PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

sivaa
5th August 2019, 07:29 PM
என்ன வசந்தமாளிகை டிஜிட்டலில் வருகிறது...
அதுவும் அதிக கட்டணம் கொண்ட பெரிய தியேட்டர்களில் வெளிவருகிறது...
புதுப்படங்களே... மூன்று நாட்களை தாண்ட தள்ளாட்டம் பே...ாடுகிறது,
அதிகபட்சம் ஒருவாரம் ஒடினாலே பெரிய வெற்றி என எதிரிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையுலகமே நினைத்துக் கொண்டிருந்தது,
ஆனால்,
யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,
23 புது படங்கள் ரிலீஸ்,
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
பெரிய படங்கள் 10,
ஆடிக்காத்துல அம்மியும் பறக்குது என்பது போல்,
விஜய் சேதுபதியின் சிந்துபாத்
விக்ரமின் கடாரம் கொண்டான் முதல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூர்கா, தர்மபிரபு போன்ற சிறிய படங்களும் வரை....
இதில் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு 50% டிக்கெட் சலுகை வேறு...
அனைத்து படங்களும், அழகாபுரி ஜமீனுக்கு முன்னால் துாள்... துாள்....
மதுரையில் வசந்தமாளிகையில் இணைந்த 50வது நாள் விழா, வண்டியூர் கல்லானையில்
மதுரை புறநகர் மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
மதுரை புறநகர் மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68830078_2622843231083396_8589379042275229696_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQlmec6pfmNNwRIkLBRqMVCd0lJuevfUKYMj4sDJnu2 e_hv1nh6dXVRjuleMZMpYhOE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=1634c41fbe007bca90cba0cb69f2a9b6&oe=5DA82569


Thanks Sundar Rajan

sivaa
5th August 2019, 07:30 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68252405_833366383715518_3151000226974662656_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQloHirKp6e1lA3SG7nCvQCA6OsjVbmxWxtx6N91YpD E_sQh-Zg3RGzfW5GcLh-UtIE&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=2b44959b10424b69b250188c0e4f69d2&oe=5DA3D607

sivaa
5th August 2019, 07:31 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67939436_664631540703775_6993710520427610112_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQkY0RKWCIeEcd2IDqUEQ8JXMBSNogDD4h9N9E_pFO7 rMa5m4TzjCX3o6aX-1TNXEto&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=a5439ab40209138070092d03bb3bc845&oe=5DD0E524

sivaa
5th August 2019, 09:27 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
வேலம்மாள் மருத்துமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
... கிராமப் பகுதிகளை தேர்ந்தெடுத்து, கிட்டத்தட்ட ஒருமாத காலமாக இதற்கென நாட்களை செலவழித்தோம்.
அதன் பலனாக, 3 மணி நேரத்தில் 214 மக்கள், முகாம் மூலம் பயனடைந்தனர், இதில் 75க்கம் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர் என்பது பெருமைக்குரிய செய்தி.
இதுபோல, மருத்து முகாம்களில் 150 பேருக்கு மேல் வருவது சிரமம் தான் என்றார், வேலம்மாள் மருத்துவமனை முகாம் மேலாளர்,
ஆனால், உங்களைது உழைப்பு மற்றும் விளம்பரங்களினால் 214 போ் வந்துள்ளனர், என பெருமையாக கூறினார்.
முகாமுக்கு வந்த 60 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள், தங்கள் இளமை காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர்திலகத்தின் பெருமைகளை கூறி சந்தோசப்பட்டனர்.
முகாம் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு......
முகாமிற்கு வந்து சிறப்பித்தவர்களின் புகைப்படங்கள் அடுத்தப் பதிவில்.....

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68427578_346641749554834_7089582045969514496_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQlQlmZfcOpwGR5NxixykqDG8QvtySNgFS-p1QW2HBzHlc6mGyf94nWonSH38NiSltg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=46ad112a45247f1701a5a1d531f3e234&oe=5DEEB816


Thanks Sundar Rajan

sivaa
5th August 2019, 09:36 PM
1964- கர்ணன் 6 திரையரங்குகளில் 100 நாளுக்கும் மேலாக ஓடி வெற்றி கண்ட காவியம்,
1969- சிவந்த மண் 10 திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது,
1980- பட்டாக்கத்தி பைரவன் தமிழகத்தில் வசூலைக் குவித்ததோடு கடல் கடந்து இலங்கையிலும் கூட இரண்டு அரங்குகளில் 150 நாட்கள் வரை ஓடி வெற்றி கண்டது,
... இப்படியான வரலாற்றுச் சுவடுகள் இருக்க மீண்டும் மீண்டும் கர்ணன் நஷ்டம், சிவந்த மண் தோல்வி என ஒரு உண்மையையும் கருத்தில் கொள்ளாமல் பொய் செய்திகளை மட்டுமே தொடர்ந்து சொல்லி வருகிறது ஒரு கும்பல்,
போகிற போக்கில் சிவாஜி படம் ஓடவில்லை, அந்த படத்தால் தயாரிப்பாளர் நஷ்டமடைந்தார், என எழுதி புத்தகம் வெளியிடும் புத்தக எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தாருக்கு அப்படி என்ன தான் வஞ்சனை இருக்கிறதோ தெரியவில்லை, ஒரு வேளை ஆட்சியாளர்கள் ஏதாவது வெகுமதி கொடுப்பார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம், அதில் உண்மையும் இருக்கிறது,
இப்படித்தான் எதேச்சையாக "தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்" என்ற புத்தகத்தை வாங்கிப் புரட்டி தொலைத்து விட்டேன், புரட்ட புரட்ட ஒரே பொய் செய்திகள், எந்த மகராசன் எழுதியது என பிறகு தான் பார்த்தேன்,கே.என் சிவராமன் என்ற ஒரு எழுத்தாளர், அப்புறம் தான் விளங்கியது இது தினத்தந்தியில் தொடராக வெளிவந்தது, அந்தத் தொடரை ஓரிரு வாரங்கள் படித்தேன் பிறகு நிறுத்திக் கொண்டேன், இப்படியான எழுத்தாளர்கள் எப்படித்தான் குறைத்து எழுதினாலும் நடிகர் திலகம் சிவாஜி ஆதரவாளர்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிப்பது இல்லை, சாதாரணமாக கடந்து செல்வது பழகிப் போய்விட்டதும் கூட,
1982 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நடிகர் திலகத்தை வரவேற்க கூடிய ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பாராத வண்ணம் லட்சக்கணக்கில் குவிந்து விட்டனர், அன்றைய எம்ஜிஆர் அரசு செய்வதறியாது திகைத்து கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியது, வரலாற்றில் ஒரு அரசு ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் இது தான், கொதித்தெழுந்த நடிகர் திலகம் ரசிகர்கள் எதிர் வினை ஆற்றத் துவங்கிய போது அரசுக்கு அமைதியை நிலைநாட்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்படுவதை உணர்ந்து நடிகர் திலகத்தை அறிக்கை விட கேட்டுக் கொண்டது, அதன் பின்னரே அன்று அமைதி நிலவியது, அப்பேற்ப்பட்ட போர்க்குணம் கொண்டவர்கள் தான் சிவாஜி ரசிகர்கள், ஆனால் எல்லாமும் தலை கீழானது போல உள்ளது அதையடுத்த நிகழ்வுகள் யாவும்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வந்த செல்லுலாய்ட் சோழன் தொடரில் பராசக்தி வெற்றியைப் பற்றியும் அதே ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த என் தங்கை படத்தின் உண்மையான தோல்வியையும் குறிப்பிட்டு இருந்தார், விட்டார்களா எம்ஜிஆர் ஆதரவாளர்கள் இருபது பேர்கள் வரை திரட்டிக் கொண்டு பத்திரிகை அலுவலகத்தை முற்றுகை இட்டனர், எதிர்ப்பு குரல் கொடுத்தனர்,
ஆனால் பாருங்கள் உண்மைக்கு மாறாக சிவாஜி படங்களை பற்றிய செய்திகளை வெளியிடும் எழுத்தாளர்களையோ பத்திரிகை, ஊடக அலுவலகங்களையோ நாம் சின்னதாக கூட ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பது இல்லை,
அப்படியே ஒரு சிலர் அமைப்பு ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என மட்டம் தட்டுவ்து சிறப்பாகவே நடைபெறுகிறது,

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67636735_770610670178791_8631063327675514880_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQmcJdZ6RI-XobP8GAUAvqapyPoL2on06Sd8MUYaACT9eTPAdvlVKnhENLsi_ CnbZm0&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=039ea2cf7dce6e3a9a47772f8e7c39fe&oe=5DD65C92https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69001504_516048549138285_3462603793676369920_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQmVIn2dUsSihBboVyr-fI8dbk2LWgjUOvKi67GAMszHc29ucSUN7PQWEO0KtploPrw&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=7344f685d147bf92013db48f88590246&oe=5DECA5A9https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67592233_408470083129036_3320493741147422720_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQneKuGKiu-2oQYqDlqFWq3A08R8nzLBoYXhoyhVMwportgYrDSm612ZZp1pr f6idT0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b6bd4bc5a3fbdff1f75e542ceecff465&oe=5DECB067




Thanks Sekar

sivaa
5th August 2019, 10:05 PM
மேற்கண்ட கட்டுரைக்கான் பின்னூட்டங்கள் சில

1952 லிருந்து 1999வரை இடைவிடாது 47 ஆண்டுகள் நடித்துவந்த288 படங்களும் கௌரவ நடிகராக 19 படங்களும்
இதைத் தவிர ஆயிர கணக்கான நாடகங்களும் மராட்டிய தூர்தர்ஷனுக்கு சத்திரபதி சிவாஜியாக நடித்து அரும்பெரும் சாதனைகளை அவர் அளவுக்கு நடத்தியவர் குறைவுதான். அவர் பெற்ற விருதுகளைப்போல் யாரும் பெறவில்லை. உலகத்து தேசங்கள் எகிப்து, அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், மொரிஷஸ், பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அவருக்கு தந்த மரியாதையை உலகம் அறியும். 47 ஆண்டுகள் ஓய்வரியா உழைத்த மகன் அடுத்த இரண்டாண்டுகள் இருந்தார் 2001ல் மறைந்தார். மறைந்து18 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் பாடும் கூட்டம் இன்னும் இருக்கிறது. கர்ணன், ராஜபாட் ரங்கதுரை, வசந்த மாளிகை இவைகள் இந்த கால வெளியீட்டிற்கு பின்னும் மாபெரும் வெற்றியை ஈட்டித்தருவது தமிழனுக்கு பெருமை இல்லையா? தமிழன் பெயரை தமிழன் குலைப்பானா? ஆம் சிலையெடுத்து அவமானத்தை வாங்கிக் கொண்டது போதாது. சிவாஜி ரசிகர்களுக்கு எந்தக் கட்சியின் பின் புலம் இல்லை. ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அத்தனை ரசிகர்கள் மடிந்து போனாலும் "அவன் ஒரு சரித்திரம்"
கலை உள்ளவரை கணேசனார் புகழை மறைக்க எந்த சக்தியாலும் முடியாது. இது சத்தியம்! வாழ்க அய்யன் சிவாஜி!






நன்றி

sivaa
5th August 2019, 10:06 PM
நாம் பதிவிடும் செய்திகள் அண்ணனின் சாதனைகளாக மட்டும் இருக்கட்டும்.
இன்று நேற்றல்ல .. பல காலமாக அண்ணனை குறைத்தே மதிப்பிட்டு எழுதும் வழக்கம் பல பத்திரிக்கைகள் செய்து வரும் தொழில்.
நமது வெற்றிகளும் சாதனைகளும் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை...
நாம் கவலைப் படவும் தேவையில்லை..
ஏனெனில் சூரியனை மேகங்கள் மறைக்க இயலாது .


நன்றி முகநூல்

sivaa
5th August 2019, 10:09 PM
அன்றைய காலத்தில் செய்ததில் அரசியல் காரணமாக இருக்கலாம் சார்,
இப்போது இப்படி குறைத்து எழுதுவதெண்பதை நாம்.அனுமதிக்கக் கூடாது சார்

இப்போ விரோதிகளின் பழைய தகிடுதத்தம் முடியாது நண்பரே. சிவாஜி ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு கூடியுள்ளனர்

...........................







இப்போ விரோதிகளின் பழைய தகிடுதத்தம் முடியாது நண்பரே. சிவாஜி ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு கூடியுள்ளனர்

sivaa
5th August 2019, 10:11 PM
கூடியிருக்கும் போது நாம் வலுவான எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும் சார்


........





எதிர்ப்பு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாளர்களும் உண்டு. அது நன்றாக தெரிந்துதான் புல்லுருவிகள் நம்மிடையே ஊடுருவி உள்ளனர்

sivaa
5th August 2019, 10:11 PM
ஊடகங்களும் சேர்ந்து
கொண்டு திட்டமிட்ட சதி அரசியல் வாதிகளால் தயாரிக்கப்பட்டு பிரச்சாரம் நடந்ததை ரசிகர்கள் சகிக்க முடியாமல் பொருமும் போதும் குமுறும் போதும் வேற்று மாநிலத்தோர் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள் நடிகர் திலகத்தின் மீது. வெளி நாட்டினர் கூட மரியாதை வைத்திருந்தனர். அரசியல் பலமும் பண பலமும் இல்லாத சிவாஜி ரசிகர்கள் அராஜகத்தின் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவருடைய புகழை யாராலும் பொய்களாலும் புரட்டுகளாலும் குறைய செய்ய முடியவில்லை

sivaa
5th August 2019, 10:12 PM
உண்மை தான் சார்

நடிகர் திலகம் அவர்களுக்கு எதிராக எத்தனை எத்தனை பொய்கள், புரட்டுகள்.

காலம் நிர்தாட்சன்யம் இல்லாதது சார்.
உண்மை யை வெகு காலம் மறைக்க முடியாது சார்.
உங்கள் பதிவுகளை பார்க்கும் போது உங்கள் மனம் அடையும் வேதனை புரிகிறது சார்.

நல்ல பதிவிற்கு நன்றி சார் நன்றி


.........................
எண்ணங்களை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சார்

sivaa
5th August 2019, 10:13 PM
அதே புத்தகத்தில் தேடிப்பாருங்கள் *எதாவது ஒரு ஓரத்தில் *நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நீரும் நெருப்பும் போன்ற படங்கள் *வெள்ளி விழா ஓடி வசூல் புரட்சி செய்த படங்கள் என்று எழுதியிருப்பான்.

.................
எழுதி இருக்கிறான் சார்,
ஏற்கனவே தந்தியில் தொடராக வந்த போது நமது நண்பர்கள் சுட்டிக் காட்டி கண்டித்து இருந்தார்கள்
ஆனால் எழுத்தாளர் பற்றி குறிப்பிடாமல் தந்தியை

sivaa
5th August 2019, 10:14 PM
நம் திலகம் #காம்போதிராகம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%A F%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95% E0%AE%AE%E0%AF%8D?hc_location=ufi) போன்றவர் யாராலும் வெல்லவோ அழிக்கவோ முடியாது. நயவஞ்சக நாய்கள் சொன்னால் நம் திலகத்தின் புகழை அழிக்க முடியாது சேகர் சார்.

sivaa
5th August 2019, 10:16 PM
காசுக்கு பிணம் தின்னிகள்!

சிவாஜி மகா பெரிய ஆல விருக்ஷம்!

அதில் பினந்தின்னிகளும்
தங்கி பறந்திருக்கின்றன!

விடுக கவலையை!.......................

குறுட்டு நாய்கள் நம்ம தலைவரின் வரலாறு தெரியாமல் கண்டபடி எழுதி தொலைக்கிறானங்க செருப்பாலே அடிக்கனும் சார்

sivaa
5th August 2019, 10:17 PM
தினத்தந்தி காசுக்காக எதையும் செய்யும் சமூகத்துரோகிகள் பத்திரிகை.அதை வாங்குவதை நிறுத்துங்கள்.தமிழில் வரும் எல்லா பத்திரிகைகளும்அப்படித்தான்.


................
அது மட்டுமில்லை.தன் ஊழியர்களுக்கே ஒழுங்காக சம்பளம் கொடுக்காத ஆதித்தன் நாகர்கோவில் பாராளுமன்ற தேர்தலில் பெருந்தலைவரை தோற்கடிக்க பெட்டி பெட்டியாய் பணத்தை அள்ளி வீசினான்.மக்கள் இந்த பிறவிகளை விரட்டி அடித்தனர்.

sivaa
5th August 2019, 10:18 PM
எம்ஜிஆர் ரசிகர்கள் இப்போது அரசியல் வாதிகள். ஆனால் சிவாஜியின் ரசிகர்கள் இன்றும் ரசிகர்களே. அதனால் தான் கர்ணன், வசந்த மாளிகை மிகப்பெரிய வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.

................
நிதர்சனமான கருத்து சார்

sivaa
6th August 2019, 01:57 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68492763_341890720089260_5519059638516973568_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQninhlbOaUNjMQ2k76-QMbeChVfgycCN72z0o810WlZEtQxB_-k1K7Zm18GZeTUtvc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=a465361a99cb368ee3b6e9dbb3fdd3da&oe=5DE2733D

sivaa
6th August 2019, 01:57 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67643133_2452032654886698_6242599325373825024_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQkEukcq1FKXRm8nOM3rniswT7_19s5aZPScaVpnaGy Gn_PdbvyqGnidVSNFFjMPErk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=1a8ae26594101ad732a9eba67718ac95&oe=5DD5438F

sivaa
6th August 2019, 02:07 AM
நடிகர்திலகத்தை பற்றி ....
பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியர்களின் வீரம் பற்றி பாடம் புகட்டிய வீரன் கட்டபொம்மனாக அவர் நடித்ததை புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண...்டும் என்ற அவசியமில்லை. கூர்மையான வசனம் கத்தியை விட ஆழமாகப் பாயும் என்பதை உணர்த்திய அற்புதமான நடிகர் சிவாஜி.
சொன்னவர் வாஜ்பாயி..
சிவாஜி நாடக மேடையில் வளர்ந்தவர். முதல் வரிசையில் இரருந்து கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவர் வரையில் மேடையில் நடிப்பதை பார்க்க, கேட்க, குரலும், முகபாவங்களும் கூடுதலாக இருந்தால் தான் சரியாக இருக்கும். சிவாஜியின் நாடகங்களைப் பார்க்கிறபோது கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவனையும் ஈர்த்து பரவசம் கொள்ளவைக்கும்.
சொன்னவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.
எண்பதுகளில் குளோசப் கதை சொல்லும் உத்தி போன்றவை மாறிய பிறகு, அவருடைய நடிப்பு உத்திகள் தான் பின்னால் வந்தவர் களுக்கு கையேடாக இருந்தது. சிவாஜி மெதட் ஆக்டிங் என்ற ஒரு தனி அத்தியாத்தை உருவாக்கிய மேதை அவர்.
சொன்னவர் மம்முட்டி.
அவன் நாவின்
ஸ்பரிசம் பட்டபின்தான்
தமிழ்ச்சொற்கள்
பூப்படைந்தன
நாவினால் மட்டுமல்ல
மற்ற அங்கங்களிலும்
பேச முடியும் என்பதைக்
காட்டிய அதிசயம் அவன்.
திருமாலுக்கு கூட
பத்து அவதாரம் தான்
ஆனால் அவனோ நமக்காக
எத்தனை அவதாரம் எடுத்தான்
அதுவும் ஒரே பிறவியில் .
சொன்னவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஒரு குறிப்பிட்ட காட்சியில் வசனம் பேசி முடித்து விட்டு சிவாஜியின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்பதாக காட்சி. ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல மூன்றாம் டேக்கில்தான் அந்த காட்சி ஓகே ஆனது. காரணம் என்ன?
சிவாஜியின் கண்ணில் இருந்த பார்வையின் ஆழத்தை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை இதனால் காட்சியில் நான் பேச வேண்டிய வசனங்களை சரியாக பேசி விட்டாலும் அதன் பின் சிவாஜியை நேருக்கு நேர் பார்த்து காட்சியை என்னால் முடிக்க முடியவில்லை. எனக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம் என்ன விஷயம்? என்று கேட்டார். நான் பிரச்சனையைச் சொன்னேன் அப்புறம் சிவாஜி தன் பார்வையில் சற்று மாற்றத்தைக் கொண்டுவர நான் அவரை நேருக்கு நேர் பார்க்க காட்சி ஓகே ஆனது, என்கிறார் நடிகர் நாசர் .(தேவர் மகன் )
ஒரு நாளைக்கு மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு இறக்கை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நேரம்.
தூக்கம் கிடையாது .ஓய்வொழிச்சல் இல்லை. இரவு முழுக்க நீதி படத்தின் சூட்டிங்கில் இருந்தவர் ,அதிகாலை வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு புறப்பட்டபோது இருமல் ,வாந்தி ,இரத்தம் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .பரிசோதித்த டாக்டர் உடனடியாக சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்கள் என்றார். சூட்டிங்கை கேன்சல் பண்ண முடியாது வேண்டுமானால் ஊசி போட்டு விட்டு விடுங்கள். மருத்து மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து நடிக்கிறேன் ,என்று அவர் நடிக்க சென்றுவிட்டார்.
சொன்னவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
முதியவர்களும் கதாநாயகர்களாக இருக்கமுடியும். இளைஞர்களாக ஒப்பனை செய்து கொண்டு ஓடிப்பிடித்து டூயட் பாடித்தான் படத்தை ஓட்ட முடியும் என்பதல்ல .ஒரு முதியவரே- கதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிரேமுக்கு பிரேம் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் முக பாவத்தின் முலமே உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளங்களை உருக்க முடியும் நிகழ்த்த முடியும் -கொள்ளை கொள்ள முடியும் என்று நிரூபித்து ,நடிப்பின் இன்னொரு தளத்தை எட்டி புதிய பரிணாமம் ஒன்றனையும் படைத்து காட்டியவர் சிவாஜி.
சொன்னவர் சின்னக்குத்தூசி
உடம்பு சரியில்லாத சிவாஜியைப் பார்க்க சென்றிருந்தேன். அப்போது அருகில் இருந்த மகள் சாந்தியிடம் நான் முதன் முதலாக பேசியதே இவர் பெயரைதான் என்றார் அது இப்போதும் என் நினைவில் உள்ளது .மக்களைப்பெற்ற மகராசி படத்துக்காக கால்ஷீட் வாங்குவதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது மாடியில் நின்று கொண்டிருந்த சிவாஜி மகள் சாந்திக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும். அவள் வீ.கே.ஆர் ,
ஏபி என் எங்களின் இனிசியலை சொல்லி அழைத்தாள். அதுவரை பேசாமல் இருந்த சிறுமி சாந்தி முதன்முதலாக சொன்ன வார்த்தைகள்தான் இவை .
சிவாஜிக்கு எவரையும் கவர்ந்திழுக்கும் முக வசீகரம் உண்டு எந்த மொழியில் பேசினாலும் பட்டெனப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு.அதே போல் தர்ம சிந்தனை மிகுந்தவர்.
சொன்னவர் விகே ராமசாமி.
சிவாஜியின் பஞ்சாயத்து ...
ஓய்வாக வீட்டில் இருக்கும் சமயங்களில் சுற்றம் மற்றும் நண்பர்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு அவர் பஞ்சாயத்து பண்ணி வைக்கிற விதமே அலாதிதான்.
கணவன் மனைவிக்குள் தகராறு என்று வந்தால் முதலில் கணவனை அழைத்து தனியாக அழைப்பாராம். டேய்! பொண்டாட்டி ஏதாவது கேட்டால் எடுத்த எடுப்பிலே முடியாது என்று சொல்லாதே! சரி, செய்கிறேன் என்று சொல்லு! அப்புறம் முடிந்ததை செய் என்பாராம்.
பிறகு மனைவியை அழைத்து அம்மா ஊர்ல ஆயிரம் அயோக்கியனுக இருக்கிறான். உன் புருஷன் தங்கக்கட்டி! தெரிஞ்சோ தெரியாமலோ அவன் தப்பு பண்ணியிருந்தாலும் அவனை போட்டு பாடா படுத்தாதே."பேசாம வீட்டை விட்டு ஓடிப் போயிறலாமானு இருக்கு "அப்படின்னு உன் புருஷன் புலம்புகிறான் . அவன் போயிட்டா அப்புறம் சண்டை போட உனக்கு யாரு இருக்கா என்பாராம்.
பிறகு இருவரையும் ஒன்றாக வைத்து சமாதானம் செய்து தம்பதி சிரிக்கச் சிரிக்க கிளம்பி போவதை ரசிப்பாராம்.
வணக்கம்!

Thanks Sekar (N T Pages only)

RAGHAVENDRA
6th August 2019, 08:20 AM
https://backwindowministries.com/wp-content/uploads/2016/09/praying-hands.jpg


நண்பர்களே, இந்த பத்தாயிரம் என்கிற முத்திரை எண், மனதில் பேருவகை அளிக்கிறது. நடிகர் திலகம் என்கிற மாமேதைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்


மய்யம் இணைய தளத்தில் நமது நடிகர் திலகம் ரசிக நண்பர்களில் இந்த முத்திரை எண்ணை அடையும் முதல் ரசிகனாக அமைந்ததில் மனம் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் என் பதிவுகளைப் பார்வையிட்டு, பதிலளித்து, ஊக்கப்படுத்தி ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் மய்யம் நிர்வாகிகளுக்கும் மாடரேட்டர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்தாயிரமாவது பதிப்பாக Definition of Style தொடரின் அடுத்த பகுதியாக இரு மலர்கள் படப்பாடலைப் பற்றிய கருத்துரை இடம் பெறுகிறது. படித்துப் பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

Definition of Style 59


பாடல் – மன்னிக்க வேண்டுகிறேன்
படம் – இருமலர்கள் (1967)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் – கவிஞர் வாலி
குரல்கள் – பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி பி.சுசீலா


மேலே இந்த விவரத்தைப் பார்த்தவுடனேயே உங்கள் உள்ளம் துள்ள ஆரம்பித்திருக்கும். குதூகலத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது திண்ணம். அந்த அளவிற்கு ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் ஒவ்வொரு ஃப்ரேமும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி இணையின் ஒவ்வொரு நுணுக்கமான காதல் பரிபாஷையும் ரசித்து ரசித்து ஊறிப்போயிருக்கும். இதற்கான காரணங்களில் ஒன்று இந்தப் படத்தின் கருவிசை. சுந்தர் உமா பாத்திரங்கள் தொடர்பான காட்சிகளிலெல்லாம் இந்த இசை இடம் பெறும். மெல்லிசை மன்னர் என்கிற மாமேதை நடிகர் திலகம் படங்களில் பணியாற்றும் போது அவரும் ஒரு சிவாஜி ரசிகராகி விடுகிறார் போலும். அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு அம்சத்தை Focus செய்து அதையே கதைக்கு Theme Music எனப்படும் கருவிசையாக உருவகம் செய்கிறார்.

பாடல் துவங்கும் போது பாடலின் வரிகளை விட்டு விட்டு, பின்னணியில் ஒலிக்கும் பாடலின் லயத்தை (Rhythm) கவனித்தால் அப்படியே படத்தின் கருவிசை தொடர்ந்து ஒலிப்பது போல் ஒரு பிரமை உண்டாகும். Yes, this tune is based on this theme music only. அந்த கருவிசையை ஆதாரமாக வைத்தே இந்தப் பாடலின் ட்யூனை உருவாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

பாடலின் வரிகளில் கவிஞர் வாலி, எந்த அளவிற்கு இந்தப் படத்தில் Involve ஆகியிருக்கிறார் என்பது புலப்படும். மலர்கள் ஒன்று சேரும், மாலையாக மாறும் நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும் என்ற வரி ஒரு உதாரணம். பாடல் முழுக்க அந்த காதலர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் புலப்படுகின்றனவே அன்றி, அவர்கள் இணைந்து வாழக்கூடிய சாத்தியத்தை இசையும் கூறவில்லை, வரியும் கூறவில்லை. காரணம் கதைப்படி அவர்களின் காதல் தோல்வியில் முடிகிறது.

இப்போது இந்த அடிப்படையில் பாடலைக் கேளுங்கள். பாடல் முழுதுமே ஒரு விதமான சோகம் Undercurrent ஆக ஓடிக்கொண்டே இருக்கும். அந்த சோகம் தான் இந்தப் பாடலின் பெரும் வெற்றிக்குக் காரணம். இதில் இந்த சோகத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பின்னால் இந்தக் காதல் என்னவாகும் என்பதைக் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் இவ்வளவு மெனக்கெட்டு அதை பாடுபவர் கோட்டை விட்டால் என்னாகும். சொல்ல வந்த கருத்து சரியான முறையில் சொல்லப்படாமல் போய் விடும். இங்கு தான் பாடகர் திலகமும் இசையரசியும் தங்களுடைய தனித்துவத்தை நிரூபிக்கிறார்கள். இசை, வரிகள், பாடகர்கள் மூவரும் ஒருங்கிணைந்து பாடலை அளித்து விட்டார்கள். இனி அந்த காதலர்களை திரையில் காண வேண்டுமே.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் இந்த பாடலில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் தங்களுடைய மேதைமையை நிரூபித்திருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசையும் குரல்களும் பின்னால் வருவதை முன்கூட்டியே சொன்னாலும் காதலர்களுக்கு அது தெரியாது. தங்களுடைய காதல் தோல்வியுறப்போகிறது என்பதை அறியமாட்டார்கள். ஆழமான காதல், ஆசை நிறைந்த எதிர்பார்ப்பு, உற்சாகமான மனநிலை, இதையெல்லாம் அந்தப் பாத்திரங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

முதலில் இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தர் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் தம்பு அவர்களுக்கும் நன்றி கூறி விட்டு காட்சிக்கு வருவோம்.

பாடல் துவக்கத்தில் ட்ரம்பெட் ஓசை கேட்கும் போது அங்கேயே ஆரம்பிக்கிறது இவர்களின் கைங்கரியம். சரியாக அந்த ட்ரம்பெட் ஒலிக்கும் போது அட்டகாசமான நடையுடன் வசீகரமான புன்னகையுடன் நடிகர் திலகத்தின் மிட் க்ளோஸப்.. சிரித்துக்கொண்டே பத்மினியை வா என கையால் சைகை காட்டும் போதே ரசிகர்கள் Flat. இப்போது மன்னரின் கைவண்ணத்தில் க்ரூப் வயலின்கள் ஒலிக்க இருவரும் ஓடியாடும் அட்டகாசம். பொதுவாக பரபரப்பான சூழ்நிலையிலோ, அல்லது வேகமாக ஓடும் போதோ அல்லது வேறு பதட்டமான சூழ்நிலியலோ இந்த Group violin பயன்படுத்துவார் எம்.எஸ்.வி. அந்த இயக்குநர்களிடம் காட்சியமைப்பு, லொகேஷன் போன்றவற்றை முழுதும் கேட்டு அதற்கேற்ப இவர் இசையமைப்பார், அவர்களும் அதன் தன்மையைப் புரிந்து கொண்டு படமெடுப்பார்கள். அதில் இந்தப் பாடலும் அடங்கும். சற்றே முதிர்ச்சியான தோற்றம் எட்டிப்பார்த்தாலும் தன் உடல் மொழியாலும் சுறுசுறுப்பாலும் அதை மறக்கடித்து நடிகர் திலகத்தின் இளமைத்துடிப்பான நடிப்பிற்கு நன்கு ஒத்துழைப்பு தருவார் பத்மினி.

மன்னிக்க வேண்டுகிறேன் பல்லவியை பத்மினி பாடும் போது சிரித்துக்கொண்டே திரும்புவது, முன்னே அழகாக நடந்து வருவது, விரலை உதட்டில் கடித்தவாறே புன்னகைப்பது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நடப்பது, குனிந்து மரியாதை செய்வது, பின் இருவரும் அருகருகே நின்று ஒருவரை ஒருவர் பார்த்தவாறும் பாடியும் காதலைப் பரிமாறுவது, மன்னிக்க வேண்டுகிறேன் என்று கைகூப்புவதும், உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் வரியின் போது விரலை கழுத்தில் வைப்பதும் அந்த காதலனின் மன ஓட்டத்தைத் தத்ரூபமாக பிரதிபலிக்கிறா3ர் நடிகர் திலகம்.

ஒவ்வொரு ஃப்ரேமும் நெஞ்சையள்ளும் இப்பாடலை என்னாளும் மறக்க முடியாது. உமா சுந்தர் என்கிற இரு காதலர்களை காவிய நாயகர்கள் ரேஞ்சுக்கு கொண்டு சென்ற பெருமை நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி பத்மினி இணைக்கே சாரும்.

நடிகர் திலகம் மற்ரும் மெல்லிசை மன்னர் என்ற மாமேதைகளின் பங்களிப்பில் இரு மலர்களும் இன்றும் அமோகமாக மணம் வீசுகின்றன. இசை பற்றி தனியாக முனைவர் ஆய்வேடே எழுதும் அளவிற்கு ஏராளமான நுணுக்கங்களைத் தெளித்திருக்கிறார் மன்னர்.

இந்தப் படத்தின் தீம் மியூஸிக் நம் நெஞ்சுக்குள் ஊடுருவி மனதைப் பிசையும். அதற்காகவே பல முறை இப்படத்தைப் பார்க்கலாம். சில சமயம் கண்களை மூடிக்கொண்டு தியேட்டரில் இந்த இசையை மட்டும் கேட்டதும் உண்டு. அப்போதெல்லாம் டி.வி. கிடையாது. இரவுக்காட்சிகளில் இது போன்ற இசையை தியேட்டரின் வெளியே நின்று காற்றாட கேட்டு ரசிப்பது மறக்க முடியாத அனுபவம்.

அதே போல எப்போதெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறதோ அப்போது இரு மலர்கள் படத்தின் Theme Music கேட்டால் உடனே அத்தனை கவலைகளும் மறந்து விடுவதோடு மனம் அந்த இசையோடு சஞ்சாரிக்க ஆரம்பித்து விடும். The use of chorus as harmony at the apt place enlivens the composition and inherits a feel to the soul.

Another important aspect about this title music. பொதுவாக மெல்லிசை மன்னரின் டைட்டில் இசையில் படத்திற்கு தீம் மியூஸிக் உருவாக்கியிருந்தாரானால் அதை கோடிட்டுக் காட்டி, முக்கியமான பாடலின் ஓரிரு வரிகளையோ அல்லது பின்னணி இசையையோ கூட இணைத்து ஒரு கலவையாக கொடுப்பார். ஆனால் இந்த படத்தின் டைட்டில் இசை முழுக்க முழுக்க தீம் மியூஸிக்கை மட்டுமே கொண்டிருக்கிறது. இது மிகவும் அபூர்வமானதாகும்.

இரு மலர்கள் படத்தின் Theme Music. முதலில் இது இசைக்கப்படும் இடம், மலையுச்சியில் சுந்தர் விழப் போக உமா அவரைக் காப்பாற்றும் போது. இப்போதாவது எனக்கு அந்த மலரைத் தருவாயா என சுந்தர் கேட்கும் போது, மலர் என்ன, என்னையே நான் தருகிறேன் என்கிற கட்டத்தில் தான் முதன் முதலாக இந்த இசை ஆரம்பிக்கிறது. சுந்தர் உமா என்று அழைக்கும் போது மிகச்சரியாக மன்னர் இந்த் இசையை ஆரம்பிக்கிறார். இதைத் தொடர்ந்து சுந்தர் விடுதியிக்குள் நுழைந்து தன் அறையில் இருக்கும் போது எதிரில் உமா அவரைப் பார்க்க, இருவரும் கீழே இறங்கி வந்து நேருக்கு நேர் பார்த்து நிற்கும் வரை Continuous ஆக இந்த இசை ஒலிக்கும். இதுவே பிரதானமானதாகும். இதற்குப்பிறகு மன்னிக்க வேண்டுகிறேன் பாடலின் ஆரம்பத்தில் இந்த இசையின் லயம் பயன்படுத்தப்பட்டிருக்கும். மெட்டிலும் அது எதிரொலிக்கும். அதற்குப் பிரகு சுந்தர் உமா சந்திக்கும் இடங்களில் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இந்த இசையை வாசித்திருப்பார்கள்.

சாதாரணமாக ஒரு படத்தில், கதையின் போக்கில், காதலை நன்கு ஆழமாக சித்தரித்து மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டத்தில் அந்த காதல் தோல்வியுற்றதும்,. கிட்டத்தட்ட படம் முடிந்து விடும் உணர்வை ஏற்படுத்தி சுவாரஸ்யம் போகும் அளவிற்கெல்லாம் நிகழ்வதுண்டு. ஆனால் இரு மலர்கள் is not such a run of the mill movie. It deserves to be placed in the Top Ten of NT movies. காதல் தோல்விக்குப் பிறகும் அந்தப் படம் இறுதி வரைக்கும் உணர்வுகளோடு கலந்துரையாடுகிறதென்றால், கதையில் உள்ள வலுவே காரணம். உரையாடல்களும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். அந்தக் காதல் தோல்வியில் எதார்த்தமிருக்கும். கோபங்களில் பரஸ்பரம் நியாயம் இருக்கும். காட்சிகளில் செயற்கையாக திணிக்கப்படும் அம்சங்கள் கிடையாது. Reality at its core. கதைக்களம் ஒரே இடத்தில் நிலைபெற்றிருப்பதால், காதலர்கள் மீண்டும் சந்திப்பதில் திடுக்கிடும் திருப்பமோ, திணிப்போ இருக்காது. அதுவும் Natural ஆக இருக்கும். இன்னும் எவ்வளவோ சிறப்பம்சங்கள். இரு மலர்கள் belongs to a genre of those movies which are complete in all aspects and respects

நெஞ்சை நெகிழ வைக்கும் இசையைத் தந்த மெல்லிசை மன்னரை நினைத்தாலே கண்கள் குளமாகின்றன. நெஞ்சம் கனக்கின்றது. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் நடிகர் திலகம் மெல்லிசை மன்னர் கூட்டணி.



https://www.youtube.com/watch?v=dKTlKv3MPoI

RAGHAVENDRA
6th August 2019, 08:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67960165_2454713461245978_3664756488276017152_n.jp g?_nc_cat=100&_nc_eui2=AeGO_tlf8XS_csQoHE_KEtrCtsmE6xzsBIprdtiXP cD-vPIeC5g3AziACU5olvoWlm7qtRtrEjzXGzI_It438KzOv7avez sCKS9YNkUlKP51Og&_nc_oc=AQlkcrLZqL8ZbqwymiQA7Mv9Lds-o0bH2be_xPhgm0IAPR3s5L2o_KSEtd3mTh01ih4&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f7a1eb4c9aadc3d7eacb67021acc5669&oe=5DED6C63

sivaa
6th August 2019, 06:16 PM
திரு ராகவெந்திரா அவர்கள் 10,000 பதிவுகள் எட்டியதையிட்டு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மேலும் பல ஆயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

sivaa
6th August 2019, 08:42 PM
தனி ஒருவன்

#சிவாஜி -#தனி #பாணி
இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்;
அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், ...நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
இவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.
அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.
எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட் கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு �� ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67702002_940655059660640_4123388369046601728_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQmqaA2D9f1VkOA1kdlzh197f25F14P2Loluiat45vm Ldm5GzEg1oNid9lMvwVrU75s&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=50a7e9e4fcbf731732f6927a34da9ada&oe=5DDB846A



Thanks ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் (Facebook)

sivaa
6th August 2019, 08:49 PM
நடிகர் திலகம் ரசிகன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா
************************************************** *************************************************
உண்மையை உரைக்கும் ஒரு உண்மை ரசிகனின் மனநிலை.
************************************************** *****************************************
எப்படி உலகத்தின் தலைசிறந்த ஒப்பற்ற நடிகர் என்ற பெருமை நம் நடிகர் திலகத்திற்கு இருக்கிறதோ அந்த அளவிற்குப் பெருமை அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற நூற்றுக்கணக்கான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய மனம் கவர்ந்த கலைஞன் மேல் தன்னுடைய உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களே என்றால் அதற்கு மாற்றுக் கருத்து என்று ஒன்று உண்டோ!
தன்னுடைய நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அவர்கள் தங்கள் கலைஞனை நடிகனாகவே பார்ப்பதில்லை. தெய்வாமாகத்தானே கொண்டாடுகிறார்கள! அவர் உயிருடன் இருக்கும்போது 'எங்கள் அண்ணன்' என்று மார்தட்டியவர்கள் அவர் இறந்தபிறகு 'எங்கள் தெய்வம்' என்றல்லவோ அவரை தினம் தினம் வழிபடுகிறார்கள்!
மற்ற நடிகர்களுக்கு இந்த பெருமை இருக்கலாம். அது சில தீவிர ரசிகர்களுக்கே பொருந்தும். ஆனால் இங்கு அப்படியா?... இங்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அவரது திருஉருவப் படத்தை பூஜை அறையில் வைத்துதானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வழிபடுகிறான்! இந்தப் பெருமை நம் ரசிகர்களுக்கு மட்டும்தானே!
அதுவும் சில ஆண்டுகளாக முகநூலில் மற்ற இணையதளங்களில் 'யூடியூப்' கமெண்ட்களில் பார்த்தீர்களானால் நம் தலைவரை 'தெய்வம்' என்றே நமது அத்தனை ரசிகர்களும் குறிப்பிடுகிறார்கள். அவரது பெயரைக் கேட்டாலே இறைஉணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். உணர்வுமயமாகி இதயத்தின் இறைவனாக கொண்டாடுகிறார்கள். இந்த பாக்கியம் எத்தனை நடிகர்களுக்கு கிடைக்கும்?
தியேட்டர்களில் இப்போதும் அவர் படங்கள் வெளிவரும்போது 'தெய்வம் சிவாஜி' என்ற கோஷங்கள்தான் முதலில் விண்ணைப் பிளக்கின்றன? எத்தனை பேர் தங்களுடைய மனம் கவர்ந்த நாயகர்களை தெய்வம் ...தெய்வம் ... தெய்வம் ... என்று கொண்டாடுகிறார்கள் சொல்லுங்கள்?
தங்களுடைய ஹீரோ அறிமுகப்படலத்தின்போது, பாழாய்ப்போன 'பஞ்ச்' விடும்போது, வில்லன்களை பறந்து தாக்கும்போது மட்டும்தானே அவர்களுக்கு கைதட்டல்?
ஆனால் நடிகர் திலகத்திற்கு அப்படியா?
1952 'பராசக்தி' முதலே அவர் நின்றால், நடந்தால், அசைந்தால், சிரித்தால், அழுதால், தும்மினால், இருமினால், கண்ணசைத்தால் வசனம் பேசினால், வசனம் பேசாமல் இருந்தாலும் படங்கள் முழுக்க கைத்தட்டல்களும் ஆரவாரங்களும்தானே! இல்லையென்று எவரும் மறுக்க முடியுமா? உலகில் இப்படி ஒவ்வொரு அசைவிற்கும் இப்படி கைதட்டல்களை பாராட்டுக்களையும் அள்ளிக் குவிக்கும் வேறு ஒரே ஒரு நடிகரைக் காட்டி விடுங்கள் பார்க்கலாம்.
எத்தனை நடிகர்களுடைய ரசிகர்கள் ஊர்விட்டு ஊர் போய் தங்களது அபிமான நடிகர்களின் படங்களை பார்ப்பீர்கள்? எத்தனை தடவை பார்த்து இருக்கிறீர்கள்? எத்தனை ரசிகர்கள் தங்கள் பிரிய நடிகர் நடித்த படங்களை மாநிலம் தாண்டி போய் பார்த்திருப்பீர்கள்? எந்த நடிகரின் ரசிகர்கள் கன்னியாகுமரியிலிருந்து வேன் அல்லது பஸ் வைத்து சென்னை வந்து தங்களது அபிமான நடிகரின் படங்களைப் பல தடவை பார்த்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்? அப்படியே வந்தாலும் உங்களைக் கூட்டிவர ஒரு அரசியல் இயக்கமோ அல்லது பணக்கார கூட்டமோ, அந்த நடிகரின் உதவியோ, வேறு பொருளாதார வசதிகளோ இருக்கிறது. உங்களுக்கு உதவி செய்ய பல்வேறு நபர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் எங்கள் தலைவர் ரசிகர்கள் அப்படியா? ஒரு வாரம் மூட்டை தூக்கி உழைத்து, அந்த உழைப்புக் காசை, நடிகர் திலகத்திற்காக, தங்களின் தெய்வத்திற்காக, அவர் படம் பார்ப்பதற்காக ஆனந்தமாக, உளப்பூர்வமாக ஆத்ம திருப்தியுடன் வரும் எத்தனை தீவிர பக்தர்களை நாம் கண்டிருக்கிறோம்! கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்தக் காசில் அல்லவோ தங்கள் தெய்வத்தை தரிசிக்க ஊர்விட்டு ஊர் தாண்டி வருகிறார்கள்!
யார் தயவும் இல்லாமல் தங்களால் இயன்ற பொருட்களை திரட்டி நடிகர் திலகம் பெயரால் நற்பணி செய்கிறார்கள்.
இது ரசிப்புக் கூட்டம். வெறித்தனமான கூட்டம். ஆனால் நிதானம் தவறாத கூட்டம் . அவர் காட்டிய வழியில் பயணிக்கும் கூட்டம். தன்னுடைய தலைவனுக்கு ஒன்று என்றால் பதறும் கூட்டம். கதறும் கூட்டம். மற்றவர்கள் போல சிதறும் கூட்டம் அல்ல.
இந்த ரசிகத் தோட்டம் அனைத்தும் அவருக்கே சொந்தம் என்று மார்தட்டும் நெஞ்சை நிமிர்த்திடும் 'சிவாஜி என்ற சுயநலக் கூட்டம்'. ஆனால் சுயநலமில்லாக் கூட்டம்.
உலகில் நடிகர் திலகத்தின் ரசிகனை வேறு எந்த ஒரு நடிகரின் ரசிகனும், எவரும் விஞ்ச முடியாது.
இது படம் பார்த்து விட்டு தங்கள் நடிகனை மறந்துவிடும் கூட்டமல்ல. ஒவ்வொரு வினாடியும் அவரை நினைத்து உருகும் கூட்டம்.
நிற்கும்போதும், நடக்கும்போதும், குளிக்கும்போதும், பிரயாணங்களின் போதும், சாப்பிடும்போதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அந்த தெய்வத்தைப் பற்றியே சதா சர்வகாலமும் சிந்தனை செய்யும் கூட்டம்.
மனைவி, மக்களிடம் குடும்ப உறவுகளிடம் சிவாஜி ரசிகர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், கடைகளுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போதும் கூட நடிகர் திலகத்தின் நினைப்பே அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். உண்மையா இல்லையா? டூ வீலரில் பயணிக்கும்போது கூட அவரது படங்களின் காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். நிஜமா இல்லையா? அவரது பெயரை உதடுகள் ஜெபம் செய்தவாறே இருக்கும். உண்மையா இல்லையா? அவரது பாடல்களை வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் என்பது சத்தியமா இல்லையா?
எத்தனை டிவி சானல்கள் இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களோ பாடல்களோ மட்டும்தானே அவரது ரசிகர்களால் வீடுகளில் பார்த்துக் கொண்டிருக்கப்படும்.
ஒரு ஆண்டனியோ, ஒரு அருணோ, ஒரு 'பிரஸ்டிஜ்' பத்மநாபனோ, ஒரு பாரிஸ்டரோ, ஒரு சௌத்ரியோ, ஒரு ஆனந்தோ, ஒரு கர்ணனோ, ஒரு கட்டபொம்மனோ, ஒரு கப்பலோட்டிய தமிழனோ, ஒரு குருவோ, ஒரு சங்கரோ, ஒரு கண்ணனோ, ஒரு ராஜசேகரனோ, ஒரு தேவரோ
....இப்படி பல்வகையான கேர்கடர்கள் எந்த நேரமும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் ஓடியவண்ணமே இருப்பார்கள் . எத்தனை நடிகர்களின் ரசிகர்கள் இப்படி இருபத்திநாலு மணிநேரமும் தங்கள் அபிமான நடிகர்களின் கேரக்டர்களை இப்படி அனுதினமும் எண்ணி எண்ணி ரசிக்கிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இது நடிகர் திலகத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்தமாகப் பொருந்தும். ஒருவர்கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஏனென்றால் அவர்கள் நடிகர்திலகத்தின் அன்புச் சங்கிலியால் இறுகப் பிணைக்கப்பட்டவர்கள். ஒருவரும் அதிலிருந்து விலகாதவர்கள்.
பிறந்ததிலிருந்து ஒரே ஒரே நடிகன்... ஒரே தலைவன்... ஒரே அண்ணன்... ஒரே தெய்வம் என்று கட்சி மற்றும் காட்சி மாறாத உண்மை விசுவாசிகள். உண்மை உடன்பிறப்புக்கள். உண்மைத் தம்பிகள். உன்னத ரசிகர்கள்.
நடிப்பின் மகான் என்ற ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்களா? அதையும் மீறித்தான் நடிகர்திலகம் எங்கள் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கிறார்.
நடிப்பு ஒன்றின் மட்டுமாலா அவரை நாங்கள் பூஜிக்கிறோம்?...அல்ல அல்ல...அதையும் தாண்டி....ஒரு மிகச் சிறந்த குடும்பத் தலைவராக அவரை ஒவ்வொரு ரசிகனும் ஏற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு பாசமான சொந்த அண்ணனாக அவரை வணங்குகிறான். ஒரு மனித நேயம் மிக்க மனிதராக அவரை நேசிக்கிறான். ஏழைகளுக்கு வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் தர்மம் செய்த கர்ணனாக அவரை மனதில் இருத்தி, தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.
தொழில் நேர்மையைக் கடைபிடித்த வழிகாட்டியாக குருவாக அவரை ஏற்றுக் கொள்கிறான். அவருடைய நேரந்தவராமையை முன் உதாரணமாகக் கொண்டு அவர் வழி நடக்க முயற்சி செய்கிறான். ஒரு பாசமிகு தந்தையாக அவரை மனதில் நிறுத்திக் கொள்கிறான். ஒரு நேசமிகு அண்ணனாக அவர் வழியைத் தொடர்கிறான். அவர் பாணியைப் பின்பற்றுகிறான். இப்போது கடவுளின் பக்தனாக பூஜை செய்கிறான்.
யார் மனமும் புண்படாத அவரது கேலியான நையாண்டித்தனத்தை அனைத்து சிவாஜி ரசிகர்களிடமும் நான் காணலாம். படங்களில் அவர் கோலோச்சிய கேரக்டர்களில் ஒவ்வொரு ரசிகனும் தன்னை நுழைத்துக் கொண்டு அவராகவே ஆகிறான்.
வாழ்வியல் உதாரண புருஷராக அவரை ஏற்றுக்கொண்டு அவர்வழி நடக்க முயல்கிறான்.
இப்போது சொல்லுங்கள்...உலகின் வேறு எந்த நடிகருக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்? எந்த நடிகன் இப்படி ஒவ்வொரு ரசிகன் மனதிலும் அவன் உறக்கத்திலும் கூட, கனவிலும் கூட அவனை ஆள்கிறான்?
அது ஒரே ஒரு தெய்வம்.... நம் இதய தெய்வத்தால் மட்டுமே சாத்தியம்
ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உயிர் மூச்சும் நடிகர் திலகம் என்ற மாபெரும் சக்திகொண்ட, மாபெரும் உண்மையான ரசிகனை தொண்டனாய்க் கொண்ட, நம் நடிகர் திலகம் ஐயன் அவர்களை மட்டும்தானே இந்தப் பெருமை சாரும்?
அதனால்தான் எவரிடமும் சேராமல் தனித்து ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் 'நான் தலைவரின் ரசிகன்' என்று மார்தட்டி இறுமாப்புக் கொள்கிறான்.
அந்த மாபெரும் பெருமையையும் பாக்கியத்தையும் அளித்த இறைவன் அல்லவோ நமது மகான்!

நன்றி வாசு தேவன் (முகநூல்)

RAGHAVENDRA
7th August 2019, 07:01 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68583188_2456268861090438_4819010974637883392_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQk5FevuNH-r5vUZXjwycgiViBXAbTHR19bpAP0lpJxpFnAhQfkZjbLohm44S 1-bnjk&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=d05e2d1620eb27eb9b294fa1963295ba&oe=5DDEAFF0

sivaa
7th August 2019, 04:33 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67640402_558012834734763_5332253244318023680_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQnMqMVgr0vT6Q0rNeuRQXe8Dg7WkhoVuYr9T_br8TI _TmhQEJgVkqiCQUAJvjz2kg4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=04be3507121f83b04edd493349d80988&oe=5DEC33DC

sivaa
7th August 2019, 04:35 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67828920_2392768604299945_6848901076658159616_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQlE2GUuthdO5ucKEXxtVnlyDjoUYBPl7gUYhBwCPLC 0IT199E6ABuH4Ve0-z1hdnQQ&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=5e690125113f40943bed7ea01c0949f2&oe=5DDE8C96

sivaa
7th August 2019, 04:36 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/s2048x2048/67626606_483356608903326_7291709786809171968_n.png ?_nc_cat=102&_nc_oc=AQmg9AJIeqqesnuwz7xWQ8BcFCqkV4-KPSUCkzk5BwWSvSq0LyhECq4BrR0K47m8ObA&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=3f2fb5a5cd1e7ed18e1ece819fc4cd5f&oe=5DD8EA00

sivaa
7th August 2019, 04:38 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67874696_2142194009225690_3872098383837528064_n.jp g?_nc_cat=111&_nc_oc=AQlfRsGZVRvbNuA0MpYIWUnom6nD_TnmWO_h6xF-i-zP8s_JZNU3AzoJpVHke5aCb84&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=0ad9e66a6c32b387b0ff7f394f8fdbfb&oe=5DA1BD58

96 ம் நாள்

sivaa
7th August 2019, 09:50 PM
வசந்த மாளிகை
நாளை 08/08/19 சென்னை ஆல்பட் தியேட்டரில் 50 நாளைக் கடக்க இருக்கிறது,
நாளைய காட்சி அரங்கு நிறைந்து விட்டது
Houseful
... அஜீத் நடிப்பில் நேர் கொண்ட பார்வை நாளை ரிலீஸாகிறது
அஜித் படமும் நாளை ஹவுஸ்புல்
வசந்த மாளிகை புதிய படங்களைப் போலவே வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது,
எதிரிகளுக்கு அடி வயிறு எரிகின்ற நிலை,
புதியதாக ரிலிஸான நேர் கொண்ட பார்வை படத்தின் டிரெய்லரை YouTube ல் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து இருக்கிறார்கள்,
ஆனால் பாருங்கள் 54 ஆண்டுகளுக்கு முன் வந்த திருவிளையாடல் படத்தின் பகுதி காட்சியை மட்டுமே ஒரு கோடியே 30 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்கள்,

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68278726_1607970319350193_5346614201911607296_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQmZYXfNun3l02WyZmKee0GR0ylQeORfgreOUEEuu3x J3BRAf21QfUJiPmFwI4QYkcQ&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=a340288d70f483f7d158f8e116dc3e13&oe=5DD8A29Ehttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67620911_942821236060841_715384450199846912_n.jpg? _nc_cat=102&_nc_oc=AQlE9ratf5My3tLsf_CNWR0oY-SpdwVMMskoByPncDbd4oR10Ih_RCvjfZR4qHM9ze0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=fcc6e3996730a44f956b00dad73a6659&oe=5DE70AC6https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68419958_865860353795878_7905315834354991104_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQmZAHKIVYMRW6kKX15UGZJXyhvzD1ey80YuHYPKCs2 pITeQzq0n8Ycic4OEt2P9kS8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=35f6520249570be8c9165a435ba61638&oe=5DD4189Fhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68797100_357918601800124_1564708890044530688_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQlSS43WupfSufX3xq1uwp1VTrwhi5ICyf5HTQO5KyS r1hr7gl23iW8h2KwEgNMKllI&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=d25af32cc4eb0e360558c0674a249b40&oe=5DD64F7E





Thanks Sekar (Facebook)

RAGHAVENDRA
8th August 2019, 07:19 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67634693_2457960917587899_1685796847186083840_n.jp g?_nc_cat=111&_nc_oc=AQlYu5YxUFZwtg5VzXk0yvz8qe13bHXvFi7ERI5DqXG iF5RHiOVwA3dmW9fR7iultCw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f809afffb34e660269a92a0f8a20006d&oe=5DE74ED2

RAGHAVENDRA
8th August 2019, 07:20 AM
தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி சிவா.

RAGHAVENDRA
8th August 2019, 07:21 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67886683_2457966827587308_8678273530883735552_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQmzUqwJGLt2H2ivGGoUqb7A3hyOz29XBdchLQtpgho b3ngTN4A-C6DtY80J6iwN_oc&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=0e32af4656a38520a7b197a471fced8b&oe=5DDC52BF

vasudevan31355
8th August 2019, 01:16 PM
10000 முத்தான பதிவுகள் கண்ட எங்கள் ஆசான் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தலைவர் ஆசியுடன் நீடு வாழ்க. வணங்குகிறேன்.

sivaa
8th August 2019, 06:40 PM
10000 முத்தான பதிவுகள் கண்ட எங்கள் ஆசான் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தலைவர் ஆசியுடன் நீடு வாழ்க. வணங்குகிறேன்.


நீண்ட இடைவெளிக்குப்பின் தங்கள் வருகை மகிழ்ச்சி வாசு சார் .

தொடர்ந்து வாருங்கள் நன்றி.

sivaa
8th August 2019, 06:49 PM
’’ நடிகர், தயாரிப்பாளர் உறவுக்கு சிவாஜியும் முக்தா சீனிவாசனும் ஒரு உதாரணம்’’ - ‘நிறைகுடம்’ அனுபவங்கள்... முக்தா ரவி பேட்டிhttps://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/08/large/510606.jpg வி.ராம்ஜி

‘’சம்பளத்தில் எப்போதுமே கறாராக இருக்கமாட்டார் சிவாஜி. அதேசமயம், படம் வெளியாகி நன்றாக ஓடியதும் அவருக்கு கூடுதல் தொகை கொடுக்க சென்றார் அப்பா முக்தா சீனிவாசன். ‘நிறைகுடம்’ படத்துக்காக நடஃத இந்தச் சம்பவத்தை மறக்கவே முடியாது’’ என்று முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி தெரிவித்தார்.

முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் இயக்குநர் மகேந்திரனின் கதை எழுத, நடிகர் சோ திரைக்கதை, வசனம் எழுத, சிவாஜியும் வாணிஸ்ரீயும் நடித்து வெளியானது ‘நிறைகுடம்’ திரைப்படம். 8.8.1969ம் ஆண்டு ரிலீசான இந்தப்படம்... இன்றுடன் 50 ஆண்டுகளாகிறது. இந்தப் படத்துக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார்.

அவரின் பிரத்யேகப் பேட்டி இதோ...

‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ பாடல்) இருக்கிறதா?’ என்று விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். ‘நிறைகுடம்’ படத்தின் போதும் கேட்டார்கள். அதற்காகவே, ‘விளக்கே நீ கொண்ட ஒளியாலே...’ பாடல் உருவானது. ‘அருணோதயம்’ உள்ளிட்ட பல பாடல்களும் அப்படித்தான் உருவானது.

‘நிறைகுடம்’ படத்துக்கு சிவாஜி சாருக்கு குறைவான சம்பளமே தரப்பட்டது. முக்தா பிலிம்ஸ் கம்பெனியில் சிவாஜி சார் நடிக்கும் முதல் படம் இது. ‘நீ கொடுக்கறதைக் கொடு சீனு. படம் நல்லா வரணும். நல்லா சம்பாதிக்கணும்’ என்று சிவாஜி சார் ஒப்புக்கொண்டார். அப்பாவை (முக்தா சீனிவாசன்) சிவாஜி சாருக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

பட வேலைகள் ஆரம்பித்தன. ஜாலியாக ஆரம்பித்து, சீரியஸாகப் போகிற கதை. சிவாஜி சார், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். ‘ஆப்தமாலஜிஸ்ட்’ மாணவன். கண் மருத்துவப் படிப்பு. இடைவேளைக்குப் பிறகு, ஒரு காட்சியில், கண் நோய் பற்றியும் அதில் உள்ள பாகங்கள் பற்றியும் டயலாக். சோ எழுதி, அதை டாக்டர் ஜகதீசன் என்பவரிடம் கேட்டு, விளக்கமாக எழுதி வாங்கி, சிவாஜி சாரிடம் கொடுக்கப்பட்டது. முழுக்க இங்கிலீஷில் பேசுகிற வசனம். ‘அந்த ஜகதீசனை வரச் சொல்லுங்கப்பா’ என்றார் சிவாஜி சார். அவரும் வந்தார். ‘நான் பேசிக்காட்றேன். சரியா இருக்கானு சொல்லுங்க’ன்னு இங்கிலீஷ் டயலாக்கைப் பேசிக் காட்டினார் சிவாஜி சார். அந்த டாக்டர் மிரண்டுபோயிட்டார். ‘என்னை விட பிரமாதமா இங்கிலீஷ் பேசுறீங்க சார்’ என்று பாராட்டினார். அதன் பிறகுதான், நடிக்கவே ஒப்புக்கொண்டார். ‘தப்பாயிடக்கூடாது பாரு, அதான்’ என்றார் சிவாஜி சார். அதுதான் சிவாஜி சார்.
படம் வெளியானது. எல்லோருக்கும் பிடித்த படமாக அமைந்தது. பத்திரிகைகளும் பாராட்டின. ஐந்தாறு வாரங்கள் கழித்து, அப்பா முக்தா சீனிவாசன், சிவாஜி சார் வீட்டுக்குச் சென்று ஒரு கவரைக் கொடுத்தார். அந்தக் கவரில் ஒரு பேப்பர் இருந்தது. அதில், படத்துக்கான பட்ஜெட், செய்த செலவுகள், விற்ற தொகை, கிடைத்த லாபம் என முழுவிவரங்களும் அப்பா எழுதியிருந்தார். ‘பரவாயில்லியே சீனு. நல்ல லாபம்தான் கிடைச்சிருக்கு. எனக்கு சந்தோஷம்டா’ன்னு மனதாரப் பாராட்டினார் சிவாஜி சார்.

உடனே அப்பா, இன்னொரு கவரை எடுத்து நீட்டினார். ‘இது என்னது?’ என்றார் சிவாஜி சார். வாங்கிப் பார்த்தார். அதில் பணம். கட்டுக்கட்டாக பணம். ‘இன்னிய தேதிக்கு உங்க சம்பளம் இதானே. ஆனா நான் அது தரலியே. படம் நல்லாப் போகுது. அதனால மீதத் தொகையை தரேன்’ன்னு அப்பா சொன்னார். ஒருநிமிடம் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தார் சிவாஜி சார். அவரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘உன் நல்ல குணத்துக்குத்தான் இந்தப் படம் பண்ணினேன். இன்னமும் பண்ணுவேன். இதையும் லாபமா வைச்சுக்கோ சீனு’ என்று பணத்தை திருப்பிக் கொடுத்தார்.

ஆனால் அப்பா, பணத்தை வாங்கியே தீரவேண்டும் என்று சிவாஜி சாரிடம் உறுதியாக வலியுறுத்தினார். ’என்னடா சீனு. இப்படிப் பண்றே. சரி... வாங்கிக்கிறேன். கொடு. ஆனா ஒண்ணு. அடுத்தாப்ல நாம பண்ணப் போற படத்துக்கு, இதை அட்வான்ஸா வைச்சிக்கிறேண்டா’ என்று சொன்னார் சிவாஜி சார். அப்பா நெகிழ்ந்து போனார். சிவாஜி சாரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார்.

அந்தக் காலத்தில் ஒரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவு எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணத்தைச் சொல்லமுடியும்?’’

இவ்வாறு முக்தா சீனிவாசன் மகன் முக்தா ரவி தெரிவித்தார்.

நன்றி இந்து தமிழ்

நன்றி Vasudevan srirangarajan

sivaa
8th August 2019, 07:05 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67930171_215471816071030_9058192228920328192_n.png ?_nc_cat=108&_nc_oc=AQkpe0VpFAbY8NS3lahT2Sj5rZcwEIJe-YJQqRO2bi-zUM2Nb3FvNxYBTKDC2MxO9u8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=58e99a6859f2143194eb99fa1716bd38&oe=5DD1388C


Thanks H O S (V C G Thiruppathy)

sivaa
8th August 2019, 07:07 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67707307_641566466331161_6489947630116798464_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQmAMkYSCTbk3qrC-Vm8BcFmsnvYU3rJJAcbqEgQyZNV4kt7pRvfcBq9A2RNcclUlbA&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b815b6c1222360bd6e0ce0492ae09332&oe=5DDEA5F3



Thanks Rajaram Msr

sivaa
8th August 2019, 07:09 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67824074_441420453381108_5802978387194544128_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQkDW49Df_GHvFfKxfhvuPLsjSO6wRgvF8yE9NnKZ96 LTFws2qUzzb-wty2BZjvkI6k&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=e040cb665e8dc756ab4625853b0ecac6&oe=5DA022C4



Thanks Sekar .P

sivaa
8th August 2019, 07:11 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68624691_487776542037584_281385607031160832_n.jpg? _nc_cat=106&_nc_oc=AQnIO91JGdJm4Rg6ax0zoq5LRyVH5JOhIb75PpqATWs zFql4iShOhN8GgrscchD6jaI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=75d5ed4d92ba0b835a4af6821dfc64b5&oe=5DD16C20


Thanks nilaa

sivaa
8th August 2019, 07:12 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67776141_2323335757755628_2806744807060275200_n.jp g?_nc_cat=111&_nc_oc=AQkr3BPW6PxjihjcARN4tNh8fRhT3b-9dFKPoc1T7Dl-nK_5GiR8NBfLsEUvMH_Xsu0&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f948902919818cec51da70aeca4cba3d&oe=5DEBD59E



Thanks nilaa

sivaa
8th August 2019, 07:13 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67723108_2302256866554372_3002020318421188608_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQmAnO9CVMOO1E2FrOteR6nBc1D_P7dcdT3iLRu-1UI05HacyCeVmOfdMtSBU9s-WgM&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6c5e6e69090d3727d89a16583f3b8d45&oe=5DE720BE

Thanks nilaa

sivaa
8th August 2019, 10:46 PM
அப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படங்கள் மூன்றிலிருந்து நான்கு படங்கள் வரை ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் இன் ஒரு படம் ரிலீஸாகி ஓடியிருக்கும்,
நடிகர் திலகத்தின் நான்கு படங்களில் மூன்று படங்கள் நூறு நாட்கள் கொண்டாடியிருக்கும் அதே வேளையில் எம்ஜிஆர் இன் ஒரு படமும் நூறு நாட்கள் கொண்டாடி இருக்கும்,
அந்த ஒன்றை வைத்தே. மூன்று படங்களுக்கு இணையாக விளம்பரம் செய்து மக்களிடையே எங்களது வெற்றித்தான் மிகப்பெரிய வெற்றி என விதைத்து விடுவார்கள்,
இப்போது இந்த டிஜிட்டல் க...ாலத்தில் அந்த நடைமுறை தலைகீழாக மாறி இருக்கிறது,
வசந்த மாளிகை டிஜிட்டலில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் போது 30 க்கும் மேற்பட்ட புதிய படங்கள் ரிலீஸாகி வந்து போனது போலவே எம்ஜிஆர் இன் 8 திரைப்படங்கள் பல்வேறு தியேட்டர்களில் ஓட்டி முடித்து இருக்கிறார்கள், உச்சக்கட்டமாக சென்னை அகஸ்தியாவில் மட்டுமே நான்கு எம்ஜிஆர் திரைப்படங்கள் போடுவதும் எடுப்பதுமாக நடந்தேறி இருக்கிறது,
போட்டோ இமேஜை பதிவிட்டால் பல நண்பர்கள் கோபப்படுவார்கள் என்பதால் தவிர்த்து விட்டேன்

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/67740597_2373326606117549_4703236738150039552_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQm8D-ebQIf8jS78xg1AGd_N8vCedQVo73RzL6pnkngqKzDGcBniKhEF q9ZbO8UpU4g&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=ea1c7219fa3e11237a31e413b054a9d1&oe=5DE366A0

Thanks Sekar (facebook)

sivaa
8th August 2019, 10:51 PM
சமீபத்தில்
எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்...
எந்த ஒரு கதாநாயகனும் ஏற்றுக்கொள்ள
தயங்கும் வேடம்... படத்தின் வேடம் சரி, நடிகர்திலகத்தின் நடிப்பிற்கு சரியான தீனி...
... ஆனால்,
இறுதிக் காட்சியில், ஜெயலலிதா நடிப்பில் பின்னிக் கொண்டிருப்பார், நடிகர்திலகமோ அதைப் பாரத்துக் கொண்டிருப்பார், பிறகு, முத்துராமன் அவருக்கும் கிளைமாக்ஸில் நடிக்கும் வாய்ப்பு,,,
இதை எந்த கதாநாயக நடிகராவது ஒத்துக் கொள்வார்களா?.. மாட்டவே மாட்டார்கள்...
அனைத்திற்கும் சம்மதித்து படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்....
படத்தின் இறுதிக்காட்சியில் ஜெயலலிதா, பாலாஜி, முத்துராமன், நாகேஷ் என அனைத்து கதாபாத்திரங்களும் வசனம் பேசிக் கொண்டிருக்க,
நடிகர்திலகம் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும் ஸ்டைல் இருக்கிறதே...
அப்பப்பா
அனைவரது நடிப்பும் துாள் துாளாகிவிடும்....
அதுதான் சிவாஜி.
இதோ அந்த ஸ்டைலான ஸ்டில் உங்களுக்காக....



https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68408680_2353073848308276_664681717025472512_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQlarh_H0MdT46mTwZBHDAdVdkyAYqsb1dORpB8w23U VG0ShiRFBSy3VHoDzh27A55Q&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=94bbbc98a8527b11ac380de7e0ab70bd&oe=5DE41DEE


Thanks Sundar Rajan

sivaa
8th August 2019, 10:55 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67683737_494164684460109_2625219727986786304_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQljq8lYzr1Pgw8iNdXmrJx5i_n2qtMmoiaCWgBIG-4Bnw9LmW3pHDA3YpBfhuL4Av4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=fc8decfe233f7f8588c1211941d777ea&oe=5DD6FB61

RAGHAVENDRA
9th August 2019, 05:55 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68531865_2459564584094199_8682141608495284224_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQnX6mpE8XLGdtep-3xA77Yl-QqaHwaPWa7ImtFCJ8HgTGmw7mGebIBO5ewzXINH0TI&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=1b152cd415ce3fdfef9f68ef28ef7103&oe=5DD39647

RAGHAVENDRA
9th August 2019, 05:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67794244_2459566380760686_4853916783737831424_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQlQnrg8R-MnYIBYwjN5stJzxOnObgfFSIR1_sqyY8gInHRf_337SBdqaVg9 7iQKjgQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=18d5b84a4f8c5e0294d6b5db61f46b2c&oe=5DDEB986

RAGHAVENDRA
9th August 2019, 06:04 AM
10000 முத்தான பதிவுகள் கண்ட எங்கள் ஆசான் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தலைவர் ஆசியுடன் நீடு வாழ்க. வணங்குகிறேன்.

உளமார்ந்த நன்றி வாசு சார்.
தங்கள் பங்களிப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், தாங்கள் மட்டுமல்ல நம் நண்பர்கள் அனைவரின் பங்களிப்பும் கூட.

sivaa
9th August 2019, 10:19 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68417707_2332006893795387_2320215966945902592_n.jp g?_nc_cat=103&_nc_oc=AQn5JEt9pnMriDSjYWhlt3p7WpFzu-SeIkev3kSzsmV8UymNfDAYCX5p31O8x2qq6Ww&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=2e901c99b5f7059a19a40b8b81c7e230&oe=5DD40028

Thanks nilaa

sivaa
9th August 2019, 10:20 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/s2048x2048/68339989_335780400697272_4010065132955631616_n.png ?_nc_cat=103&_nc_oc=AQlSWS8DKgCtQBalktDa8LyAnojJDcxbVa5RW-etYpKGWaBfJ5NAVWFhTU29W_vA7j4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=55851442d09b6d704fd91bfb14ccf322&oe=5DCB93BE


Thanks nilaa

sivaa
9th August 2019, 10:23 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67935219_417255392468949_882033794079522816_n.jpg? _nc_cat=111&_nc_oc=AQmT5tUU7FvrRl1gm9bqf8lec7fDfuF0Va6tmurA7wW-ORN2uypWQfx96XzVmHS0Eu0&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f870904076bdb743be38a0614f9a06c1&oe=5DA0CAA6


Thanks H O S ( V C G Thiruppathy -Face book)

sivaa
9th August 2019, 10:24 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67967857_1116600131872852_7932867804745695232_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQnxDpuqF01lo2hTiqYaU09RVJxLnIILb6FCX0g21rF ekbBxG5Nhm_Ysgs7UJI619Qo&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=8421a5bbdfde9cb1ac5b6823c9d67e97&oe=5DDE85F0



Thanks Nilaa

sivaa
9th August 2019, 10:25 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68282189_1069060670149850_4083557727106760704_n.jp g?_nc_cat=109&_nc_oc=AQngTF79k4_Fi3JuIHmMqDMuLRhqoRqdD8D9wlHCF2s SHT6nAjC12nP8iJBuOPN6D-A&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=c84b36439e62877e836382f1e28a440d&oe=5DCCAFF6


Thanks Soma Sundaram (Facebook)

sivaa
9th August 2019, 02:23 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67770785_349994265937274_233467829435760640_n.jpg? _nc_cat=100&_nc_oc=AQmENMT9ML_E0LdwxNyhh7va-B4LyKmP3tXi9EqYRYtzuHsJgRh5JmknI6YBZBpfb9E&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=2e87a97662b4f056fca22027423aff5b&oe=5DE58C53


Thanks Nilaa

sivaa
9th August 2019, 02:25 PM
நகரெங்கும் பளிச்சிடும்
நடிகர்திலகத்தின் வெற்றிப் பதிவேடுகள்...

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68774634_368646350497130_104459767916789760_n.jpg? _nc_cat=110&_nc_oc=AQnRqJF-nqhcn5PTnp9MiD0GB1-5pNMZYI1BrnPlgPo2TGL2Rhu3LetlTKAXsftdVDI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=03302e30e41bd342315cac7b343d2502&oe=5DCCD2E8

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68256889_451056452410727_261690798272151552_n.jpg? _nc_cat=111&_nc_oc=AQkvrjIz4dy6lKlyfmkRSEUIGjHH-PJPjHnGzgPHMTd4Di3bn9882jxz_TMbD_6fadY&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=01a09c30845e00e2cf17238c9caf7ce3&oe=5DD86AB6




Thanks nilaa

okiiiqugiqkov
9th August 2019, 03:18 PM
நீங்கள் எப்படி வேண்டமானலும் கொண்டாடிவிட்டு போங்கள். அதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. உங்கள் சந்தோசத்தை கெடுக்க மாட்டோம். ஆனால் மக்கள் திலகத்தைப் பத்தி தப்பாக உங்கள் திரியில் பொய் செய்திகள் போடுவதால் உங்கள் பொய் செய்தியை தோல் உரிக்க வேண்டி இருக்கின்றது.

நேத்து கூட வசந்த மாளிகை சென்ன பேபி ஆல்பர்ட் தியேட்டரில் ஹவுஸ்புல் என்று போட்டிருக்கின்றீர்கள்.

ஆனால், ஆல்பர்ட் தியேட்டரிலும் சரி. பேபி ஆல்பர்ட் தியேட்டர்லயும் சரி. ஜூன் மாதம் 21-ம் தேிதி படம் வந்ததில் இருந்து இதுவரைக்கும் ஒரு காட்சி கூட புல் ஆக வில்லை.

இன்றுக்கும் மத்தியானம் 1.45 மணி நிலவரப்படி வசந்த மாளிகை 6.30 மணி காட்சி (ஓடுவது ஒரு காட்சிதான்) புல் ஆகவில்லை. பெரும்பாலான சீட் காலி

அதற்கான ஸ்கீரின் சாட்

http://i65.tinypic.com/osqtco.jpg

யாருக்காக... இது யாருக்காக... இப்பிடி பணம் கொடுத்து ஓட்டுகிறீர்கள்.

http://i65.tinypic.com/osqtco.jpg

okiiiqugiqkov
9th August 2019, 03:19 PM
http://i65.tinypic.com/osqtco.jpg

okiiiqugiqkov
9th August 2019, 03:20 PM
http://tinypic.com/view.php?pic=osqtco&s=9#.XU0-6vIzbIU (https://cloudmax.info/view.php?pic=osqtco&s=9&__cpo=aHR0cDovL3RpbnlwaWMuY29t#.XU0-6vIzbIU)

okiiiqugiqkov
9th August 2019, 03:25 PM
இன்று மாலை காட்சி பேபி ஆல்பட் தியட்டர் வசந்தமாளிகை டிக்கெட் புக்கிங் 9-8-2019 (வெள்ளிகிளமை_)

ஸ்கீரீன் சாட்

http://i65.tinypic.com/osqtco.jpg

okiiiqugiqkov
9th August 2019, 03:29 PM
நேற்று நியூஸ் 7 சேனலில் ஒளி பரப்பான மறைந்த நகைச்சுவை நடிகர் கே.பி.சந்திரபாபு அவர்களை பற்றிய செய்தி தொகுப்பில் பல நடந்த உண்மைகளை நேரிடையாக எடுத்துச் சொன்னார்கள்,
எம்ஜிஆர் ஐ வைத்து "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் தயாரித்தப் போது 3000 அடிகள் வரை வளர்ந்த பின் எம்ஜிஆர் பணப்பிரட்சனை செய்ததால் தனது கிரீன்வேஸ் சாலை பங்களாவை அடமானம் வைத்து பணம் கொடுத்தும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற எம்ஜிஆர் ஒத்துழைப்பு கிடைக்காததால் கோபமடைந்த சந்திரபாபு. அதுவரை முடித்து வைத்து இருந்த பிளிம் ரோ...லையும் தீயிட்டு கொளுத்தி மீள முடியாத கடன் சுமையால் சிக்கி போதைக்கு அடிமையாகி விட்டார் என குறிப்பிட்டதோடு,..
கடைசி காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி உதவியதையும் ராஜா,நீதி என பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும்
கே.பி.சந்திரபாபு அவர்கள் இறந்த போது நடிகர் திலகம் வெளி ஊரில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இருந்ததாகவும் உடனடியாக அந்த விழாவை ரத்து செய்து விட்டு சென்னை வந்து சந்திரபாபு அவர்களது உடலை நடிகர் சங்கம் கட்டிடத்தில் வைத்து பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வழி வகுத்து பெருமை படுத்தி தி.நகரிலிருந்து ஜெமினி பாலம் வழியாக சாந்தோம் சர்ச் வரையிலான இறுதி யாத்திரையை உடனிருந்தே நடத்தினார் என்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டார்கள்,
இனி வரும் காலங்களில் ஊடகங்கள் உண்மை செய்திகளை கொடுப்பார்கள் என நம்பலாம்,
இதற்கு முன் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் நடிகர் திலகம் தேர்தலில் தோற்றதற்கு பின்னால் இருந்த உண்மைகளை டிவி நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லி இருந்தார் அதாவது "நடிகர் திலகம் அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் க்கு கொடுத்து இருந்த வாக்குறுதியால் அதைக் காப்பற்ற வேண்டி தெரிந்தே தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார்" என புரியும் படி எடுத்துச் சொல்லி இருந்தார்,
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் அதை நினைவு படுத்தும் போது " இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிறது முன்னரெல்லாம் " நாம் அதை குறிப்பிட்டு பேசும்போது எல்லாம் அரசியல்வாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்து விடும் அதனால் எதையும் எடுத்துச் சொல்லுவதை பல வருடங்களுக்கு மேலாக விட்டு விட்டேன்,
ஆனால் தற்போது எந்த எதிர்ப்பும் வரவில்லை
உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன் இனி நாம் தொடரலாம்,
இவ்வாறு கூறி இருந்தார்,
புகைப்பட இணைப்பு :- மதுரையில் நடைபெற்ற வசந்த மாளிகையின் 50 வது நாள் வெற்றி விழா ஊர்வலத்தில்,


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/67691736_2367583483358528_8052437138760794112_o.jp g?_nc_cat=104&_nc_oc=AQkr0HWZyXwTZRUwtYY2ZuKIj7II-Gkbd9o5p8wNNyNsla9MPsEdWGEL07ge-L2nI54&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=17bb3d1b761258353ecedd011f17b3f2&oe=5DDC4085

Thanks Sekar


..........................
சந்திர பாபுவின் இறுதிச்சடங்கு செலவை நம் ஐயாவே ஏற்றுக் கொண்டார் ..

................

http://i67.tinypic.com/2qk81vq.jpg

sivaa
10th August 2019, 07:14 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67706788_478900536228296_6590535983232450560_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQkQ2DOje3FsMdHnGEj4AJ2W8X611oxEM6n8pZBVLcT NEqACoedoSBwzuGGBNsntx2g&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=ce76615ef18a19846ca834fdd1e775ef&oe=5DD1EFF9



Thanks H O S

sivaa
10th August 2019, 07:14 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68721647_1488892204584175_8971840906411900928_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQnsj9ML9VEPvddJ_ArPTMxCmxggY0_tDN5FIsJ0ChT wbUz5KKHZL3THs4s7QqRi9vc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=2c1514954d7da2a63ccd0de18e4ad0b9&oe=5DE01B95



Thanks H O S

sivaa
10th August 2019, 07:15 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68353415_1595515067245480_8974420704288047104_n.jp g?_nc_cat=111&_nc_oc=AQlWSLgBt3eRABWZA6HF5yqWKYxgFSttvRIav55tnTY q3Jk1tkzz3K1TUjfRIAv_I6o&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6615d7e46bcaeb22a7b4dcbe0aeeebeb&oe=5DD908E8



Thanks H O S

sivaa
10th August 2019, 07:16 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68672046_2627868540566037_6319644102291881984_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQkt_fApcskVSet1InYkxmoOBfyPRApxnD5gl6yFHEL yfeZJ8F5q_zWjxBHyh37bgIc&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=cd63f7a7824ba33f6433d2e7ec69e326&oe=5DE13E91



THanks H O S

sivaa
10th August 2019, 07:16 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67943807_455546554998267_4675170694533742592_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQkHl9B4I78k62E5ThQo5Sixk-6TvIUZocQYvs22t5KzrpSjGljvLqI_3DZkGOl7r54&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=b8cc8f4231d6496f31a9dd176df0a337&oe=5DE84E26



THanks H O S

sivaa
10th August 2019, 07:27 AM
திரைக்கலைஞர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்
- நடிகை வாணிஸ்ரீ
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நான் முதன் முதலில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 14 வயது. சிவாஜி சாரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தேன். நேரில் பார்த்தது இல்லை. படப்பிடிப்பின்போது ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது சிவாஜி சாரை பார்த்து விடலாம் என்று நினைத்தேன். கடைசி வரை அவர் வரவில்லை.
பின்னர் கொடைக்கானல் படகு இல்லத்தில் ‘வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது சந்தித்தேன். அப்போது மேக மூட்டமாக இருந்தது. வெயில் வரவில்லை. திடீரென்று டைரக்டர் பஞ்சு சார் ‘ரெடி’, ‘ரெடி’ என்று கூறினார். நான் ரெடியாக தாமதம் ஆகி விட்டது. உடனே பஞ்சு சார், வாணிஸ்ரீ உனக்கு அறிவு இருக்கா? இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வருவ? என்று கூறி திட்டினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு நடித்தேன். டைரக்டர் திட்டியதால் அழுது கொண்டே இருந்தேன். அப்போது சிவாஜி சார் என்னிடம் வந்து நீ வாணிஸ்ரீதானே! இப்போ அழுதே இல்ல... இன்னும் கொஞ்ச காலத்தில் பெரிய ‘ஸ்டார்’ ஆயிடுவே. இதே டைரக்டர் பஞ்சு உன்னிடம் வந்து கால்ஷீட் கேட்பார் என்று கூறினார். அப்போது நான் 2 படங்களில் மட்டும் நடித்து இருந்தேன். அவர் எப்படி அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் இமயம் மாதிரி. சிலர் சொன்னால் அது நடக்கும் என்பார்கள். இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்த பின்னர் கர்நாடகா மாநிலத்தில் இளைய தலைமுறை படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெலுங்குபடங்களில் நான் பிரபலமாகி ஐதராபாத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து விமானத்தில் பெங்களூரு சென்று காரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று சிவாஜி சாரைப் பார்த்தேன். அப்போது டைரக்டர் பஞ்சு சார் என்னிடம் வந்து என்னம்மா வாணி எப்படி இருக்கே? கஷ்டப்பட்டு வந்து இருக்கே? டேக் எடுக்கலாமா? என்று கேட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி சார் என்னிடம் வந்தார்.
வாணி, அன்று கொடைக்கானல் படகு இல்லத்தில் நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா? அதே மாதிரி நடந்ததா? இல்லையா? அன்று உன்னைப் பார்த்தும் அப்படி சொல்லனும்ன்னு தோணிச்சு என்றார். நீ வருடத்தில் என்னுடன் 2தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு மனிதனாக இவ்வளவு சாதித்து விட்டோம் என்னைப் போல ஒரு நடிகர் கிடையாது என்ற கர்வம் சிவாஜி சாரிடம் கிடையாது. குழந்தை மாதிரி பேசுவார். வெளிப்புறப்படப்பிடிப்பில்அவரது மனைவி கமலாவிடம், கமலா வாணிக்கு மீன் குழம்பு கொடு. பலகாரம் கொடு என்று சொல்லுவார்.
அவருக்கு தான் ஒரு பெரிய நடிகர் என்ற அகந்தை கிடையாது. அவருக்கு தெரிந்த உலகம் சினிமா. தெரிந்தது நடிப்பு. பராசக்தியில் இருந்து பல்வேறு படங்கள் பற்றி தான் அதிகமாக பேசுவார். வசந்தமாளிகை படத்தை முதலில் தெலுங்கில் பிரேம நகர் என்ற பெயரில் எடுத்தார்கள். தெலுங்கு, தமிழ் மொழியில் நான் நடித்தேன்.படம் வெளியானபிறகு நான் நகைக்கடை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் காம்பளக்ஸ் என்று எங்கு சென்றாலும் வசந்தமாளிகை பற்றி தான் பேசுவார்கள்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மகான்களுடன் நடித்ததால்தான் மக்கள் இவ்வளவு நாள் என்னை நினைவு வைத்துள்ளனர். அப்போதே அவர்கள் பெரிய தூண்கள். வசந்தமாளிகையில் நடித்த போது எனக்கு 19 வயதுதான். பெரியவர்களை பார்த்துதான் நடிக்க கற்றுக் கொண்டேன். அவர்கள் கூட இருப்பதே நமக்கு பெரிய பலமாக இருக்கும். வசந்தமாளிகை படப்பிடிப்பின் போது ஊட்டியில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து மேக்-அப் போட்டு 5 மணிக்கு ஷூட்டிங் சென்று விடுவோம். இலங்கையில் வசந்த மாளிகை 52 வாரங்கள் ஓடியது. இலங்கை மக்கள் நானும், சிவாஜியும் இலங்கை வரவேண்டும் என்று விருப்பப்பட்டனர். இலங்கை பிரதமர் பண்டார நாயகா நாங்கள் இலங்கை வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது, சிவாஜி சார் ஒரு கையால் என் கையை பற்றிக் கொண்டும் ஒரு கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு நடப்பதைப் போலவும் பண்டார நாயகா இரு கைகளையும் விரித்து காட்டி இலங்கைக்கு வரக்கூடாது என்றுஎங்களை தடுப்பது போலவும் தினத்தந்தியில் முதல் பக்கம் கார்ட்டூன் வெளியானது. இலங்கை சென்ற போது மக்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, ‘என்ன படங்க அது, காதலை இவ்வளவு புனிதமாக சொல்லி இருக்கீங்க... என்று கூறி பரவசப்பட்டனர். புதுமையான கதை அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அதை படமாக்கிய விதம் தான் வசந்தமாளிகை வெற்றிக்கு காரணம்.
எல்லாவற்றுக்கும் ஒரு அகராதி உள்ளது. என்ஜினீயரிங் படிக்க விரும்பினால் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. டாக்டர் படிப்பு படிக்க மருத்துவ கல்லூரி உள்ளது. சினிமான்னு வரும்போது எந்த கல்லூரியோ, புத்தகமோ இல்லை. நமக்கு முன் நடித்தவர்களைதான் நாம் பின்பற்றி நடிக்கிறோம். எனக்கு தெரிந்த வரை சிவாஜி படத்தை பார்த்தால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எந்த கதையில் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள். அதற்குதான் கடவுள் சிவாஜியை படைத்தார் என்று நினைக்கிறேன். அவர் படங்களை 10 நாள் பார்த்தால் பெரிய நடிகர் ஆகி விடுவார். திரைக்கலைஞர்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
வசந்தமாளிகை படம் வெளி வந்து பல இடங்களில் 25 வாரம் வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி சாருடன் நானும் நிறைய ஊர்களுக்கு சென்றேன். பொள்ளாச்சியில் உள்ள அவரது நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வந்தால் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள். அப்போது சிவாஜி, ஏய் வாணி உனக்கு ஒரு கூட்டமே வருது பார் என்பார். பரவாயில்லை அனுப்புங்க என்பேன். வசந்தமாளிகைக்கு பின்னர் வாணிஸ்ரீயை பார்க்கனும் என்கிறார்கள். என்னைப் பற்றிய யாரும் கேட்க மாட்டேங்கறாங்க.. அந்தப் பெண்ணைத்தான் பாக்கனும் என்கிறார்கள். என்ன இது? என்று கிண்டலாக கூறி சிரிப்பார்.
சில கதாபாத்திரங்களில் சிவாஜி சார் மாதிரி யாரும் நடிக்க முயாது. தத்ரூபமாக நடித்து கதாபாத்திரமாகவே மாறி விடுவார். வசந்தமாளிகை படத்தை பார்க்கும்போதே இதயத்தை வருடுவதை போல் இருக்கும். அந்த படத்தை பார்த்தால் அழுது விடுவேன். யாருக்காக பாடல்காட்சியில் ‘எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று,’ பாடுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று’ வரிகள் வரும்போதே அழுகையும் சேர்ந்து வந்து விடும். எப்போது டி.வி.யில் அந்த படத்தை பார்த்தாலும் முதலில் கண் கலங்கும். அவர் நடிப்பு பற்றி அவரிடம் பாராட்ட முடியாது. இமயமலை கிட்டபோய் நீ இமயமலை, நீ உயரமா இருக்கே, நீ ரொம்ப குளிரா இருக்கே என்று கூற முடியுமா? அவர் நடிப்பு திறமை பற்றி அவரிடம் பாராட்ட முடியாது நல்லாயிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றுதான் கூற முடியும்.
அதன் பிறகு நாங்கள் சந்தித்த போது வசந்தமாளிகையை ராஜேஷ் கண்ணாவும், ஹேமமாலினியும் நம்ம மாதிரி பண்ணவில்லை. நம் படம் தமிழ் படம் தான் சூப்பர்! ‘என்னமா பண்ணினோம், நாம் இரண்டு பேரும்’ என்பார். பண்ணியதே அவர்தான். அவர் எளிமையானவர். தன்னை பற்றி பெரிதாக பேச மாட்டார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர் இறக்கவில்லை எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகர் அவர் மீது இருக்கும் மரியாதை நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டில் நான் எங்கே ஷாப்பிங் போனாலும் வசந்தமாளிகை கூந்தல் அலங்காரம் பற்றிதான் பேசுகிறார்கள். ஊட்டியில் என் மகளுடன் ஷாப்பிங் சென்ற போது ஊர் மக்களே திரண்டு வந்தனர். கல்யாணமாகி 30 வயதில் குழந்தை இருக்கும்போது மக்கள் வசந்தமாளிகையில் என் நடிப்பை பாராட்டிய போது அவர்கள் மனதில் எப்படி பதிவு ஆகி இருக்கிறதென்று நினைத்து வியந்து போவேன்.. பெரிய மகான்கள்கூட நடித்ததால்தான் என் பெயரும் புகழும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சிவாஜி சாருடன் உயர்ந்த மனிதன், குலமா குணமா, இளையதலைமுறை, ரோஜாவின் ராஜா, நல்லதோர் குடும்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். சிவாஜி சார் எத்தனையோ பேருக்கு நடிக்க வழி காட்டி இருக்கிறார். அவர் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். சிவாஜியின் புகழை யாராலும் குறைக்க முடியாது. அது கூடுமே தவிர குறையாது.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒவ்வொரு வருடமும், எல்லா நடிகர்களும் சேர்ந்து அவரது பிறந்தநாளில் மாலைபோட்டு சால்வை அணிவித்து அவரை பற்றி பேசி இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பார். கடலில் விழுந்த கல் போல எங்கெங்கோ போய்விட்டோம். எந்த ஆழத்துக்கு போனாலும் சூரியன் தெரிந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி சினிமா கடலாக இருந்தாலும் மேலே பார்த்தால் சூரியன் தெரியும். அந்த மாதிரி சிவாஜியை மறைக்கிற மேகம் இன்னும் பிறக்கவில்லை கடவுள் தனக்கு கொடுத்த கடமையை சிறப்பாக செய்து இருக்கிறார். சிவாஜி சார் ஒரு சகாப்தம், இன்றைய பெரிய ஹீரோக்கள் யாரும் அவர் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. அவர் கூட நான் நடித்தேன் என்பதே பெருமையாக இருக்கிறது.
'தினத்தந்தி'


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68949193_921206984906746_5592290609030234112_n.jpg ?_nc_cat=106&_nc_oc=AQnnvGOpKYu8LXwjDeJhqL34Glr2jcgeVKwsVkOU9kb SSxjrn40rASihyvF8Pb1AYb8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=68efaeea2f8611eb5f17e671dead7e52&oe=5DA0A44C



Thanks Natarajen Pachaiappan

sivaa
10th August 2019, 07:34 AM
NO means NO" அன்றே சொன்ன சிவாஜி...தற்பொழுது திரு.அஜித்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் #நேர்கொண்டபார்வை (https://www.facebook.com/hashtag/நேர்கொண்டபார்வை?source=feed_text&epa=HASHTAG) திரைப்படத்தின் முக்கிய கருத்தினை 1972 வெளியாகி தற்பொழுதும் டிஜிட்டல் வடிவில் 50 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் #வசந்தமாளிகை (https://www.facebook.com/hashtag/வசந்தமாளிகை?source=feed_text&epa=HASHTAG) திரைப்படத்தில் நடிகர் திலகம் #சிவாஜிகணேசன் (https://www.facebook.com/hashtag/சிவாஜிகணேசன்?source=feed_text&epa=HASHTAG) அவர்கள் தனது பாணியில் கூறியிருப்பார்.

Thanks Remix Gold

RAGHAVENDRA
10th August 2019, 07:35 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67818130_2461376640579660_9182058583225794560_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQnywUai3AIwNVZjjodpd77KjtClGLqueXaNGHIyVQ7 A49q53vHt29BFeE5pOnu0HYY&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e1ea4c3d9fc9356d9f049331a86d5258&oe=5DC9F1A8

sivaa
10th August 2019, 07:41 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68561533_622847251456806_6951707157611937792_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQm_2bCS38UDlj3hb7MWH87OgL6yL9x6Cyvg_VqrTXJ 4dK28liSOwprfKXXuk3CsDhc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=dbec86c47b893eff2bb3ff789d565182&oe=5DD99321



Thanks Facebook friends

sivaa
10th August 2019, 07:43 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67751810_359521541408684_5184887143956217856_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQl7S4-ou-uAlO2YNyUdxOuWBRHR7CoR45CP8NgJexFRtVoLM4iRGcfBljeO tmiQGl0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=ec47810c76a5a26dd60419b2d6a13d0b&oe=5DD37E71



Thanks H O S

sivaa
10th August 2019, 07:44 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68726829_357161198544816_2469023677375578112_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQmWfPPmliCNbkh-lN9b85zJWGzZaf-sXYd8uGEj6J_OgY0BRb4iauNW7wbjWeJMTZI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=8cb49baa33578625c4df1f0551b9c8a6&oe=5DD6BECB



Thanks nilaa

RAGHAVENDRA
10th August 2019, 07:53 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68801562_2461399243910733_213650734367899648_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQkwSxY-lWqCdmP__xmrS8nIdjZXTxazoe3SebHqGPioTMJAwvEjTZZjCR _9hEEkR-0&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=2e03da7d605d5a079a69bb6826b10480&oe=5DDC2A59

sivaa
10th August 2019, 07:55 AM
வசந்த மாளிகையின மாபெரும் வெற்றி சிலரது தூக்கத்தை கலைத்துவிட்டது
விரிவாக தொடரும்......

sivaa
10th August 2019, 06:43 PM
ஓர் உற்சாக ஊற்று...!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67822363_959404907741712_4892866356086571008_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQl4LZzN7B6Uct8gU-XH9d2tgEHYsseIHe3ArZNX3JW0wI9OcSsbQs6RMbbj-iH4Toc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=1f86479e616b1857d2ce8a85d820c129&oe=5DDFC48F


Thanks nilaa

sivaa
10th August 2019, 06:44 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67755748_2201543303283803_6535645515210555392_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQnyt0EeFc-xGibGMdC4-eoq7F7GzlwiNtsATiQfCgfb5sQk4vWQHgfh-Fd61WoexeM&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=a1eb836abbc9f9d6776db46c1a78ab85&oe=5DA0F236



Thanks frie..

sivaa
10th August 2019, 06:44 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68295349_2143137332658048_3774799632073228288_n.jp g?_nc_cat=111&_nc_oc=AQmBaKD-uRVKFqLnre2JKaI2VywavAQ8JMiFZ4ihKcxFoN4aXLq3XYW2qg dhIlxx8kM&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7586a459a974ef9915f778b5bbc41a01&oe=5DE8DE90



Thanks nilaa

sivaa
10th August 2019, 06:45 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68941361_639466306575590_9130956594186551296_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQmbwsRCLUWWtD2XiwNuz-jx--HpvFUBEQx0kVkaoi1Rs8QSyDtQ2wcQj_s_IA165I0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=32998cf8a040e65a6af281b07698ceff&oe=5DA05414



Thanks nilaa

sivaa
10th August 2019, 10:14 PM
அழகாபுரி ஜமீன்தாரின் இமாலய வெற்றி விழாவிற்கு அனைத்து திலக ரசிகர்களும் வாரீர்.

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67966826_2365143747061698_7608900629221605376_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQn7Rg93RdglrHrUAjkVqX1i4GWjkleHM9OKN_rkD7D WQPZzX0U0JsKTt7YJXJTwLas&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=23f0b95a418600936bc0536a7f8af0bb&oe=5DD1C32E


Thanks Vasudevan Sri (facebook)

RAGHAVENDRA
11th August 2019, 07:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68505803_2463102717073719_1224879189115535360_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQlCUCKECF_89bSXqtFDytt57MWnRCO-TZl_ttpK3IJB42ofGJ8HsGoRw2tByVQs55Q&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=24f5cdfc669ebfa6dd142e1b6866c63d&oe=5DD54B15

sivaa
11th August 2019, 09:54 AM
களை கட்டும் சென்னை ஆல்பட் தியேட்டர்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67982638_373981113177122_7885317354228285440_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQnmzMyitvHxew61JwmBfF3T1PugGR0B44Z980tGOkj dC3npMCEOF_6hqCshP0PIcpU&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=c8b6708bdb243bff9e7cebcbe0d8e8c9&oe=5DDBD6F5https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67778907_701346990305430_5000780669278748672_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQm9mjb4smZZE2rWMl0NBmznytq6g3_zEmDwMZUAwsV Qg9M4lwQ9a2kWcJpFNclfSYE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=150467a1267ec10d5a0bc91afb523827&oe=5DE7CCD0https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68792213_491344924745344_6369453288995160064_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQkgQOJe_9g7EGMMLCbUArVFwXwCZ5vGP_JWNn1CQXw 8j_BQXL0ipJhSVPPJ3R5JGfc&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=0529d8886dbadf70859509525ad1cc21&oe=5DD9494Ehttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67777928_878993912500410_6712739970446000128_n.jpg ?_nc_cat=106&_nc_oc=AQl9enbuyhVqHJkjJKgUMVO1onC_6wVs2ItS22FFR0-LLGAS9EYLvfcPP9HndPjWlec&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=7451e7656299027cfda2fdd464d01834&oe=5DCA4186





Thanks Vasudevan Sri

sivaa
11th August 2019, 09:55 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69317232_2353263968052462_5118347461907185664_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQmzedJ4iKz2aWmxPNi6u-rt-6lieDtfBT69dpbxrsb-I3j6I-xFox4zmISzYnQ4HT4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f7b497e70823183479203a2f928d2de0&oe=5DE87B81


Thanks nilaa

sivaa
11th August 2019, 09:55 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68355174_364879287744907_3895249485923614720_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQlCn_bgmgrDVTwSpejqWB2srpYE0e1Nu2frMu1Bpo2 RJaJHfzyQpydLWSjCyzguSdY&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=cbf9c7b1e126e81687eede97b144cbe8&oe=5DE09919


Thanks nilaa

sivaa
11th August 2019, 09:57 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67797854_354176748853671_7706344520815738880_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQnH4vM8HEf__630lSW3-BjRYU28IS0W4g8tkpfCK95se1riGnuhxZYtQKJcK0-J-5s&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=996a596555418dd417463edfb68d9e31&oe=5DD065F9



Thanks nilaa

sivaa
11th August 2019, 09:58 AM
பொக்கிஷம்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67572409_367251717298077_3969125590589505536_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlJuxkZtc4S3jZxxUsbkN6U2-wQl4-FrlZMyl5Cfnv7r71ZrTw-W91ptiTRVIVHZPk&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f3e6bbf9ba078e0994c37558d02b7b9d&oe=5DE011D8https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68753061_2077203902576143_4779087415375560704_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQnGrK_fItZV9N3mLMmBaCKANB0BWuXuHWts8Kg9DZS eVGvqGuGtNoNBXF33yJKE-rc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=209cca18430f2f46ed4784cee568e77e&oe=5DDBFF6E




நன்றி நிலா

sivaa
11th August 2019, 10:00 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67964425_2380954335519624_8482878396093693952_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQn-5iqiavkvCOAQJbVCG79TU28wQXFj9JeoBnUGQEKnMw_YhNv7wY YmYKYS-4ecAPU&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=a1fbd2a680321636dfcdeb906a7acdce&oe=5DC8B69A




நன்றி செந்தில்வேல் சிவராஜ்

sivaa
11th August 2019, 10:07 AM
ஆவணப் பொக்கிஷங்கள்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68611942_2974528749255213_6035516266016407552_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQn0a3NPy8ll0DlepYupHz1ez6NlDRdUAI9OmewXKFB OQ0MO3tTM23r0le7a2qHJ44s&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=07966bda5b0e2390333fe0f9b22438f0&oe=5DE6122C


Thanks Vasu devan (nadigar thilgaththin nandavana pookkal -one and only sivaji)

sivaa
11th August 2019, 10:15 AM
#வசந்தமாளிகை (https://www.facebook.com/hashtag/வசந்தமாளிகை?source=feed_text&epa=HASHTAG)
#ஐம்பத்துஇரண்டாம்நாள் (https://www.facebook.com/hashtag/ஐம்பத்துஇரண்டாம்நாள்?source=feed_text&epa=HASHTAG)


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68709187_371290543511281_4738555267837329408_n.jpg ?_nc_cat=106&_nc_oc=AQnAOnpf_Y-aCgieJ9uZsxi8uHjDFE9gsxxHzGTlrVjFsBkUOzHMr4Z0OXVY8 5kUtJI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=62ef6ad9bc2b7bcff5444241b72077af&oe=5DD29EA7



Thanks nilaa

sivaa
11th August 2019, 07:59 PM
கலைஞர்.கதைவசனத்தில்1956ல். #நடிகர்திலகம் (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகம்?epa=HASHTAG) நடித்து A.V.M.மின்..#பூம்புகார் (https://www.facebook.com/hashtag/பூம்புகார்?epa=HASHTAG) பாதியில் நின்றுபோனது....

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68783807_429567994568571_5623222911956418560_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQkRtR6h_AfRBxZCXq9mQMhoKaij09Am0gBAAHMtKZ1 eJIRZQKniW-z9vmGLvuN2v5I&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=71edb47b8ceb483131a64f84cfb256de&oe=5DA008B5



நன்றி பழைய திரைப்படங்களின் பத்திரிகை விளம்பரங்கள்

sivaa
11th August 2019, 09:45 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே...
மதுரைக்கு பெயர் சிவாஜி கோட்டை என்று மாற்றலாமா....
ஏன்?
... வசந்தமாளிகை ஜூன் 21 வெளியாகி, மாபெரும் சாதனை படைத்து மதுரை-அண்ணாமாலை திரையரங்கில், 25வது நாள் விழா கொண்டாடிய நேரத்தில்,
அண்ணாமலை தியேட்டருக்கு வெகுஅருகில் உள்ள சென்ட்ரல் திரையரங்கில்
20 நாள் இடைவெளியில்...
ஜூலை 12ல் மக்கள்தலைவரின் பக்தி காவியம் திருவிளையாடல் வெளியாகி, இதுவரை பிரிண்டில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூலையும், சிவாஜி நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படமாக அமைந்தது.
இதோ....
ஒரு மாத இடைவெளியில் மீண்டும்....
நடிகர்திலகம், இளையதிலகம் பிரபு அவர்கள் இணைந்த நடித்து 1984ல் வெளியாகி மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய
திருப்பம் திரைப்படம் ஆகஸ்டு 16 முதல்...
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 2019ல் திருப்பத்தை ஏற்படுத்த வருகிறது....
அப்படி என்றால் மதுரை சிவாஜி கோட்டை தானே.... இதயங்களே....
திருப்பம் வசூலில் திருப்பத்தை ஏற்படுத்த
ரமேஷ்பாபு, சுந்தரராஜன், சோமசுந்தரம், அழகுவேலாயுதம், கிச்சு, அண்ணாநகர் பழனிசாமி, திருப்பூர் குமரேசன், புதுராஜ் மற்றும் சென்னை ஜெயகுமார் சார்பில் வாழ்த்துகிறோம்.

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68669570_506664413422552_3718762403488333824_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQnbfQiTriH9ppMrdfERSZlF_ADyR8decBBQ9MZhs8L KBcg8saQLNsG0PQDKjw-UyF8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=4bd547302eb5ab2f11f42b65356bfec2&oe=5DD43DFE


ThANKS Sundar Rajan

sivaa
11th August 2019, 09:48 PM
வசந்த மாளிகை

இன்றைய ( 11/ 08/2019) சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கொண்டாட்டம்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68419003_2841641475864936_6155018873419595776_n.pn g?_nc_cat=101&_nc_oc=AQkfGQVVpVJMUAQHdCLEkLQILzYfC9XjblxNuNnHhXE VF2cxvFO3kxxVqsIuzZ7GChg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6d671e1e532c8e2f2e67b37e79c6f022&oe=5DCF4738https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68412283_473411776807407_7677126695819673600_n.png ?_nc_cat=106&_nc_oc=AQlwWxNEqln5jlnfe1HsI9q9vYSDCPd8RBHWpN-tsVQKhDDhfS6IQ1r99IYGN8-sefA&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=913c36ceafa48e5eb917aaf5b5b1c003&oe=5DDDA15D




நன்றி சேகர்

sivaa
11th August 2019, 09:49 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68767932_479642129536630_4666642590290935808_n.png ?_nc_cat=103&_nc_oc=AQkFmspBJQaEac8he8NAttYLeHDzhg4g08AujYycgyY pmfIk6L46-srWzVaHq_3mBfQ&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=b79d143eaf81ff79d066cdbf1da7b27b&oe=5DE6C5EF

sivaa
11th August 2019, 09:49 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68710076_484123135482232_3490965932338053120_n.png ?_nc_cat=101&_nc_oc=AQlJ_2VYiAort7zoovKCHNjylHtxvjT5262Ga_zhBBs ESWR_cpR06MM__CQ7mUK6hpE&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7fbe59cd327f940e72ec8d9e09ecaa65&oe=5DDC0D48

sivaa
11th August 2019, 09:50 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67953336_495248541253179_6158101465937215488_n.png ?_nc_cat=109&_nc_oc=AQngArlnmyEKz8M4U9ADKbctS7GoJl2RWScYSBwcSs6 562tc3lASDQdZua75_fVkuz4&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d59b23a110f85ab4aad7846039cb9a58&oe=5DCC0345

sivaa
11th August 2019, 09:51 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68322614_1339914802863511_6324278543802957824_n.pn g?_nc_cat=102&_nc_oc=AQkM3QcNnlxXRB-GgCVLtwGz_pKi18VgYoLBVvqveFy_v4fxk0Ec9aWTTZXeBqycH u4&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=2d5e08bb9e77c30719d7f05e39a72030&oe=5DD91889

sivaa
11th August 2019, 09:52 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67885688_2378746762211193_1938192833718517760_n.pn g?_nc_cat=110&_nc_oc=AQn1wimXtoy4FXRaA2J9-tklPTFhcNMYJ8k2XcpzKB44nbMKdx2l96agZLSQpqNKNSI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=128ba56371e79ff5909fcbbd889b977e&oe=5DE399C3

sivaa
11th August 2019, 09:52 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67804477_374093196816012_19888357165236224_n.png?_ nc_cat=111&_nc_oc=AQlDpQhPc6VkylExSRu0cEeyQFy1aFyE8k0tME-9Afu4hsY1VxQ7wJfWnU9HyrIzBgE&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=97da085295d15f9ccca123c416e861b0&oe=5DCDA988

sivaa
11th August 2019, 09:53 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68584465_982316525271996_2933617024292618240_n.png ?_nc_cat=100&_nc_oc=AQlVtJe1-MlURVSlYZ4vm3IcCLRpgDI5bKWg_GNRVymJEd85Ok5H78yHRNu xOvHRFnk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=5475d613ff42ac0dcf9861b7079de1d3&oe=5DCED3C3

sivaa
11th August 2019, 09:53 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67777502_407330159910387_4026127430174375936_n.png ?_nc_cat=107&_nc_oc=AQnOBklx2Vc8JxrRoC6KQJa2OvfFhgtFHT4fHoGw-X4r0QHc5rrOUbkRl6UGzi4Fpdk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=882c9c4fdc481e97756c1346db1219fd&oe=5DCB8504

sivaa
11th August 2019, 09:54 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67747594_2396424317280235_2015647951812034560_n.pn g?_nc_cat=111&_nc_oc=AQnlEfuyZSFsK2lCKE4P_y7w1I_o3CeKx-RgfLN9saTX8nAJ0vvuDVjuccXHoHanTwQ&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=135f0357a7fe7454a26448b41de22733&oe=5DD3A4FC

sivaa
12th August 2019, 02:01 AM
ஐம்பத்திரண்டாம் நாள் கொண்டாட்டத்தில்...

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69227053_2369820933276048_8548807947973558272_n.jp g?_nc_cat=103&_nc_oc=AQnmLndAHIVatpBCYR8JHWOegfyhr2EZR1yXKV1P8Py Fbe4CI0nwWYRTGG7IUjFiIxE&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=dd3dee57e18b6016ae8a90433a5956e2&oe=5DE779A5


Thanks vaannilaa

sivaa
12th August 2019, 05:11 AM
நீங்கள் எப்படி வேண்டமானலும் கொண்டாடிவிட்டு போங்கள். அதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. உங்கள் சந்தோசத்தை கெடுக்க மாட்டோம். ஆனால் மக்கள் திலகத்தைப் பத்தி தப்பாக உங்கள் திரியில் பொய் செய்திகள் போடுவதால் உங்கள் பொய் செய்தியை தோல் உரிக்க வேண்டி இருக்கின்றது.

நேத்து கூட வசந்த மாளிகை சென்ன பேபி ஆல்பர்ட் தியேட்டரில் ஹவுஸ்புல் என்று போட்டிருக்கின்றீர்கள்.

ஆனால், ஆல்பர்ட் தியேட்டரிலும் சரி. பேபி ஆல்பர்ட் தியேட்டர்லயும் சரி. ஜூன் மாதம் 21-ம் தேிதி படம் வந்ததில் இருந்து இதுவரைக்கும் ஒரு காட்சி கூட புல் ஆக வில்லை.

இன்றுக்கும் மத்தியானம் 1.45 மணி நிலவரப்படி வசந்த மாளிகை 6.30 மணி காட்சி (ஓடுவது ஒரு காட்சிதான்) புல் ஆகவில்லை. பெரும்பாலான சீட் காலி

அதற்கான ஸ்கீரின் சாட்

நண்பரின் வருகைக்கு நன்றி .

இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் ?

இப்பொழுதுமட்டும் என்ன இல்லாததையா பதிவிட்டுவிட்டோம்?

நீங்கள் பொங்கி எழுந்து ஓடிவந்து பதிலளிப்பதற்கு.

பதிலிலும் உண்மை கிடையாது பொய்க்குமேல் பொய்வேறு சொல்லுகிறீர்கள்.


கர்ணன் மறு வெளியீட்டில் சாதனை படைத்ததும் பொறுக்கமுடியாமல்
ஆ ஒருவனை களம் இறக்கி நீங்கள் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்.
90 நாட்கள்கூட ஓட்டமுடியாமல் போன ஆ ஒருவனை குத்தகை கட்டி
190 நாட்கள் என கணக்கு காட்டி கண்ட மிச்சம்தான் என்ன?
5கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த கர்ணன் எங்கே?
ஒரு கோடியைகூட தொடமுடியாத ஆ ஒருவன் எங்கே?

செனல் 7ல் வந்தது பதிவிட்டோம் நடிகர்திலகம் பற்றிய செய்தி இருந்ததனால்

அதில் உங்கள் நடிகர் பற்றி சொல்லப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

உங்கள் நண்பர்கள் வாட்சப் பதிவுகளில் இருந்து கொண்டுவந்து
பதிவிட்டிருக்கும் பதிவுகளை வாசியுங்கள் நடிகர் திலகம்பற்றி நல்லவிதமாகவா எழுதியுள்ளார்கள்?
அப்படி பார்த்தால் உங்களது பலவிதமான பொய் சாதனைகளுக்கு நான் பதிலளிக்கமுனைந்தால்
ஒருமாதம் போதாது

திட்டம்போடும் உங்கள் குழுக்களோடு நிதானமாக திட்டம்போடுங்கள்.
சரிவர செயல்படுங்கள்.

RAGHAVENDRA
12th August 2019, 08:10 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67965301_2464894956894495_4074113381785665536_n.jp g?_nc_cat=101&_nc_eui2=AeGV3BI2dkGYDp2wZhB41CrqyvmOjkWMJfMzs7PwI Of36JAJcJZ8miYSdAeXPUN44O_JRwmIA6x1p4boJMpbQiHp-5BLP1KKd5A-7dXtL-0Eiw&_nc_oc=AQn4SH-xwCuUrQ_BU00rhhLDbiKPHAkUxLSo6_OMb0BUKKyWhmk04yfZ0 qBloDrTcEQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=47cfe731f760d9e5b71c89e837078c72&oe=5DD57773

RAGHAVENDRA
12th August 2019, 08:11 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67839241_2464900443560613_8106180923529101312_n.jp g?_nc_cat=103&_nc_eui2=AeHhSt1yqOA0AQvuGD8Kel0CU4YQUJKOvi9xYDWxJ SB_qy3bJjnwc47Dn5Wg2bLRvRZT-HlQEM8g_q3thTKTinSQoX8Ls_-vGmbUM2omRdkJyA&_nc_oc=AQk4RNuyk78JpQipe72Kg-N-7cso-0xAwbAmNvXNOMq5aHvQqUvMhTSgmGl40D_UNGM&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=b9c85f8ed65ac76cb182ac5dd0302cda&oe=5DEBBA83

RAGHAVENDRA
12th August 2019, 08:12 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/69022092_2464901010227223_3707251148105711616_n.jp g?_nc_cat=111&_nc_eui2=AeEsCRTGe2Z5YYrRN6OBsszA9hX0jcdB9h_9Sb5-wycn-O9SIGGdD7reYXEzSbm6UmrFuhuKWSfcfBLJ1mJJYLf-4J8uBs990ynmJ1G4OzVdKw&_nc_oc=AQmUqdH3OtbOYDlBZOpDigPZM60bOSUKadnmoe_NKEV 34oBCciFmk7yol9bmmMepA6I&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=583d8b92983063ae12841b9e7fa5717c&oe=5DC76B37

sivaa
12th August 2019, 02:18 PM
குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
அது
சிவாஜியாக
இருந்ததால் சாத்தியமாயிற்று
சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்
27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.
தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
அவர்களுடைய வாழ்க்கையில்,
முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
வளரவிட அஞ்சுவார்கள்.
ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது
சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
"இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
"அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
அதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
( திரு பீம்சிங்)
அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)
பயன்படுத்திக்கொள்ளச்சொன்னார்.
வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பாசமலர் மோகன்...
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.
விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67894101_377223456273604_6788277093584076800_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQk3SsJyd-ypdP-HbiJJVlsTwEAIfd-WHYswVBBQAyg1DuWHvkcXSjYylnZHDBgR0kw&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=af88a413e6d97966d654bfd45408f9d8&oe=5DE063AF


நன்றி செந்தில்வேல் சிவராஜ் (sivaji group)

sivaa
12th August 2019, 02:19 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68968309_484201199035593_5513422360796987392_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQkrzQogsbt9AKLXi-ITUf-m6xPI4Q8oEsAZtKVnrSTRhiavD0bZnJ_9T7zZIzM67m4&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b432042e82a1cc7533462f96e783915c&oe=5DCAC19F



Thanks nilaa

okiiiqugiqkov
12th August 2019, 03:17 PM
நண்பரின் வருகைக்கு நன்றி .

இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் ?

இப்பொழுதுமட்டும் என்ன இல்லாததையா பதிவிட்டுவிட்டோம்?

நீங்கள் பொங்கி எழுந்து ஓடிவந்து பதிலளிப்பதற்கு.

பதிலிலும் உண்மை கிடையாது பொய்க்குமேல் பொய்வேறு சொல்லுகிறீர்கள்.


கர்ணன் மறு வெளியீட்டில் சாதனை படைத்ததும் பொறுக்கமுடியாமல்
ஆ ஒருவனை களம் இறக்கி நீங்கள் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்.
90 நாட்கள்கூட ஓட்டமுடியாமல் போன ஆ ஒருவனை குத்தகை கட்டி
190 நாட்கள் என கணக்கு காட்டி கண்ட மிச்சம்தான் என்ன?
5கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த கர்ணன் எங்கே?
ஒரு கோடியைகூட தொடமுடியாத ஆ ஒருவன் எங்கே?

செனல் 7ல் வந்தது பதிவிட்டோம் நடிகர்திலகம் பற்றிய செய்தி இருந்ததனால்

அதில் உங்கள் நடிகர் பற்றி சொல்லப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

உங்கள் நண்பர்கள் வாட்சப் பதிவுகளில் இருந்து கொண்டுவந்து
பதிவிட்டிருக்கும் பதிவுகளை வாசியுங்கள் நடிகர் திலகம்பற்றி நல்லவிதமாகவா எழுதியுள்ளார்கள்?
அப்படி பார்த்தால் உங்களது பலவிதமான பொய் சாதனைகளுக்கு நான் பதிலளிக்கமுனைந்தால்
ஒருமாதம் போதாது

திட்டம்போடும் உங்கள் குழுக்களோடு நிதானமாக திட்டம்போடுங்கள்.
சரிவர செயல்படுங்கள்.

அய்யா,

வசந்த மாளிகை காத்து வாங்குகிறது. இன்றைக்கும்... அதைப் பத்தி சொன்னால் ஆயிரத்தில் ஒருவன் பத்தி சொல்கிறீர்கள்.

வசந்த மாளிகை காத்து வாங்குவதை ஒப்புக் கொண்டு வீட்டீர்கள் .நன்றி நண்பா.

ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.

அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு பல நாட்கள் ஆளே இல்லாததால் சனி , ஞாயிறு மட்டும் ஒரு காட்சி அந்த காச்சியும் சில நாள் ரத்தாகி மூக்கறுபட்டு அப்பிடியும் அறுந்த மூக்கை மறைச்சுக் கொண்டு 100 நாள் கொண்டாடி சிரிப்பாக சிரித்தீர்களே. அதவிடவா...

நெஞ்சில் கைய வெச்சு சொல்லுங்கள்... ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் தொடர்ந்து ஒரு காட்சியாவது ஓடியதா?


பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.

இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா...

sivaa
13th August 2019, 05:51 AM
அய்யா,

வசந்த மாளிகை காத்து வாங்குகிறது. இன்றைக்கும்... அதைப் பத்தி சொன்னால் ஆயிரத்தில் ஒருவன் பத்தி சொல்கிறீர்கள்.

வசந்த மாளிகை காத்து வாங்குவதை ஒப்புக் கொண்டு வீட்டீர்கள் .நன்றி நண்பா.

ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.

அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு பல நாட்கள் ஆளே இல்லாததால் சனி , ஞாயிறு மட்டும் ஒரு காட்சி அந்த காச்சியும் சில நாள் ரத்தாகி மூக்கறுபட்டு அப்பிடியும் அறுந்த மூக்கை மறைச்சுக் கொண்டு 100 நாள் கொண்டாடி சிரிப்பாக சிரித்தீர்களே. அதவிடவா...

நெஞ்சில் கைய வெச்சு சொல்லுங்கள்... ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் தொடர்ந்து ஒரு காட்சியாவது ஓடியதா?


பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.

இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா...


அய்யா,

வசந்த மாளிகை காத்து வாங்குகிறது. இன்றைக்கும்... அதைப் பத்தி சொன்னால் ஆயிரத்தில் ஒருவன் பத்தி சொல்கிறீர்கள்.

வசந்த மாளிகை காத்து வாங்குவதை ஒப்புக் கொண்டு வீட்டீர்கள் .நன்றி நண்பா.

ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.

அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.

ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு பல நாட்கள் ஆளே இல்லாததால் சனி , ஞாயிறு மட்டும் ஒரு காட்சி அந்த காச்சியும் சில நாள் ரத்தாகி மூக்கறுபட்டு அப்பிடியும் அறுந்த மூக்கை மறைச்சுக் கொண்டு 100 நாள் கொண்டாடி சிரிப்பாக சிரித்தீர்களே. அதவிடவா...

நெஞ்சில் கைய வெச்சு சொல்லுங்கள்... ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் தொடர்ந்து ஒரு காட்சியாவது ஓடியதா?


பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.

இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா...


வசந்த மாளிகை காத்து வாங்குகிறது. இன்றைக்கும்... அதைப் பத்தி சொன்னால் ஆயிரத்தில் ஒருவன் பத்தி சொல்கிறீர்கள்.

வசந்த மாளிகை காத்து வாங்குவதை ஒப்புக் கொண்டு வீட்டீர்கள் .நன்றி நண்பா.

வார்த்தை ஜாலத்தால் வெற்றிகொள்ளநினைப்பது உங்களிடத்து உண்மை இல்லை என்பதன் அடையாளம் .
நீங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லியிருந்தேன் உங்களுக்கு அதன் பொருள் புரியவில்லையெனில்
விரிவாக எழுதுகிறேன் வசந்த மாளிகை பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் இப்பொழுது புரிந்ததா?

நான் முன்னரும் பல முறை எழுதியிருக்கிறேன் உங்களத வண்டவாளங்களை வெளிப்படுத்துவேன் என்று
நீங்களாகவே கிண்டினீர்கள் உண்மைகளை( நேரம் கிடைக்கும்பொழுது )வெளிக்கொணரவேண்டி வந்துவிட்டது.
ஆ ஒருவன் வண்டவாளம் அவுட்.



ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.

அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.

ஆ ஒருவன் வாரிக்கொடுக்கிறதென்று நீங்கள் எழுதுவதுபோல் வாரிகொடுத்தால் பரவாயில்லை பொய்யை எழுதி பிரயோசனம் என்ன?

ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களை உருட்டல் மிரட்டல் பண்ணி தடை செய்வதால்
எங்கள் படங்கள் வருவது குறைவுதான் .




பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.

வசந்தமாளிகை காற்று வாங்கும் அழகை பாருங்கள்

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69206595_532882980787228_1955575137596080128_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQnBAHObk7lc0tZaXsi0MtBRHPTaVu2GmrY4b5Rn20R C-LdZYrdOzU1S38KzU06AO8U&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=7aab27b42ec34e7f5feac15cecca3180&oe=5DE8C838https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67801980_1245694712266836_5792817113047498752_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQlQIitDhcZOPEPA-pDY4VvDDoUY9gkbyndqDT8HITuub0dJc7h_OIUcm-4essF4Cz4&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=f00e2134d386de75649d40e5a7534d07&oe=5DE9F595https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68741827_2366247123661277_6136550922068688896_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQlETUdj4FqLpzPvtW2aEQKcjcJzz3-W08Nng56EkQTuHw4RlepQbAK__-Hr91nv3_0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=795221c95cadde7fb24efe02dee7f386&oe=5DD0E7DC








இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா


உங்கள் திட்டங்களில் ஒரு உதாரணம் மட்டும் எங்களுக்கெல்லாம் இது தெரியாதுப்பா.

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/60535308_444498689634590_1625315246572830720_n.jpg ?_nc_cat=106&_nc_oc=AQl1BkcFnuGJkUqBmvRbs5qc6hQjJEWbLtRHByYIdsh bIKF8Qtl3QSsa3luska-9ndg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=36d805f6ba607373e77661c6ae4ec0de&oe=5DDE9C01https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/60632730_655851501531063_6136632981713846272_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQlwtqeKXDhFiJbIpeAQsd8LmNjSXQu1yOLpjCJhGgn-3A64AUUxFu8TB6UAks9zZ3k&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=be6f4b41556711bd3677984a7dcef02c&oe=5DD34675

முதல் விளம்பரம் 13 தியேட்டர் காட்டுகிறது இரண்டாவது விளம்பரம் 21 தியேட்டர்என காட்டுகிறது சேலம் தியேட்டர் விபரம் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள் இரண்டாவது விளம்பரத்தில்உள்ள எழுத்துக்களை கவனியுங்கள் புதிய எழுத்துக்கள் அதாவது சீடர்களின் கைவண்ணம் இதுதான் அவர்கள்
நாடோடி மன்னன் வெளிவந்த ஆண்டு வெளியிடப்பட்ட 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 13 தியேட்டர் சீடர்கள் தயாரித்த 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 21 தியேட்டர்கள் . சேலத்தில் நாடோடி மன்னன் திரையிடப்பட்டது நியூ சினிமாவில் அது முதல் விளப்பரத்தில் இருக்கிறது .சீடர்கள் தயாரிப்பில சேலம் சித்தேஸ்வரா காட்டுகிறது காரணம் நாடோடி மன்னன் படம் வெள்ளிவிழா ஓடியது என காட்டுவதற்கான முயற்ச்சி இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா? வருங்கால சந்ததியை ஏமாற்றுவதற்கான முயற்ச்சி இது . இனி ஒரிஜினல் விளம்ரத்தை ஒழித்துவிடுவார்கள் சீடர்கள் தயாரித்த டுப்பிளிகேற் ஒரிஜினல் ஆகிவிடும் 30 வருடங்களின் பின பார்ப்பவர்ளுக்கு பழைய கதை தெரியாது பிறகென்ன நாடோடி மன்னன் அந்தக்காலத்திலேயே 21 தியேட்டரில் 100 நாட்கள் உங்களால முடியுமா? என வினோதமாக ஒருவர் கேள்வி எழுப்புவார். அந்தக்காலத்தில் ஸ்டண்ட் நடிகர் அது செய்தார் இது செய்தார் என்றெல்லாம் இப்பொழுது அளந்து விடுகிறார்களே அவை எல்லாம் இப்படித்தான் அளந்து விட்டவையாக இருக்கும். எது உண்மை ? எது பொய்? யார் அறிவார்.

நன்றி சுந்தரபாண்டியன்

sivaa
13th August 2019, 05:57 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67881323_2545776888806896_2844393055857934336_n.jp g?_nc_cat=109&_nc_oc=AQmJtH40Qfv8AUxou5ijfWp12npn0Cc8vSrOxEqHxw1 kFT6IeFTKVGAe9kBWjVs01To&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=571db46aeed3a3387ba6c2e26c5cab41&oe=5DE8CF01

sivaa
13th August 2019, 05:57 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68672034_479653599264807_2707819881893462016_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQlP6LyS-2ct8tTTOGpNycFOhNI1oGWny86PMeMDc1FrGOKFxd0zcrYJgXk PxV8Sg9c&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=9dfe3b341c7e66634997cbebcceac157&oe=5DE4935F

sivaa
13th August 2019, 05:58 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68670677_367161933951289_2885738519878172672_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQmYzahXbRVn3YTheANTwl-74UyzsGJX7QxLRwLkqEJXwQbABxece_J24rGADUDiPLE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=08d80971f3971062a5b6c9dc33668b33&oe=5DEADED5https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67936991_676821032794008_5959480866542452736_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQkXUPUWzH2Z5l33xIvhmac0ilew4xZKdf8EMAMbxuP-f0ASgMJCGkMOyhsDlmKhW7A&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=77c1458e293d0d16580d9d3f830f421d&oe=5DD0FCCE

sivaa
13th August 2019, 05:59 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67868709_430406044220644_8534845610589683712_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQn-C3iSrUb2irbtaRsO2-PhKTQ628Srui6btpLoEYEaJzy_feSEgzgK9UlJKudX1Vg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=1c4a65d9157b5a192e76135ed3505d67&oe=5DE4EFA2

sivaa
13th August 2019, 05:59 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68494309_1663789277087043_6762373235288834048_n.jp g?_nc_cat=103&_nc_oc=AQkLlHkfGdOVfvd0bXR3JR8OGgc610hCSDtN4G0wVMN 5-PUA7cBKJ2Kzeve0ySNLtPc&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=e0494c58d09f38fc7f1c91485e37dac5&oe=5DDC0AD1

sivaa
13th August 2019, 07:03 AM
வரலாறு சொல்லும் நம் திலகத்தின்

அருமை, பெருமை, மதிப்பை பற்றி

அதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68366837_2472608329465146_1796805469566664704_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQmCY-XSI2Dz7Zq89Xujvznwocm64eDkhENZS5outWKj5Rx3K9DZ1O25 pnHpF42-uO8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=7ad6dddd46b2087438ce94e59c5a0130&oe=5DE00281


Thaanks Edwin Prabaharan Eddi

RAGHAVENDRA
13th August 2019, 07:04 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68932389_2466514273399230_8994877543324581888_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQnzKZkNukcr3gNK5PIx-VDf1TCFgMZyb1guZd69h3hz-3cttprumj1FLdHYlr5hql4&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5c34cd6fc14570320edbc0cd44f191da&oe=5DD87795

RAGHAVENDRA
13th August 2019, 07:05 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/69434000_2466515760065748_5796999852848054272_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQl3bgEeQmhDdrNOrsr4MIO-WXWWVTtazp2KCslwWecLJlTzL7yTzz5AwOzQggYhrw0&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=c224ad14537760da754e175ace091cfa&oe=5DDE32EF

sivaa
13th August 2019, 08:34 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68933492_1175839999283028_3727064867329277952_n.jp g?_nc_cat=107&_nc_oc=AQkyzXH15ZBq0a9-Q02Ug5Ylai0dYR2HKaEHbrX888k0mjFjCGcuFQUv9ocyvGsC9E w&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=3ed4a6a86aee5930b58f5ddc3359ce59&oe=5DD5EB49


Thanks V C G Thiruppathy( H O S)

sivaa
13th August 2019, 08:38 AM
காற்று வாங்கப் போனான் ஒருவன்

முடிவில் ...............................

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67871834_409866626314025_6707288677694832640_n.png ?_nc_cat=104&_nc_oc=AQmQyx3-G5HyPrG7CcFe9z2XpGpdge1LmUkPM0BFg6K4xZLtmbzmBvSFuS ilWF5ip8w&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=de7cdf77c99042f827d7c500c95e4d17&oe=5DD85E3E

sivaa
13th August 2019, 02:09 PM
நடிகர் திலகம் சிவாஜி எங்களுக்கு நேர்மையாக வாழ்வது, விளம்பரம் இல்லாத உதவிகள் செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்தார்,
அதன்படி நாங்கள் வாழ்க்கையில் நேர்மையாகவும் ஏழைகளுக்கு எங்களால் முடிந்த உதவியையும் செய்து வருகிறோம்,
:- கடலூர் ரசிகர்,


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68387427_509095726567115_6760065257302917120_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQniTxPT_sRqoM7laNdsYFyCXaRNhtU4EZK9T7L9QtZ pPMkZDPVlVVWz2XBZVGQrhTg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=0c98916126580cbe6d4baffcc525039b&oe=5DD80E78


நன்றி சேகர்

sivaa
13th August 2019, 02:10 PM
பிராமினர் சமூகத்தைச் சார்ந்த என் போன்றவர்களை பிராமினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எங்களது வாழ்வு முறையையும் தனது நடிப்பால் எடுத்துக் காட்டி பெருமை படுத்தியவர் எங்கள் நடிகர் திலகம்,
:- வசந்த மாளிகையின் 52 வது நாள் வெற்றி விழாவில்


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67871305_507417243342351_3703959064263262208_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQlZYnx9hAHGxPI4csWwfLE0-5TB-Rg79LB86qC-rDxVO9Cjt9iDK3mbtQowfEMydgk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=17fd5ab823c4ff95b62e666f803a663b&oe=5DE84F0A

நன்றி சேகர்

sivaa
13th August 2019, 02:10 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67963921_662261187518597_597844415217664000_n.jpg? _nc_cat=108&_nc_oc=AQnqDFVyejQabGHQWmfKkbxlp7ZA9fjKXqsNa4i_aNk 4U0kfmpGf-nHfFlSS72gdRWI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=3a9b9017b5d739f2cc7bea0e699c8fc1&oe=5DE2E09D



நன்றி நிலா

okiiiqugiqkov
13th August 2019, 03:25 PM
ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களை உருட்டல் மிரட்டல் பண்ணி தடை செய்வதால்
எங்கள் படங்கள் வருவது குறைவுதான் .





எது உண்மை ? எது பொய்? யார் அறிவார்.

நன்றி சுந்தரபாண்டியன்

சிவா

வசந்த மாளிகை இன்றும் அவுட் . முடிஞ்சால் இன்று ஹவுஸ்புல் காட்சியை தியேட்ரில் ஆன்லனில் நான் போட்ட மாதிரி ஸ்கிரீன் சாட் எடு்து போடுங்கள் பார்ப்போம்.

ராஜபார்ட் ரங்க துரை அவுட்.

சிவகாமியின் செல்வன் மதுரை ஓட்டல்காரர் மூலம் பணம் கட்டி ஓட்டினாலும் அதுவும் அவுட்.

இப்போது வசந்தமாளிகையும் அவுட்.

இப்படி ஒரு பிளைப்பு தேவையா/

சரி..

சென்னையில் மனோகரா படம் ஒரே வாரத்தில் 84 லட்சத்துக்கு மேல் வசூல் ஆனது என்று வெக்கமே இல்லாமல் பொய் எழுதி ஒரு வாரப்பத்திரிகையில் போட்டு பதிவு செய்ய வைத்தீர்களே.

அடேங்கப்பா... ஒட்டு மொத்த இந்தியா படங்களையும் சேர்த்தாலும் இப்படி ஒரு வசூல் அந்தக் காலத்தில் வருமா..

கடுகை மலையாக்கி பொய் சொல்லும் வித்தை அந்தக் காலத்தில் இருந்தே உங்களுக்குதான் உண்டு.

மனோகரா வசூல் பக்கத்தை நான் பதிவு போடவா, இல்லை நீங்களே போடுகிறீர்களா சிவா.

தொடர்ந்து உங்கள் பொய்கள் தோல் உரிக்கப்படும்.

Russelldwp
13th August 2019, 08:51 PM
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்

RAGHAVENDRA
14th August 2019, 07:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68573831_2468267333223924_6172333973943877632_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQnYcoPdB9koc1-eVSrwue7bhwbKQrkpla-iLB8FQ2Wsiq2J2vlE-vC3yDz3JoWLEdU&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a79b60e52e233804e30e2526a66ac835&oe=5DE76CE4

RAGHAVENDRA
14th August 2019, 07:32 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67883661_2468270073223650_4211627965336780800_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQnTkflkUoQUso9DhaYmm_AwaIj76fwbDxeOMbYu3p7 meaInF6JG1j63pItZuB32bj8&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=1894a76169b60db668a8002d63f63cb4&oe=5DCEED82

RAGHAVENDRA
14th August 2019, 07:32 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68333973_2468270996556891_1823842056766750720_n.jp g?_nc_cat=107&_nc_oc=AQl24hhKV5QZpK0sj2QBfel3Z6htYuizHbgn_BLtPxZ vc0Wr4NSRSBJr74EDh5FBcxM&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=ac3b412eaeb3913865f55ddb725d50ad&oe=5DEAD79F

RAGHAVENDRA
14th August 2019, 07:34 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/69251688_2468272203223437_2032665960858517504_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQn5jWPb2hy_PGY5P_JlsqBNT2wrayjGN0AIiyJfmiX RwzR9qWc0CiAt8S6iCwWYu38&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a8f8bae49b6ed5b3a9369b43f49b7014&oe=5DCB0BF1

okiiiqugiqkov
14th August 2019, 02:56 PM
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்

எஸ்ப்சவுத்தரிராம அய்யா

ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.

விபரம் இந்தாருங்கள்...

நன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.


நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் கவனத்திற்கு


ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்
தமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .
-----------------------------------------------------------------------------------------------------------------------

3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .

25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்

17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்
மதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்

23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்

13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்

28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்

11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்

தூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்

19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்
சாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்

26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்

திண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்


புதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்
------------------------------------------------------
கடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்
கடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக
தகவல்கள் தெரிவித்தனர் .

இந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.

கேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.

அதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.

அதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.

திமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா

இன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.

உங்கள் நடிகர் படம் ஏதாவது எந்த ஊரிலாவது வருகிறதா.

மக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னாடியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.

இன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். பரிதாபம் படுகிறோம்.

Russelldwp
14th August 2019, 07:37 PM
சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை

sivaa
15th August 2019, 06:19 AM
பொறாமை வயிற்ரெரிச்சல் கையாலாகாத்தனம் கொண்ட குமபல்களின்
கைவரிசை மீண்டும் காட்டப்படுவதாக தகவல்

56 நாட்களுடன் இன்று மட்டும் வசந்தமாளிகை (இது உறுதிப்படுத்தப்படாத தகவல்)

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67925157_2409778299142671_5326106927074115584_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQmqWZj9TVX2Olp4ghyHTr76EqwFj7MlKI7ijQb2FOl xEm2i9-NSNzVHBfdhUNCImCU&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=9f2b08c2b104e109c343dee3de527231&oe=5E143D66

sivaa
15th August 2019, 06:21 AM
மக்கள் அதிகரித்து வந்தாலும் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தற்கான நாட்களை நீட்டிக்க முடியாது
:- அரசாங்கம் அறிவிப்பு,
மக்கள் அதிகரித்து வந்தாலும் சென்னை ஆல்பட் தியேட்டரில் வசந்த மாளிகை திரையிடும் நாட்களை நீட்டிக்க முடியாது
... :- தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு,


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68755775_660516937764637_264637858801778688_n.jpg? _nc_cat=103&_nc_oc=AQlwUsn1m0k82RxbePxkiWYZ6QeIN7kkumJQ9rfcCB0 BebVwGSxcrlaDMEB0z0JTrFc&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=09f432f1e8d04cc77309a38cc4d2dee0&oe=5DDDB42Chttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68714232_2083382971970900_416335687084670976_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQluuEYUqNRyush_AxPbrYMk1o3NVz1fUZLBtbtAcEY t5EHSD9PGml2y4moYXb_-Hh8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=218c7a272a6cf15e370ca9efd83ba63c&oe=5DCDF9A1https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68660698_363866454290940_921183490429419520_n.jpg? _nc_cat=110&_nc_oc=AQnrrGBswLpBgu4WRZRo5P_NI8CpZj6o7ksU4qPc-6i0f0RfOBl1E3VYJWTig8z2EMQ&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=12a44bdba7186f50cbc070d38fc6cb76&oe=5DD4D737




நன்றி சேகர்

sivaa
15th August 2019, 06:22 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68597746_491187338339524_1937804478480646144_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQkfmMWip6nmRGc5YkOZM8gfC-lD_cWTP9eahr-rFxuxbpWTKJ2ppTzKgzyo096zu7E&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=118c66327ad1bb36ad6e72f2a181f290&oe=5DE50084

sivaa
15th August 2019, 06:23 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69012589_218940789049937_4795075014523092992_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQm66uIpwstj6oJfNn5PvuhXrCdBn390RWOtKG2Q1pD Mgvbtf-FqkXWlwNSJKS-sRNk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=f79a22028b91661338eb1352bf348a9a&oe=5E156871


நன்றி H O S

sivaa
15th August 2019, 06:24 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68405544_2302385386525360_2718120184131878912_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQmc9-nizE-mBgMrm57DV033H1gzE0rksmfNyPOl-zbx4L9wpLsXmE7oMrtoJg1qDpU&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=4909298a824a54a329a3a095879fd13d&oe=5DE14EA4https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67929065_2426021530768279_445730052416471040_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQndy3DHAtpTVUlvkOBenBNlN84Ys_LEmk86s7EEesj hqpWPGK6ycNZJPws3LnPij_8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=14b1d115e409c17d9b0a8fb5e6c34c2a&oe=5E135323https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68529447_473863136497804_7701649623345004544_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQlM42qaVSaM0x1iUnKed4rKhxFEVpXa6DDeEUjWOHj hXY5LQwejZ_ws-X7OSFqTEok&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=57b8a55209d23cadf288a312107594c1&oe=5DDAE419






நன்றி H O S

sivaa
15th August 2019, 07:23 AM
இந்திய குடிமக்கள் அனைவருக்கும்

இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69153456_356834231906866_4509719483320893440_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQlqYcJdhlc0N41hkwCoXhgmwev9nZnoa9kHgZKzqdA JM8mTvS73GLWck1j7BhJPiTg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=c932b5cd7ed36782aa2d5c3efb3269e1&oe=5DDDCD32

sivaa
15th August 2019, 07:23 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68588042_492737011293390_6330631569232887808_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQnVwCxkm8NU4E0Gszn7YMka9HnOsbfhwBbG0S1VDym rLJf4cC_zuP-udZvAmP6trCk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=441ad23b29e59b4577f3687d3631d0d0&oe=5DD97EB2

நன்றி H O S

sivaa
15th August 2019, 07:24 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68250237_401614593826656_3851922354057773056_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQnppNBBcFT-uqPXZQanLDpXWXuXLTgbQPWkK98JEDQfn5CIVhd3g-nm9mXPeH20t7A&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=27a9adf391ee0bb521130e74cb7a89df&oe=5DDFDAFEThanks ganesh

sivaa
15th August 2019, 07:27 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67963553_874452066268154_8720317244917153792_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQk62m4rxlejMo6AFsVt5qaGqesWhtt8q4y4Rdu09tc UEebHo14uENR0cX1qVmbKOAI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=29b41e6e92761336899f9574e7fbbbc8&oe=5DE1C0E3




Thanks Kuttam sivaji muthukumar

sivaa
15th August 2019, 07:28 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67950499_498610297370172_1942952709749473280_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQlovX5Bxxs0Gckgx7SolkIZiRj_3AujShb1etqX5Yq i6jc4F6Yy6MdOvRi6Mf8KGyM&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=a79b7b2a696e1838331d6d2918bc2009&oe=5E132F38https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67900618_428702684522576_6582845977432948736_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQnfGT7m_RtjCAsPCBLMgTRQ-Qd4Ow6GGIqwzzrOMZCqphz4SBHWkAv_0lov9a5d7rw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=189ea5913863b7d41b4acaf05bc98ba6&oe=5DDA2092




Thanks H O S

sivaa
15th August 2019, 07:30 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68717065_488413281984261_1866789393264541696_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQnoLketT2DTNjh9f1O8A1FR9uEmjc9UU0Sy_K-8CE45HFixS5D8awVH7mQnkozejEs&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=f632124746bc77b7e43ab359aedfb5d3&oe=5DCFE704https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68983629_411120619523990_7865897191447986176_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQl8wGcNUfaRAquBM0NMI08lT9tPzuGndVdArIL8neC UV7JXHz_MUGIUOn4uQOCN8nw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=46d93cb0f69169a78b8d1a4ab0a37d95&oe=5DDEDF5Fhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68388192_455499848638371_6464007195880062976_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQmMUiSapdcw3uXXIPPuLn3QEaehQGlrGXXfGJ8azpC vzTze7X26tz3tZj7Ufha7A7s&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=a77cdd40a285b8053e511b38f2581940&oe=5DD28907






Thanks Sundar rajan

sivaa
15th August 2019, 07:32 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
15.08.2019 சுதந்திரதினத்தை முன்னிட்டு,
மதுரை கடச்சனேந்தல், ...
ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்,
5வயது முதல் 8வயது வரை உள்ள,
ஏழை மாணவ, மாணவிகள்
40 பேருக்கு
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச புத்தாடைகள் வழங்கப்பட உள்ளது.
காலை 8.01 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிறது.
பின்பு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதுபோல்,
தொடர்ந்து நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்காக்க,
அவர்தம் தலைவர் பெருந்தலைவர்
பெருமை காக்கவும்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து சமூக பணிகள் மேற்கொள்ளப்படும்.
விரைவில்....
இலவச பல் சிகிச்சை முகாம்
இலவச கண் மருத்து முகாம்


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68477403_2499595723393919_1045176537680183296_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQnAlDlQUS-U0IwTrEWOzdjAqi9cRjNI809SrRegdAXe8HumkcgQxsCLczSam v_eNU4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=e5c3d1bc95480b6eeb2756292352b1f6&oe=5DD9EFE7



Thanks Sundar rajan

sivaa
15th August 2019, 07:34 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67920755_399187337461437_6283822030638809088_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQky0xp_trHc-IqQ3PSCkXAxgRDeZBVGlQuJATmveOx3WjpMyZeukK7ApT8y8Z_ tSso&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=81f27c992f1927bd1d2ba3dc6b73111b&oe=5DD3D6F2



Thanks H O S

sivaa
15th August 2019, 07:35 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67964187_932167607163650_8407825169740988416_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQk-FI9JsR7E0B6R716j8eJZeFz3hsghgJytzFDuLJu4ESvKnrTyQK BsD-JI2s7Cof0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=2521e6e555429775c4c5aa7cf4370f9a&oe=5DD60328



Thanks H O S

sivaa
15th August 2019, 07:36 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68856296_2176877669271469_12526993673289728_n.jpg? _nc_cat=100&_nc_oc=AQkKYJ78yV3buhQzPZF6DgBarY6OqLQGbBRaXVWn9Rb aj4BVs5ZhfFPZ9CnNu_c0ivc&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d4a2c7f21e68c347059a0b7c42172e6c&oe=5DE42237



Thanks H O S

sivaa
15th August 2019, 07:39 AM
52 ஆம் நாள கொண்டாட்டம் வசந்த மாளிகை
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68636748_440676246528386_2584972349665181696_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQmuHXezTGUX0z6Ck8yhThbAnScJRUfzPrZezycxW-ERHGPYap1syBKnnXSOs6HoZpY&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6ddc5fcf9af3e9db38c4855319607260&oe=5DEAAA97https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68337774_496440734500708_1337894385857069056_n.jpg ?_nc_cat=106&_nc_oc=AQnYthaS9yJre7045LDvx_6kfXNSXmnXgo0_trPBbiL nnIRi8wPjcBaxk9f3Ggw-vnM&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d0c5afc615ae2ef6a774547271c56456&oe=5DE1DB3E


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68856098_713823819031430_2243864075626872832_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQlDEJFTiz_hR5yw7AxzUdHV6UL9bOgFkCRtVY6ZDaq L53bUrva3e5UL-7EaYcEy6NY&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=396a5ddbdddb318fd6c58addcdd6caf9&oe=5DCA9F7F


நன்றி நிலாhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68644696_785266481887928_4765731922510872576_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQkKqU6nvSjHFhMfyiwcfWl-nt5QfiEnyo5BL0YJ47IylpknKTOsuomI-RdMYl3EpLo&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=e515b72f6359e408253d17887d5aebe8&oe=5DDAAA91

sivaa
15th August 2019, 07:39 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67980074_2355361588057086_4018239701260435456_n.jp g?_nc_cat=107&_nc_oc=AQlSjAPo3Z_WrlKs-G-l0bM4gfN__9IWkqWTvSMFqvC7wRGq-XzZizmL811KpQSq2Gg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=6fab08778758ddf6a3c6b8a99bb7d662&oe=5DD082DAhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68499371_630146114140480_5215688227041574912_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQkr5VJtEefk_jy2c-tHsq5vqIjqbcLY9QxaDB-04wF9yv1izOWIzJomhK4TzLrLl2M&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=1f64a125bf902081e6bf547ebacc2a5e&oe=5DDF1471

RAGHAVENDRA
15th August 2019, 07:40 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/67887884_2469973756386615_5496309299829276672_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQlkJszWfV8wVGJqs7KEHLOfz-5S9MBZovGKJNhM05ZWehEPpV7jujnnxjLfvxID33o&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a8b1ed1700559de1cd20b933b4be049e&oe=5DDC1E6D

sivaa
15th August 2019, 07:40 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68239006_2319889158079175_8223524060030566400_n.jp g?_nc_cat=111&_nc_oc=AQlTgYlSZ3oPn0yg7xU3nrGVxeXj_bogzZFr9zzCy8J 9pqCLSei911yip6p0mKzmIYU&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=9e5815059211e34b897e7b02153186ed&oe=5DC9EC8Fhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68663112_366634994228278_2803173541753651200_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQnV2qy3lwGvAVIzkNukPCHuvAREFSCay8MglKHY3ym 5M3wRpc0mkP7J4LOHI1PN8Tc&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=bf836015258a233dd905b0a40a4c9ab9&oe=5DE2EF01

RAGHAVENDRA
15th August 2019, 07:41 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68535247_2469975069719817_3992463652601987072_n.jp g?_nc_cat=107&_nc_oc=AQkHrCnFVFioWu4NFXnuknPqRbGbePIXw6xs6Im4Cyj eLT2TvpaP_89cXLPl8GoP-Es&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e56c4b4e17611e5d2d519f927a0b2872&oe=5E15A121

sivaa
15th August 2019, 07:41 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69183944_488640875306348_306423758833319936_n.jpg? _nc_cat=111&_nc_oc=AQnMkurdcqfphBy7_bgmDodhva7xJ-70vRS4XeSrf0mnFQ8jAw3zPc5CEXbt7HbVIlU&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=219327305899bd7693f6690f48f0a98b&oe=5DD6E849https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68276679_456367348251399_6661663356073541632_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQna1jm4C7WeVKu4IhCrrwQ_rHjpQx8YUpeu_3_3o9B gnHIKpcErPr4Uy7MXOHJxvw4&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=447d5ed0b42cf5b75050796da4b73b17&oe=5DE0B64D

sivaa
15th August 2019, 07:42 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68271878_1117199061796692_6283820587529797632_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQmLtyPqV5S0o2JceyQDN8kcORjlBB1JUz4gxMcIOSo eDHbfAv5OolN0AjuIlivwtNE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d3989ef3cf0c53ae000a537b34a226d9&oe=5DE1BDA1https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68565697_433556114168535_6708086150042484736_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQlzA42gQPOsHBu7ECwqS8VyJnmDN8dfrnO4_rKPRbk wgB-OsV3Azf2KoZVyghTlsio&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=4b9b11dcbf2804c7adb410e137b067e2&oe=5DCC8DDB

sivaa
15th August 2019, 07:42 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68467200_500991604044644_5997609215374393344_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlZDpdVFspBMUMVZ434h9sksCBp4msnfC0SAQAVFBV knraUS_KvzY1aWneemCh6ink&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=8109c84a7d9e4bfec4ba52f3c1e71ed2&oe=5DC8ED47https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67870538_866140810423986_932542072609570816_n.jpg? _nc_cat=101&_nc_oc=AQkEssp-v7IiZPzt5PICQ6dTk_c7uClfy22WK1XZcZVyXMwkjnvaZySIsT CcXt8K4HE&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=e0a0df29fca70cb95179738ad6061216&oe=5DCC8E51

sivaa
15th August 2019, 07:43 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67972552_747219192371753_5294892736854360064_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQl9Q2_7JRUPAAmf9s12tt_1XXVNyHPsjc4fuQctk8M vS8PUaNSMJXB2bgCJeSuqUlw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6f05bfbb716bc9ec83bbe42d6f144cb1&oe=5DDEE102https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68858710_362776631083545_5501396529677598720_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQmJ89KRx4jYvb4YEUVLkQHUTSYUMPhkanHaBsmYSHF LMhT7Thn78dA36rAFqA9bhLA&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d73d04643696ac6e1111b52301292829&oe=5DD1A45C

sivaa
15th August 2019, 07:44 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68289102_2360365834220279_1376466701163429888_n.jp g?_nc_cat=103&_nc_oc=AQkyv2O1_8crcCRsycNN0NrBiBGMGFSU1QSvbvV4yFA 7TvXDhnxnV3yssa_SrGAx3Eg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=343592af39a84526ba199478c5f6e333&oe=5DD85FABhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68284521_2238254072966733_3133899106016034816_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQlCBBS0nkhzqQu1P0qnRxrKd_-6MoSjW-taf_OQ_AeQPzzv4zAsAq3LDjKVJa0Mf4c&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=e0b4da212f8ec03600f040006db12fd2&oe=5DDFA316

sivaa
15th August 2019, 07:44 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68281343_487358235174465_6297879570267766784_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQkdBcs0jdYCzm35JmDDj7CqfB0wysu06TC0Dc1nUWk 5AjIGZZOm6yNYMtgMgOb5hDg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=73e3293265ca56c049dbee8f4e77c1ad&oe=5E151062https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68393609_435130480432582_9194402950594691072_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQkzjtW5vCRHqreJ1CKnn5jc5QR4j6_IbXORRvzwrZI gQ1_Ta273twl-2zpyynaaBPY&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=a7e3fcd6e0db54d09e0cdf5210e5ca65&oe=5DDBA31B

sivaa
15th August 2019, 07:45 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/67966531_487170312067351_4733791474796199936_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQlfnLEhqNw5VrCkt_LIDKA0Tn_00rGlQzhoPN-ZZ0hgyT-Hdps7Pv273NkgrAwjHFA&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=442b252aa43a9f7eb18856ba9bd6a9a9&oe=5DDD4156https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69276612_2212989662159843_1086347879431274496_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQlKsMRcWAXsgjGSPhCuXHBapW6WWXU5p-en8gpqva39qXX9WxQnMnaqkWE_Nk79ZOk&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=e65f96c64746b8a3f220f14d4e6995fa&oe=5E1456A5

sivaa
15th August 2019, 07:55 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68601474_1606810576116391_5361138995327664128_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQlZY_ORcE_dVzIw4le48TLPyKUZwzD3r5SVmFT3kMs ylnG_bKNg9iX0YQUCZaB4Fns&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=9323672e8f5041f2e92a63bf0dd44d1b&oe=5DE2C353

RAGHAVENDRA
15th August 2019, 07:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/68373679_2469992699718054_6906906860553502720_n.jp g?_nc_cat=102&_nc_oc=AQnSIskbZCqWObSkXeN8rYT_ZCR21xsE7JI0B2z-6hcd6Wlu7PJ85ZS2rL8_j_HzfXk&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=318ca9889e42d058b9a47c635affa6af&oe=5DCD14E7

sivaa
15th August 2019, 08:15 AM
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்

வணக்கம் சௌத்திரிராம் !
உங்கள் வருகைக்கு நன்றி ,
தொடர்ந்து வாருங்கள் .

நாம் சொல்லும் விளக்கங்களை இவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்
காரணம் அவர்கள் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப்போன்றவர்கள்
பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதையே தெரிந்துகொள்ளமுடியாதவர்கள்.

sivaa
15th August 2019, 08:45 AM
கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் அவர்கள் சொன்னது
அந்தக்காலத்தில் கருணாநிதியுடன் ஒள்றாக இருந்தபொழுது
கருணாநிதி தன்னுடன் இருந்தவர்களை சிவாஜி கணேசனின் படங்களை போய் பார்க்கக் கூடாது
என தடை போட்டிருந்தாராம். அனால் தாங்கள் எல்லோரும் அவருக்கு தெரியாமல்
தேடிச் சென்று சிவாஜி கணேசனின் படங்களை பார்த்து மகிழ்ந்ததாக கூறியிருக்கிறார்.

நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தியின் வெற்றி ஸ்டண்ட் நடிகரை கதிகலங்க வைத்தது
எனவே ஸ்டண்ட் நடிகர் m k உடன் சேர்ந்து அன்றே நடிகர் திலகத்திற்கு குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்தார்
ஆனால் கடைசிவரைக்கும் தோற்கடிக்கமுடியாமல் தானே தோல்வியை சந்தித்துக்கொண்டார்.

எனவே எதிரிகளுக்கு தோல்வியை பரிசாகக்கொடுத்தவன் எனதனக்குத்தானே படங்களில் வசனம் பேசி
தன மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

(எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)

okiiiqugiqkov
15th August 2019, 10:21 AM
சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை


அதைத்தான் நாங்களும் சொல்றோம்.

ஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.
சென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.

மக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.

நீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஓடவில்லை.

உங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.

எங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.

ஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.

okiiiqugiqkov
15th August 2019, 10:30 AM
காரணம் அவர்கள் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப்போன்றவர்கள்
பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதையே தெரிந்துகொள்ளமுடியாதவர்கள்.

சிவா
உங்களைவிட எங்களுக்கு மூளை சலவை குறைச்சல்தான்.

அடுத்து வியட்நாம் வீடு வரட்டும். அதுக்கு என்னென்ன சொல்லப் போறீங்களோ பாப்போம்.
நன்றி.

Russelldwp
15th August 2019, 04:28 PM
முதல் படத்திலேயே தன உயரிய நடிப்பாலும் சிம்ம கர்ஜனையாலும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் எங்கள் தமிழ் வாழ பிறந்த சிவாஜி அவர்கள் --சிலரை போல் நடிக்க வந்து பல வருடங்கள் கழித்து கதாநாயகன் அந்தஸ்த்து பெறவில்லை --உலகப்புகழ் தமிழை தன வசன உச்சரிப்பால் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எங்கள் சிவாஜி --இவர் பேசிய பராசக்தி வசனம் தான் திருவிளையாடல் வசனம் தான் இன்றும் பல தலைமுறை கடந்து இன்றைய இளைஞர்களாலும் கவிஞர்களாலும் அரசியல் வாதிகளாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது ---வெறும் பொழுது போக்கு படங்களை மட்டும் தந்து மறைந்தவர் அல்ல எங்கள் சிவாஜி --பிச்சைக்காரனாக -- கிழவனாக --டாக்டராக --வக்கீலாக --சிவனாக --வள்ளுவனாக --கட்டபொம்மனாக -குஷ்டரோகியாக --பாரதியாக --வஊசியாக --ஜமீந்தாராக --காவல் அதிகாரியாக --நல்ல குடும்பஸ்தனாக --குடிகாரனாக --இலக்கியவாதியாக --நீதிபதியாக இப்படி நடிக்காத வேடமில்லை என தமிழகம் வியக்கும் வகையில் சினிமாவை வாழவைத்து கொண்டிருப்பவர் எங்கள் சிவாஜி தன திறமை மீது நம்பிக்கை இருந்ததால் ஒரே நாளில் தன இரண்டு படங்களை வெளியிட்டு அசுர வெற்றி கண்டவர் (உலகில் எந்த நடிகனுக்கு இல்லாத துணிச்சல் )தன கூட நடிக்கும் சக நடிகர்களுக்கு சம வாய்ப்பு தருபவர் எங்கள் சிவாஜி --(உதாரணம் நான் வாழவைப்பேன் படத்தில் ரஜினி மற்றும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் இன்னும் பல படங்கள்)தன திறமை மீது அசுரநம்பிக்கை இருந்ததால் வருடம் தவறாமல் தொடர்ந்து 10 படங்கள் தந்து 100 நாள் படங்களையும் தந்தவர் எங்கள் சிவாஜி --தன்னுடைய சக போட்டியாளர் திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிய பிறகும் கமல் ரஜினி நடிகர்களோடும் போட்டிபோட்டு படங்களை வெளியிட்டு மகிழ்ந்தார் --1983ம் ஆண்டு தீபாவளி வெளியீட்டில் கமல் ரஜினி ராஜேந்தர் முதலிய படங்களோடு வெளிவந்த வெள்ளைரோஜா முதலிடம் பெற்று 50 நாள் 100 நாள் அதிக திரைகளில் ஓடிய பெருமை பெற்றது --இது மட்டுமா 1985ம் ஆண்டு வெளிவந்த பாரதிராஜா இயக்கத்தில் எங்கள் அய்யா நடித்த முதல் மரியாதை காவியம் பாரதிராஜா எடுத்த படங்களிலேயே அதிக 50, 100, 175 நாள் ஓடிய பெருமை பெற்றது தற்போது டிஜிட்டல் மறுவெளியீட்டிலும் 2012ல் கர்ணன் மூலம் 5 கோடிக்கு மேல் வசூல் 14 ஊர்களில் 50 நாட்கள் 3 ஊர்களில் 75 நாட்கள் சென்னையில் 150 நாட்கள் 2019ல் வசந்த மாளிகை --7 ஊர்களில் 25 நாட்கள் - சென்னையில் 55 நாட்கள் கடந்து சிவாஜியின் சாதனை சிவாஜியால் தான் முறியடிக்கப்படும் --தமிழனே உன்னால் தமிழுக்கும் நான்பிறந்த தமிழ் நாட்டுக்கும் பெருமை இருக்கும்போதும் போட்டியிட்டு தோற்றுப்போன எதிரிக்கு இறந்த பின்னும் தண்ணி காட்டி கொண்டிருப்பவர் எங்கள் மறத்தமிழன் சிவாஜி

sivaa
16th August 2019, 07:01 AM
சௌத்திராம் அவர்களிடத்தில் சொல்வதற்கோ வாதிடுவதற்கோ
ஒன்றும் கிடையாது கீரல் விழுந்த ரெக்காட் போல சொன்னதையே திரும்பத்திரும்ப
கீச்சிட்டுக்கொண்டு இருப்பார்கள்.

sivaa
16th August 2019, 07:13 AM
இங்கே வந்து கீச்சிட்டுக்கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைகளுக்கு
மூளைச்சலவை செய்யும் ஸ்டண்ட் நடிகரின் கை கூலிக பலருக்கும்
நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் நன்கு தெரியும்.
அதனை பொறுத்துக்கொள்ளமுடியாமல்தான் கீழ் மட்டங்களை
மூளை சலவை செய்து ஏவிவிட்டு குளிர் காய.ந்துகொண்டிருக்கிறார்கள்

sivaa
16th August 2019, 07:34 AM
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)

தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?

தொடர்ந்து பார்ப்போம்....

sivaa
16th August 2019, 07:38 AM
தன் இமேஜைப்பற்றி கவலைபடும் ஒருவன்
என்ன செய்வான் ?

பொய் சொல்லுவான் புரட்டுச் செய்வான் மக்களுக்கு முன்னால் நடிப்பான்.

sivaa
16th August 2019, 07:42 AM
நடிகர் திலகம் தன் இமேஜைபற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது.

ஸ்டண்ட் நடிகர் தன் இமேஜை பற்றியெ எப்பொழுதும் சிந்தனையில் இருந்தார்.

sivaa
16th August 2019, 07:44 AM
ஆட்ச்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை தன் வேலையை காண்பிப்பதாக தகவல்.

sivaa
16th August 2019, 08:26 AM
சென்னையில் 50 நாட்களை கடந்து வெற்றிபவனி வரும்
வசந்த மாளிகையை தூக்கச் சொல்லி அதிகாரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டர்கள்.

sivaa
16th August 2019, 08:33 AM
ஸ்டண்ட் நடிகரின் அடிமை பெண் படத்தில் ஒரு காட்சி
ஒற்றை கால் இல்லாத அசோகனுடன் சண்டையிட
தான் நேர்மையாளனாம் என படத்தில்தான் காட்டுவதற்காக
தனது ஒருகாலை கட்டிக்கொண்டு சண்டையிடுவார்.
ஆனால் நிஜத்தில் எல்லாம் பின்கதவால்தான்.
அப்படித்தான் அவரது சீடர்களையும் வளர்த்துவிட்டு சென்றிருக்கிறார்.

gingerbeehk
16th August 2019, 03:17 PM
வணக்கம் நண்பர்களே...அருமையான பதிவுகள்.

வாழ்த்துக்களுடன்,
ஜாக்

sivaa
17th August 2019, 08:01 AM
மீண்டும் திருச்சியில் சிவாஜி ரசிகர்களின் கொண்டாட்டம்!! இன்று முதல் திருச்சி கெயிட்டியில் "வாழ்க்கை "

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68809559_1435277579948234_3715384154011992064_n.jp g?_nc_cat=106&_nc_oc=AQlWNg7AAPXS5dGrK-yvOPpkndkfdugdZC6UwEfqdR6xhfsEqWfwcnmMMh5AiM5vR8Y&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=5e9fac1fdbfebbc2e42429ea2d7020ed&oe=5DD0558D


Thanks Baskar .Govindan

sivaa
17th August 2019, 08:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68523668_2542745889120885_905151940881547264_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQm2EEJZUFGNr2tygC1KSKcwGeJrc0ZY9Vi2S0QDDdv _OuVrpy1ro56y7jbIP9VYxJs&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7476c08ac0abef2cb68908ba7a008b15&oe=5DE7206D



Thanks nilaa

sivaa
17th August 2019, 08:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68601474_1606810576116391_5361138995327664128_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQlRAsdYxLqwruBrOi_fzlYgg2BvELa-uThOj7JEhSKzDqHA1CGMGqX3pWq62lKrOgM&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=e9f10ea5bbaa24611d424fd57b1102b6&oe=5DE2C353


Thanks nilaa

sivaa
17th August 2019, 08:07 AM
சுதந்திர இந்தியாவில் தேசியத்தையும், ஒருமைப்பாட்டையும் தனது இரு கண்களாக பாவித்த உன்னத கலைஞருக்கு...
இந்திய நாட்டையும், தாய் நாட்டு மக்களையும் தன் உயிரினும் மேலாக எண்ணி வாழ்ந்த
உண்மையான மனிதருக்கு...
... தேசிய தலைவர்களுக்கு உயிர் கொடுத்து இன்று வரை அவர்களின் பெயரையும், புகழையும் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள பாலமாக விளங்கும் நடிகர் திலகமெனும் மாமேதைக்கு...
சுதந்திர தினம், குடியரசு தினங்களில் ராஜ கம்பீரமான தலைவரின் சிலைக்கு புதுவை அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ராஜ மரியாதை...
இது வெறும் மரியாதை என்று மட்டும் சொல்லிவிட முடியாது...
புதுவையில் உள்ள தலைவர்களின் சிலைகளை அலங்கரித்து அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம்...
உத்தம தலைவரின் ரசிகர்கள் நாம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம்...
அன்பு இதயங்களுக்கு
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
பின் குறிப்பு : இன்று (15.08.2019) மாலை நமது உத்தம தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலை வண்ண விளக்குகளால் ஜொலித்திடும் அழகான அந்த காட்சியை வீடியோவாக தங்களுக்கு பதிவு செய்ய இருக்கிறேன்...
காத்திருங்கள்... கண்டு மகிழுங்கள்...

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69108178_735634793518498_4684343782605324288_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQmV_LnqqmBnn6cceu0UdXWLtKfdX4VpneAd8IIJpqH x1aWou333Eag_Q567yYo2Qg0&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=b2792bdbbddca700e1ce94cfea6f7f3e&oe=5DCAEFE0https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69085247_817837898612907_3530138920295596032_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQl1ftJg7infQ41c9GW6fxRL-5Z6ir4dBYjgWTMQ5PMR52rL-15cSvBTi4kD9ruuNMg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f7f68dd4d940e83c1e6cc77b78a2335c&oe=5DDCC7B5https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69118942_392347198092738_3691249285371789312_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQkBCOhEJU8kq5KPAnc4xmJ8FWv1pnzEOjKmoASbWYv 9HwiXn8-fzTBBvBMHOSXtB94&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ee20512dd17e74a8afe5edbaa65768ff&oe=5DD48BA5





நன்றி M V Ram Kumar (F Book)

sivaa
17th August 2019, 08:11 AM
ஆவணப் பொக்கிஷங்கள்

பார்வை இழந்த வாலிபரிடம் கருணை காட்டும் கலைக்குரிசில்.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69236041_466951413888866_8802675553510359040_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQmBGBBKrAe0RHvwjoIHipw7Tek8sjIkEeFvSrmGUoE CCnfRzfVZLfwTgGojVFZeSWo&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=e07ddccae56fa8d2776d6786ea95fd2d&oe=5DD9F830



நன்றி Vasu Devan முகநூல்

sivaa
17th August 2019, 08:41 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68396584_461023897782604_9160627460922933248_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQno7Yn_gV368bNxRPMkB1iZoEN9VzNBNAp_bLypsvO nKnajDlkgwDSWsoZxOGP11KM&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f107810c9301129b8b0bab6727355dce&oe=5DE268A6



Thanks Baskar .Govindan

sivaa
17th August 2019, 08:42 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68780356_662942467450142_2239824594460475392_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQmTB6vmJPlLzRTP69CFqml-tzThxPXdTFhcR9AHNtk75KxLKbDxNW8GikOFG1XiY6A&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d151c16dfa2ac51b1815b6a494cb6016&oe=5DD62C04

Thanks Baskar .Govindan

sivaa
17th August 2019, 08:43 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68291357_477666149752038_5063705264469835776_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQk2XoBKeAsol4Y2_E67cOC0C-oqKi8xdv-Fs96eQQ6xoiXo_U3JhBIYMHSnzpwqXiw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=9330a9e0c624e9e34a32242587e5f358&oe=5E11DA37




Thanks Baskar .Govindan

sivaa
17th August 2019, 08:45 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68809574_2241610902629077_3621752939246256128_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQkDSB2a0dInEwyx_CkjTqGvIZ2Fr6pZegW2O84TzuD K_aq5BAD5wGRWtkpPWOa7VWE&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ae16fb7eb4ac88a015ac12d749a310a4&oe=5DDA1C68



Thanks Gururo smurukesan ( F Book)

sivaa
17th August 2019, 08:46 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68464227_693227481140128_204068125459611648_n.jpg? _nc_cat=103&_nc_oc=AQkUcD-RhWdmAj9zCiOw80NLUE4NIuAoY-iPgSRIcIjaDR45rO7wKxxBGXFyVcLIv7U&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7facc53e12faeedea754614dfd6a251f&oe=5DCB1DDC



Thanks Gururo smurukesan ( F Book)

sivaa
17th August 2019, 08:47 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69097093_2957644994262677_5349394909767925760_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQmT8BZs1Sz9sL-lkO-MRTGMZZpGKJfVoF3NzhiYH4EhKXhhY7Rf5BV2mn_Jm_tDj28&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=49b843607d0bab3fa231f42d73a31d10&oe=5E12CF41



Thanks Gururo smurukesan ( F Book)

sivaa
17th August 2019, 09:35 AM
எந்த ஆண்டும் இல்லாத வகையில்
இந்த ஆண்டு சுதந்திர தினம்
மிகவும் மனநிறைவோடு கொண்டாடப்பட்டது.
... ஆம்,
நமது சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில், மதுரை கடச்சனேந்தலில் உள்ள
ஆர்.சி. தொடக்க பள்ளியில் படிக்கும், ஏழை மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள் கொடுத்து, அவர்களுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பார்கள்...
நாங்கள்
குழந்தைகளின் சிரிப்பில் சிவா ஜி யை கண்டோம்.
நடிகர்திலகத்தின் புகழ்பாட,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் இதுபோன்ற சமூகநல பணிகள் தொடர்ந்து செய்யப்படும்.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69227316_404173940450977_8204640446039719936_n.jpg ?_nc_cat=109&_nc_oc=AQlY5NbTFKkX0HexY6Yzu0gCKLVeha6h6QBjO4kuy3w J88IwgJA-gYrRw5QpdJi2Bbw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6661e23ba8e116009ef91019aac64145&oe=5DCD45E9


நன்றி Sundar Rajan (முகநூல்)

sivaa
17th August 2019, 09:36 AM
தொடர்ந்து மதுரையில் வெளியாகும்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
படத்திற்கு 10 பிட் போஸ்டர் அடிக்கப்படுகிறது.
இதோ, தற்போது, ...
மதுரை சென்ட்ரலில் வெளியாகும்,
நடிகர்திலகம், இளையதிலகம் இணைந்து நடித்த திருப்பம் படத்திற்கு 10 பிட் போஸ்டர் அடித்து,
மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை தெற்கு தொகுதி சிவாஜி சமூகநல பேரவை தலைவர் பச்சைமணி செய்து வருகிறார்.
அவருக்கு உலகெங்கும் வாழும் அனைத்து
சிவாஜி ரசிகர்களின் சார்பிலும்
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும்
நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
இதோ மதுரையை கலக்கும் 10 பிட் போஸ்டர்....


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68740853_2361269054087294_3758418747065368576_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQlurd9DnnFxY9W9ieqEnoly_OuiZ-rs8Qm3nGt9OWXoSe-qPntEABSGk4zXkLHQTHQ&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=813bfcb8bb4d8d9a9889db34b3de3def&oe=5DD431F4


நன்றி Sundar Rajan (முகநூல்)

sivaa
17th August 2019, 09:42 AM
மதுரை பேச்சியம்மன் கோவில் பகுதியில்,
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில்...
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில்....
... நானும் ரமேஷ்பாபு அவர்களும் கலந்து கொண்டோம்.


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68751376_486514508812271_2519458597864210432_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQm1eGUriIsnfG7F8scIipQhVFTGfO-JnO6IKxpDyHJPan09P_ipmg3uIb2n_N14LYk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=2cd31884d65eed3c9c7422991babf511&oe=5DDD94DE


நன்றி Sundar Rajan (முகநூல்)

sivaa
17th August 2019, 09:44 AM
சுதந்திர தினத்தை முன்னிட்டு.....
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில்,
மதுரை கடச்சனேந்தலில் உள்ள ஆர்.சி.உயர்நிலை பள்ளியில்,
... மரக்கன்றுகள் நடப்பட்டது.


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68560910_1729064733904532_337470449623498752_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQm-c7DR_L4qgDafsgcgaP6flSN0AfSVlIGb4iMGptOCAn3uu3k5MZ fitcjNDKRWTS0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=61db396131857d9a91eda2a71107363b&oe=5E1154E9


நன்றி Sundar Rajan (முகநூல்)

sivaa
17th August 2019, 09:55 AM
மறுபடியும் கீரல் விழுந்த ரெக்காட் போல் சொன்னதையே திரும்பத்திரும்ப
கீச்சிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பெயர் இல்லாத கோழைகள்.

sivaa
17th August 2019, 10:12 AM
தங்கள் ஸ்டணட் நடிகரின் படங்கள் மட்டும்தான் சாதனை செய்யும் செய்கிறது
மற்றைய எந்த நடிகர்களின் படங்களும் சாதனை செய்வது கிடையாது, செய்யாது ,செய்யக்கூடாது,.
இப்படியான மமதை குணம் ஸ்டணட் நடிகருக்கு இருந்தது
இதனை அடிஒற்றி செயல்படுகிறது மமதைகொண்ட கூட்டம்.

ஏனைய நநடிகர்களின் படங்கள் சாதனை செய்யாது என நினைப்பது அறிவற்றதனம்.
செய்யக்கூடாது என நினைப்பது போக்கிரித்தனம், மமதைக்குணம், மதிகெட்டதனம்.

sivaa
17th August 2019, 10:26 AM
பிரான்சில் இருந்தும் துபாயில் இருந்தும் நண்பர்கள் கைவிரித்துவிட்டதனால்
நாடோடி மன்னனை 100 நாட்கள் ஓட்டமுடியாமல்போய்விட்டது
கிடைத்திருந்தால் ஓட்டியிருப்பீர்கள்.
ஆனால் விட்டபிழையால்தான் அவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.
பின்ன என்ன கர்ணன் வசூலை மிஞ்சி காட்டச்சொல்லி பணத்தை வாங்கிபோட்டு
ஆட்டையபோட்டா எப்படி மறுபடியும் அனுப்புவார்கள்?
கர்ணனை மிஞ்சினபாடும் இல்லை பாவம ஏமாந்த சோணகிரிகள்.

Russelldwp
17th August 2019, 10:01 PM
திருச்சி கெய்ட்டியில் தாய்மார்கள் ஆதரவோடு நல்ல வசூலுடன் வெற்றி நடை போடுகிறது வாழ்க்கை சற்று இக்காவியத்தின் வரலாற்று சாதனையை பின்னோக்கி பார்ப்போம் --14/04/1984 வெளியான இப்படம் திருச்சி மாரிஸ் ராக் திரையில் 48 நாட்கள் மதியம் மற்றும் மாலை காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் (அந்த நேரம் சில கெடுபிடிகள் காரணமாக மக்கள் இரவு காட்சிக்கு அதிகம் வருவது குறைவு )--இப்படம் மாரிஸ் காம்ப்ளெக்ஸில் 84 நாட்கள் ஓடியது -- இதற்கு போட்டியாக வெளிவந்த(20/04/1984) ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு ரம்பா தியேட்டரில் 49 நாட்கள் ஓடியது --தலைமுறை கடந்து சாதனை படைத்த ஒரே நடிகர் சிங்கத்தமிழன் சிவாஜி

sivaa
18th August 2019, 09:19 AM
நடிகர் திலகத்தின் படங்கள் செய்யும் சாதனையை நாங்கள் வெளிப்படுத்தினால்
தங்களது படங்களின் சாதனைகள் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குதரம் இறங்கிவிடுவதனால்
குய்யோ முறையோ என கூக்குரல் இடுவது பொய்யுரைப்பது கண்டமேனிக்கு திட்டுவது
இல்லாதபொல்லாதவற்றை எழுதுவது நடிகர் திலகத்தின் பட போஸ்ட்டர்களை கிழிப்பது
சாணி அடிப்பது மற்றும் பலவற்றை ஸ்டணட் நடிகரின் ரசிகர்கள் அந்தக்காலத்தில்
இருந்தே செய்து வருகிறார்கள் .என்ன செய்தும் என்ன பிரயோசனம் நடிகர் திலகத்தின் சாதனையை
இல்லாமல் செய்ய முடிந்ததா? அல்லது மறைக்கத்தான் முடிந்ததா?

sivaa
18th August 2019, 09:31 AM
சிவாஜி கணேசன் அவர்களைப்பற்றி
தரக்குறைவான விமர்சனம், அவதூறுப்பிரச்சாரம் போன்றவற்றை
தான் நல்லபிள்ளைபோல நடித்துக்கொண்டு ஸ்டண்ட் நடிகர்
கைக்கூலிகளை வைத்து செயல்படுத்திவந்தார்.
அப்படியான கைக்கூலிகளின் செயல்பாடு இன்றும் தொடர்கிறது.

sivaa
18th August 2019, 10:07 AM
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)

தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?

தொடர்ந்து பார்ப்போம்....

முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
அந்தநேரத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் திருமணத்தன்று வேறு ஒரு சம்பவமும் நடந்தது,
ஸ்டண்ட் நடிகர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது
உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசத்தெரியாத நடிகர் திலகம் அவர்கள் அது பற்றி அன்றைய அவரது
திருமண நாளில் பேச்சு வந்தபொழுது ஸ்டண்ட் நடிகரை பார்த்து அண்ணே உங்களுக்கு கோட்டு சூட்டு போட்டு நடிக்கிறதைவிட
வாள் வீச்சுத்தான் எடுபடும் என்று மனதில் ஒளிவு மறைவு இல்லாம வஞ்சகம் எதுவுமின்றி கூறிவிட்டார்.
அந்தக்கூற்று வஞ்சகம் பொறாமை கொண்ட ஸ்டண்ட் நடிகரின் மனதில் பெரும் தீயாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது,
இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று வன்மத்துடன் கறுவிக்கொண்டார்.

தொடரும்.......

sivaa
18th August 2019, 10:22 AM
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார்
கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார்
1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68323035_2442410032658371_6352558481085562880_n.jp g?_nc_cat=106&_nc_oc=AQkvwFYqJ6tYmujFlZ3aUcwMwwVU4j4L-1g-CNMhmxsuzZ-HesTJBjfR8EHBUdTFYCE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d2fed28812ef35167b38a25d85c8b477&oe=5DE5950B


நன்றி Vijiya Raj Kumar(முகநூல்)

sivaa
18th August 2019, 10:23 AM
படித்ததில் பிடித்தது.ஒரு சகோதரரின் ஆதங்கம்பாரதியாரும் பாரதிதாசனும் தனி நபரை புகழ்ந்து கவிதை பாட மாட்டார்கள். பாரதிக்கு எட்டையபுரம் மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேலை தந்தார். ஆனால் பாரதி அந்த வேலையை வேண்டாம் என உதறி தள்ளி விட்டு தமிழ், தாய்நாடு பற்றி பாடினார். காந்தியைப் பற்றி பாடுவது வேறு விஷயம். அவர் தியாகி. அதே மாதிரி பாரதிதாசனும். ஆனால் அவரே 1959 ஏப்ரல் 29ந் தேதி குயில் ஏட்டில் சிவாஜியின் கொடை செய்தியை பாராட்டி கவிதை பாடியுள்ளார். 1959லியே காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ...ஒரு லட்சமும் மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூ இரண்டரை லட்சமும் வழங்கிய செய்தி அப்பாடலின் மைய கரு. இக்கவிதையை கோவிந்தராஜுலு பாலகிருஷ்ணன் என்ற சிவாஜி ரசிகர் யூடியூப்பில் பதிவிட்டு அதைப்பார்த்து தான் அதை நான் சிவாஜியின் கொடை செய்தியில் குறிப்பிட்டுள்ளேன். நான் இக்கவிதையை எல்லோரது கவனத்திற்கு கொண்டு வந்த அந்த ரசிகரை பாராட்டிய போது அவர் " சார், நீங்கள் சிவாஜி பற்றி நிறைய எழுதுறீங்க. உங்கள் பணி பெரியது. அதோடு ஒப்பிடுகையில் நான் ஒன்றும் செய்யவில்லை " என அடக்கமாக பதில் தந்தார். நானும்" ஐயா, சிவாஜி நிறைய செய்துள்ளார் *. அதை உலகறிய செய்தல் என் கடமை " என பதில் போட்டேன். நீங்களும் அந்த ரசிகர் பெயரை யூடியூப்பில் பார்த்திருக்க கூடும்.
இது நிற்க.
சிவாஜி 1959 லேயே நமக்கு தெரிய ரூபாய் மூன்றரை லட்சம் தந்துள்ளார். அன்று ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலம் இன்று மூன்று கோடிக்கு போகிறதெனில் சிவாஜி தந்த 3.5 லட்சத்தின் பண மதிப்பு இன்றைய காலத்தில் என்ன என்பதை கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள். இது ஒரு துளிதான். ஆனால் அவர் செய்த அத்தனையையும் கணக்கிட்டால் எவ்வளவு வரும்? எதற்காக சொல்கிறேன் எனில் பாரதிதாசன் கவிதை பாடிய ஆதார செய்தியை எவனாவது மறுத்தால் அவனைவிட முட்டாள் உலகில் எவனும் இல்லை . நன்றி கெட்ட நாய்கள். சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை அவர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் அவரை தோற்கடித்த நன்றி கெட்ட நாய்கள் வாழும் மாநிலம் தமிழகம். தகுதி மிக்க தமிழனை ஏற்காதவன் தமிழன். எண்ணிக்கையில் எட்டப்பர்கள் தமிழகத்தில் அதிகம். ஜனநாயகத்தில் தலைகள் எண்ணப்படுவதால் அது வெற்றியாகிறது. தலைக்குள் மூளை உள்ளதா என எவனும் பார்ப்பதில்லை. இது ஆதங்கத்தின் வெளிப்பாடு. சரிதானே?

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68817869_2386464208097201_3509615341762248704_n.jp g?_nc_cat=106&_nc_oc=AQlbyGnCFfUupca9oPTYs48kIkKT7tAy6Po94F2G6hr NnHJ2rLoFneubimOTNEYLndQ&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=2a0e4428c4dda45a81ca39dd376f3a11&oe=5DCB8BAC


நன்றி Vijiya Raj Kumar(முகநூல்)

sivaa
18th August 2019, 10:29 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68476432_2771417219557351_3527757365224931328_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQk5WKjcDQJqS522cC1X24dSSUs3FKXuGAv2ODgC9uk a6KN5cnxhxEPLCi7Mj-_A6ow&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f35768c03b418cfe7527c4932d99dc56&oe=5DD76E8A



நன்றி Rajaram Msr(முகநூல்)

sivaa
18th August 2019, 10:30 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68443007_2151463731817459_2577438388617478144_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQn0-jGnbyaY92bDU1nVvfCZDB0zRSg6a94BsnJ7NPEuNWXNIhL45fc sGjhFHkC_dIU&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=0410d6bfefcbd5bc27790ca962589a28&oe=5DD2650D




நன்றி நிலா(முகநூல்)

sivaa
18th August 2019, 10:37 AM
ஆவணப் பொக்கிஷங்கள்
மிக அரிய ஆவணம்
'காத்தவராயன்' படப்பிடிப்பில்.
... இயக்குனர் ராமண்ணா மற்றும் ஓ.ஏ.கே. தேவருடன்


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69090844_1528394227285733_7054185094474366976_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQlacXeJZ4jOcEzgeQdmrDfKFpW1111TlFQipgG7muU gSgTBUvnUxN7ngplU4RHKH6Y&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=1cd2fabbabcda70a65a54e5a1a77127b&oe=5DE3D046


நன்றி Vasu Devan (முகநூல்)

sivaa
18th August 2019, 10:38 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68323489_1655579017906833_8577700635355381760_n.jp g?_nc_cat=103&_nc_oc=AQml1yzt5Y-BiwOkLyPBbSU0wF4x9-MScE9WmpCUcQt9GPBDExjJaY57Yk1curtf5dA&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=0f3f200e4e51c64525eab99a4e4926f4&oe=5DE36CE6



நன்றி H O S (முகநூல்)

sivaa
18th August 2019, 10:43 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69292318_569840800218486_3241134041281331200_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQncHLbxW5h8bAbY1GipLoxz9Uz-anCXO3rd-dS8OsAiw1QZuyvt3kLwW5pmAYQXI1w&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=3d484e484be2246b769ca522f06d0c09&oe=5DD71BDB



நன்றி Padmanaban A(முகநூல்)

Russelldwp
18th August 2019, 11:42 AM
திருச்சி மாநகரில் டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜியின் டிஜிட்டல் வெளியீட்டு படங்களின் ac அரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ 100வைக்கப்பட்டுள்ள )சாதனைகள் 1. கர்ணன் 2012 - ரம்பா --28 நாட்கள் --ஊர்வசி --21 நாட்கள் --டிவி கோவில் வெங்கடேச--7 நாட்கள் (ரம்பா --22 லட்சம் --ஊர்வசி --1.32 லட்சம் --வெங்கடேசா --43000 ருபாய் )2.வசந்த மாளிகை 2013---திருச்சி --சோனா --7 நாட்கள் (வசூல் ருபாய் 260000) (சரியாக டிஜிட்டல் செய்யாதபோதும்)3.வீரபாண்டிய கட்டபொம்மன் 2015 --திருச்சி - கலையரங்கம் --7 நாட்கள் --ஷிபட் ஊர்வசி --7 நாட்கள் (கலையரங்கம் --ருபாய் 310000 (ஞாயிறு மாலை 550 பார்வையாளர்கள் -கட்டணம் ரூ 100--ஊர்வசி--வசூல் ருபாய் 80000)4. மீண்டும் வசந்த மாளிகை 2019--திருச்சி -la சினிமா மற்றும் சோனா (தலா இரண்டு காட்சிகள் ) ஞாயிறு மாலை காட்சி இரண்டு அரங்குகளும் ஹவுஸ்புல் அன்றைய தினம் அரங்கு நிறைந்த ஒரே படம் வசந்த மாளிகை (பல புது படங்கள் திரையிட்ட போதும் )

siqutacelufuw
18th August 2019, 08:17 PM
சிவாஜி கணேசன் அவர்களைப்பற்றி
தரக்குறைவான விமர்சனம், அவதூறுப்பிரச்சாரம் போன்றவற்றை
தான் நல்லபிள்ளைபோல நடித்துக்கொண்டு ஸ்டண்ட் நடிகர்
கைக்கூலிகளை வைத்து செயல்படுத்திவந்தார்.
அப்படியான கைக்கூலிகளின் செயல்பாடு இன்றும் தொடர்கிறது.

திரு. சிவா அவர்கள் அறிவது ..... உங்கள் அபிமான நடிகரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள் ! (அவர் புகழ்ச்சிக்குரியவரா இல்லையா என்பது வேறு விஷயம் ... அது மக்கள் தீர்மானிக்கப் பட வேண்டியது.) எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ! ஆனால், தேவையில்லாமல், தமிழ்த் திரையுலகின் அழியா எங்கள் மக்கள் திலகத்தை விமர்சித்தால்
விபரீதமாகிவிடும். "கைக்கூலிகள்" போன்ற அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு எங்களுக்கும் விமர்சிக்க தெரியும். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலை விமர்சித்து வி.சி. கணேசன் அவர்களின் ரசிகர்களின் பாராட்டுக்களை பெறலாம் என்று cheap popularity தேடிக் கொள்ளாதீர் ! இத்துடன் அடங்குவீர்கள் என்று நினைக்கிறேன். இந்த பதிவை காணும் நடிகர் திலகம் திரியின் மூத்த பதிவாளர்கள், அன்பர்கள், கொஞ்சம் திரு. சிவா அவர்களுக்கு அறிவுரை கூறவும் ! நன்றி !

siqutacelufuw
18th August 2019, 08:28 PM
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)

தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?

தொடர்ந்து பார்ப்போம்....

முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
அந்தநேரத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் திருமணத்தன்று வேறு ஒரு சம்பவமும் நடந்தது,
ஸ்டண்ட் நடிகர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது
உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசத்தெரியாத நடிகர் திலகம் அவர்கள் அது பற்றி அன்றைய அவரது
திருமண நாளில் பேச்சு வந்தபொழுது ஸ்டண்ட் நடிகரை பார்த்து அண்ணே உங்களுக்கு கோட்டு சூட்டு போட்டு நடிக்கிறதைவிட
வாள் வீச்சுத்தான் எடுபடும் என்று மனதில் ஒளிவு மறைவு இல்லாம வஞ்சகம் எதுவுமின்றி கூறிவிட்டார்.
அந்தக்கூற்று வஞ்சகம் பொறாமை கொண்ட ஸ்டண்ட் நடிகரின் மனதில் பெரும் தீயாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது,
இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று வன்மத்துடன் கறுவிக்கொண்டார்.

தொடரும்.......

சமூகப் படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து, 115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து புகழ் பெற்று, 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்களை பின்னுக்கு தள்ளி, தமிழ் திரையுலகின் அழியா நாயகன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்று முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ! அது மட்டுமல்லாமல், புராணப் படங்களில் நடித்த நடிகர்களை புறந்தள்ளி, புராணப் படங்களில் நடிக்காத புரட்சித் தலைவரை கலியுக கடவுளாக மக்கள் பார்த்தனர்; தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலும் அமர வைத்தனர்.

sivaa
19th August 2019, 08:13 AM
திரு. சிவா அவர்கள் அறிவது ..... உங்கள் அபிமான நடிகரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள் ! (அவர் புகழ்ச்சிக்குரியவரா இல்லையா என்பது வேறு விஷயம் ... அது மக்கள் தீர்மானிக்கப் பட வேண்டியது.) எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ! ஆனால், தேவையில்லாமல், தமிழ்த் திரையுலகின் அழியா எங்கள் மக்கள் திலகத்தை விமர்சித்தால்
விபரீதமாகிவிடும். "கைக்கூலிகள்" போன்ற அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு எங்களுக்கும் விமர்சிக்க தெரியும். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலை விமர்சித்து வி.சி. கணேசன் அவர்களின் ரசிகர்களின் பாராட்டுக்களை பெறலாம் என்று cheap popularity தேடிக் கொள்ளாதீர் ! இத்துடன் அடங்குவீர்கள் என்று நினைக்கிறேன். இந்த பதிவை காணும் நடிகர் திலகம் திரியின் மூத்த பதிவாளர்கள், அன்பர்கள், கொஞ்சம் திரு. சிவா அவர்களுக்கு அறிவுரை கூறவும் ! நன்றி !

திரு செல்வகுமார் அவர்களுக்கு வணக்கம் !

விபரீதம் ஆகிவிடும் என்பதற்கு விளக்கம் தர முடியுமா?

மிகுதி பின்னர்.

sivaa
19th August 2019, 08:16 AM
சமூகப் படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து, 115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து புகழ் பெற்று, 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்களை பின்னுக்கு தள்ளி, தமிழ் திரையுலகின் அழியா நாயகன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்று முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ! அது மட்டுமல்லாமல், புராணப் படங்களில் நடித்த நடிகர்களை புறந்தள்ளி, புராணப் படங்களில் நடிக்காத புரட்சித் தலைவரை கலியுக கடவுளாக மக்கள் பார்த்தனர்; தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலும் அமர வைத்தனர்.

ஆட்சிக்கட்டில் பலபேர் இருந்தார்கள் சார் மா கோ ரா மட்டுமல்ல.

sivaa
19th August 2019, 08:22 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69220752_484153398811132_6963276171714756608_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlY1TXvW34ibW6-sjsIp9lCRxzpahiLTDGWMe9fWt_3DrqJ-JryetXRwc8lDnROV-s&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=c84d1ea1b1c71434e9c580fb83c80aa9&oe=5DD20595



நன்றி H O S (முகநூல்)

sivaa
19th August 2019, 08:23 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68835072_2585191074834797_799152878160707584_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQkVmrwzBlcH4kIKoTqbHxyZiTBu1SbzRhRwIBLL_6z JXKiKlLp7t0TaDp7803BZE94&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=c9c82352c8231abcfd4ec1768dcf85ec&oe=5DCF43A4

நன்றி H O S (முகநூல்)

sivaa
19th August 2019, 08:24 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69266243_2273904252922581_1466356299334680576_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQlARXmZcN9YK1LcC3QU5drlzjFf6cBvPQdei4X7ca3 wCLnYJDqWoBNYXFaUIM0iLd4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=4c6178ad58b7d433371d892d3e1cf3bc&oe=5E0E4636


நன்றி H O S (முகநூல்)

sivaa
19th August 2019, 08:24 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69501585_360521681566242_5987396427389599744_n.jpg ?_nc_cat=100&_nc_oc=AQmLHDXOCHVk6TeAwjSUYgHUJy08qxIYXujorlFQ-5Yqz5EqZVUXDRrwua72iouB1ko&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=ce6abefee87f3a0ddfafdf04e9f38b92&oe=5DD3DBE5


நன்றி H O S (முகநூல்)

sivaa
19th August 2019, 08:35 AM
வசூல் சக்கரவர்த்தி என்றுமே நடிகர் திலகம் மட்டுமே!
அதற்கு ஒரே ஒரு உதாரணம் வசந்த மாளிகை,
29-09-1972 ல் வெளியான வசந்த மாளிகை பல்வேறு விதமான சாதனைகளை படைத்தது,
... 1) கொழும்பு - கேபிடல் திரையரங்கு- 250 days
2) யாழ்ப்பாணம் - வெலிங்டன் - 208 days
3) மதுரை - நியூ சினிமா. - 200 days
4) சென்னை - சாந்தி - 175 days
5) கொழும்பு - ப்ளாஸா. - 175 days
6) சேலம் - ஜெயா. -- 141 days
7) வேலூர் - அப்ஸரா -- 141 days
8) சென்னை - கிரவுன் - 140 days
9) சென்னை - புவனேஸ்வரி -- 140 days
10) தஞ்சை - ஜூபிடர் - 125 days
11)கோவை - ராஜா - 120 days
12) மாயவரம் - அழகப்பா -- 109 days
13) திருச்சி -- ராஜா - 107 days
14) குடந்தை - ஜூபிடர் - 107 days
15) ஈரோடு -- முத்துக்குமார் - 107 days

மேலும் தமிழகத்தில் திரையிடப்பட்ட 50 க்கும் மேற்பட்ட ஊர்களிலும் முதல் வெளியீட்டில் 50 நாட்களை கடந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது,
தற்போது 47 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகி 52 வது நாள் வெற்றியை சென்னை ஆல்பட் திரையரங்கில் 11-08-19 ஞாயிறு அன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது,
பட இணைப்பு திரு சொர்க்கம் நாகராஜன் அவர்களுடன் விழா அன்று எடுத்துக் கொண்டது


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68488415_484884442297579_699832257656913920_n.jpg? _nc_cat=108&_nc_oc=AQnHyDAYcYUMQPQxSCBSUaP7HFDhAbbDjVtD1dHmGTL MBYbDq2wuHIwrPwzIplvH6yM&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=2bfed5ac67a39b4df423e59a2ccc28fe&oe=5E13103B


Thanks Sekar (fcebook)

okiiiqugiqkov
19th August 2019, 03:05 PM
திரு செல்வகுமார் அவர்களுக்கு வணக்கம் !

விபரீதம் ஆகிவிடும் என்பதற்கு விளக்கம் தர முடியுமா?

மிகுதி பின்னர்.

சிவா அவர்களுக்கு

விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...

அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.

விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.

இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.

இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .

உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.

நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.

sivaa
20th August 2019, 08:51 AM
சிவா அவர்களுக்கு

விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.


யாரோ எழுதிய விடயம் எழுதியவருக்குத்தான் விபரம் தெரியும் அப்படியிருக்க
இவர் பதறியடித்து பாய்ந்து ஓடிவந்து பதிலளிக்கவேண்டிய காரணம் என்ன?

sivaa
20th August 2019, 08:56 AM
சிவா அவர்களுக்கு

விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும்.

இவர் குறிப்பீடும் துப்பாக்கிச்சூடு ரத்தினமாலைகள் எல்லாம் ஏதோ தாங்கள் முன்னர் எழுதாதமாதிரியும் இனிமேல்தான் எழுதுவோம் என்பதுமாதிரியும்
என்னே சுத்தமான பிறவகளப்பா.

sivaa
20th August 2019, 09:04 AM
எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும்.

இந்த விபரீதம் ஆகிவிடும் என்பதற்குத்தான் விளக்கம் கேட்டேன்
ஆனால் இங்கு வந்து பதிலளித்தவருக்கே விளக்கம் தெரியவில்லை
மீண்டும் அதையே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அதாவது விபரீதம் ஆகிவிடும்

sivaa
20th August 2019, 09:07 AM
எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

இவையெல்லாம் உங்களுக்கு எழுத்திலும் சினிமாவிலும்தான் நிஜத்தில் கிடையாது

sivaa
20th August 2019, 09:29 AM
உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.

எம் ஜீ ஆர் திரி பாகம் 25 ல் ... பக்கம் 25ல் பதிவு 244 & 245 ... பக்கம் 26ல் பதிவு 259(இது சம்பிள் மட்டும்தான்) பார்த்துவிட்டு வந்து மிச்சத்த சொல்லுங்க

okiiiqugiqkov
20th August 2019, 03:17 PM
இந்த விபரீதம் ஆகிவிடும் என்பதற்குத்தான் விளக்கம் கேட்டேன்
ஆனால் இங்கு வந்து பதிலளித்தவருக்கே விளக்கம் தெரியவில்லை
மீண்டும் அதையே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அதாவது விபரீதம் ஆகிவிடும்

சிவா அவர்களுக்கு,


செல்வகுமார் அப்பாவுக்கு கொஞ்சம் வேலை அதிகம்... பிசி... அதனாலதான் அவர் சார்பில் நான் விளக்கம் சொன்னேன். என் கருத்துதான் அவர் கருத்தும்.

உங்கள் கேள்விகள் எல்லாத்திற்கும் நேற்றே விளக்கம் சொல்லியாகிவிட்டது.

மறுபடியும் பொறுமையாக படிச்சு பார்த்து புரிஞ்சு கொள்ளவும்.

நன்றி.

sivaa
21st August 2019, 06:29 AM
கவுண்டமணி செந்திலின் ஒரு ரூபாவிற்கு 2 வாழைப்பழ பகிடிமாதிரி
போகுது இந்த விபரீதத்தின் விளக்கம்
சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வேண்டாம்
இங்கு வந்து இத்திரியை பார்க்கும் ஏனைய ரசிகர்களே
உங்களுக்காவது என்ன விபரீதம் என்ற விளக்கம் புரிந்ததா?

(சுஹராம் போன்று எம் ஜீ ஆர் ரசிகன் யாராவது ஏனைய நடிகர்களின் ரசிகன் என்ற பெயரில் வந்து இதுதான் அந்தப்பழம் என்று சிலவேளை பதில அளிக்கக்கூடும்)

sivaa
21st August 2019, 06:32 AM
உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.


எம் ஜீ ஆர் திரி பாகம் 25 ல் ... பக்கம் 25ல் பதிவு 244 & 245 ... பக்கம் 26ல் பதிவு 259(இது சம்பிள் மட்டும்தான்) பார்த்துவிட்டு வந்து மிச்சத்த சொல்லுங்க

இதற்கு பதில் இல்லை

sivaa
21st August 2019, 07:07 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68542168_583565479138708_9166001276759048192_n.jpg ?_nc_cat=105&_nc_oc=AQn79n0KdvL9pHXJuj1Vtt3ns10X-EL2Q701vQws_nLeJc7opXoSZkeFEKMs9CEtXWM&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7e22401f0646f709e721b2b9dab613e8&oe=5DD192AA



Thanks H O S

sivaa
21st August 2019, 07:08 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68534203_502593163835422_2413298993560813568_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQn0rE_B32qBKZvvOMUHig8-egmEf06HrHbyt3qBDcpqDV4xKCv46kAQ_BqW9jGoUlc&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=27a42929d5e1b4ff4d99416e6d1540eb&oe=5DC7E49A


Thanks H O S

sivaa
21st August 2019, 07:10 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/67962867_901563160221064_3274775253095546880_n.png ?_nc_cat=107&_nc_oc=AQlVQPAIQNm0s0KYcFPThg5vD2Z_9tyw7PA_1cNdPVR WqBohpAIpy42FiaalbflKxkE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=127d30b7b8d257e952c6cce161602d02&oe=5DDD3AE6



Thanks S A Thiruppathyraja

sivaa
21st August 2019, 07:20 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68883581_372241270114933_790494095242952704_n.jpg? _nc_cat=101&_nc_oc=AQlBO4p7ThYwrZsXB6rN0MaM8g48n5Nla1HMF3wOZmk eQOStDXUQIshwEpIIcvCXKvw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f1257c71f0be4200d637757e83dc6b4c&oe=5DCE0E84



Thanks Sivaji Thasan Sivaji Thasan

sivaa
21st August 2019, 07:21 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68913314_2113138822313944_3097691415019257856_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQk32H75g-gOteopImQLRy0634gg17Wo_qucdEKPyD6hBe0pfP9N28ZbThkB MnPmTeA&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=91655edd7bda74f43f2a0ad271703328&oe=5DDA9CEC

Thanks Nilaa

sivaa
21st August 2019, 07:22 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68871165_2505687522995510_3019376027861254144_n.jp g?_nc_cat=106&_nc_oc=AQkztf2eVZ3smJV3BZeoAxZzSP1NoFBRr5KYcGFKUw0 KQFclvTNP8JyJ7mzttApQ9qg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=356960c04cb5d91ef91a59508189d593&oe=5DCDAD1E

sivaa
21st August 2019, 07:23 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69107197_1351796568292447_5426841180228812800_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQm0hKr4a0UY31REYdHv3prrBKTnpzy2qLFFZi42cu5 _xvuDLTfFw_p7_VO-GGQ2ZQ4&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=8212fbfc568195f8c12d7b5e0ab962d0&oe=5DD84CDE

sivaa
21st August 2019, 07:23 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68551419_401456893816030_4565209713460903936_n.jpg ?_nc_cat=101&_nc_oc=AQnVYVJm9HoZf917p3GIFy3G1wq37ec4HMJnbUIFB_2 F27G-4oXHyLueXeoQgKTZ-3c&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=0b226c115a6a2b7b4491382f0c505166&oe=5E113FF1

sivaa
21st August 2019, 07:24 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68625554_2506477686039361_3988826657115865088_n.jp g?_nc_cat=108&_nc_oc=AQkHPtbvbwR6PI6kJWmlIClxDxHdZ8dLLVeGll0qWmH A5YPPqSMiZ8TpDLrfccc7yGs&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=4b2fa45bbab256fac1ec1142df85f296&oe=5DD9D272

sivaa
21st August 2019, 07:24 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69155181_1325590410926421_5455754642367447040_n.jp g?_nc_cat=104&_nc_oc=AQlcMHxVcyEXv9_TtJqKE2hXdTW2ALwYi0EXrVh-jUgZx_h5XXG2uC5FzhCKl-42MHk&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=89a0edbd05a103bb8fe9aa87b1821264&oe=5DD85C90

sivaa
21st August 2019, 07:25 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68399598_384710778899145_4650289403527168000_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQmacib8jHqB3rcr7CBcQnsfPrFro9GLEc1ItZYISlV iJFZxH1yI83kUVOnHUpProko&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=c596a18e4deae26c0282573c53aa850d&oe=5DD80B59

sivaa
21st August 2019, 07:36 AM
Rare photo of NT. Thanks to NTFans

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69227065_487347255163284_2457558580006486016_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQns-PlV9TAlLfRixujmvsk0A4gf34I9bakn4FTCmt5qtcmkrgrpPTW Sw0Kt7j8JEJs&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=4ce490408e062205c3d5e5aafe39a6fd&oe=5E133E98


Thanks Vasudevan Srirangarajan

sivaa
21st August 2019, 07:37 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68751591_449908892264184_7379529034650091520_n.jpg ?_nc_cat=106&_nc_oc=AQm7xcJyWVPUyyptTkkAA3QKfh-WWm1MC9XFMrC3FZviJdObokCaG3iCHwPrxFhi0tU&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=ab99be8a70af07e23faba1775740da4e&oe=5DD46C6B



Thanks H O S

sivaa
21st August 2019, 07:37 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69306355_2368957916523513_3303677221901697024_n.jp g?_nc_cat=101&_nc_oc=AQntK6bQvOir9J7AT8_bTVKrBUovt45IWJqIW3CCiYR KkVzFiuVp0AUvlhvQ_Mb447w&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=072262527f6fdeeb2dc0049548e2f33b&oe=5E0A84EE



Thanks H O S

okiiiqugiqkov
21st August 2019, 03:15 PM
கவுண்டமணி செந்திலின் ஒரு ரூபாவிற்கு 2 வாழைப்பழ பகிடிமாதிரி
போகுது இந்த விபரீதத்தின் விளக்கம்
சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வேண்டாம்
இங்கு வந்து இத்திரியை பார்க்கும் ஏனைய ரசிகர்களே
உங்களுக்காவது என்ன விபரீதம் என்ற விளக்கம் புரிந்ததா?

(சுஹராம் போன்று எம் ஜீ ஆர் ரசிகன் யாராவது ஏனைய நடிகர்களின் ரசிகன் என்ற பெயரில் வந்து இதுதான் அந்தப்பழம் என்று சிலவேளை பதில அளிக்கக்கூடும்)

சிவா அவர்களுக்கு,

விபரீதம் என்றால் என்ன என்று ஏற்கெனவே உங்களுக்கு விளக்கம் அளித்தாகிவிட்டது. துப்பாக்கிச் சூடுகள் பற்றி ரத்தினமாலைகள் பற்றி எழுதுவதுதான்
விபரீதம். அதெல்லாம் இப்போது தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

இங்கே அடங்கினால், அங்கயும் அடங்கும் என்றும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.



விபரீதம் என்றால் அடி, உதை, வெட்டு, குத்து என்று நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

பெரியவரான நீங்கள் ஏன் இப்பிடி வன்முறையை விரும்புகின்றீர்கள்?
நாங்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுக்குத் தெரிஞ்சது உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், மரியாதை, நல்லொழுக்கம், மனிதநேயம், அகிம்சை, சன்மார்க்கம் அதுதான் புட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

உடனே அதெல்லாம் உங்களுக்கு எழுத்தில் சினிமாவில்தான் நிஜத்தில் கிடையாது என்கீன்றீர்கள்.

உங்கள் கூடப்பிறந்த அண்ணன் தீவிர மக்கள் திலகத்தின் ரசிகர். அவர் சென்னை வந்தபோது எங்கள் திரி நண்பர் லோகநாதன் அவரை சந்திச்சு அவருடைய படத்தை எங்கள் திரியிலே போட்டு கவுரவிச்சோம்.

உங்கள் கூடப்பிறந்த அண்ணன் மக்கள் திலகம் ரசிகர். எங்கள் ரத்தத்தின் ரத்தம். அவரிடமே மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பற்றி கேளுங்கள். சொல்வார்.

உங்கள் அண்ணனை, அந்த நல்லவரை மக்கள் திலகம் பக்தர்கள் சார்பில் நலம் விசாரிச்சதாக கூறுங்கள்.

உங்களுக்காக மறுபடியும் ஏற்கெனவே அளித்த விளக்கம், படிச்சு புரிஞ்சு கொள்ளவும்.


சிவா அவர்களுக்கு

விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...

அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.

விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.

இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.

இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .

உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.

நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.

சிவா அய்யா, இப்பவாவது புரிஞ்சுதா. திருப்பி கேள்வி கேட்பீர்களா?

கைய புடிச்சு இழுத்தியா..... என்ன ... கைய புடிச்சு இழுத்தியா... வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.


புரியாத மாதிரி நன்றாக நடிக்கிறீர்கள் சிவா . நீங்கள் யாருடைய ரசிகர் என்று நிரூபிச்சு வீட்டீர்கள்.

இந்த மாதிரி எங்களுக்கு நடிக்கத் தெரியாது. உண்மைதான் பேசுவோம்.

உங்களுக்கு ஆகா... புரியாத மாதிரியே என்னா நடிப்பு.

கனடாவுக்குப் போய் தமிழன் பெருமையை எல்லாருக்கும் பரப்பும்

நடிப்பு பல்கலைக்கழகம், நடிப்புச் சக்கரவர்த்தி..

அண்ணன் சிவா என்கின்ற சிவானந்தம் வாழ்க.

siqutacelufuw
21st August 2019, 10:24 PM
சிவா அவர்களுக்கு

விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...

அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.

விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.

இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.

இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .

உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.

நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.

என் சார்பில் எனது அன்பு மகனாக நான் பாவிக்கும் திரு. சுந்தரபாண்டியன் தெளிவான விளக்கம் அளித்து விட்டார். மீண்டும், மீண்டும், ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க வேண்டாம், திரு. சிவா அவர்களே !

sivaa
22nd August 2019, 07:35 AM
என் சார்பில் எனது அன்பு மகனாக நான் பாவிக்கும் திரு. சுந்தரபாண்டியன் தெளிவான விளக்கம் அளித்து விட்டார். மீண்டும், மீண்டும், ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க வேண்டாம், திரு. சிவா அவர்களே !

சிறப்பான பல்டி

நான் கூறிய கூற்றை உங்கள் அன்பு மகனாக நீங்கள் பாவிக்கும் நபர் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்

okiiiqugiqkov
22nd August 2019, 03:09 PM
என் சார்பில் எனது அன்பு மகனாக நான் பாவிக்கும் திரு. சுந்தரபாண்டியன் தெளிவான விளக்கம் அளித்து விட்டார். மீண்டும், மீண்டும், ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க வேண்டாம், திரு. சிவா அவர்களே !

நன்றி அப்பா.
மக்கள் திலகம் பற்றி யார், எங்கு தவறாக கூறினாலும் புலி போல பாய்ந்து வந்து நேர்மையாக விளக்கம் அளிக்கும் உங்களுக்கு புரட்சித் தலைவர் அருள், ஆசீர் என்றும் உள்ளது. இருந்தாலும் கடினமான வேலைச் சுமைக்கு நடுவிலே இதற்கு நீங்கள் வரவேண்டுமா. நான் பார்த்துக்கறேன்.

சிவா அவர்கள் யார்? அவரது அண்ணன் மக்கள் திலகம் தீவிர ரசிகர். நமது ரத்தத்தின் ரத்தம். அப்படிப் பார்த்தால் அவருடன் உடன் பிறந்த சிவாவும் நம் ரத்தம்தான். அவரது அண்ணனுக்கு தெரிந்ததுபோல மக்கள் திலகத்தின் புகழ், பெருமை, சாதனைகள் எல்லாம் சிவாக்கும் தெரியும். நாம் அளித்த விளக்கமும் புரியும். இருந்தாலும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் அந்தப் பக்கத்து நண்பர்கள் அவரை கோவிச்சுக் கொள்வார்கள். அதனால், தெரியாத மாதிரி, புரியாத மாதிரி சும்மாங்காட்டியும் நடிக்கிறார். அதான் விசயம். மத்தபடி சிவா அய்யா நல்லவர்.

okiiiqugiqkov
22nd August 2019, 03:10 PM
சிறப்பான பல்டி

நான் கூறிய கூற்றை உங்கள் அன்பு மகனாக நீங்கள் பாவிக்கும் நபர் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்

சிவா அய்யா,

விளக்கம் புரியாத மாதிரி நடிக்கும் உங்கள் நடிப்புக்கு முன் நான் தோத்துப் போய்விட்டேன். உங்கள் நிலைமை புரிகிறது. பரவாயில்லை. இங்கே வெளிப்படையாக ஒப்புக்கொள்ள சங்கடமாக இருந்தால் கூச்சப்படாமல் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

மக்கள் திலகத்தின் ரசிகரான உங்கள் அண்ணனை , பெரிய அய்யாவை விசாரித்ததாக சொல்லவும்.

நன்றி.

sivaa
23rd August 2019, 06:38 AM
கடைசியில் எம் ஜீ ஆர் பார்முலாவுக்கு தாவியாச்சு.

(பெரிய தலைகளின் அட்வைஸ்கள் பிரமாதம்)

sivaa
23rd August 2019, 07:30 AM
நடிகர் திலகம் படங்களில் இசையமைத்த சில சுவையான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளும் மெல்லிசை மன்னர்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69090888_485159782309720_8134372268521291776_n.jpg ?_nc_cat=103&_nc_oc=AQmZH8TOyrpf1N3i2vYsJ0G1ly9Wex7WsOvffCDCZF5 8v4js_AZoBW3WJJbq1xiUPDo&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=df2e7db5200862e1ddc3a15ae9adb85e&oe=5DDC181E


நன்றி Raja Lakshmi (முகநூல்)

sivaa
23rd August 2019, 07:31 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69140470_423448048274594_2721600563635552256_n.jpg ?_nc_cat=108&_nc_oc=AQkRht6x6PM573J4gg1sh6HRe8Bpjf24AWDuPCtbZ5I iYHWM3qNZO3Wn3A7HOM3rZaM&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=17ae21287a79f59c7af8dda6f7be9a9c&oe=5DD22C47



நன்றி H O S

sivaa
23rd August 2019, 07:31 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69414558_2368662453373634_1972115838337024000_n.jp g?_nc_cat=110&_nc_oc=AQkVRw-UdD8Hqa0F4aaMy3kwWBIUAuNwJ7ZraVXGtI99mHtXpOKotW6fk FBjC13DsBs&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=08794b473c6c3351893fd96785277545&oe=5DDB4F8C



நன்றி H O S

sivaa
23rd August 2019, 07:32 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69006973_659584584554318_6350418006824189952_n.jpg ?_nc_cat=107&_nc_oc=AQlszFtgpJXNHlvhBW1CArbct_Qkt-ka2LlNgKfFrsSdGzCJfTEu3ilSLgCqP_L1mPI&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=5eabf096e67eab96a5ed99aeba740fdb&oe=5E1572F2




நன்றி நிலா

sivaa
23rd August 2019, 07:33 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/68809197_1169097129947169_3309851400598454272_n.jp g?_nc_cat=105&_nc_oc=AQmeyyDM1Av1FQc3wmPONMe7JqiqIzU8eynVS74Oqpx DkpWY6UF6q5TZWPl6RpTR26Y&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=57c3663e15e7409a3a213573078f753c&oe=5DD1E4A1




நன்றி Vasu Devan (முகநூல்)

sivaa
23rd August 2019, 07:35 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68793065_339833956922310_3902189246835851264_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQkFrvIwxY7yyqTzv1E-uqY5pZeWWszcbpD_wAoVnSqmBSkYZrtO2O4pIow21T6uDCA&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=cb61f4a51c8ad8615023967dba5d7814&oe=5DD7EDF7



நன்றி Vijay Uma (முகநூல்)

sivaa
23rd August 2019, 07:36 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/68693882_523668128378098_666575724588564480_n.jpg? _nc_cat=100&_nc_oc=AQk7nuNDGVXuia6lGaleQ1dpoqsdNUe1Ozhf61hst2k P6qNhx8lMaanH8J344KENedo&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=cf89e598faa486841957438c593b7af4&oe=5E15E270


நன்றி (H O S)

sivaa
23rd August 2019, 07:36 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/69821250_1167018446832271_1560389432845008896_n.jp g?_nc_cat=109&_nc_oc=AQm5p4J41JfdbPVrouv3Ze_KCBiMQH_tMi3vUkJ4Yex KICAVV9lbos9mNn135FbQmMg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=231bc2f0969bd53d8634c90e80dc212b&oe=5E120DD0



நன்றி நிலா

sivaa
23rd August 2019, 08:39 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69158761_2966209616784615_7263591619469770752_n.jp g?_nc_cat=100&_nc_oc=AQkGcfBlCvqTe1XT49-kmkF6AomniFIEqz56rJ6UX9U_jvkEEuG_cMe9MpJtTGu_qNw&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=51b664a29c643a90fcac8ba620a98deb&oe=5E1134F3



நன்றி (H O S)

sivaa
23rd August 2019, 08:41 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/69322111_2340326702755201_1957285887494586368_n.jp g?_nc_cat=107&_nc_oc=AQlhPKjnOmOPR4jaB3yBnPctlvaX2bQ5zxraiQYLMWx ofo1uvBMVNEGUYjsK5mBS5l0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b61324010e8786bcffaa7ec9134d98fa&oe=5E104097



நன்றி நிலா