PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Russellxor
25th September 2016, 07:57 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/ed624441eb2e9f1495ef65f2c71054b4.jpg

Russellxor
25th September 2016, 08:00 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/3d0d0ca192a38c3b005c6eb23ab0881f.jpg

Russellxor
25th September 2016, 08:34 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/41f75a0a2db82431a3ee2e002eef2845.jpg

Russellxor
25th September 2016, 08:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/200980e269c3c28d8ad037c8f8b913bc.jpg

Russellxor
25th September 2016, 08:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/b776310d0b471a127d3106b94157f34a.jpg

Russellxor
25th September 2016, 08:58 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/faf3892a7761c4fd3b293a685af3f4ae.jpg

Russellxor
25th September 2016, 09:02 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/f534cb783bdbccb13e7c912b7bb0f417.jpg

Russellxor
25th September 2016, 09:07 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/c754660469e92a9cdc05f1acd35864ad.jpg

Russellxor
25th September 2016, 09:10 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/4a7307713cf1f14ab47886ed10e5926c.jpg

Russellxor
25th September 2016, 09:15 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/5677a696dc33e48ee0649e56577f17d3.jpg

Russellxor
25th September 2016, 09:19 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/3085d286529e028d053075377f6bccbb.jpg

Russellxor
25th September 2016, 09:27 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/b6e7e6fae8d66fa014ed800a8e939c01.jpg

Russellxor
25th September 2016, 09:33 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/626964fc854d44fc1bb95de1de9de4fe.jpg

Russellxor
25th September 2016, 10:23 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/fe52a4028ac94677118bb0c306bc1909.jpg

Russellxor
25th September 2016, 10:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/6a5b3768b0a7462f48b3cf6ccf0d929e.jpg

Russellxor
25th September 2016, 10:29 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/e41041aafbd68b994194d5e6356ac110.jpg

Russellxor
25th September 2016, 10:32 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/9ce5107feb390b105b949406c4dca45a.jpg

Russellxor
25th September 2016, 10:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/f2f9b9a98725056a0b60c77e742da8bd.jpg

Russellxor
25th September 2016, 10:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20160925/b03ad5ad568619be3082964b304c89ad.jpg

Russellxor
26th September 2016, 08:08 AM
http://uploads.tapatalk-cdn.com/20160926/e50b0b44e2c02ca7c26e50059b8f3860.jpg

Russellxor
26th September 2016, 08:12 AM
http://uploads.tapatalk-cdn.com/20160926/46d748d599aeb2f7b7bbba1e6fd28ab7.jpg

Russellxor
26th September 2016, 08:14 AM
http://uploads.tapatalk-cdn.com/20160926/df6ef6f1ff94f0870a1983721baeed3d.jpg

Russellxor
26th September 2016, 11:38 AM
புதிய தலைமுறை சேனல் 25.09 16
அன்று இரவு 11மணிக்கு

" இன்றும் புதுசு"

என்ற தலைப்பில் ஒளிபரப்பிய
"அந்த நாள்" படத்தின் சிறப்புக்களை இந்த நாளில் பகிர்ந்து கொண்ட
ராகவேந்திரா சார்,
முரளி சீனிவாஸ் அவர்களுக்கு
என் இனிய பாராட்டுக்கள்&வாழ்த்துக்கள்.

Gopal.s
27th September 2016, 07:54 AM
சிவாஜி கணேசன்

By RP.Rajanayahem

image: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSUduz0fyx-seKRy3-NWpnqCrr3QSmhJxQVb9W7EvWAV_caDX8V


image: https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSBHFM5YtQZXfEcMs8T5ojaAp6BoMHeG zsjKK-fhj6jOYozEz_gQQ


image: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRrD19pLn1fbW9-3xkaC8UK-FN6kLkTWSfy7FTR76n48XVZ4ZU6ug

திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
”காவிரி கண்ட தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து சேர,சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்திலே யார் கொடி தான் பறப்பது என்று இன்று போல் அன்றும் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

image: http://upload.wikimedia.org/wikipedia/en/c/cd/SivajiGanesan_19620824.jpg

தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”

”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!


”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’

இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!

ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.


’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.

’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’

’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.

ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.

சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.

கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!


1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!


ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.

நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்

காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்

வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’

1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

........

Gopal.s
27th September 2016, 08:32 AM
Sivaji, an actor nonpareil

By Our Tamil Nadu Bureau

CHENNAI, JULY 21. The news of the demise of Sivaji Ganesan plunged the State in grief. Besides members of the Celluloid world, politicians cutting across party lines and ardent fans expressed shock and distress over the death of the veteran actor. A number of cine personalities hurried over to the hospital to pay their last respects to the departed actor, including top stars Kamal Hassan,

Rajnikant and Mrs. Latha Rajnikant, Vijayakanth, Radhika Sarathkumar, Bharathiraja and Ibrahim Rowther.

The Chief Minister, Ms. Jayalalitha, said the death of Sivaji Ganesan was an irreparable loss to the art world, particularly Tamil cinema. She conveyed her condolences to the bereaved family.

The DMK president and former Chief Minister, Mr. M. Karunanidhi, said the death had caused unbearable grief to him. Recalling his long friendship with Sivaji Ganesan, Mr. Karunanidhi said the actor ushered in a revolution in the Tamil art world. He won the acclaim of artistes world-wide. Mr. Karunanidhi conveyed his condolences to the bereaved family. The CPI State Secretary, Mr. R. Nallakannu, said Sivaji Ganesan fetched honours for Tamil Nadu by his excellent acting.

Mr. G. A. Vadivelu, president of the Janata Dal (secular), said the death was a loss not only for Tamil Nadu but for the entire nation.

Veteran Tamil director, Mr. K. Balachander, said Sivaji was an actor nonpareil. ``It is doubtful if there will ever be an actor of his calibre in Indian cinema. Working on him with one movie (Ethiroli) was a big learning experience for me. There is a lot we can learn from him''.

A visibly upset Mr. M. S. Viswanathan, music director of yesteryear said, ``I am overwhelmed by grief at the loss of my long time friend and colleague, Sivaji Ganesan. I have been closely associated with him in several films and have watched him at his work. Surely, it is the end of a glorious chapter in Indian cinema''.

Mr. Mukta Srinivasan, who has produced several films starring Sivaji Ganesan, said the actor had dedicated his life to the cause of the nation. ``He was a true follower of Kamaraj and his ideals. Sivaji Ganesan knew the intricacies of stage and screen acting. The loss is too heavy for the nation to bear, particularly to those who were deeply concerned with the growth of aesthetic sense in cinema acting. We are not going to get another Sivaji Ganesan''.

Mr. AVM Saravanan, producer said, ``It is a void in the film world that can never be filled. There are only two eras in tamil film industry, before Sivaji and after Sivaji. The death of Sivaji is the end of an era''.

Mr. Vijayakanth, president, South India Film Artists Association said, ``he was the `Father' of the industry. His loss can never be filled''. Mr. Kothandaramaiah, president, South India Film Chamber of Commerce, expressed the condolences on behalf of the Chamber, ``the lighthouse of cinema is lost. We are all in the dark. It is an irreparable loss to Indian cinema, more specifically for Tamils all over the world. This veteran actor was a rare comet in the annals of film industry''.

Mr. Sarath Kumar, MP and actor who was shooting for a film at Gobichettipalayam said, ``Sivaji Ganesan was a born actor, a doyen in the film industry. Everyone of us must take a leaf out of his book''.

Mr.Kamal Hasan ``he was like a father to me. I am as grieved as his sons''.

Ms. Radhika, actress, said ``I think we have lost a great legend and I sincerely hope he will be remembered by every single Tamilian who was inspired by him''.

The Tamil Nadu Kalai Ilakiya Perumandram, while condoling the death of Sivaji Ganesan, said he proved that an individual could be a chapter in the film world.

Gopal.s
28th September 2016, 01:37 PM
மனிதரில் மாணிக்கம்-1973.




என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)

இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.




படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.




இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.




ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.

ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).




என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.

Gopal.s
28th September 2016, 01:40 PM
நடிகர்திலகத்தின் உடல்மொழி:

நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.

---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.

---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"

---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"

---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?

---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,

---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.

---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!

--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.

---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)

--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.

---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......

---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....

---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......


---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!

---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...

---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .

---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .

---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.


"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,


--அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?

---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.

---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.

---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.

---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;

---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;

---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.

--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.

---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!

---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..


--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..

---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..

---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்

---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..

பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.

சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.

சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.

அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .

துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.


பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.

பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.

யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.

வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.

ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.

Gopal.s
28th September 2016, 01:46 PM
"துணை"(1/10/1982).


அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.

இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.

தசரத ராமன்-

1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.

2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.

3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.

4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.

5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.

6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.

7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.

8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.

9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.

10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?

இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)

வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Gopal.s
30th September 2016, 07:32 AM
நெஞ்சம் மறப்பதில்லை 20: நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை! Posted by: Peru Thulasi Palanivel Updated: Thursday, September 29, 2016, 16:19 [IST] -oneindia.com

தமிழ்க் கலையுலகில் நாடக நடிகராக நுழைந்து, திரைப் படத்துறைக்குள் சாதாரண நடிகராக அடி வைத்து, 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விசி கணேசன் எனும் சிவாஜி கணேசன். பல்வேறு சவாலுக்குரிய வேடங்களை ஏற்று ஈடுஇணையற்ற முறையில் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி 'நடிகர் திலக'மாக ஜொலித்தவர் சிவாஜி கணேசன்.

அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். சிவாஜி, தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களை சரியான முறையில் உள்வாங்கி அந்த கதாபாத்திரத்தின் போக்குப்படி சிரிப்பது, நடப்பது, கோபப்படுவது, கண்ணீர் விடுவது என்று அனைத்தையும் தனது முகபாவங்களினாலும், உடல் அசைவுகளினாலும் அப்படியே செய்து காட்டுவதில் உலகத் திரைப்படக் கலைஞர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதன்மையானவர், நிகரற்றவர். சிவாஜிக்கு நடிப்பதற்கு கிடைத்த கதாபாத்திரங்களைப்போல் வேறு எந்த நடிகருக்கும் ஏன் இந்தியத் திரைப்பட அளவில் உள்ள எந்த கலைஞர்களுக்கும் அமையவில்லை. 'நவராத்திரி' படத்தில் அப்பாவியாக, முரடனாக, டாக்டராக, குடிகாரனாக, தொழுநோயாளியாக, விவசாயியாக, கூத்துக் கட்டுபவராக, காட்டிலாகா அதிகாரியாக, காவல்துறை அதிகாரியாக இப்படி ஒன்பது விதமான வேடங்களை எந்த விதமான கிராபிக்ஸ் வேலைகள் இல்லாமல், மேக்கப்பின் மூலம் எந்த மேஜிக்கும் செய்யாமல் ஒவ்வொரு வேடத்திற்கும் வெவ்வேறுவிதமான வேறுபாடுகளை காண்பித்து நடிப்பினால் மட்டும் வித்தியாசத்தை காட்டி நடித்து சாதனைப் புரிந்த ஒரே நடிகர் உலகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான் என்றால் அது மிகையான செய்தி அல்ல.

'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் நாடக நடிகராக அர்ஜீனன், நந்தனார், ஸ்ரீமுருகன், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகவத்சிங், திவான்பகதூர், கிறிஸ்துமஸ் தாத்தா, கொடிக் காத்த திருப்பூர் குமரன் இப்படி ஒன்பதுவிதமான நாடகங்களில் ஒன்பது விதமான வேடங்களை ஏற்று நடித்து சிறப்பித்தவர் நடிகர் திலகம். 'தெய்வமகன்' படத்தில் அப்பா, பெரியமகன், சிறிய மகன் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நடித்து படம் பார்த்தவர்களை பிரம்மிக்க வைத்தவர் நடிகர் திலகம். இதற்காக இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக முதன்முதலில் போட்டியில் கலந்துக் கொண்டது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். தேர்வுக் குழுவிலிருந்த பலரும், இந்த மூன்று வேடங்களையும் ஒரே நடிகர் நடித்தார் என்பதை முதலில் நம்பவில்லை. 'உத்தமபுத்திரன்' படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். 'கௌரவம்' படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்தார். 'மனிதனும் தெய்வமாகலாம்' படத்தில் ஆத்திகன் & நாத்திகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாட்டும் பரதமும்' படத்தில் பாட்டையும், பரதத்தையும் இணைக்கும் இருவிதமான கதாபாத்திரம். 'திரிசூலம்' படத்தில் தந்தை, மூத்தமகன், இளையமகன் என்று மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடிப்பும் மூன்றுவிதமாக இருந்தது. அதனால் படமும் ஹிட்டாகி வசூலையும் தந்தது. 'எமனுக்கு எமன்' படத்தில் எம தர்மராஜனாக, எதிர்க்கும் இளைஞனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினார். 'வெள்ளை ரோஜா' படத்தில் புனிதமான கிறிஸ்துவ பாதிரியாராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறுபட்டட நடிப்பை வெளிப்படுத்தினார். 'சந்திப்பு' படத்திலும் இரட்டை வேடமேற்றார். 'எங்க ஊர் ராஜா', 'என் மகன்', 'சிவகாமியின் செல்வன்', 'புண்ணியபூமி', 'விஸ்வரூபம்', போன்ற படங்களில் இரட்டை வேடமேற்று நடித்தார். 'பலே பாண்டியா' படத்தில் 3 வேடங்கள்.

ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட வேடமேற்று நடிகர் திலகம் சாதனைப் புரிந்தார். ஒரு வேடத்தை ஏற்றிருந்த படங்களிலும், ஒப்பற்ற நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடித்தார். முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நடித்த சிவாஜி, 'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார். 'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார். 'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார். 'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார். 'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார். 'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார்.

'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார். 'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார். 'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார். 'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார். 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார். ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார். 'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார்.

எண்பதுகளின் மத்தியில் தன் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகம். அவற்றுள் முக்கியமானது 'முதல் மரியாதை' படத்தில் ஊரே மதிக்கும், ஆனால் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இழந்த ஊர்ப் பெருசு வேடம். சிவாஜின் வாழ்க்கையில் காவியப் படமாக நின்றது. நடிகர் திலகத்தின் நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் இசையும் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தன

சிவாஜி கணேசன் படங்களில் கவுரவ வேடங்களில் வந்தவர் ரஜினி. ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். எண்பதுகளில் ரஜினியின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் சிவாஜி. அவற்றில் முக்கியமானவை விடுதலை. படிக்காதவன். விடுதலை படத்தில் யாருக்கு முக்கியத்துவம், ரஜினிக்கா.. சிவாஜிக்கா? என இரு தரப்பு ரசிகர்களுக்குள் எழுந்த மோதலால் பெரும் கலவரமே ஏற்பட்டது தியேட்டர்களில். 'படிக்காதவன்' படத்தில் மீண்டும் ரஜினியுடன், அவரது பாசமிகு அண்ணனாக வந்தபோது அதே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். வெள்ளி விழா கண்ட படம் அது. சிவாஜிக்கு கடைசி படமாக அமைந்தது ரஜினியின் படையப்பாதான்.

நடிப்பு வாரிசு என்று அழைக்கப்படும் கமல் ஹாஸனுடனும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் நடித்த அளவுக்கு இல்லை. இருவரும் இணைந்து நடித்தவை மூன்று படங்கள்தான். ஆரம்ப நாட்களில் நாம் பிறந்த மண் படத்தில் சிவாஜியின் வில்லத்தனம் கொண்ட மகனாக கமல் நடித்தார். பின்னர் சத்யம் படத்தில் சிவாஜியின் தம்பியாக கமல் நடித்திருப்பார். சிவாஜி - கமல் சேர்ந்து நடித்த மூன்றாவது படம் தேவர் மகன். சிவாஜிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். படத்தின் தரமும் சிவாஜி நடிப்பும் தேசிய விருதுக்கு மரியாதை சேர்த்தன என்றால் மிகையல்ல.

'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. குறிப்பாக பசும்பொன் படத்துக்காக இன்னொரு தேசிய விருதே அவருக்குத் தந்திருக்க வேண்டும். இன்றைய தலைமுறை நடிகரான விஜய்யுடன் இணைந்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி. 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும், 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மூத்தவராகவும் நடித்திருப்பார்.

இப்படி எண்ணிக்கையில் அடங்காத எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞராக இன்றுவரையிலும் ஈடு இணையாற்றவராக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார். அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தால் தந்தை பெரியாரால் வி.சி.கணேசனாக இருந்தவர் சிவாஜி கணேசனாக்கப்பட்டார். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்து ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் கண்ணீர் விட்டு கதறினார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துவது போல் நடித்தீர்கள்' என்று சிவாஜியைப் பாராட்டினார். சிவாஜி படங்களை ரீமேக் செய்யும்போது 'சிவாஜி நடிக்கின்ற கதாபாத்திரங்களில் எங்களால் நடிக்க முடியாது' என்று இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் அனைத்து மொழிப் பட உலகைச் சேர்ந்த மாபெரும் கலைஞர்கள் அறிவித்தார்கள். இன்றைய கலைஞர்களுக்கு நடிப்பின் பெட்டகமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

மார்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இவரது படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். 'எங்களால் நம்பவே முடியவில்லை இப்படியெல்லாம் ஒருவரால் நடிக்க முடியுமா? அபாரம், அற்புதம் இதுபோன்று வேறு எவராலும் நடிக்க முடியாது. எங்களைப் போல் உங்களால் நடிக்க முடியும், உங்களைப் போல் எங்களால் நடிக்க முடியாது,' என்று ஆச்சரியப்பட்டு நடிகர் திலகத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். அவருடன் இணைந்து படமெடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.

சிவாஜியைப் பாராட்டிய மேலும் சில பிரபலங்கள்...

தன்னுடைய கைவிரல் அசைப்பின் மூலமே நம்மையெல்லாம் கவர்ந்துவிட்ட சிவாஜிகணேசன் ஓர் உலகப் பெரு நடிகர். - முதறிஞர் ராஜாஜி

உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியமாகும். - தந்தை பெரியார்

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். நம் பாரத நாட்டிற்கு அவர் தம் நடிப்பின் மூலம் மகத்தான பெயரைத் தேடித் தந்திருக்கிறார். அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமையடைகிறது. பாரதத் தாய் பூரிப்படைகிறாள். - பெருந்தலைவர் காமராஜர்

எனது திரைக்கதை, உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் என்றும் தமிழாக, தமிழ் உரை நடையாக வாழக்கூடியவர் எனது நண்பர் சிவாஜி கணேசன். - கலைஞர் மு. கருணாநிதி.

தமிழகம் பெருமைப்படும் வகையில், தனது திறமையின் மூலம் புகழ்பெற்று வாழ்பவர் அறிஞர் அண்ணா போற்றிய என் அன்புத் தம்பியான கணேசன். - எம்.ஜி.ஆர்.

சிவாஜியின் நடிப்பாற்றலை 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் இணைந்து நடிக்கும்போது பார்த்தேன், தலைச்சிறந்த கலைஞரோடு நான் நடித்தது எனது பாக்கியம். -
என்.டி. ராமாராவ்

புதிய தலைமுறை நடிகர் நடிகையர் நடிப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் சிவாஜி அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே போதும். ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். - செல்வி. ஜெ.ஜெயலலிதா, முதல்வர்

எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம். - ஏவிஎம் சரவணன்.

குறிப்பு: வரும் அக்டோபர் 1-ம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 87வது பிறந்த தினம். அதையொட்டி அவரைப் பற்றி இந்தத் தொடரில் மேலும் சில கட்டுரைகள் வெளியாகவிருக்கிறது. -

தொடரும்...

Gopal.s
30th September 2016, 01:04 PM
மனக் கோயிலில் வீற்ற இறைகளுக்கு நிஜகோயிலும்

கண்டன மதங்கள் தமிழ்மதம் தலைநிமிர ஒரேஇறை

பணிக்கான தமிழ்மன கோயிலின் கொற்றவனுக்கு

மணி கோ யிலில் வீற்றிருக்க காலம் வந்ததே கண்டதே

பெருமிதத்துடன் தொழ தமிழனுக்கு தமிழ்க் கோட்டம்

இருதிசைகளில் தொழுகை அன்னையில்ல திசையொ ன்று

ஆட்சியன்னை தந்த மணிக் கோயில் திசையின்று

மாட்சிமைமிக்க மகாசிவனுக்கும் ராஜராஜனே கண்டான்

கோட்டம் திருவிளையாடிய சிவனுக்கோ தமிழ் அய்யன்

தந்தருளிய சிலையொன்று அன்னையின் மண்டபமொன்று

அந்தவகையில் ஆட்சியாளர் கடன் தீர்த் தனர் தமிழர்க்கு

திகதியில் காணும் திருநாள் தித்திப்பல்ல உவப்பல்ல

ஆகமக் கடவுள் போல நட்சத்திர,திதிகளில் காணும் திருநாளே

நல்மரபாம் நம்மிறைகளுக்கு நடிப்பின் கலையிறைக்கும் காண்போம்

வெல்வது தமிழேயென தரணி காண செல்வோமினி தமிழ்மண்டபம்

இத்திருநாள் குடும்ப கொண்டாட்டமல்ல மக்கள் திருநாள்

முத்தமிழும் முத்தமிடும் முதற் திருநாள் முதற் தமிழனுக்கு

மாற்றோர் பண்பாள ர்களின் சிற்றவைக்கு பிரதியாக

போற்றுவோர் போற்றும் மறத்தமிழனின் பேரவை

உண்டு கொழுக்காமல் உண்ணாமல் வென்று

கண்ட மண்டபம் கண்ட கண்ணிமைக்காத சந்திரனுக்கு

என்றுமே வென்றுநிற்கும் அதிசய எழுத்தால் அர்ச்சித்த

மன்றமே வியந்து போற்றும் கோபாலனின் தலைவணக்கம்.

Gopal.s
30th September 2016, 01:37 PM
உன்னை தவிர யாராவது நான் சோழ மன்னன் பரம்பரை என்று சொல்லியிருந்தால் நகைத்திருப்போம். நீ சொன்ன போது வருந்தினோம். உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ,ஏன் சோழ பரம்பரை என்று தமிழ் நிலத்தை மூன்றிலொரு பங்காக குறுக்க வேண்டும்?



உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.



அவதார புருஷர்களில் தந்தை தாய் இருவரையுமே பெருமையாக அடையாளம் காட்டி வாழும் ஒரே அவதாரன் நீ.

சரியான நிலத்தில் சரியான விதையாக ,நாடக உரத்தில் தழைத்த அற்புத பயிரே! உன்னை சுவைக்க வேண்டிய இனமோ , அந்நிய கள் குடித்து அறியாமையில் உழன்றது.

நாங்கள் ஏற்றுமதி செய்திருக்க வேண்டிய முதல் உலகத்தரம் வாய்ந்த இந்திய பொருள் நீதான்.ஆனால் தரமான பொருளுக்கு அழகான உறை போட்டு அலங்கரிக்க தவறினோம் . இப்போது சரியான உறைகளில் தவறான பொருளெல்லாம் ஏற்றுமதி கண்டு தழைக்கிறது.



நீ மட்டுமே பணம்,அதிகாரம் விளம்பர போதைகளால் போலி புகழில் வாழாமல், எங்கள் குடிசை வீடுகளிலும் நிரந்தர தெய்வமாய் எங்களை உன்னதம் பெற வைத்து எங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் அனுதினமும் உயிர்க்கிறாய்.இந்த உயிர்ப்பு ,சமாதிகள் அல்ல.சந்நிதிகள் .



ஒரு பிறவியால் ,இத்தனை பிறவிகளுக்கு வாழும் போதே மோட்சமளித்த நடிப்பு ராமானுஜனே!!!



உலகத்திற்கு பல நாட்கள் ,பல தினங்கள். தாய்க்கு,தந்தைக்கு,நண்பர்களுக்கு,காதலர்களுக்க ு என்று. தமிழர்களுக்கு ஒரே நாள். அக்டோபர் 1 மட்டுமே.



தமிழர் பெருமை நாள்.



திருவள்ளுவனுக்கு பிறகு பெருமை மீட்ட நாள்.



சேர பாண்டியர்களை தலை குனிய வைத்த சோழ திருமகனின் அவதார நாள்.



மேதைமையும்,திறமையும் ,உழைப்பும்,நேர்மையும்,புகழும் அதிசயமாக இணையும் ஒரே நாளின் நினைவு திருநாள்.



உன்னால் தலை நிமிர்ந்த தமிழே தலை குனிகிறது. உன்னை போற்ற போதிய சொற்களின்றி.



என் உயிர்,உடல் என்றவற்றை தாண்டி எதை உனக்கு காணிக்கையாக்குவேன்?அழியும் இவைகள் அழியாத உனக்கு எப்படி காணிக்கையாகும்?



என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை.



எங்கள் போற்றுதலுக்குரிய தலை தமிழ் மகனே!!! தரம் கெட்ட தமிழர்களையும் உன் ஆன்மா மன்னிக்குமாக.வாழும்போதே நண்பர்-பகைவர், உற்றோர்-மற்றோர் என்று பேதம் காட்டாத நீயா ,தெய்வமாகிய பின் பேதம் காட்டுவாய்? உன்னை திரிக்கும் ,திரிக்கும் ,தமிழர்களாய் வாழாமல் தாழும் நரிக்கும் கூட அருள் தருவாய்

நடிப்புக்கும்,ஆண்மைக்கும்,அழகுக்கும்,திண்மைக் கும், தன்மைக்கும்,தகைமைக்கும்,பண்புக்கும்,நட்புக்கு ம்,தூ ய மனதுக்கும், சொற் தமிழுக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் தலை தெய்வமே!!



தமிழனான எனது முழு முதற் கடமை நிறைவேறிய திருப்தியில் ,நான் நிஜமாக நேசிக்கும் ஒரே நாளில் என் பணிகளை தொடங்குகிறேன்.

Harrietlgy
30th September 2016, 08:33 PM
From Tamil The Hindu,

http://tamil.thehindu.com/multimedia/dynamic/03028/sivaji1_3028864f.jpg



அக்டோபர் :1- சிவாஜி கணேசன் 88

சின்னையா - ராஜாமணி தம்பதிக்கு 1928-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளில் பிறந்த குழந்தைதான் கணேசன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தந்தை சிறை சென்றிருந்தால் பிறக்கும்போதே தந்தையின் முகம் காணவில்லை. தந்தை விடுதலையானபோது அவரது வேலை பறிக்கப்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடியேறினர்.

படிப்பின் மீது ஆர்வமில்லாத கணேச மூர்த்திக்குத் தெருக்களில் நடந்த கூத்துக்கள், நாடகங்கள் மீது ஆர்வம் அதிகம். நண்பர் காக்கா ராதாகிருஷ்ணன் மூலம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். கணேசனின் கலைப் பயணத்துக்கு அங்கு வித்திடப்பட்டது. பல முக்கியமான வேடங்களில், பெண் வேடம் உட்பட அனைத்து வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

பெரியாரின் பாராட்டு

அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தில் திடீர் என்று ஏற்பட்ட மாறுதலால் முதல் நாள் அளிக்கப்பட்ட 90 பக்க வசனங்களை ஒரே இரவில் படித்து நாடகத்தில் சிவாஜியாகவே மாறினார் கணேசன்.

திரைப்படம், நாடகம் ஆகியவற்றைப் பெரிதும் விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா., அண்ணாவின் நாடகத்துக்குத் தலைமை தாங்கினார். கணேசனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அவரை வெகுவாக ஈர்க்க, நாடகத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார். முடிவில் கணேசனைப் பாராட்டிய அவர், ‘நீ சிவாஜியாகவே மாறிவிட்டாய் இன்று முதல் உன் பெயருடன் சிவாஜியும் சேர்ந்து சிவாஜி கணேசன் ஆகிறாய்’ என்று மனதாரப் பாராட்டினார்.

விமான டிக்கெட்டுடன் வந்த வாய்ப்பு

பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ என்ற நாடகத்தில் சிவாஜி கணேசன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவந்தார். அந்நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனர் பி .ஏ. பெருமாள் முதலியாரும் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து இந்நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். இப்படத்தின் கதாநாயகன் குணசேகரனாக கே. ஆர். ராமசாமியை நடிக்கவைக்க ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் முடிவெடுத்தார். ஆனால் பி.ஏ. பெருமாள் ஒரு புதுமுக நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற முடிவுடன் ‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்த கணேசனைக் கதாநாயனாக நடிக்க வைக்க விரும்பினார்.

திருச்சியில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனுக்கு விமான டிக்கட்டுடன் சென்னையிலிருந்து சினிமாவில் கதாநாயனாக நடிக்க அழைப்பு வந்தது. 1951-ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் சக்ஸஸ் சக்ஸஸ் என்ற முதல் வசனத்துடன் தன் கலையுலக வாழ்வை ஆரம்பித்து, சினிமாவில் வெற்றி நாயகனாக அரை நூற்றாண்டுக் காலம் திகழ்ந்தார்.

அழியாத பிம்பங்கள்

‘பராசக்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள், புராண, சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள், எதிர்மறையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் தன்னுடைய நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், நடை, உடை பாவனையாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சிறந்த நடிகனாக உருமாறினார். சிவன், கர்ணன், வ.உ.சி., கட்டபொம்மன் போன்றோரை நினைக்கும்போது நம் நினைவில் சிவாஜியின் முகமே நிழலாடும். தந்தை, மகன், அண்ணன், கணவன் எனப் பல்வேறு உறவு முறைகளை அழியாத திரைப் பிம்பங்களாக மாற்றினார்.

http://tamil.thehindu.com//multimedia/archive/03028/sivaji_3028865a.jpg

கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து...



தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று 305 திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சிறந்த நடிகருக்கான ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்ம, பத்மபூஷன் விருது, திரைத்துறை வித்தகருக்கான தாதாசாகேப் பால்கே விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியே விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய அன்னை இல்லத்தின் மேல் ஒரு சிறுவன் புத்தகம் படிப்பது போன்ற ஒரு சிறிய சிற்பத்தை வைத்திருந்தார். அவர் வாழ்ந்த சென்னை, தியாகராயநகர், தெற்கு போக் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலகமே அவரைக் கவுர வித்தது. 1962-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்திலுள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2001-ல் அவர் மறைந்த பிறகு மத்திய அரசு அவருக்குத் தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் சார்பில் புதுச்சேரியிலும், தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டன.

திரைக்கு அப்பால்

திரைப்படங்களைத் தாண்டியும் அவரது பங்களிப்பு நீண்டது. சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடிகர் சங்கத்துக்காகக் கலை அரங்கத்தைக் கட்டினார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்குச் சிலை அமைத்து அந்த இடத்தை நினைவுச் சின்னமாகச் சொந்தச் செலவில் பராமரித்தார். மும்பையில் வீ ரசிவாஜி சிலை அமைக்கப் பொருளுதவி வழங்கினார். சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்துக் கொடுத்தார். தன் மனைவி கமலா அம்மாள் போட்டிருந்த நகைகளை யுத்த நிதிக்காகத் தந்ததுடன், ரூ.17 லட்சம் தொகை வசூலித்துக் கொடுத்தார். மதிய உணவுத் திட்டத்துக்காகப் பிரதமர் நேருவிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். பெங்களுர் மக்கள் நலனுக்காக ‘கட்டபொம்மன்’ நாடகத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காமராஜர் சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை.

கலையுலகை வென்ற கலைஞனை 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் நாள் காலன் வென்றுவிட்டான். அவர் தன் நடிப்பால் மக்கள் மனதில் பெற்ற இடம் மகத்தானது, நிரந்தரமானது. காலன் உள்பட யாராலும் வெல்ல முடியாதது.

vasudevan31355
30th September 2016, 09:45 PM
இறைவனுக்கு பிறந்த நாள் உண்டா?

உண்டு.

அது அக்டோபர் 1 (1928)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355101/VTS_01_1.VOB_000252546.jpg

Murali Srinivas
1st October 2016, 12:59 AM
ஒரு நண்பரை பார்க்க போயிருந்தேன். அவர் வீட்டருகே அமைந்துள்ள கோவிலில் ஒரு விழா. அங்கே வேறு சில நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. எப்போதும் போல் சில பல விஷயங்களை பற்றி பேசிய பின் நமது பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றி பேச்சு திரும்பியது. கடந்த சில வருடங்களாக ஒரு விஷயம் கவனித்து வருகிறேன். முன் எப்போதையும் விட இப்போது நடிகர் திலகம் அதிகமாக பேசப்படுகிறார், சிலாகிக்கப்படுகிறார். அவரது பல்வேறு பரிமாணங்கள் சர்ச்சை செய்யப்படுகிறது.

இது போன்றே அவரது ஒவ்வொரு படங்களையும் மீண்டும் பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் அது புதிய அனுபவமாக மனதினில் விரிகிறது, சின்ன சின்ன நுணுக்கங்கள், நகாசு வேலைகள் ஆங்காங்கே பொன் முறுவல் முந்திரியாய் ருசிக்கிறது. மிக பிரபலமான படமாக இருந்தாலும் சரி, ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஈடுபாடு அபாரம்!

மாதாமாதம் நாம் அவரின் படங்களை திரையிடும்போதெல்லாம் இந்த பரவச சிலிர்ப்பை உணர்கிறேன். நமக்கு பழக்கமேயில்லாத ஆட்கள் கூட படத்தை பார்த்துவிட்டு அவர்கள் ரசித்ததை சொல்லும்போது எந்தளவிற்கு அவர் அனைவரின் மனங்களிலும் நிறைந்திருக்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அவரின் வீச்சை கண்டு பிரமிக்கிறார்கள்.

சுற்றி நான்கு சுவர்களுக்குள் என்ற சின்ன வரியில் அந்த ச எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பதை நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாகத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொன்ன இளம் பெண், அந்த நாள் பற்றி பேசப் போனபோது படத்தில சொத்து பிரிப்பது தொடர்பாக அண்ணன் தம்பி இடையே ஏற்படும் வாக்குவாதத்தின் போது நடிகர் திலகத்தின் முகத்தில் தோன்றும் உணர்வு, அந்த காலத்திலேயே எப்படி செய்திருக்கிறார் என்று வியந்த 20-களின் ஆரம்பத்தில் நிற்கும் சினிமா பயின்ற இளைஞன், இவர்களெல்லாம் நமக்கு உற்சாகமூட்டும் வீர்ய மாத்திரைகள்.

அது மட்டுமல்ல, சிவகாமியின் செல்வன் பார்த்துக் கொண்டிருந்தபோது ரங்காராவ் air force வீரர்கள் வெற்றி பெறலாம் அல்லது வீர மரணம் அடைய நேரிடலாம் எனும்போது அந்த வசனத்திற்கேற்ப நடிகர் திலகம் நெஞ்சை விரிப்பதை சுட்டிக் காட்டிய ஒரு சாதாரண தொழிலாளி, சமூகத்தின் அடிமட்ட சூழலில் வாழும் ஒரு ரசிகன், பாரிஸ்டரின் ஆங்கில வசனங்களையும் நீதிமன்ற procedures பற்றியும் விவரிப்பது போன்ற பல்வேறு பிரமிப்புகளை அண்மைக் காலமாக நடிகர் திலகம் நல்கிக்கொண்டேயிருக்கிறார். நவராத்திரி படத்தின் இறுதிக் காட்சியில் கல்யாணத்திற்கு வரும் 7 கதாபாத்திரங்களும் கல்கண்டை எடுக்கும் முறையிலே அந்த பாத்திரத்தின் தன்மை என்ன என்பதை பார்வையாளனுக்கு கடத்துவார் என்பதை சுட்டிக் காட்டிய ஒரு நண்பர் இப்படி தினம்தோறும் unlimited சந்தோஷ பிரமிப்புகளே!

முதலில் சொன்ன நண்பர்கள் குழுவிலும் அதேதான் நடந்தது. பேசிவிட்டு கிளம்பும்போது கோவில் விழாவில் இருந்து TMS குரல் கசிந்து வருகிறது. உன்னை பாடும் தொழிலின்றி வேறு இல்லை, உண்மைதான் என தோன்றுகிறது. பிறந்த நாளன்று மட்டும் அல்லாமல் எல்லா நாளும் உன்னை பாடும் நாளே என்பதுதான் சரி. அதற்குண்டான அனைத்து தகுதிகளையும் பெற்றவன் நீ.

88 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய யுக கலைஞனே!

இந்த மண்ணும் கடல் வானும் உள்ளவரை

உன் புகழ் நிலைக்கும்! உன் கொடி பறக்கும்!

அன்புடன்

sivaa
1st October 2016, 11:21 AM
88வது சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்

http://oi65.tinypic.com/dbtvfq.jpghttp://oi63.tinypic.com/i2jat1.jpg

Harrietlgy
1st October 2016, 12:12 PM
From Dinamani,


சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா உங்களுடன் -

‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!

பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.

உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.

சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.

சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.

‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.

அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,

கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.

அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.

அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.

நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?

நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.


டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.

போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.

அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,

‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.

அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’

அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.

நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.

நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.

அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தண்மைக் குணம்!

(தேவிகாவின் கூற்று அத்தனையும் நிஜம். 1970களில் தனது சினிமாக்களைப் பற்றி சுய விமர்சனம் செய்த நடிகர் திலகம், நீல வானம் பற்றிக் குறிப்பிடுகையில்,

‘திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.

சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த கணேசனின் பாராட்டு மிக மிக அபூர்வம்!)

‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு ரெண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும். எனக்கு ஆதரவாக இருந்த அவரது அன்பில் நான் ஒரு போதும் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது.

என் மகள் கனகாவுக்கு அப்ப 4 வயது. சிவாஜி தச்சோளி அம்பு மலையாள சினிமாவில் நடிக்கும் போது கை உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

அவரைப் பார்த்து நலம் விசாரிக்கப் போயிருந்தேன். கனகாவும் என்னுடன் அழைத்துச் சென்றேன். வலியைச் சற்றே மறந்து ஜாலியாக உரையாடியவர், கனகாவைப் பார்த்து ‘உன் பேர் என்னடா’...ன்னு கேட்டார்.

கனகா பதில் பேசாமல் நின்றாள். சிவாஜி மறுபடியும் செல்லமாக அதையே வினவினார். கனகா வாயை இறுக்க மூடிக்கிட்டா. பேசவே இல்லை.

சிவாஜி என்னைப் பார்த்தார்.

‘என்ன பிள்ளை வளர்த்துருக்கே. ' என்றார் இலேசான கோபத்துடன்.

‘என் பொண்ணு என்ன மாதிரியே வளர்ந்திருக்கா... ' என்று சொல்லி சமாளித்தேன். அது நிஜமே. நானும் ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேசவே மாட்டேன். ' தேவிகா.

சிவாஜி கணேசனும்-தேவிகாவும் உச்ச நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த 1964. தேவிகா பற்றி நடிகர்திலகம் கூறியவை-

‘நல்ல பெண். திறமை உள்ளவர். மேலும் முன்னுக்கு வரக் கூடியவர். சொன்னதைச் சட்டென்று புரிந்து கொள்வதுடன் அப்படியே சிரமப்பட்டு நடிப்பில் கொண்டு வந்து விடுவார்.

ஷூட்டிங்குக்கு வருவதில் ரொம்ப கரெக்ட். சின்ன உதாரணம்- ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு.

‘அழகே வா அருகே வா

அலையே வா தலைவா வா... ’

பாடல் காட்சியில் தேவிகாவை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது. அந்த விபத்தில் தேவிகா பிழைத்ததே பகவான் புண்ணியம். உயிர் பயத்தால் தொடர்ந்து அவர் நடிக்க வரமாட்டார் என்று எண்ணினேன்.

மறு நாளே அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தார்.

தொழிலில் எத்தனை ஈடுபாடோ அதே சமயம் விளையாட்டுப் பேச்சிலும் சமர்த்து. ஷூட்டிங் சமயத்தில் நிருபர்கள் யாராவது வந்தால் போச்சு. தேவிகாவுக்கு நேரம் போவதே தெரியாது. ’- வி.சி. கணேசன்.

சிவாஜியும் தேவிகாவும் ஜோடி சேர்ந்த படங்களில் சிகரம் ‘கர்ணன்’ அதைப் பற்றி எழுதாமல் தேவிகாவின் திரையுலக அனுபவங்களைப் பூர்த்தி செய்திட முடியாது.

தமிழில் அதிசயிக்கத் தக்க வகையில் நாற்பது லட்சம் பொருட்செலவில் ஈஸ்ட்மென் கலரில் உருவான முதல் பிரம்மாண்ட புராணச் சித்திரம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற முதல் இதிகாசப் படம்!

காற்றுள்ளவரை காதுகளில் தேனைப் பாய்ச்சும் கந்தர்வ கானங்கள் கர்ணன் படப் பாடல்கள். பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கண்ணதாசனால் மூன்றே நாள்களில் முழுமையாக எழுதப்பட்டவை.

1962-1963ல் தயாராகி 1964 தைத் திருநாளில் வெளியானது கர்ணன். தேவிகா கர்ணனின் மனைவி சுபாங்கி.

பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து ஒவ்வொரு அரங்கமும் போடப்பட்டது. சுபாங்கியின் வளைகாப்பு மஹாலுக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, விஜயா ஸ்டுடியோவில் மாபெரும் செட் அமைக்கப் பட்டது.

துரியோதனன் மனைவி பானுமதியாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவர் சுபாங்கியைத் தாய் வீட்டுக்கு வழி அனுப்பிப் பாடுவதாக வந்த, ‘மஞ்சள் பூசி மலர்கள் தூவி’ என்று தொடங்கும் வளைகாப்புப் பாடலில் தேவிகாவை வாழ்த்தி 45 நடனப் பெண்கள் ஆடினார்கள்.

ஒவ்வொரு காட்சியிலும் தேவிகாவின் அழகிய தோற்றமும், தலை அலங்காரமும், உடலெங்கும் ஜொலி ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் பிரமிக்க வைக்கும்.

அன்றைய தேதியில் வேறு எந்த பிரபல நடிகைக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு! தேவிகாவை மாத்திரம் தேடி வர மிக முக்கிய காரணம் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்.

பி.எஸ். இராமையா எழுதிய ‘தேரோட்டி மகன்’ நாடகத்தை அப்போது சேவா ஸ்டேஜ் வெற்றிகரமாக நடத்தி வந்தது.


அதில் தேவிகா துரியோதனன் மனைவி பானுமதியாக, மேடையில் இதிகாச வசனங்களைப் பேசிச் சிறந்த அனுபவம் பெற்றிருந்தார்.

தேரோட்டி மகன் கதையில் சுபாங்கியை, கர்ணனை அவன் தேரோட்டி மகன் என்பதற்காக வெறுத்து ஒதுக்கும் வில்லியாகக் காட்டினார்கள்.

போருக்குச் செல்லும் கர்ணனை சுபாங்கி வழியனுப்ப மறுப்பாள். பானுமதியாக நடிக்கும் தேவிகாவிடம் கர்ணன் வீரத்திலகம் இட்டுச் செல்லும் கட்டம் கைத்தட்டலைப் பெறும்.

பந்துலு வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு கர்ணன் படத்தை உருவாக்கினார்.

அதன் படி கர்ணனுக்கு விருஷசேனன் என்ற வாரிசு உண்டு. அவன் போரில் மடிவதாகக் காட்டப்பட்டது. அதனால் கர்ணன் படத்தில் சுபாங்கி கதாபாத்திரம் உன்னதமாக அமைந்தது. தேவிகாவின் ஸ்டார் இமேஜ் மேலும் உயர்ந்தது.

யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டு பார் முழுவதும் நிற மொழி பேதங்களைக் கடந்து அனிருத்தின் கொலவெறி பாடல் பரவி புயலைக் கிளப்பிய 2012. மார்ச் மாதம்- 16 ஆம் தேதி நவீன தொழில் நுட்பத்தில் கர்ணன் மீண்டும் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

எல்லாரும் ‘கொல வெறி’யில் லயித்திருக்க யாரும் எதிர்பாராத வகையில், எளிதாக இருபத்தைந்து வாரங்களைக் கடந்தது கர்ணன்.

அதே மார்ச் 30ல் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான தனுஷின் 3 உள்ளிட்டப் புதிய சினிமாக்களை விட, கோடிக்கணக்கில் வசூலித்து அரிய சாதனை படைத்தது கர்ணன்.

-பா. தீனதயாளன்.

Russellxor
1st October 2016, 01:26 PM
உன் ஆசி தவிர
வேறொன்றும் வேண்டாத மாபெரும் ரசிகர் கூட்டத்தை
கொண்டவரே...

http://uploads.tapatalk-cdn.com/20161001/e483ec89d2d3320a1777c70b4ab04f9a.jpg

Harrietlgy
1st October 2016, 08:40 PM
From Vikatan,

http://img.vikatan.com/cinema/2016/10/01/images/sivaji%20ganeshan.png

இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள். சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி. சிவாஜியின் மிகப் பெரிய பலமே, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன்மாதிரியும் கிடையாது பின் மாதிரியும் கிடையாது. சிவாஜியைப் பற்றி திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு காலகட்டங்களில் சொன்னவைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ

'என்னைப் போல் சிவாஜி நடிப்பார்- ஆனால், என்னால்தான் சிவாஜியைப்போல் நடிக்க முடியாது!

எம்.கே.தியாகராஜ பாகவதர்

'அம்மா' என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்ததில் திரைஅரங்கையே கை தட்டவைத்தவர் சிவாஜி ஒருவர்தான்.

நடிகர் சிவகுமார்

சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.

நடிகர் வி.கே. ராமசாமி

சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் மதுரை பாலகான சபாவிலிருந்த போதே நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை. பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக கம்பீரமாக நடை போடுவார். இந்த காலகட்டத்தில் 'இழந்த காதல்' என்ற நாடகத்தில், ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரமும், 'கள்வர் தலைவன்' நாடகத்தில் விஷ வைத்தியனாக நடித்ததும் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், 'பராசக்தி'யை படமாக எடுக்கும் போது குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டுமென பெரிதும் முயற்சி செய்து , திண்டுக்கல்லில் நாடகமொன்றில் நடித்துக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன் நிறுத்தினார்.

பராசக்தியின் படப்பிடிப்பு ஏ.வி.எம்மில் நடக்க ஆரம்பித்தபோதே சினிமா உலகில் அவரது நடிப்பைப்பற்றி ஒரே பேச்சாக இருந்தது. மற்ற ஃப்ளோர்களில் நடித்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் பெருந்திரளாக வேடிக்கைப் பார்க்கக்கூடி விடுவார்கள்.
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அப்போதைய சவுண்ட் என்ஜினீயராக இருந்த ஜீவா நானும் எத்தனையோ நடிகர்களின் குரல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன், இவரது நடிப்பும் குரலும் சிம்ம கர்ஜனையாக இருக்கிறது என்று மனந்திறந்து பாராட்டினார். 1952 தீபாவளியன்று வெளியான பராசக்தியின் வசனகள் கிளப்பிய வேட்டுச்சத்தம் திரை உலகில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

http://img.vikatan.com/cinema/2016/10/01/images/sivaji%201.png

நடிகர் நம்பியார்

உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.

யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமியைத்த்ர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.

நடிகை மனோரமா

சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார். அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்.

நடிகை சௌகார்ஜானகி

சிவாஜி ஒரு பிறவிக் கலைஞர். அவருடன் பணிபுரிந்த அந்தக்கால நாட்களை நினைத்தால் மனதுக்குள் எப்போதும் சிலிர்ப்பான அனுபவம்தான். அவரது தொழில்பக்தியையும் காலந்தவறாமையையும் வேறு எவரிடமும் நம்மால் பார்க்க முடியாது. திரையுலகின் தந்தை தாதாசாஹேப் ஆயுள் முழுவதும் சினிமா நன்றாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதேப் போல் நமது அரசாங்கமும் சிவாஜியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காலதாமதமாகவே தாதா சாஹேப் விருதை வழங்கியது.

கவிஞர் கண்ணதாசன்

எதை எழுதுவது, எதை விடுவது ? இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும் ? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ? சிவாஜி ஒரு மலை, சிவாஜி ஒரு கடல்.

கண்களின் கூர்மையைச் சொல்வேனா ? அல்லது கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ? ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக் காட்டும்உன்னத நடிப்பைச் சொல்வேனா ? அவரைப்போல் இதுவரை ஒருவர் பிறந்த தில்லை; இனி பிறப்பார் என்பதற்கும் உறுதி இல்லை ! இது உண்மை. உலகறிந்ததே !


http://img.vikatan.com/cinema/2016/10/01/images/sivaji%202.png


கவிஞர் வைரமுத்து

‘பராசக்தி‘ வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன். ‘மனோகரா‘ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா…? கட்டபொம்மன்‘ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா…? உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. இந்தியா சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதிமுக்கிய பங்கிருக்கிறது. நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம் பெற்றன !

எழுத்தாளர் சுஜாதா

ராஜராஜ சோழன், சிவாஜி கணேசனாக நடித்த,''ராஜராஜ சோழன்" படம் பார்த்தேன்! (தமிழ்நாடு பாட நூல் நிறுவன 3 -ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ராஜராஜ சோழன் பாடத்தில் சிவாஜிசாரின் படமே இடம் பெற்றிருந்தது).

வியாட்நாம் வீடு சுந்தரம்

இந்திய சிறந்த நடிகர்களுக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்கு வழங்கப்படவே இல்லை. இப்படி பல தரப்பட்ட பாராட்டுக்கள் இருந்தாலும், சிவாஜி நடிப்பை 'ஓவர் ஆக்ஸன்' என்று சொல்லும் சில விமர்சனச் சேவல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவாஜி ஷப்ட்டிலாக நடித்த (அண்டர் ஆக்ட்) அநேகப் படங்களை இந்த வகையினர்,ரொம்ப சௌகரியமாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் வாதத்துக்குத் துணையாக எம்.ஆர். ராதா, ரங்கராவ், நாகேஷ், சந்திரபாபு, டி.எஸ். பாலையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடிப்பைத் துணைக்கழைத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரங்கராவ்தானுண்டு, ஒரு சந்திரபாபுதானுண்டு. ஆனால், சிவாஜிக்குள் இவர்கள் எல்லோருமே உண்டு.

Harrietlgy
1st October 2016, 10:52 PM
From Vikatan,
நடிகர் திலகத்தின் 89 வது பிறந்தநாள் இன்று...அவரைப்பற்றிய சுவாரஸ்யங்கள் சில....

http://img.vikatan.com/news/2016/09/30/images/sivaji%20mgr%201.jpg

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் எடுத்துக்கொண்டிருந்த அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் பங்குதாரரான தயாரிப்பாளரின் நண்பர் அவரைப் பார்க்க வந்திருந்தார். படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் முதற்படம். படப்பிடிப்பை கொஞ்சநேரம் பார்த்த அவர், 'இந்த குதிரைமூஞ்சிக்காரனையா கதாநாயகனா போட்டிருக்க...வாயை இப்படி பிளக்கிறானேய்யா, படம் விளங்கினாப்லதான்' என அந்த நடிகரின் காதுபடவே பேசிவிட்டுச்சென்றார். அதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிமுக நடிகர் நொந்துபோனார். கவலைப்படாதய்யா எனஅவரை தேற்றிய தயாரிப்பாளர், படப்பிடிப்பை அத்துடன் நிறுத்தி அவரை சில மாதங்களுக்கு தனது சொந்த செலவில் சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு அனுப்பிவைத்தார். எல்லா செலவுகளும் தயாரிப்பாளருடையது.

திரும்பிவந்த சிவாஜியைப்பார்த்த தயாரிப்பாளரின் நண்பர் 'யாருப்பா இது புது கதாநாயகனா என்றார்...விபரத்தைச்சொன்னதும் அந்த தம்பியா இது...'என ஆச்சர்யத்தில் உச்சிக்கே போனார் தயாரிப்பாளர். அந்தளவுக்கு பொலிவாய் மாறியிருந்தார் அந்த அறிமுகநடிகர். நண்பரின் சொன்னதற்காக தன்னை படத்திலிருந்து நீக்காமல் தொடர்ந்து நடிக்க தனக்கு அளித்த அந்த தயாரிப்பாளரை தன் இறுதிக்காலம் வரை ஆண்டுதோறும் பொங்கலன்று அவரது சொந்த ஊரான வேலுாருக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று திரும்புவதை வழக்கமாக்கிக்கொண்டார் அந்த நடிகர். 1952 ல் வெளியாகி தமிழ்சினிமாவிற்கு புதியதொரு பாதையை வகுத்த அந்த திரைப்படம் பராசக்தி...அந்த கதாநாயகன் பின்னாளில் உலகப்புகழ்பெற்ற சிவாஜிகணேசன்...இப்படி சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கமே ஒரு தன்னம்பிக்கைக்கதை...

விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பதுதான் வி.சி கணேசன்...அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜயம் என்ற நாடகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்ததால், நாடகத்தின் நுாறாவது அரங்கேற்றத்தில் பெரியார், கணேசன் இனி சிவாஜி கணேசன் என பட்டம் வழங்கினார் . அந்த நாடகத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்து கணேசனுக்கு பரிந்துரைத்தது எம்.ஜி.ஆர் என்பது இன்னொரு சிறப்பு.

http://img.vikatan.com/news/2016/09/30/images/mgr%20sivaji%20600%205.jpg

தியாகராஜபாகவதர்,பியு சின்னப்பா என சொந்தக்குரலில் பாடி நடிக்கும் நடிகர்களின் காலம் முடிந்தசமயம் சிவாஜி, எம்.ஜி.ஆர் கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஜெமினி கணேசன் என அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவானார்கள். அதில் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அழுத்தமான பாத்திர வடிவமைப்பு, உருக்கமான நடிப்பு என முதல்வரிசையில் நின்றவர் சிவாஜி.
எம்.ஜி.ஆரைப்போன்றே சிவாஜியும் அண்ணா மீது அளவற்ற காதல் கொண்டவர். ஆனால் அண்ணாவின் மற்ற தம்பிகள் அவருக்கு உரிய இடம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னாளில் அவர் திருப்பதி சென்று வந்த விஷயத்தை பெரிதாக்கி மனஉளைச்சலை ஏற்படுத்தினர். நொந்துபோய் திமுகவிலிருந்து வெளியேறினார் சிவாஜி.

திருப்பதி சென்றால் திருப்பம் நேரும் என்பார்கள். சிவாஜிக்கு திருப்பதி 2 விதத்தில் திருப்புமுனையானது. அங்குதான் அவரது திருமணம் நடைபெற்றது. இறுதிவரை தன் மனைவியுடன் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சிவாஜி. ஆனால் அரசியலைப்பொறுத்தவரை அவருக்கு வேறு திருப்பம் நிகழ்ந்தது. அண்ணாவிடம் ஈர்ப்பு கொண்டு திமுகவில் இணைந்து பணியாற்றிய சிவாஜி, 50 களின் மத்தியில் திருப்பதி சென்றார். திரும்பிவந்தபோது அரசியல் களம் அதகளப்பட்டது. திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா என அவரது பட பாணியிலேயே போஸ்டர் ஒட்டி திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். நாத்திகக் கட்சியில் இருந்துகொண்டு திருப்பதி போனதால் இந்த எதிர்ப்பு. தியாகி குடும்பத்தை சேர்ந்தவரான அவரை காங்கிரஸ் அணைத்துக்கொண்டது.

திரையுலகிலும் அரசயலிலும், எதிரும் புதிருமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி விளங்கினாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அஙகு சென்று வந்த சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் பெரும் வரவேற்பை நிகழ்த்தினார் எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து அவரை மாலை மரியாதையுடன் சாரட் வண்டியில் அழைத்துவந்தார். சிவாஜி- எம்.ஜி.ஆர் இடையே தொழிற்போட்டி உச்சத்தில் இருப்பதாக பத்திரிகைகள் எழுதிவந்த நேரத்தில் இந்த நிகழ்வு அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கென ஒரு சிறப்பு மலரை வெளியிட்ட எம்.ஜி.ஆர், அதில் எந்த நடிகனுக்கும் கிடைக்காத பேறு இது என்றும், சிவாஜி ஒரு மகாநடிகன் எனவும் ஈகோ இன்றி பாராட்டித்தள்ளினார். இறுதிக்காலம் வரை ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் இன்னொருவர் பங்குகொள்வதை இருவரும் தவறாமல் கடைபிடித்தனர். சிவாஜி வீட்டுப்பிள்ளைகள் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றே அழைப்பர். அத்தனை நட்பை பேணிவந்தனர் திரையுலகில்.

http://img.vikatan.com/news/2016/09/30/images/mgr%20sivaji%20marriage.jpg

படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மறுநிமிடத்திலிருந்து அந்த கதாபாத்திரதோடு ஒன்றிவிடுவார் சிவாஜி. தன் அருகில் இருப்பவர்களை கண்களால் அளவெடுப்பதுமனிதர்களை அவ்வப்போது உற்று கவனிப்பார். அவர்களுக்கு சிவாஜி ஏன் தன்னை அபபடி கவனிக்கிறார் என குழம்புவார்கள். அவரது திரைப்படம் வெளியாகும்போது அதற்கான விடை கிடைக்கும். ஆம். அவர்களின் உடல்மொழியை படத்தில அற்புதமாக வெளிப்படுத்தி பாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருப்பார். திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஆதாரமானவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

நடித்துக்கொண்டிருக்கும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்பது சிவாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. அப்படி இறப்பதே தனக்கு பெருமையளிப்பதாகும் என தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வார். படப்பிடிப்புக்கு சென்றபோது எதிர்பாராமல் மரணமடைந்த முத்துராமனுக்கு நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் முத்துராமன் நம்மையெல்லாம் விட சிறந்த நடிகன்...அதனால்தான் தொழிலுக்கு சென்ற இடத்தில் இறந்தார் என நெகிழ்ந்தார் சிவாஜி. ஆனால் சிவாஜியின் இந்த ஆசை நிறைவேறாமல் போனது.

http://img.vikatan.com/news/2016/09/30/images/kamaraj%20sivaji.jpg

குடும்பத்தினர் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் சிவாஜி. தன் 2 சகோதரர்கள் குடும்பங்கள் உட்பட அனைவரும் இறுதிவரை ஒன்றாகவே வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மாபெரும் நடிகன் என்றாலும் அவருக்கு கணக்கு வழக்கு தெரியாது. தன் படத்தில் தன் சம்பளம் என்னவென்று கூட கேட்டு அறிந்துகொள்ள மாட்டார். எல்லாவற்றையும் அவர் தம்பி சண்முகம் பார்த்துக்கொள்வார். தன் சகோதரர்கள் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் சிவாஜி.

சிவாஜி தீவிர வேட்டைப்பிரியர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது தனது நெருங்கிய நண்பர், வேட்டைக்காரன் புதுார் மாணிக்கத்துடன் துப்பாக்கி தோட்டா சகிதம் கம்பீரமாக காட்டுக்கு புறப்படுவது அவருக்கு பிடித்த விஷயம்.
சிவாஜியின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப்போரில் பங்கேற்ற தியாகி. ஆனால் சிவாஜிக்கு திராவிட இயக்கத்தின் மீதுதான் ஆசை உண்டானது. அண்ணாவின் தலைமை, முரண்பட்டு காமராஜர் தலைமை, காமராஜரின் மரணத்திற்கு பிறகு ஜனதா தளம் என பயணப்பட்டு தன் சேவைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் இறுதியாக தமிழக முன்னேற்ற முன்னணியை துவங்கினார். திரையுலகில் ஈடில்லா புகழ்பெற்ற அவரால் அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.

http://img.vikatan.com/news/2016/09/30/images/sivaji%20vp%20sing.jpg

அமெரிக்கா சென்ற சிவாஜி விரும்பி பார்க்க விரும்பியது ஹாலிவுட் மார்லன் பிராண்டோவைத்தான். பார்த்ததும் அவரை பாராட்டித்தள்ளவேண்டும் என்ற கற்பனையுடன் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி, சந்திப்பின்போது சிவாஜியை மார்லன் பிராண்டோ பாராட்டித்தள்ளிவிட்டார். நெகிழ்ச்சியின் விளிம்பிற்கு போனார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் படத்திற்காக எகிப்து அதிபர் நாசர் கெய்ரோவிக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தார். அங்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் ஒருநாள் மேயராக சிவாஜிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் சாட்சியாக அவருக்கு அந்நாட்டின் சின்னம் பொறித்த சாவியை வழங்கினார் எகிப்து அரசு. இந்த கவுரவம் பெற்ற ஒரு திரைக்கலைஞர் சிவாஜி மட்டுமே.

http://img.vikatan.com/news/2016/09/30/images/sivaji%20with%20rajkapoor.jpg

கட்சியிலும் ஆட்சியிலும் தன் கைமீறி நடந்த பல சம்பவங்களால் மனமும் உடலும் தளர்ந்து உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆரை அவரது இறுதிக்காலத்தில் சந்தித்தார் சிவாஜி. அப்போது தம்பி உனக்கு ஒரு பொறுப்பை தரப்போகிறேன். நாளை வா அதுபற்றி பேசலாம் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சிலவேலைகளால் சிவாஜியால் போகமுடியவில்லை. சில நாட்களில் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு என்ன பொறுப்பை தர எண்ணியிருந்திருப்பார் என்ற ரகசியம் அந்த இரு திலகங்களுக்குள் முடிந்துபோனது.

Harrietlgy
2nd October 2016, 05:53 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 146 – சுதாங்கன்.


சிவாஜி : நீ வந்து கேக்கணும்ங்கிற அவசியமில்லே. ஒரு போன் பண்ணு.கொடுத்து அனுப்புவாங்க. எனக்கு வேண்டியதெல்லாம் படத்தோட மொத்த வசனங்கள் அடங்கின முழு ஸ்கிரிப்ட். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எழுதி முடிச்சுட்டு, முதல்லேருந்து எல்லாத்தையும் ஒரு தடவை எனக்கு படிச்சுக் காட்டு.

`பாசமலர்’லேருந்து இதுவரைக்கும் நீ எழுதின எந்த ஸ்கிரிப்டையும் நான் படிக்கச் சொல்லி கேட்டதில்லே.ஷுட்டிங்குல , செட்டுல சொன்ன வசனத்தை நான் பேசியிருக்கேன். அவ்வளவுதான்.

இந்த படத்திலே என்னமோ எனக்கு ஒரு `இண்ட்ரஸ்ட்’ ஏற்பட்டிருக்கு.அதோட, டைரக்டர் தாதா மிராசி தமிழ் தெரியாதவன். ஆனா நல்லா எடுப்பான். அதனால தான் அவனைப் போட்டிருக்கோம்.

எங்கள்ல நீயும் ஒருத்தன். அதனால இதை ஒன்னோட சொந்தப் படமா நினைச்சுக்கிட்டு, அப்பப்போ ஷீட்டிங்குக்கு வந்து டயலாக் சொல்லிக் கொடுத்து மேக்ஸிமம் ஒத்துழைக்கணும். நான் கேட்டதுக்காக எழுதி போட்டுட்டு ஓடிடாதே.’

வேடனிடம் அகப்பட்ட மான் வேறு வழியின்றி மிரண்டு போய் நிற்குமே, அதைப் போல நின்றேன்.

சிவாஜி: எப்ப எழுத ஆரம்பிக்கப்போறே?

ஆரூர்தாஸ் : யோசிச்சு சொல்றேன்.

சிவாஜி :யோசிக்கறதுக்கெல்லாம் நேரம் இல்லே.

ஆரூர்தாஸ் : ஷெட்யூல் பை ஷெட்யூலா எழுதிக் கொடுக்கட்டுமா?

சிவாஜி : `ஷெட்யூல் பை ஷெட்யூலா?’ டேய், ஆரூரான், ஒரே ஷெட்யூல்ல ஜூலை மாசத்துக்குள்ளே படத்தை முடிச்சு ஆகஸ்டுல ரிலீஸ் பண்ணணும்னு சண்முகம் சொல்லியிருக்கான்.

ஆரூர்தாஸ் : அப்படீன்னா இப்ப எனக்கு இருக்கிற நெருக்கடியான நிலைமையில ராத்திரியிலே உக்காந்து விடிய விடிய எழுதுறதை தவிர வேறு வழியில்லை.

சிவாஜி : சரி, எத்தனை ராத்திரியிலே எழுதி முடிப்பே?

ஆரூர்தாஸ் : ` ஏழு இரவுகள்! ஒன்று, இரண்டு நாள் கூட ஆகலாம். அது நான் போற வேகத்தை பொறுத்தது.

சிவாஜி : எனக்கு தெரியும். நீ வேகமாக எழுதக்கூடியவன். சீக்கிரம் முடிச்சிடுவே. ஓகே! எப்ப எழுத உக்கார போறே?

ஆரூர்தாஸ் : இன்னிக்கு ராத்திரியே.

சிவாஜி : வெரிகுட், எங்கே உக்காந்து எழுதப் போறே ?

ஆரூர்தாஸ்: எங்கே சொல்றீங்களோ அங்கே.

சிவாஜி: ஒண்ணு செய்றியா?

ஆரூர்தாஸ்: சொல்லுங்க.

சிவாஜி: ராயப்பேட்டை சண்முக முதலித்தெருவிலே நான் இருந்த அந்த வீடு இப்ப காலியா இருக்கு. அதோட, மொட்டை மாடியிலே நான் தனியா ஓய்வெடுக்கிறதுக்காக ஒரு சின்ன கீத்துக்கொட்டகை போட்டிருக்கேன். அமைதியா இருக்கும். நல்லா காத்து வரும். அது உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். அங்கே உக்காந்து எழுதுறியா? ஒரு தொந்தரவும் இருக்காது.

ஆரூர்தாஸ்: அதிலே ஒரு சின்ன கண்டிஷன்.

சிவாஜி : என்ன?

ஆரூர்தாஸ்: தேவர் பிலிம்ஸ் எழுத்து வேலையோட கூட ஷூட்டிங்குக்கும் வந்து `டயலாக்’ சொல்லிக் கொடுக்கணும்னு தேவரண்ணனும் எம்.ஜி.ஆரும் சொல்லி இருக்காங்க. ஆரம்பத்திலேர்ந்தே அப்படித்தான். அதனால ராத்திரி ஒன்பது மணிக்கு மேலதான் நான் `புதிய பறவை’ க்கு எழுத முடியும்.

சிவாஜி: உன் சவுகரியப்படி செய். அப்போ, நம்ம பையன் ராஜீவையும் டிரைவர் முனிசாமியையும் உன்னோட தங்க வெச்சிடறேன். நீதான் சிகரெட் கூட குடிக்கமாட்டியே. வயித்துக்கு வஞ்சகமில்லாம சாப்பிடுவே, அவ்வளவுதான். நீ ராத்திரியிலே இடியாப்பம், பாயா பிரியமா சாப்பிடுவேன்னு எனக்குத் தெரியும். எதிர்ல மெயின் ரோட்டுல `அமீன் கபே’ இருக்கு. அங்கேருந்து உனக்கு விருப்பமானதை வாங்கிக்கிட்டு வரச் சொல்லி சாப்பிட்டுக்க. சிரமத்தைப் பாக்காம எழுதி முடிச்சிட்டீன்னா, உடனே ஷூட்டிங்க ஆரம்பிச்சு முடிச்சு ஆகஸ்ட்ல ரிலீஸ் பண்ணிடலாம். பிசினஸெல்லாம் ஆயிடுச்சு. சரி. வேற என்ன வேணும் ?

ஆரூர்தாஸ்: ஒண்ணும் வேணாம். கவலைப்படாதீங்க. என் அன்னையின் அருளாலேயும், ஆசீர்வாதத்தினாலேயும் ஆகஸ்ட் மாசத்திலே நம்ம `புதிய பறவை’ திரைவானத்திலே பறந்து புகழையும் வெற்றியையும் கொடுக்கும். ஷ்யூர். இப்படி கூறிய வண்ணம் அவரது காலைத் தொடப்போன ஆரூர்தாஸை தடுத்துப் பிடித்துத் தன்னோடு கட்டி அணைத்துக்கொண்டு அவரது தோளில் பாசத்தோடு தட்டிக்கொடுத்தார் சிவாஜி.

ஆரூர்தாஸின் ஆந்தை வேலை ஆரம்பமாயிற்று.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஆரூர்தாஸ் அன்றைய பிரபல தந்திரக் காட்சி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான `பாபுபாய் மிஸ்திரி’யின் இந்தி மொழிப் படமான `சம்பூர்ண ராமாயண’த்துக்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்தார். அதில் ஒரு காட்சி. அசோகவனம், நள்ளிரவு நேரம். சீதை உறங்காமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். லங்கேஸ்வரனான ராவணன் வருகிறான். சீதையை பார்த்துக் கேட்கிறான்.

`ஜனக நந்தினி உலகமெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கிறது. உன் விழிகள் மட்டும் இன்னும் உறங்கவில்லையா?’

அதற்கு அவள் சொல்கிறாள்– `என் நாதரைக் காணும்வரையில் நான் கண்ணுறங்க மாட்டேன்.

அதைப் போல, ராயப்பேட்டை பகுதி முழுவதும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில் `கொலகாரன்பேட்டை’ என்று அன்று அழைக்கப்பட்ட இடத்தில் உள்ள சண்முகம் முதலி தெருவில், ஒரே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஓலை வேயப்பட்ட அறையில் மட்டும் ஒளி தெரிகிறது. உள்ளே, பலவந்தத்திற்கு ஆளான ஒரு வசனகர்த்தா பாயா, இடியாப்பம் தின்றுவிட்டு `மாங்கு மாங்கு’ என்று இடைவிடாது எழுதி தள்ளிக்கொண்டிருந்தார்.

அவருக்கு துணையாக துவார பாலகர்கள் போல, டிரைவர் முனிசாமியும், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குழந்தை உள்ளம் கொண்ட ராஜூவும் கையை தலையணையாக வைத்துக்கொண்டு கண்கள்மூடி மெல்லிய குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் `புதிய பறவை’ யை வண்ணத்தில் வசனம் பேச வைப்பதற்காக, அந்த எழுத்தாளர் தன் மூளையை கசக்கிக்கொண்டிருந்தார்.

`தினமும் பத்து மணியிலிருந்து விடியற்காலை ஐந்து மணி வரையில் `புதிய பறவை’ படத்திற்கு எழுதிக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். அதனால் அவர் கண்கள் சிவந்திருந்தன. அப்போது பகலில் அவர் தேவர் பிலிம்ஸின் `தொழிலாளி’ படத்தில் பகலில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது கண்களை கவனித்த எம்.ஜி.ஆர். `என்னாச்சு?’ என்று கேட்டார்.

சொன்னார் ஆரூர்தாஸ்.

சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு சொன்னார் எம்.ஜி.ஆர். `அன்புக்கு கட்டுப்பட வேண்டியதுதான். அதே சமயம் உடம்பையும் பாத்துக்கணும். உடம்பை வச்சுத்தான் உழைப்பு. இதைக் கேட்டு அழுது விட்டார் ஆரூர்தாஸ்.

அதே சமயம் இன்னொரு நாள், எம்.ஜி. ஆர். படத்தின் படப்பிடிப்பின் மதிய நேர இடைவேளை.

அப்போது–

sivaa
2nd October 2016, 06:56 PM
'கலைக்குரிசில்' சிவாஜி கணேசன்
நீர் அணிந்த ஆடை கூட நடிக்கும்!..
உமைத்தொட்ட காற்றும் பேசி நடிக்கும்.
உமை நோக்கி ஒளியுமிழும் விளக்கு நடிக்கும்....
நெற்றியாடும் சுருள் முடியும் மெல்ல நடிக்கும்.
கலைக்குரிசில் பாதம்பட்ட தரை நடிக்கும்.
திரையரங்கம் போர்த்திநிற்கும் கூரை நடிக்கும்.
கலா ரசிகன் அமர்ந்து ரசிக்கும் நாற்காலியின்
கால் நடிக்கும்,கை நடிக்கும்,திரையில் விழும்
இடைவேளை என்கின்ற எழுத்து நடிக்கும்.
அது முடிய ஒலிக்கின்ற மணியும் நடிக்கும்!
நரை தடவி நீர்வந்து நின்றபோது....
இருபதிலும் என் முடிகள் நரைக்கக் கண்டேன்....
உயிர்வரைபடங்கள் தமிழினில் நீர் வரைந்தபோது
இரை மறந்து திரையரங்கில் தமிழ் குடித்தேன்.
குறைகாண முடியா நிறை நடிப்பில்....
இந்தக்குவலயத்தில் உமைப்போல
எவர்தான் உண்டு ?...
'திருவிளையாடல்' திரைப் படத்தில் ஓர் சிலிர்ப்புக் காட்சி...
கம்பீரமும் அலட்சியமும் காலில் மின்ன...
கடற்கரையோரம் மிடுக்காக நெஞ்சுயர்த்தி...
நீர்திரை கிழிய நடை போட்ட காட்சி கண்டு
விரல் கிழிய விசிலடித்தேன்...வியந்து நின்றேன்!...
'கந்தன் கருணை' படத்தில் அந்த நடையைப் பார்த்து
என் கந்தர்மடம் வரும் வரைக்கும்
சொந்த நடை மறந்தேன் ஐயா...
'திருஅருட்செல்வர்' படத்தினிலே பெரும் ஆடல் அரசி
பத்மினியார் மயில் நாண ஆடும் போது
கட கடவென்றே ஒரு நடை நடந்தீர்...அடடா!...
நாட்டியத்தை நான் மறந்தேன். உம் பாதங்களில் தான் பறந்தேன்.
நடை வெள்ளம் கொண்டே நாட்டியத்தை அடித்தீர்...
படித்து வந்தேன் உந்தன் படங்கள் பார்த்தே வாழ்க்கையிலே மாந்தர்களின் பன்முகங்கள் படித்து வந்தேன்....
ஐயாதுடித்து நின்றேன் உம் படத்து வரிசை நின்று
டிக்கெட் விற்றுத் தீர்ந்த போதும்...
நம் நடிப்பின் இமயம் விண்ணில் சேர்ந்த போதும்!
ஆழ்வாராய் வந்து நின்று தவத் தமிழை ஆண்டீர்...
'திருமால் பெருமை' திரைப் படத்தில் நீர் குவித்த கரத்தில்
சிக்கி நின்றேன் நெக்குருகி 'ஜீவ தீபம்' கண்டேன்.
வயது பன்னிரண்டில் இப்பாலகனும் பக்தி ஆழ்வாரானேன்!
'சுருக்க' வலை சூழ்ந்திருந்த முதிர் முகம்தனிலே
விரிஞான ஒளி சுமந்து திரு அருளை அப்புகின்றீர்...
அந்தநாவுக்கு அரசரெனும் 'அப்பர்' கதாபாத்திரத்தில்...
திலகமேநீர் வந்து நின்றீர்...
அடியேன் 'அப்பூதி அடிகள்' ஆனேன்!
- யாழ் சுதாகர்

Harrietlgy
2nd October 2016, 07:19 PM
NT 88 th Birthday celebrations


https://www.youtube.com/watch?v=YID3zCA7h0I

Harrietlgy
2nd October 2016, 07:22 PM
NT 88 th Birthday celebrations,


https://www.youtube.com/watch?v=tfC5KzCFKVA

sivaa
2nd October 2016, 07:23 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s526x395/14469616_232169553852964_837652708512579446_n.jpg? oh=22b9b34b176220b8182b9db909fe6355&oe=58AAC2A1

sivaa
2nd October 2016, 07:25 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14543948_232168513853068_1861641927709897191_o.jpg

sivaa
2nd October 2016, 07:26 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14516558_232138700522716_2118677759299325762_n.jpg ?oh=3865950e03ec1e9c667f8fca8e5a504d&oe=5868B2AF

sivaa
2nd October 2016, 07:27 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14468710_231822620554324_2769434818779013814_o.jpg

sivaa
2nd October 2016, 07:28 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14543945_231822493887670_6828500840691139889_o.jpg

sivaa
2nd October 2016, 07:28 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14543701_231822393887680_2427072196765825669_o.jpg

sivaa
2nd October 2016, 07:29 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14500626_231822043887715_2800380689678628643_o.jpg

sivaa
2nd October 2016, 07:31 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14469539_231821357221117_3559824370261024343_n.jpg ?oh=04e677e41fb9d8b142ab7f44be682f9a&oe=58743B7C

sivaa
2nd October 2016, 07:33 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14479604_1108474239237179_3042621307232525117_n.jp g?oh=766dff8f97d0e373c9b367be3a37a395&oe=586D0A45

sivaa
2nd October 2016, 07:34 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14484690_1108474252570511_6787118280393569993_n.jp g?oh=9bdfcf4f3a63965040b094a88bb92d78&oe=5866FAFB

sivaa
2nd October 2016, 07:34 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14519792_1108474329237170_3212463720128729524_n.jp g?oh=3881f2e69e87fef9052a575fcbd390aa&oe=58A72EFC

sivaa
2nd October 2016, 07:35 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14520551_1108474179237185_8319469893042095415_n.jp g?oh=3cb8da0a00b99794a3fd576f831c7f8d&oe=586BB55D

sivaa
2nd October 2016, 07:38 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14463233_10154545286836810_6302314407171128195_n.j pg?oh=d2c7565f1dd9192d2e1911b5c25e71f9&oe=587D3FBA

sivaa
2nd October 2016, 07:38 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14494609_196778110746154_6270029570384883673_n.jpg ?oh=d6cf21bcdd537abdb4b9be726cc5b0a8&oe=5863C3BC

sivaa
3rd October 2016, 01:00 AM
சென்னை தி.நகர் பால மந்திர்- ஜெர்மன் ஹாலில் நடிகர்திலகத்தின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது,
முரளியின் " மௌன ராகம் " இசைக்குழுவினரின் மெல்லிய இசை விருந்தாக நடிகர்திலகத்தின் திரைப்பட பாடல்கள் மட்டுமே இசைக்கப்பட விழாவிற்கு நீதியரசர் சிவப்பிரகாசம் அவர்கள் தலைமை ஏற்று கலைச் சேவைகளை புரிவோர்க்கென " சிவாஜி விருது " வழங்கி கௌரவித்தார்,
விழாவில் சிறப்புரை ஆற்றியதிலிருந்து
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,...
என்னவோ தெரியவில்லை அவர் தமிழன் என்பதனால் மட்டுமே புறக்கணிப்புக்கு ஆளானார்,
வெளி மாநிலத்தவரையெல்லாம் இங்கு முக்கியத்துவம் கொடுத்து பெருமை படுத்திவிட்டனர்,
அவரின் நடிப்பாற்றலைப் பற்றி உலகில் அறியாதவர் உண்டோ,
ஆஸ்கர் அவார்டையே அவருக்கு பெற வேண்டும் என்று நினைத்து இருந்தால் பெற்று கொடுத்து இருக்கலாம் ஆனால் அதற்கான முயற்சியை இந்திய மண்ணில் யாரும் முயற்சிக்கவில்லை,
இப்பொழுதும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகள் மேற்கொண்டு பெருந்தலைவர்கள் மறைவிற்குப் பிறகும் வழங்கி வரும் பாரத ரத்னா விருதினை நடிகர்திலகத்திற்கு வழங்கிட கோரிக்கை விடுக்க வேண்டும்.
நீதியரசர் கோரிக்கையை செயல் ஆக்கம் கொடுக்க நாம் என்று ஒன்று கூடப்போகிரோம்

(முகநூல் சேகர் பரசுராம்)

sivaa
3rd October 2016, 01:00 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14449877_1100399986743557_4451691991296112729_n.jp g?oh=588b823d4f46d65465d0d6894d225e13&oe=587024F0

sivaa
3rd October 2016, 01:01 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14516427_1100400036743552_6709425787452402254_n.jp g?oh=4d105694c75f29588f15dfd1ac174a4d&oe=58647D57

sivaa
3rd October 2016, 01:01 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14516537_1100400876743468_787662836671928691_n.jpg ?oh=b4b900647840cff5daa82375c708d7bc&oe=58A933FF

sivaa
3rd October 2016, 01:02 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14494809_1100401146743441_2548708087050292720_n.jp g?oh=ada31f935f31fa5a40e4a69488985ef0&oe=58639F42

sivaa
3rd October 2016, 01:02 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14570384_1100401213410101_2452068925366296786_n.jp g?oh=10649b2f52ba89b082c51fa55038709f&oe=587256FB

sivaa
3rd October 2016, 01:03 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14568144_1100401253410097_1142301026455991482_n.jp g?oh=270a5183691e50d801e4bea4e05e6e6f&oe=58A5E494

sivaa
3rd October 2016, 01:03 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14581369_1100401323410090_3186618080144978729_n.jp g?oh=7517b81cdeeed7f41cd315200b7a4d31&oe=58A95C12

Murali Srinivas
3rd October 2016, 01:41 AM
அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்தை வெல்வது அல்லது நெருங்கி வருவது என்பது எளிதான காரியமல்ல. ஆனானப்பட்ட ஆட்கள் எல்லாம் முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை என்பதுதான் வரலாறு. அப்படிப்பட்ட ஆனந்தை ஒருவர் எட்டிப் பிடிக்கிறார் என்றால் அவர் ஆனந்த பவன் ரவிக்குமாரை தவிர யாராக இருக்க முடியும்?

இன்று ஞாயிறு மாலைக்காட்சி மதுரை சென்ட்ரல் திரையரங்கம் குலுங்க குலுங்க ஆட்கள் குவிந்தனர்.அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்து கூடுதலாக நாங்கள் நின்று பார்க்கிறோம் என்று சொல்லி டிக்கெட் வாங்கிய மக்கள் கூட்டம். பால்கனியில் அதிகபட்சமாக கொடுக்கப்படும் 210 டிக்கெட்களும் விற்று தீர்ந்தது. கீழே 410 டிக்கெட்டுகள் கொடுக்கப்படும். அங்கே 425 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதை தவிர பெண்களுக்கென கொடுக்கப்படும் 31 டிக்கெட்டுகளும் நிரம்பியது. மொத்தம் 667 டிக்கெட்டுகள். வசந்த மாளிகைக்கு பிறகு அவன்தான் மனிதன்தான் இந்த சாதனையை செய்திருக்கிறது. மாலைக்காட்சி மட்டும் வசூல் ருபாய் 15,000/- திற்கும் அதிகம்.

நடிகர் திலகம் படம் என்றல் மதுரைதான் என்று நாங்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் பெருமையை அன்றும் இன்றும் என்றும் தரும் எங்கள் ஊர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்

KCSHEKAR
3rd October 2016, 12:10 PM
அக்டோபர் 1 ஆம் நாள் நடிகர்திலகத்தின் 89 வது பிறந்தநாள் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவற்றில் சில......
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Photo6_zpsjunb5goj.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Photo6_zpsjunb5goj.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Sivaji89MalaimalarNews_zpshtzuwx9i.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Sivaji89MalaimalarNews_zpshtzuwx9i.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Thanjavur_zpsjofavxfu.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Thanjavur_zpsjofavxfu.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Trichy_zpsu9n1hqkv.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Trichy_zpsu9n1hqkv.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Tirupur_zps9plm09ja.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Tirupur_zps9plm09ja.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/NellaiPhoto_zpsnwizupkp.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/NellaiPhoto_zpsnwizupkp.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Ambattur_zpstaa2ryvy.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Ambattur_zpstaa2ryvy.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Photo7_zpskoe5oymk.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Photo7_zpskoe5oymk.jpg.html)

KCSHEKAR
3rd October 2016, 12:12 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Photo3_zps0ttes4tr.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Photo3_zps0ttes4tr.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Photo4_zpsyskh7kso.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Photo4_zpsyskh7kso.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Photo5_zpsyesfqsge.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Photo5_zpsyesfqsge.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Photo8_zps77q2eqky.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Photo8_zps77q2eqky.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/1Oct2016News/Nellai_zpsrbva5zyj.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/1Oct2016News/Nellai_zpsrbva5zyj.jpg.html)

KCSHEKAR
3rd October 2016, 12:20 PM
WhatsApp மூலம் அறிமுகமாகிய நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, நடிகர்திலகம் சிவாஜி நண்பர்கள் குழு சந்திப்பு, அக்டோபர் 2 ஆம் நாள், சனிக்கிழமை, காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, சென்னை, பல்லாவரம், ஹோட்டல் பல்லவ்-இல் நடைபெற்றது.

சுமார் 100 ரசிக நண்பர்கள் கலந்துகொண்டு, நடிகர்திலகம் பற்றிய தங்கள் கருத்துக்களை, உணர்வுகளை பரிமாறிக்கொண்டார்கள். மதிய உணவுடன் சந்திப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsAppMeeting2Oct2016/WAMeeting1_zpstdfbfvaq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsAppMeeting2Oct2016/WAMeeting1_zpstdfbfvaq.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsAppMeeting2Oct2016/WAMeeting2_zpsgusb55nu.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsAppMeeting2Oct2016/WAMeeting2_zpsgusb55nu.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsAppMeeting2Oct2016/WAMeeting4_zpsnltavk35.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsAppMeeting2Oct2016/WAMeeting4_zpsnltavk35.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsAppMeeting2Oct2016/WAMeeting3_zpsnga4dt38.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsAppMeeting2Oct2016/WAMeeting3_zpsnga4dt38.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsAppMeeting2Oct2016/WhatsAppFriendsMeeting2Oct2016_zpsuj39qf0p.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsAppMeeting2Oct2016/WhatsAppFriendsMeeting2Oct2016_zpsuj39qf0p.jpg.htm l)

sivaa
3rd October 2016, 06:22 PM
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு Bence vacation club Alandur fine Arts திரு குமார்,திரு N.பெருமாள் ராஜன் ஆகியோர் முன்னின்று நடத்திய சிவாஜி விருது வழங்கும் விழா சென்னை தி.நகர் பாலமந்திர் ஜெர்மன் ஹாலில் நடைபெற்றது, சிவாஜி விருதுகளை நீதியரசர் சிவப்பிரகாசம் அவர்கள் வழங்கினார், இசையமைப்பாளர் தீனா, பிலிம் நியூஸ் டைமண்ட் பாபு ஆகியோர் உட்பட பலர் விருதுகளை பெற்றனர், விழாவில இன்னிசை விருந்தும் கிடைத்தது, நடிகர்திலகத்தின் சூப்பர் ஹிட் காலத்தால் அழியாத பாடல்களை அருமையாக இசை...த்தனர்,
உதாரணமாக இசைக்கேட்டால் புவி அசைந்தாடும், தூங்காத கண்ணின்று ஒன்று, பாலூட்டி வளர்த்த கிளி, நாளை எனது, பூங்காற்று திரும்புமா, வசந்த முல்லை போலே வந்து, யாருக்காக, அமைதியான நதியினிலே ஓடம், இன்னும் ஏராளமான பாடல்களை இசைத்தனர்,
நிகழ்ச்சி துவக்கத்தில் இசைக்குழுவின் முரளி அவர்கள் நம் உள்ளங்களிலும் இருந்து வரும் ஒரு கருத்தை முன் வைத்தார்,
நடிகர்திலகத்தின் திரைப்பட பாடல்களை அவ்வளவு எளிதில் இசைத்து விட முடிவதில்லை காரணம் அவருடைய பாடல்கள் அனைத்தும் ஜீவனானவை, ஏனைய நடிகர்களின் பாடல்கள் போல கிடையாது, அவர் பாடல்களை பொறுத்த அளவில் எங்களுக்கு கத்தியின் மேல் நடப்பது போன்று, நடிப்பை பொறுத்த அளவில் நடிகர்திலகம் no1 என்று வைத்துக் கொண்டால் அடுத்த இடம் என்பது 1001 என்ற இடம்தான் அப்படியே தான் அவருடைய பாடல்களும் என பெருமையோடு முன்னுரை அளித்தார்,
அவரது இந்த விளக்கத்தை கேட்ட பிறகு எனக்குள் இருந்த ஒரு வியப்பு மிக்க கேள்விக்கும் விடை தெரிந்து கொண்டேன், பெரும்பாலான திருவிழா இன்னிசை கச்சேரிகளில் நடிகர்திலகத்தின் பாடல்களை இசைப்பதில்லை அதற்கான காரணம் புரிந்து கொண்டேன்


(நன்றி சேகர் பரசுராம் முகநூல்)

sivaa
3rd October 2016, 06:23 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14449987_1101092643340958_983886010385249396_n.jpg ?oh=011eefe5aee7bfd41cee664256479b30&oe=58AB38B2

sivaa
3rd October 2016, 06:23 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14469565_1101093173340905_6128058297450734971_n.jp g?oh=824470d17a849d0c31229ac5f4be9009&oe=586530E8

sivaa
3rd October 2016, 06:24 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14448963_1101093456674210_7425520925686698887_n.jp g?oh=9fbd3309c06f1692ff250b15661387a1&oe=5872C466

sivaa
3rd October 2016, 06:24 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14492590_1101093696674186_5328296167015298613_n.jp g?oh=0d703e4472c8325e10502ad45665d401&oe=586AE80D

sivaa
3rd October 2016, 06:25 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14516482_1101093993340823_1013769192875179684_n.jp g?oh=b5d49cce13ecb167615604ac93d05b89&oe=5870E288

sivaa
3rd October 2016, 06:25 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14479744_1101094153340807_2655801490744221713_n.jp g?oh=cb8aa82cab6f50ccef238d410f676b12&oe=5864FA9D

sivaa
3rd October 2016, 06:26 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14445973_1101094583340764_6313224353014567358_n.jp g?oh=818bd7d7131e8c739b764570ab091507&oe=5878A378

sivaa
3rd October 2016, 06:27 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14470566_1101095653340657_4746738855090653548_n.jp g?oh=3aa7e62512dfaa7e551a98012cffe46a&oe=58A95D7A

sivaa
3rd October 2016, 06:27 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14462913_1101097360007153_8251403323993354878_n.jp g?oh=c38cb82e50394f1d3a60a8d0189b1c27&oe=5871269A

sivaa
3rd October 2016, 06:52 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14543759_1108473852570551_9176824781811498666_o.jp g


(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 06:55 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/14448987_1109798705771399_5171981477599542669_n.jp g?oh=7fcc937ad48af964493cecf2501bb4b7&oe=5867A98C


(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 06:56 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14484870_1108472829237320_7082056462033498365_n.jp g?oh=b3a5b8873eeca8979fbd2d25e16da0f6&oe=586AC7D2


(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 06:57 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14520366_1106258606125409_2742635050656582360_n.jp g?oh=b26d90e9dfc968fc00b4c4d602e74deb&oe=586E82B8


(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 06:58 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14468229_1105653086185961_4891317297927574464_o.jp g


(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 07:01 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14424886_1105637972854139_8171080028392779275_o.jp g



(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 07:02 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14468555_1103298289754774_576536770138375234_o.jpg

(நன்றி சுந்தரராஜன் முகநூல்)

sivaa
3rd October 2016, 10:31 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14469680_1604107063219064_41728447441939348_n.jpg? oh=a5cfd3577de4cc3f4eaa41315eb31406&oe=5875FAE8


(நன்றி பாலகிருஷ்ணன் முகநூல்)

Murali Srinivas
3rd October 2016, 11:31 PM
நடிகர் திலகத்தின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் - அருண் காந்த் இசையமைப்பில் சூப்பர் சிங்கர் புகழ் ரோஷன் மற்றும் கோகுல் பாடியிருக்கின்றனர். பாடல் வரிகள் இன்பா. இதற்கு காட்சிகளை தந்து உதவியவர் நமது ராகவேந்தர் சார்.

https://www.youtube.com/attribution_link?a=fpNT9PtscI8&u=%2Fwatch%3Fv%3DRcEQm6Pb2y4%26feature%3Dshare

அன்புடன்

RAGHAVENDRA
4th October 2016, 11:55 PM
நன்றி முரளி சார்

RAGHAVENDRA
5th October 2016, 12:08 AM
நடிகர் திலகத்தின் 88வது பிறந்த நாள் விழா சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் 01.10.2016 மாலை சென்னை மியூஸிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகையர் வாணிஸ்ரீ, நிர்மலா, நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரா, ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராய், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் மூத்த சிவாஜி ரசிகர்கள் திரு ஜெயவேலு, நாகமணி மற்றும் ராஜசேகரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் கௌரவிக்கப்பட்ட திரையுலகக் கலைஞர்கள் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பப் பட்டன.

திருமதி வாணிஸ்ரீ -

உயர்ந்த மனிதன் - வெள்ளிக்கிண்ணம் தான் பாடலின் ஒரு பகுதி, வசந்த மாளிகையில் தலைவரின் வசனக்காட்சி, குலமா குணமா படத்தில் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போவதில்லை என வாணிஸ்ரீ ஏற்ற பாத்திரம் கூறும் காட்சி மற்றும் மேள தாளம் பாடலின் ஒரு பகுதி.

செல்வி நிர்மலா - எங்க மாமா படத்தில் சொர்க்கம் பக்கத்தில் பாடலிலிருந்து ஒரு பகுதி, லக்ஷ்மி கல்யாணம் படத்தில் வசனமில்லாத காட்சி, பாபு படத்தில் நிர்மலா பாடுவதாக வரும் இதோ எந்தன் தெய்வம் பாடல் காட்சியின் ஒரு பகுதி

திரு சங்கர் கணேஷ் - அன்புள்ள அப்பா படத்திலிருந்து அன்புள்ள அப்பா பாடலின் ஒரு பகுதி, ஆனந்தக் கண்ணீர் படத்திலிருந்து எங்கள் குடும் பாடலின் ஒரு பகுதி, நீதியின் நிழல் படத்திலிருந்து குத்து விளக்கோ பாடலின் ஒரு பகுதி.

திரு விஸ்வநாத் ராய் - திருடன் படத்தில் ஸ்பென்சர் கட்டிடத்தின் முன்பு படப்பிடிப்பு நடத்தி கொள்ளையடிக்கும் காட்சி, எங்கிருந்தோ வந்தாள் படத்திலிருந்து ஔவையார் மற்றும் பாரதிதாசன் வேடத்தில் தலைவர் நடித்தவை, தர்மராஜா படத்தின் ஜெயித்துக்கொண்டே இருப்பேன் பாடலின் முதல் பகுதி, பாரத விலாஸில் இந்திய நாடு என் வீடு பாடலின் பகுதிகள்

திரு ஒய்ஜீ.மகேந்திரா - கௌரவம் மாதிரி கோர்ட் சீன், வெள்ளை ரோஜா படத்தில் நாகூரு பக்கத்திலே பாடலின் ஒரு பகுதி, உருவங்கள் மாறலாம் படத்தில் தலைவரின் ஒரிஜினல் கெட்டப்பில் மகேந்திரனுக்கு கடவுளாய்க் காட்சி தருவது, மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் சிக்கன் 65 காட்சி.

ஒரு சிவாஜி ரசிகனாக தான் அவரை ரசிப்பதைத் தன் பேச்சில் அழகாக சொன்ன மாண்பு மிகு மத்திய அமைச்சர் திரு வெங்கய்ய நாயுடு அவர்களின் உரை கேட்கத் தெவிட்டாத தெள்ளமுது.

விழா துவங்குதற்கு முன், திரு அருண் காந்த் அவர்களின் காணொளித் தொகுப்பு திரையிடப்பட்டு பலத்த கரகோஷத்தைப் பெற்ற தோடு மீண்டும் ஒளிபரப்பக் கோரி எழுந்த குரல்களை மதித்து மீண்டும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அன்புச் சகோதரர் திரு ராம்குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற, திரு பிரபு அவர்கள் நன்றி கூறினார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, விழாவிற்கு வெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

விழாவைப் பற்றி விரிவாகவும், மற்றும் திரு அருண் காந்த் அவர்களின் பங்களிப்புப் பற்றியும் நம் முரளி சார் எழுத்தில் படிக்க ஆவல்.

விழாவினைப் பற்றிய காணொளி இணையத்தில் தரவேற்றப்ப்ட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=DrcCdze-GR8

Gopal.s
5th October 2016, 09:11 AM
நண்பர்களே,

இந்த முறை சிவாஜி பிறந்த நாள் விழாவில் கௌரவிக்க பட்ட வாணிஸ்ரீ, விஸ்வநாத ராய், y .G. M ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
வெங்கையா நாயுடுவின் சுருக்கமான ,செறிவான உரையை கேட்டு களித்தேன்.

நடிகர்சங்க நிர்வாகிகள் விஷால்,நாசர் போன்றோரை வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி நடிகர் தினத்தை கொண்டாடாத இவர்களால் ,நடிகர் என்று பட்டம் சுமந்து எப்படி திரிய முடிகிறது?

அ .தி .மு .க பற்றி கவலையில்லை. தி .மு .க பிரமுகர்கள் வந்திருக்கலாமே?மரியாதை செலுத்தி இருக்கலாமே?தி.மு.க வை ஆரம்ப காலத்தில் வளர்த்ததில் நடிகர்திலகம் பங்கு உண்டே? அண்ணா,கருணாநிதி,உட்பட எல்லோரும் சிவாஜி ரசிகர்கள்தானே ?
கலைஞர்களால் வளர்ந்த தி.மு.க அந்த கலைக்காவது வணக்கம் செலுத்த வேண்டாமா? கலைஞர் திறந்து வைத்த சிலைக்கு உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டாமா?

கமல்,ரஜினி போன்றோர் தீவிர நடிகர்திலகம் பக்தர்கள். அவருடைய நடிப்பை பிரதியெடுத்து அவரை முன் மாதிரியாக சுமப்பவர்கள். அவர்கள் வந்து உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டாமா?

அவன்தான் மனிதனின் சாதனை வியக்க வைக்கிறது. ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி காண வாழ்த்துக்கள்.

இன்னும் மூன்று பதிவுகளில் 4000 எட்டி விடுவேன். 4000 ஆவது பதிவாக நவராத்திரி இருக்கும். பிறகு ,திரியில் இருந்து ஓய்வு பெற எண்ணியுள்ளேன்.

இதுவரை எனக்கும் இடம் கொடுத்த திரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Gopal.s
5th October 2016, 09:57 AM
என் பரீக்ஷா கால நண்பன் ,இன்றைய நடிகர்சங்க தலைவன் நாசரிடம் தொலைபேசியில் மனம் விட்டு பேசினேன் .

கீழ்கண்ட விஷயங்களை தெளிவாக கூறினார்.

1)நடிகர்திலகத்திடம் ,இன்றைய நிர்வாகிகள் பெருமதிப்பு கொண்டுள்ளனர்.

2)அரசியல் ரீதியாகவோ,தனி பட்ட முறையிலோ யாருக்கும் எந்த வித தயக்கமோ நெருக்கடியோ இல்லை.

3)இந்த முறை ஹைட்ரபாத் நகரில் ஒரு படப்பிடிப்பில் இறுதி கட்டத்தில் மாட்டி கொண்டதால், அக்டோபர் 1 அன்று நடிகர்திலகத்தின் சிலைக்கு மரியாதை செலுத்த,சக நிர்வாகிகளை பணித்துள்ளார்.

4)எனது,நடிகர்திலகம் புத்தகத்துக்கு ,இயக்குனர் மகேந்திரன்,நடிகர் நாசர்,அஜித் ஹரி போன்றோர் முன்னுரை அளிக்க இசைந்துள்ளனர்.

KCSHEKAR
5th October 2016, 11:43 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Oct8TrichyInvitationPg1_zpshpch3a8g.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Oct8TrichyInvitationPg1_zpshpch3a8g.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/Oct8TrichyInvitationPg2_zps5cxdugus.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Oct8TrichyInvitationPg2_zps5cxdugus.jpg.html)

sivaa
5th October 2016, 08:18 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14591695_1762567340677097_7547577023725831414_n.jp g?oh=8dace5d138b3161aa94e258cc81697bd&oe=58ABC4BF

sivaa
5th October 2016, 08:21 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14611084_310890725942975_2023688566317021965_n.jpg ?oh=d1e42c96899e86147798beb9f7cc2f2f&oe=586298AB

(பத்மநாதன் அவர்களின் முகநூலில் இருந்து)

sivaa
5th October 2016, 08:24 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14520478_1081197545320592_9069085413734207351_n.jp g?oh=a9f5d5610021b687c78ae7b96f119d29&oe=58A1E1F2


நடிகர் திலகம் சிவாஜிக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளது. அவற்றில் முக்கியமானது அவர் அமெரிக்காவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக ப...தவி வகித்தது.
நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எப் கென்னடி. அவர் சிவாஜியை நேரில் பார்க் விரும்பி 1962ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அழைத்தார். அந்த நாட்டின் சிறப்பு விருந்தினராக சிவாஜி அமெரிக்கா சென்றார். அங்கு அதிபர் ஜான் எப்.கென்னடியை சந்தித்தார். பின்னர் அவர் உலகிலியே பிரமாண்ட அருவி கொட்டும் நயாகரா நகர ஒரு நாள் மேயராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். மாநகர் மன்ற கூட்டத்தில் சிவாஜி பேசினார்.
சிவாஜியின் வருகையை அறிந்த அன்றை ஹாலிவுட் நடிகர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். டாவரிச் வரிசை படங்களின் நாயகன் ஜேம்ஸ் கார்னர், ஆஸ்கர் விருது பெற்ற ஜேக் லெம்மோன், தி டென் கமாண்ட்மேண்ட்ஸ், பென்ஹர் பட நாயகன் கார்ல்ட்ன் ஹெஸ்டன், ஹாலிவுட்டின் ஆரம்ப கால ஹீரோ ஜார்ஸ் சேன்ட்லியர், ஊமை படங்களின் நாயகன் வால்டர் பிட்ஜியோன் ஆகியோர் அவரை சந்தித்து சிவாஜியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய நடிகர்கள் எவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கவுரவம் இது.


(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருச்து)

sivaa
6th October 2016, 01:31 AM
நமது நடிகர் திலகத்தின் அலாதி சிரிப்பு....அவரது வெகுளித்தனமான குழந்தை மனதிற்கு இந்த புகைப்படம் ஒரு எடுத்துக்காட்டு...அந்த சமயம் திரு.வி.பி.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி திரு.பழனியப்பன் சுப்பு - புகைப்படம்

(நன்றி திருச்சி சிறினிவாசன் முகநூல்)







https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14495286_178019759307317_3364979131751383670_n.jpg ?oh=a0c398d07a901453bdd953f386ff59fa&oe=58711E95

sivaa
9th October 2016, 09:20 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14556794_235677073502212_8712879911368108424_o.jpg


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14572202_235677083502211_2547184591985702623_n.jpg ?oh=c950e0ab24b6f28684e3f5f1e419b8fd&oe=58AB0034

sivaa
9th October 2016, 09:33 AM
" நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது "
Welcome for our James Bond
October 14 rh onwards chennai mahalakhsmi theatre
" தங்கச் சுரங்கம் "

http://oi67.tinypic.com/29d9c4.jpg

Harrietlgy
9th October 2016, 05:50 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 147 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/14938892781475753276269065988sivaji%20-%20oak%20thevar.jpg


ஏழு இரவுகளோடு போராடி `புதிய பறவை’ படத்திற்கான முழு வசனங்களையும் எழுதி முடித்துவிட்டு சிவாஜியிடம் தெரிவித்தார் ஆரூர்தாஸ்!
அவருக்கு இருந்த படப்பிடிப்பு பணிகளுக்கிடையில் ஆரூர்தாஸ் எழுதியதை படித்துக் கேட்பதற்கு ஒரு நாளை ஒதுக்கினார் சிவாஜி! தெற்கு போக் ரோட்டிலிருந்த சிவாஜியின் `அன்னை இல்லம்’ வீடு! தரையில் சிவாஜியும், ஆரூர்தாஸும் அமர்ந்து கொண்டார்கள். கீழே தரையில் உட்கார்ந்து சோபாவில் சாய்ந்தபடி காலை நீட்டியபடி கேட்பது சிவாஜிக்கு மிகவும் பிடிக்கும். ஆரூர்தாஸ் எப்போதுமே தனது வசனங்களை இரண்டு கோப்புகளாகப் பிரித்து வைத்திருப்பார். ஒன்று– இடைவேளை வரையில். இன்னொன்று– இடைவேளைக்குப் பிறகு! இருவரும் காலை சிற்றுண்டி முடித்து காபி சாப்பிட்டார்கள். அந்த வீட்டில் உள்கூடத்தில் இருந்த அந்த ஆள் உயர அயல்நாட்டு கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. சிவாஜி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். ஆரூர்தாஸ் நெற்றிக்கும் நெஞ்சுக்குமாக கைகளால் சிலுவைக் குறி போட்டுக்கொண்டார்.
படிக்கத் தொடங்கினார். `நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் சிவாஜி பிலிம்ஸின் ` புதிய பறவை’. காட்சி ஒன்று – பகல் – சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வரும் கப்பல் நடுக்கடலில் மிதந்து வருவது காட்டப்படுகிறது.
காட்சி இரண்டு – பகல்– கப்பலில் உள்ளே முதல் வகுப்புப் பகுதியில் பயணிகளுக்கிடையில் கதாநாயகன் கோபால் ( சிவாஜி), நாயகி லதா ( சரோஜாதேவி) மற்றும் அவருடைய தந்தை (வி.கே. ராமசாமி) அறிமுகமாகிறார்கள்.
ஒவ்வொரு காட்சியாக திரைக்கதையை விவரித்து அதற்கான வசனங்களைப் படித்துக்கொண்டே வந்தார். சிவாஜி வைத்த விழி வாங்காமல் ஆரூர்தாஸையே பார்த்துக்கொண்டிருந்தார். இடையில் தொலைபேசித் தொல்லைகள், நண்பர்கள் வருகை எதுவும் இல்லாதபடி முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ஆரூர்தாஸின் `மூடு’க்கு எந்த இடைஞ்சலும் இல்லை. ஆரூர்தாஸும், சிவாஜியும் தெளிவான கதை சிந்தனையிலேயே இருந்தார்கள். இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ்! மதிய உணவு வேளையும் வந்து கொண்டிருந்தது. உள்ளே இருந்து சிவாஜியின் துணைவியார் கமலாம்மாள் வந்தார். `மாமா! மணியாகுது சாப்பாடு ரெடி’ என்றார்.
சிவாஜி : ஆரூரான்! உனக்கு பிடித்த வரால் மீன் குழம்பும், வறுவலும் இருக்கு. காலையிலேயே அம்மாகிட்ட சொல்லிட்டேன். சாப்பிட்டுட்டு ஒரு சின்ன தூக்கம் போட்டுட்டு, நாலு மணிக்கு மேலே இடைவேளைக்கப்புறம் இருக்கிறதை படிக்கலாம்.
கமலாம்மாளும் தஞ்சாவூர்காரர் என்பதால், அவர்களது ஊர்ப்பக்குவத்தில் புளி சற்று தூக்கலாக கரைத்து கறிவேப்பிலை. பச்சை மிளகாய் போட்டு ‘திக்’காக வைக்கும் மீன் குழம்பும், நிறைய மிளகாய் சாந்தில் போட்டு பொன்வறுவலாக வறுக்கும் மீனும் ஆரூர்தாஸுக்கு மிகவும் பிடிக்கும்.
சாப்பிட்டு முடித்ததும், கட்டில் மெத்தை இல்லாமல், கீழே தரையில் துண்டை விரித்து தூங்குவது சிவாஜிக்கு பிடிக்கும்.
அந்த நாட்களில், சிவாஜி பிலிம்ஸுடன், சிவாஜி நாடக மன்றமும் சொந்தமாக வைத்து, தனது பழைய சக்தி நாடக சபா நடிகர்களுடன் நாடகங்களையும் நடத்தி வந்தார் சிவாஜி.
`வீரபாண்டிய கட்டபொம்மன், `வியட்நாம் வீடு’ `தங்கப்பதக்கம்’ ஆகிய படங்கள் நாடகங்களாக வந்தவைதான்.
ஆரூர்தாஸுக்கும் சினிமா புகழ் இருந்ததால், அவரையும் நாடகம் எழுதித்தரும்படி சிவாஜி கேட்பார்.
அப்போதெல்லாம், `நாடகம் எழுதிக் கொடுத்து, நாடகம் நடக்கிற அன்னிக்கு நூறோ இருநூறோ பணம் வாங்கறதை விட, உங்க படத்துக்கு எழுதி ஆயிரக்கணக்கில் வாங்கிக்கிறேன்’ என்பார் ஆரூர்தாஸ்.
சில சமயங்களில் நாடகம் நடக்கிற நாட்களில் தனக்கு படப்பிடிப்பு இல்லாவிட்டால், பேச்சுத்துணைக்காக ஆரூர்தாஸை அழைத்துக்கொண்டு, ராஜா அண்ணாமலை மன்றம், `மியூஸிக் அகாடமி,’ ` ஆர்.ஆர். சபாவிற்கு காலையிலேயே போவார் சிவாஜி.
மதியம் வரையில் பழைய கதைகளையெல்லாம் பேசுவார். வீட்டிலிருந்து சாப்பாடு வரும். சாப்பிட்டுவிட்டு, அங்கேயே மேடையிலேலே துண்டை விரித்து போட்டுத் தூங்கிவிடுவார். சொல்லி வைத்தாற்போல் சரியாக நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். உடனே ஒரு காபி குடித்துவிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொள்வார். அதை அப்படியே இழுத்துக்கொண்டு நாடக ஆசிரியரை வரவழைத்து அன்றைய நாடக வசனங்களை அப்படியே படிக்கச் சொல்லி கேட்பார்.
இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்த ஆரூர்தாஸ் பிரமித்துப் போவார். சிவாஜியின் தலைசிறந்த நடிப்பு ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் அவருக்கு இருக்கும் `கலை ஒழுக்கம்,’ உண்மையான தொழில் பக்தி, `அக்கறை’ இவைதான் சிவாஜி கணேசன் என்ற ஒரு மாபெரும் நடிகனை செதுக்கி உருவாக்கி, உன்னதமான நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
`செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்று பாடினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தப் பாடல் சிவாஜிக்கு மிகவும் பொருந்தும்.
இப்போது அன்னை இல்லத்தில் கதையின் இரண்டாவது பகுதியை படிக்க ஆரம்பித்தார் ஆரூர்தாஸ். சிவாஜியின் அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிப்போய் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு படித்துக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். அதுவரையில் லேசாக இருந்த அந்த கதாபாத்திரம், இடைவேளைக்குப் பிறகு வரும் நிகழ்ச்சிகளால் கனமாக இருக்கவேண்டும் என்பதற்காக வசனங்களின் எடையைச் சற்று கூட்டி இருந்தார் ஆரூர்தாஸ். சிவாஜி அதை புரிந்துகொண்டார் என்பதை அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டார் ஆரூர்தாஸ்.
படித்துக்கொண்டே வரும்போது, இடையிடையே ஆங்காங்கே அவர் கேட்ட விவரங்கள், அதற்கு ஆரூர்தாஸ் அளித்த விளக்கங்களுடன் படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு வந்தார் ஆரூர்தாஸ். சரோஜாதேவி – போலி சவுகார் ஜானகி – எம்.ஆர். ராதா, ஓ.ஏ.கே. தேவர் – எஸ்.வி. ராமதாஸ் ஆகிய பாத்திரங்கள். நடுவே சிக்கிக்கொண்ட சிவாஜி!
(தொடரும்)

KCSHEKAR
11th October 2016, 12:15 PM
நடிகர்திலகம் 89வது பிறந்தநாள் விழா, திருச்சி
-----------------------------------------------------------------
08-10-2016 - நடிகர்திலகம் 89வது பிறந்தநாள் விழா, திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக, சிவாஜி சமூகநலப்பேரவையின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக இருந்து சமீபத்தில் காலமான திரு.சிறுகமணி கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000/- நிதி உதவி வழங்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகள்போல லட்சத்தில் உதவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், லட்சியத்தை மட்டுமே மனதில் கொண்டு நடைபோடும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் சிறு உதவியாயினும் அது சிறப்பானதே என்ற வகையில் ₹50,000/- உதவி என்பதும் சிறப்பானதே.

இப்பணியில் என்னோடு பணியாற்றும மற்றும் உதவிடும் நண்பர்களுக்கு நன்றி,

நடிகர்திலகம் புகழ்பரப்பும் பணியில்,

K.சந்திரசேகரன்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/FunctionNews_zpso7t8fgwh.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/FunctionNews_zpso7t8fgwh.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/TrichyPhoto2_zpsvhm081vh.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/TrichyPhoto2_zpsvhm081vh.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/TrichyPhoto5_zpsc9efoxh7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/TrichyPhoto3_zpsw0ifef5j.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/TrichyPhoto3_zpsw0ifef5j.jpg
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/PhotoExhibition_zps4ydxg2ca.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/PhotoExhibition_zps4ydxg2ca.jpg.html)
[URL=http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Photo6_zpswzrjrmbz.jpg.html]

RAGHAVENDRA
12th October 2016, 11:13 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14718590_1225980707452599_1907050282585840768_n.jp g?oh=d30df20618b8c8b3389a27cbdcf8be6c&oe=5868AA63

Russellxor
14th October 2016, 03:17 PM
http://uploads.tapatalk-cdn.com/20161014/bce05aeaaf4f6c9ad0dc060af1e65ce0.jpg


http://uploads.tapatalk-cdn.com/20161014/94bada503d6bbe1f414b12c77a84cf4f.jpg

Russellxor
14th October 2016, 03:26 PM
http://uploads.tapatalk-cdn.com/20161014/ee429227adc8b3c90ba9902ebc46d205.jpg


http://uploads.tapatalk-cdn.com/20161014/d3cf3cd2befee365173ea0508abf47fd.jpg

Russellxor
14th October 2016, 03:35 PM
http://uploads.tapatalk-cdn.com/20161014/c1ebd394266493dc89fa6cbff999073d.jpg

Russellxor
16th October 2016, 09:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20161016/ca229b530eb321b60308a6d431293f35.jpg

Russellxor
16th October 2016, 09:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20161016/f324f9a479e7a0e98995ae379c7f01f4.jpg


http://uploads.tapatalk-cdn.com/20161016/6f42714bd3f274ff85161343497f3a44.jpg

sivaa
17th October 2016, 05:27 PM
இன்று பராசக்தி வெளிந்த 64 வது வருடம்

http://i66.tinypic.com/2zpp4kp.jpg



http://i65.tinypic.com/2s6jw9i.jpg




http://i67.tinypic.com/1mbsl.jpg

Harrietlgy
18th October 2016, 12:07 AM
From Vikatan,

கண்ணதாசனின் தத்துவப்பாடல்களும் சிவாஜிகணேசனின் கதாவிலாஸமும்!

http://img.vikatan.com/news/2016/10/17/images/kannadasan.jpg

அறிஞர் என்றால், அண்ணா
கலைஞர் என்றால், கருணாநிதி
கவிஞர் என்றால், கண்ணதாசன்'

என்று சொல்வார்கள். இன்று கண்ணதாசன் நினைவு நாள். பூமிப்பந்தின் வரலாற்றில், தனது சொந்த வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக்களமாக்கி அதில் பலதரப்பட்ட அவதாரங்களையும் அதற்கேற்ற பலவிதமான வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்து, அதன் விளைவுகளை, அதன் முடிவுகளை வெளிப்படையாக எல்லோருக்கும் கூறிய பெருமை ஒருவருக்கு, ஒரே ஒருவருக்கு உண்டு என்றால், அது கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.

குழந்தையைப்போல் வெள்ளை உள்ளம் படைத்த அவர், மனிதனாக, ஞானியாக தன் வாழ்க்கையை ஆய்ந்து, அதில் இறைவனின் பங்களிப்பையும் கலந்து அவற்றைத் தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். அதனால்தான் `வனவாசம்’என்னும் தனது சுயசரிதையின் முன்னுரையில், 'ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல! ‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று குறிப்பிடுகின்றார்.

கண்ணதாசன், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படப் பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, அரசியல் கட்சித் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இதில், பலவற்றில் வெற்றியையும் சிலவற்றில் தோல்வியையும், நிறைய நண்பர்களையும், நிறைய எதிரிகளையும் அவர் சந்தித்தார். இப்படிப் பலதரப்பட்ட முகங்களை அவர் கொண்டிருந்தாலும், திரைப்படப் பாடலாசிரியராகத்தான் அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

காலத்தால் அழியாத சாகா வரம் பெற்ற பாடல்களை வழங்கியதில், அவர் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் முடிசூடா மன்னனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞராகத் திகழ்கிறார். வாழ்க்கைப் படிப்பினைகளை, தோல்விகளை, துன்பங்களை சிக்கல்களை தானே அனுபவித்ததால் நெருப்பில் புடம்போட்ட தங்கமாக மின்னும் ஞானத்தை அவருக்கு இணையாக இன்றளவும் எவரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.

55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங்களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில்,

'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு.

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் திரைக் கதாபாத்திரங்களுக்கும் கண்ணதாசனின் சொந்த வாழ்வு அனுபவங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதுபோல் அவரது படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்கள் அமைந்திருக்கும். அந்தப் பாடல்களுக்கான பின்னணி, கண்ணதாசன் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக இருக்கும். சிவாஜி கணேசன் நடிக்க, கண்ணதாசன் பாட்டெழுத, டி.எம்.சௌந்தர்ராஜன் பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும். அதை இரவு நேரங்களில் கேட்க வேண்டும். இத்தனைக்கும் இந்தப் பாடல்களை எழுதும்போது கவிஞரின் வயது 35தான் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமான ஒன்றாகும். கண்ணதாசனின் தங்க வரிகளில் மின்னும் சில வைரங்கள்:

படம்: பார்த்தால் பசி தீரும்
'உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை...
சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி...
தெய்வம் என்றால் அது தெய்வம்... அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை'

படம்: பாவ மன்னிப்பு
'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை...
வான்மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான்... வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்... பணம்தனைப் படைத்தான்'

படம்: பாவ மன்னிப்பு
`எல்லோரும் கொண்டாடுவோம்... அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்...
நூறு வகைப் பறவை வரும்... கோடி வகைப் பூ மலரும்...
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா...
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே... கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை.... கடவுளில் பேதமில்லை...
முதலுக்கு அன்னையென்போம்... முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்...’

படம்: ஆலயமணி
`சட்டி சுட்டதடா கை விட்டதடா! புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா! நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா! சட்டி சுட்டதடா கை விட்டதடா!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா

படம்: ஆண்டவன் கட்டளை
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’

படம்: குங்குமம்
`மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம், நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் நான் திரை ஆனேன், தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது, விதியும் மதியும் வேறம்மா - அதன்
விளக்கம் நான்தான் பாரம்மா, மதியில் வந்தவள் நீயம்மா - என்
வழி மறைத்தாள் விதியம்மா’

படம்: நிச்சயதாம்பூலம்
'படைத்தானே, மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை’

படம்: புதிய பறவை
'எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே...
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!’

படம்: பார் மகளே பார்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பாக்கும்போது கண்களிரண்டைக்
கவர்ந்து போனாளே
அவள் எனக்கா மகளானாள்? நான்
அவளுக்கு மகனானேன் என்
உரிமைத் தாயல்லவா என்
உயிரை எடுத்துக்கொண்டாள்...

படம்: பாலும் பழமும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

படம்: வசந்தமாளிகை
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ...
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ...
சொர்க்கமும் நரகமும் நம்வசமே - நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே...
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...’

படம்: அவன் தான் மனிதன்
'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன... அவன் ஆட்சி நடக்கின்றது...’

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் திரைப்படத்துறை வாயிலாகவும் , அரசியல் ரீதியாகவும் தொடர்பிருந்தது. இருவருமே தி.மு.க-விலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர்கள். சிவாஜிகணேசன் ஏற்ற கதாபாத்திரங்களின் நகர்வுகளில் கண்ணதாசனின் பாடல்கள் கதையம்சத்துடன் ரொம்பவே நெருக்கமாக ஒட்டி உறவாடியவை. குறிப்பாக `வசந்த மாளிகை’யில் சிவாஜி ஏற்ற ஆனந்த் கதாபாத்திரம் கண்ணதாசனின் குணங்களோடு ரொம்பவே நெருக்கமானவை. அதனால்தான் காலங்கள் மாறினாலும், தரம் மாறாத பாடல்களாக இன்னமும் இனிக்கின்றன.

Murali Srinivas
18th October 2016, 12:35 AM
நடிகர் திலகம் நடிப்பில் தங்கச் சுரங்கம் என்றால் அவரது படங்கள் பட வெளியீட்டாளருக்கு தங்கச் சுரங்கம் என்பதில் ஐயமில்லை. சென்னை மகாலட்சுமிக்கு விஜயம் செய்த சி.பி.ஐ, ஆபிஸர் ராஜன் பொது மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று வசூலையும் அள்ளியிருக்கிறார்.

முதல் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் [தினசரி 2] ராஜனை கண்டு களித்தவர்கள் 2000-2100 க்கும் அதிகம் மொத்த வசூல் ரூபாய் 55 ஆயிரத்திற்கும் அதிகம். ஆறே காட்சிகளில் அரை லட்சத்தை தாண்டுவது என்பது பெரிய வெற்றி.

இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதே தங்கச் சுரங்கம் திரைப்படம் கடந்த 2 வருடங்களில் எத்தனை முறை திரையிடப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தாலே அதன் வெற்றியின் வீச்சு புரியும். கடந்த 2 வருடங்களில் சென்னை பைலட் திரையரங்கில் வெளியாகி சாதனை புரிந்தது. பின் மகாலட்சுமியில் வெளியாகி வசூலை குவித்தது. பின் மீ ண்டும் ஓரு சிறிய இடைவெளியை நிரப்ப அதே மகாலட்சுமியில் திரையிடப்பட்டது. இப்போது மீண்டும் வெளியாகி சாதனை படைக்கிறது. நேற்றைய தினம் [ஞாயிறு அன்று] இந்திய அணி விளையாடிய ஒரு நாள் போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு [மதியம் மற்றும் மாலை இரண்டு காட்சிகளையும் ஒரு சேர பாதிக்கும் கால அளவில்] இருந்தும் இந்த சாதனை. அதுதானே நமது நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர்.

நடிகர் திலகம் திரையுலகில் உதயமான நாளன்று [அக்டோபர் 17] இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைக்கிறேன்.

அன்புடன்

Harrietlgy
18th October 2016, 08:05 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 148 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/17752524001476362450428407795sivaji%20solo%20puthi ya%20paravai.jpg


புதிய பறவை’ படத்தின் கிளைமாக்ஸ். இப்போது சிவாஜி வீட்டிற்கு வந்திருக்கும் சவுகார் ஜானகி தனது மனைவி அல்ல என்ற உண்மையை பொருட்டு, உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்த நிலையில் சிங்கப்பூரில் சவுகார் ஜானகியை ஆத்திரத்தில் அடித்ததன் காரணமாக அவர் இறந்த ரகசியத்தை கக்கிவிடுகிறார். அதன் பின்னர்தான் அவருக்குத் தெரிகிறது, தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் காவல் துறையினர் என்பதும், அவர்கள் ஆடிய நாடகத்திலும் தந்திரமாக விரித்த வலையிலும் தான் வீழ்ந்துவிட்ட விஷயம்.
இப்போது அவருடைய கவனம் முழுவதும் சரோஜாதேவி ஒருவர் மீதே செல்கிறது. காரணம் அவரை முழுமனதுடன் நம்பி, தன் உள்ளத்தை பறிகொடுத்து உண்மையாகக் காதலித்ததுதான். அதனால் அனைவரையும் விட்டுவிட்டுக் கை தட்டிய வண்ணம் சரோஜாதேவியின் அருகில் வந்து அவரைப் பார்த்துக் கூறுகிறார்.
`ஆகா! எவ்வளவு அற்புதமான அமைப்பு! என்ன அருமையான நடிப்பு!
லதா… பலகீனமான என் மேல படை எடுத்து என்னை வீழ்த்தறதுக்கு உன் கைக்குக் கிடைச்ச ஆயுதம், காதல்ங்கற மென்மையான மலர்தானா? அதை வச்சா நீ என்னை அடிச்சுட்டே?’
இந்த வசனத்தைக் கேட்டு கண்கலங்கும் சரோஜாதேவி, `இல்லே இல்லே.ஒங்ககிட்டேயிருந்து உண்மையை வரவழைக்க காதலிக்கிற மாதிரி நடிச்சு கடைசியில் ஒங்களை கைது செய்யத்தான் நான் இங்க வந்தேன். ஆனா. என்னையறியாம ஒங்கே மேலே ஒரு அன்பு ஏற்பட்டு, உங்களை உண்மையா நான் காதலிச்சேன். என்னை நம்புங்க கோபால் – என்னை நம்புங்க’ என்று குமுறி குமுறி அழுது சிவாஜியின் காலில் விழுவார். கைது செய்யப்பட்ட சிவாஜி, கடைசியாக சரோஜாதேவியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வார். இதுவரை பறந்த `புதிய பறவை’ இத்துடன் தன் சிறகுகளை மூடிகொண்டுவிட்டது.
ஆரூர்தாஸும் கோப்பை மூடிவிட்டு, சிவாஜியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். உணர்ச்சிவசத்தினால் சிவந்த அவரது அகன்ற விழிகளில் நீர் தேங்கி இருப்பதை பார்த்தார் ஆரூர்தாஸ்.
`எப்படி இருக்கிறது?’ என்று தான் ஏன் கேட்க வேண்டும்? அவராகச் சொல்லட்டுமே என்று மவுனமாக இருந்தார் ஆரூர்தாஸ்.
அந்த மவுன நிலையில் தனது வலது கரத்தை நீட்டி ஆரூர்தாஸின் வலது கையைப் பற்றி குலுக்கிவிட்டு சொன்னார்.
`ஒங்கிட்ட நான் என்ன எதிர்பார்த்தேனோ – அதே மாதிரி – ஏன் அதுக்கு மேலேயும் ரொம்ப நல்லா எழுதி இருக்கே. `கங்கிராட்ஸ்’. இதுக்குத்தான் உன்னை வற்புறுத்தி எழுத வெச்சேன். ஒன்னோட முழு ஒத்துழைப்போட இந்த அண்ணனுக்காக சீக்கிரமாகவும் சிறப்பாகவும் எழுதி முடிச்சு கொடுத்திட்டே.தேங்க்ஸ். இதோடு கழண்டுக்கலாம்னு நினைக்காதே, நீ ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு கஷ்டப்பட்டு எழுதின இந்த வசனங்களை நீதான் ஷூட்டிங்குக்கு வந்து சொல்லிக் கொடுக்கணும். இல்லேன்னா நீ எழுதியும் பிரயோஜனமில்லாம போயிடும். டைரக்டர் தாதாமிராசிக்கு தமிழ் தெரியாது. நீ அப்பப்போ செட்டுக்கு வந்து அவருக்கு இங்கிலீஷ்ல சொல்லி புரிய வைக்கணும். பிள்ளையை பெத்துப் போட்டுட்டா மட்டும் போதுமா? அதை வளத்து நல்லா ஆளாக்கணும்ல. இது எனக்கு மட்டும் இல்லே. உனக்கும் ஒரு ‘பிரஸ்டிஜ்பிலிம்’. உன் சொந்தப்படம் மாதிரி நினைச்சுக்க. இதுக்கு மேலே நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே.
இடைமறித்து எதுவும் பேசாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். இரண்டே எழுத்துக்களில் பதில் சொன்னார், `சரி’.
இதைக் கேட்டு சிவாஜி மகிழ்ந்தார். ஆரூர்தாஸ் நெகிழ்ந்தார்.
அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவிலும், கோடம்பாக்கத்தில் விஜயா (வாஹினி) ஸ்டூடியோவிலும் `புதிய பறவை’க்கான செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
சிவாஜி விரும்பியவாறே ஆரூர்தாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வசனம் சொல்லிக்கொடுத்தார்.
01.03.1964 அன்று விஜயா ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 5 மணி ….. ஆரூர்தாஸின் மனைவி அவரை போனில் அழைத்தார். திருத்துறைப்பூண்டியில் அவருடைய அப்பா – அதாவது ஆரூர்தாஸின் மாமனார் காலமாகிவிட்ட துயரச் செய்தியைத் தெரிவித்தார்.
முக்கியமான காட்சிகள் படமாகிக்கொண்டிருந்தன. வேறு வழியின்றி, ‘காரியங்கள் நடந்து முடிந்தவுடன் உடனே தாமதிக்காமல் சென்னை திரும்பிவிடு. நீ வந்த பிறகு, மற்ற முக்கிய காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறி ஆரூர்தாஸை ஊருக்கு அனுப்பி வைத்தார் சிவாஜி. ஊரிலிருந்து திரும்பி வந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஆரூர்தாஸ்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அன்றைக்கு உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் ஷூட்டிங் முடிந்து இயக்குநர் ` பேக் –அப்’ சொல்லி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டன.
அந்தத் தருணத்தில் திடீரென்று ஆரூர்தாஸின் மூளையில் ஒரு மின்னல் மின்னிற்று.
`அண்ணே! ஒரு நிமிஷம்’ என்று அவர் அழைத்ததும் செட்டை விட்டு நடந்து போய்க்கொண்டிருந்த சிவாஜி ` என்னப்பா?’ என்று கேட்டார்.
` சரோஜாதேவி, ` என்னை நம்புங்க கோபால், என்னை நம்புங்க’ ன்னு சொல்லி உங்க கால்ல விழுந்து குமுறி அழறதைப் பாத்துட்டு நீங்க பேசாம போறீங்களே, அது சரியா இல்லே. உங்க கேரக்டர் நினைவு பெற்றதா எனக்கு தோணலை. அந்த இடத்திலே நீங்க இரண்டு வார்த்தை பேசினா நல்லாயிருக்கும்’ என்றார் ஆரூர்தாஸ்.
`நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே?’
`அதாவது `பெண்மையே! நீ வாழ்க ! உள்ளமே உனக்கு ஒரு நன்றி–’ இதை சொன்னீங்கன்னாத்தான் சரோஜாதேவி உங்களைக் காதலிச்சது உண்மை அப்படீங்றதை நீங்க ஒப்புக்கொண்டதா அர்த்தமாகும். அப்பத்தான் உங்க கதாபாத்திரம் நியாயப்படுத்தப்பட்டு உங்க மேலே ஒரு அனுதாபம் பிறக்கும்.
இதை ஆரூர்தாஸ் சொன்னவுடனே சிவாஜியின் முகபாவனை மாறி, ‘அடப்பாவி! ஷூட்டிங் `பேக்- அப்’ ஆனதுக்கப்பறம் இப்ப வந்து சொல்றியே?’
`இப்போதான் எனக்கு தோணுச்சு.’
இதற்குள் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் வெளியில் சென்றுவிட்டார்கள். சிவாஜி தன் கைகளைத் தட்டி உரத்த குரலில் ` ஏ தாதா, பிரசாத் எல்லோரும் உள்ளே வாங்க’ என்றதும், அவர்கள் `என்னமோ ஏதோ’ என்று எண்ணி உடனே உள்ளே நுழைந்தனர். சிவாஜி சொன்னதன் பேரில் மீண்டும் `லைட் ஆன்’ ஆகி, ஆரூர்தாஸ் சிவாஜிக்கு சொன்ன வசனத்தை சொல்லி இன்னொரு ` டேக்’ எடுக்கப்பட்டது.
`பெண்மையே… நீ வாழ்க ! உள்ளமே உனக்கு என் நன்றி!’
இந்த மின்னல் வசனத்தை இன்றைக்கும் `புதிய பறவை’ படத்தில் கேட்கலாம்.
(தொடரும்)

Russellxor
20th October 2016, 07:40 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/57e2280fd9ca4b9ce1468edb79200bbf.jpg

http://uploads.tapatalk-cdn.com/20161020/a13801330c7c88abc3056107bd57e64d.jpg

Russellxor
20th October 2016, 07:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/099533214a6fe4a79411c66bbc9a074e.jpg

Russellxor
20th October 2016, 07:45 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/97350c312a9729ae152023290bd5491c.jpg

Russellxor
20th October 2016, 07:46 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/ffecd32bcce8d8b682aef131b7fe7c8d.jpg

Russellxor
20th October 2016, 07:47 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/3470d7a5081ad1cfced5946971ffcddb.jpg

Russellxor
20th October 2016, 07:48 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/13e29b1fcee9f60bd0ad8c8c93b7704d.jpg

Russellxor
20th October 2016, 07:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/537493dfabf01290a39c18da4ef00d62.jpg

Russellxor
20th October 2016, 07:50 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/213cf748d1a2834b75012c8c9ed9c190.jpg

Russellxor
20th October 2016, 07:51 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/05638f536e7bfaa7cb0dcedc473d0811.jpg

Russellxor
20th October 2016, 07:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/b9cd6c241df5caa7f601c92a167836dd.jpg

Russellxor
20th October 2016, 07:52 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/8c9f4987c4c0b08213d8adedde42fe23.jpg

Russellxor
20th October 2016, 07:53 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/867e86a5832a2ffe5ac69a87d0245565.jpg

Russellxor
20th October 2016, 07:54 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/7602d368cce66aaf69d8ce31348eb8b7.jpg

Russellxor
20th October 2016, 07:55 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/1a30e633d7eb42c5b5fdbe63334e2c73.jpg

Russellxor
20th October 2016, 07:56 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/2b97290f6c3e0e2d9a84221880f3debe.jpg

Russellxor
20th October 2016, 07:57 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/1b75d15a6c1b4c490ab7708ea17f4df5.jpg

Russellxor
20th October 2016, 07:59 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/1d6c3da299270249906d9af7dfddd852.jpg

Russellxor
20th October 2016, 08:01 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/2b59d1cf2721ec669c70faf57afc13bf.jpg

http://uploads.tapatalk-cdn.com/20161020/5fbac22180c36113d0b959045913b927.jpg


http://uploads.tapatalk-cdn.com/20161020/aa3209f81ca86f1cc19097d50f0b4705.jpg

Russellxor
20th October 2016, 08:03 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/2c8694d171c2096ebda55c03a1783675.jpg
http://uploads.tapatalk-cdn.com/20161020/c6bbf7ea9f28a55de63ef23081356a31.jpg

Russellxor
20th October 2016, 08:05 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/23880ff04434403d9f62c87951319867.jpg

Russellxor
20th October 2016, 08:07 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/7b66f963421d4dacd332a1b3c7ea42d9.jpg

Russellxor
20th October 2016, 08:08 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/30591d10b2682c02ad18381ce2472c32.jpg

Russellxor
20th October 2016, 08:11 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/aa9db7257cfc5b4862b77f319dbab52c.jpg

Russellxor
20th October 2016, 08:12 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/8d718570fceae4abc915a0958b3a15b3.jpg

Russellxor
20th October 2016, 08:14 PM
http://uploads.tapatalk-cdn.com/20161020/f1f5088d650773ee0fa724fe816b9bd1.jpg

KCSHEKAR
21st October 2016, 11:08 AM
செந்தில்வேல் சார்,

நடிகர்திலகத்தின் திரிசூலம் திரைப்பட விளம்பரங்கள் மற்றும் 200 வது திரைப்பட விழா மலர் ஆவணப்பதிவுகள் சிறப்பு. நன்றி.

Russellxor
21st October 2016, 06:19 PM
செந்தில்வேல் சார்,

நடிகர்திலகத்தின் திரிசூலம் திரைப்பட விளம்பரங்கள் மற்றும் 200 வது திரைப்பட விழா மலர் ஆவணப்பதிவுகள் சிறப்பு. நன்றி.
Thankyou sir

Russellxor
21st October 2016, 06:35 PM
Facebook
http://uploads.tapatalk-cdn.com/20161021/be440cb4d36c1a36c55ed01464e65ddd.jpg

Russellxor
21st October 2016, 06:36 PM
http://uploads.tapatalk-cdn.com/20161021/c4b319fc106170e276bc3eae2145cbe5.jpg

Russellxor
21st October 2016, 06:37 PM
http://uploads.tapatalk-cdn.com/20161021/a8a0c2daa51a9353dbe70a1efa33e32a.jpg

Russellxor
21st October 2016, 06:49 PM
http://uploads.tapatalk-cdn.com/20161021/c894f1039c8ca87a731885582b67830b.jpg

RAGHAVENDRA
24th October 2016, 07:13 PM
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான சரஸ்வதி சபதம் திரைப்படத்தின் பொன் விழா, 23.10.2016 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை ரஷ்யன் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற்றது. திரைப்படத்தில் பணியாற்றிய திரு பாபு, மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி சார்பாக அவரது புதல்வி திருமதி விஜய சாமுண்டேஸ்வரி கலந்து கொண்டனர். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திரிசக்தி திரு சுந்தரராமன் அவர்கள் கலந்து கொண்டு நினைவுப் பரிசினை வழங்கினார். இந்திய அணி பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு, தீபாவளி நெருக்கத்திலான Shopping இவற்றையெல்லாம் மீறி கிட்டத்தட்ட அரங்கு நிறையும் அளவிற்கு திரளான அளவில் ரசிகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்கது.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14611119_1237302036320466_6898598404044279021_n.jp g?oh=04e641c880d30caf3d9c7ba4434ef4cf&oe=58A340E6

ஒளிப்பதிவாளர் திரு பாபு அவர்கள் சரஸ்வதி சபதம் படத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14657288_1237302049653798_6185032290925680019_n.jp g?oh=636d59f7ebd39ac7cf8308cc6b98c2ca&oe=589AA394

திருமதி விஜய சாமுண்டேஸ்வரி அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் நடிகர் திலகம் ஆகியோரைப் பற்றிய தன் நினைவுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14724356_1237302046320465_1146778963677504299_n.jp g?oh=ee88332c7ed4d1d48922a0785543f098&oe=5897267A

திரு திரிசக்தி சுந்தர ராமன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14650677_1237302079653795_3236128863642019883_n.jp g?oh=e933b0ff1ce34e70aa11bdee71cbd2c4&oe=589064AA

திரு பாபு அவர்கள் நினைவுப் பரிசினைப் பெற்றுக் கொண்ட காட்சி

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14671192_1237302086320461_4795433483842868274_n.jp g?oh=9ccb3935ac67e585ed0ab90dc69c0075&oe=5893A4E0

திருமதி விஜய சாமுண்டேஸ்வரி அவர்கள் நினைவுப் பரிசினைப் பெற்றுக் கொண்ட காட்சி.

Gopal.s
25th October 2016, 08:19 AM
நடிகர் திலகமும் விருதுகளும் .

நிறைய பேர் விருதுகளை பற்றிய அடிப்படை உண்மை கூட தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்கள். செய்து இந்த உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அரசின் விருது.(சிறந்த நடிகர்)

இந்த விருது ஏற்படுத்த பட்டதே 1967 ஆம் ஆண்டில்தான். நடிகர்திலகம் நடிக்க வந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முடிவுற்ற நிலை. இந்த விருது 1952 முதலே இருந்திருக்குமானால் , அவருக்கு பராசக்தி,அந்த நாள்,உத்தமபுத்திரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன்,நவராத்திரி, என்ற 1967 க்கு முற்பட்ட படங்களிலும் ,தில்லானா மோகனாம்பாள்,தெய்வ மகன்,வியட்னாம் வீடு,ஞான ஒளி ,கெளரவம்,தங்க பதக்கம், முதல் மரியாதை போன்ற 1967 க்கு பிற்பட்ட படங்களுக்கும் சாத்தியம்.

மொழி மாற்ற படங்கள் இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,பாபு போன்ற படங்களுக்கு சாத்தியம் இல்லை.இது தேர்வு குழு தகுதி அடிப்படை. மொழி மாற்ற படங்கள்,இரவல் குரல் இவை தேர்வுக்கு பங்கு பெற முடியாது. 1971 இல் சவுந்தரா கைலாசம் சிவாஜிக்குத்தான் என்று சொல்லி, அங்கு சென்று வேறோர் பெயரை .சொல்லி ,தேர்வு பிரச்சினைக்கு உள்ளானதுடன் ,அகில இந்தியாவும் கை கொட்டி நகைத்தது. 1972 சட்ட சபையில் நெடுஞ்செழியன் உண்மையை போட்டு உடைக்க, சம்பந்த பட்ட நபர் நாணி ,அதனை திருப்பி விட்டார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனை பற்றி முழு விவரம் வேண்டுவோர் 1972 துக்ளக் இதழ்களை துழாவினால் உண்மைகள் வெளிச்சமாகும்.

1985 இல் முதல் மரியாதைக்குத்தான் என்று முடிவான நிலையில் ,ஜெயா (இத்தனைக்கும் இவர் சிவாஜி ரசிகர்) எம் .பீ பிரச்சினையை மனதில் வைத்து கடைசி நிமிடத்தில் கழுத்தறுத்ததை ,சக தேர்வு குழு உறுப்பினர் கோமல் ,சுபமங்களா இதழில் விரிவாக எழுதியுள்ளார்.

அதனால் இந்த விருது ,நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பு பொற்காலத்தில் (1952 to 1966) ஆரம்பிக்க படவே இல்லை.பிறகு தி.மு.க ,அமிதாப் போன்ற காரணிகள் குறுக்கே வந்தன.

Film fare விருது (தமிழ் மொழி சிறந்த நடிகர்)

இந்த விருது தமிழுக்கு ஏற்படுத்த பட்டதே 1972 ல்தான் . இதுவும் பிராந்திய அளவு தேர்ந்தெடுப்பதே. ஆனாலும் ஓரளவு புகழ்பெற்ற விருது.கமல் கூட குழந்தை தனமாக உண்மை தெரியாமல் (அல்லது சாமர்த்தியமாக மறைத்து) இதை பற்றி அரைகுறையாய் கூறியுள்ளார். இது ஏற்படுத்த பட்ட முதலிரண்டு வருடங்கள் சிவாஜிக்கே சென்றது. (ஞான ஒளி ,கெளரவம்).1974 இல் நான் அவனில்லை,தங்க பதக்கம் போட்டியில் நான் அவனில்லை ஜெமினிக்கு சென்றது. (நிஜமாகவே நல்ல தேர்வு).பிறகு சிவாஜி ஸ்டார் மட்டுமே ஆகிவிட்ட 1975 முதல் 1984 வரை குறிப்பிடத்தக்க படங்களே இல்லை. 1985 இல் முதல் மரியாதைக்கு மரியாதை வழங்க பட்டது.

அவர் உன்னதம் தொட்ட காலங்களில் Film Fare விருதே கிடையாது.(தமிழுக்கு)

தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது.

இந்த விருது ஆரம்பிக்க பட்டதே 1967 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு. இதன் லட்சணம் உங்களுக்கே தெரியும். அதிலும் ஏதோ காரணங்களுக்கு 1971 முதல் 1976 வரையும், 1983 முதல் 1987 வரை இந்த விருது வழங்க படாமல் நிறுத்து வைக்க பட்டுள்ளது. அதையும் மீறி தமிழக அரசு மனமேயில்லாமல் தெய்வ மகனுக்கு வழங்கியாக வேண்டிய கட்டாயம்.

இப்போது புரிந்திருக்குமே ,இந்த விருதுகள் அவர் உன்னதம் தொட்ட முதல் 15 வருடங்கள் ஏற்படுத்த படவே இல்லை.பிறகு மிக மோசமான அரசியல் மூன்று முறை விளையாடி உள்ளது.

இனியாவது நம் ரசிகர்கள் உண்மை புரிந்து புலம்புவதை நிறுத்தி கொள்ளவும். இந்த உண்மைகள் நிறைய திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கே தெரியாது.

அது சரி, அவர் கலைமாமணி பெற்றது 1962 இல். இது கூட விக்கி யில் தவறாக குறிக்க பட்டுள்ளது. ஆதாரத்துடன் திருத்தவும்.

Russellxor
26th October 2016, 08:30 PM
Courtesy ..Facebook
http://uploads.tapatalk-cdn.com/20161026/bc7bf2594c192deebc2fedc0a00754bd.jpg

Russellsmd
27th October 2016, 12:36 AM
இது-

அய்யன் நடிகர் திலகத்தின்
எண்பத்தெட்டாம் அவதாரத்
திருநாளில் நானெழுதிய
"எவரும் எட்டா எண்பத்தெட்டு"
எனும் கவிதையின் காணொளி
வடிவம்.

காணொளியை சிறப்புற வடிவமைத்துத் தந்த, எப்போதும் என் நன்றிகளுக்குரிய விக்னேஸ்வரனுக்கு இப்போதும் நன்றிகள்.

https://youtu.be/q-4LUILc3Ok

Russellsmd
27th October 2016, 12:40 AM
கடந்த 23.10.2016
அன்று நடிகர் திலகம் திரைப்பட
திறனாய்வு அமைப்பின் சார்பாக சென்னையில் சமீபத்தில் 50 ஆண்டுகளை
நிறைவு செய்து பொன்விழாக் கண்ட "சரஸ்வதி சபதம்" திரைக் காவியம் திரையிடப்பட்டது.

நாரதரையும், வித்யாபதியையும் நல்லவர்களோடு சேர்ந்து தரிசிக்க ஆவலாயிருந்தேன்.
கலந்து கொள்ள இயலாதவனானேன்.

"சரஸ்வதி சபதம்" பார்க்க முடியாத ஏக்கத்தை இந்த
"சரஸ்வதி சபதம்-50" மூலம்
தீர்த்துக் கொள்கிறேன்.

Russellsmd
27th October 2016, 12:42 AM
சரஸ்வதி சபதம்-50
---------------------

(1)

கல்வியா? செல்வமா? வீரமா?
எது முக்கியம் என்று ஆராயத்
துவங்கி, மூன்றுமேதான் என்று
தீர்ப்புச் சொல்கிற படம்- "சரஸ்வதி சபதம்".

நடிகர் திலகம் நமக்கு நடத்துகிற கலைப் பாடங்களின்
வழியே நாம் கற்றறிகிற ரசனை
எனும் "கல்வி", நம் இதயப் பெட்டகத்தில் நிரம்பி வழிகிற
அய்யனின் நடிப்பெனும் "செல்வம்", அய்யனின் ரசிகரென்கிற பலத்தில் நாம்
பெற்று விடுகிற "வீரம்"... மூன்றுமே முக்கியமென்ற
முடிவுக்கு நாமும் வருகிறோம்.

(2)

வேடங்கள் புனைந்து நடிப்பதென்பது வெறும் ஒப்பனைகளால் விளைவதல்ல...

உளப்பூர்வமான கலை ஈடுபாட்டால் விளைவது.

இதற்கு, அப்போதும்,இப்போதும், எப்போதும் உதாரணம்.. நம் நடிகர் திலகம் மட்டுமே.

ஓரிடம் நிலையாத நாரதராகவும், ஊமையாயிருந்து
புலவனான வித்யாபதியாகவும்
நடிப்பதல்ல.. மாறுவதே அந்த
உளப்பூர்வமான கலை ஈடுபாடாகும்.

(3)

சிறு வயதில் நான் வசித்த வீடு
இருந்த தெரு நாற்பது வருஷங்களில் அடியோடு மாறி
"பார்த்தாயா?..பார்த்தாயா?" என்று சிரிக்கிறது. என் காலத்தில் அது எனக்குத் தந்த
இனிமையை இன்று எனக்குத் தரவில்லை.

ஐம்பது வருடங்களுக்கு முன் வந்த "சரஸ்வதி சபதம்" அன்று
தந்தவற்றோடு, புதுசு புதுசாய்
இன்பங்கள் தருகின்றது.

(4)

சில தேதிகளைச் சிலர் மறக்க
முடியாதபடி பொன்னாளாக்குகிறார்கள்...
3.9.1966 எனும் தேதியை நடிகர்
திலகம் "சரஸ்வதி சபதம்" தந்து
பொன்னாளாக்கியது போல்.

(5)

துணிச்சலாய் சில பாத்திரங்களை சவாலாய் ஏற்று
ஜெயிப்பது நடிகர் திலகத்தாலேயே ஆகும்.

ஒரு ஊமையைப் பேச வைக்க
கலைவாணியைத் தூண்டி விடும் நாரதர் வேடம் ஏற்றவரே, அந்த ஊமை வேடமும் ஏற்கிற துணிச்சல்.

(6)

நாரதர் வேடம் ஒரு சுவாரஸ்யமான, கௌரவ வேடமாகவே அதற்கு முன்
இருந்தது.

நாரதரை முழுசாய் நமக்குக்
காட்டியது.. நடிகர் திலகமே.

(7)

கொண்டையில், புஜத்தில், கைகளில் சுற்றிய மலர் வட்டங்கள், அவைகளையொத்த மென் புன்னகை, கண்களிரண்டில் ஒளிரும் அருள் விளக்குகள்...
இத்தனை அழகான நாரதர்
மூவுலகும் பார்க்காதது. திரையுலகும் பார்க்காதது.

(8)

படத்தில் சத்யலோகம் காட்டப்படுகிறது. வைகுண்டம்
காட்டப்படுகிறது. கைலாயம் காட்டப்படுகிறது. மூன்று உலகங்களை விட நம்மைக் கவர்ந்ததென்னவோ... நடிகர்
திலகமெனும் நம் உலகமே.

(9)

புராணம் போற்றிக் கும்பிடும்
ஒரு கதாபாத்திரத்திற்கு, சராசரி
மனிதரின் உடல் மொழிகள், முக பாவங்களைப் பொருத்தும்
சாமர்த்தியம் நடிகர் திலகத்துக்கே உரியது.

(10)

திருவிளையாடலில் நாரதராக
நடித்தவரிடமோ, சரஸ்வதி சபதத்தில் சிவனாக நடித்தவரிடமோ நடிப்பில் எந்தக் குறையும் இருக்காதுதான். ஆனாலும்,
நடிகர் திலகத்தை சிவனாகவும்,
நாரதராகவும் பார்த்து விட்ட
கண்களுக்கு வேறு யாரையும்
அந்தத் திருவுருவங்களோடு
பொருத்த முடியவில்லையே..
என்ன செய்ய?

Russellsmd
27th October 2016, 12:43 AM
(11)

நாரதர் குறித்துப் புழங்கும் கதைகளில் பெரும்பாலும் அவர் வம்புக்காரராக மட்டுமே சித்தரிக்கப்படுகிறார். அவ்வாறில்லை என்றே சான்றோர்கள் கூறுகிறார்கள்.
நாரதர், அறிவார்ந்தவர் என்பதை நடிப்பால் நிரூபித்தவர்... நடிகர் திலகம்.

(12)

நாரதருக்காக நடிகர் திலகம்
நடந்திருக்கும் அந்த சாந்தமான,
பவ்யமான நடை அற்புதமானது.
கத்தி வீச்சாய் முன்
செல்லும் அந்த கால்களில்தானா இந்த நடையும்?

(13)

நாரதர் கண்ணியமானவர், சாந்தம் மிகுந்தவர் என்பதை
மெய்ப்பிக்கும் அந்த உச்சரிப்பு...
வார்த்தைகளை அதிராமல் அதே சமயத்தில் கம்பீரமாக
வெளிப்படுத்தும் அழகே அழகு.

(14)

அன்னை சரஸ்வதி நடத்தும்
கோமாதா பூஜைக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும்
சத்யலோகத்தைப் பார்த்து அசந்து போவதற்கு வசனங்களும் இருக்கின்றன.
ஆனால் அவற்றை முந்திக் கொண்டு அவரது கண்களே
வசனம் பேசி விடுகின்றன.

(15)

தன்னை கோமாதா பூஜைக்கு
அழைக்காத அன்னையிடம்
அதை சூசகமாய் சுட்டிக் காட்டும் நடிப்பில்தான் எத்தனை அழகு?

(16)

சரஸ்வதியின் இடத்தை லட்சுமி கடாட்சமான இடம் என்று வம்பு பேசுவதற்கு முன்பான அந்த தொண்டைச்
செருமலும், குறும்பான கண்
உருட்டலும் ரசிகனுக்கு விருந்து.

(17)

மற்ற நடிகர்களென்றால்...
ஒரே சமயத்தில் இருவர் திரையில் தோன்றினால், ஒருவர் பேசும் போது மற்றவரின் பாவனை சுமாராகவே இருக்கும். இந்தக்
காட்சியில் சாவித்திரியம்மா
நீளமாய் வசனம் பேச, நடிகர்
திலகம் காட்டும் உயிர்ப்பான
பாவனைகள் பார்த்து நம் கண்கள் அவரிடமே லயிக்கும்.

(18 )

உலக நன்மைக்காக கலகங்களின் மூலமாகவும்
நல்லதை உண்டாக்க
முனையும் நாரதரை, வெறும்
கலகக்காரராகவே காட்டி விடக்
கூடாது என்பதில் நடிகர் திலகம்
கொண்டிருக்கும் கவனத்தைக்
காட்டுகிறது... இலக்கிய, உலக
விஷயங்களை உதாரணம் காட்டி அன்னையிடம் செய்யும்
விவாதத்தின் தீவிரம்.

(19)

கல்விக்குரியவளிடம், செல்வத்தைப் பெருமையாகப்
பேசும் போது கூறும் உதாரணங்களை குறும்பிலிருந்து விலகிக் கொண்டு பேசும் நேர்மையான
நடிப்பு.

(20)

சதா தான் உச்சரிக்கும் நாராயணனைத் தரிசித்துப்
பேசுகையில் எடுத்துக் கொள்கிற உரிமை, நிஜமான ஈடுபாட்டில் வருகிற பக்தி..
இவற்றையெல்லாம் அப்படியே
வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யன்.

Russellsmd
27th October 2016, 12:45 AM
(21)

"கல்விதான் பெரிது" என்று
லட்சுமியிடம் அறிவுறுத்தும்
போது உதாரணமாகச் சொல்லும் அந்த "செல்வம்..
செல்வம்.. செல்வோம்" என்பதை மிகச் சரியான உச்சரிப்போடு சொல்லும் அழகுக்கு நம் தலைமுறையே அடிமை.

(22)

நடிப்பில் ஒரு சிறிய திருப்பத்தை, மாற்றத்தைத் தந்து நம்மைப் பிரமிக்கச் செய்வது நடிகர் திலகத்திற்கு வாடிக்கை.

"செல்வம்தான் பெரிது" என்று
கலைவாணியைத் தூண்டி விட்டு, கல்விதான் பெரிது என்று லட்சுமியையும் தூண்டி விட வந்திருக்கும் நாரதரைப்
பார்த்து பரமாத்மா கிண்டலாக
"நாடகத்தைத் துவக்கி விட்டாய். நடத்து." என்று சிரிக்க...

சட்டென்று முகத்தில் சிரிப்பு
தொலைத்து, அதிர்ச்சி காட்டி
"நானா நடத்துகிறேன்..? பெருமானே.. நடத்துவதெல்லாம் நீங்களல்லவா? இன்று ஏதோ
எனக்குள் புகுந்து உத்தரவிட்டிருக்கிறீர்கள்.." என்று பேசுகிற போது நமக்குள்
ஏற்படுகிற நெகிழ்வான ரசனை
மாற்றம், தவிர்க்க முடியாதது.

தவிர்க்கக் கூடாதது.

(23)

லட்சுமியையும் கோபப்படுத்தி
அனுப்பி விட்டு "நாராயணா"
என்று நாரதர் சிரிக்க.. "என்னை
ஏனடா அழைக்கிறாய்..?" என்று
பெருமான் கேட்க, சிரித்துக்
கொண்டே அவர் பதில் சொல்லும் போது மீண்டும் தலைதூக்கும் அவரது குறும்பு
ரசிப்புக்குரியது.

(24)

"தெரிந்தோ..தெரியாமலோ..
உன் பெயரைச் சொல்லி பல
பாவங்களைச் செய்கிறேன். அதை உனக்கே அர்ப்பணித்து
விட்டால் நான் புனிதனாகி விடுவேனல்லவா?" என்பது
மனித குலத்தின் சார்பாக
நாரதர் கடவுளிடம் சொல்வது.

(25)

கைலாயத்தில் சக்தியின் அருகே நிற்கும் சிவபெருமான்
"நாரதா.." என்றழைத்ததும், அப்போதுதான் பார்ப்பது போல
"..ச்சட்.. தாங்களும் இங்கேதான்
இருக்கிறீர்களா?" என்பார் அய்யன். அந்த "..ச்சட்.." பார்வையாளனோடு கதையைக்
கட்டுகிற சுவாரஸ்யக் கயிறு.

(26)

ஒரு பாடலென்பது பொழுது
கடத்துகிற சமாச்சாரமல்ல..ஊன்றிக் கவனிக்க அதில் ஓராயிரம் விஷயங்கள் உண்டு
என்பதை நிரூபிக்கிறது.. "கல்வியா..செல்வமா..வீரமா"
பாடலினூடே "ஒன்றுக்குள் ஒன்றாக உருவானது" என்று
வரும் இடத்தில் அய்யன் காட்டும் உருக்கமான பாவங்கள்.

(27)

நமக்கு முதுகு காட்டி அய்யா நந்தவனத்தில் பூக்கள் பறிக்கிறார். காவலாளிகள் பார்த்து மிரட்ட, பயப்படுகிறார்.
அதிர்ச்சியாகிறார். பயத்தையும்,
அதிர்ச்சியையும் முதுகிலேயே
காட்டுகிறார். நடிகர் திலகத்திற்கு முதுகும் நடிக்கும்
என்று சும்மாவா சொல்கிறோம்?

(28)

காவலாளிகள் பேச முடியாதவரைப் பிடித்து அடித்து உதைக்கிறார்கள். ரத்தம் வழியக் கலங்கி நிற்பவரிடம் நாகேஷ் " அடிக்க
வர்றாங்களே.. பூஜைக்காகத்தான் புஷ்பங்களைப் பறிக்க வந்தேன்னு வாயைத் திறந்து
சொல்லக் கூடாது?" என்று வாய் தவறிச் சொல்லி விட,
தன்னுடைய ஊனம் சுட்டிக்காட்டப்பட்ட வேதனையில் வெடித்து அழுவாரே... அப்பப்பா!?

(29)

வீட்டில், ஊமைப் பிள்ளையைக்
காணாமல் தவிப்பு நடை நடந்து
கொண்டிருப்பார்..தந்தை நாகையா. ரத்தக் காயங்களோடு, ஒரு தத்துப்பித்து நடையோடு வீட்டுக்குள் வருவார் நடிகர் திலகம்.

தனது ஊனத்தால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தனக்கென்றிருக்கும் ஒரே உறவான தன் தந்தையிடம்
சொல்லியழ ஓடி வரும் ஒரு
குழந்தையை அந்த நடையில்
பார்க்கலாம்.

(30)

"வித்யாபதி.. என்ன நடந்தது..?"
என்று பதட்டமாய் வினவும்
தந்தைக்கு பதிலளிக்க வார்த்தையின்றி ஒரு அழுகையைப் பதிலாகத் தருவார்.

அழுகை, ஒரு மொழியானது நம்
நடிகர் திலகத்திடமே.

Russellsmd
27th October 2016, 12:48 AM
(31)

தாங்க முடியாத மன வேதனையுடன் அன்னை கலைவாணியின் முன் அமர்ந்து வேண்டுவார்.அன்னை
தோன்றுவாள். ஊனம் நீக்குவாள். உருவம் அழகாக்குவாள்.

மிக கம்பீரமான எழில் தோற்றம்
பெறும் நடிகர் திலகத்தை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கென்னவோ.. கம்பீரத் தோற்றம் பெறுவதற்கு முந்தைய விநாடியில், அன்னையை வியப்போடு வாய்
பிளந்து பார்த்திருக்கும் அந்தத்
தோற்றம் மிகப் பிடிக்கும்.

(32)

அன்னை அருள் வழங்கி, பேசும்
சக்தியையையும் தந்து விட்டாள்.பிறந்தது தொட்டு
அந்த நிமிடம் வரை பேச முடியாதிருந்தவருக்கு பேச்சு
படிப்படியாக வரும் அதிசயம்
நிகழ்கிறது.

அய்யன் தன் முதல் வார்த்தைக்காக நிரம்பவும்
பிரயத்தனப்பட்டு, கண்கள் சுருக்கி, உள்ளிருந்து வார்த்தைகள் தேடும் பாவனையைப் பார்க்க நேரும்
போதெல்லாம் உடனிருப்போர்
முகத்தைக் கவனிப்பேன்.

இதுவரை நான் பார்த்ததில் தானும் கண்கள் சுருக்காமல்
திடமாய் அமர்ந்து பார்ப்பவர்
எவரையும் நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதில்லை.

(33)

தனக்கு ஒலி தந்து, மொழி தந்த
அன்னையை வியந்து பாடும்
"அகர முதல எழுத்தெல்லாம்"
பாடலினூடே "ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்"
என்கிற வரியின் போது அன்னைக்குத் தன் கண்களில்
காட்டும் நன்றிப் பெருக்கு
அருமையானது. அரிதானது.
வேறு யாரிடத்தும் காணக்
கிடைக்காதது.

(34)

அன்பு மகனுக்காக அழுது விட்டுக் கிளம்பிப் போன அருமைத் தந்தை வீடு திரும்பினால்... அலங்காரத்
திருவடிவாய் மைந்தன்.

ஆச்சரியப்படும் தந்தையிடம்
தனக்கு பேச்சு வந்த கதையைச்
சொல்லி விட்டு, குரல் தழுதழுக்க "கலைமகளுக்குப்
பூமாலையே சூட்டி வந்த நான்
பாமாலை சூட்டி விட்டேனப்பா..
பாமாலை சூட்டி விட்டேன்"என்று நடிகர் திலகம்
சொல்லும் போது அவரது ஒளி
மிகுந்த கண்கள் கண்ணீரோடு
காட்டும் பெருமிதம்.. அவர்
நமக்குக் கிடைத்த பெருமிதம்
போல.

(35)

இறைவன் மீது நம்மவர் பாடும்
பாடல் கேட்டு அசந்து போகும்
அரசி, தான் கழுத்தில் அணிந்த
விலையுயர்ந்த முத்து மாலையை பரிசளிக்க எண்ணி,
"நானே அகமுவந்து கொடுக்கிறேனென்றால்..."
என்கிற கர்வமான வாக்கியத்தை உபயோகிப்பார்.
கல்விக்கன்றி எதற்கும் அடிபணியாத நம்மவர் இந்த
இடத்தில் காட்டுகிற வெகு
அலட்சியமான உடல் மொழிகளைக் கவனியுங்கள்...
நடிகர் திலகத்துள் வித்யாபதி
ஆழ இறங்கியிருப்பது புரியும்.

(36)

இதே காட்சியில்
இன்னொன்று...

அந்த மாலையைப் பரிசாகத்
தர எண்ணும் அரசி, "விலை
மதிப்பற்ற பரிசு" என்று ஒரு
முறை சொல்வார். நிறைய
வாக்குவாதங்களுக்குப் பிறகு
அதை வாங்க மறுத்து விடுவார்
நடிகர் திலகம். கடைசியில்
அரசி "பரிசு..?" என்று நீட்ட,
"விலை மதிப்பற்ற பொருள்..
தங்களிடமே இருக்கட்டும்.."
என்பார். பதிலாக இல்லாமல்
பதிலடியாக வார்த்தைகளை
மாற்றத் தெரிந்தவரன்றோ..
நம் வித்யாபதி..?

(37)

அரசியைப் பகைத்துக் கொண்டதற்காக அப்பா கண்டிப்பார்... அரசியால் பிள்ளைக்கு ஆபத்து வருமோ
என்ற பயத்தில்.

"செங்கோல் அவர்கள் கையில்
என்றால் எழுதுகோல் என் கையில்" என்று நடிகர் திலகம்
சொல்வார். அப்போது அவர்
அகல விரிக்கும் கண்களில்
காட்டும் பயமற்ற அலட்சிய பாவங்களில் இன்னும் நூறு தலைமுறைக் கலைஞர்களுக்கான பாடங்கள்..

(38)

அரசவைக்கு வித்யாபதியை
வரச் சொல்லி அழைப்பு வரும்.
வருவார்... அரசவைக்குள்.

கொஞ்ச நேரத்துக்கு முன்
நாரதராய் நடந்த பூனை நடையல்ல இது... புலி நடை.

(39)

அரசவையில் அரசியும், தளபதியும் மாற்றி, மாற்றி
கேள்வி கேட்பார்கள்.

தளபதி கேட்கிறார்..
" அழியாதிருப்பது..?"

வித்யாபதியின் பதில்..
"கலைஞனின் காவியம்."

அழியாதிருக்கும் காவியத்துக்கு
"சரஸ்வதி சபதம்" ஒரு சான்று.

(40)

கொண்ட கொள்கையில் உறுதியாயிருப்பவர்களின்
கோபம் பலமானதாகவே இருக்கும். அரசியைப் புகழ்ந்து
ஒரு கவி பாடச் சொல்லி திரும்பத் திரும்ப வலியுறுத்தப்
படும் கோபத்தில்" இந்த மனித
ஜென்மங்களைப் பாடுவதில்லை" என்று சொல்லும் உறுதியும், அந்தக்
கைவீச்சும் இதயக் குறிப்பேட்டில் அழுத்தமாகப்
பதிவானவை.

Russellsmd
27th October 2016, 12:51 AM
(41)

நடிகர் திலகத்தின் திரைப்படக்
கதையோடு ஒன்றி வருகிற
வசனங்கள், அவரது நற்பண்புகளையும் குறிப்பது
போல் ஒலிக்கும் தருணங்கள்..
ரசிகனுக்கு உற்சாகத் தருணங்கள்.

அந்த உற்சாகத் தருணம்
இந்தப் படத்திலும் உண்டு..
சிறைக்கு வந்து 'பழசை மறந்து
விட வேண்டாம்' என்று மிரட்டும் அரசியிடம் "பழசை
மறக்கும் பழக்கம் எனக்கில்லை" எனும் போது...

(42)

நாரதராக நடித்துதான் சுவாரஸ்யமான நகைச்சுவை
நடிப்பைத் தர முடியுமா? வித்யாபதியாக நடித்தும் தர முடியும் என்று நடிகர் திலகம்
காட்டிய இடம்...

சிறையில் அரசி, வித்யாபதியின் சவாலுக்குப்
பதிலாக "பார்க்கலாம்" என்று
சொல்லும் போது, "பாருங்கள்"
என்பது. "வருகிறேன்" எனும்
போது "நன்றி" என்பது..

(43)

மூன்று கடவுளருக்குள்ளும்
போட்டிப் புயலை உருவாக்கிய
நாரதர், மீண்டும் மூவரையும்
ஒரு சேரச் சந்திக்கும் இடம்.

கலைவாணி கோபமாய் மிரட்ட
ஏதோ புலம்பிக் கொண்டே சிணுங்குவார்... அன்னையிடத்தில் பிள்ளை கொள்கிற உரிமை, அந்தச் சிணுங்கலில் தெரியும்.

(44)

அரசியைக் கிண்டலடிக்கும்
"ராணி மகாராணி" பாடல்.

"அங்கமெங்கும்" என்ற வரியின் போது மேலேறிய
கர்வப் பார்வையோடும், முன்
நடப்பது போன்றே பின் நடக்கும் கம்பீர நடையோடும்
அய்யனைத் தரிசிப்பதற்காவது
மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை ஆண்டவன்
ஐந்தாறு மடங்கு அதிகரிக்க
வேண்டும்.

(45)

செல்வச் செருக்கு கொண்ட
ராணியும், வீரத்தால் திமிர் கொண்ட தளபதியும் சண்டையிடும் போது இடையில் நின்று சிரிப்பை அடக்க முடியாமல் காட்டும்
உடல் மொழிகள்.. பாவனைகள்.. அதைப் படம் பிடித்த அந்தக்
காமிரா, கொடுத்து வைத்தது.

(46)

தன்னையும், கல்வியையும்
அழித்து மண்ணோடு மண்ணாக்குவேன் என்று சபதமிடும் தளபதியிடம் கோபத்தில் உறுமும் உறுமல்...

தேவைப்படும் போதெல்லாம்
அடித்தொண்டையிலிருந்து வரும் அந்தக் கோபக் குரல்...
எனது வெகுகால ஆச்சரியம்.

(47)

தண்டனைக் களத்துக்கு அழைத்து வருகிறார்கள்.. வித்யாபதியை.

அங்கும் ஒரு அழகு நடை...

அந்த நடையை பார்க்கத் தவறியவர்களை யானையை
விட்டு மிதிக்க விடலாம்.

(48)

தன்னைப் போலவே வணங்கத்தக்கவராய், நல்லதைத் துவக்கி வைப்பவராய், எல்லோருக்கும்
பிரியமானவராயிருப்பதால் தான் கணேசப் பெருமான், கணேசப் பெருமானைப் பார்த்து
பின் சென்றாரோ?

(49)

எல்லாம் சுபமாய் முடிகிறது.
கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கைகோர்த்துச் சிரிக்கும் கடைசிக் காட்சி.

மீண்டும் நாரதராக நடிகர் திலகம்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றுமே அவசியமென்று
உணர்த்த வேண்டிய சூழல்
உணர்ந்த, நகைச்சுவை, நையாண்டிகள் விடுத்த
அந்தப் பக்குவமான நடிப்பில்
புரிதல்.

(50)

"இசையில்,
கலையில்,
கவியில்,
மழலை மொழியில்
இறைவன் உண்டு."

-இதே படத்தில் அய்யா நடிகர்
திலகம் பாடுவதாய் வரும் பாடல் வரிகள்.

இவற்றில் மட்டுமா.. இறைவன்?

அய்யனின் நடிப்பிலும்தானே?
*****

Russellsmd
27th October 2016, 12:55 AM
சிவாஜி பாட்டு-26
------------------

"என் மகன்" படத்தில் எனக்கு
மிகவும் பிடித்த காட்சி ஒன்று
உண்டு.

படத்தின் கடைசியில், திரையை
உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் நடிகர் திலகம்
அழகாய் "டாட்டா" காட்டிக்
கொண்டிருக்கையில், "வணக்கம்" என்ற வார்த்தை
வண்ணமாய் வந்து குறுக்கே
நிற்கும்.

ஜெயிக்கிற விஷயத்தில் எனக்கு வணக்கமே கிடையாது
என்கிற கருத்தில் நடிகர் திலகம்
அந்த வணக்கத்தை நிறுத்திப்
பிடித்து வந்த வழியே தள்ளி விடுவார்.

ஆம்.

ஜெயிக்கிற விஷயத்தில் அவருக்கு வணக்கமே கிடையாது என்பதை இந்த "உத்தமன்'பாடலும் ஒரு முறை
நிரூபிக்கிறது.

ஒடுங்கிய வாசலோடு உசரத்தில் இருக்கும் கோயிலின் படிகளில் இருந்து
அழகுத் துணையோடு இறங்குவதில் துவங்கி, இன்னொரு அழகான இடத்தின்
படிகளில் ஏறுவதோடு முடியும்
இந்தப் பாடலும் முடியும் நிமிஷத்தை வெறுக்க வைக்கும்.

பின்னங்கை கட்டிக் கொண்டு
எந்தப் பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் ஒரு கால் உயர்த்தி நிற்பது அழகு.

கேமராவை நோக்கி சிரித்தபடி
திரும்புகையில் கொஞ்சம் கூட
செயற்கை சேர்க்காத அந்தப்
புன்னகை முகம் அழகு.

கொஞ்சம் பின் நகர்ந்தால் பாதாளம் காட்டுகிற உயரமான அந்த சதுரப் பரப்பில் காதலி
வெட்கத்தால் ஓடுகையில் குறுக்கே கால் நீட்டி மறித்து
அவள் வேகம் மட்டுப்படுத்துகிற குறும்பு அழகு.

"பூமியெங்கும் பச்சைச் சேலை"
பாடத் துவங்கும் போது தலை
சிலுப்புவது அழகு.

கழுத்து சுற்றிய வெளிர் நீல
நீள் துண்டு அழகுக்கு அழகு
சேர்க்க, ஒயிலாய் உடல் வளைத்துக் குனிந்து காதலியின் கால், கையென
தாளம் இசைப்பது அழகு.

வளைந்து, நெளிந்து நடந்து வந்து, தலை ஒருபுறமாய்ச்
சாய்த்து, ஆளை அப்படியே
தூக்கிக் கொண்டு போகிற ஒரு சிரிப்பைத் தனது இதழ்களிலே
தவழ விடுவதும்...

கழுத்துத் துண்டின் நீளமான ஒற்றை முனையைப் பற்றிச்
சுழற்றிக் கொண்டு வேக நடை
நடப்பது அழகு.

அழகென்ற சொல்லுக்கு இலக்கணமாக அய்யன் நடிகர் திலகத்தை ஆண்டவன் படைத்தது அழகு.

அந்த அழகு முகத்தை ஆயுசுக்கும் ரசிப்பதற்கு அந்த ஆண்டவனே நம்மைப் படைத்ததும் அழகு.

http://youtu.be/yvf6SCQQA3A

Russellsmd
27th October 2016, 12:58 AM
சிவாஜி பாட்டு- 27
------------------

முல்லா கதைகளில் படித்த ஞாபகம்.

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவி,
வேலை முடித்துத் தினமும்
மாலையில் வீடு திரும்பும்
கணவனுக்கும், வேறொரு
பெண்ணுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்கிறாள்.

அதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கக் கூடும் என்று தினமும் கணவன் கழற்றிப்
போடுகிற உடைகளைக் கவனமாக ஆய்வு செய்கிறாள்.

கணவனுக்கு முடி கொட்டும்
வியாதி உண்டு. அவனது வெள்ளைச் சட்டையில் விழும்
கறுப்பு நிற தலைமுடியை
வைத்து சந்தேகத்தை உறுதி
செய்து வசவு பாடத் துவங்கினாள்.

கணவன் ஜாக்கிரதையானான்.

தினமும் வேலை முடித்துக் கிளம்பும் போது சட்டையைக்
கழற்றி கறுப்பு முடி ஒட்டிக்
கிடக்கிறதா என்று நன்கு பரிசோதனை செய்த பிறகே
புறப்பட்டான்.

அவனுடைய போதாத வேளை,
ஒருநாள் அவனது நரைமுடி
ஒன்று அவனது வெள்ளைச்
சட்டையில் விழுந்து, அவனும்
கவனிக்காமல் வீடு வந்து சேர்ந்தான்.

மனைவிக்காரி பார்த்து விட்டுப்
பத்ரகாளியானாள்.

"போயும் போயும் ஒரு வயதான
பெண்மணியுடனா தொடர்பு
வைத்திருக்கிறாய்...?"

கணவன் நொந்து போனான்.

மறுநாள் மிகக் கவனமானான்.

வெள்ளைச் சட்டையைக் கழற்றி அங்குலம், அங்குலமாய்ப் பரிசோதித்து,
பத்து முறை சட்டையை உதறி,
சட்டையில் கறுப்பு முடியோ,
நரை முடியோ இல்லையென்று
உறுதி செய்த பிறகே வீடு திரும்பினான்.

மனைவி வழக்கம் போல சட்டையை ஆய்வு செய்தாள்.
அங்குலம், அங்குலமாக ஆராய்ந்தாள். உன்னிப்பாய்
உற்றுப் பார்த்தாள். சட்டையில்
எந்த முடியும் இல்லையென்று
அறிந்தாள்.

கண்களில் கனல் தேக்கி கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
கேட்டாள்.

"இப்போது ஒரு மொட்டைத்
தலைப் பெண்ணோடு உறவு
வைத்திருக்கிறாய்..இல்லையா?"

*******
சந்தேகம் மட்டுமல்ல, தவறான
புரிதல், பிடிவாதம், கர்வம்
என்று மோசமான குணமுள்ளவள் மனைவியாக
வாய்த்தால், அந்த ஆண்மகனின் வாழ்க்கை அவலப்பட்டுப் போகிறது.

பெய்த பெருமழையில் கரையுடைத்து ஓடும் வெள்ளமாய் வாழ்வோடு ஓடிக் கொண்டிருந்தனை கல்யாணம்
பண்ணிக் கொண்டு வந்தவள்
கதறக் கதறக் கலங்கடிக்கும்
போது, காயப்பட்ட மனசிலிருந்து பீறிட்டுப் பாயும்
கவலை ரத்தம் இந்தப் பாடல்.

ஏட்டுப் படிப்பில்லாத அப்பாவித்தனத்தையும், நற்குணங்களால் நல்லவற்றைப் படித்துத் தேர்ந்த
முதிர்ச்சியையும் ஒரே முகத்தில் பிரித்துக் காட்டுவதற்கு நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

"காட்டு மானை வேட்டையாடத்
தயங்கவில்லையே..
இந்த வீட்டு மானின் உள்ளம்
ஏனோ விளங்கவில்லையே."

ஏகப்பட்ட பயங்கரங்கள் பல்லிளிக்கும் காட்டுக்குள்ளேயே சாதித்து வந்தவன், வீட்டுக்குள் ஒரு அழகான பெண்ணிடம் பயந்து,
அவமானப்பட்டுக் கூனிக் குறுகிக் கிடக்கிற அவலத்தை
ஒரு நான்கு நிமிஷப் பாடலுக்குள் விளக்கி விடுவது,
நடிகர் திலகம் தவிர வேறு
யாராலும் சாத்தியமானதல்ல.

அந்த திறமை முகத்தில் மனைவியால் பட்ட அவமானத்தை அப்பட்டமாய்க்
காட்டும் வருத்தமும் தெரியும்.
"அவள் மேல்தான் தவறு. நான்
நல்லவன். கூனிக் குறுக எனக்கு அவசியமில்லை"- என்பதான ஒரு ஆண்பிள்ளைத்
திமிரும் தெரியும்.

பாடலின் இடையில் ஒரு முறை எழுந்து நின்று "ஆ..ஆ"
என்று சோம்பல் முறித்து, கைகள் நீட்டி வளைத்து, உடம்பை நெளித்து...

இது போன்ற பாவனைகளுக்கு
முற்றுப்புள்ளி வைப்பது போல்
பின்புறத்தை கேலியாக ஆட்டிச்
செல்வது...

அவரைப் பிடிக்காதவர்கள் அவர் மேல் வைக்கும் விமர்சனங்களுக்கு, அவர் காட்டும் பழிப்பு.

கலையுலகில் படிந்த இருட்டையெல்லாம் அவரது
திறமை வெளிச்சம் பாய்ந்து
செய்யும் அழிப்பு.

அய்யா நடிகர் திலகம் சார்ந்த
அத்தனை உன்னதங்களையும்
விளக்கி விட...

"நான் கவிஞனுமில்லை.
நல்ல ரசிகனுமில்லை."

http://youtu.be/o17JQ6TWP30

Russellsmd
27th October 2016, 01:04 AM
சிவாஜி பாட்டு-28
------------------

இதோ...

திருட்டுப் பயல் பிறக்கிறான்.

செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.

கண்ணன் என்கிற கிருஷ்ணன்
என்கிற கோவிந்தன் என்கிற
கோபாலன் என்கிற மாதவன்
என்கிற முகுந்தன் என்கிற
ரமணன் என்கிற மதுசூதனன்
என்கிற...
அந்த மாயவன்-

யுகம் யுகமாய் நீண்டு கொண்டே போகும் கடவுளுக்கும்,மனிதருக்குமான
இடைவெளியை இல்லாதொழித்தவன்.

அவனது திருக்கரங்கள் சும்மா
மாய மந்திரம் செய்து கொண்டிராமல், தன் பாதத்தில்
விழுந்து வேண்டியவனின்
தோளில் சிநேகமாய் விழுந்தவை.

மற்ற கடவுளரெல்லாம் வேதப்
புத்தகம் போல்,பாடப் புத்தகம்
போல் மிரட்டலாய் நின்றிருந்து
பயங்காட்ட, இவன் சுவாரஸ்யமான கதைப் புத்தகம் போல் எல்லோருக்கும்
பிடித்துப் போனான்.

கண்ணன்-

குழந்தையாய்க் குறும்பு, வாலிபனாய்க் காதல் சேட்டைகள், அகம்பாவங்களை
அறிவாயுதம் கொண்டு சாய்க்கிற புத்திசாலித்தனம் என்று இயல்பு விலகாமல்,
யதார்த்தம் சிதையாமல், வித்தை காட்டாமல் நம் மனம்
நிறைந்த கடவுள்.

வாயெல்லாம் வெண்ணெய் வழிய தவழ்ந்த நிலையில்
இவன் சிரிக்கும் படம் பார்த்தால் கும்பிடக் கூடத்
தோணாது மனம் நிறையும்.

அவன் சிரிக்கிற சிரிப்பே நம்
மனக்கஷ்டங்களை "லபக்"
என்று விழுங்கி விடும்.

******
'தெய்வமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நாம் கண்ணனைக் கொண்டாட...

'நடிகனென்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும்' என்பதான
அடையாளமாயிருக்கிற நம் நடிகர் திலகம், கண்ணனைக்
கொண்டாட...

அழகான பாசுரம், அருமையான
பாடலாயிற்று.

நிமிர்ந்து அமர்ந்திருக்கிற அமர்வே கம்பீரந்தான். பலகையிட்டு அமர்ந்ததில்
இன்னும் கொஞ்சம் உயரப்படும் போது.. கம்பீரமும்
உயர்கிறது.

நடு நெஞ்சில் கைகள் குவியும் கும்பிடல், அய்யனுக்கொன்றும்
புதிதில்லை. "வெற்றி வடிவேலனே" பாடும் கட்டபொம்மன் கிட்டத்தட்ட
இப்படித்தான் கும்பிடுகிறார்.

ஒரே விதமான கும்பிடலை
கட்டபொம்மனுக்கு வீரமாகவும், விப்ர நாராயணருக்கு பக்தியாகவும்
வித்தியாசப்படுத்தி செய்வது
நடிகர் திலகத்தால் மட்டுமே
ஆகிற காரியம்.

அழகென்பது ஒப்பனையால் மட்டும் உண்டாவதா? இல்லை
என்கிறது அள்ளி முடித்த கொண்டைச் சிகை விட்டுத்
துள்ளி நெற்றியில் சுருளும்
ஒற்றைக் கொத்து முடி.

"ஆ..ஊ" என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினால்தான்
ஒரு நடிகன், பல கோடி ரசிகர்களைத் தன் வசம் ஈர்க்க
முடியுமா? இல்லை.. ஒரு ரெண்டு நிமிஷப் பாசுரத்துக்கு
அமைதியாக, அம்சமாக வாயசைத்தே ஈர்க்கலாம் என்கிறார் அய்யன்.

ஆண்டவன் அடியவர்களின்
நடையழகும் அழகு மங்கையரை வியந்து வணங்க வைக்குமா..? 'வைக்கும்' என்கிறது... "காரொளி வண்ணனே" என்று பாடி வருகையில் அய்யன் புரியும்
நளினத்தையும், ராஜம்பீரத்தையும் சமவிகிதத்தில் கலந்து செய்த
அந்த அழகு நடை.
******

இதோ..

திருட்டுப் பயல் பிறக்கிறான்.

செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.

அன்பு தெய்வமவன், துணைக்கொரு கலை தெய்வத்தையும் கூட்டி வந்து,
பாடலென்கிற பேரில், வைகுண்ட ஏகாதசி இல்லாமலே சொர்க்க வாசல்
திறக்கிறான்.

http://youtu.be/Pfgfff_MZ00

Russellsmd
27th October 2016, 01:07 AM
சிவாஜி பாட்டு-29
-------------------

இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்கு "இனிப்புக் கடை"
என்றே பெயரிருப்பதை எங்கோ
பார்த்தேன்.

அழகான ஒரு திரைப்பாடல்
"அழகே வா" என்றே துவங்குவதை "ஆண்டவன் கட்டளை"யில் கேட்டேன்.
பார்த்தேன்.
******

ஒரு இளம் பெண், அந்த வயதிற்கே உரிய வேக, தாகங்களோடு பாடும் மென்பாடல்களென்றால் எழுபதுகளின் இறுதியில் உருவான இசைஞர்கள் உருவாக்கிய பாடல்கள்தாம்
என்கிற கருத்தே என் காலத்தில் ( வதந்தியாய் ) பரவியிருந்தது.

அதற்கு உதாரணமாக அவர்கள்
சுட்டிக்காட்டிய பாடல்களில்
மெட்டும்,இசையும் என்னவோ
பிரமாதப்பட்டாலும், பாடலின்
காட்சிகள் சகிக்க முடியாமலே
இருந்தன.

குளத்தோரமாய் ஒரு குடம்
தண்ணீர் மொள்ள வந்தவள்
காரணமே இல்லாமல் கவர்ச்சியாயிருந்த கண்றாவித்தனங்கள் ஒரு இனிமையான மெட்டைப் போர்த்தி மறைக்கப்பட்டன.

காற்றை விட மென்மையான
ஒரு சங்கீதக் குரல் பின்னொலித்த பாடலில், கணவனை விடுத்து கண்டவனோடு காட்டுக்குள்
அலையும் ஒரு அபத்தப் பெண்ணே காட்சிப்படுத்தப்பட்டாள்.

ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்காக, கதையும், காட்சிகளும் பாடலின்
போக்கில் திசைமாறி அலைந்த
கொடுமைகளும் நிகழ்ந்தன.

அப்படிப்பட்ட பாடல்களுக்கெல்லாம் பழிப்புக்
காட்டியது... இந்த "அழகே வா"
பாடல்.
******

பசித்த பின் உணவருந்துவது
போன்ற ஒரு முறையும், ஒழுங்கும்... கதைக்கேற்றபடி
பாடல் உருவாக்குகிற மெல்லிசை மன்னரிடமே இருந்ததென்பேன்.

கதாநாயகன் வாலிபன். என்றாலும் ஒழுக்கசீலன்.
கற்றறிந்த பண்டிதன். நிறைய மாணவர்களுக்கு பாடம் போதிக்கிற ஆசிரியன்.

கதாநாயகி இளம்பெண். கல்லூரி மாணவி. ஆசிரியராயிருக்கிற நாயகனிடமே பயில்கிறவள்.

ஒழுக்கக் கட்டுப்பாடுகளோடு
உயர்ந்த வாழ்க்கை வாழும்
நாயகன், தன்னிடம் பயிலும்
மாணவியின் வசம் தன்னை
கொஞ்சம், கொஞ்சமாய் இழப்பதை அழகாகச் சொல்கிறது இந்தப்
பாடல்.

கொஞ்சம் அசந்தால் நாயகியை
அலைகிறவளாகவும், நாயகனை வழிகிறவனாகவும்
காட்டி விடுகிற கதைச் சூழல்.
காட்சிச் சூழல்.

காவியமாக்குகிறார்கள்...நடிகர் திலகமும், தேவிகாவும்.

கடற்கரையைக் கல்லூரியாக்கி
மாணவி,ஆசிரியருக்குப் பாடம்
நடத்துகிறாள்.

"அழகே வா" என்று தேன் தடவி
நீளும் குரலில்தான் இறைவன்
வாழ்கிறான்.

வேறு விதமாய் கண்ணியமாய்
வாழ்ந்தவனை இன்றைய காதல் பாடாய்ப் படுத்துவதை
அப்பட்டமாய்க் காட்டுவதற்கு
நடிகர் திலகத்தின் கண்களைத்
தவிர வேறு கண்களுக்குச்
சக்தி கிடையாது.

ஒரு உயரமான பாறை. அதன்
பின்னே உயர்ந்து வளர்ந்த
தென்னை மரம். பாறையில்
இறுகிய, குழம்பிய நடிப்பு
பாவங்களுடன் நடிகர் திலகம்
நிற்கிறார். சட்டென்று தென்னை மரத்தை விட அவரே
உயர்ந்து தெரிகிறார்.

பழைய ஒழுக்கமான வாழ்க்கையா..? பாழாய்ப் போன
காதலா..? என்று மனம் கொள்ளும் தடுமாற்றமென்பது
பாவனைகளால் விளக்கி விட
முடியாத உணர்ச்சி.

பூதம் பார்த்து மிரண்ட ஒரு குழந்தையின் பயந்த பார்வை,
பின் திரும்பி நின்று முதுகு
காட்டி நிற்கையில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாததை வெளிப்படுத்தும்
விதமாய் வலது கையை மூடி
இறுக்கி தன் தொடையில் குத்திக் கொள்வது, அழகானவள்
அழகாய்ப் பாடிக் குளித்துக்
கொண்டிருக்க, விலகி நடக்க
முன் வைத்த காலும், தயங்கி
மீண்டும் பின் திரும்பும் காலுமாய் ஒரு பாவனை...
இப்படி சின்னச் சின்ன பாவனைகள் கொண்டே அந்த
உணர்ச்சியை விளக்கி விடுவது... நடிகர் திலகத்தின்
மூலமாக நமக்குக் கிடைக்க
வேண்டும், கிடைக்கும் என்பது..

ஆண்டவன் கட்டளை.


http://youtu.be/3lIpebdRTw0

Russellsmd
27th October 2016, 10:21 AM
சிவாஜி பாட்டு-30
-------------------

என்னை அழ வைத்த கவிதைகள் ஏராளமாயிருக்கின்றன.

என் கவிதை, நண்பரொருவரை
அழ வைத்தது.. எனக்கே வியப்பு.

என் தந்தை மறைந்து ஏழெட்டு
வருடங்களுக்குப் பிறகு, அவரது நினைவு நாளில் ஒரு
கவிதை எழுதியிருந்தேன்.

அவரைக் குறித்த என் நினைவுகளோடு நீண்ட அந்தக்
கவிதையை இப்படி முடித்திருந்தேன்...

"ஜென்மமெனும் பாத்திரத்தில்
ஒரு பிச்சையாய் விழுந்தது
உன் மரணத்தின் கௌரவமாயிருக்கலாம்.

ஆனாலும்..
அப்பா..!
இன்று... இப்போது
நீ
ஒரு விதவையின்
புருஷன்தானே..?"

-கவிதை எழுதிய காகிதத்தை
அந்த நண்பரிடம் வாசிக்கக்
கொடுத்த போது, உள்ளூர எனக்கு "திக் திக்".

காரணம்... அந்த நண்பர் நல்ல
கவிஞர்.மிகச் சிறந்த இலக்கியவாதி. தேர்ந்த விமர்சகர். என்னத்தையோ
எழுதி அவரிடம் பாராட்டெல்லாம் வாங்கவே
முடியாது.

நீண்ட நேரமாக கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் படித்துக் கொண்டிருந்தவரை
குனிந்து உற்றுப் பார்த்தேன்.
அதிர்ந்தேன். அவர் அழுது
கொண்டிருந்தார்.

அழுது முடித்து ஆசுவாசப்பட்ட
பிறகு அவரே அழுகைக்குக்
காரணம் சொன்னார்.

"உங்கள் கவிதையின் ஏக்கத்தில், கோபத்தில் இருக்கிற நிஜம்தான் என்னை
அழ வைத்தது."

நிஜமான கலைவடிவங்களுக்கு
கிடைக்கிற மரியாதை அலாதியானது.

நிஜத்தைப் பாடல் வடிவமாக்கிக் கொண்ட இந்த
"முத்துக்களோ கண்கள்" அதற்கு ஒரு உதாரணம்.
******

"டிங்.. டிங் டிங்..டிங்
டிங்.. டிங் டிங்..டிங்"
- ஒரு சின்ன எதிரொலியோடு
இனிமையாய் வந்து விழும்
துவக்க இசையே, காதலில்
வீழ்ந்த ஒரு ஆடவனின் கனவுத்
துவக்கம் என்று நிச்சயப்படுத்த
மெல்லிசை மாமன்னரால் முடிகிறது.

இரவில் இந்தப் பாடலோடு
தூங்கினால், காலைப் பொழுதும்
இந்தப் பாடலுடனேயே விடிகிறது.
*******

கனவு காணும் நாயகன், ஏழை. சாதாரணனுக்கும் கீழான சாதாரணன். வாழ்க்கை, வறுமைக் கரங்கள் கொண்டு
அவனது உடைகளைக் கிழித்தாலும், அவனது உடைக்
கிழிசல்களுக்கூடாக அவனது
நம்பிக்கை சிரித்தது.

அவன் நல்லவன். கனவிலும்
யாருக்கும் தீங்கு நினையாதவன். கனவில் வரும்
நாயகி இவனுக்கு மாலை சூட்டுகிறாள். அவள் தோளில்
கிடக்கும் மாலையை அவளேதான் சூடிக் கொண்டிருக்கிறாள்.

நாயகன் கண்ணியமானவன்.
கனவிலும் யாருக்கும் தீங்கு
நினையாதவன்.
******

சர்க்கரை டப்பா காலியாய்ச்
சிரிக்க, கசப்புக் காப்பி குடித்து
முடிக்கும் தருவாயில், தம்ளர்
விளிம்பில் ஒட்டிக் கிடந்த
ஒரு சீனித் துணுக்கு நாக்கில்
பட்டு கொடுக்கிற இனிப்பாய்..

நாயகனின் நீளமான கசப்பு வாழ்க்கைக்கூடே இந்தக் கனவுக் காதல்... கொஞ்சமாய்த்
தித்திப்பு.
******

வியர்வை மினுக்கும், யதார்த்த
வாழ்வின் அடையாளங்களாய்
நமக்குப் புலப்படும் இந்த இருவரின் ஒப்பனையற்ற
முகங்கள்... வழமையான தமிழ்
சினிமா கனவுப் பாடல்களை
விட்டு வெகுதூரம் தள்ளி நின்ற
அறுபதுகளின் ஆச்சரியம்.
******

ஒரு நல்ல நடிப்புக்கலைஞனின்
கலையொழுக்கத்திற்கு எல்லையோ, முடிவோ இல்லை என்பதற்கு இந்தப்
பாடலில் ஒரு உதாரணம் வைக்கிறார்... நடிகர் திலகம்.

பாடலின் துவக்கத்தில் ஒரு முறை மல்லாந்து படுத்துக் கொண்டு, புன்னகை அரசியின்
பக்கம் முகம் திருப்பி "முத்துக்களோ கண்கள்" என்று
பாடுகிறார்.

படுத்துக் கொண்டு பாடும் போதும் அத்தனை தத்ரூபமான
வாயசைப்பு.
******

பாடல் முழுதும் நடிகர் திலகம்
காட்டுகிற உற்சாக முகபாவங்கள், இதழ் விட்டு
நீங்காத அற்புதப் புன்னகை...
எல்லாமே, நம்மையும் ஒரு
காதல் உலகம் நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்பவை.
******

புன்னகை அரசியை முன் நிறுத்தி, இழுத்து அணைத்துத்
தன் நெஞ்சோடு இறுக்கிக்
கொள்கிற நடிகர் திலகத்தின்
நடிப்பு வெளிப்பாட்டில், வாராது
வந்த மாமணியான தன் காதலை நழுவ விடப் பிரியமில்லாத ஒரு எளியவன்
நமக்குக் காட்சிப்படுகிறான்.
******

கனவுக் காதலியின் தாவணி
உருவிய வெற்றி மதர்ப்புடன்
கூடிய நடிகர் திலகத்தின் புன்னகைக்கும், ஒரு தேர்ந்த
மீனவனின் லாவகத்துடன்
தாவணியை வலை போல் வீசுகையில் அவர் புரியும் ஆனந்தப் புன்னகைக்கும்..
குறைந்தபட்சம் நூறு வித்தியாசங்கள்.
******

பாடலின் நடுவே, தன் நெஞ்சோடு கவிழும் புன்னகை
அரசியின் பூவிருக்கும் கூந்தலில் அழுந்த ஒரு முத்தம்
தருகிறார்... நடிகர் திலகம்.

அந்த கூந்தல் பூ வாடியிருக்கலாம்.

ஆனால்... அந்த வாசனை முத்தம் மணத்திருக்கும்...
இந்தப் பாடல் போலப் பல நூற்றாண்டுகளுக்கு.

https://youtu.be/ED0bwUuSQMg

KCSHEKAR
27th October 2016, 05:08 PM
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கு உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

https://youtu.be/51GB5d0tWj4

Russellsmd
27th October 2016, 09:06 PM
சிவாஜி பாட்டு- 31
--------------------

ஆணுக்கு பெண் மீதான மோகமும், பெண்ணுக்கு ஆண்
மீதான அளவு கடந்த காதலும்..
கிட்டத்தட்ட விஷம் போலத்தான்.

அப்படியே உறைந்து போக
வைக்கிற விஷம்.

தன்னைத் தவிர அத்தனையும்
மறக்கடிக்கிற விஷம்.

ஆபத்து, அபாயங்களை எல்லாம் அலட்சியம் செய்யும்
இரண்டு அன்புள்ளங்களுக்குள்
ஒரு பாம்புக் கொத்தலுக்குப்
பிறகானது போல் "சுர்" என்று
ஏறுகிற விஷம்.

கொல்லாமல் கொல்லுகிற விஷம்.

அதனால்தானோ என்னவோ
விஷத்தோடு தொடர்புடைய
பாம்போடு தொடர்புடைய ஒரு
இசையின் சாயலோடு இந்தக்
காதல் பாடல் துவங்குகிறது.
*******

"இதை ஆனந்தன் கடைல குடுத்துடு. இந்தா.. இதை ஜாஹிர் உசேன் கடைல குடுத்துடு. பாக்கியில்லே.. முழுசாக் குடுத்தாச்சுன்னு அப்பா சொல்லச் சொன்னாருன்னு சொல்லிக் குடுத்துடு."- என்னுடைய சின்ன வயசில் வந்த சில முதல் தேதிகளில் பணத்தைக்
கட்டுக் கட்டாய்ப் பிரித்து, ரப்பர்
பேன்ட் போட்டு அப்பா என்னிடம் கொடுத்து விட்டதுண்டு.

சின்னதான சட்டை பணக்கற்றைகளால் நிரம்பி வழிய, கடைகளை நோக்கி தார்ச்சாலையில் நடந்து போக..
அத்தனை பெருமை..அந்த வயசில்.

பிறகு, வருஷங்கள் உருண்டோடி, நானும் வேலைக்குப் போய், முதல் சம்பளம் வாங்கின சாயங்காலம் வீடு திரும்பும் போது மனசில் வந்த கர்வமிகு சந்தோஷம்,சின்ன வயசுச் சந்தோஷத்தை சின்னதாக்கி விட்டது.

ஏதோ ஒரு ஈர்ப்பினால்
ஒரு ஆண், அழகான பெண்ணொருத்தியுடன் அறிமுகமான கையோடு அன்பு
கொண்டு காதலாவது... அப்பன்
காசோடு ஆனந்தமாய் நடப்பதைப் போல.

ஆசையாய் நேசித்தவள் தனக்கே தனக்கென்று வந்து
விட்ட பொழுதில், மகிழ்வான
மகிழ்வாய் காதலாகிக் கசிந்துருகும் சந்தோஷம்... சுயமாய் உழைத்துச் சம்பாதித்த
காசோடு கர்வமாய் நடப்பதைப்
போல.

இந்தப் பாடலில், சுய சம்பாத்தியத்தோடு நடந்து
போகிற சந்தோஷத்தைப் பார்க்கலாம்... நடிகர் திலகத்தின்
முகத்தில்.
******
பிரமிப்பாகத்தான் இருக்கிறது...

சோகப் பாடல்களென்றால், இரும்பாய்,பாறையாய் இறுகிப்
போகிற அதே முகத்தில், இந்த
மாதிரி காதல் பாடல்களுக்கு
நந்தவனத்தையே உருவாக்குகிற நடிகர் திலகத்தை.. நினைக்க, நினைக்க.

அய்யா நடிகர் திலகத்தின் புன்னகை ஒரு புது மொழி.

மரபுக் கவிதை போல் இலக்கணமாகவும், புதுக்கவிதையாய் கட்டுடைத்த
வடிவமாகவும் அந்த மொழி நம்மை இனிதே சேர்கிறது.

"பெண்ணே... நீ தலை முதல்
கால் வரை பரவ விட்ட அழகை,
நான் உதட்டின் மேலேயே உட்கார வைத்து விட்டேன்..பார்த்தாயா?" - என்று அந்தப்
புன்னகை மொழி, நாட்டியப்
பேரொளியிடம் கேலி பேசுகிறது.

அந்த மொழி மௌனப்படும் வேளையிலும் ஆயிரம் அற்புதங்களைப் பேசுகிறது.
******

நடிகர் திலகத்திற்காகப் பாடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவற்றை தெய்வீகப் பாடகர் அமரர் அய்யா டி.எம்.எஸ். அவர்களே
பாடி விட்டதால், வேறு குரலை
அய்யனுக்குப் பொருத்திப்
பார்க்க மறுப்போர் உண்டு.
அது,நியாயம்.

வேறு எந்தப் பாடகர் நடிகர் திலகத்துக்குப் பாடினாலும்,
அநியாயத்துக்கு மறுப்போர்
கூட்டமும் உண்டு.

அப்படிப்பட்டோரின் வாயடைத்த அற்புதப் பாடல்களின் பட்டியலில்
ஆரம்பத்திலேயே வருகிற பாடலிது.

பாடல் வரிகளுக்கு மிகச் சரியான உதட்டசைவு மட்டுமே
நடிப்புப் புலமையாகாது என்பதை நடிகர் திலகம் கற்றுக்கொடுக்கிறார்..இந்தப்
பாடலில்.

"பொன்னே சொல்..ஏன் த்யானம்?" என்று பாடினால்
வாயசைப்பில் ஒரு கேள்வி
வந்து நிற்கிறதே... அது புலமை.

நிலவடிக்கும் மொட்டை மாடியில் தன்னை விட்டு நழுவி ஓடும் மனைவியிடம்,
"வெட்கம் ஏனோ.. வா என் பக்கம்."-எனப் பாடுகையில்
ஒரு ஏக்கம் த்வனிக்கிறதே... அது புலமை.

தென்னங்கீற்றுகளை வகுந்து
கொண்டு, அந்த மொட்டை மாடியின் இன்னொரு நிலவு
போல புன்னகை முகம் நீட்டி,
"போனால் வராது... இது போலே காலமினி" என்று பாட..
'உண்மைதான்.உங்கள் காலம்
இனி வேறு யாராலும் வராது'
என்று எங்களை அந்த "தெய்வப் பிறவி" எதிர்ப் பாட்டு
பாட வைத்தாரே... அது புலமை.

https://youtu.be/shPRgjoiJhw

Russellsmd
27th October 2016, 09:09 PM
சிவாஜி பாட்டு-32
-------------------

கண்ணம்மாள் என்று பெயர் என் பாட்டிக்கு. என் அம்மாவின்
அம்மா. கண்ணுப் பாட்டி என்போம் நாங்கள்.பாசக்காரி.

பள்ளி விடுமுறையில் அவளிருந்த கிராமத்துக்குப் போனால் சற்றே பருமனாக்காமல் ஊர் திருப்ப
மாட்டாள். வயிற்றுக்கோ, பிற
மனிதர்களுக்கோ வஞ்சகம் நினைக்காத நல்ல மனசுக்காரி.

காது சுத்தமாகக் கேட்காது.
வாய்ப் பேச்சும் வராது.
மிகச் சிரமப்பட்டுப் பேசினாலும் வார்த்தைகள் சரியாக வந்து
விழாது.

ரொம்பவும் கஷ்டப்பட்டவள்.
அவள் கணவர், என் தாத்தா.. எங்கள் காலத்தில் என்னவோ
கண்ணுப் பாட்டியை சீரும், சிறப்புமாய் வைத்துக் காப்பாற்றினார்தான். ஆனால்,
என் அம்மா,சித்தி, மாமாக்கள்
எல்லோரும் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்,
சொல்லாமல், கொள்ளாமல் சில
வருடங்கள் தன் பிழைப்பைப்
பார்த்துக் கொள்ள
ஒடி விட்டாராம். அந்தக் கால
கட்டத்தில் அவள் பட்ட வேதனையும், அவமானங்களும் தந்த நெருப்பு
கடைசி வரை அவளிடமிருந்தது.

அந்த நெருப்பில், தன்னிடம் எந்தக் குறைபாடுமில்லாமல், கணவன் என்ன தவறிழைத்தாலும் பொறுத்துப்
போகும் சராசரிப் பெண்களுக்கான சூடு இருக்கும்.

மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளோடு அவள் வாழ்க்கையை ஜெயித்த
கதையை, அவளது தத்துப் பித்துப் பேச்சிலேயே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

"ச", "ர".. இப்படி என்ன எழுத்தானாலும் அவள் உச்சரிப்பில் "க" என்றே ஒலிக்கும்.

நான் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. " நான் இப்ப
கொஞ்ச நாளாத்தான் கவிதைல்லாம் எழுதுறேன்.
ஆனா..நான் பொறந்ததுல இருந்தே என்னை "கவி"ன்னு
சொல்றது (ரவி -கவி) கண்ணுப்பாட்டிதான்".

அம்மா கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட
உயர்ந்து நிற்பவர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும்.
******

ஒரு அலுவலகத்தில், ஒரு விண்ணப்பம் எழுத வேண்டிய
சூழலில் ஒரு வெள்ளைக் காகிதம் தேவையாயிருந்தது.

அருகிலிருந்த மேஜைக்குப் பின்னே இருந்தவரிடம் கேட்டேன். இரண்டு காகிதங்கள் இணைந்த ஷீட் ஆகக் கொடுத்தார்.

"ஒரு பேப்பர் போதும் சார்" என்றவுடன் அவர் சிரித்த போதுதான் கவனித்தேன்... அவரது இடது தோளுக்குக் கீழ்
கையே இல்லை என்பதை. ஒரு
கையே இல்லாதவர் காகிதத்தை எப்படி ஒற்றையாகக் கிழிப்பார்?

கேள்வியோடு நான் தவித்தேன். அவர் ஷீட்டை எடுத்து மேஜை மீது வைத்து,
வலது கை விரல்களால் அதன் மடிப்பில் கூராக நீவிய பின், வெள்ளை ஷீட்டை விரித்து,
கூராக நீவியதின் முனையில்
லேசாக கிழித்து விட்டுக் கொண்ட பின், இரண்டு விரல்களால் காகிதத்தை அழுத்தி நகர்த்திக் கொண்டே வந்தார்... தையல் இயந்திரத்தில் ஒரு துணி நகர்வதைப் போல.

மிகச் சில நொடிகள்...

அவர் என்னிடம் தந்த ஒற்றை
வெள்ளைத்தாளில் கிழிக்கப்பட்ட ஓரம் எது என
தேடுகிற மாதிரி அந்தக் காகிதக்
கிழிப்பில் ஒரு இயந்திர நேர்த்தி.

இரண்டு கைகள் கொண்ட நாமெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாய் காகிதம்
கிழித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் கோணலாய்க் கிழிகிறது.

இவரால் எப்படி முடிகிறது என்கிற என் அன்றைய ஆச்சரிய விழி விரிப்பு இன்னமும் நீடிக்கிறது.

உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட
உயர்ந்து நிற்பவர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும்.
******

கன்னையனை எனக்கு மிகவும்
பிடிக்கும்.

சிவகங்கையில் அமுதா என்றொரு திரையரங்கம் இருந்தது. மனித வாழ்க்கையை, அதன் இன்ப, துன்பங்களை
கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல எல்லோரையும் பார்த்துக் கொள்ள வைத்த நடிகர் திலகத்தின் படங்களையும் அந்த திரையரங்கம் காட்டியது.

அந்த வரிசையில் அது "பாகப்பிரிவினை"யைக் காட்டிய போதுதான் கன்னையன் என் கண்களின் வழியாக மனசுக்குள் வந்தான்.

நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனிடமிருந்து வெளிப்பட்டு, தனது தனித்தன்மையை இழந்து விடாமல் ரங்கனாய், ராமனாய்
நம் மனதில் சிரஞ்சீவியாய்
வாழ்பவர்களில் இதோ.. இந்த
கன்னையனும் ஒருவன்.

திறமையாளர்களால் கற்பிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், காலத்தை மீறி ஏதோ நம் நெருக்கமான சொந்தக்காரன் போல் வாழ்நாள் முழுதும் நம்முடன் வரும் அதிசயம், நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்வது.

கன்னையன் தன் ஊனத்தை
நினைத்து வெகுவாக வருந்துகிற போதும், சூடான பானம் தரப்பட்ட ஒற்றைக் கையின் சூடு தாங்காமல் தவிக்கிற போதும், அவனுடைய வேகத்திற்கு அவனது ஊனமே தடை போட்டாலும், அதையெல்லாம்
தாண்டி அவனது நம்பிக்கை அவனை வேகமாக செலுத்துவதும், "நம்பிக்கையோடு இருங்கள்.
ஜெயிக்கலாம்" என்று கன்னையன் உணர்த்துவதும்
அந்தச் சின்ன வயதிலிருந்தே
எனக்கு புரிதலானது. பிடித்தமானது.

திருவிழா என்று ஆட்டமும்,
பாட்டமுமாய் ஊர் ரெண்டுபட,
இயலாமையை முன்னிறுத்தி
வீட்டோடு முடங்கி விடாது,
மடங்கிப் போன இடது கையும்,
இயங்காமல் விறைத்துப் போன
இடது காலும் ஒரு புது வித நடனம் உண்டு பண்ண, தானும்
களமிறங்குவதோடு மட்டுமல்லாமல், வழக்கம் போல் இந்தக் களத்தையும் தனதாக்கிக் கொள்கிற என்
கன்னையனை மிகவும் பிடிக்கும்.

உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட
உயர்ந்து நிற்பவர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும்.

http://youtu.be/0zGNRIswveM

Russellsmd
27th October 2016, 09:13 PM
சிவாஜி பாட்டு- 33
--------------------

கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை
நமக்குப் பிடிப்பதில்லை.
******

அருகிலிருந்த மாணவன் செய்த
குறும்பைக் கண்டித்த என்னை,
நான் தவறு செய்து விட்டதாகக்
கருதி, இரண்டு காதுகளையும்
பிடித்து தன் தலைக்கு மேலே
தூக்கிய என் இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மேல் இன்று வரை கோபமிருக்கிறது எனக்கு.

அவர் உயரத்தில் தூக்கிய போது
நான் கீழே உணர்ந்த அவமானப்
பள்ளம், மிக ஆழமானது.அந்த
அவமானத்தில் உந்தப்பட்ட என்
கண்ணீர், வருஷங்கள் தாண்டி
நீளமானது.

கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை
நமக்குப் பிடிப்பதில்லை.
******

ஆனால்...

திரைப்படம் என்கிற பெயரில்
ஒரு மகாகலைஞனின் மாசற்ற
திறமைகளை நமக்கு முன்
திரையிட்டுக் காட்டிய "தெய்வ மகன்" பார்த்த போது...

அதில் "கண்களால் பேசுதம்மா" என்கிற உன்னதப் பாடலைப்
பார்த்த போது...

"அழ வைப்பவர்களைப் பிடிக்காது" என்கிற எனக்குள்
திண்மையாய் இறுகிக் கிடந்த
அனுபவ தத்துவம், தூள் தூளாய் நொறுங்கிப் போனது.

ஒற்றை ஆள் ஒரு முறை அழ
வைத்தாலே ஜென்மத்துக்கும்
பிடிக்காமல் போகுமே..முன்பெல்லாம்? இங்கே... ஒருவரல்ல..இருவரல்ல..ஆறு
பேர் நம்மை கதறக் கதற அழ வைக்கிறார்கள்.

ஆனால்... அத்தனை பேரையும்
பிடிக்கிறது.

'காலம் சென்ற' அல்ல... 'காலம் வென்ற' நம் கவியரசர் தன் இதயப் பேனாவுக்குள் உண்மைப் பாசத்தை மையாய்
ஊற்றிக் கொண்டு எழுதி, எழுதி
அழ வைக்கிறார். பிடிக்கிறது.

பாடலில் காட்டப்படும் விரிந்து
பரந்த அந்த ஆலயத்தில் ஒரு
அன்னையின், ஒரு பிள்ளையின் மனசுகளை இசையால் பேச வைத்து, மெல்லிசை மன்னர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.

"பெண்ணோடு பேசுதம்மா..பெற்றெடுத்த வயிறு.." -அந்த
"வயிறு" எனும் சொல்லைப் பாடும் போது நடுங்க விடும் குரலில், "இனம் புரியா.." என்று
உச்சஸ்தாயியில் உயர்த்தும்
குரலில் அமரர் சீர்காழியார்
அழ வைக்கிறார். பிடிக்கிறது.

இப்படி ஒரு உணர்ச்சிமயமான
உருக்கும் பாடலை, கற்பனை
செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைக் காட்சியாக நம் கண்களில் விரித்து இயக்குநர் அமரர் ஏ.சி.திருலோக்சந்தர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.

அம்மா வேஷமே போடுவதால்
"பண்டரிபாய்" இல்லை. " பண்டரித்தாய்" என்று நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். இந்தப் படம் பார்த்த பிறகு அவர்களைக்
கண்டித்திருக்கிறேன். சொல்லத்
தெரியாத பிள்ளைப் பாசத்தை,
நொண்டியடிக்கும் ஒரு தவிப்பு
நடையால் விளக்கி பண்டரிபாய் அம்மா அழ வைக்கிறார். பிடிக்கிறது.

ஊமையில்லை.. ஆனால் பேச,
பாட வார்த்தையில்லை. ஒரு
இயக்குநரின் சிந்தனையில் உதித்த பாத்திரத்தை அப்படியே
தன்னிலிருந்து வெளிக்காட்டும்
திறமைக்கு ஈடு இணையில்லை. நம் நடிகர் திலகம்- படத்தின் தலைப்பை
நிஜமாகவே நிரூபிக்கும் தெய்வ மகன்.

தெய்வ மகன்- பிறப்பிலிருந்தே
பெற்றவள் தாயைப் பிரிந்திருக்கிறவன் இவ்வாறுதானிருப்பான் என்று
காட்டுகிறார். பிடிக்கிறது.

அகல விரித்த கண்களின் வழியாக, அன்பே உருவான அன்னையை விழுங்கப் பார்க்கும் செயலால் அய்யன்
அழ வைக்கிறார். பிடிக்கிறது.

சுடர் மினுக்கும் தூணுக்குப் பின்னால் நின்று உதடு பிதுக்கி
அழுது அழ வைக்கிறார். பிடிக்கிறது.

அய்யன் தன் முகத்தை ஒரு
பாத்திரம் போலாக்கி, அன்பை
யாசித்து அழ வைக்கிறார்.
பிடிக்கிறது.

வரிசையில் கடைசியில் நின்று
கை நீட்டி யாசிக்கையில், அன்னை கை நிறைய அள்ளித்
தந்த நாணயங்களை சிதற விட்டு, அன்னையின் திருமுக
அழகை மனசுள் சேகரிக்கிற
பாச யதார்த்தத்தில் அய்யா அழ
வைக்கிறார். பிடிக்கிறது.

http://youtu.be/5Gflh-H2Mzc

Russellxor
28th October 2016, 10:37 PM
http://uploads.tapatalk-cdn.com/20161028/d10ccc1b90053418cc18362c77f40e03.jpg

sivaa
29th October 2016, 10:46 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14568076_1241493582567978_3524987177756394006_n.jp g?oh=d5cdf333f13692e08eca694414517875&oe=58A621C0

sivaa
29th October 2016, 10:47 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14368781_247137542356165_5321784931267915565_n.jpg ?oh=e9b1484d634dec6b8599eeade9c1e318&oe=5893E190

sivaa
29th October 2016, 10:47 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14906970_247137122356207_2931460456692190740_n.jpg ?oh=dabcc297137a7bcc99cf87ac67ad3216&oe=589A6900

sivaa
29th October 2016, 10:48 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14910277_247136982356221_7188328119147531778_n.jpg ?oh=950e6b06dd1cf1bb3f40a7c5af707ea0&oe=5890BC39

sivaa
29th October 2016, 10:49 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14563398_247136769022909_7290187788027330363_n.jpg ?oh=87747bf741c0a054c74ff45f3ea84950&oe=58A2C3B4

sivaa
29th October 2016, 10:49 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14572937_247135949022991_1005716789773879647_n.jpg ?oh=fb9c07c8aaa95932978bdeafc27c9947&oe=58A2636F

sivaa
29th October 2016, 10:50 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14732410_247140695689183_3839291765777321989_n.jpg ?oh=2c37bdda723fa68d50b8bdbaa0cd688d&oe=5893EC97

sivaa
29th October 2016, 10:54 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14907260_1705291693125327_5391146550975529631_n.jp g?oh=527e29e52ce9c1925e8355b8d636dc80&oe=588BFCC3

sivaa
29th October 2016, 10:54 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14568122_324547407910640_1922716962970368948_n.jpg ?oh=11865ecd5efc11d0bf3a7f9ff78605ac&oe=588E5CF7

sivaa
29th October 2016, 10:58 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14670909_1125300700920152_1215477628818128844_n.jp g?oh=d4d30679f239c5fcc65999917bdff978&oe=588A6A3D

sivaa
29th October 2016, 10:59 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/l/t1.0-9/14908311_1125300760920146_7129933290384472762_n.jp g?oh=864429ecb091c301e251ab39373efc6c&oe=58902B4B

sivaa
29th October 2016, 10:59 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14570392_1125300810920141_4749890800569616932_n.jp g?oh=b8ff85e7a7b75b10f33aa6e899b7d094&oe=588D8701

sivaa
29th October 2016, 11:00 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14908376_1125300850920137_1485022050033342267_n.jp g?oh=c4150108705a1f6d832271a5dea11371&oe=58876186

Russellsmd
29th October 2016, 11:57 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032510430723 2_20161029102033015_zpsqwwvmqmb.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032510430723 2_20161029102033015_zpsqwwvmqmb.jpg.html)

Harrietlgy
30th October 2016, 05:34 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 149 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/181911128514769548811831208071%60thiruvilayadal'%2 0sivaji.jpg

ஒரு நடிகனுக்கு மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவை! நடை – உடை – பாவனை. உடைக்கேற்ற நடை--– நடைக்கேற்ற கம்பீரம் – கம்பீரத்துக்கேற்ற பேச்சு – பேச்சுக்கேற்ற முகபாவனை. இந்த மூன்றிலும் சிவாஜி அதிக கவனம் செலுத்துவார்.
1986ம் ஆண்டு ஜூனியர் விகடன் பத்திரிகைக்காக அவரை பேட்டி கண்ட போது அந்த பேட்டியில் சிவாஜி இதைச் சொல்லியிருப்பார்.
எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் சரி, அவர் ஏற்றுக்கொண்ட வேடத்தை முழுமையாக நியாயப்படுத்தி, மற்றவர்களை திருப்திபடுத்துவதுடன், தானும் திருப்தி அடைய முனைவார் சிவாஜி.
அந்தப் படம் ஓடுமா ஓடாதா? ஓடுவதற்கு வாய்ப்பில்லாத இந்த படத்திற்கு அதுவும் சாதாரண படத்திற்கு நாம் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு சிரமப்பட வேண்டுமா என்றெல்லாம் நினைக்கமாட்டார்.
எடுத்துக்காட்டாக, ஒரு நிகழ்ச்சியை ஆரூர்தாஸ் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையில் நான் அவரிடம் கேட்டேன்.
`ஏண்ணே! எழுதறதுக்கு எனக்கும், நடிக்கிறதுக்கு உங்களுக்கும் `ஸ்கோப்’ இல்லாத இந்த படத்தை ஒப்புக்கிட்டு நீங்க நடிக்கணுமா ?’
`நீ ஏன் எழுதறே?’
`நீங்க சொன்னதனால எழுதுறேன்.’
`இல்லேன்னா?’
`நிச்சயமாக எழுத மாட்டேன்.’ இது ஆக்*ஷன் ஓரியண்டட் பிலிம்.
எம்.ஜி.ஆர்., நடிக்க வேண்டிய படம். இந்த வேஷம் உங்களுக்கு `சூட்’ ஆகவே ஆகாது. அதனால்தான் சொன்னேன்! சிவாஜி தொடர்ந்து, `நீ சொல்றது எனக்குத் தெரியாதுன்னும் நினைக்கிறியா? நல்லா தெரியும். இந்த வேஷம் எனக்கு ஒரு நல்ல மாறுதலா இருக்கும்னு தயாரிப்பாளர் சொல்றாரு. அதோட அவர் எனக்கு எவ்வளவு வேண்டியவர்ன்னு உனக்கு தெரியும். அதனால ஒப்புக்கிட்டு நடிக்கிறேன்.
ஆரூரான்! ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. இனிமே நான் நடிச்சு பேரு வாங்கணும்ங்கிற அவசியம் இல்லை. அந்த மாதிரி நீயும் எழுதி பேரு வாங்கணும்ங்கிற அவசியம் இல்லை. நம்மள வச்சு வெற்றி படம் பண்ணிக்கவேண்டியது தயாரிப்பாளர் பொறுப்பு. அவர் நமக்கு காசு கொடுக்கிறாரு. வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாம கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியது நம்ம கடமை. அவ்வளவுதான். இதுதான் என் கொள்கை. நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்க. அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை’
சிவாஜியை அழைத்துக்கொண்டு ஜப்பானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தியும் கூட அவருக்குச் சிறிதும் பொருந்தாத `கராத்தே வீரன்’ வேடத்தில் நடிக்க வைத்து, 1980ல் வெளிவந்த அந்தப் படம் `தர்மராஜா’. படம் தோல்வியுற்றது. அதன் தயாரிப்பாளர், சிவாஜி ரசிகர் மன்றத்தலைவரும் பதிப்பாளர்களின் முன்னோடியுமான சின்ன அண்ணாமலை. அதற்கு முன்னதாக அதே சின்ன அண்ணாமலை நல்ல குடும்பக் கதையைத் தேர்ந்தெடுத்து சிவாஜி – கே.ஆர். விஜயாவை நடிக்க வைத்து தயாரித்து 1978ம் ஆண்டு வெளியான `ஜெனரல் சக்ரவர்த்தி’ வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு நடிகனுக்கு நடை, உடை,பாவனை மிக முக்கிய அம்சம்.
ஆம், கயிலாயநாதரின் நடையை `திருவிளையாடல்’ படத்திலும், காஞ்சி முனிவரின் அந்தத் தளர் நடையை `திருவருட்செல்வர்’ படத்திலும், வீரபாண்டியனின் சிங்கநடையை `கட்டபொம்மன்’ படத்திலும் காவல்துறை அதிகாரியின் கம்பீர நடையை ` தங்கப்பதக்கம்’ படத்திலும் கைரிக்*ஷாக்கார முதியவரின் நடக்க இயலாத நடையை `பாபு’ படத்திலும் ஒரு பெரிய கோடீஸ்வர செல்வந்தரின் மிடுக்கான நடையை `தெய்வ மகன்’ படத்திலும் ரசித்துப் பார்க்கலாம்.
`தெய்வ மகன்’ படத்தில் மனைவி பண்டரிபாயுடன் பேசிக்கொண்டே மாடிப்படிகளில் அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வரும் அந்த அழகு– ஓர் அடிக்கும் இன்னொரு அடிக்கும் இடையில் `ஸ்கேல்’ எடுத்து வைத்து எடுத்தது போன்ற அந்த அளவு `டைமிங்.’
இந்த சிறப்புக்கள் எல்லாமே சிவாஜி கணேசன் என்கிற ஒரே ஒரு நடிகருக்கு மட்டுமே உரித்தானவை.
அடுத்தது உடை!
ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் எப்போதுமே மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்.
இந்த படத்துக்கு இந்த பாத்திரத்துக்கு இந்த உடைதான் என்று இயக்குநர், தையற்கலைஞர் உட்பட எவருமே அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அனைத்துமே அவருக்கு அத்துப்படி.
மராட்டிய மன்னன் மாவீரன் ‘சிவாஜி’ முதல் அக்பரின் புதல்வர் `ஜஹாங்கீர்’ வரையில், நாதஸ்வர வித்வான் `ஷண்முகசுந்தர’த்திலிருந்து `மிருதங்க வித்வான்’ வரையில் `பாசமலர்’ படத்தின் கடைசி உச்சக்கட்ட காட்சியில் பழைய கறுப்புக் கோட்டு போட்டிருக்கும் ஏழை ராஜசேகரிலிருந்து ` வியட்நாம் வீடு’ படத்தில் வரும் `பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர்’ வரை, அத்தனை படங்களின் கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் அவ்வளவு உடைகளும், அவருக்கு பொருத்தமான விதவிதமான `தலை’ விக்குகளும் சிவாஜியே தேர்ந்தெடுத்துக் கொண்டவை.
அவருடைய ரசனையையும், தேவையையும் முழுக்க முழுக்க நன்கு புரிந்துகொண்டு அவருடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் உடைகளை தைத்து கொடுப்பதில் கைதேர்ந்த நிபுணரான பி. ராம கிருஷ்ணன் என்பவர் இருந்தார். பழைய சிவாஜி பட `டைட்டில்களில்’ இவரது பெயரைப் பார்க்கலாம்.
இவர்தான் சிவாஜி நடித்து, ஆரூர்தாஸ் வசனம் எழுதி, ஏ. பீம்சிங் இயக்கிய `படித்தால் மட்டும் போதுமா?’ படத்தின் தயாரிப்பாளர். சில சமயங்களில் சிவாஜியிடம் நேரில் வாங்கிக் கட்டிக்கொண்டதை ஆரூர்தாஸ் நேரில் கண்டு எழுதியிருக்கிறார். அரை அங்குலம் `லூஸா’கவோ `டைட்’டாகவோ இருந்தால் அவ்வளவுதான்! கோபம் வந்து `ஏண்டா! நீயெல்லாம் துணி தைக்கிறவனா இல்லே தோல் தைக்கிறவனா?’ என்று திட்டுவார். அதையெல்லாம் கண்டு கொள்ளாத `கில்லாடி’ ராமகிருஷ்ணன்,
ஒரு நொடிப்பொழுதில் எப்போதுமே தன் சட்டையில் குத்தி வைத்திருக்கும் ஊசி நூலை எடுத்து அங்கேயே, அப்போதே ஒரு சிறு தையல் போட்டு சரிசெய்து சிவாஜியின் கோபத்தை போக்கிவிடுவார். படங்கள் அன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்குப் பொருத்தமாகவும், ஒழுங்காகவும், தூய்மையாகவும் உடைகள் அணிவதை சிவாஜி வழக்கமாகக் கொண்டிருந்தார். நடிப்பில் மட்டுமல்ல, மடிப்பு கலையாமல் உடைகள் அணிவதிலும் அவருக்கு நிகர் அவரே! படப்பிடிப்புக்கு ஸ்டூடியோவிற்குள் வரும்போது சலவை செய்யப்பட்ட நான்கு முழ கதர்வேட்டி, கதர் அரைக்கைச் சட்டையுடன் எளிமையாக வருவார்.
அவற்றைப் பூப்போல அலுங்காமல் குலுங்காமல் கழற்றி மடிப்புக் குலையாமல் `ஹேங்கரில்’ மாட்டி வைத்துவிட்டு, லுங்கி கட்டிக்கொண்டு பனியன் கூட இல்லாத வெற்றுடம்புடன் ஒப்பனை செய்து கொள்வார்.
(தொடரும்)

vasudevan31355
31st October 2016, 11:21 AM
'ஞானஒளி'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355104/MP2_Oct20_191752_0.mpg_000236795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355104/MP2_Oct20_191752_0.mpg_000236795.jpg.html)

தமிழ் சினிமாவின் மானம் காத்த 'மான' ஒளி.

சென்ற வாரம் 'சன் லைஃப்' தொலைக்காட்சியில் மீண்டும் காணும் வாய்ப்பு. அமர்ந்த இடத்தை விட்டு எழ இயலவில்லை. நூறு முறைகள் பார்த்திருந்தாலும் அத்தனை காட்சிகளும் அன்றுதான் காண்பது போல அத்தனை ஆச்சர்யங்கள். எது சம்பந்தமான வர்ணிப்பும் அலுத்துப் போகும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் அல்லது சில மாதங்களில். ஆனால் 'ஒளி' அப்படியா? உலகிற்கு ஒளி தரும் சூரியன் மங்குவான். இரவில் ஒளி தரும் சந்திரன் மறைவான். ஆனால் 'ஞான ஒளி'யாய் பிரகாசிக்கும் என் ஆண்டனியும், அருணும் மங்குவதில்லை. ஒளிர, ஒளிர பிரகாசம் அதிகமாகுமே தவிர குறைவதில்லை.

இது எதிலும் சேராத தனி ஒரு அற்புதம். அதியற்புதம். இது சினிமாவா? இல்லை...இல்லை...இது வேதம். இது கீதை அல்ல...இது பைபிள் அல்ல...இது குர்-ஆன் அல்ல. ரிக், யஜுர், சாம, அதர்வணமும் அல்ல. இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஒளி வேதம். ஒரே வேதம். இந்த வேதத்திற்கு ஒரே கடவுள். ஒரே இறைவன். நடிப்பின் இறைவன்.

என்ன காட்சிகள்! என்ன வசனங்கள்! என்ன கதையமைப்பு! என்ன நடிகர்கள்! என்ன இயக்கம்!. நம் எண்ணமெல்லாம் நிறைந்த இயக்கம். ஒவ்வொரு காட்சியும் செதுக்கி செதுக்கி எடுத்த சிற்பம்.

அந்த மூன்று மணி நேரமும் இரு கண்களின் ஓரமும் ஏன் என் கண்களில் நீர்த்திவலைகள் திரண்டு கொண்டே இருக்கின்றன? எதற்கும் கரையாத கல் நெஞ்சம் 'ஒளித்தேவனை'ப் பார்த்ததும் மெழுகாக உருகுகிறதே! என்ன காரணம்? புகை பிடிக்காமலேயே நெஞ்சடைப்பு ஏற்படுகிறதே! அது ஏன்? மனசெல்லாம் பாரமாய் ஒரு உருண்டை சோறு கூட உள்ளுக்குள் இறங்க மறுக்கிறதே! அது என்ன விந்தை!

இத்தனைக்கும் காரணம் பாவப்பட்ட அந்த மனிதன். ஆண்டனி..ஆழியளவு அல்லல் பட்டவன். நிம்மதி என்பதை கிஞ்சித்தும் அறியாதவன். அவன் நிம்மதி இல்லாத போது நான் மட்டும் எப்படி நிம்மதி கொள்வது?

தமிழ் சினிமா மட்டுமல்ல: இந்திய சினிமா மட்டுமல்ல: ஒட்டுமொத்த உலக சினிமாவும் இந்த நடிப்பின் தேவனைப் பார்த்து,

'தேவனே! எம்மைப் பாருங்கள்... எம் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்' என்று பாவ மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.

அந்த 'ஞான' நடிகனின் நடிப்புச் சிதறல்கள் இப்போது புதிதாய்ப் பட்டவை.... பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.

இது கோபாலிற்கு.

பாதிரியாரிடம் சிறுவன் ஒருவன் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்ல, தன் ஆண்டனி வழக்கம் போல எங்கோ வம்பு வளர்த்து வந்திருக்கிறான் என்று கருதி கீழே அமர்ந்து ஃபாதரின் கையை அமுக்கிக் கொண்டிருக்கும் என் தேவனைப் பார்த்து ஃபாதர்,

'இன்னைக்கு என்னடா வம்பு பண்ணே? இன்ஸ்பெக்டர் தேடிகிட்டு வந்திருக்காரே...இன்னைக்கு யார் கூட சண்டை பிடிச்சே?'

என்று கேட்க,

ஃபாதரின் கையை சின்ஸியராக பிடித்துக் கொண்டிருப்பவர் சிறுவனுக்கும், ஃபாதருக்கும் நடக்கும் சம்பாஷணை அறியாதவராக, அல்லது கண்டு கொள்ளாதவராக ஃபாதர் தன்னை அந்தக் கேள்வி கேட்டவுடன், ஃபாதர் தன்னைத்தான் கேட்கிறார் என்று 'திடு'மென உணர்ந்து, நிலைமைக்கு வந்து, அந்த சிறுவனை அப்போதுதான் பார்ப்பது போல ஒரு பார்வை வினாடியில் பார்த்துவிட்டு, ஃபாதரைப் பார்த்து,

'என்னை கேக்கிறீங்களா? நல்லா இருக்கே!'

என்று செய்யாத பழியை ஏற்றுக் கொள்ளாத பாவம் காட்டுவது பட்டையைக் கிளப்பும். சிறுவனுக்கும், ஃபாதருக்கும் நடக்கும் உரையாடலில் அது பற்றி பாதிரியார் மறைமுகமாக தன்னைத்தான் சந்தேகப்படுகிறார் என்பதை செய்யும் வேலையில் உணரத் தவறி, லேட்டாக கிரகித்துக் கொள்ளும் வினாடி நடிப்பை, அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதத்தை அள்ளி அள்ளிப் பருகலாம்.


இதுவும் கோபாலுக்கு.

இன்ஸ்பெக்டருக்காக சேர் கொண்டு வரச் சொல்லி ஃபாதர் இவரிடம் பணிக்க, இப்போது மேஜர் தன்னை பாதரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள சர்ச் உள்ளே நுழைய, கையில் சேரைக் கொண்டு வரும் நடிகர் திலகம் மிக அழகாக மேஜர் அருகே நாற்காலியை வைத்து விட்டு ரூமிற்குள் செல்வார். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

தனக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஃபாதரைப் பார்க்க வந்தவுன் ஃபாதரின் கட்டளைக்கேற்ப நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு விட்டு 'யாரோ ஒருவர் பாதிரியாருக்குத் தெரிந்தவர் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்... நமக்கு அங்கே இனி என்ன வேலை? அவர்கள் ஏதாவது பெர்சனலாக பேசிக் கொள்வார்கள்' என்பது போல நாற்காலியைப் போட்டுவிட்டு ஆண்டனி ஒதுங்கிப் போவது படுஇயல்பு. (கோபால்...நிச்சயம் இந்தக் காட்சியை சிலமுறைகள் பார்க்கவும். நம் திலகம் அவ்வளவு இயல்பாக இந்தக் காட்சியில் வந்து அழகு படுத்தியிருப்பார்.)

இது முரளி சாருக்காக.

பிரளயம் நிகழந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. வாழ வேண்டிய மகள் கெட்டுப் போயாகி விட்டது. வாழை மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்டன. ஆண்டனியும் மகளால் வெட்டாமலேயே சாய்க்கப்பட்டு விட்டான். இப்போது குடிசைக்குள் நிம்மதியற்ற அமைதி. தந்தையிடமும், மகளிடமும். குடிசையில் முழங்கால்களின் மேல் கை வைத்தபடி சிலை மாதிரி அமர்ந்திருப்பார்.

மகள் வந்து,

'அப்பா! கஞ்சி அப்படியே இருக்கு'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355103/MP2_Oct20_195916_0.mpg_000027661.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355103/MP2_Oct20_195916_0.mpg_000027661.jpg.html)

என்று சொல்ல, அப்படியே சைட் போஸில், க்ளோஸ் -அப்பில் திரும்பி, தன் மகளுக்காக ஆசையுடன் வாங்கி வந்த பூந்திப் பொட்டலம் கீழே விழுந்து சிதறி அதில் எறும்புகள் மொய்ப்பதை பார்ப்பார். மகளின் வாழ்வு அது போல சீரழிந்து விட்டதே என்று அர்த்தம் காட்டுவார். வலது கண்ணின் வழியாக ஒருதுளி நீர் கன்னத்தில் சொட்ட, அதை அப்படியே தோள்ப்பட்டையால் துடைத்துக் கொண்டு, எழுந்து, குடிசைக்கு வெளியே வேகமாக, அட்டகாசமாக நடந்து வருவார். இடது கை அந்தப் பழக்கம் உள்ளவர்கள் போல உடலை விட்டு சற்று தள்ளி தளர்வாக இருக்கும். (இப்படி சில பேரை அப்படியே கண்கூடாகக் கண்டிருக்கிறேன்) இடப் பக்க தோள்ப்பட்டையை விட வலப்பக்கத் தோள்பட்டை சற்று தாழ்ந்திருக்கும். சாரதா கூப்பிடும் போது சரியாக ஏழாவது ஸ்டெப்பில் அப்படியே நிற்பார்.

'அப்பா' என்று சாரதா மீண்டும் அங்கிருந்து கதறும் போது இடது கையை மார்பின் நடுவில் வைத்து, வார்த்தைகள் வெளிவராத நிலையில் உதடுகள் ஒன்று சேர்ந்து வெதும்பித் துடிக்க, பேச இயலாதவராய், பேசப் பிடிக்காதவராய் மார்பிலிருந்து கை எடுத்து 'இனி நான் உனக்கு அப்பனில்லை' என்ற அர்த்தத்தில் இடக்ககையால் பாவம் காட்டி, அப்படியே கையைப் பின்பக்கம் கொண்டு சென்று பின்னால் தூரத்தே தெரியும் சர்ச்சை சுட்டிக் காட்டுவார். மகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். உடல் நேராக நின்றபடி இருக்க, இடக்கை மட்டும் பின்னால் படுஅற்புதமாக நீண்டு ஆட்காட்டி விரல் சர்ச்சை சுட்டிக் காட்டும். 'இனி உனக்கு...இல்லை இல்லை... நமக்கு எல்லாம் அந்தப் ஃபாதர்தான்...அந்த சர்ச்தான்' என்பதை விரல் அற்புதமாக சுட்டிக் காட்டி உணர்த்தும். ஆத்திரம், கோபம், இயலாமை, முடியாமை, வெறுப்பு, அழுகை அத்தனையையும் துடிக்கும் அந்த உதடுகள் உணர்த்தும்.

அந்த அற்புத போஸ் முரளி சார் இதோ உங்களுக்காக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355102/MP2_Oct20_195916_0.mpg_000047150.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355102/MP2_Oct20_195916_0.mpg_000047150.jpg.html)

ராகவேந்திரன் சார்,

நாளை உங்களுக்காக ஆண்டனி ஒரு காட்சியில் இன்னொரு கோணத்தில் அலசப்படுவா(ர்)ன்.

RAGHAVENDRA
31st October 2016, 02:15 PM
அனைத்து நண்பர்களுக்கும் பண்டிகைக்கால நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

RAGHAVENDRA
31st October 2016, 02:20 PM
வாசு சார்
சன் லைஃப் தொலைக்காட்சி மட்டுமல்ல, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தினமும் ஒளிபரப்பினாலும் ஒளி குன்றாத ஞான ஒளியைப் பற்றிய தங்கள் பதிவு, நடிகர் திலகத்தைப் பற்றிய எங்கள் அறிவு ஒளியை சுடர் விட்டுப் பிரகாசித்து ஒளிரச்செய்கிறது. தங்களுக்கு உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
31st October 2016, 02:22 PM
வாசு சார்
தங்களுக்காக ஸ்பெஷல்..

நடிகர் திலகத்தின் அமெரிக்க விஜயம் ... விசேஷ நிழற்படங்கள். இவற்றைத்தந்துதவிய அந்த அன்புள்ளத்திற்கு உளமார்ந்த நன்றி.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14910497_1243586815691988_7673290384133286086_n.jp g?oh=da9738d81a70e3dbc4f2c1b8190429d2&oe=58A28BC2

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14900488_1243586829025320_4185916936425161909_n.jp g?oh=1934f83bd694cba8e7e14f9c8b792cae&oe=58897472

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14915505_1243586872358649_5772168107651509141_n.jp g?oh=d6155082fdbc072bec60dfff9fda24cf&oe=588D7014

RAGHAVENDRA
31st October 2016, 02:23 PM
உலகையே புரட்டிப் போட்ட ஒப்பற்ற கலைஞன் .. முதுகைக் காட்டியும் கம்பீரத்தை நிலைநாட்டும் எட்டாவது அதிசயம்...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14600907_1243586879025315_2874475876392522931_n.jp g?oh=8bc7a070cacbeaff0aa209945b8a41aa&oe=589C21A5

RAGHAVENDRA
31st October 2016, 02:25 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14925688_1243586895691980_9075473109637203249_n.jp g?oh=319ec18d8ed3590b4bcafdf34e0cd8d2&oe=58918458

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14906986_1243586922358644_4002464255156846736_n.jp g?oh=c490e4b010f4a540b2342faaec8a837d&oe=58A0F57F

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14610950_1243586939025309_8239471592587611226_n.jp g?oh=eb69415e0e4f542eef5949fa979d1c78&oe=58960092

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14938114_1243586949025308_162486546887616844_n.jpg ?oh=6c7fe10e241117c3e2d3cc55668d4034&oe=589814A2

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14604850_1243586985691971_2939649312985960990_n.jp g?oh=86ee29cd0a3caeb443afbc656065b646&oe=588DE4E6

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14718590_1243587005691969_466995433413444750_n.jpg ?oh=e6df3b64fa2575eaf1367fc65a262a5c&oe=5899DDE9

RAGHAVENDRA
31st October 2016, 02:25 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14581461_1243587032358633_8918359135878911614_n.jp g?oh=c2e395a126bd509e51739f72b4b57bb4&oe=589EF0DE

RAGHAVENDRA
31st October 2016, 02:26 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14938375_1243586819025321_8501634686960377365_n.jp g?oh=243c61eacf9a5d5a3513c3fedbbca3e7&oe=58A0D100

Russellxor
31st October 2016, 08:02 PM
ராகவேந்திரா சார்
புகைப்படங்கள் ஆங்கிலப் பட முன்னோட்டம் போல் உள்ளது.

http://uploads.tapatalk-cdn.com/20161031/bac8403ae376531e3e1d97e36043716e.jpgபோட்டோக்களுக்க ு மிக்க நன்றி.

Russellsmd
31st October 2016, 08:17 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14938375_1243586819025321_8501634686960377365_n.jp g?oh=243c61eacf9a5d5a3513c3fedbbca3e7&oe=58A0D100
கொஞ்சம்
அப்படியே நில்லுங்கள்.
போனால் போகிறது...
அந்தப் பூக்களும் முகரட்டும்
உங்கள் திறமை வாசனையை!


(நன்றி : அந்த நல்லுள்ளத்திற்கு.)

Sent from my P01Y using Tapatalk

sivaa
31st October 2016, 09:58 PM
ஸ்டைலில் எவராலும் நெருங்க முடியாதவர்..


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14572269_527932860733174_810417486907623798_n.jpg? oh=aa41558cb2826230865a22514ae45ac5&oe=58D1301A




mohamed farook அவர்களின் முகநூலில் இருந்து

sivaa
31st October 2016, 09:59 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14915451_527932844066509_3952178103649621686_n.jpg ?oh=7c4185250f5ade09c927d678bab0161f&oe=588D892C

sivaa
31st October 2016, 09:59 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14581483_527932980733162_5360471473909503334_n.jpg ?oh=dbb85cf479168c8551d3cc34afb66db4&oe=589FDCE5

sivaa
31st October 2016, 10:00 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14906866_527933400733120_775349041329985511_n.jpg? oh=bd44612c90372d2083dd9c76bb060560&oe=589232CC

sivaa
31st October 2016, 10:01 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14639669_527933424066451_5147816573852104696_n.jpg ?oh=0c34eebe06e901794f2b8cc7bf7fe0a9&oe=58A3F8BF

sivaa
31st October 2016, 10:01 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14937240_527933440733116_4654868527551178083_n.jpg ?oh=96a97477919fda53dbaf36b35c6311e6&oe=58917824

sivaa
31st October 2016, 10:02 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14908334_527933487399778_7626726550715199687_n.jpg ?oh=4f80cf65d56df52985c8817f688d073f&oe=5887B382

sivaa
31st October 2016, 10:02 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/14590484_527933524066441_683678662419814680_n.jpg? oh=e0d1dab5ee34c3052b273cd75aab66a1&oe=589A2C5A

sivaa
31st October 2016, 10:03 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/14919012_527931987399928_171505361843195025_o.jpg

RAGHAVENDRA
31st October 2016, 10:12 PM
நண்பர்களே
மிக மிக அபூர்வமான, நடிகர் திலகம் 1962ல் அரசாங்க ரீதியான அழைப்பில் அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன. அவை தொடரக்கூடிய பதிவுகளால் கடந்து விடக்கூடும் என்பதனால் அவற்றிற்கான இணைப்பு கீழே தரப்படுகிறது.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.mayyam.com/talk/showthread.php?12043-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-18&p=1310483&viewfull=1&PHPSESSID=c2430a88b3683e7ecf7de629842b1222#post131 0483

Murali Srinivas
31st October 2016, 11:22 PM
வாசு,

தலைக்கு மேல் இரு கை நீட்டி இரு கரம் கூப்பி சிரந்தாழ்த்தி நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லுவதை விட நான் வேறு என்ன செய்து விட முடியும்? எப்போதும் நவம்பர் 21 அன்றுதான் பரிசு கொடுப்பீர்கள். இந்த வருடம் என்ன அக்டோபர் 31 அன்றே பரிசளித்து விட்டீர்கள்! எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சியே!

நமது நடிகர் திலகத்தின் பழைய படங்களை மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் (டிஜிட்டல் முறையிலும் சரி அல்லது பழைய பிரிண்ட் முறையிலும் சரி) ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் சந்திரசேகர் மற்றும் சுப்பு போன்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் அல்லது யோசனைகள் ராமருக்கு அணில் போல செய்வதுண்டு. மீண்டும் திரையிடப்பட வேண்டும் என்ற விருப்ப பட்டியலில் நிறைய படங்கள் இருக்கின்றன. ஆனால் யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ஒரே ஒரு நண்பருக்காக தியேட்டரில் இந்தப் படத்தை திரையிட வேண்டும் என்று நினைப்பது ஒரே ஒரு படத்தை மட்டும்தான்.

பார்ப்போம்! அந்த தேவன் அருள் இருந்தால் அனைத்தும் நல்லபடி நடக்கும்.

அன்புடன்

Russellxor
1st November 2016, 11:19 AM
http://uploads.tapatalk-cdn.com/20161101/96fe6a4ae1f75bf60611c005f37d199d.jpg

Russellsmd
1st November 2016, 06:47 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IM1_zpsklszrbra.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IM1_zpsklszrbra.jpg.html)

நினைத்துக் கொள்கிறேன்.

அவனை நினைத்துக் கொள்கிறேன்.

இதயம் வாழும் இனியவனை
நினைத்துக் கொள்கிறேன்.

பாசாங்கற்ற பண்பாளனை நினைத்துக் கொள்கிறேன்.

நாற்பத்தொன்பது ஆண்டு காலமாக நெஞ்சத் திரையில்
மங்காமல் ஒளிர்கிறவனை நினைத்துக் கொள்கிறேன்.

"எனக்குப் பிடித்தவன், எல்லோருக்கும் பிடித்தமானவனாய் இருக்கிறான்" என்று என் மனம் கர்வ சந்தோஷம் காண
வைத்தவனை நினைத்துக் கொள்கிறேன்.

கதை மாந்தர்களுக்கு உயிர் கிடையாது..பொம்மையென்பதைப் பொய்யாக்கியவனை நினைத்துக் கொள்கிறேன்.

என்னிலும் ஐந்து மாதங்கள்
மூத்தவனென்றாலும், எல்லாத்
தலைமுறைகளிலும் இளமையாகவே இருப்பவனை
வியப்போடு நினைத்துக் கொள்கிறேன்.

காலம் கொணரும் வழமையான அழிவுகளெல்லாம் எனக்கில்லை என்று கலை உதடுகள் திறந்து சிரிக்கிறவனை நினைத்துக் கொள்கிறேன்.

உமாவின் காதலனை நினைத்துக் கொள்கிறேன்.

சாந்தியின் கணவனை நினைத்துக் கொள்கிறேன்.

அழகுக் குழந்தை கீதாவின்
பேரழகான அப்பனை நினைத்துக் கொள்கிறேன்.

இரு மலர்களோடு இப்போதும்
மணக்கும் என் சுந்தரை நினைத்துக் கொள்கிறேன்..

எப்போதும் வற்றாத ரசிக நன்றிகளோடு..!



( புகைப்படத்திற்கு நன்றி:
ஆவணத் திலகம் பம்மலார்.)

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
1st November 2016, 08:37 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_zpsrpklt5mk.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_zpsrpklt5mk.jpg.html)

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
1st November 2016, 08:54 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20161016234506311_zpsrsnaepgg.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20161016234506311_zpsrsnaepgg.jpg.html)

Sent from my P01Y using Tapatalk

sivaa
2nd November 2016, 11:20 AM
60 வது வருடங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/RangoonRadhaAdfw.jpg

sivaa
2nd November 2016, 11:21 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4852-1.jpg

sivaa
2nd November 2016, 11:21 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4853-1.jpg

Gopal.s
3rd November 2016, 08:17 AM
நவராத்திரி- 03/11/1964.(எனது பெருமைக்குரிய 4000)

அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

(தொடரும்)

Russellxor
3rd November 2016, 08:02 PM
4000 பதிவுகளை தொட்ட
கோபால் அவர்களுக்கு
எனது வாழ்த்துக்கள்.
தங்களின் பதிவுகள் திரிக்கு பெருமை சேர்த்தவை. தொடரட்டும் தங்களின் எழுத்துச் சேவைகள்.

Russellxor
3rd November 2016, 08:04 PM
4000 வது பதிவு.

சிம்மக்குரல்...
________________


எவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.

1952
ஒலித்ததே ஓர் குரல்.

"தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே"

இக்குரலுக்கு இதுதான்
முதல்குரல்.
அக்குரல் ஒலித்தது
அதுமுதல்
திரைகள் நடுங்கின
அன்றுமுதல்.

மொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ!
ஏற்றிய நெற்றியை
கடைசி வரை
ஏற்றிக்கொண்டே
இருக்க வைத்ததும்
இக்குரலன்றோ!
***
"மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....

"நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது..."
மரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள்! ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...

குரலுக்கும் நடிப்புண்டு
அந்நடிப்புக்கும் இலக்கணமுண்டு
அதை
இதற்கு முன் காட்டியவர் எவருண்டு
என்பதை புத்தியில் வைத்த குரல்.

****
"பரசுராமன் அவதாரம்.
மனோகரன் மனிதன்.

"என் வாள் களத்திலேதான் விளையாடும்
கனிகளை காயப்படுத்தாது."

பக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி
பத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.
இந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.
மற்றதெல்லாம் உமிழ்.

திரும்பிப் பார்க்காதவர்களையும்
திரும்பிப் பார்க்க வைத்த குரல்.
ஏளனம் செய்தோரை
ஏளனத்திற்கு ஆளாக்கிய குரல்.
***
"பாடுவது என் தொழிலும் அல்ல
சங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...
இங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்."

பேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா?
பெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா?
அது குரலுக்கும் உண்டு.
அப்பெருமை இவரைத் தவிர
வேறு எவருக்குண்டு?,
***
"அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...

உன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்"...

"நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி..."

இது-
மூதறிஞரை பேச வைத்த குரல்.
ஏசியவர்களை தூசியாக்கிய குரல்.

கண்டேன் சீதையை-
இது காவியச் சொல்
பரதனைக் கண்டேன்-
இது அழியாச் சொல்
***
"ஹ"

இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்?
செய்ததே!
இந்த விந்தையான வேந்தன் குரல்.
இந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .
மொழிகளைத் தாண்டி
சுண்டி இழுத்ததே

"நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்."
"இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்."

இரண்டும் ஒரு குரலாயினும்,
ஒன்று காந்தம்
ஒன்று சாந்தம்.
அண்டை தேசத்தவர்களையும்
ஆட்டிப் படைத்த குரல்.
மண்டையை வியக்க வைத்த
ஜாலக் குரல்.
இதையா பிரதியெடுப்பது என்று
ஓட வைத்த குரல்.
***
"ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு"

தமிழ் எல்லை தாண்டி,
பாரத பூமி தாண்டி,
அயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.
தட்டினார்களே கைகளை
கொட்டினார்களே விருதுகளை

"போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை"

பொழியும் வானத்தையும்,
விளையும் பூமியையும்
சாட்சிக்கு அழைத்த குரல் .
தன்மானத்தை பறைசாற்றிய குரல்
தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டிய குரல்.
ஒலித்ததோ ஓர் குரல்
உள் வாங்கி ஒலித்த குரல்களோ
கோடி கோடி

தமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது
இக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் ?
***
"ஆனந்தா!
உன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்கு!முழங்கு!முரசு கொட்டு!கெட்அவுட்.

இது-
ஊரையே ஆட்டுவிக்கும் குரல்
யாருக்கும் மசியாத குரல்
ஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்
பாருக்குள்ளே ஒப்புமையில்லா குரல்.
***
"துரியோதனா!
என் மானம் காத்த தெய்வமே.
என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்."

அறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.
ஆறையும் பேசவைத்த குரல்.
யாரையும் வியக்க வைக்கும் குரல்.
ஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.
***
அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி
சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ
என்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

யாரால் அறிய முடியும் சொக்கனை
சொக்கனேவியப்பானேஇக்குரலினை

மனிதருக்கு மரியாதை "ஜி"
சிவனுக்கு மரியாதை சிவா"ஜி"

***
"எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா?...
கரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமா?அழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி."

இது
வீரசிவாஜியாய்
விழுப்புரத்து கணேசன் பேசியது.
இந்தக்குரல்தானே
வெண்தாடியை வியக்க வைத்தது
மறுகணமே
பட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.
அதுதானே
"சிவாஜி"
***

நிற்க!
கண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி
எதை எழுதுவது?
எதை விடுவது?
சுருங்கக் கூறின்,

"சிங்கத்திற்கு ஒரு குரல்
சிவாஜிக்கு நூறு குரல்"

வணக்கம்
*********************************************

vasudevan31355
3rd November 2016, 09:35 PM
ராகவேந்திரன் சார்,

தலைவரின் அபூர்வ புகைப்படங்களுக்கு என் லட்சோப லட்ச நன்றிகள். கண்டு உள்ளம் மகிழ்ந்ததை வார்த்தைகளில் வடிக்க இயலாது. வைத்த பார்வையை இன்னும் எடுத்தபாடில்லை. அந்த ஆங்கிலப் பெண்மணி தலைவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் போட்டோ தூள்.


முரளி சார்,

மிக்க நன்றி. தங்கள் முயற்சியில் பேரின்பம் அடைய காத்திருக்கிறேன். நிச்சயம் 'ஒளி'யில் ஆண்டனி, அருண் இவர்களுடன் அரங்கத்தில் இணையலாம். அதைவிட பெரும் பாக்கியம் வேறெதுவும் இல்லை.


கோபால்,

4000 மாவது பதிவு நச். மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நவராத்திரி பதிவுகளில் ஒத்துப் போகிறேன். முரண்பாட்டு மனிதர் என்றாலும் 'திலகம்' பற்றிய பற்றிய முழுமையான பதிவுகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருவதற்கு பாராட்டுக்கள். நீண்ட நாட்கள் சென்று இன்று கைபேசியில் கலந்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி. சினிமா, நாடக விளக்கம் செமை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355105/DvDasympRip%20%20Par%20mahagala%20par%20%201963%20-%20sivaji%20movie%20%20ChiyaaNtrade%20%20www.uyirv ani.comreg%20.avi_007903422.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355105/DvDasympRip%20%20Par%20mahagala%20par%20%201963%20-%20sivaji%20movie%20%20ChiyaaNtrade%20%20www.uyirv ani.comreg%20.avi_007903422.jpg.html)

எத்தனையோ நடிகர்கள் நம் தெய்வத்தைப் பின்பற்றி தந்தை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அந்தப் பாத்திரத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அது மகன் அல்லது மகளுடனான உண்மையான பாசத்தில் ஒட்டாமல் தனித்தேதான் தெரிந்திருக்கிறது. தன்னை முன்னிலைப்படுத்த மட்டுமே அவர்கள் முயலுவது கண்கூடாக நமக்குத் தெரியும். ஆனால் 'திலகம்' அப்படியா? அவர் நடிக்கவே வேண்டாம். விதிவசத்தால் வீட்டை விட்டு ஓடிப்போன மகளின் புகைப்படத்தை மார்போடு அணைத்து கையில் சுமந்திருக்கும் ஒரே ஒரு போஸே மகள் மேல் அவர் காட்டும் பாசத்தையும், பிரியத்தையும் நூறு தலைமுறைகளுக்கு உணர்ச்சி பொங்க உணர்த்திக் கொண்டிருக்கும். இதில் மற்றவர் எங்கே அவரை நெருங்குவது? சூரியனை வெறும் மெழுகுகள் நெருங்க முடியுமா? வடிவேலுவின் 'நானும் ரவுடிதான்' இதற்கும் பொருந்தும்.

செந்தில்வேல் சார்,

4000 கடின உழைப்புக்கும் 'நன்றியோ நன்றி' என்று ஓங்கிக் குரல் தருகிறேன். இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

ஆதவனாரே!

சுந்தரத் தமிழில் சுந்தரைப் பற்றி பாடி சுகம் தந்ததற்கு மனமுவந்த நன்றி! அற்புதமான (சிவாஜி பாட்டு) கவிதைகளுக்கும் நன்றி! ரசித்துப் பருகி மகிழ்கிறேன். நேரமின்மையால் அதிகம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

பரணி சார்,

'செலுலாய்ட் சோழன்' தொடரை தொடர்ந்து தந்து மகிழ வைப்பதற்கு நன்றிகள். ஒரே மூச்சில் படிக்க வைக்கும் அதியற்புத கட்டுரைகள்.


சிவா சார்,

உங்கள் பாணியே தனி! உங்கள் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. 'தங்கச் சுரங்க' ஸ்டைல்களுக்கு நன்றிகள். தொடர்ந்து மகிழ்வியுங்கள்.

RAGHAVENDRA
3rd November 2016, 11:05 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Gopal4000grtg_zpssb8gd01i.jpg

RAGHAVENDRA
3rd November 2016, 11:06 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/CBESenthil4000grtg_zps52qcbp8v.jpg

adiram
3rd November 2016, 11:49 PM
அன்பு கோபால் சார்,

அற்புதமான நாலாயிரம் பதிவுகளுக்கு அகமகிழ்ந்த பாராட்டுக்கள்.

அவை இன்னும் பல்லாயிரமாக வளர்ந்து நடிகத்திலகத்தின் புகழ் பரப்பிட வாழ்த்துக்கள்.

adiram
3rd November 2016, 11:51 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

அதெப்படி ஞான ஒளியை ஆய்வு செய்யும்போதெல்லாம் புதிய புதிய விஷயங்கள், புதிய புதிய கோணங்கள், உங்களுக்கு தோன்றிக் கொண்டேஇருக்கின்றன என்று அதிசயிக்க வைக்கிறது உங்களது ஒவ்வொரு ஆய்வும்.

இனிமேல் யாரும் உங்களை 'நெய்வேலி வாசுதேவன்' என்று அழைக்கக் கூடாது. இன்றுமுதல் நீங்கள் 'ஞான ஒளி வாசுதேவன்' (சுருக்கமாக ஞான ஒளியார்)

adiram
3rd November 2016, 11:54 PM
அன்பு செந்தில்வேல் சார்,

அருமையான ஆவணப் பதிவுகள், காணக்கிடைக்காத அபூர்வ விளம்பரங்கள், சிறப்பான தொகுப்புகள் அனைத்துக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

adiram
4th November 2016, 12:05 AM
அன்பு ராகவேந்தர் சார்,

நடிகர்திலகத்தின் 1962 இந்திய அமெரிக்க கலாசார நல்லுறவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட, காணக்கிடைக்காத அற்புத நிழற்படங்கள் அனைத்தும் அருமை. பதிவிட்டமைக்கு அநேக நன்றிகள்.

குறிப்பாக நயாகரா நீரவீழ்சசியை "நயாகரா நகர அன்றைய மேயர்" பார்வையிடும் புகைப்படம் சூப்பரோ சூப்பர்.

Russellsmd
4th November 2016, 07:57 PM
நல்லவரை நோக்கிப் பயணித்த
நான்காயிரம்.

நடிகர் திலகத்தை
எழுதிச் சிறந்த
மூத்த பேனாவின்
நான்காயிரம்.

கோபத்தையும், நகைச்சுவையையும்
தம்மோடு அழகாய்
கோர்த்துக் கொண்ட
நான்காயிரம்.

கோபால் அய்யாவின்
வணங்குதலுக்குரிய
நான்காயிரம்.

வணங்குகிறேன்.



Sent from my P01Y using Tapatalk

Russellsmd
4th November 2016, 08:01 PM
ஆர்வம் மிளிரும்
நான்காயிரம்.

ஆற்றல் மிக்க
நான்காயிரம்.

இளமை ததும்பும்
நான்காயிரம்.

இளைய தலைமுறைக்கு
இனிக்கச் சேரும்
நான்காயிரம்.

நண்பர் செந்தில்வேலின்
நல்வாழ்த்துக்குரிய
நான்காயிரம்.

வாழ்த்துகிறேன்.



Sent from my P01Y using Tapatalk

Russellxor
5th November 2016, 08:35 AM
4000 பதிவுகளுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20161105082045_zpslvyrd0mp.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20161105082045_zpslvyrd0mp.gif.html)

Russellsmd
6th November 2016, 06:47 AM
நினைப்போம். மகிழ்வோம் -129


"தங்கை". -கேட்டவரெல்லாம் பாடல்.

"...போனாள்...தோழியின் வயது அறுபதுக்கு மேலே.." என்று வேடிக்கையாய் பாடியதற்கே
அவர் பாடும் இடம் சிரிப்பால் அதிர்ந்து கொண்டிருக்கும்.

மேலும், "Sweet sixty" என்று புன்னகையும், குறும்பும் தவழ தன் வேடிக்கைக்கு அழகாய் முத்திரை வைக்கிற இடம்.

'தான் சொன்ன நகைச்சுவைக்கு நிறையப் பேர்
சிரிக்கிறார்கள்' என்கிற பெருமிதத்தையும்
அய்யனின் சந்தோஷ முகத்தில் தரிசிக்கலாம்.


Sent from my P01Y using Tapatalk

Russellsmd
6th November 2016, 09:56 PM
நினைப்போம். மகிழ்வோம் - 130

"பச்சை விளக்கு".

" ஒளிமயமான எதிர்காலம்" பாடல்.

அழகாகத் தலை கவ்வியிருக்கிற தொப்பியை
ஒரு சின்ன நகர்த்தலோடு இன்னும் அழகாக்கிக்
கொள்ளுதல்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
6th November 2016, 10:00 PM
நினைப்போம். மகிழ்வோம் -131


"கௌரவம்."

தகுதியுள்ள தனக்கு நீதிபதி பதவி கிடைக்காத
கோபத்தில் மோகன்தாஸ் எனும் கொலைக் குற்றவாளிக்கு விடுதலை வாங்கித் தரப் போவதாக தலைவர் சூளுரைப்பார்.

சின்னத் தலைவர் வியப்புடன் கேட்பார்.. "அது யாரால முடியும் பெரியப்பா?"

"என்னால முடியும்டா!" என்பார் தலைவர்.

தனது தொழில் திறமையின் மீது கர்வம் மிகுந்த
அபார நம்பிக்கை கொண்ட பாரிஸ்டர் ரஜினிகாந்த்
என்கிற கதாபாத்திரத்தை ஒரு சின்னஞ்சிறு வார்த்தைக்குள் புகுத்திக் காட்டுகிற மகா வித்தை
அது.

Sent from my P01Y using Tapatalk

Harrietlgy
6th November 2016, 11:57 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 150 – சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/10498224341478167624804714206thillana%20mohanambal .jpg


ஒப்பனை செய்த பிறகுதான் சிவாஜி அந்த குறிப்பிட்ட வேடத்துக்கான உடைகளை அணிந்து கொள்வார்.
மாலையோ, இரவோ படப்பிடிப்பு முடிந்ததும் ஒப்பனை அறைக்குள் வந்து, உடைகளை கழற்றிவிட்டு,முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி, பவுடரை நன்றாக துடைத்துவிட்டு அதன் பின்னர் காலையில் வீட்டிலிருந்து அணிந்து வந்த வேட்டி – சட்டையைப் போட்டுக்கொள்வார். அவருடைய உடைகள் ஒரு நாளாவது கசங்கியோ, கலைந்தோ இருந்ததை யாருமே கண்டதில்லை.
அழுக்கு என்பது சிவாஜி அறியாத ஒன்று. கண்ட இடத்தில் நினைத்த நேரத்தில் காறி எச்சில் உமிழ்வது, சாப்பிட்டு முடிந்ததும் வாஷ்பேசினில் கை கழுவும்போது வாய் கொப்பளித்து இஷ்டத்துக்கு துப்புவது, சாப்பாட்டு மேஜையில் மற்றவர்கள் எதிரில் நீண்ட ஏப்பம் விடுவது, இருமுவது, தும்முவது முதல் போன்ற அநாகரீக பழக்க வழக்கங்களை அவரும் செய்ய மாட்டார். மற்றவர்கள் என்ன வீட்டில் உள்ள குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை யாரும் செய்ய அனுமதிக்கவும் மாட்டார். தன்னை அறியாமல் யாராவது அப்படிச் செய்துவிட்டால் அவர்களை ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வையிலேயே அவர்களின் உயிர் போய்விடும்.
`அன்றாட வாழ்க்கையில் சுத்தமாக வாழ்வது எப்படி?’ என்பதை சிவாஜியிடம் கற்றுக்கொள்ளவேண்டுமென்பார் கதாசிரியர் ஆரூர்தாஸ்.
ஆங்கிலக் கல்வியறிவு பெறக்கூடிய வாய்ப்பு வாழ்க்கையில் தனக்குக் கிடைக்காமல் போனாலும் கூட, ஆண்டவன் சிவாஜிக்கென்று அளித்த அரிய வரப்பிரசாதமான நினைவாற்றல், கேள்வி ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒரு பட்டப்படிப்பு படித்தவருக்கான அறிவையும் நாகரீகத்தையும் தனக்குத்தானே வளர்த்துப் பெருக்கிக் கொண்டவர்.
சரளமாக ஆங்கில மொழி பேசும் பயிற்சியை பெறாவிட்டாலும் கூட பிறர் பேசுவதை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றல் பெற்றவர் சிவாஜி. ஆங்கில கலாசாரத்தை அதிகம் விரும்பக்கூடியவர்.
தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பிறமொழிகளை ஓரளவுக்குப் பேசவும், மற்றவர்கள் பேசும்போது அவற்றை நன்கு புரிந்து கொண்டு தானும் அவர்களுடன் கலந்து கொஞ்சம் கொஞ்சம் பேசி சமாளித்து விடுவார். இளமையில் இல்லாமையும் கல்லாமையும் சேர்ந்து இருந்தும் கூட இயற்கை அறிவு பெற்றிருந்த காரணத்தால், அதை ஒன்றுக்குப் பத்தாக்கி பெருக்கிக் கொண்டு வாழ்க்கையில் உயர்ந்து காட்டியவர்.
அவர் வாழ்ந்த `அன்னை இல்லம்’ வீடு 1959 வருடவாக்கில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கி புதுப்பித்தும் தனது தாயார் ராஜாமணி அம்மாளின் நினைவாக `அன்னை இல்லம்’ என்று பெயரிட்டார் சிவாஜி. அந்த நாட்களில் இரண்டு லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. மேற்கு திசை பார்த்த அந்த இல்லத்தின் மொட்டை மாடி முகப்பில் ஒரு சிறுவன் கையில் புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருக்கும் பொம்மை உண்டு. அதைப் பற்றி சிவாஜி சொல்லும்போது, `அந்த பொம்மையை ஏன் அங்கே வெச்சிருக்கேன் தெரியுமா? அதை அண்ணாந்து நான் பார்க்கும்போதெல்லாம் நான் படிக்காதவன் என்பதை ஞாபகப்படுத்துவதற்காக.’
வாழ்க்கையில் தேைவக்கு அதிகமாக வசதிகள் வந்து வாய்த்த போது, அதற்கு ஏற்றவாறு போதிய கல்வி அறிவு பெறாமல் போய்விட்டோம் என்ற ஏக்கம் சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவருக்குமே உள்ளுக்குள் இருந்ததை பலரும் பக்கத்தில் இருந்து உணர்ந்திருக்கிறார்கள். அதை நண்பர்களுடன் வெளிப் படுத்தியும் இருந்திருக்கிறார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவருடைய கலை உலக வளர்ச்சிக்கு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் `கல்வி இன்மை’ என்பது ஒரு தடையாக இருந்ததேயில்லை. சிவாஜி `நடை’ ஆயிற்று. இப்போது `பாவ’ த்தை பார்ப்போம்.
ஒருவருடைய உள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சி அவரது முகத்தில் பிரதிபலிப்பதை `முகபாவம்,’ `முகபாவனை’ என்கிறோம்.
இதை வைத்துத்தான் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள்.
நவரசங்கள் எனப்படும் ஒன்பது வகை பாவங்களையும் கதை வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் `நவராத்திரி’ படத்தில் சிவாஜி ஒருவரே, அந்த ஒன்பது விதமான வேடங்களையும் ஏற்று நடித்தார். அதற்கு முன்பு இந்தியாவில் எவருமே புரிந்து காட்டாத ஒரு சாதனை அது.
`தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் அதன் கதாநாயகன் அசல் சண்முகசுந்தரமாகவே மாறி, நாகஸ்வரத்தின் `சீவாளி’யை ஒழுங்காக உதடுகளில் பொருத்தி அதை அளவோடு அசைத்துக் கன்னங்கள் புடைக்க காற்றை உள்ளே செலுத்தி ஊதி, எடுத்த எடுப்பிலேயே `நகுமோ’என்னும் தெலுங்கு கீர்த்தனையின் ராகத்தை வெளிக்கொணர்ந்த அந்த நேர்த்தி.. அந்த இயற்கை பாவனை.. உண்மையில் நாகஸ்வரத்தை வாசித்தது சிவாஜி கணேசன்தான் என்ற பிரமையை மக்கள் மனதில் உருவாக்கி அவர்களை மயக்கி கிறுகிறுக்கச் செய்ய அவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நிலைநாட்டினார்.
அதே போல ` மிருதங்க சக்ரவர்த்தி’ மிருதங்க வித்வான் வேடத்தில் தோன்றி, சைடு பாக்கெட்டுடன் கூடிய கை வைத்த அந்தக்கால `வி’ கழுத்துப் பனியனை போட்டுக்கொண்டு, மிருதங்கத்தை இலக்கணப் பிரகாரம் சரியாக கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு வாசித்த அழகு!
ஏற்கனவே, பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் வாசித்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த `ஒரிஜினல்’வாசிப்புக்குத் தகுந்தவாறு ஒரு நூல் இழை கூட பிசகாமல், விரல்களால் மிருதங்கத்தை தட்டி, அதன் வித்வான்களுக்கே உரித்தான தாளபாவத்தையும், உதடுகளில் கோணல்களையும், நெளிவுகளையும் காட்டி, ‘‘உண்மையில் சிவாஜிதான் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டு வாசித்துக் காட்டுகிறார். இல்லாவிட்டால் அவ்வளவு சுத்தமாக வாசிக்க முடியாது’’ என்று சில வித்வான்களையே சொல்ல வைத்தார்.
இந்த தத்ரூபத்தையும் `தாளகதி’ தவறாமையையும் சரியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமனை வரவழைத்து, வாசிக்கச் சொல்லி, அவர் எதிரில் அமர்ந்து உன்னிப்பாக
கவனித்து தன் உள்ளத்தில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டு அதை அப்படியே படத்தில் பிரதிபலித்துக் காட்டினார். சிலர் சிவாஜி நடிப்பை ‘ஓவர் ஆக்டிங்’ என்று கூட சொல்லுவார்கள்.
`நடிப்பு’ என்பதே மிகைதானே? தான் செய்யமுடியாத ஒன்றை மற்றவர்கள் செய்வதை பார்த்து செய்து காட்டுவதுதானே நடிப்பு?
கிராமப்புறங்களில் பார்த்தால் மரணம் நிகழ்ந்த வீட்டில் பெண்கள் `ஒப்பாரி’ வைத்து அழுது புலம்புவார்கள். அது துக்கத்தின் தாள முடியாத வெளிப்பாடு. சிலருக்கு அழுகையே வராது. அழவும் தெரியாது. முகத்தைக் கைகளால் மூடிக்கொள்வார்கள், அல்லது சம்பந்தப்பட்டவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டு தங்களுடைய நடிப்பு இயலாமை தெரியாமல் இருப்பதற்காக முகத்தை அவர்களுடைய மார்பில் புதைத்து கொண்டுவிடுவார்கள்.
ஒரு சிறு கலைஞன் ஒரு பெருங்கலைஞனைப் பற்றி குறை கூறுகிறான் என்றால், அவன் போல தன்னால் செய்ய முடியவில்லையே, புகழ்பெற முடியவில்லையே என சிறு கலைஞன் பொறாமைப்படுகிறான் என்றுதான் பொருள்.
(தொடரும்)

Russellsmd
7th November 2016, 01:17 AM
ஆழ்ந்த படிப்பறிவில் விளைந்த
ஆற்றல் மிக்க எழுத்துகள்..

அவற்றில் மின்னும் நிஜங்கள்..

நெஞ்சமெல்லாம் நிறைந்த
நாயகனுக்காக
நிதமும் வளர்க்கும்
ஆய்வு யாகங்கள்..

அத்தனையும்
நாங்கள் பெற்ற யோகங்கள் !

கோபால் சார்...
தங்களின் பிறந்த நாளில்
நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்..
வந்தனங்களும்.






Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
7th November 2016, 11:12 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

KCSHEKAR
8th November 2016, 11:03 AM
நினைப்போம். மகிழ்வோம் -131
"கௌரவம்."
ஆதவன் சார்,
ஒவ்வொரு தலைப்பாக தாங்கள் கவிதைகளை வார்த்து எங்களுக்கு அளிப்பதை, படிக்கிறோம், மகிழ்கிறோம். நன்றி

KCSHEKAR
8th November 2016, 11:06 AM
செந்தில்வேல் சார்,
தங்களின் 4000 பதிவுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகள், ஆவணங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. தங்களின் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள்.

KCSHEKAR
8th November 2016, 11:08 AM
திரு.கோபால் சார்,

தங்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட நாள் வாழ்ந்து, நம் கலைவேந்தனைப் போற்றிடும் பணியினைத் தொடர மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்.

Russellxor
8th November 2016, 09:41 PM
http://uploads.tapatalk-cdn.com/20161108/2e0c3873dce3c3c5117367d8c9c58d04.jpg

RAGHAVENDRA
9th November 2016, 09:51 PM
Sivaji Ganesan - Definition of Style 33

சிவந்த மண் - சுற்றுலா காட்சி


நடிகர் திலகத்தின் நடிப்பின் இலக்கணத்தைப் பற்றிய இத்தொடரில் பல்வேறு பாத்திரங்களில் எப்படி கையாண்டு நடித்திருக்கிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த 33வது தொடரில், அவர் நடிப்பிற்கு தன்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்கிறார், அவருடைய நடிப்பிற்கு உத்வேகம் - ஆங்கிலத்தில் Inspiration -எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் டி.வி.எஸ். அதிபரும், கௌரவம் பாரிஸ்டர் பாத்திரத்திற்கு அந்நாளைய பிரபல வழக்கறிஞர் கோவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களும், திருவருட்செல்வர் அப்பர் பாத்திரத்திற்கு காஞ்சி மகா பெரியவரும் உருவகமளித்ததாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால் யாரும் அதிகம் அறிந்திராத மக்களும் நடிகர் திலகத்திற்கு உத்வேகமளித்துள்ளனர் என்பதும் அதிகம் மக்கள் அறிந்திராத செய்தி.

தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு, அதே போல் ஸ்பெயினில் காலம்காலமாக BULL FIGHT என்ற பெயரில் அந்நாட்டு சுற்றுலாவின் முக்கிய அம்சமாக பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. சற்றே கொடூரமான விளையாட்டாக இருக்கும் இதில் பங்கேற்கும் காளைகளை அடக்க வீர்ர்கள் கூர்மையான கத்தியைப் போன்ற ஆயுத்த்தினால் குத்தி அதை அடக்குவார்கள்.

சிவந்த மண் படத்தில் நாயகி தான் நாயகனோடு பல நாடுகளுக்கு சுற்றுலா போவதாக கனவு காணுகிறாள். இந்த கனவுக் காட்சியின் மூலம் வெவ்வேறு நாடுகள் படத்தில் இடம் பெறுகின்றன. நாயகனும் நாயகியும் ரோம், மாட்ரிட், பாரீஸ் என ஐரோப்பிய முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா போகிறார்கள். ஸ்பெயினில் இந்த காளை அடக்கும் விளையாட்டையும் பார்க்கிறார்கள். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் போகிறார்கள் என்பதாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சிவந்த மண் ஒரே சமயத்தில் தர்த்தி என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டதால், அதில் நடித்த ராஜேந்திர குமார் மற்றும் வகீதா ரஹ்மான் இருவரும் தமிழில் நடிகர் திலகம், காஞ்சனா இருவரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடுத்தடுத்து இரு மொழிக் காட்சிகளும் எடுக்கப்பட்டன. அதில் மேற்கூறிய கனவுக் காட்சியும் ஒன்று.

அந்த கனவுக் காட்சியில் மேற்கூறிய ஸ்பெயின் காளை அடக்கும் காட்சியும் இதே போல் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டும் படமாக்கப்பட்டது.

இந்தக் காட்சியில் பார்வையாளர் காலரியில் நடிகர் திலகம் காஞ்சனா இருவரும் அமர்ந்திருப்பதை காமிரா அடிக்கடி காண்பிக்கும். அவர்களுக்க்குக் கீழேயே ராஜேந்திர குமார் மற்றும் வஹீதா ரஹ்மான் இருவரும் அமர்ந்திருப்பார்கள்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14925650_1252426098141393_4935547817041565068_n.jp g?oh=bb6cf791c40093741f0e993318b6ecd4&oe=58973593

இந்தக் காட்சியில் காளையை அடக்கும் வீர்ர்கள் - Matadors என அழைக்கப்படுபவர்கள் - அந்தக் கூர்மையான கொம்பினால் குத்தும் போது அவர்களின் உடல் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அந்தக் காளையை அடக்கி முடித்தவுடன் அவர்கள் தரும் போஸ் கம்பீரமாக இருக்கும் உடலை சற்றே வளைத்து தலையை நிமிர்த்தி அவர்கள் பார்க்கும் பார்வையில் வெற்றிக் களிப்புத் தென்படும்.

பொதுவாக இது போன்ற காட்சியில் மற்ற நடிகர்கள் சாதாரணமாக பார்வையாளனாக நடித்து விட்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்புப் பசியில் இந்த போஸ் மிகப் பெரிய தீனியாய் அமைந்து விட்டது.

அந்த போர்வீரனின் வெற்றித் தோற்றம் அவரை வெகுவாக்க் கவர்ந்திருந்தது.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15027569_1252426698141333_5504575371201277263_n.jp g?oh=2c859c522a488037e464097e841bc4d4&oe=58886838

அது மட்டுமின்றி இந்தக் காட்சியில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மிகச் சிறப்பாய் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய சாகசங்கள் நடைபெறும் போது அந்நாட்டு இசை கூடவே எப்படி வாசிக்கப்படும் என்பதை கவனித்திருப்பவரைப் போல இங்கிருந்தே அவ்வளவு அருமையான இசையை பின்னணியில் அமைத்திருப்பார். தனக்கே உரிய தனித்தன்மையில் சற்றும் ஒற்றுமை தென்படாத வகையில் தன் கற்பனையால் அபாரமான இசைக்கோர்வையை அமைத்து அதற்குத் தேவையான ஐரோப்பிய இசைக்கருவிகளின் ஒலியைக் கொண்டு வந்திருப்பார். இந்தக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையை நடிகர் திலகமும் கூட இருந்து கேட்டிருப்பார் போலத் தெரிகிறது.

இந்தப் பின்னணி இசையில் ட்ராம்போன் ட்ரம்பெட் இசைக்கருவிகள் மிகச்சிறப்பா இசைக்கப்பட்டிருக்கும். அந்த மெட்டை மிகவும் நடிகர் திலகம் ரசித்திருக்கிறாரோ என்னவோ, அதை அப்படியே சொர்க்கம் படத்தில் பொன்மகள் வந்தாள் பாட்டில் சரணத்தில் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பார். வெல்வெட்டின் சிரிப்பை ரசிப்பேன் என்ற பல்லவியின் மெட்டு அப்படியே சிவந்த மண் காளை மாட்டை அடக்கும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும்.

விளையாட்டின் போது மற்றவர் பார்வை விளையாட்டில் லயித்திருக்க, நடிகர் திலகமோ அந்த வீர்ர்களின் உடல் மொழியை மிகவும் உன்னிப்பாக உள்வாங்கியிருக்கிறார்.

அதற்கேற்ப அந்த இசையும் அவரை ஈர்த்திருக்க, பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியில் அந்த பின்னணி இசை பல்லவியின் மெட்டாக அமைந்த வுடன் தலைவர் அந்த ஸ்பெயின் மட்டார் வீரனின் உடல் மொழியை அங்கே மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14937402_1252427408141262_1751415883255038241_n.jp g?oh=183087b6ad85e40d6a75a3e33cc78288&oe=58C50406

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/l/t1.0-9/14963166_1252427644807905_7532760569365241120_n.jp g?oh=7c5db33c1d8e8c64008f7e6347e9add0&oe=588F0A68


பொன் மகள் வந்தாள் பாடலில் பெரும்பாலும் அவர் இந்த ஸ்பெயின் விளையாட்டு வீர்ரின் உடல் மொழியைப் பயன் படுத்தியதற்குக் காரணமும் உள்ளது. ஒரு சாதனையை நிகழ்த்திய பெருமிதமாக அந்த வீர்ர்கள் தங்கள் உடல் மொழியை வெளிப்படுத்துவது போல், இந்தப் பாடல் காட்சியில் தான் செல்வந்தனானதை ஒரு சாதனையாக மனதில் வரித்துக் கொண்டு நாயகனை உருவகப்படுத்தி அதே உடல் மொழியைக் கொண்டு வந்திருக்கிறார் நடிகர் திலகம்.

தன் கண்ணில் படும் எந்த அம்சமானாலும் அதை உள் வாங்கி அதை எங்கே எப்போது எப்படி பிரயோகிப்பது என்கிற உத்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, அதைத் தன் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதையும் கிரகிக்கும் சக்தியும் அவருக்கு உண்டு.

சும்மாவா சொன்னார்கள் அவரை நடிகர் திலகம் என்று.

சும்மாவா சொல்கிறோம் நாங்களெல்லாம் சிவாஜி வெறியர்களென்று..

vasudevan31355
10th November 2016, 07:06 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000783220.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_2VOB_000783220.jpg.html)

சும்மாவா சொல்கிறோம் ராகவேந்திரன் சாரை எங்கள் ரசிக வேந்தர் என்று. அமர்க்களம் சார். சொர்க்க சிவந்தமண் ஒப்பீடு அருமை. காளையை அந்த வீரன் அடக்கிச் சாய்க்கையில் நம் மாவீரன் அதில் லயித்து ரசிப்பதை, ஒவ்வொரு அடக்கலுக்கும் அந்த முகத்தில் தோன்றித் தோன்றி மறையும் வியப்பு ஆச்சர்யக் குறிகள், ஆபத்தை உணர்த்தும் பாவங்கள், வெற்றிப்பெருமிதங்கள், அதிர்ச்சி கலந்த ஆனந்தம், தன் நிலை மறந்த ஈடுபாடு, கண்களின் ஆழத்தீவிர பார்வை ஊடுருவல், எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கள்ளமில்லாத அழகு முகம், ஹேர் ஸ்டைல், டிரஸ் சென்ஸ் என்று நம் தெய்வம் பின்னி எடுப்பாரே! ஊன், உறக்கமின்றி அந்த முகத்தை நாள் முச்சூட பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாமே! தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதோ இன்னும் சில ஸ்டில்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000177001.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_4VOB_000177001.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000185777.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_4VOB_000185777.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000204062.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_4VOB_000204062.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000230121.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_4VOB_000230121.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000273731.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_01_4VOB_000273731.jpg.html)

RAGHAVENDRA
10th November 2016, 08:45 AM
உளமார்ந்த நன்றி வாசு சார். தங்களுடைய பங்களிப்பினை நம்முடைய வாட்ஸப் குழுவில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

adiram
10th November 2016, 02:45 PM
எக்சலண்ட் ராகவேந்தர் சார்,

சிவந்த மண், சொர்க்கம் ஸ்டைலான உடல்மொழி ஒப்பீடு மிக மிக அருமை. போன் மகள் வந்தாள்பாடலை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நடிகர்திலகம் தன இடுப்பை சற்றே ஒடித்து நிற்கும் அந்த அழகு போஸ், ஸ்பெயின் வீரர்களின் அபிநயத்தை நினைவுபடுத்தும். முரளி சாரும் கூட முன்னொரு முறை இதைச சொல்லியிருக்கிறார்.

(இதே ஸ்பெயின் மாடுபிடி சண்டைக்கு காட்ச்சி 'ரத்த பாசம் ' படத்திலும் இடம் பெற்றிருக்கும். போட்டி முடிந்ததும் அதே மைதானத்தில் நடிகர்திலகத்துக்கும் மனோகருக்கும் நடக்கும் கத்திசண்டையில் மனோகர் கொல்லப்படுவார்).

சிவந்த மண், சொர்க்கம் இரண்டு படங்களின் காட்ச்சிகளையும் சிறப்பாக ஒப்பீடு செய்துள்ளீர்கள். வாசு சார் தந்துள்ள நிழற்படங்கள் பதிவை மேலும் சுவையாக்குகின்றன.

பாராட்டுக்கள்.

adiram
10th November 2016, 02:54 PM
அன்பு செந்தில்வேல் சார்,

இளைய திலகம் பிரபு அவர்களின் திரியை தனியொருவராக மிக அருமையாக எடுத்து செல்கிறீர்கள். இளைய திலகத்தின் திரைப்படங்களின் விளம்பர ஆவணப் பதிவுகள் அனைத்தும் அற்புதம். பார்க்கும்போது அன்றைய நிகழ்வுகள் கண்முன்னே தோன்றுகின்றன. அனைத்தும் காணக்கிடைக்காத விளம்பரங்கள்.

தங்கள் சீரிய உழைப்புக்கு பாராட்டுக்கள்.

Russellxor
10th November 2016, 04:28 PM
ராகவேந்திரா சார்
சிவந்த மண், சொர்க்கம் இரண்டு படங்களின் காட்ச்சிகளையும் சிறப்பாக ஒப்பீடு செய்துள்ளீர்கள். வாசு சார் தந்துள்ள நிழற்படங்கள் பதிவை மேலும் சுவையாக்குகின்றன.

வித்தியாசமான கற்பனைத்திறன்.பாராட்டுக்கள் சார்.

Russellxor
10th November 2016, 04:59 PM
அன்பு செந்தில்வேல் சார்,

இளைய திலகம் பிரபு அவர்களின் திரியை தனியொருவராக மிக அருமையாக எடுத்து செல்கிறீர்கள். இளைய திலகத்தின் திரைப்படங்களின் விளம்பர ஆவணப் பதிவுகள் அனைத்தும் அற்புதம். பார்க்கும்போது அன்றைய நிகழ்வுகள் கண்முன்னே தோன்றுகின்றன. அனைத்தும் காணக்கிடைக்காத விளம்பரங்கள்.

தங்கள் சீரிய உழைப்புக்கு பாராட்டுக்கள்.
ஆதிராம் சார்
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

Russellsmd
10th November 2016, 06:20 PM
சிந்தையில் பதிந்த சிவந்த மண்
--------------------------------------------------------
( 1 )

முக்கால்வாசி முகத்தை வலக்கையை வைத்து மறைத்துக் கொண்டு நடிகர் திலகம் அறிமுகமாகும் முதல் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.

கிளப்பில் கதாநாயகி உற்றுப் பார்க்கையில் நமக்குக் காட்டப்படும் நடிகர் திலகம்
எதிரிலிருக்கும் நண்பர்களிடம் ஏதோ உரையாடுவது போன்ற வாயசைப்பையும், உண்டு கொண்டிருக்கும் உணவுப் பண்டத்தை மெல்லுவது
போன்ற வாயசைப்பையும் ஒன்றாக்கிச் செய்யும் மேலை நாட்டு நாகரீக பாவனைகளில்
அய்யா அசத்துவார்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:23 PM
( 2 )

காஞ்சனாவிடம் காதல் பாடும் "ஒரு ராஜா ராணியிடம்".

"ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ?" வரி முடித்த பின் அய்யனின் கைதட்டல்...

நம் பரம்பரையே கைதட்டும்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:27 PM
( 3 )

விமான விபத்தில் இறந்து போனதாய்க் கருதி காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் நம் நாயகர் நுழைய, மகிழ்வின் அதிர்ச்சியோடு அவர் அன்னை மண் சட்டிகளை உதைத்து ஓடி வருவதும், தந்தையைக் கட்டிக் கொண்டு நடிகர் திலகம் சிரிப்பும், விசும்பலுமான அழுகை அழுவதும் எக்காலத்திலும் எனக்குப் பிடித்தவை.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:30 PM
( 4 )

உயரப் பாறை மீதேறி நின்று உணர்ச்சி பொங்கப் பேசி முடிக்க... ஹெலிகாப்டரில் இருந்து குண்டு மழை பொழிய, அதிலிருந்து தப்புவதற்காக அய்யா ஓடும் ஓட்டம்...

கால்களில் மின்னல் காட்டும் அந்த பின் பார்த்து முன் ஓடும் அற்புத ஓட்டம் அன்று தொட்டு
என்றும் எனக்குப் பிரியமானது.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:34 PM
( 5 )

துரத்தி வரும் ராணுவத்திடம் இருந்து தப்பிக்க ஒரு திருமண விழாவில் நுழைய, அங்கு மாப்பிள்ளை, பெண்ணாக வேடமிட்டு நடிக்க.. அங்குள்ள
பெரியவர்களால் நடிப்பே நிஜமாக்கப்படும் கல்யாணக் காட்சி.

கொஞ்சம் அசட்டையாகச் செய்தால் படத்தின் நேரம் நகர்த்துவதற்காக உருவாக்கிய காட்சி போல் ஆகி விட வாய்ப்புள்ள ஒரு காட்சி, உணர்வு மயமான நெகிழ வைக்கும் காட்சியாக மாறிய அதிசயம் சிவந்த மண்ணில் நிகழ்ந்தது.

வாழ்த்துப் பரிசுகளும், காணிக்கைகளும் குவிய,
காட்டாற்றுப் பரிசலில் "பல்லாண்டு" பாடும் அந்தக்
கல்யாணக் காதல் மீது எனக்கு வெகுகாலமாகக் காதல்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:36 PM
( 6 )

ஒரு நாளிலே இருபத்து நான்கு மணி நேரமும் திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காத
"ஒரு நாளிலே" பாடல்.

காட்சி வடிவமாய் முதல் தடவை பார்த்த பிறகு, ஒலி வடிவமாய் எப்போது கேட்டாலும் அய்யன் திருமுக பாவனைகளை நினைவுக்குக் கொண்டு வரும் பாடல்...

"ஒரு நாளிலே.."

இதயத்திற்குப் பிரியமான இனிமை.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:38 PM
( 7 )

"பட்டத்து ராணி" பாட்டு வந்து நம்மை பரவசப்படுத்துவதற்கு முன்பே, அந்த பாடலை
மேடையேற்றத் திட்டமிடும் அந்த ஒத்திகைக் காட்சி நம்மை பரவசப்படுத்தி விடும்.

அய்யாவின் அந்த திட்டமிடும் பாவனை, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்துச் சொல்வதற்கு அவர் எடுத்துக் கொள்கிற கால அவகாசம்.. அத்தனையும் அவ்வளவு துல்லியம்.

இந்தக் காட்சியில், தேவைதான் என்றாலும் நாகேஷின் சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.. அவரையே எல்லாரும் கவனிக்க வைக்கிற மாதிரி.

அதையெல்லாம் மீறி தன்னையே கவனிக்க வைத்திருப்பார்... தலைவர்.

இந்த ஒத்திகைக் காட்சி எனக்கு மிகப் பிடிக்கும்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:41 PM
( 8 )

மிகப் புகழ் பெற்ற "பட்டத்து ராணி" பாடலுக்காக எல்லோரும் விழி விரித்துக் காத்திருக்க...

பாடலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பே அய்யா நம்மை அசத்தி விடுவார்.

அரபு நாட்டு உடை அணிந்து, அற்புத இசை பின்னொலிக்க, குதிரையாட்டம் நடந்து வந்து,
இரண்டாய் மடிந்து, வயிறு வரைக்கும் தலை கவிழ்ந்து அய்யன் செலுத்தும் வணக்கத்திற்கு ஆயுசுக்கும் அடிமையன்றோ.. நாமெல்லாம் ?

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:42 PM
( 9 )

உடல் நலம் குன்றிய தாயைக் காண வரும் புரட்சிக்கார மகனைக் கைது செய்யும் கடமை
இருப்பினும், பாசத்தால் கைது செய்ய மறுக்கிறார்.. தந்தை.

தன்னை தந்தை கைது செய்யாவிடில் அவருக்கு
கெட்ட பெயர் ஏற்படும் எனும் புரிதலில் ஒரு தைரியப் புன்னகையோடு தானே கையில் விலங்கு எடுத்து நடந்து வரும் காட்சி எனக்குப்
பிடிக்கும்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:45 PM
(10 )

என்னவோ இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களில்
எலும்பு தெரியும் கதாநாயகர்கள் சதை மலைகள்
போல இருக்கும் வில்லன்களை தலைக்கு மேலே
தூக்கிச் சுழற்றி எறியும் நகைச்சுவைக் காட்சிகளே
சண்டைக் காட்சிகளாயிருக்கின்றன.

இதிலும் உண்டு ஒரு சண்டைக் காட்சி.

கை விலங்கோடு, பின்னே வரும் காவலர்களை
ஓரப்பார்வை பார்த்தபடி நடப்பவர், சிறைக்குள் தள்ளப்பட்ட வேகத்தில் ஓடிப் போய் சுவற்றில் உதைத்து எழும்பி, திரும்பித் தாக்கும் சாதுர்யத்தை இந்தத் தலைமுறை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:46 PM
( 11 )

ரயிலைத் தகர்க்க தான் போட்ட திட்டத்தையே தகர்க்க உதவியாயிருந்த காதலியிடம் சொல்வார்
... "என் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்..இது
நான் அடைந்த அவமானத்தின் கண்ணீர்".

இதைச் சொல்லும் போது, சிவந்து, நீர் ததும்பி நிற்கும் கண்களில் அய்யன் அவமானத்தைக்
காட்டுவாரே... அது எனக்குப் பிடிக்கும்.

Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:50 PM
( 12 )

"சிவந்த மண்"- இறுதிக் காட்சி

உச்சகட்ட சண்டைக் காட்சி.

வெகு நேரச் சண்டை ஒரு முடிவுக்கு வந்து விட...
கத்தியால் குத்தப்பட்டவனின் முகபாவத்தை
நடிகர் திலகம் காட்டுவார். பதறிப் போவோம்.

அவர்தான் குத்தியிருக்கிறார்.. குத்தப்படவில்லை
என்பதறிந்து நாம் அடைகிற சந்தோஷம் உன்னதமானது.


Sent from my P01Y using Tapatalk

Russellsmd
10th November 2016, 06:51 PM
சாதாரணமாய் கோயிலுக்குப் போகும் போது
கிடைக்காத மன நிறைவும், சந்தோஷமும் பிறந்த நாளன்று கோயிலுக்குப் போகும் போது கிடைக்கும்.

"சிவந்த மண்" தினமான நேற்று "சிவந்த மண்"
பார்க்கையில் அவைகள் எனக்குக் கிடைத்தன.

முன்கூட்டியே நினைவூட்டல் தந்து நேற்றைய என்
மன நிறைவுக்கு வழிவகுத்த ராகவேந்திரா சாருக்கு இதய நன்றி.

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
10th November 2016, 07:03 PM
ஆதவன் ரவி,
தங்களுடைய பங்களிப்பையும் தமிழ் மொழி ஆளுமையினையும் கவிதைப் புலமையினையும் பாராட்ட, வார்த்தை தெரியாமல் விழிக்கின்றேன்.
உளமார்ந்த பாராட்டுக்கள்

RAGHAVENDRA
10th November 2016, 07:07 PM
இன்று நவம்பர் 10, 2016 .. அண்ணன் ஒரு கோயில் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை நினைவூட்டும் வகையில் அண்ணன் ஒரு கோயில் நிழற்பட அணிவகுப்பு நம் நண்பர்களுக்காக.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/l/t1.0-9/14992017_1253248868059116_1058816473696527741_n.jp g?oh=23f3f6499b2c7ccaf26ab3bdd96c0273&oe=588D84C9

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14991843_1253248881392448_3311504764061786667_n.jp g?oh=fa5d67dcca0fe5753b1107b9ffa411e4&oe=58D061D4

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993347_1253248951392441_393394820087841617_n.jpg ?oh=95dac5303754ca4e3d91d2f9e60430d8&oe=58C69BC1

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14947605_1253248964725773_786506290359352600_n.jpg ?oh=81a3b92604c8674588d301206bbe9817&oe=589718BB

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993449_1253249158059087_3917634905734514059_n.jp g?oh=4b22ee32dd7ba6b5e7758fa712cf49a2&oe=58CB04A5

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15036522_1253249274725742_4402660201605181318_n.jp g?oh=96ae30ecf7129fbff329e363a347014f&oe=58CE3C95

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15027364_1253249281392408_6941470774976292588_n.jp g?oh=07b4729da37677dd49f701555a66bb57&oe=58D2E8C5

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993483_1253249344725735_2724071999168735601_n.jp g?oh=9d87e1c44423ea9e84fc9dba3b6d3be5&oe=58C772C5

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14991981_1253249411392395_1279419800602659593_n.jp g?oh=bf8dc6ab630441821bdbea88b9e6e36a&oe=58CD5C85