PDA

View Full Version : Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

Russellxor
24th September 2015, 07:28 PM
ராஜாகண்ணு லாரி டிரைவரின் ரயில் பாட்டு



பச்சைப்பசேல் என்று எங்கும் மரம் செடிகள் நிறைந்த பகுதி.கண்களுக்கு ரம்மியமான காட்சி. கூட்ஸ் ரயில் வண்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அதிக பெட்டிகளை கொண்டதாய் நீளமாய் அந்த ரயில் வண்டி வளைந்து செல்லும் அழகு எல்லோரையும் கவரும்.மேலே இந்தப் பிரபஞ்சத்தை நினைக்க வைக்கும் நீல நிற ஆகாயம்.ரயில் வண்டி செல்லும் இருபுறமும் பசுமை நிறைந்த காட்டுப்பகுதி.இப்போது கூரையில்லாத அந்த திறந்த நிலைப்பெட்டிகளில் பயணம் செய்ய விரும்பாத மனமும் உண்டோ இப்பூவுலகில்?ஒரு ஆணும் பெண்ணும்ஆடிக்கொண்டு அந்த இன்பத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.அது மேலும் உற்சாகத்தை கூட்டுகிறதே. இப்போது அவர்கள் பாடத்தொடங்குவார்கள் போல் தெரிகிறது.அவர்கள் பாடும் அந்த பாட்டை சற்று கேட்போமா?
இப்போது அந்த மங்கைஹம்மிங் செய்கிறாள்.

ஹாஹாஹாஹாஆகாகாகாகேகேகே
குரலிலே குயில் போலும்.இவ்வளவு நேரம் அதிசயித்த அந்த இயற்கையையே மறக்கசெய்து விட்டதே.சில நேரங்களில் இயற்கையையும் மீறி ரசிக்க வைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கும் இருப்பதும் இயற்கைதானோ?

இப்போது ஒரு உயர்ந்த பாலத்தின் மேல் அந்த ரயில் சென்று கொண்டிருக்கிறது.கீழே அழகான நீர்நிலை.
மேலே ஆகாயம்,இடையில் பாலத்தில் செல்லும் ரயில்,கீழே ஒரு ஏரி.
ரசித்த மனம் இப்போது பிரமிப்பில்.இயற்கையும்,
செயற்கையும் கலந்த கலவையான காட்சி அது.
காட்டுப்பகுதியை பிளப்பது போல் வந்து கொண்டிருக்கிறதுஅந்த நீள ரயில் வண்டி.
அவர்களே இந்தக் காட்சியின் பிரதானம்என்பதால் இனி மங்கை, மன்னவன் என்று அழைப்போம்.

மங்கை தொடங்குகிறாள்:
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில்பூவாகி,
காயாகி,கனியாகி வண்ணம் பெறவோ
மங்கை முடித்ததும் மன்னவர் தொடர்கிறார்...
ஹஹாஹாஹாஹாக ஹேஹேகாஹஹாஹாஹாஹா
அடேங்கப்பா என்ன ஒரு வசீகரமான குரலய்யா.இந்த ஹஹஹாஹாஹாஹஹாவுக்குக் கே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் பாடலைக் கேட்டால்....

பக்கம் வரவோ பத்து விரல்களில்
பந்தல் இடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடைபோலாடஎண்ணம்
இல்லையோ

"மேலாடை மேலாட
நூலாடை போலாட"
என்று பாடுவதை கேட்கத்தான் எத்தனை இன்பம்.
மறுபடியும் அந்த ஹம்மிங்.
ஹஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாகஹஹஹஹஹஹாகாகஹா
'இந்த ஹம்மிங்கில் இன்னும்இனிமை.

இனிமை மென்மை
அந்த
மென்மை பெண்மையின் குரலில்
வெளிப்படும்போது கூடுதல் இனிமை.
ஆகாயப் பார்வையில் ரயில் நின்று கொண்டு இருப்பதை பார்ப்பதே அழகு.அது மலைப்பாதையில் ஊர்ந்து செல்வதை பார்ப்பது அழகிலும் அழகு.அப்படித்தான் இந்தக்காட்சிசெல்கிறது.
இருட்டான ஆகாயத்தில் முழுநிலவு
இருக்கும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அது போல மலையை குகைபோல பாதையாக்கி.,அந்த குகைக்குள்ளிலிருந்து பார்த்தால் இருட்டு குகை வெளிப்பிரதேச வான் வெளிச்சத்தில் வான் +முழு நிலவுகாட்சியைப் போல் இருக்குமல்லவா?அதே போன்ற இடத்தை நோக்கித்தான் இந்த ரயில் பயணம் இப்போது ஆரம்பிக்கிறது.மன்னவனும்,
மங்கையும் இணைந்தபடி இருக்க
அந்தநீள் தொடர் ஊர்தி குகைக்குள்
செல்ல ஆரம்பிக்கிறது.ஊர்தி குகைக்குள் நுழைய நுழைய பக்கவாட்டு காட்சிகள் சிறிது சிறிதாக மறைந்து கொண்டே வர,கண்ணில் ஏற்படும்" க்ளாக்கோமா"நோய் போல்
அந்தக்காட்சி கண்கள் காணும் பேரின்ப கவிதை.மன்னவனும்,மங்கையும் குகையை நெருங்கும் சமயம் அவர்களின் மேல் மட்டும் வெளிச்சம் பட்டு அவர்கள் அந்தரத்திலே நிற்பது போல காட்சி அளிக்கும் அந்தக்
காட்சி க்கு மனம் மயங்கும். விழிகள் விரியும்.இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று யார்தான் யோசித்திருப்பார்கள்?
அந்த தண்டவாள ஊர்தி வட்டமான குகைப்பாதையில் நுழைந்ததும்
அந்த வட்டம் சிறிதாகி,மறைந்து இருள் சூழ்ந்து.,பின் சிறிது சிறிதாகபிறை போலஆரம்பித்து அந்த வட்டப்பாதை வெளிச்சம் பெறுவது,
கண்ணுக்கு கிடைத்த விருந்து.
மன்னவன் கீழே அமர்ந்திருக்க மங்கை நாணத்துடன்எழுந்து பொய்க்கோபத்துடன் நடக்கிறாள்.

மன்னவன் பாடுகிறான்:

நான் புஷ்பாஞ்சலிஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

மன்னவன் இடது புறமாக லேசாக சாய்ந்து வலது கையால்பாடல் வரிகளுக்கு காற்றில் அபிநயம் செய்வது வித்தைதெரிந்தவனின் ஜால வித்தை இது என்பது புரிகிறது.அவருடைய கை அசைவுகள் இவர் சாதாரண மனிதரில்லைஎன்பதை காட்டுகிறது."நான்ன்ன்ன் புஷ்பாஞ்சலி"என்று தொடங்குவது சுகமான ராகம்."நீ பொன்னோவியம் என்று மாற"என்பதை ஓவியம் வரைவது போல் காட்டும் விரல் அசைவுகள்
அதிக அலட்டல்கள் இல்லாமலும்
உடல் அசைவுகள் அதிகம் இல்லாமலேயே விரல்களின் அபிநயங்கள் மூலமாகக் கூட சிறந்த ரசிப்பை பார்ப்பவனுக்கு கொடுக்க முடியும் என்று மன்னவன் மூலம் நடிப்பை உணர முடிகிறது.

நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
அந்த ரசனைகளின் இந்த ரசிகையது
தேர்தேர்தேர் என்று ஆட
இன்பக் கவிதைகளின்வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட

வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத் தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகி
வண்ணம் பெறவோ...

சில பாடல்களை கேட்கும்போது நம்மையறியாமலேயே தாளம் போட வைக்கும். அதற்கு அந்தப்பாடல் உற்சாகமான மெட்டிலும் ,குஷியான இசையிலும் அமைந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு மெட்டிலும் இசையிலும் அமைந்த பாடல்தான் இது.இப்படி ஒருமெட்டு,இசைக் கலவையில் ,தேன் மதுர குரல்களும் சேர்ந்து கொண்டால் பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்தானே!

ரயில்
மலை
அலுக்காது.பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இன்பம் இன்னும் மேல்.உயர்ந்த அந்த பாலத்தில் ரயில் செல்லும் அந்தக் காட்சி தமிழ் சினிமாவின் அப்போதைய பிரமாண்டம்.அதிரடி பாட்டுக்கள் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே இது போன்றரயில்காட்சிகளை படம் பிடித்து வந்த தமிழ்திரையுலகில் ஒரு மென்மையான காதல் பாட்டுக்கு
இந்த ரயில் பயண காட்சி படம் பிடிக்க பட்டிருப்பது புதுமையும் கூட.
யானைகள் நின்று கொண்டிருக்க மரம் செடி கொடிகளுக்கு இடையில் ரயில் செல்வது போல் படம் பிடிக்கப்பட்டிருப்பது காட்சிக்கு கூடுதல் சிறப்பு.

மங்கை பாடுகிறாள்:
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர

புல்லாங்குழல் இசை கேட்பது ஒரு சுகம் என்றால்,இங்கே புல்லாங்குழல் என்று பாடுவதைக் கேட்பதே அதனினும் சுகம்.
ரயில் செல்லும் விளைவால் பின்புல காட்சிகளும் மாயையால் நகர, அதனுடன் இருவரின் ஆடலும்,பாடலுமாயும் அந்தக் காட்சி
இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.

நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
என்று அவள் முடிக்க,
சின்னக்கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
மன்னவனின் காந்தமும் சாந்தமும் இணைந்த குரல் நம்மை மென்மையாக மயக்க,

தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
என பெண் முடிக்க.,
முடிப்பது மேலும் தொடராதோ
என நாம் ஏங்க...
ஒரு சுற்றுலா சென்று வந்த சந்தோசத்தை அளித்து விட்டது இப்பாடல்.

பாடல்:
பெண்:வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில் பூவாகி,காயாகி,கனியாகிவண்ணம் பெறவோ
ஆண்: பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தலிடவோ
வஞ்சிக்கொடியின் மேலாடை மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ
(வெட்கப்படவோ...
ஆண்:நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னொவியம் போன்று மாற
பெண்:அந்த ரசனைகளின் இந்த ரசிகையது தேர்தேர்தேர் என்று ஆட
ஆண்:இன்பக்கவிதைகளின் வண்ணம் முழுவதையும் பார்பார்பார் என்று பாட
(வெட்கப்படவோ.,
பெண்:நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
ஆண்:சின்னஞ்சிறு கொடிமலர்கள் கன்னங்கரு விழிகள் பார்பார்பார் என்று துள்ள
பெண்:தன்னந்தனிமையிது தனிமை இனிமையிது யார்யார்யார் தடை சொல்ல
(வெட்கப்படவோ...


Vetka Padavo - Lorry Driver Rajakannu: http://youtu.be/Y-78SiZynzw

Murali Srinivas
24th September 2015, 07:39 PM
அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துகள்.

அன்புடன்

Murali Srinivas
24th September 2015, 07:46 PM
மலைக்கோட்டை மாநகரில் நடிகர் திலகத்தின் 87-வது பிறந்த நாள் விழா!

திருச்சி மாநகரில் திருச்சி தமிழ் சங்கமும் அகில இந்திய சிவாஜி மன்றமும் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றமும் இணைந்து நடத்தும் நடிகர் திலகத்தின் 87-வது பிறந்த நாள் விழா.

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல்

நடிகர் திலகத்தின் புகைப்பட கண்காட்சி ஆகியவை நடைபெறும்

நாள் : 11.10.2015 - ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 4.00 மணி

இடம்:

திருச்சி தமிழ் சங்க வளாகம்

மேல புலிவார் ரோடு

திருச்சி

விழா ஏற்பாடுகளை அகில இந்திய சிகர மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்களும் மற்ற மன்ற நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

அனைவரும் வருக!

அன்புடன்

RAGHAVENDRA
24th September 2015, 11:20 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/MASTHANPOSTR01FW_zpsxptkmjvo.jpg

RAGHAVENDRA
25th September 2015, 12:14 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/quoteonNT01_zpsillybml7.jpg

eehaiupehazij
25th September 2015, 03:11 AM
24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!


திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின் அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன் (அவரது தம்பியுடன்) அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!!

உள்ளங்களையும் குளிர்வித்து நடிகர் திலகம் புகழ் பாடும் உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!

with regards,

senthil

இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !

https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படிப் பாடுவோமோ?!

https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

sivaa
25th September 2015, 09:21 AM
வாசு,



அற்புதமான பாடல். அருமையான படம். ரா கண்ணா ரா என்ற தெலுங்கு படத்தின் [சோமயாஜலு, கேஆர்விஜயா] ரீமேக். 1980-களில் நடிகர் திலகம் பற்றி அவர் ஏற்கும் பாத்திரங்கள் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்த காலம். அந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம். நமது ஹப்பிலேயே 6,7 வருடங்களுக்கு முன்பு ஒரு சிலர் [ஈஸி சேர் விமர்சகர்கள்] அப்படி நடித்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் .சொந்த படமாக கூட தயாரித்திருக்கலாம் என்றெல்லாம் எழுதுவார்கள். 1982-லேயே இப்படி பேரனின் பாசத்திற்காக ஏங்கும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார் அதுவும் சொந்தப் படம் என்று நாம் எடுத்துச் சொல்லும்போது அதைப் பற்றிய விவரங்களே அவர்கள் அறிந்திருக்கவில்லை.

குற்றம் சொல்லுவதற்கு ஓடி வருபவர்கள் நல்ல படங்கள் வரும்போது அதற்கு ஆதரவளிப்பதில்லை. வா கண்ணா வா போன்ற படங்கள் வெளியான காலத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. அதே நேரத்தில் சென்னையில் மூன்று அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது.

வெளியான நேரத்தில் இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்குள்ளாக நடிகர் திலகத்தின் 4 படங்கள் ரிலீஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜனவரி 26 அன்று ஹிட்லர் உமாநாத் வெளியாகி ஓடிக் கொண்டிருக்க பிப்ரவரி 5-ந் தேதி ஊருக்கு ஒரு பிள்ளை வெளியாக மறுநாள் பிப்ரவரி 6 -ந் தேதி இந்தப் படத்தை அதுவும் சொந்தப் படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கு மனசு வரும்? இதெல்லாம் போதாதென்று அதே பிப்ரவரி 25-ந் தேதி கருடா சௌக்கியமா வேறு ரிலீஸ். உலகத்திலேயே இது போன்ற வணிக கட்டமைப்பு உள்ள [Producer -Distributor - Exhibitor set up] எந்த மொழிப் படமானாலும் சரி இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ஆரம்ப நிலை கதாநாயகன் கூட இப்படி ரிலீஸ் செய்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் என்றைக்கு அதையெல்லாம் பார்த்தார்? In spite of all these things அவர் வெற்றிகளை குவித்தவர் அல்லவா?

இந்தப் படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் படம் பார்த்த திரு.வி.சி.சண்முகம் அவர்கள் இயக்குனர் யோகானந்தை ஆரத் தழுவி சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சரித்திரத்தில் இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த படம் எடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றாராம்.

நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பை. அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டியிருந்தன. குறிப்பாக துக்ளக் இதழ் அவரது நடிப்பை பற்றி விவரித்து விட்டு சிவாஜியின் கால் நகத்தின் நடிப்புக்கு கூட யாரும் ஈடாக முடியாது என்று எழுதியிருந்தது. ஆனந்த விகடன் இதழும் வெகுவாக பாராட்டியது. குறிப்பாக நீங்கள் பதிவு செய்திருக்கும் எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் இனிமேல் கிருஷ்ண ஜெயந்தி பாடலாக ஒலிக்கப் போகிறது என்றும் சொல்லியிருந்தார்கள். கவிஞர் வாலி நமது சொந்தப் படத்திற்கு முதன் முறையாக பாடல் எழுதியதும் இந்த வா கண்ணா வா படத்திற்குதான் [என நினைக்கிறேன்].

இந்த படம் வெளியானபோது அதற்கு முன்பே மதுரையிலிருந்து கிளம்பி விட்ட நான் பத்திரிக்கை விமர்சனங்களை படித்துவிட்டு நான் இருந்த இடத்திலிருந்து 70 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த படத்தை போய் பார்த்தேன். நான் இருந்த ஊருக்கு படம் வந்தபோதும் இரண்டு மூன்று முறை பார்த்தேன். கொஞ்சம் ஆந்திர வாடையை குறைத்திருந்தால் மக்களால் படத்தோடு மேலும் ஒன்றியிருக்க முடியும் என்பது என் எண்ணம். நல்ல பாடல் தந்ததற்கு நன்றி.


அன்புடன்



http://i60.tinypic.com/e6wshx.jpg

Murali Srinivas
25th September 2015, 09:46 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

1972 அக்டோபர் 1,2 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு பற்றி பார்த்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

மதுரையில் ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு நடந்த நாட்களில் நடிகர் திலகம் மைசூர் அருகே நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று காலையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு மதிய உணவு இடைவேளையோடு pack up ஆனது. மைசூரில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் மிகப் பெரிய கேக் வரவழைக்கப்பட்டு நடிகர் திலகம் கேக் வெட்ட பிறந்த விழாவும் அதை தொடர்ந்து விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. நீதி தயாரிப்பாளர் பாலாஜி அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஏராளமான தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை காண வந்திருந்தார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

சில பகுதிகளுக்கு முன்பு நீதி படத்திற்கு 15 நாட்கள் கால்ஷீட் என்றும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை ஷூட்டிங் என்பதையும் சொல்லியிருந்தோம். அக்டோபர் 6 வெள்ளியன்று மைசூரிலிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தார் நடிகர் திலகம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி அக்டோபர் 7,8 கோவையில் சிகர மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தார். அன்றைக்கு அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் போல் கூடுவார். கோவையில் அன்றைய நாட்களில் மிக பிரபலமான ஹோட்டல் குருவில் தங்கியிருந்தார். ஹோட்டல் வாசலில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததை புகைப்படமாகவும் செய்தியாகவும் பத்திரிக்கைகள் வெளியிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. .

எப்போதும் போல் இரண்டு நாட்கள் மாநாடு. முதல் நாள் கலைஞர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் இரண்டாம் நாள் அரசியல் மாநாடாகவும் நடைபெற்றது. முதல் நாள் பிரமாண்டமான ஊர்வலம் ஆரம்பித்து மாநாட்டு பந்தல் வரை சென்று முடிவடைந்தது. நடிகர் திலகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டு கை அசைத்து ரசிகர்களிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களோ சாதரணமாகவே கேட்கவே வேண்டாம். வெற்றி மேல் வெற்றியாக வந்துக் கொண்டிருந்த நேரம் எனும்போது மகிழ்ச்சி துள்ளல் அதிகமாகவே இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஆனது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. கடலலை போன்ற அந்த பிரமாண்ட கூட்டத்தை புகைப்படமாக பார்த்து பிரமித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ஊர்வலத்தையும் பின் நடைபெற்ற விழாவையும் ராமாநாயுடு தன் குழுவினரை வைத்து படமாக்கினார்.

முதன் முதலாக 1970-ம் ஆண்டு அகில இந்திய சிகர மன்றம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு ஒரு சில மாதங்களுக்கு பின் தமிழகமெங்கும் அப்போது ஓடிக் கொண்டிருந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. 1971-ம் வருடம் ஜூலையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி பட விழாவின் செய்தி தொகுப்பு சவாலே சமாளி திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு பாபு திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. ஆனால் 1972-ல் கோவையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழா வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த செய்தி தொகுப்பை நான் பார்த்த நினைவில்லை. ராகவேந்தர் சார் அல்லது வாசு போன்றவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறேன்.

முதல் நாள் கலை விழாவில் அன்றைய முன்னணி நாயக நாயகியர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மிக அதிகமான தயாரிப்பாளர்கள் விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிட்டத்தக்க விஷயம். அன்றைக்கு நடிகர் திலகத்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று அனைவரும் காத்துக் கிடந்த நிலை. அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால் மேடையிலிருந்த இசைக்குழுவினரின் வாத்திய பின்னணியோடு நடிகர் முத்துராமன் அவர்கள் என்னடி ராக்கமா பாடலை பாடியதுதான். மாநாட்டு பந்தலே திமிலோகப்பட்டது என்று சொல்வார்கள்.

மறுநாள் அரசியல் மாநாடு. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். அன்றைய அரசியல் நிலைமைக்கேற்ப பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவரின் பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இறுதியாக நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தினார். தானும் தனது ரசிகர் படையும் எந்நாளும் காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைப்போம் என்று சூளுரைத்தார். கொங்கு மண்டலமே குலுங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அதே நாளில் (அக்டோபர் 8 ஞாயிறு) தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பதை ஏற்படுத்திய பொதுக்கூட்டம் ஒன்று சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் ஊரில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அன்றைய ஆளும்கட்சியான திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 10 செவ்வாயன்று கூட்டப்பட்டு அந்த கூட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயற்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசினார் என்ற காரணத்தை சொல்லி திமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எம்ஜிஆர் அவர்கள் இடை நீக்கம் [suspend] செய்யபட்டார். தமிழகமெங்கும் பதட்ட நிலை ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின. . .

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
25th September 2015, 11:04 AM
சில சமயங்களில் சில விஷயங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொள்வதில் சிலர் பாண்டித்யம் பெற்றவர்கள். குறிப்பாக இது பொது வாழ்வில் இதை ஒரு ராஜ தந்திரமாகவே பாராட்டுவதும் நடைபெற்றதுண்டு. 1972ல் நடந்த தமிழகத்தை உலுக்கிய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா, அதன் கொண்டாட்டங்கள், நடிகர் திலகத்திற்கு உருவான மிகப் பெரிய செல்வாக்கு, அவர் பின்னால் தமிழகமே திரண்டு நின்ற அற்புதம், அப்போதைய ஆளும் கட்சிக்கெதிரான மக்கள் மனநிலையை ஒருமுகப் படுத்தி ஸ்தாபன காங்கிரஸுக்கு ஆதரவாக நடிகர் திலகம் மாற்றி வைத்திருந்த சூழ்நிலை, இவையெல்லாம் மக்களுக்கு வாய்மொழியாக தமிழகம் முழுதும் பரவலாக சென்று சேர்ந்து விட்டன. ஆனால் அன்றைக்கு இருந்த ஊடகங்களின் மூலமாக இவை சென்று சேர்ந்து விட்டால் தங்களால் காலத்திற்கும் மீண்டு வர முடியாது என நினைத்தவர்களின் மன வெளிப்பாடே அந்த மாநாட்டினைத் தொடர்ந்த நிகழ்வுகள். நடிகர் திலகம் தேவர் மகனில் சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வரும். இன்றைக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு வேற ஒருவன் அறுவடை செய்வான். அதற்கப்புறம் இன்னொருவன். அதையெல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனால் விதை நான் போட்டது. இந்த வசனம் 1972ம் ஆண்டின் அரசியல் சூழலின் பிரதிபலிப்பு எனலாம். அன்றைக்கு விதையை விதைத்து உழுது பயிராக்கி தன்னுடைய முதலாளியான ஸ்தாபன காங்கிரஸுக்கு அறுவடைக்குத் தயாரான நிலையில் தந்தவர் நடிகர் திலகம். அறுவடை செய்ய வேண்டிய முதலாளி கோட்டை விட்டதால் வேறொருவன் அறுவடை செய்து கொள்ள வழி கிடைத்து விட்டது.

விரிவாக எழுதினால் அரசியலாகி விடும். இதற்கு மேல் இதைப் பற்றி நான் எழுத விரும்பவில்லை.

adiram
25th September 2015, 11:47 AM
டியர் முரளி சார்,

தாமதமாக வந்தாலும் ஒன்றுக்கு இரண்டாக அருமையான பதிவுகளைத் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள். வா கண்ணா வா தொடர்பான பதிவும், கோவையில் நடந்த சிவாஜி ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் பதிவுகள் அற்புதம்.

வா கண்ணா வா படம் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் சரியாக வரவேற்பை பெறாமல் போனதற்கு ஆதங்கத்தை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கான காரணம் உங்கள் பதிவிலேயே உள்ளது. வேறென்ன?. இடைவெளியில்லாத தொடர் வெளியீடுகள்தான். இந்த விஷயத்தில் மட்டும் ரசிகர்களின் உணர்வை திரு வி.சி.எஸ். அவர்கள் மதிக்கவேயில்லை.

கோவை மாநாடு பற்றிய விளக்க கட்டுரை அன்றைய நாட்களை கண்முன் நிறுத்தியது. அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தி நடிகர் திரு. சஞ்சீவ்குமார், ஊர்வலத்தைப்பார்த்து மலைத்துப்போய், "சிவாஜி மீது ரசிகர்கள் இவ்வளவு உயிராக இருப்பது ஆச்சரியப் படுத்துகிறது" என்று வியந்து பாராட்டினார். மாநாடு படமாக்கம் வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதாக நினைவு (படம் கிட்டத்தட்ட 50 நாட்கள் கடந்தபின்பு). ஆனால் அந்த மாநாட்டின் ஸ்டில்கள் நீதி படத்தின் பயாஸ்கோப் (ஓடுதுபார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு) பாடலின் வரிகளின்போது காட்டப்படும்.

அப்போது 1970-ல் தொடங்கி, தொடர்ந்து ஐந்தாறு பிரம்மாண்ட மாநாடுகள் சிவாஜி ரசிகர்மன்றத்தால் நடத்தப்பட்டன. அனைத்தும் கலரில் படமாக்கவும் பட்டன. ஆனால் அவை தலைமை மன்றத்தால் பாதுகாக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இருந்தால் அவற்றை டிவிடி வடிவில் வெளியிட்டு நடிகர்திலகத்துக்கு மேலும் புகழ் சேர்க்கலாமே.

Russellbpw
25th September 2015, 12:04 PM
இனிய திரி நண்பர்களுக்கு

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய தலைமுறை பத்திரிகையில் வெளியான நடிகர் திலகம் மணிமண்டபம் பற்றிய முற்றிலும் தவறான, தகவல் ஆராயாமல், தகவல் அறியும் எண்ணம் சிறிதும் இல்லாமல் வெறும் காழ்புணர்ச்சி கொண்டு 3ஆம் பக்கத்தில் பதிவிட்ட கட்டுரைக்கு, நமது நண்பர்கள் NADIGAR THILAGAM 360* சார்பாக உண்மை தகவலை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தும் மடல் ஒன்று நேரில் சென்று திரு மாலன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

அப்போது தம்முடைய தவறினை உணர்ந்து நமக்கு வருத்தத்தை தெரிவித்த பத்திரிகை நண்பர், அதற்க்கு வருத்தம் தெரிவித்து பதில் பதிவு செய்வதாக கூறியதன் பேரில், நண்பர்கள் விடைபெற்றார்கள்.

இன்று வெளிவந்துள்ள புதிய தலைமுறை இதழில் பத்திரிகை சார்பில் வருத்தத்தை வெளியிடுவதற்கு பதிலாக பத்திரிகைக்கே உரித்தான கேடித்தனம் கொண்டு விளக்க கடிதம் பிரசூரம் செய்யப்பட்டது.

ஆதாரம் கொடுத்தும் கூட இந்த பத்திரிகை களவாணிகள் காழ்புணர்ச்சியை விட்டொழிக்காமல் தம்முடைய EGO ஒன்றையே பிரதானமாக கொண்டு இதுபோல ஈன செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் தார்மீக பொறுப்புகூட இல்லாமல் இருப்பது, இன்றைய பத்திரிகை அராஜகத்தை காட்டுகிறது !

புதிய தலைமுறை பத்திரிகையும் இந்த காழ்புணர்ச்சி கும்பலோடு சேர்ந்துள்ளது என்பதை கோடிட்டு காட்டுகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsqexeqtxz.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsqexeqtxz.png.html)

Russellxss
25th September 2015, 12:27 PM
சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் 21.07.2015 மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளன்று நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அரசே மணிமண்டபம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற வெற்றி உண்ணாவிரதத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கலையுலகைச் சார்ந்தவர்கள் ஆற்றிய உரையின் காணொளியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

http://www.sivajiganesan.in/home%203.html


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

JamesFague
25th September 2015, 04:09 PM
https://shar.es/17CEZ8

Harrietlgy
25th September 2015, 04:37 PM
NT Birth day celebration invitation.


04467

Russellbzy
25th September 2015, 05:54 PM
அன்பு நண்பர்களே !
அறுவடைக்கு தயார்நிலையில் நடிகர் திலகம் கொடுத்தார்! உண்மை!
ஸ்தாபன காங்கிரஸ் முதலாளி பெருந்தலைவர் காமராஜர் கோட்டை விடவில்லை! அவர் அறுவடைக்கு முன்பே மறைந்து விட்டார்!
கோட்டை விட்டவர்கள் மற்றவர்களே! நம் நடிகர் திலகம் உட்பட என்பதே உண்மையான அரசியல் வரலாறு!
நன்றி !

RAGHAVENDRA
25th September 2015, 08:18 PM
அறுவடைக்கு முன்பே மறைந்து விட்டார். சரி..

ஒரு முதலாளி தனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றால் கூட தனக்கு விசுவாசமான, நம்பிக்கையுள்ள ஒரு மேனேஜரையோ அல்லது தன் குடும்பத்தில் ஒருத்தரையோ தான் திரும்பி வரும் வரையிலோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்பாடு செய்து விட்டுத்தான் போவான். இது ஒரு சாதாரணமான கடைக்கே பொருந்தக் கூடியது. அதுவும் தனக்கு வயதாகி விட்டது என்றால் நிச்சயமாக அந்த முதலாளி யாரையாவது ஏற்பாடு செய்யாமல் போகமாட்டான். அப்படி இருக்கும் போது, ஸ்தாபன காங்கிரஸ் என்கிற அத்தனை பெரிய ஸ்தாபனத்திற்கு யாரையுமே அடையாளம் காட்டாமல் அம்போவென விட்டு விட்டுப் போனதை எதில் சேர்ப்பது. ஆல் இந்தியா கிங் மேக்கர் லோக்கலில் யாரையுமே சுட்டிக்காட்டாமல் போனது ஏன். தனக்கு பின் தனக்கு வாரிசாக இன்னொரு முதலாளி வருவார் அவர் சொல்வதைக் கேட்டு நடந்து செல்லுங்கள் என்று தானே ஒரு முதலாளி சொல்லுவான். அப்படி எதுவும் நடக்காத போது, அறுவடைக்கு யார் பொறுப்பெடுப்பது என்கிற நிலை ஏற்படாத போது வேறு யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமே...

விதண்டாவாதம் பேசிக்கொண்டிருந்தால் அதற்கு எல்லையில்லை. தங்களை விட அதிமேதாவி யாருமில்லை என்கிற நினைப்பில் இருப்பவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களிடம் பேசிப் பிரயோசனமில்லை.

காங்கிரஸால் நடிகர் திலகம் தன் வாழ்க்கையில் பணம், பொருள், என அனைத்தையும் தியாகம் செய்தது தான் மிச்சம், அது எந்தக் காங்கிரஸாக இருந்தாலும் சரி. அவருடைய அரசியல் வாாழ்க்கையில் ஓரளவிற்கேனும் அவருக்கு மரியாதை கிடைத்தது, இந்திரா காந்தி மற்றும் வி.பி. சிங் இவர்கள் இருவர் காலத்தில் மட்டுமே.

இது தான் உண்மை. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்க மறுத்தாலும் இது தான் வரலாறு.

நினைவில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

பெருந்தலைவர் மறைவுக்கு சில காலம் முன்னால். தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக பா.ரா. இருந்த நேரம். கர்நாக பிரதேஷ் ஸ்தாபன காங்கிரஸின் ஓரங்கமான பெங்களூரு பிரதேஷ் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவரை அழைக்க அந்த ஊர் நிர்வாகிகள் அவர்களுடைய சார்பாக அதில் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அனுப்புகிறார்கள். அவரும் வந்து நடிகர் திலகத்தைக் கேட்கிறார். நடிகர் திலகம் உடனே சொன்னது, நீங்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்டு வாருங்கள், அவர்கள் சம்ததித்தால் நான் வருகிறேன், அவர்களை மீறி நான் வர மாட்டேன் என நேர்மையாக கூறி விடுகிறார். அந்த நிர்வாகியும் நேராக பா.ரா. விடம் செல்கிறார். விவரத்தை சொல்லி நடிகர் திலகத்தை பெங்களூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல சம்மதம் கேட்கிறார். ஆனால் இந்த பிரகஸ்பதி, மிகவும் அலட்சியமாக சிவாஜியெல்லாம் கூப்பிட்டுப் போக எங்களைக் கேக்கணுமா, அவரை நாங்கள் காங்கிரஸ் காரராகவே மதிக்கிறதில்லையே, அவர் வந்தால் கூட்டிட்டுப் போங்க, அவருக்கும் ஸ்தாபன காங்கிரஸுக்கும் சம்பந்தமில்லை, எனக் கூறி விட்டு அப்படியும் வேண்டுமென்றால் இன்னோர் நிர்வாகியின் பெயரைச் சொல்லி அவரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் என்கிறார். வந்தவரும் சளைக்காமல் அந்த நிர்வாகியிடமும் சென்று கேட்க, அவர் இவரை விட இன்னும் எகத்தாளமாகப் பேசி வந்தவரை அனுப்பி விடுகிறார். வந்தவர் மனம் நொந்து நடிகர் திலகத்திடம், நீங்கள் ஏன் சார் இந்தக் கட்சியில் இருக்கீங்க.. இந்த ஊர்லே இந்தக் கட்சியிலே இனிமே இருக்காதீங்க, இல்லைன்னா நம்ம பெங்களூருக்கு வந்திடுங்க எனக் கூறுகிறார். அவர்கள் சம்மதம் ஏன் கேட்க வேண்டும், நான் அகில இந்திய தலைமையிடம் பேசிக்கொள்கிறேன், நீங்கள் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் எனக் கட்டாயமாக அழைத்துச் சென்று பெங்களூரு மாநகரமே குலுங்கும் அளவிற்கு மிகச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்திக் காட்டுகிறார்.

நடிகர் திலகத்திற்கு சென்னையில் ஸ்தாபன காங்கிரஸில் ஏற்பட்ட அவமரியாதையைப் பற்றி வெளியூரில் இருந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. இதனால் பலர் தாங்கள் வதந்தியாகக் கேள்விப்பட்டதை வைத்து மன்றங்களைக் கலைத்ததெல்லாம் முழுக்க முழுக்க அறியாமையின் விளைவே,

Russellbzy
25th September 2015, 10:10 PM
அன்பு நண்பர்களே !
காமராஜர் பொறுப்பை எவரிடமும் ஒப்படைக்க வில்லை சரி! அண்ணாதுரை தனக்கு பின்பு இன்னார் தான் கட்சி தலைமை ஏற்க வேண்டுமென்று சொல்லிவிட்டா மறைந்தார்? திமுக இன்றும் வலுவுடன் இருக்கிறதே? மக்கள் திலகத்தை திமுகவில் அலட்சியபடுத்த வில்லையா? அவர் தனி கட்சி கண்டு
சாதனை படைக்கவில்லையா? உங்களை யார் மதிக்காத கட்சியில் இருக்க சொன்னது? அரசியலில் குறிப்பாக மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை எந்த
கட்சியிலும் வளர விட மாட்டார்கள்! அதை மீறி துரோகிகளை வெற்றி கொள்வது தான் சாமர்த்தியம்! அந்த சாமர்த்தியம் திறமை நடிகர்திலகத்துக்கு
சுட்டு போட்டாலும் வராது! திரைஉலகில் சிவாஜியின் சாதனைகளை எவரும் பாதி அளவு கூட நெருங்க வில்லை என்று எப்போதும் உரக்க சொல்வேன்!
அரசியலில் அவரை போல் தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட ஒருவரை இதுவரை தமிழகம் கண்டதில்லை!
சிவாஜியை போல் மக்கள் செல்வாக்கை வீணடித்த ஒருவரை இனி தமிழகம் காணபோவதில்லை! இதுதான் சத்தியமான உண்மை!
அவரின் குணத்துக்கு அரசியலுக்கே வந்திருக்க கூடாது! அப்படி இருந்திருந்தால் ராஜ்குமார், நாகேஸ்வரராவ் போல் கௌரவமாக இருந்திருக்கும்!
நன்றி !

RAGHAVENDRA
25th September 2015, 10:32 PM
ஒரு மாநிலக் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் நிகழ்வுகளுக்கும் அகில இந்திய கட்சியின் நிலைப்பாடுகளுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன. தி.மு.க. வலுவுடன் இருக்கிறதென்றால் அதற்கென்று ஒரு நிர்வாகக்குழு, பொதுக்குழு என ஏகப்பட்ட உள் கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு அவர்கள் இயக்கம் நடைபெறுகிறது. மதிக்காத கட்சியில் இருக்கச் சொன்னது யார் என்று கேட்டால் .. அதற்கு உங்கள் மனசாட்சியே பதில் சொல்லி விடும். பெருந்தலைவர் காமராஜர் என்கிற ஒரு மனிதருக்காகத் தான் நடிகர் திலகம் அந்த இயக்கத்தில் இருந்தார். உங்களை யார் இருக்கச் சொன்னது என்பதெல்லாம் கேட்பதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறையில் ஒத்து வராது. அன்றைக்கு நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் பெருந்தலைவரின் இயக்கம் என்ன கதி ஆகியிருக்கும் என்பது உலகளந்த உண்மை. அதைத்தான் நண்பர் எதிர்பார்த்திருக்கிறாரா.

அண்ணா மறைவுக்குப் பின்னர் என்ன நடந்தது. போட்டி என்கிற சூழ்நிலை வந்த போது அதனை எல்லோரும் கூடிப் பேசி சமரசம் செய்து இன்னார் தான் அடுத்து வரவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை எடுத்தனர். அதன் மூலம் கலைஞர் அவர்கள் முதல்வராக பதவியேற்றார்.

மக்கள் செல்வாக்கை நடிகர் திலகம் வீணடிக்கவில்லை. மக்கள் தான் அவருடைய செல்வாக்கை வீணடித்து விட்டார்கள். இதை எந்த உண்மையான சிவாஜி ரசிகனைக் கேட்டாலும் சொல்லுவான். அவர் எதையும் முயற்சிக்கவில்லை. கோட்டை விடுவதற்கு. தனக்கென்று அவர் எதுவும் முயற்சிக்காத போது சூன்யம் வைக்கும் கேள்விக்கே இடமில்லை. ஏதாவது நடிகர் திலகத்தை சொல்லியே தீர வேண்டும், அதன் மூலம் தன்னுடைய அதி மேதாவித்தனத்தை உலகிற்கு பறை சாற்ற வேண்டும் என்கிற ஒரு உள்நோக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டு பேசுபவர்களுக்கு வேறு எதுவும் கண்ணில் தெரியாது.

RAGHAVENDRA
25th September 2015, 10:48 PM
இளைய தலைமுறை நண்பர்கள் மிகவும் அருமையாக நடிகர் திலகத்தின் பாடல்களைப் பற்றியும் படங்களைப் பற்றியும் காட்சிகளைப் பற்றியும் எழுதும் போது தேவையற்ற இதுபோன்ற விவாதங்கள் இடம் பெறுவதை நான் விரும்பவில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் நியாயமில்லை.

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தின் வெட்கப்படவோ பாடலை நண்பர் செந்தில்வேல் அவ்வளவு அழகாக எழுதியுள்ளார். அதைப் போன்ற பதிவுகளைப் பாராட்ட யாரும் துள்ளிக்குதித்து வருவதில்லை. நடிகர் திலகத்தைப் பற்றிக்குறை கூற வேண்டுமென்றால் துள்ளிக்குதித்து ஓடிவந்து விடுகிறார்கள். நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்களைப் பற்றிய விரிவான அலசல்கள் இடம் பெறுவதையும் அவை மக்களிடம் சென்று சேர்வதை திசை திருப்பும் முயற்சியிலும் இது போன்ற பதிவுகள் வருகின்றனவோ எனக்கூட என் மனதில் தோன்றுகிறது. இது என் மனதில் தோன்றும் ஐயமே தவிர யாரையும் குறை சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கமில்லை.

Murali Srinivas
26th September 2015, 12:56 AM
ராகவேந்தர் சார்/பாஸ்கர் சார்,

உங்கள் இருவருக்குமிடையே நடக்கும் இந்த வாக்குவாதத்தை தொடர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஒரு அசாதாரண அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை பற்றி சர்ச்சை செய்யும்போது இங்கே எழுதப்படுபவைகளை வைத்துப் பார்த்தால் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கிடையே நடக்கும் சண்டையாகவே காட்சியளிக்கிறது. அதை வேதனைக்குரியது.என்று சொல்வதா அல்லது வேறு என்ன வார்த்தை கொண்டு அதை விவரிப்பது என்றே தெரியவில்லை.

ஒரு விஷயத்தைப் பொறுத்தவரை நிச்சயமாக இரண்டு கருத்து இருக்கும். அது சகஜம். அதை ஏற்றுக் கொண்டு பயணத்தை தொடர்வதுதான் சரி. அந்த கருத்தில் மாறுபாடு இருந்தால் அதை நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டலாம். அதை விடுத்து என் கருத்துதான் சரி என்று வாதித்தால் தேவையற்ற விவாதங்கள் நீடித்துக் கொண்டே இருக்கும்.

பாஸ்கர் சார், அன்றைய நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அதனால் ஏற்பட்ட காயங்கள் உங்கள் ஆதங்கம் அனைத்தும் புரிகிறது. ஆனால் அதற்காக நடிகர் திலகத்தின் அரசியல் பற்றி பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள், வாக்கியங்கள் வரம்பை மீறி போகின்றன என்பதை வேதனையோடு சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நேரில் நண்பர்களுடன் பேசுவது போல் பொது வெளியில் வார்த்தைகளை கொட்டுவது சரியல்லவே. இலட்சக்கணக்கான மக்கள் வாசிக்கும் ஒரு விவாத மேடையில் சில தேவையற்ற வார்த்தைகள் வாக்கியங்கள் பலரின் மனதையும் புண்படுத்தக் கூடியவை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ராகவேந்தர் சார்,

நீங்கள் வயதில் மூத்தவர் மட்டுமல்ல மூத்த ரசிகரும் கூட. உங்களுக்கு நானோ மற்றவர்களோ அட்வைஸ் செய்ய தகுதியில்லாதவர்கள். ஆனால் அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரி என்றே எனக்கு தெரியவில்லை!

இன்றைய தினம் மாலையிலும் இரவிலும் பாஸ்கருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் பல விஷயங்களோடு நான் மாறுபடுகிறேன். ஆனால் அவற்றை பற்றி நான் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெளியூரில் இருந்தவர்கள் அனைவரும் அந்த காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் விஷயம் தெரியாதவர்கள் அறியாமையில் ஊறியவர்கள் அதனால் நடிகர் திலகம் எடுத்த முடிவை எதிர்த்தார்கள் என்று நீங்கள் சொல்வது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அதே போல் பெருந்தலைவரை சமயம் கிடைக்கும்போதெல்லாம் தாழ்த்தி பேசுவது சரியா? ஒரு காமராஜரையும் கக்கனையும் நாம் சரியாக நடத்தாத காரணத்தினால்தான் நமது நாடு இப்படி இருக்கிறது. இப்போது அப்படி ஆட்கள் இல்லையே என்று அங்கலாய்க்கிறோம். என்ன பயன்? போனது போனதுதானே!

இனி நான் எழுதும் அந்த நாள் ஞாபகம் தொடரில் இன்று பதிவிட்ட பகுதியின் இறுதியில் அன்றைய ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை குறிப்பிட்டேன். அதை சொல்ல காரணமே அடுத்து வரும் பகுதியில் நடிகர் திலகத்தின் சில கலையுலக சாதனைகள் எந்த சூழலில் எப்படிப்பட்ட பின்னணியில் நிகழ்ந்தது என்பதை எடுத்துக் காட்டவே. எனவே அதை பற்றி பேசி தேவையற்ற விவாதங்களுக்கு வழி வகுக்க வேண்டாம்.

அனைவரும் தயை கூர்ந்து வாக்குவாதங்களை தவிர்த்து நடிகர் திலகத்தின் பல்வேறு சிறப்புகளை பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்

Russellbpw
26th September 2015, 01:04 AM
KOVAI ROYAL SCREENING GOWRAVAM since YESTERDAY - FEW PICTURES FROM FACEBOOK - COURTESY : Mr.SHAKTHIVEL


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gow1_zpsliyaagdl.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gow1_zpsliyaagdl.png.html)

Russellbpw
26th September 2015, 01:05 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gow2_zpshubwbt5n.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gow2_zpshubwbt5n.png.html)

Russellbpw
26th September 2015, 01:06 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gow3_zpse9rcvnib.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gow3_zpse9rcvnib.png.html)

Russellbpw
26th September 2015, 01:07 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gow5_zpsers6vuyd.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gow5_zpsers6vuyd.png.html)

Russellbpw
26th September 2015, 01:09 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gow4_zpss77rptrk.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gow4_zpss77rptrk.png.html)

Russellbpw
26th September 2015, 01:10 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gowrv_zpsfhqbig3s.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gowrv_zpsfhqbig3s.jpg.html)

Russelldvt
26th September 2015, 04:47 AM
புதிய பறவை தொடர்கிறது...

http://i62.tinypic.com/2wlu345.jpg

Russelldvt
26th September 2015, 04:48 AM
http://i58.tinypic.com/ejj0ch.jpg

Russelldvt
26th September 2015, 04:53 AM
http://i62.tinypic.com/8webko.jpg

Russelldvt
26th September 2015, 04:54 AM
http://i57.tinypic.com/20szud0.jpg

Russelldvt
26th September 2015, 04:54 AM
http://i61.tinypic.com/2qu4t5e.jpg

Russelldvt
26th September 2015, 04:55 AM
http://i57.tinypic.com/2jtwgh.jpg

Russelldvt
26th September 2015, 04:56 AM
http://i60.tinypic.com/28t9ly8.jpg

Russelldvt
26th September 2015, 04:56 AM
http://i58.tinypic.com/123vzw2.jpg

Russelldvt
26th September 2015, 04:57 AM
http://i60.tinypic.com/2wgvits.jpg

Russelldvt
26th September 2015, 04:58 AM
http://i57.tinypic.com/4imur9.jpg

Russelldvt
26th September 2015, 04:58 AM
http://i61.tinypic.com/sy8686.jpg

Russelldvt
26th September 2015, 04:59 AM
http://i57.tinypic.com/2eft5jo.jpg

Russelldvt
26th September 2015, 04:59 AM
http://i60.tinypic.com/2cpykvd.jpg

Russelldvt
26th September 2015, 05:00 AM
http://i62.tinypic.com/f2ptt2.jpg

Russelldvt
26th September 2015, 05:01 AM
http://i58.tinypic.com/14lsoqw.jpg

Russelldvt
26th September 2015, 05:02 AM
http://i62.tinypic.com/122c5xl.jpg

Russelldvt
26th September 2015, 05:02 AM
http://i61.tinypic.com/3480qxx.jpg

Russelldvt
26th September 2015, 05:03 AM
http://i57.tinypic.com/vn06ex.jpg

Russelldvt
26th September 2015, 05:04 AM
http://i61.tinypic.com/dvjy9e.jpg

Russelldvt
26th September 2015, 05:04 AM
http://i59.tinypic.com/atpzib.jpg

Russelldvt
26th September 2015, 05:05 AM
http://i62.tinypic.com/mbkdgh.jpg

Russelldvt
26th September 2015, 05:05 AM
http://i58.tinypic.com/2l7vk2.jpg

Russelldvt
26th September 2015, 05:06 AM
http://i57.tinypic.com/2lbi0z8.jpg

Russelldvt
26th September 2015, 05:07 AM
http://i61.tinypic.com/jv5aw6.jpg

Russelldvt
26th September 2015, 05:08 AM
http://i58.tinypic.com/4lhsvn.jpg

Russelldvt
26th September 2015, 05:08 AM
http://i62.tinypic.com/30n9phj.jpg

Russelldvt
26th September 2015, 05:09 AM
http://i61.tinypic.com/j81ldg.jpg

Russelldvt
26th September 2015, 05:10 AM
http://i62.tinypic.com/2cn8869.jpg

Russelldvt
26th September 2015, 05:10 AM
http://i57.tinypic.com/33ufj3r.jpg

Russelldvt
26th September 2015, 05:11 AM
http://i60.tinypic.com/1nzbte.jpg

Russelldvt
26th September 2015, 05:12 AM
http://i61.tinypic.com/n146rk.jpg

Russelldvt
26th September 2015, 05:12 AM
http://i59.tinypic.com/kcksj7.jpg

Russelldvt
26th September 2015, 05:13 AM
http://i60.tinypic.com/e152yf.jpg

Russelldvt
26th September 2015, 05:13 AM
http://i59.tinypic.com/5bw8z8.jpg

Russelldvt
26th September 2015, 05:14 AM
http://i59.tinypic.com/9u0suh.jpg

Russelldvt
26th September 2015, 05:15 AM
http://i62.tinypic.com/fz466h.jpg

Russelldvt
26th September 2015, 05:15 AM
http://i59.tinypic.com/rk98qw.jpg

Russelldvt
26th September 2015, 05:16 AM
http://i61.tinypic.com/1zpleuq.jpg

Russelldvt
26th September 2015, 05:17 AM
http://i61.tinypic.com/2zf2ut1.jpg

Russelldvt
26th September 2015, 05:18 AM
http://i60.tinypic.com/vde1k6.jpg

Russelldvt
26th September 2015, 05:19 AM
http://i61.tinypic.com/2nqupa0.jpg

Russelldvt
26th September 2015, 05:19 AM
http://i59.tinypic.com/70b7uv.jpg

RAGHAVENDRA
26th September 2015, 06:56 AM
முரளி சார், சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய தினம் மாலையிலும் இரவிலும் பாஸ்கருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் பல விஷயங்களோடு நான் மாறுபடுகிறேன். ஆனால் அவற்றை பற்றி நான் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெளியூரில் இருந்தவர்கள் அனைவரும் அந்த காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் விஷயம் தெரியாதவர்கள் அறியாமையில் ஊறியவர்கள் அதனால் நடிகர் திலகம் எடுத்த முடிவை எதிர்த்தார்கள் என்று நீங்கள் சொல்வது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

வேதனை அளித்தாலும் உண்மை அது தான். இங்கு என்ன நடந்த்து என்று தெரியாமல் தான் வதந்திகளை நம்பி நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் மன்றங்கள் கலைக்கப்பட்டது. நான் வெறும் யூகங்களின் அடிப்படையில் கருத்து அலசல்களின் அடிப்படையிலும் எதையும் கூறவில்லை. பெருந்தலைவருடன் நேருக்கு நேராக மாணவர் காங்கிரஸில் இருந்து கருத்து விவாதங்களை நடத்தியவன். மாணவர் காங்கிரஸுக்கு அரசியல் தேவையில்லை என்று கூறினாலும் பரவாயில்லை, அலட்சியமாக பதில் சொன்னார்கள். விவசாயிகள் போராட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகளுக்காக காவல் நிலையங்களுக்குச் சென்று முறைப்படியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களை விடுவிக்க முயற்சி எடுத்த்து சிவாஜி மன்றங்கள் தானே தவிர உள்ளூர் காங்கிரஸ் அமைப்புகளல்ல. பெருந்தலைவர் காமராஜர் மேல் உங்கள் எல்லாரையும் விட அதிகமாகவே மதிப்பு வைத்திருப்பவன் நான். நான் சொல்வதை ஏற்காத்தும் ஏற்க மறுப்பதும் அவரவர் இஷ்டம். ஆனால் வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும். காமராஜரைப் பற்றி நான் எதுவும் தாழ்த்திப் பேசவில்லையே. காமராஜர் ஏன் நடிகர் திலகத்தை இன்னும் பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கத்தைத் தான் கூறுகிறேன். எனக்கு ஏதோ காமராஜர் விரோதி போல சித்தரிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு நடிகர் திலகத்தின் பலத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் 1971லேயே ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.
இன்னும் கூட சொல்லலாம்.
பெருந்தலைவர் மறைந்த போது ஒரு விநியோகஸ்தரை வைத்து நடிகர் திலகத்தை தரக்குறைவாக சித்தரித்து போஸ்டர் அடித்த்து யார். திராவிடக் கட்சிகளா.

அதே போல அதே விநியோகஸ்தர் திரும்பிப்பார் படத்தின் மறு வெளியீட்டின் போது விளம்பரத்தில் வேண்டுமென்றே நடிகர் திலகத்தின் விதவிதமான போஸ்களை போட்டு பெண் பித்தன், ஸ்த்ரீ லோலன் என்றேல்லாம் போஸ்டர் அடித்தது. இதற்கு காரணமாக இருந்தது யார், திராவிடக் கட்சிகளா. எதுவுமே தெரியாமல் காமராஜர் மேல் இருக்கும் அபிமானத்துக்காக கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் வைத்து, நடிகர் திலகத்தைக் குறை கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா.
மற்றவர்களிடம் ஒரு விரலை சுட்டிக்காட்டும் முன் நம்மை மூன்று விரல்கள் காட்டுவதை பார்க்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கும் தொடர் வெற்றிக்கும் காரணம், இங்குள்ள தேசிய இயக்கங்களின் தவறான அணுகுமுறையே அன்றி மக்களல்ல.
மக்கள் செய்த தவறு என்றால் நடிகர் திலகம் என்கிற உத்தமமான மனிதரைப் புறக்கணித்தது தான்.
களத்தில் பணியாற்றியவர்களுக்குத் தான் அந்த வலி புரியும். கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து ஏதோ சிந்தனைப் போக்கில் லாஜிகல் அனாலிஸிஸ் அடிப்படையில் கூறப்படும் விஷய.மல்ல இது நேரடியாக அனுபவித்ததன் மன வலி. உங்கள் எல்லோரையும் விட அதிகமாகவே காமராஜரைப் போற்றியவன் நான். தெருத்தெருவாய் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளருக்காக சுற்றி வாக்குக் கேட்டு படிப்பை விட்ட சிவாஜி ரசிகனுக்குத் தான் தெரியும். அதனுடைய கஷ்டம். மேம்போக்காக விமர்சனம் எழுதுவது சுலபம். அதை என்னாலும் செய்ய முடியும்.

இதில் தனிப்பட்ட சர்ச்சை என்று என்னைக் குறை கூறாதீர்கள். நான் என்னுடைய கருத்து எழுதவில்லை. அன்றைய சூழலிீல் நடிகர் திலகத்திற்கு ஏற்பட்ட கஷ்டங்கள் சொல்லப்படாமலேயே போய் விடக்கூடாது என்கிற நியாயமான காரணத்தில் எழுதப்பட்டது. இதில் தனிப்பட்ட நபர்களுக்கிடையே சண்டை என்பது எங்கிருந்து வந்தது.

RAGHAVENDRA
26th September 2015, 07:53 AM
முத்தையன் சார்
புதிய பறவை நிழற்படங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது.

Russellxor
26th September 2015, 07:57 AM
கோவை ராயலில் கௌரவம் படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் மாலைகள்.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234162200_zpsd7ayfbmo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234162200_zpsd7ayfbmo.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234158354_zpsreuol3wk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234158354_zpsreuol3wk.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234143510_zpsp4gfchxm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234143510_zpsp4gfchxm.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234147487_zpsqhfrujqc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234147487_zpsqhfrujqc.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234151306_zpsctjuexxp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234151306_zpsctjuexxp.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234165457_zpsf4gl7dus.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234165457_zpsf4gl7dus.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234168949_zpsz03kd0s6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234168949_zpsz03kd0s6.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234154685_zpsntkpfo3m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234154685_zpsntkpfo3m.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1443234172397_zpsqthenf1m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1443234172397_zpsqthenf1m.jpg.html)

Russellxss
26th September 2015, 07:58 AM
மதுரை சென்ட்ரலில் 2.10.2015 அன்று வெளியாகும் மக்கள்தலைவர் சிவாஜியின் உத்தமன் பட போஸ்டர். 1

http://www.sivajiganesan.in/Images/2509_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
26th September 2015, 07:59 AM
பெருந்தலைவர் காமராஜரைப் போற்றி நடிகர் திலகத்தைக் குறைகூற வேண்டும் என்று நினைத்தால் அதற்கென்று தனியாக திரி ஆரம்பித்து மனம் போன போக்கில் நடிகர் திலகத்தை விமர்சியுங்கள். யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக நடிகர் திலகம் திரியிலேயே அவரைக் குறை கூறுவதும் அதற்கு மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எவ்வகையில் நியாயம். அரசியல் வேண்டாமென்றால் குறையும் கூறாமல் பாராட்டவும் செய்யாமல் சினிமாவை மட்டும் எழதலாமே. எந்த அளவிற்கு நடிகர் திலகத்தைக் குறை கூறுபவர்களுக்கு உரிமையுள்ளதோ அதை விட அதிகமாக அவரை ஆதரிப்பவர்களுக்கு உள்ளது. ஸ்தாபன காங்கிரஸால் சிவாஜிக்கு லாபமில்லை, சிவாஜியால் தான் ஸ்தாபன காங்கிரஸுக்கு லாபம். ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்து எந்த சிவாஜி படமும் ஓடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பிறகும் அவருடைய படங்கள் அதிக அளவில் வசூலை ஈட்டியுள்ளன.

திரிசூலம், உள்பட பல படங்கள் வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது காமராஜர் காலத்திலோ அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களாலோ அல்ல.

Russellxss
26th September 2015, 08:00 AM
மதுரை சென்ட்ரலில் 2.10.2015 அன்று வெளியாகும் மக்கள்தலைவர் சிவாஜியின் உத்தமன் பட போஸ்டர். 2

http://www.sivajiganesan.in/Images/2509_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
26th September 2015, 08:03 AM
மதுரை சென்ட்ரலில் 2.10.2015 அன்று வெளியாகும் மக்கள்தலைவர் சிவாஜியின் உத்தமன் பட போஸ்டர். 3

http://www.sivajiganesan.in/Images/2509_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
26th September 2015, 08:06 AM
உத்தமன் சிவாஜி கொண்டாட்டம் மதுரையில் ஆரம்பம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரலில் 02.10.2015 வெள்ளியன்று வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒட்டபடவுள்ள வரவேற்பு சுவரொட்டி.

http://www.sivajiganesan.in/Images/2509_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
26th September 2015, 09:05 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/RRDBDGRTGfw_zps7sdp09eq.jpg

eehaiupehazij
26th September 2015, 09:05 AM
Cho Ramaswamy in NT starrer Thangappadhakkam

https://www.youtube.com/watch?v=v87Cee3JhOQ

KCSHEKAR
26th September 2015, 10:39 AM
சென்னையில் 21-07-2015 அன்று நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகம் மணிமண்டபம் கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கலையுலகைச் சார்ந்தவர்கள் ஆற்றிய உரையின் காணொளி:

மதுரை திரு.சுந்தரராஜன் அவர்களின் www.sivajiganesan.in இணையத்தில் வழங்கப்பட்ட இணைப்பு:

http://www.sivajiganesan.in/unnavi%20video.html

adiram
26th September 2015, 12:06 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

நடிகர்திலகம் எடுத்த பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் குறித்து திருச்சி பாஸ்கர் கூறிய விஷயங்கள் சற்று கடுமையான வார்த்தைகளால் சொல்லப்பட்டாலும் ஏற்கத்தக்கதே. 1970-களில் (குறிப்பாக பெருந்தலைவரின் இறுதிக்காலமான 75-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் அது ஸ்தாபன காங்கிரஸ்தான், அதிலும் ஸ்தாபன காங்கிரஸ் என்றால் அது சிவாஜி படைதான் என்ற நிலையிருந்ததுதான் உண்மை. அந்த அளவுக்கு சிவாஜி ரசிகர்கள்/தொண்டர்கள் / மன்றத்தினர் கட்சியை வளப்படுத்தி வைத்திருந்தனர். கொடிபிடித்து கொள்கைப்பணியாற்றிய தங்களுக்கு தெரியாதது அல்ல.

பெருந்தலைவர் தனக்குப்பிறகு இன்னார்தான் என்று காட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் இப்படி திடீரென மறைவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. பாயில் படுத்து மரணத்தை எதிர்நோக்கிய நிலையில் இருந்திருந்தால் ஒருவேளை அடுத்த தலைவரை சுட்டிக்காட்டியிருக்கக் கூடும். ஆனால் மரணத்துக்கு முதல்நாள் நடிகர்திலகத்தை அவர் இல்லம் வரை சென்று வாழ்த்தி விட்டு வந்தவர். இதெல்லாம் எல்லாரும் அறிந்ததே.

சரி, அவர்தான் சுட்டிக்காட்டவில்லை. ஸ்தாபன காங்கிரஸ் என்றாலே தனது மன்றமறவர்கள்தான் என்பதை அறிந்திருந்த நடிகர்திலகம் உடனே ஸ்தாபன காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டுமல்லவா?. யார் எதிர்த்திருப்பார்கள்?. பா.ரா.பின்னால் ஒருபத்துபேர், குமரி அனந்தன் பின்னால் ஒரு பதினைந்துபேர், நெடுமாறன் பின்னால் மதுரையில் மட்டும் ஒரு கூட்டம் என்றுதானே நின்றிருப்பார்கள்?. ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரிய படை சிவாஜி படைதானே. அதைப்பயன்படுத்தி ஸ்தாபன காங்கிரசைக் கைப்பற்றி தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டாமா?. அதுதான் அவர்மீது உயிரையே வைத்திருந்த, அவருக்காக எதையும் செய்யத்துணிந்து நின்ற அவரது தொண்டர்களின் பெரிய ஆதங்கம்.

எந்த இயக்கத்துக்காக தன உடல்உழைப்பு, பொருள், தன் தொண்டர்களின் உழைப்பு அனைத்தையும் செலவழித்து உழைத்தாரோ அவை அனைத்தையும் பலனின்றி விட்டு விட்டு சட்டென்று "வேறு" முடிவு எடுத்துவிட்டார். இது ரசிகர் / தொண்டர்களின் மிகப்பெரிய ஏமாற்றம்.

சரி, போனார். அங்கும் ராஜ்யசபா எம்.பி.வரை உயர்த்தப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார். அங்காவது நிலைத்தாரா?. மிகத்தவறான நேரத்தில் மிகத்தவறான முடிவாக தனிக்கட்சி துவங்கினார். தொண்டர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். "எங்கள் நடிகர்திலகத்துக்காக எதையும் செய்வோம், ஆனால் எங்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத திருமதி வி.என்.ஜானகி அம்மையாரை முதலமைச்சராக்க எங்கள் உழைப்பை செலவிட மாட்டோம்" என்று பின்வாங்கினர். அதன் முடிவாக அனைத்து இடங்களிலும் அந்த கூட்டணி தோல்வி. பி.எச்.பாண்டியன் மட்டும் தன் சொந்த செல்வாக்கில் சேரன்மாதேவியில் வெற்றி.

இப்படியெல்லாம் அவர் எடுத்த தவறான அரசியல் முடிவுகளால் தங்கள் உழைப்பு வீனாக்கப்பட்டதில் தொண்டர்கள் மனதில் விரக்தியும் அதனால் சில வார்த்தைப் பிரயோகங்கள் வருவது இயற்கை. அதற்காக அவர்கள் நடிகர்திலகத்தை குறை சொல்ல அலைகிறார்கள் என்று கணிப்பது தவறு.

உங்களைப் பொருத்தவரை நடிகர்திலகம் எடுத்த எல்லா நிலைப்பாட்டையும் ஆதரித்தவர். ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அது சரியெனப்பட்டது, இந்திராகாந்தி பக்கம் சென்றபோது அதையும், ஏற்றுக் கொண்டீர்கள், தமிழக முன்னேற்ற முன்னணி கண்டபோது அதையும் முழுமையாக ஏற்றுக்கொண்டீர்கள். ஜனதா தளத்தில் இருந்ததையும் ஆதரித்திருப்பீர்கள். அதாவது அரசியலில் நடிகர்திலகம் எது செய்தாலும் ஓ.கே.

அதே சமயம் அவருக்காக உழைத்த மற்றவர்களுக்கு அவரது இப்படிப்பட்ட முடிவுகளால் சரிவுகள் நேர்ந்தபோது ஆதங்கம், வருத்தம் ஏற்பட்டு, அதை அவர்கள் வெளியிடும்போது அவர்களை ஏதோ நடிகர்திலகத்தின் விரோதிகள், எதிரிகள், அவரை குறை சொல்லி சுகம் காண்பவர்கள் என்பது போல நீங்கள் சித்தரிக்க முயல்வது ஏற்புடையதல்ல.

டியர் முரளி சார்,

இந்த விஷயத்தை தவிர்க்கும்படி நீங்கள் சொல்லியும் நான் எழுதியதற்கு மன்னிக்கவும். நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை விமர்சித்தாலே அவர்கள் சிவாஜியின் விரோதிகள் என்பதுபோல சித்தரிக்கும் மனப்பான்மை மாற வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு நோக்கமில்லை.

KCSHEKAR
26th September 2015, 12:46 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TNCCFunction1October2015/TNCCFunctionPg1_zpsxssrqidc.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TNCCFunction1October2015/TNCCFunctionPg1_zpsxssrqidc.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TNCCFunction1October2015/TNCCFunctionPg3_zpscckpfo3i.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TNCCFunction1October2015/TNCCFunctionPg3_zpscckpfo3i.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TNCCFunction1October2015/TNCCFunctionPg2_zpsc7rmuc79.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TNCCFunction1October2015/TNCCFunctionPg2_zpsc7rmuc79.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TNCCFunction1October2015/TNCCFunctionPg4_zpsllqmarbt.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TNCCFunction1October2015/TNCCFunctionPg4_zpsllqmarbt.jpg.html)

Subramaniam Ramajayam
26th September 2015, 02:57 PM
Iam extremely sorry mr ammu iwas totally absent for the last 10days that is the reason i could not acknowlege your pp stills.kindly do not take it to heart. all your workings of NT are EXCLLENT ALWAYS.

Harrietlgy
26th September 2015, 04:30 PM
கத்தார் நாட்டில் தமிழருக்கு பெருமை சேர்க்கும் திரு. சீதாராமன் அவர்களை, உலக தமிழருக்கு பெருமை சேர்க்கும் நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவிற்கு தலைமை தாங்க அழைத்தது சால பொருத்தம். நன்றி கத்தார் வாழ் தமிழர் சார்பாக, பரணி.

RAGHAVENDRA
26th September 2015, 04:35 PM
கத்தார் நாட்டில் தமிழருக்கு பெருமை சேர்க்கும் திரு. சீதாராமன் அவர்களை, உலக தமிழருக்கு பெருமை சேர்க்கும் நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவிற்கு தலைமை தாங்க அழைத்தது சால பொருத்தம். நன்றி கத்தார் வாழ் தமிழர் சார்பாக, பரணி.

திரு சீதாராமன் அவர்கள் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராவார். தனியொருவனாக தானே தன் சொந்த செலவில் நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தைக் கட்டித்தரவும் விருப்பம் உள்ளவர்.

Harrietlgy
26th September 2015, 04:38 PM
திரு சீதாராமன் அவர்கள் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராவார். தனியொருவனாக தானே தன் சொந்த செலவில் நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தைக் கட்டித்தரவும் விருப்பம் உள்ளவர்.

Very happy news.

RAGHAVENDRA
26th September 2015, 04:40 PM
உங்களைப் பொருத்தவரை நடிகர்திலகம் எடுத்த எல்லா நிலைப்பாட்டையும் ஆதரித்தவர். ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அது சரியெனப்பட்டது, இந்திராகாந்தி பக்கம் சென்றபோது அதையும், ஏற்றுக் கொண்டீர்கள், தமிழக முன்னேற்ற முன்னணி கண்டபோது அதையும் முழுமையாக ஏற்றுக்கொண்டீர்கள். ஜனதா தளத்தில் இருந்ததையும் ஆதரித்திருப்பீர்கள். அதாவது அரசியலில் நடிகர்திலகம் எது செய்தாலும் ஓ.கே.

ஈடு இணையற்ற அப்பழுக்கற்ற உத்தமனை, உயர்ந்த மனிதனை, தெய்வப் பிறவியை, தவப்புதல்வனை, தெய்வமகனை, கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததில், ஆதரிப்பதில் மிகவும் பெருமையும் கர்வமும் கொள்கிறேன். இதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். இதைச் சொல்வதிலும் நான் மட்டுமே தனி ஒருவனாக இருந்தாலும் கூட கவலைப்பட மாட்டேன். மிகவும் நன்றி.

adiram
26th September 2015, 06:25 PM
ஈடு இணையற்ற அப்பழுக்கற்ற உத்தமனை, உயர்ந்த மனிதனை, தெய்வப் பிறவியை, தவப்புதல்வனை, தெய்வமகனை, கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததில், ஆதரிப்பதில் மிகவும் பெருமையும் கர்வமும் கொள்கிறேன். இதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். இதைச் சொல்வதிலும் நான் மட்டுமே தனி ஒருவனாக இருந்தாலும் கூட கவலைப்பட மாட்டேன். மிகவும் நன்றி.

உங்கள் நிலைப்பாட்டை தவறு என்றோ, குற்றம் என்றோ சொல்லவில்லை. உங்கள் முடிவு முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை பற்றி தங்கள் எண்ணங்களை தெரிவிப்பவர்களை நடிகர்திலகத்துக்கு எதிரிகள் போலவும், அவரை குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்களைப் போலவும் சித்தரிக்காதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

Russellsmd
26th September 2015, 07:29 PM
http://i61.tinypic.com/2qu4t5e.jpg
புகை போகிறது..
உங்கள் புகழைப் போல்..
மேலே...
மேலே..


(புகைப்படத்திற்கு நன்றி;
திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு.)

Sent from my GT-S6312 using Tapatalk

Russelldvt
26th September 2015, 07:55 PM
எனது அடுத்து பதிவு இது..எனக்கு மிகவும் பிடித்த படம்..

http://i60.tinypic.com/jtotpj.jpg

RAGHAVENDRA
26th September 2015, 08:07 PM
உங்கள் நிலைப்பாட்டை தவறு என்றோ, குற்றம் என்றோ சொல்லவில்லை. உங்கள் முடிவு முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை பற்றி தங்கள் எண்ணங்களை தெரிவிப்பவர்களை நடிகர்திலகத்துக்கு எதிரிகள் போலவும், அவரை குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்களைப் போலவும் சித்தரிக்காதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நடிகர் திலகத்தைக் குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்கள் தான்.

eehaiupehazij
26th September 2015, 09:09 PM
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் (அக்டோபர் 1ல் கரைகடக்கும்) நினைவலைகள் !


மனிதனும் தெய்வமாகலாம் ...எப்போது?
அவன் பிறந்தது முதல் அமரத்துவம் அடையும் வரை சக மனித குலத்திற்கு அவன் ஆற்றும் சமூகப் பணிகள், ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டாக விளங்கும் அவனது நடை உடை பாவனை நடவடிக்கைகள், தலை முறைகள் தாண்டி அவன் வாழ்ந்த வாழ்வு இந்த சமுதாயத்துக்கு உரைக்கும் பாடம் ........

...........எல்லாவற்றுக்கும் மேலாக வாழும் போதும் அமரராக தொழும் போதும் மக்களின் மனதில் எப்படி ஒரு நிரந்தர அடிச் சுவட்டை அவன் பதித்து, காலங்கள் மாறினும் காட்சிகள் மாறினும் அவன்தான் மனிதன் என்ற அளவில் ஊனோடும் உதிரத்தோடும்...... இதயத்தோடும் மனதின் நினைவலைகளோடும்.... எப்படி இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டேயிருக்கிறான் என்பதையும் பொறுத்தே !!

இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நம்மை உயிரூட்டம் செய்யும் சூரியன் இயங்கும் வரை கர்ணனாக கட்டபொம்மனாக திருவருட்செல்வராக சிக்கலாராக பாரிஸ்டர் ரஜினிகாந்தாக பிரஸ்டிஜ் பத்மநாபனாக கப்பலோட்டிய தமிழனாக சாக்ரடீஸாக அசோகராக பரதனாக பாசமலராக வசந்தமாளிகை மன்னனாக அம்பிகாபதியாக காளிதாசனாக விக்ரமனாக சௌத்ரியாக ஞான ஒளியாக எங்கமாமாவாக மனிதரில் மாணிக்கமாக ....வாழ்ந்துகொண்டேயிருப்பார்.....
எனது வாழ்வியல் தமிழ் உச்சரிப்புக்கும் காலம் தவறாமைக்கும் கடமை உணர்வுக்கும் பொதுநல அர்ப்பணிப்புக்கும் முன்மாதிரி ரோல்மாடலான நடிகர்திலகம் என்னும் படிக்காத மேதை !!

தொழுதல்களுடன்
செந்தில்

https://www.youtube.com/watch?v=5DhrsSQ-2aY

Russellbpw
26th September 2015, 09:32 PM
Muthayyan sir

Nadigar Thilagam avargaludaya asaththalaana pala pose ungal kaivannaththil Stills Arunachalathirkku piragu kaangirom.

Vaazhga ungal thondu...iraivan ungalukku nalla arogyam kodiththu anaivarayum magizha vaikkattum.

Nandriyudan
RKS

Russellbpw
26th September 2015, 09:33 PM
Senthil sir...Super

eehaiupehazij
26th September 2015, 10:39 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி

சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !


சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

vasudevan31355
26th September 2015, 11:12 PM
முத்தையன் அம்மு சார்,

'புதிய பறவை' ஸ்டில்கள் அருமை. இப்போதுதான் பார்ப்பது போல பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள். நான் இரண்டு நாட்களாய் ஊரில் இல்லை. அதுதான் பின்னூட்டம் இட லேட்.

அடுத்து என் உயிரான ஆண்டனி, அருண் இருவரையும் உயிரோட்டமாக உலவ விட்டு என் உறக்கத்தைக் கெட வைக்கப் போவதற்கு முன்னமேயே வாழ்த்துக்களும், நன்றிகளும்.

அந்தக் காவியம் உங்களுக்கு மட்டுமா பிடித்தது? உலகில் உள்ளோர் அத்தனை பேருக்கும் அந்த 'ஒளி' பிடிக்கும். என் ஒருவனுக்கு பைத்தியமே பிடிக்கும். வெறி பிடிக்கும். பசி, தூக்கம் எதுவும் இருக்காது. என் ஆண்டனி, அருண் இவர்கள் போதும். இவர்களே என் சொந்தங்கள். இவர்களே என் தெய்வங்கள். என்னைப் பொறுத்த வரையில் ஆண்டனி, அருண், மாதா, பிதா, குரு, தெய்வம். இப்படித்தான் என்னால் வரிசைப்படுத்த முடியும். என் உடலை பல கூறாக்கினாலும் ஒவ்வொரு கூறும் ஆண்டனி, அருண் என்றே துடிக்கும்...ஒலிக்கும்...கூப்பாடு போடும். அன்புக்கும் அடிதடிக்கும் ஆண்டனி...அறிவுக்கு அருண். இரண்டையுமே என் தெய்வம் ஏற்று ஒருவனின் இருநிலையை அத்தனை பேர் மனதிலும் அற்புதமாக இருத்தியது. இறக்கியது.

இப்போதே இதயத் துடிப்பு எகிறுகிறது. காத்திருக்கிறேன்.

Russellbpw
26th September 2015, 11:17 PM
நடிகர் திலகம் அவர்களுடைய பிறந்தநாளில் வெளிவர இருக்கும் புலி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

அக்டோபர் 2அம் தேதி மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் வெளிவரும் நமது நடிக பேரரசர் அவர்களின் உத்தமன் திரைப்படம் மிகச்சிறந்த வெற்றியும் வசூலும் பெற்றிட நம் திரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

மதுரை சிவா மூவீஸ் நிறுவனத்திற்கு எமது வாழ்த்துக்கள்.

மதுரை ஜல்லிக்கட்டு காளை திரு சுந்தர்ராஜன் அவர்களின் விளம்பரங்கள் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ளது கூடுதல் பலம் !

வளர்க ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் அவர்கள் தொண்டு !

Russellbpw
26th September 2015, 11:20 PM
கிசு கிசு

நிலக்கரி நகர வைரம் .....தென்னிந்தியாவின் மன்செஸ்டர் சென்றாராமே ?

Russellbpw
26th September 2015, 11:30 PM
உங்கள் நிலைப்பாட்டை தவறு என்றோ, குற்றம் என்றோ சொல்லவில்லை. உங்கள் முடிவு முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை பற்றி தங்கள் எண்ணங்களை தெரிவிப்பவர்களை நடிகர்திலகத்துக்கு எதிரிகள் போலவும், அவரை குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்களைப் போலவும் சித்தரிக்காதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

இதுபோன்ற விஷயங்களை நாம் விவாதிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ?

நடுரோட்டில் கண் மூடி சென்றால்...லாரியில் அடிபட்டு இறப்பது சிறப்பா அல்லது பஸ்சில் அடிபட்டு இறப்பது சிறப்பா ? என்பது போல உள்ளது !

நடிகர் திலகம் அவர்களுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்ததாக நாம் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பண்ணின நடிகர் திலகத்திற்கு அதற்க்கு தகுந்தாற்போல நடந்திருப்பார் என்பதே எனது கருத்து.

அவர் கட்சி தொடங்கியது, திரு mgr அவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே என்பதுதான் உண்மை. அவர் மீது அந்தளவிற்கு அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்திருக்கிறார் நடிகர் திலகம்.

ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் திரு mgr இருந்தபோது, பிரசாரத்திற்கு இப்போதைய தமிழக முதல்வரா போனார் ? இல்லையே ! போக முடியாது என்றல்லா இருந்தார் ? தமிழகம் முழுதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டது நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தானே !

நடிகர் திலகம் அவர்களுக்கு பதவி மேல் ஆசை இருந்தால் இதை ஒருக்காலும் செய்திருக்க மாட்டார் ! மேலும் திருமதி ஜானகி அவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் ? சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் சுலபமாக 35 இடங்களை நடிகர் திலகம் மிநிமும் வென்றிருப்பார் ! அதுகூட நடிகர் திலகம் செய்யவில்லை !

அவரது முடிவு...அவரது எண்ணங்கள்..பல காரணங்கள் மனதளவில் அவருக்கு இருந்திருக்க கூடும்....அவரை சும்மா விட்டுவிடுங்கள் ப்ளீஸ்...!
அவர் அரசியல் பொதுமக்களுக்காக மட்டும்தான்...அவருக்காக அவர் எண்ணவே இல்லை !

அவருடைய எண்ணத்திற்கு மதிப்புகொடுப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை !

sivaa
26th September 2015, 11:55 PM
முகநூலில் இருந்து

http://i62.tinypic.com/fnticg.jpg

http://i59.tinypic.com/30j4bd2.jpg


http://i60.tinypic.com/1zlqgbq.jpg

Russellsmd
27th September 2015, 12:03 AM
*குழந்தைப் பேறில்லாதவள்
வருஷக்கணக்கில்
காத்திருக்கிறாள்..
மாசமாக".

* ஞாயிற்றுக்கிழமை
கடைவீதியாய் வெறிச்சோடிக் கிடக்கின்றன..
குழந்தை இல்லாத வீடுகள்.

-இவையெல்லாம், ஒரு குழந்தைக்காக ஏங்கிக் கிடப்போரின் மனநிலையைக்
கற்பனை செய்து நான் எழுதிய
கவிதைகள்.

உலகத்திலேயே மிகக் கொடிய
சோகம்,குழந்தைப் பேறு இல்லாதவளின் சோகமென்றால்.. உலகத்திலேயே மிக உயர்வான
சந்தோஷம், தாய்மையடைந்தவளின் சந்தோஷம் எனலாம்.

போற்றி மதிக்கும் அன்புக்
கணவனிடம், மனைவி அவனது காதல்மிகு பரிசு
தன் வயிற்றிலிருப்பதைத்
தெரிவித்து மகிழ்வதாய் வரும்
"தியாகி" படப்பாடல் இது.

"வலது கையில் தாய் படுத்தால் ஆம்பளைப் பிள்ளை.
மாங்காய் தின்னா,சாம்பல்
தின்னா பொம்பளைப் பிள்ளை.
இதில் சந்தேகம் இல்லை"
-என்று பாடுகையில் குறும்பும்,தகப்பனான பெருமிதமும்
காட்டும் அந்த எழில் முகம்..

"அட..சும்மா போங்க
நீங்க ஒன்னும்
மருத்துவரில்லை.
தொட்டதுதான் உங்க சேவை..
மத்தது இல்லை".

-என்று மனைவியும் குறும்பாய் மடக்க..
நாக்கு துருத்தி
பொய்க் கோபம் காட்டும்
அந்த திறமை முகம்..

நடிகர் திலகத்தின் அன்பு முகம்
கண்டு,தாம் மலர்ந்த முகங்கள்தாம் எத்தனை கோடி?

"எப்போ..எப்போ?" என்று ஆர்வமாய்க் காத்திருந்து..
தடைகளை நொறுக்கியெறிந்து
விட்டு இந்தப் படம் வந்து
பார்த்த நிமிடம்..

நம் இதயமும்தானே
துள்ளலாய்ப் பாடிற்று..?

"இந்த யோகம்..
நல்ல யோகம்!"

https://youtu.be/Jl4O6bpklj0

eehaiupehazij
27th September 2015, 08:44 AM
Evergreen Hero ...Everlasting songs!

Dev Anand's Birthday reminiscence!

ஹிந்தி மார்க்கண்டேயன் தேவ் ஆனந்தின் 92 வது பிறந்தநாள் நினைவஞ்சலி!

ஹாலிவுட் கிரிகிரி பெக்கின் எதிரொலியான பாலிவுட்டின் தேவ் ஆனந்துக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங் தலை மட்டும் வீக்!! ஆடிக்கொண்டே இருக்கும்!!

https://www.youtube.com/watch?v=3lVxnIAGDFk

நடிகர்திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டான அமரதீபத்தின் சிவாஜி தயாரிப்பான இந்திப் பதிப்பில் தேவ் சிவாஜி ரோலில்! ஜானி மேரா நாமின் தமிழ்ப் பதிப்பில் தேவ் ரோலில் ராஜாவாக சிம்மாசனமிட்டார் நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

Russelldwp
27th September 2015, 10:39 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12039287_999769243396305_3013665294452381542_n.jpg ?oh=43a4bb01f13f69332b2b6aa915306f2c&oe=569A18F4

Russellbzy
27th September 2015, 10:59 AM
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!
ஒரு விஷயம் நினைவிருக்கிறதா? கட்டபொம்மன் படத்துக்கு சாந்தி திரைஅரங்கு கொடுக்காமல் விக்ரம்பிரபு நடித்த இது என்ன மாயம் படத்துக்கு கொடுத்த
ஒரு சாதாரணமான விசயத்துக்கு எவ்வளவு ஆத்திரபட்டீர்கள்! இது என்ன மாயம் படம் dvd யில் கூட பார்க்க கூடாது, அந்த படத்துக்கு ஒரு ரூபாய் கூட செலவு
செய்ய கூடாது என்று நீங்கள் கூறவில்லையா? இத்தனைக்கும் விக்ரம்பிரபு சிவாஜியின் சொந்த பேரன்! ஆனாலும் உங்கள் கோபம் நியாயமானது என்று
உங்களுக்கு கைபேசியில் தொடர்புகொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்! உண்மை தானே சார்?
கட்டபொம்மன் சாந்தியில் வராமல் வேறு மவுண்ட் ரோடு திரையில் வெளிவந்தால் என்ன கெட்டு விட போகிறது? சிவாஜி நடித்த காலங்களில் மற்ற திரைகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடிய நிகழ்வுகள் நிறைய உண்டே!
இதை இப்போது ஏன் சொல்லுகிறேன் என்றால் சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற நியாயமான உங்கள் எண்ணங்களுக்காக ஒரு மிக
சாதாரணமான விசயத்துக்காக நீங்கள் அவரின் மகன்கள் பேரன் எல்லோரையும் துச்சமென தூக்கி எறியும் போது சிவாஜியின் அரசியல் தவறுகளால் இன்றைக்கும் அவரை ஒரு mla கூட ஆக லாயக்கில்லாதவர் என்று பொதுமக்களே கேலி பேசும் போது என்னை போன்ற அவரின் உண்மையான ரசிகர்களுக்கு
நெஞ்சில் எவ்வளவு ரணம் இருக்கும் என்பது உங்களை போன்றவர்களுக்கு புரியாது!
1989 இல் mgr அவர்களை ஆதரிக்க தான் கட்சி ஆரம்பித்தார் என்றால் அந்த கட்சியிலேயே போய் சேர வேண்டியதுதானே? ஏன் சொந்தமாக கட்சி
நடத்தி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் புகழையும் இழக்க வேண்டும்? பிரச்சாரத்தோடு நிற்காமல் ஏன் திருவையாறில் போட்டியிட வேண்டும்?
உங்களை போன்றவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது!
அவரின் அரசியலால் அவர் புகழ் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பாதித்த நிலைதான் இன்றைக்கும் உள்ளது! மையம் திரியில் எழுதும் நம்மை போன்ற
சிலரின் எண்ணங்களை வைத்து எதையும் முடிவு செய்யவேண்டாம்! நீங்கள் மற்ற சிவாஜிரசிகர்கள், மற்ற கட்சியினர், பொதுமக்கள் போன்ற எல்லோரிடமும் உங்களுக்கு அவகாசம் கிடைக்கும் போது பேசி பாருங்கள்! நான் சொல்வது தான் எல்லோர் கருத்துமாகவும் இருக்கிறது என்ற உண்மை
உங்களுக்கு தெரியும்!
நன்றி !

vasudevan31355
27th September 2015, 11:14 AM
கலை சார்,

தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

adiram
27th September 2015, 11:52 AM
இதுபோன்ற விஷயங்களை நாம் விவாதிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ?

நடுரோட்டில் கண் மூடி சென்றால்...லாரியில் அடிபட்டு இறப்பது சிறப்பா அல்லது பஸ்சில் அடிபட்டு இறப்பது சிறப்பா ? என்பது போல உள்ளது !

நடிகர் திலகம் அவர்களுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்ததாக நாம் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பண்ணின நடிகர் திலகத்திற்கு அதற்க்கு தகுந்தாற்போல நடந்திருப்பார் என்பதே எனது கருத்து.

அவர் கட்சி தொடங்கியது, திரு mgr அவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே என்பதுதான் உண்மை. அவர் மீது அந்தளவிற்கு அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்திருக்கிறார் நடிகர் திலகம்.

ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் திரு mgr இருந்தபோது, பிரசாரத்திற்கு இப்போதைய தமிழக முதல்வரா போனார் ? இல்லையே ! போக முடியாது என்றல்லா இருந்தார் ? தமிழகம் முழுதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டது நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தானே !

நடிகர் திலகம் அவர்களுக்கு பதவி மேல் ஆசை இருந்தால் இதை ஒருக்காலும் செய்திருக்க மாட்டார் ! மேலும் திருமதி ஜானகி அவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் ? சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் சுலபமாக 35 இடங்களை நடிகர் திலகம் மிநிமும் வென்றிருப்பார் ! அதுகூட நடிகர் திலகம் செய்யவில்லை !

இந்த வாதம் மிகவும் நன்றாக இருக்கிறது.

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை உயிராக மதித்த அவரது ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களில் ஒரு பகுதியினரே (பெரும்பகுதியினர்) தங்கள் அண்ணியார் வி.என்.ஜானகி அவர்களையும், தங்கள் தலைவரின் உயர்வுக்கு பெரும்பணி ஆற்றிய ஆர்.எம்.வீரப்பன் அவர்களையும் தோற்கடிக்க ஜெயலலிதாவின் பக்கம் நின்றபோது.......

எந்த எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து காலமெல்லாம் தனக்காக பாடுபட்டார்களோ அந்த ரசிகர்களின் / தொண்டர்களின் உழைப்பை எம்.ஜி.ஆரின் மனைவியை அரியணையில் அமர்த்த நடிகர்திலகம் கட்சி ஆரம்பித்தாராம்.

கட்சி துவங்குவதிலும் இவர் வித்தியாசமானவர் தான்.

தமிழ்நாட்டில் அரசியல் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல்தான். யார் செய்யவில்லை சந்தர்ப்பவாத அரசியல்?. எம்.ஜி.ஆர், அவர்களே 1977-ல் ஜனதாவை எதிர்த்து காங்கிரசுடனும், 1980-ல் காங்கிரசை எதிர்த்து ஜனதாவுடனும், 1984-ல் மீண்டும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்கவில்லையா?. கருணாநிதியும் 77-ல் ஜனதாவுடனும், 80-ல் காங்கிரசுடனும் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் மாறி மாறி கூட்டணி வைக்கவில்லையா?. மக்கள் இவ்விரு கட்சிகளை நிராகரித்து விட்டார்களா?. இன்றைக்கும் தமிழகத்தில் முதலிரண்டு இடங்களை இவைதானே பிடித்து வைத்துள்ளன.

1989-ல் கருணாநிதி தருவதாக சொன்ன 35 இடங்களை பெற்று தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் 25 இடங்களில் த.மு.மு. வென்றிருக்கும், வென்றிருக்கும், இவரும் வென்றிருப்பார். 'அரசியலில் தோற்றவர்' என்ற பழியும் ஏற்பட்டிருக்காது.

இதோ இன்றுவரை மாற்றுத்திரி நண்பர்கள் இவரை 'அரசியலில் தோற்றவர்' என்று கிண்டலடிப்பது அந்த 89 திருவையாறு தேர்தலை வைத்துதானே. யாருக்காக கட்சி ஆரம்பித்து தோற்றார், யாருடன் சேர்ந்து நின்றதால் தோற்றார், எந்த நட்புக்காக இந்த பழியை சுமந்தார் என்று அவர்கள நினைத்துப் பார்த்தால் இப்படி கிண்டலடிக்கத் தோன்றுமா?.

vasudevan31355
27th September 2015, 01:16 PM
'புதிய தலைமுறை' என்று பெயர் வைத்து பழைய வரலாற்றுச் சுவடுகள் தெரியாமல் பண்பாளரைப் பழிக்கும் தலைமுறைக் கூட்டம் ஆதாரங்கள் தந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக மேலுக்கு ஏதோ பூசி டபாய்க்கப் பார்க்கிறது. ஆர்.கே.எஸ் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியும் கூட மன்னிப்புக் கேட்க மறுக்கிறது. இந்தக் கை கொடுப்பது அந்தக் கைக்குத் தெரியாது வாழ்ந்த வள்ளல் பெருந்தகை எங்கள் திலகம்.

கரை படிந்த தலைமுறை. இந்த தடம் புரண்ட தலைமுறைக்கு புத்தி புகட்ட ஒரு சின்ன சாம்பிள்தான்.

http://i62.tinypic.com/nnaa9h.jpghttp://i59.tinypic.com/9u91sh.jpg
http://i60.tinypic.com/25s92et.jpghttp://i57.tinypic.com/1z169gy.jpg

அன்றே தலைவன் ஏழைகளின் பசியறிந்து வாரி வழங்கினானே! அவர்களுக்காகக் கவலைப்பட்டானே! விளம்பரம் விரும்பா வள்ளலாக வலம் வந்தானே!

கொளுத்துகிற வெயிலில் நடைபாதை மீதிலே
குடியிருக்கும் ஏழைகளின் துயர் தீரச் செய்யணும்
குணமுள்ள சீமான்கள் பணம் காசு உதவணும்
குடியிருக்க வீடு தந்து விளக்கேற்றி வைக்கணும்

பாடுபடும் ஏழைகள் பசியின்றி வாழவே
பணக்காரர் முன் வந்து உணவளிக்க வேணுமே
உடையின்றி வாழ்வோரின் தன்மானம் காக்கவே
உடை அளித்து அன்போடு உதவி செய்ய வேணுமே

நான் சொல்லும் ரகசியம்
கண் காணும் அதிசயம்
நன்றாக எண்ணிப் பாருங்க இதை
அவசியம்
அவசியம் அவசியம்

'புதிய தலைமுறையே'! நீயும் அவசியம் எண்ணிப்பார். இதுதான் வருந்தும் பண்பா?


https://youtu.be/nTxe-ZhwO7U

http://i59.tinypic.com/314a00p.jpg

http://i61.tinypic.com/2e49imd.jpg

http://i59.tinypic.com/1z6e1vr.jpg

http://i59.tinypic.com/25jl8k8.jpg

Russellbzy
27th September 2015, 09:02 PM
அன்பு நண்பர் நெய்வேலி வாசு சார்
நடிகர்திலகம் அளித்த நன்கொடைகள் விவரம் தாங்கள் பதிவு செய்தமைக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்!
நம் ரசிகர்கள் அனைவரும் ஒரு முக்கியமான காரியம் உடனே செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
தங்கள் பதிவில் உள்ள விவரங்களோடு இன்றைய ருபாய் மதிப்பையும் சேர்த்து நோட்டீஸ் அடித்து அவரின் பிறந்தநாள் விழாக்கள்,மற்றும் பழைய படங்கள்
வெளியிடும் திரைஅரங்குகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்! முடிந்தவரை எல்லா சிவாஜி நிகழ்ச்சிகளிலும் இதை தொடர்ந்து செய்ய
வேண்டும்! அந்த உயர்ந்தமனிதன் செய்த தர்மங்களை நாம் விளம்பரபடுத்த வேண்டியது அவசியமான ஒன்று!
சிவாஜியின் அவதாரதினம் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது! நாம் அந்த நல்ல காரியத்தை தொடங்கலாம்!
நன்றி வாசு சார்

sivaa
27th September 2015, 09:26 PM
முகநூலில் இருந்து


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-0/s526x395/12009629_441524586051234_3893325586985170481_n.jpg ?oh=e815bdd486dc0400b2541721aab27c91&oe=56A856CB


தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழ...ுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM

நடிகர் திலகம் அவர்கள் விட்ட மகப்பெரிய தவறு தன்னுடன் ஒரு படப்பிடிப்பாளனையும்
செய்தி எழுதுபவனையும் கொண்டு திரியாதது

Russellxss
27th September 2015, 10:00 PM
மக்கள்தலைவர் சிவாஜியின் அன்பு இதயங்களே, மதுரை சென்ட்ரலில் மக்கள்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 வெள்ளி முதல் வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு நமது இணையதளத்தில் உத்தமன் கொண்டாட்டம் என்ற தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உத்தமன் திரைப்படம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.sivajiganesan.in/Images/2709_4.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th September 2015, 10:03 PM
மக்கள்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அக்டோபர் 2ந் தேதி முதல் நடிகர்திலகத்தின் மாபெரும் காதல் காவியம் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக வெளியிடப்படுகிறது. எப்பொழுதுமே வித்தியாசமான விளம்பரச் சுவரொட்டி மற்றும் பழைய திரைப்படங்களுக்கு புதிய திரைப்படங்களுக்கு இணையாக போட்டா காா்டு வைத்து அறிமுகப்படுத்திய மதுரை சிவா மூவீஸ் உத்தமன் திரைப்படத்திற்கு வைத்துள்ள போட்டோ கார்டு உங்கள் பார்வைக்கு....

http://www.sivajiganesan.in/Images/2709_8.jpg

மேலும் போட்டோ கார்டு காண www.sivajiganesan.in செல்லவும்.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
27th September 2015, 10:05 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் சிவாஜி சமூகநலப் பேரவையைத் துவக்கி, மக்கள்தலைவர் புகழ்பரப்ப புறப்பட்டிருக்கும் தங்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அழைப்பிதழ் முகநுாலில் இருந்து....

http://www.sivajiganesan.in/Images/2709_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
27th September 2015, 11:38 PM
திரும்பத் திரும்ப தங்களின் வாதத்தையே நிலைநிறுத்தி நடிகர் திலகத்தைக் குறை கூறுவதைத் தவிர வேறென்றறியேன் பராபரமே என இருப்பவர்களிடம் பேசிப்பயனில்லை.

RAGHAVENDRA
27th September 2015, 11:41 PM
வாசு சார்
தாங்கள் அளித்துள்ள நன்கொடைப் பட்டியலில் உள்ள ரூபாயை பாஸ்கரின் விருப்பத்திற்கேற்ப இன்றைய தேதிக்கு மதிப்பீடு செய்ய உதவும் அட்டவணை -

Year Exchange rate
(INR per USD)
1948 3.30
1949 3.67
1950 - 1966 4.76[16]

1966 7.50[16]

1975 8.39[16]

1980 7.86[17]

1985 12.38[17]

1990 17.01[17]

1995 32.427
2000 43.50[17]

2005 (Jan) 43.47[17]

2006 (Jan) 45.19[17]

2007 (Jan) 39.42[17]

2008 (October) 48.88
2009 (October) 46.37
2010 (22 January) 46.21
2011 (April) 44.17
2011 (21 September) 48.24
2011 (17 November) 55.3950
2012 (22 June) 57.15[18]

2013 (15 May) 54.73[19]

2013 (12 Sep) 62.92[20]

2014 (15 May) 59.44[21]

2014 (12 Sep) 60.95[22]

2015 (15 Apr) 62.30[23]

2015 (15 May) 64.22
2015 (19 sep) 65.87
2015(27 sep) 66.16

இதன் படி பார்த்தால் 1965ல் டாலரின் மதிப்பு 4.76, இன்றைய தேதியில் 66.16 என்கிற போது 13.90 மடங்கு பெருகியுள்ளது.

உதாரணத்திற்கு அன்று ரூ 5000 ரூபாய் இன்றைய மதிப்பில் ரூ 69,500.00.

இந்த மதிப்பீட்டின் அடிப்படை விவரம் விக்கிபீடியா இணைய தளத்தில் உள்ளது.

https://en.wikipedia.org/wiki/History_of_the_rupee

இதை வைத்து நாம் கணக்குப் போட்டுக்கொள்ளலாம்.

RAGHAVENDRA
27th September 2015, 11:54 PM
01.01.1972 அன்று சென்னை வானொலி நிலையத்தில் 1971ம் ஆண்டிற்கான அதிக அளவில் நேயர் விருப்பக் கடிதம் பெற்ற பாடல்களின் விவரம்..

வரிசை எண், பாடல், வந்த மொத்த விருப்பக் கடிதங்கள், பாடலைப் பாடியவர், இடம் பெற்ற படம் என்கிற வரிசையில்

1. இதோ எந்தன் தெய்வம் - 633 - டி.எம்.எஸ் - பாபு
2. அழகிய தமிழ் மகள் - 595 - டி.எம்.எஸ். பி.சுசீலா - ரிக்ஷாகாரன்
3. நிலவைப் பார்த்து வானம் சொன்னது - 117 - டி.எம்.எஸ். - சவாலே சமாளி
4. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - 87 - பி.சுசீலா - நூற்றுக்கு நூறு
5. அங்கே சிரிப்பவர்கள் - 83 - டி.எம்.எஸ். - ரிக்ஷாகாரன்
6. பொட்டு வைத்த முகமோ - 76 - எஸ்.பி.பாலா, பி.வசந்தா - சுமதி என் சுந்தரி
7. நீலக்கடலின் ஓரத்தில் - 70 - டி.எம்.எஸ். மற்றும் குழு - அன்னை வேளாங்கண்ணி
8. நீ இல்லாத இடமே இல்லை - 54 - எம்.எஸ்.விஸ்வநாதன் - முகமது பின் துக்ளக்
9. இன்று முதல் செல்வமிது - 51 - எஸ்.பி.பாலா, பி.வசந்தா - வீட்டுக்கு ஒரு பிள்ளை
10. வசந்தத்தில் ஓர் நாள் - 48 - பி.சுசீலா - மூன்று தெய்வங்கள்
11. கடலோரம் வாங்கிய காத்து - 48 - டி.எம்.எஸ். - ரிக்ஷாகாரன்
12. குறவர் குலம் காக்கும் - 45 - எம்.ஆர்.விஜயா - கண்காட்சி
13. முள்ளுக்கு ரோஜா சொந்தம் - 41 - பி.சுசீலா - வெகுளிப்பெண்
14. நான் போட்ட புள்ளி - 37 - டி.எம்.எஸ். - வீட்டுக்கு ஒரு பிள்ளை
15. விளக்கேற்றி வைக்கிறேன் - 34 - பி.சுசீலா - சூதாட்டம்

மொத்த விருப்பக்கடிதங்களின் எண்ணிக்கையான 2016ல் நடிகர் திலகம் திரைப்படப்பாடல்களைக் கேட்டு வந்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே 874. கிட்டத்தட்ட 43 சதவீதம்.

இந்த நிகழ்ச்சி ஆண்டு மொத்தம் ஒலிபரப்பப்ட்ட பாடல்களின் விருப்ப அடிப்படையில் பெற்ற கடிதங்கள் பற்றிய தொகுப்பாகும்.

இது இல்லாது நேயர் தேன்கிண்ணமாக விவித் பாரதியில் வாராவாரம் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிவந்த மண்ணிலிருந்து ஒரு ராஜா ராணியடம், பார்வை யுவராணி கண்ணோவியம், பட்டத்து ராணி, நம் நாடு படத்திலிருந்து நல்ல பேரை வாங்க வேண்டும், நினைத்ததை நடத்தியே, தெய்வ மகன் படத்திலிருந்து கேட்டதும் கொடுப்பவனே என்று இருவருடைய படப்பாடல்களும் மாறி மாறி முதல் இடத்தில் வந்துள்ளன.

Russellbpw
27th September 2015, 11:56 PM
இந்த வாதம் மிகவும் நன்றாக இருக்கிறது.


தமிழ்நாட்டில் அரசியல் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல்தான். யார் செய்யவில்லை சந்தர்ப்பவாத அரசியல்?. எம்.ஜி.ஆர், அவர்களே 1977-ல் ஜனதாவை எதிர்த்து காங்கிரசுடனும், 1980-ல் காங்கிரசை எதிர்த்து ஜனதாவுடனும், 1984-ல் மீண்டும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்கவில்லையா?. கருணாநிதியும் 77-ல் ஜனதாவுடனும், 80-ல் காங்கிரசுடனும் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் மாறி மாறி கூட்டணி வைக்கவில்லையா?. மக்கள் இவ்விரு கட்சிகளை நிராகரித்து விட்டார்களா?. இன்றைக்கும் தமிழகத்தில் முதலிரண்டு இடங்களை இவைதானே பிடித்து வைத்துள்ளன.



நீங்கள் உதாரணம் காட்டியவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தால் நடிகர் திலகம் அவர்களும் செய்ய வேண்டுமா என்ன ?
செய்தால் என்ன ? என்பது தானே வாதம் ? ....இல்லை இல்லை...விதண்டா வாதம் ?

நல்ல கதையப்பா உங்கள் கதை !

உங்கள் பக்கத்துவீடுக்காரன் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளான்...நீங்களும் அதை செய்வீர்களா ? பக்கத்துவீடுகாரன் திருட்டு தொழிலை செய்கிறான்...தமிழகத்தில் நிறைய பேர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்...யார் செய்யவில்லை திருட்டு தொழில் ...? நீங்களும் திருடலாமே...அந்த திருட்டு தொழில் செய்யலாமே சார்..ஏன் அப்படி செய்யவில்லை ?


மன்னிக்கவும் ..நடிகர் திலகம் அப்படி செய்யமாட்டார் !

நீங்கள் சினிமா வரை அவரை பார்த்து ரசியுங்கள் போதும் அதுவும் முடிந்தால் .....அவர் அரசியல் ...அவர் இஷ்டம்...அதில் நீங்கள் தலையிட ...யாருக்கும் உரிமை இல்லை. இதனால் அவர் படம் பார்க்கமாட்டோம் என்கிறீர்களா ...பரவா இல்லை....நீங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் அவர் வர முடியாது !

நீங்கள் நேசிப்பது அவர் கலையை ....அதை மட்டும் செய்யுங்கள் அதுவும் மனம் இருந்தால்...இல்லையா..அதுவும் உங்கள் இஷ்டம்...உங்கள் உரிமையில் யாரும் தலையிடபோவதில்லை.

Rks

Russellbpw
28th September 2015, 12:04 AM
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!

நன்றி !

இதனை இப்போது பேசி பயன் யாருக்கும் இல்லை நமது ரத்தகொதிப்பு தான் அதிகரிக்கும் என்பதே எனது நிலைப்பாடு...நடிகர் திலகம் அவர்களின் அரசியல் பற்றி பேச்சை தொடங்கினால் ..!

திரு MGR அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்ததாக நினைக்க எனக்கு உடன்பாடு இல்லை. அவருடைய அரசியலில் ஒரு PLANNING 1953 முதலே இருந்தது ...ஒரு குறிக்கோள் இருந்தது ..அதாவது OBJECTIVE ..என்றாவது ஒரு நாள் நாமும்.....என்ற ஒரு PLANNING .....ஒரு DECISION ...இருந்தது..!

நமது நடிகர் திலகம் அவர்களிடம் அப்படி ஒன்றும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. காரணம் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் அவர் தமது தொழிலில் மிக கெட்டியாக ..மற்ற எவரை காட்டிலும் PLANNED ஆக...OBJECTIVE ஆக ...SUBJECTIVE ஆக இருந்துள்ளார்....பிறகு எப்படி அரசியலில் அந்த PLANNING OBJECTIVE SUBJECTIVE இருக்க முடியும் ?

1952 டிசம்பர் முதல் 1987 வரை திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை விட்டபாடில்லை...வருடத்திற்கு 8 படங்கள் என்று இருந்தவரை ...அவரது திரைப்படங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தும் லாபம் மற்றும் வியாபாரம் காரணமாக வருடத்தில் 10 படம்.....13 படங்கள் ....இப்படி ஒரு GRAPH உயர்ந்துகொண்டே எப்போதும் இருந்துள்ளது....இதில் எங்கிருந்து அரசியலில் யோசிக்க நேரம் இருக்கும் ?

இத்துனை BUSY க்கு நடுவே பெற்ற இந்த TOTAL VOTES அதுவே மிக பெரிய இமாலய சாதனை சார் !

திரு MGR அவர்கள் அரசியல் வேறு...அவர் நிறைய நேரம் செலவுசெய்தார் அதற்காக...IMAGE என்ற ஒன்று கச்சிதமாக மக்கள் முன் நிறுவினார்....!

அவரை சுற்றி தம்பி, தமக்கை, அண்ணன் இப்படி ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை இருந்தார்களா அவர்களுக்கும் சேர்த்து சம்பாதிக்க...அவர்கள் வாழ்கையும் வளப்படுத்த...?

அப்படி இருந்திருந்தால் திரு MGR அவர்களும் நடிகர் திலகம் போல திரையுலகில் CONCENTRATE செய்திருப்பார் ...!

அவருக்கும் நடிகர் திலகம் போல நிகழ்வுகள் நடந்திருக்கும்...! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !

Rks

RAGHAVENDRA
28th September 2015, 12:10 AM
நினைவலைகள்

நடிகர் திலகத்தை நான் முதன் முதலில் சற்று அருகில் பார்த்தது, 1964ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பாரகன் திரையரங்கில். எதிரில் இருந்த பாலர் அரங்கில் (பின்னாளில் கலைவாணர் அரங்கம்) குழந்தைகளுக்கான படங்கள் திரையிடுவார்கள். சிறியவர்களுக்கு 6 பைசா, பெரியவர்களுக்கு 12 பைசா. அந்த 6 பைசா கிடைப்பதே பெரிய விஷயம். பள்ளி 12 மணிக்கு முடிந்தவுடன் சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து, 6 பைசா டிக்கெட்டில் குழந்தைகளுக்கான படம் பார்ப்போம். அப்போது அடிக்கடி திரையிடக்கூடிய படங்கள், The Amphian Man, Operation Tiger உள்ளிட்ட அட்வென்சர் படங்கள். கூடவே நியூஸ் ரீலாக இந்தியன் நியூஸ் ரிவியூ போடப்படும்.. இதற்காகவே போவோம். பார்த்த படமாக இருந்தாலும் கூட, காரணம் கிரிக்கெட் தொகுப்பு மற்றும் ஸ்கோர் இடம் பெறும். அவ்வாறான கால கட்டத்தில் தான் உங்கள் நண்பன், சிங்க நாதம் கேட்குது படங்களைப் பார்த்தோம்.

இதே மாதிரி ஒரு நாள் குழந்தைகள் படம் பார்க்க்போனால் அன்றைக்கு படம் ஆரம்பித்து கவுண்டர் மூடி விட்டார்கள். எதிரில் உள்ள பாரகன் தியேட்டருக்கு வந்தோம். நண்பன் ஒருவன் செலவு செய்ய தயாராக இருந்தான். ஆனால் பாரகன் தியேட்டர் மூடியிருந்தது. அதற்கு முன் தான் ஆண்டவன் கட்டளை ஓடிக்கொண்டிருந்ததே, ஏன் தியேட்டரை மூடி விட்டீர்கள் என ஊழியரிடம் கேட்டதற்கு, சிவாஜி புதுப்படம் வரப்போகுது, தியேட்டரில் புதுசா சவுண்டு சிஸ்டம் போடப் போறாங்க என்று கூறினார்.உள்ளே எட்டிப் பார்த்தோம்.

அங்கே...

தொடரும்..

RAGHAVENDRA
28th September 2015, 08:06 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12063656_424599991083269_3962771445145492919_n.jpg ?oh=458d8e1820c2f3f90cc2c7d42bf78942&oe=568BBA5A

KCSHEKAR
28th September 2015, 09:47 AM
[quote=sundarajan;1254797]மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் சிவாஜி சமூகநலப் பேரவையைத் துவக்கி, மக்கள்தலைவர் புகழ்பரப்ப புறப்பட்டிருக்கும் தங்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. [/size]/quote]
சுந்தரராஜன் சார்,
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

JamesFague
28th September 2015, 11:17 AM
Congratulation Mr KC Sir for spreading the wings outside TN.

Russellxor
28th September 2015, 01:11 PM
வெற்றிக்கு ஒருவனின்தோரண ஒளிப்பதிவு

பாடல் ஆரம்பித்து 37 விநாடிகள் வரை சூறாவளியைப் போன்ற இசையும் இயற்கை மிரட்டலை சார்ந்த
ஒளிப்பதிவும் படம் பார்க்கும் எந்த ஒரு நபரையும் இருக்கையில் சற்று அழுத்தியும் நெஞ்சை நிமிர்த்தியும் பார்க்க வைக்கும்.

ஒரே பிரேமில் பல முகங்ளைக் காட்டும் (MIRROR SHOT)ஆரம்ப ஷாட், அது டைரக்ஷன் SPமுத்துராமன் என்று
அடையாளம் காட்டவோ?

நீள செவ்வகத்தை குறுக்காக ஒரு கோடு கிழித்து (இடது கீழ் புறம் ,வலது மேல்புறம்)மேல் பகுதியில் ஆகாயமாகவும் கீழ் பகுதி புல்தரையாகவும் பார்க்கும்படி காமிரா கோணத்தில் அந்த பாடலின் ஆரம்பம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பாடல் முழுவதும் வெவ்வேறு கோணங்களில் மிரட்டலாக படம் காட்சியாக்கப்பட்டிருக்கும்.



லாலலா லாலலா லாலலா லாலலா
லால லால லாலலா லால லால லாலலா

தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி
MIRROR SHOT
ஸ்ரீப்ரியா பாடி ஆட.,நாயகன் என்னும் வார்த்தை வரும்போது சரியாக அந்த பிரேமுக்குள் நுழைவார்.
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
௯ஸ்ரீப்ரியா ஆடிக்கொண்டே வர
நடிகர்திலகம் மெல்ல நடந்து வர
பின் நெடிய அந்த மரம்,விரிந்து பரந்த ஆகாயம் எல்லாம் அடக்கிய ஒரே பிரேம்.
SUPER SNAP
தரையை ஒட்டியோ அல்லது தரையிலிருந்து அதிக உயரம் இல்லாமல் காமிராவை வைத்து படம் பிடித்திருக்கலாம்.GLARE இல்லாமல் பளிச்சென இருப்பதுதான் சிறப்பு.

மேளமும் ராகமும் நாலுபேர் ராஜ்ஜியம் சேருதே வாழ்விலே ஆனந்தம்
(தோரணம்

பக்கம் இருந்து காட்சியை படம் பிடித்த காமிரா அப்படியேபின்னால் சென்று லாங்சாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்து பின் லாங்ஷாட்டுக்கு மாறி மறுபடியும் பக்கம் வந்து படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாபு. இந்த பாடலை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து பாடலை சிறப்பாக்க வேண்டும் என்பதில் அவரின் சிரத்தைதெரியும்.


ஜோடி இது போலிருந்தால் ஆகா என பாராட்டுவார்

ஓங்கி வளர்ந்த மரங்களை கொண்ட அந்த வனப்பகுதியை காமிரா காட்டுவது அழகு.
வாழ்க என பண்பாடவா!வாழ்வோம் சுகம் நூறாகவே
நாம் இன்று இங்கு பண்பாடவே
வீணையின் நாதமும் பூவிலே வாசமும்போலவே சேர்ந்து நாம் வாழுவோம் வாழுவோம்
(தோரணம்
இருவரும் நடந்துவர காமிராவும் நகர்ந்து கொண்டே வரும் அந்த
கிரேன் ஷாட் சூப்பர்.மலைப் பிரதேச அழகின் செழுமை கண்களுக்கு குளிர்ச்சி.

ஆராரோ ஆராரிஆரோ ஆராரோ ஆராரிஆரோஆராரிராரி ஆரி ஆரி ஆரி ஆராரி ராரி ஆராரிரோ ஆராரி ஆரோ ஆராரோ
தாலாட்ட வைக்கும் ஹம்மிங்.
தாளம் போடவும் வைக்கும்.



பேரன் கொஞ்ச வேண்டும் என்று அப்பா எந்தன் காதில் சொன்னார்
நடிகர்திலகத்தின் அழகு மிகுந்த பாவனையை காட்டும் குளோசப் ஷாட்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Qs7qA4l58BQ_X_0520_zpsn4japvjo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Qs7qA4l58BQ_X_0520_zpsn4japvjo.jpg.html)


பேத்தி கொஞ்ச வேண்டும் என்று அத்தை எந்தன் காதில் சொன்னார்
போகட்டுமே ரெண்டும் பெத்துக்கொடு
ரெண்டுதான்!போதுமே!அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லதே
வாழ்விலே வாழ்விலே
(தோரணம்

Russellxor
28th September 2015, 01:59 PM
ஆவணப் பொக்கிஷங்களின் பதிவுகள்

அடுத்த சுற்று விரைவில்...


.http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443427628757_zpsemycxepm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443427628757_zpsemycxepm.jpg.html)

vasudevan31355
28th September 2015, 02:59 PM
செந்தில்வேல் சிவராஜ் சார்,

நீங்கள் கேட்டிருந்த 'கருடா சௌக்கியமா' கட்டுரைப் பதிவு. மொத்தம் மூன்று பாகங்கள் எழுதியிருக்கிறேன். முதலாவது பாகம் 11th August 2011 அன்று எழுதினேன். நான் எழுதிய முதல் பட ஆய்வுக் கட்டுரை இதுதான்.

இரண்டாவது பாகம் 30th August 2011 அன்று எழுதிப் பதித்தேன். மூன்றாவது பாகத்தை 4th December 2011 அன்று பதித்தேன்.

இப்போது மீள்பதிவாக உங்கள் பார்வைக்கும், நண்பர்கள் பார்வைக்கும், புது உறுப்பினர்கள் பார்வைக்கும்'கருடா சௌக்கியமா'.


கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.

25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

'பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும், 'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், 'மெல்லிசை மாமன்னரி'ன் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர் திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.

சரி! கதைக்கு வருவோம்.

அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால் வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.

முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.

தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.

தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.

ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.

தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துகிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள். ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.

தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.

சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும், கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர, துடிதுடித்து, மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.

இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்பப் பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.

தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.

இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப்படுத்துகிறார்.

எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.

மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.

தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.

இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.

வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.

இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.

மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.

தாதாவாக உலா வரும்போது.....

வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!

உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!

வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!

வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!

கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!

கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!

அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.

அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.

'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.

மீண்டும் 2-ஆம் பாகத்தில் சந்திப்போம்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
28th September 2015, 03:00 PM
'கருடா சௌக்கியமா' இரண்டாம் பாகம் ஆய்வுக் கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1avi_000881648-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000076676.jpg

அன்பு நண்பர்களே!

'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இரண்டாம் பாகத்தை தொடர்கிறேன்.

இனி இரண்டாம் பாகம்.

நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.

படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.

சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?'.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.

உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.

தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.

"ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது... என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...

என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).

நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!

தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார். அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.

டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.

ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்

"திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
என்பார்.

அதற்கு N.T.

"நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..

ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..

ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..

தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",

என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.

அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.

தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...

N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...வாதிக்கு நஷ்டம்...பிரதிவாதிக்குக் கஷ்டம்...வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...

என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படும்.

கட்டுரை தொடர்கிறது...

vasudevan31355
28th September 2015, 03:01 PM
தொடர்ச்சியாக...

தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...

என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.

"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...

காந்தி நாலணா..

நேருஜி நாலணா...

காமராஜி நாலணா..ன்னான்...

அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...

என்று கலாய்க்கும் போது,

கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).

அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,

"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,

"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை. "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,

"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...

மற்றொரு சூப்பரான காட்சி...

நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,

"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"

என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,

"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?"

என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.

மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.

பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,

கபாலி 'உயர்ந்த மனிதன்'

கபாலி 'கை கொடுத்த தெய்வம்'

கபாலி 'தெய்வப் பிறவி'

என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).

சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,

'உயர்ந்த மனிதன்' சிவாஜி

'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி

'தெய்வப் பிறவி' சிவாஜி

என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.

(நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
28th September 2015, 03:19 PM
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000326893.jpg

நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.

தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.

அந்த அற்புத போஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000076676.jpg

மேரியம்மாவை மடியில் கிடத்தி கதறும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000056990.jpg


"மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"

என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.

தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்

தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,

"என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...

என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்

"இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"

என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக

"முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.

அதிர வைக்கும் ஆங்கார சொடுக்கு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000323156.jpg

ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா?...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000287087.jpg


சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)

பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.


சங்கிலி முருகனிடம் "ஜகா"வாங்குவது போன்று கலாய்க்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000658091.jpg

Harrietlgy
28th September 2015, 03:47 PM
இதனை இப்போது பேசி பயன் யாருக்கும் இல்லை நமது ரத்தகொதிப்பு தான் அதிகரிக்கும் என்பதே எனது நிலைப்பாடு...நடிகர் திலகம் அவர்களின் அரசியல் பற்றி பேச்சை தொடங்கினால் ..!

திரு MGR அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்ததாக நினைக்க எனக்கு உடன்பாடு இல்லை. அவருடைய அரசியலில் ஒரு PLANNING 1953 முதலே இருந்தது ...ஒரு குறிக்கோள் இருந்தது ..அதாவது OBJECTIVE ..என்றாவது ஒரு நாள் நாமும்.....என்ற ஒரு PLANNING .....ஒரு DECISION ...இருந்தது..!

நமது நடிகர் திலகம் அவர்களிடம் அப்படி ஒன்றும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. காரணம் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் அவர் தமது தொழிலில் மிக கெட்டியாக ..மற்ற எவரை காட்டிலும் PLANNED ஆக...OBJECTIVE ஆக ...SUBJECTIVE ஆக இருந்துள்ளார்....பிறகு எப்படி அரசியலில் அந்த PLANNING OBJECTIVE SUBJECTIVE இருக்க முடியும் ?

1952 டிசம்பர் முதல் 1987 வரை திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை விட்டபாடில்லை...வருடத்திற்கு 8 படங்கள் என்று இருந்தவரை ...அவரது திரைப்படங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தும் லாபம் மற்றும் வியாபாரம் காரணமாக வருடத்தில் 10 படம்.....13 படங்கள் ....இப்படி ஒரு GRAPH உயர்ந்துகொண்டே எப்போதும் இருந்துள்ளது....இதில் எங்கிருந்து அரசியலில் யோசிக்க நேரம் இருக்கும் ?

இத்துனை BUSY க்கு நடுவே பெற்ற இந்த TOTAL VOTES அதுவே மிக பெரிய இமாலய சாதனை சார் !

திரு MGR அவர்கள் அரசியல் வேறு...அவர் நிறைய நேரம் செலவுசெய்தார் அதற்காக...IMAGE என்ற ஒன்று கச்சிதமாக மக்கள் முன் நிறுவினார்....!

அவரை சுற்றி தம்பி, தமக்கை, அண்ணன் இப்படி ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை இருந்தார்களா அவர்களுக்கும் சேர்த்து சம்பாதிக்க...அவர்கள் வாழ்கையும் வளப்படுத்த...?

அப்படி இருந்திருந்தால் திரு MGR அவர்களும் நடிகர் திலகம் போல திரையுலகில் CONCENTRATE செய்திருப்பார் ...!

அவருக்கும் நடிகர் திலகம் போல நிகழ்வுகள் நடந்திருக்கும்...! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !

Rks
Good point

vasudevan31355
28th September 2015, 04:15 PM
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்). (தொடர்கிறது)....

N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே

"டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"

என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,

"ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T

"என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?
நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?
நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.

பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,

"உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...
உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...

என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,

"சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)


"எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000838338.jpg

உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,

"இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"

என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,

"பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"

என்று நிறுத்தி

தன் கரத்தை பக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில் "விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)

"விஷ்"....என்ற வெட்டுவது போன்ற பாவனை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000918985.jpg

"குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)

பின் தொடர்ந்து,

"நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"

என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...

"அணு அணுவா" அற்புத ஆக்ஷன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000927327.jpg


மீசையை கம்பீரமாகத் தடவும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000939739.jpg

கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..

"எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,
அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,
துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,
"be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..

"எட்றா துண்டை" மிரட்டி மிரள வைக்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000946646-1.jpg

துண்டை லாவகமாக அணியும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000951251-1.jpg

"be careful" சங்கிலி முருகனை எச்சரிக்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000957023.jpg

போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.

தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.

தியாகராஜனைப் பின்னி எடுத்துவிட்டு "தம்" போடும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_001071638.jpg

"சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.

பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.

தியாகராஜனை அடித்துவிட்டு மனம் வெதும்பும் அற்புத உணர்வுப் பிரதிபலிப்புகள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_001117050.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_001114447.jpg

(ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)

(தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .


அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
28th September 2015, 04:59 PM
Padikka Padikka thevitatha pathivu. Only NT can do this type of role with ease.

RAGHAVENDRA
28th September 2015, 05:21 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VasuSpl01fw_zpsbwapzecp.jpg

வாசு சார்
கருடா சௌக்கியமா ...
தங்களுடைய பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.
அதுவும் கருடா சௌக்கியமா தங்களுடைய மாஸ்டர் பீஸ் எனலாம்.

இறந்து கிடக்கும் மேரியம்மாவை நோக்கி துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி படத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று.

தன் கடைசி படம் வரையிலும் முத்திரை பதித்த கடமை வீரனைப் போற்றும் பணியில் தங்கள் பதிவுகள் தலையாயதாய் நிற்கின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Russellxor
28th September 2015, 05:49 PM
வாசு சார்
படித்தேன்
ரசித்தேன்
சுவைத்தேன்
எல்லாம் தேன்
நன்றி

தீனதயாளன் வாசுவின்
உடம்பிற்குள் புகுந்து
மிரட்டி விட்டார்.

RAGHAVENDRA
28th September 2015, 05:56 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/s720x720/12063592_1484342701893827_5246117362524880858_n.jp g?oh=4c82bf8abc56a5beb35eb40fa5efdff8&oe=56A749D9

Reproduced from the FB page of Shri Nagarajan

ifohadroziza
28th September 2015, 07:53 PM
திரு பாஸ்கர் சார்
நான் முகநூளில் பழைய வசூல் விபரங்களை வங்கி வட்டி வீதம் கணக்கிட்டு இன்றைய மதிப்பாக வெளியிட்டிருக்கிறேன் .அதைகண்டு நிறைய நண்பர்கள் நமது திலகத்தின் மீது மதிப்பும் பற்றும் கூடுதலாக வைத்துள்ளதாக கூறும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்

Murali Srinivas
28th September 2015, 08:07 PM
முத்தையன் சார்,

நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தின் படங்களை பதிவு செய்வதற்கு நீங்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. இங்கே அனைவருக்கும் இடம் உண்டு. நண்பர் வாசுவிற்காக நீங்கள் முன்னரே சொன்னது போல் உங்களுக்கு பிடித்த ஞான ஒளி படத்தின் ஸ்டில்களை பதிவு செய்யுங்கள்.

நன்றி!

அன்புடன்

sivaa
28th September 2015, 09:35 PM
திரு பாஸ்கர் சார்
நான் முகநூளில் பழைய வசூல் விபரங்களை வங்கி வட்டி வீதம் கணக்கிட்டு இன்றைய மதிப்பாக வெளியிட்டிருக்கிறேன் .அதைகண்டு நிறைய நண்பர்கள் நமது திலகத்தின் மீது மதிப்பும் பற்றும் கூடுதலாக வைத்துள்ளதாக கூறும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்
எனது தனிமடல் பாருங்கள் நன்றி

eehaiupehazij
28th September 2015, 09:46 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்

பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!

Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!

முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !

https://www.youtube.com/watch?v=eNvjPjKqd6k


கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....விளையாட்டுப் பிள்ளையில் திடீர் ஆங்கில சொற்பொழிவு ....!

இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !

https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc

என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான தன்னம்பிக்கை நிறைந்த ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!

மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)

செந்தில்

Russellbzy
28th September 2015, 09:56 PM
அன்பு நண்பர் ரவி கிரன் சார்
நீங்கள் அன்பு நண்பர் ஆதிராம் பதிவுக்கு அளித்த பதில் நியாயமான பதிலாக இல்லை!
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நமக்கு மிகவும் பிடித்தவர்கள் தவறு செய்யும் போது தான் நமக்கு கோபம் வரும்! அதாவது உரிமை உள்ள இடத்தில்
தான் கோபதாபம் இருக்கும்! நான் அவரின் சினிமா மட்டும் பார்த்து ரசித்த ரசிகன் அல்ல! சிவாஜி சொந்த கட்சி tmm 1989 சட்டமன்ற தேர்தலில் திருச்சி 1 ம்
தொகுதியில் போட்டியிட்டபோது என் அலுவலகத்தில் 15 நாட்கள் விடுப்பு எடுத்து தேர்தல் வேலை பார்த்தவன்! அப்போதே 10000 ரூபாய்க்கு மேல் என் சொந்த
பணத்தை செலவு செய்தவன்! திருச்சியில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எங்கள் மாரிஸ்குரூப் சிவாஜி பக்தர்கள் எங்களால் முடிந்த நிதியினை
இன்று வரை செலவு செய்கிறோம்! சிவாஜி மீது எனக்கு முழு உரிமை உள்ளது! நீங்கள் திருச்சிக்கு வந்து செல்பவர் தானே? என்னை பற்றி நான் சிவாஜிக்கு
செய்யும் தொண்டு பற்றி ரசிகர்களிடம் கேட்டு பாருங்களேன்!
இன்றைக்கு காலையில் மதுரை ரசிகர் ஒருவர் என்னிடம் பேசினார்! அவர் என்ன சொன்னார் தெரியுமா? பாஸ்கர் நீங்கள் சிவாஜியின் அரசியல் பற்றி எழுதுவது
எல்லாம் அவரின் 99% ரசிகர்கள் ஏற்று கொள்ளும் உண்மைதான்! ஆனாலும் நீங்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது எங்களுக்கு வருத்ததை
கொடுக்கிறது! எல்லோருக்கும் எல்லாமும் நல்லபடி அமைந்து விடாது! நம் தலைவருக்கு அரசியலில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
எனவே அதை கெட்ட கனவாக மறந்து விட்டு அவரின் சிறப்புக்களை பதிவிடுங்கள்! இனிமேல் அவரின் அரசியலை கடுமையாக விமர்சித்தால் உன்னிடம்
நான் பேச மாட்டேன் என்று கூறினார்! நானும் அவரிடம் சிவாஜியின் உண்மையான ரசிகர்கள் வருத்தப்படும்படி இனி பதிவிட மாட்டேன் என்று கூறி
விட்டேன்! ரவிகிரன் சார் மதுரை ரசிக நண்பர் சொல்வது ஏற்று கொள்ளக்கூடியது! ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று விதண்டா
வாதம் செய்வது யாரென்று திரியின் பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் !
இன்னொரு விஷயம் சொல்கிறேன் சார்! சிவாஜி ஆரம்பகாலம் முதல் அரசியலில் திட்டமிடவில்லை! அவருக்கு பெரிய குடும்பம்! சினிமாவில் ரொம்ப பிஸி! அதனால் அரசியலில் வெற்றிகாண முடியவில்லை என்று சொல்கிறீர்கள்! ஓகே! ஆந்திராவில் nt ராமாராவ் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில்
ஆட்சியை பிடித்தார் ! அதற்கு முன்பு அவர் அரசியலில் ஈடுபடவே இல்லை! அவர் சினிமாவிலும் பிஸி தான்! சிவாஜியை விட பெரிய குடும்பம் உடையவர்!
இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்ல போகிறீர்கள்? நாமெல்லாம் படித்தவர்கள்! உண்மை என்றும் உண்மை தான்!
இனி மதுரை நண்பருக்கு கொடுத்த வாக்கின்படி நடிகர்திலகத்தின் அரசியல் குறித்த விமர்சனம் என்னிடமிருந்து வராது!
நன்றி
ரவி சார் !

Harrietlgy
28th September 2015, 10:41 PM
Courtesy Mr. Sudhangan's Face book

செலுலாய்ட் சோழன் – 90
சிவாஜி கணேசனுக்கு மணி விழா அரசே கட்டுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இது சிவாஜி ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சீயை கொடுத்திருக்கிறது!
நடிப்பு என்பதற்கு சிவாஜி என்பதுதான் பொருள்.
அவர் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக பல படங்கள் இருந்தாலும், அதில் ஒரு மிகச் சிறந்த உதாரணம் தான் ` திருவிளையாடல்’ படம்!.
தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் இந்த படம் தான்.
நாரதன் பழத்தை கொண்டு வந்து கொடுத்துவுடன் சிவன்னான் சிவாஜி, தன் உமையவளான சாவித்திரியைப் பார்த்து, ` உமா, சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இதை நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். உலகத்தார் அம்மையப்பன் என்று தானே சொல்கிறார்கள். அப்பன்ம்மை என்று சொல்வதில்லையே! அதனால் இதை நான் சாப்பிடுவதை விட நீ சாப்பிடுவதுதான் சாலச் சிறந்தது’ என்று உமையவளிடம் கொடுத்துவிடுவார்.
பழத்தை வாங்கிய உமையவள் அதிலிருக்கும் நாடகத்தை புரிந்து கொண்டு ஈசனை பார்த்து சிரிப்பாள்!
`சுவாமி, நீங்களே சொல்லிவிட்டீர்கள் அம்மையப்பன் என்று அப்படியிருக்கும்போது இந்த படம் நமக்கெதற்கு!. மேலும் இனி எதிர்காலம் என்பது பிள்ளைகளின் கையில் அதனால் இதை அவர்களிடமே கொடுத்துவிடலாம்’ என்பார்.
இந்த காட்சியின் சூட்சமத்தை ரசிகர்களும் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு கைதட்டி ஆராவாரித்தார்கள்,.
ஒரு புராணப் படத்தின் சுவாரஸ்யத்தை எப்படி கூட்ட வேண்டும் என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம்!
இப்போது பிள்ளைகளான வினாயகனும் முருகனும் வருவார்கள்!
இருவருமே பழம் தங்களுக்குத்தான் வேண்டுமென்பார்கள்.
`பழத்தை இருவருக்குமே பிரித்து கொடுத்து விடலாம்’ என்பார் உமையவள்!
`இல்லை இது ஞானப்பழம்! முழுவதுமாக சாப்பிட்டால்தான் பலனிருக்கும், இல்லையா நாரதா !’ என்பார் ஈசன்.
சொல்லிவிட்டு அவரே, ` இது சாதாரண பழமல்ல!~ இது ஞானப் பழம்! இதை சாப்பிடும் தகுதி நம் பிள்ளைகளுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு சோதனை வைத்துப் பார்க்கலாமே’ என்பார் சிவன்!
`சோதிப்பதிலும் சோதனை செய்வதிலும் நீங்கள் தான் வல்லவர். அதனால் அதையும் நீங்களே செய்துவிடுங்களேன்’ என்பாள் உமையவள்.
ஈசனின் திருவிளையாடல் அங்கே துவங்கும்!
`வினாயகா, முருகா உங்கள் இருவரின் யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப் பழம்’ என்பார் ஈசன்.
கதையின் விறுவிறுப்பு கூடும்.
உடனே முருகன் ` இதோ ஒரு நொடியில் உலகத்தை சுற்றி வருகிறேன்’ என்று கிளம்புவார்.
வினாயகன் உடனே நாரதரைப் பார்த்து, ` நாரதரே உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன ? ‘ அம்மையப்பன் தானே உலகம்? ‘ என்று கேட்பார்.
உடனே நாரதனும் ` அதிலென்ன சந்தேகம் என்ன!’ என்பார்
வினாயகர் அம்மையப்பனை சுற்றி வந்து பழத்தை பெற்றுக்கொள்வா.
முருகன் மயில் மீதேறி உலகத்தை வானுலகில் வலம் வருவார்.
முருகன் மயிலில் அமர்ந்து வானுலகில் மிதந்து போகும் போது, அரங்கமே கைதட்டல்லால் அதிரும்.!
காரணம் அந்த நாட்களில், அதாவது 1965ம் வருடங்களில் இன்றிறுக்கும் தொழில் நுட்ப வசதிகள் கிடையாது.
அதனால் முருகன் வான் மீது பறந்து செல்லுவது ரசிகர்களுக்கு ஒரு பிரமிப்பான காட்சியாக இருக்கும்.
முருகன் திரும்பி வந்தவுடன், விஷயத்தை தெரிந்து கோபப்படுவான்.
`பலே! பெரியவர்களெல்லோரும் சேர்ந்து நடத்திய நாடகம்’, மிக்க மகிழ்ச்சி! நான் வருகிறேன்’என்று கோவித்துக்கொண்டு கிளம்புவார்,
`முருகா எங்கே போகிறாய்?’கேட்பார் உமையவள்.
`எங்கோ போகிறேன்! என்னை ஏன் தடுக்கிறீர்கள் ? அம்மட்டும் இந்த சிறு பழ விஷயத்தில் உங்கள் குணத்தை காட்டியதற்கு நன்றி. வருகிறேன்’
`குமரா! பதட்டத்தில் தவறான முடிவிற்குப் போகாதே தாய் சொல்லைக் கேள்‘ என்பார் ஈசன்.
`தலைப்பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளையபிள்ளை எடுப்பார் கைபிள்ளை என்று காட்டிய உங்களுடன் இனி ஒரு கணமும் இருக்க மாட்டேன்.’
`எங்களை விட்டு எங்கே போகிறாய்’ பதறுவாள் உமையவள்.
`எனக்கென்று ஒரு உலகம்! என் நாடு! என் மக்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு தனிமையில் இருக்கப்போகிறேன்/ முடிந்தால் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்’
முருகா! குமரா! வேலவா’ என்று எழுந்து பிள்ளையை தடுக்க முயலுவாள் உமையவள்,
`நாரதா! நி நினைத்து வந்த காரியம் சுலபமாக முடிந்து விட்டதல்லவா! என்பார் ஈசன்.
உடனே உமையவளிடம் வந்த ஈசன், ` பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்பதற்கு உதாரணம் காட்டிவிட்டு போகிறான் உன் மகன்.;
`அவனை இப்படியே விட்டுவிடுவதா !’ என்று கேட்பார் உமையவள்.
உடனே ஈசன் அங்கிருந்து மறைந்து முருகன் போகும் வழியில் நின்று, ` முருகா! தமிழ்வேலே! போகாதே நில்! இதுவும் எம் விளையாட்டுகளில் ஒன்று’ என்பார்
கேட்காமல் முருகன் போய்க் கொண்டேயிருப்பான்,
அடுத்து என்ன ஆகும் என்கிற விறுவிறுப்பு படத்தின் ஆரம்பத்திலிருந்தே கூடிக்கொண்டே போகும்.
அடுத்து உமையவள் முருகனை வழிமறித்து, ` குமரா! நீ கோபப்படுமளவிற்கு தவறொன்றும் நடந்துவிடவில்லை. சினத்தை விடு! தனித்து செல்லாதே ’ என்று சொல்லி பார்ப்பாள்.
அடுத்து வினாயகன் வழியில் சென்று, ` தம்பி! பழத்தை வேண்டுமானால் நீயே வைத்துக் கொள் போகாதே என்பார்!
இவர்கள் பேச்சுக்கெல்லாம் செவி மடுக்காத முருகன், அடுத்து ஒரு குரல் கேட்டு அப்படியே நிற்பான்.
`முருகா! என்று ஒரு குரல் கேட்கும்,
முருகன் அப்படி நின்று திரும்பி, ` யாரது ?’ என்பான்
அதாவது பெற்றோர், சகோதரனுக்குக் கூட செவி மடுக்காத முருகன் `தமிழுக்கு செவி மடுப்பான்’ என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.
இந்த படத்தில் தான் எத்தனை இதிகாச புராண சம்பவங்களை சுவாரஸ்யமாக சின்ன சின்ன விஷயங்கள் இழைத்துக் காட்டியிருப்பார் இயக்குனர்.
இப்போது படத்தை பார்த்தாலும் ஒரு வினாடி கூட சலிக்காமல் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டேயிருக்கும்.
`முருகா! ஞான பண்டிதா!’ என்று அந்த பெண் குரல் கேட்டதும், முருகன் திரும்பி, `ஒ! ஒளவையா ?’ என்று கனிவோடு கேட்பான்.
அந்த தமிழ்த்த்யாக வருவார் கே.பி சுந்தராம்பாள்.
அப்போதுதான் ஒளவை ` ஞானப்பழந்த்தைப் பிசைந்து’ என்று பாடத்துவங்குவார் ஒளவை.
அந்த கணீர் குரல் எழும்பும்போதே அரங்கம் அதிரும்.!
படத்தின் சுவாரஸ்யத்தை விட ரசிகர்களின் மேம்பட்ட ரசனை மெய்சிலிர்க்க வைக்கும்.
சும்மாவா படம் 250 நாட்களுக்கு மேல் ஒடியது.!
(தொடரும்)

RAGHAVENDRA
28th September 2015, 10:56 PM
ஆமாம். இவர் ஒருவர் தான் நடிகர் திலகத்தின் ரசிகர். மற்றவர்களெல்லாம் அவர் வீட்டு எடுபிடிகள்.

கன்ஸ்யூமர் கோர்ட்டில் தான், ஒருவர்,தான் செலவழித்த பொருளின் மேல் உரிமை கொண்டாடுவார். கடையில் காசு கொடுத்து ஒரு பொருளை வாங்குபவர் தான், நான் இவ்வளவு செலவழித்தேன், அதற்கான பலனில்லை எனக் கேட்பார். பிரதிபலன் பாராமல் செலவு செய்பவர் அதை சொல்லிக் காட்டமாட்டார். எத்தனையோ ரசிகர்கள் தங்கள் சொந்த காசில் தான் நடிகர் திலகத்திற்கு இன்று வரை எந்த பிரதிபலனும் பாராமல் செய்து வருகிறார்கள். எல்லோருக்குமே அவருடைய அரசியல் தோல்வியில் வருத்தமுள்ளது என்றாலும் அதற்காக எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு அதி மேதாவி போல அவரை விமர்சிப்பது இல்லை. அவர் செய்வது செய்தது எல்லாம் சரி என எத்தனையோ பேர் இன்றும் முழுமையாகத் தங்களை நடிகர் திலகத்தின் பால் அர்ப்பணிப்பு உணர்வுடன் அவருக்குப் பணியாற்றுகிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருளுமாம். அதைப் போல தான் சொல்வது தான் சரி என விதண்டாவாதம் செய்வது, எந்த வகையிலாவது பூதக்கண்ணாடி வைத்து நடிகர் திலகத்தை தப்பு சொல்ல ஏதாவது துப்பு கிடைக்காதா எனத் தேடித் தேடி மீண்டும் மீண்டும் அவர் மேல் தவறு இருப்பதாக சித்தரித்து மாபெரும் சாதனையாளராகத் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்கிற சுயநலமே ஓங்கி நிற்கிறதே தவிர வேறேதும் இல்லை. 99 சதம் பேர் இவரிடம் வந்து ஒத்துக் கொண்டார்களாம். ஏன் அந்த ஒரு சதவீதத்தை விட்டு விட்டீர்கள். 0.0001 சதவீதம் மட்டும் எனக்காக விட்டு விட்டு மற்ற அத்தனை சதவீதமும் உங்கள் பக்கமே வைத்துக்கொள்ளுங்களேன். யார் வேண்டாம் என்றது. உங்களுக்குத் தான் இங்கு அனைவருமே ஆதரவிருக்கிறார்களே. ஏன் ஒரு சதவீதம் கூட பாக்கி வைக்கிறீர்கள்.

கையில் எந்த ஆவணமும் இல்லாமல் ஒரு வாக்குவாதத்தை ஆரம்பித்து விட வேண்டியது. அதற்கப்புறம் நீ அவல் கொண்டா நான் உமி கொண்டு வருகிறேன் என எல்லோரிடமும் கேட்க வேண்டியது.

த.மு.மு.திருச்சியில மட்டும் நடத்தப்பட வில்லை. தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. எல்லா ஊர்களிலும் ரசிகர்கள் இருந்தார்கள். எல்லா ஊர்களிலும் தொண்டாற்றினார்கள். ஐம்பது வேட்பாளர்கள் தேர்தலில் இறங்கினார்கள். எல்லாருமே நடிகர் திலகத்தை வசை பாடிக்கொண்டிருக்கவில்லை.

த.மு.மு. வெற்றி பெற்றிருந்தால் ... என்பதை விட அப்படிக் கிடைக்கக்கூடிய வெற்றியில் ஒரு தர்மம், நியாயம் இருக்க வேண்டும் எனத் தான் நடிகர் திலகம் விரும்பினார். அந்த வரையில் வரலாற்றில் ஒரே நேர்மையாளராக, ஒரே தர்மசீலனாக, ஒரே சத்தியசீலனாக, நெஞ்சு நிமிர்த்தி நம்மை பெருமைப் பட்டுப் போற்றும் வகையில் தான் அரசியல் நடத்தியிருக்கிறார் நடிகர் திலகம். இது இந்திய அரசியல் வரலாற்றில இது வரை எந்த தலைவனும் செய்யாத சாதனை. தோல்வியிலும் கர்வத்தைக் கொடுத்த ஒரே தலைவன் நடிகர் திலகம் மட்டுமே. சதித்திட்டங்கள் தீட்டி பெரும் வெற்றியை விட நேர்மையான தோல்வி என்றுமே நல்ல பெயரைத் தரவல்லது. அந்த வகையில் எந்தத் தவறும் தன் வாழ்நாளில் இழைக்காத ஒரே தலைவன் மக்கள் தலைவன் நடிகர் திலகம் மட்டுமே.

இங்குள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட எதிர்காலம் நிச்சயம் இதை அங்கீகரிக்கும். இங்கும் மனசாட்சியுள்ளவர்கள் என் கருத்தில் நிச்சயம் உடன்படுவார்கள். அவர்கள் வெளிப்படையாக ஆதரிக்க மனமில்லாவிட்டாலும் கூட.

முரளி சார், நடிகர் திலகம் தன் அரசியல் வாழ்க்கையில் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிலைநிறுத்துவது எனது கடமை, உரிமையும் கூட. எனவே எப்போது யார் எந்த வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை சொன்னாலும் நான் பதில் சொல்லிக்கொண்டு தானிருப்பேன். எனவே நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை கூறுவது நிற்கும் வரை என்னுடைய பதில் பதிவுகளும் நிற்காது. இதற்காக தாங்கள் நெறியாளர் என்கின்ற முறையில் என்னுடைய பயனாளர் இணைப்பை ரத்து செய்தாலும் கவலைப்பட மாட்டேன்.

Russellbpw
28th September 2015, 11:41 PM
அன்பு நண்பர் ரவி கிரன் சார்
நீங்கள் அன்பு நண்பர் ஆதிராம் பதிவுக்கு அளித்த பதில் நியாயமான பதிலாக இல்லை!
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நமக்கு மிகவும் பிடித்தவர்கள் தவறு செய்யும் போது தான் நமக்கு கோபம் வரும்! அதாவது உரிமை உள்ள இடத்தில்
தான் கோபதாபம் இருக்கும்! நான் அவரின் சினிமா மட்டும் பார்த்து ரசித்த ரசிகன் அல்ல! சிவாஜி சொந்த கட்சி tmm 1989 சட்டமன்ற தேர்தலில் திருச்சி 1 ம்
தொகுதியில் போட்டியிட்டபோது என் அலுவலகத்தில் 15 நாட்கள் விடுப்பு எடுத்து தேர்தல் வேலை பார்த்தவன்! அப்போதே 10000 ரூபாய்க்கு மேல் என் சொந்த
பணத்தை செலவு செய்தவன்! திருச்சியில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு எங்கள் மாரிஸ்குரூப் சிவாஜி பக்தர்கள் எங்களால் முடிந்த நிதியினை
இன்று வரை செலவு செய்கிறோம்! சிவாஜி மீது எனக்கு முழு உரிமை உள்ளது! நீங்கள் திருச்சிக்கு வந்து செல்பவர் தானே? என்னை பற்றி நான் சிவாஜிக்கு
செய்யும் தொண்டு பற்றி ரசிகர்களிடம் கேட்டு பாருங்களேன்!
இன்றைக்கு காலையில் மதுரை ரசிகர் ஒருவர் என்னிடம் பேசினார்! அவர் என்ன சொன்னார் தெரியுமா? பாஸ்கர் நீங்கள் சிவாஜியின் அரசியல் பற்றி எழுதுவது
எல்லாம் அவரின் 99% ரசிகர்கள் ஏற்று கொள்ளும் உண்மைதான்! ஆனாலும் நீங்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது எங்களுக்கு வருத்ததை
கொடுக்கிறது! எல்லோருக்கும் எல்லாமும் நல்லபடி அமைந்து விடாது! நம் தலைவருக்கு அரசியலில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
எனவே அதை கெட்ட கனவாக மறந்து விட்டு அவரின் சிறப்புக்களை பதிவிடுங்கள்! இனிமேல் அவரின் அரசியலை கடுமையாக விமர்சித்தால் உன்னிடம்
நான் பேச மாட்டேன் என்று கூறினார்! நானும் அவரிடம் சிவாஜியின் உண்மையான ரசிகர்கள் வருத்தப்படும்படி இனி பதிவிட மாட்டேன் என்று கூறி
விட்டேன்! ரவிகிரன் சார் மதுரை ரசிக நண்பர் சொல்வது ஏற்று கொள்ளக்கூடியது! ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று விதண்டா
வாதம் செய்வது யாரென்று திரியின் பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் !
இன்னொரு விஷயம் சொல்கிறேன் சார்! சிவாஜி ஆரம்பகாலம் முதல் அரசியலில் திட்டமிடவில்லை! அவருக்கு பெரிய குடும்பம்! சினிமாவில் ரொம்ப பிஸி! அதனால் அரசியலில் வெற்றிகாண முடியவில்லை என்று சொல்கிறீர்கள்! ஓகே! ஆந்திராவில் nt ராமாராவ் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில்
ஆட்சியை பிடித்தார் ! அதற்கு முன்பு அவர் அரசியலில் ஈடுபடவே இல்லை! அவர் சினிமாவிலும் பிஸி தான்! சிவாஜியை விட பெரிய குடும்பம் உடையவர்!
இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்ல போகிறீர்கள்? நாமெல்லாம் படித்தவர்கள்! உண்மை என்றும் உண்மை தான்!
இனி மதுரை நண்பருக்கு கொடுத்த வாக்கின்படி நடிகர்திலகத்தின் அரசியல் குறித்த விமர்சனம் என்னிடமிருந்து வராது!
நன்றி
ரவி சார் !

இனிய நண்பர் திரு பாஸ்கர் அவர்களுக்கு

திரு ஆதிரம் அவர்கள் சந்தர்பவாத அரசியல் யார் தான் பண்ணவில்லை இவர் பண்ணினால் என்ன என்ற பொருள் புதைந்த ஒரு கேள்வி எழுப்பினார்...அதற்க்கு நான் அதே போல பொருள் பொதிந்த ஒரு கேள்வியை அவர் முன் வைத்தேன் ...இதில் ஏன் ஞாயம் இல்லை என்கிறீர்கள் பாஸ்கர் சார் ?

சிவாஜிக்கு ஒரு சட்டம் ..திரு ஆதிராம் அவர்களுக்கு ஒரு சட்டமா ?

நான் கூறுவதை மற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எப்போதும் எதிர்பார்ப்பது கிடையாது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியல் மற்றும் அவரது நிலைபாடுகள் இவை இருந்த காலத்தில் எனக்கு வயது 1 வயது முதல் 17 வயது இருக்கும்.

இப்போதுதான் நான் அவற்றை நினைத்துபார்த்து ஒரு மெச்சூரிட்டி வரும்போது அதன் அடிபடையில் என்னுடைய என்னத்தை பதிவிட்டேன். நீங்கள் 10,000 செலவு செய்தீர்கள் என்கிறீர்கள். அவர் அரசியல் நிலைப்பாடு தெரிந்தும் ஏன் நீங்கள் செலவு செய்தீர்கள் என்ற ஒரு கேள்வி கூடவே எழாதா சார் ?

நீங்கள் மட்டும் அல்ல பல நடிகர் திலகம் ரசிகர்கள் ....அபிமானிகள்...திரு mgr அவர்களுடைய மட்டுமே ரசிகர்கள் அபிமானிகள் கூட செலவு செய்திருப்பார்கள்..செய்துள்ளார்கள்...பணம் செலவு செய்ய இயலாதவர்கள் தங்கள் உடல் உழைப்பை தந்துள்ளார்கள்....இவ்வளவு ஏன்...நம்முடைய மக்கள் திலகம் திரியில் உள்ள பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் அந்த சமயத்தில் எவ்வளவோ உழைப்பை இந்த கூட்டணிக்காக இதன் வெற்றிக்காக கொடுத்துள்ளார் என்பது எனக்குமே தெரியும்....ஒரு மக்கள் திலகம் அவர்களுடைய ஆழ்ந்த முரட்டு பக்தர் என்ற நிலையிலும் அவர் நம் நடிகர் திலகம் மக்கள் திலகம் அவர்களுடைய துணைவியாருக்கு மற்றவர்கள் கைவிட்டும் சந்தர்ப்பவாதம் காட்டியும் இவர் மட்டும் அதுபோல செய்யாமல் சொந்த காசை செலவு செய்து அவருடனே இருந்தார். அப்படி பட்டவர், தொழில் முறையில் போட்டியாளராக இருந்தும் இவ்வளவு செய்கிறார் என்றபோது, திரு செல்வகுமார் போன்ற பல மக்கள் திலக பக்தர்கள் அவர்களால் இயன்ற அளவிற்கு பணியாற்றினார்கள்.....! ஆனால் என்ன செய்ய ? கவர்ச்சி கடமையையும் மிஞ்சியது பெருத்த ஏமாற்றமே ...! அததற்கு நேரம் என்ற ஒன்று சரியாக அமையவேண்டும் சார் !

Ntr குடும்பமும் நடிகர் திலகம் குடும்பமும் ஒன்றா ?

NTR அவர்கள் மேற்றிகுலஷியன் படித்தபிறகு குண்டூரில் உள்ள ஆந்திரா க்ரிச்டிஎன் கல்லூரியில் படித்தவர்...படித்த பிறகு மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் இல் சப் ரேஜிச்டார் ஆக வேலை பார்த்தவர் ..பிறகு 1949 இல் சினிமாவில் நுழைந்தவர் ...இவர் ஏழ்மயானவரா அல்லது 3வது வரை மட்டுமே படிக்க முடிந்த நடிகர் திலகம் ஏழ்மை பாரம்பரியம் உள்ளவரா ?

சும்மா ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொல்லாதீர்கள் சார்

Ntr குடும்பத்தின் சொத்து அவர் திரைக்கு வரும்போது என்ன என்று தெரியுமா ?

நடிகர் திலகத்திடம் என்ன இருந்தது என்று தெரியுமா?

Ntr அவர் தம் தம்பிமார்கள், தமக்கையர் பற்றி இதுவரை ஒரு கூட்டுக்குடும்பமாக எந்த பத்திரிகையிலும் நான் படித்ததும் இல்லை...கேள்விபட்டதும் இல்லை.

Ntr அவர்கள் ஏழ்மயிலா இருந்தார் நடிகர் திலகம் போல ?

அட போங்க சார்.....சும்மா ஏதாவது ஒரு தமாஷ் பண்ணிட்டு !


சாகவேண்டும் என்று ஒருவன் கடலில் குதிக்க ....பை நிறைய முத்தெடுத்து கரை சேர்ந்தானாம்....

முத்தேடுக்கவேண்டும் என்று கடலில் குதித்தவன் ..மூச்சு திணறி இறந்தே போனானாம் என்ற பழமொழி தாங்கள் கேட்டதுண்டு என்று நினைக்கிறன்.

நடிகர் திலகம் - அரசியல் - மறக்கவேண்டிய காலம் !

நடிகர் திலகம் - திரைபடம் - வசந்தம் என்றும் வீசும் காலம் !

Murali Srinivas
29th September 2015, 12:52 AM
பாஸ்கர் சார்/ஆதிராம்,

நான் முன்பே கேட்டுக் கொண்டது போல் நடிகர் திலகத்தின் அரசியல் பற்றிய வாக்கு வாதங்களை தொடராமல் பதிவுகளை தொடருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஆகேஎஸ்,

சில நேரங்களில் சில பதிவுகளை செய்யும்போது அது தேவையானதுதானா என்று யோசித்து செய்தால் பலரும் மனம் புண்படுவதை தடுக்கலாம். நீங்களே சொன்னது போல் இந்த வாக்குவாதம் எதை சுற்றி நிகழ்கிறதோ அந்த நிகழ்வுகள் அரங்கேறும்போது உங்களுக்கு 3 வயது எனும்போது அதைப் பற்றி கருத்துக் கூறுதல் தவறில்லை. ஆனால் அன்றைய Ground Reality தெரியாமல் அன்று களத்தில் நின்றவர்கள் மனம் புண்பட பேசுவதை தவிர்க்கலாமே.

ராகவேந்தர் சார்,

இந்த திரியின் நெறியாளர் [மாடரேட்டர்] என்ற பதவி என்பது வானளாவிய அதிகாரம் படைத்த பதவியொன்றுமில்லை. யாரையும் நீக்கவோ சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்று உங்களுக்கே நன்றாக தெரியும். இருந்தும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். அனைவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பவன்.இங்கே நாகரீகத்தின் எல்லைக்குட்பட்டு யார் எழுதினாலும் அதை அனுமதிப்பவன். இவ்வளவு ஏன் என்னை விமர்சித்து மாற்று முகாம் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில் எத்தனயோ முறை எழுதியபோது கூட அதை நீக்காதவன் நான். இதை தற்பெருமைக்காக சொல்லிக்கொள்ளவில்லை. உண்மை அப்படியிருக்க நான் ஏதோ உங்களை திரியை விட்டு விலக்கி விடுவேன் என்பது போல் நீங்கள் எழுதியிருப்பது வேதனையளிக்கிறது. நீங்கள் உடனே அப்படி சொல்லவில்லை என்பீர்கள். இதற்கு மேல் இந்த விவாதத்தை நீட்டிக் கொண்டு போக விரும்பவில்லை.

ஒன்றே ஒன்று. ஒரு நல்ல விவாத அரங்கம் என்ற அமைப்பு நிறுவப்படுவதின் நோக்கமே பல்வேறு கருத்துகள் நாகரீகமாக முன்வைக்கப்பட்டு வரம்பு மீறாமல் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படியிருக்க எதிர் கருத்துக்களே வரக்கூடாது என்று சொன்னால் ------ என்ன சொல்வது?

அன்புடன்

Russelldvt
29th September 2015, 03:07 AM
http://i57.tinypic.com/iftuo2.jpg

Russelldvt
29th September 2015, 03:08 AM
http://i59.tinypic.com/24y8fvo.jpg

Russelldvt
29th September 2015, 03:09 AM
http://i62.tinypic.com/2hmpmqt.jpg

Russelldvt
29th September 2015, 03:12 AM
http://i59.tinypic.com/2i721oo.jpg

Russelldvt
29th September 2015, 03:12 AM
http://i62.tinypic.com/2dl1469.jpg

Russelldvt
29th September 2015, 03:13 AM
http://i60.tinypic.com/rk9co4.jpg

Russelldvt
29th September 2015, 03:13 AM
http://i61.tinypic.com/qqwkzq.jpg

Russelldvt
29th September 2015, 03:14 AM
http://i57.tinypic.com/293u15s.jpg

Russelldvt
29th September 2015, 03:15 AM
http://i62.tinypic.com/2mm5nvd.jpg

Russelldvt
29th September 2015, 03:16 AM
http://i61.tinypic.com/ne80w1.jpg

Russelldvt
29th September 2015, 03:17 AM
http://i62.tinypic.com/24fb6g4.jpg

Russelldvt
29th September 2015, 03:18 AM
http://i58.tinypic.com/2q0ixs6.jpg

Russelldvt
29th September 2015, 03:19 AM
http://i60.tinypic.com/f9ffck.jpg

Russelldvt
29th September 2015, 03:20 AM
http://i57.tinypic.com/vne4xg.jpg

Russelldvt
29th September 2015, 03:20 AM
http://i60.tinypic.com/nvo6x1.jpg

Russelldvt
29th September 2015, 03:22 AM
http://i57.tinypic.com/w86ayq.jpg

http://i57.tinypic.com/2j17u4l.jpg

http://i62.tinypic.com/10xugrn.jpg

Russelldvt
29th September 2015, 03:24 AM
http://i60.tinypic.com/29eob43.jpg

Russelldvt
29th September 2015, 03:25 AM
http://i60.tinypic.com/fljbqs.jpg

Russelldvt
29th September 2015, 03:26 AM
http://i62.tinypic.com/35mr7ep.jpg

Russelldvt
29th September 2015, 03:26 AM
http://i60.tinypic.com/fzcims.jpg

Russelldvt
29th September 2015, 03:27 AM
http://i60.tinypic.com/vfy1s8.jpg

Russelldvt
29th September 2015, 03:29 AM
http://i60.tinypic.com/mmgcd5.jpg

Russelldvt
29th September 2015, 03:30 AM
http://i57.tinypic.com/1pb3pe.jpg

Russelldvt
29th September 2015, 03:31 AM
http://i61.tinypic.com/sm90cl.jpg

Russelldvt
29th September 2015, 03:32 AM
http://i61.tinypic.com/11s06zt.jpg

Russelldvt
29th September 2015, 03:34 AM
http://i57.tinypic.com/k0giuq.jpg

http://i60.tinypic.com/55o1aa.jpg

http://i60.tinypic.com/5fraqq.jpg

Russelldvt
29th September 2015, 03:35 AM
http://i61.tinypic.com/250qrz8.jpg

Russelldvt
29th September 2015, 03:36 AM
http://i61.tinypic.com/2agrpqc.jpg

Russelldvt
29th September 2015, 03:37 AM
http://i62.tinypic.com/280120k.jpg

Russelldvt
29th September 2015, 03:39 AM
http://i61.tinypic.com/2ylqx3t.jpg

http://i61.tinypic.com/an1rts.jpg

http://i58.tinypic.com/2vufxub.jpg

Russelldvt
29th September 2015, 03:40 AM
http://i60.tinypic.com/29estg4.jpg

Russelldvt
29th September 2015, 03:59 AM
http://i58.tinypic.com/24oyuc0.jpg

Russelldvt
29th September 2015, 04:00 AM
http://i62.tinypic.com/125lszo.jpg

Russelldvt
29th September 2015, 04:01 AM
http://i59.tinypic.com/dd0w9s.jpg

Russelldvt
29th September 2015, 04:03 AM
http://i62.tinypic.com/sbjvi1.jpg

http://i59.tinypic.com/2hyl2tg.jpg

Russelldvt
29th September 2015, 04:04 AM
http://i58.tinypic.com/fbm7w8.jpg

Russelldvt
29th September 2015, 04:05 AM
http://i57.tinypic.com/34h7xbp.jpg

Russelldvt
29th September 2015, 04:06 AM
http://i59.tinypic.com/2nt7cz.jpg

Russelldvt
29th September 2015, 04:07 AM
http://i57.tinypic.com/qrdusz.jpg

Russelldvt
29th September 2015, 04:08 AM
http://i59.tinypic.com/21cgpr6.jpg

Russelldvt
29th September 2015, 04:11 AM
http://i59.tinypic.com/acpr2r.jpg

http://i61.tinypic.com/312wkyp.jpg

http://i59.tinypic.com/11i3kti.jpg

http://i62.tinypic.com/vr6kbn.jpg

Russelldvt
29th September 2015, 04:14 AM
http://i60.tinypic.com/34hxheo.jpg

Russelldvt
29th September 2015, 04:19 AM
http://i59.tinypic.com/1htfn9.jpg

http://i61.tinypic.com/68ueya.jpg

Russelldvt
29th September 2015, 04:20 AM
http://i57.tinypic.com/23ut1ck.jpg

Russelldvt
29th September 2015, 04:21 AM
http://i59.tinypic.com/k1djsg.jpg

Russelldvt
29th September 2015, 04:22 AM
http://i59.tinypic.com/14w6sdu.jpg

Russelldvt
29th September 2015, 04:23 AM
http://i61.tinypic.com/161xf0i.jpg

Russelldvt
29th September 2015, 04:24 AM
http://i59.tinypic.com/orm9gw.jpg

Russelldvt
29th September 2015, 04:24 AM
http://i60.tinypic.com/2dwgkxy.jpg

Russelldvt
29th September 2015, 04:26 AM
http://i59.tinypic.com/qyddtc.jpg

Russelldvt
29th September 2015, 04:26 AM
http://i60.tinypic.com/2wciakl.jpg

Russelldvt
29th September 2015, 04:28 AM
http://i59.tinypic.com/akfnnp.jpg

Russelldvt
29th September 2015, 04:28 AM
http://i59.tinypic.com/919q92.jpg

Russelldvt
29th September 2015, 04:29 AM
http://i58.tinypic.com/dnbn94.jpg

Russelldvt
29th September 2015, 04:30 AM
http://i60.tinypic.com/28cnabp.jpg

Russelldvt
29th September 2015, 04:31 AM
http://i61.tinypic.com/sdmstk.jpg

Russelldvt
29th September 2015, 04:32 AM
http://i62.tinypic.com/15zrzw2.jpg

Russelldvt
29th September 2015, 04:33 AM
http://i60.tinypic.com/14w9cao.jpg

RAGHAVENDRA
29th September 2015, 06:13 AM
ஒன்றே ஒன்று. ஒரு நல்ல விவாத அரங்கம் என்ற அமைப்பு நிறுவப்படுவதின் நோக்கமே பல்வேறு கருத்துகள் நாகரீகமாக முன்வைக்கப்பட்டு வரம்பு மீறாமல் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படியிருக்க எதிர் கருத்துக்களே வரக்கூடாது என்று சொன்னால் ------ என்ன சொல்வது?


முரளி சார்
எதிர் கருத்தே வரக்கூடாது என்று எங்கே நான் சொன்னேன். ஜனநாயகம் என்று சொல்கிறீர்கள். அந்த அடிப்படையில் தான் நானும் கூறுகிறேன். எப்போது யார் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை கூறினாலும் அதற்கு நான் பதிலளிப்பேன் என்று தானே கூறியுள்ளேன். நடிகர் திலகம் அரசியலில் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிலைநாட்டுவது என் லட்சியம். ஒருவர் ஒரு கருத்தைக் கூறும் போது நான் என் கருத்தைக் கூறுகிறேன். இதை நான் தொடர்ந்து செய்து கொண்டு தானிருப்பேன்.

இதில் எந்தத் தவறுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Ground Reality என்பது நேரத்துக்கு நேரம் மாறுபடும் போலிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் போது மட்டும் Ground Reality கை கொடுக்கவேண்டும். அது 1989க்கு ம்டடுமே பொருந்தும், 1975க்குப் பொருந்தாது போலும். இது என்ன அணுகுமுறையோ..

இது மட்டும் அவரவர் தங்கள் சொந்தக் கருத்தைத் திணிப்பது ஆகாதா...

நடிகர் திலகத்தைக்குறை கூறுவோர் மனம் புண்படக்கூடாது, ஆனால் அவரை ஆதரித்து எழுதுபவர் மனம் புண்பட்டால் கவலையில்லை. இது என்ன தர்மமோ தெரியவில்லை.

RAGHAVENDRA
29th September 2015, 07:00 AM
இந்த திரியின் நெறியாளர் [மாடரேட்டர்] என்ற பதவி என்பது வானளாவிய அதிகாரம் படைத்த பதவியொன்றுமில்லை. யாரையும் நீக்கவோ சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்று உங்களுக்கே நன்றாக தெரியும். இருந்தும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.


நான் அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியே எழுப்பவில்லையே. அப்படி நீக்கினாலும் கவலைப்படமாட்டேன் என்று தானே கூறியுள்ளேன். நீங்கள் ஏன் அதிகாரத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். தாங்கள் கூறுவதைப் பார்த்தால் அப்படி அதிகாரம் இருந்தால் நீக்குவதில் ஆட்சேபணையில்லை என்று தாங்களே கூறுவது போல் தொனிக்கிறதே. அந்த மாதிரி எண்ணம் தங்களுக்கு இருக்காது என்று தான் நிச்சயம் நான் நம்புகிறேன். இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என்பதைத் தான் நான் கூறியிருக்கிறேன்.

RAGHAVENDRA
29th September 2015, 07:35 AM
Happy Birthday Lata Mangeshkar: Interesting moments of her life you may have missed

Chennai: As far as fans of Indian cinema are concerned, Lata Mangeshkar is a name that most certainly needs no introduction at all. Fondly referred to as the ‘Nightingale’ , the National award winning singer is held in high regard by fans, critics and industry insiders alike.
During her highly illustrious career, which spans over as many as seven decades, she has bagged almost every major award and worked with the who’s who of the film fraternity. Today, as Lata celebrates her birthday, we take a quick look at some interesting facets of her life

http://img01.ibnlive.in/ibnlive/uploads/2015/08/lata1.jpg

She is a true survivor: Lata Mangeshkar’s childhood wasn’t exactly a bed of roses. At the tender age of 13, her world was turned upside down when her father passed away because of a heart problem. In the years that followed, she entered the film industry and tried to ensure the financial welfare of her family.
However, despite her musical abilities, Lata’s initial years in the industry were quite difficult
She kickstated her career with a song titled ‘Naachu Yaa Gade’. But as luck would have it the song was never used. Moreover, she was criticized by a noted producer who stated that her voice was extremely weak. Being a true fighter, Lata did not let these setbacks shatter her. On the contrary, she continued honing her skills and the rest as they say is history.
Lata was like a sister to Sivaji Ganesan: Not many may know this but Lata Mangeshkar shared a special bond with Tamil superstar Sivaji Ganesan and considered him be her ‘rakhi’ brother. In fact both the families were very close to one another and met on several occasions. During one such get together Lata told ‘Nadigar Thilagam’ that she wanted to visit the town of Rameshwaram.
Within minutes the actor made the necessary arrangements and proved that her wish was indeed his command. Moreover, on the professional front too Lata and Shivaji collaborated on a few occasions. ‘Didi’ recorded songs for some Hindi films produced by the star in the 1950’s.
She moved Nehru to tears: In 1963, Lata Mangeshkar achieved a rather unique feat when she sang the highly patriotic song ‘Aye Mere Watan Ke Logon’ at a grand event attended by none other than then Indian Prime Minister Jawaharlal Nehru. Despite not being able to rehearse properly owing to music composer C Ramchandra’s packed schedule, she did full justice to the song. In fact such was the impact of her rendition that it left Nehru in tears.
Lata is the public’s choice: In 1994, Lata Mangeshkar once again gave strong proof of her abilities as a singer when her lively rendition of ‘Didi Tera Devar’ from the evergreen classic ‘Hum Aapke Hain Koun’ became an instant hit among classes and masses alike. The following year she won a special Filmfare award on public demand, proving that she was still the “people’s choice”.
The Dilip Kumar connect: When the ‘Nightingale’ first began her career in Hindi films, she found it extremely difficult to pronounce Urdu words correctly and with the right diction. During that difficult time it was the original ‘King Khan’ Dilip Kumar who came to her rescue and pointed out her mistakes. This prompted her to take formal lessons in Urdu. Shortly thereafter, she went to the ‘Madhumati’ star and floored him with her flawless Urdu. This marked the beginning of a long and healthy friendship.


Reproduced from and courtesy: http://www.ibnlive.com/news/movies/happy-birthday-lata-mangeshkar-a-closer-look-at-indian-cinemas-nightingale-1119183.html

RAGHAVENDRA
29th September 2015, 07:45 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/urandaiselvampostrntbd2015_zpswyrom4w1.jpg

Russellbzy
29th September 2015, 08:59 AM
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய முரளி சார்
நான் நடிகர்திலகத்தின் அரசியலை இனி விமர்சிக்க மாட்டேன்! நான் உங்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த மாட்டேன்! என் கருத்துக்கள் எந்தளவுக்கு உண்மை
என்பது அந்த கால அரசியல் கள நிலவரம் நேரில் பார்த்த நம் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்! மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை!
raagavendrar sir சிவந்தமண் விவகாரத்தில் கையில் ஆவணம் இல்லாமல் நான் பதிவிட்டுவிட்டு பின்பு எல்லோரிடமும் ஆவணம் கேட்டு நான் அலைந்ததாக
என்னை இழிவாக பதிவிட்டுள்ளார்! நான் உண்மையை பதிவு செய்தவன்!
நான் சொன்னது உண்மையா பொய்யா? ஆவணம் கேட்டு இவரிடம் நான் பிச்சை கேட்கவில்லையே? என் வாதத்தை நிரூபிதேனா இல்லையா?
மாற்று ரசிகர்களை தூக்கி வைத்து நம் ரசிகர்களை இழிவு படுத்துவது இவரின் தொடர் வாடிக்கை!

டியர் ரவிகிரன் சார்
சிவாஜிக்கு செலவு செய்ததை நான் கூறிய காரணம் நான் அவர் படத்தை மட்டும் பார்த்து விட்டு சென்ற சினிமா ரசிகன் மட்டுமல்ல என்பதை சற்று
அழுத்தமாக சொல்ல மட்டுமே கூறினேன்! என்னை போல செலவு செய்த ரசிகர்கள் தமிழகம் முழுதும் இருந்தனர் என்பது எனக்கும் தெரியும்!
எனக்கு ஒரு சிறு சந்தேகம் நம் அரசியல் விவகாரங்களில் ஏன் தேவையில்லாமல் மாற்று முகாம் ரசிகர்களும் செலவு செய்தனர் , அவர்களும் உழைத்தனர்,
என்று கூறுகிறீர்கள்? அவர்கள் என்ன செய்தால் எனக்கென்ன சார்? மேற்கொண்டு உங்களிடம் விவாதிக்க ஒன்றுமில்லை!
நன்றி !

RAGHAVENDRA
29th September 2015, 09:26 AM
raagavendrar sir சிவந்தமண் விவகாரத்தில் கையில் ஆவணம் இல்லாமல் நான் பதிவிட்டுவிட்டு பின்பு எல்லோரிடமும் ஆவணம் கேட்டு நான் அலைந்ததாக
என்னை இழிவாக பதிவிட்டுள்ளார்! நான் உண்மையை பதிவு செய்தவன்!
நான் சொன்னது உண்மையா பொய்யா? ஆவணம் கேட்டு இவரிடம் நான் பிச்சை கேட்கவில்லையே? என் வாதத்தை நிரூபிதேனா இல்லையா?
மாற்று ரசிகர்களை தூக்கி வைத்து நம் ரசிகர்களை இழிவு படுத்துவது இவரின் தொடர் வாடிக்கை!

நம் ரசிகர்களை நான் எங்கு இழிவு படுத்தினேன். கையில் ஆதாரம் இல்லாமல் எந்த விவாதத்தையும் துவக்காதீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது. நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் அது சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் உண்மை மட்டுமே உள்ளது. அதை எடுத்துச் சொல்லவேண்டியது நம் கடமை. அவருடைய திரைப்பட வசூல் சாதனைகளைப் பொறுத்த மட்டில் அதற்கான ஆதாரங்களை வைத்துத் தான் இந்த யுகத்தில் நாம் வாதிட முடியும். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். திடீரென சொல்லவில்லை. ஒப்பீடு வேண்டாம் என்பதில் எந்தத் தவறுமில்லை. ஆதாரம் பம்மலாரிடமிருந்து கிடைத்த பிறகு தானே தங்களால் நிரூபிக்க முடிந்தது. அதுவுமல்லாமல் தாங்கள் கூறியது ஒன்றும் புதிய விஷயமல்லவே. பல ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பலமுறை விவாதித்து விட்டாகி விட்டது.

இன்னும் சொல்லப்போனால் முரளி சாரின் சாதனை சிகரங்கள் திரியில் எல்லா விஷயமும் ஏற்கெனவே அலசப்ப்டடாகி விட்டது.

இப்போது பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வசூல் விவரங்களும் எப்படிக் கிடைத்தது. அந்தக் காலத்தில் நாங்கள் அவரவர்கள் அவரவர் ஊரில் அலைந்து திரிந்து சேகரித்த வசூல் விவரங்கள் தான் இவையெல்லாம். இதற்கு நானும் உழைத்திருக்கிறேன். என்னைப் போல் ஏராளமான ரசிகர்கள் அந்தக் காலத்தில் திரையரங்கே கதியென்று அன்றாடம் வசூல் விவரங்களை, அரங்கு நிறைவு விவரங்களை, பார்வையாளர் எண்ணிக்கை போன்ற விவரங்களை சேகரித்து வெளியிட்ட தகவல்கள் தான் இன்றைக்கும் பயன்படுகின்றன. அன்றாடம் விநியோகஸ்தர்கள் அலுவலகம் சென்று விவாதித்து விளம்பர வாசகங்கள் உள்ளிட்ட ஆலோசனைகளை அளித்து படத்தை மக்களிடம் இன்னும் பரவலாக கொண்டு சேர்ப்பதற்கு வேண்டிய பணிகளை செய்திருக்கிறோம்.

வசூல் விவரங்களைப் பொறுத்த மட்டில் அவற்றையெல்லாம் திரையரங்குகளில் சென்று சரிபார்க்க இந்த காலத்தில் முடியாது. இதை பல முறை நான் கூறி வருகிறேன். இதற்காகவே ஒப்பீடு வேண்டாம் எனவும் வலியுறுத்தி வருகிறேன். அதே போல அவர்களும் திரையரங்குகளுக்குச் சென்று சேகரித்துத் தான் வசூல் விவரங்களை எழுதியிருக்கிறார்கள். இதில் நம்முடைய படங்களும் அவர்களுடைய படங்களும் மாறி மாறி வசூல் சாதனை புரிந்துள்ளன. இவர்கள் இருவரின் படங்களையும் தாண்டி வேறு படங்களும் வசூல் சாதனை புரிந்துள்ளன. இதையெல்லாம் நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இவற்றிற்கெல்லாம் இன்றைய காலகட்டத்தில் டாக்குமெண்டரி எவிடென்ஸ் எனப்படும் ஆதாரபூர்வமான ஆவணங்கள் கிடைக்கும் வாய்ப்பே இல்லை. தயாரிப்பளாரோ திரையரங்கு உரிமையாளரோ விநியோகஸ்தரோ வசூல் விவரங்களைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தால் மட்டுமே இதையெல்லாம் நிரூபிக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் நாம் இன்னொருவரை நம்பி வாதங்களைத் துவக்க முடியுமா. ஆதாரபூர்வமான ஆவணங்கள் இல்லாமல் எந்த வாதத்தையும் கொண்டு போக முடியாது. மன்ற மலர்கள் அவர்களுடையது நம்பக் தகாதவை என்று நாம் சொன்னால் நம்முடையது நம்பத்தகாதது என்று அவர்கள் சொல்வார்கள். இதை சுட்டிக்காட்டினால் நான் அவர்களை உயர்த்தி நம்மை தாழ்த்துகிறேனாம். இது என்ன லாஜிக்.. புரியவில்லை.

நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை கூறுவது, அல்லது ஒப்பீடு செய்து விவாதம் நடத்துவது இதைத் தவிர இங்கு வேறெதுவும் நடப்பதில்லை.

மிகவும் வேதனையாக உள்ளது.

RAGHAVENDRA
29th September 2015, 09:43 AM
வசூல் பற்றிய விவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. உதாரணத்திற்காக மட்டும் ஒன்றை அளிக்க விரும்புகிறேன்.

சரஸ்வதி சபதம்

சென்னை சாந்தி - 133 நாள் - ரூ. 5,21,067.00
மதரை ஸ்ரீதேவி - 104 நாள் - 2,58,015.85
வேலூர் அப்ஸரா - 69 நாள் - 1,29,609.04
நாகர்கோவில் - பிக்சர் பேலஸ் - 65 - 72,684.21
தாம்பரம் நேஷனல் - 66 - 1,15,240.00

இது அந்தக் காலத்தில் திரையரங்குகளிலிருந்து டிசிஆரிலிருந்து நமது நண்பர்கள் சேகரித்த விவரங்கள். இதையெல்லாம் ஒரு நோட்புக்கில் எழுதி வைத்திருக்கிறேன். இதை யாராவது மறுத்து, இப்போது நிரூபியுங்கள் என்று கூறினால் எவ்வாறு நிரூபிப்பது.

ஒரு சில திரையரங்குகள் இடிக்கப்பட்டுக் கூட இருக்கலாம்.

ஓடிய நாட்களை நிரூபித்து விடலாம். ஆனால் வசூல் விவரங்களை எந்தத் திரையரங்கிலும் தரமாட்டார்கள். அந்தக் காலத்திய கலெக்ஷன் ரிப்போர்ட்டும் இருக்கும் என சொல்ல முடியாது. இது தான் இன்றைய நிலைமை

goldstar
29th September 2015, 09:44 AM
http://i60.tinypic.com/nvo6x1.jpg

தலைவரின் ஞான ஓளி காட்சிகளை
முத்தையன் அவர்களுக்கு நன்றி நன்றி.

RAGHAVENDRA
29th September 2015, 09:52 AM
முத்தையன் சார்
அருமை நண்பர் சதீஷ் அவர்களின் கருத்தை அப்படியே நானும் வழிமொழிகிறேன்.
அந்தோணி அருண் என்ற இரண்டு உயிருள்ள கதாபாத்திரங்களை உலவ விட்ட அந்த உன்னதக் கலைஞனின் அற்புதக் காட்சிகளை இங்கே நிழற்படங்களாகப் பகிர்ந்து கொண்டு வேதனைப்பட்டிருக்கும் என்னைப் போன்ற தீவிரமான உண்மையான பல சிவாஜி ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்து குளிர்விக்கச் செய்துள்ளீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

vasudevan31355
29th September 2015, 10:23 AM
முத்தையன் அம்மு சார்,

'ஞான ஒளி' நிழற்படங்கள் அருமை. பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன். பாராட்டுக்கள்.

http://images.mentalfloss.com/sites/default/files/styles/insert_main_wide_image/public/istock_000002987604_small.jpg

http://www.gamecity.ch/wp-content/uploads/2012/12/Super-Mario.png

Russellsmd
29th September 2015, 01:25 PM
விரைவில்...

http://i1258.photobucket.com/albums/ii524/viki1591/PicsArt_09-28-12.52.08_zpshunddvrm.jpg (http://s1258.photobucket.com/user/viki1591/media/PicsArt_09-28-12.52.08_zpshunddvrm.jpg.html)

adiram
29th September 2015, 02:15 PM
ராகவேந்தர் சார்,

இது உங்களிடம் எதிர்பார்த்ததுதான். நடிகர்த்திலகத்துக்காக (திரைப்படங்களின் வெற்றிக்காகவும் அரசியலுக்காகவும்) அந்தரங்க சுத்தியோடு உழைத்த ரசிகர்கள் / தொண்டர்கள் தங்கள் மனம் ஆற்றாமையால் சில கருத்துக்களை வெளியிடும்போது உடனே குதித்து வந்து வாதம் செய்யும் நீங்கள், மாற்றுத்திரி நண்பர்கள் நடிகர்திலகத்தை மிகவும் மட்டமாக பேசும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறீர்களே அது ஏன்?. உங்கள் நடிகர்திலக விசுவாசம் அப்போ எங்கே போயிற்று?.

உதாரணமாக, அங்குள்ள நண்பர் ஒருவர் "நடிகர்திலகம் ஒரு வார்டு கவுன்சிலராக ஆகக்கூட லாயக்கில்லாதவர்" என்று கேலி பேசியபோது வெகுண்டெழுந்தீர்களா?. இல்லையே. ஏன்?.

அந்த திரியின் இன்னொரு நண்பர், (நடிகர்திலகத்துக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது) "பி.யு.சின்னப்பா முதல் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வரை அனைத்து நடிகர்களுக்கும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கும்போது சிவாஜிக்கு மட்டும் ஏன் கட்டவில்லை?" என்று குத்தலாக கேட்டாரே. (அதாவது அவர்களைப்போல இவரும் ஒரு நடிகர்தானாம்) அப்போது உங்கள் வீரம் கொப்பளிக்கவில்லையே. நம் திரியின் மற்ற நண்பர்கள் மாற்றுத்திரிக்கு பதிலடி கொடுத்தபோது நீங்கள் மட்டும் மௌனியாக இருந்தது ஏன்?.

அவர்களால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட 'கண்ணிய காவலர்', 'அன்பாளர்', 'பண்பாளர்' போன்ற பட்டங்கள் பறிபோய்விடும் என்ற பயமா?.

அப்போது உங்கள் நடிகர்திலக விசுவாசம் எங்கே போயிற்று?. நானும், திருச்சி பாஸ்கர் அவர்களும் எங்கள் ஆதங்கத்தை வெளியிடும்போது மட்டும்தான் உங்கள் வீரம் தலைதூக்குமா?.

Russellxor
29th September 2015, 04:51 PM
காமராஜர் கூறியது

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443525366814_zpspivaavro.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443525366814_zpspivaavro.jpg.html)

Russellxor
29th September 2015, 07:04 PM
முதன் முறையாக ரசிகர்களுக்கு சிவாஜி விருது

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 87வது பிறந்த நாள் வருகிற அக்டோபர் முதல் தேதி வருகிறது. அன்றைய தினம் சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் சிவாஜி விருது வழங்கும் விழா நடக்கிறது. திரையுலகில் சாதித்த சாதனையாளர்களுக்கு சிவாஜி விருது வழங்கப்படும். இந்த ஆண்டு சிவாஜி விருது அவரின் மூத்த தீவிர ரசிகர்கள் இருவருக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் சென்னையை சேர்ந்த டி.வி.சந்திரசேகரன், இன்னொருவர் பெங்ளூரைச் சேர்ந்த மா.நட்ராஜ். இந்தியாவிலேயே ஒரு உயரிய விருது ரசிகர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.


இவர்கள் தவிர இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், நடிகை ஊர்வசி சாரதா, ஒளிப்பதிவாளர் எம்.சி.சேகர், நடிகை குலசகுமாரி, பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, நடிகர் டைபிஸ்ட் கோபு ஆகியோருக்கு சிவாஜி நினைவு பரிசு வழங்கப்படுகிறது. விழாவிற்கு டோஹா வங்கியின் முதன்மை செயல் அதிகாரி ஆர்.சீத்தாரமான் தலைமை தாங்கி விருகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு, துஸ்யந்த் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

Russellxor
29th September 2015, 07:06 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533026893_zpshsrrtvjc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533026893_zpshsrrtvjc.jpg.html)

Russellxor
29th September 2015, 07:07 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533029790_zpslcxfiuwx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533029790_zpslcxfiuwx.jpg.html)

Russellxor
29th September 2015, 07:08 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533032754_zpse1nwo7ts.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533032754_zpse1nwo7ts.jpg.html)

Russellxor
29th September 2015, 07:09 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533035753_zpstko7d7cg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533035753_zpstko7d7cg.jpg.html)

Russellxor
29th September 2015, 07:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533039974_zpsroedf4i1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533039974_zpsroedf4i1.jpg.html)

Russellxor
29th September 2015, 07:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533042783_zpsvvds3nvz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533042783_zpsvvds3nvz.jpg.html)

Russellxor
29th September 2015, 07:13 PM
நடிகர்திலகத்தின் மூத்தமகள் சாந்தியின் திருமணம்
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533261089_zpsohksnujj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533261089_zpsohksnujj.jpg.html)

Russellxor
29th September 2015, 07:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533410519_zpsc2bzpzk5.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533410519_zpsc2bzpzk5.jpg.html)

Russellxor
29th September 2015, 07:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533407436_zpssgzs8i9n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533407436_zpssgzs8i9n.jpg.html)

Russellxor
29th September 2015, 07:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533404570_zpstzbm4amm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533404570_zpstzbm4amm.jpg.html)

Russellxor
29th September 2015, 07:20 PM
ஊட்டி வரை உறவு திரைப்படத்தின் அவுட்டோர் சூட்டிங் ஊட்டியில் நடைபெற்றபோது,
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.அப்போது எடுக்கப்பட்ட போட்டோ
(அன்று மாலை வந்த மாலைமுரசு
பேப்பரில் இருந்து)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533288589_zpsu3hgapr3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533288589_zpsu3hgapr3.jpg.html)

Russellxor
29th September 2015, 07:21 PM
NT birthday celebration photos
Ooty varai uravu shooting time

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533285553_zpsczponiwp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533285553_zpsczponiwp.jpg.html)

Russellxor
29th September 2015, 07:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533278401_zpsy5c2umfd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533278401_zpsy5c2umfd.jpg.html)

Russellxor
29th September 2015, 07:28 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533275068_zpsbbjtxwev.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533275068_zpsbbjtxwev.jpg.html)

Russellxor
29th September 2015, 07:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533506575_zps6ppx1rki.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533506575_zps6ppx1rki.jpg.html)

Russellxor
29th September 2015, 07:32 PM
மேற்கூறிய விழாவில் எடுக்கப்பட்ட மற்றுமொரு போட்டோ

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533503597_zpstgpmrux3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533503597_zpstgpmrux3.jpg.html)

Russellxor
29th September 2015, 07:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533499925_zpsi9jwmgpc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533499925_zpsi9jwmgpc.jpg.html)

Russellxor
29th September 2015, 07:34 PM
??????
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533397941_zpsdzmseygj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533397941_zpsdzmseygj.jpg.html)

Russellxor
29th September 2015, 07:37 PM
சிவாஜி ரசிகன் புத்தகத்தில் இருந்து...

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533264275_zpsbomezgju.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533264275_zpsbomezgju.jpg.html)

Russellxor
29th September 2015, 07:52 PM
இப்படி எல்லாம் கொள்கை கொண்டு அதன்படி நடந்தும் காட்டிய தலைவனுக்கு ரசிகனாக இருப்பது எத்தனைபெருமை?

அரசியலில் தோல்வி (அதுவும் ஒரு தேர்தல்)அதில் என்ன சிறுமை?

அதை வைத்து தோல்வி என்று நாம் எடை போட்டால் ,அதில் என்ன வாய்மை?

திருவையாருக்குத்தானே
அது என்றென்றும்
இழுமை!




http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533495837_zps61iivcd1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533495837_zps61iivcd1.jpg.html)

Russellxor
29th September 2015, 07:55 PM
சிவாஜி ரசிகன்புத்தகத்தில் இருந்து
(01.10.1972 பிறந்த நாள் மலர்
வசந்தமாளிகை அட்டைப்படம்)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533271832_zps8x47ntlk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533271832_zps8x47ntlk.jpg.html)

Russellxor
29th September 2015, 07:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533267314_zpstkoujhr1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533267314_zpstkoujhr1.jpg.html)

Russellxor
29th September 2015, 08:04 PM
சிவந்தமண் பட சூட்டிங்கில் நடிகர்திலகத்தின் விவேகமான.,விரைவான செயலினால் பெரும் ஆபத்திலிருந்து தப்பிய சிலிர்க்க வைக்கும் காட்சி.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Rare%20pictures/FB_IMG_1443533400885_zpso6pmw1b4.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Rare%20pictures/FB_IMG_1443533400885_zpso6pmw1b4.jpg.html)

vasudevan31355
29th September 2015, 08:19 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan119-1-2.jpg

vasudevan31355
29th September 2015, 08:27 PM
//சிவந்தமண் பட சூட்டிங்கில் நடிகர்திலகத்தின் விவேகமான.,விரைவான செயலினால் பெரும் ஆபத்திலிருந்து தப்பிய சிலிர்க்க வைக்கும் காட்சி.//

நம் ரத்தத்தை உறைய வைத்த 'சிவந்தமண்' ஹெலிகாப்டர் காட்சிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0069273.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0128742.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0128842.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0129076.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0129042.jpg

நடிகர் திலகத்தின் அற்புத கண்கொள்ளா போஸ்களில் ஜொலிக்கும் "அன்று சிந்திய ரத்தம்"வீர வசனக் காட்சிகளையும், நடிகர் திலகத்தின் தலையை சில அங்குல இடைவெளிகளில் ஹெலிகாப்டர் உரசியவாறு செல்லும் மயிர்கூச்செறியச் செய்யும் காட்சிகளையும் இப்போது ஒலி- ஒளி வடிவில் கண்டு மெய்சிலிர்க்கலாம்.


https://youtu.be/Gew4yzciSc4

Russellbpw
29th September 2015, 08:44 PM
டியர் ரவிகிரன் சார்
சிவாஜிக்கு செலவு செய்ததை நான் கூறிய காரணம் நான் அவர் படத்தை மட்டும் பார்த்து விட்டு சென்ற சினிமா ரசிகன் மட்டுமல்ல என்பதை சற்று
அழுத்தமாக சொல்ல மட்டுமே கூறினேன்! என்னை போல செலவு செய்த ரசிகர்கள் தமிழகம் முழுதும் இருந்தனர் என்பது எனக்கும் தெரியும்!
எனக்கு ஒரு சிறு சந்தேகம் நம் அரசியல் விவகாரங்களில் ஏன் தேவையில்லாமல் மாற்று முகாம் ரசிகர்களும் செலவு செய்தனர் , அவர்களும் உழைத்தனர்,
என்று கூறுகிறீர்கள்? அவர்கள் என்ன செய்தால் எனக்கென்ன சார்? மேற்கொண்டு உங்களிடம் விவாதிக்க ஒன்றுமில்லை!
நன்றி !

Dear Sir,

சிவாஜிக்கு செலவு செய்ததை நான் கூறிய காரணம் நான் அவர் படத்தை மட்டும் பார்த்து விட்டு சென்ற சினிமா ரசிகன் மட்டுமல்ல என்பதை சற்று அழுத்தமாக சொல்ல மட்டுமே கூறினேன்! - The same way I also mentioned that is all sir ! Like you, I think I also have the right to defend isnt it ?

நம் அரசியல் விவகாரங்களில் ஏன் தேவையில்லாமல் மாற்று முகாம் ரசிகர்களும் செலவு செய்தனர் , அவர்களும் உழைத்தனர்,
என்று கூறுகிறீர்கள்? அவர்கள் என்ன செய்தால் எனக்கென்ன சார்? - I did not refer to their spending for any other election contested by AIADMK. I was referring to Mrs. JANAGI factor and their spending during our Nadigar Thilagam Alliance period ONLY


Why are you always taking it in wrong side sir ! Anyway, am not interested in this politics debate. am parking my conversation here on this subject.

Regardss
RKS

Russellbzy
29th September 2015, 09:28 PM
அன்பு நண்பர் ஆதிராம் சார் ,
எனக்கு தங்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. இருப்பினும் நம்மை போலவே உணர்வுகள் உள்ளவர் என்று நினைக்கும் போது என்னையும் அறியாமல்
என் மனம் உங்களை விரும்புகிறது! நன்றி சார்! raagavendrar sir சொல்வதை mgr ரசிகர்கள் தான் பொருட்படுத்த வேண்டும்! உண்மையான சிவாஜி ரசிகர்கள்
அவர் எப்படிபட்டவர் என்று நன்றாக புரிந்திருப்பர்! சிவந்தமண் விசயத்தில் நான் எங்கே ஒப்பீடு செய்தேன்? நான் முதல்முதலில் என்ன சொன்னேன்?
சிவந்தமண், நம்நாடு இரண்டும் பெரிய வெற்றிப்படங்கள்! ஆனால் ஒன்பது திரைகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் ஆறு திரைகளில்
100 நாட்கள் ஓடிய நம்நாடு வெற்றிப்படம் என்று பொய் பிரச்சாரம் செய்தனர்! இது தானே நான் கூறியது? இந்த பதிவில் எங்கே வசூல் ஒப்பீடு நான்
செய்தேன்? என் statement உண்மையா? பொய்யா? ஆனால் அவர்கள் ஸ்ரீதர் சொன்னதாக ஒரு உலகமகா பொய்யை அவிழ்த்து 1969 இல் ஆரம்பித்த பொய்யை
2015 லும் தொடர்கதை ஆக்கினார்கள்! அவர்கள் ஸ்ரீதர் சொன்னதாக அவிழ்த்துவிட்ட பொய்யை கண்டிக்க இவருக்கு துப்பில்லை! நான் சொன்னது
தவறு என்கிறார்! இவர் அந்தபக்கம் இருக்க வேண்டியவர்! ஓகே thank u again sir!

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய முரளி சார்
சிவாஜியின் திரை சாதனைகளை நான் நம் ரசிகர்களுக்காக பதியவில்லை! அவர்களுக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும்! மாற்று நண்பர்களுக்கும்
நன்றாக தெரியும்! எனவே அவர்களுக்காகவும் பதிவு செய்யவில்லை! நம் திரியை திரு கமல்ஹாசன், திரு ரஜினிகாந்த் ரசிகர்கள் நிறைய பேர் பார்வைஇடுகிறார்கள்! அவர்களில் பெரும்பாலானவர்கள் நம் சாதனைகளை 1980 க்கு பிறகு அறிந்திருக்கிறார்கள்! ஆனால் 1952 முதல் 1978 வரையான சிவாஜியின் சாதனைகளை அவர்கள் சரியாக அறிந்திருக்கவில்லை! அந்த நண்பர்களும் சிவாஜி தான் அந்த காலகட்டத்தில் உண்மையான சாதனை மன்னன்
என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த விவரங்களை மீண்டும் கூறுகிறேன்! நீங்களும் பம்மலாரும் செய்த பழைய பதிவுகளை
தேடி பிடித்து அந்த ரசிக நண்பர்கள் பார்க்க அதிக வாய்ப்பில்லை! இரண்டு நடந்த விசயங்களை சொல்கிறேன் சார்!
1980 முதல் 1988 வரை திருச்சியில் நாங்கள் மல்லுக்கட்டியது உலகநாயகன்கமல் superstar ரஜினி ரசிகர்களிடம் தான்! அப்போதிருந்து கமல், ரஜினி
ரசிகர்கள் பலரை எனக்கு நன்கு தெரியும்! சென்றவாரம் ஒரு ரஜினி ரசிகநண்பர் என்னை ரோட்டில் சந்தித்தபோது மையம் சிவாஜி திரியில் திருச்சி பாஸ்கர் என்பது நீங்கள் தானே என்று பொதுவாக விசாரித்து விட்டு சிவந்தமண் தோல்விபடம் என்றுதான் நாங்களும் கேள்விபடிருகிறோம் ஆனால் இப்போதுதான்
எங்களுக்கு உண்மை தெரிந்தது! அதுவும் ஒன்பது திரைகளில் 100 நாட்கள் ஓடிய பெரிய ஹிட்படம் என்பது இப்போதுதான் தெரியும் என்று என்னிடம் பேசி
விடை பெற்று சென்றார்கள்! சாதனை விவரங்களை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் சார்! பம்மலார் சார் ஆவணங்களையும் அடிக்கடி மீள்பதிவு
செய்ய வேண்டும் சார்! அப்போது தான் அது அனைவரையும் சென்றடையும் சார்!
இன்னொரு ஆச்சர்ய விஷயம் கோவையில் நம் அன்புக்குரிய ரசிகர் டாக்டர் திரு ரமேஷ்பாபு அவர்கள் வயதில் ரவிகிரன்சார் போல் இளையவர் என்னை
கைபேசியில் தொடர்புகொண்டு சிவந்தமண் ஒன்பது திரைகளில் 100 நாட்கள் ஓடிய விஷயம் நான் சொல்லிதான் தெரியும் என்றுகூறினார்! இதற்கு என்ன
பதில் சொல்கிறீர்கள்? ரமேஷ்பாபு சார் முரளிசார் மற்றும் raagavendrar sir இருவருக்கும் தெரிந்தவர்! அவரிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!
முரளி சார் சிவாஜியின் திரையுலக சாதனைகளையும், அவரின் நன்கொடை போன்ற நல்ல விசயங்களையும் பொதுவான ரசிகர்கள், பொதுமக்கள் அறியும்
படி , அடிக்கடி பதிவிடுங்கள்! என் எண்ணங்களை நீங்களாவது புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
மிக்க நன்றி !

joe
29th September 2015, 09:52 PM
நான் அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியே எழுப்பவில்லையே.
ஓகோ


அப்படி நீக்கினாலும் கவலைப்படமாட்டேன் என்று தானே கூறியுள்ளேன்.
அடேங்கப்பா


நீங்கள் ஏன் அதிகாரத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்.
பரவாயில்லையே


தாங்கள் கூறுவதைப் பார்த்தால் அப்படி அதிகாரம் இருந்தால் நீக்குவதில் ஆட்சேபணையில்லை என்று தாங்களே கூறுவது போல் தொனிக்கிறதே.

அதானே பார்த்தேன்


அந்த மாதிரி எண்ணம் தங்களுக்கு இருக்காது என்று தான் நிச்சயம் நான் நம்புகிறேன்.

அப்பாடா !


இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என்பதைத் தான் நான் கூறியிருக்கிறேன்.

அவ்வ்வ்வ்வ்வ்

joe
29th September 2015, 10:30 PM
நடிகர் திலகத்தின் ரசிகன் என்றாலும் அரசியலில் மாற்றுப்பார்வை கொண்டவன் நான் .நடிகர் திலகம் காங்கிரசில் கோலோச்சிய போது நான் பிறக்கவில்லை அல்லது எனக்கு விபரம் தெரியாது ..அல்லது களம் தெரியாது ..ஆனால் எம்.ஜி,ஆர் மறைவுக்கு பின்னர் நடந்த தேர்தலில் ஓரளவு கள நிலவரம் தெரியும் .. நான் பிறந்த குமரியில் குறிப்பாக என் தொகுதியான நாகர்கோவில் தொகுதி நடிகர் திலகத்தின் கோட்டை , அன்றும் இன்றும் . ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் ..நாகர்கோவில் தொகுதியில் மட்டும் சிவாஜி நின்றிருந்தால் சிவாஜி வெற்றி பெறுவது மட்டுமல்ல , எதிர்த்து நின்றவர்களுக்கு டெப்பாசிட்டே கிடைத்திருக்காது . நாகர்கோவில் தொகுதியில் மக்கள் பரவலாக ஏன் சிவாஜி நம்மூரில் நிற்கவில்லை என பரவலாக பேசிக்கொண்டார்கள் ..இருந்தாலும் தன் சொந்த ஊரில் பாதுகாப்பான இடத்தில் தான் நிற்கிறார் என மக்கள் பேசிக்கொண்டார்கள் ..தேர்தல் நேரத்தில் வந்த ஜீனியர் விகடனில் கூட அவர்கள் சொல்லியிருந்தார்கள் ..233 தொகுதிகளில் தான் முடிவு தெரிய வேண்டும் .. திருவையாறை பொறுத்தவரை சிவாஜி வெற்றி என்பது எழுதப்பட்டது , எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது தான் கேள்வி .. நானும் கூட அதை நம்பினேன் .. என்னுடைய தொகுதியில் நான் திமுக-வை ஆதரித்தேன் .. தலையே போனாலும் திமுக தவிர வேறு கட்சிக்கு ஓட்டு போடுவதில்லை என்பது போன்ற கட்சி அபிமானம் அப்போது எனக்கு உண்டு ..ஆனாலும் ஒரே ஒரு விதிவிலக்கு ..ஒரு வேளை சிவாஜி நாகர்கோவில் தொகுதியில் நின்றிருந்தால் சிவாஜி என்ற அரசியல்வாதிக்காக இல்லாமல் , ஒரு மாபெரும் கலைஞனுக்கு அளிக்கும் அங்கீகாரமாக நிச்சயமாக் கட்சியை மறந்து சிவாஜியை பொது வேட்பாளராக ஆதரிப்பேன் என்பதே என் நிலைப்பாடு ..இதே நிலைப்பாடு கிட்டத்தட்ட எல்லா கட்சி சார்ந்தவர்களுக்கும் நாகர்கோவிலைப் பொறுத்தவரை இருந்தது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் .. எங்கள் ஊரிலேயே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்களே சிவாஜி நிண்ணா அவருக்கு போடாம இருக்க முடியுமா ? எப்பேர் பட்ட கலைஞன் ? என்பதாகவே எண்ணன் இருந்தது .ஆனால் 'மேதைகளும் ஞானிகளும் தங்கள் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்ற பைபிள் வாக்கு காஞ்சிக்கு பிறகு , விருதுநகருக்கு பிறகு திருவையாற்றிலும் பலித்தது .. சிவாஜி நிற்காமலேயே நாகர் கோவில் தொகுதியில் ஜெயலலிதா அதிமுக-வை பின்னுக்கு தள்ளி திமுக-விடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் த.மு.மு வெற்றி வாய்பை இழந்தது . சிவாஜி மட்டும் நாகர்கோவில் தொகுதியில் நின்றிருந்தால் சரித்திரம் மாறியிருக்கும் .. ஒரு தேர்தல் தோலிவியை வைத்து புனையப்பட்ட பிம்பத்தை வைத்து இன்றைய தலைமுறையிடம் சிவாஜி பற்றி எழுப்பப்பட்ட கோணல் பார்வை இருந்திருக்காது .

ஆடிக்காற்றிலே அம்மியும் பறக்கும் என்பது போல அந்தந்த சமயங்களில் மக்களால் வெவ்வேறு காரணங்களா நிராகரிக்கப்பட்ட இடங்களில் சிவாஜி இருக்க நேர்ந்தது அவரின் துரதிருஷ்டம் மட்டுமல்ல , தமிழகத்தின் துரதிருஷ்டமும் கூட .. அத்தகைய நேரங்களில் சரியான் இடங்களில் இருந்தவர்களுக்கு அதன் பலன் போய் சேர்ந்ததில் வியப்பில்லை .

காங்கிரசு என்பது தலைவர்களை மைய்யமாக கொண்டது ..திமுக தொண்டர்களை மைய்யமாக கொண்டு விளங்கியது .இன்றைக்கும் காங்கிரஸ் போன்ற இயக்கங்களில் நாலு பேர் இருந்தால் ஏழு கோஷ்டி .. இதில் பலருக்கு யாருக்கு முக்கியத்துவம் , யார் காலை வாரிவிட்டால் நாம் முக்கியமாக தெரியலாம் என்பதுவே பிரதான நோக்கம் .. அன்றைய திமுக-வில் கிஞ்சித்தும் பிரதிபலன் பாராமல் உழைக்கும் கூட்டம் இருந்தது .இன்றைய அதிமுக , திமுக போல ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் திமுக-வாக இல்லாமல் 'திமுக காரனுக்கு சிங்கிள் டீயும் ஒரு கரித்துண்டும் போதும் தேர்தல் பணிக்கு' என்று காமராசரே சொல்லும் அளவுக்கு வெறித்தனமான உழைப்பு இருந்தது ..ஆனால் காங்கிரசில் அப்படி பட்டோரின் எண்ணிக்கை குறைவே .

சிவாஜியை நான் அரசியலில் ஆதரித்தவன் அல்ல ..காரணம் அவரை எதிர்த்து அல்ல .அவர் இருக்கின்ற இடத்தை என்னால் ஆதரிக்க முடியவில்லை என்பதுவும் , கொள்கைரீதியாக நானிருந்த இடத்தில் அவர் இருக்கவில்லை என்ற எளிய காரணமேயன்றி வேறல்ல .ஆனாலும் பெருந்தலைவரின் விருதுநகர் தோல்வி இன்றும் எனக்கு வருத்தத்தை தருவது போல , திருவையாறில் சிவாஜியின் தோல்வியும் ஆறாத வடு தான் ..காரணம் அரசியல் அலல .. அரசியல் வெற்றி தோல்வியையும் ஒரு மாபெரும் கலைஞனின் மாண்பையும் பிரித்தறிய முடியாத மக்கள் கூட்டத்தில் .. சிவாஜி என்னும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞனை கேலி பேச அது ஒரு முகாந்திரமாகி விட்டதே என்ற வருத்தம் எப்போதும் இருக்கிறது.

RAGHAVENDRA
29th September 2015, 10:56 PM
அன்பு நண்பர் ஆதிராம் சார் ,
எனக்கு தங்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. இருப்பினும் நம்மை போலவே உணர்வுகள் உள்ளவர் என்று நினைக்கும் போது என்னையும் அறியாமல்
என் மனம் உங்களை விரும்புகிறது! நன்றி சார்! raagavendrar sir சொல்வதை mgr ரசிகர்கள் தான் பொருட்படுத்த வேண்டும்! உண்மையான சிவாஜி ரசிகர்கள்
அவர் எப்படிபட்டவர் என்று நன்றாக புரிந்திருப்பர்! சிவந்தமண் விசயத்தில் நான் எங்கே ஒப்பீடு செய்தேன்? நான் முதல்முதலில் என்ன சொன்னேன்?
சிவந்தமண், நம்நாடு இரண்டும் பெரிய வெற்றிப்படங்கள்! ஆனால் ஒன்பது திரைகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் ஆறு திரைகளில்
100 நாட்கள் ஓடிய நம்நாடு வெற்றிப்படம் என்று பொய் பிரச்சாரம் செய்தனர்! இது தானே நான் கூறியது? இந்த பதிவில் எங்கே வசூல் ஒப்பீடு நான்
செய்தேன்? என் statement உண்மையா? பொய்யா? ஆனால் அவர்கள் ஸ்ரீதர் சொன்னதாக ஒரு உலகமகா பொய்யை அவிழ்த்து 1969 இல் ஆரம்பித்த பொய்யை
2015 லும் தொடர்கதை ஆக்கினார்கள்! அவர்கள் ஸ்ரீதர் சொன்னதாக அவிழ்த்துவிட்ட பொய்யை கண்டிக்க இவருக்கு துப்பில்லை! நான் சொன்னது
தவறு என்கிறார்! இவர் அந்தபக்கம் இருக்க வேண்டியவர்! ஓகே thank u again sir!

இது மாற்றுத் திரி சண்டை போட ஆரம்பிக்கப்பட்ட திரியா அல்லது நடிகர் திலகம் புகழ் பாட உள்ள திரியா.. இப்போது சிவந்தமண் நம்நாடு ஒப்பீட்டுக்கு அவசியம் என்ன.. என்னவோ இவர்தான் புதியதாக நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றிச் சொல்வது போலவும் வேறு யாருக்கும் ஒன்றுமே தெரியாதது போலவும் அல்லவா ஒரு தோற்றம் உருவாக்குகிறார். எனக்குத் துப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உங்களுக்கு முழு ஆதரவளிக்கும் முரளியையே கேட்டுப் பார்த்துத்தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சான்றிதழ் தந்து தான் நான் உண்மையான சிவாஜி ரசிகன் என்று யாருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை. நான் என் சுய தம்பட்டத்திற்காக இங்கே எழுதவில்லை. என் அதிமேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ள இத்திரியைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எழுதியதில்லை. நான் மனசாட்சிப்பக்கம் தான் நிற்கிறேன். இதுவரை வந்த பதிவுகளைப் படிப்பவர்கள் தாங்களாகவே யார் எந்தப் பக்கம் என்பதைத் தெரிந்து கொள்வர்.

RAGHAVENDRA
29th September 2015, 11:12 PM
இன்று 29.09.2015 மாலை நமது ரசிகர்களின் மய்யமாம் சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் நமது ஆவணத் திலகம் பம்மலாரின் 2016ம் ஆண்டிற்கான நாட்காட்டி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளையொட்டி சிறப்புடன் வெளியிடப்பட்டது. நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் நம் பார்வைக்கு.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0301_zpsnfhwrx2v.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0300_zpswpqrq9m8.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0302_zps8u3vqs6m.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0299_zpsysvnfyx4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0306_zpsim5vibz5.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0303_zpsgrhb0wvh.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0305_zpssmoiftu2.jpg

RAGHAVENDRA
29th September 2015, 11:14 PM
பம்மலாரின் 2016 நாட்காட்டி வெளியீடு நிழற்படங்கள் தொடர்ச்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0307_zpsr7vzehsj.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0308_zpszopyfnyp.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0304_zps5rqchrxh.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0309_zpsxobzkl5c.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0315_zps586yobgu.jpg

RAGHAVENDRA
29th September 2015, 11:18 PM
பம்மலாரின் 2016 நாட்காட்டி வெளியீடு நிழற்படங்கள் தொடர்ச்சி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0310_zpss05bgg4w.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0319_zpsocnce5io.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0321_zpsuyyjvhnu.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0320_zpsvh9ifnnt.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0318_zps09fxhbly.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0323_zpsigqgbh61.jpg

RAGHAVENDRA
29th September 2015, 11:19 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0324_zpsqy4bekot.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0326_zpsuplsylc0.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0325_zpsqpdi8mjc.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0327_zpsea4kqcsy.jpg

RAGHAVENDRA
29th September 2015, 11:23 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0332_zpsjov4t1c6.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0331_zpscfw9ujxq.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBIRTHDAY2015/Pammalar%20Calendar%20Release/DSCN0333_zpsll8uwj1e.jpg

Russellsmd
29th September 2015, 11:42 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150902230437120_zpsp0dwtk8k.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150902230437120_zpsp0dwtk8k.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk

Russellsmd
29th September 2015, 11:50 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150902225138606_zpsxfrzibx2.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150902225138606_zpsxfrzibx2.jpg.html)

Sent from my GT-S6312 using Tapatalk