PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

sivaa
28th February 2017, 03:51 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16831134_270084460082185_3620791215843008538_n.jpg ?oh=a6f1f29808bf0a12fbbd14593970edf6&oe=596EF3D6

sivaa
28th February 2017, 04:17 AM
திராவிட இயக்கங்கள் (முக்கியமாக தி.க.,தி.மு.க )சமூக நீதி கொள்கையில் சாதித்தாலும், பொதுவாக பகுத்தறிவு கொள்கையில் சமூகத்தை பின் தங்க வைத்து தனி நபர் துதிக்கு தள்ளி விட்டது. பேச்சு திறமை ஒன்றை மட்டும் முன்னிறுத்தி அதன் செயல்தன்மையை,உண்மை தன்மையை நிலை நிறுத்தாமல், ஆராய தலைப்படாமல், தலைவர்களின் சிலைகளை,சமாதிகளை சந்நிதிகளாக்கி ,பக்கதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவும்,விஞ்ஞானமும் கூட இந்த பகுத்தறிவாளர்களை அண்டாமல் காத்து பலனடைகிறது.

மாற்று முகாமை குறி வைத்து பொய்களை பரப்புதல் (முக்கிய குறி காமராஜ்,சிவாஜி போன்ற திறமை வாய்ந்த நேர்மையாளர்கள், சொன்னதை செய்து செய்வதை சொல்பவர்கள்), தங்கள் தலைவர்களை பற்றி இல்லாத கட்டுக்கதைகளை பரப்பி மக்களை போதையில் வைத்திருத்தல் இப்படியாகவே செயல்பாடுகள்.

உண்மைகளை சொல்லட்டும் .நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் மிகையான , லாஜிக் மீறிய பொய்கள்?

உதாரணம். சமீபத்தில். இதில் குறிப்பிட படும் நபர் மறைந்து 29 வருடங்கள் முடிந்து விட்டதால் பெயரை தவிர்க்கிறோம். ஒரு கட்சியின் நிறுவனர். ஆனாலும் குறிப்புகளை வைத்து யூகிக்கலாம்.

சமீபத்தில் பாக்யராஜின் புதல்வர் சாந்தனுவின் பட விழா (அல்லது பார்த்திபனின் படவிழா) வில் பேசிய எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து கருத்தை அள்ளி அள்ளி வீசும் பகுத்தறிவு இளம் சிங்கம் கரு.பழனியப்பனின் அற்புதமான கதை-வசனம்.அடிப்படை சரித்திர அறிவு,பொது அறிவு,தன் துறை சம்பத்த பட்ட விஷயங்களிலேயும் லாஜிக் இடறல்.ஆனாலும் யாருடைய இமேஜையோ காக்கும் அவசர பொய்.

ஒரு ஏழை தந்தைக்கு ஒரு மகன் மலைக்கள்ளன் பார்க்கும் போது பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயரிட்டாராம்.(சுமார் 54,55 என்றே வைப்போம்.கிராமத்தில் ஒரு வருடம் கழித்தே பார்த்திருக்க வாய்ப்பு) இவர் இவர் தலைவராக எண்ணி யார் பெயரை வைத்தாரோ அவரை பார்த்து மெடிக்கல் சீட் கேட்க வந்தாராம். தமிழகத்தில் சீட் பஞ்சம் ஆதலால் அப்போது சி.எம். ஆக இருந்த n .t .r அவர்களிடம் சொல்லி மலைக்கள்ளனை ஆந்திராவில் சேர்க்க வைத்தாராம் .இந்த தலைவர் அமெரிக்காவில் நலிவுற்று சிகிச்சை பெரும் போது சிகிச்சை கொடுக்க வந்தவரு அதே மலைக்கள்ளனாம்.

மலைக்கள்ளன் பிறந்தது- 1955.

மருத்துவ படிப்பு சீட் தேடியது-1983(என்.டி..ஆர் ஆந்திர முதல்வரான வருடம்)

மலைக்கள்ளன் அமேரிக்காவில் தன் தலைவருக்கு மருத்துவம் பார்த்தது -1987 (அவருக்கு சீட் வாங்கி கொடுத்தவர் மறைந்தது.)

சராசரி மாணவர்கள் மருத்துவ படிப்பு சேரும் வயது- 18.

சராசரி மாணவர் மருத்துவம் படிக்க ஆகும் வருடம் - m .b .b .s - 5 1/2 வருடங்கள். ஹவுஸ் சர்ஜன் -1 வருடம். Md /ms -2 வருடங்கள்.

கலை வேந்தன் கொடுத்த டிப்ஸ் போல.

உண்மையே உன் விலை என்ன?

கோபால் உங்களுக்கு 100 வயசு.

அங்கே 90% உண்மையே உன் விலை என்ன? தான்

Gopal.s
28th February 2017, 08:04 AM
செந்தில்வேல்,

உங்கள் முதல் மரியாதை பதிவு(கள் ) நெகிழ வைத்து உலுக்கி விட்டது.
உங்கள் எழுத்து திறன் வியக்க வைக்கிறது. தொடருங்கள்.நாங்கள் ஒரு ரசிகர் கூட்டமே தயார்.

sivaa
28th February 2017, 09:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17022319_1367730893277579_8732121696234221552_n.jp g?oh=3b32d3e7492fd54443c778ff78af7af5&oe=5939C5C5

sivaa
28th February 2017, 09:15 AM
இன்று 100 இருக்கைகள் மட்டுமே கொண்ட எத்தனையோ ஷாப்பிங் மால் திரையரங்குகளில் வெளியாகும் புத்தம் புதிய திரைப்படங்கள் காற்று வாங்கும் சூழ்நிலையில் 1200 இருக்கைகள் கொண்ட பழைய திரையரங்கான சென்னை மஹாலட்சுமியில் வசந்த மாளிகையின் house full அரங்கேற்றம், house full ஆனதோடு 400க்கும் மேலாக ரசிகர்கள் நின்றபடி படம் பார்த்து ரசித்த உற்சாகம்,
வசந்த மாளிகை என்றும் வசூல் மழை பொழியும் ஒரு கார்மேகம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16997969_1256798901103664_3048070586684190510_n.jp g?oh=13d44707ef2bf44eae39de9cc4c7828d&oe=592D0E95


(சேகர் பரசுராம் முகநூலில் இருந்து)

sivaa
28th February 2017, 09:16 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16265884_1256798861103668_9170268064761657098_n.jp g?oh=24d2bb683ec526d0ab294dc48d00d619&oe=593B681D

(சேகர் பரசுராம் முகநூலில் இருந்து)

sivaa
28th February 2017, 09:16 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16996474_1256798821103672_1874210630830031300_n.jp g?oh=5db184d244298467c2b8f737882c278e&oe=5941FCD8

sivaa
28th February 2017, 09:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17021414_1256798791103675_213120553787503407_n.jpg ?oh=3881a21afcb913ee29f11987a50e7946&oe=59310650

Russellxor
28th February 2017, 11:36 AM
செந்தில்வேல்,

உங்கள் முதல் மரியாதை பதிவு(கள் ) நெகிழ வைத்து உலுக்கி விட்டது.
உங்கள் எழுத்து திறன் வியக்க வைக்கிறது. தொடருங்கள்.நாங்கள் ஒரு ரசிகர் கூட்டமே தயார்.
கோபால் சார்
தங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள்.

Gopal.s
28th February 2017, 12:28 PM
(From the old Hub postings)


முதல் மரியாதை- 1985-

திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.

நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.

நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.

மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.

மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.

பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.

பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.

Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.

மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.

தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .

பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?

இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.


கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)

வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)

பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

Gopal.s
1st March 2017, 08:25 AM
நெஞ்சம் மறப்பதில்லை 21:

அத்தனை நாயகிகளுக்கும் ஹீரோ!

பெரு துளசிபழனிவேல்

நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத நடிகராக பார்த்தார்கள். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் தயங்கினார்கள். அவருடன் இணைந்து நடிப்பதற்கும் யோசித்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' (1952) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநயாகனாக நடிக்க வைத்து ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படத்தைத் தயாரித்தார். கலைஞர் மு.கருணாநிதி பரபரப்பூட்டும் வகையில் வசனத்தை எழுதியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. நடிகர் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பு, அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனத்தை உச்சசரித்த அழகு படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.படத்தின் இறுதி காட்சியில் அமைககப்பட்டருந்த கோர்ட் சீன், அதில் சிவாஜியால் பரபரப்புடன் பேசப்பட்ட வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன்பிறகு சிவாஜியை நடிக்க வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முன் வந்தார்கள். பராசக்திக்குப் பிறகு அவருடன் இணைந்து ஜோடியாக நடிப்பதற்கு பல கதாநாயகிகள் ஆசைப்பட்டடார்கள். அப்படி சிவாஜியுடன் இணைந்து நடித்த அத்தனை நடிகையர்களும் சிவாஜியின் திரையுலக வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும், தமிழ் சினிமா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் நாயகி பண்டரிபாய் நடிகர் திலகம் நடித்து அறிமுகமான முதல் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் சிவாஜிக்கு முதல் ஜோடியாக இணைந்து நடித்தவர் பண்டரிபாய். இவர் ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர். ஏவிஎம் நிறுவனம் அடுத்து தயாரித்த 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகம் செய்யும் தனது கணவன் சிவாஜியை சுட்டுத் தள்ளும் துணிச்சலான வேடத்தில் நடித்தார். 'அன்னையின் ஆணை', 'ராஜபக்தி'யிலும் ஜோடியாக நடித்தார். 'தெய்வமகன்' படத்தில் தாரமாகவும், தாயாகவும் நடித்தார். 'கௌரவம்' படத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது மகன் இளம் வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். இளம் வழக்கறிஞருக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்தார்.

பத்மினி அடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி இவர் முதன் முதலாக கலைவாணர் என்.எஸ்.கே. தயாரித்து இயக்கிய 'பணம்' படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 'அன்பு', 'இல்லறஜோதி' யில் இணைந்து நடித்தார். 'கல்யாண பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் காமெடி கலந்த வேடம். 'எதிர்பாராதது' படத்தில் காதலியாகவும், சித்தியாகவும் இருமாறுபட்ட தோற்றங்கள். 'தூக்குதூக்கி', 'காவேரி', ' கோட்டீஸ்வரன்', 'ராஜாராணி' படங்களில் ஜோடியாக நடித்தவர் 'தானே உனக்காக' படத்தில் கௌரவ வேடத்தில் வந்தார். ஆனால் சிவாஜி ஜோடியாக. 'அமரதீபம்', 'புதையல்', 'பாக்கியவதி', 'உத்தபுத்திரன்', 'தங்கப்பதுமை' படங்களிலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். 'மரகதம்', 'தெய்வப் பிறவி', 'புனர் ஜென்மம்', 'ஸ்ரீவள்ளி', 'செந்தாமரை', 'நான் வணங்கும் தெய்வம்', 'பேசும் தெய்வம்', 'பாலாடை' போன்ற படங்களிலும் இணைந்து நடித்து தனது, நடிப்பாற்றைலை வெளிப்படுத்தினார். 'திருவருட்செல்வர், 'இருமலர்கள்', 'திருமால்பெருமை', 'விளையாட்டுப்பிள்ளை', 'இருதுருவம்', 'தேனும் பாலும்' போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்தார். 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம்வீடு', 'தாய்க்கு ஒரு தாலாட்டு', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற படங்களில் நடித்து சிவாஜிகணேசனுக்கு சிறப்பான ஜோடி எனப் பெயர் பெற்றார். இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் தாய்க்கு ஒரு தாலாட்டு.

சாவித்திரி அடுத்து நடிகர் திலகத்தின் ஜோடியாக வந்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. 'அமரதீபம்', 'வணங்காமூடி', 'அன்னையின் ஆணை', 'காத்தவராயன்', 'குறவஞ்சி', 'எல்லாம் உனக்காக', 'வடிவுக்கு வளைகாப்பு', 'இரத்தத் திலகம்', 'திருவிளையாடல்' போன்ற படங்களோடு 'பிராப்தம்' படத்தை இயக்கி நடித்து தயாரித்தார். அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரி. 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் வெளுத்து வாங்கினார். 'நவராத்திரி'யில் ஒன்பது விதமான வேடத்தில் நடித்த சிவாஜிக்கே சவால் விடுகின்ற அளவிற்கு அவரது நடிப்பாற்றல் சிறந்து விளங்கிறது. 'நவராத்திரி' சிவாஜி நடித்த 100வது படம் என்றாலும் 'சாவித்திரியின் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்திய முதன்மையான படமாகும். சிவாஜி - சாவித்திரிக்கு மகுடம் சூட்டிய படம் பாசமலர். இருவரும் இதில் ஜோடியல்ல. அண்ணன் - தங்கையாக வாழ்ந்திருந்தார்கள்.

அஞ்சலிதேவி அஞ்சலிதேவி 'முதல் தேதி', 'நான் சொல்லும் ரகசியம்' என்ற இரண்டே படங்களில் மட்டும் ஜோடியாகக நடித்தார். இவரது அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த 'பூங்கோதை' படத்தில் நடிகர் திலகம் நாயகனாக நடித்தார்.

எம்.என். ராஜம் சிவாஜியின் ஆரம்பகால படங்களான 'மங்கையர் திலகம்', 'நல்லவீடு', 'நானே ராஜா', 'பெண்ணின் பெருமை' 'ரங்கோன் ராதா', 'பதிபக்தி', 'பாசமலர்' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவர் எம்என் ராஜம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளர் சிவாஜியை காதலிக்கும் ரசிகையாக அழுத்தமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றார்.

பி பானுமதி நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவினால் போற்றப்பட்ட பி.பானுமதி நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். கல்கியின் நாவலான கள்வனின் காதலி பேரறிஞர் அண்ணாவின் நாவலான 'ரங்கோன் ராதா', வட்டார மொழியில் எடுக்கப்பட்ட 'மக்களைப் பெற்ற மகராசி', 'மணமகன் தேவை', 'அம்பிகாபதி', 'அறிவாளி' போன்ற அனைத்துப் படங்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இணையாகவே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உணர வைத்தார்.

கிரிஜா 'திரும்பிப்பார்', 'மனோகரா' இரண்டே படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை கிரிஜா. அதன் பிறகு அவர் சிவாஜியுடன் எந்தப் படத்தில் காணமுடியவில்லை.

சௌகார் ஜானகி நடிகர் திலகத்துடன் ஜோடியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் சௌகார் ஜானகி. இவர் நடிகர் திலகத்துடன் 'படிக்காத மேதை', 'பாவை விளக்கு', 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'பச்சை விளக்கு', 'புதிய பறவை', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'மகாகவி காளிதாஸ்', 'திருமால் பெருமை', 'எங்க ஊர் ராஜா', 'உயர்ந்த மனிதன்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'பட்டாக்கத்தி பைரவன்' போன்ற பல படங்களிலும் காதலியாக மட்டும் வந்து போகாமல் சிவாஜியின் மனைவியாகவே நேரிடையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிவாஜியை மட்டுமல்லாமல் படம் பார்த்தவர்களையே வியக்க வைத்தவர் நடிகை சௌகார் ஜானகி. குறிப்பாக புதிய பறவை படத்தில் கலக்கினார்.

சரோஜா தேவி சிவாஜிக்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அபிநய சரஸ்வதி எனப் புகழப்பட்ட சரோஜா தேவி. அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், புதிய பறவை, கடைசியாக ஒன்ஸ்மோர் என பல படங்களில் இந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்தது.

இவர்களைத் தவிர 'கண்கள்', 'குறவஞ்சி போன்ற படங்களில் மைனாவதி, 'பூங்கோதை' படத்தில் புதுமுகம் வசந்தா, 'மனிதனும் மிருகமும்' படத்தில் மாதுரி தேவி,

'திரும்பிபார்', 'துளிவிஷம்' படத்தில் கிருஷ்ணகுமாரி,

'இல்லற ஜோதி'யில் ஸ்ரீ ரஞ்சனி நடித்தார்,

'காவேரி', உலகம் பலவிதம்', 'தூக்கு துூக்கி' படங்களில் லலிதா,

'கூண்டுக்கிளி' படத்தில் சிவாஜி காதலித்த பெண்ணாகவும் பி.எஸ். சரோஜா,

'நான்பெற்ற செல்வம்', 'ஹரிச்சந்திரா', 'வாழ்விலே ஒருநாள்' போன்ற படங்களில் ஜி.வரலட்சுமி,

'தெனாலிராமன்', 'தங்கமலை ரகசியம்', 'பொம்மைக் கல்யாணம்', 'நிச்சயத்தாம்பூலம்', 'மருதநாட்டுவீரன்' போன்ற படங்களில் ஜமுனா,

'ராஜாராணி', 'ராணி லலிதாங்கி', 'சாரங்கதாரா', 'படித்தால் மட்டும் போதுமா' போன்ற படங்களில் ராஜ சுலோச்சனா,

'சபாஷ்மீனா' படத்தில் மாலினி போன்றோர் நடித்தனர்.

கலையுலகின் கனவுக் கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி 'தங்கப்பதுமை' படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.

'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' படத்தில் எஸ்.வரலட்சுமியும்,

'இரும்புத்திரை', 'சித்தூர் ராணிபத்மினி' படங்களில் நடிகை வைஜயந்திமாலாவும்,

'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் குமாரி ருக்மணியும்,

'பாவைவிளக்கு' படத்தில் இன்னொரு நாயகியாக குமாரி கமலா,

'பலே பாண்டியா', ஆண்டவன் கட்டளை படங்களில் தேவிகா ஜோடியாக நடித்தனர்.

'பந்தபாசம்' படத்தில் சந்திரகாந்த்தா நடித்தார்.

'குங்குமம்' படத்தில் சாரதா, விஜயகுமாரி நடித்தார்கள்.

'சாந்தி' படத்தில் தேவிகா, விஜயகுமாரி நடித்தார்கள்.

'நீலவானம்' படத்தில் தேவிகா, ராஜஸ்ரீ நடித்தார்கள்.

'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் மற்றொரு ஜோடியாக மணிமாலா நடித்தார்.

'பாபு' படத்தில் விஜயஸ்ரீயும்,

'ஞானஒளி' படத்தில் விஜய நிர்மலாவும் நடித்தனர்.

'சிவந்தமண்', 'தங்கை' படங்களில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா.

சிவாஜியின் ஸ்பெஷல் ஜோடி உஷா நந்தினி. 'பெண்ணுஞ்சல்', 'கௌரவம்', ராஜபார்ட் ரங்கதுரை','மனிதனும் தெய்வமகலாம்', 'என்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் இவர் நடித்தார்.

'உனக்காக நான்', 'தியாகம்', ராஜரிஷி', 'ராஜராஜசோழன்', 'ஆனந்தகண்ணீர்', 'நெஞ்சங்கள்', 'குடும்பம் ஒரு கோயில்', 'படையப்பா' போன்ற படங்களில் லட்சுமி ஜோடியாக நடித்தார்.

வாணிஸ்ரீ வாணிஸ்ரீ - சிவாஜி ஜோடி எழுபதுகளில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி. வசந்த மாளிகையில் இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்போது நரை திரை கண்ட மூத்த இளைஞர்களாலும் மறக்க முடியாதது. 'சிவகாமியின் செல்வன்', 'வாணி ராணி', 'ரோஜாவின் ராஜா', ' இளைய தலைமுறை', 'புண்ணிய பூமி', 'நல்லதொரு குடும்பம்', 'நிறைகுடம்', 'உயர்ந்த மனிதன்' என அத்தனைப் படங்களில் முத்திரைப் பதித்த ஜோடி இது.

கேஆர் விஜயா புன்னகை அரசி கே ஆர் விஜயா, நடிகர் திலகத்துடன் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடித்த படம் 'செல்வம்'. தொடர்ந்து 'நெஞ்சிருக்கும் வரை', 'தங்கை', 'பாலாடை', ' திருவருட்செல்வர்', 'இருமலர்கள்', 'ஊட்டிவரை உறவு', ' திருடன்', ' எதிரொலி', ' ராமன் எத்தனைராமனடி', ' சொர்க்கம்', ' தவப்புதல்வன்', 'பாரதவிலாஸ்' 'கிரகப்பிரவேசம்', 'நாம்பிறந்த மண்', 'ஜெனரல் சக்கரவர்த்தி', 'ஜஸ்டிஸ் கோபிநாத்', 'நான்வாழவைப்பேன்', ' ரிஷிமூலம்', 'தர்மராஜா', 'சத்தியசுந்தரம்', 'கல்தூண்', 'ஹிட்லர் உமாநாத்', ' ஊருக்கு ஒரு பிள்ளை', 'ஊரும் உறவும்', 'நீதிபதி', 'மிருதங்க சக்கரவர்த்தி', 'தராசு', 'சிம்ம சொப்பனம்', ' சாதனை', 'கிருஷ்ணன் வந்தான்', 'திரிசூலம்' போன்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து பத்மினிக்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றவர் கே.ஆர். விஜயா.

ஜெயலலிதா சிவாஜி கணேசனின் பிரபல நாயகிகளுள் ஒருவர். கலாட்டா கல்யாணம் படத்தில்தான் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து, குருதட்சணை, தெய்வமகன், ராஜா, தர்மம் எங்கே, நீதி, தாய், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி, சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டிணமா, எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் சிவாஜின் ராசியான ஜோடியாக பேசப்பட்டார்.

மஞ்சுளா சிவாஜிக்கு ஏழெட்டு படங்களில் ஜோடி போட்டு சிறந்த நடிகையாகத் திகழ்ந்தார். 'எங்கள் தங்க ராஜா', 'என்மகன்', ' அவன்தான் மனிதன்', 'அன்பே ஆருயிரே', 'டாக்டர்சிவா', 'உத்தமன்', 'சத்தியம்' ஆகிய படங்களில் மஞ்சுளாவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்தனர்.

'சிவகாமியின் செல்வன்' படத்தில் இரண்டாவது சிவாஜிக்கு ஜோடியாக நடிகை லதா நடித்தார்.

கேஆர் விஜயாவுக்குப் பிறகு சிவாஜிக்கு பாந்தமான ஜோடியாகப் பேசப்பட்டவர் சுஜாதா. 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'வா கண்ணா வா', 'கருடா சௌக்கியமா', 'தீர்ப்பு', பரீட்சைக்கு நேரமாச்சு', 'சந்திப்பு', 'சுமங்கலி', ' திருப்பம்', 'நேர்மை', ' மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களில் ஜோடியாக நடித்து சிறப்புச் சேர்த்தார்.

'கவரிமான்' படத்தில் துரோகம் செய்யும் மனைவியாக நடிகை பிரமிளா துணிச்சலாக நடித்தார்.

'மோகனப் புன்னகை' படத்தில் ஜெயபாரதி, அனுராதா, பத்மப்பிரியா இணைந்து நடித்தார்கள்.

'வைரநெஞ்சம்' படத்தில் பத்மப்பிரியா ஜோடியாக நடித்தார்.

ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா அன்றைய நாட்களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி 'விஸ்வரூபம்', 'சந்திப்பு' படங்களிலும், ஸ்ரீப்ரியா த்ரிசூலம், வசந்தத்தில் ஓர் நாள், 'வெற்றிக்கு ஒருவன்', 'எமனுக்கு எமன்', 'ரத்தபாசம்', 'அமரகாவியம்', 'லாரி டிரைவர்', ராஜாக்கண்ணு', 'மாடிவீட்டு ஏழை', ஊருக்கு ஒரு பிள்ளை', 'சங்கிலி', நட்சத்திரம் போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்தனர்.

அம்பிகா - ராதா எண்பதுகளில் வெற்றி நாயகிகளாகத் திகழ்ந்த அம்பிகாவும் ராதாவும் கூட சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து அவருக்கு இணையாக நடித்தனர். அம்பிகா வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். முதல் மரியாதை படத்தில் ராதாவின் நடிப்பைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம்பத்தியம்' படத்தில் அம்பிகா, ராதா இருவருமே சிவாஜியுடன் இணைந்து நடித்தார்கள்.

ராதிகா 'என் ஆசை ராசாவே' படத்தில் ராதிகாவும்,

'இருமேதைகள்' படத்தில் சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

'பைலட் பிரேம்நாத்' படத்தில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஜோடியாக நடித்தார்.

வீரபாண்டியன்' படத்தில் சுமித்ராவும்,

'முதல் மரியாதை,' சின்னமருமகள்', 'படிக்காதவன்', 'என்தமிழ் என்மக்கள்' போன்ற படங்களில் வடிவுக்கரசியும் சிவாஜியின் மனைவி பாத்திரத்தில் நடித்தனர்.

எத்தனையோ சிவாஜி படங்களில் காமெடி வேடத்தில் நடித்த மனோரமா, 'ஞானப் பறவை' என்ற ஒரே படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்தார்.

'இமயம்', 'நாங்கள்' படத்தில் ஸ்ரீவித்யா ஜோடியாக நடித்தார்.

சிவாஜி கடைசியாக நடித்த படம் படையப்பா. அதில் அவரது ஜோடி லட்சுமி.

நூற்றாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், சிவாஜி களத்திலிருந்தபோது உச்சம் தொட்ட நடிகைகள் அனைவருமே அவருக்கு ஜோடியாக நடித்தவர்களே. அந்தளவிற்கு அனைவருடனும் இணைந்து நடித்து சாதனைப் படைத்தவர் நடிகர் திலகம்!

sivaa
2nd March 2017, 09:15 AM
நடிகர் திலகத்தின் பல படங்கள் மறு வெளியீடுகளில்
அன்றுமுதல் இன்றுவரை சாதனைகள் பல படைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
என்னஒன்று எல்லா வெளியீடுகளும் சாதனைகளும் வெளியே தெரியவரவில்லை.
வெளியே தெரியவரவில்லை என்பதனால் நடிகர்திலகத்தின் படங்கள்
மறுவெளியீடு காண்பதில்லை என்றோ சாதனைகள் புரிவதில்லைஎன்றோ
கூறிவிட முடியாது.

மறுவெளியீடுகளில் மன்னன் சாதனை படைத்துக்ககொண்டுதான் இருக்கிறார்,
கண் செவி அறியாமல்.

1983ம் ஆண்டு மறு வெளியீடுபற்றிய நோட்டீஸ் அனைவரது பார்வைக்கும் இங்கே.
http://oi64.tinypic.com/fwm2w1.jpg

sivaa
2nd March 2017, 09:19 AM
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட இலங்கை சாதனைகள்

http://oi63.tinypic.com/2nby82b.jpg

sivaa
2nd March 2017, 09:19 AM
http://oi65.tinypic.com/30t2tqb.jpg

sivaa
2nd March 2017, 09:20 AM
http://oi65.tinypic.com/1eksqc.jpg

sivaa
2nd March 2017, 09:21 AM
http://oi63.tinypic.com/wapw1z.jpg

sivaa
2nd March 2017, 09:22 AM
http://oi68.tinypic.com/4j6owo.jpg

sivaa
2nd March 2017, 09:22 AM
http://oi65.tinypic.com/29gju45.jpg

sivaa
2nd March 2017, 09:23 AM
http://oi66.tinypic.com/2ugl8vp.jpg

sivaa
2nd March 2017, 09:23 AM
http://oi63.tinypic.com/xbrq8.jpg

sivaa
2nd March 2017, 09:24 AM
http://oi65.tinypic.com/2yv6grd.jpg

sivaa
2nd March 2017, 09:24 AM
http://oi63.tinypic.com/zna0k0.jpg

sivaa
2nd March 2017, 09:25 AM
http://oi67.tinypic.com/2vcb87m.jpg

sivaa
2nd March 2017, 09:26 AM
http://oi68.tinypic.com/14o6b7s.jpg

sivaa
2nd March 2017, 03:51 PM
99 th Movie " முரடன் முத்து "
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17103474_1258781697572051_735580552097988043_n.jpg ?oh=d49534626c1f1679f1d597b89492af02&oe=597397D0

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17021457_1258781640905390_1758306354146266303_n.jp g?oh=346dee1ecdb845159a4a24fe0e1a55ad&oe=59728730

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17098595_1258781860905368_1285843761706636028_n.jp g?oh=f62394bccfbb8e5149f44c40352bdfb0&oe=593204BF


(from f b)

Harrietlgy
2nd March 2017, 10:55 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 165– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/811096640148784652783839437devamagan%201.jpg


சரவணன் சிரித்தபடியே உட்கார்ந்திருந்தார். சுப்பையாவுக்கே பொறுக்க முடியாமல் 'நான் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு கோபம் வரலியே?’ என்றார்.
`வரலே! ஏன்னா எனக்குத் தெரியும். நீங்க உங்க மகனைத் திட்டிக்கொண்டிருக்கிறீர்கள். என்னை நேருக்கு நேர் பார்த்து திட்ட உங்களுக்கு துணிவு இல்லை என்பது எனக்குத் தெரியாதா?’ என்றார் சரவணன்.
`கரெக்டா பிடிச்சுட்டிங்களே' என்றபடி சுப்பையா சிரித்தார். சரவணன் மேல் இருந்த அன்பினால், தன் மகனுக்கு சரவணன் என்று பெயர் வைத்திருந்தார் சுப்பையா. அவரை வீட்டுக்கு வரவழைத்து, திட்டுவது போல் ஒரு பிராக்டிகல் ஜோக் விளையாடினார் சுப்பையா.
`உயர்ந்த மனிதன்’ வெற்றி விழாவில் அறிஞர் அண்ணா கலந்து கொண்டு சிவாஜி கணேசனை வாழ்த்திப் பேசினார். திருப்பதி சென்றதைத் தொடர்ந்து திராவிட இயக்கத் தொடர்புகளில் இருந்து சிவாஜி கணேசன் விடுபட்டு வெளியே வந்தபோதிலும், பெரியாரிடமும், அண்ணாவிடமும் தொடர்ந்து மதிப்பும், மரியாதையும், நட்புறவும் வைத்திருந்தார் சிவாஜி. இதைப் பற்றி சிவாஜியே சொல்லியிருக்கிறார்.
`நான் ஒரு லட்சியத்துக்காக அண்ணாவை விட்டு வெளியே வந்தேனே தவிர, அண்ணா எப்போதும் என் அண்ணாதான். நான் இருந்த இடத்தை விட்டு வெளியே வந்தனே தவிர, அண்ணாவை விட்டுப் பிரியவில்லை. அண்ணா கட்சியை அரசியலால் நடத்தவில்லை. அன்பால் நடத்தினார். அதை ஒரு மாபெரும் கட்சியாக வளர்த்தார்.
1967 தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சில காலத்திற்குப்பின் அண்ணாவுக்கு உடல் நலம் குன்றி லண்டனுக்கு பரிசோதனைக்குப் போனார். அப்போது என் மகள் சாந்திக்கு திருமணம். என் நண்பர் வேலுச்சாமி என்ற டாக்டருக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து, லண்டனுக்கு அனுப்பி, அண்ணாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செய்தேன்.
`திருமணம் நன்றாக நடக்கட்டும். இன்னும் பத்து நாட்களில் நான் சென்னை திரும்பி வந்துவிடுவேன்’ என்று அண்ணா செய்தி அனுப்பினார்.என் மகள் சாந்தியின் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அதற்கு அடுத்த வாரம் அண்ணா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வைத்தே `மகளையும், மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வருமாறு கணேசனிடம் சொல்லுங்கள்’ என்றார்.
நான் என்னுடைய மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு அண்ணா வீட்டுக்குச் சென்றேன். அண்ணாவை வணங்கியவுடன் அவர் ஒரு வேட்டியையும், புடவையையும் அன்பளிப்பாக வழங்கினார். ஏவி.எம்மின் `உயர்ந்த மனிதன்’ என்னுடைய 125 படமாக வெளியாகியிருந்தது. அதையொட்டி ஏவி.மெய்யப்பனும், என்னுடைய நண்பர் கோபாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு விழா நடத்தினார்கள்.
வடநாட்டில் இருந்து பெரிய தலைவர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஒய்.பி. சவான் வந்திருந்தார். இந்த விழாவில் அண்ணா கலந்து கொண்டு என்னை வாழ்த்தி பேச வேண்டும். என்னை விரும்பாத சிலர் அண்ணாவிடம் சென்று `விழாவுக்கு போகாதீர்கள். சிவாஜியை வாழ்த்திப் பேசாதீர்கள்’ என்று சொன்னார்கள்.
`ஆயிரம்தான் இருந்தாலும் சிவாஜி, சிவாஜிதான். அவன் எனக்கு எப்போதுமே வேண்டியவன்தான். அவனைப் போல் அன்புள்ளவன் எவனும் கிடையாது’ என்று சொல்லிவிட்டு அண்ணா விழாவுக்கு வந்தார். உடம்பு முடியாமல் இருந்த நேரத்திலும் அண்ணா அந்த கூட்டத்தில் முக்கால் மணி நேரம் பேசினார். `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்றார்.
மேலும், `இந்த மலர் மலர்ந்த பிறகுதான் நீங்கள் பார்க்கிறீர்கள். இது மொட்டு விடும்போதே, இது நன்றாக அரும்பி வாசனை கொடுக்கும் என்று எனக்குத் தெரியும்' என்றும் கூறினார். அதன்பின் `கணேசா! என் அருமைத் தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனம் திறந்து வாழ்த்தினார்.
`பெருமாள் முதலியார் கூட்டி வந்ததனால், கணேசன் திரை உலகுக்கு சீக்கிரம் வந்துவிட்டான். இல்லையென்றாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்திருப்பான். அவனுடைய வரவை யாராலும் தடுத்திருக்க முடியாது’ என்றும் கூறினார் அண்ணா.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் அண்ணா, தி.நகரில் என்.எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார்கள். அதன்பின் சில நாட்கள் கழித்து அண்ணா மறைந்துவிட்டார்கள். நான் `சிவாஜி’ ஆவதற்கு வழிவகுத்துத்தந்த அந்த மாமேதையின் மறைவு என்னை எப்படி பாதித்தது என்பதை வேறு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் நாடகங்களிலும், படங்களிலும் தமிழைப் பேசும்போதெல்லாம் அந்த தமிழ்ச் செல்வரின் நினைவு வரும். அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்’ என்றார் சிவாஜி. சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் தனது 72வது வயதில் காலமானார். சிவாஜியின் வெற்றிப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டமது!
1969ல் 'அன்பளிப்பு', 'தங்கச் சுரங்கம்', 'காவல்தெய்வம்', 'குருதட்சணை', 'அஞ்சல் பெட்டி 520', 'நிறைகுடம்', 'தெய்வ மகன்', 'திருடன்', 'சிவந்த மண்' என்று 9 படங்கள் வெளியாகின. சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த `தெய்வ மகன்‘ படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கினார். அந்தப் படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். அந்த படத்திற்கு இசை, எம்.எஸ். விஸ்வநாதன். அப்பாவாகவும், இரண்டு மகன்களாகவும் சிவாஜி சிறப்பாக நடித்தார். ஆஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்ட படம் இது.
`காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்,’
`கேட்டதும் கொடுப்பவனே கீதை நாயகனே,’ `தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே’ என்று இந்த படத்தின் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம். ஒரு காட்சியில் தந்தை சிவாஜி, மூத்த மகன் சிவாஜி, இளைய மகன் சிவாஜி, என்று மூன்று சிவாஜிக்கள் அந்தக் காட்சியில் இருப்பார்கள்.
இளைய மகன் சிவாஜி தந்தையிடம் பீரோவுக்கு பின்னால் ஒளிந்தபடி பணம் கேட்பார். தந்தை சிவாஜி மறுப்பார். எதிரில் இருக்கும் மூத்த மகன் சிவாஜி `பாவம் கொடுங்கள்’ என்று சைகை காட்டுவார். இன்று நினைவில் நிற்கிறது. சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானபோது இந்த காட்சிக்கு ரசிகர்களின் விசில் பறந்தது.
`தெய்வ மகன்’ சிவாஜியின் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். எத்தனை பாவங்கள், எத்தனை உணர்ச்சிகள், தந்தைக்கு ஒரு நடிப்பு! மூத்த மகனுக்கு ஒரு மானரிஸம்! இளைய மகனுக்கு ஒரு ஸ்டைல்! சிவாஜி சிவாஜிதான்!
(தொடரும்)

Gopal.s
3rd March 2017, 08:35 AM
சிவாஜியின் சிறப்பு.

சிவாஜியின் சிறப்பே, இந்தியாவிலேயே சிறந்த தலைவர்கள்,கலைஞர்கள்,மத தலைவர்கள் ,இலக்கியவாதிகள் அத்தனை பெரும் அவர் ரசிகர்கள் . நண்பர்கள்.

இதற்கு உதாரணம் சொல்ல, இன்னும் 50 திரிகள் முழுக்க வேண்டும்.

இன்றைக்கு அரசியலில் தலைமையில் இருக்கும் ராமதாஸ்,வை.கோ.,கலைஞர்,அனைவருமே அவரின் தீவிர ரசிகர்கள்.
அன்றைக்கு நேரு,காமராஜ்,அண்ணா,என்று ரசிகர் பட்டாளம். சிவாஜி எதிர் முகாமில் இருந்த போதும் அவர் படங்களை முதல் ஷோ பார்த்து மலைத்தவர் அண்ணா.

கலைஞர்களில் லதா மங்கேஷ்கர்,பிரித்விராஜ் கபூர்,ராஜ்கபூர்,தேவ் ஆனந்த்,திலிப் குமார்,சுனில்தத்,சஞ்சீவ்குமார்,முதலியோர் மிக மிக தீவிர சிவாஜி ரசிகர்கள் ,நண்பர்கள்.

அது மட்டுமல்ல ,சிவாஜிக்கு அடுத்த நிலையில் 60 வரை திகழ்ந்த ஜெமினி, 60க்கு பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு நடிகர் இவர்களிடம் காட்டிய பெருந்தன்மை , உண்மையான பாசம் இவற்றை சொல்லி மாளாது இத்தனைக்கும் ,மேற்குறிப்பிட்ட இருவருமே நம்பகத்தன்மையோ,விசுவாசமோ இல்லாதவர்கள். ஆனாலும் சிவாஜி குழந்தையும்,தெய்வமும் குடியிருந்த மனம் கொண்ட உலக கலைஞன்.இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் துரோகம் செய்தவரை மன்னித்து ,அவருக்கே உதவியும் செய்தார் .

இதை போல உலகமே ரசித்து கொண்டாடிய மேதையை ,இப்பூவுலகம் கண்டதில்லை,காண போவதும் இல்லை.

Russellxor
3rd March 2017, 12:08 PM
https://uploads.tapatalk-cdn.com/20170303/9db163dbabdd0fb281092d7d7b94ab62.jpg

Russellxor
3rd March 2017, 08:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170303/536015faf9bab32c9fb160088189bf96.jpg



https://uploads.tapatalk-cdn.com/20170303/4c73e344b656461d2bef5cdc8cca1a78.jpg

விவசாயிகள் பிரச்சினை...
அன்றும் இன்றும்..

இன்றுவரை உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவில்லைதான்.அன்றைய காலத்திலேயே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடவும் இறங்கிய கூட்டம் சிவாஜி ரசிகர் கூட்டமே.
இன்றும் பிரச்சினைகள். உங்கள் போராட்டமும் தொடர்கிறது.
ஆனால் உங்களுக்கு குரல் கொடுக்க எந்த நடிகனின் ரசிகர் கூட்டமாவது வருகிறதா?
நடிகர்திலகத்தை இத் தமிழ்நாடு மதித்திருந்தால் இப் பிரச்சினைகள் இன்றுவரை தொடர்ந்திருக்குமா?
கூட்டத்தோடு கூட்டமாய் கூப்பாடு போடும் நடிகர்களின் கவர்ச்சிகளிலேதானே இத் தமிழ்நாடு மயங்கிக் கிடக்கிறது.உண்மை நாட்டுப்பற்றை போதிக்கும் நடிகர் எவராவது உண்டோ இத் தமிழ்நாட்டினில்?

sivaa
5th March 2017, 10:44 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17098438_1769647440019159_1965082699231617075_n.jp g?oh=1e3e13108412b27f51f4e012262546ec&oe=596BAD7C

Russellxor
5th March 2017, 12:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/a53d2f6c84219a7fe5339ca4ede88b75.jpg

Russellxor
5th March 2017, 12:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/7ba6faa67066e958894a07ec6c44186e.jpg

Russellxor
5th March 2017, 12:46 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/3f6b04d725be0523c890bb53fd17acd5.jpg

Russellxor
5th March 2017, 12:47 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/1694a5d2c3f524e1043413a6ac50d1a3.jpg

Russellxor
5th March 2017, 12:49 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/4beeeb2c5ef5666c2ca9cc1702b95f34.jpg

Russellxor
5th March 2017, 12:51 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/f6e3b44d4b9fd6c4970e5e438dbfe103.jpg

Russellxor
5th March 2017, 12:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/92d7ac35cc43c17156afbefcffcf7342.jpg

Russellxor
5th March 2017, 12:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/87a73a6413d26263169446d11b707a47.jpg

Russellxor
5th March 2017, 12:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170305/25bab7e82502e91d01da5145d22b9d8f.jpg

Russellxor
6th March 2017, 11:27 AM
https://uploads.tapatalk-cdn.com/20170306/dbb7ded9f0b133e80136be612aae3331.jpg

இவர் பழனி.
கோவை சுந்தரா புரத்தை சேர்ந்தவர்.
வயது 70க்கு மேல்.
இவர் நடிகர்திலகத்தின் மேல் அளவற்ற பற்று கொண்டிருப்பவர்..
நடிகர்திலகத்தின் படங்கள் இப்போது எங்கே திரையிட்டாலும்
(மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி etc.,) அங்கு சென்று பார்த்து விடுவார் .சமீபத்தில்
சென்ற வாரம் சென்னை சென்று வசந்தமாளிகை பார்த்துவிட்டு வந்தார்.அந்த காலங்களில் பெரும்பான்மையான ரசிகர்கள் இவ்வாறு இருந்துள்ளனர்.ஆனால் இந்தகாலகட்டத்தில் 70 வயதுக்கு மேல் ஆன பெரியவர் ஒருவர் இவ்வளவு தூரம் சென்று நடிகர்திலகத்தின் படங்களை பார்த்து வருகிறார் என்றால் அதை என்னவென்று சொல்ல?
நடிகர்திலகத்தின் நடிப்பாளுமை எந்தளவு ஒருவரை ஈர்த்துள்ளது என்பதற்கான அத்தாட்சிகளில் இதுவும் ஒன்றாக கொள்ளலாம்.

-ராஜபார்ட் ரங்கதுரையை நாகர்கோவில் சென்று பார்ப்பதாக உத்தேசமாம்.

Harrietlgy
6th March 2017, 06:10 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 166– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/4079008931488453617120006040enga%20mama.jpg


`தெய்வ மகன்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் நினைவுக் கூர்ந்தார். `நடிகர் திலகம் `தெய்வ மகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். மூன்று வேடங்கள் என்பதால் ஒப்பனையை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு ராப்பகலாக நடித்தார். அப்போது சென்னை ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த சில பெரிய மனிதர்கள் சிவாஜியை காண வந்தார்கள். ஏழைப்புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்கு நன்கொடை திரட்டும் முயற்சியில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்திருந்தனர். அதில் ஓர் அங்கமாக 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிவாஜி கணேசன் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
'கட்டபொம்மன்' நாடகம் நடந்து பல வருடங்கள் ஆயிற்று. படமாக வந்தும் சில வருடங்கள் ஆயிற்று. இப்போது திடீரென்று அதில் நடிக்க வேண்டுமென்றால்……! ஆனால், சிவாஜி அந்த சவாலை ஏற்றுக்கொண்டார். `தெய்வ மகன்’ படப்பிடிப்பு நடக்கும்போதே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் கட்டபொம்மன் வசனத்தை மறுபடியும் படித்து ஒத்திகை பார்த்துக்கொண்டார். கலை நிகழ்ச்சி நடக்கும் நாளும் வந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிவாஜியை ஆறு வீரர்கள் இழுத்து வந்தார்கள். பானர்மேனுடனான வாக்குவாதம் ஆரம்பமானது. இடியும் மின்னலுமாக வசனமழை பொழிந்தார். வீரம், அந்த சபையில் மீண்டும் உயிர்த்தது. சிவாஜியின் ஒவ்வொரு பாகமும் துடித்தெழுந்து ஆர்ப்பரித்தது. சிம்மத்தின் கர்ஜனை முடிந்த சில விநாடிகள் அரங்கத்தில் அமைதி நிலவியது. அதன்பிறகு சுயநினைவு வந்த மக்கள் கரகோஷம் செய்தனர்.
இந்த அற்புதம் நடந்தபோது நானும் அங்கிருந்தேன். ஒப்பனை அறைக்கு வந்த சிவாஜி வாயே திறக்கவில்லை. அவசர அவசரமாக உடை அலங்காரத்தை கலைத்தவர் வெண் கதருக்குள் புகுந்தார். பெரிய மனிதர்கள் ஒப்பனை அறைக்கு வந்து பாராட்டினார்கள். மேடைக்கு வரும்படி அழைத்தனர். சிவாஜி யாரிடமும் எதுவும் பேசாமல், வெறுமனே இரு கைகூப்பி வணங்கிவிட்டு, துண்டால் வாயைப் பொத்தியபடி விடுவிடுவென்று என்னை அழைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தார். எனக்கு அவர் நடந்து கொண்ட விதம் லேசான உறுத்தலை ஏற்படுத்தியது. `பாராட்ட வந்தவர்களிடம் இரண்டு வார்த்தை பேசியிருந்தால் என்ன?’ என்று கேட்டேன். அதுவரை தும்பைப்பூ போன்ற வெள்ளைக் கதர் துண்டால் வாயைப் போர்த்தி கொண்டு இருந்தவர் துண்டை வாயிலிருந்து எடுத்து எனக்குப் பிரித்துக் காட்டினார். உதடு வழியே ரத்த வழிந்து கொண்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன். அவர் நிதானமாகச் சொன்னார்– `யாராவது என்னை இந்த நிலையில் பார்த்தால் காசநோய்க்காரன் என்று சொல்லி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போயிருப்பார்கள். அதனால்தான் அவசர அவசரமாக புறப்பட்டு விட்டேன். 'கட்டபொம்மன்' நாடகத்தை முழு நாடகமாக நடிக்கும்போது மக்கள் உணர்ச்சிப்படிகளில் படிப்படியாக ஏறி உச்சத்துக்கு வருவார்கள். பானர்மேனோடு நடக்கும் உச்சபட்ச காட்சியை நல்ல முறையில் உள்வாங்கும் நிலைக்குத் தயாராகியிருப்பார்கள். ஆனால், இன்று நடந்தது கிளைமாக்ஸ் காட்சி மட்டும்தான். எந்தவித உந்துதலும் அஸ்திவாரமும் இல்லாத நிலை. அந்த ஒரு காட்சியில் முழு நாடகத்தையும் அவர்கள்முன் கொண்டு வந்த நிறுத்த வேண்டும், உணர வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என் லிமிட்டை தாண்டிவிட்டேன். இதற்கு முன் சில சமயங்களிலும் இப்படி ஆகியிருக்கிறது. அதனால்தான் நடித்து முடித்ததும் யாரும் பார்க்கும் முன் அறைக்கு ஓடிவந்துவிட்டேன்.’ எவ்வளவு சிரத்தை பாருங்கள். நன்கொடைக்காக நடத்தப்பட்டும் கலை இரவு நிகழ்ச்சிதானே என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. எந்த மேடையாக இருந்தாலும் நடிப்பு என்றால் நூறு சதவீத ஈடுபாட்டுடன் நடிப்பார். அதனால்தானே அவரை நடிகர் திலகம் என்று அழைக்கிறோம்' என்றார் திருலோகசந்தர்.

(தொடரும்).

Russellsmd
7th March 2017, 07:09 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170301230858584_zpskdja qw2r.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170301230858584_zpskdja qw2r.jpg.html)

Russellsmd
7th March 2017, 07:24 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170302211220792_zpsxk8p ly3t.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170302211220792_zpsxk8p ly3t.jpg.html)

Russellsmd
7th March 2017, 07:26 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017030 3074927298_20170303195330853_zpsxffec7tu.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0001_20170116080120669_20170202125247091_2017030 3074927298_20170303195330853_zpsxffec7tu.jpg.html)

Russellsmd
7th March 2017, 07:28 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170303221045682_2017030 3232635705_20170304075027075_zps3gi6j9ku.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170303221045682_2017030 3232635705_20170304075027075_zps3gi6j9ku.jpg.html)

Russellsmd
7th March 2017, 07:29 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170305221735468_2017030 5221811879_20170305231717380_20170306195907759_zps tnpzi95o.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170305221735468_2017030 5221811879_20170305231717380_20170306195907759_zps tnpzi95o.jpg.html)

abkhlabhi
8th March 2017, 01:43 PM
All

Nice to see U all again.
Mr.Essvee guided me how to login and access long time back. But due to network and and also some computer configuration problem all these days unable to login. Thanks to Essvee Sir.

sivaa
9th March 2017, 03:52 AM
All

Nice to see U all again.
Mr.Essvee guided me how to login and access long time back. But due to network and and also some computer configuration problem all these days unable to login. Thanks to Essvee Sir.

well come .

sivaa
9th March 2017, 03:54 AM
கோவை ராயல் தியேட்டரில் 10.03.2017 முதல் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த உத்தமன் தினசரி 4 காட்சிகளாக..... கோவையில் உள்ள நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களே, பழைய படங்களில் நடிகர்திலகத்தின் படங்கள் தான் வசூலில் முதலிடம் வகிக்கும் என்பதை நிரூபிப்போம்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17191034_1266871350064133_6985323664506689260_n.jp g?oh=c1096c1c185e4da095de8feb649db0b8&oe=592EC1BA

(from f book_

Gopal.s
9th March 2017, 10:00 AM
abkhlabhi,

Better stay at one place without contamination.

Gopal.s
9th March 2017, 10:05 AM
ஞான ஒளி-1972(11th March 2017 -45 Years Completion)

நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

Typical Behaviours of an orphan-

1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.


மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.

sivaa
10th March 2017, 09:58 AM
1954 ஆம் ஆண்டில் வெளியான மொத்த தமிழ் படங்களின் எண்ணிக்கை 32
அந்த 32 படங்களில் நடிகர்திலகத்தின் படங்கள் 8,
அதில் மனோகரா,இல்லற ஜோதி,அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது ஆகிய 6 படங்கள் வெற்றிப் படங்கள், மீதம் இரண்டு படங்கள் என கூண்டுக்கிளி, துலி விஷம் ஆகும் இவற்றோடு மனோகரா தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இதே ஆண்டில் வெளியானது,
அந்த ஆண்டின் மொத்த வெற்றி படங்களின் எண்ணிக்கை 9
எம்ஜிஆர் நடிப்பில் மலைக்கள்ளன்...
எம்.ஆர்.ராதா நடிப்பில் ரத்தக் கண்ணீர்
இன்னொரு வெற்றிப் படம் வைர மாலை ஆகும்,
இப்போதெல்லாம் வருடத்திற்கு 250 படங்களுக்கு மேல் திரைக்கு வருகிறது அந்த 250 ல் ஒரு படத்தில் நடித்திருந்தால் போதும் இப்போதைய முக்கிய ஹீரோக்களுக்கு,
காரணம் ஒரு படத்தை வெற்றி பெற செய்வதே பெரிய சவால் நிறைந்த வேலை ஆகிவிடுகிறது,
அதனால் தான் நடிகர்திலகத்தை யாரோடும் ஒப்பிடாதீர்கள் என்று நமது நட்பு வட்டாரத்தில் பதிவுகள் வருவதற்கான காரணம்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17203000_1265580746892146_455440656464540468_n.jpg ?oh=cd6871adcdd4ff6565e451a8ecabe82c&oe=592C503B

(from f b)

sivaa
10th March 2017, 10:15 AM
http://oi63.tinypic.com/33lyw4k.jpghttp://oi68.tinypic.com/1z4zamr.jpg


சேலம் ஒரியண்டல் தியேட்டர்

sivaa
10th March 2017, 10:16 AM
http://oi65.tinypic.com/15i0y86.jpg

Russellxor
10th March 2017, 05:28 PM
நீண்ட இடை வெளிக்குப் பின்

ஒரு படக் காட்சிகள்..
https://uploads.tapatalk-cdn.com/20170310/87fb891cec1d01f7343a8c7140fae1ce.jpg

Russellxor
10th March 2017, 05:30 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/136d6de77220f8b92d930c7e382c8c7a.jpg

Russellxor
10th March 2017, 05:30 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/2a5fdee001a2aea8be4698b0aa3501d5.jpg

Russellxor
10th March 2017, 05:32 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/ab57c774a7e08553af25efee599a5fc5.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170310/bb76077eb78aa8f5077fdd16ba6016dc.jpg

Russellxor
10th March 2017, 05:33 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/9a27cfe89db4bb5ecb364f1009dd7467.jpg

Russellxor
10th March 2017, 05:34 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/e48358ba17cd85567226e51d5fe50311.jpg

Russellxor
10th March 2017, 06:29 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/f353ce326b6c12ec5eb4624671d81fe7.jpg

Russellxor
10th March 2017, 06:31 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/9619413fa90999a1bdcbd38986852df1.jpg

Russellxor
10th March 2017, 06:33 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/01ac4d737d3f4645883b1bc825d11385.jpg

Russellxor
10th March 2017, 06:34 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/f2b8f4de614139f27665fbeb4e231d19.jpg

Russellxor
10th March 2017, 06:35 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/0e24e1b898576335fa060e83c7c5de9c.jpg

Russellxor
10th March 2017, 06:36 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/8f13044b9573d71f4ffdaf4854adba6f.jpg

Russellxor
10th March 2017, 06:37 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/48fa0ef2dab89683c7f04de0ad8c5649.jpg

Russellxor
10th March 2017, 06:37 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/bddc1406af8edb30c6a1b42d5d40fdcd.jpg

Russellxor
10th March 2017, 06:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/a812e8537cae098f70c4cfd73a5c1b41.jpg

Russellxor
10th March 2017, 06:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/fb900f07251d74c6894cf57bee576482.jpg

Russellxor
10th March 2017, 06:40 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/4495017bf28ee9978b9b03725a932ce3.jpg

Russellxor
10th March 2017, 06:40 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/26a76a02882a99cde51ad86eceeaa4a9.jpg

Russellxor
10th March 2017, 06:41 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/31fd68eb643beb61c82a1ac6b1c0ff91.jpg

Russellxor
10th March 2017, 06:42 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/fc3294a68fc1a5f28eb1c5f25d2c2f03.jpg

Russellxor
10th March 2017, 06:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/5e2fa76dd07c53ffee62ccffe9745bbe.jpg

Russellxor
10th March 2017, 06:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/0bf728ef68fba7c75de8b6c177bd5120.jpg

Russellxor
10th March 2017, 06:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/e475054c557f1bc3b05e2f37a52e70d9.jpg

Russellxor
10th March 2017, 06:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/a20b8c64be0369a4f21eaea7edc8f648.jpg

Russellxor
10th March 2017, 06:46 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/3b3c27ee2ad235417e98328cc2aa7922.jpg

Russellxor
10th March 2017, 06:47 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/b70ac94bb8f854de913cefeb54d39e4a.jpg

Russellxor
10th March 2017, 07:46 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/de00d063e269a67211358e876b38205f.jpg

Russellxor
10th March 2017, 07:49 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/d8fc44c24ba40b59702d18e3bacee495.jpg

Russellxor
10th March 2017, 07:50 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/d5f15c39f87661409eb3efec03731da5.jpg

Russellxor
10th March 2017, 07:52 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/4be97ee55935575fac0b18a7de6e1076.jpg

Russellxor
10th March 2017, 07:52 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/bb359583c29c0cb17a8fcaf09231f6e1.jpg

Russellxor
10th March 2017, 07:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/ab71b71de907dcc55d1fd68259458c25.jpg

Russellxor
10th March 2017, 07:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/7cfae9592e198abab3940440ee7aa47f.jpg

Russellxor
10th March 2017, 07:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/0dbd5b7d1c38fd170067af89184692d5.jpg

Russellxor
10th March 2017, 07:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/fbb2671522708b260b86c8eb76498afb.jpg

Russellxor
10th March 2017, 07:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/dc704908d3a9c05bd588ded06b4ecf13.jpg

Russellxor
10th March 2017, 07:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/3c79513fcb3da8cd9f666b7b82134cb7.jpg

Russellxor
10th March 2017, 08:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/a1bdde3c558d9ab50089818747a6ffa4.jpg

Russellxor
10th March 2017, 08:01 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/4d1705c17ecfb64de1f87cd2048ba8f0.jpg

Russellxor
10th March 2017, 08:02 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/91e9e191b7b12f581e35a9d4b5be88c4.jpg

Russellxor
10th March 2017, 08:03 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/7efd731f5fd4e3c346512bbbc3e8df12.jpg

Russellxor
10th March 2017, 08:04 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/abe59fdf3bcd5d770b00e0f674058a31.jpg

Russellxor
10th March 2017, 08:05 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/fe088d77807656ef5461d6167bdad08e.jpg

Russellxor
10th March 2017, 08:06 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/0411dd4ef46bb4cfc033a4e671574f0e.jpg

Russellxor
10th March 2017, 08:07 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/17ee27ccbf8f607baaa3a4985b81926e.jpg

Russellxor
10th March 2017, 08:07 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/b91999dcc392ddaa24b640c477f99e49.jpg

Russellxor
10th March 2017, 08:08 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/2179723e58852c625aceff4e337001e4.jpg

Russellxor
10th March 2017, 08:10 PM
https://uploads.tapatalk-cdn.com/20170310/58fdaba5a04c84fecec6776ebb39dc52.jpg

Russellxor
10th March 2017, 08:18 PM
END OF PART


https://uploads.tapatalk-cdn.com/20170310/5a5fae41c5d688531026aeb382508371.jpg

Russellxor
10th March 2017, 08:20 PM
வணக்கம்

https://uploads.tapatalk-cdn.com/20170310/ddf1f9636534351808bce8e083142704.jpg

Russellxor
10th March 2017, 09:49 PM
" சங்கிலி "
நடிகர்திலகத்தின் ஹிட் லிஸ்டில் இல்லாத படம் என்பது எங்கள் தலைமுறையினருக்கு ஆச்சரியம் கொடுக்கும் செய்தி,
தற்போதைய நிலையில் 40 லிருந்து 50 வயதுக்குட்பட்ட நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களின் நெஞ்சத்தில் நிச்சயமாக சங்கிலிக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்யும்,
82 ல் ரிலீஸான் சங்கிலி இரண்டு ஆண்டுகள் கழித்துதான் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த டூரிங் கொட்டகைக்கு வந்தது, அப்போது நான் ஏழாவது வகுப்பு அது எப்படி இருந்தோம் என்று தெரியவில்லை, எங்கள் செட் என்றால் மொத்தமும் நடிகர்திலகத்தின் காத்தாடிகள்தான், இத்தனைக்கும் அப்போது ரஜினியும் கமலும் நன்றாகவே ரீச் ஆகியிருந்தார்கள்,
நடிகர்திலகம் படம் என்றால் குறைந்தது 10 மாட்டுவண்டியாவது எங்கள் ஊரிலிருந்து கிளம்பிவிடும் வண்டிக்கு குறைந்தபட்சம் 10 பேராவது இருப்பார்கள், சினிமா கொட்டகைக்கு
சங்கிலி படத்தை காண வந்த மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை 27 என்று நாங்கள் எண்ணிப் பார்த்தது இன்றும் நினைவில் வருகிறது, டூரங் கொட்டகையிலேயே 25 நாட்கள் ஓடியது மகத்தான சாதனையாக விளம்பரம செய்தனர்
நாங்கள் அன்று 6:30 முதல் காட்சி பார்த்தோம், முதல் காட்சி முடிந்ததும் அடுத்து காசு இருந்தால் இரண்டாவது காட்சியையும் பார்க்கும் வழக்கம் உண்டு, காசு இல்லாத பட்சத்தில் சினிமா கொட்டகைக்கு வெளியே நின்று சவுண்ட் மட்டும் கேட்டுக் கொள்வோம் அப்படி கேட்டுக் கொள்வது நடிகர் திலகத்தின் படத்திற்கு மட்டுமே பொருந்துவது தனிச்சிறப்பு,
சங்கிலியில் எங்கள் தலைமுறையினருக்கு பிடித்த காட்சிகள் அதிகம்,
DSP சரவணன் எங்களுக்கு ரொம்பவும் பிடித்தமானவர், அப்போது விளையாட்டு நேரங்களில் திருடன் போலீஸ் விளையாட்டு அதிகம, அதில் DSP சரவணன் இல்லாத விளையாட்டு கிடையாது பெரும்பாலும் நான் தான் DSP சரவணன் திருடன் என்று விளையாடும் நன்பர்களை நொருக்கி விடுவேன் ,
படம் பார்க்கையில் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்து திடீரென DSP சரவணன் விபத்தில் இறந்து விடுவதை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, எனது ஆருயிர் நண்பன் மகாலிங்கம் தேம்பி தேம்பி அழ படம் பார்த்த ஏராளமானவர்கள் எவ்வளவு சொல்லியும் அழுகையை நிறுத்தவே இல்லை, அடுத்த சங்கிலி வந்து அவர் DSP சரவணனாக தோன்றிய பிறகுதான் அழுகை நின்றது. நாங்கள் சந்திக்கும் போது அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது,
அவ்வளவு சிறப்பு மிக்க படம் சங்கிலி
படத்தில் இளைய திலகம் அறிமுகம் வேறு,
இளைய திலகம் அறிமுகம் என்ற இனிப்பான செய்தி மூத்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ஆகியவற்றின் மூலமாக நாங்கள் அறிந்து அடைந்த பூரிப்பிற்கு அளவே இல்லை இப்படி பல பெருமைகளை கொண்ட சங்கிலி ஹிட் லிஸ்டில் இல்லை என்பதை இன்றுவரை எங்கள் தலைமுறை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனம்,
(படங்கள் உதவி: thiru Senthilvel Sivaraj அவர்கள்)

திரு .சேகர்பரசுராம் முகநூல்
பக்கத்திலிருந்து..

Russellxor
10th March 2017, 09:55 PM
F B
https://uploads.tapatalk-cdn.com/20170310/0385770a95b800d1acfc7de46f21c238.jpg

sivaa
11th March 2017, 05:49 AM
http://oi66.tinypic.com/rrl1g3.jpg

(முகநூலில் இருந்து)

HARISH2619
11th March 2017, 01:59 PM
திரு செந்தில்வேல் சார் ,
ஒவ்வொரு ஸ்டில்லும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி உள்ளது ,மிகவும் அருமை.ஒரு உண்மையான சிவாஜி ரசிகனாக ஒவ்வொரு ஸ்டில்லையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் .மிக்க நன்றி.இதேபோல் இன்னும் பல படங்களின் அணிவகுப்பை காண காத்துக்கொண்டிருக்கிறோம்

Russellxor
11th March 2017, 06:33 PM
திரு செந்தில்வேல் சார் ,
ஒவ்வொரு ஸ்டில்லும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி உள்ளது ,மிகவும் அருமை.ஒரு உண்மையான சிவாஜி ரசிகனாக ஒவ்வொரு ஸ்டில்லையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் .மிக்க நன்றி.இதேபோல் இன்னும் பல படங்களின் அணிவகுப்பை காண காத்துக்கொண்டிருக்கிறோம்
தங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள் பல.

Russellxor
11th March 2017, 06:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170311/8a5667a84ce861efe87288b42e6a6f5a.jpg

Russellxor
11th March 2017, 10:04 PM
5002 வது பதிவு

(ஏற்கெனவே பதிவிட்டதுதான்)

எங்க ஊர் ராஜா...
நடிப்பின் கோர தாண்டவம்

இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.

யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
ஊட்டும்.

வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.



!குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)


பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...

பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.

தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.



பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.



!பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
காட்டியிருயிருப்பார்.

நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.

நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.

ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
முடிவில்
வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
சென்று சென்று திரும்பி வருவதும்
என்று நடிப்பு ராஜாங்கம் நடத்தியிருப்பார்.

sivaa
12th March 2017, 03:29 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17190604_390176384681075_2557761894416457067_n.jpg ?oh=5fc63372e777cc1c94a663898b29db87&oe=596091E6

sivaa
12th March 2017, 12:45 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/17157725_307629709640281_48254157261353185_o.jpg?o h=6c4b8c049895ed15a858e04e50fb95f1&oe=59738990

Harrietlgy
12th March 2017, 05:44 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 167– சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/202921657614890652541663259562vilayattu%20pillai.j pg


இந்த ஆண்டு அந்த இன்னொரு படம் `வியட்நாம் வீடு’. இது சிவாஜியின் சொந்த தயாரிப்பு. இந்தப் படத்தின் மூலமாகத்தான் எழுத்தாளர் சுந்தரம் ‘வியட்நாம் வீடு’ சுந்தரமானார். நூறு படங்களில் நடித்த பிறகு சிவாஜி மீண்டும் மேடைக்கு வந்த நாடகம் இது.
`ஏன் நீங்கள்தான் பெரிய நடிகராயிற்றே? ஏன் மீண்டும் மேடைக்கு வந்தீர்கள்? ‘சிவாஜியிடம் ஒரு முறை கேட்டேன்.
`ஒரு கலைஞன் அவனுடைய திறமையை நேரடியாக மக்கள் முன்னாடி நிரூபிக்கணும். அப்போ அவங்க கொடுக்கிற கைத்தட்டலும் பாராட்டும்தான் ஓர் உண்மையான கலைஞனுக்கு வெகுமதி. சினிமாவில சம்பாதிக்கிறது வாழ்க்கைக்கு. மேடைதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கிற உண்மையான அங்கீகாரம்’ என்றார் சிவாஜி.
குடும்பத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை வைத்து இந்த நாடகத்தை எழுதியிருந்தார் சுந்தரம். சிவாஜியும், பத்மினியும் பிராமணத்தமிழ் பேசி அருமையாக நடித்தனர். இந்த படத்தை இயக்கியவர் பி. மாதவன். இந்த வருடம் வந்த இன்னொரு படம் `எதிரொலி.’ இந்த படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். இந்த படம் சிவாஜி படமாகவும் இல்லை கே.பி. படமாகவும் இல்லை. அதனால் படம் தோல்வியடைந்தது.
இந்த வருடத்தில் வந்த மற்ற படங்கள் ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’. இதில் 15.08.1970ம் வருடம் வந்த படம் ‘ராமன் எத்தனை ராமனடி’. 20.10.70ம் வருடம் தீபாவளி நாளில் வந்த இரண்டு படங்கள் ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’. இதில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் சாந்தி தியேட்டரில் வெளிவந்தது. பக்கத்திலேயே இருந்த தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியான படம் சொர்க்கம். ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ மூன்றுமே நூறு நாட்களை கடந்து ஓடின. ‘ராமன் எத்தனை ராமனடி’, ஓர் ஏழை கிராமத்தான் பெரிய நடிகனாவது மாதிரியான கதை. படம் படு அமர்க்களமாக ஓடியது. இந்த படத்தில் சிவாஜி தொலைக்காட்சிக்காக நடித்த ‘சத்ரபதி சிவாஜி’ காட்சிகளை படத்தில் இணைத்திருந்தார்கள். இந்த தொலைக்காட்சி படத்திற்கு மட்டும் தஞ்சைவாணன் வசனமெழுதியிருந்தார். படத்தின் மொத்த கதை – வசனத்தையும் பாலமுருகன் எழுதியிருந்தார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் பாலாஜியின் தயாரிப்பு. இந்திப் படமான ‘கிலோனா’வின் தமிழ் வடிவம்தான் ‘எங்கிருந்தோ வந்தாள்’. இந்தியில் சஞ்சீவ் குமார் நடித்திருந்தார். ஆனால், தமிழில் சிவாஜி நடித்ததை பார்த்த சஞ்சீவ் குமார் `இதில் ஒரு சதவீதம் கூட நான் நடிக்கவில்லை’ என்றார்.
இந்த படத்தின் கிளைமாக்ஸை எடுக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. இந்தியிலிருந்து கொஞ்சம் மாற்றம் செய்ய நினைத்தார் இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் செய்ய நினைத்த மாற்றங்களின்படி கிளைமாக்ஸ் முழுவதும் ஜெயலலிதா மீதுதான் இருக்கும். காலையில் மற்ற காட்சிகளை எடுத்தார் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். மதிய உணவுக்குப் பிறகு கிளைமாக்ஸ் எடுக்க வேண்டும். அது முழுவதும் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதை எப்படி கதாநாயகன் சிவாஜியிடம் சொல்வது? தயங்கிக் கொண்டேயிருந்தார் இயக்குநர் திருலோகசந்தர்.
நேரமாகிக் கொண்டிருந்தது. சிவாஜி திருலோக்கை அழைத்தார். `ஏன், என்ன லேட்?’ என்றார்.
`ஒரு விஷயத்தை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலே.’
`பரவாயில்லை சொல்லுங்க.’
கிளைமாக்ஸ் முழுவதும் அம்மு(ஜெயலலிதாவை நெருக்கமானவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்) மேலே இருக்கும்!’ என்றார் திருலோக்.
`அதனால என்ன? படத்தின் டைட்டில் ‘எங்கிருந்தோ வந்தாள் தானே? வந்தான் இல்லையே?’ என்றார் சிவாஜி.
அவருக்கு அவருடைய பாத்திரத்தை விட படத்தின் வெற்றிதான் முக்கியம். அந்த படத்தின் கிளைமாக்ஸில் ஜெயலலிதா பின்னி எடுத்திருப்பார். அந்த படம் இந்திப் படத்தின் ரீமேக்காக இல்லாமலிருந்திருந்தால், அந்தப் படத்திற்கு ஜெயலலிதாவிற்கு தேசிய விருது கிடைத்திருக்கும்.
ஜெயலலிதா நடிக்கும்போது தியேட்டரில் கைத்தட்டல் பலமாக இருக்கும். அதற்கு சிவாஜி காட்டும் ரீயாக்*ஷனுக்கு விசில் பறக்கும். ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ ஆகிய மூன்று படங்களிலும் இன்னொரு பெரிய ஹீரோ, எம்.எஸ். விஸ்வநாதன். மூன்று படங்களின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்!
‘சொர்க்கம்’ படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. பணத்தினால் ஒரு மனிதனின் குணாதிசயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்திற்கு கட்டபொம்மனுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதியிருந்தார்.
இதே ஆண்டில் வந்த இன்னொரு படம் `பாதுகாப்பு.’ இந்த படத்தை இயக்கியவர் `பா’ வரிசை படங்களின் வல்லவரான பீம்சிங்தான் இந்த படத்தை இயக்கினார். ஆனால் படம் படுதோல்வியடைந்தது.
இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.
இந்த ஆண்டு வந்த இன்னொரு படம் ` விளையாட்டுப் பிள்ளை’. இந்த படத்தின் கதை முதலில் ஆனந்த விகடனில் `ராவ் பகதூர் சிங்காரம்’ என்கிற பெயரில் நாவலாக வந்தது. `தில்லானா மோகனாம்பாள்’ கதையை கலைமணி என்கிற பெயரில் எழுதிய கொத்தமங்கலம் சுப்புதான் இந்த நாவலை எழுதியிருந்தார். இந்த படத்தில் சிவாஜிக்கு சொந்தமாக பத்மினி நடித்திருந்தார்.
இந்த படத்தை அப்போது ஜெமினி அதிபராக இருந்த எஸ். பாலசுப்ரமணியன் தான் தயாரித்தார். ஆனால் இந்த படத்தை துவக்கியவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன்தான். ஆனால் இந்த படம் முடிவடைவதற்கு முன்பே அவர் இறந்து போனார். அதனால் அவர் இறந்த பிறகுதான் படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த படத்திற்காக தன் முழு அர்ப்பணிப்பை கொடுத்திருந்தார் சிவாஜி. இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது.
அடுத்த ஆண்டும் ஆதாவது 1971ம் ஆண்டு ‘இரு துருவம்’, ‘தங்கைக்காக’, ‘அருணோதயம்’, ‘குலமா குணமா’, ‘பிராப்தம்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘சவாலே சமாளி’, ‘தேனும் பாலும்’, ‘மூன்று தெய்வங்கள்’,
‘பாபு’ ஆகிய படங்கள் வெளியாகின.
(தொடரும்)

Russellxor
12th March 2017, 08:49 PM
கோவை ராயலில் உத்தமன்...

புது படங்களை பார்க்கவே ஆட்கள் வராத நிலையில் இன்று மாலை உத்தமனை தரிசிக்க
வருகை புரிந்தவர்கள் 300 நபர்களுக்கு மேல்.
என்றும் போல் " உத்தமர் " வசூலிலும் ராஜா
பழைய திரைப்படத்திற்கு 3000 ரூபாய் செலவழித்து தனி நபராக போஸ்டர் ஒட்டிய கோவை ரேணுகோபாலுக்கு பாராட்டுக்கள்.
தியேட்டரில் வழக்கம் போலவே அதகளம்.
பட்டாசு வேடிக்கை, தலைவரை வாழ்த்தி கோஷங்கள், பாலாபிசேகம், ஆட்டம் பாட்டமுமாய் உத்தமன் இனிதே நடைபெற்றது.https://uploads.tapatalk-cdn.com/20170312/7c8dabe49a53e040ca56278e22b7c0b4.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170312/95652f221021e925d90da707d2c7cf16.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170312/42bc26141386c65144d52a7985d13348.jpg


https://uploads.tapatalk-cdn.com/20170312/d06b66b4e2fe7374bd3773d375014c09.jpg

HARISH2619
13th March 2017, 01:14 PM
Dear senthilvel sir,
congrats for crossing another milestone of 5000 posts

Russellxor
13th March 2017, 01:27 PM
Dear senthilvel sir,
congrats for crossing another milestone of 5000 posts
Thankyou sir

Gopal.s
13th March 2017, 02:21 PM
Congrats Senthilvel.

Russellxor
14th March 2017, 11:22 AM
Congrats Senthilvel.
Thankyou sir

sivaa
15th March 2017, 11:50 AM
இரண்டு வருடங்கள்
5000 பதிவுகள்
அயராத உழைப்பு
வாழ்த்துக்கள் செந்தில்வேல்

Harrietlgy
15th March 2017, 10:25 PM
Congrats Mr. Senthilvel.

Russellxor
16th March 2017, 08:05 PM
சிவா சார், பரணி சார்
நன்றி

HARISH2619
17th March 2017, 07:47 PM
FROM THE FACEBOOK

நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரின் , சமீபத்திய, " தங்கப்பதக்கம் " தமிழ் திரைப்படம் தொடர்புடைய ஒரு கருத்தினை கண்டபோது, சுவைமிகுந்த விறுவிறுப்பு நிறைந்த - அந்த திரைப்படத்தினை மீண்டும் காணும் ஆவல் கொண்டு...கண்டு ரசித்தேன்... ரத்தமும் சதையுமாக ஒரு காவல் துறையின் வீரமிக்க, கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடிகர்திலகம் வாழ்ந்த ஒரு அற்புதமான திரைப்படத்தினை பார்த்து ரசித்து சுவைத்தேன், படத்தின் காட்சிகளின் சிறப்பினில் என்னை மறந்தேன்...என்பதே உண்மை.

இன்றைய காவல்துறையினரை உயர்வு படுத்தி.. கதையின் நாயகனை கடமை வீரனாக உயர்வு படுத்தி.. நாயகனை பிரம்மாண்டப்படுத்தும், காவல் துறையினரை வீரமிக்கவர்களாக...துணிவுடைய சிங்கங்களாக உருவகப்படுத்தும்... சமீப காலப் படங்களான, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மூன்று முகம், காக்கி சட்டை, சாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு.. சிங்கம் 1 -2 -3 போன்ற... படங்களுக்கு அடித்தளமிட்ட,
அந்த காவியத்தினை ஆம்..." தங்கப்பதக்கம் " எனும் காவல்துறையினரின் பெருமையினை 1974 - ஆம் வருடத்திலேயே உயர்த்திப்பிடித்த நடிகர்திலகத்தின்..ஒப்பற்ற காவியங்களில் ஒன்றான... சிறந்த படத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கி இருக்கவேண்டிய...ஒரு திரைப்படமான... அந்த படத்தினை காணும்போது மெய்சிலிர்த்தது.
அகமகிழ்ந்தேன்...கதையின் போக்கினில் கரைந்து போனேன்...

இப்படியும் இந்த கதாபாத்திரத்தினை மனதுக்குள் வடிவமைத்து கதையினை உள்வாங்கி...நடிப்பினை வெளிப்படுத்த இயலும் எனும் கலைக்குரிசிலின் திறம் கண்டேன்.. ஆஹா... என்ன ஒரு அருமையான நடிகர் நடிகையரின் கூட்டணி...இதனை நடிப்பு என்று கூறவே இயலாதே.. கதாபாத்திரங்கள் அத்துணை பேரும் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருந்தனர்.

கடமையினை தனது உயிராக கருதும் ஒரு காவல் துறை அதிகாரி, அன்பான மனைவி, அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை..
குடும்பத்தினர் மீது மட்டற்ற பாசம் கொண்டிருந்தாலும்... எந்த நிலையிலும் தனது கடமையினை விட்டு கொடுக்காத அந்த இரும்பு மனிதருக்கு வாய்த்த மகனோ...ஒரு திருடனாக, மாறி எதிரே நின்று சவால் விட...கடமையா, குடும்பமா, மகன் என்ற பாசமா ? என்ற கேள்விக்கான விடையே இந்த திரைப்படம்.
சிறுவயதில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை அப்பா கண்டிக்க, கோபமுற்ற மகன் வீட்டில் பணத்தினை திருடிக்கொண்டு ஓடி மும்பை சென்று அங்கே ஒரு திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறுவர் சீர்திருத்த சிறையினில் அடைபட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகியும் சிறையில் பழக்கமான நண்பர்கள் துணையுடன் மாபெரும் கொள்ளை செயல்களை நடத்தி தந்தைக்கே சவால் விடும், சவடால் காட்டும் அற்புதமான பாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தினில் ஸ்ரீகாந்துக்கு இந்தப்படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்...மறக்க இயலாத ஒரு கதாபாத்திரம்... நடிகர் திலகம் எனும் இமயத்தினை தைரியமாக எதிர்கொண்டு...வித்தியாசமான முறையில் தனது பங்களிப்பினை சிறப்பாகவே செய்துள்ளார்...

பாசத்துக்குரிய ஒரே மகனான ஸ்ரீகாந்துக்கு பரிந்து பேசுவதா...நியாயத்துக்கு நேர்மைக்கும் காவலனாக இருக்கும் பிரியத்துக்குரிய கண்ணின் மணியான கணவனுக்கு துணையாக நிற்பதா என்று...பாசப்போராட்டத்தில் வென்று காட்டியுள்ளார் கலையரசி K.R. விஜயா அவர்கள்... அவரின் நடிப்பும் கதறும் கதறலும்...நம்மை கலங்க வைக்கிறது...
இந்தப்படத்துக்கான வெற்றிக்கு கதை வசனம் மிகப்பெரும் பலம் என்றே கூற வேண்டும். காட்சிக்கு காட்சி...கைத்தட்டல்களை பெற்றுத்தரும் வகையிலும் நடிகை நடிகையர்களுக்கு பெயர் வாங்கி தரும் வகையிலும் ரசிகர்களின் மனதில் வேல் போல பாயும் வண்ணம் கூரான வசனங்கள்.. இன்றைய இயக்குனர் மகேந்திரன் அந்த காலக் கட்டத்தினில் வசனகர்த்தா... கதைக்கேற்ப பொருத்தமான வசனங்கள் படத்தின் விறுவிறுப்பினில் முக்கிய பங்கேற்கும் வண்ணம் அமைத்துள்ளார்.

படத்தின் ஆரம்பத்திலேயே லேட்டாக வீட்டுக்கு வரும் சௌத்ரியை, கே.ர்.விஜயா. ஏன் லேட்டு என்று உரிமையுடன் கேட்டு, போலீஸ்காரன்.. ன்னா ஆயிரம் வேலை இருக்கும் வீட்டுக்கு சரியான நேரத்தில் வரமுடியுமா...என்று வெடிக்கும் கணேசனை,
ஷூ...இது..போலீஸ் ஸ்டேஷனும் இல்லை.. நீங்க இப்போ இன்ஸ்பெக்டர்...ம் இல்லே ...ஒழுங்கா..கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க... மொதல்ல யூனிபார்மை கழட்டிட்டு வாங்க..என்று அதட்டி...விட்டு, ...
மீண்டும் கே.ஆர். விஜயா...கோபமாக பேசுவதும்... யூனிபார்மை கழட்டியதும், சௌத்திரி, ஒரு கொலைகாரனை பிடிச்சேன்...அவன்கிட்டேர்ந்து ஸ்டேட்மென்ட் வாங்கறதிலே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்று... சாந்தமாக பதிலளிப்பதும்...அப்படியே...அந்த காட்சி, இருவருக்குமான கிண்டலுடன் கூடிய காமெடியாக மாறி, பிறகு பாசத்துடன் கூடிய உருக்கமான காட்சியாக மாறுவதுவும் ரசமான காட்சி.

அதைப்போல வேறொரு காட்சியில் ஜெகனுக்கு முதலிரவுக்கு அலங்காரங்கள் அனைத்தையும் செய்து விட்டு...பார்த்தால்..அவர்கள் உங்கள் அறையில் படுத்து தூங்கி விட்டார்களே...என்ற இடத்தினில் உள்ள ஜனரஞ்சகமான காட்சிகள்..மறுநாள் காலையில்... முகத்தில் குங்குமத்துடன் சிவாஜி படுக்கையில் இருக்க காபி கொண்டு வரும் பிரமிளா...பார்த்து சிரித்துவிட்டு ஓட...K.R. விஜயாவிடம்...என்னது இது...என்று விபரம் கேட்டுவிட்டு...ஐயோ..கர்மம்..கர்மம் மானமே போச்சு... எவ்வளவு இயல்பான காட்சிகள்...

கணவன் மனைவியாக நடிகர் திலகம் மற்றும் விஜயாவின் நடிப்பு வெகு அன்யோன்யம், மிக இயல்பாக நடிப்பு என்று கூற இயலாதவண்ணம் அற்புதமான பெர்பார்மன்ஸ் .
வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் லட்டு மாதிரியான கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு கலக்கும் மேஜர் சுந்தர ராஜன், V.K. ராமசாமி போன்றோரின் கதாபாத்திரங்களும் அவர்களால் மிகவும் அருமையான முறையில் கையாளப்பட்டு இருக்கிறது..

நான்கே பாடல்கள் ஆனால் நான்கும் நான்கு முத்துக்கள் என்றே கூறவேண்டும். இசையமைப்பும், பாடல்களும் பாடல் வரிகளும், படமாக்கிய விதமும், காட்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்ற நடிகர் திலகத்தின் நேர்த்தியான அங்க அசைவுகளும், ஆடும் ஸ்டைலும், முக பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது... பாடல் காட்சிகள் படத்தின் வேகத்துக்கு தடை என்று கூற இயலாது...காட்சியோடு அத்துணை நேர்த்தியாக பொருந்தி உள்ளன...அதுவும் மெல்லிசை மன்னர் புகுந்து விளையாடி உள்ளார்..காவிய வரிகளை தந்து பாடல்களை நம் மனதில் பதிய காரணமானவர் காவிய கவிஞர்... கண்ணதாசன் அவர்கள். பாடல் வரிகளுக்கு அவ்வளவு அழகாக உயிர்கொடுக்கும் பணியினை செய்தவர் பாடகர் திலகம்...T.M . சௌந்தர ராஜன் அவர்கள்.. அவருடன் துணைக்கு தேன் குரலரசி P.சுசீலா அவர்கள்.. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு...பாடலுக்கு திருவாளர் சாய்பாபா அவர்களும் கானக்குயில் வாணி ஜெயராம் அவர்களும் குரல் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடல் காட்சி...

இந்தப்பாடல் ஆரம்பிக்கும் சமயம்...நடிகர் திலகம்..வெகு இயல்பாக ஜோக்கடித்துக்கொண்டு..மிக ஜாலியாக மனைவியை கலாய்த்துக்கொண்டு இருப்பது போல காட்சி அமைந்திருக்கும்...பாடலின் முடிவில் வரப்போகும் அதிர்வினை மனதில் இருத்தியே...இப்படி அமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

ஒரு தலைசிறந்த நடிகரிடம்...எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து அவரின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்கள்...ஒவ்வொரு காட்சியும் அவரின் ஒவ்வொரு பரிமாணத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளார்.

ஒரு பெரிய பொறுப்பில் உள்ள காவல் துறை அதிகாரியின் அந்த கம்பீரமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட கலவையாக காட்சியளித்து பாடலுக்கு நடனமாடுவதில் கூட...அந்த கண்ணியம் குறையாது...தனக்கே உரித்தான ஸ்டைலுடன் ஆடுவது அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. அவர் பாட கேட்கும்போது... K.R..விஜயாவின் அந்த வெட்கத்துடன் கூடிய நாணம்...ஆகா...அற்புதம்... காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக வரிகளை போட்டிருக்கிறார் பாருங்கள்...

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் அன்புமணிவழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க எங்கள் வீடு கோகுலம் ;

என் மகன் தான் கண்ணனாம் தந்தை வாசுதவனோ
தங்கமான மன்னனாம்

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம கண்ணன் பிறந்தான்
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்

வெள்ளம் போல ஓடுவான் வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான் கண்ணன் என்னைத் தேடுவான்

மாயம் செய்யும் மகன் வந்தது ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப்பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன் இந்தப்பிள்ளை
நலம் கொள்ளவும் என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன் (நல்ல)

கோலம் கொண்ட பாலனே கோவில் கொண்ட தெய்வமாம்
தாயின் பிள்ளைப் பாசமே தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று எதைச் சொல்வது பக்தி என்று எதைச்சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் எங்கும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா (நல்ல)

படத்தினில் என்னை கவர்ந்த இடங்கள் பல உண்டு...
மிகப்பெரும் ரவுடியாக ஆரம்பத்தினில் வரும் மேஜரை...பண்ணையாராக/ மைனராக வரும் மனோகர் ஆகியோரை சண்டையிட்டு கைது செய்யும் ஸ்டைல் , அவர்களை எதிர்கொள்ளும் விதம்...கிண்டலான அந்த பேச்சு... போகிற மாட்டை போக்கில் விட்டு பிடிப்பது போல மனோஹரை வளைத்து கைது செய்து கொண்டுசெல்லும் லாவகம்..

அந்தந்த இடங்களிலும் பொருத்தமான வசனங்கள்... ஜெகனை கைது செய்து அழைத்து செல்லும் காட்சியில்
அப்பாவும் மகனும் சவால் விட்டுக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி...
ஜெயிலில் இருந்து திரும்ப வந்ததும் ஜெகன் தனி வீடு பார்த்துக்கொண்டு போக முயலும் அந்த காட்சிகள்...

வேறொரு காட்சியினில் இரும்பு மனிதராக கண்டிப்பு, கறார், பேர்வழியாக இருக்கும் சௌத்ரி...தீபாவளியன்று...வெடி வெடிக்க அஞ்சுவதும்...மனைவி வெடிக்கு நெருப்பு வைக்க போகும்போது...இவர்...பயந்து...பதறுவதும்...ரசமா ன காட்சிகள்.

குடும்ப நண்பர் ராமசாமியின் அலுவலகத்துக்கு சென்று...அவரறியாமல் வேலைக்காரனிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு வைத்துவிட்டு...அப்போதும் அவர் கவனிக்காமல் பின்புறம் வந்து தோளை பிடித்து விட கூற...இவரும் வந்து தோளை பிடித்து விட்டு...க்கொண்டு... ஷூ காலால் ஓங்கி ஒரு உதை விட்டுக்கொண்டே... உரிமையுடன் பேசும் பாங்கு... வீகேயாருடன் உள்ள காட்சிகள் அனைத்துமே...இருவரின் இயல்பான உரிமையுடன் கூடிய நண்பர்களாக நடிக்கும் நடிப்பும் காண்பதற்கு வெகு அழகு...

சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த துயரத்துடன் கூடிய முகபாவமும் நடிப்பும், மனைவியிடம் காட்டும் அன்யோன்யமும்...பாசமும் நெஞ்சை அள்ளும்... காட்சியினை படமாக்கிய விதமும், பாடலினை இவர் உச்சரிக்கும் நேர்த்தியும்...வெகு.. அருமை.. மனிதர் எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான்...கம்பீரம்தான்.
சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குப்போகும் (சுமை)

சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிலைபோலச் சாய்ந்தால் கலை எங்கு போகும்
குலமங்கை கூந்தல் கலைந்தாடலாமா
மலர்சூடு கண்ணே மணவாளன் முன்னே (சுமை)

மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சம் நிதம் காக்கும் உன்னை

இந்தப்பாடல் காட்சி காண..க்.. காண திரும்ப பார்க்கத்தூண்டும் நடிப்பு...அற்புதமான முகபாவம்...தனது பிரியம், நேசம், காதலுக்குரிய துணைவி... எழ இயலாமல் அமர்ந்த சூழலில் அவரை வைத்து வீல்சேரில் தள்ளிக்கொண்டே சோகத்தினை நெஞ்சிலே சுமந்து...உணர்வுடன் பாடும் காட்சி காணும் அனைவரையும் கலங்க வைக்கும்.. டிஎம்மெஸ்ஸின் குரல் மிகப்பெரும் பிளஸ் பாயிண்ட் இந்த காட்சிக்கு...

ஜெகன் வேலை பார்க்கும் வங்கியில் பணம் திருடு போய்விட்ட காட்சியில் உள்ள வசனம்...நச் ...ரகம்...
மிஸ்டர் ஜெகன்நாத், விசாரணை முடியற வரைக்கும் எங்கேயும் வெளியூர் போயிட மாட்டீங்களே...
எங்க அப்பாவும் அம்மாவும் எம்மேல ரொம்ப பிரியம் உள்ளவங்க சார்...வெளியூருக்கு எங்கேயும் என்னை தனியா அனுப்ப மாட்டாங்க சார்.
ஆனா...வேலூர் போணும்னா...தனியாத்தான் போகணும்....

மேஜர் சுந்தர் ராஜனுக்கு அற்புதமான வாய்ப்புகள்.
நடிகர் திலகத்தின் படங்களில் கிடைக்கும் இதிலும் நடிப்பதற்கு அற்புதமான வாய்ப்புள்ள இடங்கள் பல. குறிப்பாக தன் மகள், சவுத்ரி வீட்டு மருமகளாகி உள்ள சூழலில் அவர் வீட்டுக்கு வந்து பேசும் காட்சிகள்...மருமகனுக்கு அறிவுரை கூறும் இடம், மருமகனை காப்பாற்ற தான் குற்றத்தினை ஏற்றுக்கொண்டு சரணடையும் இடம்.. என்று அழகான வாய்ப்புகள்...அத்தனை இடங்களிலும் வெளுத்துக்கட்டுகிறார்.
சோ அவர்களின் காமெடி படத்துக்கு மிகப்பெரும் பலமே...படம் முழுவதுமே..அன்றைய அரசியலை தைரியமாக விளாசி இருக்கிறார்.

மீட்டிங்கில்...
அமெரிக்காவையும்..ஜெர்மனியையும் எச்சரிக்கிறேன்...என்னிடம் விளையாடாதீர்கள்...
நான் மனது வைத்தால் உங்கள் நாடுகளில் பூகம்பம் வெடிக்கும்...

மீட்டிங்கில்...ஒரு கிழவியை மேடைக்கு கொண்டுவந்து தாய்க்குலமே...தாய்க்குலமே.. என்று கட்டிப்பிடித்து கொண்டு போட்டோ எடுத்து முடித்ததும்...டேய்...கிழவியை நவுத்துடா...இங்கே நின்னுட்டு கழுத்தறுக்குது...

கையூட்டு வாங்கும் அரசியல் வாதியாகவும், நேர்மையான கான்ஸ்டபிள் ஆகவும் இரட்டை வேடத்தில் பின்னி இருக்கிறார். அன்றைய காலகட்டத்தினில் எம்ஜியார், கலைஞர் இருவரையும் அரசியல் ரீதியாக அவர்களின் அணுகுமுறைகளை மிக தைரியமாக வாரி விட்டுள்ளார். அவர் பகுதிக்கான வசனங்கள் நிச்சயம் அவருடையதுதான் போலும், அவர் வருகின்ற காட்சிகள் அத்தனையும் சர வெடிதான். உதவிக்கு சுருளி ராஜன் வேறு.
சுருளி, அண்ணே..நம்பாளு ஒருத்தரு... எதிர்க்கட்சி நண்பரோட...கொஞ்சம்..தகராறு... தம்பி..கொஞ்சம் மில்லில இருந்துருக்காரு...
சண்டைலே... கத்தியால வயித்துல கிழிச்சுருப்பாரு..போல இருக்கு
குடல் வெளியே வந்துருச்சாம்..
நியாயமா பாத்தா..வெளியே வந்த கொடலைதான் ஜெயிலுக்குள்ளே போட்டிருக்கணும்...
எங்காளு ஒருத்தர் காரை ஏத்தி ஒரு குழந்தைய.. கொன்னுட்டாராம்...
கொழந்தை ஸ்பாட்டுலே...யே செத்து போச்சாம்...
இதைப்போய் ஒரு பெரிய கேசா..எடுத்துட்டு..யாரோ கான்ஸ்டபிள் சுந்தரமாமே எங்க ஆளை பிடிச்சு உள்ளே போட்டுட்டாராம்..
அப்பாயிசம்னா.. என்னன்னு தெரியுமா...ஒனக்கு...

கொழந்தை இருக்கா..செத்து போச்சே...
சாகலே...சாகலே...இதோ பாருங்க..செத்து போன குழந்தையோட தகப்பன்
தன்னோட கொழந்தை சாகலைன்னு எழுதிக்கொடுத்த லெட்டர்...
எங்.. காள .. வெளியே விட்டுட்டீங்கன்னா..எல்லாருக்கும் நல்லது...
என்ன சார் வெளயாடுறீங்களா...?
காரியம் ஆனா நாங்க விளையாட மாட்டோம்..காரியம் ஆகலைன்னாதான்..விளையாடுவோம்...
அட செத்துப்போன குழந்தையாவது...கண் முழிச்சு இதுதான் எங்கப்பான்னு சொல்லுதா..அதுவும் கெடயாது... நீங்க ஒரு நியாயத்துக்கும் கட்டுப்படாம போனா எப்புடி...

அப்பாயிசம்னா..தெரியுமா...ஒனக்கு...
என்ன சார் ஒரே அடியா குழப்பறீங்க...
அதுதான்...அப்பாயிசம்...

தாய்க்குலமே...என்ன அப்புடி கேட்டுட்டீங்க..ஒருவேளை ..அவங்கப்பா..நான் திரட்டுற நிதிக்கு அவரால முடிஞ்ச ஏதாவது... குடுத்தாருன்னா....
இந்த நாட்டுலே..ஆயிரக்கணக்கான பேரு நாட்லே கிளிஜோசியம் பாக்குறாங்க...கிளி இல்லாம கஷ்டப்படறாங்க...அவர்களுக்கெல்லாம் கிளி வாங்கி குடுக்கப்போறேன்...
ரோட்ல குப்பை பொறுக்கறவங்க...பல பேரு கோணி இல்லாம கஷ்டப்படறாங்க...அதுக்காக கோணி வாங்கி குடுக்கப்போறேன்...
கிளி மறுவாழ்வு திட்டம்...கோணி வழங்கு திட்டம்...
பணத்தை சிக்கனமாதான் செலவு செய்வேன்...ஒரே ஒரு லட்சம் கிளி வாங்குவேன்...
அந்த கிளியெல்லாம் குட்டி போட்டதும்..
என்னது குட்டியா...
ஆமாம்...எல்லாருக்கும் கிளிக்குட்டி குடுப்பேன்... ஒரு ரூபாய்க்கு மூணு கிளி...

சோ அவர்கள் நடித்த படங்களில் இதுவும் அவரின் பெயர் சொல்லக்கூடிய ஒரு படமே... அதுவும் குறிப்பாக அந்த கால கட்டத்தில், எம்ஜியாரை இவ்வளவு தைரியமாக விமர்சித்தவர் சோ..வாகத்தான் இருக்கமுடியும்...அதுவும் கூறும்கருத்துகள் மறுக்கமுடியாத மாபெரும் உண்மையும் கூட.

ஜெகன் வேலை பார்க்கும் சிட்பன்ட் நிறுவனத்தில் கொள்ளை போன இரண்டு லட்ச ரூபாயினை ஜெகன்தான் திருடி இருக்க வேண்டும் என்று போடும் நாடகம்...அதன் தொடர்ச்சியாக பணத்தினை வெளியாக்கும் யுக்தி...காட்சிகள் ருசிகரமானவை...

ஜெகன் கைது நிகழ்வுக்கு பிறகு..அடுத்த காட்சியில்...
லட்சுமி...சாப்டாச்சா...
ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
விமலா...சாப்பிடலியாம்மா....
(கண்ணீருடன்)...ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
ஆல்ரைட்.. ஆல்ரைட்..டயமாச்சு சாப்பிட வாங்க...
(அப்போதும் யாரும் வரவில்லை..)

இப்போ வரப்போறீங்களா இல்லையா.. I... Say....come on...
என்ற ஒரு அதட்டலில் இருவரும் ஓடிவர.. அவர்களுக்கு நடிகர் திலகம் உணவு பரிமாறிக்கொண்டே... சாப்பிடு..சாப்பிடு... என்று.. அவர்களை சாப்பிட வைத்து....
விமலா..நான் என்னமா தப்பு செஞ்சேன்...அப்படி ஏதாவது செஞ்சிருந்தா சொல்லு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...
லஷ்மி..ஒரு மாணவன் தப்பு பண்ணுனா...ஆசிரியர் தண்டிக்கறது இல்லையா..பிள்ளைங்க தப்பு பண்ணுனா..பெற்றோர்கள் தண்டிக்கறது இல்லையா..? குற்றம் செய்யறவங்க யாரா...இருந்தாலும்...தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்...நாளைக்கு நானே ஒரு தப்பு பண்ணுனா...கூட S.P..ங்கறதால என்ன விட்டுடவா..போறாங்க.... ..நெவர்...
கைலே விலங்கு போட்டு ரோட்ல அழைச்சிட்டுதான் போவாங்க...

நான் இதுவரைக்கும் எவ்வளவோ..குற்றவாளிகளை கைது பண்ணிருக்கேன்...நீ சந்தோஷப்பட்டிருக்கே..
ஆனா இன்னிக்கு நம்ப வீட்டுக்குள்ளையே ஒரு குற்றவாளியை கைது பண்ணியிருக்கேன்... அதுல ஒங்களுக்கு வருத்தம்...
ஏன்னா.. குற்றவாளி ஒனக்கு மகன்...
அவளுக்கு கணவன்...
ஆனா ஒன்னு மாத்திரம்...எல்லாரும் மறந்துட்டீங்க... அவன்... எனக்கும் மகன்...
பெண்கள்.. நீங்கல்லாம்...தாங்க முடியாம அழுதுடறீங்க...
ஆனா ...நான்... வெளியில் சொல்ல முடியாம... (கைகளால் நெஞ்சிலே தட்டிக்கொண்டு...கண்களில் நீர் நிறைய...) கலங்குகின்ற காட்சி...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பாடல் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும், நடிப்பும், பாடல் வரிகளும், பாடிய விதமும்...அற்புதம்...நெஞ்சை பிழியும் அற்புதமான ஒரு காட்சி. பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா... இதற்கு மேலும் இந்த காட்சிக்கு இதைவிட சிறப்பாக வரிகள் போட இயலுமா..என்று சவால் விட்டிருக்கிறார் கவியரசு..

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.

படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் ஒன்று...அந்த என்கொயரி காட்சி...மிஸ்டர் சவுத்ரி...ஹாஸ்ப்பிட்டல்லேர்ந்து கைதி தப்பிச்சு போக நீங்களும் ஒரு காரணம் ன்னு கம்பளைண்ட் வருதே....என்று துவங்கும்...அந்த காட்சியில் துவங்கும் வேகம்...
மிஸ்டர் சவுத்ரி...சாரி...என்கொய்ரி ன்ற முறைல...உங்களையே நான் கேள்வி கேட்க வேண்டியதா போச்சு..
நோ...சார்...நோ...சார் ஒங்க சீட்ல இருந்தா நானும் அப்புடிதான் சார் கேட்பேன்...
(டெலிபோன் வர)
ஓ..ரியலி ...மிஸ்டர் சவுத்ரி..ஒரு குட் நியூஸ்...அந்த கைதியை...பிடிச்சுட்டாங்களாம்..
ஓ Is It... வெரி குட்...சார்..
தப்பி ஓட முயற்சி பண்ணுனானாம்..ஷூட் பண்ணிட்டாங்களாம்...
ஓ...பைன் சார்...
(அடுத்து ஒரு போன்...வர) ஓ... அப்புடியா...
மிஸ்டர்..சவுத்ரி..
(அதே விரைப்புடன்) எஸ் சார்...
எ.. பேட் நியூஸ் பார் யூ...ஒங்க மனைவி..இறந்துட்டாங்களாம்....
இங்கே துவங்கும்...ஒரு அற்புத நடிப்பின் துவக்கம்...
உணர்வுகள் உடலை தடுமாற செய்ய..தடுமாற்றத்துடன்...சுதாரித்துக்கொண்டு ..
நான் வீட்டுக்கு போலாமா சார்...

இறுகிய முகத்துடன்...வீட்டுக்கு வந்து...படியேறி...வந்து...மனைவியை...சடலமாக காணும் பொழுதினில்.... (மருமகள் விமலா..கதறிக்கொண்டே காலில் விழுகிறார்...)
லட்சுமி நான் வந்து ரொம்ப நேரமாச்சு,
ஏன் என் கூட பேச மாட்டேங்குற...
நான் யூனி பார்ம்லே இருக்குறப்போ பேச பயப்படுவே....
இதோ பார் நான் யூனிபாம் இல்லாம.. வந்துருக்கேன்...
பேச மாட்டியா...பேசும்மா..
நான் நேரம் கழிச்சு வருவேன் நீ எனக்காக தூங்கா ம காத்துக்கிட்டு இருப்பே...
இப்போ நான் நேரத்தோட வந்திருக்கேன்.
இப்போ நீ போயிட்டியே.... ...?
நான் என்னம்மா தப்பு பண்ணுனேன்... ...?
ஏம்மா என்னை விட்டுட்டு போயிட்டே...?
எனக்கு யாருமே இல்லியேம்மா...
என்ன தனிமரமா ஆக்கிட்டு போயிட்டியேம்மா....
என்னால தாங்க முடியலேம்மா... என்று கூறிக் கொண்டே... வேரறுந்த மரமாக வீழ்ந்து கதறும் காட்சி...மைகாட்...மறக்கவே இயலாது...அந்த நடிப்பினை வழங்க இனி யாரால் இயலும்....
நடிகர் திலகத்தின் படங்களில் நிச்சயம் முத்தாரமாக விளங்கும் படங்களில் இதுவும் ஒன்று...மீண்டும், இந்தப்படத்தினை மறு வெளியீடு செய்யவேண்டும்...நிச்சயமாக இன்றைய தலைமுறையினரை கூட கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Harrietlgy
19th March 2017, 08:26 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 168– சுதாங்கன்.

http://www.dinamalarnellai.com/site/news_folder/14874850201489830205558009639kulama%20gunama.jpg


இரு துருவம்’ இந்த படம் இந்தியிலிருந்து வாங்கி எடுக்கப்பட்ட படம். `கங்கா- ஜமுனா’ என்கிற பெயரில் இந்தியில் இந்த படத்தை தயாரித்து நடித்தார் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார்.
இந்த படத்தின் கதையையும் அவரே எழுதியிருந்தார். அந்தக் கதையை வாங்கி நடிகர் பி.எஸ். வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து அப்படி வந்த படம் தான் `இரு துருவம்.’ இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி. சந்தர்ப்பவசத்தால் சிவாஜி கொள்ளைக்காரனாக மாறுவதாக கதை. இதில் கொள்ளைக்காரன் அண்ணன் சிவாஜியை அவரது தம்பி முத்துராமனே பிடிப்பதாக கதை அமைந்திருந்தது.
`தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே! உன்னை திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே’ என்கிற பாடல் மட்டும் பிரபலம். படம் சுமாராகத்தான் போனது. சென்னை வெலிங்டன் தியேட்டரில் வெளியான படம் இது. `பிராப்தம்’ தெலுங்கில் சாவித்திரியும்- நாகேஸ்வரராவும் ‘மூகமனசுலு’ (‘ஊமை உள்ளங்கள்’) என்ற படத்தில் நடித்தார்கள். இந்த படம் தெலுங்கில் மகத்தான வெற்றி பெற்று, வெள்ளி விழா கொண்டாடியது.
பூர்வஜென்மத்தைப் பற்றிய கதை. அதை தமிழில் தயாரிக்க விரும்பினார் சாவித்திரி. நாகேஸ்வர ராவ் நடித்த வேடத்திற்கு சிவாஜி ஒப்பந்தமானார். ஆரூர்தாஸ் வசனமெழுதினார். கண்ணதாசன் பாடல்கள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். படத்தை சாவித்திரியே டைரக்ட் செய்தார். நடிப்பில் தன்னிகரற்று திகழ்ந்த சாவித்திரியின் இந்தப் படம் தெலுங்கில் 25 வாரம் ஓடிய படத்தின் தமிழ் பதிப்பு – அதிர்ச்சி தரும் தோல்வியைத் தழுவியது.
`சவாலே சமாளி’ – இந்த படமும் ஒரு வகையில் `பட்டிக்காடா பட்டணமா’ படத்தின் சாயலில் இருக்கும். பணக்கார பெண்ணுக்கும், ஏழைக்கும் நடக்கும் பொருந்தாத திருமணம் சம்பந்தமான கதை. இந்த படத்திற்கு நிதி உதவி செய்து தயாரித்து கொடுத்தவர் அப்போது ஜெமினி அதிபராக இருந்த எஸ். பாலசுப்ரமணியன். படத்தை தயாரித்து எழுதி இயக்கியவர், மல்லியம் ராஜகோபால். சிவாஜியும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருந்தார்கள். படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன். பாடல்கள் எல்லாமே அருமை. படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் சுசீலா பாடிய `சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. ‘சுமதி என் சுந்தரி’, இது சிவாஜி, ஜெயலலிதா ஜோடியாக நடித்த மற்றுமொரு வெற்றிப்படம். இந்த படத்தை சி. வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். படத்தின் கதை, வசனத்தை சித்ராலயா கோபு எழுதியிருந்தார். இதில் சிவாஜிக்கு அமைந்த வித்யாசமான கதை. ஜெயலலிதாவிற்கும் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இது.
இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப காட்சியிலே ஒரு பாடல் வரும். அந்தப் பாடலில் ஜெயலலிதாவிற்கு ஜோடியாக யாரோ ஒருவர் நடித்திருப்பார். ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி! பாடலின் முடிவில்தான் கதைப்படி ஜெயலலிதா ஒரு நடிகை. அந்த காட்சிதான் அப்படி படமாக்கப் பட்டிருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான புடவைகளை இயக்குநரிடம் கலந்தாலோசித்து தானே காட்சிக்கு தகுந்த மாதிரி புடவைகளை ஜெயலலிதாவே தேர்ந்தெடுத்தாராம்.
இதை இயக்குனர் சி.வி.ராஜேந்திரனே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். இந்த படத்தில் `பொட்டு வைத்த முகமோ’ பாட்டில் சிவாஜி ஒரு அரைக்கை சட்டை அணிந்து வருவார். அப்போது இருந்த பின்னி நிறுவனம் சிவாஜிக்காக பிரத்யேகமாக தயாரித்த டிசைன் அந்த சட்டை.
சிவாஜி அதை படத்தில் அணிந்த அந்த காலத்தில் அடுத்த வாரமே தெருவில் பல பேர் அதே மாதிரி சட்டையை போட்டுக்கொண்டு போனார்கள். சிவாஜிக்காக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்த முதல் படம் இது!
சென்னை சித்ரா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய படம் இது.
‘தேனும் பாலும்’. சிவாஜிக்கு இரு மனைவிகள் கொண்ட படம். படம் சுமாராக போனாலும் பாடல்கள் எல்லாமே அருமை. இரு மனைவிகளாக சரோஜாதேவியும், பத்மினியும் நடித்திருந்தார்கள். ‘இரு மலர்’களில் இருவரை சிவாஜி விரும்புவதாக அமைந்த கதையை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், இதில் இரு தாரம் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை. சிவாஜிக்கு அமைந்த இன்னொரு வித்தியாசமான படம் ‘மூன்று தெய்வங்கள்’. படத்தை தாதா மிராஸி இயக்கியிருந்தார். இதில் சிவாஜி, முத்துராமன், நாகேஷ் மூவருக்கும் மேக்கப் கிடையாது. ஜெயிலிலிருந்து தப்பி வந்த மூன்று கைதிகள் ஒரு நடுத்தர குடும்பத்தில் வந்து அடைக்கலமாவதுதான் கதை.
அந்தக் கைதிகளே பிறகு அந்த குடும்பத்திற்கு தெய்வங்களானார்கள் என்பதே கதையின் அடிப்படை. பாடல்களும், திரைக்கதையும் அருமையாக அமைந்த ஒரு நல்ல வெற்றிப்படம் இது. ‘தங்கைக்காக’ சுமாராக போன படம்.
‘அருணோதயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். ‘குலமா குணமா’! ‘பணமா பாசமா’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் தலைப்பு வைத்து படம் எடுக்க ஆரம்பித்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். அப்படி அவர் எடுத்த படங்கள் ‘பணமா பாசமா’, ‘குலமா குணமா’, ‘உயிரா மானமா’ போன்ற படங்கள்.
‘குலமா குணமா’ படம் ஒரு படத்தின் திரைக்கதையை அந்தக் கதையின் மையக்கரு கெடாமல் எப்படி கொண்டு போகலாம், கதாபாத்திரத்தின் குணாம்சங்களுக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் வசனங்கள் எழுதலாம், கதாபாத்திரங்களை அந்த பாத்திரத்தில் எப்படியெல்லாம் அப்படியே அந்த பாத்திரமாகவே வாழ வைக்கலாம் என்பவையெல்லாம் திரையுலகத்திற்கே இந்த படம் ஓர் உதாரணம் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு நட்சத்திரமும், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். சிவாஜி, பத்மினி, ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், நம்பியார் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உண்டு. தர்க்கரீதியான வசனங்கள். அதில் ஆழமான வாழ்க்கை கருத்துக்கள் என்று புகுந்து விளையாடியிருப்பார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். திரையுலகத்தில் பாடப்படாத ஒரு கதாநாயகன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இவரை நன்கு புரிந்து கொண்டவர் கமல்ஹாசன்தான். திரைக்கதையில் இவருக்கு இணை இவர்தான்.
தான் எடுத்துக் கொண்ட கதையை திசை மாறாமல் கொண்டு செல்லுவார். அதில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் பல இருக்கும். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் கே.ஆர். விஜயா. இவரது திரைக்கதைக்கு ஏற்ற நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவரது பெரும்பாலான படங்களில் ரங்காராவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கும். அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்குவார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

sivaa
20th March 2017, 07:21 AM
நான் ரசித்த சிவாஜி - 1
இப்படியாகத்தானே நடிகர் ரெட்லோட்டஸிடமிருந்து வாங்கிய தங்கப்ப தக்கம் நாடகத்தை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பாகப் பலமுறை மேடையேற்றி பின்னர் திரைப்படமாக்கினார் நடிகர்திலகம். படம் செம ஹிட்டடித்தது. என் மாணவப் பருவத்தில் பார்த்தபோது படத்தின் கதையை, நகைச்சுவையை, விறுவிறுப்பை மட்டுமே ரசித்தேன். பின்னாளில் பார்க்கும் போதுதான் சிவாஜி என்கிற மகாநடிகளின் ஆளுமை படமெங்கும் வியாபித்திருப்பதைப் புரிந்து அவரை ரசிக்க முடிந்தது.
துவக்கத்தில் இளவயது இன்ஸ்பெக்டராக அரைடிராயர் ...போட்ட போலீஸ்காரராக வரும்போது வேலையில் கண்டிப்பும், மனைவியிடம் பாசம் கலந்த கலகலப்பும், மகனிடம் பாசத்தை வெளிக்காட்டும் போதாகட்டும், பிறகு எஸ்.பியாக கம்பீரம், கண்டிப்பு ஆகிய போர்வைக்குள்ளே பாசத்தை ஒளித்து வைத்துள்ள மனிதராக நடிப்பதாகட்டும்... கலக்கியிருப்பார் மனுஷன். எந்தக் காட்சியைச் சொல்ல, எதை விட..? தன் மகன் திடீர்த் திருமணம் செய்து கொண்டு வந்ததைக் கண்டித்துவிட்டு, இரவு டைனிங்ஹாலில் (மற்றவர்களுக்குத் தெரியாமல்) மனைவியிடம் அவளைப் பற்றி பாசமாக விசாரிப்பார் பாருங்கள், செம்ம. அதே மகன் தனிக்குடித்தனம் போக வீடு பார்த்திருப்பதாகச் சொல்ல, அது எனக்குப் பிடிக்கலை என்பார். ஏன் என்று மகன் கேட்க, என் மகனைப் பிரிஞ்சு வாழற சக்தி எனக்கில்லைப்பா என்பதை (பீம்சிங் படங்களில் அவர் கதறி அழுவது போலெல்லாம் அழாமல்) ஒரு ஏக்கம் கலந்த தந்தையின் குரலில் கூறி, முகபாவத்திலேயே அதைக் காட்டிவிட்டுச் செல்வார் பாருங்கள்... க்ளாஸ்.
மனைவி இறந்து கிடக்க, யூனிபார்மைக் கழற்றி விட்டு வந்து குமுறலை அடக்கியபடி பேசிவிட்டு பின் அடக்க முடியாமல் வெடித்து அழுவதாகட்டும், அம்மா செத்ததுக்கு காரணமே நீங்கதான் என்று குற்றம் சாட்டி கொள்ளி போட வர மறுக்கும் மகனிடம் குமுறலோடு உணர்ச்சிகளைக் கொட்டுவதாகட்டும்... மிகை நடிப்பில்லாத வேற லெவல் சிவாஜி. க்ளைமாக்ஸ் சீன் நீங்கலாக படம் முழுக்க நான் நடிச்ச பர்பாமென்ஸில் இந்த எஸ்.பி.சௌத்ரிக்குத்தான் முதலிடம்.
இன்னொரு ரசனையான விஷயம், GOOD ONE FAMILY. UNIVERSITY பாட்டுக்கு அவர் போடுகிற ஆட்டம். காவல் அதிகாரியின் கம்பீரத்தை விட்டுக் குத்தாட்டமும் போட முடியாது, அதே சமயம் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிற நடனமும் வேண்டும். உடலைச் சிலிர்த்துக் கொண்டு தலையை ஆட்டுகிற குட்டி யானை மாதிரி (உடம்பு அளவைச் சொல்லலீங்க, அது பிற்கால சிவாஜி) அழகான அசைவுகளுடன் அவர் ஆடும் டான்ஸ் அத்தனை ரசனை இப்போ பாக்கறப்பவும். நீங்களும் மறுக்கா ஒரு வாட்டி பாருங்க இங்கே.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17353380_1298149543597028_5141552464349741096_n.jp g?oh=a649877f6071ef612a969d5902103f71&oe=59547F26

(from f b)

vasudevan31355
20th March 2017, 09:34 AM
//‘அருணோதயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார்.//

'செலுலாய்ட் சோழன்' சிவாஜி தொடர் 168– சுதாங்கன் தொடரில் 'அருணோதயம்' படத்திற்கு இசை வி.குமார் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். அப்படத்திற்கு இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மஹாதேவன் அவர்கள் அல்லவா?

KCSHEKAR
20th March 2017, 10:51 AM
5002 வது பதிவு
.
செந்தில்வேல் சார்,

தங்களது 5000 பதிவுகள் - புதிய மைல்கல் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

vasudevan31355
21st March 2017, 07:17 AM
டியர் செந்தில்.

எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் 5000 அற்புதப் பதிவுகள் என்ற மைல் கற்களைக் கடந்ததற்கு. உழைப்புக்கு முன் உதாரணம் உங்கள் அறிய பதிவுகள். வாழ்க வளமுடன்.

Russellxor
23rd March 2017, 06:51 PM
5000பதிவுகளுக்கு வாழ்த்திய
k.c சேகர் சார், வாசு சார் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Gopal.s
24th March 2017, 08:20 AM
ஒரு எழுத்தில் ஈரம்,எள்ளல்,ஆழம்,எளிமை,வீர்யம்,சமகால நடப்பு,பல்வேறு தளங்களில் இழுக்கும் ஒரு அமானுஷ்ய நுட்பம் இதனூடே மிளிரும் நகைச்சுவை சூழ்நிலையா ,அங்கதமா என்று பிரித்தறியாமல் எழுத்தில் பொதிந்து ,ஒரு உணர்வை ,இசையின் அதிர்வுகள் தரும் உள்மன இசைவை தந்து, நல்ல இலக்கியங்களின் திசையில் கை பிடித்து கூட்டி செல்லும் ஒரு நயமான நன்னுணர்வு.

இவையே அசோகமித்திரன். ஐந்து வயதிலிருந்து இலக்கியம் படிக்கும் கர்வத்தில் அறுதியிட்டு சொல்வேன். இவர்தான் இந்தியா கண்ட எழுத்தாளர்களிலேயே சிறந்தவர்.

நமது திராவிடத்தின் அசிங்கமான நுண்ணரசியல், ஜாதி சார்ந்த விருப்பு வெறுப்புகளை, அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளை நிறுவனமயப்படுத்தி, வெறுக்கும் வித்தையை மட்டும் கற்பித்து,பொய்களை சரித்திரமாக்கும் பணியில், கலையிலக்கியத்தை வாகனமாக்கி கொண்டதால்(கம்பனை கூட விட்டு வைக்கவில்லை இவர்கள்) ,சிவாஜி,அசோகமித்திரன் போன்றோருக்கு கிடைக்க வேண்டிய உயரங்கள் கிடைக்கவில்லை.

எனக்கு உண்மையில் மாமன் உறவே இல்லாத குறையை ,1980 இல் பரீக் ஷா நாடக குழுவில் இருந்த பரிச்சயமான பின் நேற்று வரை தீர்த்தவர் மாமா அசோகமித்திரன். என் திருமணம் முதல், என் மகன்கள் திருமணம் வரை அவர் இல்லாமல் நடந்ததேயில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் ,சமய சந்தர்ப்பம் இன்றி கதவை தட்டி அவர் இல்லம் செல்வேன்.

ஒரு மனிதன் இளமையை தக்க வைக்க இக்காலத்தில் பல வசதிகள் உண்டு. ஆனால் கண்ணீரின் அளவு உங்கள் வயதை குறித்து விடுமோ? சிறு வயதில் தேவைக்கதிகமாக தேவையற்றவற்றுக்கு சிந்தி விடுவதால்,வயதின் வளர்ச்சியால் கண்ணீரின் அளவு குறைந்து, முக்கிய தேவைகளுக்கு கூட பற்றாக்குறையில் வைத்து விடுமோ?

மாமா, சென்னை வந்தும் உங்களை பார்க்க முடியாவிட்டால் ,நான் வேறு எங்கு போக?

Harrietlgy
24th March 2017, 06:22 PM
Actor Vijayakumar interview in Tamil The Hindu.,

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து திரையுலகில் பயணித்து வருகிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தக் காலத்திலேயே அப்பா ஊரில் இரண்டு ரைஸ் மில் வைத்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரிசி அனுப்பும் தொழிலில் இருந்தார். அப்பா, அம்மாவுக்கு நான் மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’மேடை நாடகமாகக் கும்பகோணத்தில் நிகழ்வதையும், அதில் சிவாஜி சார் நடிக்கிறார் என்பதையும் கேள்விப்பட்டு அதைப் பார்க்கச் சென்றோம்.

மகாமகம் நடக்கும்போது எவ்வளவு கூட்டம் இருக்குமோ அப்படி ஒரு கூட்டம். மரத்தில் ஏறிக்கொண்டு சிவாஜி சாரைப் பார்த்தோம். அவருக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து வாழ்ந்தால் இப்படி ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இனி படிப்பு வேண்டாம், நடிப்புதான் நம் வேலை என்று சென்னைக்கு ரயில் ஏறினேன்.

ஒருமுறை சிவாஜி அண்ணன் சாப்பாடு பரிமாற சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். ‘‘டேய் விஜயா? எப்படிடா நீ சினிமாவுக்கு வந்தே?’ன்னு கேட்டார். நீங்க மேடையில நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்த்துட்டு வந்தேன்ணே!’ என்று சொன்னேன். பரிமாறுவதை நிறுத்திட்டு, ‘அடப்பாவிப் பயலே... என்னோட நாடகத்தைப் பார்த்துட்டு வந்தவன் இன்னைக்கு என்னையே அந்தக் குழம்பு ஊத்துங்க, இந்தக் குழம்பு ஊத்துங்கன்னு ஆர்டர் போடுற!’ன்னு கிண்டல் பண்ணினார். ‘‘இதுதான்ணே சாதனை!’’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர், ‘‘டேய் விஜயா... ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ தெருக்கூத்தைப் பார்த்துட்டுத்தான் நான் நாடகத்துலயே சேர்ந்தேன்!’’ன்னு சொன்னார். ரெண்டு பேரோட அலைவரிசையும் ஒத்துப்போகிறதே என்று நினைத்து சந்தோஷமானேன்’’

RAGHAVENDRA
25th March 2017, 03:18 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/sivajisenthil5000grtg_zpschu736ol.jpg

Harrietlgy
26th March 2017, 05:24 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 169– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/135678330614902757981815821985pattikada_pattanama. jpg


1972ல் வெளிவந்த சிவாஜி படங்கள் 7. 'ராஜா', 'ஞானஒளி', 'பட்டிக்காடா பட்டணமா', 'தர்மம் எங்கே', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி'. இதில் 'ராஜா', 'நீதி' இரண்டு படங்களும் நடிகர் கே. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த படங்கள். வழக்கம்போல் இந்தியில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் எடுத்தார் பாலாஜி. 'ராஜா' இந்தியில் தேவ் ஆனந்த் நடித்து வெற்றி பெற்ற 'ஜானி மேரா நாம்' படம். இதைத்தான் தமிழில் 'ராஜா' என்கிற படமாக எடுத்தார். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
இந்தியில் வெளிவந்த படம் 'துஷ்மன்'. இதைத்தான் தமிழில் 'நீதி' என்று எடுத்தார் பாலாஜி. வித்தியாசமான கதையைக் கொண்ட படம் 'நீதி'. போதையில் காரை ஓட்டி ஒரு குடும்பத் தலைவனை கொன்றுவிடுவார் சிவாஜி. அதனால் அந்தக் குடும்பத்தை அவரே காப்பாற்ற வேண்டும் என்று தீர்ப்பு. அந்தக் குடும்பத்தை காக்க போவார் சிவாஜி.
இந்த படத்தில் ஒரு பாட்டு ` நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கி ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’. இந்த பாட்டு கம்போஸிங்கின்போது முதலில் `இன்று முதல் குடிக்க மாட்டேன்’ என்றுதான் விஸ்வநாதன் பல்லவியை ஆரம்பித்தார்.
பாடல் எழுத வந்த கண்ணதாசன், `எந்த குடிகாரனும் இன்று முதல்ன்னு சொல்லமாட்டான், அதனால் நாளை முதல் குடிக்கமாட்டேன் என்று பல்லவியை ஆரம்பித்து எழுதினார் கண்ணதாசன். இந்த படமும் தேவி பாரடைஸ் தியேட்டரில்தான் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குநர் மாதவன் தயாரித்து இயக்கிய `பட்டிக்காடா பட்டணமா ‘.
இந்த படத்தின் கதை, வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சிவாஜி படம் இது. வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி, ஜெயலலிதா. ஒரு கிராமத்து பணக்காரன் வேடம் சிவாஜிக்கு, நகரத்து நாகரீக நங்கையாக ஜெயலலிதா நடித்திருந்தார். முரணான கலாசாரத்தில் வந்தவர்களில், திருமணத்தில் வரும் சிக்கல்தான் படத்தின் கரு. எல்லா பாடல்களும் தமிழக பட்டித்தொட்டியெங்கும் பிரபலம். `என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு', என்கிற நையாண்டி பாடல் தமிழகத்தில் ஒலிக்காத கிராமங்களே இல்லை. இந்த படத்தில் சிவாஜி, ஜெயலலிதாவிற்கு ஒரு டூயட் பாடல் 'கேட்டுக்கோடி உறுமி மேளம்.’ ஆண்குரல் கிராமத்து மெட்டில் பாடும், பெண் குரலோ மேற்கத்திய இசையில் பாடும். ஆனால், விஸ்வநாதன் இதில் தன்னுடைய மேதைத்தனத்தை காட்டியிருப்பார். கிராமத்து ஆண் குரலுக்கு மேற்கத்திய பின்னணி இசையையும், மேற்கத்திய பெண்குரலுக்கு கிராமிய பின்னணி இசையையும் சேர்த்திருப்பார். இந்த பாட்டில் பெண்குரல் ஆங்கிலத்தில் பாடுவதாக அமைப்பு. ஜெயலலிதாவிற்காக எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருப்பார். இதில் ` WE SHALL MEET AT THE GARDEN GATE, MORNING EVENING NIGHT TILL THE DAWN’ என்பது வரிகள். இந்த பாட்டின் ஆரம்பம் `கேட்டுக்கோடி உறுமி மேளம்’ என்பதுதான். இந்த பாட்டுக்கு பல்லவி கவிஞர் கண்ணதாசன் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கம்போஸிங் ஒரு ஸ்டூடியோவில் ரிகார்டிங் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. கவிஞர் பல்லவியை யோசித்துக் கொண்டிருக்கும்போது விஸ்வநாதன் வெளியே வந்தார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் ஜெயலலிதா இருந்தார். அவருடன் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கவிஞர் பல்லவி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று விஸ்வநாதன் ஜெயலலிதாவிடம் சொன்னார். `டியூன் என்ன?’ என்று கேட்டார் ஜெயலலிதா. சொன்னார் விஸ்வநாதன். உடனே ஜெயலலிதா `கேட்டுக்கோடி உறுமி மேளம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் ஜெயலலிதா.
இந்த வரிகளை உள்ளே போய் சொன்னார் விஸ்வநாதன். உடனே கவிஞர் `அம்மு சொன்னாங்களா?’ என்று கேட்டார் கவிஞர் கண்ணதாசன். ஜெயலலிதாவை அவருக்கு நெருக்கமானவர்கள் 'அம்மு' என்றுதான் அழைப்பார்கள்.
அந்தப் பாடலில் வரும் ஆங்கில வார்த்தைகள் முழுவதையும் ஜெயலலிதாதான் எழுதினார். சென்னை சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானது. 'ஞான ஒளி' – இந்த படம் மேஜர் சுந்தர்ராஜனின் என்.எஸ். என். தியேட்டர்ஸ் அரங்கேற்றிய மேடைநாடகம். 'வியட்நாம் வீடு' படத்தின் மூலமாக பிரபலமான சுந்தரம் இதன் கதை, வசனத்தை எழுதியிருந்தார். கிறிஸ்தவ பின்னணியை வைத்து உருவான கதை இது.
மேடையில் மேஜர் முக்கிய பாத்திரமாகவும், வீரராகவன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். முதலில் இந்த நாடகத்தை பார்த்த சிவாஜி, அப்படியே அசந்து போனார். பிறகு பலமுறை தானே சொல்லி நாடகத்தை பார்த்தார். மேஜர் நடித்த கதாபாத்திரத்தில் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு. நாடகம் இருநூறு முறைக்கு மேல் மேடையேறிய பிறகு ஜேயார் மூவீஸ் இதை படமாக எடுத்தார்கள். பி. மாதவன்தான் இந்தப் படத்தை இயக்கினார். இன்றைக்கு சேனல்கள் கிறிஸ்தவ பண்டிகை நாட்களில் இந்த படத்தை ஒளிபரப்புவார்கள். படமாக எடுக்கும்போது வீரராகவன் நாடகத்தில் நடித்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மேஜர் நடித்தார்.
இந்தக் கதை ஏற்கனவே பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ எழுதிய 'LE MISERABLE’ கதையை ஒட்டி 'ஏழை படும் பாடு' என்று 1960 களில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் நாகையாதான் கதாநாயகன். அதில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றது எழுத்தாளர் சீதாராமன். அந்த படத்தில் அவருக்கு பெயர் ஜாவர். பிறகு அவர் ஜாவர் சீதாராமன் ஆனார். அதற்கு பிறகுதான் அவர் 'கட்டபொம்மன்' படத்தில் பானெர்மென்னாகவும், `பட்டணத்தில் பூதம்’ படத்தில் `ஜீபூம்பா’ என்கிற பூதமாகவும் நடித்தார். அந்த படத்தின் தழுவல்தான் `ஞான ஒளி’ என்று சொல்லப்பட்டதுண்டு.
இரண்டு கதைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும். சிவாஜியின் `குங்குமம்’ படத்தின் மூலமாகத்தான் 'ஊர்வசி' சாரதா சினிமாவில் அறிமுகமானார். பிறகு அவர் மலையாளத்திலும், தெலுங்கிலும் மிகப்பிரபலமானார். மூன்று முறை 'ஊர்வசி' பட்டம் பெற்றார்.
அவர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்த படம்தான் `ஞான ஒளி.’ இந்தப் படத்தில் சிவாஜியின் மகளாக வருவார் சாரதா. `தேவனே என்னைப்பாருங்கள்’ என்ற பாடல் இந்த படத்தில் மிகவும் பிரபலம். அடுத்து வந்தது முக்தா பிலிம்ஸின் 'தவப்புதல்வன்'.
(தொடரும்)

RAGHAVENDRA
27th March 2017, 07:05 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17553945_1395614807155854_1575352740371322309_n.jp g?oh=47e2a7c4ed51368ed0cd83a250bb74b2&oe=595423CA

RAGHAVENDRA
31st March 2017, 12:51 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17626138_1399247693459232_1852975796302237759_n.jp g?oh=888d7d3afac5e26f597c2f766d19497e&oe=59663FC1

RAGHAVENDRA
31st March 2017, 12:52 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/983917_1399252103458791_5643532773388101038_n.jpg? oh=64e6d3f7fbd9f8cbb1d9b3bca213e384&oe=594F2975

RAGHAVENDRA
1st April 2017, 09:21 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17553689_1400141480036520_2492887711523201541_n.jp g?oh=ba4f1f42104d309248d4d2a72e92e1aa&oe=599A3D38

KCSHEKAR
1st April 2017, 11:19 AM
DINATHANTHI - 31-03-2017

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinathanthi31March2017_zpsakt2e8lf.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Dinathanthi31March2017_zpsakt2e8lf.jpeg.html)

RAGHAVENDRA
2nd April 2017, 08:11 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17626355_1401138979936770_1699669138517681093_n.jp g?oh=e0e88121dbb4b633966742ad5bcaa359&oe=595DF392

RAGHAVENDRA
3rd April 2017, 07:47 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/538508_1402086043175397_9214008409601908925_n.jpg? oh=154bb762aa9c5ac8722f9d45b1ace79a&oe=594CAD43

Harrietlgy
3rd April 2017, 05:29 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 170– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/5077149481490954390303758561shivaji%20170_thava%20 puthalvan.jpg


முக்தா பிலிம்ஸ் தயாரித்த படம் ‘தவப்புதல்வன்’! சென்னை பைலட் தியேட்டரில் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் கதை, வசனத்தை தூயவன் எழுதியிருந்தார்.
தூயவன் ஒரு காலத்தில் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தவர். தூயவன் ஒரு இஸ்லாமியர்! அவர் மிகவும் பிரபலமடைந்தது மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவிற்காக அவர் எழுதிய ‘தீர்ப்பு’ நாடகத்தின் மூலமாகத்தான். அந்த நாட்களில் இந்த நாடகம் மிகப்பிரபலம்!
அடுத்து ஏவி.எம். ராஜனுக்காக ‘பால்குடம்’ என்கிற நாடகத்தை எழுதினார். இளையராஜாவை பஞ்சு அருணாசலத்திற்கு அறிமுகம் செய்து வைத்து, அதன் மூலமாகத்தான் இளையராஜா இசையமைப்பாளரானார்.
அவர் மகன் இக்பால் இன்றைக்கு திரையுலகில் பிரபல இயக்குநர். அவர் மனைவி ஒரு பிரபல எழுத்தாளர். இயக்குநர் – நடிகர் பாக்யராஜ், பாரதிராஜாவிடம் சேருவதற்கு முன்பாக முதலில் தூயவனிடம்தான் உதவியாளராக இருந்தார்.
‘கேள்வியும் நானே பதிலும் நானே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ ஆகிய படங்களை தயாரித்தவர் தூயவன். மாலைக்கண் நோய் வரும் ஒரு கதாநாயகனின் கதைதான் ‘தவப்புதல்வன்’!
கதாநாயகனின் குடும்பத்தில் பரம்பரையாக மாலைக்கண் நோய் இருக்கும். தனக்கு மாலைக்கண் இருப்பது தன் தாய்க்கு தெரியக்கூடாது என்று நினைத்து தடுமாறுவார் கதாநாயகன் சிவாஜி. அடிப்படையில் அந்த கதாபாத்திரம் ஒரு பாடகன். ஓட்டல்களில் பாடுவார்.
அந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு ஆங்கில பாடல் இருக்கும். LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE என்பது ஆங்கில வரிகள். இந்த ஆங்கில பாட்டுக்கு சிவாஜிக்காக அஜித் சிங் என்ற பாடகர் குரல் கொடுத்திருப்பார். இந்த படத்தில் அத்தனை பாடல்களுமே பிரபலம். ‘இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்’ ‘அது இறைவன் அருளாகும்’ என்ற பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அத்தனை பிரபலம் அந்த பாடல். ‘வசந்த மாளிகை’. இந்த படம் தெலுங்கில் முதலில் எடுக்கப்பட்டது. அதற்கு பெயர் ‘பிரேம்நகர்’. அதை தமிழில் டி. ராமாநாயுடு எடுத்தார். சிவாஜியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று ‘வசந்த மாளிகை’. இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருப்பார். அத்தனை பாடல்களும் மிகப்பிரபலம். இன்றைக்கு எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாட்டும் `மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ பாடல்தான். இந்த படத்தின் சாயல் கமல்ஹாசன் நடித்த `வாழ்வே மாயம்’ படத்தில் தென்படும்.
1973ம் வருடம் சிவாஜி 7 படங்களில் நடித்தார். பாரதவிலாஸ், ராஜராஜசோழன், பொன்னூஞ்சல் எங்கள் தங்க ராஜா, கவுரவம், மனிதருள் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை. பாரத விலாஸ் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம். ஏ.சி. திருலோகசந்தரின் நிறுவனமான சினிபாரத் இந்தப் படத்தை தயாரித்தது. திருலோகசந்தரே இயக்கியிருந்தார். இன்றைக்கும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் இந்த படத்தில் வரும் `இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு! என்பதை எல்லா சேனல்களுமே ஒளிபரப்பிக்கொண்டிருக்கும். எல்லா பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார் படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்திய நாடு என் வீடு பாட்டில், அந்த வீட்டில் வசிக்கும் பல மொழி மதக்காரர்களும் சேர்ந்து இந்த பாட்டை பாடுவார்கள். தெலுங்கு குடும்பத் தலைவன் தெலுங்கில் பாடுவார். அவர் மனைவி கன்னடத்தில் பாடுவார். பஞ்சாபி குடும்பம் இந்தியில் பாடும். கேரள முஸ்லீம் குடும்பம் மலையாளத்தில் பாடும். அப்போது இந்தி பாடலுக்காக இந்தி பிரபல கதாநாயகர் சஞ்சீவ் குமாரை அந்த காட்சியில் இருக்க வைத்திருப்பார்கள். மலையாளத்திற்கு மது, தெலுங்கிற்கு நாகேஸ்வர ராவ் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சிவாஜி கேட்டு கொண்டதற்காக வந்து தோன்றி விட்டு போனார்கள். சென்னை ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி. உமாபதி இந்தபடத்தை எடுத்தார். இந்த படத்தின் கதையை உருவாக்கியவர் அரு. ராமனாதன். இவர் ஒரு பிரபல எழுத்தாளர். பிரசுரகர்த்தா. இவர் நிறைய சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறார். அந்த நாட்களில் அதாவது 60களில் காதல் என்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்தினார். பிரேமா பிரசுரம் என்பது அவருடைய மிகப்பிரபலமான பதிப்பகம். இவர் கதை எழுத, ஏ.பி. நாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி ‘ராஜ ராஜ சோழன்’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். தமிழில் வந்த முதல் சினிமாஸ்கோப் படம் இதுதான். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி இந்தப் படத்தில் ராஜராஜ சோழனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. `பொன்னூஞ்சல்’ இந்த படத்தை கோமதி சங்கர் பிக்சர்ஸ் சார்பில் கே.ஸ். குற்றாலிங்கம் தயாரித்தார். இந்தப் படத்தை சி.வி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். கட்டபொம்மன் படத்திற்கு வசனமெழுதிய சக்தி கிருஷ்ணசாமி இந்த படத்திற்கு வசனமெழுதியிருந்தார். ஆனால் இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்திற்கு ஆரம்ப நாள் வசூலை தேடிக்கொடுத்தது எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்போதெல்லாம் ஒரு படம் ரீலிசாவதற்கு முன் பாடல்கள் வானொலியில் வந்துவிடும். இலங்கை வானொலியைப் போலவே சென்னை வானொலி நிலையமும், விவித் பாரதி என்று ஆரம்பித்து பாடல்களை முன்கூட்டியே ஒலிபரப்பத் தொடங்கியது. ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்ற பாட்டு அப்படி ஒரு பிரபலம் அடைந்தது.
அப்போதெல்லாம் விவித் பாரதியின் மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வருடத்தில் இந்த பாடல் தொடர்ந்து ஏராளமான வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தது. இந்த படம் சென்னை பிளாசா தியேட்டரில் வெளியானது. சிவாஜிக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்திருந்தார். ‘எங்கள் தங்க ராஜா’ இந்த படத்தை தெலுங்கு படத்தயாரிப்பாளர் ராஜேந்திரபிரசாத் தயாரித்து இயக்கியிருந்தார். தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தின் தமிழாக்கம் இது!
படத்திற்கு சின்னப்ப ரெட்டி என்பவர் கதை எழுதியிருந்தார். திரைக்கதை வசனத்தை எழுதியவர் பாலமுருகன். இசை – கே.வி. மகாதேவன். அவரது நிறுவனத்திற்கு பெயர் கஜபதி ஆர்ட் பிக்சர்ஸ். இதில் சிவாஜிக்கு மிகவும் மாறுபட்ட வேடம். படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த படம் ‘கவுரவம்’. இந்த படம் முதலில் யு.ஏ.ஏ. குழுவினரின் நாடகம்! இந்த நாடகத்திற்கு பெயர் ‘கண்ணன்’ வந்தான். யு.ஏ.ஏ. என்பது ஒய்.ஜி மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி நடத்தி வந்த நாடகக்குழு.
(தொடரும்)

RAGHAVENDRA
5th April 2017, 09:42 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17800183_1404073856309949_2651196617719735472_n.jp g?oh=2c073d5d4e16154548eb4d130caf41be&oe=59533C3A

RAGHAVENDRA
6th April 2017, 07:57 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17800037_1404979176219417_5949513521197192043_n.jp g?oh=f21ee03221b049544150bef524173f81&oe=595B1FBD

Murali Srinivas
8th April 2017, 12:11 AM
அனைவருக்கும் வணக்கம்!

நீண்ட இடைவெளிக்கு பின் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இணையதள இணைப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக திரியை பார்க்கவோ அல்லது பங்களிப்பு செய்யவோ இயலாமல் இருந்தது. இப்போது சரி செய்யப்பட்டு விட்டதால் தொடர்ந்து பயணிக்கலாம் என நம்புகிறேன். திரியை முன்னெடுத்து சென்ற அனைத்து நல்லிதயங்களுக்கும் மனங்கனிந்த நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
8th April 2017, 08:23 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17796776_1407199485997386_2715529517753508827_n.jp g?oh=f7b581c045891d122f74d5fd9e9703e7&oe=595BE0BE

RAGHAVENDRA
8th April 2017, 08:24 AM
நண்பர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் நமது மய்யம் இணையதளத்தில் இப்போது நேரிடையாக பதிவு செய்ய முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. இனி நண்பர்கள் அனைவரும் வழக்கம் போல் பங்கேற்கலாம் என எண்ணுகிறேன்.

Russellsmd
10th April 2017, 06:51 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170409171504664_2017041 0055628391_zpseozoy9cz.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170409171504664_2017041 0055628391_zpseozoy9cz.jpg.html)

Sent from my P01Y using Tapatalk

RAGHAVENDRA
10th April 2017, 08:31 AM
உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரவி. இறையருளாலும் நம் தலைவரின் ஆசியாலும் தாங்கள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

KCSHEKAR
10th April 2017, 03:16 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் ரவி சார்

KCSHEKAR
10th April 2017, 03:20 PM
செய்தி

மயிலை கபாலீஸ்வரர் கோவில் அறுபத்துமூவர் விழாவையொட்டி 09-04-2017, ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் "நீர்மோர்ப் பந்தல்" நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாஜி சமூகநலப்பேரவை மாநில துணைத்தலைவர் திரு.சீனிவாசன் தலைமையில் தொடர்ந்து 15வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநிலத் தலைவர் திரு.K.சந்திரசேகரன் தொடங்கிவைத்தார். திரு.அம்பத்தூர் வெங்கடேசன், திரு.சங்குராஜன், திரு.பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

அறுபத்துமூவர் விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள், நடிகர்திலகம் திருநாவுக்கரசராக திரையில் உலாவந்ததை நினைவு கூர்ந்து, அவர் பெயரால் சிவாஜி பேரவை செய்த சேவையையும் போற்றிச் சென்றனர்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp%20Image%202017-04-10%20at%2007.53.26%202_zpsc7xqksoj.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp%20Image%202017-04-10%20at%2007.53.26%202_zpsc7xqksoj.jpeg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp%20Image%202017-04-10%20at%2007.53.26%201_zpsjg3u2cna.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp%20Image%202017-04-10%20at%2007.53.26%201_zpsjg3u2cna.jpeg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp%20Image%202017-04-10%20at%2007.53.26_zpsqkoxk7do.jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp%20Image%202017-04-10%20at%2007.53.26_zpsqkoxk7do.jpeg.html)

RAGHAVENDRA
11th April 2017, 07:03 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17757324_1410788348971833_375903412827829804_n.jpg ?oh=f7cf38509e8859702bef0a0b53619538&oe=59876A49

abkhlabhi
11th April 2017, 09:36 AM
From ONE INDIA :

சென்னை: திரைப்படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். ஆனால் அடுத்தவர் மனசு நோகாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

விக்ரம் பிரபு முதல் முறையாக தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் நெருப்புடா.
இந்தத் தலைப்பு ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பஞ்ச் என்பதால், ரஜினியையே படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லத்தில் நடந்த இந்த விழாவில் படப் பாடலை வெளியிட்டு ரஜினி பேசுகையில், "இந்த அன்னை இல்லம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த வீட்டுக்கு வந்த உடனே நான் நினைச்சேன்... சிவாஜி சார் மட்டும் இப்போ என்னைப் பாத்திருந்தா, 'என்னடா போட்டிக்கு தாடி வச்சிட்டியா'ன்னு கேட்டிருப்பார். அவருக்கு போட்டியே இல்ல. இனிமேலும் கிடையாது.

நான் முதன் முதலில் 1978-ல் என்று நினைக்கிறேன்.. அப்போதுதான் நான் வாழ வைப்பேன் படத்தில் அவருடன் நடித்தேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். 'ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா.. பிரியாணி போடறேன்...' என்றார். நானும் சென்றேன். முதன் முதலாக அந்த வீட்டு வாயிலில் நுழைந்தபோது, அந்த பிரமாண்டத்தைப் பார்த்து வியந்தேன்.

உள்ளே போய் பார்த்தேன். ஏதோ என்னை மட்டும்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கோ வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த 200 பேர் வந்திருந்தார்கள். பிரியாணி என்றால்.. அப்படி ஒரு பிரியாணி.. இது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அங்கு நடக்கும்.



இரண்டாவது நிகழ்வு, அண்ணாமலை படம். நான் சிவாஜி சாரின் ரசிகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தில் ஒரு பகுதியில் என் கேரக்டரை சிவாஜி சாரை மனதில் வைத்து உருவாக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. படம் முடித்து சிவாஜிக்கு தியேட்டரில் போட்டுக் காட்டினோம். அவர் தியேட்டரில் பார்த்தது ஒன்று அண்ணாமலை. அடுத்து படையப்பா. அவர் நடிச்ச படம்.


அண்ணாமலை பார்த்துவிட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து சிவாஜி சார் பாராட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.

RAGHAVENDRA
13th April 2017, 08:40 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/17951934_1413336545383680_7001601647671832535_n.jp g?oh=8d1ce1e21563a55488f761c4daa8bc33&oe=5957827D

RAGHAVENDRA
14th April 2017, 07:50 AM
Today happens to be the 10th anniversary of our www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17759761_1413783605338974_6549354366617017088_n.jp g?oh=796d76f26d5915e552a3c3e85eeb224d&oe=5955AACDஇன்றோடு நமது நடிகர் திலகம் இணைய தளம் www.nadigarthilagam.com 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் நுழைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு ஊடகம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கால கட்டத்தில் இணைய தளங்களும் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத கால கட்டத்தில், அப்போது இருந்த சில இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் சரிவர இல்லாத காரணத்தால் ஏன் நடிகர் திலகத்திற்கென தனி இணைய தளம் துவங்கக் கூடாது என்ற எண்ணம் உதிக்க, அதனுடைய எதிரொலியாக நமது இணைய தளம் www.nadigarthilagam.com துவக்கப்பட்டு, இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு காரணமான அனைத்து சிவாஜி ரசிக நல்லிதயங்களுக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றி.https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17884532_1413783602005641_16560600179921175_n.jpg? oh=cc6be2d7fa3c395b87ed971dfbbf7dd0&oe=5991CEBB

tacinema
14th April 2017, 07:06 PM
Today happens to be the 10th anniversary of our www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17759761_1413783605338974_6549354366617017088_n.jp g?oh=796d76f26d5915e552a3c3e85eeb224d&oe=5955AACDஇன்றோடு நமது நடிகர் திலகம் இணைய தளம் www.nadigarthilagam.com 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் நுழைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் மின்னணு ஊடகம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கால கட்டத்தில் இணைய தளங்களும் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத கால கட்டத்தில், அப்போது இருந்த சில இணைய தளங்களில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்கள் சரிவர இல்லாத காரணத்தால் ஏன் நடிகர் திலகத்திற்கென தனி இணைய தளம் துவங்கக் கூடாது என்ற எண்ணம் உதிக்க, அதனுடைய எதிரொலியாக நமது இணைய தளம் www.nadigarthilagam.com துவக்கப்பட்டு, இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு காரணமான அனைத்து சிவாஜி ரசிக நல்லிதயங்களுக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும் உளமார்ந்த நன்றி.https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17884532_1413783602005641_16560600179921175_n.jpg? oh=cc6be2d7fa3c395b87ed971dfbbf7dd0&oe=5991CEBB

Hi Raghavendra,

Congratulations for this splendid work. Completing 10 years in an individual capacity is a milestone and you are doing a magnificent work in running a successful website for our one and only Nadigar Thilagam. Big Thank you for this from Tamil Speaking world.

Great work. I sincerely believe this web treasure will turn into a wonderful NT dictionary, which will benefit tamils for many generations to come. Long live NT fame.

--A NT fan

RAGHAVENDRA
15th April 2017, 07:13 AM
Thank you TAC for your kind words sof appreciation and encouragement.

RAGHAVENDRA
15th April 2017, 07:14 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/17951677_1414786128572055_2762855047676493022_n.jp g?oh=af3bab99768f95716e5b1a45d5bb615c&oe=595350E9

adiram
15th April 2017, 12:31 PM
டியர் ராகவேந்தர் சார்,

பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பதினோராவது ஆண்டில் வெற்றிகரமாக தடம் பதிக்கும் "நடிகர்திலகம்.காம்" இணையதளத்துக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

இந்த இணையதளம் மூலம் தமிழ் நல்லுலகுக்கு நடிகர்திலகத்தைப் பற்றிய சாதனை சிறப்புகள் மிக சீரிய வகையில் சென்றடைந்தன என்றால் அது மிகையல்ல.

இந்த சிறப்பான வெற்றிக்கு தங்களின் ஓய்வறியா உழைப்பும், சோர்வறியா பங்களிப்பும், நடிகர்திலகத்தின் அன்பு பிள்ளைகளின் ஆதரவுமே முழுமுதற்காரணம் என்பது உண்மை.

நடிகர்திலகம் இணையதளம் இன்னும் பற்பல சாதனைகளை தனதாக்கி வெற்றிநடை போடவும், அதற்காக நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நீண்ட நெடிய காலங்கள் வாழவும் பிரார்த்திக்கிறேன்.

Harrietlgy
16th April 2017, 05:38 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 171– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/47714766214921564021365105316gauravam.jpg


யு.ஏ.ஏ. குழுவினர் வெற்றிகரமாக நடத்தி வந்த நாடகம் 'கண்ணன் வந்தான்'. இந்த நாடகத்தை 'வியட்நாம் வீடுசுந்தரம் எழுதியிருந்தார்! நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாடகத்தை சிவாஜி பார்த்தார்.அவருக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்து விட்டது. நாடகத்தில் அப்பா,- பிள்ளை இரண்டு கதாபாத்திரங்களின் மோதல்தான் கதை. நாடகத்தில், அப்பா வேடத்தில் மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதியும், மகன் வேடத்தில் ஏ.ஆர். எஸ்ஸும் நடித்திருப்பார்கள்.
சிவாஜி இந்த நாடகத்தை படமாக்கி அதில் தான் நடிக்க வேண்டுமென்று நினைத்தார். அப்போது `இந்து’ நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரான ரங்கராஜன் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் சிவாஜியிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சிவாஜி இந்த நாடகத்தைப் பார்க்கச் சொன்னார்.
அவருக்கும் நாடகம் பிடித்துப் போனது. நாடகத்திற்கு கதை எழுதிய 'வியட்நாம் வீடு' சுந்தரமே இந்த படத்தை இயக்குவது என்று முடிவானது. கேமரா – இயக்குநர் ஸ்ரீதருடன் பல படங்களில் பணிபுரிந்த வின்சென்ட். நாடகத்தில் இரண்டு கதாபாத்திரங்கள்.
இப்போது படமாக எடுக்கும்போது அதில் அப்பா வேடத்தில் சிவாஜி என்று முடிவானது. அப்படியானால் பிள்ளை கதாபாத்திரத்தில் யார் நடிப்பது?
`அப்பா-, பிள்ளை இரண்டு வேடங்களிலும் நானே நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! படத்திற்கு தலைப்பு `கவுரவம்’ என்று முடிவானது. ஏன் அவர் அப்படிச் சொன்னார்? அதற்கு சிவாஜியே விளக்கமளித்திருக்கிறார்.
`கவுரவம்’நல்ல படம். அதில் இரண்டு வேடங்களில் நான் நடித்தேன். இரண்டு வேடங்களிலும் நான் நடித்ததற்கு ஒரு காரணமுண்டு.
இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கிய படம் `இருவர் உள்ளம்’ அந்தப் படத்திற்காக நானும் சரோஜாதேவியும் ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தோம். அந்தக் காட்சியில் சரோஜாதேவிக்குத்தான் முக்கியத்துவம். அவர்தான் அந்தக் காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் நானும் நடித்துக் கொண்டிருந்தேன்.சரோஜாதேவி பெண். நான் நடித்து, எப்படியும் அவரை ஜெயித்துவிடுவேன் என்று நினைத்து நடித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது இயக்குநர் பிரசாத் ` கட்’ `கட்’ என்று சொல்லி நிறுத்தினார்.
என்னை வெளியே அழைத்துக் கொண்டு போனார்.
`சிவாஜி, நீ நல்ல நடிகன். நீ நன்றாக நடிக்கிறாய். எனக்குத் தெரியும். நீ நன்றாக நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். அதுவும் எனக்குத் தெரியும். ஆனால், நீ இந்த காட்சியில் நன்றாக நடித்தால், நாம் எடுக்கும் காட்சி வீணாகி, கதையின் போக்கே மாறிவிடும். காரணம், கதைப்படி இந்த காட்சியில் சரோஜாதேவிதான் டாமினேட் செய்ய வேண்டும். நீ பேசாமல் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் படமே கெட்டுவிடும்' என்றார்.
இந்த அனுபவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. படத்தில் நான் நடிப்பது முக்கியமல்ல. கதைப்படி எந்தக் காட்சியில் நாம் நடிக்காமல் இருக்க வேண்டுமென்பதும் மிகவும் முக்கியம்.
இதற்கு இன்னொரு உதாரணம் `எங்கிருந்தோ வந்தாள்’ படம்.
அதன் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயலலிதாதான் நடிப்பார். நான் சும்மா கையைக் கட்டிக்கொண்டும், இடது கையை கன்னத்தில் வைத்தபடி சிரித்தபடியும்தான் அவர் அழைக்கும் இடத்திற்கெல்லாம் போவேன். நான் நடித்திருக்க மாட்டேன். ஜெயலலிதாதான் நடித்திருப்பார்.
அந்தக் காட்சியில் நான் நடித்திருந்தால் கதையே கெட்டு போயிருக்கும். படத்தின் தலைப்பும் வீணாகியிருக்கும். படத்தின் தலைப்பு என்ன? 'எங்கிருந்தோ வந்தாள்', 'எங்கிருந்தோ வந்தான்' இல்லையே ?
அதுதான் நடிப்பு. அதாவது நாம் நடிக்கக்கூடாத காட்சியில் நாம் கதாநாயகன், நானே எல்லாக் காட்சிகளிலும் நடிக்க வேண்டுமென்றால் கதை பாழாகிவிடும்.
`பாசமலர்’ படத்தில் பல காட்சிகளில் என்னைவிட சாவித்திரி நன்றாக நடித்திருப்பார். அவர் அப்படி நடித்து, நான் அடக்கி வாசித்ததால்தான் அந்தப் படத்தைப் பற்றி இன்றும் மக்கள் பேசுகிறார்கள்.
சரி! இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் நான் நடிக்கிறேன். ஆனால் பாராட்டும், ரசிப்பும் என் சக நடிகருக்குத்தான் கிடைக்கிறது. இதற்கு என்ன சொல்லப்போகிறோம்?
அந்த காட்சிதான் `திருவிளையாடல்’ படத்தில் வந்த சிவன் – தருமி நடித்த காட்சி! இதில் சிவனாக நான் நடித்துக்கொண்டிருப்பேன். என் பின்னால் தருமியான நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரது நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்து, அந்தக் காட்சியே படத்தின் முக்கிய அம்சமாக இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது. அந்த காட்சி எடுத்தவுடன் அதை நான் பார்த்தேன்.
படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் நாகேஷ் நடித்ததில் ஒரு துளி அளவு கூட குறைக்கக்கூடாது என்றேன்.
எனக்குத் தெரியும். அந்த காட்சிதான் படத்தின் பேசப்படும் என்பது.
சரி! காட்சியின் தன்மையை புரிந்து கொண்டு நாம் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்ற நடிகர்கள் இதை புரிந்து கொள்வார்களா? அதுவும் நான் ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்த சக நடிகரை 'நடிக்காதே' என்று சொன்னால் அவர் என்ன நினைப்பார்? ` சிவாஜி என்னை நடிக்க அனுமதிக்கவில்லை’ என்று நினைக்கமாட்டாரா ?
இப்போது `கவுரவம்’ விஷயத்திற்கு வருவோம். அப்பா,- பிள்ளை இரண்டும்தான் படத்தின் இரண்டு முக்கிய பாத்திரங்கள். அப்பா, பிள்ளை மோதல்தான் படத்தின் கருவே. இதில் அப்பா வேடத்தில் நான் நடிப்பதாக முடிவாகிவிட்டது. இப்போது பிள்ளை வேடத்தில் நடிக்கும் நடிகர் தானும் சிறப்பாக நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரா? மாட்டாரா?
அவர் நன்றாக நடித்தால் என்னுடைய பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேடம் அடிபட்டுப் போகும். நான் நன்றாக நடித்து அவரை டம்மியாக்கினால், அந்த கதாபாத்திரம் கெட்டுப் போகும்.
மற்றவர்களை நடிக்க வைத்து, `ஏம்பா! இந்த காட்சியில் நீ நடிக்காமல் சும்மா இரு’ என்றால் கோபமோ, மனவருத்தமோ வராதா?
இயக்குநர் பிரசாத் சொன்னதாலும், அந்தக் காட்சியின் தன்மையை புரிந்து கொண்டதாலும் `இருவர் உள்ளம்’ படத்தில் அந்தக் காட்சியில் நான் நடிக்காமல் இருந்தேன்.
அதே போல் எத்தனை நடிகர்கள் புரிந்து கொள்வார்கள்?
`சிவாஜி மட்டும் பெயர் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்’ என்று நினைக்கமாட்டார்களா?
இதையெல்லாம் யோசித்துத்தான் `கவுரவம்’ படத்தில் நானே அப்பா-, பிள்ளை இரு வேடங்களிலும் நடிக்க தீர்மானித்தேன். அப்பா பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரம்தான் மனதில் நின்றது.
அதற்குக் காரணம் கண்ணன் என்கிற அந்த பிள்ளை கதாபாத்திரம் குறைவாக நடித்ததுதான்'.
(தொடரும்)

RAGHAVENDRA
17th April 2017, 06:54 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17904108_1416686908381977_378900364711269952_n.jpg ?oh=4f53472e66cc984f54dbb77b0d34bdb1&oe=5990FD2A

RAGHAVENDRA
17th April 2017, 06:55 AM
உளமார்ந்த நன்றி ஆதிராம். தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆதரவோடும் அன்போடும் மக்கள் தலைவரின் ஆசியோடும் நம் இணையதளம் மென்மேலும் வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி, மீண்டும் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

KCSHEKAR
17th April 2017, 10:56 AM
நடிகர்திலகம் சிலை விவகாரத்தில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் தொடரும் முயற்சி.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinathanthi_zpsofszw9pg.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinathanthi_zpsofszw9pg.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Malaimurasu_zpstkjjywgo.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Malaimurasu_zpstkjjywgo.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/MalaimalarNews_zpscnd4juuj.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/MalaimalarNews_zpscnd4juuj.jpg.html)

KCSHEKAR
17th April 2017, 03:23 PM
Today happens to be the 10th anniversary of our www.nadigarthilagam.com. Started in the year 2007, when there was not much limelight thrown on the electronic media's role, particularly websites, particularly on old Tamil film history. While searching through websites, found many mistakes in the filmography of NTin various websites and a thought arose why not a website exclusively for NT be launched and thus born the www.nadigarthilagam. It has now past 10 years all with the support of fellow Sivaji fans the world over and connoisseurs of Tamil classics. Thank you all.

10 ஆண்டுகளைக் கடக்கும் nadigarthilagam.com இணையதளம் மென்மேலும் பல்லாண்டுகள் கடந்து, நடிகர்திலகம் புகழ் பரப்ப இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

Russellxor
17th April 2017, 07:22 PM
நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்க்கும்


nadigarthilagam.com

இணையத்துக்கும் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.



Sent from my Micromax A120 using Tapatalk

Russellxor
17th April 2017, 07:24 PM
ஒரு வித்தியாசமான வீடீயோ பதிவு
நடிகர்திலகத்தின் பிரமிக்க வைக்கும் நடிப்பு

https://youtu.be/Lg9BxVCzHkc

RAGHAVENDRA
18th April 2017, 07:23 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18033487_1417590348291633_8263317077245068007_n.jp g?oh=c03b01b2d294625decda570bfb6f5c08&oe=5983F158

RAGHAVENDRA
18th April 2017, 07:24 AM
உளமார்ந்த நன்றி சந்திரசேகர் மற்றும் செந்தில்வேல்

KCSHEKAR
18th April 2017, 12:30 PM
MALAI MALAR (Chennai) - 17-04-2017

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/MalaimalarAdvt17-04-2017_zps3ucxa5zv.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/MalaimalarAdvt17-04-2017_zps3ucxa5zv.jpg.html)

goldstar
21st April 2017, 11:28 AM
https://images-na.ssl-images-amazon.com/images/M/MV5BM2I4MTY3ZTItNmJjNS00MWVmLWJkMjItMTlhNWMwZTY2Mz cyXkEyXkFqcGdeQXVyMzU0NzkwMDg@._V1_UY1200_CR100,0, 630,1200_AL_.jpg

goldstar
21st April 2017, 11:33 AM
https://upload.wikimedia.org/wikipedia/en/d/d1/Sri_Valli_1961.jpg

goldstar
21st April 2017, 11:33 AM
https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/2/2f/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%A E%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF %E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.jpg/200px-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%A E%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF %E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.jpg

goldstar
21st April 2017, 11:34 AM
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/7b/Bale_Pandiya_Sivaji.jpg/220px-Bale_Pandiya_Sivaji.jpg

goldstar
21st April 2017, 11:35 AM
https://upload.wikimedia.org/wikipedia/en/b/b8/Vazhvile_Oru_Naal_.jpg

goldstar
21st April 2017, 11:36 AM
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/66/Raja_Rani_1956.jpg/220px-Raja_Rani_1956.jpg

goldstar
21st April 2017, 11:37 AM
https://upload.wikimedia.org/wikipedia/en/7/73/ChittoorRaniPadmini.jpg

goldstar
21st April 2017, 11:38 AM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRF7-fnDU0C2Kd0Ce-BSY7WUpeLD1a5rBM0AI_FaMcVl550IOHO

goldstar
21st April 2017, 11:38 AM
https://upload.wikimedia.org/wikipedia/en/b/b1/Karnan_poster.jpg

goldstar
21st April 2017, 11:39 AM
http://directorksomu.com/images/Films/Film_poster_3.jpg

goldstar
21st April 2017, 11:40 AM
http://i1048.photobucket.com/albums/s376/ksramesh1/cinema%20posters/1957poster_zps5bb7bef7.jpg

goldstar
21st April 2017, 11:41 AM
http://www.filmibeat.com/fanimg/sivaji-ganesan-photos-images-41426.jpg

HARISH2619
21st April 2017, 01:49 PM
FROM THE FACEBOOK PAGE OF MR.GANESAN SAMIAYYA
ஒரு வரலாற்றின் உண்மை, பண்டித நேரு பிரதமராக இருந்த போது முதல் சிவாஜிக்கும் நேரு குடும்பத்துக்கும் நட்பு ரீதியான உறவு இருந்தது,
நேருவிற்கு பின் அன்னை இந்திரா நம் தலைவன் சிங்கத்தமிழன் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருந்தார், அன்னை இந்திராவை முன் அனுமதி இல்லாமல் சந்திக்கும் அளவுக்கு சிவாஜி செல்வாக்கு பெற்றிருந்தார்,
ஒன்றும் தெரியாத சிலர் சொல்வது போல காமராஜர் மறைவுக்குப்பின் மூப்பனார் பின்னால் நடிகர்திலகம் செல்லவில்லை,
மூப்பனார் யார் என்றே டெல்லி தலைமைக்கு தெரியாது, ஆருயிர் அண்ணன் சிவாஜி தான் மூப்பனாரை அன்னை இந்திராவிடம் அறிமுகப் படுத்தினார், இது தான் உண்மை, அப்போது ரோஜாவின் ராஜா படபிடிப்பின் போது சண்டைகாட்சியில் அண்ணன் சிவாஜிக்கு கால் பாதத்தில் அடிபட்டதால் எற்பட்ட எலும்பு முறிவுக்கு காலில் கட்டுடன் வலியையும் பொருட்படுத்தாமல் மகாதேவன்பிள்ளை யுடன் டெல்லி சென்று அன்னை இந்திராவை சந்தித்து இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும் இணைத்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார், சிவாஜியால் காங்கிரஸ் கட்சி 1970-80 களில் திராவிட கட்சிகளுக்கு இணையான மாபெரும் கட்சியாக திகழ்ந்தது, இது தான் உண்மை, உண்மைக்கு மாறான சரித்திர நிகழ்வுகளையும் தன்னிகரற்ற தலைவன் சிவாஜியின் புகழையும் முகநூலில் நண்பர்கள் தவறாக பதிவிட வேண்டாம்,

REPLY FROM MR MUTHAYYA
பெருந்தலைவர் மறைவுக்கு பின் இண்டிகேட், சிண்டிகேட் என இருந்த இரு அணிகளையும் இணைக்க தலைவர்கள் முயற்சி செய்தனர்.நடிகர் திலகம் அதற்கு உடனே ஒப்புதல் வழங்க வில்லை. அன்னை இந்திராகாந்தி சிவாஜியுடன் இணைய வேண்டும் என கூறினார்.தலைவர்களும், அப்போது அகில இந்திய சிவாஜி மன்ற தலைவராக இருந்த சின்ன அண்ணாமலை அவர்களும் நடிகர் திலகத்தோடு சென்று இந்திராகாந்தியிடம் இணைய ஒப்புதல் கொடுத்தார்கள்.தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த மூப்பனார் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கவும் இந்திராகாந்தியிடம் ஒப்புதல் பெற்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இணைப்பு விழாவில் அறிவிக்க செய்தார்கள்.இதற்கு நடிகர் திலகத்தின் அழுத்தம் முக்கியமாகும். பின்னால் இந்திராகாந்தியிடம் கருத்து மாறுபட்ட மூப்பனார் TNCC தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராஜினமா ஏற்று கொள்ளப்பட்டது. இதை எதிர் பார்க்காத மூப்பனாரும் மற்ற தலைவர்களும் மறுபரிசீலனை செய்ய இந்திராகாந்தி அவர்களிடம் கேட்டு அவர் அதற்கு ஒத்து கொள்ளாத தோடு Tncc தலைவராக ஆர்.வி.சாமிநாதன் அவர்களை நியமித்து விட்டார்கள். இதை மறுபரிசீலனை செய்யவும் மீண்டும் மூப்பனாரை Tncc தலைவராக நியமிக்கவும் அன்னை இந்திராகாந்தியிடம் வலியுறுத்த மூத்த தலைவர்களும் மூப்பனாரும் நடிகர்திலகத்திடம் சொன்னார்கள்.அதற்காகத்தான் மதுரையில் திரிசூலம் பட விழா நடத்தப்பட்டது.இரண்டு நாள் விழா.முதல் நாள் பட விழா.இரண்டாம் நாள் அரசியல் விழா.Tncc தலைவரை அழைக்காமல் விழா நடத்தியதால் விழாவை தடை செய்ய சில தலைவர்கள் இந்திராகாந்தியிடம் சொன்னார்கள். சொந்த பணம் செலவு செய்து மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டி விழா நடைப்பதை அறிந்த இந்திராகாந்தி வாழ்த்து மடலோடு தனது பிரதிநிதியாக அகில இந்திய இளைஞர் காங் தலைவராக இருந்த ராமசந்திர ராத் என்பவரை அனுப்பினார். அந்த விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் தலைவர் காமராஜருக்கு பின்பு தமிழ்நாட்டில் நாங்கள் ஏற்றுகொண்ட தலைவர் மூப்பனார்.அவர் ராஜினமா சம்மந்தமாக அன்னை இந்திராகாந்தி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பேசினார்.அதன் தொடர்ச்சியாக அன்னை இந்திராகாந்தி மூப்பனார் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்தார்.இதுதான் கடந்த காலத்தில் நடந்தவை.
REPLY FROM GANESAN SAMIAYYA
Sir 1979 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற திரிசூலம் படவிழாவில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் சிவாஜி ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மூப்பனாரை சிவாஜி மன்றம் தோளில் சுமந்து அரசியலில் முன்னிலை படுத்தியது, இதை யாரும் மறுக்க முடியாது,
அன்னை இந்திரா சிவாஜி மீது பெற்ற தாயினும் மேலான பாசம் வைத்திருந்தார், சிவாஜியிடம் எந்த கண்டிசனும் போடவில்லை, தங்களின் பதிவு தவறு,
பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப்பின் ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காங்கிரஸ் இணைப்பிற்குப் பின் அண்ணன் சிவாஜியை TNCC தலைவராக்கவே அன்னை இந்திரா விரும்பினார், இணைப்பு விழா நடந்த சென்னையில் கடைசியில் புதிய தலைவரை அறிவிக்க அன்னை இந்திரா மைக் அருகே வந்த போது மூப்பனாரின் பெயரை இந்திராவின் காதில் அருகே கையை மறைத்து கொண்டு நடிகர் திலகம் கூறியதை வரலாற்றில் இருந்து மறைத்து விட முடியாது,

RAGHAVENDRA
22nd April 2017, 02:39 PM
மய்யம் இணைய தளம் நடுவில் சில நாட்கள் நேரடியாக பார்வையிட முடிந்து பிறகு மீண்டும் பழையபடி ஆகி விட்டது. சில நாட்களாக வர முடியாமல் இருந்து இன்று மீண்டும் வந்து பார்த்ததில் ஒரு சோகமான செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில் படித்து மனம் கஷ்டமானது.கண்கவர் நிழற்படங்கள் மூலம் நடிகர் திலகத்தின் தோற்றத்தை அழகுற பகிர்ந்து கொண்ட திரு முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என அறிந்து மனம் வருத்தமுற்றது. அவருடைய மறைவின் மூலம் இம்மய்யம் இணையதளத்தின் ஆர்வமான பங்களிப்பாளர்களில் ஒருவரை இழந்து விட்டோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழந்த இரங்கல்களையும் இத்துயரைத் தாங்கும் வலிமையை அவர்கள் பெறவும் இறைவனை வேண்டுகிறோம்.

sivaa
23rd April 2017, 10:41 AM
வணக்கம் மய்யம் திரி நண்பர்களே ,
கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை சென்றிருந்ததால்
மய்யம் திரியை பார்வையிடவோ பதிவிடவோ
முடியாமல் போய்விட்டது.

http://oi63.tinypic.com/15rnq6c.jpg

sivaa
23rd April 2017, 10:51 AM
மய்யம் இணைய தளம் நடுவில் சில நாட்கள் நேரடியாக பார்வையிட முடிந்து பிறகு மீண்டும் பழையபடி ஆகி விட்டது. சில நாட்களாக வர முடியாமல் இருந்து இன்று மீண்டும் வந்து பார்த்ததில் ஒரு சோகமான செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில் படித்து மனம் கஷ்டமானது.கண்கவர் நிழற்படங்கள் மூலம் நடிகர் திலகத்தின் தோற்றத்தை அழகுற பகிர்ந்து கொண்ட திரு முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என அறிந்து மனம் வருத்தமுற்றது. அவருடைய மறைவின் மூலம் இம்மய்யம் இணையதளத்தின் ஆர்வமான பங்களிப்பாளர்களில் ஒருவரை இழந்து விட்டோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழந்த இரங்கல்களையும் இத்துயரைத் தாங்கும் வலிமையை அவர்கள் பெறவும் இறைவனை வேண்டுகிறோம்.

திரு முத்தையன் அவர்கள் நேர்மையாளர் தங்கள் பக்கத்தில் தவறான பதிவுகள் வந்தபொழுதெல்லாம்
அதனை சுட்டிக்காட்டியவர் அப்படியான நேர்மையாளர் மறைந்தவிட்டார் என்பதனை அறிந்து
மனம் மிகவும் வேதனை அடைகின்றது; அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்.

sivaa
23rd April 2017, 10:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18057752_325953764474542_3843990307819859049_n.jpg ?oh=4e2d3c7b004ce9b34ef9a8012bcb6ced&oe=59985553

sivaa
23rd April 2017, 10:57 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18010648_1181355898640651_226953400805327980_n.jpg ?oh=f4b06d17d3e96b14638ea6cc9c85380f&oe=598E7B55

sivaa
23rd April 2017, 10:58 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17990760_325679397835312_2385803153664205609_n.jpg ?oh=d9b25d22e7b9a6d4fa2f5a9551d97a53&oe=597C5E2A

sivaa
23rd April 2017, 10:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18010833_137052220167643_7935539099241905723_n.jpg ?oh=83bc940fb169edb0de16ee7263279c11&oe=597F4FD8

sivaa
23rd April 2017, 11:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18033162_1683093901993310_7830312093792909599_n.jp g?oh=c4c07b09762546c63fd47f8611662ef4&oe=598ED226

sivaa
23rd April 2017, 11:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17883709_1308213472596587_741351205838716097_n.jpg ?oh=c22bac7f2bdec036b1f9bb77bcccead4&oe=5979915A

sivaa
23rd April 2017, 11:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17904245_1308213849263216_2640498292603775615_n.jp g?oh=a52c8528dde047d0b3c93f1d96338223&oe=5988D582

sivaa
23rd April 2017, 02:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18119373_1345652538837765_9213836891152885663_n.jp g?oh=5d580e9ff4461a1cec2f1f305fab3e81&oe=597F0C7F

Harrietlgy
23rd April 2017, 05:47 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 172– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/77486922149268652238061937rajapart%20rangadurai.jp g


சிவாஜி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் யாருடைய பாணியையாவது மனதில் உள்வாங்கி கொள்வார்.
அதாவது நிஜ வாழ்க்கையில் அவர் சந்திக்கும் மனிதர்களின் நடை, உடை பாவனைகளை பார்த்து கிரகித்துக் கொள்வார்.
உதாரணமாக 'திருவருட் செல்வர்' அப்பர் வேடம் – காஞ்சி பரமாச்சாரியார் 'வியட்நாம் வீடு' பத்மநாப அய்யர் - டி.வி.எஸ். கிருஷ்ணா. கெளரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த – சித்ரா நாராயணசாமி! யார் இந்த சித்ரா நாராயணசாமி?
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை இவர் தான் உருவாக்கினார்.
இப்போதும் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சி.பி. ராமசாமி சாலையில் மயிலாப்பூர் பக்கமாக வந்து நுழைந்தால், அங்கிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே இடது பக்கம் ஒரு பிரம்மாண்ட பங்களா இருக்கும்.
அதுதான் நாராயணசாமியின் வீடு. அதாவது வைஜெயந்தி மாலா வீட்டிற்கு எதிர்ப்புறம். இவர் தான் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் என்.ஸ்ரீனிவாசனின் தந்தை. இந்த தகவலை சிவாஜியே என்னிடம் சொன்னார்!
கெளரவம் பட வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் விஸ்வநாதன் – கண்ணதாசன் கூட்டு! தந்தைக்கு மகனுக்குமான போராட்டம். அதில் தந்தையின் மனத்துடிப்புக்கான பாடல் இரண்டு!
ஒன்று 'பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு செல்லம்மா என் செல்லம்மா'
இன்னொரு 'பாடல் நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா' பாடல்! அந்த பாடலின் ஆழத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதுதான் புரியும்.
அதில் ஒரு சரணம் `மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே! மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே’வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே! மாறும் அவதாரமே இதுதான் உலகிலே’ புராணத்தை கொண்டு வந்து நிஜ வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைக்கிற திறன் கண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியம்!
படம் சென்னை சாந்தி தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி ஒடியது. அடுத்து சிவாஜி கெளரவ வேடத்தில் நடித்த படம் ` மனிதருள் மாணிக்கம்’ பல சிவாஜி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெருத்த ஏமாற்றம். சிவாஜியை ஒரு கோமாளி டாக்டராக காட்டியிருப்பார்கள்.
அதில் ஒரு பாட்டு மட்டும் ஹிட் ஆனது! சிவாஜி படங்களில் மைல்கல்லாக விளங்கிய படம் ` ராஜபார்ட் ரங்கதுரை’. இந்த படத்தில் அவருக்கு ஒரு நாடகக்காரன் வேடம்! சிவாஜிக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது.
நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டு, தன் நாடக வாழ்க்கையை அவர் திரையில் காட்டுவது மாதிரி அமைந்தது இந்த படம்.
இந்த படத்தில் அவருக்குத்தான் நடிக்க எத்தனை வாய்ப்புக்கள்! பிச்சு உதறிவிட்டார். மேடையில் பகத் சிங்காக, திருப்பூர் குமரனாக, ஹாம்லெட்டாக வந்து கலக்கிய படம்.
சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்ட படம் இது. பாடல்கள் அத்தனையும் அருமை! இதில் ஒரு காட்சியில் ஹாம்லெட்டாக வருவார்! ஆங்கிலத்தில் வசனம் பேசுவார்! சிவாஜிக்காக ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்பவர் குரல் கொடுத்திருந்தார்.
ஆனால் சிவாஜி ஆங்கிலம் பேசும்போது, தியேட்டரில் விசில் பறக்கும்! சென்னை பைலட் தியேட்டரில் வெளியான படம் இது!
1974ம் வருடம் வந்த சிவாஜி படங்கள் ஆறு. இதில் இரண்டு படங்கள் பெரும் வெற்றி! ஒரு படம் வெற்றி! மற்ற படங்கள் சுமார் ரகம்!
இதில் ஒருபடம் தயாரிப்பாளருக்கு வசூலை குவித்தது! ஆனால் சிவாஜி அந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடாது என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தன.
அந்தப் படத்திற்கு வருவோம்
இந்த வருடத்தில் வந்த படத்தில் முக்கியமானது 'தங்கப் பதக்கம்'. அதைப் பற்றி இங்கே ஏற்கனவே சொல்லிவிட்டோம்,
'சிவகாமியின் செல்வன்' வழக்கமாக இந்தியில் பெரும் வெற்றி அடைந்த படங்களை தயாரிப்பாளர் பாலாஜிதான் அதன் உரிமையை வாங்கி, தமிழில் எடுப்பார்.
அகில இந்தியாவிலும் மாபெரும் வெற்றியை குவித்த இந்தி படம் 'ஆராதனா' !
இந்தியில் ராஜேஷ் கன்னாவும், சர்மிளா டாகூரும் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் வந்த ரூப்பு தேரா மஸ்தானா’ பாடலை இந்தி தெரியாத நமது குக்கிராம மக்கள் கூட முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். பாடல்கள் அத்தை பிரபலம்!
ஆனால் இந்த படத்தை ஜெயந்தி பிலிம்ஸார் தமிழ் உரிமையை வாங்கியிருந்தார்கள்.
இந்தி `ஆராதனா’ படத்தின் தமிழாக்கம் தான் சிவாஜி – வாணிஸ்ரீ நடித்த 'சிவகாமியின் செல்வன்'!
இந்தி படப்பாடல்களின் சாயலே தெரியாமல் அருமையாக இசையமைத்திருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.
இந்தப்படத்தை இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். படம் நன்றாகவே ஓடியது. இந்த வருடத்தில் வந்த இன்னொரு பாலாஜியின் படம் ` என் மகன்’ இதுவும் ஒரு இந்தி படம் தான்.
இதில் சிவாஜிக்கு அப்பா – பிள்ளை என்று இரட்டை வேடம்! சிவாஜி பாணியில் அமைந்த ஒரு மசாலாப் படம் இது! நூறு நாட்களைத் தாண்டி சென்னை தேவி தியேட்டரில் ஓடியது.
`தாய்’ சிவாஜி ரசிகர்கள் மனதை எட்டவே எட்டாத ஒரு படம்! `அன்பைத் தேடி’ இதில் சிவாஜிக்கு பொருத்தமில்லாத ஒரு வேடம். இதில் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா! கனவுகாணும் கதாபாத்திரம் சிவாஜிக்கு!
இந்தப் படத்தை முக்தா பிலிம்ஸார் எடுத்திருந்தார்கள். அதே போல் சிவாஜி ரசிகர்களை ஏமாற்றி, தயாரிப்பாளருக்கு வசூலை குவித்த படம் 'வாணி ராணி' இந்த படத்தில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடம்.
இந்தியில் ஹேமாமாலினி நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் ` சீதா அவுர் கீதா ‘. உண்மையில் பார்த்தால் இது ` எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் பெண் பதிப்பு என்றே இந்த படத்தை சொல்லலாம்.
அதே கதை!
'எங்க வீட்டுப் பிள்ளை'யில் ஒரு
எம்.ஜி.ஆர். சாது, இன்னொருவர் வீரர்.
அதையே அப்படியே கதாநாயகிக்கு மாற்றினார்கள்.
ஒரு கதாநாயகி சாது! இன்னொருவர் வீராங்கனை
இந்தியின் இரட்டை வேடம் ஹேமாமாலினிக்கு!
இந்த படம் இந்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது.
`எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை எடுத்த விஜயா வாஹினி புரொடக்*ஷன்ஸ் இதை தமிழில் எடுக்க முடிவு செய்தார்கள். தமிழுக்காக வாணிஸ்ரீ! படத்தின் முழு அமைப்பும் கதாநாயகி மேல்தான். அவருக்கு பக்கபலமாக இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் சிவாஜி, இன்னொருவர் முத்துராமன்! சிவாஜிக்கு இதில் தீனியே இல்லை! இதை சிவாஜியிடமே கேட்டார் எழுத்தாளர் ஆரூர்தாஸ். சிவாஜி சொன்னார்,`ஆரூரான், சில சமயம் பெரிய முதலாளிகள் கேட்கும்போது தட்ட முடியாது!’
(தொடரும்)

sivaa
23rd April 2017, 06:25 PM
பாகுபலி திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் சில வழக்கம் போல போராட்டம் நடத்தியதும், பின் நம்முடைய சத்யராஜ் அவர்களும் அதற்கு வருத்தம் தெரிவித்து விட்டதனால் போராட்டம் கைவிடப் பட்டது என்ற செய்தியை மொத்த ஊடகங்களும் திரும்ப திரும்ப ஒளி பரப்பியதால் செய்திகளை தெரிந்து கொண்டோம்,
சரி பாகுபலி கர்நாடகத்தில் தடைபடுவதால் தமிழகத்திற்கு என்ன இழப்பு என்பது புரியவில்லை,
சரி அதை விடுவோம்,
இதே கன்னட அமைப்புகள் சில வருடங்களுக்கு முன் செய்த ஒரு அட்...டூழியத்தை நினைவு படுத்துகிறேன்
1996 ல் கன்னடத்தில் திரு சாய்குமார் நடிப்பில் வெளி வந்த" போலிஸ் ஸ்டோரி" திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது, படம் ஒரு வருடங்களுக்கும் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது படம் தமிழ், தெலுங்கு என்று டப்பிங் செய்யப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் செக்கப் போடு போட்டது என்றே சொல்ல வேண்டும்,
ஒரே படத்தின் வெற்றி திரு சாய்குமார் அவர்களை திரையுலகத்தை திரும்ப பார்க்க வைத்தது, அந்த வெற்றி கன்னட முன்னோடி நடிகர்களை பொறாமை கொள்ள வைத்தது.
படத்தின் இத்தனை பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன என்ற மீடியாக்களின் கேள்விக்கு நடிகர் திலகம் சிவாஜி தான் காரணம் என்றார் திரு சாய்குமார்
மேலும் அவர் கூறுகையில் நடிகர் திலகத்தின் நடிப்பு எனக்கு சினிமா ஆசையை தூண்டியது தங்கப் பதக்கத்தை மனதில் கொண்டு போலிஸ் ஸ்டோரியில் நடித்தேன் என்றும் எனது பூஜை அறையில் நடிகர் திலகத்தை வைத்து வணங்கி வருகிறேன் என்று வெளிப்படையாகவே புகழ்ந்தார், போலீஸ் ஸ்டோரியின் வெற்றியைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் குவியத் தொடங்கின, ஏற்கனவே பொறாமை கொண்ட கன்னட முன்னணி நடிகர்கள் சாய்குமார் அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த கன்னட அமைப்புகளை தூண்டி விட்டனர், கன்னட அமைப்புகளும் அவரை எதிர்க்க எந்தக் காரணமும் இல்லாமல் போக இறுதியாக சிவாஜி தமிழர் அவரை எப்படி இங்கு புகழலாம், இங்கு எங்கள் ராஜ்குமாரை மட்டுமே புகழ வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர், கொஞ்சமும் பணிந்து போகாத திரு சாய்குமார் அவர்கள் அதுவரை ஒப்பந்தம் செய்து கொண்ட படங்களை மற்றும் நடித்து முடித்து விட்டு வெளியேறி தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்தி வருகிறார், அவ்வப்போது தமிழ் திரைப்பட ங்களிலும் நடித்து வருகிறார்,
இப்படி தமிழர் சிவாஜி அவரை போற்றியதனால் எத்தனை பெரிய இழப்பை ஏற்றுக் கொண்டார் திரு சாய்குமார் அவர்கள், இத்தனை பெரிய தமிழருக்கு எதிரான ஒரு செய்தியை எந்த ஒரு நடுநிலை ஊடகங்களும் அப்போது வெளியிடவில்லை,
நடிகர் திலகம் பற்றிய செய்திகளை தமிழக மக்கள் அறியாத வண்ணம் பார்த்துக் கொள்வது மட்டுமே தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டு வரும் முதல் துரோகச் செயலாக இன்று வரை இருந்து வருகிறது, அதற்கு சிறந்த உதாரணமாக ஆந்திர மாநிலத்தின் நகரி. அருகே அமைந்துள்ள நடிகர் திலகத்தின் இரண்டு திரு உருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்ற மிக முக்கிய செய்தியை மூடி மறைத்தது..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18058184_1311194245664129_6477685041121345032_n.jp g?oh=b1fbacc9624eadf6755d4c667ed57334&oe=59784F10

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18119199_1311194352330785_8474320531027513886_n.jp g?oh=61387dc78bac0423412fa125611d0686&oe=59978EA6

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18057052_1311194708997416_6365479805881745300_n.jp g?oh=fe116e761ea7c2f35e2bb3130b721a7d&oe=59899E33

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18118550_1311194795664074_1578296685196681931_n.jp g?oh=546064bc7ce3d2da1ebb7af159074929&oe=5985DE4E




முகநூலில் இருந்து

adiram
24th April 2017, 11:52 AM
ஆந்திர மாநில எல்லையில் மிக குறுகிய இடைவெளியில் நகரியிலும், சத்தியவாடாவிலும் நடிகர் திலகத்தின் இரு முழு உருவசிலைகள் திறக்கப்பட்டு நடிகர்திலகத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில்....

மனதில் வலியாக இருப்பது, திருச்சி மாநகரில் பாலக்கரை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டும் இன்னும் திறக்கப்படாமல் போர்த்தப்பட்டு இருக்கும் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலை, அதற்கான முறையான அனுமதி கிடைக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

சென்னை மெரினா வில் அமைந்துள்ள நடிகர்திலகம் சிலை தொடர்பாக நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் நிலைப்பாடு போற்றுதலுக்கு உரியது. அந்த சிலையை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற நேரும் பட்சத்தில் அது மெரினா கடற்கரையிலே காந்தி, காமராஜ் சிலைகளுக்கு நடுவே வைக்கப்பட வேண்டும். மணிமண்டபத்தில் வேறு ஒரு சிலை நிறுவப்பட வேண்டும்.

(மணிமண்டபத்தின் பணிகளும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஏதோ கடனுக்கு செய்வது போல உள்ளது. அவ்வளவு பெரிய இடத்தில, சுற்றிலும் இடத்தை வேஸ்டாக விட்டுவிட்டு நடுவில் மட்டும் ஒரே ஒரு ஹால் போல கட்டப்படுகிறது)

RAGHAVENDRA
25th April 2017, 10:31 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18157771_1424544427596225_4485330759209358889_n.jp g?oh=22a5f476ab58a802199b377cb6832818&oe=59766113

Gopal.s
25th April 2017, 12:14 PM
முத்தையன் மறைவு நமக்கு பேரிழப்பு. ஆண்டவனுக்கு யாராவது தேவை என்றால் நான் தேர்ந்தெடுத்து சிலரை அனுப்பி இருப்பேன். நல்லவர்களை ஏன் கூட்டி போகிறான் என்பது தெரியவில்லை.

அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

sivaa
25th April 2017, 02:14 PM
இன்று தொலைக்காட்சிகளில் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
காலை 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்லஸ்
" அவன் ஒரு சரித்திரம் "
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்லஸ்
" மண்ணுக்குள் வைரம் "
... பிற்பகல் 2:30 க்கு ஜெயா தொலைக்காட்சி
" முதல் மரியாதை"
மாலை 7 மணிக்கு சன் லைப் சேனலில்
" பலே பாண்டியா "
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" அன்னை இல்லம் "
கண்டு மகிழ்வோம்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18119176_607377259455400_6313561623834503813_n.jpg ?oh=ba5d730e8d206b96d4e2053efea9f714&oe=59C19CF4

(முகநூலில் இருந்து)

RAGHAVENDRA
26th April 2017, 07:07 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18118579_1425384860845515_5463487962045495670_n.jp g?oh=b711d5d5029f1773819a03e080f6d5b3&oe=597D72E2

Gopal.s
26th April 2017, 08:09 AM
மஸ்தான்,

எங்கள் தலைவரின் புகழ் ,திறமையின் அடிப்படையில், உருவானது. பொய்மையினால் தூக்கி பிடிக்க வேண்டிய அவசியம் வேண்டாதது. நாங்கள் ஒவ்வருவரும் நேர்மையாய் பதிவுகள் இடுவதால் எங்களுக்கு காவல் தேவையில்லை.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களுக்குத்தான் காப்பு தேவை.

Gopal.s
26th April 2017, 08:12 AM
ஒவ்வொரு உழைப்பாளர் தினத்திற்கு முன்பும் எனது கடமையாய் நான் கொண்ட ஒன்று. இந்த வருடமும் தவறாமல்.....

Gopal.s
26th April 2017, 08:16 AM
நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.(1st May 2017)

வள்ளுவருக்கு வாசுகி போல நமது கடவுளுக்கு பத்தினியின் வருகை நாள்.

உழைப்பவர் உயர வேண்டும் என்ற நோக்கில் ,உழைப்பவரின் உரிமையை இறுதி செய்த உழைப்பவர் தினம் மே திருநாள்.

உழைப்பாளிகளுக்கே ,தன திறமை சார் அயலா உழைப்பால் பெருமை சேர்த்த நமது கடவுள் நடிகர்திலகத்தின் மூன்று படங்களை இன்று
பிரசாதமாய் படைப்பது எனது வருடாந்தர வைதீகம்.

ஒன்று தற்செயலாய் சங்க நடிவடிக்கையில் தள்ள படும் ஆலை தொழிலாளி, ஒன்று நில சுவாந்தார்களுடன் முரண்படும் விவசாய தொழிலாளி,மற்றது உயரிய நோக்கம் கொண்ட நகர ரிக்ஷா தொழிலாளி.

மூன்றும் மூன்று வேறுபட்ட காலங்களின் வெவ்வேறு நடிப்பு முறைகள்.

படைப்பது என் கடமை,பெருமை,உரிமை.

நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Gopal.s
26th April 2017, 08:17 AM
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.

இரும்புத்திரை (iron curtain )- 1960

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.

நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.

அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.

தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.

இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.

நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?

இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).

ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.

மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

Gopal.s
26th April 2017, 08:21 AM
(தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)

சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

Gopal.s
26th April 2017, 08:25 AM
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

பாபு- 1971.

சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.

RAGHAVENDRA
28th April 2017, 11:27 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/18157987_1427123657338302_8298811575800922499_n.jp g?oh=0093a3c5fb951bcb86b2aba231803e8e&oe=598FA7C3

sivaa
30th April 2017, 08:59 AM
பார் மக்களே பார் படத்தில் அப்போதைய கதாநாயகிகள் விஜயகுமாரி, புஷ்பலதாவிற்கு தந்தை வேடம். முத்துராமன் மருமகன். யார் நடிக்க துணிவார்கள், நடிகர் திலகத்தை தவிர. மோட்டார் சுந்தரம் பிள்ளை 13 குழந்தைகளுக்கு தந்தை. ஜெயலலிதாவிற்கு தந்தை, ரவிச்சந்திரனுக்கு மாமனார் யாருக்கு துணிவு வரும் தந்தை வேடத்தை ஏற்க. கள்வனின் காதலி நடிகர்திலகத்தை விட வயது அதிகமான சகஸ்ராமனுக்கு தந்தை வேடம், ஏற்று நடித்தார். 1972 இல் ராஜா, நீதி, வசந்தமாளிகை, பட்டிக்காடா பட்டணமா? தவப்புதல்வன் ஆகிய படங்களில் நேற்று நடிக்க வந்த இளைஞன் மாதிரி நடிப்பிலும், நடனத்திலும் சக்கை போடு போட்டாரே யாரால் முடியும்? சான்ஸே இல்லை !


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18157059_1373684492696925_1903277842485218358_n.jp g?oh=4cf6e331cad6fc12de63acbd36e104c9&oe=5976E8A7

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18157450_1373698312695543_4099583041897678914_n.jp g?oh=d330b2ac039df82e376d0e2b1f474b3d&oe=5983C419

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18209295_1373700806028627_5161707398235573712_o.jp g?oh=ddade8283ef03a64e4f8cd14a1d854a5&oe=5986572E






(முகநூலில் இருந்து)

sivaa
30th April 2017, 09:00 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18156829_308569652912670_9056545401363243369_n.jpg ?oh=c3be547fa38303bebd41db8f8aecb365&oe=597CECB4


(முகநூலில் இருந்து)

sivaa
30th April 2017, 09:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/18194246_1299248823462878_3341436790997099832_n.jp g?oh=9a1aca246ad15af57ab1bae4146b422e&oe=599267F6
சிவாஜி கணேசன் இறந்து விட்டாரா ..?
.
யார் சொன்னது..?
.
கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை ... ...
சுமார் ஒன்பது மணி இருக்கும்.
.
ஃபேஸ்புக் நண்பர் திரு. வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன்
அவர்கள் ‘திடீர்’ என ஒரு பதிவு இட்டார்.. என் பெயரை டேக் செய்து..!
.
அது இதுதான்...!
.
“நண்பர் திரு John Durai Asir Chelliah ஸாருக்கு ஒரு சேலஞ்ச் .
சும்மா வெளையாட்டுக்குத்தான்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல , இந்தக் காட்சில வர்ற பாட்டுக்கும் , நடிகர் திலகத்திற்கும் ஒரு சிறப்பான ஸ்பெஷாலிடி உண்டு.
யார் மொதல்ல கண்டு புடிக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு புத்தகம் பரிசு. அவங்களுக்குப் புடிச்ச புத்தகம். வாங்கி அனுப்புவேன். பரிசுத் தொகை ரூ 500/-“
.
இப்படி எழுதி “தில்லானா மோகனாம்பாள்” காட்சி ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் ஆகப் போட்டிருந்தார் திரு. ஸ்ரீநிவாசன்.
.
காட்சியைப் பார்த்தேன்..! ஊஹூம்..! கண்டு பிடிக்க இயலவில்லை ..!
.
தோல்வியை ஒத்துக் கொண்டேன் .
.
சிரித்தபடி ஸ்ரீநிவாசன் கேட்டார் :
“ கண்டு பிடிக்க முடியலியா ..? நல்ல வேளை 500 ரூபாய் செலவில்லே !”
.
“தெரியவில்லை” என்று நான் சொல்லி விட்டாலும் , உள்மனதுக்குள் ஏதோ ஒரு ராகம் மெல்லியதாக ஒலித்தது.
.
“சட்” என கண்களை மூடி ஆழ்மனதை திறந்து வைத்தேன்.
.
ஆஹா.. அந்தப் பாடல் தெளிவாக என் காதுகளில் ஒலித்தது . அது இதுதான் :
. “ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே...
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே "
.
அட ... இது “பாவை விளக்கு” பாடல் அல்லவா ..?
சிவாஜி இந்த பாடல் மெட்டைத்தானே “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் நாதஸ்வரமாக அந்தக் காட்சியில் வாசிப்பார் .
.
பட பட பட வென கீ போர்டைத் தட்டி , பதில் அனுப்பினேன் திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு ..!
.
சந்தோஷத்துடன் கேட்டார் நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் :
“என்ன புத்தகம் வேண்டும் ஸார் ? சந்தோஷமாக அனுப்பி வைக்கிறேன்.”
.
நான் பதில் சொன்னேன் :
“ ஐயா ...எனக்கு புத்தக பரிசு வேண்டாம்... செங்கோட்டை அரசு மருத்துவமனை நூலகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்திரிகைகளை அனுப்பி வைக்க மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்”
.
நூலகம் பற்றி நான் எழுதி இருந்த பழைய பதிவையும் இணைத்திருந்தேன்.
.
ஆனந்தத்தில் ஆழ்ந்து போனார் திரு. ஸ்ரீநிவாசன் :
“அடடா, இதைப் போன்ற நல்ல வார்த்தைகளைக் கேட்க “ஆயிரம் காது போதாது வண்ணக் கிளியே ..!!" சொன்னது போலவே ரூ . 500 தொகையை அனுப்பி வைக்கிறேன்.”
.
திரு. ஸ்ரீநிவாசன் சொன்னதை விட , இரு மடங்கு தொகையை இந்த வாரம் அனுப்பி வைப்பதாக மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
.
நன்றிங்க திரு . வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் அவர்களே ..!
.
இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ..!
.
நானும் சிவாஜி ரசிகன் ..
ஸ்ரீநிவாசன் அவர்களும் தீவிர சிவாஜி ரசிகர் .
ஃபேஸ்புக்கில் நாங்கள் இருவரும் நட்பு வட்டத்திற்குள் வந்ததற்கு , சிவாஜியும் ஒரு முக்கிய காரணம் .
.
அது மட்டும் அல்ல ... சொல்லப் போனால் பொது நலம் நினைத்து திரு.ஸ்ரீநிவாசன் வழங்கும் இந்த நூலக உதவிக்கு , சிவாஜிதான் முக்கிய காரணம் .
.
சிவாஜி நடித்த “தில்லானா மோகனாம்பாள்” காட்சி மூலம்தானே , எங்களுக்குள் இந்த போட்டி வந்தது ..? அதுதானே இந்த பரிசையும் கிடைக்க செய்தது..?
.
“பாபு”படத்தில் சிவாஜி பாடியது என் காதுகளில் ஒலிக்கிறது :
.
“பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே..”
.
சிவாஜி இறந்து விடவில்லை..!
எங்களைப் போன்ற அன்பு ரசிகர்கள் இருக்கும்வரை , சிவாஜி , இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ..!
.
வாழ்க சிவாஜி புகழ் ..!
வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் திரு. ஸ்ரீநிவாசன் அவர்களே..!
.
வாழ்க வளமுடன்..!
.
vallam John…

(முகநூலில் இருந்து)

sivaa
30th April 2017, 09:06 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கம்பீரம் !
எத்தனையோ நடிகர்களை பார்த்துவிட்டோம். ஆனால் நடிகர் திலகம் மிடுக்கு, தோரணை, வலிமைமிக்க, உன்னத, விழுமிய, பகட்டாரவாரமான, ஒய்யார தோற்றத்தை யாராலும் காட்ட முடியாது. அதற்க்கு அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களே சாட்சி.
அவர் மகன் ராம்குமார் சொன்னார், “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18156882_1373217199410321_1907294143865065896_n.jp g?oh=92477d2c34fa24ad54da3b53435a4724&oe=597A85F2

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18198452_1373217402743634_2950903071882883978_n.jp g?oh=af2f961534ed5b146a6e032296c229dc&oe=59787C15

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18221967_1373217799410261_8533990684866067828_n.jp g?oh=bd87324f99f66edb3ba35f2323f2dd56&oe=59BC5795

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18157239_1373218229410218_4543370474500035642_n.jp g?oh=deb7047cace3f69902285dfb502038f4&oe=598D9162

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18198462_1373216992743675_7319761430364251030_n.jp g?oh=6a23075637bcbb7d510b53adbbd988e9&oe=59BCC86D

sivaa
30th April 2017, 09:10 AM
இணைப்பில் உள்ள செய்தி:-
முதல் படம் 30 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகத்தின் பேச்சைக் கேட்க ஈரோடு திடலில் கூடிய மக்கள் கடல்,
இரண்டாவது படம் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் நகரி அருகே நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் கடல்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18118525_1315442578572629_4791971706250735391_n.jp g?oh=304304a9f465b91a3373ef20383bbb7a&oe=59789122

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18118646_1315442648572622_7892072925942106254_n.jp g?oh=9d87f79444a038e61ecaf283c9d88082&oe=597B86BC



முகநூலில் இருந்து)

sivaa
30th April 2017, 09:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/s960x960/18121867_308152512954384_6761584536157234071_o.jpg ?oh=71dd164dfed634790b22492e7155a513&oe=59878BEC

sivaa
30th April 2017, 09:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18157253_284363902021331_1533643533899801384_n.jpg ?oh=6d270a043088a6d0731361491b39016b&oe=598FAAA5

Harrietlgy
30th April 2017, 05:38 PM
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 173– சுதாங்கன்.


http://www.dinamalarnellai.com/site/news_folder/173791450414933832081512316961vasantha%20maligai.j pg



ஒரு சிவாஜி ரசிகர் சொன்னார்,
`எம்.ஜி.ஆரை விட எங்கள் சிவாஜிதான் வசூல் மன்னன். ஒரே நாளில் அவருடைய இரண்டு படங்கள் வந்து இரண்டுமே நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கின்றன. ஆனால் எம்.ஜி.ஆரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். அதனால் எம்.ஜி.ஆரை ஆறு மாதங்களாக திரையில் பார்க்காத ரசிகர்கள் அலைமோதி படத்திற்கு வசூலை குவிக்கும்’ என்றார்.
ஒரு சிவாஜி ரசிகர் என்கிற முறையில் அவருடைய வாதம் சரியாக இருக்கலாம். சிவாஜி ஒரு கலைப் புதையல்.

சிவாஜியை திரையோடு மட்டும் பார்த்தார்கள். எம்.ஜி.ஆரை சமூகத்தோடும் இணைத்தார்கள். சிவாஜியின் சினிமா சரித்திரத்தில் நீக்க முடியாத படங்கள் 'ராஜா', 'ஞான ஒளி', 'தவப்புதல்வன்', 'நீதி', 'பட்டிக்காடா பட்டணமா', 'வசந்த மாளிகை'.
'ராஜா'வில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி, 'ஞான ஒளி'யில் பாசமுள்ள ஒரு முரட்டுத்தகப்பன், 'தவப்புதல்வ'னில் மாலைக்கண் நோயாளி, 'நீதி'யில் குடியினால் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன், 'பட்டிக்காடா பட்டணமா'வில் ஒரு பணக்கார கிராமத்தான், 'வசந்த மாளிகை'யில் குடிக்கு அடிமையான ஒரு ஜமீன் காதலன்.
சிவாஜிக்கு தன் இமேஜை பற்றி கவலையேயில்லை. அவருக்குத் தேவை அவர் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதாபாத்திரங்கள். அது மாதிரி பாத்திரங்களாகவே தேர்வு செய்து நடிப்பார். நல்ல நாடகங்களைத் தேடிப் போய் பார்ப்பார். அப்படி அவருக்கு கிடைத்ததுதான் 'ஞான ஒளி'.
'வசந்த மாளிகை' படத்தின் ஒவ்வொரு பாட்டும் சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் விருந்து. 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் வேடத்தில் பாலாஜி நடித்தார்.

அந்த கதாபாத்திரத்தின் மேல் சிவாஜிக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதற்கு 'சினிமா பைத்தியம்' படத்தில் கிடைத்தது. சினிமா வெறியர்களின் முட்டாள்தனத்தை துகிலுரித்துக் காட்டிய படம். இந்த படத்தை ஏல்.எல்.எஸ்.புரொடக்*ஷன்ஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். இதில் சிவாஜிக்கு கவுரவ வேடம். அந்த கதாபாத்திரம்தான் வாஞ்சிநாதன். 'டாக்டர் சிவா'வில் தொழுநோயாளிகளை குணப்படுத்தும் ஒரு டாக்டர் வேடம் சிவாஜிக்கு! இந்த படத்தை ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். சிவாஜிக்கு ஜோடி மஞ்சுளா. அந்த வருடம் முழுவதும் இந்தப்படத்தில் ஜேசுதாஸும், ஜானகியும் பாடிய 'மலரே குறிஞ்சி மலரே’ பாடல்தான் நம்பர் ஒன்னாக இருந்தது.

கவுரிமனோகரி ராகத்தில் மெட்டமைத்திருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன். ரசிகர்களை சுண்டியிழுத்த பாட்டு இது. தனக்குள் இருக்கும் எல்லா திறமைகளும் திரையில் வெளிப்பட வேண்டும் என்று ஆசைப்படுபவர் சிவாஜி.
`ஜனக் ஜனக் பாயல் பாஜே’ – இது பிரபல இந்தி இயக்குநர் சாந்தாராம் இயக்கிய படம். இது நாட்டியத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1955ல் வெளிவந்த படம் இது! இந்த படத்திற்கு வசந்த் தேசாய் இசையமைத்திருந்தார். ஒரு இளவரசனுக்கு ஒரு நாட்டிய தாரகை மேல் ஆசை. அவளுக்கோ நாட்டிய கலைஞன் மேல்தான் ஆசை. அதற்காகவே நாட்டியம் கற்றுக் கொள்வான் இளவரசன். இந்த படத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர் கோபிகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 1955ல் இந்தி உலகை கலக்கியது.. சிவாஜி, எம்.ஜி.ஆர்., இருவருக்குமே இந்தி இயக்குநர் வி. சாந்தாராம் மீது ஓர் ஈர்ப்பும், மரியாதையும் உண்டு.

அதனாலேயே அவர் இயக்கிய `தோ ஆங்கே பாரா ஹாத்’ படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் 'பல்லாண்டு வாழ்க' படமாக எடுக்க வைத்து நடித்தார்.
சிவாஜி தேர்ந்தெடுத்த சாந்தாராம் கதைதான் ஜனக் ஜனக் பாயல் பாஜே. சிவாஜி கோபிகிருஷ்ணா வேடத்தில் நடித்தார். நாட்டிய தாரகையாக ஜெயலலிதா நடித்தார். அவரைக் காதலிப்பதற்காகவே நாட்டியம் தெரியாத பணக்காரர் நாட்டியம் கற்றுக் கொண்டு ஜெயலலிதா உடனேயே நடனப் போட்டியில் இறங்குவார்.
சிவாஜிக்கு நாட்டிய பயிற்சி கொடுப்பதற்காகவே மும்பையில் இருந்து கோபிகிருஷ்ணாவின் சீடர் உதய்சங்கர் சென்னை வந்தார்.
வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான். வழக்கம்போல் எம்.எஸ். விஸ்வநாதன் இசை. 'வைரநெஞ்சம்' ஸ்ரீதர் இயக்கம். இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் படம்
`நமக்ஹராம்’. இந்த படத்தில் தர்மேந்திராவும், ராஜேஷ்கன்னாவும் இணைபிரியா நண்பர்களாக நடித்திருந்தனர். இதன் உரிமையை வாங்கினார் பாலாஜி. சிவாஜி-, ஜெமினி இருவரையும் வைத்து எடுத்த படம் 'உனக்காக நான்'.
சிவாஜியை விட ஜெமினிக்கு ஒப்பனையை மீறிய வயோதிகம் முகத்தில் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். இதுவும் சிவாஜி ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம்தான். அடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு தீனி போட்ட படம் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் வி.பி. ராஜேந்திரபிரசாத் இயக்கத்தில் வந்த 'உத்தமன்'.
கே.வி. மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் அருமையாக அமைந்த படம் இது. அடுத்தடுத்து வந்த சிவாஜி படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் 'கிரஹப்பிரவேசம்'– இது யோகானந்த இயக்கத்தில் வந்த படம். தம்பிக்காக பாடுபடும் அண்ணனின் கதை இது. இதில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. தம்பியாக சிவகுமார் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு எந்த பெரிய நடிகர்களோடும் நடிப்பதில்லை என்று சிவகுமார் என்ன காரணத்தினாலோ முடிவெடுத்தார். 'சித்ரா பவுர்ணமி' வந்த சுவடு தெரியாமல் போன சிவாஜியின் படம் இது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா! இந்த படத்தை காஷ்மீரில் போய் எடுத்தார்கள். இந்த படத்திற்கு இயக்கம் பி. மாதவன். இந்த படத்தில் நடிக்க காஷ்மீருக்கு போகக்கூடாது என்று ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர்., ஒரு முடிவு எடுத்தார்.
(தொடரும்)

sivaa
1st May 2017, 02:49 AM
http://oi65.tinypic.com/ofukxf.jpg



http://oi68.tinypic.com/4vr5o4.jpghttp://oi64.tinypic.com/20kq24z.jpghttp://oi64.tinypic.com/30kf67m.jpghttp://oi63.tinypic.com/vpx4ep.jpg

sivaa
1st May 2017, 03:30 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18222595_647610612096188_3263106633146247499_n.jpg ?oh=ee30c6dabe19e20a4554251bc012ae19&oe=598A3815

sivaa
1st May 2017, 03:33 AM
வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான்.

மன்னவன் வந்தானடி தோல்வி படமாம் அதுவும் மிகப்பெரிய தோல்விபடமாம்
இப்படித்தான் சிவாஜி கணேசனின் படங்கள் தோல்விப்படங்களாக சித்தரிக்ப்படுகிறது
இந்த எழுத்தாளன் யாரது கைக்கூலியோ ?


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/MAGAZINE_0002a-1.jpg


9. மதுரையில் முதன் முதலாக ஒரே காம்ப்ளெக்ஸ்- ல் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - மன்னவன் வந்தானடி.

அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா

நாள் - 02..08.1975

10. மன்னவன் வந்தானடி மதுரையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 125

11. மன்னவன் வந்தானடி மதுரையில் ஓடிய நாட்கள் - 110.


செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் சுதாங்கன்
என்பவர் பல தவறான தகவல்களை எழுதிவருகிறார்
நண்பர் பரணியும் அதனை கவனிக்காமல் இங்கே கொண்டுவந்து பதிவிட்டுவிடுகிறார்

சுதாங்கன் தெரியாமல் எழுதுகிறாரா? அல்லது தெரிந்தே எழுதுகிநாரா என்பது தெரியவில்லை
எனவே நண்பர் பரணி செலுலாய்ட் சோழன் தொடரை இங்கு பதிவிடுவதை நிறுத்திவிடுங்கள்
அத்துடன் முன்னைய பதிவுகளையும் பார்த்து நீக்கிவிடுவது நல்லது. இதனை கவனத்தில் எடுங்கள்.

sivaa
1st May 2017, 07:36 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18193935_1916002478683213_8115378675088134442_n.jp g?oh=5052f297a18c4c7f7b2720bba12c7f19&oe=597FCEAB



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18193753_1899969120243677_7863771645454875223_n.jp g?oh=df37392a1160658dbbcce2a9fa064341&oe=5989CA2F

தன்னுடைய 150 வது படத்தை கொஞ்சம் வித்தியாசமாக பிரசண்ட் பண்ண நினைக்கிறார்,,, மல்லியம் ராஜகோபால் ஒரு வில்லேஜ் ஸ்கிரீன் ப்ளேயை வைத்துக் கொண்டு சிவாஜியை சந்திக்கிறார...்,, வழக்கமான வில்லேஜ் சப்ஜெக்ட் ஆக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும் கமர்ஷியலாகவும் இருக்கிறது,,, மல்லியம் தானே எழுதி தயாரித்து இயக்கும் முடிவில் இருக்கிறார்,, டைட்டில் சேலஞ்சிங்காக இருக்க வேண்டும் என்றவுடன் "சவாலே சமாளி" என்ற டைட்டிலை சொல்கிறார்,. படம் துவங்குகிறது,,
ஆண்டான் அடிமை என்ற நிலைமை மாறிவரும் சூழ்நிலையில் அந்த மாற்றங்களை தன்னகத்தே விதைத்துக் கொண்ட ,,, துடிப்பான கிராமத்து இளைஞனாக நடிகர் திலகம்,,, ட்ரிம் ஆகவும் ஸ்மார்ட் ஆகவும் கோபம் வேகம் பாசம் அன்பு பணிவு காதல் என்று அத்தனை இமோஷன்களையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம்,,, பணக்காரன் ஏழை என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டும் குறிப்பிட வில்லை இந்தப்படம்,,, கூர்ந்து கவனித்தோமேயானால் அதையும் தாண்டி சாதீய சங்கிலிகளையும் உடைத்தெறிகிறது கதைக் களம்,,, மாணிக்கம என்ற பெயர்,,, அவரது பெற்றோர் தங்கை அவர்களது உடைகள்,,, அவர் வசிக்கும் குடிசை உண்ணும் உணவு விவசாய கூலி என்ற தொழில் ,,, இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஒரு தலித் இளைஞனாக உருவகப்படுத்திய
தாக உணர்ந்து கொள்ள முடிகிறது,,, ஆனால் பளிச்சென்று இயக்குநர் சொல்லவில்லை,, ஆனால் பெரிய பண்ணையாரான பகவதியின் சாதி குறிப்பிடப்பட்ட
ு இருக்கிறது,,, சவாலில் வென்று அவர் மகளை அடைகிறார் சிவாஜி,,, இதுதான் படத்தின் பாதிக்கதை,,, "ஆனைக்கொரு காலம வந்தால் பூனைக் கொரு காலம் வரும் புரிஞ்சுக்கோ" என்ற பாடல் எதை கருத்தில் கொண்டு எழுதி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது,,,
பண்ணையாரிடம் அளவுக்கு மீறிய விஸ்வாசியான தந்தை ராகவன்மேல் சிவாஜிக்கு ஏற்படும் நுனிமூக்கு கோபம் அதை அவர் வெளிப்படுத்தும் லாவகம்,, தங்கையை வாழாவெட்டி ஆக்கி விட்டு வைப்பாட்டியுடன் குடும்பம் நடத்தும் மச்சான் மீது ஏற்படும் கோபம் அதை வெளிப்படுத்தும் லாவகம்,,, இரண்டு கோபங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை காட்டும் முகபாவம்,, இவர் யாரோ ஒரு நடிகர் அல்ல,,, நடிகர் தலைவர் என்பதை நினைவு படுத்துவார்,,, பண்ணையாரின் மாடி வீடு அருகில் இவரது கையகல நிலம்,,, அது அவர்களுக்கு அவமானம் இவருக்கு தன்மானம்,,, இப்படி முரண்பட்ட முடிச்சு முதல் மூன்றாவது ரீலிலேயே விழுந்து விடுகிறது,, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவன்டா என்றதுபோல் தந்தையை வைத்துக் கொண்டு மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமலும் காட்டும் சிவாஜி முகபாவங்கள் புதிது புதிதாக இருக்கும்,, அடுத்து பண்ணையார் மகள் என்ட்ரி அழுகுடைந்த உடைகளை கழுவிக்கொடு என்று சொல்லும் போது நான் என்ன உன் பருஷனா என்று கேட்கும் கோபம் நிஜமானது,,, பண்ணையார் மகன் எம் என் நம்பியார் சிவாஜி இருவருக்கும இடையிலான பிரச்னை கைகலப்பாகி அவரை அடித்து துவைக்கும் காட்சி,,, அந்த கோபம் இன்னொறு வித்தியாசமான கோபம,, இப்படி கோபம் என்ற ஒற்றை உணர்ச்சியையே இத்தனை விதமாக காட்டியிருப்பது சிவாஜி ஸ்பெஷல்
பஞ்சாயத்து தேர்தல் சவால்,,, பகவதி தனது ஒரே பெண்ணை பந்தையம் வெக்கிற அளவுக்கு கொண்டுவந்து விட்டு விடுவார் நாகேஷ்,,, தருமி, வைத்தி, வரிசையில் இந்த சின்னப் பண்ணைக்கும் இடமுண்டு,,, பெரும்பாலான சிவாஜி சினிமாக்களில்தான் நாகேஷூக்கு இந்த மாதிரி ஸ்பேஸ் கிடைத்திருக்கிறது,,
நாகேஷ் என்ற அற்புத கலைஞனை மோல்டு செய்ததில் பெரும் பங்கு சிவாஜிக்கு இருந்தது என்பதில் ஐயமில்லை,, தேர்தல் ரிசல்ட் வர வர தாலியை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கும் சிவாஜியின் முகபாவங்கள் பணத்திமிர் சாதிய பாகுபடு இரண்டையும் ஒழித்துக் கட்டப் போகிறேன் என்கிற ஃபயர் அவர் கண்களில் தெரியும்,,, அதையும் தாண்டி ஜெயலலிதா மீது பிறந்த காதலின் பவர்,,, அதுவும் தெரியும் அதன் நீட்சியாக நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்ற கவியரசர் பாடல் அத்தனை கதைகளையும் சொல்லும்,,,அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் அந்த பாடற் காட்சியில் சிவாஜியின் டாமினேஷன் இன்றும் பேசப்படுகிறது,,, அந்த பாடலில் ஒவ்வொறு வரிகளும் குறிப்பாக " புதியதல்லவே தீண்டாமை என்பது.. புதுமையல்லவே அதை நீயும் சொல்வது" இந்த வரிகளில் சிவாஜி 100%க்கு மேலேயே நடித்திருப்பார்,,, இரண்டாம் பாதிக் கதையில் மனைவியை தனக்கேற்றவளாக படிப்படியாக மாற்றுவது அழகிய சிறுகதை,,,, படத்தில் பல வசனங்கள் சிவாஜிக்காகவே மெனக்கெட்டு எழுதி இருப்பார் மல்லியம்,,, என்ன பாவத்துடன் அந்த டயலாக் டெலிவரி செய்வார் என்று ஒரு இயக்குநராக எதிர் பார்ப்பாரோ அதைவிட சிறப்பாக படம் முழுதும் பேசி இருப்பார்,,, ஒரு உழைப்பாளியின் தோழனாக விவசாயின் மகனாக இந்தப்படத்தில் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி இருப்பார்,,, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சாதிய குணாதியங்களை கண்டு குமுறும் இளைஞனாக வந்து நடிகர்திலகம் இந்தப் படத்தை நமக்கு பரிசளித்திருப்பதால் இதை மேதின பதிவாக பதிவிடுகிறேன்,,

முகநூலில் இருந்து)

RAGHAVENDRA
1st May 2017, 08:55 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/18157412_1429621207088547_2886934800324962060_n.jp g?oh=58f26adde0a28a05f630c917ec6afabd&oe=59BA84F9

adiram
1st May 2017, 01:02 PM
[B] செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 173– சுதாங்கன். 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான். வழக்கம்போல் எம்.எஸ். விஸ்வநாதன் இசை. 'வைரநெஞ்சம்' ஸ்ரீதர் இயக்கம். இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் படம்

ஐயா சுதாங்கன் அவர்களே,

உங்களுக்கெல்லாம் தெரிந்ததை விட பல மடங்கு திரையுலக விவரங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்ற சவுகரியத்தால் உங்களுக்கு எழுத சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் வாந்தி எடுத்து வைக்காதீர்கள். செல்லுலாயிட் சோழன் என்ற உங்கள் தொடரில் ஏகப்பட்ட தவறுகள் மலிந்து கிடக்கின்றன.

தென்காசி சகோதரர்கள் சங்கரன் ஆறுமுகம் இருவரும் தெய்வத்தாய் படத்தில் பங்குதாரர்கள் என்பது மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் தனியாக தயாரித்த படங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரியவில்லை.

தனியாக 'ஜேயார் மூவீஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதலில் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரை வைத்து 'புதிய பூமி' படம் தயாரித்தது தெரியவில்லை.

பின்னர் நடிகர்திலகத்தை வைத்து தொடர்ந்து...

எங்க மாமா (1970 )
ஞான ஒளி (1972 )
மன்னவன் வந்தானடி (1975 )

ஆகிய படங்களை தயாரித்தது தெரியவில்லை.

"மூன்றுமே வெற்றிப்படங்கள் என்பது தெரியவில்லை"

1976 ல் நடிகர்திலகத்தின் திரை வாழ்க்கையில் லேசான தேக்க நிலை கண்டு அணி மாறி ஓடிப்போன ஒருசில தயாரிப்பாளர்களில் இவர்களும் சேர்ந்து, மீண்டும் திரு எம்.ஜி.ஆரை வைத்து "அண்ணா நீ என் தெய்வம்" என்ற படத்தை தயாரிக்கத் துவங்கி அது பாதியில் நின்று போனது தெரியவில்லை.

அதுவரை எடுக்கப்பட்ட அப்படத்தின் காட்ச்சிகளை (எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின்) கே.பாக்யராஜ் தனது "அவசர போலீஸ் 100 " என்ற படத்தில் இணைத்து வெளியிட்டதும் தெரியவில்லை.

இப்படி எதுவுமே தெரியாமல் இருந்துகொண்டு, நூறு நாட்களுக்கு மேல் ஓடிய பெரும் வெற்றிப்படமான மன்னவன் வந்தனாடியை தோல்விப்படம் என்று எழுதமட்டும் தெரிகிறது. ஒழுங்காக தெரிந்தால் எழுதுங்கள். இல்லாவிட்டால் தொடர் எழுதுவதை நிறுத்துங்கள். நீங்களெல்லாம் எழுதித்தான் எங்கள் தலைவர் பரவ வேண்டுமென்று இல்லை.

வைர நெஞ்சம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லைதான். அதற்காக அது நடிகர்திலகத்துக்கு பொருத்தமில்லாத ரோல் என்று எப்படி எழுதலாம். (எங்கள் மாற்று முகாமைசேர்ந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கூட அப்படி சொன்னதில்லை) அப்படத்துக்கு தேவையான இளமை, அழகு, துள்ளல், துடிப்பு, சண்டை என்று அனைத்தையும் அற்புதமாக செய்திருந்தார். இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா?. ( இதன் இந்திப்பதிப்பு மிகப்பெரிய வெற்றி என்ற பொய்யய்யும் அவிழ்த்து விட்டுள்ளீர்கள். Jitendra, அமிதாப், பிந்து நடித்த "கெஹ்ரி சால்" படமும் சராசரிக்கும் கீழேதான் ஓடியது).

(நண்பர் திரு பரணி அவர்களுக்கு,
நடிகர்திலகத்தைப்பற்றிய உண்மைக்கு மாறாக சிலர் வாந்தியெடுக்கும் பதிவுகளை இங்கே பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்)

sivaa
2nd May 2017, 04:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18010648_1181355898640651_226953400805327980_n.jpg ?oh=f4b06d17d3e96b14638ea6cc9c85380f&oe=598E7B55

RAGHAVENDRA
2nd May 2017, 09:04 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301032_1430478600336141_755979434194272755_n.jpg ?oh=0c977cb472f5d05485fd99feb56a7d50&oe=597FF4A8

RAGHAVENDRA
2nd May 2017, 09:05 AM
Bharani SirHereafter do not share Suthangan's Posts here.

Harrietlgy
2nd May 2017, 09:35 PM
வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
`தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான்.

மன்னவன் வந்தானடி தோல்வி படமாம் அதுவும் மிகப்பெரிய தோல்விபடமாம்
இப்படித்தான் சிவாஜி கணேசனின் படங்கள் தோல்விப்படங்களாக சித்தரிக்ப்படுகிறது
இந்த எழுத்தாளன் யாரது கைக்கூலியோ ?


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/MAGAZINE_0002a-1.jpg


9. மதுரையில் முதன் முதலாக ஒரே காம்ப்ளெக்ஸ்- ல் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - மன்னவன் வந்தானடி.

அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா

நாள் - 02..08.1975

10. மன்னவன் வந்தானடி மதுரையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 125

11. மன்னவன் வந்தானடி மதுரையில் ஓடிய நாட்கள் - 110.


செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் சுதாங்கன்
என்பவர் பல தவறான தகவல்களை எழுதிவருகிறார்
நண்பர் பரணியும் அதனை கவனிக்காமல் இங்கே கொண்டுவந்து பதிவிட்டுவிடுகிறார்

சுதாங்கன் தெரியாமல் எழுதுகிறாரா? அல்லது தெரிந்தே எழுதுகிநாரா என்பது தெரியவில்லை
எனவே நண்பர் பரணி செலுலாய்ட் சோழன் தொடரை இங்கு பதிவிடுவதை நிறுத்திவிடுங்கள்
அத்துடன் முன்னைய பதிவுகளையும் பார்த்து நீக்கிவிடுவது நல்லது. இதனை கவனத்தில் எடுங்கள்.

எனக்கு விவரம் தெரியாததால் பதிவு செய்தேன். அதில் மற்றவரை புகழந்து பதிவிட்டதை நீக்கி விட்டேன். இது தவறி விட்டது . மன்னிக்கவும் .

Harrietlgy
2nd May 2017, 09:40 PM
Bharani SirHereafter do not share Suthangan's Posts here.

Yes sir, I will stop.

sivaa
3rd May 2017, 08:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18222215_310387009397601_5901386065276621423_n.jpg ?oh=186c602e0936af028d49f8305001278f&oe=59C08E2B

sivaa
3rd May 2017, 08:43 AM
[QUOTE=sivaa;1320202]

எனக்கு விவரம் தெரியாததால் பதிவு செய்தேன். அதில் மற்றவரை புகழந்து பதிவிட்டதை நீக்கி விட்டேன். இது தவறி விட்டது . மன்னிக்கவும் .


நண்பர் பரணி
சுதாங்கனின் செலுலாய்ட் சோழன் தொடரில் முழுவதுமே
தப்பும் தவறுமாகவே எழுதப்படுகிறது; நான் சுட்டிகாட்டி எழுதியது மிகப் பெரிய தவறை மட்டுமே.
அதனால்தான் நீங்கள் இங்கு கொண்டுவந்து பதிவிட்ட எல்லா சுதாங்கனின் பதிவுகளையும்
நீக்கிவிடும்படி கேட்டுக்கொண்டேன்.நேரம் உள்ளபொழுது அப்பதிவுகளை நீக்கிவிட்டு
அதற்கு பதிலாக நடிகர் திலகத்தின் படங்கள் எதையாவதுஇணைத்துவிடுங்கள்.


சுதாங்கனின் செலுலாய்ட் சோழன் தொடர் முழுவதையும் இத்திரியில் இருந்து
அகற்றுவது நல்லது.

KCSHEKAR
3rd May 2017, 03:56 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/CoimbatoreInterviewDinathanthi1May2017_zpswhsb3tb8 .jpeg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/CoimbatoreInterviewDinathanthi1May2017_zpswhsb3tb8 .jpeg.html)

sivaa
4th May 2017, 01:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18198589_310802382689397_3086178565513145777_n.jpg ?oh=6a48c7d5881f564524dbcbb0132f6c45&oe=598CC354

sivaa
5th May 2017, 07:48 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18221969_649473385243244_1389474999018391332_n.jpg ?oh=285893c1a902c1d616db1bda757bc207&oe=59824ACC

sivaa
5th May 2017, 07:52 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15873055_1421552294522280_1704987947267432891_n.jp g?oh=cb434ef31d09a1ccc2a12fbc02112d56&oe=59783695

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15826328_1421592021184974_766804426037821686_n.jpg ?oh=a50f140aac129b7c28d1c9091efbe0e5&oe=59B82D41

"சிவாஜி கணேசன்" எனும் காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன்.. உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத நடிப்புத்திறமையோடு தமிழ் திரையுலகில் நடிகர் திலகமாக கோலோச்சிய மாபெரும் கலைப...்பொக்கிசம்... இவரின் நடிப்புத்திறமையை சாதாரண ரசிகனாக அமர்ந்து கைதட்டி ரசித்ததைவிட, திரைப்பட இயக்குநர் ஆனபின் அவர் படங்களைப்பார்க்கும்போது அவரின் நடிப்பின் பரிமாணம் அதற்கு அந்த கலைஞன் எடுத்திருக்கும் சிரத்தை (நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில்) ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்குகிறது...
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தனித்தனி பாவனைகளை, வசன உச்சரிப்புகளை, உடல்மொழியை பயன்படுத்தியிருக்கும் இந்த கலைஞன் எந்த உலகபயிற்சி வகுப்பிலும் தயார் செய்துகொண்டவர் அல்ல..
தன்னைத்தானே செதுக்கி கொண்டு தன் திறமையை மட்டுமே நம்பி கடைசிவரை எந்த அங்கீகாரங்களையும் எதிர்பார்க்காமல் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அதற்கு அந்த கலைஞனின் தொழில் பக்தியும் திறமையும் நேர்மையும் மட்டுமே காரணம்..
இன்று கூட சென்னை ஶ்ரீனிவாசா திரையரங்கில் "சிவகாமியின் செல்வன்" 25வது நாள்...
நானும் என் பால்ய நினைவுகளை எண்ணிக்கொண்டு சென்றேன்..
அங்கே கண்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது...
வரும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைவு...
ஆம்.. ஒரு கலைஞன் மறைவுக்கு பின் ஒரு நடிகரை நம் தேசம் என்றல்ல எந்த தேசத்திலும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நினைவு வைத்துக்கொள்வதும் கொண்டாடுவதும்.... ஆனால் சிவாஜி அவர்கள் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த கலைஞனை நினைத்து வாழும் அந்த ரசிகர் கூட்டம்... மாலைக்காட்சி கிட்டதட்ட அரங்கம் full... சிவாஜி திரையில் வந்ததும் விசில், கைதட்டல், ஆரவாரம், ஆரத்தி.... அய்யோ அப்படியே 70,80களுக்கு போனது போல... சரி முதல் காட்சிக்குத்தான்னா இல்லங்க படம் முழுவதும்.... இன்னும் அதே ரசனை... அதே பக்தி...
படமும் எதோ இன்னைக்கி எடுத்தது போல இருக்கு... இன்னிக்கிம் அவர் நடிப்பு போர் அடிக்கல...
இன்னும் அவரை தெய்வமாக நினைத்து இன்னும் அவர் தங்களோடுதான் வாழ்கிறார் என்று நினைத்து வாழும் அந்த ரசிகர்களே உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் என தோன்றியது...
அவரால் வளர்க்கப்பட்ட அந்த கண்ணியம் தெரிந்தது அவர்களிடம்..
திறமை என்னதான் வலிமை என்றாலும் இங்கே பணமும் பகட்டும் திறமையை ஏறி அமுக்குகிறது என்பதற்கு சிவாஜி அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய உதாரணம்... ஆனால் காலத்தின் முன் அந்த பணம் பகட்டு தோற்றுப்போகிறது என்பதற்கு இன்று கண்ட காட்சி உதாரணம்...
மேலே உள்ள கருத்துகள் ஒரு நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட ஒரு ரசிகரின் உள்ளத்தின் எண்ண ஓட்டங்கள்.
அதனை படித்தபோது அந்த திரைப்படம் குறித்த எனது முந்தைய பதிவு ஒன்று நினைவில் நிழலாடியது. உங்களுடன் பகிர்கின்றேன்.
சமீபத்தில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தினை காணும்
ஒரு வாய்ப்பு கிட்டியது. மிகவும்நடிகர் திலகத்துக்காகவே அமைக்கப்பட்டது போன்ற பொருத்தமான கதை. அந்த கால கட்டத்தில் பொருத்தமான ஒரு நடிகையாக இருந்த வாணிஸ்ரீ ஒரு கதாநாயகியாகவும் மற்றொரு நாயகியாக நடிகை லதா நடித்திருந்தனர்.
அருமையான பாடல்களை உள்ளடக்கிய
அழகான ஒரு பொழுதுபோக்கு படம். நடிகை லதா நடிகர் திலகத்துடன் நடித்த ஒரே படம் இதுதானோ..? கதை என்று கூறினால், விமான பைலட் ஆக பணிபுரியும் அசோக் சிவகாமியை காதலிக்கிறார், அவர்களின் உறவால் சிவகாமி கர்ப்பமுற, வந்து மணமுடிப்பேன் என செல்லும் அசோக் ஒரு விபத்தில் மரணமடைகிறார்.
சிவகாமி உண்மை நிலையினை தனது தந்தையிடம் கூற அவர் அதிர்ச்சியில் மரணமுறசிவகாமி கஷ்டத்துக்கிடையே ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறார். குழந்தையை வளர்க்க சிரமபடுவதால் ஒரு பணக்கார குடும்பத்திடம் குழந்தையினை ஒப்படைத்து விட்டு, அங்கேயே வேலைக்காரியாக சேர்ந்து
பணிபுரிகிறார், அந்த குடும்பத்தின் தலைவருக்கு இவளை பற்றிய உண்மைகள் தெரியும், ஆனாலும் வேறு யாருக்கும் தெரியவேண்டாம் என்று சிவகாமி கேட்டுக்கொண்டதற்கிணங்க...அவரும் அவர் மனைவியிடமும் உண்மையை கூறவில்லை. இதற்கிடையில் வீட்டுக்கார அம்மாவின் தம்பி ஆர்.எஸ் மனோகர் சிவகாமியை தன காம இச்சைக்கு பலியாக்க முயல அதுகண்ட சிவகாமியின் மகன் கத்தியால் மனோகரை குத்திவிட்டு கத்தியுடன் தப்பி ஓடிவிடுகிறான்.குற்றத்தை, தான் ஏற்றுக்கொண்டு சிவகாமி சிறைக்கு செல்கிறார். இதற்கிடையில் நடந்த உண்மைகளை அறிந்த வீட்டுக்கார அம்மா, தன் கணவரிடம் கூறி,சிவகாமியை விடுவிக்க ஏற்பாடு செய்கிறார். இருபதாண்டு சிறை வாசத்துக்கு பின் வெளியான சிவகாமி அந்த வீட்டுக்கு வருகிறார். அங்கிருக்கும் லதாவுடன் அன்புடன் பழக இருவருக்கும் நல்ல பாசம் ஏற்படுகிறது.
தனது வருங்கால காதலனை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லும் லதா, சிவகாமியையும் துணைக்கு அழைத்து செல்ல...
அவளின் காதலனாக அங்கே வந்திருப்பதோ...சிவகாமியின் மகன்...
அச்சு அசலாக தன் கணவனை உருவத்தை ஒத்து வந்திருக்கும் அவனை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் சிவகாமி.
ஆயினும் மகனுக்கு தன் தாயை சிறுவயதிலேயே பிரிந்ததால் அடையாளம் தெரியவில்லை,
ஒருமுறை சிவகாமியின் டயரியை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதில் இருந்த தன்னுடைய இளம் பருவ புகைப்படத்தில் உடன் இருக்கும் அம்மா சிவகாமி என்பதனை அறிகின்றான். உண்மையினை உணர்ந்து...தனது தாயினை தனக்கு விருது அளிக்கும் விழாவுக்கு அழைக்கிறான். தன் அப்பாவின் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு உண்மையை உணர்கிறான்.
ஆங்கே விருது தன் தாயின் கைகளால் விருதை பெறுகிறான்.
படத்தின் வெற்றிக்கு பக்க துணையாக இருப்பது.. நடிகர் திலகம்...நடிகை வாணிஸ்ரீ மற்றும் தேனாய் இனிக்கும் பாடல்கள்..ஆகா..கேட்க கேட்க..காதுக்குள் தேனை பாய்ச்சுகிறார்மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள். ஏற்கனவே ஹிந்தியில் ஆராதனா என்று வெளியாகிஇருந்த மாபெரும் வெற்றிப்படத்தின் ரீமேக் என்றாலும் அந்தப்படத்தின் பாடல்களும் மிகவும் பிரபலமானது என்றாலும்...அதனை தொடாமல் M.S.விஸ்வநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அருமையான பாடல்களை வழங்கியுள்ளார்.
வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில், என் ராஜாவின் ரோஜா முகம், ஆடிக்குப்பின்னே ஆவணி, போன்ற பாடல்களை கம்பீரக்குரலோன் டி.எம்.சௌந்தர ராஜன் அவர்கள் தேனிசைக் குரலுக்கு சொந்தமுடைய திருமதி.சுசீலா மற்றும் தனித்துவமான கவர்ச்சிக் குரலுக்கு சொந்தமுடைய திருமதி. ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து பாட மற்றும் எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..என்ற பாடலை அரிதாக தனது குரலை தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தும் எம்.எஸ்.வீ அய்யா அவர்கள் பாடியுள்ளார்கள்..
கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் கைவண்ணத்தில் ' எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது ' என்ற S.P. பாலசுப்பிரமணியம் அவர்களின் கவர்ச்சிக்குரலில் ஒரு பாடலும், உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்... என்ற எக்ஸ்பிரஸ் வேகப்பாடல் மற்றும் இனியவளே என்று பாடி வந்தேன்...போன்ற பாடல்களை காந்தர்வக்குரலோன் சௌந்தரராஜன் அவர்கள் கானக்குயில் சுசீலாவுடன் இணைந்து பாடியுள்ளார்கள். இதே இணை, மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக..வருக என்று பெண் பார்க்க வந்தேனடி... என்ற பாடலையும் கவியரசர். கண்ணதாசனின் கைவண்ணத்தில் பாடியுள்ளனர்.
பாடல்களை கேட்கும்போது...தேனாற்றில் நீராடும் உணர்வு ஏற்பட்டது...
அவ்வளவு இனிமை...இசையின் மேன்மை சொல்லி மாளாது.... ஆஹா...அற்புதம்... இரண்டு வேடங்களில் தனது பிரத்தியேக பாணியில் கலைக்குரிசில் கலக்கிய மற்றொரு அருமையான படம்...
அவருக்கே உரித்தான குறும்புத்தனம், காதல் செய்யும் நேர்த்தி..என தனது பங்களிப்பினை முறையாக செம்மையாக செய்துள்ளார் செவாலியே அவர்கள்.
இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்...உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்...
பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில்செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.
ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.
அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க,அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.
இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால்,இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!
காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு
கண்களில் மையெழுதி!
கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்
கோடியில் ஓரழகி!
தொட்டுத் தொட்டு கட்டுக் கதை
இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!
குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!
நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்
நெஞ்சினில் ஓர் கனவு!
வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்
வார்த்தைகள் தேன்மழையோ!
செல்லக் கன்னம் வெல்லம் என
மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!
கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!
தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.
ஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார்.பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.
இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும்,திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே.
காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.
படத்தினில் பங்கேற்றோர் அனைவருமே தனது பாத்திரங்களுக்கு உயிரூட்டி இருந்தனர்.. குறிப்பாக பழம்பெரும் நடிகர். S.V. ரங்காராவ் அவர்கள் தனது பாத்திரத்தினை மிக நேர்த்தியாக செய்திருப்பார்கள் . நடிகர் திலகத்தின் பல ஜனரஞ்சகப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் அவர்கள் விறுவிறுப்பாக படத்தினை இயக்கி உள்ளார்கள். உற்சாகமூட்டிய சிறப்பான காதல் இசை விருந்து என்றே கூறலாம்.
(முகநூல் சிங்காரவேலு பாலசுப்ரமணியன்)

sivaa
5th May 2017, 08:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18221639_1880327538877017_4804257475754062986_n.jp g?oh=cd12fcc748bf81e04500aa1851f6676d&oe=59B834B3

sivaa
6th May 2017, 03:30 AM
பாகுபலி திரைப்படம் பார்த்தேன்,
படம் பார்க்கையில் அக்கம் பக்கம் முன்னாடி பின்னாடி என யார் நடிகர் திலகம் பற்றி பேசினாலும் நம் கவனத்தை ஈர்க்கும் என்பது ஒன்றும் புதிதல்ல, இப்படி இந்தப் படத்தை பார்க்கும் போது பாகுபலி படத்தின் பிரமாண்ட உருவாக்கம் பற்றி பேசிக் கொள்பவர்கள் அவர்களுக்குள் நடத்தும் விவாதம் ருசிகரமாகவே இருக்கச் செய்கிறது, குறிப்பாக பேசிக்கொள்வது என்னவெனில் பெரியவர்கள் என்றால் இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இதை பிரமாண்டமான உருவாக்கம் என்று எடுத்த...ுக் கொண்டால் தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத 55 ஆண்டுகளுக்கு முன் வெளியான "கர்ணன்" காவியத்தை என்னவென்று அழைப்பது?
சிறியவர்கள் என்று பார்த்தோமானால் எடுத்த எடுப்பிலேயே "ஹேய் இந்தப் படம் கர்ணன் படம் மாதிரியே இருக்குதுல்ல" என்று குஷியாக பேசிக் கொள்வது நமக்கும் குஷியாக இருக்கவே செய்கின்றன,
தாய்மார்கள் அப்படியே நடிகர் திலகத்தின் கண்களை ஒப்பீடு செய்து கொள்கிறார்கள், ( பாகுபலி இறக்கும் காட்சியில் சத்யராஜ் மற்றும் பிரபாத் ஆகியோர் நடிகர் திலகம் கண்களை போல நடித்துக் காட்ட முயற்சி செய்கிறார்கள் என முனுமுனுக்கின்றனர்)
எப்படியோ ஒரு வரலாற்று படம் போன்று உருவாக்கிய படக் குழுவினரை எல்லோரையும் போல நாமும் பாராட்டியே ஆக வேண்டும் என்பது எனது கருத்தும் கூட
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18274747_1323695967747290_5227250771642125942_n.jp g?oh=f30b0154ad2456e6066efdaf524ddf9e&oe=5977D110

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18268353_1323696091080611_8595041888406139983_n.jp g?oh=b12def08a31870011f5c7137083598aa&oe=59C2B20E

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18221629_1323696164413937_7919861073335323718_n.jp g?oh=0f87262113ccbfad3903c4dfe330adc5&oe=597FBE4D



(from seker f book )

sivaa
6th May 2017, 08:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199315_311570679279234_3108393063134987947_n.jpg ?oh=e7c7982cb85263d7f32738a538bc919f&oe=59C1CE68

sivaa
6th May 2017, 08:32 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18268106_1275058215917671_8154204255068154521_n.jp g?oh=a14b7de72771648b3b0f75d354ea24cc&oe=59BEFA00
நான் ஏழாம் வகுப்பு ( "அ" பிரிவு ) படித்த போது பார்த்த படம் " நான் வாழ வைப்பேன்".
முழுசாய் முப்பத்தாறு வருடங்கள் கடந்த பின்னும்
நினைவில் ஒரு கீறல், கசங்கல் இல்லாமல், மெருகு குறையாத புத்தம் புது வடிவமாக " நான்
வாழ வைப்பேன்" ஓடிக் கொண்டே இருக்கிறது.
"நான் வாழ வைப்பேன்" எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனதற்கு இந்தக் காட்சி மிக முக்கிய
காரணம்.
அன்றைய என் சின்ன வயசிற்குப் புரிய வாய்ப்பில்லாத மரண பயம் போன்ற பெரிய விஷயங்கள் அன்றே எனக்குப் புரிந்ததென்றால்..
அது, நடிகர் திலகமெடுத்த பாடத்தினால்தான்.
அந்த மகா கலைஞனின் மீதான என் பெரு வியப்பை எடுத்துரைக்க அந்தப் பழைய நாளில்
சரியான வார்த்தைகள் இல்லை. ( இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்கிறீர்களா? )
இயன்ற வரை வார்த்தைகள் தேடி, முடிந்த மட்டும்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்ட திருப்தி
காண முப்பத்தாறு வருஷங்களாகியிருக்கின்றன.
தன்னிரகற்ற நடிப்புத் திறமையினால் மட்டுமல்ல... தன்னை மிக நேசிக்கும் ஒரு ரசிகன், தன்னை
வியந்தெழுத வருஷக் கணக்கிலானாலும், அன்று தன் மீது அந்த ரசிகன் வைத்த பேரன்பை அதிகமாக்கிக் கொண்டே போகும் ஆச்சரியத்
திறமையினாலும் நடிகர் திலகம் வென்றார். வெல்வார்.
*****
இத்துடன் நான் இணைத்திருக்கிற இந்தப் பதினான்கு நிமிடக் காணொளியின் எந்தவொரு அசைவும் அவசியமானதுதான் என்றாலும், நான்
வியந்து குறிப்பிட விரும்புவது, நடிகர் திலகம்,
மருத்துவர் பூர்ணம் விஸ்வநாதனைச் சந்தித்துப்
பேசும் அந்த ஐந்து நிமிடப் பகுதியே.
தன்னையே நம்பியிருக்கிற குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள படித்த, அழகான, பண்புள்ள வாலிபன் ஒருவன், தன்னைக் கொஞ்ச
காலமாக வாட்டி வதைக்கும் தலைவலிக்கு சிகிச்சை பெறும் பொருட்டு மருத்துவமனை செல்கிறான். அவனது மூளை படம் பிடிக்கப்பட்டு
ஆராய்ச்சி செய்யப்படவிருக்கிறது.
அவனது தலைவலியைக் குறித்து மருத்துவர், மருத்துவ ரீதியாக எழுப்பும் கேள்விகளுக்கு, தனக்கு என்னவாயிற்று என்பதைத் தெரிந்து
கொள்ள விரும்புகிற ஒரு நோயாளியின் பயம் கலந்த ஆர்வத்தோடு பதில் சொல்லும் அற்புதத்தை இதன் முந்தைய காட்சியிலேயே
காட்டியிருப்பார்.
'இப்படி இப்படியெல்லாம் பேச வேண்டும்' என்று
மனசுக்குள் தீர்மானித்திருப்போம். ஆனால், பேச
வேண்டிய சமயத்தில் பேச்சின் திசை மாறி நீர்த்து
விடுவது எல்லோருக்குமே அனுபவம்.
இதை நடிப்பில் கொண்டு வரும் அதிசயத்தை நடிகர் திலகம் நிகழ்த்துகிறார். " டாக்டர்.. இந்தத்
தலைவலி வரும்போது என்னால மூச்சு விட முடியறதில்லே.. ஒன்னும் செய்ய முடியறதில்ல.."
என்பார். மூச்சு விடமுடியாமைக்கும், ஒன்றும் செய்ய முடியாததற்கும் ஊடே நிறைய வார்த்தைகளை விட்டு விட்டதாகவே அவரது பேச்சின் த்வனி இருப்பதைக் கவனியுங்கள்.
ஆய்வு என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள அன்று மாலையே அவனை மருத்துவர் வரச் சொல்கிறார்.
கிளம்பிச் செல்பவனின் கவலையில் இறுகிய முக
பாவங்கள் நீடிப்பதைப் பாருங்கள். பிறர் சொல்லும்
நகைச்சுவைக்குச் சிரித்தாலும், சிரிக்கச் சிரிக்கத்
தானே நகைச்சுவை செய்தாலும் அந்த இறுகிய முகபாவம் மாறாது.
மாலையில் மீண்டும் மருத்துவமனை விஜயம்.
தனது தலையின் எகஸ்ரே படத்தைப் பார்த்து தானே செய்யும் கிண்டல். அந்தக் கிண்டலில்
' தனக்கு ஒன்றுமில்லை' என்பதான அழுத்தமான
நம்பிக்கை.
அவனுக்கு உண்டாகியிருக்கிற மிகப் பெரிய பாதிப்பை அவன் புரிந்து கொள்ளும் பொருட்டு
மருத்துவர் விளக்கம் தரும் போது கொள்கிற எரிச்சல். அந்த எரிச்சலில் ' ஒரு தலைவலிக்கு ஏன்
இத்தனை பேசுகிறார்?' என்றொரு சலிப்பு.
தனது பிரம்மாண்ட தலைவலிக்குக் காரணம்
" மூளைக்கட்டி" என்கிற அதிர்ச்சித் தகவலை அறிகிற போது, அந்த கசப்பு நிஜத்தை ஏற்க மறுக்கிற பாசாங்கற்ற ஓர் மனித உள்ளத்தை
நடிப்பால் காட்சிப்படுத்த நடிகர் திலகத்தால்
மட்டுமே இயலும்.
' மூளைக்கட்டி' என்றறியும் நொடியிலிருந்து முகத்தில் தொற்றிக் கொள்கிற மரண பயம்.
அந்த பயத்தின் பின்னே ஒளிந்திருக்கிற அவனது
குடும்பம். படித்தவனென்பதால் பயத்தில் "அய்யய்யோ" என வீறிடாமல், நாகரீகமாக வெளிப்படுத்தும் அழகு.
தனக்கு விரைவில் மரணமெனும் அந்த மருத்துவ அறிக்கை தன்னுடையதாயிருக்காது என்று மருத்துவரிடம் வாதிடும் குழந்தைத்தனம். அந்த
குழந்தைத்தனமான செய்கையில் கூட மருத்துவரின் மனம் புண்பட்டு விடக் கூடாது என்றெண்ணும் பெரிய மனுஷத்தனம்.
மருத்துவர் " உங்களை எனக்கு நல்லாத் தெரியும்"
என்று சொல்ல, " என்னைத் தெரியும். என் குடும்பத்தைத் தெரியாது" என்று தன் கதை சொல்ல முற்படும் புத்திசாலித்தனம் கதாசிரியரால் மட்டுமே விளைந்ததன்று. நடிகர் திலகத்தின் புரிதல் மிகுந்த நடிப்புத் திறனாலும்
விளைந்தது.
தனக்கு கொடிய வியாதியென்று மருத்துவர் சொன்னதும், அந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள
மாட்டாமல், அது பொய்யென்று அவரே சொல்லி
விட மாட்டாரா என்று எதிர்பார்க்கும் சராசரி மனித
மனோபாவம்... ஒரு கட்டத்தில் 'எதுவாயினும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?' என்கிற பக்குவப்பட்ட மனசோடு வாழ்க்கையை அணுகுகிற முதிர்ச்சி...
இவற்றையெல்லாம் ஒரு ஐந்து நிமிட சினிமாக்
காட்சி வழியே விளக்க நமக்கொரு நடிகர் திலகம்
கிடைத்தார் எனும் மகிழ்ச்சி ஒரு பக்கம். இந்த மகிழ்ச்சிக்குக் கொடுத்து வைக்காமல், " நான் வாழ
வைப்பேன்" பார்க்காமலிருக்கிறவர்கள் குறித்த
கவலை ஒரு பக்கம்.
எது எப்படியோ.. நாம் என்றும் நடிகர் திலகம் பக்கம்.
*****
ஒரு முதிர்ச்சியான மனோ நிலையில் இந்தக் காட்சியில் நடிகர் திலகம் ஒரு இடத்தில் சொல்வார்... " சாகிறதுக்காக நான் பயப்படலை
டாக்டர்.. அரை குறையா எப்படி சாகிறது?"
"அரை குறை" என்கிற மிகச் சாதாரண வார்த்தைக்குக் கூட முழுமையாய் அர்த்தம்
உணர்த்திய எங்கள் நடிகர் திலகத்தை ஆழ்ந்து,
ரசித்து அனுபவிக்காமல் அரை குறையாய்ச் செத்துப் போய் விட மாட்டான் சிவாஜி ரசிகன்.
http://youtu.be/jftOhg0LLCk

( முகநூல் சிவாஜி பக்கம்)

sivaa
6th May 2017, 08:45 PM
தற்போதைய முனுமுனுக்கும் செய்தி என்னவெனில் " பாகுபலி" படத்தை பற்றியது தான், ஒரு வேலை நான் பணி செய்யும் இடம் சுற்றியுள்ள சூழ்நிலை யாக இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் நேற்று நடந்த வணிகர்கள் தினத்தையொட்டி சென்னையின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கூட வணிகர்களின் பாகுபலி என விக்கிரமராஜா அவர்களை பாகுபலியைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டிருந்தன,
டாப் நியூஸ் என்னவென்று பார்க்க போனால் முதல் நியூஸாக பாகுபலி பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பதுதான், அப்படி என்ன வசூல் செய்து...விட்டது என்று விபரத்தை திரட்டினால் உண்மையில் தலை சுற்றுகிறது அதாவது முதல் வார வசூல் 790 கோடியாம்,
சரி நமக்கு எதற்கு இந்தச் செய்தி என்று நண்பர்கள் சொல்வதற்கு முன் நம்முடைய செய்திக்கு வந்து விடுவோம்,
நம்முடைய செய்தி என்றால் அது நடிகர் திலகம் செய்திதானே,
அதாவது தற்போது வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் வசூல் மற்றும் படத்தை பற்றிய செய்திகளை அனைத்து டிவி சேனல்கள், செய்தி நாளேடுகள் என இடம்பெற செய்து படத்தின் வெற்றியை உறுதி செய்து கொள்ள முடிகிறது, மேலும் வேறு எந்த புதிய படமும் ரிலீஸ் ஆக விடாமல் செய்து ஊரில் உள்ள எல்லா தியேட்டர் களிலும் ஒரே படத்தை ஓட வைக்கும் போது வெற்றி அடையத் தானே செய்யும்,
பாகுபலி படத்தின் முதல் வார வசூல் 790 கோடி இவ்வளவு பெரிய தொகை வசூலிக்க காரணம் படம் திரையிடப்பட்ட திரைகளின் எண்ணிக்கை உலகம் முழுக்க சுமார் 9000 க்கும் மேல்,
ஏறக்குறைய ஹாலிவுட் படங்களைப் போலவே
சரி 9000 திரைகளில் 790 கோடி வசூலை சராசரியாக ஒரு தியேட்டருக்கான வசூல் எவ்வளவு என்று பார்த்தோமானால் அது 8.3 லட்சம் என தெரிந்து கொள்ளலாம்,
இந்த 8.3 லட்சம் வசூல் தொகை என்பது 1964 ஆம் ஆண்டில் நடிகர் திலகத்தின் பிரமாண்டமான நடிப்பில் வெளியான "கர்ணன் " வசூலித்த தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது ஆச்சர்யம் அளிக்கும் செய்தியே, அதாவது அப்போது ரிலீஸான கர்ணன் ஆசியாவிலேயே பெரிய தியேட்டரான 2250 இருக்கைகள் கொண்ட மதுரை "தங்கம்" தியேட்டரில் முதல் வார வசூல் என வசூலித்த தொகை ரூபாய் 46,773.00 ஆகும், இது வெறும் 23 காட்சிகளில் மட்டுமே,
இந்தத் தொகை இன்றைய டிக்கெட் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் வசூல் தொகை 93.5 லட்சம் வருவதை உணரலாம். அப்போதைய டிக்கெட் கட்டனம் வெறும் 75 பைசா, 90 பைசா மட்டுமே,
அத்தொகை வசூலிக்க காரணமான பார்வையாளர்களின் எண்ணிக்கை 51950 பேர்கள் ஆகும்,
நடிகர் திலகத்தின் படங்கள் செய்யும் வசூலை இரட்டடிப்பு செய்வதற்கு என்றே அப்போதெல்லாம் சில ஊடகங்கள் முதற் பணியாய் செய்து வந்தன, அப்படித்தான் கர்ணன் பெற்ற வெற்றி வசூலையும் இரட்டடிப்பு செய்தன,
இப்போதும் கூட சில அறிவீளிகள் முகநூல் பதிவுகளில் கர்ணன் வெற்றியை குறைத்து மதிப்பிடுதல் தொடர்ந்து செய்து வருவதை பார்க்க முடிகிறது,
1964 ல் பெற்ற கர்ணனின் வெற்றியை ஏற்க மறுத்த மூடர்களுக்கு என்றே 2012 லும் அவதரித்த கர்ணன் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தினார்,
நன்றி:- 1964 ல் கர்ணன் வசூல் விவரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வந்த திரு பம்மலார் அவர்களுக்கு,
நன்றி:- கர்ணனை டிஜிட்டல் ஆர்ட் ஓவியத்தில் தந்த திரு கௌசிகன் அவர்களுக்கு,
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199448_1326689380781282_8915278452202742109_n.jp g?oh=9ea48267610011148f3e4a54d8859104&oe=5975C491


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301419_1326690657447821_5400688894102476280_n.jp g?oh=499164d65676fd4079910fea7ac510f2&oe=597575A8

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18342169_1326691290781091_8682061523289447361_n.jp g?oh=38054bbc4c853502b3f2a1a96a7cbe7a&oe=59C07263

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199440_1326691354114418_8814917562249717220_n.jp g?oh=5c9614511f2717f2862f0760b0df9d4d&oe=597BEBD1

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18268514_1326691497447737_8132351132037460450_n.jp g?oh=791c1c482836221aa839feb0cb9d053f&oe=59B86542

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199479_1326692047447682_5039577187981043965_n.jp g?oh=9c4545a4f77f4363c73ced46ad5c3964&oe=59BBDBC9


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18274886_1326692217447665_8518584557362716756_n.jp g?oh=7b58e5558f9c790d327e2f46712e7775&oe=59B41BCA


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301738_1326691414114412_4234732985506421769_n.jp g?oh=e37b83f46c04fbad4fc75a119f112168&oe=597E2A17

(முகநூல் சேகர் பரசுராம்)

tacinema
7th May 2017, 06:49 AM
தற்போதைய முனுமுனுக்கும் செய்தி என்னவெனில் " பாகுபலி" படத்தை பற்றியது தான், ஒரு வேலை நான் பணி செய்யும் இடம் சுற்றியுள்ள சூழ்நிலை யாக இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் நேற்று நடந்த வணிகர்கள் தினத்தையொட்டி சென்னையின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கூட வணிகர்களின் பாகுபலி என விக்கிரமராஜா அவர்களை பாகுபலியைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டிருந்தன,
டாப் நியூஸ் என்னவென்று பார்க்க போனால் முதல் நியூஸாக பாகுபலி பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பதுதான், அப்படி என்ன வசூல் செய்து...விட்டது என்று விபரத்தை திரட்டினால் உண்மையில் தலை சுற்றுகிறது அதாவது முதல் வார வசூல் 790 கோடியாம்,
சரி நமக்கு எதற்கு இந்தச் செய்தி என்று நண்பர்கள் சொல்வதற்கு முன் நம்முடைய செய்திக்கு வந்து விடுவோம்,
நம்முடைய செய்தி என்றால் அது நடிகர் திலகம் செய்திதானே,
அதாவது தற்போது வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் வசூல் மற்றும் படத்தை பற்றிய செய்திகளை அனைத்து டிவி சேனல்கள், செய்தி நாளேடுகள் என இடம்பெற செய்து படத்தின் வெற்றியை உறுதி செய்து கொள்ள முடிகிறது, மேலும் வேறு எந்த புதிய படமும் ரிலீஸ் ஆக விடாமல் செய்து ஊரில் உள்ள எல்லா தியேட்டர் களிலும் ஒரே படத்தை ஓட வைக்கும் போது வெற்றி அடையத் தானே செய்யும்,
பாகுபலி படத்தின் முதல் வார வசூல் 790 கோடி இவ்வளவு பெரிய தொகை வசூலிக்க காரணம் படம் திரையிடப்பட்ட திரைகளின் எண்ணிக்கை உலகம் முழுக்க சுமார் 9000 க்கும் மேல்,
ஏறக்குறைய ஹாலிவுட் படங்களைப் போலவே
சரி 9000 திரைகளில் 790 கோடி வசூலை சராசரியாக ஒரு தியேட்டருக்கான வசூல் எவ்வளவு என்று பார்த்தோமானால் அது 8.3 லட்சம் என தெரிந்து கொள்ளலாம்,
இந்த 8.3 லட்சம் வசூல் தொகை என்பது 1964 ஆம் ஆண்டில் நடிகர் திலகத்தின் பிரமாண்டமான நடிப்பில் வெளியான "கர்ணன் " வசூலித்த தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது ஆச்சர்யம் அளிக்கும் செய்தியே, அதாவது அப்போது ரிலீஸான கர்ணன் ஆசியாவிலேயே பெரிய தியேட்டரான 2250 இருக்கைகள் கொண்ட மதுரை "தங்கம்" தியேட்டரில் முதல் வார வசூல் என வசூலித்த தொகை ரூபாய் 46,773.00 ஆகும், இது வெறும் 23 காட்சிகளில் மட்டுமே,
இந்தத் தொகை இன்றைய டிக்கெட் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் வசூல் தொகை 93.5 லட்சம் வருவதை உணரலாம். அப்போதைய டிக்கெட் கட்டனம் வெறும் 75 பைசா, 90 பைசா மட்டுமே,
அத்தொகை வசூலிக்க காரணமான பார்வையாளர்களின் எண்ணிக்கை 51950 பேர்கள் ஆகும்,
நடிகர் திலகத்தின் படங்கள் செய்யும் வசூலை இரட்டடிப்பு செய்வதற்கு என்றே அப்போதெல்லாம் சில ஊடகங்கள் முதற் பணியாய் செய்து வந்தன, அப்படித்தான் கர்ணன் பெற்ற வெற்றி வசூலையும் இரட்டடிப்பு செய்தன,
இப்போதும் கூட சில அறிவீளிகள் முகநூல் பதிவுகளில் கர்ணன் வெற்றியை குறைத்து மதிப்பிடுதல் தொடர்ந்து செய்து வருவதை பார்க்க முடிகிறது,
1964 ல் பெற்ற கர்ணனின் வெற்றியை ஏற்க மறுத்த மூடர்களுக்கு என்றே 2012 லும் அவதரித்த கர்ணன் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தினார்,
நன்றி:- 1964 ல் கர்ணன் வசூல் விவரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வந்த திரு பம்மலார் அவர்களுக்கு,
நன்றி:- கர்ணனை டிஜிட்டல் ஆர்ட் ஓவியத்தில் தந்த திரு கௌசிகன் அவர்களுக்கு,
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199448_1326689380781282_8915278452202742109_n.jp g?oh=9ea48267610011148f3e4a54d8859104&oe=5975C491


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301419_1326690657447821_5400688894102476280_n.jp g?oh=499164d65676fd4079910fea7ac510f2&oe=597575A8

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18342169_1326691290781091_8682061523289447361_n.jp g?oh=38054bbc4c853502b3f2a1a96a7cbe7a&oe=59C07263

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199440_1326691354114418_8814917562249717220_n.jp g?oh=5c9614511f2717f2862f0760b0df9d4d&oe=597BEBD1

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18268514_1326691497447737_8132351132037460450_n.jp g?oh=791c1c482836221aa839feb0cb9d053f&oe=59B86542

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18199479_1326692047447682_5039577187981043965_n.jp g?oh=9c4545a4f77f4363c73ced46ad5c3964&oe=59BBDBC9


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18274886_1326692217447665_8518584557362716756_n.jp g?oh=7b58e5558f9c790d327e2f46712e7775&oe=59B41BCA


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301738_1326691414114412_4234732985506421769_n.jp g?oh=e37b83f46c04fbad4fc75a119f112168&oe=597E2A17

(முகநூல் சேகர் பரசுராம்)

superb Siva. மார் தட்டிக்கொள்ளும் சாதனை. 50 நாட்கள் ஓடிய (மற்றவர்கள் போல் ஓட்டப்பட்ட சாதனை அல்ல ) தியேட்டர் எண்ணிக்கையை பாரீர். எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத சாதனை. கர்ணன் எதிரிகளையும் வாழ வைத்தார், வாழ வைப்பார்.

நடிகர் திலகம் மட்டுமே என்றும் நடிப்பு சக்கரவர்த்தி - வசூல் சக்கரவர்த்தி. NT புகழ் வாழ்க.

thanks for your wonderful service Siva.

endrum NT rasigar.

sivaa
7th May 2017, 06:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18222419_196679880850903_53383462990653346_n.jpg?o h=df29da726fafe6b6a1ec665be70ed741&oe=59C1B5BD

sivaa
7th May 2017, 06:56 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18221803_196698884182336_2034781365624538316_n.jpg ?oh=2e3ca41362f7a8d1d597b5b268b6c6a7&oe=59B41FA5

sivaa
7th May 2017, 07:27 PM
இன்று இரவு 7:30 க்கு முரசு டிவியில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18275235_1328177470632473_1318796757258851759_n.jp g?oh=15d91eece97916ce89298ca22c186995&oe=598784FB

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18268420_1328177530632467_3111440166233513432_n.jp g?oh=585427269c8833f29773909e8529ddf1&oe=59766E5B

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6350-1.jpg


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6447-1.jpg


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Sandhippu-1.jpg

sivaa
7th May 2017, 07:35 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18402849_312109015892067_4155941288693675401_n.jpg ?oh=12c8a50d9bada77b9ab9cc56223ea844&oe=59784E0C

RAGHAVENDRA
8th May 2017, 05:25 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/18402952_1435622613155073_2441998769355725223_n.jp g?oh=44957ed06a207ba1f8a3e272289f6dd7&oe=59BF913A

sivaa
8th May 2017, 08:23 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18274888_312376329198669_1708356068695679319_n.jpg ?oh=ea74959a53c5ac1f14252c3e4c8fec35&oe=59744A95

sivaa
8th May 2017, 08:23 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18268210_418840728481307_4005037718154183556_n.jpg ?oh=ed27c9d23a33c266f537570e782e5210&oe=597858F6

sivaa
8th May 2017, 08:24 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/s960x960/18358874_312376682531967_3225395337304180997_o.jpg ?oh=4a65cf8dc423a6aa9241f3fbfcd47966&oe=597A47A7

sivaa
8th May 2017, 07:21 PM
கடவுள் என் வாழ்வில் "கடன்காரன்",,,, கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்,,,, ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீகூட "குடிகாரன்",,,, கடவுளை கடன் காரன் என்றும் குடிகாரன் என்றும் மற்ற நடிகர்கள் பாடினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? சிவாஜி நடித்தால் ஏற்றுக் கொள்வார்கள்,,,, காரணம் "லார்டு ஷிவா" முதற்கொண்டு பெரும்பாலான கடவுள்களாக கண்களுக்கு காட்சி தந்தவர் என்பதை மக்கள் அறிவர்,,, அது சிவாஜியின் பெருமை,,,,
சிவாஜியை கமர்ஷியல் ஹீரோவாக்கி காசு பார்க்கிறார் பாலாஜி என்று அப்போது சொல்பவர்களும் உண்டு,,, ரீ மேக் படங்களாக எடுத்து ஹிட் அடிக்கிறார்,, சொந்த சரக்கு இல்லையா என்று குற்றம் சாட்டியவர்களும் உண்டு,,, இரண்டுக்கும் ஒரே பதில் கமர்ஷியலாக ஒரு படம் கல்லாவை நிரப்பினால்தான் அடுத்தடுத்து படம் எடுக்கும் ஆர்வம் தயாரிப்பாளர்களுக்கு வரும்,,, சிவாஜிக்காக வெகுஜன மக்களை சென்றடைந்த மாற்று மொழி படங்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து அவரது நடிப்புக்கு படையல் செய்தவர் பாலாஜி என்றால் மிகையாகாது,,, அப்படித்தான் ராஜேஷ் கன்னா நடித்த துஷ்மன் படத்தை நீதி என்று பெயரிட்டு தமிழுக்கு கொண்டு வந்தார்,,,,
"ஹீரோ 72".... என்றால் சிவாஜியைக் குறிக்கும்,,, 1972ல் அந்த ஹீரோவுடைய படங்களில் ஓப்பனிங் ம் சரி ஃபினிஷிங் கும் சரி பாலாஜி படங்கள்தான்,,, கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஆமாங்க அந்த வருஷம் ரெண்டு லட்டு தின்னுபுட்டாருங்க பாலாஜி,,,,
மாப்பிள்ளையை பார்த்துகோடி மைனாக்குட்டின்னு ஓப்பனிங் ஸாங்ல சகுந்தலாவோடு ஒரு செம்ம ஆட்டம் போட்டு விட்டுத்தான் கதைக்குள்ளே நுழைவார் சிவாஜி,,, 80களில் ரீரிலீஸ் செய்யும் போது இந்தப் பாடலுக்கு ஒன்ஸ் மோர் கேட்டு கலாட்டா செய்தவர்கள் நாங்கள்,,, அந்த வீரதீர பராக்கிரமங்களை கமெண்ட்ஸ்ல பார்க்கலாம்,,, லாரி டிரைவர் என்றால்,,, அதுவும் எந்த வித ஐடியாலஜியும இல்லாத ஒருவர் எப்படி இருப்பார்? இந்தப்படத்தில் கண்முன் பார்க்கலாம்,,, சும்மா ஒப்புக்கு ஒருசீன்ல டிரைவர் யூனிஃபாம்ல வந்துட்டுட்டு கனவுக்காட்சிக்கு போய் விதவிதமாக காஸ்ட்யூம் அணிந்து கதைக்கு மேட்ச்லெஸ் ஆக வருபர் அல்ல சிவாஜி,,, கதை என்ன கேட்கிறதோ கதாபாத்திரத்திற்கு என்ன காஸ்ட்யூமோ அதில் மட்டுமே வந்திருக்கிறார்,,, ஜெயலலிதாவை புக் பண்ணியாச்சே என்று ஒரு டூயட் ஸாங்கிற்குகூட டிமாண்ட் பண்ணாதவர் சிவாஜி,,, ஒரே ஒரு காட்சியை தவிர படம் முழுதும் ஒரே காஸ்ட்யூமில் வந்து அந்த கதாபாத்திரத்தை உண்மைக்கு நெருக்கமாக செய்ததில் சிவாஜி அவர்கள் பங்கு அதிகம்,,, அதுவும் ஹீரோ 72ல்,,,,,
பெருங்குடிகாரனாக சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டு லாரி ஓட்டும் லாவகம்,,, விபத்து நடந்து ஒரு ஏழை குடும்பத்தின் வாழ்வாதாரமான ஒரு இளைஞனையும் ஒரு பசுவையும் கொன்றுவிட்டு கோர்ட் படியேறும் அலட்சியம் தண்டனையே அந்த குடும்ப பராமரிப்புதான் என்று தீர்ப்பு வரும் போது அடிக்கும் கமெண்ட்ம் போலீஸ் அதிகாரி பாலாஜியுடன் அந்த கிராமத்திற்குள் வரும் அசால்ட்நெஸ்,,, அந்த குடும்ப உறுப்பினர்கள் வெறுப்புக்கு ஆளாகும் போது காட்டும் துடிப்பு,,, பழக்கமில்லாத விவசாயத் தொழிலை அவர்களுக்காக ஏற்கத் தொடங்கும் மனநிலை,,, ஒவ்வொறுவரின் கருணைப் பார்வைக்காக ஏங்கும் ஏக்கம்,,, கடைசிவரை சௌகார் ஜானகி தன்னை மன்னிக்க தயாரிலலை எனும் போது ஏற்படும் விரக்தி,,, கிளைமேக்ஸில் அவரை காப்பாற்றி மொத்த குடும்பத்தையும் வசப்படுத்தும் மனநிறைவு,, தண்டனைக்காலம் முடிந்து பாலாஜியுடன் செல்ல மறுத்து தான் அந்த குடும்பத்தில் ஆயுட்சிறைவாசி ஆக இருக்க விரும்பும் செய்தியை நெகிழ்வுடன் கூறிச் செல்வது வரை ஒரு பக்குவப்பட்ட நடிப்பை நமக்கு வழங்கி இருக்கிறார்,, கெட்டவன் சந்தர்ப்பவசத்தில் கெட்டுப் போனவன் வாழ்வு முழுவதும் கெட்டவன் ஆகவே இருப்பதில்லை,,, வாய்ப்பும் சந்தப்பர்களும்தான் ஒரு மனிதனின் குணாதியங்களை நிர்ணயிக்கிறது என்பதை நடிகர் திலகத்தை வைத்து சொல்வதற்கு இந்த கதையை அவசியப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி,,, அதுவும் உண்மைதான்,,,
சிவாஜி - சௌகார் இருவரும் ஒரு படத்தில் ஜோடியாகவோ வெவ்வேறு கதாபாத்திரங்களாகவோ கமிட் ஆகிறார்கள் என்றால் அந்தப் படங்களை நாம் அவசியம் பார்த்தாக வேண்டும் என்பது முக்கிய விதி,,, அவர்களது ப்ளாஷ் பேக்கை பார்த்தோமே ஆனால சில விஷயங்களை பரிந்து கொள்ள முடியும்,, அழுத்தமான கதாபாத்திரங்கள் அல்லது நல்ல கதையம்சங்கள் இருவருக்கும் நடிப்பில் சவால் விடும் கதாபாத்திரங்கள்,,, இவை மூன்றுமோ அல்லது ஓரிரண்டு விஷயங்களோ அவசியம் இருககும்,,, படிக்காத மேதை, புதிய பறவை, பார் மகளே பார், பாலும் பழமும், உயர்ந்த மனிதன் என்று ஜோடி சேர்ந்த பல படங்களும் எங்கள் தங்க ராஜா நீதி பட்டாகத்தி பைரவன் உட்பட பிற படங்களும் குறிப்பிடத்தக்கவை,,, அந்த அளவுக்கு இருவருக்குமான மேட்ச் சுவாரஸ்யமாக இருக்கும்,,,,
திருடன், கொலைகாரன், கைதி, குடிகாரன், பெண் பித்தன், ரௌடி,,,, இது போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களை சிவாஜி செய்வதற்கும் மற்ற நடிகர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது,,, சிவாஜி செய்யும் போது மட்டும் அந்த வெறுப்புணர்வு ஆடியன்ஸ்க்கு வராததற்கு காரணம் அந்தந்த நெகடிவ் பாத்திரங்களை அவர் ஹேண்டில் பண்ணும் முறை,,, அதாவது பார்வையாளர்களுக்கு இப்படி மோசமானவராக போய் விட்டாரே யார் இவருக்கு என்ன கேடு செய்தார்கள் என்று மனதுக்குள் கேள்வி கேட்பார்கள்,,, அல்லது இந்த சமுதாயம் இந்த மனிதனை ஏன் கெட்டவனாக்கியது என்று சமுதாயத்தின் மீது பழி போடுகிறவர்களும் உண்டு,,, காரணம் இவரது நெகடிவ் ரோல் நடிப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க இயல்பாக அமைவதுதான் காரணம்,, இந்த சிறப்புகளை பிற நடிகர்களிடம் காண முடியாது,,, இந்த யுக்தியை மோப்பம் பிடித்துத்தான பாலாஜி தனது பெரும்பாலான படங்களில் சிவாஜியை பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார்,,, இந்த நீதி படமும் அந்த வகையைச் சார்ந்து எடுக்கப்பட்ட படம்தான்,,,
இப்படி நுணுக்கமான எத்தனையோ விஷயங்கள் அந்த மனிதனின் நடிப்புப் பெட்டகத்தினுள் புதைந்து கிடந்திருக்கிறது,,, அவர் காலத்தில் அவரோடு பயணித்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவருள் இருந்து பாதி புதையலைக்கூட கொண்டு விரவில்லை,, சராசரி மனித ஆயுளைத்தானே இறைவன் அவருக்கு கொடுத்து நம்மை ஏமாற்றி விட்டார்,,, ஸோ அந்த மனிதர் கடவுளை கடன்காரன் என்று திட்டியது தப்பில்லை தானே!!!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18424180_1903480716559184_7204543792882762377_n.jp g?oh=cf02aedf41293e024d53c341b52c9d49&oe=59BC5725



(முகநூல் ஜாகிர் hussain -நடிகர் திலகம் fans கிளப்)

sivaa
8th May 2017, 07:22 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18403757_1901900973358055_8617612064351735332_o.jp g?oh=e666088b8d909932b4e2124f65fc1d47&oe=5975A2AA

sivaa
8th May 2017, 07:29 PM
மயக்கும் மெலடி
மெலடி மெட்டுக்கள்,தத்துவம்,மென்மையான தாலாட்டு ..இதையெல்லாம் தாண்டி இன்று ஒரு பதிவு.இந்தப் பாடல் ஒரு ஜாலி பாடல்.....பாடியவர் ஏழிசை வேந்தன் அவரைப் பற்றி எவ்வளவு கூறுவது....என்ன கவி பாடினாலும் கவியரசரைப் போல வருமா ?பாடல் வரிகள் கண்ணதாசன்...இசை மெல்லிசை மன்னர்.....படம் தங்கை 1967.....பாடல் கேட்டவரெல்லாம் பாடலாம்.....காட்சியில் நடிகர் திலகம்.....நடிகர் திலகம்...நடிகர் திலகம்....அப்படி ஒரு ஆட்டம்...உடல் மொழி,கண் அசைவு...கை அசைவு......கூட புன்னகை அரசி, பாலாஜி ......
ஒரு பார்ட்டி.....அதில் மைக்கைப் பிடித்துக் கொண்டு பாடி ஆடி மகிழ்விக்கும் காட்சி.....புகுந்து விளையாடி இருப்பார்....டி எம் எஸ்ஸின் குரல் ஒன்றும் அவருக்குப் புதிதல்ல...ஆனால் அந்தப் பாடல் காட்சியில் இவரைத் தவிர வேறு யார் மேலும் கண் வைக்க முடியாத ஒரு ஆளுமை....பாடல் காட்சியில் எப்படி நடிப்பது என்று ஒரு பள்ளி வைத்தால் அதில் இந்தப் பாடல் கண்டிப்பாக முக்கிய பாடமாக இருக்கும்...பின்னு...பின்னு...பின்னுதான்..
பாடலின் வரிகள் தவிர ஸ்பெஷல் எபெக்ட் வேற பாடலில்...மெல்லிசை மன்னரின் வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பை மறக்க முடியாத பாடல்....
பாடல் ஆரம்பம் க்ளாப்சுடன் ....தக் தக் தக் ஜ ஜும் ஜும் ......காதில் கையைத் தடவிக்கொண்டே.ஹோ ஹோ ஹோ ..ஸ்டைலாக வாத்தியக் கலைஞர்களுக்கு சமிக்கை செய்யும் அழகென்ன....
"கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும் பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும் ஹோ ஹோ ஹோ ஹோஹோ....."
பாட்டுக்கு தாளம் போடலாம்......தாளம் அமைத்திருக்கும் சிறப்பை சொல்லுவதா...அதை டி .எம்.எஸ் பாடி இருக்கும் லயத்தை பாராட்டுவதா...அந்த தாளம் போடுவதில் கூட ஒரு நளி னத்தைக் காட்டும் நம்மவரை சொல்வதா ?மொத்தத்தில் கேட்பவரை எல்லாம் தாளம் போட வைத்து விடும் காம்போசிஷன் ........புன்னகை அரசியின் முகமும் மலரும்....ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஹோ.....பாடலைத் தொடரும் பாங்கோஸ்....கிடார்....குழல்.......ஆஹா ஆஹா ஆஹா....
கிடாரின் மெ ட்டைத் தொடரும் ஹுக்கும் ஹுக்கும் ......
"சீட்டுக் கட்டு ராணி மாப்பிள்ளைத் தேடி ஊர்வலம் போனாள் ஒரு நாளில்..
கூட்டத்தோடு நானும் பார்த்துக் கொண்டு நின்றேன் கூட வந்த தோழி என்னைப் பார்த்தாள் "
இனி வரும் வரிகள் டோலக்குடன்..
கண்ணாலே ஜாடை செய்து கையேடு என்னைக் கொண்டு போனாள் தோழியின் வயது அறுபதுக்கு மேலே"
இதற்கு ஒரு உடல் அசைவு...கண்ணசைவு பாருங்கள்.....அசத்தி விடுவார் அசத்தி....
"ஸ் வீட் சிக்ஸ்டி "என்று சொல்லி விஜயாவைப் பார்த்து ஒரு கண்ணடி..........
அரங்கம் முழுக்க சிரிப்பொலி...தொடரும் கேட்டவரெல்லாம்.....
"அடுத்த சரணம் விஜயாவிடம்...
"அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன் அச்சத்தோடு நின்றாள் அழகோடு "....நின்றா..ள் இங்கே ஒரு சங்கதி....அதிலே இருக்கு ஆயிரம் சங்கதி...."அழகோடு...அழகோடு..."...அழகில் மயங்கி ஒரு கோடு.....அப்படி போடு...!
'அள்ளி வைத்த கூந்தல் துள்ளி விளையாட கள்ள நகை செய்தாள் கனிவோடு"
அது போதும் போதுமென்று பலகாலம் வாழ்க வென்று இசை பாட நானும் வந்தேன் சுவையோடு...."அந்த நிறைவை கண்ணாலே காட்டி வாழ்த்தும் நடிகர் திலகம்....இசை பாட நானும் வந்தேன்....இங்கே டி எம்.எஸ்.....அப்பப்பா....புல்லரிப்புதான் .....
நான் ஒரு தீவிர நடிகர் திலகம் ரசிகை,மெல்லிசை மன்னர் வெறியள் ,கவியரசரின் அடிமை...டி எம்.எஸ்ஸின் விசிறி.........அதனால் இத்தனை பில்ட் அப் என்று யாராவது நினைப்பீர்களானால் பாடல் காட்சியைப் பாருங்கள்........பிறகு சொல்லுங்கள்....
மறுபடியும் கேட்டவரெல்லாம் பாடலாம் பல்லவி ,அதன் முடிவில் ஒரு மெல்லிய நடன அசைவு....விஜயாவும் இணைந்து கொள்ள...."பப்பரப் பப்பர பர பாப்பா பா ட ட ட ட டடடா ....கையை மேலே தூக் குவதென்ன விஜயாவின் நடனத்திற்கு தொடையில் தாளம் போட்டுக் கொண்டே ஆடும்ஸ்டைல் என்ன......ஸ்டைல் ஸ்டைல் என்று இனிமேல் வாயத் திறந்து சொல்ல முடியாத ஒரு ஸ்டைல்......ஸ்டைல் சக்ரவர்த்தி...
ஒரு அல்டிமேட் பொழுதுபோக்குப் பாடல்.......இசையமைப்பு...அதன் கம்பீரம்.....ஒரு டீம் ஒர்க் பாடல்.....உங்களுடன்


Kettavarellam-Thangai.

(முகநூல் விசாலி ஶ்ரீராம் -நடிகர் திலகம் fans கிளப்)

sivaa
8th May 2017, 07:36 PM
வளர்த்த கடா முட்ட வந்தா வெச்ச செடி முள் ஆனா " "இன்னும் நன்மை செய்து துன்பம் தாங்கும் உள்ளம் கேட்பேன்"
இந்தப் பாடல் வரிகள் எல்லாம் படத்திற்க்காக மட்டுமே அமைந்தவை என்று நினத்து இருந்த எனக்கு இந்த வார செல்லுலாய்ட் சோழன் தொடர் பாடல்களின் தனித்துவத்தை உணர்த்துகிறது,
... நடிகர் திலகத்தின் வரலாற்றை புரட்டுவோமானால் அடிக்கடி துரோகிகள், நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்ற செய்திகளை படிக்காமல் இருக்க முடியாது, நான் கூட கொஞ்சம் யோசித்து இருக்கிறேன் ஏன் என் போன்ற வயது ரசிகர்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை, நடிகர் திலகத்திற்கு அப்படி என்ன நம்பிக்கை துரோகம் செய்து இருக்க முடியும், நான் தெரிந்து கொண்ட வரை அரசியலில் 1988 கால கட்டத்தில் தனிக் கட்சி த.மு.மு தொடங்கிய போது அவர் யாரையெல்லாம் நம்பி இருந்தாரோ யாருக்கெல்லாம் உதவிகள் செய்து இருந்தாரோ அவர்கள் எல்லாம் துனை நிற்க வில்லை, துரோகம் இழைத்தார்கள் என்று அறிந்து வைத்திருந்தேன், திரையுலகில் யாரையெல்லாம் தூக்கி விட்டாரோ, யாருக்கெல்லாம் நடிக்க வாய்ப்புகள் கொடுத்தாரோ அவர்கள் எல்லாம் அரசியல் மேடைகளில் நடிகர் திலகத்தை தூற்றினார்கள் அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் கடுமையாக பேசியவர் என தெரிந்து வைத்து இருக்கிறேன்,
ஆனால் இந்த வார " செல்லுலாய்ட் சோழனின் 158 வது தொடரில் உள்ள செய்திகள் நமக்கு துரோகம் எது என்பதையும் நம்பிக்கை துரோகிகள் என்றால் யார் என்பதையும தொடரை படித்தோமானால் மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
எத்தனை பெரிய செய்திகள் இது,
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிடவும் அன்றைய நாட்களில் அந்தத் துறைக்காக வேண்டி எத்தனை மேடை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி இருக்கிறார், எத்தனையோ துணை நடிகர்களின் வாழ்விற்கு சரியான கதை இல்லை என்று தெறிந்தும் நடித்துக் கொடுத்து இருக்கிறார்,
ஆனால் அந்த நடிகர் சங்கம் அவருக்கு செய்த துரோகம்,
தேவர் மண்டபம் பற்றிய செய்தி என்னை கலங்க வைத்து விட்டது, அந்த சிறப்பு மிக்க தேவர் மண்டபம் உருவாக்க தேவையான அன்றைய மதிப்பின் ரூ1.40 லட்சத்தில் நடிகர் திலகம் மட்டுமே 50% மேலாக கொடுத்தும் மண்டப திறப்பு விழாவிற்கு நடிகர் திலகம் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர் என்பதால் புறக்கணிக்கப்பட்ட செய்தியை படிக்கும் போது நடிகர் திலகம் இதய நோயில் ஏன் அகப்பட்டார் என்பது விளங்குகிறது,
அடுத்த செய்தி மூப்பனார் அவர்களை பற்றியது, இந்தச் செய்தியை பொறுத்த அளவில் தற்போது முகநூலில் அடிக்கடி படித்து வந்தாலுமே தொடரில் விவரமாக தெரிந்து கொள்ளும் போது 1996 ல் த.மா.கா. உருவான தருணத்தில் அதற்காக கிளை உருவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, கொடி ஏற்றுதல் என ஈடுபட்டதை நினைத்தால் வேதனை மிகுதியாகிறது. அப்போதைய எண்ணம் அதிமுக வை அகற்ற வேண்டிய அவசியம் என்பதனால் இருந்த வேகம் மட்டுமே,
இதையெல்லாம் படிக்கும் போது இறைவன் நடிகர் திலகத்திற்கு அதிகம் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை கொடுத்திருந்தும் இதயத்தின் ஆயுளை குறைத்து இருக்கிறான் என்பது விளங்குகிறது...
இனைப்பில் திரு எழுத்தாளர் இன்பா அவர்கள் எழுதி வரும் செல்லுலாய்ட் சோழன் தொடரின் 158 பாகம் ( தமிழக அரசியல் இதழில்)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301755_1329759623807591_3823396023859260571_n.jp g?oh=57cd7dea795071104a47783a35907142&oe=598826B9

(முகநூல் சேகர் பரசுராம்)

sivaa
8th May 2017, 07:36 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18341814_1329759927140894_3426383204496703561_n.jp g?oh=e92c50d916cee85b45e09b8d6f80ca4b&oe=59742187