PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

okiiiqugiqkov
9th June 2018, 01:17 PM
குமுதம் லைப் வார இதழ் -31/05/2017

http://i65.tinypic.com/msyiae.jpg
http://i66.tinypic.com/21uady.jpg
http://i65.tinypic.com/2im9v1g.jpg
http://i63.tinypic.com/2m3mvzb.jpg
http://i67.tinypic.com/2a9vc47.jpg
http://i66.tinypic.com/mrqlvb.jpg
http://i66.tinypic.com/1zlsnzq.jpg

okiiiqugiqkov
9th June 2018, 01:22 PM
http://i67.tinypic.com/jsfssj.jpg

fidowag
9th June 2018, 04:42 PM
தமிழ் இந்து -08/06/18
http://i66.tinypic.com/29aw5zl.jpg

fidowag
9th June 2018, 04:43 PM
புதிய தலைமுறை வார இதழ் -14/6/18
http://i68.tinypic.com/54evsh.jpg
http://i68.tinypic.com/302ua7r.jpg
http://i63.tinypic.com/2pyb28j.jpg

fidowag
9th June 2018, 04:52 PM
இன்று (9/6/18) முதல் தூத்துக்குடி சத்யாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i67.tinypic.com/b64ls2.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.

fidowag
9th June 2018, 07:04 PM
http://i66.tinypic.com/2r53wd4.jpg
வள்ளியூரை சேர்ந்தவரும், நாகர்கோவிலில் ஜவுளிக்கடை அதிபரும், உலக வானொலி நேயர்களின் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்த திரு.ஏ.பி.எஸ். ரவீந்திரன் அவர்கள் மாரடைப்பால் நேற்று காலை (8/6/18) மரணமடைந்தார் .

சில ஆண்டுகளுக்கு முன்பாக நானும், திரு.சி.எஸ். குமார் (பெங்களூரு ), திரு.தம்பாச்சாரி, (சென்னை ) மற்றும் சில நண்பர்களுடன் , குற்றாலம் செல்வதற்கு முன்பு நாகர்கோவிலில் சென்றடைந்தபோது எங்களுக்கு திரு.ரவீந்திரன் அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, தனது ஜவுளி கடையில் சில நிமிடங்கள் , தனது மிகவும் பிஸியான நேரத்திலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகள், நெல்லை
நாகர்கோவிலில் மக்கள் தலைவரின் படங்கள் வெற்றி வாகை சூடிய வரலாறு [போன்றவற்றையம், அவரது மனித நேயத்தையும் பேசிய விதம் பசுமையான நினைவுகள் போன்றவை .அவரது சொந்த தங்கும் விடுதியில் தங்கவைத்ததோடு,
மறுநாள் , கார் மூலம், திருவட்டாறு, பேச்சிப்பாறை அணை , திற்பரப்பு அருவி, காமராஜர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை ஆகியவற்றை கண்டுகளிக்க பேருதவி செய்தவர் .

திரு.ரவீந்திரன் அவர்களின் மறைவு, எண்ணற்ற எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பேரிழப்பு .
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள், தொழிலாளிகளுக்கு என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பகதர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

fidowag
9th June 2018, 07:05 PM
http://i68.tinypic.com/2vhx8qd.jpg

fidowag
9th June 2018, 07:06 PM
http://i63.tinypic.com/2a6jmae.jpg

fidowag
9th June 2018, 07:07 PM
http://i68.tinypic.com/2mwf6o9.jpg

fidowag
9th June 2018, 07:08 PM
http://i67.tinypic.com/xmuz3m.jpg

fidowag
9th June 2018, 07:10 PM
http://i65.tinypic.com/14xoydg.jpg

fidowag
9th June 2018, 07:12 PM
http://i65.tinypic.com/655qxc.jpg

fidowag
9th June 2018, 07:13 PM
http://i63.tinypic.com/15h29eb.jpg

fidowag
9th June 2018, 07:21 PM
நாகர்கோவிலை சார்ந்த திரு. ஜேம்ஸ் என்பவர் வெறி பிடித்த , தீவிர எம்.ஜி.ஆர். பக்தர் .அவர் சிங்கப்பூரில் கப்பலில் வேலை பார்த்து வந்தார் . தற்போது தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாடு அருகில் உள்ள ஒரு நகரில் கப்பலில்
ஆறு மாத கால ஒப்பந்தத்தில் வேலை பார்த்து வருகிறார் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பார்வையாளராக உள்ளார். சமீபத்தில் மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் பதிவுகள் இருந்ததாக கருதி நேற்று (8/6/18) அவரது தேநீர் இடைவேளையின்போது சுமார் அரை மணி நேரம் அலைபேசியில் பேசி தனது கருத்துகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார் . இது போன்ற பதிவுகளைத்தான் தான் பெரிதும்
விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார் . இந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களைத்தான் உண்மையில் சாரும் .

நண்பரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

Richardsof
10th June 2018, 10:33 AM
ராஜ் தொலைக்காட்சியில் இன்று மதியம் 12 மணிக்கு மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' ஒளிப்பாராக உள்ளது .

Richardsof
10th June 2018, 10:39 AM
" வேட்டக்காரன் வருவான்... உஷார்" !

எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.

1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.

அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ' புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்' ஆக ' மக்கள் திலகம் ' ஆக உயர நிமிர்ந்ததும் - ' எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்' என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு 'Minimum Guarantee Ramachandran ' என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.

தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.

திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.

'கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ' என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த

நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.

தனது ' மடியில் விழுந்த இதயக்கனி' என்றும் ; ' முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ' எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.

அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த 'இமேஜ்'ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).

பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த

காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் " ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க" என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ' வேட்டைக்காரன்'

Richardsof
10th June 2018, 10:41 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.

“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.


இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை

அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”

courtesy- rajbav

Richardsof
10th June 2018, 10:51 AM
தாய்ப்பாசம் என்றால் எம்.ஜி.ஆர் – நடிகர் சிவக்குமார் ஆக


தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு.



உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.

அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.

“ஊருக்கு போயிருந்தியா? அம்மா… அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.

Richardsof
10th June 2018, 10:58 AM
நம் நாடு 1969



நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

ஓர் உரையாடல்

வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.

சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.

மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.

ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.

ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)

மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.

சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!

சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?

சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?

பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!

சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா
ஜெயராஜ் ஓவியர்

Richardsof
10th June 2018, 11:01 AM
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.

Richardsof
10th June 2018, 11:06 AM
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!

ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.

ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.

பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.

எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)

ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.

இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!

Richardsof
10th June 2018, 11:08 AM
உரிமைக் குரல் (Urimaik Kural)



விகடனுக்கு நன்றி.

.

———————————–

நாட்டுப்புறக் கதைக்குத் தேவையான ஒரு பணக்கார மிராசுதார் குடும்பம். மிராசுதாரின் ‘வில்லன்’ மகன், நாணயமான ஒரு சின்ன மிராசுதார், அவருடைய கதாநாயகத் தம்பி, அழகான கதாநாயகி, எடுபிடி அடியாட்கள் – இவர்களுடன் காதல், போராட்டம், அண்ணன் தம்பி பாசம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துவிட்டால் விறுவிறுப்பு இல்லாமல் போகுமா?

ஆரம்பமாக, வெள்ளைக் குதிரை பூட்டிய ரேக்ளாவில் வெகு கம்பீரமாக வரும் கதா நாயகன் கோபி (எம்.ஜி.ஆர்), கடத்திச் செல்லப் படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சோதனை மேல் சோதனை! பொதுப் பணத்தை கோபியின் அண்ணன் பறி கொடுக்கிறார். அண்ணனும் தம்பியும் நிலத்தை அடமானம் வைக்கிறார்கள். கோபியின் காதலியை (லதா) மிராசுதாரின் மகன் (நம்பியார்) மணந்து கொள்ள ஏற்பாடாகிறது. கல்யாண நாளன்று மணப் பெண்ணை மீட்டுச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான் கோபி. அண்ணன் தம்பி உறவு முறிகிறது. கதா நாயகன் தாக்கப்படுகிறான். நிலம் ஏலத்திற்கு வருகிறது. கடைசியில், உரிமைக் குரல் எழுப்பி நியாயம் கிடைக்கச் செய்கிறான் கோபி.

கதையின் உயிரோட்டம் எம்.ஜி.ஆர்! காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இயற்கையாக அமைந்திருக்கின்றன. குறும்பும், கொஞ்சலும், கொந்தளிப்புமாக லதா சளைக்காமல் நடித்திருக்கிறார்.

பிரிவினை செய்யப்பட்ட வீட்டில் கீற்றுத் தடுப்புக்கு அப்பால் எம்.ஜி.ஆரும் லதாவும் நடத்தும் காதல் விளையாட்டும், அந்த சரஸங் களைக் காது கொடுத்துக் கேட்கக் கூசி மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாதபடி அண்ணன் சகஸ்ரநாமம் தவிப்பதும் இனிமை! சகஸ்ரநாமம் பக்குவமான நடிப்பின் உருவமாக வருகிறார்.

வயலில் நடக்கும் சண்டையையும், வழியில் நெருப்பு மூட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியையும் டைரக்டர் படுவேகத்தில் படமாக்கியிருக்கிறார். பாராட்டலாம்.

தையற்காரர் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு கோஷ்டி யின் முற்பகுதி நகைச்சுவை முழுச் சிரிப்பு. சச்சுவிடம் ஒரு மெருகு தெரிகிறது.

பாடல்கள் அதிகம். ‘கல்யாண வளையோசை’, ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன.

மூலக் கதையில் டைரக்டர் கொஞ்சம்கூட கை வைக்க விரும்பவில்லை போலிருக்கிறது. கதாநாயகன் கோபியின் உடை யைப் பார்க்கும்போது ஆந்திர விவசாயி அல்லவா நினைவுக்கு வருகிறார்! கிராமியப் பின்னணிகளும் அநேகமாக ஆந்திரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.

குரலில் உற்சாகம் இருக்கிறது.

Richardsof
10th June 2018, 11:45 AM
M.G.R.'s Unique Triumph
(An extract of an article published on 7-8-1965)
A NEW milestone—significant in every respect—was reached the other day when Vijaya Combines

Productions and the Madras City distributors, Emgeeyar Pictures, celebrated the Silver Jubilee

Week of their remarkable colour picture 'Enga Veettu Pillai*, which has proved to be a great money spinner. As described aptly by Mr. A. L. Srinivasan, the new President of the Film Federation of India, the success of 'Enga Veettu Pillai' symbolises the success of the Tamil film industry. The makers, the artistes and the technicians responsible for creating such ah unforgettable film have earned the salute of the motion picture industry in South India.

In recent years, only very few pictures had the distinction of celebrating the Silver Jubilee. They were 'Kalyana -Parisu', 'Pava Mannippu', 'Pasamalar' and 'Kathalikka Neramillai'. Yet. the success of those films cannot equal that of 'Enga Veettu Pillai'. The difference lies in this. While they were shown only at one picture house, 'Enga Veettu Pillai' has been drawing bumper crowds at three cinemas—Casino, Broadway and Mekala—in Madras. This apart, the film has had a Silver Jubilee run in four other district centres in the South—Madurai, Coimbatore, Tiruchirappalli and Thanjavur.

It is a' record, about which the makers can feel proud.

Statistical figures reveal that the Government has received a bigger share of income from this film from the three theatres in the City than the distributers and the exhibitors. As many as 12 lakhs of people in Madras City, with a population of over 20 lakhs, have seen this film. The total income to the State by way of entertainment tax on this film throughout South India is estimated to be in the region of Rs. 50 lakhs. These staggering figures and the enormous box-office pull of 'Enga Veettu Pillai' have restored the needed confidence in the minds of the distributors to invest more and more in production.

What are the causes for the success of 'Enga Veettu Pillai'? The reasons are not far-to seek. A casual appraisal will convince everyone that the picture's universal appeal, capable of ensuring a repeat audience, has primarily contributed to its unqualified success. Besides wholesome entertainment values, the moral of the film, which is most inspiring, is another contributing factor. On top is the magnificent performance of the lead player, M. G. Ramachandran, in the dual role of the nitwit and his dashing, enterprising twin brother. The gamut of emotions displayed by M.G.R. in the dual role and particularly his interpretation of the nitwit have won for him the unstinted admiration of critics, connoisseurs and cinegoers. All of them have come to the conclusion that M.G.R., who is always capable of good acting has made great strides in the field of histrionics. The picture indeed marks the unique triumph of M.G.R. In the earlier years, M.G.R.'s own film 'Nadodi Mannan' was considered a great box-office hit. And now he has beaten his own record with his latest film, 'Enga Veettu Pillai', which is far superior in production and technical values to his own earlier hit. Further, it is in opulent colour. The actual "shooting" of the Him was completed within a record period of 45 days while the entire production took up less than two and a half months. This is a record for any colour film produced in India. According to B. Nagi Reddi and Chakrapani, the "de jure" makers of the film, the speed and efficiency with which the film was completed should be attributed t« the indefatigable work put in by M.G.R. as the "de facto" producer of the film, besides shouldering the dual role in it. The latter worked for nearly sixteen to eighteen hours each day on the film and supervised' every aspect of its production.

The impression about M.G.R. all the while has been that he is incapable of acting and that he is fit only for swashbuckling roles. Th.e discerning fiimgoers have taken pride in declaring that they scrupulously avoid seeing his pictures. But 'Enga Veettu Pillai' has dispelled all sorts of misgivings about him. It has, on the other hand, proved that his success as an actor has been mainly due to his talent, sincerity, humility, hard work and a spirit of camaraderie displayed by him. Both on and off the screen. His fans are now legion.

Richardsof
10th June 2018, 06:32 PM
"1985-ம் வருடம்... #எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு.

அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்.

"ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....

அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி...

"எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...

ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே

"தலைவர் உயிரோட இருக்காரா... இல்லையான்னு தெரியலே' என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...

மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
இந்த நிலையில செய்தி வருகிறது..

"எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்

ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.

அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.

எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...

காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர்.

திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...

நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது r.m. வீரப்பன் அவர்களின் திட்டம்...

மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்... மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...

இப்பொழுது ரேடியோ வர்ணனை...

டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...

வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...

நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...

இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...:?

ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?

பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.

மணி 7...

மீண்டும் ரேடியோ வர்ணனை...

"முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."

மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...

15 நிமிடங்கள் போய்இருக்கும்...

மீண்டும் ரேடியோவில் செய்தி...

"சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் m.g.r. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...

"ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"

"தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"

"ஏதோ கோல்மால் நடக்குது..."

என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.

20 நிமிடங்கள் போயிருக்கும்...

பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...

இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...

எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...

"எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?

அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...

வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.

ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!

இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்...

எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...

மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்...

அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...

இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...

ஒரே நிசப்தம்...

எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...

"பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."

கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...

"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."
தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...

இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...

ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...

வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்.,

அமெரிக்காவில் இருந்து திரும்பிய போடோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...

நினைத்தேன்_வந்தாய் 100வயது"

courtesy . Facebook

Richardsof
10th June 2018, 06:42 PM
பள்ளி குழைந்தைகள் பல் விளக்கவேண்டும் என்று பல் பொடி வழங்கியவர் பசி இல்லாமல் ஒருவேளை உணவாது உண்ணவேண்டும் என்று சத்துணவை மதிய உணவாக தரம் உயர்த்தியவர் விவாசியிகலின் கடனை வட்டியை ரத்து செய்தவர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தவர் பல துறைகளில் பல சாதனைகளை படைத்த வள்ளல் என்று பாடுவேன்

இதய தெய்வம் புரட்சி தலைவர் ஒரு அதிசிய பிறவி. அவரை போல ஒரு மனிதர் தோன்ற பல நூறு ஆண்டுகளாவது ஆகும். மக்களிடம் தனது செல்வாக்கை, தான் மறைந்த பிறகும் நிலை நிறுத்தி உள்ள ஒரு தெய்வ பிறவி. தனது ஆட்சி காலத்தில் மக்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப விலைவாசியை கட்டுபடுத்தி, நல்ல ஒரு ஆட்சியை தந்த தலைவர். தனது கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து பிறகு அவர்களது ஆதரவால் தனது இறுதி மூச்சு வரை அவர்களுக்காக தனது கொள்கைப்படி ஆட்சி செய்த மாசற்ற மாமனிதர். இன்று ஊழல் மூலம் பல லட்சம் கொடிகளை அள்ளி குவித்துள்ள தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்த வள்ளல். இருமுறை எமனை வென்ற அவரது ஆயுள் மட்டும் சற்றே நீடித்திருந்தால் திருக்குவளை குடும்பம் அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும்.

ஏழைகளின் துயர் துடைத்த வள்ளல்.. தமிழக மக்கள் மீது அளவில்லாத அன்பும், பரிவும் கொண்ட உத்தம தலைவர். அவரது இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. இன்னொரு எம்.ஜி.ஆர் நமக்கு கிடைக்கவே மாட்டார்.

பொன்மனச்செம்மல் என்றும், புரட்சி நடிகர் என்றும், புரட்சித் தலைவர் என்றும், மக்கள் திலகம் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை என்றும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்றும், வாத்தியார் என்றும், இதயக்கனி என்றும், இதய தெய்வம் என்றும்........ இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். "எம்.ஜி.ஆர்" என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மொட்டைகொபுரமாஇ இருந்ததை மாற்றி வானளாவிய வண்ணமிகு கோபுரமாய் மக்கள் மனம் மகிழும் வண்ணம் கட்டியதில் பெரும்பங்கு எம் ஜி ஆருடைது....அதைப்பாராட்டி ஸ்ரீரங்கம் ஜீயர் சொன்னார்...இவர் எம் ஜி ஆர் அல்ல...எம் ஜீயர் என்று....இதைவிடவா அந்த மாபெரும் மனிதருக்கு ஒரு சான்று வேண்டும்.

பொது நீதியிலே, புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன். .. இங்கு ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ? '' என்று கூறியவர், தன் அன்புக்குரிய, எந்த கைம்மாறும் எதிர்பார்க்காமல், தங்களின் உயிருக்கும் மேலாக - தம் மீது அன்பு வைத்திருந்த தமிழ்நாட்டு மக்களை அவரும் தன் உயிருக்கும் மேலாக மதித்துள்ளார் என்பதையும், அதனாலேயே அவருக்கு '' பொன்மனச் செம்மல்'' என்ற பெயருள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அவற்றில், இந்த செய்தி ஒரு மணிமகுடமாகும்.............................

Courtesy from comments portion.

Richardsof
11th June 2018, 06:43 PM
1972 -1973 எம்ஜிஆர் தனி மனிதராக நின்று திரை உலகில் சந்தித்த போராட்டங்கள்

ஆளுங்கட்சியின் அதிகாரம்
காவல் துறை அராஜகம்
திரை அரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல்
விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை
படத்தயாரிப்பளர்களுக்கு உத்தரவுகள்
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு காவல் துறை நெருக்கடிகள்
எம்ஜிஆர் மன்றங்களை மூட மும்மர பணிகள்
பத்திரிகைகளில் எம்ஜிஆர் பெயர் , படங்கள் , செய்திகள் இருட்டடிப்பு /
அரசியல் மேடைகளில் எம்ஜிஆரை தரமின்றி தாக்கி பேசுதல்

எம்ஜிஆரின் எதிர்காலம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது .அன்றைய தினம் பலம் பொருந்திய நடிகர சங்கத்திலிருந்து ஒரு நடிகர் கூட எம்ஜிஆருக்கு ஆதரவு தெரிவிக்க இல்லை .காமராஜர் , கருணாநிதி , மற்றும் இ.,காங் தலைமை அனைவரும் எம்ஜிஆரை தாக்குவதில் மும்மரமாக இருந்தனர் .

எம்ஜிஆர் தன்னுடைய ரசிகர்களையும் கட்சி தொண்டர்களையம் , மக்களையும் மட்டுமே நம்பினார் . மனவலிமை கொண்ட எம்ஜிஆர் மக்கள் சக்தியின் பெரும் ஆதரவோடும் ரசிகர்களின் முழு ஒத்துழைப்போடும் களத்தில் இறங்கினார் .

முதல் வெற்றி .....உலகம் சுற்றும் வாலிபன் .

எம்ஜிஆரின் உலகம் சுற்றும்வலிபன் சந்தித்த போராட்டங்கள்
1. நேரிடையாகவே திமுக வை சேர்ந்த மதுரை முத்து படம் வெளிவராது .வர விடமாட்டோம் என்று சவால் விட்டார் .
2. படத்தின் ரீ ரெக்கார்டிங் நேரத்தில் ஏகப்பட்ட தொல்லைகள் மாநில அரசால் தரப்பட்டது .
3. படத்தின் நெகடிவ் சேதாரப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
4. ஒரு வேளை பட வேலை முடிந்துவிட்டால் திரை அரங்கிற்கு வரவிடாமல் தடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டது


எல்லா சவால்களையும் எம்ஜிஆர் இன்முகத்துடன் எதிர்கொண்டு தான் குறிப்பிட்டபடி 11.5.1973 அன்று 39 திரை அரங்குகளில் திரையிட முடிவு செய்து 7.5.1973 அன்று அலைஓசை , தென்னகம் மற்றும் தினமணி முன்பதிவு விளம்பரம் தந்தார் .

முன்பதிவு தினத்தன்று முன்னாள் இரவே சென்னை அண்ணா சாலையில் ரசிகர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது .
திரை உலக வரலாற்றில் புதிய வரலாற்றை எம்ஜிஆர் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்

உலகம் சுற்றும் வாலிபன் - 11.5.1973 அன்று 39 அரங்குகளில் வெளியானது .
படமும் மாபெரும் வெற்றி
வசூலில் புதிய . வரலாற்றை உருவாக்கினான் உலகம் சுற்றும் வாலிபன்
எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகிய பின்னரும் அந்த சாதனையை யாராலும் 1979 வரை முறியடிக்க இயலவில்லை.
அதுதான் எம்ஜிஆரின் தில் ஆன சாதனை .

courtesy fb

Richardsof
11th June 2018, 06:57 PM
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள். *

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *

எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர். *

எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'. *

எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
*
எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'. *

எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'. *

எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'. *

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'. *

எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி',

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'. எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான். எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'.
இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'

. எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.


எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப் சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம்

'படகோட்டி'. எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.


courtesy - net

Richardsof
11th June 2018, 07:07 PM
மீண்டும் மீண்டும் எம்ஜிஆர்


பழையகாலத்துத் தமிழ் சினிமாக்களை இப்போது மீண்டும் பார்க்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி இணையம்தான் என்றாகிப்போன காலம் இது. யூடியூபில் மட்டுமே பழைய படங்களைக் காண இயலும் என்கிற நிலை தோன்றி அநேக காலம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்த கதி.

உலகமெங்கும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கிற டிவிடி வருகை மற்றும் பரவலாகிவிட்ட இணையதளப் பயன்பாடு போன்றவை சினிமாக்களின் திரையரங்கத் திரையிடல்களுக்குப் பெரும் சவால்களாகியிருக்கின்றன. முதல்முறை வெளியீடுகளுக்குக்கூட வசூல் உத்தரவாதமற்ற நிலைமை உருவாகியிருக்கும் இன்றைய காலத்திலும் தமிழில் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் திரையிடல் வாய்ப்பையும் ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றிருப்பவை எம்ஜிஆர் படங்கள் என்றால் அது மிகையல்ல.

எம்ஜிஆர் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஒருசில படங்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடப்பட்டு ஒரு கலக்குக் கலக்கியது பல திரையரங்குகளில்.

புதிதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குக்கூடக் கிடைக்காத பெரும் வரவேற்பைக் காலம்தோறும் எம்ஜிஆர் படங்கள் பெற்றுவருவதை உள்ளபடியே ஆய்வுக்குட்படுத்தினால் இங்கே எத்தனை ரசனை மாற்றங்கள் வந்தபோதிலும் எம்ஜிஆர் படங்களுக்கான வரவேற்பினை அவற்றால் ஒன்றும் செய்துவிட இயலவில்லை என்பதற்கான அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் இயலும். இந்தச் சூழலில் இதோ மற்றுமொரு எம்ஜிஆர் சினிமா 48 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஒலி நுட்ப அமைப்புடன், சினிமாஸ்கோப் திரைப்படமாக வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படத்தில் மறைந்த ஜெயலலிதாவும், லட்சுமியும் அவருக்கு ஜோடிகள். அவர்களுடன் அசோகன், வி.கே.ராமசாமி, சோ போன்றோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை.

ப.நீலகண்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 1970ல் இந்தப் படம் முதன்முதலில் வெளியானபோதே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சென்னையில் மட்டும் அது திரையிடப்பட்ட அரங்குகளில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என். கனகசபை தயாரிப்பில் உருவான இந்த மாட்டுக்கார வேலன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட்ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறாராம்.

oygateedat
11th June 2018, 08:02 PM
https://s22.postimg.cc/8kvhcmezl/a402dbff-3508-4138-a132-8fa68f24010f.jpg (https://postimg.cc/image/ch8t8lzz1/)
Courtesy - Mr Bhaskar - chennai

Richardsof
12th June 2018, 05:45 PM
http://i64.tinypic.com/258uv07.jpg

Richardsof
12th June 2018, 05:47 PM
மறக்க முடியாத மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்த திரை அரங்குகளில் திருவிழா காட்சிகள் நடந்த அந்த இனிய நாட்கள் என்றுமே மறக்க முடியாது . படம் வெளிவரும் முன்னரே ''திரை அரங்குகளில் காட்டப்படும் வருகிறது ஸ்லைடு , போஸ்டர்கள் ஷோ கேஸில் வைக்கப்படும் ஸ்டில்கள் மற்றும் அரங்கை தோரணங்களாலும் ஸ்டார் களாலும் அலங்கரித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களையும் எம்ஜிஆர் ரசிக மன்றங்களையும் என்றுமே மறக்க இயலாது .

அன்றைய கால கட்டத்தில் 1958 - 1977 படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்த மூத்த எம்ஜிஆர் ரசிகர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சில படங்கள் மற்றும் திரை அரங்குகள் பற்றிய பதிவு

.
பாரகன்

நாடோடிமன்னன் - 1958
மன்னாதி மன்னன் . ஆனந்த ஜோதி , அரசகட்டளை தேடிவந்த மாப்பிள்ளை ,

பிளாசா
தாய் சொல்லைத்தட்டாதே -1961
திருடாதே தெய்வத்தாய் மாட்டுக்காரவேலன் நேற்று இன்று நாளை தாயை காத்த தனயன் ரகசிய போலீஸ் 115 படகோட்டி

குளோப்

குடியிருந்த கோயில் - 1968
காவல்காரன் குமரிக்கோட்டம் இதயவீணை .

வெலிங்டன்

கலங்கரை விளக்கம் -1965
அரசிளங்குமரி சங்கே முழங்கு நவரத்தினம்

காசினோ

எங்க வீட்டுப்பிள்ளை - 1966
அன்பே வா கொடுத்து வைத்தவள் மலைக்கள்ளன்
சித்ரா

வேட்டைக்காரன் - 1964
மதுரைவீரன் தாய்க்கு பின் தாரம் பெரிய இடத்துப்பெண் நம்நாடு நல்ல நேரம்

கெயிட்டி

முகராசி - 1966
சந்திரோதயம்


ஸ்டார்

பெற்றால்தான் பிள்ளையா - 1966
விவசாயி கண்ணன் என் காதலன்
தேவிபாரடைஸ் ம் - 1971

ரிக் ஷாகாரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன் பல்லாண்டு வாழ்க இன்றுபோல் என்றும் வாழ்க மீனவ நண்பன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
தேவிகலா

நீதிக்கு தலை வணங்கு - 1976

ஓடியன்

உரிமைக்குரல் -1974
நாளை நமதே
சத்யம்

இதயக்கனி - 1975

சாந்தம்
உழைக்கும் கரங்கள் - 1976

மிட்லண்ட்
ஆயிரத்தில் ஒருவன் - 1965
அடிமைப்பெண் நான் ஆணையிட்டால் ஒளிவிளக்கு என் அண்ணன் ராமன் தேடிய சீதை

சபையர்

கன்னித்தாய் - 1965

பைலட்

ஊருக்கு உழைப்பவன் - 1976

Richardsof
12th June 2018, 06:11 PM
ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் பார்க்க வேண்டும்?

சென்னையில் + தமிழத்தில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து (ஒரு ஷோவுடன்) இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..


.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.

படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.

வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.

"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.

அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.

சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (10 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.

இன்னொருத்தர் வெளியூர் போல. இருக்குற மொத்த டிக்கெட்டையும் வாங்கிவிட்டிருந்தார். சுமார் 20-25 பேர். ஆங்காங்கே சிதறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் 50+

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.

இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.

டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.

ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.

இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.

1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.

2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.

இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?

நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?

COURTESY NET

Richardsof
12th June 2018, 06:15 PM
அதிமுக எம்.ஜி.ஆர்.
1972 ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அன்றிலிருந்து ஜெயலலிதா மறையும் வரை தமிழகத்தின் பெரிய கட்சி என்கிற நிலையில் இருந்து அதிமுகவை யாரும் அசைக்க முடியவில்லை. தற்போது இருக்கிற அதிமுக இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்கிற விமர்சனம் எதிர்தரப்பிலிருந்து காட்டமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் அதிமுகவின் தொடக்கம் முதல் தற்போது உள்ள சூழல் வரை அரசியல் சமூக பகுப்பாய்வு அவசியமாகிறது.

periyar MGR1972 ம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தபோது, மு.க.முத்துவை திட்டமிட்டு வளர்த்தது, கட்சியில் கணக்கு கேட்டது போன்ற காரணங்களால்தான் எம்ஜிஆர் கட்சியை விட்டு விலகினார் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இது ஒருபுறமிருந்தாலும்,எம்ஜிஆர் கட்சி தோற்றுவிக்க காங்கிரசுதான் காரணம் என்கிற நுட்பமான பார்வையும் அரசியல் பார்வையாளர்களிடம் இருந்தது. திமுகவினர் பலர் எம்ஜிஆர் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்கிற திறனாய்விற்கு செல்லுவதற்கு முன் எம்ஜிஆரின் இயல்பை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

எம்ஜிஆர் திமுகவில் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்டபோதே காமராசரை தன் வழிகாட்டி என அறிவித்தார். அந்த சர்ச்சை கழகத்தில் சில நாட்கள் நீடித்து அதன் பிறகு அடங்கிவிட்டது. திமுகவில் அண்ணா கலைஞர் போன்றோர்களுக்கு இருந்த பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்கிற முத்திரை எம்ஜிஆருக்கு இல்லை. இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆருக்குக்கு கூட அந்த முத்திரை இருந்த்து. ஆனால் எம்ஜிஆருக்கு அந்த முத்திரை இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுநபர் என்கிற அடையாளம் தனக்கு வேண்டும் என்பதில் எம்ஜிஆர் தெளிவாக இருந்தார். திமுகவின் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் திரைப்படங்கள் உதவியாக இருந்தன. தான் நடிக்கும் படங்களில் உதயசூரியன் என்கிற பெயர் வருமாறு பார்த்துக் கொள்வார் .அன்பே வா படத்தில் “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்கிற வரி வரும். அன்றைய காங்கிரசு அரசு உதயசூரியன் என்கிற வரியை தணிக்கை செய்து புதிய சூரியன் என்று வெளியிட்டது. நம் நாடு படத்தில் “காரிருள் மறையுதுங்க சூரியன் உதிக்குதுங்க” என்று ஜெயலலிதா பாடுவார்.

இது போன்ற எண்ணற்ற படங்களை சொல்ல்லாம். 72 வரை அவருடைய அனைத்து படங்களிலும் “அண்ணாவும்” “உதயசூரியனும்” குறியீடுகளாக தவறாமல் இடம்பெறும். 72 க்கு பிறகு,அண்ணா மட்டுமே தவறாமல் இடம்பெற்றார்.

எம்ஜிஆரால் திமுக வளர்ந்த்தா? திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா? என்றால், இரண்டுமே சரிபாதியாக நிகழ்ந்த்து. “முகம் காட்டு ராமச்சந்திரா முப்பது இலட்சம் வாக்குகள் திமுகவிற்கு” என்று அண்ணா சொன்ன வாசகம் திமுகவில் எம்ஜிஆருக்கு இருந்த வசீகரத்தை காட்டியது. திமுகவில் சிறு பிணக்கு ஏற்பட்ட சமயம் ‘என் கடமை’ படம் வெளியானது. படம் படுதோல்வியடைந்த்து. இந்த தோல்வி எம்ஜிஆரின் வெற்றிக்குப் பின்னால் திமுகவின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியது.

எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இருந்த்தா? இல்லையா? என்று தெரியவில்லை. எந்த திரைப்படங்களிலும் கடவுளை வணங்கியதாக காட்சி இல்லை. கதாநாயகியை கடவுளை வணங்க சொல்லிவிட்டு அமைதியாக நிற்பார். ஒருமுறை இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தன் தாயைத்தான் கடவுளாக வணங்குவதாக தெரிவித்தார். ஆனாலும்,ஆன்மீகவாதிகள் அனைவரும் விரும்பத்தக்க தலைவராகத்தான் எம்ஜிஆர் இருந்தார். திமுகவின் மீது ஆன்மீகவாதிகளுக்கு இருந்த அதிருப்தி எம்ஜிஆரிடம் இல்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிருபானந்தவாரியார் சம்பவத்தை சொல்ல்லாம்.

“கடவுள் இல்லை என்று சொல்பனுக்கே அமெரிக்காவிற்கே சென்று மருத்துவம் பார்த்தாலும் மரணம்தான்” என்று கிருபானந்தவாரியார் கூறினார். (அண்ணாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சையளித்தும் பலனிக்கவில்லை என்பதை மறைமுகமாக கிருபானந்தவாரியார் சுட்டிகாட்டுகிறார்). இது திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர் உட்பட பலரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. பல இடங்களில் கிருபானந்தவாரியார் உரை நிகழ்த்திய இடங்களிலெல்லாம் பதற்றம் ஏற்பட்டது. உடனே,எம்ஜிஆர் தலையிட்டு, கிருபானந்தவாரியாரை சமதானபடுத்தினார். அதன்பிறகு,கிருபானந்தவாரியார் தலைமையில் எம்ஜிஆருக்கு பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. “பொன்மனச்செம்மல்” என்கிற பட்டமும் எம்ஜிஆருக்கு கிருபானந்தவாரியாரால் வழங்கப்பட்டது.

அதிமுக எம்ஜிஆர்

72 ல் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது அவருக்கு கைகொடுத்த காரணிகள் இரண்டு

திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர்கள்

திமுகவிற்கு அப்பாற்பட்டு எம்ஜிஆரை நேசித்த அமைப்புகள் ,சமூகங்கள்,மாற்று கருத்தாளர்கள்

72 ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி எம்ஜிஆர் பின்னால் திரண்டவர்கள் யார் என்பதை காண்பிக்கும் தேர்தல். 77 லில் எம்ஜிஆரை கோட்டைக்கு அனுப்பியது அருப்புக்கோட்டை. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக 80 ல் மதுரை மேற்கு, 84 ல்ஆண்டிப்பட்டி என தென்மாவட்டங்களையே தனக்கான களமாக கருதினார். திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையையோ, வடதமிழகத்தையோ, காவிரி கடைமடைபகுதிகளிலுள்ள ஏதேனும் தொகுதியையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால்,எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த்தோ திமுகவிற்கு பெரிய வெற்றிவாய்ப்புகளை தந்திராத தென்மாவட்டங்களைத்தான். திமுகவில் இருந்தபோது 67 மற்றும் 71 ஆகிய இரண்டு தேர்தலைகளை சந்தித்தார். அப்போது பரங்கிமலைத் தொகுதியில்தான் நின்றார். அதாவது திமுகவிற்கு சாதகமான தொகுதி. ஆனால்,தனியாக கட்சி ஆரம்பிக்கும்போது தென்மாவட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.

எம்ஜிஆர் பின் அணிதிரண்ட சமூகங்கள்

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, திமுகவின் சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணசட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடில்லாத சமூகங்கள் எம்ஜிஆரின் பின்னால் அணி திரண்டன. குறிப்பாக பிரான்மலை கள்ளர்,கொண்டைய கொட்ட மறவர் ,கொங்கு வேளாள கவுண்டர் போன்றோர்களின் வாக்குகள் எம்ஜிஆருக்கு சாதகமாகின.

பார்ப்பன எதிர்ப்பில் தீவிரம் காட்டும் சமூகங்களான தஞ்சாவூர் கள்ளர்,வட தமிழகத்திலுள்ள வன்னியர், முதலியார் போன்ற சமூகங்கள் திமுக ஆதரவில் நிலைத்து நின்றன. காங்கிரசு வாக்கு வங்கியாக இருந்த ஆதிதிராவிடர்களும் கணிசமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தனர். மதுரை வீரன் படத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டிருந்த அருந்த்தியர்கள் அப்படியே எம்ஜிஆர் பக்கம் சாய்ந்தனர்.

தமிழகத்தில்,எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் எந்த சாதியும் சொந்தமும் கிடையாது பந்தமும் கிடையாது. அதுவே, எம்ஜிஆருக்கு சாதகமான அம்சமாகிவிட்டது. எம்ஜிஆர் திண்டுக்கல் இடைத்தேர்தலில் காமராசரிடம் ஆதரவு கேட்டார். காமராசர், அதிமுக திமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என கூறி ஆதரவு தர மறுத்துவிட்டார்.அந்த கோபத்தை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்தில் காண்பித்தார். “முதுகளத்தூர் கலவரத்தின்போது ,காமராசர் தேவர் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொண்டார்” என்று காமராசருக்கு எதிராக குற்றம்சாட்டினார். பெரும்பாலும் சாதியைப் பற்றி பேசாத எம்ஜிஆர், திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது காமராசரை எதிர்ப்பதற்காக சாதியை சொல்லி பேசினார்.

எம்ஜிஆரும் நடுவண் அரசின் செயல்பாடும்

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்திரா காந்தி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தார்.

தமிழகத்தில் நெருக்கடி காலத்தில் இந்திரா காங்கிரசை ஆதரித்த ஒரே மாநில கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டும்தான். நெருக்கடி நிலையை ஆதரித்த இந்திய பொதுவுடைமைக் கட்சி கூட பின்னாளில் இந்திரா ஆதரவு நிலை எடுத்தமைக்காக, வருத்தம் தெரிவித்த்து. இமயம் தொலைக்காட்சிக்கு எனக்களித்த நேர்காணலில், தா.பாண்டியன் இது குறித்து விரிவாக பதிவு செய்திருப்பார். ஆனால், நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்ததற்கு இதுவரை அதிமுக வருத்தம் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு இந்திரா காந்திக்கு ஆதரவாக எம் ஜி ஆர் நடந்து கொண்டார்.

ஆனால், எம்ஜிஆர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது,மொரார்ஜி தேசாய் மத்தியில் பிரதமரானார். உடனே, சுதாரித்துக் கொண்டு மொரார்ஜியை முழுமையாக ஆதரிக்க ஆரம்பித்தார். மொரார்ஜி ஆட்சிக்குப்பிறகு சரண்சிங் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் பொம்மை அரசு என்று கூட சரண்சிங் விமர்சிக்கப்பட்டார். அந்த ஆட்சியில் மத்திய அமைச்சரைவயில் அதிமுகவின் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றனர். திராவிட ஆட்சியில் மத்தியில் பங்கு வகித்த முதல் அமைச்சர்கள் என்கிற பெருமையை அதிமுக வழங்கியது..அதிலும் சத்தியவாணிமுத்து என்கிற ஒடுக்கப்பட்டோர் அரசியல் உணர்வுடைய ஆதிதிராவிட பெண் முதன் முறையாக மத்திய அமைச்சரவைக்குச் சென்றார்.

இவ்வாறாக,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,சரண்சிங் என யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கவே விரும்பினார். இந்திரா காந்தி மறைவிற்குப் பிறகு ராஜீவ் காந்தியுடன் எம்ஜிஆர் நல்லுறவுடன் இருந்தார். 84 தேர்தலில் இந்திரா காந்தி சாவுக்கு ஒரு ஓட்டு,எம்ஜிஆர் நோவுக்கு ஒரு ஓட்டு என்கிற வாசகம் மிகவும் பிரசித்திப்பெற்றது .அந்த தேர்தலில்தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டே எம்ஜிஆர் வெற்றிப் பெற்றார்.

67ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றிப் பெறுவேன் என்று அண்ணாவிடம் சவால் விட்டவர் காமராசர். ஆனால்,உண்மையில் படுத்துக் கொண்’டே வெற்றிப் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்ஜிஆர்தான்.

COURTESY NET

Richardsof
13th June 2018, 07:34 PM
வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.

திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.

தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.

இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.

இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.

- அரவிந்தன்,

Richardsof
13th June 2018, 07:49 PM
எம்.ஜி்.யாரைப் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். ஆனால் அவரை பிடிப்பதற்கான அந்த பிடிப்பின் ஆழம் மட்டும் அனைவருக்கும் ஒரே அளவிற்கு இருப்பதால்தான் அவர் மறைந்து 30 வருடங்களுக்குப் பிறகும் அவரின் புகழும் சரி அவரை விரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் சரி கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

இன்றும் மக்கள் திலகம் என்ற அந்த மஹா மனிதன் m g r , என்ற அந்த மக்களின் மனம் கவர்ந்த புரதச் நடிகர் வயது கடந்து இன்றும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியம் இல்லை, ஏன் என்றால், ஒரு வள்ளல் தனம், அள்ளி கொடுப்பது, யாரை கண்டாலும் முதலில் நலம் விசாரிப்புடன் சாப்பிட்டிர்களா என்ற பழகிய தன்மை, இப்படி நல்ல மனிதன் மிக சிறந்து [ ஒரு ஹீரோ எப்படி திரையில் இருக்க வேண்டும் [ என்பதை ஆணி அடித்தர்போல உணர்த்தியது, இன்றைய பொறிக்கி,குடிகார,ரவுடி ,கத பாத்திரம் ஏற்று நடிக்கும் பெரும்பாலான அயோக்ய பொறிக்கி ஹீரோக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம், இன்னொரு எந்த ஸ்டார் நடிகரும் இப்படி வர மக்களே அனுமதிக்க மாட்டார்கள், எம்ஜியார் என்ற இந்த சிறந்த ஹீரோவை இன்றைய ஹீரோக்கள் தாண்ட முடியாது.

M g r முகராசி, அவரின் கைகூப்பி வணக்கம் சொல்லும் வசீகரம் ,மக்களை கவர்ந்ததே காரணம், இன்றளவும் அவரைபோல் நான் யாரையும் காணவில்லை .

இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் இந்த உத்தம மனிதர் பற்றி மக்கள் பேசுவார்கள் இடையில் வந்த தமிழ் வியாபாரிகள் மறைந்து விடுவார்கள் சரித்திரத்தில்
உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள்...........அனால் இன்னும் ஒரு நூற்றாண்டு காலதிர்கவது மாறாமல் இருக்க போவது எம் ஜி ஆர் அவர்களின் தாக்கம்..............இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்........இவர் போலே யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.....

உண்மை ! உண்மை !! பேருண்மை !!! மனிதம் நிறைந்த மனிததெய்வம் மக்கள் திலகம் .
Courtesy - comments portion

orodizli
13th June 2018, 10:50 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

எதிர் காலம் வரும் என் கடமை வரும்
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
புது நீதியிலே
புது பார்வையிலே
நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

#நக்கீரன் (2017 June 04-06) மாவலி பதில்கள்:
#பொன்னரசு, மெல்போர்ன், ஆஸ்திரேலியா.

கிராமங்கள்தோறும் உயர்சாதிக்காரர்கள் வசம் இருந்த மணியம், கர்ணம் போன்ற பரம்பரை அரசுப்பதவிகளை ரத்து செய்து, ஆதி திராவிடர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் அந்தப் பதவிகளைப் பெறும்படி செய்தவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன், நக்கீரன் கட்டுரையில் தெரிவித்திருக்கிறாரே?

#எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, பொருளாதார அளவுகோலின்படிதான் மக்களின் ஏற்றத்தாழ்வை மதிப்பிடுவார். திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையிலும்கூட பொருளாதார அளவுகோலை கொண்டு வர முயன்று, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் பின்வாங்கினார். எனினும், கிராமத்தின் அன்றாட நிர்வாகத்துடன் தொடர்புடைய மணியம், கர்ணம், கணக்கப்பிள்ளை உள்ளிட்ட பதவிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த செல்வாக்கான சாதிக்காரர்களே பரம்பரை முறையில் இருப்பதையும், அதனால் அவர்களின் சாதிக்கே சாதகமாக செயல்படுவதையும் உணர்ந்து, அந்தப் பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்டியர் எம்.ஜி.ஆர். ஒரே உத்திரவில் பரம்பரை பதவிகளை காலி செய்து, கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் இடம்பெற வழிவகுத்தார்.

இது குறித்து ஈரோட்டில் 17 நவம்பர் 1980ல் புரட்சித்தலைவர் பேசியது:
"தமிழகத்தில் கிராம முன்சீப், கர்ணம் போன்ற கிராம அதிகாரிகள் பதவி ஒழிக்கப்பட்டுள்ளது.
பல நுாற்றாண்டுகளாக இருந்து வந்த அரசர் பதவியை வல்லபாய்படேல் ஒழித்தார்.
ஆனாலும் கிராம அதிகாரிகளின் பாரம்பரியம் ஒழியவில்லை.
கிராம அதிகாரிகள் மீது பல புகார்கள் வந்தன என்ற போதிலும் அவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறுதலும் செய்ய இயலவில்லை. கிராம அதிகாரிகளுக்குப் பதிலாக வேலை இல்லாத பட்டதாரிகளும், படித்த இளைஞர்களும் அந்தப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.
இதனால் வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" இவ்வாறு முதல்வர் புரட்சித்தலைவர் கூறினார்... நன்றி, நண்பர்கள் குழு...

orodizli
14th June 2018, 09:14 AM
காலங்கள் கடந்து
மங்கா புகழோடு வாழும்
சரித்திர நாயகன்

புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
ஜானகி அம்மாள்

திருமணநாள் இன்று
14=6=1962

குழுவின் சார்பாக
இனிய
திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே...💐

orodizli
14th June 2018, 09:18 AM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்து விடு
நல்ல அன்புக்கும் பண்பு க்கும்
வளைந்து கொடு

"டைரக்ஷனுக்கு படிக்கணுமா? அதை பற்றி உனக்கு என்ன தெரியும்?" என கேட்ட #எம்ஜியார் அந்த இளைஞர் தான் பின்னாளில் புகழ் பெற்ற இயக்குனர்.
கோவையைச் சேர்ந்த மாணவன் அவன். அவனின் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் புகழ் பெற்றவர்.
அவன் கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவில் சேர ஆசைப்பட்டான். அதற்காக திரைப்படக்கல்லூரியில் கேமராமேன் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தபோது, அதற்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணத்தால் டைரக்ஷன் கோர்ஸுக்கு விண்ணப்பித்தான்.
அவன் தந்தை அவனை சென்னை கம்யூனிஸ்ட் அலுவலகமான-பாலன் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். சென்னையில் அவன் இன்னார் தோழரின் மகன் என்றதும் தோழர் கல்யாண சுந்தரமே அவனுக்காக முயற்சிகள் மேற்கொண்டார்.
"என்ன வேலைக்கு தம்பி?" என அவனைக் கேட்டார்.
அவன் 'இயக்குநர் படிப்புக்கு' என்றான்.
அவர் "நமக்கு அங்கு யாரையும் தெரியாதே" என கூறிவிட்டு, "சரி ஒரு தோழர் மூலம் பார்ப்போம்" எனகூறினார்.பின்னர்
ஒரு தோழரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
அந்த கார் தலைமைச் செயலகம் சென்றது.
அங்கு ஒரு அறைக்கு அந்த தோழரும் வாலிபனும் சென்றனர்.
அந்த அறை முகப்பில் 'முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்ற போர்டு காணப்பட்டது.
இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். எம்.ஜி.ஆர் அந்த தோழரைக் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.
தோழர் சொன்னதைக் கேட்டுவிட்டு அந்த வாலிபனிடம் "டைரக்ஷனுக்கு படிக்கணுமா? டைரக்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என கேட்டார்.
"அது பத்தி தெரியாது. இனிமேதான் கத்துக்கணும்" என்றான்.
அவன் முதுகில் தட்டி. "உனக்கு ஏற்பாடு செய்கிறேன்.நன்றாக படி" என கூறி அனுப்பி வைத்தார்.
வெளியே வந்ததும் அந்த தோழரிடம், "எம்.ஜி.ஆரே கட்டி பிடிக்கிற அளவுக்கு நீங்க பெரிய ஆளா? உங்கள் பெயர் என்ன?" என கேட்டான் அந்த வாலிபன்.
அதற்கு அந்த தோழர் "நான்தான்
வழக்கறிஞர் என்.டி.வானமாமலை.
MGR-ருக்கு எதிரா, M.R.ராதாவுக்காக வாதாடிய வக்கீல்" என்றார்.
இதைக்கேட்டதும் அந்த வாலிபன் மிகுந்த ஆச்சரியத்துடன் "அப்போ எம்.ஜி.ஆர் உங்களைக் கட்டிப்பிடித்து ரொம்ப மரியாதையாக பேசினாரே" என்றான்.
"அதுதான் #MGR -ரின் பெருந்தன்மை"
என்றார் தோழர்.
அந்த வாலிபன்தான் பின்னாளில் ரஜினியை 'எஜமான்' படத்திலும்,
கமலை 'சிங்காரவேலன்' படத்திலும்,
விஜயகாந்தை ' சின்ன கவுண்டர் படத்திலும் இயக்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
நன்றி : Vaidyanathan Krishnamurthi அவர்களின் பதிவிலிருந்து... Thanks Friends...

Richardsof
14th June 2018, 06:29 PM
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!


'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல் லைஃப்க்கு மட்டுமில்லை, ரியல் லைஃப்க்கும் சேர்த்து தான்.


படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா இருந்து போய் சேர்ந்தாரு! ஆனா அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொண், இறந்தாலும் ஆயிரம் பொண், ஆயிரத்தில் ஒருவன்!

சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!

அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் மொட்டத்தலை ஷெட்டின்னு ஒரு நடிகர்! இதோ இப்ப இந்த இரண்டு கிளிப்பு, ஒன்னு மனோகரோட, இன்னொன்னு ஜஸ்டினோட! அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!

அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!

அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க! இப்ப இந்த மாதிரி பொருட்காட்சி, தீம் பார்க்குல புடிச்சா அவ்வளவு சுவராசியம் இல்லை,ஏன்னா அந்த காலத்திலே ஜனங்க ஊரை விட்டு வெளியே போகலை, இது மாதிரி படக்காட்சிகளை 'பே'ன்னு விழிபிதுங்க பார்த்தாங்க, ஆனா இப்ப சும்மா நாலு கோடு எழுதப்போறேன்னு உலகத்தை சுத்தி வர்றவங்களுக்கு இதெல்லாம் ஒரு ஆச்சிரியமே இல்லை! முக்காவாசி பேரு பார்த்திருப்பாங்க! மேற்கொண்டு மக்கள் கையிலே காசு பொறள ஆரம்பிச்சிருச்சி, அவங்களே போய் பக்கத்திலே சிங்கப்பூரு, மலேசியா, ஹாங்காங்குன்னு பார்த்துட்டு இந்த அதிசியங்களை பார்த்துட்டு வந்துடறாங்க! அதனாலே தான் இப்ப வெளிநாட்டுல போயி படம் புடிச்ச நம்மூருல் இருக்கிற நெருக்கடியான ரோட்டை காமிக்கிற மாதிரி, 'நியூயார்க் நகரிலே'ன்னு தெருத்தெருவை காமிக்கிறாங்க!

அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு! கடைசியிலே அந்தம்மாவை தங்கச்சியாக்கிட்டு போயிடுவாரு!





பச்சைக்கிளி முத்துச்சரம்-

என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே ரசிச்சு, ரசிகனா இருந்த எங்கள் தலைவர் எம்ஜியார் பத்தி இது வரை சொல்லவே இல்லியே, என்னோட அரிதாரத் தொடர்ல அப்படியே கொஞ்சம் தொட்டு வச்சேன், நான் அவரோட ரசிகர்னு, ஆனா அதிகமா எழுதலை அதான்!

இந்த தலைப்பிலே வரும் பாடல், அப்ப ரொம்ப பாப்புலர், 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே நம்ம தலைவர் தாய்லாந்து நடிகையோட ஆடிப்பாடி வரும் கனவுப்பாடல்! இந்த படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தப்படம் 70களின் தொடக்கத்திலே வந்த ஒன்னு, எனக்கு தெரிஞ்சு இந்த படம் அப்பே எவ்வளவோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு, என்ன பார்க்கிறீங்க, அப்ப எனக்கு தெரிஞ்சு இந்த படம் திருச்சி பேலஸ் தியோட்டர்ல வெளி வந்து, அந்த தியேட்டர்ல வேலை செஞ்ச, எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு, இந்த படம் ஓடின அத்தனை நாடகளிலேயும் ப்ளாக்ல டிக்கட்டு வித்தே தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கதை உண்டு! அப்படி பல சாதனைகளை முறியடிச்ச படம்.


இந்த படம் வந்தப்ப தான் எம்ஜியார் அரசியல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த படம் வந்தா நம்ம கட்சி அம்பேல்ன்னு பயத்து நடுங்கின கலைஞரு இந்த படத்தோட நெகடிவ்களை லேபிலேயே கிழிச்சு போட்டு படம் வெளிவரவிடாம தடுக்க பார்க்கிறாருன்னு அப்போ ஒரு வதந்தியே சுத்தி வந்தது. அதைக்கூட நம்ம மணி இருவர் படத்திலே அப்படி இப்படின்னு காமிச்சு கடைசியிலே, ஒரு நடிகனோட புது படம் வெளியாவதை பாத்து பயப்படும் நிலமையிலே நம்ம கட்சியில்லேன்னு சொல்ற மாதிரி ஒரு டைலாக் வச்சு, கலைஞரை நல்லவரா காட்டி இருப்பாரு, ஏன்னா இருவர் படம் வந்தப்ப திமுக ஆட்சியிலே இருந்த நேரம்! ஆனா இது வதந்தியா, இல்லை உண்மையான்னு எனக்கு தெரியாது, ஆனா 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வர்றதுக்கு முன்னே நல்லொதொரு பப்ளிசிட்டி, இதுகூட எம்ஜியாரின் மார்க்கெட்டிங் சாதுர்யம் தான்!

இந்த மாதிரி அந்த காலத்திலே, சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு,
அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) ,

அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!

அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!

அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு! இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)

மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு காமிடி பண்ணி இருப்பாரு! முதல்ல காமடியா தான் தெரிஞ்சுது, அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! ஆனா அந்த இடி, மின்னல்லருந்து வரும் மின்சாரத்தின் அளவை கையாள நமக்கு எவ்வளவு பெரிய மின்தடை(Insulation) வேணும் தெரியுமா? சொன்னா ஆச்சிரியப்படுவீங்க , இப்ப இருக்கும் பீங்கான் போன்ற பொருட்களின் தடிமன் ஏழு கிமீ இருந்தா தான் அதை கையாள முடியும், 'Insulation'ஐ விடுங்க, அதை கையாள தேவையான மின்கடத்துவான்(Conductor), அதை விட அதிகம். ஆனா படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!

அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்!

முதல்ல அண்ணன் எம்ஜியாருக்கு மஞ்சுளா ஃபியான்ஸி, அவங்களை கூட்டிக்கிட்டு முதல்ல நம்ம தலைவர் போற இடம் ஹாங்காங்!அதாவது இந்த பாட்ல வர்ற கிளிப்பு பாருங்க, விக்டோரியா பீக்லருந்து ட்ராம்ல வர்ற மாதிரி! இதை நான் 92ல முதமுதல்ல போயி ஏறி பார்த்தப்ப நிஜமாலுமே இந்த படம் ஞாபகம் தான் வந்துச்சு, இங்கேருந்து சுத்துபட்டு கிராமம் எல்லாம் தெரியுதுன்னு சொல்றமாதிரி எல்லா தீவுகளும் தெரியும்! அது மாதிரி 'கோவலூன்' சொல்ற தீபகற்ப பூமி நல்லா தெரியும்! அப்படி ட்ராம்ல ஏறி மஞ்சுளா ஆன்ட்டியோட ஹனிமூன் ட்ரிப்பு போற மாதிரி போயி, அப்பறம் இந்த பக்கம் ஹிமாச்சல் வந்து 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்'ன்னு கொண்டாட்டம் போட்டா நமக்கு அப்படி கொண்டாட்டம் போடனும்னு தோணுமா தோணாதா?


இந்த படம் தான் பின்னாடி எல்லாரும் வெளிநாடு போய் படம் புடிக்க பாலபாடம் சொல்லி கொடுத்தது!நம்ம எம்ஜியாரு ஸ்டைல்ல தான் அப்புறம் போன ரஜினியும் செஞ்சாரு! அதுமட்டுமில்லை எல்லா பாடல் காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும் மனசை அப்படியே அள்ளூம்! மூணு கதாநாயகி, எல்லாமே காதல் பாடல்கள்னு போய்ட்டா கொள்கைப்பாடல்களுக்கு என்ன பண்றது, அதுக்குத்தான் 'சிரித்து வாழவேண்டும்' பாட்டு! இன்னும் இதை பத்தி நிறைய சொல்ல வேண்டியிருக்கு! எழுதுனா பதிவு நீளமாயிடும்,

COURTESY NET

Richardsof
14th June 2018, 06:37 PM
Ulagam Sutrum Vaaliban (1973)

This film, starring MGR, is one of the biggest box-office hits in the history of Tamil cinema and ran for 25 weeks, not only in India, but also in places like Sri Lanka, U.S, Canada and the United Kingdom. Assisted by Pa. Neelakantan, the film was directed by M. G. Ramachandran himself for his family firm MGR Pictures Private Limited.

This commercial entertainer had several songs and dance numbers featuring both classical Indian and western styles. It also had many fight sequences that were shot abroad in the Far East, with the highlight being the climax which was set in Japan.

Written by R.M. Veerappan, Vidwan Ve. Lakshmanan and S.K.T. Sami, the film had dialogues by K. Sornam.

The story is about Indian scientist Murugan (MGR), who has recently discovered how to store a part of the energy unleashed by lightnings, and reports this in theHong Kong scientists’ conference. He subsequently announces that he would not reveal his discovery, as the world is on the brink of World War III and his research may be used for destructive purposes.

Scientist Bairavan (S.A. Asokan) accuses Murugan of false claims. Murugan then conducts a demonstration, and at the end of it, destroys the vital research notes, which upsets all the scientists. Bairavan tries to negotiate with him to sell the research to a foreign country, but Murugan refuses.

Murugan then departs with his girlfriend, Vimala (Manjula) on a world tour. He discloses to Vimala that he only pretended to destroy the research notes, and that he has kept them in a safe place. He has plans of using them further, so that his research is used for productive purposes. Bairavan, who has been following them, overhears this, and plans to steal the research notes.

While in Singapore, Bairavan shoots Murugan but he does not die. Murugan, however, suffers from a mental disorder as a result and is subsequently taken into Bairavan’s custody.

Soon, Vimala too is abducted by Bairavan, who expects the former to cure Murugan, so he can steal the research documents.

Raju (MGR), a CBCID officer and Murugan’s younger brother, arrives in Singapore in search of his brother. Here, he meets a classic dancer (Chandrakala), who soon falls in love with him.

The secret research documents are hidden in a locket; all the villains go after it, but nobody succeeds. Two guys (Asokan and Gopalakrishnan) even try to kill MGR with their own brand of weapons, but are finally killed by the same arms.

The film’s melodious music, composed by maestro M.S. Viswanathan (aided by Joseph Krishna’s orchestration), was a major highlight. There are as many as 15 songs, with many of them not finding a place in the movie. The lyrics were written by Kannadasan, Vaali, Pulavar Vedha and Pulamaipithan. The songs were rendered by S. P. Balasubrahmanyam, K. J. Yesudas, Sirgazhi Govindarajan, P. Susheela, S. Janaki, L. R. Eswari and some unnamed Japanese singers.

Richardsof
14th June 2018, 06:44 PM
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - எம்.ஜி.ஆர்.






தமிழ்த் திரைப்பட உலகில், வரலாறு படைத்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கப் படம், உலகம் சுற்றும் வாலிபன்.


நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என, திரை உலகின் முப்பெரும் பரிமாணங்களில், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட படம், உலகம் சுற்றும் வாலிபன்.
வெளிநாடுகளில் நடப்பது போல கதையை அமைப்பது சுலபம். ஆனால், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கே நடிகர்களை அழைத்துச் சென்று, படப்பிடிப்பை நடத்தி, அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவது என்பதை, அந்த நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சுமார், 40 ஆண்டுகளுக்கு முன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, பாங்காக் மற்றும் சிங்கப்பூர் என, தென் கிழக்காசிய நாடுகளில் நடந்த உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு அனுபவங்களை, 'திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்' எனும் தலைப்பில், 'பொம்மை' இதழில், எம்.ஜி.ஆர்., தொடராக எழுத, அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


முதன் முறையாக வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய போது, எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இன்றைய வாசகர்களுக்கு மட்டுமல்ல; பட உலகினருக்கும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகம் சுற்றும் வாலிபன். படத்துக்காக வெளிநாடு செல்ல இருந்த சமயம்...
'திரை கடலோடியும், திரவியம் தேடு' என்று, பெரியவர்கள் சொன்னாலும், சொன்னார்கள்; அந்தச் சொல், என்னை, எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தது என்பதை எண்ணும் போது, சிரிப்பு வருகிறது. ஏனெனில், பணம் சம்பாதிக்கச் சென்றேனா, செலவு செய்ய சென்றேனா என்பதை நினைத்தல்ல; கையில் போதிய பணம் இல்லாத நிலையில், என்னை நம்பிய, கலைஞர்களை, பரிதாபமான நிலைக்கு ஆளாக்கும், விபரீத சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றேன் என்று தான், சொல்ல வேண்டும்.


ஆம்... அந்த அன்புள்ளம் கொண்ட, நல்ல நண்பர்களை, கையில் பணமில்லாத ஏழைகளாக, உறவினர்களில்லாத அனாதைகளாக, என்னுடைய எந்த முடிவிற்கும் அசைய வேண்டியவர்களாக, சுருங்கச் சொன்னால், என்னைத் தவிர, வேறு துணையற்றவர்களாக ஆக்கிவிட்ட நிலையில், அவர்களை, என்னோடு வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்கு, அழைத்துச் சென்றேன்.


உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக, ஜப்பானுக்கு பயணமான அன்று,
காலையிலேயே அண்ணா நினைவிடத்திற்கு சென்றேன். முன்பு ஒருமுறை, இலங்கையில் நடந்த பாராட்டு விழாவுக்கு சென்ற போது, நேரில் வந்து, எனக்கு மாலையணிவித்து வாழ்த்திய அந்த அன்பு இதயம், இன்று மீளா துயிலில் ஆழ்ந்து விட்டது.
அவருடைய பாதத்தை, என் இதயத்தால் தொட்டேன். என் உள்ளமெல்லாம் சிலிர்க்க, ரத்த நாளமெல்லாம் துடிக்க, கண்கள் குளமாக, விரல்கள் நடுங்க, அந்த நினைவு மேடையில், அண்ணா கால்களை வருடினேன்.

அண்ணா ஏதோ சொல்வது போல், ஒரு பிரமை...
'தம்பி... தமிழகத்துக்கோ, தமிழ்ப் பண்புக்கோ, இந்திய துணைக் கண்டத்து உயர்வுக்கோ, ஏதும் பங்கம் வராமல் நடந்து கொள்!'
இப்படி அண்ணா சொன்னது போல், ஒரு எண்ணம் தோன்றியது.
ஏன் சொல்லியிருக்கக் கூடாது... அவர் எத்தனையோ முறை பேசி, எழுதி, நமக்கெல் லாம் அறிவுறுத்தியது தானே!
இருப்பினும், அன்று, அது ஒரு புதிய கட்டளை போல், மனத்தெளிவை உண்டாக்கும் அறிவுரை போல் இருந்ததுடன், எனக்கு புத்துணர்வையும், புது தெம்பையும் அளித்த வரமாகவும் இருந்தது.
கிடைத்தற்கரிய பெரு நிதியை பெற்று விட்டவனாக நான் மாறினேன். அந்தத் துணிவோடு நேரே என் உடன் பிறந்த அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை காணச் சென்றேன்.
அண்ணனின் காலில் விழுந்து வணங்கினேன். தழுதழுத்த குரலில் அவர், 'உடம்பை ஜாக்கிரதையாக பாத்துக்க; எதுக்கும் அவசரப்படாதே. நீ குற்றமில்லாதவனா இருக்கலாம். உன்னைச் சுற்றி இருக்கிறவங்க எல்லாரையும் அப்படி எதிர்பார்க்காதே, எல்லாரையும் நம்பிடாதே; அதுக்காக எல்லாரையும் சந்தேகப்படாதே. எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு. அதனால், அமைதியா இருந்து, எச்சரிக்கையா நடந்துக்க. படப்பிடிப்பிலே கவனமா தொழில் செய்யணும். முடிஞ்சா அடிக்கடி கடிதம் போடு...' என்று கூறினார்.
இந்த ஆசியை தாய், தந்தை, ஆசான் என, மூன்றுமாக இருந்து வாழ்த்தி வழங்கியதை, என் பாதுகாப்பு கவசமாக்கிக் கொண்டு புறப்பட்டேன்.
விமான நிலையத்தில் அன்பு தோழர்களின் நெரிசல் இருக்கும் என்று நினைத்து, வீட்டிலேயே வழியனுப்ப வந்திருந்த நண்பர்களிடம், மாலை, மரியாதையை ஏற்று,ஆசி பெற்றுக் கொண்டேன்.
எந்த வித தொழில் தொடர்பு இல்லாவிடினும், என் மீது உடன்பிறப்பு போன்ற பாச உணர்வு காட்டி, எப்போதும், தனித்தன்மை வாய்ந்த அன்புணர்வோடு பழகும், என்.டி.ராமராவ், என் வீட்டிற்கு வந்து, மாலை அணிவித்து, வாழ்த்தினார்.
அவரிடம் ஆசி பெறுமாறு, படத்தில் நடிக்க வந்த சந்திரலேகா, மஞ்சுளா மற்றும் லதா ஆகிய மூன்று கதாநாயகிகளையும் வணங்கச் சொன்னேன்.
இம்மூன்று பெண் களும், தங்களுடன் எந்த உறவினரையும், அழைத்து வர இயலாத நிலை. எனவே, என் வாழ்க்கைத் துணைவி ஜானகி தா,ன் அவர்களுக்குத் தாய், தமக்கை, அண்ணன் எல்லாமாக இருந்தார்.
இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு, இருவரும் மலர் மாலைகளை அணிவித்து, வாழ்த்தினர். கிருஷ்ணன் அதிகமாகப் பேச மாட்டார். அப்படி ஏதாவது பேசினால், அது, ஊக்கம் தருவதாக இருக்கும். 'கொஞ்சங் கூடப் பயப்படாதீங்க. ரொம்ப நல்லாப் படம் எடுத்துக்கிட்டு வருவீங்க...' என்று கூறினார் கிருஷ்ணன். வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து வாழ்த்தினார் இயக்குனர் பந்துலு.
'நிறைய நாளாகுமோன்னு பயப்படாதீங்க; நல்லதைப் பாத்தா விட்டுடாதீங்க... நீங்க எங்கே விடப்போறீங்க! நான்தான் மொதல்ல போயி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர்ல படம் பிடிச்சேன். அப்புறத்தான் நீங்க, அடிமைப் பெண் படத்துக்கு போனீங்க. நான் எடுத்த மாதிரியா எடுத்தீங்க...ஒரு சந்து, பொந்து விடாம படம் பிடிச்சிட்டு வந்து, என்னையே அசர வெச்சுட்டீங்களே... ஜப்பானெல்லாம் போனா விட்டுடுவீங்களா... போய் வெற்றிகரமாக முடிச்சுட்டு வந்துடுங்க சுவாமி...' என்று வாழ்த்தினார். அவர் எப்போது என்னைக் கண்டாலும், 'என்ன சுவாமி, சவுக்கியமா...' என்று கேட்பது வழக்கம்.
நாகேஷும் வீட்டிற்கே வந்து விட்டார். அவரோடு, அவருடைய நெருங்கிய நண்பர், நடிகர், ஸ்ரீகாந்த்தும் வந்திருந்தார்.
ஸ்ரீகாந்த் தனியாக என்னிடம், என் கையைப் பிடித்து கண் கலங்கியவாறு, 'நாகேஷை உங்கக் கிட்டே ஒப்படைக்கிறேன். நீங்க தான் உங்க தம்பி போலப் பாத்துக்கணும்...' என்றவர், 'அவன் நல்ல நடிகன்; ஆனா, ஒண்ணும் தெரியாதவன், நல்லவன்...' என்றார்.
இதை அவர் சொல்வதற்குள்ளே, என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் எத்தனை, எத்தனை! நான் வயது முதிர்ந்த பின்பும் கூட, என் தாயார், பிறரிடம் என்னைச் சிறு குழந்தையாக பாவித்து, ஒப்படைப்பார்.
அந்த அன்புத் தாயுள்ளத்திற்கும், இந்த நண்பரின் அன்புள்ளத்திற்கும் வித்தியாசம் காண முடியவில்லை! இதைப்பற்றி நினைத்தவாறே, அவர் தொடர்வதற்கு வாய்ப்பு கொடுக்காமல், 'கொஞ்சங்கூடக் கவலைப்படாதீங்க, நான் இருக்கேன்; பாத்துக்குறேன்...' என்று கூறினேன்.
இப்படி உணர்ச்சி குவியலாக இருந்த நாங்கள், விமான நிலையத்துக்கு புறப்பட்டோம்.
விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில், என் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்களும், அன்புத் தோழர்களும் கொடிகள், தோரணங்களைக் கட்டி, மாலைகளோடு காத்திருப்பதைக் கண்டேன்.
நாங்கள் சென்ற வேனிலிருந்து எழுந்து நின்றோம்.
நாகேஷ், அசோகன், மூன்று கதாநாயகிகள், நான் உட்பட எல்லாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல், வாழ்த்துடன், மாலைகளும் தந்தனர் மக்கள்.
இப்படி நெரிசல் ஏற்படும் அளவிற்கு, மக்கள் கூட்டமாக கூடுவர் என்று, நான் எதிர்பாக்கவில்லை. ஏனெனில், நானே, 'என் தொழில் பயணத்தை விழாவாக்க வேண்டாம்...' என்று, முன்பு ஓர் அறிக்கை வெளிட்டிருந்தேன். 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்பது போல், மக்கள் கூட்டம் கூடி விட்டது.
விமான நிலையத்தில் இறங்கினேன். கலையுலகப் பிரமுகர்களும், நண்பர் ஜெமினிகணேசன் முதலானவர்களும் மாலை அணிவித்தனர். அப்போது, கருணாநிதி வந்தார்; மாலையை என் கழுத்தில் அணிவித்தார். நான் உணர்ச்சிவசப்பட்டிருந்தபோதே, அவர் அதிகாரிகளிடம், வண்டியை நேராக விமானத்திற்கு அருகில் கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். நான் வேனில் ஏற்றப்பட்டேன்; வண்டி நகர்ந்தது.
விமானத்தின் உள்ளே சென்று, உட்கார்ந்தேன். திடீரென வெளியே இருந்து, போலீஸ் அதிகாரிகள் சிலர், விமானத்திற்குள் வந்தனர்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,

Richardsof
14th June 2018, 08:51 PM
துக்ளக் இதழில்,
நான் அண்மையில் படித்த – திருமதி ராதிகா அவர்களின்
பேட்டியின் இடையே, இவர்கள் இரண்டு பேரைப்பற்றியும்
திருமதி ராதிகா கூறிய கருத்துக்கள்.

அவற்றை படிக்க வாய்ப்பில்லாத நமது வலைத்தள
நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே தருகிறேன்….

—————

கேள்வி – உங்கள் அப்பாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும்
பகை இருந்தது. நீங்கள் உங்களது சினிமா வாழ்க்கையில்
எம்.ஜி.ஆரைச் சந்தித்தது உண்டா ? அப்போது உங்கள்
மனநிலை எப்படி இருந்தது…?

ராதிகா – “சிறைச்சாலை சிந்தனைகள்” என்று
ஒரு புத்தகத்தில் தெளிவாக என்னுடைய அப்பா கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் பகைவர்கள் இல்லை.
நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள்.

அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் அந்த
அசம்பாவிதம் நடந்து விட்டது. அந்த புத்தகத்தில் கூட
இதைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். “கையில் துப்பாக்கி கிடைத்தது.
சுட்டு விட்டேன். கம்பு கிடைத்திருந்தால் அடித்திருப்பேன்”
என்று எழுதி இருக்கிறார்.

“பெற்றால் தான் பிள்ளையா ” என்ற படத்தில் நடிக்கும்போது
தான் இருவருக்குள்ளும் சண்டை வந்திருக்கிறது. அந்தப்பட
ஷூட்டிங் சத்யா ஸ்டூடியோவில் நடந்தபோது நான் போயிருந்தேன்.
எங்களுடைய குடும்பத்தில் எல்லாருக்கும் எம்.ஜி.ஆரை ரொம்ப
பிடிக்கும். அவருடைய படங்களை விரும்பி பார்ப்போம். அந்த
ஷூட்டிங்கில் என்னை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தார்.
அதற்காக ரெண்டு நாள் நான் என்னுடைய முகத்தை கழுவாமல்
வைத்திருந்தேன். சின்ன வயதில் அந்த அளவுக்கு அவர் மீது
எனக்கு கிரேஸ் இருந்தது.

அவரை துப்பாக்கியால் என்னுடைய தந்தை சுட்டதற்குப் பிறகு
நாங்கள் யாரும் இங்கே இல்லை. அந்த சமயத்தில் தான்
ஸ்ரீலங்கா சென்று ஹாஸ்டலில் சேர்ந்து படித்தேன்.

நான் நடிகையான பீறகு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பொறுப்பு
ஏற்றவுடன் பாரதிராஜா ஒரு விழா எடுத்தார். அந்த நிகழ்ச்சியில்
நான் எம்.ஜி.ஆரை மீண்டும் சந்தித்தேன்.

பிறகு ஒரு சமயம், நான் சம்பந்தப்படாத ஒரு படத்தில்,
தயாரிப்பாளர் என்று என்னுடைய பெயரை யாரோ பயன்படுத்தி
விட்டதால், நான் ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டேன்.
அந்த சமயத்தில் யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்து,
கடைசியில் நேராக எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீட்டிற்கே சென்று
விட்டேன்.

என்னை அங்கு எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்து
விட்டார். என்னுடைய பிரச்சினையை அவருக்கு சொன்னேன்.
அவரால் பேச முடியாத காரணத்தால், சைகை செய்தார்.
பக்கத்தில் இருந்த நெடுஞ்செழியன், ” நீ வீட்டிற்கு போ;
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ” என்று சொன்னார்.

ராமாவரத்திலிருந்து, நான் தி.நகர் வருவதற்குள் அத்தனை
பிரச்சினையும் சரியாகி விட்டது. நெருக்கடி அளித்த அனைத்து
வினியோகஸ்தர்களும், என் வீட்டிற்கு வந்து மன்னிப்பு
கேட்டுச் சென்றார்கள்.

அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். மிகவும் நல்ல குணம் கொண்டவர்.
என்னுடைய அப்பா எதையும் யோசிக்காமல் செய்யும் குணம்
உடையவர். இந்த புத்தகத்தை ( சிறைச்சாலை சிந்தனைகள் )
படிக்கும்போது, அது இன்னும் தெளிவாக எனக்கு புரிகிறது.
அவர், அவருடைய கண்ணோட்டாத்திலேயே வாழ்க்கையை
வாழ்ந்து முடித்து விட்டார்.

————

Richardsof
14th June 2018, 08:54 PM
1956- அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது அரபீய சரக்கு. எம்.ஜி.ஆருக்கு இதெல்லாம் அல்வா சப்ஜெக்ட். புகுந்து விளையாண்டு இருப்பார். எம்.ஜி.ஆர் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகலாம், பொழுதைப் போக்கிவிட்டு வரலாம்! மதுரை வீரன். இதில் எம்ஜிஆரை மாறுகால், மாறுகை வாங்கிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டமான தமிழ் சினிமா பிம்பம் உருவாகிவருகிற காலம். பின்னால் ஒரு படத்தில் அவர் செத்துப்போவதாகக் காட்ட, படம் படுத்துவிட்டது. இந்தப் படத்தில் கூட, தண்டனைக்குப் பிறகு அவர் இருதேவிகளுடன் தெய்வமாக மீண்டும் வந்துவிடுவார். "சுபம்" என்று கடைசியில் போடுவார்கள்.
Courtesy net

Richardsof
14th June 2018, 08:57 PM
எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம்
1967 தேர்தலின் பொது குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர இயலவில்லை. 1967 தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம். கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். ராஜாஜி சில மேடைகளில் காமராஜரோடு இணைந்து பேசுகிறார். சிவாஜி கணேசன், மூப்பனார், குமரி அனந்தன், நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி, ப. ராமசந்திரன் ஆகிய பல தலைவர்களும் காமராஜரின் பிரதிநிதிகளாக பிரச்சாரம் செய்கிறார்கள்.


எம்ஜி ஆர் கிராமம் கிராமமாக செல்கிறார். மக்கள் கூட்டத்தில் நீந்தி வருகிறார். எங்கும் அவரை பார்க்க மக்கள் வெள்ளம், இரண்டு நாள் வரை தாமதமாக வருகிறார். காலையில் பத்து மணி என்றால் மறுநாள் இரவு 11.00 மணிக்கு வருவார். அதுவரை மக்கள் கூட்டம் அந்த இடத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். திடீரென்று இரண்டு மூன்று கார்கள் ஒன்றாக சென்றால் தூரத்தில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் எம்ஜி ஆர் வந்து விட்டார் என கத்திக் கொண்டே ரோட்டருகே வருவதும் வந்து ஏமாற்றத்தோடு திரும்பி போவதும் அடிக்கடி நடக்கும்.


கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், வேனிலிருந்து பேசி விட்டு போவார். எம்ஜி ஆரால் குறித்த நேரத்தில் வர இயலாது என்பதால் கூட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகள் தோன்றி வியாபாரம் களைகட்டும். திமுக முன்னணி கிராம தலைவர்களை சுற்றி கூட்டம் விசாரித்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கும் எம்ஜி ஆர் எப்போது வருவார் என தெரியாது. எதாவது ஒரு பதிலை சொல்லி கொண்டிருப்பார்கள்.

கிராமங்கள் தோறும் திருவிழா கோலம். எங்கு பார்த்தாலும் திமுக கொடிகளும், ஒலிபெருக்கி சத்தங்களும் என ஒரே ஆரவாரம். இறுதியில் இதோ வந்துவிட்டார் பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் என ஒலிபெருக்கி சத்தமிட்டு கொண்டு முன்னே ஒரு கார் செல்ல தொடர்ந்து நாலைந்து கார்கள் தொடர்ந்து ஒரு வெள்ளை வேனில் நிஜமாகவே வந்து விட்டார் புரட்சி தலைவர். இரண்டு நிமிடம் பேசி விட்டு மின்னல் போல தோன்றி மறைவார். யாரும் நல்ல பார்த்ததாக சொல்ல முடியாது.

பக்கத்துக்கு ஊருக்கு சென்று மீண்டும் பார்ப்பது, கூட்டம் முழுவதும் தேர்தல் முடியும் வரை அவரை பற்றியே பேசி கொண்டிருக்கும். இடையில் சிவாஜி, காமராஜர். கருணாநிதி யார் வந்தாலும் எம்ஜி ஆருக்கு வந்த கூட்டமும் தாக்கமும் இருக்காது. இந்த நிகழ்வுகள் நடக்கும் பொது எனக்கு எம்ஜிஆர் மீது எந்தவித ஈர்ப்பும் கிடையாது. நான் சிவாஜி ரசிகன். எம்ஜிஆரை பார்க்க எல்லோரும் போகும் பொது விருப்பமில்லாமல் நண்பர்களுடன் போனவன் நான். ஆனால் அவரை பார்த்ததும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உடல் புல்லரிப்பதை நானும் உணர்ந்தேன். அப்படி ஒரு தோற்றம்.

Richardsof
14th June 2018, 08:59 PM
மக்களின் மனதில் சிம்மாசனம்
Charisma என்னும் ஆங்கில வார்த்தைக்கு சரியான உதாரணம் எம்ஜிஆர்தான். நான் அவரது பரங்கிமலை தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கத்தில் இப்போது வசித்து வருகிறேன். இன்றைக்கும் முகம் தெரியாத கட்சியில் எந்த பலனையும் அனுபவிக்காத தொண்டர்கள் அவரது பிறந்த நாள் அன்று சாலைகளில் அவரது படத்தை வைத்து மாலை அணிவித்து பார்க்கிறவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்குவதை இப்போதும் பார்த்து கொண்டிருக்கிறேன். இது எப்படி அவரால் சாத்தியமாயிற்று.

கேரளாவை சேர்ந்தவர், கண்டியில் பிறந்து சிறு வயதில் அப்பாவை இழந்து, தமிழ்நாடு வந்து படிப்பை தொடர முடியாமல், நாடகத்தில் நடிக்க தொடக்கி சினிமாவில் நுழைந்து மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அவரது வாழ்வு உலக வரலாற்றில் யாருக்கும் அமைய வில்லை. என்டிஆரை கடவுளாக பாவித்த ஆந்திராவில் அவர் இரண்டாவதாக சிவபார்வதியை திருமணம் செய்த போது அவரது மருமகன் சந்திரபாபு நாய்டுவிடம் ஆட்சியை பறிகொடுத்து திரும்பவும் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களை சந்திரபாபு நாயுடு தங்க வைத்திருந்த ஹோட்டலுக்கு பஸ் கூரையில் அமர்ந்து சென்று அழைத்து பார்த்தும் யாரும் உடன் வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற ஆட்சியை இழந்தார். எம்ஜி ஆர் ஊழல் செய்தார் என எதிர் கட்சிகள் குறிப்பாக கருணாநிதி சொல்லும் போது ஒருவர் கூட நம்ப தயாராக இல்லை. அவர் அப்படி செய்ய மாட்டார். அவருக்கு ஊழல் செய்ய அவசியம் இல்லை. அவர் சொந்த பணத்தை தான் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குகிறார் என குற்றசாட்டை வந்த வேகத்தில் நிராகரித்ததை பார்த்திருக்கிறேன்.


சேரன்மகாதேவி தொகுதி
எம்ஜி ஆர் மேல் மக்களுக்கு இருந்த அன்பு தமிழ்நாடு முழுவதும் இருந்தாலும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மட்டும் சற்று குறைவாக இருந்ததாக ஞாபகம். அங்கு காமராஜர் மீது ஒரு வித பக்தி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். மீண்டும் 1971 தேர்தலுக்கு வருவோம். என்னுடைய சேரன்மகாதேவி தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பாக திரு D.S.A. சிவபிரகாசமும், திமுக சார்பில் திரு ரத்தினவேல் பாண்டியன் என்பவரும் போட்டியில். திரு ரத்தினவேல்பாண்டியன் திமுகவின் மாவட்ட செயலாளரும் ஆவார். இவர்தான் பின்னாளில் உச்ச நீதி மன்றத்தின் நீதியரசராக பணியாற்றியவர். திரு சிவப்பிரகாசம் முக்கூடல் சொக்கலால் பீடி அதிபரின் மைத்துனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான D.S. ஆதிமூலம் என்பவரின் மகனுமாவார். குறைந்த வயது. இவர் சுதந்திர கட்சி பின் நாளில் கலைக்கப்பட்ட பின் திமுகவில் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்


1971தேர்தல் முடிவுகள்

கருணாநிதி அவர்கள் சென்ற இடமெல்லாம் தன்னுடைய நாவன்மையால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒருவாறாக தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தது. பாராளுமன்ற தேர்தலில் காமராஜர் மட்டும் வெற்றி பெற்றார். சட்ட மன்ற தேர்தலில் திமுக 184 தொகுதி களையும் இந்திரா காங்கிரஸ் திமுக கூட்டணி 205 இடங்களையும் கைப்பற்றியது. சுதந்திரா கட்சி ஆறு இடங்களையும், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பதினைந்து இடங்களிலும் மொத்தம் 21 இடங்களை கைப்பற்றியது.என்னுடைய சேரன்மகாதேவி தொகுதியில் திரு சிவப்பிரகாசம் 193 ஓட்டில் வெற்றி பெற்றார். திரு கருணாநிதி மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சி அமைத்தார்.

எம்ஜிஆருக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்கு தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர், எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம், படத்தயாரிப்பாளர்களுக்கு லாப தேவன், வறியவர்களுக்கு வள்ளல், தமிழ்நாட்டு பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்ஜிஆர் என்ற மனிதரில் புதைந்து கிடக்கின்றன. 1972 ம் ஆண்டு கலைஞர் தனது மூத்த மனைவி திருமதி பத்மாவதியின் மகன் மு. க. முத்துவை சினிமாவிலும் அரசியலிலும் நுழைத்தார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுத்த பிள்ளையோ பிள்ளை தொடக்க விழாவிற்கு எம்ஜிஆர் வந்தார். அவரே கிளாப் அடித்து படத்தை துவக்கினர். முத்துவிற்கு வாழ்த்துக்களை கூறினார். இடைப்பட்ட காலத்தில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பனிப்போர் தொடக்கி இருந்தது. ஆனால் இருவருமே அதை பகிரங்கப் படுத்த வில்லை. படம் முடிந்தது. சிறப்பு காட்சிக்கு எம்ஜிஆர் வந்தார். படத்தை பார்க்க பார்க்க உதட் டை கடித்தபடியே யோசித்து கொண்டிருந்தார்.

முகமுத்துவின் நடிப்பில், நடனம், சண்டை காட்சிகள், பாடல்கள் எல்லாவற்றிலும் எம்ஜிஆரை: அப்படியே பிரதிபலித்தார். எதோ சதி நடக்கிறது என எம்ஜிஆருக்கு புரிந்து விட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை. உனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொள் என முத்துவிடம் கூறி விட்டு ஒரு கடிகாரத்தை பரிசளித்து விட்டு கிளம்பினார். அது முத்துவுக்கு புரிந்ததோ இல்லையோ கலைஞருக்கு புரிந்தது.

orodizli
14th June 2018, 09:53 PM
எம்.ஜி.ஆர் என்ற ஒரு மாமனிதருக்காக பல கவிஞர்கள் அவரை வாழ்த்தியும், உயர்த்தியும் பால பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள். ஆனால் எந்தக் கவிஞர்களும் எழுத முடியாத இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்த கவிஞர் கண்ணதாசனை எண்ணிப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டும் மீண்டும் பெரும் வெற்றி பெற்றது.

1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; அந்த இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது.மக்களின் மாபெரும் ஆதரவுடன் தனி இயக்கம் தொடங்கினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னம் மகத்தான வெற்றி கண்டது. இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார். தர்மம் தலை காக்கும் என்ற படத்தில் வரும் இதோ அந்தப் பாடலில்,

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”

இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!

மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”

அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

படம் - தர்மம் தலை காக்கும்
பாடல் - கவியரசர் கண்ணதாசன்
இசை - கே.வி.மகாதேவன்
குரல் - டி.எம்.செளந்திரராஜன்... Thanks - net- 👌

orodizli
14th June 2018, 09:56 PM
👍👌🏼👌🏼💪🏻நல்லதொரு பெருமைக்குரிய விஷயம்......பொன்மனச்செம்மலின் புகழை மென்மேலும் பரப்பிட,எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ,அதை நம்மைப்போன்றோர் கிஞ்சித்தும் நழுவ விடக்கூடாது.,,,நன்றி.நண்பரே!👍👌🏼👌🏼 மிக சரியாக கூறி இருக்கிறீர்...

Richardsof
15th June 2018, 11:05 AM
Wish you a happy birth day
suha ram sir.

Richardsof
15th June 2018, 05:45 PM
எம்ஜிஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யம் தமிழ்ச் சூழலில் இன்னும் குறைந்து விடவில்லை. அது தீராத நதியாக அவ்வப்போது புதுப்புது வண்ணம் கொண்டு, தமிழ் மனப்பரப்பில் நுங்கும் நுரையுமாக கொப்பளித்து பெருக்கெடுத்தபடியேதான் இருக்கிறது.



எம்ஜிஆர் மரணமடைந்த தருணத்தில் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள், கருத்துகளாகவும், கருத்துகள் தமிழ்ச் சமூகத்தின் உளவியலை ஆட்டிப்படைத்தன. எம்ஜிஆர் கதை என்ற பெயரில் புத்தகம் கூட வந்ததாக நினைவு. பத்திரிகை உலகில் இருந்த அவரது விசுவாசிகளும், ரசிகர்களும் பேசப்பட்ட தகவல்கள் அனைத்தையும் புத்தகங்களாக்கினர். இரண்டு மூன்று திரைப்படங்கள் கூட எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தன. இவை அனைத்திலும், எம்ஜிஆரது பூர்வீகம், இளமைக்காலம், திரையுலக வாழ்க்கை, அரசியல் பிரவேசம் என பேசப்பட்ட பொருள்களே திரும்பத் திரும்பப் பேசப்பட்டன. இருந்தாலும், அவரது ரசிகர்கள் சலிப்பின்றி அவற்றைப் படித்தும், பார்த்தும், எம்ஜிஆரின் நினைவுகளைத் தோண்டி எடுத்து நுகர்ந்தபடியே லாகிரியில் திளைத்தனர்.



எம்ஜிஆரின் பெரும் செல்வாக்குக்கு முக்கியமான காரணம், அவரது தோற்றம்தான். எம்ஜிஆர் இயல்பிலேயே சிவந்த நிறம் என்பதையும் தாண்டி பளிச்சிடும் சருமத்தைக் கொண்டவர். ரோஸ் வண்ணம் என்று அவரது தோலின் நிறத்தை வர்ணிப்பார்கள். ஆனால்… எம்ஜிஆரின் தோற்றப் பொலிவு என்பது அது மட்டுமே அல்ல. இயல்பு வாழ்க்கையில் ஒரு காலக்கட்டம் வரை அவர் பாகவதர் கிராப் வைத்திருந்தார். காஷ்மீர் குல்லாயும், பின்னர் கருப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இவற்றையெல்லாம் விட திரைப்படங்களில் அவர் தன்னை வடிவமைத்துக் கொண்ட விதம்தான், மக்களின் மனதில் அவரைப் பற்றிய சித்திரமாக இன்றுவரை பதிந்து விட்டது. அதி mgr anniv 4முக்கியமானது அவரது அரும்பு மீசை. பெரும்பாலும் இது வரையப்பட்டதுதான் என்றாலும், ஒட்டு



மீசையாகக் கூட அவர் பெரிய மீசையை வைத்துக் கொண்டதில்லை. அவரது சிகையலங்காரம் சீசன்களுக்கு தகுந்தாற் அவ்வப்போது மாற்றம் கொண்டாலும், மீசை மட்டும் அதே வரையப்பட்ட அரும்பு மீசைதான். பல்லாண்டு வாழ்க, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற சில பிற்காலப்படங்களில் மட்டும், லேசாக திருகிவிட்டதைப் போல வரைந்திருப்பார். மாறுவேடங்களில் வருவதாக அமைக்கப்பட காட்சிகளில் மட்டும், முரட்டு மீசை, வித்தியாசமான தாடி, கருப்பு மச்சம் என தோற்றத்தில் சில வித்தியாசங்களைக் காட்டுவார்..



அதே போல, நிற்பது, நடப்பது, வாள் சுழற்றுவது என எல்லாவற்றிலும் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். குறிப்பாக வாள் சுழற்றுவதில் வல்லவரான எம்ஜிஆர், அதற்கான ஸ்டெப்பிங் ஸ்டைல், சுழற்றும் லாவகம், புன்னகை மாறாத முகத்துடனேயே எதிரியுடன் மோதுவது போன்ற தனித்துவங்களை, வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்.

Richardsof
15th June 2018, 05:52 PM
· ஒரு எம்ஜிஆர் ரசிகையின் #டைரி

எம்ஜிஆர் அதிகம் விமர்சிக்கப்பட்டதுஅவரின் உடைகளுக்காக. "என்னய்யா...மஞ்ச சட்ட, பிரவுன் பேண்ட், மெரூன் கலர் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவு ஜீவிகளுக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.பொதுவாக அறுபதுகளின் இறுதியில் வந்த படங்களில்தான் அவர் அந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்திருப்பார்.அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1964ம் ஆண்டு ' ஈஸ்ட்மென் கலர்'
தொழில் நுட்பம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்யப்படுகிறது.ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்படும் படங்களில் பொதுவாக அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாகத் தெரியும்.நடிப்பது மட்டுமின்றி ஒரு காட்சி திரையில் செம்மையாக எப்படி தோன்றவேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர். அதற்கேற்றவாறு உடை அணியவும் ஆரம்பிக்கிறார்.
இரண்டாவது காரணம், உலக சினிமா விரும்பிகளுக்கு தெரிந்த ஒன்று. அறுபதுகளில் வந்த ஹாலிவுட் படங்களில் சக்கைப் போடுபோட்டுக்கொண்டிருந்த 'கேரி கிராண்ட்' கிரிகோரி பெக்' ' பால் நியுமேன்' போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது.ஹாலிவுட்டின் ஆடை ட்ரெண்டைத்தான் எம்.ஜி.ஆர் அவர் படங்களிலும் கடை பிடித்தார்.

ஆடைகள் என்கிறபோது இந்த முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்.ஜி.ஆர்.ஒரு ' fashion icon' என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிக்கக் கூடும்.நான் அதற்கு கோபப்பட மாட்டேன்.மாறாக எம்.ஜி.ஆரைப்போல அழகான ஒரு நமுட்டுச் சிரிப்புடன் உண்மைகளைத் தெளியவைப்பேன்.எம்.ஜி.ஆர்.தன் இளமைக்காலம் தொடங்கி ஹாலிவுட் படங்களில் இருந்த ' fashion trend' ஐ நேர்த்தியாக கடைபிடித்தவர்.மேலே கூறிய நடிகர்களின் படங்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் ஏழைக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது கூட சட்டையை ' tuck in ' செய்து, ஷூ அணிந்து இருப்பார்கள்.அது அப்போதைய பாரின் ஸ்டைல்.எம்.ஜி.ஆர். ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


'V' கட் கழுத்து வைத்த குர்தாக்கள், slim fit பேண்ட், வலது கையில் அழகிய பிராண்டட் வாட்சுகள், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பிகள், ஸ்கார்ப்புகள் என்று தான் அணியும் உடைகளில் தனி கவனம் எடுத்துக்கொண்டது அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே.இன்று கூட ஆண்டிப்பட்டியில் இருக்கும் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம், ஜிப்பா வேட்டியில் வந்த பாகவதர் போன்ற தமிழ் ஹீரோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பேண்ட், ஷூ சகிதமாக வந்த எம்.ஜி.ஆர்.நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பார்தானே?

52 வயதில் ரோம் மன்னர்கள் பாணியில் முட்டிக்கு மேல் ஒரு உடையணிந்து ' ஆயிரம் நிவே வா 'என்று பாடி வருவார். நான் அடித்துச் சொல்கிறேன், எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யார் அந்த உடை அணிந்து இருந்தாலும் கொஞ்சம் முகம் சுளிக்கத்தான் வைத்திருக்கும்.ஆனால் எம்.ஜி.ஆரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.இது ஒன்று போதும் அவரின் ஆடையலங்கார நேர்த்தியை பறை சாற்ற.


அடுத்து எம்.ஜிஆரின் நடனக் காட்சிகளுக்கு வருவோம்.அவரது நடனம் பெரும்பாலும் ' broad way musicals' பாணியில் இருக்கும்.அதே போல் எம்.ஜி.ஆரின் பெரும்பாலான பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் இருக்கும்.அதிலும் முக்கியமாக மிகவும் கடினம் என கருதப்படும் ' லத்தீன் அமெரிக்க ' நடனஅமைப்புகள் இருக்கும்.' துள்ளுவதோ இளமையில்' வரும் ' 'paso-double' , 'என்னைத் தெரியுமா'வில் வரும் ' rock and roll ',அன்று வந்தது அதே நிலா' வில் வரும் ball room dance என்று பல வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.


கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார்.நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும். எம்.ஜி.ஆர். எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து சிறப்பாக செய்திருப்பார்.'ஆடலுடன் பாடலை' பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி மேற்கொண்டார். ஆழ்ந்து யோசித்துப் பார்க்கிறேன். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை வேறு யாரும் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் முயற்சி கூட செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
COURTESY NET

Richardsof
15th June 2018, 06:15 PM
மெல்லிசை மன்னரின் அற்புத இசையமைப்பில் வரிசை கட்டி வந்து கொண்டிருந்த படங்களில் ஒன்றுதான் ஒளிவிளக்கு. 1968 ல் வெளியான இப்படம் திரு எம்.ஜி.ஆரின் நூறாவது படம் என்ற பெருமையும் பெற்றது.

ஆனால் இப்படத்தின் பாடல்களைப் பற்றி பேசும் வாய்ப்பு வருபோதெல்லாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குறிப்பிடுவது இப்படத்தில் வரும் இரண்டு பாடல்களைப்பற்றி மட்டும்தான் என்பது, உண்மையான இசையை ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் சொன்ன இரண்டு பாடல்களில் ஒன்று, பி.சுசீலா பாடிய
"ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்"
என்ற பாடல். இதை எல்லோரும் ஒருமித்து பாராட்டிப்பேசக் காரணம், அடிபட்டுக்கிடக்கும் கதாநாயகனைக் காப்பாற்ற அனைத்து மதத்தவரும் பிரார்த்தனை செய்வதாக காட்டப்படுவது. மற்றும் கதாநாயகர் எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் புகழும்

"உள்ளமதில் உள்ளவரை.... அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்"

போன்ற வரிகள். பல்லவிக்கு முன் தொகையறாவோடு அமைந்த பாடல் இது. இசையமைப்பு அருமை என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து அனைவரும் குறிப்பிடும் இன்னொரு பாடல்

"நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க"

குறவன் குறத்தி பாடுவதாக அமைந்த இப்பாடலில் திரு எம்.ஜி.ஆரும் செல்வி ஜெயலலிதாவும் குறவன் குறத்தியாக வேடம் கட்டி ஆடியதால் புகழ்பெற்றது.
இவையிரணடையும் தவிர்த்து அவர்கள் குறிப்பிடுவதானால்
"தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா" என்ற டி.எம்.எஸ்.பாடலைச் சொல்வார்கள். அதற்கும் காரணம் கதாநாயகன் இப்பாடலில் குடிப்பழக்கத்தின் கேடுகளைச் சொல்வதனாலும், ஒரு காட்சியில் அவர் ஐந்து வேடங்களில் தோன்றுவதனாலும்தான்.

ஆனால் இம்மூன்றையும் தாண்டி, உண்மையிலேயே இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு அரிய விருந்தாக அமைந்த மூன்று முத்தான பாடல்கள், அதே ச்மயம் மற்றவர்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவை

"நான் கண்ட கனவில் நீயிருந்தாய்"

"ருக்குமணியே...பப்பர..பர...பர.."

"மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம்"

ஆகிய மூன்று முத்தான பாடல்கள்தான். நாமும் அவற்றை கண்டுகொள்ளவிட்டால் எப்படி..?. அதற்குத்தான் இந்த சின்ன பதிவு.

Courtesy msv times
saradhaa sn

Richardsof
15th June 2018, 06:16 PM
"நான் கண்ட கனவில் நீயிருந்தாய்..." (ஒளி விளக்கு)

மெல்லிசை மன்னரின் மிக அருமையான மெட்டமைப்பில், அதிக INSTRUMENTS உபயோகித்து அமைத்த பாடல்

எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் அமைந்த அருமையான பாடல். கதாநாயகி கிளப்பில் பாடிக்கொண்டே கவர்ச்சி நடனம் புரிவார்.
ஃப்ளூட் மற்றும் டிரம்ஸ் சகிதம் துவங்கும் முன்னிசையில் அடுத்து ட்ரம்பெட்டில் ஒரு உச்சஸ்தாயி அதைத்தொடர்ந்து வயலின் மேலே பயணித்து அப்படியே கீழே இறங்க, தொடர்ந்து கோரஸ்

ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...
ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...

தொடர்ந்து பேஸ் கிடார் அப்ப்டியே கீழே சரிய, ஈஸ்வரியின் துள்ளல் குரலில் பல்லவி..

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...

இப்பாடலுக்கு அனுபல்லவியும் உண்டு. அனுபல்லவியில் பாங்கோஸின் அற்புத விளையாடல்..

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

தொடர்ந்து இடையிசையில் பேஸ் அக்கார்டியனுடன் ட்ரம்ஸ், அடுத்து கிடாரின் கம்பீரம் என HEAVY INTERLUDE... அதைத்தொடர்ந்து சரணம்...

பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ
பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில் பாடத்தைச் சொன்னானோ
ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி
ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி

('பந்து போல' தொடங்கி 'சொன்னானோ' வரையில் பாங்கோஸ், பின்னர் 'ஆகட்டும் ஆகட்டும்' தொடங்கி 'பொன்மேனி' வரையில் தபேலா)

மீண்டும் பாங்கோஸில் அனுபல்லவி

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

மீண்டும் அக்கார்டியன், ட்ரம்பெட், கிடார் கலந்த HEAVY INTERLUDE க்குப்பின் அடுத்த சரணம்

என்னவேண்டும் என்று நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ
இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும் என்று முத்திரை இட்டானோ
ஏ. .மிஸ்டர் ஏ...மிஸ்டர் உனக்கிது கிட்டாது
ஓ...மிஸ்டர் ஓ...மிஸ்டர் கைகளுக்கெட்டாது

(முதல் சரணம் போலவே முதலிரண்டு வரிகளுக்கு பாங்கோஸ், பின்னிரண்டு வரிகளுக்கு தபேலா)

தொடர்ந்து பாங்கோஸுடன் அனுபல்லவி

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

இறுதியில் பல்லவி

ய...ய...ய...நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...


இறுதியில் HEAVY POSTLUDE உடன் பாடல் முடியும்போது அடைமழை பெய்து .. ஓய்ந்த மாதிரி இருக்கும்.

(மெல்லிசை மன்னரின் ரசிகர்கள், அறுபதுகளில் வந்த 'பா' வரிசைப்பாடல்களை விட்டால் 'தொபுக்கடீர்னு' தாண்டி 'நினைத்தாலே இனிக்கும்' காலத்திற்கு வருவதை விடுத்து, இதுபோன்ற இடக்காலங்களில் மறக்கடிக்கப்பட்ட பல பாடல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்).
_________________
Saradha

Richardsof
15th June 2018, 06:19 PM
ஒளிவிளக்கு. எம்.ஜி.ஆரின் 100வது படம். 1968இல் வெளிவந்தது.

சினிமாப் படங்களில் பீடி சிகரெட் புகைப்பது மாதிரியோ, மது அருந்துவதாகவோ எம்.ஜி.ஆர். நடித்ததேயில்லை. தீய பழக்கங்கள் அண்டாத தூயவராகவே படங்களில் நடித்து நல்ல இமேஜ் ஏற்படுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் ஒரு சோதனை.

அது என்ன? எம்.ஜி.ஆர். அதை எப்படி எதிர்கொண்டார்? விளக்குகிறார் சினிமா ஆய்வாளர் அறந்தை நாராயணன்:

“கதையில் கதாநாயகன் ஒரு காட்சியில் மதுபானம் அருந்தியே ஆக வேண்டும். எம்.ஜி.ஆர். மது அருந்துவதா? அவரது இமேஜ் என்னவாகிறது? ஆனால் கதைக்கு மது குடித்தேயாக வேண்டும்.

பத்து பதினைந்து அழகிய இளம்பெண்கள் பாடி நடனமாடியபடி மயக்க மருந்தை எம்.ஜி.ஆர். முகத்தில் ஸ்பிரே செய்கின்றனர். மயக்கமடைந்ததும் அவர் பிராந்தியைக் குடிக்கிறார். இதனாலும் தன் இமேஜ் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு வரவில்லை.

படத்தில், மயக்கம் தெளிந்ததும் எம்.ஜி.ஆருக்கு உள்ளிருந்து இன்னொரு எம்.ஜி.ஆர். (மனசாட்சி) புறப்படுகிறார். எதிரே போய் நின்றுகொண்டு கை நீட்டி “தைரியமாகச் சொல், நீ மனிதன் தானா? இல்லை. நீ ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம் மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்” என்று பாடி மதுவை எதிர்த்து மனசாட்சி எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்கிறார்.”

1975இல் வெளியான நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில்கூட “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து” எனும் பாடலுக்கு இடையில் கதாநாயகி, கதாநாயகனுக்கு மது கொடுப்பார். கதாநாயகனோ அதைக் குடிப்பதுபோல் பாவனை செய்து, கீழே கொட்டி விடுவார். ஆனால் குடித்தது போலவே நடிப்பார்.

இப்படித்தான் எந்தக் காலத்திலும் மக்கள் மத்தியில் தன் இமேஜ் கெட்டுவிடக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த கவனமுடன் இருந்தார்.

அந்தக் கதாநாயகர் எம்.ஜி.ஆருக்கு நிஜ வாழ்க்கையிலும் மதுவில் துளிகூட நாட்டம் கிடையாது. ஒரு கட்டத்தில் மருந்தாகக் கூட மதுவை அருந்த மறுத்து விட்டாராம்.

முந்தைய தி.மு.க. அரசு மதுக்கடைகளைத் திறந்தபோது அக்கட்சியின் பொருளாளர் எனும் அடிப்படையில் அதற்கு அவர் உடன்பட்டிருக்கிறார். மதுவுக்கு எதிரானப் பிரசாரத்தை எம்.ஜி.ஆர். முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.

1971 செப்டம்பர் 15 அன்று தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பணியாற்றும் ஊழியர்களை அண்ணா சமாதியின் முன்பு நிற்க வைத்து “நான் என் வாழ்வில் எப்பொழுதும் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட மாட்டேன். இதுவரை சூழ்நிலையின் காரணமாக அப்படி அந்தப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபடுவேன். என் முயற்சியில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பகுதியினரைக் குடிப்பழக்கத்தில் இருந்து மாற்றினேன் என்ற பட்டியலை எங்களை வாழ வைத்த பேரறிஞர் அண்ணாவின் காலடியில் காணிக்கையாக்குவேன். என்தாய், என்சகோதரி, என் குடும்பம், என் நாடு, எல்லாப் பொதுமக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக இன்றையதினம் உறுதியெடுத்துக் கொள்கிறேன்” என சத்தியம் செய்ய வைத்தார்.

அ.தி.மு.க.வை தொடங்கியபோது அதன் கொள்கைகளில் ஒன்றாக, “முழுமையான மதுவிலக்கு என்பதுதான் அதிமுகவின் கொள்கை. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் இறுதியாக மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Richardsof
15th June 2018, 06:23 PM
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .

20.9.1968

.

1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''

பிரம்மாண்ட வண்ணப்படம்

மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

சோ வின் சந்திப்பு

ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

பாடல் காட்சி - புதுமை

திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''

oygateedat
15th June 2018, 10:16 PM
http://i63.tinypic.com/256qq21.jpg

orodizli
15th June 2018, 11:40 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றி திரு வினோத் சார், மக்கள் திலகம் "ஒளி விளக்கு" இன்னிசை விளக்கங்கள் அருமை, மற்ற பதிவுகள் அனைத்தும் அற்புதம்...👍 👌

Richardsof
16th June 2018, 10:42 AM
தமிழ்ப் பட முதலாளிகள்
அந்த வெற்றியை… அந்தக் காசை…
தாங்களும் அடைய விரும்ப…
எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
குலோபகாவலி
அலிபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிட்டியது என்னவோ
வெறும் புகழ் மட்டும்தான்.
கூடுதலாக…
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்
நிறந்தர இடம்!

மேற்குறிப்பிட்ட நான்கு படங்கள் மட்டுமில்லாமல்
மகாதேவி(1957) ‘தாயத்து தாயத்து’ப் பாடலிலும்
சிரித்து வாழவேண்டும்(1974)
‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடலிலும்
இஸ்லாமிய வேடமிட்டு அவர் மின்னவே செய்தார்!
அந்தப் பாடல் காட்சிகளில்
மக்கத்து சால்வை அணிந்து
புகையும் ஊதுபத்தியை காதில் சொருகியபடி
ஃபக்கீர்களின் ‘தப்’போடும்,
அவர்களின் தாளம் பிசகாத கை லாவகத்தோடும்
இசைத்தபடி
சூஃபிகளை ஒத்த
தத்துவார்த்தங்களையும் பேசி வலம் வர
அவர் மின்னாமல் என்ன செய்வார்?

Richardsof
16th June 2018, 10:44 AM
எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் பலவற்றை
இந்த எம்.ஜி.ஆர். வாரத்தில்தான் அதிகமும் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர். நடித்த,
இஸ்லாமிய திரைக்கதை கொண்ட படங்களையும் சேர்த்து.

*
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.

சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!

Courtesy net

Richardsof
16th June 2018, 10:51 AM
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.

எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.
Courtesy net

Richardsof
16th June 2018, 11:10 AM
எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த எல்லோருமே வயதானவர்கள்தான். எல்லோருமே கதாநாயகனாக, கல்லூரி மாணவனாக, இளைஞனாக நடித்தனர். அவர்களில் அவர்களை விட இவர், அதாவது எம்ஜிஆர் கொஞ்சம் மூத்தவர் அவ்வளவுதான். ஆனாலும் அவரை எதிர் முகாமில் வயதான நடிகர் என்று கிண்டலடித்தனர்.

எனவே தனது தோற்றத்தை காட்டிக் கொள்வதில் தனி கவனம் செலுத்தினார். அதற்குத் தகுந்தாற் போல காட்சிகள் அமைக்கச் சொன்னார். உடைகள் அணிந்தார். மேக்கப் போடச் சொன்னார். பெரும்பாலும் அவரது பாடல்களில் அவர் அணியும் அரைக் கை சட்டை என்பது கைகளில் உள்ள முண்டாவைக் காட்டும். அவரது எந்த தனிப் பாடலை பார்த்தாலும் அவர் கைகளை வீசிக் கொண்டும், உயர்த்தி கொண்டும் வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். (அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன் ; உலகம் பிறந்தது எனக்காக – பாசம் ; புதிய வானம் புதிய பூமி – அன்பே வா ; அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் & ஏன் என்ற கேள்வி – ஆயிரத்தில் ஒருவன் ) அதே போல திடீரென்று ஏதேனும் ஒரு கனமான பொருளை தூக்குவார் அல்லது நகர்த்தி வைப்பார். துள்ளி குதிப்பார். அவரது காதல் பாடல்களும் இதற்கு தப்பாது ( காற்று வாங்கப் போனேன் – கலங்கரை விளக்கம் ; நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் –அன்பே வா )
courtesy net

Richardsof
16th June 2018, 11:35 AM
எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை!


மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து சமயத்தை ஹிந்துப் பண்பாட்டை இழிவுபடுத்துவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகி விட்டது. வாய்த்த தலைமை அப்படி. கஞ்சாத் தோட்டத்தில் ரோஜாமலராக வந்தார் எம்.ஜி.ஆர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் ஹிந்து சமுதாயம் அந்த நல்ல ஹிந்துவை நினைத்துப் பார்க்கிறது.

தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சிறப்பு எம்.ஜி.ஆர்ருக்கு மட்டுமே உண்டு. 1977 முதல் 1987ஆம் ஆண்டு அவர் மறையும் வரை வேறு யாரும் முதல்வர் பதவியை நெருங்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர். வெறும் கூத்தாடிதான் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அவருக்கு படிப்பறிவு கிடையாது, நிர்வாக அனுபவம் துளியும் இல்லை. சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார் என்றெல்லாம் கணைகள் வீசப்பட்டன.

எம்.ஜி.ஆர். மெத்தப்படித்த மேதாவி அல்லர் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் மக்கள் திலகம் என்ற பெயர் இன்றுவரை அவருக்குப் மட்டுமே பொருத்தமாக உள்ளது. பொருளாதாரம் மிகவும் நுட்பமானது. நிதி சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க நிபுணர்களே தடுமாறுவது உண்டு. ஏனெனில் பொருளாதார ரீதியான விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக முன்கூட்டியே அவதானிக்க முடியாது.mgr

பொருளாதார பிரச்சினையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இதை நன்கு உணர்ந்திருந்தார். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை அவர் கட்டுக்குள் வைத்திருந்தார்.

சிறுவயதில் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அவர் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார். தன்னைப்போல யாரும் எதிர்காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது, பசிப்பிணியால் வாடக்கூடாது என்ற உணர்வு அவர் நெஞ்சில் வலுவாக இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. காமராஜர் ஆட்சி காலத்திலேயே மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும் அதை செம்மைப்படுத்தி மெருகேற்றியது எம்.ஜி.ஆர். தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

குழந்தைகள் வயிறார உணவு உண்டால்தான் படிப்பில் அவர்களால் கவனத்தை செலுத்த முடியும் என்பதை கல்வியியல் வல்லுனர்கள் உறுதிபட உரைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு காரணங்களால் இடையிலேயே நின்றுவிடுவது உண்டு. இப்போது இந்த இடைநிற்றல் பெருமளவு குறைந்துள்ளதற்கு சத்துணவும் ஒரு முக்கிய காரணம். இப்போது இத்திட்டம் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர். திரையில் நடித்தவரே தவிர, பொதுவெளியில் தன்னால் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்த காலக்கட்டத்தில் கூட தன்னை நாத்திகன் என்று அவர் ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.

பிரபல படத் தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டோ சின்னப்ப தேவர், மருதமலை முருகன் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பக்தர்களின் வசதிக்காக மருதமலையில் விளக்கு வசதியை சின்னப்ப தேவர் ஏற்பாடு செய்தார். இதை தனது நண்பரான எம்.ஜி.ஆர்.தான் திறந்து வைக்க வேண்டும் என்பதில் சின்னப்பா தேவர் இருந்தார்.

கோயில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமோ அக்கறையோ காட்டக்கூடாது என்று திமுக பிரமுகர்கள் சிலர் எம்ஜிஆருக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரையிடம் எம்.ஜி.ஆர். இது குறித்து பேசியி பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலம் வாக்கை ஏற்ற தி.மு.க. மறுக்க முடியவில்லை.

எம்ஜிஆரைப் பொறுத்த வரை தான் இறைநம்பிக்கை உடையவர் என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்கியது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை எம்ஜிஆர் வெளிப்படுத்தியுள்ளார்.

கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவு காரணமாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது கல்வீசும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது பல்லாயிரக்கணக்கானோருக்கு மன வேதனையை அளித்தது. எம்ஜிஆரும் மன உளைச்சலால் தவித்தார். எம்ஜிஆர் நேரடியாகத் தலையிட்டு மோதலை தணித்தார். இதன்வாயிலாக, பொன்மனச் செம்மல் என்ற மகுடத்துக்கு பொருந்தமானவர் என்பதை அவர் நிரூபித்தார்.

எம்ஜிஆரின் இஷ்ட தெய்வம் கொல்லூரில் வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன். வாய் பேச முடியாத அசுரனை அம்மன் வதம் செய்த இடம்தான் கொல்லூராகும். இதனால்தான் அம்மனுக்கு மூகாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவர் கொல்லூரில் அமர்ந்து தியானம் செய்தார். ஆதிசங்கரர் தியான பீடம் இப்போதும் பக்தர்களை ஈர்த்துவருகிறது.

திரைப்படம் ஒன்று அமோக மதுரையில் எம்ஜிஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. இது சுமார் அரை கிலோ எடை கொண்டது. இந்த தங்க வாளை மூகாம்பிகையம்மன் கோயிலுக்கு எம்ஜிஆர் காணிக்கையாக அளித்தார்.

இப்போதும் இந்த தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கோயிலை அலங்கரிக்கிறது. திமுகவில் சிவாஜி கணேசன் இருந்தபோது அவர் திருப்பதிக்குச் சென்றதை பிரச்சினை ஆக்கினார்கள். இதைப்போல மூகாம்பிகை கோயிலுக்கு எம்ஜிஆர் சென்றதையும் சிலர் பிரச்சினை ஆக்க முற்பட்டார்கள். ஆனால் மூகம்பிகையை நான் என் தாயாகக் கருதுகிறேன். என் தாயையும் மூகம்பிகையையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை என்று எம்ஜிஆர் ஆணித்தரமாக கூறியதையடுத்து, பிரச்சினையை எழுப்பியவர்கள் செல்லாக்காசுகளாகிவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகும் மத பாரபட்சத்தை அண்டவிட்டதில்லை. பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களை ஒதுக்கி தள்ளவேண்டும் என்றோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்றோ எம்ஜிஆர் ஒருபோதும் நினைத்தது இல்லை.

வேலூர் கோட்டையில் உள்ள ஆலயத்தில் மூலவர் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய குறையாக விளங்கியது. எப்படியாவது ஆலயத்தில் மூலவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்பதில் ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டின. இரவோடு இரவாக ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவரை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த காரியகர்த்தர்கள் ஸ்தாபித்தனர். இதை ஹிந்து மத துவேஷிகள் ஊதிப் பெரிதாக்க முயன்றனர். ரத்தக்களரியைத் தூண்டிவிட்டனர். ஆனால் இப்பிரச்சினையில் ஹிந்துக்களின் செயல்பாடு நியாயமானதுதான் என்பதை நன்கு உணர்ந்த எம்.ஜி.ஆர்., பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவருக்கு குந்தகம் எதுவும் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என காவல்துறையைப் பணித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ வெறியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. மாவட்டத்தின் பெயரையே கன்னிமேரி என்று மாற்றவேண்டும் என்று எல்லாம் அவர்கள் குரல் எழுப்பினார்கள். மண்டைக்காட்டில் கடலில் நீராடிய ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இதையடுத்து கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் ஹிந்துக்களின் உண்மையான நிலையை தாணுலிங்க நாடார் எடுத்துரைத்தார். கிறிஸ்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டனர். பொய்யான விவரங்களைத் தெரிவித்தனர் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் இதற்கு பிராயச்சித்தம் தேட முடிவு செய்தார்.

மத கலவரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பதற்காக நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஆய்வு குழுவை எம்ஜிஆர் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்தது. வெவ்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கிடையே குறிப்பிட்ட தொலைவு இடைவெளி இருக்கவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஜெபக்கூடங்கள் என்று தொடங்கி அவற்றை சர்ச்சுகளாக மாற்றும் கலையில் வித்தகம் பெற்றிருந்தார்கள். நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இந்த மோசடியை நிர்மூலமாக்கியது.

கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் அரசு பணத்தை எம்ஜிஆர் அநாவசியமாக வாரி வழங்கியதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் சம்புரோக்ஷணமும் தங்குதடையின்றி நடைபெற அவர் வழிவகை செய்தார். ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே ஹிந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டியது அரசின் தலையாய கடமை.

சர்ச்சுகளையும் மசூதிகளையும் பாதுகாக்கவேண்டிய, பராமரிக்க வேண்டிய பணி அரசைச் சார்ந்தது அல்ல. ஏனெனில் இவற்றுக்கு கோடிக்கணக்கில் சொத்து உண்டு. இந்த வருவாயைக் கொண்டே சர்ச்சுகளையும் மசூதிகளையும் செம்மையான முறையில் நிர்வகிக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் மதப் பாரபட்சமின்மை சார்ந்த உறுதிப்பாடு இன்றியமையாதது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத பாரட்சம்தான் தலைதூக்கியுள்ளது. ‘ஹிந்துக்களை நிந்திப்பவர்கள் முற்போக்கு வாதிகள். ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் பிற்போக்கு வாதிகள்’ என்ற மாயை எம்ஜிஆரிடம் இல்லை. இப்போதைய அரசியல்வாதிகள் பலர் இந்த மாயையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.





எம்.ஜி.ஆர் என்ற ஹிந்து…

* பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில், ‘தோமையார் மலை’ என்று அதைப் பெயர்மாற்றம் செய்துவிடும் சர்ச் விஷமத்தை முறியடித்தார்.

* ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தனது ‘ஆனந்த விகடன்’ தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.

* மண்டைக்காட்டில் கிறிஸ்தவ வெறியர்கள் பகவதி அம்மனின் பக்தைகள் கடலில் நீராடப் போனபோது மானபங்கம் செய்ததைக் கேள்விப் பட்டு கொதித்துப் போன எம்.ஜி.ஆர். தமிழனை தமிழ்நாட்டில் தடுப்பதா?” என்று கர்ஜித்தார்.

* சென்னை கதீட்ரல் சாலை பெயர் மாற்றப்பட்டபோது சர்ச் அமைப்புகள் பெரிய ரகளை நடத்தி தடுத்தன. அதை சுட்டிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக கண்டனக் குரல் எழுப்ப வேண்டும், மனுக்கள் குவிய வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வழிவகை சொல்லிக் கொடுத்தார்.

* வேலூர் ஆலயத்தில் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் எழுந்தருளியதற்கு காரணமானவை ஹிந்து அமைப்புகள். சட்டமன்றத்தில் ஹிந்து விரோத கூச்சல் எழுந்தது. மற்ற மதத்தினருக்கு அமைப்பு இருக்கலாமானால் ஹிந்துக்களுக்கு அமைப்பு இருக்கக் கூடாதா?” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் எழுப்பிய கேள்விக்குப் பின் அடங்கினார்கள்.



COURTESY NET

orodizli
16th June 2018, 11:13 PM
மக்கள் திலகம் புகழ் பாடும் திரியில் பல உறுப்பினர்கள் அதிகமாகவோ, அல்லது சாரசரியாகவோ பங்கெடுபதில்லை, அதனால் புரட்சி நடிகர் பதிவுகள் நிறைய பகிர அனைவரும் விரும்பி வருமாறு பாசத்துடன் அழைக்கிறோம்...

Richardsof
17th June 2018, 12:19 PM
http://i66.tinypic.com/eq19gi.jpg
உலகில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மொழியிலும் நடந்திராத வரலாற்று உண்மை .
தமிழ் மொழியில்
மக்கள் திலகத்தின் பேரழகை ஆளுமைகளை பாடலாசிரியர்கள் கவியரசரும் வாலியும் ஜெயலலிதாவின் வாயால் பாட வைத்த வரிகள் உண்மையிலே சிலிர்க்க வைக்கிறது . மக்கள் திலகத்தின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் சாத்தியமான வார்த்தைகள் . சத்தியமான வார்த்தைகள்
http://i68.tinypic.com/18on79.jpg
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்


பொன்னைத்தான் உடல் என்பேன் -
சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் -
தொட்டகைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
(உன்னை)
உண்மைதானே . 1965ல் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக ஜெயலலிதா பாடிய அருமையான வரிகள் .


கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
உன் கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே

வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்னம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே

விடிய விடிய வீசு -
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு

1965ல் வெளிவந்த கன்னித்தாய் படத்தில் எம்ஜிஆரை பெருமை படுத்திய வரிகள்

எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்

1966ல் முகராசி படத்தில் ஜெயலலிதா மக்களுக்கு தெரிவித்த வரிகள் .
http://i65.tinypic.com/34q90ms.jpg

இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

எம்ஜிஆரின் பேரழகை பற்றி 1966 சந்திரோதயம் படத்தில் ....

http://i64.tinypic.com/9kcpwk.jpg
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி 1966ல் தனிப்பிறவி படத்தில் ......

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
(என்னை)
...
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
(என்னை)


அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
(என்னை)


அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
(என்னை)
தன்னை திரை துறையில் காலூன்ற செய்த பொன் மனச்செம்மலுக்கு ஒரு சமர்ப்பணமாக வாலி அவர்கள் எழுதிய பாடல் இது

196அரச கட்டளை படத்தில் .. ஜெயாவின் புகழுரைகள்


பொன்னைத் தேடும்போது பூப்போல வந்து
மாளிகை ஓரத்தில் நின்றாடுது
இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
காவிய வள்ளலைக் கண்டாடுது
பட்டுக் கன்னம் தட்டித் தட்டித் தவிக்கின்றது
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது

1968 ரகசியப்போலீஸ் 115

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

1968 கண்ணன் என் காதலன்


நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

1968 கணவன் படத்தில் ....
http://i63.tinypic.com/90yv47.png

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....


அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
(காலத்தை)


பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்

1969 அடிமைப்பெண் படத்தில் .....

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
1969 நம்நாடு படத்தில் .........

நான் உனக்காகப் பிறந்தவள்
உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி
மறுபோது உருகிதனியாகத் துடிப்பவள்
1970 எங்கள் தங்கம் படத்தில் .........
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
1970 தேடிவந்த மாப்பிள்ளை படத்தில்


மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

1971 நீரும் நெருப்பும் படத்தில்

http://i67.tinypic.com/28te0qo.jpg
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

1972 ராமன் தேடிய சீதை படத்தில் ...

Richardsof
17th June 2018, 04:16 PM
முனைவர் இராஜேஸ்வரி செல்லையா

எம்.ஜி.ஆர்


எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உதவிய சண்டைக் காட்சிகள்


எம்.ஜி.ஆர் தன் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சம வலிமையுள்ள வில்லன், அவனது அடியாட்களாக வரும் ஸ்டன்ட் பார்ட்டி, சண்டைக் கருவிகள், சண்டையின் தீவிரத்தை அதிகரிக்கும் மழை, பாறை, மின்சாரம், பெண்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் சண்டைக்கு இடையே மாட்டிக்கொள்ளும் கதாநாயகி, குழந்தைகள் போன்ற எமோஷனல் விஷயங்கள் என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாக அமைப்பார். இவற்றுடன் புலி சிங்கம் பாம்பு போன்றவையும் இவரது சண்டைக் காட்சிகளில் இடம்பெறுவதுண்டு.

குலேபகாவலியில் புலியோடு மோதும் சண்டை

1955ம் ஆண்டில் பொங்கல் அன்று கேவா கலரில் வெளிவந்து வெற்றி விழா கொண்டாடிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தொடர்ந்து ஜூலை 24இல் வெளிவந்த வெற்றிப் படம் குலேபகாவலி. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஆர்.ஆர் பிக்சர்சின் ராமண்ணா. இவர் டி.ஆர் ராஜகுமாரியின் தம்பி. இப்படத்தில் எம்.ஜி.ஆர் குலேபகாவலி என்ற மலரைத் தேடி வருவார். அந்த மலர்ச்செடிக்கு ஒரு புலி பாதுகாப்பாக இருக்கும். அந்த மலரைப் பெற எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போட்டுக் கொல்ல வேண்டும். அந்தக்காலத்தில் புலிக்குட்டி கோவிந்தன் என்பவர் புலி,பாம்பு,சிறுத்தை இவற்றை வளர்த்து படப்பிடிப்புக்குத் தருவார். அவரே சண்டைக்காட்சியில் டூப்பாகவும் நடிப்பார். ஆறடி பள்ளம் வெட்டி அதற்குள் கூண்டு அமைத்து புலியை வெளியே வர விடாமல் வைத்து சண்டைக் காட்சியைப் படமெடுக்க திட்டமிட்டனர்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ஷூட்டிங்குக்கு வந்தார். வெளியே கிரேனில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இருந்தனர். கோவிந்தன், புலியைக் கூண்டை விட்டு வெளியே வா என்று அழைத்ததும் புலி விருட்டென்று வெளியே வந்து ஆறடி பள்ளத்தை தாவி மேலே ஸ்டுடியோவுக்குள் புகுந்து விட்டது. கோவிந்தன் ஐயோ ஐயோ என் புலி புலி என்று ஓடுகிறார். கிரேன் சட்டென்று மேலே போனது. அதனால் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் உயரே இருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் எங்கும் ஓடவில்லை, பதற்றப்படவில்லை. தன் கையில் துப்பாக்கியுடன் கேமராவின் ஸ்டாண்ட் அருகே புலியைக் குறி பார்த்தபடி நிற்கிறார். அந்த ராஜ உடைக்குள் எங்கே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தாரோ?. ஆனால், சமயம் வந்ததும் சட்டென்று துப்பாகியால் குறி பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டார். இதுதான் எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தி, துணிச்சல், நிதானம். பிறகு மறுநாள் முதல் ஒரு வாரம் வரை சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் படங்களில் சிங்கம்

வேட்டைக்காரன் படத்தில் சிங்கம் ஒரு கதாபாத்திரமாகவே வரும். ஒரு காட்சியில் சிங்கம் வலியுடன் படுத்திருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் அதன் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிடுவார். அது பிறிதொரு சமயம் நன்றிக்கடனுக்காக எம்.ஜி.ஆரின் மகனை சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றும். Androcles and the Lion கதை நினைவுக்கு வருகிறதா..!

ராமாவரம் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சிங்கம்

அடிமைப்பெண் படத்தின் சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர் இரண்டு சிங்கங்களை வாங்கிவந்தார். அதில் ராஜா என்ற ஆண் சிங்கத்தை மட்டும் சண்டைக்காகப் பழக்கினார். சிங்கத்தை வைத்துக்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார். அதற்கு நல்ல சாப்பாடு போட்டார். சிங்கத்தை சர்க்கஸில் பார்த்துக்கொண்டவர், ’சர்க்கஸில் கூட நாங்க இப்படி சாப்பாடு போட்டதில்லை’ என்றார். அவ்வளவு கவனிப்பு. தினமும் எம்.ஜி.ஆர் சிங்கத்திடம் போய் அதற்கு உணவளிப்பார்.

அடிமைப்பெண் ஷூட்டிங்கில்

சிங்கத்துக்குச் சண்டைக் காட்சியில் நடிக்க மயக்க மருந்து கொடுத்த போதும் அது உர் உர் என்று உறுமிக்கொண்டே இருந்தது அதனால செட்டில் இருந்தவர்கள் பயந்தபடியே இருந்தனர். முதல் நாள் சிங்கம் எம்.ஜி.ஆரை சட்டென்று அறைந்துவிட்டது. அங்கிருந்த ஒருவர் ஐயோ அண்ணனை சிங்கம் அடிச்சுடுச்சு என்று கத்தியதும் எம்.ஜி.ஆர் அவரை ஒரு அறைவிட்டார். ஏன் பீதியைக் கிளப்புகிறாய் என்று அதட்டினார். அதன்பின்பு அங்கிருந்த வசனகர்த்தா சொர்ணம் முதற்கொண்டு சண்டைக்காட்சிக்குத் தேவையில்லாதவர்களை வெளியேற்றினார். பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. காலையில் அடி கொடுத்தவருக்கு மாலையில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுத்து இனி அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு எங்கேயும் கத்தக் கூடாது என்று அறிவுரை கூறினார்.

எம்.ஜி.ஆர்

அடிமைப்பெண் படத்துக்குத் தொடர்ந்து பத்து நாள்கள் சிங்கத்துடனான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. சிங்கம் எம்.ஜி.ஆரின் தோள் மீது முன்னங்கால் இரண்டையும் போட்டு நிற்கும்போது அதன் முழு எடையைத் தாங்கக்கூடிய வலிமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது. சிங்கத்துடன் உருளும்போது அதன் முழு எடையை எம்ஜி ஆர் தாங்கிகொண்டு உருண்டார். எம்.ஜி.ஆரின் உடல்வலிமையும் மனதுத்துணிவும் அந்தக் சண்டைக் காட்சியை வெற்றி பெறச் செய்தது. அந்தக் காட்சியில் ஜெயலலிதா, பண்டரிபாய் போன்ற பெண்களும் இடம்பெற்றது, படப்பிடிப்பை மிகவும் ரிஸ்க் உடையதாக்கியது.

எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதே சிங்கம்

அடிமைப்பெண் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தச் சிங்கம் சர்க்கஸுக்குத் திருப்பித் தரப்பட்டது. சிங்கம் அங்கே இறந்ததும் அதன் உடலை எம்.ஜி.ஆர் பம்பாய்க்கு அனுப்பி பாடம் செய்து வாங்கினார் . இப்போது அது எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் கம்பீரமாக நிற்கிறது.. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்தச் சிங்கத்தின் அருகே நின்று படம் எடுத்துக்கொள்கின்றனர்.

கதைக்கு ஏற்ற சண்டைக் காட்சி வடிவமைப்பு

படத்தில் எம்.ஜி.ஆர் என்ன தொழில் செய்கின்றாரோ அதற்கேற்ப சண்டைக் காட்சி அமைக்கப்படுவதும் உண்டு, கதை நடக்கும் இடத்துக்கேற்ப சண்டைக்காட்சிகள் அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

விவசாயி படத்தில் கடைசிக் காட்சியில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள் மீது நம்பியார் முகமூடி அணிந்து பூச்சி மருந்து அடித்ததால் எம்.ஜி.ஆர் அவருடன் சண்டையிடுவார். இந்த முகமூடிச் சண்டை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


மாட்டுக்காரவேலன் படத்தில் எம்.ஜி.ஆர் தன் குடிசைக்குள் தோசை சுட்டுக்கொண்டிருப்பார். அப்போது வெளியே அசோகனின் ஆட்கள் வந்து அவரை சண்டைக்கு இழுக்கும்போது எம்.ஜி.ஆர் மாட்டுக்குக் கழுத்தில் அணிவிக்கும் சலங்கை கோத்த கழுத்துப்பட்டியை வைத்து சண்டை போடுவார். அதன் வீச்சால் எதிரிகளின் முகத்தில் விழும் கீறல்கள் ஆங்கில எழுத்துகளைப் போல தோன்றும். இதுவும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பார்க்கும் காட்சி ஆகும்.


உரிமைக்குரல் படத்தில் நம்பியாரின் ஆட்கள் எம்.ஜி.ஆரின் ரேக்ளா வண்டி வரக் கூடாது என்பதற்காக அவர் வரும் பாலத்துக்கு தீ வைத்து விடுவர். ஆனால், எம்.ஜி.ஆர் சரியாக டைமிங் பார்த்து ரேக்ளாவுடன் அந்தப் பாலத்தை கடந்துவிடுவர். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் டூப் போடாமல் செய்திருப்பார். அவர் படம் முழுக்க ரேக்ளாவில் வருவதால் ரேக்ளாவைச் சண்டைக்காட்சியிலும் சேர்த்திருப்பார்.


ரிக்*ஷாக்காரன் படத்தில் ரிக்*ஷாவில் இருந்தபடியே எதிரிகளைக் கம்பு சுற்றி விரட்டியடிப்பார். படகோட்டியில் எம்.ஜி.ஆர் வயதான தாத்தாவாக மாறு வேடத்தில் வந்து தன் படகில் இருந்தபடி அடுத்த படகில் இருந்த அசோகனின் கம்பை அடித்துத் தூக்கி கடலில் எறிவார். கலங்கரை விளக்கம் படம் மாமல்லன் ஒரு கதாபாத்திரமாகவும் அவன் எழுப்பிய மகாபலிபுரமே கதைக்களமாகவும் கொண்டிருந்ததால் அந்த மலைப் பாறைகளில் சண்டைக் காட்சிளை அமைத்திருப்பார்.


கடைசி சண்டையில் இயற்கையோடு போராட்டம்

எம்.ஜி.ஆர்

படத்தின் கடைசி சண்டைக்காட்சி வரும் போது வாழ்வா சாவா போராட்டம் போல தோன்றும். இதில் எம்.ஜி.ஆர் வென்றால் அது நீதியின் வெற்றி வில்லன் வென்றால் அது அநீதியின் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் எம்.ஜி.ஆர் சில இயற்கை சீற்றங்களையும் இரக்க உணர்வுகளையும் இடம்பெறச் செய்வார். இயற்கை சீற்றம், படம் பார்க்கும் ஆண்களை கவர்வதற்கான உத்திமுறை ஆகும்.

அடுத்ததாக வெள்ளமும் நெருப்பும் சூழ்ந்து ஆபத்தை விளைவிக்கும் சண்டைக் காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்வார். இரக்க உணர்வை மிகுவிக்கும் இச்சூழ்நிலையில் இயற்கையோடு போராடும் நிலையும் எம்.ஜி.ஆருக்கு ஏற்படும். இது பெண் ரசிகைகளை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். இவற்றிற்கு இரண்டு மூன்று உதாரணங்களை மட்டும் இங்குக் காண்போம்.

நாடோடி மன்னன் படத்தில் கடைசி காட்சிகளில் கழுகுக்குகை சிதைந்து வெள்ளமாக நீர் வெளியேறும். அந்த வெள்ளத்தில் மன்னன் மார்த்தாண்டனைக் காப்பாற்றும் முயற்சியில் நாடோடி போராடுவதை பார்க்கும் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்திருப்பர்.

என் கடமை படத்தின் கடைசிக் காட்சியில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சிக்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் மேலே மேலே ஏறி அவர்களை மூழ்கடிக்கும். மேலும் கடைசியில் எம்.ஜி.ஆரின் ஷூவும் மாட்டிக்கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு டென்ஷனை அதிகப்படுத்தும். தண்ணீரின் மட்டம் உயர்வதும் சரோஜாதேவி மயங்கிக் கிடப்பதும் படம் பார்க்கும் ஆண்களையும் பெண்களையும் டென்ஷனோடு படம் பார்க்க வைக்கும்.

அரசகட்டளை படத்தில் சரோஜாதேவியைக் காப்பாற்றும் முயற்சியில் எம்.ஜி.ஆர் மணல் மேடாகிவரும் வெற்றி மண்டபத்தை விட்டு வெளியேற முயல்வார். அப்போது ஒவ்வொரு வாயில் வழியாக வெளியேற முயலும் போது அங்கு பாதியில் மணல் கொட்டி வழியை அடைத்துவிடும். அடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும்போது படம் பார்க்கும் பெண்கள் பரிதவித்துப் போவார்கள். நாடோடி மன்னனில் அம்பு பட்டு இறந்து கிடக்கும் மானை காட்டி பானுமதியின் மறைவை குறிப்பாக உணர்த்தியது போல அரச கட்டளையில் நரம்பு அறுந்த வீணையை காட்டி சரோஜாதேவியின் மறைவை உணர்த்துவார்கள் எம்.ஜி.ஆரின் ஜோடி அவரது அத்தை மகள் ஜெயலலிதாதான் என்பதை உணர்த்த அவர் கனவில் பாடிய ஒரு டூயட் பாட்டைக் காட்டுவார்கள். உரிமைக்குரல் படத்திலும் என் அண்ணன் படத்திலும் கடைசி சண்டைக் காட்சிகளில் நெருப்பு முக்கிய இடத்தை பெறும்.

கடைசிக் காட்சியில் விரட்டுதல் [சேசிங்]

ஆங்கிலப் படங்களில் கார் சேஸிங், பைக் சேஸிங் என்பன ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுவன. அது போல தமிழ்ப் படத்தில் வைக்க இயலாவிட்டாலும் தேவையும் இல்லை என்பதாலும் எம்.ஜி.ஆர் தனது படங்களில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் சில சேஸிங் காட்சிகளை வைத்திருப்பார்.

என் அண்ணன் படத்தில் தன் குதிரை வண்டியைக் கொண்டு காரை விரட்டிச் சென்று பிடிப்பார். தாயின் மடியில் படத்தில் இருவரும் சகோதர முறை என்று தெரிந்தவுடன் ஜீப்பில் படு வேகமாக மலை உயர்த்துக்குப் போய் விழுந்து செத்துப்போக எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் முயல்வர். அப்போது சகோதரர்கள் கிடையாது என்பதைச் சொல்ல நாகேஷ் இன்னொரு வண்டியில் படுவேகமாக இவர்களைத் துரத்தி வருவார். மீனவ நண்பன் படத்தில் கடைசியில் மின்சாரப் படகில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வருவர். இதில் பொம்மை படகுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஸ்டுடியோவுக்குள் வைத்து அதிக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.

எம்.ஜி.ஆர்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் ஸ்கேட்டிங் செய்தபடியே பலருடன் வாள் சண்டை போடுவார். அடுத்து விஷ ஊசியுடன் ஒருவர் தாக்க வரும்போது அவருடனும் மோதுவார். இந்தக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக முதலில் நீச்சல் குளத்திலும் பிறகு தன் வீட்டு மொட்டை மாடியிலும் எம்.ஜி.ஆர் 55ஆவது வயதில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். பறக்கும் பாவை படத்தில் நடிக்கும் போது பார் விளையாட்டு பயின்றார். டூப் இல்லாமல் அவர் டிரபீஸ் விளையாடியிருப்பதை காணலாம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டையும், பாட்டும் மாறி மாறி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இன்றைக்கும் சிறு நகரங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் படம் போட்டால் போதும் என்கின்றனர். அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போட்டால் வசூல் அள்ளி விடலாம் என்று நம்பும் அளவுக்கு இப்படம் இலாபம் தருகிறது.

நடிகைகளின் சண்டைக்காட்சி

எம்.ஜி.ஆர் படத்தில் பெண்களுக்கு முக்கிய ரோல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருவதுண்டு. அது சரியல்ல. கதைக்கு ஏற்ப அவர் முக்கியப் பங்கை வழங்கியுள்ளார். அதிமுக ஆரம்பித்த பின்பு எம்.ஜி.ஆர் படத்தில் லதாவின் விழிப்புஉணர்வு வசனங்களும் காட்சிகளும் ஏராளமாக இடம்பிடித்தன. அதற்கு முன்பு சாவித்திரி மகாதேவி படத்திலும் பி பானுமதி ராஜா தேசிங்குப் படத்திலும் வாள் சண்டை போட்டு தங்களைக் காத்துக்கொள்ள முனைவார்கள். மருத நாட்டு இளவரசியிலும் அடிமைப்பெண்ணிலும் எம்.ஜி.ஆருக்கே கதாநாயகிகள்தான் சண்டை சொல்லிகொடுப்பர். முகராசி படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் சிலம்பு சுற்ற கற்றுக்கொடுப்பார். இதுவும் பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே எம்.ஜி.ஆர் இக்காட்சியை அமைத்திருப்பார்.

சண்டைக்காட்சிகளில் பாட்டும் ஆட்டமும்

தமிழ் பாரம்பர்யத்தில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு போன்ற வீர விளையாட்டுகளை ஆட்டம் பாட்டம் என்றே அழைக்கின்றனர். அவற்றிற்கென்று தனி தாளக்கட்டில் பாடல்களும் உள்ளன. அதனை பின்பற்றி எம்.ஜி.ஆர் தன் படங்களில் சில சண்டை காட்சிகளில் ஆடல்பாடலையும் புகுத்தியுள்ளார்.

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று’ என்ற பாடல் காட்சி சிறுவர்கள் சண்டைப் பயிற்சி பெறுவதை காட்டும். இதில் எம்.ஜி.ஆர் கையில் இரண்டு வாள்களை ஏந்திய வீசி அபிநயித்தபடி பாட்டுப் பாடிக்கொண்டு வருவார். அப்போது மிகவும் லாகவமாக இரண்டு பக்கமும் வரிசையாக வந்து எட்டு போடும் சிறுவர்கள் மீது படாமல் ஆடிவருவார். ஒரு சிறுவனுடன் மிகவும் மென்மையாக தன் வாளால் அவன் வாளை தட்டிச் சண்டையிடுவார். அவரது வாளின் அசைவில் காணப்படும் மென்மை அவரது நடிப்புக்கு ஓர் உதாரணம் ஆகும்.

எம்.ஜி.ஆர்

அரச கட்டளை படத்தில் சரோஜாதேவியை ஆட விடாமல் தடுப்போரை விரட்டி அடிக்கச் சண்டையிடும் காட்சியில் ‘ஆடி வா ஆடி வா ஆடி வா --ஆடப்பிறந்தவளே ஆடி வா - புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா -- ஆடி வா ஆடி வா ஆடி வா’ என்று பாடவும் செய்வார்.

தெய்வத்தாய் படத்தில் தன்னைச் சிறைப்பிடித்திருக்கும் மூவரை விட்டு தப்பியோடுவதற்கு பார்க்கும் ஒத்திகையாகப் பாட்டோடு கலந்த ஒரு சண்டைக் காட்சி இடம்பெறும் . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் –அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் --உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்’ என்று பாடியபடி சண்டையிடுவார். பாட்டு முடியும் தருவாயில் வெளியேறிவிடுவார்.

கலைஞரின் எங்கள் தங்கம் படத்தில் திமுகவின் கட்சி நிகழ்வுகளை விளக்கும் ‘நான் செத்து பொழச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடல் காட்சியில் சண்டைக் காட்சியும் இணைந்திருக்கும். பாட்டு முடியும்போது அனைவரையும் அடித்து போட்டிருப்பார்.

சண்டை காட்சியில் நகைச்சுவை

சண்டை காட்சியில் காமெடி நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் இருந்தால் நகைச்சுவையும் சேர்ந்திருக்கும். இது போன்ற காட்சிகள் கதையின் பிரச்னை தீவிரமடையாத வேளையில் அதாவது படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இதுபோன்ற நகைச்சுவை காட்சி முதல் சண்டைக் காட்சியில் இருக்கும்.

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் ஓங்கி ஒரு பீரோவை குத்துவார் பீரோ உடைந்துவிடும் உள்ளே போன தன் கை வெளியே வந்ததும் அந்தக் கையில்கட்டியிருக்கும் கை கடிகாரத்தை காதில் வைத்து ஓடுதா என்று பார்ப்பார். சண்டையின் தீவிரத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் சிரித்துவிடுவர். எதிரியை மடக்கி துப்பாக்கியைப் பறித்து திரும்பவும் அவரிடமே எறிந்துவிடும் காட்சிகளில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியின் குண்டுகளை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் எதிரியின் வீரத்தைச் செல்லா காசாக்கும் போது ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.



சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார் என்பதை இதுவரை கண்டோம். இதனை மேலும் வலியுறுத்த ஒரு முத்தாய்ப்பு சான்று. பணத்தோட்டம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. மறுநாள் காலை வரை நடந்தது. இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து இந்தக் காட்சியை நடித்து முடித்தார். இந்தக் காட்சியை நீங்கள் படத்தில் பார்த்து அதன் மதிப்பை புரிந்துகொள்ளுங்கள். அவரது பட வெற்றியில் அவர் காட்டும் அக்கறைக்கு இது ஒரு சோறு பதம் ஆகும்.

COURTESY NET

Richardsof
17th June 2018, 04:19 PM
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்


’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.

வாத்தியார் எம்.ஜி.ஆர்

ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.

எம்.ஜி.ஆர்

உளவியல் கருத்து

ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும்.

ரசிகர் வகைகள்

சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர்.

சண்டையின் பாரம்பர்யம்

ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை, நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு

தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும்.
1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது.
2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத் தாக்குகிறார்.
3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார்.
4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார்.

சண்டைப் போடும்போது

எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார்.

வில்லிகளுடன் சண்டை

எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்

சண்டைக்குப் பின்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.

வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும்

எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.

வாள் சண்டை

வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்

எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர்.

ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட் நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.

மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர்.

எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.

சண்டைக் கருவிகள்

வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார்.

சிலம்பு

எம்.ஜி.ஆர்

சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்*ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்*ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்*ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.

எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார்.

செடிக்குச்சி

செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர்.

கோபுடா

கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மான் கொம்பு

மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம்.

மல்யுத்தம்

எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார்.

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்.

Richardsof
17th June 2018, 04:30 PM
எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்புகளுக்கும் அவரது தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தந்தை அன்பை அறியாதவர். தாயால் வளர்க்கப்பட்டவர். தாயாரின் கண்டிப்பு மொழிகளும் வசைமொழிகளும் அவரது நினைவில் நின்றன. அண்ணனின் பாசமும் அன்பும் ஏழு வயது முதல் அவரை திரையுலகம் வரை அரவணைத்துக் கொண்டு சென்றது. எம்.ஜி.ஆரின் அரசியல் ஈடுபாட்டில் அவர் அண்ணனுக்கு பெருவிருப்பம் கிடையாது. அம்மா, அண்ணன், அண்ணி, மனைவி குழந்தைகள் மட்டுமே அவரது குடும்பம் திரையுலகிலும் அரசியலிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். நலம் விரும்பிகள் இருந்தனர். அடி வருடிகள் இருந்தனர். எதிரிகளும் துரோகிகளும் அவரைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவரைப் பகைத்துக் கொண்ட சில அப்பாவிகளும் இருந்தனர். அவரது ரசிகர்கள் அவரது ரத்தத்தின் ரத்தமாக விளங்கினர். அவரது உயிர்நாடியாக இருந்தது உழைக்கும் வர்க்கத்தினரும் தாய்மாரும் பெண்களும் ஆவார். இவர்களை மையப்படுத்தியே அவரது படத்தலைப்புகள் வைக்கப்பட்டன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்பு சில இலக்கியச்சான்று உடைய தலைப்புகளைப் பற்றி காண்போம்.


ஆயிரத்தில் ஒருவன்

எம்.ஜி.ஆர்

1965ஆம் ஆண்டு ஜூலை ஒன்பதாம் நாள் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். கம்ப இராமயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த போது கம்பர் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூறுபாட்டுக்கு ஒரு பாட்டாகப் புகழ்ந்திருந்தார். அதனைக் கேட்ட சபையினர் ‘இராமகாதையில்’ (கம்பர் சூட்டிய பெயர்) நரஸ்துதி (மனிதனைப் புகழ்வது) அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். உடனே கம்பர் சரி நான் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடலாக சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறேன் என்றார். மேலும், சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் அல்லர் அவர் ஆயிரத்தில் ஒருவர் என்றார். இந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற பெயர் எம்.ஜி.ஆரின் படத்துக்கு சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆரின் கதை இலாகாவில் இருந்த வித்வான் வே. இலட்சுமணன் எம்.ஜி.ஆர் கம்பராமாயணம், தொல்காப்பியம் போன்றவற்றைப் படிக்க உதவினர். மேல்சபைத் தலைவராக இருந்த மா.பொ.சி. அவருக்குச் சிலப்பதிகாரச் சுவையைப் புகட்டினார்.

கம்பன் விழா ஒன்றில் சிறப்புரை ஆற்றிய எம்.ஜி.ஆரை வியப்புடன் பார்த்த மு.மு. இஸ்மாயில் அவர்கள் ‘நீங்கள் கம்பனை எங்குக் கற்றீர்கள்?’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் சிறுவயதில் சம்பூர்ண இராமாயணத்தில் நடித்த காலத்தில் இருந்தே எனக்கு கம்பராமாயணத்தில் பரிச்சயம் உண்டு என்றார்.

கம்பன் விழாவில் பங்கேற்கும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு கம்பராமாயணம் தெரிந்திருந்தது. அவர் படத்துக்கு அவருடன் இருந்த இலக்கிய இதிகாசத் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் காட்சி சித்தரிப்பு. வசன உதவி, பெயர் சூட்டல் ஆகியவற்றிற்கு உதவினர். ஆஸ்தான நாத்தகி, கவிஞர் என்பவை எல்லாம் அவர் முதலமைச்சர் ஆன பிறகு நடைமுறைக்கு வந்ததற்கு அடிப்படை காரணம் அவர் சினிமாவில் இருக்கும் போதே இலக்கியம் இதிகாசம், இசை, நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை தன்னுடன் வைத்திருந்ததே ஆகும்.

ஆசை முகம்

எம்.ஜி.ஆரின் தேர்தல் நிதியை விட அவர் தன் முகத்தை ஒருமுறை மக்களிடம் வந்து காட்டினாலே போதும் திமுக அதிக ஒட்டுகளை பெற்று வெற்றி வாகை சூடும் என்றார் அறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆரின் மலர்ந்த முகத்தைப் பார்க்க மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்தனர். இதனால், ஆசை முகம், முகராசி என்ற பெயர்கள் அவர் படங்களுக்கு சூட்டப்பட்டன.

ஆசை முகம் (10-12-65) படம் தமிழில் வந்த முதல் முகமாற்று அறுவை சிகிச்சை படம் ஆகும். ராம்தாஸ் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக எம்.ஜி.ஆர் முகம் போல மாற்றிக் கொள்ளும் படம் ஆசைமுகம். ரேவதியும் அவர் கணவரும் இதே கதையமைப்பில் ஒருபடம் எடுத்தபோது ‘புதியமுகம்’ என்று பெயரிட்டனர். இது அறிவியல் சாதனையைக் குறிக்கும் பெயர். ஆனால் எம்.ஜி.ஆர் முகம் ‘செண்டிமெண்ட்’ சார்ந்தது. அது “ஆசைமுகம்”.

பாரதியார் பாடல்களில் காதலி ஒருத்தி

“ஆசைமுகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல் வேண்டி தோழி”

என்று காதலனின் முகம் மறந்துவிட்டதை பற்றி தன் தோழியிடம் கூறுவாள். இந்த ‘ஆசை முகம்’ என்ற பெயர் ரசிகர்கள் ஆவலோடு பார்க்க விரும்பும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு ஏற்ற பெயராகவும் கதையோடு பொருந்திச் செல்கின்ற பெயராகவும் அமைந்தது.

முகராசி

எம்.ஜி.ஆர்

1966ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் நாள் தேவர் ஒரு படம் வெளியிட்டார். எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்த இப்படத்துக்கு அவர் ‘முகராசி’ என்று பெயரிட்டார். படம் அமோக வெற்றி. குறைந்த செலவில் எடுத்து நிறைய இலாபம் கிடைத்த படம் முகராசி. இதில் ஜெயலலிதா சிலம்பு சுற்றுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்.ஜி.ஆர் அவருக்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை எடுத்துரைப்பார். அமெரிக்க மாணவிகள் இப்படத்தைப் பார்த்தபோது ஜெயலலிதா கதாபாத்திரத்தை ‘Empowered Woman' எனப் பாராட்டினார்.

குடியிருந்த கோயில்

எம்.ஜி.ஆர் படங்களில் தாய்க்குலம் விரும்பும் வகையில் தாய்ப்பாசம் இடம் பெற்று இருக்கும். தந்தைப் பாத்திரம் புதியபூமி, விவசாயி, பணக்காரக்குடும்பம் போன்ற சில படங்களில் மட்டுமே காணப்படும்.

தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெரியவர்களின் கதைகள் நமக்கு நினைவுக்கு வரும். உலகத்தையே வெறுத்த துறவிகளால் கூட தாய்ப்பாசத்தை துறக்க இயலவில்லை. நபிகள் நாயகம் தாயின் காலடியில் உன் சொர்க்கம் இருக்கிறது என்றார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது தன் சீடர்களைப் பார்த்து ‘இதோ உன் தாய்’ என்று தன் தாயாரை பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறார். சங்கரர் தன் தாய்க்கு இறுதிக்கடன் தீர்க்க எங்கிருந்தாலும் வந்துவிடுவேன் என்கிறார். ஒரு தாய்க்கு மகன் செய்யும் கடமையை அவர் மறக்கவில்லை. பட்டினார்த்தார் தன் தாயின் சிதைக்கு தீ மூட்டிய பிறகு குடியிருந்த கோயிலை தீக்கு இரையாக்கிவிட்டேனே என வருந்துகிறார். இங்கு தாயை இவர் ‘குடியிருந்த கோயில்’ என்று குறிப்பிட்டது, எம்.ஜி.ஆர் படத்துக்கு பொருத்தமான தலைப்பாக இடம்பெற்றது. ஆரம்பத்தில் இதற்கு ‘சங்கமம்’ என்றுதான் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அதைவிட குடியிருந்த கோயில்’ என்ற பெயரை எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாகத் தோன்றியது. படமும் வெள்ளிவிழா கொண்டாடியது.

உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர்

தமிழ்மொழி அகராதியைத் தொகுத்த ஏ.சிதம்பரநாதன் செட்டியார் உலகநாடுகள் பலவற்றைச் சுற்றிவந்து உலகம் சுற்றிய தமிழன் என்று ஒரு நூல் வெளியிட்டார். எம்.ஜி.ஆர் இத்தலைப்பை உலகம் சுற்றும் வாலிபன் என்று தனக்கேற்றபடி மாற்றிக் கொண்டார்.

காவல்காரன்

1967-ல் திமுக வெற்றி பெற்றதும் செப்டம்பர் ஏழாம் நாள் வெளிவந்த திரைப்படம் இது. இந்தப் படத்துக்கு முதலில் “மனைவி” என்று பெயர் சூட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி குழந்தை பெறும் படமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளித்து “மனைவி” என்று பெயர் சூட்டப்பட்டது.

விளம்பர ஸ்டில்கள் எடுத்த போது “ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கையில் டார்ச் லைட்டும் மறுகையில் சிறு தடியுமாக இரவில் காவல்பணி மேற்கொள்ளும் ரோந்துப் போலிஸ் போலத் தோன்றினார். அதைப்பார்த்த கவிஞர் வாலி இந்தப் படத்துக்கு ‘காவல்காரன்’ என்று பெயரிடலாமே என்றார். எம்.ஜி.ஆருக்கும் சரியனப்பட்டது ஏனென்றால் இப்படத்தில்

“என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும்
நான் தான் காவலடி”

என்று பாடல்வரிகள் அமைந்திருக்கும். எனவே மனைவிக்கும் காதலிக்கும் நானே காவல்காரன் என்ற பொருளில் இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்ததால் ‘காவல்காரன்’ என்பதே பொருத்தமான தலைப்பாகத் தோன்றியிருக்கும்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத சிலர் ஆரம்பம் முதலே ஜெயலலிதாவை கழற்றிவிடத் திட்டமிட்டனர். ‘மனைவி’ என்ற பெயரை நீக்கிட்டாலும் பிடிவாத குணம் உடைய ஜெயலலிதா அடுத்தடுத்த படங்களில் கணவன் கண்ணன் என் காதலன் படத்தலைப்புகளில் தன் முக்கியத்துவத்தை நிறுவி அடிமைப்பெண்ணில் தன் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்டார்.

திருடாதே

‘பாக்கெட் மார்’ என்ற இந்திய படத்தைப் பார்த்து எடுக்கப்பட்ட திருடாதே படம் 1958ல் தொடங்கி 1961-ல் வெளிவந்தது. இப்படத்துக்கு “நல்லவனுக்குக் காலமில்லை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இத்தலைப்பு எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.

எம்.ஜி.ஆரே நல்லவனுக்கு காலமில்லை என்று சொல்லிவிட்டார். இனியெதற்கு நல்லவனாக வாழவேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை இத்தலைப்பு உருவாக்கிவிடும் என்று எம்.ஜி.ஆர் தான் குழுவினரிடம் தெரிவித்தார். பின்பு “அந்தப் படக்குழுவினரைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்பவர் (இவர் வித்வான் வே. லட்சுமணன் கிடையாது) ‘திருடாதே’ என்ற பெயரைக் கூறினார். எம்.ஜி.ஆருக்கு இந்தப் பெயர் பிடித்திருந்ததால் அவருக்கு ரூ.500 அன்பளிப்பாகக் கொடுத்தார். படத்தில் வரும்

திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

என்ற பாடல் படத்தலைப்புக்கு வலுச் சேர்த்தது. ‘திறமை இருக்கு’ என்று பாடியது வறுமையில் உழன்றவருக்கு உழைத்து வாழும் நம்பிக்கையை வாழ்வில் ஏற்படுத்தியது.

நல்லவன் வாழ்வான்

எம்.ஜி.ஆர்

‘திருடாதே’ படத்துக்கு ‘நல்லவனுக்குக் காலமில்லை’ என்று முதலில் சூட்டியிருந்த பெயர் சரியில்லை என்று மாற்றிய எம்.ஜி.ஆர் தன் அடுத்த படத்திற்கு ‘நல்லவன் வாழ்வான்’ என்று பெயர் வைத்தார். இது அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம். அண்ணா தனது இதயக்கனி எம்.ஜி.ஆர் என்பதைக் குறிப்பிடும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதனால் இதயக்கனி என்று ஒரு படத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரிட்டார். பணத்தோட்டம், பணம் படைத்தவன், பணக்காரக் குடும்பம் ஆகியவை பணக்காரனின் முகத்திரையைக் கிழித்த படங்கள்.

திமுக ஆட்சியில்

திமுக அரசாட்சி அமைந்ததும் தமிழ் நாட்டில் பொற்காலம் பிறந்துவிட்டதாகக் கருதும் வகையில் புதியபூமி, ஒளிவிளக்கு தேர்த்திருவிழா, ஒரு தாய்மக்கள், நல்லநேரம், போன்றவை வெளிவந்தன. புதியபூமி என்பது கிறிஸ்தவக் கோட்பாடான ‘புதிய வானம், புதிய பூமி’ என்பதைச் சார்ந்ததாகும். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது இந்துமத, எதிர்ப்பாளராக இருக்கிறார் என்பதை நம்பிய கிறிஸ்தவர்கள் பலர் அவரை Secret Christian என்றே நம்பினார். அவர் தினமும் பைபிள் வாசித்து ஜெபம் செய்வார் என்றும் கூறி வந்தனர். தென் தமிழகத்தில் இவருக்கு இருந்த ஆதரவைப் பார்த்ததால் இவரை வைத்து ‘பரமபிதா’ என்ற படத்தை எடுக்க முன் வந்தனர். கேரளாவில் எம்.ஜி.ஆர் இயேசு கிறிஸ்து வேடத்தில் இருக்கும் படத்தை தம் வீட்டில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றினர். படகோட்டி படப்பிடிப்புக்கு கொல்லத்துக்குப் போயிருந்த எம்.ஜி.ஆரிடம் இத்தகவலைத் தெரிவித்ததும் அவர் என்னப்பா உயிரோடு இருக்கும்போது எனக்கு பூ, மாலை, மெழுகுவர்த்தி ஏற்றுகிறீர்களோ என்று சொல்லிச் சிரித்தாராம்.

அண்ணாவின் தலைப்புகள்

அறிஞர் அண்ணாவைத் தன் தலைவராகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவரது கதைகளின் தலைப்புகளைத் தன் படங்களுக்குச் சூட்டி தன்னை ஒரு திமுக காரர் என்று பறைசாற்றிக் கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் துணிச்சலுடன் எம்.ஜி.ஆர் செயல்பட்டதற்கு படத்தலைப்புகளும் நற்சான்றாக அமைந்தன. அவரது நாவல்களின் தலைப்புகளான குமரிக்கோட்டம் பெரிய இடத்துப் பெண் என்ற பெயர்களில் படம் எடுத்து வெளியிட்டு வெற்றிவாகை சூடினார்.

தனக்கான பெயர்கள்

தனது பெயரையும் புகழையும் உயர்த்தும் வகையில் தன்னை நேசிக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களில் உயர்ந்த ஓரிடத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில படங்களுக்குப் பெயர் சூட்டினார். அவற்றுள் சில, உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, என் அண்ணன், அன்னமிட்ட கை, தனிப்பிறவி, முகராசி, நினைத்தை முடிப்பவன், கருணாநிதிக்கு இலவசமாக நடித்துக் கொடுத்த கலைஞரின் எங்கள் தங்கம், தர்மம் தலை காக்கும் ஆகியன. இவை எம்.ஜி.ஆரின் மீதான நல்லவன், வல்லவன், கொடையாளி என்ற கருத்துக்களை மேலும் வலுப்படுத்த உதவிய படத்தலைப்புகள் ஆகும்.

திமுக ஆட்சிக்கு முன்

எம்.ஜி.ஆர் பட வரலாற்றை திமுக ஆட்சிக்கு முன்பு, திமுக ஆட்சியின் போது, அதிமுக ஆரம்பித்த பிறகு என்று மூன்றாகக் பகுக்கலாம்.

புதிய பூமி

எம்.ஜி.ஆர்

கதிரவன் என்ற பெயருடைய எம்.ஜி.ஆர் ஆங்கில மருத்துவராக ஒரு மலைக்கிராமத்துக்கு வந்ததும் அங்கிருந்த மந்திரம் தந்திரம் என்ற அறியாமை இருள் மறைந்து பகுத்தறிவுப் பகலவனின் ஒளி தோன்றியது. இது திமுகவின் ஆட்சி நாட்டில் புதிய பூமியை உருவாக்கியதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஆகும்.

அதிமுக தோன்றிய பின்பு...

அதிமுக ஆட்சியில் சேர்ந்து தன்னைப் பின்பற்றுவோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் படத்தலைப்புகளை அமைத்தார். முதலில் நேற்று இன்று நாளை, பின்பு அதைத் தொடர்ந்து உரிமைக்குரல், நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க நிறைவாக மதுரையை (தமிழகத்தை) மீட்ட (திமுகவிடம் இருந்த) சுந்தரபாண்டியன் (அழகான தலைவன் எம்.ஜி.ஆர்). இப்படத்துடன் அவர்காலத்திய அவரது திரையுலக வரலாறு நிறைவு பெற்றது. அவர் காலத்திற்குப் பின்பு அவர் நடித்த அவசரப்போலீஸ் படம் வெளி வந்தது. எம்.ஜி.ஆர் நடித்த இரண்டு பாடல்காட்சிகளும் சில வசனக்காட்சிகளும் மட்டுமே அப்படத்தில் இருந்தன.

அதிமுக தொடங்கிய பிறகு நல்லதை நாடு கேட்கும், உன்னை விட மாட்டேன், புரட்சிப் பித்தன் போன்ற படங்கள் எம்.ஜி.ஆர் நடித்த வரவேண்டியவை. ஆனால் அவர் முதல்வராகி விட்டதால் வரவில்லை.

ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்

ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர் பாட்டாளிகளில் ஒருவராகத் தான் நடித்து பணக்கார முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்கியதால் பலரும் எம்.ஜி.ஆரை தம் பங்காளியாகவும் தம் ரட்சகராகவும் பார்த்தனர். துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் இறையம்சம் பொருந்தியவராகவே எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தோன்றினார். எனவே எம்.ஜி.ஆர் ‘உங்களில் ஒருவன் நான்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலான உழைக்கும் வர்க்கத்தினரின் பாத்திரங்களை ஏற்று நடித்தார். தன் படங்களுக்கும் உழைப்பவரின் பெயரையே சூட்டினார். ஆட்டோகிராஃப் போடும்போதும், ’உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
தொழிலாளி, படகோட்டி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், உரிமைக்குரல் என்று தன் படங்களுக்குப் பெயர் சூட்டினார்.

1001 அரபுக்கதைகள்

மேடை நாடகமாக குலேபகாவலி நாடகம் ‘பகடை 12’ என்ற பெயரில் நடைபெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இதை எம்.ஜி.ஆர் நடித்து ராமண்ணா தனது ஆர் ஆர் பிக்சர்ஸ் மூலமாக படமாக எடுத்தார். ஆயிரத்தோரு அரபுக்கதைகளைச் சேர்ந்த குலேபகாவலி, பாக்தாத் திருடன், அலிபாபாவும் 40 திருடர்களும் படங்கள் எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.


படத்தலைப்பு என்பது ஒரு படத்துக்கு முகம் போன்றது எனவே எம்.ஜி.ஆர் மிகவும் ஆலோசித்து படத்தலைப்பைச் சூட்டியுள்ளார்.

Richardsof
17th June 2018, 08:35 PM
எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.

எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

“கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.

Richardsof
17th June 2018, 08:36 PM
பி.யு. சின்னப்பா

முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்தவர், வாள்வீச்சில் கெட்டிக்காரர்; எம்.ஜி.ஆர் வியந்து போற்றும் மேடைக்கலைஞர். இவர் ராஜபார்ட வேடம் ஏற்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் ஸ்திரீபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார். இத்தகைய சிறந்த கலைஞரின் மரணம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்துக்கு ‘ராஜபாட்டையை’ (நெடுஞ்சாலை) அமைத்துக் கொடுத்தது. 1951-ல் பி.யு. சின்னப்பா திடீரென ஒரு விபத்தில் காலமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் (1952) படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ (1953) நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

Richardsof
17th June 2018, 08:37 PM
ஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’

பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

Richardsof
17th June 2018, 08:37 PM
1955-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி 1955 ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. அடுத்த ஆண்டில் (1956) ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன. ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பில் காளையுடன் சண்டை போடுவதில் எம்.ஜி.ஆர் காட்டிய தயக்கம் தேவருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்டுக்காக’ காத்திருக்காமல் தேவர்தனது அடுத்த படமான ‘நீலமலைத் திருடனில்’ ரஞ்சனை கதாநாயகன் ஆக்கினார். படம் எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. பெரிய வெற்றியும் பெற்றது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ரஞ்சனின் ரசிகர்களும் தம்முள் மோதிக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு சமமான ஒரு போட்டியாளர் வந்துவிட்டதான சூழ்நிலை உருவானது. எம்.ஜி.ஆர் உடனே தனது ‘நாடோடிமன்னன்’ படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். பாதிப் படத்தை வண்ணப்படமாகவும் எடுத்தார். 1958-ல் வெளிவந்த நாடோடிமன்னனில் எம்.ஜி.ஆரை ரசித்த ரசிகர்கள் அதன்பின்பு ரஞ்சனை ரசிக்கவில்லை. அடுத்த ஆண்டு (1959) வெளிவந்த ராஜாமலையசிம்மனும், மின்னல் வீரனும் ரஞ்சனுக்கு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 1960-ல் வெளிவந்த ‘கேப்டன்’ ரஞ்சனும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. படங்கள் ஓடாததால் அவர் தன் மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் போய்த் தங்கிவிட்டார். இப்போது தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார். சிலருடைய மரணமும் சிலருடைய தோல்வியும் கூட எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தன.

Richardsof
17th June 2018, 08:51 PM
நடிப்பு திறனைக் காட்ட மாறு வேடங்கள் புனைந்த எம் ஜி ஆர்!

எம்.ஜி.ஆர் இளைஞனாக நடித்தது அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் அது அவரது கலை ஆர்வம் அல்லது நடிப்பு ஆர்வத்தை நிறைவு செய்யவில்லை. அதனால் அவர் வேறு பல கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பி தன் படங்களில் அவற்றை மாறு வேடக் காட்சிகளாக அமைத்தார். மாறு வேடத்தில் நடிக்கும்போது அதற்கேற்ற உடை, குரல், நடிப்பு என அனைத்தையும் நேர்த்தியாகச் செய்தார். காதல் சண்டை என காட்சிக்கு காட்சி துள்ளிச் செல்லும் ஹீரோவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் கிழவனாகவும் பெண்ணாகவும் பல்வேறு தொழில் செய்பவராகவும் நடிப்பதையும் ஆடி பாடியதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.



பெண் வேடத்தில் எம்.ஜி.ஆர்


எம்.ஜி.ஆர் புதுமை பித்தனில் நடன மங்கையாகவும் காதல் வாகனம் படத்தில் நவீன மங்கையாகவும் சில காட்சிகளில் வருவார். கவுன் போட்ட இளம்பெண்ணாக எம்.ஜி.ஆரின் வேடப் பொருத்தமும் பெண்ணை போல அவர் கொஞ்சி பேசுவதும் நளினமாக் நடப்பதும் ரசிகரகளை வெகுவாக கவர்ந்தன. சங்கே முழங்கு படத்தில் பெண்ணாக வேடம் போடாவிட்டாலும் திருமண சம்பந்தம் பேசும் பெண்ணை போல நடித்து காட்டியிருப்பார். அதை போல மாட்டுக்கார வேலனில், வேலன் எம்.ஜி.ஆர் தன்னை ரகு என நினைத்து காதலிக்கும் ஜெயலலிதாவை பற்றி தெரிவிக்கும்போது,


''ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா''

என்று பாடி ஒரு பெண்ணை போல ரகு எம்.ஜி.ஆரிடம் நடித்து காட்டுவார். அந்த பாட்டில் அவர் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். இந்தக் காட்சிக்கு திரைஅரங்கில் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளக்கும்.



சாமியாராக எம்.ஜி.ஆர்

நல்லவன் வாழ்வான், ஆனந்த ஜோதி, இதய வீணை போன்ற படங்களில் சாமியாரை போல வருவார். நல்லவன் வாழ்வான் படத்தில் கொலை பழி சுமந்து ஒளிந்து வாழும் நிலையில் உண்மைக் கொலைகாரனை அறிய அதே ஊரில் எம்.ஜி.ஆர் சாமியாராக வந்து தங்கியிருப்பார். அப்போது ‘‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்’’ என்ற பாட்டு பாடுவார்.



இதய வீணையில் திருட்டு பழி சுமந்த அண்ணனான எம்.ஜி.ஆர் தன் தங்கை லட்சுமியின் கல்யாணத்துக்கு சாமியார் வேடத்தில் வந்து ‘‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி – திருமணம் கொண்டாள் இனிதாக’’ என்று பாடி வாழ்த்துவார். இந்த படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஜி சகுந்தலாவிடம் என் கடைசிக்காலம் இப்படிதான் (ஆன்மீக வழியில்) இருக்க போகிறது என்று தன் சாமியார் கோலத்தை காட்டினாராம். அதன் பிறகு அவர் திமுக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் ஆங்காங்கே தாமரை கொடியை ஏற்றி அவர்களாகவே புது கட்சி தொடங்கினர். பின்பு எம்.ஜி.ஆர் அவர்களை ஒருங்கிணைத்து ஓர் அரசியல் தலைவராகிவிட்டார். அவரை திமுகவில் இருந்து வெளியேற்றாமல் விட்டிருந்தால் ஒரு வேளை அவர் ரஜினியை போல ஒரு ஆன்மீகவாதியாகி இருப்பார். திமுக தன் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டது.



முஸ்லீம் வேடத்தில் எம்.ஜி.ஆர்

மலைக்கள்ளன், மகாதேவி, சங்கே முழங்கு, போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் துப்பு துலக்குவதற்காக பட்டாணி முஸ்லீம் வேடமிட்டு வந்தார். மலைக்கள்ளனில் அப்துல் ரஹீம் என்னும் வடநாட்டு முஸ்லீம் வேடம் ஏற்றிருப்பார். தமிழை அன்றைய வடநாட்டுக்காரர் போல பேசுவார். இன்ஸ்பெக்டர் நடத்தும் விசாரணையில் அவரது திருட்டுப் பார்வையும் உடல்மொழியும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றுத் தந்தது.



மகாதேவியில் லப்பை முஸ்லீம் போல மாறு வேடமிட்டு வந்து மக்களுக்கு இளவரசன் உயிரோடு இருக்கும் உண்மையை தாயத்து மூலமாக வெளிப்படுத்துவார். தாயத்தை விற்பதற்காக ‘‘தாயத்து தாயத்து – சில சண்டாளர் வேலைகளை சனங்களின் மத்தியிலே தண்டோரா போட வரும் தாயத்து’’ என பாடுவார். அப்போது அவர் தலைப்பாகையில் காதோரத்தில் சொருகிய பத்தி புகைந்துகொண்டிருக்கும். கண் இழந்தவர் போல வருவதால் கண்களை சுற்றி கறுப்பாகத் தோன்றும். உடையும் வெகு பொருத்தமாக இருக்கும். கழுத்தில் தாயத்து அணிந்திருப்பார். கையில் டேப் வைத்து அடித்துக்கொண்டு வருவார். கைலியை உயர்த்தி கட்டியிருப்பார். தோளில் ஒரு துணி மூட்டை தொங்கும்.



சங்கே முழங்கு படத்தில் வீண் கொலைப் பழியேற்று ஊரை விட்டு முஸ்லீம் பாய் வேஷத்தில் ரயிலேறிவிடுவார். அப்போது தன் காதலி லக்ஷ்மியை அதே வேஷத்தில் சந்தித்து அவருடன் பேசுகின்ற காட்சிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வசனங்கள் உருக்கமானவை. வசதியான முஸ்லீமாக வருவதால் தலையில் குஞ்சம் தொங்கும் உயரமான குல்லா, கையில் ஒரு ப்ரீஃப் கேஸ் மற்றும் சிறு கைத்தடி வைத்திருப்பார், கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற படி மேக்கப், உடை, உடல் மொழி ஆகியவற்றில் சின்ன சின்ன விஷயங்களில் கூட எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பார்.



பஞ்சாப் சிங்காக எம்.ஜி.ஆர்


சங்கே முழங்கு படத்தில் எம்.ஜி.ஆர் கொலைப்பழியில் இருந்து தப்பிக்கவும் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் பஞ்சாப் சென்று கிருபால் சிங் என தன் பெயரையும் உருவத்தையும் மாற்றிக்கொள்வார். அங்கேயே ஐ.பி.எஸ் முடித்து தமிழகம் வந்து காவல்துதுறை அதிகாரியாகி உண்மையான கொலையாளியைக் கண்டு பிடிப்பார்... (சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா கதையும் இது போன்ரதுதான்) எம்.ஜி.ஆருக்கு சிங் வேஷம் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிங்குகளை போல அவரும் தலையில் டர்பன், முகத்தில் சிறிய கருந்தாடி என வருவார். இவ்வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.



குடியிருந்த கோயிலில் ஆனந்த் எம்.ஜி.ஆர், திருடன் பாபுவாக கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்தபோது ஒரு முறை மட்டும் சிங் வேடம் போடுவார். இந்த வேஷத்துடன் தான் எல்.விஜயலட்சுமியுடன் இணைந்து ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம் சுகம்’ என்ற பாட்டுக்கு பங்க்ரா நடனம் ஆடியிருப்பார். அதிலும் வேஷ பொருத்தும் மிக சரியாக இருக்கு
ம்.

பூட்டுக்காரராக எம்.ஜி.ஆர்

ANATHA JOTHI படத்தில் எம்.ஜி.ஆர் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலை தேடும் காவல்துறை அதிகாரி மாறனாக நடித்தார். இதில் பூட்டு விற்பவரை போல மாறு வேடம் போட்டு கள்ள நோட்டு மாற்றும் கும்பலைக் கண்டுபிடிக்க ஊரை சுற்றி வருவார். அவரது பம்பை க்ராப், முறுக்கு மீசை, ஏற்றிக்கட்டிய கைலி, கையில்லாத ஓவர் கோட், தோளில் தொங்கும் இரும்புப்பெட்டி, ஒரு கையில் பெரிய இரும்பு வலையத்தில் கோர்க்கப்பட்ட பல தினுசு சாவிகள் இத்துடன் காலை அகட்டி வைத்து நடக்கும் நடை என பொருத்தமாக மாறு வேடம் போட்டிருப்பார். பூட்டு சாவி ரிப்பேர் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார். அதில் பூட்டும் சாவியும் என்ற சொற்கள் சமூக சிந்தனையோடு இடம்பெற்றன. காங்கிரஸ்காரர்களின் வெற்றுப்பேச்சுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்றும் பாடுவார்.



வளையல்காரராக எம்.ஜி.ஆர்

படகோட்டி நம்பியாரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் சரோஜா தேவியை சந்திக்க எம்.ஜி.ஆர் வளையல்கார வருவார். அந்த வீட்டில் நம்பியார் – சரோஜாதேவி திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் அப்போது எம்.ஜி.ஆர் கறுப்பு மேக்கப்பில் தலையில் வட்டக் குடுமி, பெரிய வயிறு, மேலே கனத்த கோட், முகத்தில் ஒரு கறுப்பு மரு, பெரிய உருண்ட மீசை, தோளில் வளையல் பெட்டி கையில் வளையல் சரம் எனத் தன் குண்டு உடம்பை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒரு சோபாவில் பொத் என விழுவார். அந்த தோற்றத்தில் அவரை படம் பார்க்கும் புதியவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது.



‘‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - கொண்டாடி வரும் வளையல் – அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே - சிங்கார தங்க வளையல்’’ என்ற பாட்டும் பாடி வளையல்களை அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு விற்பார். இந்தக் காட்சியில் வயதான ஒரு தம்பதியர் வரும்போது ‘மாமனாரை மாமியாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சு தந்த வளையல்’ மற்றும் ‘இளங்காளையர்கள் கெஞ்சிவர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்’ என்ற வரிகள் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றன.


மின்சாரத்துறை ஊழியர்

காதல் வாகனம் படத்தில் மின் பயன்பாட்டை பதிவு செய்யும் மின்சார துறை ஊழியராக வயதான தோற்றத்தில் வருவார். தலையில் தொப்பி, கண்ணில் ஒரு காந்தி கண்ணாடி, கையில் ஒரு பதிவேடு, குடு குடு நடையுடன் அவரது நடிப்பும் தோற்றமும் பாராட்டும்படியாக இருக்கும். துப்பறியும் நோக்கில் எம்.ஜி.ஆர் மாறு வேடத்தில் வரும் இக்காட்சி நகைச்சுவை காட்சியாக அமைந்திருக்கும்.

வெஸ்டெர்ன் டான்ஸ் மாஸ்டராக எம்.ஜி.ஆர்

என் கடமை படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கடமை தவறாத போலிஸ் அதிகாரி. அவருக்கு எம்.ஆர்.ராதா மீது சந்தேகம் இருப்பதால் அவர் வீட்டுக்குள் போய் வந்து துப்பு கண்டுபிடிக்க வழி தேடுவார். அப்போது சரோஜாதேவிக்கு வெஸ்டெர்ன் டான்ஸ் கற்றுத்தர ஒரு மாஸ்டர் வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்த்தும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்கு போய் பணியில் சேர்ந்துவிடுவார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சரோஜாதேவியிடம் உனக்காகத்தான் இந்த வேடத்தில் வந்தேன் என்று சொல்லிவிடுவார். கடைசியில் குற்றவாளி எம்.ஆர்.ராதா அல்ல அவருக்கு வைத்தியம் பார்க்க வரும் டாக்டர் என்பதை கண்டுபிடிப்பார். டாகடர் வேடத்தில் பாலாஜி நடித்தார். அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இதுதான். யாரது யாரது தங்கமா என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வெஸ்டெர்ன் டான்ஸ் ஆடுவார்கள். படிக்கட்டில் சுற்றி வந்து ஸ்டெப் போட்டு இருவரும் ஆடுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எம்.ஜி.ஆர் கறுப்பு தாடி கறுப்பு கண்ணாடி என வித்தியாசமான கெட்டப்பில் வருவார். அடிக்கடி தாடியை தடவிக்கொள்வார். ஹீல்ஸ் ஷூ போட்டு தன்னை நல்ல உயரமாகக் காட்டியிருப்பார்.

கதா காலட்சேபம் செய்பவராக எம்.ஜி.ஆர்

எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் போலிசுக்கு பயந்து ஒரு காலட்சேபம் நடத்தும் இடத்துக்கு வந்து அங்கு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரே காலட்சேபம் செய்வார். இந்து சமயத்தின் பார்ப்பனீயக் கருத்துகளுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரது காலட்சேபன் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். 1967-ல் வெளிவந்த படம் என்பதால் அப்போது அமெரிக்கா விண்வெளிவீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்தில் கால் வைத்த நிகழ்ச்சி பிரபலமாகியிருந்தது. எனவே அதையே தம் காலட்சேபப் பாடுபொருளாக்கி மூட நம்பிக்கைகளை கேலி செய்து ஒரு கலகலப்பான நிகழ்ச்சியை நடத்துவார். முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இவரது நடிப்பும் முக பாவனைகளும் காண்போர் மனதை கவரும். மேலும் இவரது வேட பொருத்தம் வியக்க வைப்பதாக அமையும். மொட்டை தலை அதில் பட்டை விபூதி, சிவந்த நிறம், மேல் அங்கவஸ்திரம், கைகளில் தப்பளா கட்டை, கழுத்தில் மாலை என வெகு நேர்த்தியாக அவரது மேக்கப் அமையும். அவர் தலையை திருப்பி இரு பக்கம் இருப்பவரையும் பார்த்து பேசுவதும் கைகளை வீசி வீசி பாடுவதும் அவரது முக பாவமும் நொடிக்கு நொடி மாறும் முக பாவங்களும் அந்நிகழ்ச்சியை ரசிக்க வைக்கும் அவரது நடிப்பு திறனுக்கு இக்காட்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்.


கலை மக்களுக்காக


e
எம்.ஜி.ஆர் தனது நடிப்பார்வத்துக்கு தீனி போடவே பல படங்களிலும் மாறு வேடக் காட்சிகளை அமைத்து நடித்துள்ளார். இக்காட்சிகளின் வெற்றி இவர் இதே கதாபாத்திரங்களில் படம் முழுக்க நடித்திருந்தாலும் இப்படித்தான் வெகு சிறப்பாக நடித்திருப்பார் என்பதை நமக்கு உறுதி செய்கிறது.

ஒரு படம் முழுக்க அவர் ஒரு சாமான்யனை போல நடிப்பதை மக்கள் விரும்பவில்லை. எனவே எம்.ஜி.ஆர் தன்னுள் இருந்த கலைஞனை ஒதுக்கிவிட்டு கலையார்வத்தை மட்டுப்படுத்திவிட்டு மக்களின் மகிழ்ச்சி ஆதரவு என்ற இலக்கை மட்டும் நோக்கி பயணித்ததால் அவர் வெற்றி திருமகன் ஆனார். இங்கு ஒரு கலைஞனின் தனிமனித ஆர்வத்தை விட அவன் சார்ந்திருக்கும் சமூக அக்கறையே முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு கலையும் கலைஞன் என்ற ஒருவனுக்கானது அல்ல அது கலைஞனை வாழவைக்கும் சமூகத்துக்கானது என்பதை எம்.ஜி.ஆரின் கலை வாழ்க்கை புரிய வைக்கிறது. எம்.ஜி.ஆர் கலை கலைக்காக என்ற கூட்டத்தை சேர்ந்தவரல்ல; கலை மக்களுக்காக என்ற சித்தாந்தத்தை அவர் நமபினார். மக்களை மகிழ்விக்கின்ற அவர்களுக்கு படிப்பினை தருகின்ற படங்களை உருவாக்கினார். அதன் மூலமாக மக்கள் மனம் கவர்ந்த மக்கள் திலகம் ஆனார். பின்பு மக்கள் முதல்வர் ஆனார். அவர் இறந்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்

COURTESY NET

Richardsof
18th June 2018, 06:17 AM
தமிழ் சினிமா உலகில் பாட்டுக்கு தகுந்த மெட்டு, மெட்டுக்கு தகுந்த பாட்டு என்று இரண்டு வகையாக எழுதுவார்கள். இதில் மெட்டுக்கு தகுந்த பாட்டு எழுதுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான். இதில் வல்லவர் நமது கவிஞர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞருக்கு, சினிமா உலகில் இருக்கும் எல்லோருக்கும் உண்டாகும் ஆசை வந்தது. சொந்தமாக படம் ஒன்றை எடுத்தார். கையைச் சுட்டுக் கொண்டார். கடனாளி ஆனார். இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார். அந்தக் காலக் கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

Richardsof
18th June 2018, 06:18 AM
மறக்க முடியாத பாடல்கள்:

கீழே மறக்க முடியாத, அந்தக் கால இலங்கை வானொலியில் நான் கேட்ட கவிஞர் மருதகாசி அவர்களது சில பாடல்களின் முதல் வரிகளை மட்டும் தந்துள்ளேன். அடைப்புக் குறிக்குள் படங்களின் பெயர்கள்.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே (பாகப்பிரிவினை)
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி (மக்களைப் பெற்ற
மகராசி)
விவசாயி விவசாயி (விவசாயி)
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் (தை பிறந்தால் வழி பிறக்கும்)
சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா (வண்ணக்கிளி)
சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)
எஜமான் பெற்ற செல்வமே (அல்லி பெற்ற பிள்ளை)
மாமா மாமா மாமா (குமுதம்)
வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே (பாவை விளக்கு)
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)
வாராய் நீவாராய் போகுமிடம் வெகு தூரமில்லை (மந்திரி குமாரி)
வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)
தென்றல் உறங்கிய போதும் ( பெற்ற மகனை விற்ற அன்னை)
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா (குமுதம்)
எத்தனை எத்தனை இன்பமடா (யாருக்குச் சொந்தம்)
காட்டு மல்லி பூத்திருக்க … மாட்டுக்கார வேலா ( வண்ணக்கிளி)
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும் (கைதி கண்ணாயிரம்)
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். (நினைத்ததை முடிப்பவன்)
இதுதான் உலகமடா மனிதா ( பாசவலை)
சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)
ஆத்திலே தண்ணி வர ( வண்ணக்கிளி)
அடிக்கிற கைதான் அணைக்கும் ( வண்ணக்கிளி)
இன்பம் எங்கே இன்பம் எங்கே (மனமுள்ள மறுதாரம்)
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( நீலமலைத் திருடன்)

orodizli
18th June 2018, 03:01 PM
வரும் வாரம் சன் லைப் சேனலில் மக்கள் திலகம் விஜயம் 19-06-2018 செவ்வாய் பகல் 11 மணிக்கு கன்னித்தாய், 20_06-2018 புதன் கிமை இரவு 7 மணிக்கு திருடாதே, 21-06-2018 வியாழன் இரவு 7 மணிக்கு நம் நாடு, 23 - 06-2018, சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நான் ஆனையிட்டால், 24 -06-2018 ஞாயிறு பகல் 11 மணிக்கு நவரத்தினம் ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கண்டு மகிழவும் காலை வணக்கங்ள் மதுரை ராமகிருஷ்ணன்... thanks

orodizli
18th June 2018, 03:03 PM
சிரித்து வாழ வேண்டும் படத்தில், ஒருபாடலில் "மேரே நாம் அப்துல் ரஹ்மான்" என்று பாடுவார் தலைவர்.

#எம்ஜியார் ஏன் அந்த 'அப்துல் ரஹ்மான்' பெயரை தேர்ந்தெடுத்தார்...? அதற்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு... வாங்க என்னனு பார்போம்...

மக்கள் திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.

ஒரு முறை தான் நடித்து வெளியான 'சிரித்து வாழ வேண்டும்' என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்தார்.

ஒரு பாடலை உருவாக்கும்போது.. 'தனது நண்பரின் பெயர் வர வேண்டும்' என்று கேட்டுக்கொள்ள..

புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை..
டி.எம.எஸ். குரலில் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்தான் இந்த 'ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்' என்ற பாடல்.

எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

எம்.ஜி.ஆர். திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும், திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?

பகுத் அச்சா என்பதைவிட!! இது இறைவனின் சித்தமே! திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.

நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!

நன்றி:கவிஞர் காவிரி மைந்தன்..... நன்றி9

orodizli
19th June 2018, 08:47 AM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

நமது வெற்றியை
நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்

எம்ஜிஆர் ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!

M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.

பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’ தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.

‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.

உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.

திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.

எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!

‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது... Thanks

orodizli
19th June 2018, 08:56 AM
1972ல் எம்.ஜி.ஆர் அதுவரை தான் சார்ந்திருந்த தி.மு.க கட்சியிலிருந்து விலகி அ இ .அ.தி.மு.க என்ற புதிய கட்சி தொடங்கிய நேரம். மக்களிடையே தன்னுடைய கட்சியின் செல்வாக்கை அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்தது திண்டுக்கல் இடைத்தேர்தல் .

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மறைவையொட்டி 1973ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில் 6 மாதக் குழந்தையை கடும் பயிற்சி பெற்ற தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ் என்ற ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஓடவிட்டார்
எம் ஜி ஆர்.

மும்முனைப் போட்டியில் அ.இ.அ.தி.மு.க என்ற ஆறு மாதக் குழந்தை வீரர்களை முந்திச் சென்று மாபெரும் வெற்றி பெற்றது.படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆர் வெற்றிச் செய்தி கேட்டவுடன், அருகில் இருந்த பாடலாசிrயர் கவிஞர் வாலியை கட்டி அணைத்துக் கொண்டார்.

"அண்ணே இந்த இடைத் தேர்தல் வெற்றி மூலம் மக்கள் உங்க பக்கம்னு நிரூபிச்சிட்டாங்க."

என்றார் வாலி,எம் ஜி ஆரிடம் .

" எனக்கு முன்பே தெரியும் ஆண்டவனே"

என்றார் மக்கள் திலகம்.

"எப்படிங்கண்ணே தெரியும் "

என்று வாலி கேட்க

" நீங்கதான் எழுதிட்டீங்களே, மூன்றெழுத்தில் ( தி.மு.க)என் மூச்சிருக்கும்.அது முடிந்த பின்னால் (கட்சியை விட்டு வெளிவந்த பின்)என் பேச்சிருக்கும்னு , கவிஞன் வாக்கு பொய்க்குமா ?"

என்றாராம் எம் ஜி ஆர்.

தெய்வத்தாய் படத்தில் வரும் இந்தப் பாடல் எம் ஜி ஆர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை கணித்த பாடலாக வாலி அவர்கள் தேர்தலுக்கு முன்பே அமைந்தது பிற்காலத்தில் நடந்தது. தெய்வத்தாய் படத்தில் இருந்து மக்கள் திலகம் நடிப்பில் செளந்திர்ராஜன் குரலில் மெல்லிசை மன்னர்களின் இசையில் இனிய பாடல்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்.
கடமை........ அது கடமை
கடமை......... அது கடமை..... Thanks...

Richardsof
19th June 2018, 05:59 PM
http://i64.tinypic.com/1nxm2q.jpg

Richardsof
19th June 2018, 06:02 PM
http://i65.tinypic.com/o6f97c.jpg

Richardsof
19th June 2018, 06:04 PM
http://i67.tinypic.com/2v26p8k.jpg

Richardsof
19th June 2018, 06:06 PM
http://i67.tinypic.com/2h55ixe.jpg

Richardsof
19th June 2018, 06:17 PM
http://i64.tinypic.com/v4pb0x.jpg

Richardsof
19th June 2018, 06:18 PM
http://i65.tinypic.com/5ajm9k.jpg

Richardsof
19th June 2018, 06:21 PM
http://i67.tinypic.com/156dau1.jpg

Richardsof
19th June 2018, 06:23 PM
http://i67.tinypic.com/1178h3o.jpg

Richardsof
19th June 2018, 06:25 PM
http://i66.tinypic.com/2qjvuqa.jpg

Richardsof
19th June 2018, 06:27 PM
http://i66.tinypic.com/orsdw9.jpg

Richardsof
19th June 2018, 06:30 PM
http://i67.tinypic.com/2vjadef.jpg

Richardsof
19th June 2018, 06:31 PM
http://i67.tinypic.com/15yhdlg.jpg

Richardsof
19th June 2018, 06:33 PM
http://i67.tinypic.com/9kz0q9.jpg

Richardsof
19th June 2018, 06:34 PM
http://i63.tinypic.com/9r15yw.jpg

Richardsof
19th June 2018, 06:36 PM
http://i66.tinypic.com/kdaik0.jpg

Richardsof
19th June 2018, 06:38 PM
http://i64.tinypic.com/2cmrzx4.jpg

Richardsof
19th June 2018, 06:41 PM
http://i68.tinypic.com/1zx5zig.jpg

orodizli
19th June 2018, 11:54 PM
Makkalthilagam regarding beautiful documents register by Our esvee sir, simply superb... Go Ahead always...

orodizli
20th June 2018, 06:13 AM
Makkalthilagam MGR' s thread senior one of the member Mr. Vinton Sir achieves & Jumbing proudly 15001 super postings, All members greetings to him...

Richardsof
20th June 2018, 06:08 PM
எனக்கு பாராட்டு தெரிவித்த இனிய நண்பர் திரு சுக ராம் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
20th June 2018, 06:21 PM
மக்கள் திலகத்தின் படங்களின் அருமையான டைட்டில் பற்றி சிறு தொகுப்பு


காலத்தால் மறக்க முடியாத டைட்டில்

.நாடோடி மன்னன்
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
இதயக்கனி
காஞ்சித்தலைவன்
ஒளிவிளக்கு
நாளைநாமதே
நான் ஆணையிட்டால்
நீரும் நெருப்பும்


மக்கள் திலகத்தின் வாழ்த்துரைகள் மற்றும் அறிவுரைகள்

பல்லாண்டு வாழ்க
இன்று போல் என்றும் வாழ்க
சிரித்து வாழ வேண்டும்
நீதிக்குபின்ப்பாசம்
நீதிக்கு தலைவணங்கு
தர்மம் தலைகாக்கும்
நல்லவன் வாழ்வான்
திருடாதே

மக்கள் திலகத்தின் ஆளுமைகள் டைட்டில்

முகராசி
தனிப்பிறவி
அன்பே வா
ஆசைமுகம்
அன்னமிட்டகை
ஊருக்கு உழைப்பவன்
உழைக்கும் கரங்கள்
எங்கள் தங்கம்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கண்ணன் என் காதலன்
காவல்காரன்
சந்திரோதயம்
வேட்டைக்காரன்

Richardsof
20th June 2018, 06:29 PM
வேட்டைக்காரன்!

‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்மா.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் பாடல்களால் உச்சாணிக் கொம்பில் இருந்தனர். தேவர் பிலிம்ஸிலும் அவர்கள் இசை அமைக்கட்டும் என்றார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ட்யூன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி கேட்பதாக ரசிகர்கள் அபிப்ராயம் சொன்னார்கள். எந்தப் பாட்டு எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என்று சட்டென்று உணரமுடியாதபடி தேவரின் ‘தா’ வரிசைப் பாடல்கள் இருந்தன.





‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’





தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.

வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

Richardsof
20th June 2018, 06:38 PM
டாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்....

திரு.தஞ்சை ராமையாதாஸ் திரு.மாயவநாதன்
திரு.பாபநாசம் சிவன் திரு.கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி திரு.கு.சா.கிருஷ்ணமூர்த்தி
திரு.ஆத்மநாதன் திரு.கே.டிசந்தானம்
திரு.ராண்டர்கை திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா திரு.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ் திரு.கு.மா.பாலசுப்பரமணியன்
திரு.அ.மருதகாசி திரு.முத்துகூத்தன்
திரு.கண்ணதாசன் திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு திரு.அவினாசிமணி
திரு.புலமைபித்தன் திரு.வித்தன்
திரு.நா.காமராசன் திரு.முத்துலிங்கம்
திரு.பஞ்சு அருணாசலம் -

Richardsof
20th June 2018, 06:39 PM
டாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பின்னணி பாடகர்கள்....

திரு.செஞ்சுகுட்டி திரு.வசந்தகுமாரி
திரு.தோடு திருமதி. ராஜலட்சுமி
திரு.சி.எஸ்.ஜெயராமன் திருமதி. பி.லீலா
திரு.எஸ்.சி.கிருஷ்ணன் திருமதி. வைதேகி
திரு.என்.எஸ்.கிருஷ்ணன் திருமதி. எம்.எஸ்.ராஜேஸ்வரி
திரு.டி.வி.ரத்தினம் திருமதி. பானுமதி
திரு.எம்.டி.கே.சந்திரபாபு திருமதி. ஜமுனாராணி
திரு.திருச்சி லோகநாதன் திருமதி. கானசரஸ்வதி
திரு.ஷேக் முகம்மது திருமதி. ஜிக்கி
திரு.கண்டசாலா திருமதி. ரத்தினமாலா
திரு.டி.எஸ்.பகவதி திருமதி. எஸ்.வரலட்சுமி
திரு.டி.எம்.சௌந்தரராஜன் திருமதி. பி.சுசீலா
திரு.பாலமுரளிகிருஷ்ணா செல்வி. எல்.ஆர்.ஈஸ்வரி
திரு.சீர்காழி.கோவிந்தராஜன் திருமதி.ஜெ.ஜெயலலிதா
திரு.பி.பி.ஸ்ரீநிவாஸ் திருமதி.எஸ்.ஜானகி
திரு.ஏ.எம்.ராஜா திருமதி.ரமோலா
திரு.கோபாலகிருஷ்ணன் திருமதி.எல்.ஆர்.அஞ்சலி
திரு.கே.வீரமணி திருமதி.லியன் பிண்டே
திரு.ஜேசுதாஸ் திருமதி.வசந்தா
திரு.ஏ.எல்.ராகவன் திருமதி.சூலமங்களம் ராஜலஷ்மி
திரு.சாய்பாபா திருமதி.வாணி ஜெயராம்
திரு.ஜெயச்சந்திரன் திருமதி.டி.கே.கலா
திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருமதி.உஷா உதூப்
திருமதி.நிர்மலா

Richardsof
20th June 2018, 06:40 PM
டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் குழுக்களின் பட்டியல்...

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
கிருஷ்ணன் நினைவு நாடக சபா
உறையூர் முகைதீன் நாடக கம்பென
எம்.ஜி.ஆர். நாடக மன்றம்
டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திர நாடகப் பாத்திரங்கள் மற்றும் நாடகங்கள்
கதாபாத்திரங்கள்
இராமாயணம்
அகத்தியர்
மகாபாரதம
விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன்.
ரத்னாவளி
நடனக் காட்சி
நல்லதங்காள்
ஏழாவது குழந்தை
இராசேந்திரன்
லட்சுமி
சந்திரகாந்த
ஆங்கிலேயப் பெண்
சத்தியவான் சாவித்திரி
தவில் சுண்டுர் இளவரசன்
மனோகரா
மனோகரன் சந்திரகாந்தா
தசாவதாரம்
சத்ருகன், பரதன், இலட்சுமணன்
பக்தராமதாஸ்
நவாப்
கபீர்தாஸர்
முதியவர், மாறுவேடத்தில் ராமர்
சக்குபாய்
பெண்வேடம்
மார்க்கண்டேயா
மேனகா
மற்ற நாடகங்கள்
கோவலன்
கற்பின் வெற்றி
பவளக்கொடி
வள்ளித்திருமணம்
ராசாம்பாள்
கதர்பக்தி
கதரின் வெற்றி
பதிபக்தி
தேசபக்தி
தேசியக்கொடி
கவர்னர்ஸ்கப்
பம்பாய் மெயில்
அரிச்சந்திரா
லீலாவதி
மோகனசுந்தரம்
ராஜேந்திரா
இன்பக்கனவு
சுமைதாங்கி
இடிந்தகோவில்
அட்வகேட்அமரன்
கள்வனின் காதலி ஆகிய நாடகங்களில் பல வேடங்கள்.

Richardsof
20th June 2018, 06:44 PM
Vettaikaaran (1964)
MGR and Savithri play the leads in Vettaikaaran, a story of an estate owner (MGR), who is a hunter, and spends his time taking down wild animals. He lives in his estate along with his mother (M.V. Rajamma), and falls in love with Savithri, the daughter of another estate owner (M.R. Radha).

M. N. Nambiar takes on a double identity as Ramu and Somu. But he keeps it a secret, and makes the world believe that his father has two sons, with Somu being a spoiled child. Initially, everybody believes him, but ultimately, the truth and the true identity of Ramu is exposed. He has his eye on the estate, and waits for the right opportunity to steal the documents. MGR and Savithri’s son (‘Baby’ Shakila as a boy) also shows a keen interest in hunting, just like his father, and starts going on hunting trips even as a small boy into the woods. His mother and grandmother are upset, but MGR encourages him to pursue his passion. While on one such expedition, MGR tries to shoot a tiger, but it escapes unhurt, and later tries to take revenge on him by stealthily entering the estate. (This part of the film is inspired by one of the adventures in Jim Corbett’s book Man-Eaters of Kumaon.)

In the meantime, Nambiar kidnaps MGR’s child and takes him to the forest, and the mother goes into the forest in search of him. Nambiar threatens to kill both of them if he does not get the estate papers. And, as expected, the hero comes in at the right time to save them, and after an intense fight between MGR and Nambiar, the latter falls prey to an ambush of tigers. MGR takes home his wife and son, and they live happily thereafter.

Vettaikaaran was produced by ‘Sandow’ M.M.A. Chinnappa Thevar and directed by M.A. Thirumugam, the younger brother of Thevar. This film was a box office success at several cinemas. The film was written by Aaroor Das, who has worked with MGR and Thevar in many movies.

Music was one of the main reasons for the film’s success at the box office. Composed by maestro K. V. Mahadevan, there are six songs in the movie, with some becoming big hits.

One song, ‘Unnai Arindhaal’, became a superhit, and is still remembered by moviegoers after several decades. Other songs which became hits include ‘Medhuvaa medhuvaa thodalaamaa’. Nagesh and Manorama played the funny couple, and their duet, ‘Seettu kattu raja’, was also popular.

The romantic sequences between MGR and Savithri created a sensation those days, and was yet another reason for the film’s success. Cinematography was by N.S. Varma, with the film being edited by M. A. Thirumugam and his team.

Remembered for: The interesting storyline, romantic sequences between MGR and Savithri, and super hit songs.

courtesy the hindu

oygateedat
21st June 2018, 08:18 AM
நமது
திரியில்
15000
பதிவுகளைப்
பதிந்து
தொடர்ந்து
பயணிக்கும்
அன்பு நண்பர்
திரு வினோத்
அவர்களுக்கு
எனது
மனமார்ந்த
பாராட்டுக்கள்.

- எஸ் ரவிச்சந்திரன்
அன்பு

orodizli
21st June 2018, 01:11 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

அன்பில் வாழும்
இதயம் தன்னை
தெய்வம் கண்டால்
வணங்கும்
ஆசையில்லா மனிதர்
தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்

1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... Thanks...👍 👌

orodizli
21st June 2018, 03:01 PM
புரட்சித் தலைவரின்
சூப்பர் ஹிட்
படங்களுக்கு
இசை அமைத்த
திரை இசை திலகம்

K. V. மகாதேவன்
நினைவுநாள் இன்று

குழுவின் சார்பாக
அவருக்கு அஞ்சலி
செலுத்துகிறோம்

திரை இசைத்திலகம் கே.வி.ம*காதேவ*ன் அவ*ர்க*ளின் 17ஆம் ஆண்டு நினைவு தின*ம் இன்று!

இவ*ர், எம்.ஜி.ஆருட*ன் சிற*ந்த* ந*ட்புட*ன் விளங்கிய*வ*ர். எம்.ஜி.ஆர் ந*டித்து வெளியான 35 ப*ட*ங்க*ளுக்கு இசை அமைத்துள்ளார். அவ*ற்றில் 90% சூப்ப*ர் ஹிட் பாட*ல்க*ளே!

எம்.ஜி.ஆரின் ப*ட*ங்க*ளுக்கு கே.வி.ம*காதேவ*ன் இசைய*மைத்த*த*ன் ப*ட்டிய*ல்.

1. குமாரி
2. கூண்டுக்கிளி
3. ராஜ*ராஜ*ன்
4. ச*பாஷ் மாப்பிளே
5. தாய் சொல்லை த*ட்டாதே
6. ராணி ச*ம்யுக்தா
7. மாட*ப்புறா
8. தாயைக்காத்த த*ன*ய*ன்
9. குடும்ப*த்த*லைவ*ன்
10. கொடுத்து வைத்த*வ*ள்
11. த*ர்மம் த*லைகாக்கும்
12. க*லை அர*சி
13. நீதிக்குப் பின் பாச*ம்
14. காஞ்சித்த*லைவ*ன்
15. ப*ரிசு
16. வேட்டைக்கார*ன்
17. தொழிலாளி
18. க*ன்னித்தாய்
19. தாழ*ம்பூ
20. முக*ராசி
21. தாலிபாக்கிய*ம்
22. த*னிப்பிற*வி
23. தாய்க்கு த*லைமகன்
24. அர*ச*க*ட்ட*ளை
25. விவ*சாயி
26. தேர்த்திருவிழா
27. காத*ல் வாக*ன*ம்
28. அடிமைப்பெண்
29. மாட்டுக்கார* வேல*ன்
30. என் அண்ண*ன்
31. ந*ல்ல* நேர*ம்
32. அன்ன*மிட்ட*கை
33. ப*ட்டிக்காட்டுப் பொன்னையா
34. ப*ல்லாண்டு வாழ்க
35. தாய்க்குப்பின் தார*ம்

இவ*ர், தேவ*ர் பிலிம்ஸ் த*யாரித்த எம்.ஜி.ஆரின் 16 ப*ட*ங்க*ளுக்கும் இசை அமைத்துள்ளார். இதுத*விர த*லைவ*ரின் வெளிவ*ராத வெள்ளிக்கிழ*மை, த*ந்தையும் ம*க*னும் மற்றும் சில ப*ட*ங்க*ளும் உண்டு.
மொத்த*ம் 218 த*மிழ் ப*ட*ங்க*ள் உட்ப*ட தெலுங்கு, ம*லையாளம் சேர்த்து 1500 ப*ட*ங்க*ளுக்கு மேல் இசை அமைத்துள்ளார். த*மிழ*க அர*சின் விருது, தேசிய விருது பிலிம்பேர் விருதுக*ள் உட்ப*ட ப*ல விருதுக*ளையும் குவித்துள்ளார்.

இனிய காலை வ*ணக்கத்துட*ன்... Thanks this statistics particulars...

orodizli
21st June 2018, 03:08 PM
திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட செய்திகள் பகிரும்போது( facebook, whatsapp etc.,) அந்தந்த விடயங்கள் சரிதானா என அறிந்து, தெரிந்து கொண்டு பதிவு செய்ய நண்பர்களை பாசத்துடன் வேண்டி கேட்டு கொள்கிறோம், நன்றி...

Richardsof
21st June 2018, 06:06 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
தங்கள் அன்பு பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றி .

Richardsof
21st June 2018, 06:11 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22வது திரைப்படமாகிய "மந்திரி குமாரி" யில் இடம் பெற்ற பாடல்கள் : (ஒரிரண்டு வரிகள் மட்டும்)


1. தர்பார் நடனப் பாடல் : ஆதவன் உதித்தான் - தாமரை மலர்ந்தது
காதலில் கலந்தது இரண்டும்

2. பெண் குரலில் தனித்த பாடல் ஆஹா ஹா ஹா வாழ்விலே ஓர் ஆனந்தம் - இனி
பெறுவோம் நாமே நாளுமே ஓ - மாரனே

3. பெண் - நடனப் பாடல் இசைக் கலையே - இனி தாமே மேலான
கானத்திலே ஆனந்தம் பெறார் யாரோ ?

4. பெண் குரலில் தனித்த பாடல் : பெண்களினால் உயர்வாகிடுமே - புவி வாழ்வதுலே தானே
வீரர் தம்மை நாட்டினுக்கீந்த விளங்கும் மேன்மையாலே

5. காதல் ஜோடிப் பாடல் உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே
நாம் மகிழ ஊஞ்சலாடுதே - அலைகள் வந்து மோதியே

6. பெண் - நடனப் பாடல் கண்ணடிச்சு யாரை நீயும் கண்ணி வைக்கப் பாக்குறே
கண்ணி வைக்கப் பாக்குறே - என்னையா ஏய்க்கிறே ?

7. குழுப்பாடல் (கோரஸ்) அந்தி சாயுற நேரம் - மந்தாரைச் செடி யோரம்
ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா - அடிச்சாராம் கண்ணு
அவ சிரிச்சாளாம் பொண்ணு

8. இரு பெண் (தோழியர்) பாடல் : பெறக்கப் போகுது ! - பாரு பொறக்கப் போகுது
என்ன ? எங்கே ? யாருக்கு பொறக்கப் போகுது

9. பெண் குரலில் தனித்த பாடல் : எண்ணும் பொழுதில் இன்பம் - பெருகி என் உள்ளம்
மகிழலானேன் - மாவீரர் பணியும் ஜெயதீரா

10. குழு - நடனப் பாடல் : ஓ ராஜா .............. ஒ ராணி ...........மிக ஏழை எளிய
எங்க மனசு குளிர இந்த குடிசை வழியே வாங்க

11. மாட்டுக்கார பையன் பாடல் : ஊருக்கு உழைப்பவனடி - ஒரு குற்றம் அறியானடி (தொகையறா)
நல்லதுக்கு காலமில்லே - நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு (பாட்டு)
எருமைக் கண்ணுக்குட்டி -என் எருமை கண்ணுக்குட்டி

12. இரு பெண் (தோழியர்) பாடல் : மனம்போல் - வாழ்வு பெறுவோமே ! இணைந்தே கேசமுடன் எந்நாளும்
நாம் - மகிழ்வோம் மெய்யன்பாலே - என்னுயிர் காதலன் குணமே - மாறி

13. காதல் ஜோடிப் பாடல் : வாராய் நீ வாராய் - போகுமிடம் வெகு தூரமில்லை - நீ வாராய்
ஆஹா ! மாருதம் வீசுவதாலே - ஆனந்தம் பொங்குதே மனதிலே!


14. உழவன் பாடும் பாடல் : உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் (தொகையறா)
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே

15. பெண் குரலில் தனித்த பாடல் : காதல் பலியாகி நீயும் தியாகத்தின் சின்னமாய் - நாட்டினர்
நெஞ்சிலே ஓவியமே ஆகினாய் !
. ================================================== ==================================================

orodizli
22nd June 2018, 01:18 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

புரட்சி தலைவர் ...

திரையில் ஆட்சி செய்யும் போதும்....
திரையுலகில் ஆட்சி செய்யும் போதும்..
அரசியலில் ஆட்சி செய்யும் போதும்...
அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் போதும். ..

அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்கள் .... எல்லாப்படங்களும் வசூலில் சாதிக்கிறதே என்று
வயிறு எறிந்தவர்கள்.. எங்களைவிட பெரிய தயாரிப்பாளர்ஆகிவிட்டாரே என பல்லை கடித்தவர்கள்....மனதால் காயப்ப்படுத்தியவர்கள்..
இந்த புகழ் தனக்கு வரவில்லையே என்று
வெம்மியவர்கள்...
ஆவடியில் உயிரோடு கொல்ல நினைத்தவர்கள்.....
விருத்தாச்சலம் அருகே திருச்சிக்கு ரெயிலில் பயணம்செய்யும் போது வண்டியை இடையே நிறுத்தி ஏசி பெட்டியை உடைத்து அங்கேயே கை வேறாக கால்வேறாக எடுக்க நினைத்தவர்கள்....

பொறாமைப்பட்டவர்கள்..அசுர வளர்ச்சியை தாஙக முடியாதவர்கள்....
வேற்று மொழிக்காரர் என மக்களிடமிருந்து
பிரிக்க நினைத்தவர்கள். .

வாங்காத கப்பலுக்கு கப்பல் பேர ஊழல்
என்று கூச்சலிட்டவர்கள். ..

இந்திரா காந்தியுடன் சேர்ந்து தேர்தலில்
வஞ்சக கூட்டணி அமைத்து ஒரு வேளை தப்பித்தவறி வென்றால் தலைவரை கம்பி எண்ணவைக்கலாம் என்று எண்ணியவர்கள்

அமெரிக்க நாட்டில் இருக்கும் போது எனக்கு
ஓட்டு போட்டால் தலைவர் தாய் நாடு திரும்பியதும் அவரையே முதல்வர் ஆக்கிவிடுவதாக அப்பாவி கிராமத்து மக்களை ஏமாற்ற நினைத்தவர்கள்...

என்னை ரெம்ப திட்டி விட்டீர்களா உங்கள்
திட்டமெல்லாம் எனக்கு லட்டு என்று மானங்கெட்டு உளறியவர்கள்...

இறுதியில் கீழே விழுந்து..
அவமானப்பட்டு....அசிங்கப்பட்டு..
கேவலப்பட்டு..... மக்களால் தூக்கியெறியப்பட்டு....காறி எச்சிலால்
துப்பப்பட்டு... மானங்கெடப்பட்ட...பட்டியலில்
உள்ளவர்கள். ...

..............
சந்திரபாபு. ..
கண்ணதாசன். ..
எம். ஆர். ராதா. ..
நாகேஷ். ...
அசோகன்...
வி.கே.ராமசாமி..
மேஜர் சுந்தர்ராஜன். .
டி.ராஜேந்தர். ..
எஸ்.எஸ் வாசன். .. அவரது மகன்
எஸ் பாலசுப்பிரமணியன் ஆனந்த விகடன்.
சோ .. ..
கருணாநிதி. ..
நாவலர் நெடுஞ்செழியன். ..
க.அன்பழகன். .
துரைமுருகன். ..
ரகுமான் கான். ..
ஆர்.எம். வீரப்பன். .
நாஞ்சில் மனோகரன்...
எஸ்.டி.சோமசுந்தரம்...
மதுரை முத்து. ..
நெகமம் கந்தசாமி. ..
நாராயணசாமி நாயுடு. ..
மதுரை ஆதீனம். ..
தீப்பொறி ஆறுமுகம். ..
வெற்றி கொண்டான்...
முரசொலி மாறன்..
டி.ஆர். பாலு. ..
வை.கோ...
கி.வீரமணி. ...
கம்பம் நடராஜன்.....

இப்படி மண்ணைக்கவ்வியவர்கள்
பட்டியல் நீண்டு செல்லும்.

உயிருடன் இருக்கும் வரை வெல்ல முடியாத தலைவனை முப்பது ஆண்டுகளுக்கு பின் அவர் மறைந்த பின்னர்
சில எலும்பு துண்டுக்கு அலைபவர்கள்
பேசினால் அதைப்பற்றி நாம்
துச்சமென எண்ணுவோம். ...
இவனுங்க எல்லாம் சொந்த தொகுதிக்கு
ஓட்டு கேட்க போனால் மக்கள் செருப்படி
கொடுக்க காத்திருக்கிறார்கள்...
இவனுங்க பேரை சொல்லவோ எழுதவோ
துணியவேண்டாம்....
அதெற்க்கெல்லாம லாயக்கில்லாதவர்கள்.
அருகதையில்லாதவர்கள்

நன்றி. .வணக்கம். ... Thanks fb friends...

orodizli
22nd June 2018, 01:20 PM
மக்கள் திலகம் உலக எம் ஜி.ஆர் பேரவை மாபெரும் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலை கழகம் வளாகத்தில் ஜூலை 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுவதால் நமது ரசிகர்களும் அபிமானிகளும் தங்கள் குடும்பத்துடன் அனைவரும் அலைகடலென திரண்டு வருக! வருகll.. என மதுரை மகரன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக அழைக்கிறோம்... Thanks whatsapp friends...

orodizli
22nd June 2018, 01:31 PM
மக்கள் திலகம் அபிமானிகள் அறிய வேண்டிய அருமையான, இனிய தகவல்... கடந்த மாதங்களில் சென்னை - ஆல்பர்ட் வளாகத்தில் என்றும் வசூல் சக்ரவர்த்தி ஆக திகழும் புரட்சி நடிகர் இரு வேடங்களில் முதன் முறையாக நடித்து, தயாரித்த, இயக்கிய காலத்தை வென்ற காவியம் "நாடோடி மன்னன்" இன்றைய சினிமா துறை நிலவுகின்ற சூழ்நிலையிலும் அட்டகாசமான ரூபாய் ஏழு லட்சங்களை (700000.00) வசூலித்து புதிய சாதனை உச்சத்தை படைத்திருக்கிறது...

orodizli
22nd June 2018, 01:46 PM
மற்றுமொரு இனிய செய்தி... விரைவில் வசூல் திலக காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியிடும் விழா வைபவம் சத்தியம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது, வாழ்க... வளர்க மக்கள் திலகம் நீடிக்கும் புகழ்...

Richardsof
22nd June 2018, 06:45 PM
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 1978


1974ல் இயக்குனர் பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் துவக்கப்பட்ட படம் . 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புதுவை , கோவை நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் புதுவை சட்டமன்ற தேர்தல்களிலும் எம்ஜிஆர் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று அரசியல் வானிலும் ஜொலித்து கொண்டிருந்தார் . அதிமுக இயக்கம் மக்கள் மத்தியில்
பரபரப்பாக பேசப்பட்டது . திரை உலகிலும் எம்ஜிஆரின் புகழ் உச்சத்தில் இருந்தது . தமிழகத்தில் திமுக ஆட்சியில் எம்ஜிஆருக்கு எல்லா விதத்திலும் தொல்லைகளை திமுக தலைவர் கருணாநிதி தந்து கொண்டிருந்தார் . பறக்கும் படை என்ற பெயரில் சாதி இன பேதங்களை வளர்த்தார் .

தமிழகத்தை மீட்டு நல்லாட்சி அமைந்திட பந்துலு அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து மதுரையை [ தமிழகத்தை ] மீட்ட சுந்தரபாண்டியன் { அழகுதலைவர் எம்ஜிஆர் } என்ற அகிலனின் காவியத்தை உருவாக்கினார் . உடல் நலன் பாதிக்கப்பட்ட திரு பந்துலு அவர்கள் இயற்கை எய்திய நிலையில் படப்பிடிப்பு நின்று போனது . அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இப்படத்தின் வளர்ச்சி 1976க்கு பின்னர் மீண்டும் வளர துவங்கியது . 1977 மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் நடந்த பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்களில் எம்ஜிஆர் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னர் இடைவெளி இன்றி தொடர்ந்து நடித்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இயக்கி நடித்து முடித்து கொடுத்தார் .

ஏற்கனவே தயரிப்பில் இருந்த ஸ்ரீதரின் மீனவ நண்பனையும் நடித்து முடித்தார் .அந்த படம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் 14.8.1977 அன்று வெளிவந்தது மாபெரும் வெற்றியை அடைந்தது , மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14.1.1978 அன்று திரைக்கு வந்தது
1936ல் வெளிவந்த ,சதிலீலாவதி - எம்ஜிஆரின் திரை உலக அறிமுகப்படம் . இறுதி படமாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அமைந்து விட்டது
மொத்தத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழகத்தை மீட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
.
1977ல் தமிழகத்தை எம்ஜிஆர் மீட்டார் .
1978ல் மதுரை மாநகராட்சியை எம்ஜிஆர் மீட்டார்
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் - எம்ஜிஆர் தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கினர் . மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துடன் தன்னுடைய கலைப்பயணத்திற்கு விடை கொடுத்தார் .கடைசியாக மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .மதுரை எம்ஜிஆருக்கு நிரந்தர அரசியல் மற்றும் கலைத்துறை கோட்டை என்பதை நிரூபித்து காட்டினார் . மறைவிற்கு பின்னரும் 30 ஆண்டுகள் கடந்தும் இன்றும் மதுரை எம்ஜிஆர் கோட்டையாக திகழ்கிறது
.

இனி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை பற்றி ...........

அகிலனின் கதையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மிகச்சிறப்பாக சுந்தரபாண்டியனாக நடித்து . இருந்தார் .மக்கள் திலகத்துடன்
நம்பியார் , வீரப்பா , சகஸ்ரநாமம் .வி.எஸ். ராகவன் , கண்ணன் தேங்காய் ஸ்ரீனிவாசன் , ஐசரி வேலன் மற்றும் நடிகைகள் லதா , பத்மப்ரியா நடித்திருந்தார்கள் . மைசூர் அரண்மனை . ஜெய்பூர் அரணமனை , பாலைவனக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து .
எம்ஜிஆர் - நம்பியார்
எம்ஜிஆர் - வீரப்பா
எம்ஜிஆர் - ஜஸ்டின்
மூன்று சண்டை காட்சிகள் அருமை . குறிப்பாக அரண்மனையில் வீரப்பாவுடன் மோதும் காட்சியில் எம்ஜிஆரின் ஆக்ரோஷமான நடிப்பு பிரமாதம் .
அதே போல் ஜஸ்டினுடன் பாதாள அறையில் மோதும் காட்சியும் அனல் பறந்தது . பாலைவனத்தில் நம்பியாருடன் மோதும் சண்டை கட்சியில் எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடிப்பு நன்கு தெரிகிறது .

எம்ஜிஆர் அரசியல் வசனங்கள் அனைத்தும் அருமை .
தாயகத்தின் சுதந்திரமே
வீர மகன் போராட வெற்றி ..
தென்றலில் ஆடும் கூந்தலில்
அமுத தமிழில் .....
4 பாடல்கள் சூப்பர் ஹிட் . நகைச்சுவை காட்சிகள் மிகவும் குறைவு .மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் சூப்பர் .
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் .

Richardsof
22nd June 2018, 06:59 PM
தமிழ்நாட்டின் நிலப்பரப்பை விட எம்.ஜி.ஆரின் மனப் பரப்பு பெரியது



தமிழ்நாட்டின் நிலப் பரப்பைவிட எம்.ஜி.ஆரின் மனப் பரப்பு பெரியது என்று வேலூரில் கவிஞர் முத்துலிங்கம் பேசினார். எம்.ஜி.ஆர் என்பது

மூன்றெழுத்து. இதில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துத்தான் அன்றைக்கும் இன்றைக்கும் கழகத்தின் ஆயுத எழுத்தாக விளங்குகின்றது.

என்று வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகம் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்து லிங்கம் பேசினர்.

இவ்விழாவிற்கு வி.ஐ.டி வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இரண்டு நாள் நடந்த இவ்விழாவில் இரண்டாம் நாளில் எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் பங்கேற்ற பல கலைஞர்களை அழைத்துப் பேச வைத்து சிறப்புச் செய்தார் விசுவநாதன்.

இவ்விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை லதா, நடிகை வாணிஸ்ரீ நடிகை சச்சு, ராமபிரபா, பேபி இந்திரா கலைப்புலிதாணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் முத்தாய்ப்பாக அவையோரின் கை தட்டல்களுக்கிடையே திரைப்பாடல் ஆசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

குறிஞ்சி பூமலர்களில் சிறந்தது தாமரை. நதிகளில் சிறந்தது கங்கை. மலைகளில் சிறந்தது இமயம்: மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூவைப் போல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக் கூடிய தலைவர்களில் அல்லது மனிதர்களின் ஒருவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நெருஞ்சிமனம் படைத்த தலைவர்கள் நிறைந்திருக்கும் இந்நாட்டில் குறிஞ்சி மனம் பரப்பிய கொடைக்கானலாகத் திகழ்ந்தார். நேருக்கும் காந்திக்கும் நிகரான செல்வாக்கைப் பாருக்குள் பெற்றிருந்த பண்பான தலைவர் இவர். எடுக்கும் பழக்கமுள்ள எத்தனையோ கைகளிடை கொடுக்கும் பழக்கமுள்ள கொடைக் கைகள் இவர் கைகள். கொடைக் குணமும் படைக்குணமும் கூடப் பிறந்த இரட்டைக் குணங்களாகக் கொண்டிருந்தவர் அவர்.


“மூன்றெழுத்து அதிசய மனிதர் எம்.ஜி.ஆர்” என்று வி.ஐ.டி வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துத்தான் இன்னமும் மக்கள் நெஞ்சில் அழியாமல் வாழ்கின்ற உயிரெழுத்தாகவும் உயிர்மெய் எழுத்தாகவும் உலாவருகிறது. அந்த மூன்றெழுத்துதான் அன்றைக்கும் இன்றைக்கும் கழகத்தின் ஆயுத எழுத்தாகத் திகழ்கிறது. அந்த எழுத்துத் தான் எதிரிகளின் ஆயுதங்களைத் தாங்குகின்ற கேடயமாகவும் திகழ்கிறது. ஈகை பூமி குளிரவேண்டும் என்பதற்காக மேகம் பொழி வதைப் போலே காடுகரைகள் செழிக்க வேண்டும் என்பதற்காக நதிகள் பாய்ந்தோடிச் செல்வதைப் போலே உலக இருட்டை நீக்குவதற்காகச் சூரிய வெளிச்சம் தோன்று வதைப் போல் ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைக்க வேண்டுமென்பதற்காக கழகத்தைப் புரட்சித்தலைவர் தோற்றுவித்தார். அதன் மூலம் அடையாளம் இல்லாமல் இருந்தவர்களுக்கெல்லாம் ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.

பேர் தெரியாமல் இருந்தவர்களை யெல்லாமல் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் ஆக்கினார். அதுபோல் அம்மா அவர்களும் ஊருக்கு மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தவர்களை யெல்லாம் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களாக்கி உலகறியச் செய்தார். இவர்கள் இருவரும் கீழ்மட்டத்தில் இருந்தவர்களை யெல்லாம் கை கொடுத்து மேல் மட்டத்திற்கு உயர்த்தியவர்கள்.

ஒருவன் நடந்து வரக் கூடிய நடையை வைத்தே அவனது குணத்தை அறிந்து கொள்ளும் கூர்த்தமதி உடையவர் எம்.ஜி.ஆர். அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவிகேட்டு வந்தால் இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும். வந்தவர் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்.
எல்லாருக்கும் உள்ளங்கையில் இருப்பது ரேகையென்றால் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ஈகை. அதனால் தான் அவர் சூடினார் அனைத்திலும் வாகை.

மனப்பரப்பு பெரியது “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” படத்திற்குப் பாடல் எழுதும் போது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் காட்டுவதற்குப் பணமில்லை கையில் இரண்டு ரூபாய் தான் இருந்தது. அதைப் பேருந்துக்கு வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைப் பார்க்க சத்தியா ஸ்டுடியோவிற்குச் சென்றேன். அப்போது படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறிவிட்டார். கார் புறப்படத் தொடங்கியது. நான் வேகமாக வந்ததைப் பார்த்துவிட்டு காரை நிறுத்தச் சொல்லி கார் அருகே என்னை அழைத்து என்ன விஷயமென்று கேட்டார். நான் இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு, நேற்றுத்தான் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” கம்பெனியில் பாட்டெழுதுவதற்கான காட்சியைச் சொன்னார்கள். நாளைக்குத்தான் கம்போசிங் இருக்கிறது. பாட்டெழுதிய பிறகு வாங்க வேண்டிய பணத்தை நிலைமை இப்படி இருப்பதால் முன் கூட்டியே வாங்கிக் கொள்ளலாமா என்று கேட்டேன்.

“ அப்படிக் கேட்கக் கூடாது. இதற்கு முன்பு அந்தக் கம்பெனியில் நீ எழுதியிருந்தால் கேட்கலாம். நான் சொன்னதால் தான் உன்னைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதனால் முன் கூட்டியே நீ கேட்டால் அது உனக்கும் அசிங்கம் எனக்கும் அசிங்கம் கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு காரில் இருந்த அவர் உதவியாளர் மாணிக்கத் திடம் டிக்கியில் இருக்கிற பெட்டியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லி விட்டு காரைவிட்டு இறங்கி என்னை மேக்கப் ரூமுக்குள் கூட்டிக் சென்றார். மனிதநேயம் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து நம்ம டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்தைப்பார். இல்லையென்றால் நீ எந்த டாக்டரிடம் காண்பிக்கிறாயோ அவரிடம் காட்டி என்ன நிலையென்பதை என்னிடம் சொல் என்றார். அப்போது ஒரு பவுன் நானூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்றகாலம். இரண்டாயிரம் ரூபாய்க்கு நான்கு பவுன் வாங்கலாம். இப்போது நான்கு பவுன் வாங்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாயாகும். அன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ஒரு லட்சம்.

மேக்கப்பை கலைத்துவிட்டு காரில் ஏறி உட்கார்ந்து விட்டால் காரை விட்டிறங்கி மேக்கப் அறைக்குள் மறுபடி வரமாட்டார். இது அவர் இயல்பு. நான் சொன்னவுடன் காரைவிட்டு இறங்கி மேக்கப் அறைக்குள் வந்தார். என்னுடைய நிலைமையில் யார் வந்து சொல்லியிருந்தாலும் அப்படித்தான் உதவி செய்திருப்பார். ஏனென்றால் அதுதான் இரக்கக் குணம். அதுதான் மனிதநேயம். இந்த மனித நேயம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது?
இந்நாட்டின் நிலப்பரப்பை விட எம்.ஜி.ஆரின் மனப்பரப்பு பெரியது. இவரைப் போல் ஒரு தலைவர் இதுவரைக்கும் பிறந்ததில்லை. இனிப் பிறப்பார் என்று சொல்வதற்கும் உறுதியில்லை. மக்கள் மனங்களில் மாறாமல் மணம் வீசிக் கொண்டிருக்கிற வாடாத வசந்த முல்லை எம்.ஜி.ஆர். இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

Richardsof
22nd June 2018, 07:03 PM
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

இந்த காலக்கட்டத்தில், மீண்டும் அகிலனுடன் எம்.ஜி.ஆர். தொடர்பு கொண்டார்.

‘‘நீங்கள் எழுதிய ‘கயல்விழி’ நாவலை நான் படமாக தயாரிக்க விரும்புகிறேன். கதாநாயகனாக நானே நடிக்கிறேன். படத்திற்கு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று பெயர் வைக்கலாம் என்று இருக்கிறேன். படத்துக்கு நீங்களே வசனம் எழுதுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

கதை உரிமையை மகிழ்ச்சியுடன் தருவதாக எம்.ஜி.ஆரிடம் அகிலன் தெரிவித்தார். ஆனால் வசனம் எழுத அவர் சம்மதிக்கவில்லை. ‘திரைக்கதை – வசனம் எழுத ப.நீலகண்டன் போன்ற ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்க லதா, பத்மப்பிரியா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோர் ஒப்பந்தம் ஆனார்கள். ப.நீலகண்டன் திரைக்கதை – வசனம் எழுதினார்.

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படப்பிடிப்பு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சத்யா ஸ்டூடியோவில் தொடங்கியது. முதல்நாள், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

எதிர்பாராத திருப்பங்கள்

வெளிப்புற படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய, கர்நாடக மாநிலத்திற்கு பி.ஆர்.பந்தலு சென்றார். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென காலமானார்.

பந்தலுவின் எதிர்பாராத மரணத்தால், எம்.ஜி.ஆர். அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார். என்றாலும் படத்தை எடுத்து முடிப்பது என்று உறுதிபூண்டார்.

சிவஸ்ரீ பிக்சர்ஸ் அதிபர் மணி அய்யர், பட அதிபர் சேவுகன் செட்டியார் இருவரையும் அழைத்துப் பேசினார். அவர்கள் இருவரும் சேர்ந்து, ‘சோளீஸ்வரா கம்பைன்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்குவது என்றும் அந்த நிறுவனத்தின் சார்பில் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை எடுத்து முடிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. படத்தின் டைரக்ஷன் பொறுப்பை எம்.ஜி.ஆர். ஏற்றார். படம் வேகமாக வளர்ந்தது.

படத்தில் பிரமாண்டமான போர்க்களக்காட்சி இடம் பெற்றது. அக்காட்சி ஜெய்ப்பூரில் 26 நாட்கள் படமாக்கப்பட்டது. அத்துடன் டெல்லி, மைசூர் முதலான இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு திருப்பம்.

1977–ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில், எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

படத்தில், எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அக்காட்சிகளைப் படமாக்கி கொடுத்துவிட்டு அதன் பின் முதலமைச்சராக பதவி ஏற்பது என்று எம்.ஜி.ஆர். தீர்மானித்தார்.

இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்த பின், முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்.

எம்.ஜி.ஆர். பதவி ஏற்றபின், 1978–ம் ஆண்டு ஜனவரி 14–ந் தேதி பொங்கல் தினத்தன்று ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்றது. அத்துடன் எம்.ஜி.ஆர். நடித்த கடைசி படம் என்ற சிறப்பையும் பெற்றது

Richardsof
23rd June 2018, 06:13 PM
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

Richardsof
23rd June 2018, 06:16 PM
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, இன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”

என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

உண்மைதானே!

அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.

அவர்தானே,

‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.

Richardsof
23rd June 2018, 06:28 PM
மெல்லிசை மன்னர் எம் எஸ் வி பிறந்த நாள் 24.6.2018

மெல்லிசை மன்னர் மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்திற்கும் அருமையான பாடல்களை தந்துள்ளார் எம்ஜிஆர் படங்களில் டைட்டில் காட்சி இசைஅமைப்பும் பின்னனணி இசையும் மிகவும் அருமையான இருந்தது

குலேபகாவலி
மன்னாதி மன்னன்
பணத்தோட்டம்
ஆனந்தஜோதி
படகோட்டி
எங்கவீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
காவல்காரன்
ரகசியப்போலீஸ் 115
குடியிருந்தக்கோயில்
ஒளிவிளக்கு
நம்நாடு
ரிக் ஷாக்காரன்
ராமன் தேடிய சீதை
உலகம் சுற்றும் வாலிபன்
சிரித்து வாழவேண்டும்
இதயக்கனி
மீனவநண்பன்

Richardsof
23rd June 2018, 06:37 PM
விஸ்வநாதன் ராமமூர்த்தி தேர்ந்த மெலடியில் இசையமைக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்ட பீம்சிங், ஸ்ரீதர் மற்றும் பலர் களம் அமைத்துக் கொடுத்தார்கள் என்றாலும் எம்ஜிஆர் திரைப்படங்களே அவர்களுக்கு விதவிதமான பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அளித்தன. எம்ஜிஆர் படங்களிலும் சிறந்த மெல்லிசைப் பாடல்கள் இருந்தன என்றாலும், அவற்றில் துள்ளிப் பாயும் உற்சாகம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மிகப்பெரிய ஆளுமையாக எம்ஜிஆர் திரைப்படங்களில் தோன்றியது ஒரு காரணம் என்றாலும் அவர் அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள திரைப்படங்களைப் பயன்படுத்தியதும் ஒரு காரணம். முன்னதாகவே எம்ஜிஆர் இவர்களுடன் பணியாற்றியிருந்தார் என்றாலும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கே வி மகாதேவனுக்கு சம வாய்ப்புகள் அளித்தார் (பின்னரே அவர் எம்எஸ்வி பக்கம் சாய்ந்தார்).

1960ஆம் ஆண்டிலேயே எம்ஜிஆருக்கு மறக்க முடியாத ஒரு பாடல் அமைத்திருந்தனர்- “மன்னாதி மன்னன்” திரைப்படத்தில் வரும், “அச்சம் என்பது மடமையடா,” என்ற பாடல். இன்றும் இது கழக மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதன் ட்யூன் நன்றாக இருக்கிறது என்றாலும் ஐம்பதுகளுக்கு உரிய பாடல்தான் இது- விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகளில் மிகக் குறைவாகவே இதில் இருக்கிறது. அக்காலத்துக்கே உரிய பாடல்-

Richardsof
23rd June 2018, 06:39 PM
பாசம் (1962) என்ற திரைப்படத்தில் ஏறத்தாழ இதே போன்ற தாளம் மற்றும் பாடல் அமைப்பு இப்போது நவீனமாக ஒலிக்கிறது. இதன் துவக்கத்தில் வரும் கிதாரின் அதிர்வுகள் மற்றும் வயலின், இன்டர்லூடில் வரும் அக்கார்டியன் ஓசை, டிஎம்எஸ் பாடும் முறை இந்த மாட்டு வண்டி முன்பிருந்த ஒன்றல்ல என்பதைக் காட்டுகின்றன- “உலகம் பிறந்தது எனக்காக”



அரசியல் பாடல்கள் மட்டுமல்ல, எம்ஜியாரின் காதல் பாடல்களும் உற்சாகமாக இருந்தன. இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி கர்நாடக சங்கீத ராகங்களின் கட்டுக்களைத் தளர்த்டில், மேலும் நவீன வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. இது, “பணத்தோட்டம்” படத்தில் வரும் “பேசுவது கிளியா,” என்ற பாடல்..



இந்த பாடலின் முன்னிசை எவ்வளவு நவீனமாக ஒலிக்கிறது பாருங்கள். பல்லவியின் துவக்கத்தில் பாங்கோக்கள் சேர்ந்து கொள்கின்றன. “சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா” என்று எவ்வளவு அழகாக பல்லவி நிறைவடைகிறது பாருங்கள்.

“பணத்தோட்டம்” பாடல் நவீன பாடலாக இருந்தாலும் அது தமிழ் மெலடியாகதான் இருக்கிறது, சரணத்தில் தபலாதான் பாடலைக் கொண்டு செல்கிறது. இதன்பின் “பெரிய இடத்துப் பெண்” படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று முழுக்க முழுக்க மேலை நாட்டுப் பாணியில் ஒரு பாடல் செய்தார்கள். இதில் தபலா கிடையாது. முழுக்க முழுக்க சா சா நடனத்தைத் தழுவிய மேற்கத்திய இசைப்பாணி. இங்கு நாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி நம் எல்லைகளுக்கு அப்பால் சென்று உலக இசையை நமக்கு அளிக்க முயற்சி செய்வதைப் பார்க்கிறோம் (1990ஆம் ஆண்டுதான் உலக இசை தமிழ் திரைப்பாடல்களில் ஒலித்தது என்று நினைப்பவர்கள் தம் கருத்தைப் பரிசீலித்துக் கொள்ளலாம்)-



இதே படத்தில் “பாரப்பா பழனியப்பா” என்ற கிராமிய மெட்டில் ஒரு பாடலை ‘ஏழைப்பங்காளன்’ எம்ஜிஆருக்கு இசையமைத்திருந்தது இவர்களுடைய திறமைக்குச் சாட்சி. முன்சொன்ன பாடல் இளமையான, கம்பீரமான எம்ஜிஆர் பாடுவது.



பலவகைப் பாடல்களுக்கு இசையமைக்கக்கூடியவர்கள் என்று சொல்வதை நம்பாதவர்கள் இதைக் கேட்கலாம்- “கட்டோடு குழலாட”

(1963ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த “ஆனந்தஜோதி” படப்பாடல்கள் சிவாஜி/ ஜெமினி படப்பாடல்கள் போலிருக்கும்- “நினைக்கத் தெரிந்த மனமே“, “பனி இல்லாத மார்கழியா” முதலிய பாடல்கள்).

Richardsof
23rd June 2018, 06:42 PM
எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிகள்- அனைத்தும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்த்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-ஃபைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.



(இந்தப் படத்தின் கதைக்கரு முதலில் தெலுங்கு மொழியில் “ராமுடு பீமுடு” என்ற படத்தில் வந்தது, அதன்பின் பல முறை இந்திய மொழிகளில் மீளப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மிக வெற்றிகரமாகவே என்றும் சொல்லலாம்- ராம் ஔர் ஷ்யாம், சீதா ஔர் கீதா, சால்பாஜ், கிஷன் கண்ணையா என்று எத்தனை எத்தனை ஹிட் படங்கள்! ஏறத்தாழ இந்தியத் திரைப்படங்களின் டெம்ப்ளேட்டாகவே ஆகிவிட்ட, “மாறுபட்ட மனநிலை கொண்ட இரட்டையர்கள்” என்ற கதைக்கருவின் மூலப்பொருள் பிரெஞ்சு மொழியில் அலெக்சாண்டர் டூமாஸின் கற்பனையில் உதித்தது என்கிறது விக்கி).

இந்த ஆண்டின் மற்றொரு மறக்க முடியாத பாடல், “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்“, படம் “ஆயிரத்தில் ஒருவன்”



வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலிருந்து மாறுபட்ட பாடல் இது- கோரஸ் பாடுபவர்களின் பங்களிப்பு அதிகம். ஜாஸ் இசையை நினைவுபடுத்தும் டிரம்ஸ் வேறுபட்ட ஒரு கதியில் இசைக்கிறது, பியானோகூட பாடலுக்கு ரிதம் அளிப்பதாகவே இருக்கிறது. இடையிசையில் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது, சரணத்திலும் அதைச் சொல்லலாம்- ஆனால் இசைக்கருவிகள் தொகுக்கப்பட்ட முறையில் நம்மால் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களின் படைப்புலகில் பெருமைக்குரிய பாடல்.

oygateedat
24th June 2018, 01:14 PM
இன்று
காலஞ்சென்ற
கவிஞர் கண்ணதாசன்
மெல்லிசை மன்னர்
எம் எஸ் விஸ்வநாதன்
இருவரும்
பிறந்த தினம்.
நமது மக்கள் திலகத்தின்
திரைக்காவியங்களில்
இவர்களின்
பங்களிப்பு
மிகவும்
போற்றத்தக்கது.

Richardsof
24th June 2018, 09:04 PM
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.

courtesy -
–நர்கிஸ் ஜியா.
vallamai

Richardsof
24th June 2018, 09:30 PM
மக்கள் திலகம் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் கீழ் கண்ட படங்களில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் காட்சிகளும் சூப்பர் ஹிட் .

மன்னாதிமன்னன் 1960
பாசம்
பெரிய இடத்து பெண்
பணத்தோட்டம்
ஆனந்தஜோதி
என்கடமை
பணக்கார குடும்பம்
ஆயிரத்தில் ஒருவன்
நாடோடி
பறக்கும்பாவை
ரகசியப்போலீஸ் 115
புதியபூமி
தேடிவந்த மாப்பிளை
சங்கே முழங்கு
ராமன்தேடிய சீதை
உலகம் சுற்றும் வாலிபன்
உரிமைக்குரல்
நினைத்ததை முடிப்பவன்

fidowag
25th June 2018, 11:37 PM
http://i65.tinypic.com/fc4geg.jpg
இனிய நண்பர் திரு.வினோத் , பெங்களூரு அவர்கள் 15000 பதிவுகள் என்கிற சிகரத்தை கடந்து , தொடர்ந்து பல அற்புத, அபாரமான, அறுசுவை மிக்க, ஆரவாரமிக்க செய்திகள் அளிப்பதற்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் .


ஆர். லோகநாதன் .

fidowag
25th June 2018, 11:46 PM
நான் கடந்த இருவார காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன். கோல்டுகோஸ்ட் ,மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களுக்கு சுற்றுலா நிமித்தம் சென்ற காரணத்தினால் திரியில் பதிவுகள் செய்ய இயலவில்லை.
மீண்டும் திரியில் இணைந்து பதிவுகள் தொடருவதில் மகிழ்ச்சி.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இனிதாகவும், பயனுள்ளதாகவும், சுவையாகவும்,
ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .அதுபற்றி ஒய்வு நேரத்தில் நண்பர்களுக்கு செய்திகளை பதிவிடுகிறேன். ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் அவர்களுடைய முன்னேற்றம், நாகரிகம், ஒழுக்கம், கட்டுப்பாடு என
பல வகைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அந்த அளவிற்கு நமது நாடோ, மக்களோ
முன்னேறுவதற்கு பல காலம் ஆகலாம். அதற்குள் அவர்கள் மிகவும் அட்வான்ஸாக
சென்று விடுவார்கள். அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன், நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
26th June 2018, 12:00 AM
இரங்கல் செய்தி .
------------------------


திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் என்கிற பகுதியை சார்ந்த திரு.மணி (ஆத்தூர் மணி ) , திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் வந்தபோது விபத்துக்குள்ளாகி
மரணமடைந்தார் . அவருக்கு வயது சுமார் 62. அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மையான விசுவாசி, தூத்துக்குடி, நெல்லை, குற்றாலம் நகரங்களில் ஓட்டல் பிருந்தாவன் என்கிற உணவு விடுதியை நடத்தி வந்தார். பணியாளர்கள்
வேலைக்கு குறைந்த அளவில் வருகின்றபோதும், விடுமுறையில் செல்கின்ற போதும் , வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட இலையை தயங்காமல் எடுத்து (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களை பாடிக்கொண்டே ) சுத்தம் செய்வார் .மற்ற முதலாளிகள் போல் கௌரவம் பார்க்கமாட்டார்.

நெல்லை, நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நிகழ்ச்சிகளுக்கும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா
நிகழ்ச்சிகளுக்கும் பொருளுதவி செய்து வந்தவர் .

மேற்படி, திரு.ஆத்தூர் மணி அவர்களின் மறைவு நெல்லைதூத்துக்குடி, குமரி , மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பேரிழப்பாகும்,

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்.
அவரை இழந்து தவிக்கும், அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், என் சார்பிலும்
அனுதாபங்களையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.


ஆர். லோகநாதன்.

fidowag
26th June 2018, 12:03 AM
தினத்தந்தி =24/6/18
http://i65.tinypic.com/2i1h7hj.jpg

fidowag
26th June 2018, 12:05 AM
http://i64.tinypic.com/1671cfd.jpg
தினமலர் -24/6/18

orodizli
26th June 2018, 09:08 AM
புரட்சித் தலைவரின்
திருக்கரங்களால்
தொடங்கப்பட்ட
கட்சியான
அஇஅதிமுக கட்சியின்
அதிகாரபூர்வ
வெற்றி கொடி
உருவான பதிவு

#அஇஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் திரு.பாண்டு அவர்களின் நேர்காணல்...

"ஆரம்பத்துல இருந்தே சொல்றேனே. என் அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ்,
#MGR-ருக்கு நண்பர். அவரோட சுமார் 40 படம் வொர்க் பண்ணியிருக்கார். அவர் மூலமாகத்தான் எம்.ஜி.ஆர் எனக்கு பழக்கம்.

அப்ப ஓவியக் கல்லூரியில படிச்சுட்டிருந்தேன். எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்கள், அப்பப்ப யார் பெரிய நடிகர்ங்கறதுல மோதிக்குவாங்க.

நான், எம்.ஜி.ஆரை இம்ப்ரஸ் பண்ணணும்னு, நூறு சிவாஜி புகைப்படங்களை ஒன்னு சேர்த்து, #நூறு_சிவாஜி, #ஒரு_எம்ஜிஆர்’
அப்படிங்கற தலைப்புல ஒரு எம்.ஜி.ஆர் முகத்தை வரைஞ்சேன்.

பெரிய அளவுல வரைஞ்ச அந்தப் படம், ஒரு வார இதழ்ல வந்தது. அதைப் பார்த்துட்டு எம்.ஜி.ஆர் என்னைப் பாராட்டுவார், தங்க சங்கிலி பரிசா தருவார்னு நினைச்சேன்.

ஆனா, எம்.ஜி.ஆர், என் அண்ணன் மூலமா என்னைக் கூப்பிட்டார். போய் நின்னேன். ஏதோ பாராட்டப்போறார், தங்க சங்கிலி தரப்போறார்னு மனசுக்குள்ள குறு குறுன்னு இருந்தது.

திடீர்னு பார்த்து திட்ட ஆரம்பிச்சார். "#சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர். அவரை இப்படியா பண்ணுவே"ன்னு கேட்டார்.

எனக்கு பயமாயிடுச்சு. பிறகு, ‘ஒரு மனுஷனை இகழ்ந்து எப்பவும் புகழ்பெறக் கூடாது, சிவாஜி நடிப்புக்கு எதுவும் ஈடாகுமான்னு அவர் சொன்னது, என்னை என்னமோ பண்ணுச்சு. சிவாஜி ரசிகர்கள்கிட்ட இருந்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்.

பிறகு எம்.ஜி.ஆருக்கு என் மேல இருக்கிற கோபத்தைக் குறைக்கணும்னு நினைச்சேன். அதுக்காக, எம்.ஜி.ஆர் கூட முதல்படத்துல இருந்து அவர் ஜோடியா நடிச்ச ஜெயலலிதா வரை எல்லா ஹீரோயின்களோட புகைப்படங்களையும் வச்சு எம்.ஜி.ஆர் முகத்தை பெரிய சைஸ்ல வரைஞ்சு, பிரேம் போட்டு எம்.ஜி.ஆரைத் தேடிப் போனேன்.

அப்ப விஜயா கார்டன்ல ’#எங்கள்_தங்கம்’ பட ஷூட்டிங். நான் செத்துப் பிழைச்சவண்டா பாடல் ஷூட் பண்ணிட்டிருந்தாங்க. இடைவேளையில ஓவியத்தைக் கொடுத்தேன். பார்த்துட்டு பாராட்டிய எம்.ஜி.ஆர், ரெண்டு பவுன்ல செயின் போட்டார். இது 1967-ல நடந்தது. இதுக்குப் பிறகு என் மேல அவருக்குப் பாசம் வந்தது.

1969-ல அவருக்கு #பாரத் பட்டம் கொடுத்தாங்க. அந்த நேரத்துல, எம்.ஜி.ஆர் முகத்தை லைன் டிராயிங்ல வரைஞ்சு அவர்ட்ட கொடுத்தேன். "சரி, இதுல என்ன புதுமை இருக்கு?"ன்னு கேட்டார் எம்.ஜி.ஆர்.

சாதாரணமா பார்த்தா ஒண்ணுமே இல்லை, பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்தா, ஒவ்வொரு கோடுலயும் பாரத் பாரத்னு தெரியும்னு சொன்னேன். ஒரு பூதக்கண்ணாடியை கொண்டு வந்து கொடுத்துப் பார்க்கச் சொன்னேன். அவருக்கு சந்தோஷம். அப்ப சத்யா ஸ்டூடியோவுல நடந்த ஒரு விழாவுல இந்த படத்தை வச்சு, மேடையில என்னை பாராட்டினார் எம்.ஜி.ஆர். இதுக்குப் பிறகு அவரோட நான் நெருக்கமானேன்.

1972-ல அதிமுகவை ஆரம்பிச்சார் எம்.ஜி.ஆர். அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ், ’எம்ஜிஆர் கூப்பிடறார், உடனே வா’ன்னு கூப்பிட்டார். போனேன். எம்.ஜி.ஆர், ’கட்சி கொடி பண்ணணும்’னு சொன்னார்.

பிரஸ் எல்லாம் எடுத்துட்டு போயிருந்தேன். பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. சாப்பிட்டுட்டு, வரைஞ்சேன். கருப்பு சிவப்புக்கு நடுவுல அண்ணா படம். நான் தான் வரைஞ்சேன். அவருக்குப் பிடிச்சிருந்தது.

அதே போல இரட்டை இலைச் சின்னத்தையும் என்னை டிசைன் பண்ணச் சொன்னார். அப்ப ஒருநாள் கசாப்பு கடைக்குப் போயிருந்தேன். ஆட்டுக்கறியோட நுரையீரலை கடையில தொங்கவிட்டிருந்தாங்க. ரெண்டு இலை மாதிரி அது தொங்கிட்டு இருந்தது. அதைப் பார்த்துட்டு வந்ததும் இரட்டை இலையை வரைஞ்சேன்.

இலைக்குள்ள நுரையீரல்ல இருக்கிற மெல்லிய கோடுகள் மாதிரி வரைஞ்சிருந்தேன். பார்த்துட்டு கட்டிப் பிடிச்சுட்டார் எம்.ஜி.ஆர். நல்லா பண்ணியிருக்கீங்கன்னு சொன்னார்" என்றார் பாண்டு..... Thanks , courtesy friends...

http://www.puthiyathalaimurai.com/news/special-news/18327-i-draw-admk-flag-says-actor-pandu.html?frm=old_web

fidowag
26th June 2018, 05:31 PM
24/6/18 அன்று கவிஞர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம் எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்த நாள் .
http://i64.tinypic.com/2iiuddt.jpg

fidowag
26th June 2018, 05:33 PM
http://i64.tinypic.com/2nks1e8.jpg

fidowag
26th June 2018, 05:34 PM
http://i66.tinypic.com/fw6m53.jpg

fidowag
26th June 2018, 05:36 PM
காந்தி கண்ணதாசன் திருமண வைபவத்தில் மக்கள் தலைவர் எம்.ஜிஆர்.
http://i68.tinypic.com/mkkikx.jpg

fidowag
26th June 2018, 05:37 PM
http://i65.tinypic.com/eamdlh.jpg

fidowag
26th June 2018, 05:38 PM
http://i64.tinypic.com/2q03egz.jpg
புகைப்படங்கள் உதவி : நண்பர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு

fidowag
26th June 2018, 05:39 PM
http://i63.tinypic.com/2z68mya.jpg

fidowag
26th June 2018, 05:40 PM
http://i68.tinypic.com/k20al5.jpg

fidowag
26th June 2018, 05:41 PM
http://i66.tinypic.com/rirblv.jpg

fidowag
26th June 2018, 05:41 PM
http://i65.tinypic.com/2ns9xcm.jpg

Richardsof
26th June 2018, 06:50 PM
இனிய நண்பர் திரு லோகநாதன்
தங்களின் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி . தங்களின் ஆஸ்திரேலியா இன்ப சுற்றுலாப் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி .

Richardsof
26th June 2018, 06:54 PM
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' பொன்விழா .

27.6.1968

மக்கள் திலகத்தின் 98 வது திரைப்படம் புதிய பூமி .

இயக்குனர் சாணக்யா அவர்களின் எங்கவீட்டுப் பிள்ளை மற்றும் நான் ஆணையிட்டால் படத்திற்கு பின்னர் இயக்கிய 3 வது படம் .

மக்கள் திலகத்தின் மீதும் அவரது துணைவியார் திருமதி ஜானகி அவர்கள் மீதும் பற்றும் பாசமும் வைத்திருந்த திருவாளர்கள் சங்கரன் - ஆறுமுகம் அவர்கள் இருவரும் ஜானகி எம்ஜிஆர் என்பதை சுருக்கமாக ஜேயார் மூவிஸ் என்ற நிறுவனத்தை துவக்கி முதல் படமாக புதியபூமி படத்தை 27.7.1966ல் துவக்கினார்கள் .

மக்கள் திலகம் - ஜெயலலிதா - நம்பியார் - அசோகன் - நாகேஷ் - ராமாபிரபா - ஷீலா - திருச்சி சௌந்திரராஜன் - பண்டரிபாய் நடித்திருந்தார்கள் .
கவியரசரின் பாடல்கள் மற்றும் பூவை செங்குட்டுவனின் பாடலும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்துவிட்டது . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இலங்கை வி.சி .குகநாதன் முதன் முதலில் வசன கர்த்தராக அறிமுகமான படம் . படத்தின் டைட்டில் இசை மிகவும் அருமை .மக்கள் திலகம் மருத்துவராக சிறப்பாக நடித்திருந்தார் . மக்கள் திலகத்தின் சண்டைக்காட்சிகள் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது ,

புதிய பூமி - சிறந்த கருத்துக்கள் நிறைந்த பொழுதுபோக்கு படம் .

Richardsof
26th June 2018, 07:03 PM
எம்ஜிஆரின் புதிய பூமி படத்தில் கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் மருத்துவராக நடித்தார் . 1963ல் வெளிவந்த தர்மம் தலைகாக்கும் படத்தில் எம்ஜிஆர் மருத்துவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது . சின்னவளை என்ற பாடலில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை ஜெயலலிதாவிற்கு உடை அலங்காரத்தில் இடம் பெற செய்தார்கள் . 1968 தென்காசி சட்ட சபைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெயரும் கதிரவன் என்ற சம்சுதீன். தேர்தலில் திமுக வெற்றி

Richardsof
26th June 2018, 07:09 PM
வி.சி. குகநாதன்

“நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.

அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.

ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.

அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.

சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.

அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.

அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.

கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே என்று.

அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.

எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.

ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.

அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.

அவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி….

Richardsof
26th June 2018, 07:11 PM
புதிய பூமி

எம்.ஜி.ஆர்

கதிரவன் என்ற பெயருடைய எம்.ஜி.ஆர் ஆங்கில மருத்துவராக ஒரு மலைக்கிராமத்துக்கு வந்ததும் அங்கிருந்த மந்திரம் தந்திரம் என்ற அறியாமை இருள் மறைந்து பகுத்தறிவுப் பகலவனின் ஒளி தோன்றியது. இது திமுகவின் ஆட்சி நாட்டில் புதிய பூமியை உருவாக்கியதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஆகும்.

fidowag
26th June 2018, 08:47 PM
சென்னை எம்.எம்.பிரி வியூ அரங்கில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா "
எவர்க்ரீன் சூப்பர் ஹிட் மெகா திரைப்படம் ,24/6/18 காலை 10 மணியளவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் நினைவாக திரையிடப்பட்டது .

திரைப்படத்தின் முடிவில், திரு.சுகி சிவம் அவர்கள் பேசிய வீடியோ பதிவு
வெளியிடப்பட்டது . கணவன் மனைவி இருவரிடமும் உங்களில் யார் சொர்க்கத்திற்கு செல்வதற்கு தயார் என்கிற கேள்விக்கு கணவன் சொன்னான் ,மனைவியை அனுப்பி வையுங்கள் என்று. ஏன் என்று கேட்டதற்கு அப்போதுதான் நான் இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியும். அதுவே எனக்கு சொர்க்கம் என்றான் .
மனைவியுடன் கேட்டதற்கு கணவனை அனுப்பி வையுங்கள் . ஏனெனில் நான் இல்லாமல் அவர் கஷ்டப்பட கூடாது . மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோரிடம் பேச்சு வாங்கக்கூடாது. நோய் நொடி வந்து கவனிக்க ஆள் இல்லாமல் இருக்கக் கூடாது என்றாராம் . இவற்றை நடைமுறை வாழ்க்கையில் அவரவர் தங்கள் விருப்பப்படி முடிவு எடுக்கலாம். ஆனால் நான் சொன்னவற்றை கருத்தில் மட்டும் கொள்ளுங்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். வியும் , கவிஞர் கண்ணதாசனும் திரையுலகில் கணவன் மனைவி போல்தான் வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். சுமங்கலியாக
கண்ணதாசனை அனுப்பி விட்டு எம்.எஸ். வி. சில காலம் வாழ்ந்தார் .
http://i65.tinypic.com/qntijr.jpg


மேலும் வைசாலி கண்ணதாசன் பேசிய வீடியோ பதிவும் ஒளிபரப்பப்பட்டது .
அவர் பேசும்போது, கவிஞர் கண்ணதாசன் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைவிட கலைஞர் கருணாநிதி அவர்களிடம்தான் மிகவும் நெருங்கி பழகினார். புகழ்மிக்க பல சிறந்த பாடல்களை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதினாலும் ஒரு கால கட்டத்தில் புரட்சி தலைவர் அவர்களை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, மாறுபட்ட கருத்துகளுடன், கருத்து வேறுபாடுகளுடன் செய்திகளை வெளியிட்டவர் .ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் , தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் கண்ணதாசன் பாடல்கள், உறுதுணையாக இருந்ததாக கருதி,
அவரை அரசவை கவிஞர் ஆக்கிய பெருமை புரட்சி தலைவரையே சாரும் .
அதுமட்டுமின்றி , கண்ணதாசன் மறைந்ததும், அஞ்சலி செலுத்த வந்தபோது
அவரது உடலை கிடத்தி இருந்த இடத்தை பார்த்து மனம் வருந்தி, எப்பேர்ப்பட்ட கவிஞர் அவர், இப்படியா அவரை வைப்பது என்றவாறு, பொதுமக்கள் ஊர்வலத்தில் அனைவருக்கும் அவர் முகம் தெளிவாக தெரியும் வண்ணம் உடலை கிடத்தும்படி ஏற்பாடு செய்திருந்தார் . அப்போது அவர்தான் தமிழக முதல்வர் .
அதுமட்டுமின்றி, இறுதி ஊர்வலத்தில் மயானத்திற்கு சகல கலைஞர்களுடன் நடந்தே வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் .


திரையுலகில் அவர்தான் முதல்வர் . அரசியலிலும் அவர்தான் முதல்வர் . மனிதநேயத்திலும் முதல்வர் மக்கள் தொண்டிலும் முதல்வர் . கொடைப்பணி செய்வதில் முதல்வர் .
மக்களின் வாக்கு வங்கி பெறுவதிலும், செல்வாக்கு பெறுவதிலும் முதல்வர் .
அதனால்தான் புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சி தலைவரானார்.எப்பேர்ப்பட்ட மனிதநேய மிக்க மனிதர்குல மாணிக்கம் அவர் என்று புகழ்ந்தார் .


தொடர்ந்து , கவிஞர் கண்ணதாசன் பாடல்களான ஒருதாய் மக்கள் (ஆனந்த ஜோதி )
கட்டி தங்கம் வெட்டியெடுத்து (தாயை காத்த தனயன் ) பாடல்கள் திரையிடப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது .

fidowag
26th June 2018, 08:52 PM
தினகரன் -25/6/18
http://i66.tinypic.com/15ow0nb.jpg

fidowag
26th June 2018, 08:58 PM
இன்று (26/6/18) ம.பொ. சி. அவர்களின் பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது .

http://i66.tinypic.com/wrmiib.jpg
புகைப்படம் உதவி :நண்பர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு.

fidowag
26th June 2018, 09:01 PM
அந்தி மழை -ஜூன் 2018
http://i63.tinypic.com/2nscrxz.jpg

fidowag
26th June 2018, 09:09 PM
பிரபல பின்னணி பாடகர் திரு.சிதம்பரம் ஜெயராமன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு
புதுமை பித்தன் உட்பட மூன்று படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார் .பிறகு அடுத்தடுத்து 10படங்களுக்குமேல் இசை அமைப்பாளர் ஆகிவிட்டார் .அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய "ரத்தக்கண்ணீர் ".அப்போது ஒரு பாடலுக்கு
ஜெயராமன் வாங்கிய தொகை ரூ.750.

திரு.சிதம்பரம் ஜெயராமனுக்கு அரசு சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்துள்ளது .ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள இசை கல்லூரிகளுக்கு
இவர்தான் கௌரவ ஆலோசகர் .இதற்கெல்லாம் காரணமான தமிழக முதல்வர் எம்.ஜிஆரை நினைவு கூறும்போது நன்றியுடன் உணர்ச்சி வயப்படுகிறார் .


அந்தி மழை -ஜூன் 2018

fidowag
26th June 2018, 09:12 PM
http://i64.tinypic.com/16i8f9d.jpg

fidowag
26th June 2018, 09:13 PM
http://i63.tinypic.com/2sb8tpd.jpg

fidowag
26th June 2018, 09:15 PM
http://i68.tinypic.com/mtbind.jpg

fidowag
26th June 2018, 09:15 PM
http://i67.tinypic.com/10ftj7q.jpg

fidowag
26th June 2018, 09:16 PM
http://i63.tinypic.com/mcbqx2.jpg

fidowag
26th June 2018, 09:20 PM
http://i67.tinypic.com/1zcpms0.jpg

fidowag
26th June 2018, 09:22 PM
http://i65.tinypic.com/65wuq9.jpg

fidowag
26th June 2018, 09:24 PM
வெள்ளி முதல் (22/6/18) சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i68.tinypic.com/15rzep2.jpg

fidowag
26th June 2018, 09:26 PM
http://i64.tinypic.com/20pq2at.jpg

fidowag
26th June 2018, 09:35 PM
வெள்ளி முதல் (22/6/18) சென்னை மகாலட்சுமியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் "
தினசரி 2 காட்சிகளில் (மேட்னி /மாலை ) வெற்றிநடை போடுகிறது .
ஞாயிறு (24/6/18) மேட்னி காட்சியில் சுமார் 300 நபர்களும், மாலை காட்சியில்
சுமார் 650நபர்களும் பார்த்து ரசித்தனர் . இடைவெளி ஓராண்டு . கடந்த வருடம் இதே ஜூன் மாதம் வெளியானபோது மாலை காட்சியில் 1100 நபர்கள் கண்டுகளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த முறை அருகில் உள்ள சரவணா அரங்கில் போட்டியாக "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது என்பது கவனத்தில் கொள்ளவும் .
http://i65.tinypic.com/153qkoy.jpg

fidowag
26th June 2018, 10:21 PM
http://i67.tinypic.com/f4mbko.jpg

fidowag
26th June 2018, 10:22 PM
http://i63.tinypic.com/245zte8.jpg

fidowag
26th June 2018, 10:23 PM
http://i64.tinypic.com/16lydfp.jpg

fidowag
26th June 2018, 10:24 PM
http://i63.tinypic.com/x6mryh.jpg

fidowag
26th June 2018, 10:25 PM
http://i64.tinypic.com/ddnmno.jpg

fidowag
26th June 2018, 10:26 PM
http://i63.tinypic.com/314t3tk.jpg

fidowag
26th June 2018, 10:27 PM
http://i63.tinypic.com/25i2gzq.jpg

fidowag
26th June 2018, 10:28 PM
http://i66.tinypic.com/wnty1.jpg

fidowag
26th June 2018, 10:42 PM
கோவை டிலைட்டில் வெள்ளி முதல் (22/6/18) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த "நாளை நமதே " தினசரி 2 காட்சிகள் , 4 நாட்கள் மட்டும் திரையிடப்பட்டது. தகவல் உதவி : நண்பர் திரு.சேகர், கோவை.
http://i66.tinypic.com/1zzhx8x.jpg

fidowag
26th June 2018, 10:48 PM
வெள்ளி முதல் (22/6/18) போடிநாயக்கனுர் ஆர்.எஸ். அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2r77xfn.jpg


தகவல் உதவி : திரு. அய்யாசாமி, கோவை.

fidowag
26th June 2018, 10:51 PM
வரும் வெள்ளி முதல் (29/6/18) மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "விவசாயி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i64.tinypic.com/16c8cud.jpg
தகவல் உதவி : நண்பர் திரு. எஸ். குமார், மதுரை.

fidowag
26th June 2018, 10:58 PM
வரும் வெள்ளி முதல் (29/6/18) கோவை ராயலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது .

http://i64.tinypic.com/dnbjlz.jpg
தகவல் உதவி : நண்பர் திரு.அய்யாசாமி, கோவை.

fidowag
26th June 2018, 11:03 PM
தினமலர் /வாரமலர் -24/6/18
http://i67.tinypic.com/10e3trb.jpg
http://i66.tinypic.com/feff69.jpg

fidowag
26th June 2018, 11:07 PM
புதிய தலைமுறை வார இதழ் -21/6/18
http://i64.tinypic.com/24dfqpy.jpg
http://i67.tinypic.com/23hak42.jpg
http://i63.tinypic.com/zxsh3d.jpg

fidowag
26th June 2018, 11:10 PM
புதிய தலைமுறை வார இதழ் - 28/6/18
http://i64.tinypic.com/2a8oolw.jpg
http://i66.tinypic.com/24dpic7.jpg
http://i66.tinypic.com/2qd08ia.jpg

orodizli
27th June 2018, 02:26 PM
நன்மையே ! உன் வாழ்வின் தொழிலாகட்டும் !
நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும் !

என்ன செய்வோம் என்ற நிலைமாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் !

கொள்கையிலே அன்பு ஒளி வீசட்டும் !
கோழையும் உன்னாலே புலியாகட்டும் !
இந்த வரிகள் எல்லாம் நாம் திரையரங்குகளில் கேட்க முடியாது காரணம் ரசிகர்களின் விசிலும் கைத்தட்டலும் விண்ணை பிளக்கும் மக்கள் திலகத்தின் விரலை கண்டும் இவ் வரிகளை கேட்டும் தான் இவ்வாராவாரம்
உலகத்தில் மக்கள் திலகத்திற்கு கிடைத்த ரசிகர்கள் போல் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை !
பொன் மனச் செம்மல் ரசிகர்களை நேசித்தது போல் வேறு எவரும் நேசிக்கவில்லை இது நிதர்சன உண்மை !... நன்றி whatsapp நண்பர்கள்...

oygateedat
28th June 2018, 07:08 AM
https://s33.postimg.cc/geez8oe0f/IMG_9262.jpg (https://postimages.org/)

Richardsof
28th June 2018, 02:22 PM
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை சமூக ஆய்வு இருக்கை - முதல்வர் அறிவிப்பு

fidowag
28th June 2018, 11:35 PM
மாலை மலர் -28/6/18
http://i66.tinypic.com/v79lp2.jpg
http://i68.tinypic.com/21chj.jpg

fidowag
28th June 2018, 11:37 PM
http://i68.tinypic.com/b3ldll.jpg

fidowag
28th June 2018, 11:40 PM
http://i67.tinypic.com/sbne4w.jpg

fidowag
28th June 2018, 11:41 PM
http://i68.tinypic.com/2nqbdrd.jpg

fidowag
28th June 2018, 11:42 PM
http://i65.tinypic.com/25ywww6.jpg

fidowag
28th June 2018, 11:42 PM
http://i64.tinypic.com/2f0bznb.jpg

Gambler_whify
29th June 2018, 12:44 AM
நான் கடந்த இருவார காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன். கோல்டுகோஸ்ட் ,மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களுக்கு சுற்றுலா நிமித்தம் சென்ற காரணத்தினால் திரியில் பதிவுகள் செய்ய இயலவில்லை.
மீண்டும் திரியில் இணைந்து பதிவுகள் தொடருவதில் மகிழ்ச்சி.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இனிதாகவும், பயனுள்ளதாகவும், சுவையாகவும்,
ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .அதுபற்றி ஒய்வு நேரத்தில் நண்பர்களுக்கு செய்திகளை பதிவிடுகிறேன். ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் அவர்களுடைய முன்னேற்றம், நாகரிகம், ஒழுக்கம், கட்டுப்பாடு என
பல வகைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அந்த அளவிற்கு நமது நாடோ, மக்களோ
முன்னேறுவதற்கு பல காலம் ஆகலாம். அதற்குள் அவர்கள் மிகவும் அட்வான்ஸாக
சென்று விடுவார்கள். அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன், நன்றி.


ஆர். லோகநாதன்.

வாழ்துக்கள் நண்பா

Gambler_whify
29th June 2018, 12:51 AM
http://i65.tinypic.com/2r4k1kw.jpg

Gambler_whify
29th June 2018, 01:02 AM
http://i63.tinypic.com/29c9ks3.jpg
http://i67.tinypic.com/2ecma9d.jpg

oygateedat
29th June 2018, 06:38 PM
https://s33.postimg.cc/sm75jvbpr/IMG_9271.jpg (https://postimages.org/)

Richardsof
29th June 2018, 08:04 PM
எம்.ஜி.ஆர் பதவியேற்கும் போது

14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல் அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30 ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:-

1. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
2. நாஞ்சில் மனோகரன் நிதி.
3. நாராயணசாமி முதலியார் சட்டம்.
4. எட்மண்ட் உணவு
5. பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுப்பணி.
6. ஆர்.எம்.வீரப்பன் செய்தி, பொதுமக்கள் தொடர்பு
7. அரங்கநாயகம் கல்வி.
8. பெ.சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
9. காளிமுத்து ஊராட்சி.
10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
14. கே.ராஜா முகமது கைத்தறி.
(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் “எம்.ஜி.ஆர். வாழ்க” என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார்.

அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார். பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் “போட்டோ” படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார்.

பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள். ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் “புரட்சித் தலைவர் வாழ்க” என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார். அவர் கூறியதாவது:-

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாக வும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும் , வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன். எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல் அமைச்சர் அறையில்… பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11.15 மணிக்கு, முதல் அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் “நெருக்கடி நிலை”யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது “மிசா”வில் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.

Richardsof
29th June 2018, 08:24 PM
எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்



எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

“ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

பங்க்ரா நடனம்



பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

மேலை நாட்டு நடனம்

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்



டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

டான்ஸ் மாஸ்டர்கள்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.

ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.

Courtesy - net

oygateedat
29th June 2018, 10:37 PM
https://s33.postimg.cc/8xgfhsc33/IMG_9275.jpg (https://postimages.org/)

orodizli
30th June 2018, 11:28 PM
அன்பு சகோதரர்களே,
1977 ம் வருடம், இன்றைய நாளான ஜூன் 30ந் தேதியை பின்னோ க்கி பாருங்கள்.

யார் இந்த MGR. என்ன இவர் பழைய கதை என்று ஏளனம் பே சியவர்களுக்கு பதில் சொல்லும் வகையில்,
செயற்கை கலந்த அலட்டல் நடிப்பு நடிக்காமல்,
இயல்பான நடிப்பின் மூலம் பல கோடி உள்ளங்களை மகிழ்விப்பவன் நான், என்பதை நி ரூபித்து, நடிப்பி ற்கும் மக்கள் மீது காண்பித்த அன்பிற்கும் வித்தியாசம் இல்லாமல் வாழ்ந்து காட்டிய, நம் புரட்சித்தலைவரை, மக்கள் அரியாசனத்தில் அமர்த்திய நாள் இன்று.
நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்போம்... Thanks friends...

orodizli
30th June 2018, 11:32 PM
Now screening Emperor of Cinema World, also Political World Makkal Thilagam's Top ever Collection Movie "Vivasayee" @ Murasu TV Channels...

fidowag
30th June 2018, 11:47 PM
http://i63.tinypic.com/23utzbm.jpg

எனது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இனிதாகவும், சிறப்பாகவும் அமைந்தது குறித்து வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு.வினோத் , திரு.சி.எஸ். குமார், திரு.மஸ்தான் சாஹிப், மற்றும் திரு.ஜேம்ஸ் (பிரேசில் நாட்டில் இருந்து -அலைபேசி மூலம் ) ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.


;ஆர்.லோகநாதன் .

fidowag
30th June 2018, 11:52 PM
தின செய்தி -29/6/18
http://i63.tinypic.com/fxcg2q.jpghttp://i63.tinypic.com/22cmtj.jpg
http://i68.tinypic.com/96lunb.jpg

fidowag
30th June 2018, 11:53 PM
-29/6/18 தமிழ் இந்து
http://i63.tinypic.com/2125xf.jpg

fidowag
1st July 2018, 12:01 AM
வெள்ளி முதல் (29/6/18) மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அளிக்கும் தேவரின் "விவசாயி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i68.tinypic.com/2kqxbc.jpg
தகவல் உதவி மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

fidowag
1st July 2018, 12:02 AM
http://i68.tinypic.com/20jolxs.jpg

fidowag
1st July 2018, 12:03 AM
http://i63.tinypic.com/2cqgpsp.jpg

fidowag
1st July 2018, 12:04 AM
http://i64.tinypic.com/2ro0sjo.jpg

fidowag
1st July 2018, 12:04 AM
http://i68.tinypic.com/2q01r8l.jpg

fidowag
1st July 2018, 12:05 AM
http://i65.tinypic.com/21j3aqf.jpg

fidowag
1st July 2018, 12:07 AM
வெள்ளி முதல் (29/6/18) திருச்சி அருணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2niqqad.jpg

fidowag
1st July 2018, 12:09 AM
http://i68.tinypic.com/sytogz.jpg

fidowag
1st July 2018, 12:10 AM
http://i63.tinypic.com/24v1jl0.jpg

fidowag
1st July 2018, 12:11 AM
http://i66.tinypic.com/qoy3v4.jpg

fidowag
1st July 2018, 12:15 AM
கோவை ராயலில் 6/7/18 முதல் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .
http://i65.tinypic.com/72w3uf.jpg

fidowag
1st July 2018, 12:16 AM
http://i68.tinypic.com/35it1ya.jpg

fidowag
1st July 2018, 12:19 AM
http://i66.tinypic.com/w2kq5g.jpg

fidowag
1st July 2018, 12:20 AM
http://i68.tinypic.com/mj1nip.jpg

fidowag
1st July 2018, 12:21 AM
http://i66.tinypic.com/51swig.jpg

fidowag
1st July 2018, 11:50 PM
திரு.கவிகுமரன் (எம்.ஜி.ஆர். பக்தர் ) அவர்களின் குமாரர் திரு.ராஜ் பரத் மற்றும்
மணமகள் கோகிலா ஆகியோரின் திருமணம் இன்று (1/7/18) காலை வடபழனி முருகன் அருகில் உள்ள கந்தசாமி மினி ஹாலில் இனிதே நடைபெற்றது .
சென்னை, மதுரை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதில் சில புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/fc44lz.jpg

fidowag
1st July 2018, 11:53 PM
http://i65.tinypic.com/358uczk.jpg

fidowag
1st July 2018, 11:55 PM
http://i63.tinypic.com/10nuj4h.jpg

fidowag
2nd July 2018, 12:00 AM
தினமலர் -01/07/18
http://i66.tinypic.com/34ifmld.jpg

fidowag
2nd July 2018, 12:03 AM
-01/07/18 தினத்தந்தி
http://i64.tinypic.com/ohs3ya.jpg
http://i63.tinypic.com/ndqu13.jpg

fidowag
2nd July 2018, 12:04 AM
-01/07/18 தினமணி கதிர்
http://i65.tinypic.com/213pz4x.jpg

fidowag
2nd July 2018, 01:29 PM
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 1988 லிருந்து குடியேறி வாழ்ந்து வரும் இலங்கை தமிழரும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகரும், பக்தருமாகிய திரு. சுந்தரதாஸ் அவர்களை நேரில் சந்தித்தேன். சிட்னியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 14 ரயில் நிலையங்களுக்கு அப்பால்; அவர் வீடு அமைந்துள்ளது .வீட்டிற்கு அழைத்து சென்று, தேநீர் அளித்தபின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு நகரங்களில் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார் . அவர் ஏற்கனவே சென்னைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து சென்னை தி.நகர் ஓட்டலில் தங்கியிருந்த சமயம் சந்தித்து உள்ளேன் .
பின்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் / தகவல்கள்,வெப்சைட் /வாட்ஸ் அப் மூலம் அறிவது , தெரிந்து கொள்வது பற்றிய தகவல்களை அளித்தேன் .
பின்னர் தனது காரில், 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருகன் கோயிலுக்கு
அழைத்து சென்றார் . இரவு உணவுக்கு பின்னர், 2000ம் வருடம் சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற ஸ்டேடியம் காண்பித்தார் . இரவு 10மணியளவில் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் . அவரது பரிவு, பாசம், நேசம், அன்பு, நட்பு, உபசரிப்பு, கவனிப்பு அனைத்தும் போற்றத்தக்கவை.
அடுத்த வருடம் சென்னைக்கு விஜயம் செய்வதாக சொன்னார் .
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/28sy6ms.jpg
http://i68.tinypic.com/avpjig.jpg

http://i68.tinypic.com/xd8jsi.jpg

orodizli
3rd July 2018, 11:27 PM
இனிய சகோதரர் திரு லோகநாதன் அவர்களின் ஆஸ்திரேலியா வெளிநாட்டு பயணம் சிறந்த பயனுள்ள நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, நம்முடைய எல்லோரின் நல் வாழ்த்துக்களை தெரிவிப்போம்... நம் மன்னவர் மன்னனின் மக்கள் திலகம் பெயரில் அமையவுள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனம் , இருக்கை சம்பந்தமாக முக்கிய தகவல்களை தோழர்கள் இங்கு பதிவு செய்ய பாசத்துடன் வேண்டுகிறோம்...

fidowag
4th July 2018, 06:20 AM
புதிய தலைமுறை வார இதழ் -5/7/18
http://i65.tinypic.com/2dmfu4j.jpg
http://i67.tinypic.com/amy2wn.jpg
http://i66.tinypic.com/vdk906.jpg

fidowag
4th July 2018, 06:23 AM
அன்பார்ந்த நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.

என்னுடைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் அமைந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.


ஆர். லோகநாதன் .

fidowag
4th July 2018, 03:48 PM
http://i64.tinypic.com/alpyqo.jpg

fidowag
4th July 2018, 03:50 PM
http://i68.tinypic.com/2pze88m.jpg

fidowag
4th July 2018, 03:51 PM
http://i68.tinypic.com/28sa15g.jpg

fidowag
4th July 2018, 03:52 PM
http://i64.tinypic.com/20texw3.jpg

fidowag
4th July 2018, 03:56 PM
http://i63.tinypic.com/1hxyes.jpg

fidowag
4th July 2018, 03:58 PM
http://i63.tinypic.com/i70ar7.jpg

fidowag
4th July 2018, 03:59 PM
http://i63.tinypic.com/scb7ty.jpg

fidowag
4th July 2018, 04:01 PM
http://i64.tinypic.com/ofr5oj.jpg

fidowag
4th July 2018, 04:02 PM
http://i63.tinypic.com/30ry4q9.jpg

fidowag
4th July 2018, 04:11 PM
http://i68.tinypic.com/28kt2r4.jpg

fidowag
4th July 2018, 04:13 PM
http://i68.tinypic.com/25kl8it.jpg
http://i68.tinypic.com/wgosbd.jpg

fidowag
4th July 2018, 04:14 PM
http://i68.tinypic.com/j5wins.jpg

fidowag
4th July 2018, 04:15 PM
http://i65.tinypic.com/ou632r.jpg

fidowag
4th July 2018, 04:17 PM
http://i65.tinypic.com/2938v49.jpg

fidowag
4th July 2018, 04:19 PM
http://i63.tinypic.com/2z5rlt1.jpg

fidowag
4th July 2018, 04:21 PM
http://i68.tinypic.com/20h7was.jpg

fidowag
4th July 2018, 05:30 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i66.tinypic.com/bfs1lj.jpg

fidowag
4th July 2018, 05:31 PM
http://i68.tinypic.com/28qzziu.jpg

fidowag
4th July 2018, 05:33 PM
http://i67.tinypic.com/xe21hf.jpg

fidowag
4th July 2018, 05:34 PM
http://i63.tinypic.com/21oakwl.jpg

fidowag
4th July 2018, 05:37 PM
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
http://i67.tinypic.com/15gq9le.jpg

fidowag
4th July 2018, 05:41 PM
சமீபத்தில் கார் விபத்தில் அகால மரணமடைந்த தீவிர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஆத்தூர் மணி அவர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 101 வது பிறந்த நாள் நிகழ்வில் மலரஞ்சலி செலுத்தியபோது
http://i65.tinypic.com/2i8gi7n.jpg

fidowag
4th July 2018, 05:43 PM
http://i66.tinypic.com/vwves8.jpg

fidowag
4th July 2018, 05:46 PM
http://i65.tinypic.com/2vi4iyq.jpg

Richardsof
4th July 2018, 06:20 PM
மக்கள் திலகத்தின் '' நாளை நமதே '' 4.7.1975
44வது ஆண்டு துவக்க தினமும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக கோட்டையில் அமர்ந்த தினமான 4.7.1977 இன்றைய சிறப்பு தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் 21, 000 பதிவுகளை நிறைவு செய்து மய்யம் இணையத்தளத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் . அவருக்கு அனைவரின் சார்பாக இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

மக்கள் திலகத்தின் அன்றாட செய்திகள்
பத்திரிகை தகவல்கள்
மறு வெளியீடு மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய நிழற்படங்கள் செய்திகள்

நம் அனைவருக்கும் உடனுக்குடன் பதிவிட்டு மக்கள் திலகத்தின் பெருமை சேர்க்கும் உழைப்பாளி நண்பர் திரு லோகநாதன் அவர்களை மீண்டும் பாராட்டுகிறேன் . அடுத்த இலக்கான 22000 பதிவுகள் சாதனையை இந்த ஆண்டே வழங்கி நமக்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கிறோம்

fidowag
4th July 2018, 09:14 PM
மாலை மலர் -4/7/18
http://i64.tinypic.com/2rnvcqb.jpg
http://i68.tinypic.com/344zdqd.jpg
http://i64.tinypic.com/1zh3e34.jpg

fidowag
4th July 2018, 09:21 PM
வரும் வெள்ளி முதல் (6/7/18) நெல்லை கணேஷில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " குறைந்த இடைவெளியில் மீண்டும் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .கடந்த 2/3/18 முதல் நெல்லை ரதனாவில் வெளியாகி வெற்றி முரசு கொட்டியது குறிப்பிட தக்கது .

http://i66.tinypic.com/nwmser.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
4th July 2018, 09:27 PM
மணப்பாறையில் வெள்ளி முதல் (6/7/18) புதிய அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில்
வெற்றி பவனி வருகிறது .

http://i67.tinypic.com/34t9ulz.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .(திண்டுக்கல் திரு.நாகராஜன் மூலம் )