PDA

View Full Version : Makkal Thilagam MGR PART 18



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

ainefal
15th December 2015, 08:22 AM
https://www.youtube.com/watch?v=_Do8lK7iLaM

fidowag
15th December 2015, 08:28 AM
மதுரை திருமங்கலம் பானு அரங்கில் நேற்று (14/12/2015) முதல் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள் , சனி ஞாயிறு 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது . சுவரொட்டி விளம்பரங்கள் பின்னர் பதிவிடப்படும் .

தகவல் உதவி : மதுரை திரு. தமிழ் நேசன்

http://i63.tinypic.com/a42cgp.jpg

fidowag
15th December 2015, 08:31 AM
http://i67.tinypic.com/2czys94.jpg

ainefal
15th December 2015, 08:31 AM
Thanks to Sri. MGC B Pradeep

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/floodsmgr_zps5lrucsjm.jpg

Richardsof
15th December 2015, 10:02 AM
http://i64.tinypic.com/nv75t5.jpg
http://i64.tinypic.com/wsms2a.jpg

Richardsof
15th December 2015, 10:04 AM
http://i66.tinypic.com/vpuu78.jpg

Russellisf
15th December 2015, 01:40 PM
மக்கள் திலகம் திரி 18 தொடங்கிய திரு கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Russellisf
15th December 2015, 02:15 PM
நமது கடவுளின் தீவிர பக்தர் திரு சத்யா எனும் சத்தியமுர்த்தி அவர்கள் கடந்த 2000 மே 6 தேதி முதல் வரும் ஞாயிறு தோறும் தலைவரின் சமாதிக்கு சென்று மலரால் அலங்கரித்து வணங்கி அங்கு வரும் பொதுமக்களுக்கு தன்னால் செய்யபட்ட பிரசாதத்தை இது நாள் வரை வழங்கிவரும் அவர் தன்னுடைய முதல் முயற்சியாக தெய்வத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில்

பொன் போல் மின்னும் பொன்மனச்செம்மல் என்ற பெயரில்

நூற்றாண்டு தொடக்கும் சிறப்பு மலர் வெளியீட உள்ளார் நமது நண்பர்கள் யாவரும் அவருக்கு பேராதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்

விளமபர கட்டணம்

முழு பக்கம் - 10000.00 ரூபாய்

அரை பக்கம் - 5000.00 ரூபாய்

பாஸ்போர்ட் சைஸ் பக்கம் - 3000.00 ரூபாய்

விளம்பரம் செய்யும் நண்பர்களுக்கு புத்தகம் இலவசமாக வழங்கப்படும்

அணுகவேண்டிய தொலைபேசி எண் சத்யா 9677309995



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr%20image_zpsz7uclipx.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr%20image_zpsz7uclipx.jpg.html)

Russellisf
15th December 2015, 02:17 PM
நமது கடவுளின் தீவிர பக்தர் திரு சத்யா எனும் சத்தியமுர்த்தி அவர்கள் கடந்த 2000 மே 6 தேதி முதல் வரும் ஞாயிறு தோறும் தலைவரின் சமாதிக்கு சென்று மலரால் அலங்கரித்து வணங்கி அங்கு வரும் பொதுமக்களுக்கு தன்னால் செய்யபட்ட பிரசாதத்தை இது நாள் வரை வழங்கிவரும் அவர் தன்னுடைய முதல் முயற்சியாக தெய்வத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில்

பொன் போல் மின்னும் பொன்மனச்செம்மல் என்ற பெயரில்

நூற்றாண்டு தொடக்கும் சிறப்பு மலர் வெளியீட உள்ளார் நமது நண்பர்கள் யாவரும் அவருக்கு பேராதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்

விளமபர கட்டணம்

முழு பக்கம் - 10000.00 ரூபாய்

அரை பக்கம் - 5000.00 ரூபாய்

பாஸ்போர்ட் சைஸ் பக்கம் - 3000.00 ரூபாய்

விளம்பரம் செய்யும் நண்பர்களுக்கு புத்தகம் இலவசமாக வழங்கப்படும்

அணுகவேண்டிய தொலைபேசி எண் சத்யா 9677309995



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr%20image_zpsz7uclipx.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr%20image_zpsz7uclipx.jpg.html)

Russellisf
15th December 2015, 02:23 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr%20image_zpshdudmqjt.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr%20image_zpshdudmqjt.jpg.html)

Russellisf
15th December 2015, 02:25 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mgr%20phtos_zpsqsqe4nmv.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mgr%20phtos_zpsqsqe4nmv.jpg.html)

Russellvpd
15th December 2015, 03:30 PM
மக்கள் திலகத்தை தாக்கி வேண்டும் என்றே மதிஒலி பத்திரிகையில் வெளியான செய்திகளை மற்றொரு துணை நடிகர் திரியில் போட்டிருக்கார்கள். போடாமல் அவர்கள் தவிர்க்க நினைத்தால் தவிருத்திருக்காலாம். வேண்டும் என்று மக்கள் திலகத்தை தாக்குகிறார்கள்.

அப்படியானால் வாருங்கள். ஆரோக்கியமாக விவாதம் நடத்தலாம். யார் படங்கள் நஷ்டம் என்று விவாதிக்கலாம் வாருங்காள். ப்ராப்தம் படம் படுதோல்வி. நஷ்டமடைந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்த அந்த படத்தை தயாரித்த நடிகை சாவித்திரிக்கு புரட்சித் தலைவர் பணமும் வீடும் கொடுத்து உதவிகள் செய்தார். அது தொடர்பான பதிவுகள் இங்கே.

http://www.sramakrishnan.com/?p=2590

பறவைக் கோணம்

சாவித்தியை நாம் நடிகையர் திலகம் என்றே சொல்கிறோம், சினிமாவில் இவர் ஒருவரே இப் பட்டத்தை பெற்றவர், சாவித்திரியினை மஹாநடிகை என்கிறது தெலுங்கு சினிமா, சொந்த வாழ்வில் அதிகமும் துன்பத்தையும் வேதனைகளையும் அனுபவித்து குடியால் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டார் சாவித்திரி, ஆனால் அவரைப்போல சினிமாவை நேசித்த. சினிமாவிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகை இன்று வரை எவருமில்லை,

சாவித்திரி தனிப்பெரும் ஆளுமை, எந்தக் கதாநாயனுடன் நடித்தாலும் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் ,துடுக்குதனமிக்க பேச்சுமாக சாவித்திரி தனது தனித்ன்மையை வெளிப்படுத்த தவறியதேயில்லை, தேவதாஸ் படத்தில் வரும் சாவித்திரிக்கும் மிஸ்ஸியம்மாவில் வரும் சாவித்திரிக்கும் இடையில் நடிப்பில் எவ்வளவு பெரிய மாறுபாடு, அந்த வேறுபாட்டை அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கவனமாக வெளிப்படுத்தியவர்,

மிகக் குறைவான நடிகைகளே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள், பானுமதி. அதில் ஒரு முன்னோடி, சாவித்திரி தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

மணம் போல் மாங்கல்யம் படத்தில் நடித்த போது ஜெமினி கணேசனைக் காதலிக்க ஆரம்பித்து 1956-ல் அவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.

சிவாஜியை வைத்து அவர் இயக்கிய பிராப்தம் படத்தை சமீபத்தில் மறுமுறை பார்த்தேன், பாசமலர் படத்தின் வழியே சிவாஜியின் தங்கை என்ற அழியாத பிம்பத்தை உருவாக்கி கொண்ட சாவித்திரி, சிவாஜியை வைத்தே பிராப்தம் படத்தை உருவாக்கினார், அப்படத்தால் உருவான பிரச்சனைகள் தான் சாவித்திரியின் வீழ்ச்சிக்கான முக்கியகாரணமாக அமைந்தது

அடூர்த்தி சுப்பாராவ் இயக்கி நாகேஸ்வர ராவ் சாவித்திரி ஜமுனா நடித்த மூக மனசுலு என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இப்படத்தில் கே,விஸ்வநாத் உதவிஇயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்

முந்நூறு நாட்களை கடந்து ஒடிச் சாதனை செய்த அப் படத்தை சாவித்திரி தமிழில் இயக்க விரும்பினார், அதே படம் மிலன் என்ற பெயரில் இந்தியில் வெளியாகி அங்கேயும் வெற்றி பெற்றது, ஆகவே இப்படம் தமிழில் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினார்,

மூக மனசுலு கோதாவரி ஆற்றின் கரையில் வாழும் ஒரு ஜமீன்தார் குடும்பத்தினைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணிற்கும் கோபி என்ற படகோட்டி ஒருவனுக்குமான உறவைப் பற்றியது, பிறவி தோறும் தொடரும் பந்தம் என்பது போல மறுபிறவியில் இவர்கள் வேறு ஊரில் வேறு ஒரு கல்லூரியில் படித்து திருமணம் செய்து கொண்டு தேனிலவிற்காக அதே கோதாவரி ஆற்றங்கரை பகுதிக்கு வருகிறார்கள், முந்தைய பிறவியின் நினைவுகளுடன் அவருக்காக காத்திருக்கும் கௌரி என்ற பெண்ணைச் சந்திக்கிறான் கோபி,

கோபிக்காகவே காத்திருந்த கௌரி அவரது மடியில் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் இறந்து போய்விடுகிறாள், முந்தைய பிறவியின் நினைவுகள் வழியாக படம் துவங்குகிறது, தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் காட்சிபடுத்தபட்ட விதமும் சிறப்பாக இருக்கின்றன, கோதாவிரியைப் பிஎல் ராய் ஒளிப்பதிவு செய்துள்ள விதம் அபாரமானது, இன்றும் அது முன்மாதிரி படமாகவே இருக்கிறது,

அதைத் தமிழில் சிவாஜி நடித்தால் வெற்றிபெறும் என்ற கணிப்பில் படம் துவங்கப்பட்டது, ஆரூர்தாஸ் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார், சிவாஜியின் தங்கை என்று அறியப்பட்ட சாவித்திரியை சிவாஜி காதலிப்பதையோ. மனைவியாக்கி கொள்வதையோ மக்கள் விரும்பமாட்டார்கள் என்று படம் துவங்கப்படும் நாட்களில் கூறப்பட்டது, ஆனால் சாவித்திரி சின்னம்மா என்ற தனது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது என்று உறுதியாக நம்பினார்,

படத்தின் ஆரம்பத்தில் இருந்த சிவாஜிக்கும் அவருக்குமான சிக்கல்களும் கருத்துவேறுபாடுகளும் துவங்கிவிட்டிருந்தன, சிவாஜி தனது கதாபாத்திரத்தை விட சாவித்திரியே மேலோங்கியிருப்பதாக உணர்ந்திருக்ககூடும், இந்தக் கசப்பு படத்தின் பிரச்சனையாகி இரண்டு ஆண்டுகள் படமாக்குதல் நடைபெற்றிருக்கிறது

மூக மனசிலு படத்தையும் பிராப்தம் படத்தையும் ஒரு சேரப் பார்க்கும்போது அந்த படத்தின் பத்தின் ஒரு பங்கு கூட தமிழில் இல்லை என்றே தோன்றுகிறது, காரணம் ஈடுபாடு இல்லாத நடிப்பு மற்றும் சிவாஜி சம்மதிக்க மறுத்த காரணத்தால் படத்தில் இருந்து தூக்கபட்ட காட்சிகள், தொடர்பில்லாத கதைப்போக்கு, அது போலவே இப்படத்தில் சந்திரகலாவை இரண்டாவது கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் சாவித்திரி, ( இவரே உலகம் சுற்றும் வாலிபனில் எம்ஜிஆரோடு இணைந்து நடித்தவர் ), ஐமுனாவின் துடுக்குதனமும் இயல்பும் இப்படத்தில் இவரிடமும் சுத்தமாகயில்லை

மூக மனசுலு படம் பாடலுக்காகவே ஒடியது, எட்டு பாடல்கள் அதிலும் கே.வி.மகாதேவன் நாட்டுப்புற தவில் மற்றும் நாதஸ்வர இசையை படத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார். கண்டசாலா மற்றும் சுசிலாவின் குரலில் உள்ள பாடல்கள் பெரும்வரவேற்பை பெற்றன

தமிழிலும் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னை தழுவிக் கொண்டோடுது தென்னங்காத்து பாடல் மிகுந்த புகழ்பெற்றது, அதிலும் குறிப்பாக தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும். வெகு நாளாக என் ஆசை சின்னம்மா என்ற பாடலின் ஊடே கண்ணா என்று சாவித்திரி மெய்யுருக அழைக்கும் குரல் சிலிர்ப்பூட்டக்கூடியது,

படத்தின் ஆரம்பக் காட்சியில் தேனிலவிற்காக சிவாஜியும் சாவித்திரியும் ஒரு காரில் பயணம் செய்கிறார்கள், அந்தக் காரை சாவித்திரி ஒட்டிக் கொண்டுவருகிறார், அருகில் சிவாஜி உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே வருவார், அநேகமாக இந்த படத்தில் தான் மணப்பெண் வெட்கப்பட்டு தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டிராமல் சந்தோஷமாக சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவேயில்லாதது என்று பாட்டுப் பாடியபடியே காரை ஒட்டிக் கொண்டு போகிறார், அபூர்வமான சித்தரிப்பு அது, பொதுவாக கதாநாயகர்கள் இது போன்ற காட்சிகளில் நடிக்க ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள், அதை மீறி சாவித்திரி அது தான் கதாபாத்திரத்தின் இயல்பு என்று ஒத்துக் கொள்ள செய்திருக்கிறார்,

படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் சாவித்திரிக்கே ஷாட் முதன்மையாக உள்ளது, பிரேமின் ஒரு ஒரம் தான் சிவாஜி இடம் பெறுகிறார், கேமிரா நகரும் போது கூட அது சாவித்திரியை நோக்கியே நகர்கிறது, சிவாஜியின் உடையலங்காரம் முற்றிலும் தெலுங்குச் சாயல் கொண்டது, உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அப்படியே தெலுங்கில் உள்ளது போலவே சாவித்திரி எடுத்திருக்கிறார், ஆனால் சில காட்சிகளைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றும் போது அதிக அக்கறை கொள்ளவேயில்லை

தெலுங்கு படத்தில் கைதட்டு பெற்ற பல வசனங்கள் தமிழில் அப்படியே இருக்கின்றன, ஆனால் ஒன்று கூட தனித்துப் பாராட்டு பெறவேயில்லை, ஒரு இயக்குனராகத் தான் நினைத்த படத்தை உருவாக்க முடியவில்லை என்பதை சாவித்திரி நன்றாக உணர்ந்திருக்கிறார், கடன்சுமைகளோடு படத்தை உருவாக்கிய சாவித்திரி 1971 ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு அன்று வெளியிட்டார், படம் பெரும்தோல்வியை தழுவியது, அதனால் கடனாளியான சாவித்திரி மனநிம்மதி இழந்து அவதிப்படத்துவங்கினார், ஒரு இயக்குனராகப் படத்தின் தோல்விக்கு தானே காரணம் என்று ஒப்புக் கொண்டதோடு தன்னோடு முரண்பட்ட எவரையும் பற்றி ஒருவார்த்தை அவர் தவறாகப் பேசவேயில்லை,

மதுமதி மோகமனசிலு இரண்டுமே மறுபிறவி கதையின் வெற்றிகரமான இரண்டுபடங்கள், இதில் மதுமதி நெஞ்சம் மறப்பதில்லை என்ற படமாகி பெரும் வெற்றிபெற்றது, ஆனால் பிராப்தம் தோல்வியை அடைந்தது, இதே வகைப்பாட்டில் ஹிந்தியில் உருவாக்கபட்ட ஒம்சாந்தி ஒம் பெரும்வெற்றியை பெற்றது

சாவித்திரி என்ற ஆளுமையின் பன்முகத்தன்மையில் ஒன்று இயக்குனரானது, அதை அவர் சவாலாக எடுத்துக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார், பொதுவாக நடிகைகளைக் கவர்ச்சிபொம்மையாகச் சித்தரிக்கும் சினிமா உலகில், கவர்ச்சியின் நிழல் கூட தன்மீது விழாமல் பார்த்துக் கொண்டதோடு சினிமாவில் நடிகர்கள் இயக்குனர் ஆனதைப் போல தன்னால் சாதித்து காட்ட முடியும் என்று நிரூபணம் செய்தவர் சாவித்திரி, படத்தின் எல்லாக் குறைபாடுகளுக்கும் முக்கியக் காரணம் கசப்புணர்வோடு முக்கியநடிகர்கள் பணியாற்றியதே,

மனம் வருந்தி வடிக்கும் கண்ணீர் வாளை விட கூர்மையானது. அது தவறுக்கு காரணமானவர்களை நிச்சயம் தண்டித்துவிடும் என்று நம்பினார் சாவித்திரி, ஆனால் அது அவரது வாழ்நாளில் நடைபெறவேயில்லை, மனவேதனை தாளமுடியாமல் குடித்துத்குடித்துத் தன்னை உருத்தெறியாமல் சிதைத்துக் கொண்டு மீளமுடியாத துயரச் சின்னமாக இறந்து போன சாவித்திரி என்ற மகாநடிகையின் வீழ்ச்சியை ஒரு காவியத்துயரம் என்றே சொல்வேன்,

மூகமனசிலு இன்றும் விரும்பிப் பார்க்கபடுகிறது, ஆனால் பிராப்தம் கைவிடப்பட்ட படமாகவே இருக்கிறது, இந்த படத்தின் ஊடாக ஒளிர்விடும் சாவித்திரியின் ஆசையும் கனவுகளுக்காக அதை யாவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது

சினிமாவின் பகட்டான வெளிச்சம் எப்போதும் வெற்றியின் பக்கமே சுழன்று கொண்டிருக்கிறது, தோற்றும் கைவிடப்பட்டும் போன திரைக்கலைஞர்கள் படம் முடிந்து போன பிறகு மிஞ்சும் வெற்றுத்திரையைப் போல மௌனமாக, கண்ணீர் கறைபடிந்த நினைவுகளோடு இருக்கிறார்கள், சினிமாவின் இத்தனை கோடி ஜனத்திரளில் அது பலராலும் உணரப்படுவதேயில்லை என்பதே கூடுதல் துயரம்.

Russellvpd
15th December 2015, 03:33 PM
http://mix.looktamil.com/cinema-articles/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%A E%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/

டைரக்டர் சாவித்திரி

சிவாஜி கணேசன் அத்தியாயத்துக்குள் இன்னொரு கதை – வழி காட்டலின்றி ஒரு கலைஞர் வீழ்ச்சியுற்ற கதை… தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மதுசூதனராவுக்கு ஒரு ஆசை. ‘நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, தற்போது உடம்பு கொஞ்சம் கனத்துப் போய் விட்டதால் அதிக வாய்ப்பில்லாமலிருக்கும் நடிகை சாவித்திரியை டைரக்ட் செய்ய வைத்து ஒரு படத்தை உருவாக்கினால் பரபரப்பாக இருக்குமோ?’

சாவித்திரியைத் தேடி வந்தார்; “இதோ பாரம்மா எங்கள் டைரக்டர் ஆதுர்த்தி கப்பாராவ் ரொம்ப பிஸியாகி விட்டார். அதனால் எங்கள் படக் கம்பெனியின் அடுத்த படத்தை நீ டைரக்ட் செய்ய வேண்டும்”
உடனே சம்மதம் சொல்லவில்லை. சில நாட்களுக்கு பின் திருமதி மதுசூதனராவ் வந்தார்.
“இருங்கள் ஒரு நிமிஷம். அவரைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு ஜெமினி கணேசனுக்குப் போன் செய்தார் சாவித்திரி.

“உன்னை டைரக்டர் செய்யச் சொல்றாங்க! அவ்வளவு தானே, தயங்காம ஒத்துக்கோ” என்றார் ஜெமினி கணேசன்: வேண்டாம் என்று அவர் தடுத்திருக்கலாம்.

தயாரிப்பாளர் – திருமதி மதுசூதனராவ்; டைரக்டர் – சாவித்திரி; உதவி டைரக்டர் – மோகனகுமாரி; கதை – சரோஜினி; இசையமைப்பாளர் – பி. லீலா… தெலுங்குப் படம் உருவாகி வெளியாகியது. தமிழ்ப்படம் ஒன்றை டைரக்ட் செய்ய சாவித்திரிக்கு ஆசை வந்தது தமிழ்ப் படத்தில் நடித்து வெகு நாட்களாகி விட்டனவே… தமிழ்ப் படத்தை டைரக்ட் செய்ய எந்தத் தயாரிப்பாளரும் கூப்பிடவில்லை… சொந்தத்தில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்து டைரக்ட் செய்தால்? அதில் நடித்தால்?

சொந்தப் படம் தமிழில் தயாரிக்கவும், டைரக்ட் செய்யவும் முற்பட்டார் சாவித்திரி. கதாநாயகன் – ஜெமினி கணேசன்தான். “வேண்டாம், சொந்தப் படமும் வேண்டாம், டைரக்னும் வேண்டாம்” என்று தடுத்திருக்கலாம் ஜெமினி கணேசன். ஸ்ரீ சாவித்திரி புரொடக்ஷன்ஸ் அளிக்கும் ‘குழந்தை உள்ளம்’ தயாராகியது; வெளி வந்தது: வசூலில் தோல்வி கண்டது… ‘அடுத்து ஒரு பெரிய ஸ்டாரைப் போட்டு, படம் தயாரித்து, டைரக்ட் செய்தால், இழந்த பொருளை மீட்டு விடலாமே.’ சிவாஜி கணேசனிடம் வந்தார் சாவித்திரி. நடிகர்களில் தலைவர் என்ற முறையிலும், சாவித்திரி நண்பர் என்ற முறையிலும், “சொந்தப்பட ஆசை வேண்டாம்” என்று கூறி சிவாஜி கணேசன் தடுத்திருக்கலாம்…

1971 – ல் சாவித்திரி டைரக்ஷனில், சிவாஜ் கணேசன் நடித்த ‘பிராப்தம்’ வெளிவந்து, வசூலில் படுதோல்வி அடைந்தது. இந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வெளிவந்த சிவாஜி கணேசனின் இதர படங்கள்: ‘இரு துருவம்’, ‘தங்கைக்காக’, ‘அருணோதயம்’, ‘குலமா குணமா’, ‘சுமதி என் சுந்தரி’.

Russellvpd
15th December 2015, 03:43 PM
நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

from dinamani



சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
By பா. தீனதயாளன்
First Published : 05 September 2015 10:00 AM IST


தன் சறுக்கல்களுக்கும் சரிவுகளுக்கும் சாவித்ரி யார் மீதும் பழி போட விரும்பவில்லை. தனக்காக இரக்கப்பட்ட ரசிகர்களிடம் மனம் விட்டுப் பேசினார். அவரது பேட்டியில் ஒளிவு மறைவு கிடையாது. அது ஓர் ஓபன் ஸ்டேட்மென்ட். தவறுகளுக்கானத் தன்னிச்சையான வாக்குமூலம். அதில் கண்ணியத்தின் மாண்பைக் காணலாம்.

‘யாருடைய கருணையும், பரிதாபமும் எனக்குத் தேவை இல்லை. மீண்டும் உயிர்த்தெழுவேன்! ’ என்கிற வைராக்கியத்தின் விலாசமாக வெளிப்பட்டது.

‘பிராப்தம் தெலுங்கு படத்தை எடுக்கும் போதே அதன் தயாரிப்பாளர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்கச் செய்தார்கள். அதில் ஏ. நாகேஸ்வர ராவ் அப்பாவியான படகோட்டி. அவரை நான் வாடா போடா என்று பேசி நடிக்க வேண்டும். எனக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அதனாலேயே அதில் நடிக்க ரொம்பத் தயங்கினேன்.

ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் கடைசியில் ஒப்புக் கொண்டேன். படம் அபாரமான வெற்றி அடைந்தது. அதுவே என்னைத் தமிழிலும் தயாரிக்கத் தூண்டியது. தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதன் தமிழ் உரிமையையும் நானே வாங்கிக் கொண்டேன்.

எம்.எஸ்.வி. அருமையாக இசை அமைத்தார். ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’, ‘சந்தனத்தில் நல்ல’, ’தாலாட்டு பாடி’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா’ என அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. எனக்குப் பெரிய நஷ்டம்.



‘சாவித்ரி ஒவ்வொரு சிச்சுவேஷனையும் உணர்ச்சி பூர்வமாக எனக்கு சொல்லிக் காட்டிய விதம் மறக்க முடியாதது. மிகச் சிறந்த நடிகையாக இருந்ததால், பாடலின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுவதை விட, நடித்தே காட்ட அவரால் முடிந்தது. சில காட்சிகளை சாவித்ரி விளக்கிய போது அழுது விட்டார். என்னையும் அழ வைத்தார். ’

-மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.

பிராப்தம் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கவா இரண்டரை ஆண்டுகள் என்றார்களாம். இடையில் ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், உண்டாக்கி விடப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் எத்தனை?

டாக்டர் பட்டம் பெற முதலில் ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, ஸ்பெஷல் கோர்ஸ், பயிற்சி மருத்துவராக ப்ராக்டிஸ் என்று படிப்படியாகப் போய், ஆபரேஷன் செய்ய ஏழு வருஷங்கள் ஆகி விடும். மூன்று மணி நேரம் ஆபரேஷன் செய்ய இத்தனை கால விரயம் செய்து படிப்பார்களா..., என யாராவது கேட்பார்களா?

எதனாலேயோ பிராப்தம் ஷூட்டிங் முழுவதுமே எனக்குப் பெரிய கலக்கமாகத்தான் போய்விட்டது. கோதாவரியில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம். மார்ச் முதல் தேதி அங்கு புறப்படும் வேளையில் என் தாயார் இறந்து விட்டார்.

அது எனக்குத் தாங்க முடியாத இடி. பத்து நாள்கள் காரியம் முடியாமல் எங்கேயும் போக முடியாது என்ற நிலை. மனவருத்தம், வேதனையோடு மீண்டும் சுதாரித்து எழும் போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வேறு வந்து விட்டது. மறுபடியும் ஷூட்டிங் ரத்தானாது.

பிராப்தம் தயாரிப்பில் இருந்த போதே தெலுங்கில் வியட்நாம் வீடு படத்தையும் தயாரித்து இயக்கி, பத்மினி ரோலில் நடித்தும் வந்தேன். எனக்கு வந்த காமாலை நோய் ஒரு புதுவகை. முகம் புஸூபுஸுவென்று ஊதி விட்டது.

நான் சுபாவமாகக் கருப்பு நிறம். இந்த நிறத்தையும் பளபளப்பையும் பார்த்தவர்கள் எல்லாம், உங்களுக்கு என்ன உடம்பு என்று கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தான் காமாலை என்பது தெரிந்தது.

பிராப்தம் ரிலீசில் என்னால் மிகவும் தாமதம் ஏற்பட்டு விட்டது. பிராப்தம் தோல்விக்கு நானே காரணம்! யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காலம் கடந்த தயாரிப்பு. என் உடல் நிலைக் கோளாறு. இவையே முக்கிய காரணம்.

நான் மிகவும் ஆசையாக உருவாக்கிய ஓர் உன்னதமான கோட்டை நொறுங்கிப் போனது. பண நஷ்டம் மட்டும் அல்ல. நல்ல கதை. புகழ் பெற்ற நல்ல நடிகர் நடிகையர். நல்ல இசை. இவ்வளவு அம்சங்களும் இருந்தும் பிராப்தம் ஏன் வெற்றி பெறவில்லை? தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றம்.

கோதாவரி நதியும் படகுப் பயணமும் தமிழர் வாழ்க்கை முறைக்குப் பழக்கம் இல்லாதவை என்பதனாலா?



என்னை மங்கலம் இழந்த கோலத்தில் காண ரசிகர்களுக்குப் பிடிக்காததனாலா? புரியாத மர்மமாகவே இருக்கிறது.

நான் நடிக்காமல் வாணிஸ்ரீ நடித்திருக்கலாம் என்றார்கள். நான் ஏற்று நடித்த பாத்திரம் சாதாரணமானதல்ல. மிக அனுபவமிக்க சிறந்த நடிகை ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நான் செய்தது சரி இல்லை என்றால் எனக்குப் பதில், அதை செய்யக்கூடிய நடிகை சவுகார் ஜானகி ஒருவரே. அவரால் அதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.

சந்திரகலாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டு இருக்கலாம் என்று முதலிலும் முடிவிலும் சொன்னார்கள். அதை வேண்டுமானால் செய்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

தாய் போன துக்கம். குழந்தைகளைப் பற்றிய கவலை. ஏகப்பட்டப் பண நஷ்டம். எல்லாமாக சேர்ந்து என்னை உலுக்கி விட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த போது ஜூரத்தில் ஓயாமல் புலம்புவேன். சாவித்ரிக்கு சித்தம் கலங்கி விட்டது என்று கூடச் சிலர், புரளியைக் கிளப்பி விட்டுப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிரமம் வரக் கூடாது. வந்தால் உடனே கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஹபிபுல்லா சாலையில் நான் இருந்த வீட்டை மாற்ற நேர்ந்த போதும் அப்படித்தான் ஆயிற்று. அவ்வளவு ஆசையாகக் கட்டிய பெரிய வீட்டில், நான் தனியாகக் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அதனால் சிறிய வீட்டுக்குப் போனேன்.

உடனே எல்லாரும் ஆளாளுக்கு ஒரு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘பாவம் சாவித்ரி நொடித்துப் போய் விட்டாள். ’ என்று என் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.

பிராப்தத்துக்குப் பிறகு சாவித்ரி படமெடுக்க மாட்டாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் படமெடுக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? இன்றைய சூழலில் தயாரிப்புத் துறை அவ்வளவு லாபகரமானது அல்ல.

பிற தொழில்களைப் போல பயபக்தியோடு, புனிதத் தன்மையோடு இந்தத் தொழிலை என்று நடத்துகிறோமோ அன்று தான் இதில் லாபம் காண முடியும்.

நாம் ஒன்றை நினைத்துப் படமெடுப்போம். விநியோகஸ்தர்கள் தாங்கள் நினைத்ததைப் படமெடுக்கச் சொல்வார்கள். கதையை மாற்றச் சொல்வார்கள். கதையின் கரு மாறி படம் ஏதோ ஒன்றாகி விடும்.

எனது அடுத்தப் படத்தில் நர்ஸாக நடிக்கிறேன். என்னுடன் ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் இதை நான் டைரக்ட் செய்யப் போவதில்லை. தயாரிப்பு மட்டுமே. ‘புகுந்த வீடு’ வெற்றிச்சித்திரத்தை இயக்கிய பட்டுவிடம் அப்பொறுப்பைத் ஒப்படைத்து விட்டேன்.

நான் இயக்கிய பிராப்தம், குழந்தை உள்ளம் இரண்டிலும் நான் ஏற்று நடித்த பாத்திரம் படங்களில் ஓரளவுதான். எனக்கு ஓய்வு அதிகம். எனவே டைரக்ஷனைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. இப்போது நான் தயாரிக்கப் போகும் படத்தில் என் வேடம் முழுமையானது. நான் டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் நடிப்பில் அதிக பாதிப்பு ஏற்படும்.

நாற்பது நாள்களில் இந்தப் ப்ராஜெக்டை முடித்து விடுவேன். 1972 தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸாகும். இனி நான் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் மறுத்ததில்லை. என்னால் இனி மேல் காதல், ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க முடியாது. வயதாகி விட்டதல்லவா! தாயாக, சகோதரியாக, அண்ணியாக நடிக்கலாம்.

அன்று முதல் இன்று வரை நானாக யாரிடமும் போய் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டதில்லை. எனது ஒரே ஆசை சாகும் வரையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிக்கும் போதே சாக வேண்டும். ’

மேற்கண்ட சாவித்ரியின் நேர் காணலில் ஊன்றி கவனித்தால் அவர் குழம்பிப் போய் இருப்பது புரியும். அப்படியும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கான முயற்சிகளும் விளங்கும். வாசகர்களின் மனத்தில் எழுந்த ஒரே கேள்வி.

ஏற்கனவே யானைப் பள்ளத்தில் வீழ்ந்து அவதியுறும் நடிகையர் திலகம், தமிழ் சினிமாவின் சூழல் சரியில்லை என்று தெளிவாகக் கூறும் சாவித்ரி, மீண்டும் படம் தயாரிக்க வருவானேன்! தொடர்ந்து அழிவைத் தேடிக் கொள்வானேன்!

நல்ல வேளை! அவ்வாறு நடக்காமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தியவர் சாட்சாத் ஜெமினி கணேசன்! சாவித்ரியை அதல பாதாளத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு.

‘என் மனம் அறிஞ்சி நானாக எந்தத் தப்பும் பண்ணல. யானை தன் தலையில் மண் எடுத்துப் போட்டுக்குற மாதிரி, அவா அவா கெட்டுப் போனா நான் என்ன பண்ண முடியும்? ’

மத்தவங்க ஆண்டவன் கிட்டே பாவ மன்னிப்பு கேட்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்னா எனக்கு ஏதாவது கெடுதல் வந்தால், கடவுள் தான் இத்தனை நல்ல ஆத்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருந்த வேண்டும்.’ - ஜெமினி கணேசன்.



தன் மணாளனின் வாக்கியங்கள் உண்மையானவை என்பதை மனைவி உடனடியாக நிருபித்தார்.

தன்னை நன்கு அறிந்த சகக் கலைஞர்களிடம் சாவித்ரி அடிக்கடி மனம் விட்டுக் கூறிய வாசகம்!

‘என் நிலைமையைப் பார்த்தீங்களா...! எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ’

ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

1968-ல் வெளியான கே.எஸ். கோபால கிருஷ்ணனின் ’பணமா பாசமா’ வசூலில் சுனாமி! தமிழகமெங்கும் வெற்றி விழா கொண்டாடியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் அபூர்வமாக 25 வாரங்கள் ஓடியது.

அதே கால கட்டத்தில் சவுகார் ஜானகியும், தேவிகாவும் தங்களின் சொந்தத் தயாரிப்புகளில் ஜெமினி கணேசனையே நாயகனாக நடிக்கச் செய்தார்கள். சவுகாரின் ’காவியத்தலைவி’ 100 நாள்கள் ஓடி விழா கொண்டாடியது.ஜெமினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது.

தேவிகாவின் ‘வெகுளிப் பெண்’ நூறு நாள் படம். அது மாத்திரம் அல்ல. 1971ன் சிறந்த மாநில மொழிப் படம் என்கிற தேசிய விருதைத் தட்டிச் சென்றது. சாவித்ரியால் புறக்கணிக்கப்பட்ட ஜெமினியின் கவுரவத்தை அத்தகைய பெருமைகள் உயர்த்தின.

1969, 1970,1971, 1972 ஆகிய வருடங்களில் ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஜெமினி, தொடர்ந்து புயல் வேகத்தில் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரது படப் பட்டியலைப் பாருங்கள். இரு கோடுகளாகி கே.பாலசந்தரும் -ஜெமினியும் தொடர்ந்து முத்திரைச் சித்திரங்களை வழங்கினர்.

சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

சவுகார் ஜானகிக்கும், எஸ். வரலட்சுமிக்கும், பண்டரிபாய்க்கும், சுகுமாரிக்கும் வழங்கிய அம்மா வேடங்களை ஏனோ சாவித்ரிக்கும் தராமல் போனார்.

--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

‘ஒரு தாய் மக்கள்’ படப்பிடிப்பு. சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் நடிகர் கே.பி. ராமகிருஷ்ணன் கால் ஒடிந்து விட்டது. கே.ஜே. நர்சிங் ஹோமில் உடனடியாக அனுமதித்தார்கள். அவரைப் பார்க்கச் சென்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

அங்கேயே மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாவித்ரி ஆதரவின்றி கிடப்பதைக் கேள்விப் பட்டார். சகலரையும் போல் சும்மா நலம் விசாரித்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா?

சாவித்ரிக்கான முழு சிகிச்சை செலவையும் வள்ளலே ஏற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கால கட்டம்.

மிகவும் நிராதராவான நிலையில், புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்துக்கு வந்து காத்து நின்றார் சாவித்ரி. எப்படியாவது முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம். சுற்றிலும் மன்னாதி மன்னனின் ராஜாங்கம் கண்களில் தெரிந்தது.

மந்திரிகள். அரசு உயர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர்கள். தினந்தோறும் நாளிதழ்களில் வாத்தியாரோடு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் முக்கியப் பிரமுகர்கள். எம்.எல். ஏ.க்கள். எம்.பி.க்கள்...

அத்தனை பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், களையிழந்த நேற்றுப் பூவாக, மாலைகள் கூட கொண்டு வராமல், வெறுங்கையோடு தோன்றும் மாஜி நடிகையை முதல்வர் அழைப்பாரா...? அல்லது ஆட்சி நடத்தும் பரபரப்பில் பாராமலே சென்று விடுவாரா?

ஒவ்வொரு விநாடியையும் வாழ்வின் புதைகுழியில் செலவிடும் தன்னை, எம்.ஜி.ஆரும் கை விட்டு விட்டால்...?



நினைக்கவே பயங்கரமாக இருந்தது சாவித்ரிக்கு.

திருப்பதி பெருமாளே! உனக்கு நிம்மதியாக தேங்காய் உடைக்கக் கூட எனக்கு இப்போது வக்கில்லை. இக்கட்டான இத்தருணத்திலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று. எம்.ஜி.ஆரின் மனத்தில் புகுந்து, என்னைச் சீக்கிரம் கூப்பிடச் சொல்...

தேவைகளின் நெருக்கடியில் நெருடும் மனதோடு, கவுரவர் சபையில் திரெளபதியாக கை கூப்பி நிற்கும் தனக்கு, இரண்டு மதில் சுவர்களையாவது ஓடோடி வந்து, ஒதுக்கித் தர மாட்டாரா மக்கள் திலகம்...?

யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் இயலாத துக்கத்தின் சாஹரம். நிமிர்ந்து பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாத சங்கடம். ஆனால் இன்னமும் சாவித்ரியின் ஆணவம் அடங்கவில்லை. திமிராகவே இருக்கிறாள் என நினைக்கும் சமூகம்! நேரம் ஓடியது.

மக்கள் திலகம் அழைத்ததும்,

மழைக்கு ஒதுங்கவும் ஒரு வீடு இல்லாத தன் வாழ்வின் நிர்வாண அவலத்தை, அப்பட்டமாக பொன்மனச் செம்மலிடம் எடுத்துச் சொல்லிக் கதறி அழுதார்.

உடனடியாகத் தமிழக முதல்வர் வீட்டு வசதி வாரியம் மூலம், சாவித்ரிக்காக ஒரு குடிலை வழங்கி நடிகையர் திலகத்தின் துயரைப் போக்கினார்.

மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்!

Russellvpd
15th December 2015, 03:55 PM
http://www.appusami.com/v273mgrsavithri.asp

எம்ஜிஆரின் சொந்த மெய்க்காப்பாளராக இருந்த
கே.பி. ராமகிருஷ்ணனின் 'எம்ஜிஆர் ஒரு சகாப்தம'
என்ற நூலிலிருந்து...






சாவித்ரிக்கு லட்ச ரூபாய் நன்கொடை தந்த எம்.ஜி.ஆர்.




கே.ஜே. ஆஸ்பத்திரியில் ராமகிருஷ்ணன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 'நடிகையர் திலகம்' சாவித்ரியும் அதே ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டதால், டைரக்டர் ஏ. சுப்பாராவ் அவரை இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 'அட்மிட்' செய்திருந்தார். நோயாலும் பணமில்லாததாலும் தான் கஷ்டப்படுவதாக ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார் சாவித்ரி.

அதற்கு மறுநாள் ராமகிருஷ்ணனை எம்.ஜி.ஆர். பார்க்க வந்தபோது, இங்கு சாவித்ரி சிகிச்சை பெறுகிறார் என்பதை அவரிடம் கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.

சாவித்ரியை எம்ஜிஆர் அவரது ஆஸ்பத்திரி அறையில் சென்று சந்தித்தார். 'எனக்கு ஆதரவாக இப்போ யாரும் இல்லை. ரொம்ப கஷ்டமாக இருக்குண்ணே...' என்று எம்ஜிஆரிடம் கூறினார் சாவித்ரி.

நல்ல செல்வாக்கில் வாழ்ந்த சாவித்ரியின் நிலைமை எம்ஜிஆரை மிகவும் பாதித்துவிட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகியை அழைத்து, ராமகிருஷ்ணன் சிகிச்சைக்கான கட்டணத்தை அவர் கொடுக்க பொறுப்பு ஏற்றதைப் போல சாவித்ரியின் சிகிச்சைக்கான முழு தொகையையும் தானே கட்டுவதாக உறுதியளித்தார்.

ஒரு மாதம் சாவித்ரி அங்கு சிகிச்சை பெற்றதற்கான பல ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லை கட்டி, செட்டில் பண்ணினார் எம்ஜிஆர்.

நடிகை சாவித்ரி மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் ஒரு நாள் காலை 10.30 மணிக்கு எம்ஜிஆரின் மாம்பலம் ஆபீசுக்கு வந்தார் சாவித்ரி. 'அவரை நான் கண்டிப்பாக பார்த்தே ஆகணும்!' என்று பரபரப்பாக இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தார் முதல்வர் எம்ஜிஆர்.

'எனக்கு எந்த ஆதரவும் இல்லை, நீங்கதான் ஹெல்ப் பண்ணணும், என்று உருக்கமாக கேட்டார். அவரோடு பேசியதில் அவருக்கு தங்குவதற்கு சொந்தமான வீடு இல்லை என்பதை அறிந்து கொண்டார் எம்ஜிஆர். வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் திருப்பூர் மணிமாறனுக்கு போன் போட்டு, அவரை இங்கே உடனே வரச் சொல்லு!' என்றார்.

அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மாம்பலத்திற்கு அருகே இருந்ததால் காலதாமதமின்றி வந்துவிட்டார். அதுவரை வரவேற்பு அறையில் காத்துக் கொண்டிருந்தார் சாவித்ரி.

திருப்பூர் மணிமாறனிடம், 'அண்ணா நகரிலே இவங்களுக்கு ஒரு வீடு ஏற்பாடு பண்ணுங்க...' என்றார். சவுகரியமாக சாவித்ரி இருப்பதற்கு ஒரு சொந்த வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாடிக்குச் சென்று ஒரு பையோடு திரும்பினார். அதை சாவித்ரியிடம் கொடுத்து, 'இதிலே ஒரு லட்சம் ரூபாய் இருக்கு. இதை வச்சுக்கோம்மா. உங்க உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோம்மா..' என்றார் எம்ஜிஆர்.

ஆதாரம் - கே.பி. ராமகிருஷ்ணன்

Russellvpd
15th December 2015, 04:16 PM
http://i66.tinypic.com/sykn5i.jpg


1972-ம் வருஷம் வெளிவந்த பொம்மை பத்திரிகை கேள்வி பதிலில் மக்கள் திலகம்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று போட்டுள்ளார்கள். வேறு எந்த நடிகரும் துணை நடிகர்களும் அவர் அளவு சம்பளத்தை அவர் திரைப்படத்தில் இருந்த வரை வாங்க முடியவில்லை.
ஒரு சில நடிகர்களின் படங்கள் சில ஊர்களில் கடைசி காலத்தில் ரிலீசே ஆகவில்லை. கடைசி வரை திரையிலும் அரசியலிலும் செல்வாக்காக இருந்தவர் புரட்சித் தலைவரே.

Russellvpd
15th December 2015, 05:09 PM
http://i67.tinypic.com/a2c2oh.jpg

திரைப்படத்திலும் அரசியலிலும் செல்வாக்கோடு இருந்தவர்கள் ஆந்திராவில் சூப்பர்ஸ்டார் என்.டி.ராமாராவும் தமிழகத்தில் புரட்சித் தலைவருமே. ராமாராவ் கூட ஒரு தடைவை தேர்தலில் தோற்றுப் போய் ஆட்சியை இழந்தார். ஆனாலும், அவர் நின்ற இடத்தில் ஜெயித்தார். தோற்கவில்லை.

ஆனால், திரைப்படத்திலயும் சரி, அரசியல்லேயும் சரி, செல்வாக்கோடு இருந்தவர் புரட்சித் தலைவர். தேர்தலில் தான் நின்ற இடத்தில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி, 3 முறை தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே தலைவர் புரட்சித் தலைவரே.

செல்வாக்கோடு விளங்கிய என்.டி.ஆரும் இன்னும் செல்வாக்கோடும் புகழோடும் இருக்கும் பொன்மனத் தலைவனும் கட்டி அணைத்து கொள்ளும் அபூர்வ படம். தலைவர்கள் சந்திப்பு.

Russellmxc
15th December 2015, 06:31 PM
மக்கள் மனங்களை மட்டுமே கொள்ளை கொண்ட ஒரே மக்கள் தலைவர்......
யார்......?????

Russellbpw
15th December 2015, 07:28 PM
நடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்

from dinamani



சாவித்ரி-18. ஏமாற்றத்தின் பள்ளத்தாக்குகளில்!
By பா. தீனதயாளன்
First Published : 05 September 2015 10:00 AM IST


தன் சறுக்கல்களுக்கும் சரிவுகளுக்கும் சாவித்ரி யார் மீதும் பழி போட விரும்பவில்லை. தனக்காக இரக்கப்பட்ட ரசிகர்களிடம் மனம் விட்டுப் பேசினார். அவரது பேட்டியில் ஒளிவு மறைவு கிடையாது. அது ஓர் ஓபன் ஸ்டேட்மென்ட். தவறுகளுக்கானத் தன்னிச்சையான வாக்குமூலம். அதில் கண்ணியத்தின் மாண்பைக் காணலாம்.

‘யாருடைய கருணையும், பரிதாபமும் எனக்குத் தேவை இல்லை. மீண்டும் உயிர்த்தெழுவேன்! ’ என்கிற வைராக்கியத்தின் விலாசமாக வெளிப்பட்டது.

‘பிராப்தம் தெலுங்கு படத்தை எடுக்கும் போதே அதன் தயாரிப்பாளர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்கச் செய்தார்கள். அதில் ஏ. நாகேஸ்வர ராவ் அப்பாவியான படகோட்டி. அவரை நான் வாடா போடா என்று பேசி நடிக்க வேண்டும். எனக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. அதனாலேயே அதில் நடிக்க ரொம்பத் தயங்கினேன்.

ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் கடைசியில் ஒப்புக் கொண்டேன். படம் அபாரமான வெற்றி அடைந்தது. அதுவே என்னைத் தமிழிலும் தயாரிக்கத் தூண்டியது. தெலுங்கில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதன் தமிழ் உரிமையையும் நானே வாங்கிக் கொண்டேன்.

எம்.எஸ்.வி. அருமையாக இசை அமைத்தார். ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’, ‘சந்தனத்தில் நல்ல’, ’தாலாட்டு பாடி’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா’ என அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. எனக்குப் பெரிய நஷ்டம்.



‘சாவித்ரி ஒவ்வொரு சிச்சுவேஷனையும் உணர்ச்சி பூர்வமாக எனக்கு சொல்லிக் காட்டிய விதம் மறக்க முடியாதது. மிகச் சிறந்த நடிகையாக இருந்ததால், பாடலின் உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுவதை விட, நடித்தே காட்ட அவரால் முடிந்தது. சில காட்சிகளை சாவித்ரி விளக்கிய போது அழுது விட்டார். என்னையும் அழ வைத்தார். ’

-மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.

பிராப்தம் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கவா இரண்டரை ஆண்டுகள் என்றார்களாம். இடையில் ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், உண்டாக்கி விடப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் எத்தனை?

டாக்டர் பட்டம் பெற முதலில் ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, ஸ்பெஷல் கோர்ஸ், பயிற்சி மருத்துவராக ப்ராக்டிஸ் என்று படிப்படியாகப் போய், ஆபரேஷன் செய்ய ஏழு வருஷங்கள் ஆகி விடும். மூன்று மணி நேரம் ஆபரேஷன் செய்ய இத்தனை கால விரயம் செய்து படிப்பார்களா..., என யாராவது கேட்பார்களா?

எதனாலேயோ பிராப்தம் ஷூட்டிங் முழுவதுமே எனக்குப் பெரிய கலக்கமாகத்தான் போய்விட்டது. கோதாவரியில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம். மார்ச் முதல் தேதி அங்கு புறப்படும் வேளையில் என் தாயார் இறந்து விட்டார்.

அது எனக்குத் தாங்க முடியாத இடி. பத்து நாள்கள் காரியம் முடியாமல் எங்கேயும் போக முடியாது என்ற நிலை. மனவருத்தம், வேதனையோடு மீண்டும் சுதாரித்து எழும் போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வேறு வந்து விட்டது. மறுபடியும் ஷூட்டிங் ரத்தானாது.

பிராப்தம் தயாரிப்பில் இருந்த போதே தெலுங்கில் வியட்நாம் வீடு படத்தையும் தயாரித்து இயக்கி, பத்மினி ரோலில் நடித்தும் வந்தேன். எனக்கு வந்த காமாலை நோய் ஒரு புதுவகை. முகம் புஸூபுஸுவென்று ஊதி விட்டது.

நான் சுபாவமாகக் கருப்பு நிறம். இந்த நிறத்தையும் பளபளப்பையும் பார்த்தவர்கள் எல்லாம், உங்களுக்கு என்ன உடம்பு என்று கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தான் காமாலை என்பது தெரிந்தது.

பிராப்தம் ரிலீசில் என்னால் மிகவும் தாமதம் ஏற்பட்டு விட்டது. பிராப்தம் தோல்விக்கு நானே காரணம்! யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை. காலம் கடந்த தயாரிப்பு. என் உடல் நிலைக் கோளாறு. இவையே முக்கிய காரணம்.

நான் மிகவும் ஆசையாக உருவாக்கிய ஓர் உன்னதமான கோட்டை நொறுங்கிப் போனது. பண நஷ்டம் மட்டும் அல்ல. நல்ல கதை. புகழ் பெற்ற நல்ல நடிகர் நடிகையர். நல்ல இசை. இவ்வளவு அம்சங்களும் இருந்தும் பிராப்தம் ஏன் வெற்றி பெறவில்லை? தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றம்.

கோதாவரி நதியும் படகுப் பயணமும் தமிழர் வாழ்க்கை முறைக்குப் பழக்கம் இல்லாதவை என்பதனாலா?



என்னை மங்கலம் இழந்த கோலத்தில் காண ரசிகர்களுக்குப் பிடிக்காததனாலா? புரியாத மர்மமாகவே இருக்கிறது.

நான் நடிக்காமல் வாணிஸ்ரீ நடித்திருக்கலாம் என்றார்கள். நான் ஏற்று நடித்த பாத்திரம் சாதாரணமானதல்ல. மிக அனுபவமிக்க சிறந்த நடிகை ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நான் செய்தது சரி இல்லை என்றால் எனக்குப் பதில், அதை செய்யக்கூடிய நடிகை சவுகார் ஜானகி ஒருவரே. அவரால் அதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்.

சந்திரகலாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டு இருக்கலாம் என்று முதலிலும் முடிவிலும் சொன்னார்கள். அதை வேண்டுமானால் செய்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

தாய் போன துக்கம். குழந்தைகளைப் பற்றிய கவலை. ஏகப்பட்டப் பண நஷ்டம். எல்லாமாக சேர்ந்து என்னை உலுக்கி விட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருந்த போது ஜூரத்தில் ஓயாமல் புலம்புவேன். சாவித்ரிக்கு சித்தம் கலங்கி விட்டது என்று கூடச் சிலர், புரளியைக் கிளப்பி விட்டுப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிரமம் வரக் கூடாது. வந்தால் உடனே கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஹபிபுல்லா சாலையில் நான் இருந்த வீட்டை மாற்ற நேர்ந்த போதும் அப்படித்தான் ஆயிற்று. அவ்வளவு ஆசையாகக் கட்டிய பெரிய வீட்டில், நான் தனியாகக் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அதனால் சிறிய வீட்டுக்குப் போனேன்.

உடனே எல்லாரும் ஆளாளுக்கு ஒரு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘பாவம் சாவித்ரி நொடித்துப் போய் விட்டாள். ’ என்று என் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.

பிராப்தத்துக்குப் பிறகு சாவித்ரி படமெடுக்க மாட்டாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் படமெடுக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? இன்றைய சூழலில் தயாரிப்புத் துறை அவ்வளவு லாபகரமானது அல்ல.

பிற தொழில்களைப் போல பயபக்தியோடு, புனிதத் தன்மையோடு இந்தத் தொழிலை என்று நடத்துகிறோமோ அன்று தான் இதில் லாபம் காண முடியும்.

நாம் ஒன்றை நினைத்துப் படமெடுப்போம். விநியோகஸ்தர்கள் தாங்கள் நினைத்ததைப் படமெடுக்கச் சொல்வார்கள். கதையை மாற்றச் சொல்வார்கள். கதையின் கரு மாறி படம் ஏதோ ஒன்றாகி விடும்.

எனது அடுத்தப் படத்தில் நர்ஸாக நடிக்கிறேன். என்னுடன் ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் இதை நான் டைரக்ட் செய்யப் போவதில்லை. தயாரிப்பு மட்டுமே. ‘புகுந்த வீடு’ வெற்றிச்சித்திரத்தை இயக்கிய பட்டுவிடம் அப்பொறுப்பைத் ஒப்படைத்து விட்டேன்.

நான் இயக்கிய பிராப்தம், குழந்தை உள்ளம் இரண்டிலும் நான் ஏற்று நடித்த பாத்திரம் படங்களில் ஓரளவுதான். எனக்கு ஓய்வு அதிகம். எனவே டைரக்ஷனைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. இப்போது நான் தயாரிக்கப் போகும் படத்தில் என் வேடம் முழுமையானது. நான் டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் நடிப்பில் அதிக பாதிப்பு ஏற்படும்.

நாற்பது நாள்களில் இந்தப் ப்ராஜெக்டை முடித்து விடுவேன். 1972 தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸாகும். இனி நான் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் மறுத்ததில்லை. என்னால் இனி மேல் காதல், ஆடல், பாடல் காட்சிகளில் நடிக்க முடியாது. வயதாகி விட்டதல்லவா! தாயாக, சகோதரியாக, அண்ணியாக நடிக்கலாம்.

அன்று முதல் இன்று வரை நானாக யாரிடமும் போய் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்டதில்லை. எனது ஒரே ஆசை சாகும் வரையில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிக்கும் போதே சாக வேண்டும். ’

மேற்கண்ட சாவித்ரியின் நேர் காணலில் ஊன்றி கவனித்தால் அவர் குழம்பிப் போய் இருப்பது புரியும். அப்படியும் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்கான முயற்சிகளும் விளங்கும். வாசகர்களின் மனத்தில் எழுந்த ஒரே கேள்வி.

ஏற்கனவே யானைப் பள்ளத்தில் வீழ்ந்து அவதியுறும் நடிகையர் திலகம், தமிழ் சினிமாவின் சூழல் சரியில்லை என்று தெளிவாகக் கூறும் சாவித்ரி, மீண்டும் படம் தயாரிக்க வருவானேன்! தொடர்ந்து அழிவைத் தேடிக் கொள்வானேன்!

நல்ல வேளை! அவ்வாறு நடக்காமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தியவர் சாட்சாத் ஜெமினி கணேசன்! சாவித்ரியை அதல பாதாளத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு.

‘என் மனம் அறிஞ்சி நானாக எந்தத் தப்பும் பண்ணல. யானை தன் தலையில் மண் எடுத்துப் போட்டுக்குற மாதிரி, அவா அவா கெட்டுப் போனா நான் என்ன பண்ண முடியும்? ’

மத்தவங்க ஆண்டவன் கிட்டே பாவ மன்னிப்பு கேட்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை. ஏன்னா எனக்கு ஏதாவது கெடுதல் வந்தால், கடவுள் தான் இத்தனை நல்ல ஆத்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருந்த வேண்டும்.’ - ஜெமினி கணேசன்.



தன் மணாளனின் வாக்கியங்கள் உண்மையானவை என்பதை மனைவி உடனடியாக நிருபித்தார்.

தன்னை நன்கு அறிந்த சகக் கலைஞர்களிடம் சாவித்ரி அடிக்கடி மனம் விட்டுக் கூறிய வாசகம்!

‘என் நிலைமையைப் பார்த்தீங்களா...! எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்! ’

ஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.

பிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

1968-ல் வெளியான கே.எஸ். கோபால கிருஷ்ணனின் ’பணமா பாசமா’ வசூலில் சுனாமி! தமிழகமெங்கும் வெற்றி விழா கொண்டாடியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தியேட்டரான மதுரை தங்கத்தில் அபூர்வமாக 25 வாரங்கள் ஓடியது.

அதே கால கட்டத்தில் சவுகார் ஜானகியும், தேவிகாவும் தங்களின் சொந்தத் தயாரிப்புகளில் ஜெமினி கணேசனையே நாயகனாக நடிக்கச் செய்தார்கள். சவுகாரின் ’காவியத்தலைவி’ 100 நாள்கள் ஓடி விழா கொண்டாடியது.ஜெமினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றுத் தந்தது.

தேவிகாவின் ‘வெகுளிப் பெண்’ நூறு நாள் படம். அது மாத்திரம் அல்ல. 1971ன் சிறந்த மாநில மொழிப் படம் என்கிற தேசிய விருதைத் தட்டிச் சென்றது. சாவித்ரியால் புறக்கணிக்கப்பட்ட ஜெமினியின் கவுரவத்தை அத்தகைய பெருமைகள் உயர்த்தின.

1969, 1970,1971, 1972 ஆகிய வருடங்களில் ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஜெமினி, தொடர்ந்து புயல் வேகத்தில் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரது படப் பட்டியலைப் பாருங்கள். இரு கோடுகளாகி கே.பாலசந்தரும் -ஜெமினியும் தொடர்ந்து முத்திரைச் சித்திரங்களை வழங்கினர்.

சாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது!

காதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.

சவுகார் ஜானகிக்கும், எஸ். வரலட்சுமிக்கும், பண்டரிபாய்க்கும், சுகுமாரிக்கும் வழங்கிய அம்மா வேடங்களை ஏனோ சாவித்ரிக்கும் தராமல் போனார்.

--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.

பொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்?

‘ஒரு தாய் மக்கள்’ படப்பிடிப்பு. சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் நடிகர் கே.பி. ராமகிருஷ்ணன் கால் ஒடிந்து விட்டது. கே.ஜே. நர்சிங் ஹோமில் உடனடியாக அனுமதித்தார்கள். அவரைப் பார்க்கச் சென்றார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

அங்கேயே மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாவித்ரி ஆதரவின்றி கிடப்பதைக் கேள்விப் பட்டார். சகலரையும் போல் சும்மா நலம் விசாரித்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா?

சாவித்ரிக்கான முழு சிகிச்சை செலவையும் வள்ளலே ஏற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கால கட்டம்.

மிகவும் நிராதராவான நிலையில், புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்துக்கு வந்து காத்து நின்றார் சாவித்ரி. எப்படியாவது முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம். சுற்றிலும் மன்னாதி மன்னனின் ராஜாங்கம் கண்களில் தெரிந்தது.

மந்திரிகள். அரசு உயர் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியர்கள். தினந்தோறும் நாளிதழ்களில் வாத்தியாரோடு ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் முக்கியப் பிரமுகர்கள். எம்.எல். ஏ.க்கள். எம்.பி.க்கள்...

அத்தனை பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், களையிழந்த நேற்றுப் பூவாக, மாலைகள் கூட கொண்டு வராமல், வெறுங்கையோடு தோன்றும் மாஜி நடிகையை முதல்வர் அழைப்பாரா...? அல்லது ஆட்சி நடத்தும் பரபரப்பில் பாராமலே சென்று விடுவாரா?

ஒவ்வொரு விநாடியையும் வாழ்வின் புதைகுழியில் செலவிடும் தன்னை, எம்.ஜி.ஆரும் கை விட்டு விட்டால்...?



நினைக்கவே பயங்கரமாக இருந்தது சாவித்ரிக்கு.

திருப்பதி பெருமாளே! உனக்கு நிம்மதியாக தேங்காய் உடைக்கக் கூட எனக்கு இப்போது வக்கில்லை. இக்கட்டான இத்தருணத்திலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று. எம்.ஜி.ஆரின் மனத்தில் புகுந்து, என்னைச் சீக்கிரம் கூப்பிடச் சொல்...

தேவைகளின் நெருக்கடியில் நெருடும் மனதோடு, கவுரவர் சபையில் திரெளபதியாக கை கூப்பி நிற்கும் தனக்கு, இரண்டு மதில் சுவர்களையாவது ஓடோடி வந்து, ஒதுக்கித் தர மாட்டாரா மக்கள் திலகம்...?

யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் இயலாத துக்கத்தின் சாஹரம். நிமிர்ந்து பதில் வணக்கம் கூடச் சொல்ல முடியாத சங்கடம். ஆனால் இன்னமும் சாவித்ரியின் ஆணவம் அடங்கவில்லை. திமிராகவே இருக்கிறாள் என நினைக்கும் சமூகம்! நேரம் ஓடியது.

மக்கள் திலகம் அழைத்ததும்,

மழைக்கு ஒதுங்கவும் ஒரு வீடு இல்லாத தன் வாழ்வின் நிர்வாண அவலத்தை, அப்பட்டமாக பொன்மனச் செம்மலிடம் எடுத்துச் சொல்லிக் கதறி அழுதார்.

உடனடியாகத் தமிழக முதல்வர் வீட்டு வசதி வாரியம் மூலம், சாவித்ரிக்காக ஒரு குடிலை வழங்கி நடிகையர் திலகத்தின் துயரைப் போக்கினார்.

மகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு! பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்![/COLOR]

திரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை

ப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று !

ஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...!

ப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.

அப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.

எப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று !

சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...

[COLOR="#0000FF"]அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !

சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.

அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.

ஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 )

தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)

ஜெமினியோடு கருத்துவேறுபாடு ப்ராப்தம் திரைப்படத்திற்கு சில வருடங்கள் முன்னால் எடுக்கப்பட்ட குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..

காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம்.

நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ஞாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை !

மேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் !

அப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -

திருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.

அவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.

17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.

ஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.

டிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் !

அவரை சாவித்திரி அவர்கள் சொந்த பணத்தில் 1950களில் வாங்கிய ,அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...

இதுதான் உண்மையான நிகழ்வு !

இதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது !

திரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.

ஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.

திரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் !

திரு ஜெமினி அவர்கள்.....

1969 இல்10 படங்கள்
1970 இல் 6 படங்கள்
1071 இல் 4 படங்கள்
1972 இல் 13 படங்கள்
1973 இல் 6 திரைப்படங்கள்
1974 இல் 4 படங்கள்
1975 இல் 3 படங்கள்
1976 இல் 5 படங்கள்
1977 இல் 3 படங்கள் ,
1978 இல் 2,
1979 இல் 1,
1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )
1981, 1982 படங்கள் இல்லை

நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்

1969 - 9 படங்கள்
1970 - 9 படங்கள்
1971 - 10 படங்கள்
1972 - 7 படங்கள்
1973 - 9 படங்கள்
1974 - 6 படங்கள்
1975 - 8 படங்கள்
1976 - 6 படங்கள்
1977 - 8 படங்கள்
1978 - 9 படங்கள்
1979 - 7 படங்கள்
1980 - 6 படங்கள்
1981 - 7 படங்கள்
1982 - 13 படங்கள்
1983 - 8 படங்கள்
1984 - 10 படங்கள்
1985 - 8 படங்கள்
1986 - 7 படங்கள்
1987 - 10 படங்கள்

எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் !

திரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது !

ainefal
15th December 2015, 07:47 PM
1971

http://i63.tinypic.com/107nsj9.jpg

ainefal
15th December 2015, 07:53 PM
1976

http://i68.tinypic.com/2lld5ww.jpg

Russellbpw
15th December 2015, 07:54 PM
இனிய நண்பர் திரு அக்பர் அவர்களுக்கு

நடிகர் திலகம் திரியில் பதிவிடும் திரு செந்தில்வேல் controversy பதிவுகள் வேண்டுமென்றே பதிவிடுபவர் அல்ல !

நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று தயவு செய்து நினைக்கவேண்டாம்..அவருடைய பழைய பதிவுகள் எல்லாம் நீங்கள் பார்த்தால் அது நன்கு விளங்கும் !

Due to oversight , இது நிகழ்ந்திருக்க மட்டுமே வாய்ப்பு ...!

தயவு செய்து என்னை போலவே தாங்களும் உணர்ச்சிவசப்படவேண்டாம் என்று மன்றாடி கேட்டுகொள்கிறேன் !

தவறுதலாக பதிவிட்டமைக்கு நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் !

சிறிது பொறுமை காக்க வேண்டுகிறேன் !

அவரிடம் கூட திரியில் விண்ணப்பித்துள்ளேன் !

மற்ற பதிவு இருக்கட்டும் ..."நிழல் மனைவி" என்று நீங்கள் பதிவு செய்ததை மட்டும் நீக்கிவிடுங்கள் என்று விண்ணப்பிக்கிறேன் !

மற்றவர்களுடைய சொந்த வாழ்கையை பற்றி இருக்கிறதோ இல்லையோ அதனை பற்றி எழுதுவது அநாகரீகம் அல்லவா ?

அதனை மக்கள் திலகம் பக்தர் நீங்கள் செய்யவேண்டுமா ?

"நிழல் மனைவி" பற்றி மற்றவர்களுக்கு எழுததேரியாதா அல்லது அனைவரும் எழுத தொடங்கினால் அதற்க்கு முடிவு இருக்குமா என்று சற்று நினைத்து பாருங்கள் !


ஆகையால் i request your patience ! Kindly Consider !

Rks

Russellvpd
15th December 2015, 09:15 PM
அந்த திரியில் ஒருத்தர் சொ,ல்றது போல நல்லிணக்கம் தேவைதான். அது இருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் மட்டுமே அப்படி சொல்லிக் கொண்டிருக்கா கூடாாது. ஒவ்வொரு வாட்டியும் எங்களை முதலில் தாக்குவது நீங்கள்தான். கொஞ்சமாவது மக்கள் திலகம் மேல் நல்ல எண்ணம் இருந்தால் சில படங்களின் தோல்வியால் எம்ஜியார் கதிகலங்கி போய் இருக்கிறார் என்றெல்லாம் பத்திரிகையில் வந்ததை போடுவார்களா? அவரது படங்கள் என்றுமே வசூலில் தோல்வி கிடையாது. அப்பிடி என்ன எங்கள் தெய்வம் மீது பொறாமய்? காழ்புணர்ச்சி? பத்திரிகையில் வந்ததை எல்லாம் நாங்களும் போடட்டுமா? உங்கள் நடிகரை சொன்னால் மட்டும் தமிழ் உணர்வு இல்லை. புரட்சித் தலைவரை சொன்னால் அது தமிழ் உணர்வா?
ந்ல்லிணக்கம் பேசும் பெரிய மனிதர் முதலில் தங்கள் நண்பர்களுக்கு நல்லிணக்கம் பத்தி பாடம் சொல்லட்டும்.நடிகை ரத்னமாலாவுடன் ஒரு நடிகருக்கு இருந்த தொடர்பு அவர் குடும்பம் மட்டுமின்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்று அந்த பெரிய மனிதர் ஒப்புக் கொண்டிருக்கார். நன்றி. அடுத்தவங்க படுக்கையறையில் எட்டி பார்ப்பது அநாகீரீகம். அந்த அசிங்கம் எங்களுக்கு தேவை கிடையாது. இனிமேல்பட்டாவது, இரட்டை வாழ்க்கை, காமிராக்கு வெளியே நடிக்கத் தெரியாதுண்ணு நேரடியாவோ, மறைமுகமாவோ, திரையுலக, அரசியலில் மக்கள் திலகத்தை தாக்காதீங்க. தோண்டினா எல்லாருக்கும் நாறும். நிழல் மனைவி பதவை எடுத்தாச்சு. எங்கள் தலைவரைப் பற்றி நீங்க புதுசா சொல்ல ஒண்ணும் இல்லை. அரசியல் குள்ளநரிகள் சொல்லாதையா நீங்க சொல்லப்போறீங்க? ஆனால், நல்லிணக்கம் வேணும் என்று நீங்க சொல்றதை முதலில் கடைபிடிங்க.

oygateedat
15th December 2015, 09:23 PM
உலக சாதனையாளர் நம் இதயதெய்வம் மக்கள் திலகம் - புரட்சித்தலைவர்

http://s1.postimg.org/gpqs605db/scan0004.jpg (http://postimage.org/)

COURTESY : KUMUDHAM - WEEKLY

Russellvpd
15th December 2015, 09:25 PM
16-6-2013 -ல் நடந்த சென்னையில் உரிமைக்குரல் பத்திரிகை சார்பில் நடந்த விழாவில் சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரியும் ஜெமினி மகள் கமலா செல்வராஜ் கலந்து கொண்டு பேசியது. கலியபெருமாள் அவர்கள் போட்ட பதிவு.


http://i63.tinypic.com/11mfcc4.jpg

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் கமலா செல்வராஜ் பேசும்போது " திரு. எம்ஜிஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்..என் தங்கைக்கு எம்.பி.பி.எஸ் சீட் கொடுத்திருக்கிறார். நாங்கள் கஷ்டப்படும்போது நிறைய உதவிகள் செய்த தெய்வம் அவர் ..மேலும் நாங்கள் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகைகள்..எம்ஜிஆர் படம் வந்ததும் நாங்கள் எங்கள் அம்மாவிடம் சொல்லி முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்..அவர் படங்களை பார்த்தாலே அப்படி ஒரு பரவசம் ஏற்படும். நாங்கள் அதிகமாய் மேடை ஏறியதில்லை..தலைவர் விழா என்பதால்தான் வந்தோம் என்றார்கள்..அவர்கள் பேசும்போது கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டனர்..ஏன் என்றால்..திருமதி சாவித்திரி அவர்கள் நடித்துகொண்டிருந்தபோது அவருடன் நடித்த நடிகர்கள், அவருக்கு கஷ்டம் வந்தபோது கண்டுகொள்ளவில்லை..மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பில் கட்ட பணம் இல்லாதபோதும், அவர் இறக்கும் தருவாயில் கூட அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை..ஆனால் நமது இதய தெய்வம் அவர்களோ திருமதி சாவித்திரி அவர்கள் 'அண்ணா ரொம்ப கஷ்டப்படுகிறேன்' என்று சொன்னதும்..அவருக்கு பண உதவி செய்ததுமட்டுமில்லாமல், அவர் மருத்துவமனை பில்லையும் கட்டி அவர் இறக்கும் வரை அவருக்கு உதவிகள் செய்தார்..இத்தனைக்கும் திருமதி சாவித்திரியுடன் அவர்களுடன் 3 படங்களே நடித்தும், உதவி என்று கேட்டதும் உடனே செய்தார் நமது தெய்வம்..ஈடிணை இல்லா கண்கண்ட தெய்வம்...

ainefal
15th December 2015, 09:42 PM
பெற்றால்தான் பிள்ளையா - 100வது நாள் விழாவில் புரட்சித்தலைவர் மற்றும் மக்கள் கலைஞ்சர். இந்த படம் நூற் நாட்கள் ஓடவில்லை என்று முன்பு மையத்தில் ஒரு சிலர் பதிவு செய்தனர். இந்த பதிவு அவர்களுக்கு சமர்ப்பணம்.

http://i67.tinypic.com/28gqlwx.jpg

ainefal
15th December 2015, 09:46 PM
1969

http://i66.tinypic.com/351an3n.jpg

oygateedat
15th December 2015, 09:48 PM
http://s4.postimg.org/psbub4z65/fdd.jpg (http://postimage.org/)

ainefal
15th December 2015, 09:53 PM
1971

http://i64.tinypic.com/5o72uh.jpg

ainefal
15th December 2015, 09:59 PM
http://i65.tinypic.com/2z9cmso.jpg

ainefal
15th December 2015, 10:04 PM
https://www.youtube.com/watch?v=x92eM4bcBjE

ainefal
15th December 2015, 10:06 PM
https://www.youtube.com/watch?v=sXSJgB2DJt8

ainefal
15th December 2015, 10:18 PM
http://i66.tinypic.com/2q02fl1.jpg

ainefal
15th December 2015, 10:21 PM
http://i67.tinypic.com/2nhfdrm.jpg

ainefal
15th December 2015, 10:24 PM
http://i67.tinypic.com/2q8n6tk.jpg

ainefal
15th December 2015, 10:25 PM
http://i63.tinypic.com/r0sec5.jpg

ainefal
15th December 2015, 10:26 PM
http://i64.tinypic.com/24vk3yu.jpg

ainefal
15th December 2015, 10:29 PM
http://i65.tinypic.com/2nk7x46.jpg

siqutacelufuw
15th December 2015, 10:46 PM
[QUOTE=RavikiranSurya;1274272]


சமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...

[B][SIZE=3]அவர் கூறிய பதில் "அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் !

சாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் "சாவித்திரி - கலைகளில் ஓவியம் " நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.

ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது. அதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது. [QUOTE=RavikiranSurya;1274272]

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[B][COLOR="#FF0000"]சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களே !

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகை சாவித்திரிக்கு உதவிகள் செய்ய வில்லை. அப்படித்தானே !

உண்மை செய்தியை அறிய வேண்டும் என்றால், ஒலிக்கிறது உரிமைக்குரல் பத்திரிகையும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கமும் இணைந்து 16-06-2013 அன்று நடத்திய "பொன்மனச்செம்மல் - முப்பெரும் விழா" வில், அருமை சகோதரர் ஷாரியார் அக்பர் அவர்கள் குறிப்பிட்டிருந்தபடி, நடிகை சாவித்திரி மகள் திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் திருமதி கமலா செல்வராஜ் ஆகிய இருவரும், மக்கள் திலகம் அவர்கள் நடிகை சாவித்திரிக்கு செய்த உதவிகள் பற்றி நினைவு கூர்ந்து தங்கள் நன்றி கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது பற்றிய வீடியோ ஆதாரம் கூட பதிவு செய்ய தயார்.

மேலும் திரு. கே. பி. ராமகிருஷ்ணன் அவர்கள் எங்கள் மக்கள் திலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தான். அவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள "எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம்" என்ற புத்தகத்தின் 18 மற்றும் 19 வது பக்கங்களில், எங்கள் புனித தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் செய்த உதவிகள் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிடப்பட்ட மேற்கூறிய புத்தகத்தில், நடிகை சாவித்திரி அவர்களுக்கு, நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள் செய்த உதவிகளை பற்றி தெரிவித்தமைக்கு, சாவித்திரி தரப்பிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும், எந்த வித மறுப்பும் இல்லாத பட்சத்தில், திருமதி விஜய சாமுண்டீஸ்வரி எப்படி நீங்கள் தெரிவித்த படி கருத்து தெரிவித்திருக்க முடியும் ?. யாரிடம் இப்படி அவர் கூறினார் ? நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி திருமதி நடிகை விஜய சாமுண்டீஸ்வரி கூறியிருந்தால், அதனை நிரூபிக்க முடியுமா ?

தயவு செய்து இது மாதிரி விஷயங்களில் வக்காலத்து வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். [SIZE=6][COLOR="#0000FF"] வேண்டுமென்றால், நடிகை சாவித்திரி எடுத்த பிராப்தம் படத்தில் நாயகனாக நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், நடிகை சாவித்திரிக்கு கடைசி காலத்தில் உதவிகள் ஏதேனும் செய்திருப்பின் (?), அந்த தகவலை தேடி கண்டு பிடித்து பதிவிட்டு கொள்ளுங்கள். அதை விடுத்து எங்கள் மக்கள் திலகம் உதவி செய்தாரா - இல்லையா என்று ஒரு பட்டி மன்ற தோரணையில் ஆராய்ச்சி வேண்டாம், சகோதரரே ! .

:நடிகை சாவித்திரி அவர்களை பற்றி புத்தகம் எழுதிய "நாஞ்சில் இன்பா' என்பவர் ஒரு தீவிர சிவாஜி கணேசன் ரசிகர். அந்த புத்தகத்தை நான் இன்னும் படிக்க வில்லை. அவர் உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் என்றால் மக்கள் திலகம் உதவிய செய்திகள் பற்றி நடு நிலையோடு எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு அந்த செய்திகள் அதில் இடம் பெற்றிருக்க வில்லையென்றால் அது ஒரு தலை பட்சமாக, வெறும் காழ்ப்புனர்ச்சியுடன் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியுள்ளது.

மக்கள் திலகத்தை பற்றி அவதூறு பரப்பும் விதத்தில் ஏதாவது ஒரு செய்தி, மதி (இழந்த) ஒளி யில் பிரசுரிக்கப்பட்டால், உடனே அதை வெளியிட்டு அற்ப சந்தோஷம் அடைவது, பின்னர், மக்கள் திலகம் திரியில் எங்கள் பொன்மனசெம்மலின் அன்பர்கள் பதில் பதிவாக சில செய்திகள் பதிவிட்டால், உடனே அதை நீக்குமாறு கெஞ்சுவது - இதே வாடிக்கையாகி விட்டது. பிரச்சினைகளை நாங்கள் உருவாக்குவது இல்லை அங்கிருந்துதான் .முதலில் துவக்கப்படுகிறது.

நாகரீகம் கருதி, திரி மரபு காக்கும் விதத்தில் எனது ஆக்ரோஷமான பதிவினை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.


பின் குறிப்பு :

இந்த மதி ஒளி ஆசிரியர் சண்முகமும், தமிழ் சினிமா ஆசிரியர் கரீமும், ஆரம்பத்தில், எதோ ஆதாயத்துக்காக, தங்கள் காரியங்கள் கை கூட ஒரு காலத்தில், எங்கள் புரட்சித்தலைவரின் பின்னால் சுற்றி திரிந்தனர். பின்னர் அவர்களின் நியாயமாற்ற தேவைகள் நிறைவேறாத காரணத்தால், வரலாற்று நாயகனாம் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி எதிர் மறையான செய்திகள் வெளியிட்டு, தங்களின் அரிப்பை தீர்த்து கொண்டனர்.

"நாளை நமதே" என்று எங்கள் தலைவர் நடித்த காவியத்துக்கு தலைப்பை சொல்லி, அதற்குண்டான பரிசுத்தொகையை இந்த மதி ஒளி ஆசிரியர் சண்முகம் பெற்றுக்கொண்டதாகவும் ஒரு செய்தி.

ainefal
15th December 2015, 10:47 PM
1989

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1989_zps6myalb5o.jpg

Russellbpw
16th December 2015, 12:23 AM
Dear Selvakumar Sir,

First, I would like to mention that I have not put up anything like that.

I requested Mr. Akbar to remove one specific post titled "Shadow wife" only because it was too personal. There wouldn't be an end, if all start to write "Shadow Wife" episodes citing this as an example because there is no draught or poverty for such "Shadow Wife" stories of celebrity or politicians including Chief Ministers or Prime Ministers across globe. There are 3rd rated stories too about such things. Should the sanctity of this thread get lost by accommodating such baseless episodes? That's why I requested Mr. Akbar to remove that post only.

Please publish that video where both the daughters mentioning that Mrs. Savithri was given Anna Nagar House and One Lakh rupees since you have the video. It gives an opportunity for me to understand the truth and the world should know about this, if that's the case.

With reference to Mr. K. P. Ramakrishnan's book or his verse in page 18 & 19, I am not aware as I have not read that book. There is no deniel from me about his closeness with Makkal Thilagam.

Like Mr. KPR, Mr. VKR was also very close to Nadigar Thilagam but you mentioned that VKR is a liar, sometime back when a needless article about Nadigar Sangam Debt was put up.

Now, Would you accept if I mention the same? You will not accept it because it is obvious sir..!

About Makkal Thilagam's kindness and Generosity, the whole world knows and no certificate is required from any person stating where the sun rises, it is east.

I never talked about the medical college seat or other helps done by Makkal Thilagam to Mrs. Savithri and family because I have not heard about it or read about it until past few week/now.

With reference to your suggestion to check for any evidence ?? / information on any help (????) Whether offered lby Nadigar Thilagam to Mrs. Savithri, I shall certainly do so. One more thing I would like to mention is like Raja Raja Chozhan 2 week's gigantic collection advertisement ( Hope you are aware that many pooh pooh 'ed with their lies and always projected RRC as failure..did not collect as expected etc.,) if not from my end, through someone else definitely Evidences will come out in the same thread about Nadigar thilagam's Generosity one day or others towards helping Savithri and everyone will realise it is second to none in terms of the magnitude.

Like you mentioned for VKR, I can also ask what is the need for Mr.KPR to mention Praptham was a disaster, project as if that made Savithri Bankrupt in his book released in 2007 and compliment Makkal Thilagam mentioning he gave house, money to her took complete in charge of settling hospital bills etc.,

I can also in that case mention like your kind self that Mr.KPR had ulterior motive to say so, right? He could have mentioned Makkal Thilagam helped and matter would end there?

If we audit, there are no end sir. My objective is not that. That Madhi Oli article, am sure is not deliberately put because Mr. Senthilvel never does such things. He scans, uploads in photo bucket site and puts link...that's all.

Am very sure, he would see my request and realise the issue lying there and remove it.

I just elaborated to you only for explanation purpose and not for inviting any fresh debate or argument.

If I had explained anything wrong, my apology.

Regards,
RKS

siqutacelufuw
16th December 2015, 01:05 AM
Dear Selvakumar Sir,

First, I would like to mention that I have not put up anything like that.

I requested Mr. Akbar to remove one specific post titled "Shadow wife" only because it was too personal. There wouldn't be an end, if all start to write "Shadow Wife" episodes citing this as an example because there is no draught or poverty for such "Shadow Wife" stories of celebrity or politicians including Chief Ministers or Prime Ministers across globe. There are 3rd rated stories too about such things. Should the sanctity of this thread get lost by accommodating such baseless episodes? That's why I requested Mr. Akbar to remove that post only.

Please publish that video where both the daughters mentioning that Mrs. Savithri was given Anna Nagar House and One Lakh rupees since you have the video. It gives an opportunity for me to understand the truth and the world should know about this, if that's the case.

With reference to Mr. K. P. Ramakrishnan's book or his verse in page 18 & 19, I am not aware as I have not read that book. There is no deniel from me about his closeness with Makkal Thilagam.

Like Mr. KPR, Mr. VKR was also very close to Nadigar Thilagam but you mentioned that VKR is a liar, sometime back when a needless article about Nadigar Sangam Debt was put up.

Now, Would you accept if I mention the same? You will not accept it because it is obvious sir..!

About Makkal Thilagam's kindness and Generosity, the whole world knows and no certificate is required from any person stating where the sun rises, it is east.

I never talked about the medical college seat or other helps done by Makkal Thilagam to Mrs. Savithri and family because I have not heard about it or read about it until past few week/now.

With reference to your suggestion to check for any evidence ?? / information on any help (????) Whether offered lby Nadigar Thilagam to Mrs. Savithri, I shall certainly do so. One more thing I would like to mention is like Raja Raja Chozhan 2 week's gigantic collection advertisement ( Hope you are aware that many pooh pooh 'ed with their lies and always projected RRC as failure..did not collect as expected etc.,) if not from my end, through someone else definitely Evidences will come out in the same thread about Nadigar thilagam's Generosity one day or others towards helping Savithri and everyone will realise it is second to none in terms of the magnitude.

Like you mentioned for VKR, I can also ask what is the need for Mr.KPR to mention Praptham was a disaster, project as if that made Savithri Bankrupt in his book released in 2007 and compliment Makkal Thilagam mentioning he gave house, money to her took complete in charge of settling hospital bills etc.,

I can also in that case mention like your kind self that Mr.KPR had ulterior motive to say so, right? He could have mentioned Makkal Thilagam helped and matter would end there?

If we audit, there are no end sir. My objective is not that. That Madhi Oli article, am sure is not deliberately put because Mr. Senthilvel never does such things. He scans, uploads in photo bucket site and puts link...that's all.

Am very sure, he would see my request and realise the issue lying there and remove it.

I just elaborated to you only for explanation purpose and not for inviting any fresh debate or argument.

If I had explained anything wrong, my apology.

Regards,
RKS

Dear Brother Ravi Krian Surya,

I proved that V.K.R. is telling lies in his book, by exhibiting the entire issue, appeared in the Thenninthiya Nadigar Sangam Web-Site. You can also challenge that Mr. K.P.Ramakrishnan's real write up on late Actress Savithri.

Since, I, on behlaf of ANAITHTHULGA M.G.R. PODHU NALA SANGAM, organized the function, along with Mr. B.S.Raju, the Editor of "OLIKKIRATHU URIMAIKKURAL" at that
time, and I heard with my own ears, the assistance provided by my beloved God M.G.R. to the family of Savithri, during the function, as narrated by Ms. Vijaya Samundeeswari.

If your intention is Challenging the Help by my beloved God MGR, no problem, I can produce the evidence. But at the same time, you should prove that the occasion in which Ms. Vijyasamundeeswari denied the news of assistance rendered by my beloved God MGR.

I know few peopple in N.T. Thread, with some aim, intention, motto, ambition, principle make their controversial posts and subsequently claim that there is no specific intention, behind such posts.

This is the usual practice they adopt, in the recent past.

Anyhow, I do not want to continue to reply for such controversial statements and make full stop to the issue, by quoting the incidents. I am also of the same opinion of not having the intention to hurt the feelings of others but at the same time, it is my bounden duty to narrate the cirucmstances with facts, to the viewers to erase out the negative impression developed by the few hubbers of NT Thread.

Hope you will understand.

Thank you.

siqutacelufuw
16th December 2015, 01:11 AM
1972ம் ஆண்டில் வெளி வந்த தங்களின் அபிமான நடிகரின் படங்களின் பெருமையை மட்டும் சொல்லி சொல்லி ( அப்படியென்றால் மற்ற ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார்களோ என்னவோ) மாய்ந்து போயிருக்கின்றனர் மாற்று திரி நண்பர்கள்.

"பட்டிக்காடா பட்டணமா 21 வாரங்கள் மட்டுமே சாந்தியில் ஓடி இருக்கிறது. பின்பு, சித்ரா அரங்கில் ஷிப்ட் செய்து 4 வாரங்கள் ஒட்டப்பட்டு, அதனையும் வெள்ளி விழா படங்களில் ஒன்று என கணக்கு காட்டியதை நாங்கள் மறக்க மாட்டோம்.

வெள்ளி விழா படம் என்று கூறப்பட்ட "வசந்த மாளிகை" , "திரி சூலம்" போன்ற திரைப்படங்கள் மறு வெளியீட்டில், தியேட்டரை விட்டு ஒரு வாரத்துக்குள் தூக்கப்பட்ட பரிதாப நிலை , எங்கள் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு என்றுமே ஏற்பட்டதில்லை.

வீர பாண்டிய கட்ட பொம்மனை விட்டு விட்டீர்களே என்று எங்கள் மக்கள் திலகத்தின் அன்பர் குரல் ஒலிக்கிறது ஒரு புறம்.

1965ல் நூறு நாட்கள் ஓடிய எங்கள் மன்னவனின் காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", பெட்டிக்குள் முடங்காமல், தமிழகமெங்கும் ஓடிக்கொண்டே இருந்தது. 2014ம் ஆண்டு, வெள்ளி விழாவையே கண்டது. இதைப்போல் கின்னஸ் சாதனை நிகழ்த்த எங்கள் பொன்மனச்செம்மல் ஒருவரால் மட்டுமே முடியும்.

1972ல் வெளியான, பொன்மனசெம்மலின் - சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, இதய வீணை போன்ற பொற்காவியங்கள் இன்றும் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த 1972ம் ஆண்டு வெளியான, இதர நடிகர்களின் படங்கள் எத்தனை முறை மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

நாங்களும் எங்கள் தரப்புக்கு -

1. 15-07-1972 அன்று வெளிவந்து வெறும் 41 நாட்கள் (ஓடியன் அரங்கில்) மட்டுமே ஓடிய 'தர்மம் எங்கே" வசூலை தெரிவியுங்கள் என்று கேட்கலாமே.!
மகாராணி அரங்கில் 35 நாட்கள் ஓடியதன் வசூலையும், மேகலா அரங்கில் ஓடிய 42 நாட்கள் வசூலையும், ராம் அரங்கில் 34 நாட்கள் மட்டுமே ஓடியதன் வசூலையும் போனால் போகிறது என்று விட்டு விடுகிறோம்.

2. 15-06-1973 அன்று, சென்னை பிளாசா அரங்கில் வெளியாகி வெறும் 42 நாட்கள் மட்டுமே ஓடிய "பொன் ஊஞ்சல் " வசூலை கோரலாமே ! ராம் தியேட்டரில் வெறும் 28 நாட்களில் தூக்கப்பட்டதன் விவரத்தை நாங்கள் பெருந்தன்மையாக விட்டு விடுகிறோம்.

3. 07-12-1973 அன்று, வசந்த் மூவீஸ் வெளியிட்ட "மனிதரில் மாணிக்கம்" பைலட் அரங்கில் வெறும் 15 நாட்கள் ஓடியது. அதன் வசூலை நாங்கள் எப்போதாவது எங்கள் மக்கள் திலகத்தின் பட ஒரு நாள் வசூலுடன் ஒப்பீடு செய்தோமா ? ஸ்ரீ முருகன், (35 நாட்கள்) ஜெயராஜ் (21 நாட்கள்) முரளி கிருஷ்ணா (15 நாட்கள்) ஓடியதை விட்டு விடுவோம்.

4. சிவா கம்பைன்ஸ் ரிலீஸ் செய்த "ராஜபார்ட் ரங்க துரை" யின் 69 நாட்கள் ( பைலட் அரங்கில்) வசூலை எதிர்பார்க்கலாமே !

5. 26-01-1974 அன்று, கிரசண்ட் மூவிஸ் வெளியிட்ட "சிவகாமியின் செல்வன்" (சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடிய "ஆராதனா" இந்தி படத்தின் தமிழாக்கம்), தேவி பாரடைஸ் அரங்கில் வெறும் 55 நாட்கள் மடடுமே ஓடியதன் வசூலையும் நாங்கள் கேட்கலாமே ! (47 நாட்கள் உமா அரங்கில் ஒடியதையும், 56 நாட்கள் அகஸ்தியா அரங்கில் ஓடியதையும் விட்டு விடுகிறோம்)

இப்படியே, சென்னை அரங்குகளில், முதல் வெளியீட்டிலேயே, 1975 முதல் 1980 வரை, 50 நாட்களுக்கும் குறைவாக ஓடிய -

6. மனிதனும் தெய்வமாகலாம், 11-01-1975 அன்று வெளிடப்பட்டு ஆனந்த் அரங்கில் வெறும் 27 நாட்கள், பிராட்வே - 41 நாட்கள், முரளி கிருஷ்ணா 41 நாட்கள், தமிழ்நாடு 27 நாட்கள்)
7, அன்பே ஆருயிரே,- 27-09-1975 அன்று வெளியானது. வெலிங்டன் - 36 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 36 நாட்கள், சயானி -- 27 நாட்கள் , ராம் 27 நாட்கள்)
8. வைர நெஞ்சம், 02-11-75 அன்று வெளியானது. ஓடியன் 26 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 26 நாட்கள், முரளி கிருஷ்ணா 26 நாட்கள், நூர்ஜஹான் 19 நாட்கள்)
9. உனக்காக நான் 12-02-1976 அன்று வெளியாகி ( 50 நாட்கள் மட்டுமே ஓடிய தேவி பாரடைஸ் அரங்கு தவிர்த்து) அகஸ்தியா 43 நாட்கள், புவனேஸ்வரி 43 நாட்கள் ஓடியது
10. சித்ரா பௌர்ணமி, அவன் ஒரு சரித்திரம் (ஸ்ரீ கிருஷ்ணா ஆரங்கு தவிர்த்து) ,
11. இளைய தலைமுறை, (28-05-1977 அன்று வெளியானது) - சித்ரா 34 நாட்கள், கிரவுன் 41 நாட்கள், புவனேஸ்வரி 34 நாட்கள், பழநியப்பா 27 நாட்கள்)
12. நாம் பிறந்த மண் : (07-10-1977 அன்று வெளியானது) சித்ரா 37 நாட்கள், மகாராணி 34 நாட்கள், முரளிகிருஷ்ணா 28 நாட்கள்) ,
12. வாழ்க்கை அலைகள் 14-04-1978 அன்று வெளியானது. சென்னை பாரகன் - 8 நாட்கள் மட்டுமே, நடராஜ் - 14 நாட்கள், நூர்ஜஹான் - வெறும் 7 நாட்கள்)., ... இப்படி ஒரு படம் திரைக்கு வந்ததா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம்.
13. புண்ணிய பூமி 12.05.1978 அன்று வெளியானது. (சித்ரா 21 நாட்கள், பிராட்வே - 21 நாட்கள், உமா 26 நாட்கள்), - கேள்விப்படாத ப்டமாயிருக்கிறதே என்று எண்ண வைத்த படம்.
14. ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 அன்று வெளியானது. (பாரகன் 43 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 27 நாட்கள், லிபர்ட்டி 41 நாட்கள்)
15. கவரி மான் 06-04-1979 அன்று வெளியானது (மிட்லண்ட் 49 நாட்கள், பிராட்வே 42 நாட்கள், லிபர்ட்டி 42 நாட்கள்),
16. இமயம் 21-07-1979 அன்று வெளியானது. ( சாந்தியிலேயே 48 நாட்கள் தான், கிரவுன் 35 நாட்கள், புவனேஸ்வரி 41 நாட்கள்)
17. வெற்றிக்கு ஒருவன் 08-12-1979 அன்று வெளியானது. (ஸ்டார் 34 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 38 நாட்கள், ஈகா 20 நாட்கள்), இதுவும் எப்போது வெளியானது என்று ரசிகர்களை கேட்க வைத்த படங்களுள் ஒன்று.
18. தர்ம ராஜா 26-04-1980 அன்று வெளியானது. (பைலட் 20 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 40 நாட்கள், ஈகா 20 நாட்கள்)
19. எமனுக்கு எமன் 16.05. 1980 அன்று வெளியானது. (மிட்லண்ட் 49 நாட்கள், கிரவுன் 35 நாட்கள், புவனேஸ்வரி 49 நாட்கள், கமலா 42 நாட்கள்),

போன்ற படங்களின் வசூலை கேட்கலாமா ?

இந்த தோல்விப்பட பட்டியல், 1981ல் வெளியான மோகனப்புன்னகை படம் முதற்கொண்டு 1991ல் வெளியான ஞானப்பறவை வரை அடுத்த பத்தாண்டுகளில், ஒரு தொடர்கதை போல் நீளுகிறது.

தேவைப்பட்டால் அவற்றையும் புள்ளி விவரங்களுடன் வெளியிட தயாராக உள்ளேன்.



எனவே, இந்த வசூல் விவர ஒப்பீடு என்பதை அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் பட வசூல்களுடன் ஒப்பிட்டு ஆனந்தம் அடைந்து கொள்ளுங்கள்.

தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தியின் காவியங்களை ஒப்பிடுவதை, இனியாவது நிறுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

mgrbaskaran
16th December 2015, 01:56 AM
http://i68.tinypic.com/wk4bur.jpg


மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 திரியினை துவக்க எனக்கு வாய்ப்பு தந்த நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் இது எனக்கு கிடைத்த இரண்டாவது பெருமை . எல்லா புகழும் நம் இதய தெய்வம் மக்கள் திலகதிற்கே என்று சொல்லி கொள்வதில் பெருமை படுகிறேன் .

நம்முடைய மக்கள் திலகத்தின் பதிவாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். பார்வையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -17 சிறப்பாக நடத்தி தந்த திரு சுஹராம் அவர்களுக்கு என்னுடைய நன்றி .


wishes of our great Thalaivar always with you

Richardsof
16th December 2015, 06:49 AM
மாலை முரசு பத்திரிகை மக்கள் திலகம் எம்ஜிஆர் எதிர்ப்பு நிலையில் இருந்ததால் 1972 இறுதில் வெளியிட்ட சினிமா கண்ணோட்டம் பகுதியில் மக்கள் திலகம் ஒரே மாதிரி நடித்தார் என்று கூறியுள்ளது அவர்களுடைய நிலைப்பாடு .ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மக்கள் திலகம் படங்கள் பற்றி நன்கு தெரியும் .

1972ல் மக்கள் திலகம் நடித்த படங்களில் அவருடைய நடிப்பும் மற்றும் சாதனைகளும் தொடரும் .

Russellwzf
16th December 2015, 07:52 AM
Courtesy : Facebook

http://i63.tinypic.com/ay0o5g.jpg

Russellwzf
16th December 2015, 07:52 AM
http://i64.tinypic.com/2m4yt1e.jpg

Russellwzf
16th December 2015, 07:53 AM
http://i64.tinypic.com/icvhv5.jpg

Russellwzf
16th December 2015, 07:53 AM
http://i65.tinypic.com/2w65i8g.jpg

Russellwzf
16th December 2015, 07:56 AM
http://i66.tinypic.com/14bqtl.jpg

Russellwzf
16th December 2015, 07:57 AM
http://i68.tinypic.com/o0b8z4.jpg

Russellwzf
16th December 2015, 07:57 AM
http://i68.tinypic.com/2ahsm4k.jpg

Russellwzf
16th December 2015, 07:58 AM
http://i64.tinypic.com/2zz226h.jpg

Russellwzf
16th December 2015, 07:58 AM
http://i66.tinypic.com/jq70uw.jpg

Russellwzf
16th December 2015, 07:59 AM
http://i67.tinypic.com/2wnbus0.jpg

Russellwzf
16th December 2015, 08:00 AM
http://i64.tinypic.com/2ez05xj.jpg

Russellwzf
16th December 2015, 08:00 AM
http://i63.tinypic.com/2psipf7.jpg

idahihal
16th December 2015, 08:08 AM
Dear Sathya sir,
Thank you very much for uploading the image I requested.All the images uploaded by you are excellent.

idahihal
16th December 2015, 08:18 AM
Dear Ravikiransurya sir,
We do have good respect on Nadigar thilagam. As a true devotee of Nadigar Thilagam you can prove or say that Praptham movie is not a flap and it won't give any loss to Mrs.Savithiri Ganesan. We all appreciate the same. It is not necessary to say whether Makkal thilagam extended his helping hand or not. If you argue that Mr.Senthil has no intention in reproducing Mathioli Shanmugam's statement, our people may argue that We too have no intention to reproduce the article from Dinamani. I humbly request friends from both the threads not to publish any matter which will lead to controversies. We both have lots of things to publish in our valable thread which gives a great platform to share our views and feelings. Don't spoil them.
Jaisankar V.

Russellbpw
16th December 2015, 08:31 AM
Dear Selvakumar Sir,

YOUR POINT :
a) I proved that V.K.R. is telling lies in his book, by exhibiting the entire issue, appeared in the Thenninthiya Nadigar Sangam Web-Site.
b) You can also challenge that Mr. K.P.Ramakrishnan's real write up on late Actress Savithri.

MY RESPONSE :
a) I too proved by exhibiting the entire process or the STATE BANK OF INDIA with reference to the ground on which they would sanction the construction loan and also proved that it was Nadigar Thilagam's effort to get the loan sanctioned WITHOUT MORTGAGING THE LAND OF NADIGAR SANGAM. I have also proved that no office bearer took efforts in this regard from the inception of the NADIGAR SANGAM till 1971 when Nadigar Sangam was headed by Nadigar Thilagam and also many mismatches in the NADIGAR SANGAM WEBSITE itself on the contents mentioned.

b) I have not challenged Mr. KPR's real write up on late Actress Savithri on the helps offered to the family etc., because am not aware of it.
BUT, I have only mentioned that unlike the statement mentioned in the writeup very specific to , THE ANNA NAGAR HOUSE was Late Actress SAVITHRI's OWN HOUSE PURCHASED OUT OF HER OWN MONEY in the year 1950's and NOT donated to her. Please go through the same if you have any doubt.


YOUR POINT :
If you intention is Challenging the Help by my beloved God MGR, no problem, I can produce the evidence.

MY RESPONSE :
It is DEFINITELY NOT A CHALLENGE on the numerous good deeds and charities of Makkal Thilagam having known many things myself. I will 100% say from the heart, that am NOT AN ANTI.

I only requested you to post that Video containing that SPECIFIC matter because if they had mentioned about the Jaundice Expense Bearing, DONATION OF ANNA NAGAR HOUSE and 1 Lakh Ruppees assistance in that Video, It should definitely be known to the entire World and many including myself have not heard about until the article by DINAMANI Dheena Dhayalan was published here along with attaching his false claim of Savithri becoming pauper because of the most inexpensive film Praptham produced by her.

From the pages 18 and 19 of Mr. KPR, it is quite evident and proof that Mr. Dheena Dhayalan himself, has reproduced the contents of this book along with the severe dose of his personal verbatim about Nadigar Thilagam. I was only reacting to that verbatim and the baseless, false claim!

YOUR POINT :
a) But at the same time, you should prove that the occasion in which Ms. Vijyasamundeeswari denied the news of assistance rendered by my beloved God MGR.

I was only referring to the specific ANNA NAGAR HOUSE CLAIM and 1 Lakh Rupees Assistance and NOT anything else which am not aware of.

My OBSERVATION :
It has been customary in internet world that a claim about some loss or bankruptcy of any individual film personality being written ALONG WITH A SHADOW LINE OF LINKING NADIGAR THILAGAM AS RESPONSIBLE FOR THE SAME & BACK TO BACK , supporting it with mentioning, such people were hand picked and helped by Makkal Thilagam and they becoming MULTI MILLIONAIRE from there on...!

I am responding to such specific WRITE UP ONLY with enough Clarification to expose that they are baseless lies JUST like how you explain ! Such baseless lies ( INTERMS OF SHADOW LINE MENTIONING NADIGAR THILAGAM AS THE REASON) related to Mr. B.R. Bandhulu, Thengai Srinivasan, Late Actress Savithri etc., have come up many a time. I have only given an explanation providing enough clarity on HOW THEY ARE BASELESS LIES !

Affectionately,
RKS

Russellbpw
16th December 2015, 08:39 AM
Dear Ravikiransurya sir,
We do have good respect on Nadigar thilagam. As a true devotee of Nadigar Thilagam you can prove or say that Praptham movie is not a flap and it won't give any loss to Mrs.Savithiri Ganesan. We all appreciate the same. It is not necessary to say whether Makkal thilagam extended his helping hand or not. If you argue that Mr.Senthil has no intention in reproducing Mathioli Shanmugam's statement, our people may argue that We too have no intention to reproduce the article from Dinamani. I humbly request friends from both the threads not to publish any matter which will lead to controversies. We both have lots of things to publish in our valable thread which gives a great platform to share our views and feelings. Don't spoil them.
Jaisankar V.

Dear Jaishankar Sir,

I do not indulge in spoiling anything sir. Yes, I agree that I too had responded long time back on articles instantly on emotional front But, subsequently when the response was responded in the form of explanation, sometime as rightful scolding by Mr. Selvakumar or Mr. Esvee on the reasoning, I too realized on the error and immediately have removed the contents along with apology which your kind self should be aware of. That is what am !

Also Sir, I never argued about Mr. Senthilvel. I only gave my view that it MAY BE because of the continuous activity of scanning, uploading, publishing all happening at one time & may be that did not give enough time for him to AUDIT the content and upload. If you mention that am arguing, I should also argue for the contents also isn't it sir ? Did I do that? Please tell me ?


Regards
RKS

Richardsof
16th December 2015, 08:57 AM
http://i63.tinypic.com/1230aky.jpg

Richardsof
16th December 2015, 09:00 AM
http://i66.tinypic.com/s3pw85.jpg

Richardsof
16th December 2015, 09:01 AM
http://i65.tinypic.com/2ltknqp.jpg

Russellbpw
16th December 2015, 09:04 AM
1972ம் ஆண்டில் வெளி வந்த தங்களின் அபிமான நடிகரின் படங்களின் பெருமையை மட்டும் சொல்லி சொல்லி ( அப்படியென்றால் மற்ற ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார்களோ என்னவோ) மாய்ந்து போயிருக்கின்றனர் மாற்று திரி நண்பர்கள்.

"பட்டிக்காடா பட்டணமா 21 வாரங்கள் மட்டுமே சாந்தியில் ஓடி இருக்கிறது. பின்பு, சித்ரா அரங்கில் ஷிப்ட் செய்து 4 வாரங்கள் ஒட்டப்பட்டு, அதனையும் வெள்ளி விழா படங்களில் ஒன்று என கணக்கு காட்டியதை நாங்கள் மறக்க மாட்டோம்.

வெள்ளி விழா படம் என்று கூறப்பட்ட "வசந்த மாளிகை" , "திரி சூலம்" போன்ற திரைப்படங்கள் மறு வெளியீட்டில், தியேட்டரை விட்டு ஒரு வாரத்துக்குள் தூக்கப்பட்ட பரிதாப நிலை , எங்கள் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு என்றுமே ஏற்பட்டதில்லை.

வீர பாண்டிய கட்ட பொம்மனை விட்டு விட்டீர்களே என்று எங்கள் மக்கள் திலகத்தின் அன்பர் குரல் ஒலிக்கிறது ஒரு புறம்.

1965ல் நூறு நாட்கள் ஓடிய எங்கள் மன்னவனின் காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", பெட்டிக்குள் முடங்காமல், தமிழகமெங்கும் ஓடிக்கொண்டே இருந்தது. 2014ம் ஆண்டு, வெள்ளி விழாவையே கண்டது. இதைப்போல் கின்னஸ் சாதனை நிகழ்த்த எங்கள் பொன்மனச்செம்மல் ஒருவரால் மட்டுமே முடியும்.

1972ல் வெளியான, பொன்மனசெம்மலின் - சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, இதய வீணை போன்ற பொற்காவியங்கள் இன்றும் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த 1972ம் ஆண்டு வெளியான, இதர நடிகர்களின் படங்கள் எத்தனை முறை மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

நாங்களும் எங்கள் தரப்புக்கு -

1. 15-07-1972 அன்று வெளிவந்து வெறும் 41 நாட்கள் (ஓடியன் அரங்கில்) மட்டுமே ஓடிய 'தர்மம் எங்கே" வசூலை தெரிவியுங்கள் என்று கேட்கலாமே.!
மகாராணி அரங்கில் 35 நாட்கள் ஓடியதன் வசூலையும், மேகலா அரங்கில் ஓடிய 42 நாட்கள் வசூலையும், ராம் அரங்கில் 34 நாட்கள் மட்டுமே ஓடியதன் வசூலையும் போனால் போகிறது என்று விட்டு விடுகிறோம்.

2. 15-06-1973 அன்றுகி,,சென்னை பிளாசா அரங்கில் வெளியாகி வெறும் 42 நாட்கள் மட்டுமே ஓடிய "பொன் ஊஞ்சல் " வசூலை கோரலாமே ! ராம் தியேட்டரில் வெறும் 28 நாட்களில் தூக்கப்பட்டதன் விவரத்தை நாங்கள் பெருந்தன்மையாக விட்டு விடுகிறோம்.

3. 07-12-1973 அன்று, வசந்த் மூவீஸ் வெளியிட்ட "மனிதரில் மாணிக்கம்" பைலட் அரங்கில் வெறும் 15 நாட்கள் ஓடியது. அதன் வசூலை நாங்கள் எப்போதாவது எங்கள் மக்கள் திலகத்தின் பட ஒரு நாள் வசூலுடன் ஒப்பீடு செய்தோமா ? ஸ்ரீ முருகன், (35 நாட்கள்) ஜெயராஜ் (21 நாட்கள்) முரளி கிருஷ்ணா (15 நாட்கள்) ஓடியதை விட்டு விடுவோம்.

4. சிவா கம்பைன்ஸ் ரிலீஸ் செய்த "ராஜபார்ட் ரங்க துரை" யின் 69 நாட்கள் ( பைலட் அரங்கில்) வசூலை எதிர்பார்க்கலாமே !

5. 26-01-1974 அன்று, கிரசண்ட் மூவிஸ் வெளியிட்ட "சிவகாமியின் செல்வன்" (சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடிய "ஆராதனா" இந்தி படத்தின் தமிழாக்கம்), தேவி பாரடைஸ் அரங்கில் வெறும் 55 நாட்கள் மடடுமே ஓடியதன் வசூலையும் நாங்கள் கேட்கலாமே ! (47 நாட்கள் உமா அரங்கில் ஒடியதையும், 56 நாட்கள் அகஸ்தியா அரங்கில் ஓடியதையும் விட்டு விடுகிறோம்)

இப்படியே, சென்னை அரங்குகளில், முதல் வெளியீட்டிலேயே, 1975 முதல் 1980 வரை, 50 நாட்களுக்கும் குறைவாக ஓடிய -

6. மனிதனும் தெய்வமாகலாம், 11-01-1975 அன்று வெளிடப்பட்டு ஆனந்த் அரங்கில் வெறும் 27 நாட்கள், பிராட்வே - 41 நாட்கள், முரளி கிருஷ்ணா 41 நாட்கள், தமிழ்நாடு 27 நாட்கள்)
7, அன்பே ஆருயிரே,- 27-09-1975 அன்று வெளியானது. வெலிங்டன் - 36 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 36 நாட்கள், சயானி -- 27 நாட்கள் , ராம் 27 நாட்கள்)
8. வைர நெஞ்சம், 02-11-75 அன்று வெளியானது. ஓடியன் 26 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 26 நாட்கள், முரளி கிருஷ்ணா 26 நாட்கள், நூர்ஜஹான் 19 நாட்கள்)
9. உனக்காக நான் 12-02-1976 அன்று வெளியாகி ( 50 நாட்கள் மட்டுமே ஓடிய தேவி பாரடைஸ் அரங்கு தவிர்த்து) அகஸ்தியா 43 நாட்கள், புவனேஸ்வரி 43 நாட்கள் ஓடியது
10. சித்ரா பௌர்ணமி, அவன் ஒரு சரித்திரம் (ஸ்ரீ கிருஷ்ணா ஆரங்கு தவிர்த்து) ,
11. இளைய தலைமுறை, (28-05-1977 அன்று வெளியானது) - சித்ரா 34 நாட்கள், கிரவுன் 41 நாட்கள், புவனேஸ்வரி 34 நாட்கள், பழநியப்பா 27 நாட்கள்)
12. நாம் பிறந்த மண் : (07-10-1977 அன்று வெளியானது) சித்ரா 37 நாட்கள், மகாராணி 34 நாட்கள், முரளிகிருஷ்ணா 28 நாட்கள்) ,
12. வாழ்க்கை அலைகள் 14-04-1978 அன்று வெளியானது. சென்னை பாரகன் - 8 நாட்கள் மட்டுமே, நடராஜ் - 14 நாட்கள், நூர்ஜஹான் - வெறும் 7 நாட்கள்)., ... இப்படி ஒரு படம் திரைக்கு வந்ததா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம்.
13. புண்ணிய பூமி 12.05.1978 அன்று வெளியானது. (சித்ரா 21 நாட்கள், பிராட்வே - 21 நாட்கள், உமா 26 நாட்கள்), - கேள்விப்படாத ப்டமாயிருக்கிறதே என்று எண்ண வைத்த படம்.
14. ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 அன்று வெளியானது. (பாரகன் 43 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 27 நாட்கள், லிபர்ட்டி 41 நாட்கள்)
15. கவரி மான் 06-04-1979 அன்று வெளியானது (மிட்லண்ட் 49 நாட்கள், பிராட்வே 42 நாட்கள், லிபர்ட்டி 42 நாட்கள்),
16. இமயம் 21-07-1979 அன்று வெளியானது. ( சாந்தியிலேயே 48 நாட்கள் தான், கிரவுன் 35 நாட்கள், புவனேஸ்வரி 41 நாட்கள்)
17. வெற்றிக்கு ஒருவன் 08-12-1979 அன்று வெளியானது. (ஸ்டார் 34 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 38 நாட்கள், ஈகா 20 நாட்கள்), இதுவும் எப்போது வெளியானது என்று ரசிகர்களை கேட்க வைத்த படங்களுள் ஒன்று.
18. தர்ம ராஜா 26-04-1980 அன்று வெளியானது. (பைலட் 20 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 40 நாட்கள், ஈகா 20 நாட்கள்)
19. எமனுக்கு எமன் 16.05. 1980 அன்று வெளியானது. (மிட்லண்ட் 49 நாட்கள், கிரவுன் 35 நாட்கள், புவனேஸ்வரி 49 நாட்கள், கமலா 42 நாட்கள்),

போன்ற படங்களின் வசூலை கேட்கலாமா ?

இந்த தோல்விப்பட பட்டியல், 1981ல் வெளியான மோகனப்புன்னகை .படம் முதற்கொண்டு 1981ல் வெளியான ஞானப்பறவை வரை அடுத்த பத்தாண்டுகளில், ஒரு தொடர்கதை போல் நீளுகிறது.

தேவைப்பட்டால் அவற்றையும் புள்ளி விவரங்களுடன் வெளியிட தயாராக உள்ளேன்.



எனவே, இந்த வசூல் விவர ஒப்பீடு என்பதை அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் பட வசூல்களுடன் ஒப்பிட்டு ஆனந்தம் அடைந்து கொள்ளுங்கள்.

தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தியின் காவியங்களை ஒப்பிடுவதை, இனியாவது நிறுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


செல்வகுமார் சார்...

இதுபோல ஓடிய நாட்கள் விபரங்கள் முக்கால் வாசி ரசிகர்களிடம் இருக்கும் என்று நினைக்கிறன். ஆனால் என்னிடம் எதுவுமே இல்லை. தங்கள் தகவல்களுக்கு நன்றி...

இதற்க்கு விளக்கவுரை என்னிடம் இருந்தாலும் ( வழக்கம் போல ) அதனை எழுத நான் விரும்பவில்லை காரணம், இதற்க்கு நான் பதில் புனைந்தால் மற்றொன்று முளைக்கும் !

ஆகவே ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமே.

1) நீங்கள் குரிப்பிட்டவைக்கு நிச்சயம் தங்களுடைய கேள்விகளுக்கு பதில் என்னிடம் உண்டு !
1952 தீபாவளி அன்றே உச்ச நட்சத்திர அந்தஸ்து நடிகர் திலகத்தை தேடி வந்துவிட்டது சார் ! 1987 வரை அவரது உடல்நலம் ஒத்துழைத்தது வரை அது தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. எந்த நிலையிலும் அது எள்ளளவும் இறங்கவில்லை

மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களிடம் பொம்மையில் இதே கேள்வியை எழுப்பியபோது அவர் மிக அழகாக தெளிவுபட கூறியுள்ளார் " தங்கத்தின் விலை சிறிது கூடலாம் குறையலாம்...ஆனால் தரத்தில் தங்கம் என்றும் தங்கமே ! என்று "

இதன் பொருள் - திரைப்படம் வெற்றி அடையலாம் அல்லது அடையாமல் போகலாம்...நூறு நாட்கள் ஓடலாம் ஓடாமல் போகலாம் ...ஆனால் நிலை ..(உச்சநட்சத்திரம் என்ற) அந்த நிலை...அது என்றும் அதே நிலையில் தான் நடிகர் திலகத்தை பொருத்தவரை இருந்தது !

2) 1952 முதல் 1962 வரை ....1963 முதல் 1973 வரை ...1974 முதல் 1978 வரை காலகட்டங்கள் எவர் எடுத்து பார்த்தாலும் அதிக நூறு நாள் படங்கள் ...அதிக 150 நாள் படங்கள் ...அதிக 175 நாள் படங்கள் அதிக 200 நாட்கள் படங்கள்...ஒரு நாளில் ரெண்டு படங்கள்..இரெண்டும் 100 நாட்கள் ஆகிய சாதனைகள் கொடுத்தவர் நடிகர் திலகம் என்பது உண்மை..மறுக்கமுடியாது ...மறைக்கவும் முடியாது !

வெற்றி... தோல்வி.... வசூல் இவை மூன்றும் மாறி மாறி வருவது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை ! எல்லா காலகட்டத்திலும் அது உள்ளது ! இவை அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும் !

எல்லா படமும் எல்லா நடிகர்களுக்கும் 100 நாட்களாகவும்..வெள்ளிவிழாவாகவும் அமைந்துவிட்டால் எந்த நடிகரையும் கையில் பிடிக்கமுடியாது !

மறு வெளியீடு...வெளியிடுபவரை பொருத்தது..அந்த வியாபாரம் தொடர்ந்து செய்பவரை அவர் எண்ணத்தை பொருத்தது ...இதில் யாராலும் சரியான கருத்து சொல்ல முடியாது.

Regards
RKS

siqutacelufuw
16th December 2015, 09:04 AM
http://i66.tinypic.com/jq70uw.jpg

Dear Brother Sathya,

Thank you very much for having posted this specific image, from FACEBOOK.

siqutacelufuw
16th December 2015, 09:08 AM
செல்வகுமார் சார்...

வெற்றி... தோல்வி.... வசூல் இவை மூன்றும் மாறி மாறி வருவது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை ! எல்லா காலகட்டத்திலும் அது உள்ளது ! இவை அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும் !


Regards
RKS


Dear Brother Ravi Kiran Surya,

PLEASE ADVISE THIS TO NT THREAD HUBBERS WHO MAKE CONTROVERSIES, frequently

Affectionately Yours
S. Selvakumar

ainefal
16th December 2015, 10:28 AM
http://i64.tinypic.com/2hs5407.jpg
http://i66.tinypic.com/mip3e1.jpg

Daily Thanthi, Dubai, 13-12-2015, I was not sure if the above appeared in Chennai Edition, hence posting it over here.

Russellsui
16th December 2015, 10:43 AM
Dear Brother Ravi Kiran Surya,

PLEASE ADVISE THIS TO NT THREAD HUBBERS WHO MAKE CONTROVERSIES, frequently

Affectionately Yours
S. Selvakumar

கரெக்ட். நன்றி.

Russellsui
16th December 2015, 10:49 AM
http://i66.tinypic.com/243febk.jpg

Russellsui
16th December 2015, 10:52 AM
http://i64.tinypic.com/2zhqghx.jpg

Richardsof
16th December 2015, 11:33 AM
1972- MAKKAL THILAGAM MGR MOVIES- A GLANCE.

http://i66.tinypic.com/288y2bo.pnghttp://i63.tinypic.com/2mot2bq.jpghttp://i66.tinypic.com/k057ae.jpghttp://i63.tinypic.com/25re1w3.jpghttp://i68.tinypic.com/igvhpu.jpghttp://i66.tinypic.com/hrkehy.jpg

Richardsof
16th December 2015, 12:03 PM
1972ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .

சங்கே முழங்கு.படத்தில் உண்மை ஊழியராகவும் , தன்மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க மாறு வேடத்தில் இன்ஸ்பெக்டராக கிருபால் சிங் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக ''சிலர் குடிப்பது போலே நடிப்பார் ''பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நடனம் மிகவும் அருமை . மௌனத்தாலே முகப்பாவனையுடன் நடித்த ''நாலு பேருக்கு நன்றி '' பாடல் காட்சியில் நடிப்பு .அபாரம் .

நல்லநேரம் - பணக்காரர் ஏழையாகி மீண்டும் வாழ்க்கயில் முன்னேறும் வேடத்தில் மக்கள் திலகம் அட்டகாசமாக நடித்து இருந்தார் . யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி ஒன்றே போதும் மக்கள் திலகத்தின் வெற்றிக்கு .ஓடி ஓடி உழைக்கணும் - மிக சிறந்த தத்துவ் பாடல் .

ராமன் தேடிய சீதை - மக்கள் திலகம் செல்வந்தராக , மிகவும் ஜாலியாக நடித்த பொழுது போக்கு படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படம் .

நான் ஏன் பிறந்தேன் - நடுத்தர குடும்ப தலைவராக மக்கள் திலகம் நடித்த ஒரே படம் .எல்லா பாடல்களும் தேன் அமுது .மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு ஒரு வரப்பிரசாதம் .

அன்னமிட்ட கை - கொடுத்த வாக்கை காப்பாற்றும் வேடத்தில் மக்கள் திலகம் மிக சிறந்த முறையில் நடித்து இருந்தார் . 1966ல் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் கணீர் குரல் சில காட்சிகளில் இடம் பெற்று இருந்தது சிறப்பு .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

இதய வீணை - பாடல் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப் பட்ட இரண்டாவது படம் . மணியனின் நாவல் . மக்கள் திலகம் மிக சிறப்பாக நடித்து இருந்தார் .

மொத்தத்தில்; 1972ல் வெளியான மக்கள் திலகத்தின் நல்லநேரம் மற்றும் இதய வீணை மாபெரும் வெற்றி பெற்றது . ராமன் தேடிய சீதை இலங்கையில் மாபெரும் வெற்றி . தென்னகத்தில் சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - நான் ஏன் பிறந்தேன் வணிக ரீதியாக வெற்றி படங்கள் . அன்னமிட்டகை சுமாரான வெற்றி படம் .
மறு வெளியீடுகளில் மேற்கண்ட 6 படங்களும் பல முறை பல ஊர்களில் இன்னமும் தொடர்ந்து ஓடிகொண்டிருப்பது சாதனை .

Russellvpd
16th December 2015, 03:49 PM
நியாயத்துக்கு குரல் கொடுத்த செல்வகுமார்,(சார், நான் உங்கள பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது. உங்களுக்கு கம்பியூட்டர் மூளை) ஜெயசங்கர், சுகாராம், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.

சர்ச்சையான பதிவுகளை அவர்கள் திரியில் நீக்கிய நண்பருக்கும் அவருக்கு வேண்டுகோள் விட்ட நண்பருக்கும் நன்றி.
நல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லும் பெரிய மனிதர் (ராகவேந்திரா என்ற பதிவாளர்) முதலில் அவர்கள் திரியில் பாடம் சொல்லட்டும் எனவும், ரத்னமாலா என்ற நடிகையுடன் சிவாஜி கணேசனுக்கு உள்ள தொடர்பை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் நேற்று பதிவு போட்டிருந்தேன்.(மக்கள் திலகம் திரியில் என் பதிவு 273) அதைப் பார்த்துவிட்டு அவர்கள் திரியில் தனது பதிவை (நடிகருக்கும் நடிகைக்கும் உள்ள தொடர்பு நடிகரின் குடும்பம் உட்பட எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்ட பதிவு) அந்த பதிவை நீக்கி விட்ட பெரிய மனிதருக்கும் நன்றி. தான் சொன்னதில் உறுதியாக இருந்தால் ஏன் நீக்க வேண்டும்? ஒப்புக் கொண்டது எல்லாருக்கும் தெரிந்து விடுமே என்ற பயம்தான் காரணம்.

எதிர்காலத்தில் உண்மைகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் திலகம் மீது பழிபோடுகிறவர்கள், அவதூறு சொல்கிறவர்கள் முதலில் தங்கள் முதுகை பார்க்கட்டும், அவர்கள் யோக்கியமா? என்பதை முதற்கொண்டு மனசாட்சியின்படி யோசிக்கட்டும் என்பதற்காகவும் சிவாஜி கணேசன், ரத்ன மாலா ஆகியோரின் பெயர்களை இந்த பதிவில் குறிப்பிட்டு 1-1-2016 அன்று மீண்டும் திருத்தி இருக்கிறேன். நான் முதலில் போட்டிருந்த இந்த பதிவின் ஒரு பகுதியை பெரிய மனிதருக்கு (ராகவேந்திரா என்பவருக்கு) பதில் சொன்னதை மட்டும் எடுத்து ரிப்ளை வித் கோட் போட்டு ரவிகிரான் சூரியா என்ற பதிவர் பதிவு 327-ல் எடுத்து போட்டு எனக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருக்கிறார் (மக்கள் திலகம் திரி இதே பக்கம் பதிவு 327) அவரும் கூட பெரிய மனிதர் தனது பதிவை நீக்கிவிட்டார் என்று நான் கூறியதையோ அல்லது அவராகவோ உண்மையை மறுக்கவில்லை என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிவாஜி கணேசனுக்கும் ரத்னமாலாவுக்கும் இருந்த அந்தரங்க தொடர்புக்கான விவரங்கள் ‘சிவாஜியின் நிழல் மனைவி’ என்ற தலைப்பில் இணையதளத்தில் உள்ளது. ஆனந்த விகடன் பத்திரிகையில் வேலை செய்த பிரகாஷ் என்பவர் ‘விகடன் டயரி’ என்ற தனது பிளாக்கில் இது பற்றி கூறியுள்ளார். இவ்வளவுக்கும் அவரும் சிவாஜி கணேசன் ரசிகர்தான். அவரது பிளாக்கிலேயே கூறியுள்ளார். அவரது விருப்ப நடிகரை புகழ்ந்தும் எழுதியுள்ளார். முதலில் அந்த இணையதள பதிவை நீக்கித்தான் இருந்தேன். ஆனாலும் மாற்று திரியினர் தொடர்ந்து மக்கள் திலகம் பற்றி அவதூறாக எழுதுவதால் கோபத்தில் மீண்டும் அதன் இணைப்பை தருகிறேன். எல்லாரும் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. சிவாஜி கணேசன் என்ன யோக்கியவான்?

http://vikatandiary.blogspot.in/2009/10/blog-post_28.html

Russellvpd
16th December 2015, 03:52 PM
http://i67.tinypic.com/2rgkv0y.jpg
http://i68.tinypic.com/2hwguu8.jpg

Russellbpw
16th December 2015, 04:08 PM
நண்பர்கள் திரு அக்பர்
திரு செல்வகுமார் அவர்கள்
திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்கள்

திரு செந்தில்வேல் அவர்கள் தவறுதலாக பதிவான மதிஒளி பதிவினை நீக்கிவிட்டார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsqhcgyzqg.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsqhcgyzqg.jpg.html)

rks

Russellbpw
16th December 2015, 04:25 PM
நல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லும் பெரிய மனிதர் முதலில் அவர்கள் திரியில் பாடம் சொல்லட்டும் எனவும், நடிகையுடன் நடிகருக்கு உள்ள தொடர்பை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் நேற்று பதிவு போட்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு தனது பதிவை நீக்கி விட்ட பெரிய மனிதருக்கும் நன்றி.

நடிகயுடன் நடிகருக்கு உள்ள தொடர்பு" - எந்த நடிகருக்கு இல்லை ? அந்த தொடர்புக்காகவே , சில நடிகர்களின் திரை மறைவு வேலைகள் அநாகரீகத்தின் உச்சம். பத்திரிகைகளில் தினமும் வருவதுதானே அவை அல்லாது, அத்ஹன் புகைப்படங்களோ கண்ணொளி காட்சியோவா ஆதாரங்களாக இந்த விஷயத்தை பொருத்தவரை ஏற்றுகொள்ளபடுகின்றன ? Only gossips are considered as truth ever !

மற்றவர்களின் சொந்த விஷயங்கள் பற்றிய தொடர்புகளை பற்றி நம் தமிழகத்தில் மட்டும் சற்று அதிகமாக கவலைபடுபவர்கள் அதிகம் ! நடிக நடிகையர் பற்றியது என்றால் கேட்கவே வேண்டாம்...அவர்களுக்கு பதில் இவர்கள் கனவு காணும் வழக்கம் கொண்டவர்களாக மாறிவிடுவதும், இவர்கள் என்னமோ அவர்கள் பக்கத்திலயே இருந்ததுபோல பேசவும் எழுதவும் செய்வது என்றும் இருக்கப்போவது உண்டு !

ஆகவே..இது போல மற்றவர்களுடைய சொந்த வாழ்வியல் பற்றிய பதிவுகள் வராமல் இருந்தால் நல்ல விஷயம் !!

சினிமாவை பற்றி பேசினால் முழுக்க முழுக்க அதனை பற்றி பேச எழுதவேண்டும்...சினிமாவுடன் அரசியல் பற்றி கலப்பது....சினிமா மற்றும் அரசியல் பற்றி பேசினால் எழுதினால் சொந்த வாழ்கை பற்றி நுழைப்பது...இது அனைவராலும் செய்ய முடியும் என்பதை அனைவரும் உணர்ந்தால் நலம் !

Russellvpd
16th December 2015, 04:48 PM
அவரவர்கள் ஏற்றுக் கொண்டவர்களை பற்றி மட்டும் புகழ் சேர்ப்பது நல்லது. அடுத்தவர்களை தாக்காமல் இருக்கவேண்டும் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Russellvpd
16th December 2015, 05:14 PM
http://i64.tinypic.com/20qgi2a.jpg

Russellvpd
16th December 2015, 05:27 PM
http://i64.tinypic.com/6thjti.jpg

Richardsof
16th December 2015, 06:57 PM
MY CHOICE.
BEST SCENES, SONGS AND STUNTS OF MAKKAL THILAGAM MGR'S MOVIES RELEASED IN THE YEAR OF 1972.


https://youtu.be/GUL62HGORog

Richardsof
16th December 2015, 07:00 PM
NALLA NERAM.
https://youtu.be/u_xUTTKbSCc

Richardsof
16th December 2015, 07:03 PM
RAMAN THEDIYA SEETHAI
https://youtu.be/W70Mw6XFMR8

Richardsof
16th December 2015, 07:07 PM
NAN YEN PIRANTHEN
https://youtu.be/fCXwpPO7JOY
https://youtu.be/S2RLsp1D58Q

Richardsof
16th December 2015, 07:09 PM
ANNAMAITTA KAI
https://youtu.be/0Daa00DQxHs

Richardsof
16th December 2015, 07:14 PM
IDHAYA VEENAI
https://youtu.be/IWPruFQXV4A

Richardsof
16th December 2015, 07:25 PM
https://youtu.be/RDn6uKUsaro

ainefal
16th December 2015, 07:35 PM
1981

http://i63.tinypic.com/jg46ki.jpg

Richardsof
16th December 2015, 07:35 PM
MAKKAL THILAGAM MGR'S FIRST PLACE OF SUPER HIT SONG-1972

https://youtu.be/6wRx8Z_oa-o

SECOND PLACE

https://youtu.be/BWsX8Zsq6-o

THIRD PLACE

https://youtu.be/yiOVK2taBno

ainefal
16th December 2015, 07:37 PM
1979

http://i66.tinypic.com/2a6mr6p.jpg

Richardsof
16th December 2015, 07:39 PM
SUPERB TITLE MUSIC OF 1972.
https://youtu.be/ITPvlborXTU

Richardsof
16th December 2015, 07:45 PM
MAKKAL THILAGAM MGR'S ORIGINAL VOICE-1966 IN ANNAMITTAKAI -1972
https://youtu.be/CUsXEBL6Y5E

ainefal
16th December 2015, 07:53 PM
1976


http://i67.tinypic.com/2n80cbp.jpg

ainefal
16th December 2015, 07:55 PM
1975

http://i68.tinypic.com/15zjk44.jpg

Stynagt
16th December 2015, 08:25 PM
மக்கள் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். நான் எப்போதும் கூறுவது போல், நம் ஆண்டவன் ஒப்பரும் மிக்காரும் இல்லா ஆண்டவன். சராசரி வேலையை செய்பவன் , மனிதன். சக்திக்கு மீறிய வேலையை செய்பவன் ஆண்டவன். நம் தலைவன் எவராலும் நினைத்து பார்க்க கூட முடியாத செயல்களைப் புரிந்த 'விந்தைகளுக்கெல்லாம் தந்தை'.

அவருக்கு யாரும் ரோல் மாடல் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அவரைப் பார்த்து இவர் இப்படி செய்தார் - அப்படி செய்தார் என்று சொல்லலாம். ஆனால் அவருக்கு அவரே ரோல் மாடல். நம் தலைவரைப்பர்த்துதான் அன்று முதல் இன்று வரை அவராய் ஆகி விடமாட்டோமா என்று மனப்பால் குடித்தனர்...குடிக்கின்றனர். சிலர் நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி காணாமலும் போனார்கள். நம் மக்கள் திலகத்தின் உள்ளம் தொண்டுள்ளம்..பிரதி பலன் பாராதது. அதனால்தான் மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்து மக்கள் திலகம் ஆனார். பின்னர் இதய தெய்வம் ஆனார்.

இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு
சவாரி செய்யவும் முடியும். வெற்றியும் காண முடியும் என்று சாதித்து காட்டியவர் நம் புரட்சித்தலைவர். திரையுலகம், அரசியல் என்னும் இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முதலிடம் பெற்று, வசூல் சக்கரவர்த்தி என்று திரையிலும், நிரந்தர முதல்வர் என அரசியலிலும் கோலோச்சி, இருக்கும் வரை, இறக்கும் வரை தோல்வியே காணமல் வாழ்ந்தார். இன்றளவிற்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை அவரது திரைப்படங்கள் சாதனை படைத்துகொண்டிருக்கின்றன என்பது மற்றவர் சொல்லி தெரிய தேவையில்லை. அங்கைப்புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ என்பது போல, அவரது திரைப்படங்கள் இன்றும் பெரும்பாலான திரையரங்குகளில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. வசூலில் சாதனை புரிகின்றன. கோவையில் இந்த ஆண்டு மட்டும் புரட்சித்தலைவரின் 40 படங்கள் வெளியாகி உள்ளன. 265 நாட்களில் 230 நாட்கள் தலைவரின் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இதன் புள்ளி விவரங்களை என் அன்பு சகோதரர் திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிடுவார். இந்த சாதனைகளை யாரால் செய்ய முடியும். இப்போதுள்ள ஸ்டார்களால் கூட செய்ய முடியாத சாதனை இது. இன்றைக்கல்ல, அன்றைக்கும் நம் புரட்சி நடிகர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நாடறிந்த ஒன்று.. பல ஏடுகளில் வெளி வந்த உண்மை இது. மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாட்களில் எடுக்கும் வசூலை, தலைவர் படங்கள் 50 நாட்களில் குவித்ததுதன் திரையுலக வரலாறு

இப்படிப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரை நம் திரியின் நண்பர்கள் ஏன்தான் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறீர்களோ தெரியவில்லை. தயவு செய்து இதோடு இதைவிட்டு விட்டு நம் தலைவர் புகழ் ஒன்றையே நோக்கமாக கருதி செயல்பட உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். மற்ற திரியில் தவறாய் போடுகிறார்கள் அதற்கு பதில் போடுகிறோம் என்று நம் திரியின் தரத்தை தாழ்த்த வேண்டாம் என்று மீண்டும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரியின் தன்மையைப் பொருத்தது. அதே போல் நாம் செய்து நம் திரியின் புனிதத்தைக் கெடுக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
16th December 2015, 08:52 PM
நண்பர்கள் திரு அக்பர்
திரு செல்வகுமார் அவர்கள்
திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்கள்

திரு செந்தில்வேல் அவர்கள் தவறுதலாக பதிவான மதிஒளி பதிவினை நீக்கிவிட்டார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/capture_zpsqhcgyzqg.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/capture_zpsqhcgyzqg.jpg.html)

rks



திரு rks அவர்களுக்கு,

மக்கள் திலகத்தின் பக்தர்களின்
மன உணர்வைப்புரிந்து கொண்டு
தவறான பதிவை நீக்கம் செய்த
திரு செந்தில் அவர்களுக்கும் -
அந்த செய்தி நீக்கப்படவேண்டும்
என்று எடுத்துரைத்த தங்களுக்கும்
நன்றி.

வருகின்ற காலங்களில் இம்மாதிரி
செய்திகளை பதிவிட வேண்டாம் என்று தங்கள்
திரி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். பதிவிடும்போது
எங்கள் நண்பர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
அவரவர் தங்கள் கருத்துக்களை கொட்டித்தீர்க்கின்றனர்.


நமது திரிகளில் இடம்பெறும் தகவல்கள்
அடுத்த தலைமுறைக்கும் பயன்பெறும்
வண்ணம் நல்ல பல செய்திகளை பதிவிடுவோம்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

ainefal
16th December 2015, 09:28 PM
http://i63.tinypic.com/v62hz4.jpg

ainefal
16th December 2015, 09:30 PM
http://i65.tinypic.com/rutxmw.jpg

ainefal
16th December 2015, 09:34 PM
http://i67.tinypic.com/69lsaa.jpg

ainefal
16th December 2015, 09:38 PM
http://i65.tinypic.com/4fxqh3.jpg

ainefal
16th December 2015, 09:45 PM
http://i67.tinypic.com/65ojs6.jpg

ainefal
16th December 2015, 09:49 PM
http://i66.tinypic.com/egkgl.jpg

ainefal
16th December 2015, 09:53 PM
http://i68.tinypic.com/1zz55bp.jpg

ainefal
16th December 2015, 09:55 PM
http://i67.tinypic.com/av0co3.jpg

ainefal
16th December 2015, 10:04 PM
http://i65.tinypic.com/2z8tead.png

ainefal
16th December 2015, 10:08 PM
http://i68.tinypic.com/2nc1o43.jpg

ainefal
16th December 2015, 10:10 PM
http://i65.tinypic.com/2u7om8n.jpg

ainefal
16th December 2015, 10:12 PM
http://i68.tinypic.com/2ai3k77.jpg

oygateedat
16th December 2015, 10:39 PM
http://i65.tinypic.com/2z8tead.png

Arumai Thiru Sailesh Basu Sir

Regds

S.Ravichandran

ainefal
16th December 2015, 10:44 PM
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா. அதிலே என்ன தலைவனாக கொண்டு விழாக் குழுவை அமைத்தார். இதுபோன்று நிகழ்ச்சியில் முதலமைச்சர் தான் தலைவராக இருபது வழக்கம். பாரதியாரின் 80-வது அந்து விழா நடந்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த திரு. எம்.பக்தவத்சலம் தான் விழாக்குழுத் தலைவார இருந்தார். என்னை அந்த குழுவில் ஒரு அங்கதினராகே சேர்பதற்கு மறுத்தார் என்பது விழக் குழுவின் கூட்டத்தில் முதல்வர் சொன்ன சமாதானம்தான்.
காங்கிரஸ் ஆட்சியில் அவளவு கேவலமாக நடத்தப் பெற்ற நான் ஆ.தீ.மு.க ஆட்சியில் பாரதியின் நூற்றாண்டு விழாக் குழுவின் தலைவனாகவே நியமிக்கப்பட்டேன் என்பதை நினைக்கும்போது அமரராகிவிட்ட எம்.ஜி. ஆரின் அன்மாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.


- சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

ainefal
16th December 2015, 10:46 PM
அக்டோபர் 17, 1972, சென்னை
எம்.ஜி.ஆரின் தனிக்கட்சி
புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டுவேன். நான் எழுப்பிய பிரச்சனைய்களை பற்றி பேசுவேன். என்னிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு பதில் அளிப்பேன்.
சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமருவீர்கள என்று கேட்கப்பட்டதற்கு அது மாற்றி பரிசிலிக்கிறேன் என்று தெரிவித்தார்.

ainefal
16th December 2015, 10:46 PM
நீங்கள் நீதியை மீட்டவர். நீதி தங்களை மீட்காமல் விட்டுவிடாது. நீங்கள் சத்தியத்தின் பிள்ளை. நீங்கள் காலத்தை வென்றவர், யமனையும் ஜெயித்தவர் மீண்டும் ஒரு முறை வெற்றிபெற்று எங்கள் இதயங்கள் குளிரவையுங்கள்.
க. காளிமுத்து 1984, மன்ற முரசு

ainefal
16th December 2015, 10:47 PM
டிசம்பர் 23, கிருஷ்ணகிரி 1968
கடலில் இருந்து தண்ணீர் ஆவியாகி வானத்துக்குப் போகிறது. திரும்பவும் மழையாகி பூமிக்கே வந்து விடுகிறது. அதுபோல் உங்களிடம் இருந்து எனக்கு பணம் வருகிறது. அதை உங்களுக்கு திருப்பு கொடுத்து விடுகிறேன். அவளவுதான்.

- புரட்சித்தலைவர்

ainefal
16th December 2015, 10:48 PM
ஏப்ரல் 18, ராமநாதபுரம் 1981
தொப்பி இல்லாத எம்.ஜி.ஆர்.
"சும்மா எடுங்கள் தொப்பி, தொப்பி என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். தொப்பியில்லாமல் மக்கள் என்னை பார்க்கட்டும், சும்மல் எடுங்கள்" என்று எம்.ஜி.ஆர் கூறினார். உடனே புகைப் படக்காரர்கள் மளமள வேண்டு படத்தை எடுத்து விட்டார்கள்.

ainefal
16th December 2015, 10:49 PM
1949-இல் தொடங்கப்பட்ட தீ.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1972-இல்தான் 18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தீ.மு.க தலைவர் அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் [ஆ.தீ.மு.க நவம்பர் மாதம் 3-ஆம் தேதிக்குள்] 15 நாள்களில் பத்து இலட்சம் உறுபினர்களையும். ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவளவு பெரிய சாதனை.
இந்தச் சாதனை, புரட்சித்தலைவருக்கு பொதுமக்கள் மத்தியில் எத்துனை செல்வாக்கு இருந்தது என்பதை சொல்லும்.

ainefal
16th December 2015, 10:53 PM
புரட்சித்தலைவர் "பகிரங்கமாக சொல்லாமல்" யாருக்காவது "தினமும்" உதவி செய்தார்.

"சோ" ராமசாமி

ainefal
16th December 2015, 11:18 PM
http://i65.tinypic.com/35knb4m.jpg

orodizli
16th December 2015, 11:19 PM
மக்கள்திலகத்தின் புகழை திக்கெட்டும் பரப்ப அயராது பதிவுகள் வழங்கும் திருவாளர்கள் வினோத், செல்வகுமார், சைலேஷ்பாசு,ஜெயசங்கர், கலியபெருமாள் விநாயகம், vp சத்தியா, ஷெரியர் அக்பர் - எல்லோருக்கும் இனிய பாராட்டுக்களை சக தோழர்கள் சார்பாக தெரிவிக்கிறோம்...

ainefal
16th December 2015, 11:21 PM
http://i67.tinypic.com/15gtr0l.jpg

orodizli
16th December 2015, 11:49 PM
சக்கரவர்த்திகளின்- ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் mgr., புகழையோ, பெருமையையோ, ஈடு இணையில்லா அவர்தம் மாண்பினையோ, திரை உலகிலோ, அரசியல் உலகிலோ யாரும், எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லையென்பது எல்லோரும் அறிந்த உண்மை... திரு செல்வகுமார் சார் தாங்கள் தந்திருக்கும் விவரங்களின் ஒரு பகுதி 1972- ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே...அதற்கும் முன்னாள் (1972) ஆண்டுகளிலும் அட்டவணை விவரங்கள் பல உள்ளன... அதனால் வேறு மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி அமைதியாக உள்ளோம்...

Russelldvt
17th December 2015, 03:34 AM
http://i64.tinypic.com/2luc0lz.jpg

Russelldvt
17th December 2015, 03:35 AM
http://i66.tinypic.com/2d2afye.jpg

Russelldvt
17th December 2015, 03:36 AM
http://i63.tinypic.com/34y5zlc.jpg

Russelldvt
17th December 2015, 03:37 AM
http://i64.tinypic.com/wmay5v.jpg

Russelldvt
17th December 2015, 03:38 AM
http://i68.tinypic.com/2sb78n4.jpg

Russelldvt
17th December 2015, 03:39 AM
http://i63.tinypic.com/25k7vhv.jpg

Russelldvt
17th December 2015, 03:40 AM
http://i67.tinypic.com/2445w68.jpg

Russelldvt
17th December 2015, 03:41 AM
http://i65.tinypic.com/34j6uiv.jpg

Russelldvt
17th December 2015, 03:42 AM
http://i67.tinypic.com/aovpkz.jpg

Russelldvt
17th December 2015, 03:43 AM
http://i65.tinypic.com/316ay4w.jpg

Russelldvt
17th December 2015, 03:44 AM
http://i63.tinypic.com/11u7qfq.jpg

Russelldvt
17th December 2015, 03:46 AM
http://i68.tinypic.com/2v19jqd.jpg

Russelldvt
17th December 2015, 03:48 AM
http://i68.tinypic.com/2yy58b9.jpg

Russelldvt
17th December 2015, 03:49 AM
http://i64.tinypic.com/4k7nug.jpg

Russelldvt
17th December 2015, 03:50 AM
http://i63.tinypic.com/2qsrx9e.jpg

Russelldvt
17th December 2015, 03:51 AM
http://i66.tinypic.com/14w8sj9.jpg

Russelldvt
17th December 2015, 03:51 AM
http://i67.tinypic.com/21myah2.jpg

Russelldvt
17th December 2015, 03:52 AM
http://i66.tinypic.com/2555p3p.jpg

Russelldvt
17th December 2015, 03:53 AM
http://i68.tinypic.com/29uro1f.jpg

Russelldvt
17th December 2015, 03:53 AM
http://i66.tinypic.com/2s0nz3t.jpg

Russelldvt
17th December 2015, 03:54 AM
http://i67.tinypic.com/swe92o.jpg

Russelldvt
17th December 2015, 03:55 AM
http://i66.tinypic.com/2ajxb9s.jpg

Russelldvt
17th December 2015, 03:56 AM
http://i63.tinypic.com/33zepow.jpg

Russelldvt
17th December 2015, 03:57 AM
http://i67.tinypic.com/r0tgdv.jpg

Russelldvt
17th December 2015, 03:58 AM
http://i67.tinypic.com/2mpinq1.jpg

Russelldvt
17th December 2015, 03:59 AM
http://i65.tinypic.com/2jds9sg.jpg

Russelldvt
17th December 2015, 04:00 AM
http://i64.tinypic.com/1zyu5i.jpg

Russelldvt
17th December 2015, 04:01 AM
http://i67.tinypic.com/hrbvuo.jpg

Russelldvt
17th December 2015, 04:02 AM
http://i68.tinypic.com/3599si8.jpg

Russelldvt
17th December 2015, 04:03 AM
http://i67.tinypic.com/27ynwqg.jpg

Russelldvt
17th December 2015, 04:03 AM
http://i68.tinypic.com/zvzl0j.jpg

Russelldvt
17th December 2015, 04:04 AM
http://i64.tinypic.com/efm9ma.jpg

Russelldvt
17th December 2015, 04:05 AM
http://i66.tinypic.com/nfif4k.jpg

Russelldvt
17th December 2015, 04:06 AM
http://i64.tinypic.com/344waom.jpg

Russelldvt
17th December 2015, 04:07 AM
http://i63.tinypic.com/2426bf7.jpg

Russelldvt
17th December 2015, 04:08 AM
http://i66.tinypic.com/352kdjt.jpg

Russelldvt
17th December 2015, 04:09 AM
http://i64.tinypic.com/2iqhk4.jpg

Russelldvt
17th December 2015, 04:09 AM
http://i67.tinypic.com/hwzo5c.jpg

Russelldvt
17th December 2015, 04:10 AM
http://i64.tinypic.com/2iqd0z9.jpg

Russelldvt
17th December 2015, 04:11 AM
http://i63.tinypic.com/4r7yfc.jpg

Russelldvt
17th December 2015, 04:12 AM
http://i66.tinypic.com/scz23m.jpg

Russelldvt
17th December 2015, 04:13 AM
http://i67.tinypic.com/25s0sx5.jpg

Russelldvt
17th December 2015, 04:13 AM
http://i64.tinypic.com/2qa33io.jpg

Russelldvt
17th December 2015, 04:14 AM
http://i66.tinypic.com/20r8n86.jpg

Russelldvt
17th December 2015, 04:15 AM
http://i65.tinypic.com/ptah2.jpg

Russelldvt
17th December 2015, 04:16 AM
http://i64.tinypic.com/w6zcyr.jpg

Russelldvt
17th December 2015, 04:17 AM
http://i63.tinypic.com/16az1u8.jpg

Russelldvt
17th December 2015, 04:17 AM
http://i64.tinypic.com/2jad8y1.jpg

Russelldvt
17th December 2015, 04:18 AM
http://i68.tinypic.com/i50kdt.jpg

Russelldvt
17th December 2015, 04:19 AM
http://i63.tinypic.com/2iho13o.jpg

தொடரும்.......

Russelldvt
17th December 2015, 05:17 AM
http://i64.tinypic.com/14mt7gz.jpg

Richardsof
17th December 2015, 05:18 AM
http://i64.tinypic.com/14mt7gz.jpg

super stills. Thanks MUTHAYAN SIR

Richardsof
17th December 2015, 05:19 AM
http://i63.tinypic.com/2426bf7.jpg
superb still.

Richardsof
17th December 2015, 05:50 AM
மகாகவி பாரதியார்
மகாத்மா காந்தி
பண்டிதர் நேரு
தந்தை பெரியார்
மூதறிஞர் ராஜாஜி
பெருந்தலைவர் காமராஜர்
பேரறிஞர் அண்ணா

மேற்கண்ட தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை நம் வாழ் நாளில் பலரும் பார்த்து இருக்கிறோம் என்பது நமக்கு கிடைத்த பெருமை .

17.1.2016
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg.html)
நம்முடைய வாழ்க்கையில் நாம் காண இருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்கம் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வாழ்ந்த காலத்தில் நாமும் அவரோடு வாழ்ந்தோம் . அவருடைய திரை உலகம அரசியல் மற்றும் மனித நேயம் என்று மூன்று துறைகளிலும் அவர் கொடி கட்டி பறந்த பொற்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான நேரம் . விரைவில் அவருடைய நூற்றாண்டு விழாவினை துவங்க நாம் எல்லோரும் தயாராக இருப்போம் என்று கூறி கொள்கிறேன் .

Richardsof
17th December 2015, 05:56 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/coming-soon_zpse5235872-1_zps8bdcfeff.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/coming-soon_zpse5235872-1_zps8bdcfeff.jpg.html)

Richardsof
17th December 2015, 05:57 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr_crowd_anna_salai4_zpsdd3f59c3-1_zps94e0f38c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/mgr_crowd_anna_salai4_zpsdd3f59c3-1_zps94e0f38c.jpg.html)

Richardsof
17th December 2015, 05:59 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/nervo-optico-design-magazine-new-beetle-small-90797_zps84cdeecd-1_zps0f904b8f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/nervo-optico-design-magazine-new-beetle-small-90797_zps84cdeecd-1_zps0f904b8f.jpg.html)

Richardsof
17th December 2015, 06:00 AM
2016

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/147_zps64b95d51.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/147_zps64b95d51.jpg.html)

Richardsof
17th December 2015, 06:10 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21205_450716968356451_246383994_n_zps5e6f41bc.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21205_450716968356451_246383994_n_zps5e6f41bc.jpg. html)

Russellvpd
17th December 2015, 09:37 AM
திரு rks அவர்களுக்கு,

மக்கள் திலகத்தின் பக்தர்களின்
மன உணர்வைப்புரிந்து கொண்டு
தவறான பதிவை நீக்கம் செய்த
திரு செந்தில் அவர்களுக்கும் -
அந்த செய்தி நீக்கப்படவேண்டும்
என்று எடுத்துரைத்த தங்களுக்கும்
நன்றி.

வருகின்ற காலங்களில் இம்மாதிரி
செய்திகளை பதிவிட வேண்டாம் என்று தங்கள்
திரி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். பதிவிடும்போது
எங்கள் நண்பர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
அவரவர் தங்கள் கருத்துக்களை கொட்டித்தீர்க்கின்றனர்.


நமது திரிகளில் இடம்பெறும் தகவல்கள்
அடுத்த தலைமுறைக்கும் பயன்பெறும்
வண்ணம் நல்ல பல செய்திகளை பதிவிடுவோம்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

ரவி சந்திரன் நீங்கள் சொல்றது சரிதான். ஆனால்எப்போதும் நாம் யார் மீதும் முதலில் கல் எரிவது இல்லை. தெய்வமாக விளங்கும் மக்கள் திலகத்தை எப்போதுமே முதலில் கேவலமாக விமரிசிப்பது அவர்கள்தான். அதற்குதான் பதில் சொல்றோம். இதை எல்லாரும் புரிய வேண்டும். அப்போது பிரச்சினை வராது.

Russellvpd
17th December 2015, 09:40 AM
http://i65.tinypic.com/ptah2.jpg

super... Deivame.. Vaalga..

siqutacelufuw
17th December 2015, 11:06 AM
http://i67.tinypic.com/1182fbt.jpg

siqutacelufuw
17th December 2015, 11:20 AM
http://i68.tinypic.com/2r4u1ox.jpg

Courtesy : Facebook - by Mr.Boominathan Andavar

Russellbpw
17th December 2015, 12:06 PM
சக்கரவர்த்திகளின்- ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் mgr., புகழையோ, பெருமையையோ, ஈடு இணையில்லா அவர்தம் மாண்பினையோ, திரை உலகிலோ, அரசியல் உலகிலோ யாரும், எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லையென்பது எல்லோரும் அறிந்த உண்மை... திரு செல்வகுமார் சார் தாங்கள் தந்திருக்கும் விவரங்களின் ஒரு பகுதி 1972- ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே...அதற்கும் முன்னாள் (1972) ஆண்டுகளிலும் அட்டவணை விவரங்கள் பல உள்ளன... அதனால் வேறு மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி அமைதியாக உள்ளோம்...

Dear Suharaam Sir,

What are you trying to put up / Claim ?

Kindly do not mention flat statements like this.

The only reason why i did not respond to those statistics of Prof. Sir is, that it would start fresh debate / arguments, which i mentioned already.

It is not that I cannot give such details about the number of days run films of Makkal Thilagam Avargal. But what is the use ? .

Like your "அட்டவணை" "விவரங்கள்", we too have and which I can also source and get it !

For Example : with reference to the Rajapart Rangadurai reference of Prof, sir, I could have posted immediately, the following 2 week's advertisement given by distributors ( what i have) But i did not do it because, if i get on like that, the debate and argument would only continue and never will a FULL STOP Happen. Like your kindself, many pooh poohed Raja Raja Chozhan with misleading statement with reference to the collection of the film too...I am giving you proof of 2 weeks collection of Raja Raja Chozhan so that you can look at it : It is a matter of time, where we could source the RELIABLE, AUTHENTIC data in the form of Advertisement.

RAJAPART RANGADURAI ( 2 Week's CHS Advertisement )- Courtesy www.nadigarthilagam.com

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/rajapart200showsadfw_zpszw9y9jlz.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/rajapart200showsadfw_zpszw9y9jlz.jpg.html)

RAJA RAJA CHOZHAN ( 2 week's Collection Advertisement that too amidst severe POWERCUT times)- Courtesy Mr. Senthilvel, KOVAI

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/25lks_zps3qa11p9y.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/25lks_zps3qa11p9y.jpg.html)

Even Now, I would not have put up the above ads, But, am doing only to clear your mind and explain you that EVERY VETERAN will have such details.

I too "மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி " keeping quiet and want to move to next level on our friendship / relationship rather than ponder over who was better etc., etc., which are increasing the blood pressure levels of all of us as we are very sensitive and true to our demi gods !

There is NO ANSWER TO WHETHER LORD SHIVA IS GREATER (or) LORD VISHNU IS GREATER !
THAT QUESTION ITSELF IS WRONG AND SHOULD NEVER ARISE IS WHAT MY CONTENTION IS !

Regards
RKS

siqutacelufuw
17th December 2015, 12:34 PM
மலரும் நினைவுகள் :

1978ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் வந்த வைகுண்ட ஏகாதசி அன்று, சென்னை சத்யம், சாந்தம், சுபம் ஆகிய மூன்று திரையரங்குகளிலும், நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் "ஆயிரத்தில் ஒருவன்" திரையிடப்பட்டது.

http://i67.tinypic.com/2wf34mc.jpg

மூன்று அரங்குகளிலும், HOUSE FULL ஆகி வரலாறு படைத்தது.

உலக சினிமா வரலாற்றில், நள்ளிரவு காட்சியில், ஒரே திரைப்படம், மூன்று அரங்குகளில் திரையிடப்பட்டு, அனைத்திலும், அரங்கு நிறைந்தது ஒரு மாபெரும் சாதனை. இந்த சாதனையை நிகழ்த்த நம் புரட்சித்தலைவரால் மட்டுமே முடியும்.

இந்த அரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள் (என் நண்பர் தபால் அலுவலக திரு, கே. பாபு உட்பட) . . அன்று, அதே நாளில் விடியற்காலை காட்சியாக சென்னை ஓடியன் அரங்கில் திரையிடப்பட்ட, எழில் வேந்தனின் "பணம் படைத்தவன்" காவியத்தை கண்டு களித்தனர். அங்கும், HOUSE FULL தான்.

http://i64.tinypic.com/11hqico.jpg

Russellsui
17th December 2015, 12:56 PM
http://i67.tinypic.com/1182fbt.jpg

அட்டகாசமான போஸ். சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

Russellsui
17th December 2015, 01:00 PM
http://i68.tinypic.com/2nuluu8.jpg

1968ம் ஆண்டிலேயே நமது காவியத் தலைவன் வசூல் சக்கரவர்த்தி நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் சென்னையில் மட்டும் அதுவும் வெறும் பத்தே நாட்களில் மொத்த வசூல் ரூ.2,37,470.44. ஆகியுள்ளது. இந்த வசூல் வெறும் சென்னையில் மட்டுமே. அதுவும் 10 நாட்களில். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் அதுவும் 2 வாரங்களில் ஈஸியாக 30 லட்சத்தை தாண்டும்.

Russellsui
17th December 2015, 01:06 PM
http://i67.tinypic.com/25s0sx5.jpg

நன்றி முத்தையன் சார்

Russellbpw
17th December 2015, 01:20 PM
http://i68.tinypic.com/2nuluu8.jpg

1968ம் ஆண்டிலேயே நமது காவியத் தலைவன் வசூல் சக்கரவர்த்தி நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் சென்னையில் மட்டும் அதுவும் வெறும் பத்தே நாட்களில் மொத்த வசூல் ரூ.2,37,470.44. ஆகியுள்ளது. இந்த வசூல் வெறும் சென்னையில் மட்டுமே. அதுவும் 10 நாட்களில். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் அதுவும் 2 வாரங்களில் ஈஸியாக 30 லட்சத்தை தாண்டும்.

ராஜ்குமார் சார்

மிகவும் சந்தோஷம் ...!

ராஜ ராஜ சோழன் 2 வாரம் ருபாய் 25,00,000 விளம்பரம் போல நீங்கள் (அனுமானம் செய்யும் ஈசியாக தாண்டும்) விளம்பரம் இருந்தால் பதிவிடுங்கள் பார்த்து சந்தோஷம் இருவருமே அடையலாம் !

யார் செய்தாலும் சாதனை சாதனைதானே ! இல்லை என்று கூற இயலுமா என்ன ?

1968 இதே போல விளம்பரம் கிடைத்தால் நானும் பதிவிடுகிறேன் நீங்களும் சந்தோஷம் அடையுங்கள்

இவ்வளவுதானே விஷயம் ராஜ்குமார் சார் !

siqutacelufuw
17th December 2015, 01:24 PM
ந்யாயத்துக்கு குரல் கொடுத்த செல்வகுமார்,(சார், நான் உங்கள பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது. உங்களக்கு கம்பியூட்டர் மூளை) ஜெயசங்கர், சுகாராம், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.
சர்ச்சையான பதிவுகளை அவர்கள் திரியில் நீக்கிய நண்பருக்கும் அவருக்கு வேண்டுகோள் விட்ட நண்பருக்கும் நன்றி.
நல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லும் பெரிய மனிதர் முதலில் அவர்கள் திரியில் பாடம் சொல்லட்டும் எனவும், நடிகையுடன் நடிகருக்கு உள்ள தொடர்பை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் நேற்று பதிவு போட்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு தனது பதிவை நீக்கி விட்ட பெரிய மனிதருக்கும் நன்றி.

தங்களின் பாராட்டுக்களினால் நான் கவுரவிக்கப்பட்டாலும், எல்லாப் புகழும் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் புரட்சித்தலைவருக்கே !

நன்றி ! நன்றி ! நன்றி !

siqutacelufuw
17th December 2015, 01:31 PM
http://i64.tinypic.com/14mt7gz.jpg



அன்பு சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களே !

தாங்கள் பதிவிடும் பொன்மனசெம்மலின் நிழற் பட பதிவுகள் வெகு அற்புதம்.

ஆஹா ..... ஓஹோ .......பேஷ் ...... பேஷ்.


தொடரட்டும் தங்களின் சீரியபணி . ! தங்களின் உடல் நிலையையும் கவனித்து கொள்ளவும். புரட்சித்தலைவரின் ஆசிகள் தங்களுக்கு என்றும் உண்டு !

siqutacelufuw
17th December 2015, 01:36 PM
மக்கள் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். நான் எப்போதும் கூறுவது போல், நம் ஆண்டவன் ஒப்பரும் மிக்காரும் இல்லா ஆண்டவன். சராசரி வேலையை செய்பவன் , மனிதன். சக்திக்கு மீறிய வேலையை செய்பவன் ஆண்டவன். நம் தலைவன் எவராலும் நினைத்து பார்க்க கூட முடியாத செயல்களைப் புரிந்த 'விந்தைகளுக்கெல்லாம் தந்தை'.

அவருக்கு யாரும் ரோல் மாடல் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அவரைப் பார்த்து இவர் இப்படி செய்தார் - அப்படி செய்தார் என்று சொல்லலாம். ஆனால் அவருக்கு அவரே ரோல் மாடல். நம் தலைவரைப்பர்த்துதான் அன்று முதல் இன்று வரை அவராய் ஆகி விடமாட்டோமா என்று மனப்பால் குடித்தனர்...குடிக்கின்றனர். சிலர் நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி காணாமலும் போனார்கள். நம் மக்கள் திலகத்தின் உள்ளம் தொண்டுள்ளம்..பிரதி பலன் பாராதது. அதனால்தான் மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்து மக்கள் திலகம் ஆனார். பின்னர் இதய தெய்வம் ஆனார்.

இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு
சவாரி செய்யவும் முடியும். வெற்றியும் காண முடியும் என்று சாதித்து காட்டியவர் நம் புரட்சித்தலைவர். திரையுலகம், அரசியல் என்னும் இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முதலிடம் பெற்று, வசூல் சக்கரவர்த்தி என்று திரையிலும், நிரந்தர முதல்வர் என அரசியலிலும் கோலோச்சி, இருக்கும் வரை, இறக்கும் வரை தோல்வியே காணமல் வாழ்ந்தார். இன்றளவிற்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை அவரது திரைப்படங்கள் சாதனை படைத்துகொண்டிருக்கின்றன என்பது மற்றவர் சொல்லி தெரிய தேவையில்லை. அங்கைப்புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ என்பது போல, அவரது திரைப்படங்கள் இன்றும் பெரும்பாலான திரையரங்குகளில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. வசூலில் சாதனை புரிகின்றன. கோவையில் இந்த ஆண்டு மட்டும் புரட்சித்தலைவரின் 40 படங்கள் வெளியாகி உள்ளன. 265 நாட்களில் 230 நாட்கள் தலைவரின் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இதன் புள்ளி விவரங்களை என் அன்பு சகோதரர் திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிடுவார். இந்த சாதனைகளை யாரால் செய்ய முடியும். இப்போதுள்ள ஸ்டார்களால் கூட செய்ய முடியாத சாதனை இது. இன்றைக்கல்ல, அன்றைக்கும் நம் புரட்சி நடிகர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நாடறிந்த ஒன்று.. பல ஏடுகளில் வெளி வந்த உண்மை இது. மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாட்களில் எடுக்கும் வசூலை, தலைவர் படங்கள் 50 நாட்களில் குவித்ததுதன் திரையுலக வரலாறு

இப்படிப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரை நம் திரியின் நண்பர்கள் ஏன்தான் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறீர்களோ தெரியவில்லை. தயவு செய்து இதோடு இதைவிட்டு விட்டு நம் தலைவர் புகழ் ஒன்றையே நோக்கமாக கருதி செயல்பட உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். மற்ற திரியில் தவறாய் போடுகிறார்கள் அதற்கு பதில் போடுகிறோம் என்று நம் திரியின் தரத்தை தாழ்த்த வேண்டாம் என்று மீண்டும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரியின் தன்மையைப் பொருத்தது. அதே போல் நாம் செய்து நம் திரியின் புனிதத்தைக் கெடுக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

மக்கள் திலகம் திரி நெறியாளர் சகோதரர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் இந்த பாகம் 18 திரியை துவக்கி வைத்திருக்கும் அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது ----

நமது மக்கள் திலகம் திரி அன்பர்களின் நோக்கம் புரட்சித்தலைவரின் புகழ் பரப்புவது மட்டுமே. வீண் சர்ச்சைகளையும், விவாதங்களையும் நாம் விரும்பாதவர்கள். பொன்மனச்செம்மலின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும், களங்கம் ஏற்படுத்தும் எந்த செய்திகளையும் அனுமதிக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அவ்வாறு, அவதூறு பதிவுகள் இடப்படும் போது, அதற்கு நெத்தியடி பதிலாக சில உணர்ச்சிகரமான, ஆக்ரோஷமான பதிவுகளை வருத்தத்தோடு மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடுகின்றது.

நமது திரி அன்பர்களுக்கு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் கிடையாது. நடிகர் திலக திரியின் சில அன்பர்கள், நம்மை சீண்டும்போது, அவர்களி ன் அபிமான நடிகர் பற்றிய பல எதிர்மறையான செய்திகள் பதிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. அதுவும் அப்போதுதான் நமது உணர்வுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கும் புரியும் என்பதற்காக நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் சிவாஜி கணேசன் அவர்களது படங்கள் பற்றி விமர்சிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுகிறது.

உண்மையிலேயே அவர்களுக்கு தங்கள் அபிமான நடிகர் மீது பற்றும் பாசமும் இருப்பின், அவர் (நடிகர் சிவாஜி கணேசன்) தனது இறுதி கால கட்டத்தில், மிகவும் போற்றிய தனது அருமை அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட மாட்டார்கள். நாமும்,நம் வழக்கமான பதிவுகளில் கவனம் செலுத்துவோம்.

Russellsui
17th December 2015, 01:52 PM
http://i65.tinypic.com/wqsqyw.jpg

சென்னையில் 10 நாளுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வசூல் என்றால், தமிழகம் மொத்தமும் 2 வாரத்தில் என்ன வசூல் என்பதற்கு அனுமானம் வேண்டாம். கணக்கு போட தெரிந்தால் போதும்.

நம்நாடு ஒரு வாரம் வசூல் பல லட்சம் வருகிறது. தமிழகத்தின் சில தியேட்டர்களில் மட்டுமே.

அப்புறம் நாங்கள் உலகம் சுற்றும் வாலிபன் பற்றி பேசுவோம். இதற்கு முடிவே இல்லை. சாதனைகளை அவர் அவர்கள் திரிகளில் பதிவிடலாம். யாரும் விவாதத்தை வளர்க்க வேண்டாம்.

siqutacelufuw
17th December 2015, 01:55 PM
மலரும் நினைவுகள் :


1987 ம் ஆண்டு, இதே போன்று வைகுண்ட ஏகாதசி அன்று, சென்னை சத்யம் திரையரங்கில், பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலின் "அரச கட்டளை " திரையிடப்பட்டு HOUSE FULL ஆனது.

http://i67.tinypic.com/eansd2.jpg

அதே நேரத்தில், சாந்தம் அரங்கில், மக்கள் திலகத்தின் மற்றோர் காவியம் "அன்பே வா " திரையீடப்பட்டு, அதுவும் HOUSE FULL ஆனது.

http://i66.tinypic.com/1zyge0z.jpg

Russellbpw
17th December 2015, 02:03 PM
சென்னையில் 10 நாளுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வசூல் என்றால், தமிழகம் மொத்தமும் 2 வாரத்தில் என்ன வசூல் என்பதற்கு அனுமானம் வேண்டாம். கணக்கு போட தெரிந்தால் போதும்.




சார்

ஒரே ஒரு கேள்வி - இதற்க்கு நான் பதில் எழுதவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா ?

Rks

Russellsui
17th December 2015, 02:08 PM
அப்புறம் நாங்கள் உலகம் சுற்றும் வாலிபன் பற்றி பேசுவோம். இதற்கு முடிவே இல்லை. சாதனைகளை அவர் அவர்கள் திரிகளில் பதிவிடலாம். யாரும் விவாதத்தை வளர்க்க வேண்டாம்.
[/COLOR][/SIZE]

இந்த வரியை பார்க்கவில்லையா?

Russellbpw
17th December 2015, 02:12 PM
dear suharaam sir,


the only reason why i did not respond to those statistics of prof. Sir is, that it would start fresh debate / arguments, which i mentioned already.

Even now, i would not have put up the above ads, but, am doing only to clear your mind and explain you that every veteran will have such details.

I too "மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி " keeping quiet and want to move to next level on our friendship / relationship rather than ponder over who was better etc., etc., which are increasing the blood pressure levels of all of us as we are very sensitive and true to our demi gods !

There is no answer to whether lord shiva is greater (or) lord vishnu is greater !
That question itself is wrong and should never arise is what my contention is !

Regards
rks

நீங்களும் இதை படிக்கவில்லையா ?

siqutacelufuw
17th December 2015, 02:14 PM
http://i67.tinypic.com/2qi7ius.jpg

Russellsui
17th December 2015, 02:24 PM
[அது சுகராம் நேற்று விவாதத்துக்கு போட்டது. குழிப்பிள்ளையை எடுத்து இப்போது எதற்கு எழவு கொண்டாட வேண்டும்?

நீங்கள் ஆயிரம்தான் உங்கள் நடிகரை தூக்கி வைத்து பேசினாலும் ஹிட்லர் உமாநாத் படம் திருச்சியில் ரிலீசே ஆகவில்லை. ஏன்? படத்தை வாங்க ஆளில்லை. அதுதான் உங்கள் மார்க்கெட். இதுபோல பல சொல்ல முடியும். மீண்டும் வம்பு விவாதம் வேண்டாம்.பொறுமைக்கு எல்லை உண்டு. வாயை கிளறாதீர்கள். நிறுத்திக் கொள்ளுங்கள்.

Russellbpw
17th December 2015, 02:51 PM
[
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் ஹிட்லர் உமாநாத் படம் திருச்சியில் ரிலீசே ஆகவில்லை. ஏன்? படத்தை வாங்க ஆளில்லை. அதுதான் உங்கள் மார்க்கெட். இதுபோல பல சொல்ல முடியும். மீண்டும் வம்பு விவாதம் வேண்டாம்.பொறுமைக்கு எல்லை உண்டு. வாயை கிளறாதீர்கள். நிறுத்திக் கொள்ளுங்கள்.

சார் ,

சுகாரம் அவர்கள் நேற்று போட்டார் ...நான் இன்றுதான் பார்த்தேன் ! சுகாரம் அவர்களுக்கு தான் நான் விளக்கவுரை அளிதேனே தவிர ...உங்களுக்கு நான் எதுவுமே பதிவு செய்யவில்லையே சார் !

நீங்கள் ஏன் என் மீது அனாவசியமாக கோபபடுகிறீர்கள் சார் ?

நான் என்ன தவறாக எழுதினேன் நீங்க இவ்வளவு வாருவதற்க்கு !

உங்களுடைய பதிலுக்கு என்னால் பதில் கொடுக்க உடனே முடியும்...ஆனால் விருப்பமில்லை !

எல்லோருடைய பொறுமைக்கும் எல்லை உண்டுதானே சார் !

ஆயிரம் விடுங்கள் சார் ...நான் ஒரு வாட்டி கூட ஹிட்லர் உமாநாத் திரைப்படம் பற்றி வாயே திறக்கவில்லையே ?

அப்படி இருக்க ஹிட்லர் உமாநாத் படம் பற்றி எதற்கு இப்போது நீங்களாக வலிய எழுதுகிறீர்கள் ?

ஹிட்லர் உமாநாத் திருச்சியில் ரிலீஸ் ஆனால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.. ஆகவில்லை என்றால் உங்களுக்கு ஒரு லாபமும் இல்லை !

நீங்கள் கூறுவது மிகவும் சரிதான் ...அவருக்கு மார்க்கெட் இல்லை தான் ! இப்போது திருப்தியா ?

தமிழகத்தில் 1982இல் மொத்தம் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் எண்ணிக்கை 130.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாததால் தான் அவர் 1982 ஆம் வருடம் வெறும் 13 படங்களில் மட்டுமே நடித்தார் !

அதாவது 10% (பத்து சதவிகிதம்) படங்கள் அவரை வைத்து தயாரித்து வெளியிடப்பட்டவை ! )

அடுத்த உங்கள் பதிவில் " அனைத்துமே தோல்வி படங்கள் ...வசூலே இல்லாமல் திரை அரங்குகளில் இருந்து பரிதாபமாக தூகபட்டது.." என்பது வேறு விதமாக எழுதுவீர்கள் என்பதும் எனக்கு தெரியும் ! விடுங்க..சார்..விடுங்க ..!

நடிகர் திலகம் அவர்களுடைய மார்கெட்...அதுபற்றி நான் எதற்கு 2015 இல் கவலை படவேண்டும் சார் ?

பாவம், நீங்கள் தான் சிவாஜி மார்க்கெட் பற்றி இன்னும் கவலை பட்டு கொண்டிருக்கிறீர்கள் !

தயவு செய்து ஒரு திறந்த மனதுடன் என்னை பாருங்கள் என்பதுவே எனது விண்ணப்பம் !

Rks

Russellsui
17th December 2015, 02:57 PM
http://i67.tinypic.com/15g6omu.jpg

siqutacelufuw
17th December 2015, 03:41 PM
http://i66.tinypic.com/nzh8iu.jpg

Russellbpw
17th December 2015, 03:45 PM
http://i66.tinypic.com/nzh8iu.jpg

Great Effort From the Compiler of this !

It actually says the time and effort the person has put for preparing this !

Nice one Selvakumar Sir !

RKS

ainefal
17th December 2015, 03:48 PM
மதுரை, மார்ச் 6 1977

கருணாநிதிக்கு சிவாஜி கணேசன் பதில்!

நான் பேசியதால்தான் உங்கள் வசனங்கள் புகழ் பெற்றன!!

தீ.மு.க தலைவருக்கு நடிகர் திலகம் பதில் அளித்துள்ளார்:

நான் பேசியதால்தான் உங்கள் வசனங்கள் புகழ் ஏற்பட்டுள்ளது. உங்களது அரசை அடித்து முச்சந்தியில் விசுவது போல் மக்கள் விசி விட்டார்கள், ஏன் என்ற கேட்க நாத்தில் இல்லை என்று நடிகர் திலகம் நெல்லையில் பேசினார்.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படி என்று தெரியும். நாங்கள் பார்த்து வந்தவர் தானே? கருணாநிதியின் அரசியல் பிரவேசம் எப்படி என்று எங்கள் இருவருக்கு நன்றாக தெரியும்.

கலையை தாயாக நினைபவர்கள் நங்கள். நாட்டைப் பாதுகாப்பதில் நாங்கள் இருவரும் போட்டி போடுகிறோம்.

The above text is edited. Why Nadigar Thilagam responded, because the then DMK Chief[?] made nasty press release [ which nobody will like (leave alone NT fans)].

I do not want to post what DMK said for which NT responded.


Thanks.

Russelldvt
17th December 2015, 07:17 PM
சார்

ஒரே ஒரு கேள்வி - இதற்க்கு நான் பதில் எழுதவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா ?

Rks


நம் திரியின் நெறியாளர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..இந்த ஆர்கேஎஸ் என்னும் நண்பர்..அவரது திரியில் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளாமல் நமக்கு தேவையில்லாமல் நம் திரியில் பதிவுகளை மேற்கொண்டு..நமது பதிவுகளுக்கு தடங்கள் ஏற்படுத்துகிறார்..நேற்று..என் நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களிடம் இந்த பாகத்தில் உங்களது பதிவு இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை செல்பேசி வழியாக வைத்தேன்..அவரும் நம் தலைவரை மதித்து பதிவை செய்துள்ளார்..அவருக்கு என் நன்றி..தேவையில்லாத பதிவுகளை நீக்குவது உங்கள் கடமை..தயவு செய்து மேற்கண்ட திரியின் ரசிகனை நமது பதிவுகளில் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது உங்கள் கடமை..இனிமேலும் இந்த நபரின் பதிவுகள் தொடர்ந்தால்..எங்களது எனது பதிவுகள் செய்ய முடியாது..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதற்கு வேறு ஊடகங்கள் எங்களுக்கு உண்டு..இது எங்களது கடைசி வேண்டுகோள்..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதுதான் எங்கள் கடமை..இந்த மாதிரி ? ஆளுக்கெல்லாம் பதில் சொல்லுவது எங்களது வேலை அல்ல..எங்களுக்கும் வேலை உள்ளது..அவருக்கு கிடையாது அவருக்கு இது பொழுது போக்கு என்று நினைக்கிறன்.. உங்களது பதிலை உடனே நாங்கள் எதிர்பார்க்கிறோம்..வாழ்க தலைவர் வளர்க அவரின் பக்தர்கள்..அன்புடன் முத்தையன்

http://i63.tinypic.com/zkfzt1.jpg

oygateedat
17th December 2015, 08:35 PM
நம் திரியின் நெறியாளர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..இந்த ஆர்கேஎஸ் என்னும் நண்பர்..அவரது திரியில் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளாமல் நமக்கு தேவையில்லாமல் நம் திரியில் பதிவுகளை மேற்கொண்டு..நமது பதிவுகளுக்கு தடங்கள் ஏற்படுத்துகிறார்..நேற்று..என் நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களிடம் இந்த பாகத்தில் உங்களது பதிவு இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை செல்பேசி வழியாக வைத்தேன்..அவரும் நம் தலைவரை மதித்து பதிவை செய்துள்ளார்..அவருக்கு என் நன்றி..தேவையில்லாத பதிவுகளை நீக்குவது உங்கள் கடமை..தயவு செய்து மேற்கண்ட திரியின் ரசிகனை நமது பதிவுகளில் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது உங்கள் கடமை..இனிமேலும் இந்த நபரின் பதிவுகள் தொடர்ந்தால்..எங்களது எனது பதிவுகள் செய்ய முடியாது..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதற்கு வேறு ஊடகங்கள் எங்களுக்கு உண்டு..இது எங்களது கடைசி வேண்டுகோள்..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதுதான் எங்கள் கடமை..இந்த மாதிரி ? ஆளுக்கெல்லாம் பதில் சொல்லுவது எங்களது வேலை அல்ல..எங்களுக்கும் வேலை உள்ளது..அவருக்கு கிடையாது அவருக்கு இது பொழுது போக்கு என்று நினைக்கிறன்.. உங்களது பதிலை உடனே நாங்கள் எதிர்பார்க்கிறோம்..வாழ்க தலைவர் வளர்க அவரின் பக்தர்கள்..அன்புடன் முத்தையன்

http://i63.tinypic.com/zkfzt1.jpg


திரு முத்தையன் அவர்களுக்கு,

தாங்கள் இரவு பகல் பாராது

தங்களின் உடல்நலத்தைக்கூட பொருட்படுத்தாது

தொடர்ந்து நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின்

படங்களைப்பதிவிட்டு - நமது பதிவாளர்கள் -

பார்வையாளர்கள்

அனைவரின்

அபரிமிதமான

அன்பைபெற்றவர்.

இந்த மையம் திரி பொதுவான திரி -

இதில் பதிவிடும் நண்பர்களை பதிவிடாதே என்று

யாரும் கூறமுடியாது. தவறாக பதிவிடாதீர்கள்

என்று வேண்டுமானால் கூறலாம். அதுவும் தவறான

செய்தியாக இருந்தால் மட்டும்.

ஆகவே நாம் நமது பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவோம்.


அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

ainefal
17th December 2015, 09:02 PM
1981

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1981_zpsuvszu9nh.jpg

ainefal
17th December 2015, 09:14 PM
1984 - really?

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1984_zpsn51zttaa.jpg

ainefal
17th December 2015, 09:24 PM
1984 - இப்படிபட்ட தேறுதல் பிரச்சாரம் உலகில் நடந்ததுண்டா?

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1984thalaivarmk_zpsc8sjo2kp.jpg

ainefal
17th December 2015, 09:45 PM
1969

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1969ik_zpsg5zh64te.jpg

ainefal
17th December 2015, 09:48 PM
1969

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1969ik1_zpsu293jycs.jpg

oygateedat
17th December 2015, 09:50 PM
http://s13.postimg.org/q1io9cjo7/gfff.jpg (http://postimage.org/)

ainefal
17th December 2015, 10:12 PM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/fb_img_1450362098258_zpsuxzex83t.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/fb_img_1450362098258_zpsuxzex83t.jpg.html)

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/FB_IMG_1450362098258_zpsf916lefx.jpg

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/SS_zpsdrrc4ohr.png



AGAIN?

இனிய நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு,

மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பும் ஒரு செய்து தனகளது பதிவில் உள்ளது. தயவு செய்து "அதையும்" மறைக்கவும் நண்பா.

நன்றி

ainefal
17th December 2015, 11:00 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2016CALENDAR_zpssuozclwx.jpg

ஒலிக்கிறது உரிமைக்குரல், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அறகட்டளை, மற்றும் அணைத்து புரட்சித்தலைவர் பக்தர்கள் பெருமையுடன் வழங்கம் 2016 ஆம் ஆண்டு பிரமாண்டமான காலண்டர். இது முற்றிலும் வியாபார நோக்கம் இல்லாமல் வழங்கபடுகிறது. இதன் விற்பனை மூலம் வரும் பணம் யாவும் புரட்சித்தலைவர் மணிமண்டபம், தியான மண்டபம், திரை/கல்யாண அரங்கு அமைப்பதற்கு பயன்படுத்த படும்.

முன்பதிவு செய்து பெற்றுகொள்ளவும். விலை ரூபாய் 50/= மட்டுமே. மொத்தமாக வாகும் நபர்களுக்கு இனமும் விலை குறைத்து கொடுக்கப்படும்.

இந்து வரை யாரும் இவளவு மலிவான விலையில் தரத்தில் உயர்ந்த [ 32 பக்கம் வண்ணம்] பாதுகாத்து வைக்கவேண்டிய பொக்கிஷத்தை வழங்கவில்லை]. தொடர்புக்கு : செல் 9840726378

Russelldvt
18th December 2015, 04:08 AM
http://i65.tinypic.com/dxfgqx.jpg

Russellbpw
18th December 2015, 08:06 AM
அனைவருக்கும் உகந்த , ஏற்ற பாடல்கள் எளிய நடையில் மக்கள் திலகம் அவர்கள் திரைப்படத்தில் இருக்கும்.

காரணம் மிகபெரிய தத்துவங்கள் வாழ்கையில் போற்றபடாததர்க்கு நடைமுறை படுத்தாததர்க்கு காரணம் அதன் நடை எளிய முறையில் அமையாததுதான்.

ஆகவே அதனை மக்களிடம் உரிய முறையில் கொண்டு போய் சேர்க்க எளிய நடை மிகவும் உதவியாய் இருக்கும்.

என்னதான் எளிய நடை இருந்தாலும் ..அதனை கூட ஒரு சாரர் தமது வாழ்கையில் நடை முறை படுத்துவது கிடையாது...

அதற்க்கு சாட்டை அடியை அமைந்த ஒரு பாடல், ஒளிவிளக்கு திரைப்படத்தில் இருந்து - தைரியமாக சொல் நீ மனிதன் தானா ?

https://www.youtube.com/watch?v=GscOC7aw97k

Russellisf
18th December 2015, 09:07 AM
super posting sir




1984 - இப்படிபட்ட தேறுதல் பிரச்சாரம் உலகில் நடந்ததுண்டா?

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1984thalaivarmk_zpsc8sjo2kp.jpg

Russellisf
18th December 2015, 09:09 AM
எதிரிகளை கூட தன் பக்கம் கவர்ந்த ஒரே தலைவர் இப்பேற்பட்ட தலைவரை இனி இந்த உலகம் எங்கே காண போகிறது


super posting sir

Russellisf
18th December 2015, 09:10 AM
சைலேஷ் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

Russellisf
18th December 2015, 09:11 AM
வள்ளலே நீ எங்கிருக்கிறாய் வா
மறுபடியும் பிறந்து
நலிந்து கொண்டிருக்கும் சினிமாவை
தூக்கி நிறுத்த வா உடனே
அண்ணா நீ என் தெய்வம் என்றாய்
ஆனால் தலைவா இன்றோ நீயே
தெய்வமாகிவிட்டாயே! இமயத்தின்
உச்சியிலே என்றாய்.உடனே சதிகாரர்கள்
துள்ளிவருகுது வேல் என்றனர்! இந்த போட்டியை
நாங்கள் மீண்டும் காண்போமா? பூக்களுக்கு
புன்னகையை கற்றுத்தந்த தலைவா! மீண்டும்
பிறந்து எங்கள் இதயத்தில் பால் வார்க்கவா!

courtesy net

Richardsof
18th December 2015, 09:13 AM
http://i65.tinypic.com/dxfgqx.jpg

makkal thilagam mgr with villans .super muthayan sir

Russellisf
18th December 2015, 09:14 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsz73xkd30.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsz73xkd30.jpg.html)

Richardsof
18th December 2015, 09:18 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் ஒருவர் கூட இதுவரை மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பற்றிய தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடாமல் இருப்பது வியப்பை தருகிறது.இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் நண்பர்கள் இனியாவது தங்களுடைய சிறப்பான மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பதிவுகளை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன் .

Russellisf
18th December 2015, 09:25 AM
EN ANNAN RELEASING AD BANGALORE
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsjwqqqbfs.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsjwqqqbfs.jpg.html)

siqutacelufuw
18th December 2015, 09:29 AM
http://i64.tinypic.com/2e3aikm.jpg

Russellisf
18th December 2015, 09:46 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsacnf15th.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsacnf15th.jpg.html)


COURTESY MAYILRAJ FB

ainefal
18th December 2015, 10:33 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் ஒருவர் கூட இதுவரை மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பற்றிய தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடாமல் இருப்பது வியப்பை தருகிறது.இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் நண்பர்கள் இனியாவது தங்களுடைய சிறப்பான மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பதிவுகளை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன் .

https://www.youtube.com/watch?v=UDV2ehBywmM

ainefal
18th December 2015, 12:06 PM
1967

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1967cnaaboutmgr_zpstemiinr7.jpg

ainefal
18th December 2015, 12:29 PM
1974

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1974fv_zpsqvoqronu.jpg

ainefal
18th December 2015, 01:15 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ukdecember2015_zpssyprylg5.jpg

ainefal
18th December 2015, 02:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/radhika_zpsds11ua2k.jpg

ainefal
18th December 2015, 02:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/RSMANOHAR_zpsn03bu0st.jpg

Russellbpw
18th December 2015, 02:36 PM
இனிய அண்ணன் திரு முதய்யன் அம்மு சார்,

தங்களுடைய புகைப்படங்கள் எல்லாம் கவிதை !

வார்த்தைகளும் அப்படி இருந்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும் !

தொடர்ந்து உங்கள் புகைப்பட கவிதைகளை தொகுத்து எங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்க வேண்டுகிறேன் !

நீங்கள் நினைத்தாலும் நினைக்கவில்லை என்றாலும் நான் உங்கள் புகைப்பட பதிவுகளின் ரசிகனே ....!

வளர்க உங்கள் நற்பணி !

இதற்க்கு மேல் நான் என்ன சொல்ல !

https://www.youtube.com/watch?v=-kmac4wfWCI

Richardsof
18th December 2015, 03:21 PM
18-12-1964 MAKKAL THILAGAM MGR IN ''THAYIN MADIYIL'' - RELEASED.
52ND ANNIVERSARY BEGINS TODAY.
http://i63.tinypic.com/351sd4i.jpg

Richardsof
18th December 2015, 03:24 PM
https://youtu.be/D-5-kLkHf9Q

Richardsof
18th December 2015, 03:30 PM
https://youtu.be/5BH_oVbUWpc

siqutacelufuw
18th December 2015, 03:38 PM
1984 - இப்படிபட்ட தேறுதல் பிரச்சாரம் உலகில் நடந்ததுண்டா?

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1984thalaivarmk_zpsc8sjo2kp.jpg

போட்டிக் கட்சி தலைவரை முன்னிலைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது உலகிலேயே இங்கு நடந்த அதிசயம். இதிலும் நம் புரட்சித்தலைவர் கின்னஸ் சாதனை படைத்து நம்மையெல்லாம் பெருமைப்பட வைத்து விட்டார்.

siqutacelufuw
18th December 2015, 03:42 PM
https://youtu.be/5BH_oVbUWpc

அருமையான பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காகவே, இத்திரைக்காவியத்தை பல முறை பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன். சுழன்று சுழன்று ஆடும் நம் மக்கள் திலகத்தின் அழகே தனி அழகு. காணக் கண்கள் கோடி வேண்டும்.

ainefal
18th December 2015, 08:15 PM
போட்டிக் கட்சி தலைவரை முன்னிலைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது உலகிலேயே இங்கு நடந்த அதிசயம். இதிலும் நம் புரட்சித்தலைவர் கின்னஸ் சாதனை படைத்து நம்மையெல்லாம் பெருமைப்பட வைத்து விட்டார்.


உண்மை பேராசிரியர் செல்வகுமார் சார். உலகமே ஒன்றாக ஒன்று கூடி நின்றாலும், புரட்சித்தலைவர் எவளவு வலுவானவர் [ மக்கள் செல்வாக்கும், மனிதாபிமானம் இப்படி அணைத்து துறைகளிலும்] என்பதை இது குறிக்கிறது [ எடையில் அல்ல].

ainefal
18th December 2015, 09:32 PM
This is not for Senthilvel Sir who deleted his post immediately [ Sivaji Fan, in fact I requested him to cover that particular section only] but this is for nameless....:

பாம்பின் கால் பருந்தும் அறியும்

fidowag
18th December 2015, 09:39 PM
அந்தி மழை -டிசம்பர் 2015
http://i66.tinypic.com/1znontg.jpg
ஜெயலலிதாவை அழைத்து ஒரு நாட்டிய நாடகம் நடத்த ஏற்பாடு செய்தது.

http://i67.tinypic.com/zodz5v.jpg

http://i64.tinypic.com/2qcpfvd.jpg

எம்.ஜி.ஆரிடம் இருந்துதான்

http://i64.tinypic.com/20ge2vl.jpg

fidowag
18th December 2015, 09:41 PM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -டிசம்பர் 2015
http://i65.tinypic.com/s13m0l.jpg
சமாக இருந்தன.

fidowag
18th December 2015, 09:44 PM
http://i64.tinypic.com/333jyfa.jpg
http://i63.tinypic.com/2e3py08.jpg
http://i64.tinypic.com/1530fuw.jpg

fidowag
18th December 2015, 09:46 PM
http://i65.tinypic.com/2hi5v1w.jpg
http://i68.tinypic.com/nwg3rm.jpg
http://i66.tinypic.com/10roh2s.jpg

fidowag
18th December 2015, 09:49 PM
மாலை முரசு -18/12/2015
http://i65.tinypic.com/p2g43.jpg

Russellwzf
18th December 2015, 10:41 PM
M.G.R. Words on Actor Kamal Haasan - Dinamalar Video Dated Dec 2015
https://www.youtube.com/watch?v=PtTvEJhiDEI

Russellwzf
18th December 2015, 10:45 PM
RARE MGR FAN AT MADURAI; DINAMALAR 23/11/15 DATED

https://www.youtube.com/watch?v=JXDdMJ94-HM

Hats off to you Madurai Tamil nesan sir !

fidowag
18th December 2015, 10:46 PM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " உதயமான தினம் :18/12/1964
51 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

பல இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.

1.தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

2.என்னைப் பார்த்து எதை பார்த்தாலும்

3. ராஜாத்தி காத்திருந்தா

4.பார்வையிலே பந்தல் கட்டி.

5.பெண்ணே ஒன்று சொல்லவா.

6. கள்ளிருக்கும் ரோஜா மலர்

இத்திரைப்படம் வெளியான 28 நாட்களில் , பிரம்மாண்ட வெற்றிப் படமான
"எங்க வீட்டு பிள்ளை " வெளியானதால் , எதிர்பார்த்த வெற்றி இந்த படத்திற்கு
முதல் வெளியீட்டில் கிடைக்கவில்லை. இருப்பினும் மறு வெளியீடுகளில்
நீண்ட இடைவெளிகளில் காண முடிகிறது.

http://i65.tinypic.com/54wu49.jpg

fidowag
18th December 2015, 10:47 PM
http://i64.tinypic.com/17es6u.jpg

fidowag
18th December 2015, 10:48 PM
http://i66.tinypic.com/ru72q9.jpg