PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

oygateedat
18th January 2020, 05:23 AM
https://i.postimg.cc/pV7vDxtz/IMG-4903.jpg (https://postimg.cc/mhQKsvkg)

oygateedat
18th January 2020, 05:24 AM
https://i.postimg.cc/tgXGX4hQ/IMG-4896.jpg (https://postimg.cc/yDrbjBQv)

Coimbatore - avinashi road

oygateedat
18th January 2020, 05:24 AM
https://i.postimg.cc/634XP1ry/b548a808-731b-4ebf-83f7-1df9cb64544b.jpg (https://postimg.cc/dkFpk6SY)

oygateedat
18th January 2020, 05:25 AM
https://i.postimg.cc/NfJdyfqv/b9c2f409-a3d7-4ea0-a724-fe08063e681c.jpg (https://postimg.cc/Cz8GX0xc)
Thanks to Mr Ranjith

oygateedat
18th January 2020, 05:51 AM
https://i.postimg.cc/SN4N3kJ8/IMG-4906.jpg

fidowag
18th January 2020, 06:56 AM
நேற்று முதல் (17/01/20) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு*சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த "நாளை நமதே " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .

fidowag
18th January 2020, 06:57 AM
இன்று முதல் (18/01/20) தூத்துக்குடி சத்யாவில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான "அடிமைப்பெண் " டிஜிட்டல் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.

fidowag
18th January 2020, 06:57 AM
இத்துடன் கடந்த ஒரு வார காலமாக 8 நகரங்களில் 14 திரைப்படங்கள்**இந்த*பொங்கல் சீசனில் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன.*
சென்னையில் =3 கோவையில் 3 , மதுரையில் 2* தூத்துக்குடியில் 2 , பழனி ,சேலம், புளியங்குடி, விக்கிரமசிங்கபுரம் , ஆகிய இடங்களில் திரைப்படங்கள்*வெளியாகியுள்ளன .
வேறு எந்த பழைய /புதிய /தற்போதைய நடிகர்களின் படங்கள் இதுபோன்ற பழைய படங்களின்* மறுவெளியீட்டில் இப்படி ஒரு சாதனையை புரிந்ததில்லை புரியப்போவதுமில்லை.* சில இடங்களில் புதிய படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததாலும், வசூல் பற்றாக்குறையினாலும் அதை ஈடு செய்ய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை திரையிட விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

orodizli
18th January 2020, 10:15 AM
https://youtu.be/0hsbEp1ign4......... Thanks.........

orodizli
18th January 2020, 10:30 AM
பாசமிகு சகோதரர் திரு லோகநாதன் பகிர்த்துள்ள தகவல்கள், விளக்கங்கள் 100% முற்றிலும் உண்மை... ஏனெனில் உலகளவில் எந்தவொரு நடிகரும் திரையுலகை விட்டு விலகி 42 ஆண்டுகளும்... இந்த மண்ணை விட்டு பிரிந்து 32 வருடங்கள் கடந்தும்... அந்த நடிகர் நடித்து வெளியான பழைய திரைப்படங்கள்(காவியங்கள்)2020 ம் காலத்தில் பற்பல இடங்களில் திரையிடப்படுவது சர்வதேச அளவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., ஒருவருக்கு மட்டுமே இறைவனால் அத்தகைய பாக்கியம் அருள பெற்றுள்ளது. இது நாமெல்லாம் செய்த பேரற்புத பாக்கியம்... இதுவே நாமிருக்கும் நிலை( ஆட்சி, அதிகாரம்) போன்றவை வேறு யாருக்கும் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?!!! ஆக... நமக்கு போட்டி நாம்தான் ... வேறு யாருமில்லை... எவருமில்லை...

orodizli
18th January 2020, 04:51 PM
கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை சுற்றுலா தளமாக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளும் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு உறுதி அளித்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடவனூர் என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டை சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு கோடி ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்.நினைவு இல்லமாக அமைத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த நினைவு இல்லத்தை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும் கேரள கவர்னருமான சதாசிவம் திறந்து வைத்தார்.மிகமிக அபூர்வமான
எம்.ஜி.ஆர்.புகைப்பட மற்றும் வீடியோபட ஆவணக்காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நேற்று ( வெள்ளிக்கிழமை)
வடவனூர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சைதை துரைசாமி செய்திருந்தார்.சுமார் 800 பேர் விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்களை சூலூர் வாசுதேவன் , கோவிந்தன் ஆகியோர் வரவேற்றனர்.
கேரள ஆளும்கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கே.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் கேக் வெட்டினார்.

நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அவரது தாய் தந்தை உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் விழாவில் அவர்பேசும் போது , வடவனூரில் உள்ள இந்த எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை அமைத்த சைதைதுரைசாமியை பாராட்டினார்.நினைவு இல்லத்தை கேரள சுற்றுலா தள பட்டியலில் சேர்க்க எல்லாஏற்பாடுகளையும் செய்வேன் என்று உறுதி அளித்தார்.


விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
சூலுர் வாசுதேவன் மதிய உணவை வழங்கினார்.

நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஆவணக்காப்பக திரைப்பட கூடத்தில் எம்.ஜி.ஆரின் அரிய வீடியோ காட்சிகள் காலை முதல் மாலைவரை திரையிடப்பட்டது.
விழாவுக்கு வந்திருந்தோர் கூட்டம் கூட்டமாக அதை பார்த்து
வியந்தனர்.



.கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை சுற்றுலா தளமாக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளும் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு உறுதி அளித்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடவனூர் என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டை சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு கோடி ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்.நினைவு இல்லமாக அமைத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த நினைவு இல்லத்தை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும் கேரள கவர்னருமான சதாசிவம் திறந்து வைத்தார்.மிகமிக அபூர்வமான
எம்.ஜி.ஆர்.புகைப்பட மற்றும் வீடியோபட ஆவணக்காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நேற்று ( வெள்ளிக்கிழமை)
வடவனூர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சைதை துரைசாமி செய்திருந்தார்.சுமார் 800 பேர் விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்களை சூலூர் வாசுதேவன் , கோவிந்தன் ஆகியோர் வரவேற்றனர்.
கேரள ஆளும்கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கே.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் கேக் வெட்டினார்.

நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அவரது தாய் தந்தை உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் விழாவில் அவர்பேசும் போது , வடவனூரில் உள்ள இந்த எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை அமைத்த சைதைதுரைசாமியை பாராட்டினார்.நினைவு இல்லத்தை கேரள சுற்றுலா தள பட்டியலில் சேர்க்க எல்லாஏற்பாடுகளையும் செய்வேன் என்று உறுதி அளித்தார்.


விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
சூலுர் வாசுதேவன் மதிய உணவை வழங்கினார்.

நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஆவணக்காப்பக திரைப்பட கூடத்தில் எம்.ஜி.ஆரின் அரிய வீடியோ காட்சிகள் காலை முதல் மாலைவரை திரையிடப்பட்டது.
விழாவுக்கு வந்திருந்தோர் கூட்டம் கூட்டமாக அதை பார்த்து
வியந்தனர்.......... Thanks.........

orodizli
18th January 2020, 05:03 PM
அந்த ராமசந்திரன் தனிபெரும் பட்டாளத்தை வைத்திருந்தார், அவருக்கென திரண்ட கூட்டமும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் அளவு அவர்கள் அவரை உயிராய் மதித்ததையும் இன்னொரு நடிகன் பெறமுடியாது

மாபெரும் படை அது, அவர் உத்தரவிட்டால் எதையும் செய்ய தயாராய் இருந்த கூட்டம் அது

ராமசந்திரன் வெறும் நடிகராயினும் அவருக்கு மனசாட்சி இருந்தது, அவரின் மனசாட்சியின் குரலாக அவர் சொன்னது இதுதான்

"எனக்கு ரசிகர்கள் அதிகம், அவங்க அதிகம் படிக்காதவங்க. என்னை கடவுள் அளவுக்கு வச்சிருக்காங்க*

என்னை பின்பற்றும் அவர்களுக்கு தவறான வழிகாட்டிவிட கூடாது, ஆண்டவன் என்னை அவங்க கவனிக்கிற இடத்துல வச்சிருக்கான், அத தப்பா பயன்படுத்த கூடாது

அவங்க நல்லாயிருக்கணும், நல்லபடியா வளரணும். அதுக்குத்தான் என் படத்துல தாயினை மதிக்க சொல்றேன், குடிக்காதீங்கண்ணு சொல்றேன், பெண்களை மதிக்க சொல்றேன், என்னால முடிஞ்ச அளவு அவங்களுக்கு நல்லது போதிக்கிறேன்"

ஆம், சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது, அவன் பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம்

அந்த வெற்றிக்கு சாட்சி இப்படம், அந்த மூதாட்டிக்கும் ராமசந்திரனுக்கு என்ன உறவு? என்ன பந்தம்?

அவளுக்கு தெரிந்தவரை ராமசந்திரன் ஒரு காட்சியும் தப்பாக நடித்ததில்லை, நல்லது தவற எதுவும் பேசியதில்லை, தாயினை அப்படி வணங்கினான்

தனக்கொரு மகன் இருந்தால் எப்படி வளர்க்கவேண்டும், அவன் எப்படி உருவாக வேண்டும் என இத்தாய் விரும்பினாளோ அதை அந்த மனிதரில் கண்டாள், இதோ வணங்கிகொண்டிருக்கின்றாள்

அந்த தாயின் முகத்தை பாருங்கள்,

பாரதத்தில் கர்ணனை மடியில் போட்டு அழுத குந்தியின் முகம் இப்படித்தான் இருந்திருக்கும். (மக்கள் திலகம் திரு உருவ புகைப்படத்திற்கு பூமாலை அணிவித்திருக்கும் நிலையில் மூதாட்டியின் எண்ண சிந்தனைகள்) ........... Thanks.........

oygateedat
18th January 2020, 08:11 PM
https://i.postimg.cc/XNQHGvh7/IMG-4903.jpg

orodizli
18th January 2020, 09:34 PM
மேலே பார்த்து ரசித்த
காட்சி
பெரிய இடத்துப் பெண்
திரைப்படத்திலிருந்து
ஒரு காட்சியென
நாமறிந்ததே...

இந்த
சமூகத்தில் நிலவி வரும்
பல்வேறு அவலங்களை
ஒரு பாமரனும் அறிந்துகொள்ளும்
வகையில் எளிமைப்படுத்தி
எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் தலைவர்..

அந்த காலக்கட்டத்தில்
அனைவரும் ஆலயங்களுக்குள் சென்று கடவுளை
வழிபடுவதென்பது
சிரமமே..

இப்படியான பாகுபாடுகளை உடைத்தெறிய தனது
திரைக்காவியங்களை
ஆயுதமாக தலைவர்
பயன்படுத்தியிருக்கிறார்..

நினைத்தாலே
ஒருவித சிலிர்ப்பு.

தந்தை பெரியார்
பெரிய சமூகப்போராளி
அறிஞர் அண்ணாவும்
அப்படியே...

ஆனாலும் அவர்கள்
பேசி எழுதி
மாற்றங்களை
கொஞ்சமாகத்தான்
செய்ய முடிந்தது..

அவர்களை
விடவும்
மிக வீரியத்தோடு
பல மடங்கு செய்து முடித்திருக்கிறார்
தலைவர்..

இன்னும்
நம் தலைவரெல்லாம்
நீண்ட ஆயுளோடு
இருந்திருந்தால்
தமிழகம் இன்னும் கூட
சமூக மாற்றங்களை
கண்டிருக்கும்...

கிடைத்த வரம்
முழுப்பலனில்லை..

யார் சபித்தாரோ
தமிழகத்தை..
����
நன்றி
ஆக்கமும் எழுத்தும்
பொன்மனம் புகழ்பாடி
��இரா.குமார்.��.......... Thanks.........

orodizli
18th January 2020, 09:36 PM
https://youtu.be/hfMWZWXF7LI......... Thanks...

orodizli
18th January 2020, 09:37 PM
எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் | MGR | J Jayalalitha | ADMK | DMK | Durai Karuna

https://youtu.be/ELK_BW8CLYA.......... Thanks...

orodizli
18th January 2020, 09:41 PM
தலைவரின் பிறப்பு கலியுகத்தின் திறப்பு....
.... அவரை வழிபடுவது பக்தர்களின் சிறப்பு.அந்த சிறப்பை செயல்படுத்துவதுவதே நமது பிறப்பு.அந்த பிறப்பின் கடமையை செவ்வனே செய்த கோடிகணக்கான சேவகர்களின் ஒருதுளியான கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை 17.01.2020 சென்னை வாலாஜா சாலையில் தொடர்ந்து 32 வது வருடமாக தலைவரின் திருஉருவத்திற்கு மாலை அணிவித்து பூஜை புனஸ்காரங்கள் செய்து இனிப்பு வழங்கிவிட்டு அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு ஆர்த்தி எடுத்த சமயத்தில் தமிழகத்தில் என் பிறந்தநாள் அன்று ஆரத்தி எடுத்து என்னை குளிரவைத்த ஒரே காரணத்தால் உங்களை ஆசிர்வதிக்கின்றேன் என்று (மாலையும்) பூ விழுந்து சமிக்ஞை செய்ததை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாமல் செய்த எங்கள் இதயதெய்வத்திற்கு திலகமும் இட்டு மகிழ்ந்த கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் வீடியோக்கள்......... Thanks.........

orodizli
19th January 2020, 07:44 AM
#எப்பேர்_பட்ட_மாமனிதர்_அவர்
கேள்வி : பலருக்கு பல ஆயிரக் கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது , யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா ?

பதில் : பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள் .

கேள்வி : அப்படிப் பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும் , மறக்க முடியாததும் எது ?

பதில் : கலைவாணர் என் எஸ் கே அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார் . பத்து , பதினைந்து என்று மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கூட கவலை படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்க முடியாது . ஆனால் அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன் . என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை

யார் கேட்ட கேள்வி ?
யார் சொன்ன பதில் தெரியுமா ?
1968 ம் ஆண்டில் பொம்மை பத்திரிக்கைக்காக
#புரட்சிதலைவி அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு
#மக்கள்_திலகம் சொன்ன
பதில்கள் தானே இவை
#எப்பேர்ப்பட்ட_மாமனிதன்......... Thanks.........

orodizli
19th January 2020, 07:46 AM
https://m.facebook.com/story.php?story_fbid=2670624979717125&id=100003089479533&sfnsn=wiwspwawes&extid=sspv8vG1nPfP9s16&d=w&vh=i

orodizli
19th January 2020, 07:47 AM
https://m.facebook.com/story.php?story_fbid=176154790415301&id=100040623440866&sfnsn=wiwspwa&extid=FuFCppRVdkELpQyH&d=w&vh=i

orodizli
19th January 2020, 07:48 AM
1973, எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அதிமுகவைத் தொடங்கியிருந்தார். ஆனால் மக்கள் செல்வாக்கு அது எப்போதும் போல நிறைந்திருந்தது. காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.

#அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தி விட்டார்கள்.

#அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை. எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

#மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

#கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.

#அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, எம்ஜிஆர் உருகிப்போனார்.
நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.

#தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.
இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!.... Thanks.........

orodizli
19th January 2020, 07:52 AM
அதைவிட மிக மிக அதிசயம் எம். ஜீ.ஆர். அவர்கள் மறைந்த ஆண்டு ம். *1987* அந்த ஆண்டின் கூட்டு எண்ணும்1987=25= *7* ஆகும். தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே இவையே எண்களின் ரகசியம் அதிசயம் மனிதர்களை கொண்டுவரும் எண் 7. ஏழு கேது ஞானகாரகன் சூரியனின் நட்பு பிரகாசம் கொண்டது. அதுபோலவே பிரகாசமாக பிறந்து ஒரு இடம் வளர்ந்தது ஒரு இடம் வாழ்ந்தது ஒரு இடம் கலை பயின்றது ஒரு இடம் கலை வாழ்க்கையில்பல வாழ்ந்தது பல பல இடங்களே இவையே அதிசயங்கள்.����....... Thanks...

oygateedat
19th January 2020, 09:14 AM
*எம்ஜிஆர்*

*சினிமா சக்சஸ் வரலாறுனா இப்படி இருக்கணும்..*

*ஒரு சினிமா வெற்றிபெறும். நூறு நாட்கள் ஓடும். அவ்வளவு ஏன், வெள்ளிவிழா கூட கொண்டாடும்.. ஆனால் 1965ல் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய ஆனந்த அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை.*

படத்தின் பிரமாண்ட வெற்றியால் மகிழ்ந்து போன படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டி எம்ஜிஆருக்கு அளித்து, அவர் திருப்பி அனுப்பிய உபரி ஒரு லட்ச ரூபாயை கொண்டு அப்போதைய சென்னை புறநகர் பகுதிகளில் சில ஏக்கர் வாங்கி இருக்கலாம்.. இன்று அந்த நிலம்எத்தனை நூறு கோடிகள் போயிருக்கும்?

எங்க வீட்டுப் பிள்ளையின் பிரமாண்ட வெற்றி பெற்ற 1965 ஆம் ஆண்டு அப்போது The Hindu பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்தது அதே பத்திரிகை..

அந்தக் கட்டுரையை மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் Kathir vel சார் தமிழாக்கம் செய்து முகநூலில் பதிவிட்டு இருந்தார்.. இதோ அந்த பதிவு..
------------------------------------------------------
எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.

வசூலில் இதுவரை கண்டிராத சாதனை படைத்த அந்த படம் இப்போது வெள்ளி விழா கொண்டாடுகிறது. ப்டத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு மழையில் நனைகிறார்கள். படத்தை வினியோகித்தவர்களும் திரையிட்டவர்களும் லாபத்தில் திளைக்கிறார்கள்.

சமீப காலங்களில் ஒரு படம் வெள்ளி விழா காண்பதே அரிதாகி விட்டது. கல்யாண பரிசு, பாவ மன்னிப்பு, பாச மலர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மட்டுமே வெள்ளி விழா கண்இருக்கின்றன. ஆனால் அந்த பெருமையும் எங்க வீட்டு பிள்ளையின் சாதனைக்கு நிகராகாது.

எப்படி என்றால், அந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு தியேட்டரில் மட்டுமே 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடின. எங்க வீட்டு பிள்ளையோ மெட்ராசில் மட்டுமே கேசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களில் வெள்ளி விழா தாண்டி சக்கைபோடு போடுகிறது. இது தவிர மதுரை, கோயமுத்தூர், திருச்சி, தஞ்சாவூர் என வேறு ஊர்களிலும் இந்த சாதனையை புரிந்திருக்கிறது.

படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இந்த மகத்தான சாதனையை நினைத்து பெருமை கொள்ளலாம். ஒட்டுமொத்த தென் இந்திய திரை உலகமே அவர்களுக்கு தலை வணங்குகிறது.

ஆச்சரியம் என்ன என்றால், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோரை காட்டிலும் எங்க வீட்டு பிள்ளை மூலமாக அதிகம் சம்பாதித்து இருப்பது நமது அரசாங்கம்தான். த்ன் இந்தியா முழுவதிலும் இருந்து இந்த ஒரு படத்தின் மூலமாக மட்டும் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் கேளிக்கை வரி எவ்வளவு தெரியுமா? 50 லட்சம்!

எங்க வீட்டு பிள்ளை படத்தின் பிரமிக்க வைக்கும் இந்த வருமானமும் லாபமும் திரைப்பட தயாரிப்பிலும் வினியோகத்திலும் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து அவர்கள் இன்னும் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய தூண்டுதலாக அமைந்துள்ளது.

மதராஸ் பட்டணத்தில் வசிக்கின்ற மொத்த ஜனங்களான 20 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் எங்க வீட்டு பிள்ளை படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அது சாதாரண சாதனை கிடையாது.

ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு மகத்தான வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்?

காரணங்களை கண்டுபிடிக்க சிரமப்பட தேவையில்லை. ஒரு தடவை பார்த்தவர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வரவழைக்கும் விதமாக படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்திருந்தது என்பது முதல் காரணம். மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர, படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கப்படும் நீதியும் இன்னொரு காரணம். தனிமனித ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் கதையம்சம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

நடுங்கும் கோழையாகவும் அட்டகாசமான ஜாலி பேர்வழியாகவும் இரண்டு வேடங்களில் வெளுத்துக் கட்டியிருக்கும் எம்ஜிஆரின் பிரமாதமான நடிப்பு வேறு எதை விடவும் முக்கியமான காரணம்.

இரண்டு முற்றிலும் வேறுபட்ட பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அற்புதமாக நடித்திருந்தாலும், கோழையான நல்லவனாக எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அபார நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் அததனை பேரின் உள்ளங்களையும் கொள்ளையடிக்கிறார்.
தேர்ந்த விமர்சகர்கள், சினிமா விற்பன்னர்கள், சராசரி ரசிகர்கள் எல்லோரும் சொக்கிப் போகிறார்கள் அவர் இரு வேடங்களிலும் வெளிப்படுத்தும் முக பாவங்களையும் உடல் அசைவுகளையும் பார்த்து. அபாரமான நடிப்புத் திறன் கொண்ட எம்ஜிஆர் இந்தப் படத்தின் மூலமாக பல தடங்களைத் தாண்டியிருக்கிறார் என்று அவர்கள் ஏகோபித்து சிலாகிக்கிறார்கள்.

எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆரின் தனிப்பட்ட வெற்றி என்றும் தாராளமாக சொல்லலாம். இதுவரை அவரே சொந்தமாக தயாரித்து இயக்கி வெளியிட்ட நாடோடி மன்னன் படம்தான் தமிழில் மிகப்பெரிய வசூலைக் குவித்த படமாக இருந்து வந்தது. எங்க வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக தனது சாதனையை அவரே முறியடித்திருக்கிறார்.

இந்த படம் இதுவரை வெளியான எந்தப் படங்களையும்விட பல வகையிலும் மேம்பட்டது. கண்ணைப் பறிக்கும் வண்ணப் படம் என்பது பிரதானமான அம்சம். காட்சி அமைப்பில் ஆகட்டும், தொழில் நுட்ப நேர்த்தியில் ஆகட்டும் இது புதிய மதிப்பீடுகளை கோரும் படம். மொத்த படப்பிடிப்பும் 45 நாட்களில் முடிந்தது புதிய சாதனை. பூஜை போட்ட இரண்டரை மாதத்தில் படம் திரைக்கு வந்து விட்டது என்பதே பிரமிக்க வைக்கும் நிகழ்வாகும். இந்தியாவில் வேறு எந்தப் படமும் இந்த சாதனையை புரிந்ததில்லை.

இது எப்படி சாத்தியமானது என்று தயாரிப்பாளர் நாகிரெட்டி, சக்கரபாணியை கேட்டால் ஒரே நபரை கைகாட்டுகிறார்கள்.

“பணத்தை முதலீடு செய்தவர்கள் நாங்கள்தான் என்றாலும், இது முழுக்க முழுக்க எம்ஜிஆர் படம். அவரே கதாநாயகன், அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு எல்லா பொறுப்புகளையும் தோளில் சுமந்தார். அவருடைய திராமைக்கும் வேகத்துக்கும் ஈடுகொடுக்க எல்லோரும் திணறிப் போனோம். ப்டத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார். ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் எம்ஜிஆர் இந்தப் படத்துக்காக உழைத்ததை பார்த்து அசந்து விட்டோம்” என்று சொன்னார்கள் இரு ஜாம்பவான்களும்.

எம்ஜிஆருக்கு நடிக்க வராது என்பதுதான் இதுவரை பொதுவான ஒரு கருத்தாக சொல்லப்பட்டது. ஜாலியாக வந்து ஆடிப்பாடி சிரித்து சண்டை போட்டு மகிழ வைக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே அவரால் ஜொலிக்க முடியும் என பலரும் நினைத்தார்கள்.

அவ்வளவு எதற்கு. நிறைய படித்த, பல மொழி படங்களை பார்த்து ரசிக்கும் திரைப்பட ரசிகர்கள் ‘நான் எம்ஜிஆர் படத்துக்கெல்லாம் போவதில்லை’ என்று கொஞ்சம் கர்வத்துடனே சொல்லுவார்கள். அவர்களுக்கெல்லாம் எங்க வீட்டு பிள்ளை மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு நடிக்க தெரியுமா என்ற கேள்வியை இனி அவர்கள் கனவிலும் கேட்க மாட்டார்கள்.

எம்ஜிஆர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. பன்முக திறமை, தொழில் ஈடுபாடு, கடின உழைப்பு, கடைநிலை தொழிலாளிகளையும் சமமாக பாவித்து பாராட்டும் நட்புணர்வு எல்லாமே அவரது வெற்றிக்கு உதவியிருப்பதை இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

இந்த நல்ல குணங்கள் எம்ஜிஆரிடம் வெளிப்படுவது திரையில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும்தான். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரமாண்டமான ரசிகர் பட்டாளம் வாய்த்திருக்கிறது.

நன்றி Kathir Vel

orodizli
19th January 2020, 10:30 AM
M.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். அதிலும் கூட அவரது மனிதாபிமானமே மேலோங்கியிருக்கும்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கவும் ஆன்மிகப் பிரசங்கம் செய்யவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறை வுக்குப் பிறகு அந்தப் பணி அவரது மகளுக்கு வழங்கப்பட்டது. அறநிலை யத்துறை மூலம் அவருக்கு மாதச் சம்பளமும் உண்டு. அந்தப் பெண்மணி அவரது தாயாரைப் போல இல்லாமல், சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பயிற்சியில் சேருவோருக்கு முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் புகார்கள், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தன.

மதுரைக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றிருந்த நேரத்தில் ஒருநாள், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு மேல் உதவியாளர்களிடம் ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். அங்கு ஒரு வேலை இருக்கிறது. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். பக்தர் களுக்கு இடைஞ்சல் இருக்காது’’ என்று சொன்னார். போலீஸ் அதிகாரிகளையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார். கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததுடன், தனது வருகை யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்!

கோயிலுக்குச் சென்ற எம்.ஜி.ஆரை நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தனக்கு எந்தவித விசேஷ மரியாதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தரிசனம் முடித்து பிரசாதம் கொண்டு வந்த அர்ச்சகருக்கு பணம் கொடுத்துவிட்டு, கோயிலை சுற்றிப் பார்த்தார். நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கோயில் யானையைத் தட்டிக் கொடுத்து அதன் பராமரிப்பு, அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டறிந்தார்.

கோயில் அலுவலகத்துக்குச் சென்று அர்ச்சகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கும் பெண்மணியை தன்னை வந்து பார்க்கச் சொல்லும்படி எம்.ஜி.ஆர். கூறினார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அருகிலேயே அந்தப் பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அவ ருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார்கள் குறித்து விசாரிக்கத்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைக்கிறார் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.

பயத்தில் கோயில் அலுவலகத்துக்கு அழுதுகொண்டே வந்தார் அந்தப் பெண்மணி. அவரை எம்.ஜி.ஆர். உட்காரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து விக்கி விக்கி அழுதபடியே நின்றார். மீண்டும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி சொன்னதும் உட்கார்ந்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர். கனிவுடன், ‘‘அழாதேம்மா, தப்பு உங்கள் பேரில் தானே. உங்கள் தாயார் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாக செய்தார்? நீங்களும் அதேபோல பணியாற்றுவீர்கள் என்று நம்பித்தானே உங்களுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்? தெய்வீகமான விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் பணியில் இருக்கும் நீங்கள், அதை பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டாமா?’’ என்றார்.

அந்தப் பெண் அழுதவாறே, ‘‘இனி மேல் ஒழுங்காகப் பணியாற்றுகிறேன் ஐயா. பணியில் கவனமாக இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம்’’ என்றார். ‘‘உங்களை நம்புகிறேன். கவனமாக பணி யாற்றுங்கள். நான் அழைத்ததும் வந் ததற்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என் றார். அதன் பின்னர், அந்தப் பெண்மணி ஈடுபாட்டோடு பணி செய்தார்.

எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டே நீக்கி யிருக்கலாம். அல்லது அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம். மதுரை வந்தபோது, தானே நேரில் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்மணியை அழைத்து அறிவுரை வழங்கினார் என்றால், அதற்கு அந்தப் பெண்மணியின் குடும்பச் சூழலை அறிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்தான் காரணம்!.......... Thanks.........

orodizli
19th January 2020, 10:34 AM
புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது. புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறது ‘வந்தியத்தேவன்’ படக்குழு.������.......... Thanks.........

orodizli
19th January 2020, 10:36 AM
https://www.youtube.com/watch?v=wFPFo2oLknc... Thanks......

oygateedat
19th January 2020, 11:26 AM
#புரட்சித்தலைவர்னா #யாரு???

சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.

தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.

குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...

"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...

ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...

"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"

"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."

orodizli
19th January 2020, 12:23 PM
#புரட்சித்தலைவர்னா #யாரு???

சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.

தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.

குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...

"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...

ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...

"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"

"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."......... Thanks.........

orodizli
19th January 2020, 12:28 PM
மக்கள் திலகம், புரட்சிதலைவரின் திரைப்படங்களை , திரைக்காவியங்களை...டிஜிட்டல் முறையில் புதுப்பொலிவுடன் மெருகேற்றி திரையிட்டால். துக்கடா புதிய படங்கள் எல்லாம் முறியடித்து நம் தலைவர் புரட்சிதலைவர் ஒருவரே என்றும்" வசூல் சக்கரவர்த்தி". சரித்திர நாயகன், சகாப்தம் படைத்த ஏக சக்கரவர்த்தி......... Thanks.........

orodizli
19th January 2020, 03:00 PM
இங்கே தான் எம்.ஜி.ஆர்!!
------------------------------------
வரலாறு!
இது சாதனையாளர் எல்லோரையுமே உள் வாங்குகிறது!
சிலரை அழுத்தமாக அமர வைக்கிறது!
சிலரை முகமன் கூறி வரவேற்று--பின் மூலையில் உட்கார்த்தி வைக்கிறது!
சிலருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தை அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் கொடுத்து மூச்சுக்கு முப்பது தடவை அவர்கள் பெயரை முழங்குகிறது!
சரி! பதிவுக்குள் செல்வோம்!
இந்தியாவில் இன்று பசியின்றி உண்டு ருசியோடு கல்வியை மாணவ சமுதாயம் கற்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர்!!
அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரால் தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப் பட்டது!
மேற்கூறிய செய்தியை சொல்லி மகிழ்ந்திருப்பவர் ராகுல் காந்தி!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!!
சமீபத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார் ராகுல்!!
இது அரசியல் விளம்பரத்துக்கான அவரது உரை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது! அதே சமயம் அவரது தந்தை ராஜிவ் காந்தியின் எம்.ஜி.ஆர் பற்றையும் நாம் அறிவோம்!!
ஏற்கனவே திரு நரேந்திர மோடி எம்.ஜி.ஆரின் சிறப்புக்களை மக்களிடம் பகிர்ந்து மகிழ்ந்ததும்--எம்.ஜி.ஆருக்கு என்றே சில சாதனைகளை செயல்படுத்தி இருப்பதையும் நாம் அறிவோம்!
இந்த நிலையில் ---
ராகுல் காந்தியின் சமீபத்திய இந்த உரை நமக்கு சில தீர்மானமான தெளிவுகளை கொடுக்கிறது!!
1]--தனித் தமிழ் நாடு என்ற தி.மு.கவின் அன்றைய அர்த்தமற்ற கோரிக்கையை அன்று நிராகரித்த காலம்-
எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூபத்தின் வாயிலாகவே-
தமிழ் நாட்டுக்குள் இந்தியா!!--என்ற கீர்த்தியை அளித்திருக்கிறது!
2]--இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள்-
காங்கிரஸ்--பி.ஜே.பி--இரண்டின் தலைவர்களுமே எம்.ஜி.ஆரை உள் வாங்கி உரைத்திருப்பவை இதுவரை எந்த தலைவருக்கும் கிட்டாத பேறு என்பதுடன் எட்டாத பேறு என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கதே!!
3]--பள்ளிக் குழந்தைகள் பசியாற வேண்டும் என்று துடித்த விருது நகர் தந்த விருது,,காமராஜர் நினைத்தாலும்--அன்றைய நிதிப் பற்றாக்குறை அவரது லட்சியத்தை நீதிப் பற்றாக்குறை ஆக்கி,,திட்டத்தை பாதியில் நிறுத்த நேர்ந்ததை மறந்து இன்றையக் காங்கிரஸ்காரர்கள்,,சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரின் சாதனையாக பேசப் படுவதை ஏற்காத நிலையில்--
காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுலே இன்று குறிப்பிட்டிருப்பது??
காலத்தில் தோன்றி கைகளை வீசிக்
காக்கவும் தயங்காது என்ற ஆனந்தஜோதியின் அமிர்த வரிகள்!!
இப்படி இன்னும் பல்வேறு ஆச்சரிய உண்மைகளை அணு அணுவாக நமக்கு தெரிய வைக்கும் வகையில் திரு ராகுல் காந்தியின் அறிக்கை அமைந்திருக்கிறது என்ற வகையில் நாம் அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்!!
சரித்திரம்--
சிலரை முழங்கும்
சிலரை முழுங்கும்!!
வெகு சிலரின் சாதனைகளை மட்டுமே
அணு தினமும் வழங்கும்!!
அந்த வகையில்--
எங்கே எம்.ஜி.ஆர். ? என்ற கேள்விக்கு--
மீண்டும் பதிவின் தலைப்பு!! இடம் பெறுவதில் உடன்பாடு தானே உங்களுக்கு???......... Thanks...

orodizli
19th January 2020, 03:05 PM
*MGR* வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.

எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.

‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை வெளியூருக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதையும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.

எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’

‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக
இயங்கியவர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’

எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை
வெங்கட்ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும், தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.

சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை
சந்தித்தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.

‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.

இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.

‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும், சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு
அபாரமான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.

‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன்
மனோகரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...

‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’.

த*க*வ*ல் உத*வி: இதயக்கனி எஸ். விஜயன் அவ*ர்க*ள்............ Thanks.........

orodizli
20th January 2020, 05:32 PM
நாளை 21-01-2020 முதல் கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " பாரத்" உயரிய விருது பெற்று தந்த படிப்பினை காவியம் "ரிக்க்ஷாக்காரன்" திருச்சி - பேலஸ் dts., திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் காட்சி தரவிருக்கிறார்.........

orodizli
20th January 2020, 05:36 PM
நாகர்கோயில்- தங்கம் 21.01.2020 முதல் தினசரி.4. காட்சிகளாக வெற்றிப்பவனி... தென்காசி புளியங்குடி ;கண்ணா திரையரங்கில் வெற்றிமுரசு கொட்டுகின்றது கலைக்கடலின் "எங்கவீட்டுப்பிள்ளை " தினசரி.2.காட்சிகளாக நன்றி மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம் திருச்சி பேலஸ் ரிக்சாக்காரன் தகவல் நண்பர் திருச்சி. கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோயில் தகவல் திரு நெல்லை.. ராஜா.அவர்கள் நன்றி
......... Thanks.........

fidowag
20th January 2020, 08:31 PM
நம் நாடு -சென்னை அகஸ்தியாவில் வசூல் சாதனை*
------------------------------------------------------------------------------------
கடந்த 15/01/20 முதல் சென்னை அகஸ்தியாவில் வெளியாகி வெற்றிநடை போடும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நம் நாடு " முதல் 5 நாட்களில் ரூ.1,25,000/- வசூலித்து அபார சாதனை புரிந்துள்ளது .என்று பட வினியோகஸ்தர்* தகவல் அளித்துள்ளார் .


இந்த வாரம் மூலக்கடை ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நாளை நமதே " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

17/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில் யு.கே.முரளியின் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். ஹிட்ஸ் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .

18/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில்* தியாகுவின் லோகேஷ் ரிதம்ஸ் இன்னிசை நிகழ்ச்சியில் காலத்தை வென்ற எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .

19/01/20 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு மேல் அன்பு ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசை விருந்து நடைபெற்றது .

19/01/20* மாலை 6 மணிக்கு மேல் சென்னை தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கில்*புதிய நீதி கட்சி தலைவர் திரு.ஏ .சி.சண்முகம் தலைமையில் ,பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பங்கேற்கும், திரு.சௌந்தர்ராமனின் பல்லவி ராகமழையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .

மேற்கண்ட நிகழ்ச்சிகள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் போட்டி படங்களுக்கு இடையில் சென்னை அகஸ்தியாவில் வசூல் மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "நம் நாடு " வசூல் சாதனை புரிந்துள்ளது என்பது வியக்கத்தக்கது .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு போட்டி வேறு எந்த நடிகரின் படமுமல்ல.அவரது படங்களே /நிகழ்ச்சிகளே போட்டி என்பது குறிப்பிடத்தக்கது


அடுத்த வாரம் முதல் விருகம்பாக்கம் தேவி கருமாரி , காஞ்சி அருணா, மற்றும் செங்குன்றம் அரங்குகளில் வெளியீடு .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அகஸ்தியாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்* ஒரு வார வசூலாக*" ரூ.1,90,000/- வசூலித்து சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது*

oygateedat
21st January 2020, 12:12 AM
விரைவில்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

மணீஸ்

திரையரங்கில்

எங்க வீட்டுப்பிள்ளை

orodizli
21st January 2020, 07:52 AM
பெங்களூர்- அருணா DTS தியேட்டரில். 21- 01- 2020
முதல்
''உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தின்
டிரைலர்
திரையிடபடுகிறது............ Thanks.........

orodizli
21st January 2020, 07:54 AM
https://youtu.be/KZImN2CYzBU........... Thanks...

orodizli
21st January 2020, 08:06 AM
உலக மஹா, மெகா சாதனையின் உச்சம் என்றால்... ஒரு நடிகர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும்... திரையுலகை விட்டு விலகி 42 ஆண்டுகள் தாண்டியும்... அவர் நடித்த பழைய, பற்பல முறைகள் மறு வெளியீடுகள் கண்டு சிறப்பை பெற்றும்... இன்றைய 2020 தை பொங்கல் திருநாளில்...15 இடங்கள் அளவில் புத்தம் புதிய படங்களுக்கு போட்டியாக திரையிடப்பட்டுள்ள அதிசயத்தை, பேரற்புத நிகழ்வினை கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., தவிர இந்த உலகத்தில் வேறு யார் நடத்தி காட்ட இயலும்?!...இதுதான் சாதனை...சரித்திரம்... சகாப்தம்...

orodizli
21st January 2020, 03:56 PM
தலைவரின் நெருங்கிய நண்பர் நடிகர் அசோகன் அவர்களின் சொந்த ஊர் திருச்சி....இயற்பெயர் அந்தோணி. கல்லூரி நாடங்கங்களில் பிரபலம் ஆனார் .

மணப்பந்தல் படத்தில் பெயர் மாற்றம் அசோகன் என்று ஆனார்...இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களை நம் தலைவருக்கு அறிமுகம் செய்து பின் அன்பேவா படம் உருவானது.

தலைவர் வீட்டு சாப்பாட்டை மிகவும் விரும்புபவர் அசோகன் அவர்கள்... மற்ற படங்களில் நடித்து கொண்டு இருந்தாலும் உணவு அருந்த தலைவர் செட் தேடி வருவது வழக்கம்.

தலைவருடன் அதிக படங்களில் நடித்த பெருமை இவருக்கு மட்டுமே சொந்தம்.

புகழ் சேர கோவையில் ஒரு பெரிய குடும்பம் சேர்ந்த சரஸ்வதி என்பவருடன் காதல் மலர பெண் வீட்டார் எதிர்ப்பில் பின் தங்க.

ஒரு நாள் திரைப்படங்களில் வருவது போல சரஸ்வதி அவர்கள் அசோகன் அவர்களை தேடி ஓடி வர...தலைவருக்கு விஷயம் அசோகன் அவர்கள் சொல்ல.

சரஸ்வதி மனதில் உள்ளதை உள்வாங்கி சரி.. இனி என் பொறுப்பு என்று சொல்லி....

செல்வந்தர் சரஸ்வதி குடும்பம் திருமண நிகழ்வுகளை தடுப்பது அறிந்து கோடம்பாக்கம் பாத்திமா சர்ச்சில் வாத்தியார், இயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தர், மற்றும் ஏ. வி.எம்.சகோதர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

ஒருகட்டத்தில் பெண்ணை பெற்றவர்கள் இதற்குமேல் ஒன்றும் இல்லை என்று இருக்க.

அந்த அசோகன் தம்பதிக்கு இரு பிள்ளைகள்... பெரியபிள்ளை அமல் ராஜ்... நன்கு இருந்து 2002 இல் மறைய.

அடுத்த மகன் வின்சென்ட் அசோகன் திரைத்துறையில் வளர்ந்து வருவது தெரியுமே.

நேற்று இன்று நாளை படம் அசோகன் அவர்கள் தயாரிப்பில் வர விருக்க படத்தின் பினான்சியர் டிமாண்டி அவர்கள் அரசியல் மாற்றம் கண்டு தீயசக்தி பேச்சை கேட்டு கொண்டு படத்தை தாமதம் ஆக்க.

நிலைமை அறிந்த வாத்தியார் அசோகனை அழைத்து ஒரே இரவில் படத்தில் நடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை முழுவதும் தன் கையால் கொடுக்க.

அன்று இரவே சார்ந்தவர்கள் தேடி அசோகன் பாக்கி பணத்தை செட்டில் பண்ணி படம் முடிந்து வெளியே வந்து வசூலை வாரி குவிக்க.

தலைவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி சம்பளத்தை பெருந்தன்மையுடன் அவர் மறுக்க.

இதுவே உண்மை வரலாறு...இனி எவனும் அந்த நல்ல இருவர் நட்பை விமர்ச்சித்து பேசினால்...

வாழ்க எம்ஜியார் புகழ்.தொடரும்...நன்றி உங்களில் ஒருவன் நெல்லை மணி.......... Thanks.........

fidowag
21st January 2020, 09:44 PM
கோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (24//01/20) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகளில் திரைக்கு வருகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
22nd January 2020, 02:45 PM
கல்கண்டு வார இதழ் -29/01/20
------------------------------------------------
எங்கே போவது ?

எம்.ஜி.ஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது .* தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த அவருக்கு ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த விருப்பம் .* ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி,*சொல்கிறேன், என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார் .* ஒருமுறை சிவாஜி, எம்.ஜி.ஆர்.பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு காமராஜரை வழியனுப்பும் பொது மீண்டும் அழைப்பு விடுத்தார்* எம்.ஜி.ஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல்*ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது* என்றில்லை .* உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன் .அறுசுவை உணவும், மீன், இறைச்சியும் ,அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.* நான் மக்கள் ஊழியக்காரன் .* ரெண்டு இட்லி, தயிர் சோறுதான் எனக்கு சரிப்படும் .* உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டா, திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும் .* அதுக்கு நான் எங்கே போவது ? என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.* தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர்.*

fidowag
22nd January 2020, 02:46 PM
குமுதம் வார இதழ் -29/01/20
------------------------------------------
ஆர்.சி.சம்பத்* --மாயக்கலைஞன் எம்.ஜி.ஆர். நூலில் இருந்து*

தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி தொடங்கிய படம் "பரமபிதா",எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடித்தார் .* "டிசூசா " என்பவர் சென்னை லயோலா கல்லூரி முதல்வர். கண்டிப்பு மிக்கவர் .* பிறகு இவர் போப்பாண்டவருக்கு கீழுள்ள*பன்னிரண்டு கார்டினல்\களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் .* அவர் ரோம் நகருக்கு புறப்பட போகும் நேரத்தில் இருதய டாக்டர் பி.எம்.ரெக்ஸ் , அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து வந்தார்.*

பேச்சு வாக்கில், பரமபிதா படத்தை பற்றி பேசும்போது , அதன் கதையை பற்றி டிசூசா கேட்டார் .* ஒருவன் பாதிரியார் ஆனபிறகு அவனது காதலி அவனை தேடி வருகிறாள்.* அவனை மனம் சஞ்சல படவைக்கிறாள் என்று போகும் கதை .

அதை கேட்ட டிசூசா* பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது .* நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான் , அவன் அப்படியான மன நிலைக்கு ஆளாக கூடாது .* அப்படிப்பட்டவன் பாதிரியாராக வரக்கூடாது , வர முடியாது, என்றார் .* அதைக் கேட்ட எம்.ஜி.ஆர். இரண்டாயிரம் அடி எடுத்திருந்த "பரமபிதா"படத்தைக் கைவிட்டார் .

orodizli
22nd January 2020, 02:59 PM
டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயம்...

நான் முன்பதிவு செய்துவிட்டேன். நீங்கள்???

http://igmmumbai.spmcil.com/Interface/product-in-Detail.aspx?sell=159

"எங்கள் தங்கத்தின்" நாணயம் தங்கத்திலும் வெளிவரவேண்டும். அதற்கு நமது கழக அரசு ஆவன செய்யவேண்டும்.

மேலும் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயம் வருவதற்கு [ பொது மக்களுக்கு கிடைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்த உலக எம். ஜி.ஆர் பேரவை ஒருங்கிணைப்பாளர், சென்னை, அனைத்து தலைவர் அமைப்புகளுக்கும் நன்றி.

மேலும் இந்த நாணயங்களை பொது வெளியில் அதாவது மக்கள் மத்தியில் புழக்கத்தில் வருவதற்கும் திரு. முருகு பத்மநாபன், திரு. துரை கருணா .....போன்றோர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.������............. Thanks mr.SB.,

orodizli
22nd January 2020, 03:03 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாணயங்கள் வருகை... ரூபாய் 100, மற்றும் 5 வருகிறது......... நாமனைவரும் முந்துவோம் பதிவு செய்ய...

orodizli
22nd January 2020, 03:45 PM
டாக்டர் எம்.ஜி. “புரட்சி தலைவர்” (புரட்சிகரத் தலைவர்) என்று அன்போடு அழைக்கப்பட்ட ராமச்சந்திரன், இலங்கையின் கண்டியில் எம்.கோபாலகிருஷ்ண மேனன் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு 17.01.1917 அன்று பிறந்தார். அவர் வி.என். ஜானகி. 1940 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் அறிமுகமான பிறகு, தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மிகவும் வெற்றிகரமாக பணியாற்றினார். அவர் பெராரிக்னர் அண்ணாவுடன் 1952 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டார், அதன்பிறகு அவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். 1967 ஆம் ஆண்டில் பரங்கிமலை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் 1972 ஆம் ஆண்டில் அண்ணா திராவிட முனேத்ரா காசகம் (ஏ.டி.எம்.கே) கட்சியைத் தொடங்கி 1977 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஆனார். தேர்தலில் தோல்வியடையாத மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். 24.12.1987 அன்று. டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழக மாநிலத்தின் மிகச் சிறந்த, கவர்ந்திழுக்கும் மற்றும் பிரபலமான முதலமைச்சர்களில் ஒருவராக இருந்தார். நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட மாதிரி திட்டங்களாக மாறியுள்ள பல புதுமையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நினைவுகூரப்படுகிறார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்ட “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்தான உணவு திட்டம்” மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் பாராட்டப்பட்டது, மேலும் இது நாடு முழுவதும் பிரதியெடுக்க உத்தரவிடப்பட்டது. டாக்டர் எம்.ஜி. கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழக அரசு கண்ட விரைவான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ராமச்சந்திரன் அடித்தளம் அமைத்தார். அவர் தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களை நிறுவினார். ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார். இந்திய அரசு டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மிக உயர்ந்த சிவில் க honor ரவத்துடன், பாரத் ரத்னா தனது இணையற்ற பொது சேவைக்காக. டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஒரு உத்வேகம் தரும் நபராகத் தொடர்கிறார், அவர் தனது பெருந்தன்மை, தாராளம், கட்டளைத் தலைமை மற்றும் மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடுவதற்கான உறுதியுடன் எப்போதும் நினைவுகூரப்படுகிறார். அவர் இறந்தபோது, ​​செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளின் நலனுக்காக அவர் தனது செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார். டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கைக் கதை அர்ப்பணிப்பான சேவையின் மூலம் அதிகமான பொது நலனுக்காக பாடுபட மில்லியன் கணக்கானவர்களைத் தூண்டுகிறது.������......... Thanks.........

orodizli
22nd January 2020, 04:03 PM
மதுரை - ராம் DTS.,புரட்சித்தலைவரின் பிரமாண்ட இணையில்லா தயாரித்து அளித்த புரட்சி படைப்பு "அடிமைப்பெண் " 24.01.2020 வெள்ளிமுதல் தினசரி 3காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் வேங்கைமலையான் காத்த அடிமைப்பெண் நன்றி ...மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம்......... Thanks.........

orodizli
22nd January 2020, 08:43 PM
எம்ஜிஆர் காலத்தில் வந்த படங்கள், பாடல்கள் இன்றைக்கு உள்ளதா? இப்போது படமா எடுக்கிறார்கள், பாடல்களா எழுதுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் படத்துடன் தற்கால படங்களை ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இன்றையதினம் நம்மையெல்லாம் ஆளாக்கிய எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா. இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன்கூட உயர்ந்த நிலைக்கு உருவாக்குவதற்கு காரணமாக, அடித்தளமாக விளங்கிய ஒப்பற்றத் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவிளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த காலத்திலே மிட்டா, மிராசுதார், தொழிலதிபர்கள் தான் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றி, அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக எம்.ஜி.ஆர் சாதாரண தொண்டன்கூட அமைச்சராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்ற ஒரு நிலையை உருவாக்கிச் சென்றார்.

அதனாலேதான் நான் உட்பட, மேடையிலே வீற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியச் சேர்மன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அத்தனைபேரும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் இருந்த காரணத்தினாலே நமக்கு இந்த பதவி கிடைத்திருக்கின்றது. சாதாரண மனிதனையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கி அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட ஒரே மனிதர் எம்.ஜி.ஆர்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரரும், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் என்று தான் பாடிய பாடலுக்கு தானே இலக்கணமானவர் எம்.ஜி.ஆர் . அற்புதமான பாடலைப் பாடி அவரே அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 1917-ஆம் ஆண்டு பிறந்து, இளம் வயதிலேயே கல்வியை தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் தன்னை இணைத்துக் கொண்டு சிறு வயதில் கடுமையான பசியில் வாட்டப்பட்டு, கடினமான வாழ்க்கை வாழ்ந்த தலைவர் நம்முடைய எம்.ஜி.ஆர் .

ஆகவே தான் அவர் ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இன்றைக்கு எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன, எந்தத் திரைப்படமாவது உயிரோட்டமுள்ள திரைப்படமாக இருக்கிறதா? இல்லை. ஆனால், அப்பொழுது அண்ணா எம்.ஜி.ஆரைப் பார்த்து, """"நீ முகம் காட்டினால் 30 இலட்சம் வாக்குகள் நிச்சயம்"" என்று சொன்னார்கள். அந்தளவிற்கு மக்கள் சக்தி படைத்த தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு திமுகவில் அவரை விலக்கியபொழுது அப்பொழுது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அதனை அஇஅதிமுகவாக உருவாக்கினார். ஆகவே, அன்று முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், அண்ணா பெயரிலே இந்த இயக்கத்திற்கு பெயர் சூட்டினார்.

அண்ணா உருவத்தை நம்முடைய கழகக் கொடியிலே பொறித்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கு அதிமுக என்று சொன்னால் அண்ணா நினைவில் வருகின்ற அளவிற்கு அண்ணா மிகப்பெரிய மரியாதை, புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் தான் உண்டு.

அதேபோல, எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படங்கள் ஊருக்கு உழைப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, தாய்ச்சொல்லைத் தட்டாதே, அன்னமிட்ட கை, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என அருமையான தலைப்புள்ள படங்கள். இன்றைக்கு வரக்கூடிய படங்கள் ஏதாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னென்னவோ தலைப்புள்ள படங்கள் வருகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கின்றபொழுது நாட்டு மக்களுக்கு தேசியப் பற்றை உருவாக்க வேண்டும், நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், ஆக்கபூர்வமான கருத்தை திரைப்படத்தின் மூலமாக விளக்குவார்.

பாடல்கள் மூலமாக விளக்குவார். அப்படிப்பட்ட உன்னதமான தலைவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள். ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" ""நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி"" ""சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"" ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" இப்படி பல கருத்துள்ள அற்புதமான பாடல்களை அவர் படங்களிலே பாடியுள்ள பாடல்கள் அவர் இந்த மண்ணிலே இருந்து மறைந்தாலும் அவர் பாடிய பாடல் இன்றைக்கும் உயிரோட்டம் உள்ள பாடல்களாக, அறிவுபூர்வமான பாடல்களாக, தேசப்பற்றுள்ள பாடல்களாக, இளம் சமுதாயத்தை வளர்க்கின்ற பாடல்களாக, அழிவில்லாத பாடல்களாக இருந்து கொண்டிருக்கும் அற்புதங்களை படைத்த தலைவர் எம்.ஜி.ஆர்.

""புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழைகள் நமக்காக"" இந்தப் பாடல் மூலமாக. சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மகான்களை நினைவு கூறுகிறார். மகான்கள் இந்த நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாமனிதர்களுடைய புகழைப் பரப்புவதற்காக, அவர்கள் வழியிலே நடக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பாடலை தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக நாட்டுக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர் .

""எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே"" எப்படிப்பட்ட தத்துவப் பாடல். ஆகவே, நாம் எதிர்காலத்தில் எப்படியிருக்க வேண்டும், பெற்றோர்கள் எப்படி வாழவேண்டும், எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அன்றைய காலகட்டத்திலே நமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கும் தான் தலைவர் இருக்கிறார்கள். படத்தைப் பார்த்தாலே பையன் கெட்டுப் போய் விடுவான், பையனை அந்தப் பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்ற படமாக இப்பொழுது வருகிறது.

அந்தக் காலத்தில் இருக்கும் திரைப்படமும், இன்றைக்கு இருக்கின்ற திரைப்படமும் எப்படி இருக்கின்றது என்று நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ""நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே"" "" இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி"" ""உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புதுமுறையில் உண்டாக்கும் கைகளே"" என்ற பாடல் மூலம் தொழிலாளியின் பெருமையையும் அவர்கள் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல ""ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்"" என்ற பாடல் மூலம் தனது மதச்சார்பின்மையை வலியுறுத்தியிருக்கிறார்.

தன் வாழ்நாள் முழுவதும் தன் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய ஒவ்வொரு பாடலும் தத்துவப் பாடல். இன்றைக்கு அவர் பிறந்தநாள் விழாவிலே இதையெல்லாம் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இதை நான் இங்கு தெரிவிக்கின்றேன். அதேபோல ""நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்"" என்றும் ""தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கருத்தான பல தொழில் பயில்வோம் ஊரில் கஞ்சியில்லை என்ற சொல்லினை போக்குவோம்"" இவ்வளவு அருமையான பாடல்கள் மூலமாக இன்றைக்கு ஒரு வழிகாட்டியாக, தேசப்பற்றுள்ளவராக, இந்த நாட்டின் மீது, தமிழக மக்கள் மீது அன்பு கொண்டவராக, நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரே ஒரு மனிதர் எம்.ஜி.ஆர். "

"அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் நம்மிடம் இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே"" இந்தத் தமிழகமும் நமதே. ஆகவே, எம்.ஜி.ஆர் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த மாபெரும் ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு, சிறப்போடு நாம் இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்”.......... Thanks.........

orodizli
22nd January 2020, 08:46 PM
https://youtu.be/KZImN2CYzBU......... Thanks.........

oygateedat
22nd January 2020, 10:40 PM
திரு. சைதை துரைசாமி அவர்களுடன் சந்திப்பு..
=========================================
அண்ணன் திரு. சைதையார் அவர்களை சென்னையில் கடந்த செப்டெம்பர் , 2019 மாதம் அவர் அலுவலகத்தில் சந்தித்தேன்.

என்னுடன் அருமை நண்பர் திரு. செல்வக்குமார் , பேராசிரியர் அவர்களும் வந்திருந்தார்.

அண்ணன் சைதையார் அவர்களை மக்கள் திலகம் அரசாட்சி நடந்தபோது ஒரே ஒருமுறை சந்தித்தேன்.,

கடந்த 21.10.1987 அன்று அண்ணன் ஜேப்பியாருடன் ஒரே காரில் வந்து அமைச்சர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் தி நகர் வீட்டில் வந்து இறங்கினேன்.அன்று மாலை ஐந்து மணி இருக்கும். சிறு தூறல். அண்ணன் சைதையார் அப்போது அங்கு நின்றார். அண்ணன் ஜேப்பியார் இறங்கியதும் கைகொடுத்து தனியாக இருவரும் பேசினர். நான் அப்போது அண்ணன் சைதையார் அவர்களிடம் கை கொடுத்து "வணக்கம்" மட்டுமே சொன்னேன். கருப்பு நிறம் , கட்டையான உருவம், தலை நிறைய முடி, அரை கை வெள்ளை சட்டை, அதிமுக கரைபோட்ட வேஷ்டி.,இந்த உருவம்தான் அன்றைய அண்ணன் திரு. சைதையார் அவர்களுடன் முதல் சந்திப்பு..
( அன்று பார்த்த அண்ணன் சைதையார் அவர்களை
32 வருடம் கழித்துதான் சந்திக்கறேன்)

அண்ணன் திரு.சைதையார் அவர்களை 1972 ஆம் ஆண்டு முதலே நன்றாக தெரியும் செய்தி தாள்களின் மூலம். காரணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்த புதிதில் அவர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது செய்தியாக வந்தது. அப்போது அண்ணன் அவர்களை "சைதாப்பேட்டை சா. துரைசாமி" என்றே பதிவுகள் படித்துள்ளேன். ஆகவே அந்த கால கட்டம் எனக்கு வயத வெறும் ஒன்பதுதான்.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று திமுகவில் இருந்து நீக்கம் செய்த பின் அடுத்த மாதம் நவம்பர் மாதம் அப்போதைய கவர்னர் சுகாதியாவிடம் அப்போது எம்ஜிஆர் அவர்கள் , கருணாநிதிக்கு எதிராக ஊழல் புகார் கொடுக்க பேரணி ஒன்றை ஏற்ப்பாடு செய்தார்.

எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் அன்று பேரணியில் கலந்துகொண்ட தொண்டர்கள், பொதுமக்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டார்கள். சென்னையே அப்படியே ஸ்தம்பித்தது. காரணம் அன்று கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரே நாள் சுமார் 10 லட்சம் பேர்கள்...

அதே நாளில் மறுநாள் பேப்பரில்தான் எல்லோரையம் குறிப்பிட்டு சைதை பகுதி கழக செயல்வீரர் சா. துரைசாமியும் கலந்து கொண்டார் என்று செய்தி படித்தேன் எனது ஒன்பதாவது வயதில்;...

என் மாமா கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பார். அப்போது தினத்தந்தி பத்திரிக்கையில் படிப்பதுண்டு. பின்னாளில்..

ஒருமுறை மக்கள் திலகம் அவர்களை கருணாநிதி அவருக்கு "பைத்தியம்" என்றே விமர்சித்து , "எம்ஜிஆருக்கு எலுமிச்சம் பழம் கொடுத்து தலை தேய்த்து குளித்தால் பைத்தியம் தெளியும்" என கருணாநிதி நய்யாண்டி செய்திருந்தார்.

அண்ணன் திரு.சைதையார் கருணாநிதியை மேடையில் வைத்து அவருக்குதான் பைத்தியம் பிடித்துள்ளது என்ற சரியான அர்த்தத்தில் எலுமிச்சம் மாலையை மேடையில் போட்டு கருணாநிதியை மேடையிலே கலங்கடித்தவர்தான் அன்றைய அண்ணன் சைதை துரைசாமி அவர்கள்.

அன்றைய முதல்வர் கருணாநிதியால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் கற்பித்த கருணாநிதியை நேரடியாக மேடையில் போட்டு வாங்கிய பெருமை பெற்ற ஆண் மகனாக அன்று வலம் வந்தார் அண்ணன் திரு.சைதையார் அவர்கள்.

1983 ல் அமைச்சர் திரு. காளிமுத்து மற்றும் விருதாசலம் குஞ்சிதபாதம், எம்ஜிஆர் மன்ற தலைவர் அண்ணன் வேங்கட வேணு, நகர செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூலம் அண்ணன் ஜேப்பியாரின் அறிமுகம் எனது கல்லூரி காலத்தில் கிடைத்தது.

அதன் பின் சென்னை அதிகம் வர நேர்ந்தது.

காலம் ஓடியது.... 1984 தேர்தல் களத்தில்
அண்ணன் திரு.சைதையார் அவர்களுக்கு மக்கள் திலகம் சீட் சைதை தொகுதியில் ஒதுக்கினார்.வெற்றியும் அடைந்தார்.

1984 ஆம் ஆண்டு நான் ரொம்ப வறுமையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது "குமுதம்" வார இதழில் அண்ணன் திரு.சைதையார் பற்றிய செய்தி படித்தேன். அதில் மாணவ - மாணவர்களுக்கு தனது அலுவலகத்தில் டைப்பிங் இலவசமாக செய்து தருகிறார் என படித்தேன். ஆனால் சந்தித்தது இல்லை. அந்த கால கட்டங்களில் அதிமுக தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் மக்கள் திலகத்துடன் ஜெ.டிசி பிரபாகரன், லியாகத் அலிகான், வளர்மதி ,ஜேப்பியார், சைதை துரைசாமி என்று ஒரு கூட்டமே வரும்..

பலமுறை அப்போது அங்கு 1983 -84 கால கட்டங்களில் அப்போது அண்ணன் சைதையார் அவர்களை மக்கள் திலகம் பக்கத்திலேயே பார்த்துள்ளேன்.

1984 ஆம் ஆண்டு ஜனவரியில் எங்கள் விருத்தாசலம் கலைகல்லூரிக்கு அமைச்சர் திரு. எஸ்டி சோமசுந்தரம் அவர்களை பேச அழைத்து
பேச அழைத்து வந்தேன். அடுத்த சில மாதங்களில் செல்வி ஜெயலலிதா அவர்களை கட்சிக்கு முக்கியத்துவம் தருவதை எதிர்த்து சோமசுந்தரம் எதிர் கொடி பிடித்தார். மக்கள் திலகம் அவர்களுக்கு சோம சுந்தரத்தை கட்சியில் விட்டு நீக்க சென்னை சத்யா ஸ்டுடியோவில் பெரியவர் திரு வள்ளிமுத்து தலைமையில் பொதுக்குழு கூடியது.

அந்த நாள் நான் சென்னை சத்யா ஸ்டுடியோ வாசல்படியில் அன்று அண்ணன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழமணியுடன் பேசிக்கொண்டு நின்று இருந்தேன். அப்போது அண்ணன் சைதை துரைசாமி, ஜேப்பியார், திருப்பூர் மணிமாறன் மற்றும் பலர் ஸ்டுடியோ உள்ளே சென்றனர்.

திரு எஸ் டிஎஸ் அவர்களை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்தபின் வெளியே நின்ற எஸ் டிஎஸ் ஆதவரவளர்கள் “எஸ் டி எஸ்” வாழ்க என ஒரு கூட்டம் கிளம்பியது. அப்போது...

திடீர் என ஒருகும்பல் அந்த கோஷம் போட்ட்டவர்களை ஒரு கூட்டம் அடித்து துவைத்தது . பலபேர் ரதத காயங்களுடன் ஆளை விட்டால் போதும் என்று ஓடியது .. அதை பார்த்து தூரத்தில் இருந்த நான் கைகொட்டி சிரித்தேன் .நல்ல காலம் நான் பேண்ட் போட்டு இருந்தேன் . இல்லையெனில் எஸ் டி எஸ் ஆதரவாளர் என்று என்னையும் துவைத்து இருப்பார்கள் .

1987 ல் புரட்சித்தலைவர் காலத்தில்– சென்னை சைதாப்பேட்டையில் தேரடி தெருவில் அமைச்சர் திருமிகு. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கு அண்ணன் திரு. சைதையார் அவர்களை அன்று கடைசீயாக மேடையில் பார்த்தேன்.

2016 ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இறந்ததும் திருமதி. சசிகலா நடராஜன் அவர்களை பார்த்து ஆறுதல் கூற போயஸ் தோட்டம் சென்றார் அண்ணன் சைதையார்

அப்போது மந்திரிகள், நிர்வாகிகள் எல்லாம்.."நீங்கள்தான் இனி பொறுப்பு ஏற்க்கவேண்டும்" என்று கை கூப்பி கெஞ்சினர்.

அப்போது அண்ணன் சைதையார் மட்டும் முறையான விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கம்தான் என் மனதில் அப்படியே பதிந்து , புதைந்து கிடக்கிறது.

" புரட்சித்தலைவர் அவர்கள் கருணாநிதியின் அராஜக அரசியலை ஒழிக்கத்தான் அதிமுக இயக்கம் கண்டார்கள். அவர்கள் இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதே மாதிரி அம்மாவும் கடந்த காலத்தில் கருணாநிதியை ஆட்சியில் அமர முடியாமல் முடமாக்கினார். அப்படி இனிமேல் கருணாநிதி ஆட்சி வராமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஆட்சி ஆள வேண்டும்" என்று அழகாக எடுத்து சொன்னார்.(இந்த நேரத்தில் கருணாநிதி உயிருடன் இருந்தார். கண்டிப்பாக தானே மடக்க முடியாத ஒரு நபரின் பேட்டியை பார்த்து அவரும் ஆடியிருப்பார்)

(அந்த வீடியோ இன்றும் முகநூலில் அவ்வப்போது வரும்.. பார்த்து பார்த்து அண்ணனின் பேச்சை ரசிப்பேன்)

காரணம் என் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன உண்மை தொண்டர்தான் அண்ணன் சைதையார் .புரட்சித்தலைவரின் அடிமட்ட தொண்டன் என்பதை அழகாக நிரூபித்து சொன்ன அந்த தருணம் .. அந்த இடத்தில யாரும் அப்படி சொல்லவே இல்லை. இதுதான் அண்ணன் சைதையாரின் "ஹைலைட்" விளக்கம்.

அண்ணன் திரு. சைதையாரிடம் கண்ட ஒரே அதிசயம் என்ன தெரியுமா?ஆனானப்பட்ட கருணாநிதியாலேயே வளைக்க முடியாத இரும்பு மனிதன்தான் அண்ணன் சைதையார்.,

கண்ணதாசன் கருணாநிதியை பற்றி இப்படிதான் அளந்து சொன்னார். காரணம் கூடவே இருந்தவர் அல்லவே?

"கருணாநிதி பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்”

---மேற்கண்டவாறு கண்ணதாசன் சொன்ன அப்படிப்பட்ட கருணாநிதியால் எல்லோரையும் வளைத்தவர் என பெயர் வாங்கியவர். அண்ணன் சைதையாரை மட்டும் இறக்கும் வரை வளைக்கமுடியாமல் கருணாநிதி காலாவதி ஆகிப்போனார். மக்கல்திலகத்தின் உண்மை தொண்டரை அசைக்க கூட முடியவில்லை – அதுவும் சென்னை நகரில் இருந்துகொண்டே..!
அண்ணன் சைதையாரிடம் போனிலும், நேரிலும் பேசியபோது இதைதான் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

அண்ணனிடம் கடந்த செப்டம்பரில் சந்திந்த நாள் அன்று 1984 மே 10 ஆம் நாள் புரட்சித்தலைவர் என்னிடம் அளித்த அதிமுக உறுப்பினர் அட்டை, அவர் அளித்த கிளை செயலாளர் பதவியின் நோட்டீஸ், கல்லூரி காலத்தில் நான் மாணவர் அணியில் நான் கட்சிக்கு அளித்த ரசீது, 1975 ல் இதயக்கனி படப்பிடிப்பில் அண்ணன் விருத்தாசலம் குஞ்சிதபாதம் புரட்சித்தலவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் , 1984 ல் செல்வி. ஜெயலலிதா கொள்கை பரப்புசெயலாளர் அவர்களுக்கு நான் அனுப்பிய விண்ணப்பத்தின் அஞ்சல் ரசீது ...ஆகிய அனைத்தும் அண்ணன் சைதையாரிடம் காண்பித்தேன்.

இன்றுவரை எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துள்ளேன்.

கடந்த வருடம் அண்ணன் சைதையார் பேசிய youtube ஒன்று பார்த்தேன். அதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரடி பதில் சொல்லி உள்ளார். அதற்கெல்லாம் மனதில் எந்த அப்பழுக்கும் இல்லாத மக்கள் திலகத்தின் தொண்டனால் மட்டுமே அது சாத்தியம் என்பதை அறிந்தேன். சந்தோசம்.
அந்த பதிவில் தான் நடத்தும் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச கல்விதான் அளிப்பதாக கூறி உள்ளார்.

பல கல்லூரிகளில் வசூலிப்பதை போல அதில் பாதி வசூலித்தால் மாதம் தனக்கு 120 கோடி ரூபாய் சம்பாதிப்பேன். அதை எல்லாம் தூர வைத்துதான், பணத்தை சேர்க்காமல் மாணவர்களின் நலனுக்கு இலவசமாக படிப்பு வசதிகள் செய்து தருவதாக அண்ணன் கூறினார்.

இதை பார்த்துத்தான் சென்னை மேயர் தேர்தலில் அண்ணன் சுலபமாக ஜெயித்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன். மக்கள் அவர் பக்கம் அப்படியே சாய்ந்து விட்டனர் என்றே கூறலாம். அண்ணனின் அருமையான பதிவுகள் எல்லாம் எனக்கு பிடிக்கும்.

இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரமில்லை

என் வாழ்நாளில் இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியல்வாதிகளின் பின்னால் அலையமாட்டேன்.

எனக்கு உதவி என்று கேட்க சென்றால் ஒன்று மக்கள் திலகம் இருந்த ராமாவரம் தோட்டம் வீட்டில் சென்று கேட்பேன். இல்லை என்றால் அண்ணன் சைதையார் அவர்களிடம் கேட்பேன்.

அந்த உதவிகள் அவர்கள் எனக்கு செய்வதாக இருந்தாலும் நானே உழைத்து சாப்பிடும் உதவிதான் கேட்பேன். யாரையும் அண்டி பிழைக்கும் அவல நிலை உதவிக்கு அங்கு செல்லமாட்டேன்.

இந்த கட்டுரை அண்ணண் சைதையாரின் மனித நேயத்துக்கும் , நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவரின் வாழ்ககை இன்று நகர்கிறது. மக்கள் திலகத்தின் உண்மை தொண்டனாக இன்று தமிழகத்தில் அவரை தவிர நேர்மையான மனிதர்களில் ஒருவராக இருப்பதால்

இன்று முதல் அவருக்கு "மக்கள் திலகத்தின் மறுபக்கம் " என்று பட்டம் அளித்து அவரை என்றும் வாழ்த்தும் ...

மக்கள் திலகத்தின் உண்மை அடிமட்ட தொண்டன்
அப்துல் சலாம் , குவைத் .

fidowag
22nd January 2020, 10:52 PM
வெள்ளி முதல் (24/01/2020) மதுரை ராம் அரங்கில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமை பெண் " தினசரி 3 காட்சிகள்* பவனி வருகிறது .* மதுரையில் மீண்டும் வேங்கையன் வெற்றி விஜயம் .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
22nd January 2020, 10:53 PM
வெள்ளி முதல் (24/01/20) தூத்துக்குடி சத்யாவில்* வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
22nd January 2020, 10:53 PM
வெள்ளி முதல் (24/01/2020) நாகர்கோயில் வசந்தம் பேலஸ்சில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி. ராஜா .

orodizli
23rd January 2020, 06:55 PM
https://youtu.be/X-7JZUJdrhw......... Thanks.........

orodizli
23rd January 2020, 07:13 PM
மதுரை- ராம் DTS., தூத்துக்குடி -சத்யா dts.,திரையரங்கம் பொன்மனச்செம்மல் எம்.ஜி ஆர்., அவர்களின் "அடிமைப்பெண்" நாகர்கோயில் - வசந்தம்பேலஸ் DTS தேனி-வசந்தம் dtsதிரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிப்பவனி வருகின்றார் நன்றி மதுரை எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்... Thanks......

fidowag
23rd January 2020, 09:48 PM
கடந்த ஞாயிறு (19/01/20) மாலை 6.30மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அன்பு ஸ்ருதி அவர்களின் இன்னிசை மழையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கீழ்கண்ட பாடல்கள் ஒலித்தன

1.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*

2.ஓடி ஓடி உழைக்கணும்* *- நல்ல நேரம்*

3.ஆனந்தம் இன்று ஆரம்பம்* - இதய வீணை*

4.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*

5.கண்கள் இரண்டும் விடிவிளக்காக = கண்ணன் என் காதலன்*

6.நாலு பக்கம் சுவரு - தேடி வந்த மாப்பிள்ளை*

7.சத்தியம் நீயே தரும தாயே - மாட்டுக்கார வேலன்*

8.பொன்னந்தி மாலை பொழுது* -- இதய வீணை*

9.மயங்கி விட்டேன் உன்னை கண்டு - அன்னமிட்டகை*

10.கண்ணழகு சிங்காரிக்கு - மீனவ நண்பன்*

11.நல்லது கண்ணே கனவு கனிந்தது - ராமன் தேடிய சீதை*

12.ஒரே முறைதான் உன்னோடு - தனிப்பிறவி*

13.மயக்கும் மாலை பொழுதே - குலேபகாவலி*

14.என்னை காதலித்தால் மட்டும் போதுமா -ஆசைமுகம்*

15.கண்ணன் எந்தன் காதலன் - ஒருதாய் மக்கள்*

16.பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் -மீனவ நண்பன்*

17.பாடினாள் ஒரு பாட்டு - ஒருதாய் மக்கள்*

18.நீயா இல்லை நானா* - ஆசைமுகம்*

19.நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே -நல்ல நேரம்*

20.தானே தானே தன்னான தானா -நினைத்ததை முடிப்பவன்*

21.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*

22.ஒரு தாய் வயிற்றில்* - உரிமைக்குரல்*

23.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

fidowag
23rd January 2020, 09:53 PM
தமிழக அரசியல் வார இதழ்*
----------------------------------------------
: முகமது சலீம், ராசிபுரம்*

கேள்வி : பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷனில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து எடுக்கிறார்களாமே ?

பதில் : எம்.ஜி.ஆர். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை .* வந்தியத்தேவனின் நாயகியாக மறைந்த முதல்வர் ஜெ. உருவில் கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல் .

fidowag
24th January 2020, 07:27 PM
இந்த வாரம்(24/01/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*
------------------------------------------------------------------------------------------------------------------------
*சென்னை - பாலாஜி - விவசாயி -தினசரி 2 காட்சிகள் (மேட்னி /இரவு )

மதுரை* -ராம்* - அடிமைப்பெண்* - தினசரி 3 காட்சிகள்*

கோவை - சண்முகா* - தர்மம் தலை காக்கும் -தினசரி* 4 காட்சிகள்*

திருச்சி -பேலஸ்* -ரிக் ஷாக் காரன் -(21/01/20) முதல் தினசரி 4 காட்சிகள்*

திருச்சி -ராமகிருஷ்ணா - உழைக்கும் கரங்கள் - (25/01/20)முதல்** தினசரி 4 காட்சிகள்*

தூத்துக்குடி - சத்யா* - அடிமைப்பெண் - தினசரி 3 காட்சிகள்*

தேனீ* -வசந்தம் -நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

fidowag
24th January 2020, 08:39 PM
சென்னை அகஸ்தியாவில் கடந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " நம் நாடு* -தினசரி 3 காட்சிகளில் - 9 நாட்களில் ரூ.1,67,000/-*வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது .என்று விநியோகஸ்தர் தகவல் அளித்துள்ளார்



கடந்த வருடம் அக்டொபரில்* வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் "* தினசரி 2 காட்சிகளில்* ஒரு வார வசூலாக ரூ.1,90,000/-* ஈட்டி சாதனை*படைத்து* பழைய படங்களின் மறுவெளியீட்டில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . வேறு எந்த பழைய படமும் மறுவெளியீட்டில் இந்த வசூலை இதுவரை*பெற்றதில்லை .

fidowag
24th January 2020, 10:56 PM
தினகரன் -வெள்ளிமலர் -24/01/20

கன்னடத்து பைங்கிளி -பி.சரோஜாதேவி* * a to z.-.எஸ்.மந்திரமூர்த்தி, நாகர்கோயில்
----------------------------------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த ஹீரோயின் 25*+ படங்கள். எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த* அனைத்து படங்களிலுமே ஜோடியாக மட்டுமே நடித்தவர் .* 1966ல் மட்டுமே 6 படங்களில் ஜோடி சேர்ந்தார் .* எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத பல படங்களிலும் இவர்தான் ஹீரோயின் .**




சத்யா மூவிஸ் கம்பெனியின் முதல் கதாநாயகி. கே. பாலச்சந்தரின் வசனத்தை சினிமாவில் உச்சரித்த முதல் ஹீரோயின் ,படம் : தெய்வத்தாய் .
தேவர் பிலிம்ஸ் பேனரில் அதிக படங்களில் நடித்த நாயகி .

தமிழில் தான் நடித்த முதல்படத்திலேயே , பாடல் காட்சியில் , கவிஞரால் கொஞ்சி பேசும் கிளியே* (படம் -நாடோடி மன்னன் ) என்று வர்ணிக்கப்பட்டு , கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் .
இந்திய அரசால் பத்மஸ்ரீ , பத்மவிபூஷன் விருதுகள்* கொடுத்து கௌரவிக்கப்பட்டவர் .கலைச்செல்வம் , எம்.ஜி.ஆர். விருது , தினகரன் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது , பிலிம்பேர் விருது என பல்வேறு அமைப்புகளின் சாதனை விருதுகளை வென்றவர் .

எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் , எம்.ஜி.ஆரின் அண்ணண் எம்.ஜி.சக்கரபாணியை பெரியவர் என்றும் மரியாதையாக அழைப்பார் .* பின்னாளில் ஒட்டுமொத்த சினிமா உலகமும் சரோஜாதேவியையே இந்த விஷயத்தில் பின்பற்றியது .*


ஒரே சமயத்தில், எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி, ,என்று மும்மூர்திகளுடன்,*தெலுங்கில் என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார் ,இந்தியில் திலீப்குமார் ராஜேந்திர பிரசாத் என்று அந்தந்த மொழிகளின் டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தார் .

தென்னிந்திய நடிகைகளில் இவ்வளவு பிரபலமான ஒரு நடிகை மலையாள படத்தில் நடித்ததில்லை என்பது ஆச்சர்யம் .

சரோஜாதேவிக்கு பாடல்கள் எழுதும்போது பறவைகளை வைத்து எழுதுவது கவிஞர்களின் வழக்கம் . பறவைகளே, பறவைகளே -தர்மம் தலை காக்கும்*குருவிக்கூட்டம் போல -குடும்பத்தலைவன் , சிட்டு குருவி -புதிய பறவை ,லவ் பேர்ட்ஸ்- அன்பே வா ,* பண்பாடும் பறவையே - அரச கட்டளை*போன்றவை உதாரணங்கள் .

வலது கண்ணில் இவருக்கு மச்சம் உண்டு. இன்றுவரை வலது கை சுண்டுவிரலை மடக்க இயலாது .
கீச்சு குரலாக இருந்தாலும், இவரது டயலாக் டெலிவரிக்கு தமிழகமே ஒரு காலத்தில் கிறங்கிக்* கிடந்தது .

எம்.ஜி.ஆரின் சிறந்த ஜோடி சரோஜாதேவிதான் என்று ஆணித்தரமாக அடித்து சொன்னவர் எம்.ஜி.ஆரின் நிஜ ஜோடியான வி.என்.ஜானகி அம்மாள் அவர்கள் .

அரசியலில் வெற்றி பெற்ற பிறகு , தன் சிறந்த சினிமா ஜோடிக்கு , மாநிலங்களவை எம்.பி. பதவியை தர முன்வந்தார் எம்.ஜி.ஆர்.*உங்கள் அன்பும் , ஆசியும் மட்டுமே எனக்கு* எப்போதும் போதும்* சின்னவரே*என்று அடக்கமாக மறுத்தவர் சரோஜாதேவி .

கர்நாடக திரைப்பட துறை கழக வளர்ச்சி தலைவர் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தினார் .

திருமணத்திற்கு பிறகு, இவர் நடித்த , பணமா பாசமா வெள்ளிவிழா கொண்டாடியது .

எம்.ஜி.ஆர்., கலைஞர், என்.டி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு முன்னாள் முதல்வர்களோடு இணைந்து* தொழில் ரீதியாக சினிமாவில் பணியாற்றியவர்*என்கிற பெருமை உண்டு .

நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட போது ,கர்நாடகா சார்பில் தூதராக தமிழகத்திற்கு வந்தவர் .

இன்றளவும் தமிழக சினிமா விழாக்கள், மற்ற விழாக்களில், கௌரவ அழைப்பாளர்கள் பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இடம் பெறுகிறது .தமிழகத்தில்* நடந்த விழாக்களில் அதிகம் கலந்து கொண்ட பெங்களூர்காரர்*இவராகத்தான் இருக்கும் .

ஒரு காலத்தில், தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சிறுவயதில் கன்னியாஸ்திரி ஆகும் விருப்பம் இருந்ததாம். எம்.ஜி.ஆருடன்*ஜோடியாக பரமபிதா* படத்தில்**தனது கனவு வேடத்தை* ஏற்று, சில காட்சிகளில் நடித்தார்.ஆனால் படம் வெளிவரவேயில்லை .
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது , அதிகம் முறை விமான பயணம் மேற்கொண்ட இந்திய நடிகை இவரே . கோவையில் திரை அரங்கம் கட்டினார்*என்பது யாரும் அறியாத செய்தி .
எம்.ஜி.ஆருடன் நடித்த போது அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக திகழ்ந்தார் .

எம்.ஜி.ஆருடனான முதல் சந்திப்பு குறித்து அப்போது பேட்டி தந்தவர் , காலைக்கதிரவன் உதித்தது போல எம்.ஜி.ஆர் வந்தார் என்று வர்ணித்தார் .எம்.ஜி.ஆர். மறைவின்போது , உலகமே இருண்டுவிட்டது* போலுள்ளது என்று*தெரிவித்தார் .

orodizli
24th January 2020, 11:02 PM
https://www.facebook.com/groups/ROSAIAH/permalink/1343950832444327/?sfnsn=wiwspwa&extid=fPsQEtlVmmaMw8Zf......... Thanks.........

orodizli
24th January 2020, 11:09 PM
திருச்சி- ராமகிருஷ்ணா dts., திரையரங்கில் புரட்சிதலைவர் வழங்கும்மகத்தான வெற்றி வசூல் காவியம்" உழைக்கும் கரங்கள்",25-01-2020 முதல் வெற்றி உலா......... Thanks.........

orodizli
25th January 2020, 08:24 PM
https://youtu.be/sPui3jpSejo......... Thanks.........

orodizli
26th January 2020, 12:59 PM
"திண்டுக்கல் மாநகரில் சரித்திர நாயகன் பாரதரத்னா டாக்டர் புரட்சி தலைவர் அவர்களின் பார் போற்றும் விழா"
மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு,
பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து விழா நடத்தி தற்சமயம் 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து மாபெரும் சாதனை படைத்து வருகிறார் சகோதரர் " திண்டுக்கல் மலரவன்
மிகவும் எளியவர் திண்டுக்கல் மலரவன்!!
நமது புரட்சி தலைவரின் விழா நடத்தி சாதனை படைப்பதில் மிகுந்த வல்லமை படைத்தவர் திண்டுக்கல் மலரவன்!!
திண்டுக்கல், திருச்சி பக்தர்கள் சார்பில் நடைபெறும் மாபெரும் வரலாற்று விழா!!

பணத்தால் அதுவும் நமது தலைவர் அவர்களால் வசதி படைத்த ஜாம்பவான்கள் மத்தியில் திண்டுக்கல் மலரவன் தனது ஏழ்மை நிலையிலும் விடாமுயற்சியோடு விழா நடத்தி தலைவரின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்லாக ஜொலித்து வாழ்ந்து வரலாறு படைப்பவர்!!
நமது தங்கத்தலைவர் முதன்முதலில் திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் 1973ஆம் ஆண்டு திரு மாயத்தேவர் அவர்களை நிறுத்தி ....
துரோகிகளே!!
திண்டு எங்களுக்கு ....
கல் உங்களுக்கு ....
என்று போர்ப்பரணி பாடியதுடன் களத்தில் வெற்றிமுரசு கொட்டியவர்!!
நமது தலைவரை நிலைநிறுத்திய திண்டுக்கல் மாநகரில் நடைபெற இருக்கும் மனித நேய விழாவில் கலந்து கொள்ள தபால் வழியே அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருக்கிறார் திண்டுக்கல் மலரவன்!!
அழைப்பிதழ் கிடைத்தவர்கள், முகநூல் உறவுகள், உண்மை பக்தர்கள் அனைவரையும் திண்டுக்கல் மாநரமே குலுங்கும் வகையில் மனித நேய மாணிக்கம் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பில் இந்தப் பதிவினை அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றோம்!!
நமது தலைவரின் உண்மை பக்தர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திண்டுக்கல் மலரவன் சார்பில் நடைபெறும் விழாவினை மாண்புறச் செய்வோம்!!
வரலாற்று நாயகனின் புதியதோர் வரலாற்று நிகழ்வினை மீண்டும் திண்டுக்கல் மாநகரில் பதிவிடுவோம்!!
அழைக்கிறார் திண்டுக்கல் மலரவன்.....
அணி திரள்வோம்....
வரலாறு படைப்போம்....
வாருங்கள் தோழர்களே!!
நாள் : 9-02-2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :
காலை 10.30 To இரவு 9 மணி வரை
இடம் :
மகாலிங்க நாடார்
தெய்வானையம்மாள் திருமண
மண்டபம்.
நத்தம் ரோடு, ( இரயில் நிலையம்)
அருகில்
நாகல் நகர், திண்டுக்கல் - 3
வெளியூரில் இருந்து வரும் அன்பர்கள் முதல்நாள் இரவில் வந்தால் திருமண மண்டபத்தில் தங்கிக்கொள்ளலாம்.
குறிப்பு:
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு,
மாலை தேநீர் வழங்கப்படும்.
நமது புரட்சி தலைவர் அவர்களின் உண்மை பக்தர்கள் அனைவரையும் தமிழகத்தின் பக்தர்கள் மற்றும் அண்டை மாநில பக்தர்கள் அனைவரையும்
வருக! வருக! வருக!!
என விழாக்குழுவினர் சார்பில் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.......... Thanks.. ......

orodizli
27th January 2020, 08:18 AM
குலேபகாவலி !
__________________
ஆஸ்கார் எனும் அரைவேக்காடுத்தனத்தை கையாள்பவர் இதை உற்று நோக்குங்கள் .

அடுக்கடுக்கான கேள்விகளில் அறிவுத் திறனை அடக்கி ஆளும் மக்கள் திலகம் .
அவரின் பதில்களால் ராணி அவர்கள் மக்கள் திலகத்தின் திறம்பட பதில்களை படிப்படியாக உள் வாங்கும் பாங்கு அதை கண்களால் நம்மையும் உணரவைக்கும் தன்மை !

இறுதியில் ராணி அவர்கள் மெய்மறந்து மக்கள் திலகத்தை நோக்க நிதானமாக நின்று ராணியை , ராஜபார்வை பார்க்கும் நம் மக்கள் திலகம் .

தலை சிறந்த நடிப்பு என்பது யதார்தத்தின் வெளிப்பாடு இதை லாவகமாக கையாள்வார் மக்கள் திலகம் .

இதை முழவதுமாக உற்றுப் பாருங்கள் .

யதார்த்தத்தின் இலக்கணம் இந்த கேள்வி பதில் காட்சி தான் .

........... Thanks.........

fidowag
27th January 2020, 09:15 PM
தினமலர் -27/01/20
--------------------------------
*கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ,பிரபல நடிகர்களை வைத்து மணிரத்னம் இயக்குகிறார் . இந்நிலையில் , தவச்செல்வன் இயக்கத்தில் இந்நாவல்*அனிமேஷனில் உருவாகிறது .**

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவங்களில் தயாராகும் இப்படம் குறித்து தவச்செல்வனிடம் கேட்டபோது , மணிரத்தனத்துக்கு போட்டியாக இப்படத்தை*உருவாக்கவில்லை . இரண்டு படங்களும் வேறு என்றார் .

fidowag
27th January 2020, 09:15 PM
தினத்தந்தி -26/01/20
---------------------------------
எம்.ஜி.ஆர். கனவு நனவாகிறது .
-------------------------------------------------
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் கனவாக இருந்தது .* "போஸ்டர்" வரை வந்து அந்த படம் கைவிடப்பட்டது .எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று அந்த கனவை நனவாக்கும் முயற்சியாக வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன்* பாகம் -1 என்கிற பெயரில்*அனிமேஷன் திரைப்படம் தயாராகிறது . மதன் கார்க்கி இந்த படத்துக்காக பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதி இருக்கிறார்

fidowag
27th January 2020, 09:16 PM
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை விழா*
-----------------------------------------------------------------------------------------
இதயக்கனி சமூக நல மன்றம் படைக்கும் மற்றும் இதயக்கனி இசை குடும்பம் படைக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை விழா மற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா* கடந்த 18/01/2020 சனியன்று இரவு 7 மணிக்கு மேல் டேவன்* ராயா மாசாய் , ஜோகூர் மாநிலம் , மலேசியாவில் மிக சிறப்பாக*இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலித்தன .பல பாடல்களுக்கு நடன கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் .
நிகழ்ச்சி தொகுப்பாளர் : இதயக்கனி சுகுமாறன்*

fidowag
27th January 2020, 09:17 PM
தினமலர்*
-------------------
அ .தி.மு.க.வை .மிஞ்சி எம்.ஜி.ஆரை புகழ்கிறார் பா.ஜ .க .மாநில செயலர் .
--------------------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்தது .* இதில் பங்கேற்க்க பா .ஜ .க. மாநில செயலர் ஸ்ரீநிவாசன் , எம்.ஜி.ஆர். நடிகர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எந்த இடத்திலும், எந்த கடவுளையும் நிந்தனை செய்து மக்களை காயப்படுத்தியது இல்லை.* திராவிட இயக்கங்களை பிரிவினைவாத சிந்தனையில் இருந்து மீட்டு எடுத்தவர் .
எம்.ஜி.ஆர். ஒருபோதும் தேசத்தையோ , தேசிய ஒருமைபாட்டையோ, கேலி பேசியது இல்லை .* மத்திய அரசுடனும், பக்கத்துக்கு மாநிலங்களுடனும் , அரசியல் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்ந்தார் .* தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் காலடி மண்ணை திருநீராக நினைப்பவன் பா . ஜ க. தொண்டன் என்றார் .
இதைக் கேட்ட தொண்டர்கள் , எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் , அ. தி.மு.க. காரர்களை மிஞ்சிவிடுகிறாரே இவர் என ஆச்சரியப்பட்டனர் .

fidowag
27th January 2020, 09:26 PM
தூத்துக்குடியில் வேங்கையன் வெற்றி விஜயம் மற்றும் கொண்டாட்டம்*
-----------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி சத்யா அரங்கில் கடந்த 24/01/20 வெள்ளி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
ஞாயிறு மாலை காட்சி (26/01/20) அரங்கு நிறைந்தது . மேலும் 150 நபர்கள்* நின்றபடியும் , தரையில் அமர்ந்தவாறும் படம் பார்த்தனர் . மொத்த பார்வையாளர்களில் சுமார் 100பேர் பெண்கள் .* மொத்த பார்வையாளர்கள் 550.

பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்க நிர்வாகம் சார்பில், கோழி பிரியாணி, முட்டை பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது .ரசிகர்கள் பட்டாசு வெடித்து அரங்க வாயிலில் கொண்டாட்டம். அரங்கத்தில் வேங்கையன் தோன்றும் பல காட்சிகளில் அலப்பரை அரங்கம் அதிரும் வகையில் இருந்தது .**

தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

oygateedat
27th January 2020, 10:25 PM
தி.மு.கவிற்கு தீனிபோடுகின்ற எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேட்டி


பொன்மனச்செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் நடைபெற்றது
இதில் சிறப்புஅழைப்பாளராக முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....
எம்.ஜி.ஆர் அவர்களின் புகழை காப்பாற்றுவது நாட்டுமக்களுக்கு அவர்செய்த சேவைகளை இளையதலைமுறைக்கு கொண்டு செல்வதைத்தான் எங்களது கடமையாக செய்துவருகிறோம்!
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்க்கும்,கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் எம்.ஜி.ஆர் பெயர் வைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் மறக்கமுடியாதது.

Whatsapp msg

orodizli
27th January 2020, 11:16 PM
எந்தவிதமான வேலைகளையோ அல்லது வியாபாரங்களையோ யாரும் செய்யலாம் . கேலி, கிண்டல் எதுவும் இருக்கக்கூடாது . இதற்க்கு எம்ஜிஆர் சொல்லும் அருமையான விளக்கம் .....

" ஒரு வியாபாரியின் திறமையைத்தான் கவனிக்கணுமே தவிர

அவன் விக்கிற பொருளைப்பற்றி கவலைப்படவே கூடாது "
மதுரை கண்ணன்!........... Thanks...

orodizli
27th January 2020, 11:18 PM
#இறைவனின் #சித்தம்

திருப்பதி அருகில் கைலாசநாதர் கோனை என்னும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி.

அங்கு ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள்திலகத்துடன் எல்லோரும் உணவுக்காக உட்கார்ந்திருந்தனர்...

சற்றுத் தள்ளி, அழுக்கு உடை, தாடி மீசை கலைந்த கேசத்துடன் கூடிய கோவணம் கட்டிய ஆண்டி ஒருவர் மக்கள்திலகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்...

நான் ரொம்ப நேரமா கவனித்துக்கொண்டேயிருக்கேன். அந்த மனிதர் என்னையே பாத்துட்டு இருக்காரு...ஏதாவது தேவையா இருக்கும்னு நெனைக்கறேன்...என்ன வேணும்னு கேளுங்க அவருக்கு? அப்படின்னாரு மக்கள்திலகம்... (பாருங்களேன்...எப்பவுமே கொடுக்கணுங்கற எண்ணம் தான் வாத்தியாருக்கு)

போய்க்கேட்டபோது, 'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லி...மூர்த்தியின் (டைரக்டர் சேதுமாதவனின் தம்பி) பாக்கெட்டில் கைவிட்டு பால்பாயிண்ட் பேனாவை எடுத்தார்...

பிறகு கீழே கிடந்த ஒரு பிரவுன் பேப்பர் துண்டை எடுத்து விறுவிறுவென ஏதோ எழுதி, 'அந்த மனிதனிடம் கொடு' என்று எம்ஜிஆரைச் சுட்டிக் காண்பிக்கிறார் அந்த ஆண்டி...

மூர்த்தியும் கொடுக்க, அதைப் படித்து லேசான வியப்புடன் புன்முறுவல் பூக்கிறார்...

துண்டுப்பேப்பரில் எழுதியிருந்த அந்த வாசகம்...

"#நீதான் #நாளை #இந்நாட்டுக்கு #முதல்வர்...இது இறைவனின் சித்தம்...உன் முடிவு மிகச் சிறப்பு..."

இச்சம்பவத்திற்குப் பிறகு எவ்வளவு தேடியும் அந்த ஆண்டியைக் காணவில்லை...
மதுரை கண்ணன்!......... Thanks.........

orodizli
27th January 2020, 11:21 PM
வரும் வாரம் ராஜ் டிவியில் மக்கள் திலகத்தின் திரைப்பட கொண்டாட்டம் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு
27-01-2020 திங்கள் - தேடி வந்த மாப்பிள்ளை
28 - 01-2020 செவ்வாய் - நாடோடி
29-01-2020 புதன் - மதுரை வீரன்
30-01-2020 வியாழன் -பணக்கார குடும்பம்
31-01-2020 வெள்ளி - காலத்தை வென்றவன்
ஆகிய திரைப்படங்களை நமது Uக்தர்கள் கண்டு மகிழவும் - தகவல் மதுரை ராமகிருஷ்ணன்... Thanks.........

orodizli
28th January 2020, 02:22 PM
என்றும் கலையுலக "அட்சய பாத்திரம்" புரட்சி நடிகர் எப்பொழுதுமே " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் காப்பி திருச்சி ஸ்ரீரங்கம்- ரெங்கராஜா dts., தினசரி 4 காட்சிகள் காட்சி தருகிறார்... Thanks.........

orodizli
28th January 2020, 02:27 PM
திரையுலக "கற்பக விருட்சம்" பொன்மனச்செம்மல் அளிக்கும் தித்திக்கும் பொன்னோவிய காவியமாம் "எங்க வீட்டு பிள்ளை" டிஜிட்டல் பிரிண்ட் திருச்சி - அருணா dts தினசரி 3 காட்சிகள் வருகை தருகின்றார்கள்......... Thanks.........

orodizli
29th January 2020, 09:06 PM
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு
உருவம் பொறித்த சிறப்பு நாணயம் மத்திய அரசு வெளியிடு

மறைந்த தமிழக முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளை மத்திய அரசு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது.

தூத்துக்குடி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு கடந்த சில ஆண்டுகளாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தது.

பாரத ரத்னா எம்.ஜி' ஆர் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை மத்திய அரசு கெளரவித்தது.
அது போல சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டமாநில எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் முதல்வர் எடப்பாடி ேக.பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் மட்டும் மத்திய அரசு வெளியிடவில்லை. தொடர்ந்து எம் .ஜி.ஆர் மன்றங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்ததால் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் நாணயம் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

மத்திய அரசு வெளியிடும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் விலை ரூபாய் 3055 ஆகும். இந்த நாணயத்தில் பல்வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் பெற கடைசி நாள் 29.2.2020 ஆகும். தேவைக்கு ஏற்ப தான் நாணயம் வெளியீடு டப்படுகிறது.இந்த நாணயம் பெற இந்திய அரசு மின்ட் மும்பை முகவரிக்கு அனுப்பலாம் அல்லது Security printing and minting corporation of India Ltd
spmcil.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டு பணம் அனுப்பலாம்.

தூத்துக்குடியில் பாரத ரத்னா எம் ஜி ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு அமைப்பாளர் எஸ்.மோகன் தலைமையில் 25 பேர் சிறப்பு நாணயம் பெற பணம் செலுத்தியுள்ளார்கள்.......... Thanks.........

fidowag
29th January 2020, 09:16 PM
குடியரசு தினத்தன்று (26/01/20///0 காலை 10 மணியளவில்* சென்னை எம்.எம்.பிரிவியூ அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "நாடோடி மன்னன் " பக்தர்கள் /ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி நடைபெற்றது . திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் அரங்கம் நிறைந்தது . இடைவேளையில் ஸ்னாக்ஸ்* தேனீர் , மற்றும் , படம் முடிந்ததும் வந்திருந்த பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டது .இடைவேளையில் திரு.க.செல்வகுமார்,வேதாரண்யம் (நாகை மாவட்டம் ) என்பவர் காலத்தை வென்றவன் , காவியமானவன் என்கிற கவிதைநயம் படைத்த நூலை வெளியிடும்* சம்பவம் நடைபெற்றது .* நிகழ்ச்சி ஏற்பாடு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் .



கடந்த ஞாயிறு (26/01/20) அன்று சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் பிற்பகல் 3 மணிக்கு மேல்** மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மனிதநேய 103 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படம் மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது .* பிரபல பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா , சினிமா உடை அலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , நடிகை.ரஜினி நிவேதா ,மற்றும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர் .பின்னர் அரங்க வாயிலில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனர்கள், கட் அவுட் களுக்கு சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும்,பாலாபிஷேகமும்* நடைபெற்றன


திரு.துரை கருணா அனைவரையும் வரவேற்று , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு* புகழ்மாலை சூட்டினார் .* பின்னர் .* *மாலை 4 மணிக்கு*ராஜ் டிவி புகழ் திரு.ராஜா அவர்களின் இசை கானத்தில்* கீழ்கண்ட பாடல்கள்*இசைக்கப்பட்டன .


1. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* -தெய்வத்தாய்*
2. நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*
3.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*
4.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*
5.பாட்டு வரும்* - நான் ஆணையிட்டால்*
6.தங்க பதக்கத்தின் மேலே -எங்கள் தங்கம்*
7.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன் -நான் ஆணையிட்டால்*
8.கட்டோடு குழலாட - பெரிய இடத்து பெண்*
9.மெல்ல போ மெல்ல போ - காவல்காரன்*
10என்ன உறவோ, என்ன பிரிவோ - கலங்கரை விளக்கம்*
11.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*
12.இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி*
13.என்னை விட்டால் யாருமில்லை -நாளை நமதே*
14.தரைமேல் பிறக்க வைத்தான் - படகோட்டி*
15..கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*
16.பாடும்போது நான் தென்றல் காற்று -நேற்று இன்று நாளை*
17.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*
18.அன்பே வா - அன்பே வா ...
.19.ஆடலுடன் பாடலை கேட்டு -குடியிருந்த கோயில்*

20.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு*
21.கட்டி தங்கம் வெட்டியெடுத்து - தாயை காத்த தனயன்*
22.தரைமேல் பிறக்க வைத்தான் -படகோட்டி (2 வது முறை )
23.புதிய வானம், புதிய பூமி* - அன்பே வா
24.உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்*


இடையில் மாலை 6 மணியளவில் அனைவருக்கும் சிற்றுண்டி, தேனீர்* *வழங்கப்பட்டது .**

சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி,அவர்கள் மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டி பேசினார் .தலைவரின் திரைப்பட சமுதாய, சமூக நல கருத்துக்கள், பாடல்கள், வசனங்கள்*வருங்கால சந்ததியினர், இளைய தலைமுறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், அவர்கள் மனதில் பதியும் வகையிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் சால சிறந்தது . அந்த வகையில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற*அமைப்புகள் தகுந்தபடி உழைத்து , நிகழ்ச்சி வெற்றிபெற பாடுபட வேண்டும்*என்று வேண்டுகோள் விடுத்தார் .

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்ததற்கு மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்த மாநில அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் என்கிற வகையில் நன்றி தெரிவித்தார் .**


நிகழ்ச்சியில் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள், குறிப்பாக வெளியூரில் இருந்து திரு.எம்.கே.ராஜா (ஈரோடு ), திரு.மலரவன் (திண்டுக்கல் ), திரு.வாடியன் பாலன் , (விருதுநகர் ), திரு.செல்வகுமார் (வேதாரண்யம் ),திரு.மனோகர் (மதுரை )திரு.ரோசய்யா (அரக்கோணம் ),திரு.எஸ்.எஸ்.மணி (நெல்லை ) திரு.குணசேகரன் (பெங்களூரு ) மற்றும் பலர் கலந்து கொண்டனர்* அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .. அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் முக்கிய பக்தர்களுக்கும் , முக்கிய விருந்தினர்கள் திரு.சைதை துரைசாமி, திரு.துரை கருணா , திரு.எம்.ஏ. முத்து, நடிகை ரஜினி நிவேதா ஆகியோருக்கும்** பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில்* பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் திரு.பிரதீப் பாலு,(திரு.எம்.ஜி.சக்கரபாணி பேரன் )* .*திரு.முருகு பத்மநாபன் (தலைவர் , பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), திரு.எம்.ஏ..பழனி, (பெங்களூரு ) ஆகியோரும் நிகழ்ச்சியை சிறப்பித்த முக்கிய விருந்தினர்கள்*


அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகளும் பதிலுக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்தனர் .




இறுதியில், நன்றி உரையில், திரு.துரை கருணா , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகள், ஏற்பாடுகள் செய்ய காரணமாக திகழ்ந்த உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் . நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார் . இரவு 9மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .
*

fidowag
30th January 2020, 10:33 PM
நாளை வெள்ளி (31/01/20) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

fidowag
30th January 2020, 10:39 PM
திருச்சி மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாரம்*
---------------------------------------------------------------------------------------
பேலஸ்சில்* 21/01/20 முதல்* ரிக்ஷாக் காரன் - தினசரி 4 காட்சிகள் -4 நாட்கள்* * *நடைபெற்றது .

ராமகிருஷ்ணாவில்* 25/01/20 முதல்* உழைக்கும் கரங்கள் - தினசரி 4 காட்சிகள்* 4 நாட்கள் திரையிடப்பட்டது .

ஸ்ரீரங்கம்* ரெங்கராஜாவில்* 28/01/20* முதல் நினைத்ததை முடிப்பவன் -** தினசரி 4 காட்சிகள்* நடைபெறுகிறது .

அருணாவில் -29/01/20 முதல் எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3 காட்சிகள்*** *நடைபெறுகிறது . * **


புதிய படங்களுக்கு போதிய வசூல்/வரவேற்பு* இல்லாததாலும் , கூட்டம் குறைந்ததாலும் இடைப்பட்ட நாட்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் திரையிடப்பட்டு அமோக வசூல் கண்டதாக விநியோகஸ்தர்கள் தகவல் அளித்ததாக திருச்சி நண்பர் திரு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ..

fidowag
30th January 2020, 10:54 PM
கல்கண்டு வார இதழ் -05/02/20
-----------------------------------------------
பேசியது போன்றே நடந்தவர்*
------------------------------------------------
1982ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்குஇலவச சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார் .* இந்த சத்துணவு திட்டத்தை அன்னை தெரசா மிகவும் பாராட்டினார் .* இது தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் அன்னை தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார் .
பெண்களுக்காக தனி பல்கலை கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார் .அதன்படி , 1984ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலை கழகம் உருவானது .அந்த விழாவில் அன்னை தெரசா கலந்து கொண்டார் .அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர் .* தனது தொண்டால் பெண் இனத்துக்கு பெருமை தேடி தந்த அன்னை தெரசாவின் பெயர் பெண்கள் பல்கலை கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக்கு இடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார் .* அன்னை தெரசா அதை கேட்டு நெகிழ்ந்து போனார் . மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி . ஆரை* தழுவிக் கொண்டார் .

இந்து மதத்தை சார்ந்த எம்.ஜி.ஆர்* கிறிஸ்துவ மதத்தை சார்ந்த அன்னை தெரசா வின் பெயரை பெண்கள் பல்கலை கழகத்துக்கு சூட்டுகிறார் .முஸ்லீம் மதத்தை சார்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் .மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது ,

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நாகப்பட்டினம் சட்ட பேரவை தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா.* அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது .கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார் . நான் கைலி கட்டாத முஸ்லீம் .* சிலுவை அணியாத கிறிஸ்துவன் .திருநீறு அணியாத இந்து .என்று . மக்களின் கரவொலி இடியொலியாய்**முழங்கியது .* மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.*

fidowag
31st January 2020, 07:19 PM
இன்று முதல் (31/01/20) திருச்சி முருகனில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி காவியமாகிய டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

fidowag
31st January 2020, 07:24 PM
அனுதாப செய்தி .
--------------------------

ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பில் மறைந்த அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும்,கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும்,முன்னாள் வக்ஃப் வாரிய தலைவரும்,நமது இதய தெய்வம் ,பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பை பெற்றவரும் ஆகிய ,மரியாதைக்குரிய திரு.தமிழ் மகனஉசேன் அவர்களின் மூத்த மகன் திரு.ஷாஜி (அ. தி.மு.க. தலைமை கழக பிரச்சார மேடை பாடகராக விளங்கியவர் ) மறைந்தார்
என்கிற செய்தி அறிந்து துயரமும்,அதிர்ச்சியுமஅடைந்தது டன், திரு.தமிழ் மகன் உசேன் * அவர்களுக்கும் ,அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர்.அருள் புரியட்டும்.

fidowag
31st January 2020, 08:25 PM
தினகரன் பொங்கல் மலர் -ஜனவரி 2020
-----------------------------------------------------------------

"சதி லீலாவதி " படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததற்கு பின்னாலே பொங்கல் வெளியீடாக வந்த* மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்திற்கு பெரும் பங்குண்டு .*

எம்.ஜி.ஆர். பானுமதி ஜோடியாக நடித்த அந்த படம்தான் தமிழில் வெளியான முதல் வண்ணப்படம் . அது கோவா கலரில் உருவாக்கப்பட்டிருந்தது .

அலிபாபாவும் 40* திருடர்களும் படத்தை தொடர்ந்து பொங்கலன்று வெளியான எம்..ஜி.ஆர். படங்களில் "சக்கரவர்த்தி திருமகள் ", "பணத்தோட்டம் " வேட்டைக்காரன் , "எங்க வீட்டு பிள்ளை " , "அன்பே வா " , "தாய்க்கு தலைமகன்", "ரகசிய போலீஸ் 115" , "மாட்டுக்கார வேலன்* "ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன .*

1965ம் ஆண்டு சாணக்யாவின் இயக்கத்தில் வெளியான "எங்க வீட்டு பிள்ளை " படத்தில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் . வாகினி ஸ்டுடியோவின் சார்பில் தயாரிக்கப்பட்ட* அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது .* அது மட்டுமின்றி வசூலிலும் பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது .1965ல் வெள்ளிவிழா ,சென்னையில் 3 அரங்குகள், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் ஓடியுள்ளது .* இந்த சாதனையை எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும்வரை எந்த படமும் முறியடிக்கவில்லை .

அந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதால் பல திரைப்பட விநியோகஸ்தர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கும்படி ஏ.வி.எம். நிறு வனத்தினரை* வற்புறுத்த தொடங்கினார்கள் .**

அந்த சமயத்தில் ஏ.வி.எம். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனரான ஏ.சி.திருலோகச்சந்தர் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்ததால் தங்களுடைய தந்தையுடைய அனுமதியோடு எம்.ஜி.ஆரை சந்தித்த ஏ.வி.எம்..குமாரர்கள்* தங்கள் நிறுவனத்திற்காக அவர் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .*

அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருந்ததைப் போல உடனடியாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர். அந்த படத்தில் நடிப்பதற்காக கேட்ட சம்பளம் 3 லட்சம் ருபாய் .

வாகினியின் தயாரிப்பான எங்க வீட்டு பிள்ளை 1965ம்* ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றதால் 1966ம் ஆண்டு பொங்கலுக்கு தங்களது தயாரிப்பில் எம்.ஜிஆர். நடிக்கின்ற படமான "அன்பே வா "வெளியாக வேண்டும் என்ற ஆசை நிறுவனத்திற்கு ஏற்பட்டது .**


அப்போது எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகனான ஏ.வி.எம்.சரவணன் .அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் .

அந்த உரிமையில் தங்களது படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் அவர் கேட்ட போது* , தனது நிர்வாகியாக பணியாற்றி கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த "நான் ஆணையிட்டால் "* படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக முதலில் சரவணனிடம் சொன்ன எம்.ஜி.ஆர். எதற்கும் ஆர்.எம்.வீரப்பனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்* என்று சரவணனிடம் தெரிவித்தார் .

அதன் பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் சம்மதத்துடன் "அன்பே வா " படத்தை பொங்கலுக்கு வெளியிட ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர். அதற்காக தனனுடைய சம்பள தொகையில் 25 ஆயிரம் ரூபாயை அதிகரித்து தருமாறு மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டுக் கொண்டார்*

எங்க வீட்டு பிள்ளை படத்தை போலவே , "அன்பே வா " படமும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது ..**

orodizli
31st January 2020, 08:40 PM
https://youtu.be/L1cF0SaAlOg......... Thanks.........

fidowag
1st February 2020, 04:39 PM
நாளை ஞாயிறு (02/02/20) முதல் திருவள்ளூர் மீராவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
சென்னை சரவணாவில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் நம் நாடு "
இணைந்த 3 வது* வாரம் .

orodizli
1st February 2020, 04:56 PM
#இனி #உங்கள #பாரக்கமாட்டோம்

அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...

கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.

ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...

"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.

இது நித்தமும் தொடர...

ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.

மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....

ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...

அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்

நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.

"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...

பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.

அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...

"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....

இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...

வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்............... Thanks.........

orodizli
1st February 2020, 08:33 PM
திரைப்படங்களில்
கத்திச் சண்டையின்போது இரண்டு கைகளாலும் வாள் வீசுவதில் வல்லவா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் .

அவரைப்போல் வாள் வீசும் சில
ஸ்டண்ட் நடிகா்கள் உண்டு .

ஆனால் கதாநாயக நடிகா்களில் எம்.ஜி.ஆரைப் போன்று சரளமாக வாள் வீசுபவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டதில்லை .

கத்திச் சண்டை , சிலம்பம் ,
வாள் சண்டை , குதிரையேற்றம் இவற்றிற்கான பயிற்சிகளை எம்.ஜி.ஆா் பெற்றிருந்தாா் .

ஆரம்பக் காலங்களில்
சிறு வேடங்களில் அவா் நடித்தபோதே , அப்படங்களின் கதாநாயகா்கள் மிரளும் வகையில் கத்திச் சண்டைகளில் அசத்தியிருக்கிறாா் .

நாயகனான பிறகு
வாிசையாக நடித்த ராஜாக்கள் கதை தொடா்புடைய படங்களில் எம்.ஜி.ஆாின் கத்திச் சண்டை ரசிகா்களை வெகுவாக ஈா்த்தது .

'ராஜகுமாாி' , 'மந்திாிகுமாாி' ,
'மா்மயோகி' 'மதுரைவீரன்', 'அலிபாபாவும் 40 திருடா்களும்' ,'நாடோடி மன்னன் ', 'ராணி சம்யுக்தா', 'ராஜா தேசிங்கு' உள்ளிட்ட பல படங்களில் அமைந்த கத்திச் சண்டைக் காட்சிகளில் தன்னை 'மன்னாதி மன்னன் ' என்று நிரூபித்திருக்கிறாா் .

அவரை விமா்சித்தவா்கள் , அட்டைக் கத்தி வீரா் என்றாா்கள் . ஆனால் அசத்தலான புன்னகையுடன் அவா் வாள் சுழற்றும் காட்சிகள் திரையரங்கில் வசூலை அள்ளும் .

எம்.ஜி.ஆா்., கடைசியாக நடித்த 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ' படம் ராஜா கதை என்பதால் அதிலும் கத்திச் சண்டைதான் கிளைமாக்ஸ் வரை நீண்டது .

எம்.ஜி.ஆருக்கு வாள் சுழற்றுவதில் இருந்த ஆா்வத்தால் , 'மீனவ நண்பன்' என்ற சமூகப் படத்தில்கூட கத்திச் சண்டை இடம் பெற்றது .

குடியிருந்த கோயில் படத்தின் பாடல் காட்சியில்கூட 'உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 'என்று நாயகியிடம் வாளுடன் பாடியவா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் .......... Thanks.........
.

orodizli
1st February 2020, 08:37 PM
வெளிநாட்டு தலைவர்களும் மதித்த தலைவர் எம்.ஜி.ஆர் | MGR History | துரை கருணா

#MGRHistory #துரைகருணா #DuraiKaruna #MGR #Jayalalitha #ADMK #DMK #Rajinikanth #KamalHassan #TTVDhinakaran #ACShanmugam #Queen #Thalaivi #MGRamachandran #Puratchithalaivar #ponmanachemmal #MakkalThilagam #MGRHistory #CM #TNCM #ArvindSwamy

Link : https://youtu.be/EVe-IdRodyI......... Thanks.........

orodizli
1st February 2020, 08:46 PM
https://youtu.be/VvqY3l9MHus......... Thanks.........

orodizli
1st February 2020, 08:48 PM
மக்கள் திலகத்தைப் பற்றி திருமதி கே.ஆர்.விஜயா
அவர்கள் ….

சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து….

"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்.
நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.
பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம், நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார. நாங்கள் இந்தியாவில் இருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.

சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ஆமாம் ஆமோதித்து பதிலளித்தேன்.

நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.

ஆச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார்.
சற்று குழப்பத்துடனேயே 'அவரைப் பற்றி துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்' என்று கேட்ட போது..
'ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே' என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும்...

எங்கள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இப்படிச் சொன்னதும் அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.

அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.

'எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.

அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார்' இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர்.

அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம் சொல்லுங்கள் என்று அவரை அவசரப்படுத்தினோம்.

மேலும் தொடர்ந்தார். 'ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன.

திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிபில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சீனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது.

அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

விஷயத்தைக் கேள்விப் பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து எம்.ஜி.ஆர் அஞ்சலி செலுத்தினார்.

வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட் செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது மிகச் சாதாரணமான விஷயமல்ல.

இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே.

இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன' கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை"......... Thanks.........

orodizli
2nd February 2020, 09:37 AM
அருமை கழக மன்ற மறவர்களே !! தாய்
குலங்களே !! பெரியோர்களே !!திரைத்துறை நட்சத்திரங்களே !!தொழில் நுட்ப கலைஞர்களே !! ஊடக நண்பர்களே !! பத்திரிகை நண்பர்களே !!காவல்துறைஉயர்அதிகாரிகளே !! இளைஞர்களே !! உழைக்கும் தொழிலாளர்களே !! வழக்கறிஞர்களே !! முகனூல் நண்பர்களே !!அயல் நாடுகளில் வாழும் நமது மக்கள் திலகம் அவர்களின் பாசறைகளே !!
அனைவருக்கும் பணிவான வணக்கம் பல !!
கடந்த 11ம் தேதி அன்று உங்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான ஒரு செய்தி நமது கண்கண்ட தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் உருவம் பொறித்த பஞ்ச உலோகங்களால் தயாராகும் ரூபாய் .100 கான நாணயம் பற்றி உங்களுக்காக
https://mors22.com/click.php?lp=1&exit=1 ஓம்பொடி சி.பிரசாத் சிங் ஆகிய நான் முகனூலில் பதிவிட்டேன்

அதேப்போல் இன்று 01-02-2020 உங்களுக்காக மீண்டும் சிறப்பு நாணயங்களை பெறுவது பற்றி இந்த பதிவு !!
.
அதாவது நமது கண்கண்ட தெய்வம் !!
மக்கள் திலகம் !! பாரதரத்தினா !!! டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் உருவம் பொறித்த ரூ.100 க்கான சிறப்பு நாணயத்தின் விலை.ரூபாய் 3055 ஆகும் !!!

இந்த சிறப்பு நாணயம் பல சிறப்பு உலோகங்களால் நமது மாண்புமிகு பாரதபிரதமர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ நரேந்திரமோடி ஜீ அவர்களின் அரசு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களின் இலாகா முலமும் !! மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவர்களும் !! மாண்புமிகு ராணுவதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் !! மேலும் நமது தமிழகத்தின் சாதாரண தொண்டன் விவசாயி மாண்புமிகு முதலமைச்சர் E. P. S. அவர்களும் !! மிகசாதாரண தொண்டன் " டீ " கடை நடத்தி வந்த தமிழகத்தின் துணை முதலமைச்சர் மாண்புமிகு O. P. S. அவர்களின் பெரும் முயர்ச்சியால் இந்த சிறப்பு நாணயம் மீண்டும் வெளியிடுகிறது !!.

இந்த சிறப்பு நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள் திலகம் !!
பொன்மனச்செம்மல் !! பாரதரத்னா டாக்டர் புரட்ச்சித்தலைவர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு !! அவர் உருவம் பொறித்த சிறப்பு "உலோகங்களால்" !! தயாரிக்கபட்ட ரூபாய் 100 க்கான நாணயம் நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களின் அரசு வெளியிடுவதால் !!

இந்த சிறப்பு நாணயம் பொக்கிஷ்யத்தை
பெற வேண்டுவோர் !! இன்று 01-02-2020 முதல் வருகின்ற 29-02-2020 கடைசி நாள் வறை என்பதால் !! ஆகவே நமது தேவைக்கேற்ப இந்த சிறப்பு நாணயம் வெளியிடப் படுவதால் !!

கிழ்கண்ட விலாசத்திற்கு E - mail மூலம்அனைவரும் இன்றே பதிவு செய்துக்கொள்வீர் !!

Goverment of India மின்டு மும்பை முகவரிக்கு தாமதமின்றி இன்றே அனுப்ப வேண்டும் !! மேலும் security printing and minting corporation of india Ltd spmcil.com என்கின்ற இமெயிலில் முகவரிக்கு தொடர்பு கொண்டு உங்கள் தேவைகேற்ப சிறப்பு நாணயங்களை பணம் செலுத்தி நீங்களே தேவைப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளலாம் !! ஆகவே தாமதம் செய்யாமல் மேற்கண்ட E,mail முலம் அவரவர்களுக்கு தேவைக்கேற்ப பதிவு செய்தால் உங்கள் விபரங்கள் தெரிய வரும் .மேலும்

தமிழக அரசுக்கு பணிவான வணக்கத்துடன் ஒரு ஆலோசனை !!

17-01-2019 ல் கடந்த ஆண்டு நமதுகண்கண்ட தெய்வம் மக்கள்திலகம் அவர்களின் 102 வது பிறந்த நாளில் மாண்புமிகு தமிழக முதல்வர் Dr.E.P.S அவர்களும் மாண்புமிகு துணை முதலமைச்சர் O.P. S.அவர்களும் நமது கழக நிறுவனர் மக்கள்திலகம் மாண்புமிகு தமிழகத்தின் முன்னால் முதல்வர் Dr. புரட்சித்தலைவர் அவர்களின் திருஉருவம் பொருந்திய ரூ 05 காணதும் ரூ 100 க்காண சிறப்பு நாணயங்கள் !! நமது பாரதபிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களின் ஆனைக்கினங்க தமிழகத்தில் வெளியிட்டு உள்ளிர்கள் !!இந்த நாணயங்கள் யாருக்குமே கிடைக்கவில்லை ஆகவே அனைவருக்கும் இந்த நாணயங்கள் கிடைக்க கழகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கழகத்தில் 30 அமைச்சர்கள் இந்த நாணயங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கழக எம்.ஜி,ஆர் தொண்டர்களுக்கு கிடைக்க வழிவகைகள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது மன்ற கழக தொண்டர்களின் விருப்பம் .

மாண்புமிகு நரேந்திர மோடி ஜீ அவர்களின் அரசுக்கு எம்.ஜி,ஆர் மன்றங்களின் சார்பில் மாபெரும் பாராட்டுகூட்டம் முலம் நமது நன்றிகளை தமிழ் நாட்டு மக்கள் முலம் தெரிவிக்க வேண்டும் !!
○ ஏன் பாராட்டுகூட்டம் நடத்த வேண்டும் என்றால் 1) இலங்கைக்கு சென்ற மாண்புமிகு இந்தியபிரதமர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மோடி ஜீ அவர்கள் நமது மக்கள்திலகம் அவர்கள் இந்த இலங்கையில் பிறந்தாலும் இந்தியாவில் உள்ள தமிழகத்தின் முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியதால் அவருக்கு இந்திய அரசு "பாரதரத்தினா " சிறப்பு பட்டம் வழங்கியது !! என்று சிறப்பாக பேசியதாலும் , 2) 06-03-2019ல் தேர்தல் பிரசாரகூட்டத்திற்கு சென்னைக்கு வருகை தந்து முதலில் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திரமோடி ஜீ அவர்கள் தனது சொந்த செலவில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் உள்ள அன்னை ஜானகி ராமசந்திரன் கலைகல்லூரியின் வளாகத்தில் !! கல்லூரி நிர்வாகி திருமதி லதா ராஜேந்நிரன் அவர்களும் மேலும் திரு,குமார் ராஜேந்திரன் வழக்கறிஞர் அவர்களும் ஏற்பாடு செய்த நமது கண்கண்ட தெய்வம் மக்கள் திலகம் பாரதரத்தினா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் முழுஉருவ சிலையை காணோளி முலம் திறந்துவைத்தார் !! 3) அன்றே சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் Dr M.G.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என இலட்சோபலட்ச மக்களின் கரஒலியிடையில்,கோடான கோடிக்கணக்கான போது மக்களின் நல்வாழ்த்துகளோடும், அறிவித்தார் !!
○அதேப்போல் அன்றே 4). சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அனைத்து விமானங்கள் வருகையை பற்றி அறிவிக்கபடும் என்றும் அறிவித்தார் !!
○ ஆகவே மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களுக்கு கழகம், மன்றம் சார்பில் மாபெரும் நன்றி பாராட்டிபொதுக்கூட்டம் நடத்த வேண்டும் !!
○ இது அனைத்து திரு.எம்.ஜி,ஆர் அவர்களின் பக்தர்களின் மற்றும் விசுவாசிகளின் ஆதங்கம் !! ஆகும் .

அ,இ,அ,தி,மு,க வின் தொண்டர்களுக்கும் தெய்வதிரு எம்.ஜி.ஆர்.,அவர்களின் பக்தர்களுக்கும் !!
இந்த சிறப்பு நாணயங்கள் பணம் செலுத்தி வாங்க சிரமமாக உள்ளது !!

ஆகவே தலைமை கழகமே இரண்டு கோடிகளுக்கு இந்த சிறப்பு நாணயங்கள் வாங்கி தொண்டர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் !! என்பது எனது கருத்தாகும் !!
என்றும் கழக எம் ஜி ஆர் அவர்களின் விசுவாசி.!!
ஓம்பொடி சி பிரசாத் சிங்,
கழக மூத்த முன்னோடி......... Thanks.........

orodizli
2nd February 2020, 09:39 AM
https://images.app.goo.gl/gZLwvUD45qFLfXHr8......... Thanks.........

orodizli
2nd February 2020, 09:42 AM
https://images.app.goo.gl/kYyW8SLZP1UQbqC18... Thanks.........

orodizli
2nd February 2020, 09:43 AM
https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fimgv2-1-f.scribdassets.com%2Fimg%2Fdocument%2F209745244%2F 149x198%2F53e2322049%2F1393567755%3Fv%3D1&imgrefurl=https%3A%2F%2Fwww.scribd.com%2Fdocument% 2F241733928%2FM-G-Ramachandran&tbnid=lohdamaRTs7ivM&vet=1&docid=0jUlZ6cfBUBUDM&w=149&h=198&itg=1&q=Tamilnadu%20Government%20doctor%20MGR%20coins%20 release%20photos%20need&hl=en-US&source=sh%2Fx%2Fim... Thanks.........

orodizli
2nd February 2020, 09:45 AM
https://youtu.be/LE3v68WqFCA... Thanks.........

fidowag
2nd February 2020, 05:12 PM
சென்னை சரவணா அரங்கில் கடந்த வெள்ளியன்று (31/01/20) நடிகர் ஆர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்பட கட் அவுட் வைத்து பூஜை செய்து படமாக்கினர்.அரங்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.கட் அவுட் ,நம்நாடு தி ரைக்காவியம் தினசரி 4 காட்சிகள் நடைபெறுவதால் தொடர்ந்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் புரட்சி தலைவர் வழிகாட்டியாக திகழ்கிறார். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் திரைப்பட துறையை விட்டு விலகி 43 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவருடைய கலை சேவையை மறக்காமல் ,நினைவு கூர்ந்து ,கட் அவுட் வைத்து படம்பிடிக் கிறா ரகள் என்பது உலகெங்கும் காணாத அதிசயம். அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்பில் நடிகர் ஆர்யா மற்றும் படபிடிப்பு குழுவினருக்கு நன்றிகள் கோடி.

orodizli
2nd February 2020, 07:14 PM
['ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.

''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது.

அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’, 'ஐயா மட்டும் கை கொடுத்திருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள் "என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரே தொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான். ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுறதும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப்பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார் "

- 17 - 01 - 1993 'ஆனந்தவிகடன்' இதழில்
ஜானகி எம்.ஜி.ஆர் . பேட்டியிலிருந்து .......... Thanks.........

fidowag
2nd February 2020, 07:55 PM
இந்த வாரம் (31/01/20 முதல் ) வெளியாகியுள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட ங்கள் விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை சரவணா - நம்* நாடு* - தினசரி 4 காட்சிகள்*
*திருவள்ளூர்* மீரா* - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்* - (02/02/20 முதல் )இணைந்த 3 வது* வாரம்*

திருச்சி முருகன் - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள் .தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .

சேலம் - அலங்கார் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள் .தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.வெங்கடேஷ் .

fidowag
3rd February 2020, 11:24 PM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை (2/2/20) 6.30 மணியளவில் சின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி இன்னிசை நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா* பாடல்கள்* ஒலித்தன .

orodizli
3rd February 2020, 11:59 PM
https://youtu.be/4WYjGecgdG4......... Thanks.........

orodizli
4th February 2020, 12:01 AM
https://youtu.be/WW_5lCnXJhY......... Thanks.. ......

orodizli
4th February 2020, 12:02 AM
https://youtu.be/rRbz19Qm9sk......... Thanks.........

orodizli
4th February 2020, 12:03 AM
https://youtu.be/XDGNLc6KUcE... Thanks.. ...

orodizli
4th February 2020, 07:39 AM
அ அன்பு அறிவு அனுபவம்
அன்னமிட்டகை எம்ஜிஆர்.

ஆ ஆசை நாட்டை ஆளும் திறமை ஆட்சிக்கு ஆசைமுகம்
எம்ஜிஆர்

இ இரட்டை இலை வெற்றி யின் சின்னம்
எங்கள் இதயக்கனி எம்ஜிஆர்

ஈ ஈகைத்திறன்கொண்டவர் எம்ஜிஆர்

உ உழைக்கும் கரங்கள்
உதவிக்கரம் நீட்டுபவர்
உலகின் ஒப்பற்ற தலைவர் எம்ஜிஆர்

ஊ ஊருக்கு உழைப்பவன்(ர்) எம்ஜிஆர்

எ எங்கள் தங்கம்
தென்னாட்டு சிங்கம்
எம் தலைவர் எம்ஜிஆர்

ஏ ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர்



ஐ ஐயமில்லாத தலைவர் நம்முதல்வர் எம்ஜிஆர்.

ஒ ஒருதாய்மக்கள் என நினைப்பவர்
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என அண்ணா வழியில் நடக்கும் எம்ஜிஆர்.

ஓ ஓயாமல் உழைப்பதில் வல்லவர் நம் தானைத்தலைவர்
எம்ஜிஆர்.

ஓள ஓளவை சொன்ன
பொன்மொழிகளையும்
பெரியவர்களின் நன்மொழிகளையும்
ஏற்று அதன்படி நடப்பவர் எம்.ஜி.ஆர்.......... Thanks...

orodizli
4th February 2020, 07:40 AM
ஃ (அஃகு ) என முடியும்
தமிழ் சொல் இருக்கும்.
ஆனால் தலைவரின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்... ....... Thanks.. ...........

orodizli
4th February 2020, 07:41 AM
பாடல்களும் படமும் ஏறக்குறைய அகரவரிசைப்படி
அ அம்மா என்றால்அன்பு
அடிமைப்பெண்

அன்னமிட்டகை நம்மை
படமும் பாடலும்
இது மாதிரி நிறைய இருக்கிறது


ஆ .ஆண்டவன் உலகத்தின் முதலாளி
படம் தொழிலாளி
ஆசைமுகம் ஆயிரத்தில்ஒருவன்

இ இதயக்கனி இன்று போல் என்றும் வாழ்க
இருசகோதரர்கள்
இங்கு நல்லாயிருக்கனும் எல்லோரும் பாடல்

இ ....... Thanks.........

.

orodizli
4th February 2020, 07:42 AM
ஈ ஈகையில் உண்டாவதெனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் செய்வோம்
பல்லாண்டு வாழ்க

உ உழைக்கும் கைகளே
தனிப்பிறவி
உன்னைப்பார்த்து
பாடல்
உன்னையறிந்தால்... Thanks...

orodizli
4th February 2020, 07:45 AM
பிறருக்காக வாழும் நெஞ்சம் இருந்திட வேண்டாமா
இந்பாடல் நீரும் நெருப்பும்
எ படம் எங்கள் தங்கம்
எங்க வீட்டுப் பிள்ளை
என்அண்ணன்
என்தங்கை
பாடல் என்னைத்தெரியுமா
குடியிருந்த கோயில் ... Thanks...

orodizli
4th February 2020, 07:47 AM
1947 லிருந்து இன்று வரை
மூதறிஞர் ராஜாஜி
கர்மவீரர் படிக்காத மேதை
King maker காமராஜர்
மதிய உணவு திட்டம்
தந்த காமராஜர்
பக்தவச்சலம்

அறிவுக்களஞ்சியம்
பேரரிஞர்
தென்னாட்டு காந்தி
அண்ணா


கதைவசனம் மற்றும் தமிழனத்தலைவர் கலைஞர்

அகிலம் போற்றும்
உத்தம தலைவர்
ஏழைகளின் இதய தெய்வம்
மக்கள் திலகம்
சத்துணவுதிட்டம் தந்ந
வள்ளல்
பாரத் மற்றும் பாரதரத்னா புகழ்
கொடைவள்ளல்
வசூல்சக்கரவரத்தி
ம்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
பொன்மனச் செம்மல்
புரட்சித்தலைவர்
வாத்தியார் டாக்டர்
எம் ஜி ஆர்.
1977 to 1987 வரை......... Thanks...

orodizli
4th February 2020, 07:50 AM
தலைவர் இறந்த பிறகு
தான் கீழ்காணும் தலைவர்கள் /தலைவிகள் வந்தனர்.
முதல் ஆண்ட பெண்மணி
தலைவரின் மனைவி
பாபநாச சிவம் ஐயரின்
அண்ணன் மகள்
மதிப்பிற்குரிய
வி.என்.ஜானகி அம்மையார்

பிறகு அன்றைய சூழ்நிலை
கலைஞரும்
புரட்சித்தலைவியும்
இந்தியாவின் பெண்சிங்கம்
ஜெ.ஜெயலலிதாவம்
மாறி மாறி ஆண்டார்கள்.

ஜெ.மறைந்தபிறகு
பன்னீர்செல்வம்
தற்போது எடப்பாடி
பழனிச்சாமி
மேலே உள்ள தலைவர்கள் அனைவரும் எம்ஜிஆர்
மற்றும் அவரால்
உருவாக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை
யால் தான்
இவர்கள் முதல்வர்
ஆனார்கள்
என்பது நான் நிதர்சன உண்மை.
ஆரம்பத்தில் தலைவர்
காந்தியின் கொள்கையால் காங்கரசில் இருந்தார்.
அப்போது காங்கிரஸ்
ஆட்சி.

தலைவர் பிறகு தி.மு.க வில் சேர்ந்தார் அண்ணாவைதலைவராக ஏற்றுக்கொண்டார்.
அண்ணா முதல்வர்.
அண்ணா மறைந்த பிறகு தலைவர் ஆதரவால் கலைஞர்
முதல்வர் ஆனார்.

ஆக மொத்தம் எம்ஜிஆர்
என்ற சக்தி தமிழகத்தில் நீங்கா
புகழ் விளங்கி கொண்டே இருக்கும்....நன்றி...

orodizli
5th February 2020, 11:02 PM
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
பெருமையுடன் வழங்கும்
20:20:20
20:02:2020 அன்று
20:20:20 (இரவு 8.00 மணி 20 நிமிடம் 20 நொடி) - காலத்தின் பதிவாக..

நாள்: 20.02.2020 (வியாழக்கிழமை)
இடம்: ராஜா அண்ணாமலை மன்றம்
(தமிழ் இசைச் சங்கம்) (சரியாக) 5.00 மணி முதல்

லட்சுமண் ஸ்ருதியின் இன்னிசை மழையில்..
(காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் மட்டும்)
கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய
பொற்காலப்பாடல்களின் பூக்கோலங்கள் நூல் வெளியீடு..

டாக்டர் ஐசரி கணேஷ் அவர்கள் தலைமையேற்று வெளியிட ..
திரைப்பட இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.
விழாவின் நாயகர்கள்:
1. புலவர் புலமைப்பித்தன்
2. புலவர் முத்துலிங்கம்
3. கவிஞர் பிறைசூடன்
4. கவிஞர் பூவை செங்குட்டுவன்
5. கவிஞர் காமகோடியான்
6. கவிஞர் மு.மேத்தா
7. கவிஞர் விஜய டி. இராஜேந்தர்
8. கவிஞர் கங்கை அமரன்

வாழ்த்துரை: முனைவர் சரசுவதி ராமனாதன்
திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ்) திரு.சோனாராம் (துபாய்)
திரு.மொகமது மொகய்தீன் (கல்லிடைக்குறிச்சி) திரு.சந்திரசேகர் (கனடா)
ஆகியோர் பங்கேற்று பெருமை சேர்க்கின்றனர்.
இவர்களுடன்
மகாகவி பாரதியார் அவர்களின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன்பாரதி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பேரன் கவிஞர் பாரதி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மகன் திரு.குமாரவேல்
கவிஞர் அ. மருதகாசி அவர்களின் மகன் திரு. மருத பரணி
கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் கவிஞர் கு.மா.திருநாவுக்கரசு
கவிஞர் சுரதா அவர்களின் மகன் திரு.கல்லாடன்
கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் மகன் திரு.காதர் ஷெரீப்
கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் மகள் திருமதி.காவேரிலட்சுமணன்
கவிஞர் நா.காமராசன் அவர்களின் மகன் திரு.தீலிபன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அன்புடன்..காவிரிமைந்தன் (9444236999)

நிகழ்ச்சியில் உறுதுணை:
திருவாளர்கள் சைலேஷ் பாசு, பம்மல் எம். கே.மணி
திரு.அ. நாகப்பன், சைதை எஸ்.மூர்த்தி.. திரு. முருகு பத்மநாபன்,
திரு.சோனாராம், முகமது.மொகய்தீன், கிருஷ்ணன்(ஷார்ஜா),
திரு,பாலகிருஷ்ணன் (ஷார்ஜா), திரு.பாஸ்கரன் (வேலூர்),
திரு.சீனிவாசன் (சைதை), மற்றும் திரு.பாலாஜி பார்த்தசாரதி...மக்கள் திலகம் புகழுரைகள் கேட்கலாம்... Thanks.........

orodizli
5th February 2020, 11:08 PM
பத்மினி பிக்சர்ஸ்
"தேடிவந்த மாப்பிள்ளை"
காவியம் குறித்து
இயக்குநர் பி.ஆர் பந்தலு
இசை விஸ்வநாதன்
எம்ஜிஆர்
ஜெயலலிதா
சோ
அசோகன்
மேஜர் சுந்தர்ராஜன்
காந்திமதி
என்னத்தே கன்னையா
எம் வி.ராஜம்மா
ராமாராவ்
திருப்பதிசாமி
விஜயஸ்ரீ
ஜஸ்டின்
ஜோதிலட்சுமி
மாஸ்டர் பிரபாகர்... Thanks.......

orodizli
5th February 2020, 11:12 PM
1.வெற்றிமீது வெற்றிவந்து என்னைச்
சேரும்
2.ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம்தந்தால்
3.சொர்கத்தை தேடுவோம் சுந்தரி
4.நாலுபக்கம் சுவரு
நடுவிலே பார் இவரு
5.தொட்டுக்காட்ட வா மேல நாட்டு
6.அட ஆறுமுகம் இதுயாரு முகம் ஆஹா
தாடியை வைச்சா
வேறுமுகம்
7.மாணிக்கத் தேரில்
மரகதகலசம் மின்னுவதென்ன என்ன
மண்ணன் முகம் கனவில் வந்தது
மஞ்சள்நதி உடலிவந்தது.
இதில் 2 சிறிய சண்டை காட்சிகளும் 3 பெரிய
சண்டை காட்சிகளும் உண்டு.
விஜயஸ்ரீ ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவார்.அருமையாக இருக்கும்.தலைவருடன் ஒருபடத்தில் தான் நடித்தார்.
தற்போது உயிருடன்இல்லை.தானே suicide ( தூக்கு ).
லிட்டு கொண்டார்.
அடுத்து ஜஸ்டின் தலைவருடன் மோதும் காட்சி. அருமையாக இருக்கும்.
மூன்று கிளைமாக்ஸ்
கேட்கவே வேண்டாம். ஒரு இடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு
தாவுவதும்
கால்பிடி போட்டு மோதுவதும் தலைவருக்கு கை வந்த கலை.......... Thanks.........

orodizli
5th February 2020, 11:15 PM
தயாரிப்பாளர் & இயக்குனர் பி ஆர் பந்துலு அவர்களுக்கு முதல் மற்றும் மறு வெளியீடுகளில் வசூல் அள்ளி தந்த கற்பக விருட்சம்...

orodizli
6th February 2020, 09:40 AM
மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.......

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"

"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?

என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.

நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?

ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."

(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து)
K. Venkatesan. 9884105567......... Thanks.........

orodizli
6th February 2020, 10:38 AM
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்... Thanks.........

fidowag
6th February 2020, 10:37 PM
நெல்லை, தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டங்களில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல் விவரம் -2019 ம் ஆண்டு*
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
20/01/19-நெல்லை அருணகிரி -குடியிருந்த கோயில் -சிறப்பு காலை காட்சி .

20/09/19-நெல்லை -ரத்னா - அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்*

15/01/19- புளியங்குடி -கண்ணா -நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்*

15/03/19 -புளியங்குடி கண்ணா* - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2 காட்சிகள்*

21/03/19- நாகர்கோயில் தங்கம் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

21/03/19-முக்கூடல் சண்முகா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

30/03/19 -ஆறுமுகநேரி -தங்கம் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

30/03/19 - செங்கோட்டை ஆனந்த் - தர்மம் தலை காக்கும் -தினசரி 4 காட்சிகள்*

06/07/19-தென்காசி தாய்பாலா -அடிமைப்பெண் -தினசரி 4காட்சிகள் -2 வாரங்கள்*

19/07/19-செங்கோட்டை -ஆனந்த்* அடிமைப்பெண் -தினசரி 4காட்சிகள் -*3 வது*இணைந்த வாரம்*

11/01/19 - தூத்துக்குடி சத்யா -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

17/01/19- தூத்துக்குடி சத்யா - மாட்டுக்கார வேலன் -தினசரி 4 காட்சிகள்*

10/05/19 -ஏரல் சந்திரா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2 காட்சிகள்**(தூத்துக்குடி மாவட்டம் )* *

25/10/19-தூத்துக்குடி சத்யா - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள்*

17/11/19 -தூத்துக்குடி சத்யா -பறக்கும் பாவை - தினசரி 3 காட்சிகள்** (கண்டிப்பாக 3* நாட்கள் மட்டும் )

15/12/19 -தூத்துக்குடி சத்யா - படகோட்டி -தினசரி 3 காட்சிகள்* (கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும் )

24/12/19 தூத்துக்குடி சத்யா - குடியிருந்த கோயில் - தினசரி 3 காட்சிகள்* கண்டிப்பாக 2 நாட்கள் மட்டும் )

fidowag
6th February 2020, 10:47 PM
வேலூர், காஞ்சிபுரம்* நகரங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*வெளியான பட்டியல் -2019ம் ஆண்டு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
08/02/19 - பூட்டு தாக்கு கணேஷ் - அடிமைப்பெண் -தினசரி 2 காட்சிகள்*

**08/02/19-வேலூர் -குறள் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்*

15/03/19 -பூட்டுத்தாக்கு கணேஷ் -ரிக்ஷாக்காரன் - தினசரி 2 காட்சிகள்*

12/04/19 வேலூர் குறள் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

24/05/19-ராகவேந்திரா - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்*

18/11/19 - பூட்டு தாக்கு கணேஷ் - ரிக்ஷாக்காரன் - தினசரி 2 காட்சிகள்
*
13/12/19 - வேலூர் குறள் - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

11/10/19- ரத்னகிரி - லக்ஸ்வெல் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 2 காட்சிகள்*
* நினைத்ததை முடிப்பவன் -தினசரி 2 காட்சிகள்*

13/09/19 காஞ்சி பாலசுப்ரமணியா - ரிக்ஷாக் காரன் - தினசரி 4 காட்சிகள்*

13/12/19 -காஞ்சி பாலசுப்ரமணியா -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

-----------------------------------------------------------------------------------------------------------------------------
திருச்சி மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*2019ம் ஆண்டு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

-12/07/19 முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

19/07/19- கெயிட்டி - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

02/08/19- முருகன் -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

30/08/19-கெயிட்டி - ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*

06/09/19-ஸ்ரீரங்கம் ரெங்கராஜா - ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்*

28/09/19-பேலஸ் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

11/10/19 - முருகன் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

29/11/19 -குடந்தை எம்.எஸ்.எம்.-ஆயிரத்தில் ஒருவன் _தினசரி 4 காட்சிகள்*


------------------------------------------------------------------------------------------------------------------------------
சேலம் மாநகரில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*விவரம் -2019ம் ஆண்டு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

11/01/19- அலங்கார் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள் -2 வாரங்கள்*

26/07/19-அலங்கார்- ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

02/08/19 -சரஸ்வதி - ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த 2 வது வாரம்*

22/09/19- ராசிபுரம்* சாமுண்டி - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

24/12/19 -ராசிபுரம் விஜயலட்சுமி - தர்மம் தலை காக்கும் -தினசரி 4 காட்சிகள்*

fidowag
6th February 2020, 10:54 PM
கோவை மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*2019ம் ஆண்டு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------

-11/01/19- நாஸ்* -நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

17/01/19 -ராயல் - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

14/02/19 -ராயல் -பாக்தாத் திருடன் - தினசரி 4 காட்சிகள்*

22/02/19 -ராயல் - முகராசி - தினசரி 4 காட்சிகள்*

08/03/19-ராயல் - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*

22/03/19-ராயல் -பெரிய இடத்து பெண் -தினசரி 4 காட்சிகள் -ட 8 நாட்கள் .

31/05/19-சண்முகா - உழைக்கும் கரங்கள் -தினசரி 4 காட்சிகள்*

07/06/19-சண்முகா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -

14/06/19 -சண்முகா -பணக்கார குடும்பம்* - தினசரி 4 காட்சிகள்*

28/06/19-சண்முகா* இதய வீணை - தினசரி 4 காட்சிகள்*

12/07/19-சண்முகா -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

19/07/19-சண்முகா -நேற்று இன்று நாளை - தினசரி 4 காட்சிகள்*

25/07/19 -சண்முகா -தாய்க்கு தலை மகன் - தினசரி 4 காட்சிகள்*

02/08/19- டிலைட் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்*

09/08/19-சண்முகா -குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

16/08/19-சண்முகா - குடும்ப தலைவன் - தினசரி 4 காட்சிகள்*

23/08/19-சண்முகா - நீதிக்கு தலைவணங்கு - தினசரி 4 காட்சிகள்*

30/08/19 -டிலைட் - ஊருக்கு உழைப்பவன் - தினசரி 2 காட்சிகள்*

06/09/19 -நாஸ்* - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

20/09/19-டிலைட் -சிரித்து வாழ வேண்டும் - தினசரி 2 காட்சிகள்*

27/09/19 -சண்முகா -நவரத்தினம் - தினசரி 4 காட்சிகள்*

27/09/19-டிலைட் -குமரிக்கோட்டம் - தினசரி 2 காட்சிகள்*

04/10/19-சண்முகா - ஒரு தாய் மக்கள் - தினசரி 4 காட்சிகள்*

11/10/19-டிலைட் - பட்டிக்காட்டு பொன்னையா* - தினசரி 2 காட்சிகள்*

25/10/19- சண்முகா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள் -11 நாட்கள்*

25/10/19 -டிலைட் - ரிக்ஷாக்காரன் - தினசரி 2 காட்சிகள்*

08/11/19-டிலைட் -நீதிக்கு பின் பாசம் - தினசரி* 2 காட்சிகள்*

15/11/19-சண்முகா -தொழிலாளி - தினசரி* 4 காட்சிகள்*

22/11/19- டிலைட் - உழைக்கும் கரங்கள் - தினசரி 2 காட்சிகள்*

29/11/19- சண்முகா - பாக்தாத் திருடன் - தினசரி 4 காட்சிகள்*

08/12/19 -சண்முகா - முகராசி - தினசரி 4காட்சிகள்*

13/12/19 - டிலைட் -விவசாயி - தினசரி 2 காட்சிகள்*

20/12/19-சண்முகா - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*

24/12/19- டிலைட் -பணக்கார குடும்பம் - தினசரி 2 காட்சிகள்
*
27/12/19-சண்முகா - தாய் சொல்லை தட்டாதே - தினசரி 4 காட்சிகள்*

----------------------------------------------------------------------------------------------------------------------------
ஈரோடு , திருப்பூர் ,பொள்ளாச்சி மாவட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*திரைப்படங்கள் வெளியான பட்டியல் -2019 ம் ஆண்டு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------

21/06/19- திருப்பூர் -மணீஸ்* - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

28/06/19- திருப்பூர் மணீஸ்* - ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

06/09/19 -திருப்பூர் மணீஸ்* - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*

24/12/19-திருப்பூர் அனுப்பர்பாளையம் -கணேஷ் -** * *குடியிருந்த கோயில்** சிறப்பு மாலை காட்சி*

31/12/19-திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் - * * * நேற்று இன்று நாளை* சிறப்பு மாலை காட்சி .

29/11/19- ஈரோடு சங்கீதா - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*


05/07/19- தாராபுரம் வசந்தா - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*

30/08/19 -தாராபுரம் வசந்தா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

fidowag
6th February 2020, 10:58 PM
மதுரை மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல் -2019ம் ஆண்டு*
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

04/01/19 ராம் - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

11/01/19- அரவிந்த் - தர்மம் தலை காக்கும்- தினசரி 4 காட்சிகள்*

22/02/19 - சென்ட்ரல் - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்*

26/04/19-* சென்ட்ரல் - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

19/07/19 -சண்முகா - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

26/07/19- சென்ட்ரல் - என் அண்ணன் - தினசரி 4 காட்சிகள்*

18/08/19 -திருப்பரங்குன்றம்-லட்சுமி -அடிமைப்பெண்-தினசரி 4 காட்சிகள்*

23/08/19-பழனி ஆறுமுகா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

27/08/19-திருப்பரங்குன்றம் லட்சுமி -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

30/08/19 -ராம் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*

01/09/19-பழங்காநத்தம் -ஜெயம் -ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்*

13/09/19-திருமங்கலம் ஆனந்தா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*

20/09/19- சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்**-- *வசூல் ரூ.1,40,000/-

11/10/19- ஷா* *- நினைத்ததை முடிப்பவன் - தினசரி 3 காட்சிகள்*

25/10/19 - சென்ட்ரல் - நாடோடி மன்னன் - தினசரி 4 காட்சிகள்*-- *வசூல் ரூ.1,95,000/-. அபார சாதனை*

15/11/19 -திருமங்கலம் ஆனந்தா -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

22/11/19- ராம் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 3 காட்சிகள்*

29/11/19- சென்ட்ரல் - ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*

20/12/19-அனுப்பானடி பழனி ஆறுமுகா -எங்க வீட்டு பிள்ளை-தினசரி 3காட்சி கள்
*
27/12/19 -சென்ட்ரல் - கலங்கரை விளக்கம் - தினசரி 4 காட்சிகள்*

-------------------------------------------------------------------------------------------------------------------------------
திண்டுக்கல் மாநகரில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட*பட்டியல் -2019ம் ஆண்டு*
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

12/04/19 -என்.வி.ஜி.பி. - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்*

31/05/19 -என்.வி.ஜி.பி.- நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்*

02/08/19 -என்.வி.ஜி.பி. -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

16/08/19 - என்.வி.ஜி.பி.- தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

16/09/19 -என்.வி.ஜி.பி.- ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

07/12/19 -என்.வி.ஜி.பி. - பல்லாண்டு வாழ்க - தினசரி 4 காட்சிகள்*

----------------------------------------------------------------*
மதுரை மாவட்டத்தில் இதர நகரங்களில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்* திரைப்பட பட்டியல் விவரம் =2019ம் ஆண்டு* *
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

25/01/19-பழனி -- சாமி - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

28/06/19-பழனி -----*சாமி -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

21/08/19 ப ழனி-- -*-சாமி - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4காட்சிகள்*

------------------------------------------------------------------------------------------------------------------
-விருதுநகர்*------

18/10/19 -அல்லம்பட்டி ஸ்ரீராம் - ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

10/11/19 -அல்லம்பட்டி ஸ்ரீராம் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*


20/12/19 -அல்லம்பட்டி ஸ்ரீராம் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

-------------------------------------------------------------------------------------------------------------------------------
22/03/19 -ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

15/08/19 -ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

14/06/19-சிவகாசி -லட்சம் -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

27/09/19 -சிவகாசி -லட்சம் -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

24/11/19-சிவகாசி தங்கமணி -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*

19//07/19-சாத்தூர் வி.பி.எஸ்.-ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

09/08/19-சாத்தூர் வி.பி எஸ்.-எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

18/08/19-போடிநாயக்கனூர்- ஏ.ஆர்.சினிமாஸ்-எங்க வீட்டு பிள்ளை -* *தினசரி 4 காட்சிகள்*

31/08/19 -நத்தம் சென்ட்ரல் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

06/09/19-பண்ணைபுரம் தியாகராஜா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4காட்சிகள்*

fidowag
6th February 2020, 11:01 PM
சென்னை மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட*பட்டியல் - 2019ம் ஆண்டு .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

10-01-19* *-அகஸ்தியா* - ரிக்ஷாக் காரன்* -தினசரி 3 காட்சிகள் -5 நாட்கள் மட்டும்*

11/01/19* * - பாலாஜி* -நேற்று இன்று நாளை - தினசரி 4 காட்சிகள்*

11/01/19* -மூலக்கடை ஐயப்பா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

18/01/19* -பாலாஜி - விவசாயி - தினசரி 4 காட்சிகள்*

08/02/19* பாலாஜி - தனிப்பிறவி -தினசரி 4 காட்சிகள் -(3 நாட்கள் மட்டும் )

11/02/19 - பாலாஜி -ஆனந்த ஜோதி -தினசரி 4 காட்சிகள் (4 நாட்கள் மட்டும் )

15/02/19- பாலாஜி - நாளை நமதே - தினசரி 4 காட்சிகள்*

01/03/19 பாலாஜி - நல்ல நேரம் - தினசரி 4 காட்சிகள்*

26/04/19- பாலாஜி -நீரும் நெருப்பும் -தினசரி 4 காட்சிகள்*

10/05/19 -பாலாஜி -சங்கே முழங்கு -தினசரி 4 காட்சிகள்*

17/05/19 - பாலாஜி -பணம் படைத்தவன் -தினசரி 4 காட்சிகள்*

17/05/19 -அகஸ்தியா -தர்மம் தலை காக்கும் (தினசரி மாலை காட்சி )

24/505/19 - பாலாஜி - முகராசி - தினசரி 4 காட்சிகள்*

31/05/19 - பாலாஜி - நீதிக்கு தலைவணங்கு -தினசரி 4 காட்சிகள்*

07/06/19 - அகஸ்தியா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2 காட்சிகள்*

14/06/19 - அகஸ்தியா - காவல்காரன் - தினசரி மாலை காட்சி*

14/06/19 - பாலாஜி -கலங்கரை விளக்கம் - தினசரி 4 காட்சிகள்*


21/06/19 -பாலாஜி - பெரிய இடத்து பெண் -தினசரி 4 காட்சிகள்*

21/06/19-அகஸ்தியா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 2 காட்சிகள்*

28/06/19 -ரெட்ஹில்ஸ் நடராஜா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

05/07/19- அகஸ்தியா -அடிமைப்பெண் -தினசரி 2 காட்சிகள்*

26/07/19 -அகஸ்தியா - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 2 காட்சிகள்*

09/08/19 -பாலாஜி - காவல் காரன் - தினசரி 2 காட்சிகள்*

16/08/19 -அகஸ்தியா -நல்ல நேரம் - தினசரி* 2 காட்சிகள்*

16/08/19- ரெட்ஹில்ஸ் நடராஜா -நினைத்ததை முடிப்பவன்-தினசரி 3 காட்சிகள்*

23/08/19 - பாலாஜி - பல்லாண்டு வாழ்க -தினசரி 2 காட்சிகள்*

06/09/19- பாலாஜி -விக்கிரமாதித்தன் - தினசரி 2 காட்சிகள்*

20/09/19-அகஸ்தியா -குடியிருந்த கோயில் -தினசரி 2 காட்சிகள்*

04/10/19 -அகஸ்தியா -நாடோடி மன்னன் - தினசரி 2 காட்சிகள்*---* வசூல் ரூ.1,90,000/--அபார சாதனை*

04/10/19-ரெட்ஹில்ஸ் நடராஜா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

11/10/19-மூலக்கடை ஐயப்பா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

25/10/19-சரவணா -நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

01/11/19 - பாலாஜி - தனிப்பிறவி -தினசரி 2 காட்சிகள்*

15/11/19- பாலாஜி - குலேபகாவலி -தினசரி 2 காட்சிகள்*

22/11/19- பாலாஜி - தாய்க்கு தலைமகன் - தினசரி 2 காட்சிகள்*

29/11/19 - பாலாஜி - தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
*
06/12/19 - பாலாஜி -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

20/12/19 - அகஸ்தியா - விவசாயி - தினசரி மாலை காட்சி*

22/12/19 -பொன்னேரி வெற்றிவேல் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள் *

fidowag
7th February 2020, 12:08 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் கடந்த வருடம் (2019)கீழ்கண்ட நகரங்களில் வெளியாகி மறுவெளியீட்டில் சாதனை புரிந்த விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------------
1.சென்னை* - 39*

2.கோவை* -35

3.மதுரை -* *20

4.நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்* -17

5..ஈரோடு, திருப்பூர்,* *மாவட்டங்கள் -8.

6.வேலூர் நகரம் -10

7. திருச்சி -8

8.சேலம் ,ராசிபுரம் -5

9.திண்டுக்கல் -6

10.பழனி* -3

11.விருதுநகர்* -3

12.ஸ்ரீவில்லிபுத்தூர் -2, சிவகாசி -3, சாத்தூர் 2 ,போடி -1, நத்தம் -1,பண்ணைபுரம் 1


மேற்கண்ட விவரங்கள் கிடைத்த வகையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது*சில நகரங்களில் இருந்து சரியான தகவல்கள் கிடைக்காததால் சில படங்கள்*விடுபட்டிருக்கலாம். எனவே வெளியூர் நண்பர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் , தலைவர் படங்கள் வெளியாகும்போது*அவ்வப்போது தகவல்கள் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*மேலும், இது போன்ற சாதனைகளை கடந்த 5 வருடங்களாக நான் பட்டியல் இட்டு பதிவிடுகிறேன்* இப்படிப்பட்ட மறுவெளியீடு சாதனைகளை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விட கூடுதல் படங்கள் நடித்தவர்கள் /குறைவான படங்கள் நடித்த*எந்த நடிகரின் பழைய படங்களும் சாதித்ததில்லை / சாதனை புரியவில்லை /சாதிக்க* போவதுமில்லை என்பது பலரும் அறியவேண்டிய செய்தி .

fidowag
7th February 2020, 03:15 PM
இன்று முதல் (07/02/20) ரெட்ஹில்ஸ் அம்பிகாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் வெளியாகியுள்ளது .இணைந்த 4 வது வாரம் .

fidowag
7th February 2020, 03:16 PM
இன்று முதல் (07/02/20) மூலக்கடை ஐயப்பாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

fidowag
7th February 2020, 10:35 PM
தினமலர் - 07/2/20
-------------------------------
மறக்க முடியுமா ?* **
-------------------------------
மலைக்கள்ளன்*
வெளியான ஆண்டு -1954.*இயக்கம் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு,*நடிப்பு : எம்.ஜி.ஆர். -பானுமதி,*தயாரிப்பு : பக்ஷிராஜா ஸ்டூடியோ*

வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று* சிறையில் இருந்தபோது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவல் தான் மலைக்கள்ளன் .
ஸ்ரீராமுலு நாயுடு , தமிழ் , தெலுங்கு , உட்பட ஆறு மொழிகளில் ,இந்த படத்தை தயாரித்து , இயக்கி இருந்தார் .* குடியரசு தலைவர் விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் .* தமிழில், தணிக்கை குழுவில் இப்படத்திற்கு ஏ* சான்றிதழ்* வழங்கப்பட்டது .*
எம்.ஜி.ஆரை மக்கள் மனதில் இடம் பிடிக்க செய்த படங்களில் முக்கியமானது மலைக்கள்ளன் .*

வசதியானோரிடம்* கொள்ளையடித்து , ஏழைகளுக்கு உதவும் ராபின்ஹுட்* கதைதான் மலைக்கள்ளன் . முதியவர், ரஹீம், மலைக்கள்ளன் என மூன்று வித கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார் .*
அனல்பறக்கும் திராவிட வசனங்களால் புகழ் பெற்ற கருணாநிதி, இப்படத்தில் கதைக்கு தேவையான அளவில் மட்டுமே வசனம் எழுதினார் .

இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு . எம்.ஜி.ஆருக்காக*டி.எம்.எஸ்.முதன் முதலாக இப்படத்தில்தான் பாடினார் .* அந்த பாடல்தான்*எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே .

இப்படம் எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி என்கிற அந்தஸ்திற்கு உயர்த்தியது

fidowag
7th February 2020, 11:14 PM
இந்த வாரம் (07/02/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------------

ரெட் ஹில்ஸ் -அம்பிகா - நம் நாடு -தினசரி 4 காட்சிகள்** இணைந்த 4 வது* வாரம் .

மூலக்கடை ஐயப்பா - சங்கே முழங்கு - தினசரி 3 காட்சிகள் .

கரூர் - வெற்றி - டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்* *(04/02/20 முதல் )

orodizli
7th February 2020, 11:34 PM
https://youtu.be/aCsD-sVTZOc......... Thanks.........

orodizli
7th February 2020, 11:36 PM
https://youtu.be/SOfJDn0TsTE... Thanks...

orodizli
7th February 2020, 11:38 PM
https://youtu.be/X07sNSu7Zmc... Thanks......

orodizli
8th February 2020, 08:50 PM
https://m.facebook.com/story.php?story_fbid=633584953884788&id=100016998677816&sfnsn=wiwspwa&extid=nK32xHOUKyWAYef3......... Thanks.........

orodizli
8th February 2020, 08:51 PM
https://m.facebook.com/story.php?story_fbid=862506494151549&id=100011766189226&sfnsn=wiwspwa&extid=ouquMEs7ZLtqI08Q&d=w&vh=i... Thanks.........

orodizli
8th February 2020, 09:02 PM
இந்தியாவின் "பாரத்" "பரத்" என உச்சரிப்பதே சரி... பரத் எனில் " நிறைவு" என பொருளாகும்...
எம்.ஜி.ஆரி.,ன்
"ரிக்சாக்காரன் "
வெளியான தேதி
29.5.1971
ஓடிய நாட்களாக 167
கதாபாத்திரமாக
செல்வம்(ரிக்சா தொழிலாளி )
சத்யா மூவிஸ் வசனம் ஆர்.கே.சண்முகம்
இயக்குனர் எம்.கிருஷ்ணன்
பாடியவர்கள்
டி.எம் எஸ் பி.சுசிலா
ஈஸ்வரி
இசை எம்எஸ்வி.
நடிகர்கள் எம்ஜி.ஆர்
மஞ்சுளா
அசோகன்
தேங்காய் சீனிவாசன்
வீரராகவன்
சுந்தர்ராஜன்
சோ ஜஸ்டின்
உசிலைமணி
ராமதாஸ்
பூர்ணம் விஸ்வநாதன்
ஜி.சகுந்தலா
கரிக்கோல்ராஜ்
ஜசரிவேலன்
பத்மினி
கள்ளபார்ட்நடராஜன்
ஜோதிலட்சுமி
ராமாராவ்
சேதுபதி
மனோகர்
2.பொன்னழகுப் பெண்மை சிந்தும்
புன்னகை என்ன?
ஒரு மந்திரமோ
இல்லை தந்திரமோ
பாடல்கள் அருமை.
1.அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது
ஆணவச்சிரிப்பு
இங்கேநீ சிரிக்கும்
புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
3.அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
படித்தால் ரசிக்கும்
கனிபோல் இனிக்கும் 4.கடலோரம் வாங்கிய காற்று
குளிராக இருந்தது நேற்று
5.பம்பை உடுக்கை கொட்டி பரிவட்டம்
மேலே தட்டி
தங்க ரதம் போலே ஆடும் வித்தாரகள்ளி... Thanks...

orodizli
8th February 2020, 09:07 PM
ரீலிஸ் அன்று தேவிபாரடைஸ் தியேட்டரில் மக்கள் வெள்ளம்.
ஹெலிகாப்டர் மூலம்
படவிளம்பர நோட்டீஸ்
மேலிருந்து வீசினார்கள்
படத்தில் சண்டை காட்சிகளும் வசனமும்
தலைவருக்கு பாரத்
பட்டம் வழங்கியது.
அந்த நேரத்தில் 3 படங்கள் சரியான போட்டி.
1.ஆதிபராசக்தி
சாமி படம் வெற்றி.
2.சிவாஜியின் பாபு
ஓரளவு வெற்றி.
3.தலைவர் படம்
"ரிக்க்ஷாக்காரன்"
அமோக வெற்றி.
அசோகன் கல்லூரி விழாவில் கலந்து
பேசும்போது
கல்லூரி முதல்வர் அவர்களே
தென்றல் பட்டாலே தேய்ந்துவிடும் மென்மையான தேகம் கொண்டவள் குமாரி உமா வாழ்க வாழ்க!
இந்த நாட்டிய நிகழ்ச்சி
நமக்கு ஒரு நல்ல கருத்தை எடுத்து சொன்னார்.
அதற்கு முன் அறிவிப்புதான் இந்த வெற்றி கோப்பை.
எதிர்காலம் அவர்களை
இருகரம் கூப்பி வரவேற்கிறது....... Thanks.........

orodizli
10th February 2020, 10:11 AM
https://m.facebook.com/groups/1666545363671016?view=permalink&id=2609757876016422&sfnsn=wiwspwa&extid=IkMSzJwxxiSKyFlg&d=w&vh=i......... Thanks.........

orodizli
10th February 2020, 10:12 AM
புன்னகை திருநாள்
�� 82 ��
அகவை நன்னாாள் ��
��������������������
விண்ணுலக சந்திரர் ,
மண்ணுலகை திறம்பட ஆண்ட முதல்வர்....
ஏழை எளியவர்களின்
இதயங்களை விட்டு என்றும் நீங்கா , இறைவனவர்....
எங்கள் ஆத்மா...
எங்கள் சுவாச மூச்சு ,
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசிபெற்ற,
அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளரும்,
தமிழக (மு)வக்ஃப் வாரிய தலைவரும்...
MGR என்கிற மூன்றெழுத்து மந்திரத்தின் நிழல்....
அன்பு....
மிக்க,
திரு,

��"தமிழ்
மகன்
உசேன்"��
அண்ணார் அவர்களது 82 வது .....இல்லையில்லை
28 வது துடிப்புமிக்க
இளைஞரின் அகவை திருநாளுக்கு ,
(எம்மை பொறுத்த மட்டில் அகவை 28)
பெங்களூர்...
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "
"உழைக்கும் குரல்" மாத இதழ்
"உழைக்கும் குரல்" தளத்தின் சார்பாகவும்... உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் இதயதெய்வம்... மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மீது விசுவாசமுள்ள உண்மையான ரத்தத்தின் ரத்தங்களின் சார்பாகவும் இனிய அகவை திருநாள் 82 நன்னாளை போற்றி மகிழ்கிறோம்.
என்றும்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி -பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா - தி. மலை
ஆர். ஜி. சுதர்சன் - பெங்களூர்
மேலும் பல உறவுகளின் ������������������������������������... Thanks ...........

orodizli
10th February 2020, 10:14 AM
கேரளா பாலக்காடு மாவட்டம் வடவனூர் கிராமம் என்னுயிர் தலைவன் MGR குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து விளையாடிய வீடு பழமை மாறாது கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்க விழா 26/02/2020 வாருங்கள் தலைவரின் பற்றாளர்களே வந்திருந்து விழாவினைச் சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் MGR BOSSCOR... Thanks.. ......

orodizli
10th February 2020, 10:21 AM
https://youtu.be/_w7u70WDyQU......... Thanks...

orodizli
10th February 2020, 10:22 AM
https://youtu.be/E6Ejy8lUSJ8... Thanks...

orodizli
10th February 2020, 10:24 AM
https://youtu.be/TwAf23bpYYQ... Thanks...

orodizli
10th February 2020, 10:25 AM
https://youtu.be/51oSqDEs_70... Thanks...

orodizli
11th February 2020, 04:39 PM
சந்தரோதயம் படத்தில் வரும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
என்ற பாடல் படமாக்க பட்ட போது
தேவைப்பட்டது ..
ஒரு ஆட்டுக்குட்டி ...
25 துணை நடிகர்கள். ..
10 குழந்தைகள். ....
50 அண்டாக்களில் நிரப்பப்பட்ட தண்ணீர்.

தலைவர் ஸ்டுடியோவுக்குள் வந்ததும்
முதலில் கவனித்தது குழந்தைகளை. ..

பின்னர் பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு
முன் குழந்தைகள் நனையும் காட்சி
என்பதால் தண்ணீரை தொட்டுப்பார்த்தார்
தண்ணீர் சில்லென்று இருந்ததால்
அது குழந்தைகளுக்கு ஒத்து வராது
என்பதால் சுடு தண்ணீரில் படப்பிடிப்பு
நடத்த உத்தரவிட்டார். ...

தயாரிப்பாளர் ..தண்ணீரை சுட வைத்து
படப்பிடிப்பு நடக்க சிறிது நேரம் ஆகும்
என்றார். ...தலைவர் சரியென்றார்....

பொன்மனச்செம்மல் ...குழந்தைகள்
பசியோடு இருக்கக்கூடாது என்று
உடனே தனது சொந்த பணத்தில்
பால் மற்றும் சக துணை நடிக நடிகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு
செய்தார். ....

நண்பர்களே நீங்கள் நன்றாக பாடலை
பார்த்தால் குழந்தைகள் வயிறு
நிரம்பி இருப்பதை பார்க்கலாம். ....

பாடல் படப்பிடிப்பு தொடங்கியது...
ஆட்டுக்குட்டியை தலைவர் தூக்கி
பாட ஆரம்பிக்க வேண்டும். ...

ஆடுக்குட்டி மிரண்டு ஓடியது. ...
மீண்டும் மீண்டும் காட்சி படமாக்கப்பட்டது. ...
குழந்தைகள் நனைந்து நின்றுக்கொண்டு
இருந்தனர்.....

தலைவர் உடனே ஆட்டுக்குட்டியின்
காலை கட்ட சொன்னார் நனைந்த சின்ன
குழந்தைகளுக்கு தொப்பி அணிய சொல்லி மீண்டும் படப்பிடிப்பை
ஆரம்பித்தார். ....

நண்பர்களே நாம் அனைவரும்
இந்த பாடலை ஆயிரக்கணக்கான
முறை பார்த்து கேட்டு ரசித்திருப்போம்
ஆனால் இந்த பாடல் எடுக்கப்பட்டதற்கு
பின்னால் இருக்கும் அந்த மனித நேயத்தை என்னவென்று சொல்லுவது....

நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு
பாசமிக்க தலைவரை இறைவன்
நமக்கு அளித்தார் என்று பெருமிதம்
கொள்வோம்..........

அருமை நண்பர்கள் அனைவருக்கும்
பிற்பகல் வணக்கம். ................ Thanks.........

����������


����������

orodizli
12th February 2020, 11:17 PM
https://youtu.be/9A6dr5x5Nys......... Thanks.........

orodizli
12th February 2020, 11:22 PM
https://youtu.be/1pVXvQwrNBU... Thanks...

orodizli
12th February 2020, 11:23 PM
https://youtu.be/A784H8n2rc4... Thanks......

orodizli
12th February 2020, 11:23 PM
https://youtu.be/iYlfX43vif4... Thanks......

orodizli
12th February 2020, 11:30 PM
"அன்னமிட்ட கை " காவியத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்களுடன் பதிவை தொடர்கிறேன் ..
1.வெள்ளத்துக்கு அனை போடலாம் ஆனால் உள்ளத்தோடு பாசத்துக்கு அணை போட முடியாது ..

2 .ஊதுபத்திக்குப் பக்கத்தில் சிகரெட் இருக்க கூடாது. பாத்ரூம் பக்கத்தில் பூஜை அறை இருக்க கூடாது.

3. நல்லதைச் சொல்றவன்தான் நண்பனாக இருக்க முடியும்.

4. வீட்டுப் பாதுகாப்புக்கு பூட்டு போடற மாதிரி ஒமுக்கத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கனும்.

5. அவமானம் படுத்துவது வேறு அறிவுரை கூறுவது வேறு. இரண்டையும் ஒன்றாக நினைக்க கூடாது.

6. உடையை மட்டும் மாற்றினால் போதாது. உள்ளத்தையும் மாற்றியாகனும். அதற்கு அன்பு காட்டனும் அடுத்தங்களை மதிக்கனும்.

7..ஆடம்பரமாக அவியலும் பொறியலும் போட வேண்டாம். பாசத்தோடு பழைய சோறு போட்டா போதும் ..

8. .ஏமாற்ற நினைக்கறவங்கத்தான் அடிக்கடி இடத்தை மாற்றுவாங்க.

9. மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அன்பு காட்டனும் அதிகாரம் காட்டக் கூடாது.

10. வீட்டைக் பாதுக்காத்தான் நாயை வளர்க்கறாங்க அது வெறி பிடித்து அலைந்தா நாயை குறை கூற மாட்டாங்க வளர்த்தவங்கத்தான் குறை சொல்வாங்க.

11. சமுதாயத்தில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருடையை கையே தொட்டுப் பார்த்து நோயை தீர்ப்பவங்க டாக்டர்தான் ..

12 இதயத்தை சத்திரமாக வைத்தால் எல்லோரும் தங்குவாங்க அதே நேரத்தில் பத்திரமாகவும் இருக்கனும்.

13. ரத்த வெறிக்கொண்ட புலிக்கிட்ட தற்புகழ்ச்சி பற்றி பேசினால் அது கேட்காது. அழிவில்தான் நியாயம் என்று பேசினவங்க கிட்ட அன்பைப் பற்றி பேசினால் கேட்க மாட்டாங்க.

14 ஒரு முறை கேட்டு நியாயம் கிடைக்கலைன்னா மறு முறை வேறு வழியில் முயற்சி பண்ணனும்.

15 மரத்திலே ஏறி தவறி விழுந்துட்டாங்கன்னா அதற்காக மரத்தை வெட்ட மாட்டாங்க ஏறின விதம் தவறு என்றுத்தான் நினைப்பாங்க.

16. இன்னார்கிட்ட இன்னார் பற்றித்தான் பேசனும் என்கிற விதிமுறை இருக்கிறது.

17. டாக்டர் எக்ஸ்ரே எடுத்தா இதயத்தைத்தான் பார்ப்பாங்க அதில் உள்ள எண்ணங்களை பார்க்க முடியாது.

18. செடிக்கிட்ட மலர் கைமாறு எதிர்ப்பார்க்காது பிள்ளைக்கிட்ட தந்தை கைமாறு எதிர்ப்பார்க்கக்கூடாது.

19. எதிரியை யாராலும் கண்டுபிடிக்கப் முடியாது. உண்மையே யாராலும் அழிக்கவும் முடியாது.

20 அனாதைகள் மேல் யாராவது அக்கறைப்பட்டுத்தான் ஆகனும். உண்மையே பலமாக பேசும் போது மிரட்டுகிற மாதிரித்தான் இருக்கும்.

21.எந்த தாய்மீதும் யாரும் பாசம் காட்டலாம் தவறைக் மன்னிக்கிற ஒரே தெய்வம் பெற்றத்தாய்தான்

பின்குறிப்பு ..15- 09- 1972. ஆண்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வெளியிடபட்டது. (தலைவரின் கடைசி கறுப்பு & வெள்ளை காவியம்) படத்திற்கு வசனம் எழுதியவர் .A .L. நாரயணன்
அடுத்த பதிவு வள்ளல் புகழ் தொடரும்... Thanks......

oygateedat
13th February 2020, 07:50 PM
நாளை முதல்

கோவை

சண்முகாவில்

நினைத்ததை முடிப்பவன்

fidowag
14th February 2020, 11:10 PM
இன்று முதல் (14/02/20) மூலக்கடை* ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

fidowag
14th February 2020, 11:11 PM
குமுதம் வார இதழ் -19/02/20
-----------------------------------------------
உங்க எம்.ஜி.ஆர். எப்படி இருக்கார் ? -பூவாளி - ஆர்.சி.சம்பத்*
--------------------------------------------------------------------------------------------------
தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். திடுதிப்பென்று நீக்கப்பட்டுவிட்டார் .தமிழகமே பரபரப்பாகிவிட்டது* பூதாகரமான இப்பிரச்னையில் தலையிட்டு என்னால் தீர்வு காணமுடியுமா தெரியவில்லை .* ஆனாலும் அசட்டு துணிச்சலுடன் கலைஞர் வீட்டுக்கு போனேன் .* அங்கே கொந்தளிப்பான சூழ்நிலை .

அமைச்சர்கள் பலர் வந்திருந்தனர் ,* மாடியில் அவர்களோடு கலந்து பேசிக் கொண்டிருந்தார் கலைஞர் . அவரது உதவியாளர் என்னிடம் நீங்கள் அவரை நாளை சந்திக்கலாமே என்றார் .* நான் ஒரு சிறு காகிதத்தில் மிக முக்கியம் , மா . லட்சுமணன் என்று எழுதி , இதை* முதல்வரிடம்**கொடுங்கள் .அவர் அழைத்தால்*சந்திக்கிறேன் என்றேன் .* *காகிதத்தை பார்த்ததும் கலைஞர் என்னை உடனே அழைத்தார் .* எம்.ஜி.ஆர். விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டார் .* அறிஞர் அண்ணா பாடுபட்டு வளர்த்த கழகம் அழிவதா ? என்று கேட்டேன் .**

இதை எம்.ஜி.ஆரிடம் கேட்கலாமே . அவர் உங்களுக்கு வேண்டியவராயிற்றே என்றார் முதல்வர் . கேட்கத்தான் போகிறேன் .* முதலில் உங்களை சந்திக்கத்தான் இங்கு வந்தேன் என்று கூறினேன் .

எம்.ஜி.ஆர். கூறும் குற்றச்சாட்டுக்கள் ஒருதலைப்பட்சமானவை .ஆதாரமற்றவை .* எந்த நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் .

எம்.ஜி .ஆரை பார்த்து பேசிவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று கூறிவிட்டு* புறப்பட்டேன் .* எம்.ஜி.ஆருக்கு போன் செய்து கலைஞரை சந்தித்த விவரத்தை சொன்னேன் .* சத்யா ஸ்டுடியோவில் நேற்று இன்று நாளை படப்பிடிப்பு உள்ளது . நாளை காலை 10மணியளவில் அங்கே வாருங்கள் என்றார்.* ஸ்டுடியோவுக்கு போனேன் .**

மேக்கப் ரூமிற்கு சென்றேன் .* மேக்கப் மீனை வெளியே அனுப்பிவிட்டு கதவை தாழிட்ட எம்.ஜி.ஆர். பிறகு என்னிடம் என் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ஆளும் கட்சிக்கு* பங்கு இருக்கிறது .* ஆனால் இல்லை என்கின்றனர் .* மதுரை மாநாட்டில் நான் ஒதுக்கப்பட்டேன் .* புறக்கணிக்கப்பட்டேன் .* ஒரு நடிகையை* படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தேன் .* அவர் மேஜரில்லை . மைனர் .* அதனால் ஒப்பந்தம் செல்லாது என பிரித்த செயல் யாருடையது .* என்றெல்லாம் கேட்டு 50 நிமிடம் தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி தீர்த்தார் .**

அதன்பின் எம்.ஜி..ஆர். தனிக்கட்சி துவங்கி ஆட்சி யை பிடித்தார் .* அவரை சந்திக்க போனேன்* * அங்கிருந்த எஸ்.டி.சோமசுந்தரம், நாஞ்சில் மனோகரனிடம் இவர் கருணாநிதிக்கு ரொம்ப வேண்டியவர்* என்று கூறி அறிமுகப்படுத்தினார் .பின் ஒருமுறை கருணாநிதியை சந்திக்க போனேன்* உங்கள் எம்.ஜி.ஆர். எப்படி இருக்கிறார் என்று கேட்டார் . என் நிலையை எண்ணி நொந்து கொண்டேன் .

திரையுலக* நினைவுகள் என்ற நூலில் திரைப்பட உதவி இயக்குனர் மற்றும் வசனகர்த்தா* திரு. மா. லட்சுமணன்*

fidowag
14th February 2020, 11:12 PM
குங்குமம் வார இதழ் -21/02/20
-------------------------------------------------
அன்பே வா -
---------------------
பார்க்க தெவிட்டாத* காதல் படம் .* ஓய்வுக்காக மலை பிரதேசத்துக்கு வரும் எம்.ஜி.ஆர். அங்கே அவருக்கு கிடைக்கின்ற அனுபவங்கள் , ,,,,,, இப்போது வரை*ரீமேக்கிலும் இனிக்கும் காதல் .**
ஏ.வி.எம். நிறுவனத்திற்காக எம்.ஜி.ஆர். அன்போடு செய்து கொடுத்த ஒரே படம் .எம்.ஜி.ஆரின் துடிப்பும் , சரோஜாதேவியின் வனப்பும் , எம்.எஸ். விஸ்வநாதனின் தேன் சொட்டும் பாடல்களும்,மெல்லிய காதல் சரசங்களும், இழையோடிய நகைச்சுவையும் படத்தை ஆகப் பெரிய வெற்றிக்கு அழைத்து சென்றன .

orodizli
15th February 2020, 02:50 PM
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துக்ளக் பத்திரிகையில் ஒரு பேட்டியில் எம்ஜிஆரையும் ரஜினியையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டவருக்கு அளித்த பதில்:---

"எம்ஜிஆரையும், ரஜினியையும் ஒரே தராசில் வைத்து நாம் எடை போட முடியாது. எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் இருந்து, பின்னர் திமுகவிற்கு வந்து எம்.எல்.சி., எம்.எல்.ஏ. போன்ற பதவிகளை வகித்து, ஒரு பலமான அரசியல் பின்பலத்தோடு தனிக்கட்சி தொடங்கினார்.

மேலும் அவர் ஆரம்ப காலம் தொட்டே ஏழைகளுக்கு உதவுவது, மாணவர்களைப் படிக்க வைப்பது என்று தாராள மனதோடு ஏராளமான உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

தன் திரைப்படங்களில் எந்த தவறான நடத்தையுமில்லாத ஒரு தூயவனாக, மக்கள் போராளியாகத் தன்னை சித்தரித்து தனது இமேஜை வளர்த்துக் கொண்டார்.இவையெல்லாம் சேர்ந்துதான் எம்ஜிஆருக்கு வெற்றியைக் கொடுத்தன.
ரஜினிக்கு இத்தகைய பின்புலம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."......... Thanks.........

fidowag
15th February 2020, 10:32 PM
தென்னக ஜேம்ஸ் பாண்ட் ராமு மதுரையில் வெற்றி விஜயம்*வரும் வெள்ளி முதல் (21/02/20) வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த*ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் புதிய தொழில்நுட்பம்* மற்றும்*முற்றிலும் புதிய பரிமாணத்தில் மதுரை வெற்றி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில்* வெளியீடு .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
15th February 2020, 10:32 PM
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் வெள்ளி /சனி/ஞாயிறு (14/02/20* முதல்*16/02/20 வரையில் ) தீனசரி இரவு காட்சி மட்டும் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " நாளை நமதே " திரையிடப்படுகிறது .

தகவல் உதவி : திருப்பூர் நண்பர் திரு. நடராசன் .

orodizli
16th February 2020, 07:31 AM
*மனிதநேயப் பண்பாளர் சைதை சா. துரைசாமி அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட தீராத அன்பால், அவரின் கொள்ளைப் பற்றுடனே தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்...*

*பின், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர் என உயர்ந்த பொருப்புகளில் வகித்தார்...*

*மக்கள் சேவகர் சைதை சா. துரைசாமி அவர்கள், 2005-ஆம் ஆண்டு மனிதநேய அறக்கட்டளை மூலமாக இலவச ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளைத் துவங்கி, இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்களை அரசுப் பணிகளுக்கு கொண்டு சென்றுள்ளார்...*

*புற்றீசல்கள் போலத் தனியார் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் இன்று உருவெடுத்துள்ள நிலையில், தன் சொந்தப் பணத்தை செலவு செய்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்...*

*மேலும், கண்ணை இமை காப்பது போல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழைக் காத்து வரும் திரு.சைதையார் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...*

*தாங்கள் வாழ வேண்டும் இவ்வையகத்தில் பல்லாண்டு ...*

*- அன்புடன் எம்ஜிஆர் ஸ்ரீநாத்*......... Thanks .

oygateedat
16th February 2020, 11:27 AM
மக்கள் திலகத்தின்

சீடர்களில் முதன்மையானவர்

சென்னை பெருநகர முன்னாள் மேயர்

மனிதநேயம் அறக்கட்டளையின்

நிறுவனர் போற்றுதற்குரிய அண்ணன்

திரு சைதை துரைசாமி அய்யா

அவர்களுக்கு இனிய பிறந்த நாள்

நல்வாழ்த்துக்களை நமது மக்கள் திலகம்

திரியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு


எஸ் ரவிச்சந்திரன்

fidowag
16th February 2020, 11:13 PM
தினத்தந்தி -14/02/20
------------------------------------
என்றென்றும் கண்ணதாசன்* *-* எளிய இலக்கியம்*
------------------------------------------------------------------------------------
தேவர் பிலிம்ஸ் தயாரித்த " தாய் சொல்லை தட்டாதே " \படத்தில் ஒரு காட்சி .எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை காதலிப்பார் .* எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு வரும் சரோஜாதேவியின் அப்பா எம்.ஆர். ராதாவை பார்த்ததும் எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பாவுக்கு அதிர்ச்சி .

தன் கணவரை கொலை செய்தவர் எம்.ஆர். ராதா என்று சொல்லி, திருமணத்திற்கு தடை விதித்து விடுகிறார்* எம்.ஜி.ஆரின் தாய்* அதே போல் , இந்த மாப்பிள்ளை உனக்கு வேண்டாம் என்று சரோஜாதேவிக்கு தடை போடுகிறார் எம்.ஆர். ராதா .

காதலர்கள் இடையே பிரிவு ஏற்படுகிறது . அந்த ஏக்கத்தில் இரவில், தனிமையில் சரோஜாதேவி பாடுகிறார் .* *இதுதான் பாடலுக்கான சூழல் .இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். அவரது இசை என்றால்* முதலில் பாடல் எழுதப்பட்டு , விடும் .* பின்னர் அதற்கு அவர் இசை அமைப்பார் .

பாடலுக்கான சூழல் , கண்ணதாசன் அவர்களிடம் சொல்லப்பட்ட பிறகு கவிஞர் சிந்தனை வசப்படுகிறார் ,* பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதல், ஊடல், பிரிவு பற்றிய கவிதைகள் அவர் நினைவில் வந்து போகின்றன .
அப்போது கவிஞர் பல வருடங்களுக்கு முன் படித்த குறுந்தொகை பாடலும்,*தாயுமானவரின் பாடலும் அவரின் நினைவிற்கு வருகின்றன .**

தாயுமானவர் ஒரு பாடலில்* மண் உறங்கும் , விண் உறங்கும் மறறுள* எல்லாம் உறங்கும் , கண் உறங்கேன், எமிறைவர் காதலால் பைங்கிளியே ,மண்ணில் வாழும் மக்களும், விண்ணில்* வாழும் தேவரும் உறங்குகின்றனர் .அவர்களுடன் இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும் உறங்குகின்றன .**என் இறைவன் மீது நான் கொண்ட காதலால் என்னால் உறங்க முடியவில்லை என்று தாயுமானவர் சொன்னதாக பாடல் அமைகிறது .

அந்த கருத்தினை உள்ளடக்கி "தாய் சொல்லை தட்டாதே " படத்தில் இடம் பெற்ற*இந்த பாடலுக்கான வரிகளை அமைக்கிறார் .

பூ உறங்குது, பொழுதும் உறங்குது,நீ உறங்கவில்லை நிலவே,கான் உறங்குது, காற்றும் உறங்குது*நான் உறங்கவில்லை .மான் உறங்குது, மயிலும் உறங்குது ,மனம் உறங்கவில்லை .என் வழி உறங்குது, மொழியும் உறங்குது ,*விழி உறங்கவில்லை .தென்றலில் எனது உடல் தேய்ந்தது பாதி ,அது*தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி*திங்கள் நீயும் , பெண்குலமும் ஒருவகை ஜாதி*தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி ?

orodizli
17th February 2020, 03:36 PM
��mgr எம்.ஜி.ஆர். ஆட்சி - 1980ல் கலைக்கப்பட்ட நாளாக்கும் இன்று 17.02.1980.��

அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த #திண்டுக்கல் #பாராளுமன்ற_இடைத்தேர்தலில் #மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

பின்னர் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. #அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார். இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை.

ஆனால் 1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ்(இந்திரா காந்தி தலைமை) கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து எம் ஜி ஆர்தலைமையிலான, தமிழகம் உள்ளிட்ட9 மாநில சட்டசபைகளைக் கலைத்தார். உடனே 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்’ என்று அறிக்கை வெளியிட்ட எம்.ஜி.ஆர்., 'யாரும் ஆத்திரப்படாதீர்கள், அடுத்து நம்முடைய ஆட்சிதான்’ என்று சொன்னார்.

அதையடுத்து நடந்த தேர்தல் பிரசாரத்தில், 'நான் என்ன தவறு செய்தேன், என்னை எதற்காகத் தண்டித்தீர்கள்? நான் உங்களுக்காகத்தானே உழைத்தேன்’ என்று கண்ணீர் விடுமளவுக்கு பேசினார். அப்போது தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் மழை விடாது பெய்துகொண்டு இருந்தது. பல ஊர்களில் வெள்ளம். எம்.ஜி.ஆருக்காகக் கொட்டும் மழையில் மக்கள் காத்திருந்தார்கள். 'எம்.ஜி.ஆருக்காக வானமும் அழுதது’ என்று அப்போது அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் முடிவில் இது எதிரொலித்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 129 இடங்களைக் கைப்பற்றி எம்.ஜி.ஆர். மீண்டும் வென்றார்.......சரித்திரம் படைத்த சகாப்தம் சாதனை கண்டார்.........

orodizli
18th February 2020, 05:17 PM
இன்றைய (ஏன் பல காலமாகவே) அரசியல் தலைவர்கள் தரக்குறைவாக (எல்லாக் கட்சியினருமே) பேசி வருகிறார்கள். எனக்குத் தெரிந்து பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஆகிய இரு தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பழித்ததில்லை. தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதில்லை.. எம் ஜி ஆர் தனது கட்சி பிரமுகர் பயன்படுத்திய சொல்லுக்காக தானே மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர் பா. கிருஷ்ணன்......... Thanks...

orodizli
18th February 2020, 05:18 PM
சார்.... காமராஜர் கூட நம் புரட்சித் தலைவரை, 1964ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் , வேட்டைக்காரன் வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும் தனிக்கட்சி தொடங்கிய நம் மக்கள் திலகத்தின் செல்வாக்கை கண்டு பொறாமைப் பட்டு, எதிரும் புதிருமாக இருந்த இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கருத்து முரண்பட்டிருந்தும்,1974ல் பாண்டிச்சேரி சட்ட மன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோல்வி கண்டார். அந்த பாண்டிச்சேரி தேர்தலிலும் நம் பொன்மனச் செம்மலை கடுமையாக விமர்சித்தவர்தான் காமராஜர். அரசியலில் நாகரீகப் பண்புகளை கடைப்பிடித்த ஒழுக்க சீலர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் சமதர்ம சமுதாயக் காவலன் எம்.ஜி.ஆர். அவர்களும் மட்டுமே ! அன்புடன் : சௌ.செல்வகுமார்......... Thanks.........

fidowag
19th February 2020, 07:25 AM
சேலம் அம்மாபேட்டை ஜோதி அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " திங்கள் முதல் (17/02/20) தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.சுப்பிரமணி

fidowag
19th February 2020, 07:30 AM
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரகசிய போலீஸ் 115" வெள்ளி முதல் (21/02/20) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வெற்றி மற்றும் அண்ணாமலை அரங்குகளில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

oygateedat
19th February 2020, 08:53 PM
வருகின்ற

வெள்ளி (21.02.2020)

சனி (22.02.2020)

ஞாயிறு (23.02.2020)

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

கணேஷ் திரையரங்கில்

மக்கள் திலகத்தின்

இன்று போல் என்றும் வாழ்க

இரவு 8 மணிக்காட்சி மட்டும்

orodizli
19th February 2020, 09:50 PM
*1975 அன்று கர்நாடகா முதல்வர் தேவராஜ் அர்ஸ் நம் வாத்தியாரை சந்திக்க விரும்பி அழைப்பு விடுக்க அதன் பேரில் புரட்சிதலைவர், சித்திரா கிருஷ்ணசாமி, மற்றும் தலைவர் உதவியாளர் மகாலிங்கம் மூவரும் விமானத்தில் பெங்களூரு செல்ல.

விமானநிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கான், மற்றும் குண்டுராவ் இருவரும் நம் தலைவரை வரவேற்று அசோகா ஹோட்டலில் தங்க வைக்க.

அதிகாலை விமான பயணம்...தலைவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வு எடுக்க போக மற்றவர் அடுத்த அறைக்கு செல்ல...ஹோட்டல் பணியாளர்கள் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏதோ பொருள்களை அடுக்கிவிட்டு போக.

களைப்பு தீர்ந்து விழித்த தலைவர் குடிக்க தண்ணீர் வேண்டி குளிர்சாதன பெட்டியை திறக்க அங்கே அடுக்கி வைக்க பட்டு இருந்தன ஒரு புறத்தில் மது பாட்டில்கள்

வந்தது கோவம் மன்னருக்கு இது யார் வேலை என்று ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து கேட்க...மேனேஜர் பதறி அடித்து ஓடி வந்து என்ன இந்த பாட்டில்கள் என்று அவரிடம் தலைவர் கேட்க.

ஐயா முதல்வர் அர்ஸ் மதிய உணவு உங்களுடன் இந்த அறையில் என்று சொல்லி இருக்கிறார்..

சரி அதற்கும் இந்த பாட்டில்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க.

ஹோட்டல் நிர்வாகி ஐயா அவர் மது அருந்தாமல் சாப்பிட மாட்டார் அதனால் தான் இந்த ஏற்பாடு என்று சொல்ல.

உடனே குண்டுராவை தொடர்பு கொண்ட தலைவர் உங்கள் முதல்வர் இன்று மதிய உணவு முடிந்து வந்து என்னை சந்தித்தால் போதும்.....என் அறையில் இருக்கும் மது பாட்டில்களை உடனே அப்புற படுத்த சொல்லுங்கள்.

எனக்கு மது அருந்தியவர்கள் உடன் இருந்து சாப்பிட்டு பழக்கம் இல்லை என்று சற்று கடுமையாக சொல்ல.

அர்ஸ் அவர்கள் ஒப்புதல் உடன் அறையில் இருந்த அந்த வகை பாட்டில்கள் அப்புற படுத்த பட்டன அடுத்த சில நிமிடங்களில்.

வேறு ஒரு மாநிலம் சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்து பேச வேண்டி இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் எவரிடமும் சமரசம் கொள்ளாமல் இருந்தார் வாத்தியார்.

ஹோட்டல் சிப்பந்திகள் எங்கள் மாநில முதல்வர் வேலை வாத்தியாரிடம் பலிக்க வில்லை என்று மகிழ்ச்சி அடைய.

குண்டுராவ்,மற்றும் கான் வாய்அடைத்து இந்த நாட்டில் இப்படி ஒரு மனிதரா.... என்று வியக்க.

அப்படி வாழ்ந்த மனித புனிதர் வாத்தியார் புகழ் என்றும் காப்போம்.

நன்றி தொடரும் .உங்களில் ஒருவன் நெல்லை மணி...*......... Thanks.........

orodizli
20th February 2020, 02:47 PM
கருர் - லட்சுமிராம் DTS., 21. 02.2020 வெள்ளிமுதல் இந்தியாவின் சீன்கானரி ஜேம்ஸ்பாண்ட் "ரகசியபோலிஸ் 115" காவியம் வெற்றிப்பவனி... தகவல் திருச்சி. மாவட்ட படவெளியிட்டாளர் திரு சுந்தரம் அவர்கள் நன்றி மதுரை எஸ்.குமார் எம்ஜிஆர். மன்றம்......... Thanks.........

oygateedat
20th February 2020, 08:03 PM
நாளை 21.02.20 முதல் கூடலூர் (கம்பம்) வேல்முருகன் தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் 4 காட்சிகள்

தகவல் - திரு எஸ் குமார் - மதுரை

orodizli
20th February 2020, 11:54 PM
நாளை 21.02.2020 முதல் கூடலூர் (கம்பம்)வேல்முருகன் DTS., தியேட்டரில் "ஆயிரத்தில் ஒருவன்" 4 காட்சிகள் ஆக வெற்றிபவனி வருகிறார்......... Thanks.........

orodizli
20th February 2020, 11:56 PM
வாழும் போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்!!
வார்த்தை இன்றி போகும்போது மௌனத்தாலே புரட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி கூறிய கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இறுதிப்பயணம்.....!!....!!....!!....!!....!!.. .!!
அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்.............!!...!!....!!....!!..!!

பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்..!
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது...!

அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு ..!
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை..!
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா ..”

அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்...!
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!

திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்...
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்..!

அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும் ...!
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம்....
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை...
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!

# கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். ! அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!

எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!

இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்...!

ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!

# எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :

“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்

நாலு பேருக்கு நன்றி ”
இவண்
ஜெயம் பழனிவேல்MA
விராலிமலை தொகுதி......... Thanks...

orodizli
20th February 2020, 11:58 PM
21.02.2020 வெள்ளிமுதல் திண்டுக்கல்- என்.வீ.ஜி.பி dts.,திரையரங்கில் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் "புதுமைப்பித்தன்" பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். தகவல்.திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் படக்கம்பெனி நண்பர் நன்றி மதுரை எஸ்.குமார் எம்ஜிஆர். மன்றம்... Thanks.........

orodizli
21st February 2020, 12:00 AM
திருப்பூரில் நாளை மணீஸ் திரையரங்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை திருப்பூர் சரவணன்

orodizli
21st February 2020, 06:50 AM
M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.

தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..

வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.

அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.

தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!

1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.

அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.

அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?

1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’

மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.......... Thanks.........

orodizli
21st February 2020, 06:52 AM
https://youtu.be/mn1HgTLuRRE... Thanks......

orodizli
21st February 2020, 06:53 AM
https://youtu.be/jTc08yllwSc... Thanks...

orodizli
21st February 2020, 06:54 AM
https://youtu.be/jhUVv2C3y2g......... Thanks...

orodizli
21st February 2020, 06:55 AM
https://youtu.be/nwPhTNJkbxc... Thanks...

orodizli
21st February 2020, 06:58 AM
வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "ரகசிய போலீஸ் 115" வெற்றி காவியம் திருச்சி - பேலஸ் DTS., தினசரி 4 காட்சிகள் வருகை தருகின்றார்... Thanks............

orodizli
21st February 2020, 11:45 PM
எங்க வீட்டுப் பிள்ளை !
________________________
அவ ஜோடி குயில் பாடுவதை சொல்லாம சொல்லி மெதுவா அணைச்சிக்கிட்டா..
அவ ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே அழகா தெரிஞ்சிகிட்டா .

கவிஞர் வாலி !

இந்த படத்தை இனி வரும் எத்தனை தலைமுறை நடிகர்களானாலும் திரையில் நிலைத்து நிற்க மக்கள் திலகத்தின் நடிப்பை உள் வாங்குகள் .

இவர் இதில் ஏற்றிருப்பது இரட்டை வேடமல்ல இருவரின் வாழ்க்கையாகவே வாழ்ந்திருப்பார் வெறும் பயந்த சுபாவமாக நடித்திருக்க மாட்டார் ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசத்தை பிரதிபலித்துப்பார் .

படம் பார்த்து வெளியில் வந்தால் ராமு ,இளங்கோ இருவராகத்தான் நம் மணக்கண் முன் நிற்கும்

எக்காலத்திற்கும் வாத்தியார் நம் மக்கள் திலகமே !

இந்தப் பாடல் காட்சியில் துள்ளும் ரத்ணா அவர்களின் ஸ்டெமினாவை பாராட்டியே தீர வேண்டும் ........ Thanks...

orodizli
21st February 2020, 11:45 PM
https://youtu.be/_glzejYfev0... Thanks...

orodizli
21st February 2020, 11:46 PM
https://youtu.be/zt8ND9eRMR8... Thanks...

orodizli
21st February 2020, 11:46 PM
https://youtu.be/7OOLXoUpbPk... Thanks...

orodizli
21st February 2020, 11:47 PM
https://youtu.be/Ueb5fM0hoZY... Thanks...

orodizli
21st February 2020, 11:49 PM
இந்தவாரம் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த தேடிவந்தமாப்பிள்ளை கம்பம் .கூடலூர் வேல்முருகன் ஆயிரத்தில்ஒருவன் திருச்சி பேலஸ் கருர்.லட்சுமி ராம் சேலம் அலங்கார் மற்றும் குமாரபாளையம் ஆத்தூர் உட்பட ஆறு திரையரங்குகளில் ரகசியபோலிஸ் 115.திண்டுக்கல் என்.வீ.ஜு.பி புதுமைப்பித்தன் கோவை அனுப்பாளையம் மணிஸ் திரையரங்கில் எங்கவீட்டுப்பிள்ளை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் தகவல்கள் தெரிவித்த நெல்லை ராஜா திருப்பூர்.சரவணன் மதுரை ஸ்ரீனிவாசன் திரு சுந்தரம் அனைவருக்கும் மதுரைமாநாகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் மதுரை.எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்......... Thanks...

orodizli
22nd February 2020, 09:47 AM
மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.

மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.

100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது.

பட்டியலின, பழக்குடியின மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (VAO) என சட்டம் கொண்டு வந்தார்.

பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.

இதெல்லாம் பல அதிமுகவினரும் மறந்துபோன சாதனைகள்.

இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்.

எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் மூலம் அனைத்து சாதியினரும் VAO ஆனார்கள். தற்போது தமிழகத்தில் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்.

கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.

இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்டைகள் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்து ஆண்டைகளின் அட்டூழியத்தை அழித்தார்.

திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது.

அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்

அந்த புரட்சியின் மூலம் ரேஷன் கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.

அதனால்தான் அவர் மக்களால் #புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார் அழைக்கப்படுக்கிறார்... Thanks.........

orodizli
22nd February 2020, 04:50 PM
எம்.ஜி.ஆர் சங்கீத கொடை
- R.P.ராஜநாயஹம்

முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.

தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.

எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்த்து இசைத்து பாடவேண்டும்.’

பாலமுரளி சிரமேற்கொள்கிறார்.

தியாகராஜ கீர்த்தனைகளை தமிழில் மொழி பெயர்த்து பாடல்களை இசைப்படுத்துகிறார்.
கீர்த்தனைகளை மொழிபெயர்த்தவர் அவருடைய துணைவி அபயம் அவர்கள் தான்.

ஆறே மாதத்தில் எள் என்றால் எண்ணையாக தயாராகி விட்டார் பாலமுரளி கிருஷ்ணா.

எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைத்திருக்கிறார். பார்க்க பல முறை முயன்றார்.


முதல்வரை சந்திக்க இவரே முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.

அவ்வளவு சுலபமா அது?

எம்ஜிஆர் மறந்து விட்டார் போலிருக்கிறது. ராஜாங்க தலைமைக்கு எத்தனையோ சுமை.

சரிதான் என்று பாலமுரளி பிரமைகளை உதிர்த்து வேறு காரியங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். வெளி நாட்டு சங்கீத கச்சேரியே போதாதா?

இரண்டு வருடம் ஓடி விட்டது.

எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு.

”நான் உங்களிடம் சொன்ன வேலையை மறந்து விட்டீர்களா? இரண்டு வருடம் ஆகி விட்டது.”

பாலமுரளிக்கு எப்படியிருந்திருக்கும்?
When Caesar says “Do it”, it is performed.

பதற்றத்துடன் “அந்த பணியை நான் ஒன்றரை வருடம் முன்னரே முடித்து விட்டேன்.”

”அப்புறம் என்ன? என்னிடம் வந்து ஏன் சொல்லவில்லை?”

“ உங்களை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவே இல்லை”

வழி மறித்து தடுக்கிற நந்திகளுக்கு எம்.ஜி.ஆர் என்ற மஹாபுருஷர் விலக்கல்லவே. அவரும் அறியாததல்ல.

மிக சிறப்பான விழாவிற்கு எம்.ஜி.ஆர் ஆணையிடுகிறார்.

தியாகப்ரும்ம கீர்த்தனைகளை தமிழில் பால முரளி பாடி அரங்கேற்றுகிறார்.

எம்.ஜி.ஆர் உதவியாளரை அழைத்து சொல்கிறார். “பாலமுரளியிடம் பிரசாதத்தை கொடுங்கள்”

பிரசாத பை பெரிதாய் பாலமுரளி கையில்.

பாலமுரளி வீட்டிற்கு வந்து பார்க்கிறார்.

கத்தை கத்தையாய் பணக்கட்டு.

கட்டிலில் தான் அதையெல்லாம் எடுத்து வைக்கிறார்.

பத்து லட்சம் என்பது அன்று மிக மிகப்பெரிய தொகை.

அதோடு பாலமுரளி கிருஷ்ணா அதுவரை பார்த்தேயிராத பெருந்தொகை.

பால முரளி விம்மி,விம்மி அழுகிறார்.
தேம்பி அழுகிறார்.

https://www.facebook.com/photo.php?fbid=2576599659220151&set=a.1758817030998422&type=3&theater

…......

................................... Thanks.........

orodizli
22nd February 2020, 04:52 PM
இந்த வாரம் (21/02/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்
திரை காவியங்கள் பட்டியல் நண்பர்களின் பார்வைக்கு.
----------------------------------------
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று 1968 ல் பல அரங்குகளில் 100நாள் நிறைவு செய்த
ரகசிய போலீஸ் 115 பலமுறை வெளியீட்டில் வெற்றி கண்டபின் மீண்டும் டிஜிட்டல் வடிவில் முற்றிலும் புதிய தொழில்நுட்பத் தில் தயாராகி சேலம் ,திருச்சி மாவட்டங்களில் புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் சாதனையுடன் கீழ்கண்ட அரங்குகளில் தினசரி 4காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
சேலம் - அலங்கா ர்,
ஆத்தூர் - என்.எஸ்.
குமாரபாளையம்_கே. ஓ.என்.
மாரண்ட ஹல்லி -பொன் முடி,
சோ லை சிகாமணி - வெங்கடேஸ்வரா
எலம் பிள்ளை-நடராஜா
நல்லசமுத்திரம் -அருணாசலம்
ராசிபுரம் - விஜயலட்சுமி
திருச்சி - பேலஸ்,
கரூர் - லட்சுமி ராம்

சென்னை பாலாஜி
உழைக்கும் கரங்கள்
தினசரி 2 காட்சிகள்
( நண்பகல் /மாலை )

மதுரை சென்ட்ரல்
தேடி வந்த மாப்பிள்ளை
தினசரி 4 காட்சிகள்

திண்டுக்கல் என். வீ.ஜி. பி.- புதுமை பித்தன்
தினசரி 4 காட்சிகள்

கூடலூர் (கம்பம் ) வேல்முருகன்
ஆயிரத்தில் ஒருவன்
தினசரி 4 காட்சிகள்

திருப்பூர் அனுப்பர்பாளையம்
மணீஸ் அரங்கு
எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள்

திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில்
இன்று போல் என்றும் வாழ்க
வெள்ளி / சனி/ஞாயிறு
21/22/23/02/20
தினசரி இரவு காட்சி மட்டும்

கோவை கர்நாடிக் (23/02/20)ஞாயிறு முதல் எங்க வீட்டு பிள்ளை
தினசரி 4 காட்சிகள்
(வெள்ளியன்று வெளியான புதிய படத்திற்கு வரவேற்பும்/வசூலும் அறவே இல்லாததால்)......... Thanks to mr.Loganathan Sir...

orodizli
22nd February 2020, 04:53 PM
நாளை ஞாயிறு முதல் (23/02/2020) சென்னை திருவொற்றி யூர் எம்.எஸ்.எம்.அரங்கில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வழங்கும் "நம்நாடு" தினசரி 2 காட்சிகள் (மேட்னி/இரவு) வெள்ளி திரைக்கு வருகிறது... Thanks mr.Loganathan Sir...

fidowag
23rd February 2020, 09:49 AM
புதிய படங்களின் வருகையால் மதுரை வெற்றி, அண்ணாமலை அரங்குகளில் ரகசிய போலீஸ் 115 படம் வெளியாவது தள்ளி வைப்பு.

fidowag
23rd February 2020, 09:52 AM
நாளை ஞாயிறு முதல் (23/02/20) சென்னை திருவொற்றி யூர் எம்.எஸ்.எம்.அரங்கில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வழங்கும் "நம்நாடு" தினசரி 2 காட்சிகள் (மேட்னி/இரவு) வெள்ளி திரைக்கு வருகிறது

fidowag
23rd February 2020, 09:53 AM
சேலம் சரஸ்வதி அரங்கில் 21/02/20 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

orodizli
24th February 2020, 02:47 PM
நாங்கள் எந்த நிலையிலும் வணங்கப்படும் தெய்வம் புரட்சி தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு இரண்டு கட்டம்.ஒன்று திரையுலகம்.அதில் தலைவரே வெற்றி கொடி நாட்டி இன்று வரை தொய்வில்லாமல் பறக்க செய்துவிட்டார்.இன்னொன்று கழகம்.அதை ஒவ்வொரு பருவத்திலும் யாராவது ஒருவர் தலைமை தாங்கி பண்பாகவும் சமயோகிதமாகவும் தொண்டர் படையை வழிநடத்திதான் வெற்றி பெறவேண்டும். ஆனால் புரட்சி தலைவியாகிய தாங்கள் எதிரியின் நிழலை பார்த்தாலே நெற்றிக்கண் திறந்து எரித்துவிடுவீர்கள். அந்த அளவிற்கு கழகத்தை ராணுவகட்டு கோப்புடன் பொதுமக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக 30 ஆண்டுகள் புரட்சிதலைவர் உருவாக்கிய கழகத்தை கட்டிக்காத்து இன்று வரை தொய்வில்லாமல் நடைபெறவும் வழிகாட்டிய உங்கள் சேவைக்கு நன்றி செலுத்த 72 வது பிறந்த நாளில்(24.2.2020) கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம். இவன். ஷிவபெருமாள்.......... Thanks.........

orodizli
24th February 2020, 05:02 PM
தற்போது வெற்றி நடை காண்கிறார், திரையுலக வசூல் சக்கரவர்த்தி "எங்க வீட்டு பிள்ளை" கோவை - காவேரி a/c dts., திரையரங்கிலும்...

orodizli
24th February 2020, 11:49 PM
இப்பொழுதும் வெற்றி நடை போடும் ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் திகட்டாத காவியமாம் "ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவம் திருச்சி, கரூர் , சேலம் உட்பட பல செண்டர்களில் அசத்துகிறார், ஆனால் நாளிதழ்களில் எந்த விதமான விளம்பரம் தரவில்லை... மாறாக ஓடாத படங்களை, டிக்கெட் கிழித்து வசூலானதாக கணக்கு காண்பிக்கும் டப்பா படங்களுக்கு வேலை மெனக்கெட்டு விளம்பரம் தரும் ஆத்மாக்களை என்னவென்று சொல்வது?!☺️

orodizli
25th February 2020, 02:54 PM
https://youtu.be/dSire23PRM0......... Thanks.........

orodizli
25th February 2020, 02:56 PM
https://youtu.be/slmkElnAy5o... Thanks...

orodizli
25th February 2020, 02:57 PM
https://youtu.be/kQaJOohXQNo... Thanks...

orodizli
25th February 2020, 02:58 PM
https://youtu.be/caucK-tSIsY... Thanks...

orodizli
25th February 2020, 02:59 PM
https://youtu.be/wpLM0PdzdsM... Thanks......

orodizli
25th February 2020, 02:59 PM
https://youtu.be/fVr-zc1SoC8... Thanks...

orodizli
25th February 2020, 03:00 PM
https://youtu.be/7ArkSOvWr2c... Thanks...

orodizli
25th February 2020, 03:01 PM
https://youtu.be/sgxxOUYm-FM... Thanks...

orodizli
25th February 2020, 07:26 PM
கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும்
--------------------------------------------------------------

நன்றி: திரு.சுதாங்கன்

பி.ஆர் . பந்*துலு படம் ஒன்*றிற்கு வாலி பாட்*டெ*ழு*தும் பொழுது, ` நல்ல இலக்*கிய நயத்*தோடு இந்த டூயட் இருக்*க*லாம்’ என்று எம்.ஜி.ஆர்., வாலி*யி*டம் சொன்*னார். அந்த மாதி*ரியே ஒரு பல்*ல*வியை எழுதி விஸ்*வ*நா*த*னி*டம் கொடுத்*தார் வாலி. `அண்ணே, இந்த பல்*லவி சரித்*தி*ரப் படத்*துக்*குத்*தான் நல்லா இருக்*கும். இது சமூ*கப் படம். வேற எழு*திக் கொடுங்க’ என்று விஸ்*வ*நா*தன் வாலி எழு*திய பாடலை அவ*ரி*டமே திருப்பி கொடுத்*து*விட்*டார்.
வாலி வேறு பாடல் எழுதி, அந்*தப் பாடல் ஒலிப்*ப*தி*வா*யிற்று.

அன்று மாலை வாலிக்கு கே. வி. மகா*தே*வன் கம்*போ*சிங். படம் `அரச கட்*டளை.’ அது சரித்*தி*ரப் படம் என்*ப*தால், காலை*யில் விஸ்*வ*நா*த*னி*டம் காட்*டிய அதே பல்*ல*வியை மகா*தே*வ*னி*டம் கொடுத்து இசை*ய*மைக்க வேண்*டி*னார். ‘அரச கட்*டளை’ படத்தை பார*கன் டாக்*கீ*சில் பார்த்து விட்டு வந்து நள்*ளி*ர*வில் வாலிக்கு போன் செய்*தார் விஸ்*வ*நா*தன்.

`வாலி*யண்ணே, நான் சொன்ன மாதி*ரியே, அந்*தப் பாட்டு சரித்*தி*ரக் கதைக்கு எவ்*வ*ளவு பொருத்*தமா இருந்*தது பாத்*தீங்*களா?’ மாமா ரொம்ப அற்*பு*தமா டியூன் பண்*ணி*யி*ருக்*காரு’ என்று மனந்*தி*றந்து பேசி*னார் விஸ்*வ*நா*தன்.

அது*தான் விஸ்*வ*நா*தன். இன்*னொரு இசை*ய*மைப்*பா*ள*ரா*யி*னும் அவர் தம் பணி அவர் சிந்*தையை கவ*ரு*மா*யின், வாய்*விட்டு ஆர*வா*ர*மா*கப் பாராட்*டு*வார் விஸ்*வ*நா*தன்.காம்*போதி ராகத்*தில் `மெழு*குத்*திரி’ என்ற ஒரு பாடலை பூவை செங்*குட்*டு*வன் எழு*தி*யது. அம*ரர் எம்.பி. ஸ்ரீனி*வா*சன் அற்*பு*த*மாக இசை*ய*மைத்*தி*ருந்*தார். அவர் வீடு தேடிச் சென்று பாராட்*டி*னார் விஸ்*வ*நா*தன்.


`அரச கட்*டளை’ படத்*தில் இடம்*பெற்ற வாலி*யின் பாடல் இது*தான்.

`புத்*தம் புதிய புத்*த*கமே – உனைப்

புரட்*டிப் பார்க்*கும் புல*வன் நான்

பொதிகை வளர்த்த செந்*த*மிழே உனைப்
...
பாட்*டில் வடிக்*கும் கவி*ஞன் நான்’......... Thanks...

orodizli
26th February 2020, 01:51 PM
https://youtu.be/oCKxfrYjh-E......... Thanks.........

orodizli
26th February 2020, 01:53 PM
https://youtu.be/xCOydDzVCyM... Thanks...

fidowag
26th February 2020, 11:55 PM
குமுதம் வார இதழ் -04/03/20
----------------------------------------------
நடையல்ல நாட்டியமே தான் -- ஆர்.சி.சம்பத்*
--------------------------------------------------------------------------

சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் நான் பணியாற்றியபோது எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டது .* அவரை வைத்து ஒரு சமூக கதையை படமாக்க விரும்பினேன் . பாக்கெட் மார் என்னும் இந்தி படத்தை போட்டுக் காட்டினேன் .* சரி இந்த கதையை யே* எடுக்கலாம் . எனக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது என்றார் .* படத்திற்கு " திருடாதே" என்று பெயர் சூட்டினோம் .*

அப்போது நான் எழுதிய தங்கமலை ரகசியம் படத்தினை பி.ஆர். பந்துலு எடுத்துக் கொண்டிருந்தார் .* ஒருநாள் சென்னை கடற்கரையில் தனியாகஉட்கார்ந்து கொண்டிருந்தேன் .* அப்போது அங்கு டைரக்டர் சுப்ரமணியம் புதல்வி* பத்மா சுப்பிரமணியம் வந்தார் .* அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள் .**

பல விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு வரும்போது நான் தங்கமலை ரகசியம் படத்திற்கு கதை எழுதி இருப்பதையும் அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன் .**

உடனே, பத்மா , இந்த பெண் பெங்களூரை சேர்ந்தவள்.* தாய்மொழி கன்னடம் .* தமிழ் படத்தில் நடிக்க ஒரு சிறு சான்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .

தங்கமலை ரகசியம் படத்தில் நடனமணிகளில் ஒருத்தியாக நடிக்க வைத்தோம் . சிறு வேடம்தான் . சம்பளம் இருநூற்று ஐம்பது .* அந்த பெண்தான் பின்னாளில் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவி .**

எம்.ஜி.ஆரிடம் , புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன் .* ஒரு டெஸ்ட் எடுங்கள்* பார்க்கலாம் என்றார் .* டெஸ்ட் எடுப்பது என்பது பலவிதமாக நடிக்க சொல்லி படமாக எடுப்பது .**

டெஸ்டை எம்.ஜி.ஆர். பார்த்தார் .* கூட நாங்கள் சிலரும் பார்த்தோம் .* சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு காலை தாங்கி தாங்கி* நடந்து சென்றதை சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டி காட்டினார்கள் .* அதற்கு எம்.ஜி.ஆர்.*அதுவும் ஒரு செக்ஸியாகத்தானே இருக்கிறது .* இந்த பெண்ணையே* கதாநாயகியாக போட்டு விடுங்கள் என்றார் .* திருடாதே திரைப்படமாக்க மிக பெரிய வெற்றி கண்டது .* எம்.ஜி.ஆறுக்கும் வெற்றிகரமான முதல் சமூக படமாக அமைந்து , அவரது வளர்ச்சிக்கு திருப்பு முனை ஆனது .

--சின்ன அண்ணாமலை .

orodizli
27th February 2020, 09:50 PM
நேற்று கேரளா வடவனூர் உள்ள புரட்சித்தலை வரின் இல்லமான பலயை வீட்டை புதுப்பித்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விழா நடந்தது ,அதில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ,நடிகர் இயங்குனர் மான பாண்டியன்ராஜன் ,புரட்சித்தலைவரின் வளர்ப்பு மகள் ராமவரம் தோட்டத்தில் வசிக்கும் லதா மேடம் தலைவர் உறவினர்கள் பல ஊர்கலிருந்து தலைவர் பக்தர்கள் கலந்து கொண்டனர் ,சென்னை முன்னாள் மேயர் அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் இந்த வீட்டை புதுப்பித்து கொடுத்து எங்களுக்கு காணும் பாக்கியம் ஏற்படுத்தி கொடுத்த அண்ணன் அவர்களுக்கு கோவை பக்தர்கள் சார்பில் நன்றி நன்றி,......... Thanks.........

orodizli
27th February 2020, 09:51 PM
https://youtu.be/JyI_BUID_7g......... Thanks.........

orodizli
27th February 2020, 09:52 PM
https://youtu.be/HDcbcEhvvPo... Thanks...

orodizli
27th February 2020, 09:52 PM
https://youtu.be/om7MbqQQ8f0... Thanks...

orodizli
27th February 2020, 10:06 PM
ஸ்ரீ MGR வாழ்க

நடித்தால் துள்ளல்

கொடுத்தால் வள்ளல்

எம்ஜிஆர் பக்தர்களே

படத்தில் நம் உயிரினும் மேலான தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்

பாண்டிச்சேரி மாநில அண்ணா திமுக முதலமைச்சர் ராமசாமி அவர்கள்

///////////////////////////////////////////////////////

முகநூல் எம்ஜிஆர் பக்தர்களே

1972 ஆண்டு மதுரையிலே ஒரு பிரம்மாண்டமான திமுக மகாநாடு நடைபெற்றது

கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார்

எம்ஜிஆர் திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தார்

///;///////////////////?//////////////////////////////

இந்த மகாநாட்டில் ஒரு மிகப்பெரிய சிறப்பான புதுமையான அம்சம் ஒன்று நடைபெற்றது

இப்பொழுது கட்டவுட் பிளக்ஸ் போர்டு வைப்பது போன்று அந்த காலகட்டத்தில்

பிரம்மாண்டமாக கடை வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் ஆர்ச் அமைப்பார்கள்

மூங்கில் தென்னங்கீற்று இவைகளை பயன்படுத்தி ஆர்ச் அமைப்பார்கள்

மதுரையில் அமைக்கப்பட்ட ஆர்ச்களைப் பற்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது

இந்த ஆர்ச்களை பார்ப்பதற்காகவே அனைத்து கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தொண்டர்கள் எல்லாம் மதுரையில் வந்து குவிந்தார்கள்

மதுரை மாவட்டச் செயலாளர் முத்து அவர்கள் இந்த மாநாட்டை நடத்தினார்

சனி ஞாயிறு இரண்டு நாட்கள் அந்த மகாநாடு நடைபெற்றது

அந்த மகாநாட்டின் ஊர்வலத்திற்கு தலைமை மு க முத்து

மு க முத்து அவர்களுக்கு மதுரை முழுவதும் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் வண்ண வண்ணமாக ஒட்டப்பட்டிருந்தன
////////////////////////?/////////?//?///////////////

எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை காலை மதுரை சென்றடைந்தோம்

ஊர்வலம் புறப்படுகிற / வண்டியூர் தெப்ப குளம் மைதானத்திலிருந்து

நாங்கள் நடந்தே வழியில் உள்ள அனைத்து ஆர்ச்களையும் பார்த்துக்கொண்டே வந்தோம்

ஒவ்வொரு ஆர்ச்களையும் பார்த்துக் கொண்டு வரும் பொழுது எங்களுக்கு மிகவும் பயங்கரமான கோபம் வந்தது

அனைத்திலும் கருணாநிதி அவர்களுடைய படங்கள்தான் இருந்தன

அடுத்து மதுரை முத்து அவர்களுடைய படங்களும் இருந்தன

ஆனால் அந்த மகா நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆர்ச் இருந்தது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த. எஸ் எஸ் தென்னரசு அவர்களுக்கு ஒரு ஆர்ச்
வைத்திருந்தார்கள்

ஆனால் 1967 இல் இருந்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த எம்ஜிஆர் அவர்களுடைய படம் எங்குமே கிடையாது

ஒவ்வொரு தேர்தலிலும் எம்ஜிஆர் ரசிகர்கள்திமுகவுக்காக ஓடிஓடி நாங்கள் உழைத்தோம்

எம்ஜிஆருக்காக தான் திமுகவிற்கு உழைத்தோம்

1967 ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில்
பழனி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு நான் தேர்தல் வேலை செய்தேன்

1971 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது

பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட புலவர் பழனிச்சாமி அவர்களுக்காகவும் நான் தேர்தல் வேலை செய்தேன்

எம்ஜிஆர் ரசிகன் ஆகிய நாம் எம்ஜிஆருக்காக நான் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டேன்

என்னைப்போல் தமிழ் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான , கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் காகத்தான் திமுகவுக்கு ஓட்டு கேட்டார்கள்

அப்படிப்பட்ட எம்ஜிஆர் அவர்களுக்கு எந்த இடத்திலும் ஆர்ச் கிடையாது

மகாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று நாங்கள் முடிவு எடுத்தோம்

மறுநாள் எம்ஜிஆர் மகாநாட்டில் பேசுகிறார் அந்த நேரத்தில் மகாநாட்டிற்கு சென்று எம்ஜிஆரின் பேச்சைக் கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்

ஆகவே நாங்கள் மகாநாட்டிற்கு செல்லாமல்
தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள. நான் ஏன் பிறந்தேன் என்ற சினிமாவை பார்க்கலாம் என்று நாங்கள் சென்றோம்

செல்லும் வழியில் ஒரு மாடியின் மீது மதுரை நகர எம்ஜிஆர் மன்றம் என்று ஒரு போர்டு மாட்டி இருந்தது

நாங்கள் அந்த மாடிக்கு சென்றோம்

மாடியில் ஒரு சிறிய அறை

அது இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள்

அவர்கள் யார் என்று நான் கேட்டேன்

மதுரை நகர தலைமை எம்ஜிஆர் மன்ற தலைவர் / தங்கம்

எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த. இளவரசன்

அவர்களைசுற்றி பயங்கரமான எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டம்

கூட்டத்தில் வந்திருந்த அந்த எம்ஜிஆர் ரசிகர்கள்

உட்கார்ந்திருந்த அந்த இரண்டு பேர்களிடமும்

திட்டம் போட்டு இந்த மகாநாட்டில் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்

என்று ஆக்ரோசமாக கூறினார்கள்

அதற்குத் தங்கம் அவர்கள்

நாளை காலை விமானத்தில் எம்ஜிஆர் அவர்கள் மதுரை வருகிறார்

பாண்டியன் ஓட்டலில் தங்குகிறார்

அவரை சந்தித்துஅனைத்து விவரங்களையும் கூறலாம் என்று கூறினார்

மறுநாள் காலை 11 மணிக்கெல்லாம் நாங்கள் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு சென்று விட்டோம்

எம்ஜிஆர் அவர்கள் விமானநிலையத்தை விட்டு புறப்பட்டடு விட்டார்

இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் ஹோட்டல் வந்துவிடுவார் என்று கூறினார்கள்

நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது கூட்டம் பயங்கரமாக கூடிவிட்டது

போலீஸார் எங்களை எல்லாம் பாண்டியன் ஓட்டல் முன் நிற்க விடாமல் அப்புறப் படுத்துகிறார்கள்

ஏன் எம்ஜிஆர் வருவதற்கு இவ்வளவு காலதாமதம்

அதற்கு என்ன காரணம் என்று பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது

மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் கம்பெனி

,தீ விபத்தில் கருகி விட்டது

அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சென்று

அங்குள்ள சர்க்கஸ் கம்பெனி தொழிலாளர்களைஎல்லாம் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு

அவர்களுக்கு10 பத்தாயிரம் ரூபாய் நிதி கொடுத்து விட்டு பிறகு பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தார்

பிறகு எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த

தங்கம்/ இளவரசன் / ஸ்ரீவில்லிப்புத்தூர் தாமரைக்கனி

இவர்களை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தார்கள்

மாலையில் எம்ஜிஆர் பேசுகிறார் என்ற காரணத்திற்காக நாங்கள் 2மணிக்கு

டிக்கெட் வாங்கிக்கொண்டு மகா நாட்டிற்குள் சென்றோம்

நாங்கள் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அவர்கள் பேச ஆரம்பித்தார்

எம்ஜிஆர் அவர்கள் பேசி முடிந்ததும் நாங்கள் எல்லாம் மகாநாட்டு கொட்டகை விட்டு வெளியேறினோம்

மகாநாட்டில் இருந்த பெரும்பாலான மக்கள் வெளியேறினார்கள்

உடனே மதுரை நகர கவுன்சிலர /
M.R. கனேசன் என்பவர்

எல்லோரும் அமைதியாக அமருங்கள் கட்சித் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேசுவார்கள் உட்காருங்கள் உட்காருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார்

மகா நாட்டிலிருந்த முக்கால்வாசி மக்கள் வெளியேறி விட்டார்கள்

நாங்கள் மகாநாட்டு கொட்டகைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும்போது மைக்கில் ஒரே சலசலப்பு

பேசுவதற்கு எழுந்த முதலமைச்சர்கருணாநிதி அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார்

இப்படி எம்ஜிஆருக்காக எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டோம்

அடுத்து சில மாதங்களில் எம்ஜிஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்

/////////////////////////////////////////////////////

எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தார்

நாங்களெல்லாம் எம்ஜிஆருக்கு பின்னால் வந்து அண்ணா திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டோம்

அண்ணா திமுக மேடையில் நாங்களெல்லாம் கருணாநிதி அவர்களைப் பற்றி கூறிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா

கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்ஜிஆர் அவர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று கூறினோம்

எம்ஜிஆர் உடைய படத்தை இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி என்று கூறினோம்

அண்ணா திமுக தொண்டர்கள் அடிபட்டு உதைபட்டு உயிரைக்கொடுத்து இந்த கட்சியைவளர்த்தார்கள்

1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்

1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்

1983ஆம் ஆண்டு அண்ணா திமுகவுக்கு ஜெயலலிதா வந்தார்

ஜெயலலிதா சினிமாமார்க்கெட் இழந்து ஏழு ஆண்டுகள் வீட்டில் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்

1984 ஆண்டு எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு

எம் ஜிஆர் மரணம் அடையும் வரை

கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருந்தார்
தனியாக டெல்லி சென்று ராஜீவ் காந்தியை சந்தித்து எம்ஜிஆருக்கு உடல் நலம் சரியில்லை

இந்திய அரசியல் சட்டப்படி உடல்நலம் இல்லாதவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியாது

ஆகவே நீங்கள் எம்ஜிஆரை ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்

என்று ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே வந்தார்

எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு

கட்சியை இரண்டாக உடைத்தார் ஜெயலலிதா

ஜானகி ஆட்சியைக் கவிழ்த்தார்

ஜானகி அணியும் ஜே அணியும் போட்டியிட்டார்கள்

கருணாநிதி முதலமைச்சர் ஆனார்

எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை கருணாநிதி முதலமைச்சராக வர முடியவில்லை

ஜானகி அம்மையார் கட்சியை ஒன்றுபடுத்தி ஜெயலலிதாவிடம் கட்சியின் இரட்டை இலையை ஒப்படைத்தார்

1981 ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகாலத்திலிருந்து ஜெயலலிதா மரணம் அடையும் வரை எம்ஜிஆர் பெயரை சொல்ல விடாமல் எம்ஜிஆர் படங்களை
இருட்டடிப்பு செய்து ஆட்சி நடத்தினார்

கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் படத்தை இருட்டடிப்பு செய்து ஆட்சி நடத்துகிறார் என்ற காரணத்திற்காக கருணாநிதி மேல் பயங்கர கோபம் எங்களுக்கு வந்தது

அதே காரியத்தை தான் ஜெய லலிதாவும் செய்தார் கருணாநிதி என்ன எம்ஜிஆருக்கு கெடுதல் செய்தாரோ

அதை விட லட்சம் மடங்கு ஜெயலலிதா எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார்

கருணாநிதியின் ஊழலை எதிர்த்து தான் அண்ணா திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டது

1972 ஆண்டு
மு க முத்து உங்கப்பனுக்கு ஏது சொத்து என்று நாங்கள் கோஷம் போட்டோம்

இப்பொழுது திமுகவினர்

அண்ணா திமுக தொண்டர்களை பார்த்து

ஒங்கஅம்மாவுக்கு ஏதுடா ஒன்றரை லட்சம் கோடி சொத்து என்று

கேலி செய்கிறார்கள் கிண்டல் செய்கிறார்கள் நக்கல் செய்கிறார்கள் நையாண்டி செய்கிறார்கள்

எங்கள் கலைஞர் அவர்களைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் குற்றவாளி என்று கூறினீர்கள்

உங்க அம்மா பெங்களூர் கமிஷன்கோர்ட் குற்றவாளி என்று கிண்டல் செய்கிறார்கள்

எங்களைப் போன்ற பழைய அண்ணா திமுகவினர் தலைகுனிந்து செல்கிறோம்

ஜெயலலிதா ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து அண்ணா திமுக வைஊழல் கட்சி என்ற பெயரை உருவாக்கி விட்டார்

கருணாநிதி எம்ஜிஆர் க்குதுரோகம் செய்தால் எம்ஜிஆர் ரசிகர்கள்

கருணாநிதியை
தீயசக்தி கருணாநிதி என்கிறார்கள்

கருணாநிதியை விட. லட்சம் மடங்கு எம்ஜிஆருக்கு கெடுதல் செய்த

ஜெயலலிதாவை நல்ல சக்தி என் கிறார்கள்

பழைய எம்ஜிஆர் ரசிகர்கள்

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன

இந்தப் பதிவைடைப்செய்து என் விரல்கள் எல்லாம் வலி எடுத்து விட்டன

அடுத்து நான் இன்னும் பல பழைய விஷயங்களை உங்களிடம் பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்......... (இது ஒரு ரசிக சகோதரரின் சொந்த கருத்து)... Thanks.........

fidowag
27th February 2020, 10:17 PM
தனியார் தொலைக்காட்சிகளில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு*
---------------------------------------------------------------------------------------------------------------------------
27/02/20* * *- கே டிவி* *- பிற்பகல் 1* மணி - நான் ஆணையிட்டால்*

29/02/20* * * * கே. டிவி. - பிற்பகல்* 1 மணி* - விவசாயி*

02/03/20* * * * *கே. டிவி -பிற்பகல் 1 மணி* - மகாதேவி*

05/03/20* * * * *கே. டிவி -பிற்பகல் 1 மணி - ராமன் தேடிய சீதை*

07/03/20* * * * *கே டிவி. -பிற்பகல் 1 மணி -தாய் சொல்லை தட்டாதே

fidowag
27th February 2020, 10:18 PM
தென்னக ஜேம்ஸ் பாண்ட்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மதுரை ,தேனீ, பழனி நகரங்களுக்கு வெற்றி விஜயம் .
----------------------------------------------------------------------------------------------------------------------

நாளை முதல் (28/02/20)* மதுரை வெற்றி, தேனீ -வெற்றி, பழனி சந்தானகிருஷ்ணா*அரங்குகளில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த*ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் வசூல் வேட்டை .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் குமார் , நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
27th February 2020, 10:34 PM
நாளை முதல் (28/02/20, 29/02/20,01/03/20) வெள்ளி /சனி /ஞாயிறு இரவு 8 மணி காட்சியில் மட்டும் திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "முகராசி " திரையிடப்படுகிறது . குறுகிய இடைவெளியில் 6 வது*திரைக்காவியம் .

தகவல் உதவி ;திருப்பூர் நண்பர் திரு.நடராசன் .

fidowag
27th February 2020, 10:59 PM
உலக எம் ஜி ஆர் பேரவை ! உலக பக்தர்களை ஓரணியில் ஒருங்கிணைப்பது - தலைவர் புகழ் காக்க உலக மாநாடுகள் நடத்துவது - தலைவர் புகழ் போற்ற விழாக்கல் நடத்துவது என்பதோடு நிற்க்காமல் அடுத்த தலைமுறைக்கு மக்கள் திலகம் புகழ் பரவ வேண்டும் என்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயலாற்றுகிறது ! அவ்வகையில் உலக எம் ஜி ஆர் பேரவையின் அங்கமாக திகழும் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் தலைவரின் மிகப் பெரும் பக்தர் சைலீஸ்பாசு தலமையில் இயங்கும் "அபுதாபி எம் ஜி ஆர் பேரவை " அனுசரணையுடன் நடக்கும் கால் பந்து போட்டி வரும் 28/2/2020 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம் ! மக்கள் திலகத்தின் உலக பக்தர்கள் பெருமையுடன் வாழ்த்தி வரவேற்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ! ( நான்கு ஆண்டுகளாக் போட்டிகள் நடந்தாலும் , இவ்வாண்டுதான் உலக எம் ஜி ஆர் பேரவையில் பதிவு பெற்று நடத்தப்படுகிறது )

fidowag
27th February 2020, 11:20 PM
தினமணி -கொண்டாட்டம் -23/02/20
---------------------------------------------------------

ரோஜா மலரே - சச்சு*
------------------------------------

அந்த காலத்தில் எங்களுக்கு வேலையே சினிமாவில் நடிப்பது மட்டுமல்ல .* சினிமா பார்ப்பதுதான் .* ஜனக் ஜனக் பாயல் பாஜே என்று ஒரு இந்தி படம் வந்தது .* அந்த படத்தை இயக்கியவர் வி.சாந்தாராம் .* அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் .ஒரு செய்தியை இங்கு முக்கியமாக சொல்ல விரும்புகிறேன் .**


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம் ஒரு நாள் இயக்குனர் வி.சாந்தாராம் சென்னைக்கு வருகை புரிந்தார் .* அப்போது நவரங் படம் எடுத்ததற்காக அவருக்கு பரிசு ஒன்றை அளிக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். நவ என்றால் 9 என்று அர்த்தம் .* அதனால் அவருக்கு 9 ச்வரனில் தங்க செயினை செய்து பரிசளிக்க விரும்பினார் .*


அந்த நாளும் வந்தது .மேடையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் ,முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கூட அமர்ந்திருந்தனர் .* இந்த சந்தர்ப்பத்தில் தான் கொண்டு வந்த செயினை இயக்குனர் சாந்தாராமிடம் கொடுக்க, அவர் எம்.ஜி.ஆரை பார்த்து, நீங்களே எனக்கு போட்டு விடுங்கள் என்று கூற , எம்.ஜி.ஆர். அவர் கழுத்தில் போட முயற்சிக்க , அது கை தவறி கீழே விழ, உடனே எம்.ஜி.ஆர். குனிந்து அதை எடுக்க முயற்சிக்க , புகைப்படக்காரர்கள் படமெடுக்க, அது சாந்தாராம் காலில் எம்.ஜி.ஆர். விழுந்தது போல் இருந்தது .* அடுத்த நாள் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் தெரியுமா ?* நான் அவர் காலில் விழுந்தாலும் தவறொன்றுமில்லை . மிக பெரிய இயக்குனர் மட்டும் இல்லை. என்னை விட எல்லாவிதத்திலும் அவர் பெரியவர் என்று கூறினாராம் .**


1975ல்* எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான படம் இயக்குனர் சாந்தாராம் எடுத்த ஒரு படத்தின் தமிழாக்கம்தான் .* ஆமாம் , சிறை தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே* அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் ஒரு சிறந்த படத்தை எடுத்துள்ளார் . வி.சாந்தாராம் .* அதுதான் தோ* ஆங்கேன்* பாரா ஹாத் என்ற படம். இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு மைல் கல் என்று கூறலாம் .* பெர்லின் நகரில் நடந்த ஒரு திரைப்படவிழாவில்* வெள்ளி கரடி விருதையும், அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது .* இந்த திரைப்படத்தை தான் எம்.ஜி.ஆர். தனது நடிப்பில் " பல்லாண்டு வாழ்க " என்று தமிழில் நடித்து வெற்றி படமாக்கினார் என்பது வரலாறு .**

orodizli
28th February 2020, 10:44 AM
சென்னை மூலக்கடை- ஐயப்பா DTS., இன்று 28-02-2020 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான தொடக்கம்... என்றும் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "நேற்று இன்று நாளை" காவியம் தினசரி 3 காட்சிகள் வெற்றி பவனி உலா......... Thanks.........

fidowag
28th February 2020, 01:11 PM
இன்று முதல் (28/02/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் திரைக்காவியங்கள்*தமிழகத்தில் வெளியான பட்டியல்*
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரகசிய போலீஸ் 115 - மதுரை வெற்றி , தேனீ வெற்றி , பழனி - சந்தான கிருஷ்ணா**-* *இணைந்த 2 வது* வாரம்.* - தினசரி 4 காட்சிகள்*


நேற்று இன்று நாளை - சென்னை மூலக்கடை ஐயப்பா - தினசரி 3 காட்சிகள்*


நம் நாடு* * * * * * * * * * - நகரி (ஆந்திர பிரதேசம் ) ஸ்ரீநிவாஸா* அரங்கில்* * தினசரி 2 காட்சிகள் -இணைந்த 6 வது* வாரம் .


விவசாயி* * * * * * * - கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள் .கடந்த டிசம்பர் மாதம்***கோவை டிலைட்டில் தினசரி 2 காட்சிகள் நடைபெற்றது .

ஆயிரத்தில் ஒருவன் - கீரனூர் லட்சுமி யில்* (திருச்சி மாவட்டம் ) - தினசரி 4 காட்சிகள்*

முகராசி* * * * * * * * * - திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் -வெள்ளி /சனி /ஞாயிறு***தினசரி* இரவு காட்சி மட்டும் .

ரிக் ஷாக் காரன்* - தஞ்சை விஜயா* ( 21/02/20முதல் ) தினசரி 4 காட்சிகள்* *நடைபெற்றது .

fidowag
28th February 2020, 01:19 PM
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் அவர்களின் வசூல் வேட்டை தொடர்கிறது*
---------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை சென்ட்ரலில் கடந்த வாரம் வெளியான நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின்*தேடி வந்த மாப்பிள்ளை* ஒரு வார வசூலாக ரூ.1,05,000/- ஈட்டி அபார சாதனை.சிவராத்திரி திருவிழா சமயத்தில் இந்த வசூல் பிரமிக்கத்தக்கது என்று விநியோகஸ்தர் தகவல் அளித்ததாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் செய்தி அளித்துள்ளார் .

திருச்சி பேலஸில் கடந்த வாரம் வெளியான தென்னக ஜேம்ஸ் பாண்டாக நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த ரகசிய போலீஸ் 115 -டிஜிட்டல்* ஒரு வார வசூலாக*ரூ.98,000-/-* வசூலாகி சாதனை புரிந்ததாக திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார் . விரைவில் திருச்சி முருகனில் சாதனை தொடரும் .............

fidowag
28th February 2020, 04:53 PM
தமிழ் இந்து - 28/02/20
திரை நூலகம் - ஓர் உதவியாளரின் அனுபவங்கள் - ரசிகா*
---------------------------------------------------------------------------------------------


எம்.ஜி.ஆர். எனும் உச்ச நட்சத்திரத்தின் திரையுலக வாழ்க்கை குறித்து நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வந்திருக்கின்றன.* ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய பொது வாழ்க்கையின் ஆளுமையை அருகிலிருந்து கவனித்து எழுதப்பட்ட புத்தகங்கள் அரிது எனலாம் .* "சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் " எனும் இந்த நூல் தனது சின்ன சின்ன கட்டுரைகளால் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது .* 1972 தொடங்கி , அதன்பின்* எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக இருந்தவர் கே. மகாலிங்கம் .* அனுபவ சாட்சியம் போல் அமைந்திருக்கும் புத்தகம் இது .* மிக முக்கியமாக எம்.ஜி.ஆர். சந்தித்த கடினமான தருணங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்* மகாலிங்கம் என புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஐந்து முன்னுரைகளிலும் சுட்டி காட்டபட்டிருக்கிறார்* அதை 456 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் 110 குறுங்கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .*

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய கார்களின் பதிவெண்ணாக*4777 எப்படி தேர்வானது என்பதில் தொடங்கி, அவர் முன்னின்று நடத்திவைக்கும் திருமணங்களில் அவர் தாலியை எடுத்து கொடுக்கும் பங்கு, அவருடைய கண்டிப்பு, அன்பு, அரவணைப்பு , வள்ளல் தன்மை மணிதநேயம், வறிய மக்கள் மீதான கரிசனம் , அரசியல் சாணக்கியம் என அவருடைய பன்முக ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகளைத் தாண்டி, அவருடைய அரசியல் வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அறிந்து கொள்ள நினைக்கும் யாருக்கும் இந்த புத்தகம் மற்றுமொரு புதையல் .



சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் - கே.மகாலிங்கம் , மூன்றெழுத்து பதிப்பகம், ஆர். ஏ. புரம் , 54/29 , மூன்றாவது பிரதான சாலை, சென்னை -28.தொடர்புக்கு : 9444019079

fidowag
29th February 2020, 03:42 PM
தினமலர் -29/02/20
---------------------------------
காலத்தை வென்றவன் -2
------------------------------------------
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 103ம் பிறந்த நாள் விழா , சிங்கப்பூரில் சமீபத்தில் நடந்தது .**

காலத்தை வென்றவன் நீ - பாகம் 2 என்ற அந்த நிகழ்வில், சிங்கப்பூர் , மலேசியா*மற்றும் தமிழக கலைஞர்கள் பலர், ஆடல், பாடல் என்று அசத்தினர் .

விழாவில், 50* பேருக்கு , பாராட்டு பட்டயங்கள் வழங்கப்பட்டு , கௌரவிக்கப்பட்டனர் .* ஏழு பேருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது .**

எம்.ஜி.ஆர். , ஈவண்ட் புரோமோட்டர்ஸ்* மற்றும் அன்னை சாரதா மூவிஸ் இணைந்து,இதை நடத்தினர் .* இந்நிகழ்ச்சி, மூன் டிவி.யில் மார்ச் 1 ம்* தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது .**

fidowag
29th February 2020, 03:56 PM
தினமலர் -29/02/20
--------------------------------
மறக்க முடியுமா ?* -- ஆயிரத்தில் ஒருவன்*
----------------------------------------------------------------------
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ? "சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் "* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இந்த வசனத்தை கேட்கும் போது , ரசிகர்கள் சிலிர்த்துக் கொள்வர். ஆம். ஒரு படத்தின் வெற்றிக்கு , வசனங்களும் முக்கியம்*

பொருளாதார சிக்கலில் சிக்கிய பி.ஆர். பந்துலுவிற்கு உதவிக்கரம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.* ஹாலிவுட் படத்திலிருந்து தழுவிய கதை, ஆயிரத்தில் ஒருவன் .**அது எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாக பொருந்தியது.**

இப்படத்தில் நடிப்பதற்காக, 1 ரூபாய் மட்டுமே, எம்.ஜி.ஆர். முன்பணமாக பெற்றுக் கொண்டார் .* படம் வெளியாகி வெற்றி பெற்றபின் , பி.ஆர். பந்துலு, தானே சென்று,*எம்.ஜி.ஆருக்கு சம்பளம் கொடுத்தார் .* *அதுவரையில் அவர் சம்பளம் கேட்கவில்லை .
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா முதன் முதலில் இணைந்து நடித்த படம் என்ற பெருமையும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி படம் என்கிற சோகமும் உண்டு .* *

தீவு ஒன்றில், அடிமைகளின் தலைவனாக இருக்கும் எம்.ஜி.ஆர். அங்கிருந்து மீண்டு, கொள்ளையர் கூட்டத்தில் சிக்கி, இறுதியில் அனைவரிடமும் வெற்றி பெற்று , தாய்நாட்டிற்கு எப்படி செல்கிறார் என்பதே கதையின் சுருக்கம் .**

கண்ணதாசன், வாலி, ஆகியோர் வரிகளில், பருவம் எனது பாடல், ஏன் என்ற கேள்வி, ஓடும் மேகங்களே, உன்னை நான் சந்தித்தேன், நாணமோ* இன்னும் நாணமோ, ஆடாமல் ஆடுகிறேன், அதோ அந்த பறவை போல , என அத்தனை பாடல்களும் தேன்.**

நம்பியாரும், எம்.ஜி.ஆரும், போடும் கத்தி சண்டையில், அனல்பறக்கும், ஆர்.கே.* சண்முகம் வசனத்தில் பொறி கிளம்பும் .* மொத்தத்தில், வசூலில் சூறாவளியை நிகழ்த்தியது, ஆயிரத்தில் ஒருவன் .

fidowag
29th February 2020, 04:25 PM
தினமலர் - வார மலர் - 23/02/20
-------------------------------------------------
சிவகங்கை மாவட்டம் ஜோ. ஜெயக்குமார் என்பவர் சொல்ல கேட்டது*
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை படப்பிடிப்பிற்கு , தன காரில் சென்று கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.*அப்போது , ஒரு பள்ளி சிறுவன், செருப்பில்லாமல் வெயிலில் நடந்து போவதை*பார்த்தார் .* கார் டிரைவரின் தோளில் தட்டி, உடனே நிறுத்த சொன்னார் .

அந்த சிறுவனின் வீட்டு முகவரியையும், கால் அளவையும் குறித்து வர சொன்னார் டிரைவரும் வாங்கி வர, தயாரிப்பாளர் ஒருவரிடம், முகவரியை கொடுத்து, உடனே, புதிய தோல் செருப்பை தைத்து கொடுத்து வாருங்கள் .* அதன்பின் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.*

தயாரிப்பாளரும், சிரமேற்கொண்டு, அதை செய்து, சிறுவனின், தந்தையிடம் இருந்து சாட்சிக்கு கையெழுத்தும் வாங்கி வந்தார் .* அதற்குள் மதியம் ஆகிவிட்டது .மதிய உணவு சாப்பிடாமலேயே*.படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த சிறுவன்தான் பின்னாளில், பேட்டா என்கிற மிக பெரிய நிறுவனத்தின் தென் மாநில டீலர் ஆனார் . எம்.ஜி.ஆர்.இறக்கும் வரையில், அவருக்கு செருப்பு விநியோகம்* செய்து, அவர் வற்புறுத்தி கொடுத்த தொகையை வாங்கி கொண்டார் .**

பின்னாளில் அவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினார் .எம்.ஜி.ஆரை அணுகியபோது,ஒரு ஜோடி செருப்பை கொடுத்து, பட வாய்ப்பை பெற்றவன் என்ற இழுக்கு எனக்கு வேண்டாம் என்று சொல்லி அன்பாக மறுத்துவிட்டார் .**
இன்று அந்த பையன் குடும்பத்தினர் தான், உலக அளவில் "ஷை பப்பீஸ் " என்ற ஷூ கம்பெனி யை நடத்தி வருகின்றனர் .**

fidowag
29th February 2020, 04:51 PM
ஏழைகளின் இதயம் எம்.ஜி.ஆர்.*
----------------------------------------------------
ஈழத்தில் மற்றுமொரு எம்.ஜி.ஆர். சிலை.
----------------------------------------------------------------
யாழ்ப்பாணம் அருகே, பாசையூர் கடற்கரை பகுதியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முழு உருவசிலை நிறுவப்பட்டுள்ளது .
வாட்ஸ் அப் செய்தி*

fidowag
29th February 2020, 06:08 PM
துக்ளக் வார இதழ் -01/01/1988
-----------------------------------------------
திரு.எம்.ஜி.ஆர்.
--------------------------

அசாத்தியமான மனோதிடம், பரிபூரணமான தன்னம்பிக்கை, தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவும் தாராள குணம் , - இவை எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களாக திகழ்ந்தன .**

என்னை போல் அவருடைய அரசியலை ஏற்காத வர்கள் கூட, அவருடைய இந்த குணங்களை* கண்டு வியக்காமல் இருந்ததில்லை .

தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி, சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தபோது , சோர்ந்துபோய்விடாமல், அவற்றைக் கடந்து வரக்கூடிய தன்மை - இந்த குணாதிசயங்களால்தான் அவருக்கு கிட்டியதுஎன்று நினைக்கிறேன் .* அவர் மறைந்துவிட்ட இன்றைய நிலையில்* சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரை பற்றி துக்ளக் இதழில் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில பகுதிகளை நினைத்துப் பார்க்கிறேன் .*


எம்.ஜி.ஆர். செய்துள்ள தான தருமங்கள் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரியும் .வருமான வரியை குறைப்பதற்காக செய்கிறார் , விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சிலர் கூறுவதுண்டு .* அப்படியே வைத்துக் கொள்வோம் .* இந்த காரணங்களுக்காக தான தருமங்கள் செய்ய முன்வருபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.* தவிர, எந்தவித விளம்பரமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். செய்துள்ள தான தருமங்கள் உதவிகள் அநேகம் உண்டு .* அவ்வாறு உதவி பெற்றவர்களே என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள் .* மிகவும் தேவையான சமயத்தில் செய்யும் உதவி போன்ற நல்லகாரியம் வேறு எதுவுமில்லை .* அவ்வாறு பல நல்ல காரியங்களை எம்.ஜி.ஆர். செய்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை .* ஒரு நடிகர் ஒருமுறை என்னிடம் கூறினார் , வீட்டிலே உலை வைத்துவிட்டு , சோறு பொங்குவோம் என்கிற நம்பிக்கையோடு, அரிசிக்காக ஒருத்தர் வீட்டிலே போய் நிற்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆர். வீட்டு வாசலிலேதான்.* வேறு யாரும் கிடையாது* *இந்த மாதிரி மனப்பூர்வமான சர்டிபிகேட்* எத்தனை பேருக்கு கிட்டும் என்று நினைத்து பார்க்க வேண்டும் .

துக்ளக் --13/12/1974.

ஒருவருடைய அரசியலை விமர்சிக்கிறோம் என்பதற்காக அவரிடம் இருக்கக் கூடிய பல நல்ல விஷயங்கள்* நமக்குத் தெரிந்திருந்தால் , அவற்றை மறுத்துதான் தீரவேண்டும் என்று நினைப்பவர்களில் நான் ஒருவன் அல்ல.*அரசியல் பற்றிய என்னுடைய அபிப்பிராயங்கள் எடுபடவேண்டும் என்பதற்காக*என் கருத்துக்களுக்கு விரோதமாக போகக்கூடிய எனக்கு தெரிந்த உண்மைகளை நான் மறைக்க முற்பட்டதில்லை* *எம்.ஜி.ஆரின் அரசியலைப் பற்றிய என்னுடைய* கடுமையான விமர்சனம்* தொடர்வது வேறு விஷயம் .* ஆனால் தனிப்பட்ட முறையில் அவரிடம் உள்ள பல நல்ல குணாதிசயங்களை எடுத்து சொல்ல நான்* தயங்கவில்லை .**

துக்ளக் = 01/07/1974


பலருக்கு மனமுவந்து வந்து உதவி செய்து, அந்த மனிதர் மீண்டும் முழுமையாக தனது உடல்நலத்தை திரும்ப பெற்று* நன்றாக வாழ வேண்டும் என்று ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் .
எம்.ஜி.யாருக்கோ, தான் செயல்பட்டு காட்ட வேண்டும் என்கிற துடிப்பு எப்போதுமே அதிகம் . துப்பாக்கி சூட்டுக்கு பிறகு அவரது குரல், பேச்சு மிகவும் பாதிக்கப்பட்டது . இனி அவர் சினிமாவில் நடிக்க முடியாது என்று தான் பலரும் நினைத்தார்கள் .* ஆனால் செயல்பட்டே தீர வேண்டும் என்ற தன்னுடைய உத்வேகத்தின் காரணமாக , எம்.ஜி.ஆர். மிக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் .* தொடர்ந்து பேசிப் பேசி, தனது பயிற்சியின் மூலமாக இழந்த தனது குரலை பெருமளவு திரும்ப பெற்றார் .சினிமாத்துறையில் தொடர்ந்து நடித்து பல அபார வெற்றிகளை கண்டு சாதித்தார் .* இந்த மாதிரி செய்வதற்கு மிகவும் மனோதிடம் வேண்டும். எம்.ஜி.ஆரிடம் அந்த மனோதிடம் இருந்ததனால்தான் அப்போது அவரால் அவ்வாறு செய்யவும், சாதிக்கவும் முடிந்தது .


வாழ்க்கையில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால் இடிந்து போகிறவர்கள் உண்டு .எப்படியாவது போராடி, அபாயத்தைக் கடந்து, ஜெயித்து காட்ட வேண்டும் என்று முனைபவர்களும் உண்டு . எம்.ஜி.ஆர். அதில் இரண்டாவது ரகம்*


குண்டடிபட்டபோது எமன் வாயில் இ*ருந்து மீண்டார் .அதுமட்டுமல்ல.
குரலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பை* விடா முயற்சியின் பலனாக பெருமளவு வென்று, சினிமாவில் பல வெற்றிகளை , சாதனைகளை தனதாக்கிக் கொண்டார் .* இப்படி தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சோதனைகளையும், தோல்விகளையும், அவர் கடந்து உறுதியுடன் நின்றிருக்கிறார் .*


ஆனால் அரசியலை ஒதுக்கிவிட்டு பார்க்கும்போது, அவர் பலருக்கு செய்துள்ள உதவிகளும் , சொந்த வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து நிமிர்ந்து நிற்க காரணமாக இருக்கும் அவருடைய மன உறுதியும் , என் கண்முன்னே தோன்றுகின்றன .* இவை இப்போதும் அவருக்கு கைகொடுக்கும் என்று நம்புவோமாக
.
துக்ளக்* -01/11/1984.

தன்னை மட்டுமே நம்பி , எம்.ஜி.ஆர். சாதித்த வெற்றிகளை, சாதனைகளை வேறு எந்த தனி மனிதனும், சமீப கால தமிழக சரித்திரத்தில் சாதிக்கவில்லை .
அவரை இழந்து நிற்கும் அவருடைய மனைவி திருமதி ஜானகி ராமச்சந்திரனுக்கும், அவருடைய மற்ற உறவினர்களுக்கும் , அவரது கட்சியினருக்கும், துக்ளக் பத்திரிகையின் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

orodizli
29th February 2020, 10:12 PM
அப்படியா??
-----------------------
ரிக்ஷாக்காரன் படம்!
சத்யா மூவிஸ் படங்களிலேயே அசுர சாதனை புரிந்த படம்!
அந்தப் படம் இந்திய அளவில் பாரத் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது சற்று சலசலப்பு எழுந்தது.
சிவாஜி ரசிகர்கள் ,,தங்கள் நாயகனுக்கு விருது கிடைக்காத வருத்தத்தில் சலசலத்துக் கொண்டிருந்தார்கள்--அப்போது--
ஒருவரின் தீர்க்கமான கருத்து அமளியை அமைதிக்கு மாற்றியது!
அவர் அப்படி என்னக் கூறியிருந்தார் என்றால்--
இந்த விருது,,ரிக்ஷாக்காரன் படத்துக்குக் கிடைக்கலேன்னா தான் நான் வருத்தப் பட்டிருப்பேன். உண்மையிலேயே எம்.ஜி.ஆருக்குக் கிடைக்க வேண்டிய விருது தான் இது.
எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்பதை வலுவாக எடுத்து சொல்லியிருக்கும் படம் இது. இந்தக் கருத்து,,தம் ரசிகர்கள் மனசுல ஆழப் பதியணும்ன்னு எம்.ஜி.ஆர் இந்தப் படத்துலே ரொம்பவும் மெனக்கெட்டிருக்கார்.
இந்திய விருதுன்னாலே ஹிந்திப் படங்களுக்கும்,,அந்த நடிகர்களுக்கும் தான் என்று எழுதியா வச்சிருக்கு?
சிவாஜி ரசிகர்களுக்கும் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன்--
உங்க சிவாஜிக்கு ஏன் கொடுக்கலேன்னு கேளுங்க,,நியாயம்!! எம்.ஜி.ஆருக்கு ஏன் கொடுத்தாங்கன்னு கேக்கறது சரியில்லே.
ஒரு தமிழனா,,தமிழ் படத்துக்குக் கிடைச்சதுக்காக நீங்க எம்.ஜி.ஆரைப் பாராட்டணும். அவரை வாழ்த்தணும்!!!
இப்படி ஒரே போடாகப் போட்டு அன்றைய விவாதத்தை அடக்கியவர்--
கவிஞர் கண்ணதாசன்!!
இதில் என்ன செய்தி இருக்கிறது எனக் கேட்கிறீர்களா??
அந்த சமயம்,,,இதே கண்ணதாசன்,,அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த நேரம்? இன்னொரு சுவாரஸ்யம்??
இதே கண்ணதாசன் சிவாஜியுடன் இணைந்திருந்து,,அவரது படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த பீரியட்??
வேண்டப்பட்டவர் என்பதால் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்ததாக--
தூண்டப்பட்டவர்கள் சிலரால் மும்முரமாக--
தோண்டப்பட்டுக் கொண்டிருந்த பள்ளத்துக்கு கவிஞரின் விளக்கமே சரியான தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை தானே அருமைகளே???!!! ......... Thanks.........

orodizli
29th February 2020, 10:33 PM
திரு லோகநாதன் அவர்கள், இன்றைய தினமலர் செய்தியில் சில வரிகளை விட்டு விட்டு பதிவு செய்து இருக்கிறீர்... ( கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற தரமான படங்களுக்கு அப்போதைய மக்கள்
போதிய ஆதரவு தரவில்லை, அதனால் பந்துலு பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டார். அதிலிருந்து விடுபட புரட்சி நடிகர் அவர்களை நாடி"ஆயிரத்தில் ஒருவன்" எடுத்து வெளியிட்டு பிரச்சினையிலிருந்து விடுப்பட்டார்) என்ற செய்திகளை எடிட் செய்து உள்ளீரே...

fidowag
29th February 2020, 10:47 PM
இன்று முதல் (29/02/20) அருப்புக்கோட்டை மகாராணியில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
29th February 2020, 11:04 PM
நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.*

தினமலர் செய்தியை இணைய தளத்தில் வேண்டுமென்றே தான் எடிட் செய்து பதிவிட்டேன் . ஏனெனில் இது சம்பந்தமாக பல விவாதங்கள், கருத்து பேதங்கள், சர்ச்சைகள் நடந்து முடிந்துவிட்டன . ஆகவே மீண்டும் புதியதாக பிரச்சனையை*உருவாக்கி வளர்த்துவிட வேண்டாம் என்பதற்காக தான். மற்றபடி, தினமலரில் பிரசுரம் ஆன செய்திகள், கருத்துக்களை பொதுமக்கள் படித்தபின்னர் யார்தான்*எடிட் செய்யமுடியும் . ஆயிரத்தில் ஒருவன் ஓய்வில்லாமல் தமிழகத்தில் ஏதாவது ஒரு அரங்கில் அயராமல் காட்சியளித்து கொண்டுதான் உள்ளார் .* மறைந்த இயக்குனர் /தயாரிப்பாளர் தயாரித்த படங்களிலேயே அதிக நாட்கள் அரங்கினில் ஓடி கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன் என்பது அவரது குடும்பத்தினருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தெரியும்.என்று சொன்னால் மிகையாகாது .* எனவே , இணைய தளத்தில் பதிவிட்டு, மீண்டும் நாமே விவாதத்தை தொடங்குவதற்கோ, அல்லது யாருக்கும் பயந்தோ அல்ல. அப்படி ஒருவேளை* செய்திகளை படித்துவிட்டு கே*ள்வி கணை தொடுப்பவர்கள் தினமலர் நாளிதழ் ஆசிரியரை கேட்கட்டும் ,நாம் என்ன செய்ய முடியும் .

orodizli
1st March 2020, 12:19 AM

வாழ்ந்த காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த புகழ் போல் எவருக்கும் கிடைத்ததில்லை
மறைந்த 32ஆண்டுகள் ஆன பிறகும் தினமும் அவருடைய புகழ் வெளிவந்த வண்ணம் இருப்பதை போல் உலகில் எந்த ஒரு நடிகருக்கோ , அரசியல் தலைவருக்கோ கிடைத்ததில்லை .

70 ஆண்டுகளாக ஒரு நடிகரின் படம் திரை அரங்கில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சாதனையை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே.

அரசியலிலும் தான் தொடங்கிய கட்சி 47 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது மூலம் உலக அரசியல் வரலாற்றில் தனி முத்திரையை பதித்து விட்டார் நம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் .

ஏறத்தாழ 70 ஆன்டுகளாக ரசிகர்களை 
இன்னமும் தன் வசம் ஈர்த்து ரசிகர்கள் கட்டி காத்து வரும் எம்ஜிஆர் மன்றங்கள் 7 தலை முறைகளாக நிலைக்க செய்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . இந்திய மண்ணிலும் அந்நிய நாட்டு மண்ணிலும் கோடிக்கணக்கான எல்லா மதத்தினரும் எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு வருவது உலக சாதனை.
.
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி [1977] அரசியலில் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து திரை உலகிலும் , ஆட்சியிலும் , அரசியலிலும் உலக அரங்கில் புகழ் பெற்ற மனித நேய தலைவராக எம்ஜிஆர் அவர்கள் புகழுடன் வாழ்ந்தது இன்னமும் மக்கள் இதயங்களில் நிலையாக இருப்பது கண்டு வியந்து நிற்கிறேன்
என்ன ஒரு அதிசய மனிதர் எம்.ஜி.ஆர்.,
நிச்சயம் அவர் ஒரு தனிப்பிறவி......... Thanks.........

fidowag
1st March 2020, 12:00 PM
இன்று முதல் (01/03/20) சத்தியமங்கலம் வீராஸ் அரங்கில் கலைச்சுடர் /கலைவேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

orodizli
1st March 2020, 02:04 PM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி பொற்கால ஆட்சியை தந்த பொன்மனசெம்மலின் அரசியல் சாதனைகளை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகபடுத்தினார்.

3. அழகுத் தமிழில் சீர் திருத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின்
அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்..

7. புதிய போக்கு வரத்து கழfங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம், போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார்.

குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known
as DE- CENTRALIZATION)

10. வீட்டுக்கொரு விளக்கு என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

11. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிfSக்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
(ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்.

17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கிட உத்தரவிட்டார்.

18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை
ஏற்படுத்தினார்.

20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில், பல்கலைகழகம் உருவாக்கினார்.

21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை
மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம், வேலை வாய்ப்பினை பெற்றனர்.

23. ஏழை மாணவ - மாணவியர் பயன்பெறத்தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு
முறையை அறிமுகப் படுத்தினார்.

24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர்
நகரத்தில் ஏற்படுத்தினார்.

25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.

26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும்,
என்று உத்தரவிட்டார்.

27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் எழுத பணித்தார்.

28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட
அரசு உதவியினை பெருமளவில் வழங்கினார்.

30. முதன் முதலில் மாநில கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார். (உதாரணமாக -
இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும் அருப்புக்கோட்டையில், தானே நின்று
மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை
நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல், பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச்
செய்தார். கவுண்டர் இனம் பெரும்பான்மையாக கொண்ட திருப்பூர் தொகுதியில் மணிமாறன் என்பவரை வேட்பாளராக
அறிவித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்தார்.. தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு
புதியவர்களையும், மிக மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும், அடிமட்ட
தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை
ஏற்படுத்தியவர் நமது புரட்சித் தலைவர் மட்டுமே) சாதிக்கலவரம் நேரா வண்ணம் அமைதியுடன் மக்கள் வாழ முடிந்தது.)

32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை
ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும், உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983
அன்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.

34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே
போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத்தொழிலை மேம்படச் செய்தார்.

36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக, மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல
திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று
உணர்த்தினார்.

41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

42. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு
வரத்துக்கு வழி வகுத்தார்.

44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம்
அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு (PUC) படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம்
அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் இன்றும் பயன் பெற்றுறுக்
கொண்டிருக்கின்றனர்.

47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

48. கிராமக் கைவினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே
இதுதான் - இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில்
கொள்ளத்தக்கது).

50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY-CUM-SUPERANNUATION SCHEME)
அறிமுகப்படுத்தினார்.

51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல்
படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும்
திட்டத்தையும் அமல் படுத்தினார்.

55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை
தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300/- வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

58. பத்தாயிரம் ஏழைத் தாய்மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

59. ஏழை விதவை தாய்மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி
சிறப்பித்தார்.

60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல்
படுத்தினார்.

61. உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம் என போற்றப்படும் நமது உன்னத தலைவர் சங்கம் வளர்த்த கூடல் மாநகராம் மதுரை
மண்ணில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்ததும் அல்லாமல் தமிழறிஞர்களை மிகவும்
கவுரவப்படுத்தினார்.

62. தமிழறிஞர்கள், திரைப்பட வல்லுனர்கள் மற்றும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் விதத்தில், தமிழக அரசு
சார்பில் "கலைமாமணி" விருது வழங்கிட்டார். அத்திட்டம், இன்றும் தொடர்கிறது.

63. நக்சலைட்டுகளை அறவே ஒழித்து, தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து, " தமிழகம் அமைதிப்பூங்கா " என்ற
நற்பெயரை தொடர்ந்திடச் செய்தார்.

64. ENCOUNTERS இல்லாமல் தமிழகத்தில் ரௌடிசம் (ROWDISM) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டினார்.

65. புதிய தொழிற் கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் அந்நிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.

66. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து -

a). ஆசியாவிலே பெரிய அங்காடி (மலர் அங்காடி, காய்கறி மற்றும் பழ வகை அங்காடிகள் உள்ளடக்கியது) சென்னை
கோயம்பேட்டில் நிறுவ திட்டம் தீட்டி, அதனை செயல் படுத்த அடிக்கல் நாட்டினார். 120 ஹெக்டேர் நிலபரப்பில், சுமார்
3000 கடைகளை கொண்டது இந்த கோயம்பேடு வணிக வளாகம்.
b) சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளையும் கோயம்பேட்டிளிருந்து இயக்கிட அடிக்கல் நாட்டினார்.
c) சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், WHOLESALE STEEL MARKET மிகப் பெரிய அளவில், சென்னை
திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தாங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
d) உள்வட்ட சாலையை (INNER RING ROAD) ஏற்படுத்தினார்.

67. சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினெரல்ஸ் (TAMIL NADU MINERALS) தொழிற்சாலையை நிறுவினார்.

68. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் போதிய வசதிகளுடன், புதிய கட்டிடமாக
உருப்பெறச் செய்தார்.

69. தமிழகமெங்கும், கிராம மக்களின் வசதிக்காக, அதிக எண்ணிக்கையில், சுகாதார மையங்களை அமைத்தார். முக்கிய நகர
மருத்துவமனைகள விரிவாக்கம் செய்தார்.

70. கடும் மழை காரணமாக, சென்னையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுக்கும் விதத்தில், பெயர்பெற்ற "கூவம்"
நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி, தூர் வார ஏற்பாடு செய்தார். சென்னை கோட்டுர்புரத்தில், அடுக்கு
மாடி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த போது, முழங்கால் அளவு நீரில், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, மக்களின்
குறைகளை கேட்டறிந்து, அவர்களை தேற்றினார். பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என்று இப்போதும்
போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

71. சென்னை திருவல்லிக்கேணி யில் அமைந்துள்ள "அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின்" குளத்தை, பக்தர்களின்
கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை தொடக்க ஆவன செய்தார்.

72. முறையான நிர்வாகமில்லாமல், நன்கு பராமரிக்கப்படாமல், பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
கீழ் கொண்டுவந்து, அவைகளை சீரமைத்தார்.

73. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்காமல், அவர்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து, மாற்றுக்
கட்சியினரையும் மதிக்கும் நற்பண்பாளராக திகழ்ந்து நல்லாட்சி நடத்தினார்.

74. நாட்டின் முன்னேற்றத்துக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்திய இருபது அம்ச திட்டத்தின்
ஒரு அம்சமான "கொத்தடிமைத்தனம் ஒழித்தல் " திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

75. பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா, மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுச்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின்
நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி, அவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார்.

76. அரசு விழாக்களில் " ஆடம்பரத்தை " தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தார்.

77. தமிழக அரசின் சார்பில் முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து, சொந்தக் காரிலேயே பயணித்து, அமைச்சர்கள்
அனைவருக்கும் எளிமையின் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து, அவர்களுக்கும் முன்னோடியாக விளங்கினார்.

78. தன்னை அதிகமாக எதிர்மறை விமர்சனம் செய்த கண்ணதாசன் அவர்களை, அரசவைக் கவிஞராக 28-03-1978 அன்று நியமனம்
செய்து, பகைவனுக்கும் அருளும் பண்பாளர் என பெயர் பெற்று, அதிகாரிகளும், அமைச்சர்களும், விருப்பு வெறுப்பு இன்றி செயல்
பட வேண்டும் என்று அதன் மூலம் உணர்த்தினார்.

79. குடிசை வாழ் மக்களுக்கு "இலவச தொலைக்காட்சி" வழங்கும் திட்டத்தினை தொடங்கி, அதன் ஒரு பகுதியாக 02-07-1985
அன்று சென்னை துறைமுகம் பகுதியில், குடிசைவாசிகளுக்கு வழங்கிட்டார்.

80. தொழிலார் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.

81. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெற்றனர்.

82. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
தலைவரின் மகத்தான சாதனை.

83. இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது
இடத்தை பெற்றது.

84. 1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம்
வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

85. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

86. கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி
விலையை கிலோ ஒன்றுக்கு ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப
அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.

இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

87. அரசு ;அலுவலர்கள் வருகைப் பதிவேட்டிலும், தமிழில் தான் கையொப்பமிட வேண்டுமென்று ஆணையிட்டார்.

88. பெயர்ப்பலகை, ,விளம்பரப்பலகை, ஆகியவற்றில் முதல் பெயர் தமிழாகத்தான் இருக்க வேண்டும், அதன் கீழ் வேறு
மொழிகளில் இடம் பெறலாம் என்று ஆணை பிறப்பித்தார்.

89. தமிழ் சான்றோர்களின் பிறந்த நாள் விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றை அரசே சிறப்பாக கொண்டாட வழி
வகுத்தார்.

90. வறுமையில் வாடும் தமிழ் புலவர்கள் வாட்டமுறக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழறிஞர் உதவித் தொகை என்ற பெயரில்
அவர்களுக்கு மாதந்தோறும் உதவிப்பணம் வழங்க ஏற்பாடு .செய்தார்.

91. திருக்குறள் நெறி பரப்பப்பாடல் வேண்டும் என்ற வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். திருக்குறள் பரப்பும்
தொண்டில் ஈடுபட்ட பெருமக்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாளன்று "திருக்குறள் விருது" வழங்க ஏற்பாடு செய்தார்.
20,000/- ரூபாய் ரொக்கத் தொகை கொண்டது இவ்விருது.

92. தமிழகத்தின் பழங்கலைகளைக் காப்பதற்காக பழங்கலை இயக்ககம் (DIRECTORATE) ஒன்றை உருவாக்கினார்.

93. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறந்த கவிஞருக்கு தங்கச் சங்கிலியும், 10,000 ரூபாய் தொகையும்
கொண்ட பாவேந்தர் விருது வழங்கும் வழக்கத்தை உருவாக்கினார்.

94. சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

95. மதுரையில் வாழ்ந்த சங்க காலப் புலவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அவர்களை நினைவு கூறும் வண்ணம், அவர்களது
பெயர்கள் பொறித்த நினைவுத்தூணையும் மதுரையில் நிறுவினார்.

96. மேலும், அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும், நிறுவினார்.

97. தமிழகத்தின் இசை, நடனம் ஆகிய கலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இசைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள்
சிலரை அரசவைக்கலைஞர்களாக நியமித்தார்.

98. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூக சீர்திருத்த பணியினை நினைவு கூர்ந்து அவர் பிறந்த
ஈரோடு மாநகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நவீன வடிவத்தில் நிறுவி அதை மற்ற மாவட்ட தலைநகர ஆட்சியர்
அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வைத்தார்.

99. காவலர்கள் சீருடையில் மாற்றங்கள் கொண்டு வந்தார் .

100. சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவ அடித்தளமிட்டதுடன் சென்னை மாநகர மக்களுக்கு பால்,
பாக்கெட்டுகளில் கிடைக்க வழி செய்தார்.......... Thanks.........

fidowag
1st March 2020, 02:50 PM
இன்று முதல் (01/03/20) மேட்டுப்பாளையம் அபிராமியில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை ' தினசரி 4காட்சிகள் நடைபெறுகிறது .

orodizli
2nd March 2020, 06:30 AM
�� *வேலூர் மாவட்டம்*

*வேலூர் கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற பெண் போலீசார் சந்திப்பு*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *எம்ஜிஆர் தான் எங்கள் தெய்வம் என உருக்கம்*

*வேலூர் தமிழகத்தில் 1981 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்அமைச்சராக இருந்த பொழுது 650க்கும் மேற்பட்ட பெண்கள் 2-ம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.வேலூர் கோட்டையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் ஏராளமானோர் பயிற்சி பெற்றனர். *அவர்கள் கோட்டையிலுள்ள திப்பு மஹாலில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்களுடைய பயிற்சி நிறைவு விழாவில் அப்போதைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார்.அப்போது பெண் போலீசாரின் பயிற்சியைக் கண்டு அவர்களை முதல் நிலை காவலராக அறிவித்தார்.அப்போது பயிற்சி பெற்ற போலீசார் பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்தனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது இவர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.திருநெல்வேலியை சேர்ந்த போலீஸ் ஒருவர் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற அவர்கள் வேலூர் கோட்டையில் அவர்கள் பயிற்சியில் சேர்ந்த நாளான பிப்ரவரி மாதம் 23 ம் தேதி சந்திக்க முடிவு செய்தனர்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை 1981ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற பெண் போலீசார் 160 பேர் கோட்டையில் உள்ள திப்பு மஹாலில் சந்தித்து பேசினர் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய குடும்பம் பயிற்சியின்போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசிக் கொண்டனர். அப்போது *எம்.ஜி.ஆர் தான் எங்களுக்கு தெய்வம் அவர் அளித்த வாய்ப்பால் தான் நாங்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் நல்ல நிலையில் இருக்கிறோம் என உருக்கமாக தெரிவித்தனர். மேலும் பயிற்சிக்கு வந்த முதல் நாளில் திப்பு மஹாலில் நுழைந்தபோது மின்தடை ஏற்பட்டிருந்தது அதே போல இன்றும் அவர்கள் வந்தபோது மின்தடை ஏற்பட்டது இதனையடுத்து அவர்கள் பழைய நினைவுகளை கூறி ஒருவருக்கொருவர் ஆரவாரமாக பேசிக்கொண்டனர். கோட்டையில் உள்ள அனைத்து கட்டிடங்கள் அப்படியே உள்ளன நாங்கள்தான் வயது முடிவடைந்து விட்டோம் என்றனர்.நிகழ்ச்சியில் வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பேசிய பெண் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.*......... Thanks.........

orodizli
3rd March 2020, 06:55 AM
https://youtu.be/cBhWaOp7kkk......... Thanks.........

orodizli
3rd March 2020, 06:56 AM
https://youtu.be/DSaFuGOFpzM... Thanks...

orodizli
3rd March 2020, 06:56 AM
https://youtu.be/SDdNnRM1O94... Thanks...

orodizli
3rd March 2020, 06:57 AM
https://youtu.be/hZrLBWsNlFw... Thanks...

orodizli
3rd March 2020, 06:58 AM
https://youtu.be/yzIZFGaRHMk... Thanks...

orodizli
3rd March 2020, 06:58 AM
https://youtu.be/wEjKUSkzLOM... Thanks...

orodizli
3rd March 2020, 06:59 AM
https://youtu.be/Dz0xE7spaTY... Thanks...

orodizli
3rd March 2020, 09:42 AM
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் ஏன் மதிக்கணும் ?

ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க..

ஆனால் எம்ஜிஆர் வித்தியாசம்

யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான,லட்சோப லட்சம், கோடான கோடிக்கணக்கான மக்கள் மனதாரத் திருந்த வழிவகுக்கிறதோ...

பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ...

எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ.

அவர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிலைக்கமுடியும்...

இந்த வீடியோவைப் பாருங்க...

இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, நேரிலாவது பார்த்திருப்பவர்களா..? சிலர் பார்த்திருக்கவும் கூடும்

இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...

#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்......... Thanks.........

orodizli
3rd March 2020, 09:50 AM
மக்கள் திலகம்" பிறந்த நாள்", நிகழ்ச்சி 4 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றபோது திரைப்பட இயக்குனர் திரு சுந்தர்ராஜன் நிகழ்த்திய உரை, கருத்துகள் அருமை... ஆனால் திரு ரஜினிகாந்த் பேசிய ஒரு பேச்சு தவறானது, நாகரிகம் காத்து பேசியிருக்கலாம் என்பது நம் கருத்து...

oygateedat
3rd March 2020, 06:31 PM
கோவை

சண்முகாவில்

வருகின்ற வெள்ளி முதல்

ரிக்*ஷாக்காரன்

புதிய பொலிவுடன்

oygateedat
3rd March 2020, 06:35 PM
வருகின்ற

சனி - ஞாயிறு - திங்கள் 7th To 9th march

இரவு 8 மணி காட்சி மட்டும்

நவரத்தினம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

கணேஷ் திரையரங்கில்

orodizli
4th March 2020, 12:54 PM
1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!

உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!

நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’

சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.

எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.......... Thanks.........

fidowag
5th March 2020, 10:18 PM
நாளை ,வெள்ளி முதல் (06/03/20) மதுரை*சக்தியில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*"ரகசிய*போலீஸ் 115" தினசரி 4 காட்சிகள் திரைக்கு*வருகிறது. வெற்றிகரமான 2 வது* இணைந்த*வாரம் .

வெள்ளி முதல் (06/03/20) திண்டுக்கல்*விஜய்*அரங்கில்*நிருத்திய*சக்கரவர் த்தி எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*"ரகசிய*போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .

தகவல்கள்*உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
6th March 2020, 03:53 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் இந்த வாரம் (06/03/20)*தமிழகத்தில் வெளியான*விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை -மூலக்கடை ஐயப்பாவில் - பல்லாண்டு வாழ்க -தினசரி 3 காட்சிகள்*

மதுரை* - சக்தி* * *- ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்*-*இணைந்த 2 வது* வாரம் .

திண்டுக்கல் - விஜய்* - ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்*

கோவை* - சண்முகா* - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்** 9 மாதத்தில் 3 வது* முறையாக கோவையில் வெளியீடு*

திருப்பூர் - அனுப்பர்பாளையம் கணேஷ் - நவரத்தினம் -தினசரி* இரவு காட்சி** மட்டும் -வெள்ளி /சனி /ஞாயிறு -06/07/08-03-20

orodizli
6th March 2020, 11:20 PM
https://youtu.be/reXmZ1WhFao......... Thanks.........

orodizli
6th March 2020, 11:21 PM
https://youtu.be/qcTOx-KkiIY... Thanks...

orodizli
6th March 2020, 11:23 PM
https://youtu.be/0DtcWxIhF2w... Thanks...

orodizli
6th March 2020, 11:23 PM
https://youtu.be/Hv5aPLiS-O8... Thanks...

fidowag
7th March 2020, 05:56 PM
கடந்த*வியாழனன்று*(05/03/20)* சென்னை*வேளச்சேரி*, அம்மா திருமண*மண்டபத்தில் , தர்மம் தலைகாக்கும் இதழ் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன் அவர்களின்*மகள் திருமண*நிகழ்ச்சி காலை*10.30 மணியளவில் சென்னை*பெருநகர*முன்னாள் மேயர் திரு.சைதை*துரைசாமி*அவர்கள் தலைமையில் இனிதே*நடைபெற்றது . நிகழ்ச்சியில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எம்.ஜி.ஆர். பக்தர்கள், முக்கிய*பிரமுகர்கள்*கலந்து கொண்டு*சிறப்பித்தனர் .* மலேசிய*நடன*கலைஞர்*திரு.எம்.ஜி.ஆர். ஹரி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனமாடி*அனைவரையும்*மகிழ்வித்தார் .சொற்பொழிவாளர் திரு.திருஞானசம்பந்தம், கல்கண்டு*ஆசிரியர் திரு.லேனா*தமிழ் வாணன்*போன்ற முக்கிய*பிரமுகர்கள்* நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை*வாழ்த்தினர் .