PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

Russellisf
17th March 2016, 02:45 PM
☆☆☆உலகம் சுற்றும் வாலிபன்☆☆☆

1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ்.
நாடோடி மன்னன்,
உலகம் சுற்றும் வாலிபன்,
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார்.

எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம்.

தலைவரின் மாஸ்டர்பீஸ்.

அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி.

சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம்.

தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.

கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.

☆ இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.

☆ தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.

☆ மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.

☆ சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார்.

☆ இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.

☆ வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை.

சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க்.

'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட்.

'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும்.

'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல்.

'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு.

'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர்.

'பஞ்சாயீ' இனிமை.

'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம்.

'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.

* "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.

☆ நாகேஷின் காமெடி கொடிகட்டிப் பறக்கும்.

☆ தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.

☆ படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.

11-5-1973 இப்படம் திரையிடப்பட்டது. சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை.

9ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் "ஹவுஸ் புல்" ஆயின.

இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு" என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து "இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்" என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, "உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது.

182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது. சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 31 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100_வது நாளைக் கண்டன.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்"தான்.


courtesy karthic saravananan

Russellisf
17th March 2016, 02:47 PM
எம்ஜிஆர் 100 | 22 - மதியூகத்தின் மறுபெயர்!

M.g.r. படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் தன் மனதில் எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர் அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல; அவரது ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.

கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.

அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.

அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர். புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கும் முன்பே, ஆர்வ மிகுதியால் முதன் முத லாக மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தாமரைப் பூ உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். மேலும் சில இடங்களிலும் தாமரைப் பூ கொடி ஏற்றப்பட் டது. ஒரு சில இடங்களில் கொடிகளை மாற்றுக் கட்சியினர் கிழிப்பதாகவும் கொடிக்கம்பங்களை வெட்டுவதாகவும் செய்திகள் வெளியாயின.

பின்னர், அதிமுக கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தவுடன் இதுபற்றி அவரிடம் கேட்கப் பட்டது. ‘‘எங்கள் புதிய கட்சியின் கொடியை யாரும் இனிமேல் கிழிக்க மாட்டார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவர் அவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறியதற்கான காரணம் கட்சிக் கொடி அறிமுகமானபோதுதான் எல்லாருக்கும் தெரிந்தது. அதிமுக கொடியில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் யோசனைப்படி அந்தக் கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மீனவ நண்பன்’படத்தில்

‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’

பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்

‘தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’

என்ற வரிகள் இடம்பெறும்.

அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் தரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச் சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.

ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன் னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’

மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேல் சபை உறுப்பினராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார். பின்னர், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் ஆனார் அங்கமுத்து. அந்தப் பதவியில் அவரது பணிகளை பாராட்டி ஓராண்டே நிர்ணயிக்கப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை மூன்று ஆண்டுகளாக நீட்டித்தார் எம்.ஜி.ஆர்.

Russellisf
17th March 2016, 02:50 PM
எம்ஜிஆர் 100 | 23 - மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!

M.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.

‘புரட்சிப்பித்தன்’... இந்தப் பெயரைப் பார்த் ததுமே எம்.ஜி.ஆர். படத் தலைப்பு என்பது புரியும். இந்தப் படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ். திரவியமும் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணாவும் தயாரிப்பதாக இருந்து சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு கன்னடப் படத்தின் கதை. பாடல்களுடன் திரைக்கதை, வசனமும் வாலி எழுதுவதாக இருந்தது. 1975-ம் ஆண்டு ‘தீபாவளி வெளியீடு’ என்று பத்திரிகைகளில் விளம்பரமும் வந்தது. ஆனால், அரசியலில் எம்.ஜி.ஆர். ‘பிஸி’யாகி, தேர்தல் வந்து ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிட்டதால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த படத்தின் காட்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவையான சம்பவம்.

கதைப்படி எம்.ஜி.ஆர். ஒரு விஷயத்துக்காக வேண்டுமென்றே மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல நடிப்பார். ஒரு நாள் படப்பிடிப்புக்கு முன்ன தாக இயக்குநர் ராமண்ணாவின் ஆலோசனைப் படி, அன்று எடுக்க இருக்கும் காட்சி பற்றி ஒப்பனை அறையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று விளக்கினார் வாலி. அதைக் கேட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

அன்று எடுக்க வேண்டிய காட்சியின்படி கோயிலுக்கு காரில் வந்து இறங்கும் கதாநாயகி, சாமி கும்பிடுகிறார். அவர் கண்களை மூடி வணங்கும்போது, பின்னால் வரும் மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கும் எம்.ஜி.ஆர். நாயகியின் தலையில் சூடி இருக்கும் மல்லிகைப் பூவை பிய்த்து தின்ன வேண்டும். அதன்படியே, எம்.ஜி.ஆர். மல்லிகைப் பூவை பிய்த்து தின்றார். எல்லோருக்கும் திருப்தி; காட்சி ஓ.கே.

ஆனால், வாலி மட்டும் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் நின்றார். எல்லோரையும் நோட்டமிட்ட எம்.ஜி.ஆர். அதை கவனித்து விட்டார். ‘‘என்ன ஆண்டவனே... காட்சி உங்களுக்கு திருப்தி இல்லையா?’’ என்று வாலியிடம் கேட்டார்.

‘‘ஆமாண்ணே, நாயகியின் தலையில் உள்ள பூவை நீங்க இன்னும் நிறைய பிச்சு எடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு உள்ள வேகத்தோடு தின்னுருக்கணும்’’ என்ற வாலியின் பதிலால் கோபமடைந்தார் எம்.ஜி.ஆர்.

‘‘அது எனக்கும் தெரியும். ஆனா எப்படிய்யா வேகமா திங்கிறது? மல்லிகைப் பூவை கடிச்சுப் பாரும். எட்டிக் காயா கசக்கும்’’ என்று வாலியைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு ஒப்பனை அறைக்கு விறுவிறுவென எம்.ஜி.ஆர்.சென்று விட்டார்.

படப்பிடிப்பு குழுவினர் வாலியை விரோதியைப் போல பார்த்தனர். எம்.ஜி.ஆரை சமாதானம் செய்வதற்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு வாலியே சென்றார். வழக்கமாக ஒப்பனை அறை யின் முன் நிற்கும் எம்.ஜி.ஆரின் காரைக் காணோம். ‘ஒருவேளை வீட்டுக்கே எம்.ஜி.ஆர். புறப்பட்டு போய்விட்டாரோ?’ என்று குழம்பியபடி நின்ற வாலி யின் சிந்தனையைக் கலைத்தது எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் குரல்.

‘‘என்னண்ணே, இங்கேயே நிக்கிறீங்க. சின்னவர் (எம்.ஜி.ஆர்.) உள்ளேதான் இருக் காரு... வாங்க’’ என்று வாலியின் வயிற்றில் பால் வார்த்தார் பீதாம்பரம்.

உள்ளே சென்ற வாலி, எம்.ஜி.ஆரைப் பார்த்து பவ்யமாக, ‘‘அண்ணே, என்னை மன்னிக்கணும். மனதில் பட்டதைச் சொன்னேன். நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது’’ என்றார். எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடி,

‘நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு’

என்ற திருக்குறளை சொல்லி, ‘‘நீங்கதான் உண்மையான நண்பர். உங்களை எதுக்கு மன் னிக்கணும்? அதே காட்சியை மறுபடி எடுக்கலாம். ராமண்ணாகிட்ட சொல்லுங்க’’ என்றார்.

இங்கே ஒரு விஷயம். நியாயமான கருத்தை சுட்டிக் காட்டி குறை சொன்ன வாலியை, உண்மையான நண்பர் என்று பாராட்டியதோடு, ஒருவரோடு நட்புகொள்வது சிரித்து மகிழ மட்டுமல்ல; தவறை இடித்துரைத்து திருத்துவதற்கும் என்று பொருள்படுகிற அதிகம் புழக்கத்தில் இல்லாத பொருத்தமான குறளையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.

மறுபடி அதே காட்சியை எடுக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சிறிய மாற்றம். வாலி கூறியபடி பூவை நிறைய பிய்த்து வேகமாக தின்ன வசதியாக நாயகி தலையில் இருக்க வேண்டிய மல்லிகைப் பூ, ரோஜாப் பூவாக மாறியது; அதுவும் எம்.ஜி.ஆர். செலவிலேயே. வாலி பார்த்தபோது, எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு முன் வழக்கமாக நின்றிருக்கும் கார் திடீரென காணாமல் போனதன் ரகசியமும் சிறிது நேரத்தில் தெரிய வந்தது. அந்தக் காரில்தான் ஒரு கூடை ரோஜாப்பூ வந்தது.

வாலியின் கருத்துக்கும் மதிப்பளித்து அதே நேரம் காட்சி சிறப்பாக வர, சாதுர்யமாக மல்லிகைப் பூவை ரோஜாப் பூவாக மாற்றி விட்டார் எம்.ஜி.ஆர்.

மீண்டும் அந்தக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கும் முன், ‘‘அண்ணே நீங்க ரோஜாப் பூவை தின்னா எப்படி இருக்கும் தெரியுமா?’’ எம்.ஜி.ஆரை பார்த்து கேட்டார் வாலி.

‘இதென்ன மறுபடியும்?’ என்று புரியாமல் எல்லோரும் பதைபதைப்புடன் பார்க்க, வாலி சொன்னார்...

‘‘ரோஜாப் பூவே ரோஜாப் பூவை திங்கிற மாதிரி இருக்கும்’’

எம்.ஜி.ஆரின் முகம் ரோஜாவாய் மலர்ந்தது.

‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘தம்பி, நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..’ என்ற பிரபலமான பாடல் இடம்பெறும். பாடலுக்கு முன் இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு புத்தகத்தை பார்த்தபடி ‘பாட்டை எழுதியவர் வாலி’ என்று எம்.ஜி.ஆர். சொல்வார். இது வாலியின் திறமைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த அங்கீகாரம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வாலியை இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியில் நியமித்தார். அதற்கு முன் கவுரவப் பதவியாக இருந்த அதன் பதவிக் காலத்தை மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்து ஊதியமாக மாதம் ரூ.3,000 வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.


courtesy sailesh sir

oygateedat
17th March 2016, 08:38 PM
http://s24.postimg.org/3pgxdruj5/FB_20160314_20_36_06_Saved_Picture.jpg (http://postimg.org/image/3pgxdruj5/)

oygateedat
17th March 2016, 08:40 PM
http://s27.postimg.org/a2fx3sadv/FB_20160316_20_38_39_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
17th March 2016, 09:00 PM
http://s9.postimg.org/dsl0vbdz3/FB_20160317_20_53_44_Saved_Picture.jpg (http://postimage.org/)

fidowag
17th March 2016, 11:01 PM
மாலை மலர் -16/03/2016
http://i64.tinypic.com/2ppejrp.jpg

fidowag
17th March 2016, 11:04 PM
மாலை மலர் -17/03/2016
http://i65.tinypic.com/21bm1xz.jpg

fidowag
17th March 2016, 11:06 PM
கல்கி வார இதழ் -20/03/2016
http://i65.tinypic.com/f54rqq.jpg

fidowag
17th March 2016, 11:08 PM
விழா அழைப்பிதழின் உறையின் தோற்றம்
http://i67.tinypic.com/1zc0hgl.jpg

fidowag
17th March 2016, 11:10 PM
விழா அழைப்பிதழின் தோற்றம்
http://i67.tinypic.com/2eojr55.jpg

fidowag
17th March 2016, 11:12 PM
நுழைவு சீட்டின் தோற்றம்
http://i68.tinypic.com/2dc7rpw.jpg

fidowag
17th March 2016, 11:24 PM
சினிகூத்து -24/03/2016
http://i65.tinypic.com/346t43m.jpg
http://i63.tinypic.com/2lkwwlt.jpg
http://i65.tinypic.com/2cf3v9u.jpg

fidowag
17th March 2016, 11:25 PM
http://i65.tinypic.com/oaw49d.jpg

oygateedat
18th March 2016, 04:40 AM
http://s24.postimg.org/8e4rverol/FB_20160318_04_36_34_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.S.Vijayan - facebook

Richardsof
18th March 2016, 05:47 AM
1969ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ{ம்,இயக்குனர் கே.சங்கரும் அசாத்தியமான காரியத்தை தங்களுக்கு கிடைத்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டு அப்படியொரு பிரம்மாண்டமான அடிமைப்பெண் படத்தை தமிழில் எடுத்தது வியப்புக்குரிய விஷயம்.
இதற்கு முன் ராஜா வேடம் ஏற்று எம்ஜிஆர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால்- இதில் தான் முதன் முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பார். கட்டுமஸ்தான அவரது புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் அப்பட்டமாக தெரியும். அதன் வழியாக ஐம்பத்திரண்டு வயதிலும், தன் உடல் வலு குன்றவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
அடிமைப்பெண்ணில் அதிக டுவிஸ்டுகளும் கமர்ஷியல் அம்சங்களும் கொண்டது. ஜெயப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக படமாக்கி இருப்பார்கள். பாலைவன ஒட்டக சண்டையும், க்ளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்ஜிஆர் நேருக்கு நேர் மோதும் காட்சியும் மெய்சலிர்க்க வைக்கும்.
எம்ஜிஆர் சிங்கத்துடன் போடும் சண்டை மிகவும்பிரசித்தம். சிங்கத்துடன் சண்டை போடும் காட்சிக்காக, எம்ஜிஆர் நிறைய சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கசில் இருந்து நன்றாக வளர்ந்த, ராஜா என்ற ஆண் சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன் சத்யா ஸ்டூயோவில் தனி இடத்தில் வைத்து பிரத்யேக பயிற்சியாளர் வைத்து, ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்தார்.
அடிமைப்பெண் படத்தில் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்ற பாடலை ஜெயலலிதா பாடினார். ஆனால் டி.எம்.சௌந்தரராஜனையும் இதே பாடலை பாட வைத்து முதலில் ரிக்கார்டிங் செய்து விட்டனர்.கதைப்படி எம்ஜிஆர் பேச முடியாத சூழ்நிலை என்பதால் இந்தப் பாட்டிற்கு வாயசைத்து நடித்தால் சரி வராது அதனால் ஜெயலலிதாவை பாட வைத்து பாட்டை பதிவு செய்து விடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். எனவே முதன் முதலாக ஜெயலலிதாவை பாட வைத்தவர் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். டி.எம்.எஸ் அவர்களுக்கு இன்னொரு அம்மா பாட்டைக் கொடுத் தார்கள் அது தான் தாய் இல்லாமல் நானில்லை என்ற கம்பீரமான பாட்டாக எம்ஜிஆருக்கு அமைந்த பாடல்.
இப்படி பார்த்துப் பார்த்துப் செதுக்கப்பட்ட படம்-
இவை அனைத்தையும் விட-நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும் எம்ஜிஆரும் கடைசியாக நடித்த படம்.
இயக்குநர் கே.சங்கர்-எம்ஜிஆர்-கே.வி.மகாதேவன் ஆகியோர் கைகோர்த்த முதல் படம் -போன்ற சிறப்புகளும் இப்படத்துக்கு உண்டு.
இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு மாஸ் ஹீரோ. தன் 52வது வயதில் பதினாறடி தாவி உச்சத்துக்கு சென்றிருந்தும்- சிறுக சிறுக தன்னை செதுக்கியடி எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு ரசிகர்களை மட்டுமே நம்பி ஒரு ஹீரோ நகர்ந்தார் என்பது புரியும். எம்ஜிஆர் என்றால் சும்மாயில்லை.
courtesy - net

Richardsof
18th March 2016, 05:52 AM
வலிமை போகாத எம்.*ஜி.ஆர்.

இன்றும் எம்*ஜிஆர் நடித்தப் படங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்கு உ**ரிமையாளர்களைப் பொறுத்தவரை அவரது படங்கள் அட்சய பாத்திரங்கள். எத்தனைமுறைப் போட்டாலும் வசூலுக்கு குறைவிருக்காது.

எம்*ஜிஆ**ரின் மூன்றாவது தலைமுறை விஜய். அவருக்கும் பீல்டில் நிலைத்து நிற்க எம்*ஜிஆர் தேவைப்படுகிறார். எம்*ஜிஆர் படப் பெயர், எம்*ஜிஆர் நடித்த காட்சிகள், வசனங்கள்...

courtesy -cine world

Richardsof
18th March 2016, 06:02 AM
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.

“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார்

courtesy - vallamai

Richardsof
18th March 2016, 06:06 AM
எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் ஜெய்.

" ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..

நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா

தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.

ஒரு தவறும் புரியாமல்

பதவி விட்டு சென்றாய் - பொருந்தாத

பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.

சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே

வாரி வாரி தந்தவனும் நீயே.

சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - நீ

சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.

மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா - அதற்கு

நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா "

- தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ' பணக்காரப் பெண்' என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு 'அரசியல் பிராண்டு' பெற்றிருந்தது இப்பாடல்.

-------------------------------------

Richardsof
18th March 2016, 06:10 AM
https://youtu.be/FI0lhVIMCEs

Richardsof
18th March 2016, 06:32 AM
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.

முத்துகுமார் - vathiyar

Richardsof
18th March 2016, 11:04 AM
18.3..2016

the hindu -tamil

எம்ஜிஆர் 100 | 24 - மென்மையான உள்ளம் கொண்டவர்!


M.G.R தன்னால் ஒரு மனிதர் கூட வருத்தப்படக் கூடாது என்ற மென்மையான உள்ளம் கொண்டவர். தவிர்க்க இயலாத நிலையில், தன் நடவடிக்கையால் யாராவது பாதிக்கப்பட்டாலோ, மனம் புண்பட்டாலோ, உடனே அதற்கு பரிகாரம் தேடிய பிறகே அமைதி அடைவார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ம.பொ.சி. தொடர்பான சம்பவம் அதில் ஒன்று.

‘மந்திரி குமாரி, ‘மலைக்கள்ளன்', ‘குலேபகா வலி', ‘மதுரை வீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று 1956-ம் ஆண்டிலேயே எம்.ஜி.ஆர். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி ம.பொ.சி.யின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, ம.பொ.சி.யின் தமிழறிவை பாராட்டி, ‘‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’’ என்று கூறவும்... கூட்டம் ஆர்ப்பரித்தது.

1986-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மேல்சபை இருந்து வந்தது. சட்டசபைத் தேர்தலில் தோற்றவர் களை கொல்லைப்புற வழியாக பதவிக்குக் கொண்டு வரவே மேல்சபை பயன்படுகிறது என்று பொதுவாக ஒரு விமர்சனம் இருந்தது. இந்நிலையில், 1986-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மேல்சபை கலைக் கப்பட்டது. அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் வருத்தங்களும் நிலவின.

1984-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் மேல்சபை உறுப்பினராக இருந் தார். அரசியல் காரணங்களுக்காக சபை கலைக்கப் பட்டதாகவும் பேச்சு உண்டு. ஆனால், அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு என்பதால் மேல்சபை கலைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசுக்கு வீண் செலவு என்று கூறி ஆந்திராவிலும் மேல்சபை கலைக்கப்பட்டது. அங்கே அப்போது எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தமிழகத்தில் அதுதொடர்பான வாக் கெடுப்பில் நடுநிலை வகித்தது.

காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், ‘‘மேல்சபை கலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் காங்கிரஸ் நடுநிலை வகித்தது’’ என்றார். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதாக காங்கிரஸை திமுக குற்றம் சாட்டியது.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை யும் விமர்சித்தார்.

எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது. வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.

ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.

அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பிய பின் ஒருநாள், கோட் டையில் இருந்து வீட்டுக்கு காரில் புறப் பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர் பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப் பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.

ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்துகொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும். அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதி களும் உங்களுக்கு தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறை தலைவராக நியமித்திருக் கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.

சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’




மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட் டது. வடக்கு எல்லை போராட்டம் நடத்தி திருத் தணியை தமிழகத்துக்கு மீட்டார் ம.பொ.சி.

பின்னாளில் அவர் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செலவுகளையும் செய்து குணப்படுத்தி கடும் வயிற்று வலியில் இருந்து ம.பொ.சி-யை மீட்டார் எம்.ஜி.ஆர்.

Richardsof
18th March 2016, 11:42 AM
https://youtu.be/eiuJGyVStrg

Richardsof
18th March 2016, 01:05 PM
RARE STILLS.
http://i66.tinypic.com/14dle0h.jpg

Richardsof
18th March 2016, 01:06 PM
http://i68.tinypic.com/11j507l.jpg

Richardsof
18th March 2016, 02:59 PM
மொரீஷியஸ் தீவின் அழைப்பு

பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அவர் மொரீஷியஸ் தீவு நாட்டுக்குச் செல்வதென்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்.

மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.
அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு

ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அடை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடித்த்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.

புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச்மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!

குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித் தலைவர் கலந்துகொண்டார்.

மறுநாள் அந்த நாட்டின் ஒரே துறைமுக நகரான ‘போர்ட்லூயி’க்குச் சென்ற புரட்சித் தலைவர். அங்கு கரும்பாலைகளில் பணியாற்றும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார். தமிழ் நாட்டின் தானைத் தலைவரைத் தமிழர்கள் பேரார்வத்தோடு வரவேற்று உபசரித்தனர்.
மக்களின் மனங்கவர்ந்தவர்!

புரட்சித் தலைவர், அவர்களுடைய தொழில் நிலவரம், குடும்ப நிலவரம், வாழ்க்கை முதலியவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அதனால், இவருக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு! என்று மொரீஷியஸ் தமிழர்கள் மனம் நெகிழ்ந்தார்கள்.

ஒரே ஒரு நகரசபை, ஒரே ஒரு துறைமுகம். ஒரே ஒரு விவசாயக் கல்லூரி, ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 2 ஏரிகள், 3 வங்கிகள், 8 நாளேடுகள், 56 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம், தெற்கு வடக்காக சுமார் 60 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக சுமார் 40 கிலோ மீட்டர் எனப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்ட அந்தச் சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புரட்சித் தலைவருக்கு அதிக நாள்கள் ஆகவில்லை.

கடல் நடுவே பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்று அமைந்திருந்த அந்த அழகிய தீவையும், அந்தத் தீவு மக்கள் தம்மீது காட்டிய அன்பையும் புரட்சித் தலைவரால் மறக்கவே முடியவில்லை.

மொரீஷியஸ் தீவின் பாரம்பரிய மொழியின் பெயர் ‘கிரியோல்’ என்பதாகும். அந்த மொழியில் பாடப்பட்ட ஒரு நாட்டுப் பாடல் புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்டின் அழகையும், அதன் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அனைபையும் விளக்கும் அந்தப் பாடல் வருமாறு;

”லில மொரிரீஸ் மோ ஜொலி பெய்
மோ பா பு ட்ரூவே என் பிளி ஜொலி
சி ஜாமே மோ கித் துவம்மூவாலே
ப ஜோதி ப தாமே முவா ரெட் வனே”

இதன் பொருள்; ”மொரிஷியஸ் மிக அழகான தீவு; இதைவிட அழகான தீவை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தீவை விட்டு நான் ஒருபோதும் அகல மாட்டேன். அப்படியே அகன்றாலும், அகிலம் முழுவதும் சென்றாலும் என்றேனும் ஒருநாள் மீண்டும் இங்கேயேதான் திரும்பி வருவேன்!”

oygateedat
18th March 2016, 08:41 PM
http://s30.postimg.org/b9krfbnj5/FB_20160318_20_40_20_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

fidowag
18th March 2016, 10:14 PM
இன்று (18/03/2016) இரவு 11 மணிக்கு சன் டிவியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.நடித்த
"மகாதேவி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2rhuvt1.jpg

fidowag
18th March 2016, 10:36 PM
http://i68.tinypic.com/169oug4.jpg
http://i63.tinypic.com/2urq8fd.jpg
http://i65.tinypic.com/r22tyu.jpg
http://i68.tinypic.com/2rcba6w.jpg

fidowag
18th March 2016, 10:39 PM
http://i67.tinypic.com/2urrx9x.jpg
http://i64.tinypic.com/2wp3xc4.jpg
http://i68.tinypic.com/15q993k.jpg
http://i65.tinypic.com/16rtsg.jpg
http://i63.tinypic.com/2cyijoz.jpg

oygateedat
18th March 2016, 11:03 PM
http://s14.postimg.org/b3km83s1t/actor.jpg (http://postimage.org/)

fidowag
18th March 2016, 11:20 PM
தமிழ் இந்து -18/03/2016
http://i67.tinypic.com/fu816p.jpg
http://i64.tinypic.com/2jd1fyw.jpg
http://i64.tinypic.com/23kq0yv.jpg
http://i66.tinypic.com/wkiyxf.jpg

fidowag
18th March 2016, 11:23 PM
http://i65.tinypic.com/xdbjg8.jpg
http://i66.tinypic.com/15znjic.jpg
http://i66.tinypic.com/2yxlro2.jpg
http://i67.tinypic.com/2pzmkja.jpg

fidowag
18th March 2016, 11:35 PM
http://s14.postimg.org/b3km83s1t/actor.jpg (http://postimage.org/)





விரைவில் டிஜிடல் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் உன்னத மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பான "உலகம்
சுற்றும் வாலிபன் " திரைப்படத்தில் மிக சிறப்பாக , புத்த துறவியாக நடித்து
புகழ் பெற்ற நடிகர் கெம்பையா அவர்கள் , இந்த தருணத்தில் மறைந்தது கோடிக்கணக்கான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு
மிகவும் வேதனை தரக்கூடிய செய்தி.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் எம்.ஜி.ஆர். அருள்
புரியட்டும்.


இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக எனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .


ஆர். லோகநாதன்.

Russellwzf
19th March 2016, 04:43 AM
https://www.youtube.com/watch?v=eT9SfdY8dXo

Russellwzf
19th March 2016, 04:44 AM
https://www.youtube.com/watch?v=noK_T_WiMKY

Richardsof
19th March 2016, 08:40 AM
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் புத்த பிட்சுவாக நடித்த திரு கெம்பையா அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

Richardsof
19th March 2016, 11:01 AM
எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!


M.G.R எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.
http://i64.tinypic.com/2rcbww9.jpg
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.


கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அத னால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

Russelldvt
19th March 2016, 12:30 PM
அன்னாரின் ஆன்மா சாந்தியடைக..

http://i63.tinypic.com/fbxrpu.jpg

Russelldvt
19th March 2016, 12:32 PM
http://i68.tinypic.com/6qwqhy.jpg

Russelldvt
19th March 2016, 12:33 PM
http://i66.tinypic.com/2mfc6is.jpg

Russelldvt
19th March 2016, 12:34 PM
http://i66.tinypic.com/10h80ec.jpg

Russelldvt
19th March 2016, 12:35 PM
http://i66.tinypic.com/fvjyi1.jpg

Russelldvt
19th March 2016, 12:37 PM
http://i65.tinypic.com/fbglkl.jpg

oygateedat
19th March 2016, 08:38 PM
http://s16.postimg.org/5zug8pss5/ssd.jpg (http://postimage.org/)

oygateedat
19th March 2016, 09:14 PM
http://s11.postimg.org/iao3rgqer/999900_999172753453226_1406426094813631730_n.jpg (http://postimage.org/)
Courtesy : Ithayakkani S.Vijayan - facebook

fidowag
19th March 2016, 09:43 PM
http://i66.tinypic.com/6z80mf.jpg

fidowag
19th March 2016, 09:51 PM
மாலை மலர் -19/03/2016
http://i67.tinypic.com/2iig80i.jpg

fidowag
19th March 2016, 09:54 PM
தின மலர் -19/03/2016
http://i63.tinypic.com/33mn760.jpg

fidowag
19th March 2016, 09:57 PM
தினத்தந்தி -19/03/2016
http://i66.tinypic.com/2mg5yly.jpg
http://i64.tinypic.com/i4ld6w.jpg
http://i64.tinypic.com/29zodvl.jpg
http://i63.tinypic.com/2rn92tg.jpg

fidowag
19th March 2016, 10:18 PM
http://i67.tinypic.com/qoa9vq.jpg
http://i68.tinypic.com/22l1et.jpg
http://i67.tinypic.com/32zqkw6.jpg
http://i66.tinypic.com/33c9jwm.jpg

fidowag
19th March 2016, 10:21 PM
http://i65.tinypic.com/28lv391.jpg
http://i64.tinypic.com/1236pop.jpg
http://i68.tinypic.com/2hzpn2d.jpg
http://i65.tinypic.com/30lmq91.jpg

Richardsof
20th March 2016, 06:41 AM
20.3.1977

டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் திலகத்தின் 19 வெற்றி வேட்பாளர்கள்

மக்கள் திலகம் எம்ஜிஆர் துவக்கிய அதிமுகவின் ஹாட்ரிக் தேர்தல் வெற்றி

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டு தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடு படுத்தி கொண்டு .புரட்சித்தலைவரின் வெற்றிக்கு உழைத்த இனிமையான நாட்கள் மறக்க முடியாதது .

1.1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் - மாபெரும் வெற்றி

2.1974 புதுவை நாடாளுமன்ற இடைதேர்தல் - மாபெரும் வெற்றி

3.1977 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தமிழகம் புதுவை உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட்டு தமிழகத்தில் `18 பாராளுமன்ற தொகுதிகளையும் , புதுவை தொகுதியையும் கைப்பற்றி அமோக வெற்றி கண்ட தினம் இன்று .

1977 பாராளுமன்ற தேர்தலில் புரட்சித்தலைவரின் வேட்பாளர்களின் சாதனை துளிகள் .

திண்டுக்கல் மற்றும் புதுவை தொகுதிகளில் இரண்டாவது முறையாக மாயத் தேவரும், பாலா பழனூரும் அமோக வெற்றி பெற்றனர் .

புதுக்கோட்டை - சிவகங்கை - பெரிய குளம் 3 தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி .

நெல்லை - ராமநாதபுரம் -பெரம்பலூர்- திண்டுக்கல் - பொள்ளாச்சி- சிதம்பரம் - கிருஷ்ணகிரி - திருச்செங்கோடு -8 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் மேல் வித்தியாசத்தில் வெற்றி .

சேலம் - தஞ்சை -வந்த வாசி - திருப்பத்தூர் 4 தொகுதிகளில் 50,000 -95,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .

நீலகிரி - செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் - புதுவை 4 தொகுதிகளில் 20,000- 45000 வித்தியாசத்தில் வெற்றி .

வட சென்னை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது .

Richardsof
20th March 2016, 06:47 AM
இனிய நண்பர் திருசத்யா அவர்களுக்கு இனியநல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா
முன்னிட்டு தங்களின் தொடர் பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

Richardsof
20th March 2016, 07:09 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் மிகவும் சிறப்பாக புது வேகத்துடன் நமது திரியின் இனிய நண்பர்கள் பலரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சிறப்புகளையும் , கருத்துகளையும் பதிவிட்டு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன் .
https://youtu.be/6zjtgbZxiS0

Richardsof
20th March 2016, 07:24 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜஸ்டின் மோதும் அருமையான சண்டைக்காட்சியில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , மின்னல் வேக வாள் வீச்சும் கண்ணுக்கு விருந்து .

https://youtu.be/v-N6yQ9HTEc

siqutacelufuw
20th March 2016, 08:48 AM
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா இன்று நடைபெறவிருப்பதையொட்டி, ,சென்னை மாநகரில் ,வாரந்தோறும் வெளியாகும் MYLAPORE TALK மற்றும் PERAMBUR TALK முதலான பத்திரிகைகளில் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில்,, கொடுக்கப்பட்ட விளம்பரம்.

http://i63.tinypic.com/29xxfyr.jpg

siqutacelufuw
20th March 2016, 09:06 AM
தின இதழ் நாளிதழில், மக்கள் திலகம் திரியின் நெறியாளர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் நடத்திய கூட்டத்தில் திரைப்பட நடிகர் திரு. ராஜீவ் அவர்கள் உரையை பிரசுரித்துள்ள செய்தி :

http://i63.tinypic.com/2q8x0sw.jpg http://i63.tinypic.com/2e3psmc.jpg

Richardsof
20th March 2016, 12:56 PM
தேர்தல் வரலாற்றில் மக்கள் திலகமும் அவருடைய ரசிகர்களின் பங்களிப்பும் .
1957 மற்றும் 1962
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் இலக்கு - மக்கள் திலகம் எம்ஜிஆர் அடையாளம் காட்டிய திமுகவின் வேட்பாளருக்கு வெற்றி கனி பறிக்க அயராது உழைத்தார்கள் .
1967
மக்கள் திலகம் பரங்கிமலையில் போட்டியிட்ட போது மாநிலத்தில் உள்ள எல்லா எம்ஜிஆர் மன்றங்களும் அவருக்காகவும் , திமுக கட்சிக்காகவும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்பாக உழைத்து வெற்றிகளை குவித்தார்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டிலே அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார் .

1971
திரை உலகின் புகழின் உச்சியில் இருந்த மக்கள் திலகம் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார் . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக தேர்தல் பணி புரிந்து மீண்டும் மக்கள் திலகத்தை வெற்றி வீராராக தேர்ந்தெடுத்தார்கள் .

1977
https://youtu.be/qsVKb_kw7Ag
முகவை மாவட்டம் - அருப்புக்கோட்டையில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் அயராத உழைப்பின் சிகரமாக சென்னை கோட்டைக்கு தமிழக முதல்வராக அனுப்பிய பெருமை இந்த தொகுதிக்கு சேரும் .

1980

மதுரை நகரம் என்றென்றும் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் கோட்டை என்பதை அவருடைய ரசிகர்கள் மூலம் மதுரை மேற்கு தொகுதியில் அவரை வெற்றி பெற செய்து இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக அமர செய்தார்கள் . இந்த பெருமையை பெற்றவர்கள் மதுரை மண்ணின் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களும் மக்களும் என்பது பெருமை .

1984
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் . அவருடைய வெற்றிக்கு உழைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள்
பெருமைக்குரியவர்கள் என்பது சரித்திர வரலாறு .

தொடரும்... மதுரை கிழக்கு - மருங்காபுரி - 1989

Richardsof
20th March 2016, 01:16 PM
ஒயிட் & ஒயிட் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அழகோ அழகு . பாடல் ஆரம்ப காட்சி முதல் இறுதி வரை அலட்டி கொள்ளாமல், சேஷ்டைகள் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக சிரித்த முகத்துடன் பாடும் அழகு நெஞ்சை விட்டு அகலாது .

https://youtu.be/S2RLsp1D58Q

Richardsof
20th March 2016, 08:58 PM
1988ல் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஜா அணி - ஜெ அணி 1989 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது . தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுகவின் வெற்றி சின்னம் - இரட்டை இலை மீண்டும் ஜெயலலிதா தலைமையில் கிடைத்தது . இந்திய அரசியல் வரலாற்றில் உடைந்த ஒரு கட்சிக்கு மீண்டும் கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
நிறுவிய அதிமுக இயக்கம் என்பது சாதனை .

அதிமுகவின் கதை முடிந்துவிட்டது என்று எள்ளி நகையாடிவர்கள் துவண்டு போகும் விதத்தில் மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைதேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்கள் .
மறைந்து 27 ஆண்டுகள் மேல் ஆனாலும் புரட்சித்தலைவரின் புகழ் - சக்தி - செல்வாக்குமக்கள் மன்றத்தில் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு 2014 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 37/39 வெற்றி ஓர் சாட்சி .

orodizli
20th March 2016, 10:25 PM
So many best wishes to Any Time Emperor MakkalThilagam MGR., Centenery Functions hits a great success...

idahihal
20th March 2016, 10:42 PM
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். இதற்கான ஏற்பாடுகளைச் செய்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் , நன்றிகள். காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக என்னால் இந்த சிறப்பு மிகுந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை

idahihal
20th March 2016, 10:47 PM
மக்கள் திலகத்தின் மேடைப் பேச்சு அடங்கிய மிக மிக அபூர்வமான வீடியோவைப் பதிவிட்ட அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றிகள். தமிழ் இந்து நாளிதழில் மக்கள் திலகத்தின் மாண்பை அருமையாகப் பதிவிட்டு வரும் நண்பர் ஸ்ரீதர்சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகள். கடந்த வியாழன் அன்று பொதிகை தொலைக்காட்சியில் என்.எஸ்.கே அவர்கள் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் மக்கள் திலகம் அவர்கள் கலைவாணருடனும் அவர்களுடைய வாரிசுகளுடனும் கொண்டிருந்த நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள் திரு.கோலப்பன் அவர்களது துணைவியார். அதன் வீடியோ பதிவு கிடைத்தால் நமது திரியில் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.

Richardsof
21st March 2016, 09:05 AM
ஞாபக மேகங்கள் …….

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.



நன்றி - கவிஞர் வைரமுத்து


என்ன ஒரு தீர்க்கதரிசனமான ஆய்வு வரிகள் .ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதுவதை விட நூறு வரி கவிதைகளே மக்கள் திலகத்தின் பெருமைகளை பறை சாற்றும் .

Richardsof
21st March 2016, 11:47 AM
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..

வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடல்களின்மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.
courtesy - net

oygateedat
21st March 2016, 08:23 PM
தமிழ் சினிமாவின் முதல் pro (படம் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்) பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று சென்னையில் காலமானார். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.

fidowag
21st March 2016, 10:31 PM
தின செய்தி =20/03/2016
http://i64.tinypic.com/1zofh4k.jpg

fidowag
21st March 2016, 10:33 PM
மாலை சுடர் -20/03/2016
http://i63.tinypic.com/25fmxhi.jpg

fidowag
21st March 2016, 10:34 PM
தின செய்தி -21/03/2016
http://i65.tinypic.com/2mnm5n4.jpg

fidowag
21st March 2016, 10:35 PM
மாலை மலர் -21/03/2016
http://i67.tinypic.com/30bpm5j.jpg

fidowag
21st March 2016, 10:38 PM
தினமணி கதிர் -20/03/2016
http://i66.tinypic.com/2464dbk.jpg

fidowag
21st March 2016, 10:38 PM
http://i67.tinypic.com/2nrhapi.jpg

fidowag
21st March 2016, 10:39 PM
http://i65.tinypic.com/20rk50h.jpg

fidowag
21st March 2016, 10:40 PM
http://i65.tinypic.com/4glk6.jpg

fidowag
21st March 2016, 11:20 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு அன்று (20/03/2016) காலை 10 முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது , சென்னை காமராஜர் அரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு , நமது
நண்பர்களின் பார்வைக்கு.
http://i63.tinypic.com/osfol4.jpg

fidowag
21st March 2016, 11:21 PM
http://i66.tinypic.com/2h71awz.jpg

fidowag
21st March 2016, 11:23 PM
http://i66.tinypic.com/2i7u1rk.jpg

fidowag
21st March 2016, 11:25 PM
http://i66.tinypic.com/2ahz02b.jpg

fidowag
21st March 2016, 11:26 PM
http://i65.tinypic.com/2hfnsiq.jpg

fidowag
21st March 2016, 11:27 PM
http://i66.tinypic.com/35miez6.jpg

fidowag
21st March 2016, 11:29 PM
http://i64.tinypic.com/15danm8.jpg

fidowag
21st March 2016, 11:30 PM
http://i65.tinypic.com/5bdvmd.jpg

fidowag
21st March 2016, 11:31 PM
http://i64.tinypic.com/rwqxco.jpg

fidowag
21st March 2016, 11:32 PM
http://i66.tinypic.com/ulkdx.jpg

fidowag
21st March 2016, 11:34 PM
http://i65.tinypic.com/2r5fa85.jpg

fidowag
21st March 2016, 11:35 PM
http://i65.tinypic.com/kbypuh.jpg

fidowag
21st March 2016, 11:36 PM
http://i68.tinypic.com/2ntfiaq.jpg

fidowag
21st March 2016, 11:37 PM
http://i67.tinypic.com/ehynip.jpg

fidowag
21st March 2016, 11:39 PM
http://i64.tinypic.com/25hk03q.jpg

fidowag
21st March 2016, 11:40 PM
http://i63.tinypic.com/4j57p0.jpg

Richardsof
22nd March 2016, 08:27 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''திருடாதே '' இன்று 55 ஆண்டுகள் நிறைவு தினம் .

23.3.1961 அன்று வெளிவந்து திரை உலகில் சமூக புரட்சியினை உண்டாக்கிய மாபெரும் வெற்றி காவியம் . சென்னை பிளாசா - பாரத் - மகாலட்சுமி அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி காவியம் .

Richardsof
22nd March 2016, 08:35 AM
http://i63.tinypic.com/2crpshv.jpg

Richardsof
22nd March 2016, 08:42 AM
இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
பாடல் மேலும் வளர்கிறது :
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்
courtesy- c.s.kumar

Richardsof
22nd March 2016, 08:44 AM
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..

ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது.

திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது.

பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..

அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே.
இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..

இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..



இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார்

..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார்.

சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.


மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..

Richardsof
22nd March 2016, 08:50 AM
திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது.

தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 27 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
courtesy - thiru chandran - france- dinamalar comments portion

Richardsof
22nd March 2016, 08:53 AM
இன்று 22.3.2016 மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நெறியாளரும் , இனிய நண்பருமான திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் இனிய பிறந்த நாள் . அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .

fidowag
22nd March 2016, 11:13 AM
இன்றைய தமிழ் ஹிந்து நாழிதளில் வெளியான செய்தி
http://i66.tinypic.com/vebqm0.jpg
http://i68.tinypic.com/2zjc8iq.jpg
http://i65.tinypic.com/160vvkm.jpg
http://i68.tinypic.com/2yuel9h.jpg
http://i63.tinypic.com/2zsupn7.jpg

fidowag
22nd March 2016, 11:16 AM
http://i64.tinypic.com/fmun41.jpg
http://i67.tinypic.com/259hpnb.jpg
http://i65.tinypic.com/307uwy9.jpg
http://i67.tinypic.com/5eicjs.jpg

Richardsof
22nd March 2016, 12:22 PM
தேர்தல் திருவிழா -1

1977

மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் சந்தித்த முதல் சட்டமன்ற பொது தேர்தல் .
நான்கு முனைப் போட்டியில் புரட்சித்தலைவர் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் .மக்கள் திலகத்தின் செல்வாக்கு மாநிலம் முழுவதும் இருந்தது .குறிப்பாக சென்னை நகரம் மற்றும் கன்யாகுமரி மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு பெரும்பான்மை பலத்தில் இருந்தது .

Richardsof
22nd March 2016, 12:30 PM
1977- சட்ட சபை தேர்தல் .

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் இருந்த 22 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 16 தொகுதிகளை வென்றது .

1.பெரியகுளம் .
2.தேனி .
3.போடிநாயக்கனூர் .
4.கம்பம் .
5,ஆண்டிப்பட்டி .
6.சேடப்பட்டி
7.திருமங்கலம்.
8.நிலக்கோட்டை
9.சோழவந்தான்
10.திருப்பரங்குன்றம்.
11.மதுரை மேற்கு
12.மதுரை மத்தி .
13.சமயநல்லூர்
14.மேலூர் .
15, ஆத்தூர்
16.வேடசந்தூர்

தொடரும் ...

Stynagt
22nd March 2016, 01:15 PM
Happy birthday to Thirupur S. Ravichandran

siqutacelufuw
22nd March 2016, 02:07 PM
http://i67.tinypic.com/20958gg.jpg

இன்று பிறந்த நாள் காணும் எனதருமை சகோதரர் மற்றும் திரியின் நெறியாளர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களை, நான் வணங்கும் குல தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் நல்லாசியுடன், எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

Richardsof
22nd March 2016, 03:12 PM
தேர்தல் திருவிழா -3

1977- சட்ட சபை தேர்தல் .

கோவை - நீலகிரி மாவட்டம்
http://i67.tinypic.com/14wt2r9.png
கோவை - நீலகிரி மாவட்டத்தில் இருந்த28 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 21 தொகுதிகளை வென்றது .
http://i64.tinypic.com/2lnwggp.jpg
1. மேட்டுப்பாளையம்
2. தொண்டாமுத்தூர்
3. கோவை மேற்கு .
4. கிணத்து கடவு .
5.பொள்ளாச்சி .
6. வால்பாறை
7.உடுமலை
8. தாராபுரம்
9. பொங்கலூர்
10.பல்லடம் .
11.திருப்பூர்
12.காங்கேயம்
13.மொடக்குறிச்சி
14.பெருந்துறை
15.ஈரோடு
16.பவானி
17.அந்தியூர்
18.கோபிசெட்டிபாளையம்
19.பவானிசாகர்
20.சத்தியமங்கலம்
21 ஊட்டி

Richardsof
22nd March 2016, 03:28 PM
தேர்தல் திருவிழா -4

1977- சட்ட சபை தேர்தல் .

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் 17 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 11 தொகுதிகளை வென்றது
http://i65.tinypic.com/2ujtggi.png
1. கரூர்
2. தொட்டியம்
3. முசிறி
4.லால்குடி
5. பெரம்பலூர்
6. வரகூர்
7. ஆண்டிமடம்
8. ஜெயம்கொண்டம்
9. ஸ்ரீரங்கம்
10. திருச்சி -1
11. திருச்சி -2

fidowag
22nd March 2016, 09:08 PM
http://i66.tinypic.com/2zgx65y.jpg
http://i67.tinypic.com/2w54kfd.jpg
http://i65.tinypic.com/20tgp49.jpg
http://i63.tinypic.com/9uszdf.jpg

fidowag
22nd March 2016, 09:15 PM
http://i68.tinypic.com/2n8n6sj.jpg



இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நண்பர் திரு.எஸ். ரவிச்சந்திரன்
அவர்கள் இன்று போல் என்றும் , எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு
வாழ்க!


ஆர்.லோகநாதன்.

fidowag
22nd March 2016, 09:19 PM
http://i63.tinypic.com/16jk5jp.jpg
http://i65.tinypic.com/w99ypu.jpg
http://i66.tinypic.com/2lbe2op.jpg
http://i67.tinypic.com/m9pxeg.jpg
http://i65.tinypic.com/2zi3crk.jpg

fidowag
22nd March 2016, 09:21 PM
http://i64.tinypic.com/iqx178.jpg
http://i66.tinypic.com/j6ls9d.jpg
http://i66.tinypic.com/2zhjj9l.jpg

fidowag
22nd March 2016, 09:25 PM
துக்ளக் வார இதழ் -30/03/2016
http://i64.tinypic.com/2zhf59s.jpg
http://i64.tinypic.com/260a51y.jpg
http://i66.tinypic.com/23m21y9.jpg
http://i63.tinypic.com/23ih62w.jpg

fidowag
22nd March 2016, 09:27 PM
மாலைசுடர் -22/03/2016
http://i68.tinypic.com/2ev9bhg.jpg

oygateedat
22nd March 2016, 09:47 PM
நமது திரியிலும் அலைபேசியிலும் இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தெரிவித்த அனைத்து
நல் உள்ளங்களுக்கும்
எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

Russellwzf
22nd March 2016, 10:07 PM
http://i63.tinypic.com/2vc72i1.jpg

fidowag
22nd March 2016, 10:19 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா புகைப்படங்கள் ...தொடர்ச்சி..........
http://i64.tinypic.com/2rm1oqt.jpg

fidowag
22nd March 2016, 10:20 PM
http://i68.tinypic.com/v8eqzt.jpg

fidowag
22nd March 2016, 10:21 PM
http://i63.tinypic.com/9r7wx2.jpg

fidowag
22nd March 2016, 10:26 PM
http://i63.tinypic.com/j9alqv.jpg

fidowag
22nd March 2016, 10:27 PM
http://i66.tinypic.com/2s0cthf.jpg

fidowag
22nd March 2016, 10:28 PM
http://i65.tinypic.com/15e77cw.jpg

fidowag
22nd March 2016, 10:29 PM
http://i68.tinypic.com/3304llx.jpg

fidowag
22nd March 2016, 10:30 PM
http://i67.tinypic.com/6gdfmp.jpg

fidowag
22nd March 2016, 10:32 PM
http://i65.tinypic.com/14ux8ya.jpg

fidowag
22nd March 2016, 10:51 PM
http://i67.tinypic.com/2ilmy43.jpg

fidowag
22nd March 2016, 10:58 PM
http://i65.tinypic.com/dmwgub.jpg

fidowag
22nd March 2016, 11:01 PM
http://i67.tinypic.com/349fjit.jpg

fidowag
22nd March 2016, 11:04 PM
http://i68.tinypic.com/10gy0aw.jpg

fidowag
22nd March 2016, 11:05 PM
http://i64.tinypic.com/2crahcz.jpg

fidowag
22nd March 2016, 11:08 PM
http://i65.tinypic.com/2qc17gj.jpg

fidowag
22nd March 2016, 11:10 PM
http://i67.tinypic.com/rtkc2w.jpg

fidowag
22nd March 2016, 11:11 PM
http://i66.tinypic.com/b4xb93.jpg

fidowag
22nd March 2016, 11:13 PM
http://i68.tinypic.com/25992sw.jpg

fidowag
22nd March 2016, 11:17 PM
http://i67.tinypic.com/11kwqvl.jpg

Russelldvt
23rd March 2016, 02:55 AM
http://i66.tinypic.com/2cr35dz.jpg

Russelldvt
23rd March 2016, 02:56 AM
http://i66.tinypic.com/2wdalix.jpg

Russelldvt
23rd March 2016, 02:57 AM
http://i65.tinypic.com/2woloc2.jpg

Russelldvt
23rd March 2016, 02:58 AM
http://i63.tinypic.com/11r66no.jpg

Russelldvt
23rd March 2016, 02:59 AM
http://i63.tinypic.com/10cjh1s.jpg

Russelldvt
23rd March 2016, 03:00 AM
http://i68.tinypic.com/rwl1r6.jpg

Russelldvt
23rd March 2016, 03:01 AM
http://i65.tinypic.com/kbujdh.jpg

Russelldvt
23rd March 2016, 03:02 AM
http://i63.tinypic.com/2hp1v5u.jpg

Russelldvt
23rd March 2016, 03:03 AM
http://i67.tinypic.com/205tnvb.jpg

Russelldvt
23rd March 2016, 03:04 AM
http://i68.tinypic.com/2dryqdv.jpg

Russelldvt
23rd March 2016, 03:05 AM
http://i64.tinypic.com/2aiewas.jpg

Russelldvt
23rd March 2016, 03:06 AM
http://i63.tinypic.com/bgdbao.jpg

Russelldvt
23rd March 2016, 03:07 AM
http://i67.tinypic.com/x38ua1.jpg

Russelldvt
23rd March 2016, 03:08 AM
http://i65.tinypic.com/oggcd2.jpg

Russelldvt
23rd March 2016, 03:09 AM
http://i67.tinypic.com/2gy2ede.jpg

Russelldvt
23rd March 2016, 03:10 AM
http://i68.tinypic.com/2h4bbia.jpg

Russelldvt
23rd March 2016, 03:11 AM
http://i64.tinypic.com/j5cv43.jpg

Russelldvt
23rd March 2016, 03:12 AM
http://i64.tinypic.com/e85u82.jpg

Russelldvt
23rd March 2016, 03:13 AM
http://i65.tinypic.com/2wg87f9.jpg

Russelldvt
23rd March 2016, 03:14 AM
http://i67.tinypic.com/35hjwo8.jpg

Russelldvt
23rd March 2016, 03:15 AM
http://i64.tinypic.com/2sba2q1.jpg

Russelldvt
23rd March 2016, 03:16 AM
http://i63.tinypic.com/290r8lx.jpg

Russelldvt
23rd March 2016, 03:17 AM
http://i66.tinypic.com/33a3rsm.jpg

Russelldvt
23rd March 2016, 03:18 AM
http://i64.tinypic.com/2qm0x7q.jpg

Russelldvt
23rd March 2016, 03:19 AM
http://i64.tinypic.com/sza7x4.jpg

Russelldvt
23rd March 2016, 03:20 AM
http://i65.tinypic.com/2guf7eu.jpg

Russelldvt
23rd March 2016, 03:21 AM
http://i68.tinypic.com/106ip13.jpg

Russelldvt
23rd March 2016, 03:22 AM
http://i64.tinypic.com/e0ltva.jpg

Russelldvt
23rd March 2016, 03:25 AM
http://i64.tinypic.com/dxbo04.jpg

Russelldvt
23rd March 2016, 03:26 AM
http://i67.tinypic.com/f56fdk.jpg

Russelldvt
23rd March 2016, 03:27 AM
http://i67.tinypic.com/2yuwzva.jpg

Russelldvt
23rd March 2016, 03:29 AM
http://i68.tinypic.com/5uqg8.jpg

Russelldvt
23rd March 2016, 03:30 AM
http://i64.tinypic.com/ok7thg.jpg

Russelldvt
23rd March 2016, 03:31 AM
http://i68.tinypic.com/24vsexi.jpg

Russelldvt
23rd March 2016, 03:32 AM
http://i67.tinypic.com/10pdrti.jpg

Russelldvt
23rd March 2016, 03:33 AM
http://i64.tinypic.com/2zs9so2.jpg

Russelldvt
23rd March 2016, 03:34 AM
http://i68.tinypic.com/8xrf3b.jpg

Russelldvt
23rd March 2016, 03:35 AM
http://i63.tinypic.com/34rzmmt.jpg

Russelldvt
23rd March 2016, 03:36 AM
http://i67.tinypic.com/2qty8m0.jpg

Russelldvt
23rd March 2016, 03:37 AM
http://i65.tinypic.com/10ydn38.jpg

Russelldvt
23rd March 2016, 03:39 AM
http://i68.tinypic.com/e0hjjn.jpg

Russelldvt
23rd March 2016, 03:40 AM
http://i68.tinypic.com/300a5c0.jpg

Russelldvt
23rd March 2016, 03:57 AM
http://i63.tinypic.com/28ugz6a.jpg

Russelldvt
23rd March 2016, 03:59 AM
http://i66.tinypic.com/ixqhq1.jpg

Russelldvt
23rd March 2016, 04:01 AM
http://i67.tinypic.com/jjsrgz.jpg

Russelldvt
23rd March 2016, 04:05 AM
http://i65.tinypic.com/30j35p0.jpg

Richardsof
23rd March 2016, 06:22 AM
மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் நிழற் படங்கள் - மிகவும் அருமை .நன்றி திரு முத்தையன் சார் .
சென்னையில் நடைப்பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் - நூற்றாண்டு தொடக்க விழா - செய்திகள் , விளம்பர பதாகைகள் நிழற்படங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிட்ட மக்கள் திலகத்தின் தகவல்கள் பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
23rd March 2016, 06:26 AM
http://i65.tinypic.com/2hfnsiq.jpg


superb.
Thanks selvakumar sir

Richardsof
23rd March 2016, 06:51 AM
MAKKAL THILAGAM MGR'S ACTING PERFORMANCE.
https://youtu.be/A8FkufnxH6Q?list=PLKo5eKhFRZDbAcwYqoeh6RJ3ma0G74Ju j

oygateedat
23rd March 2016, 07:12 AM
http://i67.tinypic.com/2qty8m0.jpg

Arumai Muthaiyan sir

fidowag
23rd March 2016, 08:52 AM
http://i68.tinypic.com/2dujnuo.jpg
http://i66.tinypic.com/1zwtg3.jpg
http://i68.tinypic.com/30rpmko.jpg

http://i68.tinypic.com/309rfnq.jpg
http://i67.tinypic.com/335eiag.jpg
http://i66.tinypic.com/29q09w6.jpg

fidowag
23rd March 2016, 09:01 AM
தின செய்தி -23/03/2016
http://i67.tinypic.com/sgk6z6.jpg
http://i65.tinypic.com/3004ln8.jpg

Russellvpd
23rd March 2016, 04:06 PM
http://i63.tinypic.com/16jk5jp.jpg
http://i65.tinypic.com/w99ypu.jpg
http://i66.tinypic.com/2lbe2op.jpg
http://i67.tinypic.com/m9pxeg.jpg
http://i65.tinypic.com/2zi3crk.jpg

இந்தாளுதான் சமீபத்துல கூண்டுக்கிளியில் இன்னொரு நடிகரை கதாநாயகன் என்று சொல்லி ஒரு பத்திரிக்கையிள் எழுதினான். இப்போது அந்தப் படத்தில் நாயகனாவும் வில்லானாகவும் அந்த நடிகர் நடித்தததாக இந்தப் பத்திரகையில் சொல்றான். திருப்பியும் அடுத்த பக்கமே கதாநாயகன் என்கிறான். அப்படி என்றால் படத்தில் புரட்சித் தலைவர் என்ன வேசத்தில்தான் நடிச்சார்? கணவர் தங்கராஜ் வேசத்தில் நடிச்சாராம்.
டைட்டிலில் ஒரு சேர பெயர் காட்டினார்களாம். சதாரண நடிகர் என்றால் ஏன் அதிலும் முதலில் புரட்சித் தலைவர் பேர் போட்டார்கள்? மந்திரி குமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என்தங்கை படங்கள் வெற்றியால் அப்போதே புரட்சித் தலைவர் சூப்பர் ஸ்டார். அவர் கதாநாயகன் என்ற உண்மையை ஒப்புக்க கோன தயாளனுக்கு மனமில்லை.
நாம் படத்தின் தோல்வியால் வருந்தி நின்ற புரச்சி தலைவருக்கு ராமண்ணா வாய்ப்பு கொடுத்தாராம். மக்கள் திலகத்துக்கு கையில் படங்கள் இல்லையம்.கூண்டுக்கிளிக்கு முதல் மாதாம் மலைக்கள்ளன் படம் வந்து சூப்பராக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பே ஜெனோவா வெற்றிப்படம்.
கோன தயாளன் என்பவன் தயங்காமல் பொய் சொல்கிறான். போறாமய் புடிச்ச பசங்க

புரட்சித் தலைவர் பட பட்டியல்


http://i63.tinypic.com/dlnlu9.jpg

Russellvpd
23rd March 2016, 04:23 PM
http://i64.tinypic.com/32zhmbk.jpg

Russellvpd
23rd March 2016, 04:32 PM
1971ம் வருஷம் பேசும்படம் கேள்வி பதில்

இன்று தென்னகத்தின் வசூல் சக்ரவர்த்தி யார்?

எம்.ஜி.ஆர்.

http://i68.tinypic.com/b47137.jpg

Russellisf
23rd March 2016, 04:40 PM
அறிந்தேன்
ஆசர்யம இல்லை

ஒரு சமயம் பேரறிஞர் அண்ணா வெளியூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பகல் வேளை நல்ல வெயில் வழியில் ஒரு மூதாட்டி இளநீர் விற்றுக் கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தச் சொன்னார் அண்ணா டிரைவரிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்து இரண்டு இளநீரை வாங்கி வரச்சொன்னார். டிரைவரும் பாட்டியிடம் இரண்டு இளநீரைக் கேட்டு ஐம்பது ரூபாயை நீட்ட சில்லரை இல்லை என்றார் பாட்டி. உடனே டிரைவர் அண்ணாவிடம் சில்லரை இல்லையாம் என்ற விபரத்தை சொல்ல மீதி தொகையை பாட்டியையே வைத்துக்கொள்ளுமாறு சொல்லச் சொன்னார் அண்ணா. டிரைவரும் பாட்டியிடம் சொல்ல உடனே அந்த பாட்டி காரில் அமர்ந்திருப்பது யார் எம்.ஜி.ஆரா என கேட்டாராம். அந்த அளவிற்க்கு எம்.ஜி.ஆர். என்றாலே வள்ளல் என்பது மக்கள் மனங்களில் ஊன்றிப்போனது.


courtesy net

Russellisf
23rd March 2016, 04:44 PM
தலைவா எத்தனை பேர்கள் உங்களை எதிர்த்து நின்று மண்ணை கவ்வினார்கள் இந்த ஸ்டைல் இப்பொழுது நடக்கும் தேர்தலுக்கும் பொருந்தும்

கலை உலகிலும் அரசியலிலும் எங்கள் தெய்வத்தை வென்றவர்கள் நேற்று இன்று ஏன் நாளையும் இல்லை




http://i67.tinypic.com/35hjwo8.jpg

Russellisf
23rd March 2016, 04:48 PM
சும்மா நச்சுன்னு இருக்கு உங்கள் பதில் இந்த யுகேஷ் பாபு அக்பர் பாய்க்கு சலாம் வைக்கு ரான்



இந்தாளுதான் சமீபத்துல கூண்டுக்கிளியில் இன்னொரு நடிகரை கதாநாயகன் என்று சொல்லி ஒரு பத்திரிக்கையிள் எழுதினான். இப்போது அந்தப் படத்தில் நாயகனாவும் வில்லானாகவும் அந்த நடிகர் நடித்தததாக இந்தப் பத்திரகையில் சொல்றான். திருப்பியும் அடுத்த பக்கமே கதாநாயகன் என்கிறான். அப்படி என்றால் படத்தில் புரட்சித் தலைவர் என்ன வேசத்தில்தான் நடிச்சார்? கணவர் தங்கராஜ் வேசத்தில் நடிச்சாராம்.
டைட்டிலில் ஒரு சேர பெயர் காட்டினார்களாம். சதாரண நடிகர் என்றால் ஏன் அதிலும் முதலில் புரட்சித் தலைவர் பேர் போட்டார்கள்? மந்திரி குமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என்தங்கை படங்கள் வெற்றியால் அப்போதே புரட்சித் தலைவர் சூப்பர் ஸ்டார். அவர் கதாநாயகன் என்ற உண்மையை ஒப்புக்க கோன தயாளனுக்கு மனமில்லை.
நாம் படத்தின் தோல்வியால் வருந்தி நின்ற புரச்சி தலைவருக்கு ராமண்ணா வாய்ப்பு கொடுத்தாராம். மக்கள் திலகத்துக்கு கையில் படங்கள் இல்லையம்.கூண்டுக்கிளிக்கு முதல் மாதாம் மலைக்கள்ளன் படம் வந்து சூப்பராக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பே ஜெனோவா வெற்றிப்படம்.
கோன தயாளன் என்பவன் தயங்காமல் பொய் சொல்கிறான். போறாமய் புடிச்ச பசங்க

புரட்சித் தலைவர் பட பட்டியல்


http://i63.tinypic.com/dlnlu9.jpg

Russellisf
23rd March 2016, 04:52 PM
இந்த உலகிலேயே ரசிகர் கூட்டத்தால் முதல் முதலாக தன்னுடைய அபிமான தலைவரின் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்து அதிலும் நாம் தான் முதல் இடத்தை தக்க வைத்துகொண்டோம் . விழா எடுத்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு கோடி நன்றி




மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஞாயிறு அன்று (20/03/2016) காலை 10 முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது , சென்னை காமராஜர் அரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு , நமது
நண்பர்களின் பார்வைக்கு.
http://i63.tinypic.com/osfol4.jpg

Russellisf
23rd March 2016, 04:54 PM
மன்னாதி மன்னன் திரையில் மட்டும் அல்ல அரசியலிலும்





1977- சட்ட சபை தேர்தல் .

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் இருந்த 22 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 16 தொகுதிகளை வென்றது .

1.பெரியகுளம் .
2.தேனி .
3.போடிநாயக்கனூர் .
4.கம்பம் .
5,ஆண்டிப்பட்டி .
6.சேடப்பட்டி
7.திருமங்கலம்.
8.நிலக்கோட்டை
9.சோழவந்தான்
10.திருப்பரங்குன்றம்.
11.மதுரை மேற்கு
12.மதுரை மத்தி .
13.சமயநல்லூர்
14.மேலூர் .
15, ஆத்தூர்
16.வேடசந்தூர்

தொடரும் ...

Russellisf
23rd March 2016, 04:54 PM
happy birthday tirupur ravichandran sir

Russellvpd
23rd March 2016, 04:56 PM
http://i68.tinypic.com/e0hjjn.jpg

இத்தன வருசம் ஆகியும் தனியா நிக்க தயிரியம் இல்லாம இன்னொரு ஆளை எதிர்பாத்து பழம் நழுவி பாலில் விழும் என்று சொன்னவங்க வாயில் பந்து விழுந்துவிட்டது. நம் தெய்வம் தொடங்கிய கட்சியை எதிர்க்கும் முக்கிய கட்சி தோற்பது உறுதி. அதற்கு முக்கியமான இன்னொம் ஒரு காரணமும் உள்ளது. .................

நம் தலைவனுக்கு வெற்றி நிச்சயம்.

புரட்சித் தலைவர் வாழ்க

Russellisf
23rd March 2016, 04:56 PM
தலைவரே யோசிக்காதிங்க எத்தனை கூட்டணி வந்தாலும் உங்கள் இரட்டை இலை தான் என்றும் வெற்றி பெறும் .





http://i66.tinypic.com/33a3rsm.jpg

Russellisf
23rd March 2016, 05:00 PM
திரையில் மட்டும் சக்ரவர்த்தி அல்ல நிஜத்திலும் தமிழகத்தை ஆண்ட உண்மையான நிருத்திய சக்ரவர்த்தி



தேர்தல் திருவிழா -3

1977- சட்ட சபை தேர்தல் .

கோவை - நீலகிரி மாவட்டம்
http://i67.tinypic.com/14wt2r9.png
கோவை - நீலகிரி மாவட்டத்தில் இருந்த28 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 21 தொகுதிகளை வென்றது .
http://i64.tinypic.com/2lnwggp.jpg
1. மேட்டுப்பாளையம்
2. தொண்டாமுத்தூர்
3. கோவை மேற்கு .
4. கிணத்து கடவு .
5.பொள்ளாச்சி .
6. வால்பாறை
7.உடுமலை
8. தாராபுரம்
9. பொங்கலூர்
10.பல்லடம் .
11.திருப்பூர்
12.காங்கேயம்
13.மொடக்குறிச்சி
14.பெருந்துறை
15.ஈரோடு
16.பவானி
17.அந்தியூர்
18.கோபிசெட்டிபாளையம்
19.பவானிசாகர்
20.சத்தியமங்கலம்
21 ஊட்டி

Russellvpd
23rd March 2016, 05:02 PM
happy birthday tirupur ravichandran sir

வாழ்துக்கள்.

Russellisf
23rd March 2016, 05:03 PM
திமுகவை விரட்டியடித்த எங்கள் ராமாபுரம் ராமச்சந்திரனின் அரசியல் வெற்றிகளை பட்டியலிட்ட வினோத் அவர்களுக்கு நன்றி





தேர்தல் திருவிழா -4

1977- சட்ட சபை தேர்தல் .

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் 17 சட்ட சபை தொகுதிகளில் அதிமுக மட்டும் 11 தொகுதிகளை வென்றது
http://i65.tinypic.com/2ujtggi.png
1. கரூர்
2. தொட்டியம்
3. முசிறி
4.லால்குடி
5. பெரம்பலூர்
6. வரகூர்
7. ஆண்டிமடம்
8. ஜெயம்கொண்டம்
9. ஸ்ரீரங்கம்
10. திருச்சி -1
11. திருச்சி -2

Russellisf
23rd March 2016, 05:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsiuofqc1k.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsiuofqc1k.jpg.html)

Russellvpd
23rd March 2016, 05:22 PM
சும்மா நச்சுன்னு இருக்கு உங்கள் பதில் இந்த யுகேஷ் பாபு அக்பர் பாய்க்கு சலாம் வைக்கு ரான்

அலைக்கும் சலாம். நன்றி.

Russellisf
23rd March 2016, 05:24 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsecofryud.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsecofryud.jpg.html)

Richardsof
23rd March 2016, 05:42 PM
தேர்தல் திருவிழா -5

1977 தமிழக சட்ட சபை தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது ,புரட்சித்தலைவரின் அதிமுக இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க ''திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடை போட்டு வந்தது .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரவு பகல் பாராது தொடர்ந்து 234 சட்ட சபை தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் .


மறுபக்கம் திமுக , காங் மற்றும் ஜனதா கட்சி தலைவர்கள் .புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எதிர்த்து தீவிர ஒட்டு வேட்டையாடினார்கள் புரட்சித்தலைவரோ தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் மிக தெளிவாக உரையாற்றி ஒட்டு கேட்டார் . இதர கட்சிகள் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கி பேசினார்கள் .


தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது புரட்சித்தலைவரின் வலிமை , மக்கள் சக்தி , எம்ஜிஆர் ரசிகர்களின் தன்னலமற்ற தேர்தல் பிரச்சாரம் ,பற்றி நாடே அறிந்து கொண்டது . மாற்றார்கள் மனமொடிந்து நொந்து போனார்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுத்திய சாதாரண கட்சி தொண்டர் , ரசிகர் , மன்ற நிர்வாகிகள் , உண்மையாக உழைத்த கட்சி தலைவர்கள் , அவருடன் நடித்த நடிக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள் ,
முகவை மாவட்டதில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து புரட்சித்தலைவர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .

மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நாஞ்சிலார் இம்முறை பாளையங்கோட்டை சட்ட சபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் .
சென்னை யில் - ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் நடிகர் ஐசரி வேலனும் , ஸ்ரீரங்கத்தில் நடிகர் திருச்சி சௌந்தராஜனும் , முசிறியில் எம்ஜிஆர் மன்ற தலைவர் முசிறி புத்தனும் , திருப்பூரில் எம்ஜிஆர் ரசிகர் மணிமாறனும் என்று பலரும் வெற்றி பெற்றார்கள்

கட்சி உருவான 55 மாதங்களில் , அதிமுக இயக்கம் எல்லா கட்சியினரையும் புறந் தள்ளி விட்டு .தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஆட்சியில் அமர வைத்த பெருமையும் புகழும் தமிழக மக்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சேரும் என்பதில் பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னை நம்பினார் . மக்களை நம்பினார் .தன உயிர் ரசிகர்களையும் , தொண்டர்களையும் நம்பினார் . நம்பிக்கை வீண் போகவில்லை . தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக 1977 தேர்தலில் ஜொலிக்க ஆரம்பித்தார் . அந்த ஒளிவிளக்கு இன்னும் ஜெக ஜோதியாக பிரகாசமாக
ஜொலிக்கிறது .

.

Richardsof
23rd March 2016, 06:09 PM
எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே.

Richardsof
23rd March 2016, 07:55 PM
After the Sixth General Election held in 1977, a new Ministry with Thiru M.G.Ramachandran
as Chief Minister was formed on the forenoon of the 30th June 1977. The
names of the Ministers with their portfolios are given below: -

1. THIRU M.G. RAMACHANDRAN, Chief Minister:- Minister in-charge of Public,
General Administration, Matters relating to Indian Civil Service and Indian Administrative

Service Officers, District Revenue Officers, Deputy Collectors, Police, Elections, Passport,
Prohibition, Health, Medicine, Religious Endowments, Prevention of Corruption and
Industries.

2. THIRU K. MANOHARAN, Minister for Finance: - Minister in-charge of Finance,
Planning, Commercial Taxes and Excise, Revenue and Legislature.

3. THIRU S. RAMACHANDRAN, Minister for Public Works: - Minister in-charge
of Public Works, Minor Irrigation including Special Minor Irrigation Programme Works,
Mines and Minerals, Iron and Steel Control.

4. THIRU K. NARAYANASWAMY MUDALIAR, Minister for Law: - Minister incharge
of Law, Courts Prisons, Legislation on Weights and Measures, Legislation on money
lending, Legislation on chits and Registration of Companies.

5. THIRU G.R. EDMUND, Minister for Food and Co-operation:- Minister in-charge
of Food, Food Production, Co-operation and Fisheries.

6. THIRU R.M. VEERAPPAN, Minister for Information and Publicity: - Minister incharge
of Information and Publicity Film Technology, Tourism Development Corporation
and Cinematograph Act.

7. THIRU C. ARANGANAYAGAM, Minister for Education: - Minister in-charge of
Education, including Technical Education, Official Language, Approved Schools,
Employment and Training.

8. THIRU K. KALIMUTHU, Minister for Local Administration: - Minister in-charge
of Municipal Administration, Community Development, Panchayats, Panchayat Unions,
Village, Industries, Rural Industries, Project and Rural Indebtedness.

9. THIRU S. RAGHAVANANDAM, Minister for Labour: - Minister in-charge of
Labour, Housing, Slum Clearance Board, Statistics, Tamil Nadu Water supply and Drainage
Board and Town Planning.

10. THIRU P. SOUNDARAPANDIAN, Minister for Harijan Welfare: - Minister incharge
of Harijan Welfare, Backward Classes, Stationary and Printing, Government Press and
Hill Tribes.

11. THIRU C. PONNAIYAN, Minister for Transport: - Minister in-charge of
Transport, Nationalized Transports, Motor Vehicles Act, Highways and ports.

12. SELVI P.T. SARASWATHI, Minister for Social Welfare: - Minister in-charge of
Social Welfare including Women and Children Welfare, Animal Husbandry, Beggars Home,
Orphanages, Vigilance Service, Indian Overseas and Refugees and Evacuees.


13. THIRU P. KOLANDAIVELU, Minister for Agriculture: - Minister in-charge of
Agriculture, Agriculture Refinance, Agricultural Engineering Wing, Agro-Engineering Wing,
Milk, Diary Development Corporation and Operation Flood Project.

14. THIRU K. RAJA MOHAMMED, Minister for Handlooms and Textiles: -
Minister in-charge of Accommodation Control, News Print Control, and Agro Service Cooperative
Societies at Block, District and Apex Level including Federation, Wafts, Textiles,
Yarn and Handloom.

Russellisf
23rd March 2016, 07:57 PM
https://www.youtube.com/watch?v=UNqMcZX3tl0



தேர்தல் திருவிழா -5

1977 தமிழக சட்ட சபை தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது ,புரட்சித்தலைவரின் அதிமுக இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது .மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க ''திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடை போட்டு வந்தது .புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரவு பகல் பாராது தொடர்ந்து 234 சட்ட சபை தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் .


மறுபக்கம் திமுக , காங் மற்றும் ஜனதா கட்சி தலைவர்கள் .புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எதிர்த்து தீவிர ஒட்டு வேட்டையாடினார்கள் புரட்சித்தலைவரோ தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் மிக தெளிவாக உரையாற்றி ஒட்டு கேட்டார் . இதர கட்சிகள் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக தாக்கி பேசினார்கள் .


தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது புரட்சித்தலைவரின் வலிமை , மக்கள் சக்தி , எம்ஜிஆர் ரசிகர்களின் தன்னலமற்ற தேர்தல் பிரச்சாரம் ,பற்றி நாடே அறிந்து கொண்டது . மாற்றார்கள் மனமொடிந்து நொந்து போனார்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுத்திய சாதாரண கட்சி தொண்டர் , ரசிகர் , மன்ற நிர்வாகிகள் , உண்மையாக உழைத்த கட்சி தலைவர்கள் , அவருடன் நடித்த நடிக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள் ,
முகவை மாவட்டதில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து புரட்சித்தலைவர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .

மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நாஞ்சிலார் இம்முறை பாளையங்கோட்டை சட்ட சபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் .
சென்னை யில் - ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் நடிகர் ஐசரி வேலனும் , ஸ்ரீரங்கத்தில் நடிகர் திருச்சி சௌந்தராஜனும் , முசிறியில் எம்ஜிஆர் மன்ற தலைவர் முசிறி புத்தனும் , திருப்பூரில் எம்ஜிஆர் ரசிகர் மணிமாறனும் என்று பலரும் வெற்றி பெற்றார்கள்

கட்சி உருவான 55 மாதங்களில் , அதிமுக இயக்கம் எல்லா கட்சியினரையும் புறந் தள்ளி விட்டு .தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஆட்சியில் அமர வைத்த பெருமையும் புகழும் தமிழக மக்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சேரும் என்பதில் பெருமை . மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னை நம்பினார் . மக்களை நம்பினார் .தன உயிர் ரசிகர்களையும் , தொண்டர்களையும் நம்பினார் . நம்பிக்கை வீண் போகவில்லை . தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக 1977 தேர்தலில் ஜொலிக்க ஆரம்பித்தார் . அந்த ஒளிவிளக்கு இன்னும் ஜெக ஜோதியாக பிரகாசமாக
ஜொலிக்கிறது .

.

Russellisf
23rd March 2016, 07:59 PM
https://www.youtube.com/watch?v=FOQad32D26U

Russellisf
23rd March 2016, 08:02 PM
நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த ஸ்டைல்
யாருக்கும் வராது





http://i68.tinypic.com/2h4bbia.jpg

Russellisf
23rd March 2016, 08:05 PM
அன்பு நண்பா்களே! வணக்கம்.!

அறிவுலக மேதை அறிஞா் அண்ணா
அவா்களை முதலமைச்சா் ஆக்கிய
படம் தான் கீழே உள்ளது. எப்படி ?
1967 தோ்தலின் போது புரட்சித் தலைவா்
எம்.ஜி.ஆா். சுடப்பட்டாா். தமிழகம்
கண்ணீரில் மிதந்த சமயம். அவரை
நம்பி தொ்தலில் நின்றவா்களெல்லாம்
அழுது புலம்பினாா்கள். அதில் முக்கிய
மானவா் ராமநாதபுரம் சட்ட மன்றத்
தொகுதியிலே கழக வேட்பாளராக
நிறுத்தப்பட்ட அண்ணன் தங்கப்பா.
இவா் அரண்மனை எதிரில் குதிரை
வண்டி வாடகைக்கு போய் அதில்
வாழ்ந்து கொண்டிருப்பவா். இவரை
எதிா்த்து ராமநாதபுரம் மன்னரான
அமைச்சா் நிற்கிறாா்.
புரட்சித் தலைவரை இந்தக கோலத்தில்
பாா்த்த ராஜப்பா கதறி அழுகிறாா்.
அவரை அருகில் அழைத்த புரட்சித்
தலைவா் அவா கண்ணீரைத் துடைத்து
விட்டு அருகிலிருந்த உதவியாளரிடம்
ஒரு சிலேட்டும் குச்சியும் கொண்டு
வரச் சொல்லி அதில் இப்படி எழுது
கிறாா் "ஒரு புகைப்படக்காரரை வரச்
சொல்லி இந்த அடையாளத்தோடு
புகைப் படம் எடுத்து ராமநாதபுரம்
தொகுதி முழுதும் ஒட்டச்சொல்லுங்கள்"
என்று எழுதிக் கொடுத்தாா்.
நண்பா்களே! ஒரு ஏழை குதிரை வண்டிக்
காரரை வெற்றி பெற வைக்கவேண்டும்
என்ற நினைவு தன் உயிருக்குப் போ
ராடும் வேளையில் கூட புரட்சித்
தலைவரை விட்டுப் போகவில்லை.
அந்த போஸ்டா் தான் 1967 தோ்தலில்
தமிழகம் முழுதும் ஒட்டப் பட்டது.
அதில் உள்ள வாசகம் இது தான்.
"உங்கள் வீட்டு பிள்ளை கேட்கிறேன்
உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்" அண்ணன் தங்கப்பா அவா்கள் மன்னரை வீழ்த்தி மகத்தான வெற்றியைப் பற்றாா்.
இது தான் அண்ணா அவா்களை முதல
மைச்சராக அமர வைத்தது.
அந்த தங்கத் தலைவா் எம்.ஜி.ஆரைத்
தான் நன்றி கெட்ட கருணாநிதி கட்சி
யிலிருந்து நீக்கினாா். அந்தப் பாவம்
அரசியல் அனாதையாக கருணாநிதி
அலைகிறாா்.


courtesy net

Russellisf
23rd March 2016, 08:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps0hunebrv.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps0hunebrv.jpg.html)

oygateedat
23rd March 2016, 09:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsecofryud.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsecofryud.jpg.html)

Nice

Thank you

Mr.Yukesh babu

oygateedat
23rd March 2016, 09:36 PM
happy birthday tirupur ravichandran sir

Thank you Mr.Yukesh babu

fidowag
23rd March 2016, 10:32 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா புகைப்படங்கள் ...தொடர்ச்சி..........
http://i63.tinypic.com/33l165d.jpg
http://i67.tinypic.com/2gugsr7.jpg
http://i68.tinypic.com/28vvtw1.jpg

fidowag
23rd March 2016, 10:35 PM
http://i64.tinypic.com/sw8tnp.jpg

fidowag
23rd March 2016, 10:47 PM
http://i64.tinypic.com/25qyy9v.jpg

fidowag
23rd March 2016, 10:51 PM
http://i67.tinypic.com/15rfugy.jpg

fidowag
23rd March 2016, 10:53 PM
http://i68.tinypic.com/2h5tbow.jpg

fidowag
23rd March 2016, 10:55 PM
http://i68.tinypic.com/nwbhjt.jpg

fidowag
23rd March 2016, 10:56 PM
http://i64.tinypic.com/2a8kr3k.jpg

fidowag
23rd March 2016, 11:34 PM
http://i64.tinypic.com/33cufwy.jpg

fidowag
23rd March 2016, 11:35 PM
http://i63.tinypic.com/femi9s.jpg

fidowag
23rd March 2016, 11:37 PM
http://i64.tinypic.com/2gy85q8.jpg

fidowag
23rd March 2016, 11:39 PM
http://i67.tinypic.com/2rh1jmb.jpg

fidowag
23rd March 2016, 11:40 PM
http://i67.tinypic.com/2mf0j78.jpg

fidowag
23rd March 2016, 11:42 PM
http://i66.tinypic.com/2itn3py.jpg

fidowag
23rd March 2016, 11:43 PM
http://i65.tinypic.com/xkxg0g.jpg

fidowag
23rd March 2016, 11:45 PM
http://i67.tinypic.com/sd00ub.jpg

fidowag
23rd March 2016, 11:46 PM
http://i67.tinypic.com/6huvbm.jpg

fidowag
23rd March 2016, 11:49 PM
http://i68.tinypic.com/2ik5urq.jpg

fidowag
23rd March 2016, 11:51 PM
http://i65.tinypic.com/2418393.jpg

fidowag
23rd March 2016, 11:52 PM
http://i64.tinypic.com/mkjgux.jpg

fidowag
23rd March 2016, 11:53 PM
http://i67.tinypic.com/v2wysn.jpg

fidowag
23rd March 2016, 11:55 PM
http://i65.tinypic.com/2daahad.jpg

Russelldvt
24th March 2016, 04:54 AM
http://i68.tinypic.com/2pqmj55.jpg

Russelldvt
24th March 2016, 04:55 AM
http://i66.tinypic.com/wujvar.jpg

Russelldvt
24th March 2016, 04:56 AM
http://i66.tinypic.com/2i7tydh.jpg

Russelldvt
24th March 2016, 04:58 AM
http://i68.tinypic.com/14kd5jk.jpg

Russelldvt
24th March 2016, 05:00 AM
http://i65.tinypic.com/rrozm9.jpg

Russelldvt
24th March 2016, 05:01 AM
http://i63.tinypic.com/20rpg2.jpg

Russelldvt
24th March 2016, 05:02 AM
http://i65.tinypic.com/28rpehe.jpg

Russelldvt
24th March 2016, 05:03 AM
http://i63.tinypic.com/2v2vaew.jpg

Russelldvt
24th March 2016, 05:04 AM
http://i65.tinypic.com/29vh2dj.jpg

Russelldvt
24th March 2016, 05:05 AM
http://i66.tinypic.com/30lfdjq.jpg

Russelldvt
24th March 2016, 05:07 AM
http://i68.tinypic.com/2ug2jqc.jpg

Russelldvt
24th March 2016, 05:09 AM
http://i66.tinypic.com/25flifq.jpg

Russelldvt
24th March 2016, 05:10 AM
http://i63.tinypic.com/2d9r8g7.jpg

Russelldvt
24th March 2016, 05:12 AM
http://i65.tinypic.com/bdpbmu.jpg

Russelldvt
24th March 2016, 05:14 AM
http://i68.tinypic.com/206hb2c.jpg

Russelldvt
24th March 2016, 05:15 AM
http://i65.tinypic.com/szzgqf.jpg

Russelldvt
24th March 2016, 05:17 AM
http://i63.tinypic.com/slsms5.jpg

Russelldvt
24th March 2016, 05:18 AM
http://i68.tinypic.com/nmakqq.jpg