PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

sivaa
8th May 2017, 07:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18423915_1329761403807413_937159053651220685_n.jpg ?oh=79d57d8a34c913c3ad686d4e80aefb56&oe=597B6E27

sivaa
8th May 2017, 07:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301509_1329761703807383_3609872853696535354_n.jp g?oh=63b09fd74c57b86ff7f1b063fe5dba06&oe=59877B71

sivaa
8th May 2017, 07:40 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301571_1906911939584499_1452416727458899136_n.jp g?oh=b9b680cd26adf730e85c33952cd76265&oe=597A3DA0

sivaa
8th May 2017, 07:40 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18222221_1905190489756644_7219731706294709322_n.jp g?oh=ee3c55d507efc6f8bc9338259de16d65&oe=59812632

sivaa
8th May 2017, 07:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18222700_1905190466423313_4065960312873891141_n.jp g?oh=75ae44911230bc8eebfcfa199d70fcfc&oe=59B4FB7D

sivaa
9th May 2017, 09:58 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18342662_312746942494941_2157684098720926074_n.jpg ?oh=aa7e4816f23fdbe99aa093c65aef5742&oe=59765CBB

sivaa
9th May 2017, 06:52 PM
இன்று(09/05/17) இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
காலத்தால் அழியாத காவியம்
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301956_1331214430328777_3052415262536067492_n.jp g?oh=0dd18d1755913e584a9c7b654d46e483&oe=5973EEB8

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18341999_1331214506995436_5642073311271464603_n.jp g?oh=373a7bfa5ab65d0978a7c17ed7c67eb1&oe=597E53AA

http://i62.tinypic.com/23hwyhl.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC1981.jpg

sivaa
9th May 2017, 08:21 PM
Vasantha Maligai running at Coimbatore Naaz theatre from 5.5.2017

http://www.sivajiganesan.in/Images/100316_5.jpg
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/FB_IMG_1450268211914_zps2lumzeqp.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/FB_IMG_1450268211914_zps2lumzeqp.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449671007118_zpseuze2iaa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449671007118_zpseuze2iaa.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449670999499_zpsmbwvewjb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449670999499_zpsmbwvewjb.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449671014321_zps8pajpyaq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449671014321_zps8pajpyaq.jpg.html)
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Srilanka250Days_zpsbb3417fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Srilanka250Days_zpsbb3417fb.jpg.html)


(தகவல் முகநூல்)

sivaa
9th May 2017, 08:23 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18341795_419487318416648_635154141124625584_n.jpg? oh=fe3916dc988fe0a1840e591719c59987&oe=5984B1B5

sivaa
9th May 2017, 08:28 PM
டி.எம்.எஸ்....நடிகர்திலகம்...கவியரசர்....மெல்லிசைம ன்னர்.இந்தப் பாடலில் எது என்னைக் கவர்ந்தது?இசையா?டி.எம்.எஸ் அவர்களா?மெல்லிசைமன்னரா?இல்லை கவியரசரா என்றால் என்னால் சொல்ல இயலாது என்பதே உண்மை...அப்படி ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைத்துக் கொண்டு நெஞ்சத்தில் ரீங்காரம் செய்து கோலோச்சுகிறார்கள் என்பதே உண்மை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...1962 இல் வந்த படித்தால் மட்டும் போதுமா படப் பாடல்.
திருமணம் முடிந்து விடுகிறது.ஆனால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை...அவன் என்ன செய்வான் பாவம்....இத...ு வெளியில் சொல்லக் கூடிய விஷயமா?
நான் கவிஞனும் இல்லை என்று ஒரு பாடல் இப்பொழுது உங்களுக்காக!!!
ஒரு வீரமான வாலிபன் திருமணம் முடிந்து ஓராயிரம் கனவுகளோடு முதலிரவு அறைக்கு செல்கிறான்!அவ்ளோ அவன் படிக்கதவன் என்று வெறுத்து ஒதுக்குகிறாள்!அவனின் வாலிப விரகம் இந்தப் பாடல்!நடிகர் திலகம் அந்த ஆண்,அந்த ஆணுக்கு ஒரு ஆண்மைகென்றே அமைந்த குரலோன் டி.எம்.ஸ் குரலில்,மெல்லிசை மன்னரின் இசைப்பூங்கொத்து இது!
நான் கவிஞனும் இல்லை,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!!!
அவன் விரகம்,கவியரசரின் கண்ணியமான வரிகளில்........
இரவு நேரம் பிறறைப் போலே என்னையும் கொல்லும்,துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் என்று பாடி ஆஹாஹாஹா என்று வார்த்தைகளே இல்லாமல் ஊமைகீதத்தில் தன் வருத்ததை அழுதும் அழாமலும் புரியவைக்கிறான்!!!
உடலை முறுக்கிக் கொண்டு உடம்பெல்லாம் வலிப்பதாகக் காட்டும் லாவகம்,மேலிருந்து ஒரு மாண்டலினை எடுத்து பிரடையை சரி செய்து சுருதி சேர்க்கும் நயம்....நடிகர் திலகத்துக்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா?வாழ்ந்திருப்பார்...'அன்பே ஆருயிரே,இன்பமே இனியவளே...பண்போடு அன்போடு படியேறி வந்தவளே!!!உன்மேல் பாட்டுப் பாட...நான் கவிஞனும் இல்லை என்று பாடும்போது நம் கண்ணை நிறைக்கும் கண்ணீர் துளிகள்....
'காட்டு மானை வேட்டையாடத் தயங்கவில்லையே...இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ மயங்கவில்லையே...கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்கை புரியவில்லையே...நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே..https://static.xx.fbcdn.net/images/emoji.php/v8/fcb/1/16/1f641.png:(...நான் அழுதால் சிரிக்கிறால் சிரித்தாள் அழுகிறாள்....அம்மா தாயே.....இந்த வரிகளைப் பாடும்போது கெஞ்சும் அவன் முகம்...அதில் கப்பிக் கொண்டிருக்கும் சோகம்.....பெண்ணினமே பெண்ணை வெறுக்கும் காட்சி அது....ராஜசுலோசனாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...அந்த ஆணவப் பார்வை.....அற்புதம்.
எனக்குத் தெரிந்தவரையில் இந்த மாதிரி ஒரு விரகத்தை விரசமில்லாமல் விரிவாக இரண்டு வரிகளில் சொன்ன கவிஞன் வேறு யாரும் இல்லை என்பதால்,கவியரசர்,ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத கவிமாமன்னன்!!!!!!!பாடல் உங்களோடு.

Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song (https://www.youtube.com/attribution_link?a=68UsU6OmF4Y&u=%2Fwatch%3Fv%3Do17JQ6TWP30%26feature%3Dshare)
Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma











youtube.com


(முகநூல் விசாலி ஶ்ரீராம்)

sivaa
9th May 2017, 09:48 PM
இந்தப் பகிர்வை எழுதுவதற்கே மிகுந்த மன உறுதி வேண்டும்...பார்ப்பதற்குக் கலங்காத நெஞ்சுரம் வேண்டும்.....மணியான காட்சி....மிகையில்லாத நடிப்பு...அதை நடிப்பென்று கூட சொல்ல முடியாது....அத்தனை இயல்பு...ஒன் மேன் ஷோ என்பார்களே.....மூன்று பேர் காட்சியில் இருந்தும் இந்த ஒரு மனிதனின் ஆளுமை....அய்யா...இவர் மட்டுமே நடிக்கப் பிறந்தவரய்யா .......நடையழகில் எத்தனை வகை, குரல் உயர்த்தி,தாழ்த்தி,கண்ணாலே பேசி,கெஞ்சி,கொஞ்சி......இனிமேல் பிறந்து வரணும்...அதுவரை நான் சாகாதிருக்கணும்...ஒரு அல்ப ஆசை....காட்சியின் துவக்கத்தில் குமாரி பத்மினி ,பகவதி அண்ணாச்சி ...பணக்காரக் குடும்பம்...கணவனுக்காக வாசலில் காத்திருக்கும் மனைவி,,,,மகளிடம் மருமகனின் தொழில் பக்தி பற்றி பிரஸ்தாபிக்கும் தந்தை...கல்யாணத் தரகர் உள்ளே நுழைகிறார்....அவரிடம் பகவதி (நாடகப் பிரியர்)ராஜப்பார்ட் ரங்கதுரையைப் பற்றி நலம் விசாரிக்க...உண்மை தெரியாத தரகர் ராஜபார்ட் ரங்கதுரை நாடகம் இல்லாமல் வறுமையில் உழல்வதையும்,கஷ்டப்பட்டு படிக்க வைத்த ரங்கதுரையின் தம்பி பாஸ்கர் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை என்று(பாஸ்கர் அவர் மருமகன் என்பதை உணராமல் )சொல்லி விடுகிறார்.வந்த காரியம் முடிந்தது என்று மானஸ்தனாக அவர் நகர,பாஸ்காராகிய ஸ்ரீகாந்த் உள்ளே நுழைகிறார்.கோபத்தில் பகவதியும் குமாரி பத்மினியும் ரங்கதுரையைப் பற்றியும்,அவர் இவருடைய அண்ணனா என்று கோபத்துடன் விசாரிக்க,ஆடம்பர வாழ்விற்குப் பழகிப் போன ஸ்ரீகாந்த் யாரோ தவறான தகவல் தந்திருப்பதையும்,தான் ரங்கதுரையின் தம்பியல்ல,கப்பல் முதலாளி கண்ணபிரான் அவர்களின் தம்பி என்றும் நிரூபிக்கும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று சூளுரைத்து அண்ணனைக் காணச் செல்கிறான்......'ராஜாமணி அம்மா தர்மச் சத்திரத்தில்,தரையில் படுத்துறங்கும் ரங்கதுரை....தட்டி எழுப்பும் ஸ்ரீகாந்த்....'வாப்பா"ஆதுரத்துடன் அழைப்பவரிடம்,"அண்ணே உங்க கிட்ட பேசணும் கொஞ்சம் வெளியே வாங்க "அழைக்க உடன் செல்கிறார்.அவரிடம் தன மாமனார் மனைவிக்கு,தான் ஏழை ரங்கதுரையின் தம்பி என்று தெரியாது என்றும்,தன மரியாதையைக் காப்பாற்ற ஒரு பெரிய தனவந்தனாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்.வெள்ளந்தியான ரங்கதுரை"அவுங்கதான் என்னைப் பார்த்திருக்கிறார்களே?என்று வினவ.....நாடகத்தில் பல வேடங்கள் போட்டிருக்கும் அவர் பெரிய கனவானாக நடிப்பது பெரிய விஷயமில்லை என்றும் சொல்கிறான்.அதிர்ந்து போன நடிகர் திலகத்தின் கண்களையும் உடல் மொழியையும் இனிமேல் பார்க்கணும் ஒவ்வொரு நொடியும் ஒரு பாடம்...நடிகன் என்று பேர் சொல்லிக் கொண்டிருக்கும் அனைவரும் பலமுறை ரீவைண்ட் செய்து செய்து பார்க்கணும்.....பாடமாகவும் நடிப்புக் கல்லூரியில் வைக்கணும்..."நான் உங்கண்ணன் மாதிரி நடிக்கணுமாப் பா??நான் மேடையில் அர்ஜுனனாக நடிச்சிருக்கேன்,அரிச்சந்திரனாக நடிச்சிருக்கேன்...சொந்த தம்பிக்கே அண்ணனாக முதன் முதல்ல வேஷம் போடப் போறேம்பா?"தோள் துண்டும்,உடல் குறுகிக் கூனும் நெகிழ்வும்...ஆஹா....உன் அண்ணனில்லைஎன்று நானே வந்து சொல்லணு மாப்பா...கேட்கும் பொழுதே நெஞ்சு வெடித்து விடும் நமக்கு...சொன்னபடியே ஒரு பெரிய தலைப்பாகை,கம்பீரமான நடை,பகட்டான உடை,கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் அதை சுழட்டும் லாவகம்...'ஏண்டா இதுதான் உன் மாமனார் வீடா...என்னமோ பேலஸ் மாதிரின்னு சொன்னே நம்ம செர்வெண்ட்ஸ் குவாட்டர்ஸ் மாதிரி இருக்கு......தோரணை....ஸ்டைல்....கம்பீரம் என்றால் இது!பகவதியைக் காட்டி யார் இவரு உன் மேனேஜரா?எடக்கு ...என்ன நினச்சுகிட்டு இருக்காரு உன்னை....திருவாங்கூர் திவான் தில்லை நாயகத்தின் பேரனா இல்ல தோட்டக்காரனா?கப்பல் முதலாளி கண்ணபிரானின் தம்பியா இல்லை இவுங்க வீட்டுத் தோட்டக்காரனா?ராயல் பேமிலி....அவர் நிறுத்தியதும் பகவதி மன்னிக்க வேண்டுகிறார்...அவரிடம்'அய்யா நெல்லைக் கொட்டினா மணிமணியாகப் பொறுக்கிடலாம்...நெய்யைக் கொட்டினால் முடியுமா?'பேசி முடித்து தலையில் இருக்கும் தலைப் பாகையையும்,மீசையையும் கலைக்க....கலந்குவோம் நாம்...தொடருவார் அவர்....ஆமாய்யா ரங்கதுரையே தான்....இந்த லட்சாதிபதி வேஷம் பொய்,,,எல்லாம் பொய்.....அய்யா நாங்க லட்சாதிபதிக்குப் பிறக்கலை...ஆனால் தேசத்தின் விடுதலைக்காக மேடையில் நடித்த ஒரு லட்சியவாதிக்குப் பிறந்தவர்கள்...என் தம்பி நல்லவனய்யா...பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டதன் விளைவு.....தம்பி மனைவியிடம் அம்மா என் தம்பி நல்லவன் என்று சொல்லி வெளியேறும் முன்...பகலெல்லாம் பட்னி கிடக்கிற நான் இரவில் மேடையில் ராஜாவாக நடிக்கிறேன்.....பகலெல்லாம் நல்ல வாழ்க்கைக்காக என் தம்பி நாளும் நடிக்கிறான் ஒருத்தன் பொழைப்புக்காக நடிக்கி றான்...இன்னொருத்தன் பகட்டுக்காக நடிக்கிறான்.....சொல்லி நடக்கிறார்.பகவதியும் பத்மினியும் விக்கித்து நிற்க,ஸ்ரீகாந்த் வெட்கி நிற்க நாம் சொக்கி,திக்கு முக்காடிப் போகிறோம் சோகத்தில்.....என்றும் நீரே உமக்கு நிகரானவர் நடிகர் திலகமே....காட்சி உங்களுடன்...


https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQB8UXVZ6fvxtbxe&w=158&h=158&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fbflp40ReqeE%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&sx=120&sy=0&sw=360&sh=360&_nc_hash=AQDCbM0bYmPnAyys

(https://www.youtube.com/attribution_link?a=xkUs4J1LG6U&u=%2Fwatch%3Fv%3Dbflp40ReqeE%26feature%3Dshare)

Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fattributio n_link%3Fa%3DxkUs4J1LG6U%26u%3D%252Fwatch%253Fv%25 3Dbflp40ReqeE%2526feature%253Dshare&h=ATNjQyG3E00VKAZm4Yzg_CoLrPfotoDFwwi7PW8hEMxsD3Wi L_aP4Kwt5DgAlteOyyEDnp8hZGXhsCpLWhul75HdO3DdeASeu_ BC3h6aZHmREB5zC0APFAEsn5XuYMu9UFbgcA&enc=AZPVFjtZyu-oJlCrd43dFs-qKHinPBLBO7jDurNsudkPrLP75vT3ir3qzHIjXIwUPRJM1dO6k Yhtppoq5FkfE2ywwAWqZ6_WyodqZNOGVohI2gjCjjyarq0LvDO _aDrRIy9MNkOnNC_N9oGMqVtt-4igolqPNtu3xYfy0DCezEhvmw&s=1)
Rajapart Rangadurai - Tamil Movie Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ra...
youtube.com









(முகநூல் விசாலி ஶ்ரீராம்)

sivaa
9th May 2017, 09:57 PM
டி.எம்.எஸ்....நடிகர்திலகம்...கவியரசர்....மெல்லிசைம ன்னர்.இந்தப் பாடலில் எது என்னைக் கவர்ந்தது?இசையா?டி.எம்.எஸ் அவர்களா?மெல்லிசைமன்னரா?இல்லை கவியரசரா என்றால் என்னால் சொல்ல இயலாது என்பதே உண்மை...அப்படி ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைத்துக் கொண்டு நெஞ்சத்தில் ரீங்காரம் செய்து கோலோச்சுகிறார்கள் என்பதே உண்மை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...1962 இல் வந்த படித்தால் மட்டும் போதுமா படப் பாடல்.
திருமணம் முடிந்து விடுகிறது.ஆனால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை...அவன் என்ன செய்வான் பாவம்....இத...ு வெளியில் சொல்லக் கூடிய விஷயமா?
நான் கவிஞனும் இல்லை என்று ஒரு பாடல் இப்பொழுது உங்களுக்காக!!!
ஒரு வீரமான வாலிபன் திருமணம் முடிந்து ஓராயிரம் கனவுகளோடு முதலிரவு அறைக்கு செல்கிறான்!அவ்ளோ அவன் படிக்கதவன் என்று வெறுத்து ஒதுக்குகிறாள்!அவனின் வாலிப விரகம் இந்தப் பாடல்!நடிகர் திலகம் அந்த ஆண்,அந்த ஆணுக்கு ஒரு ஆண்மைகென்றே அமைந்த குரலோன் டி.எம்.ஸ் குரலில்,மெல்லிசை மன்னரின் இசைப்பூங்கொத்து இது!
நான் கவிஞனும் இல்லை,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!!!
அவன் விரகம்,கவியரசரின் கண்ணியமான வரிகளில்........
இரவு நேரம் பிறறைப் போலே என்னையும் கொல்லும்,துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் என்று பாடி ஆஹாஹாஹா என்று வார்த்தைகளே இல்லாமல் ஊமைகீதத்தில் தன் வருத்ததை அழுதும் அழாமலும் புரியவைக்கிறான்!!!
உடலை முறுக்கிக் கொண்டு உடம்பெல்லாம் வலிப்பதாகக் காட்டும் லாவகம்,மேலிருந்து ஒரு மாண்டலினை எடுத்து பிரடையை சரி செய்து சுருதி சேர்க்கும் நயம்....நடிகர் திலகத்துக்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா?வாழ்ந்திருப்பார்...'அன்பே ஆருயிரே,இன்பமே இனியவளே...பண்போடு அன்போடு படியேறி வந்தவளே!!!உன்மேல் பாட்டுப் பாட...நான் கவிஞனும் இல்லை என்று பாடும்போது நம் கண்ணை நிறைக்கும் கண்ணீர் துளிகள்....
'காட்டு மானை வேட்டையாடத் தயங்கவில்லையே...இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ மயங்கவில்லையே...கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்கை புரியவில்லையே...நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே..https://static.xx.fbcdn.net/images/emoji.php/v8/fcb/1/16/1f641.png:(...நான் அழுதால் சிரிக்கிறால் சிரித்தாள் அழுகிறாள்....அம்மா தாயே.....இந்த வரிகளைப் பாடும்போது கெஞ்சும் அவன் முகம்...அதில் கப்பிக் கொண்டிருக்கும் சோகம்.....பெண்ணினமே பெண்ணை வெறுக்கும் காட்சி அது....ராஜசுலோசனாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...அந்த ஆணவப் பார்வை.....அற்புதம்.
எனக்குத் தெரிந்தவரையில் இந்த மாதிரி ஒரு விரகத்தை விரசமில்லாமல் விரிவாக இரண்டு வரிகளில் சொன்ன கவிஞன் வேறு யாரும் இல்லை என்பதால்,கவியரசர்,ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத கவிமாமன்னன்!!!!!!!பாடல் உங்களோடு.
See more (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1416021451813474/)
https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQBLN-Hra8mdAc6g&w=158&h=158&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fo17JQ6TWP30%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&sx=67&sy=0&sw=360&sh=360&_nc_hash=AQAF9Bw3qJF6uIWy
(https://www.youtube.com/attribution_link?a=68UsU6OmF4Y&u=%2Fwatch%3Fv%3Do17JQ6TWP30%26feature%3Dshare)


Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song (https://www.youtube.com/attribution_link?a=68UsU6OmF4Y&u=%2Fwatch%3Fv%3Do17JQ6TWP30%26feature%3Dshare)
Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Naan Kavignanum Illai from the super hit classic film, Padithal Mattum Podh...
youtube.com

(முகநூல் விசாலி ஶ்ரீராம்)

sivaa
9th May 2017, 10:31 PM
1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18301022_1330215150428705_625996718804358448_n.jpg ?oh=967e3a2a5c6a4331000cef4be509b71a&oe=597C903C


(முகநூல் sekar .p)

sivaa
10th May 2017, 10:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18423725_10154875699873171_5343340039835976593_n.j pg?oh=f1c069cd4c63b766bc1b790b6e181e8b&oe=59B28A0E

sivaa
10th May 2017, 10:16 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18424187_10154875701578171_9070776298988346951_n.j pg?oh=8e35532bb37f97ebf1102762ae4b1c77&oe=59B4B8A2

Gopal.s
10th May 2017, 08:35 PM
Veerapandiya Kattabomman- 16/05/1959- 58 th Year of Completion.

என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது


கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

Gopal.s
10th May 2017, 08:40 PM
Veerapandiya Kattabomman-16/05/1959

எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?

அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)

எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.

இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.

அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.

ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .

Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.

ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.

ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.

வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.

வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.

Gopal.s
10th May 2017, 08:44 PM
வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.

ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.

மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.

இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.

என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.

அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.

நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .

முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?

நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.

தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .

இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.

1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.

2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.

3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.

4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)

5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.

6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .

7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.

8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.

எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.

வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.

மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .

ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.

என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.

தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.

கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.

vasudevan31355
11th May 2017, 10:32 AM
'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)

https://i.ytimg.com/vi/M29SruOv6AQ/0.jpg

'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'

பாடல் ஒரு முழு ஆய்வு.

ஒரு பாடல்.ஒரே ஒரு பாடல். உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் ஊன் உயிரெல்லாம் கலந்து மௌனமான சிலிர்ப்பை உண்டாக்கும் சிந்தை கவரும் பாடல்.

இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனது பாரமாகும். இனம் புரியா சோகம் நெஞ்சைக் கவ்வும். தொண்டைக்குழிக்குள் பலாப்பழம் அடைப்பது போன்ற உணர்வு. நாயகருடனும், பாடகனுடனும், இசை அமைப்பாளருடனும், கவியரசருடனும், காட்சியுடனும் இரண்டறக் கலந்து விடுவோம். பாடல் கேட்டு முடித்த பின் உணவு உண்ணப் பிடிக்காது. உறக்கத்தில் நாட்டம் இராது.


எதிலும் நாட்டமில்லாமல் சதா தொழில் தொழில் என்று அலைந்து பணம் புரட்டும் பெரும் வியாபார நாயகன் ஒரு நடன மாது மீது சொல்லொணாக் காதலுற்று, அவளை அடைவதற்காகவே பரதம் பயின்று, போட்டியில் அவளையே வென்று பல சோதனைக்களுக்கிடையில் அவளைக் கைப்பிடிக்கும் நேரம் அந்தஸ்து கெளரவம் என்று அலையும் தந்தையின் சதியால் அவளை பிரிகிறான். காசு காசு என்று அலைந்தவன் காதலிக்காக கலை, கலை என்று அதிலேயே மூழ்குகிறான் விபச்சாரி என்று பட்டம் கட்டப்பட்டு பரிதாபமாக அந்தப் பாவை பரத நாயகனை விட்டு நீங்குகிறாள்.

நாயகியைத் தேடித் தேடி அலைகிறான் அந்த பரிதாபத்துக்குரிய நாயகன்.தேடுகிறான்...தேடுகிறான்....காடு மேடெல்லாம் தேடுகிறான்....மலைகளிலெல்லாம் தேடுகிறான்...அவளால் தான் கற்ற பரதத்தையும், இசை ஞானத்தையும் முதலாக வைத்து தேடுகிறான். பாவை கிடைத்தபாடில்லை. அவளின்றி அவனுக்கு இனி வேறோர் உலகம் உண்டோ. 25 வயதில் அவளைத் தொலைத்து விட்டு 60 வதிலும் அவளைத் தேடுகிறான். இன்னும் தோல்விதான் அவனுக்கு. ஆனால் அவனின் காதலுக்கு அல்ல.

இளமை போய் நரைத்திரை விழ, நடுத்தர வயதை நாயகன் அடைந்தும் முயற்சியை விடவில்லை. வருடங்கள் பறந்து வாலிபன் வயோதிகனாகிறான். பொலிவிழந்த உருவம்...களையிழந்த முகம்.. குன்றிய உடல்.. ஆனால் குன்றாத மன உறுதி. .காதல் அவனை உருக்கியது. ஆனால் அவனோ காதலை இன்னும் தன் உள்ளத்தில் இறுக்கினான். இருத்தினான். கிடைத்து விடுவாள் என்று தேடுதலை விடான்.

இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.

‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்'

என்ற தொகையறாவில் தொடங்கி

'தெய்வத்தின் தேரெடுத்து'

தன் தேவியைத் தேடுகிறான். தென்றலை தூதாக ஓடச் சொல்லி ஓடாய்த் தேய்கிறான்.

நாயகன் யார்? வேறு யார். நம் நடிகர் திலகமே. சதியால் காதலியைப் பிரிந்து துயருறும் துன்ப நாயகன். நடிப்பில் நமக்கு எப்போதும் இன்பமளிக்கும் இனிய நாயகன். பிரிந்த நாயகி கலைச்செல்வி

சால்வை அணிந்த ஜிப்பா பஞ்சகச்சத்துடன் நடிகர் திலகம் மலைப் பிரதேசங்களில் கவலை தோய்ந்த முகத்துடன் காதலியின் பிரிவுத்துயரை பாடல் வரிகளின் மூலம் பறை சாற்றும் கட்டங்களை எப்படி எழுதுவது?

மனதில் கவலை மேகங்கள். வானில் கலைந்து செல்லும் வெண் மேகங்கள்.

'பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு' வரிகளில் இந்த அதிசய நடிகன் காட்டும் கை பாவங்கள். வலது கை விரல்களில் நான்காவது விரலையும், சுண்டு விரலையும் சற்றே மடக்கி, நடு விரலையும், சுட்டு விரலையும் நிமிர்த்தி, கட்டை விரலை விரித்து, வளைத்து, வான் நோக்கி தலை உயர்த்தி, இடமிருந்து வலமாக காற்றில் விரல்களால் கோடு கிழிக்கும் உன்னத நடிப்பு. அந்த வரியை உச்சஸ்தாயியில் உயர்த்திப் பிடிக்கும் பாடகர் திலகம் நடிகர் திலகத்தினுடேயே இணைந்து விடுவார்.

ஷெனாய், சிதார், வீணை, சாரங்கி வைத்து வித்தை காட்டுவார் மெல்லிசை மன்னர். மலைப் பரப்புகளில் நடிகர் திலகம் லாங் ஷாட்டில் சோகமே உருவாய் நடந்து வரும் அழகை அற்புதமாக படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர். மென் குளிரில், மெலிதான தென்றலில் சால்வை அகல, அதை சரி செய்து கொண்டு நடந்து வரும்போது சூரியனைக் கொண்டுதான் திருஷ்டி சுற்றி போட வேண்டும் இந்த நடிப்புத் திருமகனுக்கு.

'மாமழை மேகமென்று கண்களில் இருப்பு' என்ற ஒரே ஒரு ஒற்றை வரியில் நாயகனின் மன நிலையை நம்முள் விரிய வைத்த மகா கவிஞன்.

நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சைட் போஸும் ஒரு கோடி பெறும்.

பருவ காலங்கள் மாறி மாறி வர, காதோரம் நடிகர் திலகத்திற்கு நரைக்க ஆரம்பிப்பதை காலத்தின் ஓட்டம் காட்டும்.

கம்பனும், காளிதாசனும் தங்கள் நாயகிகளை மறந்து இவன் நாயகியை கண்டால் அவர்கள் நாயகி என்று சொந்தம் கொண்டாடுவார்களாம். அடடா! நாயகி மேல் நாயகன் வைத்துள்ள காதலை இதைவிட சிறப்பாக உணர்த்த இயலுமா?

'சீதையைக் காண்பான்' எனும்போது நடிகர் திலகம் கையை அருள்புரிவது போல அமைதியாக காட்டும் கட்டம் கன ஜோர். 'சகுந்தலை' எனும்போது காற்றிலே திலகத்தின் கைகள் சாகுந்தலம் வரையும். மஞ்சள் நிற சால்வை பெருமை கொள்ளும். பாந்தமான நடிப்பில், தோற்றத்தில் சிகரம் நம்மை சிறையிடுவார்.

'நாயகியே எனது காவிய எல்லை' வரிகளில் பாடகர் திலகமும், நடிகர் திலகமும் நிஜமாகவே அவரவர்கள் துறையின் எல்லைகளைத் தாண்டி அற்புதம் காட்டுவார்கள். நடிகர் திலகம் கண்களை மூடி
சைட் போஸில் 'காவிய எல்லை'யை வாயசைப்பில் ஜாலம் காட்டும் வித்தைக்கு ஆஸ்கர் எந்த மூலை க்கு? ஒவ்வொரு இடத்திலும் ஒரு நடிகன் எப்படி நிற்க வேண்டும்,எப்படி கைகளை வைத்துக் கொள்ள வேண்டும், எப்படி பாவங்களை தேவையான சமயம் காட்ட வேண்டும் என்ற நடிப்பு நாளந்தா பல்கலைக் கழகமல்லவோ இந்த பார் போற்றும் நடிப்புச் சக்கரவர்த்தி.

'நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை' வரிகளில் தன் தலை தொட்டு, நரை காட்டி, தன்னிரக்கம் காட்டுவார் நடிகர் திலகம். நம் இரக்கம் முழுதும் மொத்தமாக அவருக்கே போய்ச் சேரும். நம் மனம் இந்த இடத்தில் புண்பட்டு பழுதாகும்...ரணமாகும்.

நீண்ட நெடிய, யாருமே இல்லாத வளைந்து செல்லும் ஒற்றை சாலையில் கைகளை பின்புறம் கட்டி விட்டேர்த்தியாக திலகம் நடக்கையில் நம் இதயம் பரிதவிக்கும்.

சிதாரின் பின்னணியில் மலையருவி கொட்ட, காதல் வாழ்வை பாழ்படுத்திய தந்தை, மற்றும் காதலிக்கும், தனக்கும் வித்தை கற்றுத் தந்த குருக்கள், இவர்கள் மாலையிட்ட புகைப்படமாக மறைந்து விட்டதற்கு கா(சா) ட்சியளிக்க, காலங்கள் பறப்பதை இசைக்கருவிகள் அம்சமாக உணர்த்த, பாடகர் திலகத்தின் ஸ்வரங்கள், ஜதி கம்பீரமாக கேட்க, குழந்தையாய் ஆடும் இளம் ஸ்ரீப்ரியா இப்போது குமரியாக நடராஜர் சிலை முன் பரதம் ஆட, பாடலின் முடிவில் கழுத்தைக் கவர் செய்யும் வெள்ளைக் கலர் ஜிப்பாவுடன் முதிர் தோற்றத்தில் தாடியுடன் 'தாம் தீம் தாம் தகிடதகதிமி' ஜதி சொல்ல.....

காலங்கள் கடக்கும் வேகத்தை இசை மூலமாகவே நமக்கு உணர்த்திவிடும் மகா இசைக் கலைஞன் சொல்லி மெல்லிசை மன்னர். அந்த மகானுக்கு தன் பாடல் வரிகளால் தீனி போடும் கவியரசன். பிரிவுத் துன்பத்தை நம்முள் நடிப்பால் விதைக்கும் நடிகர் திலகம். கர்நாடக இசையோடு இழையும் இந்த இனிய பாடலை ஒரே ஒரு வித்தகன் மட்டுமே பாட முடியும். நாயகனின் பிரிவுத் துயரை தன் குரல் மூலம் பிரித்து மேயும் பாடகர் சிகரம் டி.எம்.எஸ்.

மனதை பிழித்தெடுக்கும் பாடல்களில் என்றும் முதலிடம் பெறும் உணர்ச்சிக் குவியல்களின் ஒருமித்த சங்கமப் பாடல். பாடல்களின் வேதம். கல்வி போல நீராலும், நெருப்பாலும், காலத்தாலும் அழிக்க முடியாத சிரஞ்சீவிப் பாடல்.

https://i.ytimg.com/vi/8rr_wLo9aLE/hqdefault.jpg?custom=true&w=168&h=94&stc=true&jpg444=true&jpgq=90&sp=67&sigh=Ul2fKcAQ7bOE04mRfqXNPwUMzuo

கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்
கால் சலங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை.....

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்குப் போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடிப் பறந்ததம்மா இளங்குயில் பேடு
இளங்குயில் பே டு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தினில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
மாமழை மேகமென்று கண்களில் இருப்பு
மார்கழிப் பனியன்றோ அவளது சிரிப்பு
அவளது சிரிப்பு

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

கம்பனைக் கூப்பிடுங்கள்
சீதையைக் காண்பான்
கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
கம்பனைக் கூப்பிடுங்கள்
சீதையைக் காண்பான்
கவிகாளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில்
திரை விழவில்லை

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு

தாம் தீம் தாம்
தகிடதகதிமி
ததீம்தாங்கு ததீம்தாங்கு தகதிமி
தாம் தீம் தாம்
தகிடதகதிமி ததீம் தாங்கு ததீம் தாங்கு தகதிமி
ததரிட தகஜுனு ததரிட தகஜுனு
தகிட ஜூனுகு தகிட ஜூனுகு
தகிடதகமி தகிட தஜூனு
தகிடதனத்த தகிட தஜூனு
தஜூம் தஜூம் தஜூம் தகிடதா

https://www.youtube.com/watch?v=-M0MxspI6Xg

adiram
11th May 2017, 01:33 PM
அன்பு வாசுதேவன் சார்,

சற்று இடைவெளிக்குப்பின் தங்களின் புத்தம்புது பதிவான 'தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு' பாடலின் விவரணை கண்டு சொக்கிப்போனேன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் பரவச நிலை, அதை தலைவர் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மட்டுமே நீங்களும், கோபால் சாரும், முரளி சாரும் தர முடியும்.

பாட்டும் பரதமும் படத்தின் அத்தனை பாடல்களும் தேன் சொட்டு என்றால் மிகையாகாது.

மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
தெய்வத்தின் தேரெடுத்து
உலகம் நீயாடும் சோலை
என ஒவ்வொரு பாடலும் அருமையோ அருமை.

நடிகர்திலகத்தின் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் பெரும்பாலும் டூயட் பாடல் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒன்றேயொன்று வைப்பார்கள். இப்படத்தில் மூன்று பாடல்களில் இணையாக தோன்றுவது மனதுக்கு இதமாக இருந்தது.

இப்படத்தின் துவக்கம் முதல் அண்டர் கரண்ட் என்பது போல ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கும். அதுவே படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும்.

பாடலின் ஒவ்வொரு வரியையும் வார்த்தைகளையும் அற்புதமாக அலசியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது எழுதியவரின் படைப்பாற்றல், இசையமைத்தவரின் அசாத்திய திறமை, பாடியவரின் அபார பங்களிப்பு என்று அனைத்தையும் விவரித்துள்ளீர்கள். நிச்சயமாக டி. எம். எஸ். தவிர வேறு யாரும் இந்தப்பாடலை அவ்வளவு ஜீவனோடு பாடியிருக்க முடியவே முடியாது. உச்ச ஸ்தாயியில் 'கற்பனைக்கு மேனி தந்து' என்று அவர் துவங்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்து விடும். பாடல் முடியும் வரை அந்த பரவசம் அடங்காது. பாடலின் இடையே கதையின் முக்கிய பாத்திரங்களான மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, மனோகர் ஆகியோர் மறைந்து விட்டதை காண்பிக்கும்போது நம் சோகம் இன்னும் அதிகரிக்கும். கதாநாயகியையும் காணவில்லை, கதாபாத்திரங்களும் மறைந்து விட்டனர். மேற்கொண்டு கதை எப்படி நகருமோ என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள நம் ஆவல் அதிகரிக்கும்.

சிறப்பான திறனாய்வுக்கு பாராட்டுக்கள்.
இதுபோன்ற சிறப்பு பதிவுகளுடன் அடிக்கடி வருகை தாருங்கள்.

Russellsmd
11th May 2017, 07:29 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170510211636881_zpse3au 7pvn.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170510211636881_zpse3au 7pvn.jpg.html)

எதை எதிர்பார்த்திருந்தோமோ... அது அப்படியே
சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதில் கூட அத்தனை சந்தோஷமில்லை.

இங்கே நாம் எதிர்பார்த்தது எங்கே கிடைக்கப் போகிறது என்று சலித்திருக்கும் சூழலில், நாம்
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைக்கிற
போது வருகிற சந்தோஷம் அலாதியானது.

அப்படியொரு சந்தோஷம் எனக்கு " வாணி ராணி"
திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு காட்சிகளைப் பார்க்கையில் கிடைத்தது.
*****

போன வருஷத்துக்கு முந்தின வருஷம் நான்
பணிபுரியுமிடத்தில் பெண்களெல்லாம் ஒன்று கூடி
மகளிர் தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்.

ஒரே விதமாய் உடையணிந்து, எல்லோருக்கும் இனிப்பு பரிமாறி... மிக உற்சாகமாய்க் கொண்டாடினார்கள்.

நான் மகளிர் தினத்திற்காக எழுதி வைத்திருந்த
ஒரு கவிதையை விழா துவங்குவதற்கு முன்பே
அவர்களிடம் கொடுத்து வாழ்த்துச் சொன்னேன்.

ஆனால், விழா துவங்கிய சில நிமிடங்களில் அதை
மீண்டும் என்னிடமே தந்து, என்னையே ஒலிபெருக்கியில் வாசிக்கும்படி கேட்டுக் கொள்ள,
பெண்கள் விழாவில் என் குரலா என நான் தயங்கத்துடனே வாசித்தேன்.

என் தயக்கத்தை சந்தோஷத் திகைப்பாக மாற்றியது அந்த மகளிர் அரங்கம். கைதட்டல்கள்
என் எழுத்துகளைக் கௌரவித்தன. நிறைய பாராட்டுகள்.

" வென்று சிரிக்கிற
ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால்
நின்று சிரிப்பது நீங்கள்தானே?"
- என்கிற வரிகள் மிகவும் ரசிக்கப்பட்டவை.

பெண்கள் பேசப்படுமிடத்தில், ஒரு ஆண்.. நான்
பேசப்பட்ட கர்வமிகு மகிழ்விலிருந்த எனக்கு
அப்போது "வாணி ராணி" எனும் பெண் பேசப்படும்
கலைக்களத்தில் ஒரு ஆணாக வென்று வந்த
வணங்குதலுக்குரிய முன்னோடி நடிகர் திலகம்தான் நினைவுக்கு வந்தார்.
*****

" வாணி ராணி" யில் அய்யன் ஏற்றிருக்கிற அந்த
"ரங்கன்" கதாபாத்திரத்தை வேறு யாரேனும்
செய்திருந்தால், ரங்கனை வாணியும், ராணியும்
சுலபமாய் ஜெயித்திருப்பார்கள்.

கால் பதித்த மாத்திரத்திலேயே நுழைந்த இடத்தை
தனதாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நடிகர்
திலகத்தாலேயே ரங்கன் நம் மனதில் நின்றான்.
வென்றான்.

இத்துடன் நான் இணைத்திருக்கிற 11.09 நிமிடக்
காணொளியின் முதல் 4.00 நிமிடங்களை எடுத்துக் கொண்ட இரண்டு காட்சிகளே இங்கு நான் குறிப்பிட விரும்புவது.

ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் என்கிற சராசரி
நிலையிலிருந்து ஒரு திரைப்படத்தின் போக்கை
மாற்றி, ஒரு கதாபாத்திரத்தை ஜனங்கள் ஊன்றிக்
கவனிக்கிற உயர் நிலைக்கு நடிகர் திலகம் மாற்றியிருக்கிறார்.

மூன்று மணி நேர சினிமாவில் மொத்த நேரமும்
பேசப்படுவது அந்த கதாநாயகியரின் இரட்டை
வேடங்களே. அவற்றை ஜெயித்து தன் பாத்திரத்தைப் பேச வைக்க நான்கே நிமிடங்கள்
போதுமானதாயிருக்கிறது... நடிகர் திலகத்திற்கு.

நிறையக் குடித்து விட்டு, தன் வீடே தெரியாது
தள்ளாடும் நாயகனை நாயகி அவனது குடிசை வீட்டுக்குள் அழைத்து வருகிறாள். " இதுதான்
உங்க வீடு" என்கிறாள். அங்கேயே அய்யனின்
திறமை விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது.

அவன் குடிப்பது உற்சாகத்துக்கில்லை.. உள்ளே வாட்டும் கவலை வெப்பம் தணிக்கவே என்பதும்,
அவனருந்தும் மதுத்திரவம் அவன் அநாதையாகி
அவலப்பட்ட கொடுமை எரிக்க அவன் மனதில்
ஊற்றும் அமிலமென்பதும் நமக்கு விளங்குகிறது.

படிப்பறிவற்ற ஒரு எளியவன் அவன் மீது கரிசனம்
கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், நமக்குமாக
தன் வேதனை பகிரும் அந்த முதல் காட்சி அற்புதமானது.

கிண்டல் மிகுந்த ஒரு மொழியில் நாயகன் தன் வேதனை வாழ்வுக்குத் தரும் விளக்கத்தில்தான்
எத்தனையெத்தனை உணர்வுகள் வெளிப்படுகின்றன?

" காரை உதிர்ந்து போன சுவரு, கயிறு அறுந்து
போன கட்டில், கரையான் புடிச்சுப் போன ஜன்னல்.. ஓட்டை.. உடைசல்.. ஈயம், பித்தளை.. பேரீச்சம்பழம்..." - இது, தனது ஏழ்மையில் சலித்துப் போய் கொட்டும் கேலி மழை.

" யாராவது குடியிருந்தா அது வீடு. இங்க யாரு
குடியிருக்கா? யாரு " குடி" இருக்கான்னு கேக்கிறேன்..!? - இது, தன்னையும், தனது சாராய சிநேகிதத்தையும் திறமையாய் வெளிப்படுத்தும்
சாதுர்யம்.

சிறு வயதில் தான் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட
சோகம் பகிரும் இடத்தில் அய்யனின் முகம் காட்டும் பல நூறு பாவங்களில் ஒரு அநாதை இளைஞன் தாண்டி வந்த இருபத்தைந்து வருட
வாழ்க்கை கண் முன்னே வருகிறது.

" எல்லோரும் இந்நாட்டு மன்னராம்" என்று மகா நக்கலாக சொல்லி விட்டு நமக்கு நேரே கை நீட்டி,
நாக்கு மடித்து, ஒரு கெட்ட வார்த்தையை தவிர்த்து
அவர் காட்டும் பாவனை... நம்மில் இயல்பு மீறி
வக்கணையாய்ப் பேசிப் பழகுவோருக்கு மௌன
எச்சரிக்கை.

தனக்கென்று யாருமில்லாத சோகம், உனக்கு நான் இருக்கிறேன் என்றொருத்தி வந்தவுடன் மாறுவதாய் அந்தக் குமுறல் காட்சி முடிகிறது.
*****

விடிகிறது.

இதோ... தொடரும் இந்தக் காட்சியில் வேறொரு
அய்யனைப் பார்க்கலாம்.. சற்று முன் புயல் போல்
ஆட்டங் காட்டியவர், இப்போது தென்றலாய் இதம்
பேசுகிறார்.

உறங்கி எழுந்தவனின் முகத்தை மட்டுமல்ல.. திருந்தி எழுந்தவனின் முகத்தையும் அவரில்
பார்க்கலாம்.

முன்னே பின்னே கடவுளை வணங்கியறியாதவன்
கோயிலுக்குப் போய் கடவுளிடம் மனம் விட்டுப்
பேசினால், அது இப்படித்தான் இருக்கும் என்பது
சர்வ நிச்சயம். இப்படியொரு நடிப்பற்புதம் இதற்கு
முன்போ.. இதற்குப் பின் இன்று வரையுமோ நம்
நடிகர் திலகத்தினாலன்றி வேறு யாராலும் நிகழ்ந்ததில்லை என்பதும் சத்தியம்.

பாசாங்கு என்பதே துளியும் இல்லாத ஒரு எளியவன் கடவுளை நோக்கிப் போகும் நடையைப்
பாருங்கள்.. ஏதோ.. இது வரை தவறாக நினைத்து,
இப்போதுதான் நல்லவர் என்றுணர்ந்த ஒரு பெரிய
மனிதரைப் பார்க்கப் போவது போல் ... எளிமையாக!

" நம்ம ராணி இல்ல ராணி..." தனக்கானவளை கடவுளுக்கு அறிமுகப்படுத்தும் வெள்ளந்தித்தனம், ஒரே ஒரு " ஒப்புரானே" கொண்டு செய்யும் உயர்ந்த சத்தியம், "புத்தி சொல்லி பக்கத்தில வச்சுக்கப்பா" என்று தன் தவறு திருத்தி தன்னைக் கடவுளிடம் சரண் செய்யும் நற்பண்பு, " மத்தபடி நீ அதைச் செய்யி..
நான் இதைச் செய்யறேன்னு வியாபாரம் பேச வரலே.."- என்று கடவுளிடம் கூட விட்டுக் கொடுக்காத அற்புதமான நேர்மை, " காசிருந்தா
கற்பூரம்.. இல்லாட்டி கையெடுத்து ஒரு கும்பிடு"
- என்று கடவுளின் முன் கடவுளுக்கே கற்றுத் தருகிற யதார்த்த வாழ்வியல்...

இந்த கலை வியப்புகளையெல்லாம் நான்தான்
எழுதுகிறேன் என்கிற கர்வமல்ல.. இந்தப் பதிவு.
நானும் எழுதியிருக்கிறேன் என்கிற பெருமிதம்.
*****

இந்தக் காட்சியில் முருகனிடம் வாணிஸ்ரீ வேண்டிக் கொள்வார்.. "முருகா.. அவர் உன்னை
மறந்தாலும், நீ அவரை மறக்காதே!"

நான் வேண்டிக் கொள்கிறேன்.. " முருகா.. என்
மனதிலிருந்து எந்த நினைவை மறக்கடித்தாலும்,
அய்யனை மறவாமல் நினைக்க வை!"

Vaani Rani - Sivaji Ganesan | Vanisri ( Double Ro…: http://youtu.be/gG3zb81jy78

Russellsmd
11th May 2017, 07:44 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170507122251691_zpszf9p h8jy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170507122251691_zpszf9p h8jy.jpg.html)

Russellsmd
11th May 2017, 07:46 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170507142201858_2017050 7183136418_20170507184709545_zps2ng0xf3d.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170507142201858_2017050 7183136418_20170507184709545_zps2ng0xf3d.jpg.html)

goldstar
12th May 2017, 05:08 AM
நன்றி வாசு அவர்களுக்க்கு. பதின்மூன்று வயதில் இந்த பாட்டைப் பார்த்து, நடிகர் திலகத்தின் ரசிகராகவும் தீவிர ரசிகராகவும் ஆனார். இந்த பாடல் என் மனதில் மிகவும் நெருக்கமாக இருக்கிறது, ஏனென்றால் உயர்ந்த இசைத்தட்டு T.M.S குரல் மற்றும் நடிகர் திலகத்தின் முகம், கை, விரல் வெளிப்பாடு, நம்பமுடியாத அற்புதம்.

Please do the analysis of vasanthathil oru naal song "vendum vendum ungal uravu" sad part. NT's facial expression simply amazing.

நடிகர் திலகத்தின் 1980 திரைப்படங்களில் ஒவ்வொன்றும் அவரது முந்தைய 1970 மற்றும் 60 இன் திரைப்படங்களை விட உயர்ந்ததாக இருக்கிறது.

goldstar
12th May 2017, 05:10 AM
[QUOTE=vasudevan31355;1320461]'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)

This movie re-released in Madurai Meenakshi on 1988 and run for 2 weeks houseful and made huge collection.

RAGHAVENDRA
13th May 2017, 12:10 PM
Sivaji Ganesan - Definition of Style 32 வசந்தத்தில் ஓர் நாள்காட்சி - படத்தின் உச்சக்கட்டம்கதை..டாக்டர் ராஜசேகர் மிகப் பெரிய செல்வந்தர். தொழில் நிமித்தம் மலேசியா செல்லும் அவர் எதிர்பாராத ஒரு உடல் வலியால், ஒரு நாட்டு வைத்தியரிடம் செல்லும் படியான நிர்ப்பந்தம் நேர்கிறது. அவருடைய மகள் நீலாவின் யதார்த்தமான அன்பும் பரிவும் அவளிடம் அவரை ஈர்க்கின்றன. அவளும் அவரை விரும்புகிறாள். தன் மகளுக்குத் திருமணமாக வேண்டும் என்கிற ஒரே ஆசையில் வாழும் வைத்தியரும் சம்மதிக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் திருமணமாகாமலேயே காதலர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விடுகின்றனர். அவசர காரணமாக தாய் நாடு திரும்ப வேண்டிய நிர்ப்ந்த்த்தில் ராஜசேகர் நீலாவை திரும்பி வந்து திருமணம் செய்து கொள்வதாய்க் கூறி புறப்பட்டு விடுகிறார்.பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி மலேசியாவுக்கு வருகிறார் நாட்டு வைத்தியர் காலமாகி விட்டார், தன் காதலி நீலாவும் ஒரு மகளை ஈன்று விட்டு பைத்தியமாய் பல ஆண்டுகள் திரிந்து கடைசியில் மாண்டு விடுகிறாள். அவள் மகளான ராஜி ஒருவனிடம் காதல் வயப்பட்டிருந்தாள். அவனும் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி விட்டு சென்று விடுகிறான்.பல ஆண்டுகளாக ராஜசேகர். பல வகையில் முயற்சி செய்து ஒரு வழியாய் தன் மகள் ராஜியைக் கண்ணால் பார்க்கும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் அவருடைய மகள் அங்கே ஒரு விலைமாதாய் வாழுகிறாள். தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறாமல், மெல்ல மெல்ல அவள் மனதைக் கரைத்து தன்னுடன் அவளை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.. ஒரு கட்டத்தில் அந்த விடுதி முதலாளியான பெண்மணியும் தன் நல்லெண்ணத்தின் காரணமாக ராஜியை அவர் அழைத்துச் செல்ல சம்மதிக்கிறாள்.ராஜியும் ஒரு கட்டத்தில் மனம் மாறி அவருடன் செல்ல சம்மதிக்கிறாள். . அவருடைய களங்கமற்ற அன்பு அவள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தன்னால் அவர் வாழ்வில் இன்னல் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவருடன் பொய்யாக சண்டை போட்டு விட்டு மீண்டும் விடுதிக்கு வருகிறாள். ஆனால் விடுதி முதலாளியான பெண்மணி அவருடனேயே சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவளைத் திருப்பி அனுப்புகிறாள்.அந்த விடுதியை விட்டு வெளியேறி ராஜசேகருடன் வாழ்வதற்காக அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு ராஜி வருகிறார்.இதன் பிறகு என்ன நடந்த்து. ராஜசேகர் தன் மகளுடன் சேர்ந்தாரா. ராஜி அவரை ஏற்றுக் கொண்டாளா. இது தான் உச்சக்கட்டக் காட்சி. இந்தக் காட்சியைத் தான் இன்று நாம் காண இருக்கிறோம்.ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்கு ஆய்வு செய்து கிட்டத்தட்ட ஒரு மனோதத்துவ நிபுணராய் தன்னை நிலைப்படுத்தி, (PSYCHO ANALYSIS) அதற்குள் புகுந்து அந்த கதாபாத்திரத்தின் மன நிலையை நன்கு உள்வாங்கி வெளிப்படுத்துவதால் தான் நடிகர் திலகம் இன்றும் ஈடிணையற்ற உன்னத கலைஞராய் விளங்குகிறார். மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் சிக்கிக் கொள்ளும் போது எப்படி அதை வெளிப்படுத்த வேண்டும், எப்படி அதற்கான REACTION தர வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். தன் மகளே தன்னை மணமுடிக்க வேண்டும், தன்னோடு வாழ வேண்டும் எனக் கேட்டு வரும் போது அவர் வெளிப்படுத்தும் அந்த அதிர்ச்சி, அவளிடம் உண்மையைக் கூறும் போது வெளிப்படைத் தன்மை, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என மகளிடம் கூறுவதன் மூலம் தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளுதல், மகளிடம் உண்மையைக் கூறி விட்ட பின் ஏற்படும் நிம்மதி, அவள் என்ன செய்தாலும் பரவாயில்லை என எதிர்கொள்ளும் துணிவு, தன் உணர்வை அவள் ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறும் போது ஏற்படும் ஏமாற்றம், சோகம், ஊரை விட்டுக் கிளம்பும் சமயம் அவளை சந்திக்கும் போது ஏற்படும் ஒரு சிறிய நம்பிக்கை, என அமர்க்களப் படுத்துகிறார் தலைவர்.எல்லாவற்றிற்கும் மேலாக வசனமே இல்லாமல் பார்வையிலேயே அன்பைப் பொழிந்து அவள் மனதை மாற்றி அவள் தன்னை நம்பும் படி செய்வது, தந்தையும் மகளும் சேர மாட்டார்களா என பார்வையாளர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அது நிறைவேறிய பின் அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியைத் தன் நடிப்பால் நகர்த்திச் செல்லும் அசாத்திய தன்னம்பிக்கை...நடிப்பின் இமயத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி. இதில் நடிகர் திலகத்துடன் போட்டி போடுபவர்கள் பலர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர், இவர்களை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு நடிகர் திலகத்துடன் கைகோர்த்து இணையாய் நடந்து செல்லும் மெல்லிசை மன்னர்.காலங்களைக் கடந்து நிற்கும் காவிய நாயகனின் வசந்தத்தில் ஓர் நாள், காலமெல்லாம் நாம் ரசித்து மகிழுவதெல்லாம் திருநாள்.நடிகர்கள் ராஜசேகர் - நடிகர் திலகம்நீலா மற்றும் ராஜி - ஸ்ரீப்ரியாநாட்டு வைத்தியர் - வி.கே. ராமசாமிவிலைமாது விடுதி முதலாளி - மனோரமாவிலைமாது தரகர் - தேங்காய் சீனிவாசன்ராஜசேகரின் சமையல்காரர் - ராமராவ்ஒளிப்பதிவு - விஸ்வநாத் ராய்வசனம் - ஆரூர்தாஸ்படத்தொகுப்பு - பி.கந்தசாமிஇசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்திரைக்கதை டைரக்ஷன் ஏ.சி. திருலோக்சந்தர் https://www.facebook.com/vee.yaar/videos/1434937166556951/

sivaa
13th May 2017, 02:16 PM
டிவி சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
காலை 10 மணிக்கு " கௌரவம்" ஜெயா மூவியில்,
பிற்பகல் 1:30 க்கு " பணம் " கலைஞர் டிவியில்,
பிற்பகல் 2:30 க்கு " கீழ் வானம் சிவக்கும்" வசந்த் டிவியில்,
மாலை 6:30 க்கு " ஆனந்தக் கண்ணீர் " கேப்டன் டிவியில்,...
இரவு 7:30 க்கு " பந்தம்" முரசு டிவியில்,
இரவு10 மணிக்கு "பட்டிக்காடா பட்டினமா" ஜெயா மூவியில்,
கண்டு மகிழ்வோம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3833a.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/panamad1-1.jpg

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0012_zpswnyhdxcf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0012_zpswnyhdxcf.jpg.html)

sivaa
13th May 2017, 07:12 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18423812_1904092543138898_7991909976411868146_n.jp g?oh=dc72a7cf137af23b7caea2300412e016&oe=59C2EF97

sivaa
13th May 2017, 07:18 PM
'பாபா முத்திரை'.1958-ல் வெளிவந்த உத்தம்புத்திரன் படத்திலேயே காட்டி விட்டார்.எனவே சிவாஜியின் பாதிப்பில்லாமல் எந்தப்படமும் இல்லை என்பதே உண்மை !




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18423990_1903935316487954_7844251694772482365_n.jp g?oh=a87542e16075f5855301cfed29a8af48&oe=59C088CF


இது போன்ற " நச் " பதிவுக
ளை தொடர்ந்து போடுங்கள்
இலுப்பை பூ சுவைத்திடும்
இன்றை சினிமா ரசிகனுக்கு
அன்றைய சிறப்புகள் தெரிய
வேண்டும் !
.................................................. ........
நம் தெய்வம் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம், பஞ்ச் டயலாக் பேசுவோரெல்லாம் அவருக்கு ஈடாக முடியாது VCGT அண்ணா....

.................................................. ......................
உண்மை. அந்த கண்கள் நம்மிடம் எப்படி பேசுகிறது. அது தான் நமது கலைக்குரிசிலின் சிறப்பு. இன்று வரை நம்மை கட்டி போட்டிருப்பதும் அவர் தான்.


(முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)

sivaa
13th May 2017, 07:24 PM
நான் +1 படித்துக் கொண்டிருந்த காலம் வருடம் 1987 விடுதியில் தங்கி படித்து வந்திருந்தேன், அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் " ஒளியும் ஒலியும் என்ற அரை மணி நேர நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் இருக்கும் என்பதனால் நாங்கள் விடுதியை விட்டு தெருவின் கோடியில் அமைந்திருந்த பஞ்சாயத்து டிவியில் பார்ப்பது வழக்கம், அப்போதெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் டிவி என்பது கிடையாது, அதனால் கூட்டம் நிரம்பி வழியும், ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஐந்து முதல் ஆறு பாடல்கள் மட்டுமே இடம் பெறும், அந்த ஐ...ந்து பாடல்களில் நடிகர் திலகம் பாடல் ஒன்றாவது இடம் பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும்,
அன்றைய நிகழ்ச்சியில் நான்கு புதிய பாடலுடன் நடிகர்திலகத்தின் " சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" எங்கிருந்தோ வந்தாள் படப் பாடல் இடம் பெற்றது, பாடல் ஓடிக் கொண்டிருந்த போது ஒருவர் நையாண்டி செய்தார், "சிவாஜி எதுக்கு பைத்தியம் பிடித்தவர் போல் நடிக்கிறார்"

நாங்கள் விடுதிக்கு வந்து அந்தப் பாடலை பற்றியே பேசிக் கொண்டோம் எதற்காக நடிகர் திலகம் அப்படி நடிக்கிறார், நாங்கள் யாரும் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பார்க்கவில்லை எனவே நடிகர் திலகம் கேரக்டர் பற்றி தெரிய வாய்ப்பில்லை,
ஆனால் நடிகர் திலகம் பாருங்கள் ஒரு பாடல் காட்சியிலேயே சாதாரண பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய நடிப்பை கொடுத்து இருக்கிறார்..



(முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)

கதாபாத்திரத்தை தாண்டி நடிகன் தெரியக்கூடாது,,, சிவாஜி அவர்களின் நடிப்பின் சூட்ஷமமே அதில்தான் அடங்கி உள்ளது,,, இன்ன வேஷம் என்ற கூடு ஒன்று செய்து வைத்திருப்பார்கள்,,, அதற்குள்ளே போய் அழகாக உட்கார்ந்து கொண்டு பர்ஃபாமென்ஸ் செய்வார்,,, சுறுக்கமாக சொன்னால் கூடுவிட்டு கூடு பாயும் மாயாவி,,,,

.................................................. ..........

ஒரே பாடல் உன்னை அழைக்கும்.!பாடலில்
அண்ணன் ரொம்ப அழகாக
அவருக்கு பிடித்த உடையில்
கண்களில் நீர் ததும்ப நடித்திருப்பார். படத்தில் திருப்பு முனை காட்சி அது.!.

sivaa
13th May 2017, 10:52 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18486247_1904127113135441_3572137278048888816_n.jp g?oh=60ff69583d6784b3f4392705e3a5e75d&oe=598025C3

sivaa
14th May 2017, 05:20 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18403483_1904415599773259_2482437844580826186_n.jp g?oh=d05aeaff215cd325abfae0f96c14134e&oe=59749965

sivaa
14th May 2017, 05:21 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18403330_1906128236294432_8638121966355910437_n.jp g?oh=7260ad032a648eadafa34d28f2f409f6&oe=5979D1E5

sivaa
14th May 2017, 05:22 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/18449585_1692487444381025_5850834591629125027_o.jp g?oh=fa5d858e22050bdf62f7ab4c2050e05e&oe=59BA01AF

sivaa
14th May 2017, 05:23 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18422899_1692485024381267_2954957160719542237_o.jp g?oh=6bc3dcf98d52813f2b8acff1aeabef44&oe=59C0D6F8

sivaa
14th May 2017, 05:23 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18446672_314920175610951_3401736027142904510_n.jpg ?oh=df3fc74ed635371109ae6174a3c0f118&oe=5978A79B

Russellsmd
14th May 2017, 07:51 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170514182857257_zpspau7 z2x4.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170514182857257_zpspau7 z2x4.jpg.html)

பள்ளிப் பருவத்தில் காலாண்டு, அரையாண்டு,
முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்த தினத்தில்,
உற்சாகமாய் பள்ளியை விட்டு வெளியேறும் போது...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.


அறிவிக்கப்பட்ட விடுமுறை தினங்களை ஆனந்தமாய் அனுபவிக்க, தாத்தாவின் கிராமத்திற்குப் போய் இறங்கினவுடன்...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.


எப்போது ஊரிலிருந்து வந்தாலும், சிவாஜி படம்
கூட்டிப் போகிற மாமா வந்து இரண்டு நாள் தங்குகிறாரென்று அறிந்தால்...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.


கல்லூரி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுக் கிடந்தவனுக்கு, கல்லூரியில் இடம் கிடைத்து
உள் நுழையும் முதல் நாளில்...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.


பொறுப்பாய், சிறப்பாய் ஊன்றிப் படித்து ஜெயித்தவனுக்கு நல்ல வேலை கிடைத்ததென்று
தபால் வரும் போது...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு
வரும்.


கிடைத்த வேலையைச் சிரத்தையாய்ச் செய்து கத்தை, கத்தையாய் முதல் சம்பளம் பெறுகையில்...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.


உடனிருந்து அன்பு பாராட்ட ஒருத்தி மனைவியாக
வாய்த்தால்...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.


நம் ரசனையின் வெற்றியென ஒரு பாடல் அமைந்தால்...

அந்தப் பாடலின் நாயகனாக நம் நடிகர் திலகமே
இருந்தால்...

அய்யன் நடிகர் திலகத்தால் அப்பாடல் சிறந்தால்...

இந்தப் பாடலின் முதல் வரிதான் நினைவுக்கு வரும்.

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி - Happy indru mudhal ha…: http://youtu.be/0kGMCSvuQx8

Russellsmd
14th May 2017, 08:03 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170514123643649_zpsfyxq tkcc.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170514123643649_zpsfyxq tkcc.jpg.html)

இது-

ஒரு சில வாத்தியக் கருவிகள் நம்மை வசியம் பண்ண உச்சரிக்கும் மந்திரமா?

காற்றைக் கௌரவப்படுத்த இரண்டு இனிய குரல்கள் கலந்து செய்த தந்திரமா?

கலையும் , இசையும் ரம் ரசனை வீதிகளில் செய்யும் நடை பழகலா?

கண்களும், காதுகளும் அதிசயமாய் செய்து கொள்ளும் கைகுலுக்கலா?

நாமெல்லாரும் மெய்மறந்திருக்கும் ஒரு விநாடியில், நடிகர் திலகம் தண்ணீருக்குள் குபீரென்று ஒரு குட்டிக்கரணம் அடிப்பாரே..?

அது...

"குட்டிக்கரணம் போட்டாலும் யாரும் இங்கே சிவாஜியாக முடியாது" என்பதன் விளக்கமா?

" என் விழியில் நீயிருந்தால்" என்று பாடுகையில்
விரிந்து பரந்த திரை முழுதும் வியாபிக்கும் அய்யனின் அற்புத விழிகள்.. ஒளி மிகுந்த சூரியனும், சந்திரனுமா?

" விண்ணோடு விளையாடும்" என்று பாடி முடிக்கையில், அய்யனின் இடது கை நளினமாய்
மேலேறிக் கீழிறங்குமே..?

அது...

" பாரடா என் திறமையை" என்று பாமர ரசிகனுக்குப் போடும் உத்தரவா?

குடும்பத்தோடு போன திருவிழாக் கூட்டத்தில்
திடீரென்று திரும்பிப் பார்த்தால், உடன் வந்த குடும்பத்தினரில் ஒருவரும் இல்லாமலிருந்தால்
ஒரு பயத் திடுக்கிடல் வருமே..?

அது போல..

இந்த உன்னதப் பாடலின் உருவாக்கத்திற்குக்
காரணிகளாயிருந்த மெல்லிசை மாமன்னர்கள்
இப்போது இல்லை.

தெய்வீகப் பாடகர் அய்யா டி. எம். எஸ் இல்லை.
தேன் குரலோன் அய்யா பி. பி. எஸ் இல்லை.

இயக்குநர் அய்யா பீம்சிங் இல்லை.

பாந்தமான நடிப்புக்காரர் அய்யா பாலாஜி இல்லை.

ஏன்...

கோடிக் கோடி நெஞ்சங்களில் கோயில் கொண்ட நடிப்புத் தெய்வம் அய்யா நடிகர் திலகமே இல்லை.

காலமே..! காலனே..! இது நியாயமா?
*****

நானே பேசிக் கொண்டிருந்தால் போதுமா?

நான் கண்ட பொன்னை நீங்கள் காண வேண்டாமா?

Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil …: http://youtu.be/rUmL6PFD1OE

sivaa
15th May 2017, 12:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18446563_813287345494289_6031071658025560353_n.jpg ?oh=9dc172f2a306571017aecec6a3920baf&oe=59BBF837

Russellxor
15th May 2017, 12:32 PM
கவரிமான் 2 பக்க விளம்பரம்.கவரிமானுக்கு செய்யப்பட்ட பேப்பர் விளம்பரங்களைப் பார்த்தால் அது பெரிய பட்ஜெட் படங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.
மதி ஒளியில் அது செய்தியாகவே வந்துள்ளது.
அதன் காப்பி:https://uploads.tapatalk-cdn.com/20170515/0d307ac486bb38a2a7bc508eb3178d1c.jpg

தினந்தந்தி விளம்பரம்:
https://uploads.tapatalk-cdn.com/20170515/83c4a0fb3ccf5cd54c799ba9ac2c95b1.jpg

sivaa
15th May 2017, 08:45 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18425109_421989611499752_8556805898715721185_n.jpg ?oh=19b079162291ae8819335e7e65bf1525&oe=59AF7763

sivaa
15th May 2017, 08:47 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519600_1337325879717632_4362079121438967406_n.jp g?oh=812c398667391364475c7300971c4d76&oe=59754BAC

sivaa
15th May 2017, 09:02 PM
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புக...ழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,

நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் ............... அவர்கள் உருவாக்கிக் கொண்ட ........................................ என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில்(......... )அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519600_1337325879717632_4362079121438967406_n.jp g?oh=812c398667391364475c7300971c4d76&oe=59754BAC

sivaa
15th May 2017, 09:10 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18446563_813287345494289_6031071658025560353_n.jpg ?oh=9dc172f2a306571017aecec6a3920baf&oe=59BBF837


சத்தமின்றி சாதனை செய்துகொண்டிருக்கிறது

sivaa
15th May 2017, 10:01 PM
உட்கார்ந்து இ௫க்கும்இந்த அம்மா தி௫விளையாடல் படத்தை தொடர்ந்து 100 நூறு நாள் 100முறை பார்த்து சாதனை படைத்ததற்கு ஏ.பி.நாகராஜன் பாராட்டி பரிசு வழங்கினார்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/11108676_1629795473901941_7663904126922214300_n.jp g?oh=8f972c4ac1fb0ecef32fbe4ccd59f8fb&oe=59B930A0

sivaa
16th May 2017, 10:18 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான தேதி 16.05.1959
கட்டபொம்மன் இன்று 59வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறார்

வீரபாண்டிய கட்டபொம்மன்.

1. முதன் முதலாக சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடகம் திரைப்படமாக்கப்பட்டது இந்த படத்தின் மூலமாகத்தான்.

2. படமாக்கப்படுவதற்கு முன்பும், படம் வெளி வந்த பிறகும் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.

3. முதன் முதலாக ஒரு நாடகத்தின் மூலமாக கல்விக்கூடங்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தது கட்டபொம்மன் தான்.

4. முதன் முதலாக ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்ட தமிழ் படம் கட்டபொம்மன்.

5. முதன் முதலாக டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட தமிழ் படம் -கட்டபொம்மன்.

6. முதன் முதலாக லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம் - கட்டபொம்மன்.


1. முதன் முதலாக 26 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடின தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்.

2. மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ் கலர் படம் - கட்டபொம்மன்

அரங்கு - நியூ சினிமா

நாட்கள் - 181

3. மதுரையில் முதன் முதலாக 2 லட்சத்திற்கு மேல் வசூல் தந்த படம் - கட்டபொம்மன்

181 நாட்கள் மொத்த வசூல் - Rs 2,77.365.71

வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,08,113.44

விநியோகஸ்தர் பங்கு - Rs 1,13, 583.55

4. வெற்றிவிழாவிற்கு மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்ட முதல் கலைஞன் - நடிகர் திலகம்.

5. வெற்றி விழா பரிசாக 2-ம் வகுப்பு வரை சிலேட்- குச்சியும்,5-ம் வகுப்பு வரை பென்சிலும், 10-ம் வகுப்பு வரை பேனாவும், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும், அந்தந்த பள்ளிகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்பட்டது முதன் முதலாக மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாததும் கூட.

6. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று 1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் அது வரை எந்த தமிழ் படமும் செய்யாத சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகமும் பெற்றார்கள்.

கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.

ஊர் - திருவனந்தபுரம்

2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.

6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5798-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5779-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5775-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5778-1.jpg

sivaa
16th May 2017, 10:18 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5799-1.jpg

sivaa
16th May 2017, 10:19 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5780-1.jpg

sivaa
16th May 2017, 10:24 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5800-1.jpg

sivaa
16th May 2017, 10:24 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5801-1.jpg

sivaa
16th May 2017, 06:56 PM
சொல்லப்பட்ட விடயம் என்னவென்று புரிந்துகொள்ளாமல்
வாந்தி எடுப்பதே பிழைப்பாய் போச்சு சிலருக்கு

என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.

sivaa
16th May 2017, 07:58 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18486070_1335355499882384_1053851722641831019_n.jp g?oh=af277c96dfa3e4a7212e06cac7838a4a&oe=59AD8AFD

நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவரும், தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான திரு.K.சந்திரசேகரன் அவர்களின் தாயார் திருமதி. ராஜலெட்சுமி அவர்கள் (வயது 82) இன்று (16-05-2017) அதிகாலை காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்கு (17-05-2017, புதன்கிழமை) காலை 8 மணியளவில் (புதிய என்.38. பழைய எண்.29. 5வது மெயின் ரோடு, நங்கநல்லூர், பங்கஜம் மருத்துவமனை எதிரில்) நடைபெறுகிறது.
தாயை இழந்து வாடும் நடிகர்திலகத்தின் அன்பு இளவல் சந்திரசேகரன் அவர்களுக்கு ஆறுதலையும் அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம். —





ஆழ்ந்த இரங்கல்கள்

tacinema
17th May 2017, 06:44 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18486070_1335355499882384_1053851722641831019_n.jp g?oh=af277c96dfa3e4a7212e06cac7838a4a&oe=59AD8AFD

நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவரும், தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான திரு.K.சந்திரசேகரன் அவர்களின் தாயார் திருமதி. ராஜலெட்சுமி அவர்கள் (வயது 82) இன்று (16-05-2017) அதிகாலை காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்கு (17-05-2017, புதன்கிழமை) காலை 8 மணியளவில் (புதிய என்.38. பழைய எண்.29. 5வது மெயின் ரோடு, நங்கநல்லூர், பங்கஜம் மருத்துவமனை எதிரில்) நடைபெறுகிறது.
தாயை இழந்து வாடும் நடிகர்திலகத்தின் அன்பு இளவல் சந்திரசேகரன் அவர்களுக்கு ஆறுதலையும் அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம். —


ஆழ்ந்த இரங்கல்கள்



Dear Chandrasekhar,

ஆழ்ந்த இரங்கல்கள். Heartfelt condolences. May God give you strength to withstand this irreplaceable loss.

Gopal.s
17th May 2017, 07:29 AM
My Hearty Condolences Chandrasekar.

adiram
17th May 2017, 11:03 AM
ஆழ்ந்த இரங்கல்கள்.

தாயாரை இழந்து வாடும் நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்களை தெரிவிக்கிறோம்.

Russellxor
17th May 2017, 12:07 PM
திரு.சந்திரசேகரின் அன்னையாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Russellxor
17th May 2017, 12:10 PM
இப்பட விவரங்களை சீனியர்கள் எழுதவும்.
https://uploads.tapatalk-cdn.com/20170517/627930ebb2eee9ce61e6210158120a37.jpg

Russellxor
17th May 2017, 12:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170517/8cea1932b406631839762ed6526112ee.jpg

Russellxor
17th May 2017, 12:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170517/1166aee6921494305f86f1bfce040055.jpg

Russellsmd
17th May 2017, 07:01 PM
அன்பின் k.c.s. சார்.. அன்னையாரின் மறைவுச் செய்தியறிந்து வருத்தமானேன்.

உலகத்தின் மிகப் பெரிய சோகம்.. தாயைப் பிரிந்து தவித்து நிற்பதே!

அந்த மாபெரும் சோகத்திலிருந்து காலமும், கடவுளும் தங்களை மீட்டெடுக்கட்டும்.

மேன்மை மிகுந்த அந்தத் தாயுள்ளம் தன் பிரிவின் துயர் பிள்ளையைத் தாக்காமல் காக்கட்டும்.

அன்னையாருக்கு எனது இறுதி வணக்கம்.

தங்களுக்கெனது ஆறுதல்கள்.

HARISH2619
18th May 2017, 01:12 PM
திரு சந்திரசேகரன் அவர்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

sivaa
19th May 2017, 08:54 PM
மதுரையை மகிழ்விக்கும் "ராஜபார்ட் ரங்கதுரை"


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18557204_1341365902646963_8685383213714279913_n.jp g?oh=7c478e63ee24c9dd0d1fb4ad67e2946f&oe=5974BC12

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556416_1341366332646920_4395930281012222071_n.jp g?oh=6357bcbe9849afcf5f8d1b7170e22f4c&oe=59C03110

sivaa
19th May 2017, 08:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18581861_1341366429313577_7876401649301424557_n.jp g?oh=f2cca0a3d86eedd9f128ddfdddaa2ada&oe=59BE9AB6

sivaa
19th May 2017, 08:55 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519774_1341366512646902_2451442903177657826_n.jp g?oh=b51fd309b40c4ab5594305a40a3c7ba3&oe=59A4018D

sivaa
19th May 2017, 09:02 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18520001_307331896357441_2484707436951539083_n.jpg ?oh=5cb83710e55b6c3d544a803e2742a640&oe=59B1CF2C
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18558699_307331823024115_6853118571453383888_o.jpg ?oh=47f13c5ba81c1c7b0dbbed331fdb081f&oe=59B0B7FA

sivaa
20th May 2017, 10:08 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18595280_816154545207569_2757725573136041000_o.jpg ?oh=b33bb366caf02fd7796aa2a8d3f5a166&oe=59BD1EE8

sivaa
20th May 2017, 10:10 AM
இன்று (20/05/2017) இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" பாக்யவதி"
Nadigar Thilagam present Amazing Acting & Super Hit Movie.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519929_1341996835917203_7931857037760837411_n.jp g?oh=3bf70247de56a34a1e792a67a89628b0&oe=59A9FF6D

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18486087_1341996869250533_780372970326268417_n.jpg ?oh=de029635f696591adc78fb4728443a15&oe=59B826A7

vasudevan31355
20th May 2017, 07:40 PM
அருமை நண்பர் திரு சந்திரசேகரன் அவர்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை இறைவனும், தலைவரும் திரு.சந்திரசேகரன் சாருக்கு அளிக்க வேண்டுகிறேன்.

sivaa
20th May 2017, 08:23 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622258_1907069216174564_2309611222497413297_n.jp g?oh=05e82783f55fd5310a8a7f0f9d7dd458&oe=59B96EE9

sivaa
20th May 2017, 08:38 PM
அப்போதைய திரையரங்குகள் மற்றும் டூரிங் கொட்டகைகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் யாவும் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தமையால் பிலிம் சுருள் அறுந்து விடுவதுண்டு அதை தியேட்டர் புரஜெக்டர் ஆபரேட்டர் பெரும் சிரமப்பட்டு ஒட்டவைத்து மீண்டும் படத்தை ஓட வைப்பார், அதற்குள் ரசிகர்கள் போடும் கூப்பாடு காதை கிழித்து விடும், அப்படியே படம் தொடரும்போது துண்டாகிப் போன பிலிம் சுருளில் நடிகர்திலகத்தின் காட்சிகள் இடம் பெற்று படம் பார்க்கும் போது அது இல்லாமல் போனால் படத்தின் முக...்கியத்துவமே இல்லாமல் போய் விடும்,
மற்ற ஏனைய நடிகர்களின் படங்களுக்கு இந்த குறை ஏற்பட வாய்ப்பில்லை, மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த வித முக பாவனைகளையும் காட்டத் தெரிவதில்லை, வசனம் பேசும்போது முகத்தில் எந்த மாற்றமும் வெளிப்படையாக தொற்றுவிக்கத் தெரியாது, நடிப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது எனவே அந்தப் படங்களில் ஏதாவது பிலிம் சுருள் துண்டாகிப் போனாலும் படத்தின் தன்மை மாறாது, ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அவர் தோன்றும் காட்சிகள் காட்சிக்கு காட்சி நடிப்பிலும் வசனம் பேசுவதிலும் அசத்தியிருப்பார், எனவே 3 அடி பிலிம் சுருள் விடுபட்டு போனாலுமே படத்தின் சுவராஸ்யம் குறைந்து விடும்
நடிகர் திலகத்தின் நடிப்பை திரும்ப திரும்ப பார்த்த காலங்களில் எல்லாம் அதிக நாட்கள் என 175 நாட் களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருந்ததனால் பிலிம் சுருள் தேய்ந்து கோடுகள் விழுந்து விடும், அப்போது அது ஒரு பெரிய கவலை,
ஆனால் இப்போதெல்லாம் வெளியாகும் படங்களுக்கு டிஜிட்டல் வசதி வந்து விட்டது தியேட்டரில் 1000 காட்சிகள் ஓடினால் கூட ஒரு கீரல் விழ வாய்ப்பில்லை, ஆனால் படத்தை பார்க்கத்தான் யாரும் இல்லை.





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18581482_1342299085886978_5730710900509844329_n.jp g?oh=e2b0c9aab4345c2f06dfc932c257059f&oe=59BB0C2A

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18582402_1342299499220270_2598512776633774322_n.jp g?oh=e2b72c93dc34bf139f4f94eb8636e60b&oe=59A25770

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18527897_1342299532553600_4301225185573615444_n.jp g?oh=1da7c3857201d56b93a3a1c778b7102b&oe=59A7BBD5



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18620457_1342299555886931_3542777443228631790_n.jp g?oh=5856d0788b52fff5bc672c210711aef9&oe=59A734B7


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519580_1342299585886928_290982185651160901_n.jpg ?oh=ec6df5891cccf5d1cd5671b15ed5b223&oe=59A9B0F2
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556957_1342299622553591_8216566869679742213_n.jp g?oh=cff2aac66f8cc7d708cb937a3eb7714b&oe=59C0AA1B
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18557094_1342299672553586_1041596773031214405_n.jp g?oh=827dc244b1f4804685acfa12f1504d09&oe=59B01A58

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519613_1342299852553568_1301643161047149726_n.jp g?oh=fc9b2c0f3c0d9840e5c4ab0e14043e6a&oe=59B2FC1E


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18557480_1342299882553565_2370192011685672952_n.jp g?oh=d4f7fb61aa7088b16c6d2434d069e76b&oe=5976226E


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556001_1342299905886896_914167341481175263_n.jpg ?oh=8aac9ca38e883d8c07a60b1543e12b6b&oe=59BD4C4A

sivaa
20th May 2017, 08:41 PM
அப்போதைய திரையரங்குகள் மற்றும் டூரிங் கொட்டகைகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் யாவும் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தமையால் பிலிம் சுருள் அறுந்து விடுவதுண்டு அதை தியேட்டர் புரஜெக்டர் ஆபரேட்டர் பெரும் சிரமப்பட்டு ஒட்டவைத்து மீண்டும் படத்தை ஓட வைப்பார், அதற்குள் ரசிகர்கள் போடும் கூப்பாடு காதை கிழித்து விடும், அப்படியே படம் தொடரும்போது துண்டாகிப் போன பிலிம் சுருளில் நடிகர்திலகத்தின் காட்சிகள் இடம் பெற்று படம் பார்க்கும் போது அது இல்லாமல் போனால் படத்தின் முக...்கியத்துவமே இல்லாமல் போய் விடும்,
மற்ற ஏனைய நடிகர்களின் படங்களுக்கு இந்த குறை ஏற்பட வாய்ப்பில்லை, மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த வித முக பாவனைகளையும் காட்டத் தெரிவதில்லை, வசனம் பேசும்போது முகத்தில் எந்த மாற்றமும் வெளிப்படையாக தொற்றுவிக்கத் தெரியாது, நடிப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது எனவே அந்தப் படங்களில் ஏதாவது பிலிம் சுருள் துண்டாகிப் போனாலும் படத்தின் தன்மை மாறாது, ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அவர் தோன்றும் காட்சிகள் காட்சிக்கு காட்சி நடிப்பிலும் வசனம் பேசுவதிலும் அசத்தியிருப்பார், எனவே 3 அடி பிலிம் சுருள் விடுபட்டு போனாலுமே படத்தின் சுவராஸ்யம் குறைந்து விடும்
நடிகர் திலகத்தின் நடிப்பை திரும்ப திரும்ப பார்த்த காலங்களில் எல்லாம் அதிக நாட்கள் என 175 நாட் களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருந்ததனால் பிலிம் சுருள் தேய்ந்து கோடுகள் விழுந்து விடும், அப்போது அது ஒரு பெரிய கவலை,
ஆனால் இப்போதெல்லாம் வெளியாகும் படங்களுக்கு டிஜிட்டல் வசதி வந்து விட்டது தியேட்டரில் 1000 காட்சிகள் ஓடினால் கூட ஒரு கீரல் விழ வாய்ப்பில்லை, ஆனால் படத்தை பார்க்கத்தான் யாரும் இல்லை.







https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556281_1342299992553554_7871347295506747049_n.jp g?oh=c108d6908c52f6446d77163810de8706&oe=59BEBE1D



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622542_1342300019220218_2594086398960685479_n.jp g?oh=7b002454dd7735992ab711180d21bdfd&oe=59A6BC24


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519720_1342300045886882_8799081561942363586_n.jp g?oh=b167ad9035df81ae41a885181de5c3c5&oe=59BD981F



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18557226_1342300075886879_4750820072821969262_n.jp g?oh=99ca40dacd36b9c991bd202f6c68bcc6&oe=59BB6A0F


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18519903_1342300109220209_4678199869935887493_n.jp g?oh=0d87439f6883971b8cebf14a6f063349&oe=59A3E9DA



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18582043_1342300142553539_7908882165128392572_n.jp g?oh=0c4ee4f4d28298ea67d5a92399b3c0c4&oe=59BE23BF


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556362_1342300192553534_6950549126621599294_n.jp g?oh=e3ff3f1e99e70570141dac8a04f611c1&oe=59A13D3C


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556960_1342300229220197_2583583212256083904_n.jp g?oh=6679208e06c6deebbfa1d6f57332a48a&oe=59A32B11

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556949_1342300262553527_5744615773585439395_n.jp g?oh=74be6905e2a840a32cab08b3872be555&oe=59A3771F

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18527900_1342300299220190_6036805422980666990_n.jp g?oh=25036db9bf6b45d8c137b04d07bafab0&oe=59BC5F2E

sivaa
20th May 2017, 10:25 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556214_1339109146173686_7974263059571362519_n.jp g?oh=6caee73f9a19cb7918de765f4f799a8b&oe=59ACD348

Russellxor
21st May 2017, 06:48 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/75d9e57265be838cdb753f3d8a07d3d4.jpg

Russellxor
21st May 2017, 06:49 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/4a47052da4ebd9bfc94665a97b26019b.jpg

Russellxor
21st May 2017, 06:50 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/74039c150dccd25e4d19b0661965d8ed.jpg

Russellxor
21st May 2017, 06:51 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/480555ef4ca08954562478c7767d4dbe.jpg

Russellxor
21st May 2017, 06:53 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/e206de57564a8f830327b68e3520eed8.jpg

Russellxor
21st May 2017, 06:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/e5d7dd14dc76ad00900c35911dbf7a82.jpg

Russellxor
21st May 2017, 06:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/64323f56bdd8d4ad25666779ee35a9d2.jpg

Russellxor
21st May 2017, 06:56 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/b3fd711e228a821aeb0e2df6d19c5532.jpg

Russellxor
21st May 2017, 06:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/43af7d22f886aab2eb872d1aef15cd65.jpg

Russellxor
21st May 2017, 06:57 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/2b9e03dce263c3513bdd5a0c8e106ddb.jpg

Russellxor
21st May 2017, 06:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/627eb16ee27b17306a43b0dbbdbdb2c1.jpg

Russellxor
21st May 2017, 06:59 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/bc8f1bfc00f4499c3f1640238142927d.jpg

Russellxor
21st May 2017, 07:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/a9d8c35809358cf1f0f15ad58d838ba0.jpg

Russellxor
21st May 2017, 07:27 PM
https://uploads.tapatalk-cdn.com/20170521/c822edd7eb20bd186283ded96612ca7a.jpg

sivaa
21st May 2017, 09:22 PM
Sun life TV - padithal mattum poduma - going on

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5720-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5721-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5723-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5724-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5725-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5726-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5727-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PMP100-1.jpg

sivaa
22nd May 2017, 08:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16387024_1467125306631645_2238412116970680918_n.jp g?oh=d1063a39b67abbb7519dc2c5bdded57f&oe=59AA5083


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16299534_1467125763298266_1965004237892301061_n.jp g?oh=d35a2b8683fbdcce24facda8ef770d5a&oe=59BF7962

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16473260_1467129856631190_4250838744928153859_n.jp g?oh=ccc0c9ccf911e3d0635bb38e950691f4&oe=59B71133



கப்பலோட்டிய தமிழன் படத்தில் செக்கிழுக்கும் காட்சியில்,
நடிகர்திலகம் கீழே விழவும், சிறை அதிகாரி, அவரை அடித்து காலால் மிதிப்பது போலவும் ஒரு காட்சி வரும். இக்காட்ச...ியில் வி.பி.மணி என்கிற நடிகர் சிறை அதிகாரியாக நடித்தார், நடிகர்திலகத்தை காலால் மிதிக்க மிகவும் தயங்கினார். அவரைச் சமாதானப்படுத்த படப்பிடிப்புக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர். பின் நடிகர்திலகம் அவரை அழைத்துச் சமாதானப்படுத்தி ' இந்தக் காட்சியில் நீ ஒரு சிறை அதிகாரி என்பதை நினைவில் கொண்டு நடிக்க வேண்டும், என்னைக் கைதியாக நினைத்துக் கொள்... என்று கூறி, சமாதானம் செய்த பிறகே அவர் சம்மதித்தார். காட்சி மிகச்சிறப்பாக அமைந்தது, காட்சி முடிந்த பின், அந்த நடிகர், கண்ணீர் விட்டு அழுததோடு நடிகர்திலகத்தின் காலில் விழுந்து வணங்கினார்.
நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை வரிசைப்படுத்தும்போது
வண்ணத்தில் வந்து வானவில்லாய் நம் இதயத்தில் அமர்ந்த, காலத்தால் அழியாத காதல் ஓவியம் என பெயர் வாங்கிய நம்மால் தவிர்க்க இயலாத ஒரு படம் ' வசந்த மாளிகை '
சமீபத்தில் ரசிக்கும் அரியதொரு வாய்ப்பு கிட்டியது. பன்முக திறன் கொண்ட ஒரு கலைஞன் தன திறமைகளை வெளிக்காட்ட அருமையான களம் அமைத்து கொடுத்த தமிழ் திரை உலகத்தையும்... அவரை எப்படி எல்லாம் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க முடியும் என்று பலவித திறமையாளர்கள் அவரை பயன் படுத்தி கொண்டதும்...சரித்திர நிகழ்வுகள்...
நமக்கோ...ரசிப்பு திறன் கொண்டோர்க்கோ...பசியுடன் உள்ளவன் அருஞ்சுவை உணவினை..அள்ளி அருந்துவது போன்ற உணர்வுதான்...வெகு எளிமையான கதைதான்...எந்த ஒரு சிறிய கதையையுமே மிகப்பெரும் விருந்தாக மாற்றதான் நடிகர் திலகம் உள்ளாரே...
அழகாபுரி ஜமீனின் இளைய ஜமீன்தார் ஆனந்த், அன்பும் கருணையும் மிகக்கொண்டவன் ஆயினும் தாயின் அன்பும் அரவணைப்பும் முறையாக கிட்டாததாலும், தாயுடன் தொடர்புடைய ஒரு கொடூர கொலை சம்பவத்தினை சிறுவயதில் நேரில் பார்த்ததாலும் மனம் நொந்து...அந்த கவலையை மறக்க அவன் தந்தையே கூறிய ஒரு அறிவுரையினை ஏற்றதால் தொற்றிய குடிப்பழக்கம் அளவுக்கு மீறியது...குடும்ப உறுப்பினர்களை சற்றே விலகி இருக்க வைத்தது...
ஒரு சந்தர்ப்பத்தினில் நட்சத்திர ஹோட்டலில் நேர்முகத்தேர்வுக்கு வந்த முன்னாள் விமான பணிப்பெண்ணான லதாவை அந்த ஹோட்டலின் மேனேஜர் கெடுக்க முயல, முழு போதையில் அறையினை கடக்கும் ஆனந்த், சப்தம் கேட்டு உள்ளே நுழைந்து அவளை காப்பாற்ற, மறுநாள் அவள் அவனது கோட்டினை திரும்ப தருவதற்கு வந்த லதாவிடம் என்ன நடந்தது என்று கேட்டறிந்து...நீ விருப்பப் பட்டால் இங்கேயே தனது செயலாளராக இருக்கலாம் என்று வேலை தர, ஏழையாக இருந்தாலும் தன்மான உணர்வு மிகுந்த லதா, என் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டாலோ...அத்தகைய சூழலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்திலோ நான் இங்கு நிற்க மாட்டேன் என்ற கண்டிஷனுடன் வேலைக்கு உடன்படுகிறாள்.
மதுப்பழக்கத்தினால் அந்த நாட்டத்தினால் ஜமீனில் நடைபெறும் பல விஷயங்களை கண்டும் காணாமல் இருந்து வந்த ஆனந்துக்கு பல விஷயங்கள் செயலாளரின் வருகைக்கு பிறகு தெரிய வருகிறது...லதாவின் செயல்பாடுகள் அனைவரையும் கவருகிறது...இவளின் வருகையினை மற்றும் தலையீடுகளை ஆனந்தின் உடன் பிறந்த சகோதரனும் அவன் மனைவிக்கும் அவ்வளவாக பிடிப்பதில்லை.
உடன் பிறந்த அண்ணனோ..பேராசைக்காரன்...இவனது குடிப் பழக்கத்தினை பயன்படுத்தி சிறிய அளவு சொத்துக்களை மட்டும் அவனுக்கு கொடுத்து ஒதுக்கி விட முயல...அதற்கென ஒரு பத்திரம் தயாரித்து கையெழுத்து கேட்க...அலட்சியமாக ஆனந்த் ஒப்பமிட முயல, செயலாளர் லதா தடுத்து, அதனை படித்து பார்க்க வேண்டும் என கேட்டு படித்து உண்மையை உடைக்க...முயற்சி தடைப்படுகிறது. லதாவின் வருகையினால் ஆனந்தின் வாழ்வில் பலப்பல நல்ல மாற்றங்கள்...ஒரு கட்டத்தில் ஆனந்தின் தாயாரே அவளிடம் எப்படியாவது...அவனது குடிப்பழக்கத்தினை தடுத்து நிறுத்து என கெஞ்சுகிறார்...அதனையும் சாதிக்கிறாள் லதா... லதாவின் அன்பும், அறிவும், குண நலன்களால் பெரிதும் கவரப்பட்ட ஆனந்த் அவளை உயிரினும் மேலாக காதலிக்கிறான்.. அவளுக்காக ஒரு வசந்த மாளிகையை கட்டுகிறான்...
இதற்கிடையில் ஜமீனில் லதாவை வெளியேற்ற மிகப்பெரும் சதி நடைபெற்று, திருட்டு குற்றம் சாட்டப்பட்ட லதா ஜமீனை விட்டு வெளியேறுகிறாள்...அதன் பிறகு என்ன நடந்தது...இருவரும் ஒன்று சேர்ந்தார்களா...? என்பதே கதை..
பொதுவாக உயர்ந்த நிலையில் இருக்கும் சில நடிகர்கள் எதிர்மறை பாத்திரங்களை ஏற்க மாட்டார்கள். படம் வெளியான அந்த காலக்கட்டத்திலே...இதைப்போன்ற கேரக்டர்களை நடிகர் திலகம் ஏற்று நடிக்கத்தான் வேண்டுமா என்று விமர்சித்தவர்களும் உண்டு....நடிகர் திலகத்துக்கோ...எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது...இமேஜ் பார்ப்பதும்..கிடையாது நாளை தலைவனாக மாற தடையாக இருக்குமோ என்று பயமும் கிடையாது, என்பதனாலோ என்னவோ... எந்த ஒரு கதாபாத்திரத்தினையும் ஏற்று நடிக்க தயக்கமும் கிடையாது...நடிப்பு என.... வந்து விட்டால்... அந்த கேரக்டர்தான்....முக்கியம்... என்று அந்த கதாபாத்திரத்துடன் ஒருங்கிணைந்து அதுவாகவே மாறிவிடுவது செவாலியருக்கு புதியதல்லவே...
இங்கே...ஒரு மிகப்பெரும் பணக்காரனாக குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட மனிதாபிமானமுள்ள அன்பு நிறைந்த ஒரு அப்பாவி ஜீவனாக அற்புதமாக வாழ்ந்து காட்டியுள்ளார் கலைக்குரிசில்.
மது அருந்தும்....காட்சியோ.. புகைக்கும் காட்சியோ...என்ன ஒரு ஸ்டைல், அலட்சியப்புன்னகை, அருமையான நடன அசைவுகள்..கொடுமைகள் கண்டு பொங்குவதும்...காதலில் மயங்குவதும் காதலியின் பிரிவினில் உருகுவதும்,
தவிப்பதும், துடிப்பதும், மருத்துவர் குடிக்ககூறி வற்புறுத்த, நோ...உயிரே போனாலும் காதலிக்கு கொடுத்த வாக்கினை மீறி இனி மதுவை தொட மாட்டேன்... என்பதும்...
இறுதிக்காட்சியில் யாருக்காக ...இது யாருக்காக...இந்த மாளிகை வசந்த மாளிகை...காதல் ஓவியம் கலைந்த மாளிகை... என விஷமருந்தி பாடுவதாகட்டும்....ஆகா...என்ன ஒரு உச்சக்கட்ட நடிப்பு...
படத்தின் துவக்கத்தில்......ஓ...மானிட ஜாதியே...என்ற பாடலுடன் அறிமுகமாகி...கடைசிக்காட்சி வரையினில் முழுமையாக படத்தினை தாங்கிப்பிடித்து நம்மை பரவசப்படுத்தி விட்டார் நடிப்புசெம்மல்.
அவருடன் பொருத்தமான கதாபாத்திரங்களுடன் ...கலையரசி வாணிஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, நடிகர் பாலாஜி, ஸ்ரீகாந்த், பண்டரிபாய், புஷ்பலதா, எஸ்.வீ. ரங்காராவ், நாகேஷ், சுந்தரராஜன், வீ.கே.ராமசாமி, சுகுமாரி, வீ.எஸ்.ராகவன், சாந்தகுமாரி, என ஒரு பட்டாளமே...படத்தின் வெற்றிக்கு துணை நின்றுள்ளனர்.
நகைச்சுவை திலகம்...நாகேஷ்...V.K. ராமசாமியுடன் இணைந்து தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தார்...எனினும்..(உண்மையிலேயே குடியினால் பாதிக்கப்பட்டது போன்று இருந்தார்) சில பல இடங்களில் காமெடி..முகம் சுளிக்க வைத்தது...
படத்தை தூக்கி நிறுத்தியதில் பாடல்களும் இசை அமைப்பும் நிச்சயம் நல்லதொரு பங்கு வகித்துள்ளது. திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் காவியத்தாயின் இளையமகன் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்...அதுவும் அவருக்கே உரித்தான ரசனை மிகுந்த விஷயங்களை பற்றி எனும்போது...கவிஞர் புகுந்து விளையாடி விட்டார் ...
இரண்டு மனம் வேண்டும்...இறைவனிடம் கேட்டேன்....
ஓ....மானிட ஜாதியே....
மயக்கமென்ன...இந்த மௌனமென்ன...
கலைமகள் கைப்பொருளே....உன்னை கவனிக்க...
குடிமகனே...பெருங்குடிமகனே....நான் கொடுக்கட்டுமா..
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்....
யாருக்காக...இது...யாருக்காக....
குரல் நடிகர்...T.M. சௌந்தரராஜன்...பாடல் காட்சிகளில் நடிகர் திலகமாகவே மாறி அசத்தி விட்டார்...
மற்றும்...இசைக்குயில். P. சுசீலா,.. கவர்ச்சிக்குரலுக்கு உரிய.. .L.R. ஈஸ்வரி, பின்னணி பாடகி..வசந்தா...என்று அற்புதமான இசைக்கூட்டணி...திரையிசை திலகத்தின் கற்பனைக்கு உயிரூட்டி விட்டனர்...
ரசித்த காட்சிகள் பல...ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்....பாடலில் உள்ள நடிகர் திலகத்தின் உற்சாக துள்ளல் நடனம்...ஒரு கட்டத்தில்...கட்டழகானதோர் ...கற்பனை ராஜ்ஜியம்...கட்டி முடிந்ததடா...அதில் கட்டில் அமைந்ததடா...வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை என்று...சக்கரம் சுற்றுதடா...(இப்போது...ஏராளமான கனமுள்ள ஒரு மஞ்சள் நிற ஆடை அழகியை சர்வ சாதாரணமாக தூக்கி ஒயிலாக வீசுவார்...) அதில் நான் சக்கரவர்த்தியடா....என்ற வரிகளுடன் ஒரு அட்டகாசமான சிரிப்பு....
இரண்டு மனம் வேண்டும்...இறைவனிடம் கேட்டேன்...பாடலில்...
கண்களின் தண்டனை காட்சி வழி...
காட்சியின் தண்டனை காதல் வழி...
காதலின் தண்டனை கடவுள் வழி...
கடவுளை தண்டிக்க என்ன வழி...?
மயக்கமென்ன...இந்த மௌனமென்ன... பாடலில்
ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே
பெண்:கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா
ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட
பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)
ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)
ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன்
ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)
கலைமகள் கைப்பொருளே....உன்னை கவனிக்க...ஆளில்லையோ... பாடலில்
ஆஹா...கேட்கும்போதே...மெய்சிலிர்க்கும் வரிகளும்...இசையும்...குரலும்....அற்புதம்...இச ை என்றால்...தேன்மழை என்பதா...? மதுக்குடத்தை சுற்றும் வண்டுகளாக...மனதையும் காதுகளையும்
நாம் பறிகொடுத்து நிற்கின்றோம்...இசையும் கவிஞரின் பாடல் வரிகளும்...நம்மை எங்கோ...கொண்டுசெல்லும் வண்ணம் உள்ளது...
வசனம்...திரு.பாலமுருகன்...ஆகா..அற்புதம்...வெக ு பொருத்தமானவை...
தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் லதாவிடம்:
இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!
* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:
பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?
*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:
இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.
* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:
குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.
விசுவாசமான பணியாளராக வரும் ராகவனிடம்...பிறந்த நாளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தும் இடத்தில் உள்ள வசனங்கள்..
பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!
.டேய்...ஒன்ன போல உள்ள நல்லவங்களோட அன்பு இருந்தா...போதும்டா...நூறு வருஷம் என்னா...ஆயிரம் வருஷம் நான் நல்லா இருப்பேன்...
வாணிஸ்ரீயிடம்...வசந்த மாளிகைக்கு அழைத்துசென்று...தன் காதலியினை காண்பிக்கிறேன்...என்று...காதலை வெளிப்படுத்தும் இடம்.....
என் காதல் தேவதைக்காக நான் கட்டியுள்ள இந்த ஆலயத்தை..பார்...என் இதய சாம்ராஜ்ஜியத்தின் தலைவியின்..அன்பு வாழ்க்கை...ஆரம்பிக்கபோகும் அன்பு மாளிகையை..பார்...என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டி இருக்கும் வசந்த மண்டபத்தை பார்.... தொடரும்...வசனங்கள்...மறக்கவே முடியாதவை..
ஏராளமான இடங்களில் இப்படிப்பட்ட முத்தாய்ப்பான வசனங்களால் நம்மை ஆட்கொள்ளுகிறார்... படத்தினை பற்றி குறிப்பிட்டுக் கூற...வசனம்...பாடல் வரிகள்... என்று...எவ்வளவோ..உள்ளது...
மொத்தத்தில் வசந்தமாளிகை....நமது காலத்தால் அழிக்கமுடியாத ரசிகர்களின் உள்ளத்தில் கட்டப்பட்ட ஒரு அருமையான 'காதல் மாளிகை '...மீண்டும்....ரீ ..ரிலீஸ் செய்வதற்கு பொருத்தமானதொரு உன்னதமான பொழுது போக்குப்படைப்பு...


(முகநூல் விருந்து)

Russellxor
22nd May 2017, 01:01 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/bc345824c25f57268f0fefae1b05c561.jpg

Russellxor
22nd May 2017, 01:03 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/c467223c2b37a0b2b5fa1f4ecdc6c9ca.jpg

Russellxor
22nd May 2017, 01:06 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/154b5ae188b1316b33566fea5326ec96.jpg

Russellxor
22nd May 2017, 01:08 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/5053bc266930871f68c0df2cd1a8d71b.jpg

Russellxor
22nd May 2017, 01:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/9cd2028a4935e87cb4575e79376d722d.jpg

Russellxor
22nd May 2017, 01:16 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/230cae62de8445cb7cda23f19d4247a5.jpg

Russellxor
22nd May 2017, 01:18 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/b41ac5128455a0d007aa43ced5e7e293.jpg

Russellxor
22nd May 2017, 01:21 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/91d9c94532d6ef2d63b1545b55ff9bfa.jpg

Russellxor
22nd May 2017, 01:23 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/7ce497e8abd4488be552f43d8e56c432.jpg

Russellxor
22nd May 2017, 01:25 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/5755ebd093f96d78b6d72b21ee5872b2.jpg

Russellxor
22nd May 2017, 01:27 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/7728caeddbe1c329ff3e795b7d6cf1b5.jpg

Russellxor
22nd May 2017, 01:30 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/06f93c1e9cba36c77f263f8ded91bfcf.jpg

Russellxor
22nd May 2017, 01:32 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/28bd0d03db219f4ca5a647dad509644f.jpg

Russellxor
22nd May 2017, 01:36 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/ef146e1a0b57adcd8f198752caeb330a.jpg

Russellxor
22nd May 2017, 01:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/6a265d58900e26636c5f3f234f0720f7.jpg

Russellxor
22nd May 2017, 01:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/7ddff349e81fb3b9386bf37a2dcb1caf.jpg

Russellxor
22nd May 2017, 01:47 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/699735bbcdd7b2ac9b605be2fd2af965.jpg

Russellxor
22nd May 2017, 01:48 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/0310b8ac79bc3d5f9deb466fb6287867.jpg

Russellxor
22nd May 2017, 01:50 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/04a73cbe920b3a928642019fca68d22f.jpg

Russellxor
22nd May 2017, 01:52 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/9448a08dbcc757cc2a9ab55f0776069e.jpg

Russellxor
22nd May 2017, 01:54 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/75e762b603d92bf8a991615534906356.jpg

Russellxor
22nd May 2017, 01:55 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/e3ab5367fb3ef67b51bbe8d135e54e0a.jpg

Russellxor
22nd May 2017, 01:58 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/143b0efbb7d04ecbdc57d586f880133c.jpg

Russellxor
22nd May 2017, 02:00 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/c3e741c6c5003312023cc78a06b0b9b2.jpg

Russellxor
22nd May 2017, 09:24 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/886d30d082f6993d9b08ac3f1d6fcbd2.jpg

Russellxor
22nd May 2017, 09:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/e5d0f2b193ca0a5e126256f60bccaafc.jpg

Russellxor
22nd May 2017, 09:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/89844388c91d4f2a01d9a136e98bfb68.jpg

Russellxor
22nd May 2017, 09:33 PM
மதிஒளி
ஏப்ரல் 74

https://uploads.tapatalk-cdn.com/20170522/9aab5c1be4e30747fbc920f56cd45dfd.jpg
https://uploads.tapatalk-cdn.com/20170522/c65e10d7f5971ddbbfbdc0086f93abbc.jpg

Russellxor
22nd May 2017, 09:35 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/85252d8cb36fb29beda975d41ed2f445.jpg

Russellxor
22nd May 2017, 09:36 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/8545669b2882435aa56b788c3f723aee.jpg

Russellxor
22nd May 2017, 09:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/5125615c41ddd1895ce6499e6b5b647a.jpg

sivaa
22nd May 2017, 11:09 PM
க்கள்தலைவரின் அன்பு கண்மணிகளே, வரும் 26.05.2017 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் சூப்பர் ஹிட் காவியம் ஊட்டி வரை உறவு திரைப்படம் வெளிவ...ருகிறது. தொடர்ந்து மதுரையில் வசூல் சாதனை படைத்து வரும் நடிகர்திலகத்தின் படங்களின் வரிசையில் ஊட்டி வரை உறவு முதல் இடத்தைப் பிடிக்கும், கூடிடுவோம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில்....

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18557132_1340877512663516_5416167993729301505_n.jp g?oh=b2355f0d136cf9e481363348ff46d85c&oe=59B26297


(முகநூல் பதிவிலிருந்து)

sivaa
22nd May 2017, 11:12 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556204_1907310006150485_7358488793719959839_n.jp g?oh=15c0abd75a0dd9dca9219dbf5e085a3d&oe=59B0D384

sivaa
22nd May 2017, 11:13 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18527692_1907352746146211_8201702142231239352_n.jp g?oh=2de0e2eaf6e830afdf5d68a33da8e6e0&oe=59B2241A

sivaa
22nd May 2017, 11:14 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622258_1907069216174564_2309611222497413297_n.jp g?oh=05e82783f55fd5310a8a7f0f9d7dd458&oe=59B96EE9

sivaa
22nd May 2017, 11:15 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664420_459848124360185_4711568215523474191_n.jpg ?oh=d6ab73200ff717a6fd505a48292afe3e&oe=59B6E482

sivaa
22nd May 2017, 11:16 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18581506_131009387451060_881199908687027907_n.jpg? oh=b6399833e12775ff0920a29f54b67429&oe=59AEE9C5

Russellxor
22nd May 2017, 11:27 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/94aa742854152afca5ed77aa262f1faa.jpg

Russellxor
22nd May 2017, 11:29 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/4da0dcbb2d9584932057bcc2b0881bdf.jpg

Russellxor
22nd May 2017, 11:31 PM
https://uploads.tapatalk-cdn.com/20170522/a8fc7205b2fde47ccbe9802571d37381.jpg

sivaa
23rd May 2017, 01:21 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622265_308704489553515_6795881321401259604_n.jpg ?oh=321d0edd7cd61904aafd384a93043927&oe=59AF486A

sivaa
23rd May 2017, 01:21 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18620459_308704629553501_8034422720728540154_n.jpg ?oh=21bebe49c3c33f6b80c952e1676252c0&oe=59B9ABD2

sivaa
23rd May 2017, 01:22 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/s960x960/18589035_308704676220163_783870857817978869_o.jpg? oh=368eaf1830d7dc5ec90a6c9dee9025e6&oe=59B1E57A

sivaa
23rd May 2017, 01:23 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556322_308703836220247_3624367594997065492_n.jpg ?oh=910c22faeeb62cdf48e89afaea638f88&oe=59C226E3

sivaa
23rd May 2017, 01:26 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18557195_307511263006171_6218598316124008459_n.jpg ?oh=f125fc1f5206e9bb1c9d851d39dc3368&oe=59AE01B0

sivaa
23rd May 2017, 05:30 AM
நடிகர் திலகத்தின் வெற்றிச் சாதனைகளோடு ஒப்பிட முடியாமல் போனவர்கள் ஒரு கட்டத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர் அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சிவாஜி யாருக்கும் உதவிகள் செய்யாதவர் என்பது,
உண்மையிலேயே அந்தப் பொய் பிரச்சாரம் இன்று வரையிலும் நிலைத்து நிற்பதை நம்மால் காணவே முடிகிறது, சாமான்யமானவன் பொய்யை எளிதில் நம்பி விடுகிறான், அது தேர்தல் வரையும் ஊடுருவி நாட்டையும் சீரழித்து விடுவதை நாம் கண்டு விட்டோம்,
இனைப்பில் நடிகர் திலகம் அளித்த உதவி பற்றிய நாளேட்டின் செய்தி,
அடுத்த படம் மெரினாவில் உள்ள சிலை, நடிகர் திலகத்தின் சிலை பெற்று உள்ள சிறப்பு உலகின் எந்த தலைவருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு,



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17634455_1284941071622780_6847452914460458814_n.jp g?oh=fbb5a44d62691b4e2ece7ea8c6aad070&oe=59B21BD9


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17626199_1284941044956116_528180432415661906_n.jpg ?oh=bdd85b30a601dad3fc9ed2fd929548e8&oe=59751710

sivaa
23rd May 2017, 05:34 AM
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரின் , சமீபத்திய, " தங்கப்பதக்கம் " தமிழ் திரைப்படம் தொடர்புடைய ஒரு கருத்தினை கண்டபோது, சுவைமிகுந்த விறுவிறுப்பு நிறைந்த - அந்த திரைப்படத்தினை மீண்டும் காணும் ஆவல் கொண்டு...கண்டு ரசித்தேன்... ரத்தமும் சதையுமாக ஒரு காவல் துறையின் வீரமிக்க, கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடிகர்திலகம் வாழ்ந்த ஒரு அற்புதமான திரைப்படத்தினை பார்த்து ரசித்து சுவைத்தேன், படத்தின் காட்சிகளின் சிறப்பினில் என்னை மறந்தேன்...என்பதே உண்மை.
இன்றைய காவல்துறையினரை உயர்வு படுத்தி.. கதையின் நாயகனை கடமை வீரனாக உயர்வு படுத்தி.. நாயகனை பிரம்மாண்டப்படுத்தும், காவல் துறையினரை வீரமிக்கவர்களாக...துணிவுடைய சிங்கங்களாக உருவகப்படுத்தும்... சமீப காலப் படங்களான, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மூன்று முகம், காக்கி சட்டை, சாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு.. சிங்கம் 1 -2 -3 போன்ற... படங்களுக்கு அடித்தளமிட்ட,
அந்த காவியத்தினை ஆம்..." தங்கப்பதக்கம் " எனும் காவல்துறையினரின் பெருமையினை 1974 - ஆம் வருடத்திலேயே உயர்த்திப்பிடித்த நடிகர்திலகத்தின்..ஒப்பற்ற காவியங்களில் ஒன்றான... சிறந்த படத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கி இருக்கவேண்டிய...ஒரு திரைப்படமான... அந்த படத்தினை காணும்போது மெய்சிலிர்த்தது.
அகமகிழ்ந்தேன்...கதையின் போக்கினில் கரைந்து போனேன்...
இப்படியும் இந்த கதாபாத்திரத்தினை மனதுக்குள் வடிவமைத்து கதையினை உள்வாங்கி...நடிப்பினை வெளிப்படுத்த இயலும் எனும் கலைக்குரிசிலின் திறம் கண்டேன்.. ஆஹா... என்ன ஒரு அருமையான நடிகர் நடிகையரின் கூட்டணி...இதனை நடிப்பு என்று கூறவே இயலாதே.. கதாபாத்திரங்கள் அத்துணை பேரும் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருந்தனர்.
கடமையினை தனது உயிராக கருதும் ஒரு காவல் துறை அதிகாரி, அன்பான மனைவி, அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை..
குடும்பத்தினர் மீது மட்டற்ற பாசம் கொண்டிருந்தாலும்... எந்த நிலையிலும் தனது கடமையினை விட்டு கொடுக்காத அந்த இரும்பு மனிதருக்கு வாய்த்த மகனோ...ஒரு திருடனாக, மாறி எதிரே நின்று சவால் விட...கடமையா, குடும்பமா, மகன் என்ற பாசமா ? என்ற கேள்விக்கான விடையே இந்த திரைப்படம்.
சிறுவயதில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை அப்பா கண்டிக்க, கோபமுற்ற மகன் வீட்டில் பணத்தினை திருடிக்கொண்டு ஓடி மும்பை சென்று அங்கே ஒரு திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறுவர் சீர்திருத்த சிறையினில் அடைபட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகியும் சிறையில் பழக்கமான நண்பர்கள் துணையுடன் மாபெரும் கொள்ளை செயல்களை நடத்தி தந்தைக்கே சவால் விடும், சவடால் காட்டும் அற்புதமான பாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தினில் ஸ்ரீகாந்துக்கு இந்தப்படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்...மறக்க இயலாத ஒரு கதாபாத்திரம்... நடிகர் திலகம் எனும் இமயத்தினை தைரியமாக எதிர்கொண்டு...வித்தியாசமான முறையில் தனது பங்களிப்பினை சிறப்பாகவே செய்துள்ளார்...
பாசத்துக்குரிய ஒரே மகனான ஸ்ரீகாந்துக்கு பரிந்து பேசுவதா...நியாயத்துக்கு நேர்மைக்கும் காவலனாக இருக்கும் பிரியத்துக்குரிய கண்ணின் மணியான கணவனுக்கு துணையாக நிற்பதா என்று...பாசப்போராட்டத்தில் வென்று காட்டியுள்ளார் கலையரசி K.R. விஜயா அவர்கள்... அவரின் நடிப்பும் கதறும் கதறலும்...நம்மை கலங்க வைக்கிறது...
இந்தப்படத்துக்கான வெற்றிக்கு கதை வசனம் மிகப்பெரும் பலம் என்றே கூற வேண்டும். காட்சிக்கு காட்சி...கைத்தட்டல்களை பெற்றுத்தரும் வகையிலும் நடிகை நடிகையர்களுக்கு பெயர் வாங்கி தரும் வகையிலும் ரசிகர்களின் மனதில் வேல் போல பாயும் வண்ணம் கூரான வசனங்கள்.. இன்றைய இயக்குனர் மகேந்திரன் அந்த காலக் கட்டத்தினில் வசனகர்த்தா... கதைக்கேற்ப பொருத்தமான வசனங்கள் படத்தின் விறுவிறுப்பினில் முக்கிய பங்கேற்கும் வண்ணம் அமைத்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்திலேயே லேட்டாக வீட்டுக்கு வரும் சௌத்ரியை, கே.ர்.விஜயா. ஏன் லேட்டு என்று உரிமையுடன் கேட்டு, போலீஸ்காரன்.. ன்னா ஆயிரம் வேலை இருக்கும் வீட்டுக்கு சரியான நேரத்தில் வரமுடியுமா...என்று வெடிக்கும் கணேசனை,
ஷூ...இது..போலீஸ் ஸ்டேஷனும் இல்லை.. நீங்க இப்போ இன்ஸ்பெக்டர்...ம் இல்லே ...ஒழுங்கா..கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க... மொதல்ல யூனிபார்மை கழட்டிட்டு வாங்க..என்று அதட்டி...விட்டு, ...
மீண்டும் கே.ஆர். விஜயா...கோபமாக பேசுவதும்... யூனிபார்மை கழட்டியதும், சௌத்திரி, ஒரு கொலைகாரனை பிடிச்சேன்...அவன்கிட்டேர்ந்து ஸ்டேட்மென்ட் வாங்கறதிலே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்று... சாந்தமாக பதிலளிப்பதும்...அப்படியே...அந்த காட்சி, இருவருக்குமான கிண்டலுடன் கூடிய காமெடியாக மாறி, பிறகு பாசத்துடன் கூடிய உருக்கமான காட்சியாக மாறுவதுவும் ரசமான காட்சி.
அதைப்போல வேறொரு காட்சியில் ஜெகனுக்கு முதலிரவுக்கு அலங்காரங்கள் அனைத்தையும் செய்து விட்டு...பார்த்தால்..அவர்கள் உங்கள் அறையில் படுத்து தூங்கி விட்டார்களே...என்ற இடத்தினில் உள்ள ஜனரஞ்சகமான காட்சிகள்..மறுநாள் காலையில்... முகத்தில் குங்குமத்துடன் சிவாஜி படுக்கையில் இருக்க காபி கொண்டு வரும் பிரமிளா...பார்த்து சிரித்துவிட்டு ஓட...K.R. விஜயாவிடம்...என்னது இது...என்று விபரம் கேட்டுவிட்டு...ஐயோ..கர்மம்..கர்மம் மானமே போச்சு... எவ்வளவு இயல்பான காட்சிகள்...
கணவன் மனைவியாக நடிகர் திலகம் மற்றும் விஜயாவின் நடிப்பு வெகு அன்யோன்யம், மிக இயல்பாக நடிப்பு என்று கூற இயலாதவண்ணம் அற்புதமான பெர்பார்மன்ஸ் .
வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் லட்டு மாதிரியான கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு கலக்கும் மேஜர் சுந்தர ராஜன், V.K. ராமசாமி போன்றோரின் கதாபாத்திரங்களும் அவர்களால் மிகவும் அருமையான முறையில் கையாளப்பட்டு இருக்கிறது..
நான்கே பாடல்கள் ஆனால் நான்கும் நான்கு முத்துக்கள் என்றே கூறவேண்டும். இசையமைப்பும், பாடல்களும் பாடல் வரிகளும், படமாக்கிய விதமும், காட்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்ற நடிகர் திலகத்தின் நேர்த்தியான அங்க அசைவுகளும், ஆடும் ஸ்டைலும், முக பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது... பாடல் காட்சிகள் படத்தின் வேகத்துக்கு தடை என்று கூற இயலாது...காட்சியோடு அத்துணை நேர்த்தியாக பொருந்தி உள்ளன...அதுவும் மெல்லிசை மன்னர் புகுந்து விளையாடி உள்ளார்..காவிய வரிகளை தந்து பாடல்களை நம் மனதில் பதிய காரணமானவர் காவிய கவிஞர்... கண்ணதாசன் அவர்கள். பாடல் வரிகளுக்கு அவ்வளவு அழகாக உயிர்கொடுக்கும் பணியினை செய்தவர் பாடகர் திலகம்...T.M . சௌந்தர ராஜன் அவர்கள்.. அவருடன் துணைக்கு தேன் குரலரசி P.சுசீலா அவர்கள்.. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு...பாடலுக்கு திருவாளர் சாய்பாபா அவர்களும் கானக்குயில் வாணி ஜெயராம் அவர்களும் குரல் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடல் காட்சி...
இந்தப்பாடல் ஆரம்பிக்கும் சமயம்...நடிகர் திலகம்..வெகு இயல்பாக ஜோக்கடித்துக்கொண்டு..மிக ஜாலியாக மனைவியை கலாய்த்துக்கொண்டு இருப்பது போல காட்சி அமைந்திருக்கும்...பாடலின் முடிவில் வரப்போகும் அதிர்வினை மனதில் இருத்தியே...இப்படி அமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
ஒரு தலைசிறந்த நடிகரிடம்...எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து அவரின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்கள்...ஒவ்வொரு காட்சியும் அவரின் ஒவ்வொரு பரிமாணத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளார்.
ஒரு பெரிய பொறுப்பில் உள்ள காவல் துறை அதிகாரியின் அந்த கம்பீரமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட கலவையாக காட்சியளித்து பாடலுக்கு நடனமாடுவதில் கூட...அந்த கண்ணியம் குறையாது...தனக்கே உரித்தான ஸ்டைலுடன் ஆடுவது அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. அவர் பாட கேட்கும்போது... K.R..விஜயாவின் அந்த வெட்கத்துடன் கூடிய நாணம்...ஆகா...அற்புதம்... காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக வரிகளை போட்டிருக்கிறார் பாருங்கள்...
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் அன்புமணிவழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க எங்கள் வீடு கோகுலம் ;
என் மகன் தான் கண்ணனாம் தந்தை வாசுதவனோ
தங்கமான மன்னனாம்
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம கண்ணன் பிறந்தான்
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்
வெள்ளம் போல ஓடுவான் வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான் கண்ணன் என்னைத் தேடுவான்
மாயம் செய்யும் மகன் வந்தது ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப்பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன் இந்தப்பிள்ளை
நலம் கொள்ளவும் என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன் (நல்ல)
கோலம் கொண்ட பாலனே கோவில் கொண்ட தெய்வமாம்
தாயின் பிள்ளைப் பாசமே தட்டில் வைத்த தீபமாம்
பாசம் என்று எதைச் சொல்வது பக்தி என்று எதைச்சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் எங்கும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா (நல்ல)
படத்தினில் என்னை கவர்ந்த இடங்கள் பல உண்டு...
மிகப்பெரும் ரவுடியாக ஆரம்பத்தினில் வரும் மேஜரை...பண்ணையாராக/ மைனராக வரும் மனோகர் ஆகியோரை சண்டையிட்டு கைது செய்யும் ஸ்டைல் , அவர்களை எதிர்கொள்ளும் விதம்...கிண்டலான அந்த பேச்சு... போகிற மாட்டை போக்கில் விட்டு பிடிப்பது போல மனோஹரை வளைத்து கைது செய்து கொண்டுசெல்லும் லாவகம்..
அந்தந்த இடங்களிலும் பொருத்தமான வசனங்கள்... ஜெகனை கைது செய்து அழைத்து செல்லும் காட்சியில்
அப்பாவும் மகனும் சவால் விட்டுக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி...
ஜெயிலில் இருந்து திரும்ப வந்ததும் ஜெகன் தனி வீடு பார்த்துக்கொண்டு போக முயலும் அந்த காட்சிகள்...
வேறொரு காட்சியினில் இரும்பு மனிதராக கண்டிப்பு, கறார், பேர்வழியாக இருக்கும் சௌத்ரி...தீபாவளியன்று...வெடி வெடிக்க அஞ்சுவதும்...மனைவி வெடிக்கு நெருப்பு வைக்க போகும்போது...இவர்...பயந்து...பதறுவதும்...ரசமா ன காட்சிகள்.
குடும்ப நண்பர் ராமசாமியின் அலுவலகத்துக்கு சென்று...அவரறியாமல் வேலைக்காரனிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு வைத்துவிட்டு...அப்போதும் அவர் கவனிக்காமல் பின்புறம் வந்து தோளை பிடித்து விட கூற...இவரும் வந்து தோளை பிடித்து விட்டு...க்கொண்டு... ஷூ காலால் ஓங்கி ஒரு உதை விட்டுக்கொண்டே... உரிமையுடன் பேசும் பாங்கு... வீகேயாருடன் உள்ள காட்சிகள் அனைத்துமே...இருவரின் இயல்பான உரிமையுடன் கூடிய நண்பர்களாக நடிக்கும் நடிப்பும் காண்பதற்கு வெகு அழகு...
சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த துயரத்துடன் கூடிய முகபாவமும் நடிப்பும், மனைவியிடம் காட்டும் அன்யோன்யமும்...பாசமும் நெஞ்சை அள்ளும்... காட்சியினை படமாக்கிய விதமும், பாடலினை இவர் உச்சரிக்கும் நேர்த்தியும்...வெகு.. அருமை.. மனிதர் எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான்...கம்பீரம்தான்.
சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குப்போகும் (சுமை)
சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிலைபோலச் சாய்ந்தால் கலை எங்கு போகும்
குலமங்கை கூந்தல் கலைந்தாடலாமா
மலர்சூடு கண்ணே மணவாளன் முன்னே (சுமை)
மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சம் நிதம் காக்கும் உன்னை
இந்தப்பாடல் காட்சி காண..க்.. காண திரும்ப பார்க்கத்தூண்டும் நடிப்பு...அற்புதமான முகபாவம்...தனது பிரியம், நேசம், காதலுக்குரிய துணைவி... எழ இயலாமல் அமர்ந்த சூழலில் அவரை வைத்து வீல்சேரில் தள்ளிக்கொண்டே சோகத்தினை நெஞ்சிலே சுமந்து...உணர்வுடன் பாடும் காட்சி காணும் அனைவரையும் கலங்க வைக்கும்.. டிஎம்மெஸ்ஸின் குரல் மிகப்பெரும் பிளஸ் பாயிண்ட் இந்த காட்சிக்கு...
ஜெகன் வேலை பார்க்கும் வங்கியில் பணம் திருடு போய்விட்ட காட்சியில் உள்ள வசனம்...நச் ...ரகம்...
மிஸ்டர் ஜெகன்நாத், விசாரணை முடியற வரைக்கும் எங்கேயும் வெளியூர் போயிட மாட்டீங்களே...
எங்க அப்பாவும் அம்மாவும் எம்மேல ரொம்ப பிரியம் உள்ளவங்க சார்...வெளியூருக்கு எங்கேயும் என்னை தனியா அனுப்ப மாட்டாங்க சார்.
ஆனா...வேலூர் போணும்னா...தனியாத்தான் போகணும்....
மேஜர் சுந்தர் ராஜனுக்கு அற்புதமான வாய்ப்புகள்.
நடிகர் திலகத்தின் படங்களில் கிடைக்கும் இதிலும் நடிப்பதற்கு அற்புதமான வாய்ப்புள்ள இடங்கள் பல. குறிப்பாக தன் மகள், சவுத்ரி வீட்டு மருமகளாகி உள்ள சூழலில் அவர் வீட்டுக்கு வந்து பேசும் காட்சிகள்...மருமகனுக்கு அறிவுரை கூறும் இடம், மருமகனை காப்பாற்ற தான் குற்றத்தினை ஏற்றுக்கொண்டு சரணடையும் இடம்.. என்று அழகான வாய்ப்புகள்...அத்தனை இடங்களிலும் வெளுத்துக்கட்டுகிறார்.
சோ அவர்களின் காமெடி படத்துக்கு மிகப்பெரும் பலமே...படம் முழுவதுமே..அன்றைய அரசியலை தைரியமாக விளாசி இருக்கிறார்.
மீட்டிங்கில்...
அமெரிக்காவையும்..ஜெர்மனியையும் எச்சரிக்கிறேன்...என்னிடம் விளையாடாதீர்கள்...
நான் மனது வைத்தால் உங்கள் நாடுகளில் பூகம்பம் வெடிக்கும்...
மீட்டிங்கில்...ஒரு கிழவியை மேடைக்கு கொண்டுவந்து தாய்க்குலமே...தாய்க்குலமே.. என்று கட்டிப்பிடித்து கொண்டு போட்டோ எடுத்து முடித்ததும்...டேய்...கிழவியை நவுத்துடா...இங்கே நின்னுட்டு கழுத்தறுக்குது...
கையூட்டு வாங்கும் அரசியல் வாதியாகவும், நேர்மையான கான்ஸ்டபிள் ஆகவும் இரட்டை வேடத்தில் பின்னி இருக்கிறார். அன்றைய காலகட்டத்தினில் எம்ஜியார், கலைஞர் இருவரையும் அரசியல் ரீதியாக அவர்களின் அணுகுமுறைகளை மிக தைரியமாக வாரி விட்டுள்ளார். அவர் பகுதிக்கான வசனங்கள் நிச்சயம் அவருடையதுதான் போலும், அவர் வருகின்ற காட்சிகள் அத்தனையும் சர வெடிதான். உதவிக்கு சுருளி ராஜன் வேறு.
சுருளி, அண்ணே..நம்பாளு ஒருத்தரு... எதிர்க்கட்சி நண்பரோட...கொஞ்சம்..தகராறு... தம்பி..கொஞ்சம் மில்லில இருந்துருக்காரு...
சண்டைலே... கத்தியால வயித்துல கிழிச்சுருப்பாரு..போல இருக்கு
குடல் வெளியே வந்துருச்சாம்..
நியாயமா பாத்தா..வெளியே வந்த கொடலைதான் ஜெயிலுக்குள்ளே போட்டிருக்கணும்...
எங்காளு ஒருத்தர் காரை ஏத்தி ஒரு குழந்தைய.. கொன்னுட்டாராம்...
கொழந்தை ஸ்பாட்டுலே...யே செத்து போச்சாம்...
இதைப்போய் ஒரு பெரிய கேசா..எடுத்துட்டு..யாரோ கான்ஸ்டபிள் சுந்தரமாமே எங்க ஆளை பிடிச்சு உள்ளே போட்டுட்டாராம்..
அப்பாயிசம்னா.. என்னன்னு தெரியுமா...ஒனக்கு...
கொழந்தை இருக்கா..செத்து போச்சே...
சாகலே...சாகலே...இதோ பாருங்க..செத்து போன குழந்தையோட தகப்பன்
தன்னோட கொழந்தை சாகலைன்னு எழுதிக்கொடுத்த லெட்டர்...
எங்.. காள .. வெளியே விட்டுட்டீங்கன்னா..எல்லாருக்கும் நல்லது...
என்ன சார் வெளயாடுறீங்களா...?
காரியம் ஆனா நாங்க விளையாட மாட்டோம்..காரியம் ஆகலைன்னாதான்..விளையாடுவோம்...
அட செத்துப்போன குழந்தையாவது...கண் முழிச்சு இதுதான் எங்கப்பான்னு சொல்லுதா..அதுவும் கெடயாது... நீங்க ஒரு நியாயத்துக்கும் கட்டுப்படாம போனா எப்புடி...
அப்பாயிசம்னா..தெரியுமா...ஒனக்கு...
என்ன சார் ஒரே அடியா குழப்பறீங்க...
அதுதான்...அப்பாயிசம்...
தாய்க்குலமே...என்ன அப்புடி கேட்டுட்டீங்க..ஒருவேளை ..அவங்கப்பா..நான் திரட்டுற நிதிக்கு அவரால முடிஞ்ச ஏதாவது... குடுத்தாருன்னா....
இந்த நாட்டுலே..ஆயிரக்கணக்கான பேரு நாட்லே கிளிஜோசியம் பாக்குறாங்க...கிளி இல்லாம கஷ்டப்படறாங்க...அவர்களுக்கெல்லாம் கிளி வாங்கி குடுக்கப்போறேன்...
ரோட்ல குப்பை பொறுக்கறவங்க...பல பேரு கோணி இல்லாம கஷ்டப்படறாங்க...அதுக்காக கோணி வாங்கி குடுக்கப்போறேன்...
கிளி மறுவாழ்வு திட்டம்...கோணி வழங்கு திட்டம்...
பணத்தை சிக்கனமாதான் செலவு செய்வேன்...ஒரே ஒரு லட்சம் கிளி வாங்குவேன்...
அந்த கிளியெல்லாம் குட்டி போட்டதும்..
என்னது குட்டியா...
ஆமாம்...எல்லாருக்கும் கிளிக்குட்டி குடுப்பேன்... ஒரு ரூபாய்க்கு மூணு கிளி...
சோ அவர்கள் நடித்த படங்களில் இதுவும் அவரின் பெயர் சொல்லக்கூடிய ஒரு படமே... அதுவும் குறிப்பாக அந்த கால கட்டத்தில், எம்ஜியாரை இவ்வளவு தைரியமாக விமர்சித்தவர் சோ..வாகத்தான் இருக்கமுடியும்...அதுவும் கூறும்கருத்துகள் மறுக்கமுடியாத மாபெரும் உண்மையும் கூட.
ஜெகன் வேலை பார்க்கும் சிட்பன்ட் நிறுவனத்தில் கொள்ளை போன இரண்டு லட்ச ரூபாயினை ஜெகன்தான் திருடி இருக்க வேண்டும் என்று போடும் நாடகம்...அதன் தொடர்ச்சியாக பணத்தினை வெளியாக்கும் யுக்தி...காட்சிகள் ருசிகரமானவை...
ஜெகன் கைது நிகழ்வுக்கு பிறகு..அடுத்த காட்சியில்...
லட்சுமி...சாப்டாச்சா...
ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
விமலா...சாப்பிடலியாம்மா....
(கண்ணீருடன்)...ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
ஆல்ரைட்.. ஆல்ரைட்..டயமாச்சு சாப்பிட வாங்க...
(அப்போதும் யாரும் வரவில்லை..)
இப்போ வரப்போறீங்களா இல்லையா.. I... Say....come on...
என்ற ஒரு அதட்டலில் இருவரும் ஓடிவர.. அவர்களுக்கு நடிகர் திலகம் உணவு பரிமாறிக்கொண்டே... சாப்பிடு..சாப்பிடு... என்று.. அவர்களை சாப்பிட வைத்து....
விமலா..நான் என்னமா தப்பு செஞ்சேன்...அப்படி ஏதாவது செஞ்சிருந்தா சொல்லு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...
லஷ்மி..ஒரு மாணவன் தப்பு பண்ணுனா...ஆசிரியர் தண்டிக்கறது இல்லையா..பிள்ளைங்க தப்பு பண்ணுனா..பெற்றோர்கள் தண்டிக்கறது இல்லையா..? குற்றம் செய்யறவங்க யாரா...இருந்தாலும்...தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்...நாளைக்கு நானே ஒரு தப்பு பண்ணுனா...கூட S.P..ங்கறதால என்ன விட்டுடவா..போறாங்க.... ..நெவர்...
கைலே விலங்கு போட்டு ரோட்ல அழைச்சிட்டுதான் போவாங்க...
நான் இதுவரைக்கும் எவ்வளவோ..குற்றவாளிகளை கைது பண்ணிருக்கேன்...நீ சந்தோஷப்பட்டிருக்கே..
ஆனா இன்னிக்கு நம்ப வீட்டுக்குள்ளையே ஒரு குற்றவாளியை கைது பண்ணியிருக்கேன்... அதுல ஒங்களுக்கு வருத்தம்...
ஏன்னா.. குற்றவாளி ஒனக்கு மகன்...
அவளுக்கு கணவன்...
ஆனா ஒன்னு மாத்திரம்...எல்லாரும் மறந்துட்டீங்க... அவன்... எனக்கும் மகன்...
பெண்கள்.. நீங்கல்லாம்...தாங்க முடியாம அழுதுடறீங்க...
ஆனா ...நான்... வெளியில் சொல்ல முடியாம... (கைகளால் நெஞ்சிலே தட்டிக்கொண்டு...கண்களில் நீர் நிறைய...) கலங்குகின்ற காட்சி...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பாடல் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும், நடிப்பும், பாடல் வரிகளும், பாடிய விதமும்...அற்புதம்...நெஞ்சை பிழியும் அற்புதமான ஒரு காட்சி. பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா... இதற்கு மேலும் இந்த காட்சிக்கு இதைவிட சிறப்பாக வரிகள் போட இயலுமா..என்று சவால் விட்டிருக்கிறார் கவியரசு..
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் ஒன்று...அந்த என்கொயரி காட்சி...மிஸ்டர் சவுத்ரி...ஹாஸ்ப்பிட்டல்லேர்ந்து கைதி தப்பிச்சு போக நீங்களும் ஒரு காரணம் ன்னு கம்பளைண்ட் வருதே....என்று துவங்கும்...அந்த காட்சியில் துவங்கும் வேகம்...
மிஸ்டர் சவுத்ரி...சாரி...என்கொய்ரி ன்ற முறைல...உங்களையே நான் கேள்வி கேட்க வேண்டியதா போச்சு..
நோ...சார்...நோ...சார் ஒங்க சீட்ல இருந்தா நானும் அப்புடிதான் சார் கேட்பேன்...
(டெலிபோன் வர)
ஓ..ரியலி ...மிஸ்டர் சவுத்ரி..ஒரு குட் நியூஸ்...அந்த கைதியை...பிடிச்சுட்டாங்களாம்..
ஓ Is It... வெரி குட்...சார்..
தப்பி ஓட முயற்சி பண்ணுனானாம்..ஷூட் பண்ணிட்டாங்களாம்...
ஓ...பைன் சார்...
(அடுத்து ஒரு போன்...வர) ஓ... அப்புடியா...
மிஸ்டர்..சவுத்ரி..
(அதே விரைப்புடன்) எஸ் சார்...
எ.. பேட் நியூஸ் பார் யூ...ஒங்க மனைவி..இறந்துட்டாங்களாம்....
இங்கே துவங்கும்...ஒரு அற்புத நடிப்பின் துவக்கம்...
உணர்வுகள் உடலை தடுமாற செய்ய..தடுமாற்றத்துடன்...சுதாரித்துக்கொண்டு ..
நான் வீட்டுக்கு போலாமா சார்...
இறுகிய முகத்துடன்...வீட்டுக்கு வந்து...படியேறி...வந்து...மனைவியை...சடலமாக காணும் பொழுதினில்.... (மருமகள் விமலா..கதறிக்கொண்டே காலில் விழுகிறார்...)
லட்சுமி நான் வந்து ரொம்ப நேரமாச்சு,
ஏன் என் கூட பேச மாட்டேங்குற...
நான் யூனி பார்ம்லே இருக்குறப்போ பேச பயப்படுவே....
இதோ பார் நான் யூனிபாம் இல்லாம.. வந்துருக்கேன்...
பேச மாட்டியா...பேசும்மா..
நான் நேரம் கழிச்சு வருவேன் நீ எனக்காக தூங்கா ம காத்துக்கிட்டு இருப்பே...
இப்போ நான் நேரத்தோட வந்திருக்கேன்.
இப்போ நீ போயிட்டியே.... ...?
நான் என்னம்மா தப்பு பண்ணுனேன்... ...?
ஏம்மா என்னை விட்டுட்டு போயிட்டே...?
எனக்கு யாருமே இல்லியேம்மா...
என்ன தனிமரமா ஆக்கிட்டு போயிட்டியேம்மா....
என்னால தாங்க முடியலேம்மா... என்று கூறிக் கொண்டே... வேரறுந்த மரமாக வீழ்ந்து கதறும் காட்சி...மைகாட்...மறக்கவே இயலாது...அந்த நடிப்பினை வழங்க இனி யாரால் இயலும்....
நடிகர் திலகத்தின் படங்களில் நிச்சயம் முத்தாரமாக விளங்கும் படங்களில் இதுவும் ஒன்று...மீண்டும், இந்தப்படத்தினை மறு வெளியீடு செய்யவேண்டும்...நிச்சயமாக இன்றைய தலைமுறையினரை கூட கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/17311371_1513425975334911_9046012401811996440_o.jp g?oh=da15bc6ad4a73827391b16484ebfd2af&oe=59C10A01



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17264928_1513426208668221_5360871374906463563_n.jp g?oh=e729d0c02c48c23390ffadbc64d195c7&oe=59B8022F

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17264438_1513426765334832_3241331431235021636_n.jp g?oh=b2b7d065020f99bbf9b072d8af405363&oe=59AE052B



(முகநூல் விருந்து)

sivaa
23rd May 2017, 08:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622177_459996067678724_5808014794570377148_n.jpg ?oh=045e253d607967d245f300c43691e626&oe=59C119FF

sivaa
23rd May 2017, 08:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18581494_459996114345386_7487272431992573761_n.jpg ?oh=f5ef70f346e754dcbea96490bbec9bf8&oe=599E9638

sivaa
23rd May 2017, 08:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622583_1908118269402992_2654754775729295583_n.jp g?oh=e26670779908f8f5c000702247c2087b&oe=59AE0197

sivaa
24th May 2017, 01:51 PM
இன்று நடிகர் திலகம் வலியுறுத்திய "நீதி"
இருக்கிறது " வானவில்" தொலைக்காட்சி சேனலில் பிற்பகல் 1:30 க்கு


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18582069_1346449662138587_2370255980187397204_n.jp g?oh=6ec6e3fce249c1951469f0e195843493&oe=59C1EB35

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449753892793_zpskovljlga.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449753892793_zpskovljlga.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449668560458_zpsq7ykcabm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449668560458_zpsq7ykcabm.jpg.html)


http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449667493386_zpsguea7yzm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449667493386_zpsguea7yzm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449667512895_zpsfnilth1s.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449667512895_zpsfnilth1s.jpg.html)

sivaa
24th May 2017, 01:59 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18620160_1342187522532515_5707299003264831646_n.jp g?oh=00fe49f7b4b9018c19b27f8a07681ea9&oe=599D44D1

sivaa
24th May 2017, 02:01 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18558683_1722964641066627_4487557968573805392_o.jp g?oh=7b8b0ab7a0712fcc35415f7bbb08a47a&oe=59AEB5F6

18.7.1976 நாகர்கோவில்,வடிவீஸ்வரம்,தேர்தல் பிரச்சாரம்

sivaa
24th May 2017, 02:02 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18581866_1321826841265137_3032256007782531475_n.jp g?oh=e40c29cb2f29deb33e3bfb0749cb1b52&oe=59A86CC6

sivaa
25th May 2017, 02:07 PM
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கும் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்,
காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில் "ஞான ஒளி",
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
" முரடன் முத்து "
பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில்...
" இரு மேதைகள்"
இரவு 7:30 க்கு முரசு டிவியில்
" ஜல்லிக்கட்டு "
கண்டு மகிழ்வோம்
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GnanaOli1000showsFullDailyThanthi361972_zpspzknrju q.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOli1000showsFullDailyThanthi361972_zpspzknrju q.jpg.html)


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4937-1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOli_zpseowlcgim.jpg.html)

sivaa
25th May 2017, 02:07 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18740047_1343148065769794_259025026582386629_n.jpg ?oh=67b717ae176f77cecc523f36ffd421b5&oe=599B9489

Russellxor
25th May 2017, 08:25 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/44699c076345e7656b31ca19cdea3207.jpg

Russellxor
25th May 2017, 08:25 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/83792d87d24aeba65d934e98129f0d84.jpg

Russellxor
25th May 2017, 08:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/0546866747c20d596a70563528b1566a.jpg

Russellxor
25th May 2017, 08:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/8626435b9ebad3aa05e7988b7b5740fb.jpg

Russellxor
25th May 2017, 08:27 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/36df29db6c00d3d5dfb7b94fcdfabe8e.jpg

Russellxor
25th May 2017, 08:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/3df1050fc0ff0e4da8949f13ff7274b6.jpg

Russellxor
25th May 2017, 08:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/8e37285d77829f52685f3b6c4c6bb9ef.jpg

Russellxor
25th May 2017, 08:34 PM
https://uploads.tapatalk-cdn.com/20170525/c1aea7c5a42a5b4f0b465c98779a0838.jpg

sivaa
26th May 2017, 01:09 AM
சிவாஜிக்கு போட்டி சிவாஜி தான்
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 1952 முதல் 2017 வரை சிவாஜி அவர்களுக்கு வேறு யாரும் போட்டியாக இருக்கவில்லை நமது தலைவருக்கு போட்டி...யாக நமது தலைவரே தான் இருந்துள்ளார்.
ஒரே நாளில் இரண்டு படங்கள் பல முறை வெளியிட்டு இரண்டு முறை 100 நாள் ஓடிய வரலாறு வேறு யாருக்கும் இல்லை.
அடுத்தடுத்த நாள் படங்களை தைரியமாக வெளியிட்டு ஒரே கலைஞன் நமது நடிகர்திலகமே.
ஒரு வார இடைவெளியில் படங்களை வெளியிட்டவரும் நமது கலைக்குரிசிலே.
ஒரே வருடத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட ஒரே நடிகரும் நமது தேசியதிலகமே.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களைத் தந்தவரும் நமது சரித்திரநாயகனே.
ஒரு படம் 50 நாளைத் தாண்டி 100வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நமது நடிகர்திலகத்தின் வேறு படம் வெளிவந்து போட்டியாக அமைந்து பல படங்கள் 100 நாளை தொடாமல் போயிருக்கிறது.
இப்போது சிவாஜி அவர்கள் இல்லை இனியாவது வேறு யாராவது போட்டிக்கு வருவார்களா என்று எதிர்பார்த்தால் மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு படங்களை வெளியிட்டு அதுவும் 100 நாளை நெருங்க முடியாத இந்த தருணத்தில்
மதுரையில் மே 19ல் ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவந்து தற்போது 26 முதல் தொடர்ச்சியாக மதுரை அலங்கார் திரையரங்கில் இரண்டாவது வாரத்தை தொடர்கிறது.
அதே நேரத்தில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மே 26 முதல் ஊட்டி வரை உறவு திரைப்படம் வெளிவருகிறது.
இரண்டு தியேட்டருக்கும் அதிகபட்ச துாரம் ஒரு கிலோ மீட்டர் தான் இருக்கும்.
இப்போது உச்சத்தில் உள்ள நடிகர்களாலும் இந்த சாதனையை செய்யமுடியாது என சவால் விடலாம்.
ராஜபாரட் ரங்கதுரைக்கு போட்டியாக ஊட்டி வரை உறவா அல்லது ஊட்டி வரை உறவுக்கு போட்டியாக ராஜபாரட் ரங்கதுரையா
எதுவாயினும் நமது மக்கள்தலைவர் மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் அவர் படங்களுக்கு அவர் படமே தான் போட்டியாக உள்ளது ரசிகர்களாகி நமக்கு பெருமை தானே இதயங்களே....
மதுரையில் நகரெங்கும் ராஜபாரட் ரங்கதுரை மற்றும் ஊட்டி வரை உறவு திரைப்படத்தின் போஸ்டர்கள் அருகே அருகே ஒட்டப்பட்டிருப்பதால் அனைவரும் வியப்போடு பார்த்துச் செல்கின்றனர்.
படத்தின் போஸ்டர் புகைப்படங்கள் நமது இதயங்களின் பார்வைக்கு
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18700338_1343333949084539_6578290536357548469_n.jp g?oh=d8d2cd1cb1d87f518d8f5e2e8f21187a&oe=59A33824

sivaa
26th May 2017, 01:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18699897_1343333945751206_7700234255833003564_n.jp g?oh=d848ef75e15797fe37b79dea4c9c7f62&oe=59E932DD


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698458_1343333952417872_8491584942629046325_n.jp g?oh=2582afd2cd58c568aaacaac033a6c135&oe=59A9F006

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18671277_1343334069084527_1552462108552731441_n.jp g?oh=aa02e378c26b73157d7e2d73b9a97e87&oe=59A4A612

sivaa
26th May 2017, 01:46 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698144_1346667985450088_8780333655590559942_n.jp g?oh=b978e43507de5c9db33ce1c59d9aa638&oe=59A7F555


*** திகைக்க வைக்கும் நடிகர் திலகம் திரைப்பட சாதனைகள்,
நடிகர் திலகம் அறிமுகம் ஆன பராசக்தி வெளிவந்த வருடம் 1952 முதல் 1962 வரையிலான பத்து ஆண்டுகளில் வெளிவந்த ஒட்டுமொத்த நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 432 ஆகும்,
அந்த 432 படங்களில் வெற்றிப் பெற்ற படங்களின் எண்ணிக்கை என பார்த்தோம் என்றால் அது 101 படங்கள் மட்டுமே,
(வெற்றிப் பெற்ற தமிழ் சினிமாக்கள் என்ற பல்வேறு நூல்களில் இருந்து இத்தகவலை பெற முடிகிறது,)
அந்த வெற்றிப் பெற்ற 101 படங்களில் நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்கள் மட்டுமே 53 திரைப்படங்கள் ஆகும்,
அதாவது நடிகர் திலகம் பத்து ஆண்டுகளில் நேரடி தமிழ்ப் படங்கள் நடித்தது 78 படங்கள் ஆகும்( பிற மொழிகளில் 5 படங்களில் நடித்தார்)
அடுத்து முக்கிய நடிகராக விளங்கிய
.................................................. ...........................

ஏனைய ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பில் வந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை 31 படங்கள் மட்டுமே,
நடிகர் திலகம் நடிப்பில் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற படங்களின் பட்டியல்,
*** நூறு நாட்களுக்கும் மேல் ஓடியவை
1) பராசக்தி
2) திரும்பிப் பார்
3) மனோகரா
4) எதிர்பாராதது
5) காவேரி
6) மங்கையர் திலகம்
7) நான் பெற்ற செல்வம்
8) பெண்ணின் பெருமை
9) அமரதீபம்
10) வணங்காமுடி
11) புதையல்
12) உத்தம புத்திரன்
13) பதிபக்தி
14) சம்பூர்ண ராமாயணம்
15) அன்னையின் ஆணை
16) சபாஷ் மீனா
17) வீரபாண்டிய கட்டபொம்மன்
18) மரகதம்
19) பாகப்பிரிவினை
20) இரும்புத்திரை
21)தெய்வப்பிறவி
22) படிக்காத மேதை
23) விடிவெள்ளி
24) பாவ மன்னிப்பு
25) பாச மலர்
26)ஸ்ரீவள்ளி
27) மருத நாட்டு வீரன்
28) பாலும் பழமும்
29) பார்த்தால் பசி தீரும்
30) படித்தால் மட்டும் போதுமா
31) ஆலயமணி
** 75 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலைப் பெற்று தந்த படங்கள்
32) பணம்
33) இல்லற ஜோதி
34) அந்த நாள்
35) கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
36) தூக்கு தூக்கி
37) கள்வனின் காதலி
38) தெனாலிராமன்
39) ராஜா ராணி
40) ரங்கோன் ராதா
41) மக்களை பெற்ற மகராசி
42) தங்க மலை ரகசியம்
43) அம்பிகாபதி
44) பாக்கியவதி
45) சாரங்கதாரா
46) காத்தவராயன்
47) தங்கப் பதுமை
48) பாவை விளக்கு
49) புனர் ஜென்மம்
50) நிச்சய தாம்பூலம்
51) பலே பாண்டியா
52) வடிவுக்கு வளைகாப்பு
53) பந்த பாசம்

.......................................

** ஏனைய அனைத்து நடிகர்களின் நடிப்பில் வந்த வெற்றிப் படங்கள், 30
1)ஔவையார்
2) தேவதாஸ்
3) ரத்தக்கண்ணீர்
4) கணவனே கண் கண்ட தெய்வம்
5) மிஸ்ஸியம்மா
6) நல்லத் தங்காள்
7) டவுன் பஸ்
8) குல தெய்வம்
9) பாச வலை
10) ரம்பையின் காதல்
11) சதாரம்
12) எங்க வீட்டு மகாலட்சுமி
13) மாயா பஜார்
14) முதலாளி
15) நீல மலைத் திருடன்
16) பூலோக ரம்பை
17) மாலையிட்ட மங்கை
18) வஞ்சிக் கோட்டை வாலிபன்
19) கல்யாணப்பரிசு
20) மணி மேகலை
21) மின்னல் வீரன்
22) வண்ணக்கிளி
23) எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
24) கைதி கண்ணாயிரம்
25) களத்தூர் கண்ணம்மா
26) பாக்யலட்சுமி
27) குமுதம்
28) தேன் நிலவு
29) நெஞ்சில் ஓர் ஆலயம்
30) சாரதா
31) காலம் மாறி போச்சு
இப்போது. தெரிந்து கொள்ளலாம் நடிகர் திலகத்தின் இமாலய சாதனையை
பத்து ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் ( 83/432) 20% பங்களிப்பை நடிகர் திலகம் அளித்தது போன்று உலகில் எவரும் கொடுத்ததில்லை, அப்படியே நடித்து இருந்தாலும் வெற்றி பெற்ற படங்களை கொடுத்து இருக்க முடியாது ( 53/101)
பதிவைப் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்..

----------------------------------------------------------------------------------------------
சில பின்னூட்டங்கள்

E நடிகர் திலகம் ஒரு சாதனை நாயகன்.அவரது படத்தின் வெற்றியை அவரது மற்றொரு படம்தான் முறியடித்து இருக்கிறது

(ஆமாம் சார், நீங்கள் சொல்லும் அடிப்படையில் எத்தனையோ படங்கள் வெள்ளி விழா வாய்ப்பை இழந்தன, குறிப்பாக உத்தம புத்திரன் 23 வாரங்கள் ஓடிய நிலையில் நடிகர் திலகத்தின் அடுத்த படத்திற்காக மாற்றிய சூழ்நிலை)
............
சிவாஜி சினிமாக்கள்,,, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதையல்கள்,,, நடிகர் திலகத்தின் சம்பளம் ஆரம்பம் முதலே அவரது உழைப்புக்குத் தகுந்ததை விட வெகு குறைவு,,, தன்னை நம்பி படம் எடுக்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பது அவர் எண்ணம்,,, படத் தயாரிப்பு செலவுகளையும் அநாவசியமாக இழுத்து விட மாட்டார்,,, பெரிய பேனர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஒரே மாதிரித் தான் நினைப்பார்,,, ஆகவே அவரது படங்கள் குறைந்த பட்சம் 50 நாட்கள் ஓடினாலே தயாரிப்பாளர்கள் போட்ட முதலை தாண்டி லாபம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்,,, ",,, சிவாஜியை நம்பி ரிஸ்க் ஆன சபஜெக்ட் செய்தாலும் கூட முதலுக்கு மோசம் வராது,,, ஆகவே மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் நல்ல வருமானம் ஈட்டியவை,,, அடுத்தடுத்து சிவாஜியை வைத்து படங்கள் பண்ணவே எல்லா தயாரிப்பாளர்களும் விரும்புவர்,,, ஏனெனில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி தான்,,, கொசுறு தகவல் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" 100 நாட்கள் ஓடிய படம் என்று நினைக்கிறேன்,,,

( சார், அருமையாக புரியுமாறு நடிகர்திலகத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த உறவு முறையை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள், தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்த காரணத்தால் தான் குறுகிய காலத்தில் நடிகர்திலகம் அத்தனை எண்ணிக்கையிலான படங்களை கொடுத்து இருக்கிறார்,)

( நடிகர் திலகத்தின் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலை பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் தொடர்பான புத்தகங்கள் தந்திருக்கும் விவரங்கள் மட்டுமே, அதையே தான் nadigar Thilagam. Com லிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது,
எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடுதான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி நூறு நாட்கள் ஓடிய படம் என்று)
.................................................. ...........

தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் சிவாஜியை சுற்றிதான் சினிமா வியாபாரம் இருந்தது என்று எழுதினார் .அதை நீங்களும் படித்திருக்கலாம்

.........................................

அண்ணாச்சி இதில் கள்வணின் காதலி 100நாள் படம் தானே படம் நன்றாக ஓடியது என்று எனது சித்தப்பா என் சின்ன வயதில் சாென்ன ஞாபகம்

.................................................. ...

மக்களைப் பெற்ற மகராசி முதல் வட்டாரத் தமிழ் பேசி வெளிவந்த வெற்றிப்படம் அதாவது இதில் காெங்குத் தமிழ் பேசி நமது தலைவா் அசத்தியிருப்பாா் படத்தை தயாாித்தவா் வி கே ராமசாமி அவா்கள் வி கே அவா்களை தயாாிப்பாளராக உயா்த்தியவா் நமது தலைவா்தான்

( உண்மை வி.கே.ஆர் அவர்களை தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம், சிறந்த நடிகர் என சினிமா ரசிகர்கள் மூலம் நடிகர் திலகத்திவிற்கு பட்டம் வழங்கப்பட்டது)

(வி.கே.ஆர் அவர்களிடம் எந்த வித முன் பணமோ, சம்பளமோ பெற்றுக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம், படம் பெரும் வசூலைக் குவித்தது,)

.................................................. .........
தங்கமலை ரகசியமும் 100நாள் படம் என என் சித்தப்பா சாெல்லியிருக்கிறாா் அப்போது டாா்ஜான் என்று நமது தலைவரை சாென்னாா்களாம்

( அறியப்பட்ட செய்திதான், எனக்கும் இது போன்ற ஆதங்கம் இருக்கிறது, நடிகர் திலகத்தின் வெற்றி பெற்ற 100 படங்கள் ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்று,
இந்த பதிவின் மூலம் நண்பர்கள் யாராவது ஆதாரம் கொடுக்கிறார்களா என்று பொறுத்து பார்ப்போம்)

......................................
நான் கேள்விப்பட்டதை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.நடிகர்திலகம் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கமாட்டர் என்பதற்கு ஒர் உதாரணம். தங்கபதக்கம் படத்தில் ஒர் காட்சியில் நடிகர்திலகம் அவர்கள் சாப்பிட்டு விட்டு டைனிங் டேபிளிலிருந்து எழுந்து வருவது pol ஓர் காட்சி. அதற்கு திரு மகேந்திரன் அவர்கள் டின்னர் ஏற்பாடு செய்வதாக கூறினார்.அதற்கு நமது நடிகர்திலகம் அவர்கள் அதெல்லாம் தேவையில்லை என கூறிவிட்டு அந்த காட்சியில் சாப்பிட்டு விட்டு வருவது pol பல்லை துருத்திக்கொண்டு வருவார். அந்த காட்சி படத்தில் மிகவும் தத்ரூபமாக வந்ததை கண்டு திரு மகேந்திரன் அவர்கள் நெகிழ்ந்து போனார்.
(சரியான தருணத்தில் தேர்ந்த உதாரணம் சார்,
மிக்க நன்றி)

.................................................. ..............

sivaa
26th May 2017, 02:42 AM
பலேபாண்டியாவுக்கு இன்று 55 வயது


http://oi66.tinypic.com/2v8h3l1.jpghttp://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5817-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5818-1.jpg



http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5816-1.jpg

sivaa
26th May 2017, 07:08 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18623444_308699809553983_8895825425720811395_o.jpg ?oh=7393ff0e577679c43b632e433eb9adaa&oe=59BB6BAA

sivaa
26th May 2017, 07:11 AM
ஒரு சின்ன அரசியல் விவாதம், உடனே அரசியல் நமக்கு வேண்டாமே என்று சொல்லி விடாதீர்கள் பணி புரியும் அலுவலகத்தில் உள்ளவர்கள் மத்தியில் நடந்தது
இன்றைய அரசியல் நிலைமை குறித்து ஆளுக்கு ஆள் ஒரு கருத்து அவரவர்கள் தான் சார்ந்த கட்சிகளை விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக விவாதித்தனர், அதாவது ஒரு குரூப் திமுக சார்பு அவர்களுக்கு எதிர் குரூப் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், இன்னும் பிற கட்சிகளின் சார்பு ஆதரவாளர்கள்,
சில நிமிடங்கள் விவாதித்தவர்கள் இறுதியாக என்னைக் கிளறினார்கள் அதாவது அ...வர்களின் கேள்வி "யாருக்கு தகுதி இருக்கிறது இந்த நாட்டை ஆள்வதற்கு"
அதற்கு சாதாரணமாகத்தான் கூறினேன இப்போதும் சரி அல்லது பெருந்தலைவருக்குப் பின ஆணடவர்களும் சரி யார் தான் நேர்மையின் வழி வந்தவர்கள் இருக்கிறார்கள், அல்லது இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா? அவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறது என கூறுவதற்கு என் நான் சொன்ன மாத்திரம் ஒரு நண்பர் ஆவேசப்பட்டுவிட்டார், அட என்ன சார் உங்களுடைய எண்ணம் அந்த தகுதி சிவாஜிக்கு மட்டுந்தான் இருக்குதுன்னு சொல்ல வருவீங்க " என்னமோ சிவாஜியின் அப்பா என்ன சுதந்திர போராட்ட தியாகி போல "
ஒரு கனம் நம்மால் உடனடியாக எதுவுமே பதில் பேச முடியவில்லை,
"அடப் பாவிகளா சிவாஜியின் அப்பா சுதந்திர போராட்ட தியாகிதானே, சிவாஜி இந்த உலகிற்கு பிறந்த போது அவரது தந்தை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதனால் 7 ஆண்டுகள் சிறையில் வாடினாரே" ,
இந்த வரலாற்று செய்திகள் எல்லாம் வரும் தலைமுறைக்கு எப்படி தெரிய படுத்தப் போகிறோம்?
சிவாஜியின் வரலாறு தெரியாமல் போனதால் தானே சிலர் சிலை விஷயத்திலும் மணி மண்டபம் தொடர்பாகவும் கூட எதிர் கருத்து தொடுக்கும் நிலை இருக்கிறது..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18527595_1340221536094733_6682053916382215780_n.jp g?oh=69d17cca10236d69f54b3433e3daccc9&oe=59AF6F75

( from face book)

sivaa
26th May 2017, 02:05 PM
நாகர்கோவில் வசந்தம் பேலஸ் தினரி 4. காட்சிகளக வெற்றி வாகை சூடுகிறார் ரங்கதுரை

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18622571_1696598247303278_8192698991860463486_n.jp g?oh=70532959a62e02f5b7a9414914a03245&oe=59B1F420

sivaa
27th May 2017, 01:30 AM
புதிய படங்களை ஒரம் கட்டும் தலைவரின் சாதனை

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18738647_819476038208753_8519830147306631158_o.jpg ?oh=b9e4bbc46cc94de4a05d0e0c919e719d&oe=59B4D70E

sivaa
27th May 2017, 04:43 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767474_1345059658911968_5194467165012084984_n.jp g?oh=0c6dd2623f99ccfab47eb35203fb648c&oe=599C17F7

sivaa
27th May 2017, 11:03 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664347_1910178672530285_1234591951482870360_n.jp g?oh=eb0ec36c61241f418ef441d82978481b&oe=59E8F813

sivaa
27th May 2017, 11:52 PM
http://oi65.tinypic.com/3e9ah.jpg



http://oi67.tinypic.com/2i88wav.jpg

http://oi64.tinypic.com/jzfn0z.jpghttp://oi64.tinypic.com/sc6zhj.jpg

sivaa
28th May 2017, 08:44 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664608_1697307733898996_6597309824169662219_n.jp g?oh=25648edf324d903ee877036611c9afce&oe=59BBCBC0

sivaa
28th May 2017, 08:50 AM
இன்று (28-5-2017) பிறந்தநாள் காணும்
திரு ராகவேந்திரா அவர்கள் மேலும்
பல பிறந்தநாள் காண வாழ்த்துக்கள்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698270_1516074748464085_5781416480725208523_n.jp g?oh=0fa92f81c42b9b27434c65a4439f79b0&oe=59BBC3FB

Russellxor
28th May 2017, 05:10 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/8d154cbab05853e6d7832c2c19ab4b62.jpg

Russellxor
28th May 2017, 05:10 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/2f6cdc10fb24539ee36cb7e688d8ec7f.jpg

Russellxor
28th May 2017, 05:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/50ed28fb003ed609d3825a330e31cdd5.jpg

Russellxor
28th May 2017, 05:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/3115962ad945728e502bfdf8225ddca5.jpg

Russellxor
28th May 2017, 05:12 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/68f633762d11662e82213715c358eea2.jpg

Russellxor
28th May 2017, 05:13 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/be0d61894887d5edf8597dfef101aa94.jpg

Russellxor
28th May 2017, 05:13 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/f97c2b3c35a05ee746e9fe8c7f487813.jpg

Russellxor
28th May 2017, 05:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/3f382c3e95887765cdb5782adf37f80e.jpg

Russellxor
28th May 2017, 05:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/2239b0e4938229911a5ee6a5f59f6c26.jpg

Russellxor
28th May 2017, 05:15 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/ebab860eb234b178785442842a8335bd.jpg

Russellxor
28th May 2017, 05:16 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/6d4dc23248f836054d8af6f8101dbf7a.jpg

Russellxor
28th May 2017, 05:17 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/3f6ec821455f32314c59fbeff7896b7a.jpg

Russellxor
28th May 2017, 05:17 PM
Delete

Russellxor
28th May 2017, 05:19 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/832cd88f202784e8b344d9cb09713b37.jpg

Russellxor
28th May 2017, 05:20 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/57de5eb39b039f441284cb316d84de4e.jpg

sivaa
28th May 2017, 05:25 PM
திரிசூலம் பார்க்காதவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா ?
நிச்சயமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்க வாய்ப்பில்லை,
இன்றைய தலைமுறையினர் பார்க்கும் வாய்ப்பு,
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18671097_1350539185062968_1191807130875486987_n.jp g?oh=1014fd2de95a24b01b3f9cf2954d4b76&oe=59BBABFF

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767484_1350539221729631_3965628290337064378_n.jp g?oh=25418ccfdd7aa0032ef05649f7d7b716&oe=599FD766

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TS175.jpg

Russellxor
28th May 2017, 05:35 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/98b3f0db130b9120b0bf1a5ef5167a0e.jpg

Russellxor
28th May 2017, 05:36 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/e7dcf898b837916be2acbd43625394e0.jpg

Russellxor
28th May 2017, 05:36 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/3c82cd3d90e3eeeeb0add0a24ee1da76.jpg

Russellxor
28th May 2017, 05:37 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/bb448a676d3dbd47b8c6ae3b0f7e7e2a.jpg

Russellxor
28th May 2017, 05:37 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/d90bc8458d291275e44c3b3f39f8262d.jpg

Russellxor
28th May 2017, 05:38 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/c4b4ab994af1830dbb713b03e9004669.jpg

Russellxor
28th May 2017, 05:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/7d0cf6056a534c057978710beb5ee6a3.jpg

Russellxor
28th May 2017, 05:39 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/f44326932248bc03ab22128abef820ba.jpg

Russellxor
28th May 2017, 05:40 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/9ad393a624396858e07b57aa102d3cbb.jpg

Russellxor
28th May 2017, 05:41 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/8bea41a54b5b553156787178fbbc97da.jpg

Russellxor
28th May 2017, 05:42 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/01983a6a78c28b162c6ecf8070ce6b52.jpg

Russellxor
28th May 2017, 05:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/9a2cd5902429eeb41abf6979b6122aa1.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170528/af1efc309fbdfe25fd2d0b17f06abb01.jpg

Russellxor
28th May 2017, 05:43 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/12a9224a3107266305d9da07ac3ee540.jpg

Russellxor
28th May 2017, 05:44 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/b162c6470c9c291dac230abec48843b5.jpg

Russellxor
28th May 2017, 05:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/15ed53d3b3ca60c46365dfde3519cce0.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170528/255e49e8459060566b8c765422ddf44e.jpg

Russellxor
28th May 2017, 05:45 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/afe36b613beae4a25c997ccb689f3d21.jpg

Russellxor
28th May 2017, 05:46 PM
https://uploads.tapatalk-cdn.com/20170528/1b3ff761ee46acdec6ed47ffe6499783.jpg

sivaa
28th May 2017, 07:52 PM
கலையுலகின் சரித்திரநாயகனின் சாதனையை எவராலும் வெல்ல முடியாது.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18768359_1346246548793279_7379641838057912109_o.jp g?oh=0839c80ba320b6b0b95858ebaf0d4589&oe=59A609F2

Gopal.s
29th May 2017, 03:03 PM
May I request Mr.Siva to start the New Thread? part-19.

KCSHEKAR
30th May 2017, 12:17 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/RajapartRangaduraiPosterMdu2_zps6zx4fknp.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/RajapartRangaduraiPosterMdu2_zps6zx4fknp.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/RajapartRangaduraiPosterMadurai_zpsvso4c7oq.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/RajapartRangaduraiPosterMadurai_zpsvso4c7oq.jpg.ht ml)

Russellxor
30th May 2017, 12:28 PM
திரி 19 ஐ சிவா சார் தொடங்கி வைக்க வேண்டும். அவரின் ஆர்வமான பதிவுகள் திரியை மேலும் ரசிக்க வைக்கும்.
சிவாஜி என்றபெயரின் முக்கால் பாகத்தை தன்னில் வைத்திருப்பர்.கடல் கடந்தாலும் இனத்தை மறக்காத மண்ணின் மைந்தர்.அவருக்கு என் வாழ்த்துக்கள்!

RAGHAVENDRA
30th May 2017, 01:57 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சிவா மற்றும் வினோத்.

RAGHAVENDRA
30th May 2017, 01:58 PM
கோபால் மற்றும் செந்தில் இருவருடன் இணைந்து சிவாவை, நமது நடிகர் திலகம் திரியின் 19வது பாகத்தைத் துவக்கி வைக்க் அழைக்கிறேன்

sivaa
30th May 2017, 02:20 PM
Today for Nadigar Thilagam special,
டிவி தொலைக்காட்சிகளில இன்று ஒளிபரப்பாக இருக்கும் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்,
காலை 11 மணிக்கு சன் லைப்பில் ...
" மூன்று தெய்வங்கள் "
பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்
" கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி "
பிற்பகல் 1:30 க்கு புதுயுகம் டிவியில்
" நீதியின் நிழல் "
பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில்
" தவப்புதல்வன்"
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
" கலாட்டா கல்யாணம் "
இரவு 10 மணிக்கு ராஜ் டிவியில்
" சாதனை"
கண்டு மகிழ்வோம்!

sivaa
31st May 2017, 03:33 AM
நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் அருமை பெருமைகளை சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் படங்கள் வெளியான காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்களை படித்தால் தெளிவாக உணரலாம், எதார்த்த மற்றும் நடைமுறை வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து நெறி முறைகள் கொண்டதாக இருக்கும், உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின்
"முதல் தேதி"
நடிகர் திலகத்தின் 21 வது படமாக 1955 ம் வருடம் வெளியானது, படம் வெளியான போது நடிகர்திலகத்தின் வயது 27 மட்டுமே, ஆனால் அந்த படத்தின் நடிப்பை பார்க்க வேண்டுமே...!
அதை உளமார உணர வேண்டுமெனில் அந்த பத்திரிகை விமர்சனத்தை அப்படியே காணுவோம்.
' எங்கு நோக்கிலும் வேலை இல்லாத திண்டாட்டம், அதன் காரணமாக வறுமை
முடிவு தற்கொலை' இம்மாதிரி செய்திகளை தினசரி படிக்கும் காலமாக இருக்கிறது இன்று,
அப்படிப்பட்ட இக்காலத்திற்கு ஏற்ற படம்
"முதல் தேதி" என்று கூறினால் அது மிகையாகாது
தற்கொலை செய்து கொள்வது எத்தகைய மாபெரும் தவறு மனிதனுடைய கஷ்டம் அத்தோடு தீருவதற்கு பதில் அதிகரிக்கவே செய்கிறது, என்பதை " முதல் தேதி " அழகாகச் சித்தரிக்கிறது. அத்துடன் கூட பத்திரிகைகள் அனைத்தும் எழுதி வரும்
"இன்றைய கல்வி பயனற்றது" என்ற உண்மையை ஆழப் பதிய வைக்கிறது முதல் தேதி.
நடிப்பு என வரும்போது அதன் முதல் ஸ்தானத்தை சிவாஜி கணேசனுக்கா அல்லது அஞ்சலி தேவிக்கா யாருக்கு அளிப்பது என்பதும் பெரும் பிரச்சனைதான் அஞ்சலி தேவி தனியே தோன்றும் கட்டங்களை பார்க்கும் போது அவருக்கே அந்தப் புகழ் என்று சொல்லத் தோன்றுகி்றது,
ஆனால் அடுத்து சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்க்கும் போது அவருக்குத் தான் அந்தப் புகழ் என்றுத் தோன்றுகிறது,
சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் இதுவரை நடிக்காத புது மாதிரியான ஒரு பாத்திரத்தில் நடித்து இருக்கிறார், வயோதிகக் குடும்பத் தலைவனாக அவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட அப்படியே மாறி விட்டார் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும். தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட பின் தன் மனைவி மக்களை அருகில் வைத்து கொண்டு பேசும் கட்டத்தில் அவரது நடிப்பு உள்ளத்தை உருக்குகிறது, அதுவும் தனது தமையனிடம் "இவளைப் போல ஒரு தாய் கிடைக்க மாட்டாள்" என்று கூறும் கட்டத்தில் கண்ணீர் விடச் செய்கிறார் சுருங்கக் கூறினால் " சபாஷ் சிவாஜி" என்று தான் சொல்லத் தோன்றுகிறது..
எத்தனை அருமையான நடிப்பிற்கான விமர்சனம், பாருங்கள் அதனால் தான் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் " நடிகர் திலகம் " என உயர்ந்தார்..


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18766009_1352920894824797_8751095069725255288_n.jp g?oh=4a8ff084ad822ba112dd99c187d27d0a&oe=59A50E8F

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18739962_1352920934824793_5940593079214702010_n.jp g?oh=8b21123acc90a89e1c8186f923ac9906&oe=599C974E

sivaa
31st May 2017, 03:36 AM
ஜய் டிவியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிடி யின் சுவையான செய்தி,
அரை இறுதி சுற்றில் பங்கேற்ற மோனிக்கா " மன்னவன் வந்தானடி" பாடலை பாடி அசத்தினார்,
மோனிக்காவை பாராட்டிய டிடி பாடலைப் பற்றிய தனது தந்தையினுடனான பழைய நினைவுகளை கூறி எல்லோரையும் மகிழ்வித்தார்
தந்தையுடன் டிவி பார்க்கும் போதெல்லாம் "மன்னவன் வந்தானடி" பாடல் காட்சி வரும் போது என்னுடைய முதுகில் தட்டிக் கொண்டே இருப்பார்
" நடிகர் திலகத்தின் நடையழகைப் பார், நடையழகைப் பார்" எனப் பாடல் முடியும் ...வரை சொல்லிக் கொண்டே இருப்பார",
மோனிக்கா பாடும் போது நடிகர் திலகம் நடையழகு முன்னே தெரிகிறது..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18740259_1352196441563909_1863379934815571650_n.jp g?oh=c4adcee07cc08b72e1afb84a939cbcfb&oe=59AC47B7

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767578_1352196461563907_6954025893832266681_n.jp g?oh=5a0565f763917232015ad76c601e0efe&oe=59AF6C55

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767813_1352196501563903_7285530672367173082_n.jp g?oh=27a1a0a89abc65b6dcb6c2d11c372570&oe=59AB1BB8

sivaa
31st May 2017, 03:38 AM
நடிகர் திலகம் நடித்து ஒரே தினத்தில் இரெண்டு படங்கள் திரையிடப்பட்டு இரண்டும் நூறு நாட்களை தாண்டி ஓடின.
சொர்க்கம் – எங்கிருந்தோ வந்தாள்’ ; ‘ஊட்டி வரை உறவு – இரு மலர்கள்’ என வசூல் சாதனைப் படங்களும் அதில் அடங்கும்.
நடிகர் திலகம் நடித்து ஒரே தினத்தில் இரெண்டு படங்கள் திரையிடப்பட்டு இரண்டும் நூறு நாட்களை தாண்டி ஓடின. 1967 தீபாவளி அன்று ஸ்ரீதர் இயக்கத்தில் ஊட்டி வரை உறவு, ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் இருமலர்கள். ஊட்டி வரை உறவு நடிகர்திலகத்தின் இளமை, ஸ்டைல், நகைச்சுவை நடிப்பு ...என பிச்சு உதறி இருப்பார். அதற்க்கு நேர் மாறாக இருமலர்கள். காதலியா ?மனைவியா ? ஆரம்பம் வெகு வேகமாக செல்லும். மாதவி பொன் மயிலால் தொகை விரித்தாள் பாடல் ஓன்று இடைவேளை வரை போதும். ஆனால் அப்போது நடிகர்திலகத்திற்கு ஈடாக நடிக்க பத்மினி இருந்தார் இடைவேளைக்கு பிறகு சோகநடிப்பில் கே ஆர் விஜயா ஈடு கொடுத்தார். ஆனால் கருப்புவெள்ளை படமான அதுவும் ஊட்டி வரை உறவு படத்துடன் போட்டி போட்டு ஓடியது என்றால் நடிப்பு என்ற ஒத்தை வார்த்தை தானே. அதுவும் அதே நாளில் எம் ஜி ஆர் நடித்த விவசாயி படமும் வெளியாகி இருந்தது. அப்பவே நாங்க அப்படி ? யார்கிட்ட ? ( இருமலர்கள் படத்தில் ஒரு மகாராஜா ஒரு மகாராணி பாடலை ரோஜாரமணிக்காக பாடியவர் ஷோபா சந்திரசேகரன் )
1970 இல் எங்கிருந்தோ வந்தாள் படம் ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்திலும், சொர்க்கம் டி ஆர் ராமண்ணா இயக்கத்திலும் ஒரே நாளில் வெளிவந்து நூறு நாட்களை தாண்டி ஓடின. எங்கிருந்தோ வந்தாள் ஜெயலலிதா நடித்திருந்த படங்களில் ஒன்று. மற்ற படங்களில் ஒரே ஆட்டம் தானே. ஒரே பாடல் உன்னை அழைக்கும், நான் உன்னை அழைக்கவில்லை என இருதுருவ பாடலை எழுதியிருப்பார் கண்ணதாசன். கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும் பாடும் போது அழாதவன் கமல் சொன்ன மாதிரி மனுசன் கிடையாதுல்ல? சொர்க்கம் படத்தில் பொன் மக்கள் வந்தாள் பாடல் என்ன ஒரு வித்தியாச கெட்டப், என்ன ஒரு நவரச நடை, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்த பாடலை ஆலங்குடி சோமு எழுதியிருந்தார். பூ மாலையில் ஓர் மல்லிகை பாடலை இன்றுவரை இரவு தூங்கும் முன் கேட்டு ரசித்துவிட்டு தான் படுக்கைக்கு செல்வேன். 1980 முன்னால் வந்த படங்கள் எல்லாமே முத்துக்கள். யாரால் முடியும் அவர் சாதனையை முறியடிக்க !
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18813160_1404076419657732_5632607720388493013_n.jp g?oh=a9da0e02e8409fdd452e1417718e50a5&oe=59EA559D

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767915_1404076849657689_3561761627427615422_n.jp g?oh=a1ff9746aefc3884b8a55e32e756efa4&oe=59AF4EF3
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18765752_1404077162990991_1410736248385523756_n.jp g?oh=c8380c1bd903a8c3fa192ec5d346d90e&oe=599BDE57

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18739903_1404077312990976_5879208174373684017_n.jp g?oh=219f44098dbfcda167610278902df572&oe=59E9854D

sivaa
31st May 2017, 03:49 AM
மக்கள்தலைவரின் அன்பு கண்மணிகளே,
YOU TUBE ல் SMILE SETTAI என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த சேனல் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் இருவர் கண்ணைக் கட்டிக் கொள்ள ஒருவர் ஒரு படத்தை நமக்கு காட்டி அந்த படத்தைப் பற்றிய குறிப்புகளைச் சொல்வார். அந்தக் குறிப்புகளை வைத்து அது யார் என்பதைக் கண்ணைக் கட்டியுள்ள இருவரும் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு படத்தின் குறிப்பைச் சொல்ல...ும் போது இருவரும் வேறு வேறு நபர்களின் பெயர்களைச் சொன்னார்கள்.
நமது நடிகர்திலகத்தின் படத்தைக் காட்டி படத்தைப் பற்றி ஒரே ஒரு குறிப்பு தான் சொல்வார், அது என்னவென்றால் உண்மையான நடிகர்
இதைக் கேட்டதும் இருவரும் ஒன்று சொன்னால் போல் சிவாஜி என்று கூறுவார்கள்.
அன்பு இதயங்களே,
இன்றைய இளையதலைமுறையினரும் உண்மையான நடிகர் என்று நமது நடிகர்திலகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது, நாம் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம்



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18738759_1347623608655573_4333023334151882258_o.jp g?oh=7592b41d44121e2d103c40eb3609cd53&oe=59B6449F

sivaa
31st May 2017, 04:20 AM
அவசியம் படியுங்கள்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, ஊடகங்களும் சரி, மக்களும் சரி இப்போது தான் நமது தலைவர் சிவாஜி அவர்கள் தமிழக மக்களின் மீதும், தமிழ்நாட்டின் வ...ளர்ச்சி மீதும் அக்கறைக் கொண்டிருந்தார் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர்.
ஒரு தமிழனை, அரசியலில் உண்மையையும், நேர்மையையும் கொண்டு வர முயற்சி செய்தவருக்கு பொறுப்பை தராமல் கண்டவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்ததின் விளைவை இன்று தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை படியுங்கள்
நாம் எப்படிப்பட்டவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்தோம் என்று....
பகிரங்கமாக ஆண்டவர்களின் சரித்திரத்தை போட்டுடைத்து, மக்கள்தலைவரையும் பெருந்தலைவரையும் தோற்கடித்ததன் விளைவு தான் இது என மக்களை உணரச் செய்யும் வகையில் இதை எழுதி அனுப்பிய மதுரை மல்லிகை மன்னன் அவர்களுக்கும், அதை வெளியிட்ட தினமலருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றி.

http://i63.tinypic.com/r7m5i9.jpg

sivaa
31st May 2017, 04:37 AM
http://i68.tinypic.com/34sklua.jpg

HARISH2619
31st May 2017, 01:17 PM
நடிகர் திலகம் திரியின் 19 ஆவது பாகத்தை துவக்கிட திரு சிவா அவர்கள் மிகவும் பொருத்தமானவர் .18ஆவது பாகத்தை முன்னெடுத்து சென்றதில் இவரின் பங்கு அளப்பரியது .

Russellsmd
31st May 2017, 09:37 PM
திரியின் மதிப்பிற்குரிய முன்னோடிகள் மகிழ்வோடும், அன்போடும் விடுத்த கோரிக்கையே என்னுடைய கோரிக்கையுமாகும்.

திரு. ஹரீஷ் அவர்கள் குறிப்பிட்டது போல் அய்யா நடிகர் திலகத்தின் புகழ் தாங்கிய அற்புதப் பதிவுகளால் திரியின் பாகம் பதினெட்டை சிறப்பாக்கியவரும், திரி மிக சோர்வான நகர்விலிருக்கிற தருணங்களில் ஒற்றை ஆளாய்
வேகமாக்கியவருமான கனடா திரு. சிவா அவர்கள்
திரியின் பாகம் பத்தொன்பதை தனது சாதனைக்
கரங்களால் துவக்கித் தர அன்புடன் வேண்டுகிறேன்.

- "காதல் ராணி கட்டிக் கிடக்க" , "கங்கை
யமுனை ", " தேவன் வந்தான்டி"
பாடல்களின் அழகுப் படங்களை
கேட்டதும் அள்ளித் தந்தமைக்கு நன்றி
மறவாத...
.. ஆதவன் ரவி..

sivaa
1st June 2017, 08:17 AM
அலங்கார் தியேட்டரில்
ராஜபார்ட் ரங்கதுரை

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767615_292731257852307_7535250534527965628_n.jpg ?oh=2530232db4a52e9cc528947cb6422797&oe=59E6C537

sivaa
1st June 2017, 08:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18670939_292731277852305_1186586113282843592_n.jpg ?oh=a2ade95e896353cc16e20bb99132d853&oe=59E1E73D

sivaa
1st June 2017, 08:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18739748_292731207852312_97638542837964622_n.jpg?o h=a8ba916dd223ea0f819810ba9604a95d&oe=59B37DCF

sivaa
1st June 2017, 08:19 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18813382_292731174518982_2799009051214009001_n.jpg ?oh=bf354847458092ac0d43c9d9c4733fcf&oe=59E1AE3A

sivaa
1st June 2017, 08:20 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18699304_292731107852322_85335382797725361_o.jpg?o h=8202574a492d2c6cca75cc1da20eb088&oe=59AC3B06

Russellxor
1st June 2017, 11:28 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/aac6f5003924ab8d1039950052482b42.jpg

Russellxor
1st June 2017, 11:29 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/6f94b00cfee9f8482d9410718e199651.jpg

Russellxor
1st June 2017, 11:30 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/68c4984be391eea05afcf3f77cacb432.jpg

Russellxor
1st June 2017, 11:31 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/8748d05fd5f3f32753e4b45d3ff45df1.jpg

Russellxor
1st June 2017, 11:32 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/711c66e665a65b9ce5cbaa57ad293953.jpg

Russellxor
1st June 2017, 11:32 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/1be26bf2353801db7688ca979f9944b1.jpg

Russellxor
1st June 2017, 11:33 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/599784dc1cda8930fa9f76cc0b758739.jpg

Russellxor
1st June 2017, 11:34 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/87df40286fc231e0e8212f41eb6f8350.jpg

Russellxor
1st June 2017, 11:35 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/ec349affde1c166f6bf203fb71b947cf.jpg

Russellxor
1st June 2017, 11:36 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/e27f0f6bc1a34eef956bb4719e78f497.jpg

Russellxor
1st June 2017, 11:37 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/ea8e67e6ad2d7b2a6e8e0179e9d2b973.jpg

Russellxor
1st June 2017, 11:37 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/3a9d6963676efff8bd500410347231b3.jpg

Russellxor
1st June 2017, 11:38 AM
https://uploads.tapatalk-cdn.com/20170601/e94c41531f498770ba9d0d6f0ee765c9.jpg

Russellxor
1st June 2017, 08:25 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/67b70b53375b584e18f726ac669f33d4.jpg

Russellxor
1st June 2017, 08:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/db5682e18836b4223ed6118415939bcb.jpg

Russellxor
1st June 2017, 08:26 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/3d34f1ff55199f15004781f86a86d2d3.jpg

Russellxor
1st June 2017, 08:27 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/adf78c7d840ac93c9a790533837a44db.jpg

Russellxor
1st June 2017, 08:28 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/ea5a1025919af26a49a0f6af96c209fb.jpg

Russellxor
1st June 2017, 08:29 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/0f009707ca3e8b9ce6fd6fbf62844bc0.jpg

Russellxor
1st June 2017, 08:29 PM
https://uploads.tapatalk-cdn.com/20170601/b8a11e061324c263d159bf1658136f00.jpg

sivaa
2nd June 2017, 12:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18765725_1350664071684860_1721754866066729781_n.jp g?oh=28163dfed456cab7250d01528ef309a5&oe=599F0FC0

sivaa
2nd June 2017, 01:03 AM
( புனித ரமலான் மாதத்தில் , வரும் பொருத்தமான பதிவு என நினைக்கிறேன்). 'இவரைப் போன்ற ஒரு நண்பரை நான் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும், இவரைப் போன்ற மனிதர்களே உலகில் அனைவரும் இருந்து விட்டால் உலகம் எவ்வளவு அமைதியாக இருக்கும், இவரைப் போன்ற மகனைப் பெற எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்' ....என்றெல்லாம் எண்ண வைக்கும் இளைஞன். அமைதியும் சாந்தமும் திகழும் முகம். அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம்..பகைவனுக்கும் அருளும் பண்பு......அதுதான் ரஹிம். A.பீம்சிங் இயக்கத்தில், ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 1961 இல் வெளிவந்த 3.15 மணி நேரம் ஓடக்கூடிய நீளமான படம் 'பாவமன்னிப்பு'. படம் தொடங்கிக் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்துத்தான் திலகம் அறிமுகமே ஆவார்.'எல்லோரும் கொண்டாடுவோம்..அல்லாவின் பெயரைச் சொல்லி..நல்லோர்கள் வாழ்வை எண்ணி...' என்ற அருமையான , கருத்தாளம் மிக்க பாடலுடன் அவர் என்ட்ரி ஆரம்பிக்கும். படம் முழுமையும் அதே சாந்தமான முகம், Subtle acting தான். கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லோருமே சாந்த சொரூபிகள்தான், ஒரே ஒருவரைத் தவிர. அவரைப்பற்றி நிறையச் சொல்ல வேண்டும். அதைத்தனியே அப்புறம் எடுத்துக் கொள்ளலாம். நிறையப் படங்களில், திடுக்கிடும் ரகசியங்கள், திருப்பங்கள், நாயகன், நாயகி பற்றிய ஏதேனும் செய்திகள் போன்றவை படம் முடியப் போகும் கிளைமாக்ஸில் சொல்லுவார்கள்.ஆனால், இப்படத்தில் எல்லா விசயத்தையுமே ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், பார்வையாளர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை. ஆனால் படத்தின் வெற்றியே, கதையை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டும் 3.15 மணி நேரம் அனைவரையும் கட்டிப் போடும் திரைக்கதைதான். ரகசியங்கள் எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெரியும், ஆனால் படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாது.ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து , இறுதியில் அனைத்தும் தெளிவாக முடியும். ஆளவந்தார் என்கின்ற பணக்கார வைர வியாபாரிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவரின் ஒரு குழந்தை சிறு வயதிலேயே காணாமல் போகிறது. அவரால் ஏமாற்றப்பட்ட விசுவாச வேலைக்கார TS பாலையாவால் , பழி தீர்க்க கடத்திச் செல்லப்பட்ட குழந்தை. அதுதான் சிவாஜி. மற்றவர் ஜெமினி. சிவாஜி குப்பத்திலும், ஜெமினி பணக்காரப் பிள்ளையாகவும் பின்னர் போலிஸ் அதிகாரியாகவும். பொன்னகரம் என்ற குப்பத்தின் ஏழை ஜனங்களுக்குப் போக்கிடமே பாரதி வைத்தியசாலை என்ற பெயரில் வைத்தியம் பார்க்கும் இஸ்மாயில் பாயாக வரும் நாகையாவும் , சுப்பு சாஸ்திரியாக வரும் கொத்தமங்கலம் சுப்புவும்தான் ( தில்லானா மோகனாம்பாள் காவியத்தைத்தந்தவர்). அந்தக்குப்பம் இருக்கும் இடம் தனக்குச் சொந்தமானது என்று சொல்லி, அதைச் சர்க்கரை ஆலை கட்ட விற்க முயலும் ஆளவந்தாரின் முயற்சிக்குத் தடையாக இருக்கும் ரஹிமின் மேல் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு வெறுப்பு. ஆளவந்தாரால் ,நயவஞ்சமாகப் போலிஸில் மாட்டப்பட்டுச் சிறை செல்லும் TS பாலையாவின் ஒரு பெண் ,சாவித்திரி, தங்கமாக, வேலைக்கார ஆயாவின் பெண்ணாக குப்பத்திலும், இன்னொரு பெண், தேவிகா, சமூக சேவகர் ஜேம்ஸ் என்னும் கிருத்துவராக வரும் SV சுப்பையா வீட்டில் மேரியாகவும் வளர்கிறார்கள். பணக்கார ஜெமினி, ஏழைத் தங்கத்தைக் காதலிக்கிறார், அப்புறம் பிரிந்து போலிஸ் டிரெய்னிங் போய்விடுகிறார். தேவிகா ரஹிமைக் காதலிப்பார். ஆளவந்தாரின் மனைவி M.V.ராஜம்மாவுக்கு, தேவிகாவைத் தன் மகன் ஜெமினிக்குத் திருமணம் செய்து வைக்க ஆசை. அது நிறைவேறியதா, ஆளவந்தாரின் பணத்தாசைக்கு எப்படியெல்லாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே மீதிக்கதை. இப்படம் மத நல்லினக்கத்துக்கு அருமையான ஒரு உதாரணம்.படத்தில் நான்கு மதங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. கிருத்தவம், இஸ்லாம், இந்து மற்றும் புத்தமதங்கள்.( படத்தயாரிப்பு பேனரே புத்தா பிலிம்ஸ்தான்). ஜெமினி சாவித்திரிக்குக் காதல் பரிசாக புத்தர் சிலை ஒன்றைக் கொடுத்து புத்தரின் அன்பைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுவார், அதைத்தவிர புத்தமதம் பற்றி இதில் வேறெதுவும் இல்லை. ஆரம்பத்தில் இஸ்மாயில் பாய் ( நாகையா) புனிதக் குர்ரான் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் உயர்வானவை. படம் முழுவதும் எம்.வி.ராஜம்மா பூஜைத்தட்டோடு கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருப்பார். அவ்வப்போது ஜேம்ஸ் கிருத்துவத்தின் கருணையைச் சொல்லுவார்.போப்பாண்டவரைச் சந்தித்து விட்டு வந்து அவரைப்பற்றிச் சொல்லும் கருத்துக்கள் அருமை. இவ்வளவு கதை மாந்தர் இருந்தும் மூன்று மதங்கள் படம் முழுக்க விரவி இருந்தும் , ஒரு இடத்தில் கூட , எந்த ஒரு மதம் பற்றிய சம்பிரதாயங்களையும் , வழிபாடுகள் பற்றியும் சொல்லாது இயல்பாக கதை நகர்த்தி இருப்பது தனிச்சிறப்பு. மேலும் எந்த விதமான மத மாச்சரியக் கருத்துக்களும் இல்லாதது அருமை. பணத்தாசை கொண்ட ஆளவந்தாருக்குக் கூட மதம் ஒரு பிரச்சினை இல்லை, பணம் மட்டுமே பிரதானம். இப்போது ஆரம்பத்தில் சொன்ன அவரைப்பற்றி ஒரு சிறப்புப் பார்வை. ஆளவந்தாராக வரும் M.R. ராதா. அப்பப்பா, என்ன ஒரு performance? உடல் முழுக்க சந்தனம், வாய் திறந்தால் என் அப்பன் ஞானபண்டிதன் என்ற பேச்சு , தெய்வத்துக்குப் பயந்ததாகத் தோற்றம்...ஆனால் அவ்வளவும் வெளிவேசம்... மனசு முழுக்க விசம். பணம் பணம் பணம் இது மட்டுமே அவர் நோக்கம். படம் முழவதும் பிரேம் பை பிரேம் அவர்தான் ஆக்கிரமித்திருப்பார். படத்தின் முதுகெலும்பே அவர்தான். ரத்தக்கண்ணீர் போல ராதாவின் திரைவாழ்வில் இது மிகவும் குறிப்பிடும்படியான படம். என்ன டயலாக் டெலிவரி, டைமிங், மாடுலேசன்.... உதாரணத்துக்கு ஒன்று "ஜேம்ஸூ,ஞானபண்டிதன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை ஆனா நான் போறேன், ஞாயித்துக்கிழமை ஆனா மாதா கோயிலுக்கு நீ போற. வாரம் பூரா செஞ்ச பாவத்தை ஒரு நாளாவது சாமிகிட்டப் போயி சரிப்படுத்தனும் இல்ல......". சிவாஜியின் முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைக்கும் அளவுக்குக் கொடூர சிந்தனை..... அருமையான பாத்திரம் அவருக்கு...அப்படி வீடு கட்டி விளையாடி இருப்பார்.. இப்படியும் ஒரு மனம் முதிர்ந்த, நிலை பிரளாத ஒரு இளைஞன் இருக்க முடியும் என்று நிரூபித்தவன் ரஹிம். வயதுக்கு மீறிய முதிர்ச்சியான சொல்லும் செயலும் நடத்தையும். ஊர் ஊராகச் சென்று ஏழை எளிய மக்களுக்குச் சேவை...சேவை ஒன்றைத்தவிர வேறு எதுவுமே அறியாத உத்தமன். " எதுவும் யாருக்கும் சொந்தமில்லை...இந்த மண்ணை எல்லாம் வளைத்துக் கொள்ளும் மன்னாதி மன்னனாக இருந்தாலும், முடிவில் இம்மண்ணில்தான் போய்ப்புதைய வேண்டும்" என்பது போன்று வயதுக்கு மீறிய பக்குவ ம்..... தேவிகா காதலியாக இருந்தாலும் அவரிடம் இவர் காட்டும் கண்ணியம்... அமைதியாகச் செல்லும் ஆற்றோட்டமான நடிப்பு. முகத்தில் ஆசிட் வீசப்பட்டதும் வலியும் எரிச்சலும் தாங்க முடியாமல் தரையில் விழுந்து புரண்டு கதறும் போது, கல்லான மனங்கள் கூடக் கரைந்து போகும். இப்படிப் பட்ட உத்தமனுக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்று நம் மனம் பதறித் துடிக்கும் ராதாவின் ஆர்ப்பாட்டமான நடிப்பும் திலகத்தின் அமைதியான நடிப்பும் நேர் எதிர் துருவங்கள்.. இங்க ஒருவரைப்பற்றி மிக முக்கியமாகச் சொல்லியே ஆக வேண்டும். கண்ணதாசன். எவ்வளவு அற்புதமான பாடல்களைத்தந்திருக்கிறார்? பாலிருக்கும், பழமிருக்கும்.... வந்த நாள் முதல்........ காலங்களில் அவள் வசந்தம்.....சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...... எல்லோரும் கொண்டாடுவோம்........அத்தான் என்னத்தான்......காலங்கள அழிந்தாலும் நிலைத்திருக்கும் காவியப்பாடல்கள். தேன் சொட்டும் இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ரஹிம் என் மனங்கவர்ந்த ஆதர்ச புருசன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18740476_1936440519973254_5057535402599469317_n.jp g?oh=4e0f122aa4c5003d2ce93544132830ac&oe=59A35298

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6519-1.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/PM100SJADSfw_zpsde8be7f1.jpg

sivaa
2nd June 2017, 01:21 AM
எல்லா அவதாரத்திற்கும் ஒரு இனையை யூகிக்க முடிகிறது,
உதாரணத்திற்கு பராசக்தி குணசேகரன்- மனோகரா மனோகரன், அன்னையின் ஆணை சாம்ராட் அசோகன்- ராஜா ராணி சேரன் செங்குட்டுவன், ஆலயமணி தியாகராஜன் - அவன் தான் மனிதன் ராம் குமார், பாகப்பிரிவினை கண்ணையா- பழனி பழனி, இன்னமும் பல
ஆனால் தங்கப் பதக்கம் எஸ்.பி.சௌத்ரிக்கு இனையாக தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்
இன்று 01/06/2017 தங்கப் பதக்கம் திரைக்கு வந்த நாள்,...

தங்கப் பதக்கம் படத்தின் விளம்பரம் தான் தினத் தந்தி உட்பட செய்தி பேப்பர்களில் முழுப் பக்க விளம்பரத்தை தாங்கி வந்தது,
தங்கப் பதக்கம் படம் தான் முதன் முதலாக தமிழ்ப் பட உலகில் இருந்து பிற மாநிலங்களிலும் ஒரே நாளில் திரையிடப்பட்டது..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18839374_1354824411301112_6749191889184207880_n.jp g?oh=115c3018873b01787e34e687f34f38a7&oe=59A6A688

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18814024_1354824381301115_2231922292628103127_n.jp g?oh=107e52af1209cd24f5de4f0f047cf768&oe=59B05ACC

sivaa
2nd June 2017, 01:38 AM
Nadigar Thilagam special
இன்று (02/03/17) தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்
" அந்த மான் காதலி"
பிற்பகல் 1:30 க்கு கலைஞர் டிவியில்...
" பார்த்தால் பசி தீரும்"
இரவு 7 மணிக்கு சன் லைப் டிவியில்
" அன்பே ஆருயிரே "
இரவு 10 மணிக்கு ராஜ் டிவியில்
" நீதிபதி "

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/PPTAd1-1_zps49073d1c.jpg
http://uploads.tapatalk-cdn.com/20161020/13e29b1fcee9f60bd0ad8c8c93b7704d.jpg

http://oi64.tinypic.com/24l2cm0.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4018a.jpg


http://i57.tinypic.com/icjkm0.jpg



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18813444_1355111421272411_3955274720027622269_n.jp g?oh=096bf6cecc2f46c71f296e8855a097f1&oe=59AABC0D

Murali Srinivas
2nd June 2017, 05:51 PM
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு,

நமது மய்யம் இணையதளத்தில் நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் திரி எண் 19-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.(உங்களுக்கு இது பற்றிய ஒரு தனி மடல் 3 நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்தேன்).

இன்றைய தினம் திரி எண் 18, 400 பக்கங்களை நிறைவு செய்திருக்கிறது. எனவே திரி என் 19-ஐ துவக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

அன்புடன்

KCSHEKAR
3rd June 2017, 12:09 PM
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு,
நமது மய்யம் இணையதளத்தில் நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் திரி எண் 19-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.(உங்களுக்கு இது பற்றிய ஒரு தனி மடல் 3 நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்தேன்).
இன்றைய தினம் திரி எண் 18, 400 பக்கங்களை நிறைவு செய்திருக்கிறது. எனவே திரி என் 19-ஐ துவக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்

திரி எண் -18 வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.

திரி எண் -19 ஐத் துவக்கவிருக்கும் நண்பர் சிவா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

Murali Srinivas
3rd June 2017, 12:56 PM
Dear All,

Please continue your discussions here.

http://anonymouse.org/cgi-bin/anon-w...=1#post1321107

Regards