிவாஜி ரசிகனுக்கும் அன்றாடம் நிகழ்கிற அதிசயங்கள்.

சரியான வார்த்தைகள் கிடைக்காத, கிடைத்தாலும்
சொல்லத் தெரியாமல் போன
என் போன்ற கோடிக்கணக்கான
ரசிகர்களின் ஒற்றைக் குரலாய்..
நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.

"உங்கள் திரைப்படம் காண
திரையரங்கத்தினுள்
நுழைகிறவன்
மூன்று மணி நேரம் கழித்து
வெளியேறுகிறான்..
உங்கள் ரசிகனாக"

-என்று நான் கூட ஒரு கவிதை
எழுதியதுண்டு.

சிவாஜி ரசிகன் ...

நன்றி மறவாதவன்.

சிவாஜி ரசிகனைப் பெருமை செய்த சிவாஜி ரசிகனுக்கு
அவன் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறான்.

நன்றி..
செந்தில்வேல் சார்!

adiram
22nd September 2015, 08:18 PM
சிவாஜி ரசிகன் காரணம் இன்றி எந்த நடிகரையும் அவரின் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய விரும்புவதில்லை.முதல் கல் எதிரணியிடம் இருந்து வந்தாலொழிய.

செந்தில்வேல் சார்,

உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் சிறப்பானவை. அதில் மேலும் சிறப்பானவற்றுள் மிகச்சிறப்பான வரிகள் இவை.

RAGHAVENDRA
22nd September 2015, 09:15 PM
முத்தையன்
மிகவும் குறுகிய காலத்தில் 7000 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் தங்களுடைய ஒவ்வொரு நிழற்படத்தின் பின்னாலும் உள்ள தங்களின் உழைப்பு பிரமிக்கவைப்பதாகும்.
குறிப்பாக நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
22nd September 2015, 11:03 PM
முத்தையன் அம்மு சார்!

https://pbs.twimg.com/media/Boio882IMAAAazK.jpg:large

தங்களது சாதனைப் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். உடல் வருத்தி 7000 பதிவுகள். உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு. தங்களது ரசனைக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள். உடல்நலத்தோடு உத்தமனின் படங்களை வழக்கம் போல உன்னதமாகப் பதிவுடுங்கள். நன்றி!

Russellsmd
22nd September 2015, 11:27 PM
சில வார்த்தைகள் சேர்ந்த ஒரு வாக்கியத்தை, தன்னுடன்
நடிக்க வைப்பதென்பது நம்
நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த காரியம்.

"படிக்காதவன்" படக்காட்சி.

தாய்,தகப்பன் இல்லாத குறை
தெரியாமல் போற்றி வளர்த்த
தன் தம்பியர் இருவரையும்
பொறுப்பாய் பார்த்துக் கொள்ளுமாறு மனைவியிடம்
சொல்லி விட்டு வெளியூர் சென்று திரும்பும் நடிகர் திலகம், மனைவி வடிவுக்கரசி
தம்பிகளைக் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டிய கதை தெரியாமல், "தம்பிகளா..நான்
வந்துட்டேன்டா" என்று அழைத்தபடி உள்ளே வர..

அவர்களைக் காணாமல் மனைவியை விசாரிக்க..

மனைவி,மழுப்பலாய் "உங்க தம்பிங்க என் கூட சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டு
ஓடிட்டாங்க..!" என்று சொல்ல..

பொய் மனசை ஊடுருவிப்
பார்க்கும் ஒரு பார்வையுடன்
மனைவியுடன் பேசும் அந்த
வாக்கியம் உயிர் பெற்று நடிக்கத் துவங்குகிறது

"உன் கூட சண்டை போட்டுகிட்டு..வீட்டை விட்டு
ஓடிப் போற வயசா அவங்களுக்கு..?"

இந்த சிறிய வாக்கியத்தை
என்னமாய் அர்த்தப்படுத்துகிறார்.. ?

"உன் கூட சண்டை போட்டுகிட்டு.."-மனைவி சொல்லும் பொய்யை எள்ளல்
செய்யும் தொனி.,
"போட்டுக்கிட்டு" என்று சொன்ன பிறகு அவர் விடும் ஒரு மிகச் சிறிய இடைவெளியை,பொய் சொல்லும் மனைவி கூசிக் குறுகும் விதமாய்ப் பயன்படுத்துதல்..

"வீட்டை விட்டு ஓடிப் போற
வயசா அவங்களுக்கு?"-இதை
அவர் சொல்லும் போதே..
ஏதுமறியா அப்பாவி முகங்களுடன் இரண்டு சிறுவர்களை நமக்குக் காட்சிப்
படுத்துவது..

அட போங்கப்பா..!

அவர்..அவர்தான்!

KCSHEKAR
23rd September 2015, 05:56 AM
திரு.முத்தையன் அம்மு சார்,

7000 பதிவுகளை சிறப்புடன், சிரமேற்கொண்டு பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

Russellsmd
23rd September 2015, 08:40 AM
http://i62.tinypic.com/30sfrya.jpg
முத்து,முத்தாய் ஏழாயிரம்
பதிவுகள் தந்து மனம் நிறையும்
திரு.முத்தையன் அம்மு
அவர்களுக்கு நன்றிகளும்..
நல்வாழ்த்துகளும்.

Sent from my GT-S6312 using Tapatalk

RAGHAVENDRA
23rd September 2015, 09:45 AM
https://www.youtube.com/watch?v=-khK58F2pUU

ஏவி.எம். சரவணன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் மக்கள் தலைவர் உரையாற்றும் அபூர்வ காணொளி.

நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் தரவேற்றிய நண்பருக்கு.

eehaiupehazij
23rd September 2015, 09:57 AM
ஊற்றெடுக்கும் கருத்துக் கோர்வையான நிழல்படப் பதிவுகளால் நடிப்பின் தங்கச் சுரங்கத்தை அரங்கேற்றிய முத்துச்சர பதிவர் முத்தையன் அம்மு அவர்களின் 7000 பதிவுச்சாதனை நடிகர்திலகம் புகழ்பாதையில் மலர்படுகையாக விரிந்து பறந்திட வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்!!
செந்தில்

https://www.youtube.com/watch?v=f2gQqwbeJRM

Harrietlgy
23rd September 2015, 12:17 PM
Prabhu 's interview about NT donations.



https://www.youtube.com/watch?v=jET42x9OQAc

Russellzlc
23rd September 2015, 04:25 PM
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஒருவரைக் கூட மறக்காமல், மக்கள் திலகம் திரிக்கு வந்து நன்றி சொன்னதோடு, பொன்மனச் செம்மலின் கலக்கலான புகைப்படத்தை பரிசளித்திருக்கும் பண்புமிக்க நண்பர் பம்மல் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு பாசமிகு நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 04:29 PM
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Anna1.jpg



திரு.வாசு சார்,

எல்லோரையும் அசர வைக்கும் அசராத உழைப்புக்கு சொந்தக்காரரான தாங்கள் 8,000 பதிவுகள் கண்டதற்கு வாழ்த்துக்கள். 22-ம் தேதி வரை பதிவிட மாட்டேன் என்று நான் கூறியிருந்ததால் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். தங்களின் ஒவ்வொரு பதிவிலும் என்ன ஒரு உழைப்பு, தான் ரசித்ததை அப்படியே சிந்தாமல், சிதறாமல் மற்றவர்களுக்கு கடத்தும் ஆற்றல். பாராட்டுக்கள் சார்.

தங்கள் 8,000 பதிவு சாதனைக்கும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துக்கள். அயரா உழைப்புக்கு வணக்கங்கள். நன்றி.

பேரறிஞர் அண்ணாவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் உள்ள மேலே இருக்கும் அரிய படத்தை பதிவிட்டிருக்கும் அன்பு நிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா சார் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
23rd September 2015, 04:34 PM
அன்பு நண்பர் திரு.ஆதிராம் அவர்களுக்கு,

‘உங்கள் பதிவால் திரிகள் களை கட்டுகின்றன. இத்தனாம் தேதி வரை பதிவிட மாட்டேன் என்பது போன்ற விரதத்தை கைவிடுங்கள்’ என்று நீங்கள் எனக்கு விடுத்த அன்பான அழைப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கடந்த வாரம் எங்கள் திரிக்கு வந்து உலகம் சுற்றும் வாலிபனை சென்னையில் துர்கா பிலிம்ஸ் மூலமாக மக்கள் திலகம் வெளியிட்டார் என்று கூறினீர்களே. உங்களுக்கு பழைய விஷயங்கள் நிறைய தெரிந்திருக்கிறது. திரு.கார்த்திக் சாரைப் போல. அவரது பதிவுகளில் நிறைய பழைய விஷயங்கள் விரவி இருக்கும். இதை ஏதோ ஒப்புக்காக சொல்லவில்லை. இந்த தலைமுறையினர் எத்தனை பேருக்கு மகாதேவன் பிள்ளையைத் தெரியும். ஆனால், அவரைப் பற்றி ஒரு பதிவில் திரு.கார்த்திக் சார் சொல்லியிருப்பார். அவன் ஒரு சரித்திரம் பதிவில் என்று நினைவு.

கத்தி சரியாக இலக்கை நோக்கி வீசப்பட்டிருக்கும் விதத்தையும் அது இறங்கியிருக்கும் ஆழத்தையும் வைத்தே கத்தியை வீசியவரின் திறமையை கண்டுபிடித்து விட முடியும். அப்போதே, நினைத்தேன். இவர் விஷயம் தெரிந்தவர் என்று. அவர் திரிக்கு வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அந்த குறையை நீங்கள் போக்கலாமே. தங்கள் பழைய நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதி எல்லாரையும் மகிழ்விக்கலாமே.

திரு.வாசு சாருக்கு 8,000 பதிவுக்கு வாழ்த்து கூறும்போது, ‘உங்கள் ஆதி’ என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. பேரறிஞர் அண்ணாவின் தம்பிமார்களில் ஒருவர். அது மட்டுமல்ல, எல்லாரையும் அரவணைத்து செல்வது மக்கள் திலகத்திடம் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். அதோடு மட்டுமல்ல, ஆரம்ப காலத்தில் எங்கள் திரியின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்காற்றியுளளீர்கள். மக்கள் திலகத்தை ‘தலைவர்’ என்றெல்லாம் போற்றி புகழ்ந்துள்ளீர்கள். அந்த வகையில் நீங்கள் ‘எங்கள் ஆதி’யும்தான்.

உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
23rd September 2015, 07:32 PM
http://i59.tinypic.com/bdpoie.jpg

Russelldvt
23rd September 2015, 07:33 PM
http://i58.tinypic.com/qxqy53.jpg

Murali Srinivas
23rd September 2015, 07:44 PM
வாசு,

தாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்த்து சொல்ல வந்தது பொட்டு வைத்தோ முகமோ பாடலின் சிறப்புக் கட்டுரைக்கு இல்லை. அதற்கும் முன்பு நீங்கள் எழுதிய எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் பதிவிற்காக. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்ததாலும் சில தேவையற்ற விவாதங்கள் திரியை கையடக்கியிருந்ததாலும் இந்த பாடல் பற்றி பேச முடியவில்லை. [மதுர கானங்கள் திரியிலும் நீதிதேவன் மயக்கம் மற்றும் புதிய வாழ்க்கை படங்கள் பற்றி சொல்ல நினைத்தேன்]

அற்புதமான பாடல். அருமையான படம். ரா கண்ணா ரா என்ற தெலுங்கு படத்தின் [சோமயாஜலு, கேஆர்விஜயா] ரீமேக். 1980-களில் நடிகர் திலகம் பற்றி அவர் ஏற்கும் பாத்திரங்கள் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்த காலம். அந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம். நமது ஹப்பிலேயே 6,7 வருடங்களுக்கு முன்பு ஒரு சிலர் [ஈஸி சேர் விமர்சகர்கள்] அப்படி நடித்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் .சொந்த படமாக கூட தயாரித்திருக்கலாம் என்றெல்லாம் எழுதுவார்கள். 1982-லேயே இப்படி பேரனின் பாசத்திற்காக ஏங்கும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார் அதுவும் சொந்தப் படம் என்று நாம் எடுத்துச் சொல்லும்போது அதைப் பற்றிய விவரங்களே அவர்கள் அறிந்திருக்கவில்லை.

குற்றம் சொல்லுவதற்கு ஓடி வருபவர்கள் நல்ல படங்கள் வரும்போது அதற்கு ஆதரவளிப்பதில்லை. வா கண்ணா வா போன்ற படங்கள் வெளியான காலத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. அதே நேரத்தில் சென்னையில் மூன்று அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது.

வெளியான நேரத்தில் இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்குள்ளாக நடிகர் திலகத்தின் 4 படங்கள் ரிலீஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜனவரி 26 அன்று ஹிட்லர் உமாநாத் வெளியாகி ஓடிக் கொண்டிருக்க பிப்ரவரி 5-ந் தேதி ஊருக்கு ஒரு பிள்ளை வெளியாக மறுநாள் பிப்ரவரி 6 -ந் தேதி இந்தப் படத்தை அதுவும் சொந்தப் படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கு மனசு வரும்? இதெல்லாம் போதாதென்று அதே பிப்ரவரி 25-ந் தேதி கருடா சௌக்கியமா வேறு ரிலீஸ். உலகத்திலேயே இது போன்ற வணிக கட்டமைப்பு உள்ள [Producer -Distributor - Exhibitor set up] எந்த மொழிப் படமானாலும் சரி இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ஆரம்ப நிலை கதாநாயகன் கூட இப்படி ரிலீஸ் செய்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் என்றைக்கு அதையெல்லாம் பார்த்தார்? In spite of all these things அவர் வெற்றிகளை குவித்தவர் அல்லவா?

இந்தப் படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் படம் பார்த்த திரு.வி.சி.சண்முகம் அவர்கள் இயக்குனர் யோகானந்தை ஆரத் தழுவி சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சரித்திரத்தில் இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த படம் எடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றாராம்.

நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பை. அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டியிருந்தன. குறிப்பாக துக்ளக் இதழ் அவரது நடிப்பை பற்றி விவரித்து விட்டு சிவாஜியின் கால் நகத்தின் நடிப்புக்கு கூட யாரும் ஈடாக முடியாது என்று எழுதியிருந்தது. ஆனந்த விகடன் இதழும் வெகுவாக பாராட்டியது. குறிப்பாக நீங்கள் பதிவு செய்திருக்கும் எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் இனிமேல் கிருஷ்ண ஜெயந்தி பாடலாக ஒலிக்கப் போகிறது என்றும் சொல்லியிருந்தார்கள். கவிஞர் வாலி நமது சொந்தப் படத்திற்கு முதன் முறையாக பாடல் எழுதியதும் இந்த வா கண்ணா வா படத்திற்குதான் [என நினைக்கிறேன்].

இந்த படம் வெளியானபோது அதற்கு முன்பே மதுரையிலிருந்து கிளம்பி விட்ட நான் பத்திரிக்கை விமர்சனங்களை படித்துவிட்டு நான் இருந்த இடத்திலிருந்து 70 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த படத்தை போய் பார்த்தேன். நான் இருந்த ஊருக்கு படம் வந்தபோதும் இரண்டு மூன்று முறை பார்த்தேன். கொஞ்சம் ஆந்திர வாடையை குறைத்திருந்தால் மக்களால் படத்தோடு மேலும் ஒன்றியிருக்க முடியும் என்பது என் எண்ணம். நல்ல பாடல் தந்ததற்கு நன்றி.

பொட்டு வைத்த முகமோ பாடல் பற்றி நான் என்ன சொல்ல? சொல்வதற்கு ஒன்றுமே பாக்கியில்லாமல் நீங்கள் எல்லாம் எழுதி விட்டீர்கள். மற்றவர்களும் எழுதி விட்டனர். சுமதி என் சுந்தரி பற்றி முன்பே நிறைய எழுதியிருக்கிறேன் மீண்டும் அதை எழுதினால் போரடிக்கும்.

ஆனால் இந்தப் படத்தின் இளமை quotient எந்த காலத்திலும் சிலிர்ப்பை தருவதோடு நீங்கள் குறிப்பிட்ட அந்த பின்னணி ஹம்மிங் மனதுக்குள் மழையாக பெய்து இறங்கும். சென்ற மாதம் நமது NT FAnS அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் எம்எஸ்வி அவர்களின் பின்னணி இசையின் மாற்றை எடுத்துக் காட்டும் ஒரு உதாரணமாக சுமதி என் சுந்தரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை திரையிட்டோம். மீண்டும் பெரிய திரையில் தியேட்டர் effect-ல் காட்சி விரிந்தபோது அந்த ஹம்மிங் கொடுத்த சந்தோஷமே அலாதி.

நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு பெருமைப்பட்டுக் கொள்வது போல இந்தப் படத்திற்கும் நாங்கள் மதுரைக்காரர்கள் பெருமை கொள்வோம். காரணம் படம் அதிகபட்ச நாட்கள் ஓடியது மதுரை அலங்காரிலும்தான். சென்னை சித்ராவிலும் அதே நாட்கள் [12-வது வாரம் முழுமையடையாமல்] என்று ராகவேந்தர் சார் சொல்வார். [கார்த்திக் இருந்திருந்தால் அவரும் சொல்லியிருப்பார்]. ஆனால் மதுரையின் பெருமை அதோடு முடியவில்லை. அதே நாள் வெளியான பிராப்தம் அதிகபட்ச நாட்களை கடந்ததும் எங்கள் மதுரை சென்ட்ரலில்தான்[10 வாரம் முழுமை பெறாமல்].

பல விஷயங்களை பேச வாய்ப்பளித்த உங்கள் பதிவிற்கு மீண்டும் நன்றி வாசு! .

அன்புடன்

வாசு, நேற்று இரவே இதை எழுதி முடித்து பதிவிட நினைத்தேன். சட்டென்று ஒரு செய்தி வந்தது. சன் லைஃப் சானலில் சுந்தரும் உமாவும் சாந்தியும் லைவ் ஆக வந்திருக்கின்றனர் என்று. அதன் பிறகு அவர்களை பார்க்காமல் இருக்க முடியுமா? அதனால் நேற்றிரவு பதிவு மிஸ் ஆகி இன்று செய்திருக்கிறேன்

vasudevan31355
23rd September 2015, 09:12 PM
நன்றி முரளி சார்.

மறக்க முடியுமா? 'கட்டபொம்மன்' பார்க்கையில் கூட 'மலர்கள்' பற்றித்தான் பேசினோம். அன்பே பிரதானமாகக் கொண்ட மனித வடிவ தெய்வங்கள் அல்லவோ சுந்தரும் உமாவும் சாந்தியும்.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00004.jpghttp://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00002.jpg
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00005.jpghttp://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00006.jpg

Russellsmd
23rd September 2015, 11:29 PM
காதல் மட்டும்தான்.. எச்சிலை
முத்தமாக்குகிறது.

காதல் மட்டும்தான்.. நடக்கும்
போதே பறக்கிற பிரமையைத்
தருகிறது.

நம் காதலுக்குரிய நடிகர் திலகத்தின் எண்ணற்ற காதல் பாடல்களில்., எனக்கு மிகவும்
பிடித்த பாடல்களில் ஒன்று-
இந்தப் பாடல்.

அந்த மென்மையிலும், மென்மையான புன்னகை ஒன்றை மட்டும் வைத்தே
உறுதியாகச் சொல்லலாம்..நம்
நடிகர் திலகம்.."ரோஜாவின்
ராஜா"தானென்று.

கனவுப் பாடலிது.

கனவுகள்,இங்கிதமில்லாதவை.
எப்போதும் கண்ணியமாகவே இருக்கக் கூடிய உத்தரவாதம்
இல்லாதவை. ஒழுக்கம் உணர்த்த வேண்டிய உலக நிர்ப்பந்தங்களுக்காக ஒளித்து
வைத்திருந்த அடி மனசின்
அழுக்கு எண்ணங்களையும் அதிரடியாய் வெளிப்படுத்த
வல்லவை.

ஆனால்,இந்தப் பாடல் போல
கனவு வந்தால்..அது வரம்
நமக்கு.

பள்ளிக் குழந்தைகளை ஏதேனும் நல்ல காரியத்துக்காக
ஊர்வலமாய் அழைத்துப் போவார்களே..!? அந்த ஊர்வலக் குழந்தைகளின் ஒழுங்கில் காணும் அழகை..
நடிகர் திலகத்தின் பாவனைகளில் காணலாம்.

கனவுதானே என்று சும்மா பிதற்றாமல் பாடலுக்குள் ஒரு
கவித்துவம் புகுத்தியிருக்கிறார்கள் ..பாடலோடு சம்மந்தப்பட்ட
எல்லோரும்.

சில நிமிடங்களில் பாடல் முழுவதுமாய் முடிந்த பிறகு..
மனசு பாடத் துவங்குமே..

அது..

பாமர ரசிகன், மெல்லிசை மன்னருக்குச் செலுத்தும்
ரகசிய அஞ்சலி.


https://youtu.be/lORp7dvVNsg

Russelldvt
24th September 2015, 07:20 AM
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

http://i58.tinypic.com/155t4xf.jpg

Russellsmd
24th September 2015, 07:52 AM
இல்லாமை தீர்ந்ததென்ற
இணையற்ற சந்தோஷம்,
இசை வடிவமாயிற்று.

தியாகம்-
அதன் ஆதார ராகம்.

பசி தீர்ந்த, பசி தீர்த்த
மன நிறைவே பாடல் வரி.

பாராட்டி ஒலிக்கின்ற
கரவொலியே அதன் தாளம்.

இனிதான திருநாளில்
எல்லோர்க்கும்
இசையோடு
வாழ்த்துரைப்போம்.

https://youtu.be/27nZJEdKEvw

RAGHAVENDRA
24th September 2015, 07:53 AM
மிக விரைவில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/RR201501FW_zpssscgonpv.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/RR201502FW_zpsmpitibp2.jpg