PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

sivaa
15th September 2018, 08:28 AM
Nadigar Thilagam Sivaji Ganesan - Part (http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19) 20


மையம் இணைய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், மற்றும் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 20 ஆரம்பித்துள்ளேன். இங்கு வர இயலுமானவர்கள் வந்து பங்களிப்பினை மேற்கொண்டு ஐயனின் புகழ், சாதனைகள் ,வெற்றிகள், என்பனவற்றை அனைவரும் அறிய உதவிடும்படி அன்புடன் அழைக்கின்றேன்.
http://oi66.tinypic.com/33a52t0.jpg

Murali Srinivas
15th September 2018, 11:10 AM
அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
15th September 2018, 01:52 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/41826382_1730416260421022_2516290299274199040_n.jp g?_nc_cat=0&oh=872b274faee0460de7404ac95320cfbb&oe=5C3A1B22


வாழ்த்துக்கள் நண்பர்களே, பாகம் 19 முடிவடைந்து 20ஐத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் அனைத்து நண்பர்களும் திரியில் தொடர்ந்து பங்கு பெற்று நடிகர் திலகம் புகழ் பாடும் பணியில் ஈடுபட வேண்டுகிறேன்.

1968ம் ஆண்டின் தமிழ்நாடு அரசு சினிமா விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர் மற்றும் பாடகி விருதுகளை வென்ற லக்ஷ்மி கல்யாணம் படத்தின் பொன்விழாவையொட்டி நாளை, 16.09.2018 மாலை 6 மணிக்கு சென்னை ரஷ்யன் கலாச்சார மய்ய அரங்கில் இக்காவியத்தின் திரையிடல் நிகழ உள்ளது. நண்பர்கள் அனைவரும் வருக.

சில சிறப்பு நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் காரணமாக நவம்பரில் பொன்விழா காணும் இத்திரைப்படம் முன்கூட்டியே திரையிடப்பட உள்ளது.

sivaa
15th September 2018, 10:41 PM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 19 இனிதே நிறைவுற்றுள்ளது.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 19

ஆரம்பித்த வேளை மய்யம் இணையம் இந்தியாவில்

முடக்கப்பட்டிருந்த காரணத்தால் பல இந்திய நண்பர்களால்

இத்திரியில் பங்களிக்கமுடியாமல் போய்விட்டது என்பதை உணர முடிகிறது,

எனினும் திரு ராகவேந்திரா சார், நண்பர் செந்தில், திரு ஆதவன் ரவி, நண்பர் சதீஷ் (அவுஸ்திரேலியா),

நண்பர் சௌத்திரிராஜன், நண்பர் கோபால் ஆகியோர் தங்களால் முடிந்தவரை பங்களிப்பை செய்திருந்தார்கள்,

அவர்ககள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

பல பதிவுகள் பல நண்பர்களின் முகநூலில் இருந்து வெட்டி ஒட்டியவை.

அந்த முகநூல் நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அதிகமான பக்கங்களில் இடம் பிடித்துக்கொண்ட ,

பழைய பத்திரிகையின் பதிவுகள் சிவாஜி பட சிறப்பு மலர்களின் பதிவுகள்

கிடைக்கக் காரணமான தமிழ்நாட்டு நண்பர் திரு சீனிவாசகோபாலன் ,

இலங்கை நண்பர்கள் சிவாஜி தாசன், ரங்கநாதன், சின்னவன்

ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எல்லாவற்ரையும் விட இத்திரி விறுவிறுப்பாக செல்லவும்

அதிக பார்வையாளர்களை கொண்டுவரவும் தங்களை அறியாமலே உதவிட்ட,

திரு ரவிச்சந்திரன் , திரு மஸ்த்தான் சாகிப் ,திரு எஸ்வீ ஆகியோருக்கு விஷேட நன்றிகள்.

மற்றும் இத்திரிக்கு வந்து அனைத்து பதிவுகளையும் பார்வையிட்டு சென்ற அனைத்து பார்வையாளர்களுக்கும் இனிய இதய நன்றிகள்.

http://oi63.tinypic.com/2zqhml2.jpg

Russellsmd
15th September 2018, 11:18 PM
மதிப்பிற்குரிய சிவா சார்...

மீண்டும் மகிழ்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.

அன்பு தெய்வம் நடிகர் திலகத்திற்கு தன்னை அர்ப்பணிக்கக் காத்திருக்கும் இந்த இந்த இருபதாம் திரியிலும்
தாங்களே சுடரேற்றியிருப்பது கண்டு...

மீண்டும் மகிழ்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.


மீண்டும் தாங்களே திரி துவக்கித்
தர வேண்டுமென்ற மிகச் சரியான கோரிக்கை விடுத்த அய்யா திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்,

அந்தக் கோரிக்கைக் குரல் தன் குரலே என அகமகிழ்ந்த திரியின்
நெறியாளர் அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்,

முடக்கப் புயலால் திரியின் ஒளிச்சுடர் அணைந்து விடாதபடி
ஒற்றை ஆளாய் கைகள் பொத்திக்
காத்ததோடு, திரியில் அதிகம் பதிவிட முடியாத எங்களின் பதிவுகளையும் எடுத்துப் பதிவிட்டு எங்கள் ஏக்கம் போக்கிய தங்களுக்கும்...

எனது இதய நன்றிகள்.


முன்னை விட முனைப்போடு, ஒற்றை ஆளாய் உங்களைத் தனித்து விடாமல் உங்களுக்கு உறுதுணையாக வலம் வர வேண்டும் என்கிற திடமான நினைப்போடு திரி -20 ல் என்
பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்
என்று உறுதியளிக்கிறேன்.

நல்வாழ்த்துகள்.. மீண்டும்.

sivaa
15th September 2018, 11:19 PM
அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்

அன்பு நண்பர் முரளி அவர்ககட்கு

வழ்த்துக்கு நன்றி

தாங்கள் வேலைப்பழு காரணமாக இங்கு வருவதற்கு
போதிய நேரமின்மையால் தாங்கள் திரியில்
வந்து பாகம் 20 ஐ ஆரம்பிக்கும்படி கேட்டு எழுதுவதற்கு முன்னதாகவே

தாங்கள் போன் உரையாடலின்போது கேட்டுக்கொண்டதற்கு
இணங்கவும் திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பமாகவும்
மற்றும் என்னுடன்; தொடர்பிலுள்ள நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கும்
செவி சாய்த்து பாகம் 20ஐ ஆரம்பித்துவிட்'டேன்.

sivaa
15th September 2018, 11:31 PM
மதிப்பிற்குரிய சிவா சார்...

மீண்டும் மகிழ்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.

அன்பு தெய்வம் நடிகர் திலகத்திற்கு தன்னை அர்ப்பணிக்கக் காத்திருக்கும் இந்த இந்த இருபதாம் திரியிலும்
தாங்களே சுடரேற்றியிருப்பது கண்டு...

மீண்டும் மகிழ்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.


மீண்டும் தாங்களே திரி துவக்கித்
தர வேண்டுமென்ற மிகச் சரியான கோரிக்கை விடுத்த அய்யா திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்,

அந்தக் கோரிக்கைக் குரல் தன் குரலே என அகமகிழ்ந்த திரியின்
நெறியாளர் அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்,

முடக்கப் புயலால் திரியின் ஒளிச்சுடர் அணைந்து விடாதபடி
ஒற்றை ஆளாய் கைகள் பொத்திக்
காத்ததோடு, திரியில் அதிகம் பதிவிட முடியாத எங்களின் பதிவுகளையும் எடுத்துப் பதிவிட்டு எங்கள் ஏக்கம் போக்கிய தங்களுக்கும்...

எனது இதய நன்றிகள்.


முன்னை விட முனைப்போடு, ஒற்றை ஆளாய் உங்களைத் தனித்து விடாமல் உங்களுக்கு உறுதுணையாக வலம் வர வேண்டும் என்கிற திடமான நினைப்போடு திரி -20 ல் என்
பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்
என்று உறுதியளிக்கிறேன்.

நல்வாழ்த்துகள்.. மீண்டும்.

வாழ்த்துக்கு நன்றி ஆதவன் அவர்களே.

தனித்துவிடாமல் உறுதுணையாய் வருவேன் என்ற தங்களின்,

அன்புக்கு நன்றி! நன்றி !நன்றி!

Russellsmd
16th September 2018, 12:10 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/Screenshot_20180904-210050_YouTube_zpsfduywltd.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/Screenshot_20180904-210050_YouTube_zpsfduywltd.jpg.html)


அட...
விகாரமும் அழகாச்சு
நீ நடித்த பின்னால் !

RAGHAVENDRA
16th September 2018, 06:42 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/41985812_1959379020779427_2867888051680444416_n.jp g?_nc_cat=0&oh=db8d687efda661caa94cb699c76e197b&oe=5C2CEEAF

RAGHAVENDRA
16th September 2018, 06:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/41818744_1959384294112233_1471928937796861952_n.jp g?_nc_cat=0&oh=bae322037da49f5302a00311a3ee09be&oe=5C37260E

sivaa
16th September 2018, 09:36 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41796193_2166348863579930_7124439394953461760_n.jp g?_nc_cat=0&oh=c44e85527932f8a6e207bb50b91903aa&oe=5C2D99FC

sivaa
16th September 2018, 09:55 AM
ராஜா.. எனக்கு ஏதோ அன்ஈஸியா இருக்குடா..”சிங்கப்பூர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் , சிவாஜி இளையராஜாவை அருகில் அழைத்து இப்படி சொன்னதும் பதறிப் போனாராம் இளையராஜா .
# 1999ல் விகடனில் வெளியான சிவாஜி பற்றிய இளையராஜாவின் நினைவலைகள்:
... ”சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக அண்ணன் சிவாஜி அவர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் ஏற்பாடானது. நானும், தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தோம்.
சிவாஜியின் உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருந்தும் பிடிவாதமாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
‘அண்ணே, உடம்பு சரியில்லையென்றால், நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கூட்டத்தை சமாளித்துக் கொள்கிறோம்’ என்றேன்.
உடனே ‘ஊஹூம், சிவாஜி வாக்குக் கொடுத்துட்டான்டா! வாக்குத் தவறிட்டான் இந்த சிவாஜின்னு பேர் வாங்கணுமா? உயிரே போனாலும் மேடையில் போகட்டுண்டா!” என்றார்.
மேடையில் நட்சத்திரங்களின் தோற்றமும் பாட்டுகளும் சூடுபிடித்துக்கொண்டிருந்தன. நான் பாடி முடித்த சிறிது நேரம் கழித்து அண்ணன் சிவாஜி, என்னை அவசரமாக அழைத்தார். ‘ராஜா.. எனக்கு ஏதோ அன்ஈஸியா இருக்குடா..’ என்றார். உடனே அருகில் இருந்த டாக்டர்களை அழைக்க எழுந்தேன். என்னைப் பிடித்து நிறுத்தி, ‘வேண்டாம்…’ என்றார்.
மேடைக்கு மேலே இருந்த ஸ்க்ரீனில் சிவாஜி நடித்த காட்சிகளைத் தொகுத்துப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் அண்ணன் சிவாஜி, என் தோள்மீது சாய்ந்து, உணர்விழந்து அப்படியே முழுவதுமாக என் மேலேயே விழுந்துவிட்டார்.
நிகழ்ச்சி நடத்துபவரை உடனே அழைத்து, “அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்..” என்று பரபரத்தேன். ஆனால் நிகழ்ச்சி நடத்தியவர் நடந்துகொண்ட முறை எனக்குக் கோபத்தை ஊட்டியது. என்னுடைய பரபரப்புக்கு நேரெதிராக சாவகாசமாகப் பேசினார். “இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் மேடையில் அவருக்குச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்துவிடலாம். குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்..” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.
“இதுபோல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால், சிவாஜியின் முக்கியத்துவம் தெரியாத மூடனாக இருக்கிறானே இவன்..?!” என்று ஆத்திரமாக வந்தது.
ஏதும் அறியாத ரசிகர்கள், ஸ்க்ரீனில் சிவாஜி நடித்த படக்காட்சியில் லயித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று, ‘கிஸ்தி.. திரை.. வரி.. வட்டி’ என்ற கட்டபொம்மனின் வசனம் கேட்க, அண்ணனின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வந்தது.
அப்படியே எழுந்து மிகவும் தெம்பாக உட்கார்ந்துகொண்டார். “எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா….?”, திரையில் கட்டபொம்மன் முழங்க, அதை முதன்முதலாகக் காணும் ரசிகன் எப்படி அதனுடன் கலந்து அதே உணர்வெய்தினானோ, அதேபோல கட்டபொம்மன், சிவாஜியின் உடம்புக்குள் புகுந்து, அவரைக் கட்டபொம்மனாக மாற்றி, சிவாஜியாக எழுப்பி உட்காரவைத்துவிட்டு, வெளியே வந்துவிட்டான். கூட்டம் ஓவென்று கத்திக் கரகோஷம் எழுப்ப, என் கண்களில் நீர் வழிந்தது!
வழிந்த கண்ணீர் சிவாஜிக்கா..?
சிவாஜியைத் திருப்பித் தந்த கட்டபொம்மனுக்கா..?”
[நன்றி: ஆனந்த விகடன் 25.7.1999]

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41782006_2180370238865688_5432964961779318784_n.jp g?_nc_cat=0&oh=9361212192dd46e58b8d8c77899f1f60&oe=5C2319AE


courtesy k.geetha F B

sivaa
16th September 2018, 09:57 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41758785_2196627933959845_1045737632207732736_n.jp g?_nc_cat=0&oh=710008e1c7bd2e7648ccd9592e249a34&oe=5C250F42

Rare photo of NT. Thanks to NTFans. உடன் இருப்பது SSR

courtesy vasudevan F B

sivaa
16th September 2018, 09:58 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41671987_562833397486293_1999166027698536448_n.jpg ?_nc_cat=0&oh=1407f22278ec5d920eb83456d7371b87&oe=5C170135
vaannilla

sivaa
16th September 2018, 10:00 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41684537_562841304152169_7323806249210871808_n.jpg ?_nc_cat=0&oh=81de6aade6b422aee26f8525636b8612&oe=5C28248E


nilla

sivaa
16th September 2018, 10:41 AM
http://oi65.tinypic.com/4fxq41.jpg

sivaa
16th September 2018, 10:42 AM
http://oi66.tinypic.com/iw3arq.jpg

sivaa
16th September 2018, 10:43 AM
http://oi64.tinypic.com/5k3iad.jpg

sivaa
16th September 2018, 10:44 AM
http://oi67.tinypic.com/jqn72t.jpg

sivaa
16th September 2018, 10:44 AM
http://oi63.tinypic.com/262lksi.jpg

sivaa
16th September 2018, 10:45 AM
http://oi64.tinypic.com/w1qlwp.jpg

sivaa
16th September 2018, 10:46 AM
http://oi64.tinypic.com/2z5m4pf.jpg

sivaa
16th September 2018, 10:47 AM
http://oi68.tinypic.com/wvzu6a.jpg

sivaa
16th September 2018, 10:47 AM
http://oi63.tinypic.com/2e1c306.jpg

sivaa
16th September 2018, 10:48 AM
http://oi64.tinypic.com/19048j.jpg

sivaa
16th September 2018, 10:49 AM
http://oi64.tinypic.com/xmlkjm.jpg

Russellsmd
16th September 2018, 12:30 PM
சிவாஜி பாட்டு -41
----------------------------------

https://youtu.be/fN5QEP46qck

வீடு என்பது... சும்மா ஒரு இடமல்ல.

ஒரு இருப்பிட அடையாளமல்ல.

நாம் இருந்து, நகர்கிற கூடல்ல.

வீடு, நமது சிறையல்ல. அது நம் விடுதலை. நிம்மதி. தனித்தும், உறவுகளோடும் நாம் நம் வாழ்வை ருசிக்கும் இடம். நமது இதய சோகங்களை அகற்றி மகிழ்வளிக்கும் திருத்தலம்..
வீடு.

எல்லோரையும் போல அப்படிப்பட்ட வீடுகள் தனித்தனியே இருந்தாலும், சிவாஜி ரசிகர்களுக்கென்று சிறப்பான, வசதிகள் நிறைந்த, மன நிம்மதியும், நிறைவும் தந்த, தருகிற பொதுவான ஒரு வீடு உண்டு.

"வியட்நாம் வீடு".
*****

பெரியநாயகியம்மன் கோயில் வாசலில் சிலுசிலுவென்று கரும்புச்சாறு வாங்கி அருந்திய தருணங்களில் கவனித்திருக்கிறேன்.. உறுதியான பற்சக்கரங்களினூடே தன்னைச் சக்கையாக்கிக் கொண்ட கரும்பை.

கரும்பின் தியாகமே நம் நாவில் இனிப்பாகப் பரவி
நிலைக்கிறதென்பதை நிஜமாக நான் உணர்ந்து
கொண்டிருக்கிறேன்.

தன்னலம் என்பதை கனவில் கூட நினையாத, குடும்பத்திற்காக தன்னை சக்கையாகப் பிழிந்து
கொண்டு இன்பம் வழங்கிய ஒரு குடும்பத் தலைவனின் தியாக வரலாற்றை "வியட்நாம் வீடு"
பேசிற்று.

"நாடகமாயிருந்தது... திரைப்படமாயிற்று" என்று
மட்டுமே " வியட்நாம் வீடு" பற்றிப் பேசி வருகிறோம். திரைப்படமான பின் எண்ணற்றோருக்கு "திரைப்பாடம் " ஆயிற்று என்பதை அடிக்கடி பேச மறந்தோம்.

அமர்ந்திருந்த இருக்கைக்கும், திரைக்கும் இடையிலான தொலைவில் ஒரு புனித வாழ்வை
தரிசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தப் பதினாறு வயதில் அந்த வெண்திரை, பாடங்கள்
எழுதிய கரும்பலகையாகவே காட்சியளித்தது.

" வியட்நாம் வீடு" சும்மா வெட்டி கௌரவத்தைப் பற்றிப் பேசவில்லை. ஒழுக்கத்தைப் பேசியது.
எளிமையைப் பேசியது. உழைப்பின் மீது ஆசை வேண்டும் என்று பேசியது. பொறுப்பைப் பேசியது.

எல்லாவற்றுக்கும் மேலாக அப்பழுக்கில்லாத கணவன் - மனைவி அன்பைப் பேசியது.

மிகப் புனிதமான கணவன் - மனைவி அன்பின்
இசை வடிவ விளக்கமாக இந்தப் பாடலைச் சொல்லலாம். இதே படத்தில் வரும், அத்தனை கண்களுக்கும் நீர் சேர்க்கும் " உன் கண்ணில் நீர் வழிந்தால்" பாடலைப் போலவே இந்தப் பாடலும்
வேறொரு வி்தத்தில் கணவன் - மனைவி அன்பின்
மகத்துவம் உணர்த்தும்.

நாயகி, "அப்பாவி ராஜா", "அம்மாஞ்சி ராஜா" கேலிப் பட்டங்களை நாயகனுக்கு அளிக்கிறாள். "அப்பாவி ராணி", "அம்மாமி" பட்டங்கள் அதே கிண்டலோடு நாயகனிடமிருந்து நாயகிக்குப் போகிறது.

"மன்னவன்.." என்று மிக அழகாய், வித்தியாசமாய்,
கவர்ச்சியாய் திருவருட்செல்வரில் உதடு சுழிக்கும் போது கிறங்கடித்த, மாதவிப் பொன்மயிலாளாய்
இருமலர்களில் தோகை விரித்த போது மயங்க வைத்த பத்மினியம்மாவுக்கு ஆட்டத் திறமை காட்டுவதற்குத் தோதான களம் இந்தப் பாடல்.
என்றாலும் " நாட்டியப் பேரொளி"யை ஒளித்து வைத்து விட்டு, சாவித்திரி மாமியாய் ஜொலிப்பது
அவருக்குப் பெருமை சேர்க்கிறது.

வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டிருக்கும் ஆத்துக்காரரின் அதிகரித்துக் கொண்டே போகும்
கூச்சம் பார்த்து அவர் சிரிக்கும் 'களுக்' சத்தம்,
கலையுலகில் எதிரொலிக்கும் சாதனைச் சத்தம்.

தீவிரமாய் உணர்வுகள் பேசும் ஒரு திரைப்படத்தின் ஊடே திடீரென்று ஆனந்த இடைச்
செருகலாய் வரும் இந்தப் பாடல், திணிக்கப்பட்ட
ஆர்ப்பாட்டக் கலை வடிவமாய்ப் போயிருக்கும்..
நாயகனாய் நடிகர் திலகம் மட்டும் இல்லாதிருந்தால்.

பின் வரும் நாட்களில் அப்பாவி மனைவி, பொறுப்பற்ற பிள்ளைகள், பாதை தவற முனையும் மகள், ஆடம்பர மருமகள் என்று அத்தனை பேருக்கும் பாடங்கள் நடத்தும் வாத்தியாராகப் போகிறவர், கட்டிய மனைவியிடம் வாழ்வில் முதன்முறையாக அறிமுகமாகும் பின்னிரவில்
வெட்கி நடுங்கும் சுவாரஸ்யத்தை நடிகர் திலகமன்றி வேறு யாரும் வழங்க முடியாது.

மிக இளமையாய், அழகாய்த் தோன்றும் ஒரே காட்சியிலும் கோமாளித்தனங்கள் காட்டி நடிக்கிற
தைரியம், நரைத்து வயசான பின் நடக்கிற அந்தத்
தத்துப்பித்து நடையை " அவர் படித்த புத்தகத்தில்"
என்று பாடியபடியே நடக்கும் திறமை, பத்மினியம்மா தொட்டவுடன் வெடிக்கும் அதிபயங்கரக் கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உதாரணப்படுத்த கழுத்து வரை போட்ட சட்டைப் பொத்தானை விடுவித்துக் கொள்ளும் அழகு, என்னதான் அப்பாவியாய் நடித்தாலும் ஒரு தேர்ந்த கலைஞனின் மேதாவிலாசத்தை ஒளித்து வைப்பதென்பது இருட்டுக்குள் நெருப்பை ஒளிப்பது போலாகும் என்பதற்கு உதாரணமாய் " அந்தப் பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்" எனும் போது காட்டும் பாவனை...

நடிகர் திலகமா அப்பாவி ராஜா? அந்த நடிப்பு ராஜனா அம்மாஞ்சி ராஜா?

நடிகர் திலகத்திற்கும், பப்பியம்மாவுக்கும் மட்டுமல்ல... அவசியம் ஒரு நாள் எழுத வேண்டும் என்று குறித்து வைத்திருந்த பாடலை எழுதி, எழுதிஆவலைத் தூண்டி அவசரமாக எழுத வைத்த
அன்பு அப்பா நடராஜன், கவி வேந்தன் கஜேந்திரன் ஆகியோருக்கும் நன்றி சொல்லத்
தூண்டுகிறது.. இப்பாடல்.
*****

முதலிரவுப் பாடல்களென்றாலே அரையிருட்டில்
அங்கங்கள் காட்டும் தமிழ் சினிமா மரபுடைத்து
வெள்ளந்தி மனசுகள் காட்டும் இப்பாடலில் கவனியுங்கள்... அகிலத்துக்கே ஒளி பாய்ச்சிய அய்யன் நடிகர் திலகத்தின் வெளிச்ச விழிகள் போல இரண்டு விளக்குகள் பிரகாசமாய் எரிவதை!

Russellsmd
16th September 2018, 12:32 PM
சிவாஜி பாட்டு - 42
---------------------------------

அன்பு...

பேரன்பு...

மாசற்ற அன்பு...

உண்மை அன்பு...

உன்னதமான அன்பு...

இவையெல்லாம் இசை வடிவம் கொண்டு நம்மை
நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?

இதோ... இந்தப் பாடல் போல இருக்கும்.
----------

நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அன்றைய தினங்களில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஏழு முறையாவது பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம்
உண்டு. " திரிசூலம்".

எங்கள் ஊரில் இந்தப் படம் ஓடிய போது, படம் வெளியான திரையரங்க வாசலை நான் நெருங்கவே வாரக் கணக்கிலானது.

தவிப்பும், பரவசமாய்ப் பார்த்த இப்படத்தின் முதல்
பாடலே இதுதான் என்பதாலோ என்னவோ.. இந்தப் பாடலின் மீது அநியாயத்துக்கு ஒரு ஈர்ப்பு.
----------

கல்யாணம் செய்து கொண்டு வாழ்வுக் களம் கண்டு விட்ட இரண்டு உயிர்களின் அபார மகிழ்வை இந்தப் பாடல் தன்னுள் அழகாகச் சுருட்டி
வைத்திருக்கிறது.

தான் அப்பனாகப் போகிற அளவற்ற சந்தோஷம்
நாயகனுக்கு என்றால், தனக்கு மற்றுமொரு அம்சமான இசைக் குழந்தை என்கிற சந்தோஷம்
நம் மெல்லிசை மாமன்னருக்கு.
--------

புன்னகை அரசி, நடிகர் திலகத்துடன் இணைந்த
காவியங்களெல்லாம் ஏன் ஜெயிக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் தெளிவாக விடை தருகிறது.

சும்மா " ஈ..ஈ " என்று பல்லைக் காட்டி சிரிப்பதால் புன்னகை அரசி ஆகி விட முடியாது.. யாராலும்.
அந்த அற்புதமான அள்ளிக் கொண்டு போகிற
புன்னகை... கொஞ்சல், கெஞ்சல், பெருமிதம், நாணம், பெருமகிழ்வு, மனநிறைவு என்று அத்தனை மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாய் இருப்பது.. பெரு வியப்பு.

"கண்ணான மணவாளன் சேயாகிறான்.
கல்யாண மகராசி தாயாகிறாள்.
கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையே..
தொட்டில் கண்டால் அங்கு என் பிள்ளையே.."

"என் பாட்டில் ஒரு ராகம் உண்டானது.
என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது."

"மீன்கள் நாறும் சினிமாச் சந்தையில், விண்மீன்களை விற்ற பைத்தியம்" என்று கவிக்கோவால் வர்ணிக்கப்பட்ட கண்ணதாசர்,
தான் விதைத்த விண்மீன்களால் சந்தைகள் பரவிய இடங்களையெல்லாம் சாதனை வானமாக்கியதை யாரும் எழுதவில்லை.
----------

தொழில் தொடர்பான கருவிகளுடன் நூறு பேர்
சூழ்ந்து கொண்டு தன்னையே பார்க்க, இருநூறு
கண்கள் போதாதென்று காமிராவின் கண்ணும்
குறுகுறுவென்று பார்க்க, மனைவியாய் உடன் நடிக்கும் நடிகையைக் கொஞ்சிக் குழைந்து கொண்டாடும் கணவனாக, இன்னும் கொஞ்ச நாளில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகிற
குஷியிலிருக்கிற கணவனாக... பளீரென்று மாறிப் போவது அய்யனால் மட்டுமே முடிகிற அதிரடி அதிசயம்.

" மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே" என்று பாடும் போது தனக்கே தனக்கானவளை தாயாக்கிய பெருமிதம், நாளைய பிள்ளைக் கொஞ்சலுக்குக்கான ஒத்திகை போல் அந்த துள்ளி விளையாடல்கள்...

பாடலுக்கு வாயசைத்து நடிப்பது சாதாரண காரியமல்ல. சும்மா காட்சியை அழகாக நிரப்பி வென்று விட நினைக்கிற எண்ணற்ற நடிகர்களின்
அசட்டுத்தனங்களுக்கு, இந்தப் பாடலில் பாடங்கள்
இருக்கின்றன.

பேரன்பும், பரவசமுமாய் இரண்டு உயிர்கள் கலந்து, தமக்கென்று இன்னொரு உயிர் உருவாக்கும் பெருங் கனவு, நாட்கள் தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து நனவாகும் ஒரு பொன்னாளில் அந்தக் கணவனின் மனோநிலை
எப்படி இருக்குமென்பதை அப்படியே நடித்துக்
காட்டியிருக்கிற நடிகர் திலகம்.. கண்களெனும் திரை முழுக்க வியாபிக்கிறார்.

"தன் கைகள் கொட்டட்டும்" என்று மனைவியைக்
குழந்தையாய்ப் பாவித்து, தன் கன்னத்தோடு அவள் கைகள் இணைக்கும்போது அய்யனின்
நடிப்பழகு ஆயிரம் முறை பார்த்தாலும் தீராது.

இந்தப் பாடல் மீதான என் காதல், கால காலத்துக்கும் மாறாது.

அப்படியே தன் நாயகியைச் சுழற்றி அரை வட்டமடித்துப் பாடும் போது, பின்னணியில் இன்றைய அய்யனின் வணங்குதலுக்குரிய அந்த தந்தம் வைத்த நினைவுச் சின்னம் அன்று வேறொரு விதமாய் காட்சிப்படுகிறது.

சட்டென்று கண்கள் பனிக்கிறது.

அய்யனின் அவதார தினங்களில், அதே இடத்தில்தான் அய்யனை வணங்கி நான் மலர் கொடுத்தேன்.


https://youtu.be/vMrEvt61Nek

Russellsmd
16th September 2018, 12:35 PM
சிவாஜி பாட்டு - 43
--------------------------------

https://youtu.be/g0PctraE4AQ

உணர்ந்திருக்கிறீர்களா?

நமக்கு மிகவும் இஷ்டமான விஷயமாக இருக்கும். அதில் நம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்
கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சங்கடம் வந்து அந்த இஷ்டமான விஷயத்தின் மீதான நம் ரசிப்பை,
ஒட்டுதலை அடியோடு தகர்த்து விட்டுப் போகும்.

உணர்ந்திருக்கிறீர்களா?

நான் உணர்ந்ததுண்டு.

வெகுதூர, ஜன்னலோரப் பேருந்துப் பயணம் எனக்குப் பிடிக்கும். அப்படியொரு பயணம் அமைந்து, பேருந்து அருமையாகப்
போய்க் கொண்டிருக்கும் போது, பேருந்தில் பழுது ஏற்பட்டு, நடுவழியில் நிறுத்தப்பட்டு, இப்போதைக்கு சரியாகாது எனும் நிலையாகி, நிரம்பி வழிந்து செல்லும் மற்றொரு பேருந்துக்குள் மாற்றி விடப்பட்டு,
இரண்டு பேர்களுக்கிடையில் நசுங்கும் நிலையில் ஒரு இருக்கை கிடைத்து...

நான் உணர்ந்ததுண்டு.

ஆனால்...

நசுங்கிக் கொண்டே பயணப்படும்
அந்த வேளையில் கூட, சற்றுமுன் ஆனந்தமாய்க் கிடைத்த ஜன்னலோரப் பயணத்தை எண்ணிக் கிடைக்கும் பெருமிதமான ஆறுதலிருக்கிறதே... அது பெரிய விஷயம்.

இந்த "பூ மணக்கும் பூங்குழலி" பாடல் போல.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்... அப்போது. அப்பா இருந்தார்.

சிவகங்கையில் "அமுதா" எனும்
டூரிங் திரையரங்கம் இருந்தது.
" ரத்த பாசம்" போட்டிருந்தார்கள்.
போக வாய்ப்பில்லாத பள்ளி நாட்கள்.

வீட்டில் யாரும் போகிற மாதிரி தெரியவில்லை. அப்பா யாருடனும் கூட்டணி வைத்துப் போக மாட்டார். சுயேச்சை.

அப்பாவிடம் அனுமதி கேட்டுப் போகப் பயம்.

ஆபத்பாந்தவனாய் நண்பன் ரகு
ஒரு நாள் மாலை வந்தான். கையில் பாடப் புத்தகம். அப்பா வேலை முடிந்து வரவில்லை.
தன் வீட்டில் யாருமில்லை என்றும்,
என்னை அனுப்பி வைத்தால் இருவரும் அவன் வீட்டில் படிப்போம் என்றும் அம்மாவிடம் அனுமதி கேட்டு அழைத்துப் போனான்.

தெருமுனை தாண்டினதும் கண்ணடித்தான். புரிந்து கொண்டேன்... அன்றைய படிப்பு
அமுதா திரையரங்கிலென்றும்,
பாடம், ரத்த பாசம் என்றும்!

தெருமுனை திரும்பினதும் வலது
பக்கம் கொஞ்ச நேரம் போனால்
அவன் வீடு. அவன் வீட்டு வாசலில்
புத்தகத்தோடு நின்ற போது, அப்பா வேலை முடிந்து வீட்டுக்குப்
போய்க் கொண்டிருந்தார்.

"என்ன இங்கே?" என்பது போல் ஒரு முறைப்பான ஒரு பார்வை.
வேகமாய் அவர் முன்னே ஓடிப் போய் " ரகுவோட படிக்க" என்றதும், ஒரு மெலிசான தலையாட்டலுடன் போய் விட்டார்.
நல்லவேளை... இனி பயமில்லை.
------------

வில்லன்களைப் பந்தாடி, ரசிகர்களை உற்சாகமாக்கிய தலைவரின் திருநாமத்தில் துவங்கி தலைப்பெழுத்துகள் ஓடிக் கொண்டிருந்த போது, இருட்டுக்குள் இருக்கை தேடுபவர்கள் வசதிக்காக பின்வரிசையில் ஒளிர்ந்த விளக்கொளியில், பெஞ்ச் டிக்கெட் வரிசையிலிருந்த நான் பார்த்து
மகா அதிர்ச்சியானேன். முன் வழுக்கை மின்ன காலி இருக்கை
தேடியவர் சாட்சாத் அப்பாவேதான்.

பெஞ்சிலிருந்து அப்படியே நண்பனையும் இழுத்துக் கொண்டு சரிந்து தரை டிக்கெட் ஜனங்களோடு கலந்துதான் மிச்சப் படமெல்லாம் பார்த்தேன்...
ஒரு பய முள் உறுத்த,உறுத்த..
ரசனை தகர்த்த அந்த நசுங்கல் பேருந்துப் பயணம் போல்.

ஆனால்... "ரத்தபாசம்" என்று நினைத்தாலே நான் சொன்ன மேற்படி சங்கடங்களையெல்லாம் தகர்ந்து எறிந்து விட்டு முன்னுக்கு
வருவது.. இந்தப் பாடல். ஒரு நாலரை நிமிஷம் என்னை வேறெதையும் சிந்திக்க விடாத அழகுப் பாடல்.

பஞ்சகச்சம் போல அணிந்து நடக்க சிரமமான ஒரு ஆடையை
நடிகர் திலகம் லாவகமாகக் கையாளும் சமயோசிதம், என்
சின்ன வயசின் பெரிய பிரமிப்பு.

"சிவந்த மண்" ராஜாவும், ராணியும் காதல் பாடிய அதே அயல்நாட்டு அழகுப் பிரதேசத்தில்
இந்தப் பாடல்.

ஸ்ரீப்ரியா மிக அழகாக இருப்பார்.
மிக அழகாக நடிப்பார். நீலமும், வெள்ளையுமாய் அழகழகாய் வந்து நம்மாள் கைதூக்கிச் செய்கிற அழகிய அழிச்சாட்டியங்களில் அந்த அம்மா ...பாவம் கவனிக்கப்படவே
மாட்டார்.

"உயர் காமன் மந்திரம் நீ" - கவியரசர். மரியாதையாய் " உயர்"
போட்ட கவிச் சக்ரவர்த்தியின் சேட்டை.

சாதனைக் காடுகளில் தேடியலைந்து நம் ஏக்க வியாதிகளுக்கான இசை மூலிகைகள் கொணர்ந்த மெல்லிசை மாமன்னரின் ராக வேட்டை.

நடிகர் திலகத்திற்குப் பாடினாலே,
ஒரு மாமேதைக்குப் பாடுகிறோம்
எனும் அர்த்தமுள்ள கர்வம் தொனிக்கும் ஒரு குரலால்( இந்தப் பாடலில் அந்த " ஒன்று போலத் தோன்றுதம்மா")
"பாடும் நிலா "போடும் ராஜபாட்டை.

எப்போதும் போல் எங்கள், உங்கள், நம் நடிகர் திலகம் எளிதாய்க் கைப்பற்றும் நம் இதயக் கோட்டை.
---------

படம் முடியப் பத்து நிமிஷம் முன்பே தலைதெறிக்க ஓடி வந்து,
அப்பா வருவதற்கு முன்பே வீட்டில்
நல்ல பிள்ளையாய் உட்கார்ந்து கொண்ட என்னை அப்பா நம்பி விட்டார் என்பதுவே இன்று வரை
என் நம்பிக்கை. ஒருவேளை நான்
படம் பார்த்தது தெரிந்தும், என்னிடம் காட்டிக் கொள்ளாமல் என்னை மன்னித்திருப்பாரேயானால்...
அது.. "ரத்த பாசம்" தான்.
----------

எண்ணற்ற முறைகள் " பூ முடிக்கும் பூங்குழலி" பார்த்தாயிற்று. அத்தனை தடவையும் அந்தப் பாடல் அள்ளித் தெளித்தவை.. ஆனந்தத் துளிகள்.

அன்று எனக்குப் பின்னால் இருந்து எனக்குப் பாடங்கள் தந்த என் சொந்தத் தந்தை, எனக்கு முன்னால் திரை வழியே எனக்குப் பாடமெடுத்த என் கலைத் தந்தை இருவருமே இன்றில்லை என்றெண்ணுகிற
போது முந்துபவை... கண்ணீர்த்
துளிகள்.

Russellsmd
16th September 2018, 12:37 PM
சிவாஜி பாட்டு- 44
---------------------------------

https://youtu.be/DNmVHa3VdNQ

காற்றோடும், ரசனையோடும்
மட்டுமல்லாமல் சில பாடல்கள்
நம் வாழ்வோடும் பொருந்தி
விடுகின்றன.

மகிழ்வு மிகுந்த ஒரு பொழுதில்
ஒரு இளம்பெண் பாடுவதாய்
வரும் இந்த "அமுதை பொழியும் நிலவே" பாடல், என் வாழ்வோடு பொருந்தி விட்ட பாடல்.

முப்பத்து நான்கு வருஷங்களுக்கு முன், தனது நாற்பத்தி நான்காம் வயதில் உயிர் நீத்த என் தந்தையாருக்கு மிகப் பிரியமான
பாடல்... இது!

மிக இனிமையான குரலில் நம் சுசீலாம்மா "ஓஓ...ஓ" என துவங்குவதிலிருந்து, "டஸ்"
என்று தாம்பாளம் தரையில்
விழும் ஓசையும், "கிறீச்" எனும்
பெண் கூவலுமாய் பாடல்
நிறைவுறுகிற கடைசி விநாடி
வரைக்கும் இந்தப் பாடலை
என் அப்பா வெகுவாய் ரசிப்பதை எண்ணற்ற முறைகள் பார்த்திருக்கிறேன்.

ஏதொன்றுமறியா அப்பாவியாய்
ஒரு முகம். அதில் அகல விரிந்து
மலர்ந்திருக்கும் இரு விழிகள்.
அவற்றில் சதா ஞானத் தேடல்.
வெளியுலகம் தெரியாத காட்டுவாசியாய் நம் நடிகர் திலகம்.

எங்கிருந்தோ ஒலிக்கும் தேன் குரல் பாடல் கேட்டு தெறித்தோடி வருவார்.. தலைவர். செங்குத்தாய்
நிமிர்ந்த மலையில் அவர் ஒடி வருவதைக் கவனியுங்கள். எந்த
ஒரு தடுமாற்றமும் இருக்காது. சாவகாசமாய் நின்று போகும் மந்தத் தனம் இருக்காது. தமிழ் திரையுலகம் முதலும், கடைசியுமாய்ப் பார்த்த அசத்தல்
டார்ஜான்.. நம் நடிகர் திலகம்.

மிக மெலிதாய், எழிலாய் மூக்கு
சுளித்துப்,புன்னகைத்துப் பாட்டிசைக்கும், இளம் பெண்கள்
எல்லாருக்கும் யாசகமாய்த் தந்தாலும் தீராத அழகு கொண்ட இந்தப் பாடலின் கம்பீரக் கதாநாயகி சில மாதங்களுக்கு முன் நெரிசல் மிகுந்த சென்னையின் பேருந்து சிக்னல்
ஒன்றில், யாசகம் கேட்டு நின்றதாய்ப் படித்த பத்திரிகைச்
செய்தி அதிர்ச்சியை அள்ளித் தந்தது.

மலையேறிய தங்கமலையாம்
அய்யன் இப்போதில்லை.

அப்பா மடியில் ஆவலோடு
இருத்தியிருந்த அடர் அரக்கு நிற உறையிட்ட ஃபிலிப்ஸ் டிரான்சிஸ்டர் இப்போதில்லை.

அவர் பாடல் ரசித்துச் சாய்ந்திருந்த ஈஸி சேர் இப்போதில்லை.

அவரே இப்போதில்லை.

"இல்லை"களின் மத்தியில்
பெரிய ஆறுதலாய்...

பெரு நம்பிக்கையாய்...

ஈரம் கசியும் கண்களினூடே அன்பு அப்பாவை காட்சிப்படுத்துவதற்கு
என்றென்றும் உயிர்ப்போடிருக்கும்..
இந்தப் பாட்டு !

Russellsmd
16th September 2018, 12:40 PM
சிவாஜி பாட்டு - 45
----------------------------------
( 24.06.2018-ல் எழுதியது)


https://youtu.be/mU5127S9EPQ

வார்த்தைகளுக்குள் வாழ்க்கையை சுருக்கிக் காட்டிய கவியரசர் அய்யா கண்ணதாசன்...

மனித குலத்தின் நீண்ட நெடிய நினைவுகளை, சந்தோஷக் கனவுகளை தனது ஆர்மோனியப் பெட்டிக்குள் சுருட்டி மடித்து வைத்து விட்ட மெல்லிசை மன்னர்
அய்யா எம்.எஸ்.வி...

இணையற்ற இவ்விரு சாதனையாளர்களும் இணைந்தே
பிறந்த நாள் காணும் இந்த இனிய
தினம் இந்த அற்புதப் பாடலை
நினைத்துக் கொள்ளச் சொல்கிறது.
-----------

எக்காலத்திலும் போற்றிக் கொண்டாடப்படும் இவ்விருவரின்
இணைவில் வந்த ஏராளமான பாடல்களில் மிகப் பெரும்பாலானவை, அய்யா நடிகர் திலகத்தினுடையவை.

தனது ஒப்புவமையில்லாத உயர்ந்த கலைத் திறமையையும்,
கலையுலகின் வெற்றியையும் ஒன்றிணைத்த பெருமையோடு,
இந்த இரண்டு சாதனையாளர்களின் மாசற்ற
திறமைகளை அதிகமாக ஒன்றிணைத்த பெருமையும் அய்யா நடிகர் திலகத்தைச் சேர்கிறது.
----------

ஒரு திரைப்படத்தின் நீளத்தில் கணிசமான பகுதியை பாடல்களால் அடைத்து நிரப்பும்
சராசரி இசையமைப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ள விரும்பாமல், திரைப்படம் சொல்ல வரும் சேதியை தன் இசை மொழி கொண்டு சொல்ல முற்படும் இசை வித்தகராக அய்யா எம்.எஸ்.வி இருந்திருக்கிறார்.

குறிப்பிட்ட படத்தின் குறிப்பிட்ட
பாடல் காட்சிக்கு அப்போதைக்கு உகந்ததாய் சில வரிகள் எழுதி விட்டுப் போகிற பாடலாசிரியராய்
இல்லாமல், ஆண்டாண்டு காலம்
கடந்து போனாலும் மனிதர்களால்
மறக்கவியலாத வாழ்வியல் தத்துவங்களை ஒரு சின்னஞ்சிறு பாட்டுக்குள் சுருக்கித் தருகிற
சூரியக் கவிஞனாய் அய்யா கண்ணதாசன் இருந்திருக்கிறார்.

இந்த இரண்டு அற்புதங்களை இணைக்கும் அற்புதமாக அய்யா
நடிகர் திலகம் இருந்திருக்கிறார்.
--------

இந்தப் பாடல் எனக்குத் தரும் மகா வியப்புக்கு என் வயது.

அழச் சொல்லும் வாழ்வின் சோகம். அந்த நேரத்தில் சிரிக்க வைத்து சோதிக்கும் விதியின் குரூரம்.

" துன்பம் வரும் வேளையில் சிரிங்க.. என்று சொல்லி வச்சார் வள்ளுவரு.. சரிங்க!

பாம்பு வந்து கடிக்கையில், பாழும்
உடல் துடிக்கையில்.. யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?"

- வாழ்க்கை சவுக்காலடித்து
உடம்பெல்லாம் ரணப்பட்டிருக்க,
வள்ளுவப் புத்தகத்தால் விசிறும்
காற்று ..புண்ணாற்றுமா? - எனும்
கண்ணதாசக் கேள்விக்கு மறுப்பேதும் வரவில்லை.. இன்று
வரை.

" இங்கு நானிருக்கும் இருப்பு.. நாலு பேரு பொறுப்பு.. நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு!"- எனும் வரிகள்
பாடப்படும் போது நாம் உணரும்
ஒரு வித சலிப்புணர்வு... இந்தப்
பாடலின் மெட்டிலேயே இருக்கும்.
ரணத்தை ராகமாக்கிய எம்.எஸ்.வி எனும் இசைஞனைப்
போல் வேறோருவர் வரவில்லை.. இன்று வரை.

ஞானக் கலைஞனே..! நடிகர் திலகமே.. ! இந்தப் பாடலைப் பார்த்த பின் " உன்னை நினைச்சு..பாட்டுப் படிச்ச" வர்கள்..
உன் வழியில் வர முடிந்தது. உன்னைப் போல் வர முடியவில்லை.. இன்று வரை!
------------

நம் ரசனைக் கதவு திறக்கும்.

இந்த சின்னக் கிளி பறக்கும்.

சிந்தை நிறைந்த இந்த மாமேதையரை வணங்கிச் சிறக்கும்.

goldstar
16th September 2018, 04:40 PM
Thank you and congratulations Siva for your continuous hard work and taking into 20th episode. I will play my role as Squirrel.

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR2cI7oWzThozpZAb2a-lLxQVF8qjTj4yc1glRRhKz8n0ytP9MWwQ

goldstar
16th September 2018, 04:42 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSoqnfuQJAVtaDybQ7XHnjku7wsuCrYp vjz67xTbSbxTd6UoU4M

goldstar
16th September 2018, 04:44 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS8rATsjVABK3wVEEdeQll176GyM1t6m nVjfeXiva9mRy5x1jUf

goldstar
16th September 2018, 04:46 PM
https://www.esplanade.com/-/media/tributesg/performing-arts/madhavi-krishnan-14-tn.jpg

goldstar
16th September 2018, 04:47 PM
https://vbcdn.com/cdn/download/201504251429961305683168741.jpg

goldstar
16th September 2018, 04:50 PM
http://www.nadigarsangam.org/wp-content/uploads/2016/07/shivaji-remembrance-photo-3.jpg

goldstar
16th September 2018, 04:54 PM
http://1.bp.blogspot.com/_ldd7S3X4A0U/TUSgyZNuc2I/AAAAAAAAACE/QcLqnoCEjUM/s1600/ThathawithSivaji.jpg

Sivaji Ganesan and Kamala Ganesan in Tamil Conference at Toledo, Ohio on 02 July 1995

goldstar
16th September 2018, 04:56 PM
எவருமே நினைத்துப் பார்க்கக் கூட முடியாத 'ஸ்டைல்' புத்திரன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg

goldstar
16th September 2018, 04:59 PM
http://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2018/6/3/original/Karunanidhi2_EPS.jpg

goldstar
16th September 2018, 05:00 PM
http://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2018/6/3/original/Karunanidhi_EPS.jpg

goldstar
16th September 2018, 05:01 PM
https://farm2.static.flickr.com/1776/43348014524_fba6d9506d_b.jpg

goldstar
16th September 2018, 05:07 PM
https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/Bale_Pandiya_Sivaji.jpg?itok=xBxlEFL_

goldstar
16th September 2018, 05:08 PM
https://www.thehindu.com/entertainment/article19967002.ece/alternates/FREE_615/Sivaji

goldstar
16th September 2018, 05:09 PM
http://images.newindianexpress.com/uploads/user/ckeditor_images/article/2018/5/30/sivaji.jpg

goldstar
16th September 2018, 05:11 PM
https://images.indianexpress.com/2017/10/ch507202.jpg?w=610

goldstar
16th September 2018, 05:13 PM
https://qph.fs.quoracdn.net/main-qimg-8823d2101bfb965c9d340384235148bc-c

goldstar
16th September 2018, 05:15 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRPBFjvqCL6ehb5juI28T1903q3VWyLf 732DZWkCKx6dj-s76_n

goldstar
16th September 2018, 05:16 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTOiheUBosahG8TM1gfPv0KMGuHL3TDC 1q4dTrcHSmpZCZl78rr

goldstar
16th September 2018, 05:17 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/MaduraiSaraswathi2006.jpg

goldstar
16th September 2018, 05:19 PM
https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article19658599.ece/alternates/FREE_660/10SepMAPVANS2GVM2F15PU3jpgjpg

goldstar
16th September 2018, 05:21 PM
https://2.bp.blogspot.com/-tyW2iHHPU9c/V_St0tQ5-ZI/AAAAAAAAETg/tjEArcErizcyD3jhTdtvh-MaL_8PhK9fgCLcB/s1600/actor-sivaji-ganesan-images_pakkatv.jpg

goldstar
16th September 2018, 05:24 PM
http://i18.photobucket.com/albums/b126/cdjm/DSC00014.jpg

goldstar
16th September 2018, 05:26 PM
http://www.mohannadkarni.org/wp-content/uploads/2015/09/Bal-Sivaji-300x203.jpg

Bal Gandharva at an advanced age with legendary South Indian actor Sivaji Ganesan. (From the Mohan Nadkarni Archive).

Russellsmd
16th September 2018, 09:55 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80916212817232_zpslzalxuej.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80916212817232_zpslzalxuej.jpg.html)

RAGHAVENDRA
17th September 2018, 06:41 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/41885539_1960538323996830_361914272441171968_n.jpg ?_nc_cat=0&oh=636e2fa7b1b2eebc83afe3db186248f9&oe=5C2030F4

RAGHAVENDRA
17th September 2018, 06:42 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/41922884_1960540440663285_2508540589134315520_n.jp g?_nc_cat=0&oh=55d97c804b14d418cab1ffe0ae86d800&oe=5C225312

sivaa
17th September 2018, 07:28 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 20 ஐ
ஆரம்பித்ததற்கு வாழ்த்து கூறிய எம் ஜீ ஆர் ரசிகர்
திரு மஸ்த்தான் சாகிப் அவர்களுக்கு நன்றி.

sivaa
17th September 2018, 07:29 AM
Thank you and congratulations Siva for your continuous hard work and taking into 20th episode. I will play my role as Squirrel.

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR2cI7oWzThozpZAb2a-lLxQVF8qjTj4yc1glRRhKz8n0ytP9MWwQ

வாழ்த்துக்கு நன்றி சதீஷ்.

sivaa
17th September 2018, 07:38 AM
என்ன விடயம் சொல்லப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளாமல்
மொட்டந் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடுவதே வழக்கமாக இருக்கிறது அங்கே.

நடிகர் திலகத்துக்கு போட்டியாளர்கள் கிடையவே கிடையாது
துரோகியும் துரோகிகள் மூலம் எதிரிகளும்தான் உண்டு.

sivaa
17th September 2018, 07:42 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41915735_334623403778205_8663375775392595968_n.jpg ?_nc_cat=0&oh=575689fa4087632ed1664f7eb0c15b45&oe=5C352BA1

courtesy K V Senthilnathan F B

sivaa
17th September 2018, 07:44 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41968616_334264473814098_3299682146402172928_n.jpg ?_nc_cat=0&oh=95d45aac67b1bf3ae0b2568bf2b2fb0e&oe=5C2AA65F

courtesy K V Senthilnathan F B

sivaa
17th September 2018, 07:48 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41862355_2033566363622616_7061791009109180416_n.jp g?_nc_cat=0&oh=a39fa29e5772931ac035efb0761488d1&oe=5C2BE754

courtesy K S Narsmhan F B

sivaa
17th September 2018, 07:50 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41865074_2033566233622629_7126693106027593728_n.jp g?_nc_cat=0&oh=15a93daccc8c2fa25c396157bd95ce49&oe=5C290B5F

courtesy K S Narsmhan F B

RAGHAVENDRA
18th September 2018, 06:50 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42086219_1961693913881271_4996171353326354432_n.jp g?_nc_cat=0&oh=7761e1cf5fac43f14090300d97a0e346&oe=5C37513F

sivaa
18th September 2018, 08:09 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41897925_565030193933280_2368505744543711232_n.jpg ?_nc_cat=0&oh=3b1382cf93fa91183b6ad601c071e70b&oe=5C24A29B

sivaa
18th September 2018, 08:10 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42044851_564750460627920_5334628417067286528_n.jpg ?_nc_cat=0&oh=55dc57dd4c503e48dd716f4b036ec4db&oe=5C1CDFAD

sivaa
18th September 2018, 08:20 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41966540_677929105905800_5057453961045344256_n.jpg ?_nc_cat=0&oh=56f470c2d95035eebd82d6ad411ecd44&oe=5C388D0D

sivaa
18th September 2018, 08:23 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41991296_490276848106875_5644309083960901632_n.jpg ?_nc_cat=0&oh=57cc492387ec806877233a5d21d215ec&oe=5C3393EE
நன்றி மொகமட் தமீம் முகநூல்

sivaa
18th September 2018, 08:54 AM
1970 களின் போது வந்த பத்திரிகை செய்திகளை தற்போது புரட்டி பார்த்து படித்தால் ஏராளமான உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்,
ஏனெனில் அந்த கால கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் மற்றும் திரைத்துறையில் பெரும் போட்டிகளும் இருந்து வந்தது, உண்மையான வெற்றி பெற்ற திரைப்படங்கள் எவை என்பதை அறிந்து கொள்ள பழைய செய்திகளை படித்தால் அதிலிருந்து இன்றைய சமுதாயத்திற்கு உண்மையான நிகழ்வை எடுத்து செல்ல உதவும்
அப்போதைய பத்திரிகையில் வந்த கட்டுரையை அப்படியே மீண்டும் ஒரு முறை படித்து பார்ப்போம்,...
" அரசியலும் ரசிகர்கள் மன்றமும் "
தென் இந்திய நடிகர் சங்கத்தில் பேசிய எம்ஜிஆர் அவர்கள் " நானும் தம்பி சிவாஜியும" அன்றும் இன்றும் ஒற்றுமை யாகவே இருந்து வருகிறோம், ஆனால் பத்திரிகையாளர்கள் தான் எங்களை பிரித்து வைத்து பார்க்கிறார்கள் என்று பேசினார்,
அவருடைய பேச்சில் எவ்வளவு மாறுபாடு இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிவார்கள்.
நடைபெற்ற தேர்தலின்போதும் அதற்கு பின்னாலும் எம்ஜிஆர் சிவாஜி அவர்களுக்கு சவால் விட்ட கதையும் - மேடை போட்டு நடிக்கலாம் வா - என்று வம்புக்கு இழுத்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது, - சின்ன சின்ன நடிகர்களை விட்டு கேவலமாக பேச வைத்ததையும் யாரும் அவ்வளவு சுலபமாக மறக்கக்கூடியதல்ல
இத்தனை காலமாக சிவாஜி - எம்ஜிஆர் மோதல்கள் பற்றி ஊர் உலகம் அறிந்து இருக்கும் போது " முழு பூசனிக்காய் " சோற்றில் மறைக்கும் வகையில் எம்ஜிஆர் ஈடுபட்டிருப்பது வேடிக்கையே!
" நீரும் நெருப்பும்"- " சங்கே முழங்கு " - "ராமன் தேடிய சீதை" - "நான் ஏன் பிறந்தேன்" ஆகிய நான்கு வண்ணப் படங்களும் வாங்கிய அடி அவரை அப்படி பேச வைத்திருக்கிறது.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " பாபு" - " ராஜா "- "ஞான ஒளி" -
" பட்டிக்காடா பட்டணமா" ஆகிய படங்களின் இமாலய வெற்றி எம்ஜிஆரை கதி கலங்க வைத்திருக்கிறது.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14370248_1085123934937829_6553723317375949128_n.jp g?_nc_cat=0&oh=2f4d6dbb7dcff2005774e7a70b805f82&oe=5C2D7A09

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14322461_1085124468271109_5391250384077498535_n.jp g?_nc_cat=0&oh=aa003c6f0cc1b6ef956b203ab4c98265&oe=5C1A2AC1

courtesy net

sivaa
18th September 2018, 09:06 AM
http://oi66.tinypic.com/535o1y.jpg

sivaa
18th September 2018, 09:11 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41990528_1914121482009418_3740655324969828352_n.jp g?_nc_cat=0&oh=ae1717d1ede357f100211e983a2fcb99&oe=5C6251EE
abdul kadar abdul salam

sivaa
18th September 2018, 09:12 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41968110_1914121275342772_8346717736558133248_n.jp g?_nc_cat=0&oh=5ad49d1c2fa4b490b3f8903c96dc637a&oe=5C2EBE8D

abdul kadar abdul salam

sivaa
18th September 2018, 02:24 PM
நடிகர்திலகத்திற்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை ?
இதற்கான வினாவிற்கு வலைதளத்தில்
தேடிய போது இதற்கான விடையை 'திரு ஆர்.சரவணன் அவர்கள் ஆங்கிலத்தில் அழகாக விளக்க...ியிருக்கின்றார்.
ஆர்.சரவணன் 17.11.2013 புதன் 12:10
உலகத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சிவாஜி அய்யாவிற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணமிருக்கிறது.
இதுவரைக்கும் உலகமே இப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன சிறந்த விருது சிவாஜிக்கு கொடுக்க வேண்டும் ?
நேற்று பர்மா பஜாரில் ஒரு கால்குலேட்டர் வாங்க சென்றேன். அந்த கடைகாரர் எனக்கு 25 வருடமாக
தெரிந்த ஒரு நண்பர்...சில பழைய தமிழ் பட சி.டிக்களும் வாங்க வேண்டியிருந்தது.
"என்ன கடைக்காரரே பழைய படங்கள்
எதாவது கிடைக்குமா ?"
"இருக்கு சார்"
"பாரதிராஜா படம் "மண் வாசனை"
பாக்கியராஜ் படம் "தூரம் நின்னு போச்சி இருக்குதா ?"
"இல்ல சார்"
"சரி... (சந்தேகத்துடன்) "வியட்னாம் வீடு" "கௌரவம்"*
இந்த படங்கள் இருக்குமா ?
"கண்டிப்பா சார்...இருக்கு சார்"
"வேற எதாவது சிவாஜி படம்..." வசந்த மாளிகை"
" வீரபாண்டிய கட்டபொம்மன்?"
"இருக்கு சார்"
"(சந்தேகத்துடன்) சிவாஜி படம் இன்னுமா பாப்புலரா இருக்கு ?"
" எவர் கிரீன் சார், சிவாஜி மூவி ஃபாஸ்ட் மூவிங் சார்... எங்க கிட்ட எல்லா சிவாஜி படமும் இருக்கு சார்.
25 வருடம் ஆகிவிட்டது... இன்னும் சிவாஜி படத்த இன்னும் இந்த உலகம் ரசிப்பதற்கு... சிவாஜி அய்யாவிடம்
குறிப்பிட்டு சொல்லும்படியா ஏதோ இருப்பதை நினைத்தால் பிரமிப்பா இருக்கிறது. அதனால்தான் அவர் புகழ் நிலைத்து இருக்கிறது.
'இந்த விருது உலகத்தின் சிறந்த நடிகருக்காக வழங்கப்பட்ட ஒரு சிறந்த விருது'
'2002ல் சிவாஜி அய்யாவிற்கு என்ன மரியாதை கொடுத்திருந்தார்கள் ?
நேற்று ஒரு பழம்பெரும் நடிகரை பேட்டி கண்டேன்... அப்போது அவர் சிவாஜி அய்யாவை பேசும் போது ஒவ்வொரு சிவாஜி என்ற வார்த்தைக்கு சார் போட்டு சிவாஜி சார் என்று பௌயமாக மரியாதையுடன் குறிப்பிட்டது சாதரணமானதல்ல... அவர் மனதின்
அடித்தளத்திலிருந்து வந்த மரியாதை அது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தங்க முலாம் பூசப்பட்ட சிவாஜியின் படம் பொறிக்கப்பட்டு நினைவுச் சின்னத்தின் திறப்பு விழா நடந்தது. அப்போது பேசிய
திரு ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் சிவாஜி அய்யாவின் மேல் வைத்த மரியாதையை பார்க்க முடிந்தது.
இந்த மரியாதையெல்லாம் சாதரண மரியாதையல்ல... மனதிலிருந்து வரும் உண்மையான மரியாதை. அவரும் சிவாஜி சார் என்றுதான் குறிப்பிட்டார். இந்த விழாவிற்கு
முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும்
கலந்துக்கொண்டனர்.
கமல், ரஜினி, விஜய்காந்த் மற்றும் அனைத்து நடிகர்களும் அவர் மீது பாசத்தையும், மரியாதையையும்
புரிந்துக் கொள்ளமுடிகிறது. அந்த மரியாதையின் காரணமாகத்தான் கமல் 'தேவர்மகன்' படத்தில் சிவாஜி
அய்யா அவர்களை நடிக்க வைத்தார். இரண்டு காட்சிகள்... அவரின் இயல்பான நடிப்பு மறக்கமுடியாதது.
....
ஆர்.சரவணன் 17.11.13
புதன் 16:15
சிவாஜி என்ற ஒரே தமிழன்தான் இந்த உலக முழுதிற்குமான தலைசிறந்த நடிகன். இந்த பூமியில் அவரை தவிர இன்னொருவர் இல்லை. ஆனால் அவருக்கு தெரிந்ததெல்லாம் தமிழ்நாடுதான்.
தமிழில் மட்டும் சிவாஜி அய்யா நடிப்பது குறித்து எனக்கு உண்மையில் சந்தோஷந்தான். தமிழர்கள்தான் அவரை புரிந்துக்கொள்ள முடியும். என்னுடைய சொந்த கருத்து இத்தனை திறமை படைத்தவர்... இன்றைய காலத்தில் கமலை போன்று சிவாஜியும் ஹிந்தியிலும் கதாநாயகனாக வலம் வந்திருந்தால், இந்திய மக்கள் அனைவரும் சிவாஜி யாரென உணர்ந்திருப்பார்கள். அதுவே அவருக்கு பாரதரத்னா, ஆஸ்கர் போன்ற
மிகப்பெரிய விருதுகள் 'செவாலியே விருதிற்கு முன்பே அவ்விருதுகள் எளிதாக கிடைத்திருக்கும். அதற்காக
கடலிருந்து சில சொட்டு நீரை எடுப்பது போல் கீழே சில உதாரணங்களை தருகிறேன்.
வங்காள இயக்குநர் மரியாதைக்குரிய 'சத்தியஜித்ரே' அவர்கள்... உலகம் போற்றும் ஒப்பற்ற இயக்குநர்களில்
ஒருவராக உலகமே ஒப்புக்கொண்டவர்.
சிவாஜி அய்யாவின் பெயரை செவாலியே கமிட்டிக்கு பரிந்துரைக்கும் போது சிவாஜி அய்யாவின் பெயர் செவாலியே கமிட்டியில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
செவாலியே விருதை பெற அத்தனை தகுதிகளும் சிவாஜி அய்யாவிடம் இருந்தது. அந்த விருது சிவாஜி அய்யாவிற்கு கிடைக்க வைண்டுமென அக்கறையுடன் யாராவது பெறுநரை அணுகினார்களா ? இவர்கள் பரிந்துரைத்து அனுப்பியது பழைய இந்திய பெறுநரிடமிருந்தது. சிவாஜி அய்யாவை அந்த விருதிற்கான தனி தகுதிக்கு ( personality ) பொறுத்தமானவரில்லை யென கூட்டமைப்பு (federation) செவாலியே கமிட்டிக்கு கூறியது.
( அதற்கு காரணம் அரசியல்தான்... அதன் உண்மையான காரணத்தை அய்யன் சிவாஜியே சொல்லுவார்... அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம்.)
சத்தியஜித்ரேதான் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இன்று சிவாஜியை தவிர செவாலியே விருது யாராவது பெற முடிந்ததா ?
( இநத கட்டுரை கட்டுரை எழுதப்படும்போது கமல்ஹாசன் செவாலியே விருதை பெறவில்லை)
....
பழம்பெரும் நடிகர் திரு பிரதிவிராஜ்:
( நடிகர் திரு ராஜ்கபூரின் தந்தை )
நாம் வித்தியாசமான நடிகர்களை பார்க்கின்றோம்... வித்தியாசமான கதாபாத்திரங்களில் வித்தியாசமாக
நடிக்கின்றார்கள்.நாம் இலக்கிய வரலாற்று பாத்திரங்களை அவர்கள் எப்படி நடிக்கின்றார்கள் ? என்று பார்த்தால்தான் அந்த நடிகர்களை பற்றி அறிந்துக்கொள்ள இயலும். அவ்வித கதாபாத்திரங்களில் சிவாஜியால்தான் நடிக்கமுடியும். ஏனென்றால் நடிப்பின்
இலக்கணம் அவர் !
அவர் நடித்த எத்தனையோ சிறந்த படங்கள் ஹிந்தியில் மறுபடியும் தயாரிக்கப்பட்டு வந்தாலும்...அவரைப்போல் யாராலும் நடிக்க இயலவில்லை. தயவு செய்து மக்களும், நடிகர்களும் யாரும் அவருடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டாம்.
அவர் ஒரு பெரிய நடிப்புலக மேதை... அது போன்ற நிகழ்வுகள்... சில இடங்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அவையெல்லாம் எண்ணமுடியாத நேரங்கள்.
....

ஹிந்தி சூப்பர் ஸ்டார்ஸ் 'திலீப்குமார்

மற்றும் 'சஞ்சீவ்குமார் சிவாஜியின் தீவிர ரசிகர்கள்.
....

இயக்குநர் கே. கோபாலகிருஷ்ணன்

படபிடிப்பு தளத்தில்... ஹிந்தி நடிகர்கள்
பேசிக்கொண்டிருக்கும் போது... நான் எப்போதெல்லாம் சிவாஜி பெயரை உச்சரிக்கும்போது... உடனே பேசிக்கொண்டிருக்கும் நடிகர்கள் கவனம் சிவாஜி என்ற பெயர் சொன்ன இடத்திற்கு திரும்பும்... அத்துடன் இரண்டு கைகளால் அவர்களின் இரண்டு காதுகளை பிடித்துக்கொண்டு கடவுளை கும்பிடுவதுபோல்
மிக மரியாதையுடன் கவனமாக கேட்பார்கள்... அதை எத்தனையோ முறை நான் கவனித்திருக்கிறேன்.
பிறகு சிவாஜியை வேறு ஒரு நடிகருடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு நோ...நோ...அவரை நம்மிடம் ஒப்பிட்டு
பார்ப்பது தவறு தவறு என்பார்கள்.
.......

சிவாஜி ஒரு அப்போஸ்டல் கலை.
நற்குணத்திற்கும் சிறப்பிற்கும் ஓர் எடுத்துக்காட்டு. தன்னுள் அனைத்தையும் அடக்கிவைத்திருப்பவர்தான்
'டாக்டர் சிவாஜி அவருடைய நடிப்புதிறன் தூண்டுதலுக்கு 'சூப்பர்ப்' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே... ஏனென்றால் இதைவிட சிறந்த வார்த்தையால் அவரின் பல்துறை திறமையை விவரிக்க முடியாது. அவர்
எல்லோரையும் போன்ற நடிகரல்ல... அவர் ஒரு 'பல்கலை கழகம்... அவர் ஒரு 'கல்விச்சாலை... அவரை யாரும் ஒப்பிட்டு பார்க்கவோ... அளந்து பார்க்கவோ முடியாதவர்.
...
'டாக்டர் கணேசன் இந்த உலகின் ஒரு மகப்பெரிய நடிகர் அத்துடன் எல்லோரையும் மிஞ்சக்கூடிய உருவத்திற்கு சொந்தக்காரராக வெள்ளித்திரையில் மின்னியவர். இதில் எந்த ஒரு சந்தேகம் ஏதுமில்லை. அவர் ஒரு ஆண்டவனின் அறுமையான படைப்பு. தன்னுடைய சுய திறமையால்
நுணுக்கமான கலைதன்மையை கொண்ட கலைஞனாக திகழ்ந்தவர். அவருக்கான சுய திறமையாலும் அவருடைய அமைப்பினாலும் சுற்றுப்புறத்தில் தன் புகழை நிலை நிறுத்தியவர்.
கலையும் மற்றும் கலாச்சாரமும் அவருடைய நிலைப்பாடுகளாய் ஆகின. அவரின் முகத்தின் வெளிபாடுகள் மேடையில் வித விதமான பாவனைகளாய் ஆகின. அவரின் உயர்தரமான நடவடிக்கைகள் அவரை
உச்சத்தில் இருப்பதை சொல்லிவைத்தன.
--------தீக்குறிசி சுகுமாரன் நாயர்
( மலையாள இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்)
.....
தெலுங்கு சூப்பர் 'நாகேஷ்வரராவ் மற்றும் மலையாள
சூப்பர் ஸடார் 'மம்முட்டி ஓர் வித்தியாசமான சந்திப்பில் சிவாஜி அய்யாவை பற்றி விவரித்தது :
நடிகர் திலகம் தன் அசாதரண நடிப்புத்திறனால் வெள்ளி திரையில்
தோன்றி அதிசயத்தால் அனைவரையும் தாக்கி அவர் பெயரை உச்சரிக்க செய்தவர்.
....
மலையாள சூப்பர் ஸ்டார் 'மோகன்லால்
சிவாஜி சார் ஒரு அற்புதமான நடிகர்.
அவருடைய இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க முடியாது.
...
'மாண்புமிகு சரத்பவார்'
( முதலமைச்சர். மஹாராஷ்ட்ரா )
தாங்கள்... மராட்டிய வீர சிவாஜியாய்
நடிப்புதிறனை காட்டி நடித்ததை
என்றுமே மறக்க முடியாது.
...................

எம்.ஜி.ஆர்

இனிமேலும் இன்னொரு நடிகர்
பிறக்கமுடியாதென என்தம்பி
நிரூபித்திருக்கின்றார்.
.....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
என்னுடைய ஸ்டைலை பார்த்து... என்னை 'ஸ்டைல் மன்னன் என்கிறார்கள். நான் ஸ்டைல் மன்னனாக இருந்தால்... சிவாஜி சார் ஸ்டைல் சக்ரவர்த்தியாக இருப்பார்கள்.
....
காதல் இளவரசன் கமல்ஹாசன்
இன்றோ... நாளையோ... என்றுமே அவரை காலத்தால் மறைக்க முடியாது. ஒதுக்க முடியாத உயரத்தில்
இருப்பவர். அத்தனை நடிகர்களும் அவர் நடிப்பை பார்த்துத்தான் நடிக்கிறார்கள். அவர்கள் இவர் வழியில்
சென்றாலும் இல்லை வேறு வழியில்
சென்றாலும். சிவாஜி அய்யாவின் பாதிப்புத்தான் இருக்கும். அப்படி இல்லை என்றும் சொன்னால்... அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற அர்த்தமாகும்.
...
மூன்று முறை தேசிய விருதை பெற்ற 'நடிகை லக்ஷமி https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f75/1/16/1f618.png:*
நான் இந்தியா முழுதும் சுற்றுலா சென்றிருக்கிறேன்.இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போய் இருக்கின்றேன். நான் எல்லா மொழி நடிகர்களிடமும் பேசியிருக்கின்றேன்...
அவர்கள் நடிப்பையும் பார்த்திருக்கிறேன்... ஆனாலும்
சிவாஜி சாரை போன்று நடிப்பு திறமை ஒருவரிடமும் இல்லை. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது.
அவருக்கு ஆற்றல் இயற்கையாய் அமையப்பெற்றது. சிவாஜி சாரின் புகழ் ஓர் இமயமலையை போன்றது. அதை யாருமே நெருங்க முடியாது. நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். அவருக்கு கீழ்படிந்த மாணவிபோல் நினைக்கின்றேன். அவரிடமிருந்து பெரிய நடிப்புக் கலையை கற்றுக்கொள்ள ஆசைபடுகின்றேன்.
...
ஆர்.சரவணன் புதன். 17.11.13/21:27
இயக்குநர் சத்தியஜித்ரேவுக்கு ஆஸ்கர்
கிடைத்தது... சிவாஜி அய்யாவிற்கு
அது கிடைக்கவில்லை.
சத்தியஜித்ரே உலகத்தின் சிறந்த இயக்கநரில் பத்தில் ஒருவராக இருந்தார். அவருக்கு மட்டும் அனைத்து உலக நாடுகளின் விருதுகளை பெற சாத்தியமிருந்தது. அதற்கு காரணம் அவருக்கிருந்த சுயமான தன்மை (Originality) உருவாக்கும் தன்மை (Criativity) தனித் தன்மை (Individuality) அவருடைய படைப்புகள் தரமிக்கது.
அவருடைய படங்கள் வித்தியாசமானவையை அணுகக்கூடியது. வித்தியாசமான சிந்தனைகள் அவரை உயர்ந்த இடத்தில் அவரின் அடையாள புள்ளியை பதிய வைத்தது. அவருடைய படங்கள் கதை வெகு வேகமாக நகர்ந்து யாரும் எதிர்பாராத போது திடீரென படம் முடிந்துவிடும். இந்த காரணங்களால் இவரை உலகம் அங்கிகரித்திருக்கலாம்.
*1.* சத்தியஜித்ரே... அவர் என்ன நினைக்கின்றாறோ..? அதே முறையில் படத்தை தயாரித்தார். அவருடைய
படங்கள் உயர்தரமாகவும், உலகத்தரமாகவும், படித்தவர்களுக்காகவும், அகில உலகத்தினர் பார்பதற்காகவும் இருக்கும். அவர் எடுத்த படங்கள் எல்லாமே சிறப்பிற்குரியவை. ஆனால் அவர் படங்கள் பெரும்பாலும் பொழுது போக்கிற்காக இருக்காது. வியாபாரத்திற்காகவும்,பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் இன்னும் மற்றவை ஏதுமிருக்காது. மிக மிக யதார்த்தமாக நடைமுறை வாழ்க்கையைப் போலிருக்கும்.
2அவருடைய படங்கள் அகில உலக தரத்திற்கு
எடுக்கப்பட்டதால் அவருக்கு உலகத்தின் விருதுகள் பெற காரணமாய் அமைந்தது.
3. சத்தியஜித்ரே... அவரே அனைத்தையும் தீர்மானிப்பவராய் இருந்ததார். அதாவது இயக்கம், தயாரிப்பு மற்றும் இசையமைப்பு... இவையெல்லாம் ஒருங்கே பெற்றவராய் இருந்தார். அவர் ஒரு சிறந்த இசையமைப்பவராக இருந்ததால் உலக தரத்திற்கு அவர் இசையமைப்பு இருந்தது.
4. அவர் திரையரங்க வசூலைபற்றி (Box - Office) கவலைபட்டதில்லை. அவர் தயாரித்த 3,4 படங்கள்தான் மேற்கு வங்கத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அவருடைய படங்களில் பெரும்பாலும் செலவில்லாமல் தொலைகாட்சியில்தான் நான் பார்த்திருக்கிறேன். 50% படங்களை மட்டுமே திரையரங்கில் பார்த்திருக்கின்றேன். அதுவும் எனக்கு பிடித்தமானதாக இல்லை. பல படங்கள்
ஒன்றரை மணி நேரத்தில் ஆங்கில படம் போல் முடிந்துவிடும்.
5. அவர் எடுத்த 5,6 படங்களை தவிர, மற்ற படங்களை ஒரு தடவைக்கு மேல் பார்க்க முடியாது.
'பதர் பாஞ்சாலி, 'சாருலதா மற்றும் 'கோபி க்யானே பாகா பய்ன' இது போன்ற படங்களைத்தான் திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் கதை கற்பனையானதும் அவரின் தந்திரங்களினால் எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் மற்றும் அருமையான பாடல்களும் நிறைந்த ஒரு அற்புதமான படம். அவருடைய படத்திலேயே மாறுபட்ட ஒரு வித்தியாசமான படம். இந்த படத்தில் நடிகைகள் யாருமில்லை. இந்த இடத்திலே குறிப்பிட்டு சொல்ல வேண்டியது... இந்த படந்தான் அவர் எடுத்த படங்களிலே எனக்கு உண்மையாகவே ஞாபகத்தில் இருப்பது. ஆனால் இந்த படம் உலக தரத்திற்கானதல்ல... எந்த விருதுகளும்
இந்தப்படம் பெறவில்லை. இதைத்தானே சிவாஜி அய்யாவும் பின்பற்றினார்.
6. நான் எவ்வளவோ சத்தியஜித்ரேவின் படங்களை பார்த்திருந்தாலும் அதில் நடித்த நடிகர்கள் - நடிகைகள் அவர்களின் நடிப்பு என்று ஞாபகத்தில் இல்லை.எனக்கு ஞாபகத்தில் இருப்பதெல்லாம் சத்தியஜித்ரேவின் புத்திசாலிதனமான அவரின் திறமை மட்டுமே.
..........
1.'நடிகர் திலகம் படத்தை பார்பதற்கென்றே தனி ஒரு கூட்டமே இருந்தது. அவர் ஒரு மிகப்பெரிய 'மெகா ஸ்டார்... சாதரண கிராமத்தில்கூட அவரை தெரியும். அவரை பொறுத்தவரை அவர் படம் வெற்றியடைவதே குறிக்கோள். அவரை நம்பி படத்தை வெளியிட்டவர்கள் கைமேல் பலனடைய வேண்டுமில்லையா ?
நடிகர் திலகத்திற்கு வித்தியாசமான ரசிகர்கள் மாநில முழுதும் மாவட்டம், பட்டணங்கள், கிராமங்கள் முழுதும் இருந்தார்கள். அவர்களை திருப்தி படுத்துவதே முக்கியம். A, B,C மையங்களில் (Centre) அவர் படம் நன்றாக ஓட வியாபார மதிப்பு (Business value) இருந்தது. அவர் படத்தை 1% அதிக படித்தவர்களையும் 99% சுமாராக படித்தவர்களையும் படிக்காதவர்களையும் திருப்தி படுத்துவது முக்கியமாக இருந்ததால், பாட்டு காட்சிகள், சண்டை காட்சிகள், நகை சுவை காட்சிகள், நடிகைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இவையெல்லாம் தேவைபட்டதால்... அவர் நடிப்பை யதார்த்த நிலையில் புதிய பரிசோதனைக்கு உட்படுத்த முடியாமல் போனது. அப்படி உட்படுத்தியிருந்தால் திரையரங்கில் வருமானம் வராது... படமும் ஓடாது.
2. சிவாஜி அய்யாவின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அகில உலக தரத்திற்கு படமெடுக்கவும், சிவாஜியின் இயல்பான நடிப்பை காட்டி
அகில உலக விருதை பெற முயற்சிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை படம் குடும்பத்துடன் வந்து குதுகுலமாக இருக்க வேண்டும். சிவாஜி படம் நன்றாக ஓடியது என்று நல்ல பெயர் எடுத்தால் போதுமென்ற
எண்ணமிருந்தது.
3.சிவாஜியும் தான் நடிக்கும் படத்தில்
எதிலும் குறிக்கிடமாட்டார். அவரை பொறுத்தவரை இந்த படத்தில் தன் நடிப்பாற்றலை எப்படி ஜனங்கள் ரசிக்க வேண்டுமென்பதே குறிக்கோலாய் இருந்தது.
4.அவரே சுயமாக நடிப்பில் எல்லையற்ற பல விதங்களில் உருவாக்கி கொள்வார். அந்த நேரத்திலும் அவர் உலக தரத்திற்கேற்பத்தான் அவர் நடிப்பும் இருந்தது. ஆனால் தெழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் , மேக்கப் மேன், கேமரா மேன் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருக்கு உறுதுணையாய் இல்லை. தனி மனித காட்சி (One man show) செய்பவராக இருக்க வேண்டியிருந்தது.
இந்த விஷயத்தில் அவர் பெருந்தன்மையை பாராட்ட வேண்டும். இயக்குநர் என்ன ? தன்னிடம் எதிர்பார்பதை மரியாதையுடன் ஒத்துக்கொண்டு செய்தார். அந்த காலத்திற்கு எது தேவைபட்டதோ அதற்காக சிவாஜியை
பயன்படுத்தி கொண்டதால்... பல சிவாஜி படங்கள் பெரும் வெற்றி (Super - hit) பெற்றது.
1980ல் 'திரிசூலம் பல மையங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது... சின்ன சின்ன ஊர்களில் நீண்ட நாட்கள் ஓடியது. அது அந்த காலத்திற்கு பொருந்தியது. அதே படம் இந்த காலத்தில் எடுக்கப்பட்டால் அவ்வளவு நாட்கள் ஓடுமா? என்று சொல்ல முடியாது. அது அந்த காலத்திற்கு பொருந்தியது
அவ்வளவுதான்.
சிவாஜி தன் படத்தில் எதையும் தீர்மானிப்பவர் அவர் அல்ல. இயக்குநர் என்ன விரும்புகிறாறோ? அதையே அவர் செய்தார்... அதனால் அவருக்கு கிடைத்த முடிவு (Result) சிவாஜி மிகையான நடிப்பு (Over acting) நடிக்கிறார் என்றாகியது. அதனால் அவரை குறை சொல்ல முடியாது... அதைத்தானே மக்களும் ரசிகர்களும் விரும்பினார்கள்.
நான் அறிந்தவரை... அவர் நடிக்கும்போது அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார். அதை அவர் அறியமாட்டார்... மிதமான நடிப்பு (Under acting) இயல்பான நடிப்பு (Natural acting) மிகையானநடிப்பு (Over acting) எல்லாமே சிவாஜிக்கு நடிக்க தெரியும். அதை தீர்மானித்து OK சொல்வது இயக்குநர்தானே...அதனால் சிவாஜி அய்யாவின் மேல் எந்த குறையும் இல்லை. ஒரே நடிப்பை பலவிதமாக நடிக்க அவரால் முடியும்.
பல ஆண்டுகள் போன பின்னர்... 'பாரதிராஜா மற்றும் 'கமல்ஹாசன்... எடுத்த "முதல் மரியாதை" மற்றும்
"தேவர்மகன்" அவருடைய இயல்பான அற்புத நடிப்பை அவர்களால் எப்படி பெறமுடிந்தது ?
5. சிவாஜி அய்யா நடித்த படங்களை எத்தனை முறை வேண்டுமென்றாலும் திரும்ப திரும்ப பார்க்கலாம். நான்
'வியட்நாம் வீடு, 'தில்லானா மோகனாமாம்பாள் படத்தை குறைந்தபட்சம் 10 தடவையாவதுபார்த்திருப்பேன்... ஆனால் இயக்குநர்களின் பெயர்களை கேட்டால் என் ஞாபகத்திற்கு வருவதில்லை... எனக்கு ஞாபகத்தில் இருப்பதெல்லாம் சிவாஜி அய்யாவின் நடிப்பு மட்டுமே...
இந்த காரணங்களால்தான் சிவாஜி படங்கள் உலக தரத்திற்கு விருதுகள் கிடைக்காமல் போனது. சிவாஜி ஒருவர் மட்டும் படமல்ல... அந்த படத்தில் என்னென்ன துறைகள் இருக்கிறதோ அத்தனையும் உலக தரத்திற்கு ஏற்றவையாய் இருந்திருந்திருந்தால், சிவாஜிக்கு நிறைய உலக விருதுகள் கிடைப்பது சாத்தியமாகியிருக்கும்.
சத்தியஜித்ரேவுக்கு ஆஸ்கர் கொடுத்தால் சிவாஜிக்கும் ஆஸ்கர் கொடுத்திருக்க வேண்டும்.
சத்தியஜித்ரே உலகத்தின் மிக முக்கியமான இயக்குநர் என்றால்....
சிவாஜி அய்யா உலகத்தின் ஈடு இணையற்ற மாபெரும் நடிகர்.
சத்தியஜித்ரேவும் சிவாஜியும் ஒப்பற்ற மேதைகள்... அவர்கள் ஏற்றிவைத்த சுடரின் வெளிச்சத்தில்தான் இன்றைக்கு, திரைப்பட கலைஞர்கள் நடைபோடுகின்றனர்.
சிவாஜியும் சத்தியஜித்ரேவும் ஒன்றாக இணைந்திருந்தால் உலக தரத்திற்கேற்ற அற்புதமான படங்கள் உருவாகியிருக்கும்.
இன்றைக்கு சத்தியஜித்ரே மட்டும் உயிரோடு இருந்திருந்தால் சிவாஜியின் பெயரை வாழ்நாளின் சாதனையாளருக்காக கிடைக்கின்ற 'ஸ்பெஷல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்திருப்பார். ஒருவரை பரிந்துரைக்க நிறைய சிபாரிசுகள் தேவைபடுகின்றது. சத்தியஜித்ரேவுக்கும் இது போன்ற சிபாரிசுகள் தேவைபட்டது...
உலகத்தின் மிக முக்கியமான நடிகர்களின் பெயர்களெல்லாம் செவாலியே கமிட்டியில் இருந்தது.
6 ஆண்டுகளாக ஊக்கமான முயற்சியால்தான் அவர்கள் உண்மையை கண்டுபிடிக்க ஆராய்ச்சி வேலையெல்லாம் நடந்த பின்னர்தான் சிவாஜி 'செவாலியே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆறு வருடங்களாக சிவாஜி நடித்த படங்களின் பட்டியலில் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து... அதன்பின்னர்தான் சிவாஜிக்குத்தான் செவாலியே என்று வெற்றிகரமாக நிறைவேறியது.
99 படிகளில் கஷ்டப்பட்டு ஏறித்தான் சிவாஜியால் செவாலியேவை வெல்லமுடிந்தது. வெகு சீக்கிரத்தில் அவர் 100 வது படியும் ஏறுவதும் சாத்தியந்தான். சரியான முறையில் ஆராய்ச்சி நடந்திருந்தால் அதை விடாமல் அணுகியிருந்தால் மகிழ்ச்சியான 'ஆஸ்கரும் சிவாஜி அய்யாவிற்கு கிடைத்திருக்கும்.
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fbd/1/16/1f4a2.png��
ஆர் சரவணன்) புதன் 17.11.13/25:33
நீங்கள் சொல்லிக்கொண்டேயிருங்கள்.உங்களின் ஈடு இணையற்ற திறமை சரியான பெறுநரிடம் கிடைத்து உங்கள் திறமை நிரூபிக்கபட்டால்... மிதமான
திறமையுள்ளவர்கூட ஆஸ்கர் விருதுக்கு பொறுத்த மாகலாம். உலகமே கொடுப்பதுதானே 'ஆஸ்கர் விருது.
நைஸ் ஜோக்... ஆஸ்கர் நல்ல ஆங்கில படத்திற்கு கொடுக்ககூடியது... அதற்காக உலகத்தை குறை சொல்ல
முடியாது. இங்கிருக்கும் அரசியலை போல் அங்கும் அரசியல் சம்மந்தப்பட்டு இருக்கிறது. லாபிகள் வேலை நன்றாகவே நடக்கின்றது.
அதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம்.இதுவரை இரண்டு கறுப்பர்கள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும், ஒரே ஒரு கறுப்பு பெண்மணிக்கு சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
வெள்ளைக்கார நடிகர் - நடிகைக்கு மட்டும் ஆஸ்கர் விருது தீர்மானிக்ப்படுகிறதா ? அங்கும் இனத்தின் பேரால்
ஓரவஞ்சனை அரசியல்தானே நடக்கின்றது.
உலகமெங்கும் 1000 கணக்கான படங்கள் தயாரிக்கப்படுகின்றது. எல்லா நாட்டினிலும் அரசியல் இருக்கிறது. அதன்படிதான் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்து படங்கள் அனுப்ப படுகின்றது. இந்தியாவில் சுமாராக ஆண்டுக்கு 800 படங்கள் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் ஆஸ்கர் கமிட்டியால் தேர்வு செய்யப்படுவது 1000ல் ஒரே ஒரு படம் மட்டுந்தான் பரிந்துரைக்க தேர்வு செய்யப்படுகின்றது.
நல்ல வெளிநாட்டு படங்களும் நல்ல உலக தரத்தில்தான் இருக்கிறது. அசாதரணமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் கூட கவனிக்கப்படாமல் போகின்றது.
இந்த காரணங்களால்தான் ஆஸ்கர் கமிட்டி உலக தரமான படங்களுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கின்றதா ?
சத்தியஜித்ரேவின் படங்களுக்கே 'ஆஸ்கர்விருது ஒரு முறைகூட கிடைக்கவில்லை.இதுவரை ஒரு இயக்குநருக்கும் கிடைக்கவில்லை
ஏ.ஆர்.ரஹ்மானை தவிர்த்து, எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்... இசை ஞானி இளயராஜா உலக தரத்திற்கு இசையமைக்க வில்லையா ?
இது ஒரு பெரிய ஜோக்...அகில உலகத்தின் விருது ஆஸ்கர் என்பது....
ஆசிய - ஆப்ரிக்கா மற்றும் செவாலியே விருது உலக படவிழாவின் விருதென்று எத்தனை பேருக்கு தெரியும் ?
உலகளவில் சில பேருக்கு மட்டுந்தான் நடிப்பிற்காக 'செவாலியே விருது கிடைத்திருக்கிறது. இந்த விருது
'ஃபிரான்ஸ் அரசால் கொடுக்கப்படும் மிக பெரிய விருது. இந்த விருது ஆஸ்கர் விருதிற்கு சமமானது.
சிவாஜி அய்யாவை தவிர்த்து...ஹாலிவுட் நடிகர்களும்
செவாலியே விருதிற்காக முயற்சி செய்தார்கள். அவர்கள் எந்தளவு புகழ் பெற்றிருக்கிறார்கள்... என்பதையெல்லாம் ஆஸ்கர் கமிட்டி போல் செவாலியே கமிட்டியும் விருதை
அவ்வளவு சீக்கிரமாக கொடுப்பதில்லை.ஏனென்றால் ஃபிரான்ஸ்சின் மிக முக்கிய உயர்ந்த விருது. சிவாஜிக்கு எப்படி கிடைத்தான் ஏற்கனவே பாத்தோம். எத்தனைதான்
ஹாலிவுட் நடிகர்கள் ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும்... குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஹாலிவுட் நடிகர்கள்
'கிளீண்ட் ஈஸ்ட்வுட், 'டஸ்ட்டின் ஹூப் மேன் போன்றோருக்குத்தான் செவாலியே விருது கிடைத்தது.
அய்யன் நடிகர் திலகம் சிவாஜிக்கு செவாலியே விருது கிடைக்க... வெகு காலத்திற்கு முன்பே..
*வீர பாண்டிய கட்டபொம்மன்* படத்தில் தன் ஒப்பற்ற நடிப்புத்திறனை காட்டி 1960ஆம் ஆண்டே
*ஆசிய - ஆப்ரிக்கா* விருதை வென்றுவிட்டார்.
நான் இந்தியாவை நினைத்து மிக மிக
வெட்கப்படுகின்றேன். இந்தியாவின் எங்கோ ஓர் மூலையிலிருக்கும் சிவாஜியை கண்டுபிடித்து ஃபிரான்ஸ்
தேசம் செவாலியே விருதை கொடுக்கின்றது. ஆனால் இந்திய அரசு அவருக்கான மரியாதையை தராமல்
ஒதுக்கிவைத்து வேடிக்கை பார்கிறது. ஏனென்றால் சிவாஜி ஒரு தமிழன். அதிலும் சிங்கத்தமிழன். நானும்
தமிழன்தான்... நம் சொந்த தமிழின மிகப்பெரிய மேதையை பெற்றிருப்பதால் பெருமைபடுகின்றேன்.
வாழ்க சிங்கத்தமிழன் சிவாஜி!
மொழி பெயர்ப்பு:
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21616000_692582517598138_3793461051799337798_n.jpg ?_nc_cat=0&oh=04f5157afc18f962fcd011c85afd58fb&oe=5C2389F8


courtesy net

sivaa
19th September 2018, 04:02 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41968587_565224287247204_2934816209226432512_n.jpg ?_nc_cat=0&oh=868eb4d0f8749873efb96eb089c9ad98&oe=5C31B7BF

sivaa
19th September 2018, 04:03 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14364858_178773179225652_7683273526316155924_n.jpg ?_nc_cat=0&oh=66baee220f8a5e6db64bbf5fc596d25d&oe=5C218B7B

sivaa
19th September 2018, 04:05 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16711514_270132470089722_3134104680859742791_n.jpg ?_nc_cat=0&oh=4a2d5fab373c305591ba6980ff8f6dbe&oe=5C2B0B93

sivaa
19th September 2018, 04:09 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16684208_269654556804180_7552416969703063881_n.jpg ?_nc_cat=0&oh=6a1b9e2c186105590c5f3cdfc82e1c6a&oe=5C1ADE6E

nillaa

sivaa
19th September 2018, 04:12 AM
ஆச்சரியத்தில் ஆச்சரியம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சரித்திர சாதனைகள் அடிக்கடி
நிகழ்வதில்லை....
அப்படி அவைகள் நிகழ்ந்தால், அது
அய்யன் சிவாஜியால் மட்டுமே நிகழ்த்த முடியும். அவர் மறைந்தும்
நிகழ்வதுதான் பேராச்சரியம்.
இன்னும் அவரின் ரசிகர்கள் அவரை மறவாமல் இருப்பதும், அவர் படங்கள் 100 நாட்கள் ஓடுவதவற்கும், அவரை போற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதும், அவர் சிலைகளை பற்பல இடங்களில் நிறுவுவதும், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், வழக்குகள் இன்னும் அவருக்காக சமூக நற்பணிகள் செய்வதும் நினைத்தால் பேராச்சரியம்.
எந்த அரசியல் கட்சிகளின் பின்புலமின்றி, இதற்காக பொருளுதவி செய்யும் பணம் படைத்தவர்களின் உதவியின்றி, சிவாஜி என்ற சிம்மத்தின் மீது அடங்கமுடியாத பாசத்தின் பிரவாகமாக, நேசத்தின் ஊற்றுக்கண்ணாக எந்த பிரதிபலன் பார்க்காமல் செய்வது அப்பப்பா...
ஆச்சரியத்தில் ஆச்சரியம், பிரமாண்ட ஆச்சரியம்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/: F B

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21557780_692435254279531_1538583655749412246_n.jpg ?_nc_cat=0&oh=30b9dc4bc797f0f4278662afe1094eeb&oe=5C2A6DA2

RAGHAVENDRA
19th September 2018, 07:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42171869_1962866480430681_9218957115417165824_n.jp g?_nc_cat=104&oh=9ca3d43b0af7d3e381c1e938c394f263&oe=5C351484

sivaa
19th September 2018, 08:15 AM
நடிகர் திலகத்துடன் தங்கள் அனுபவம் குறித்து பல்வேறு பிரபலங்கள் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி தேதி வாரியாக ,
சிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)
==========================================
“சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு
வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.
படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”
– கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)
“சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!
இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!”
– டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)
“சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.
படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”
– நடிகை உஷாநந்தினி (22.7.73)
[நாளை தொடரும்]

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30581622_542341149500159_1701529857852178432_n.jpg ?_nc_cat=0&oh=d60192fd8707941b68e84ec7a023d5ee&oe=5C246588

courtesy Raja Luxmi F B

sivaa
19th September 2018, 08:18 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42085921_2010189275939955_5631911669450932224_n.jp g?_nc_cat=0&oh=4f25908b0ebc86c51c6e09266b98b09c&oe=5C60EA26

courtesy Palaniappan subbu FB

sivaa
19th September 2018, 08:24 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41990875_2010188882606661_2096516112911958016_o.jp g?_nc_cat=0&oh=ec257418be2a22680725b219ef9afc77&oe=5C37692B
courtesy Palaniappan subbu FB

sivaa
19th September 2018, 08:33 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41935329_306954010093812_5443340434535350272_n.jpg ?_nc_cat=0&oh=6a1abd3be49426e68a93b3878c71bc44&oe=5C2B833F


courtesy nirmal F B

sivaa
19th September 2018, 08:41 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42045107_335323920374820_2838593810626248704_n.jpg ?_nc_cat=0&oh=63f43fe4d381a3e9fbcf11322eb3220d&oe=5C3760C5

K V Senthil nathan

sivaa
19th September 2018, 08:43 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41863963_334457267128152_490625465820643328_n.jpg? _nc_cat=0&oh=d873df12462b1fbab48753b24a6e0095&oe=5C28385E

K V Senthil nathan

Russellsmd
19th September 2018, 10:15 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80919214213827_zpsznqeprpo.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80919214213827_zpsznqeprpo.jpg.html)

RAGHAVENDRA
20th September 2018, 12:08 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/41991750_1963654207018575_8540927559158726656_n.jp g?_nc_cat=109&oh=5caecc9f292bbb7156182ccbdcfca9c1&oe=5C1DCBD5

RAGHAVENDRA
20th September 2018, 12:09 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42090760_1963654493685213_4867182808138776576_n.jp g?_nc_cat=101&oh=4edc95136dca23298933455ce05ed6c0&oe=5C2AFE12

sivaa
20th September 2018, 04:45 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41980191_2198629737092998_809449224734244864_n.jpg ?_nc_cat=0&oh=f453d043a93c63747b9d2ebbd2565fbc&oe=5C216E57

sivaa
20th September 2018, 04:46 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41965179_2167935790087904_3681061957953126400_o.jp g?_nc_cat=0&oh=0f3293360d60d12aee3e8658c5c6923f&oe=5C214862

sivaa
20th September 2018, 04:52 AM
தமிழ் மண் இப்படியொரு நடிகரை மட்டுமல்ல... இப்படியொரு தலைவரையும் இனி பிரசவிக்குமா என்பதும் சந்தேகமே!
ஆம். அதற்கொரு சம்பவத்தை நினைவு கூர்கிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய நடிகர்திலகம் 1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்றொரு கட்சியைத் துவக்கினார்.(கட்சிப் பெயரில் அன்றே கழகம் என இல்லாதிருப்பதை நண்பர்கள் கவனிக்கவும்). முழுக்க முழுக்க தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்தார். யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட நன்கொடையாக வாங்கவில்லை.
த.மு....மு சார்பில் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவுக்காக
தம் சேமிப்பிலிருந்து பல லட்ச ரூபாய்களைக் கொடுத்தார்.
அதுமட்டுமின்றி, தேர்தல் முடிந்தவுடன் தன் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து, தம் சொந்த செலவில், தேர்தலுக்காக அவர்கள் செய்திருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கச் சொல்லியும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
எப்பேற்பட்ட கட்சித் தலைவர்!
இப்போது சொல்லுங்கள்!
இப்படியோர் கண்ணியமிக்க தலைவனை இந்த தேசம் இனியும் காணுமா?!
அத்தகைய நல்லுள்ளம் கொண்ட பிதாமகனின் அன்பிதயங்களுக்கு என் இனிய மாலை வணக்கம்.
சுவரொட்டி எண் : 10

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42145993_565694390533527_6275625957432754176_n.jpg ?_nc_cat=0&oh=f236af1a23956e2a0bd48889235f53c4&oe=5C2A4FD1


nilaa

sivaa
20th September 2018, 04:55 AM
ஒருமுறை, பிரபல' பொம்மை ' மாத இதழில், " அரசியலை ஒரு கருவியாக வைத்துக் கொண்டும், சினிமா உலகச் செல்வாக்கை சேர்த்துக் கொண்டும், 'பிழைக்கத் தெரியவில்லை ' என்று உங்களைச் சிலர் குறை கூறுகிறார்கள். அதற்கு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள்? " என்று ஒரு வாசகர் நடிகர்திலகத்திடம் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு நடிகர் திலகம் என்ன பதில் சொல்லியிருந்தார் தெரியுமா...
" என் திறமையையும் புகழையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த எனக்குத் தேவையுமில்லை; அவசியமுமில்லை "
என்பதே அந்த பதில்.
சொன்னது மட்டுமல்ல... கடைசிவரை அப்படியேத்தான் வாழ்ந்தார்.
அந்த உன்னதக் கலைஞரின் நினைவுகளோடு இனிய காலை வணக்கம் நண்பர்களே!

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42058402_565554007214232_3494516070700548096_n.jpg ?_nc_cat=0&oh=7e910143a9fd08c10bc0c3a1fd3eecad&oe=5C238A99


nilaa

RAGHAVENDRA
20th September 2018, 06:49 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42199581_1963978116986184_4004217766910361600_n.jp g?_nc_cat=102&oh=cd0d37f2a9e142eb358f073498e0ebad&oe=5C17F89C

Russellsmd
20th September 2018, 03:35 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80920084635922_20180920102742468_zpsjrxsgdt9.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80920084635922_20180920102742468_zpsjrxsgdt9.jpg.h tml)

Russellsmd
20th September 2018, 10:12 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/2509_2_zpsc4rz2uss.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/2509_2_zpsc4rz2uss.jpg.html)

RAGHAVENDRA
21st September 2018, 02:01 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42286096_1964920360225293_2861119208991752192_n.jp g?_nc_cat=107&oh=98a0e4ab46ee64c305dba300f64fdbcc&oe=5C262249

RAGHAVENDRA
21st September 2018, 02:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42205428_1964920646891931_4027163148652904448_n.jp g?_nc_cat=111&oh=65db005c2f21ad416e6712a76355df48&oe=5C221DB9

sivaa
21st September 2018, 02:53 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42182244_1133683546798325_2227487459816505344_n.jp g?_nc_cat=0&oh=94c4b67635cd840b9d401ba7470a756a&oe=5C3314A4



நன்றி முகநூல் நண்பர்கள்

sivaa
21st September 2018, 02:54 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42146782_1917668534988046_7183458675166543872_n.jp g?_nc_cat=0&oh=edc8445bdca30a5e90606901c07cc530&oe=5C61F8C2

நன்றி முகநூல் நண்பர்கள்

sivaa
21st September 2018, 03:01 AM
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
சுவரொட்டி எண் :11
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை சிவாஜியை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. தமிழர்களுக்கு எப்போதும் தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் அநேகர் சிவாஜியின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
மனத்தின் உணர்ச்சிகளை முகத்தில் துல்லியமாக பிரதிபலிக்கும் கலையில் சிவாஜியை மிஞ்ச உலகிலேயே ஆள் இல்லை. அவர் ஒரே நேரத்தில் முகத்தில் ஒரு உணர்ச்சியை மட்டுமல்ல...இரண்டு உணர்ச்சிகளையும் எளிதாக பிரதிபலிப்பார். மூன்றுவித உணர்ச்சி...
களையும் அவர் சித்தரித்த கட்டங்கள் பல படங்களில் உண்டு.
இந்த நடிப்பு மேதையின் நடிப்புப்பற்றி விமர்சிக்க வருபவன், முதலில் ஒரேஒரு உணர்ச்சியை முத்தில் ஒழுங்காக சித்தரித்துக் காட்டட்டும். அதற்குமேல் எனக்கும் உணர்ச்சிகளை சித்தரிக்கத் தெரியும் ....அது வேண்டாமென்றுதான் யதார்த்தமாக முகத்தை மரக் கட்டையாக வைத்துக்கொண்டு நடிக்கிறேன் என்று பேசட்டும்.
சிவாஜியின் நடிப்புத்திறன் முக்கால் பங்கு என்றால் அவர் முக அமைப்பும்
அந்த கண்களும் இருக்கிறதே... அவை பாக்கியை முழுமைப் படுத்துகின்றன.
குளோசப்பில் காட்டப்படும் அழுகைக் காட்சியிலும் சிவாஜி ஒருவர்தான் நம்மை ரசிக்கவும் வைப்பார்; உருகவும் வைப்பார்.
மற்ற நடிகர்கள் அழும்போது தங்கள் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ளாவிட்டால் நாமே பயத்தில் அழ நேரிட்டுவிடும்.
நன்றி: 19:02:1986 தினகரன் நாளிதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில பத்திகள்....

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42308432_566163547153278_2331193572641996800_n.jpg ?_nc_cat=0&oh=dcd12ba4312973343115419964cafb0e&oe=5C1B8954

sivaa
21st September 2018, 03:02 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42204030_565994263836873_2563355847983890432_n.jpg ?_nc_cat=0&oh=0f74ab80496e3aede16a6278dea65a57&oe=5C2FB9D1

சந்தேகத் தீயில் கருகும் நாயகனாக, வில்லத்தனம் அரும்பி நிற்கும் வித்தியாசமான பாத்திரப் படைப்பில், இடைவேளைக்குப் பின்பு கால்கள் நடையிழந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே நமது நடிப்புச்சுடர் நடித்து
வெளிவந்து சக்கைபோடு போட்ட படம்...
முதல் நாள் இரவுக்காட்சியில் படம் பார்த்துவிட்டு, நள்ளிரவு ஒன்றரை மணிக்குமேல் அன்னை இல்லத்தின் கதவுகளைத்தட்டி, கலைக்குரிசலை எழுப்பி, கட்டியணைத்து, " இந்த உலகிலேயே ...நீ ஒருவன்தான் சிறந்த நடிகன்..." என்று நடிகர் அசோகனை பாராட்ட வைத்த படம்தான் ஆலயமணி.
அத்திரைப்படம் அன்றைக்கு எத்தனையோ இயக்குநர்களின் இதயங்களையெல்லாம் தூக்கமின்றி தவிக்க வைத்தது. 'UNDER PLAY' எனப்படும் மிகத் துல்லியமான .... அதே சமயம் வெகு கூர்மையாக, மெருகூட்டப்பட்ட பண்பட்ட நடிப்புச் சிதறல்களை வெளிப்படுத்திய ஆலயமணியைப் போல் ஒரு நடிகரை நம்மால் இயக்கி வெற்றி பெற முடியுமாவென யோசிக்க வைத்தது.
வித்தியாசமான படங்ளை தந்துவந்த புரட்சி இயக்குநர் ஸ்ரீதர் தனது நுண்ணிய திரைக்கலைத் திறனைப் பயன்படுத்தி, அதே ஆலயமணியை மீண்டும் ஒரு வெற்றிப் படமாக தமிழ்த்திரைக்கு இளமை ஊஞ்சலாடுகிறது என்று படைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி எல்லா தரப்பட்ட திரைக்கலைஞர்களையும் தம் நடிப்புத்திறனால் கட்டிப்போட்டு வைத்த கலைக்குரிசில் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கு என் இனிய காலை வணக்கம்.

நன்றி :வரலாற்றுச்சுசுவடுகள் பாகம் 1 லிருந்து...

sivaa
21st September 2018, 03:03 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/41992141_565358603900439_7707545836053331968_n.jpg ?_nc_cat=0&oh=681da625eac00bb5ac7b64942f290600&oe=5C2C78A1

sivaa
21st September 2018, 05:25 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42170177_2198763663724798_1283851091544375296_n.jp g?_nc_cat=0&oh=38589c4b83fdc2b8a0e62746af063f45&oe=5C151037

courtesy sivaji peravai

RAGHAVENDRA
21st September 2018, 06:58 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42179591_1965138823536780_8587914196434288640_n.jp g?_nc_cat=101&oh=3170f3e86bcbcf9636021969243315f1&oe=5C1F8086

sivaa
21st September 2018, 07:31 AM
http://oi65.tinypic.com/32zmmme.jpg

sivaa
21st September 2018, 07:33 AM
http://oi65.tinypic.com/2na0m0g.jpg

sivaa
21st September 2018, 07:33 AM
http://oi64.tinypic.com/kb8u10.jpg

http://oi66.tinypic.com/2rqimgx.jpg

sivaa
21st September 2018, 07:39 AM
http://oi64.tinypic.com/14m4em8.jpg

sivaa
21st September 2018, 07:39 AM
http://oi65.tinypic.com/14b8h0x.jpg

sivaa
21st September 2018, 07:40 AM
http://oi64.tinypic.com/qpjcxg.jpg

sivaa
21st September 2018, 07:40 AM
http://oi63.tinypic.com/xanbk0.jpg

sivaa
21st September 2018, 07:41 AM
http://oi67.tinypic.com/fnr5er.jpg

sivaa
21st September 2018, 07:41 AM
http://oi65.tinypic.com/4g53b5.jpg

sivaa
21st September 2018, 07:42 AM
http://oi68.tinypic.com/jj8ci0.jpg

Russellsmd
21st September 2018, 01:11 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80921123227740_20180921125808039_zpsvytanymo.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80921123227740_20180921125808039_zpsvytanymo.jpg.h tml)

RAGHAVENDRA
22nd September 2018, 06:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42270083_1966290576754938_2099302086398181376_n.jp g?_nc_cat=108&oh=59a70bb779bcd64b1789062dc06f9fce&oe=5C5D1157

RAGHAVENDRA
23rd September 2018, 06:49 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42365587_1967494759967853_8663980678586564608_n.jp g?_nc_cat=106&oh=c5b72370d66d9cb548b0edcd8c84c74f&oe=5C5D7953

sivaa
23rd September 2018, 08:28 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42297056_2117894328474655_1322229145479938048_n.jp g?_nc_cat=0&oh=4b3d10198bb2f9dd030a2f4d16a0335f&oe=5C15C357

நன்றி சுகுமார் முகநூல்

sivaa
23rd September 2018, 08:31 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42280353_722696841411730_7425838342698172416_n.jpg ?_nc_cat=0&oh=0dc97571ffcca045bbc940765e4ca9f6&oe=5C2C90E9


நன்றி கௌசிகன் முகநூல்

sivaa
23rd September 2018, 06:16 PM
Sekar Parasuram
இரண்டு நாட்களுக்கு முன் ஹரிச்சந்திராவையும் பிதாமகன் போஸ்டர்களையும் பதிவில் காட்டிய நான் என்னுடைய கருத்து என எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை, நாம் ஒன்றை சொல்ல நினைத்து அது ஒப்பீடு செய்வது போல சென்று விடுகின்ற காரணத்தால் தவிர்த்து நண்பர்கள் சொல்லும் கருத்தை ஆவலோடு படித்து பின் கருத்தை சொல்லி விடுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன், தெண்டுல்கரை பதிவில் இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது போதும்,
பொதுவாகவே ஏதாவது செய்தியை சொல்லப் போனால் அது ஒப்பீடு என அவசரம் காட்டிவிடுகிறோம்,
ஒப்பீடு இல்லாமல் எந்தத் தலைவரையும் உயர்த்திப் பிடிக்க முடியாது, ஒப்பீடு இல்லாமல் எந்தச் சாதனையாளரும் உருவாகவும் முடியாது,
1952 வரை இருந்த நடிகர்களை பராசக்தி ஹீரோவோடு ஒப்பிட்டதால் தான் அன்றைய அத்தனை ஹீரோக்களும் தவிடு பொடியானார்கள்,
ஏன் பின்னாட்களில் எம்ஜிஆர் கூட சிரமெடுத்து நடித்தக் காட்சிகளும் உண்டு, ஆனாலும் நடிகர் திலகத்தோடு ஒப்பிட்ட காரணத்தினால் மட்டுமே நடிக்க தெரியாதவர் எம்ஜிஆர் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார் என்பதை மறுக்க முடியாது, அதன் தொடர்ச்சியாகவே எம்ஜிஆர் இன் ஆதரவாளர்கள் நடிகர் திலகம் எவ்வளவோ தான தர்மங்கள் செய்த போதும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர் மறை விமர்சனங்களை பரப்பி விட்டனர்,
எனவே ஒப்பீடுகளை சீர் கொண்டு பார்த்து அதில் அடங்கி இருக்கும் செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக செயல்படுவோம்,
அதன் அடிப்படையில் தான் ஹரிச்சந்திராவையும் பிதாமகனையும்.இணைத்தேன், பிதாமகன் 2003 ஆண்டு வெளியான போது விக்ரம் மிகவும் தைரியமாக வெட்டியான் கேரக்டரில் நடித்து இருக்கிறார், எந்த ஹீரோக்களுக்கும் இல்லாத தைரியம் என அன்றைய பத்திரிக்கைகள் புகழ்ந்து இருந்தன, அதைத்தான் அன்றைய இளைய தலைமுறையினர் கூட தெரிந்துக் கொண்டச் செய்தி, இங்கு கவனிக்கத் தவறியச் செய்தி அன்றைய நாளில் விக்ரம் வளர்ந்து வரும் நடிகர் அவர் அந்தக் கேரக்டரை ஏற்றுக் கொண்டதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை, ஆனால் 1968 ல் நடிகர் திலகம் வெட்டியான் கேரக்டரில் நடித்தது தான் பெருமைக் கொள்ளும் நிகழ்வு செய்தியும் கூட,
நடிகர் திலகம் சிகரத்தின் உச்சியில் இருந்தார், 150 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தமது இமேஜ் பற்றியேல்லாம் யோசிக்காமல் அசத்தினார், உண்மையில் நடிகர் திலகம் வெட்டியான் கேரக்டரில் நடித்ததனால் அவரை நேசித்த ரசிகர்கள் தாமும் ஒரு நாள் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து பார்க்க வேண்டும் என ஆசைப் பட்டவர்கள் உண்டு "அது தான் நடிப்பின் தாக்கம்" உண்மையான விருதும் கூட,












தேசிய விருது
பிதாமகனின் நடிப்பிற்காக விக்ரம் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது,
விருது பெருவது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது நடிகர் திலகம் பற்றிய ஒரு கேள்விக்கு "நடிகர் திலகம் ஒரு பல்கலைக்கழகம் அதில் நாங்கள் மாணவர்கள்" எனப் பதிலளித்து இருந்தார், எனவே விக்ரம் அவர்கள் விருது பெற்றது பெருமையே,
அதற்கான முதன்மை காரணம் வெட்டியான் என்ற கேரக்டரை ஏற்றதுதான், உண்மையில் பிதா மகன் படத்தில் விக்ரமைக் காட்டிலும் சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது தான் எனது கருத்து, அதில் சூர்யா வெவ்வேறு காட்சிகளில் நடிப்பில் அசத்திக்காட்டினார்,
ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிகர் திலகம் நாட்டின் மஹாராஜாவாக இருந்தவர் சூழ்நிலை காரணமாக சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்திட வேண்டும், அந்தப் பணியையும் நேர்மையாக செய்தாக வேண்டும், அந்தச் சூழலில் தனது மகன் இறந்த சூழலில் தனது மனைவி எரிக்க முயலும் போது அதைத் தடுக்கும் அதி முக்கிய காட்சி
இங்கு தான் நடிகர் திலகம் தேவைப்படுகிறார்,
மஹாராஜாவின் உடல்மொழியிலிருந்து மாறி வெட்டியான் என்ற உடல் மொழிக்கு மாறியாக வேண்டும், இது தான் நடிப்பு,
பிதாமகனில் விக்ரம் ஏற்ற கேரக்டர் முழுக்க வெட்டியான் கேரக்டர் என ஏற்க முடியாது, அவரை ஒரு மன நோயாளி போன்று தான் உருவாக்கியிருந்தார் இயக்குனர் பாலா, விக்ரம் படம் முழுக்க ஒரு விரக்தியுடன் முரட்டுச் சுபாவம்.கொண்ட மனிதராக மட்டுமே தோன்றினார், ஆனால் விருதுக் குழுவினருக்கு தெரிந்தது வெட்டியான் கேரக்டரை திறம்பட செய்திருக்கிறார் என மட்டுமே,
ஹரிச்சந்திராவித்கும் பிதாமகனிற்கும் உள்ள தொடர்பு என நான் நினைத்து இருந்ததில் முக்கிய செய்தியை ஐயா பூபால் சிங் அவர்கள் பதிவில் சொல்லி இருந்தார்,
இரண்டு கேரக்டருமே "சுடுகாட்டில் வெட்டியான்" தொழில் செய்வது,
பிதா மகனிற்கு தேசிய விருது கிடைத்தது, மாறாக ஹரிச்சந்திரா வை இந்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை,
ஆனால் ஹரிச்சந்திராவை விருதுப் போட்டிக்காக அனுப்பவேக் கிடையாது, அப்படி இருக்கும் பட்சத்தில் விருது என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டியதில்லை
நான் பிதாமகனை எடுத்துக் கொண்ட காரணம் அந்தப் படம் முழுக்க நடிகர் திலகம் நினைவேந்தல் காட்சிகள் போல தொடர்ந்து கொண்டே வருவதை கவனிக்கலாம்,
எதற்கெடுத்தாலும் சினிமாக் காட்சிகளில் எம்ஜிஆர் ஐ மட்டுமே நினைவு கூறும் அள்ளக் கைகளுக்கு இடையே பிதாமகனில் இயக்குனர் பாலா அவர்கள் நடிகர் திலகத்தின் பாடல் வரிகள், காட்சியமைப்பு இருக்கும் படி பார்த்துக் கொண்டார், அதில் வரும் முக்கிய வில்லன் கேரக்டரை கூட நடிகர் திலகம் போல நடிக்க வைத்து காட்சியை சிறப்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார்,
பொன் மகள் வந்தாள், ஒரு கிண்ணத்தை ஏந்து கிறேன், நலந்தானா ஆகிய பாடல் வரிகளை இணக்க நமது இசைஞானி இசைந்தார் என்றால் அது நடிகர் திலகத்திற்காகவே,
எனவே தான் பிதாமகனிற்கு தேசிய விருது யோகம் அடித்தது.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p261x260/42397468_1878827725567442_1466354508333318144_n.jp g?_nc_cat=0&oh=d73cc994ce151fffbd3ec704c7bb7b0e&oe=5C198F74
(https://www.facebook.com/photo.php?fbid=1878827722234109&set=pcb.1878829635567251&type=3&__tn__=HH-R&eid=ARAJadZYTjE7GKPB5awDGmLFoBso6Op2pmM9k9Q1XxIlyA Avrvc7jBUu_8GAXqrS_bMuhMzhWpf-Hsw8&__xts__%5B0%5D=68.ARAPn0qD3IeW5LtSFVHvuW6QGsMVW4ng tmAY4jZegbmwaHaKEpJpHIF5GCWvaRgP8uod1KbGDEwwmrC1JD QXubFQINxBmBM25gsylaCnnQQtei-uiOBCqdUmwIaZ7iIRggCrJLTWTPXiCdh3R_L7o89e1GQhvU6-Ap7HisHnyQaGn6LJ5QVIcw)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s417x417/42369958_1878827808900767_8880107203902570496_n.jp g?_nc_cat=0&oh=751a6a5f834da4c9fa2b3b40055e7835&oe=5C2F802E
(https://www.facebook.com/photo.php?fbid=1878827802234101&set=pcb.1878829635567251&type=3&__tn__=HH-R&eid=ARA2z30p8uE6MGagxgvrC22LHti2jsWwSQzBoDuxS7ootp Ws_N6KMae_8GTBadLJcmpx8n-sHcdASAT9&__xts__%5B0%5D=68.ARAPn0qD3IeW5LtSFVHvuW6QGsMVW4ng tmAY4jZegbmwaHaKEpJpHIF5GCWvaRgP8uod1KbGDEwwmrC1JD QXubFQINxBmBM25gsylaCnnQQtei-uiOBCqdUmwIaZ7iIRggCrJLTWTPXiCdh3R_L7o89e1GQhvU6-Ap7HisHnyQaGn6LJ5QVIcw)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/42430147_1878828105567404_3332126054478249984_n.jp g?_nc_cat=0&oh=74007d9e29d6d428c0facdb13b7dacdd&oe=5C5BFAC8
(https://www.facebook.com/photo.php?fbid=1878828095567405&set=pcb.1878829635567251&type=3&__tn__=HH-R&eid=ARBqSB8G2_8DTEUuKMlYqfD1ARRpZxnDljjTyzYyB1PazC ukrhjkijVGJtpceLEWg2uhDJBj79Xx-CZ-&__xts__%5B0%5D=68.ARAPn0qD3IeW5LtSFVHvuW6QGsMVW4ng tmAY4jZegbmwaHaKEpJpHIF5GCWvaRgP8uod1KbGDEwwmrC1JD QXubFQINxBmBM25gsylaCnnQQtei-uiOBCqdUmwIaZ7iIRggCrJLTWTPXiCdh3R_L7o89e1GQhvU6-Ap7HisHnyQaGn6LJ5QVIcw)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x165/42472981_1878828225567392_6561393255739555840_n.jp g?_nc_cat=0&oh=7f599da079ba63619df376de3cfc76a5&oe=5C195146
(https://www.facebook.com/photo.php?fbid=1878828208900727&set=pcb.1878829635567251&type=3&__tn__=HH-R&eid=ARBYjXHBpqwZBx8uYuVCVBQDByl5fwDbJMq-8blcW5flta2vNbW1MNV0etg6_FZOJl6_kgq7QqSvQXvL&__xts__%5B0%5D=68.ARAPn0qD3IeW5LtSFVHvuW6QGsMVW4ng tmAY4jZegbmwaHaKEpJpHIF5GCWvaRgP8uod1KbGDEwwmrC1JD QXubFQINxBmBM25gsylaCnnQQtei-uiOBCqdUmwIaZ7iIRggCrJLTWTPXiCdh3R_L7o89e1GQhvU6-Ap7HisHnyQaGn6LJ5QVIcw)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p173x172/42369599_1878828395567375_4890014798449737728_n.jp g?_nc_cat=0&oh=d580656274fb67b6be81861c0f887d53&oe=5C608414
(https://www.facebook.com/photo.php?fbid=1878828392234042&set=pcb.1878829635567251&type=3&__tn__=HH-R&eid=ARBTh9YwDN1a8sAb34OY1EhjYNZQYtEAlZgbZE-LRtKLrsFOLBD9eLao0iavlkDqp5SaYbjHhP1qDSRu&__xts__%5B0%5D=68.ARAPn0qD3IeW5LtSFVHvuW6QGsMVW4ng tmAY4jZegbmwaHaKEpJpHIF5GCWvaRgP8uod1KbGDEwwmrC1JD QXubFQINxBmBM25gsylaCnnQQtei-uiOBCqdUmwIaZ7iIRggCrJLTWTPXiCdh3R_L7o89e1GQhvU6-Ap7HisHnyQaGn6LJ5QVIcw)

sivaa
23rd September 2018, 06:24 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42321893_892755330917016_5298143077909659648_n.jpg ?_nc_cat=0&oh=43c3058722083c229e8cd181b5ca8d6f&oe=5C1A60C9

நன்றி ரங்கநாதன் முகநூல்

Russellsmd
24th September 2018, 12:37 AM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80924001519175_zpsgi20xj6z.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80924001519175_zpsgi20xj6z.jpg.html)

sivaa
24th September 2018, 07:05 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42391135_567782676991365_5813929943913988096_n.jpg ?_nc_cat=0&oh=6f9e5edc276d18a4ddd6b754b2653087&oe=5C15163D

nilaa

sivaa
24th September 2018, 07:14 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42310953_2012496892375860_3194250483220873216_n.jp g?_nc_cat=0&oh=95ff07fdbf8a0f61fac11e72a9702d64&oe=5C1FBDAD

palaniappan subbu

sivaa
24th September 2018, 07:38 AM
வசந்த மாளிகை பிரஸ் ஷோ... கைத்தட்டி, விசிலடித்து உற்சாகத்துடன் பார்த்த செய்தியாளர்கள்
ரிலீசாகி 40 ஆண்டுகள் கடந்த பிறகும், கொஞ்சம் சுமாரான பிரிண்டுடன் இருக்கும் ஒ...ரு படத்தை இத்தனை உற்சாகத்தோடு பார்க்க முடியுமா? முடியும் என நிரூபித்தது வசந்த மாளிகை படம். இந்தப் படத்தை கொஞ்சம் அங்கே இங்கே பட்டி பார்த்து 'புதுப்பொலிவுடன்' என்ற தலைப்போடு மீண்டும் வெளியிடுகிறார்கள். 1972-ல் வெளியான வெளியான இந்தப் படம், தெலுங்கில் வெளியான பிரேம் நகர் என்ற படத்தின் தமிழ் வடிவம்.
டி ராமாநாயுடு தயாரிப்பில், கேஎஸ் பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். இந்தப் படம் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. வசூலில் மிகப் பெரிய சாதனையைச் செய்தது. தமிழகத்தில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை - சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி - ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது. இலங்கையில் கேபிடல், வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் முறையே 287 மற்றும் 208 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை இன்றுவரை வசந்த மாளிகைக்குத்தான். ஒரு படத்துக்கு ஒரே நாளில் பல ஊர்களில் விழா எடுப்பது என்ற புது ட்ரென்ட்டை உருவாக்கியதும் இந்த வசந்த மாளிகைதான். இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய நான்கு ஊர்களில் 1973ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மயிலாடுதுறையிலும் விழா நடந்தது. இந்தப் படம் வரும் 8-ம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. அதனையொட்டி நேற்று செய்தியாளர்களுக்கு ஆர்கேவி அரங்கில் சிறப்புக் காட்சி போட்டுக் காட்டினார்கள். பலமுறை பார்த்த படம்தான் என்றாலும், ஏகப்பட்ட பேர் பார்க்க வந்திருந்தார்கள். வசந்த மாளிகை பிரிண்ட் சுமார் என்றாலும்... பார்த்த அனுபவம் நிஜமாகவே சூப்பராகத்தான் இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டி, விசிலடித்து, குறிப்பாக வசனங்களுக்காக கைத்தட்டி ரசித்ததை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிந்தது. கவியரசரோடு ஒப்பிட வேறு எவருக்கும் தகுதியில்லை என்பதை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தன. நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு என்றாலும்... எத்தனை பிரமாதமாக தமிழை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்! படத்தில் டிஎம்எஸ் பாடியதாகவே தெரியவில்லை.. சிவாஜியே பாடுவதுபோலத்தான் உணர முடிந்தது. வசனங்களைப் பேசும் சிவாஜியின் குரல்தான், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... பாடல் வரிகளையும் பாடியது போல அத்தனை பர்பெக்ஷன்!!
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/480541_224724504318782_256490774_n.jpg?_nc_cat=104&oh=45b1ddd8dfa5c7e75fd77987e5f78197&oe=5C15AA02


(சினிமா களம் பழைய பதிவு நன்றி சேகர் முகநூல்)

RAGHAVENDRA
24th September 2018, 08:40 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42492236_1968802156503780_3192446060085641216_n.jp g?_nc_cat=110&oh=a37defd8f5283983c3085e0c65935b20&oe=5C5C53CA

RAGHAVENDRA
24th September 2018, 08:41 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42458080_1968805193170143_4616739275084398592_n.jp g?_nc_cat=109&oh=efda3ea473ca63431693e275d9253bb4&oe=5C1F5539

RAGHAVENDRA
25th September 2018, 06:37 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42474122_1969845176399478_3819263839350816768_n.jp g?_nc_cat=111&oh=03214e07016b76a1d0d54be03ed28866&oe=5C5945BA

RAGHAVENDRA
25th September 2018, 06:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42461344_1969863029731026_8068996986465943552_n.jp g?_nc_cat=110&oh=14e10c22bbae365fc3afb9ea2d9d0941&oe=5C2AC8AC


Friends most welcome to use this for their FB cover.

RAGHAVENDRA
26th September 2018, 06:21 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42568152_1970973656286630_2843201365642051584_n.jp g?_nc_cat=100&oh=48c680e1258bbc3b71c520999183ef1a&oe=5C583CE0

sivaa
26th September 2018, 08:59 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42570084_545478602558761_6878748500910145536_n.jpg ?_nc_cat=103&oh=e1e47c85573ac828a159df9273a35972&oe=5C2CEE4F

sivaji annadurai

sivaa
26th September 2018, 09:04 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/42442871_916923751831538_7560973875144556544_n.jpg ?_nc_cat=101&oh=220ea6527a008f5000bb163e5fbfe46c&oe=5C27575C

RAGHAVENDRA
26th September 2018, 09:41 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42450717_1971707849546544_6229062172572385280_n.jp g?_nc_cat=106&oh=deb778f28f131486a2f5370fb0eeb899&oe=5C2D0E24

Russellsmd
26th September 2018, 10:19 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80926212201351_20180926215715770_zpsotoqak3h.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80926212201351_20180926215715770_zpsotoqak3h.jpg.h tml)

RAGHAVENDRA
27th September 2018, 07:06 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42570093_1972144606169535_989940831597101056_n.jpg ?_nc_cat=107&oh=e018f76e1374feae22e0c54ac8a11245&oe=5C17671D

RAGHAVENDRA
27th September 2018, 11:32 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42640221_1972936292757033_2805440820629471232_n.jp g?_nc_cat=104&oh=644763a6a3a76f19b2c35e27f6acbd5c&oe=5C2722F9

RAGHAVENDRA
28th September 2018, 05:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42654170_1973240112726651_6234215884219482112_n.jp g?_nc_cat=103&oh=c44a22420afc439e33b2b40616158817&oe=5C1B83AE

RAGHAVENDRA
28th September 2018, 08:18 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42611229_1973345896049406_7455727037290905600_n.jp g?_nc_cat=101&oh=ad25194dbc75bfdbc4520bdf3def3964&oe=5C1C06C6


From today's Hindu Talkies Supplement of Tamil Hindu

RAGHAVENDRA
28th September 2018, 09:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42670917_1973404559376873_8002161548673941504_n.jp g?_nc_cat=108&oh=d0440b15cea47c0010d60220450bce94&oe=5C5F3B83

RAGHAVENDRA
28th September 2018, 09:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42626020_1973418679375461_8995202796902940672_n.jp g?_nc_cat=103&oh=c933d59f8b78837092ada3fab7a0a8ed&oe=5C58C4AB

RAGHAVENDRA
28th September 2018, 10:41 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42692939_1974053319311997_4455473732839800832_n.jp g?_nc_cat=106&oh=dca1cbce2e7848853039b3dc856e3c9d&oe=5C1576BD

RAGHAVENDRA
29th September 2018, 02:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42699590_1974249469292382_8421919285311438848_n.jp g?_nc_cat=110&oh=d164676bed7a5d89966cfda66373e2ce&oe=5C207548

RAGHAVENDRA
29th September 2018, 02:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42767856_1974249415959054_8443329448173895680_n.jp g?_nc_cat=107&oh=6b36a97c5a687bf48dcf521eb587e31b&oe=5C1E7D91

RAGHAVENDRA
29th September 2018, 02:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42745718_1974249399292389_6412772028494905344_n.jp g?_nc_cat=107&oh=12067344df7c25725025b16584490f0b&oe=5C1DD517

RAGHAVENDRA
29th September 2018, 02:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42656997_1974249425959053_2345364847299919872_n.jp g?_nc_cat=105&oh=0bea75890265081cf481dc9b82db1847&oe=5C5741DD

RAGHAVENDRA
29th September 2018, 06:40 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42805480_1974460379271291_5994342141126508544_n.jp g?_nc_cat=106&oh=2456aa13a12a61fdd5266062cd89a70e&oe=5C197CE4

RAGHAVENDRA
29th September 2018, 08:06 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42790197_1974531819264147_9251436864995328_n.jpg?_ nc_cat=103&oh=c135a9d117c0c95e0dd29177e7cda12f&oe=5C1D8B84

sivaa
29th September 2018, 09:29 PM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் மீண்டும் அவசர அலுவல் காரணமாக ஒரு மாத விடுமுறை. பதிவுகள் இடுவது சிரமம் .பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு இத்திரியை தொய்வின்றி கொண்டு செல்லுங்கள் நன்றி.

Russellsmd
30th September 2018, 10:47 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80930192328624_zpspltpmd9v.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/13316914_626782327481092_4445816223108479418_o_201 80930192328624_zpspltpmd9v.jpg.html)


கால் கடிக்கும்
குறும்பு மீன்கள்...

மூக்குப் பிடித்து
நீருக்குள் போக,
மங்கலாக உணர்கிற
நிசப்தமான தண்ணீர் உலகம்...

குளித்த பின் நேரும்
அவஸ்தையும், சுகமுமான
காது வலி...

இப்படி
ஒரு ஊரணிக் குளியல்
மனதுக்குத் தந்த
பேரானந்தத்தை
நித்தமும் எங்களுக்குத் தந்தவை
உங்கள் படங்கள்தானே அய்யா ?
---------

அடி பிறழாமல்
மனப்பாடச் செய்யுள் ஒப்பித்து
கைதட்டல் பின்னணியில்
நான் பரிசுகள் வாங்கியதற்கு
ஆதாரம்
உங்கள் அழகு தமிழ்தானே அய்யா?
-------

சின்ன வயசில்
விவசாய ஆபிஸ் வாசலில்
சினிமாப் பாத்திரங்களாய் மாறி
விளையாடியிருக்கிறோம்.

விளக்குமாற்றுக் குச்சி
வாளாக மாறிய போது
பார்த்திபனாக மாறியதுதான்
அதிகம்.

நண்பர்களிருவர்
இருபுறமும் கைபற்றிக் கொள்ள,
மானசீகச் சங்கிலிகள்
நெஞ்சோடு பிணைக்க,
மார் விரித்து
வசனம் பேசும் போதெல்லாம்
மனோகரனாக மாறியதுதான்
அதிகம்.

( விளையாட்டு போதுமென்று
சாப்பிட அழைக்கும்
அன்னையர்கள்
பத்மாவதிகளாய் இருந்தாலும்
அன்று எங்களுக்கு
வசந்தசேனைகளாய்
தெரிந்தது வேறு விஷயம்.)

விளையாட்டுக்குக் கூட
மறக்கக் கூடாதென்று
எங்கள் விளையாட்டில் கூட
நீங்கள்தானே அய்யா?
-------

"உங்கள் படங்கள்
பார்க்கும் போது மட்டும் தான்
தின்னக் கொண்டு போன
கடலைகளை
தின்ன மறந்து
திரும்பக் கொண்டு வந்தோம்"
என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.

உங்கள் படங்கள்
முடியும் தருவாயில் தான்
'கடலை வாங்க வேண்டும்'
என்று நினைத்திருந்ததே
நினைவுக்கு வந்தது
எனக்கெல்லாம்.

உங்களைத் தவிர மற்றதெல்லாம்
மறக்கடித்தது
உங்கள் கலைதானே அய்யா?
--------

அப்பாவோ, அம்மாவோ
திட்டியோ,அடித்தோ
சிறு வயதில் அழுத போது,
சினிமாவில்
நீங்கள் அழுவது போல்
இருக்கிறதா என்று
கண்ணாடி பார்ப்பேன்.

இல்லை என்று புரிய வரும்.

அதற்கே ஒரு அழுகை வரும்.

அந்த அழுகைக்குக் காரணம்
நீங்கள்தானே அய்யா?
---------

மறுநாள் பரீட்சையென்று
பாடப் புத்தகம் எடுத்தால்
ஏழரை மணிக்கே
தூக்கம் கேட்கும் கண்கள்...
உங்கள் படமென்றால்
இரவுக் காட்சி நேரத்தில் கூட
குண்டு பல்பு போல் ஒளிர்ந்த
அதிசயத்திற்குக் காரணம்
நீங்கள்தானே அய்யா?
---------

கோயில்களுக்குப் போனால்
" அம்பிகையே ஈஸ்வரியே"...
"தெய்வம் இருப்பது எங்கே?"...

சுதந்திர தின விழாவில் நின்றால்
" இந்திய நாடு என் வீடு"...

பள்ளி விழாக்களென்றால்
" தங்கங்களே.. நாளைத் தலைவர்களே!"...

பாரதி விழாவென்றால்
" சிந்து நதியின் மிசை நிலவினிலே..."

எந்நேரமும்
உதடுகள் உற்சாகமாக உச்சரிக்கும்
பாடல்கள் அத்தனையும்
உங்களுடையவை.

இசையாகவும் மாறி
எங்கள் இதயம் நிரம்பியவர்
நீங்கள்தானே அய்யா ?
---------

கலை காக்க
காலையில் கிளம்புகையில்
"அம்மா" என்றழைத்து
அன்பான அன்னை கையால்
மோர் வாங்கிக் குடித்து விட்டுக்
கிளம்புவீர்களாம்.

உயிரான அன்னை
உயிர் துறந்த பின்னும் கூட
வெளிக் கிளம்புகையில்
அன்னை இருந்த இடம் நோக்கி
"அம்மா" என்று அழைத்து விட்டுப்
போவீர்களாம்.

உன்னதமான உயிர்கள்
மரணப்படுவதில்லை.
அவைகள்
உயிர்ப்புடனே இருக்கின்றன.

என்றும்
உயிர்ப்புடனே இருக்கும்.
---------

உயிருடன் இல்லை என்றாலும்
"அம்மா" என்றழைத்து
நீங்கள் கலை காக்கப்
புறப்பட்டீர்கள்.

உயிருடன் இல்லை என்றாலும்
" அய்யா" என்றழைத்து
நாங்கள்
உங்கள் புகழ் காக்கப்
புறப்பட்டோம்.
---------
உங்களைப் போன்ற
உன்னதமான உயிர்களுக்கு...
பிறப்பு மட்டும் தானே அய்யா !

Murali Srinivas
1st October 2018, 12:34 AM
சிவாஜி 90

நினைவு தெரிந்த நாள் முதல்

நினைவு இருக்கப்போகும் நாள் வரை

என்றென்றும் உங்களுடன்

அன்புடன்

sivaa
1st October 2018, 09:16 PM
கலை உலக மன்னன் அகில உலக தமிழ்ப்பட வசூல் சக்கரவர்த்தி கலைக்குரிசில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90 வது பிறந்தநாளில் அவரை போற்றி அவர் புகழ் பாடுவோம்

sivaa
1st October 2018, 09:21 PM
முகநூலில் பல நண்பர்களால் பதிவிடப்படும் பலவித பேனர்களை இயலுமானவர்கள் கொப்பிபண்ணி இங்கே பதிவிடுங்கள் நன்றி

RAGHAVENDRA
3rd October 2018, 06:28 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42987671_1979134478803881_1831577499025276928_n.jp g?_nc_cat=111&oh=ddb2e79307c45db6433829e7530a8039&oe=5C1A4438

RAGHAVENDRA
4th October 2018, 06:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42977573_1980426118674717_5809677080182390784_n.jp g?_nc_cat=104&oh=787110bf6f1a3b45be66b7a170b3c7b0&oe=5C5284A9

RAGHAVENDRA
4th October 2018, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42963274_1978835175500478_4821569538195718144_n.jp g?_nc_cat=106&oh=1aaf6a188b058745c880fac205f2b401&oe=5C5316BE

RAGHAVENDRA
4th October 2018, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42913338_1976718585712137_8206780254581161984_n.jp g?_nc_cat=109&oh=a4c7d3b72079e9b19a2448c90078ed65&oe=5C52C204

RAGHAVENDRA
4th October 2018, 06:45 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/42933045_1978837685500227_3303569508416880640_n.jp g?_nc_cat=100&oh=aa939e80075eb7ce29fb402758f1d37f&oe=5C1615E6

RAGHAVENDRA
5th October 2018, 08:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43193453_1981730728544256_9036108434797232128_n.jp g?_nc_cat=103&oh=3da9608f2e1e65814073d22b1c200151&oe=5C2155DE

RAGHAVENDRA
5th October 2018, 08:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43050770_1981301105253885_255922644308721664_n.jpg ?_nc_cat=108&oh=ff40af83d5a217c7d92f521641c018fc&oe=5C5525FB

RAGHAVENDRA
5th October 2018, 08:37 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43131013_1981734808543848_1866129892446306304_n.jp g?_nc_cat=105&oh=9edb8e5675d0532e4dfe2ea9fe199855&oe=5C1C2F25


இன்றைய (05.10.2018) ஹிந்து தமிழ் ஹிந்து டாக்கீஸ் இணைப்பிலிருந்து

RAGHAVENDRA
5th October 2018, 08:38 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43174361_1981735438543785_179188466540609536_n.jpg ?_nc_cat=111&oh=76a4c8f73ec1cd689ad24cbaea1fc061&oe=5C1FA44E


இன்றைய (05.10.2018) தமிழ் இந்து பத்திரிகையின் இந்து டாக்கீஸ் இணைப்பிலிருந்து. போட்டியில் பங்கு பெற நாளிதழை வாங்கவும். இந்த நிழற்படம் தகவலுக்காக மட்டுமே.

RAGHAVENDRA
5th October 2018, 08:38 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43199561_1981739271876735_8375771717141790720_n.jp g?_nc_cat=111&oh=06d4f8f741759755ea8c5f2d729e31be&oe=5C4E56BC


இன்றைய (05.10.2018) தமிழ் இந்து நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பில் வெளியாகியுள்ள நமது Murali Srinivas அவர்களின் தகவல் தொகுப்பு

RAGHAVENDRA
5th October 2018, 08:39 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43159203_1981742238543105_8545982035586449408_n.jp g?_nc_cat=108&oh=d968a581be4b2a8e6b8ed6e56eb94fed&oe=5C1F6796


இன்றைய (05.10.2018) தமிழ் இந்து நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிலிருந்து..

RAGHAVENDRA
6th October 2018, 06:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43149285_1982961485087847_7768164510547836928_n.jp g?_nc_cat=110&oh=4dc55507077130caaac09e27eaac8f38&oe=5C5B17A1

RAGHAVENDRA
7th October 2018, 06:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43086350_1984283238289005_297167404230770688_n.jpg ?_nc_cat=103&oh=4b1e07a5d9f3750a49d7676bfe708a78&oe=5C1FA606

RAGHAVENDRA
7th October 2018, 06:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43185073_1983864301664232_2313229369415303168_n.jp g?_nc_cat=105&oh=ebbd11b41af8ad92a3155c74af751325&oe=5C53DC29

RAGHAVENDRA
10th October 2018, 12:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43496570_1987823864601609_838445326338621440_n.jpg ?_nc_cat=103&oh=d3757eb8e31fbf0f9efed5555982eb7b&oe=5C166157

RAGHAVENDRA
10th October 2018, 06:12 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43747850_1988151724568823_6833499298164899840_n.jp g?_nc_cat=101&oh=a213a15b85ecd5a6f932dfc549a82098&oe=5C467552

RAGHAVENDRA
10th October 2018, 09:08 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43514726_1988288537888475_1896531311644901376_n.jp g?_nc_cat=105&oh=55a14720bbda276b8f8b71f6daf1bf7e&oe=5C4C8DA7

RAGHAVENDRA
11th October 2018, 05:55 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43747879_1989478264436169_1433450209827880960_n.jp g?_nc_cat=110&oh=92469400c57054332f57a4a58084b147&oe=5C4F9187

RAGHAVENDRA
12th October 2018, 07:25 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43773015_1990826064301389_7558924226556592128_n.jp g?_nc_cat=109&oh=1beacd69ea35f7f6c8b1c15f874fb547&oe=5C46A84F

RAGHAVENDRA
12th October 2018, 07:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43669116_1990833557633973_9222315986001068032_n.jp g?_nc_cat=108&oh=17d842a1757c0578801b366947211c03&oe=5C192D83


https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43952231_1990833544300641_5873000883993706496_n.jp g?_nc_cat=100&oh=7bf5a788871c6b8ea895bd2a87a77f60&oe=5C420A69


ஹிந்து டாக்கீஸ் நடிகர் திலகம் போட்டியில் உடனே பங்கு பெற்று உங்கள் விடைகளை அனுப்புங்கள். விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி, மற்றும் விதிமுறைகள் யாவற்றையும் கவனமாகப் படியுங்கள்.

பங்கு பெறும் தாங்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
12th October 2018, 07:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43748235_1990836644300331_5167252704023543808_n.jp g?_nc_cat=100&oh=fc63935c9f67a8b3bb9d831c16f1b1e8&oe=5C5906F2


My article on NT MSV Combo in today's Hindu Talkies Supplement of Tamil Hindu.

Thank you Tamil Hindu.

RAGHAVENDRA
13th October 2018, 06:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43770140_1992123900838272_8893164583087243264_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=61d377f5e664dd4b3fe6926ff32497d1&oe=5C56FC70

RAGHAVENDRA
15th October 2018, 10:59 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44085490_1994814903902505_6221782293199978496_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=9812b2a5a0dd5e9f276e4e8d94dc85a8&oe=5C46B655

RAGHAVENDRA
16th October 2018, 10:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44110961_1996036683780327_2324204758908272640_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=551b4b793ea1fbfce6a664d1958644dd&oe=5C57EF9A

RAGHAVENDRA
16th October 2018, 01:44 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44132191_1996207973763198_8221530220247646208_n.jp g?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=288b4f6ec6dfcb4803c5b57c26c71004&oe=5C4F4AA8

RAGHAVENDRA
17th October 2018, 10:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44179912_1997242433659752_4253081520798957568_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=49f1560d70a2c6835fe06ce966715212&oe=5C3F7C87

RAGHAVENDRA
17th October 2018, 10:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44223969_1996838283700167_3239893074905661440_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=0952361935945e43ac8ef36f844c5c32&oe=5C558D80

RAGHAVENDRA
17th October 2018, 03:22 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44294069_1997467403637255_1989279012983144448_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=23a451fdefce80fc1c26e2efcacef2a5&oe=5C439E2D

RAGHAVENDRA
18th October 2018, 10:58 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44177288_1998435910207071_7537246968267931648_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e5435aa6d5ecfe0ba544fe5aed4d29fc&oe=5C46592F

RAGHAVENDRA
19th October 2018, 10:42 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44228374_1999056580145004_448502642784600064_n.jpg ?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=22d8d1067255093897eb6eded91138c1&oe=5C4DE5A3

RAGHAVENDRA
19th October 2018, 10:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44439542_1999647170085945_7125087282180128768_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=caab286b1f019104d3cef4578478d356&oe=5C5F3C35

Russellsmd
19th October 2018, 02:25 PM
18.10.2018

நேற்று முன் தினம் இரவிலிருந்து
முற்றின காய்ச்சல். நேற்று காலை
மருத்துவமனை சென்று ஊசி ஏற்றி, "திரிசூலம்" வி.கே.ஆர் பாணியில் "மாத்திரைகளை மார்ச்
பண்ணி வரச் சொல்லி" விழுங்கி
விட்டு, நன்றாக ஓய்வெடுத்த பின்
பின் மாலைப் பொழுதில் சுகமாகி தெளிந்தெழுந்தேன்.

உண்ணாவிரதமிருப்பவர்களுக்கு உண்ணா நோன்பை முடித்துக் கொள்ளும் தருவாயில் சுவையாய், சத்தாய் பழச்சாறு கிடைப்பது மாதிரி, என் காய்ச்சல்
தீர்ந்த இரவில் பழச்சாறாய் "அவன்தான் மனிதன் " கிடைத்தது.( நன்றி: ஜெ. மூவிஸ்)

" எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது"
பாடல் காட்சி வரை பார்த்தேன்.
அதற்கு சற்று முன்பாக ஒரு காட்சி.

முத்துராமனின் குழந்தையிடம் "எது வேண்டுமானாலும் கேள்" என்று சொல்லி விடுவார்.. நடிகர் திலகம். என்னென்னவோ கொடுப்பார். அத்தனையையும் வீசி எறியும். அவரது பாரம்பரியப் பெருமை சொல்லும் பச்சைக்கல்
மோதிரத்தையே கழற்றித் தருவார். 'அம்மா வேண்டும்' என்று
கேட்கவிருக்கும் பெண் குழந்தை
அதையும் தூர வீசும்.

பதறிப் போகும் வேலையாள் மேஜர்.. பரம்பரை மோதிரத்தை
குழந்தையிடம் கொடுத்து, அதன்
பெருமையறியாமல் அது வீசி எறிந்து விட்டதே என்று வருத்தப்பட, நடிகர் திலகம் புரிதல்
மிகுந்த ஒரு புன்னகையோடு சொல்லுவார்...

" அழுத குழந்தையை சிரிக்க வைக்க முடியல.. என்ன பெரிய
மோதிரம் அது?"

அய்யா நடிகர் திலகத்தின் தேசப்பற்று ஓங்கிய தூய அரசியலாக அந்த பச்சைக்கல் மோதிரத்தை நான் பார்க்கிறேன்.

வேறு எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்த அசட்டுத்தனத்தில், கைக்குக் கிடைத்த உயர்ந்த விஷயத்தை வீசி எறிந்த தமிழக மக்களை அந்தக் குழந்தையின் வடிவில் பார்க்கிறேன்.

தன் தூய்மையை நிராகரித்த புரிதலற்றவர்களும் சிரிக்க
வேண்டும் என்று சிந்தித்த நம்
தலைவனை ஆனந்த பவனம் ரவிக்குமாராகப் பார்க்கிறேன்.

எங்கள் எஜமானின் புகழும், அறிவும், அரசியல் தெளிவும், தன்னலமற்ற அரசியல் தொண்டும், கண்ணியமும்.. கணப்பொழுதும்
ஓய்வில்லாமல் அத்தனை திசைகளிலிருந்தும் அரசியல்வியாதிகளால் அவமானப்படுத்தப்படுவது பார்த்து கண்களில் ரத்தக் கண்ணீர் வார்த்துத் துடிக்கும்
விசுவாசமான கோடானுகோடி சிவாஜி ரசிகர்களின் ஒற்றை வடிவமாக மேஜர் சுந்தர்ராஜனைப்
பார்க்கிறேன்.

RAGHAVENDRA
20th October 2018, 10:28 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44468148_2000912046626124_4707616689963925504_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=cd12c1607158d9a096d27e50b524d1da&oe=5C454269

RAGHAVENDRA
20th October 2018, 10:29 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44336063_1999870720063590_4196206331209711616_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=59e31bff7b7910d8e6bdd69f6173607c&oe=5C5A4F42

RAGHAVENDRA
20th October 2018, 10:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44278021_1999872850063377_5403527900177629184_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a5d1a626c46adef94c2f246eb4bf61da&oe=5C3D2C47

RAGHAVENDRA
20th October 2018, 10:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44146168_1999872586730070_2082630513708761088_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a50ef09845f38f5b983aa591894149a9&oe=5C587974

RAGHAVENDRA
21st October 2018, 10:33 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44450349_2002165739834088_7728881416808693760_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e4de208db486758c531daf26a53ea0d0&oe=5C417137

RAGHAVENDRA
22nd October 2018, 10:55 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44576951_2003492099701452_8871379332140892160_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=9c2fd1d8b370ea06ef66815c4e217111&oe=5C58FD79

RAGHAVENDRA
22nd October 2018, 10:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44494139_2003499529700709_1150703978632183808_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=97d9e07208af46dc7d917e9ba0beb4a0&oe=5C496181

RAGHAVENDRA
22nd October 2018, 10:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44526542_2003495723034423_6497345457881088000_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=60c5a1eb4f2b647efe7a32c86065a9be&oe=5C3E41BD

RAGHAVENDRA
22nd October 2018, 10:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44507714_2003496036367725_877121605623349248_n.jpg ?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a73107f17f9e32a1752c13fbce1494e6&oe=5C83F4A8

RAGHAVENDRA
23rd October 2018, 10:40 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44579662_2004771426240186_5443924554382573568_n.jp g?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=9856ec208a2b171ed460cb12e24d688b&oe=5C4DE3E3

RAGHAVENDRA
23rd October 2018, 10:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44571447_2004774062906589_7767586863216328704_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=b78c4ba7f3d57f3a78138634646fe6c2&oe=5C51E730

RAGHAVENDRA
24th October 2018, 10:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44606556_2006009736116355_3259794939743043584_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=af1e4c147a91a60f55bb0264445018f5&oe=5C401CE6

RAGHAVENDRA
25th October 2018, 10:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44828974_2007209559329706_6070644902314639360_n.jp g?_nc_cat=105&_nc_eui2=AeHS3ZS9iAgxOofJpiwgvVmnOR6cH3xLDiu56DfoT ccdmq7WVU3Ll0QmiyU1LlruSuqohe59UIkdrVmfDh3B7pfY1Ok 0kttpw_-_wJRGevi4Ug&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5c484da25b410543a269a57867630331&oe=5C551DF4

RAGHAVENDRA
25th October 2018, 10:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44699215_2007213375995991_5368011415447666688_n.jp g?_nc_cat=103&_nc_eui2=AeGGwa-yJ5hQiUJGNE-thonNw1Iz5mZKKX221S8U7HYIGP2NvORGSooLYbx8TxNjEDCsW JhwFYg8z2QlpISxwckKr1lwriMlXZeLEpdaljSeWQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=57268f928e5573892605e21d39213be4&oe=5C8AD4BB

RAGHAVENDRA
25th October 2018, 10:58 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44723372_2007213639329298_1860290613824454656_n.jp g?_nc_cat=105&_nc_eui2=AeEAEdgyCPjBdWW6R_1sB_yydHCf8JBGkZ2aDbDbp So9kz9ZgCc3Fm1YFHQ21b9xi4bdqwfmKShGef_KKlAyQRSVrmX pk0eMaEEgBkHRXYOTzQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=32c3ba8352dd4f17d9a108a1c4aae429&oe=5C7FC98D

RAGHAVENDRA
25th October 2018, 10:59 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44768121_2007216592662336_4461457472686653440_n.jp g?_nc_cat=104&_nc_eui2=AeFmBwxxAsCvOqM_S9Q8NsTwh6e1-j_vhU0vlhTgdd3cyUuwLINEygrBFVCYcKn-MpA57KW4j6NBJNtUMMTs8ORcVrOivND4dBnRRVLVgP4g9A&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=883ce3de9a6d394c43d9b326a329bc46&oe=5C4F3822

RAGHAVENDRA
25th October 2018, 10:59 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44770199_2007216599329002_5385387268284350464_n.jp g?_nc_cat=103&_nc_eui2=AeFzVJoeF5dYjhH1HFx7hbruvrk-8gTK4Skcu6vjqSwEH4XaeyMy2M_pUfJ4etucHMnFDaKOMa8UqQ 4o49h0jwTCVgpuo-LcTHp8ArtOVfP9LQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=3ec563693d0de5358a85f4e815c0d9e9&oe=5C460447

RAGHAVENDRA
25th October 2018, 11:00 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44751463_2007216639328998_4823783349023670272_n.jp g?_nc_cat=102&_nc_eui2=AeFskURJLhqqWhLY5FCumT5wzK79Mj8HIxop2xvmQ silBPTAJshl6CPgwmMRNcmVgyD1NVH5hn_ggcGopXReP44bpSO xUQ1Uc1K7MUDYqkfcvw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=9623ced7cf796aff38e6397e7cb8cc98&oe=5C3DBA33

RAGHAVENDRA
25th October 2018, 11:00 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44776222_2007216669328995_5295292353496481792_n.jp g?_nc_cat=110&_nc_eui2=AeE4ob-r7dBIypFBggxQQguRtvMRIhaMRVwJjXIBVG_JD3XzGTYcKHC9C ri9T9CsRsTWWCBddL8pKHdzIIYG3AJG8RRbo2cnj4YYG_zvlLH wyg&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e5b488b60aacf6899c4120b2b7268ba7&oe=5C4E1CDC

RAGHAVENDRA
25th October 2018, 11:01 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44753970_2007216662662329_7988176276164706304_n.jp g?_nc_cat=110&_nc_eui2=AeGD0chl0kGAfnpC-NCbB2Xou_-z-HPpbqt7DT-LK-M00gNQer3tjK6cv8K2Edh-HW4EOlMbe-_10Jq5sDOWeGtuY6MqX-4_Bvo7koeCIBdy3Q&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=931630d9d1effea83f607887db86689f&oe=5C86049D

RAGHAVENDRA
25th October 2018, 11:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44750599_2007217325995596_1570694562626666496_n.jp g?_nc_cat=107&_nc_eui2=AeGGBuGyzEX-RzisHihUCjtTvtUCVeTA7WBYMDHHMQ0eYZZ_w6sXLRoORzYJtX 7Itf6GvjUMOuoFY2ajFyHeAcjanqVSaLvI5wAxR2TJCiqBeQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=6f35e35cb60993abe28fa4b0ad0d9020&oe=5C467575

RAGHAVENDRA
25th October 2018, 11:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44798432_2007217335995595_4958107136946077696_n.jp g?_nc_cat=111&_nc_eui2=AeHezs_ZmZQawE9zg_-EkJeo1ZpS-uSr7JM7KHVNH1rA1ujG9akIFgHAo6dWaTUgWCTmtH6GoILDowO c_nYMVLqNyjTN48WLL6dOf4zG_N1wvg&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=dbbc4b0862bbc611156e7768947fcd46&oe=5C4F0EA7

RAGHAVENDRA
25th October 2018, 11:03 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43725942_2007217355995593_8036514316310020096_n.jp g?_nc_cat=111&_nc_eui2=AeGhAsdC4iw2itghgp01jwmJEG2vKYPUDtRTPjHU5 bD5kO5QYk9FX9okjKfD28dVOM1nZRIUNCBpgCMnJFCsVHa9nGo baykt4_Amv9e3XclVgw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=650a1c20ed232275475480cdd98d770f&oe=5C4A7D94

RAGHAVENDRA
25th October 2018, 11:04 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44734004_2007217442662251_6579169506902409216_n.jp g?_nc_cat=105&_nc_eui2=AeH0NkenJicw5jtMQd6vRsEZp8KbuKtBtQQM7zloZ xRgTuPBaOmJRP3ITTixWxcYKJWm8CkNO_jgnwNnqijOhsFHLwu rFFC-Ct1kFUriKQmy6Q&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=962ff6186f2bc0dcadcbfc1772914640&oe=5C8A87F8

RAGHAVENDRA
25th October 2018, 11:06 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44815435_2007217452662250_16954782832918528_n.jpg? _nc_cat=102&_nc_eui2=AeHGbttnHwVvDX_sU_J0DoetlsQhgeCfQ-KF-iP_-eObW2-JsrlIxCjQtDulOeLCa2t_kQQxcWKLK3g_uHmx-l1FDxusnVigfx2Z8cbbKDP-iw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5e68eb13713d50687155f9311dcd2d26&oe=5C48DDC6

RAGHAVENDRA
26th October 2018, 10:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44762119_2008477329202929_9092339134478942208_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=4371a4f45fb4146dafe997b5789b8dab&oe=5C43A0E6

RAGHAVENDRA
26th October 2018, 10:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44855016_2008480535869275_730177795036020736_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=11e9ea20bd33bae6a8c2ec21c5a124bc&oe=5C53A087

RAGHAVENDRA
26th October 2018, 10:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44816779_2008482869202375_3031314903072768_n.jpg?_ nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=798579f6ea5219f45ae01423427ce390&oe=5C459535

RAGHAVENDRA
26th October 2018, 10:45 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44782608_2008484472535548_400718812334260224_n.jpg ?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=4fe0e328dc4b92c810e317521c23ce1e&oe=5C88C9EA

RAGHAVENDRA
27th October 2018, 10:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/43586585_2009702862413709_2647624721239113728_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=57a01fe45c279b2363f5e20b0cfa9f4f&oe=5C4C7EEE

RAGHAVENDRA
27th October 2018, 10:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44944380_2009706942413301_9192403583188860928_n.jp g?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=ada1d5fa7723f7e5bff4a7306ef330f8&oe=5C403D3B

Russellsmd
28th October 2018, 07:25 PM
https://youtu.be/GMi3TMNImKE


சிவாஜி பாட்டு -46
---------------------------------
மனிதனின் கண்களில் நடப்பு
மட்டுமே காட்சிகளாய் இருப்பதில்லை.

அவனது இன்ப, துன்பங்கள் நிரம்பிய, அவன் மிகவும் சிரமப்பட்டுத் தாண்டி வந்த அவனது கடந்த காலம்...

ஏற்கனவே அவன் நுகர்ந்து தவித்த துன்பங்களின் பொசுங்கல் வாடையை இனியும்
நுகர்ந்து விடலாகாதென்று அவன்
பிரயத்தனங்கள் மேற்கொண்டிருக்கிற அவனது
இன்றைய நிகழ்காலம்...

வளமும், புகழுமாய் அவன் எதிர்கொள்ளக் துடிக்கிற அவனது
எதிர்காலம்...

இவற்றிலும் அவன் கண்களுக்குக் காட்சிகளிருக்கின்றன.
---------

"இருந்தோம்.. வாழ்ந்தோம்.. போனோம்" என்று அர்த்தமற்ற
வாழ்க்கை வாழ்கிற வெகுசராசரி
மனுஷர்களைத் தவிர்த்த மற்ற
எல்லோருக்கும் அவசியமான பாடல்.. இது.

எதிர்காற்றை மீறி மேட்டில் மிதிவண்டி அழுத்துவதற்கு நிகரானது.. நடைமுறை வாழ்வின்
சவால்களை மீறி இலட்சியத்துடன் வாழ்வது.

வாழ்வில் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும், நம்பிக்கை என்பது
அவசியத் தேவையாகிறது.

" எங்களுக்கும் காலம் வரும்"

இந்தப் பாடலை நிறையப் பேர்
நம்பிக்கைப் பாடல் என்றே கருதுகிறார்கள்.

ஊன்றிக் கவனித்தால் தெரியும்..
இது வெற்றிப் பாடலென்பது.

" நாளை இப்படிச் செய்வோம்.. அப்படிச் செய்வோம். அப்போது எங்களுக்குக் காலம் வரும்" என்பதாய் இந்தப் பாடல் நகரவில்லை.

"இன்றொரு இனிமை செய்தோம். வென்றோம்" என்று பாடல் நகர்கிறது.

உழைப்பின் உன்னதம் உணர்த்துவதாய் ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கிய சந்தோஷத்தில் வெடிக்கும் பாடல்
இது.

" செய்வோம்" என்கிற அலட்டல்
கிடையாது. செய்து முடித்தவர்களின் அடங்காத மகிழ்வு.

ஆர்ப்பாட்டமில்லாத ஆனந்தம்.
கர்வம் தடவாத களிப்பு.

புயலாய்ச் சாய்த்து விட்டுப் போகிற வேகமில்லை.. இந்தப் பாடலில். வியர்வை உலர்த்தும்
மென்காற்றாய் ஒரு நிதானம்
இந்தப் பாடலில்.

நன்மை செய்து விட்டு நல்ல விளைவுக்குக் காத்திருப்போரின்
பொறுமை " காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே!"
என்ற வரிகளில் புரியும்.

அடுத்த மனிதனுக்கும் அன்பு கொடுத்து வாழ நினைக்கும் பெருங்குணம் " உறவும், சுவையும்
என்றும் நாம் வளர்ப்போம்" என்ற
வரிகளில் புரியும்.
--------

ஒளிவு, மறைவற்ற உள்ளத்தின்
பேரானந்தம் பின்னணியில் இசை போட ஆடிப் பாடும் பெருங்கூட்டத்தை நம்மோடு ஒப்பிடலாம்.

அணிந்திருக்கிற முழுக்கால் சட்டையும், வெள்ளை மேல்சட்டையும் போன்ற "தாராளமான" மனங்கொண்ட நம்
தலைவன் நம்மை வைத்துக் கொண்டிய பாடிய " வஞ்சமில்லா
வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என்கிற வரி
அப்படியே பலிக்கும்.

நம் சபைகளில் என்றுமிந்த வெற்றிப் பாடல் ஒலிக்கும்.

RAGHAVENDRA
29th October 2018, 10:25 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45009540_2012205918830070_660919712221233152_n.jpg ?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=8a18755aea07a3fb8df7165d371bde52&oe=5C7FEF27

RAGHAVENDRA
29th October 2018, 10:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44909885_2012211158829546_5558204812266307584_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f20889552f459e689f664da15d52dc80&oe=5C4FE65E

RAGHAVENDRA
29th October 2018, 10:27 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44933289_2012211425496186_732564727405740032_n.jpg ?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=47702df2681924d136591dc4ac923ae9&oe=5C42EA06

RAGHAVENDRA
29th October 2018, 10:27 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44937174_2012211785496150_7620464291795173376_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=ab0d291385123beef88ac47ef45ca3be&oe=5C41A269

RAGHAVENDRA
29th October 2018, 11:11 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45116621_2012252328825429_1903840199226425344_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=98f1278156c5d24e8bec1a20af35af6c&oe=5C7A4AE1

சென்னை சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள் ஓடிக்கொண்டிருந்தபோது.. இக்காட்சி தங்கைக்காக படத்தில் இடம் பெற்றுள்ளது.

RAGHAVENDRA
30th October 2018, 11:09 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45159083_2013675498683112_7450795409812750336_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=d39fb4a96136b4c106774779639178e7&oe=5C7A69E6

RAGHAVENDRA
30th October 2018, 11:10 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/44977657_2013678552016140_1223338786209923072_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=bea57881c84efa48eca6096748a04a7b&oe=5C4149FD

RAGHAVENDRA
30th October 2018, 11:11 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45002910_2013678858682776_7154067015664140288_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=27ef45fa86cc0568f16c0b0ba4e83c1d&oe=5C49C0DD

RAGHAVENDRA
31st October 2018, 11:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45041882_2015615585155770_3052542572774817792_n.jp g?_nc_cat=110&_nc_eui2=AeGiCfVJM7NPOQLoqBhtnp7VcaATiABxjy3d1P7ij SbUQCLna8v67C7mFhhWitG08FeI6EvpCCcIkE3QOlPmAyuOjXB cPLuU10CSI0iVySrLwQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5adc96425b4b023d6a8522bbb98bd3ec&oe=5C7DFF7A

RAGHAVENDRA
31st October 2018, 11:54 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45151827_2015620208488641_8720793200307994624_n.jp g?_nc_cat=108&_nc_eui2=AeHu_quGnK5CUmArH2zLRUE5nz8znxkZ8XRiqa-yem8xHLjWj8h7TKsTUsX7zu8sJFP-TYMQrtFmMZOH-p1YTb1-76AKvBkbHuogZhixax-9ww&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=78420876f7771ed7cd3f25b6137e30e7&oe=5C81D10B

sivaa
1st November 2018, 12:27 AM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

ஒரு மாதகால இடைவெளியின் பின்

மீண்டும் இங்கு வருவதில் மகிழ்ச்சி

இத்திரியினை தொய்வின்றி கொண்டு செல்லும்

திரு ராகவேந்திரா சார் அவர்களுக்கு மிக்க நன்றி

sivaa
1st November 2018, 12:32 AM
நடிகர் திலகத்தின் 90 வது பிறந்த நாளை ஒட்டி

இலங்கை பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை

http://oi65.tinypic.com/2mzz68l.jpghttp://oi65.tinypic.com/1t0do4.jpghttp://oi68.tinypic.com/dw7szk.jpg

sivaa
1st November 2018, 12:33 AM
http://oi66.tinypic.com/2hpkc9c.jpg

sivaa
1st November 2018, 12:36 AM
யாழ் சிவாஜி ரசிக நண்பர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்

http://oi66.tinypic.com/2s80lfc.jpghttp://oi65.tinypic.com/2ef5o40.jpghttp://oi63.tinypic.com/2wdaky8.jpg

sivaa
1st November 2018, 12:41 AM
( a v m குமரன் )

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45054144_1972090082879224_3135916782867447808_n.jp g?_nc_cat=100&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=8fe982728aaee0f8dc407695f0d906e5&oe=5C8317DB

sivaa
1st November 2018, 12:42 AM
சிவாஜி – எம்.ஜி.ஆர்., வள்ளல் யார்?
பத்திரிகையாளர்களுக்கு ‘கவர்’ கொடுக்கும் பழக்கம் ‘சிவாஜி’யிடம் இல்லாததால் அவரை ‘கஞ்சன்’ என்று கதை கட்டியவர்கள் பத்திரிகையாளர்களே.
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ஒழித்து, காமராஜர் கொண்டு வந்த கிராமபுறப் பள்ளிக் கூடங்கள் திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாய் கொடுத்தவர் சிவாஜி கணேசன். இன்றைய மதிப்பு சில கோடி....
அதற்காகவே ‘கொடைவள்ளல்’ என்றுவிடுதலையில் தலையங்கம் எழுதி கொண்டாடினார் சிவாஜியை பெரியார்.
100 முறைக்கும் மேல் நடத்தப்பட்ட கட்டபொம்பன் நாடகத்தில் வசூலான லட்சக்கணக்கான தொகையையும் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கே கொடுத்தார் சிவாஜி.
சிவாஜியைப் போல் அரசு திட்டங்களுக்கு அப்போது எம்.ஜி.ஆர். எந்த நன்கொடையும் கொடுத்ததில்லை. அவர் பிரமுகர்களுக்கு உதவி செய்தார். அதைப் பத்திரிகையாளர்களுக்குக் கவர் கொடுத்து செய்தியாக்கிக் கொண்டார்.
வாங்கிய பிரபலங்களும் இன்றுவரை அதைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். - வே.மதிமாறன்.

sivaa
1st November 2018, 12:45 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45163640_351104585463420_6773617107482443776_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=f3bd16fe0189a437de679d1ef1d4f080&oe=5C7A6313

sivaa
1st November 2018, 12:46 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45050165_361696771234161_3089791767571070976_n.jpg ?_nc_cat=101&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=96e1b1e6d6072f57ef383012bedab631&oe=5C4089B4

sivaa
1st November 2018, 12:49 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/44976672_583934152042884_5919690459856240640_n.jpg ?_nc_cat=102&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=c5c345dcd3ffd4344323eca07806e06e&oe=5C3E0BE2

sivaa
1st November 2018, 12:50 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/44931444_583938638709102_4206099925815001088_n.jpg ?_nc_cat=105&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=93d789112ffdf055eb1950579ad08181&oe=5C87B068

sivaa
1st November 2018, 12:53 AM
பாகப்பிரிவினை
இன்றைக்கு 59 ஆம் ஆண்டினை நிறைவு செய்யும் பாகப்பிரிவினை வெற்றிக் காவியத்தை, இந்தி மொழியில் தயாரிக்க முடிவெடுத்து, அன்றைக்கு அங்கு முன்னணி நாயகர்களாக இருந்த திலீப்குமார், ராஜ்கபூர், தேல் ஆனந்த் ஆகியோரை அணுகியபோது, நடிகர்திலகத்தின் ஊனமுள்ளத் தோற்றமும் நடிப்பும் கண்டு, இவரைப்போல் நம்மால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். கடைசியில் சுனில்தத் நடிக்க, பீம்சிங் இயக்க, 'காந்தான் ' என்ற பெயரில் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கிடைத்த பெரும் இலா...
பத்தில் தயாரிப்பாளர் வாசுமேனன் 'வாசு ஸ்டூடியோ'வையே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின்போது கண்டினியூட்டி ( Continuity) தவறக்கூடாது என்பதற்காக, நடிகர்திலகம் ஏற்றிருந்த கன்னையன் கதாப்பாத்திரத்தின் கையசைவுகளை கவனிப்பதற்காகவே ஒரு உதவி இயக்குநரை நியமித்திருந்தது அன்றைய திரையுலகில் அதிசயமான செய்தி.
நடிகர்திலகம் நடித்து பராசக்திக்குப் பிறகு 200 நாட்களைக் கடந்த இரண்டாவது கருப்பு-வெள்ளைப் படமான பாகப்பிரிவினை 'கலசி உண்டே கலது சுகம்' என்னும் பெயரில் தெலுங்கிலும், 'நிறகுடம்' என்னும் பெயரில் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
ஸ்ரீ, கீதா, சாரதா, ஸ்வஸ்திக் என்று பெங்களூரில் முதன்முதலாக நான்கு அரங்குகளில் 50 நாட்ளைக் கடந்து ஓடிய பாகப்பிரிவினை முதன்முதலாக திண்டுக்கல் NVGB அரங்கில் 100 நாட்கள் ஓடிய படமாகும்.
மதுரை சிந்தாமணி அரங்கில் 216 நாட்கள் ஓடிய மொத்த வசூல் ரூ. 3,36,180.54 ஆகும்.
1959 ஆம் ஆண்டுக்கான தேசியவிருது வெள்ளிப்பதக்கம் பெற்ற படமும்கூட.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45080632_584779728624993_5485639041992884224_n.jpg ?_nc_cat=103&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=53ac5e3d210cf2eb40bf2db894bfb8c0&oe=5C80EA78

sivaa
1st November 2018, 12:55 AM
nilaa

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45145527_584465878656378_7114010746207338496_n.jpg ?_nc_cat=101&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=65fb3e791fe3680fc867e79f3a98deed&oe=5C44775A

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/44986420_584465935323039_8874451685456478208_n.jpg ?_nc_cat=103&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=b715e62b5416977e68b2b4e5f73b9f5e&oe=5C4EA711

sivaa
1st November 2018, 12:56 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45135942_272185393485263_2309909157832032256_n.jpg ?_nc_cat=104&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=cc42270a72fdac0b6cb9eb254aa50499&oe=5C4A87DF

sivaa
1st November 2018, 12:59 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45023239_1417301391734662_7240272781730906112_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=1deb44549dd1b8ed8deca8ef3aeb0a60&oe=5C79B7D1

sivaa
1st November 2018, 01:09 AM
இன்று (31/10/18) நண்பகல் 12 மணிக்கு சன் லைப் சேனலில் " திரிசூலம் " ஒளி பரப்பாகிறது,
திரிசூலம் பெற்ற இமாலய வெற்றியைப் போல வேறு எந்த நடிகர்களின் திரைப்படமும் அத்தனைப் பெரிய வெற்றியைக் கண்டதில்லை,
இந்த அதிமுக்கிய செய்தியை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதத்தில் எப்படி சொல்வது?...
தற்போதைய நாட்களில் பத்திரிக்கை ஊடகங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் திரைப்பட ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என யாவரும் நடிகர் திலகம் திரைப்படங்களை உதாரணத்திற்கு சொல்லும் போது பராசக்தி, முதல் மரியாதை, தேவர் மகன் என மேலோட்டமாக வெற்றி கண்டவை என சுருக்கிக் கொள்வதை காண முடிகிறது,
அதிலும் பராசக்தி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது என வரலாற்றை தவறாமல் சொல்பவர்கள் திரிசூலம் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை சொல்வதில்லை,
திரிசூலத்தின் இமாலய வெற்றி அதாவது 4.3 கோடி கொண்ட தமிழக மக்களில் 3:2 கோடி மக்களை காண வைத்த வெற்றி,
திரிசூலம் கண்ட வெற்றி அன்றைய முதல்வர் எம்ஜிஆர் , எதிர்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஆகியோரை பலவிதமான கணக்கைப் போடச் செய்தது,
அப்படி கணக்குப் போட்டவர்களில் முந்திக் கொண்டவர் கலைஞர் அவர்கள், அதன் தொடர்ச்சியாக வலிமையான மக்கள் செல்வாக்கு பெற்றவர் எனக் கருதப்பட்ட எம்ஜிஆர் அவர்களை தோல்வியடையச் செய்யப் போட்டக் கணக்கு,
நடிகர் திலகம் இசைவுக் கொடுக்க காங்கிரஸ் திமுக கூட்டணி உருவானது,
திரிசூலத்தின் வெற்றி மட்டுமே இந்த அரசியல் கூட்டணியை அமைத்தது என்பது தான் வரலாற்று உண்மை, ஒரு திரைப்பட வெற்றி விழா நாட்டின் பிரதமரையும் கவனத்தில் ஈர்த்தது, அதன் காரணம் நடிகர் திலகம் ஜி.கே.மூப்பனார் அவர்களை மேடையில் அமர்த்தி பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் படிச் செய்தது, அதன் காரணம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த நடிகர் திலகம் ஆதரவு பெற்ற ஜி.கே.மூப்பனாரை மாற்றி தமிழக காங்கிரஸ் தலைவராக திரு.பா.ராமச்சந்திரன் அவர்களை டெல்லி காங்கிரஸ் நியமித்திருந்தது, திரிசூலம் விழா பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அரசியல் அறிந்தவர்கள் மறுக்க முடியாது,
திரிசூலம் கண்ட வெற்றி கலைஞர் போட்ட கணக்கு என 1980 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திமுக கூட்டணி 40 க்கு 38 என்ற இமாலய வெற்றியை போல அதாவது 58% வாக்குகளை அள்ளியதைப் போல தமிழக தேர்தல் வரலாற்றில் வேறு எந்தக் கூட்டணியும் இதுவரை பெற்றதும் இல்லை,
திரிசூலம் சினிமாக்களை மட்டுமே வென்றுவிடவில்லை
அது வந்த போது அன்றைய அரசியலையும் வென்றது,
(p sekarr)

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/45026506_1931098550340359_759773130477535232_n.jpg ?_nc_cat=102&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=68c8630a76b99b098851d4715d47a869&oe=5C7D34C6

sivaa
1st November 2018, 01:11 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/44954741_1927735257343355_8986471566476836864_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=9216dcdf6c3b564bdcb0f9d6a086272c&oe=5C47B8D5

sivaa
1st November 2018, 03:25 AM
http://oi67.tinypic.com/w7ejur.jpg

sivaa
1st November 2018, 03:26 AM
http://oi65.tinypic.com/2uypvlx.jpg

sivaa
1st November 2018, 03:26 AM
http://oi66.tinypic.com/vpz01w.jpg

sivaa
1st November 2018, 03:27 AM
http://oi63.tinypic.com/b6cxdv.jpg

sivaa
1st November 2018, 03:27 AM
http://oi67.tinypic.com/24y7e9t.jpg

sivaa
1st November 2018, 03:28 AM
http://oi63.tinypic.com/sc3nn4.jpg

sivaa
1st November 2018, 03:28 AM
http://oi63.tinypic.com/2lcsh1t.jpg