PDA

View Full Version : Makkal Thilagam MGR Part -19



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

mgrbaskaran
19th January 2016, 03:30 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12509488_1661307710800816_3812162090890643066_n.jp g?oh=553bf0bf5366d108ba5227cb9f524eb0&oe=57087F80

mgrbaskaran
19th January 2016, 03:31 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/1914602_1661301600801427_1566360661384622340_n.jpg ?oh=b1e12d89d0cfba4c1ae2b37567b4de5b&oe=57052FB9

mgrbaskaran
19th January 2016, 03:32 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1918049_1659313987666855_1447592050334548545_n.jpg ?oh=2fe187cb2cafb0da2c5d7681581e035d&oe=5743612D

mgrbaskaran
19th January 2016, 03:33 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/1619444_1658777594387161_8934557823898413414_n.jpg ?oh=f4f91c02cfd1b026af968fe0d410a348&oe=5738E08A

mgrbaskaran
19th January 2016, 03:34 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/941019_1658777947720459_7422895413557610696_n.jpg? oh=84f32adaabf1118332c591a2459e6147&oe=574954B4

mgrbaskaran
19th January 2016, 03:34 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12400908_1658761147722139_3867029954613120077_n.jp g?oh=7aef6a1d96eb9eb34d21ec788f8659ca&oe=574953F3

mgrbaskaran
19th January 2016, 03:35 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12289681_1646209532310634_4526391698532138272_n.jp g?oh=1a4936a4e19b1ceddb874c1052027a11&oe=573B998C

mgrbaskaran
19th January 2016, 03:35 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12247042_1646183882313199_8213444127774501006_n.jp g?oh=7ff3b478950c2a35f4ff7263f2d071e6&oe=57433FF2

mgrbaskaran
19th January 2016, 03:36 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12278787_1645534342378153_9152797929996441842_n.jp g?oh=862524119b915ed294282f0b6af1e3ed&oe=573F6D4E

mgrbaskaran
19th January 2016, 03:37 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11988744_1644304369167817_7300431756896720486_n.jp g?oh=1df9ab974ca5c56206e6e1de369f88de&oe=573CB71E

mgrbaskaran
19th January 2016, 03:43 AM
http://4.bp.blogspot.com/-yfiCshKOjUE/UBJXnbrmKnI/AAAAAAAABJ0/QlBq0znrGSA/s1600/mgr+vnj.jpg

oygateedat
19th January 2016, 04:58 AM
http://s18.postimg.org/hh1nw2tmh/IMG_20160118_WA0036.jpg (http://postimage.org/)
Courtesy - face book

oygateedat
19th January 2016, 05:01 AM
http://s12.postimg.org/ugbtt2igt/FB_20160118_22_28_33_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.Dhanasekaran

oygateedat
19th January 2016, 05:08 AM
http://s30.postimg.org/5bptoyabl/IMG_20160118_WA0030.jpg (http://postimage.org/)

Richardsof
19th January 2016, 09:37 AM
மலரும் நினைவுகள்
1967 - தமிழ் நாடு சட்டசபை தேர்தல்.
" சூரியன் உதிச்சதுங்க..."

1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.

வெகுஜனங்களின் உயிர்நாடிப் பிரச்னையாக அப்போது நிலவிய அரிசி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை திமுக கிளறி விட்டது. 'ஒருரூபாய்க்கு மூன்று படியரிசி' என்று அண்ணா வாக்குறுதி வேறு அள்ளி வீசினார். மேலும், உணர்வுப் பிரச்னையாக 1965ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலபேர் பலியான விவகாரத்தையும் திமுக கையில் எடுத்துக் கொண்டது.

' காமராஜர் அண்ணாச்சி; கடலைப் பருப்பு விலை என்னாச்சி ' - ' பக்தவச்சலம் அண்ணாச்சி ; அரிசி விலை என்னாச்சி ?' - ' கூலி உயர்வு கேட்டான் அத்தான் ; குண்டடிப்பட்டு செத்தான் ' என்றெல்லாம் ஜனரஞ்சகமாக கோஷங்கள் வேறு.

காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.

முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றிவிட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, 'மக்கள் திலகமாக' அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும்போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக. (இத் தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்)

அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார்25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.

இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். 'படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயேதோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.

சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்தது.
courtesy- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்

Richardsof
19th January 2016, 09:50 AM
தேர்தல் சமயத்தில், எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியிருந்தாலும் அதற்கு முன்பே அவர் திரையில் செய்த பிரச்சாரங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க தவறவில்லை.
முன்னதாக, 67 தேர்தலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் ' அரசகட்டளை ' என்ற படத்தை உருவாக்கியிருந்தார். 1966 துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், ராஜா ராணி - புரட்சிக்காரன் கதை தான். இப்படத்தின் நோக்கமே மறைமுகமாக ஆட்சியாளர்களை (காங்கிரஸ் அரசை) கடுமையாக விமர்சிப்பதும் தாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ' தேனும் பாலும் ஓடும் ' என்று மக்களுக்கு சொல்வது தான். வசனங்களும்
பாடல்களுமாக படம் முழுக்க அரசியல் பிரச்சார நெடி.

குறிப்பாக, அனல் பறக்க " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா.." என ஆரம்பிக்கும் பாடலை சொல்லலாம். இப்பாடலை வழக்கமான கவிஞர் வாலிக்குக் கொடுக்காமல் திராவிட இயக்க அபிமான கவிஞர் முத்துக்கூத்தன் என்பவரைக் கொண்டு எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர்.

" தடை மீறி போராட சதிராடி வா

செந்தமிழே - நீ பகை வென்று

முடிசூட வா.

மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்

குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ;

முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன்

முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ. (ஆடி வா..)

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ - அதன்

உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ.

புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ

மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ (ஆடி வா..) "

என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆட்சியை கடுமையாக எதிர்த்தும், திமுக
தொண்டர்களின் கட்சி உணர்வை தட்டியெழுப்புவதுமாக இப்பாடல் வரிகள் அமைந்தன. (ஆனால், இப்படம், தாமதமாக முடிந்து ரிலீஸ் ஆவதற்குள் தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பையே ஏற்றுக் கொண்டு விட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தால் படத்தில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வசனங்கள் திரையில் ஒலித்து

திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான
சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்

கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். "அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி..." என்று தொடங்கும். அதில்:

" அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.

அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.

இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே

இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே..."

" நான் செல்லுகின்ற பாதை

பேரறிஞர் காட்டும் பாதை "

இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்

பூமியே புதிய பூமி " (புதியபூமி- 1968)

இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்

கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :

" கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி."

" கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்"

" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே - நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே - நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே.."
ஒளிவிளக்கு ' (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி
.
" வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.
கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க - இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க..." ( நம்நாடு - 1969)

இந்த 'நம்நாடு' படம் மாமூல் எம்.ஜி.ஆர். ·பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். = சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரை. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் 'துரை' என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சில சுருக் வசனங்கள்:

" பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க."

" யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. "

" குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு 'ஆகட்டும் பார்க்கலாம்'னு சொல்லிட்டு

போயிடறாரு "

courtesy- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்

Richardsof
19th January 2016, 10:06 AM
மலரும் நினைவுகள்
1971 - தமிழ் நாடு சட்டசபை தேர்தல்.

மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க தமிழகம் தயாரானது. தங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான மக்களின் 'ரியாக்ஷனை' எதிர்பார்த்து திமுகவும் - ' சிண்டிகேட் & இண்டிகேட் ' என்று இரண்டாக உடைந்த நிலையில் காங்கிரசும் தேர்தலுக்கு ஆயத்தமாயின.

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி தலைமையிலான ' இண்டிகேட் ' என்றும் இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்ட காங்கிரஸ் அணி , திமுகவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துக் கொண்டது. ஆனாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் 'இண்டிகேட்' போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவளித்தது. எதிர்புறம், காமராஜ் தலைமையிலான 'சிண்டிகேட்' காங்கிரஸ் ( இது 'பழைய காங்கிரஸ்' எனவும் 'ஸ்தாபன காங்கிரஸ்' என்றும் அழைக்கப்பட்டது) திமுகவை எதிர்த்து நின்றது.

தேர்தலையொட்டி, தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சினிமாவில் இரு துருவங்களாக இருந்து வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் அரசியல் களத்திலும் மல்லுக்கு நின்றனர்.

திமுகவுக்காக எம்.ஜி.ஆரும், ' சிண்டிகேட்' டுக்காக சிவாஜியும் பிரச்சாரம் செய்தனர். இருதரப்பு ரசிகர்களும் அரசியல்ரீதியாகவும் மோதிக் கொண்டனர்.

கடைசியில் தேர்தல் முடிவு , கருணாநிதி தலைமையிலான திமுகவின் செல்வாக்கை வெளிச்சமிட்டு காண்பித்தது. காமராஜர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசுக்கு அதிர்ச்சித் தோல்வியை தந்து, 184 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1971 மார்ச் 15ம் தேதி கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். பரங்கிமலைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் எம்ஜிஆர் .

அரசியல் அரங்கில் மு.க.,வின் செல்வாக்கு வளர்ந்திருந்தது போல் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், எவரும் எட்டிப் பிடிக்க முடியாதபடிக்கு சினிமாவிலும் அதைச் சார்ந்து திமுக கட்சியிலும் வளர்ந்து வந்தது.

courtesy- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்

Richardsof
19th January 2016, 10:10 AM
மலரும் நினைவுகள்
1977 - தமிழ் நாடு சட்டசபை தேர்தல
கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !
1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.
எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடிய
வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.
ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !

Richardsof
19th January 2016, 12:14 PM
எம்.ஜி்.யாரைப் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். ஆனால் அவரை பிடிப்பதற்கான அந்த பிடிப்பின் ஆழம் மட்டும் அனைவருக்கும் ஒரே அளவிற்கு இருப்பதால்தான் அவர் மறைந்து 28 வருடங்களுக்குப் பிறகும் அவரின் புகழும் சரி அவரை விரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் சரி கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

comments by sakthivel.


இன்றும் மக்கள் திலகம் என்ற அந்த மஹா மனிதன் M G R , என்ற அந்த மக்களின் மனம் கவர்ந்த நடிகர் வயது கடந்து இன்றும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியம் இல்லை, ஏன் என்றால், ஒரு வள்ளல் தனம், அள்ளி கொடுப்பது, யாரை கண்டாலும் முதலில் நலம் விசாரிப்புடன் சாப்பிட்டிர்களா என்ற பழகிய தன்மை, இப்படி நல்ல மனிதன் மிக சிறந்து [ ஒரு ஹீரோ எப்படி திரையில் இருக்க வேண்டும் [ என்பதை ஆணி அடித்தர்போல உணர்த்தியது, இன்றைய பொறிக்கி,குடிகார,ரவுடி ,கத பாத்திரம் ஏற்று நடிக்கும் பெரும்பாலான அயோக்ய பொறிக்கி ஹீரோக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம், இன்னொரு எந்த ஸ்டார் நடிகரும் இப்படி வர மக்களே அனுமதிக்க மாட்டார்கள், எம்ஜியார் என்ற இந்த சிறந்த ஹீரோவை இன்றைய ஹீரோக்கள் தாண்ட முடியாது.
comments by sherif

உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள்...........அனால் இன்னும் ஒரு நூற்றாண்டு காலதிர்கவது மாறாமல் இருக்க போவது எம் ஜி ஆர் அவர்களின் தாக்கம்..............இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்........இவர் போலே யார் என்று ஊர் சொல்ல வேண்டும்....
comments by alagesan.

Stynagt
19th January 2016, 08:06 PM
புதுச்சேரியில் புரட்சித்தலைவர்.................

http://i65.tinypic.com/30df51x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:08 PM
http://i64.tinypic.com/sy0cqh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:10 PM
http://i64.tinypic.com/spyqyx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:11 PM
http://i67.tinypic.com/2hciyxs.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:15 PM
http://i65.tinypic.com/23vdopu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:16 PM
http://i64.tinypic.com/2lucduw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:18 PM
http://i67.tinypic.com/i1du79.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:26 PM
http://i66.tinypic.com/f9r502.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:31 PM
http://i68.tinypic.com/zygcbr.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:32 PM
http://i65.tinypic.com/j6jyhc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:34 PM
http://i65.tinypic.com/f0ynx1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:36 PM
http://i65.tinypic.com/zukya1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:37 PM
http://i68.tinypic.com/sc589s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:38 PM
http://i66.tinypic.com/2yxrawy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:40 PM
http://i67.tinypic.com/r7lky1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:41 PM
http://i64.tinypic.com/2m3p894.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:44 PM
http://i68.tinypic.com/be61cg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:45 PM
http://i64.tinypic.com/2e1d940.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:50 PM
http://i66.tinypic.com/eqpn2x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:51 PM
http://i65.tinypic.com/25a6p9u.jpg
http://i65.tinypic.com/25a6p9u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:53 PM
http://i67.tinypic.com/2z8rtx4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:54 PM
http://i67.tinypic.com/261m7fa.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:56 PM
http://i63.tinypic.com/28helok.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:58 PM
http://i68.tinypic.com/15887x0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 08:59 PM
http://i67.tinypic.com/dze83r.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:00 PM
http://i66.tinypic.com/33agx6x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:01 PM
http://i64.tinypic.com/deqzj7.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:03 PM
http://i67.tinypic.com/24bubk5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:04 PM
http://i67.tinypic.com/23iuekn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:06 PM
http://i64.tinypic.com/16apu2x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:08 PM
http://i66.tinypic.com/v5zn9g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:09 PM
http://i68.tinypic.com/2nv7ck4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:10 PM
http://i64.tinypic.com/35dce4i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:11 PM
http://i64.tinypic.com/72t6w4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:12 PM
http://i67.tinypic.com/9ibqfb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:13 PM
http://i63.tinypic.com/xc7i2x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:14 PM
http://i63.tinypic.com/2mx1wk1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:15 PM
http://i67.tinypic.com/2moyvy1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:17 PM
http://i65.tinypic.com/15na8zm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:18 PM
http://i65.tinypic.com/8wa9tu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:19 PM
http://i64.tinypic.com/2n00qx4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th January 2016, 09:20 PM
http://i63.tinypic.com/dbnql0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
19th January 2016, 09:40 PM
ஒரு முறை எம் ஜி ஆர் முதல்வராய் இருக்கும் போது உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் எம் ஜி ஆர் தலைமையில் நடைப்பெற்றது தோட்டத்தில் கூட்டம் முடிந்து உணவு எம் ஜி ஆர் தலைமையில் அமர்ந்து உண்டார்கள் தோட்டத்தில்
பின் சிலமாதங்கள் சென்று அந்த கூட்டத்தில் பங்குகொண்ட என்னை நான் பணியில் இருக்கும் போது ஒருவர்வந்து தோட்டதில் சின்னவர் எம் ஜி ஆர் ஆரை அப்படி அழைப்பார்கள் அழைக்கிறார் வாருங்கள் என்றார் எனக்கு படபடப்பாற்று என்ன தவறு செய்தோம் இது வரை நேர்மை அதிரிகாரி என்று தான் பெயர் எடுத்துள்ளேன் ஏதாவது தவறு நடந்து விட்டதா என எண்ணி கொண்டே சென்றேன் மதியவேளை அது தோட்டத்தில் எம் ஜி ஆர் ஆரும் பலரும் எனக்காக காத்திருந்தார்கள்
எம் ஜி ஆர் வாருங்கள் சாப்பிடலாம் என்றார் நான் படபடப்பாக சார் என் விசயம் சொல்லுங்கள் என்றேன்
அதற்க்கு எம் ஜி ஆர் அன்று ஒருநாள் நீங்கள் சாப்பிடும் போது ஒரு கறியின் பெயரை சொல்லி அதை நீங்கள் விரும்பி சாப்பிடுவதை கவனித்தேன்
அதன்பிறகு இன்று தான் அந்த கறி சமைக்கபட்டது உடன் உங்கள் நினைவு வந்தது வாருங்கள் சாப்பிடலாம் என சதாரணமாக சொன்னார்
எனக்கு கண்களில் கண்ணீர் நிரம்பியது ஒருதாயின் கருணை
தன்னலமற்ற அன்பை அவர் முகத்தில் கண்டேன் அன்று
ஓய்வு பெற்ற அந்த அதிகாரி கூறியது
ஒரு நூலில் படித்தது

Russellisf
19th January 2016, 09:44 PM
மக்கள் திலகம் இவரை பிடித்ததுக்கு முதல் காரணம் சினிமாவின் சண்டைக் காட்சிதான் என்று ஒவ்வொரு ரசிகரும் கூறியது
சண்டை காட்சி எடுப்பதற்கு முன்னால் அங்கு முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார் அதுவே இன்றும் எம்ஜிஆர் பார்முலா என்ற பெயரில்் திரை உலகத்தில் உள்ளது என்றால் ஆச்சரியம் தான்
பின்பு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்பும் அரசு எந்திரங்கள் செயல் படும் கட்டிடங்கள் அரசு பள்ளிகள் அரசு பேருந்துகளிலும் கட்டாயப் படுத்தினார் முதலுதவி பெட்டியுடன் திருக்குறலும் எழுத வேண்டும் என்றார்
இதற்கு பெயர்தான் உண்மையான
மக்கள் திலகத்தின் மக்கள் நலம்

Russellisf
19th January 2016, 09:58 PM
சைலேஷ் சார் திரும்பவும் நீங்கள் திரிக்கு திரும்ப வேண்டும் தலைவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தலைவரின் புகழ் பாட வேண்டும்

Richardsof
20th January 2016, 04:50 AM
இனிய நண்பர் கலிய பெருமாள் சார்
புதுவை நகரில் கொண்டாடப்பட்ட மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிழற்படங்கள் , போஸ்டர்கள் பதிவுகள்
அனைத்தும் மிகவும் அருமை .

Richardsof
20th January 2016, 04:55 AM
மறைந்தும் மறையாத மாமனிதர்!


தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 28
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.

நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!

எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.

அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.

1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.

அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.

மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.

""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.

செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.

முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.

எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.

""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.

எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.

என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.

தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.

தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.

"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.

தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!

மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.

எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

(இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்)

கா.இர. குப்புதாசு

Richardsof
20th January 2016, 05:41 AM
பொன்விழா ஆண்டு நினைவலைகள்.

14.1.1966 - 18.2.1966.

36 நாட்களில் மூன்று வெற்றி காவியங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்

அன்பே வா - 14.1.1966

நான் ஆணையிட்டால் . 4.2.1966

முகராசி - 18.2.1966

ஏ.வி.எம் , சத்யா மூவிஸ் , தேவர் பிலிம்ஸ் -மூன்று பெரிய நிறுவனங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் வெளிவந்தது .அன்பேவா - பிரமாண்ட வண்ணப்படைப்பாகவும் , நான் ஆணையிட்டால் சமூக சீர்திருத்த படமாகவும் , முகராசி பொழுது போக்கு படமாகவும் வந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டது .

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு , இனிய பாடல் காட்சிகள் , புதுமையான சண்டை காட்சிகள் என்று எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தது .

புதிய வானம் புதிய பூமி ....
தாய் மேல் ஆணை ..
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு
நல்ல வேலை நான் பிழைத்து கொண்டேன்
அன்பே வா ..உள்ளம் என்றொரு .....
ஏய் ,,நாடோடி ..
நான் பார்த்ததிலே ...அவள்
ராஜாவின் பார்வை ராணியின் ..
பாட்டு வரும் உன்னை ...
நான் உயர உயர போகிறேன் ..
உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்
முகத்தை மூடி கொண்டது ...
12 இனிய பாடல்கள் .....
மூன்று படங்களின் திருவிழா நாட்களை ரசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
மறக்க முடியாத நாட்கள் .................

Russellisf
20th January 2016, 08:05 AM
இந்த மூன்று படங்களும் இன்று வரை மறுவெளிட்டில் சாதனை படைத்து கொண்டு இருப்பது நம் தலைவருக்கு மட்டுமே சாத்தியம்

Richardsof
20th January 2016, 10:15 AM
எல்லோர்க்கும் பிடித்த அருமையான மக்கள் திலகத்தின் பாடல் .
https://youtu.be/NPaQS0qFyGY

fidowag
20th January 2016, 02:58 PM
இன்று (20/01/2016) பிற்பகல் 1.30 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
பெரிய இடத்துப் பெண் , ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/2z3yjdk.jpg

fidowag
20th January 2016, 03:05 PM
நேற்று பொதிகை டிவியில் பொன்மனச்செம்மல் நடித்த பல்லாண்டு வாழ்க படம் ஒளிபரப்பாகியது. இதயும் சேர்த்து நேற்று ஒரே நாளில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான மக்கள் திலகம் படங்களின் எண்ணிக்கை 15.

பரங்கி மலை பாரி எட்டாம் வள்ளல் சாதனை சக்ரவர்த்தி புகழ் வாழ்க.






இத்துடன் 17/01/2016 அன்று இரவு 11 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பான புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் , "நல்ல நேரம் " சேர்த்து 16 திரைப்படங்கள் தொலைகாட்சி
சானல்களில் ஒளிபரப்பாகியது உலக மகா சாதனை.
http://i67.tinypic.com/14to9yf.jpg


தகவல் உதவி :ஓட்டேரி திரு. பாண்டியன்.

fidowag
20th January 2016, 03:16 PM
http://i67.tinypic.com/2rc7s4n.jpg

fidowag
20th January 2016, 03:17 PM
http://i64.tinypic.com/4utqhy.jpg

fidowag
20th January 2016, 03:18 PM
http://i63.tinypic.com/20u8j9x.jpg

fidowag
20th January 2016, 03:19 PM
http://i63.tinypic.com/2myn67p.jpg

fidowag
20th January 2016, 03:20 PM
http://i68.tinypic.com/9rpoyd.jpg

fidowag
20th January 2016, 03:21 PM
http://i66.tinypic.com/2emj606.jpg

fidowag
20th January 2016, 03:35 PM
கிளாசிக் சினிமா - ஜனவரி 2016
http://i65.tinypic.com/s0zktd.jpg

fidowag
20th January 2016, 03:36 PM
கிளாசிக் சினிமா செய்திகள் - ப்ளாஷ் பேக்



தமிழ் திரைப்பட உலகில் முதன் முதலாக ட்ராக் ட்ராலியை அமைத்து திரைப்படம்
எடுத்தவர் இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன் - படம்- சதி லீலாவதி -1936ல்

1965 பொங்கல் வெளியீடாக வந்து, வசூலிலும், பார்வையாளர் எண்ணிக்கையிலும்,
அதிக அரங்குகளில் வெள்ளி விழா (7 அரங்குகள் ) கண்ட ஒரே படம் "எங்க வீட்டு பிள்ளை "
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் இருந்தவரையில் இந்த சாதனை
முறியடிக்கப்படவில்லை .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு முதன் முதலாக பின்னணி பாடியவர் திரு. எம்.எம். மாரியப்பா .
சென்னையில் அதிக தியேட்டர்களில் வெளியான முதல் தமிழ் படம் "மகாதேவி "
1957ல் ஆறு அரங்குகளில் வெளியானது .

http://i67.tinypic.com/2zjaq6h.jpg

fidowag
20th January 2016, 04:01 PM
நக்கீரன் வார இதழ் =20/01/2016-

தன்னலம் தேவைதான் . அனால் அது பொதுநலமாக பரிணமிக்க வேண்டும் -
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
http://i65.tinypic.com/15x0ll2.jpg

fidowag
20th January 2016, 04:13 PM
http://i67.tinypic.com/2a5n2d.jpg
http://i65.tinypic.com/2ir2j2r.jpg
http://i64.tinypic.com/so1w8z.jpg
அவ்ளோ பெரிய சந்தோஷம்

abkhlabhi
20th January 2016, 06:09 PM
http://mayvee.blogspot.in/2016/01/avm-anbe-vaa-50years.html

Richardsof
20th January 2016, 07:09 PM
எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா படம் வெளிவந்து இந்த பொங்கலோடு ஐம்பது வருடங்கள் ஆகிறது. இந்த படத்திற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் நான் பார்த்த முதலும் கடைசியுமான தலைவர் படம்.

எங்கள் பகுதியில் இருந்த மத்திய அரசு தொழிற்சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஊழியர்களுக்கான மனமகிழ் மன்றத்தின் திறந்த வெளி திரையரங்கில் அதிகம் ஞாபகம் இல்லாத ஒரு சனிகிழமை அன்று பார்த்தேன்.

ஜெ.பி.யாக தலைவர் திரையில் தோன்றும் முதல் காட்சியில் ரசிக்க ஆரம்பித்து, ஆனந்தத்தின் உச்சியில் அவர் பாடும் புதிய வானம் புதிய பூமி பாடலில் அவரின் ரசிகனாகிவிட்டேன்.

என்னதான் புதிய வானம் புதிய பூமி பாடல் எனக்கு பிடித்து இருந்தாலும் நான் அதிகம் முணுமுணுப்பது கல்லூரி மாணவர்கள் பாடும் ஒன்ஸா பாப்பா மெத்தமாமா என்னடி அம்மா எங்கள் லிட்டில் டூரிஸ்ட் என்ற பாடல் தான்.

அதுவரை நாயக பிம்பத்திலேயே நடித்து வந்த தலைவர் முதல்முறையாக நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பார். சின்ன பாப்பூ, ராமைய்யா, புண்ணியகோடி ஆகியோரது நகைச்சுவை மறக்க முடியாத ஒன்று.

திரையில் படம் பார்த்து கொண்டு இருந்த பொழுது, இடைவேளையில் ஒரு பெரியவர் இந்த படம் வெளி வந்த பொழுது படத்திற்கு இரண்டு இடைவேளை இருந்தாக சொன்னார். உண்மை தான். அன்று பெரும்பாலும் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் வெளியீடாக அன்பே வா போட்டபட்ட பொழுது படத்தின் நீளம் காரணமாக சூடான ப்ராஜெக்ட்டரை இரண்டு தடவை நிறுத்தி ரீல் சுற்றி, மாற்றி வைத்து படதை ஓட்டினார்கள்.

படத்தில் சேகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, என் முதல் மனைவி விமானம் என்று சொல்வார்.... அவரது விமானத்தின் மீதான காதலை பின்னாட்களில் சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலில் அகூதா மற்றும் அமீர் ஆகியோரின் கடல் மீதான காதலில் கண்டேன். அந்த நாவலில் ஒரு வரி வரும் (சரியாக ஞாபகம் இல்லை) ஒருவன் கடலில் பயணித்து விட்டால், கடல் அவனை விடாது.. அவனை கடல் அழைத்து கொண்டே இருக்கும். அந்த வரியை போல அன்பே வா படத்தை ஒருதரம் பார்த்துவிட்டதால் அந்த படத்தை மீண்டும் மீண்டும் இந்நாள் வரையில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அதிகாலை பனியின் பொழுது புதிய வானம் புதிய பூமி பாடல், குளித்து விட்டு வரும் பொழுது லவ் பேர்ட்ஸ் பாடல், நண்பர்களுடன் இருக்கும் பொழுது ஒன்ஸா பாப்பா மெத்தமாமா பாடல் என்று இந்த படத்தை ஞாபகபடுத்தும் விஷயங்கள் தினசரி வாழ்க்கையில் கிடைத்து கொண்டே இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலே தான் யார் என்று தெரியாமல் கலாட்டா பண்ணும் கல்லூரி மாணவர்களை பார்த்து தலைவர் சிரிக்கும் அந்த சிரிப்புக்காகவே படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
courtesy - tamil manam .Thanks ABKHLABHI SIR

oygateedat
20th January 2016, 08:48 PM
http://s24.postimg.org/wbnekng79/FB_20160120_20_42_31_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

Russellisf
20th January 2016, 09:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ab_zpsfjfpblfe.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ab_zpsfjfpblfe.jpg.html)

Richardsof
21st January 2016, 06:08 AM
“அன்பே வா” – (மறு) திரைப்பார்வை
courtesy - Raghavan Sampathkumar
80s ல பொறந்தவங்களுக்கே பாதி பேருக்கு மேல பழைய படம்னா ஒரு கிலி உண்டாகும். பக்கம் பக்கமா செந்தமிழ் வசனம், செண்டிமெண்ட் ஓவர்லோட், அழுகை, குடும்பக் கதை, etc etc ன்னு நமக்கு செட் ஆகாதுப்பான்னு சொல்லுவாங்க.

அதே 90s க்கு அப்புறம் பொறந்த பசங்கன்னா “இதுக்கு கெமிஸ்ட்ரி கிளாசே பரவால்ல” ன்னு தெறிச்சி ஓடியே போய்டுவாங்க. ஆனா, பழைய படங்கள் எல்லாமே அப்படி இல்ல, 3 மணி நேரம் போறதே தெரியாம யூத்புல்லா, ஜாலியா, சும்மா டைமிங் காமெடியோட சில EXTRAORDINARY ENTERTAINER படங்கள் இருக்குன்னு சொல்றத்துக்கு தான் இந்த பதிவு.

இன்டெர்நெட்ல எங்க பாத்தாலும் புதுப்பட விமர்சனம் கெடைக்கும். ஆனா, என்னிக்குமே நினைவில் நீங்காம இருக்கற சில படங்களப் பத்தி விவரம் இருக்குமான்னா பெரும்பாலும் இல்லை.

அந்த வரிசையில FIRST… நம்ம மக்கள் திலகம் MGR நடிச்ச
“அன்பே வா”

“அடப்பாவி ! கவுத்துட்டான்”

இது 2015 ல வந்த எதோ ஒரு படத்துல வந்த ஒரு யங் ஹீரோவோட டயலாக் இல்ல. 1966 ல வந்த “அன்பே வா” ல MGR பேசினது. Typical பழைய படம் மாதிரி “அய்யகோ, பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி என்னை ஏமாற்றிவிட்டானே, கிராதகன்” ன்னெல்லாம் AVM Rajan (படமே ஏவிஎம் ப்ரொடக்ஷன் தானே…) எபக்டு குடுக்காம, சும்மா பஞ்ச் பாலா மாதிரி தலைவர் பேசின இந்த ஒரு டயலாக்லேந்தே புரியும் அந்த படம் எவ்ளோ யூத்புல்லா இருக்கும்னு.



அந்த காலத்துல தமிழ் வசனங்களுக்காகவே ஓடின படங்கள் தான் ஜாஸ்தி. அதஎல்லாம் பாத்துட்டு இந்த ஜெனரேஷன் பசங்க “ஏம்பா? வீட்டுக்குள்ளயே செந்தமிழ்ல தான் பேசுவாங்களா?” ன்னு கேப்பாங்க. ஆனா, அந்த (60s) ஜெனரேஷன்ல இது முற்றிலும் வித்தியாசமான படம்னு காட்ட இந்த ஒரு வசனம் போதும்.


படத்தோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான். COME SEPTEMBER ங்கற ஹாலிவுட் படத்தோட அடிப்படையில் AC திருலோகச்சந்தர் அவர்கள் திரைக்கதை, டைரக்ஷனில் வந்தது. சொல்லப்போனா அந்த பீரியட்களில் இந்த கதையை படமாக்கத் துணிந்த ACT, பலவித GENRE களில் வல்லவர்னு காட்ட இது ஒரு நல்ல உதாரணம்.


அதே போல, அதுவரை ஆக்ஷன் ஆதர்ஸ ஹீரோவாவே நடிச்ச நம்ம மக்கள் திலகமும் காமெடியில வூடு கட்டி கலக்குவார்னு காட்டினதும் இந்த படம் தான். சும்மா சொல்லக்கூடாது, செம்ம கேஷுவலா; READERS DIGEST படிக்கற; GOLF விளையாடும் மல்டி மில்லியனரா செம்ம கலக்கல். அதுவும் குளிச்சிட்டு வந்து ஹீரோயின கலாய்க்கற ஸீன்… ஹா ஹா… டாப் கிளாஸ். இன்னோரூ ஸீன்ல காலேஜ் பஸ் டிரைவருக்கு பணம் குடுத்து அவன வயத்து வலின்னு சொல்லச் சொல்லிடுவாரு. அதுக்கு முன்னாடி, “டிரைவாஆஅர்” னு சும்மா வாய சொழட்டி நக்கலா கூப்டுவாரு பாருங்க… யப்பா… செம்ம மாஸ்….

அபிநய சரஸ்வதி (அவங்கள காலேஜ் ஸ்டூடன்ட்னு நம்பக் கொஞ்சம் நிறையவே கஷ்டமா இருந்தாலும்…) தன் பங்குக்கு கேஷுவலா பண்ணிருப்பாங்க.



படத்தோட ஹைலைட் நாகேஷ் & மனோரமா. என்ன டைமிங் ரெண்டு பேருக்கும். அதுவும் நாகேஷ் செம்ம கூலா தலைவர் கிட்ட காசு வாங்கிகிட்டே இருக்கறதும், அதப்பார்த்தும் ஒண்ணும் பண்ண முடியாம ஆச்சி தவிக்கறதும் சொல்லி முடியாது. திரையில் பார்த்து ரசிக்கணும். கேஸட் ப்ளேயர் இருந்த காலத்துல நானும் என் அக்காவும் இந்த வசனம் முழுக்க “கட்டிக்கரும்பே கண்ணம்மா” ல ஆரம்பிச்சு மொத்த வசனத்தையும் ஒப்பிப்போம்.

CAMEO வா வர்ற நம்ம (நடமாடும் AHUJA சவுண்ட் சிஸ்டம்) அசோகன், அவர் வேலையக் கரெக்டா அளவா செய்வாரு. மத்த எல்லாருமே அவங்கவங்க கேரக்டர்ல அழகா நடிச்சிருப்பாங்க.



ஹீரோ ஹீரோயின்க்கு நடுவுல வர்ற ஈகோ, மோதல், காதல், எல்லாத்தையும் அவ்வளவு டீசண்டா, அழகா, திரைக்கதையில கொண்டுவந்த ACT ஒரு ஜீனியஸ்னு சொல்ல எனக்கு வயசும், அறிவும், அனுபவமும் போதாது. ஆனாலும், ரசிகன்ங்கற முறையில், அவரைக் கண்டிப்பா புகழ்ந்தாக வேண்டும்

சுத்தமா கவனிக்கப்படாத ஆனா REFRESHING ஆன 2 விஷயங்கள் அதாவது பாடல்கள்.

1) AL ராகவன் பாடின “ONCE A PAPPA, MET A MAMA“ – என்ன ஒரு ஸ்டைல் ஆன PRONUNCIATION! யப்பா… வாட்ட பௌட்ட ஹெல்லார்யூ? ன்னு எதோ RAP சிங்கர் மாதிரி பாடிருப்பாரு. அந்தக்கால சுராங்கனி ன்னு சொல்லலாம். கேட்டா எழுந்து டான்ஸ் ஆட வக்கிற மாதிரி செம்ம யூத்தா இருக்கும் அந்த பாட்டு.


2) கிளைமாக்ஸ் க்கு முன்னாடி வர்ற Liban Bindey ங்கற ஒரு சிங்கர் பாடின சோகமான “ADIOS, GOODBYE MY FRIEND“ ங்கற பாட்டு. அந்த மூடுக்கு ஏத்தா மாதிரி அருமையா செட் ஆகி இருக்கும்

இந்த ரெண்டு பாடல்களையும் சேர்த்த MSV அவர்களை மெல்லிசை மன்னர்னு சொல்லலேன்னா எப்படி?

ஓகே, மொத்தத்துல பழைய படம்னா கிளிசரின் பாக்டரி தான்னு நெனச்சிட்டிருக்கற யூத்களே, அன்பே வா ஒரு தடவ பாருங்க…

Richardsof
21st January 2016, 06:14 AM
அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.

சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.

ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.

‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!

இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.

‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.

விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.

படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?

s.p .muthuraman

Richardsof
21st January 2016, 06:16 AM
அன்பே வா’ படத்தில் சரோஜாதேவி கல்லூரி மாணவர் களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரைக் கேலி செய்து நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி. உதவி நடன இயக்குநர் ரத்தன்குமார் தலைமையில் மாணவர் குழு நடனமாட இருந்தனர். ரத்தன்குமாருக்கு இணையாக எம்.ஜி.ஆரால் ஆட முடியுமா என்று படக்குழு எதிர்பார்ப்பில் இருந்தது.

போட்டி என்றாலே விறுவிறுப்புத் தானே. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெகு இலகுவாக ட்விஸ்ட் நடனம் ஆடியபோது கைதட்டல் ஷூட்டிங் அரங்கத்தை அதிர வைத்தது. படம் வெளியானதும் தியேட்டர்களில் ரசிகர்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தனர்.

சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக போயிருந்தோம். சிம்லாவின் மேல்பகுதி முழுதும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள். அங்குதான் சீனாவின் எல்லைக் கோடு இருந்தது. அந்தப் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பதற்காக காவல் இருந்தார்கள். அங்கிருந்த பனியும் மிகையான குளிரும் நம் ராணுவ வீரர்களை பாதித்து, அவர்களில் சிலருக்கு கால்கள் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் இருந்தார்கள்.

அத்தகைய ராணுவ வீர்ர்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் தலைமையில் சரவணன் சார், திருலோகசந்தர் சார் மற்றும் சிலரும் புறப்பட்டோம். அந்த வீரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கண் கலங்கினார். ‘‘நாட்டில் உள்ள எங்கள் உயிரைக் காக்க, உங்கள் உயிரைப் பணயம் வைக்கும் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்’’ என்று இரு கை தூக்கி அவர்களை வணங்கினார் எம்.ஜி.ஆர். அந்த வீரர்களுக்கு ஹார்லிக்ஸ், ரொட்டி, பழங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார்.

எப்போதுமே எம்.ஜிஆருக்கு ஏவி.எம்.சரவணன் சார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான் 86 மற்றும் 87-ம் ஆண்டுகளில் ‘சென்னை செரிஃப்’ஆக சரவணன் சாரை நியமித்து பெருமைப் படுத்தினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. இந்தப் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆரிடம் பத்திரிகையாளர் கள் கேட்டபோது, ‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாடோடி’’ என்றார். அந்தச் சூழ்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஏவி.எம்.செட்டியாரைப் பார்க்க வந்தார். ‘‘நாடோடி மன்னன் படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்றார். செட்டியாருடைய சட்ட ஆலோசகர் எம்.கே.எஸ், ‘‘பணம் கொடுப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டுமே’’ என்றார்.

அதற்கு ‘‘நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகி. நான் கையெழுத்துப் போடுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்துக் கொடுங்கள்’’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருடைய அணுகுமுறை செட்டியாருக்கு பிடித்துவிட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்தார். படம் ரிலீஸான உடனேயே வாங்கிய பணத்தைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தார் ஆர்,எம்.வீ. அவருடைய நாணயம் செட்டியாருக்குப் பிடித்துப்போய் ‘‘நீங்கள் படம் எடுத்தால், நான் பண உதவி செய்கிறேன்’’ என்றார். ஆர்.எம்.வீ ‘தெய்வத்தாய்’படத்தை சொந்தமாக தயாரித்தபோது, தான் சொன்னதைப் போலவே ஆர்.எம்.வீ அவர்களுக்கு செட்டியார் பணம் கொடுத்தார்.
s.p .muthuraman

Richardsof
21st January 2016, 06:18 AM
சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்

இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’

எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.

Richardsof
21st January 2016, 06:21 AM
Come September is a popular Hollywood movie of 1963 featuring Rock Hudson and Gina Lollobrigida. This movie, directed by the noted filmmaker Robert Mulligan, was a hit around the world, including India where it had a successful run in places like Madras.

One of the contributing factors for its success was the popular title music, ‘Come September,’ and the long-playing record, rendered by the famous American musician Billy Vaughn, was a bestseller even in Madras city.

The movie narrated the tale of Robert (Rock Hudson), an American millionaire, who arrives early for his annual vacation at his luxurious Italian villa. His long-time girlfriend Lisa (Gina Lollobrigida) has given up waiting for him to “pop the question,” and has decided to marry another man. Meanwhile, his sneaky villa manager Maurice secretly converts the villa into a hotel when the boss is away. The current guests of the “hotel” are a group of young American girls trying to fend off a gang of oversexed boys, led by Tony (famed singer Bobby Darin in his movie debut).

This interesting storyline was brilliantly adapted into a Tamil film by the multifaceted writer-director-producer A.C. Thirulokachandar, who was then working for the House of AVM writing screenplays and also making movies. ‘ACT’ hails from an upper middle-class family of Madras and after qualifying himself with an MA degree he worked hard to appear for the Indian Administrative Service without thinking of a job.

Even as a student he wrote stories and articles and was a voracious reader. His close friend and classmate P. Balasubramaniam, son of the South Indian movie pioneer R. Padmanabhan, introduced him to his father and soon he joined RP as his assistant and learnt the ropes of moviemaking, especially screenplay writing. Then he moved to the AVM unit where he made his debut as a filmmaker…

Anbe Vaa was all about JB (MGR), a wealthy industrialist, who decides to take a break at his Simla home away from business concerns. He lands there to find that his caretaker (Sambandam) has rented his house to Geetha’s (Saroja Devi) family, taken the rent and left for Kasi with his wife. His daughter Manorama and brother-in-law Nagesh are left in charge of the house and the guests. JB decides not to reveal his identity and pretends to be a wealthy man, Balu, willing to pay rent for a place in the house. Nagesh takes the money and gives him JB’s room.

Balu keeps playing practical jokes on Geetha and they keep clashing. She brings her friends who are on a trip to Simla and tries to drive JB from the house. After he gets the friends on his side, she gets angry and tells her parents to get her married to Asokan, a relative and an Air Force pilot.

By the time Balu confesses his love for her, Geetha’s engagement is already fixed. Asokan turns out to be a school friend of JB, but he also agrees to play along with the trick. Asokan discovers that Balu and Geetha are actually in love with each other and steps aside. When Balu’s true identity is known, Geetha thinks that the wedding plans are yet another of his practical jokes and tries to run away. He finds her and all misunderstandings are cleared. The two get married.

The screenplay was brilliantly written by ACT. MGR’s performance as the rich man posing as a tenant was impressive. Nagesh was inimitable. Saroja Devi looked glamorous in her glossy make-up and costume.

One of the major plus points was its melodious music (composer M.S. Viswanathan working on his own after separating from his erstwhile partner T.K. Ramamurthi). Many songs became hits. The opening song, ‘Puthiya Vaanam Puthiya Bhoomi’ (lyrics: Vaali and voice: T.M. Soundararajan) filmed on MGR sporting a red and black striped coat in Simla and other areas, had a political touch. It was brilliantly photographed by master lens man S. Maruthi Rao. ‘Rajavin Paarvai’ (TMS and P. Suseela) is another hit number.

The film was produced by the sons of AV. Meiyappan — Murugan, Saravanan and Balasubramaniam.

With so many plus points, Anbe Vaa turned out to be a box office hit….

Remembered for the impressive performances by MGR, Nagesh and Saroja Devi, melodious music, interesting storyline and screenplay, picturesque cinematography which captured the beautiful landscape of the Himalayan region, and the fabulous sets in true AVM style.
the hindu

rajeshkrv
21st January 2016, 06:28 AM
esvee ji super

Richardsof
21st January 2016, 09:07 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அன்பே வா பட விமர்சனத்தின் இணைப்பை தந்த நண்பர் திரு bkhlabhi அவர்களுக்கும் , அன்பே வா - பதிவுகளை பாராட்டிய திரு ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி .

Richardsof
21st January 2016, 09:17 AM
சமுதாயத்தில் உள்ள அத்தனை பிரிவுகளின் ஏகோபித்த அன்பையும் , பாராட்டையும் பெற்ற ஒரே நடிகர் மக்கள திலகம் எம்ஜிஆர் . எம்ஜிஆர் படங்கள் - மக்களுக்கு பாடங்கள் . மேல்தட்டு கீழ் தட்டு என்ற வித்தியாசம் கிடையாது .திரையில் எம்ஜிஆர் தோன்றியதும் கிடைக்க கூடிய வரவேற்பு - கைதட்டல்கள் - உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு .
நாம் சொல்லவில்லை . வரலாறு பேசுகிறது .

Richardsof
21st January 2016, 09:22 AM
வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.

திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.

தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.

இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.

இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.

- அரவிந்தன்,

abkhlabhi
21st January 2016, 01:23 PM
http://www.tamilsguide.com/details.php?nid=39&catid=146974

8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார். இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன். தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது. ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது. எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது. 1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர். சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார். 14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது. வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார். ‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:– எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு? நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு. எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா? நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன். ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன். வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.

(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)

abkhlabhi
21st January 2016, 01:25 PM
http://www.tamilsguide.com/details.php?nid=39&catid=147109

எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!

abkhlabhi
21st January 2016, 01:36 PM
ரிகஷா தொழிலார்களுக்கு மழைக்கோட்டு வழங்கும் விழாவில் அறிஞர் அண்ணா, 4-12-1961 , நம்நாடு இதழில் :

என்தம்பி எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்? இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும், ‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார், நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான். எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால். ‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்." -

oygateedat
21st January 2016, 01:43 PM
http://s30.postimg.org/ixfdrocip/IMG_20160120_WA0027.jpg (http://postimage.org/)

oygateedat
21st January 2016, 01:47 PM
http://s12.postimg.org/csrhw12q5/IMG_20160120_WA0010.jpg (http://postimage.org/)

Richardsof
21st January 2016, 06:32 PM
நமது மக்கள் திலகத்தின் இளமைத் திருவிழா

http://i64.tinypic.com/2co26v6.jpg
ஒரு படத்தில் மக்கள் திலகம் நடிக்கிறார் என்றாலே அது அந்த படத்துக்கு பிளஸ்தான். மக்கள் திலகத்தை தவிரவும் , நாகேஷ், சரோஜா தேவி, சிம்லா, எம்எஸ்வி, ஏசிடி என அன்பே வா படத்துக்கு பிளஸ்கள் ஏராளம். அன்பே வா திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே அமுதகானங்கள்.

நான் பார்த்ததிலே....
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
உள்ளம் என்றொரு கோயிலிலே...
லவ் பேர்ட்ஸ்....
அச்சம் இல்லை.. நாணம் இல்லை..
நாடோடி... நாடோடி..
புதிய வானம்.. புதிய பூமி...

.... அதிலும் நாடோடி பாடலுக்கு தலைவரின் நடனம் really superb. சிம்லா விழாவில், குட்டி யானை போன்ற நெல்லூர் காந்தாராவை அலேக்காக ஒருவர் தூக்குவதே கஷ்டம். அவரை அப்படியே தூக்கி சில விநாடிகள் தனது வலிமையான தோள்களில் அந்த மாமிச மலையை மக்கள் திலகம் வைத்திருப்பது பிரமிப்பை ஏற்படுத்தும்.

மக்கள் திலகம் படங்களில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஹைலைட்டாக அமையும். இதிலும் ஹோட்டலில் காந்தாராவ் அடியாட்களுடன் கொண்டாட்டத்தில் இருக்க, சரோஜாதேவியை தலைவர் பின் தொடர்ந்து தொல்லை செய்கிறார் என்று நினைத்த காந்தாராவ் தனது ஆட்களுடன் சேர்களை தூக்கி முன்னே வர, மக்கள் திலகமும் நாற்காலியை தூக்க பெரிய சண்டையை எதிர்பார்க்கும்போது...... சரோஜாதேவி என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் மக்கள் திலகத்தை கட்டிப்பிடித்துக் கொள்ள... (என்னதான் கோபம் இருந்தாலும் உணர்வு பூர்வமான காதலை அந்த தழுவல் உணர்த்தி விடும்.தன் மீது கோபம் கொண்ட சரோஜாவின் இந்த திடீர் தழுவலை எதிர்பார்க்காத மக்கள் திலகத்தின் எக்ஸ்பிரஷன் சூப்பர்.) உண்மையை உணர்ந்த காந்தாராவ் ‘லவர்ஸ் ஃபைட்’ என்று கூறிவிட்டு சிரித்தபடி தனது ஆட்களுடன் வெளியேற சண்டை இல்லாத கிளைமாக்ஸ் என இதிலும் வித்தியாசம்.

ஹோட்டலில் ஆங்கிலப் பின்னணி இசையுடன் சரோஜா தேவியும் மக்கள் திலகமும் தங்கள் காதலை துறக்க முடிவு செய்து பேசும் உணர்ச்சி மிக்க காட்சி. படத்தில் இதுதான் கொஞ்சம் சீரியஸ் காட்சி. அதுவும் நம்மை கட்டிப்போட்டு ஒன்ற வைக்கும். அந்த காட்சியில் பிளாக் சூட்டில் அட்டகாசமாக இருக்கும் மக்கள் திலகத்தின் கோட்டில் அசோகன் ரோஜாப் பூவை செருகுவார். ஆனாலும் மக்கள் திலகத்தின் முகப்பொலிவுக்கு முன் ரோஜா எடுபடாது.

தாமரைப் பூவுக்கு ஆசைப்படுவது போல அதைப் பறிக்க சொல்லி மக்கள் திலகத்தை ஐஸ் குளத்தில் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்து ஏமாற்றுவார் சரோஜா தேவி. மேலே ஏறி வந்ததும் தும்முவது போல தலைவர் நடிப்பது இயற்கையாவே தும்மல் வந்து தும்முவது போல அவ்வளவு இயல்பாக இருக்கும்.

மறுநாள் சரோஜா தேவிவை கலாய்க்க குளிர் ஜூரம் வந்தது போல நடித்து அவர் கையாலேயே நெஞ்சில் தைலத்தை தேய்த்து விடச் செய்யும் மக்கள் திலகத்தின் அழகும் குறும்பும்... சரோவின் கனிவும் மழலைக் கொஞ்சலும்...

மொத்தத்தில் அன்பே வா இளைமைத் திருவிழா.

அன்பே வா மட்டும் இல்லை. மக்கள் திலகத்தின் படங்களின் பாடல்கள் அழியா வரம் பெற்றவை. தனக்கே உரிய இசை ஞானத்தால் பாடல்களை அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்தான் அவை இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குறிப்பிட்ட பாடலை மட்டுமே தேர்ந்தெடுப்பதால் மற்ற பாடல்கள் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விடப்படும். பின்னர், அவை பயன்படுத்தப்படாமலே போய் விட்டன. சில பாடல்கள் வேறு படங்களில் இடம் பெற்றன.

அதுபற்றி சிறு குறிப்பு அடுத்த பதிவில்.

Richardsof
21st January 2016, 06:40 PM
கிளாஸிக் ஃப்ளாஷ் பேக்
http://i67.tinypic.com/1qgymr.jpg
புலவர் புலமைப் பித்தன் மிகவும் அருமையான புலமை பெற்ற கவிஞர். முறைப்படி தமிழ் கற்றறிந்து புலவர் பட்டம் பெற்றவர். அவரது பாடல்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. சில பாடல்கள் அவர் எழுதி மக்கள் திலகம் படத்தில் இடம் பெறாமல் போனவை. அந்தப் பாடல்களை இப்போது கேட்டாலும் மயக்கம் தருவதோடு, மக்கள் திலகம் படத்தில் இடம் பெறவில்லையே என்று பொறாமைப்பட வைக்கும்.

‘நல்லதை நாடு கேட்கும்’ படத்துக்காக

‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை...’

என்ற பாடலை எழுதினார். தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வர் ஆகிவிட்டதால் படம் நின்று போனது. (புரட்சித் தலைவர் மறைந்த பிறகு, அவர் வெறும் 6 நிமிடங்களே தோன்றும் காட்சிகளை இணைத்து ஜேப்பியார் அதே பெயரில் படத்தை வெளியிட்டார்)

‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை...’ பாடல் நீயா? படத்தில் இடம் பெற்றது. அருமையான பாடல். மக்கள் திலகத்தை மனதில் நினைத்துக் கொண்டே இந்த பாடலை புலமைப் பித்தன் இயற்றியிருப்பது வரிகளை கவனித்தால் தெரியும். மற்ற கவிஞர்களுக்கும் புலமைப் பித்தனுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மக்கள் திலகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு பணியாற்றியவர் அவர். புரட்சித் தலைவரில் தோய்ந்து ரசிகனின் பார்வையில் இருந்து பாடல்களை எழுதியவர். அதனால்தான், ‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. என் இரு விழியே ஒரு கணமும் இமைப்பதில்லை..’ என்ற நமது மனதில் இருக்கும் உண்மையை தனது பாடல் வரிகளில் கொண்டு வந்தார்.

அதேபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்துக்காக,

‘இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...’

என்ன ஒரு அற்புதமான இலக்கிய நயத்தோடு அதே நேரம் விரசம் இல்லாமல் அமைந்த பாடல். இந்த பாடல்கள் மக்கள் திலகம் படத்தில் இடம் பெற்றிருந்தால், கற்பனை செய்தாலே மனம் சிறகடிக்கிறதே. இனங்களிலே .... பாடல் நல்ல பெண்மணி படத்தில் இடம் பெற்றது.

அது போலவே, ‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...’ பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்துக்காக புலமைப்பித்தன் எழுதியது. இதற்கு பதிலாக வேறு பாடல் தேர்வு செய்யப்பட்டதால், அந்தப் படத்தில் இடம் பெறவில்லை. படத் தயாரிப்பாளர் கனகசபையிடம் அவரது படத்தின் பாடல் பற்றி எம்.எஸ்.வி. பேசிக் கொண்டிருக்கும்போது இந்த பாடலை பாடிக் காண்பித்திருக்கிறார். கனகசபைக்கும் பிடித்துப் போக, புலமைப்பித்தனிடம் எம்.எஸ்.வி. சொல்லியுள்ளார்.
‘சிவகாமியின் செல்வன் ’படத்தில் நாம் பாட்டு எழுதினால் மக்கள் திலகம் மகிழ்ச்சியடைவார் என்றாலும், எதற்கும் ஒருவார்த்தை அவரிடம் சொல்லி விடலாம் என்று தலைவரை சந்தித்திருக்கிறார் புலமைப் பித்தன். விஷயம் முன்கூட்டியே மக்கள் திலகத்துக்கு தெரிந்திருக்கிறது. எங்கு என்ன நடந்தாலும் மக்கள் திலகத்துக்கு தெரிந்து விடும்.

புலமைப் பித்தன் சொன்னதும் ‘நீங்கள் எல்லா படங்களுக்கும் பாடல் எழுதி புகழ் பெற வேண்டும். என்னைச் சேர்ந்தவர்கள் உயர்வு பெறுவது எனக்கு பெருமை’ என்று வாழ்த்தியிருக்கிறார் தலைவர். அதுதான் பொன்மனச் செம்மல்.

‘எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது’ பாடலை எழுதியவர் புலவர் புலமைப் பித்தன்.

புதுமைப் பித்தன் இல்லை.

ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘உயிரோவியம் நடக்கின்றதோ..’ பாடல் எழுதப்பட்டு கடைசியில் அந்த பாடல் வேறொரு பாடலின் இசை சாயலில் இருப்பதாக மக்கள் திலகம் கருதியதால் அதற்கு பதிலாக எழுதப்பட்டதுதான்.

‘அழகெனும் ஓவியம் இங்கே


காலத்தால் அழியாத ரசனை மிக்க பாடல்.

நாயகி பாடுவது போலவும் இருக்கும். புலமைப் பித்தன் மட்டுமல்ல. நாமே தலைவரைப் பார்த்து சொல்வது போல அமைந்த வரிகள்...

‘என்றும் இளைமை மாறாமல்
வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும்
எண்ணம் இனித்திடுமே..’

மக்கள் திலகம் அழகோவியமாக ஜொலிக்கும் அந்த இலக்கிய நயம் மிக்க பாடல் இதோ.....
https://youtu.be/GiK19sow_wM
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே?’

Russellisf
21st January 2016, 09:51 PM
விளக்குமாத்துக்கட்டைக்கு எதுக்கு
பட்டு குஞ்சம் ....
இந்த பழமொழி தென் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ...
அதாவது விளக்குமாறு. ..துடைப்பம். ..
வீட்டை பெருக்கும் இதுக்கு பட்டு குஞ்சம்
தேவையா என்பது பொருள் .....
இதைப்பற்றி பிறகு பார்க்கலாம். .........

17 / 01 / 2016... ஞாயிற்றுக்கிழமை
தங்க தலைவர் பிறந்த நாள். ....

ஜிம்கானா கிளப் 100 ஆண்டுகள் பழமையான
சென்னையில் உள்ள முதன்மையான கிளப். ..

புரட்சித் தலைவர் இந்த கிளப்பில் 1983 இல் முதலமைச்சராக இருந்த போது
வாலிபால் வீரர்களுக்கு பரிசளிக்க வந்த போது வேட்டி அணிந்திருந்த காரணமாக
உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி வெளியில் இருந்தே வீரர்களுக்கு பரிசு அளித்து சென்றார். ....

இந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது. ..
இந்த கிளப்பில் தடைகளை தாண்டி
புரட்சித் தலைவருக்கு ஒரு சிறப்பு செய்ய
வேண்டும் என்று நினைத்தேன். ...

சரியான நேரத்தில் தலைவர் பிறந்த நாளை சிறப்பாக இங்கு நடத்த முடிவு செய்தேன். ....

நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து விழா
நடைபெற்றது. ..

விழாவில் நடந்ததை பார்போம் ......

திரு ஆதம்பாக்கம் முருகன் அவர்கள்
தன்னால் பேச முடியாது ..பேசினால்
அழுதுவிடுவேன் என்று கூறி உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உரையாற்றினார். ......

திரு ராம் வினாயக மூர்த்தி அவர்கள்
தலைவர் சமாதிக்கு அடிக்கடி சென்று
தியானம் செய்கிறேன் ...தலைவர் ஆன்மாவோடு பேசுகிறேன் என்ற
மிகப்பெரிய செய்தியை கூறினார். .....

திரு கனகராஜா அவர்கள் படகோட்டி படத்தில்
நடிகர் ராமதாஸ் அவர்களுக்கு தலைவர் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி கொடுத்ததை உணர்ச்சிவசப்பட்டு விளக்கினார். ...

திரு விஸ்வநாதன். .
திரு செல்வகுமார். ..
திரு மனோகர் ரஞ்சித். ...
திருத்தணி ஜெயசாரதி.....
திரு விஜயகுமார். ....
திரு சடையாண்டி. ...
திரு ஹூசேன். ..
திரு குருநாதன். ...
திரு ராமகிருஷ்ணன்....
திரு எம்ஜிஆர் சண்முகம்....
திரு ரமேஷ். .....
திரு சுதர்சன் கிருஷ்ணமூர்த்தி.....
திரு விமல் ராஜ் .......
ஏனைய அனைவரும் தலைவரை அவரவர்
பார்வையில் மிகவும் அருமையாக புகழ் பாடினார்கள். ....

திரு காவிரி மைந்தன் அவர்கள்
அழகு தமிழில் தலைவரை புகழ் பாடினார். ...

திரு மேஜர் தாசன் அவர்கள்
நாம் வருங்காலத்தில் தலைவர் வழியில்
எவ்வாறு நடக்க வேண்டும் என்று அழகாக
கூறினார். .....

மலேசியாவில் இருந்து அண்ணன்
திரு கமல் ராஜ் அவர்கள் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். ...

விழாவில் முத்தாய்ப்பாக அண்ணன்
திரு ரோசய்யா அவர்கள்.....

இவர் தென்னக இரயில்வேயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் சுத்தம் செய்யும் பணியில் இருந்துள்ளார். ...

விழாவில் இவர் கூறியதாவது...
ஒரு முறை தலைவர் ரயிலில் அரக்கோணம் வந்த போது முக்கிய பிரமுகர்கள் முன்னாடி நின்று அவரை வரவேற்க காத்திருக்கும் நேரத்தில். ..அண்ணன் ரோசய்யா அவர்கள் தனது கையில் இருந்த விளக்கமாறை தனது சட்டையின் பின்னால் செருகி தலைவரை
காண எல்லாருக்கும் பின்னால் நின்று கொண்டுஇருந்திருக்கிறார்...

ரயில் வந்தது ...தலைவரும் வந்தார். ..
கட்டுக்கடங்காத கூட்டத்தில் விளக்கமாறை
பின்னால் செருகி கையசைத்த ரோசய்யா
அவர்களை பார்த்ததும் கூட்டத்தை விலக்கி
ரோசய்யா அவர்களை முன்னால் வர சொல்லி அவர் கையை பிடித்திருக்கிறார்...

இந்த நிகழ்வை கூறும் போது அண்ணன் திரு ரோசய்யா
அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ...

அரக்கோணம் ரயில் நிலையத்தில்
விளக்கமாறுக்கு தங்க தலைவரால்
இந்த பூமியில்
முதல் முறையாக
பட்டு குஞ்சம் அணிவிக்கப்பட்டு
இருக்கிறது ........

நண்பர்களே நீங்களும் உங்கள் கருத்துக்களை
கண்டிப்பாக பகிரவும் .......

வணக்கம்.......

thalaivar facebook friends

Russellisf
21st January 2016, 09:55 PM
திரை உலகம் பத்திரிகை 1-12-1975. திகதியன்று இதயக்கனி திரைப்படம் பற்றி வெளியிட்ட தகவல்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1prbxhmw.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1prbxhmw.jpg.html)

Russellisf
21st January 2016, 10:00 PM
புரட்சித்தலைவர் ஒருமுறை கோவையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றவர் சென்னை செல்லும் விமானத்தை தவறவிட்டார்...
மறுநாள் காலையில் சென்னையில் இருக்கவேண்டிய சூழ்நிலை...
உடன் வந்த அமைச்சர் ஒருவரின் காரில் சென்னைக்கு புறப்பட்டார்...!
கார் சென்று கொண்டிருக்கும்போதுதான் தலைவர் கவனித்தார்...முன் சீட்டில் அமர்ந்திருந்த அமைச்சர் தூங்கி ட்ரைவர் மீது விழுந்து கொண்டிருப்பதையும் ட்ரைவர் சங்கடத்துடன் சகித்துக்கொண்டிருப்பதையும்...!
உடனே காரை நிறுத்தச் சொல்லி ட்ரைவரை அனுப்பி மூன்று பாக்கெட் நிலக்கடலை வாங்கிவரும்படி கூறினார் .
வந்ததும் ஒன்றை ட்ரைவருக்கும்
இரண்டு பாக்கெட்டுகளை அமைச்சரிடமும் கொடுத்தார்.
ஒன்றை சாப்பிடச்சொல்லியும் மற்றொன்றை தான் கேட்கும்போது தரும்படியும் கூறிவிட்டார்.
அமைச்சரும் ஒரு பாக்கெட் கடலையை சாப்பிட்டுவிட்டு,
மற்றொன்றை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார். தலைவர் எந்தநேரமும் கடலையைக் கேட்பார் என்பதால்
கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தார்...!
ட்ரைவருக்கு நிம்மதி...
கடைசிவரை தலைவர் கடலையை கேட்கவேயில்லை....!
தோட்டத்திற்குள் நுழைந்த பிறகுதான் தலைவர் கடலையை வாங்கிக்கொண்டு அமைச்சரைப் பார்த்து புன்னகை புரிந்தபோதுதான் அமைச்சருக்கு தலைவரின் புன்னகையின் பொருள் புரிந்தது...! தன்னை தூங்காமல் இருக்கச்செய்ய தலைவர் செய்த தந்திரம்தான் அது என்று...!
ஆஹா ....! இதுவல்லவா சமயோசித அறிவு...!


courtesy net

fidowag
21st January 2016, 10:04 PM
இறைவன் எம்.ஜி.ஆர். திருவடியை சென்றடைந்த , திரு. எஸ்.ராஜ்குமார் அவர்களுக்கு 16 ஆம் நாள் நினைவஞ்சலி இன்று அவரது குடும்பத்தினரால்
அச்சரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பெரும் சோகத்துடன் அனுசரிக்கப்பட்டது .

சென்னையில் இருந்து, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைப்புகளை
சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர்.

நிகழ்ச்சி குறித்து அமைக்கப்பட்ட பேனர்கள் /சுவரொட்டிகள் ஆகியன நண்பர்களின்
பார்வைக்கு

http://i68.tinypic.com/zx1v6p.jpg

Russellisf
21st January 2016, 10:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpszofqopxz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpszofqopxz.jpg.html)

fidowag
21st January 2016, 10:07 PM
மறைந்த திரு. எஸ். ராஜ்குமார் அவர்களின் கடை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்
http://i63.tinypic.com/nf2v5t.jpg

oygateedat
21st January 2016, 10:08 PM
http://s22.postimg.org/qwr32vdzl/IMG_20160121_WA0048.jpg (http://postimage.org/)

fidowag
21st January 2016, 10:09 PM
http://i64.tinypic.com/aoo0pj.jpg

fidowag
21st January 2016, 10:11 PM
அச்சரப்பாக்கத்தில் அவரது இல்லத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்.
http://i68.tinypic.com/vdo0nl.jpg

fidowag
21st January 2016, 10:12 PM
http://i66.tinypic.com/r79kew.jpg



சென்னை சைதாபேட்டையில் வரும் 31/01/2016 ஞாயிறு அன்று மாலை மறைந்த
திரு. எஸ். ராஜ்குமார் அவர்களுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.

அவரது உற்றார், உறவினர், குடும்பத்தினர் மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் முகவரி விரைவில் திரியில் பதிவிடப்படும்.


ஆர். லோகநாதன்.

oygateedat
21st January 2016, 10:21 PM
நாளை முதல் (22.01.2016)

கோவை

டிலைட் திரை அரங்கில்

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான

வெற்றிக்காவியம்

விவசாயி.

கடவுள் என்னும் முதலாளி என்ற பாடல் காட்சி இதே கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

fidowag
21st January 2016, 10:23 PM
http://s30.postimg.org/ixfdrocip/IMG_20160120_WA0027.jpg (http://postimage.org/)நேற்று (20/01/2016) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கதை எழுதி நடித்த "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

oygateedat
21st January 2016, 10:26 PM
http://s15.postimg.org/xkcc80hu3/FB_20160118_22_25_58_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
21st January 2016, 10:30 PM
http://s13.postimg.org/sisyjdx6v/IMG_20160120_WA0028.jpg (http://postimage.org/)

oygateedat
21st January 2016, 10:34 PM
http://s2.postimg.org/90aabem95/FB_20160121_22_02_27_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.BHOOMINATHAN ANDAVAR, MUMBAI.

siqutacelufuw
21st January 2016, 10:35 PM
http://i63.tinypic.com/nf2v5t.jpg

http://i63.tinypic.com/33axlzq.jpg

http://i67.tinypic.com/2qtwgnl.jpg

oygateedat
21st January 2016, 10:36 PM
http://s9.postimg.org/6rtfqpdv3/FB_20160121_22_04_18_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
21st January 2016, 10:45 PM
http://s7.postimg.org/n087912ob/IMG_20151016_WA0006.jpg (http://postimage.org/)

siqutacelufuw
21st January 2016, 10:47 PM
நாளை முதல் (22.01.2016)

கோவை

டிலைட் திரை அரங்கில்

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான

வெற்றிக்காவியம்

விவசாயி.

கடவுள் என்னும் முதலாளி என்ற பாடல் காட்சி இதே கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் மருதகாசி எழுதிய பாடல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரபலமான பாடல் : கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி

thanks for additional and special news on the shooting spot.

Russellisf
21st January 2016, 10:57 PM
இந்தியில் இதய வீனை

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsqajy384n.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsqajy384n.jpg.html)

oygateedat
21st January 2016, 11:02 PM
http://i63.tinypic.com/nf2v5t.jpg

http://i63.tinypic.com/33axlzq.jpg

http://i67.tinypic.com/2qtwgnl.jpg

மக்கள் திலகத்தின்
பக்தர் அன்புக்குரிய நண்பர் சைதை ராஜ்குமார்
அவர்களின் பண்பு நலன்களை பட்டியலிட்டு
கவிதை எழுதிய அன்பு நண்பர் திரு ஹயாத் அவர்களுக்கும் பதிவிட்ட பண்பாளர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி. அன்னாரின் இரங்கல் கூட்டம் 31ம் தேதி நடைபெறும் செய்தி அறிந்தேன். நானும் நமது நண்பர்களும் கலந்துகொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துத்கொள்கிறேன்.

oygateedat
21st January 2016, 11:06 PM
http://s17.postimg.org/u5u0tcd9r/FB_20150920_16_54_01_Saved_Picture.jpg (http://postimage.org/)

oygateedat
21st January 2016, 11:34 PM
மக்கள் திலகத்தை
என்றும் மறக்காத
பக்தர்கள்.

உலகில் இவரைப்போல் இனி ஒருவர் புகழின்
உச்சத்தை அடையப்போவதில்லை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை ராயல் திரை அரங்கில் எங்க வீட்டுப்பிள்ளை காவியத்தைக் காணவந்தவர்கள்.
http://s23.postimg.org/n5xjnhf23/IMG_20160121_WA0067.jpg (http://postimage.org/)

oygateedat
21st January 2016, 11:43 PM
http://s12.postimg.org/di8l1f199/IMG_20160121_WA0057.jpg (http://postimage.org/)
Courtesy - Mr.Samuvel.

oygateedat
22nd January 2016, 12:00 AM
http://s11.postimg.org/frd84kclf/IMG_20160121_WA0068.jpg (http://postimage.org/)

rajeshkrv
22nd January 2016, 01:53 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அன்பே வா பட விமர்சனத்தின் இணைப்பை தந்த நண்பர் திரு bkhlabhi அவர்களுக்கும் , அன்பே வா - பதிவுகளை பாராட்டிய திரு ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி .

romba naal aachu esveeji ungala paathu.. andha thread pakkam aalaye kaanom

Richardsof
22nd January 2016, 05:15 AM
மனதிலே சாந்திகிடைக்கும்போது அமைதி ஒரு அழகிய ஆபரணமாக எங்களை
அலங்கரித்துக் கொள்ளும். ஆனால் எம்மில் பலருக்கு இன்று மனதில் சாந்தியும்,
தங்கள் வாழ்க்கையில் அமைதியும் இருக்கின்றனவா என்றால் இல்லை.

ஒருவனின் செயல்பாடுகளும், சிந்தனைக்களும்தான் அவனை ஆட்டிப்படைக்கும்
காரணிகளாகும் என்று ஒருவன் புரிந்து கொண்டால் அவன் அமைதி அடைகிறான்.
சாந்தி பெறுகிறான். ஒரு மனிதன் அமைதியான சூழ்நிலையில் இருக்கும்பொழுதுதான்
தன் அறிவுகொண்டு பிறரை அறிந்துகொள்ளமுடியும். அமைதி பெற்ற மனிதன் தன்னை
எப்படி கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்வது என்பதை தெரிந்துகொண்டவன். எப்படி இந்த சமுதாயத்தோடு
இயைந்து செயல்படுவது என்ற சமூகக் கண்ணோட்டம் புரிந்தவன்.

இனிமையும், அழகும் நிறைந்த வாழ்வை தங்கள் கோபத்தால்
பாழ்படுத்திக் கொண்டவர்கள் எம்மில் ஏராளம். இவர்கள் அமைதியும், இனிமையும் கொண்ட
நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தவறியவர்களே. வாழ்வை கசக்கும்படி செய்து
தங்கள் உடலில் கெட்ட இரத்தத்தை ஓடச் செய்தவர்கள் இவர்கள். சுய கட்டுப்பாடு இல்லாமல்
தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டவர்கள் பலர் எம் சமுகத்தில்
வாழ்கிறார்கள். ஆக, எண்ணங்களை கட்டுபடுத்தி தன்னை தூய்மை ஆக்கிக்கொண்ட
மனிதன் அமைதி அடைகிறான். சுயகட்டுப்பாடுதான் வலிமை. அமைதியான மனம்தான் சக்தி.
இவற்றை உங்களோடு அணைத்துக்கொள்ள முயலுங்கள். வாழ்க்கை சுகமாகும்.
அதிலும் அந்திமத்து காலம் அமைதிபெறும்.

https://youtu.be/I_8KVZTuPcE
courtsy - keezhvanam - net

fidowag
22nd January 2016, 08:15 AM
தினமலர்(வெள்ளிமலர்) 22/01/16
http://i66.tinypic.com/2hxpnog.jpg
http://i66.tinypic.com/213n8s1.jpg

oygateedat
22nd January 2016, 01:36 PM
http://s29.postimg.org/lm26q9987/FB_20160121_23_53_53_Saved_Picture.jpg (http://postimage.org/)

Russellvpd
22nd January 2016, 03:50 PM
பொன்மனச் செம்மலை குறை கூறுவர்கள் பற்றி இயக்குநர் ஸ்ரீதர். குருட்டுப் பயல்கள் கண்கள் திறக்கட்டும்.


http://i67.tinypic.com/11c3yb9.jpg

Russellvpd
22nd January 2016, 03:54 PM
http://i65.tinypic.com/14waan5.jpg

Russellvpd
22nd January 2016, 08:12 PM
http://i68.tinypic.com/15i6xqg.jpg

பக்தர்களின் இதய ஜோதியே எங்கள் தங்கமே புரட்சித் தலைவரே பக்தனை மதிக்கும் தெய்வமே வாழ்க.

oygateedat
22nd January 2016, 08:59 PM
அன்பு நண்பர்களே

மாற்று திரியில் நமது இதய தெய்வத்தை
பற்றி ஒருவர் எழுதியதற்கு
நமது திரியில் திரியின் விதிமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தி பதில் எழுதி பதிவிட்ட நண்பர் - அப்பதிவை அவரே நீக்குவார் என்று நம்புகிறேன்.

oygateedat
22nd January 2016, 09:05 PM
http://s2.postimg.org/sl5l1cb3d/IMG_20160122_WA0034.jpg (http://postimage.org/)

Russellvpd
22nd January 2016, 09:10 PM
-deleted with warning-

oygateedat
22nd January 2016, 09:46 PM
http://s9.postimg.org/rkc6r86v3/IMG_20160121_WA0076.jpg (http://postimage.org/)

oygateedat
22nd January 2016, 10:22 PM
நன்றி அன்பு நண்பரே

மக்கள் திலகத்தை

மாசற்ற நமது தலைவரைப்பற்றி
தவறாக எழுதும்போது நமது நண்பர்கள் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் நமது தெய்வம் நமக்கு சொல்லிக்கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டை நாம் மறந்து விடக்கூடாது.

என்றும் அன்புடன்,

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
22nd January 2016, 10:25 PM
http://s11.postimg.org/to9rhn0yr/IMG_20160121_WA0058.jpg (http://postimage.org/)

oygateedat
22nd January 2016, 10:30 PM
http://s13.postimg.org/6775czvqv/IMG_20160121_WA0059.jpg (http://postimage.org/)

oygateedat
22nd January 2016, 10:34 PM
http://s24.postimg.org/ua2b1rpz9/IMG_20160121_WA0060.jpg (http://postimage.org/)

orodizli
22nd January 2016, 10:41 PM
Makkalthilagam well wishers register so many kind of news, articles like Any Time Emperor Our MGR., pleasingly...

oygateedat
22nd January 2016, 10:42 PM
http://s12.postimg.org/r7uxr22jx/IMG_20160121_WA0069.jpg (http://postimage.org/)

oygateedat
22nd January 2016, 10:45 PM
http://s7.postimg.org/d4ap91rmj/IMG_20160121_WA0070.jpg (http://postimage.org/)

oygateedat
22nd January 2016, 10:49 PM
http://s18.postimg.org/7wo8cg7dl/IMG_20160121_WA0075.jpg (http://postimage.org/)

Russellisf
22nd January 2016, 11:04 PM
நடிப்பு எனும் குண்டு சட்டியில் வெந்த பருப்பை காலம் காலமாக புகழ்வதை ஒன்றை தவிர வேறு ஒன்றும் அறியாத அதி மேதாவிகள் (பெயருக்கு சொல்லிகொள்ளலாம் ) எங்கள் தெய்வம் நடிப்பு , அரசியல், பொதுவாழ்வு, எனும் உலகினை தாண்டி கடவுள் எனும் பிரபஞ்சத்தில் சென்று விட்டார் அவருடைய ரசிகர்கள் பக்தர்களாக மாறி எத்தனையோ நல்ல காரியங்கள் செய்து கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் வெறும் மூன்று மணி நேர படத்தின் நடிப்பை மட்டும் இன்று வரை அலசி கொண்டு இருக்கும் நீங்கள் தான் இன்னும் சுத்திகரிக்கப் படாத குப்பைகள். . நிறுத்தி கொள்ளவும் இதோடு . இல்லை நாங்கள் அலசினால் தாக்கு பிடிக்க மாட்டிர்கள் எங்கள் தெய்வத்தின் நூற்றாண்டு பணிகள் எவ்வளவோ உள்ளது எங்களை மக்கள் தெய்வத்திற்கு சேவை செய்ய விடுங்கள் . உங்களை போல் பிரத்தியேக திரி எங்களுக்கும் உள்ளது ஞாபகம் இருக்கட்டும்

Russellisf
22nd January 2016, 11:12 PM
தலைவரின் இயற்கை நடிப்பு, அசாத்திய சண்டை காட்சிகள் , அறுபதிலும் இருபது வயது வாலிபனின் சுறுசுறுப்பு , காதல் காட்சியில் இளமை ரசம் , மக்களுக்கு தன் படத்தின் மூலமாக திருக்குறளின் நெறிகளை சொல்லும் விதம் இன்றளவும் மக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து மன்னவனின் ஒவ்வொரு அசைவுக்கும், கை தட்டி ஆரவாரம் செய்யும் திறமையான நடிப்பு இந்த உலகில் எங்கள் புரட்சி நடிகரை தவிர வேறு எவரும் கிடையாது .

Russellisf
22nd January 2016, 11:16 PM
என்தங்கை, பெற்றால் தான் பிள்ளையா , பாசம் , தாய்க்கு பின் தாரம் , இந்த மூன்று படங்கள் போதும் மூண்ணூறு படங்கள் என்ன மூவாயிரம் படங்கள் நடித்தாலும் எங்கள் இயற்கை நடிக மன்னவரின் ஆண்மைத்தனமான நடிப்புக்கு முன்னால் எல்லாம் வெறும் தவிடுபொடி ,

Russellisf
22nd January 2016, 11:28 PM
நடிக மன்னவரின் திரை நடிப்பினை பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை , ஒரு ஸ்டில் போதும் ஓராயிரம் பக்கங்கள் எழுதலாம் அப்பொழுது படம் முழுக்க ஆரம்பித்தால் புத்தகம் போட வேண்டி வரும்

oygateedat
22nd January 2016, 11:31 PM
http://s14.postimg.org/4jcjoha69/FB_20160122_23_25_18_Saved_Picture.jpg (http://postimage.org/)

Russelldvt
23rd January 2016, 02:26 AM
http://i66.tinypic.com/qrbyuv.jpg

Russelldvt
23rd January 2016, 02:27 AM
http://i66.tinypic.com/axkvlt.jpg

Russelldvt
23rd January 2016, 02:28 AM
http://i68.tinypic.com/35hmnnl.jpg

Russelldvt
23rd January 2016, 02:29 AM
http://i64.tinypic.com/fbe4iu.jpg

Russelldvt
23rd January 2016, 02:30 AM
http://i66.tinypic.com/21cxto0.jpg

Russelldvt
23rd January 2016, 02:30 AM
http://i67.tinypic.com/jfew6o.jpg

Russelldvt
23rd January 2016, 02:31 AM
http://i65.tinypic.com/154ybtw.jpg

Russelldvt
23rd January 2016, 02:32 AM
http://i66.tinypic.com/2ngh5iv.jpg

Russelldvt
23rd January 2016, 02:33 AM
http://i64.tinypic.com/11qtj0p.jpg

Russelldvt
23rd January 2016, 02:34 AM
http://i63.tinypic.com/2lvd3x0.jpg

Russelldvt
23rd January 2016, 02:34 AM
http://i67.tinypic.com/wuoshd.jpg

Russelldvt
23rd January 2016, 02:35 AM
http://i65.tinypic.com/255i1w2.jpg

Russelldvt
23rd January 2016, 02:36 AM
http://i66.tinypic.com/10eeplx.jpg

Russelldvt
23rd January 2016, 02:37 AM
http://i63.tinypic.com/29fs3a0.jpg

Russelldvt
23rd January 2016, 02:38 AM
http://i68.tinypic.com/oril2s.jpg

Russelldvt
23rd January 2016, 02:38 AM
http://i68.tinypic.com/24v3990.jpg

Russelldvt
23rd January 2016, 02:39 AM
http://i66.tinypic.com/ja9o9d.jpg

Russelldvt
23rd January 2016, 02:40 AM
http://i65.tinypic.com/2qbdrtl.jpg

Russelldvt
23rd January 2016, 02:41 AM
http://i63.tinypic.com/2cp9dnr.jpg

Russelldvt
23rd January 2016, 02:42 AM
http://i68.tinypic.com/j0w2gk.jpg

Russelldvt
23rd January 2016, 02:43 AM
http://i67.tinypic.com/3r0vc.jpg

Russelldvt
23rd January 2016, 02:43 AM
http://i63.tinypic.com/qx2g5d.jpg

Russelldvt
23rd January 2016, 02:45 AM
http://i64.tinypic.com/2r4ki87.jpg

Russelldvt
23rd January 2016, 02:46 AM
http://i68.tinypic.com/6eiv82.jpg

Russelldvt
23rd January 2016, 02:47 AM
http://i66.tinypic.com/b3u5xs.jpg

Russelldvt
23rd January 2016, 02:48 AM
http://i68.tinypic.com/2gugmfb.jpg

Russelldvt
23rd January 2016, 02:48 AM
http://i68.tinypic.com/in98ba.jpg

Russelldvt
23rd January 2016, 02:49 AM
http://i66.tinypic.com/2yv5p52.jpg

Russelldvt
23rd January 2016, 02:50 AM
http://i65.tinypic.com/261burn.jpg

Russelldvt
23rd January 2016, 02:51 AM
http://i65.tinypic.com/2ztjztk.jpg

Russelldvt
23rd January 2016, 02:52 AM
http://i68.tinypic.com/2zyiqeh.jpg

Russelldvt
23rd January 2016, 02:53 AM
http://i64.tinypic.com/2iu26gz.jpg

Russelldvt
23rd January 2016, 02:53 AM
http://i63.tinypic.com/2howi68.jpg

Russelldvt
23rd January 2016, 02:54 AM
http://i67.tinypic.com/xp4z06.jpg

Russelldvt
23rd January 2016, 02:55 AM
http://i65.tinypic.com/2ch76a.jpg

Russelldvt
23rd January 2016, 02:56 AM
http://i65.tinypic.com/11jn5vr.jpg

Russelldvt
23rd January 2016, 02:56 AM
http://i64.tinypic.com/s1ul1u.jpg

Russelldvt
23rd January 2016, 02:57 AM
http://i67.tinypic.com/2uqlohj.jpg

Russelldvt
23rd January 2016, 02:58 AM
http://i64.tinypic.com/11j3ig6.jpg

Russelldvt
23rd January 2016, 02:58 AM
http://i68.tinypic.com/2mm8mj4.jpg

Russelldvt
23rd January 2016, 02:59 AM
http://i67.tinypic.com/213263a.jpg

Russelldvt
23rd January 2016, 03:00 AM
http://i63.tinypic.com/2d7j3aw.jpg

Russelldvt
23rd January 2016, 03:00 AM
http://i68.tinypic.com/23kx8k2.jpg

Russelldvt
23rd January 2016, 03:01 AM
http://i65.tinypic.com/t9fi1l.jpg

Russelldvt
23rd January 2016, 03:02 AM
http://i65.tinypic.com/oqf1oh.jpg

Russelldvt
23rd January 2016, 03:03 AM
http://i63.tinypic.com/2mdruko.jpg

Richardsof
23rd January 2016, 12:11 PM
நாடோடி மன்னன் படத்தை பற்றி மக்கள் திலகத்தின் பதில்

கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?

பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.

இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.

இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".

‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.

Richardsof
23rd January 2016, 12:13 PM
திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள் கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக் கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின் முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:

"நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'

"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'

ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல் வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:

""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன். படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.

உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.

நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற "தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல "தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.

நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால் ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.'' என்கிறார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'

நன்றி: தினமணி.காம்

Richardsof
23rd January 2016, 12:17 PM
thanks karthik sir . Repeating your aug- 2014 posting.

பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)

1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்).

ரிக்ஷாக்காரனுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா நடித்து வெளியான இரண்டாவது படம். இதற்கு முன் மஞ்சுளா நடித்து படப்பிடிப்பு நடந்த உலகம் சுற்றும் வாலிபன் மேற்கொண்டு வேலைகள் நடைபெறாததால், அதற்குப்பின் துவங்கப்பட்ட இதயவீணை வெளியீட்டில் முந்திக்கொண்டது. இதற்கு அடுத்த படமாக உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

இதயவீணையில் இன்றைய என் விருப்பமாக வருவது 'பொன் அந்தி மாலைப்பொழுது' என்ற மனதை மயக்கும் ரம்மியமான பாடல். பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் அருமையான டூயட்டாக அமைந்தது. அழகிய வண்ணத்தில் எழிலான காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்துக்கே ஹைலைட் பாடலாக அமைந்தது. குடியிருந்த கோயில் படத்தில் 'நான்யார் நான்யார் நீ யார்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் இது.

பாடகர்திலகம் மற்றும் இசையரசியின் அருமையான ஹம்மிங்கோடு துவங்கும் இப்பாடலுக்கு மூன்று சரணங்களுக்கும் மூன்று வித்தியாசமான மெட்டைத்தந்து அசத்தியிருந்தார்கள் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ். அவர்களது இசைப்பயணத்தில் இந்தப்படமும், இந்தப்பாடலும் மைல்கல் என்றால் மிகையில்லை.

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்

(முதல் சரணம் ஒரு மெட்டில்)

மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளிப்
பனிவிழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலின்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக்காலையில் விழிக்கின்ற வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு

(அடுத்த சரணம் வேறொரு மெட்டில்)

கட்டுக்கூந்தல் தொட்டுத்தாவி என்னைத்தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடிவர
சொல்லிசொல்லி வழங்கட்டும் கவிதை
எண்ணி எண்ணி மயங்கட்டும் இளமை
எந்நேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு

(மூன்றாவது சரணம் பிறிதொரு மெட்டில்)

ஆடைமூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசைகொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
கண்ணோடு கண் பண்பாடுமோ
என் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்

இந்தப்பாடலில் மக்கள்திலகம் மற்றும் மஞ்சுளாவுக்கு அருமையான கண்ணைக்கவரும் உடைகள். மக்கள்திலகம் முதலில் மஞ்சள், அடுத்து ஆரஞ்சு, இறுதியில் சிவப்பு வண்ணங்களில் பேண்ட் கோட், அணிந்து கூடவே விதவிதமான கூலிங்க் கிளாசும் அணிந்து அசத்த, மஞ்சுளாவும் அதற்கேற்றார்போல வண்ண உடைகளணிந்து நம்மை கிறங்கடிப்பார்.

பாடல் வரிகள், சிறப்பான இசை, அருமையான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நாயகன், நாயகி என எப்போது பார்த்தாலும் மனதைக்கவரும் பாடல் 'பொன் அந்தி மாலைப்பொழுது...

Stynagt
23rd January 2016, 12:50 PM
எந்த கட்சியானாலும் என் தலைவன் பெயரை சொல்லித்தான் ஆகவேண்டும் !

http://i67.tinypic.com/25yuddw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
23rd January 2016, 12:57 PM
உலகிலேயே 72 அடி உயர பிரத்தியங்கிரா காளியின் உபாசகரும் புரட்சித்தலைவரின் பக்தருமான திரு. பால முருகனின் பிறந்த நாள். இந்த ஆசிரமத்தின் ஸ்தாபகர் திரு. நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://i67.tinypic.com/dgqmih.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
23rd January 2016, 10:54 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் பொங்கல் வெளியீடாக திரையிடப்பட்டு வெற்றி
நடை போட்ட நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் "அலிபாபாவும் 40
திருடர்களும் " ஒரு வார வசூல் - ரூ.98,000/-
http://i67.tinypic.com/20ayzva.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
23rd January 2016, 11:00 PM
தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் , மதுரை சென்ட்ரல் சினிமாவில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " திரைக்கு வருகிறது.
http://i67.tinypic.com/noh3ya.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

oygateedat
23rd January 2016, 11:00 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் பொங்கல் வெளியீடாக திரையிடப்பட்டு வெற்றி
நடை போட்ட நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் "அலிபாபாவும் 40
திருடர்களும் " ஒரு வார வசூல் - ரூ.98,000/-
http://i67.tinypic.com/20ayzva.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.


Thank you Mr.Loganathan for your information.

Russelldvt
24th January 2016, 02:41 AM
படம் : படகோட்டி
பாடல் : பாட்டுக்கு பாட்டெடுத்து..

http://i65.tinypic.com/6s9uki.jpg

Russelldvt
24th January 2016, 02:42 AM
http://i68.tinypic.com/33l01ar.jpg

Russelldvt
24th January 2016, 02:44 AM
http://i67.tinypic.com/2rnc0v4.jpg

Russelldvt
24th January 2016, 02:45 AM
http://i65.tinypic.com/2zhegjm.jpg

Russelldvt
24th January 2016, 02:46 AM
http://i68.tinypic.com/119rvxt.jpg

Russelldvt
24th January 2016, 02:49 AM
http://i65.tinypic.com/21d37cz.jpg

Russelldvt
24th January 2016, 02:50 AM
http://i64.tinypic.com/2wflsm0.jpg

Russelldvt
24th January 2016, 02:51 AM
http://i64.tinypic.com/350ly74.jpg

Russelldvt
24th January 2016, 02:52 AM
http://i67.tinypic.com/e0pg5w.jpg

Russelldvt
24th January 2016, 02:53 AM
http://i66.tinypic.com/5oi2c3.jpg

Russelldvt
24th January 2016, 02:54 AM
http://i67.tinypic.com/2ziau1c.jpg

Russelldvt
24th January 2016, 02:55 AM
http://i63.tinypic.com/ou6w0p.jpg

Russelldvt
24th January 2016, 02:56 AM
http://i67.tinypic.com/33ys0vk.jpg

Russelldvt
24th January 2016, 02:57 AM
http://i66.tinypic.com/2nb4whh.jpg

Russelldvt
24th January 2016, 02:58 AM
http://i68.tinypic.com/2ef6l8w.jpg

Russelldvt
24th January 2016, 02:59 AM
http://i66.tinypic.com/k3w2di.jpg

Russelldvt
24th January 2016, 03:33 AM
படம் : அடிமைப்பெண்
பாடல் : ஏமாற்றாதே ஏமாற்றாதே..

http://i67.tinypic.com/6tfn92.jpg

Russelldvt
24th January 2016, 03:34 AM
http://i65.tinypic.com/2gujy38.jpg

Russelldvt
24th January 2016, 03:35 AM
http://i63.tinypic.com/30b2p0x.jpg

Russelldvt
24th January 2016, 03:35 AM
http://i66.tinypic.com/5agzmp.jpg

Russelldvt
24th January 2016, 03:36 AM
http://i64.tinypic.com/2zzqmbo.jpg

Russelldvt
24th January 2016, 03:37 AM
http://i67.tinypic.com/mm515i.jpg

Russelldvt
24th January 2016, 03:38 AM
http://i66.tinypic.com/1izx2b.jpg

Russelldvt
24th January 2016, 03:39 AM
http://i63.tinypic.com/29cnu9u.jpg

Russelldvt
24th January 2016, 03:40 AM
http://i65.tinypic.com/343k9ps.jpg

Russelldvt
24th January 2016, 03:40 AM
http://i67.tinypic.com/4u6q75.jpg

Russelldvt
24th January 2016, 03:41 AM
http://i67.tinypic.com/v416kz.jpg

Russelldvt
24th January 2016, 03:42 AM
http://i65.tinypic.com/omngh.jpg

Russelldvt
24th January 2016, 03:43 AM
http://i63.tinypic.com/muet6v.jpg

Russelldvt
24th January 2016, 03:44 AM
http://i64.tinypic.com/x6eyjc.jpg

Russelldvt
24th January 2016, 03:44 AM
http://i66.tinypic.com/15dm4pi.jpg

Russelldvt
24th January 2016, 03:45 AM
http://i68.tinypic.com/27y7tvs.jpg

Russelldvt
24th January 2016, 03:46 AM
http://i64.tinypic.com/2n9fat5.jpg

Richardsof
24th January 2016, 10:50 AM
மக்கள் திலகத்தின் படகோட்டி , அடிமைப்பெண் பாடல்களின் நிழற்படங்கள் பதிவுகள் மிகவும் அருமை . நன்றி திரு முத்தையன் சார் .
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் அலிபாபவும் 40 திருடர்களும் -வசூல் விபரம் தகவலுக்கு நன்றி லோகநாதன் சார் .

Russellwzf
24th January 2016, 07:09 PM
http://i64.tinypic.com/fe4gsl.jpg

Russellwzf
24th January 2016, 07:09 PM
http://i64.tinypic.com/nzkh28.jpg

Russellwzf
24th January 2016, 07:10 PM
http://i64.tinypic.com/r0qemp.jpg

Russellwzf
24th January 2016, 07:10 PM
http://i68.tinypic.com/2z4mqvk.jpg

Russellwzf
24th January 2016, 07:13 PM
Courtesy : Facebook

http://i67.tinypic.com/n4dvzs.jpg

Russellwzf
24th January 2016, 07:14 PM
Courtesy : Facebook

http://i63.tinypic.com/2v33pkz.jpg

Russellwzf
24th January 2016, 07:36 PM
Rare image of Makkal Thilagam with his make up man Pitambaram.

http://i65.tinypic.com/2rqloaq.jpg

idahihal
24th January 2016, 07:40 PM
http://i64.tinypic.com/r0qemp.jpg
Excellent sir, Is it photoshop work or painting?

idahihal
24th January 2016, 07:41 PM
Rare image of Makkal Thilagam with his make up man Pitambaram.

http://i65.tinypic.com/2rqloaq.jpg

Very very rare and unseen image. Thank you very much for posting this image and expecting more from you.

Russellwzf
24th January 2016, 08:15 PM
Excellent sir, Is it photoshop work or painting?

Photoshop sir !

oygateedat
24th January 2016, 09:15 PM
மக்கள் திலகத்தின் பக்தர் கோவை துரைசாமி ஒரு ஆண்டிற்கு முன்பு தமது இல்லத்தில் மக்கள் திலகத்தின் சிலையை நிறுவினார். இன்று இரண்டாம் ஆண்டு விழா அவர் இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் திலகத்தின் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு v c ஆறுக்குட்டி, நடிகர் திரு சக்கரவர்த்தி கலந்து கொண்டனர். நானும் எனது இளைய புதல்வர் ராகுலும் விழாவிற்கு சென்றிருந்தோம். புகைப்படங்கள் சில நமது பார்வையாளர்களுக்கு.

oygateedat
24th January 2016, 09:22 PM
http://s10.postimg.org/639ng8ho9/WP_20160124_003.jpg (http://postimage.org/)