PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 17



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

Russellxor
10th January 2016, 05:30 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1452425524198_zpsugbk7kug.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1452425524198_zpsugbk7kug.jpg.html)

Russellxor
10th January 2016, 05:30 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1452425527418_zpsc2ssdwfc.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1452425527418_zpsc2ssdwfc.jpg.html)

Russellxor
10th January 2016, 05:31 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1452425533399_zpsaxo8w2ve.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1452425533399_zpsaxo8w2ve.jpg.html)

Russellxor
10th January 2016, 05:32 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1452425530428_zpsxdzu0sqk.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1452425530428_zpsxdzu0sqk.jpg.html)

Russelldvt
10th January 2016, 06:57 PM
அன்பு நண்பர் சிவாவின் பதிவுகளை வரவேற்கிறேன்..தொடரட்டும் உங்கள் பதிவுகள்..நன்றி..சிவா..


http://i63.tinypic.com/f0dk53.jpg

Russellxor
10th January 2016, 10:40 PM
மதிஒளியில் வந்த ஏவி.எம்.ராஜனின் பேட்டியில் இருந்து http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452444754307_zpsxdnemch3.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452444754307_zpsxdnemch3.jpg.html)

Russellxor
10th January 2016, 10:41 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452444757614_zpsrupqssp6.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452444757614_zpsrupqssp6.jpg.html)

Russellxor
10th January 2016, 10:41 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452444762388_zpsb0kiuh0z.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452444762388_zpsb0kiuh0z.jpg.html)

RAGHAVENDRA
11th January 2016, 12:11 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1003600_1034377633279575_6129002381361768504_n.jpg ?oh=10e805a85b20e00e2c5ebd64197138e6&oe=57454795

தெய்வமகன் படத்துவக்க விழா பூஜையின் போது...

Gopal.s
11th January 2016, 08:22 AM
நடிகர்திலகத்தின் ஜனவரி காவியங்களில் மிக சிறந்த படங்களின் எனது விமரிசனங்கள்.பொங்கலில் இருந்து இரண்டு. குடியரசு தினத்தில் இரண்டு.

Gopal.s
11th January 2016, 08:28 AM
கர்ணன்- 14/1/1964

கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.
.

கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.


குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.

sivaa
11th January 2016, 08:39 AM
கோபால் உங்களுக்கு ஆயுசு 100

sivaa
11th January 2016, 08:40 AM
அன்பு நண்பர் சிவாவின் பதிவுகளை வரவேற்கிறேன்..தொடரட்டும் உங்கள் பதிவுகள்..நன்றி..சிவா..

நன்றி முத்தையன் சார்

sivaa
11th January 2016, 08:46 AM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452444762388_zpsb0kiuh0z.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452444762388_zpsb0kiuh0z.jpg.html)

இவரைத்தானே நடிகர் திலகம் அவர்கள்
நாட்டுக்காக சேவை செய்யவென இராணுவத்தில் இணைத்துவிட்டவர்.
மேலதிக விபரங்கள் நண்பர்கள் யாருக்காவது
தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள்.

Gopal.s
11th January 2016, 09:01 AM
இரும்புத்திரை (iron curtain )- 14/01/1960

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.

நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.

அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.

தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.

இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.

நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?

இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிர்க்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).

ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

Gopal.s
11th January 2016, 09:45 AM
ராஜா-26/01/1972.

சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு (குல்லா), துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.

வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.

சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....

இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.

பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.

என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.

இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.

உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....

பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.

அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.

இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.


முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.

ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.

நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.

பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.

குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.

ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.

அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.

பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.

தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.

சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?

இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.

தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)

இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.

இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.

இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).

Gopal.s
11th January 2016, 10:51 AM
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 26/01/1966

ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.

வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.

ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.

பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
நாளும் வருகிறது.

சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.

மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.

நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.

குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.

supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.

நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).

சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.

மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).

Russellxor
11th January 2016, 05:46 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452513667875_zpsyh3rtkhr.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452513667875_zpsyh3rtkhr.jpg.html)

Russellxor
11th January 2016, 05:46 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452513671239_zpsbskkm0el.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452513671239_zpsbskkm0el.jpg.html)

Russellxor
11th January 2016, 05:47 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452513674413_zpszqfkacid.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452513674413_zpszqfkacid.jpg.html)

Russellxor
11th January 2016, 05:47 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452513677601_zpsu9frx5zs.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452513677601_zpsu9frx5zs.jpg.html)

Russellxor
11th January 2016, 05:48 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1452513683240_zpsi0livazg.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1452513683240_zpsi0livazg.jpg.html)

Russellxor
11th January 2016, 07:14 PM
Facebook http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452519469856_zpsazdzhu7e.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452519469856_zpsazdzhu7e.jpg.html)

Russellxss
11th January 2016, 08:24 PM
http://www.sivajiganesan.in/Images/1911_3.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:24 PM
http://www.sivajiganesan.in/Images/1911_4.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:25 PM
http://www.sivajiganesan.in/Images/1911_5.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:25 PM
http://www.sivajiganesan.in/Images/1911_6.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:31 PM
http://www.sivajiganesan.in/Images/2211_1.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:32 PM
http://www.sivajiganesan.in/Images/2211_2.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:32 PM
http://www.sivajiganesan.in/Images/2211_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:33 PM
http://www.sivajiganesan.in/Images/2211_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:33 PM
http://www.sivajiganesan.in/Images/2911_1.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:34 PM
http://www.sivajiganesan.in/Images/2911_2.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:34 PM
http://www.sivajiganesan.in/Images/2911_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:35 PM
http://www.sivajiganesan.in/Images/2911_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:41 PM
http://www.sivajiganesan.in/Images/110116_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:42 PM
https://youtu.be/sdngHnetKMU

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
11th January 2016, 08:44 PM
1.1.2016 அன்று மதுரை ரமேஷ்பாபு அவர்களின் தந்தையார் அவர்கள் காலமானர். தகவல் அறிந்த அன்னை இல்லத்தின் புகழ் காக்கும் இனளயதிலகம் பிரபு அவர்கள் 2.1.2016 அன்று கைபேசியில் தொடர்பு கொண்டு ரமேஷ்பாபு அவர்களிடம் துக்கம் விசாரித்ததோடு ஆறுதலும் சொல்லியுள்ளார்.
ஒரு ரசிகரின் சோகத்தில் பங்கெடுத்து அவருக்கு ஆறுதல் கூறும் பண்பு இளையதிலகத்திற்கே சொந்தமானது.
இளையதிலகம் பிரபு அவர்களுக்கு சிவாஜிகணேசன்.இன் தனது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.

http://www.sivajiganesan.in/Images/0201_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
11th January 2016, 09:01 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/12507091_1034875846563087_2066072222636251979_n.jp g?oh=c1be58d00860d784777f7c811584410a&oe=57447B34&__gda__=1463502093_8a6d537ddda9ad431f391679965e0d5 8

RAGHAVENDRA
11th January 2016, 09:04 PM
நண்பர் ரமேஷ் பாபு அவர்களின் தந்தையார் மறைவு செய்தி மிகவும் துயரூட்டுகிறது. இந்தப் பெருந்துயரைத் தாங்கும் மன வலிமையை இறைவன் அவருக்குத் தர வேண்டும் எனவும் அன்னாருடைய ஆன்மா சாந்தியடையவேண்டும் எனவும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

RAGHAVENDRA
12th January 2016, 07:06 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/DEIVAMAGANCOLLAGE01fw_zpsfdelpn0a.jpg

தெய்வமகன் - தற்போது திரைப்படப் பட்டியல் திரியில்... (http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1280611&viewfull=1#post1280611)

Gopal.s
12th January 2016, 07:29 AM
சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .

நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.

1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.

1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.

அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.

இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?

1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).

Gopal.s
12th January 2016, 10:11 AM
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி ,கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )

தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.

போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?

Russellxor
12th January 2016, 04:49 PM
Courtesy :facebook

பதிவு
சுஜாதா , “தமிழ் சினிமாவின் அபத்தங்கள்” பற்றி எழுதிய ஒரு விஷயம் , தற்செயலாக கண்ணில் பட்டது....
அந்த சுவாரஸ்யம் ...இதோ சுஜாதாவின் வார்த்தைகளில் ...

# “ 'ராஜராஜசோழன்' ...சிவாஜி நடிக்கும் தமிழ்ப்படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்ராசில் தஞ்சைக் கோயிலையும் , நந்தியையும் செட் அமைத்துப் பிடித்திருக்கிறார்களாம். இதைவிட .......த்தனமான காரியம் இருக்க முடியாது...”

# “இதைவிட ........த்தனமான காரியம்” என்று “பீப்” போல ஒரு இடைவெளி விட்டிருக்கிறாரே ...
அந்த இடத்தில் என்ன எழுத நினைத்திருப்பார் சுஜாதா..?

சரி... அதை விடுங்கள்...
தொடர்ந்து சுஜாதா எழுதுகிறார் , இப்படி :
“மேனாட்டில் சரித்திரப்படம் எடுப்பவர்கள் ஆயிரம் மைல் கடந்து சரித்திரம் நடந்த இடத்துக்குச் சென்று பிடிப்பார்கள்....இருநூறு மைலில் இருக்கும் தஞ்சாவூர்... அங்கே செல்லவில்லை.... அதற்குக் காரணம் தஞ்சைக் கோயிலில் இன்று இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களும், கம்பிகளும் நியான் விளக்குகளும் என்று சொல்லப்படுகிறது.... செட் அமைக்கச் செலவிட்ட பணத்தில் பத்தில் ஒரு பங்கு செலவழித்து அந்த உறுத்தும் விளக்குகளையும், கம்பங்களையும் அகற்றிவிட்டு படம் எடுத்துவிட்டு மறுபடி அவற்றை அமைத்திருக்கலாம்.”

# இந்த இடத்தில்தான் சுஜாதாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...
பக்தர்கள் வராத பாழடைந்த கோவில் என்றால் சுஜாதா சொல்வது போல படம் எடுக்கலாம்...
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் , உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களையும் , கம்பிகளையும் , நியான் விளக்குகளையும் எப்படி அகற்றுவது..? எத்தனை நாள் அகற்றுவது..?

அப்படியே அகற்றி படப்பிடிப்பு நடத்தினாலும் , அத்தனை நாள் அங்கு வரும் பக்தர்களும் , சுற்றுலாப் பயணிகளும் திண்டாடிப் போய் விட மாட்டார்களா..?
எப்படி இதை எழுதினார் சுஜாதா..?

# இதை சுஜாதாவின் குற்றமாக நான் கருதவில்லை ..!
அவரைக் குறை கூறும் அளவுக்கு அருகதையும் எனக்கு இல்லை..!

# ஆனாலும் நடைமுறை சாத்தியம் இல்லாத இந்த விஷயத்தை சுஜாதா எழுதி இருக்க மாட்டார் என நம்பி , இணையத்தை துணைக்கு அழைத்து தேடிக் கொண்டிருக்கிறேன்...!

என்ன பதில் கிடைக்கப் போகிறது என எனக்கே தெரியவில்லை..!

கருத்துக்ககள்:


" நாயகன்" திரைப்பட இறுதி காட்சியில் .இன்ஸ்பெக்டரின்
இன்னொசன்ட் மகன் வேலுநாயக்கரை கொலை செய்ய
அப்பாவின் பெட்டியை திறப்பான்..
லோடு செய்யப் பட்ட.துப்பாக்கி..ஸ்டார் யூனிஃபார்ம் ..எல்லாம் 20 வருடங்களாக அப்படியே இருக்குமாம்.? காவல்துறையில்
திரும்ப வாங்கவே மாட்டார்களாம்.அதை எடுத்துப்
போய் கொலை செய்வாராமாம்.?!?!
ரோஜாவில் ஒரு கிராமத்துப்பெண்
கணவனை மீட்க கா.,ஷ்.மீ.ரி.ல்..
தனியாக போராடுவாளாமாம்..
அப்பா அம்மா பேசினால் நானே
பார்த்துக் கொள்கிறேன் என்பாளாமாம்..! குசலம் விசாரிக கும் .அவள் அப்பா அம்மா..?
சுஜாதா .மணிரத்ணம் இணைந்த
படங களில் அபத்தங்கள் குவிந்து
கிடக்கும்.,!
சினிமா என்பது நிஜம் மாதிரியே ஆன பொய்.! பொய் போல இருக்க கும் நிஜம்..! காம்ப்ரமைஸ் இருக்கத்தான் செய்யும் ..!
அவரின் நைலான் கயிறு முதல் நாவலில் கூட முடிவு அபத்தம் தான்.,!
குறை சொல்வது எளிது..,
வேறென்ன சொல்ல.....


அவர் கருத்துப்படி தஞ்சை பெரிய கோவில்களில் படத்தை எடுக்க முயற்சிகள் எடுத்திருந்து என்றால் முடிக்க குறைந்தபட்ச 7 முதல் 9 ஆண்டுகள் நீடித்திருக்கும் (அவர் குறிப்பிடும் ஆங்கில படங்கள் போல) அப்போதைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் கால்சீட் வேல்யூவை பார்க்க வேண்டும், ரசிகர்கள் இடையே அங்கு அவ்வளவு சுலபமாக குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்க முடியாத ஒன்று


, But the film didn't fill the cash box. As a fan of Sivaji I felt very bad about it at that time.

கடுமையான மின்வெட்டு,படம் தயாரித்தவரின் விளம்பரம் இது.2 வாரங்கள் 25இலட்சம்.இன்றைய கணக்கில்?



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449658681058_zps94kkkah8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449658681058_zps94kkkah8.jpg.html)

abkhlabhi
12th January 2016, 05:55 PM
இதயம் பேசுகிறது 29/6/1986 இதழில் ரசிகன் பதில்கள் பகுதியில் கேட்ட ஒரு கேள்வியும் ரசிகனின் பதிலும் :

இ. காங்கிரசில் செல்வாக்கு பெற்றவர் - விஜயத்திமாலாவா , சிவாஜியா ?

விமான நிலைய வரவேற்ப்க்கு பெரிய போஸ்டர் போட்டு கொள்ள தெரியாத - ராஜீவ் காந்தியோடு புன்னகையுடன் போஸ் கொடுத்து கொண்டிருக்க தெரியாத சிவாஜியை போய் வைஜயந்தி மாலாயிடம் ஒப்பிடுகிறே .

Russellxor
12th January 2016, 07:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_5_zpsz8tup8vs.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_5_zpsz8tup8vs.jpeg.html)

Russellxor
12th January 2016, 07:29 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_6_zpslytezwel.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_6_zpslytezwel.jpeg.html)

Russellxor
12th January 2016, 07:30 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_4_zpswpwurrun.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_4_zpswpwurrun.jpeg.html)

Russellxor
12th January 2016, 07:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_3_zpsdeqnyfjq.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_3_zpsdeqnyfjq.jpeg.html)

Russellxor
12th January 2016, 07:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_2_zps6enrithq.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_2_zps6enrithq.jpeg.html)

Russellxor
12th January 2016, 08:17 PM
2500 வது பதிவு

தங்கமலை ரகசியம்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20160111_154613_zpskhpiwcut.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20160111_154613_zpskhpiwcut.jpg.html)


அழகாபுரி என்றொரு பேரரசு.அதன் அரசன் ஆதித்தன் .அந்த ராஜ்யத்தின் பாத்தியதைக்கு உட்பட்ட ஒரு சிற்றரசு தான மங்களாபுரி.மங்களாபுரியின் இளவரசியின் பெயர் நந்தினி.ஒரு பேரரசை தன் இஷ்டம் போல் ஆள வேண்டும் என்ற பேராசையுடன் வாழ்ந்து வருபவள்தான் இந்த நந்தினி.
பேரரசரான ஆதித்தன் தனக்கு திருமணம் முடிக்க விரும்பி மங்களாபுரிக்கு வருகை புரிகிறார்.
மங்களாபுரி இளவரசி தன் விருப்பம் நிறைவேறப்போகிறது என்று ஆசையுயுடன் ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறாள்.
அப்பொழுது குறி(ஜோதிடம்) சொல்லும் பெண்ணொருத்தி அந்த இடத்திற்கு வருகிறாள்.அரசகுமாரிக்கு ஜோதிடம் சொல்வதாக கூறுகிறாள்.தான் அரசியாகும் ஆசையில் இருக்கும் நந்தினி குறி சொல்லும் பெண்ணிடம் ஒரு நாடகத்தை நடத்துகிறாள்.அதாவது,தன் தோழி குமுதா என்பவளைஇளவரசி போல் அலங்காரம் செய்து இவள்தான் இளவரசி என்று கூறுகிறாள்.தோழியின் கையை பார்த்து இவளுக்கு அரசியாகும் ஜாதக அமைப்பு இருப்பதாகக்கூற நந்தினியும் தோழிகளும் எள்ளி நகையாடுகின்றனர்.அவர்களின் நகைப்பை பொருட்படுத்தாத குறி சொல்பவள்,தன் வாக்கு தப்பாது அது முற்றிலும் உண்மை என்று கூறி சென்று விடுகிறாள்.
இந்தசமயத்தில்,
மங்களாபுரிக்கு வந்திருக்கும் ஆதித்த மன்னன் யாருக்கும் தெரியாமல் இளவரசியை பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார். குறி சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணின் வாக்கை கேட்டும்,கையை காட்டிக் கொண்டிருக்கும் பெண்ணையும் பார்த்துவிட்டுஅவளே இளவரசி,
அவளைப் பார்த்தாகி விட்டது என்ற மகிழ்ச்சியில்அத்துடன் திரும்பி விடுகிறார்.
திருமண நாள்.
நந்தினி தன் பணிப்பெண் குமுதாமற்றும் தோழிகளுடன் மகிழ்ச்சியுடன் நின்றிருக்கிறாள்.
ஆதித்தன் மாலை சூடும் நேரத்தில் தான் உண்மையான இளவரசி நந்தினி என்பதை அறிகிறான்.சற்றே அதிர்ச்சியடைந்தாலும் தன் மனதில் குமுதாவே நிறைந்திருப்பதால் அவளுக்கே மாலையைச் சூட்டுகிறான். இதனால் நந்தினி ஆவேசமடைகிறாள்.குமுதாவைப் பார்த்து"நான் அமர வேண்டிய சிம்மாசனத்திலே உன்னை ஒரு நாளும் உட்கார விட மாட்டேன் "என்று கோபத்துடன் கூறுகிறாள்.

சிறிது காலம் சென்றதும் ஆதித்தனுக்கும் குமுதாவுக்கும் குந்தை பிறக்கிறது.அந்த குழந்தைக்கு விக்கிரமன் என்று பெயர் சூட்டுகின்றனர்.
மன்னன் ஆதித்தன் விக்கிரமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டவிரும்புகிறார்.அந்த விழாவிற்கு நந்தினியையும் அழைக்குமாறு அரசியான குமுதாகூறுகிறார்.நந்தினியும் விழாவில் கலந்து கொள்வதுடன் அரண்மனையிலேயே தங்கவும் செய்கிறாள்.ஆனால் உள்ளுக்குள் துவேஷம் கொண்டே, பழி வாங்க சந்தர்ப்பம் தேடி காத்துக்கிடக்கிறாள்.இவையெதுவும் தெரியாத குமுதாவும் அவளுடன் நட்புறவுடனும்பாசத்துடனும் பழகி வருகிறாள்.
சமயம் பார்த்து பழி வாங்க காத்துக்கிடக்கும் நந்தினி ஒரு சந்தர்ப்பத்தில் தன் தோழி சுந்தரியின் மூலம் குழந்தை விக்கிரமனை கடத்திச் சென்று காட்டில் விட்டுவிடுகிறார்கள்.

இந்த நேரத்தில் தோழி சுந்தரியின் அண்ணன் மகேந்திரன் நந்தினிக்கு அறிமுகம் ஆகிறான்.அவன் மந்திர தந்திரங்களில் வல்லவன்.நந்தினியும் அவனைக் கொண்டு காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று சந்தோசமடைகிறாள்.
குழந்தை காணாமல் போனாலும் உயிருடன் இருப்பதாக அரண்மனை ஜோதிடர்கள் மூலம் ஆதித்தனுக்கு கூறுகின்றனர்.
மகேந்திரனின் மாய வித்தைகள் மூலம் சில காரியங்களை அரங்கேற்றிக்கொள்ள நந்தினி தலைப்படுகிறாள்.மகேந்திரனோ தனக்கு நந்தினி மாலையிட்டால் அந்தக் காரியங்களுக்கு உடன்படுவதாகக் கூற நந்தினியும் அவனுக்கு இசைகிறாள்.
நந்தினியின் சதித்திட்டத்தின்படி, குழந்தை விக்கிரமன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள வேண்டி ஆதித்தன் தன் மனைவியுடன் தனியாக யாருக்கும் தெரியாமல் சாமியார் வேடமிட்ட மகேந்திரனை நாடிச் செல்கிறான்.மாய குளிகையை பாலில் கலந்து கொடுத்து ஆதித்தனையும் குமுதாவையும் குடிக்கச் சொல்லி மகேந்திரன் கூற,இருவரும் அவ்வாறே செய்கின்றனர்.அந்த மாய குளிகைகள் சாப்பிட்ட எவரையும் எந்த உருவத்திற்கும் மாற்றமுடியும்.ஆதித்தனை முத்துமாலையாய் மகேந்திரன் மாற்றி விடுகிறான்.அதன்பின் மறைவிலிருந்து வெளிப்படும் நந்தினியின் சதியை பார்த்து குமுதா அலறுகிறாள்.குமுதாவை பிச்சைக்காரியாய் நந்தினி மாற்றி விடுகிறாள். முத்துமாலையை எடுத்துக்கொண்டு அழுது புலம்பியபடி பிச்சைக்காரி கோலத்தில் குமுதா வெளியேறுகிறாள்.அதன்பின் அதே மருந்தை தான் அருந்தி மகேந்திரன் மன்னன் ஆதித்தனாக தன்னை மாற்றிக் கொள்கிறான்.

அரண்மனைக்கு ஆதித்தன் உருவத்தில் செல்லும் மகேந்திரன்
அரசி மலையிலிருந்து விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடுகிறான்.நந்தினியின் கட்டளைப்படி அவளை அரசியாக்குகிறான்.

காட்டில் விடப்பட்ட குழந்தை விக்கிரமன் யானைக் கூட்டத்தோடு பழகி யானைக்கூட்டத்தின் ஆதரவிலே வளர்ந்து வருகிறார்.

சில காலம் கழித்து...
ஆதித்தன் உருவத்தில் வாழ்ந்து வரும் மகேந்திரன தன் மகள் அமுதாவோடும் பரிவாரங்களுடனும் காட்டிற்கு வருகிறான்.அங்கே காட்டுவாசி போல் வாழ்ந்து வரும் வளர்ந்த பெரியவரான விக்கிரமனை பார்க்கிறாள்.சிறு வயதில் இருந்தே காட்டில் வளர்ந்து விட்டபடியால் விக்கிரமனுக்கு பேசத் தெரியாது.காட்டுவாசி போல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவரை அமுதாவிற்கு பிடித்துப்போக அரண்மனைக்கு அழைத்து வருகிறாள்.அங்கு விக்கிரமனுக்கு கஜேந்திரன் என்று பெயர் வைத்து கல்வி மற்றும் கலைகளை கற்றுத் தருகிறாள்.இயற்கையிலேயே ராஜ வம்சத்தில் பிறந்த விக்கிரமன் முகத்தில் இப்போது ராஜ களை குடி கொள்கிறது.அமுதா விக்கிரமன் மனம் ஒத்துப் போகிறார்கள்.தந்தை ஆத்தனுக்கு (மகேந்திரன்) இது கௌரவப்பிரச்சினை ஆகிறது.விக்கிரமனை சொல்லால் அவமானப்படுத்த விக்கிரமன் காட்டிற்கே சென்று விடுகிறான்.
அரண்மனையிலிருந்து தப்பிஅமுதா காட்டிற்கு சென்றுவிக்கிரமனிடம் சேர்ந்து கொள்கிறாள்.
தான் ஏன் இப்படி காட்டில் வளர்ந்தோம்,தன் தாய் தந்தையர் என்னவாயினர்?என்ற கேள்விகள் விக்கிரமனை உந்தித்தள்ள அதற்கான விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும்என்ற எண்ணத்தில் இருவரும் நாட்டிற்குள் வருகின்றனர்.
இதே வேளையில் தனியாக இருக்கும் குமுதாவிடம் இருந்து கள்வர்கள் அந்த முத்துமாலையை அபகரித்து சென்றுவிடுகின்றனர்.அதனால் அவள் பைத்தியம் போல் முத்துமாலை.,முத்துமாலை என்று அழுது புலம்பியபடியே தெருக்களில் சுற்றித் திரிகிறாள்.இதைப் பார்க்கும் பாக்கியமும்? விக்கிரமனுக்கும் அமுதாவிற்கும் கிடைக்கிறது.அவள் மேல் பரிதாபப்பட்டு அவளிடம் கருணை கொள்கின்றர்.பின் வந்த வேலையின் முதல் கட்டமாய் ஒரு கடைக்குச் சென்று அமுதா ததன் நகைககளை விற்று பணமாக்குகிறாள்.அந்தக் கடையில் அப்போதுதான் சற்று நேரத்திற்கு முன் குமுதாவிடம் திருடிய முத்துமாலையை கள்வர்கள் விற்றுச் சென்றுள்ளனர்.அந்த முத்துமாலையை அங்கே விக்கிரமன் பார்த்து ஆசைப்பட அமுதா அதை வாங்கி அவர் கழுத்தில் கழுத்தில் அணிவிக்கிறாள்.
தெருவில் முத்துமாலையை அணிந்து நடந்து வரும் விக்கிரமனை பார்க்கும் குமுதா அந்த முத்துமாலையை எடுக்க விக்கிரமனை பின் தொடர்கிறாள்.

பின்னர் இரவாகிபட்டபடியால் ஒரு சத்திரத்தில் அவர்கள் இருவரும் தங்குகின்றனர்.சத்திரத்தில் விக்கிரமன் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் குமுதா முத்துமாலையை எடுக்க முயற்சிக்க விழித்துக்கொள்ளும் விக்கிரமன் இருட்டில் அடையாளம் தெரியாமல் கள்வரோ என்று நினைத்து சப்தமிட ,
சத்திரத்து காவலர்களும் ஓடி வர,
அதனால் பயந்து குமுதா மூர்ச்சையாகிறாள்.அவளைப் பார்த்தால் திருட வந்தவள் போல் தெரியவில்லை என்று நினைப்பதுடன்
அவள் மேல் பரிவு கொண்டு உறங்க வைத்து துணைக்கு அமுதாவையும் இருக்க வைக்கிறார்.

அந்த சத்திரம் உஜ்ஜியினி மகாராஜா விக்கிரமாதித்தன் தங்கிய சத்திரம்.விக்கிரமனின் தேஜஸ் அந்த சத்திரத்து தலைவனிடம் மதிப்பை ஏற்படுத்துகிறது.விக்கிரமாதித்தன் தங்கிய அறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான் .நடு இரவில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் விக்கிரமனை ஏதோ சத்தம் எழுப்பி விடுகிறது.ஏதோ பேச்சுக்குரல் போல் இருக்கவே எங்கே இருந்து இந்த பேச்சுக்குரல் வருகிறது என்று பார்க்க அவரை அந்தக் காட்சி பெரிதும் ஆச்சரியப்படுத்துகின்றது.அது என்னவெனில்,கட்டிலின் நான்கு கால்களின் முனையிலே இருக்கும் பதுமைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் காட்சி தான் அது.அதை விட ஆச்சரியம் அந்தப் பதுமைகள் பேசிய தகவல்கள்.விக்கிரமன் எந்த. உண்மைகளை தேடி வந்தாரோ அந்த ரகசியங்களைஅந்த பதுமைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.பைத்தியம் போல் அலைந்து கொண்டிருக்கும் அந்த மூதாட்டி தான் தன் தாயென்றும்,அவர் கழுத்தில் அணிந்திருக்கும் அந்த முத்துமாலைதான் தன் தகப்பனென்றும் கூறுவதுடன் அவற்றிக்கெல்லாம் விமோசனத்தையும்அந்த பதுமைகள் கூறுகின்றன.அந்த ரகசியங்கள்தான் "தங்கமலை ரகசியம்"
என்றும் கூறுகின்றன.வரும் பௌர்ணமிக்குள் விமோசனத்திற்குண்டான வழிமுறைகளை முடிக்க வேண்டும் அப்படி முடிக்க இயலவில்லையென்றால் காலம் காலமாக அவர்கள் அப்படியே இருந்து விட வேண்டியதுதான்
என்றும் பதுமைகள் கூற விக்ரமன்
அதிர்ச்சி அடைகிறார்.

இதற்கிடையில் நந்தினி ஆதித்தனாக நடித்துக்கொண்டிருக்கும் மன்னன் மகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.இவர்களின் சதிகள் மகேந்திரனின் தங்கை சுந்தரியின் மூலம் மந்திரி அறிந்து கொள்கிறார்.சில சாதுர்யமான காரியங்களின் மூலம் மகேந்திரனின் உண்மை உருவத்தை உலகிற்கு காட்டி விடுகிறார்.அவர்களை சிறையில் தள்ளுகிறார்.மகேந்திரன் சிறையில் இருந்து தப்பி விடுகிறான்.

தங்கமலை ரகசியத்தின் படி பச்சைமலை பவளமலை முத்துமலைஆகிய மூன்று மலைகளை கடந்து இறுதியில் தங்கமலையை அடையவேண்டும்.
ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு உபாயங்களை கையாண்டு ஜெயித்தால் மட்டுமே அடுத்த மலைக்கு செல்ல முடியும்.

முதலில் பச்சைமலை.அங்கு சாந்தம் என்ற உபாயத்தை கையாண்டு அங்கு தோன்றும் அரக்கனை சாந்தமாய் அடிபணியவைத்து அடுத்த மலைக்கான வழியை விக்கிரமன் தெரிந்து கொள்கிறார்.
இரண்டாவது பவளமலை.அங்குதானம் என்ற உபாயம்.அங்கு தோன்றும் தேவகன்னியர் விக்கிரமனின் அழகையும் வயதையும் தானமாக பெற்று அடுத்த மலைக்கு வழி காட்டுகின்றனர்.இந்த உபாயத்தினால் விக்கிரன் வயோதிகத்தை அடைந்து விடுகிறார்.
மூன்றாவது முத்துமலை..இங்கு குமுதா பேதம் என்ற உபாயத்தைக்கொண்டு அடுத்த மலைக்கு வழி கேட்டு அதை விக்கிரமனிடம் கூறுகிறாள்.அந்த மலையின் ரகசியத்தை சொன்னால் சொல்பவர்கள் கல்லாக மாறி விடுவர்.அதன்படி விக்கிரமனிடம் ரகசியத்தை சொன்னதும் அமுதா கல்லாகி விடுகிறாள்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்கினாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு தாயையும்,தாரத்தையும் தூக்கிக் கொண்டு கடைசி மலைக்கு முதுமை தோற்றத்துடன்விக்கிரமன் செல்கிறார்.

தங்கமலை
இங்கு வந்ததும் கல்லால் ஆன உடம்பும் மனித தலையும் கொண்ட யோகியை பார்க்கிறார்.யோகியின் இந்த நிலைமைக்கு காரணமும் மகேந்திரன்தான்.யோகியை வணங்கும் விக்கிரமனுக்கு வழி காட்டுகிறார் அவர்.அங்கிருக்கும் மந்திரக்கோலை எடுத்துவந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று யோகி சொல்லஅதை எடுக்க செல்லுகிறார் விக்கிரமன்.இந்த நேரத்தில் அங்கு வந்து விடுகிறான் மகேந்திரன்.விக்கிரமனும் மகேந்திரனும் கடும் சண்டைபுரிகின்றனர். இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதற்கேற்றவாறு விக்கிரமன் அந்த மந்திரக்கோலை தொட்டு சுய உருவம் அடைந்ததுடன் மகேந்திரனையும் வெல்கிறார்.அந்த மந்திரக்கோலை கொண்டு யோகியை மானிட உருவத்திற்கு மாற்ற,யோகி அந்தக்கோலை வாங்கி ,
முத்துமாலையை ஆதித்தனாகவும்,
பிச்சைக்காரி உருவத்தில் இருக்கும் குமுதாவை பழைய தோற்றத்திற்கும்,
கல்லாய் மாறிய அமுதாவை உண்மைத்தோற்றத்திற்கும் மாற்றுகிறார்.பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

*****************சு பம்**********************

விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர்திலகம்.
" நான் அதிகம் பேசாது நடித்த படம்"என்று நடிகர்திலகம் கருத்து தெரிவித்த படம். நடிகர்திலகம் தோன்றும் அந்த ஆரம்ப வன காட்சிகள் டார்ஜான் படத்தை நினைவு படுத்தும்.நடிகர்திலகம் தோன்றும் ஆரம்ப வனக்காட்சிகளை பார்க்கும்போது படம் முழுவதும் அதே டார்ஜான் கதை அமைப்பிலேயே அமைந்திருக்கலாமே என்றுநினைக்கத் தோன்றும்.


படம் ஓடும் நேரம் 3மணி 11விநாடிகள்.நடிகர்திலகத்தின் உருவத்தை நாம் திரையில் பார்க்கும்போது 1மணி 4 விநாடிகள் கடந்திருக்கும்.1மணி 41 விநாடிகள் கடந்தபின்புதான் அவர் பேசும் காட்சியே வரும்.அப்பொழுதும் ஒன்று இரண்டு வார்த்தைகள் தான்.
சரியாக1மணி 50விநாடிகள் 25 நொடிகள் கடந்தபின்புதான் சிங்கத்தின் குரலே ஒலிக்க ஆரம்பிக்கும.ஆனாலும் இந்தப்படத்தில் பேசி நடித்த காட்சிகளைக் காட்டிலும் பேசாமல் நடித்த காட்சிகளில் அவருடைய நடிப்பு மலைக்க வைக்கிறது..காட்டுவாசியாய் அவரின் கோலம் கச்சிதம்.அமுதைப் பொழியும் நிலவே பாடலைத் தொடர்ந்து வரும் சண்டைக்காட்சியில் ராட்சஸத்தனமாய் அவர் நடித்திருக்கும் நடிப்பு பிரமிப்புதான்.அரண்மனையில் சிரித்துக்கொண்டே அவர் செய்யும் ரகளைகள் எல்லாம் அட்டகாசமான நடிப்பு.
காட்டுவாசித் தோற்றத்தில் இருந்து மாறியபின் அவர் முகத்தில் இருக்கும் தேஜஸ் பெரும் சக்கரவர்த்திகளுக்கு கூட இருந்திருக்குமா?என்று யோசிக்கும் வைக்கும் தோற்றம் அவரிடத்திலே காணப்படும்.

முதுமை தோற்றத்திற்கு மாறியபின்பு அந்த தோற்றத்திற்கேற்றவாறு குரலையும் நடையும் வேறுபடுத்தி விடுவார்.நம் கண்களையே நம்மால் நம்ப முடியாத நடிப்பு அது.

பராசக்தி மனோகரா தூக்குத்தூக்கி போன்ற படங்களில் நடித்துஉச்சாணிக்கொம்புக்கு அவர் புகழ் பெற்ற பின்னரும் இது போன்ற படங்களில் துணிந்து நடித்திருப்பது,
நடிப்பு அவருக்கு அடிமை என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.

பத்துக்கும் மேலான பாடல்கள் இருந்தாலும் எப்பொழுதும் அழியாத பாடலாய் "அமுதைப் பொழியும் நிலவே" இருக்கும்.



http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Screenshot_2016-01-09-11-50-12_20160109152311698_20160109152509259_zpsanjcrt1v .jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Screenshot_2016-01-09-11-50-12_20160109152311698_20160109152509259_zpsanjcrt1v .jpg.html)

Russellxor
12th January 2016, 08:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_1_zpsljz4ss1v.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_1_zpsljz4ss1v.jpeg.html)

Harrietlgy
12th January 2016, 08:53 PM
Courtesy You tube.


https://www.youtube.com/watch?v=0zUrf75vtmw

RAGHAVENDRA
12th January 2016, 08:58 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Senthilvel2500grtgsJan2016_zps9s86sc0i.jpg

Gopal.s
13th January 2016, 07:29 AM
Congrats Senthilvel. Enjoying your dedication.Pl.Keep the spirit up.

Russelldvt
13th January 2016, 08:07 AM
2500 பதிவுகளை கடந்த செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..வாழ்க..

Subramaniam Ramajayam
13th January 2016, 08:58 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/design%20photos/magazine_1_zpsljz4ss1v.jpeg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/design%20photos/magazine_1_zpsljz4ss1v.jpeg.html)

congrats senthilvel sir for the unique distinction achived keep it up always
blessings

Gopal.s
13th January 2016, 09:02 AM
My Favourite Muthaiyan,

My advance wishes for your 10,000. Yours is special and liked by all . You are the only worthwhile 10000 Club.

Russellxor
13th January 2016, 11:14 AM
தினத்தந்தி புத்தக மதிப்புரை
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452663662769_zpslg8xgel1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452663662769_zpslg8xgel1.jpg.html)

sankara1970
13th January 2016, 12:06 PM
நேற்று வசந்த மாளிகை அனைத்து பாடல்களையும் பார்த்துவிட்டு தான் உறங்க போனேன்

காலத்தை கடந்த பாடல்கள். ரொமாண்டிக் பேர்.நம் ஸ்டைல் திலகம் ஆடல்கள் அமர்க்களம்

HARISH2619
13th January 2016, 01:23 PM
Dear senthilvel sir,
congrats for your 2500 valuable and rare posts,hope you will post your 25,000th post also with the same enthusiasm

anasiuvawoeh
13th January 2016, 01:45 PM
Dear all.there is always a confusion among people (even in our people) regarding the birthday celebrations and the number of the birthday.
To have clarity if we refer the dictionary for ANNIVERSARY and BIRTHDAY,its given
Anniversary : the day on which an event took place in the previous year.
Birthday : the anniversary of the person"s birth.
To be simple, for a person born on 01.01.2000,01.01.2016 will be his 16th birthday.(2016-2000=16).I think this is just an effort to make our selves to be clear.
Last October 2nd,for Gandhiji"s birth anniversary,the central government was given one number and the state govt was giving another in newspapers.
Peoplwe generally confuse with independence and Republic days which is different from our bitrthdays.Because we 15.08.1947 itself will be first Independence and 26.01.1950 itself first republic day.
thank You all.

RAGHAVENDRA
13th January 2016, 02:32 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/71872_1035779436472728_7058632519191164759_n.jpg?o h=1782f9f4b7c50768afa820462731e58c&oe=574A2783

From Bommai 1969 issue

Russellxor
13th January 2016, 05:46 PM
Courtesy. Facebook


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452687277635_zpshh8c2foj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452687277635_zpshh8c2foj.jpg.html)

Russellsmd
13th January 2016, 06:07 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20160113180020706_zpslln7nwta.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20160113180020706_zpslln7nwta.jpg.html)

Russelldwp
13th January 2016, 06:25 PM
2500 முத்தான பதிவுகளை வழங்கி நடிகர்திலகத்தின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் திரு. செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

Murali Srinivas
13th January 2016, 08:29 PM
செந்தில்வேல்,

பல நாட்களுக்கு முன்பே இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் அமையவில்லை. உங்களின் அன்றைய தின பத்திரிக்கை பதிவுகள் அனைவரையும் போல் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. எனது மகிழ்ச்சிக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது நான் எழுதி வரும் அந்த நாள் ஞாபகம் தொடரில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கு நீங்கள் ஆதாரத்தை பதிவு செய்திருந்தீர்கள்.

1 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா ராமாநாயுடு குழுவினரால் படமாக்கப்பட்டதை குறிப்பிட்டு அது வசந்த மாளிகை ஓடிக் கொண்டிருந்த அரங்குகளில் காண்பிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன் அது காண்பிக்கப்பட்டது என்பதற்கு பத்திரிக்கை விளம்பரங்களை பதிவிட்டதற்கு முதல் நன்றி.

2. அதே 1972 அக்டோபரில் 14-ந் தேதியன்று தவப்புதல்வன் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 50-வது நாளை நிறைவு செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த 50-வது நாள் விளம்பரத்தை பதிவு செய்ததற்கு இரண்டாவது நன்றி.

3. மதுரையில் 1961-ல் சிந்தாமணி அரங்கில் பாசமலர் வெளியான போது தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்தது பற்றி சொல்லியிருந்தேன். அதை பற்றிய நோட்டிஸ்-ஐயும் பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி.

உங்கள் சேவை தொடரட்டும்!

அன்புடன்

Murali Srinivas
13th January 2016, 08:30 PM
ஆதவன் ரவி,

நான் முன்பு ஒரு முறை சொன்னது நினைவிருக்கும் என நினைக்கிறேன். என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை.என்று. இப்போதும் உங்களின் இரு மலர்கள் மற்றும் தாவணிக் கனவுகள் பற்றிய விவரணைகளை படித்தபோது அதுவே மீண்டும் மனதில் தோன்றியது.

இங்கே நமது திரி நண்பர்கள் அனைவருக்கும் ஏன் இந்த திரியுடன் தொடர்ந்து பயணிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் இரு மலர்கள் படத்திற்கு நான் ஒரு ஆயுட்கால ரசிகன் என்று. அப்படி ஒரு படத்தை பற்றிய உங்கள் விவரிப்பு என் மனதை எங்கோ கொண்டு போய் விட்டது. ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அணுகிய விதம், நடிகர் திலகத்தின் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் பதிவு செய்த விதம், அவரை பற்றி மட்டுமல்லாமல் படத்தின் பங்களிப்பாளர்கள் அனைவரையும் பற்றி நீங்கள் எழுதிய விஷயங்கள் படம் பார்த்த அனைவருக்கும் ஒரு புதிய வெளிச்சத்தையும் இதுவரை பார்க்காதவர்களுக்கு இதை இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த படத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தால் மீண்டும் அது ஒரு நீண்ட கட்டுரையாக போய் விடும் என்பதனால் நிறுத்திக் கொள்கிறேன். சென்னையில் விரைவில் இந்த படத்தை வெளியிட அதன் விநியோகஸ்தர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சென்னைக்கு வாருங்கள். நமது வாசுவும் வருவார். நாம் அனைவரும் சேர்ந்து பார்க்கலாம்.

இரு மலர்கள் பற்றியாவது பலருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவதாக நீங்கள் தாவணிக் கனவுகள் பற்றி எழுதியது பலருக்கும் ஆச்சரியம். எனக்கும் சேர்த்துதான்.

அதைப் பற்றிய உங்கள் பதிவுகளை படிக்க படிக்க ஆச்சரியம் கூடியது. காரணம் அந்த படத்தின் தூணாக நடிகர் திலகம் விளங்கியிருப்பார். ஆனால் அந்த performance அதற்கு உரிய அங்கீகாரத்தை பெறவில்லை. அதாவது முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் பேசப்பட்டது போல் இது சிலாகிக்கப்படவில்லை. அதை உணர்த்தும் வண்ணம் உங்கள் பதிவுகள் அமைந்திருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.

இந்த படத்தை எடுத்துக் கொண்டு அலசியதற்கு உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி! திருவிளையாடல் பற்றி சிறப்பு பதிவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! தொடருங்கள்

அன்புடன்

Murali Srinivas
13th January 2016, 08:35 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்த நாளன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக் வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.

வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.

[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].

சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.

எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது

உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.

நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.

ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்

இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
13th January 2016, 09:16 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/1936358_1035931936457478_2575740768828265048_n.jpg ?oh=07e6e1765383b89a802f8f91d4116163&oe=56FD3873

நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Russellsmd
14th January 2016, 12:27 AM
'இரு மலர்கள்' ஏராளமானோருக்கும், எனக்கும்
பிடித்த இனிப்பு மிட்டாய்.

எத்தனை முறையானாலும்
தெவிட்டாத அதன் சுவை,
அந்தச் சுவையால் நான் அடைந்த திருப்தி, நிம்மதி,
இத்தனை சுவையானது
என் நாவில் இருக்கிற பெருமிதம் எல்லாவற்றையும்
எழுதித் தீர்த்தேன்.

முழுசாய் முடித்த பிறகு ஒரு
பயம் என்னைக் கவ்விக் கொண்டது.

"இரு மலர்கள்" என்கிற இந்த
இனிப்புக்கு என்னைப் போல்
எத்தனை விரும்பிகள்?

இனிப்பை வியந்த என் எழுத்து
அத்தனை விரும்பிகளுக்கும்
ஏற்புடையதாயிருக்குமா?

ஏற்கனவே இதே இனிப்பை
ஆழ்ந்து, அனுபவித்து ருசித்த
அவர்களுக்கெல்லாம் எனது
சப்புக் கொட்டல் எரிச்சலைத்
தந்திருக்குமோ?

நிறைய பயங்கள்.

முதன் முதலாய் இந்த பயம்
உடைத்து வாழ்த்திய வாசு சாருக்கு நன்றி சொல்லிப் பேசிய போது கூட, இந்த பயம்
குறித்துச் சொன்னேன்.

மிக நீண்ட இடைவெளிக்குப்
பிறகு திரிக்கு வந்த மாத்திரத்தில், கொஞ்ச நஞ்ச
பயத்தையும் காணாமலடித்து,
என்னை உளமார
வாழ்த்தி மிகவும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.
----------------

சற்று முன்தான் "எதிரொலி"
பார்த்து முடித்தேன்... முரசு
தொலைக்காட்சியில்.

மிகுந்த வேதனையோடு நம்
நடிகர் திலகம் பேசுவதாய்
இதில் ஒரு வசனம் வைத்திருக்கிறார்... இயக்குனர் சிகரம் அமரர் கே.பி.

" இந்த உலகம் பொல்லாததுன்னு எனக்குத்
தெரியும்.ஆனா இவ்வளவு பொல்லாததுன்னு தெரியாது."

"தாவணிக் கனவுகள்" கேப்டன்
பாத்திரத்தைக் கொண்டாடத்
தெரியாத இந்த உலகம் கூட பொல்லாததுதான்.
---------------

மிகச் சரியான புரிதலோடு,
மிகச் சரியான வார்த்தைகளால்
பாராட்டப்படுகிற போது
கிடைக்கிற சந்தோஷம்,
அடுத்ததை எழுதக் கிளம்பும்
பேனாவில் மையாய் நிரம்புகிறது.

--------------------
மிக்க நன்றி...முரளி சார்.

Gopal.s
14th January 2016, 08:03 AM
முரளி,



மிக வருத்தம்,இந்த கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. எப்படி பட்ட பதிவுகள்? என்னை இங்கு இழுத்து வந்த பதிவுகள். இப்போது நீ போடும் பதிவுகள், முரளி என்ற பெயரில் வருவது உனக்கு அவமானம்,எனக்கும் அவமானம். ஏனோதானோ. ஒரு எங்கே நிம்மதி,ஒரு தேவனே என்னை, அட்டகாசமான அரசியல் பதிவுகள்,சுவையான விமர்சன பதிவுகள் தந்த முரளி எங்கே ?

திறந்து வைத்த கோலி சோடா போன்ற இன்றைய சுவையற்ற பதிவுகள் எங்கே? இது போதும் என்கிற கூட்டம் இருக்கும் போது ,மெனக்கெடுவானேன் என்ற எண்ணம் உனக்கு. எழுத்து என்று வரும் போது நானும் எனது சகோதர சகோதரிகளும் கூட மோதுவோம் ,தரமில்லாவிட்டால். உன்னையும் விட போவதில்லை. உன் பெயரை காப்பாற்றி கொள்.

Gopal.s
14th January 2016, 08:14 AM
ஆதவன் ரவி,



உங்கள் அளவு, முரளி அளவு எனக்கு இரு மலர்கள் உவப்பில்லை என்றாலும், சிவாஜி,ரோஜாரமணி இருவரும் அற்புதமான , ஆழமான நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிகொணர்ந்த காட்சிகள்,பாடல்கள் மிக பிடிக்கும்.



நீங்கள் தோய்ந்து எழுதும் முறை அற்புதம். மிக ரசித்தேன். எனது பழைய எண்ணங்களை ஒதுக்கி, இரு மலர்கள்,நெஞ்சிருக்கும் வரை மறு ஆய்வு செய்யும் எண்ணம் உண்டு.



தாவணி கனவுகளை, துணை,முதல் மரியாதை,தேவர் மகன் ரேஞ்சில் சொல்வோர் மூளை பரிசோதனைக்கு உட்படுவது நலம்.

Gopal.s
14th January 2016, 08:21 AM
செந்தில் வேல்,



திரியை சுவையாக்குவதில் ,நீங்களும் ,ஆதவன் ரவியும் முக்கிய பங்களிக்கிறீர்கள்.



உங்கள் ஆவணங்கள் அத்தனை அருமை.

JamesFague
14th January 2016, 09:05 AM
Congrats Mr Senthilvel for reaching another milestone.

Russellsmd
14th January 2016, 09:15 AM
நன்றி.. கோபால் சார்.

மீண்டும்,மீண்டும் என்னை
வாழ்த்துவதற்கு மட்டுமல்ல..
என் காலத்தில் தாங்கள் எழுதப்
போகும் இரு மலர்கள்,
நெஞ்சிருக்கும் வரை ஆய்வுகளுக்காகவும்.

வேறு யாரும் நடித்திருந்தால்
வந்து போயிருக்கக் கூடிய
பாத்திரம்.. தாவணிக் கனவுகள்
பாத்திரம். வாழ்ந்து போயிருக்கிறார் நடிகர் திலகம்.
இன்னும் அது பேசப்பட்டிருக்கலாம் என்கிற
ஆதங்கம் அப்போதிருந்தே
எனக்கிருக்கிறது.

JamesFague
14th January 2016, 09:55 AM
http://tamil.filmibeat.com/heroes/tamil-cinema-best-debut-actors-038420.html?utm_source=article&utm_medium=tweet-button&utm_campaign=article-tweet … #sivajiganesan via @FilmibeatTa

Gopal.s
14th January 2016, 10:38 AM
எனக்கும் ஒரு ஆதங்கம் உண்டு. 76க்கு பிறகு, பழைய சிவாஜியின் சாயலையோ, அந்த உலகிலேயே உயர்ந்து நின்ற திறனையோ ,துளி கூட அப்போது வந்த படங்களில் காணாத போது ,வாழ்க்கை,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் ஆறுதல் தந்தன. அவரது நடிப்பு என்று பார்த்தால் பந்தம்,தீர்ப்பு,ஹிட்லர் உமாநாத்,கருடா சௌக்யமா,நெஞ்சங்கள்,தாம்பத்யம், கீழ்வானம் சிவக்கும்,பரீட்சைக்கு நேரமாச்சு,வெள்ளைரோஜா,திருப்பம் ,தாய்க்கு ஒரு தாலாட்டு ,விடுதலை ஆகிய படங்களில் கூட ஒன்றிரண்டு காட்சிகளில் உலக தரம் வெளிப்படும். ஆனால் படம் நெடுக ,புளித்து போன அலுப்பான வெளிப்படை காட்சிகள்,cliche நடிப்பே அலுக்க வைக்கும்.



பாக்ய ராஜின் யதார்த்த ,இலகுவான பாணி படமாக்கத்தில் சிவாஜி துருத்துவார். ரொம்ப contrived ,cliched and strained ஆக மூடுக்கு பொருந்தாது. ஓட்ட வைத்தது போல இருக்கும். இது சிவாஜி,இயக்குனர் எல்லாருமே கவனித்து சரி செய்திருக்கலாம். ஆனால் சிம்மத்தை வைத்து குரங்காட்டி வித்தை காட்டி கொண்டிருந்த தமிழ் பட உலகில் ,சில்லறைக்காக உலக நடிகன் வளைந்தது நமக்கு நஷ்டமே.

Irene Hastings
14th January 2016, 11:32 AM
நடிகர் திலகம் இனத்தை சேர்ந்த அனைவர்க்கும் வணக்கம் .
திரிக்கு பங்களித்து பல நாட்கள் ஆகின்றன . மன்னிக்கவும்
ஆனால் என் மதிப்புக்குரிய திரு கோபால் இங்கு புத்துணர்ச்சியுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இதை நான் அவரின் ரசிகன் என்ற முறையில் சொல்கிறேன் .
கோபால் ...என்றவுடன் உண்மையான நடிகர் திலகம் பக்தர்களுக்கு உடனே நினைவுக்கு வர வேண்டிய மிக சிறந்த கதா பாத்திரம் ...புதிய பறவை கோபால் ..
உலக தரம் வாய்ந்த இக்காவியம் ஒரு தங்க சுரங்கம் போன்றது. எல்லாம் பொன் பொன் தான் !
நம் திலகத்தின் உடல் மொழி ( body language ) மிகவும் போற்றுதலுக்கு உரியது ..

விரைவில் அடியேன் பகுதி பகுதியாக அவரின் உடல் மொழி மற்றும் படத்தின் சிறப்பு அம்சங்களை எழுத உள்ளேன் ...

தயவு செய்து பொறுமை காக்கவும் நண்பர்களே

பொங்கல் வாழ்த்துக்கள் ...

Gopal.s
14th January 2016, 11:52 AM
Irene ,
Most welcome . My take on Pudiya paravai. Eagerly awaiting your contribution on Body Language.

எழுதியவர்களே ரசிப்பார்கள் என்றாலும் (எழுதுவதே இந்த திருப்தி அடையத்தான்) ,எனக்கே பிடித்த ,என்னுடைய முதல் ஐந்து படங்களுக்குள் இருக்கும் படங்களின் என்னுடைய write -up .உங்கள் பார்வைக்கு மீண்டும்.

What is the Chekhov Technique?

For Chekhov, actors are not here to imitate life but to interpret it, to bring out its hidden meaning to the audience. For this, they must be able to act with ease, bring form and beauty to their creative expressions, and see the big picture so they can convey it in their performance.

Sensitivity of the Body

The actor's body must be trained to be receptive so it can convey creative impulses to the audiences. Through psychological exercises, the actor's body can be developed from the inside. The actor must learn to radiate the inner life of its characters and to create an imaginary center within his body that will allow him to connect to the various energies of many different characters.

Rich Psychology

The actor must penetrate the psychology of its characters. He can train by observing others and figuring out why they act or feel a certain way. Unlike method actors, Michael Chekhov firmly believed that drawing from real feelings from one's life kills inspiration and should be avoided. Creative feelings on the stage come from the actor's ability for compassion.

Creative Imagination

Our creative imagination constantly draws pictures in our mind. We can learn to collaborate with these images by asking questions from them and sometimes ordering them to show us what we are looking for. For example, you can ask your character, "show me how you would approach this part of the scene" and keep asking questions until the answer you get stirs you up emotionally and helps you start to enter the inner life of the character. Once you have a very clear inner vision, you can start incorporating it by copying one aspect of your vision at a time.

Similarly, the actor can use his imagination to create an imaginary body for his character. This allows the actor to really feel like another person and to start exploring his character's reality, movement and speech from the inside.

Atmosphere, quality and sensations

The atmosphere - whether it is happy, sad, calm, hectic, nervous, etc. - has a tremendous impact on the way we act. An actor can create an atmosphere, imagine it "in the air" and submit to it. He can imagine at outer atmosphere for a scene and an inner atmosphere for his character, contrasting them. These atmospheres will permeate his body and psychology when he acts.

Similarly, he can choose to give a quality to his movements. For example, if he chooses to move calmly, the physical sensation that results from his movements will attract similar emotions without any effort at all. This could be called working "from the outside in", except in this acting technique, the actor doesn't fake anything, he just lets atmospheres and sensations inspire his performance.

The Psychological Gesture

Just like we can access our emotions through atmospheres and sensations, we can access the will to pursue objectives through a gesture that encompasses all the needs and wants of the character. The actors starts with his first guess of what the character's main desire may be and from there, develops a gesture with his hand and arm that encompasses this desire. He gradually expands this gesture to the entire body, changing it until he feels satisfied as an artist. The psychological gesture should be strong but not tense, simple but definite, and archetypal in nature.

நான் எந்த பள்ளியை தொட்டாலும், நடிகர் திலகத்துக்குதான் எவ்வளவு பொருந்துகிறது? எந்த படத்தை தொட்டாலும், எல்லா பள்ளிகளிலும் உள்ள salient features என்பது அவரறியாமல் அவர் ரத்தத்திலேயே ஊறிய திறன், எல்லா பாத்திரங்களிலும் அவர் மிக மிக நுண்மையான உளவியல் விஷயங்களை புகுத்தி ,அந்த பாத்திரத்தின், mood ,tone ,body language ,hand -eye coordination , subtle changes in tempo and body position என்று தன் உள் வாங்கிய கதாபாத்திரத்தின் தன்மையை , பார்வையாளர்களுக்கு உணர்வு பூர்வமாக மட்டுமின்றி, அறிவு பூர்வமாகவும் பதிய வைத்தார்.

அவர் உளவியல் பாணியில் அமைந்த உத்தம புத்திரன், புதிய பறவை போன்ற படங்களை விரிவாக அலசுவோம். தயவு செய்து நடிகர்திலகத்துக்காக ஒரு முறை மேற்கண்ட ஆங்கில original chekhov விளக்கங்களை படித்து விட்டு என்னை தொடர்ந்தால் ,உங்களுக்கும் எனக்கும் வேலை சுலபம்.

புதிய பறவை- 1964

தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.

அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.


அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.


லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

Artaud acting techniques.

Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

KCSHEKAR
14th January 2016, 12:41 PM
Dear Senthilvel Sir,

Congratulations for your Valuable 2500 Posts.

Irene Hastings
14th January 2016, 12:51 PM
நண்பர் கோபால் ,
ஐயோ ! நீங்கள் புதிய பறவையை பற்றி எழுதியதை நான் பல முறை படித்துள்ளேன் ..
உண்மையை மனம் விட்டு சொல்ல வேண்டும்.
நீங்கள் ஒரு பேராசிரியர் தொழில் செய்ய வேண்டியவர் ..அது மட்டும் அல்ல ... ஒரு தீவிர கை தேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆகா வேண்டியவர் ..
இறைவன் அந்த அளவிற்கு திறமையை தந்துள்ளான் ..

இங்கு உள்ளவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை அன்றும் , இன்றும் ... இனிமேலாவது உங்களை , உங்கள் திறமையை அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் நம் திலகத்தை பற்றிய எழுத்துக்கள் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் ...

எனக்கு ஒரே ஒரு வருத்தம். திலகம் வாழ்ந்த காலத்தில் உங்களை போன்ற ஒரு ரசிகரோடு அளவலாவினால் எவ்வவளவு உற்சாகம் அடைந்திருப்பார் !

Russelldvt
14th January 2016, 01:16 PM
சிவாஜி பக்தர்களுக்கு என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

http://i68.tinypic.com/2i8ex1.jpg

Russelldvt
14th January 2016, 01:17 PM
http://i64.tinypic.com/125mjc3.jpg

Russelldvt
14th January 2016, 01:19 PM
http://i65.tinypic.com/2luv0pl.jpg

Russelldvt
14th January 2016, 01:20 PM
http://i68.tinypic.com/ip04tz.jpg

Russelldvt
14th January 2016, 01:21 PM
http://i63.tinypic.com/2irrfad.jpg

Russellxor
14th January 2016, 01:29 PM
Face book

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20160114_132430_zpstcetrc2m.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20160114_132430_zpstcetrc2m.jpg.html)

RAGHAVENDRA
14th January 2016, 01:57 PM
முத்தையன்
அபாரம்... பாராட்ட வார்த்தைகளே இல்லை..
ஒவ்வொரு தொகுப்பிலும் குறைந்தது 20 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அதற்கென ஓர் பின்புல நிழற்படத்தைப் பொருத்தி, அவற்றை சரியான நேர்கோட்டில் அமைத்து துல்லியமாக வடிவமைத்துள்ளீர்கள். ஒவ்வொன்றிற்கும் தங்களுடைய பொன்னான நேரமும் உழைப்பும் திறமையும் மிகவும் தேவைப்பட்டிருக்கும். அதிலும் தாங்கள் தொகுத்துள்ளவற்றில் ஒவ்வொன்றிலும் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நிழற்படமும் நெஞ்சை அள்ளுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுடைய தொகுப்பு ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் நேரத்தில் பல பக்கங்களை எழுதி விடலாம். தங்களுடைய உழைப்பிற்கு என் சிரந்தாழ்த்த வணக்கங்கள்.

RAGHAVENDRA
14th January 2016, 02:00 PM
மீண்டும் ஆரம்பம்....?????

Gopal.s
14th January 2016, 02:17 PM
Yes Sir.Never Ending.

KCSHEKAR
14th January 2016, 06:43 PM
நண்பர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Russellbpw
14th January 2016, 06:49 PM
அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்..

அலுவல் வேலைகள் தலைக்கு மேலே இருந்ததால் திரிக்கு பங்களிக்க முடியாமல் போனது...மன்னிக்கவும் ....

முதற்க்கண் அனைவருக்கும் எனது belated புத்தாண்டு வாழ்த்துக்கள். Better late than never என்பதைப்போல !

தை பிறந்தால் வழி பிறக்கும் ! இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

மாற்று திரி நண்பர்கள் திரு எஸ்வி, திரு பேராசிரியர் செல்வகுமார், திரு ரவிச்சந்திரன் திரு யுகேஷ், திரு அக்பர், திரு ராமமூர்த்தி, திரு ராஜ்குமார், திரு சைலேஷ் ஆகியோருக்கும் எனது belated புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

கோவை செந்தில்வேல் அவர்களே....என்னவென்று பாராட்டுவது உங்களை ? வார்த்தைகள் இல்லை ! மிக அறிய பொக்கிஷங்களை தாங்கள் இங்கு அனைவருக்கும் பகிர்ந்துள்ளீர்கள். பதிவு சாதனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நண்பர் முதய்யன் , ராகவேந்தர் சார், முரளி ஸ்ரீநிவாஸ் திரு ஆதவன் ரவி மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் பதிவுகளுக்கும் மற்ற அனைத்திற்கும் !

நீண்டநாள் கழித்து திரு ஐரீன் அவர்கள் வந்துள்ளார். வருக..! திரு கோபால் அவர்கள் பதிவுகளை பற்றி சொல்லத்தேவையே இல்லை. சாமான்யனால் சாமான்யமாக புரிந்துகொள்ள முடியாத பதிவுகள் ! நமது நடிகர் திலகம் நடிப்பு அவர் நடித்த காலங்களில் எப்படி தரத்தில் உலக நடிப்புகளை விட நான்கு படி மேலாக இருந்ததோ அப்படி ! கண்ணதாசன் வாலி பாடல்கள் போல !

ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது - எனது நண்பர் ஒருவர் மிக மிக பிரபல நடிகர் ஒருவரின் மிக சிறந்த நண்பர். என்னை ஒருநாள் அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அந்த நடிகரின் துணைவியார் அவர்களை எனக்கு நன்கு பரிச்சியம் !

வீட்டின் மாடியில் உடல் பயிற்சி செய்து முடித்து படிவழி கிடு கிடு என வந்தவர் சோபாவில் அமர்ந்தார். என்னை அறிமுகபடுத்தினார் நண்பர். புன்னகையுடன் குசலம் விசாரித்தார். தொலைக்காட்சி remote எடுத்து ஒவ்வொரு channel ஆக அவர் தாவிகொண்டிருந்தபோது ஒரு channel இல் நடிகர் திலகம் அவர்களுடைய ஆலயமணி திரைப்படம் முடியும் தருவாயில் இருந்தது !

சிறிது நேரம் அதை இமை மூடாமல் பார்த்தவர்...தீடீரென்று ...அக்காலத்தில் எதற்கு மிகையாக காட்சியை எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார் !

இதனை கேட்டவுடன் நான் உடனே...அவரிடம் ...காட்சியா அல்லது மொத்தமுமா எதை குறிப்பிடுகிறீர்கள் என்று வினா எழுப்பினேன்...! என்னை ஒரு கணம் உற்றுபார்த்த அவர் தலையை சிலுப்பி ஒரு சிரிப்பு சிரித்தார். !

நான் விடாமல் அவரிடம்...சார் நீங்கள் கூறியது மறைமுகமாக nt என்றால் ...எனக்கு ஒரு விஷயம் உள்ளது கூறுவதற்கு என்றேன் !

என்ன என்பதுபோல பார்த்தார் !

உடனே நான் நடிகர் திலகம் அவர்களை பற்றி யோசிப்பதற்கு ஒருவர் குறைந்தது 50 படங்களாவது நடித்திருக்கவேண்டும்...!

அவர் நடிப்பை பற்றி பேச குறைந்தது 150 படங்களாக வித்தியாசமான கதைகலத்தில் நடித்திருக்கவேண்டும் ..!

என்னை பொறுத்தவரையில் திரை உலகில் நடிகர் திலகத்திற்கு அடுத்தது என்று பேசப்படும் நடிகர் கூட இன்றளவில் நடிகர் திலகம் நடிப்பை பற்றி ஆராய பேச இன்னும் பக்குவப்படவில்லை எந்தவிதத்திலும் என்றேன் !

மேலும் நீங்கள் முடிந்தால் அவர் இப்போது மணல்வெளியில் நடக்கிறாரே walking stick வைத்து ..அதே போல ....அல்லது ....அதில் ஒரு 10% நடக்க இங்கு முயன்று பாருங்கள் சார்..உங்களால் நிச்சயமாக நடக்க முடியாது என்றேன் ஆணித்தரமாக !

இதை கூறியவுடன் அவரது கன்னம், காது, மூக்கு இவை அனைத்து செக்க செவேல் என்று ஆயிற்று. மனிதர் கோபம் கொண்டுவிட்டார் நான் கூறியதை கேட்டு ...!

ஒரு கணம் என்னை பார்த்தவர், i think you felt bad about my comment .....am sorry about that ! I second your statement ! என்று கூறி ..கிடு கிடுவென மாடிக்கு சென்றுவிட்டார் அவர் மனைவியிடம் see you dear ...என்று உரைத்தவுடன் !

வேதாளம் முருங்கை மரம் எத்தனை முறை ஏறினால் என்ன , ? பிடித்து இழுத்து முதுகில் கிடத்தும் விக்ரமாதித்த்யன் உள்ளவரை !

இதை இங்கு கூறுவதற்கு காரணம் ...அந்த நடிகரை கூட கேள்வி கேட்டவன் நான் ...புரியவைத்தவன் நான் !

விமர்சனம் என்ற பெயரில் ....nadigar thilagam பற்றி யார் இங்கு மறைமுகமாக வஞ்சபுகழ்ச்சியுடன் எப்படி தாக்கி எழுதினாலும், கிண்டலாக எழுதினாலும் எனது கண்களில் இருந்து அவை தப்ப முடியாது !

அதற்க்கு முதல் பதில் பதிவு என்னுடையதாக தான் இருக்கும் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் !

நடிகர் திலகத்தை பற்றி எழுதுகிறீர்கள் ...எழுதுங்கள்....!

ஆனால் என்னமோ நீங்கள் தான் அனைத்து நடிப்பையும் கரைத்து குடித்தவர் போல எழுதினால் ..................துள்ளி வருகுது வேல் !

rks

Russellxor
14th January 2016, 07:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20160114173201_zpsumxv1yu3.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20160114173201_zpsumxv1yu3.gif.html)

Russellxor
14th January 2016, 07:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20160114165949_zpsvrfcpclb.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20160114165949_zpsvrfcpclb.gif.html)

Russellxor
14th January 2016, 07:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20160114184447_zpsklxofg0h.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20160114184447_zpsklxofg0h.gif.html)

Russellsmd
14th January 2016, 07:18 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160114-WA0004_zpsko56kkum.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160114-WA0004_zpsko56kkum.jpg.html)

Russellxor
14th January 2016, 07:24 PM
பாராட்டு தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Russelldvt
14th January 2016, 07:46 PM
முத்தையன்
அபாரம்... பாராட்ட வார்த்தைகளே இல்லை..
ஒவ்வொரு தொகுப்பிலும் குறைந்தது 20 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அதற்கென ஓர் பின்புல நிழற்படத்தைப் பொருத்தி, அவற்றை சரியான நேர்கோட்டில் அமைத்து துல்லியமாக வடிவமைத்துள்ளீர்கள். ஒவ்வொன்றிற்கும் தங்களுடைய பொன்னான நேரமும் உழைப்பும் திறமையும் மிகவும் தேவைப்பட்டிருக்கும். அதிலும் தாங்கள் தொகுத்துள்ளவற்றில் ஒவ்வொன்றிலும் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நிழற்படமும் நெஞ்சை அள்ளுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுடைய தொகுப்பு ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் நேரத்தில் பல பக்கங்களை எழுதி விடலாம். தங்களுடைய உழைப்பிற்கு என் சிரந்தாழ்த்த வணக்கங்கள்.

இருபெரும் திலகங்களை எனது இரண்டு கண்களாக நினைக்கிறன்..நீங்கள் என்னை பாராட்டியதில் நான் இந்த இருபெரும் திலகங்களின் பதிவுகளுக்கு பட்ட சிரமம் எல்லாம் பறந்தோடிவிட்டது..நன்றி..மிக்க நன்றி..அன்புடன் முத்தையன்..

Russellsmd
14th January 2016, 07:59 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150904201117333_20160114193830685_zpsr qhvmckd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150904201117333_20160114193830685_zpsr qhvmckd.jpg.html)

Harrietlgy
14th January 2016, 08:12 PM
Wish you Happy Pongal to all NT fans.

Harrietlgy
14th January 2016, 08:39 PM
From Mr. Sudhangan face book,
செல்லுலாய்ட் சோழன் –108
ஒரு பாண்டிய மன்னன் ‘ செண்பக மலர்’களால் ஆன மாலையை இறைவனுக்கு சூட்டி வந்தான். அதனால் அந்த மன்னனை ‘செண்பக பாண்டியன்’ என்றே மக்கள் அழைத்தார்கள்.
ஒரு இளவேனிற்கால சமயம்!
வேனிற்கால வெப்பம் தாங்க முடியாமல் இருந்தது!
மாமரங்களில் செந்தளிர்கள் துளிர்த்து சிவந்து இருந்தன.
முள்செருக்கு,செருந்தி, கடம்பு முதலான மரங்கள் பூத்துக்குலுங்கின.
குங்கும மலர்கள் மகர்ந்தத்தை சிந்தி நின்றன.
அவ்வப்போது தவழ்ந்து வரும் தென்றல் வெப்பத்தைத் தணித்ததாம்!
அப்போது அந்த செண்பக பாண்டியன் தன் தேவியோடு செண்பக வனத்திற்கு போய் தங்கி இருந்தான்.
இந்த காட்சியை திருவிளையாடல் படத்தில் வைத்து போது, திருவிளையாடற் புராணம் நன்கறிந்தவர் கவியரசு கண்ணதாசன்,
அவ்வப்போது அங்கே வரும் தென்றல் விஷயம் அவருக்குத் தெரியும்!
அதனால் செண்பக பாண்டியனும், அவன் தேவியும் ஒன்றாக இருக்கும் போது பாடப்படும் பாடலை
‘பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்!
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்! என்கிற பல்லவியோடு பாடலை எழுதினார்.
அப்படியே வீசிய தென்றலிலிருந்து செண்பக பாண்டியனுக்கு ஒரு புது வித மணம் வீசியது!
இந்த புதுவிதமான நறுமணம் இந்த வனத்திலுள்ள மணம் அல்ல!
காற்றிற்கு இயற்கையாக எந்த வித மணமும் கிடையாது! பின் எங்கிருந்து இந்த நறுமணம் வீசுகிறது என்று வியந்தான்!
அந்த சமயத்தில் தன்னருகே இருந்த தன் தேவியைப் பார்த்தான்!
அந்த நறுமணம் தன் தேவியின் கூந்தலிலிருந்து வருவதாக அவன் உணர்ந்தான்!
பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் இருப்பது இயற்கையாகவா அல்லது செயற்கையாகவா ?’ என்கிற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது! அடுத்த நாள் அரசவை கூடியது! ‘சபையோரே! எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது!
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்பதுதான் அந்த சந்தேகம்!
இதை யாராவது அறிந்து அதைக் களைய ஒரு பாடல் எழுதுவார்களேயின் அவருக்கு ஆயிரம் பொற்கிழி பரிசாக கிடைக்கும்’ என்று அறிவித்தான்! அந்த ஊரில் ஆதி சைவன் மரபி பிறந்தவனும், பெற்றோரை இழந்தவனும், பிரம்மசாரியான தருமி என்கிற ஏழைப் புலவன் அந்த ஊரில் இருந்தான். அவன் மன்னனின் அறிவிப்பை கேள்வியுற்றான்!
நேராக சோமசுந்தரர் ஆலயத்திற்கு போனான்!
கடவுளிடம் வேண்டினான்! இதுதான் உண்மையான திருவிளையாடற் புராண சம்பவம்!
அந்த இடத்தில்தான் தன் கற்பனையை புகுத்தினார் இயக்குனரும், எழுத்தாளருமான ஏ.பி. நாகராஜன்!
அவருடைய முதல் வெற்றி அந்த தருமி கதாபாத்திரத்திற்கு நாகேஷைத் தேர்ந்தெடுத்தது!
அதன் விளைவு இந்த ‘தருமி’ கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் நடுவே பெரும் பாதிப்பை இன்று வரையில் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது!
அந்த கதாபாத்திரம் மட்டுமா சிறப்பு!
அந்த பரிசுத் தொகைக்கான தண்டோரவை கேட்டதும் தருமியான நாகேஷ் நேராக கோவிலுக்கு ஓடுவார்!
நேராக அவரை சிவனிடம் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம்! ஆனால் அந்த சோமசுந்தேரேஸ்வரரின் மதுரை ஆலயத்து வனப்பை ரசிகர்களுக்குக் காட்ட தருமி அந்த கோவிலின் நீண்ட பிரகாரத்தில் ஓடுவதாக காட்டியிருப்பார்!
அந்த பிரகாரத்தின் பாங்கு மக்கள் மனதில் பதியவேண்டுமென்பதற்காக அந்த பிரகாரத்திலிருந்து ஒரு விநாயகனை தருமி நாகேஷ் நின்று வணங்குவது மாதிரி காட்டியிருப்பார்!
தருமி அப்படியே ஒவ்வொரு சிற்பங்களையெல்லாம் தாண்டி ஒரு கோயில் கூடத்திற்கு வந்து
‘அப்பா! சொக்கா! அரசன் கொடுக்கிற ஆயிரம் பொன் பரிசும் எனக்கே கிடைக்கிற மாதிரி செய்ய மாட்டியா? உன் காதில விழாதே! மீனாட்சி என்பான் தருமி!
அருகில் போகும் ஒரு பெண் ‘என்னய்யா கூப்பிட்டய்யா ?’ என்பாள்
‘உன்னை யாரும்மா கூப்பிட்டா! போ!’
‘பாத்தியா! பாத்தியா! மீனாட்சி நான் கூப்பிட்டா மத்தவங்க எல்லாரும் திரும்பி பாக்கறாங்க! நீ திரும்ப மாட்டேங்கிறீயே! உணவுக்கு பஞ்சணை மேல் நீ இருக்கும் வேளையிலே! நீ எங்கே தனியாக இருந்தே! நான்முத்து பஞ்சணையில் நாதனுடன் நீ இருக்கும் வேளையிலே! உன் சொல்முத்து சொற்களாலே எந்தன் குறை தீர்க்கச் சொன்னால், உன் வாய் முத்து சிந்திடு நான் வணங்கும் அம்பிகையே! ஐயோ! ஐயோ! ஒரு முத்தா! இரு முத்தா! ஆயிரம் பொன்னாச்சே! இந்த நேரம் பாத்து நமக்கு பாட்டு எழுத வரலே வரலே! என் சந்தேகத்தையே தீக்கறதுக்கு வழி தெரியலை! நான் எப்படி அடுத்தவங்க சந்தேகத்தை தீர்த்து வைப்பேன்! எனக்கில்லை! எனக்கில்லை! எவனோ அடிச்சுக்கிட்டு போகப் போறான்!
தருமி நாகேஷ் புலம்பி தவிப்பார்!
அப்போது சிவனான சிவாஜி வருவார் !
‘ஐயா ‘
‘போய்யா’
‘புலவரே’
‘யார்ய்யா அது ‘
‘அழைத்தது நான் தான்’
‘ஏன் அழைச்சீரு யாருங்க நீங்க ?’
‘சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கூட்டி சுந்தர தமிழினிலே பாட்டிசைத்து செந்தமிழ் கவிபாடும் புலவன் நான்!
‘நம்ம ஜாதியோ! தண்டோரா போட்டதை நீயும் கேட்டுட்டியா ? என் வயித்தில அடிக்கிறதுக்கு வந்திருக்கீங்க அப்போ!
இப்போது சிவன் சிவாஜியை திரும்பி பார்த்து அவரது உடைகளை தொட்டு பார்த்து அப்படியே நின்றபடி சாய்வார்!
மீண்டும் எழுந்து நின்று பிரமிப்போடு விழிப்பார் தருமி! அவர் வாயிலிருந்து புகை கிளம்பும்!
‘நீங்க வசதியுள்ள புலவர் மாதிரி தெரியுது!
‘அப்போது நீர் என்ன /’
‘வுட்டேனே அனல் மூச்சு! அதிலிருந்தே தெரிஞ்சுக்க வேண்டாமா? வேகுதுங்க உள்ள ‘
‘அதனால் தான் ஆண்டவனிடம் முறையிட்டு புலம்பிக்கொண்டிருந்தீரோ!
‘ஆமாம்! ஆமாம்! மனுஷங்கிட்ட சொல்லி ஒரு புண்ணியமுமில்லே! ஆண்டவன் கிட்ட சொல்லித்தான் அழுது புலம்பறதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்!
‘நீர் புலம்பியது எம் காதில் விழுந்தது!
‘சரிதான் ஒளிஞ்சிருந்து ஒட்டுக்கேட்டுக்கிட்டு இருந்திருப்பீங்க!
‘ஒட்டுக்கேட்கும் பழக்கம் எனக்கு இல்லையப்பா! நான் உன் எதிரிலேயே இருந்தேன்’
‘ஒஹோ! நான் கண்ணை மூடிக்கிட்டு நாம் சாமி கும்பிடும்போது நீங்க எதிர வந்து நின்னுரூப்பிங்க! நான் கவனிச்சிருக்கமாட்டேன்’
‘உண்மை! கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் தென்படுவதில்லை’
‘என்னங்க நீங்க கடவுள் மாதிரி பேசறீங்க’
‘அதுவும் உண்மை! நான் முற்றும் கடந்தவன்’
‘கொஞ்சம்வுட்டா நான்தாண்டா கடவுள் விழுந்து கும்பிடுங்கன்னு சொல்வீங்க போலிருக்கே!
‘அதுவும் உண்மை! கடவுள் உன்னிலும் இருக்கிறார்! என்னிலும் இருக்கிறார்! பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனந்தமே ‘ என்று பாடியவனும் உன்னைப் போன்ற ஒரு புலவன் தானே’
அடுத்த சுவாரஸ்யம் துவங்கும்!

RAGHAVENDRA
14th January 2016, 10:09 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/SIVAJIMGRPONGALGRTGS2016FW_zpsbqyrgyi8.jpg

RAGHAVENDRA
15th January 2016, 12:00 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12541045_1036594519724553_8778756212925504009_n.jp g?oh=a0a36ee640a55b904683fa5eb9742738&oe=570EDFC1

eehaiupehazij
15th January 2016, 09:05 AM
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் !
அனைத்துத் திரி நண்பர்களுக்கும் நடிகர்திலகம் திரி சார்ந்த......
கண்கண்ட வாழ வைக்கும் தெய்வம் சூரியனாருக்கு நன்றி நவின்று தமிழர் பெருமை பறைசாற்றும் உழவின் உழவர்களின் மாண்பு நெஞ்சில் நிறைந்திட அறுவடைத் திருநாளாகவும் அடிப்படை விவசாய ஆதாரங்களான மண் மற்றும் நீர்வளம் பேணிக் காத்திடவும் உழவுத்தொழிலில் உணவு அளிப்பதில் மனித இனத்துக்கு உறுதுணை நிற்கும் மாடுகள் மற்றும் ஏனைய சுற்றுச் சூழல் சார்ந்த விலங்கினங்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி நவில்வதில் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூவி நன்றி பகர்வோம்!!

https://www.youtube.com/watch?v=yKrbVSA7VwA

sivaa
15th January 2016, 09:32 AM
அனைத்து மய்ய ம் உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

http://i65.tinypic.com/2vkg2kx.jpg

sivaa
15th January 2016, 09:36 AM
ஆவணப்பதிவுகளை அள்ளிவீசும் செந்தில்வேல் சார்
2500 பதிவுகள் 25000 ஆக உயர வாழ்த்துக்கள்

sivaa
15th January 2016, 09:38 AM
http://i68.tinypic.com/ip04tz.jpg


முத்தையன் சார் பாராட்ட வார்த்தைகள் இல்லை

Russellxss
15th January 2016, 11:14 AM
15.01.2016 உழவர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று பிறந்தநாள் காணும் அன்னை இல்லத்தின் வம்சவிளக்கு, மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்காக்க வந்த இளையதிலகத்தின் குலவிளக்கு, தமிழகத் திரையுலகில் தனிப்பாதை வகுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் வின் ஸ்டார் விக்ரம்பிரபு நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.


http://www.sivajiganesan.in/Images/150116_1.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th January 2016, 11:15 AM
http://www.sivajiganesan.in/Images/150116_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
15th January 2016, 11:16 AM
மக்கள்தலைவரின் பேரனும், நமது தளபதி ராம்குமார் அவர்களின் அருந்தவப்புதல்வன் ஜூனியர் சிவாஜி துஷ்யந்த் அவர்கள் இளையதிலகம் பிரபு அவர்கள் நடிக்க தயாரிக்கும் முதல் படமான மீன்குழம்பும் மண்பானையும் படத்திற்கான போஸ்டர்....

http://www.sivajiganesan.in/Images/150116_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
15th January 2016, 11:58 AM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-9/12509782_904183266365231_698726910258116911_n.jpg? oh=e4dc2b461c96f020cd9a0c996b91d314&oe=57476ACA&__gda__=1459460879_695ed99b839f8d2b2dfc3de734f4fbb 2

Russelldvt
15th January 2016, 12:29 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/SIVAJIMGRPONGALGRTGS2016FW_zpsbqyrgyi8.jpg

நன்றி..சார்..பொங்கல் வாழ்த்துக்களுடன்..

KCSHEKAR
15th January 2016, 02:48 PM
உழவர் மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் உழவைப் போற்றும் பொங்கல் சிறப்புப் பாடல்......

https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag

Murali Srinivas
15th January 2016, 03:18 PM
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

மற்றும்

உழவர் திருநாள் வாழ்த்துகள்!

அன்புடன்

Russellxor
15th January 2016, 07:45 PM
திரு.விக்ரம் பிரபு பிறந்த நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் கருணை இல்லத்தில் கோவை மாவட்ட விக்ரம் பிரபு மாவட்ட தலைவர் சிவாஜி சக்திவேல தலைமையில், சிவாஜி சுரேஷ், சிவாஜி செந்தில்வேல், கோவை பாலாஜி, சிவாஜி L.MW ரவி, சிவாஜி K.N ஆறுமுகம், சிவாஜி சிவா, முத்துகுமார், L.I.C நாகராஜ், பறக்கும் படை ராஜ்குமார், சிவாஜி நாகராஜ் முன்னிலையில்மதிய உணவு வழங்கபட்டது.


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452917270622_zpsftmhwshf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452917270622_zpsftmhwshf.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452917274961_zpscvle13gz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452917274961_zpscvle13gz.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452917263084_zps683bp4or.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452917263084_zps683bp4or.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1452917266366_zpspgbhm1o3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1452917266366_zpspgbhm1o3.jpg.html)

Russellxor
15th January 2016, 08:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1452920065888_zpshizpit8q.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1452920065888_zpshizpit8q.jpg.html)

Russellxor
15th January 2016, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_1452920160798_zpsrypo2bue.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1452920160798_zpsrypo2bue.jpg.html)

Subramaniam Ramajayam
15th January 2016, 11:27 PM
http://www.sivajiganesan.in/images/150116_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

happy pongal greetings to all our hub friends
blessings

KCSHEKAR
16th January 2016, 10:51 AM
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்,
உழவனின் உற்ற நண்பன் காளைகளைப் போற்றுவோம்,

https://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg&feature=youtu.be

RAGHAVENDRA
16th January 2016, 12:29 PM
A few images from Anjal Petti 520 - hilarious wholesome entertainer

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12540762_1037279532989385_8280998364023548047_n.jp g?oh=d31c43636b5b2761b7de42cb2b7e5223&oe=57044081

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12509506_1037279542989384_2760821209169140299_n.jp g?oh=def6a4cbee5f8890c7ff637d08e29cc3&oe=57066D68

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12400753_1037279569656048_3381080133900850675_n.jp g?oh=4c63bbc1eff0c6aae27f674a9a4982b5&oe=57387C68

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12523898_1037279562989382_8760300012532004813_n.jp g?oh=b2b965abfd9942864a0c1fa721208e20&oe=56FDC3E0

RAGHAVENDRA
16th January 2016, 10:07 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12507339_1037560652961273_1420960888804636934_n.jp g?oh=543e9466dbb1ec9730ced16f627686cf&oe=57005A03

A rare still from Irumbuthirai. Courtesy: Ithayakkani Cinema Special.

RAGHAVENDRA
17th January 2016, 07:39 AM
http://lh4.ggpht.com/-aNJLi6M74TY/T6K3OT1sKDI/AAAAAAAAEGo/2QADvQkRIGk/MGR%252520with%252520Sivaji%252520Ganesan_thumb%25 255B3%25255D.jpg?imgmax=800

இன்று எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாளைக் கொண்டாடும் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
17th January 2016, 09:39 AM
இன்று 17.01.2016 பிறந்த நாள் காணும் துஷ்யந்த் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசியுடனும் இறையருளாலும் அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து வாழ்வில் பல்வேறு உயர்வுகளைப் பெற்றிட வாழ்த்துகிறோம்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12552814_1037858929598112_1857832352144713318_n.jp g?oh=3f15dfa6c33c72fdae9039cc591897a5&oe=57382ADE

Russellxss
17th January 2016, 12:49 PM
17.01.2016 காணும் பொங்கல் தினத்தன்று பிறந்தநாள் காணும் அன்னை இல்லத்தின் வம்சவிளக்கு, மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்காக்க வந்த தளபதி ராம்குமார் அவர்களின் அருந்தவப்புதல்வன் ஜூனீிூர் சிவாஜி துஷ்யந்த் அவர்கள் நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/170116_1.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:54 PM
http://www.sivajiganesan.in/Images/3011_2.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:55 PM
http://www.sivajiganesan.in/Images/3011_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:55 PM
http://www.sivajiganesan.in/Images/3011_4.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:56 PM
http://www.sivajiganesan.in/Images/3011_5.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:57 PM
http://www.sivajiganesan.in/Images/1312_1.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:57 PM
http://www.sivajiganesan.in/Images/1312_2.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:58 PM
http://www.sivajiganesan.in/Images/1312_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:58 PM
http://www.sivajiganesan.in/Images/1312_4.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:59 PM
http://www.sivajiganesan.in/Images/2112_4.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 12:59 PM
http://www.sivajiganesan.in/Images/2112_5.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 01:00 PM
http://www.sivajiganesan.in/Images/2112_6.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 01:01 PM
http://www.sivajiganesan.in/Images/2112_8.jpg


சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
17th January 2016, 01:18 PM
விரைவில் டிஜிட்டலில் கலக்க வரும் மக்கள்தலைவர் இருவேடங்களில் நடித்த சிவகாமியின் செல்வன் FIRST LOOK போஸ்டர் உங்கள் பார்வைக்கு....

http://www.sivajiganesan.in/Images/170116_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

RAGHAVENDRA
17th January 2016, 02:50 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11237576_1037943186256353_2869559986561267312_n.jp g?oh=155cc87c65ba467d04daf51239b4730c&oe=570549E1

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரத் விருது தரப்பட்டபோது முதல் ஆளாக முன்னின்று விழா எடுத்தவர் நடிகர் திலகம்.
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உலகம் சுற்றும் வாலிபன் திரையரங்கில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது முதல் ஆளாக தன் சாந்தி திரையரங்கில் திரையிட முன் வந்தவர் நடிகர் திலகம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதன் முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது தான் சார்ந்த காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக அவருக்கு முழு மூச்சுடன் ஒத்துழைப்புத் தந்தவர் நடிகர் திலகம். 1977ல் நடைபெற்ற அந்த பாராளுமன்றத் தேர்தலில், அது வரை எலியும் பூனையுமாக ஊடகங்களால் சித்தரிக்க்ப்பட்டிருந்த இருவரும் ஒன்றாய் அரசியல் மேடையில் தோன்றியது வரலாறு படைத்த நிகழ்வாகும்.
எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி உயிருக்கு போராடியபோது குடும்பத்தோடு ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் மசூதியிலும் குடும்பத்தோடு தொழுது, அவர் குணமடைய இறைவனை வேண்டியவர் நடிகர் திலகம்.
எல்லாவற்றிற்கும் மேலாக எம்.ஜி.ஆர். அவர்கள் தன் கடைசி காலத்தில் அவரிடம் முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைக்க இருந்தார். அது என்னவென்று தெரியாவிட்டாலும், அதனை நாகரீகமாக மறுத்து விட்டார் நடிகர் திலகம். என்றாலும் அவருக்குப் பின் அவருடைய இயக்கத்திற்கு உறுதுணையாக, அவருடைய துணைவியாரும் தன் உடன் பிறவா சகோதரியுமான ஜானகி அம்மையாருக்கு ஆதரவளிப்பதாக எம்.ஜி.ஆரிடம் உறுதியளித்து, அதற்காக தான் பல ஆண்டுகளாக சார்ந்து உழைத்த இயக்கத்தையும் விட்டு வெறியேறி தியாகம் புரிந்தவர் நடிகர் திலகம்.

நட்பு என்பதற்கு உண்மையான சிறந்த அடையாளம் இதுவே.

காணும் நிழற்படம் சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில் நடைபெற்ற காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி பிரச்சார மேடையில் எம்.ஜி.ஆர். அவர்களும் நடிகர் திலகமும் ஒன்றாய் பிரச்சாரம் செய்ய வந்திருந்தபோது எடுத்தது.

நிழற்படம் நன்றி இதயக்கனி சினிமா ஸ்பெஷல் மாத இதழ்.

eehaiupehazij
17th January 2016, 03:30 PM
This whole week we celebrate as the prideful fathers' week!!

தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை


Nothing can ever replace the Mother's love and affection right from the womb till the tomb!!

Fathers on the other hand have the inherent love for their children but in a coherent way with a measured mix of affection as well as strictness so that the children should be groomed in the right track bringing laurels to their parents. The phase of education till employment is taken care by the father without exhibiting his turmoil in earning money through hard work for the ultimate benefit of his children. Quite often the children do not realize the Lion's share of behind curtain difficulties and perils of life a father gets succumbed to in bringing up his wards to the satisfaction of their goals or his dreams coming true!!

The hard working sacrificing father characterisations have been brought to our eyes best exemplified and conceptualized on big screen by the two doyens of Tamil cinema Nadigar Thilagam Sivaji Ganesan (Motor Sundaram Pillai and Vaazhkkai to be more specific) and kaadhal Mannar Gemini Ganesan (Ramu and Vellivizha to be more specific) as down to the earth performances rather than the larger than life depictions as part of histrionics!! We love and respect these two model fathers on screen who taught us the significance of love and respect to our fathers and forefathers too!! We salute the doyens.....with these nostalgia!!

https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4

https://www.youtube.com/watch?v=bceucNMzPLE

https://www.youtube.com/watch?v=Ro1P_zIYWXA

https://www.youtube.com/watch?v=_WayJmgstw0

RAGHAVENDRA
17th January 2016, 07:36 PM
https://image.tmdb.org/t/p/original/4iJZ4w2FTXlsFpshs5bwaqwQZqe.jpg

THEVAR MAGAN - NOW ON MURASU TV...
DON'T MISS

eehaiupehazij
17th January 2016, 08:42 PM
We celebrate this week as Fathers' week!


Kamalhasan joins the ranks and files of Sivaji/Gemini Ganesans in exemplifying the characterization of a father fond of his children and caring for their future, at the cost of hiding the hurdles and hassles a father has to encounter in real life till he puts his wards on the right platform of life after graduation!!

Like Sivaji and Gemini, who have groomed Kamal as his screen Godfathers, kamal too never had an image circle in enacting elderly roles even at his young age!

Godfathers guiding Kamalhaasan!

https://www.youtube.com/watch?v=h8kfABvuJBk

https://www.youtube.com/watch?v=19qmDM1q4Ys

Kamalhaasan flying on his own wings in fatherhood roles!!

https://www.youtube.com/watch?v=FE6sAr5DuJw

Gopal.s
18th January 2016, 08:13 AM
என்னை மிக மிக கவர்ந்த P _R என்ற அதிசய இளைஞனின் அற்புத பதிவு. எனக்கு இந்தியாவின் ஒரே உலக அதிசயம் எழுதும் inspiration கொடுத்த சிறந்த பதிவு.(மார்ச் 2008 பாகம்-4 இல் வெளியானது)

தேவர் மகன்- 1992

மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.

இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.

இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.

இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.


நடிப்பு என்பது என்ன ?

ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:

'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).

இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.

ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது

இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.

இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.

இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )

இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.

காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.

அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)

கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.

எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.

தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.

நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.

தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.

சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.

படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.

பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.

"சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.

வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :

"ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"

"என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
"நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"

இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.

'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.

படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.

புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.

பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.

ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.

தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:

"நீ எப்பிடி செய்வே ?"

"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."

"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.

தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.

"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.

ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.

தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !

----To be continued.

Gopal.s
18th January 2016, 08:15 AM
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி

என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )

இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.

பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.

அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.

அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)

அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.

"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.

"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.

பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....

"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.

சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.

இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"

முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).

"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,

"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.

பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.

பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.

உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.


பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.

வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.

கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.

உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.

பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.

கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?

இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.

சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.

"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.

படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).

கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.

அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.

உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"

"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.

அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.

"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.

என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.

இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.

பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.

---To be continued.

Gopal.s
18th January 2016, 08:17 AM
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி

இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.

ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.

கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

மகன் சாப்பிடவில்லை.

பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.

ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.

ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.

பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.

முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.

இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.

சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.

நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.

நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.

"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"

இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.

"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"

"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.

"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.

"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.

பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.

"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.

ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.

ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"

இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).

தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?

நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே

பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.

தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".

கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.

ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.


பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....

என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.

கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.

"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.

வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.

ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.

இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.

ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.

அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.

(முற்றும்)

RAGHAVENDRA
19th January 2016, 07:40 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12400629_1038919146158757_8490711226312411240_n.jp g?oh=bb790924b512928dbfcfe25762047fc9&oe=57038B70

Russellxor
19th January 2016, 02:23 PM
Delete

Russellxss
19th January 2016, 07:24 PM
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிக்காவியம் பாவமன்னிப்பு 22.01.2016 வெள்ளி முதல் கோவை ராயலில், மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே வரவேற்க தயாராகுங்கள்.....

http://www.sivajiganesan.in/Images/190116_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:32 PM
அன்பு இதயங்களே இது அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வந்த பக்தர்கள் கூட்டமல்ல, கலையுலகின் அழகன் மக்கள்தலைவர் சிவாஜியைக் காண வந்த ( மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாவமன்னிப்பு படத்திற்கு) ரசிகர்கள் கூட்டம்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/21749_807263892691550_6481398772984011516_n.jpg?oh =67224527c52d7d0fe07bdb773be83126&oe=574829DF

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:36 PM
http://www.sivajiganesan.in/Images/1312_5.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:36 PM
http://www.sivajiganesan.in/Images/1312_6.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:37 PM
http://www.sivajiganesan.in/Images/1312_7.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:38 PM
http://www.sivajiganesan.in/Images/1312_8.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:38 PM
http://www.sivajiganesan.in/Images/2112_9.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:39 PM
http://www.sivajiganesan.in/Images/2112_10.jpg

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:40 PM
http://www.sivajiganesan.in/Images/2112_11.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:40 PM
http://www.sivajiganesan.in/Images/2112_12.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 07:48 PM
கண்களில் ரத்தத்தைக் கசிய விட்ட சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்து தலைவரிடத்தில் ஐக்கியமான அமைந்தகரை ரவி அவர்கள் நமது மக்கள்தலைவருக்கு காட்டிய தீப ஆராதனை.
மண்ணில் நிழலுக்குக் காட்டியது போதும் என்று, விண்ணில் நிஜத்திற்கு தீப ஆராதனைக் காட்டச் சென்று விட்டாயா? இதயமே!


https://youtu.be/Uz8IMFDUmxY


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
19th January 2016, 08:16 PM
நீண்ட இடைவெளிக்குப் பின் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 29.01.2016 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போட வருகிறது, மக்கள்தலைவரின் தங்கைக்காக.

http://www.sivajiganesan.in/Images/190116_3.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.

Subramaniam Ramajayam
19th January 2016, 10:36 PM
My deepfelt condolences to comrade ravi's family who left us at this young age

may his soul rest in peace,

Gopal.s
20th January 2016, 07:41 AM
Thanks to Pammalar for his meticulous compilation.


சிவாஜி 83

1. சிவாஜி என்கிற வி.சி.கணேசன் பிறந்த தேதி : 1.10.1928, திங்கட்கிழமை. இந்த தேதியில் விழுப்புரத்தில் மாலை 4:30 மணியளவில் ராஜாமணி அம்மாள் - சின்னையா மன்றாயர் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.

2. தன்னுடைய ஏழாவது அகவையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தில், தனது வீட்டுக்கு அருகாமையில் நடைபெற்ற "கம்பளத்தார் கூத்து" நாடகத்தில், ஒரு நாள் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடித்ததற்காக, சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் கடுங்கோபத்திற்கு ஆளாகி கன்னத்தில் அறையும் வாங்கினார்.

3. இவர் சேர்ந்த முதல் நாடகக் கம்பெனி, யதார்த்தம் பொன்னுசாமியின் 'மதுரை ஸ்ரீ பால கான சபா'. இவரது முதல் நாடக வேடம், 1935-ல், திண்டுக்கல்லில் "இராமாயண" நாடகத்தில் பாலஸ்திரீபார்ட்டாக, 'இளம்பருவ கன்னிமாட சீதை' வேடம்.

4. நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.

5. 1945-ன் இறுதியில், தந்தை பெரியாரின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகம் மேடையேற்றப்பட்டது. மாவீரன் சத்ரபதி சிவாஜியாகவே, கணேசன் உருமாறி, வீரமுழக்கம் செய்தார். நாடகம் முடிந்ததும் பெரியார், கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டி, "இன்று முதல் நீ வெறும் கணேசனல்ல, சிவாஜி கணேசன்" என்று பட்டம் சூட்டினார். இந்த நாடகத்தை, பார்வையாளர்களில் ஒருவராக, எம்.ஜி.ஆரும் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. 1946 முதல் சற்றேறக்குறைய 4 வருடங்களுக்கு, சக்தி கிருஷ்ணசாமியின் 'சக்தி நாடக சபா'வில், பல நாடகங்களில் பல தரப்பட்ட வேடங்களில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. அவற்றில் அவருக்கு தலையாய புகழ் கொடுத்த வேடம், 'நூர்ஜஹான்' நாடகத்தில், அவர் ஏற்று நடித்த அழகுக்கிளி 'நூர்ஜஹான்' வேடம். அந்த நாடகத்தையும், அதில் அவரது அந்த ஸ்திரீபார்ட் வேட நடிப்பையும் பார்த்து பாராட்டாத பிரபலங்களே இல்லை.

7. சிவாஜி, சக்தி நாடக சபாவில் இருந்த போது, ஏ.பி.நாகராஜனும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே நாடகத்தில், ஏபிஎன்
ராஜபார்ட்டாகவும், அவரது ஜோடி ஸ்திரீபார்ட்டாக சிவாஜியும் நடித்திருக்கிறார்கள்.

8. "பராசக்தி" படத்தில் நடிக்கும் போது சிவாஜிக்கு மாத சம்பளம் தான். சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் தயாரிக்கப்பட்ட அப்படத்தின் கதாநாயகனான சிவாஜிக்கு மாதந்தோறும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

9. "பராசக்தி" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, "பணம்", "பூஙகோதை" படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" வெளியான மறுதினமே "திரும்பிப் பார்" திரைப்படத்திலும், "மனோகரா"விலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.

11. 1953 பொங்கல் திருநாளிலிருந்த்து, தான் அமரராவதற்கு முன் வந்த 2001 பொங்கல் திருநாள் வரை, ஒவ்வொரு பொங்கலன்றும், வேலூருக்குச் சென்று, தன்னை வாழ வைத்த தெய்வம் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செய்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வழங்குவதை ஒரு வழக்கமாகக் (கடமையாகக்) கொண்டிருந்தார். பெருமாள் தம்பதியரை வணங்கி ஆசி பெறுவார். 1979-ல் பெருமாள் அமரரான பின்னரும் கூட, ஒவ்வொரு பொஙகலன்றும் வேலூருக்கு சென்று, அவரது மனைவியை வணங்கி ஆசி பெற்று புத்தாடைகளை அளித்து வந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் சென்று, பெருமாள் அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து புத்தாடைகளை வழங்கி வருகின்றனர்.

12. சென்னை மாநகரில், முதன்முதலில் 5 திரையரங்குகளில் [சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி, லட்சுமி] வெளியான படம் "மனோகரா(1954)". அதே போன்று சிங்காரச் சென்னையில், 6 திரையரங்குகளில் [அசோக், சன், ஸ்ரீமுருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன்] வெளியான முதல் படம் "நானே ராஜா(1956)".

13. 1955-ன் தொடக்கத்தில் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து அவர் அருளால் சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்ட சிவாஜி தீவிர பிள்ளையார், ஐயப்ப பக்தர். பல ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று பயபக்தியுடன் ஹரிஹரஸுதனை தரிசித்து வணங்கியிருக்கிறார். மாரியம்மனிடமும் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு.

14. 1957 முதல் 1961 வரை, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை இந்தியாவெங்கும், சற்றேறக்குறைய 112 முறை நடத்தி, அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, தனது சிவாஜி நாடக மன்ற உறுப்பினர் சம்பளம் போக, கிட்டத்தட்ட ரூ.32,00,000/-த்தை (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சங்களை), பல்வேறு ஆக்கப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக, தென்னகமெங்கும், பல பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் இந்நாடகம் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளால் தான் உருவானது.

15. "ராணி லலிதாங்கி" திரைப்படம் வெளிவந்த சமயம், படத்தைப் பார்த்து விட்ட கழகத் தோழர் ஒருவர், அதில் சிவாஜியின் நடிப்பையும், நாட்டியத்தையும் கழகத் தலைவர் அண்ணாவிடம் வானளாவப் புகழ, அன்று இரவுக்காட்சியே யாரும் அறியாவண்ணம், மாறுவேடம் பூண்டு, முண்டாசு எல்லாம் கட்டிக் கொண்டு படத்தை பார்த்து விட்டு வந்தார் அண்ணா.

16. "சம்பூர்ண ராமாயணம்" திரைப்படத்தை கண்டு களித்த மூதறிஞர் ராஜாஜி "சிவாஜியின் நடிப்பில் பரதனைக் கண்டேன்" என்று வியந்து பாராட்டினார். "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தை பார்த்து ரசித்த வ.உ.சி.யின் புதல்வர் சுப்ரமண்யம் "நடிகர் திலகத்தின் ரூபத்தில் எனது தந்தையாரை தரிசித்தேன்" என உருக்கத்துடன் புகழ்ந்துரைத்தார். இந்த இரு பாராட்டுக்களைத் தான், தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு கூறி, இன்புறுவார் சிவாஜி.

17. மத்திய அரசு கொண்டு வந்த, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு, 1959-ம் ஆண்டு, தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், பாரதப் பிரதமர் நேருவிடம் ரூ.1,00,000 /- தொகையை வாரி வழங்கிய முதல் இந்திய நடிகர் வள்ளல் சிவாஜி.

18. நடிகர் திலகத்தின் முதல் கறுப்பு-வெள்ளைப் படமும் (பராசக்தி) வெள்ளிவிழாக் கண்டுள்ளது. அவரது முதல் வண்ணப்படமும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளது. உலக சினிமா சரித்திரத்திலேயே - ஒரு கதாநாயக நடிகருக்கு - இது ஒரு அபூர்வமான சாதனை.

19. இந்தியத் திரையுலகக் கலைஞர்களில், அதிக அளவில் உலக விருதுகளை வென்ற மாபெரும் சாதனையாளர். 1960-ல் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என கௌரவிக்கப்பட்டு வெள்ளிப்பருந்து சிலையையும் பரிசாகப் பெற்றார். 1995-ல், பிரான்ஸ் நாடு இவருக்கு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருது வழங்கி கௌரவித்தது.

20. 1960-ல் தமிழகம் கடும்புயல், பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, முதல்வர் காமராஜர் அவர்களின் மேற்பார்வையில், சிவாஜி அவர்கள் தனி மனிதனாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

21. 1961-ல் தனது 'அன்னை இல்ல'த்தில், ஒரு பிள்ளையார் கோவிலை உருவாக்கினார் இந்த கலைப்பிள்ளையார். 2010-ல் பொன்விழா தொடக்கத்தைக் காணும் இப்பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்னர் அவரது அருந்தவப்புதல்வர்களால் மங்களகரமாக நடத்தப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்த வழியாக போவோர், வருவோர் எல்லாம் இந்த விநாயகரை வழிபட்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ளனர்.

22. சிங்காரச் சென்னையில், முதன்முதலாக, ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மொத்த வசூலை அளித்த திரைப்படம் "பாவமன்னிப்பு". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு ஏசி டீலக்ஸ் திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [திரையரங்கம் : சென்னை - சாந்தி]

23. 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் கலைத்தூதுவராக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளுக்கும் விஜயம் செய்து பற்பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றார். அமெரிக்க பயணத்தின் போது, நியூயார்க் மாநிலத்தில் உள்ள எழில் கொஞ்சும் நகரமான நயாகரா நகரின், ஒரு நாள் கௌரவ மேயராக, தங்கச்சாவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பிரதமர் நேருவிற்குப் பிறகு, இந்த கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி.

24. 1962-ல் சீனப் படையெடுப்பின் போது ரூ.40,000/-, 1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம், 1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.

25. 1964-ல் பம்பாயில் சத்ரபதி சிவாஜி சிலை, 1968-ல் சென்னையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை, 1972-ல் ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றை தன் சொந்த செலவில் நிறுவினார்.

26. 1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.

27. 1965-ன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்பினரானார். அதிலிருந்து 1988 ஜனவரி வரை, கிட்டத்தட்ட 23 வருடங்கள், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தனது உடல், பொருள், ஆவி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.

28. 1966-ல் பத்மஸ்ரீ, 1982-ல் ராஜ்யசபை எம்.பி., 1984-ல் பத்மபூஷன், 1997-ல் தாதா சாகேப் பால்கே விருது என தாய்த்திருநாடும் தன் தலைமகனை கௌரவித்திருக்கிறது.

29. 1971ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், 47 சென்ட் நிலம் வாங்கி, அதில் கட்டபொம்மன் சிலையை நிறுவினார். தமிழகமெங்கும் பல ஊர்களில், பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை, தன் சொந்த செலவில் நிறுவியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைத்தார். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் அமைய தாராளமாக நிதியுதவி செய்தார்.

30. சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் (அம்மாவின் அப்பா), அக்காலத்திலேயே, குழந்தைகளுக்கு தமிழ்ப்பற்றும், இறையுணர்வும் வரவேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் தனது சொந்த செலவில் விழுப்புரத்தில் தேவாரப் பாடசாலை நடத்தி வந்தார். அந்தத் தேவாரப் பள்ளியில் மாணவராகப் பயின்றவர் தான், பிற்காலத்தில் தமிழிசைக்கு அருந்தொண்டு புரிந்த தமிழிசை மாமேதை இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

31. விருந்தோம்பலில் சிறந்தது அன்னை இல்லம். அன்னை இல்லத்தில் சாப்பிடாதவர்களே இல்லை. சாதாரண ரசிகர்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை அனைவரும் கமலா அம்மாள் கையால் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அதே போன்று, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சிவாஜிக்கு வரும் மதிய உணவும் அங்குள்ள அனைவரும் (குறைந்த பட்சம் 10 பேராவது) சாப்பிடும் அளவுக்கு ருசியாக நிறைய செய்து அனுப்பி வைப்பார் கமலா அம்மாள்.

32. "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் 'யாரடி நீ மோகினி' பாடல் காட்சியில் நடிக்கும் போது 102 டிகிரி ஜுரத்துடன் நடித்தார். "பாலும் பழமும்" படத்தில் கண்பார்வை இழந்தவராக படுக்கையில் படுத்துக் கொண்டு அவர் நடித்த காட்சிகளின் போதும் அவருக்கு High Fever. அதே போன்று "கலாட்டா கல்யாணம்" திரைப்படத்தில் வரும் 'அப்பப்பா நான் அப்பனல்லடா' பாடல் காட்சி படமாக்கப்பட்ட போதும் காய்ச்சலுடன் நடித்தார். "இரு துருவம்" படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஷூட்டிங்கின் போதும் கூட கடும் காய்ச்சலுடன் நடித்துக் கொடுத்தார். தன்னால் படத்திற்கு,
படப்பிடிப்பிற்கு எந்தவிதத்திலும் பங்கம் வந்துவிடக் கூடாது என்கின்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்.

33. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் தான் படமாக்கத்தில் Zoom Lens
உபயோகப்படுத்தப்பட்டது. 'உன்னழகை கன்னியர்கள்' பாடலுக்கு இந்த யுக்தி கையாளப்பட்டது. "உனக்காக நான்" திரைப்படத்தில், நடிகர் திலகம் தனது கண்களுக்கு சிறப்பு லென்ஸ் அணிந்து கொண்டு நடித்தார்.

34. "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் அவர் வாழ்ந்து காட்டிய "அப்பர்" வேடத்திற்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration), காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

35. இயக்குநர் ஸ்ரீதருக்கு கை விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உண்டு. அவரது அந்த மேனரிஸத்தை, நடிகர் திலகம், தான் நடித்த "தெய்வமகன்" விஜய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவரது மிக நெருங்கிய நண்பர் தொழிலதிபர் டிவிஎஸ் கிருஷ்ணாவின் மேனரிஸங்களை "கௌரவ"த்தின் பாரிஸ்டர் ரோலில் பார்க்கலாம். இன்னொரு நெருங்கிய நண்பரான இண்டியா சிமெண்ட்ஸ் நாராயணசுவாமியின் மேனரிஸங்கள் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் [வியட்நாம் வீடு] பாத்திரத்தில் இருக்கும்.

36. உலகப் பெரும் சினிமா நிறுவனமான 20th Century Fox நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளக்க உரையுடன் வியாபார ரீதியாக வெளியிட உரிமை பெற்ற முதல் தமிழ்ப் படம் "தில்லானா மோகனாம்பாள்".

37. சிங்கப்பூர் நாடு கண்டுபிடிக்கப்பட்ட 150வது ஆண்டு விழாவில் திரையிடுவதற்காக, சிங்கப்பூர் அரசால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுககப்பட்டு, சிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில், சிறப்புக் காட்சியாக காட்டப்பட்ட திரைப்படம் "தங்கச்சுரங்கம்".

38. ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார், சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம், "நீங்கள் ஒரு ஹிந்திப் படத்திலாவது அவசியம் நடிக்க வேண்டும். உங்களது தமிழ்ப் படங்களைப் பார்த்தே உங்களுக்கு இந்தியாவெங்கும் எவ்வளவு ரசிகர்கள் தெரியுமா! உங்கள் ஹிந்திப் படம் வெளியாகும் நாளில் பம்பாயில் பூகம்பமே ஏற்படும்." என்றார். சில வருடங்கள் கழித்து, தர்த்தி திரைப்படத்தில், சிவாஜி நடித்தார். தர்த்தி வெளியான தினத்தன்று [6.2.1970], பம்பாயில் நிஜமாகவே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

39. முதல் வெளியீட்டில், வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" திரைப்படத்தினுடைய முடிவு, தமிழகத்தில் சுபமாகவும், கேரளத்தில் சோகமாகவும் காண்பிக்கப்பட்டு, இரு மாநிலங்களிலுமே பெரும் வெற்றி. "பராசக்தி"க்குப் பிறகு, தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இந்தியாவிலும், இலங்கையிலும் என இரு நாடுகளில் வெள்ளி விழா கொண்டாடிய படம் "வசந்த மாளிகை". [இந்தியா - 200 நாள், இலங்கை - 287 நாள்]

40. இந்திய அரசினால், நெகடிவ் உரிமை வாங்கப்பட்டு, இந்திய முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம், தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்".

41. "கௌரவம்" திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்காக, ராஜேஷ் கன்னாவிடம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் ராஜேஷ் கன்னாவின் வாக்குமூலம்: "கண்ணன் ரோலை வேண்டுமானால் நான் முயன்று பார்க்கலாம். ஆனால் அந்த பாரிஸ்டர் ரோலை நான் மட்டுமல்ல, பாலிவுட்டிலே கூட யாரும் நடிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஹாலிவுட்டிலே கூட சிவாஜி போல் நடிக்க அங்குள்ள எவராலும் முடியாது. இந்தப் படத்தை தயவு செய்து எந்த மொழியிலும் ரீமேக் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் விஷப்பரீட்சையாகி விடும்."

42. தமிழ் சினிமா சரித்திரத்தில், எண்ணிலடங்கா சாதனைகளின் கருவூலம் "திரிசூலம்". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில், பத்து திரையரங்குகளில் [தமிழகத்தில் 8 திரையரங்குகள், இலங்கையில் 2 திரையரங்குகள்] வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் "திரிசூலம்".

43. பாரதியாரின் கவிதைகள் என்றால் இவருக்கு உயிர். பாரதி பாடல்களில் 'பாரத சமுதாயம் வாழ்கவே', 'நெஞ்சு பொறுக்குதில்லையே' All time favourites. கண்ணதாசனின் 'மலர்ந்தும் மலராத', வாலியின் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' ஆகிய பாடல்களையும் அடிக்கடி முணுமுணுப்பார். வைரமுத்துவின் பாடல்களும் பிடிக்கும்.

44. பாரதிதாசனார் ஒரு சிவாஜி வெறியர். தனது குயில் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி பல தருணங்களில் வானளாவ புகழ்ந்து கவிதைகளும், செய்தி கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்.1962-ல் அவரது படைப்பான 'பாண்டியன் பரிசை', அதே பெயரில் நடிகர் திலகத்தை கதாநாயகனாகக் கொண்டு படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. படத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு, பற்பல காரணங்களினால், படப்பிடிப்பு நடைபெறாததால், படம் வளரவில்லை.

45. கர்மவீரர் காமராஜர், கலைக்குரிசிலின் சில திரைப்படங்களை, பிரத்யேக சிறப்புக் காட்சியாக கண்டு களித்து, நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார். அப்படி அவர் பார்த்து பாராட்டிய திரைப்படங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை, சினிமா பைத்தியம் [வீர வாஞ்சிநாதனாக சிவாஜி நடித்த காட்சிகள் மட்டும்].

46. சிவாஜி ஆங்கிலப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார். சென்னை காஸினோ திரையரங்கில் இரவுக்காட்சியாக ஆங்கிலப்படம் கண்டு களிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹிந்திப் படங்களில் அவரை மிகவும் கவர்ந்தவை, "ஜனக் ஜனக் பாயில் பாஜே" மற்றும் "ஷோலே". எம்.ஜி.ஆர் படங்களில் "ஆயிரத்தில் ஒருவன்", "நாடோடி மன்னன்", "அடிமைப் பெண்" ஆகிய படங்கள் ரொம்பப் பிடிக்கும்.

47. சில தமிழக விஐபிக்களுக்கு மிகவும் பிடித்த சிவாஜி படங்கள்:
எம்.ஜி.ஆருக்கு பிடித்த சிவாஜி படம் "ஆலயமணி"; கலைஞருக்கு பிடித்த தனது நண்பரின் படம் "தில்லானா மோகனாம்பாள்"; மூப்பனாருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் "முதல் மரியாதை"; மு.க.அழகிரியின் மனதைக் கவர்ந்த திரைப்படம் "இருவர் உள்ளம்"; பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு பிடித்த படம் "பாசமலர்".

48. பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம். சிவாஜியை எங்கு எப்பொழுது பார்த்தாலும் அவரது காலில் விழுந்து வணங்குவார் அமிதாப். இன்னொரு பாலிவுட் பிரபலமான அமீர்கான் நடிகர் திலகத்தின் "கர்ணன்" திரைக்காவியத்தைப் பார்த்து விட்டு அப்படியே ஆடி அசந்து மிரண்டு போய் விட்டாராம்.

49. தங்களது தந்தையார் நடித்த திரைப்படக் கதாபாத்திரங்களில், மூத்த மகன் தளபதி ராம்குமாருக்கு பிடித்த ரோல் 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்' [கௌரவம்]. இளைய மகன் இளைய திலகம் பிரபுவுக்கு பிடித்த வேடம் 'அப்பர்' [திருவருட்செல்வர்].

50. 1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!


51. நடிகர் திலகம், காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையை விரும்பிக் கேட்பார். 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று உலகப்பயணம் செய்த போது, காருக்குறிச்சியாரின் இசைத்தட்டுகளை மறக்காமல் எடுத்துச் சென்றார்.

52. ஹாலிவுட் படங்களின் இசையமைப்பு, BGM, Sound Effects இவையெல்லாம் நடிகர் திலகத்துக்கு நிரம்பப் பிடிக்கும். "மியூசிக்கிலேயே மிரட்டுறாங்க பாரு" என்று புகழ்ந்துரைப்பார். ஹிந்தியில், லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அதி திவீர ரசிகர். சிவாஜியின் மனைவி கமலா, ஆஷா போன்ஸ்லேவின் விசிறி. [லதா, ஆஷா இருவருமே சிவாஜி பக்தைகள்!]. தென்னகத்தில் சுசீலா, ஜானகி, ஈஸ்வரி, வாணி ஜெயராம் எல்லோர் குரலும் பிடிக்கும். கே.பி.சுந்தராம்பாளின் கணீர்க்குரல் இவர் மனம் கவர்ந்த ஒன்று. 'திருவிளையாடல்' திரைப்படத்தில் வரும் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடலின் பரம விசிறி. இப்பாடலை 'சர்பத் பாட்டு' என்று தான் செல்லமாக அழைப்பாராம்.

53. ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பைப் பற்றி புகழ்ந்து கூறுவார். "உங்கள் இசை எப்பொழுதுமே நன்றாகத் தானிருக்கும்" என்று அவரிடமே பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது இசையையும் சிலாகித்துக் கூறுவார். "என் படங்களை விட அண்ணன் (எம்.ஜி.ஆர்.) படங்களுக்குத் தான் நீ தூக்கலாக இசையமைத்துக் கொடுக்கிறாய்! உன்னை கவனித்துக் கொள்கிறேன்' என செல்லமாக, உரிமையுடன் எம்.எஸ்.வியிடம் கடிந்து கொள்வதும் உண்டு. இளையராஜா இசையமைத்த பாடல்களில் சிவாஜிக்கு மிகவும் பிடித்தவை "செந்தூரப்பூவே" [பதினாறு வயதினிலே] மற்றும் "மாஞ்சோலைக்கிளிதானோ" [கிழக்கே போகும் ரயில்].

54. "தூக்கு தூக்கி"யில் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு, அவர் தனக்குப் பாடுவதற்கு பச்சைக் கொடி காட்டினார் சிவாஜி. "பெரிய பாகவதர் போல பாடியிருக்கிறீர்கள். உங்களுடைய அருமையான, வளமான குரல் எனக்கு பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து நீங்களே எனக்கு பின்னணி பாடுங்கள்" எனக் கூறிப் பாராட்டினார். பின்னொரு சமயத்தில், "உங்கள் குரலும் என் குரலும் ஒன்று போலத் தான் இருக்கிறது. நான் நடிப்பில் கொடுக்கும் பாவத்தை நீங்கள் பாட்டில் கொடுக்கிறீர்கள். ஆகையால் பாடலின் போது வரும் வசனங்களை அந்தந்த பாவங்களைக் கொடுத்து நீங்களே பேசுங்கள்." என்றார். டி.எம்.எஸ் இதைப் பலரிடம் சொல்லி பெருமைப்படுவாராம்.

55. "பொட்டு வைத்த முகமோ" பாடலை முதன்முதலாக எஸ்.பி.பி. தனக்கு பின்னணி பாடிய போது, 'நீ உன் குரலிலேயே பாடு, நான் அட்ஜெஸ்ட் பண்ணி நடித்துக் கொள்கிறேன்' எனப் பெருந்தன்மையோடு கூறினார் சிவாஜி. எஸ்.பி.பி., ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலை வேளைகளில், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஆல்பங்களை கேட்டு பரவசப்படுவார். தனக்கு முதன்முதலில் பின்னணி பாடிய சிதம்பரம் ஜெயராமனின் குரல் ரொம்பப் பிடிக்கும்.

56. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் நேயர் விருப்ப திரைப்படப் பாடல்கள் நிகழ்ச்சியில், அன்று முதல் இன்று வரை, அதிக நேயர்கள் விரும்பிக் கேட்ட / கேட்கின்ற பாடலாக இருப்பது "பாசமலர்" திரைக்காவியத்தின் 'மலர்ந்தும் மலராத' பாடல்.

57. சிவாஜி அவர்கள், எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும். எஸ்,எஸ்.ஆரை 'ராஜூ' என்றும், ஜெமினியை 'மாப்ளே' என்றும், ஸ்ரீகாந்தை 'வெங்கடா' என்றும், பீம்சிங்கை 'பீம்பாய்' என்றும், பந்துலுவை 'பிஆர்பி(BRB)' என்றும், முக்தா சீனிவாசனை 'சீனு' என்றும், பத்மினியை 'பப்பி' என்றும், சாவித்திரியை 'தங்கச்சி / சிஸ்டர்' என்றும், சௌகார் ஜானகியை 'பார்ட்னர்' என்றும், சரோஜாதேவியை 'சரோ' என்றும், அஞ்சலிதேவியை 'பாஸ்(Boss)' என்றும், ஜெயலலிதாவை 'அம்மு' என்றும், வெண்ணிற ஆடை நிர்மலாவை 'ஸ்வீட் கேர்ள்(Sweet Girl)' என்றும் அன்பாகவும், செல்லமாகவும் அழைப்பார்.

58. கலைஞர் கருணாநிதி எழுதும் திரைப்பட வசனங்கள் மிகவும் சிறப்பானவை என மனதாரப் பாராட்டும் சிவாஜி, தனக்கு அவர் எழுதிய திரைப்பட வசனங்களில் தனக்கு மிகவும் பிடித்தது "திரும்பிப் பார்" படத்தின் வசனங்கள் என்றும் கூறியிருக்கிறார். கலைஞரை சிவாஜி "மூனாகனா" என்று தான் அழைப்பார். அவர் இவரை "கணேசு" என்பார்.

59. எந்த மேக்கப்மேன் சிவாஜிக்கு மேக்கப் போட்டு விட்டாலும், புருவத்தை மட்டும் தானே தான் எழுதிக் கொள்வார். "திருவருட்செல்வர்" அப்பர், "தெய்வமகன்" கண்ணன், சங்கர், "நவராத்திரி" குஷ்டரோகி இன்னும் இது போன்ற பல கதாபாத்திரங்களின் மேக்கப்பிற்காக, பல மணி நேரங்கள் உடலை வருத்திக் கொண்டதுண்டு.

60. படப்பிடிப்பின் போது, எந்தவொரு காஸ்ட்யூமை தான் அணிந்து கொண்டு நடித்தாலும், அந்த உடை கசங்காமல், அழுக்காகாமல் இருப்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்.

61. தன்னுடன் நடிக்கும் நடிக, நடிகையர் நன்றாக நடிக்கும் போது மனம் திறந்து பாராட்டுவார். பல சமயங்களில் கூட நடிப்பவர்களுக்கு, காட்சிக்கு ஏற்றாற் போல், நடிப்பு சொல்லிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி நடிக்கச் செய்வார். பானுமதி, சாவித்திரி, சௌகார் ஜானகி, மனோரமா ஆகியோருடன் நடிப்பது பற்றி இப்படிக் கூறுவார். "இவங்க கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா இருக்கணும். நாம கொஞ்சம் அசந்தா போதும், இவங்க performanceஸால நம்மளையே தூக்கி சாப்பிட்டுடுவாங்க."

62. ஷுட்டிங் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார். காலை ஆறு மணிக்கு மேல் அவர் உறங்கியதாக சரித்திரமே இல்லை. 1990களில் தாடி வைப்பதற்கு முன் வரை, தினமும் ஷேவ் செய்வார். சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் போதும், சூரக்கோட்டைக்கு விடுமுறையாகச் செல்லும் போதும் மட்டும் தான் ஷேவ் செய்யாத சிவாஜியைப் பார்க்க முடியும். தினமும் இரு வேளை குளிப்பார். எந்த சீசனாக இருந்தாலும் குளியல் பச்சைத் தண்ணீரில் தான்.

63. குளிர்ந்த மோர், காபி, அதிலும் பிளாக் காபி (Black Coffee) ஆகியவை இவர் விரும்பி அருந்துகின்ற பானங்கள். வேர்க்கடலை உருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார். காலைச் சிற்றுண்டியாக விரும்பிச் சாப்பிடும் பலகாராங்கள் - இட்லி, பொங்கல், உப்புமா (ஏதேனும் ஒன்று). மதிய உணவில் கண்டிப்பாக அசைவம் இருக்க வேண்டும். டின்னரில் சில சமயங்களில் அசைவம் இடம்பெறும். மூன்று வேளைகளிலுமே அளவோடு தான் சாப்பிடுவார்.

64. ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 - இவர் புகைக்கும் சிகரெட். தம்பி ஷண்முகத்தின் மறைவுக்குப் பிறகு, மனைவி கமலாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தன்னிடம் இருந்த புகை பிடிக்கும் பழக்கத்தை, ஒரே நாளில் கைவிட்டார். அதற்குப்பின், ஒரு நாள், ஒரு வேளை, ஒரு தடவை கூட சிகரெட் பிடித்ததில்லை. What a Will Power!

65. தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தித்தாள்களை வாசிப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளுக்கே முதலிடம் கொடுப்பார்.

66. சிவாஜி விமானப் பயணத்தின் போது மட்டும் அதிகம் பேச மாட்டார். பல சமயங்களில், விமானத்தில் ஏறி அமர்ந்த உடனேயே, கண்களை மூடிக் கொண்டு உறங்கி விடுவார்.

67. காரில் பயணம் செய்யும் போது சினிமா, அரசியல், பொதுவான விஷயங்கள் என நிறைய பேசுவார். மிக நீண்ட தூர கார் பயணத்தின் போது, நிறைய பாடல்கள் கேட்பார். அதில் "கப்பலோட்டிய தமிழன்" படப் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.

68. சிவாஜிக்கு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும். அந்தந்த மொழிக்காரர்களிடம் அவரவர்களது மொழியிலேயே பேசி அசத்துவார்.

69. சிவாஜி எந்த இடத்திற்கு சென்றாலும் சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிப்பார். வீட்டிலோ, வெளியிலோ எந்த இடத்திலும் அமர்வதற்கு முன் தான் உட்காரப் போகும் இருக்கை, தலை மேல் சுழலும் மின்விசிறி என ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் உட்காருவார்.

70. ரஷ்யா தவிர, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாட்டின் மக்கள் அணியும் விதவிதமான தொப்பிகளை சேகரித்து 'அன்னை இல்ல'த்தில் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருந்தார்.

71. எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு சென்றாலும் அந்தப் பகுதியினுடைய சிறப்பம்சங்கள், அங்குள்ள மக்கள், அவர்கள் செய்யும் தொழில், அந்தப் பிரதேசத்தினுடைய சிறப்பு உணவு வகைகள் என்கின்ற தகவல்களை அளித்து உடன் வருவோரை அசத்துவார். புவியியல் அறிவில் புலி இவர்.

72. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலுக்கும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும், சிவாஜி அவர்கள், யானையை காணிக்கையாகத் தந்துள்ளார். நாகை மாவட்டம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு, ஆலயமணியை தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார்.

73. 1982-ல், தமிழக அரசு கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு, இளைய திலகம் பிரபு, தன் சார்பில் ரூ.25,000/-மும், நடிகர் திலகத்தின் சார்பில் ரூ.1,00,000/-மும், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கினார்.

74. 1986-ல் பெல்ஜியம் பல்கலைக்கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அவரது கலைச்சேவைக்காக, 'டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.

75. தமிழ்த் திரையுலகில், எம்.கே.டி. பாகவதருக்குப் பின், கறுப்பு-வெள்ளையில், ஐந்து வெள்ளிவிழாப் படங்களை [பராசக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா] கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி. ஒரே காலண்டர் வருடத்தில்(1961), கறுப்பு-வெள்ளையில், இரு வெள்ளிவிழாப் படங்களை [பாவமன்னிப்பு, பாசமலர்] கொடுத்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, கறுப்பு-வெள்ளைப் படங்களில், முதல் வெளியீட்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த ஒரே படம் "பட்டிக்காடா பட்டணமா".

76. 2593 இருக்கைகளைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில், 'மூன்று' 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும், 'ஒன்பது' 50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும் கொடுத்துள்ள ஒரே உலக நடிகர் நடிகர் திலகம். [ஆக மொத்தம், மதுரை தங்கத்தில் 'பன்னிரண்டு' 50 நாட்களைக் கடந்த படங்கள்]

77. நமது இந்தியத் திருநாட்டின் மகத்தான தினங்களான சுதந்திர தினத்தன்று 7 சிவாஜி படங்களும், குடியரசு தினத்தன்று 13 சிவாஜி படங்களும் வெளியாகியுள்ளன.

78. 'பண்டிகை தின ஹீரோ' என்றாலும் அது சிவாஜி தான். பொங்கல் வெளியீடுகளாக 23 திரைப்படங்களும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடுகளாக 26 திரைப்படங்களும், தீபாவளி வெளியீடுகளாக 42 திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.

79. கிரிக்கெட், கால்பந்து இரண்டு விளையாட்டுக்களும் மிகவும் பிடித்தமானவை. கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் நேரில் சென்று கண்டு, களித்து, ரசித்து மகிழ்வார். Indoor விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது கேரம். டென்னிஸ் மேதை ராமநாதன் கிருஷ்ணனுக்கு, அவரது டென்னிஸ் ஆர்வத்தை கண்டு வியந்து, ஊக்கத் தொகை அளித்து உயர்த்தியுள்ளார்.

80. சென்னை தியாகராய நகரில் உள்ள நல்லியில் தான் தனது வீட்டிற்கு, வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பெரும்பாலான ஜவுளிகளை வாங்குவார். "நான் சம்பாதிப்பதில் ஒரு பெரிய பகுதியை உன் கடைக்குத் தான் கொடுக்கிறேன்" என நல்லி குப்புசாமியிடம் ஜோக்காகவும் கூறுவார்.

81. நடிகர் திலகம் தனது ரசிகர்களை "பிள்ளைகள்" என்று தான் கூறுவார். ரசிகர், ரசிகர் மன்ற கடிதங்களையெல்லாம் தம்பி ஷண்முகம் தான் கவனித்துக் கொள்வார். சில சுவாரஸ்யமான, வித்தியாசமான, முக்கியமான கடிதங்களை மட்டும் அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.

82. ஒரு நடிகருக்கு, இரு அரசுகள், சிலை அமைத்த பெருமை, நடிகர் திலகத்துக்கே. புதுவை அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி, 11.2.2006 அன்று புதுச்சேரியில், சிவாஜிக்கு சிலை அமைத்தார். தமிழக அரசு சார்பில், முதல்வர் கலைஞர், 21.7.2006 அன்று சென்னையில், தன் ஆருயிர் நண்பனுக்கு சிலை அமைத்தார்.

83. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் அவரது நினைவு மற்றும் பிறந்த தினங்களில், சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பில், நடைபெறும் சிவாஜி நிகழ்ச்சிகள், விழாக்களில், திரையுலக முன்னோடிகளுக்கும், திரையுலக சாதனையாளர்களுக்கும் சிவாஜி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமரத்துவம் அடைந்த முன்னோடிகள், சாதனையாளர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்படுகின்றன

Gopal.s
20th January 2016, 09:28 AM
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.

பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.

நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.

.

நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)

ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.

Gopal.s
20th January 2016, 09:31 AM
100 Days Films List

Film Name /

Place Name(s)

(1952-1960)

Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
Thirimbipar Selam
Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
Ethir Parathathu Chennai, Trichy
Kaveri Vellor
Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
Pennin Perumai Chennai(3), Trichy, Selam
Amaradeepam Chennai, Trichy
Vanangamudi Chennai(2), Trichy
Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
Sabash Meena Chennai, Selam
Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
Maragadham Chennai
Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
Irumbuthirai Kovai
Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Vidi Velli Chennai(2), Madurai

(1961-1970)

Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
Sri Valli Colombu
Marutha Naatu Veeran Kerala
Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
Paarthal Pasi Theerum Madurai, Selam
Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Iruvar Ullam Chennai, Madurai, Colombu
Annai Illam Chennai
Karnan Chennai(3), Madurai
Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
Pudhiya Paravai Chennai
Navarathri Chennai(4), Madurai, Trichy
Santhi Chennai
Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
Motar Sundaram Pillai Madurai, Trichy
Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
Iru Malargal Chennai, Trichy, Selam
Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
Galatta Kalyanam Chennai(2)
Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
Uyarntha Manithan Chennai
Deivamagan Chennai(3), Madurai, Trichy
Thirudan Colombu
Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
Raman Ethanai Ramanadi Madurai, Colombu
Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli

(1971-1980)

Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
Gnana Oli Chennai
Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
Thavapudhalvan Chennai
Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
Needhi Chennai
Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
Kouravam Chennai(3), Madurai, Selam
Vani Rani Madurai
Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
En Magan Madurai
Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
Mannavan Vanthanadi Chennai(3)
Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
General Chakaravarthi Chennai, Yazh Nagar
Thatcholi Ambu(Malayalam) Kerala
Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
Naan Vazhzvaippen Chennai
Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
Rishimoolam Chennai(3)
Viswaroopam Chennai

(1981-1990)

Satthiya Sundaram Chennai, Selam
Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
Va Kanna Va Chennai(3)
Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
Neevuru Kappina Neppu(Telugu) Andhra
Bejavaada Boppuli(Telugu) Andhra
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Miruthanga Chakravarthy Chennai
Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
Thiruppam Chennai
Vazhkkai Chennai(3)
Dhavanik kanavugal Chennai
Bandham Chennai
Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
Sadhanai Chennai(2)
Marumagal Chennai(2)
Viswanatha Nayakudu (Telugu) Andhra
Agni Puthrudu (Telugu) Andhra
Jallkikattu Chennai(2)
Pudhiya Vanam Chennai

(1991-1999)

Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
Oru Yathramozhi(Malayalam) Kerala
Once More Chennai(2)
Padaiyappa
நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -

1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்


திருவருட்செல்வர் (சென்னை )
விளையாட்டுபிள்ளை (மதுரை )
என்தம்பி
சங்கலி
தியாகி ( ஸ்ரீலங்கா)
பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
விடுதலை (சென்னை)
ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
ராஜராஜ சோழன் (சென்னை)
சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )

Gopal.s
20th January 2016, 09:41 AM
மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .

மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்

ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்

சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்

மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா

நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்

நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்

தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்

நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை

மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்

கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்

Gopal.s
20th January 2016, 10:01 AM
Pammalar,

What happened to Nadigarthilagam Pugazh Malai with all his Still from his Movies? We have been hearing since 2012 but not yet released.(Don't worry Murali,I am leaving our contribution Part).I feel little disappointed with Pammalar sluggish indifference.



http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/7995b92c-0723-4a10-8e8d-9502004c68b6_zpsaea4ae92.jpg

Gopal.s
20th January 2016, 10:12 AM
ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்

2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்

3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்

4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்

5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்

6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்

7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்

8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்

10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்

11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்

12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்

13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்

14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்

15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்

16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்

17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்

18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்

19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்

20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்

21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்

22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்

23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்

24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்

25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்

26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்

27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்

28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்

29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்

30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்

31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்

32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்

33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்

34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்

35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்

36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்

37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்

38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்

39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்

40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்

41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்

42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்

43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்

44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்

45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்

46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்

47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்

48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்

49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்

50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்

51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்

52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்

53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்

54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்

55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்

56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்

58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்

59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்

60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்

62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்

63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்

64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்

65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்

66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்

70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்

71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்

72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்

73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்


74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்

75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்

76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்

77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)

78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்

79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்

80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்

81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்

குறிப்பு:
ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
(தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))

சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:

பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81

இதில் வெள்ளி விழா கண்டவை : 6

20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2

100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33

10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12

50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9

43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7

6 வாரங்கள் வரை : 12

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

சாந்தி சாதனைகள் நிறைவு.

சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...

அன்புடன்,
பம்மலார்.

Gopal.s
20th January 2016, 10:28 AM
என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-

1952- 1960
தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).


1961-1970
பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).

1971-1980
தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).

1981-1990
குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)

1991-2000
சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)

Gopal.s
20th January 2016, 10:33 AM
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடியவர்- எஸ்.பீ.பாலசுப்ரமணியம் .
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.

நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)

அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான் அல்லது மாலிஷ்.). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.


எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

ஒரு இள விமானி, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

எழும் போதே suggestive ஆக தன் அவசர விழைவை வேட்கையை உணர்த்தி கையில் முத்தமிடுவார். , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தொடர்ந்து அலை பாயும் உணர்ச்சிகளை உணர்த்துவார் சிறு சிறு தொடல்களில். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,

Gopal.s
20th January 2016, 10:39 AM
கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.

கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....

1)பராசக்தி
2)புதையல்
3)ராஜா ராணி
4)தெய்வ பிறவி
5)இரும்பு திரை
6)பாவை விளக்கு
7)கல்யாணியின் கணவன்
8)ஆண்டவன் கட்டளை
9)புதிய பறவை
10)சாந்தி
11)நீலவானம்.
12)கலாட்டா கல்யாணம்.
13)தங்க சுரங்கம்.
14)தெய்வ மகன்.
15)நிறை குடம்.
16)சிவந்த மண்.
17)சுமதி என் சுந்தரி.
18)வசந்த மாளிகை.
19)உத்தமன்
20)ரோஜாவின் ராஜா
21)திரிசூலம்.
22)முதல் மரியாதை

ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.

Gopal.s
20th January 2016, 10:41 AM
சிவாஜியின் காதல்கள்- 1

பராசக்தி- முதற்காதல்.

புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.

முதற்காதல் என்றால் எல்லோருக்குமே புது அனுபவம். ஐம்பதுகளின் இளைஞர்களுக்கு முதற்காதல் பிராணநாதா,பிரபோ என்ற ரேஞ்சில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அத்தான்,மாமா,ஏன்னா ,என்னாங்க அளவிலாவது வாய்த்திருக்கும். ஆனால் அந்த இளைஞனுக்கு வாய்த்தது வா,போ,குணா என்று விளிக்கும் ஒரு பாரதி கனவு கண்ட புதுமை பெண்.பேஷ் பேஷ் அந்த இளைஞனின் முதற்காதலே மிக நன்றாக வாய்த்துள்ளதே? பத்மினியுடன் முதற்படம்.என்ன திகைக்கிறீர்கள்?படம் டைட்டில் கார்டு பண்டரி பாய்(பத்மினி)என்றே காட்டும்.விமலாவுடன் குணாவின் முதற்காதலை பார்க்கு முன் ஜாலியுடன் (கண்ணம்மா) ஜாலியாக பார்த்த முதல் நடனத்தை (சிவாஜியின் முதல் பாடல் காட்சி)பார்த்து விடலாமா?

அந்த பணக்கார ,பர்மா செல்ல பிள்ளை ,தமிழ் நாட்டில் முதல் குரலை ஏளனம் செய்து ,ஹோட்டல் paradise (பர்தேஸ்) நுழையும் அமர்க்களமாய். ஸ்டைல் ஆக அலட்சியம் கலந்த curiosity யுடன் அறையை ஒரு நோட்டம் விட்டு,காப்பி ஆர்டர் செய்து,ரூம் பாயிடம் காசை சுண்டி டிப்ஸ் கொடுக்கும் தோரணை!!என்ன சொல்ல?கீழே வந்து மஜுராவிற்கு டிக்கெட் கேட்க ,அன்றைக்கு டிக்கெட் இல்லாமல் ,மறுநாள்தான் ,பண்ணி விடலாமா என்று கேட்கும் reception ஆளிடம், ஓரிரு நொடி கடுப்பு கலந்து ஏமாற்றம் காட்டி சரி என்பான்.அறைக்கு திரும்பி வந்தால் ,படுக்கையில் ஒரு முன் பின் அறியாத பெண்.பட படப்புடன் வியர்வையை டையால் துடைத்து, பிறகு அந்த பெண் தன் தவறுதான் என்றதும் ,காப்பியை கொடுத்து உபசரித்து,ஒரு ஆர்வம்,தயக்கம்,தடுமாற்றம்,பயம் கலந்த akwardness என்ற எல்லா உணர்வும் காட்டி, நடனத்திற்கு செல்ல அரை மனதாக சம்மதம் கொடுக்கும் அழகு!!பின் அழைப்பது பெண்ணல்லவா?ஒரு பெண்ணின் அருகாமை ,அக்கால இளைஞர்களுக்கு(50 களின்) கொடுக்கும் உணர்வை பார்க்க விழைவோர் ,இக்காட்சியை பார்த்தே ஆக வேண்டும்.நெளிந்து கொண்டு நாட்டியத்தில் முள் மேல் அமர்வது போல ,நடுவில் போய் விடலாமே என்று தயக்கம் கலந்த அரை மனதை, உணர்த்தியும்,பெண்ணின் அருகாமை தரும் சிறு சலனத்தால் பாவம் இளைஞன்...
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புது முகமாம்!!

அதே இளைஞன். கதாநாயகி அறிமுக காட்சியில் பெட்டியை பிடுங்கி வில்லன் ஓட ,கதாநாயகன் அவனுடன் போராடி ,பெட்டியை மீட்டு தந்து,காதலை பெறுவதையே பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி. பெட்டியை ,கதாநாயகியிடம் இருந்து பறித்து ஒடுபவனே நாயகன்தான்.பெட்டியை விட்டு ,சாப்பாட்டை எடுத்து ,காக்கைகளுடன் (முதல் பாடலுடன் பாடல் காட்சி-சிவாஜிக்கு)பகிர்ந்து பாடி, மகிழும் இடம் ,கதாநாயகியின் வீடாகவே இருக்க வேண்டுமா?அவளை கண்டதும் ஒரே ஓட்டம்.

பிறகு பௌர்ணமி நாளில்,ஒரு நதிக்கரையில் அதே பெண். அவள் நல்ல மனமறிந்து, அவள் அழைப்பை ஏற்று வீடு சென்றால்....
காதல் மொழியா பேசினாள் கட்டிளம் கன்னி?குணா என்றும்,வா,போ என்றும் டோஸ்தான்.பிச்சைஎடுக்க வெட்க படவில்லை.பைத்தியமாக நடிக்க வெட்க படவில்லை,திருட வெட்க படவில்லை ஆனால் நீ ஏமாந்ததை சொல்ல வெட்கம், உன்னை ஏமாற்றிய அந்த ஜால காரியை பாராட்டுகிறேன்,அவளால்தான் நீ இந்த உலகத்தை பார்த்தாய் என்றெல்லாம் lecture பாணியில் டோஸ்..ஆனால் கடைசியில் சிறிதே கனிந்து ஒருவரையொருவர் புரிவர்.(அண்ணாவிடம் கற்றவளாம்). பிறகு இரவு தூங்காமல் தங்கையை எண்ணி குணசேகரன் உருக... விமலாவோ குணசேகரனின் காதல் கனவில் உருக...
சிவாஜியின் கதாநாயகி மட்டும் பாடும் முதல் காதல் டூயட்.சுரிதாரில் அமர்க்களமாக முதல் பட கூச்சம் சிறிதும் இன்றி, கனவு காணும் கதாநாயகியின் எண்ண ஓட்ட படியே காதல் செய்வார்.(அந்த பாத்திர நடைமுறை சாயல் அற்று)
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!

கடைசி காட்சியில் சுபம் போடும் முன்னால், நான் போகட்டுமா என தயங்கி கேட்கும் நாயகியை ,சோபாவின் கை பிடியில் காப்பி குடித்து கொண்டே தன் எண்ணத்தை உணர்த்தும் அழகு. பிறகு பெரிய நூலால் அவள் தலைப்பை இழுத்து சொந்த குரலில் பெண்ணின் மனதை தொட்டு பாடி கிண்டலிக்கும் இளமை.பார்த்து விட்டு சிறிய நூல் போதுமே என்று சொல்லும் அண்ணியின் முன் நாண சம்மதம்.
இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!

Gopal.s
20th January 2016, 10:45 AM
சிவாஜியின் காதல்கள்- 2

அந்த நாளும் வந்திடாதா.......

பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)

இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.

உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.

ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.

கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதி ர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.

அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.

Gopal.s
20th January 2016, 10:55 AM
சிவாஜியின் காதல்கள்-3

ராஜா ராணி-1956.

இதுவரை நான் பேசியதெல்லாம் intellectual காதல்கள்.இதெல்லாம் காதலில் சேர்த்தியா என்றே உலகம் பேசி கொண்டிருக்கிறது. இப்போது நான் பேச போவது அக்மார்க் உள்ள பூர்வமான காதல்.

அதுவரை தமிழ்திரையே காணாத அதிசயம்.

நிஜமாகவே chemistry கொண்ட அழகான இளைஞன் இளைஞி இணைவு.

நடிப்பு,வயது,அனுசரணை (compatability ) அத்தனையிலும் நூற்றுக்கு நூறு வாங்கி அன்றைய இளைஞர்களின் இதய துடிப்பை எகிற செய்த ஜோடி.

Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.

அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.

டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.

எப்போதாவது கிளைமாக்ஸ் முடிந்த பிறகு ஒரு full டூயட் பாடலை ஒரு ஜோடி பாடி ரசிகர்கள் கலையாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்த அதிசயம் கண்டதுண்டா?ராஜா ராணியில் சிவாஜி-பத்மினி என்ற அமர காதலர்கள் நிகழ்த்தி காட்டினர்.

60லும்,70 களிலும் இயக்குனர்கள் திணறிய (கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலச்சந்தர்) விதவா மறுமணத்தை அலட்சியமாய் அலட்டாமல் சாதித்து காட்டியது இந்த 50 களின் படம்.

சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance ,இந்த படத்தின் மிக அற்புத காதலை விழுங்கி ஏப்பம் விட்டு நிலைத்து நிற்பது சோகமே.

ராணி என்கிற குருட்டு தகப்பனின் ஏழை பெண் ,சந்தர்ப்ப வசத்தால் ராஜா என்கிற வசதியுள்ள இளைஞனால் பணக்கார பெண்ணாக புரிந்து கொள்ள பட்டு ,அவனிடமே வேலைக்கு சேர்ந்து ,காதல் கனிந்து,உண்மையும் தெரியும் போது,ராணி இளம் வயது விதவை என்ற பேருண்மை திடீரென்று காதலை பெயர்க்க ,பிறகு பரபரப்பான இறுதி காட்சியில் காதலர்கள் சேரும் கதை.

என்னவென்று இந்த படத்தை வர்ணிக்க?இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)இளைமையுடன் கூடிய குறும்பு மின்னி தெறிக்கும் அழகோ அழகு சிவாஜி-பத்மினி.(முத்துலிங்கம் போல நானும் சிறிதே வருந்தினேன் இந்த படம் காணும் போது)

மயக்க மருந்து உட்கொண்டு ராணி தள்ளாடி ராஜாவின் காரில் உட்கார்ந்து கண்ணசர தொடங்கும் இளமை குதூகல திருவிழா. ராஜா வீட்டிற்கு அழைத்து சென்று(தூக்கம் வருதுப்பா என்னும் பத்மினியின் நடிப்பு,பின்னாட்களின் பஞ்ச தந்திரம் தேவயானியை தூக்கி சாப்பிடும்) ,ஏனோதானோ போஸில் போட்டு விட்டு,பத்திரிகையில் வந்த விளம்பர படி பணக்கார பெண்ணாய் (லீலா) இருப்பாளோ என்ற சந்தேகத்தில் ,அவளின் தூங்கும் விதத்தை நேர் செய்து,போர்வையும் போர்த்தும் விதம். மறுநாள் காலை ராணி ஒட்டு கேட்டு லீலாவாகவே தொடர ,அவளை வீட்டில் விட வரும் ராஜாவிடம் இங்கேயல்ல, என்ற டபாய்த்து ,சுலபமாய் நுழைந்து வெளியேறும் வீடாக பார்ப்பது. நுழைந்து பிறகு அமைதியாக வெளியேறி ,பரோபகாரம்-தங்கம்(என்.எஸ்.கே,டி.ஏ.மதுரம்) தம்பதிகள் வீட்டில் குழப்பம் விளைவிக்கும் சமயங்கள். ராஜா, ராணியிடம் சேலை கொடுக்க,துரத்தும் நாய்க்கு பயந்து மாடியேறி ஓடி அமர்க்களம் செய்ய , தங்கத்தையும்,ராஜாவையும் ,பரோபகாரம் சந்தேகிக்க, ராணியையும்,பரோபகாரத்தையும் தங்கம் சந்தேகிக்க ஜாலி நாட்.

வேலைக்கு அமரும் ராணியிடம் சீசீ இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டா ,அவங்க பொழுது போக்கா வேலை செய்யறாங்க ,சம்பளமெல்லாம் வாங்க மாட்டாங்க என்று ராணி வயிற்றில் புளி கரைக்கும் காட்சி தூள். ராணி பிறகு தான் ஒரு 200 ஐ தொலைத்ததாய் சொல்லி சமாளித்து இருநூறை பெறுவார்.

பாபு என்ற அமச்சூர் நாடக நண்பனிடம் முரண் பட்டு ,தானே நாடகம் அரங்கேற்றும் போது,பாபு பணம் கொடுத்து தூண்டி விடும் கலாட்டாவால் துவங்கும் காதல் அத்தியாயம் நம்மை சொக்க வைக்கும்.

எனக்கு மிக பிடித்த காதல் காட்சிகளில் ஒன்று.கல்லடிக்கு தப்பி ஓடும் லீலாவை துரத்தி கொண்டு, ஓடி,இருவரும் ஒரு வாய்க்காலை கடக்க முயலும் போது நனைந்து விட,நடுக்கத்துடன் ,தன வயிற்றுக்குள் நாடகத்திற்காக சுருட்டும் சேலையை லீலாவிற்கு கொடுத்து திருமணம் என்று சொல்லி தீர்மானம் என்று சமாளித்து லவ் மீட்டர் கையை கொடுத்து மாட்டி கொண்டதாய் டபாய்த்து,மீனை கண்ணுக்கு ஒப்பிட்டு வழிந்து,அய்யய்யோ,அநியாயத்துக்கு ஜாலி இந்த காட்சி.

பாபுவுடன் நேரும் கைகலப்பை விலக்க,வீட்டினுள்ளிருந்து பையன் வேஷத்தில் வரும் ராணியை ,போட்டோ பார்த்து அடையாளம் கண்டு ,கட்டு போடும் போது டபாய்ப்பது படு ஸ்வீட்.

டீசிங் சாங் (எஸ்.சி.கிருஷ்ணன்)லீலா லாலி, பூனை கண்ணை மூடி கொண்டால் செம கலாய்ப்பு.

improvisation என்றால் தெரிந்த கொள்ள விரும்பும் ஆட்கள், சிவாஜி-பத்மினி காதல் காட்சியில் சிவாஜி ஒரு மர மட்டையை பறித்து, frisky ஆக காலால் உதைத்து,மட்டையை கையால் உரித்து கொண்டு ,துரு துறுவென்று பண்ணும் இந்த அதகள காதல் காட்சி!! என்னவென்று வர்ணிக்க?

காதலில் ஒருமித்த பின் transister பரிசு காட்சி என்று மகா சுவாரஸ்யம்.

ஒரு இதமான ஜாலி ரைட் இந்த இதமான நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள காதல் படம்.

RAGHAVENDRA
20th January 2016, 05:23 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12573790_1039579832759355_9024480066026338470_n.jp g?oh=9b044afe90a7a30e33424f229ce759f4&oe=573AD289

Russellxor
20th January 2016, 05:26 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/th_913393_zpsdvc0vl3f.jpg (http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/913393_zpsdvc0vl3f.mp4)

abkhlabhi
20th January 2016, 06:03 PM
https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

Aatuvithaal Yaarovar song :
Parthiban S Arumuganeri wrote 2 months ago
1:19ல் ‘என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு...’

‘அனுபவத்தில்’ என்று
சொல்கையில்
வலது இமையில்
தனித்து தருகிறான் பாருங்கள்
ஒரு மின்னல் வெட்டு...

இதனை
செய்து காட்டிவிட்டு
அவனை
மிகை நடிப்பென்று திட்டு

abkhlabhi
20th January 2016, 06:20 PM
https://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k

Ar Raja wrote in Youtube:
பாட்டும் நானே பாடல் காட்சி ஒரு மாஸ்டர் பீஸ்..

ஒரு கட்டத்தில் 5 சிவாஜிகள், அடுத்தடுத்து அமர்ந்திருப்பர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இசைக்கருவி.. ஒருவர் மட்டும் கொன்னக்கோல் என்னும் வாய்த்தாளம்.. முதலில் சிவாஜி 'தனி'யாக வீணை வாசிப்பார்.. அவர் முடிக்கும் தருவாயில் அடுத்து மிருதங்க இசையை வழங்கவிருக்கும் சிவாஜி, தன் வாத்தியத்தை வசதியாக அமைத்துக்கொண்டு தயாராவார் பாருங்கள்.. அடடா..! அடுத்து புல்லாங்குழலாரும் எதோ ஒருவகையில் தயாராவார். இறுதியில் கொன்னக்கோலார் என்னக் கோளாறு பண்ணுவாரென ஆவலோடு காத்திருந்தேன். முன்னவர் முடிக்கும்போது, தன் தொண்டையைத் தடவித் தயார்செய்து ஆரம்பித்தார்..! அப்படியே உடல் சிலிர்த்துவிட்டது..!!

சிவாஜி என்ற நடிகர் ஒருவர்தான்.. ஆனாலும் திரையில் 5 வெவ்வேறு கலைஞர்கள் வீற்றிருக்கிறார்கள் என்று நம்மை உணரவைப்பார்..

இதெல்லாம் பார்த்து ரசித்தால்தான் புரியும்.. சிவாஜி ஒரு மஹாகலைஞர்..!

Mohan Srinivasan wrote in You tube :
It is very unfortunate that Shivaji Ganesan did not get the recognition he truly deserved. Undoubtedly the best actor ever lived.
" 4.44 ---Just watch the Konnakkol portion of him getting ready by adjusting his throat when the flute goes for the first round of kalpana swarams".
He was truly amazing and no one can ever match him.

RAGHAVENDRA
20th January 2016, 10:10 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12507100_1039744662742872_7439189518691064952_n.jp g?oh=c8091796b560386dba7f1c5b8b63ccd5&oe=57448BBE&__gda__=1463115649_2ad903ac604b9c84a634d30e1a3b208 8

More details to follow

Russellxor
20th January 2016, 10:15 PM
"பா "வரிசை பாடல்கள்.
தலைவரின் படங்களில் இடம் பெற்றவை மட்டும்.
1.பார் மகளே பார்.
2.பார்த்த ஞாபகம் இல்லையோ
3.பாலும் பழமும் கைககளில் ஏந்தி
4.பாவாடை தாவணியில்
5.பார்த்தா பசுமரம்
6.பால் பொங்கும் பருவம்
7.பாலக்காட்டு பக்கத்திலே
8.பாலிருக்கும் பழமிருக்கும்
9.பாலூட்டி வளர்த்த கிளி
10.பாவை யுவராணி
11.பார்த்துப்போ
12.பாசமலரே அன்பில் விளைந்த
13.பாட்டும் நானே
14.பாட்டொன்று கேட்டேன்.
15.பார்த்தால் பசி தீரும்.

Russellxor
20th January 2016, 10:17 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301778863_zpsrqweavxp.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301778863_zpsrqweavxp.jpg.html)

Russellxor
20th January 2016, 10:18 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301775877_zpsrk8ayuz6.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301775877_zpsrk8ayuz6.jpg.html)

Russellxor
20th January 2016, 10:18 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301772942_zps0n6nmruu.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301772942_zps0n6nmruu.jpg.html)

Russellxor
20th January 2016, 10:19 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301769786_zpsnvefsdv4.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301769786_zpsnvefsdv4.jpg.html)

Russellxor
20th January 2016, 10:20 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301764670_zpsr4gfelmv.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301764670_zpsr4gfelmv.jpg.html)

Russellxor
20th January 2016, 10:20 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301761715_zpsardkl1zm.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301761715_zpsardkl1zm.jpg.html)

Russellxor
20th January 2016, 10:21 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301758697_zpshtpaejn4.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301758697_zpshtpaejn4.jpg.html)

Russellxor
20th January 2016, 10:21 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301755667_zpsfzvlcjqp.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301755667_zpsfzvlcjqp.jpg.html)

Russellxor
20th January 2016, 10:22 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301752570_zps4tvwanik.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301752570_zps4tvwanik.jpg.html)

Russellxor
20th January 2016, 10:23 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301745987_zpscfohmekq.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301745987_zpscfohmekq.jpg.html)

Russellxor
20th January 2016, 10:24 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301742940_zpsslqkcvgz.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301742940_zpsslqkcvgz.jpg.html)

Russellxor
20th January 2016, 10:24 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1439195087392_zpssxzvxykr.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1439195087392_zpssxzvxykr.jpg.html)

Russellxor
20th January 2016, 10:25 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301748918_zps83exawt_edit_1453308769686 _zpsu4zbaght.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301748918_zps83exawt_edit_1453308769686 _zpsu4zbaght.jpg.html)

RAGHAVENDRA
20th January 2016, 11:13 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1453301748918_zps83exawt_edit_1453308769686 _zpsu4zbaght.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1453301748918_zps83exawt_edit_1453308769686 _zpsu4zbaght.jpg.html)

Senthilvel

Outstanding! What an imagination you have!

எப்படியெல்லாம் அழகாக கற்பனை செய்து தலைவரின் திருவுருவத்தை செதுக்கியுள்ளீர்கள்...

தங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

Gopal.s
21st January 2016, 07:53 AM
ராகவேந்தர்,



நீங்கள் என்னை புரிந்து கொள்ள மாட்டீர்கள் .ஆனால் ,நான் உங்களை புரிந்ததோடு மட்டுமன்றி ,மிக மதிக்கவும் செய்கிறேன்.எங்களை விட,உங்களை போன்றோர் ,நடிகர்திலகத்தின் புகழை உலக அளவில் எடுத்து செல்ல தேவை.இதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.

புதிய எண்ணங்கள் ,முயற்சிகள்,புதிய நபர்கள் வரும் போது ,வரவேற்காமல் சந்தேக பார்வை பார்ப்பது ,தங்களை போல சுமங்கலி,தராசு,மோகனபுன்னகை, சிரஞ்சீவி, அமரகாவியம் எல்லாமே உன்னதம் என்று ஜால்ரா தட்டாவிட்டால் மற்றவர்களின் பார்வையில் அவர்களை வீழ்த்துவது என்று செயல்படுவது. நான் 2012 இல் சுணங்கியிருந்தால்,உங்களுக்கு இந்த வீர்யமான எழுத்துக்கள் கிடைத்திருக்குமா?

ஐரீன் வரும் போதெல்லாம்,வீறு கொண்டு எழுவது என்ன விவேகம்?அவரின் பார் மகளே பார் போன்று உங்களால் எழுத முடியுமா? புதிய எண்ணங்கள்,எழுத்துக்கள் வருவது,அதை வரவேற்பதே இந்த திரிக்கு வலு சேர்க்கும்.

மற்ற திரிகளுக்கும்,நமது திரிக்கும் உள்ள வித்யாசம்,இது என்னை போன்று,முரளி போன்று,கார்த்திக் போன்று,சாரதி போன்று,ஐரீன் போன்று,பிரபு ராம் போன்று,வாசு போன்று,ஜோ போன்று புத்தி கூர்மையுள்ளவர்கள் மிக்க திரி. இங்கு பாமரர்கள் ,படிக்காத ,பகுத்தறிய தெரியாதவர்கள் போல நாம சங்கீர்த்தன பஜனை நடக்க வாய்ப்பே இல்லை. வேதங்கள் போல,உபநிடதங்கள் போல,பாரதம் போல,திருக்குறள் போல பிரச்சினைக்குரிய கருத்துக்கள் வந்தே தீரும். கேனோபநிஷத் போல கடவுள் மறுப்பும் வரும். ஆனால் அது கடவுளின் இருப்பை ஆழ சொல்லும் முகாந்திரம் ஆகும்.

இங்கு வரும் அறிவின் ஊற்றை வரள செய்யாதீர்கள். ஐரீன் வருக,எண்ணங்களை தருக.

Gopal.s
21st January 2016, 08:43 AM
Excellent write up by our fellow hubber Irene Hastings. Great work buddy .(Trend-setting)

மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.


நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.

ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.

வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.

ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.

விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.

சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.

சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.

While covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him !

Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.


நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "

வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.

சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?

வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே

இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.

வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.

நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.

தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.

சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.

சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.

உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.

ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.

ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.


அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !

அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி

தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !

உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.

இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.

எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!


சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.

அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.

செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.

சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.

அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்



இப்படம் முற்றிலும் நடிகர் திலகத்தை பல கோணங்களில் காணலாம்:

முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்துவிடுவார் ! நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் ஆடுவது போல துவங்கம் அவர் வரும் காட்சி. ஒரு நடனமங்கை உங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார் என்று பணியாளர் சொன்ன உடனே முகபாவம் சற்று கோபமாக மாறி அந்த மனிதரை அனுப்பிவிடும் விதமே நமக்கு ஒரு செய்தி தரும்.....இவர் மற்றவர்களை போல இல்லை..மாறுபட்டவர் என்று !

தன் மனைவிக்கு ப்ரசவ வேதனை என்று செய்தி கிடைத்ததும் ஒரு வேகம்....

மருத்துவமனையில் தன் மனைவியை கண்டதும் ஒரு அன்பான அரவணைப்பு...

அருகில் 2 குழந்தைகளை கண்டதும்...." ஓ இரட்டை பிறவிகளா " என்று உற்சாகம்.

நண்பனின் போக்கு பிடிக்கவில்லை என்பதில் ஒரு தீர்மானமான முடிவு...அவர் அதில் காட்டும் கடுமை..ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...

குழந்தைகளிடம் அளவற்ற அன்பு....அதே சமயம் அவர்களிடம் ஒரு கண்டிப்பு...அவர்களை வளர்க்கும்விதத்தில்

தானாக வளர்த்துகொண்ட அந்தஸ்து என்ற பிடிவாத குணம்....அதனால் வெளிப்படுத்தும் ஒரு பெரிய மனிதனை போன்ற நடை, உடை , பாவனை

பணியாளர் கருணாநிதியிடம் முதலில் கண்டிப்பு.....

தன் பெண் ஒரு நல்ல குடும்பதை சேர்ந்த வாலிபனை மணக்க விரும்புகிறாள் என்றதும் ஒரு உற்சாகம், முத்துராமனிடம் சாதாரணமாக உரையாடத்துவங்கி உடனே தன் போக்கை மாற்றிக்கொள்ளும் விதம்..

ஒரு பெண் தன்னுடையவள் இல்லை என்று வி.கே.ஆர். சொன்னதும் ஒரு சீற்றம்..அதிற்ச்சி...

தன் அருமை மனைவி கூட தன்னிடம் மறைத்துவிட்டாளே என்று வெறுப்பு...

முதல் பெண் விஜயகுமாரி தன் மகள் இல்லை என்ற செய்தி கிடைத்ததும் ஒரு நிம்மதி..

பின் அவளை பற்றிய செய்தி அனைத்தும் தவறானது என்றதும் மீண்டும் பொங்கி எழும் ஒரு தந்தையின் பாசம். அன்பு.

ஆனால் அவள் இறந்து விட்டாளே என்று தாங்கமுடியாத சோகம்..அவலை நினைத்து நினைத்து வாடுவது... மனைவி படுத்த படுக்கையாகிவிட்டாளே என்று துயரம்..இயலாமை....

முடிவில் தன் பெண்ணை கண்டதும் சந்தோஷம்..மகிழ்ச்சி...

நண்பணிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பழைய நட்பின்படி, தன் பெண்ணை நண்பனின் மகனுக்கே மணமுடித்தல்.............


இப்படி ஒரு கம்பீரத்துடன் துவங்கும் அவர், படிபடியாக தளர்ந்து தான் கொண்ட அந்தஸ்து, கவுரவம்..என்ற கோட்பாட்டிலிருந்து வரும் அவர் தான் படத்தின் நாயகன்...

உண்மையிலேயே தன் சொந்த பெண்ணை பறிகொடுத்தவர் போல துடிக்கும் காட்சி தான் தலை சிறந்த நடிப்பு...

மின்னல் வேகத்தில் அவர் காட்டும் முகமாற்றம் இப்படத்தின் சிறப்பு..

அவருடைய நடை , உடை , பாவனையிலேயே ஒரு பணக்கார தொழிலதிபரின் எல்லா குணாதிசயங்களையும் காணலாம்.

படத்தின் 3/4 பகுதி புகை பிடிப்பது போல ஒரு அமைப்பு... அதில் பாதி பகுதி அதை பிடித்துக்கொண்டே பலவிதமாக பேசும் ஸ்டையில் !

வடநாட்டு ஆடையான குர்தா-பைஜாமா ...இந்த உடையை அவர் பொது வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்துவார்...இப்படம் முழுவது அதுதான் அவரின் உடை ! ஒரு அழகான குருந்தாடி கூட.!

34 வயதில் ஒரு நடுத்தர/ வயதான வேடம் செய்ய யாருக்கு தான் துணிச்சல் வரும்...

காதலி...மனைவியுடன் ஆடிப்பாட காதல் பாட்டு கிடையாது....

இப்படி படம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ளும் நம் நடிகர் திலகத்தின் திறமையை பற்றி எழுத ஒரு கட்டுரையே வேண்டும்
காலத்தை வென்ற நடிப்பு... நடிகர்களின் திலகம் தான் இவர் !

Russellxor
21st January 2016, 01:32 PM
தலைவரின் ரசிகர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இருந்து... http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453356701976_zpsxpetxcok.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453356701976_zpsxpetxcok.jpg.html)

abkhlabhi
21st January 2016, 01:33 PM
http://www.tamilsguide.com/details.php?nid=39&catid=146774

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது. ஆனால், அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவன், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன். சிவாஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்கே அழைத்துச் சென்று உபசரித்தார்கள் அந்த ஹாலிவுட் ஸ்டார்கள். "காட்பாதர்" கதாநாயகன் மார்லன் பிராண்டோ, "பென் ஹர்" நாயகன், சார்டன் ஹெஸ்டன், டென் காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய "பூல்பிரன்னர்" உள்பட ஹாலிவுட் பஞ்ச பாண்டவர்கள் மத்தியில் எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா..எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா..

- See more at: http://www.tamilsguide.com/details.php?nid=39&catid=146774#sthash.BT4bjpfs.dpuf

Russellxor
21st January 2016, 01:33 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/Mobile%20Uploads/FB_IMG_1453356648652_zpsxmbox11v.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/Mobile%20Uploads/FB_IMG_1453356648652_zpsxmbox11v.jpg.html)

Irene Hastings
21st January 2016, 03:36 PM
PUDHIYA PARAVAI

PART-1

அறிமுகம்

திரு தாதா மிராசி அவர்களுக்கு ஒரு வந்தனம்...

என் ( நம் ) தலைவனை நாம் பார்க்கும் முதல் சந்திப்பே ஒரு தனி சுவையானது !! மிகவும் அசத்தலான ஒரு அறிமுகம் .
ஒரு கதாநாயகன் எப்பேர் பட்டவன் ....அவனை அறிமுக படுத்த வேண்டும்
நம் நாயகன் ஒரு பெரும் பணக்காரன் ..

செல்வந்தர்களுக்கு என்று ஒரு தனி குணாதிசயங்கள் உண்டு...

அதாவது , எப்பொழுதும் மேல் தட்டு மனிதர்களையே தினமும் சந்திப்பதாலும் அல்லது அவர்களுடன் பழகுவதாலும் ஒரு பக்குவமும், தனி நாகரிகமும் ஆங்கிலத்தில் DECORUM என்று சொல்வார்களே அதை பின்பற்றுவர் செல்வந்தர்கள் ...

ஒரு உல்லாச கப்பலில் மலாயாவிலிருந்து தாயகம் வரும் நம் கோபால் , Binocular மூலமாக வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் சமயம் , பின் நோக்கி நகர தற்செயலாக ஒரு பெண்ணின் காலினை இடற ....உடனே மன்னிப்பு கேட்க ....

He : Oh God…
She : I am very sorry
He : Illa Illa.. Sorry solla vendiyavan naan dhaan …naan ungala paakadha vandhu…
She : illa naan dhan kaala neeti kondirundhen…

Well dressed up , half sleeves white shirt , tucked in ..
When he comes across a stranger , our man will always bend few inches extra to display that courtesy …It’s an indication of coming forward to voluntarily introduce oneself ..
இங்கு தான் நாம் பார்க்கிறோம் ..உடனே உணர்கிறோம்...ஒ இவன் அல்ல... இவர் ஒரு மேல் தட்டு மனிதர் !

I also watched ANbe vaa and the introduction of Makkal Thilagam :
JB is also a very rich business man ..Coming back from an overseas business trip and he is getting down ..
First thing, He will thank the support staff and then briskly will get down waving to the sea of public . Here the character appears in full suit with hat and gets garlanded by all…
இங்கும் நாம் பார்க்கிறோம் ..உடனே உணர்கிறோம்...ஒ இவன் அல்ல... இவர் ஒரு மேல் தட்டு மனிதர் !

Part - 2 to follow

Russelldvt
21st January 2016, 06:51 PM
http://i65.tinypic.com/eqt24h.jpg

Russelldvt
21st January 2016, 06:52 PM
http://i68.tinypic.com/1j0lll.jpg

Russelldvt
21st January 2016, 06:53 PM
http://i63.tinypic.com/149b0hu.jpg

Russelldvt
21st January 2016, 06:55 PM
http://i65.tinypic.com/27xqafk.jpg

Russelldvt
21st January 2016, 06:56 PM
http://i65.tinypic.com/116i2r5.jpg

Russelldvt
21st January 2016, 06:57 PM
http://i66.tinypic.com/2r7ad82.jpg

Russelldvt
21st January 2016, 07:12 PM
http://i67.tinypic.com/2ls8j2b.jpg

Russelldvt
21st January 2016, 07:13 PM
http://i67.tinypic.com/10ngtfk.jpg

Russelldvt
21st January 2016, 07:14 PM
http://i65.tinypic.com/34zhefr.jpg

Russelldvt
21st January 2016, 07:15 PM
http://i68.tinypic.com/25jfpj7.jpg

Russelldvt
21st January 2016, 07:16 PM
http://i67.tinypic.com/vp7pl2.jpg

Russelldvt
21st January 2016, 07:16 PM
http://i67.tinypic.com/runrcy.jpg

Russelldvt
21st January 2016, 07:17 PM
http://i66.tinypic.com/k39dz4.jpg

Russelldvt
21st January 2016, 07:18 PM
http://i63.tinypic.com/vpl1zo.jpg

Russelldvt
21st January 2016, 07:19 PM
http://i68.tinypic.com/2cfaxs1.jpg

Russelldvt
21st January 2016, 07:20 PM
http://i65.tinypic.com/35jm39k.jpg

Russelldvt
21st January 2016, 07:21 PM
http://i66.tinypic.com/65wm5h.jpg

Russelldvt
21st January 2016, 07:21 PM
http://i68.tinypic.com/14wuekz.jpg

Russelldvt
21st January 2016, 07:22 PM
http://i67.tinypic.com/sl35sy.jpg

Russelldvt
21st January 2016, 07:23 PM
http://i66.tinypic.com/n97dk.jpg

Russelldvt
21st January 2016, 07:24 PM
http://i64.tinypic.com/2napchg.jpg

Russelldvt
21st January 2016, 07:25 PM
http://i67.tinypic.com/xp1wky.jpg

Russelldvt
21st January 2016, 07:26 PM
http://i67.tinypic.com/1zeld95.jpg

Russelldvt
21st January 2016, 07:26 PM
http://i68.tinypic.com/30ue3ap.jpg

Russelldvt
21st January 2016, 07:27 PM
http://i68.tinypic.com/w13fd0.jpg

Russelldvt
21st January 2016, 07:28 PM
http://i64.tinypic.com/290t2x5.jpg

Russelldvt
21st January 2016, 07:29 PM
http://i67.tinypic.com/246qi6s.jpg

Russelldvt
21st January 2016, 07:29 PM
http://i65.tinypic.com/2s1vggl.jpg

Russelldvt
21st January 2016, 07:30 PM
http://i63.tinypic.com/xmlqn5.jpg

Russelldvt
21st January 2016, 07:31 PM
http://i65.tinypic.com/29vgv0x.jpg

Russelldvt
21st January 2016, 07:31 PM
http://i68.tinypic.com/110hpnp.jpg

Russelldvt
21st January 2016, 07:32 PM
http://i68.tinypic.com/167455d.jpg

Russelldvt
21st January 2016, 07:33 PM
http://i66.tinypic.com/2s0n86x.jpg

Russelldvt
21st January 2016, 07:34 PM
http://i68.tinypic.com/2ibckt5.jpg

Russelldvt
21st January 2016, 07:34 PM
http://i64.tinypic.com/wgyrys.jpg

Russelldvt
21st January 2016, 07:35 PM
http://i64.tinypic.com/1zq6era.jpg

Russelldvt
21st January 2016, 07:36 PM
http://i63.tinypic.com/4jnwc1.jpg

Russelldvt
21st January 2016, 07:36 PM
http://i63.tinypic.com/esudkj.jpg

Russelldvt
21st January 2016, 07:37 PM
http://i64.tinypic.com/6s5k0n.jpg

Russelldvt
21st January 2016, 07:38 PM
http://i63.tinypic.com/1nyzyf.jpg

Russelldvt
21st January 2016, 07:39 PM
நன்றியுடன் முத்தையன்..

http://i67.tinypic.com/2i8ktmv.jpg

Gopal.s
21st January 2016, 08:57 PM
ஐரீன்,

தாங்கள் சொன்னது போல,என் விண்ணப்பத்தை ஏற்று மேலான பதிவை துவங்கியதற்கு மிக்க நன்றி.

ஆனால் ,நீங்கள் எழுதுவது நடிகர்திலகம் என்ற உலக நடிகரை பற்றி, அவருடைய மிக சிறந்த படங்களில் ஒன்றை பற்றி என்பதை நினைவில் நிறுத்தி, தயவு செய்து ,நாங்கள் நினைக்கவும் விரும்பாதவற்றோடு,மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் ஒப்பீடு செய்வதை தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.

தங்கள் மேல் மதிப்பு கொண்டவன் என்ற விதத்தில்,இந்த விண்ணப்பத்தை மதிப்பது நம் நட்புக்கு உகந்தது என்று தெரிவித்து கொண்டு,வேண்டாத ஒப்பீடுகளை தவிர்க்குமாறு மீண்டும் கேட்டு கொள்கிறேன்.

வேண்டாத அந்த பகுதியை நீக்கி விடவும்.

Subramaniam Ramajayam
21st January 2016, 10:45 PM
http://i64.tinypic.com/wgyrys.jpg

Excellent work annanoru koil AND related materials
thanks on my behalf and nt fanstoo

Gopal.s
22nd January 2016, 08:52 AM
1973 இல் வெளியான மூன்று முற்றிலும் மாறுபட்ட அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களின் ஆய்வுகள்.

Richardsof
22nd January 2016, 08:55 AM
PUDHIYA PARAVAI

PART-1

அறிமுகம்

திரு தாதா மிராசி அவர்களுக்கு ஒரு வந்தனம்...

என் ( நம் ) தலைவனை நாம் பார்க்கும் முதல் சந்திப்பே ஒரு தனி சுவையானது !! மிகவும் அசத்தலான ஒரு அறிமுகம் .
ஒரு கதாநாயகன் எப்பேர் பட்டவன் ....அவனை அறிமுக படுத்த வேண்டும்
நம் நாயகன் ஒரு பெரும் பணக்காரன் ..

செல்வந்தர்களுக்கு என்று ஒரு தனி குணாதிசயங்கள் உண்டு...

அதாவது , எப்பொழுதும் மேல் தட்டு மனிதர்களையே தினமும் சந்திப்பதாலும் அல்லது அவர்களுடன் பழகுவதாலும் ஒரு பக்குவமும், தனி நாகரிகமும் ஆங்கிலத்தில் DECORUM என்று சொல்வார்களே அதை பின்பற்றுவர் செல்வந்தர்கள் ...

ஒரு உல்லாச கப்பலில் மலாயாவிலிருந்து தாயகம் வரும் நம் கோபால் , Binocular மூலமாக வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் சமயம் , பின் நோக்கி நகர தற்செயலாக ஒரு பெண்ணின் காலினை இடற ....உடனே மன்னிப்பு கேட்க ....

He : Oh God…
She : I am very sorry
He : Illa Illa.. Sorry solla vendiyavan naan dhaan …naan ungala paakadha vandhu…
She : illa naan dhan kaala neeti kondirundhen…

Well dressed up , half sleeves white shirt , tucked in ..
When he comes across a stranger , our man will always bend few inches extra to display that courtesy …It’s an indication of coming forward to voluntarily introduce oneself ..
இங்கு தான் நாம் பார்க்கிறோம் ..உடனே உணர்கிறோம்...ஒ இவன் அல்ல... இவர் ஒரு மேல் தட்டு மனிதர் !

I also watched ANbe vaa and the introduction of Makkal Thilagam :
JB is also a very rich business man ..Coming back from an overseas business trip and he is getting down ..
First thing, He will thank the support staff and then briskly will get down waving to the sea of public . Here the character appears in full suit with hat and gets garlanded by all…
இங்கும் நாம் பார்க்கிறோம் ..உடனே உணர்கிறோம்...ஒ இவன் அல்ல... இவர் ஒரு மேல் தட்டு மனிதர் !

Part - 2 to follow

very nice.thanks Irene sir

Gopal.s
22nd January 2016, 09:06 AM
ஐரீன்,



பார்த்தீர்களா?வீண் குழப்பம் விளைவிக்க என்னை உபயோக படுத்தி கொண்டு,என் அபிப்ராயத்தில் மிக மிக தாழ்ந்து விட்டீர்கள். இன்னும் கூட உங்களுக்கு வாய்ப்பு உண்டு. நேர்மையானவர் என்று நிரூபிக்க.



எஸ்வி போன்றவர்கள் ,வேண்டாத இடத்தில் ,வேண்டாத விருந்தாளியாய் நுழைவதில் கை தேர்ந்தவர்கள்.

JamesFague
22nd January 2016, 09:20 AM
Mr Muthaiyan Ammu,

Thanks for the crystal & clear photos of NT in AOK.

Gopal.s
22nd January 2016, 09:26 AM
நடிகர்திலகத்தின் உடல்மொழி:

நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.

---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.

---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"

---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"

---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?

---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,

---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.

---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!

--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.

---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)

--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.

---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......

---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....

---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......


---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!

---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...

---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .

---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .

---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.


"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,


--அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?

---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.

---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.

---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.

---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;

---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;

---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.

--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.

---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!

---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..


--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..

---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..

---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்

---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..

பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.

சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.

சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.

அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .

துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.


பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.

பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.

யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.

வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.

ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.

Gopal.s
22nd January 2016, 09:32 AM
எங்கள் தங்க ராஜா- 1973.


நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.

இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.

ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.

இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)

ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.

ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.

உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..

வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.

அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.

வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.

கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.

கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.

சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.

முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.

சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.

எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.

இனி நடிகர்திலகம்.

அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)

பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.

வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.

படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.

சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).

தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)

முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).

மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .

கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .

போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.

Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.



எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.

Gopal.s
22nd January 2016, 09:47 AM
கெளரவம்-1973

கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.

Richardsof
22nd January 2016, 09:54 AM
கோபால்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது உங்களுக்கு இருக்கும் எதிர்ப்பை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் .வீணாக மற்ற பதிவாளர்களுக்கு கட்டளை இடவும் வேண்டாம் . கெஞ்சவும் வேண்டாம் . கிண்டலும் வேண்டாம் . கேலியும் வேண்டாம் .
புரிந்து கொள்ளவும் நண்பரே .

Gopal.s
22nd January 2016, 10:00 AM
எஸ்வி,



இதை உங்கள் திரியில் வந்து சொல்லி,நீங்கள் எதிர்த்தால் ஞாயம். இது எங்கள் பிரத்யேக திரி. இங்கு எது எங்கள் சுவற்றை அலங்கரிக்க வேண்டும், எந்த குப்பைகள் கொட்ட பட கூடாது என்று சொல்லும் உரிமை,கடமை எங்களுக்கு உண்டு.