PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part-18



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
1st May 2016, 12:09 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-0/p526x296/13100943_1106796539371017_3007757351066904653_n.jp g?oh=5cd5f2a28c3209769b0a925390d8bfa7&oe=57A08F2B

RAGHAVENDRA
1st May 2016, 06:31 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/13139004_261327914213035_8774394831680856155_n.jpg ?oh=1f29348cde95665a6dc9d41e71ce3bcd&oe=579C08A7

From Divya Films' FB page.

eehaiupehazij
1st May 2016, 07:46 AM
May 1 உழைப்போர் மேன்மை தினம் இன்று! உழைப்பால் உயர்ந்தவர்தம் நினைவுகளைப் போற்றுவோம் !

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?
உழைப்பின் பலன் மட்டுமே இனிக்கும் !

உழைப்பும் நேரம் தவறாமை மற்றும் நேர்மை என்னும் நடிகர்திலக உதாரண குணங்களைக் கடைப்பிடிக்கும் போதுதான் மேன்மை பெறும் !

https://www.youtube.com/watch?v=YtejNDSHCKk

https://www.youtube.com/watch?v=geYyN5_QYKg

https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo

Russellsmd
1st May 2016, 08:26 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160501074259389_20160501080516129_201605010809 49947_zpshesvqayz.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160501074259389_20160501080516129_201605010809 49947_zpshesvqayz.jpg.html)

vasudevan31355
1st May 2016, 09:17 AM
புனித வாழ்க்கை வாழ்ந்த பொன்னான தம்பதியரே! உங்கள் திருமண நாளில் நீங்கள் இல்லாவிடினும் நீங்கள் வாழ்ந்த உதாரண வாழ்க்கை உலகம் அறிந்ததே. இந்த நன்னாளில் உங்கள் திருவடிகளை மனதில் நினைத்து வணங்கி ஆசி பெறுகிறோம். உங்கள் இல்லறமே நல்லறம். அருள் புரிக...ஆசி தருக.

http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/article_node_view/public/templeelephant_t3%20(1)_0.jpg

vasudevan31355
1st May 2016, 09:18 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ln_zps794428d1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ln_zps794428d1.jpg.html)

vasudevan31355
1st May 2016, 09:23 AM
Thanks to palakkadwalks.blogspot.in.

'King Of Acting', Shivaji Ganesan Greeted By 'Emperor Of Music', Chembai Vaidyanatha Bhagavathar. Photo Took On The Actor's Residence In Chennai.

https://2.bp.blogspot.com/-uOjNs72LBf8/U6A_f3nHEmI/AAAAAAAADP8/NOoa-pLlHHc/s1600/GreatShivajiGanesanGreetedByLegendaryChembai.jpg

Gopal.s
1st May 2016, 10:07 AM
இன்று நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

வள்ளுவருக்கு வாசுகி போல நமது கடவுளுக்கு பத்தினியின் வருகை நாள்.

உழைப்பவர் உயர வேண்டும் என்ற நோக்கில் ,உழைப்பவரின் உரிமையை இறுதி செய்த உழைப்பவர் தினம் மே திருநாள்.

உழைப்பாளிகளுக்கே ,தன திறமை சார் அயலா உழைப்பால் பெருமை சேர்த்த நமது கடவுள் நடிகர்திலகத்தின் மூன்று படங்களை இன்று
பிரசாதமாய் படைப்பது எனது வருடாந்தர வைதீகம்.

ஒன்று தற்செயலாய் சங்க நடிவடிக்கையில் தள்ள படும் ஆலை தொழிலாளி, ஒன்று நில சுவாந்தார்களுடன் முரண்படும் விவசாய தொழிலாளி,மற்றது உயரிய நோக்கம் கொண்ட நகர ரிக்ஷா தொழிலாளி.

மூன்றும் மூன்று வேறுபட்ட காலங்களின் வெவ்வேறு நடிப்பு முறைகள்.

படைப்பது என் கடமை,பெருமை,உரிமை.

Gopal.s
1st May 2016, 10:13 AM
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.

இரும்புத்திரை (iron curtain )- 1960

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.

நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.

அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.

தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.

இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.

நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?

இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).

ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.

மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

Gopal.s
1st May 2016, 10:16 AM
((தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)

சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

Gopal.s
1st May 2016, 10:18 AM
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

பாபு- 1971.

சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.

vasudevan31355
1st May 2016, 10:47 AM
https://pbs.twimg.com/media/BR9Fs5lCMAEyG1G.jpg

RAGHAVENDRA
1st May 2016, 04:28 PM
டாக்டர் சிவா .. நடிகர் திலகத்தின் உணர்வுப் பிரதிபலிப்புகள்


https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13043596_1107181172665887_5363511111993313405_n.jp g?oh=7c24bfbe1394b6692b9a538b826910ce&oe=57A6B858

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/13091898_1107181175999220_1013540127854993484_n.jp g?oh=2fb2fb6e63c70f3aeca26838069243c8&oe=57ACEADC

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/13095787_1107181179332553_8461743546414111820_n.jp g?oh=8abfc0585a59f9fbdc374d1d72d207e5&oe=579C82E7

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13096207_1107181249332546_3984383543240539200_n.jp g?oh=f855bf64d78f4f6c706fe82f4658952e&oe=57ACBE73

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13102737_1107181275999210_5226320562032033124_n.jp g?oh=0a08a2d07721b236e794f4beb77a5832&oe=579FE93B

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xlt1/v/t1.0-9/13094328_1107181279332543_6572528971395199831_n.jp g?oh=863f988b7935b864c16beef50f4eac82&oe=57A6BF65

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13133176_1107181319332539_1594887081893123849_n.jp g?oh=cd83e0b895fb343e73a7c386acf202c1&oe=57A84389

RAGHAVENDRA
1st May 2016, 04:29 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/13087293_1107181369332534_2571717294956496962_n.jp g?oh=eb966acb87ba3da73345684fd1c7a51e&oe=57B27295

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/13087461_1107181385999199_7865268117209504629_n.jp g?oh=f14da8bc1e202e3cc3ae0116be904a13&oe=57BD9725

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13133120_1107181422665862_5698429880170833896_n.jp g?oh=62ba28f3b296e8ffc8e294099fd548f5&oe=57AF486E

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/13094196_1107181449332526_5188883552498510443_n.jp g?oh=b43db3d367da17d55c06dee575c49bf0&oe=57B5D0C5

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/13092031_1107181489332522_2543495740235892487_n.jp g?oh=b1379540fc626cc37b8ff7413284c86b&oe=57E6CD91

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/13094395_1107181509332520_4737283849491636669_n.jp g?oh=2ccdc5912399724a79b1b03e571a55a2&oe=579EF9A2

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13006529_1107181545999183_6902206613552084817_n.jp g?oh=d1d699ba848baf42a401ea90c0e6028b&oe=57A26A81

vasudevan31355
1st May 2016, 08:38 PM
ராகவேந்திரன் சார்,

டாக்டர் சிவா நிழற்படங்கள் படுநேர்த்தி. அனுபவித்து இமேஜ் எடுத்துள்ளீர்கள். பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன். இந்தப் படத்தில்தான் தலைவர் என்ன ஒரு அழகு! நம்மில் சிலருக்கு இப்படத்தில் தலைவரின் ஹேர்ஸ்டைல் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தங்கள் சிரத்தையான உழைப்புக்கு என் நன்றிகள்.

vasudevan31355
1st May 2016, 08:43 PM
'கைகொடுத்த தெய்வம்' 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா'விற்கு கை கொடுத்துப் பாராட்டிய ராகவேந்திரன் சார், முரளி சார், ஆதிராம் சார், கோபால் சார் மற்றும் 'லைக்'குகள் வழங்கிய சிவா சார், கோபு சார், பரணி சார் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

sivaa
2nd May 2016, 09:09 AM
http://i67.tinypic.com/sq79eh.jpg




(முகநூல்களில் இருந்து)

sivaa
2nd May 2016, 09:10 AM
http://i64.tinypic.com/2yoxq21.jpg




(முகநூல்களில் இருந்து)

sivaa
2nd May 2016, 09:11 AM
http://i67.tinypic.com/2yvtkwg.jpg



(முகநூல்களில் இருந்து)

sivaa
2nd May 2016, 09:14 AM
http://oi66.tinypic.com/zl6es3.jpg



(முகநூல்களில் இருந்து)

sivaa
2nd May 2016, 09:18 AM
http://i68.tinypic.com/f9fa79.jpg




(முகநூல்களில் இருந்து)

vasudevan31355
2nd May 2016, 06:09 PM
சிவா சார்,

முக நூலிலிருந்து இருந்து தலைவரின் அற்புதமான பல்வேறு படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

sivaa
3rd May 2016, 02:25 AM
வரும் 6.5.16 வெள்ளி முதல்
மதுரையை கலக்க வருகை தரும்
மக்கள்தலைவரின் பச்சை விளக்கு கொண்டாட்டம் ஆரம்பம்.
பச்சை விளக்கு படத்திற்கு
மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு தியேட்டரில் வைக்கப்பட்டது.

http://i64.tinypic.com/1z6s7zp.jpg


(முகநூல்களில் இருந்து)

sivaa
3rd May 2016, 02:27 AM
சிவகாமியின் செல்வன்
35 வது நாள் .

http://i67.tinypic.com/a9whlk.jpg


(முகநூல்களில் இருந்து)

sivaa
3rd May 2016, 02:39 AM
இப்படி ஒரு போஸ் தர உலகின் எந்த மூலையில் உள்ள நடிகனாலும் முடியாது..

http://i67.tinypic.com/21p04g7.jpg




(முகநூல்களில் இருந்து

sivaa
3rd May 2016, 02:48 AM
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...


Visali Sriram (https://www.facebook.com/visali.sriram)·Saturday, 30 April 2016 (https://www.facebook.com/notes/visali-sriram/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D% E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D/1187013774656224)




நடிகர் திலகம் திருமணநாள் பதிவு.....
என்றும் நாம் அனைவருமே மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு நிகழ்வு....திருமணம்...இரு மனம் கொண்டு இணந்து ஒரு மனமாகி வாழ்ந்து வளம் பெற வேண்டிய இனிய நாள்.இல்லறமே நல்லறம்...தாம்பத்தியம் ஒரு சங்கீதம்....எல்லாம் தெரிந்தது தானே?....இல்லை என்கிறேன் நான்...
ஒரு பருவத்தில் துணையை நாடி சேர்வதோ,மேளமும் தாலியும்,அட்சதையும்,விருந்தும்,முதலிரவும் அதைத் தொடரும் உடலுறவு மாத்திரமே திருமணமா????கேட்டுக் கொள்ளுங்கள் உங்களையே!!!
இல்லை பெற்றவர் கடமை முடிந்தது பிள்ளைகளின் கல்யாணத்தோடு என்பதா???இப்படியெல்லாம் நாம் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே அன்று முதல் இன்று வரை 100க்கு 80 திருமணம் ஒரு அட்ஜஸென்ட்மென்டிலும்(நம் காலம்)மீதி 20 (இக்காலம்)மணமுறிவிலும்...நீதிமன்ற வாசலிலும் நின்று தவிக்கிறது...மொத்ததில் ஒரு ஊசலாடல்.
சரி.....அப்படியென்றால் ஒரு வெற்றியான தாம்பத்தியத்திற்கு சூத்திரம்தான் என்ன????
கவியரசர் சொல்கிறார் அதைப் பகிர்கிறேன்.இந்தப் பாடல் நான் முதன் முதலில் கேட்ட போது எனக்கு வயது 8...அப்போது எனக்குப் புரிந்தது,பிடித்தது பாடலின் இசை......ம்ம் ம்ம் ம்ம்...திரையில் தோன்றிய ஆணும் பெண்ணும் என்னைச் சுண்டி இழுத்த அழகு...அப்போது வரிகளின் வலிமை புரியவில்லை.
பருவம் வந்தது....வரிகள் புரிந்தும் புரியாமலும்....ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்வு தோன்றியது.திருமணம் ஆனது...அப்போது இப்படியெல்லாம் பாடணும் என்று தோன்றியது.....யதார்த்ததிற்கு அதில் இடம் இல்லை.சரி.....கட்டிலுக்குப் பின் தொட்டில்...பிள்ளைகள்...அவர்கள் கடமை...எப்படி எப்படியோ வாழ்க்கை சக்கரம் சுழன்றாலும் அடி மனதில் பாடல் மாத்திரம் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது...இதில் நாம் அனைவருமே ஏதோ ஒரு முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறி இருக்கிறோம் என்று மட்டும் தெரிந்தது....இப்போது பாடல் வரிகள் முக்கியத்துவம் பெற்றது....கண்ணதாசன் என்கிற அந்த மாபெரும் ஞானி எனக்குள் ஒரு கருத்தை ஆழமாக விதைத்தது புரிந்தது...
தாம்பத்தியம் என்பது என்ன???அது கட்டிலோ...தொட்டிலோ,தொடுதலோ இல்லை......அது ஒரு புரிதல்...உடலாலும் மனதாலும் நம்மை கணவனுக்கோ..மனைவிக்கோ ஆத்மார்த்தமாக ஒப்புக் கொடுப்பது....வேறு மூன்றாம் மனிதர் நுழைய ஊசிமுனை இடம் கூட கொடுக்காமல்....மாமியார் பிரச்சினை...நடத்தை சரியில்லை...சுதந்திரம் இல்லை...ஆணாதிக்கம் இதெல்லாம் நமக்கு நாமே கூறிக் கொள்ளும் சப்பைக் கட்டு...அங்கு அறிவுக்கோ,திறமைக்கோ,படிப்பிற்கோ,பணத்திற்கோ,அழகுக்க ோ,சுதந்திரத்திற்கோ...ஆணாதிக்கத்துக்கோ எதற்கும் இடமில்லை.....அங்கு இருக்க வேண்டியது பரஸ்பர அன்பு...நம்பிக்கை...பொறுமை....என்னவள்..என்னவன ் என்கிற சுயம்....
இங்கு ஒரு இளம் ஜோடி...காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று இணைந்த இல்லறம்....அவர்களின் தேன் நிலவுப் பாடல்...மனம் விட்டுப் பேசிக் கொள்வது போல ஒரு பாடல்.
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்...உறவாட வேண்டும்....அவள் ஆசை(திருமணமான புதிதில் மோகம் முப்பது நாள் ரகம் அல்ல இது)என்றும் எப்பொழுதும் இது தம்பதிகளுக்குள் இருக்க வேண்டிய ஒரு நெருக்கம்.
அவனின் ஆசை "நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்.நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்...ம்ம் ம்ம் ம்ம்.அப்படியென்றால் அவன் வேலை நிமித்தமாக உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் இவளையும் கூட்டிக் கொண்டு போக வேண்டுமா?????இல்லை இல்லை...இது.."பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா..உந்தன் பச்சை நிறம் தோணுதடா நந்தலாலா"அந்த ரகம்...
உடல் எங்கிருந்தாலும் நினைவு மட்டும் அவளோடு.....அவளுக்கும் காணும் பொருள் எல்லாம் அவனாகவே இருக்க வேண்டும்...
உயிர் வாழ உணவு வேண்டும்...அந்த உணவு கூட அவனுக்காகவே உண்ண வேண்டும்...அவள் நன்றாக இருக்கும் வரை தானே அவனுக்கு ஆனந்தம்..."பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்..உனக்காக வேண்டும்..ம்ம்
பாவை(நான்)உன் முகம் பார்த்து நீ உண்ணும் அழகையும் நிறைவையும் பார்த்து பசியாற வேண்டும்..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்...எனக்குள்ளே நீ நுழைந்து கொண்டாலே நான் தாய்மையின் பரிபூரணம் எய்துகிறேன்...என் நினைவில் கூட நான் ஒரு தாய்க்கு சமமாக உன்னைப் பேணுவேன்..அப்பொது நீ"மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்..நீயாக வேண்டும்....
இனிமேல் வருவது தான் சூத்திரம்...சொல்லென்றும் மொழி என்றும் பொருளென்றும் இல்லை..பொருளென்றும் இல்லை...சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...விலை ஏதும் இல்லை....."முடிந்த வரை மௌனம் காத்துக் கொள் பெண்ணே...தர்க்கமும்,வீண் விதண்டாவாதமும் வேண்டாம்....இருவரில் ஒருவர் சூடாகும் போது அடுத்தவர்...அதுவும் பெண் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலம்...ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் AVOID ARGUEMENTS.
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே....உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை...இப்படி நாம் ஒருவருள் ஒருவர் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறி இரண்டும் ஒன்றாய்க் கலந்திடாதோ???
வேறேதும் இல்லை.ஒவ்வொரு வரியிலும் முடிவில் ஒரே சொற்றொடரையும் ஏன் இரண்டு முறை சொல்கிறார் கவியரசர்...அவருக்கு கற்பனை வளம் இல்லையா????அதன் வலிமையை அழுத்தி உரைக்கவே இரண்டு முறை போலும்.வேறேதும் இல்லை என்று சரோஜா தேவி பாட பிள்ளைச் சிரிப்போடு நடிகர் திலகம் ம்ம் ம்ம் சொல்லும் அழகு இருக்கிறதே..ஆஹா...
பாடல் முழுவதும் சரோஜாதேவி,நடிகர்திலகத்தின் அன்யோன்யம் திரைப்பட ஜோடி என்று ஒரு நொடி கூடத் தோன்றாது என்றால்...பாடி இருக்கும் டி.எம்.எஸ்,சுசீலாம்மாவின் பரிபூரண பங்களிப்பு அர்ப்பணிப்பு என்று அடித்துச் சொல்லலாம்.
இந்தப் பாடலைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி.....நடிகர் நாகேஷ் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்....அழுது விடுவார் பாடலைக் கேட்கும் போதே....
இப்படி ஒரு காலத்தை வென்ற பாடலை சிவரஞ்சனி ராக ரசத்தைப் பிழிந்து வடித்துத் தந்திருக்கும் மெல்லிசை மன்னர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...டி.எம்.எஸ் சுசீலாம்மா டூயட் பாடலில் என்றும் இதற்கு முதலிடம்....


பாடல் உங்களுடன்..https://www.youtube.com/watch?v=G6r... (https://www.youtube.com/watch?v=G6rQC97gkxQ)


(முகநூல்களில் இருந்து

JamesFague
3rd May 2016, 11:00 AM
Mr Neyveliar,


Fantastic analysis of Ayirathil Oruthiyamma. Awaiting for your stunt series and Dress seris of Thalaivar.

Russellxss
3rd May 2016, 07:59 PM
மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.

மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 6.5.2016 வெள்ளி முதல் வெளியாகும் மக்கள்தலைவரின் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் தியேட்டரில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்.

http://www.sivajiganesan.in/Images/030516_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
3rd May 2016, 08:01 PM
மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.

நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதையால் உலகெங்கும் பரப்பும் கவித்திலகம் திரு.ஆதவன் ரவி அவர்களின் சார்பில் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைக்கபடும் ப்ளக்ஸ் பேனர்

http://www.sivajiganesan.in/Images/030516_2.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
4th May 2016, 07:35 AM
http://i64.tinypic.com/21ki5x4.jpg

RAGHAVENDRA
4th May 2016, 08:50 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/MAY2016PROGINVITEAhub_zps50jlj0c0.jpg

RAGHAVENDRA
4th May 2016, 11:36 PM
https://scontent.xx.fbcdn.net/v/t1.0-9/13124669_1109300255787312_1999149329839444083_n.jp g?oh=84cd5226140dd898585b64bf5621aa45&oe=57A333AE

மக்கள் தலைவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் பாடும் பணியில் முன்னணியில் இருக்கும் நமது வசந்த் தொலைக்காட்சி 05.05.2016 அன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் உலகெங்கிலும் உள்ள சிவாஜி ரசிகர்களின் சார்பாகவும் நமது www.nadigarthilagam.com இணையதளம் சார்பாகவும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் சிவாஜி கணேசன் வழியில் தங்களுடையே அரசியல் பாதை தொடர்ந்து வெற்றி நடை போடவும் தங்களுடைய தொலைக்காட்சியின் மூலம் தமிழகத்தில் தேசிய நீரோட்டம் மீண்டும் வளம் பெறவும் நல்வாழ்த்துக்கள்.

sivaa
5th May 2016, 01:21 AM
https://scontent.xx.fbcdn.net/v/t1.0-9/13124669_1109300255787312_1999149329839444083_n.jp g?oh=84cd5226140dd898585b64bf5621aa45&oe=57A333AE






மக்கள் தலைவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் பாடும் பணியில் முன்னணியில் இருக்கும் நமது வசந்த் தொலைக்காட்சி 05.05.2016 அன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் உலகெங்கிலும் உள்ள சிவாஜி ரசிகர்களின் சார்பாகவும் நமது www.nadigarthilagam.com (http://www.nadigarthilagam.com) இணையதளம் சார்பாகவும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் சிவாஜி கணேசன் வழியில் தங்களுடையே அரசியல் பாதை தொடர்ந்து வெற்றி நடை போடவும் தங்களுடைய தொலைக்காட்சியின் மூலம் தமிழகத்தில் தேசிய நீரோட்டம் மீண்டும் வளம் பெறவும் நல்வாழ்த்துக்கள்.

மேலும் வளர்ந்துவர
வசந்த் தொலைக்காட்சிக்கு
வாழ்த்துக்கள்

sivaa
5th May 2016, 01:24 AM
FRIDAY 6th May ONWARDS Chennai MAHALAKSHMI dts
daily 3 shows GRAND GALA OPENING....
(in TIRUCHI, .TANJORE, MAYAVARAM , TIRUPUR also)


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/t31.0-8/13131117_263348007344359_3831772353839086836_o.jpg



முகநூலில் இருந்து

sivaa
5th May 2016, 04:44 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/MAY2016PROGINVITEAhub_zps50jlj0c0.jpg

தெய்வப்பிறவி நிழல்படங்கள்
(முகநூலில் இருந்து)

http://i65.tinypic.com/midx09.jpg

sivaa
5th May 2016, 04:46 AM
http://i65.tinypic.com/midx09.jpg

http://i67.tinypic.com/fnskds.jpg

http://i64.tinypic.com/wv8hf7.jpg

sivaa
5th May 2016, 04:48 AM
http://i67.tinypic.com/2u8i3vn.jpg

http://i63.tinypic.com/28uldox.jpg

http://i66.tinypic.com/20hlf6x.jpg

sivaa
5th May 2016, 04:50 AM
http://i65.tinypic.com/f3uxpy.jpg

http://i68.tinypic.com/358ulvs.jpg

sivaa
5th May 2016, 05:30 AM
http://i68.tinypic.com/qxrvyh.jpg

http://i68.tinypic.com/2elxams.jpg

http://i68.tinypic.com/2qcjeaa.jpg

sivaa
5th May 2016, 05:33 AM
http://i63.tinypic.com/smpzlt.jpg

http://i63.tinypic.com/2s61rus.jpg

sivaa
5th May 2016, 05:35 AM
http://i68.tinypic.com/2efnubt.jpg

http://oi68.tinypic.com/2efnubt.jpg

sivaa
5th May 2016, 05:36 AM
http://oi66.tinypic.com/sncgn5.jpghttp://oi67.tinypic.com/2n3pfc.jpg

sivaa
5th May 2016, 05:37 AM
http://oi67.tinypic.com/29pvvv8.jpghttp://oi63.tinypic.com/2yl056f.jpg

sivaa
5th May 2016, 05:38 AM
http://oi63.tinypic.com/1551d7q.jpg

--
http://oi67.tinypic.com/21p04g7.jpg

Russellxss
5th May 2016, 09:18 AM
சென்னை ஸ்ரீநிவாசாவில் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் மக்களின் பேராதரவோடு 6வது வாரமாக தொடர்ந்து வெற்றிநடைபோடுகிறது. பல இடையூறுகளுக்கு இடையேயும் படத்தினை வெற்றியடைய செய்த அனைத்து உள்ளங்களுக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13096262_1000143713403566_3651210852143211732_n.jp g?oh=baa1817ca18425ce5d770710097837f6&oe=57B1C7D3

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Harrietlgy
5th May 2016, 08:11 PM
From Vikatan written by Panju Arunachalam,

http://img.vikatan.com/av/2016/05/yzuzyz/images/p64a.jpg


இயக்குநர் பீம்சிங்கும் தயாரிப்பாளர் வேலுமணியும் சேர்ந்து ‘பாகப்பிரிவினை’ தொடங்கியிருந்த நேரம். கவிஞரைச் சந்திக்க வேலுமணி வந்திருந்தார். ‘அண்ணே, நீங்க நம்ம படத்துக்குப் பாட்டு எழுதணும்ணே’ என்றார் தயங்கியபடி. ‘என்னப்பா சிவாஜி படத்துக்கு என்னைக் கூப்பிடுற... வழக்கமா பட்டுக்கோட்டைதானே எழுதுவார்?’ கவிஞருக்கு ஆச்சர்யம்.

அந்தப் படத்தில் ‘பிள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு... இந்தப் பிள்ளை யாரு?’ பாடலை பட்டுக்கோட்டை எழுதியிருந்தார். ஆனால், தாலாட்டுப் பாடலை மட்டும் அவரால் உடனடியாக எழுதித்தர முடியவில்லை. காரணம், பட்டுக்கோட்டைக்கு வரிகள் பொட்டில் அடித்தாற்போல் இருக்கவேண்டும். அதற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார். வேலுமணிக்கோ, எல்லா வேலைகளும் கிடுகிடு வென நடக்க வேண்டும். ஆனால் பட்டுக்கோட்டையோ, ‘இவ்வளவு அவசரப்படுத் தினீர்கள் என்றால் என்னால் பாட்டு எழுத முடியாது. தவிர, தாலாட்டுப் பாடல்களை கண்ணதாசன் பிரமாதமா எழுதுவார். அவரை வைத்து எழுதிக்கங்க’ என்றிருக்கிறார்.

வேலுமணி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிவாஜி படத்துக்குப் பாட்டு எழுத கவிஞருக்கு விருப்பம் இல்லை. கவிஞர் பிடிகொடுக்கவில்லை என்பதால், ‘எப்படியாவது இந்தப் படத்துல கவிஞரை எழுதவைக்கவேண்டியது உன் பொறுப்பு’ என வேலுமணி என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார். கவிஞரின் முடிவில் நான் எப்படித் தலையிடுவது என எனக்குத் தயக்கம். ஆனாலும் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த அந்த ரிலாக்ஸ் சமயத்தில், அவரிடம் பேசினேன். ‘சிவாஜிக்கும் உங்களுக்கும் எப்பவோ நடந்த பிரச்னை. அதுவும் நாமளாப் போய் கேட்கலை. அவங்கதானே வந்து கேக்குறாங்க. எழுதலாம்ணே’ - கவிஞரிடம் சொன்னேன்.

‘எழுதலாம்டா... ஆனா, ‘என்னைக் கேக்காம அவர்கிட்ட ஏன் பாட்டு வாங்குனீங்க?’னு சிவாஜி ஏதாவது சொல்லி, எழுதின பாட்டு படத்துல வரலைனா நமக்கு அசிங்கம்டா. வேணாம் விட்டுடு’ என்றார் கவிஞர். ‘இல்லண்ணே. அப்படி சிவாஜி `வேண்டாம்'னு சொன்னார்னா நமக்கு மட்டுமா அசிங்கம், பாட்டு எழுதச் சொன்ன டைரக்டர், தயாரிப்பாளர்களுக்கும் தானே அசிங்கம்? தவிர, சிவாஜியைக் கேட்காமலா உங்ககிட்ட வந்து பாட்டு எழுதச் சொல்லப் போறாங்க. கண்டிப்பா அவரோட ஒப்புதலோடதான் வந்திருப்பாங்க’ - நான் விடுவதாக இல்லை. யோசித்த கவிஞர் சிவாஜியிடம் கேட்டுவிட்டுதான் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொண்டு ‘பாகப் பிரிவினை’க்கு பாடல்கள் எழுத சம்மதித்தார்.

அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஒரு கை விளங்காது. அவர் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுவதாக ஒரு பாட்டு. அதுதான், ‘ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...’. அடுத்து சிவாஜியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும்விதமாக, கதாநாயகி பாடுவதாக ஒரு பாட்டு. அது, ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...’. அடுத்து, ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து...’ கவிஞர் எழுதிய அந்த மூன்று பாடல்களும் அருமையாக வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

‘பாகப்பிரிவினை’ ரிலீஸுக்கு முன் யாரும் எதிர்பாராத ஓர் அதிர்ச்சியான சம்பவம். பட்டுக்கோட்டை இறந்துவிட்டார் என்று செய்தி வந்தது. ‘நல்லாத்தானே இருந்தார்? முதல்நாள்கூட பேசிட்டு இருந்தாரே... அவருக்கு எந்தவித பிரச்னையும் இல்லையே...’ சினிமா உலகில் இப்படி அதிர்ச்சி அலைகள். சைனஸ் பிரச்னைக் காக ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருக்கிறார். சிகிச்சையின்போது மூளை நரம்பில் பிரச்னை ஏற்பட்டு இறந்திருக்கிறார். பட்டுக்கோட்டையின் இறப்பு கவிஞருக்குப் பேரதிர்ச்சி. அவர் மீது கவிஞருக்கு அவ்வளவு பிரியம். கவிஞர் முதன்முதலாகக் கண்ணீர்விட்டு அழுததை அப்போதுதான் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பல படங்களுக்கு கவிஞர் பாதி, பட்டுக்கோட்டை பாதி எனப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தனர். அவரின் மறைவால் மொத்தப் பாடல்களையும் கவிஞரே எழுதவேண்டிய சூழ்நிலை.

‘பாகப்பிரிவினை’க்கு கவிஞர் எழுதிய பாடல்கள் சிவாஜிக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது. ‘இனி என் எல்லா படங்களுக்கும் கண்ணதாசனே எழுதட்டும்’ எனச் சொல்லிவிட்டார். அப்படி ‘பாசமலர்’ படத்துக்கு கவிஞர் பாடல் எழுதினார். அந்தப் படப் பாடல்களை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதும்போதே பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகும் என்பதை உணர்ந்தேன். அதை நிரூபிக்கும் வகையில் நடந்தது அந்தச் சந்திப்பு. ரிக்கார்டிங்குக்குப் பிறகு பாடல்களைக் கேட்ட சிவாஜி, கவிஞரை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனச் சொல்லி கார் அனுப்பிவிட்டார். அப்போது இரவு 10 மணி இருக்கும். எம்.எஸ்.வி-யும் சிவாஜியின் வீட்டில்தான் இருந்தார். கவிஞரும் நானும் சிவாஜியின் வீட்டுக்குச் சென்றோம். கவிஞரைப் பார்த்ததும் சிவாஜி ஓடிவந்து கட்டி அணைத்துக்கொண்டார். அழுகையும் ஆத்திரமுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். ‘கவிஞன்டா நீ. சரஸ்வதி, உன் நாக்குல விளையாடுறாடா’. சிவாஜி அழ, கவிஞரும் அழுதார். ‘நீயும் தப்பா நினைச்சுக்காதே. அந்த வயசுல ஏதோ எழுதினோம்... போனோம்’ என்ற கவிஞரைத் தொடர்ந்த சிவாஜி ‘என்னைக்கோ ஏதோ வருத்தம். அதெல்லாம் முடிஞ்சுடுச்சு. இனி நீதான் என் படங்களுக்குப் பாட்டு எழுதுற. இந்த மாதிரி யாராலடா எழுத முடியும்?’ ஒருவருக்கொருவர் மாறிமாறி சமாதானம் சொல்லிக்கொண்டனர்.

sivaa
6th May 2016, 01:49 AM
திரையுலக வரலாற்றில் மறு,மறுவெளியீட்டிலும்
மாபேரும் உலக சாதனை

http://i67.tinypic.com/293aveg.jpg

(திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து)

sivaa
6th May 2016, 01:54 AM
திரையுலக வரலாற்றில் மறு,மறுவெளியீட்டிலும்
மாபேரும் உலக சாதனை



http://i65.tinypic.com/2weiads.jpg


(திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து)

Russellsmd
6th May 2016, 09:52 AM
"சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே" பாடல் மெட்டில்
எனது முயற்சி.
-------------------------------


நெஞ்சமெல்லாம் எனக்கு
உன் நினைவே!- உன்னை
நேசிக்கும் மனங்களென்றும்
எந்தன் உறவே!

( நெஞ்சமெல்லாம்)

அன்னை இல்லம் கொண்ட
அருங்கலையே..!
அன்னை இல்லம் கொண்ட
அருங்கலையே..!
உந்தன் திறமைகளை யாரும்
நெருங்கலையே..!

( நெஞ்சமெல்லாம்)

தங்கச் சிரிப்பில் எங்கள்
துயர் மறந்தோம்- மனம்
தங்கும் நடிப்பில் எங்கள்
விழி நனைந்தோம்.

பொங்கி வரும் மகிழ்வில்
சிறகு கொண்டோம்-உந்தன்
வானத்திலே வந்து தினம்
பறந்திருந்தோம்-தலைவா..

(நெஞ்சமெல்லாம்)

உந்தன் கொடி எங்கும்
பறக்குதய்யா!- வெற்றிக்
கதவுகள் நீ வரத்
திறக்குதய்யா!

உந்தன் கலை எங்கும்
சிறக்குதய்யா!
கலை அன்னை முகம்
உன்னைக் கண்டு
சிரிக்குதய்யா...தலைவா!

(நெஞ்சமெல்லாம்)

eehaiupehazij
6th May 2016, 10:42 AM
The Mirror cracked!!

இப்புவி கண்ட நிகரற்ற உளவியல் தத்துவ மேதை சிக்மண்ட் பிராய்ட் 160 வது பிறந்த தினம் இன்று!

https://www.youtube.com/watch?v=R0w0db2zR7Q

https://www.youtube.com/watch?v=PNLV_QT09i0

https://www.youtube.com/watch?v=mQaqXK7z9LM

நினைவு கூர்வதில் பெருமை கொள்கின்றன நடிகர்திலகம் சிவாஜிகணேசன் / காதல் மன்னர் ஜெமினி கணேசனுக்கான மேன்மைத் திரிகள் !!

How an elite and educated person becomes a split personality by circumstances and cheats and avenges the world using his intelligence in an intellectual way exploiting the weakness of women,as exemplified in an incomparable performance ever given by an actor of calibre like NT or GG!! In line with the Freud's theory on mental fissures and fractures that can destabilize the behavioral pattern and equilibrium inside a man who avenges the ignorance of the society on him (by NT) and the negligence of the weaker sex..(by GG)..!! Hats off to NT/GG for their lifetime performances with elegance and diligence!!

https://www.youtube.com/watch?v=oo-A6DLaD2A

https://www.youtube.com/watch?v=ij9bR4B_11c

eehaiupehazij
6th May 2016, 08:08 PM
Larger than Life Night Club songs in NT films!!


Night club entertainment had never been in our culture! However, inspired by Hollywood and Bollywood movies, this became a part and parcel of our screen entertainment segments though larger than life dances, songs, Casino Royale type card play, booze and even stunts are included!!

Night Club songs are mostly the forte of LR Eswari but P Suseela too had contributed occasionally in NT movies!

The Number One Spot as regards a night club ambiance goes always to Pudhiya Paravai with the scintillating voice of P Suseela synchronizing with the stylish and effervescent mood changes depicted in an overwhelming presence and presentation by the one and the only one NT!!

Night Club Song 1 : Pudhiya Paravai / Parththa Gyaapagam Illaiyo....by P. Suseela!

மறதி என்னும் மாமருந்து இல்லாவிடில் மனக்காயங்கள் ஆறும் வழி தெரியாது மனித இனம் வாழும்போதே நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான் !

சோகங்களை முற்றிலும் மறக்கும் வரை எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று அலைந்து திரிந்து அவ்வப்போது மது மயக்கத்தை நாடுவதும் மங்கையின் ஆதுர அணைப்பை தேடுவதும் ஒருவழிப் பாதையான நிரந்தரமற்ற தீர்வே !!

சோக உணர்வுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு மனதை பதமாக்கும் உணர்வு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் வெளிப் படுத்தியிருக்கும் விதமே அலாதி !!
சிக்மண்ட் பிராய்ட் கூட பொறாமைப்படும் அளவு உளவியல் ரீதியான பாடல் ஆடல் இசை தெரபியை சௌகார் நடைமுறைப் படுத்தியிருக்கும் விதமும் அபாரம் !!

https://www.youtube.com/watch?v=go40tKa90yI

sivaa
7th May 2016, 05:53 AM
இன்று முதல்
காஞ்சிபுரம் பாலசுப்ரமண்யா dts
4 காட்சிகள்


http://i63.tinypic.com/akfolh.jpg

(திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து)

sivaa
7th May 2016, 05:55 AM
http://i65.tinypic.com/9k72f4.jpg


(முகநூலில் இருந்து)

sivaa
7th May 2016, 05:56 AM
http://i68.tinypic.com/30v0svb.jpg


(முகநூலில் இருந்து)

Russellsmd
7th May 2016, 06:56 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160507064213439_zpsotnuvagp.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160507064213439_zpsotnuvagp.jpg.html)

அனுதினமும்
மேற்கொள்கிறோம்
அநேகம்
பயணங்கள்.

புறப்பட்ட இடம்
வாழ்த்தொலித்து
அனுப்பி வைக்க,

வந்து சேருமிடம்
வண்ண மலர் தூவி
வரவேற்க..

எல்லாப்
பயணங்களுமே
ஜெயிப்பதில்லை..

அய்யா..

பூமிக்கு வந்த
நோக்கம்
வென்ற
உங்கள்
பயணம்
போல!

Russellsmd
7th May 2016, 07:00 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160325-WA0012_20160507063714907_20160507064550245_zpsvld6 vkay.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160325-WA0012_20160507063714907_20160507064550245_zpsvld6 vkay.jpg.html)

இந்த முகத்தில்
பொருந்தியது போல்
வேறெந்த
முகத்திலும்
பொருந்தாது
ஒப்பனை.

அழகு-
மிகவும்
விரும்பிற்று..
எங்கள்
அப்பனை.

eehaiupehazij
7th May 2016, 10:13 AM
Night Club Song in NT movies!! 2 : Sivandha Mann....Sollavoa...by P. Suseelaa!

சிவந்த மண் !

நடிகர்திலகம் ஸ்ரீதரின் இணைவில் பெருமைப்படுத்திய பிரம்மாண்டத்தின் சிகரம் சிவந்த மண் !


நடிகர்திலகத்தின் திரை வரலாற்றில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி ரசிகர்களின் ஆவலை எல்லா வகையிலும் பூர்த்தி செய்து வசூல் பிரளயமும் உண்டாக்கி இன்றும் இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மறு வெளியீடாக என்று வரும் என்று வரும் என்று ஒரு மன தாக்கத்தில் நம்மை ஆழ்த்தி..... கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் நடிகர்திலகம் புகழாரமாக வரவேண்டும் என்பதே நமது அவா !

சொல்லவோ சுகமான கதை சொல்லவோ என்னும் இரவு கேளிக்கை விடுதி மனமகிழ் ஆடல் பாடல் எமெஸ்வி பி சுசீலாம்மா இசை இணைவில்...அருமையான அரங்க அமைப்பில்...நேர்த்தியான காமிரா சுழற்சியில்....கலர் காஞ்சனாவின் சச்சுவின் இணையாட்டத்தில் நடிகர்திலகத்தின் பங்கேற்பில் ...நமது கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக.....

https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE

ஹுக்கு மேரோ...நாகேஷ்-சச்சு இணைவில் இரவு கேளிக்கை விடுதி துள்ளாட்டம்! கேளிக்கைவரிவிலக்கு உண்டா? Now, LR Eswari takes over!

https://www.youtube.com/watch?v=18_6LOOHC2s

eehaiupehazij
7th May 2016, 10:40 AM
Sivandha Mann fever!


Sivandha Mann remains one the action based movies of NT with uninterrupted flow of a mixture of sentiments, stunts, songs,foreign locale, ....entertaining all time!!

Besides, the traditional Night Club songs this movie also the scintillating dance movements by Magic Radhika in a ship whence NT and his pals plan to wreck the ship by invasion!! Enjoy these sequences too....!!

https://www.youtube.com/watch?v=5LC3ZAPk_rw

Harrietlgy
7th May 2016, 11:55 AM
From Dinamani

http://media.dinamani.com/2016/05/06/0.jpg/article3419057.ece/binary/original/0.jpg


சிவாஜி கணேசன் - ஏ.பீம்சிங் கூட்டணியில் பதிபக்தி வெற்றிகரமாக ஓடியது. விளைவு தமிழ் சினிமாவில் ‘பா’ வரிசை சித்திரங்களின் வருகை அதிகரித்தது.

ஒரே நேரத்தில் படிக்காத மேதை, பாகப்பிரிவினை இரு படங்களும் ஆரம்பமாயின. கதைப்படி இரண்டிலும் கணேசனுக்கு வீட்டு வேலைக்காரியாக வரும் பெண்ணே ஜோடி.

படிக்காத மேதை படத்தில் சவுகார் ஜானகியை ஏற்கனவே கணேசனின் மனைவியாக நடிக்கத் தேர்வு செய்திருந்தார்கள்.

‘பாகப்பிரிவினை’ சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என். வேலுமணி தயாரித்த முதல் படம். அதற்கான நாயகியை முடிவு செய்ய வேண்டும்.

வாஹினியில் ஸ்ரீதருடன் சேர்ந்து கல்யாணப்பரிசு ரஷ் பார்த்தார் சிவாஜி கணேசன். சரோவின் நடிப்பில் பரவசமாகி, அதற்குக் காரணமான டைரக்டரையும் பாராட்டினார்.

அது நடந்து நாலாவது நாள். சிவாஜி அனுப்பியதாகச் சொல்லி, வேலுமணி - சரோவைச் சந்தித்து பாகப்பிரிவினை படத்தில் நடிக்க வைத்தார்.

தேவர் பிலிம்ஸ் போலவே சரவணா பிலிம்ஸூம் சரோவைக் கொண்டாடியது. பாகப்பிரிவினை தொடங்கி, சரோ அதன் ராசியான நட்சத்திரம் ஆனார்.

பாகப்பிரிவினையில் சரோவுக்குச் சற்று வயதுக்கு மீறிய, ‘பொன்னி’ என்கிற உருக்கமான வேடம்.

கை கால்கள் விளங்காத ‘கண்ணையன்’ - சிவாஜிக்கு இணையாக, சரோ சிறப்பாக நடித்துப் புகழ் பெற வேண்டும் என்பது சிவாஜியின் ஆசை. அதற்காக ரொம்பவும் மெனக்கெட்டார்.

நடிகர் திலகத்தின் ஆவலை சரோ பூர்த்தி செய்தாரா...?

அபிநய சரஸ்வதியின் சந்தோஷ சாரல் இதோ:

‘ டைரக்டர் பீம்சிங் எப்போதும் காட்சிகளை விளக்கி நடிப்பு சொல்லித் தருவார். அதற்குப் பின்பே காமிரா முன் நிற்பேன்.

அன்றைக்குப் பிரசவ வேதனையில் நான் துடி துடிப்பது போல் எடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பெண், எப்படியெல்லாம் துன்பப்படுவாள் என்பதை பீம்சிங் செய்து காட்டினார்.

டேக்கின் போது அதை சரி வர செய்ய முடியுமா என்கிறப் பயம் எனக்கு ஏற்பட்டது. சிவாஜி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன சரோஜா, பிரசவ நடிப்புதானே... வா எங்கூட... ’ என்றார்.

அருகில் ஒரு மரம். அதைக் கட்டிக் கொண்டு இடுப்பு வலியில் அலறும் பெண்ணைத் தனது நடிப்பில் தத்ரூபமாக வெளிப்படுத்தினார்.

நான் மிரண்டு போனேன். குழந்தை பேறு பற்றித் தனக்குத் தெரிந்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு, தாய்மையின் தவிப்பை எடுத்துக் காட்டினாரே அதனால் தான் அவர் நடிகர் திலகம்!


அவர் என்ன செய்தாரோ, அதையே பிரதிபலித்தேன். எனக்கு நல்லப் பெயர் கிடைத்தது.

பாகப்பிரிவினை வெளிவந்ததும் அநேகத் தாய்மார்கள் குறிப்பாக, அக்காட்சியை மட்டும் சொல்லி என்னைப் புகழ்ந்தார்கள்.

எல்லாருக்குமே ஒட்டு மொத்தமாக என் பதில் என்ன தெரியுமா...?

அந்த வாழ்த்துகள் முழுக்க முழுக்க சிவாஜி சாரையே சேரும்.’ - சரோஜாதேவி.

eehaiupehazij
7th May 2016, 12:33 PM
திரைப்படத்தின் வெற்றி ஓட்டம் வேண்டி திலகத்தின் ஓட்டம் !

சிவந்தமண் படத்தில் ஸ்லிம்மான சிவாஜியை நன்றாகவே ஓடவிட்டிருப்பார் இயக்குனர் ஸ்ரீதர் !

In the [COLOR="#FF0000"]helicopter chase scene, realizing the need for his original presence in the close-up action scenes,NT took his lifetime risk in running, bouncing and jumping even as the helicopter often comes too closer to him!!
I have never seen such an energy filled running by NT in any other movie with his action scenes!!

https://www.youtube.com/watch?v=Gew4yzciSc4

eehaiupehazij
7th May 2016, 12:39 PM
In Nenjrukkum varai too Sreedhar extracted the full potential of NT's running skills in the climax!!


https://www.youtube.com/watch?v=hyxu41luOp4

Murali Srinivas
7th May 2016, 12:51 PM
சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part I

நடிகர் திலகத்தின் மிக பிரபலமான படங்களை சிலாக்கிப்பதை விட அதிகம் பேசப்படாத ஆனால் தரத்தில் குறைவில்லாத படங்களைப் பற்றிய கருத்துகளை விமர்சனங்களை முன் வைப்பது என்பது எப்போதும் எனக்கு பிடித்தமான ஒன்று. அந்த பட்டியலில் சிவகாமியின் செல்வனுக்கும் இடம் உண்டு. இந்த படம் எனக்கு பிடித்துப் போனதற்கு இந்த படத்தின் “தலைப்பு” கூட ஒரு உளவியல் காரணமாக இருக்கலாம்.

இந்த படம் வெளியானபோது.அது சந்தித்த மிகப் பெரிய சவால் இதன் மூலப்படமான ஆராதனாவோடு ஒப்பிட்டப்பட்டதுதான். 85 வருட தமிழ் பேசும்பட வரலாற்றில் இது போன்ற ஒப்பிடலை வேறு எந்த தமிழபடமும் எதிர்கொண்டதில்லை காரணம் ஆராதனா என்ற இந்திப் படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஏற்படுத்தியிருந்த தாக்கம். ஆராதனா படத்தின் பாடல்கள் மிக மிக பிரபலம். அந்தப் பாடல்களின் சாயல் துளி கூட இல்லாமல் மெல்லிசை மன்னர் போட்டிருந்த அருமையான ட்யூன்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் ஒரிஜினல் போல இல்லை என்ற விமர்சனம் படத்தை பாதித்தது என்பது உண்மை.

அனைவருக்கும் தெரிந்த இந்த விஷயங்களை இப்போது மீண்டும் இங்கே பதிவிட காரணம் அது போன்ற baggage எவற்றையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு இப்போது வெளியாகியிருக்கும் சிவகாமியின் செல்வன் படத்தை பார்க்கும் எவருக்கும் படத்தின் தரம் விளங்கும். அந்த அடிப்படையில் எழுதப்படும் எண்ணங்களே இந்த பதிவு.

இந்த படத்திற்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் மஸ்தான். இயக்குனர் சிவிஆரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக 70-களில் விளங்கியவர். வடநாட்டு டார்ஜிலிங்கையும் சரி தென்னாட்டு தேக்கடி மூணாறு போன்ற இடங்களின் அழகை அள்ளிக் கொடுத்த விதத்திலும் பின் இந்த இரண்டு இடங்களையும் மாட்ச் (match) செய்த விதத்திலும் படு துல்லியம்.

மெல்லிசை மன்னரைப் பற்றி என்ன சொல்ல? வேறு ஒரு இசையமைப்பாளராக இருந்தால் ஆராதனா படத்தின் ரீமேக் என்று சொன்னதுமே வேண்டாம் என்று விலகியிருப்பார்கள். ஆனால் எம்எஸ்வியோ அந்த சவாலை ஏற்றுக் கொண்டு மிக பிரமாதமான பாடல்களை மட்டுமல்ல உள்ளத்தில் ஊடுருவி மனதின் அடித்தட்டு வரை ஒரு சோகமான சுகத்தை விதைக்கும் அந்த ஹம்மிங்கையும் தந்தார். அன்று வெளியானபோதும் சரி இன்றைக்கு 42 வருடங்களுக்கு பின்னர் கேட்கும்போதும் சரி, ஏன் இன்னும் பல ஆண்டுகள் கடந்து போனாலும் இந்த பாடல்களும் அந்த ஹம்மிங்கும் மனதில் இருந்து மறையாது.

இந்த படத்தின் பின்னணியில் இருந்து பணியாற்றிவர்களில் கவனம் ஈர்க்கும் மற்றொருவர் ஆலகாலா என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏ.எல்.நாராயணன். இவர் வசனம் எழுதுவதில் வாலி என்றே சொல்ல வேண்டும். எப்படி வாலியின் பாடல்களில் எதுகை மோனை தூக்கலாக இருக்குமோ அது போன்ற ரைமிங் டயலாக் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் இவர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை பல நடிகர்கள் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று பார்வையாளனுக்கு தோன்ற காரணமே இவரின் வசனங்களால்தான். இதில் மிக பெரும் பலன் அடைந்தவர் ஏவிஎம் ராஜன். முதல் பகுதியில் நடிகர் திலகம் ராஜன் வாணிஸ்ரீ சம்மந்தப்பட்ட காட்சிகளிலெல்லாம் வசன முத்திரைகள் அழகாய் விழுந்திருக்கும்.

“பிரும்ம தேவன் உனக்காகவே ஸ்பெஷலா. இவளை படைச்சிருக்கான். உங்க ரெண்டு போரையும் பார்த்தா ரவிவர்மா ஓவியத்தில் வர ராமன் சீதா மாதிரியே இருக்கீங்க. வில்லை ஒடி விவாகத்தை பண்ணிக்கோ.”

நாயகனின் காஃப்பி மற்றும் சிகரெட் பழக்கத்தை பற்றி பேசும்போது “உங்களுக்குனு யாரும் இல்லையா” என்று நாயகி கேட்க அதற்கு நாயகன்
“நீங்கதான் I mean நீங்களே சொல்லுங்க” என்று ஆரம்பிக்க உடனே நண்பனான் ஏவிஎம் ராஜன் இடை மறித்து “நீங்கதான் சொல்லணும்” என்று சொல்வெதெல்லாம் ரசிக்கக் கூடியவை. இது தவிர ராஜன் பேசுவதாக வரும்

“சிரிக்கிறவ கிட்ட சின்சியாரிட்டி இருக்காதுடா”.

“உனக்காக அழறாளானு பார்க்க வேண்டாமா”

“இந்த பிளேன் அவ மனசிலே லாண்ட் பண்ண ஒரு ரன்வே தயார் பண்ணேன்”.

“Perfect landing straight in to her heart “

“ஒரு பெண்ணை பிடிக்கணுமுனா அவங்க அம்மாவுக்கு ஸ்வீட் வாங்கி கொடுக்கணும். இல்லே வேலைக்காரனுக்கு சில்லறையை தள்ளணும்.”

போன்ற சுவையான வசனங்கள். ராஜனும் இவற்றை கெடுக்காமல் neat-ஆக present பண்ணியிருப்பார்

வசனத்தினாலும் உடல் மொழியாலும் வசீகரிக்கும் மற்றொருவர் வழக்கம் போல் எஸ்.வி.ரங்காராவ். ஆங்கிலமும் தமிழும் கலந்து அவருக்கே உரித்தான அந்த வேகத்தில் அவர் பேசும் அழகே தனி. “என் அனுபவத்திலே உனக்கு ரெண்டு அட்வைஸ் சொல்றேன். ஒன்னு மனைவிக்கு வாக்கு கொடுத்தா அதை எப்படியாவது நிறைவேத்தியே ஆகணும். ரெண்டு மனைவிக்கு எப்போதுமே வாக்கு கொடுக்கக்கூடாது” என்று அவர் நடிகர் திலகத்திடம் சொல்லும் வசனத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி காது அடைக்கும் அப்ளாஸ்.

யார் வசனம் எழுதினாலும் சோ பேசும் வசனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அவர் 1974-ல் பேசின வசனங்களுக்கு இன்றும் அப்ளாஸ் விழுகிறது. "காக்கா பிடிச்சாத்தான் டாக்டர்க்கு பிடிக்கும்" [கலைஞரை] "வர வர நம்ம நாட்டிலே பொம்பளைங்களுக்கு குளிர் விட்டுப் போச்சுப்பா" [இந்திராவை மனதில் வைத்து], "மத்தவங்க உளறதை நான் சொன்னா என்னை போய் உளர்றேன்னு சொல்றாங்க" இதெல்லாம் சாம்பிள்.

சஹஸ்ரநாமம், டி.கே பகவதி, வி.எஸ். ராகவன், எஸ்.என். பார்வதி கச்சிதம். எம்.என்.ராஜம் மற்றும் மனோகர் சற்று ஓவராக பண்ணியிருந்தாலும் அன்றைய நாட்களில் அந்த கேரக்டர்களுக்கு அப்படிப்பட்ட நடிப்பு தேவையாக இருந்தது என்பதனால் பெரிதாக உறுத்தவில்லை.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
7th May 2016, 12:52 PM
சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part II

அடுத்து கதையின் நாயகி, தலைப்பின் நாயகி. இந்த பாத்திரத்திற்கு அளவெடுத்து பொருத்தியது போல் அமைந்தார் வாணிஸ்ரீ. இன்னும் சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் அவருக்கு இது போன்ற பலமான ஆழமான பாத்திர வார்ப்பு வேறு எந்த படத்திலும் அமைந்ததாக நினைவில்லை. இருளும் ஒளியும், வாணி ராணி ஏன் வசந்த மாளிகையையும் சேர்த்தே சொல்கிறேன்.

முற்பகுதியில் இளமை துள்ளும் குறும்பு கொப்புளிக்கும் காதல் வயப்பட்ட பெண் பின் எதிர்பாராத விபத்தில் காதலனை இழந்து யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று வேறு வீட்டில் தத்தெடுக்கப்படும் அந்த குழந்தையை வளர்க்கும் ஆயாவாக சந்தர்ப்ப சூழலால் கொலைப்பழி சுமப்பவளாக சிறை தண்டனை முடிந்து மகன் இருக்கும் இடம் தெரியாமல் பின் தன்னை ஆதரிக்கும் ஜெயிலரின் மகளின் காதலனாக மகனை சந்தித்து ஆனால் அவன்தான் தன மகன் என்று வெளிக் காட்டிக் கொள்ள முடியாத தாயாக பல்வேறு முகம் காட்ட வேண்டிய ஒரு கடினமான வேடத்தை எந்த பிசிறும் இல்லாமல் செய்திருப்பதற்கு வாணிஸ்ரீக்கு ஒரு மலர்கொத்து.

தன்னை கிண்டல் செய்து பாடும் வாலிபன் மீது ஏற்படும் செல்லக் கோபம் அது ஈர்ப்பாக மாறுவது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வயப்பட்டு கசிந்துருகி தெய்வ சன்னிதானத்தில் மாலை மாற்றி கணவனாக ஏற்று அவனோடு கலந்து உறவாடி - இந்த phase-ல் வாணிஸ்ரீ ஸ்வீட்டோ ஸ்வீட்.

ரயில் பயணத்தில் தன்னை ஈர்த்த வாலிபன் தீடீரென்று வீட்டிற்கு வந்து நிற்க அந்த தவிப்பு, தெரியாமல் வாளி தண்ணீரை ஊற்றி விட்டோமே என்ற குற்ற உணர்வு, சட்டையை அயர்ன் செய்து காஃப்பி போட்டு கொடுத்து காஃப்பிக்கு அதை போட்டுக் கொடுத்த கைக்கு கிடைக்கும் பாராட்டை வெட்கத்தோடு ஏற்றுக் கொண்டு சட்டைக்கு மட்டும் சூடேறலே என்று குறும்பாக நாயகன் சொல்லிவிட்டு போக நாணத்தில் முகம் சிவக்க தலை குனிவது .
நாயகனின் காஃப்பி மற்றும் சிகரெட் பழக்கத்தை பற்றி “சிகரெட்டை கட் பண்ணுங்க. காஃப்பி காலையிலே ஒரு கப் சாயந்திரம் ஒரு கப். (இதை சொல்லும்போது முகத்தை இரண்டு பக்கமும் ஆட்டி) ஓகே? Bye bye” என்று சொல்லும் அழகு, காலையில் தன்னைப் பார்க்கதான் நாயகன் மார்கெட்டிற்கு வந்திருக்கிறான் என்று தெரிந்தும் கூட கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்றிருப்பவர் கோவிலில் நாயகனை சந்திக்கும்போது காட்டும் முகபாவங்கள் இருக்கிறதே பிரமாதம்! தேவியை தரிசனம் பண்ண வந்தேன் என்று நாயகன் சொல்லும்போது அந்த கண்கள் காட்டும் பாவம்! பிரசாதத்தை வாங்கிக் கொண்டு நாயகன், இன்னிக்கிதான் தேவியோட அருள் எனக்கு கிடைச்சிருக்கு தேங்க்ஸ் என்று குறும்பாக சொல்லும்போது தலையை சாய்த்து கண்களை மூடி அதை ஏற்றுக் கொள்ளும் அழகு அடிக்கடி கோவிலுக்கு வாங்க அப்பத்தான் நினச்சதெல்லாம் நடக்கும் என்று நாயகன் சொல்லும்போது அதை அர்த்தம் பொதிந்த புன்னகையோடு அங்கீகரிப்பது (இந்த காட்சியில் வாணிஸ்ரீக்கு வசனமே கிடையாது என்பது தனி சிறப்பு)

ஞாயிறன்று சாப்பிட வருவதாக சொன்ன நாயகன் அதற்கு முன்னரே வீட்டிற்கு வர, ஞாயிற்றுக்கிழமை வரை உங்களால காத்திருக்க முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும் என்று கிண்டல் செய்வது, நாயகன் விவரிக்கும் கனவைக் கேட்டுக் கொண்டே தவறான கையில் கட்டுப் போடுவது நாயகன் தன சம்மதத்தை கேட்க அதற்கு அப்பா என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவது, வெட்கப்பட்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு சம்மதம் என்று முகத்தை மட்டும் ஆட்டுவது, அந்நேரம் தந்தை வந்துவிட கதவை லேசாக திறந்து காதலனின் தர்மசங்கடத்தை ரசிப்பது, புன்னைகையோடு டாட்டா காட்டுவது, பார்ட்டியில் IAF உயரதிகாரியின் கிண்டல்களுக்கு நாணத்தோடு கூடிய புன்னகையை மட்டும் பதிலாக அளிப்பது என்று அமர்களப்படுத்தியிருப்பார்.

இனியவளே பாடல் காட்சியில் அந்த டார்க் ப்ளூ/ப்ளாக் கலர் sareeயில் அவ்வளவு attractive-ஆக இருப்பார் என்றால் அடுத்து மேள தாளம் பாடலுக்கு sky blue கலர் sareeயில் பட்டையை கிளப்புவார். மேள தாளம் பாடலுக்கு முன்னர் நாயகன் தன்னையே உற்றுப் பார்ப்பதை என்ன பாக்கறீங்க என்று கேட்க நான் பொண்ணு பாக்கிறேன் சிவகாமி என்று பதில் வர எதுக்கு என்று அடுத்த கேள்வி எழுப்ப அந்த நல்ல நாள் எப்போ வரும்னு பாக்கிறேன் என்ற பதிலுக்கு எந்த நல்ல நாள்? என்று மீண்டும் கேள்வி எழுப்புவார். இதை படிக்கும்போது சாதாரணமாக தோன்றினாலும் அந்த மூன்று கேள்விகளையும் அவர் கேட்கும் விதம்! அந்த நேரத்தில் அவரின் Voice modulation என்னவென்று புரிந்தாலும் புரியாதது போல் நடித்து காதலனின் வாயிலிருந்தே அதை வரவழைக்கும் அந்த குறும்பு! வாவ் வாணிஸ்ரீ!

எத்தனை அழகு பாடலில் அந்த உணர்ச்சி வசப்படும் நிலையை விரசம் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பார் தவறு செய்து விட்டோம் என்ற மனநிலையை கூட melodrama இல்லாமல் செய்திருப்பார். அது போன்றே விபத்தில் காதலனை இழக்கும் காட்சியும் அதே ரகம். ஆயாவாக வாழும் வீட்டில் எஜமானியம்மாளின் தம்பியை தவிர்க்கும் இடங்களிலும் சரி ஒரு இயல்பு தெரியும். வயதான பிறகு ஒரு முதிர்ச்சி காண்பித்திருப்பார். மகன் என்று தெரிந்தும் அதை காட்டிக் கொள்ள முடியாமல் தவிப்பது, தன கணவன் சொன்ன அதே வார்த்தைகளை வாக்கியங்களை மகன் சொல்லும்போது நெகிழ்ந்து போவது, அடுத்த ஜென்மத்திலாவது நான் உங்கள் மகனாக பிறக்கணும் என்று உண்மை தெரியாமல் மகன் சொல்லும்போது இந்த ஜென்மத்திலேயே நீ எனக்கு மகன்தான் அப்படின்னு வச்சுக்கோயேன் என சமாதானம் சொல்வது, இறுதிக் காட்சியில் மகன் தன்னை மேடைக்கு அழைத்தவுடன் முதலில் தயங்கி பிறகு மேலே சென்று தன கையால் தங்கபதக்கத்தை மகனுக்கு அணிவித்து ஆனந்தக் கண்ணீர் விடும் அந்த நேரம் வரை வாணிஸ்ரீ கொடிக் கட்டி பறப்பார்..

அவரை முதிய தோற்றத்தில் காண்பிக்க தலை முடி முழுக்க நரை முடியாக் மாற்றியதை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். ஒரே படத்தில் இளமையாகவும் முதுமையாகவும் தோன்ற வேண்டும் என்பதே ஒரு சவால். அதிலும் முதல் பகுதியில் காதலனாக வந்த நடிகரே பிற்பகுதியில் மகனாக வரும்போது சவால் கடினமாகிறது. ஆனால் அந்த நெருடல் சற்று கூட பார்வையாளனுக்கு தெரியாமல் திரையில் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல. அதை திறம்பட செய்ததற்கே வாணிஸ்ரீக்கு மீண்டும் ஒரு மலர் கொத்து!

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
7th May 2016, 12:55 PM
சிவகாமியின் செல்வன் - ஒரு மீள் பார்வை – Part III

அடுத்து நமது பாட்டுடை தலைவன்! என்ன சொல்வது! எத்தனை தடவை சொன்னாலும் போதாது அவரின் தொழில் பக்தியைப் பற்றி! இந்த படம் heroine oriented subject. இதில் ஹீரோவிற்கு பெரிய வேலை ஒன்றுமில்லை. அதிலும் நடிகர் திலகம் தேவையில்லை எனும்போது அதிலும் தன தனி முத்திரையை பதிக்கிறாரே அதுதான் நடிகர் திலகம்!. ஒரு துடிப்பான நாயகன் அதைவிட துடிதுடிப்பான மகன். கதையின் போக்கிற்கு நாயகியின் வாழ்க்கையின் போக்கிற்கு உதவுபவர்கள். இதை பெரிய ஹீரோக்கள் செய்வதற்கு யோசிப்பார்கள். அதிலும் காதலன் மறைந்து மகன் சிவாஜியாக வரும் வரை 35 நிமிடத்திற்கு ஹீரோவே இல்லாமல் காட்சிகள் ஓடும் என்கின்ற நிலையில் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அபார நம்பிக்கை வைத்திருந்த நடிகர் திலகம் அந்த ரோல்களை ஏற்று பளிச்சிட வைத்தார் என்றால் அதுதான் கிரேட்!

அசோக் ரோலிற்கும் ஆனந்த் ரோலிற்கும் எவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார்! அசோக் ரோலில் Headquarters- லிருந்து நண்பனோடு சும்மா ஒரு ஜாலி ட்ரிப் அடிப்பவர் காதல் வலையில் சிக்கி கொள்வதையும் அந்த காதல் கனிவதற்கு நிறைவேறுவதற்கு கையாளும் உத்திகளை எவ்வளவு இளமை துள்ளலோடு செய்திருக்கிறார் என்று இப்போது பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. முதல் வெளியீட்டில் பள்ளிக்கூட பருவத்தில் அதை புரிந்தும் புரியாமலும் ரசித்ததை விட இப்போது அனுபவித்து ரசிக்க முடிகிறது. அதே நேரத்தில் ஆனந்த் அறிமுகமாகும்போதே காதலித்துக் கொண்டிருப்பதாக கதை அமைந்திருப்பதால் காதல் காட்சிகளை வேறு விதமாக கையாண்டிருக்கிறார்.

முதன் முதல் வீட்டில் வைத்து வாணிஸ்ரீயை சந்திக்கும்போது அவர் உடல் மொழி அபாரம். செட்டில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியை என்னவோ டார்ஜிலிங் குளிரில் வெடவெடவென்று உடல் நடுங்குவது போல் ஒரு உணர்வை பார்வையாளனுக்கு எவ்வளவு எளிதாக கடத்துகிறார்! அந்த நேரத்தில் அவரது குரல் மாடுலேஷனை கவனிக்க வேண்டும். மேடம் ஒரு கப் காஃப்பி கிடைக்குமா என்ற சாதாரண வாக்கியத்தை எப்படி உச்சரிக்கிறார்? அதே வசனத்தை (மேடத்திற்கு பதிலாக ஆன்ட்டி) மகனாக பேசும்போது என்ன ஒரு வித்தியாசம்! அது மட்டுமல்ல அதே போல் தான் கண்ட கனவை காதலியிடம் விவரிக்கும் இடத்தில ஒரே வசனத்தை ( 5000,10000, 300000 feet உயரத்திலே பறக்கிறேன் ---) இரண்டு விதமாக சொல்லும் அழகே தனி. வாணிஸ்ரீ கொடுத்த காஃப்பியை குடித்து விட்டு ஒரு உச் கொட்டுவார். பிறகு சொல்வார் "நானும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் காஃபி சாப்டிருக்கேன்" இந்த வரியில் அவர் காஃபி என்று சொல்லுவதை கவனித்தால் எவ்வளவு ஸ்டைலிஷாக சொல்லுவார் என்பது புரியும்.

அந்த கனவை பற்றி வாணிஸ்ரீயிடம் சொல்லும்போது அவர் குரல் மாறிக் கொண்டே வரும். "என்ன செய்வேன் கண்ணை மூடிக்கிட்டேன் கடவுளை வேண்டிக்கிட்டேன். தொபுகட்டீர்னு குதிச்சிட்டேன். கண்ணை திறந்து பாக்குறேன் ஒரு புது வீடு தெரியுது. கதவை திறந்துக்கிட்டு ஒரு நிலா வெளியே வந்து என்னை பார்த்து சிரிக்கிது ஒரு பக்கெட் தண்ணியை கொண்டு வந்து என் மேல ஊத்துது" அந்த கடைசி வரியை அவர் சொல்லும்போது அந்த வாய்ஸ் மாடுலேஷனை கேட்கணுமே! இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பிறகு வாணிஸ்ரீ நல்லவேளை உங்க கனவு முடிஞ்சிச்சு என்று சொல்ல முடியறதா இப்பதான் என் கனவே ஆரம்பிக்குது என்று நடிகர் திலகம் சொல்லும்போதுதான் முதன் முறையாக அந்த மனதை வருடும் தாலாட்டும் வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை மனதில் பரத்தும் அந்த ஹம்மிங் ஆரம்பிக்கும். அதன் தொடர்ச்சியாக கதவிற்கு பின்னால் நிற்கும் வாணிஸ்ரீயிடம் உங்கப்பாவிடம் சம்மதம் வாங்கிறேன் என பேசிக் கொண்டிருக்கும்போது வாணியின் அப்பா வந்துவிட எதிர்பாராமல் காதலியின் தந்தை வந்துவிட்டதால் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று சற்று தடுமாறி மறுநாள் தங்கள் ஆபிசர்ஸ் கிளப்பில் நடக்க போகும் பார்ட்டியைப் பற்றி குறிப்பிட்டு நான் ஜீப்போட வந்துறேன் நீங்க சிவகாமியோட வந்துருங்க என்ற வசனத்தை இரண்டாவது முறையும் அவர் ரீப்பிட் செய்யும் விதம் அந்த நேரத்தில் அவரது வசீகரமான கை அசைவுகள் முகத்தில் தெரியும் தர்மசங்கடத்தை மறைக்கும் அந்த சிரிப்பு! அனுபவித்து பார்க்க வேண்டிய காட்சி!

மகன் வேடத்தில் அவர் உடல்மொழி அப்படியே துள்ளலும் துடிப்புமாக இருக்கும். ஒரு இடத்தில நிற்காமல் துறுதுறுவென்று பேசிக் கொண்டு லதாவை லாலிபாப் லாலிபாப் என்று கிண்டல் செய்துக் கொண்டு வாணிஸ்ரீயை பர்ர்க்கும்பொதெல்லாம் மனதில் தோன்றும் அந்த இனம் புரியாத மரியாதையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் (“Those eyes”) தவிப்பது எல்லாமே தனி சுவை. உங்களுக்கு என்ன டிரஸ் பிடிக்கும் என்று லதா கேட்கும்போது நாலு முழ வேட்டி ஒரு கதர் சட்டை என்ற வசனத்திற்கு இப்போதும் கூட கைதட்டல் பறக்கிறது என்றால் அன்றைய நாளில் எப்படியிருந்திருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். இதை குறிப்பிடும்போது மற்றொன்றை பற்றியும் சொல்ல வேண்டும். காதலுக்கும் கடமைக்கும் தாய்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய இந்த படத்திற்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் சூட்ட வேண்டுமென்றால் நடிகர் திலகம் தான் ஏற்றுக் கொண்ட தலைவனை எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்திருந்தார் என்பது புரியும்.

அது மட்டுமல்ல படத்தின் கதையோடு ஓட்டிவருவது போல் அதே நேரம் தன் உள்ளக்கிடக்கையையும் ஏன் அன்றைய நாளில் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்த

சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ

நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ

என்ற வரிகளை இடம் பெற வைத்தார் என்றால் அதிலும் குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் மகனுக்கு தங்கப்பதக்கம் சூட்டி மகிழும் தாயை காட்டிவிட்டு பின்னணியில் இந்த வரிகள் ஒலிக்கவிடப்பட்டது என்று சொன்னால் நான் கடந்த பத்தியில் சொன்ன தலைவர் பக்தி புலப்படும்.

மூன்று டுயட் பாடல்கள். மூன்றிலும் ஸ்டைலில் தூள் கிளப்பியிருப்பார். இனியவளே பாடலில் பல்லவியை மெதுவாக ஆரம்பித்து விட்டு பாட்டு நார்மலாக ஆரம்பிக்கும்போது பக்கவாட்டில் ஒரு உடல் அசைவு கொடுப்பார். ஆரவாரம் ஆரம்பம். பின் இரண்டு சரணத்திலும் மெட்டு சற்று பாஸ்ட் பீட்டிற்கு மாறும்போது போடும் இரண்டு ஸ்டெப்ஸ். கைதட்டல் பறக்கும்.

அடுத்து மேள தாளம் பாடல். முதல் சரணத்தின் ஆரம்ப வரி “பூங்கொடி தன்னை மெல்ல தொட்டு” அதை இரண்டாம் முறை பாடும்போது இரண்டு கைகளையும் உடலின் இடைப் பகுதியிலிருந்து அப்படியே பக்கவாட்டில் நேர்கோட்டில் விரித்து ஒரு அடி பின்னாடி எடுத்து வைப்பார். இதை இரண்டு முறை தொடர்ச்சியாக செய்வார். தியேட்டரே அதிரும். ஆடிக்கு பின்னே பாடலில் அணிந்திருக்கும் கோட்டின் ஒரு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டு பக்கவாட்டில் இசைக்கேற்றாற்போல் ஸ்டெப்ஸ் போடுவார். அதுவும் ஸ்டைலிஷ்.

Gallantry award விழாவிற்கு போவதற்காக காத்திருக்கும்போது தற்செயலாக புத்தகத்தை பிரித்துப் பார்க்க தன் பிறப்பு பற்றியும் தான் தாய் தந்தையார் யார் என்பதையும் தெரிந்துக் கொண்டவுடன் அவர் முகம் அதில் ஓடும் பலதரப்பட்ட உணர்வுகள். கண்கள் நிறைந்து, சிறு வயதில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை மனகண்ணில் நினைத்துப் பார்த்து தனது வளர்ப்பு தந்தை எழுதிய கடிதத்தின் மூலமாக இன்றைக்கு தான் ஆன்ட்டி என அழைக்கும் பெண்தான் தன் தாய் என்பதை உறுதிப்படுத்தும் கொள்ளும் அந்த வசனமில்லா நிமிடங்கள்! காட்சி சூழலுக்கு ஏற்றவாறு சிறுவனாக இருந்தபோது தன் தாய் பாடிய பாடல் பின்னணியில் மெதுவாக ஒலிப்பது! என்னதான் இந்தியில் வந்திருந்தாலும் அதை வேறு தளத்திற்கு கொண்டுப் போயிருக்கிறார் நடிகர் திலகம். இந்த காட்சியின் சிறப்பில் இயக்குனர் சிவிஆருக்கும் இசையரசி சுசீலாவிற்கும் பங்குண்டு. .

இவ்வளவும் சொல்லக் காரணம் ஒரு heroine oriented subject-ல் கூட ஒரு கைதேர்ந்த நடிகனால் எந்தளவிற்கு value addition செய்ய முடியும் என்பதற்கு நடிகர் திலகமும் சிவகாமியின் செல்வனும் prime examples.

பாடல்கள் மற்றும் பாடகர்கள் பற்றி சொல்லாமல் போனால் பாவம் வந்து சேரும். மெல்லிசை மன்னர் இசை பற்றி சொன்னோம். அவர் குரல் பற்றியும் சொல்ல வேண்டும். எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் அந்த சூழலை அதன் பின்னணியில் புதைந்திருக்கும் சோகத்தை அவரது குரலில் இழையோட விட்டிருப்பார். டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் இனிமையை இழைத்திருப்பார்கள். இனியவளே ஒரு ரகம் என்றால் சற்றே துரித தாள கதியில் (பாஸ்ட் பீட்) அமைந்த மேள தாளம் பாடலில் தூள் கிளப்பியிருப்பார்கள். அதிலும் சுசீலா முதல் சரணத்தில் "மாங்கனி கன்னம் வெள்ளிதட்டு தங்க பந்தாட்டம் துள்ளி வரவா" பாடும்போது கவனியுங்கள். இரண்டு முறை பாடுவார் (படத்தில்.ஆனால் இசைதட்டில் ஒரு முறைதான் இருக்கும்). வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுகானுபவமாக இருக்கும் எத்தனை அழகை எஸ்பிபி அவருக்கே உரித்தான பாணியில் மெருக்கேற்ற ஈஸ்வரியின் தனித்தன்மை ஆடிக்கு பின்னே பாடலில் எதிரொலிக்கும்.

பிலிம் ரோலில் படமாக்கப்பட்ட முன்கால படங்களின் பிரிண்டை பாதுகாத்து வைப்பது என்பது கடினமாகவும் இடத்தை அடைப்பதாகவும் ஒரு காலகட்டத்திற்கு மேல் அந்த பிரிண்டும் சரி நெகட்டிவும் சரி சிதிலமடைவதை தடுக்க முடியவில்லை என்ற நிலையில் டிஜிட்டல் முறையில் உருமாற்றி பாதுகாத்து வைக்கும் முறை பலன் அளிக்கவே அந்த முறையில் சில படங்கள் மாற்றப்பட்டன. ஆனால் அப்படி செய்தவர்கள் எல்லோருமே நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்களான கர்ணன் திருவிளையாடல், கட்டபொம்மன் பாசமலர் வசந்த மாளிகை ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றினார்கள்.

பெரிதும் பேசப்பட்ட அந்த படங்களை இன்றைய சூழலுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் அதே நேரத்தில் feel good romantic musical films என்ற வகையை சார்ந்த சிவகாமியின் செல்வன் போன்ற படங்களும் டிஜிட்டல் பாஃர்மாட்டிற்கு மாற்றப்படுவது என்பது வரவேற்க்கதக்க விஷயம். இன்றைய தலைமுறைக்கு இன்று பெரிதும் பேசப்படும் feel good movies genre-ல் அன்றைய நாட்களிலே இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கிறது என்ற செய்தி சென்று சேர வேண்டும். அதை அவர்கள் காண்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும். அந்த வகையில் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலிலா என்ற கேள்வி எழுந்தபோதும் அதை புறந்தள்ளி இந்த படத்தை டிஜிட்டல் முறையில் உருமாற்றி வெளியிட்ட மதுரை சிவா மூவிஸாருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி!

இந்த மிக நீண்ட மீள் பார்வையை வாசித்த அனைவருக்கும் நன்றி!

அன்புடன்

eehaiupehazij
7th May 2016, 08:42 PM
நேரம் தவறாமை, திறமை, நேர்மை, தமிழ் உச்சரிப்புப் பாவனைகளின் நேர்த்தி, நடிப்பாளுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீது காட்டிய அன்பு
பாசம் பக்தி ...வாழ்ந்து காட்டிய உதாரண மாமனிதர் நடிகர்திலகத்தின் கண்ணியத் திரி சார்ந்த உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!

https://www.youtube.com/watch?v=b1PuDk_WyS0

From telugu version of Deiva Makan!

https://www.youtube.com/watch?v=mU-GlbPlong

Russellsmd
7th May 2016, 08:44 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160507203238654_zpsod6xndii.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160507203238654_zpsod6xndii.jpg.html)

sivaa
8th May 2016, 11:01 AM
சிவகாமியின் செல்வன் 6 வது வாரம்


(தினத்தந்தி E பேப்பர் விளம்பரம் may 8.2016)


http://i63.tinypic.com/2zia0z9.jpg

Gopal.s
8th May 2016, 02:47 PM
முரளி ,

ரொம்ப நாள் கழித்து விஸ்வரூபம் எடுக்கிறீர்கள். ரொம்ப ரசித்து படித்தேன். ரொம்ப மூளைக்கு வேலை வைக்காமல் நல்ல எழுத்து திறனுடன் விளங்குவதால் எஸ்.வாசுதேவன்,ரவிகிரண் போன்றவர்களையும் ரசிக்க வைக்கும் எழுத்து. வழக்கமான பின்னணி விவரணங்கள் குறைவாய்,நடித்தவர்களின் திறன் பற்றிய விமரிசனம்.

இந்த படத்திற்கு,மிகவும் எதிரியானவை பத்திரிகைகள். குமுதம் ஒன்று மட்டும் விதிவிலக்கு. நூறு ராஜேஷ் சேர்ந்தாலும் சிவாஜி புலமைக்கு ஈடாகுமா என்று உண்மை பேசியது .

எனக்கோ சிவாஜி-வாணிஸ்ரீ இணை வெல்லம் போல.வசந்த மாளிகைக்கு பிறகு சி.வீ.ஆர் இசையில் இந்த ஜோடி இணைவு,எத்தனை அழகு பற்றி பத்திரிகை விவரணைகள்,இனியவளே காட்சிகள் பொம்மையில் என்று துடித்து கொண்டிருந்தேன். வழக்கம் போல படம் எங்களூரில் ரிலீஸ் கிடையாது. சிதம்பரத்தில் ,பக்கிரி பார்த்து விட்டு, இந்த ஜோடி விளையாட்டை சொல்லி சொல்லி வெறுப்பேற்றினான்.நான் பிப்ரவரி 1974 வரை காத்திருக்க வேண்டி வந்தது.என் அத்தை பையன் கல்யாணம் சுவாமி மலையில். ஒரு நாள் முன்னதாக சென்று குடந்தை நூர்மஹாலில் ஆஜர்.(பின்னர் செல்வமானது) என்ன அழகு இந்த ஜோடி. சிவாஜி-வாணிஸ்ரீ உடை,தோற்றம் எல்லாமே வசந்த மாளிகையை விட கூடுதல் அழகு. நெருக்கம் அதிகம்.சி.வீ.ஆர் படம் என்பதால் உடை,ஸ்டைல் (ஏ.வீ.எம்.ராஜன்,ஸ்ரீகாந்த்,மனோகர் அனைவரும் செம ஸ்டைல் )எல்லாவற்றிலும் மெருகு. சிவாஜி இரண்டு ரோல்களிலும் கலக்கல். வாணிஸ்ரீ-லதா இருவருடனும் விளையாடி தள்ளுவார்.(மடி கணினி)

தொடர்ந்து மூன்று முறை அடுத்ததடுத்த நாட்கள் விஜயம்.விஸ்வநாதன் இசை, மூலத்தை ஒப்பிடாதிருந்தால், மோசமில்லை ரகம்.ஆனால் வேலுமணி,பந்துலு,ஸ்ரீதர்,ஏ.வீ.எம் படங்களுக்கு காட்டும் அக்கறையை அவர் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபைக்கு காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

நன்றி முரளி, என் பிரிய நடிகைக்கு ஒரு பகுதி ஒதுக்கியதற்கு. (வாணிஸ்ரீ யின் அத்தனை பகுதிகளும் என் பிரியமே),சிவாஜியின் சிறப்பை அழகாக எழுதியதற்கு.

இந்த படம் நான் ஜூலை யில் வந்தால் காண முடியுமா?

sivaa
8th May 2016, 06:48 PM
இன்று நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் - தொலைக்காட்சிகளில்
சன் லைப்- -7pm க்கு
" கலாட்டா கல்யாணம் "


http://i68.tinypic.com/2e5lk09.jpg

http://i67.tinypic.com/oh4njp.jpg

http://i63.tinypic.com/2v11002.jpg

sivaa
8th May 2016, 06:54 PM
இன்று நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் - தொலைக்காட்சிகளில்
-7pm க்கு

ஜெயா மூவியில்...
" பாகப்பிரிவினை "
கண்டு மகிழ்வோம்

http://i66.tinypic.com/nyxxz8.jpg

http://i66.tinypic.com/jqg8q0.jpg

http://i66.tinypic.com/fveh4i.jpg

http://i67.tinypic.com/20hwrkh.jpg

http://i65.tinypic.com/1z5t91d.jpg

sivaa
8th May 2016, 10:00 PM
இன்று நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள் - தொலைக்காட்சிகளில்
சன் லைப்- -7pm க்கு
" கலாட்டா கல்யாணம் "


http://i68.tinypic.com/2e5lk09.jpg

http://i67.tinypic.com/oh4njp.jpg

http://i63.tinypic.com/2v11002.jpg


சன் லைப் டிவியில் கலாட்டா கல்யாணம் மாற்றப்பட்டு " நவராத்திரி ஒளி பரப்பு

RAGHAVENDRA
9th May 2016, 12:00 AM
முரளி சாரின் சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவுகளுக்கு பாராட்டு...


Sivagamiyin selvan.... Review... Super... It gives a feeling of watching the movie again....

Sharmila Murugan Madam. in Whatsapp

Russellsmd
9th May 2016, 12:13 AM
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் பச்சை விளக்கு
பார்க்கப் போன இன்றைய
மதியப் பொழுது,மகிழ்வான, நெகிழ்வான தருணம் எனக்கு.

அய்யா நடிகர் திலகத்தைப்
பார்க்கும் ஆசையில் கூட்டம்,
கூட்டமாக வந்தவர்கள்,
அங்கே நான் வைத்திருந்த
பெரிய பேனரை பார்த்ததும்,
படித்ததும் எனக்குப் பேரானந்தம் தந்தது.

எழுதியதைப் படித்தவர் கூறும்
பாராட்டுகள் மட்டுமல்ல..
என் எழுத்தைக் கூர்ந்து படித்துக்
கொண்டிருந்தவர்களின்
மௌனம் கூட மகிழ்வைத்தான்
தருகிறது.

எழுபது வயசு தாண்டிய ஒரு
முதியவர் என் எழுத்துகளை
வரி விடாமல் வாசித்துக்
கொண்டிருந்த போது எனக்கு
இதுதான் மனதில் தோன்றியது.

http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/20160508_172945_zpsnwhonslg.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/20160508_172945_zpsnwhonslg.jpg.html)

vasudevan31355
9th May 2016, 07:36 AM
முரளி சார்,

http://www.rajtamil.com/wp-content/uploads/2012/09/Sivagamiyin-Selvan-246x300.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-62.jpg

பிரித்து மேய்ந்து விட்டீர்கள் 'சிவகாமியின் செல்வ'னை. அனுபவித்துப் படித்தேன். இனிமேல் என்ன இருக்கிறது நாங்கள் அதைப் பற்றி எழுத? அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை:clap: திரியின் விமானியின் பாணியே தனிதான். அருமை...அருமை.

vasudevan31355
9th May 2016, 07:37 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-24.jpg

vasudevan31355
9th May 2016, 07:37 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-47.jpg

vasudevan31355
9th May 2016, 07:38 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-21.jpg

vasudevan31355
9th May 2016, 07:38 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-24.jpg

vasudevan31355
9th May 2016, 07:39 AM
http://entertainment.chennaipatrika.com/image.axd?picture=2016%2F2%2FSivakamiyin+Selvan+Mo vie+Trailer.jpg

https://i.ytimg.com/vi/dwrf7rPZdoM/hqdefault.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0001.jpg

vasudevan31355
9th May 2016, 07:39 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0002.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0003.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0006.jpg

vasudevan31355
9th May 2016, 07:41 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0007.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0010.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0011.jpg

vasudevan31355
9th May 2016, 07:41 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-60.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-45.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0018 20568.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0018 70743.jpg

vasudevan31355
9th May 2016, 07:44 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 08756.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 66230.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 29252.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 34507.jpg

vasudevan31355
9th May 2016, 07:45 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 42473.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0025 95300.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0015 82455.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0027 34523.jpg

vasudevan31355
9th May 2016, 07:46 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 67398.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 45059.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0026 58947.jpghttp://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 03000.jpg

JamesFague
9th May 2016, 08:46 AM
Mr Murali Sir,


Long time we have seen such a review from your end and once again you have not disappointed us. Hats Off to you

for the write up on SS and subsequently well supported with the superb photos by our Neyveliar.



Regards

RAGHAVENDRA
9th May 2016, 09:07 AM
வாசு சார்
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றிய முரளி சாரின் அற்புதமான எழுத்தாற்றலுடன் கூடிய பதிவிற்கு தங்களுடைய நிழற்படங்கள் உயிரூட்டியுள்ளன.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
9th May 2016, 09:09 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0027 34523.jpg

முழுப்படத்திலும் என் நெஞ்சைக் கவர்ந்த ஷாட்..

இதற்காக தங்களுக்கு தயிர்வடை தேசிகன் பாணியில்

"Double Thanks"

Gopal.s
9th May 2016, 10:25 AM
Murali ,


Long time we have seen such a review from your end and once again you have not disappointed us. Hats Off to you

for the write up on SS and subsequently well supported with the superb photos by our Neyveliar.



வாசு சார்
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றிய முரளி சாரின் அற்புதமான எழுத்தாற்றலுடன் கூடிய பதிவிற்கு தங்களுடைய நிழற்படங்கள் உயிரூட்டியுள்ளன.
பாராட்டுக்கள்.

Whatelse I can say? Ragavendhar and I concur on best still from SS.

JamesFague
9th May 2016, 11:58 AM
NT Week in Sun Life Today Uthama Puthiran Dont miss it

Murali Srinivas
9th May 2016, 03:16 PM
சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவுகளை பாராட்டிய பெரியவர்கள் கோபு சார், ராமஜெயம் சார், சிவா சாருக்கு நன்றி!

பதிவை விரும்பி லைக் அளித்த ஆதிராம், வாசு, கோபால், சின்னகண்ணன், பரணி, சித்தூர் வாசு, ராகவேந்தர் சாருக்கு நன்றி!

பதிவை பாராட்டிய இளையதலைமுறையை சேர்ந்த mappi என்ற கார்த்திக்கிற்கு நன்றி!

அலைபேசியில் அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்த பதிவுகளை whatsapp group-லும் பகிர்ந்த கவி திலகம் ஆதவனுக்கு நன்றி!

whatsapp -ல் படித்து பாராட்டிய ஷர்மிளா மேடம் மற்றும் நண்பர் ஸ்ரீராம், ராமஜெயம் (சாந்தி) ஆகியோருக்கும் நன்றிகள் பல!

கோபால்,

நீங்கள் ஜூலையில் வரும்போது நிச்சயமாக நீங்கள் பார்க்க ஏற்பாடு செய்துவிடலாம்.

வாசு,

அருமையான ஸ்டில்- களை பதிவு செய்து அதுவும் நான் எழுதிய காட்சிகளுக்கு support-ஆக பதிவு செய்திருப்பது மிக நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக நான் குறிப்பிட்ட கோவில் காட்சிக்கு அடுத்ததாக வரும் ஜீப்பில் பயணம் செய்யும் காட்சி அதற்கு முன்னரே கோவிலில் வைத்து நடிகர் திலகம் அணிந்திருக்கும் வேட்டி சட்டையை சுட்டிக் காட்டி இந்த டிரஸ்சோடவா ஜீப் ஓட்டப் போறே என்று சகஸ்ரநாமம் கேட்க இல்லே டிரஸ் மாத்திட்டு வந்துறேன் என்று போகும் நடிகர் திலகம் யூனிபார்மிற்கு மாறி நடந்து வருவாரே! பட்டு வேட்டி சட்டையில் அவ்வளவு அம்சமாக இருப்பவர் யூனிபார்ம் அணிந்தவுடன் கம்பீரமாக மாறும் அதிசயத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை.

ஜீப் ஓட்டும்போது சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்திலே சூரக்கோட்டை என்பார். அடுத்து மற்றொன்றும் சொல்வார் கீழே இருக்கும்போதுதான் இது உன் ஊரு என் ஊரு-ங்கறதெல்லாம். வானத்திற்கு மேலே போய்ட்டா எல்லாமே நம்ம ஊருதான். இது அன்றைய நாட்களில் அரசியல் ஆதாயத்திற்காக சுயாட்சி என்றெல்லாம் வெற்று கோஷங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டும்வண்ணம் எழுதப்பட்ட ஒன்று.

மேள தாளம் பாடலில் வரும் அனைவருக்கும் பிடித்த அந்த ஸ்டில் படத்தில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அந்த காட்சியில் அழகாய் வெளிப்படும். படத்தில் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும்தான் கவியரசர் என்றபோதிலும் வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பார்.

ஆனந்த் ரோலிற்கு நீங்கள் போட்டிருக்கும் ஸ்டில்ஸும் அட்டகாசம். லதாவை அழைத்துப் போக வரும்போது விசிலடித்துக் கொண்டே வரும் அந்த நடை! விஎஸ் ராகவனிடம் ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் உட்கார்ந்து பேசிவிட்டு அவர் முறைத்தவுடன் பம்மி தன்னுடைய சீட்டிற்கு திரும்புவது என்று ஜாலியாக செய்திருப்பார்.

இப்படி எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காட்சியையும் எழுதிக் கொண்டே போக வேண்டியதுதான். அந்தளவிற்கு படத்தில் மெரிட் இருக்கிறது.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

அன்புடன்

Harrietlgy
9th May 2016, 08:22 PM
முரளி சார் தேதி சொன்னால் மிகவும் சந்தோசம். நானும் ஜூலையில் வருகிறேன். உங்கள் மொபைல் எண்ணை பிரைவேட் மெயிலில் அனுப்பவும், நான் உடனே பேசுகிறேன் நன்றி.

Harrietlgy
9th May 2016, 10:47 PM
From Sudhangan FB,


1968ம் ஆண்டு வந்த முதல் சிவாஜி படம் ‘ திருமால் பெருமை’தான்! ஆனால், அந்த படத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும்! அதனால் அந்த வருடம் வந்த படங்களை வரிசைப்படுத்தாமல் எழுதுகிறேன்!
காரணம், அந்த வருடம்தான் என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் மகுடத்தில் வைத்த இன்னொரு சில வைரக் கற்கள் உருவாகின! பல வித்தியாசமான திரைப்படங்களும் வந்தன! அந்த வருடம் வந்த படங்கள் எனக்குள் சிவாஜியைப் பற்றி பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றன!
அத்தனை வித்தியாசமான படங்கள்! இப்படி ஒரு நடிகன் ஒரே வருடத்தில் இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா? உலகத்தில் எந்த நடிகனாவது இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஒரே வருடத்தில் நடித்திருக்கிறானா? ஏன் இவனது சாதனையைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள்?
காரணம், இந்த கலைஞன் கலையோடு மட்டுமே வாழ்ந்துவிட்டான்! அந்த வருடம் வந்த படம்தான் ‘உயர்ந்த மனிதன்’! இது ஏவி.எம். தயாரிப்பு! இதில் பணக்கார இள, நடுத்தர, வயோதிக வேடம்! முதலில் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்! பிறகு திருத்தி அமைக்கப்பட்ட கதைக்குத்தான் உடன்பட்டார் அவர்!
இந்தப் படத்திற்கான திரைக்கதை – வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார்! சிவாஜி ஒரு பணக்கார வீட்டு பிள்ளை! அவருடைய தந்தை எஸ்.வி. ராமதாஸ்!
சிவாஜி ஓர் ஏழைப்பெண்ணைக் காதலிப்பார்! அவளோடு உறவும் கொண்டு விடுவார்! அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவள் தனியே தந்தையுடன் வீட்டில் இருக்கும் போது சிவாஜியின் தந்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்!
குழந்தை என்ன ஆனது? குழந்தை பிழைக்கும். தாய் இறந்து போவாள்! வருடங்கள் கடக்கும்! சிவாஜி இப்போது ஒரு நடுத்தர மிகப்பெரிய தொழிலதிபர்!
அவருடைய மனைவி சவுகார் ஜானகி! திருமணமாகி வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை! இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது! இந்த சம்பவத்தை எனக்குச் சொன்னவர் சவுகார் ஜானகி! இந்தப் படத்தின் முக்கால்வாசி பகுதி முடிந்துவிட்டது!
அப்போது திடீரென்று ஏவி.எம்மில் ஒரு தொழிலாளர் போராட்டம்! ஸ்டூடியோ மூடப்பட்டுவிட்டது! இந்த இடைப்பட்ட காலத்தில் சிவாஜிக்கும், சவுகாருக்குமிடையே ஒரு பொதுமேடையில் வைத்து கருத்து வேறுபாடு!
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு! சிவாஜி-– சவுகார் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக நடிக்க உடன்படவில்லை! இருவரையும் சம்மதித்து நடிக்க வைத்தனர்! நடிப்பில் மட்டும்தான் இருவருக்கும் பேச்சுவார்த்தை!’ படப்பிடிப்பில் ஒரு‘ஹலோ’ கூட கிடையாது! மீண்டும் ஒரு வருடம் கழித்து படப்பிடிப்பு!
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சியின் தொடர்ச்சி! அதாவது முதல் வருடம் சவுகார் உள்ளே வருவது மாதிரி காட்சி! இப்போது அவர் உள்ளே வந்து கூடத்தில் வந்து உட்கார வேண்டும்! சிவாஜிக்கும் சவுகாருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது!
திடீரென்று அதற்கு முந்தைய வருடம் படப்பிடிப்பு பாதியில் நின்றதால், தொடர்ச்சி காட்சிக்கான புகைப்படங்கள் அதாவது ஸ்டில்ஸ் எடுக்கப்படவில்லை! இப்போது சவுகார் உள்ளே உடையோடு படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் வருகிறார்! சிவாஜி ஏற்கனவே தயார் நிலையில்! சவுகார் வந்த உடையை கண்டதும் சிவாஜி முகத்தில் ஒரு கலவரம்! அதை சவுகாரிடம் சொல்ல முடியாது!
காரணம், இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது! இருவருக்கும் தூது, உதவி இயக்குநர்கள்தான்! சிவாஜி உதவி இயக்குநரை அழைத்தார்! ‘அந்தம்மாவின் உடை சரியில்லை! போன முறை ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த காட்சியில் அவர் கறுப்பு சேலை அணிந்திருந்தார். இப்போது சேலை நிறம் மாறியிருக்கிறது’ என்றார் சிவாஜி! இதை உதவி இயக்குநர்கள் சவுகாரிடம் போய் சொன்னார்கள்!
சவுகார் படித்தவர்! தனக்கென ஒரு கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வைத்துக்கொண்டிருக்கும் குணாதிசயம் கொண்டவர்!
‘அதெல்லாம் கிடையாது! படம் நின்னு போய் ஒரு வருடம் ஆச்சு! இதே புடவையைத்தான் நான் கட்டியிருந்தேன். இந்த ஒரு வருடம் அவர் நடுவில் எத்தனை படங்கள் நடித்திருப்பார். வேறு படத்தின் நினைவில் சொல்கிறார்! வேணும்னா கண்டினியூடி அதாவது தொடர்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துப் பாருங்கள்’ என்றார் சவுகார்!
‘மேடம்! ஸ்டில்ஸ் எடுக்கிறதுக்குள்ள தான் படப்பிடிப்பு நின்னு போச்சே!’
‘அப்ப என்னால புடவையை மாத்த முடியாது–’ இது சவுகார்!
சிவாஜியிடம் போய் சொன்னார்கள் உதவியாளர்கள். அந்தப் படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு! இவர்கள்தான் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தை இயக்கியவர்கள்!
சிவாஜி தன் குருநாத இயக்குநர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, ‘வேண்டுமானால் நீங்கள் ‘ரஷ்’ போட்டு பாருங்கள். நான் சொல்வது சரியில்லையென்றால் நான் நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! வேறு வழியில்லாமல் ‘ரஷ்’ பார்க்க முன்பார்க்கும் ( பிரிவியூ) திரையரங்கும் தயாரானது!
படம் பார்க்க சிவாஜி – சவுகாரை அழைத்தார்கள்! சிவாஜி வர மறுத்துவிட்டார்! சொன்ன காரணம் ‘எனக்கு சந்தேகமில்லை! தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் பார்க்கட்டும்’ என்று சொல்லி தன் ஒப்பனை அறைக்குப் போய் விட்டார்! படத்தை பார்த்தார்கள்! சவுகாரும் பார்த்தார்! பார்த்த மாத்திரத்தில் அந்த அரங்கை விட்டு வெளியே ஓடினார் சிவாஜி இருந்த ஒப்பனை அறையை நோக்கி,
அப்போது இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையில்லாத சமயம்! நேராக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் சவுகார்! கண்ணீர் மல்க சிவாஜி எதிரே ஒரு வினாடி நின்று அப்படியே காலில் விழுந்தார்!
‘எப்படிங்க இது! ஒரு வருடத்திற்கு முன்னாடி நின்னு போன படம்!
நடுவிலே எத்தனை படம் நடிச்சிருப்பீங்க! எப்படி நான் இந்தக் காட்சியில நடிச்ச புடவை நிறம் கூட நினைவில் வெச்சிருக்கீங்க!! நீங்க அபாரம்! என்ன கோபமிருந்தாலும் மன்னிச்சுக்குங்க’ என்றார் சவுகார்.
அவரை கைதூக்கிவிட்டபடி சிவாஜி சொன்னார்! ‘என் சுபாவம், கவனம் எல்லாமே நடிப்புத்தானேம்மா! இந்தப்படத்துக்கு வந்தால் இந்த கதாபாத்திரம்! அடுத்த படப்பிடிப்புக்கு போய் மேக்கப் போட்டால், அடுத்த கதாபாத்திரம்! இதுதானே என் பழக்கம்?’ என்றார் சிவாஜி!
சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பும், அதை புரிந்து கொண்ட சவுகாரும் பழைய தற்காலிக கோபத்தை மறந்தார்கள். அதுதான் அந்த காலத்து நட்சத்திரங்களின் தொழில் அர்ப்பணிப்பு! அந்த காலத்தவர்களுக்கும் பணம் தேவைதான்! ஆனால் அதையும் மீறி ஒரு தொழில் அர்ப்பணிப்பு இருந்தது!

Harrietlgy
9th May 2016, 10:50 PM
From Sudhangan FB

திருவருட்செல்வர்’ படம் வந்த அதே வருடம் சிவாஜிக்கு கிடைத்த ஒரு வித்யாசமான படம் என்பது இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கறுப்பு வெள்ளைப் படம்!
ஸ்ரீதருக்கும் முக்கோண காதல் கதைக்கும் மிகுந்த உறவு உண்டு.
அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்.
அப்படி ஸ்ரீதருக்கு ஏமாற்றம் தந்த படம்தான் சிவாஜி நடித்த ‘நெஞ்சிருக்கும் வரை.’
இந்த படத்தில் பலரும் மேக்கப் இல்லாமலேயே நடித்திருந்தார்கள்.
சிவாஜி இந்த படத்தில் ஓர் ஏழைத் தொழிலாளி!
அவருக்கு இரண்டு நண்பர்கள்.
அந்த நண்பர்கள் வேடத்தில் முத்துராமனும், வி.கோபாலகிருஷ்ணனும் நடித்திருப்பார்கள்.
தனக்கு அடைக்கலம் கொடுத்தவர் வீட்டுப்பெண்ணான கே. ஆர்.விஜயாவை விரும்புவார்.
ஆனால் கே.ஆர். விஜயாவோ முத்துராமனை விரும்புவார்.
உடனே, அனாதையாகிவிட்ட அந்த பெண்ணுக்கு ஓர் அண்ணனாகவே மாறி தன் நண்பன் முத்துராமனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்.
இந்த படம் சிவாஜிக்கும், ஸ்ரீதருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இந்த படத்தை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்த்ததற்கு காரணம் இசைதான்.
இந்தப் படத்தின் உண்மையான நாயகர்கள் எம்.எஸ். விஸ்வநாதனும், கவியரசு கண்ணதாசனும்தான்!
இசை மிஞ்சியதா அல்லது இசைத்தமிழ் மிஞ்சியதா என்கிற மாதிரி அத்தனை அற்புதமான பாடல்!
தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கும் வாழ்ந்தே திருவோம்.’
அதே போல் சிவாஜி கனவில் கே.ஆர். விஜயாவோடு பாடுவதாக அமைந்த டூயட் பாட்டான ‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம், சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ பாடலுக்கு இன்னும் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இரவு விடுதிகளில் தமிழ் மெல்லிசை கச்சேரி நடக்கும்.
அதில் தவறாமல் இந்த பாடல் இடம்பெறும்!
ஒரு நாளிதழை கொடுத்தால் அந்த செய்திக்கு கூட எம்.எஸ். விஸ்வநாதன் டியூன் போட்டு விடுவார் என்பார்கள்.
அதற்கு உதாரணம் இந்தப் படம்தான்!
ஒரு திருமண பத்திரிகைக்கு பாடல் அமைத்த ஒரே இசையமைப்பாளர் உலகத்திலேயே விஸ்வநாதனாகத்தான் இருப்பார்.
இந்த படத்தில் கே.ஆர்.விஜயா – முத்துராமனின் திருமண பத்திரிகையை வைத்துக்கொண்டு சிவாஜி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் இன்றும் பல திருமண வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம்!
அந்த பாடல்தான் ‘ பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ பாடல்!
ஓர் அழைப்பிதழில் தொடங்கி, அப்படியே திருமணத்தில் மணப்பெண் எப்படி நடந்து வருகிறாள் என்பதை வர்ணித்து, திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை வாழ்த்தி அந்த பாடல் முடியும்.
என்னவொரு கற்பனை கண்ணதாசனுக்கு?
‘மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை பெற கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர் கட்டினான் மாங்கல்யம்
மனை வாழ்க! துணை வாழ்க! குலம் வாழ்க!’ இந்த வரிகளை ரசிக்காத ரசிகர்களே அப்போது இல்லை என்றே சொல்லலாம்.
இந்த படத்தை இன்று ரசிகர்கள் நினைவில் வைத்திருந்தால் அதற்குக் காரணம் பாடல்கள்தான்.
அதே போல் சிவாஜியின் மிகையில்லாத நடிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட்!
அடுத்து அதே வருடம் வந்த இன்னொரு சிவாஜி படம் ‘பாலாடை.’
பீம்சிங் இயக்கத்தில் வந்த இன்னொரு ‘பா’ வரிசை படம் இது!
தனக்கு பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக தன் தங்கை கே.ஆர்.விஜயாவுக்கே தன் கணவர் சிவாஜியை திருமணம் செய்து வைப்பார் பத்மினி!
மிகவும் சிக்கலான கதைக் களம் இந்த படத்திலும் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக அமைந்திருந்தன!
1968–ல் பல படங்கள் வெற்றி பெற்றன. இந்த வருடம் முதலில் வந்த சிவாஜி படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வந்த ‘திருமால் பெருமை!’
இது பன்னிரண்டு ஆழ்வார்களில் சில ஆழ்வார்களை மட்டுமே எடுத்துக் கொண்டு எடுக்கப்பட்ட படம்!
முந்தைய ஆண்டு சைவர்களுக்காக ‘திருவருட்செல்வர்’ கொடுத்த நாகராஜன், அடுத்த ஆண்டு வைணவர்களுக்காக கொடுத்த படம்தான் ‘திருமால் பெருமை.’
அடுத்து வந்த படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காமெடி படம்.அதுதான் ‘கலாட்டா கல்யாணம்’.
ஒரு நட்சத்திர கலைவிழாவிற்காக சித்ராலயா கோபு எழுதிய ஒரு பதினைந்து நிமிட நாடகம்தான் ‘கலாட்டா கல்யாணம்’ கதை!
அந்த நாடகத்தின் கரு சிவாஜிக்கு பிடித்திருந்தது.
உடனே சிவாஜி பிலிம்ஸின் இன்னொரு நிறுவனமான ராம்குமார் பிலிம்ஸ் பேனரில் எடுத்த படம்தான் இது!
தன் முதல் படமான ‘அனுபவம் புதுமை’ படத்தை எடுத்திருந்து தோல்வியில் இருந்தார் இயக்குநர் சி.வி. ராஜேந்திரன்!
அவர் இயக்குநர் ஸ்ரீதரின் நெருங்கிய உறவினர்!
அதே சமயம் அவருடன் ‘வெண்ணிற ஆடை’ படக் காலத்திலிருந்து அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உண்டு!
‘வெண்ணிற ஆடை’ படம்தான் ஜெயலலிதாவின் முதல் படம்!
‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சி.வி. ராஜேந்திரன்தான் இயக்க வேண்டுமென்று சிவாஜி உறுதியாக இருந்தார்.
உடனே சி.வி. ராஜேந்திரன் சிவாஜியிடம் ‘இந்தப் படத்தில் ஏன் உங்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்கக்கூடாது ?’ என்று கேட்டவுடன் சம்மதித்தார் சிவாஜி!
இந்த படம்தான் சிவாஜி – ஜெயலலிதா ஜோடி சேர்ந்த முதல் படம்!
அதற்கு முன்பு வந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருந்தார் ஜெயலலிதா!
இந்த படத்தில், டைட்டில் வருவதற்கு முன்பே படம் ஒரு பாடலோடுதான் துவங்கும். சி.வி. ராஜேந்திரனும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். சி.வி. ராஜேந்திரன் பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிற்கு உண்டு!
அதனால் படத்தின் முதல் காட்சியே ஒரு நல்வரவு பலகையோடு கேமரா பின்னோக்கி வரும்!
கேமராவை நோக்கி ஜெயலலிதா ஓடிவந்து சாத்தனூர் அணைக்கட்டின் மேல் படிக்கட்டில் இருக்கும் சிவாஜியை நோக்கி ஓடிப்போவார்!
அவரை அப்படியே அணைத்து அவர் முதுகுக்குப்புறமாக கேமராவை பார்த்து ‘ வந்த இடம் நல்ல இடம்! வரவேண்டும் காதல் மகராணி’ என்று ஆரம்பித்தவுடன், அது ஜெயலலிதா தன்னுடன் ஜோடி சேர்ந்ததற்கான வரவேற்பு என்பதை புரிந்து கொண்டு ரசிகர்களின் விசில்கள் பறக்கும்.
இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியிருந்தவர் வாலி!
இந்த வருடம் வந்த முதல் படம் புராணம் என்றால், அடுத்த படம் முற்றிலுமாக மாறியிருந்த படம்தான் ‘கலாட்டா கல்யாணம்’!

Harrietlgy
9th May 2016, 10:54 PM
From Sudhangan FB,

தனக்கு திருநாவுக்கரசர் பாத்திரம் கிடைத்தது கூட பரமாச்சார்யாளின் அருள்தான் என்று சிவாஜி நெகிழ்ந்து சொன்னார்.
அந்த திருநாவுக்கரசர் வேடத்தில் சிவாஜி திரையில் தோன்றிய போது எழுந்த கைதட்டல்களை எண்ணவே முடியாது.
ஒவ்வொரு நடைக்கும், ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டல்கள்தான்!
அப்பூதி அடிகள் வீட்டுக்கு வந்து அந்த வீட்டு திண்ணையில் அவர் உட்காருகிற பாணிக்கே தனியாக கைதட்டுவார்கள்.
அன்றைய இயக்குநர்களுக்கு சிவாஜி என்பவர் ஓர் அட்சய பாத்திரம்!
அந்த பாத்திரத்தில் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்!
சிவாஜி எந்த கதாசிரியரை பார்த்தாலும் முதலில் கேட்பது ‘ ஏம்பா! எனக்கெல்லாம் கதை சொல்ல மாட்டியா?’ என்பதுதான்.
அதே சமயம், சக நடிகர்களை மதிக்கும் பாங்கை அவரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார். இங்கே இன்னொன்றையும் பதிவு செய்ய வேண்டும். உலகத்திலேயே முதன்முதலாக ஒரு நடிகன் சட்டமன்றத்தில் நுழைந்தது எஸ்.எஸ். ஆர். மூலமாகத்தான். 1962ல் பெரியகுளம் தொகுதியிலிருந்து அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அதற்குப் பிறகுதான் அமெரிக்க அதிபர் ரீகன் நடிகராக இருந்து ஜனாதிபதியானார். இதே எஸ்.எஸ். ஆர். ராஜ்யசபா உறுப்பினர் ஆனதும் சிவாஜி அவருடைய வீட்டுக்குப் போனார்.
‘ ஏண்டா ராஜு! நீயெல்லாம் டில்லிக்கு போய்ட்டா நான் யார் கூட நடிக்கிறது? நீ என்னோடு நடிக்கும்போதுதாண்டா என் நடிப்புக்கே ஒரு மதிப்பு வருது’ என்று வெளிப்படையாக சொன்னவர் சிவாஜி.
இதை சிவாஜி என்னிடம் சொல்லவில்லை. எஸ்.எஸ். ஆர். ‘நான் வந்த பாதை’ என்ற அவருடைய சுயசரிதையில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் சிவாஜி ஒரு விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
‘ என்னை எல்லோரும் பெரிய நடிகன்னு சொல்றாங்க. ஆனால் நான் நடிக்க பயப்படுற பல நடிகர்கள் நம்ம தமிழ் சினிமாவில் இருக்காங்க. உதாரணமாக எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதாண்ணேன், எஸ்.வி. சுப்பையா, டி.எஸ். பாலையா, சந்திரபாபு, நாகேஷ், அதே மாதிரி நடிகைகள்ள கண்ணாம்பா, பானுமதி’ என்றார்.
மற்ற நடிகர்கள் நன்றாக நடித்தால்தான் அதை மிஞ்சி நாம் நடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தவர் சிவாஜி!
தன்னுடைய பல படங்களில் மற்றவர்களின் நடிப்பை ரசித்து பாராட்டியவர் சிவாஜி!
தமிழில் சிவாஜி நடித்த பல படங்கள் வேற்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
பல உலகப்புகழ் இந்தி நடிகர்கள் சிவாஜி நடிப்பை கண்டு வியந்து சில கதாநாயகர்கள் எங்களால் இப்படி நடிக்க முடியாது என்று சொல்லி அதனால் அந்தப் படங்களை நிராகரித்த கதாநாயகர்கள் உண்டு! சிவாஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் அவரது உச்சரிப்பு!
தமிழை அவர் உள்வாங்கிக்கொண்டு பேசும் வசனங்கள், அதே மாதிரி கரடுமுரடான தமிழ் பாடல்களை, பாசுரங்களை, தேவார பதிகங்களை அவரைப் போல் உள்வாங்கி வாயசைப்பவர்கள் உண்டா என்பது சந்தேகம் தான்.
உதாரணமாக, இந்த திருநாவுக்கரசர் வேடத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
சிவாஜி வசனம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!
ஆனால், கடினமான பாடல்களுக்கு அப்படியே ஏதோ இவரே திரையில் பாடுவதைப் போல உணர்ச்சி பொங்க வாயசைப்பதுதான் அவருடைய மிகப் பெரிய சிறப்பு என்றே சொல்லலாம்.
முதலில், பெரிய புராணத்தில் திருநாவுக்கரசர் எப்படி இருந்தார் என்பதை தெரிந்து கொண்டால்தான் சிவாஜியின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சமண மன்னனை சைவத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர்! அவர் நம் சமண மதத்தை இழித்துப் பேசுகிறார் என்றெல்லாம் பல்லவ மன்னனிடம் போய் சொல்வார்கள்!
திருநாவுக்கரசரை இழுத்து வரச்சொல்வான் மன்னன்!
மன்னனின் படைகள் திருநாவுக்கரசரை சூழ்ந்து கொள்ளும்.
ஓரமைச்சன் திருநாவுக்கரசர் அருகே சென்று, ‘நம் அரசர் உம்மை அழைத்து வருமாறு எங்களை அனுப்பினார். வாரும்’ என்றான்.
அஞ்சுதல் இல்லாத திருநாவுக்கரசு அடிகள் அரசன் ஆணை வழி வந்த அமைச்சனை நோக்கி,
‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம்
நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை
நாமார்குங் குடியல்லாத்
தன்மை யான
சங்கரனற் சங்கவெண்
குழையோர் காதிற்
கோற்கே நாமென்று
மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச்சே
வடியிணையே குறுகினோமே’
என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். இத்தனை கடினமான பாடல்களை பாடியவர் திருநாவுக்கரசர்.
இவருடைய ஒரு பாடலை, ‘திருவருட்செல்வர்’ படத்தில் வைத்திருப்பார்கள்.
அதற்கு கே.வி. மகாதேவன் அருமையாக இசையமைத்து டி.எம்.எஸ். பாடியிருப்பார்.
ஆனால் இந்த பாடல் பதிவு என்பது ரிக்கார்டிங் தியேட்டரில் நடந்தது! ஆனால், சிவாஜி விஷயம் அப்படியில்லை! வெளிப்புற படப்பிடிப்பு! பலர் பார்க்க பின்னால் வரும் பாடலுக்கு திருநாவுக்கரசரான சிவாஜி வாய் அசைக்க வேண்டும்! அதைப் படத்தில் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது மாதிரி இருக்கும்!
அந்த பாடல் இதுதான்!
‘மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலை!’
இத்தனை கடுமையான வரிகளுக்கு சிவாஜி கொடுத்த வாயசைப்பெல்லாம் பலரை அன்று பிரமிக்க வைத்தது!
திருநாவுக்கரசர் வாழ்க்கையை பெரிய புராணத்தில் படித்தால் பல சாகசங்கள் இருக்கும்!
ஆனால், அதையெல்லாம் கொண்டு வந்தால் சிவாஜிதான் தெரிவார்!
ஆனால், அப்பரான திருநாவுக்கரசர் பாத்திரம் சிவாஜி மூலமாக ரசிகர்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்பதால் ஏ.பி.நாகராஜன் அந்த சாகச சம்பவங்களை தவிர்த்து விட்டு, திருஞான சம்பந்தர், அப்பர், அப்பூதியடிகள் சம்பவங்களை மட்டுமே வைத்து படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கினார்.
சிவாஜி சொன்னார், ‘பாசமலர்’ படத்திற்கு பிறகு நானும் சாவித்திரியும் ஜோடியாக நடித்தால் எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதே போல் இந்த திருநாவுக்கரசர் பாத்திரம் ஏற்று நடித்த பின் என்னை சமூக படங்களில் ஏற்றுக்கொள்வார்களா என்று நான் பயப்படும் அளவிற்கு இந்த கதாபாத்திரத்தை அப்படி ரசித்தார்கள்.’
ஆனால் ‘ பாசமலர்’ அனுபவம் அவருக்கு ‘திருவருட்செல்வ’ரில் தொடரவில்லை.
அதற்கு பிறகு அவர் பல வித்தியாசமான வேடங்களில், சமூக படங்களில் கலக்கினார் என்பதுதான் திரை சரித்திர உண்மை.
அதற்கு சிறந்த உதாரணம் ‘திருவருட்செல்வர்’ படம் வந்த அதே வருடத்தில் வந்த இன்னொரு மிக வித்தியாசமான சிவாஜி படம்.
அது என்ன படம் ?

Russellsmd
9th May 2016, 10:54 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160502-WA0001-2-1_20160509224413538_zpsy2znymrk.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160502-WA0001-2-1_20160509224413538_zpsy2znymrk.jpg.html)

பச்சை விளக்கு- எழுத்துப் பயணம் -1


அணிந்திருக்கிற கருப்புத் தொப்பி தலையோடு அழகாகப்
பொருந்தி விடுவதைப் போலவே, அந்த "சாரதி" வேடமும் நடிகர் திலகத்தோடு
"கிச்"சென்று பொருந்தி விடுகிறது.

நடிகர் திலகம் என்ற உயரிய
நடிப்புக் கலைஞனும், பீம்சிங்
என்கிற இயக்குநரும் கொண்டிருந்த புரிதல் மிகுந்த
நட்பு, திரையிலும் பார்த்துணர
முடிகிற புனிதமாயிருக்கிறது.

வைத்தியமில்லாத ஒரு கொடிய வியாதிக்கு அன்னையைப் பறிகொடுத்துப்
பரிதவித்து, தாயன்போடு
நெருங்கும் வேலைக்காரியை
அன்னையாக்கிக் கொண்டு,

அந்த வேலைக்காரியின்
சின்னஞ்சிறு மகளைத் தன்
தங்கையாக்கிக் கொண்டு,

குடும்பம் விளங்க ஒரு குணவதியைத் தன் இல்லாளாக்கிக் கொண்டு,

புத்தம் புதிய வாழ்க்கைக்குள்
நுழைகிற புது நாளில் பெற்றவளைப் போல பேணி
வளர்த்த இரண்டாம் தாயும்
இறந்துபடும் கொடுமைக்கு
கதறிக் கொண்டு,

அழுதுறங்கும் உடன்பிறவாத் தங்கையை சாவுகளைச் சாகடிக்கிற ஒரு மருத்துவராக்க வேண்டும் என்கிற இலட்சியம் கொண்டு,

தன் இலட்சியம் நிறைவேறிக்
கனியும் வரைக்கும் கட்டில்
சுகம் வேண்டாமென்று
மனைவியிடம் கெஞ்சிக் கொண்டு,

உடலாலும், உள்ளத்தாலும் தனக்கும், தன் நல்லது கெட்டதுகளுக்கும்
பக்கத்திலேயே இருக்கிற
நண்பன் ஜோசப்பிடம் உயரிய
நட்புக் கொண்டு,

வயதான தந்தை, ஒற்றைத் தம்பி, பண்பின் இருப்பிடமான மனைவி, உயிரின் உயிரான
தங்கை எல்லோரின் மீதும்
உண்மையான அன்பு கொண்டு,

நல்லவற்றிற்கும் தனக்கும்
கொள்ளை தூரம் வைத்திருக்கிற உதவாக்கரை
சித்தப்பா மேல் நிறைய கோபம்
கொண்டு,

ஒழுக்கமான வளர்ப்பு கொண்டு,

தங்கள் குடும்பத்தின் மீது
அக்கறை மிகக் கொண்ட
பெரியவர் பொன்னம்பலத்தின்
மீது மட்டற்ற மரியாதை
கொண்டு,

மருத்துவருடையில் பார்க்கத்
துடித்திருந்த தங்கையை,
மணக்கோலத்தில் பார்க்க
வேண்டிய சூழலுக்காக வருந்திக் கொண்டு,

தங்கையை மணந்தவன்
நல்லவனென்பதால் அவன்
மீது பேரன்பு கொண்டு,

தங்கை மீண்டும் படிக்க அவள்
கணவனே சம்மதித்தது கண்டு
ஆனந்தம் கொண்டு,

தங்கையின் அப்பாவிக் கணவன் பொல்லாதவர்களின்
சூழ்ச்சியால் சிறை செல்வது
கண்டு கலங்கிக் கொண்டு,

இரண்டு உயிர்களைப் பழிவாங்க, எண்ணற்ற உயிர்களைச் சுமந்து செல்லும்
ரயிலுக்கு வெடி வைக்கும்
தீயவர்களின் சதி முறிக்கும்
கடமை கொண்டு,

விரதம் முடித்து மழலைச் செல்வம் தர மனைவி வலியோடு துடித்திருக்க..
தன்னுயிரைப் பெற்றுத் தரும்
மனைவியையும் விட்டு விட்டு
ஏராளமானோரின் இன்னுயிரே
முக்கியமென்று வேகம் கொண்டு,

தீமை தடுத்து, தேசம் காக்கும்
திடம் கொண்டு,

அழிக்கச் சிதறிய வெடிக்குத்
தன் தியாகத் திருவுருத்தையே
சிதைத்துக் கொண்டு...

நொடிக்கு நொடி மாறும் ஆயிரம் பாவங்களுக்கும்
உரியதாய் தன் முகத்தை மாற்றிக் கொண்டு,

இத்தனை அற்புதமாய் எங்கள்
நடிகர் திலகம் போல் நடிக்க
யாருண்டு... ரயிலோடு எங்கள்
கவலைகளையும் ஓட்டும்
சாரதியாய் வேடங் கொண்டு?

( ...தொடரும்... )

Harrietlgy
9th May 2016, 10:57 PM
From Sudhangan FB

திருவருட்செல்வர்’ படத்தில், அடுத்த காட்சியாக ஏ.பி. நாகராஜன் நாயன்மார் கதைகளில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரத்தில்தான் அவருடைய மேன்மைத்தனம் பளிச்சிடும்.
குழந்தையாக இருந்த போது பார்வதிதேவியிடம் ஞானப்பால் பருகிய குழந்தை, திருஞானசம்பந்தர்!! இவரை திருவிளையாடற்புராணத்தில், ஆளுடைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். அதே போல் திருவிளையாடற் புராணத்தில் இன்னொரு முக்கியமானவர், திருநாவுக்கரசர்! இவருடைய இயற்பெயர் மருனீக்கியார்! ஒரு பல்லவ மன்னனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்!
சுண்ணாம்பு கொப்பரையில் போடப்பட்டார்! யானையை விட்டு மிதிக்க சொன்னார்கள்! விஷம் கொடுத்து பார்த்தார்கள்! ஆனால் சிவனின் அருளால் அவர் உயிர் பெற்றார்.
வயதில் முதிர்ந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரையும் இணைத்தே காட்சிகளை அமைத்திருந்தார் ஏ.பி. நாகராஜன்!
இதில் நன்றாக கவனித்தால் ஏ.பி. நாகராஜன் தன் ஆரம்பகால படங்களிலிருந்தே சிவாஜி கணேசன் என்கிற ஒரு சகலகலாவல்லவ நடிகரை நம்பிய தன் திரைவாழ்க்கையை நகர்த்திச் சென்றது தெரியவரும்!
ஆரம்ப காலத்தில் சிவாஜி நடித்த படம் ‘சம்பூர்ண ராமாயணம்’. இந்த படத்தில் ராமராக நடித்தவர் என்.டி. ராமாராவ்!
ஆனால் படத்தில் பரதன் வேடத்திற்கு சிவாஜிதான் பொருத்தமானவர் என முடிவு செய்தார் ஏ.பி. நாகராஜன்!
அந்த படத்திற்கு திரைக்கதை –வசனத்தை நாகராஜன்தான் எழுதியிருந்தார். அதே போல் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்கிற சமூகபடத்தில் சிவாஜி கணேசனை கொங்கு தமிழ் பேசி நடிக்க வைத்தவரும் ஏ.பி. நாகராஜன் தான்!
அதே போல், அவர் புராணப்படங்களுக்கு கதையை யோசிக்கும் போதே சிவாஜியை வைத்துத்தான் ஆரம்பிப்பார்! அந்த சிந்தனையின் உச்சக்கட்டம்தான் ‘திருவருட்செல்வர்’ படம்.
இதில் திருகுறிப்புத் தொண்டன், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார், அப்பர் சுவாமிகள் என்று நான்கு கதாபாத்திரங்கள் சிவாஜிக்கு!
எல்லா பாத்திரங்களிலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தாலுமே, இந்த திருநாவுக்கரசர் வேடத்தை பார்த்த அந்த நாளில் வியக்காதவர்கள் இல்லை!
அந்த ஒப்பனையோடு அவரை பார்த்தவர்கள் அவரை திருநாவுக்கரசராக பார்க்கவில்லை.
காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளாகவே கண்டார்கள்.
அந்த ஒப்பனை, அவர் அந்த பாத்திரத்திற்காக எடுத்துக் கொண்ட சிரத்தை, ஒரு வயோதிகர் எப்படி நடப்பார் என்பதற்கு உதாரணம் காட்டிய ஒரு கதாபாத்திரம் அது!
கமல்ஹாசன் பின்னாளில் பத்து வேடங்கள் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார்.
கமல் காலத்தில் ஒப்பனைக்கலை நன்றாக வளர்ந்திருந்த காலம்.
மேலும், வெளிநாட்டிலிருந்து புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர்களை கொண்டு வர முடியும்.
சிவாஜி அப்பராக நடித்த காலத்தில் அந்த வசதி கிடையாது!
‘திருவருட்செல்வர்’ படத்தில் ஒரு சூரியோதய காட்சி– அதுவும் கடற்கரையில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அதிகாலையில் நிற்பதாக காட்சி!
இந்தப் படத்தைப் பற்றி 1986ம் வருடம் நான் ஜூனியர் விகடன் பத்திரிகையில் அவரை எடுத்த பேட்டியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.
இந்த திருநாவுக்கரசர் வேடத்திற்கு ஒப்பனை செய்ய 4 மணி நேரமாகுமாம்!
அப்படியானால், அந்த அதிகாலை காட்சி வருகிறதே?
‘ஆமாம், ராத்திரி ஒரு மணிக்கு மேக்கப் போட உட்காருவேன்.
முழு மேக்கப்போடு அந்த காவி துணியை கட்டிக்கிட்டு கடற்கரையில் சூரியோதயத்திற்கு முன்பாக முதல் ஆளாக இருப்பேன்’ என்றார்.
சரி, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது யார்? ‘காஞ்சி பரமாச்சாரியாள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தீர்கள்?’
‘நான் முன்பே சொல்லியிருக்கிறேன், ஒரு நடிகனுக்கு நிறைய கவனிக்கும் திறமை (observation) வேண்டும் என்று. நான் என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் சூழ்நிலை எல்லாவற்றையும் நன்கு கவனிப்பேன். நான் அப்பராக வேடம் போடும் போது ஒரு வயதான சிவனடியாருக்குரிய தோற்றம், நடையுடை பாவனை போன்றவற்றை என் நடிப்பில் காட்ட வேண்டுமல்லவா?
எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்’ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் கூப்பிட்டு அனுப்பியதாக சங்கர மடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவர் மைலாப்பூரில் இருந்த ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி, நான்கு பேரும் சென்றோம். எங்களை உள்ளே ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஓர் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறு குத்துவிளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாக பார்த்துக்கொண்டே வந்தார். மெல்ல கீழே உட்கார்ந்து, கையை புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.
‘நீதானே சிவாஜி கணேசன்?’ என்றார்.
‘ஆமாங்கய்யா! நான்தான்’ என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.
என் குடும்பத்தினரும் அவரை வணங்கினார்கள்.
அப்போது அவர் ‘உன்னை பார்த்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. ‘யானை நன்றாக இருக்கிறதே ? யாருடையது?’ என்றேன்.‘சிவாஜி கொடுத்தது’ என்றார்கள்.
திருச்சி சென்றிருந்தேன்.
அங்கு திருவானைக்கா கோயிலுக்குப் போனேன்.
அங்கும் யானை மாலை போட்டது!
‘யானை அழகாக இருக்கிறது! யாருடையது?’ என்றேன்.
‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள்.
தஞ்சை புன்னை மாரியம்மன் கோயில் சென்றிருந்தேன்.
அங்கேயும். யானை மாலை போட்டது.
‘இது யாருடையது?’ என்றேன்.
‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
அவர்கள், பப்ளிசிட்டிக்காக சில சமயம், கோயில்களுக்கு பணம்தான் நன்கொடையாக கொடுப்பார்கள்.
ஆனால் யானையை கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. அதனால் உன்னைப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானை பிரார்த்தனை செய்கிறேன்,
என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
அப்போது என் மனம் எப்படி இருந்திருக்கும்? எத்தனை அனுக்கிரகம்! நினைத்துப் பாருங்கள் (சொல்லும்போதே சிவாஜியின் கண்களில் நீர் முட்டியது.) அந்த கண்ணீரில் நடிப்பில்லை.
பொதுவாக எனக்கு வாழ்க்கையில் பயமே கிடையாது. காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற பெரிய முனிவர்களின் ஆசி எனக்கு இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்? இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்து போனது. இந்த சந்திப்பைப் பற்றியே நான் பல நாட்கள் யோசித்துக்கொண்டிருந்தேன்.
இந்த திருநாவுக்கரசர் பாத்திரத்தை என்னை நம்பி இயக்குநர் ஒப்படைத்தது கூட அவர் ஆசிதானோ?

RAGHAVENDRA
10th May 2016, 06:53 AM
பரணி
சுதாங்கன் அவர்களின் நடிகர் திலகம் பற்றிய தொடர்களுக்கு உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
10th May 2016, 06:54 AM
பரணி சார்
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

RAGHAVENDRA
10th May 2016, 06:55 AM
ஆதவன் ரவி
உங்களை எப்படிப் பாராட்டுவது என்கிற வித்தையையும் தாங்கள் தான் எங்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
வார்த்தை முட்டுகிறது..
எனினும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
10th May 2016, 07:07 AM
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவு தினம் சில தினங்களுக்கு முன் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி ஒரு நினைவுக்கட்டுரையில் நமது நடிகர் திலகத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

http://blogs.timesofindia.indiatimes.com/wp-content/uploads/2016/05/09_05_2016_006_004_012.jpg

அதற்கான இணைப்பு - http://blogs.timesofindia.indiatimes.com/tracking-indian-communities/all-the-worlds-a-stage-tamil-nadu-too/

RAGHAVENDRA
10th May 2016, 07:08 AM
ரத்த திலகம் படத்திலிருந்து தலைவரின் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தின் காணொளி

https://www.youtube.com/watch?v=lSAcVpljPE0

RAGHAVENDRA
10th May 2016, 07:09 AM
அதே ஒத்தெல்லோ நாடகம் அன்பு படத்திலிருந்து

https://www.youtube.com/watch?v=QJy4pQ66Da8

Gopal.s
10th May 2016, 08:00 AM
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.

நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.

monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.

Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..

ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )

பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.

Agecraft skills மற்றும் stamina .

பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.

பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.

மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.

என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.

larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.

shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.

அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.

உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.

நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.

உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.

முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.

ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.

voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.

இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.

Gopal.s
10th May 2016, 08:04 AM
அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.

ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)

Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)

ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.

மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.

ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.

முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.

சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.

ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.

Russellsmd
10th May 2016, 08:56 AM
பச்சை விளக்கு-
எழுத்துப் பயணம் - 2


ஒரு விஷயம் குறிப்பிடுவது
அவசியமென்று நினைக்கிறேன்.

பெரும்பாலும்
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள்,
நடிகர் திலகத்தைப் பற்றி
மிக ஆர்வமாய்
( நேரடியாகவோ, WhatsApp குழுமங்களிலோ) உரையாடுவார்கள்.

நிறைய பேசப்படும். நடிகர் திலகம் நிறைய வியக்கப்படுவார்.

அவர்களுக்குள் விஷயங்கள் தீர்ந்து,நீண்ட நேர உரையாடல்
முடிவடைகிற நிமிஷத்தில்
ஒருத்தர் ஆரம்பிப்பார்...
"அவரைப் பற்றி சொல்லிக்
கொண்டே போகலாம்.நாள்
போதாது" என்று.

"ஆமாம்" போடுவார் இரண்டாமவர்.

மூன்றாவது நபர் முடிப்பார்...
"என்ன சொல்ல...? அவர் ஒரு
பிறவி நடிகர்".

இந்த "பிறவி நடிகர் "எனும்
வார்த்தை எனக்கு அலர்ஜி.
அதிர்ச்சி.

ஆழ்ந்து ரசித்து, ஆர்வமாய்
விவாதிப்போர் நடிகர் திலகத்தின் மீது கொண்டிருக்கிற மதிப்பில்,
அதிகபட்ச வியப்பில் கிளம்பி வருகிற வார்த்தையே அந்த
"பிறவி நடிகர்" என்பதை
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

நம்மைப் போல் சாதாரண
மனிதப் பிறப்பெடுத்து, நம்மைப்
போல் இன்ப,துன்பங்களோடு
வளர்ந்து, நம்மைப் போல்
தனக்கென ஒரு தொழில் தேர்ந்து, அந்தத் தொழிலைத்
தெய்வமெனக் கருதிப் போற்றி,
நம்மாலெல்லாம் எழும்பிப்
போக முடியாத ஒரு உயரத்தை
அடைந்தவர்... அய்யா நடிகர்
திலகம்.

விடாமுயற்சி, உழைப்பு, தொழில்பக்தி, முன்னேற்றம்,
வெற்றி... எனப் போகிறது,
அய்யாவின் கலை வாழ்க்கை.

"பிறவி நடிகர்" என்கிற சோம்பலான வார்த்தை
அய்யாவுக்கு சரியானதாய்
இருக்காது.
-------------------------------

"பச்சை விளக்கு" படத்தின்
துவக்கக் காட்சி.

தன்னுடைய திருமண தினத்தன்றே தன்னை வளர்த்து
ஆளாக்கிய வளர்ப்பு அன்னை இறந்து போகிறாள். அந்த
அன்னையின் அன்பு மகளை
அநாதைப் பெண்ணாகப்
பார்க்காமல் தங்கையாகவே
வரிந்து கொள்வதும், அந்தத்
தங்கையை கொடிய மரணங்களைத் தடுக்கும் மருத்துவராக்க வேண்டும்
என்கிற உறுதியேற்பும்..
எங்கே..? மனைவியின் முன்னிலையில், முதலிரவு
அறைக்குள் நடக்கிறது.

தங்கையின் எதிர்காலம் குறித்த
தன் கனவு நனவாகும் வரை
இல்லற சுகம் வேண்டாமென்று
மனைவியைக் கேட்டுக் கொள்ளும்போதும், அவன்
சொல்லத் தயங்குவதைப் புரிந்து கொண்ட அந்த பண்பான மனைவி அதற்கிசைந்ததும் அவளது கரம் பற்றிக் கொண்டு
நன்றியுணர்வில் கசியும் போதும், நடிகர் திலகத்தின்
குரலைக் கவனியுங்கள்.

காட்சியைப் புரிந்து கொண்ட
ஒரு அற்புதக் கலைஞனின்
குரல். மென்மைக் குரல்.
மேன்மைக் குரல்.

அந்தக் குரலை அப்படியே
நினைவுகளில் சுமந்து கொண்டு
தொடர்ந்து வாருங்கள். கொஞ்ச
நேரம் கழித்து ஒரு ரயில் காட்சி. ரயிலைச் செலுத்திக்
கொண்டே, பின்னால் நிற்கும்
நண்பனின் முகம் பாராமல்,
அத்தனை போட்டிகளிலும்
வென்று பரிசு பெறப் போகும்
தங்கையின் பெருமையை,
காதடைக்கும் பேரிரைச்சல்
மீறி கத்திக் கத்திப் பேசும்
காட்சி. கத்தலிலும் கனவு
நிறைவேற்றிய தங்கைக்கான
நன்றி வைத்திருக்கும் இந்தக்
குரலையும் கவனியுங்கள்.

"பிறவி நடிகர்" விமர்சனம் மறந்து,ஒரு கதாபாத்திரத்தை, குரலைக் கொண்டே நமக்கு எளிமையாய் விளங்க வைக்கிற நடிகர் திலகத்தின் பேருழைப்பை
வணங்குங்கள்.

(...தொடரும்...)

RAGHAVENDRA
10th May 2016, 09:27 AM
ஆதவன் ரவி
பிறவி நடிகர் என்ற சொல்லைப் பற்றிய தங்கள் எண்ணம் புரிகிறது.
நடிப்பதற்கென்றே பிறந்தவர் என்ற பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாமே...
உருவகமாக எடுத்துக் கொள்வோம்..
சொல்பவர்கள் இலக்கணமறிந்து சொன்னாலும் எதேச்சையாகச் சொன்னாலும் நாம் அதை உருவகப்படுத்திக்கொள்வதில் தவறில்லையே..

Murali Srinivas
10th May 2016, 10:39 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

பல ஊர்களிலும் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழா நடைபெற்றபோதும் சென்னையில் விழா பல காரணங்களால் தள்ளிப் போனது. தமிழகத்தின் பல இடங்களிலும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்த காரணத்தினால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையாக இருந்தது.

இந்த நேரத்தில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த ராமண்ணாவின் சக்தி லீலை தள்ளிப் போடப்படுகிறது என்ற செய்தி வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் ஆவதாக இருந்த சக்தி லீலை தள்ளிப் போடப்படுவதால் பட்டிக்காடா பட்டணமாவே தொடரும் என்ற ஒரு தகவலும் வந்தது. சக்தி லீலை தீபாவளியன்று [நவம்பர் 4] வராது எனபது உண்மைதான். ஆனால் நவம்பர் 10 வெள்ளியன்று வெளியீடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் அறிவிக்கவே, நவம்பர் 4 முதல் 9 வரை உள்ள 6 நாட்களுக்கு சென்ட்ரல் சினிமாவில் துஷ்மன் இந்திப் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

வசந்த மாளிகை தொடர்ந்து வெற்றி பேரிகையை முழங்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று நடிகர் திலகத்தின் புதிய படம் வெளிவராததால் அன்று காலை நியூசினிமாவில் கூட்டம் அலை மோதியது. 6-வது வாரம் சனிக்கிழமை காலைக்காட்சிக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டதை பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவும் தவப்புதல்வனும் ஷிப்ட் செய்யப்பட்டு ஓட சென்னையைப் பொறுத்தவரை வசந்த மாளிகையும் தவப்புதல்வனும் ரிலீஸ் தியேட்டர்களில் தொடர, பட்டிக்காடா பட்டணமா ஷிப்டிங்கில் தொடர்ந்தது.

நடிகர் திலகத்தின் அடுத்த ரிலீசாக வெளியாவதாக இருந்த நீதியின் ஒரிஜினல்தான் துஷ்மன் என்பதை தெரிந்திருந்த நானும் என் கஸினும் தீபாவளியன்று மாலை காட்சிக்கு துஷ்மன் பார்க்க சென்ட்ரல் சினிமாவிற்கு போகிறோம். நல்ல கூட்டம். ஆனால் படம் பெரிய அளவிற்கு எங்களை impress பண்ணவில்லை. இந்த கதை தமிழ் சினிமாவிற்கு எப்படி சூட் ஆகும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் நடிகர் திலகம், பாலாஜி சிவிஆர் கூட்டணி இருப்பதால் அதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. மாப்பிளையை பார்த்துகடி மைனா குட்டி பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை பத்திரிக்கையில் படித்திருந்தோம். அது போல் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டதும் செய்தியாக வந்திருந்தது.

இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.

அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!

நான் முன்பே குறிப்பிட்டது போல தமிழக அரசியல் வானிலும் பல்வேறு விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். அதன் எதிரொலியாக பல சம்பவங்கள் நடந்துக் கொண்டிருந்தன. அன்றைய ஆட்சியின் முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்களை அன்றைய ஆளுநராக இருந்த கே.கே.ஷா அவர்களிடம் எம்ஜிஆர் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சி தலைவர் M. கல்யாணசுந்தரம் அவர்களும் கொடுக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த புகார்களை நான் தமிழக அமைச்சரவையிடம்தான் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்க முடியும் என்று ஆளுநர் சொல்லிவிட அதனால் அவரிடம் கொடுத்தை திரும்பபெற்று டெல்லி சென்று அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரியிடம் அளித்தனர். ஆனால் அங்கிருந்தும் அது தமிழக அமைச்ச்சரவையிடம்தான் வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம். இதே நேரத்தில்தான் (1972 நவம்பர் மத்தியில்) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார் இதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலையால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
10th May 2016, 01:01 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13179002_1112848905432447_5997659037925114679_n.jp g?oh=cb65cfc784a41c8a4860adae4e560c0d&oe=57997D47

HARISH2619
10th May 2016, 01:31 PM
திரு முரளி சார்,
பெங்களூரில் கடந்த இரண்டு மாதமாக எங்களை வாட்டி வதைத்த வெயில் கொடுமை கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மாலை நேர மழையால் சற்று தணிந்துள்ளது .அந்த மழை தந்த சந்தோஷத்தை விட கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பிறகு தாங்கள் மீண்டும் பதிவிட்ட இந்த தொடர் .நன்றி .

KCSHEKAR
11th May 2016, 02:32 PM
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.

டியர் கோபால் சார்,

ஒரு சிவாஜி ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதமுடியும். படிப்பதும்கூடத்தான்... சபாஷ்.....

KCSHEKAR
11th May 2016, 02:35 PM
டியர் முரளி சார்,

சில நாட்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தின் காரணமாக திரியைப் பார்க்கவில்லை. தற்போதுதான் பார்த்தேன். தங்களுடைய சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவு அருமை. சிறிது நாட்கள் கடந்து வந்தாலும், தங்களின் எழுத்துக்களின், வர்ணனையின் வலிமை, அப்பப்பா!!! நன்றி.

KCSHEKAR
11th May 2016, 02:36 PM
டியர் வாசு சார்,

முரளி சாரின் சிவகாமியின் விமர்சனப் பதிவுக்கு வலிவூட்டும் விதத்தில் தாங்கள் பதிவிட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் அருமையான புகைப்படப் பதிவுகள் சிறப்பு. நன்றி.

KCSHEKAR
11th May 2016, 02:39 PM
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் பச்சை விளக்கு
பார்க்கப் போன இன்றைய மதியப் பொழுது,மகிழ்வான, நெகிழ்வான தருணம் எனக்கு.
டியர் ஆதவன் ரவி சார்,

தங்களுடைய கவிதை, நடிகர்திலகத்தைப் பற்றிய வர்ணனை, எழுபது வயது முதியவரை மட்டுமல்ல, ஏழு வயது சிறுவனையும் கவரும். இடையிலிருக்கும் எங்களையும் கவரும். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

தங்களுக்கு வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....

RAGHAVENDRA
12th May 2016, 12:32 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13220985_1113726878677983_5697514179900242469_n.jp g?oh=fd9a80bea0ebe4dbb2bb3c36cb2f91c1&oe=579C6690

Gopal.s
12th May 2016, 07:57 AM
முரளி,

தங்கள் தமிழை விட ஆங்கிலம் அழகானது. ஆனாலும் தமிழில் தாங்கள் சினிமா,அரசியல் இணைத்து போடும் பதிவுகள் படிக்கும் சுகமே அலாதி.ஸ்ரீதர் என்ற கலைவேந்தன் போன்றோரின் முறையற்ற ,சார்புள்ள,உண்மைக்கு புறம்பான ,நேர்மையற்ற பதிவுகள் போல இல்லாமல், தங்கள் பதிவுகள் அச்சு அசலான உண்மை பதிவுகள். சில அறிவிலிகள் கிருஷ்ணசாமி என்பதை சாமிகிருஷ்ணா என்று எழுதி விட்டார் என்பது போன்ற குழந்தைத்தனமான குற்றசாட்டுக்களை வைத்து, வடிவேலு பாணியில் நம்மை சிரிப்பூட்டினர்.

இன்றும் சொல்கிறேன் ,என்னை திரிக்கு இழுத்து வந்தவை உங்கள் பதிவுகள்(non -linear விவரிப்புகள்,சம்பத்தப்பட்ட சுற்று வட்டார அனைத்து விவரணங்கள்),சாரதா(விமரிசன சுவாரஸ்யம்),கார்த்திக்(ரசிப்பு திலகம்,அற்புத கால விவரணை),சாரதி(பாட்டு ஸ்பெஷல் ), வாசு(விஸ்தார விவரணை),பம்மலார் (ஆவணம் மட்டும்.எழுத்து ஐயகோ) .

நம் பதிவர்கள் சுவாரஸ்யம் மிக்க திறனாளிகள் .. சவ சவ என்று இருபதாயிரமும்,முப்பதாயிரமும் தொடுவதை விட குறைந்த பதிவுகளில் நிறைவு என்றே நம் பதிவர்கள் பயணிக்கின்றனர். வாழ்த்துக்கள். ஆதவன் ரவி, கவிதைகள் போதும் ,எழுதுங்கள். உங்கள் கவனிப்பு திறன் அலாதி. சிவாஜி செந்தில்,ஒப்பீடு போதும் ,வேறு பாணி மாற்றுங்கள். ஆளில்லாத கடையில் டி ஆற்றுவது போல ஜெமினி திரியில் நேர விரயம். இங்கே சுவாரச்யமாக ஏதாவது எழுதுங்கள் டாக்டர். செந்தில்,ஆவணங்கள் தொடரட்டும். வாசு, கதாநாயகியர், ஆடை அழகர் தொடர்கள் என்னவாயின? ராகவேந்தர் ,தங்களின் வழக்கமான உபயோக பங்களிப்புகள் போதும்.

Gopal.s
12th May 2016, 08:09 AM
சோ சார் ஒன்றரை பக்க நாளேடுகளை மிகவும் ரசித்தவன் என்ற விதத்தில்,அதை பின்பற்றி நம் திரி நண்பர்களை வைத்து ஒரு parody பண்ணினால்?இது ஒரு உயர் ரக நகை பாணி.யார் மனதையும் புண் படுத்த வாய்ப்பே இல்லை .

நம் திரியில் தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு ,பதிவாளர்களின் பாணி ஓரளவு பரிச்சயம் என்பதால் பெயர் சொல்லாமல் பதிவிட்டு ஊகத்துக்கு விடுகிறேன்.(தயவு செய்து சிரிக்க மட்டுமே)

Gopal.s
12th May 2016, 08:15 AM
பதிவு எண் -1

அப்போதுதான்,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து ,வசதியான கல்லூரி கால ஜீன் ,டி.ஷர்ட் துறந்து,படவைக்கு மாறிய நேரம்(அம்மா சொல்படி).கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பழகியது.அப்போது ஹரிதாஸ் ரிலீஸ் ஆகி எம்.கே.டி.பாகவதர் சிறை சென்றிருந்த நேரம்.ஹரிதாஸ் படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு ,எனது சித்தப்பா,பெரியப்பா இருவருக்கும் இரண்டு பாஸ்கள் மட்டுமே வழங்க பட்டிருந்தது,.நான் இந்த படத்தை 20 முறைகளுக்கு மேல் பார்த்தவள் என்பதால்,பாஸை தியாகம் செய்யவே மனமில்லாத அவர்களிடம் போராடி நானும் ,என் சித்தப்பா பையன் மணியும் விழாவிற்கு கிளம்பினோம்.

அப்போது அண்ணா சாலை,மவுண்ட் ரோடு என்று அழைக்க பட்டது.இப்போது இருக்கும் l .i c கட்டிடம் அப்போது காலி மனை. அங்கேதான் பந்தல் போட்டு விழா.ஒரே தள்ளு முள்ளுதான்.என் சித்தப்பா மகன் சைக்கிளை நானே ஓட்டும் வசதிக்காக அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜீனுக்கு மாறி,சுலபமாய் இரு கால்களையும் போட்டு சீட்டில் உட்கார்ந்து பின்னாடி மணியையும் உட்கார வைத்தேன்.

பந்தலுக்குள் கூட்டமான கூட்டம்.பீ.யு.சின்னப்பா,வசந்த கோகிலம்,டி.ஆர்.ராஜகுமாரி ஜி.ராமநாதன்,பாபநாசம் சிவன்(அடுத்ததடுத்து ஹிட் படங்களை தந்த ஜோடி அசோக் குமார்,சிவகவி,ஜகதல பிரதாபன்,ஹரிதாஸ் இப்படி),அந்த நாள் கவர்ச்சி புயல் தவமணி தேவி,எம்.எஸ்.பாக்கியம் என்று அதுவரை பிரமிப்போடு திரையில் கண்டு களித்த நட்சத்திரங்கள் நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு.பாகவதரை நினைவு கூறும் விதமாக ஜெயில் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை.தம்பிக்கு ஏக பட்ட நண்பர்கள்.சமீபத்தில் வந்த வசந்த சேனா படத்தின் ரிசல்ட் திருப்தியளிக்கவில்லை என்று வருத்த பட்டனர்.நண்பர்கள் என்னை பற்றி விசாரிக்க,என் அக்கா ,இப்பதான் காலேஜ் முடிச்சா என்று அறிமுக படுத்தினான் மணி.

அப்போது ஒருவர் ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து இறங்கினார்.(அவர்தான் பட இயக்குனர் என்று காதில் முணுமுணுத்தான் மணி).என்னையும் என் தம்பியையும் பார்த்து ,அட்லஸ் சைக்கிள் நல்ல வண்டிதான் என்று தட்டி கொடுத்து விட்டு மேடையேறினார். விழா தொடங்கி களை கட்டியது.

அடுத்த பதிவில் ,நான் பள்ளியில் படிக்கும் போது ,பாவாடை சட்டையுடன் ,என் அப்பா கைப்பிடித்து அழைத்து சென்ற கல்தூண் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டங்களை பற்றி எழுத இருக்கிறேன்.


பதிவு எண் -2.

உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக

பிரம்மாண்டமாய் புதிய சகாப்தம் படைக்க,

இதுவரை அச்சிலே எழுத்து வடிவிலே மட்டுமே வந்த "சரோஜாதேவி"

பட வடிவில் (வண்ணம்),வித விதமான கோணங்களில்,போஸ்களில்....

கண்கள் பிதுங்க, இதயம் இனிக்க,

பொக்கிஷாதி பொக்கிஷம்.

இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

பிரதி ஒன்றின் விலை ரூபாய் 10,000.

பணத்தை இன்றே அனுப்பி விடவும்.

வெளிவரும் நாள்/தேதி/வருடம்-வெகு விரைவில் இந்த நூற்றாண்டு முடிவுக்குள்.

உலக விநியோக உரிமையாளர்- டி.டபுள்யு . (பெங்களூர்)



பதிவு எண் -3.

ஈந்த பாடம் எங்க ஆமா ஆப்பு கூட நேத்து காட்டில் பத்தேன் .சீவஜீ ஆந்த வாருஷாம் நலு முலு நீல படத்தில் அடித்திருந்தார் .

நல்ல தடிப்பு.கானிலூயெ தடிப்பு தரியும் .

முத்தத்தில் சுமங்கிலி ...முழ சூமங்காலி ஈல்ளை .

பதிவு எண் -4.

இஸ்கி புஸ்கியின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது டுபாகூர் பாணி.(சிஷ்யன் என்றாலும்)இஸ்கி புஸ்கி every action should have reaction and verse versa என்றதற்கு மாறாக டுபாகூர் action is behaving என்றார்.

உதாரணம் (உங்களுக்கு புரிய)நீங்கள் ஒரு குடிகாரர் என்று வைத்து கொள்ளுங்கள்.குடித்து விட்டு இரவு வீடு செல்கிறீர்கள்.உங்கள் மனைவி "இன்னாய்யா ,நீயெல்லாம் ஒரு மனுசனா "என்று திட்டிய பிறகு உதைத்தால் reaction .தூங்கி கொண்டிருக்கும் மனைவியை அப்படியே காலால் உதைத்தால் behaving .

இப்போது என்னை தொடருங்கள்.

ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றாருண்டோ பாட்டில் ஒரு முத்தம் என்றதும் ராஜகுமாரி ,பாகவதர் கையில் முத்தம் கொடுப்பது இஸ்கி புஸ்கி பள்ளி என்றாலும்,பாகவதர் மரக்கட்டை போல உட்கார்ந்து பாடுவது டுபாகூர் பள்ளி சார்ந்ததே.

இயக்குனர் ,அந்த காலத்திலேயே ,எல்லா பள்ளிகளையும் சார்ந்த நடிப்பை ,நடிகர்களிடம் வெளிக்கொண்டு வந்தது,நட்கர்னியின் சாதனையில் ஓர் மகுடம்.

eehaiupehazij
12th May 2016, 08:26 AM
Thank you Mr.Gopal for your interlude on my postings in GG thread.
Sure I will adhere to your piece of advice.
However, even though there is no other posting in GG thread except mine I take it as a privilege to glorify the contributions of Shri.Gemini Ganesan as a part and parcel of my thanks giving duty on behalf of NT in commemoration of their long time on and off screen friendship with understanding. I will sure resume my postings in our thread but presently I think it is my commitment to complete at least one full pledged thread for a second to none category of actor GG!!...of course for my personal satisfaction too!
Any way thanks again Mr Gopal!

https://www.youtube.com/watch?v=J4QCNQi17a8&index=8&list=PLE5C1AE2A472A45C1

By the by, Kalai Nilavu Ravichandran is also one of the yester years' successful silver jubilee hero for whom you are also making your postings!! I wish you may also kindly concentrate in that thread and I will also come and interact so that we can at least have one full pledged thread for him too,as part of honoring his association with our NT and our thanks giving culture!

Gopal.s
12th May 2016, 08:29 AM
பதிவு எண் -5.

அப்போது பாகவதருக்கும்,சின்னப்பாவிற்கும் போட்டி உச்சத்தில் இருந்த நேரம்.மகாலிங்கம்,ராமசந்திரன் போன்றோர் வளர்ந்து கொண்டிருந்தனர்.ஹொன்னப்ப பாகவதர்,கிட்டப்பா போன்றோர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்ட நிலையில்,போட்டி என்றால் முதலில் கூறிய இருவருக்குள்தான் ,நிறைய ரசிகர்களை கொண்டிருந்ததால் ,ரசிகர்களுக்கும் போட்டிதான்.(அதிலும் மதுரை மண் தனிதான்).பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.

அப்போது நாங்கள் அல்லோல கல்லோல புரத்தில் குடியிருந்தோம். ஆண்டியடியில் என்னை விட எட்டு வயது மூத்த என் கசின்.

மேல கூசி தெருவில் இருந்து,நடு ஊசி தெரு பிரியும் சந்தில் இருந்த வெள்ளி திரையரங்கில் சின்னப்பா நடித்த தர்ம வீரன் படம் 23.2.41 இல் ரிலீஸ்.பாகவதரின் திருநீலகண்டர் 14.1.41இல் (13.8.40 இல் பூஜை போட்டது)ரிலீஸ் ஆவதாக இருந்து,வெற்றிலை பாக்கு கடை வைத்திருந்த முருகேஷ் என்ற சின்னப்பா ரசிகர் ,இந்த படம் வெளியாக இருந்த அலங்கோல் தியேட்டர் அத்தனை சேர்களையும் கொளுத்தி நாசம் செய்து விட்டதால்,அந்த படமும் ரிலீஸ் தள்ளி போய் ,23.2.41 அன்று கார்னெர் தியேட்டரில் ரிலீஸ்.

ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.

அப்போதைய அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ,தெரிந்த விஷயம்,சுதந்திர போராட்டம் உச்ச நிலையில் இருந்த நேரம்.அப்போது ஆங்கிலேயரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சி சார்பாக k .முதலியாரும்,காங்கிரஸ் சார்பாக எஸ்.செட்டியாரும் தேர்தலில் போட்டியிட்டனர்.அப்போது சென்னை கன்னிமரா ஹோட்டல் அறையில் அவர்கள் தங்கியிருந்த போது , தற்செயலாய் அங்கு வந்த சின்னப்பா முதலியாருக்கு வணக்கம் சொல்ல,இன்னொரு தற்செயலாய் இன்னொரு இடத்தில் பாகவதர் செட்டியாரை தற்செயலாய் வணங்க ,வெவ்வேறு திசையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த செட்டியாரும்,முதலியாரும் ஒருவரையொருவர் பார்க்காமல் தற்செயலாக மோதி விட ,இந்த மோதல் சின்னப்பா-பாகவதர் ரசிகர்களை கொதிப்படைய செய்து ,இருவர் ரசிகர்களும் மோதி கொண்டதில் 2500 பேர் சம்பவ இடத்திலேயே மரிக்க (சின்னப்பா ரசிகர்கள் 602 பேர்,பாகவதர் ரசிகர்கள்-1898 பேர்),35008 பேருக்கு காயம். (சின்னப்பா ரசிகர்கள் முன்னணி)


இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம்,இந்த நேரத்தில் ,இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் பதட்டத்தை உண்டு பண்ணியிருந்தது.நாங்கள் உஷாராக எதற்கும் தயாராகவே இருந்தோம்.அப்போது ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள்,சனி ஞாயிறு 3 காட்சிகள்.(வாரம் 16 ஷோ,மாதம் 64 ஷோ).பின்னாளில் 27/4/1963 முதல் தினசரி 3 காட்சிகள் ,சனி ஞாயிறு 4 காட்சிகள் பழக்கத்திற்கு வந்தது.நிறைய இட்லி கடைகள் மூட பட்டு மதுரையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி விட்டதால்,1980 இல் தினசரி 4 காட்சிகள்,சனி ஞாயிறு 5 காட்சிகளாயிற்று.வெள்ளி தியேட்டரில் 861.5 இருக்கைகள்.(865 இல் 3 உடைந்தும்,ஒன்று பாதி உடைந்தும்).கார்னெர் தியேட்டரிலோ 675 இருக்கைகள். (அத்தனை சேரும் உடைந்திருக்கும்)அதனால் எல்லா வகுப்புகளும் நின்று கொண்டே பார்ப்போம்.

இந்த நிலையில்தான் ,அந்த செய்தி நம் ரசிகர்களை இடி போல தாக்கியது.

(தொடரும்)

பதிவு எண் -6

சின்னப்பா ஒரு சிறந்த internaliser என்பது என் அபிப்ராயம்.பாத்திரத்துக்குள் தன்னை நுழைத்து அதுவாகவே மாற பார்க்கும் சிறந்த கலைஞர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.எதையும் கூர்ந்து கவனித்து ,ஆராய்ந்து அணுகும் திறன் ,அவர்க்கு கலைமகள் அளித்த வரமாகும்.

சில நாட்கள் முன்பு ,நமது நண்பர் கிருஷ்ணப்பா ஒரு காட்சியை தரவேற்றி இருந்தார்.அதில் சின்னப்பாவின் அந்த காட்சியை பார்த்தவர்கள்,அவர் நெற்றியில் குங்கும பொட்டை கவனித்தார்களா என்று தெரியாது.(இந்த படம் கன்னடத்தில் ஹூவு ஹோன்ன ஹேவு ,தெலுங்கில் மீறு செப்பின காவு படங்களின் re -make )அந்த காட்சியின் ஆரம்பத்தில் அவர் பொட்டு சிறிய அளவிலும்,காட்சி நடுவில் பெரிதாகவும் இருக்கும்.பெரிய பொட்டு 46 இல் வந்த பிரித்திவிராஜன் படத்தில் வைத்தது.இதன் படி பார்த்தால் 44 இல் வெளிவந்த இந்த படத்தின் காட்சியின் ஒரு பாதியை 41 இலும் ,மீதியை 46 இலும் ஷூட் பண்ணி இருக்க வேண்டும்.சிறிய பொட்டுடன் "ஆமாம் அம்மா" என்று பேசி,பெரிய பொட்டுடன் "இல்லை அம்மா"என்பார்.5 வருட இடைவெளியில் எடுக்க பட்ட இந்த காட்சியில் எப்படி ஒரு பரிபூரணதுவத்தை அந்த மேதை காட்ட முடிந்தது.

கேதுசெந்தன் அவர்களே,அந்த காட்சியை பதித்து ,எங்கள் நெஞ்சை நிறைய செய்யுங்கள்.




பதிவு எண் -7

சின்னப்பா படங்கள் வருடத்திற்கு மூன்று. (நமக்குதான் அந்த ராசி.எதிர்முகாமை பாருங்கள் 2 வருடத்திற்கு ஒரு படம் )ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். சென்னையில் அப்போது இருந்ததோ 8 திரையரங்குகளே.அப்போது அண்ணா நகர்,கே.கே.நகர்,வேளச்சேரி,பெசன்ட் நகர் எல்லாம் கிடையாது.அபிராமி,உதயம் காம்ப்ளெக்ஸ் ,தேவி,சாந்தி இவையெல்லாம் கூட கிடையாது.சித்ரா,பிராட்வே ,அசோக் (இப்போது இடிக்க பட்டு விட்டது)இவை போல ஒரு சில திரையரங்குகளே.இப்போது போல கம்ப்யூட்டரில் ரிசர்வ் பண்ணும் வசதியெல்லாம் இல்லை.கியூவில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்க வேண்டும்.

பிரித்திவி ராஜன் பட ரிலீஸ் அன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து ,வழியில் எதிர்பட்ட பிச்சை காரர்களிடம் எல்லாம் சில்லறை வாங்கி,நோட்டாக திருப்பி கொடுப்போம்.சில்லறை நிறைய சேர்ந்ததும் சித்ரா திரையரங்கை அடைந்தோம்.அப்போது சின்னப்பா முதல் காட்சியில் தோன்றும் போது சின்னப்பா வாழ்க வாழ்க என்று கத்தி சத்தமிட்டு எழுந்து நின்று சில்லறை வாரி இறைப்போம்.

இதனால் சின்னப்பா ரசிகர்களை போலிஸ் கைது செய்வது வழக்கமான நிகழ்வாகி போனது. இரண்டு முறை சின்னப்பா போலிஸ் ஸ்டேஷன் வந்து எங்களை பார்த்து ,வீணாக இறைக்கும் சில்லறையை தன்னிடம் நேரில் கொடுத்திருக்கலாமே என்று சொன்னது எங்களுக்கு பசுமையாக நினைவிருக்கிறது.


இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது.மாட்டினி ஷோ புல் .நாங்கள் பொடி நடையாக பிராட்வே சென்று ,அங்கும் டிக்கெட் கிடைக்காமல் ,அசோக் சென்றோம்.தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராகையால்,படம் ரிசல்ட் எப்படி என்று விசாரிக்க,சூப்பர் பா என்று கட்டை விரல் உயர்த்திய பாணியிலேயே,படம் சூப்பர் ஹிட் என்று முடிவானது.பிறகு மீண்டும் சித்ரா தியேட்டருக்கே வந்து மாலை காட்சிக்கு காத்திருந்தோம்.மாட்னி முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் அனைவருமே படம் ரொம்ப ஜோர் என்று சொல்ல,ஒரு ரசிகர் எங்களிடம் வந்து முழு கதையையும் ஒவ்வொரு சீனாக விவரிக்க தொடங்கி விட்டார்.

மாலைக்காட்சிக்கு முன் துடைப்பத்துடன் பணியாளர்கள் சென்று குப்பை வாரிய பிறகு,நாதஸ்வரம் போட பட்டது.மாலை காட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் காட்சி .வரிசையாக சின்னப்பாவின் மூன்று பாடல்கள்.மேலே ஒன்றுமே போடாமல் வேட்டி மட்டுமே கட்டி ஜொலிப்பார்.சின்னப்பாவை நோக்கி சில்லறைகளை வீசினோம்.

சித்ராவில்தான் அந்த படம் அதிக நாட்கள் ஓடியது.

ஆஹா ..நினைக்கும் போதே இனிக்கும் தெவிட்டாத நாட்கள்...
யாரவது எங்களை அந்த நாட்களுக்கு திருப்பி அனுப்ப மாட்டார்களா?

இந்த படத்திற்கு சகோதரி .......... அவர்களின் ஆய்வு ஒன்றின் மீள் பதிவினை இத்துடன் பதிவு செய்கிறேன்.


பதிவு எண் -8

காலையில் தூக்கம் முழித்ததும் , பல் விளக்கி விட்டு டீ சாப்பிட ,எதிரே இருந்த கடைக்கு சென்றேன் .கடை ஒனர் தெரிந்தவர் என்பதால் ,டீ கிளாசை கழுவி ,டீயை போட்டு பாலை விட்டு , என்னிடம் கொடுத்தார். சார் ,எனக்கு ஒரு காவலுக்கு வாட்ச்மேன் வேண்டுமே என்றார். எந்த மாதிரி வாட்ச்மேன் என்று கேட்டதும், பெரிய மீசை வைத்திருக்க வேண்டும்.வீரமாய் நடக்க தெரிய வேண்டும்.அரச உடைகள் அணிந்திருக்க வேண்டும்.வாள் ஒன்று உரையில் தொங்க வேண்டும்.வானம் பொழிகிறது ,பூமி விளைகிறது என்று யாரவது திருடன் வந்தால் பேச வேண்டும் என்றார்.

அவர் கேட்பது வீர பாண்டிய கட்டபொம்மனையே என்று தெரிந்து கொண்டு ,அந்த வீரனை நினைவு கூர்ந்தேன்.

மீதி பகுதிகளாக பிரித்து பழசிலிருந்து cut paste .

Gopal.s
12th May 2016, 08:44 AM
அடுத்ததாக இன்னும் எழுவர். இதை ரசித்து கருத்து தெரிவித்தால் ,தொடருவேன். இது நம் அணி எழுத்தர்களுக்கு மட்டுமே. உங்களுக்கே தெரியும் ,நல்ல எழுத்துக்களை ,நல்ல நடிப்பை,நல்ல இயக்கத்தை மட்டுமே, parody ,satire என்று பண்ண முடியும்.

இதை ஜாலியாக எடுத்து கொள்வதானால் ,இன்னும் செய்வேன். எனக்கு ரொம்ப பிடித்தமான ஜாலி விஷயம் இது.

adiram
12th May 2016, 12:02 PM
டியர் கோபால் சார்

உங்கள் இமிடேட் பதிவுகளை மிகவும் ரசித்தேன். நான் அறிந்த வரையில் கீழ்க்கண்டவர்கள் என்று நினைக்கிறேன்.

பதிவு எண் 1 : சாரதா
பதிவு எண் 2 : வினோத் (எஸ்வீ)
பதிவு எண் 3 : (நிஜமாகவே தெரியவில்லை)
பதிவு எண் 4 : கோபால்
பதிவு எண் 5 : முரளி ஸ்ரீநிவாஸ்
பதிவு எண் 6 : ராகவேந்தர்
பதிவு எண் 7 : Karthik
பதிவு எண் 8 : Ganpat (??)

RAGHAVENDRA
12th May 2016, 12:09 PM
நல்ல எழுத்துக்களை ,நல்ல நடிப்பை,நல்ல இயக்கத்தை மட்டுமே, parody ,satire என்று பண்ண முடியும்.

ஹையா....ஜாலி....நான் தப்பிச்சேன்....

ஆதிராம் சார்... இந்த லிஸ்டில் நான் இல்லை...

Gopal.s
12th May 2016, 12:22 PM
உங்கள் யூகம் முக்கால்வாசி சரியே.

பதிவு 1- சாரதா.
பதிவு 2- பம்மலார்
பதிவு 3 -ராகுல் ராம்
பதிவு 4- கோபால்(அடியேன்)

பதிவு 5- முரளி ஸ்ரீநிவாஸ்.
பதிவு 6- சாரதி.
பதிவு 7- கார்த்திக்.
பதிவு 8- ஹைதராபாத் ரவி.

adiram
12th May 2016, 12:59 PM
கோபால் சார்,

எட்டுக்கு நாலு சரியென்றால் பாதிதான் தேறியிருக்கிறேனா?.

மதுரையில் வெள்ளி (தங்கம்), கார்னர் (சென்ட்ரல்) தியேட்டர் பெயர்கள் அருமை. அப்படியென்றால் மூதேவி (ஸ்ரீதேவி), ஓல்ட் ட்ராமா (நியூ சினிமா) தியேட்டர்களை சேர்த்திருக்கலாமே. .

தன்னுடைய பெயர் லிஸ்டில் இல்லையென்று ராகவேந்தர் சார் ரொம்ப குதிக்கிறார். அடுத்த பதிவில் அவரையும் இழுத்து விடுங்கள்.

Gopal.s
12th May 2016, 01:14 PM
பதிவு எண் -9

(இந்த பதிவு எண் பார்க்க விரும்புவோர் இந்த மெயின் திரியில் காண முடியாது. ஒரு புது திரி தொடங்க படுகிறது.)

சின்னப்பா இட்டிலி சாப்பிடும் காட்சிகள்.-புது திரி
(Started by Kethusanther)

அன்பர்களுக்கு ,மெயின் திரியில் போடும் போது பல விஷயங்கள் இடம் பெற்று விடுவதால் தேட வேண்டியுள்ள விஷயங்களை இங்கு போடலாம்.

சின்னப்பாவின் இட்லி சாதனைகளை சொல்லி மாளாது .சமனும் கிடையாது. குறிப்பாக அவர் இட்லி சாப்பிடும் காட்சிகள்.அதை பாத்திருப்பீங்க,ரசிச்சிருப்பீங்க. அதை இங்கே பதிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

அவர் சாப்பிடாத இட்லியா,பார்க்காத அரசியல் கட்சியா, பார்க்காத தலைவர்களா. அவருக்கு காந்தி தமிழ் நாடு வந்த போது இட்லி பரிமாற பட்டது. அவர் அதை தொட்டும் பார்க்கவில்லை. ஆட்டு பாலும் ,கடலையும் காந்தியே கொடுத்த போதும் அவர் எடுத்து கொள்ளவில்லை..

அப்போது ஜகதல பிரதாபன் படத்தை பார்த்து விட்டு வரும் போது ஒரு பரவசமான அனுபவம். அப்போது விநியோகிக்க பட்ட காலண்டர், சின்னப்பாவின் ரசிகர்கள் கடையிலிருந்து போனசாக தர பட்ட பொருள்கள் ,அடியேனின் திரட்டிலிருந்து உங்கள் பார்வைக்கு.

மக்கள் தலைவர் என்று கூற இதை விட தகுதியானவர் யார்?ஐயம் உண்டா? கோடி கணக்கான சின்னப்பா பக்தர்கள் இன்றிலிருந்து சங்கல்பம் எடுத்து கொள்ள வேண்டும்.

1)யார் முதலமைச்சராக வந்தாலும் ,அந்த நாற்காலியில் உட்காராமல் ,சின்னப்பாவின் பாதுகையை அங்கு வைத்து விட்டே ஆட்சி நடத்த வேண்டும்.

2)எல்லா வீட்டிலும் சின்னப்பா படம் போட்ட கொடியை பறக்க விடுபவர்களுக்கே நமது வோட்டு என்று ஒவ்வொருவரும் முடிவெடுக்க வேண்டும்.

3)அவரது பிறந்த நாளில் ,அனைத்து அமைச்சர்களும் ,மொட்டையடித்து,கடுக்கன் போட்டு ,காவடிஎடுக்க வேண்டும்.

KCSHEKAR
12th May 2016, 04:48 PM
இதை ஜாலியாக எடுத்து கொள்வதானால் ,இன்னும் செய்வேன். எனக்கு ரொம்ப பிடித்தமான ஜாலி விஷயம் இது.
இன்றிலிருந்து குசும்பு கோபால் என்று அழைக்கப்படுவீராக!!!

Subramaniam Ramajayam
13th May 2016, 07:35 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13220985_1113726878677983_5697514179900242469_n.jp g?oh=fd9a80bea0ebe4dbb2bb3c36cb2f91c1&oe=579C6690

sad news for sivaji fans Our meeting point ever since 64 karnan relese we call it HEADOFFICE THOSEDAYS, Any way we will wait till NEW SHANTI COMPEX with new new shape and dimension comes
bye bye SHANTHI.

Gopal.s
13th May 2016, 09:36 AM
பதிவு எண் - 10

தூசு வேதன் 42466

பாடும் ப்ளுட்டோ சின்னப்பா -6773.

கேதுசெந்தர் சாருடன் ,சாருக்கும் எனக்கும் பிடித்த பாடல்கள் பற்றி தொலைபேசியில் மணிகணக்கில் பேசியிருக்கிறோம். பேசி முடித்த கணம் , படுத்த படுக்கையாக ஒரு மாதம் கோமாவில் சென்று இன்றுதான் முழித்தேன். கைகாலெல்லாம் நடுங்க பதிவை இடுகிறேன்.கழத்து,முழங்கால் எல்லாம் வலி.

மாத்ரு பூமி எல்லா பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட படம்.
எப்போதோ ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல என்று வைத்து கொள்ளுங்களேன். (என் அத்தனை பதிவிலும் பூத்த குறிஞ்சி பூவை தொடுத்தால் பூமிக்கே மாலையிட்டு விடலாம்)

பீ.யூ .சின்னப்பா,டி.வீ.குமுதினி (இவர் பெயரில் ஒரு டி.வீ ஸ்டேஷன் 1930 இலிருந்து இருந்ததாம்),காளி N .ரத்னம். நமது நடிகர்திலகம் மகாகவி காளிதாசில் பெற்றது போல காளி அருள் பெற்ற நடிகர். எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விடுவார்கள்.

எனக்கு பிடித்த இயக்குனர் H .M .ரெட்டி இயக்கம். இவருக்கு இயக்குனர் கைலாஷ் என்று பொன்னான பட்டம் கிடைத்தது இந்த படத்தில்தான்.

இது பல சிறப்புகளை தன்னகத்தே தக்க வைத்த பெருமை கொண்ட படம் என்று அகமலர்ந்து சொல்லலாம்.

சின்னப்பாவை என்றென்றும் நம் நெஞ்சில் நிலைக்க வைத்து விட்ட பெருமை என்றென்றும் இந்த படத்திற்கு என்றும் உண்டு.

இந்த பாடலை கேட்கும் போது எனக்கும் சிரிப்பும் வரும் .அழுகையும் வரும்.உடல் முறுக்கேறி நுரையீரலில் கடப்பாரை வைத்து நெம்புவது போல உற்சாகம் பீறிட்டு வசியம் செய்வதை ஓங்கி குரல் கொடுக்க முடியும்.(கீழ்பாக்கம் வேனுக்கு தொலை அழைப்பு செய்ய வேண்டியதில்லை )

அதுவும் பாபநாசம் சிவனின் பாடலும் இசையும் ,சின்னப்பாவின் சிறகை வைத்து வருடுவது போன்ற வசியம் செய்யும் மாயகுரலும் ,
இந்த குரலை கேட்டு பக்கவாதம் வந்து படுத்தவனும் எழுந்து நின்று கை தட்டி பரவச முத்துக்கள் வருவதை கோத்து ,மனரஞ்சித மாலையுடன் சேர்க்கலாம்.

எத்தனையோ பாடகி இருந்தாலும் நம் தாடகி பூதகி குமுதினி குரல் தனி ரகம்தான்.இதை பார்த்து காக்கை கோட்டான்கள் பாடம் எடுத்து கொள்ள வேண்டும்.

இனி இந்த பாடல். இதை பற்றி நான் என்ன சொல்ல?

மாத்று பூமியே சௌந்தர்ய லஹரி
அதிமதுர இகபர லோகம் சௌந்தரம்

ஆஅ ஆஹா ஆ அஹா ம்ம்ம்ம்ம்

ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

லலல்லா லாலா லலல்லா லாலா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

அருள் தாரும் பிராணநாதா
சதிபதி போதக குண வினாசகா

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ததும் ததும் தானா தனநேனா

மாத் று பூமியே சௌந்தர்ய லஹரி
அதிமதுர இகபர லோகம் சௌந்தரம்

ஆஅ ஆஹா ஆ அஹா ம்ம்ம்ம்ம்

ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

லலல்லா லாலா லலல்லா லாலா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

அருள் தாரும் பிராணநாதா
சதிபதி போதக குண வினாசகா

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ததும் ததும் தானா தனநேனா

இதற்கான காணொளி.(நானே தரவேற்றியது)

www .matru boomi .sinnappa .xyzw aaaa bbbb yomu kp

Gopal.s
13th May 2016, 10:08 AM
பதிவு எண் - 11.

பெரிய காதன்

//மாத்று பூமியே சௌந்தர்ய லஹரி
அதிமதுர இகபர லோகம் சௌந்தரம்//

தூஸ்ஸு ,இந்த பாட் கிளப்......நன்னாயிட்டு எழதரீங்கோ...ஞான் எந்து பறையும் எந்து செய்யும்.......

என் கைநூலில் (handbook ) ஏதோ தெரிந்ததை கிறுக்கியிருக்கிறேன்.

மாத்ரு பூமியில் இகபர சுகம்பெற
காத்ரமான கையின் விரல்களே போதுமென
தோத்ரமென தொழும் கைவிரல் துணை
சூத்ரமென முன்பின் அசைத்தல் அறியுமா

சி.பா வை மறக்க முடியுமா ?இந்த படத்தில் மோகமாய் தாபமாய் நடிப்பார். பட் இந்த படம் நான் கேள்விப்பட்டதில்லை.பார்த்ததுமில்லை.

இன்னிக்கு சூடான ரவா உப்புமா ,பாகற்காய் கறியுடன் ,டெக் எடுத்து பார்த்து விட வேண்டியதுதான்.

முதலில் இந்த ஆ ஆ ஆ லாலல்லா எல்லாம் அர்த்தம் புரியாமல் முழித்திருக்கிறேன். இன்று உங்கள் விளக்கம் கேட்டதற்கு எக்கசக்கமாக புரிந்து விட்டது.

Gopal.s
13th May 2016, 01:28 PM
பதிவு எண் - 12.

சின்னப்பா கந்தன்.(Dr )

சட்டை என்பது மனிதனுக்கு மிக அவசியம். வெயிலுக்கும் ,மழைக்கும் மனிதன் சட்டையணிந்தே ஆக வேண்டும். சமயங்களில் வேர்வையால் சட்டை நனைந்திருக்கும் போதும்,மழையால் நனையும் போதும் ,நாமே தோய்க்கலாம் .மனைவியிடமோ ,வேலைக்காரியிடமோ கொடுக்கலாம். சோப்பு போட்டால் நல்லது. மகாலிங்கம் சட்டையணியும் வழக்கம் உள்ளவர். சிறு வயதில் மகாலிங்கம் சட்டையணிவதை பார்த்தே நானும் சட்டை போட ஆரம்பித்தேனாம்.

The Shirt gives suvve Debonaire look to our Moron king Mahalingam .

Stills of Trinities wearing shirts T.R.Mahalingam,M.K.T, P.U.Chinnappa .

Gopal.s
13th May 2016, 01:35 PM
Dear Muthaiyan Ammu,

We know what we are doing and probably you lack higher sense of Humour . Our fans love it and they take it well. I appreciate your postings in our Thread but this is not called for.

முத்தையன்,

நான் மதிப்பு வைத்திருக்கும் பதிவர்கள் பாணியில் spoof .இது ஒரு விதமான இளக்கத்தை ஏற்படுத்தி நட்பை இறுக்கமாக்கும்.இதில் எல்லோருமே,அவர்களாக விரும்பி கேட்டே இந்த பதிவுகளை நான் போட்டேன். சில திரிகள் போன்று ,ஒரே விஷயத்தை, பொய்களை கூறி ,அளவு மீறி கொடுப்பது எங்களால் இயலாது.


எங்களுக்குள் இருக்கும் நட்பை உங்களால் அளவிடவும் முடியாது.

நான் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் உங்கள் ரசிகன்(எங்கள் திரியில் போடும் ஸ்டில்களுக்கு மட்டுமே)என்ற விதத்தில், எதையும் புரிந்து செய்யுமாறு வேண்டுகிறேன்.

eehaiupehazij
13th May 2016, 06:43 PM
Dear Gopal
Enjoyed your spoof and parody in a healthy way! You could have added a relevant video too!!
senthil


வ(ச)ம்பு சோ(ப்)பாலின் தழும்பு தரும் அ(ழு)ம்பு தாங்காமல் திகைத்து திண்டாடி திடுக்கிட்டு திகிலடித்து வெதும்பி கலங்கி குழம்பி தயங்கி மயங்கி பயந்து நயந்து ஏறி இறங்கி கண்கள் இருண்டு தொண்டை வறண்டு சிந்தை மிரண்டு வெருண்டு மருண்டு உருண்டு புரண்டு வெறித்து தெறித்து ஓடி ஒளிந்து வளைந்து நெளிந்து ஒதுங்கி பதுங்கி சுருங்கி விரிந்து குனிந்து நிமிர்ந்து தாவி குதித்து ஏறி மிதித்து வேர்த்து விறுவிறுத்து பதறி உதறி கத்திக் கதறி துடித்து துவண்டு வெந்து புழுங்கி நொந்து நூலாகி நடுங்கி ஒடுங்கும் புதியபறவை கோ(ப்)பால் !!

கட்டம் கட்டப்பட்ட இத்தனை முக பாவ வர்ண ஜாலங்களையும் கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்து வட்டமடித்திட நடிகர்திலகத்தினால் மட்டுமே முடியும்!

https://www.youtube.com/watch?v=___CnUWEADk

sivaa
13th May 2016, 09:27 PM
எழுச்சிமிகு 7வது வாரம் சிவகாமியின் செல்வன்

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது தலைவர் இருவேடங்களில் நடித்து டிஜிட்டலில் வெளிவந்த சிவகாமியின் செல்வன் திரைப்படம் 7 வாரங்களை கடந்து 50 நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது. பல இடையூறுகளைச் சந்தித்து தொடர்ந்து மக்களின் பேராதரவோடு வெற்றிநடை போடும் சிவகாமியின் செல்வன் வெற்றியைத் தடுக்க பலர் முயற்சித்து அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர் என்பது தான் உண்மை.
நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருவதைப் பார்த்தால் படம் 50 நாளையும் தாண்டி ஓடும் என்று தெரிகிறது.
வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆவான் என்ற பழமொழிக்கேற்ப நமது தலைவர் படத்தின் வெற்றியைத் தடுக்க முயற்சிப்பவன் யாராக இருந்தாலும் நமது கலைக் கடவுள் தண்டனைக் கொடுப்பார் என்பதில் ஐயமில்லை.

http://i68.tinypic.com/znmqnn.jpg

(முகநூலில் இருந்து)

sivaa
13th May 2016, 09:37 PM
இன்றைய நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கள்,
தொலைக்காட்சி களில்
* ஆலயமணி*
பிற்பகல் 1 pm க்கு ஜெயா மூவி யில்
... * கந்தன் கருணை*
இரவு 7 மணிக்கு சன் லைப்
* நான் பெற்ற செல்வம்*
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
கண்டு மகிழ்வோம்

http://i63.tinypic.com/2hpnl6x.jpg


http://i68.tinypic.com/22c2o2.jpg


http://i63.tinypic.com/t82lp2.jpg


http://i64.tinypic.com/1j2p05.jpg


http://i67.tinypic.com/2h6dkqs.jpg



(முகநூலில் இருந்து)

Russellsmd
13th May 2016, 09:49 PM
பச்சை விளக்கு-
எழுத்துப் பயணம் -3


"பச்சை விளக்கு" படத்தில்
நான் இமைக்கவும் மறந்து ரசித்துப் பார்த்த மேலும்
சில காட்சிகள்...


உயிருக்குயிரான தங்கையை
கெட்ட எண்ணத்தோடு நெருங்கியவனை வெட்டிச்
சாய்த்து விடும் கோபத்துடன்
நம் தலைவர் கிளம்புகிறார்.

வாழ்வில் பக்குவப்பட்ட தந்தை
தடுக்கிறார். அவனை அழிக்கும் எண்ணத்தை மறந்து,மகளின்
படிப்பை நிறுத்தி விட்டு
திருமணம் செய்து வைப்பதே
சரியென்கிறார்..தந்தை.

"தப்பு செய்தவன் வேறொருவன். தண்டனை
தங்கைக்கா..?" என்று அடக்க
முடியாத கோபமும், வேதனையும் அழுகையாய்
மாற... "தவறு செஞ்சவன் பாலுப்பா..பாலு" என்பார்.

"ஆமா" என்று ஒத்துக் கொள்வார்..தந்தை.

"உம்ம்..." - என்பார்.

அதில்-
"சரிதானே..?
எனது கோபம் நியாயமானது
தானே..?"- என்கிற கேள்வியும்
இருக்கும்.

தப்பு ஒரு பக்கம்..தண்டனை ஒரு பக்கம் என்று நியாயம்
பேசும் தந்தையைக் குறித்த
கேலியும் இருக்கும்.

இன்னொன்று...

அந்த அழுகை கலந்த கோபத்தில் ஒரு குழந்தைத்தனம் பளிச்சென்று
தெரியும்.

நல்லவிதமாய் வளர்க்கப்பட்டு,
நல்லவனாயிருப்பவன் எந்த
வயசிலும் குழந்தையாகவே இருப்பான்.

அந்த கோபம்-

நல்லவனின் கோபம்.
---------------------

"சுமதி விஷயமாகப் பேச வேண்டும்.உடனே கிளம்பி வா"
என்று அக்காள் எழுதிய கடிதம்
பார்த்து, சுமதிக்கும், தனக்கும்
திருமணமென்று புரிந்து கொண்டு, ஆள்,அம்பு,பரிவாரத்துடன் கிளம்பி வந்து
விடுகிறான்.. பசுபதி. மனைவியின் தம்பி தங்கையை
மணக்கப் போவதாய்ச் சொல்ல
சுள்ளென்று கோபம் காட்டும்
காட்சி.

அக்காள்தான் கடிதம் எழுதி
வரச் சொன்னாள் என்றதும்,
கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டு, "பார்வதி" என்று அழைத்தபடியே கடுங்கோபத்துடன் அவர் உள்ளே போகும் வேகம், ஒரு
பெரிய பிரளயத்தையே உண்டு
பண்ணப் போகிறார் என்று
எண்ண வைப்பதாயிருக்கும்.

ஆனால் மனைவி அமைதியாக
உண்மையைப் புரிய வைத்த
பின் அந்தக் கொதிப்பு அடங்குகிற கோபம்...

நடுத்தரக் குடும்பங்களில்
ஆவேசமாய் எழுந்து, எதுவும்
நடவாதது போலே அடங்கிப்
போகும் பல்லாயிரம் கோபங்களில் ஒன்று.
----------------------

திடீர் கல்யாணத்திற்காக பழக்கமேயில்லாமல் பட்டாணியிடம் கடன் வாங்குவார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட
பின் கடன் கொடுத்தவனிடம்,
தானே வந்து வட்டியைக் கொடுத்து விடுவதாகவும்,
வட்டிக்காக வீட்டுக்கோ, வேலை செய்யுமிடத்துக்கோ
வந்து விட வேண்டாம் என்றும்
கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்.

அவன் சம்மதித்த பின்னும்
அவர் காட்டும் தயக்கமும்,
முகக் குழப்பமும் சில விநாடிகளே என்றாலும்,
கடன் வாங்கிப் பழக்கமில்லாத,
பொறுப்பும்,தன்மானமுமுள்ள
ஒரு குடும்பத் தலைவனை
நமக்குக் காட்சிப்படுத்தியவை.
-----------------

தங்கையை மணக்கவிருந்தவன், தங்கை
நடத்தை கெட்டவளென்று
குற்றஞ்சாட்டி வெளியேற,
திருமணம் நின்று போகிறது.
வேதனையில் விம்மி அழுபவர்
தந்தை வந்து தோள் தொட்டதும்
அழுகையைப் பெரிதாக்குவார்.
வெகு இயல்பானது..அந்த
சத்தமான அழுகை. முன்னர்
வந்த ரயில் காட்சியிலும்,
இந்தக் காட்சியிலும்தான்
அவரது உரத்த குரலைக்
கேட்கலாம்.

(...தொடரும்...)

adiram
14th May 2016, 12:51 PM
டியர் கோபால் சார்,

பதிவுகள் ( ராகவேந்தர், வாசுதேவன், சின்னக்கண்ணன், சிவாஜிசெந்தில்) மிக மிக அருமை. படித்து, ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்.

ஒரு பக்கம் பயமும், நம்மை எப்போது வாருவாரோ என்று. இன்னொரு பக்கம் நிம்மதி. வாரும் அளவுக்கு பெரிய பதிவுகள் எதுவும் இட்டு விடவில்லை. நாமிட்ட பதிவிகள் நாலு வரிகளுக்கு மிகாமல்தானே இருக்கும் என்று.

முத்தையன் சாருக்கு அளித்த பதில் நன்று. அதிசயம் என்னவென்றால் 'சாந்தகோபாலாக' பதில் அளித்திருப்பதுதான்.

நடிகர்திலகம் போலவே நீங்களும் அந்தந்த பாத்திரமாகவே மாறி விடுகிறீர்கள்.

sivaa
14th May 2016, 06:25 PM
திரையுலக வரலாற்றில் மறு,மறுவெளியீட்டிலும்
மாபேரும் உலக சாதனை

http://i63.tinypic.com/2w2he8p.jpg

Russellsmd
14th May 2016, 07:00 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160514164734984_zpspw2zei5f.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160514164734984_zpspw2zei5f.jpg.html)

"சிவாஜி ஃபிலிம் கிளப்"
ஏற்றி வைக்கும் "தீபம்".
நமக்குக் காட்சி தருகின்ற
நான்காம் கலை" தீபம்".

29.05.2016 ஞாயிறன்று
ஒளிரவிருக்கும் "தீபம்".
திருச்சியின் சுருதி மஹாலை
வெளிச்சமாக்கும் "தீபம்".

முன்போலே அய்யன் படம்
திரையரங்கில் வருவதில்லை.
அய்யன் முகம் காணும் வாய்ப்பு நாம் அடிக்கடிதான்
பெறுவதில்லை.

ஆசை தீர நாம் காண
ஓர் அன்புருவம் வைத்தது
நம் முன்னே அகலத் திரை.
அதில் அய்யனைக் காட்டிய
அந்த அன்புருவத்தின் பெயர்
அண்ணாதுரை.

முதன்முதலாய் அத்திரையில்
"கௌரவ"த்தைக் காட்டினார்.
பின் வந்த ஒரு தினத்தில்
"புதிய பறவை" காட்டினார்.
திருச்சியே திரண்டு வர
"தியாக"த்தையும் காட்டினார்.

இதோ...

"சிவாஜி ஃபிலிம் கிளப்" எனும்
கோயிலிலே
"தீப"த்தை அவரே ஏற்றுகிறார்.
நம் ஆசை மனமெனும்
விளக்கினிலே
ஆனந்த நெய்யை ஊற்றுகிறார்.

"தீபம் " கண்டு
மகிழ்வில் மனம் உருக...
நல்லவர்கள் எல்லோரும்
திருச்சி நோக்கி வருக!

இது-

ஒளி தந்து வழிகாட்டி
ஒளிர்ந்திருக்கும் "தீபம்".
நம் நடிப்பரசர் திறமையிலே
எரிந்திருக்கும் "தீபம்".

ஈடு இணை இல்லாத
இனியதொரு "தீபம்".
எல்லோரும் கைகூப்பி
வணங்குகின்ற "தீபம்".

அய்யன் புகழ்ப் பாதை சூழ்ந்த
இருளகற்றும் "தீபம்".
புனிதர் நடிகர் திலகம் நடந்த
திசை காட்டும் "தீபம்".

"தீபம்" கண்டு
மகிழ்வில் மனம் உருக...
நல்லவர்கள் எல்லோரும்
திருச்சி நோக்கி வருக.

adiram
14th May 2016, 07:22 PM
ஒரே நேரத்தில் நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் வெற்றி பவனி

64-ல் வெளியான 'கர்ணன்' 6-வது வாரம்

74-ல் வெளியான 'சிவகாமியின் செல்வன்' 7-வது வாரம்

சாதனை என்றால் இது சாதனை.

Russellsmd
15th May 2016, 02:18 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160515131303545_zpsl29qf9yc.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160515131303545_zpsl29qf9yc.jpg.html)

RAGHAVENDRA
15th May 2016, 02:41 PM
Before writing articles like this on History, please try to verify the info. Navarathiri was a super duper hit and ran 100 days in six screens in Tamil Nadu.

Chennai: Midland, Maharani, Uma & Ram, Trichy Central and Madurai Sridevi - 100 days.

For Madras edition ad of 100 th day ad in newspaper:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4963-1.jpg

The Hindu has done it again. Thalaivar's Navarathri which is a roaring success ever, has been mentioned as caught in a jinx. Why these people write such kind of comments is a misery. The above quote is a reply comment made by me in that page of the Hindu the link of which is given below:

http://www.thehindu.com/features/cinema/tamil-film-industry-100th-film-jinx-grips-the-mighty-sans-captain/article8595803.ece#comments

eehaiupehazij
15th May 2016, 07:36 PM
நவராத்திரி திரைக்காவியம் தமிழர் சார்பில் உலகத்திரையை பெருமைப்படுத்திய காலத்தின் அழிக்க முடியாத நடிப்புக்கலைத் தந்தையின் வரலாற்றுச் சுவடு !

நவராத்திரி திரைப்படம் வெளிவந்தபோது அது ஏற்படுத்திய தாக்கம் உலகமகா கலைஞர்கள் எவரையும் விட நடிகர்திலகத்தை Never Before and Never Again என்னும் உலகத்தர உச்சாணிக் கொம்பில் சிம்மாசனமிட வைத்தது.

மரியாதைக்குரிய ஹிந்து நாளிதழ் யானையைப் புரிந்து கொள்ள முயலும் ஆறு அந்தகர்களில் ஒருவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வரலாற்று உண்மையை மறைக்க முயலாமல் நடுநிலையாக செயல்படுவது ஒன்றே அதன் தரத்தின் வெளிப்பாடாக இருக்கும் !

ஆங்கில வார்த்தைகளை தாறுமாறு தக்காளிச் சோறாக அடுக்கிவிட்டால் நவராத்திரியின் மாபெரும் வெற்றி என்ற முழுப் பூசணிக்காய் மறைந்து விடுமா ?!

The HINDU shall keep up its standards lest it may lose its accountability and reliability among its voracious readers who have grown up witnessing the invincible success of NT's prestigious movie NAVARATHIRI!!!

See how a renowned Psychiatrist can easily read the mind of the person disguising herself as a mentally retarded!!....without getting caught in a jinx...of course!

https://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA

Subramaniam Ramajayam
15th May 2016, 08:40 PM
The HINDU shall keep up its standards lest it may loose its accountability and reliability among its voracious readers who have grown up witnessing the invincible success of NT's prestigious movie NAVARATHIRI!!!

See how a renowned Psychiatrist can easily read the mind of the person disguising herself as a mentally retarded!!....without getting caught in a jinx...of course!

https://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA

This is mot the firstoccasion THE HINDU very often publish false news in the PAST THE BLAST COLUMNS. ATLEAST LET THIS BE LAST ONE

Harrietlgy
15th May 2016, 11:07 PM
Written by Mr. Sudhangan,


http://www.dinamalarnellai.com/site/news_image/22/15174Tamil_News_Nellai.jpg

1968ம் ஆண்டு வந்த எல்லா படங்களுமே சிவாஜிக்கு வெற்றி படங்களாகவே இருந்தன! அந்த வருடம்தான் இயக்குநர் பி.மாதவன் தன்னுடைய அருண்பிரசாத் மூவீஸ் சார்பில் எடுத்த ‘எங்க ஊர் ராஜா‘ படம் வந்தது! அப்போதெல்லாம் அருண் பிரசாத் மூவீஸிற்கு ஆஸ்தான கதாசிரியர், பாலமுருகன்! இவர் அருண் பிரசாத் மூவீஸிற்கு எழுதிய அத்தனை படங்களுமே வெற்றிப் படங்கள்! ‘எங்க ஊர் ராஜா’ சென்னை சித்ரா தியேட்டரில் வெளியானது! இந்தப் படத்தில் சிவாஜிக்கு தந்தை– மகன் என்று இரண்டு வேடங்கள்!
இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட்! அதிலும் அந்த நாட்களில் இலங்கை வானொலியில் இந்தப் படத்தில் வரும் ‘ யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க’– இந்த பாடலின் சரணத்தில் ‘தென்னையைப்பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு! பெத்தவர் மனமே பித்தம்மா! பிள்ளையின் மனமே கல்லம்மா’ பாட்டு அந்த காலத்தில் பிள்ளைப் பெற்றவர்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று!
நான் வீட்டில் அடாவடி வேலைகள் செய்யும்போது, என் அம்மா சொல்வார், ‘பிள்ளையப்பெத்தா கண்ணீருன்னு சும்மாவா எழுதினார் கண்ணதாசன்’? என்பார்! அதே வருடம் வந்த இன்னொரு படம் பாலாஜி தயாரித்த கறுப்பு– வெள்ளைப்படம் ‘என் தம்பி!’
இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்! தயாரிப்பாளரும், நடிகருமான கே. பாலாஜி படங்கள் எடுக்க ஆரம்பித்த போது இந்தியில் வெற்றியடைந்த படங்களை அப்படியே உரிமை வாங்கி தமிழில் எடுப்பார்!
அந்தப் படங்கள் தமிழிலும் பெரிய வெற்றியடையும்! இந்தப் படம் இப்போது ஜெயப்ரதா தியேட்டராகி மூடியே கிடக்கும் அந்த நாளைய மிட்லண்ட் தியேட்டரில் வெளியானது. இந்த தியேட்டர் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அடுத்து உள்ளது!
பாலாஜி இப்படி இந்திப் படங்களை வாங்கி தமிழில் அதை வெற்றி படமாக்கியது அப்போது பெரிதும் பேசப்பட்டது! அதாவது பின்னால் 1980களில் இயக்குநர் மகேந்திரன் சிவசங்கரியின் ‘நண்டு’ படத்தை எடுத்தார்.
இந்தப் படத்தில் பெரும்பாலும் இந்தி வசனங்கள் இருக்கும். காரணம், கதைக்களம் என்பது வடநாடு! அந்த படத்திற்கு குமுதம் பத்திரிகை விமர்சனம் எழுதிய போது ‘இந்தப் படத்தில் இன்னும் ஒன்றிரண்டு ரீல்கள் இந்தியில் எடுத்திருந்தால் தயாரிப்பாளர் கே. பாலாஜி அதன் உரிமையை வாங்கி தமிழில் எடுத்திருப்பார்’ என்று எழுதினார்கள்.
அந்த அளவிற்கு கே. பாலாஜியின் படங்கள் பேசப்பட்டன! அந்த வருடம்தான் தமிழ் சினிமாவின் காலத்தால் அழிக்க முடியாத சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் வந்தது! ‘தில்லானா மோகனாம்பாள்’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது!
‘கலைமணி’ என்கிற பெயரில் இந்த தொடரை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு! தொடராக வந்த போது அதை ஆர்வமாகப் படித்து வந்தவர் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்!
பரதமும், நாதமும் இணைந்த சுவையான இந்தக் கதை திரைப்படத்திற்கு ஏற்ற நல்ல வலுவான கதை என்று கருதினார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன்! ‘நவராத்திரி’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையை படமாக்க விரும்பிய நாகராஜன், ஜெமினி அதிபர் வாசனை சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னார்.
அப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடர் வந்தால் அந்த தொடரின் உரிமை அந்த பத்திரிகை முதலாளியிடம்தான் இருக்கும்.
பின்னால்தான் அந்த உரிமை எழுத்தாளர்களுக்கு வந்தது!
அதனால் அந்த நாவலின் உரிமை ஆனந்த விகடன், ஜெமினி அதிபரான வாசனிடம்தான் இருந்தது!
‘‘தில்லானா மோகனாம்பா’ளை நாம் இருவரும் கூட்டாக எடுப்போம்’. உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. படம் எடுக்கும்போது நான் தலையிட மாட்டேன்’ என்றார் வாசன்!
ஆனால் உடனே நாகராஜன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை
இதற்கிடையில் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ ‘திருவருட் செல்வர்’ படங்களை முடித்துவிட்டு மீண்டும் வாசனை அணுகினார் நாகராஜன்!
இந்த முறை ஒரு முடிவோடு வரவேண்டுமென்றுதான் அங்கே போனார்! ‘திருவிளையாடல்’ படம் பார்த்துவிட்டு, வாசனுக்கு, நாகராஜன் மீது அதிக மதிப்பு ஏற்பட்டிருந்த காலம் அது! விடாமுயற்சியில் தளராத நாகராஜனைக் கண்டதும் வாசன், ஒரு விளக்கம் கேட்டார்– ‘கூட்டுத்தயாரிப்பில் உங்களுக்கென்ன தயக்கம்?’
‘லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் என்னையே சேரட்டும். வாழ்க்கையில் சில அனுபவங்களுக்கு ஆளாகி இருப்பவன் நான்!’ என்றார் நாகராஜன்!
‘நாகராஜன்! தில்லானாவை நீங்களே படமாக எடுத்துக்கொள்ளுங்கள். ‘திருவிளையாடல்’ படம் பார்த்த பிறகு ‘ஆனந்த விகட’னில் வந்த இந்த கதையை அதன் தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்று சொல்லிவிட்டார் வாசன்! மறுநாள்!
கதைக்குக் கொடுக்க வேண்டிய தொகை என்னவென தெரிந்து கொடுத்துவிடலாம் என ஏ.பி.என். ஜெமினிக்கு வந்தார். வாசன் மிக அதிகமாக கேட்பாரோ என பயந்து கொண்டிருந்தார் ஏ.பி.என்.!
‘பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் போதும்!’ என்று சொல்லிவிட்டார் வாசன்! உடனே ‘ செக்’ எழுதி கொடுத்துவிட்டார் ஏ.பி.என். அடுத்த தினம் மாலை, ‘தில்லானா’வைப் படைத்த அதன் ஆசிரியரான கொத்தமங்கலம் சுப்புவை எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் கண்டு பேசினார் ஏ.பி.என். வாசனிடம் அவர் கதையைப் படமாக்க உரிமை பெற்ற செய்தியைச் சொல்லிவிட்டு, ‘கதை எழுதிய உங்களுக்கு என் சொந்த முறையில் ஐயாயிரம் கொடுக்க விரும்புகிறேன்’ என்றார் ஏ.பி.என்.
‘நீங்கள் கொடுத்த பத்தாயிரத்தை இங்கே என்னிடம் கொடுத்து, எல்லாவற்றையும் வாசன் ஏற்கனவே சொல்லிவிட்டார். அவரும் ஓர் எழுத்தாளர், அதனால் ஓர் எழுத்தாளனின் கஷ்டம் அவருக்குத் தெரியும். மேலும், அவர் அந்த உரிமைகளை வைத்திருப்பது கூட அவர் காசு சம்பாதிக்க அல்ல!! நான் நேரடியாக கொடுத்திருந்தால் ஐயாயிரம்தானே கொடுத்திருப்பீர்கள். வாசன் கேட்டதால்தானே மறுபேச்சு பேசாமல் பத்தாயிரம் கொடுத்தீர்கள்! எழுத்தாளனுக்கு அதிக பணம் கிடைக்க வேண்டுமென்பதாலேயேதான் அவர் அந்த உரிமைகளை வைத்திருக்கிறார். வாசன் என் முதலாளி மட்டுமல்ல! என் தெய்வம்’ என்று கண்கட்டுடன் சுப்பு கண்ணீர் மல்க கூறினார்.
ஏ.பி. நாகராஜன் மெய்சிலிர்த்து போனார். இந்தத் தகவல்களை அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து அப்போது வந்து கொண்டிருந்த மாதம் ஒருமுறை வரும் சினிமா பத்திரிகையான பேசும்ப டம் இதழிலும் எழுதினார் நாகராஜன்!
அடுத்து சிவாஜி எப்படி ஒரு நாதஸ்வர கலைஞனாகவே மாறினார்?

vasudevan31355
16th May 2016, 09:08 AM
ஆதவன் ரவி அவர்களே!


//பணத்தைப் பெற்றுக் கொண்ட
பின் கடன் கொடுத்தவனிடம்,
தானே வந்து வட்டியைக் கொடுத்து விடுவதாகவும்,
வட்டிக்காக வீட்டுக்கோ, வேலை செய்யுமிடத்துக்கோ
வந்து விட வேண்டாம் என்றும்
கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்.

அவன் சம்மதித்த பின்னும்
அவர் காட்டும் தயக்கமும்,
முகக் குழப்பமும் சில விநாடிகளே என்றாலும்,
கடன் வாங்கிப் பழக்கமில்லாத,
பொறுப்பும்,தன்மானமுமுள்ள
ஒரு குடும்பத் தலைவனை
நமக்குக் காட்சிப்படுத்தியவை//

தங்களது 'பச்சை விளக்கு' பற்றிய எழுத்துப் பயணம் வெகு நேர்த்தி. தங்களது அற்புதமான ரசனை வார்த்தைகளாய் எழுத்து வடிவில் என்னமாய் விளையாடுகிறது! ஒவ்வொரு காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் முத்திரைகளை தாங்கள் விளக்கும் விதம் அருமை. நானும் அந்த ரகம் என்பதால் என்னால் இன்னும் ரொம்ப ரசிக்க முடிகிறது. தங்களது எழுத்துக்களை ஒன்று விடாமல் படித்து வருகிறேன். நேரமின்மை காரணத்தால் அடிக்கடி இங்கே பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மனமுவந்து பாராட்டுகிறேன். தொடர்ந்து தெய்வத்தின் அற்புதங்களைப் பற்றி எழுதி மகிழ்ச்சி தாருங்கள்.

KCSHEKAR
16th May 2016, 12:18 PM
http://newstodaynet.com/chennai/iconic-shanthi-theatre-wind-sunday

Iconic Shanthi theatre to wind up Sunday

Saturday, 14 May 2016 NT Bureau

Chennai: Shanthi theatre in Anna Salai is a sanctuary for Sivaji Ganesan fans. Owned by the family of the actor, the cinema hall is known for releasing all films of him.

These films saw silver jubilee run and they have very fond memories to the place. Interestingly, the iconic theatre will see curtains coming down Sunday as a commercial complex with a multiplex is all set to come up in its place.

The theatre is synonymous with films associated with Sivaji Ganesan, his son Prabhu and grandson Vikram Prabhu. It even has a plaque with all of Sivaji Ganesan’s films and references to his other on-screen achievements.

It all began in 1961 here with the screening of the movie Pava Manippu. "Fans of the legendary actor would gather from various corners of the State to watch his movies here. The special attraction would be the way screens are decked up for every release", says Thirukumaran, an ardent fan of the actor.

He says, "my special fan moment at Shanthi theatres was watching Sivaji Ganesan’s Thirusulam, which happened to be his 200th film. It saw a continuous 150 housefull shows here".

However fans have a grouse. They say such a theatre which is part and parcel of Sivaji Ganesan fans could have been demolished after screening one last show of the thespian’s movie.

When iconic theatres like Liberty and Muralikrishna were closed, they screened Sivaji Ganesan’s films like 'Andavan Kattalai' and 'Saraswathy Sabatham' as last shows, he says.

Speaking to 'News Today', K Chandrasekaran of Nadigarthilagam Sivaji Samooga Nala Peravai said, "It is sad that curtains are coming down at Shanthi Theatre without screening a Sivaji movie. We are not angry. But we are hopeful when they reopen the complex, they inaugurate it with one of his classics."

eehaiupehazij
16th May 2016, 01:39 PM
Oneway we are worried....but in another perspective when the same SHANTHI theatre assumes a reincarnation within the new complex...we request the management to recreate all the fanfare features, award details....etc as a museum part for our nostalgic recitals!!

RAGHAVENDRA
16th May 2016, 06:19 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13245317_1116556511728353_4014461972176031435_n.jp g?oh=58e9a9c3ae81fcbafba8a6a456b0006d&oe=57DA9FDA

From Today's Times of India Chennai edition

RAGHAVENDRA
16th May 2016, 06:20 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/MyinterviewIE16052016_zpsublb55bs.jpg

From today's The New Indian Express Chennai Edition

RAGHAVENDRA
16th May 2016, 06:36 PM
நண்பர்களே,
இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை பதிப்பின் சார்பாக சென்னை சாந்தி திரையரங்கைப் பற்றிய ஒரு கட்டுரைக்காக, நமது நண்பர்கள் என் பெயரைச் சொல்லி அதன் மூலமாக நேற்று என்னிடம் அப்பத்திரிகை நண்பர் பேட்டி எடுத்தார். மிகவும் குறைந்த கால அவகாசமிருந்ததால் ஓரளவிற்கு நினைவில் இருந்த விவரங்களைச் சொல்லி யிருக்கிறேன். குறிப்பாக நூறு நாட்கள் வெள்ளி விழாப் படங்களைப் பற்றி மிகத் துல்லியமாக சொல்ல முடியவில்லை. எனவே எண்ணிக்கையில் ஏறக்குறைய இருந்தாலும் அதை விவாதப் பொருளாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். தலைவரின் படங்களின் வரவேற்பினைப் பற்றிய சிறப்பினை எடுத்துக் கூறும் ஒரு வாய்ப்பாகத் தான் நான் இதை எடுத்துக் கொண்டு அதற்கேற்ப ஞாபகம் வந்த தகவல்களைச் சொல்லியிருக்கிறேன்.

அதிகமிருந்தாலும் குறைவாக இருந்தாலும் தயவு செய்து அதனை பெரிது படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய பெயரை பத்திரிகையாளரிடம் பரிந்துரைத்த ராமஜெயம் மற்றும் நண்பர்களுக்கு என் உளமாார்ந்த நன்றி.

அடியேனிடம் இருந்த பழைய டிக்கெட்டினையும் பிரசுரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு உளமார்ந்த நன்றி

KCSHEKAR
17th May 2016, 10:05 AM
DINAMALAR - 17-05-2016

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinamalar_zpseucxkbh1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Dinamalar_zpseucxkbh1.jpg.html)

Harrietlgy
17th May 2016, 05:26 PM
From Vikatan.

மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthitheatre6001.jpg


வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.

1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்த புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.

நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.

1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் 'சாந்தி'யின் பெயரில், தனது ஆசைப்படி ஒரு தியேட்டரை கட்டினார் சிவாஜிகணேசன். இதன் பங்குதாரர் ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.

http://img.vikatan.com/news/2016/05/17/images/sivaji5502.jpg

பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.
திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில், சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தை காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.

தியேட்டரின் முழுநிர்வாகத்தையும், சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே, திரையுலகிற்கு பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சகப் போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.

http://img.vikatan.com/news/2016/05/17/images/mgranniversary600sivaji.jpg

இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான், தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.

சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலக போட்டியை தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார். ஆனால் இருவரது ஆசையும் நிறைவேறவில்லை என்பது வேறு கதை.

http://img.vikatan.com/news/2016/05/17/images/sivajikamarajar.jpg

2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக் ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.

சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.

http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthitheatre6005.jpg

சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது, சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது.

அதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி, தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய், இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள்.

http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthiright.jpg

இதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.

அந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட், சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.

இந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம் கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமா,க நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

தியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்' என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம் கவலையுடன் பேசினர்.

http://img.vikatan.com/news/2016/05/17/images/shanthitheatre60031.jpg

இருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.

இருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர், சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது.
தியேட்டர்கள் மூடப்பட்டு, வணிக வளாகங்களாக ஆடைபோர்த்திக்கொள்வதை வெறுமனே ரசிகர்களின் கவலையாக மட்டுமே கொள்ளக்கூடாது; அது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் விடப்படும் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியும் கூட. திரையுலகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Russellsmd
17th May 2016, 06:34 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160516194122647_20160516213335646_201605162231 06470_zps1p4s8xoy.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160516194122647_20160516213335646_201605162231 06470_zps1p4s8xoy.jpg.html)

RAGHAVENDRA
18th May 2016, 01:00 PM
உளமார்ந்த மண நாள் நல்வாழ்த்துக்கள் முரளி சார். இறையருளால் தாங்கள் தங்கள் குடும்பமும் இல்லற வாழ்க்கையில் மென்மேலும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Russellsmd
18th May 2016, 07:02 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160518-WA0011_zpstr8aheuu.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160518-WA0011_zpstr8aheuu.jpg.html)

JamesFague
18th May 2016, 07:15 PM
Wish you many more happy returns of the day Mr Murali Sir

Russellsmd
18th May 2016, 08:01 PM
மனமார்ந்த மணநாள் நல்வாழ்த்துகள்... முரளி சார்.

Subramaniam Ramajayam
18th May 2016, 08:45 PM
Happy wedding day murali sir

blessings to yu and yur family

Russellsmd
19th May 2016, 07:16 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20160518-WA0021_zpsdaly3fz1.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20160518-WA0021_zpsdaly3fz1.jpg.html)

RAGHAVENDRA
19th May 2016, 07:19 PM
A write up on Shanti Theatre and my views on the silverscreen website: (http://silverscreen.in/tamil/features/sivaji-fans-bid-farewell-to-the-iconic-shanthi-theatre/)

Harrietlgy
19th May 2016, 08:24 PM
From Vikatan by Panju Arunchalam,

பவநாராயணாவைச் சந்திக்கப் போனேன். ‘செப்பன்டி குட் ஸ்டோரி’ - தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் என மும்மொழி கலந்து பேசினார். ‘நிறையக் கதைகள் வெச்சிருக்கேன் சார். யார் ஆர்ட்டிஸ்ட்?’ - எனக்கு அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால், எந்தவித பயமும் இல்லாமல் பேசினேன். தவிர, அவர் பெரிய ஆள் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ‘நுவ்வே... அதெல்லாம் உனக்கு எதுக்கு. இட்ஸ் மை ப்ராப்ளம். யூ ஆர் தி ஸ்டோரி ரைட்டர். டெல் த ஸ்டோரி’ என்றார்.

‘யார்னு சொன்னீங்கன்னா, அவங்களுக்கு தகுந்த கதை சொல்வேன்’ என்றேன்.

`எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரும் பெத்தவாடு. பட் சிவாஜி ஈஸி அப்ரோச். அதனால அவருக்கே செப்பு’ என்றார். எனக்கு சந்தோஷம். காரணம், எந்த நடிகருக்கு எப்போது வேண்டுமானாலும் கதை கேட்கலாம் என்பதால், நான் சிவாஜிக்கும் கதை பண்ணிவைத்திருந்தேன். அதைச் சொன்னேன்.

பிறகு, அவர் சிவாஜி வீட்டுக்குப் போய் அவரின் தம்பி சண்முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கிறார். சிவாஜியின் கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை சண்முகம்தான் கவனிப்பார். ‘யார் பஞ்சுவா? நல்லா தெரியுமே, நம்ம பையன். வரச்சொல்லுங்க, கேட்ருவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு இடையில் படத்தின் இயக்குநராக கே.எஸ்.பிரகாஷ்ராவை முடிவுசெய்தனர். அவர் தெலுங்கில் மிகப் பெரிய இயக்குநர். (நடிகை ஜி.வரலட்சுமியின் கணவர். பிரகாஷ் ஸ்டுடியோ உரிமையாளர். அவர், மகன்கள் அனைவரும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என சினிமா குடும்பம். சிவாஜி, வாணிÿ நடித்த ‘வசந்தமாளிகை’யை இயக்கியவர்.)

கதை சொல்ல சிவாஜி வீட்டுக்குப் போனேன். சிவாஜி புரொடக்*ஷனில் அப்போது கதை கேட்க சண்முகம் உள்பட நான்கைந்து பேர் இருந்தனர். எனக்கு என்றைக்கும் இல்லாத பதற்றம். காரணம், பவநாராயணா பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அறிமுகம் இல்லாதவர். அவரிடம் பயம் இல்லாமல் கதை சொல்லிவிட்டேன். ஆனால், கவிஞருடன் செல்கையில் சண்முகம் எனக்கு நல்ல அறிமுகம். என்ன சொல்வாரோ என்ற தயக்கம். உதவியாளராக இருந்த பையனை திடீரென கதாசிரியனாக உட்காரச் சொன்னால்? கதை கோர்வையாக வரவில்லை. நான் நினைத்ததுபோலவே உணர்ச்சியுடன் என்னால் கதையைச் சொல்ல முடியவில்லை. ‘இல்லண்ணே இதுக்கு அப்புறம்தான் அது, அதுக்கு அப்புறம்தான் இது’ - நான் சொதப்பியது எனக்கே தெரிந்தது.

‘சரி பஞ்சு, நான் புரொடியூசர்கிட்ட பேசுறேன்’ என்ற சண்முகம், பிறகு பவநாராயணாவிடம் பேசியிருக்கிறார். ‘நீங்களும் முதன்முதல்ல தமிழுக்கு வர்றீங்க. ஹெவி சப்ஜெக்ட்டா எடுத்து பண்ணலாம். பஞ்சு சொன்ன கதை, அண்ணணுக்கு சரியா வருமானு சந்தேகமா இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார். பின்நாட்களில் நான் வளர்ந்த பிறகு, அந்தக் கதையின் ஒரு பகுதியை ஜெய்சங்கரையும் ÿகாந்தையும் வைத்து ‘உன்னைத்தான் தம்பி’ எழுதினேன். இன்னொரு பகுதியைக் கொஞ்சம் மாற்றி ரஜினியை வைத்து ‘ராஜா சின்ன ரோஜா’ எழுதினேன். ஏவி.எம் தயாரித்த அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இன்று உள்ள அனுபவத்தில் சொல்கிறேன்... அன்று அந்தக் கதையை சிவாஜி பண்ணியிருந்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

Russellsmd
21st May 2016, 12:16 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150904201117333_20160520192903242_2016 0520210429595_zpsors6cs8y.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid-Black-Wallpaper_20150904201117333_20160520192903242_2016 0520210429595_zpsors6cs8y.jpg.html)

Russellsmd
21st May 2016, 12:32 AM
அய்யா நடிகர் திலகத்தின் புகழ் காக்கும் ஆவணங்களைத் தான் காக்கும் ஆருயிர் நண்பர்
திரு.செந்தில்வேல் அவர்களின்
சந்தோஷ நல்வாழ்வை கடவுள்
காக்கட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

RAGHAVENDRA
21st May 2016, 07:04 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13256095_1119638204753517_4208888944686399029_n.jp g?oh=13d26ba5b667a86675c29d5a60eb4c64&oe=579AB9ED

RAGHAVENDRA
21st May 2016, 07:05 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13238885_1119652381418766_1672993225616618132_n.jp g?oh=e9a4b643833dd4a47e924e4944114fb3&oe=57D5B376

https://www.youtube.com/watch?v=i7rJ_HATYZE

eehaiupehazij
21st May 2016, 08:21 AM
Happy Birthday wishes Senthilvel!
Greetings for your continued service to NT's documentations

JamesFague
21st May 2016, 09:01 AM
Wish you many more happy returns of the day Mr Senthilvel







S Vasudevan

KCSHEKAR
21st May 2016, 10:54 AM
இன்று (21-05-2016) பிறந்தநாள் காணும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Harrietlgy
21st May 2016, 11:59 AM
From Dinamani,

http://media.dinamani.com/2016/05/21/8.jpg/article3444364.ece/binary/original/8.jpg

பாலும் பழமும் நினைவினில் ஏந்தி சரோ கூறியவை-

‘பாலும் பழமும் படத்தில் நடிகர் திலகம் டாக்டராகவும், நான் அவரது காதல் மனைவியாகவும் நடிச்சோம். படப்பிடிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் சிவாஜி என்னிடம், ‘சரோஜா... இந்தப் படத்துல நீ என்னை விட நல்லா நடிச்சிருக்கே’என்றார். நான் சிலிர்த்துப் போயிட்டேன்.

அவர் நடிப்புக்கு முன்னாடி நானும் கொஞ்சம் நடிச்சிருந்தேன். ஆனா என் நடிப்பை அவர் நடிப்புக்கும் மேலா வெச்சு சொன்னார் பாருங்க. அதுதான் அவரை மத்தவங்கக் கிட்டயிருந்து வித்தியாசப்படுத்துது.

அந்த கேரக்டருக்காக நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டுருக்கேன். அதில் நான் இரண்டு விதமாத் தெரிவேன். அதாவது டி.பி. பேஷண்டா இருக்கிறப்ப ரொம்ப வற்றி உலர்ந்து காணப்படுவேன். மத்த சீன்கள்ள வழக்கம் போல் தெரிவேன்.

டி.பி. பேஷண்ட் சீன்ல நான் அப்படி மெலிவா தெரியறதுக்கு காரணம் நான் கிடந்த கொலைப்பட்டினிதான். சாப்பாடு நேரத்துல கொஞ்சம் ஜூஸ் மட்டுமே சாப்பிட்டு உடலை இளைக்க வெச்சிருக்கேன்.

ஒரு வேளை என் கேரக்டர் மேலே நான் காட்டின அக்கறை சிவாஜி சாரை இப்படிச் சொல்ல வெச்சிருக்கலாம்’.

பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த படம் பாலும் பழமும். செப்டம்பர் 9ல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. சென்னையில் 20 வாரங்களைக் கடந்து ஓடியது.
1961ல் ஜனாதிபதி பரிசுக்காகச் சென்ற நாலு படங்களும் சிவாஜியுடவை. அவற்றில் மூன்று பீம்சிங் இயக்கியவை.

அவை மொத்தமாக மோதியதில், பாலும் பழமும் பரிசைத் தவற விட்டது.

அகில இந்தியாவிலும் பாவமன்னிப்பு மிகச் சிறந்த படம் என்கிற விருதையும், பாசமலர் சான்றிதழையும், கப்பலோட்டிய தமிழன் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றது.

mr_karthik
21st May 2016, 12:12 PM
நான் தவழ்ந்த என் தாய் வீடு
=====================

“சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல். நான் வாலிபனாக பதினைந்து ஆண்டுகள் தவழ்ந்து திரிந்த என் தாய் வீடு. அது ஒரு அரங்கம் மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இதயத்துடிப்பு. ஒவ்வொரு நாள் மாலையின் சந்தோஷம். மறக்க முடியுமா அதன் மணியான நாட்களை. பள்ளி, கல்லூரி, அலுவலகம் இவற்றுக்கு கூட வாரம் ஆறு நாள், ஐந்து நாள் என்று போனது உண்டு. ஆனால் வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தின் முப்பது நாட்களும் தவறாமல் ஓடிசசென்ற, தேடிசசென்ற, நாடிசசென்ற ஒரே இடம் அது “சாந்தி” மட்டுமே. பெயர் வைத்தவர் தீர்க்கதரிசி. அங்கே சென்றால் மட்டுமே எங்களுக்கு சாந்தி என்று உணர்ந்து வைத்திருக்கிறார்.

அங்கு பார்த்து மகிழ்ந்த திரைக் காவியங்கள்தான் எத்தனை, எத்தனை. அதை விட பல மடங்கு அதிகமாக சாந்தி வளாகத்தில் நின்று, அமர்ந்து பேசிய, பகிர்ந்துகொண்ட, சுகமாக உரையாடிய, சூடாக விவாதித்த விஷயங்கள்தான் எவ்வளவு. அங்கு எத்தனை மணி மணியான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களுடன் பேசித் தீர்த்த விஷயங்கள் எவ்வளவு, தகவல் பரிமாற்றங்கள், ஆவண பரிமாற்றங்கள், வரப்போகும் படங்களுக்கு எந்த எந்த மன்றங்கள் சார்பில் என்ன என்ன அலங்காரங்கள் செய்வது என்று எங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்ட பாங்கு. (பெரும்பாலும் மெயின் கட் அவுட்டுக்கு ராட்சத மாலை போடும் உரிமை எங்கள் மன்றத்துக்கே கிடைக்கும்).

வேறு அரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்கள் ரிலீஸாகி இருந்தாலும் அவற்றைப்பற்றி கருத்து பகிர்வுகள், விவாதங்கள், வெளியூர் நிலவரங்கள் குறித்த அலசல்கள் அனைத்தும் நடைபெறும் இடமாக விளங்கியது சாந்தி வளாகம். அந்த அளவுக்கு ரசிகர்களின் சந்திப்பு கேந்திரமாக, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்து வந்தது. தற்போது மூடப்பட்ட வண்ணமுகப்பு கொண்ட சாந்தியைவிட, உடலெங்கும் “சந்தனவண்ணம்” பூசிக்கொண்டு கம்பீரமாக நின்ற அன்றைய சாந்திதான் எங்கள் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த வளாகத்தில் எங்கள் கால்கள் படாத இடமே இல்லையெனலாம். அங்கு ‘இருந்த’ தண்ணீர் பவுண்டன் தொட்டியின் ஓரம் அமர்ந்து கலந்துரையாடிய அந்த பதினைந்து வருடங்களும் பசுமையானவை. கல்வெட்டாக மனதில் பதிந்து விட்டவை.

அங்கு கிடைத்த அற்புதமான நண்பர்களை மறக்க முடியுமா?. கோவை சேது, தி.நகர் வீரராகவன், மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், நமது ராகவேந்திரன் சார், வடசென்னை வாத்தியார் ராமன், பாம்குரோவ் சந்திரசேகர், மாரீஸ் சந்திரசேகர், குருஜி, சிவா, பல்லவன் விஜயகுமார், கும்பகோணம் ஸ்ரீதர், கவிஞர் கா மு ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி, புரசைவாக்கம் ஆனந்த் என்று இன்னும் எத்தனை எத்தனை நண்பர்கள் (1971 முதல் 1984 வரை) தினமும் மாலை 5 மணிக்கு உற்சாகத்துடன் ஒன்று கூடுவதும் 9 மணிக்கு மேல் பிரிய மனமில்லாமல் பிரிவதும், இடைப்பட்ட நேரத்தில் நடிகர்திலகத்தின் சாதனைகளை அலசோ அலசென்று அலசுவதும் மறக்க முடியுமா அந்த நாட்களை.

இதோ நாங்கள் கூடிக்குலாவிய எங்கள் தாய் வீடு மூடப்பட்டு விட்டது. இன்னும் சிறிது நாட்களில் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

அழியாத சுவடுகளாக நினைவுகள் மட்டுமே இதயங்களில் தங்கியிருக்கும் மண்ணறைக்கு செல்லும் வரை.

HARISH2619
21st May 2016, 01:14 PM
Dear senthilvel sir,
many many happy returns of the day

KCSHEKAR
21st May 2016, 03:30 PM
நான் தவழ்ந்த என் தாய் வீடு
=====================
“சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல்.

டியர் கார்த்திக் சார்,

நீண்ட நாள் கழித்து தங்களுடைய பதிவைக் காண்பது மகிழ்ச்சி.

தங்களின் சாந்தி தியேட்டர் அனுபவங்கள், எல்லா ரசிகர்களுக்கும் உள்ள ஏக்கங்கள் ஆகியவற்றை அழகாகக் கூறியிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, சிறுவயதில் விடுமுறையில் சென்னைக்கு, என்னுடைய சகோதரர் வீட்டிற்கு வரும்போது, சாந்தி திரையரங்கை வந்து பார்த்துவிட்டுச் செல்வதையே ஒரு பாக்கியமாகக் கருதினேன். அப்போது அங்குள்ள யாரும் எனக்குத் தெரியாது. அப்போதெல்லாம், திரையரங்கிற்குள் சென்று திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அங்கு சுவற்றில் எழுதப்பட்டிருந்த, நடிகர்திலகத்தைப் பற்றிய சாதனைத் தகவல்களையெல்லாம் ஆச்சர்யத்தோடு பார்த்துச் சென்றிருக்கிறேன்.

தாங்கள் மற்றும் திரு.ராகவேந்திரன் சார் போன்ற ஜாம்பவான்களின் சாந்தி தியேட்டர் அனுபவங்களை பார்க்கும்போது நான் மிகவும் குழந்தை. ஆனால், உங்களின் அனுபவங்களைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பே, என்னையும் உங்கள் அனுபவங்களோடு பயணிக்க வைக்கிறது. தாங்கள் சாந்தியில் பயணித்த நாட்களாக 1971 முதல் 1984 வரை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் முதன் முதலில் சென்னை வந்தபின், 1985-ல் முதல் மரியாதை படத்தைத்தான் முதன் முதலாக பார்த்து மகிழ்ந்தேன். அதன் பிறகுதான் எனக்கும் சாந்தி திரையரங்கத்திற்கும் நெருக்கம் அதிகமானது. தியேட்டரோடு மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளரான எனது கனவுலக நாயகனாகத் திகழ்ந்த நடிகர்திலகத்தொடு நெருங்கிப் பழகி, பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும் என்று கனவில்கூட நினைக்காத நிலையில், கடவுள் அருளால் அந்த பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.

அதன் உரிமையாளர்களாக இருந்த சண்முகராஜா பெயரின் முன்பாதியையும் (san), உமாபதி பெயரின் பின்பாதியையும் (thi) இணைத்து இப்பெயர் வைக்கப்பட்டதாகவும், பின்னாளில் இத்திரையரங்கை வாங்கிய நடிகர்திலகம், தன் மகளுடைய பெயராக இருப்பதால் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. (சாந்தி திரையரங்கின் முந்தைய உரிமையாளர்களில் ஒருவரான சிவகங்கையைச் சேர்ந்த திரு.சண்முகராஜாவிற்கு நெருக்கமான திரு.மாரி சேர்வை என்பவர் என்னிடம் தெரிவித்த தகவல் இது) இந்தத் தகவல் உண்மையா என்பதுகுறித்து தெரிந்த நண்பர்கள் பதிவிடவும்.

காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுபோல இப்போதுள்ள சூழ்நிலையில், mallகளோடு கூடிய சிறிய திரையரங்கங்கள்தான் தாக்குப்பிடிக்கமுடிகிறது. இத்திரையரங்கத்தை இடித்து கட்டப்படும் mallல் வரும் தியேட்டருக்கு சாந்தி பெயர் சூட்டப்படும் என்று இளையதிலகம் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். அதோடு, மற்றொரு திரையரங்கிற்கு நடிகர்திலகத்தின் பெயர் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. எதிர்பார்ப்போம்.

நன்றி.

Russellxor
21st May 2016, 07:49 PM
வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

RAGHAVENDRA
21st May 2016, 11:09 PM
https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13254494_1120037621380242_8061782600777214478_n.jp g?oh=dc66a20145a6718589c58575e9e462af&oe=57E7B63B

https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13221532_1120039611380043_5218561975223355134_n.jp g?oh=abdc744deaef381b9f29c26fbdf3788b&oe=57E60278

https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13227207_1120039644713373_6117524435056439482_n.jp g?oh=70ff152149e788c63ac33deeb78e01fc&oe=579E2B8E

https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13233116_1120039641380040_5650746604221936634_n.jp g?oh=89d97de6b53dc2b8ca7e507a4becd7e6&oe=579D3778

The Fountain that existed in the Shanti Theatre. Behind we can see the wall wherein we had painted the list of films of Nadigar Thilagam. This was conceived by myself and the theatre management was so kind enough to immediately concede our request and we almost stayed at the Shanti for almost a month. The preliminary work was started in the end of 1982 and the painting was started around the month of April-May 1983. Due to summer and since we all were employed in our profession, the painting work was carried out in the evenings. We fixed the target and decided to open it on the release of Santhippu movie. Accordingly we completed and opened it on 16.06.1983 with the help of fellow Sivaji fans and celebritiy Sivaji Fans including Ygee Mahendra, CVR Sir, MSV Sir, Jai Ganesh, Prem Anand, and many others.

This was later on translated to a Granite Plaque by our fellow Sivaji Fans for whom we are always thankful.

These images are snapshots from the movie Mannan. The queue system can also be seen in the images.

Long live memory of Shanti.

My sincere thanks to Murali Srinivas for kindly reminding this Scene from Mannan.

RAGHAVENDRA
21st May 2016, 11:19 PM
கார்த்திக்
தங்களை வரவழைத்த நமது சாந்திக்கு என் உளமார்ந்த நன்றி.

சென்ற ஞாயிறன்று மாலை இறுதி நாளாக சாந்திக்கு சென்றபோது முரளி சாருக்கு இந்த இடத்தையெல்லாம் காண்பித்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் வரும் வழியையும் காட்டினேன். அப்போது அவர் மன்னன் படத்தை நினைவூட்டி, அதில் நீங்கள் பெயிண்டிங் வரைந்த சுவரைக் காட்டுவார்கள் என்று கூறினார். அன்று முழுதும் நினைவுகள் சாந்தியையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. இன்னமும் அதிலிருந்து மீள முடியவில்லை. இருந்த போதிலும் சுற்றிலும் மிகச் சிறந்த வடிவமைப்புடன் பல்வேறு புதிய வளாகங்கள் வரும் போது நம்முடைய அரங்கம் இன்னும் பழைய அமைப்பிலிருந்து மீளாமல் இருப்பது ஒருவகையில் வருத்தமாகத் தான் உள்ளது. அதிலும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் மாற்றப்பட்டே ஆக வேண்டிய நிலையில் தான் அரங்கமும் உள்ளது.

புதிய வளாகத்தில் மூன்று அல்லது நான்கு திரையரங்குகள் வர இருப்பதாகவும் அவற்றுக்கு பெயர்கள் கூட தீர்மானிக்கப்பட்டு செயல் வடிவம் பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும் கேள்விப்பட்டோம். அதில் நிச்சயமாக ஒரு திரையரங்கம் பழைய தமிழ்த்திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்கிற என் விருப்பத்தினை என்னிடம் பேட்டி கண்ட நிருபர்களிடம் நான் கூறியுள்ளேன்.

எது எப்படியோ, நம்மால் சாந்தியின் நினைவுகளிலிருந்து மீள்வது என்பது இயலாத காரியம்.

தங்களுடைய பதிவுகள் எத்தனையோ கடந்த கால நிகழ்வுகளை மனதில் அசை போட வைக்கின்றன.

என்றும் மலரும் சாந்தியின் நினைவுகளுடன் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...

புதிய பறவையில் தலைவர் சொல்லுவார். நான் உன்னை மனம் ஒப்பியா போகச் சொல்கிறேன். நீ இல்லாத அந்த நாட்களில் உன் நினைவோடு வாழ்ந்து அதில் ஒரு சந்தோஷம் கிடைக்குமே அது போதும் என்கிற எண்ணத்தினால் தான் போகச் சொல்கிறேன் என்பார்.

அது போல் இந்தக் கட்டிடத்திற்கு பிரியா விடை கொடுத்து மனதில் பழைய நினைவுகளை அசை போட்டு வாழ்ந்திருப்போம்...

Russellxor
22nd May 2016, 01:42 PM
நினைவுகள்
சில மாதங்களுக்கு முன்பு சாந்திக்கு சென்றிருந்தபோது ...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217803511_zpswr7vnusr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217803511_zpswr7vnusr.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217817438_zpsossfmuse.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217817438_zpsossfmuse.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442217800693_zpshkffoxiv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442217800693_zpshkffoxiv.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218064904_zpshqbj1qoh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218064904_zpshqbj1qoh.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218081880_zpshwlhpawu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218081880_zpshwlhpawu.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218442230_zpscwuegi5c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218442230_zpscwuegi5c.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218448232_zpsemihpczc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218448232_zpsemihpczc.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218450896_zpsz2fu6epa.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218450896_zpsz2fu6epa.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218061827_zpsd8fokjna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218061827_zpsd8fokjna.jpg.html)
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/shanthi%20theatre/FB_IMG_1442218079229_zpsfmlq601i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/shanthi%20theatre/FB_IMG_1442218079229_zpsfmlq601i.jpg.html)

Harrietlgy
22nd May 2016, 07:46 PM
Written by Mr. Sudhangan,

http://www.dinamalarnellai.com/site/news_image/22/16016Tamil_News_Nellai.jpg

சிவாஜி எப்படி ஒரு நாதஸ்வர கலைஞனாகவே ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மாறினார்? படம் வந்தபோது பலர் மனதிலும் எழுந்த கேள்வி இதுதான்! அதற்கு சிவாஜி என்ன சொன்னார்? ‘ஒரு நடிகன் எத்தனையோ வேடங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அவன் ஏற்றுக்கொண்டது ஒரு வாத்தியக்காரன் வேடனாக இருக்கலாம்.

வீணை வாசிக்க வேண்டியிருக்கும். மிருதங்கம் வாசிக்க வேண்டியிருக்கும். சிதார் வாசிக்க வேண்டியிருக்கும். நாதஸ்வரம் வாசிக்க வேண்டியிருக்கும். அதற்காக அவன் ஒவ்வொரு வாத்தியமாக எடுத்துக்கொண்டு பயிற்சி செய்ய ஆரம்பித்தால் அவன் நடிப்புத் தொழில் என்னாவது? அவன் வாத்தியக்காரனும் ஆகமுடியாது. நடிகனாகவும் இருக்க முடியாது!

நான் செய்ததெல்லாம் நடிப்புத்தான். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நான் நாதஸ்வரம் வாசிப்பது போல நடித்தேன். உண்மையில் நான் நாதஸ்வரம் வாசிக்கவில்லை. என்னுடைய முகபாவத்தால் நாதஸ்வரத்தை நானே வாசிப்பது போல், ரசிகர்களுக்குத் தோன்றச் செய்தேன்.

நாதஸ்வரத்தின் மீது விரல்களை வைத்து அசைத்தேன். இடையிடையே மூச்சுப் பிடித்து ஊதுவதுபோல் முகபாவத்தைச் சேர்த்தேன். அங்கே நீங்கள் சிக்கல் சண்முகசுந்தரத்தைப் பார்த்தீர்கள். என்னை ஒரு நாதஸ்வர வித்வானாகவே பாராட்டினீர்கள்.

அதில் நிஜமாக நாதஸ்வரம் வாசித்த மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்கள் என் பக்கத்திலேயே உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்தால் கூட, நான் வாசிப்பதுதான் சரி, அவர்கள் வாசிப்பது தப்போ என்று தோன்றும். இது நடிப்பால் உருவாக்கும் ஓர் இம்பாக்ட் அல்லது மாயத்தோற்றம்.

இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் அருமையாக இசையமைத்திருந்தார். பத்மினி, பாலையா, மனோரமா, ஏவி.எம்.ராஜன், நாகேஷ், என் நண்பன் பாலாஜி போன்றவர்களும் என்னோடு நடித்திருந்தார்கள். இதையேதான் நான் பல படங்களிலும் செய்தேன். ‘திருவிளையாடல்’ படத்தில் ஒரு காட்சியில் ‘ பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலுக்கு பல்வேறு வாத்தியங்களை வாசிப்பது போல் நடித்தேன். ‘மிருதங்க சக்ரவர்த்தி’ படத்தில் சுப்பையா பிள்ளை பாத்திரத்தில் நடித்தபோதும் என்னுடைய முகபாவத்தில் மிருதங்கம் வாசித்தேன். கைவிரல்கள் மிருதங்கத்தை நிரடியது என்னவோ உண்மை. ஆனால், அதுதான் சரியான தாளங்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் நடிப்பினாலும், என் முகத்திலுள்ள ஒவ்வொரு தசை அசைவினாலும், கண்களின் அசைவினாலும் அங்கே மிருதங்க நாதத்தை நான் உருவாக்கினேன்.

இதே போல்தான் ‘தெய்வ மகன்’ படத்தில் ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’ பாடலுக்கு நான் சிதார் வாசித்தேன். அதே போல் ‘தவப்புதல்வன்’ படத்தில் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ பாடலுக்கு சிதார் வாசித்துக்கொண்டே பாடுவேன்.

‘பாசமலர்,’ ‘புதிய பறவை,’ ‘தங்கப்பதக்கம்,’ ‘எங்க மாமா’ போன்ற படங்களில் நான் பியானோ வாசித்திருப்பேன். எந்த வாத்தியம் வாசிப்பது போல் நடித்தாலும் அந்த வாத்தியத்தின் நியதிக்கேற்ப, என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகக் கேட்டுக்கொண்டு அதன்படி செய்ததனால், நானே மிகத்திறமையாக வாத்தியங்களை வாசிப்பது போல் உங்களுக்கு தோன்றியது. அதுதான் நடிப்பு!’ இப்படித்தான் சிவாஜி, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறினார். அந்த வருடம் வந்த இன்னொரு முக்கியமான படம் ‘திருமால் பெருமை’. ஏ.பி. நாகராஜன் எடுத்த மற்ற புராணப்படங்களை விட இந்தப் படம் அதிகம் பேசப்படாத படம். காரணம், வைணவர்களுக்கு சினிமா ரசனை குறைவோ என்று கூட யோசிக்க வைத்த படம்! அல்லது ‘திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர்’ போன்ற சைவ படங்களைப் போல் இந்த படத்தில் ஜனரஞ்சகம் அதிகமில்லை என்று ரசிகர்கள் நினைத்தார்களோ என்பது தெரியவில்லை. ‘திருவருட்செல்வர்’ எப்படி நாயன்மார்கள் வரலாறோ, அதே போல்தான் இது ஆழ்வார்களின் வரலாற்றை தொகுத்த படம்!

வழக்கமாக தன் எல்லாப் படங்களையும் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்கிற பெயரில்தான் எடுப்பார் ஏ.பி. நாகராஜன். ஆனால் இந்தப் படத்தை வெங்கடாசலம் செட்டியார் என்பவருக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவீஸ் சார்பில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன்! படத்தின் ஆரம்பமே திருப்பதி பெருமாளிடமிருந்துதான் ஆரம்பிக்கும். திருப்பள்ளியெழுச்சி பாடலாக பின்னால் சீர்காழியின் குரலில் ‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்!’ என்று துவங்கி, ‘பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்’ என்றுதான் படம் துவங்கும்! அப்படியே அந்தப் பாடல் கதாகாலட்சேப பாகவதரான நாகேஷின் மேல் முடிந்து அவர் பாடுவதாக முடித்து படம் ஆரம்பிக்கும். படத்தை பெரியாழ்வாரிடமிருந்து துவக்குவார்! ஆழ்வார்களிலேயே நம்மாழ்வாருக்கு மிகப்பெரிய பெயர் உண்டு. ஆனால், திருமகளை பெரியாழ்வாரின் மகளாக பூமியில் கண்டெடுத்து வளர்க்க வைத்தார் திருமால்! ஜனகனுக்கு பூமியில் கிடைத்த பெண், ராமாயண சீதை! அதே போல் பெரியாழ்வாருக்கு அவர் தோட்டத்தில் கிடைத்த பெண்தான் கோதை என்கிற ஆண்டாள்! பாண்டியன் சபையிலே பெருமாளின் புகழ் பாடி பெரும் பரிசுகளை பெற்று திரும்பிய பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர், தினமும் பெருமாளுக்கு தன் தோட்டத்தில் வளர்த்த பூக்களையே தினமும் சூட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பார்! அந்த நந்தவன கைங்கர்யத்திலேயேதான் படத்தின் காட்சிகள்! சிவாஜி அந்த தோட்டத்து பூக்களுக்கு குடத்தினால் தண்ணீர் ஊற்றுவார்! அப்படியே ஒரு வைணவராகவே காட்சி தருவார்! கொட்டகையில் விசில் பறக்கும்!

பிரபந்தம் படித்துக்கொண்டே சிவாஜி படத்தையும் பார்த்தவர்கள் இருந்தால், இனி பெரியாழ்வார் என்றால் சிவாஜி நினைவுதான் வரும்! அப்போது அந்த தோட்டத்து துளசிச்செடி அருகே திருமகள் வந்து நின்று அப்படியே குழந்தையாக மாறி அங்கே படுப்பாள்! திடீரென்று தோட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் அழுகுரல் வரும் திசை நோக்கிப் போவார். அங்கே துளசிமாடத்திற்கு அருகே அழுது கொண்டிருந்த குழந்தை இவரைக் கண்டதும் அப்படியே சிரிக்கும்! குழந்தையை கையிலெடுப்பார்! யார் குழந்தை என்று சில விநாடிகள் திகைப்பார்!

பிறகு, இதுவும் நாராயணன் விளையாட்டு என்று முடிவு செய்து குழந்தையை தானே வளர்க்க முடிவு செய்து, அந்தக் குழந்தைக்கு உடனே கோதை என்று பெயர் சூட்டுவார்! அடுத்த காட்சி காமெடிக்கு போகும்! எஸ். ராமராவும், மனோரமாவும் வைணவ தம்பதிகளாக ஒரு காட்சியைக் காட்டிவிட்டு, கதை அப்படியே பெரியாழ்வாரிடம் வரும்! இங்கே மறுபடியும் பாடலில் கண்ணதாசனின் மிகுந்த கற்பனை வளம் மிகுந்த பாடல் துவங்கும்! அந்தப் பாடலும் நந்தவனத்திலேயே ஆரம்பிக்கும்!

‘மலர்களிலே பல நிறம் கண்டேன்! திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்’ என்ன அருமையான பாடல் அது!

(தொடரும்)

Subramaniam Ramajayam
22nd May 2016, 09:03 PM
Mr senthilvel sir
please see my pm in the mailbox

KCSHEKAR
23rd May 2016, 06:24 PM
"சிவகாமியின் செல்வன்" - 52-வது நாள் விழா

இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும், நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறு மற்றும் மறு வெளியீட்டிலும் சாதனை புரியும், நம் ரசிகனின் ரசனை என்றும் மாறாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டில் 50-வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது.

22-05-2016, ஞாயிறன்று சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற 52-வது நாள் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர், திரு.சி.வி.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர்திலகத்தோடு தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டார்.

இயக்குனர் திரு.சி.வி.ராஜேந்திரன், திரு.முரளி சீனிவாஸ், திரையரங்கப் பொறுப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் திரு.P .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவும் சிறப்புற நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும், இதுபோல நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளிவந்து, வெற்றிவிழாக்கள் காணவேண்டும் என்ற நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆவல், விருப்பத்துடனும்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160523%201_zpswmxpswpv.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160523%201_zpswmxpswpv.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160522_zps8unsqbl3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160522_zps8unsqbl3.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160523_zpsiwmfh1hs.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160523_zpsiwmfh1hs.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160523%202_zpsxs7fzlzn.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160523%202_zpsxs7fzlzn.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160522%205_zpsnx1caqsx.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160522%205_zpsnx1caqsx.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160522%206_zpsjlkvpubz.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160522%206_zpsjlkvpubz.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160522%207_zps9byj4s5o.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160522%207_zps9byj4s5o.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/WhatsApp-Image-20160522%204_zpsziw5isim.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/WhatsApp-Image-20160522%204_zpsziw5isim.jpg.html)

Russellsmd
23rd May 2016, 11:50 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160522003048630_20160522011615785_201605220856 03213_zpszweltbbw.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160522003048630_20160522011615785_201605220856 03213_zpszweltbbw.jpg.html)

RAGHAVENDRA
24th May 2016, 08:15 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/13254377_1121756907874980_6068455572476126812_n.jp g?oh=7a6eed0fe1ee574b2bcd522522a04c73&oe=57D3419C

Gopal.s
24th May 2016, 10:46 AM
சாந்தி திரையரங்கம்.

ராகவேந்தர் ,கார்த்திக் எழுத்துகளை படித்து கண்ணீர் திரையிட்ட கண்களை துடைக்க நேரம் தேவை பட்டது. இன்று எனது மணநாள் ஆதலால் சோகங்களை ஒத்தி வைத்து எனது எண்ணங்களை பகிர்கிறேன்.

நான் பிறந்ததிலிருந்தே சிவாஜி ரசிகன். என் சூழல் முழுதும் சிவாஜி காற்றே. 1965 முதலே, சாந்தி என்ற விளம்பரங்களை கண்டால் உடலில் ஒரு இன்ப எழுச்சி ,ஒரு ஆசுவாச உணர்வு எழும். கிட்டத்தட்ட நம் கடவுளின் ஆலயம் போல ,அந்த திசை நோக்கி எண்ணியே தொழுதோம். நான் நெய்வேலியில் வளர்ந்ததால் சாந்தி தியேட்டரை பற்றி கேள்வி ஞானம் மட்டுமே.

சிவந்த மண் போன்ற சில சில முக்கிய படங்கள் சாந்தியில் வெளியாகாத சூழ்நிலை,தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் வெள்ளி விழா வாய்ப்பிருந்தும் தவற விட்ட சோகங்கள் என தூற்றிய தருணங்களும் உண்டு.

ஆனால் தேவி பாரடைஸ் போன்ற திரையரங்குகள் வந்து ஓரளவு சாந்தி மோகத்தை தணித்தது.ராஜா சாந்தியில் வெளியாகாதது ஆத்திரமூட்டவில்லை.நெய்வேலி அமராவதியில் அஞ்சல் பெட்டி காணும் போது கன்னட பைங்கிளியுடன்(Chinna paingili) திராவிட மன்மதனின் கிணற்று விளையாட்டு சாந்தி cutout காணும் போது , பட்டிக்காடா பட்டணமா படத்தை மதுரை சென்ட்ரலில் கண்டு களிக்கும் போது சாந்தி வரும் போது உடம்பு பூரா விசிலடிக்கும்.

நான் சென்னையில் தங்க ஆரம்பித்தது 1974 ஆகஸ்ட் முதலே. ஆனால் தனியே நடமாடும் அளவு தன்னம்பிக்கை வளராததாலும்,ஜெமினி studio colour lab ,பிரத்யேக திரையரங்கில் ,வெளியாக போகும் படங்களை ஒரு மாதம் முன்பே கண்டு களித்து கொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்த பொன்னாள் வந்தே விட்டது. 1975 ஏப்ரல் 20 ஆம் தேதி என் அத்தை மகன் ,28 டிக்கெட் புக் பண்ணி ,கருணை கூர்ந்து என் பெயரையும் பார்வையாளர் வரிசையில் சேர்த்த நாள். நான் சாந்தியில் பார்த்து ரசித்த முதல் படம். என்ன சொல்வது ,அப்படியே சந்தோஷத்தில் ஓவென்று கத்தி, குதிக்கலாமா என்று. என் ஆலயத்தில் மேல் மாடியிலிருந்து என் தெய்வ தரிசனம். பின்பு மன்னவன் வந்தானடி,பாட்டும் பரதமும் ,தீபம்,அண்ணன் ஒரு கோயில்,திரிசூலம்,ரத்த பாசம், என்று பல படங்கள்.

முதல் முதலில் சுவர்களில் சாதனையலங்காரங்கள் இருப்பதை கேள்வியுற்று ஓடி ஓடி போய் பார்த்து களித்திருக்கிறேன்.மன்னனில் சாந்தி வரும் காட்சியில் பழைய த்ரில் எட்டிபார்க்கும்.சென்னையை விட்டு வெளிநாடு போன பிறகு , எப்போது விடுப்பில் வந்தாலும் ,ஒரு முறையேனும் அங்கு வந்து சுற்றி விட்டே செல்வேன். மனம் முழுக்க பரவசம் சூழும். ஆனால் மற்ற நடிகர்களின் படம் அங்கு ஓடுவதோ, அவர்களின் போஸ்டர்கள் இருப்பதோ கடுப்பை கிளப்பினாலும் பொறுத்தே சுற்றி பார்ப்பேன்.

இன்று எங்கள் ஆலயம் இடிக்க படும் சோகம். அங்கு வணிக வளாகம் என்ன , இன்னொரு தாஜ் மகாலே வந்தாலும் கூட எங்கள் சாந்தி எங்களுக்கு தந்த உணர்வையா தர போகிறது?

vasudevan31355
24th May 2016, 12:08 PM
From FB

Sivagamiyn Selvam 50th day function at Chennai Srinivasa Theatre we all with Our Respected Director Thiru CV Rajendran Sir.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/t31.0-8/13254726_1019189788193987_3249589280551592888_o.jp g

vasudevan31355
24th May 2016, 12:11 PM
Last day of Our Shanthi Theatre.

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/13240055_1015414675238165_8677846684866402026_n.jp g?oh=03d94f62df58ad8d0012a36fee5521f4&oe=57CE2BDC

vasudevan31355
24th May 2016, 12:12 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x395/13164227_899138603529050_6887238492454715198_n.jpg ?oh=ac20dcb74396e818eeda54f4ae9da039&oe=57CC52D1

vasudevan31355
24th May 2016, 12:14 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13266025_821710647973373_3101670171474153173_n.jpg ?oh=8c0c3233a5bd104f3babeaa2d06e9e1d&oe=57CB4BD0

vasudevan31355
24th May 2016, 12:16 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/11222791_10204606574546379_1617077691472576601_n.j pg?oh=01f1e69d4cc641b328dd48ce0db589cf&oe=57D6BC04

JamesFague
24th May 2016, 12:59 PM
Mr KCS Sir,


Thanks for your writeup on 52 days celebration of SS. Very happy to meet Canada Siva sir in the fumction.

He made his presence inspite of busy schedule. We miss you on that day in Srinivasa Mr KCS.




Mr Neyveliar,


Thanks for uploading the snap from FB.



Regards

KCSHEKAR
24th May 2016, 04:47 PM
Mr KCS Sir,
Thanks for your writeup on 52 days celebration of SS. Very happy to meet Canada Siva sir in the fumction.
He made his presence inspite of busy schedule. We miss you on that day in Srinivasa Mr KCS.
Regards
வாசு சார்,

நான் முன்கூட்டியே செல்லத் திட்டமிருந்த நிகழ்ச்சிக்காக, திருநெல்வேலி சென்றுவிட்டதால் 22 ஆம் தேதி நடைபெற்ற 52வது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.

101-வது நாள் 10-07-2016, ஞாயிறு அன்று வருகிறது. அன்றைய தினம் விழா கொண்டாடத் திட்டமிட்டிருப்பதாக வெளியிட்ட மதுரை சிவா மூவிஸ் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கொண்டாடுவோம்.

நன்றி.

Russellsmd
25th May 2016, 01:16 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160520214608916_20160524223857848_201605242300 31696_zps6xtgwhmp.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160520214608916_20160524223857848_201605242300 31696_zps6xtgwhmp.jpg.html)

RAGHAVENDRA
25th May 2016, 12:11 PM
http://static.dnaindia.com/sites/default/files/1839429.jpg

இன்று தெய்வீகப் பாடகர், பாடகர் திலகம், டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் நினைவு தினம். அவர் பூவுடலால் மறைந்தாலும் தன் குரலால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நினைவாக

https://www.youtube.com/watch?v=K4lu758K0uk

RAGHAVENDRA
25th May 2016, 12:13 PM
Unnai Solli Kutramillai


https://www.youtube.com/watch?v=wVvekJW2omk

RAGHAVENDRA
26th May 2016, 08:48 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13244731_1590145271296501_4295532252773893798_n.jp g?oh=50095fe915962385050b14afb5882ed4&oe=57C8D0F7

From FB of Murugan Prabhu

vasudevan31355
26th May 2016, 12:02 PM
மிக மிக துயரமான செய்தி.

நமது அன்பு நண்பர், நடிகர் திலகத்தின் ரசிகர், மதுர கானங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் நமது ஹப் உறுப்பினர் திரு ராஜேஷ்குமார் அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்தார். தன் துணையை இழந்து வாடும் ராஜேஷ்குமார் சாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரது மனதிற்கு சாந்தியை அளிக்கட்டும். அவரது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திப்போம்.

adiram
26th May 2016, 12:04 PM
சாந்தி தியேட்டர் அனுபவங்கள் பற்றிய ராகவேந்தர், கார்த்திக், சந்திரசேகர், கோபால் ஆகியோரின் பதிவுகள் மனதைத் தொட்டன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லோர் மனத்திலும் சோகத்தை தந்த ஒரு நிகழ்வு. என்ன செய்வது. கால மாறுதல்களுக்கு ஏற்ப நாமும் ஓடவேண்டியிருக்கிறது.

கோபால் சார் சொன்னது போல இனி என்ன நவீன வசதிகளோடு இன்னொரு சாந்தி வந்தாலும், பழைய சாந்தியில் கிடைத்த நிம்மதி கிடைக்காது.

இனி நம் பழைய சாந்தியை காண வாய்ப்புள்ள திரைப்படங்கள்:

நீலவானம் (ராஜஸ்ரீ படம் பார்க்க வரும் காட்சி)
அஞ்சல் பெட்டி 520 (சாந்தியில் தங்க சுரங்கம் ஓடிய சமயம்)
பட்டிக்காடா பட்டணமா (நடிகர்திலகத்தை ரவுடிகள் கடத்தும் காட்சி)
தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)
எமனுக்கு எமன் (எமனாக நடிகர்திலகத்தின் அலம்பல் காட்சி)
நெஞ்சங்கள் (வா கண்ணா வா ஓடிக்கொண்டிருந்த சமயம்)
மன்னன் (சின்ன தம்பிக்கு ரஜினி, கவுண்டமணி முதல் டிக்கட் காட்சி - இக்காட்சியில் 'மாப்பிள்ளை' வேணுகோபாலும் நடித்திருப்பார்)

இன்னும் வேறு என்னென்ன படங்களில் சாந்தி இடம் பெற்றுள்ளது?.

vasudevan31355
26th May 2016, 12:12 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02331/6MP_SHANTHIOLD_2331436g.jpg

vasudevan31355
26th May 2016, 12:27 PM
ஆதிராம் சார்,

இதோ உங்கள் நினைவலைகளை மீண்டும் மீட்ட,

பட்டிக்காடா பட்டணமா (நடிகர்திலகத்தை ரவுடிகள் கடத்தும் காட்சி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002685652.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/Pattikada_Pattanama_CD2avi_002685652.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002681014.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/Pattikada_Pattanama_CD2avi_002681014.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002679713.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/Pattikada_Pattanama_CD2avi_002679713.jpg.html)

adiram
26th May 2016, 12:32 PM
துணைவியாரை இழந்து வாடும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இப்பேரிழப்பை தாங்கும் சக்தியை அவருக்கு இறைவன் அருள்வானாக.

vasudevan31355
26th May 2016, 12:35 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/100_8940.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/100_8940.jpg.html)

vasudevan31355
26th May 2016, 12:50 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002066044.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1_VOB_002066044.jpg.html)

தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002076491.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1_VOB_002076491.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002078693.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/VTS_04_1_VOB_002078693.jpg.html)

vasudevan31355
26th May 2016, 01:21 PM
அஞ்சல் பெட்டி 520 (சாந்தியில் தங்க சுரங்கம் ஓடிய சமயம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355087/12.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355087/12.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355087/11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355087/11.jpg.html)


'தங்கச் சுரங்கம்' படத்தின் கட் -அவுட்டில் தலைவருக்கு மாலை அணிவித்திருப்பதைக் காணுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355088/13.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355088/13.jpg.html)

vasudevan31355
26th May 2016, 01:33 PM
எமனுக்கு எமன் (எமனாக நடிகர்திலகத்தின் அலம்பல் காட்சி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355089/18.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355089/18.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355089/17.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355089/17.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355089/16.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355089/16.jpg.html)

RAGHAVENDRA
26th May 2016, 05:23 PM
நெஞ்சைப் பிளக்கும் செய்தி வாசு சார்..
ராஜேஷ், உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தாங்கும் துயரமா அது.. சில சமயம் இறைவனை மனம் வெறுக்கிறது என்கிறோமே.. அதற்கு இது ஒரு காரணம். அதுவும் அவ்வளவு இளைய வயதில் ... கொடுமை...

ராஜேஷ், இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Russellsmd
26th May 2016, 06:28 PM
மரணம் கொடியது.

ஒத்துக் கொள்ளவே முடியாத
அந்தக் கொடுமையை மிக
அருகே சந்தித்துத் துன்புறுவது,
மரணத்தைக் காட்டிலும்
கொடியது.

திரு.ராஜேஷ்குமார் அவர்களின்
கண்ணீரைத் தடுக்க இயலாத
நம்மால் ,துடைக்க முடியும் என்பதொரு ஆறுதல்.

துடைப்போம்.

Russellxss
26th May 2016, 09:38 PM
சிவகாமியின் செல்வனின் வெற்றியை தடுக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், நமது மக்கள்தலைவரின் ஆசியோடும், ரசிகர்களின் பேராதரவோடும் 100வது நாளை நோக்கி மாபெரும் வெற்றிநடைபோடும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 9வது வாரத்தையொட்டி ஒட்டப்பட உள்ள சுவரொட்டி...

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13307274_1014672465284024_2025271080841067748_n.jp g?oh=53a87733053a37251c815625f828062e&oe=579B19D1

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th May 2016, 09:39 PM
சரித்திரம் படைக்கும் சரித்திர நாயகனின் சிவகாமியின் செல்வன் 60வது நாளையொட்டி நாளிதழில் வெளியாகும் விளம்பரம். மதுரை சிவா மூவீஸாருக்கும், வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!


https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13238882_1014671725284098_3872880273024914349_n.jp g?oh=4b88ecdd581c29b035a12636a4b61f02&oe=57E7A112

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th May 2016, 09:40 PM
நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதை நடையில் உலகெங்கும் உள்ளவர்கள் உணரும் வகையிலும், படிப்பவர்கள் உணர்ச்சிவசப்படும் வகையிலும் எழுதி வரும் திரு.ஆதவன் ரவி அவர்களின் புதல்வி செல்வி.ஹரிதா அவர்கள் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதை தெரிவித்துக் கொண்டு செல்வி ஹரிதா அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

http://www.sivajiganesan.in/Images/260516_4.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th May 2016, 09:41 PM
27.05.2016 அன்று பிறந்தநாள் காணும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவரும்,அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரும், டெம்பிள்சிட்டி இளையதிலகம் பிரபு குரூப்ஸ் செயலாளருமான திரு.நா.ரமேஷ்பாபு அவர்கள் எல்லா வளமும் பெற்று தனது சுற்றம் சூழ நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

http://www.sivajiganesan.in/Images/260516_6.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russellxss
26th May 2016, 09:43 PM
நீண்ட இடைவெளிக்குப் பின் இளையதிலகம் பிரபு அவர்கள் கதாநாயகனாக நடித்து, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த் அவர்கள் தனது பெயரில் தயாரிக்கும் முதல் படமான மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 28.05.2016 சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இது இளையதிலகத்தின் 200வது படம் என்று கூறப்படுகிறது. மேலும், நமது மக்கள்தலைவரின் பேரன் துஷ்யந்த் அவர்களின் மகன் கலையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

http://www.sivajiganesan.in/Images/260516_5.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

Russelldwp
26th May 2016, 10:40 PM
சாந்தி வெறும் திரை அரங்கம் அல்ல --சிவாஜி ரசிகர்களின் சிந்தனையின் பிறப்பிடம்


சாந்தி திரைஅரங்கம் சிவாஜி ரசிகர்களின் கோவில் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை நான் அலுவல் விஷயமாக சென்னை வரும்போதெல்லாம் அங்கு வராமல் இருந்ததில்லை - நான் கடந்த 1988ம் வருடம் முதல் சாந்தி திரை அரங்கத்திற்கு வருகை புரிந்திருக்கிறேன் -எனக்கு மாதத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக சென்னையில் தான் வேலை ஆதலால் அலுவல் முடிந்து மாலை சரியாக 6 -7 மணிக்கு ஆஜராகி விடுவேன் - இதற்காகவே மவுண்ட் ரோடு ஹோடெல்லில் தான் ரூம் போடுவேன் - சாந்தி திரைஅரங்க நண்பர்கள் எழில்(தற்போது இவர் இல்லை), பாபு , மோகன் ,துவரகேஷ், ராமஜெயம், நாகராஜ், இதயவேந்தன் நாராயண், எஸ்கே விஜயன் முதலானோர் என்னுடைய நீண்ட நாள் நண்பர்கள் - நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு கல்யாண விசேஷத்திற்கு சென்னை வந்தபோது 1983ம் வருடம் சந்திப்பு வெளிவந்த நேரம் அசந்து விட்டேன் அலங்காரத்தை பார்த்து - தயவுசெய்து யாரிடமாவது அந்த போட்டோ இருந்தால் பதிவிடவும்

அதற்கு பிறகு நான் அசந்து போனது ராஜகுமாரன் படத்திற்கு வைக்கப்பட்ட ஸ்டார் அலங்காரம் என்னை மிகவும் கவர்ந்தது - இதுவும் யாரிடமாவது போட்டோ இருந்தால் பதிவிடவும் -

சாந்தி அரங்கத்திற்கு 6 மணிக்கு வந்து பேசிவிட்டு சரியாக 8.30 மணி அளவில் அனைவரும் அருகில் அண்ணா திரைஅரங்க வாசலில் உள்ள டீ கடையில் காபி குடித்து விட்டு கிளம்பிவிடுவோம் - போன மாதம் வரை இது கடை பிடிக்க பட்டது

நான் மிகவும் ஆசையாக இருந்தது அரங்கம் மூடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாவது தலைவரின் முக்கியமான 4 படங்களை வாரம் ஒன்றாக திரையிட்டு ஆசைதீர அனுபவித்து பார்க்க வேண்டும் என்றிருந்தேன் -அது நிறைவேறாமல் போனதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது - கடைசி ஒரு வாரமாவது தலைவர் படத்தை போட்டு விட்டு பின்பு மூடியிருக்கலாம்

ஆல்பர்ட் தியேட்டரில் ராஜா படம் ஓடியபோது நாள் முழுதும் சாந்தியில் பொழுதை கழித்து பின்பு மாலையில் படம் பார்க்க சென்றது - தேவி பாரடைசில் தங்கபதக்கம் படம் பார்ப்பதற்காக ஞாயிறு சென்னை வந்து பகல் முழுதும் சாந்தியில் இருந்து விட்டு மாலை படம் பார்க்க போனது -சின்னத்தம்பி 105 வது நாளன்று கண்ட மக்கள் கூட்டம் --பிள்ளைக்காக படம் ஓடிக்கொண்டிருந்தபோது நம் ரசிகர்கள் பொது மக்களிடம் படம் எப்படி என்று கேட்டது --வாழ்க்கை படம் அலங்காரில் பொசுக்கென்று எடுக்கப்பட்டதை எதிர்த்து நம் ரசிகர்கள் ஒட்டிய கண்டன போஸ்டரை சாந்தியில் பார்த்தது - வெற்றிவிழா படத்திற்கு பிரபு கடவுட்டிற்கு ரசிகர்கள் மாலையிட்டதை பார்த்தது --டூயெட் படத்திற்கு லேசர் லைட்டில் போர்டு வைத்தது -அறுவடை நாள் படத்திற்கு அப்போதைய பிரபு மன்ற தென்சென்னை தலைவர் திரு.காதர் அவர்கள் சாந்தியிலிருந்து ரசிகர்களுடன் அண்ணாசாலை சந்திப்பில் வைக்கப்பட்ட கட்டவுட்டிற்கு மாலை அணிவித்தது

இப்படி என் மனதை விட்டு நீங்காத சாந்தி திரைஅரங்க அனுபவங்கள் நிறைய உள்ளது - கண்டிப்பாக சாந்தி அரங்கம் என்னதான் புதுபிக்கபட்டாலும் பழமையின் பெருமையை யாராலும் திருப்பி கொடுக்க முடியாது

பல ஆயிரம் சிவாஜி ரசிகர்களின் உணர்ச்சிக்குமுறல் அடங்க நாளாகும்

Russellsmd
26th May 2016, 11:46 PM
சுந்தரராஜன் சார்...

எனது அன்பு மகளின் கல்விச்
சிறப்பை, சிறப்பு மிக்க நம்
www.sivajiganesan.in இணையத்திலும், நமது
திரியிலும் வெளியிட்டு உலகறியச் செய்த தங்களின்
உன்னத செயலுக்கென்
உள்ளம் சொல்லும் நன்றிகள்
கோடி.

Russellsmd
27th May 2016, 12:05 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160526191946314_zpsvx5pcmxq.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160526191946314_zpsvx5pcmxq.jpg.html)

Gopal.s
27th May 2016, 07:21 AM
ராஜேஷ் அவர்களின் துயருக்கு வருந்துகிறோம். காலம்தான் அவரை தேற்றி ,துயரிலிருந்து மீட்க வேண்டும்.

Gopal.s
27th May 2016, 08:05 AM
உத்தம புத்திரன்.-1958

எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

Subramaniam Ramajayam
27th May 2016, 08:56 AM
OUR sicere condolences to RAJESH and family for the lossof your dearest.
may god give you enough strength to comeover fom the loss;

JamesFague
27th May 2016, 09:00 AM
My Heartfelt condolences to Mr Rajesh. May god give enough power to overcome this unbearable

loss.

KCSHEKAR
27th May 2016, 09:40 AM
துணைவியாரை இழந்து வாடும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரங்கல்கள்

sivaa
27th May 2016, 10:01 AM
இந்தியா சென்றிருந்த காரணத்தினால்
10 நாட்களாக நான் திரியை பார்வையிடமுடியவில்லை

துணைவியை இழந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

sivaa
27th May 2016, 10:04 AM
நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

sivaa
27th May 2016, 10:06 AM
திரமண நாள் கண்ட நண்பர் முரளி அவர்களுக்ககு
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

sivaa
27th May 2016, 10:12 AM
http://i63.tinypic.com/91gbxt.jpg

sivaa
27th May 2016, 10:14 AM
http://i67.tinypic.com/nfmsrn.jpg

sivaa
27th May 2016, 10:15 AM
http://i64.tinypic.com/2lxif4n.jpg

sivaa
27th May 2016, 10:16 AM
http://i66.tinypic.com/2wcgxf6.jpg

sivaa
27th May 2016, 10:39 AM
சிவாஜி ரசிகர்களுக்கு இன்னும் 10 மணி நேர
அவகாசத்தில் ஓர்
இனிய அதிர்ச்சிப் பதிவு
காத்திருக்கிறது.
காத்திருங்கள்

Gopal.s
27th May 2016, 10:40 AM
:idontgetit::confused2:

Russellxor
27th May 2016, 12:24 PM
துணைவியை இழந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

Harrietlgy
27th May 2016, 01:02 PM
துணைவியை இழந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

RAGHAVENDRA
27th May 2016, 04:06 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13315528_1123531917697479_3634444378189596393_n.jp g?oh=8da1a1efcdf3ab96dfd1aed8c5db4d2d&oe=579A1932

Congratulations to Prabhu Ganesan for completing 200 films in 34 years on an average of 6 films ..

A very impressive performance.

So many new directors, co-stars, technicians he had worked with.

So many producers have wished him for the complete co-operation he has rendered all these years!

Well done Prabhu

sivaa
27th May 2016, 07:24 PM
சிவாஜி ரசிகர்களுக்கு இன்னும் 10 மணி நேர
அவகாசத்தில் ஓர்
இனிய அதிர்ச்சிப் பதிவு
காத்திருக்கிறது.
காத்திருங்கள்

:idontgetit::confused2:

அன்பின் கோபால்
எனது மேற்படி பதிவை பதிவிடுவதற்கு 2 மணித்தியாலங்கள்
முன்னதாகத்தான் இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தேன்

பிரயாண அலைச்சல் உடல் அலுப்பு எல்லாம் சேர்ந்து
என்னால் விபரமாக எழுதமுடியாமல் போய்விட்டது

பல வருடங்களாககளாக நான் தேடிக்கொண்டிருந்த
விளம்பரம் ஒன்று நான் இந்தியா சென்றிருந்தபொழுது
என் கைக்கு கிடைத்தது.அதனை பதிவிடுவது பற்றித்தான்
குறிப்பிட்டிருந்தேன்,அதனை விபரமாக எழுதமுடியாமல் போய்விட்டது
மன்னிக்கவும்

sivaa
27th May 2016, 07:51 PM
பலரும் பார்த்திராத
பலருக்கு ஆச்சரியம்கலந்த
இன்ப அதிர்ச்சி தரும்

விளம்பரம்

(மறுபக்கம் ஒருவருக்கு மூச்சுத் திணறும் அதிர்ச்சி)

இலங்கையில் பராசக்தி 38 வது வார விளம்பரம்

http://i67.tinypic.com/1mbsl.jpg


http://i67.tinypic.com/2aahkiv.jpg

Russellxss
27th May 2016, 10:08 PM
நாளை பாடல் வெளியீட்டு விழா காணும் மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படம் இளையதிலகத்தின் 200வது படமாகும். பாடல் வெளியீட்டு விழா சிறக்க அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
படத்தின் சிறப்பு
1.இளையதிலகத்தின் 200வது படம்.
2. தளபதி ராம்குமாரின் புதல்வன் நமது மக்கள்தலைவரின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் முதல் படம்.
3. நமது மக்கள்தலைவரின் பேரனின் மகன் (துஷ்யந்த் அவர்களின் மகன்) நடிக்கும் முதல் படம்.

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13256236_1015303438554260_8524355577635382450_n.jp g?oh=683790aebe82a00edebafcb4f005ab5e&oe=57CFBDC7

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
28th May 2016, 08:59 AM
மறு மறு வெளியீட்டிலும் மாபெரும் சாதனை

கர்ணன் 50 வது நாள்

http://i67.tinypic.com/2yl5r0l.jpg

sivaa
28th May 2016, 09:01 AM
http://i64.tinypic.com/fwulix.jpg

sivaa
28th May 2016, 09:08 AM
http://oi67.tinypic.com/sqpoir.jpg

http://i63.tinypic.com/v67tif.jpg


http://oi63.tinypic.com/2im55c0.jpg

sivaa
28th May 2016, 09:23 AM
http://i63.tinypic.com/2hd38up.jpg

JamesFague
28th May 2016, 09:28 AM
Wish you many more happy returns of the day Mr Raghavendra Sir



Regards

Harrietlgy
28th May 2016, 11:00 AM
From Dinamani,

சிவாஜி கணேசனும் கே. சங்கரும் நீண்ட கால சிநேகிதர்கள். பி.எஸ். வீரப்பாவின் சூப்பர் ஹிட் படைப்பு ’ஆலயமணி’. கலைத் தொழிலிலும் அவர்களை ஒன்று சேர்த்தது.

அதே நேரம் எம்.ஜி.ஆர், ஜி.என்.வேலுமணியை அனுப்பிக் கையோடு சங்கரை வரவழைத்தார்.

‘ஏன் எதுக்கு எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிடறார்... சிவாஜியோட புது ப்ராஜெக்ட் ஆரம்பமாயிடுச்சே, அப்புறம் வரேன்னு சொல்லுங்களேன்.’ என்றார் அப்பாவியாக.

‘அதை நீங்களும் எம்.ஜி.ஆரும் நேர்ல பேசித் தீர்த்துக்குங்க.’

வேலுமணி விடமாட்டார் போலிருந்தது.

1962ல் உச்சக்கட்ட யுத்தம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நிலவியது. தினந்தோறும் விசிறிகளின் விஸ்வரூபம்! ரசிகர்களின் மண்டைகள் உடைந்த கதை பத்திரிகைகளில் வராத நாளே கிடையாது.

சங்கருக்கு சங்கடம்.

பயமும் குழப்பமும் போட்டியிட்டன. அது ஒரு காலை நேரம். வீட்டிலேயே சிற்றுண்டி அருந்தி விட்டு சங்கர் கிளம்பினார்.

ராமாவரம் ராமச்சந்திரன் சங்கரை மறுபடியும் டிபன் சாப்பிட வற்புறுத்தினார்.

ஏற்கனவே ஆயிற்று என்றாலும் ஆளை விடவில்லை. உண்ட பிறகே பேச்சு வார்த்தை என்றார். அஜீரணம் ஆனாலும் பரவாயில்லை என்று சங்கர் இலை முன்பு அமர்ந்தார்.

‘சார் ஆலயமணில முன்னாலேயே கமிட் ஆயிட்டேன். இப்ப உங்க படத்தையும் எப்படி ஒத்துக்கறது...?’

சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.

பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.

எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.

சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.

‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...!’


எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்?

ஓர் படைப்பாளியைக் கைது செய்து சிறைப்படுத்தாத குறையாக சங்கரை பணத்தோட்டத்தில் சிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

ஆலய மணி, பணத்தோட்டம் இரண்டிலும் ஒரே நாளில் வேலை செய்ய வேண்டி சங்கரும், நாயகி சரோவும் வாஹினியில் மாறி மாறி காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரையில் கஷ்டப்பட்டார்கள்.

நவம்பர் 23 - மாலை. கே. சங்கரை தொலைபேசி கூவிக் கூவி அழைத்தது. மறுமுனையில் எம்.ஜி.ஆர்.

‘சங்கர் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள். சூப்பர் ஹிட் படத்தைக்கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!’

அன்று ஆலயமணி ரிலீஸ். நடிகர் திலகத்தின் படம் நூறு நாள்களைக் கடந்து வசூலில் சாதனை புரியப் போகிறது... என்கிற ஆசீர்வாதம் முதன் முதலில் பொன்மனச் செம்மலின் வாயிலிருந்து!

எம்.ஜி.ஆரின் வாக்குப் பலித்தது.

சென்னையில் பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, நூர்ஜஹான் என நான்கு தியேட்டர்களில் 100 நாள்கள் கண்ட முதல் படம் என்கிற அழியாப் பெருமையை அடைந்தது ஆலயமணி!

பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.

ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு!

பி. எஸ். வீரப்பாவின் புகழ் பாடிய ஒரே சாதனைத் தயாரிப்பு!

‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ எஸ்.எஸ். ஆரும் - சரோவும் எடுத்த எடுப்பில் ஆடிப்பாடும் லவ் டூயட் சஸ்பென்ஸை ஏற்படுத்தும்.

சந்தர்ப்பவசத்தால் சரோ சிவாஜி கணேசனின் காதலி ஆவார். ஜாவர் சீதாராமனின் வெகு நுட்பமான திரைக்கதை.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’ சரோ ஆடிப்பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல். அக்காட்சி முடிந்ததும், சிவாஜியை சந்திக்க நேரும் சரோ, அவர் தனது எஸ்டேட் முதலாளி என்பதை அறியாமல் கேலி செய்வார்.

நிஜம் தெரிந்ததும் சரோ எப்படிக் கிண்டல் அடித்தாரோ..., அதை அப்படியே சிவாஜி அபிநயித்துக் காட்டுவது அரங்கை அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யம்.

பின்னணி குரலில் பேக்ரவுண்ட் வாய்ஸில் ’ஹம்மிங்’குக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் ஆலயமணி.

‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ டூயட்டில் எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் ஒலிக்கும். சரோவுக்கு ஈஸ்வரி பாடி சூப்பர்ஹிட் ஆன முதல் பாடலும் அதுவே.

சிவாஜி கணேசனின் தூரிகையில் சகுந்தலையாக சரோ சில விநாடிகள் தோன்றுவார்.

ஆலயமணியில் திருப்பம் ஏற்படுத்தும் மரணப்பாறை காட்சிகளை ‘வர்க்கலை’ என்கிற ஊரில் படமாக்கினார்கள்.

க்ளைமாக்சில் சிவாஜி - சரோ இருவரும் இறந்து விடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆலயமணி சுபமாக முடிந்தது.

1962ல் சிவாஜி - சரோ இருவரது புகழையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே படமாக ‘ஆலயமணி’ அமைந்தது.

‘ஆலயமணியில் ‘மீனாவாக’ சரோஜாதேவி வருகிறார். அவரது சொந்த மாடல் குறும்புத்தனங்களைக் காதல் கட்டங்களில் காண்கிறோம். அப்புறம் குறும்புகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது.

அக்காவின் வாழ்க்கையைக் கடைத்தேற்றப் போக, அதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய நேரும் இடத்தில் அதிர்ச்சியைப் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார்’ என்று குமுதம் குறிப்பிட்டது.

நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் கண்ணியம் இல்லையே உன்னிடம்...‘

சரோ தட்டுத் தடுமாறி ஒத்திகையில் கஷ்டப்பட்டு பேசிப் பார்த்தும், டைரக்டர் எல். வி. பிரசாத் மவுனமாக நின்றார். ஓகே சொல்லவில்லை.

எல்.வி. பிரசாத்தின் ‘சுக்ரால்’ (இந்தி) மூலம் வடக்கேயும் சரோ வாகை சூடிய சமயம். 40 வாரங்களை வெகு சுலபமாகக் கடந்த ’சுக்ராலின்’ நாயகி உளறிக் கொட்டுவது சரோவுக்கே அவமானமாகத் தோன்றியது.

அது ‘இருவர் உள்ளம்’ சினிமா ஷூட்டிங்.

சரோவை அச்சுறுத்திய சமாசாரங்கள் அதில் அதிகம். தமிழகத்தின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லட்சுமி எழுதிய புதினம் ‘பெண் மனம்’. அதுவே இருவர் உள்ளம் என்ற பெயரில் படமாகியது. அதனைத் தயாரித்து இயக்கியவர் எல். வி. பிரசாத்.

சரோ ஹாயாக வந்து போகும் வழக்கமானப் பொழுது போக்குச் சித்திரமில்லை.

ஆண் இனத்தின் வாலிபத் தவறுகளுக்கு சாட்டையடி கொடுக்கும், வலிமை மிக்க வீராங்கனை – ‘சாந்தா’ வாக, சரோ விஸ்வரூபம் எடுக்க வேண்டிய வேடம்!

அதுவரையிலோ அதற்குப் பிறகோ அத்தனை உணர்ச்சிப் போராட்டமான, இறுக்கமானத் திரைக்கதையில் சரோ நடித்ததில்லை.

இருவர் உள்ளம் படத்துக்கு வசனம் மு. கருணாநிதி.

‘மனோகரா’ வின் செந்தமிழ்ச் சோலையிலிருந்து விடுபட்டு, சரோ சுலபமாகப் பேசும் வகையில் கலைஞர் உரையாடல் எழுதியிருந்தார்.

அதைப் பேசவும் சரோ சிரமப்பட்டார். அதற்குக் காரணம் நடிகர் திலகம்!
சிவாஜி கணேசனுடன் நடிக்கும் போது டயலாகை கோட்டை விடுவது சரோவின் வாடிக்கை.

ஃபிலிமைத் தின்னும் தமிழர்களின் ட்ரீம் கே(ர்)ளை யூனிட் ஆள்கள் துச்சமாகக் காண்பது போல் தோன்றியது.

விளைவு சுய பச்சாதாபம் மேலிட க்ளிசரின் இன்றிக் கண்ணீர் விடத் தொடங்கினார்.

சதா புன்னகை தவழும் சரோவின் சந்தோஷக் கன்னங்களில், முதன் முதலாகச் சோகத்தின் தூரிகைகள்! அதைக் கண்டதும், கணேசனுக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.

டைரக்டர் பொறுமையிழந்து கோபத்தில் சரோவை ஏதாவது ஏசி விடுவாரோ என்கிறத் தவிப்பு. சரோ மூட் அவுட் ஆனால் தமிழ் சினிமாவின் கல்லாவே காலி என்று அர்த்தம்.

புதிய பறவைக்கான கால்ஷீட்டும் கோவிந்தா ஆகிவிடும்.

ஹீரோயினைக் காப்பாற்ற கணேசன் துரிதமாகக் களத்தில் இறங்கினார்.

‘அன்று இப்படியே விட்டிருந்தால் என் டென்ஷன் ஜாஸ்தியாகி மேலும் சில டேக்குகள் வீணாகி இருக்கும். டைரக்டர் பிரசாத் என்னையே பார்க்கிறார். அப்போ சிவாஜி ஒரு காரியம் செய்தார்.

‘யாருப்பா அது லைட் சரியில்லை. சரி பண்ணு... சரி பண்ணு... என்றார்.

‘சரோஜா சரியாகத்தான் பேசறா...’,

‘சரோஜா... இந்த சீனை மறுபடியும் எடுக்கறதுக்கு நீ காரணமில்லை. டெக்னிகல் மிஸ்டேக். இந்த வாட்டி அழகா பண்ணிடு.’ என எனக்கு உற்சாகமூட்டுவது போல் கூற, நான் சுதாரித்துக் கொண்டேன்.

அடுத்த டேக்கில் என் நடிப்பு உடனடியாக ஓகே ஆனது.

அக்காட்சி திருப்தியாக எடுக்கப்பட்டதும்,

‘தப்பு என் மேலே. எதுக்கு லைட் சரியில்லன்னு பழி போட்டீங்க...?’ என்று கேட்டேன்.

அண்ணன் அதற்கு,

‘நீ தான் அழுமூஞ்சின்னு எனக்குத் தெரியுமே..! நானும் சேர்ந்து உன்னைத் திட்டினா அப்புறம் அந்த சீனை என்னைக்கு எடுக்கறது... ? என்றாரே பார்க்கலாம்.’ - சரோஜாதேவி.

சரோ நடித்து முடித்ததும் சிவாஜி ரீ ஆக்ஷன் தர வேண்டும். சரோவை மிஞ்சும் போட்டி மனப்பான்மை உசுப்ப கணேசன், ‘ஹீரோ செல்வம்’ உயிர் பெற்று உலவும் படியாக நடிப்பின் எல்லைக்கே சென்றார்.

கலைச் சிற்பி பிரசாத் முன்பு சிவாஜியும் சிறு துரும்பு.

’கட் கட் என்ற எல்.வி. பிரசாத், கணேசனை மெல்ல செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

‘சிவாஜி நீ சிறந்த நடிகன் எனக்குத் தெரியும். நீ நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். ஆனால், இந்த சீனில் நீ பிரமாதமாகப் பண்ணினால் எல்லாமே வீணாகி விடும்.

இந்தக் கட்டத்தில் சரோஜாதேவிதான் உன்னை டாமினேட் பண்ணி நடிக்க வேண்டும்.

நீ பதில் பேசாமல் அமைதியாக இரு. இல்லையென்றால், இந்தக் காட்சி எடுபடாது. படமே ஓடாமல் போய் விடும்.’

பிரசாத் சொல்லே மந்திரம்! கணேசன் செயலற்று நின்றார்.

இருவர் உள்ளம் படத்தில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

பி. சரோஜாதேவி

என்று இருவரது பெயரையும் இணைத்து டைட்டில் காட்டினார் எல்.வி. பிரசாத். கணேசனுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்தில் சரோஜாதேவிக்கும் கவுரவம் தேடித் தந்தார்.

Russellxor
28th May 2016, 01:14 PM
ராகவேந்திரா சார்
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/tapatalk_1464420678964_zpsl3eo9x6l.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/tapatalk_1464420678964_zpsl3eo9x6l.jpg.html)

Russellsmd
28th May 2016, 02:21 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160528001307888_zps6ifkiwgd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Solid20color20background20texture_2016032512534023 8_20160528001307888_zps6ifkiwgd.jpg.html)

Russellxss
28th May 2016, 02:47 PM
அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் வலைதள பொறுப்பாளரும், கடந்த 10 வருடங்களாக உலகெங்கும் உள்ள பெரியவர்கள் மற்றும் இன்றைய இளைஞர்கள் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் திறமையை, பெருமையை, புகழை தெரிந்து கொள்ளும் வகையில் நடிகர்திலகம்.காம் என்ற இணையதளத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு.ராகவேந்திரா அவர்களின் பிறந்தநாளான இன்று (28.05.2016) அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

http://www.sivajiganesan.in/Images/280516_1.jpg

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

sivaa
28th May 2016, 05:15 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு ராகவேந்திரா சார்

vasudevan31355
28th May 2016, 05:31 PM
திரியின் பிதாமகருக்கு பிறந்த நாள்.

ராகவேந்திரன் சார்,

https://s-media-cache-ak0.pinimg.com/736x/6b/0c/48/6b0c487493fc33f1d9cec02c7a09bdeb.jpghttp://www.freelargeimages.com/wp-content/uploads/2015/10/Happy_Birthday_Cakes_02.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-3.jpg

தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். நடிகர் திலகத்தையே சுவாசிக்கும் தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ராகவேந்திரன் சார்,

இந்த ஸ்டில் பிரத்யோகமாக தங்களுக்கு மட்டுமே. என் பிறந்தநாள் பரிசாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355090/reghj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355090/reghj.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355090/qqqq.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355090/qqqq.jpg.html)

vasudevan31355
28th May 2016, 05:36 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/02483/24fr_MSV_6_jpg_2483465g.jpg

vasudevan31355
28th May 2016, 05:38 PM
Bal Gandharva at an advanced age with legendary South Indian actor Sivaji Ganesan. (From the Mohan Nadkarni Archive). (Thanks to www.mohannadkarni.org)

http://www.mohannadkarni.org/wp-content/uploads/2015/09/Bal-Sivaji.jpg

vasudevan31355
28th May 2016, 05:42 PM
http://ec2-23-21-236-109.compute-1.amazonaws.com/images/topic_desc/533e392301fb4.jpg

vasudevan31355
28th May 2016, 05:43 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/2011-01-2710018_zps70dad396.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/2011-01-2710018_zps70dad396.jpg.html)

vasudevan31355
28th May 2016, 05:45 PM
https://i.ytimg.com/vi/bq3vUnmJX4o/hqdefault.jpg

vasudevan31355
28th May 2016, 05:46 PM
just relax.

https://www.tufing.com/img-inline-share/this-photo-is-a-very-899678.jpg