PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

Russellvpd
16th July 2016, 10:32 AM
https://youtu.be/WchveRT6VUU

Russellvpd
16th July 2016, 10:36 AM
https://youtu.be/xB9g8Qc0SnE

Russellvpd
16th July 2016, 10:37 AM
https://youtu.be/SDs7X9vu9I0

Russellvpd
16th July 2016, 10:38 AM
https://youtu.be/GDdrwqXne6o

Russelldvt
16th July 2016, 12:57 PM
http://i66.tinypic.com/snja5z.jpg

Russelldvt
16th July 2016, 12:59 PM
http://i63.tinypic.com/6ohnc2.jpg

Russelldvt
16th July 2016, 01:00 PM
http://i67.tinypic.com/21l94k8.jpg

Russelldvt
16th July 2016, 01:01 PM
http://i65.tinypic.com/2j60k03.jpg

Russelldvt
16th July 2016, 01:02 PM
http://i68.tinypic.com/2cpoqr6.jpg

siqutacelufuw
16th July 2016, 08:52 PM
சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.

அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.

அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.

நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.

புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

stop it என்று கூக்குரலிட்டவரையும், அநாகரீகமாக கூச்சலிட்டோரையும் தனது ஆளுமை திறனால் அடக்கி, புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்த நன்றி மறவாத நல்ல நடிகைகள் திருமதி லதா மற்றும் திருமதி வாணிஸ்ரீ போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

புவி உள்ளவரை புரட்சித்தலைவரின் புகழ் எந்த மேடையிலும் எதிரொலிக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயம்.

பின்குறிப்பு : மறுவெளியீட்டில், வெள்ளி விழாவையும் தாண்டி, 190 நாட்கள் ஓடி. தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாறு படைத்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் " ஆயிரத்தில் ஒருவன் " காவியத்துக்காக, சென்னை சத்யம் அரங்கில் டிரைய்லர் வெளியிட்ட பொழுது, திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றுமொரு சிறப்பு விருந்தினர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி நினைவு கூர்ந்து பேசிய சமயத்திலும், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது நடிகர் பாக்கியராஜ் அவர்கள் மறைத்திரு சிவாஜி கணேசன் பற்றி பேசும் பொழுதும், இது போன்ற அநாகரீக கூக்குரல்களை மக்கள் திலகத்தின் ரசிகர்கள், பக்தர்கள் எழுப்ப வில்லை. பெருந்தன்மையின் சிகரமாம் நம் புரட்சித்தலைவர் போல், அவரது ரசிகர்களும், பக்தர்களும், அன்பர்களும், அமைதியுடன் இருந்து கண்ணியம் காத்தனர்.

திரு. சுஹாராம் அவர்கள் குறிப்பிட மறந்து போனது : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தயவால் பள்ளி கட்டிடத்துக்காக இடம் பெற்று நன்றி மறந்த அரை லூஸ் காமெடியன் மகேந்திரனின் (சுவாதி கொலை வழக்கில் ஏனோ தானோ என்றும் தத்து பித்து என்றும், அரை வேக்காட்டுத்தனமாய் உளறிக்கொட்டி பின்பு ஜகா வாங்கி மன்னிப்பு கேட்டு கொண்ட மகேந்திரன்) வழக்கமான உளறல் பற்றிய செய்தி !

siqutacelufuw
16th July 2016, 09:04 PM
லதா அவர்கள் புரட்சித்தலைவரின் விசுவாசி என்று எல்லாருக்கும் தெரியும். அ.தி.மு.க.வில் உறுப்பினர் ஆகவும் இருந்திருக்கிறார். கட்சி கூட்டத்திலும் பேசி இருக்கிறார். சமீபத்தில் குமுதம் பத்திரிகையில் வரும் தொடரிலும் புரட்சித்தலைவரை பாராட்டி பேட்டி கொடுத்திருக்கிறார். இது எல்லாம் தெரிஞ்சுதானே எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கிறார்கள்.

லதாவாக எந்த நிகழ்ச்சிக்கும் வலிய வரமாட்டார். அவரைப் பற்றி தெரிந்து கொண்டே நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டுவிட்டு அவர் தன் விருப்பம் போல பேசக்கூடாது என்றால் எப்படி சரி?

புரட்சித்தலைவர் பற்றி இவர்கள் யாரும் பேச வேண்டாம். ஆனால், தாங்களாக வலிய அழைத்துவிட்டு ஒரு விருந்தாளி அதுவும் புரட்சித்தலைவர் விசுவாசியான லதா, அவரைப் பற்றி பேசக்கூடாது என்பது அராஜகம்.

புரட்சித்தலைவர் பற்றி லதா பேசும்போது ஸ்டாப் இட் என்று கத்தியவர்கள் காட்டு மிராண்டிகள். புரட்சித்தலைவர் பேரைக் கேட்டாலே பின்னாலே கரண்ட் வெச்சா மாதிரி துள்ளும் அரைவேக்காடு அறிவுகெட்ட முண்டங்கள் எப்பதான் திருந்துமோ? தெரியலை.


உரிமைக்குரல் கொடுத்த புரட்சித்தலைவரின் விசுவாசி கலை இளவரசி கவர்ச்சி கன்னி அண்ணி லதா வாழ்க!

கண்ணன் என் காதலன் படத்தில் கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாட்டுக்கு புரட்சித்தலைவர் அளவு சூப்பரா ஆடவில்லை என்றாலும் நன்றாக ஆடியிருக்கும் கவர்ச்சி புயல் நன்றி மறக்காத வாணி ஸ்ரீ வாழ்க!

புரட்சித்தலைவர் புகழை எங்கும் ஒலிக்கும் பக்தர்கள் வாழ்க!

[/SIZE][/SIZE][/COLOR]

அருமையான பதில் ! இவர்கள் எல்லாம் நடிகர் திலகம் ரசிகர்கள் என்ற போர்வையில், அவரை விமர்சிக்க மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வல்லவர்கள் !

Russellvpd
16th July 2016, 09:49 PM
stop it என்று கூக்குரலிட்டவரையும், அநாகரீகமாக கூச்சலிட்டோரையும் தனது ஆளுமை திறனால் அடக்கி, புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்த நன்றி மறவாத நல்ல நடிகைகள் திருமதி லதா மற்றும் திருமதி வாணிஸ்ரீ போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

புவி உள்ளவரை புரட்சித்தலைவரின் புகழ் எந்த மேடையிலும் எதிரொலிக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயம்.

பின்குறிப்பு : மறுவெளியீட்டில், வெள்ளி விழாவையும் தாண்டி, 190 நாட்கள் ஓடி. தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாறு படைத்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் " ஆயிரத்தில் ஒருவன் " காவியத்துக்காக, சென்னை சத்யம் அரங்கில் டிரைய்லர் வெளியிட்ட பொழுது, திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றுமொரு சிறப்பு விருந்தினர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி நினைவு கூர்ந்து பேசிய சமயத்திலும், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது நடிகர் பாக்கியராஜ் அவர்கள் மறைத்திரு சிவாஜி கணேசன் பற்றி பேசும் பொழுதும், இது போன்ற அநாகரீக கூக்குரல்களை மக்கள் திலகத்தின் ரசிகர்கள், பக்தர்கள் எழுப்ப வில்லை. பெருந்தன்மையின் சிகரமாம் நம் புரட்சித்தலைவர் போல், அவரது ரசிகர்களும், பக்தர்களும், அன்பர்களும், அமைதியுடன் இருந்து கண்ணியம் காத்தனர்.

திரு. சுஹாராம் அவர்கள் குறிப்பிட மறந்து போனது : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தயவால் பள்ளி கட்டிடத்துக்காக இடம் பெற்று நன்றி மறந்த அரை லூஸ் காமெடியன் மகேந்திரனின் (சுவாதி கொலை வழக்கில் ஏனோ தானோ என்றும் தத்து பித்து என்றும், .அரை வேக்காட்டுத்தனமாய் உளறிக்கொட்டி பின்பு ஜகா வாங்கி மன்னிப்பு கேட்டு கொண்ட மகேந்திரன்) வழக்கமான உளறல் பற்றிய செய்தி !




பதிலுக்கு நன்றி நண்பரே.

ஒய்.ஜி.மகேந்திரன் ஆதிக்க எண்ணம் உயர் மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர். அதான் சுவாதி கொல்லப்பட்ட நிகள்ச்சி பற்றி பேஸ்புக்கில் வந்த தகவலை ஷேர் செய்துவிட்டு பின்னர், மன்னிப்பு கேட்டார்.
அவர் குடும்பம் நடத்தும் ஸ்கூலில் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் விழுந்து செத்துபோனான். அதற்காக அவர்கள் குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், ஜேப்பியார் நடத்தும் ஸ்கூலில் ஒரு நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் விழுந்து செத்து போனதுக்காக ஜேப்பியாரை கைது செஞ்சார்கள். அப்போ, ஜேப்பியாருக்கு ஒரு நீதி, மேட்டுக்குடிங்களுக்கு ஒரு நீதியா? என்று யார் கேட்கிறது?

orodizli
16th July 2016, 10:26 PM
http://i68.tinypic.com/2cpoqr6.jpg

திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சிநடிகர், மக்கள்திலகம் அவர்களது என்றும் பொக்கிஷமாக விளங்கும் " படகோட்டி "காவியத்தைத்தான் அங்கோர் நண்பர் ஏதும் அறியாமல் அரை வேக்காட்டு தனமாக படுதோல்வி என உளறி இருக்கிறார் . பாவம்... அன்றும் அக்காவியம் மகத்தான வெற்றி பெற்றது... இன்றும் இக்காவியத்தின் மறு வெளியீட்டு விநியோக உரிமையை பெற பலர் முயற்சித்த பொழுதும் கிடைக்காமல் , அதாவது உரிமை தொகை மிக அதிக அளவில் பேசப்படுவதால் உடன்பாடு ஏற்படாமல் இருப்பதை அவர் அறிவாரா? இந்த மாதிரி செழுமையான வியாபார போட்டி வேறு எந்த நடிகர், நடிகை திரைப்படங்களுக்கு , எந்த மொழியிலாவது --- உள்ளதா?!

Russellvpd
16th July 2016, 10:51 PM
கொடுப்பவன் தானே மேல்ஜாதி, கொடுக்காதவனே கீழ் ஜாதி.


நாடோடி படத்தில் ஜாதி வெறியை எதிர்த்து நம் தெய்வத்தின் அறிவுரை சொல்லும் சூப்பர் பாடல்.

கடவுள் செய்த பாவம்..


https://youtu.be/61t4CBURuAI

Richardsof
17th July 2016, 06:35 AM
http://i63.tinypic.com/2ikb43p.jpg

DEIVATHAI- 18.7.1964

M.G.R

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்

தமிழ் - அண்ணா - கடமை - திமுக - எம்ஜிஆர்

இப்படி பல மூன்றெழுத்தில் உள்ள வார்த்தைகள் - வாலியின் வரிகள் நிஜ வாழ்வில் மக்கள் திலகத்தின் புகழை பிரதிபலித்தது .


எம்ஜிஆரின் பெயர் - எம்ஜிஆரின் படங்கள் - எம்ஜிஆர் இயக்கத்தின் ஆட்சி .

சரித்திரம் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .

இந்த அதிசயம் உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே .

Richardsof
17th July 2016, 06:37 AM
http://i64.tinypic.com/15qqec0.jpg

Richardsof
17th July 2016, 06:39 AM
http://i65.tinypic.com/2due844.jpg

Richardsof
17th July 2016, 06:41 AM
http://i67.tinypic.com/b3k4z7.jpg

Richardsof
17th July 2016, 06:42 AM
http://i64.tinypic.com/353e0xj.jpg

Richardsof
17th July 2016, 06:49 AM
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
https://youtu.be/ufwwcCxpz8E
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

Courtesy- ilavenirkaalam

Richardsof
17th July 2016, 06:52 AM
http://i67.tinypic.com/e0l5s1.jpg

Richardsof
17th July 2016, 06:55 AM
http://i63.tinypic.com/2r47y46.jpg

Richardsof
17th July 2016, 06:58 AM
http://i68.tinypic.com/23h812h.jpg

Richardsof
17th July 2016, 07:00 AM
"தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.

இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.

ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


, சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை "சத்யா மூவிஸ்" தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

Richardsof
17th July 2016, 07:04 AM
திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்

மக்கள் திலகத்தின் நாடக மன்றம்

எம்ஜியார் பிக்சர்ஸ்


எம்ஜிஆர் ரசிக மன்றம்

நடிகன் குரல் - சமநீதி

சத்யா மூவிஸ் நிறுவனம்

அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்

அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்

1977-1987 மந்திரிசபையில் பதவி

என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்

மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .


திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு


உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .

சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த


தெய்வத்தாய்

காவல்காரன்

ரிக்ஷாக்காரன்

இதயக்கனி


பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .

கண்டிப்புக்கு பெயர் போனவர் .

மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது .

Richardsof
17th July 2016, 07:13 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ் ''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .
http://i66.tinypic.com/1zxbdzd.jpg

oygateedat
17th July 2016, 08:04 AM
திரு வினோத் அவர்களுக்கு

தெய்வத்தாய் படத்தகவல்கள் - படங்கள் - அருமை.

Russelldvt
17th July 2016, 08:07 AM
http://i63.tinypic.com/fu3jma.jpg

Russelldvt
17th July 2016, 08:09 AM
http://i63.tinypic.com/1oklz5.jpg

Russelldvt
17th July 2016, 08:10 AM
http://i66.tinypic.com/14lqyv4.jpg

oygateedat
17th July 2016, 08:11 AM
இன்று மக்கள் திலகத்தின்

புகழ் பாட புதிய மாத இதழ் - மதுரை மாநகரில் வெளியிடப்படவுள்ளது.

ஒளிவிளக்கு

https://s32.postimg.org/f8qq71v79/Mail.jpg (https://postimg.org/image/j54231g6p/)

Russelldvt
17th July 2016, 08:12 AM
http://i63.tinypic.com/33artxk.jpg

Russelldvt
17th July 2016, 08:13 AM
http://i67.tinypic.com/rcudub.jpg

Russellwzf
17th July 2016, 12:38 PM
நெஞ்சம் மறப்பதில்லை -8: எம்.ஜி.ஆருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சினை வந்ததேன்?

ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் பன்முகம் கொண்ட கலைஞர், கதை வசனகர்த்தா, பத்திரிகையாளர், ஸ்டுடியோ அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர்.

இவரது திரையுலக வாழ்க்கை 1941ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. முதல் படமாக 'மதன காமராஜன்' படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து 'நந்தனார்', 'ஒளவையார்', 'மிஸ் மாலினி', 'சம்சாரம்', 'மங்கம்மா சபதம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'மோட்டார் சுந்தரம்பிள்ளை', 'இரும்புத்திரை' போன்ற படங்களை கருப்பு வெள்ளையில் தயாரித்தார்.

இவரால் அதிகபொருட்செலவில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட 'சந்திரலேகா' படம்தான் இவருக்கு நலல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல இயக்குனரும் இவரே.

இந்தச் சூழ்நிலையில்தான் திரைப்படத் துறையில் சிலமாற்றங்கள் ஏற்பட்டன. கருப்பு வெள்ளை படம் எடுத்தவர்களெல்லாம் கலரில் படத்தை எடுக்கத் தொடங்கினார்கள். அப்படி எடுப்பதை பெருமையாகக் கருதினார்கள்.
எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கும் கலரில் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் தன்னை வைத்து கருப்பு வெள்ளைப் படங்களை தயாரித்தவர்களுக்கெல்லாம் கலரில் எடுப்பதற்கு, தானே முன்வந்து கால்ஷீட் கொடுத்து உதவினார். ஜி.என்.வேவலு மணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனத்தை 'படகோட்டி' படத்தை கலரில் எடுக்க வைத்தார். தன்னை வைத்து அதற்கு முன் எந்தப் படமும் எடுக்காத ஏவிஎம் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்து அழகான கலரில் 'அன்பே வா' படத்தைத் தயாரிக்க வைத்தார்.

விஜய வாஹினி நிறுவன பேனரில் 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நடித்தார்.கருப்பு வெள்ளையில் எம்.ஜி.ஆர். அவர்களை நாயகனாக வைத்து அதிகம் படங்களை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அவருடைய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் கால்ஷீட் கொடுத்து, 'நல்ல நேரம்' படத்தை கலரில் எடுக்க வைத்தார்.

எம்.ஜி.ஆர்.அவர்கள் முதன்முதலில் நடிகராக அறிமுகமான 'சதிலீலாவதி' படத்திற்கு கதைவசனம் எழுதிய எஸ்.எஸ்.வாசன். இப்பொழுது எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து கலரில் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்தார் அதற்கான கதைகள் தேடப்பட்டன. இறுதியில் இந்தியில் வெளிவந்த தர்மேந்திரா, மும்தாஜ், மீனாகுமாரி நடித்த 'பூல் அவுர் பத்தார்' என்ற படத்தைத் தேர்வு செய்தார்கள்.

எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் படத்தைப் போட்டு காண்பித்தார்கள் திருடன், குடிகாரன், எல்லோரும் பயப்படுகின்ற அளவிற்கு முரடன், அவன் வாழ்கின்ற பகுதியில் யாருக்கும் அவனிடம் பழக்கமில்லை. அவனைப் பார்த்ததும் அனைவரும் பயந்து ஓடினார்கள். போலீசும் திருடன் என்பதால் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. திருடப்போன இடத்தில் ஒரு விதவைப் பெண்ணைப் பார்க்கிறான், வீட்டிற்கு அழைத்து வருகிறான். அவளை இறுதியில் திருமணம் செய்துக் கொள்கிறான். இடையில் திருட்டுக் கும்பலில் இருக்கும் ஒரு பெண் அவனைக் காதலிக்கிறாள்.

இப்படி போகிறது இந்தப்படத்தின் கதை.

படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். தமிழுக்கு ஏற்ற சில மாற்றங்களும், தன் படத்திற்கே உரித்தான சில கருத்துக்களையும் சொன்னார்.

சிறுவனாக இருக்கும்போது பசிக்காக திருடப் போனவன் திருடனாகி விட்டான். அதன்மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தான். சில சுயநல கூட்டத்தினர் அவனை தங்களது தேவைகளுக்காக தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவனை உண்மையில் காதலித்துக் கொண்டிருந்தாள். திருடப்போன இடத்தில் ஆபத்தில் இருந்த ஒரு விதவைப் பெண்ணை காப்பாற்றி அழைத்து வருகிறான். அவளை சகோதரியாக நினைக்கிறான். அவளும் அவனைத் திருத்த முயற்சிக்கிறாள். அந்த ஊரில் திடீரென்று நடக்கும் தீவிபத்திலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றுகிறான். அப்பொழுது தீவிபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுகிறான். ஊரேஅவனைப் புரிந்துக் கொண்டு காப்பாற்ற முயற்சி செய்கிறது. கடவுளிடம் பிரார்த்தனை செய்து பாடல்களையும் பாடுகிறார்கள். இப்படி எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கின்றவகையில் சிலமாற்றங்கள் செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அதன்படி படத்தின் திரைக்கதை வசனகர்த்தா கே.சொர்ணம் அதற்கான வேலைகளில் இறங்கினார். ஆரம்பத்தில் மாற்றங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் ஒத்துக் கொண்டதால் படப்பிடிப்பு ஆரம்பமாகியது.ப டத்திற்கு 'ஒளிவிளக்கு' என்று பெயர் வைத்தார்கள்.எம்.ஜி.ஆர்.அவர்களும் 'ஒளிவிளக்கு' படத்தை தான் நடிக்கும் படங்களின் பட்டியலில் 100வது படமாக அறிவித்தார்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்.சொன்ன மாற்றங்களை ஏற்றுக் கொணடவர்கள் பின்னாளில் கதைப்படி படத்தை முடிப்போம் என்று முரண்டு பிடித்தார்கள். அதனால் தொடர்ந்து நடந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நின்றது. பிறகு இரு தரப்பினரும் கலந்துப் பேசியதால் சமரசம் ஆகி படப்பிடிப்பும் தொடர்ந்தது.

எம்.ஜி.ஆர். இதில் குடிகாரனாக நடித்திருப்பதால், அதை மறுத்து குடிப்பது தவறு என்பதை அவரே பல வித தோற்றத்தில் வந்து பாடி நடித்து விளக்குகின்ற வகையில்,

'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?
இல்லை...நீதான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு அகலும்...'

என்ற ஒரு பாடல்காட்சியைப் படமாக்கிச் சேர்த்தார்கள்.

அதே போல் கதைப்படி எம்.ஜி.ஆர்.தீவிபத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்காக போராடுகின்ற போது,
'இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...

உள்ளமதில் உள்ளவரை
அள்ளி தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால்
மண்ணுலகம் என்னாகும்..'

என்றுஊர்மக்கள்ஒன்று கூடிப் பிராத்தனை செய்து பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியையும் படமாக்கிச் சேர்த்தார்கள்.

இந்தப் பாடல் காட்சிகள் கதைப்படி, எம்.ஜி.ஆர்.விருப்பப்படி படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. படத்திற்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்ட இந்தப் பிராத்தனைப் பாடல்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது நலம்பெற்று வரவேண்டுமென்று உண்மையிலேயே உலகம் முழுவதும் மக்களால் பாடப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பாடல் இது.

இந்தப் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகும் போது எல்லா தியேட்டர்களிலும் உண்மையிலேயே கையிலே கற்பூரம் ஏற்றிக் வைத்துக் கொண்டு ரசிர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள், அவற்றின் தயாரிப்பாளர்களோடு முரண்பாடு ஏற்பட்டு இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கிடையில்தான் தயாராகி வெளிவந்திருக்கின்றன. இதற்கு காரணம் அவரை வைத்து படம் எடுக்க வருகிறவர்களில் பலர் கதைப்படி படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ கதைப்படி என்பதை விட கருத்துப்படி என்பதற்குதான் முக்கியத்துவம் தருவார்.

தனது படத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கு நல்ல கருத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார். எதிர்மறைச் சிந்தனையை யாரிடமும் தன் படம் உருவாக்கிவிடக் கூடாது என்பதில்தான் அதிக அக்கறை அவருக்கு. அனைவருக்கும் பிடிக்கின்ற வகையில் ஜனரஞ்சகமாகவும் எடுக்க வேண்டுமென்று விரும்புவார்.

இதில் முரண்பாடு வரும்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு விடும். படம் வெளிவந்ததும் அது அள்ளித்தரும் வசூலைப் பார்த்ததும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதே தயாரிப்பாளர் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு ராமாவரம் தோட்டத்தில் வந்து நிற்பார் !

Courtesy : http://mlife.mtsindia.in/nd/?pid=1693109&aid=36&pos=1&wsf_ref=பொழுது போக்கு&pag=HPAGES&anam=Oneindia&pi=5&rgn=tn

Russelldvt
17th July 2016, 05:56 PM
http://i63.tinypic.com/205e7tc.jpg

Russelldvt
17th July 2016, 05:57 PM
http://i67.tinypic.com/b4sr3k.jpg

Russelldvt
17th July 2016, 06:00 PM
http://i68.tinypic.com/2lo42ef.jpg

Russelldvt
17th July 2016, 06:01 PM
http://i66.tinypic.com/ws0h6x.jpg

Russelldvt
17th July 2016, 06:03 PM
http://i63.tinypic.com/opwgif.jpg

Russellvpd
17th July 2016, 09:24 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ் ''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .
http://i66.tinypic.com/1zxbdzd.jpg

நன்றி.

Russellvpd
17th July 2016, 09:25 PM
மாற்று திரியில் ஒருத்தர் நம்பளைப் பாத்து அரைவேக்காடு கால்வேக்காடு என்று திட்டி எழுதலாமா? என்று கேட்கிறார். அப்பிடி போடு. ஞாயமான கேள்வி கேட்டாருய்யா. அவரது கவனகத்துக்காக.
அரைவேக்காட்டு ஆட்கள், முட்டாள்கள், உளறல்கள் ( மாற்றுத் திரி பதிவு.நம்பர். 1828)
நம்பளைப் பார்த்து கேள்வியை கேட்பவரீல் இருந்து ஒருபக்கம் எல்லாரும் காமராஜரை புகழுவார்கள். அதே நேரம் காமராஜரை ‘சுத்தமாக தலமை குணம் இ்லலாத அரசியல்வாதி’‘அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்’ ‘தமிழகத்தின் நலன்களை புறக்கணித்தவர் (சபாஸ்) ‘இரண்டும் கெட்டான் அரசியல் ஞானசூனியம்’ ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்’ என்று அவர்கள் திரியில் காமராஜை திட்டி (அவர்கள் திரி பதிவு நம்பர் 1838) பதிவு போடுவார்கள். (பொளைச்சு போகட்டும் என்று கடைசியிலே நல்ல மனம் என்று பாராட்டு)
நம்பளைப் பாத்து பொய்யர்கள் என்று அடிக்கடி அந்தப் பக்கத்திலே இருந்து சொல்லுவார்கள். பத்து நாள் முன்னாடி சொன்னது இன்னும் அப்பிடியே இருக்கு.
நம்பளைப் பாத்து அரைவேக்காடு என்று எழுதலாமா? நெறியாளர் ஒன்றும் சொன்னதாக தெரியலை என்று கேள்வி கேட்கும் ஞாயபதிகள், தங்கள் திரியை படிக்கிறதே இல்லை போல இருக்குது. நாம்பளாவது இரண்டு திரியையும் படிக்கறோம். ஆனால், அவர்கள் நம்ப திரியை மட்டும்தான் படிக்கிறாங்க போல இருக்கு.
தங்கள் திரிய கூட படிக்காமல், மக்கள் திலகம் அந்த அளவுக்கு அவங்களை ஈர்ப்பு செய்கிறார். இதே மாதரி எப்போதும் உங்க திரிய படிக்காமல் எங்க திரிய மட்டுமே படியுங்கள்.
மிகவும் நன்றி.

Russellvpd
17th July 2016, 09:28 PM
http://i63.tinypic.com/5drp50.jpg


‘‘என்னை ஏய்ப்பதற்கும் சாய்ப்பதற்கும் யார் நினைத்தும் ஆவதில்லை வீண்தான்’’


_ ஊருக்கு உழைப்பவன் படத்தில் புரட்சித் தலைவர்.

siqutacelufuw
17th July 2016, 11:25 PM
https://youtu.be/SDs7X9vu9I0

புரட்சித்தலைவரின் புகழை பறை சாற்றும் விதத்தில் தயங்காமல் பேசி அவரது பெருமைகளை உணர்த்திய நடிகை திருமதி வாணிஸ்ரீ நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தோன்றும் இந்த காட்சி வெகு அருமை ! பதிவிட்ட ஷஹ்ரியர் அக்பர் அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
17th July 2016, 11:37 PM
http://i63.tinypic.com/sox2pv.jpg

மக்கள் திலகத்துடன், அவரை துதி பாடி, அவரின் புகழை துணிச்சலாக எந்த மேடையிலும் பேசும் தைரியம் படைத்த, நன்றி மறவாத நல்ல நடிகை திருமதி லதா அவர்கள்

Richardsof
18th July 2016, 11:47 AM
இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள் .
http://i67.tinypic.com/r9hd10.jpg
பொன்மனச்செம்மலே!
என்
பொழுத்து புலரக்
கூவிய சேவலே!
உனக்கென்று
நான் எழுதிய
முதல் வரியில்தான்
உலகுக்கு
என் -
முகவரி
தெரிய வந்தது!

என் கவிதா விலாசம்..
உன்னால்தான் -
விலாசமுள்ள
கவிதையாயிற்று!

இந்த நாட்டுக்குச்
சோறிடு முன்னரே
என் -
பாட்டுக்குச்
சோறிட்டவன் நீ!

என்னை
வறுமைக் கடல்மீட்டு..
வாழ்க்கைக் கரை சேர்த்த
படகோட்டியே!
கருக்கிருட்டில்
என்
கண்களில் தென்பட்ட
கலங்கரை விளக்கமே!

நான் பாடிய பாடல்களை
நீ பாடிய பிறகுதான்
நாடு பாடியது...
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது!

இல்லையென்று
இரப்போர்க்கு
இல்லையென்று
சொல்லாதவன்...

இன்று -
இல்லையென்று போனான்...
இனி நான் -
யாரைப்பாடுவேன்...?

புரட்சித் தலைவனே!
நீ
இருந்தபோது -
உன் அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...
இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து -
நாடு அழுதது!

வைகை யாறும்
பொன்னி யாறும்
வற்றிப்போகலாம்;
நீ
வற்றாத
வரலாறல்லவா!

கலைத்தாயின்
தலைமகனே!
கோட்டையில்
கொலுவிருந்தால் மட்டும்
நீ
'சி.எம்' அல்ல...
கோடம்பாக்கத்திலும்
கர்ஜித்துக்கொண்டிருந்த
சீயம் தான்!

இன்று
படத்தை நிரப்பப்
பலர் இருக்கிறார்கள்;
உன் இடத்தை நிரப்பத்தான்
எவருமே இல்லை!

நான்
மனிதர்களில் -
நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆனால்,
நடிகர்களில்
நான் பார்த்த
முதல் மனிதன் நீதான்!

அதனால்தான்...
நீ
நோயுற்ற போது -
தங்களது
வாழ்நாட்களின் மிச்சத்தை
உன் கணக்கில்
வரவு வைத்துவிட்டு -
எத்துணையோ பேர்
தங்கள் கணக்கை
முடித்துக்கொண்டு
தீக்குளித்தார்கள்!

என்
இதய தெய்வமே!
உன்
இறப்பில்
நான்
இரண்டாவது முறையாக
என்
தாயை இழந்தேன்!
இனி -
நான் யாரைப் பாடுவேன்...!

எம்.ஜி.ஆர் இறந்த போது கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது.

Richardsof
18th July 2016, 12:06 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/014888ff-e63a-466e-a839-b267f0be9851_zpsgelbixok.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/014888ff-e63a-466e-a839-b267f0be9851_zpsgelbixok.jpg.html)

Richardsof
18th July 2016, 12:15 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/024f5f8b-3b31-4d76-aaa9-a0e19936b356_zps2vx2myta.png (http://s1273.photobucket.com/user/esvee6/media/024f5f8b-3b31-4d76-aaa9-a0e19936b356_zps2vx2myta.png.html)

Russelldvt
18th July 2016, 01:33 PM
http://i65.tinypic.com/2myyu5c.jpg

Russelldvt
18th July 2016, 01:35 PM
http://i68.tinypic.com/2h3mpef.jpg

Russelldvt
18th July 2016, 01:36 PM
http://i65.tinypic.com/155mow3.jpg

Russelldvt
18th July 2016, 01:38 PM
http://i68.tinypic.com/rw16qd.jpg

Russelldvt
18th July 2016, 01:39 PM
http://i65.tinypic.com/b6yl1s.jpg

Richardsof
18th July 2016, 02:55 PM
தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாறு நூலான, 'கடல் தாமரை'யில், தி.முத்துகிருஷ்ணன் எழுதியது:


'எனக்கு ஒரு ஆசை உண்டு. தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; அவருக்கு, நான் மாலை அணிவித்து, மகிழ வேண்டும். அவர், என்னை, 'வாழ்க...' என்று, வாயார வாழ்த்த வேண்டும்...' என்று எம்.ஜி.ஆர்., போற்றி புகழ்ந்து பேசிய, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின், 32வது நினைவு தினம், வரும் ஜூலை, 21ம்தேதி வருகிறது.
எம்.ஜி.ஆர்., எங்கே இப்படி பேசினார், இன்னும் என்னவெல்லாம் பேசினார் என்பதை அறிந்து கொண்டால், அவர், தினமலர் நாளிதழ் மீதும், ஆசிரியர் டி.வி.ஆர்., மீதும் வைத்திருந்த அன்பையும், மரியாதையையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.


தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மார்ச், 13, 1984ல், தினமலர் நாளிதழின் ஈரோடு பதிப்பை, துவக்கி வைத்து பேசுகையில், 'திருநெல்வேலி பதிப்பு, தினமலர் நாளிதழை படித்த போது, சென்னையில், தினமலர் பதிப்பை கொண்டு வர வேண்டுமென்று, அதன் நிருபரிடம் கூறினேன். சென்னையில் இருந்து, தினமலர் நாளிதழ் வெளி வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
'சில நேரங்களில், மற்றவர்களிடம் இருந்து கிடைக்காத தகவல்களை, தினமலர் நாளிதழ் மூலம் தெரிந்து கொண்டதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும் பத்திரிகை. அப்பணியை சிறப்பாக செய்கிறது தினமலர் நாளிதழ்.

'நல்ல தமிழில், சீரிய கருத்துகளை கூறும் தினமலர் நாளிதழுக்கு, 'மலர்' என்று பெயர் வைத்தது, மிக பொருத்தமானது. தினமலர் இதழில், குழந்தைகள் பட கதை ஒன்று வெளி வருகிறது. அப்பட கதைகளை, என் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காட்டி, படிக்க வைக்கிறேன். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு மற்றும் பாசம் ஆகியவற்றை உணர்த்த வேண்டும்.

'அந்த வேலையை, தினமலர் நாளிதழ் செவ்வனே செய்கிறது. 'இவ்வளவு படங்களுடன் பத்திரிகை வெளியிடுகின்றனரே...' என, தினமலர் நாளிதழ் மீது, பலருக்கு பொறாமையும், 'நம்மால் இது போல செய்ய முடியவில்லையே...' என்ற இயலாமையில் கோபமும், கவலையும் அடைகின்றனர். மேலும், ஞாயிற்றுகிழமை தோறும் வெளிவரும், வாரமலர் இதழ் பார்த்து, பலரும் அது போல தர ஆரம்பித்துள்ளனர். இப்படி பல சிறப்புகளுடன் வரும், தினமலர் நாளிதழ் எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,

Russellvpd
19th July 2016, 12:22 AM
http://i65.tinypic.com/ff05eq.jpg



வள்ளலே!

எங்கள் வாழ்வே!!

Russellvpd
19th July 2016, 12:42 AM
http://i67.tinypic.com/2vazk1d.jpg

உயிரே!


எங்கள் உணர்வே!!

oygateedat
19th July 2016, 06:25 AM
https://s32.postimg.org/l3hlldi79/poster_sticker.jpg (https://postimg.org/image/vdk0km82p/)

oygateedat
19th July 2016, 06:29 AM
https://s32.postimg.org/co892lev9/IMG_20160719_061919.jpg

oygateedat
19th July 2016, 06:37 AM
https://s32.postimg.org/c8o29fpol/IMG_20160717_233106.jpg (https://postimg.org/image/4sosnn1z5/)
ஒளிவிளக்கு மாத இதழ் வெளியிட்டபோது -

நடிகர் செந்தில் - இயக்குனர் T.P.GAJENDIRAN - Senior journalist major Dasan - Madurai s.s.Ramakrishnan.

Richardsof
19th July 2016, 09:18 AM
21.8.2016
சென்னை - தேவிபாரடைஸ் அரங்கில் மக்கள் திலகத்தின் ''ரிக்ஷக்காரன் '' டிஜிட்டல் டிரைலர் வெளியீடு
நன்றி - திரு கிருஷ்ணகுமார் - கோவை

Richardsof
19th July 2016, 11:18 AM
http://i64.tinypic.com/25zmd53.jpg

Russelldvt
19th July 2016, 12:55 PM
http://i63.tinypic.com/16c27o3.jpg

Russelldvt
19th July 2016, 12:57 PM
http://i64.tinypic.com/2d92nw2.jpg

Russelldvt
19th July 2016, 12:58 PM
http://i66.tinypic.com/i1mjh5.jpg

Russelldvt
19th July 2016, 12:59 PM
http://i66.tinypic.com/2vtpfg9.jpg

Russelldvt
19th July 2016, 01:00 PM
http://i63.tinypic.com/308cjg7.jpg

Russelldvt
20th July 2016, 08:15 AM
http://i67.tinypic.com/x4oe2c.jpg

Russelldvt
20th July 2016, 08:17 AM
http://i66.tinypic.com/2ciguip.jpg

Russelldvt
20th July 2016, 08:19 AM
http://i66.tinypic.com/2d7hilc.jpg

Russelldvt
20th July 2016, 08:21 AM
http://i64.tinypic.com/33yntwn.jpg

Russelldvt
20th July 2016, 08:23 AM
http://i63.tinypic.com/2m4y7ns.jpg

siqutacelufuw
20th July 2016, 10:03 AM
http://i64.tinypic.com/5x8uab.jpg

Courtesy : Facebook

Russelldvt
20th July 2016, 12:55 PM
http://i68.tinypic.com/234q4p.jpg

Russelldvt
20th July 2016, 12:56 PM
http://i65.tinypic.com/sqmf5c.jpg

Russelldvt
20th July 2016, 12:58 PM
http://i65.tinypic.com/bhjc7p.jpg

Russelldvt
20th July 2016, 12:59 PM
http://i63.tinypic.com/fng3d2.jpg

Russelldvt
20th July 2016, 01:00 PM
http://i65.tinypic.com/2mq7pyc.jpg

tamiyt11
20th July 2016, 05:53 PM
http://i65.tinypic.com/2rp41ep.jpg

வணக்கம் நண்பர்களே

நானும் உங்களைப் போலவே புரட்சித் தலைவரின் பக்தன். திரியை பல மாதங்களாக படித்து வந்தேன். பதிவு செய்த எனக்கு இப்போது அனுமதி கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. திரியில் புரட்சிதலைவர், பொன்மனச் செம்மலின் பெருமைகளை பதிவிட விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போது பதிவிடுவேன். என்னை வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

fidowag
20th July 2016, 09:57 PM
மதுரை சென்ட்ரலில் 22/07/16 முதல் புரட்சி தலைவர் நடித்த "ஆசை முகம்" தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது.
http://i63.tinypic.com/mc4zt1.jpg
http://i66.tinypic.com/2reod8l.jpg


தகவல் உதவி நண்பர் திரு. மதுரை எஸ்.குமார்.

fidowag
20th July 2016, 10:07 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "ரிக்க்ஷகாரன்" போஸ்டர்.
http://i63.tinypic.com/nd9e83.jpg
http://i67.tinypic.com/28hphd4.jpg
http://i66.tinypic.com/2hzk308.jpg

fidowag
20th July 2016, 10:13 PM
http://i68.tinypic.com/34j5fuf.jpg
http://i66.tinypic.com/xp3h38.jpg
http://i63.tinypic.com/oqli6h.jpg

fidowag
20th July 2016, 10:16 PM
http://i65.tinypic.com/eqqs6t.jpg
http://i67.tinypic.com/2jd4a6o.jpg

orodizli
20th July 2016, 10:48 PM
Evergreen Makkalthilagam, Emperor of Cinema World always... His Majestic Mega, Super Duper Hit "Rickshawkkaaran"--- Digital 2K proudly format will be release shortly...That's Fine Posters, Stills too Good...

siqutacelufuw
21st July 2016, 08:55 AM
http://i65.tinypic.com/2rp41ep.jpg

வணக்கம் நண்பர்களே

நானும் உங்களைப் போலவே புரட்சித் தலைவரின் பக்தன். திரியை பல மாதங்களாக படித்து வந்தேன். பதிவு செய்த எனக்கு இப்போது அனுமதி கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. திரியில் புரட்சிதலைவர், பொன்மனச் செம்மலின் பெருமைகளை பதிவிட விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போது பதிவிடுவேன். என்னை வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

http://i65.tinypic.com/jl2eqw.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதிதாய் இணைந்திருக்கும் திரு. தேவ சேனாதிபதி ராஜராஜன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் !

okiiiqugiqkov
21st July 2016, 08:58 AM
புரட்சித் தலைவரின் தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் சுந்தர பாண்டியன். மக்கள் திலகத்தின் பெயரால் இப்படி ஒரு திரி இருப்பதை ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். ரிக்க்ஷாக்காரன் படம் வெற்றிகரமாக வெளியாகி ஆயிரத்தில் ஒருவன் படம் போல வெள்ளிவிழா காண இருக்கும் நேரத்தில் இங்கே கலந்து கொண்டு பதிவு செய்வதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

ஒப்பீடுகளை எல்லாம் கடந்து யாரும் எட்ட முடியாத உயரத்தில் புகழோடு விளங்கும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க!

okiiiqugiqkov
21st July 2016, 09:06 AM
http://i66.tinypic.com/seahs6.jpg

திரைப்படத்தில் மட்டுமின்றி, எப்போதுமே ஸ்டைலாக இருப்பவர் மக்கள் திலகம் என்பது வசீகரிக்கும் இந்த ஃபோட்டோவைப் பார்த்தாலே தெரியும்.

Richardsof
21st July 2016, 10:35 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு .தேவ சேனாதிபதி ராஜராஜன் மற்றும் திரு சுந்தரபாண்டியன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .

நணபர்களே
மக்கள் திலகத்தை பற்றிய உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

Richardsof
21st July 2016, 10:46 AM
NADIGAR THILAGAM SIVAJI GANESAN- NINAIVU NAAL -INDRU

http://i68.tinypic.com/fwbq9.jpg
http://i67.tinypic.com/2ylqmh5.jpg

okiiiqugiqkov
21st July 2016, 12:38 PM
எனக்கு வரவேற்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.

நான் சிறுவயதில் இருந்தே புரட்சித் தலைவரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். இன்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அவரைப் போல நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்க்கையில் வழிதவறிப் போக சந்தர்ப்பங்கள் வந்தபோதும் நேர்மையாக ஒழுக்கமாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இனிமேலும் அப்படியே இருக்க புரட்சித் தலைவரின் ஆசி வேண்டுகிறேன். மக்கள் திலகத்தின் ரசிகன் என்பதில் கர்வப்படுகிறேன்.

நான் ஆணையிட்டால் எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் வரும் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடலும் மக்கள் திலகத்தின் நடிப்பும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
வாழ்க்கையில் தவறான வழிகளில் செல்லாமல் இருந்ததால் நானும் நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன். மக்கள் திலகம் மீது உள்ள காதலை இங்கே அழைத்து வந்தேன்.

கருப்பு வெள்ளை படங்களில் கருப்பு மற்றும் வெள்ளை டிரஸ்கள்தான் பளிச்சென தெரியும். பாக்கி நிறங்கள் தெரியாது. இந்தப் பாடலில் மக்கள் திலகத்துக்கும் சரோஜாதேவிக்கும் கருப்பு வெள்ளையில் உடைகள். ஆரம்பத்தில் மக்கள் திலகத்துக்கு வெள்ளை உடை. சரோஜா தேவிக்கு கருப்பு உடை. பாதி பாடலுக்குப் பின் மக்கள் திலகத்துக்கு கருப்பு உடை. அதில் அவர் இளமை பிளஸ் கொள்ளை அழகு. நடன அசைவுகள் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாடலின் கடைசியில் சரிவான மேடை மீது விறுவிறுவென்று கால்களை வேகமாக ஸ்டெப் வைத்து பக்கவாட்டில் வரும் சுறுசுறுப்பு 25 வயது இளைஞருக்கு கூட வராது. அவருக்கு என்றுமே 16தான்.

நான் மிகவும் ரசித்த நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடல். எல்லாரும் ரசிப்போம். நன்றி.

https://youtu.be/IACqSG0qUgg

siqutacelufuw
21st July 2016, 12:43 PM
http://i66.tinypic.com/seahs6.jpg

திரைப்படத்தில் மட்டுமின்றி, எப்போதுமே ஸ்டைலாக இருப்பவர் மக்கள் திலகம் என்பது வசீகரிக்கும் இந்த ஃபோட்டோவைப் பார்த்தாலே தெரியும்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதிதாய் இணைந்திருக்கும் திரு. சுந்தர பாண்டியன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் !

நான் வணங்கும் எங்கள் குல தெய்வம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள், தங்கள் பெயருக்கு முன் " மதுரையை மீட்ட " என்ற வாக்கியத்தை பயன்படுத்தி ஒரு வரலாற்று காவியம் அல்லவா படைத்து விட்டார்.

http://i63.tinypic.com/nzq71u.jpg

siqutacelufuw
21st July 2016, 12:49 PM
. பாடலின் கடைசியில் சரிவான மேடை மீது விறுவிறுவென்று கால்களை வேகமாக ஸ்டெப் வைத்து பக்கவாட்டில் வரும் சுறுசுறுப்பு 25 வயது இளைஞருக்கு கூட வராது.

https://youtu.be/iacqsg0qugg

இதே வார்த்தையினை நான் எனது குடும்பத்தினர் அனைவரிடம் கூறி, மகிழ்வேன். நானும் இந்த பாடல் காட்சியை அடிக்கடி, dvd player மூலம் தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பேன். உன்னதமான பாடல் காட்சிகள் கொண்ட அற்புதமான காவியம் "நான் ஆணையிட்டால்"

siqutacelufuw
21st July 2016, 12:51 PM
ஒப்பீடுகளை எல்லாம் கடந்து யாரும் எட்ட முடியாத உயரத்தில் புகழோடு விளங்கும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க!

golden words !

Russelldvt
21st July 2016, 01:18 PM
http://i67.tinypic.com/2pziff8.jpg

Russelldvt
21st July 2016, 01:21 PM
http://i64.tinypic.com/29oh6ab.jpg

Russelldvt
21st July 2016, 01:23 PM
http://i67.tinypic.com/2dbwivs.jpg

Russelldvt
21st July 2016, 01:24 PM
http://i67.tinypic.com/2vngozc.jpg

Russelldvt
21st July 2016, 01:27 PM
http://i63.tinypic.com/2624d1k.jpg

oygateedat
21st July 2016, 01:58 PM
ஒரு கோவில் கட்டட நிதிக்காக பொன்மனசெம்மலை வாரியார் சுவாமிகள் பார்க்க சென்றிருந்தார் .தலைவர் அப்போது நம்நாடு படப்பிடிப்பில் விஜயா ஸ்டூடியாவில் இருந்தார்.சுவாமிகள் வந்து இருப்பதை அறிந்த செம்மல் விவரத்தை கேட்டு அறிந்து தொகை குறிப்பிடாமல் செக் ஒன்றை கையொப்பம்மிட்டு கொடுத்து உள்ளார் .இதை பார்த்த சுவாமிகள் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு தலைவர் சொன்ன பதில் என்ன வென்றால் என்னிடம் வந்த பிறகு நீங்கள் இனி யாரிடமும் கோவில் கட்டட நிதிக்காக வசூலுக்கு செல்லக் கூடாது .உங்களுக்கு வேண்டிய தொகையை நீங்களே எழுதி கொள்ளுங்கள் என்று தலைவர் வாரியார் சுவாமிகளிடம் சொன்னார்.

அதற்கு பிறகு தான் பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை சுவாமிஅவர்களால் எங்கள் சிங்கார தலைவன் செல்ல தலைவனுக்கு அளிக்க பட்டது .

WhatsApp message

oygateedat
21st July 2016, 02:18 PM
நமது திரியில் புதிதாக சேர்ந்துள்ள திரு தேவ சேனாதிபதி ராஜராஜன் மற்றும் திரு சுந்திரபாண்டியன் ஆகியோர் இருவரும் மக்கள் திலகத்தின் புகழ்பாட அன்புடன் வரவேற்கின்ரேன்.

Richardsof
21st July 2016, 02:25 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ea29d4ff-beea-4bca-a16b-77b3b4d3159c_zpswvezpfof.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ea29d4ff-beea-4bca-a16b-77b3b4d3159c_zpswvezpfof.jpg.html)

Richardsof
21st July 2016, 02:37 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/76ccf2c4-2830-46af-afc7-a581e51f19e1_zpsoqu4qpws.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/76ccf2c4-2830-46af-afc7-a581e51f19e1_zpsoqu4qpws.jpg.html)

Richardsof
21st July 2016, 02:51 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/39946663-ed31-47b3-919d-dd8f31535e4a_zps8h01ccte.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/39946663-ed31-47b3-919d-dd8f31535e4a_zps8h01ccte.jpg.html)

Russellvpd
21st July 2016, 03:10 PM
http://i66.tinypic.com/seahs6.jpg

திரைப்படத்தில் மட்டுமின்றி, எப்போதுமே ஸ்டைலாக இருப்பவர் மக்கள் திலகம் என்பது வசீகரிக்கும் இந்த ஃபோட்டோவைப் பார்த்தாலே தெரியும்.

நம் திரியில் புதியதாக சேர்ந்து இருக்கும் தேவ சேனாபதி ராஜ ராஜன், சுந்தர பாண்டியன் ஆகியவர்களை வரவோற்கிறேன்.

Russellvpd
21st July 2016, 03:23 PM
http://i64.tinypic.com/2vvjls8.jpg

உரிமைக் குரல் நாயகி லதாவை அணைத்தபடி இருக்கும் இந்த வாலிபனுக்கு 20 வயசு இருக்குமா?

Russellvpd
21st July 2016, 03:31 PM
https://youtu.be/vylKWIFujkI

சுந்தர பாண்டியன், நான் ஆணையிட்டால் பட பாடல் எனக்கும் புடிக்கும். லதாவும் நம் தெய்வமும் சேர்ந்து கலக்கிய இளமை பொங்கித் திமிரும் இந்தப் பாட்டிலே புரட்சித் தலைவர் குந்தி உட்கார்ந்து முட்டியை மடக்கி மடக்கி ஸ்டெப் போட்டு நகர்ந்து செல்வார். அதை எல்லோராலயும் பாக்க மட்டுமே முடியும். யாரும் செய்ய முடியாது.

Russellvpd
21st July 2016, 03:40 PM
https://youtu.be/WZeGz5BijUE

உரிமைக் குரல் நாயகி ரோஜா மொட்டு லதாவுடன் தெய்வத்தின் இந்த டான்சு இன்னும் கலக்கும்

Russellbfv
21st July 2016, 05:36 PM
http://i65.tinypic.com/21bp4.jpg

Russellbfv
21st July 2016, 05:38 PM
http://i68.tinypic.com/292md7c.jpg

Russellbfv
21st July 2016, 05:40 PM
http://i67.tinypic.com/xgmq9f.jpg

fidowag
21st July 2016, 10:24 PM
நாளை (22/07/16) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா) மக்கள் திலகம் நடித்த "சங்கே முழங்கு" தினசரி 3 திரையிடப்படுகிறது.
http://i64.tinypic.com/xmtt2t.png

தகவல் உதவி நண்பர் திரு. பி.ஜி.சேகர்.

fidowag
21st July 2016, 10:31 PM
இந்த வாரம் குமுதம் இதழில் செய்தி.
http://i64.tinypic.com/x1eukw.jpg
http://i65.tinypic.com/v5hk7q.jpg
http://i65.tinypic.com/b6txc1.jpg
http://i68.tinypic.com/szv0k7.jpg

fidowag
21st July 2016, 10:34 PM
http://i67.tinypic.com/11ietk1.jpg
http://i63.tinypic.com/2usg4s3.jpg
http://i67.tinypic.com/2r3ziwp.jpg

Richardsof
22nd July 2016, 08:42 AM
Malaikallan 1954

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)


The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.
courtesy
randor guy

GerardBex
22nd July 2016, 09:32 AM
வணக்கம். நான் மக்கள் திலகத்தின் பக்தை. பேஸ் புக் நண்பர்கள் இந்த திரி பற்றி சொல்லி திரிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். எப்படி வருவது என்று சொல்லிக் கொடுத்தார்கள். இங்கு வந்து பார்த்தால் ஆச்சிரியமாய் உள்ளது. என் குடும்பமே மக்கள் திலகத்தின் மீது அன்பு கொண்டவர்கள். சின்ன வயதில் தியேட்டருக்கு மக்கள் திலகம் படம் பார்க்க கூட்டிப் போவார்கள். நானும்அப்படியே வளர்ந்தேன். விவரம் தெரிஞ்ச பிறகு மக்கள் திலகத்தையும் அவரது உயர் குணங்களையும் ஆளுமையையும் பார்த்து பிரமித்தேன். பெண்களை தெய்வமாக வணங்கியவர் புரட்சித் தலைவர் என்பது அவர் மீது கூடுதல் மரியாதையை ஏற்படுத்தியது. முடிந்தபோது இங்கு வந்து பதிவிடுவேன். நன்றி.

GerardBex
22nd July 2016, 09:34 AM
நேற்று வேந்தர் டிவியில் தேர்த்திருவிழா படம் போட்டார்கள். முழுசாகப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் நடிக்கும் நாடகத்துக்கு தலைமை தாங்க மக்கள் திலகமாகவே வருவார். இந்தப் படத்திலும் எங்கள் தங்கம் படத்தின் அறிமுக காட்சியிலும்தான் மக்கள் திலகமாகவேதோன்றுவார் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது படங்களில் அப்படி நிஜ எம்.ஜி.ஆராக வருவாரா?

நாகேஷ் நாடகம் முடிந்து புரட்சித் தலைவர் தலைமை தாங்கி பேசும்போது, பட வசனத்தை பேசுவதுபோல இல்லாமல் ஒரு விழா மேடையில் எப்படி பேசுவாரோ அப்படியே ரொம்பவும் இயல்பாக பேசுவார். நிகழ்ச்சி முடிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக வரும் புரட்சித் தலைவரை வழியனுப்ப மக்கள் கூட்டம் கூடவே வந்து நெருக்கியடிக்கும். அந்த நெரிசலில் படத்தில் வரும் மக்கள் திலகமும் ஜெயலலிதாவும் முன்னால் வந்து புரட்சித் தலைவர் உட்கார்ந்திருக்கும் காருக்குள் தலையை நுழைத்து அவருக்கு வணக்கம் சொல்வார்கள். மக்கள் திலகத்தின் முகத்தில் ஒரு பெரிய நடிகரை பார்க்கும் ஆர்வமும் பிரமிப்பும் தெரியும். பின்னால் யாரோ கூட்டத்தில் தன்னை நெருக்குவதை மாதிரி திடீரென்று முகத்தை சுளித்து பின்னால் திரும்பிப் பார்ப்பார். பெரிய நடிகரைப் பார்க்கும் ஒரு கூட்டத்தில் சிக்கிய சாதாரண மனிதன் எப்படி இருப்பான் என்பதை மக்கள் திலகம் எப்படி உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று பார்த்து ஆச்சிரியப்பட்டேன்.

அந்தக் காட்சி முடிஞ்சதும் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அசோகனுடன் மக்கள் திலகத்தின் சண்டை பயங்கர ஸ்பீடு. ஆற்றில் துரத்தியபடி நீஞ்சி வரும் மக்கள் திலகத்திடம் இருந்து தப்பிக்க கையில் உள்ள பண பேக்கை தூரத்தில் இருக்கும் பரிசலிலில் அசோகன் தூக்கி எறிவார். உடனே திரும்பி படு வேகமாக நீந்தி பரிசலுக்கு வரும் மக்கள் திலகம் பண பேக் இருக்கும் பரிசலை கரையை நோக்கி ஓட்டுவார். பின்னால் நீஞ்சி வரும் அசோகன் தந்திரமாக தன்னால் நீஞ்ச முடியவில்லை என்று சத்தம்போடுவார்.

எதிரியாக கெட்டவனாக இருந்தாலும் ஆபத்தில் உதவும் புரட்சித் தலைவருக்கே உரிய மனிதாபிமானம் வெளிப்படும். பரிசலை திருப்பி அசோகனை தண்ணீரில் இருந்து இழுத்து காப்பாற்றுவார். அந்த பெரிய பரிசலை ஓட்டும்போது குச்சியை ஆற்றுக்குள் செலுத்தி மணலில் ஊன்றி உண்மையிலேயே வலு போட்டு தள்ளியிருப்பார்.
படத்துக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலேயும் இந்த மனிதாபிமானத்தால்தான் புரட்சி நடிகராக இருந்தவரை மக்கள் புரட்சித் தலைவராக ஆக்கினார்கள் என்பதே உண்மை.

படத்தில் சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு பாடலுக்கும் மக்கள் திலகத்தின் நடனம் அருமை. நல்ல ஸ்பீடான மூவ்மென்ட்களை அனாயசமாக செய்திருப்பார்.

https://youtu.be/Q0KW4u96pWE

siqutacelufuw
22nd July 2016, 09:44 AM
http://i68.tinypic.com/hra5fm.gif

மக்கள் திலகம் திரியில், புதிதாய் இணைந்திருக்கும் Ms. ஆர்த்தி கிரிஜா அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் பற்றிய செய்திகள் அடங்கிய சிறப்பான பதிவுகளை,தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

siqutacelufuw
22nd July 2016, 09:49 AM
நேற்று வேந்தர் டிவியில் தேர்த்திருவிழா படம் போட்டார்கள். முழுசாகப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் நடிக்கும் நாடகத்துக்கு தலைமை தாங்க மக்கள் திலகமாகவே வருவார். இந்தப் படத்திலும் எங்கள் தங்கம் படத்தின் அறிமுக காட்சியிலும்தான் மக்கள் திலகமாகவேதோன்றுவார் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது படங்களில் அப்படி நிஜ எம்.ஜி.ஆராக வருவாரா?

நாகேஷ் நாடகம் முடிந்து புரட்சித் தலைவர் தலைமை தாங்கி பேசும்போது, பட வசனத்தை பேசுவதுபோல இல்லாமல் ஒரு விழா மேடையில் எப்படி பேசுவாரோ அப்படியே ரொம்பவும் இயல்பாக பேசுவார். நிகழ்ச்சி முடிந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக வரும் புரட்சித் தலைவரை வழியனுப்ப மக்கள் கூட்டம் கூடவே வந்து நெருக்கியடிக்கும். அந்த நெரிசலில் படத்தில் வரும் மக்கள் திலகமும் ஜெயலலிதாவும் முன்னால் வந்து புரட்சித் தலைவர் உட்கார்ந்திருக்கும் காருக்குள் தலையை நுழைத்து அவருக்கு வணக்கம் சொல்வார்கள். மக்கள் திலகத்தின் முகத்தில் ஒரு பெரிய நடிகரை பார்க்கும் ஆர்வமும் பிரமிப்பும் தெரியும். பின்னால் யாரோ கூட்டத்தில் தன்னை நெருக்குவதை மாதிரி திடீரென்று முகத்தை சுளித்து பின்னால் திரும்பிப் பார்ப்பார். பெரிய நடிகரைப் பார்க்கும் ஒரு கூட்டத்தில் சிக்கிய சாதாரண மனிதன் எப்படி இருப்பான் என்பதை மக்கள் திலகம் எப்படி உள்வாங்கி நடித்திருக்கிறார் என்று பார்த்து ஆச்சிரியப்பட்டேன்.

அந்தக் காட்சி முடிஞ்சதும் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அசோகனுடன் மக்கள் திலகத்தின் சண்டை பயங்கர ஸ்பீடு. ஆற்றில் துரத்தியபடி நீஞ்சி வரும் மக்கள் திலகத்திடம் இருந்து தப்பிக்க கையில் உள்ள பண பேக்கை தூரத்தில் இருக்கும் பரிசலிலில் அசோகன் தூக்கி எறிவார். உடனே திரும்பி படு வேகமாக நீந்தி பரிசலுக்கு வரும் மக்கள் திலகம் பண பேக் இருக்கும் பரிசலை கரையை நோக்கி ஓட்டுவார். பின்னால் நீஞ்சி வரும் அசோகன் தந்திரமாக தன்னால் நீஞ்ச முடியவில்லை என்று சத்தம்போடுவார்.

எதிரியாக கெட்டவனாக இருந்தாலும் ஆபத்தில் உதவும் புரட்சித் தலைவருக்கே உரிய மனிதாபிமானம் வெளிப்படும். பரிசலை திருப்பி அசோகனை தண்ணீரில் இருந்து இழுத்து காப்பாற்றுவார். அந்த பெரிய பரிசலை ஓட்டும்போது குச்சியை ஆற்றுக்குள் செலுத்தி மணலில் ஊன்றி உண்மையிலேயே வலு போட்டு தள்ளியிருப்பார்.
படத்துக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலேயும் இந்த மனிதாபிமானத்தால்தான் புரட்சி நடிகராக இருந்தவரை மக்கள் புரட்சித் தலைவராக ஆக்கினார்கள் என்பதே உண்மை.

படத்தில் சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு பாடலுக்கும் மக்கள் திலகத்தின் நடனம் அருமை. நல்ல ஸ்பீடான மூவ்மென்ட்களை அனாயசமாக செய்திருப்பார்.

https://youtu.be/Q0KW4u96pWE

நல்ல தொடக்கத்தின் அறிகுறியாய் - நான் வணங்கும் குல தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "தேர்த்திருவிழா" காவியம் பற்றிய சிறு அலசல். அருமை !

பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் ! நன்றி !

Richardsof
22nd July 2016, 10:06 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று இணைந்திருக்கும் Ms ஆரத்தி கிரிஜா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் ஆரம்ப பதிவு மிகவும் அருமையாக இருந்தது . மக்கள் திலகத்தின் தேர்த்திருவிழா படக்காட்சியை விவரித்த விதம் நன்றாக இருந்தது.தொடர்ந்து மக்கள் திலகம் திரியில் உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன் .

Richardsof
22nd July 2016, 11:24 AM
எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.

கதைச்சுருக்கம்

"ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.

விமர்சன சுருக்கம்

மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.

கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.

ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.

நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.

கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை

வசனம்: மு. கருணாநிதி

இசை: சுப்பையா நாயுடு

தயாரிப்பு: பட்சிராஜா

டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

courtesy - cinema express

tamiyt11
22nd July 2016, 11:36 AM
http://i68.tinypic.com/2liwzub.jpg

Russelldvt
22nd July 2016, 01:59 PM
http://i66.tinypic.com/sfgwm1.jpg

Russelldvt
22nd July 2016, 02:00 PM
http://i63.tinypic.com/u1lrm.jpg

Russelldvt
22nd July 2016, 02:03 PM
http://i65.tinypic.com/2r3c8w2.jpg

Russelldvt
22nd July 2016, 02:05 PM
http://i67.tinypic.com/vp9tw5.jpg

Russelldvt
22nd July 2016, 02:07 PM
http://i64.tinypic.com/9a3acw.jpg

Richardsof
22nd July 2016, 02:23 PM
http://cinema.dinamalar.com/cinema-news/26166/special-report/MGRs-Best-movies---MGR-Special.htm

ifucaurun
22nd July 2016, 03:10 PM
http://i63.tinypic.com/fn8jt5.jpg


புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு வணக்கம்.

ifucaurun
22nd July 2016, 03:23 PM
http://i65.tinypic.com/xkomsp.jpg

வணக்கம். என் பெயர் மகாலிங்கம் மூப்பனார். புரட்சித் தலைவரின் புகழ் பாடுவதற்காக நண்பர்களின் வழிகாட்டலுடன் மய்யம் மக்கள் திலகம் திரிக்கு வந்திருக்கிறேன். என் பங்களிப்பை நிச்சியம் தருவேன். நன்றி.

siqutacelufuw
22nd July 2016, 09:25 PM
http://i63.tinypic.com/fn8jt5.jpg


புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு வணக்கம்.


மக்கள் திலகம் திரியில் புதிய வரவாய் இணைந்திருக்கும் திரு. மகாலிங்கம் மூப்பனார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். பொன்மனச்செம்மல் பற்றிய அருமையான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி !

http://i63.tinypic.com/2hxuk2r.jpg

oygateedat
23rd July 2016, 07:47 AM
நமது திரியில் புதிதாக இணைந்திருக்கும் ms.ஆர்த்தி கிரிஜா மற்றும் திரு மகாலிங்கம் மூப்பனார் இருவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Richardsof
23rd July 2016, 09:29 AM
http://i68.tinypic.com/2liwzub.jpg
super still.

Richardsof
23rd July 2016, 09:31 AM
நீண்ட நாட்களுக்கு பிறகு மய்யம் திரியில் கடந்த ஓரிரு நாட்களில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்

திரு தேவசேனாதிபதிராஜராஜன்
திரு சுந்தரபாண்டியன்
Ms ஆரத்தி கிரிஜா
திரு மகாலிங்கம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .

நண்பர்களே
மக்கள் திலகத்தின் திரை உலகம் , அரசியல் , மனிதநேயம் சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் உங்கள் அனுபவங்களை திரியில் பகிர்ந்து கொள்ளவும் .
இனிய நண்பர்கள்
திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
திரு கலியபெருமாள்
திரு ஜெய்சங்கர்
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு யுகேஷ் பாபு
திரு ராமமூர்த்தி
திரு ரூப்குமார்
திரு கலைவேந்தன்
திரு சி.எஸ்..குமார்

நீங்கள் நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் வழங்காதது வியப்பை தருகிறது .மக்கள் திலகத்தின் நூற்றாண்டு முன்னிட்டாவது மீண்டும் திரியில் கலந்து கொண்டு உங்கள் பதிவுகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் .

Richardsof
23rd July 2016, 09:46 AM
மக்கள் திலகம் '' தலைவன் ''

24.7. 1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் படம் .

துப்பறியும் அதிகாரியாக மக்கள் திலகம் நடித்த படம்

படத்தின் ஆரம்ப காட்சிகளில் மக்கள் திலகத்தின் யோகா மற்றும்
மூச்சு பயிற்சி பற்றிய காட்சிகள் அற்புதம் .


அறிவுக்கு வேலை கொடு ....


பாய் விரித்தது பருவம் ....

ஓடையிலே ஒரு தாமரைபூ

நீராழி மண்டபத்தில் .. தென்றல் ....

பல மொழி கலவை பாடல் ....


மக்கள் திலகத்தின் பொழுது போக்கு படங்களில் ஒன்று .

இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று

ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .

Richardsof
23rd July 2016, 10:09 AM
http://i65.tinypic.com/jg5n3k.jpg

CHENNAI - ANNA SALAI
http://i66.tinypic.com/2e4x53a.jpg

Richardsof
23rd July 2016, 10:11 AM
http://i65.tinypic.com/979182.png

ifucaurun
23rd July 2016, 11:27 AM
http://i68.tinypic.com/2m3okew.jpg


எனக்கு நல்வரவு சொன்ன திருவாளர்கள் செல்வகுமார், ரவிச்சந்திரன், எஸ்வி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

புரட்சித் தலைவர் என்னைத் தொடக்கூடிய பேறு பெற்றவன் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அதுவும் விபத்தில் இருந்து என்னை காப்பாற்றினார். எனக்கு மாலையும் போட்டார். அவர் முதல் அமைச்சர் ஆவதற்கு முன்பு ஒரு முறை மாயவரம் வந்திருந்தார். அவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோடில் மக்கள் வெள்ளம். காதைக் கிழிக்கும் வாழ்த்து கோஷம் போட்டபடி வரவேற்றது. ரோஜாப்பூ போல திறந்த ஜீப்பில் வந்தார். காளியாகுடி காப்பி ஓட்டல் அருகே திருப்பத்தில் நானும் நண்பர்களும் நின்று காத்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் அருகில் வந்ததும் நெரிசலில் முன்டியடித்து அவர் அருகே சென்றோம். மாலையை புரட்சித் தலைவருக்கு அணிவித்து கும்பிட்டேன். அவரும் சிரித்தபடி கும்பிட்டார். அவர் சிரிப்பதில் என்னை மறந்து அவரையே பார்த்து கொண்டிருந்தேன். வேன் மெதுவாக ஊர்ந்து வந்தது. வேனை ஒட்டியபடி நின்று கொண்டிருந்தேன். திடீரென்று என் நெஞ்சில் கையை வைத்து புரட்சித் தலைவர் தள்ளிவிட்டார். மூன்று நான்கு அடிகள் தடுமாறிக் கொண்டே பின்னால் போனேன். அவரது கையின் பலத்தை நேரடியாக அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன். என் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களும் தள்ளாடியபடியே பின்னால் போனார்கள். என் பின்னால் யாரும் இல்லாமல் இருந்தால் நான் கீழே விழுந்து இருப்பேன்.

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. என்ன இப்படி தள்ளுகிறாரே என்ன தப்பு செய்தேன் என்று அதிர்ச்சி அடைந்தேன். வேன் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டார். புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து, ‘இன்னும் கொஞ்சம் இருந்தால் வேனின் பின் சக்கரம் உங்கள் காலில் ஏறி இருக்கும். கவனமாக நிற்கக் கூடாதா’ என்று சத்தமாக கேட்டார். அப்போதுதான் என்னை விபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டார் என்பதை புரிந்து கொண்டேன். என் மனசு கோணக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, தன் கழுத்தில் உள்ள மாலையை கழற்றி லாவகமாக என்னை பார்த்து வீசினார். அது என் கழுத்தில் சரியாக விழுந்தது. சுற்றியிருந்த ஜனங்கள் ஒரே ஆரவாரம் செய்தனர். என் நெஞ்சில் புரட்சித் தலைவர் கைபட்டது. நான் பாக்கியசாலி. அவரது ஆசியால் இன்று நன்றாக இருக்கிறேன்.

புரட்சித் தலைவர் சாதாரணமான மனிதப் பிறவியே இல்லை. பூமியில் மனிதராக அவதரித்த கடவுள்.

Richardsof
23rd July 2016, 09:13 PM
http://i65.tinypic.com/nlsfsy.jpg
super

okiiiqugiqkov
23rd July 2016, 11:39 PM
நான் யாரையும் குறை கூறவில்லை. பொதுவாக சொல்கிறேன். நான் சொல்வது தப்பு என்று யாராவது நினைத்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியாகியுள்ளது. அதற்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட விளம்பரம். அதன் விளைவுகளாக டிக்கட்டுகள் வெளிப்படையாகவே அநியாய விலைக்கு விற்கப்படுகிறது. கடைசியில் படத்துக்கும் நல்ல ரிசல்ட் இல்லை. அதனால் என்ன? படத்தைப் பற்றி மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் முன்பே மக்களிடம் இருந்து காசைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களால் அநியாய விலை கொடுத்து படத்தை பார்க்க முடியாது. (ஒவ்வொருவரின் மொபைலிலும் படம் இருக்கிறது என்பது வேறு விஷயம்). அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? எல்லாரும் சேர்ந்து மக்களிடம் பணம் பறிக்கிறார்கள்.



படத்திலும் நல்ல நீதி இல்லை. புரட்சித் தலைவர் படங்களில் வில்லன் செய்ததை இப்போது கதாநாயகர்களே செய்கிறார்கள். மக்கள் திலகம் என்னதான் அநியாயத்தை எதிர்த்துப் போராடினாலும் கூட அநீதி வழியில் வெல்லமாட்டார். தர்ம நியாயமாக சட்டப்படிதான் சமூக விரோதிகளை ஜெயிப்பார்.
அவரது படங்களில் பாடல்கள் கூட டூரிங் கொட்டகையிலும் உள்ளவர்களுக்கும் நன்றாக கேட்க வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொண்டார். நாடோடி மன்னன் படத்தை ரத்தத்தை தானம் செய்து பணம் வாங்கி ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதைத் தடுத்தார். பணம் வேண்டும் என்றால் எனக்கு கடிதம் எழுதுங்கள் என்று கூறி எத்தனையோ ரசிகர்கள் அவரது விலாஸத்துக்கு கடிதம் எழுதி மணியார்டர் மூலம் பணம் பெற்றுக் கொண்டனர். தன் படம் மூலம் கிடைக்கும் லாபம் எல்லாருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று மக்கள் திலகம் நினைத்தார். ரசிகர்களிடமும் அக்கறை கொண்டிருந்தார்.

இப்பவெல்லாம் மக்களை பற்றியோ ரசிகர்களை பற்றியோ யாரு கவலைப்படுகிறார்கள். தனக்கு பணம் வந்தால் சரி. எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போச்சு. மனது தாங்கவில்லை. மக்கள் திலகத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

https://youtu.be/ADpCUpeQwqc

orodizli
24th July 2016, 04:57 PM
Makkalthilagam- Emperor of Cinema Field, World... In time, Every time... Presents "Rickshawkaaran". Digital Format Releasing Soon, It's Advertisement Published Today Dhina Thanthi News paper...

orodizli
24th July 2016, 05:06 PM
A Warm Welcome to the New Hubbers Thiruvaalarhal Shri Deva we athipathi Rajarajan, Sundarapandiyan, Ahirtha Girija, Mahalingam... You rselves kindly register Our MGR's Mass & Fame also...

orodizli
24th July 2016, 10:37 PM
மக்கள்திலகம் - இணையே இல்லா, ஒப்பாரும், மிக்காரும் இல்லா திரையுலக சக்கரவர்த்தி அவர்களின் மங்காத புகழையும், மாண்புகளையும் பறை சாற்றிட புதியதாய் இங்கு வந்திருக்கும் பதிவாளர்கள் தகுந்த ஆவணங்கள் வழியாக பகிர்ந்து கொள்ள திருவாளர்கள் தேவ சேனாபதி ராஜராஜன், சுந்தர பாண்டியன், ஆர்த்தி கிரிஜா, மஹாலிங்கம் வருக என வரவேற்று வேண்டுகிறோம்...

Richardsof
25th July 2016, 06:48 PM
Super article.Thanks sundarapandiyan.

Richardsof
25th July 2016, 07:12 PM
MADURAI - CENTRAL
Now running
MAKKAL THILAGAM M.G.R IN Asai Mugam

Richardsof
25th July 2016, 07:27 PM
மொத்தத்துல ரஜினி பட விளம்பரத்துக்கே எம்ஜிஆர் பேசிய பன்ச் தேவைப்படுது. படம்: மீனவ நண்பன்...." நான் நெருப்பு யாரும் நெருங்க முடியாது. (கபாலி: நெருப்புடா, நெருங்கிப் பாருடா) மீனவநண்பன்: நேருக்கு நேராய் வரட்டும். (கபாலி: மோதிப்பாருடா) புரட்சித் தலைவர் வசனமே உலக அளவில் இன்று ரஜினியால் உச்சரிக்கப்பட்டு கபாலி விளம்பரமாகியிருக்கு. இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்?
Courtesy Samuel WH.

Richardsof
25th July 2016, 07:37 PM
குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம்.
ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது.
அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்!!
மக்கள் திலகம் என்று அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.
எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள்!
கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா. நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள்!
“ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்!
அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும் கூடக் கேட்கக் கிடைப்பவை.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.
'எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார்!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது!'.
எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள்!
எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்!
இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது! அதுதான் எம்.ஜி.ஆர்!
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது!
இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் காட்சி என்பது எல்லைக்கு உட்பட்டது.
சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம்.
‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும்.
அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா, இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும்.
இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
“என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது.
எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு....” என்று பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.
சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும்.
“குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம்.
திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் இறக்கும் வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார்.
சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.
தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை.
தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் எம்ஜிஆர் நினைவுகூறப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது.
எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர்.
- இரா.விநாயகம்

Richardsof
26th July 2016, 01:18 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலன் பாதிக்கபட்டபோது, அரசு தனக்கு செலவு செய்த தொகை ரூ.96 இலட்சத்தை குணமடைந்த பின் 30-06-85 அன்று அரசுக்கே திருப்பிச் செலுத்தினார். முதல்வர் என்ற முறையில்,மருத்துவ செலவுகள் அரசை சார்ந்தவை.அவர் நினைத்திருந்தால், திருப்பி கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை.ஆனாலும் திருப்பி கொடுத்தார்.
.................................................. ......................................
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்று திரைப்படத்தில் பாடியவர்,அதுபோலவே வாழ்ந்தும் காட்டினார்..

orodizli
26th July 2016, 02:49 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலன் பாதிக்கபட்டபோது, அரசு தனக்கு செலவு செய்த தொகை ரூ.96 இலட்சத்தை குணமடைந்த பின் 30-06-85 அன்று அரசுக்கே திருப்பிச் செலுத்தினார். முதல்வர் என்ற முறையில்,மருத்துவ செலவுகள் அரசை சார்ந்தவை.அவர் நினைத்திருந்தால், திருப்பி கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை.ஆனாலும் திருப்பி கொடுத்தார்.
.................................................. ......................................
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்று திரைப்படத்தில் பாடியவர்,அதுபோலவே வாழ்ந்தும் காட்டினார்..

Only One Greatest Achievement by Only Our Makkalthilagam...














achievement

Richardsof
26th July 2016, 03:29 PM
http://i64.tinypic.com/1zeibt4.jpg

ifucaurun
26th July 2016, 10:58 PM
http://i66.tinypic.com/k2mepy.png

புரட்சித் தலைவர் தனக்கு பிடிக்காத பாதகமான கருத்துக்களை யாராவது சொன்னாலும் கோபித்துக் கொள்ளமாட்டார். அவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்வார். பாதகமான விஷயங்களை சொல்வபவருக்கும் அவருடைய திறமைகளை பாராட்டி பரிசு அளிப்பார். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.

நம்புங்கள் நாராயணன் என்று ஒரு ஜோதிடர். அவர் 1980-வது ஆண்டில் பிப்ரவரி மாதம் 17ம் தேதிக்குள் அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் ஆட்சி கலைக்கப்படும் என்று கணித்து கூறியிருந்தார். இதை அறிந்து கொண்டு, நம்புங்கள் நாரயணயனை நேரில் தனது வீட்டுக்கு புரட்சித் தலைவர் வரச் சொல்லியிருக்கிறார். அவரும் பயந்து கொண்டே சென்றுள்ளார்.

ஆனால், அவரை மகிழ்ச்சியாக வரவேற்று உபசரணை செய்து அவர் சொன்ன ஜோதிடம் பற்றி புரட்சித் தலைவர் கேட்டுள்ளார். ஆட்சி கலைக்கப்படுவது உறுதி என்று நம்புங்கள் நாராயணன் அப்போதும் கூறியிருக்கிறார். குடும்ப நிலவரங்களை விசாரித்து அவரை அன்பொழுக வழி அனுப்பி வைத்துள்ளார் புரட்சித் தலைவர்.

நம்புங்கள் நாராயணன் சொன்னது போலவே ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது, அவரை புரட்சித் தலைவர் மீண்டும் அழைத்து அவரது திறமையை பாராட்டியிருக்கிறார். அதோடு ஒரு தட்டில் ஐயாயிரம் ரூபாய் வைத்து அவருக்கு கொடுத்து மரியாதை செய்திருக்கிறார்.
இந்த செய்தியை பின்னால் நம்புங்கள் நாராயணனே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதை பலரும் படித்திருப்பீர்கள் என்று நினக்கிறேன்.

ஆட்சி கலைக்கப்படும் என்று கெட்ட தகவலை கணித்து சொன்னவருக்கு கூட பாராட்டி பரிசளிக்கும் தங்க மனம் கொண்டவர் புரட்சித் தலைவர். அதனால்தான் அவரை பொன்மனச் செம்மல் என்று கூறுகிறார்கள்.

Richardsof
27th July 2016, 05:26 AM
Transcripts of MGR assassination attempt Trial

After the hearing of the assassination trial at Saithapettai Sessions Court, by Magistrate S. Kuppuswami, it was forwarded to the Chengalpattu (formerly Chingleput) High Court. The case was heard by Justice Lakshmanan. The prosecution attorney was P.R. Gokulakrishnan. Accused M.R. Radha was represented by N.D. Vanamamalai (1922-2006), a ranking criminal attorney of his era.

MGR was called as the third prosecution witness. The first prosecution witness was draughtsman Umapathi, who had drawn the shooting incident location. The second prosecution witness was photographer Ranganathan. When MGR appeared in the witness box, Justice Lakshmanan had suggested that if the witness felt tired, he is permitted to sit and answer the questions. To this courtesy, MGR had asserted that he had opted to stand. Cross examination of MGR lasted for six days!

I provide the cross examination details (as I could gather in Tamil) in full for the following reasons: (1) These details provide vital information about MGR’s career in cinema and politics, up to 1966. Simple paraphrasing cannot do justice. (2) Reading the verbal pyrotechnics between the ranking defense counsel and MGR we can sense the court room tension. (3) As many had learnt in their interactions with MGR, he would never allow anyone to steal a scene from him, even when cameras were not rolling. (4) Mention is made on some specfics of MGR’s movies such as Ayirathil Oruvan, En Kadamai, Anbe Vaa, Nadodi Mannan, and Thirudathe. (5) MGR also answers about his family details with wife V.N. Janaki, elder brother M.G. Chakrapani, adopted son Appu, his assets, his knowledge about guns, and his professional relationships with C.N. Annadurai (Anna), M. Karunanidhi, K. Kamaraj, M.R. Radha (his mentor cum purported assassin), movie producer K.K. Vasu, and contemporary actor Sivaji Ganesan.





Cross Examination of MGR by Defense Counsel Vanamamalai

This cross examination lasted for three days. I continue with the verbatim English translation of the transcripts of this cross examination.

Question (by Counsel): After you had resigned the M.L.C. position, did S.S. Rajendran issued a critical report?

Answer (by MGR): A report did appear under Rajendran’s name.

Q: Did any of your party members criticized you?

A: The General Secretary (of the Party) didn’t criticize me. The Central Committee (of the Party) also didn’t criticize me.

Q: For the shooting of ‘Ayirathil Oruvan’ movie, did you visit Goa?

A: I did go to Karwar, adjacent to Goa.

Q: How many days did you stay there?

A: One month.

Q: Did love scenes shot there?

A: Fight scenes and ship transportation scenes were shot.



Q: Weren’t there any love scenes at Karwar? [Laughter at Court!]

A: Do you mean ‘song sequences’, when you mention love scenes?

Attorney for the Defense: Just a glamor scene.

Atorney for the Prosecution: Will you define the love scene?

Attorney for the Defense: We don’t know what is a love scene? But, he knows. Didn’t shooting was done for the song ‘Naanamo’ there? [Laughter at Court!]

A (by MGR): Yes.

Q: Did Anna announce that on 1965 January 26, there will be an anti-Hindi agitation, and the Constitution will be burnt?

A: Yes.

Q: Did DMK decide that the anti-Hindi agitation will be held all over Tamil Nadu?

A: Yes

Q: As you didn’t participate in the anti-Hindi agitation, and went to Goa (for shooting), did your party men criticize you?

A: I don’t know.

Q: Can it be said that the box office failure of your movie ‘En Kadamai’is due to the antagonism shown by your party cadres?

A: No. That’s not the reason for the failure of that movie.

Q: Do you know that there was an agitation for changing the name ‘Dalmiapuram’ to ‘Kallakudi’?

A: Yes.

Q: At that time, were you a member of your party?

A: At that time, I was not a member, but was a sympathizer of the party.

Justice (to the Defense Counsel): You have been asking questions like this. Are these relevant for this assassination attempt case?

Defense Counsel: The prosecution counsel opened this case with the comment that this case has links to politics. Thus, to prove that this case doesn’t not have any links to politics, I have to ask such questions.

Justice: I do agree. You can continue the cross examination.

MGR (to the Justice): I would appreciate if you consider my explanation too. I did attend and spoke at the party conference held in Lalgudi. At that conference, Mr. Sivaji Ganesan who was then a member of the DMK before me spoke as follows: ‘If Anna ordered, I will abandon all the movie shootings and jump into the agitation.’ In answering this comment, Anna spoke, ‘Actors should do propaganda for the party, offer financial assistance to the families of the party volunteers who participate in agitation and land in jail. Thus, actors should not participate in the agitation.’

Defense Counsel: In the Lower Court hearing, you did not mention about this Lalgudi Conference. Isn’t it?

MGR: Then, the prosecution counsel generally asked ‘Why I didn’t participate in the party agitation?’ I also answered generally. Now, a question is being asked, ‘Why I didn’t take part in Kallakudi Agitation?’ Thus, I have to give this answer.

Q: Are you aware of the ‘Nonsense’ agitation?

A: Yes. As Nehru had criticized the actions of Periyar as ‘nonsense’, that agitation was held to oppose Nehru’s views.

Q: Do you know that, your party cadres participated at that agitation as well?

A: Yes. They participated and protested showing black flags.

Q: Did you participate in that? Or at least did you think of participating in it?

A: I didn’t participate in it. I didn’t even think of participating in it.

Q: Was Karunanidhi involved in cinema field, before he became a minister?

A: Yes.

Q: He is addressed as ‘Kalaignar’ [Artist] by all, isn’t it?

A: Yes. All do address him as ‘Kalaignar’.

Q: Is the title ‘Kalaignar’ suitable for him? Or, is it an inappropriate one?

A: He is suitable for the ‘Kalaignar’ title.

Q: If it is asserted that Karunanidhi is a pioneer of actors, is it right or wrong?

A: I don’t have capability to answer this.

Q: Has he acted in movies?

A: No. He had acted in propaganda plays.

Q: If Karunanidhi had wished, he could have become a well-known actor, isn’t it?

A: I don’t know.

Q: Even though he had the means to make money via movies, he was focused on supporting his party and concentrated on it, isn’t it?

A: I don’t know.

Q: Is Anna good actor? Hasn’t he acted in plays like ‘Chandrodayam’?

A: Yes, he had acted.

Q: Does he act well?

A: I had seen his acting. For me, it was impressive. I don’t know opinions of others.

Justice: Some do like one’s acting. But others don’t.

Q: Anna had written scripts for movies, isn’t it?

A: Yes.

Q: Then, he left the field and continue to work full time in politics, isn’t it?

A: I don’t know whether he left cinema altogether or continue to write scripts for cinema. You have to ask him that. This is because, I had read that he is writing script.

Q: If I say that for many years he had left script writing for cinema and sacrificed a lot of his income, to be involved in politics, is it correct or incorrect?

A: This question is difficult for me to answer. I cannot say that my favorite (Uyirum UdaLum ‘life and body’) Anna had left cinema. At the same time, I cannot assert that he had sacrificed his income. From my answer, they are attempting to discredit my leader.

Q: My question is to defend the interests of those whom I represent. It is not my intention to discredit anyone. Did Anna leave cinema, or not?

A: Cinema is also a component of politics. But, I don’t know whether he had left cinema.

Q: You say that you were given exceptions for why you didn’t participate in the party agitations. I say that the reason you mention for not participating in the party agitations are not true.

A: I object your reason.

Q: Showing a photo to MGR: Is this photo in which you are garlanding Kamaraj is yours?

A: Yes.

Q: At that time, what was the position he was holding?

A: He was then the Chief Minister [of the State of Madras]

Q: Do you garland him during his birthday felicitation?

A: I don’t remember.

Q: Look at this. You had garlanded Kamaraj, when he was the leader of All India Congress Party. You had garlanded him during his birthday felicitation.

A: Yes, I did it.

Q: Did you participate in his 1963 birthday felicitation?

A: I did participate in that meeting. When I spoke at that function, there were reports that I had said, Kamaraj ‘is my leader’.

Q: Have you spoken anywhere or at any time about Kamaraj in a disrespective manner?

A: I had never criticized him personally.

Q: Do you respect Kamaraj?

A: Yes.

Q: Do you know that Kamaraj house was attacked in Delhi by rioters last year?

A: I know.

Q: Have you criticized that violent act?

A: I did write in the ‘Sama Neethi’ paper in which I’m the special editor that action is condemnable.

Q: Do you know that the gun which was used to shoot you had gone to police hands, before they inquired you?

A: Can’t remember.

Q: Did your elder brother Chakrapani say that the gun was handed to police?

A: Yes. After I was discharged from the hospital, he did say that one day.

Q: Can you tell, when was it?

A: He said that, after he went to Tirupathi and tonsured his head. He might have told me, 5 days after I was discharged from the hospital.

Q: Did Chakrapani arranged with Vasu to say false evidence?

A: Why we had to hide the truth? Radha did shoot me.

Justice: This is not true, says the Defense Counsel.

A: No one has attempted to hide any type of truth.

Q: I say that Chakrapani arranged to give false evidence. You are also giving false evidence. Can you reject this?

A: Yes. I reject it.

Q: In the past three years, you have never agreed to act in a movie for a sum less than 50,000 rupees, isn’t it?

A: To act in the ‘Anbe Vaa’ movie, I had received 150,000 rupees. This movie was made within the past three years.

Q: What are your assets? Are they worth 100 million rupees?

A: Not really 100 million rupees. But, may be 20 million rupees.

Q: What can you say about your combined assets?

A: I cannot answer now. Very soon, we are planning to divide our assets.

Q: Whether you will divide your assets or not, it is your wish. I’m not asking this for income tax details. [Laughter in Court] I’m interested in knowing whether Chakrapani made use of funds to prepare witnesses favorable to your case.

A: No! No! No!

Q: Do you know whether Radha was alive or dead when he was brought to Royapettah hospital?

A: I don’t know. But, I did see him falling down.

Q: Were you scared that after Radha was brought to Royapettah hospital, that he will accuse you?

A: I was not scared at all, because I’m innocent.

Q: Where do they teach the dialogue, which are used in cinema shooting?

A: Either at the ‘Make Up’ room or in the Set.

Q: In the scenes in which you have to speak long dialogues, they complete them quickly, isn’t it?

A: What does that mean?

Q: Sivaji Ganesan and you can speak long dialogues quickly due to the talent, isn’t it?

A: I’m not given long dialogues to speak. Even if such scenes do occur in crying scenes, we usually split the ‘takes’ and then join them.

Q: Have you heard of American actor Paul Muni?

A: Yes, heard about him.

Q: Do you know that Anna had mentioned once that in acting, Radha could better Paul Muni.

A: I don’t know.

Q: Isn’t Pammal Sambantha Mudaliyar is called the Father of [‘modern Tamil’] theater?

A: Yes.

Q: Do you know that he had praised Radha as the one who had defined drama?

A: I have heard about it.

Q: Isn’t Dr. M. Varatharasan one among the elite writers in Tamil Nadu?

A: Yes.

Q: Didn’t he praise Radha as, ‘Radha’s acting reflects life, and the beauty of life. This one cannot forget’?

A: Yes. Even, I had praised his acting.

Q: You had praised him. Kalivanar N.S. Krishnan and T.K. Shanmugam also have praised him, isn’t it?

A: Yes.

Q: Do you think, he is an excellent actor?

A: Yes. He was one who led my path in acting.

Q: Now, if he comes out (of jail), movie producers are waiting to ‘book’ him, isn’t it?

A: Yes. If he returns, to celebrate his acting, even I’m willing to make use of his talent.

Q: Radha is considered as one of the best actors in Tamil movies, isn’t it?

A: Yes.

Q: You and he had acted together in around 20 movies, isn’t it?

A: I guess so. It may be, even more.

Q: In your movies, you do play the roles of Good Samaritan, isn’t it?

A: What does that mean?

Q: For example, in the ‘Nadodi Mannan’ movie, you had acted in a character which helps the downtrodden folks. Akin to that, even in other movies, you had taken similar roles, isn’t it?

A: I do act in roles to promote good character traits. Even if a role is constructed that exhibits unfavorable character traits, such a role is designed to repent for the committed sin.

Q: Even in this case, I assert that it is designed that you are decorated with good character traits and he (Radha) was assigned the role of bad character, to be realistic.

A: False.

Q: Have you ever spoken ill about M.R. Radha?

A: Not even once.

Q: Have you ever attempted to do anything bad to him, or have you done anything bad to him?

A: I have never done anything bad to him, and even never thought about doing bad to him.

Q: Anna has a close relationship with M.R. Radha, isn’t it?

A: Yes, they were close.

Q: Your estate property, and Radha’s estate property are adjacent to each other?

A: Yes.

Q: You had never restricted his entry into your house, isn’t it?

A: No, I have never restricted his entry. He could enter anytime.

Q: Have you ever invited Radha for meals, and had he come to your house?

A: One day, he and actor Thangavelu did visit our house with ‘make up’ and had meals. That day, we had dried fish curry. It is his favorite dish. That day, he did come after knowing we were serving dried fish curry. I didn’t invite him. [At this instance, MGR looked at Radha, and said, ‘He also knows this’ and smiled. Radha also smiled.]

Q: Do you know the father’s name of your adopted child Appu?

A: I don’t know. Appu’s father had died while serving the military. He also had no mother.

Q: You have adopted him since he was 2 -3 years old, isn’t it?

A: I have adopted him since he was 4-5 years old.

Q: When Appu entered your household, have you married V.N. Janaki or not?

A: I had married.

Q: Appu goes out on errands to purchase items for your household, isn’t it?

A: Sometimes Appu goes. Other times, Ratnam serves.

Q: Until you came to Royapettah hospital from your house, you didn’t tell the police that Appu was with you, isn’t it?

A: Yes.

Q: You had said, ‘Someone had taken me in car’ to the police?

A: Yes. As I had pain then, I had shortened my answer.

Q: Like Mrs. Kalyani (wife of actor K.R. Ramasamy) who visits your house, your wife V.N. Janaki also visits Mrs. Kalyani’s house, isn’t it?

A: Yes, she does go.

Q: She also visits other houses?

A: Yes, she visits.

Q: I assert that on that day of assassination attempt, Mrs. Kalyani and V.N. Janaki were not at your house?

A: I object this.

Q: Does M.R. Radha wear shawl (salvai) regularly?

A: He wears that only occasionally.

Q: [Defense Attorney, showing a Radha shawl] Is the color of this shawl, body color or cow manure color?

A: For me, it appears like body color.

Q: On that day, you failed to notice his shawl properly. I suggest that he didn’t wear a shawl.

A: This is wrong. When he was coughing, I did notice his shawl.

Q: You could have told the police that you didn’t tell the details because you had hiccup.

A: They didn’t ask, so I didn’t tell.

Q: You say that M.R. Radha was standing with a gun, until there was shooting. What were doing then?

A: Until I got hit, I was seated and was talking.

Q: Did you get up, after completing the sentence, ‘What elder (Anne!) You had done like this?, or you got up simultaneously while you were saying those words?

A: I got up simultaneously, while I was saying those words.

Q: Did you feel that Radha had shot you, before you got up?

A: Yes.

Q: Did Radha fall, while he was on the verge of shooting himself?

A: Yes, he did fall.

Q: While he was falling, what were you doing then?

A: I was standing, while holding my hand in a chair.

Q: Were you standing like that, while Radha was falling?

A: Yes.

Q: Once you realize that Radha had shot you, did you sense that he may shoot you again?

A: I thought like that, and because of that, I got up.

Q: If there was a further attempt at shooting, did you think that you should hide behind a chair or you should grab the gun from his hand?

A: If Vasu didn’t interfere, I’d have attempted to grab the gun from his hand.

Q: After you realized that Radha had shot you, were you angry at his behavior?

A: Not anger, I was disappointed. My feeling was to protect myself.

Q: Do you have knowledge about gun?

A: Yes.

Q: You were able to identify [the gun] only after the prosecution counsel showed it to the Court and its license.

A: We can identify only after seeing them, isn’t it?

Q: Isn’t your gun is Webley & Scott 0.32 caliber pistol?

A: I don’t know.

Q: Radha’s gun is identical to yours, isn’t it?

A: I had to first see it.

Defense Counsel handed Radha’s gun to MGR and asked,

Q: Isn’t this also Webley & Scott type?

A: Yes.

Q: [Handing both MGR’s gun and Radha’s gun to MGR] both are of same ‘make’ isn’t it?

A: [MGR checked both guns for a while] Yes, both are the same ‘make’.

Justice also checked both guns. How many bullets can be used?

Q: How many bullets can be placed in your gun?

A: 6 bullets

Q: [Handing Radha’s gun to MGR] Can you tell, how many bullets can be used in this?

A: I can tell, only after ‘opening’ the gun.

Q: Please do so.

A: I don’t know how to ‘open’ it.

Q: Haven’t you have handled guns in so many movies? You cannot open it! OK, I’ll open it for you. [and handed the gun to MGR]

A: After checking it, 6 bullets can be placed here.

Q: Did you sense that Radha may shoot Vasu?

A: I didn’t think about others. I didn’t also think what Radha would do after that.

Q: Did you state in this Court that Radha was circling the chair in front of you, and approached you?

A: [to the Justice] MGR indicated the places in the photo, where Radha was moving around.

Q: At the Saithapet Court, you didn’t indicate the locations where Radha walked.

A: I was not asked. So, I didn’t say.

Q: When police officers were inquiring, you didn’t mention this, isn’t it?

A: Police officers didn’t ask. So, I didn’t say.

Q: I assert that after listening to the testimony of M.R. Radha in the Lower Court, you are stating this now, to fit accordingly.

A: No.

Q: You state this, because if you say like this, then your testimony will be believed, isn’t it?

A: I cannot accept it.

Q: The number of bullets which can be bought is mentioned in the license, isn’t it?

A: Yes.

Q: Apart from this, have you ever bought bullets additionally?

A: I don’t buy like that.

Q: How long have you practiced gun shooting?

A: Only after 2 or 3 years after purchase of the gun, I learnt shooting practice.

Q: During practice, do you use ‘live’ bullets?

A: Yes.

Q: Do you use ‘live’ bullets for any other purpose?

A: What do you mean?

Q: Do you use them for any other purpose other than shooting practice?

A: I use it only for shooting practice, and not for other purposes. Only one exception. In ‘Thirudathe’ movie, I used a live bullet to brake glass.

Q: At what distance?

A: In about 5 feet distance.

Q: In movies, how many times have you used ‘live’ bullets?

A: As the first take was inappropriate, I had to use it for the second time. I did use two ‘live’ bullets.

Q: On that day of shooting [at your house], did you have ‘live’ bullets?

A: I might have had.

Q: I assert that, when Vasu called [you], Radha was not near him. What do you say?

A: How do I know whether Radha was near Vasu? How could I see that?

Q: You were stating that there was discussion with a Coimbatore (Kovai) Party. I assert that there was no talk like that.

A: Wrong. There indeed was a discussion.

Q: Before the incident, did someone tell you that Radha was talking about you ‘like this’ or ‘like that’?

A: Cannot remember.

Q: On the day of the incident, did you ask Radha, ‘Why you had given reports to the papers that I (MGR) am plotting to kill Kamaraj’?

A: No.

Q: Did you ask Radha, that ‘You will shoot me after the release of the reports’?

A: I didn’t ask.

Q: Did you say ‘I will also react. I’ll shoot too’?

A: I didn’t say. This incidence never occurred.

Q: After listening to your ‘I’ll shoot’ talk, didn’t Radha say, ‘I came here because Vasu asked. Your talk is vulgar.’?

A: No.

Q: I assert that he moved here and there, without knowing that you had a gun in your hand?

A: This is not true.

Q: Did you ask Radha angrily, ‘What would you do after shooting?’

A: No. This is a total lie. Just I tell this, you shouldn’t believe that I’m disregarding you personally.

Q [Defense Counsel] No, we don’t take anything personally. When you said, ‘What would you do after shooting?’, didn’t he say, ‘One day, humans have to die. Why not shoot’?

A: No.

Q: I assert that, after he said that, you had shot him. When he looked at you, he saw the gun in your hand, isn’t it?

A: Lie.

Q: Did Radha grabbed the gun from you?

A: No.

Q: During that struggle, I assert that his blood spilled in your shirt.

A: Not true.

Q: As blood got spilled in your shirt, it was taken to dry cleaning, I assert.

A: Not true.

Q: I assert that only after Radha grabbed the gun from you, you were shot.

A: This is not true. I was the one who was shot first.

Q: I assert that Radha who had fallen from a gunshot wound, was shot again.

A: I don’t know. At that time, I was not there.

Q: I assert that you are hiding the truth and by twisting facts, you offer false evidence.

A: This is incorrect. I have been telling the truth.
courtesy- MAKKAL THILAGAM MGR REMEMBERED PART-36 -

Richardsof
27th July 2016, 02:09 PM
எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்'' என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?'' என்று கேட்பார். "இல்லை'' என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, `ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார். ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார்.

"அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை''ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் `தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது'' என்றார்.

இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, `அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது `ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்'' என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா'' டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்.''

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்

Russellvpd
27th July 2016, 05:32 PM
இரண்டு நாள்களாக மையம் திரிகள் வரவே இல்லை. ப்ளாக் என்று கான்பிக்கிறது. இப்பத்தான் திறக்கிறது. ஏன்? என்ன ஆனது? எனக்குதான் நெட் டவுனாக இருப்பதால் வரவில்லியா? யாருக்குமே வரவில்லியா?

Russellvpd
27th July 2016, 05:35 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலன் பாதிக்கபட்டபோது, அரசு தனக்கு செலவு செய்த தொகை ரூ.96 இலட்சத்தை குணமடைந்த பின் 30-06-85 அன்று அரசுக்கே திருப்பிச் செலுத்தினார். முதல்வர் என்ற முறையில்,மருத்துவ செலவுகள் அரசை சார்ந்தவை.அவர் நினைத்திருந்தால், திருப்பி கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை.ஆனாலும் திருப்பி கொடுத்தார்.
.................................................. ......................................
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்று திரைப்படத்தில் பாடியவர்,அதுபோலவே வாழ்ந்தும் காட்டினார்..

http://i66.tinypic.com/2954t2o.jpg

Russellvpd
27th July 2016, 06:04 PM
http://i68.tinypic.com/9sb6gl.jpg

முன்னாடி எல்லாம் பேஸ்புக் வாட்ஸப் எல்லாம் கிடயாது. இப்போது அதெல்லாம் வந்துவிட்டது. எல்லாம் அதிலேயே தொடர்பு கொள்ளுகின்றனர். நினைச்சதை குரூப்பாக இருந்து ஒருத்தருக்கொறுத்தர் சொல்லிக் கொள்கின்றனர். அந்த குரூப்புக்குள் சண்டை வராது. எல்லாம் ஒரே கருத்து உள்ளவர்கள்தானே. அ ்தான் இங்கே யாரும் அவ்வளாவாக வருவதில்லை போல. ஆள்கள் வராததால் சுவாரஷ்யமாக இல்லாமல் போரடிக்கிறது. நம்ப பங்காளிங்கள் திரியிலும் இப்பிடித்தான் இருக்கு. ஒ ருத்தர் ரெண்டு பேர் தவிர்த்து யாரயும் காணும்.

எங்கே இருந்தாலும் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எட்டாவது வள்ளல் மனிதப் புனிதர் புரட்சித் தலைவர் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லுவோம்.

மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க!

Richardsof
28th July 2016, 09:28 AM
MAKKAL THILAGAM MGR IN ''GULEBAHAGAVALI'' - 61 YEARS COMPLETED TO DAY.
29.7.1955
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/33-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/33-2-1.jpg.html)

Richardsof
28th July 2016, 12:56 PM
http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2016/07/28094456/1028814/Digitally-remastered-version-of-MGR-Rickshawkaran.vpf

orodizli
29th July 2016, 09:57 PM
Thanks for Malaimalar --- sharing with ourselves... Mr. Vinoth sir... What's the matter about Mayyam website strumming?

Richardsof
30th July 2016, 04:10 PM
மய்யம் திரியில் சில நாட்களாக பதிவுகளை வழங்க இயலாமல் இருந்த நிலையில் இனிய நண்பர் திரு ராகவேந்திரன்
சார் மூலம் திரு நவ் அவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் மய்யம் திரியில் மீண்டும் பதிவிடவும் பார்வையிடவும் புதிய இணைப்பை தந்துள்ளார் .நண்பர்கள் இனி இந்த புதிய இணைப்பின் மூலம் திரியில் தொடர்ந்து பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் .

திரு ராகவேந்திரன் , திரு நவ் இருவருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் .

புதிய இணைப்பு


http://www.mayyam.com

Richardsof
30th July 2016, 04:34 PM
DECCAN CHRONICLE- TODAY
http://i63.tinypic.com/2z829du.jpg

An ardent fan of MGR is digitally restoring his 1971 blockbuster Rickshawkaran as a tribute to his matinee idol and releasing it in a big way

With late legendary actor-politician MGR’s centenary celebrations around the corner, P. Mani and Krishnakumar, (who have no filmy connection but are ardent fans of the former Chief Minister), are digitally restoring his 1971 blockbuster film Rickshawkaran as a tribute to their matinee idol and releasing it on a grand scale.

At a time when the life span of even a big star’s film is hardly a week, the re-release of the re-mastered digital version of MGR’s Aayirathil Oruvan a couple of years back completed a massive run of 175 days in the city breaking all records at the box-office. It was thespian Sivaji Ganesan’s epic historical drama Karnan, which was given a makeover with colour correction, enhanced sound quality, and DI, which when released in 2012, ran for 100 days, setting the ball rolling for similar initiatives.

Rickshawkaran also marked the introduction of actress Manjula as the lead heroine. The commercial mass entertainer directed by Krishnan Nair and produced by Sathya Movies, which catered to all types of audiences, also fetched the Best Actor award from the state for MGR. The songs by MS Viswanathan were the biggest asset for the film.

Right from my childhood, I am a zealous fan and sincere devotee of MGR I have grown up watching Thalaivar’s films. I have never missed FDFS of his movies. I hail from a business family and have no links in cinema. Out of love and affection towards MGR, I have ventured into this — the first being Rickshawkaran, which is very close to my heart,” Kovai-based Krishnakumar tells DC.

He adds, “As far as I am concerned, MGR is the only Superstar of Tamil cinema. Since Rickshawkaran is a mass movie, I am releasing it in 100 screens in Tamil Nadu and I am confident of its success.” The icing on the cake is that Krishnakumar is releasing the film’s trailer on August 21 at Devi Paradise in Chennai — the same venue where the film was released 47 years ago. Plans are on to release it in September.

Richardsof
30th July 2016, 04:39 PM
Rikshakaran is one among the many megahit movies that MGR had given. For the first time in Tamil film industry, a Tamil actor won the National Award for the movie. It is none other than Makkal Thilagam MGR. The movie was a directorial venture by Krishnan Nair. MGR had done the role of Rickshaw Karan in the movie. The movie had other actors as Manjula, Padmini, Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, and Cho Ramaswamy. Many numbers in the movie turned out to be super hits.

RM Veerappan produced the movie under the banner Sathya Movies. The movie that hit the screens in 1971 proved to be a super hit. In a development, many old Tamil movies are being converted to digital and are being released so that the movies adhere to the taste of the present generation.

Many such movies have turned super hits. Many of MGR starrers and Sivaji starrers have been released in digital. Following MGR starrers as Naadodi Mannan, Maattukaran Velan, the movie Rikshakaran is being made in digital. Krishnakumar hailing from Coimbatore has been a distributor for the last five years. Now, he is into efforts to make the movie Rikshakaran in digital. The digital movie has features as DTS and cinemascope.

Richardsof
30th July 2016, 04:40 PM
எம்,ஜி.ஆர் நடித்த 'ரிஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் 'ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் 'ரிக்ஷாக்காரன்' தான். டைரக்டர் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.


கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி' ரிக்ஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.

Richardsof
30th July 2016, 04:42 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘ரிக்ஷாக்காரன்’ காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட தரைப்படமாக 1971 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த வகையில், இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் ‘பாரத்’ பட்டத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில், ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் பதிப்பை ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் வெளியிடுகின்றனர்
‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் அனைத்து பாடல்களும் இசையமைப்பாளர் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவாக்கப்பட்ட நிலையில், எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடவுள்ள நிலையில், அந்த விழாவின் முதற்கட்டமாக ‘ரிக்ஷாக்காரன்’ படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Richardsof
30th July 2016, 04:47 PM
https://youtu.be/DKpdXoRXmi8

orodizli
30th July 2016, 07:21 PM
When this "mayyam" website net work problem solve... Otherwise thanks to Administrator Mr Nov sir...

orodizli
30th July 2016, 07:26 PM
"Rickshawkaaran" Makkalthilagam's Grand Mega Hit Digital Version contents--- informations Super Sir...

Richardsof
31st July 2016, 05:55 AM
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

கூண்டுக்கிளி -1954

புதுமைபித்தன் -1957

நாடோடி மன்னன் -1958

நல்லவன் வாழ்வான் -1961

குடும்ப தலைவன் -1962

பாசம் - 1962

நீதிக்கு பின் பாசம் -1963

கலங்கரை விளக்கம் -1965

தாலி பாக்கியம் -1966

கணவன் -1968

தேடிவந்த மாப்பிள்ளை -1970

பட்டிக்காட்டு பொன்னையா -1973

இதயக்கனி -1975

மீனவ நண்பன் -1977.


உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .

கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .

''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .

''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''


என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .

Richardsof
31st July 2016, 06:08 AM
http://i64.tinypic.com/256cidk.jpg

MAKKAL THILAGAM MGR IN

http://i64.tinypic.com/256cidk.jpg

ADIMAIPEN

31.7.2016

SUNDAY- 2.30 PM

AT RED CARPET HALL
http://i64.tinypic.com/256cidk.jpg
RKV FILM INSTITUTE PREVIEW THEATREhttp://i64.tinypic.com/256cidk.jpghttp://i64.tinypic.com/256cidk.jpg
DR.NSK SALAI [ ARCOT ROAD]
OPP VIJAYA HOSPITAL
VADAPALANI
CHENNAI

PROGRAMME BY
http://i64.tinypic.com/256cidk.jpg http://i64.tinypic.com/256cidk.jpg http://i64.tinypic.com/256cidk.jpg
ANITHTHULAGA MGR PODHUNALA SANGAM
MESSAGE BY THIRU SELVAKUMAR.
http://i64.tinypic.com/256cidk.jpg [http://i64.tinypic.com/256cidk.jpg

Richardsof
31st July 2016, 06:49 AM
சினிமாவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.

நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.

தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை.
அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார்.
நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.


அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.

அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.

அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். . தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல்.
COURTESY -RV- NET

Richardsof
31st July 2016, 06:33 PM
முரசு தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் திலகத்தின் ''நல்லநேரம்'' ஒளி பரப்பாக உள்ளது .

கடந்த வாரம் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ''ஆசை முகம் '' 7 நாட்களில் 95,000 வசூலாகியதாக தகவல் .

இந்த வாரம் கோவை - ராயல் அரங்கில் மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க '' நடை பெறுகிறது .

Richardsof
31st July 2016, 06:37 PM
https://youtu.be/CNeWIBCkv7E

Richardsof
1st August 2016, 07:07 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் சங்கமம் .

சென்னையில் நேற்று அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கத்தின் சார்பாக மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்
திரைப்படம் திரையிடப்பட்டது .அரங்கம் நிரம்பியது , ஏராளமான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் வெளியூர்களில் இருந்து வந்தார்கள் .இதர செய்திகள் விரைவில் .......

Richardsof
1st August 2016, 07:14 AM
http://i63.tinypic.com/eqnnds.jpg

Richardsof
1st August 2016, 07:16 AM
ANNAMITTA KAI - 1972

http://i66.tinypic.com/2ij2sjs.jpg

Richardsof
1st August 2016, 07:18 AM
UNRELEASED MOVIEI
http://i67.tinypic.com/2lo4z82.jpg

Richardsof
1st August 2016, 07:23 AM
http://i66.tinypic.com/149mtk1.jpg

Richardsof
1st August 2016, 07:30 AM
http://i67.tinypic.com/358ucxt.jpg

Richardsof
1st August 2016, 07:38 AM
http://i65.tinypic.com/35cfpqt.jpg

oygateedat
1st August 2016, 02:42 PM
எம்,ஜி.ஆர் நடித்த 'ரிஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் 'ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் 'ரிக்ஷாக்காரன்' தான். டைரக்டர் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.


கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி' ரிக்ஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.

அருமை

Richardsof
1st August 2016, 05:28 PM
http://i66.tinypic.com/qpm26v.jpg

Richardsof
2nd August 2016, 06:28 AM
மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை -1970 படத்திற்கு இசை அமைத்த மெல்லிசை மன்னர் தொடர்ந்து

எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக்ஷக்காரன்
நீரும் நெருப்பும்
ஒருதாய் மக்கள்
சங்கே முழங்கு
7 படங்களுக்கு இசை அமைத்தார் . 7 படங்களில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகத்தின் இனிமையான காதல் கீதங்கள்
இடமோ சுகமானது ...
அட ஆறுமுகம் இது யாரு முகம்
மாணிக்க தேரில் மரகத கலசம் ....

டோன்ட் டச் மீ மிஸ்டர் எக்ஸ்
நான் அளவோடு ரசிப்பவன்
தங்கப்பதக்கத்தின் மேலே

நாம் ஒருவரை சந்திப்போம் ...

அழகிய தமிழ் மகள் இவள்...
கன்னி ஒருத்தி மடியில் ..
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

தமிழில் அது ஒரு இனியக்கலை
இரண்டு கண்கள் பேசும் மொழியில்

கண்ணன் எந்தன் காதலன் ..கண்ணில் ...

Richardsof
2nd August 2016, 06:23 PM
இன்றைய சமுதாயத்தில் பள்ளிக்கூடங்களில் தினமும் மக்கள் திலகத்தின் பாடல்களை ஒளி பரப்பினால் நிச்சயம் மாணவர் சமுதாயம் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை செம்மை படுத்தி கொள்வார்கள் என்பது உறுதி .

ஆனந்த ஜோதி

ஒரு தாய் மக்கள் நாமென்போம் .........


நாடோடி மன்னன்

தூங்காதே தம்பி தூங்காதே

மன்னாதி மன்னன்

அச்சம் என்பது மடமையாடா

அரசிளங்குமரி

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

திருடாதே

திருடாதே பாப்பா திருடாதே

ஆயிரத்தில் ஒருவன்

ஏன் என்ற கேள்வி இங்கு ....

பணம் படைத்தவன்

கண் போன போக்கிலே கால் போகலாமா ..

பெற்றால்தான் பிள்ளையா

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

நம்நாடு

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நீரும் நெருப்பும்

கடவுள் வாழ்த்து பாடும் ...

உலகம் சுற்றும் வாலிபன்

சிரித்து வாழ வேண்டும் ..பிறர் சிரிக்க...

Richardsof
2nd August 2016, 06:28 PM
மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.

மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.

மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.

இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.

Thanks sridhar - tamil hindu

Richardsof
2nd August 2016, 06:36 PM
நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரை முத்துவின் மேற்பார்வையில் மதுரையில் தடபுடலாக ஏற்பாடாகியது. நான்கு குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது. ஊர்வலத்தின் இறுதியில் தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் ‘பளபள’வென்று மின்னிக் கொண்டிருந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.

நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி போன்றோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.

Richardsof
2nd August 2016, 06:38 PM
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு மதுரை வந்த எம்.ஜி.ஆர் நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கும் வரநேர்ந்தது. அவரது முன்னிலையில் பேசிய மூன்று மாணவர்களில், எனது பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. அது சினிமாவைப் பற்றிய பேச்சு. ஆனால், பாராட்டுரை அல்ல. நடைமுறை யதார்த்தத்திலிருந்து தமிழ் சினிமா எவ்வளவு தூரம் விலகிப் போலித்தனமாயிருக்கிறது என்பதைப் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய விமரிசன உரை அது. சினிமாத்துறையின் மிக மிக முக்கியமான மனிதரின் முன்னிலையில் தைரியமாக விமரிசித்து, தயக்கம் ஏதுமின்றிப் பேசினேன்.


எனக்கு அப்போது உனக்குள்ளதைப் போன்ற சினிமாக் கனவுகள் ஏதுமில்லை. ஆனால், அதன்மீது நேசம் இருந்தது. நமது சினிமா தமிழுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம் இருந்த்து. அப்போது என்மீது விழுந்த எம்.ஜி.ஆரின் கவனம் ஐந்தாண்டுகளுக்குக் பிறகு, நான் ஒரு நிருபராக அமர்ந்திருந்த சந்திப்பின் போது என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்குக் கூர்மையாக இருந்த்து.

Director - mahendran

Richardsof
2nd August 2016, 06:48 PM
தி இந்து
மதுரையில் 61 வயது விநோத ரசிகர்
எம்ஜிஆருக்கு அதிக ரசிகர்கள் கொண்ட ஊர் மதுரை. எம்ஜிஆர் ரசிகர்களை மகிழ்விக்க இங்குள்ள திரையரங்குகளில் இன்றும் மாதம் 2 முறை எம்ஜிஆர் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த படங்க ளுக்கு இன்றைய நட்சத்திர நடி கர்கள் படங்களுக்கு இணையான வரவேற்பு, வசூல் கிடைக்கிறது. அந்தளவுக்கு எம்ஜிஆர் வாழ்ந்த நாட்களிலும் சரி, இறந்தபிறகும் சரி மதுரையில் அவரது ரசிகர்கள் அவரை ரசித்து வருகின்றனர்.

ஒரு திரையரங்கில் எம்ஜிஆர் படம் திரையிடப்பட்டால் அந்த தகவலை எல்லா ரசிகர்களுக்கும் தெரியப்படுத்துவது, அவர்களை ஒருங்கிணைப்பது, திரையரங்கு முன் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என இளம் நடிகர் ரசிகர்களுக்குப் போட்டியாகத் திகழ்கிறார் மதுரையை சேர்ந்த 61 வயது எம்ஜிஆர் ரசிகர் தமிழ்நேசன். இவர் மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை கிராமம். குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர். இவர் 15 ஆண்டுகளாக மதுரை கே.கே.நகர் விடுதியில் அறை எடுத்து தங்கி யிருக்கிறார். இவர் தங்கியிருக்கும் அறை முழுவதுமே எம்ஜிஆர் படங்கள் மயமாக இருக்கின்றன.

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் எம்ஜிஆர் நினைவாக அவரது பட ஸ்டிக்கர், படங்களை ஒட்டி வைத்துள்ளார். சுவிட்ச் பாக்ஸ், சேவிங் செட், பவுடர் டப்பா, மின் விசிறி, டி.வி., ரிமோட், புத்தகங் கள், காலண்டர், கைக்கடிகாரம் உட்பட அனைத்து பொருட்களிலும் எம்ஜிஆர் ஸ்டிக்கர், படங்களை ஒட்டிவைத்துள்ளார். அந்த காலம் முதல் தற்போதுவரை எம்ஜிஆர் படத்தின் டிக்கெட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் எம்ஜிஆர் படத்துக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்கிறார்.

இதுகுறித்து தமிழ்நேசன் கூறியதாவது: 9-ம் வகுப்பு படிக்கும் போது வீட்டுக்குத் தெரியாமல் எங்க காட்டுல இருக்கிற பருத்தி யைப் பறித்து எடைக்குப் போட்டு அந்த பணத்தில் டி.கல்லுப்பட்டி டூரிங் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ‘முகராசி’ படம் பார்த்தேன். அன்று முதல் எம்ஜிஆர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இன்றுவரை தொடர்கிறது. எம்ஜிஆர் நடித்த 134 படங்களை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை பார்த்தேன் என்பதை கணக்கு வைத் துக்கொள்ள முடியாத அளவில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரின் அனைத்து படங்களின் பாட்டுப் புத்தகங்களையும் வைத்துள்ளேன். எல்லா படங்களின் பாடல்க ளையும் மனப்பாடமாக என்னால் பாடமுடியும். எந்தெந்த படத்தில் எம்ஜிஆர் என்னென்ன வேடங்க ளில் நடித்தார் என யோசிக்காம லேயே கூற முடியும். மதுரையில் பெரிய நடிகர்கள் படம் போட்டு நஷ்டமடைந்த திரையரங்கு உரி மையாளர்கள், அடுத்து எம்ஜிஆர் படத்தைப் போட்டு அந்த நஷ்டத் தை ஈடுகட்டுவார்கள் என்றார்.

எம்ஜிஆர் நூலகம் அமைப்பேன்

தமிழ்நேசன் கூறியது: என் ஓய்வூதியத்தில் பாதியை வீட்டுக்கு கொடுத்துவிடுவேன். மீதி பணத்தில் என்னுடைய செலவு போக எம்ஜிஆர் நினைவு நாள், பிறந்த நாட்களில் நலிவடைந்தவர்களுக்கு உதவுவேன். எம்ஜிஆர் பிறந்த நாள், நினைவு நாளில் சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்கும், கடற்கரையில் இருக்கும் நினைவிடத்துக்கும் செல்வேன். எம்ஜிஆரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்துள்ளேன். மதுரையில் உலக தமிழ் மாநாட்டுக்கு வந்த எம்ஜிஆர் கையை தொட்டு மகிழ்ந்தேன். எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள், நாளிதழ்கள் செய்திகளை சேகரித்து வைத்து வருகிறேன். அவற்றைப் பத்திரப்படுத்தி எதிர்காலத் தலைமுறையினர் எம்ஜிஆரைப் பற்றி தெரிந்துகொள்ள மதுரையில் விரைவில் ‘எம்ஜிஆர் நூலகம்’ அமைப்பது என்னுடைய திட்டம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

orodizli
2nd August 2016, 10:38 PM
So many thanks to our prestigious newspaper" The Hindu" Tamil...Super article ... Thanks again to Hindu- Editor Mr. Asokan sir, & Journalist Mr. Sridhar Swaminathan sir...Always Live the Fame of Emperor of Cinema World, & Politics World "Bharat Ratna" Makkalthilagam MGR.,

orodizli
2nd August 2016, 10:48 PM
Hello viewers, easy method for mayyam.com log... http:// anonymouse.org and then http://www.mayyam.com thank you...

Richardsof
3rd August 2016, 05:55 AM
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு

கூண்டுக்கிளி - மக்கள் திலகம் & நடிகர் திலகம் இணைந்து நடித்த ஒரே படம் .

நாடோடி மன்னன் - 1958ல் இமாலய வெற்றி அடைந்து மதுரை மாநகரில் பிரமாண்ட வெற்றி விழா கொண்டாடிய படம் .

நல்லவன் வாழ்வான் - மக்கள் திலகத்தின் 50 வது படம் . பேரறிஞர் அண்ணா அவர்களுடன் இணைந்த 2வது படம் .

குடும்பத்தலைவன் - தேவரின் தாயை காத்த தனயன் படம் வெளிவந்த 4 மாதத்தில் தேவரின் இன்னொரு படமாக வந்த படம் .

பாசம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம்.

நீதிக்கு பின் பாசம் - மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் . சோக காட்சியிகளில் பிரமாத சோபித் திருப்பார் .

கலங்கரை விளக்கம் - எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .மக்கள் திலகம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த படம் .

தாலி பாக்கியம் - கிராமத்து கதை .மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த படம் .

கணவன் - மக்கள் திலகம் எழுதிய கதை . சில காட்சிகளில் இடம் பெற்ற உரையாடல்கள் இன்றைய அரசியல் சூழ் நிலைக்கு பொருத்தமாக இருப்பது மூலம் மக்கள் திலகம் ஒரு தீர்க்கதரசி என்பதை உணராலாம் .

தேடிவந்த மாப்பிள்ளை - பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த பொழுது போக்கு சித்திரம் .

பட்டிக்காட்டு பொன்னையா - மக்கள் திலகத்தின் இரட்டை வேடத்தில் வெளிவந்த இனிமையான படம் .

இதயக்கனி - 1975ல் வசூலில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய காவியம் .

மீனவ நண்பன் - மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படம் .

Richardsof
3rd August 2016, 06:07 AM
எம்ஜிஆர் என்ற பெயருக்கு அப்படி என்ன காந்த சக்தி உள்ளதோ தெரியவில்லை, அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. முகத்தை பார்த்த உடனே வசீகரிக்கும் ஆற்றலை கொண்டவர் எம்ஜிஆர். அவர் நடித்து வெளியான திரைப்படங்களும், முதல்வராக அவரது ஆட்சி முறையும் இணைந்து எம்ஜிஆருக்கு மலைபோன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் கொடுத்துள்ளன. அதிலும் அதிமுக தொண்டர்களின் நாடி நரம்பெல்லாம் எம்ஜிஆர்தான் நிறைந்துள்ளார்.

Richardsof
3rd August 2016, 06:11 AM
எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!

சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.


இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று...
ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள்.


'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது.


இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.

உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.

அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.

பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.

இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!

எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

courtesy — எஸ்.ஆர்.சாந்தி

Richardsof
3rd August 2016, 06:15 AM
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .


மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.



அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.




“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.


இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.



அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”



courtesy - ராஜ்பாவ்

orodizli
3rd August 2016, 09:27 AM
Makkalthilagam. Matters fine sir... Please write. Chennai "Adimaipenn" function news...

Richardsof
3rd August 2016, 05:12 PM
2.8.1957

மக்கள் திலகத்தின் ''புதுமைப்பித்தன்'';60வது ஆண்டு விழா துவக்க தினம் இன்று .

சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

fidowag
3rd August 2016, 08:51 PM
http://i66.tinypic.com/2ppitua.jpg

சென்னை பாட்சாவில் (மினர்வா ) 22/7/2016 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
நடித்த "சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு ஒரு வாரம் ஓடியது

fidowag
3rd August 2016, 08:52 PM
http://i65.tinypic.com/2qxz0xl.jpg

fidowag
3rd August 2016, 08:53 PM
http://i68.tinypic.com/28clzsg.jpg

fidowag
3rd August 2016, 09:04 PM
சென்னை சரவணாவில் கடந்த 22/07/2016 முதல் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நாளை நமதே " தினசரி 3 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

இந்த ஆண்டில் (2016) இணைந்த 10 வது எம்.ஜி.ஆர். வாரம்.

கடந்த ஆண்டில் 13/03/2015 முதல் சென்னை சரவணாவில் வெளியாகி தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது .


http://i65.tinypic.com/wbe4hw.jpg

fidowag
3rd August 2016, 09:10 PM
சென்னை சரவணாவில் வெள்ளி முதல் (29/07/2016) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது .

இந்த ஆண்டில் (2016) இணைந்த 11 வது எம்.ஜி.ஆர். வாரம்.


கடந்த ஆண்டில் 16/01/2015ல் சென்னை சரவணாவில் வெளியாகி தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

http://i66.tinypic.com/2hmdl68.jpg

fidowag
3rd August 2016, 09:20 PM
http://i64.tinypic.com/6f7fjb.jpg

fidowag
3rd August 2016, 09:21 PM
http://i67.tinypic.com/voo978.jpg

fidowag
3rd August 2016, 10:33 PM
இன்று (03/08/2016) இரவு 7 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " யாக சன் லைப் தொலைக்காட்சியில் ஜொலித்தார்.
http://i65.tinypic.com/2qas6yd.jpg

fidowag
3rd August 2016, 10:34 PM
தினத்தந்தி - மதுரை -24/07/2016
http://i63.tinypic.com/t87o5h.jpg

fidowag
3rd August 2016, 10:36 PM
http://i65.tinypic.com/jgmv6o.jpg

fidowag
3rd August 2016, 10:37 PM
DAILY THANTHI -29/07/2016
http://i63.tinypic.com/2u4lpgi.jpg

fidowag
3rd August 2016, 10:38 PM
மாலை மலர் -29/07/2016
http://i68.tinypic.com/2ntedmr.jpg

fidowag
3rd August 2016, 10:43 PM
http://i68.tinypic.com/343kahv.jpg

fidowag
3rd August 2016, 10:44 PM
http://i63.tinypic.com/126btlk.jpg

fidowag
3rd August 2016, 11:19 PM
தினமணி கதிர் -மதுரை -24/07/2016
http://i63.tinypic.com/5wemb.jpg

fidowag
3rd August 2016, 11:21 PM
http://i64.tinypic.com/2emidzo.jpg
http://i67.tinypic.com/2gtdtsh.jpg
http://i67.tinypic.com/2yl5oop.jpg
http://i68.tinypic.com/2yxq901.jpg

fidowag
3rd August 2016, 11:24 PM
http://i67.tinypic.com/1692jrb.jpg
http://i68.tinypic.com/efl28g.jpg
http://i67.tinypic.com/30djos5.jpg
http://i68.tinypic.com/33m1i85.jpg

fidowag
3rd August 2016, 11:25 PM
http://i68.tinypic.com/2ntzpz4.jpg
http://i68.tinypic.com/o8gajb.jpg
http://i68.tinypic.com/105ny1y.jpg

fidowag
3rd August 2016, 11:35 PM
தினகரன் -வெள்ளிமலர் -29/07/2016
http://i68.tinypic.com/1zo7vo8.jpg
http://i68.tinypic.com/2jcest0.jpg
http://i63.tinypic.com/unhi0.jpg

fidowag
4th August 2016, 08:36 AM
இன்று (04/08/2016) மதியம் 12 மணிக்கு மெகா டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2vug3zq.jpg

Richardsof
4th August 2016, 07:47 PM
சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் முதன் முதலில் தொடர்ந்து 100காட்சிகள் , 125காட்சிகள் , 150 காட்சிகள் என்று
அரங்கம் நிறைந்து சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் .

தேவிபாரடைஸ் - ஸ்ரீகிருஷ்ணா - சரவணா என்று மூன்று அரங்கில் வெளிவந்து தேவிபாரடைஸ் - ஸ்ரீகிருஷ்ணா 2 அரங்கில் 20 வாரங்களுக்கு மேல் ஓடியப்படம் ரிக் ஷாக்காரன் .
சரவணாவில் நம்நாடு படத்திற்கு பின்னர் 100 நாட்கள் ஓடியப்படம் ரிக் ஷாக்காரன் .



தேவிபாரடைஸ் அரங்கிற்கு கிடைத்த பெருமை .


தேவிபாரடைஸ் அரங்கில் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்னிலையில்
அன்றைய ஆளும் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வரும் சிறப்பு விருந்தனாராக கலந்து கொண்ட விழா என்ற ட
பெருமை பெற்றது தேவிபாரடைஸ்.

fidowag
4th August 2016, 11:40 PM
தமிழ் இந்து - மதுரை -24/07/2016
http://i65.tinypic.com/6rsjt5.jpg

fidowag
4th August 2016, 11:41 PM
பாக்யா வார இதழ் -05/08/2016
http://i68.tinypic.com/n52a1h.jpg

fidowag
4th August 2016, 11:43 PM
குமுதம் வார இதழ் -10/08/2016
http://i64.tinypic.com/2ltip8w.jpg
http://i65.tinypic.com/296c6zs.jpg

fidowag
4th August 2016, 11:46 PM
http://i63.tinypic.com/nygygn.jpg
http://i64.tinypic.com/fvdaht.jpg
http://i64.tinypic.com/11grexc.jpg

fidowag
4th August 2016, 11:47 PM
http://i68.tinypic.com/33jpuzb.jpg
http://i66.tinypic.com/250p7op.jpg

Richardsof
5th August 2016, 06:52 AM
http://i66.tinypic.com/ws67tk.jpg
48 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது மாபெரும் வெற்றி அடைந்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
தற்போது நவீன தொழில் மாற்றங்களுடன் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் வடிவில் நம்மை மகிழ்விக்க
விரைவில் திரைக்கு வர இருக்கிறது .
http://i63.tinypic.com/2nvcz1y.jpg
அதே போல் மக்கள் திலகத்தின் ரிக் ஷாக்காரன் டிரைலர் வெளியீடு 21.8.2016
சென்னை -தேவிபாரடைஸ் அரங்கில் நடை பெற உள்ளது .
http://i68.tinypic.com/98zmom.jpg
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் விரைவில்
தணிக்கைக்கு செல்ல இருக்கிறது .

fidowag
5th August 2016, 08:48 AM
தினத்தந்தி -05/08/2016
http://i66.tinypic.com/mv2pds.jpg


தகவல் உதவி : நண்பர் திரு. வினோத் , பெங்களூரு.

fidowag
5th August 2016, 08:52 AM
இன்று முதல் சென்னை சரவணாவில் (05/08/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i67.tinypic.com/5oh5js.jpg
தகவல் உதவி : நண்பர் திரு.பாண்டியன், ஓட்டேரி.

Richardsof
5th August 2016, 07:00 PM
ரகசிய போலீஸ் 115 படத்தின் சிறப்புகள்

மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த முதல் வண்ணப்படம் .
மக்கள் திலகத்தின் புதுமையான சண்டைக்காட்சிகள் .
எல்லா பாடல்களும் இனிமை
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடிப்பு காட்சிகள்
மெல்லிசை மன்னரின் அருமையான ரீ ரெக்கார்டிங்
மக்கள் திலகத்தின் பல புதுமையான வண்ண உடைகள்
ஆர் .கே .சண்முகத்தின் சிறப்பான வசனங்கள் .
மொத்தத்தில் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கடந்த 48 ஆண்டுகளாக பார்க்க வைத்த சிறந்த பொழுது போக்கு படம் .

orodizli
5th August 2016, 07:20 PM
Makkalthilagam's another Greatest Mega Hit Kaaviyam Rahasiya Police 115 Digital Version will be rerelease news... Huge pleasure to Our selves...

Richardsof
5th August 2016, 07:45 PM
சென்னை அண்ணா சாலையில் இரண்டு திரை அரங்குகளில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் 2

1968 ரகசிய போலீஸ் 115- பிளாசா & குளோப்

1976 நீதிக்கு தலை வணங்கு - தேவி கலா & ஓடியன்

fidowag
5th August 2016, 11:34 PM
இன்று (05/08/2016) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் (2016) இணைந்த 12 வது எம்.ஜி.ஆர். வாரம் .
http://i64.tinypic.com/160xa54.jpg

கடந்த ஆண்டில் (2015) சென்னை மகாலட்சுமியில் -11/07/2015 முதல் தினசரி 2 காட்சிகள் திரையில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

orodizli
6th August 2016, 07:15 AM
சென்னை அண்ணா சாலையில் இரண்டு திரை அரங்குகளில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் 2

1968 ரகசிய போலீஸ் 115- பிளாசா & குளோப்

1976 நீதிக்கு தலை வணங்கு - தேவி கலா & ஓடியன்
Also 1978 14th January Makkalthilagam's Final Kaaviyam " Maduraiyai meetta sundarapandiyan" screened @ Mount Road Devi A/C & Deviparadise A/C... Kind remember...

orodizli
6th August 2016, 02:57 PM
Cine Screen story dialogue writer veteran also tv serial actor thiru Sundaram passes away... Makkalthilagam's Naan yean piranthean, & Naalai namathea --- Sundaram worked story dialogues etc... Deep Condolences to their family members...

orodizli
6th August 2016, 10:27 PM
மக்கள்திலகம் அவர்களின் பிரம்மாண்ட வசூல் காவியம், மறு வெளியீடுகளின் குபேரபுரி "ரகசிய போலீஸ் 115" முதன்-முறையாக டிஜிட்டல் வடிவத்தில் திரை காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது...இன்னும் இரண்டு வாரங்களில் ஒவ்வொரு ஏரியா- களிலும் திரையிட படவுள்ளது என கூறப்படுகின்றது...நமது ரசிகர்கள் அனைவரும் கொண்டாட தயாராவோம்...

orodizli
6th August 2016, 10:38 PM
இன்று (05/08/2016) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் (2016) இணைந்த 12 வது எம்.ஜி.ஆர். வாரம் .
http://i64.tinypic.com/160xa54.jpg

கடந்த ஆண்டில் (2015) சென்னை மகாலட்சுமியில் -11/07/2015 முதல் தினசரி 2 காட்சிகள் திரையில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

Rerelease of Old Cinema Field Emperor of Emperors Our Makkalthilagam MGR., only... Only One...Many kinds of variable films like Black & White, Colour Kaaviyams too...

fidowag
6th August 2016, 11:40 PM
பிரபல தமிழ் திரைப்பட வசனகர்த்தா திரு. வியட்நாம் வீடு சுந்தரம் இப்பூவுலகை
விட்டு இன்று (06/08/2016) மறைந்தார் என்பது மிகவும் துயரமான செய்தி.

திரு. சுந்தரம் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நான் ஏன் பிறந்தேன் "மற்றும் "நாளை நமதே " ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி புரட்சி தலைவர் புகழுக்கு பெருமை சேர்த்திருந்தார் .


திரு. சுந்தரம் அவர்களின் மறைவிற்கு , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்
புரிவாராக !

ஆர். லோகநாதன்.

fidowag
6th August 2016, 11:46 PM
நாளை (07/08/2016) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைப்படம் , சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i66.tinypic.com/jtm9ee.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
6th August 2016, 11:47 PM
நாளை இரவு 7 மணிக்கு, சன் லைப் தொலைக்காட்சியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ராமன் தேடிய சீதை " ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/1zvzy1t.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

tamiyt11
7th August 2016, 01:48 AM
http://www.dailythanthi.com/News/State/2016/08/07004633/Veteran-Tamil-scriptwriterdirector-Vietnam-Veedu-Sundaram.vpf


வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு: தமிழ் திரைப்படத்துறைக்கு பேரிழப்பு; ஜெயலலிதா இரங்கல்


பதிவு செய்த நாள்:
ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016, 12:46 AM IST

சென்னை,

வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு தமிழ் திரைப்படத்துறைக்கு பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இரங்கல்

பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழம்பெரும் தமிழ் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், இயக்குனரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். வியட்நாம் வீடு சுந்தரம் திரையுலகம் கண்ட மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் ஆவார்.
1970-ஆம் ஆண்டு ‘வியட்நாம் வீடு’ என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார். இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘நாளை நமதே’ ஆகிய படங்களுக்கு திரைக் கதை ஆசிரியராக இருந்ததோடு, பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பேரிழப்பு

இவர் குடும்பப்பாங்கான கதைகளை இயக்குவதில் வல்லவர். வியட்நாம் வீடு சுந்தரம் ‘வியட்நாம் வீடு’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, அறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு தமிழ்த் திரைப்படத்துறையினருக்கு பேரிழப்பாகும். வியட்நாம் வீடு சுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

tamiyt11
7th August 2016, 01:54 AM
நாளை நமதே மக்கள் திலகம் சூப்பர் பஞ்ச்

https://youtu.be/XJHRgBvjbic

tamiyt11
7th August 2016, 02:19 AM
எதிரிகள் தாக்கும்போது மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு. நாற்காலியில் உருண்டு புரண்டு ரியலாக விழுகிறார். கீழே விழுந்தபிறகு தரையில் படுத்தபடி வலியின் வேதனையை காட்டுகிறார். கடைசியில் காயம்பட்ட தம்பியின் உதட்டில் வழியும் ரத்தத்தை துடைத்து தலையில் தடவிக் கொண்டு அண்ணன் ஆறுதல் கூறும்போது இரண்டு மக்கள் திலகத்தின் நடிப்புக்கும் எவ்வளவு வித்தியாசம். தம்பிக்கு வசனமே இல்லை. தனது நிலையையும் வேதனையையும் பார்வையிலேயே காட்டி பரிதாபப்பட வைக்கிறார். அண்ணன் பேசும் வசனமும் நன்றாக அளவாக நறுக்காக உள்ளது.

https://youtu.be/cpAEbgQnFb4

வசனகர்த்தா அமரர் சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி.

fidowag
7th August 2016, 10:51 PM
தின செய்தி -05/08/2016
http://i65.tinypic.com/1zzjojk.jpg

fidowag
7th August 2016, 10:53 PM
தமிழ் இந்து -07/08/2016
http://i63.tinypic.com/28tbds8.jpg
http://i68.tinypic.com/24dit4w.jpg

fidowag
7th August 2016, 10:54 PM
http://i66.tinypic.com/34evuc8.jpg

fidowag
7th August 2016, 10:55 PM
http://i65.tinypic.com/wvehrr.jpg

fidowag
7th August 2016, 10:55 PM
http://i65.tinypic.com/f25tlw.jpg

fidowag
7th August 2016, 11:46 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரிக் ஷாக் காரன் " டிஜிட்டல் வெளியீடு
குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று காலை 11 மணி அளவில் துவங்கியது .

நிகழ்ச்சியில் விநியோகஸ்தர்கள் திரு. கிருஷ்ணகுமார் , திரு. ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்து ஆலோசனைகள் தெரிவித்தனர் .

உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு, மற்றும் இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் ஆகியோரும் உரையாற்றி, ரிக் ஷாக்காரன் டிஜிட்டல் திரைப்படம் வெற்றி பெற்று, அரிய சாதனைகள் படைக்கும் வகையில் அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்று பேசினார்கள்

முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீப ஆராதனைகள் செய்யப்பட்டன .

திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டனர் அவர்கள் பக்தர்களின் கேள்விகளுக்கும், வேண்டுகோளுக்கும் செவி சாய்த்த வண்ணம் இருந்தனர்.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்து , சாதனைகள் படைக்க
அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் .

இறுதியில் ட்ரைலர் வெளியீடு பற்றிய அழைப்பிதழ் அனைவருக்கும்
அளிக்கப்பட்டது .

fidowag
7th August 2016, 11:48 PM
http://i66.tinypic.com/2yytqj6.jpg

fidowag
7th August 2016, 11:50 PM
http://i66.tinypic.com/x0p9hu.jpg

fidowag
7th August 2016, 11:51 PM
http://i67.tinypic.com/2url8r6.jpg

fidowag
7th August 2016, 11:52 PM
http://i68.tinypic.com/zjeyyd.jpg

fidowag
7th August 2016, 11:54 PM
http://i64.tinypic.com/2cdjs8.jpg

fidowag
7th August 2016, 11:55 PM
http://i66.tinypic.com/35b6yyu.jpg

fidowag
7th August 2016, 11:57 PM
http://i68.tinypic.com/2d7gcx5.jpg

fidowag
7th August 2016, 11:58 PM
மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i68.tinypic.com/2afk6eg.jpg

fidowag
8th August 2016, 12:00 AM
திரு.தம்பாச்சாரி ,மூத்த எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i63.tinypic.com/vxowgw.jpg