PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

orodizli
14th April 2020, 11:07 PM
ஒரு சமயம் தலைவர் பொம்மை என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.

ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்..

நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.

அதற்கு தலைவர் பதில்.
படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.

ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.

தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.

யார் அவர் என்றால்

அவர் பெயர் பாரதி...தலைவருடன் அவர் நடித்த படம் நாடோடி.

நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.

வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி......... Thanks...

orodizli
14th April 2020, 11:11 PM
ஸ்ரீ mgr வாழ்க

சித்திரை 1 செவ்வாய்

எம்ஜிஆர் பக்தர்களே

உங்கள் முன்பாக மேடையில் பேசிக் கொண்டிருப்பவர்

ராஜ விசுவாசி

கோவை மாவட்டம்

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்

நெகமம் கந்தசாமி அவர்கள்

எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து

இவர் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்

கோவை மாவட்டத்தில் திமுக அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்

கோவை மாவட்டத்தில்திமுக அமைச்சர் கண்ணப்பன் அவர்களை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய மாட்டார்கள்

ஆனால் அந்தஅமைச்சர் கண்ணப்பனின் கண்ணில் விரலை விட்டு இவர்ஆட்டிய காரணத்தினால்

இவருக்கு ஒரு பட்டப் பெயர் வந்துவிட்டது

இவரை நெகமம் நெப்போலியன் என்று அழைப்பார்கள்

எம்ஜிஆர் அவர்கள் மரணம் அடைந்த பிறகு

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்

உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு

துரோகம் செய்யாதவர்

எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மையாரை முதல்வராக கொண்டு வந்த எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்

உறவைக்காத்த கிளி என்ற படத்தின் தயாரிப்பாளர் பொள்ளாச்சி ரத்தினம் அவர்களுக்கும்

டைரக்டர் டி ராஜேந்திரன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது

நெகமம் கந்தசாமி அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்

அப்பொழுது நெகமம் கந்தசாமி அவர்கள்

டி ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து

தயாரிப்பாளர் சொல்வதை போல் நீங்கள் படத்தை எடுத்து முடித்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்

பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை

பத்திரிகைகளில் வந்த செய்தியை இப்பொழுது நான் பதிவிடுகிறேன்
நெகமம்ம்கந்தசாமி அவர்கள்

டி ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து

கையை வெட்டுவேன் காலைவெட்டுவேன் என்று கூறினாராம்

இப்படித்தான் திமுக மேடையில் பேசினார்கள்

இந்த நிகழ்ச்சி நடந்து நான்கு நாட்களில்

டி ராஜேந்திரன் அவர்கள்

கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்

நெகமம் கந்தசாமி அவர்களைப் போன்றவர்கள் கட்சி வளர்த்தி வைத்த காரணத்தினால்தான்

ஜெயலலிதா எடப்பாடி போன்றவர்கள் முதலமைச்சராக வர முடிந்தது

நெகமம் கந்தசாமி போன்றவர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.........நன்றி... முகநூல்.........

orodizli
14th April 2020, 11:42 PM
M G R
வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது

வாழ்க எம்ஜிஆர்புகழ்........ Thanks.........

orodizli
14th April 2020, 11:45 PM
#தெரியாதது #கடலளவு

சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.

"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...

பின்னர்,

அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.

அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,

#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...

வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

படித்ததைப் பகிர்கிறேன்...

வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'........ Thanks...

orodizli
15th April 2020, 07:47 AM
*எம்ஜிஆரும்*
*பத்திரிகையாளருக்கு நடந்த ‘கவனிப்பும்’!*
---------------------------------------
https://m.facebook.com/story.php?story_fbid=3236793109666133&id=100000064280192
---------------
அவர் முற்போக்கு *கட்சியின் #பத்திரிகையாளர்.*

எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தவர்.
அமைச்சர்களின் பல ஊழல்களை எழுதியவர்.
எப்போதும் எதிர் விமர்சனம்தான்.

#செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார். (நிறைய எழுதுவதை தவிர்க்கின்றேன்).

ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிலுந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள் என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.

அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள் என்கிறார்.

அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். அவர் மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான் என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.

அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.

அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள் என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார் எனக்கூறி வருந்தினார்கள்.

நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஅர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-

எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டு #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

#கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆ. பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.

தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

காலம் ஓடியது.

ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.

மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்!

அந்த பத்திரிகையாளரும், எம்ஜிஆர் செய்த உதவிக்காக வேண்டி, தன் #எழுத்தை விற்றுவிடவில்லை. தன் நோக்கத்தில், மக்கள் நலனுக்காக வேண்டி தன் #விமர்சனத்தை சமரசம் இன்றியே எதிர்த்து எழுதி வந்தார்.

இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள்.

குறிப்பு- நான் #குமுதத்தில் எழுதியது. சில காரணங்களுக்காக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி சம்பவம் உண்மை........ Thanks Enkalai van...

orodizli
15th April 2020, 07:49 AM
#தேவை #என்பதே #இல்லை

வாத்தியாரோட பக்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களாகவும், மீதமுள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும் தான் இருக்கிறார்கள்...

ஏன்? அவர்களால் வாழ்வில் முன்னேற முடியாதா? எம்ஜிஆர் பக்தர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...?????

எம்ஜிஆர் பக்தர்கள் போதுமென்ற மனம் படைத்தவர்கள். அவர்களுக்கு சதா வாத்தியாரை நினைப்பதைத் தவிர வேறு எண்ணமில்லை.

வாத்தியாரின் முகத்தை திரையில் பார்த்தால் போதும், சோறும் தண்ணீரும் அவர்களுக்குத் தேவைப்படாது... குறைந்த சம்பளத்தில் தான் சேமிக்கும் சிறிது பணத்தைக்கூட வாத்தியாருக்காகத் தான் செலவு செய்வார்கள்.

வாத்தியாரின் பக்தர்கள் பணத்தால் வசதி படைத்தவர்களல்ல...
மனத்தால் வசதி படைத்தவர்கள்...

ஏங்க! நம்ம பொண்ணு படிப்புக்கு, திருமணத்திற்கு இன்னும் சேர்த்து வைக்காமல் இருக்கீங்களே? உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ....!

#எல்லாத்தையும் #எங்க #வாத்தியார் #பாத்துப்பாரு...

இதுதான் எம்ஜிஆர் பக்தனின் பதில்...
எவ்வளவு அசாத்திய நம்பிக்கை பாருங்க...

வாத்தியாரின் பக்தர்களுக்குத் தேவை என்பதே இருப்பதில்லை............. Thanks.........

orodizli
15th April 2020, 07:57 AM
மக்கள் திலகத்தின் மாண்பு
'எங்க வீட்டுப் பிள்ளை' நூறாவது நாள் வெற்றி விழா மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நடந்தது.

அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை சிறுவன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஆர்வத்தில் எம்.ஜி.
ஆரின் கையை பிடித்து விட்டான்.

எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அந்த பையனின் கையைத் தட்டி விட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை முறைத்து பார்த்து விட்டு, அந்த சிறுவனை அருகில் அழைத்து அவனுடைய கையைப் பிடித்து குலுக்கி விட்டு திரும்பினார்.

அந்த பையன் தன் கையை பார்த்த போது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.சுற்றியிருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் அப்பையனின் கையை குலுக்கியது மட்டும் தான் தெரிந்தது.அருகில் நின்று கொண்டு இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை புரிந்தது.
('இரு பெரும் திலகங்கள்' என்ற நூலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி.என்.சிதம்பரம் எழுதியது.)......... Thanks.........

orodizli
15th April 2020, 08:01 AM
எம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100

முன் குறிப்பு- இந்த கட்டுரை திருமதி ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் விகடன்.காம் வலைதள பக்கத்தில் எழுதியது. அவர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

எம்.ஜி.ஆர் பாடல்களில் பிரசார உத்தி :

MGR

எம்.ஜி.ஆர் சிறு வயது முதல் நாடக மேடையில் நடித்துப் பழகியவர் என்பதால் பாடல்களின் செல்வாக்கு குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார்.

பாடல்கள் சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்ட விதத்தை அறிந்திருந்ததால் தேச விடுதலை போல சமூக விடுதலைக்கும் அவை நல்ல பிரசார உத்தியாகத் திகழும் என்று அவர் நம்பினார். இத்துடன் தன் சுய விளம்பரத்துக்கும் திரை இசைப் பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்த முன்னறிவுடன் அவர் பாடல் ஆசிரியர்களிடம் பாடல்களைக் கேட்டு எழுதி வாங்கினார். அவருக்கு உடன்பாடில்லாத எந்த ஒரு விஷயமும் அவர் பாடலில் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்.

எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் தன் விருப்பத்துக்கேற்றபடி பாடல் அமையாதவரை அவர் விடுவதேயில்லை. படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் தன் பாதையில் குறுக்கிடாதவரை அவர் எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். இருப்பினும் காதல் பாடல்களில் அவர்களின் விருப்பத்துக்கு இடம் அளித்த எம்.ஜி.ஆர், தத்துவப் பாடல் என்று ரசிகர்களாலும் வேறு பலராலும் அழைக்கப்படும் தனிப் பாடல்களில் அவர் பாடல் ஆசிரியரோடு எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை

எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாறு 1936-ல் தொடங்கி 1977-ல் நிறைவு பெற்றது.

இந்த முப்பது ஆண்டுகளில் 1954-ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்துக்குப் பிறகே அவர் படப்பாடல்கள் தீவிரமாக சமூக அக்கறை உள்ளனவாகப் படைக்கப்பட்டன. இந்த 22 வருட காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் ஒரிரு தனிப் பாடலாவது அவரது பிரசார பீரங்கியாகச் செயல்பட்டது.

எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் குறித்து சான்றுகள் காட்டி எழுதினால் முந்நூறு பக்க அளவில் புத்தகமே எழுதலாம் என்றாலும், அதன் விரிவு அஞ்சி 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் அரங்க மாநகருளானே' என்பது போல இப்போதைக்குச் சுருக்கமாக சிலவற்றை மட்டும் காண்போம்.


MGR-Karunanedhi

மூன்று காலகட்டம் - மூன்று கருத்தாக்கம் :

எம்.ஜி.ஆர் திமுக கட்சிக்கு வந்த பிறகு அவர் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்ததால் அந்த ஆட்சி அக்கட்சி பெரியவர்கள் சிலரின் ஏமாற்றுத்தனம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை தனக்கிருப்பதாகக் கூறிய எம்.ஜி.ஆர் தன் தனிப்பாடல்களில் இந்த கருத்துக்களைப் புகுத்தினார்.

இவை சமூகச் சாடல், சமூக அக்கறை, இளைய சமுதாயத்தின் நியாயமான கோபம் கொப்பளிக்கும் பாடல்களாக அமைந்தன. பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பது போன்ற பாடல்களையும், திமுக-வின் வரலாறு மற்றும் பெருமை பேசும் பாடல்களையும் தனிப்பாடல்களாக அமைத்தார். இவை மகிழ்ச்சி ததும்பும் பாடல்களாக ஒலித்தன.

அடுத்து அதிமுக கட்சி உருவானதும் மீண்டும் பாடலின் கருத்தாக்கம் மாற்றம் அடைந்தது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசு என்னும் கருத்து வலுவாக பரப்பப்பட்டது. 'புதிய சமூகம் தோன்ற வேண்டும்', 'புதிய ஆட்சி மலர வேண்டும்', 'ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கள் எம்.ஜி.ஆரின் படங்களிலும் பாடல்களிலும் மையக் கருத்தாக மாறின.

ஆரம்பகட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பாடல்கள் :

1952-ல் திமுக அரசியலில் தலைதூக்கிய காலத்தில் அக்கட்சியில் எஸ்.எஸ்.ஆர், எம்.கே.ராதா, நாரயணசாமி போன்ற நடிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அளவுக்குக் கட்சியால் தானும் தன்னால் கட்சியும் வளர உழைத்தவர்கள் எவரும் இல்லை.

கட்சிக்காக உழைத்த கலைஞர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மேடையில் பிரகாசித்த அளவுக்குத் திரையில் ஜொலிக்கவில்லை. அந்த வருடம்தான் நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆருக்கு அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது கருத்துரைகளுக்கு இளைஞர் கூட்டம் மயங்கிக் கிடந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு தமிழக அரசியலில் நல்ல வாய்ப்பு இருப்பதை யூகித்தார்.

இந்த முன்னறிவு அவரை திமுக-வின் பக்கம் ஈர்த்தது. காங்கிரஸ் கட்சியின் வேகமும் விவேகமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமத்துவிட்டதைப்போல எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது. எனவே இளைஞர்களைக் கவர்ந்த திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இக்கட்சிக்குத் தன் பங்களிப்பாக தன் படங்களிலும் பாடல்களிலும் கட்சி கருத்துகளைப் புகுத்தினார். 1954-ல் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதி பட்ஷி ராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படத்தில் நேரடியாக தனது காங்கிரஸ் தாக்குதலைத் தொடங்கினார்.

டி.எம்.சவுந்தரராஜன் குரலில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைச் சேர்த்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தில் 'நியாயமில்லே இது நியாயமில்லே...' என்ற பாடலும், 1956-ல் வெளிவந்த 'மதுரை வீர'னில் 'ஏய்ச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்க நீங்க எண்ணிப்பாருங்க...’ என்ற பாடலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது.

அதே ஆண்டு வெளிவந்த 'தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அவர் பாடிய 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே...' பாடல் இளைஞர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் :

திமுககாரர் என்ற முத்திரை கிடைத்ததில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அடுத்த ஆண்டு [1957] முதல் திமுக-வின் தேர்தல் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாவே 'தம்பி நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். எனவே தேர்தல் பிரசாரத்துக்கு வா' என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர், தேர்தல் நிதி அளிப்பதுடன் களத்தில் இறங்கிப் பொது மக்களை, குறிப்பாகத் தன் ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இவருக்கு தன்னைப் பற்றி மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இந்தத் தேர்தல் மேடைகளையும், பயணத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

திமுக அரசியல் கூட்டங்களுக்குப் பெண்கள் அதிகமாக வருவதில்லை என்ற நிலை மாறியது. எம்.ஜி.ஆரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர் வரும் வழியெங்கும் பெண்கள் தம் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். இந்த நல்வாய்ப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலித்தன

எம்.ஜி.ஆர் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கியாக மாறினார். சிறந்த மேடை பேச்சாளர்களும், மற்ற திரைக்கலைஞர்களும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் அண்ணாவிடம் பெற்ற செல்வாக்கைப்போல, கலைஞரையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டார்.

ஆனால், அதே சமயம் 'மலைக்கள்ள'னோடு அவரைத் தன் படங்களுக்கு வசனம் எழுத வைப்பதையும் நிறுத்திக்கொண்டார். ஆருர்தாஸ், சொர்ணம் [கலைஞரின் மைத்துனர்], ஆர்.கே.சண்முகம் போன்றோரையும், பிற்காலத்தில் கா.காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் தமக்கு வசனம் எழுத அமர்த்திக்கொண்டார்.

தன் நன்மையைக் கருதியும், கட்சியின் நன்மையைக் கருதியும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரை முதலமைச்சராக முன்மொழிந்தார்.

MGR-Karunanedhi

எம்.ஜி.ஆர் திரையுலகிலும் அரசியலிலும் எது செய்தாலும் அதில் ஒரு பொதுநலமும், சுயநலமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதில் அவரது கொடைத்தன்மைக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் கொடுப்பதற்கு அவர் தேடிக்கொண்ட விளம்பரத்தைவிட அவர் கொடுத்தது ஏராளம். இதை அவர் விளம்பரத்துக்காக மட்டும் செய்யவில்லை.

அவருக்கு இயல்பாகவே அந்தக் குணம் அமைந்திருந்தது. முகம் தெரியாத நபர்கள் பலருக்கு அவர் மாதந்தோறும் வருடக்கணக்கில் மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருக்கிறார். துன்பப்படுவோரைப் பார்த்தால் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவும் குணம் எம்.ஜி.ஆருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. உதவி என்று நாடி வந்தவர் எதிரியாக இருந்தாலும், அவருக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது.

இதுபோக 'தர்மம் தலைகாக்கும்' என்று படத்தலைப்பும் பாடலும் அமைத்து அதில் நடித்தார். குண்டு சுட்டு பிழைத்தபோதும், சிறுநீரகம் மாற்றிப் பிழைத்தபோதும், இந்தப்பாடல் அவர் தர்மம் அவரது தலையை காத்ததை ஊருக்குப் பறை சாற்றியது. எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பளபளப்பான நோட்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆரை மனதாரப் பாராட்டிய பெண்கள், அரசியலுக்கு வரவும் இச்செயல் ஒருவகையில் காரணமாக இருந்தது.

‘நாடோடி மன்னன்' படப்பாடல்கள் :

1958-ல் எம்.ஜி.ஆர் சொந்தப்படம் எடுத்தார். திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல சின்னம் அமைத்தார். 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று பெயரிட்டார். முதல் பாடலே கொள்கை விளக்கப் பாடலாகவே ஒலித்தது. இன்றைக்கும் இது மதிமுக வின் கடவுள் வணக்க பாடலாக அங்கீகரிக்கபட்டுள்ளது.

'செந்தமிழே வணக்கம் நம் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’ என்ற இப்பாடல் வைகோவின் மனங்கவர்ந்த பாடலும் ஆகும். அடுத்து இப்பாடலில் இன்னொரு பாடலை அமைத்தார். இப்பாடலுக்கு பெரிய காட்சியமைப்பு சிறப்பு கிடையாது.

எம்.ஜி.ஆரும் அமைச்சர் ஒருவரும் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்து போவார்கள். அப்போது எம்ஜிஆர் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’ என்று கேட்பார். அமைச்சர் பதில் எதுவும் சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர் பதிலும் சொல்வார்.

‘உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்பதுதான் அந்தப் பதில். இப்படிக் கேள்வி பதிலாக அமைந்த இப்பாடலுக்கு அமைச்சர் தலை அசைத்தபடி வருவார்.

இதுதவிர 'காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என பானுமதி கேட்க எம்.ஜி.ஆர் 'காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்று பதில் அளிக்கும் பாடல் 'திமுக ஆட்சி வரட்டும்' என்ற நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புப் பாடலாக அமைந்தது.

இந்தப்பாடலில் தான் ‘நாளை போடப்போறேன் சட்டம் மிக நன்மை புரிந்திடும் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம்’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளே அவர் முதலமைச்சரானபோது அனைவரும் பாராட்டிய தீர்க்கதரிசன வரிகள் ஆகும். இந்தப்படல்கள் எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு அதிக அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டின.

எம்.ஜி.ஆர்

தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு :

1960-க்குப் பிறகு திமுக அரசு ஏற்கும் வரை எம்.ஜி.ஆர் படங்களில் காங்கிரஸ் எதிர்ப்புப் பாடல்கள் வலுப்பெற்றன.

1963-ல் வெளிவந்த 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'போயும் போயும் மனிதருக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் சேர்த்து பூமியைக் கெடுத்தானே’ என்ற பாடல், 'படகோட்டி (1964)'யில் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' பாடலில் 'இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லயென்பார் - மடிநிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்' என்ற வரிகள்

'ஆசைமுகம் (1965)' படத்தில் 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு' என்ற பாடலும் 'பணம் படைத்தவன் (1965)' படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாட்டில் 'மனிதன் போன பாதையை மறந்தும் போகலாமா' என்ற வரி வரும்போது காந்திஜி படத்தைக் காட்டி காங்கிரஸார் காந்திய வழியைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்பதை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார்.

அதே வருடம் வெளிவந்த 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து எம்.ஜி.ஆர் பாடும் 'நான் ஆணையிட்டால்' பாட்டில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்று காங்கிரஸ்காரர்களைக் குறித்து பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் சென்சாரில் அனுமதி பெறாததால் 'கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று மாற்றப்பட்டது.

ஆனாலும், இலங்கை வானொலியில் பழைய வெர்ஷனைக் கேட்க முடிந்தது. பின்பு அங்கும் விடுதலை புலி அமைப்பு தடை செய்யப்பட்டபோது இந்தப்பாட்டு ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டது.

1966-ல் வெளிவந்த 'நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல் ஒன்று. கண்தெரியாமல் பிச்சையெடுக்கும் சரோஜாதேவி பாடும் விரசமான பாடலை மாற்றி ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு - பாடும்பொழுதெல்லாம் அதையே பாடு' என்ற பாடலைச் சொல்லித்தந்து பாடச்செய்வார்.

அதே ஆண்டு வெளியான 'நான் ஆணையிட்டால்' படத்தில் 'தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன் - தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்' பாடல் திருடர்களைத் திருத்தும் பாடலாக அமைந்தாலும், சமூகத்தில் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பணத்தைக் கொள்ளயடிக்கும் திருடர்களைத்தான் குறித்தது. பாடல் கருத்து திரைக்கதைக்கு ஏற்றதாகவும் அதேசமயம் பொது அரசியலுக்கு ஏற்றதாகவும் அமைத்துத் தரச்சொல்லி அதைத் தன் படங்களில் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

1967-ல் வெளிவந்த 'அரசகட்டளை' படம் காங்கிரஸ் காலத்தில் தயாரிக்கப்பட்டதால், 'ஆடி வா...' பாடலில் 'முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நம் வரவேற்பதோ' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதில் முயல் கூட்டம் என்பது காங்கிரஸையும் சிங்கம் என்பது திமுகவையும் குறித்தது.

திமுக புகழ் பாடும் பாடல்கள் :

1967-ல் அண்ணா அரசு பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களின் உள்ளடக்கமும் மாறியது. அண்ணா அவர்கள் போலீஸ் என்ற பெயரைக் காவல் துறை என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் 'காவல்காரன்' எனப் படம் எடுத்தார். அது எம்.ஜி.ஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.

இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தது அவரைச் சுற்றியிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கோ ஜெயலலிதாவின் படிப்பும் சுறுசுறுப்பும் துணிச்சலாகத் தன் கருத்தை எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் பிடித்துப்போயிற்று.

ஜெயலலிதாவை காவல்காரன்' படத்தில் வரும் 'ங்கொப்புறாண சத்தியமா நான்' பாடலில் ‘என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும் நான்தான் காவலடி’ என்ற வரிகள் அர்த்தத்துடன் எழுதப்பட்டது. தன் உள்ளம் கவர்ந்த கதாநாயகியான ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கடைசி வரை காவல் காத்தார். ஜெயலலிதா மீறி நடந்த போதும்கூட எம்.ஜி.ஆர் அவர் பாதுகாப்பில் ஒரு கண் வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின்பு வந்த முதல் படம் என்பதால் இதில் இடம்பெற்ற 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'காவல்காரன்' என்பது திமுக அரசை சிம்பாலிக்காகக் குறித்தது. எம்.ஜி.ஆரும் அதில் காவல்துறையை சேர்ந்த ரகசிய போலீஸாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் .

வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் உயரத்துக்கு வெள்ளித் தகட்டினால் அவர் உருவம் செய்து அவருக்கு வழங்கினர். அது இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இருக்கிறது. இதில் அரசை சாடியோ கண்டித்தோ எந்தப்பாடலும் இல்லை.

மாறாக மூன்று டூயட் பாட்டு. மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சீர்திருத்தத் திருமணம் செய்வதாகவும், குழந்தை பிறப்பதாகவும் அவர்களின் கனவு கற்பனைகளாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது சீர்திருத்தத் திருமணத்திற்கு அண்ணாவின் அரசினால் சட்ட அங்கீகாரம் கிடைத்த சமயம். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல படம் எடுக்கப்பட்டிருந்தது.

1968-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர் தன் தீவிர ரசிகர்களான குறவர்களை போல மாறுவேடம் அணிந்து ஜெயலலிதாவுடன் ஒரு பாட்டு பாடுவார்.

அந்தப்பாட்டில் திமுக-வின் படியரிசி திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பாடலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதாகவும் இப்பாட்டும், காட்சியும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக மற்றும் எம்.ஜி.ஆர் புகழ் பாடல்கள் :

சமூகச் சாடல் குறைந்ததால் எம்.ஜி.ஆரை மையப்படுத்திய பாடல்கள் அவர் படத்தில் தோன்றின. 'நான் யார் நான் யார் நீ யார்' மற்றும் 'என்னைத் தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா', 'நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' போன்ற திமுகவின் பிரதிபலிப்பாக எம்.ஜி.ஆரைக் காட்டும் பாடல்கள் எழுதப்பட்டன.

அதாவது எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை அவர் உருவாக்கினார். இது திமுக மூத்த உறுப்பினர்களுக்குச் சற்று காட்டமாக இருந்தாலும், இளைஞர்கள் எம்.ஜி.ஆர் மீது வெறியாக இருந்ததாலும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததாலும் எவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

கலைஞர் முதல்வர் ஆக்கப்பட்டார் :

1969-ன் தொடக்கத்திலேயே அண்ணா காலமாகிவிட்டார். கலைஞர் எம்.ஜி.ஆரை அடிக்கடி சந்திக்கிறார். கட்சியின் அடுத்த தலைவர் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். 'தம்பீ வா... தலைமை ஏற்க வா...' என்று அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் தன் ஆதரவாளர்களோடு 'தான் தன் அடுத்த முதல்வர்' என்ற நம்பிக்கையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.

இச்சூழலில் எம்.ஜி.ஆர் தன் சத்யா ஸ்டூடியோவில் கட்சியின் முக்கிய பிரமுகர்களைக் கூட்டி காங்கிரஸின் செல்வாக்கு இன்னும் முற்றிலுமாக ஒடுக்கப்படவில்லை, இந்நிலையில் படித்தவரைவிட காங்கிரஸை சமாளிக்கக் கூடியவரே கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்பேற்பது நல்லது என்று சொல்லி அனைவரையும் கலைஞருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் சம்மதிக்க வைத்து கலைஞருக்கு பிடித்தமான வால்நட் கேக்கை அவர் டிரைவரை விட்டு வாங்கிவரச் சொல்லி அவர் வாயில் ஊட்டினார்.

ஏமாற்றிய ஆட்சி :

1969-ல் கலைஞர் முதல்வரானதும், எம்.ஜி.ஆர் நினைத்தபடி ஆட்சி நடக்கவில்லை. திமுகவினர் தறிகெட்டுத் திரிகின்றனர். ஊழலும் வன்முறையும் எம்.ஜி.ஆரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. கலைஞரும் எதையும் கண்டிக்கவில்லை. உள்ளூர் தாதாக்கள் கட்சிப் பொறுப்பேற்று கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆகின்றனர்.

பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கலைஞரின் ஆட்சி அவர் நினைத்ததற்கு மாறாக இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர் அவசரப்படாமல் அமைதியாக ஒரு காரியம் செய்கிறார். அப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் அவர் கொடி கட்டி பறக்கிறார். அவரிடம் ஜெயலலிதா முழு செல்வாக்கு பெற்றிருக்கிறார். ஆழம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் அதை மற்றவர் காசில் பார்ப்பது கிடையாது. தன் பணத்தை போட்டு சொந்தப் படம் எடுக்கிறார்.

அந்தப்பட்த்தில் ஒர் கொடுங்கோலனைக் காட்டுகிறார். தாயை தாய்நாடாகவும் அதை ஒரு கொடுங்கோலனின் அடிமைப்பிடியில் இருந்து மீட்பதாகவும் கதை உருவாக்கிப் படமாக எடுக்கிறார். அந்தப் படம் 'அடிமைப்பெண்' என்ற பெயரில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடியது.

ஏமாற்றாதே ஏமாறாதே :

'அடிமைப்பெண்' படத்தில் மீண்டும் அரசை எதிர்க்கும் பாடல் காட்சிகளை அமைக்கிறார். கொடுங்கோலனுக்கு எதிராக ஒரு க்ளைமாக்ஸ் பாடல் ‘உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது’ பாடல் ஹிட் ஆனது.

படத்தின் நடுவில் கலைஞருக்கு நேரடியாக எச்சரிக்கை செய்வது போல ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற இந்தப்பாடலும் ஹிட் ஆனது. தன் செல்வாக்கு அவருக்கு தைரியத்தை அளித்தது இந்தப் படத்தின் வெற்றி அவருடைய எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவர் அவசரப்படவில்லை.

இதனை அடுத்து, தான் அரசியலுக்கு வரலாமா என்பதை அறிய நேரடியாக ஒரு படம் எடுத்து மக்களின் நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதிக செலவில்லாமல் 'அடிமைப்பெண்' படம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் பத்தே நாட்களில் விஜயா வாஹினி முதலாளி நாகிரெட்டியிடம் சொல்லி அவரது தயாரிப்பில் 'நம் நாடு' படத்தில் நடித்து முடிக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அரசியலில் ஈடுபடலாம் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்தது.

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் :

'நம் நாடு' படமும் 'அடிமைப்பெண்' போல எம்.ஜி.ஆர் வில்லன்களைத் தோற்கடிக்க ஜெயலலிதாவே அவருக்கு முற்றிலும் உதவுவது போன்ற கதையம்சம் உள்ள படம். இதில் அவர் கோடீஸ்வரராக மாறு வேடத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் - துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்’ என்று பாடி ஆடும் பாடல் அவரது மனத் திட்டத்தை எடுத்துரைத்தது. இதில் வில்லன்களைக் காங்கிரஸ்காரர்கள் போலவும் உயர்ந்த பக்திமான் போலவும் காட்டியிருந்ததால், திமுகவினருக்கோ சாதாரண மக்களுக்கோ சந்தேகம் வரவில்லை.

இதற்கிடையே பல வெற்றிப்படங்கள் வந்தன. 'விவசாயி', 'மாட்டுக்கார வேலன்', 'குடியிருந்த கோயில்', 'தேடிவந்த மாப்பிள்ளை' எனப் பல படங்கள் வந்து எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டு போயின. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள் எல்லாம் நல்ல லாபம் பெறுகின்றனறே, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கலைஞரும் அவரது மருமகன் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை அணுகி தாங்கள் கடனில் தவிப்பதாகவும், ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் கடனில் இருந்து கரையேறிவிடுவோம் என்றனர்.

எம்.ஜி.ஆர் எதிரி என்றாலும் உதவி என்று கேட்டுவிட்டால் செய்துவிடுவார் அல்லவா... அவர், தான் மட்டுமல்லாது ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பார் என்றார். 'எங்கள் தங்கம்' உருவாயிற்று. எம்.ஜி.ஆர் மற்றும் திமுக புகழ் பாடும் பாடலாக 'நான் செத்துப் பிழச்சவன்டா எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடலில் கலைஞரை பற்றிய வரிகளாக ‘ஓடும் ரயிலை இடை மறிச்சு அதன் பாதையில் தனது தலை வச்சு - உயிரையும் துரும்பா தான் மதிச்சு - தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என்பவை அமைந்தன. இன்னொரு டூயட் பாடலுக்கு, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற வரியை எழுதிவிட்டு கவிஞர் வாலி அடுத்த வரிக்குத் தடுமாறிய போது கலைஞரோ, 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.

பாரத் விருது பெற்ற எம்.ஜி.ஆர் :

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் பிரிந்துவிட்டனர். உடல்நலத்தைப் பேணுவதில் சிறிதும் அக்கறை இல்லாத ஜெயலலிதா ரொம்பவும் குண்டாகிவிட்டார். 'பட்டிக்காட்டுப் பொன்னையா', 'அன்னமிட்ட கை' படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பெரியம்மா போலத் தோற்றமளித்தார்.

மேலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து இவரைப் பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கும்பல் இந்நேரம் பார்த்து மஞ்சுளாவை அறிமுகம் செய்தது. சத்யா மூவிஸ் முலமாக 'ரிக்க்ஷாக்காரன்' படம் ஆர்.எம்.வீ அவர்களால் எடுக்கப்பட்டது. இதில் பணக்காரர்களின் அக்கிரமங்களுக்குத் துணை போகும் நீதித்துறையை எம்.ஜி.ஆர் சாடியிருந்தார். இதில் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு' என்ற பாடலில் 'நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா - அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று கேட்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகரான 'பாரத்' விருது கிடைத்தது. பின்பு அது கலைஞர் சிபாரிசால் கிடைத்தது என்று திமுகவினர் குற்றஞ்சாட்டியதும், எம்.ஜி.ஆர் அதைத் திருப்பிக் கொடுத்தார். இத்துடன் எம்.ஜி.ஆர் - கலைஞர் நட்பு முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டே (1971) கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போன்ற கதைகள் கேட்டு, தோற்றம், பாட்டு, டான்ஸ் எம்.ஜி.ஆர் போலவே உருமாற்றி திரைக்குக் கொண்டுவந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை.

'சினிமாவுக்கு அதிகம் பேர் போகிறார்களே அவர்களை மடை மாற்றுவோம்' என்று கருதி அரசுக்கு வருமான தரக்கூடிய மதுக்கடைகளைத் திறந்தார்.

எம்.ஜி.ஆரையும் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகான தனது படங்களில் எம்.ஜி.ஆர் நேரடியாக திமுக எதிர்ப்பை வெளியிட்டார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்........ Courtesy by: mr.Vaithianathan.........

orodizli
15th April 2020, 08:07 AM
That day report from 'The Times of India' news paper:

As the optics of crowds became synonymous with the popularity of the leader, it became essential to keep up the show. Now money is key to bringing in people. The audience is, therefore 'assembled' by luring men, women and college students with incentives like money, food and liquor.

This was not the case in 1970s and 1980s, when announcements used to be made on 'cone' speakers about '#Puratchi #Thalaivar' #MGR being on his way and crowds would instantly gather and wait patiently for a glimpse of the matinee idol. MGR would finally arrive well past midnight. But it didn't matter to the crowd which would go into raptures on seeing MGR's convoy........ Thanks...

orodizli
15th April 2020, 08:14 AM
Why Edappadi Palaniswami can’t claim MGR’s legacy

As late as in the early 2000s, I’ve met men and women in the hinterlands of Tamil Nadu who said MGR was alive. Maybe some of them were lying, but all of them wanted to believe what they said.

Sunday’s grand finale of the MGR centenary celebrations in Chennai marked the end of a year-long attempt by chief minister Edappadi K Palaniswami to claim the legacy of a man whose charisma no other politician in the state could match even more than 30 years after his death on the Christmas eve of 1987.

Has it helped EPS gain popularity? Yes.
Has it helped him claim MGR’s legacy?
No.

Political legacy is mostly perception, but no amount of public relations or publicity can ensure legacy. It comes with association or action. In the case of J Jayalalithaa, it happened mostly because of the former (by being his heroine) and partly because of the latter (through welfare measures). EPS has neither-and he knows it.

MGR was a phenomenon of his own making. A heart in the right place helped, but he also systematically worked to be the king of hearts. It wasn’t just M Karunanidhi’s scripts that helped MGR become the hero that he was; he chose and played his roles to be the epitome of goodness. He never smoked or drank on screen, he was gentle with his women, he was fair.

And when the time came, he so effortlessly moved from the silver screen to the rough and tumble of Tamil politics, and became Ponmanachemmal (the one with the golden heart). Such was his image of Puratchi Thalaivar (revolutionary leader), the school noon meal scheme introduced by Kamaraj (some argue such a scheme was introduced in Madras during the British rule) was attributed to MGR.

It wasn’t easy for Jayalalithaa to inherit the political legacy of MGR. She fought a bitter battle with MGR’s widow Janaki, first to stay near MGR’s hearse during his funeral procession and later to take over the AIADMK mantle. Once she achieved it she strenuously worked on it, rolling out welfare measures. Always in the background were images of her with her mentor, prominent among them the one showing MGR handing over a silver sceptre to her in 1982 when she became the propaganda secretary.

Taking MGR’s welfare measures to a new level, Jayalalithaa gave away free bicycles and gold rings, goats and computers. At one point, Jayalalithaa, who so fiercely wanted to leave her original mark in politics, appeared to be trying to grow out of the image of being MGR’s successor. She catalysed a new industrial climate that attracted investments in manufacturing. But when she finally left her footprint, it was still in her mentor’s shadow.

The Jayalalithaa model that combined freebies with overall development was a natural progression from the MGR times. If he wants to take forward that progress, EPS should focus more on ensuring ease of doing business while remaining true to long-term commitments on health and education.

Jayalalithaa had the knack of keeping corruption and business on parallel tracks, with neither derailing the other. Today corruption stands in the way of business. If EPS shows the courage to minimise, if not remove, corruption, he may be remembered as someone who tried, not just survived.

Forget about winning hearts. MGR' legacy is alive though he is physically dead.

forwarded message

DISCLAIMER : Views expressed above are the author's own.
AUTHOR
Arun Ram Resident Editor
Times of India,Tamilnadu....... Thanks...

orodizli
15th April 2020, 08:15 AM
"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்

தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா

தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.
வாட்ஸ் அப்பில் வந்த பதிவு........ Thanks.........

orodizli
15th April 2020, 09:34 AM
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்- I

# சத்துணவு திட்டம்(01-07-1982 முதல் அமுல்படுத்தப்பட்டது.

# பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்

# கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்

# பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.

# புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

# குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.

# காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

# பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.

# பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.

# கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.

# சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.

# அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.

# அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.

# பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.

# பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.

# நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.

# முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.

# தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.

# மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.

# பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.

# ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.

# திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.

# அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.

# அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

# தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.

# தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.

# தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.

# தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.

# தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.

# நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.

# பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.

# வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.

# கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

# விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)

# நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.

# மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

# கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.

# காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.

# உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்......... Thanks.........

orodizli
15th April 2020, 09:37 AM
புரட்சித் தலைவரைப் பற்றி பேரறிஞர் அண்ணா போற்றுவது...

M.G.R என்பது தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துகள்...

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம்...

சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்...

தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு.அவருக்கே அமைந்த வசீகரம்...

இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம்...

ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்?

இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர்...

அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்...

‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந்தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது....

உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார்...

கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்...

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’

... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று...

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார்...

ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா...!!!

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது...

இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா...!!!......... Thanks.........

orodizli
15th April 2020, 09:40 AM
'நாடோடி' என்ற படத்தில் ஒரு காட்சியில் பணியாளர்கள் தங்கள் எஜமானர்
எம்.ஜி.ஆரைக் காண வருவர். சமதர்மம் பேசும் அவரிடம், "நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்" என்பர். அதற்கு
எம்.ஜி.ஆர்., "நீங்களெல்லாம் வாழ்த்தப்பட்டவர்கள்" என்பார். அப்படிப்பட்டவர்களின் தலைவர் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கர்.

அப்படி சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட,
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவிக்க வந்த ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே. அவரைப்பின்பற்றி அடித்தட்டு
மக்களுக்காக பாடுபடுகின்றவர் எவருமில்லை.

நேற்று அம்பேத்கரின் பிறந்த நாள்.

Image by Mr Ponvannan

Ithayakkani S Vijayan........ Thanks...

orodizli
15th April 2020, 09:45 AM
தலைவரின் காட்சி அமைப்புகள்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன...

அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான்...

காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்...

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயாரிப்பாகும்.படம் வெளியானது 1973-ஆம் ஆண்டு...

தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம்...

‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும்...

இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும்...

இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து தலைவர் பார்த்துக் கொண்டிருப்பார்...

காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்...

‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும்...

பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று...

இதில் விசேஷம் என்னவென்றால், காட்சியைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்...

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்............ Thanks.........

orodizli
15th April 2020, 10:26 AM
அது 1974.இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கி மிக*சிரமத்தில் உழன்ற* வருடம்.
திரையுலகில் அப்போது அறுத்த கைக்கு யாரும் சுண்ணாம்பு கூட* தரமாட்டார்கள். கையறு நிலையிலிருந்த அவரை நோக்கி ஒரு சிவந்த கை உதவிசெய்ய நீட்டப்பட்டது.அஃது நமது மனிதபுனிதர் எம்ஜிஆர் அவர்களின் வள்ளல் கை!

கையை இறுகப் பிடித்துக்கொண்ட* ஸ்ரீதர் 'உரிமைகுரல்' படத்தின் முதல் காட்சியை இப்படி ஆரம்பித்திருப்பார்,

கீழத்தெரு பெண்ணை வில்லன் நம்பியார் ஆள்வைத்து கடத்திவர சொல்லியிருப்பார்.அவரின் அடியாட்களிடமிருந்து அப்பெண்ணை மீட்டு வீட்டில் கொண்டு விடுவதற்காக

'எந்த ஊர்மா நீ? வாம்மா தங்கச்சி வண்டில ஏறு' என்பார் தலைவர்.

'சாமி நாங்க* கீழ்ஜாதி,நீங்க மேல்ஜாதி உங்க வண்டில எப்படி நான்' என்று தயங்குவார்.

அப்ப நம் தலைவர் சொல்லுவார் 'எனக்கு தெரிஞ்ச ஒரே ஜாதி மனித ஜாதி மட்டும் தான்மா நீ வண்டில ஏறுமா!'

ஏறினார் இயக்குநரும் படத்தின் வெள்ளிவிழா மேடையில்!

பசுமையான,கண்களுக்கு இதமான,பாசனவசதி பெறும் நெல்வயல்கள் அமையப்பெற்ற கிராமம்.
அதில் ஒற்றை குதிரை வண்டியில் சவாரி செய்பவர்.சிவப்புச் சட்டை,தங்கச்செயின் அணிந்திருக்கும் கதாநாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
பிறந்தநாள் கொண்டாடினால் புது பட்டுஜரிகை வேட்டி, சட்டை அணிந்துகொண்டு அண்ணன், அண்ணியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் அளவு அண்ணன்-தம்பி பாசம்.

அவரின் உரிமைப்பெண்ணாக லதா!
முதலில் குறும்புகளாக நகரும் காட்சிகள் அவர்களின் திருமணத்திற்கு பின் பாகப்பிரிவினை,வீட்டை இரண்டாக பிரிப்பது என்று தடம் மாறும்.
பெண் கதாபாத்திரத்திற்கு சமமான ஸ்கீரின் ஸ்பேஸ் தந்திருப்பார் எம்ஜிஆர் அவர்கள்.'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற பாடலும் பெண்களே நிலத்தை ஏர்மாடு கொண்டு உழவு செய்யவருவதுமே உதாரணங்கள்!

எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் இன்னிசையில் 'நேத்து பூத்தாலே ரோஜா மொட்டு' 'மாட்டிக்கிட்டாரடி மயில காளை' 'பொண்ணா பொறந்தா ஆம்பிளைகிட்ட*' ஆகியவை இன்றைய பென் டிரைவ் யுகத்திலும் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் வாழ்த்து கீதமாக ஒலித்துகொண்டிருக்கிறது!

படத்தில் அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சிறுவிரிசல் முடிந்து, வாங்கிய கடனை அடைத்து, உரிமையான நிலத்தை ஏலத்திலிருந்து மீட்கிறார் தலைவர்.

நிஜத்தில் இறைவன் அருளால்,மக்களின் அன்பால்,தமிழகத்தின் உரிமைக்காக மூன்றுமுறை முதல்வராக குரல் கொடுத்தவர் தான் நம் தலைவர்.
இன்றும் அவர் தொடங்கிய இயக்கம் தான் ஆசியுடன் நடக்கிறது என்றால் அப்படிப்பட்டவரின் ஆன்மா இன்றும் நம்மை பிரியவில்லை என்றே அர்த்தம்.

தலைவர் எம்ஜிஆரின் ஆசிர்வாதமிருந்தால் இன்று ஒரு ஒன்றியப் பகுதிக்கு மட்டும் உரிமைக்குரல் தருபவர்கூட* நாளை ஒரு தொகுதி முழுவதும் அதன் உரிமைக்காக* குரல் தர முடியும்!

அப்பேற்பட்ட தலைவர் எம்ஜிஆரின் 'உரிமைகுரல்' என்றைக்கும் ஓங்கும்!...ஒலிக்கும்!...... Thanks...

orodizli
15th April 2020, 11:21 AM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படங்கள் மறு வெளியீட்டிலும் மகத்தான சாதனை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும் குறிப்பாக ஒரு சில படங்கள் எப்போது திரையிட்டாலும் வாரக்கணக்கில் ஓடும். அப்படிபட்ட படங்களில் ஒன்றுதான் "படகோட்டி". சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த ஊர்களில் திரையிட்டாலும் மீண்டும் மீண்டும் ஒரு சில வாரங்கள் ஓடும் ஆற்றல் இந்த படத்திற்கு உண்டு. இந்த படத்தை ரீ மாஸ்டர் பண்ணினால் நிச்சயம் இன்னொரு 100 நாள் படமாக அமையும். சென்னையில் மறுவெளியீட்டில் படகோட்டி செய்த சாதனைகளை பாருங்கள்.......... Thanks.........

orodizli
15th April 2020, 11:36 AM
அன்னை ஜானகி எம்ஜியார் தலைவர் கால நினைவுகள் உங்கள் பார்வைக்கு.

சர்வாதிகாரி படத்தில் இருவரும் நடித்து கொண்டு இருந்த நேரம் நானும் அவரும் குதிரை வண்டியில் தான் பயணம்..

படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து செல்ல கார் வரும். பின் படம் சார்ந்த அனைவரும் பயணம் செய்ய குதிரை வண்டியே.

நாங்கள் ஊர் கடைசியில் இருந்த பிரபாத் திரையரங்கு போக கூட அதிலே பயணம்.

வழக்கம் போல கோவை விடுதியில் இருந்து நாங்கள் சாப்பிடும் மதீனா உணவகத்துக்கு வண்டியில் வந்து சேர என்னை யாருக்கும் அறிமுகம் செய்ய கூடாது என்று அவர் சொல்ல.

வெள்ளை கலர் முழு ஜிப்பா இடுப்பில் நான்கு முழ வேட்டியுடன் அவர்.

மதீனா உணவக முதலாளி எங்களை பார்த்தவுடன் கல்லா பெட்டியில் இருந்து எழுந்து வரவேற்பார்.

என்ன வேண்டும் என்று முதலாளி கேட்க அவர் இரண்டு புல்ஸ் ஐ என்று சொல்ல. நான் பதறி அதுஎல்லாம் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல.

வரும் பார் என்றவுடன் வந்தது இரண்டு முட்டைகள் அரை வேக்காட்டுடன் மஞ்சள் கரு பாதி வெந்து வேகாமல் இருக்க வெள்ளை கரு தோசை போல.

அந்த ஹோட்டல் இருந்த இடத்தில் இப்போது பெரிய ஜவுளிகடை வந்து விட்டது

சேலத்தில் ஓரு நாள் இரவு காட்சிக்கு நான் கதாநாயகி ஆக நடித்த படம் பார்க்க இருவரும் போனோம்...அரங்கம் நிறைந்து விட அம்பிகா திரை அரங்க முதலாளி அவர் வந்து

கேபின் அறையில் இரண்டு நாற்காலிகள் போட்டு அந்த படத்தை நாங்கள் இருவரும் பார்த்தோம்.

படம் ஒளி செல்லும் ஓட்டை வழியாக ஒரு வழியாக எட்டி எட்டி படத்தை பார்த்து முடித்தோம்.

மருதநாட்டு இளவரசி படத்தில் அன்னை ஜானகி அம்மாவுக்கு சம்பளம் 5000 ரூபாய், நம் தலைவருக்கு சம்பளம் 4001 ரூபாய்.
நன்றி.... ......... Thanks fb.,

orodizli
15th April 2020, 11:39 AM
�������� இதய தெய்வம் புரட்சித்தலைவர் பக்தர்களாக இணைந்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய வணக்கத்துடன், நாளை நமதே இந்த தளத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி புகழும் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்துடன் இத்தளத்தில் என்னை யார் என்று கேட்டீர்கள் நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர் தேவராஜ் ராதிகா தற்போது நான் இந்தியாவில் திருச்சியில் இருக்கின்றேன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி தெரிந்து கொண்டேன் என்றாள் அவர் இறந்த பிறகு புகைப்படங்களை அவரின் படங்களை பார்த்துதான் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன் ஆனாலும் எனக்கு தெரிந்த நாள் முதலாய் அவர் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் இப்போது இந்தியாவில் வந்து தேவராஜ் சாரை மருமணம் செய்துகொண்டேன் என்றாள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தெய்வ வடிவில் வந்து இந்த வாழ்வை எனக்கு அமைத்துக் கொடுத்துள்ளார் என்று நான் உறுதியுடன் கூறுவேன் மேலும் நான் இதய தெய்வம் எம்ஜிஆர் ஆண்டவன் எம்ஜிஆர் நல்ல நேரம் எம்ஜிஆர் ஆசைமுகம் எம்ஜிஆர் தற்போது நாளை நமதே புகழ் வேந்தர் எம்ஜிஆர் இது போன்ற தளங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி பதிவுகளைப் போட்டுக்கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெயரால் என்னால் முடிந்த சிறுசிறு உதவிகளை செய்கின்றேன் மேலும் தலைவர் தேடி தேடி ஓடி ஓடி கேட்கும் உங்கள் அன்பின் தேவராஜ் ராதிகா வணக்கம்������........ Thanks...

orodizli
15th April 2020, 11:48 AM
������������������������

*��மலரும் நினைவுகள்....*

*கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார்,*

“என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.

‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.

காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.

அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.

நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.

‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.

‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.

‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.

‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.

‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.

‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.

‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.

அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "

*MGR IS GREAT...!!*

Nallathambi
(Son Of Kalaivanar)
அவர்கள் ஆல்பத்திலிருந்து.

������������������������..... Thanks.........

orodizli
15th April 2020, 12:25 PM
பொதுவாக தமிழில் யாரையாவது புகழ்வதற்கு ஒரு வார்த்தை பயன்படுத்துவார்கள்.....

அது.....

ஒப்பாரும் - மிக்காரும் இல்லாதவர்..... என்பர்.....

இன்று முதல் அந்த வார்த்தையை மற்றவர்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளட்டும் ....!!!

எங்கள் மக்கள் திலகத்திற்கு மட்டும் வேண்டாம்.....!!!!!!????

ஏன் என்றால்.....?

ஒப்பாரே இல்லாத போது மிக்கார் யார்.....? எங்கள் தங்கத்தை மிஞ்ச.......???!!!

என்ன ரத்தத்தின் ரத்தங்களே நான் சொல்வது சரிதானே......????...... Thanks...

orodizli
15th April 2020, 12:30 PM
கெட்டவன் வாழ்வான் …!!!

நல்லவன் வாழ்வான் … நீதிக்கு பின் பாசம் … நீதிக்கு தலை வணங்கு … தர்மம் தலை காக்கும் … தாய் சொல்லை தட்டாதே … குடியிருந்த கோயில் …… நம் நாடு … திருடாதே … உழைக்கும் கரங்கள் … சிரித்து வாழ வேண்டும் … இவை எல்லாம் 1960 இல் இருந்து 1980 வரை தமிழ் சினிமா தந்த கருத்து பெட்டகமான தலைப்புக்கள் ….

சூது கவ்வும் … மூடர் கூடம் … சதுரங்க வேட்டை … கபடம் … டமால் டுமீல் … பிசாசு … கத்தி … துப்பாக்கி … யுத்தம் செய் … சண்டியர் … குத்து … சேட்டை … திமிரு … சண்டகோழி … களவாணி… உத்தம வில்லன் … இவை சமீப கால படத் தலைப்புகள் …

எங்கே போகிறோம் நாம் … 1980 களில் கூட நம் கதாநாயகன்கள் நெகடிவ் ரோல்கள் செய்து இருக்கிறார்கள் … ஆனால் .., தப்பு செய்தால் தண்டனை உண்டு என்பதை ஆணித்தரமாக சொன்ன காவியங்கள் அவை …

1961இல் வெளியான திருடாதே … படத்தில் கிளைமாக்ஸ்
எம் .ஜி .ஆர் . திருடி அந்த பணத்தில் பல நல்ல விஷயங்கள் செய்து திருட்டை விடுத்து திருந்தி வாழ முடிவு செய்து சில காலம் கஷ்டப்பட்டு பின் ஒரு பெரிய கூட்டத்தின் நன் மதிப்பை பெற்று போலீசில் சரணடையும் போது அந்த கூட்டம் தடுக்க அவர் நான் தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் … என் நன்னடத்தை காரணமாக நான் இப்போது கூட தப்பித்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது … ஆனால் அது ஒரு மோசமான முன் உதாரணமாக போய் விடும் … நாளை யாரும் திருடி நல்லது செய்து கூட்டம் சேர்த்தால் தப்பித்துகொள்ளலாமென்று இந்த சமுதாயம் நினைத்துவிடகூடாது என்று கூறி மக்களை பார்த்து கும்பிட்டு விட்டு காவலர்களிடம் செல்வதாக முடியும் … அந்த காவியம் …

மாட்டிக்காம தப்பு செஞ்சா நெறைய பணம் வரும்னா கண்டிப்பா செய்யலாம்ங்கறது தான் என்னோட பிலாசபி … இது சரபம் எனும் படத்தில் நாயகன் உதிர்க்கும் அரிய பெரிய தத்துவம் …

மங்காத்தா படத்தில் அஜித் உருவாக்கிய ட்ரெண்டு புத்திசாலித்தனமான கெட்ட விஷயங்கள் ஜெயிக்கும் என்கிற ஜானரில் புற்றீசல்களை பின்னுக்கு தள்ளி விட்டு வேகமாக அதிக எண்ணிக்கையில் யோசிக்க தொடங்கி விட்டார்கள் நம் சிந்தனை சிற்பிகள் … ஆனால் எதுவுமே நம் சமூகத்திற்கு சொல்லும் கருத்து … நல்லவன் இளிச்சவாயன் … யோக்கியன் கேனயன் … அயோக்கியனே உயர்ந்தவன் … கெட்டவன் வாழ்வான் ….(ஒரு பழைய பதிவு)

orodizli
15th April 2020, 12:46 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டில் உள்ளோம்...!

என்ன செய்ய போகிறோம்...? என நான் அடிக்கடி உங்கள்
( உண்மையான உன்னதரின் உதிரத்தின் உதிரங்களை ...???!!!) சிந்தையினை தூண்டியதுண்டு...!!

ஆனால் இப்போது பரவலாக சில செவி வழி செய்திகள் என்னை மிகவும் வருத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது...???

நம் மக்கள் திலகத்தின் பால் உண்மையான அன்பு - பாசம் - பக்தி - மரியாதை என அனைத்தும் உள்ள சில செல்வந்தர்களிடம் ஒரு சிலர் சுயஇலாப நோக்கத்தில் நம் மக்கள் திலகத்தின் பெயரினை பயன்படுத்தி சதுரங்க வேட்டையாடி வருகிறார்களாம்...???!!!

சிலர் சொன்னதில் பாதி செய்கிறார்களாம்...???!!!
சிலர் முழுவதுமாக வேட்டையாடி விளையாடி விடுகிறார்களாம்...???!!!

தன் தாய் மண் - சொந்த பந்தங்களை துறந்து அந்நிய தேசம் சென்று உழைத்து செல்வத்தால் செழித்து - உள்ளத்தால் இளகிய நம் மக்கள் திலகத்தின் உண்மை உதிரங்களும் இந்த நயவஞ்சக கூட்டத்தில் அவ்வப்போது சிக்கி கொள்கிறார்களாம்...???!!!

அன்பர்களே...!

ஒரு மாபெரும் அற்புத மஹா சக்தி நம் மக்கள் திலகம்...!!!

தயவு செய்து அவர் பெயரினை உச்சரித்து தவறோ - தப்போ செய்ய நினைக்காதீர்கள்....!!!

நீங்கள் செய்யும் இந்த செயல்.... உண்மையான தேவை உள்ள இடத்திற்கு அந்த செல்வந்தர்களின் சேவை பார்வை பதிய தடையாய் உள்ளது...

அதே போல சேவை செய்ய நினைக்கும் மக்கள் திலகத்தின் உண்மை அன்பர்கள் உங்கள் உதவி 100% உரியவர்களிடம் செல்கிறதா...? என உறுதி செய்து கொள்ளுங்கள்...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை....

இது நம் மக்கள் திலகம் சொன்னது...

ஏமாற்றாதே... என அந்த கூட்டத்திற்கு மட்டும் சொல்லவில்லை நம் உன்னதர்... மறு வார்த்தையே... ஏமாறாதே... என நமக்கும் தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

ஆகவே இது தான் சமயம்.... என நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சில விஷமிகள் உலவுவதாக தகவல்...

எச்சரிக்கை அவசியம்... அவர்களுக்கு மட்டும் அல்ல... நமக்கும் தான்...

மக்கள்திலகத்தின் மாணவன் - மயில்ராஜ் - மதுரை..........(Old Posts)... Thanks...

orodizli
15th April 2020, 12:48 PM
பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பக்தர்கள் அணைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

எனது பெயர் வ.ராஜவேல். திருவண்ணாமலை மாவட்டம். சாணானந்தல் கிராமம்.
நான் ஒரு எம்ஜிஆர் பக்தன்.
எனது பாட்டனார் முதல் எனது தந்தை வரை புரட்சி தலைவர் மீது தீராது அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அந்த வழியில் வந்த மூன்றாம் தலைமுறையில் பிறந்தவன் நான்.

எனது தந்தைக்கு புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் தலைமையில் எங்கள் தாத்தா ஏற்பாட்டில் ராமவர தோட்டத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
எனது தாதா அவர்கள் எம்ஜிஆரின் ரசிகனகாக மட்டுமல்லாமல் பக்தியும் இருந்த காரணத்தால் ராமவர தோட்டத்தில் கிடையாய் கிடந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக திருமதி ஜானகி அம்மையாருக்குதான் சொந்தம் என்றுசொந்தம் கொண்டாடிய சமயத்தில் அம்மையார் கோஷ்டியில் இருந்தார்.

பிறகு 1989ஆம் ஆண்டு திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்திற்க்கு அழைத்து வந்து எம்ஜிஆர் நினைவாகவும் அவரது புகழை வளர்க்க எம்ஜிஆர் பெயர் பொறித்த பெயர் பலகையை அம்மையார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இறந்த நாள் அஞ்சலி மற்றும் அம்மையாரின் மறைவுக்கு பிறகு அவர்களின் இறந்த நாள் அஞ்சலி செலுத்தி வந்தோம்.

தற்போது என்ன பிரச்சனை என்றால்.

தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக புரட்சி தலைவர் பெயர் பொறித்த பலகையை அகற்றிவிட்டு புதிதாக ஆளும் கட்சியினர் பெயர்களை பொறித்து வரும் 28 ம் தேதி அன்று திறப்பு விழா நடத்த உள்ளனர்.

திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மற்றொரு கல்வெட்டை திறந்து வைக்க மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்களும் கல்வெட்டை திறந்து வைக்க வரவுள்ளனர்.

எனது ஆதங்கம் என்ன வென்றால் அதே இடத்தில் மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் ஜானகி அம்மையார் அவர்களின் பெயர் மட்டுமல்லாமல் புரட்சி தலைவரின் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என அந்த பெயர் பலகை நீக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் என் மனம் குமுறி கொண்டு இருக்கிறது.

புரட்சிதலைவர் வெறும் அரசியல்வாதி மட்டும்மல்ல கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று நான்காம் தலைமுறைக்கு உணர்த்த கடைமைப்பட்டுள்ளேன்.

இதனை பற்றி சில கருத்துகள் மற்றும் உதவிகள் தேவைகப்படுகிறது ஐயா.
நன்றி.
எனது தொடர்பு எண். 9884165867
எம்ஜிஆர் புகழ் வாழ்க வளர்க....... Thanks...

orodizli
15th April 2020, 12:57 PM
நியூஸ் 18 சேனல். துரைமுருகன் பேட்டி. விருப்பமில்லாமல் வேறு சேனல் மாற்ற நினைக்கும்போது புரட்சித் தலைவரைப் பற்றி துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
புரட்சித் தலைவர் தன்னை படிக்க வைத்தது, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அவர் கோவாவில் இருந்தபோது, கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ய உதவிகள் செய்ததை சொன்னார். சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்தபோது நீ படி, அதுதான் நல்லது என்று புரட்சித் தலைவர் சொல்லி சட்டக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்ததை சொன்னார். துரைமுருகன் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னை வரத் திட்டமிட்டிருந்த புரட்சித் தலைவர் அப்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். சென்னை வரஇருந்த ஃப்ளைட்டை தவறவிட்டுவிட்டாராம். எப்படியும் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சார்டர்ட் ப்ளைட் ஏற்பாடு செய்து கொண்டு புரட்சித் தலைவர் சென்னை வந்ததை துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
புரட்சித் தலைவர் முதல்வர் ஆன பிறகு அவரை பார்ப்பதை துரைமுருகன் தவிர்த்து வந்திருக்கிறார். ஒருநாள் எதிர்பாராமல் சட்டசபை கட்டிடத்தில் புரட்சித்தலைவரை நேருக்கு நேர் பார்த்துவிட்டார். புரட்சித் தலைவர் உடனே துரைமுருகனை சட்டையை இழுத்துப் பிடித்து ‘மேலே வா’ என்று தன் அறைக்கு கூப்பிட்டிருக்கிறார்.
துரைமுருகன் போனதும், ‘யார் யாரோ என்னிடம் அமைச்சராக இருக்கிறார்கள். நான் வளர்த்தவன் நீ. என்னிடம்தானே நீ இருக்க வேண்டும். என்ன இலாகா வேண்டும் என்று முடிவு செய். போ’ என்று புரட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.
அதற்கு துரைமுருகன், ‘நான் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவுக்கு வந்தவன். அண்ணாவுக்குப் பிறகு கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டேன். என்னால் உங்களிடம் வர முடியாது. மன்னித்துவிடுங்கள். கலைஞர்தான் என் தலைவர்’ என்று சொல்லியிருக்கிறார்.
புரட்சித் தலைவர் உடனே, ‘அப்ப உனக்கு நான் யாரு?’ என்று கேட்டிருக்கிறார்.
‘நீங்க என்னை வாழவெச்ச தெய்வம்’ என்று கூறி காலில் விழுந்தாராம் துரைமுருகன். அவரைத் தூக்கி கட்டியணைத்து ‘சரி போயிட்டு வா’ என்று புரட்சித் தலைவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை எல்லாம் துரைமுருகனே நியூஸ் 18 செய்தி சேனலில் சொன்னார். நெகிழ்ச்சியாக இருந்தது.
மாற்றுக் கட்சியினரும் எதிரிகளும் கூட தெய்வமாக வணங்கும் ஒரே தலைவர் மனிதப் புனிதர் புரட்சித் தலைவர்....... Thanks...

orodizli
15th April 2020, 01:11 PM
இனிய காலை வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#பிறந்த நாள் கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர் வீட்டில் ஆரம்பத்தில் அவர் அண்ணனின் ஒன்பது குழந்தைகளுக்கும் அடிக்கடி பிறந்த நாள் பெயர் சூட்டல் திருமண நாள் என்று விசேஷங்கள் வந்துகொண்டேயிருக்கும். அவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதை விரும்பமாட்டார்.

அன்றைக்குப் பாயசத்துடன் நல்ல சாப்பாடு செய்யச் சொல்வார். ஜி.சகுந்தலா எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போய் வரும்போது அடிக்கடி விசேஷம் வருவதால் அங்கு வைக்கும் பாயசத்தை எனக்குத் திருகுச்செம்பில் (கூஜா) எம்.ஜி.ஆரின் அண்ணி கொடுத்து விடுவார்கள் என்பார்.

அதன்பிறகு ஜானகி அம்மையாரின் அண்ணன் பிள்ளைகள் ராமாவரத்திலிருந்து வளர்ந்த போதும் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இல்லை. அதை அவர் ஆடம்பரம் என்று நினைத்தார்......... Thanks.........

orodizli
15th April 2020, 01:15 PM
எழுத்தாளர் திரு. ஆரூர்தாஸ் அவர்கள் எழுதிய "சினிமாவின் மறுபக்கம்" என்ற தொடரில் புரட்சித் தலைவர் நடித்த "அன்பே வா" திரைப்படம் தயாரிப்பு மற்றும் இயக்கம் பற்றியும் எழுதியது.

அன்பே வா ! MGR ஐ சோதித்து சாதனை காட்டிய AVM இன் Masterpiece ! நிரந்தர வசூல் படம்

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1965–ல் பட உலகில் ஒரு பரபரப்பான பேச்சு! என்ன அது? ஏவி.எம். புரொடக்ஸன்ஸ் முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப்போகிறார்! அவருடைய சம்பளம், அதுவரையில் தென்னிந்திய கதாநாயக நடிகர்கள் வேறு யாருமே வாங்காத அதிகபட்சத் தொகையான மூன்று லட்சம் ரூபாய்!

செய்தி வெளியான சிறிது நாட்களுக் குள்ளாகவே அனைத்து ஏரியாக்களையும், அதிகபட்சத் தொகையான முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு செட்டியார் விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்திருக்கிறார்! (அந்த 33 லட்சம் இன்றைக்கு 100 கோடிக்கு சமம்!)
ஆம், இந்தச் செய்தி உண்மைதான். ஏவி.எம். பிளஸ் எம்.ஜி.ஆர். அதனால்தான் அந்த விலையும் விற்பனையும்.

1964 வாக்கில் ‘கம் செப்டம்பர்’ என்ற பெயரில் ஓர் ஆங்கிலப்படம் வந்து நன்றாக ஓடியது. அதைப்பார்த்த நண்பர், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அந்தத் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்திருந்தார்.

அதைக்கேட்ட முருகன் பிரதர்ஸின் மூன்றாவது சகோதரரான எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரனை வைத்து கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று சொன்னார். பிறகு இதே கதையை எம்.ஜி.ஆரை வைத்து கலர் படமாக எடுக்கலாமே என்று எண்ணி திருலோகசந்தரை தன் தந்தையிடம் அழைத்துச்சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்லச் சொன்னார்.அதைக்கேட்ட செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட் ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக் கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்றார்.

எம்.ஜி.ஆரிடம் சென்று திருலோகசந்தர் கதையைச் சொன்னார். அதைக்கேட்ட அவர் கூறியது:–
‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’. அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் பணம் அனுப்பப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர்.எம்.வீ. தனது சத்யா மூவிஸ் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து ‘நான் ஆணையிட்டால்’ படத்தைத்தயாரித்துக் கொண்டிருந்தார். ‘அன்பே வா’ படத்தின் கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும் ஒப்பந்தமானார்கள். வசனம், வழக்கம்போல நான்தான்! (ஆரூர்தாஸ்) ஸ்டூடியோவில் ‘அன்பே வா’ களைகட்டத் தொடங்கியது. செட்டியார் பட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் அழைத்து ஒளிவு மறைவு இன்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.
‘இந்தப்படம் முப்பத்தி மூணு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கு. இதுல முப்பது லட்ச ரூபாய் தயாரிப்பு செலவு (காஸ்ட் ஆப் புரொடக்ஷன்) ஆகும். அந்தச் செலவு படத்தில தெரியணும். அந்த அளவுக்கு படம் ‘ரிச்சா’ இருக்கவேண்டும். உதவி டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம்... ‘இந்தாப்பா, நீயும் நம்ம காஸ்டியூமர் ரஹ்மானும் இங்கே இருக்குற எல்லா பெண்கள் கல்லூரிக்கும் காலையிலேயே போய் வெளி வாசல்ல நின்னு அங்கே படிக்குற பொண்ணுங்க லேட்டஸ்டா எந்தெந்த விதமான டிரஸ் போட்டுக்கிட்டுப் போறாங்கன்னு நல்லா கவனிச்சு அதே மாதிரி நம்ம ஹீரோயின் சரோஜாதேவிக்கும் மத்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கும் டிரஸ் தயார் பண்ணுங்க’.

ஒளிப்பதிவாளர் மாருதிராவிடம்...
‘நீ என்ன பண்றே. இதுவரைக்கும் வந்திருக்குற பெஸ்ட் இங்கிலீஷ் – இந்தி கலர் படங்களை தினமும் நம்ம மாடி டீலக்ஸ் தியேட்டர்ல பார்த்து நல்லா ஸ்டடி பண்ணிக்கிட்டு, அதுக்குத் தகுந்தபடி நிறைய கலர் டெஸ்ட் எடுத்துப்பாரு’.

முருகன் பிரதர்ஸின் இரண்டாவது சகோதரரான எம்.குமரனிடம்...
‘அப்பா! நீ வழக்கம்போல மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கத்துலேருந்து கவனிச்சி ஒனக்கு திருப்தி உண்டாகுறபடி நல்ல நல்ல டியூனா போடச்சொல்லி, வாலி கிட்டே நல்ல பாட்டு எழுதி வாங்கி ‘ரிக்கார்ட்’ பண்ணு.

செட்டியார் அத்துடன் விடவில்லை. அன்றைய நாட்களில் கலை இயக்குனர்களில் (ஆர்ட் டைரக்டர்) தலை சிறந்து விளங்கியவரும், ஜெமினி ‘‘சந்திரலேகா’’ படத்திற்கு பிரமாண்டமான அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், ஆடை அணிமணி அலங்காரங்கள் அமைத்துப் புகழ் பெற்று, பின்நாட்களில் ஜெமினியிலிருந்து விலகி வந்து ஏவி.எம். ஸ்டூடியோவில் சேர்ந்து பணிபுரிந்தவருமான பிரபல ஏ.கே.சேகர் என்பவரை அழைத்தார். இவரது முழுப் பெயர் ஏ.குலசேகரன் செட்டியார்.
ஏ.கே.சேகரிடம் செட்டியார் சொன்னார்:– ‘‘சார்! எம்.ஜி.ஆரோட அந்த ஊட்டி பங்களாவை, வழக்கமான சினிமா செட் மாதிரி இல்லாம, ரொம்ப ரிச்சா போடுங்க. நல்லா அழகா பர்னிஷ் பண்ணுங்க. கீழே தரையில் விரிக்கிற கார்ப்பெட்டெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா ரிச்சா இருக்கோணும். படத்துல பார்க்கும்போது பிரமிப்பா இருக்கோணும்.’’
அதைக்கேட்டு சேகர் சொன்னார்:– ‘‘நம்ம ஸ்டூடியோவுல இருக்கிற ஏழு புளோர்லேயும் இப்போ செட் போட்டு ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு . புல் புளோர் எதுவும் காலியா இல்லே.’’
செட்டியார்:– அப்படின்னா எட்டாவதா பெரிசா புதுசா ஒரு புளோர் கட்டி அதுல இந்த பங்களா செட்டைப் போடுங்க. இப்போ பாட்டு பிக்சரைஸ் பண்ணுறதுக்காக டைரக்டர் யூனிட் ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போகப்போறாங்க. அவுங்க திரும்பி வர்றதுக்குள்ளே இந்த புது புளோர் ரெடியாகி வந்த உடனே இதுல ஷூட் பண்ணணும். அதுக்குத் தகுந்த மாதிரி ஒரே மாசத்துல எட்டாவது புளோர் ரெடியாகோணும். கட்டி முடிக்கிற வரைக்கும் நம்ம புரொடக்ஷன் மேனேஜர் வெள்ளைச்சாமியை ராத்திரி பகலா இங்கேயே தங்கி இருந்து பாத்துக்கச் சொல்லுங்க.
அப்படியே, புது புளோருக்கு கீழ்ப் பக்கம் காலியா இருக்கிற இடத்துல எம்.ஜி.ஆருக்கும், சரோஜாதேவிக்கும் புதுசா ஏர் கண்டிஷன் வசதியோட ரெண்டு மேக்–அப் ரூம் கட்டுறதுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. எல்லாம் ஒரே மாசத்துல ரெடியாகோணும்.
இந்த மாசம் ஆறாந்தேதி பூஜை போட்டு படத்தை எடுத்து முடிச்சு வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும். அதுக்குத் தகுந்தபடி எல்லாத்தையும் நீங்க கவனிச்சிக்கோணும்.’’
செட்டியார் உத்தரவின் பேரில் போர்க்கால வேகத்தில் வேலைகள் தொடங்கின.

புதிய எட்டாவது தளம் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது ‘‘அன்பே வா’’ படத்திற்கான பாடல்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அருகில் சொல்லி வைத்தாற்போல இருவர்! ஒருவர் கோயமுத்தூரிலிருந்து அவர் கூடவே வந்த அருமை ஆர்மோனியப் பெட்டியார். இன்னொருவர் சின்னச்செட்டியார். அதாவது ஏவி.எம். செட்டியாரின் இரண்டாவது குமாரரான எம்.குமரன்.

என் அன்பிற்கினிய அண்ணன் எம்.எஸ்.வி.யின் மூளையை முடிந்த மட்டும் குமரன் பிசைந்து மெல்ல மெல்ல நல்ல – நல்ல மெட்டுக்களை மொட்டு மொட்டாக வாங்கி அருமைக் கவிஞர் வாலியின் மூலமாக அவற்றை மனதிற்கினிய பாடல்களாக மலரச் செய்துவிடுவார்.
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.’ என் அண்ணன் எம்.எஸ்.வி. சுடர் விளக்கு என்றால் என் சகோதரர் எம்.குமரன் தூண்டுகோல்.

‘ஊட்டி’ என்னும் நீலகிரி உதகமண்டலம் மற்றும் இமாசல பிரதேசத்தில் உள்ள ‘சிம்லா’ ஆகிய மலை வாசஸ்தலங்களில் முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மூன்று பாடல்கள் முதலில் தயாராயின. படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலும், ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்ற டூயட் பாடலும், இன்னொரு எம்.ஜி.ஆரின் தனி (சோலோ) பாட்டும் அன்றைக்கு ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர்.தான் அந்த ஊட்டி மாளிகையின் உரிமையாளரான ஜே.பி. என்னும் பாலு என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட கீதா – சரோஜாதேவி. அவரை ‘டீஸிங்’ பண்ணியதை எண்ணி வருந்தி ஓடும்போது, அவர் பின்னாலிருந்து எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வரும் அந்தச் சூழலுக்கான பாட்டை அண்ணன் டி.எம்.எஸ். பாடி ஏராளமான இசைக் கருவிகளுடன் இணைந்து ஒத்திகை பார்த்து முடிந்து ‘டேக்’ எடுத்துப் பதிவாகப் போகும் தருணத்தில் செட்டியார் ‘ஆர்.ஆர்’ தியேட்டர் என்னும் வழக்கமான ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்து அமர்ந்து ‘பைனல் மானிட்டர்’ என்னும் கடைசி ஒத்திகையைக் கேட்டார்.
அடுத்து ‘டேக்’ என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். அதுதான் இல்லை.
எந்த பீடிகையும் இல்லாமல் எடுத்த எடுப்பில் செட்டியார் இப்படிக் கூறினார்:–
‘‘அப்பா! மியூசிஷியன்ஸ்க்கு (இசைக்குழுவினர்) சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க (எம்.எஸ்.வி.யிடம்) நீங்க இதுக்குப்பதிலா வேறு ஒரு டியூன் போடுங்க. (வாலியிடம்) நீங்க அதுக்குத் தகுந்தபடி சிச்சுவேஷனுக்கேத்தாப்போல வேற பாட்டு எழுதுங்க. (குமரனிடம்) நீ பக்கத்துலேருந்து பாத்துக்கப்பா. டேக்குக்கு முந்தி என்னைக் கூப்பிடுங்க’’ என்று சர்வ சாதாரணமாக – மென்மையாக சொன்னார். இருக்கையை விட்டு எழுந்தார். துண்டை எடுத்தார். தோளில்போட்டுக்கொண்டார். ஒன்றும் அறியாத நல்ல பிள்ளைபோல காரில் உட்கார்ந்தார். கார் நகர்ந்தது.
வாலி வாழைப்பூ போல தலை குனிந்து தரையைப் பார்த்தார்.
எம்.எஸ்.வி. சட்டைப்பையிலிருந்து எவர்சில்வர் பொடி டப்பியை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து ஒரு சிட்டிகை எடுத்தார். மூக்கில் வைத்தார். முடிந்த மட்டும் ஒரு இழுப்பு இழுத்து உறிஞ்சினார். அந்தப் பொடி சிவ்வென்று மூளையில் ஏறி கண்கள் சிவந்தன. கலங்கின.
அதோடு குமரனை ஒரு பார்வை பார்த்தார்.
குமரன் தியேட்டருக்குள் போனார். பியானோ எதிரில் ஸ்டூலில் உட்கார்ந்தார். டியூன் பண்ணிக்கொடுத்தார். எழுந்தார். விசுக்கென்று அண்ணன் விசு அதில் அமர்ந்தார். கண்டமேனிக்கு கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்து அழுத்தென்று அழுத்தினார். ஒலி உண்டானது. அந்த இன்னொலியில் இசையுடன் இணைந்து இனிய ‘டியூன்’ பிறந்தது.

வாலியை அழைத்தார். அவர் வந்தார். இவர் வாசித்தார். அவர் எழுதிக்காட்டினார். இவர் தன் டியூனோடு சேர்த்துப்பாடிப்பார்த்தார். சரியாக இருந்தது. குமரன் கேட்டார். ஓகே சொன்னார். ஆள் அனுப்பினார். ‘அப்பச்சி’ (செட்டியார்) வந்தார். ‘மானிட்டர்’ கேட்டார். ‘‘டேக் எடுங்கப்பா’’ என்றார்.
டி.எம்.எஸ். மைக் அருகில் சென்றார். நின்றார். வாயைத் திறந்தார். பாட்டு வந்தது. அது ஒலிப்பதிவு ஆனது. அந்தப்பாட்டுதான்:–

‘‘அன்பே வா... அன்பே வா
உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும்
அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும்
அன்பே வா.’’
இந்தப்பாட்டும் மற்றும் படத்தில் இடம் பெற்ற ‘புதிய வானம் – புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’, ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்’
இன்றைக்குக் கேட்டாலும் – இனி என்றைக்குக் கேட்டாலும் இனிக்கும் இந்த இனிய கற்கண்டுப் பாடல்கள், அன்றைக்கு அண்ணன் எம்.எஸ்.வி.க்கும், என் அருமை இளவல் கவிஞர் வாலிக்கும் புகழுக்குப் புகழ் சேர்த்தன.

அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று அன்றைக்கு தியேட்டர்களில் விற்கப்பட்டன.
செட்டியாரின் விருப்பப்படி எட்டாவது எண் கொண்ட புதிய தளம் கட்டி முடிக்கப்பெற்றது. அதில் கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய எம்.ஜி.ஆர். ஊட்டி மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும் மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக உருவாகி இருந்தது!

8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.

முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.
இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.

தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.
ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.

இந்திய உடம்பில் அமெரிக்க தலையையும், அதனுள்ளே பிரிட்டிஷ் மூளையையும் கொண்டிருந்த காரைக்குடி ஆவிச்சி செட்டியாரின் ஏகமகன் ஆன மெய்யப்ப செட்டியார் என்ற பிறவி மேதை – மருதூர் கோபாலமேனனின் நான்காவது புதல்வரான – பூதலம் புகழ் ராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆரை மயங்க வைப்பதற்காக அல்ல – அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதற்காகச் செய்த இனிய ஏற்பாடுகள் இவை என்பதை ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு நான் எடுத்து விளக்கினேன். அதைக்கேட்டு அவருடைய செவ்விதழ்களில் ஒரு சிறு பெருமிதப் புன்னகை நெளிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.

1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.
சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.

அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.
14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.
காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.
‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–
எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?
நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.
எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?
நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.

ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். ஓலம். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.

வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.
(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)

எம்.ஜி.ஆர். சொன்னார்:– ஒரு சந்தோஷமான சேதின்னேனே. அதைச் சொல்றேன். இப்போ நாம ராதாண்ணனுக்கு (எம்.ஆர்.ராதா) ஒரு படம் பண்றோம். அவருடைய நண்பர் வாசுன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் புரொடியூசர். அவர் கலைவாணர் மற்றும் டி.எஸ்.பாலையாண்ணன், கே.ஏ.தங்கவேலு மாதிரி பழைய நாடக நடிகர்களுக்கெல்லாம் நண்பர். அவருக்கு உதவி செய்றதுக்காகத் தான் ராதாண்ணன் இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்காரு. ஆரம்ப பைனான்சே அவரோட சொந்தப்பணம் தான். முத்துக் குமரன் பிக்சர்ஸ் கம்பெனி பேரு.
டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு. அவுங்களும் இந்தப் படத்துல பார்ட்னருங்க. கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்ல ஏற்கனவே ‘‘ரத்னகுமார்’’, ‘‘பைத்தியக்காரன்’’ படங்கள்ளே நான் சின்னச் சின்ன வேடங்களில் நடிச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறது இதுதான் முதல் தடவை. அதனால ஒரு மாறுபட்ட கதையா இருக்கணும் என்று விரும்புகிறேன். ஒங்ககிட்ட இப்போ உடனே எழுதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறாப்போல ஏதாவது நல்ல கதை இருக்கா?
நான்:– (சற்று யோசித்து) இருக்குண்ணே. ‘அவுட்லைன்’ வச்சிருக்கேன். அதுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதணும்.
எம்.ஜி.ஆர்:– அதையெல்லாம் நீங்க சீக்கிரம் எழுதிடுவீங்க. எனக்குத் தெரியும். இப்போ அந்தக் கதையை சுருக்கமாக எனக்குச் சொல்லமுடியுமா?
நான்:– சொல்றேன். இது ஒங்களுக்கு ஒரு மாறுபட்ட கதையா இருக்கும்னு நினைக்கிறேன். கேளுங்க என்று நான் நினைத்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொன்னேன். அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். சொன்னார்:– கதை நல்லாயிருக்கு. நான் விரும்பின மாதிரி எனக்கு இது ஒரு மாறுபட்ட வேஷமா இருக்கும். சரி. இதுக்கு ஏதாவது டைட்டில் வச்சிருக்கீங்களா?
நான்:– நல்ல டைட்டில் இருக்குண்ணே. அதை நானே ரிஜிஸ்ட்டர் பண்ணி வச்சிருக்கேன்.
எம்.ஜி.ஆர்:– அப்படியா? சொல்லுங்க என்ன அது?
நான்:– ‘‘பெற்றால்தான் பிள்ளையா?’’
இதைக்கேட்ட மாத்திரத்திலேயே எம்.ஜி.ஆரின் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அப்படியே என்னை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு தூக்குத் தூக்கினார். ‘ஜானு’ என்று கூப்பிட்டார். அம்மா வந்தார்கள். ஆள் காட்டி விரலைக்காட்டினார். அவர் அறைக்குள் சென்றார். எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆர்:– இந்த டைட்டில் கதைக்கு மட்டுமல்லே எனக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு. இதைவிட ஒரு நல்ல டைட்டில்
கிடைக்கவே கிடைக்காது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஜானகி அம்மா வந்து ஒரு கவரை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.
“அதை நீயே உன் கையால் ஆசிரியர்கிட்டே கொடு”. அம்மா என் கையில் கொடுத்ததை வாங்கிக்கண்களில் ஒற்றிக்கொண்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.
1964–ல் கமலாம்மா கையால் ‘‘புதிய பறவை’’க்கு முன் பணம். 1966–ல் ஜானகி அம்மா கையால் ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’வுக்கு டைட்டில் பணம். நான் கொடுத்து வைத்தவன்.
எம்.ஜி.ஆர். கூறினார்:– இதுல ஆயிரம் ரூபா இருக்கு. இது டைட்டிலுக்காக நான் உங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு.
நான்:– ரொம்ப நன்றி அண்ணே! இப்படி ஆயிரம் ஆயிரமா நீங்க கொடுக்கிறதா இருந்தா, நான் ஒவ்வொரு படத்துக்கும் நல்ல நல்ல டைட்டிலா சொல்லுவேன்.’’
இதைக்கேட்டு அண்ணன் மட்டும் அல்ல. அம்மாவும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.
எம்.ஜி.ஆர்:– என்ன பிரமாதம். நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. நான் கொடுத்துக்கிட்டே இருக்கேன். இப்போ நீங்க நேரா ராதாண்ணன் வீட்டுக்குப்போய் அவரைப் பாருங்க. உங்களை எதிர்பார்த்து அவரும், கிருஷ்ணன் பஞ்சுவும், வாசுவும் காத்துக்கிட்டிருக்காங்க. டைரக்டருங்க கிட்டே கலந்து பேசிக்கிட்டு தற்சமயம் அவசரத்துக்கு முதல் கட்ட படப்பிடிப்புக்கான காட்சி வசனங்களை மட்டும் எழுதிக்கொடுத்திட்டிங்கன்னா மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம். புறப்படுங்க. வாழ்க.
அங்கிருந்து புறப்பட்டேன். வயிறு நிறைய சர்க்கரைப்பொங்கல். மனம் நிறைய மகிழ்ச்சி. சட்டைப்பை நிறைய பணம். கார் ஸ்டியரிங்கைப் பிடித்தேன். பரங்கிமலைச் சாலையில் ஓட்டினேன். பாட்டு வந்தது. பாடினேன்:–
‘‘நான் பார்த்ததிலே அவர் ஒருவரைத்தான் நல்ல வள்ளல் என்பேன், நல்ல வள்ளல் என்பேன்’’
இது வாலியின் அந்த பாட்டு அல்ல. என் சொந்தப்பாட்டு.

Courtesy. Arurdoss.............. Thanks.........

orodizli
15th April 2020, 01:23 PM
"அன்பே வா" திரையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் முதன்மை காவியங்களில் ஒன்று...1965ம் வருடம் 33 லட்சங்கள் என்பது இன்றைய 300 கோடிகள் ரூபாய் எனில் மிகையாகாது.........

orodizli
15th April 2020, 02:38 PM
ஸ்ரீMGR வாழ்க

சித்திரை 2 புதன்

MGR பக்தர் களே

நீங்கள் பார்க்கின்ற இந்த போட்டோ

MGR அவர்கள் திமுக வில் இருந்த காலத்தில் எடுத்த போட்டோ

தமிழ் நாட்டில் தொடர்ந்து மழை காரணத்தினால்

சென்னை நகரமக்கள் வாழ்க்கை பாதிக்கபட்டது

ஏழைமக்கள் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே

முடங்கி கிடந்தார்கள்

அப்பொழுது நம் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்

ராமாபுரம் தோட்டத்தில் தன் பணத்தில்உணவு தயாரித்து

லாரிகளில் சென்னை முழுவதும் ஏழை மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கினார்

இப்போது கொரோனா / வந்தகாரணத்தினால்

ஏழை மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்

இப்போதுஉள்ள நடிகர்களும்

MGR அவர்களைபோல்

ஏழைமக்ளுக்கு தன் பணத்தில் உணவுதயாரித்துகொடுக்கலாம்அப்படி யாரும் செய்ய மாட்டார்கள்

நடிகர்களும்
நடிகைகளும் அப்படி த்தான்

இவர் களுடைய நினைப்பு

நேராக முதலமைச்சர் நாற்காலியில் சென்று அமர வேண்டும்

மார்க்கெட் இழந்த பிறகு

யாருடையகட்சியிலாவதுசேர்ந்து

முதலமைச்சராக வரவேண்டும்எண்று

நடிகைகள் நினைக்கிறார்கள்

அந்த நடிகைகள் மார்க்கெட்டுக்கு இழப்பதற்கு முன்பு ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் கூட அவர்கள் நிதி கொடுத்தது கிடையாது........ Thanks PM

orodizli
15th April 2020, 02:48 PM
#மண்டைக்காடு மதக்கலவரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் #எம்ஜியார் என்ன பேசினார்?

29.3.1982 அன்று சட்ட மன்றத்தில் நடந்த காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர்...

“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.

இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது.

குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.

நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாகச் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.

மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும். அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.’’

- என்று மிக தெளிவாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்...........(இதுபோன்ற ஆணித்தரமாக கருத்துக்களை துணிந்து கூறுவதற்கு இப்பொழுது தலைவர்கள் யாருமில்லை)......... Thanks.........

orodizli
15th April 2020, 02:54 PM
கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்...

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்....

ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்...

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்...

காரில் தலைவர் செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.......... Thanks.........

orodizli
15th April 2020, 02:57 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிப் பட்டுக்கோட்டையார் புகழ்வது...

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம் இந்தக் கருத்துக்கு நாடோடி மன்னன் சாட்சி கடலலைபோல் திரண்டுவந்தகூட்டம் சாட்சி

ஆகாவென் ரார்த்தெழுந்த குரல்கள் சாட்சி அரங்கத்தை யதிரவைத்தகரங்கள் சாட்சி காட்சிக்கும் நடிப்பிற்கும் கதைக்கும் உண்மைக் கருத்துக்கும் கணக்கில்லா கண்கள் சாட்சி

பாட்டுக்கும் பண்ணுக்கும் செவிகள் சாட்சி பட்ட பாட்டுக்கும் கூட்டுக்கும் வெற்றி சாட்சி எம்.ஜி.ஆர். துணிவுக்கு செலவே சாட்சி என்றார்க்கு இன்று புகழ் வரவே சாட்சி

படம் பெற்ற பெருமைக்கு பலபேர் சாட்சி பயன்கூற வெற்றிவிழா மேடை சாட்சி எண்ணரிய சாட்சிகளுக்கிடையில் நானும் இதயத்தை திறந்தொன்று சொல்கின்றேன்.

திருந்து திருந்தெனத்தானும் நடந்து காட்டும் சிறப்பாலே எம்.ஜி.ஆர். சிறப்பு பெற்றார் பொருந்தாத கூற்றுகளைப் பொய்யென் றோதும் புதுமையினால் எம்.ஜி.ஆர். புதுமையானார்

அவர் வாழ்க! கலை வளர்க! வென்று வாழ்த்தி ஆரம்பக் கருத்தினையே இங்கும் சொல்வேன்: கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம்.......... Thanks.........

orodizli
15th April 2020, 08:35 PM
இதுவே தலைவரின் சிறந்த படம் ஆகும்...இந்த படத்தை விரும்பாத எம்ஜியார் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

புகைப்பட நிபுணர் சுபாசுந்தரம் அவர்கள் ஒரு தனியார் விழாவில் இரண்டு படங்கள் எடுத்தார். ஒன்று இந்த படம் அடுத்தது 2017 இல் மைய அரசு வெளியிட்ட தபால் தலை தலைவர் படம்.

கீழே உள்ள இந்த படத்தை அரசு படம் ஆக ஆக்க விரும்பி செய்தி துறை அதிகாரியாக இருந்த அவர் மற்றவர்களிடம் காட்டிய போது இது முதல்வருக்கு பிடிக்காத படம்....சாப்பிட்டுவிட்டு பல் குத்துவது போல இருக்கு என்று அவரே நிராகரித்த படம் என்று சொல்ல.

முதல்வரிடம் இந்த படத்தை காட்டிய அந்த அதிகாரி.... ஐயா இந்த படத்தில் தான் உங்கள் தனித்து உள்ள அடையாளங்கள் ஆன உங்கள் தொப்பி, கருப்பு கண்ணாடி, வலது கரத்தில் கடிகாரம், கையில் கைக்குட்டை, மற்றும் உயரமான சட்டை காலர் அவை தவிர...

உங்களுக்கே உரிய அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு அனைத்தும் உண்மையை காட்டுகின்றன என்று அவர் சொன்னதும் ஒரு நிமிடம் படத்தை உற்று பார்த்த நம் மன்னன் சரி இந்த படமே இருக்கட்டும் என்று ஒப்புதல் தந்தார்.

இன்றும் இந்த படம் தலைவர் நம்மை விட்டு சென்று பல ஆண்டுகள் ஆகியும் பட்டி தொட்டி எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது உண்மைதானே நண்பர்களே.

படத்தை தலைவரிடம் காட்டி ஒப்புதல் பெற்றவர்....இரா.. கற்பூரசுந்தரபண்டியன்..(இந்திய ஆட்சி பணி)... அவர்கள்.

நீங்களும் படத்தை பார்த்து அனைத்தும் சரிதானா என்று சரிபார்த்து கொள்ளவும்.

நன்றி...வாழ்க எம்ஜியார் புகழ்...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி............ Thanks...

orodizli
15th April 2020, 09:46 PM
எம்.ஜி.ஆரை ஒரு ரசிகனாக வியந்தேன்... நடிகனாக நேசத்துக்கு உரியவனானேன்- நடிகர் சத்யராஜ்.

வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ் தனது திரை உலக பயணம், எம்ஜிஆர் உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் மரியாதை படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு கடலோரக் கவிதைகள் என்ற படத்தை எடுக்க இருந்தார்.
இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், இரவுப்பூக்கள் என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப் படம்தான், நான் ஹீரோ ஆகிய பின் டூயட் பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு டூயட் கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு டான்ஸ் தெரியாதே என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம் ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா என்று கேட்டேன். அவர் நடனம் தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, மைசூர் போனால் டான்ஸ் காட்சி எடுக்காமல் விட்டு விடலாமா, என்று சிரித்தபடி கேட்டார்.

இந்தப்படத்தில் நண்பர் நிழல்கள் ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர் மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன, என்று கேட்டார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர் சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல் காட்சிக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.

எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. மலைக் கள்ளன், சிவகவி போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திருமண மண்டபத்தில் தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார்.

நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, அம்மா இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன், என்றேன்.
இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு ஃபோன் செய்தார். ஏன் சார் சி.எம் வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே, என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார். மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் எப்படி என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.
அவர் எப்படி என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த எப்படி வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன எப்படிக்கு அர்த்தம். நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா, என்கிற அர்த்தம்.
நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார். இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை சட்டென்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம், டேய் இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.
திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர் என்னிடம், உங்கம்மா எங்கே என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப் போனேன். அம்மாவை பார்த்து வணக்கம்மா என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.
சிவாஜி சாருடன் நான் நடித்த ஜல்லிக்கட்டு பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், உனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்.
நான், வேணாங்க எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே. இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும் என்றேன்.
நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா, என்று மறுபடியும் கேட்டார்.
இதற்கும் வேண்டாம் என்றேன். எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு என்றார், உறுதியான குரலில். அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.
எனவே, நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும் என்றேன். நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

1987 டிசம்பர் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று வரவில்லை என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.
இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
ஆனால் அவர் எப்படிப்பட்டவர், எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம் என்பதுதான் அந்த தகவல்.
ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே, என்று சொல்லி விட்டார்கள்.
நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் ஃபைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல, என்றார்.

நான் என்ன பதில் சொல்வது, விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே என்றேன். அதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, நான் வரலைன்னா வருத்தப்படுவியா, என்று கேட்டார்.
வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே என்றேன். ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், உனக்காக வர்றேன், என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் எப்படி என்றார், உற்சாகமாக. அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த எப்படி என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.
இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். முத்தமா தர முடியாது. குத்துவேன் என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம் என்றார். இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர், கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.
டிசம்பர் 5ஆம் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு உப்பு போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த உப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்கு உரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர் என்று சத்யராஜ் சொன்னபோது அவருடைய கண்கள் கலங்கி இருந்தன.......... Thanks...

fidowag
15th April 2020, 10:00 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------

1 yes news tv யில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை ஒளிபரப்பான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சந்தித்த சவால்கள் நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த தகவல்கள் விவரம் :

எம்.ஜி.ஆர். அவர்கள் இலங்கையில் கண்டியில் பிறந்தாலும் , வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரின் தாயார் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணத்தில் சில காலம் வசித்தார். அப்போது கும்பகோணத்தில் உள்ள ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு வரை எம்.ஜி.ஆர். படித்தார் .* பின்னர்* வறுமையின் காரணமாகவும், வருமானம் போதிய அளவு இல்லாததாலும் , தன்*குழந்தைகளான எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி..ராமச்சந்திரன் இருவரையும்* மதுரையில் உள்ள பாய்ஸ் நாடக கம்பெனியில் நாடகத்தில் நடிக்க சேர்த்துவிட்டார் .பருவ வயதை அடைந்த பின்பு ,போதிய அளவு கல்வி திறன் இல்லாததால் , நிறைய புத்தகங்கள் படித்து கல்வியையும், அறிவையும் வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். மகாத்மா காந்தியின் சத்திய சோதனை உள்பட நிறைய புத்தகங்களை படித்துள்ளார் . இலக்கணம், இலக்கியம் அறிந்த அறிஞர்கள் புத்தகங்களை படித்துள்ளார் .பள்ளியில் பொது கல்வி பயிலாவிட்டாலும், இந்த உலகத்தில் ஒரு அறிவார்ந்த மனிதனுக்கு என்ன தேவை, மற்றவர்களுடன் எப்படி பழகுவது, உரையாடுவது , மற்றவர்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது போன்ற புத்தகங்கள் அதிகம் படித்துள்ளார் .நாடக துறையில் நல்ல நிலைக்கு வரவும் ,*உலக அறிவு, பொது அறிவு , பற்றி தெரிந்து கொள்ளவும், எம்.ஜி.ஆரின் தாயார் சிறிது காலம் ஆங்கில மொழி பயிற்சி அளிக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு*செய்திருந்தார் . கல்வி திறன், பேச்சு திறன் ஆகியவற்றில் நல்ல பயிற்சி மேற்கொண்டு அதை பொது வாழ்க்கையில் நல்லமுறையில் கையாண்டார் .

இதயவீணை படத்தில் காஷ்மீர் பியூட்டி புல் பாடலில் வரும் வரிகள்*சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா , சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா* -* தான் பள்ளியில் பொதுக்கல்வியை போதுமான அளவில் படிக்காவிட்டாலும் , ஒரு தேர்ந்த மனிதனை போல தான் அறிந்ததை இந்த பாடலில் குறிப்பிட்டார் .

எம்.ஜி.ஆருக்கு தெய்வபக்தி உண்டா என்று அனைவரும் அந்த காலத்தில் கேட்பதுண்டு.* சினிமாவில் பிரபலம் ஆவதற்கு முன்பு சில கோவில்களுக்கு சென்றுள்ளார் . திருப்பதிக்கு இருமுறை சென்றுள்ளார் .* முதல்வரான பின்பு*அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும், கோவில் மரியாதை நிமித்தமாகவும் சில கோவில்களுக்கு சென்றுள்ளார் .* பொதுவாக மதுவிலக்கு , தெய்வபக்தி எம்.ஜி.ஆருக்கு பிடித்த விஷயங்கள் .* நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு. தெய்வம் உண்டு என்ற நம்பிக்கை உடையவர் எம்.ஜி.ஆர்.* மகாத்மா காந்தி சோர்வாக இருந்த சமயத்தில் பகவத் கீதை படித்து உற்சாகம் அடைவார் என்று சொல்வதுண்டு . பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை* தொடங்கிய பின்னர் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சி கொள்கையில் இருந்து சற்று மாறுபட்டவர் . அதாவது தெய்வ பக்திக்கு எதிராகவும், கடவுள் நம்பிக்கை இல்லை எனவும் செயல்படவில்லை .* அதனால்தான் என்னவோ, தந்தை* பெரியாருக்கு கூடிய கூட்டத்தைவிட பேரறிஞர் அண்ணாவுக்கு அதிக அளவில் கூட்டம் கூடியது என்பார்கள்.


எம்.ஜி.ஆர். தி. மு.க. வில் சேர்ந்த பின்னர் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ,*அவர் வீட்டில் என்ன தெய்வங்கள் உள்ளன என்ற கேள்விகள் கேட்கப்பட்டது .எம்.ஜி.ஆர். தனது வீட்டில் , என் தாய் வணங்கிய விஷ்ணு, காளி ஆகிய தெய்வங்களின் படங்கள் இருந்தன . என் தாய் மறைந்த பிறகு ,அவரது படத்தை நான் வணங்கி வருகிறேன் .ஆனால் எம்.ஜி.ஆரை போல தன் தாயை வணங்கியது , போற்றியது,திரைப்படங்களில்* மரியாதை அளித்தது , தாய் பற்று மிக்க காட்சிகளில் நடித்தது, தாயின் பெருமை மிக்க பாடல்களில் நடித்தது*உலகில் வேறு* எந்த நடிகரும், அரசியல் தலைவரும் உண்டா என்றால் இல்லை என்று அடித்து சொல்லலாம் .உதாரணமாக தாயின் பெருமையை போற்றும் வகையில் அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலை*சிறப்பாக இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர்.*


எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, உடன் நடிகை ஜெயலலிதாவும் நடித்துக் கொண்டிருந்தார் . அப்போது பொம்மை சினிமா மாத இதழில் ஒரு பேட்டியில் நடிகை ஜெயலலிதா , எம்.ஜி.ஆரிடம் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார் .* ஏன் நீங்கள் கடவுள் வேடத்தில் ஒரு படத்தில் கூட நடிப்பதில்லை .* எம்.ஜி.ஆர். பதிலுக்கு, நான் கடவுள் வேடம் ஏற்று நடித்துதான் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று மக்களையோ, மற்றவர்களையோ நம்பவைக்க வேண்டும் என்ற நிலையில் இல்லை .ஒருவர் மனதை தூய்மைப்படுத்துவது, வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது , ஒழுக்கத்தை கற்று கொடுப்பது, உழைப்பில் நம்பிக்கையை வைக்க சொல்வது , தாய் தந்தையரை வணங்க செய்வது , அனைவரிடமும் அன்பு செலுத்த சொல்வது , இப்படி என்னால் முடிந்த அளவில் திரைப்படங்களின் மூலம் பல நல்ல விஷயங்களை* எடுத்து சொல்வதில் என் மனம் நிறைவடைகிறது . இவையே நான் கடவுள் வேடத்தில் நடித்து மக்களுக்கு நன்மை பயக்கும் செயலை செய்ததாக எண்ணி மகிழ்கிறேன் . எனவே நான் தனியாக கடவுள் வேடம் ஏற்று நடித்துதான் நான் கடவுள் நம்பிக்கை உடையவன்என்று மற்றவர்களை நம்பவைக்க வேண்டும்* என்ற கட்டாயத்தில் இல்லை என்றார் எம்.ஜி.ஆர் .இப்போதைக்கு அது அவசியமில்லாத ஒன்று .


ஒருவன் எப்போதும் தன் தாயிடம் அன்பு காட்ட வேண்டும் . தந்தையிடம் மரியாதை அளிக்க வேண்டும் . தனக்கு போதிக்கும் ஆசானிடம் பயபக்தியாக நடந்து கொள்ள வேண்டும் .* ஏழைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும் . மக்களிடம் மனிதநேயத்தோடு நடக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார் .ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது பேரறிஞர் அண்ணாவின்*தி. மு. க. கொள்கை .* *திரைப்படங்களில் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை, பொன்மொழிகளை, கருத்துக்களை தனது பாணியில் , மிகவும் எளிமையாக மக்களை சென்றடையும் வகையில்* நடித்து மக்களை தன்பால்*ஈர்த்தவர் எம்.ஜி.ஆர். என்று சொன்னால் மிகையாகாது .


நிகழ்ச்சியில் இதயவீணை படத்தில் ஒரு வாலுமில்லே* நாலு காலுமில்லே* பாடல், அடிமைப்பெண் படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் ,என் அண்ணன் படத்தில் கடவுள் ஏன் கல்லானான் என்ற பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன .*

orodizli
15th April 2020, 10:00 PM
1967ஆம் ஆண்டு சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட குடிசைவாழ் ஏழை மக்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரூபாய் 25,000 பணம் உதவி அளித்துள்ளார்.

அத்துடன் ஒரு திறந்த ஜீப்பில் ஏறி சென்னை நகர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி வசூல் செய்து அந்த பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.

அவர் சுற்றுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகள்.

புகைப்படங்கள் அன்றைய பொம்மை சினிமா இதழ்........ Thanks...

orodizli
15th April 2020, 10:05 PM
#நினைத்ததை_முடிப்பவன்..
"பூமழை" தூவி பாடல்...

மைசூர் சாமுண்டேஸ்வரி கோயில்
மலையின்
அடிவாரத்தில் எடுக்கப்பட்ட
தலைவரின் இந்த பாடலை
சற்று மெருகுபடுத்தியுள்ளேன்...

இந்த பாடலை ஒளிப்பதிவு
செய்த ஒளிபதிவாளர்
ரெம்ப சாமர்த்தியமாக திறமையாக
சூரிய வெளிச்சம் அதுவும்
உச்சி வெயிலில் மட்டும்
அதுவும் தலைவரின் தலை மீது
விழுமாறு ரெம்ப கைதேர்ந்த
ஒளிபதிவு நிபுணராக
பதிவு செய்துள்ளார்...

1974 இல் நமது காதுகளை
குடைந்த ஏழிசை அரசர்
பாட்டிசை சித்தர்
ஐயா டிஎம்எஸ் அவர்களின்
குரல் அந்த
பாட்டுடை தலைவனின்
உயிரான ஒரு படைப்பு...

என் அண்ணாவை ஒருநாளும்
என் உள்ளம் மறவாது என்று
இடது கையால் தலைவர்
காட்டுவது நமது கழக
அண்ணா கொடியை...

இந்த காட்சியை தீவிரமாக
ஆராய்ந்து பார்த்தால்
தலைவர் வேறெந்த பக்கமும்
கை நீட்ட வசதி இல்லாததால்
தனது இடது கை மட்டும்
காட்சியின் பிரேமில்
சரியாக இருக்கும் என்று
Technically யோசித்து
எடுக்கப்பட்ட காட்சி...

தலைவர் கடைசியில்
லதாவோடு காரில்
ஏறும் இடம்
மைசூர் மிருக கண்காட்சி
அருகே உள்ளது..
நன்றி...
பொன்மனம் பேரவை...
சென்னை............ Thanks...

orodizli
15th April 2020, 10:07 PM
அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...

எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர். எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்... எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து... தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு... நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர். பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.

"அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்..." என தயங்கியிருக்கிறார்.

"நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.." என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.

முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....

"இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க... கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....'

-என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
"சாப்பிட்டீங்களா... என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?' என கேட்டிருக்கிறார்.

திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.

ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...

"அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி..." என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

ஊருக்கு வந்தவர்... திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.

சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத உதவாக்கரை... ஈழத்தமிழன் மேல் தீடீர் பாசம் காட்டுகிறது.
அதற்க்கு... அபியின் அப்பா என்ற ஓணான் சாட்சி சொல்கிறது......... Thanks...

orodizli
15th April 2020, 10:14 PM
https://youtu.be/hXmnzrqoqJk...... Thanks...

orodizli
15th April 2020, 10:18 PM
https://youtu.be/BtU0eiUaLy8...... Thanks...

orodizli
15th April 2020, 10:26 PM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாத நிகழ்வு இது .....
1958ல் ஜவஹர்லால் நேரு சென்னை வர இருந்தபோது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட திமுக தயாராக இருந்தது.
அந்த சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எம்ஜிஆர் அவர்களையும் எஸ்.எஸ்.ஆர் அவர்களையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தது அன்றைய காவல் துறை .
சிறையில் வசதியான வகுப்பை மறுத்து, சாதாரண வகுப்பில் ஆறு நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் நமது இதயதெய்வம் எம்ஜிஆர் !........ Thanks...

orodizli
15th April 2020, 10:32 PM
#நான்_சாப்பிடட்டுமா..? #வேண்டாமா..?

சாப்பாட்டு இலை முன் அமர்ந்து கொண்டு, இந்த ஒரே ஒரு சாமர்த்திய கேள்வியை மட்டுமே வஜ்ராயுதமாக பயன்படுத்தி எப்படிப்பட்ட வல்லவரையும் நம் வழிக்குக் கொண்டு வந்து விட முடியும்... அதற்கு சாமர்த்தியமும் சமயோசித புத்தியும் வேண்டும், இரண்டுமே எம்.ஜி.ஆரிடம் இருந்தது.

அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் மறைந்து விட ... அடுத்த முதல்வர் யார்..? என நாலா திசைகளிலிருந்தும் குரல் வர....நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர ..உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி...

அதற்கு ராஜாஜி, “ உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்....
எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார் ” என்று அனுப்பி வைக்க....

உடனடியாக கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும் தமிழ், தமிழ்... என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். “என்று எதுகை மோனையுடன் எம்.ஜி.ஆரிடம் பேச ...இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.சொன்னார் இப்படி....
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்..”

உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த எஸ்..எஸ். ராஜேந்திரனுக்குப் போன் செய்த எம்.ஜி.ஆர்....
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார் ...
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு எஸ்.எஸ்.ஆரின் இல்லம் வருகிறார் எம்.ஜி.ஆர்.

இலை போட்டு இனிய முகத்துடன் எஸ்.எஸ்.ஆரின் தாய் , எம்.ஜி.ஆருக்கும் - எஸ்.எஸ்.ஆருக்கும் பரிமாற....,
இந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர்...எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுங்க….!” என்கிறார்....

“கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று எம்ஜிஆர் விளக்குகிறார்.

திகைத்துப் போன எஸ்.எஸ்.ஆர். நிறைய விளக்கங்கள் சொல்லி.., “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
எம்.ஜி.ஆர். வாதம் செய்யவில்லை..வற்புறுத்தவில்லை...
எஸ்.எஸ்.ஆரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்
"நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா..?”
எஸ்.எஸ்.ஆர். வெகு நேர யோசனைக்குப் பின், வேறு வழியின்றி சொல்கிறார்...
“சரி.. நீங்க சாப்பிடுங்க..”
அதன் பின்.. முதல்வராகக் கருணாநிதி பொறுப்பேற்கிறார்.
அப்புறம்.. நடந்ததை நாடே அறியும்...!

#யானைக்கு_பாகனைவிட_சிறந்த #நண்பன்_யாருமில்லை.
#ஆனால்_மதம்_பிடித்தால்_யானைக்கு #பாகனை_விட_மோசமான_எதிரியும்
#யாரும்_இல்லை.

சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!......... Thanks..........

orodizli
15th April 2020, 10:34 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_பொற்பாதம்_வணங்கி #நண்பர்கள்_அனைவருக்கும்_இனிய #காலை_வணக்கம்

#திமுக_அதிமுக_இணைப்பு
#பேச்சு_வார்த்தைகள்

1979ஆம் வருடத்தின் இலையுதிர் காலம். ஒரிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிஜு பட்நாயக், ஒரு வலிமையான எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்க விரும்பினார்.

ஆகவே, தனிப்பட்ட முறையில் இரு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் அவர். வீரமணி மூலம் அவ்வப்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது அவருக்குத் தெரியாது.

கலைஞரை எம்.ஜி.ஆர். சந்திக்க வேண்டுமென பத்திரிகையாளர் சோலை அறிவுறுத்திவந்தார். கலைஞரிடம் வீரமணி இதனை வலியுறுத்திவந்தார்.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை கலைஞரை தொலைபேசியில் அழைத்த, பட்நாயக் சென்னை வந்து அவரை சந்திக்கலாமா என்று கேட்டார்.

.... செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வந்த பட்நாயக், கலைஞரைச் சந்தித்தார். கலைஞர் ஆறு நிபந்தனைகளை முன்வைத்தார்.

1. இணைப்பிற்குப் பிறகு ஒருங்கிணந்த கட்சி தி.மு.க. என்றே அழைக்கப்படும்.

2. கட்சியின் கொடி அ.தி.மு.கவின் கொடியாக இருக்கலாம்.

3. எம்.ஜி.ஆர். முதல்வராகத் தொடர்வார்.

4. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க அவசியமில்லை.

5. ஒருங்கிணைந்த கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் யார் என்பது இணைப்பிற்குப் பிறகு தகுந்த நேரத்தில் முடிவுசெய்யப்படும்.

6.முக்கியமாக, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற ஆணையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற வேண்டும்.

இந்த நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், எம்.ஜி.ஆர். இதற்கு நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்று நம்பினார்.

#மோதல்_அரசியலால்_களைப்படைந்த #எம்ஜிஆர்

எம்.ஜி.ஆரும் இணைப்பை விரும்பினார் அல்லது அப்படி ஒரு தோற்றம் இருந்தது.

மோதல் அரசியல் தமிழ்நாட்டை முன்னெடுத்துச்செல்லவில்லை என்பதோடு, எம்.ஜி.ஆருக்கு மிகவும் களைப்பூட்டியது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலையில் மோகன்தாஸுடன் (காவல்துறை தலைவர்) இணைப்பு குறித்து பேசினார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் காலையில் மாநில விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். பட்நாயக் அருகில் இருந்த கலைஞரை 'ஆண்டவரே' என்று பிரியத்துடன் அழைத்தார்.

கலைஞருடன் அன்பழகன் இருந்தார். எம்.ஜி.ஆர். நெடுஞ்செழியனையும் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

பிறகு இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பட்நாயக் சொன்ன நிபந்தனைகள் எல்லாம் உண்மைதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

இந்த ஆறு நிபந்தனைகளுக்கும் பின்னாலிருந்த காரணங்களை விளக்கினார் கலைஞர். எம்.ஜி.ஆர். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

மேலும் ஒருபடி முன்னே சென்று, இரு கட்சிகளின் செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒரு குறிப்பிட்ட நாளில்கூடி இணைப்பு குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என வாக்குறுதியளித்தார் எம்.ஜி.ஆர்.

#கழகங்களின்_இணைப்பைக்
#தடுத்தது_யார் ?

பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த இரு தலைவர்களும் பட்நாயக்கையும் ஊடகத்தினரையும் சந்தித்து, எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினர்.

அதே நாளில் கருப்பையா மூப்பனாரை எம்.ஜி.ஆர். சந்தித்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக கலைஞர் குறிப்பிடுகிறார்.

கலைஞரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தன்னுடைய ராமாவரம் இல்லத்தில் வைத்து கருப்பையா மூப்பனாரைச் சந்தித்துப் பேசியிருந்தார் எம்.ஜி.ஆர்.

அன்று மாலையில் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த
பி.ராமச்சந்திரனுக்கு விருந்தளித்தார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் செப்டம்பர் 14ஆம் தேதி. அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம்.

#வேலூரில்_நடந்த_பொதுக்கூட்டம் #ஒன்றில்_பேசிய_எம்ஜிஆர். #அதிமுகவின்_கொடி_இன்னும்_ஆயிரம் #ஆண்டுகளுக்கு_உயரத்தில்_பறக்கும் #என்று_குறிப்பிட்டார்.

தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்பது இருக்காது என்றும் கூறினார். எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவரது அமைச்சர்கள் தி.மு.க. குறித்தும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இப்படியாக, கழகங்களின் இணைப்பு என்ற சிந்தனையை தீர்த்துக்கட்டினார் எம்.ஜி.ஆர்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பொது நிகழ்வில் பேசிய கலைஞர், இணைப்பு நடக்காமல் போனதற்கு வேறு ஒரு ராமச்சந்திரன் மீது குற்றம்சாட்டினார்.

"இதனைக் கெடுத்தது யார் என்பது எனக்குத் தெரியும். நான் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரைச் சொல்லாவிட்டால் வரலாறு முழுமையடையாது. மாநில விருந்தினர் மாளிகையில் இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, எம்.ஜி.ஆர். வேலூருக்குப் போனபோது உடன் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர்" என்றார் கலைஞர்.

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.......... Thanks.........

orodizli
15th April 2020, 10:51 PM
எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்...��
படத்தில் வரும் ஒரு பாத்திரத்திற்கு நண்பரின் பெயரேயே வைத்து, பாடலிலும் நண்பர் பெயர் வரும்படி பாடலை எழுதி வாங்கிய நட்புக்கு பெருமை சேர்தவர்தான் நம் #எம்ஜியார்...

//#மக்கள்_திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.

ஒரு முறை தான் நடித்து வெளியான #சிரித்து_வாழ_வேண்டும் என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

ஒரு பாடலை உருவாக்கும்போது.. தனது நண்பரின் பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள.. புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை..

டி எம். சௌந்தரராஜன் குரலில் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்..

'எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும்!
அன்புள்ள தோழர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்...
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்...

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும்?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும்!

#எம்ஜிஆர் திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும் திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?

பகுத் அச்சா என்பதைவிட! இது இறைவனின் சித்தமே! திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. #புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.

நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!//

சரி யாருய்யா இந்த 'அப்துல் ரஹ்மான்' என கேட்பவர்கள் இந்த சுட்டியை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.vallamai.com/?p=48679

நன்றி:கவிஞர் காவிரி மைந்தன்....... Thanks...

orodizli
15th April 2020, 11:11 PM
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

எம்.ஜி.ஆர்.

அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..

— புவனா, மும்பை......... Thanks.........

orodizli
16th April 2020, 07:34 AM
#வாத்தியார் #பாட்டு

தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல...

ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆனால் – எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் ” #மலைக்கள்ளன்...

ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் தயாரிக்கப்பட்டு பெருவெற்றி அடைந்த படம்.

அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்...

மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக – எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது...!!!

கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!.

"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி – இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.”........... Thanks to mr. BSM.........

orodizli
16th April 2020, 07:48 AM
https://youtu.be/YArGYA-4dc4......... Thanks.........

orodizli
16th April 2020, 01:41 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#ரேகை_சாஸ்திரம்

M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.

அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே........... Thanks.........

orodizli
16th April 2020, 01:54 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#பண்டிகை

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு.......... Thanks fb.,

orodizli
16th April 2020, 02:05 PM
"நாம் திரும்பி வரும்போது (ராமவர) தோட்டம் ஜப்தி செய்யபட்டிருக்கலாம்.."
உதவியாளரிடம் சொன்ன #எம்ஜியார்..

ஒரு நாள் எம்.ஜி.ஆர்.தோட்டத்திலிருந்து தனது உதவியாளருடன் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார். காரில் ஏறியவர் தன் உதவியாளரிடம் சொல்கிறார்..

"தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"

இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.

"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...

"பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்

"ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"

"என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
#உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.

'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..

அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)

நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.

இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"

சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.

"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"

"வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.

நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும்
வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.

என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.

ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.

"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"

அந்த வகையில் உருவானது தான்
#நீதிக்கு_தலை_வணங்கு படம்.

எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....

எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..

#படித்ததில் நெகிழ்ந்தது

#MGR #Ulagam #Sutrum #

Courtecy : Jayant Prabhakar.......... Thanks.........

orodizli
16th April 2020, 02:50 PM
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைய முழு காரணம் #புரட்சித்தலைவரே...!

வரலாறு தெரியாமல் வாயை கொடுத்து, வம்பில் மாட்டிய ஸ்டாலின்..

"சென்னை பெருநகர மேம்பாட்டுக் குழு உறுப்பினராக 1985-86-ல் என்னை எம்ஜிஆர் நியமித்தார்.

அவர் தலைமையில் கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில்தான் திட்டத்தின் அவசியத்தை நான் வலியுறுத்தி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மனுவாக அளித்தேன்.

உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நல்லுசாமிக்கு எம்ஜிஆர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில்தான், 1986-87-ல் முதன்முதலில் இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது.

'கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, புறநகர் பேருந்து நிலையம் மற்றும் சுமை வண்டி நிலையம் உள்ளிட்டவை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப்படும்'

-என்று 1986-87-ம் ஆண்டு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, எம்ஜிஆர் உத்தரவின்படி, அப்போதைய துறை அமைச்சர் நல்லுசாமி அறிவித்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 3 ஆயிரம் கடைகள், பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவெடுத்தவர் எம்ஜிஆர்தான்.

இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால் இது யார் குழந்தை என்பது தெரிந்திருக்கும்.

பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 3 ஆயிரம் கடைகள், பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவெடுத்தவர் எம்ஜிஆர்தான்."

வரலாறு இப்படி இருக்க, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவதே தில்லு முல்லு திமுக-வின் வேலையாகி போய்விட்டது...

-சைதை துரைசாமி | சென்னை முன்னாள் மேயர்......... Thanks.........

orodizli
16th April 2020, 02:51 PM
புரட்சி தலைவர் ஆட்சியில் தான் சென்னை பாரிமுனையில் இருந்த திருவள்ளுவர் பேருந்து நிலையம், பூக்கடைகள், கொத்தவால் சாவடி என்ற மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை வாகன நெரிசல் காரணமாக அன்றாடம் தினறும் சென்னை வாகனநெரிசலை போக்க நிரந்தரமாக மாற்றியவர். தவிரவும் எண்ணற்ற ஊர்களுக்கு பஸ் வசதி /கிராமங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தவரும் அவர் தான். தவிரவும் 1977ஆடசிக்கு வந்த நிலையில் உயிர் காட்சி சாலையை வண்டலூர்க்கு மாற்றினார். திருவள்ளூர் /கும்மிடிப்பூண்டி ரயில் தடங்களை அன்னை இந்திரா காந்தி அம்மையார் ஒத்துழைப்புடன் மின்மயமாக்கினார். 11ஆண்டு எஸ் எஸ் எல் சி பாடத்திட்டத்தை நீக்கி 10வகுப்பு எஸ் எஸ் எல் சி /+2 புகுமுக பாடத்திட்டத்தை உருவாக்கி PUC ஒழித்து ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டத்தை உருவாக்கி ஏழை, நடுத்தர மக்கள் பயிலும் வகையில் எஞ்ஜினியர்/மருத்துவம்/வக்கில் படிப்பை எளிமையாக்கினார். ஐம்பது சதம் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார். நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கினார்.ரேஷன் அட்டைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கி, கடைகோடி கிராமங்களில் கூட ரேஷன் கடை உருவாக்கினார். கர்ணம், முன்சீப் பதவியை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை ஏற்படுத்தி எண்ணற்ற ஏழைவீட்டு பிள்ளைகளும் விஎஒ ஆக்கினார். குடிசைகள் ஒரு மின்விளக்கு பெற செய்தார். மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தார். போலீஸ் காவலர்களுக்கு ட்ரவுசர் பதிலாக பேன்ட் மற்றும் கோபுர தொப்பியை நீக்கி அழகான தொப்பி அணிய செய்தார். தமிழ் பல்கலை கழகம்/மகளிர் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார். எண்ணற்ற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார். இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.......... Thanks fb., Friends.........

orodizli
16th April 2020, 03:09 PM
வணக்கம்..!

இன்று உலகக் (World Voice Day) குரல் தினம்..!

இந் நாளில் ஒரு மகிழ்ச்சியான நற்செய்தி..!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "நான் ஆணையிட்டால்." படத்தில் இசையரசர் திரு.டி.எம்.எஸ். பாடிய "தாய்மேல் ஆணை." எனும் பாடல் ரசிகர்களின் ஏகோபித்த நல் வரவேற்பினைப் பெற்ற ஒரு அதியற்புதப் பாடலாகும்..!

இந்த இனிய பாடலின் இறுதி வரிக் காட்சியில் புரட்சித் தலைவர் கையில் ஒரு "திருக்குறள்" புத்தகம் இருக்கும்..! (இந் நற்தகவல் உதவி:- மெகாத் தொலைக் காட்சித் "தமிழ்நதி ஆதவன்")

அதாவது இசையரசரின் தேமதுரக்குரலுக்கும் வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனைக்கும் புரட்சித் தலைவரின் தமிழ்ப் பற்றிற்கும் மெல்லிசை மாமன்னரின் இசைநயத்திற்கும் பெருமை சேர்க்கும் இந்த அதியற்புதப் பாடலை இன்றைய (World Voice Day) "உலகக் குரல் தினத்தில்" முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுத்து முகநூல் பக்கத்தில் பகிர்வதைப் பயனுள்ளப் பொருத்தமானச் செயலாக யான் கருதுகின்றேன்..!

-கவிச்சாரல் காமராஜ் மாரியப்பன் கொள்ளிடம் காமராஜ்,
சர்வதேச வானொலி நேயர்,
கரோகிப் பாடகர்,
ஸ்ரீசத்ய சாய் இல்லம்,
நெ.1.டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி - 621 216....... Thanks...

orodizli
16th April 2020, 03:24 PM
இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து இந்திக்கும் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்கள் எவை...?

தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்திப்படம் இயக்குனர் சாந்தாராமின் மகத்தான படைப்பு அதை தமிழில் எம்ஜிஆர் பல்லாண்டு வாழ்க என மாற்றினார்.

சச்சா ஜூட்டா –இந்தியில் ரொமான்டிக் ஹூரோவாக இருந்த ராஜேஷ் கன்னா முதன்முறையாக ஆக்சன் படத்தில் நடித்தார்.இரட்டை வேடம் கொண்ட இப்படத்தை எம்ஜிஆர் நினைத்ததை முடிப்பவன் என்று தமிழில் மாற்றினார். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலில் ராஜேஷ்கன்னாவின் உருக்கமான நடிப்பை எம்ஜிஆர் தமிழில் மெருகேற்றியிருந்தார். உருக்கத்தை முழுவதுமாக ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதாவிடம் தந்துவிட்டார் எம்ஜிஆர்.

ராம் அவுர் ஷ்யாம் இந்தப் படத்தில் இந்தியில் நடித்தவர் திலீப்குமார். நடிப்புலக ஜாம்பவான் எனப் பெயர் பெற்ற அவரே தமிழில் எடுக்கப்பட்ட எங்க வீட்டுப்பிள்ளையில் எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரைப் போல தம்மால் நடிக்க முடியாது என பெருந்தன்மையுடன் பாராட்டினார்.

ஜன்ஜீர்- அமிதாப்பச்சனுக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தந்த படம். சல்மான் கானின் தந்தை சலீம் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற இரட்டையராக கதைவசனம் எழுதிய படம் இது. பின்னர் இதே ஜோடிதான் ஷோலே, தீவார் போன்ற வெற்றிப்படங்களை அளித்தது. தமிழில் இப்படத்தை எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார். கதாநாயகனுக்கு இணையான மற்றொரு பாத்திரத்தில் இந்தியில் பிரான் நடித்தார். அந்த வேடத்தையும் எம்ஜிஆர் ஏற்று முஸ்லீம் பத்தானாக நடித்து மேரா நாம் அப்துல் ரகுமான் எனப்பாடி இஸ்லாமிய ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.

ஜிக்ரி தோஸ்த்- இந்தியில் ஜித்தேந்திரா நடித்த இந்தப் படத்திலும் இரட்டை வேடம் ஏற்று தமிழில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மாட்டுக்கார வேலனாக நடித்தவர் எம்ஜிஆர். ஒரு பக்கம் பார்க்குறா என்ற நயமான பாடல்காட்சியில் எம்ஜிஆரின் நளினமான நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்கது.

ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் இந்தியில் தர்மேந்திராவும் அவரால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்ட மீனாகுமாரியும் நடித்தது. தமிழில் மீனாகுமாரியின் வேடத்தில் சவுகார் ஜானகி நடித்தார். ஒளிவிளக்கு என பெயர் மாறிய இப்படத்தில்தான் முதல்முறையாக எம்ஜிஆர் குடிகாரனாக நடித்தார். அந்தப் படம் இரட்டை வேடம் இல்லை என்பதால் அவரே தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்று பாடி குடி குடியை கெடுக்கும் என்ற தனது கொள்கையையும் பிரச்சாரம் செய்தார்.
இந்தப்படத்தில்தான் இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்ற பாடலில் உயிருக்குப் போராடும் எம்ஜிஆருக்காக சவுகார் பாடுவார். புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் போதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இந்தப்பாடல் ஒலித்தது.

ரக்வாலா- இதுவும் தர்மேந்திரா நடித்த படம்தான். காவல்காரன் என்ற பெயரில் தமிழில் உருவாக்கினார் எம்ஜிஆர். இப்படத்தில் இடம் பெறும் பாக்சிங் காட்சிகளும் ரகசிய போலீஸ்காரராக எம்ஜிஆர் ஏற்ற கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்தன.

ரிக்சாவாலா- தமிழில் எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற ரிக்சாக்காரன் படமே இந்தியில் ரந்தீர் கபூரும் இளமை துள்ளும் பெரிய மார்பகங்களுடைய நீத்து சிங்கும் நடித்தனர்.

ஜீனே கீ ராஹா இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆர் நான் ஏன் பிறந்தேன் என மாற்றினார். இரு பெண்களுக்கு இடையில் பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு ஆண் என்ற கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம். எம்ஜிஆரின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லாத குடும்பக்கதை ஆயினும் நான் ஏன் பிறந்தேன், சித்திரச் சோலைகளே, தம்பிக்கு ஒரு பாட்டு போன்ற பாடல்களில் எம்ஜிஆர் தனது கொள்கைகளை பதிவு செய்துவிட்டார். இந்தியில் ஜித்தேந்திரா நடித்த மென்மையான காதலனின் அப்பாவித்தனமான தோற்றம் எம்ஜிஆருக்கும் அழகாகப் பொருந்தி விட்டது. இப்படத்தில் இசையமைத்த சங்கர்-கணேஷ் தனிப்புகழ் பெற்றனர்

சைனா டவுண்- இதுதான் தமிழில் குடியிருந்த கோயில் என்று வந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் பின்னர் இதே கதையை தமிழிலிருந்து இந்திக்கு உல்டா செய்த இயக்குனர் மகேஷ் பட் இதனை இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கினார்.

யாதோங்கி பாரத் –தர்மேந்திரா நடித்த இந்திப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக இதை எடுத்த எம்ஜிஆர் முற்பகுதியில் மற்றொரு கதாநாயகனான விஜய் அரோராவே பாதிக்கதையை ஆக்ரமித்ததால் அந்தப்பாத்திரத்தையும் தானே நடித்து இரட்டை வேடம் ஏற்றார். லதாவின் தூக்கலான கவர்ச்சியுடன் இனிமையான பாடல்களுடன் உருவான இப்படத்தில் மூன்றாவது தம்பியாக தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்தார்.

உல்ஜன்- இதயக்கனியாக மாறிய இந்தப்படம் இந்தியில் சஞ்சீவ்குமார், சுலக்சனா பண்டிட்டின் பக்குவமான நடிப்பாலும் கிஷோர்- லதா பாடல்களாலும் மெருகேற்றப்பட்டது. இதனை தமிழில் மிக அழகாக மாற்றம் செய்தார் இயக்குனர் ஏ.ஜகன்னாதன். தோ ரஹா படத்தில் கற்பழிப்புக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ராதா சலூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர். ராதா சலூஜா எம்ஜிஆருடன் இன்றுபோல் என்றும் வாழ்க படத்திலும் நடித்து எம்ஜிஆருடன் நடித்த ஒரே இந்தி நடிகை எனும் மதிப்பை பெற்று அதற்குபின்னர் காணாமல் போனார்.

ஹாத்தி மேரே சாத்தி –தேவர் பிலிம்சின் இந்தப் படம் தமிழில் நல்லநேரமாக எடுக்கப்பட்டது. இந்தியில் ராஜேஷ் கன்னா ஹீரோ. தமிழுக்கும் இந்திக்கும் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் முகமது ரபி குரலில் யானையின் மரணத்திற்காக ஒலிக்கும் பின்னணி பாடல் தமிழில் இல்லை.

தமிழில் நம் நாடு என எம்ஜிஆர் நடித்த படமே இந்தியில் அப்னா தேஷ்- இதுவும் ராஜேஷ் கன்னா நடித்த படம். இந்தியில் கவர்ச்சிப் புயல் மும்தாஜின் நடிப்பு ராஜேஷ்கன்னாவையே சில இடங்களில் ஓரம் கட்டியது.

கோரா அவுர் காலா- ராஜேந்திரகுமார் நடித்த இந்தப்படமும் இரட்டைவேடம் கதைதான். தமிழில் நீரும் நெருப்பும். இந்தியில் இந்தப் படம் பெற்ற வெற்றியை தமிழில் வசூலில் வழக்கமான வெற்றி பெற்றது, கரி பூசிய எம்ஜிஆரை ரசிகர்கள் ஏற்கவில்லை. உருவத்திலும் பொன்மனச்செம்மலாகவே பார்த்துப்பழகி விட்டார்கள்.

ராஜா ஜானி – தர்மேந்திரா-ஹேமாமாலினி ஜோடியாக நடித்த இப்படத்தை தமிழில் ராமன்தேடிய சீதையாக ஜெயலலிதா எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறந்த திரைக்கதை கொண்ட படம் இது.

இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்

மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்

இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.

பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலிக்கிறது............ Thanks fb.,

orodizli
16th April 2020, 07:49 PM
1982 ஆம் ஆண்டு நம் மக்கள்திலகம் முதல்வர்.

சென்னையில் 5 ஆண்டு மருத்துவ படிப்பு முடிந்து ஹவுஸ் சர்ஜென் ஆக ஓராண்டு பயிற்சி மருத்துவர்கள் ஆக பணி புரிவோர்கள் தங்களுக்கு வழங்க படும் மாத சிறப்பு அரசு ஊதியம் 375 ரூபாய் தங்களுக்கு போதவில்லை என்று.

போராட்டம்...ஆர்பார்ட்டம்.... உண்ணாவிரதம்..ஊர்வலம் நடத்துகிறார்கள்.அப்போது சுகாராதத்துறை அமைச்சர் திருமிகு ஹண்டே அவர்கள்.

ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள் சிலர் திரு ஹண்டே அவர்களை சந்திக்க அவர் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கி தர ஒப்புக்கொள்ள.

அதன் படி ஒரு நியாயிற்று கிழமை காலை 10.30. மணிக்கு தன் வீட்டுக்கு மருத்துவ குழுவினரை வர சொல்கிறார் மன்னர்.

அதன் படி முதல்வர் 10.30 மணியில் இருந்து காத்து இருக்க போராட்ட குழுவினர் 11.30 மணி தாண்டி தலைவர் வீட்டுக்கு செல்ல.

என்ன இவ்வளவு தாமதம் என்று முதல்வர் கேட்க எங்க கிட்ட வாகன வசதி இல்லை அனைவரும் பஸ்ஸில் வர லேட்டா ஆகி விட்டதை சொல்ல.

நீங்க சொல்லி இருந்தால் நான் டி.நகர் வந்து இருப்பேனே என்கிறார் முதல்வர்...என்ன சிந்தனை பாருங்கள்.

விவரங்கள் சொல்ல பட ஆம் உண்மை 375 ரூபாய் காணாது ஒரு மாதத்துக்கு..
படிக்கும் போது அப்பா அம்மா செலவழிப்பது சரி நீங்கள் முடித்த பிறகு அது தவறு.

சரி நீங்கள் எவ்வளவு கேட்கிறீர்கள் என்று தலைவர் கேட்க 500 ரூபாய் கொடுத்தால் சமாளித்து விடுவோம் என்று குழுவினர் சொல்ல.

நீங்கள் உயிர் காக்கும் மருத்துவர்கள் 500 ரூபாய் எப்படி பத்தும் மாதத்துக்கு என்று 1500 ரூபாய் கொடுக்க ஒப்புக்கொள்கிறார் நம் தங்க தலைவர்..

யாருக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று கணிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

அன்று அவர் போட்ட அஸ்திவாரத்தில் தான் இன்று தமிழக சுகாதாரத்துறை தலை நிமிர்ந்து நடை போடுவது பலருக்கும் தெரியாத உண்மை.

அன்று முதல்வரை சந்தித்த அந்த குழுவில் இருந்த 6 மருத்துவர்களின் பல முறை அதிமுக எம்பி ஆக இருந்த மருத்துவர் வேணுகோபால்
அவர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல்... அவர் அப்போது ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.

பின்னர் கழகத்தில் தீவிர பணியாற்றி கட்சி எம்பி ஆனார்...எப்படி..

நன்றி....வாழ்க எம்ஜியார் புகழ்...நன்றி

தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி... Thanks.........

orodizli
16th April 2020, 08:11 PM
#மனிதநேயம் #நம் #இனம்
#அன்பு #நம் #மதம்

P2 Media விற்காக நம்ம எம்ஜிஆர் லதாம்மா பிரத்யேக பேட்டி

You tube link :

https://youtu.be/KOqIOEdlSxw

#புரட்சித்தலைவர் #தான் #என் #ஆசான்...! ����

நான் எங்கு சென்றாலும் என்னை எம்ஜிஆர் லதா என மக்கள் அழைப்பதை நான் மிகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்...! ������

குறிப்பறிந்து உதவுவார்...! நிறைய நேரங்களில் நானே பார்த்து வியந்திருக்கிறேன்...! ��

அவரைப் போல சிறந்த தொழில்நுட்ப வல்லுந*ர் கிடையாது, எந்த வசதியுமில்லாத அந்த காலகட்டத்திலேயே அவரது தொழில்நுட்பம் மிகப் பிரம்மாண்டமாய் இருக்கும்...! ��

பிறருக்கு உதவும் குணம் நான் அவரிடம் கற்றது...! மனித நேயத்தில் முன்னேற இன்னமும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன்...! ������������

அன்றைய சினிமா மற்றும் இன்றைய சினிமாக்கள் பற்றிய கருத்து...! ��

(எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்புடீ...!)
இன்னும் பலப்பல பசுமையான நினைவுகளை நமக்குப் பகிர்ந்துள்ளார் நம்ம எம்ஜிஆர் லதாம்மா!!! ������.......... Thanks.........

orodizli
16th April 2020, 08:26 PM
வட இந்தியாவில் உள்ள ஒரு தனியார் டி.வி சேனலில் எடுக்கப்பட்ட சர்வே யார் சிறந்த மனிதர் சிறந்த முதல்வர் மூன்று பேர்கள் பெயர் குறிப்பிட்டு கருத்து கணிப்பு எடுத்தனர் அதில் நம்ம தெய்வம் பொன்மனச்செம்மல்க்கு ஐந்தரை கோடி பேர் வாக்களித்தனர். ஜெயலலிதாவுக்கு மூன்று கோடி பேர் வாக்களித்தனர் கருணாநிதிக்கு இரண்டு கோடி பேர் வாக்களித்தனர். ..இந்த செய்தி அதிகமாக சேர் செய்யுங்கள் மக்கள் அனைவரிடமும் போய் சேரும். .......... Thanks.........

orodizli
16th April 2020, 08:58 PM
#கண்ணன்_என்_காதலன் படத்தில் #அம்மா கால் ஊனமுற்றவரைப்போல் நடிப்பார்.

ஒருநாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் மக்கள்திலகம் #எம்ஜிஆர் புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை.

"காரில் ஏறும் போது இயக்குநரிடம் மதியம் என்ன காட்சி எடுக்கப்போகிறீர்கள்" என்று #புரட்சித்தலைவர் கேட்க,

இயக்குனரோ "சக்கர நாற்காலியில் இருந்து மாடிப்படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி" என்று விளக்க, காரில் ஏறப்போன #எம்ஜியார் இறங்கிவிட்டார்.

"அது ரிஸ்க்கான காட்சி நானும் உடன் இருக்கிறேன். அந்தப்பெண் (ஜெயலலிதா) விழுந்துவிட்டால் என்ன ஆவது?" என்று கூறி அவரும் அங்கேயே இருந்துவிட்டார்.

படியில் உருள்வது டூப் தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும் சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார்.

எனவே முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்திற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒத்திகையின் போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர்., தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து அதற்கு மேல் நாற்காலி உருண்டு விடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா? என்று உறுதி செய்தார்.

ஒருமுறைக்கு பல முறை உறுதி செய்த பின்னர் தான் ஜெயலலிதா நடித்த அந்த காட்சி படமாக்கப்பட்டது.

அந்த அளவு உடன் நடிப்பவர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர்தான் நம் #மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.......... Thanks...

orodizli
16th April 2020, 09:08 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன்....

ஒரு கேள்வி?
இந்த வீடியோ காட்சியை காணுங்கள்?

பல நாடுகளில் ஜனநாயக முறைப்படி மக்களால் வாக்களித்து தங்களுக்கான முதலவர்களை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது?

ஆனால் இந்த அமெரிக்காவில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி ஒன்றை மட்டும் நம்பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நாடு திரும்பிய எங்கள் மனிதபுனிதர், புரட்சி தலைவர்,மக்கள் திலகம்,பொன்மனச்செம்மல், பாரத்ரத்னா, டாக்டர்."திரு.எம்.ஜி.ஆர்" போல் சாதனை படைத்தவர்கள் எந்த நாட்டிலாவது உண்டோ?

தெரிந்திருந்தால் கருத்தை பதிவு செய்யவும்?

எம்.ஜி.ஆர் பக்தன்
A .A. பாலு...... Thanks...

orodizli
16th April 2020, 09:10 PM
எம் ஜி ஆர் புகழ் மக்களால்
எம் ஜி ஆரால் பலன் கண்டோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா
இதில் நன்றி மறந்தோர் அதிகம்

அண்ணா முதல் இன்றைய ஆட்சி வரை எம் ஜி ஆர் எனும் சக்தியால்
எம் ஜி ஆரை மறப்பது மக்களை மறப்பது போன்று
திராவிட இனம் ஆட்சி நடக்க எம் ஜி ஆர் எனும் ஆணிவேர் வேண்டும்

எம் ஜி ஆர் எவரையும் எதிரியாக காணவில்லை எம் ஜி ஆர் முன் எதிரியாக நிற்க்க எவராலும் முடியாது
எம் ஜி ஆர் சக்தியின் பலம் அப்படி

வெற்றி வேண்டுமா எம் ஜி ஆர் சக்தி அங்கு வேண்டும்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...

orodizli
16th April 2020, 09:54 PM
ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

அதனை இப்போது காண்போமா?

“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது......... Thanks.........

orodizli
16th April 2020, 09:56 PM
இந்தப்*பாடல்*திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்காக எழுதப் பட்டுப் படமாக்கப் பட்டதோ அதே சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிஜ வாழ்விலும் பாடப்பட்டது. திரைப்படத்தில் கதாநாயகனின் உயிரை மீட்ட அதே பாட்டு எம்.ஜி.ஆர். அவர்களின் உயிரையும் மீட்டது.


தமிழக மக்களின் இதயக்கனியான எம்.ஜி.ஆர். அவர்களது உயிரை எமனிடமிருந்து மீட்டு வந்த அந்த உயிர்ப்*பாடல்இன்றைய பாடலாக ஒலிக்கிறது.


இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு


இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு


��திரைப்படம்: ஒளிவிளக்கு

��இயற்றியவர்: கவிஞர் வாலி

��இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

��பாடியவர்: பி. சுசீலா

ஆண்டு: 1968


இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு

தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

நம்பிக்கையின் ஒளிவிளக்கு


ஆண்டவனே உன் பாதங்களை நான்

கண்ணீரில் நீராட்டினேன் இந்த

ஓருயிரை நீ வாழவைக்க இன்று

உன்னிடம் கையேந்தினேன் முருகையா!


ஆண்டவனே உன் பாதங்களை நான்

கண்ணீரில் நீராட்டினேன் இந்த

ஓருயிரை நீ வாழவைக்க இன்று

உன்னிடம் கையேந்தினேன்


பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை

உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை

விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?


ஆண்டவனே உன் பாதங்களை நான்

கண்ணீரில் நீராட்டினேன் இந்த

ஓருயிரை நீ வாழவைக்க இன்று

உன்னிடம் கையேந்தினேன்


மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்

வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?

உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்

மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!

இறைவா நீ ஆணையிடு! ஆணையிடு!

இறைவா! இறைவா! இறைவா!✍����........ Thanks...

orodizli
16th April 2020, 10:02 PM
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.

உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .

கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்

ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்

புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........ Thanks...

orodizli
16th April 2020, 10:03 PM
நான் ஏன் பிறந்தேன் படம் பார்க்காத கண்கள் இல்லை. இருந்தாலும் அதில் உள்ள சிறு கருத்துக்கள் மட்டும் கூறுகிறேன்.

படத்தின் கதைப்படி நடிகை காஞ்சனா அயல்நாட்டில் இருந்து வருவார். கால்கள் ஊனமுற்றவராக இருப்பார். எத்தனையோ வகை வைத்தியம். ,மருத்துவர்கள் பார்த்தும். அவர் கால்கள் குணமாகாது. அப்படியிருக்கையில் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடன் பழகியதும் அவரது கால்கள் குணமாகும் என்ன காரணம். ? அதுதான் அங்கே கொடுக்கப்பட்ட கருத்தாகும், ,,,.....

எப்படிப்பட்ட நோயாளியாக இருந்தாலும். எந்த வகை நோயாக இருந்தாலும்
நோயாளியிடம் காட்டும் உண்மையான அன்பு. .பாசம் அவர்களுடன் பழகும் விதமும்தான் நோயை குணப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகதான் இக்காட்சி யாகும்.

மருத்துவரிடம் சென்று குணமாகாத. நோய். எத்தனையோ கோயில்கள் சென்று குணமாத நோய் ஒருவருடைய அன்பு குணமாக்கும்

மருந்தைவிட அதைக் கொடுக்கறவங்க மனசைப் பொருத்துதான் நோயாளிகளின் நோய் போக்குவதற்கு உதவும்.

இதைத்தான் புரட்சித்தலைவர் நான் பாடும் பாடல் காட்சி மூலம் நமக்கு இக்கருத்தை கூறுகிறார். ....... Thanks........

orodizli
16th April 2020, 10:05 PM
சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் புரட்சித்தலைவரும் கலைவாணரும் போட்டிபாடல் அனைவரும் அறிந்ததே
பாடலில் வரும் ஒரு வரி
என் .எஸ் கே....கேட்கும் கேள்வி, .
உலகத்திலேயே..பயங்கரமான ஆயுதம் எது?

புரட்சித்தலைவர் பதில். .நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகளின் நாக்கு

இந்த பாடல் எழுதும் போது நாக்கு என்பதைப் மட்டுமே குறிப்பிட்டு எழுதினார்.

பாடல்வரினை கவனித்த புரட்சித்தலைவர். நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளது இருந்தாலும் ஒரு மனக்குறை

பாடல் வரியில் நாக்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள் நாக்கு நன்மை தீமை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு வார்த்தை வாழ்த்துக்கள் கூறுவது. வாயாலே. புகழ்வது. நல்ல வார்த்தைகள் உதிர்வது. நல்ல கல்வி கற்பது நல்ல பாடல்கள் பாடுவது வாக்கு தவறாமல் நடப்பது இப்படி எத்தனையோ நன்மை தரும் நல்ல செயல்கள் நாக்கு தான் பயன் படுத்தக்கிறோம் .நீங்கள் எழுதிய ஒரு வரியில் நாக்கினால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் மறக்க படுகிறது. மறைக்கப்படுகிறது. அதனால் நாக்கு என்ற வார்த்தையை மட்டும் மாற்றி வேறு வார்த்தைகளில் எழுதுங்கள் அப்படியில்லையென்றால் ஒருமைப் பன்மை வருகிறமாதிரி..குறிப்பிட்ட ஒரு இனம் குறிப்பிடப்படி எழுதுங்கள் என்றார்

புரட்சித்தலைவர் கூறிய கருத்துக்களையும் சுட்டிக்காட்டியவிதமும் வியர்ந்து நெகிழ்ந்து போனார் பட்டுக்கோட்டையார். அதன் பிறகுதான்
நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகளின் நாக்கு என்று மாற்றி எழுதி புரட்சித்தலைவரிடம் காண்பித்தார்.புரட்சித்தலைவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது பட்டுக்கோட்டையாரைக் வெகுவாக பாராட்டினார்....... Thanks...

orodizli
16th April 2020, 10:09 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...

எம்.ஜி.ஆருக்கு வாரிசு இல்லை
குடும்பம் இல்லை என்று கூறும் அறிவுஜீவிகளின் கவனத்திற்க்கு?

அரசியலில் இருந்து தன் குடும்பங்களை தள்ளியே வைத்த எங்களின் புரட்சி தலைவரின் சரித்திரத்தில் மேலும் ஒரு வைரக்கல்...

ஆம் அவர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும் அவர் இளம் வயதில் தவழ்ந்த
கேரளாவில் உள்ள வடவனூர் வீட்டை
அவருடைய தம்பியாக போற்றப்படும் வாழும் மனிதநேயம் உலக எம். ஜி. ஆர் பேரவை தலைவர் அண்ணன் திரு."சைதை துரைசாமி" அவர்களின் சீறிய நடவடிக்கையால் நினைவு இல்லமாக புதுப்பிக்கப்பட்டு நாளை 26.02.2019 அன்று திறக்கப்பட்டது...
விழாவில் புரட்சி தலைவரின் அண்ணன் பெரியவர் சக்கரபாணி குடும்பத்தினருக்கும் புரட்சி தலைவரின் பக்தர்களால் மரியாதை செய்யப்படுகிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்...

மறைந்து இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு மட்டுமல்ல தான் வாழ்ந்த வீட்டுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இன்றும் பெருமையை தேடிக்கொடுக்கும் எங்கள் புரட்சி தலைவர் மனிதக்கடவுள்தான் யாருக்கு கிடைக்கும் இந்த மகத்துவம்?..

ஒன்றை மட்டும் உறுதியாகவும், தெளிவாகவும் கூறிக்கொள்கிறேன்..
புரட்சி தலைவர்
தம்பியாக போற்றப்படும் அண்ணன் "சைதையார்" உள்ளவரையிலும்...

தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் வாழும் தமிழர்கள் இருக்கும் அத்தனை இடத்திலும் பிள்ளைகளாகவும்,பேரன்களாகவும் பக்தர்ளாக நாங்கள் உள்ளவரையிலும்,
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் புகழ் பெற்று விளங்கும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்....

எம்.ஜி.ஆர் பக்தன்
A.A. பாலு... Thanks...

orodizli
16th April 2020, 10:14 PM
பொதுவாக கர்மவீரர் காமராஜர் அவர்கள் யாரையும் சாப்பிட்டீர்களா சாப்பீடுர்களா என்று கேட்க மாட்டார் அதற்கு காரணம் 1957 ம் ஆண்டு காமராஜர் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வீடு திரும்ப. இரவு 12 மணிக்கு மேல் ஆகி விட்டது அப்போது அவருடன் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெகுநேரம்ஆகிவிட்டதால் காமராஜர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் செல்லலாம் என்று எண்ணி காமராஜரிடம் அனுமதி கேட்டனர் அவரும் சம்மதம் கூறி தனது வீட்டீர்க்கு அழைத்து வந்தார் வீட்டீர்க்கு வந்தவர்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.வந்தவர்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் காமராஜர் வீட்டு உணவு ருசி அறிய. சாப்பிடவில்லை என்றனர். உடனே தனது வீட்டு பணியாளர் அழைத்து அவர்களுக்கு உணவு பறிமாற சொன்னார் அவர்களுடன் காமராஜரும் அமர்ந்து உணவு உண்டார்..மறுநாள் அவர்கள் சென்ற பிறகுதான் காமராஜர்க்கு நினைவு வந்தது நேற்று நமக்கு உணவு அளித்த பணியாளர் உணவு உண்ணவில்லையே என எண்ணி வருந்தினார் தனது வரட்டு கௌரவத்தால் அவரை பட்னி போட்டமே இனி கௌரவத்துக்காகவும் தன்மானம்த்துக்காகவும் கடமைக்காகவும் சுயநலத்துக்காகவும் யாரையும் சாப்பிட்டீர்களா என்று கேட்க கூடாதுஎன்று முடிவு எடுத்தார் அன்றுமுதல் அதைகடைப்பிடித்தார் (காமராஜர் வீட்டீல் அவரும் பணியாளர் மட்டும் இருப்பதால் இரண்டு பேர்க்குதான் உணவு தாயரிக்கப்படும் என்பது குறிப்பிடக்தக்கது.)இதே பத்து ஆண்டுகள் கழித்து 1967 ம் ஆண்டு ஒருமுறை காமராஜரைக் காண புரட்சித்தலைவர் அவரது அலுவலகம் வந்தார்.அங்கே காங்கிரஸ் தொண்டர்கள் 100 க்கு மேற்ப்பட்டவர்கள் கூடிருந்தனர் சில கட்சி தலைவர்கள் அவருடன் இருந்தனர். எம்.ஜி ஆர் வருகிறார் என்பதை அறிந்ததும் காமராஜர் சென்று அவரை வரவேற்று சாப்பிட்டீர்களா என்ன சாப்பிடுர்கள் என்று கேட்டார் இதுவரை யாரையும் அப்படி கேட்காத காமராஜர் புரட்சித்தலவரை மட்டும் கேட்டதை எண்ணி சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் இதை சற்று கவனித்த புரட்சித்தலைவர் அப்படி என்ன அவர் கேட்டார் நீங்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைகிறீர்கள் என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார் அதற்கு அவர் காமராஜர் பற்றியும் அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்தார் ..இதே சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜரிடம் கேட்டனர்.ஐயா நீங்கள் யாரையும் இப்படி கேட்டதில்லை ஆனால் எம் ஜி ஆரிடம் கேட்டதற்க்கு என்ன காரணம் ? அதற்கு காமராஜர் தந்த விளக்கம் பொதுவா எம் ஜி ஆர் யாரைப் பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என்று கேட்பது வழக்கம் கேட்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அலாதி பிரியம் கொண்டவர் இது எம் ஜி ஆரிடம் மட்டும் உள்ள. தனி கலை அதுமட்டும் அல்ல அவர் வீட்டில் உணவு உண்டவர்கள் லட்சம் பேர்களுக்கு மேல் இருப்பார்கள் அதையே தனது லட்சியமாக கொண்டு வாழ்பவர் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் உணவு அளித்தால் ஊருக்கு உணவு அளித்தற்கு சமம் அது மட்டும் அல்ல நான்தான் அவரை சாப்பிட்டிர்களா என்று கேட்டேன் ஆனால் அவர் நமக்கு உணவு அளிப்பார் பாருங்கள் எம் ஜி ஆர்க்கு மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் எதையும் யாரிடமும் தனககு என்று கேட்க மாட்டார் என்று காமராஜர் சொல்லிமுடிக்கும் முன் அங்கே நுற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு எம் ஜி ஆர் உணவு வரவைத்துருந்தார் பார்த்தீர்களா நான் அவர் ஒருவரை கேட்டேன் அதனால் நூற்றுக்கணக்கில் உள்ளவர்களுக்கு உணவு கிடைத்தது என்றார் காமராஜர் இதைக்கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் எம் ஜி ஆர் பற்றி காமராஜர் எந்தளவுக்கு சராசரியா எடை போட்டு வைத்துள்ளார் என்பதை எண்ணி மகிழ்ந்தனர்....... Thanks.........

orodizli
16th April 2020, 10:15 PM
தலைவரை பற்றிய ஒரு தகவல் - 6

தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அம்பாசிடர் கார் ஈரோட்டில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இவருடைய வீட்டில் வெளிர் நீல நிறத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் பராமரிக்கப்பட்டு வருகிறது. யாரும் இதில் பயணம் செய்வது இல்லை என்றாலும் புதுப்பொலிவுடன் காரை வைத்து இருக்கிறார்கள். காரின் பதிவு எண் M G R 4777 என்பதாகும்.

இது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய கார் ஆகும். ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருந்த சு.முத்துசாமி இதுபற்றி கூறியதாவது:-

1986 அல்லது 87 என்று நினைக்கிறேன். ஒருநாள் நானும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வாரப்பத்திரிகையில் பெட்டி செய்தியாக ஒரு தகவல் வந்திருந்தது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் பயன்படுத்தி வரும் பியட் காருக்கு எம்.எஸ்.வி. என்று பதிவு எண் பெற்று ஓட்டி வருவது அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதைப்படித்த எம்.ஜி.ஆர். அப்படியே என்னிடம் காட்டினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

அப்போது எம்.ஜி.ஆரிடம் T M X 4777. என்ற கார் இருந்தது எனக்கு M G R என்று பதிவு செய்யப்பட்ட கார் வாங்கி அதில் அவர் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம். இதற்காக M.G. R என்கிற பதிவு எங்கே உள்ளது என்று விசாரித்தபோது மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக எனது உறவினரை அனுப்பி, 4777 என்ற எண் பதிவு செய்ய முடியுமா? என்று விசாரித்து பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அதே எண் கிடைத்தது.

உடனடியாக உறவினர் பெயரில் கார் வாங்கி, அதில் M G R 4777 என்ற பதிவு எண்ணை பெற்று சென்னைக்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முன் நிறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார். அதன்பின்னர் இந்த 2 கார்களிலும் அவர் பயணம் செய்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய வீட்டில் இருந்த 3 கார்களில் ஒரு காரை ஜானகி அம்மையார் பயன்படுத்தி வந்தார். ஒரு கார் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த காரை என்னிடம் எடுத்துச்செல்லும்படி ஜானகி அம்மையார் வற்புறுத்தியதால் ஈரோடு கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர். பயணம் செய்த அந்த காரில் நாங்கள் பயணம் செய்வதில்லை. அவரது நினைவாக பராமரித்து வருகிறோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்
பகிர்வுக்கு நன்றி Nallasiva சகோதரரே..... Thanks...

orodizli
16th April 2020, 10:21 PM
#விளம்பரம்

ஒரு சமயம் எங்கள் சந்திப்பின்போது ‘மக்களிடையே ஏற்கனவே செல்வாக்குடன் விளங்கும் நடிகர்களுக்கு விளம்பரம் தேவையா, அல்லது வளரத்துடிக்கும் திறமைசாலிகளுக்கு அதிக விளம்பரம் அவசியமா? என்ற கேள்வி எழுந்தது.

“செல்வாக்குடன் விளங்கும் கலைஞர்களுக்குப் பதிலாக வளரும் நிலையிலுள்ளவர்களுக்கு போதிய விளம்பரம் தந்தால், அந்த விளம்பரம் அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, அவர்கள் முன்னேற உதவுமல்லவா? என்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.

“செல்வாக்குடன் விளங்கும் உங்களைப் போன்றவர்களைப்பற்றி செய்திகளும் படங்களும் வெளியிடும்போது மக்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். அதே சமயம் புதுமுகங்களைப் பற்றியும், வளரும் கலைஞர்களைப் பற்றியும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ‘பேசும் படம்’ அதைத்தான் செய்கிறது என்று சொன்னோம்.

’அப்படியானால் புதுமுகங்கள் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.

இந்தப் பதில் எங்களுக்கு மிக்க மன நிறைவு தந்ததுடன், அவர் மீதுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் கூட்டியது.

சக கலைஞர்களுக்காக - அவர்கள் அறியாமலேயே - அவர்களது நலனுக்காக முன்னின்று வாதிடும் தன்னலமற்ற செயல்வீரராக அவரைக் கண்டோம். தன் வாழ்நாளின் கடைசிவரை அப்படித்தான் அவர் விளங்கினார்.

#நன்றி: பொம்மை சாரதி...... Thanks...

orodizli
16th April 2020, 10:27 PM
மக்கள் திலகம்.மக்கள்.மேல் வைத்திருந்த அன்புக்கு இந்நிகழ்ச்சி ஒர் சமர்ப்பணம் ஆகும்

ஆண்டு அமைச்சர் பெயர் சரியாக. நினைவு இல்லை ஆனால் நடந்தது உண்மை ஆகும்

நமது தெய்வம் பொன்மனச்செம்மல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து தாயகம் திரும்பிய நேரம் சென்னை விமான நிலையத்தில் மக்கள் திலகம் காணவும் வரவேற்கவும் மக்கள் தலைகள் அலைகக்கடலன. காட்சியளித்தன

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் வசனம் போல்
மாண்டுபோன முருகன் மறுபிறவி எடுத்து வருவதுப்போல் நமது பொன்மனச்செம்மல் மறுபிறவி எடுத்து வந்ததை எண்ணி மக்களிடம்

மகிழ்ச்சி சந்தோஷம் ஆரவாரம் கைத்தட்டல் விண்ணை பிளந்தது மழை வெயில் பொருட்படுத்தாமல் தூக்கம் உணவு இல்லாமல் எண்ணம் செயல் எல்லாமே தலைவரை காண்பதே குறிக்கோள் என்று 24 மணி நேரம் காத்திருந்தனர்

பொன்மனம் கொண்ட. பொன்மனச்செம்மல் விமான நிலையம் வந்ததும்
மக்கள் கூட்டத்தையும் மக்களின் அன்பையும் கண்டு தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினார்

இவர்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன் ஏன் என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் இனி என்ன செய்ய போகிறன் என எண்ணி மனம் உருகினார் மக்களிடம் கையசத்து அவர்கள் அன்பையும் வாழ்த்தும் பெற்றுக்கொண்டு தியாகராய நகரில் தனது அலுவலகம் வந்துக்கொண்டீருந்தார்
விமான நிலையம் கிண்டி சைதாப்பேட்டை வழியாக வரும் எங்கும் புரட்சித்தலைவர் கட்வுட்டு வரவேற்பு அலங்காரம் என்று வரிசையாக மாம்பழம் அலுவலகம் வரை அலங்கரிக்கப்ப.டு இருந்தது காரில் வரும் வழிஙெங்கும் இதைக்கவனித்துக்கொண்டுவந்தார் அலுவலகம் வந்ததும் இந்த விளம்பரம் செய்த அமைச்சர் பெயரைக்கூறி தன்னை வந்து சந்திக்க. சொன்னார்

அமைச்சர்க்கு குஷி தாங்கல புரட்சித்தலைவரே தன்னை அழைக்கிறார் என்றால்
நமக்கு பாரட்டு விழா நடக்கும் என. மகிழ்ந்து தலைவரைக் கான சென்றார் மற்ற. அமைச்சர்களுக்கும் இவர் மீது சிறிது பொறாமை ஏற்ப்பட்டது

தலைவர் அமைச்சர் வந்தும் சாப்பிட்டீர்களா என்று கேட்டு முதலில் போய் சாப்பிடுங்கள் பிறகு என்னை வந்து பாருங்கள் என்றார் சாப்பிட்டு வந்த. அமைச்சரிடம் கேட்ட. முதல் கேள்வி ..என்னை வரவேற்க. செய்த. செலவு மொத்தம் எவ்வளவு என்றார் அதற்கு பணம் ஏது யாரிடம் வசூல் செய்தாய் உன் வருமானம் எவ்வளவு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபம் கொண்டார்
என்னை பார்ப்பதற்க்காக. வெயில் மழை என்று பாரமல் மக்கள் காத்திருக்கிறார்கள் என்மனம் குளிரவைப்பதற்க்காக அவர்கள் வயிறு எரியவைத்தாயே அந்த பணத்தில் ஒரு லெமன்சாதம் தயிர் சாதம் புளிச்சாதம் வாங்கிக்கொடுத்துருந்தால் அவர்கள் வயிறு நிறைந்திருக்கும் அல்லது ரஸ்னா மோர் குளிர்பானம் கொடுத்துருந்தால் அவர்கள் மனம் குளிர்ருந்துருக்கும் இதுதான் நீ எனக்கு செய்யும் தொண்டு நீ என்னிடம் நல்லபெயரை வாங்க. வேண்டும் என்பதற்க்காக. மக்களிடம் எனக்கு கெட்ட பெயர் உருவாக்க. பார்த்தாயே இனி நீ என் கட்சிக்கு தேவையில்லை ஆடம்பரம் செலவு செய்பவர்களை ஒரு நாளும் நான் நேசிப்பதில்லை என்று கூறி அமைச்சர் பதவி முதல் அடிப்படை உறுப்பினர் வரை கட்சியே விட்டு நீக்கினார்

மக்களுக்கு பணி புரியாதவர்கள் மக்களை மதிக்காதவர்களையும் மக்கள் திலகம் ஒருநாளும் மதிக்கமாட்டார் விரும்ப மாட்டார்...... Thanks...

orodizli
16th April 2020, 10:30 PM
எம்.ஜி.ஆரின் பலகீனம்???
-----------------------------------------
இந்தப் பதிவை கவனமாகப் படித்து உள் வாங்குமாறு கேட்டுக் கொள்கிறென்!1
இன்றைய அரசியல்வாதிகள் இப்படி முழங்குவார்கள்!
என் உயிரைக் கொடுத்து என் நாட்டைத் தூக்கி நிறுத்துவேன்!!
நீ உயிரை விட்டா,,உன்னைத் தூக்கவே நாலு பேர் வேணும்? நீ எப்படி நாட்டு மக்களைத் தூக்கி நிறுத்துவே??
என் வீட்டையே நாடாகவும்,,என் பிள்ளைகளையே மக்களாகவும் நினைச்சு நான் சொன்ன வார்த்தை அது? அரசியல்வாதியின் விளக்கத்துக்கு நம்மிடம் சரியான பதில் இல்லாத காரணத்தால்--
ஒரு நிகழ்வில் நம் கவனத்தைத் திருப்புவோம்!!
முன்னாள் அமைச்சர் அரங்க நாயகம்!!
எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலேயே காபினட் மந்திரியாக இருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.
அவர் அடிக்கடி மேடையில் ஒன்றைச் சொல்வார்!
எம்.ஜி.ஆர்,,,எப்போதுமே மக்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்!
எந்தப் பயனும் எதிர்பார்க்காமல் இவ்வளவு தூரத்துக்கு என்னை ஆளாக்கியிருக்கும் இந்த மக்களுக்கு என்னாலே,,நான் நினைச்ச அளவுக்கு செய்ய முடியலே??
தனியாக எங்களுடன் உரையாடும்போது கூட இதைச் சொல்லியே புலம்புவார்!
நாங்கக் கூட சில சமயம் அவரிடம் சொல்வோம்!!
இப்படி ஓவராக அதையே நினைச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க!!
அந்த அளவு அவர் மனசுலே மக்களைப் பற்றிய நினைவே மண்டியிட்டுக் கிடந்தது!!
அந்த மன உளைச்சலே அவரை நம்மிடம் இருந்து சீக்கிரம் பறித்து விட்டது என்று கூட சொல்லலாம்!!
சரி! ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்!
அது எம்.ஜி.ஆர் குணமடைந்து தாய் நாடு திரும்பி ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த நேரம்!!
வக்கீல்கள் அணிகள் பல்வேறு அம்சங்களை வேண்டி போராட்டம் நடத்துகின்றன!
முதல்வர் எம்.ஜி.ஆர்,,அவர்களின் பிரதி நிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்!
ஊரில் இல்லாத சட்டங்களையும் உதவாத கோரிக்கைகளையும் அடுக்கிக் கொண்டே எம்.ஜி.ஆரை டென்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள் பிரதி நிதிகள்!
பொறுமை இழந்த எம்.ஜி.ஆர் கடுங்கோபத்துடன் வெளியில் விரலை சுட்டிக் காட்டியவாறு வேகமாக வார்த்தைகளை வெளியே அனுப்புகிறார்?
இதைப் பாருங்க!! உங்க நிலைமையை விட வெயிலில் வெளியே என்னைப் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கும் இந்த ஏழை மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம்!!
இந்த ஆட்சியையே கலைச்சுட்டு அவங்க கூட சேர்ந்துடுவேன்.?
அவுங்க ஆதரவில் தான் நான் இன்னிக்கு முதல்வரா இருக்கேனே தவிர உங்க தயவுலே இல்லை! அதைப் புரிஞ்சுக்கிடுங்க??
அந்தப் பிரதி நிதிகளே,, எம்.ஜி.ஆரின் அந்த பதிலில் ஆடிப் போனதுடன்--மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும்--அவர்களைப் பற்றிய நலனிலேயே அவர் கொண்டிருந்த இடைவிடா சிந்தனையையும் கண்டு மனம் நெகிழ்ந்தார்களாம்??
ஏன்? பதிவைப் படிக்கும் நாமும் தானே????... Thanks........

orodizli
16th April 2020, 10:33 PM
வாள் எம் ஜி ஆர் சேர்ந்தால் அங்கு மின்னல்களின் அணிவகுப்பு
ஒவ்வொரு வீச்சும் ஒரு மின்னல் வேகம்
நீரும் நெருப்பும் கடைசி சண்டை காட்சி எம் ஜி ஆரின் ஸ்டைல் அத்தனையும் கொண்ட வாள்வீச்சு
முதலில் கரிகாலனாக முரட்டு தனமான வாள்வீச்சு இடிபோல் இறங்கிய வாள் எதிரின் திகைப்பை அசோகன் நன்றாக பிரதிபலிப்பார் பின் மணிவண்ணனாக எம் ஜி ஆர் இடது கையால் வாள் வலது கை வேகத்தில் சுழற்றுவார் என்னா ஒரு லாகவம் நேரிடையாக இதை பார்த்த இந்தி பிரபல நடிகர் ஒருவர் பிரமித்து உடனே எம் ஜி ஆர் பிரமிப்போடு பாராட்டினார் பின் இரு கரத்தால் வாள் வீசுவார் எம் ஜி ஆர் என்ன ஒரு அழகு இடது கையால் வீசி கொண்டே இடையிடையே வலது கையால் இடிபோல் தாக்குவார் என்ன ஒரு சக்தி அதில் வாள் கொண்டு எதிரியை பந்தாடுவார் அங்கும் இங்கும் எவராலும் செய்ய முடியாத காட்சி இது முடிவில் இடது வலது என எதிரியின் உடலில் வாளால் கோலம் இடும் வேகம் ஸ்டைல் எழுதும் போதே புல்லிரிக்கும் காட்சி
வில்லுக்கு விஜயன்
வாளுக்கு எம் ஜி ஆர்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...

orodizli
16th April 2020, 10:35 PM
தமிழன் ஏமாளி அல்ல
சினிமா பைத்தியம் அல்ல

அரசியல் கட்சிகள் சினிமா நடிகர்களை அவர்கள் ரசிகர்கள் போதும் தமிழகம் ஆள என எண்ணும் அவலம்
ரஜினிகாந்து விஜய் கமல் இப்போது தேசியகட்சி ஒன்று அஜீத்க்கு வலைவீசியுள்ளது
எந்த கொள்கையும் இல்லாத இந்த நடிகர்கள் தன் குடும்பத்துக்கு கோடிகணக்கில் சேர்த்து விட்டு பதவி ஆசையில் மக்களை ஏமாளி ஆக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள்
இவர்களின் எண்ணத்தை தூள் ஆக்கி கடும் தோல்வி மூலம் ஒரு பாடம் புகட்ட தமிழ் மக்கள் தயார்
எம் ஜி ஆர் முதலில் மக்கள் சேவை நாட்டு சேவை திராவிடம் மூலம் தமிழ் மக்கள் நலம் காக்க போராடி அரசியல் களம் கண்டவர் காலத்தின் கட்டளை கட்சி நிறுவி பொற்கால ஆட்சி தந்தார்
நடிகர்கள் எல்லாம் எம் ஜி ஆர் ஆக முடியாது
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks...

orodizli
16th April 2020, 10:38 PM
எம் ஜி ஆர் பிறந்த நாள்
அன்றும் இன்றும் என்றும் எங்கள் எம் ஜி ஆர் தான் அவருக்கு இணையா எவரும் இல்லை

ஆண்டுகள் கால் நூற்றாண்டு கழிந்து விட்டது ஆனால் சினிமா அரசியல் எம் ஜி ஆரை சுற்றியே நகர்கிறது
இது எவராலும் சாதிக்க முடியா சாதனை

இந்தியா எதிர்த்தபோதும் தமிழனுக்கு உதவிகரம் நீட்டிய மாவீரன் எம் ஜி ஆர்
இந்தியா பாரதரத்னா அளித்து கௌரவித்தது எம் ஜி ஆரை

தந்தை பெரியார் மூதறிஞர் ராஜாஜீ
அறிஞர் அண்ணா கண்ணியத்துக்குயுரிய காயித்தே மில்லத் அன்னை தெரசா போப்பாண்டவர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உலக குத்து சண்டை வீரர் முகமது அலி முப்படை வைத்து போராடிய பிரபாகரன் இவர்கள் மட்டும் அல்ல எம் ஜி ஆரை எதிர்த்து விமர்சித்த காமராஜ் கருணாநிதி ஜோயவர்த்னா தமிழ்வாணன் சோ கண்ணதாசன் சிவாஜிகணேசன் வைகோ டி ராஜேந்தர் சீமான் கம்மியூனிஸ்ட் பாலசுப்பிரமணியன் வரை எதிரிகளாலும் இன்றுவரை புகழபட்டவர் எம் ஜி ஆர் ஒருவரே

எல்லோருக்கும் நல்லவர் வல்லவர் எம் ஜி ஆர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...

orodizli
16th April 2020, 10:40 PM
அதுவரை மக்கள் திலகத்தின் பிறந்தநாள் எது? என்று யாருக்கும் தெரியாத நிலையில் பப்ளிக்காக போட்டுடைத்த தலைவரின் நண்பர்...

#புரட்சித்தலைவர் முதல்வரான பிறகு 1978 ஜனவரி மாதம் 17–ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் எம்ஜியாரின் நண்பர் ஒரு விளம்பரம் கொடுத்தார்.

அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள் விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும் வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைப்பார்த்த #புரட்சித்தலைவர் தன் நண்பரை தொலைபேசி வாயிலாக அழைத்து,

‘‘என் பிறந்த நாள் உங்களைத் தவிர யாருக்குமே தெரியாது. இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் சொன்னதும் கிடையாது, சொல்றதும் இல்லை. அப்படி இருக்கும்போது இன்னிக்கு நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில் போட்டிங்க?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

அதற்கு முதலியார், ‘‘இப்போ நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர் இல்லே. இந்தத் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர். இதுவரைக்கும் இல்லேன்னாலும், இப்போவாவது – இனிமேலாவது உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான் தினத்தந்தியிலே போட்டேன்’’ என்றார்.

புரட்சித்தலைவரால் பதில் ஏதும் பேசமுடியவில்லை. அதற்குப் பிறகுதான் புரட்சித்தலைவரின் பிறந்த நாள் ஜனவரி 17 என்பது அவருடைய அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும் மற்றும் அரசியல், திரை உலக நண்பர்களுக்குமே தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17 புரட்சித்தலைவர் பிறந்த நாளில் முதலியாரின் வாழ்த்துச்செய்தி தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து கொண்டிருந்தது.

புரட்சித்தலைவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வென்று முதல்–அமைச்சர் ஆன பிறகும்கூட அவர் இல்லாமல் முதலியாரின் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷங்களும் நடைபெற்றது இல்லை, நடக்கவும் நடக்காது.

முதலியாரது பிள்ளைகளின் திருமணச் சடங்குகளை சம்பிரதாயப் பிரகாரம் பிராமணப் புரோகிதர்கள் நடத்துவார்கள்.

ஆனால் தேங்காய் மீதிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகனின் கரங்களில் கொடுப்பது மட்டும் ஒரே ஒருவருடைய கரங்கள்தான்.

அது அள்ளி அள்ளி வழங்கிய மகாபாரதக் கர்ணனுடைய கரங்களுக்குச் சமமான புரட்சித்தலைவரின் கரங்கள்தான்.

அந்த அளவிற்கு புரட்சித்தலைவரும், பரமசிவ முதலியாரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும், நட்பையும் மட்டும் அல்ல, ஆரூயிரையே வைத்திருந்தனர் என்றால் அது சற்றும் மிகை அல்ல.

எப்படா பிறந்தநாள் வரும். தொண்டர்களை அறிவாலயம் வரச்சொல்லி வசூல் வேட்டை நடத்தலாம் என்றிருந்த தலைவரை போலல்ல நம் தலைவர்.

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான வாத்தியார் ஒரு போதும் தம் பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை....... Thanks...

orodizli
16th April 2020, 10:49 PM
திமுக-வுக்கு மறக்க முடியாத மரண அடி கொடுத்த #மக்கள்திலகம்..எம்.ஜி.ஆர்

தி.மு.கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அவர்களை திட்டமிட்டு நீக்கி அவமானப்படுத்திய திரு. கருணாநிதிக்கு தக்க அரசியல் பதிலடி கொடுக்க பொருமையாக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் #புரட்சிதலைவர்.

அந்த தருணமும் விரைவில் வாய்த்தது பொண்மனசெம்மல் அவர்களுக்கு

ஆம். அப்போது திண்டுக்கல் மக்களவை உறுப்பினரான இருந்த திமுகவை சேர்ந்த ராஜாங்கம் திடீரென மரணம் அடைந்தார்.

ஆகவே, திண்டுக்கல் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் மீதான மக்களின் மனவலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது அரசியல் ரீதியான பொதுவான கருத்து.

அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி.

செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர்தான் பொன்.முத்துராமலிங்கம்.

புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது மக்கள் திலகத்தின் கணிப்பு. உடனே மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார்.

சுயேட்சி சின்னமான இரட்டை இலையை தேர்ந்தெடுத்தார் மாயத்தேவர்.

திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.

கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் #புரட்சித்தலைவர் களத்தில் இறங்கினார்.

அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆர் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்.

திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.

இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ்.முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

'படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன்' என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின

பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி.

உண்மையில் அந்த படத்தின் வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின.

அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபார வெற்றியைப் பெற்று திமுகவை மண்ணை கவ்வ செய்தார்.

ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மாறாக, திமுக வேட்பாளர் வெறும் பொன்.முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று, மூக்குடைபட்டு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

கருணாநிதியை கதற அடித்த தேர்தல் என்றால் இதுதான்.

அறிமுக மேச்சிலேயே டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ் மேன் போல வலம் வந்தார் நமது வாத்தியார்.

ஜீரணிக்க முடியாத இந்த தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.

"தி.மு.கழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது." என்று..

(படம்: முதல் முறையாக தமிழகத்தில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வாகை சூடிய மாயத்தேவர் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு மலர் மாலையிட்டு கழகத்தின் வெற்றியை சமர்பித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்)

பதிவு எண்:13, ��
��பதிவுகள் பிடித்திருந்தால் லைக், சேர், கமெண்ட் பன்னுங்க, அதிமுக, அன்பர்களே, நண்பர்களே, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெ.அம்மா அவர்களின் குறிப்புகள், புகைப்படங்கள், மேடை பேச்சுக்கள், திரைப்பாடல்கள், காண விரும்பினால் லிங்கை தொடரவும் https://www.facebook.com/groups/237398323372711........... Thanks...

orodizli
16th April 2020, 10:53 PM
ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் நிரபராதியாக இருந்தும் தண்டனை பெறுவார். அவர்க்கு பதில் நீதிபதியாக இருக்கும் நடிகர் சுந்தர்ராஜன் அபாதாரம் கட்டுவார் அதற்காக சுந்தர்ராஜன் காண வீட்டுக்கு வருவார்.புரட்சித்தலைவர் வரும் போது நீதிபதியான சுந்தர்ராஜன் வேலைக்காரிடம் பேசிக்கொண்டுருப்பார் வேலைக்காரி சென்ற பிறகு தனக்காக கட்டிய பணத்தை சுந்தர்ராஜன் எதிராக உள்ள மேஜை மீது வீசுவார்

இந்த காட்சியினை உற்று கவனித்தால் அதன் பொருள் அறியலாம்
புரட்சித்தலைவர் வந்தவுடன் பணத்தை வீசவில்லை. வேலைக்காரி சென்ற பிறகுதான் பணத்தை வீசுவார் அதற்கான காரணம்.

ஒரு வேலைக்காரிக்கு முன்னால்..நீதிபதியே அவமானம் படுத்தக் கூடாது என்பதற்காகவும் சுந்தர்ராஜன் கெட்டவனாக இருந்ததாலும் அவர் படித்த படிப்புக்காவும் அவர் ஏற்றுள்ள பதவிக்கு மரியாதை கொடுக்கனும் என்பதற்காக
அக்காட்சி அமைந்திருக்கும். ...மேலும் தொடரும். ......... Thanks....

orodizli
16th April 2020, 10:54 PM
ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு காட்சியில் நடிகை மஞ்சுளா அறிமுகம் பாடல் காட்சி முடிந்தவுடன் கல்லூரி முதல்வராக நடித்த நடிகையர் பேசும் போது
பெண்கள் அழகிகளாக இருக்கலாம். ஆண்மைக்களா இருக்கக்கூடாது.
என்று பேரறிஞர் அண்ணா சொன்னதாக கூறுவார். அவர் சொன்னவுடன் அனைவரும் கைத்தட்டுவார்கள்.இக்காட்சி சற்று உற்று கவனித்தால் ஒர் உண்மை புலப்படும். கைத்தட்டுப்போது பெண்கள் மட்டுமே கைத்தட்டுவதைக்காட்டுவார்கள்.
காரணம் இக்கட்சியில் வரும் வசனம் பெண்களுக்கு அறிவுரை கூறுவது போலவும் அதே நேரத்தில் அவர்களிடம் உள்ள தவறை சுற்றிக்காட்டுவதை போலவும் அமைந்திருக்கும். அது போன்ற வசனம் வரும் போது ஆண்களும்.கைத்தட்டுவதுப்போல் காண்பித்தால் .அது பெண்களுக்கு எதிரான கருத்தாக சித்தரிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து பெண்களே இக் கருத்தை ஏற்றுக்கொள்வதுப்போலவும் பெண்கள் இக் கருத்தை ஆதரிப்பதுப்போலவும் இக் காட்சி அமைந்திருக்கும் இது சமயோகிதனமான அறிவுக்கு வேலைக்கொடுக்கும் காட்சியாகும் சாமானியர்கள் இதைக்கண்டுப்பிடிப்பது கடினம். ..மேலும் தொடரும். ......... Thanks...

orodizli
16th April 2020, 10:55 PM
ரிக்ஷாக்காரன் படத்தில் வாத்தியார் கூறும் அறிவுரைகள்
வாயாலே வாழ்த்தறாங்களே அதை நம்ப முடியாது வயிறு வாழ்த்தவேண்டும்
சாமர்த்தியமாக நெருப்பை மூடி மறைக்கலாம் ஆனால் புகையை மறைக்க முடியாது.

இலக்கணம் தெரிந்தா மட்டும் போதாது அடுத்தவங்களை மதிக்கனும் அதுதான் வாழ்க்கையின் அரிச்சுவடி
முறைப்படி நடக்கற தொழிலுக்குத்தான் கெளரவம் இருக்கும். .தொழிலுக்கு கெளரவம் இருந்தால்தான் எல்லோரும் ஈடுபட முன் வருவார்கள்

குடிசைகள் எல்லாம் எப்போ கட்டிடங்களாக மாறுதோ அப்பத்தான் மனுசனின் தரம் கூட உயரும் எல்லோரும் மதிப்பார்கள்
உண்மைக்கு சாட்சி மனசாட்சி யாருக்கிட்ட என்ன கேட்கறதங்கற வரைமுறை இல்லாததினால்தான் உண்மை தெரிந்திருக்கும் நல்லவஙுககூட சாட்சி சொல்லபயப்படறாங்க

எல்லோரும் மகாத்மா அளவுக்கு உயராமல் இருக்கலாம். ஆனால் சராசரி மனிதனாக இருக்கலாம் அல்லவா.
ஒரு பொம்பள நிம்மதியா வாழமுடியும் என்ற நம்பிக்கை எப்போ வருதோ அப்பத்தான் சுதந்திரம் கிடைத்தாக அர்த்தம்.

கல் உடைந்தால் படியாகும். .வில் உடைந்தா விறாகும்..குடும்பம் உடைந்தால் குப்பைக்கு கூட ஆகாது.
மனசாட்சியே போல கண்டிப்பான நீதிபதியே பார்க்கவே முடியாது. ..

உடல் உழைப்பும் அறிவும் சேர்ந்து செயல்பட்டால்தான் எந்த தொழிலுக்கும் மதிப்பும். கூடும். அப்பத்தான் நாடு நாடாக இருக்கும். இல்லையென்றால் நாடு என்று போர்டு போட்டால்தான் தெரியும்
கண்ணு கெட்டா கூட மருந்து உண்டு ஒரு பொண்ணு கெட்டபோயிட்டா என்று பேர் எடுத்துட்டா மண்ணுக்கு போனாகூட் அந்த பேர் மறையாது

என்னத்தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும். மற்றவர்கள் உணரும் படி எடுத்து கூறினால்தான் எந்த நியாயமும் எடுப்படும் உண்மைமைக்கு என்றும் அழிவில்லை
ஒரு பொண்ணுடைய வாழ்க்கை லட்சியம் ஒன்று நல்ல மனைவியாக இருக்கனும். மற்றொன்று நல்ல தாயா இருக்கனும்
கெட்டவர்கள் யாரையும். வேண்டாம் திருத்துவோம்........ Thanks...

orodizli
16th April 2020, 10:56 PM
புரட்சித்தலைவர்.முதல்வராக இருந்தப்போது அவரை தேடி சுமார் பத்து பதினைந்து இளைஞர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு என்னை வந்து பார்க்கும் படி கூறினார்.அதேப்போல் அனைவரும் சாப்பிட்டவுடன் புரட்சித்தலைவர்க்காக காத்திருந்தனர்.அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் எதற்க்காக வந்திருக்கிறார்கள்..என்பதைப் புரட்சித்தலைவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். இருந்தாலும் அவர்களா கூறவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தார். தனது அலுவலகம் வந்தவுடன் அவர்களை அழைத்தார். என்ன விஷயம் எதற்க்காக வந்திருகக்கிறீர்கள் என்று கேட்டார். வந்தவர்கள் கூறினார்கள்....

ஐயா நாங்கள் கேரளாவில் இருந்து வந்துள்ளோம் நாங்கள் எல்லோரும் மலையாளிகள் எங்கள் ஊரில் உங்கள் தாயார் பெயரில் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறோம். அதற்க்காக தாங்களிடம் நிதியுதவி பெறவே வந்துள்ளோம் என்று கூறினர் அவர்கள் கொண்டுவந்த அழைப்பிதழ் குறிப்புகள் யாவும் கொடுத்தனர்.

அதையெல்லாம் வாங்கிப் பார்த்தார் புரட்சித்தலைவர் ..நீங்கள் எல்லாம் எனது தாயார் பெயரில் நிதி கேட்டது தவறு இல்லை ஆனால் மலையாளி என்று கூறி நிதி கேட்டுருக்ககூடாது நீங்கள் என்னை மலையாளி என்பதால் தமிழகமக்களிடம் இருந்து பிரித்து பார்க்கீர்கள் நான் தமிழன் தமிழ்தான் என்னை வாழவைத்தது .பேர் புகழ் தந்தது இந்த உயிர் மூச்சு எல்லாம் தமிழம் தமிழக மக்கள் தந்தது ... தமிழக மக்களுக்காக எதையும் விட்டு கொடுப்பேன் ஆனால் தமிழை விட்டுக்கொடுக்கப்மாட்டேன் அதுமட்டும் அல்ல நீங்கள் தந்த அழைப்பிதழ் தமிழ் வார்த்தை தமிழ் எமுத்து எதுவும் இல்லை. சாரசரி மனிதனாக வந்து எந்த உதவியும் கேளுங்கள் செய்கிறேன் ஜாதி பெயர் மதத்தின் பெயர் மொழி பெயர் சொல்லி எந்த உதவியும் கேட்டாலும் செய்ய. மாட்டேன்.மீண்டும் இதுப்போல் மலையாளி கேரளா என்று கூறிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்று அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தார்......... Thanks...

orodizli
16th April 2020, 10:57 PM
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.

உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .

கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்

ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்

புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........ Thanks...

orodizli
16th April 2020, 11:02 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

அடிமைப்பெண் - பாகுபலி
அடிமைப்பெண் 1969ம் ஆண்டு வெளியான அக்காலத்து பிரமாண்டப் படம். பாகுபலி 2015ல் வெளியான பிரமாண்டப் படம்.

50 வருடங்களுக்கு முன்பு
வெளியான படம்தான் அடிமைப்பெண். இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் அக்காலத்தில் வெகுவாக சிலாகித்துப் பார்க்கப்பட்டது, ரசிக்கப்பட்டது.

நிஜ சிங்கத்துடன் சண்டை போட்ட "வாத்தியார்"
அடிமைப் பெண் படத்தில் நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டிருப்பார் எம்.ஜி.ஆர். இந்தப் படத்துக்காக, அந்த சிங்கத்தை தனது வீட்டுக்கே வரவழைத்து தினசரி சாப்பாடு போட்டு அதை தனக்குப் பழக்கிக் கொண்டாராம் எம்.ஜி.ஆர். கிளைமேக்ஸ் காட்சியில் இந்த சிங்கச் சண்டை மயிர்க்கூச்செறிய வைத்தது அந்தக் காலத்து ரசிகர்களை.

ஜெய்ப்பூர் அரண்மனையில்
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்திருந்தனர். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.

வசூல் ராஜா
அடிமைப்பெண் படம் அப்போதைய கணக்குப்படி ரூ. 2.30 கோடியை வசூலித்ததாக கூறுகிறார்கள். இப்போதுள்ள கணக்குக்கு அது ரூ. 350 கோடி என்று கணக்கிடப்படுகிறது.

100 நாள்தான் ஷூட்டிங்
அடிமைப் பெண் படத்தின் ஷூட்டிங் ஜஸ்ட் 100 நாட்களில் முடிந்து போனது. பாகுபலியின் ஷூட்டிங்கோ கிட்டத்தட்ட 3 வருடம் ஆனது.

சிலிர்க்க வைத்த கிளைமேக்ஸ்
கிளைமேக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமாக, திரில்லாக இருக்கும். வெறும் கையுடன், கிரேக்க நாட்டு ஸ்டைலில் எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் போட்ட அந்த சண்டை.. இந்தக் காலத்து சிக்ஸ் பேக் ஹீரோக்கள் பிச்சை வாங்க வேம்ண்ம்.

கம்ப்யூட்டர் இல்லை. கிராபிக்ஸும் இல்லை
அடிமைப்பெண் படமான காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது, கிராபிக்ஸ் கிடையாது, அனிமேஷன் கிடையாது. பிளை கேம் கி்டையாது, ஹெலிகேம் கிடைாயது. அகேலா கிரேன் கிடையாது. டிஜிட்டல் கேமரா கிடையாது. எந்த வசதியுமே இல்லாத பட்டிக்காட்டு சினிமா சூழல் அப்போது இருந்தது. ஆனால் இசையில், நடிப்பில், பிரமாண்டத்தில் பிரமிக்க வைத்த படம் அடிமைப் பெண்.

திருப்பம்.. திரில்
சாதாரண இந்தக் கதையை திருப்பங்கள், ஆச்சரியங்களுடன் விறுவிறுப்பாக படமாக்கியிருப்பார்கள் அடிமைப்பெண் படத்தில். காதல் காட்சிகள், சண்டைக்
காட்சிகள், வீராவேசம், கோபம், குரோதம், துரோகம், வர்த்தகம் என அத்தனையும் கலந்த அதிடிப்படம் அடிமைப்பெண்.

தீர்ப்பு
எனவே பாகுபலியைப் பார்த்து பிரமிக்கும் அதே நேரத்தில் நம் 'சொந்த' அடிமைப்பெண்ணை கொண்டாடுவோம். இந்தக் கால இளைஞர்கள் கட்டாயம் அடிமைப்பெண்ணை ஒருமுறை பார்க்குமாறு சொல்லுவோம்....... Thanks...

orodizli
16th April 2020, 11:03 PM
#மெருகேற்றிக்கொண்ட #வாத்தியார்

சாலிவாஹனன் படத்தின் கதாநாயகன், ரஞ்சன். வில்லன், டி.எஸ் பாலையா. கதாநாயகிகள் அன்றைக்கு கவர்ச்சிக்கன்னி என ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் கே.எல்.வி வசந்தா. கதாநாயகன் ரஞ்சன், தமிழ்சினிமாவின் முதல் அஷ்டாவதானி நடிகர்.

அன்றைய காலகட்டத்தில் இத்திரைப்படத்தைப் பற்றி ஒரு பாப்புலரான பத்திரிகையில் வந்த விமர்சனம் :

“இந்தக் கதையை டைரக்டர் சீர்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக நடிகைகளைக் கவர்ச்சியாகப் பதிவு செய்வதில் சிரத்தை காட்டியிருக்கிறார். கே.எல். வி வசந்தாவை வெறுக்கத்தக்கபடி மேலாடை தரிக்கச் செய்திருக்கிறார். இதில் தேவையில்லாத வெறுக்கத்தக்க குளோசப் ஷாட்டுகள் வேறு. ராஜகுமாரி தோற்றமும் இதுபோலவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

ரஞ்சனுக்கு வேஷம் துளிக்கூடப் பொருத்தமில்லை. அவரது முகத்தோற்றம் அவருக்கு எதிராக நிற்கிறது. மேக்கப் சகிக்கக்கூடியதாக இல்லை. முகத்தில் வீரத்துக்குப் பதில் அசடும் அறியாமையும் தாண்டவமாடுகின்றன. அவருடன் காதல் காட்சிகளில் மட்டுமு டி.ஆர். ராஜகுமாரி நன்றாக நடித்திருக்கிறார்.....”-

நீளமான இந்த விமர்சனத்தின் இடையே அந்த பத்திரிகை ஒரு கதாபாத்திரத்தை மட்டும் பட்டும் படாமல் ஒரேவரியில் பாராட்டியிருந்தது.

அது, நம்ம வாத்தியார் பற்றியது தான். “எம்.ஜி.ராம்சந்தர் போடும் கத்திச்சண்டை பாராட்டும்படி உள்ளது..." என்ற அந்த ஒருவரியினால் உச்சிக்குளிர்ந்து போனது வாத்தியாருக்கு.

கதாநாயகனை கண்டமேனிக்கு சாடியும் அதேசமயம் துணைபாத்திரத்தை பாராட்டியும் எழுதப்பட்ட இந்த விமர்சனம், 'வெறும் நடிப்புத்திறமையும் அழகும் மட்டுமே சினிமாவுக்கான மூலதனம் இல்லை. பல விசயங்களிலும் நம்மை மெருகேற்றிக்கொண்டால் மட்டுமே மற்றவர்களிடமிருந்து தாம் தனித்துத் தெரிவோம்' என்ற எண்ணத்தை வாத்தியாரின் மனதில் இன்னொரு முறை ஆழமாக விதைத்தது.

அந்த உறுதியோடு முன்னைவிடவும் சுறுசுறுப்போடு தன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத்துவங்கினார் நம்ம வாத்தியார்....... Thanks...

orodizli
16th April 2020, 11:05 PM
பொதுவா நம்ம வாத்தியார் மீது ஒரு தவறான செய்தி கூறுவார்கள் அது என்னவென்றால் அவர் நடிக்கிற படத்தில் படப்பிடிப்பு தாமதமாக நடைப்பெறுகிறது ..அதற்கு என்ன காரணம் என்பது அறியாமல் பல. தவறான. கருத்துக்கள் கூறுவார்கள் சில சண்டாளர்கள்,.அதற்க்கான காரணம் இதோ நான் அறிந்தவை

1...புரட்சித்தலைவர் படப்பிடிப்பில் இருக்கும் போது தீடீரென்று அறிஞர் அண்ணாவிடம் தகவல் வரும் உடனே புறப்பட்டு வரும்படி அதனால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி விட்டு அண்ணாவின் கட்டளைக்கு பணிந்து புறப்பட்டு சென்று விடுவார் அப்படி புறப்படவில்லையென்றால் அண்ணா கூப்பிட்டு போகல என்று தவறானா கருத்து திணித்து பத்திரிகையில் எழுதி விடுவார்கள் என்பதால் ....போகாமல் இருந்தால் அண்ணா மீது பற்று இல்லை என்று நினைப்பார்கள் மதிக்க வில்லை என்று கதைக்கட்டி விடுவார்கள் போனால் படப்பிடிப்பு நின்றுவிடும் இப்படி இரண்டுக்கும் மத்தியில்தான் அவர் படப்பிடிப்பு நடைப்பெறும்

2....தமிழகத்தில் எங்கு தீ விபத்து ஏற்ப்பட்டாலும் மழை வெள்ளம் ஏற்ப்பட்டாலும் அங்கே வந்து முதல் உதவி புரட்சித்தலைவரின் உதவித்தான் இருக்கும் யாருக்கு எந்த ஆபத்து இருந்தாலும் அவர்கள் நாடுவது புரட்சித்தலைவரின் உதவித்தான் ஒவ்வொரு முறையும் பட.ப்பிடிப்பு நடைப்பெறும் போதும் இப்படி எதாவது அசம்பாவிதம் நடை.ப்பெறும் உடனே புரட்சித்தலைவர் படப்பிடிப்பு நிறுத்திவிட்டு பிறர்க்கு உதவிட சென்று விடுவார் இதனால் அவர் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும்

3...அரசியல் கட்சி பொதுக்கூட்டம் தேர்தல் பிரச்சாரம் அரசியல் பிரமுகர்கள் பொது நிகழ்ச்சி என்று பல்வேறு அழைப்பு க்கள் நிகழ்வுகள் மத்தியில்தான் படப்பிடிப்பு நடைப்பெறும்

4......புரட்சித்தலைவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் ஒரே நேரத்தில் 4. ..5..படத்தில் நடிப்பார்கள் அடுத்த பட.த்தில் படப்பிடிப்பு கலந்துக்கொள்ள. இயக்குனர் களிடம் அனுமதி கிடைக்காது அந்த காலத்தில் மிகவும் கண்டிப்பு மிக்க. இயக்குனர் இருந்தனரர் அதனால் புரட்சித்தலைவரிடம் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் இதனால் புரட்சித்தலைவர் மீது அபாண்டமா பழி வரும் வாத்தியாரிடம் இதைப்பற்றிறி கேட்டபோது அதற்கு அவர் கூறிய. பதில்.. இதுதான் அவர்கள் சம்பாதிக்கும் நேரம் அவர்களுக்கு சினிமா தவிர் வேறு தொழில் தெரியாது அதனால் அவர்கள் பிழைப்புக்கு நாம் தடையாக இருக்க கூடாது என்பார் இப்படி உதவி செய்து படப்பிடிப்பு தாமதம் ஏற்படுவது உண்டு..
..

5....படப்பிடிப்பு முடியும் தருவாயில் கிளைக்மாஸ் காட்சியில் உடனே நடித்துக்கொடுக்கமாட்டார் காரணம் ? ....தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கும் விருந்து கொடுப்பார் யாருக்காவது எதாவது பிரச்சினை சம்பளம் பாக்கி இருக்க கவனிப்பார் அப்படி எதாவது இருந்தால் முதலில் அதை தீர்த்தப்பிறகுத்தான் படப்பிடிப்பு நடக்கும் தன்னைப்போல் மற்றவர்களை நினைத்து பிற. நலனில் அக்கறை காட்டுவதாலும் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும்

6...குடும்பம் அரசியல் பொது சேவை சினிமா இந்த நான்கு வாழ்க்கையிலும் எதிலும் யாருக்கும் குறைபாடு இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம் ஆனால் நம்ம வாத்தியார் நான்கு வாழ்க்கையிலும் எல்லோருக்கும் வழிகாட்டியா வாழ்ந்துக்காட்டினார்

பின்குறிப்பு இதற்கு ஆதாரம் புரட்சித்தலைவருடன் நடித்தவர்கள் கூறியது
அவரைப்புரிந்துக்கொண்டு படம் எடுத்தவர்கள் இரண்டு பேர்
ஒன்று R. M. . வீரப்பன் மற்றொருவர் சாண்டோ சின்னப்ப தேவர்....... Thanks...

orodizli
16th April 2020, 11:06 PM
கவியரசு கண்ணதாசன் அவர்கள
உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் எமுதிக்கொண்டிருந்த நேரம் கண்ணதாசன் காண அவரது வீட்டுக்கு நடிகவேள் M..R..ராதா அவர்கள் வந்தார் ..கண்ணதாசன் எமுதிய பாடலை வாங்கி படித்துபார்த்தார் பாடல் வரிகள் M.R.ராதாவை வெகுவாக கவர்ந்தது கண்ணதானை அப்படியே கட்டி தழுவி பாரட்டினார். என்னய்யா கவிஞர் நீ உன்னைபோல் கவிஞர் நான் பார்த்ததில்லை பிரமாதமான பாடல் கண்டிப்பாக இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாது உலகளவில் பேசப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்.

ஆமா இந்த பாடல் யாருக்காக எமுதப்பட்டது என்று கேட்டார்..
அதற்கு கண்ணதாசன் நீங்களே சொல்லுங்க யாருக்கு இந்த பாடல் பொருந்தும் நீங்கள் சரியான பதில் தந்தால் அந்த பாடல் அவர்க்கே போய் சேரும் தவறான பதிலாக. இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் நீங்கள் உங்கள் சொந்த படத்துக்கு பயன் படுத்திக் கொளேளுங்கள் என்றார்.

என்ன கவிஞர் இப்படி கேட்டிட்டுங்க உங்கள் பாடல்க்கு உயிர் கொடுக்க எம். ஜி. ஆர். ஒருவர்தான் இருக்கிறார் அவரைத் தவிர வேறு எவருக்கும் பொருந்தாது

எனக்கு கொடுத்தால் என் தலைமுறை வரைத்தான் பேசப்படும். ஆனால்
எம்.ஜி. ஆர் க்கு பல தலைமுறை தாண்டி நிலைக்கும் என்றார்
...உடனே கவியரசு கண்ணதாசன் M.R.ராதாவை கட்டி தழுவி நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் ..இது கண்ணதாசன் பாடல் என்பதை தாண்டி எம்.ஜி.ஆர் பாடல் என்றுத்தான் பேசப்படும்

சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் புரட்சித்தலைவரை சந்தித்த M.R.ராதா அவர்கள்
எல்லா நடிகர்களும் கவிஞர்களின் வரிகளுக்கு வாய் அசைவு கொடுப்பது சுலபம் ஆனால் வாழ்ந்துக்காட்டுவது கடினம் நீங்கள் வாழவும் வைக்கிறீர்கள் வாழ்ந்தும் காட்டுகிறீர்கள் என வாழ்த்து கூறி கண்ணதாசன் எமுதிய. பாடலையும் குறிப்பிட்டு பாரட்டினார் ..
M.R.ராதாவால் பாரட்டுப்பெற்ற பாடலுக்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தந்து மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தார்

எல்லா பாடல் வரிகளையும் கவனிக்கும் புரட்சித்தலைவர் இந்த பாடலை மட்டும் கவனிக்க வில்லை திருத்தவும் இல்லை.......... Thanks...

orodizli
16th April 2020, 11:06 PM
.நமது தெய்வம் பொன்மனச்செம்மல் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களின் மனதில் வெற்றி கண்ட வெற்றிச்சித்திரம் பாசம் படத்தில் இடம்பெற்ற பாடல்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்ற பாடல் வாத்தியார் வாழ்வில் மறக்க முடியாத ஒர் உன்னதமான அற்புதமான பாடல் ...

அன்றைக்கு கதைக்காகவும் தாயாரிப்பாளர்கள் வேண்டுதலுக்காகவும் இயக்குனர்களின் திரைக்கதைக்காகவும்தான் பாடல்கள் எமுதப்பட்டது.

முதல் முதலாக கதாநாயகன் அந்தஸ்து உயர்த்தி கதாநாயகன் பெருமைகளைப் குறிப்பிட்டு எழுதபட்ட முதல் பாடல் முதல் படம் இதுதான் இந்தபாடல் வெளியிடப்பட்டு புரட்சித்தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது.

இப்பாடல்க்கேட்டு அன்றைய. முன்னணி கதாநாயகன்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலர் கவியரசு கண்ணதாசன் வீட்டுக்கு படையெடுத்தனர் எங்களுக்கும் இது போன்ற பாடல் எழுதி தருமாறு கேட்டனர்

அதற்கு கவியரசு கண்ணதாசன் தந்த பதில் நான் எம்..ஜி..ஆர்க்காக பாடல் எமுதனும் என்று எழுத வில்லை நான் எழுதிய பாடலுக்கு அவர் பொருத்தமானர்
அதுப்போல் நான் எத்தனையோ பாடல் எழுதியுள்ளோன் அவற்றில் எதாவது ஒரு பாடலுக்கு உங்களுக்குள் பொருத்திக்கொள்ளுங்கள் என்றார் .
...
பத்து ஆண்டுகள் கழித்து 1965 ம்ஆண்டு முதல் 1975 ம்ஆண்டு வரை உள்ள. முன்னனி கதாநாயகன்கள் 1975 ம்ஆண்டு முதல் 1980 ம்ஆண்டு வரை உள்ள முன்னணி கதாநாயகன்கள் கவியரசு கண்ணதாசனிடம் இதே கேள்வி கேட்டனர்

அதற்கு கவியரசு சொன்ன பதில் எம் ஜி ஆர் போல் பாடல் கேட்கிறீர்கள் தவறில்லை ஆனால் உங்களால்

எம். ஜி. ஆர்.போல் சினிமாவில் கொள்கையுடன் நடித்து நிலைக்க முடியுமா?
எம். ஜி. ஆர் போல வாழ்க்கையில் மனிதநேயம் வள்ளல் தனம் வுடன் வாழமுடியுமா?..
எம். ஜி. ஆர் போல் அரசியலில் பண்பு பணிவு ஊழலற்ற அரசாக ஜொலிக்க முடியுமா? ..இதெல்லாம் சாத்தியமாகும் என்றால் நான் உங்களுக்காக பாடல் எமுதி தருகிறேன். என்றார்.

1996 ம்ஆண்டு கவியரசு கண்ணதாசன் பவள விழாவில் விசாலி கண்ணதாசன் கூறியது ...... Thanks...

orodizli
16th April 2020, 11:07 PM
பேரறிஞர்அண்ணா அவர்கள் ஒரு முறை வேலுர் பொதுக்கூ.ட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னைக்கு வந்துக்கொண்டுருந்தார்.வரும் வழியில் புரட்சித்தலைவர் நடித்த காவல்காரன் படத்தில் இடம்பெற்ற பாடல் அவர் காதில் ரீங்காரம் இட்டது பாடல் வந்த திசையில் நோக்கி சென்று வண்டியே நிறுத்த சொன்னார் ...அப்போதுத்தான் காவல்காரன் வெளி வந்து வசூலில் சாதனை செய்துக்கொண்டிருந்தது.வண்டி ஒரு தியேட்டர் அருகே சென்று நின்றது. தியேட்டர் அதிபர் அழைத்து தான் வந்த செய்தி யாரிடமும் கூற வேண்டாம். நான் மக்களோடு சேர்ந்து படம் பார்க்க போகிறேன் என்று கூறி தியேட்டர்க்குள் சென்று காவல்காரன் படம் பார்த்தார் ..படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கைத்தட்டல் விசில் சத்தம் காதைபிளந்தது மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி ஆரவாரம் செய்தனர். காட்சிக்கு காட்சி வாத்தியாரே தலைவா என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது

அண்ணா படம் பார்க்காமல் மக்களின் சந்தோஷம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தார் எத்தனையோ கவலைகள் பிரச்சினைகள் மறந்து இந்த மூன்று மணி நேரத்தில் அடையும் மகிழ்ச்சி கண்டு வியந்தார் ஆச்சரியம் அடைந்தார். படம் முடிந்தவுடன் தனது அலுவலகம் சென்று நான் உடனே காவல் காரன் படம் பார்க்கனும் அதற்க்கான ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .அப்போது உடன் வந்தவர் கே.ட்டார் .ஐயா இப்போதுத்தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தோம் மீண்டும் பார்க்க. வேண்டும் என்கிறீர்களே என்றார்
அதற்கு பேரறிஞர் அண்ணா தந்த விளக்கம் நான் படம் பார்க்கனும் என்றுத்தான் சென்றேன் ஆனால் மக்களின் சந்தோஷம் ஆரவாரம் மகிழ்ச்சி கண்டு அவர்களைத்தான் ரசித்தேன் எம். ஜி. ஆர் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்பு பற்று பாசம் கண்டு பெருமிதம் கொண்டேன்.ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் எம். ஜி.ஆர் மக்களுக்கு தந்து அவர்கள் மனம் திருப்தி ஏற்படுத்தியுள்ளார் இதைவிடப் ஒரு திரைப்படத்துக்கு என்ன தகுதி வேண்டும் ..மக்களின் உண்மையான சந்தோஷம்தான் சிறந்த விருதுக்கான தகுதியான படம் ஆகும் இந்த ஆண்டு சிறந்த திரைப்படம் காவல் காரன் என்று அறிவியுங்கள் என்றார் மக்கள் ரசித்த திரைப்படம் நானும் ரசிக்க விரும்புகிறேன் என்றார் ...

பின்குறிப்பு.... ...புரட்சித்தலைவர் விவசாயி திரைப்படம் தேர்ந்தெடுக்க சொன்னார் காரணம் காவல் காரன் தனது சொந்த கம்பேனி சத்யா மூவிஸ் என்பதால் பலர் தவறான கருத்து கூறுவார்கள் என்பதால் விவசாயி திரைப்படம் சொன்னார்.

ஆனால் அண்ணா அதற்க்கெல்லாம் இடம் தராமல் காவல் காரன் முன்பே அறிவித்தால் அதுவே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தார்........ Thanks...

orodizli
16th April 2020, 11:08 PM
கவியரசு கண்ணதாசன் பிடித்த பாடல்
பாராட்டிய பாடல்
படகோட்டி,படத்தில் வரும் கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல். .
கவிஞர் வாலி முதல் முறையாக ஒரு படத்தில் முழு பாடல் எமுதிய
முதல் படம் படகோட்டி....அப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்

இன்னும் சொல்லனும் என்றால் பாட்டுக்கு ஒரு படம் இப்படம் வெளியான முதல்
தமிழகத்தில் உள்ள அனைத்து சென்டரில் இப்படத்தில் வரும் பாடல்கள்தான் ஒலித்தது இப்படத்தில் வரும் பாடல்கள் பாராட்டாத பத்திரிக்கைகள் கிடையாது
பாராட்டாத தலைவர்கள் கிடையாது
கவிஞர்கள் பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் .இப்படி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தார்கள்

ஏன் அன்றைய முன்னனி கவிஞர்கள் பலர் ஒன்று கூடி கவிஞர் வாலிக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்ற அனைவரும் கவிஞர் வாலியை பாராட்டினார்கள்

அதில் கவியரசு கண்ணதாசன் வாலியைப்பற்றி பாராட்டிய சில வரிகள்
படகோட்டி படம் புரட்சிநடிகர் எம். ஜி.ஆர். க்கு மேலும் ஒரு வெற்றி மகுடம் சூட்டும் இனி புரட்சிநடிகரின் ஆஸ்தான கவிஞராக வாலி திகழ்வார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அற்புதமாக செதுக்கிள்ளார் கவிஞர் வாலி
அதிலும் குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்தது பிடித்தது கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல். காரணம். வாலி இதை ஒரு கவிஞராக இருந்து எமுதினாரா அல்லது ஒரு மீணவராக இருந்து எமுதியாதா என்று என்னால் யூகிக்க முடியல. . ஒரு மீணவன் துன்பம் பற்றி அவனிடம் போய் கேட்டாலும் இந்தளவுக்கு கூறுவானா என்பது சந்தேகமே ஆனால் கவிஞர் வாலி அதைவிட ஆழமாக வேரூன்றி செதுக்கியுள்ளார் இப்பாடல் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பல பேர் வியர்ந்து பாராட்டுக்கு பொருத்தமான கவிஞராக திகழ்கிறார். இப்படி பல இடங்களில் பலர் பாராட்டு பெற்ற வாலி முடிவாக கூறியது

பல பேர் பாராட்டு பெற்ற நான் இன்று ஒரு கவிஞன் என்ற அந்தஸ்து பெறுவதற்கு காரணம் புரட்சிநடிகர் எம். ஜி.ஆர். நான் பல நாள் பட்ட கஷ்டம் துயரம் எல்லாம் அவரைக்கண்டவுடன் ஒரு நோடியில் பறந்து போனது வறுமை பசி பட்டினி யாவும் மறந்து போனது எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அக்கறையுடன் எடுத்துக் கொண்டவர் இனி நான் எந்த உயரம் சென்றாலும் எம் ஜி ஆர் என்ற ஒரு மாமனிதர்தான் எனக்கு அடையாளம் என்றார்..... Thanks.........

orodizli
16th April 2020, 11:09 PM
எம்ஜிஆர் பக்தர் s.குமார் அவர்களுக்குக்காக இப்பதிவு எமுதிகிறேன்

பொதுவாக புரட்சித்தலைவர் பாடல் என்றாலே கருத்துக் ஆழமிக்க பாடல் என்பது ஊர் உலகம் முழுவதும் அறிந்த உண்மை ஆனால் அதன் உண்மையான உட்பொருளும் கருத்துக்கள் பலர் அறிந்திருக்கவில்லை. . அவர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம். ....பணத்தோட்டம் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். ...

என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே. ..என்ற பாடலில் வரும் ஒரு வரி. ..


. பின்னாலே தெரிவது அரிச்சுவடி
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்து போராடு

இப்பாடல் கருத்து. ..பின்னாலே தெரிவது அரிச்சுவடி என்றால்
நடந்து முடிந்த சம்பவம். சுவடு என்றால் வரலாறு. இறந்த காலத்தை குறிக்கும்
இறந்த காலம் மீண்டும் வராது அதனால் அதைப் பற்றி நீ சிந்திக்க வேண்டாம்.

முன்னாலே இருப்பது அவன் வீடு..இக்காட்சி யில் இறைவன் ஆலயத்தைக்காட்டி பாடுவார்..உன்னுடைய எதிர்காலம் இறைவனிடம் உண்டு அதை அவன் பார்த்துக்கொள்வான்.அதனால் அதைப்பற்றி.நீ சிந்திக்காதே

நடுவினிலே நீ விளையாடு...இப்போது நடப்பது நிழல் காலம் இந்த காலத்தில்
நல்லது செய்து நல்லதை நினைத்து வாழ்ந்தால். .எதிர் காலம் உன்னை தேடி வரும். இறந்த காலம் பேசப்படும்

அதாவது நடந்து முடிந்த சம்பவம் பற்றி பேச வேண்டாம்
நடக்க போறதைப்பற்றி யோசிக்க வேண்டாம் இப்போமுது நடக்க வேண்டியதை மட்டும் சிந்திப்போம் செயல் படுத்துவோமா. ...

என்பதே இப்பாடலின் உட்பொருளின் கருத்தாகும்........ Thanks...

orodizli
16th April 2020, 11:12 PM
1968 ---குடியிருந்தக்கோயில். ....ஒளிவிளக்கு ...
1969 --- அடிமைப்பெண்,......நம்நாடு...
1970 ---மாட்டுக்காரவேலன் தொடர்ந்து 5_வது வெள்ளி விழா படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது இந்த வெற்றி புரட்சித்தலைவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். ? என்பது பலர் அறிந்த உண்மை ஆனால் அதன் பின்னனி என்ன என்பது பலர் அறியாமல் இருப்பதும் உண்மையாகும். அதற்கு ஒர் உதாரணம் இப்பதிவு எமுதிகிறேன். .1970- ம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்காரவேலன் வெள்ளி விழா கொண்டாடி மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்தது. படம் பொங்கல் திருநாள் அன்று வெளிவந்தது. ஆனால் அப்படம் தீபாவளிக்கு வரவேண்டியது காலதாமதமாக பொங்கலுக்கு வெளிவந்தது ...அதற்கு காரணம். ....

ஜெயந்தி பிலிம்ஸ் படத்தின் தயாரிப்பாளர் கனகசபை ரத்தினம் படம் முழுவதும் எடுத்தபின் புரட்சித்தலைவரிடம் போட்டுகாண்பித்தார். படத்தின் கதை படி புரட்சித்தலைவர் வக்கீல் அதனால் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் நீதிமன்றம் காட்சிகள்தான் வைக்கப்பட்டது புரட்சித்தலைவர் நீதிமன்றத்தில் வாதாடி அசோகனுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதுப்போல் வழக்காடு காட்சி இடம் பெற்று இருந்தது அப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் இல்லை. ..புரட்சித்தலைவர்க்கு படம் முழுக்க பார்த்த பிறகு மனம் திருப்தி அளிக்கவில்லை அதனால் தயாரிப்பாளர் இயக்குநர் இருவரையும் அழைத்து இந்த காட்சியினை எடுத்து விட்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ...

இதைக்கேட்டதும் தயாரிப்பாளர் முகம் வாடியது. படம் முழுக்க முடிந்த பிறகு இனி மீண்டும் செட்டிங்ஸ் அமைத்து எடுத்து முடிக்க நாள் ஆகும் செலவும் அதிகம் ஆகும் அதனால் வேறு ஒரு தயாரிப்பாளரிடம் படத்தை ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்கிக்கொள்வோம் அல்லது கதை விவாதத்தில் புரட்சித்தலைவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். மீண்டும் புரட்சித்தலைவரிடம் வந்து ஐயா படத்தின்கதைப்படி நீங்கள் வக்கீல் நீதிமன்றம் காட்சி இடம் பெற்றால்தான் அதில் உங்கள் வாததிறமையுமீ சமூக கருத்துக்கள் மக்களிடம் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். .அதுமட்டுமல்ல பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் விமர்சனம் செய்து படத்தின் வெற்றி வசூல் பாதிக்கும் என்றார்.... உடனே அதற்கு புரட்சித்தலைவர் தந்த பதில். ..

கதைப்படி நான் வக்கீல் ஆக இருந்தாலும் நீதிமன்றம் காட்சி இரண்டு மூன்று முறை வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே நான் நடித்த நீதிக்குப்பின்பாசம்படத்தில் அப்படி ஒரு காட்சி இருந்ததால்தான் அப்படம் வெற்றி பெற்றது வசூலில் லாபம் பார்த்தது நீங்கள் ஒரு காட்சியில் மட்டும் நீதிமன்றம் காட்சி வைத்திருந்தால் அவை பலர் கேள்விக்கு சாதகமாக அமையும் அதே நான் சொல்வதுப்போல் கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் மக்கள் கதையை மறந்து இதிலே ஆர்வம் காட்டி மகிழ்ச்சி அடைவார்கள் மக்கள் தரும் வெற்றி எந்த பத்திரிகையாளர் விமர்சனம் வெற்றியை பாதிக்காது வசூலும் குறையாது..நான் சொல்வதுப்போல் கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை நானே செய்து விடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். தயாரிப்பாளர் கனகசபை இனிமேல். .... எம் ஜி ஆர் வைத்து படம் எடுக்க கூடாது என்று முடிவு செய்து விட்டார்.
அதன் பின்னர் புரட்சித்தலைவர் அதற்கான பயிற்சி பெற்ற பிறகுதான் செட்டிங்ஸ் அமைத்து சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டது கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க இரண்டு மாதங்கள் ஆனது தீபாவளிக்கு வரவேண்டிய படம் பொங்கலுக்கு வெளிவந்தது வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ..
படத்தின் தயாரிப்பாளர் கனகசபை பணம் மழையில் நனைந்தார் அவர் வாழ்விலே அவ்வளவு பெரிய அளவில் வசூல் பார்த்ததில்லை. ..எந்தளவுக்கு புரட்சித்தலைவர் மீது கோபம் இருந்ததோ அவையெல்லாம் மறந்து இனிபடம் எடுத்தால் புரட்சித்தலைவர் வைத்துதான் எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். .......

மாட்டுக்காரவேலன் வசூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக அளவில் வசூலில்
சக்கரவர்த்தியாக திகழ்ந்தது இப்படி ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் நமது தெய்வம் புரட்சித்தலைவர் தான்....... Thanks...

orodizli
16th April 2020, 11:14 PM
நம்நாடு உருவான வரலாறு பாகம் 1

பொன்மனச்செம்மல் ஸ்ரீதர் இயக்கத்தில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தில் சில தவறான கருத்துக்களால் நடிப்பதை நிறுத்தி விட்டார் அவருடைய. கொள்கை படத்தில் சரியான முறையில் அமைய வில்லை என்பதும் ஒர் காரணமாகும் ...
எம் ஜி ஆர் மீது உள்ள கோபத்தில் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்ற படத்தை வெளிநாட்டில் எடுத்து வெளியிட முடிவு செய்தார் ..

அதே நேரத்தில் நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீதர் படத்தில் என்ன கருத்தை கூற. விரும்பினோமோ அதே கருத்தை வேறு படத்தில் கூறி அவருக்கும் மற்றவர்களுக்கும் பதிலாக உணர்த்தவே உருவாண படம்தான் நம்நாடு
படத்தின் கதைப்படி குடிசைவாழ்பகுதியில் வாழும் மக்களின் அறியாமை போக்கி அவர்கள் பக்கம் உள்ள நியாத்தை எடுத்துக்கூறி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு திட்டங்கள் அவர்களுக்கு போய் சேர வேண்டும். அதற்காக பாடுபடும் இளைஞராக புரட்சித்தலைவர் நடித்தார்..இதுதான் நம்நாடு படத்தின் கதை

அதே நேரத்தில் ஸ்ரீதர் அவர்கள் எம் ஜி ஆர் நடித்த நம்நாடு படம் வெளீயிடும் அதே நாளில் சிவந்த மண் வெளியீட்டு மாபெரும் வெற்றியை காட்ட வேண்டும். எம் ஜி ஆர் க்கு தோல்வியே பரிசாக தரவேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணமாக இருந்தது ஸ்ரீதரின் எண்ணத்துக்கு ஏற்ற போல் சிவாஜியும் ஒத்துழைப்பு கொடுத்தார் ..
...அதற்கு காரணம் எம் ஜி ஆர் படத்துடன் போட்டி போட்டு சிவாஜி படம் எதுவும் வசூலில் முந்தியது இல்லை. அதனால் இந்தப்படம் எம் ஜி ஆர் படம் மிஞ்சி வசூலில் ஹிட் படமாக அமையவேண்டும் என்பது சிவாஜியின் நோக்கமாக இருந்தது.....

ஆனால் புரட்சித்தலைவர் நாம் சொல்ல போகும் கருத்துக்கள் மக்கள் மனதில் ஆழமாக. பதிய வேண்டும். என்பதில் குறிக்கோள் கொண்டிருந்தார் ....அதற்க்கான கதைதான் நம்நாடு .
நம்நாடு படம் பெரும்பகுதி 100/.க்கு 75/. சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது ...பட.த்தைப் போட்டு பார்த்த புரட்சித்தலைவர் சமூக கருத்து இருந்தாலும் திரைக்கதையில் திருப்தி இல்லை. படத்தின் கதையை மாற்றியமைக்க சொன்னார்

தொடரும்....தொடரும்......தொடரும்..... Thanks...

orodizli
16th April 2020, 11:16 PM
நம்நாடு உருவான வரலாறு பாகம் 2

திரைக்கதையில் திருப்தி இல்லாத புரட்சித்தலைவர் விஜயாபுரொடக்ஷன் தயாரிப்பாளர் B.நாகிரெட்டி அப்போது படத்தை இயக்கிக்கொண்டிருந்த ப.நீலகண்டன் எங்க வீட்டு பிள்ளை படத்தின் இயக்குனர் சாணக்யா அவர்கள் அழைத்து கதையே மாற்றியமைக்க. சொன்னார் திரைக்கதை பற்றியும் ஆலோசனை செய்தார் ...எம் ஜி ஆர் எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் ..நமக்கு தேவை படத்தின் வெற்றி வசூல் என்பது நாகிரெட்டியின் கருத்தாகும். காரணம் எங்க வீட்டு பிள்ளை படமும் எம் ஜி ஆரின் ஆலோசனையாதால் முமு வெற்றி பெற்றது.என்பது நாகிரெட்டி மட்டுமே அறிந்தார்..

துணை இயக்குனர் ஜம்பு லிங்கம் கதையில் சில மாற்றங்கள் அமைத்து திரைக்கதை வடியமைத்து எம் ஜி ஆரிடம் நாகிரெட்டியிடம் விளக்கி கூறினார்
திரைக்கதை கதை இரண்டும் எம் ஜி ஆர்க்கு பிடித்து விட்டது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படம் எடுத்தால்தான் ஜம்புலிங்கம் சொன்ன கதை திரைக்கதை சரியாக அமையும். ஆனால் 100/.க்கு 75/. சதவீதம் படம் முடிந்த நிலையில் எப்படி மாற்றுவது என தயங்கினார் நாகிரெட்டி.....

உடனே புரட்சித்தலைவர் சில ஆலோசனை வழங்கினார் இடைவேளை வரைக்கும் ஏற்கனவே உள்ள கதையே இருக்கட்டும் இடைவேளைக்கு பிறகு ஜம்பு லிங்கம் சொன்ன திரைக்கதையேஇனைத்து அமைத்துக்கொள்ளுங்கள் படத்தை ஜம்புலிங்கத்தையே இயக்க சொல்லுங்க அப்படி செய்தால் படத்தின் செலவும் குறையும் வெற்றியும் உறுதி என்றார் .....உடனே நாகிரெட்டி இப்போது இயக்கும் பா. நீலகண்டன். க்கு என்ன பதில் கூறுவது என்றார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி புரட்சித்தலைவர் பா.நீலகண்டன் அழைத்து தற்போது உள்ள நிலவரம் கூறி எனது அடுத்து இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குனர் என்று வாக்குறுதி கொடுத்தார்.பிறகு ஜம்புலிங்கம் இயக்கத்தில் நம்நாடு உருவானது ...நாகிரெட்டியும் செலவைப்பற்றி யோசிக்காமல் நம்நாடு பிரமாண்டமான முறையில் வளர தொடங்கியது ...

தொடரும் .....தொடரும்....தொடரும்....... Thanks...

orodizli
16th April 2020, 11:18 PM
நம்நாடு உருவான வரலாறு பாகம் 3

எங்கவீட்டுபிள்ளை படத்தில் வரும் முதல் சண்டைக் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் நீண்ட நாள் ஆசை அப்படத்தில் மூலம் நிறைவேற்றது...அதேப்போல் நம்நாடு படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சிறிது லித்தியாசமாக எடுக்க நினைத்தார். தர்மலிங்கம் அழகிரி சாமிநாதன் ஷ்யாம்சுந்தர் போன்ற ஸ்டண்டு நடிகர்கள் அழைத்து ஆலோசித்தார் .இது அரசியல் படம் என்பதால் இதில் ஆக்ரோஷம் இருக்க கூடாது. அதனால் நகைச்சுவையாக அமைத்து விடுங்கள் என்றார் ..படத்தில் பெரிய மனிதர் களாக நடித்தவர்களை நான் ஆக்ரோஷமாக தாக்கினால் உண்மையாண பலசாலிகள் திறமைசாலித்தனம் அடிப்பட்டடு போய்விடும். புரட்சித்தலைவர் ஆலோசனைப்படி சண்டைக்காட்சி நகைச்சுவையாக எடுக்கப்பட்டது இப்படி கதையே மாற்றி கிளைமாக்ஸ் காட்சி மாற்றி 1969 நவம்பர் 7 ந் தேதி வெளிவந்தது.
.
நம்நாடு மாபெரும் வசூல் சாதனை படைத்தது மக்களின் ஏகோபித்த பாராட்டு மழையில் நனைந்தது 150 நாட்கள் மேல் ஒடி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இதனுடன் போட்டி போட்டு வந்த சிவந்த மண் நம்நாடுக்கு நிகராகமல் தோல்வியடைந்தது . போட்ட காசு எடுக்க.முடியால் ஸ்ரீதர் கடன்காரனாக மாறினார். புரட்சித்தலைவர் பா.நீலகண்டன் கொடுத்த வாக்குபடி மாட்டுக்கார வேலன் என்அண்ணன் தொடர்ந்து இரண்டு படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் .இவ்விரண்டும் மாபெரும் வெற்றி வசூலில் ஒன்றரை மிஞ்சி ஒன்று ஒடியது. நம்நாடு வசூல் மாட்டுக்கார வேலன் மிஞ்சியது மாட்டுக்காரவேலன் வசூல் நிகராக என்அண்ணன் வந்தார் ..நம்நாடு படம் பார்த்தால் தெரியும் இடைவேளை வரை ஒரு கதையும் இடைவேளைக்கு பிறகு கதைமாற்றுருக்கும்.

இவையெல்லாம் புரட்சித்தலைவர் கை வண்ணத்தில் உருவானது .நாகிரெட்டி நம்நாடு படத்தின் வசூலில் திக்கு முக்காடி போனார் ..
இப்படி வாத்தியார் நடிக்கிற ஒவ்வொரு திரைப்படமும் தனது சொந்த படம் போல் நினைத்துத்தான் அவருடைய கலை ஆர்வம் ஒவ்வொரு ரசிகர்களிடமும் போய் சேர்ந்தது ......... Thanks...........

orodizli
16th April 2020, 11:20 PM
தமிழகத்தின் ஒளிவிளக்கு நமது தெய்வம் புரட்சித்தலைவர் M .G .R .
அதேப்போல் ஆந்திராவின் விடிவிளக்கு N .T .R

அரசியல் சினிமா இரண்டுக்கும் N. T. .ராமராவ் குரு நம்ம. வாத்தியார் .
வாத்தியார் நடித்த பல படங்கள் டப்பிங்கில் ஆந்திராவில் N. T .ராமராவ் நடித்தார் ...
ராமராவ் அரசியல் ஆசான் குரு வழிகாட்டி எல்லாம் நம்ம தலைவர் எம். ஜி. ஆர்.
கட்சி தொடங்குவதற்கு முன் நம்ம வாத்தியார் பார்த்து ஆசிர்வாதம் வாங்கி கட்சி பெயர் முடிவு செய்து. பிறகு ஆந்திராவில் ஆட்சி பிடித்தது. இவையெல்லாம் ஊர் உலகம் அறிந்த உண்மையாகும் ...

முதல் முதலாக ஆந்திராவில் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றதும் .
N .T. ராமராவ் அவர்கள் நம்ம வாத்தியார் கண்டு தரிசனம் பெற்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு முதல்வர் பதவி ஏற்கவேண்டும் .என்பது ராமராவின் விசுவாசம் உள்ள விருப்பம் ஆகும் அதனால் வெற்றி பெற்ற செய்தி அறிந்தவுடன் நம்ம தலைவரை காண இரவு 2.00 மணிளவில் ராமபுரம் தோட்டத்துக்கு வந்தார்
ராமராவ் ..பாதுகாப்பு நலன் கருதியே இரவு வந்தார்) ..

ராமபுரம் தோட்டத்துக்கு வந்ததும் சில அதிசியம் கண்டு ஆச்சரியம் அடைந்தார் ராமராவ் அந்த நேரத்திலும் சுமார் 30. பேர் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் எங்கு சென்றாலும் உணவு கிடைக்காது நம்ம வீட்டீலே கூட இந்த நேரத்தில் சாப்பாடு இருக்காது அப்படியே இருந்தாலும். எது இருக்கிறதோ அதைத்தான் சாப்பிடனும் இதுதான் வழக்கம் நடைமுறையாகும் ...ஆனால் இங்கே சுட சுட அறுச்சுவை உணவு சாப்பபிடுகிறார்கள். இது எப்படி சாத்தியம் ஆகும் அதுவும் இந்த நேரத்தில் என எண்ணி ஆச்சரியம் அடைந்தார் .

தன்மனதில் பட்டதை அப்படியே புரட்சித்தலைரைக் கண்டதும் கேட்டார் .அதற்கு புரட்சித்தலைவர் தந்த விளக்கம் ...இந்த நேரம் மட்டும் அல்ல எந்த நேரத்தில் வந்தாலும் என்னால் உடனே செய்யக்கூடிய ஒரே உதவி சாப்பாடு மட்டுமே
வேறு எந்த உதவியும் காலம் தாமதமாகத்தான் செய்ய முடியும் ..மனிதன் பிறவி எடுத்ததும் வாழ்வதும் தன் வயிற்றுக்காகத்தான் ..இதைக்கூட நம்மால் செய்ய. முடியல என்றால் நாம் பிறவி எடுத்து என்ன பயன். பசித்தவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் உன் தாய் உன்னை பெற்றுடுத்த பலன் அடைவார் காலமெல்லாம் உணவு கொடுத்தால். நீ உன் தாயின் வயிற்றில் பிறந்த பலன் அடைவாய் ..இதுதான் மனிதன் பிறவிக்கு அர்த்தம் ஆகும் .

இதைக் கேட்டதும் N. T. ராமராவ் தன்னையறியாமல் கண்கலங்கினார் ..இப்படியும்
ஒரு மனிதரா தாய் செய்த புண்ணித்தால் இவர் பிறந்தாரா அல்லது இவர் பிறந்தனால் தாய் புண்ணியம் அடைந்தாரா..என எண்ணி நெகிழ்ச்சியடைந்தார் .

இன்னும் முடியல ...தொடரும் ...தொடரும் ...தொடரும்....... Thanks...

orodizli
16th April 2020, 11:21 PM
M. G. R. ..N. T. R. தொடர்ச்சி பாகம் 2

ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அனையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை லட்சியம்..ஆகும் ...புரட்சித்தலைவர் காண வந்த N. T. ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன். தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் ..அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரே.அவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ..வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள். வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...

புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..

தமிழகம் முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்போதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது..
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்..

பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து..மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த. சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவோருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவாதுக்கு காரணம்

நமது தெய்வம் பொன்மனச்செம்மல்..... Thanks...

orodizli
16th April 2020, 11:22 PM
"நாடோடிமன்னன்" படம் குறித்த சில அறியாத தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

ஆரம்பத்தில் மதனா பானுமதிக்கு கழை கூத்தாடி வேடம் என்று முடிவாகியது.

முத்துகூத்தன் பாடல் எழுத ஆண்டவன் எங்கே அரசாண்டவன் எங்கே என்ற ஒரு பாடல் படமாக்க பட்டு பின் படத்தில் வரவில்லை.

பாடல் ஒத்திகையில் வாத்தியார் வழக்கம் போல திருத்தங்கள் சொல்ல பானுமதிஅதை ஏற்க மறுக்க பாடல் கைவிடப்பட்டது.

வாத்தியார் கோவம் அடைந்து வெளியே செல்ல சக்கிரபாணி அண்ணன் பதட்டம் அடைந்து படம் தொடருமா என்று பதற.

ஒரு காட்சியை வாத்தியார் மீண்டும் மீண்டும் படமாக்க கோவம் கொண்ட பானுமதி ஏ. கே. சுப்ரமணியம் மாதிரி ஒரு நல்ல இயக்குனரை வைத்து எடுக்காமல் ஏன் இப்படி என்னை படுத்துகிறீர்கள் என்று கத்த.... தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரிந்து விட்டது . இனி பானுமதி படத்தில் நீடிப்பது கடினம் என்று.

காடு விளைந்தென்ன பாடல் ஏவிஎம் தளத்தில் படமாக்க இருக்க நான் அங்கு வரமாட்டேன் எனக்கும் ஏ வி.எம்.க்கும் ஆகாது என்று மறுக்க பாட்டையே தூக்கி விடலாமா என்று தலைவன் யோசிக்க பின் சமாதானம் ஆகி வாஹினி படத்தளத்தில் படம் ஆக்க பட்டது. நல்ல வேளை நல்ல பாடல் தப்பியது.

பொன்மனம் தன் மனதை கல்மனம் ஆக்கி கொண்டு ஏன்பா ரவீந்தர் கதாநாயகி இல்லாமல் கதையை மாற்ற முடியாதா என்று கேட்க அது நடந்து பின் படம் தொடர்ந்தது.

கன்னித்தீவில் தங்கை புஷ்பலதாவை தேடி போவது போல முதலில் கதை...ஆம் ஏ. வி.எம்..ராஜன் மனைவி அவரே..

பானுமதி பாத்திரம் பாதியில் முடிய கதை மாற்றப்பட்டு பின் சரோ படத்தில் இணைய பின் பகுதி கலராக வர.

தினம் தினம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிய நாடோடிமன்னன் வெளி வந்து வெள்ளி வெற்றி விழா மலரில் எழுதிய நம் மன்னாதி மன்னன்

பானுமதி கூட எழுந்த மோதல்கள் பற்றி ஏதும் சொல்லாமல் படத்தில் மதனா பாத்திரமே மிகவும் சிறப்பு...அந்த பாத்திரத்தை பானுமதி தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று சொல்ல.

அவர் சொல்லவந்த செய்தி இதுதான் கருத்து வேறுபாடுகளை யாரும் மறக்க வேண்டும் என்பதே..

என்ன சரிதானே எம்ஜியார் நெஞ்சங்களே...மறு வெளியீட்டில் ஒரே திரை அரங்கில் 3 காட்சிகள் தினமும் ஓடி 100 நாட்கள் கண்ட திருவண்ணாமலையில் சாதித்த நிகழ்வு நம் தலைவனுக்கு மட்டுமே இந்த தமிழகத்தில் சொந்தம்.

வாழ்க எம்ஜியார் புகழ்.. தொடரும்...கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. ஒரு ஊக்கத்துக்குத்தான் நன்றி........ Thanks.........

orodizli
16th April 2020, 11:24 PM
தமிழ் மக்கள் எம் ஜி ஆருக்கு கொடுத்த ஆதரவு உலக சரித்திரத்தில் பொறிக்க வேண்டியது
எம் ஜி ஆர் பணத்தை விட மனிதநேயத்தை நேசித்தார் மக்கள் தங்களை விட எம் ஜி ஆரை அதிகம் நேசித்தார்கள்

தன்பசியை விட மற்றவர் பசி ஆறி பார்பதில் சுகம் கண்டார் எம் ஜி ஆர் மக்கள் எம் ஜி ஆர் புகழ் வளர்ச்சி கண்டு சுகம் பெற்றார்கள்

அனாதையாக வந்த தன்னை ஆளாக்கி நாட்டை ஆளவைத்த மக்களுக்கு அரணாக இருந்து காத்தார் எம் ஜி ஆர் மக்கள் தங்களை காத்த எம் ஜி ஆரை காவல்தெய்வமாக கொண்டாடுகிறார்கள்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks...

orodizli
16th April 2020, 11:25 PM
உண்மை தான் எங்கள் புரட்சித் தலைவா

இப்போது நீதி நியாயம் தர்மம் என்பது

காணல் நீர் போல் ஆகிவிட்டது

தர்மம் நீதி நியாயம் இவைகளை எல்லாம்
தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை

புரட்சித் தலைவரே நீங்கள் இல்லாத இந்த உலகில்
நீதியும் இல்லை
நியாயமும் இல்லை
தர்மமும் இல்லை
நேர்மையும் இல்லை
உண்மையும் இல்லை

எல்லாம் வெற்றிடமாக உள்ளது

மக்கள் திலகமே நாங்கள் அனைவரும்
உங்களின் அருமை பெருமைகளை
நன்கு உணர்ந்து கொண்டோம்

மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறோம்

வாழ்க வளர்க வள்ளல் பெருமான் புரட்சித் தலைவரின் புகழ்
✌️���� நன்றி ��....... Thanks...

orodizli
16th April 2020, 11:25 PM
அன்பு நண்பர்களே

இந்த புகைப்படம் தலைவர்

எஸ் என் லட்சுமி அம்மா அவர்களுக்கு
நம் மக்கள் திலகம் பரிசாக வழங்கினார்
தொழிலாளி திரைப்படத்தின் போது
லட்சுமி அம்மா அவர்கள் பெற்றுக்கொண்டு தன் வீட்டின் வாசல் முன்பு அலங்கரித்து வைத்துக் கொண்டார் தலைவரின் தாய்
எஸ் என் லட்சுமி அம்மா அவர்கள்

காலம் உருண்டோடுகிறது தொழிலாளியாக நாடோடியாக விவசாயியாக இருந்த நம்
புரட்சித் தலைவர்
மன்னாதி மன்னனாக
காவல்காரறாக இந்நாட்டு
முதல்வர் ஆகிறார் ஆம் தமிழ் நாட்டுக்கே

முதல் அமைச்சர் ஆகிறார்

நம் தலைவரின் தாய் எஸ் என் லட்சுமி அம்மா அவர்கள் நம் தலைவர் வழங்கிய
புகைப்படத்தை தன் வீட்டின் முன்பு அலங்கரித்த புகைப்படத்தை அகற்றி விடுகிறார்

தமிழ் நாட்டின் முதல்வர்
என் கால் பிடித்திருக்க கூடாது என்று
நல் எண்ணத்தில்
இந்த செய்தி நம் தலைவருக்கு எப்படியோ செல்கிறது

நம் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம்
அன்பு கட்டளை இடுகிறார்
அந்த புகைப்படம் இருந்த இடத்திலே இருக்க வேண்டும் என்று

நம் அன்பு தலைவரின் சொல்லை மீற முடியுமா

அந்த புகைப்படம் இருந்த இடத்துக்கே வந்தது

இது தான்
நம் மக்கள் திலகத்தின் மகிமை...... Thanks...

orodizli
16th April 2020, 11:26 PM
MGR வாழ்க

நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மூன்று முறை முதலமைச்சராகி நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை
உருவாக்கித் தந்தார்

ஆந்திர முதலமைச்சர் எம் டி ராமாராவ் அவர்களுடன் கலந்து பேசி

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு திட்டம் தீட்டினார்

அதுதான் தெலுங்கு கங்கை திட்டம்

கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு குடி நீர் வந்தது

அடுத்து காவிரி நீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக

காவிரிப் பாசன விவசாயிகள் உடன் சேர்ந்து

தமிழ்நாடு அரசின் சார்பில்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

அதன் காரணமாக. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வாங்கியது

ஷண்முக நதியின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டது

நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப் பட்டது

இன்னும் பல திட்டங்களை நாட்டு மக்களுக்காக எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் உருவாக்கினார்

இந்தத் திட்டத்தினால் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் எவ்வளவு லஞ்சப் பணம் கிடைக்கும் என்று திட்டம் போடாமல் நாட்டு மக்களுக்காக லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினார்

ஆகவேதான் இவரைப் பார்த்து யாரும் ஊழல் பெருச்சாளி என்று சொல்ல முடியாது
.....
எம்ஜிஆரின் ஆட்சி பொற்கால ஆட்சி...... Thanks...

orodizli
16th April 2020, 11:29 PM
சாண்டோ சின்னப்பர்தேவர் வாழ்வில் நமது தெய்வம்....பாகம் ..1

1961. ம் ஆண்டு வெளி வந்த தாய் சொல்லைத்தட்டாதே மாபெரும் வசூல் சாதனை புரிந்த சூப்பர் ஹிட் மெகா ஹிட் படம் என்பது யாவரும் அறிந்தது, .இப்படம் சாண்டோ M..M .சின்னப்ப தேவர்க்கு மறு வாழ்வு தந்த படம் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் பிரச்சினைகள் கடன்ங்கள் எல்லாம் தீர்த்து வைத்த ஒர் அற்புதமான திரைக்காவியம் சின்னப்பாதேவர் புரட்சித்தலைவரை ஆண்டவன் என்று அழைத்தது இப்படத்திற்கு பிறகுதான். எனக்கு இரண்டு கடவுள் ஒன்று முருகன் மற்றொருவர் எம்.ஜி. ஆர். என்று பல தடவை சின்னப்பர் தேவர் கூறியுள்ளார்.அதற்கு காரணம் இத்திரைப்படம்தான் .இப்படம் உருவான வரலாறும் அதன் பின்னனியும் தான் இங்கே நான் கூற விரும்பிகிறேன் ..

சாதாரண.ஒர் காட்சியில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த சாண்டோ M.M. சின்னப்பர் தேவர். அகில இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த மிக பெரிய தாயாரிப்பாளராக ஆக்கிய பெருமை நமது புரட்சித்தலைவரையே சேரும்...

1956. ம். ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை ஏற்படுத்தி சின்னப்பதேவரின் அந்தஸ்து உயர்த்திய திரைப்படம்தான் தாய்க்கு பின் தாரம்.
புரட்சித்தலைவர் ஒப்பந்தம் மீறி படத்தின் தெலுங்கு உரிமையே விற்றது..A.சென்டர் B. சென்டர் என்று ஏரியா பகுதிகளை கேட்காமல் மறு வெளியீடு செய்தது..இப்படி ஒரு சில விஷயங்கள் புரட்சித்தலைவரைக் கேட்காமல் சாண்டோ சின்னப்பர்தேவர் செய்த சில தவறுகளால். இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன் பின் சாண்டோ சின்னப்பர்தேவர் கொங்கு நாட்டு தங்கம் பாண்டிய நாட்டு சிங்கம் யானை பாகன் வாழவைத்த தெய்வம் நீலமலைத்திருடன் என்று பல படங்கள் எடுத்தார் ..தாய்க்கு பின் தாரம் படத்திற்கு பின் சுமார் 10. 15. படங்கள் எடுத்துருப்பார். அந்தந்த கதாநாயகர்களுக்குத்தான் வாழ்வு தந்தது தவிர
சாண்டோ சின்னப்பர்தேவர் பொருத்தவரைக்கும் படும் நஷ்டம் கடனாளி ஆனார் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இழந்தார்...அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் மூழ்கி போனார்..அப்போது அவர் மனைவி கூறினார்..நீங்கள் அண்ணணை போய் பாருங்கள் கண்டிப்பா நமக்கு வழி பிறக்கும்..என்றார் ...

தொடரும் ... தொடரும் ......தொடரும் .......... Thanks...

orodizli
16th April 2020, 11:30 PM
சாண்டோ M .M. A.சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் .பாகம். 2. தொடர் ஆரம்பம்

அலிபாபாவும் 40 திருடர்களும்.படத்தில் M.G.சக்ரபாணி மனைவி சந்தியா கூறுவார் அலிபாபா மனதை உங்களை விட நான் நன்கு அறிவேன். என்பது போல் சின்னப்பா தேவரின் மனைவி மாரி முத்தம்மாள் கூறினார்.அன்ணனைப் பற்றியும் அவர் குணத்தையும் உங்களைவிட நான் நன்கு அறிவேன். போய் பார்த்து விட்டு வாருங்கள் வழி பிறக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார். குசேலன் கண்ணபிரானை காண சென்றதுப் போல் சின்னப்பதேவர்.நமது தெய்வத்தை காண சென்றார். நாடோடி மன்னன் படத்தின் அடுத்த காட்சிக்காக ஆலோசனையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார் தனது குழுவினர்வுடன் நமது தெய்வம்.

சின்னப்பதேவர் தன்னை கான வந்திருக்கிற செய்தி அறிந்ததும் ஒடி சென்று வாங்க முதலாளி எப்படி இருக்கிறீங்கள் என்று சின்னப்பதேவரை கட்டி அனைத்து அன்பு மழை பொழிந்தார் நமது தெய்வம். எதோ எதோ நினைத்துக்கொண்டு வந்த சின்னப்பதேவர்க்கு எம் ஜி. ஆரின் அன்பும் வரவேற்பும் கண்டு மெய்சிலித்துபோனார்.தான் வந்த நோக்கம் பிரச்சனை சொல்வதற்கு முன்பே புரட்சித்தலைவர் முந்திக்கொண்டு கூறினார். நான் உங்களுக்கு என்ன செய்யனும்.
அதைமட்டும் கூறுங்கள் வேறு எதையும் கூற வேண்டாம். என்று கூறி வாங்க சாப்பிட்ட பிறகு பேசலாம் அழைத்து சென்று விருந்தோம்பல் உபசரிப்பு செய்து சின்னப்பதேவர் மனம் குளிற வைத்தார
மீண்டும் நீங்கள் எனக்காக ஒரு படம் நடித்துக்கொடுக்க. வேண்டும். அப்பபடம் மூலம் நான் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து பழைய நிலைக்கு வந்துடுவேன்
என்றார் சின்னப்பர்தேவர்..அதற்கு புரட்சித்தலைவர் தந்த பதில்....

இப்போது நான் நாடோடி மன்னன் என்ற படம் எனது சொந்த தயாரிப்பில் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.இது எனது லட்சிய படம் பலர் சாவலுக்கு பதிலாக இப்படம் எடுக்கிறேன்.இப்படம் வெற்றியடைந்தால் எனது முதல் கால்ஷீட் உங்களுக்குத்தான் ஒரு வேளை தோல்வியுற்றா மீண்டும் சினிமாவில் நடிப்பதில்லை என்று உறுதி எடுத்துள்ளோன் அதனால் வேறு வழியில் உங்களுக்கு
உதவி செய்கிறேன். என்றார்.
சின்னப்பதேவர் கூறினார் என் அப்பன் முருகன் அருளால் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவிர்கள் எனக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுப்பீர்கள் இது உறுதி
என வாழ்த்துக்கூறி புறப்பட்டார் சின்னப்பர்தேவர்..

மருதமலை முருகன் ஆலயம் சென்று நாடோடி மன்னன் படம் வெற்றியடைய வேண்டும்..எம்.ஜி. ஆர் கால்ஷீட் எனக்கு கிடைக்க வேண்டும். அவர் வெற்றியடைந்தால் நான் வெற்றி பெற்றதுப்போல் என முருகனிடம் வேண்டி
பூஜை செய்தார்.சாண்டோ.M.M.A. சின்னப்பர் தேவர்....

தொடரும் .....தொடரும் .....தொடரும் ......... Thanks...

orodizli
16th April 2020, 11:32 PM
சாண்டோ M.M.A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 3.

நாடோடி மன்னன் உருவாக பல காரணங்கள் உண்டு.அதற்கான முதல் காரணம். சிலவற்றை அறிவோம்.

சொந்த படம் எடுத்தது. ...குண்டூ மணி தூக்கி கால் முறிவு ஏற்பட்டது.)( துப்பாக்கி சூடு நடந்தது) வெளிநாடு சென்று படபிடிப்பு நடத்தியது) அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்தது) ( அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது) இவையெல்லாம் புரட்சித்தலைவர் வாழ்வில் நடக்கனும் என்பதற்க்காக நடக்க வில்லை ..நடக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் நடந்தது.இதற்கான விளக்கம் நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் புரட்சித்தலைவர் எழுதியுள்ளார். அதன் தெளிவுரை இத்தொடர் முடிந்ததும் நானே எமுதிகிறேன். அந்த வகையில் நாடோடி மன்னன் படமும் சந்தர்ப்பம் சூழ்நிலையில் உருவானது அதற்க்கான காரணம்.

குலேபகாவலி! ! அலிபாபாவும் 40 திருடர்களும்!! சக்கரவர்த்தி திருமகள் மலைக்கள்ளன் பதுமைப்பித்தன் மதுரை வீரன் போன்ற படங்களில் நடிக்கும் போது வாத்தியார் மீது தவறனா பழிகள் சுமத்தப்பட்டது.என்ன வென்றால் காட்சிகள் இப்படி அமைய வேண்டும் பாடல்கள் இப்படித்தான் எழுத வேண்டும் சண்டைக்காட்சியில் இவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று தலையீடுவது. ஒளிப்பதிவு எடிட்ங் ஒலிபரப்பு இப்படி எல்லா விஷத்திலும் எம் ஜி.ஆர் ஆலோசனை தலையீடுகிறார்.இவர் சொந்த படம் எடுத்தால் தெரியும். இவர் தயாரிப்பாளராக இருந்தால் இப்படி செய்வாரா.?? என பலர் பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க வாத்தியார் தந்த பதில். நீங்கள் என்ன படம் எடுக்கிறீங்க நான் படம் எடுத்தால் இதை விட பிரண்டாமா எடுத்துக்காட்டுகிறேன் என சவாலாக எடுத்ததுதான் நாடோடி மன்னன். அது மட்டும் அல்ல

திரையுலகில் நாடோடி மன்னன் படத்துக்கு முன் எந்த நடிகரும் சொந்த படம் எடுத்து வெற்றி அடைந்ததில்லை..அதற்கும் முற்று புள்ளி வைக்கனும்.
அதே நேரத்தில் தனது முமு திறமையும் வெளிக்காட்ட முடியல என்கிற ஏக்கம் வாத்தியாரிடம் இருந்தது ..அதற்கான நேரம் காத்திருந்து எடுக்கப்பட்ட படமே நாடோடி மன்னன்.

அதற்க்காக வாத்தியார் பட்ட கஷ்டங்கள் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் அல்ல இப்படி அரசியல்.? சினிமா.? வாழ்க்கை .இவை மூன்றும் இழக்க நேர்ந்தது..எத்தனையோ சிக்கல்கள் தாண்டி படம் எடுக்கப்பட்டது..வெளியிடுவதற்க்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
(நாடோடி மன்னன் வரலாறு கூற ஒரு யுகம் வேண்டும்) அதே தேதியில் சிவாஜி நடித்த காத்தவராயன் படம் தேதி அறிவிக்கப்பட்டது.

தொடரும் .....தொடரும் ....தொடரும் .......... Thanks...

orodizli
16th April 2020, 11:33 PM
சாண்டோ M. M. A.சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் .பாகம். 4 .

15. 8. 1958. வெளியீடு என்று தேதி அறிவிக்கப்பட்டது. நாடோடி மன்னன் எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர். அதே நேரத்தில் காத்தவராயன் படமும் அதே தேதி அறிவிக்கப்பட்டது.அப்படத்தின் இயக்குனர்
T. R. ராமண்னா கதாநாயகி T. R. ராஜகுமாரி கதாநாயகன் சிவாஜி மூவரும் புரட்சித்தலைவர் காண வந்தனர் ..அண்ணே உங்கள் படம் வெளியீடும் அதே நாளில் எங்க படம் வருகிறது.எங்களுக்காக ஒரு வாரம் தள்ளி வெளியீடுங்கள்.
.எங்கள் படம் வாங்கும் வினியோஸ்தர்கள் உங்கள் படத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.இரண்டும் ஒரே நேரத்தில் வந்தால் எங்கள் படம் வாங்கும் .வினியோஸ்தர்கள் லாபம் குறைவாகத்தான் இருக்கும்.என எண்ணி பின் வாங்குகின்றர்.அதனால் எங்கள் படம் முதலில் வந்தால். வாங்கிய வினியோஸ்தர்கள்.லாபம் அடைவார்கள்.அதை வைத்து நாங்களும் படத்தை விற்று விடுவோம் என்றார் சிவாஜி.T. R. ராமண்னா T.R. ராஜகுமாரியும் தங்களுக்கு உள்ள இக்கட்டானச் சூழல் சொல்லினர் ..வாத்தியார் மனம்தான் பொன்மனம் அல்லவா..
தன்னால் எந்த தயாரிப்பாளரும்.நடிகரும் ஏன் எந்த மனிதரும் நஷ்டம் அடைய விட மாட்டார். அதனால் ஒப்புதல் கொடுத்தார்.

15. 8. 1958. அன்றுமுதல் முன்பதிவு செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை முதல் முதலாக கொண்டு வந்தார்..22. 8. 1958 அன்று படம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். காத்தவராயன் ஒருவாரத்துக்கு முன்பே வெளியிடப்பட்டது..படம்
படுத்தோல்வி யானது.வினியோஸ்தர்கள் லாபம் அடையவில்லையென்றாலும்.பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தார்கள் ( காத்தவராயன் படத்தில் முதலில் வாத்தியார்தான் நடிக்கவேண்டிருந்தது.தனது கொள்கைக்கு எதிரான மாயாஜாலம் காட்சி இருந்ததால் நடிக்க மறுத்தார்))
22. 8. 1958. அன்று நாடோடி மன்னன் வெளிவந்து மக்கள் எதிர்பார்ப்பு ஆவல் விட மிகப்பெரிய வெற்றி மகுடம் சூடியது.

படத்தின் ரிசல்ட் அறிய புரட்சித்தலைவர். R.M .வீரப்பன் கலை இயக்குனர் அங்கமுத்து ஒளிப்பதிவாளர் G.K.ராமு. எடிட்டர் R.பாலசுப்ரமணியம். மற்றும் தனது உதவியாளர் அழைத்து. படம் மக்கள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதை அறிந்து வாருங்கள் என அனுப்பி வைத்தார்.
இராமயணத்தில் ராமருக்கு தூதூவராக சென்ற அனுமன் போல். இந்த ராமச்சந்திரனுக்கு தூதூவராக சென்றார்கள்.நால்வரும் ..நால்வரும்.ஒவ்வொரு திசையாக சென்று படத்தின் ரிசல்ட் தெரிந்துக்கொண்டு வந்து சொன்ன பதில்...
அண்ணே படம் பார்த்து விட்டு யாரும் வீட்டுக்கு செல்லவில்லை. மீண்டும் அடுத்த. காட்சிக்கு நிற்கிறார்கள் என்றதும்.புன்னகை வேந்தன் முகம் புன்னகைத்தது..

தொடரும் ...தொடரும் ....தொடரும் ......... Thanks...

orodizli
16th April 2020, 11:36 PM
சாண்டோ M.M.A.சின்னப்ப தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 5

நாடோடி மன்னன் பல சாதனைகள் படைத்த சரித்திரம் படம்.எல்லோரும் வரலாற்றைத்தான் படமாக்குவார்கள். ஒரு படத்தை வரலாறாக மாற்றிய பெருமை வாத்தியாரால் மட்டுமே முடிந்தது.எல்லோரும் நடந்ததை.? நடக்கபோவதை.?மட்டுமே திரையில் காட்டுவார்கள்.....நடத்திக்காட்டுவேன்.நடத்துவே ன் நடப்பேன்.என்று திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் அதை நிருப்பித்தவர்.புரட்சித்தலைவர் ஒருவரே என்பதற்கு நாடோடி மன்னன் ஒர் உதாரணம் ஆகும்..

ஆனந்தவிகடன் மற்றும் பல பத்திரிகைக்கள் இப்படி விமர்சனம் எமுதினார்கள்.
படத்தை வாங்கிய வினியோஸ்தர்கள் ஒன்றுக்கு பத்து மடங்கு லாபம் பார்த்தனர்..
ஆனால் படம் எடுத்த எம் ஜி. ஆர் க்கு நஷ்டம் ..மக்கள் எதிர்பார்த்தை விட அதிகமா
நிறைவேற்றுப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்து திருப்தி அடையற படமல்ல குறைந்தது பத்து முறை பார்த்தால்தான்.மனம் ஆறுதல் அடைகிறது.தமிழ் திரையுலகத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. இப்படி எல்லா பத்திரிகையும் புரட்சித்தலைவர் புகழுக்கு மகுடம் சூட்டீனர்.படத்தின் வசூலை பற்றி குறிபிடும் போது. படம் வாங்கியவர்கள் படம் பார்த்தவர்கள். ஒரு பைசா முதலீடு போட்டு.1.50.ரூபாய் லாபம் பார்த்தனர்.இந்த காலத்துக்கு ஏற்ற படி சொல்லனும் என்றால்.
100. ரூபாய் முதலீடு போட்டு 10'000. ரூபாய் லாபம் பார்த்துள்ளனர்.இப்படி பல
சாதனை வசூல். பத்திரிகை பாராட்டு பிரமாண்டம் மக்கள் வரவேற்பு எல்லாவற்றிலும்.நாடோடி மன்னன் மகுடம் சூட்டப்பட்டார்.1958.1959.இரண்டு ஆண்டுகளும் நாடோடி மன்னன் வசூல் பற்றியே பேச்சு.
ஆலிவுட் பாலிவுட் கோலிவுட் அகிலம் முமுவதும்.நாடோடி மன்னன் பேச்சுத்தான்.

1959 ம்ஆண்டு வாத்தியார் வாழ்வில் முதல் கண்டம் ஏற்பட்டது.குண்டுமணி தூக்கி கால் முறிவு ஏற்பட்டது.நாடோடி மன்னன் வெற்றியின் கண் திருஷ்டி என்றும் கூறலாம்.( .(அதனால் வாத்தியார்க்கு வந்த சோதனைப்பற்றி வேறு தொடரில் எழுதிகிறேன்).) 1960. ம் ஆண்டு விடுப்பட்ட படங்கள் பாக்தாத் திருடன் அரசிளங்குமரி மன்னாதிமன்னன் திருடாதே ராஜா தேசிங்கு. சபாஷ் மாப்பிள்ளை நல்லவன் வாழ்வான்.போன்ற படங்களில் நடித்து முடித்தார்..

1961. ம் ஆண்டு சாண்டோ சின்னப்பர்தேவர்க்கு கொடுத்த வாக்குபடி தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் நடிக்க தொடங்கினார் நமது தெய்வம் .....

தொடரும் ..........தொடரும் ......தொடரும் ......(மேற்கண்ட பதிவில் நாடோடிமன்னன் படத்தோடு வந்தது சாரங்கதாரா அல்லவா?! என பதிவாளரிடம் விளக்கம் அளிக்க கேட்டுளோம்)... Thanks...

orodizli
16th April 2020, 11:37 PM
சாண்டோ M.M.A.சின்னப்பர் தேவர்வாழ்வில் நமது தெய்வம் பாகம் .6

முதன் முதலாக வாத்தியார் C.I.D. காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம்.
ஒரே மாதத்தில் முமு படபிடிப்பும் நடத்தி முடிக்கப் பட்ட முதல் திரைப்படம் ..
நடிகர் அசோகனுக்கும்.! நடிகவேள் M.R. ராதாவுக்கும். நடிப்பில் பெரும் போட்டி
வைத்து ரசிகர்களிடமே கேட்கப்பட்டு முடிவில் பல. பேர் அசோகன் என்றே
தேர்ந்தெடுத்தனர்..மணப்பந்தல் படத்துக்குப் பின் தாய்சொல்லைத்தட்டாதே அசோகன். என்றே அழைத்தனர்.அந்தளவுக்கு அசோகன் நடிப்பு பேசப்பட்டது..

போயும்.போயும்.மனிதனுக்கு என்ற.பாடலில்.வாத்தியார் போட்ட. மேக்காப் மிகவும்
பிரபலமானது.ஆரம்பத்தில். படப்பிடிப்பில். உள்ளவர்களால்.கூட.கண்டுப்பிடிக்க
முடியவில்லை.அந்தளவுக்கு வாத்தியார் மாறுவேடம் பிரமாதமாக அனைவோரையும் கவர்ந்தது..அசோகனுக்கும்.வாத்தியார்க்கும் நடக்கும்..சண்டைக்காட்சி.அனைவரையும்.பிரமிக்க வைத்தது. படம். பார்த்து விட்டு
வரும் மக்கள் படத்தில் வரும் பாடல்களை பாடிக்கொண்டே வெளிவந்தனர்.
அந்தளவுக்கு. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
படத்தின் வசூல் சொல்ல வேண்டும் என்றால். தாய்க்குப்பின்தாரம்.படம்.அந்த..
காலத்தில்.45.ஆயிரம் ரூபாயில் எடுக்கப்பட்டு.ஐந்து மடங்கு அதிகமாக வசூல் ஆனது..தாய் சொல்லைத்தட்டாதே 75 ஆயிரம் ரூபாயில்.எடுக்கப்பட்டு..பத்து. மடங்கு வசூல் அதிகமானது. அந்த ஆண்டு அதிக வசூல் சாதனைப் படைத்தது..

சின்னப்பதேவர் பட்ட கடன் பிரச்சினை யாவும்.ஓரே.படத்தில் தீர்ந்தது.படத்தில் நடிப்பதற்கு முன் வாத்தியார் சின்னப்பதேவரிடம்.சம்பளம் பேசவும் இல்லை.
வாங்கவும் இல்லை.படம் வசூல் வந்த பிறகு சம்பளம் கொடுங்கள் என்றார். அதேப்போல் விஜாயா வாகினி ஸ்டியோவில்.படப்பிடிப்பு நடத்துவதற்கான. வாடகையும் தர வில்லை. படம் வெற்றிப்பெற்ற பிறகு வாடகை தாருங்கள்.என்றார்
நாகிரெட்டி ..ஆனால் படம் இவ்வளவு பெரிய வெற்றி வசூல் சாதனை புரியும் என்று
சின்னப்பதேவர் எதிர்பார்க்க வில்லை. தாய்சொல்லைத்தட்டாதே படத்திற்க்கான
சம்பளம் அடுத்தப்படம்.தாயைக்காத்த தனயன் படத்திற்க்கான சம்பளமும்.சேர்த்து
கொடுத்தார்.வாத்தியாரிடம்.....அதேப்போல் இரண்டு படத்திற்க்கான ஸ்டியோ வாடகையம் சேர்த்து நாகிரெட்டியிடம் கொடுத்தார்..
வசனகர்த்தர்.ஆருர்தாஸ். வாத்தியார்க்கு முதன் முதலாக வசனம் எழுதியப்படம்.

சாதனைகள். தொடரும் ..........தொடரும் ............தொடரும் ............. Thanks...

orodizli
16th April 2020, 11:38 PM
சாண்டோ M.M.A. சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம். பாகம். 7

வெற்றி .வெற்றி .வெற்றி. என்று வாத்தியார் கூறுவதுப்போல்தான்.முதல் காட்சி.
முதல் ஷாட். எடுக்கப்ட்டது..தாய்சொல்லைத்தட்டாதே.படத்தில் தொடங்கிய இந்த வெற்றி என்ற வசனம் சின்னப்பர் தேவர் எடுத்த அனைத்து படங்களிலும்.இடம
பெற்றது..போட்டோ படம் எடுத்து அதை கழவி உடனே பிரிட்டு போடுவதுப்போல் காட்சி காண்பித்து தொழில் முன்னேற்றத்துக்கு.முன்னோடியாக விளங்கியது இப்படம்தான்..

1961.ஆண்டு வந்த பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும். வசூலில் அனைத்து படங்கனையும் முந்தி NO....1 .வசூல் சாதனை புரிந்தது.தாய்சொல்லைத்தட்டாதே..? இப்படத்திற்கு பிறகு வந்த அனைத்து படங்களில் வாத்தியார் புகழுக்கு புகழ் சேரும்.படி எதாவது ஒரு பாடல் அமைத்திருப்பார்.சின்னப்பர் தேவர்....
படப்பிடிப்பு முமுவதும்..முடிந்து விட்டது.நடிகை சரோஜாதேவி வேறு படத்தில் நடிப்பதற்க்காக பம்பாய் செல்வதற்க்காக புறப்பட்டு.சென்றார்.கண்ணதாசன் எமுதிய ஒரு அற்புதமான பாடல் பதிவில் விடுப்பட்டு போயிருந்தது.அது வாத்தியார் பார்வைக்கு பட உடனே அதை பாடல் காட்சியாக எடுக்க சொன்னார்.
சரோஜாதேவி சென்று விட்டார் இனி எப்படி எடுப்பது என்றார் சின்னப்பர்தேவர்.?
உடனே வாத்தியார் அவர் எப்போது சென்றார்.எத்தனை மணிக்கு பயணம் என்றெல்லாம் எல்லாம் விபரம் கேட்டார். முமுவிபரம்.அறிந்த பிறகு கூறினார்.
இந்நேரம் விமான நிலையம்தான் சென்றிருப்பார்கள்,நான் அழைத்தேன் என்று அழைத்து வாருங்கள் இப்பாடல் காட்சி எடுத்த பிறகு நானே வழி அனுப்பி வைக்கிறேன்.என்றார். வாத்தியார் கூறியதையே.சரோஜாதேவிடம் கூறி அழைத்தார்.விமானம் ஏறும் தருனத்தில் வேறு யார் கூப்பிட்டு இருந்தாலும் சரோஜாதேவி வந்திருக்க மாட்டார்.எம்.ஜி.ஆர்.என்ற ஒரு சொல்லுக்கு மதிப்பிட்டு. உடனே புறப்பட்டு வந்து படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்துக்கொடுத்தார்.
நான்கு மணி நேரத்தில் எடுக்கபட்டு பாட்டு சூப்பர் ஹிட் .படமும் சூப்பர் ஹிட்.

அந்த பாடல் தான். பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாடா. என்ற பாடல் ....
இப்படம் வெற்றி சாண்டோ சின்னப்பர்தேவர்.மனைவி மாரி முத்தம்மாள் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.தனக்கு ஒரு ஆசை இருப்பதாக கூறினார்.?அது என்ன ஆசை..??

தொடரும் ...........தொடரும் ......தொடரும் .......... Thanks...

orodizli
16th April 2020, 11:39 PM
சாண்டோ M.M.A.சின்னப்பர்தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 8

நான் எப்ப எப்படி எங்கே வருவேன் என்று யாருக்கும்.தெரியாது. வரவேண்டிய இடத்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு வந்துடுவேன்...என்று தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் வாத்தியார் கூறும் வசனம் ஆகும்..படத்தில் வாத்தியார் C.I.D. என்பதால் அந்த காட்சிக்கு அமைந்தது.போல் இருக்கும் ...((.இதே வசனத்தை முத்து படத்தில் ரஜினி பேசி தன்னை தானே பெருமைப்படுத்திக்கொள்வார்.)) .படத்தில் ஆருர்தாஸ் வசனம் பிளஸ் பாயின்ட்டா அமைந்தது.காட்சிக்கு காட்சி கருத்து ஆழமிக்க வசனம் அமைந்திருக்கும்.இப்படி ஆருர்தாஸ்? அசோகன்.? M.R.ராதா. சின்னப்பர்தேவர். சரோஜாதேவி.? அனைவருக்கும் ஒரு வெற்றி மகுடம் சூட்டியது.தாய்சொல்லைத்தட்டாதே.......

சின்னப்பர்தேவர் மனைவி மாரிமுத்தம்மாள்.வாத்தியார் போட்டோ பூஜை அறையில் வைத்து தெய்மாக வணங்கினார்.தனது கணவரிடம்.நமக்கு இரண்டு கடவுள் ஒன்று முருகன் மற்றொருவர் அன்ணன் எம். ஜி. ஆர். இந்த இரண்டு பேரும் இனைத்தப்படி ஒரு பாடல் எழுதி தர சொல்லுங்கள் கண்ணதாசனிடம்.என்று தனது விருப்பத்தையும் ஆசையும் கூறினார்.
சின்னப்பர்தேவரும் தனது மனைவியின் விருப்பத்தை கண்ணதாசனிடம் கூறி ஒரு பாடல் எமுதி தருமாறு கேட்டார். கண்ணதாசனும்.அதற்கெற்றப்படி ஒரு பாடல் எமுதி கொடுத்தார்.அந்த பாடல்தான் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற

அன்றொரு நாள் அவனுடைய பெயரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவன் இருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்று வரை அவன் முகத்தை நானும் காணேன் ...அவன்
என்னைத் தேடி வரும் வரைக்கும் விடவும் மாட்டேன்.
இந்தப்பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் முருகரை நினைத்து பாடுகிறாரா அல்லது புரட்சித்தலைவர் நினைத்து பாடப்பட்டதா.என்று கண்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ..இதற்கு முன்னாலே இந்த பாடல் கேட்டீருந்தாலும் இப்போது மீண்டும் அப்பாடல் கேட்டுப்பாருங்கள் புரியும் ..சாண்டோ சின்னப்பர் தேவர் வீட்டு பூஜை அறையில் எப்போதும் இப்பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ...
வாத்தியார் சின்னப்பர் தேவர் வீட்டுக்கு வருவதும்.? வாத்தியார் வீட்டுக்கு சின்னப்பர் தேவர் வருவதும் நாளடைவில் இருந்தாலும். அவரவர் பூஜை அறைக்கு இருவரும் வந்ததில்லை.
ஒரு நாள் சின்னப்பர் தேவர் வீட்டு நிகழ்ச்சிக்கு வாத்தியார் பூஜை அறைக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
தொடரும் ....தொடரும் ......தொடரும் ........ Thanks...

orodizli
16th April 2020, 11:40 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 9

பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராய கல்லூரியில் எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து சொற்பொழிவு உரையாற்றினார்.
இந்திய ஜனாதிபதி லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் எம்ஜிஆர் மன்றம் திறந்து வைத்து பெருமை சேர்த்தவர்
இந்து முஸ்லீம் கிருஸ்துவ அனைத்து மதத்தினரும் எம்ஜிஆர் உடல் நலம் பெற வேண்டி அவரவர் வழியில் வழி பாடு செய்து தனது விசுவாசித்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்
இவையெல்லாம் சராசரி மனிதன் வாழ்வில் நடப்பது சாத்தியம் ஆகாது ஆனால் எம்ஜிஆர் வாழ்வில் நடந்தது ஆச்சரியம் அதிசயம் ஆகும்.அதனால்தான் அவரை தெய்வபிறவியாக கருதுகிறார்கள். அதேப்போல் தான் சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் அவர் தெய்வமாக கருதினர். பூஜை அறையில் இருந்த தனது போட்டோ பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வாத்தியார்.
இது என்ன அநியாயம் சாமி படத்துக்கு நடுவில் என் படத்தை ஏன் வைத்தீர்கள் நான் சராசரி மனிதன் என்னை கடவுளுடன் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொ*ண்டு*ள்ளா*ர்.அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை உன் அண்ணனுக்கு தெரிந்தால் ஏற்றுக்கொள்ளக்மாட்டார்.என்று நான் எவ்வளவோ சொல்லியும் கேட்க வவில்லை இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று என் மனைவி கூறியுள்ளார் நீங்களே கேளுங்கள் என்றார்.

வாத்தியார் சின்னப்பர் தேவர் மனைவி மாரி முத்தம்மாளிடம் என்னம்மா உங்கள் வீட்டுக்காரர் சொல்வது உண்மையா என்றார். ?
அதற்கு அவங்க கூறிய பதில் அண்ணே உங்களுக்கு தெரியாது எங்க வீட்டுக்காரர் இழந்த கெளரவத்தை மீட்டு கொடுத்தது நீங்கள் அதனால் உங்களிடம் கூறுகிறேன். அவர் கடன் கேட்க போய் எத்தனை முறை அவமானத்தால் திரும்பி வந்தார். வேதனைப்பட்டார் .எங்களை ஏராளமான பார்த்தவர்கள் உண்டு இழிவாக நினைத்தவர்கள் உண்டு. ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும் போது அவனுக்கு பெரும் உதவி செய்து அவன் துன்பத்தை போக்கி அவனை உயர்ந்த ஸ்தானத்தில் உயர்த்தி பார்ப்பவன் எவனோ அவனே இறைவனாக கருதப்படுகிறது அந்த வகையில் எங்களைப் பொருத்தவரைக்கும் நீங்கள்தான் எங்களுக்கு கடவுள் அதனால் எங்கள் நம்பிக்கையில் மறுப்பு சொல்லாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார் மாரி முத்தம்மாள் மட்டும் கலங்க வில்லை உடன் இருந்த சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் தன்னை அறியாமல் கலங்கினார்கள்.

இப்படித்தான் வாத்தியார் பல பேர் வியர்ந்து ஆச்சரியம் அடையற போல் உதவி செய்து வள்ளலாகவும் தெய்வமாக திகழ்கிறார்.அவர் கொடைவள்ளத்தனம் நமக்கு தெரிந்தது 100/,25/சதவீதம் தான் மீதி 75/சதவீதம் நாம் அறியவில்லை. அதை அறிந்து இருந்தால் வாத்தியார் தவிர வேறு ஒருவரை நேசிக்க மாட்டார்கள். என்பது தான் உண்மை. .

அடுத்தது தாயைக் காத்த தனயன் சாதனை தொடரும், ....தொடரும். ......தொடரும்... Thanks...

orodizli
16th April 2020, 11:41 PM
சாண்டோ M, M.A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 10

இது மற்றவர்களை மட்டம் தட்டனும் என்பதற்காகவோஉதாசீனம் படுத்தனும் என்பதற்காகவும் எமுத வில்லை ஒர் உதாரணம் காட்டவேண்டும் என்பதற்காக எமுதிகிறேன் தவறாக கருத வேண்டாம்.அப்படி தவறு இருந்தால். மன்னிக்கவும். ....எத்தனையோ தலைவர்கள் பகையே மனதில் வைத்து எதிரணியே,. எதிர்த்து காழ்ப்புணர்ச்சி தனம் காட்டி யுள்ளனர் அதற்கு உதாரணமாக சிலர், ,

தந்தை பெரியார் கண்ணதாசன் கருணாநிதி ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அனைவரும் எதாவது ஒரு கூட்டம் அல்லது மேடை பேச்சு அல்லது பேட்டியில் தனது எதிராளி எதிர்த்து காழ்ப்புணர்ச்சி தனம் காட்டி யுள்ளனர் தரக்குறைவாக பேசியுள்ளார்கள்.
மகாகவி பாரதியார் என் எஸ் கிருஷ்ணன் மக்கள் திலகம் எம் ஜி ஆர் இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் யாரையும் எப்பவும் தரக்குறைவாக பேசியதாக இல்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை.
மகாகவி பாரதியார் வெள்ளையனை எதிராக குரல் கொடுத்தார் தனது புரட்சி கவிதை மூலம். ஆனால் ஒரு முறை கூட தனது காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை.
என் எஸ் கிருஷ்ணன் .தன்னை தர குறைவாக எமுதி கொலை வழக்கில் சிக்க வைத்த லட்சுமி காந்தன் பற்றி எங்கும் எப்போதும் தர குறைவாக பேசியது இல்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை
மக்கள் திலகம் எம் ஜி ஆர் சினிமாவில் M.R.ராதா சிவாஜி அரசியலில் கண்ணதாசன் கருணாநிதி தன்னைப் பற்றி தர குறைவாக பேசினாலும் அவர்கள் மட்டும் அல்ல வேறு யாரையும் எங்கும் எப்போமுதும் தர குறைவாக பேசியதில்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை. பகையே மனதில் வைத்து பழிவாங்கும் குணமும் அவரிடம் இருந்தது இல்லை,
வாத்தியார் பற்றி நன்றாக அறிந்தவர்கள் புரிந்தவர்கள் அவரை தெய்வபிறவியாக கருதுகிறார்கள், தெரியாதவர்கள் புரியாதாவர்கள்தான் வதந்திகள் நம்பி தவறான கருத்துக்கள் கூறுகிறார்கள், தாய்சொல்லைத்தட்டாதே படத்தின் வெற்றி மட்டும் அவர் குணம் அறிய வில்லை. ஏற்கனவே எடுத்த தோல்வி படங்கள் மூலம் தான் கண்ட அனுபவத்தால் வாத்தியார் குணம் அறிந்து வேதனை பட்ட காலம் உண்டு, 7.11.1961 அன்று படம் வெளிவந்து வெற்றி மாலை சூடியது
13.4.1962.அன்று தாயைக் காத்த தனயன் தமிழர் திருநாள் வெளிவந்தது சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் மற்றொரு மறுமலர்ச்சி மகிழ்ச்சி ஏற்பட்டது அது என்ன? ??
தொடரும். ....தொடரும். ...தொடரும். ..... Thanks...

orodizli
17th April 2020, 07:58 AM
https://youtu.be/rtpO9JvXbmA......... Thanks.........

orodizli
17th April 2020, 08:05 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 11

M R. ராதா இரு வேடங்களில் நடித்த முதல் படம்
M R. ராதா மகன் M R. வாசு முதல் படம்
தேவர் பிலிம்ஸ் ஆர்ட்ஸ் முத்திரை பதித்த முதல் படம்
சின்னப்பர் தேவர் தம்பி M A மாரியப்பன் எடிட்டிங் செய்த முதல் படம்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட முதல் படம்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் வேட்டைக்காரன் வேடத்தில் நடித்த முதல் படம்
இவையெல்லாம் தாயைக் காத்த தனயன் சாதனைகள் எண்ணிக்கை

படத்தில் சிறப்பான விஷயங்கள். ..
சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் மோதும் சிலம்பாட்டம் சண்டைக்காட்சிகள்
வாத்தியார் புலியுடன் மோதும் சண்டைக்காட்சி
M R ராதா டீக்கடை பெஞ்ச் அரசியல் தெறிக்கும் நகைச்சுவை காட்சிகள்
சூப்பர் ஹிட் மெகா ஹிட் பாடல் காட்சிகள் இதுதான் சிறந்த பாடல் என்று சொல்லமுடியாத அளவுக்குப் அனைத்து பாடல்களும் தேனமுது
தாய்சொல்லைத்தட்டாதே அசோகன் என்றால் தாயைக் காத்த தனயன் M R. ராதா
நடிப்பு கொடிக்கட்டி பறந்தது
தொடர்ந்து 21 வாரம் ஒடி மாபெரும் வெற்றி வாகை சூடியது அந்த ஆண்டு அதிக
வசூல் சாதனையை படைத்தது.
திருச்சி பேலஸ் தியேட்டரில் 146 நாட்கள் ஒடிக்கொண்டிருக்கும் போது குடும்பத்தலைவன் வந்ததால் இப்படம் எடுத்து விட்டனர்.
சென்னை பிளாசா பாரத் மகாலட்சுமி மூன்று தியேட்டரிலும் 120 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது
வெற்றி. வெற்றி. ...வெற்றி என்று மூன்று முறை சொல்லுவதைப்போல் காட்சி எடுக்கப்பட்டது. மூன்று முறை எடுக்கப்பட்டது. .வாத்தியார் சின்னப்பர் தேவரிடம் கேட்டார் ஏன் ஒரு முறை எடுத்தால் போதாது
அதற்கு சின்னப்பர் தேவர் தந்த விளக்கம் ஆண்டவேன நான் உங்களை வைத்து மூன்றாவது வெற்றி பெறுகிறேன். அதாவது
தாய்க்கு பின் தாரம் தாய்சொல்லைத்தட்டாதே தாயைக் காத்த தனயன் என்று மூன்று படங்களை குறிப்பிட்டார்.
குறைந்த செலவில் குறைந்த நாட்களில் எடுக்க ப்பட்டு அதிக வசூல் அதிக நாட்கள்
ஓடியது கண்டு கோலிவூட் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது
சின்னப்பர் தேவர் பெருமை மேலும் கொடிக்கட்டி பறந்தது. .

அடுத்தது குடும்பத்தலைவன் சாதனை தொடரும். ...தொடரும். ...தொடரும். .......... Thanks..........

orodizli
17th April 2020, 08:07 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 12

1 பேரறிஞர் அண்ணா 2 நாவலர் நெடுஞ்செழியன் 3 மு கருணாநிதி
4 V N ஜானகி 5 J , ஜெயலலிதா 6 O பன்னீர்செல்வம் 7 எடப்பாடி பழனி சாமி
தமிழகத்தில் ஏழு முதல்வர்களை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவர்
எம் ஜி ஆரை சேரும். .

1 சரோஜாதேவி 2 ஜெயலலிதா 3 லதா 4 மஞ்சுளா 5 ராஜ ஸ்ரீ 6 ரத்னா 7 லஷ்மி ஏழு பேரும் முன்னணி கதாநாயகியாக உயர்வுக்கு காரணம் புரட்சிநடிகர் எம் ஜி ஆர்

1 M R ராதா 2 , M N நம்பியார் 3 S, A அசோகன் 4, R. S , மனோகர், 5 P S வீரப்பா
6, T S, பாலையா , 7. O. A. K, தேவர் இந்த ஏழு பேரும் வில்லனாக பிரபலமானது
வாத்தியார் படத்தில்தான்

1, சரவணா பிலிம்ஸ் 2, A V, M , புரடக்ஷன் 3 ஜெயந்தி பிலிம்ஸ் 4 வீனஸ் பிக்சர்ஸ்
5, மேகலா பிக்சர்ஸ் 6. விஜயா வாகினி, 7, தேவர் பிலிம்ஸ்
இவர்கள் எல்லோரும் வாத்தியார் வைத்துதான் முதல் முதலாக கலர் படம் எடுத்து வெற்றி வாகை சூடினார்கள்
இப்படி எத்தனையோ மனிதர்கள் வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் மூல காரணமாகவும் முதல் காரணமாகவும் விளங்கியவர் நமது தெய்வம் பொன்மனச்செம்மல்.
ஒரு உதாரணத்துக்கு மட்டும் தான் மேலே உள்ளது குறிப்பிட்டேன் ஆனால் வாத்தியாரால் உதவி பெற்றவர்கள் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம் கணக்கில் அடங்காது எண்ணிக்கை இல்லாதது உண்டு.
அந்த வகையில் M R ராதா மகன் M R வாசு அறிமுகம் ஆனது எப்படி என்பதை முதலில் அறிவோம்.

ரத்தகண்ணீகர் படத்தில் மூலம்தான் M R. ராதா பிரபலம் ஆனார். அந்த படத்திலே தனது மகனை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருந்தது ஆனால் தனது படத்தில் அறிமுகமாகி உயர்த்த நிலை வருவதை விட வேறு ஒருவர் படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே M R. ராதாவின் ஆசை அதற்கான தருணம் காத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தாயைக் காத்த தனயன் படத்தில் இரட்டை வேடம் கொடுக்கப்பட்டது. அதிலே ஒரு வேடம் எனக்கும் மற்றொரு வேடத்தில் தனது மகனை நடிக்க வைக்க வாய்ப்பு அமைய சின்னப்பர் தேவரிடம் கேட்டார். .அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் குறுகிய காலத்தில் படம் எடுப்பதால் புது முகம் அறிமுகம் படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை இருந்தாலும் எம் ஜி ஆரிடம் ஒரு வார்த்தை கூறி விடுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.
வசனகர்த்தா ஆரூர்தாஸ் மூலம் எம்ஜிஆரிடம் இச்செய்தி எட்டியது.???
தொடரும். ...தொடரும். ...தொடரும். ......... Thanks...

orodizli
17th April 2020, 08:08 AM
சாண்டோ M M. A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 13

கவிஞர் வாலி 2 கவிஞர் முத்துலிங்கம் 3 கவிஞர் நா காமராசன் 4 புலவர் புலமைப்பித்தன் 5 கவிஞர் மருதகாசி 6 கவிஞர் பஞ்சு அருணாசலம் 7 கவிஞர் அவினாசிமணி இவர்கள் எல்லாம் புரட்சித்தலைவர் மூலம் அறிமுகமான ஜாம்பவான்கள்

1 K , பாலச்சந்தர், 2, K, மகேந்திரன் 3, பா நீலகண்டன் 4 A, ஜகன்நாதன் 5 R. M, வீரப்பன் 6 கிருஷ்ணன் பஞ்சு 7, ஜம்பு வாத்தியார் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்கள் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்

T, M, செளந்தரராஜன் , 2, S, P. பாலசுப்பிரமணியம் , 3. T. K, கலா, 4. K J. யேசுதாஸ்
5, L R. ஈஸ்வரி , 6, வாணி ஜெயராம் , 7. ஜிக்கி புரட்சித்தலைவர் படத்தில் பாடிய பிறகுதான் பிரபல பின்னணிப் பாடகர்கள் என்ற நிலை அடைந்தனர்
மேலே குறிப்பிட்ட அனைவரும் வாத்தியாரால் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்கள்
இப்படி எத்தனையோ துறையில் உள்ளவர்கள் புரட்சித்தலைவர் மூலம் புகழ் அடைந்தனர் வாழ்வு பெற்றனர், இது குறைவுதான் கணக்கில் அடங்காது எண்ணிக்கை எத்தனையோ பேர் உண்டு, அந்த வகையில் M. R. வாசும் புரட்சித்தலைவர் மூலம் தாயைக் காத்த தனயன் படத்தில் அறிமுகமானார். வசனகர்த்தா ஆரூர்தாஸ் வாத்தியாரிடம் M. R. ராதா அண்ணனுக்கு இரட்டை வேடம் கொடுக்கப்பட்டது என்றும் அதில் ஒரு வேடம் தனது மகனுக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார் உடனே வாத்தியார் கூறினார்

ராதா அண்ணன் இரட்டை வேடம் அவரே நடிக்கட்டும் அதுதான் அவர் நடிப்புக்கு முத்திரை பதிக்கும், தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் காமெடி நடிகர் இல்லை அது க்ரைம் த்ரில்லர் படம் என்பதால் எடுப்பட்டது. இது குடும்பம் படம் அதனால் இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் முக்கியத்துவம் தரனும் அவர் மகனை நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யுங்கள் என்றார்,
வாத்தியாரின் சமயோகிதனமான அறிவும் திறமையும் கண்டு படப்பிடிப்பில் இருந்த M. R. ராதா முதல் ஆரூர்தாஸ் சின்னப்பர் தேவர் வரை அசந்து போனார்கள்
இது தான் எம் ஜி ஆர் சினிமா அனுபவம் இந்த ஐடியா யார் கொடுப்பார்கள் என்று வியந்து பாராட்டினார்கள். .
அதே நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த M. R ராதா விடம் அவரது மகன் M R. வாசு தனது தந்தையிடம் கேட்ட கேள்வி .?? அப்பா என்னை ஏன் எம் ஜி ஆர் படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் நீங்கள் நினைத்தால் யாரிடம் கூறினாலும் என்னை நடிக்க அழைப்பார்கள் ஏன் உங்கள் படத்தில் கூட என்னை நடிக்க வைக்க முடியும் குறிபிட்டு எம் ஜி ஆர் படத்தில் நடிக்க வைக்க தருணம் காத்திருக்க காரணம் என்று கேட்டார். ?
அதற்கு M. R. ராதா கூறிய பதில். ...தொடரும். ...தொடரும். .தொடரும். ?...... Thanks.........

orodizli
17th April 2020, 08:09 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 14

போதனையில் புத்தனாக இருந்து போதித்தார்

அகிம்சையில் மகாத்மாவும் இருந்து கடைப்பிடித்தார்

கொள்கையில் அண்ணா வழியில் வாழ்ந்தார்

தமிழ் நேசிப்பதில் மகாகவி பாரதியார் வழியில் வாழ்ந்தவர் நமது தெய்வம் M G R
இப்படி எத்தனையோ தலைவர்கள் கலவையில் கலந்த கலவைதான் M G R
அதேப்போல் எத்தனையோ திறமைகளை கொண்டு தொழில் வித்தைகளையும் கற்ற சகலகலா வல்லவர் பொன்மனச்செம்மல் சினிமாவில் அவருக்கு தெரியாத கலைகள் எதுவும் இல்லை இது நன்கு அறிவார் M R ராதா அவர்கள் ஆனால் அதைப் ஒரு போதும் வெளிபடையாக யாரிடமும் கூறியது இல்லை ஏன் என்றால் அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலை அமைந்தது இல்லை இன்று தனது மகன் கேட்கும் போது சொல்லவேண்டிய சூழ்நிலை உருவானது.
உன்னை எம் ஜி ஆர் படத்தில் அறிமுகம் செய்ய பல காரணங்கள் உண்டு அதில் சில முக்கியமான விஷயம் மட்டும் கூறுகிறேன் , ,

எம் ஜி ஆர் ஒர் அனுபவமிக்க நடிகர் அவருடன் நடித்தால் பதற்றம் பயம் இல்லாமல் மற்ற படங்களில் நடிக்க சுலபமாக இருக்கும். முதல் படத்திலேயே அவர் படத்தில் நடித்த பெருமை அடைவாய் மற்ற படங்கள் நடிக்க வாய்ப்பு சுலபமாக கிடைக்கும்
சம்பளம் அதிகமாக கிடைக்கும் அதனால் மற்ற படங்களிலும் இங்கு கிடைத்த சம்பளமே கிடைக்கும். . சினிமாவில் நடிக்கும் எவருக்கும் முதல் படம் வெற்றி படமாக அமைந்து விட்டால் அடுத்த படம் நடிக்கும் வாய்ப்பு தானாகவே அமைந்துவிடும். இததான் சினிமா பார்முலா ஆகும் ஆனால் எம்ஜிஆர் படத்தை பொருத்தவரைக்கும் அந்த பார்முலா கிடையாது. . வெற்றி என்பது அவரை வைத்துத்தான் உள்ளது . அவரை குறை கூறுபவர்கள் குற்றம் சாட்டியவர்கள் எதிரியாக நினைப்பவர்கள் கூட அவரை வைத்துத்தான் புகழ் அடைவது வருமானம் பார்ப்பார்கள் அவரால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அதிகம் உண்டு ஏன் நீயே மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு குறைவுதான் அதனால் தான் முதல் படம் எம் ஜி ஆர் படமாக இருக்கனும் என்பதால் காத்திருந்தேன் அதற்கான தருணம் இப்போமுது ஏற்பட்டுள்ளது என்றார்

இக்குறிப்பு M R வாசு அவர்கள் மகன் நடிகர் வாசுவிக்ரம் பொதிகை தொலைக்காட்சியில் தனது சினிமா அனுபவம் கூறும் போது தனது அறிமுகம் தனது தந்தை அறிமுகம் இப்படி கூறியுள்ளார் தினமலர் வாசகர் மலரில் இச்செய்தி வந்துள்ளது
அடுத்து குடும்பத்தலைவன் பற்றி தகவல் தொடரும் தொடரும் தொடரும். ............ Thanks
.........

orodizli
17th April 2020, 08:11 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 15

இந்தியா சுதந்திரம் வாங்கி 15 , வது ஆண்டு 15-08- 1962, அன்று "குடும்பத்தலைவன் " படம் வெளிவந்தது. .
பொதுவா வாத்தியார் படத்தில்தான் போட்டிகள் பல இடம்பெற்றிருக்கும். உதாரணமாக சில படங்கள் குறிப்பிடுகிறேன்.
குலேபகாவலி அறிவு போட்டி. . வாள்சண்டை போட்டி புலி அடக்குவது
சக்கரவர்த்தி திருமகள். ..பாட்டு போட்டி. நடன போட்டி மல்யுத்தம் போட்டி
ராஜா தேசிங்கு. ...குதிரை அடக்குவது
மன்னாதி மன்னன். ..காட்டெருமை அடக்குவது நடனம் போட்டி
விக்ரமாதித்தன். .நடனம். அறிவு. வாள்சண்டை. பல போட்டிகள்
கலையரசி. ..பல போட்டிகள்
தாயைக் காத்த தனயன். ..பெரிய இடத்துப்பெண். ..சிலம்பாட்டம் போட்டி
காஞ்சித்தலைவன். ...மல்யுத்தம் போட்டி
பணக்காரக்குடும்பம். ..சடுகுடு போட்டி
தாயின் மடியில். .குதிரை ரேஸ். .போட்டி
அன்பே வா. ..மல்யுத்தம். .போட்டி
பறக்கும் பாவை. .சர்க்கஸ் போட்டி
படகோட்டி. ...படகு போட்டி
காவல் காரன். ...பாக்ஸின் போட்டி
அடிமைப்பெண். .. ஈட்டி சண்டை. போட்டி
நம்நாடு. ..தேர்தல் போட்டி
பணம் படைத்தவன். .. ஒட்டபந்தயம். ..குண்டு எறிதல். ..நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் பல போட்டிகள்
ரிக்ஷாக்காரன். ..ரிக்ஷா போட்டி
குமரிக்கோட்டம். ...மாறுவேடம் போட்டி. .
நல்ல நேரம். ..யானை போட்டி. ...
பட்டிக்காட்டு பொன்னையா. ...பாக்ஸின் மல்யுத்தம் போட்டி
நினைத்ததை முடிப்பவன். ...நடனம் வாள் சண்டை . ஆள்மாறாட்டம் போட்டி
பல்லாண்டு வாழ்க. ...முதலை அடக்குவது
நீதிக்கு தலை வணங்கு. ....பைக் ரேஸ் போட்டி
மீணவநன்பன். ...வாள் சண்டை போட்டி
மதுரையைமீட்டசுந்தரபாண்டியன். ..பாட்டு போட்டி

இப்படி அதிக படங்களில் போட்டி வைத்து சினிமா உலகில் சாதனை படைத்தார்
அந்த வகையில் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற ரேக்ளா பந்தயம்
சடுகுடு விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
தந்தையே மகன் திருத்தும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
மாறாதய்யா மாறாது பாடல் காட்சி கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரை சுண்டி இழுக்கும். ...
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்ற பாடல் வாத்தியார் முருகர் கடவுள் இனைத்து எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இப்படி குடும்பத்தலைவன் படத்தின் சிறப்பு சொல்லிக்கொண்டே போகலாம் இதைவிட இன்னொரு சிறப்பு இப்படத்தில் உண்டு அது என்ன. ?.?..?தொடரும். ....தொட.ரும் ..தொடரும்......... Thanks.........

orodizli
17th April 2020, 08:12 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 16

வாத்தியார் படத்தை பொருத்தவரைக்கும் தனது நடிப்பை விட படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுப்பார் அதற்கு காரணம்?
தன்னுடைய நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார்கள் கதாநாயகன் பொருத்தவரைக்கும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல படங்கள் உண்டு அதற்கான வாய்ப்பும் அமையும் ஆனால் மற்ற நடிகர்கள் அப்படியல்ல அவர்கள் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். கதாபாத்திரம் அமைந்திருக்க வேண்டும் அப்போது தான் படவாய்ப்புகள் கிடைக்கும் ரசிகர்களால் பேசப்படுவார்கள். இதை நன்கு உணர்ந்து அனுபவம் கண்டவர் நம்ம வாத்தியார் தனது ஆரம்ப காலம் சினிமா அனுபவத்தை நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் எழுதியுள்ளார். அதனால்தான் அவர் நடித்த பல படங்களில் மற்ற நடிகர்களுக்கு கனமான கதாபாத்திரம் கொடுத்து அவர்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் அதற்கு உதாரணமாக பல படங்கள் உண்டு அதில் சில முக்கியமான படங்கள் மற்றும் கூறுகிறேன்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்....மகாதேவி. .... P S வீரப்பா
படகோட்டி. ..எங்க வீட்டு பிள்ளை. ....M N நம்பியார்
தெய்வத்தாய்....குடியிந்தக்கோயில். ...பன்டரிபாய்
தாய்சொல்லைத்தட்டாதே. ..பணக்காரக்குடும்பம்....S A அசோகன்
அரசக்கட்டளை ஒளிவிளக்கு. ......R S மனோகர்
சந்திரோதயம். ...குமரிக்கோட்டம். ....ஜெயலலிதா
திருடாதே. ... அன்பே வா. ..சரோஜாதேவி
உரிமைக்குரல். ....லதா
தாயைக் காத்த தனயன். ..தாயின் மடியில். ....M R ராதா
நீதிக்குப்பின்பாசம் நம்நாடு. ....ரங்காராவ்
இப்படி பல படங்கள் நீண்டுக்கொண்டே போகும் மற்ற நடிகர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களால் பேச வைத்தார் ஒவ்வொரு பபடத்திலும் ஒவ்வொருக்கும் நடிக்கும் வாய்ப்பு அமைத்து கொடுத்தார் இது எந்த நடிகர்களிடம் காணத ஒரு அதிசயம் ஆகும்
நடிகர் அசோகன் பல படங்களில் பல நடிகர்களையும் நடிப்பில் முந்திக்கொண்டு வருவார் அதற்கு பல படங்கள் உதாரணமாக கூறலாம் அவை பின் வரும் தகவலில் பதிவு வரும் குடும்பத்தலைவன் படத்தில் வாத்தியாருடன் நடிப்பில் போட்டி போடுவார் அடுத்த பதிவில் காண்போம்
தொடரும். ...தொடரும். ....தொடரும். ........ Thanks...

orodizli
17th April 2020, 08:14 AM
சாண்டோ M,M, A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 17

குடும்பத்தலைவன் படத்தில் வாத்தியாருடன் அசோகனுக்கு கடுமையான நடிப்பு போட்டி அமைந்திருக்கும் . . வாத்தியார் தனது இயற்கை நடிப்பிலும் யதார்த்தம் நடிப்பும் வெளிப்படுத்திருப்பார் அசோகன் சிறிது அதிகமான நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் தாய்சொல்லைத்தட்டாதே, பணக்காரக்குடும்பம், , சந்திரோதயம் தெய்வத்தாய் இவையெல்லாம் அசோகன் நடிப்புக்கு தீனி போட்டவை , , குடும்பத்தலைவன் தாய்க்கு தலைமகன், பெற்றாதால்தான் பிள்ளையா, கொடுத்துத்வைத்தவள் காவல்காரன் போன்ற படங்களில் வாத்தியாரின் நடிப்புக்கு அசோகனால் ஈடுக்கொடுக்க முடியவில்லை வாத்தியார் நடிப்பே அதிகமாக பேசப்பட்டது . சின்னப்பர் தேவரின் நான்காவது வெற்றி படமாக குடும்பத்தலைவன் அமைந்தது,
1956 தாய்க்கு பின் தாரம், . 1961 தாய்சொல்லைத்தட்டாதே. . 1962 தாயைக் காத்த தனயன் . குடும்பத்தலைவன் தொடர்ந்து 22. 2. 1963 தருமம் தலைக்காக்கும் மற்றொரு வெற்றி படமாக அமைந்தது. இனி இப்படத்தின் வரலாறு கவனிப்போம்.
தருமம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் இப்பாடல் படத்திற்காக எமுதிய பாடல் அல்ல, இப்பாடல் தகுதியுள்ள ஒருவருக்குத்தான் அமையனும்
என்பது கண்ணதாசனின் விருப்பம். . இப்பாடலை கேட்டு பல இயக்குநர்கள் படையெடுத்தனர் கண்ணதாசனின் வீட்டுக்கு இன்னும் குறிப்பாக சொல்லனும் என்றால் ஸ்ரீதர், . B R பந்தலு K S, கோபாலகிருஷ்ணன் பீம்சிங் திருலோகச்சந்தர்
போன்றோர் கண்ணதாசன் இவர்களுக்கு சொன்ன பதில் எம்ஜிஆர் வைத்து யார் படம் எடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இப்பாடல் என்றார் அவருக்கு மட்டுமே இப்பாடல் பொருந்தும் என்றே பதில் தந்தார். .
இச்செய்தி சின்னப்பர் தேவர் கேள்விப்பட்டார் உடனே கண்ணதாசன் வீட்டுக்கு சென்று அப்பாடலை கேட்டார். அதற்கு கண்ணதாசன் என்ன படம் என்ன கதை என்று கேட்டார். உடனே சின்னப்பர் தேவர் பாடல் வரிகள் சொல்லுங்கள் படத்தின் பெயர் கூறுகிறேன் என்றார். . பாடல்வரினை கண்ணதாசன் கூறியதும் அதுதான் படத்தின் பெயர் என்றார் சின்னப்பர் தேவர்
என்ன கதை என்ன படம் என்று எதுவும் சொல்லாமல் நான் கூறியதை வைத்து படத்தின் பெயர் கூறுகிறீர்கள் என்றார் அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார்
நான் ஆண்டவனை வைத்து படம் எடுக்கிறேன் அவருக்கு கதை முக்கியம் இல்ல
அவருக்கு பொருந்தர மாதிரி பாடல் அமைந்தால் கதை தானாக அமைந்திடும்
ஆண்டவன் ரசிகர்கள் பொருத்தவரைக்கும் சண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் அமைந்துவிட்டால் அவர்கள் திருப்தியடைவார்கள் என்பதால் நான் கதை முடிவு செய்யவில்லை என்றார். சின்னப்பர் தேவர் புரட்சித்தலைவர் மீது வைத்துள்ள அபார நம்பிக்கை கண்டு கண்ணதாசன் வியர்ந்து போனார் அன்று முதல் சின்னப்பர் தேவர் எப்போமுது வந்தாலும் அவர்க்கு ஏற்றபடி பாடல் எமுதிக்கொடுத்திடுவார் இன்னும் முடியலங்க
தொடரும். ...தொடரும். ....தொடரும். .......... Thanks...

orodizli
17th April 2020, 08:17 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 18

நின்றால் பொதுகூட்டம் ...
நடந்தால் ஊர்வலம் ...
பேசினால் மாநாடு... இந்த வரலாறு உருவானது வாத்தியார் மூலம் தான் ... அதேப்போல் அவரின் ஒவ்வொரு தகவலும் வரலாறாக உருவாக்கப்பட்டது ...
இன்று காணும் வரலாறு "தர்மம் தலைக்காக்கும்"
1962 ம் ஆண்டு தமிழக சட்டசபையில் பொதுத்தேர்தல் நடந்தது. .கவியரசு கண்ணதாசன் ஈ வி கே, சம்பத் இனைந்து தேசிய தமிழ் ஜனநாயக கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு தோற்றது. . இராமநாதபுரம் மாவட்டம் திருக்கோஷ்டியூர் (தற்போது திருப்பத்தூர் என்று மாற்றப்பட்டது ) என்ற தொகுதியில் கண்ணதாசன் போட்டியிட்டு தோற்றார் தனது தோல்வியினால் மனம் உடைந்த நிலையில் இருந்தார் இன்னும் சொல்லனும் என்றால் மக்கள் மீது கோபம் இருந்தது. அதே நேரத்தில் அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வியுற்றார்.
இருவரும் தனது சொந்த ஊரிலே தோற்றனர். .....

பலே பாண்டியா படத்தின் பாடலுக்காக படத்தின் இயக்குனர் பி ஆர் பந்தலு கவியரசு கண்ணதாசன் தேடி வந்தார் மக்களிடம் தனது கோபத்தை எப்படி காட்டுவது என்று காத்திருந்த கண்ணதாசனுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது
தான் எமுதிய ஒரு பாடல் பி ஆர் பந்துலுவிடம் கொடுத்தார். அந்த பாடல் பலே பாண்டியா படத்தில் இணைக்கப்பட்டது
யாரைக் எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல என்ற பாடல்தான் அது
இந்த பாடலை நன்றாக கவனித்தால் தெரியும் தனது தோல்விக்கு காரணம் என்னவென்று குறிப்பிட்டுள்ளார்,
அதே நேரத்தில் அறிஞர் அண்ணா தோல்வி கண்டு அதிர்ச்சி அடைந்தார் வாத்தியார் அண்ணாவை விட வாத்தியார்தான் அதிக வேதனை அடைந்தார். .
அண்ணாவின் மனதுக்கு ஆறுதல் கூறுவது போல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கூறினார்
தருமம் தலைக்காக்கும் படத்தில் வரும் ஒரு பாடலில் இரண்டு வரிகள் இனைத்து அண்ணாவுக்கு ஆறுதல் கூறுவது போல் எமுதிக்கொடுத்தார்.அந்த பாடல்தான்
மூடு பனி குளிருடுத்து முல்லை மலர் தேனடுத்து என்ற பாடலில் வரும் ஒரு வரி தேர்தலிலே தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு
காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பது இல்லை
என்ற வரி அண்ணாவை வாத்தியார் சமாதானம் கூறுவது போல் அமைந்திருக்கும்
தனக்காக தான் எம் ஜி ஆர் இந்த வரி இனைத்து உள்ளார் என்று அண்ணா தன்னுடன் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். .
1964 ம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணா வாத்தியார் பற்றி இப்படி கூறியுள்ளார்.
பணம் இருப்பவர்கள் எல்லாரும் தர்மம் செய்யலாம் அதன் பெயர் தர்மம் அல்ல
யாருக்கு தர்மம் செய்தால் அதன் பயன் அடைவார்கள் என்பதை அறிந்து தர்மம் செய்யவேண்டும் அதுதான் உண்மையான தர்மம் தலைக்காக்கும். அதை எம் ஜி ஆர் ஒருவர் தான் செய்துக்கொண்டிருக்கிறார் .அவர் செய்யும் தர்மம் அவரை என்றைக்கும் காப்பாற்றும். .
தர்மம் தலைக்காக்கும் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சின்னப்பர் தேவர்க்கு அந்த வார்த்தை பொருந்தவில்லை. .பாடல் எழுதியவர் கவியரசு கண்ணதாசனுக்கு பொருந்தவில்லை. .பாடல் பாடிய பின்னனி பாடகர் T M சௌந்தராஜன்க்கு மொருந்தவில்லை படத்தில் நடித்த கதாநாயகன் எம்ஜிஆர் ஒருவருக்குத்தான் அமைந்தது பொருந்தியது இது எல்லாருக்கும் அமையாது பொருந்தாது
அது உண்மையான தர்மம் அதனால்தான் அமைந்தது என்று புகழாரம் சூட்டினார்

தொடரும். ...தொடரும். ..தொடரும். ....... Thanks...

orodizli
17th April 2020, 08:19 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 19

தாய்க்கு பின் தாரம் தாய்சொல்லைத்தட்டாதே தாயைக் காத்த தனயன் திருடாதே நல்லவன் வாழ்வான் தர்மம் தலைக்காக்கும் நீதிக்குப்பின்பாசம்
பெற்றால் தான் பிள்ளையா நீதிக்கு தலை வணங்கு பல்லாண்டு வாழ்க
இன்று போல் என்றும் வாழ்க நல்லதை நாடு கேட்கும் படத்தின் பெயர் கூட பிறருக்கு புத்தி மதி கூறுவது போல் அமைந்திருக்கும் அதுதான் புரட்சித்தலைவரின் மிக பெரிய சமூக சிந்தனை ஆகும் அதன் படி வாழ்ந்து காட்டியவர் .. எல்லோரும் அனுபவத்தை கூறுவார்கள் அறிவுரை சொல்வார்கள்
ஆனால் அதன் படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் அதுதான் மற்றவர்களுக்கும் வாத்தியார்க்கு உள்ள வேற்றுமை ஆகும். .தர்மம் தலைக்காக்கும் என்று படத்தின் பெயர் வைத்தது பெரிய விஷயம் இல்லை. அது தான் வாத்தியார் புகழுக்கு இன்று வரை புகழ் சேர்த்துக்கொண்டிருக்கிறது.
படத்தில் ஏழு பாடல்கள் சூப்பர் ஹிட் நான்கு சண்டைக்காட்சிகள் மிரள வைக்கும்
திகில் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படம். இப்படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய மான பாடல்கள் இரண்டு ஒன்று தர்மம் தலைக்காக்கும் மற்றொன்று
ஒருவன் மனது ஒன்பதடா என்ற பாடல் இப்பாடலில் வரும் கருத்துக்கள் இனி எத்தனை தலைமுறை வந்தாலும் அவர்களுக்கு பொருந்தும். .
தர்மம் தலைக்காக்கும் என்ற பாடல் வாத்தியார் புகழுக்கு புகழ் சேர்த்தது...
ஒருவன் மனது ஒன்பதடா பாடல் பணக்கார வர்க்கத்தையும் படித்தவர்கள் வறட்டு கர்வத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார். .அதனாலே பாடலில் வரும் கடைசி இரண்டு வரிகள் நீக்கப்பட்டு இருக்கும். ..அப்படி நீக்கப்பட்ட வரிகள் இதோ
பட்டம் பதவி பெற்றவர்கள் மட்டும் பண்புயோடையர் ஆவாரா
பள்ளி படிப்பு இல்லாத மனிதர்கள் பகுத்தறிவு யின்றி போவாரா
இப்பாடல் வீடியோ ஆடியோ எதிலே கேட்டாலும் இவ்வரிகள் நீக்கப்பட்டு இருக்கும்
பொதுவாக புரட்சித்தலைவர் பாடல் என்றாலே பாமரமக்களுக்கு சாதகமாகவும்
பணக்காரர்களுக்கு மாதகமாவே அமையும். அவருடைய ஒவ்வொரு பாடலின் கருத்துக்கள் கேட்டால் நான் சொல்வது உண்மையா இல்லையா என்பது புரியும்
இப்படி புரட்சித்தலைவர் படத்தின் பெயர் பாடல் கதை கதாபாத்திரம் அனைத்தும் புரட்சிகரமான கருத்துக்களை கூறி இருப்பதால் தான் அவருக்கு
புரட்சித்தலைவர் புரட்சிக் நடிகர் என்ற பொருத்தமாக அமைந்தது. .
இது நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லாத ஆச்சரியம் அதிசயம் ஆகும்
எமது அடுத்த பதிவில் சின்னப்பர் தேவர் அடுத்த வெற்றி படமான நீதிக்குப்பின்பாசம்படத்தின் சாதனை வரலாறு தொடரும்
தொடரும் தொடரும் தொடரும்.... Thanks...

orodizli
17th April 2020, 08:22 AM
சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 44

கைராசி முகராசிக்கும் பேர் ராசிக்கும் பேர் போனவர் நம்ம வாத்தியார். .அவர் கால்கள் பட்ட இடமெல்லாம் வரலாற்று சுவடுகளாக பதிக்கப்பட்டது. .அவர் கரங்களால் துவக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் புதுபொலிவுப்பெற்றது. .அவர் முகத்தை காட்டி ஓட்டு பெற்றவர்கள் உண்டு. அவர் பெயரை சொல்லி பிழைத்தவர்கள் உண்டு அவரால் வாழ்ந்தவர்கள் உண்டு இன்றும் அவர் பெயர் கூறி வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் அதிகம். இன்னும் சொல்லனும் என்றால் அவர் பெயர் சொன்னால்தான் அவர் சின்னத்துக்குதான் ஓட்டு என்கிற வரைமுறை கொண்டு வந்தவர் வாத்தியார் ஒருவரே இது வேறு எந்த தலைவர்களிடமும் காண முடியாத ஒர் அதியம் ஆகும். . அதனால் தான் கடையெழு வள்ளல்கள் வரிசையில் எட்டாவது வள்ளலாக திகழ்கிறார். புகழ வேண்டும் என்பதற்காக நான் புகழவில்லை. புகழுக்குரியவர் புகழுக்கு தகுதியுடையவர் என்பதால் புகழ்கிறேன். .விவசாயி படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் கூறுவார் அடடா போதும் அண்ணனைப்பற்றி புகழ ஆரம்பித்தால் அப்புறம் அதுக்கு ஏது எல்லை அடுத்த வேலை பார்ப்போம் என்பார். அதைப் போல் நானும் எனது அடுத்த பதிவுக்கு வருகிறேன். ..தெய்வம் செயல். என்ற படம் நடிகர் சுந்தர்ராஜனை கதாநாயகனாக வைத்து சாண்டோ சின்னப்பர் தேவர் எடுத்த படம். பெரும் நஷ்டம் ஏற்பட்டு படுத்தோல்வி அடைந்தது பல பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை. கூறி விமர்சனம் எழுதினார்கள் கதை திரைக்கதை சரியில்லை என எழுதினார்கள்.பத்திரிக்கையாளர்களுக்கு சின்னப்பர் தேவர் கூறியதாவது படத்தின் கதை திரைக்கதை சரியில்லை என எழுதினார்கள் இதே கதையை நான் எனது ஆண்டவனை வைத்து வெற்றி பெற்று காட்டுகிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாநாயகன் அமையவில்லை தவிர கதை திரைக்கதை சரியில்லை என்று கூறியதை தவறு என்பதை நிருப்பிக்கிறேன் என்று சவாலாக கூறினார். .

23 -06 -1967 ம் ஆண்டு "தெய்வசெயல் " படம் வெளிவந்தது. .அப்போது தேர்தல் நேரம் ஒரு புறம் குண்டடிபட்ட சம்பவம் ஒரு புறம் ஏற்கனவே பல படங்கள் புக்கிங் ஒரு புறம் இப்படி பல தரப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதால் வாத்தியாரால் அந்த கதையில் நடிக்க முடியவில்லை என்றாலும் வாத்தியார் உடல் நலம் விசாரிக்க வந்த இந்தி நடிகர் ராஜேஷ்கண்ணா அவர்களிடம் சின்னப்பர் தேவரை அறிமுகம் செய்து வைத்தார். .சின்னப்பர் தேவர் பற்றியும் அவரது திறமையையும் ராஜேஷ் கன்னாவிடம் கூறினார் சின்னப்பர் தேவரை கட்டித்தழுவி தனது அன்பை பறிமாறிக்கொண்டார் அதே நேரத்தில் சின்னப்பர் தேவர் கூறிய கதையை வாத்தியார் ராஜேஷ் கன்னாவிடம் கூறினார். ராஜேஷ் கன்னா சின்னப்பர் தேவரிடம் இப்படி கூறினார். .எனக்கு இந்திய திரையுலகில் பல ரசிகர்கள் இருந்தாலும். இந்திய திரையுலகில் உள்ள நடிகர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர் ரசிக்கும் நடிகர் உங்கள் எம்ஜிஆர் தான். அப்படிப்பட்ட நடிகர் நடிக்கும் கதையில் நான் நடிக்கிறேன் என்றால் அதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியில் கால்பதித்தார் சின்னப்பர் தேவர் அப்படி வெளிவந்த படம்தான் ஹாத்தி மேரா ஷாத்தி என்ற இந்தி படம் 1971. ம் ஆண்டு வெளிவந்தது மாபெரும் வெற்றி பெற்றது. . அதன் பிறகு வாத்தியார் வைத்து எடுக்கப்பட்ட மெகா ஹிட் படமான "நல்ல நேரம்" 10. 03. 1972. ம் ஆண்டு வெளிவந்தது. .இனி நல்லநேரம் படத்தின் சாதனையை அடுத்த பதிவில் சந்திப்போம் தொடரும் தொடரும் தொடரும்..... Thanks.........

orodizli
17th April 2020, 08:23 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 45

கஷ்டத்தை போல மனிதனுக்கு படிப்பு சொல்லித்தரும் கண்டிப்பான வாத்தியார் யாரும் இல்லை. ...
கொடுக்கறவங்களும் வாங்கறவங்களும் எஎன்றைக்குமே நாணயம் தவறக்கூடாது என்பதற்காகத்தான் காசுக்கே நாணயம் என்று பெயர் வந்தது. .
வஞ்சகர்கள் மத்தியில் வசதியாக வாழ்வதை விட நெஞ்சம் நிறைய கஷ்டப்பட்டு ஏழையாக வாழ்ந்திடலாம். .
இதயத்தை விட வயிறு பெரிசுதான் அதற்க்காக வயிற்றை நிரப்பனும் என்பதற்காக இதயத்தை விலை பேசக்கூடாது. .
தகுதி என்பது பணத்துல இல்ல வாழற வாழ்க்கையிலே இருக்கு.

நல்ல நேரம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் ஆகும். மேலும் வரும். . எந்த படத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் இந்த படத்துக்கு உண்டு. இவை பல பேர் அறியாத தகவல் ஆகும். 10. 3. 1972. ம் ஆண்டு வெளிவந்த பிறகு கட்டப்பட்ட சினிமா தியேட்டர்கள் அனைத்திலும் திறப்பு விழா அன்று முதல் காட்சியாக இலவசமாக நல்ல நேரம் படம்தான் காண்பிக்கப்பட்டது. .இந்த தகவல் சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகத்தில் வந்தது. . எனக்கு தெரிந்து எங்கள் பகுதியில் உள்ள பல தியேட்டர்களில் காண்பிக்கப்பட்டது நானும் பார்த்துள்ளேன். .குறிப்பிட்ட சில தியேட்டர்கள் ஸ்ரீ பிருந்தா ஆல்பர்ட் மூலகடை ஐயப்பா M M தியேட்டரில் போன்ற தியேட்டரில் பார்த்து உள்ளேன். .அதுமட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது. .

தேவர் பிலிம்ஸ் எடுத்த முதல் கலர் படம் இது தான். அதேசமயம் வாத்தியார் நடித்த கடைசிப் படம் இது தான். . இந்தியில் சில தியேட்டரில் மட்டுமே 100. நாட்கள் ஒடியது ஆனால் தமிழில் பல ஊர்களில் பல தியேட்டர்களில் 100. நாட்கள் மேல் ஒடியது. .சென்னையில் சித்ரா மேகலா பிராட்வே ராம் நான்கு தியேட்டரிலும் 100. நாட்கள் மேல் ஒடியது ..இந்தி படத்தின் வசூலை விட ஐந்து மடங்கு அதிகமாக வசூலில் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. . 1972 ம் ஆண்டு வந்த படங்களில் அதிக வசூல் சாதனையை படைத்தது நல்ல நேரம் படமே.

கவியரசு கண்ணதாசன் எமுதிய ஒரு பாடலில் வரும் வரிகள். .
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ. ..
அதாவது வாத்தியார் உடலும் உள்ளமும் பொன்னானது. அப்படிப்பட்ட உடலும் உள்ளமும் பெற என் மேனி தகுதியற்றது. என்ற கவிஞரின் வரிகள் வாத்தியார் புகழுக்கு மேலும் புகழ் மணக்க செய்தது. ...படத்தில் நான்கு பாடல்கள். ..இரண்டு பாடல் கவியரசு கண்ணதாசன் ஒரு பாடல் அவினாசிமணி எழுதியிருப்பார் கள்
இதையெல்லாம் மிஞ்சி புலமைப்பித்தன் எமுதிய பாடல் தான் உலகமெங்கும் ஒலிக்க செய்தது மெகாஹிட் சூப்பர் ஹிட் டாப் டக்கர் என்று புகழாரம் சூட்டினார்கள் தமிழக மக்கள் அந்த பாடல் எது என்று நீங்கள் அறிவீர்கள் அடுத்த பதிவில் அப்பாடலின் சாதனையும் வரலாறும் காணலாம் தொடரும் தொடரும் தொடரும் .... Thanks.........

orodizli
17th April 2020, 09:51 AM
ஸ்ரீ MGR வாழ்க.........

சித்திரை 4. வியாழன்

எம்ஜிஆர் பக்தர்களே

1974 ஆம் ஆண்டு நடந்த அற்புதம்

அண்ணன் சிவாஜி அவர்களின் அதிகபடங்களுக்கு கதைவசனம் எழுதிய வர்
A.L.நாராயணன்

இவர் MGR அவர்கள் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில்

உதவி வசனகர்த்தாவாக அறிமுகமானவர்

A.L. நாராயணன் எழுதி வெளியிட்ட

அவர்வாழ்க்கை வரலாறு புஸ்தகத்தில்

இந்த செய்தி வந்துள்ளது

இந்த செய்தியை நம்பாதவர்கள்

இப்போது உயிரோடு உள்ள

A.L.நாராயணனிடம் கேட்டுக்கொள்ளவும்

/////////////////////////////////////////////$$$$/////

நான் வசனம் எழுதியபடம் ஒன்று சத்தியாஸ்டுடியோவில் படம்எடுத்துக்கொண்டுஇருந்தனர்

ஆகவேநான் அங்கு சென்றுஇருந்தேன் .

MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிது
வெளியூர் சென்று கூட்டத்தில் பேசிவிட்டு
அன்று சத்தியா ஸ்டுடியோ வந்திருந்தார்

இதையறிந்த நான்

MGR அவர்களைசந்திக்க. அவருடைய அறைக்குசென்று அவருடன் பேசிக்கொண்டுஇருந்தேன்

அப்போது வெளியூரில் இருந்து வந்த தந்தையும் மகனும்

MGR அவர்களை சந்தித்தார்கள்
தந்தைஅவர்கள் எம்ஜிஆர் அவர்களிடம் என்னுடைய மகன் அதிகமார்க் எடுத்துள்ளான்

மெடிக்கல் காலேஜில் இவனுக்கு இடம்தரமறுக்கிறார்கள் /

ஆகவே நீங்கள் என்மகனுக்கு டாக்டர் சீட் வாங்கித்தரவும்
என்று கூறினார்/

அதற்கு MGR அவர்கள் மெடிக்கல்காலேஜில்
சீட்கிடைத்தாலும் 5 வருடம் ஹாஸ்டலில்
தங்கி படிக்க வேண்டும் அதற்கு சில லட்சம்
செலவு ஆகும் பணத்திற்க்கு என்ன. செய்வீர்கள்என்றுகேட்டார் அதற்கு அந்த தந்தை எங்களுக்கு ஒருவீடுஉள்ளது
அதைவிற்றும் கடனை வாங்கியும்படிக்க வைக்கிறேன் என்று கூறினார்

பிறகு MGR அவர்கள் அந்த மாணவனின்
மார்க்லிஸ்டைப்பார்த்தார் பிறகு பல மெடிக்கல்கல்லூரிக்கு போண்செய்தார்
கடைசியில் அந்த மாணவனுக்கு சீட்
கிடைத்துவிட்டது இதை அறிந்த மாணவனும் / தந்தையும் MGR அவர்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டுவெளியேரினார்கள்

உடனே MGR அவர்கள் சத்யாஸ்டுடியோ முன் கேட்டில் உள்ள காவலாளியை

இண்டர்காம்போண் மூலம் அழைத்து
தந்தையும் மகனும் வெளியே வருகிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லுகின்ற செய்தியைசொல்லிவிடுங்கள்

இந்த மாணவனின் 5 வருட மெடிக்கல் காலேஜின் / புஸ்தக சிலவு சாப்பாட்டு சிலவு
ஹாஸ்டல்பீஸ் அனைத்தையும்

MGR அவர்கள்

ஏற்றுக்கொண்டார்என்று சொல்லிவிடுங்கள் இதைகேட்டவுடன்
என்னைசந்தித்து நன்றிசொல்ல என்னிடம் அவர்கள் வருவார்கள்

அவர்களை என்னிடம் வர விட வேண்டாம்

அவர்களிடம் உங்கள் மகன்
டாக்டரானவுடன் வந்து MGR பார்க்க சொன்னார் ஆகவே நீங்கள் உங்கள் ஊருக்கு
செல்லுங்கள் என்று சொல்லிவிடவும் எண்று

MGR கூறினார்

இதைக்கேட்டவுடன் நான்
அசந்துவிட்டேன்

இதனால்தான் தமிழ்

நாட்டுமக்கள்இவரை தெய்வமாக நினைத்து

முதலமைச்சர்பதவியில் அமர்த்தினார்கள்

இவ்வாறு AL நாராயணன் எழுதிஉள்ளார்

×××××××÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷3÷÷÷÷==

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகைகள்

கதாநாயகிகளாக நடித்து உள்ளார்கள்

அந்த நடிகைகள் யாராவது சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை எம்ஜிஆரை போல் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா

அப்படி இருந்தால் அந்த நடிகையின் படத்தை வெளியிட்டு அவர் எந்த காரணத்திற்காக மக்களுக்கு பண உதவி கொடுத்தார் என்பதையும் பதிவிட வேண்டுகிறேன்

தர்மம் செய்வதில்
எம்ஜிஆர் கால் தூசுக்கு இணையாக யாரும் வர முடியாது

இப்படிப்பட்ட வள்ளல் எம்ஜிஆர் அவர்களை

முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு

ஒரு துரோகி முயற்சி செய்தார்

அந்த துரோகியை நீதிதேவன் எமலோகத்தில்

கழுமரத்தில் ஏற்றிதண்டனைகொடுத்துக்கொண்டு உள்ளார்

அந்த துரோகியை கொதிக்கும் எண்ணெயில் போட்டு அப்பளத்தை போல் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் எமதர்மராஜா

அந்த துரோகியை எண்ணெய் ஆட்டும் செக்கில் இட்டு எமதர்மராஜா எமலோகத்தில் ஆட்டிக்கொண்டு இருக்கிறார்....... Thanks mr.PM.,

orodizli
17th April 2020, 11:11 AM
புரட்சித் தலைவர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாக சத்யா ஸ்டுடியோவில் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், தனது தலைவரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக்கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள்.
முசிறிப்புத்தன், அவர்களிடமிருந்து உயிர் தப்பி புரட்சித் தலைவரிடம் வந்து செய்தியைச் சொன்னார். ஒரு கால் சற்றே ஊனமான அவரைக் கொலை வெறியோடு தாக்கி, உடல்முழுக்க இரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்களே! என்று புரட்சித் தலைவர் மிகுந்த வேதனையடைந்தார்.
அந்த நிமிடம் வரை தி.மு.க. வோடு சமாதானத்திற்கு இசைந்து விடலாம் என்றுதான் புரட்சித் தலைவரும் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், ரத்தக் கடாகத்தில் மூழ்கி எழுந்தவர் போல தன் முன்னால் ரத்தம் வழிய வழிய வந்து நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்ததும், புரட்சித் தலைவரின் உள்ளம் துடித்தது.
சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்று கூறினார்.
அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது. இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் கணக்கில் அடங்காதவை ஆகும். இத்தகைய வெறித்தாக்ககுதலுக்குப் பலியாகி உயிர் துறந்த கழகத் தோழர்களின் தொகை மட்டும் 20 ஆகும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தி.மு.கழகத் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்றும், ஆங்காங்கே உள்ள உணர்ச்சிவசப்பட்ட சிலர் தாமாகவே அவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தி.மு.க. விளக்கம் அளித்தது.
அ.தி.மு.க. மீது தி.மு.க. வினர் தாக்குதல் தொடுத்தது ஒருபுறமிருக்க மறுபுறம் அண்ணா தி.மு.க. தொண்டர்களின், மீதும் முன்னணி வீரர்களின் மீதும் தி.மு.க. அரசு தொடுத்த கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரம் ஆகும். இது மிகைப்படுத்தப்பட்ட தகவலோ, கற்பனையோ அல்ல. அது மட்டுமா? புரட்சித் தலைவர் மீது அரசு தொடுத்த வழக்குகள் மட்டும் 19 ஆகும்.
இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகள், தொடர்ந்த பொய்வழக்குகள், தொடுத்த தாக்குதல்கள் ஆகியவை ஏராளம் ஆகும்! இவ்வளவையும் மீறித் தான் கட்சியைக் கட்டி வளர்த்தார், புரட்சித் தலைவர்!
அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.
அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள், அந்த விநியோகஸ்தர்கள்,அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறுத்துவிட்டனர்.
படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், லட்சம் லட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!

பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல லட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள்., பின் வாங்கினார்கள்.
ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!!!......... Thanks.........

orodizli
17th April 2020, 11:14 AM
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"

தலைவரை பற்றிய ஒரு தகவல்:

இன்று 17-ம் தியதி
தலைவர் நடிப்பில் வெளிவந்த 136 படங்களில் ஜெனோவா ( மலையாளம் ) மட்டுமே 17-ம் தியதி வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.

ஜெனோவா ( மலையாளம்)
17-04-1953

ஜெனோவா மலையாளம்
மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள படம் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகு தான் தமிழில் 01--06-1953-ம் தியதி வெளியிடப்பட்டது.

மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்
இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார்.
இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார்.
MGR நடித்த ஒரே ஒரு மலையாள படம் இது தான். 1953 -ம் ஆண்டு ஈஸ்டர் அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், இது ஈஸ்டருக்கு 13 நாட்களுக்கு பின்னர் 17-04-1953-ம் தியதி தான் திரையரங்குக்கு வந்தது. ஈஸ்டருக்கு பின்னர் வெளியான போதிலும், ஜெனோவா பெரிய வெற்றி பெற்றது.

ஜெனாவா -
"ஜானோவா நாடகம்" மற்றும் "ஜானோவா பர்வம்" ஆகியவற்றின் கீழ் கேரளாவில் பிரபல நாடக குழுவால் நடத்தப்பட்ட ஒரு இசை நாடகம் (சங்கீகா நாடகம்) தழுவலாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலையாள இசை நாடகங்களில் ஒன்றான டி.சி.அச்சுத மேனனின் வேடங்களில் ஒன்றான இந்த இசை நாடகம் மிகவும் பிரபலமானது.

இயக்கம் :- ஈச்சப்பன்
தயாரிப்பு :- ஈச்சப்பன்
கதை :- சுவாமி பிரம்ம வரதன்
இளங்கோவன் (உரையாடல்)இசை :- விஸ்வநாதன்
ஞானமணி கல்யாணம்
ஒளிப்பதிவு :- G.விட்டல்ராவ்
நடிப்பு :- எம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா , கண்ணம்பா,
ராஜமணி

@ வெளியிடூ : 17th April, 1953
( மலையாளம்)

@ வெளியீடு : 1st June, 1953
( தமிழில் )

நன்றி ...
என்.வேலாயுதன் , திருவனந்தபுரம்........ Thanks...

orodizli
17th April 2020, 11:20 AM
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 12/04/2020

"இந்தப் பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்! நானும்
'நாடோடி மன்ன'னில் ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்"
என்றேன்.
“நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும் என்
படத்தில் ஒப்பந்தம் செய்யறேன்'' என்றார் ஏ.எல்.எஸ். அவர்கள்.
"நான் எந்தத் தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து
நடிக்கணும். அதை மறக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து
கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் நினைவு படுத்தினேன்.
முதலில் நான் சொன்னது யோசனை.
ஆனால், அதுவே 'நிபந்தனை' ஆயிற்று.
பிறகு அது ‘கட்டளை'யாகி விட்டது.
"காரியத்தை இந்த வகையில் செய்தால் நல்லதாச்சே" என்று
கூறுவது யோசனை. "அப்படிச் செய்தால்தான் நான் உங்களோடு
இருக்க முடியும்” என்று சொல்வது நிபந்தனை.
"நீங்க இப்படித்தான் செய்ய வேண்டும்; செய்து விடுங்கள்"
என்று அவர்களைக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு நிலையை
உண்டாக்குவது கட்டளை...!
ஆனால், ஏ.எல்.எஸ். அவர்கள் நான் கட்டளையிட்டதாக
நினைத்தார் என்று சொல்ல முடியாது.
“நான் கொடுக்கும் கால்ஷீட்டுகளிலெல்லாம் அந்தப் புதுமுக
நடிகை வந்து நடிக்கணும்” என்று நான் சொன்னேனே, அது
கட்டளையில்லாமல் வேறென்ன?
இப்படிக் கட்டளையிடத் தூண்டியது எது? அறிவுதானே!
அதன் விளைவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள
வேண்டாமா?
ஏனென்றால் நான்தான் தெரிந்து, அனுபவித்து கண்ணீர்
வடித்துத் திருந்தியவனாயிற்றே!
எனது அகம்பாவத்திற்குக் கிடைத்த அடையாளச் சின்னத்தை
அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா?
மறக்கத்தான் கூடுமா?

"அகந்தைக்குக் கிடைத்த அறிவுரை"

"வெற்றியும் தோல்வியும்"

அறிவுதான் ஒரு மனிதனுக்கு
வழிகாட்டியாக அமைகிறது.
அனுபவந்தான் தெளிவைத் தருகிறது.
ஒருவன் தனது முயற்சியில் வெற்றி
அடையும்போது 'அறிவாளி' ஆகிறான்;
தோல்வி அடையும் போது 'முட்டாள்'
ஆகிறான்.
இவை புறத் தோற்றத்திற்கு.
ஒரு கலைஞன் தன்னுடைய செயலிலே,
நடிப்புத் தொழிலிலே தோல்வி அடைந்து
விடுகிறான். அதாவது மற்றவர்கள்
அவனைத் தோல்வி அடையச் செய்து
விட்டார்கள் என்பதே அதன் பொருள்.
ஆனால், அனுபவ அறிவுத் தெளிவுள்ள
கலைஞன் அதைத் தோல்வியாக எடுத்துக்
கொள்ளமாட்டான்.
வேறொரு சமயம் அதே கலைஞன்
பிறரால் வெற்றி மகுடம் சூட்டப்படு
கிறான். ஆனாலும் அப்போது, அவனது
லட்சியம் நிறைவேறவில்லை என்று அவன்
உணருவதால் அவனுடைய உள்ளம்
வருந்துகிறது. “நான் தோல்வி அடைந்து
விட்டேன்'' என்று.
பாவம்! மக்களுக்கு எப்படித் தெரிய முடியும், அந்தக்
கலைஞனுக்கு ஏற்பட்ட தலைகுனிவும், உண்டாக்கப்பட்ட
சோதனையும், அவன் அடைந்த வேதனையும்?
இதே நிலையில்தான் நானிருந்தேன், ‘திருடாதே' என்ற அந்தச்
சமூகப்படம் வெளிவந்து வெற்றி பெற்று, மக்களால் நான்
பாராட்டப்பட்ட அந்த நேரத்தில்!
அதற்கு என்ன காரணம்?
நான் அடைந்த வெற்றியையும் பாராட்டுகளையும்விடப்
பன்மடங்கு பலமுடையதாக, என் அகம்பாவத்திற்குக் கிடைத்த
தண்டனை அல்லவா என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது!
நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று புகழ் மாலை சூட்டப்
பட்ட அந்த நேரத்தில், அந்த வெற்றியின் பின்னணியில் அணு
அணுவாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த
வேதனையில் அல்லவா நான் சோர்ந்து துவண்டு போயிருந்தேன்.

"தலையை முட்டிக்கொண்ட பிறகு..."

திரு.ஏ.எல்.எஸ். சீனிவாசன் அவர்கள் 'திருடாதே' படத்தில்
நான் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டுக்கொண்ட
போது, அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி என் கருத்னை
வெளியிட்டதற்கு, இப்பேர்ப்பட்ட தண்டனையா கிடைக்
வேண்டும்!
நான் அவரிடம் சொன்னது இருக்கட்டும். அவ்வாறு நான்
சொன்னதற்கு அடிப்படையாக, என் உள்ளத்தில் தோன்றிய அந்த
எண்ணம் என்ன?
"அவரது படம் ஒழுங்காக நடைபெற்று முடிய வேண்டும்!"
என்பது ஒன்று.
மேலும், "பரபரப்பான சூழ்நிலையில் என்னைப் போலவே
கதாநாயகி வேடம் ஏற்பவரும் இருந்தால், நான் கொடுக்கும்
நேரத்தில் அவரும் அவர் கொடுக்கும் நேரத்தில் நானும் 'கால்ஷீட்,
கொடுக்க முடியாமல் போக நேர்ந்து, படப்பிடிப்பு தடைப்
படக்கூடுமே” என்ற எண்ணமும் உண்டாகவே புது முகமாகவும்,
என் கால்ஷீட்டை அனுசரித்து நடிக்க வருபவராகவும் உள்ள
ஒருவரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! ஒருவகையில்
அந்த எண்ணம் சரிதான் அல்லவா? ஆயினும் எனது நல்ல ஆசை
அதை வெளிப்படுத்தும்போது நிபந்தனையாகவும் கட்டளையாகவும்
அல்லவா அது மாறிவிட்டது!
ஆனால், அப்போது எனக்கு அது ஒரு நிபந்தனை என்றோ ,
கட்டளை என்றோ புலப்படவில்லை! தலையை முட்டிக்கொண்ட
பிறகு குனிந்து போவது போல் அல்லவா என் நிலைமை
ஆகிவிட்டது! முன்னதாகவே புலப்பட்டிருந்தால் அப்படிச்
சொல்லியிருக்கவே மாட்டேனே! ஆயினும் ஒன்றைத் தெரியாமல்
செய்தாலும் தெரிந்து செய்தாலும், செய்து விட்ட குற்றத்திற்குத்
தண்டனையை ஏற்கத்தானே வேண்டும்?
நண்பர்களா? நயவஞ்சகர்களா?
"திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்பிய
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதற்கும்

திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்......... Thanks.........

orodizli
17th April 2020, 11:23 AM
"அன்பே வா" படத்தில் ருசிகரமான ஒரு காட்சியில் சரோஜாதேவி அப்பாவை வாங்கப்பா சிம்லாவை சுற்றிப் பார்க்கலாம் என்று அழைத்தவுடன் நீங்க போயிட்டு வாங்கம்மானு சொல்லிட்டு எனக்கு இந்த குளிர் ஒத்துக்காது என்பார்.
இருவரும் சென்றவுடன் "மசாலா கோழியை விட்டுட்டு மலையாவது கிலையாவது இன்னைக்கு ஒரு பிடி பிடிக்கலாம்" னு சாப்பிட ஆரம்பிப்பார். சற்று நேரத்தில் டேபிளுக்கு கீழே சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை தூக்கும் போது வெறும் கோழி எலும்பு மட்டும் தட்டில் இருப்பதாக சீன அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த காட்சியில் நடிக்க T R ராமச்சந்திரன்
முதலில் மறுத்து விட்டார். நான் ப்யூர் வெஜிடேரியன் என்னை போய் கோழி சாப்பிட வைத்தால் எனக்கு வாந்தியே வந்திரும்னு சொல்லிட்டார். உடனே அவருக்காக கோழி மாதிரி வடிவில் கேக் ஆர்டர் பண்ணி ( தலைவர் யோசனைப்படி) பின்னர் அவர் சாப்பிடுவது போல காட்சி எடுக்கப்பட்டது ஒரு ருசிகரமான தகவல் இல்லையா.?!........ Thanks.........

orodizli
17th April 2020, 11:39 AM
எம்ஜியாருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..ஹா... ஹா...
---------------------------------------------------------
(ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல். Sska Rabeek Rajaa உபயத்தில் வாசித்து மகிழ்ந்த மதிப்புரை)

நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது

மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது

பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்....

ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.

எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.

எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.

135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.

எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.

எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.

எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.

ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.

அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?

'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.

எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.

அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.

முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.

இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?

52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.

இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.

அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.

'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.

ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.

சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.

’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?

சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.

கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.

எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.

நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.

அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.

எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.

அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.

எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.

அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.

இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்

இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்

இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்

என்னை தெரியுமோ
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமோ

உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா

ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...(மீள் பதிவு)... Thanks.........

orodizli
17th April 2020, 01:54 PM
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மானசீக குருவாக ஏற்றுகொண்ட நம் தலைவர் >>>> ரீமோட்டுடன் டிவியில் உலா வந்தேன் HBO -வில் police story -2 , 1988 இல் வெளிவந்த படம் !! டிபன் சாபிட்டுகொண்டு இருந்த நான் கைகழுவ மறந்து பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன் > ஜாக்கி சான் கதநாயகன் உடலில் மனித வெடிகுண்டும் அதை கழட்டிவிடும் லாவகமும் > இவருக்கெல்லாம் தலைவர்தான் முன்னோடி > இந்த சண்டைகாட்சி யில் வில்லன் உடலில் தீபிடித்து அலறுவான் தலைவரைபோலவே மனிதாபத்துடன் கதாநாயகன் தீயை ஆணைப்பார் > வில்லன் உடனே தன் நம்பியார் புத்தியை காண்பித்து கதாநாயகன் மேல் சீரிபாய்வான் < > இந்த காட்சியிலும் தலைவர்தான் முன்னோடி <> படத்தின் முடிவில் படபிடிப்பு காட்சிகளை காட்டுவார்கள் <> கதாநாயகனும் கதாநாயகியும் மிகவும் ஆபத்தை கையில் எடுத்து நடித்து இருப்பார்கள் << இதெல்லாம் வெறும் காசுக்கா ?? புகழுக்கா ??...... Thanks.........

orodizli
17th April 2020, 02:59 PM
#பெற்றால்தான்பிள்ளையா
[ 09 - 12 - 1966 ]

தலைவரின் அற்புதமான நடிப்பில் வெளி வந்த மெகா ஹிட் காவியம்...

தமிழ் இருக்கும் இடமெல்லாம் தலைவரின் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்...

சின்னஞ்சிறு கைகளை நம்பி என்ற காட்சியில் தலைவரின் Steps...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...
தலைவருக்கு நிகர் தலைவரே...

இதே மாதிரி ஸ்டைலில் சத்யராஜ், ராமராஜன் உட்பட ஏன் விஜய் உட்பட முன்னணி நடிகர்கள் கூட முயன்று பார்க்கிறார்கள்...முடியவில்லை...

எனினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

தலைவர் முதல்வராக இருந்த போது நடைபெற்ற ஒரு விழாவில்...
சென்சார் போர்டு ஒரு தீராத நோய் என்பார்கள்.

இப்பாடலில் வரும் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வரிகளில் அறிஞர் அண்ணா என்று வரக்கூடாது என்று சென்சார் போர்டு தடை செய்து விட்டதால் படத்தில் திருவிக போல் என்றே இருந்தது.

ஆனால் தலைவர் வாய் அசைவு அறிஞர் அண்ணா என்றே இருக்கும்...

ஒலி நாடாவிலும் அறிஞர் அண்ணா என்றே இன்றளவும் ஒலிக்கிறது...

மெல்லிசை மன்னர் M.S.V. இசையில்...
T.M.S. அவர்களின் கணீர் குரலில்...

வாலிப கவிஞர் வாலியின் அற்புத வரிகளுக்கு தலைவர் உயிர் கொடுத்ததால் பாடல் சாகா வரம் பெற்று விட்டது.

★ வளர்க புரட்சித்தலைவர் புகழ் ★

��#இதயதெய்வம்��.......... Thanks.........

orodizli
17th April 2020, 05:21 PM
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்கிற நிலை. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துவிடலாம். ஆனால் பசி. அதற்கு வழி. பிதுங்குமா இல்லையா விழி..?

அந்த பிதுங்கும் விழிகளுக்கு வழி சொல்லியிருக்கிறது நம்ம ரேஷன் கடைகள். மொத்தம் கிட்டத்தட்ட 35000 நியாயவிலை கடைகள். ஏழு கோடி தமிழ்மக்கள். கிட்டத்தட்ட 2 கோடி ரேஷன் அட்டைகள்.

நம்ப முடிகிறதா இப்படிப்பட்ட சூழலை இன்றைய அரசு இலகுவாக சமாளிக்கக் காரணம் ஒரு மாமனிதன். அம்மாமனிதனின் தொலைநோக்கு பார்வை. அந்த மனிதனின் பசியறிந்த மனசு.

யார் அவர்..?

ஆம். புரட்சித்தலைவர் எம்ஜியார்.

இந்த சினிமாரக்காரனுக்கு என்ன தெரியும் நிர்வாகம் பற்றி..? அந்தாளு கூட ஒரு நூறு விசிலடிச்சான் குஞ்சுகள் சுத்திகிட்டு திரியுவானுக அவனுகளுக்குலாம் அரசு நிர்வாகம் ன்னா என்னான்னு தெரியுமா..? அதுவுமில்லாம அந்த நடிகன் கூட இருப்பவனெல்லாம் படிக்காத ஆட்கள். இதுகளை லாம் வச்சிக்கிட்டு இந்தாளு எண்ணத்தப் பண்ணிடுவான்னு பார்த்திடுவோம்.

இப்படி எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானவர் வேறுயாருமல்ல நம்ம மக்கள் திலகம் எம்ஜியார் தான்.

அப்படிப்பட்டவர் தான், 1980 இல் ஒரே ஒரு கையெழுத்தில் 22000 கடைகளை திறந்தார். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்பதை இலக்காக கொண்டு இந்த structure ஐ மிகச்சிறப்பாக உருவாக்கி, அவசர காலத்திற்கு தமிழனுக்கு உணவாக்கிய, உன்னதமான மனசு நம் தலைவருடையது.

அது மட்டுமா தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் PHC மருத்துவமனைகளை ஏற்படுத்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரரும் அவரே.

சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு முன்பே இதன் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றியவர்
மக்கள் திலகம். அதனால் தான் அவர் மக்களின் திலகம்.......... Thanks.........

orodizli
17th April 2020, 05:26 PM
'லூஸிப்பர்' மோகன்லால் நடித்து பிருதிவுராஜ் தயாரித்த மலையாளபடம் இதுவரை உள்ள எல்லா மலையாள வசூலையும் முறியடித்த படம் இந்த படம் சென்ற ஈஸ்டர் அன்று ஏசியநெட் டிவியில் ஔிபரப்பபட்டது இதில் ஒருகாட்சி கதாநாயகன் ஒரு அனாதை விடுதி நடத்தி கொண்டே கேரளா அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக நேர்மைவாதியாகவும் இருக்க சில ஊழல்வாதிகள் கதாநாயகனை அழிக்க போலீசை அனுப்புகிறது ... உயர் அதிகாரி தலைமையில் அனாதை இல்லத்தில் நுழைந்து கதாநாயகன் ஆன மோகன்லாலை பொய் வழக்கின் பெயரில் விலங்கு மாட்டி இழுத்து செல்ல ஒரு சிறுமி மோகன்லாலை நெருங்க உயர்அதிகாரி சிறுமியை தூக்கி வீச கோபம் கொண்ட கதாநாயகன் உயர் அதிகாரியை காலால் ஓங்கி மிதித்து தள்ளுகிறான் கோபம் கொண்டு உயர் அதிகாரி கதாநாயகனை பார்த்து நீ என்ன பெரிய "எம்.ஜி.ஆரா. " தலைவராடா என உறுமி தரதர என இழுத்து செல்லுகிறார் ...
மலையாள படத்தில் இந்த காட்சியை கண்ட போது.அநீதியை எவ்வளவு பெரியவன் செய்தாலும் தண்டிக்கும் சக்தி எம்.ஜி.ஆரு.க்கு மட்டுமே இருந்தது என்பதை மலையாளிகளும், கேரள திரையுலகமும் ஒப்பு கொள்ளுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது... வாழ்க, வளர்க... மக்கள் திலகம் புகழ்........ Thanks.........

வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்...

orodizli
17th April 2020, 05:50 PM
உண்மை தான்.
தானம்...
கோ தானம்(பசு)...
கன்னிகா தானம்...
நிதானம்...
அன்னதானம்...
பொருள்தானம்(தங்கம் அடங்கும்)...
உடைகள் தானம்....
வீடுகள் தானம்....
புரட்சிதலைவர்
கையில் எடுத்தார்...
சட்டத்தை
நானே போடப்போகிறேன்
சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு....... Thanks.........

fidowag
17th April 2020, 07:20 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில்*இன்று (17/04/20) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரு.இருகூர்*இளவரசன்(எழுத்தாளர் )*அளித்த*தகவல்கள் விவரம் :


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு*தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்*, தனது*உதவியாளர்* மூலம் அழைத்து**அவர்களின்*துன்பத்தை*போக்குவது*என்பது*அவரி ன்*வாழ்க்கையில்*அன்றாடம் நடக்கும்*விஷயங்கள்* நான் கோடம்பாக்கத்தில்,பூபதி நகரில்**குடிசை*மாற்று வாரியம் அருகில் குடியிருந்தபோது , சங்கரய்யா என்பவர் (தந்தை பெரியாரின்* சீடர்) என் வீட்டிற்கு கீழே குடியிருந்தார் . *திரு.சங்கரய்யா , தந்தை பெரியாரிடம் இருந்து பின்னர் பேரறிஞர் அண்ணா*, மு.கருணாநிதி ஆகியோரின் நட்பில்*இருந்தார்*. அப்போது முரசொலி*பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார் . திரு.சங்கரய்யா தனது முதிர்ந்த வயதில்*மனைவியுடன் வாழ்ந்து வந்தார் .* அப்போது அவர் மனைவிக்கு உடல் நலம் குன்றியது* மருத்துவ*சிகிச்சைக்கு பலரிடம்*பணம் கேட்டு கிடைத்த*பாடில்லை, தான் சார்ந்த இயக்கத்தினரிடம் கேட்டும் பலனில்லை. நோய் என்றால் அரசு மருத்துவமனை இருக்கிறதே .அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று பரிகசித்தனர் .*.இதுபற்றி*என்னிடம்* தெரிவித்தபோது , நான்* உடனே நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று*எம்.ஜி.ஆரை*பாருங்கள்*.* நிச்சயம் உதவி கிடைக்கும்*என்று யோசனை சொன்னேன் . . ஆனால் ஆரம்பத்தில் .சங்கரய்யா சற்று*தயக்கத்துடன்* எம்.ஜி.ஆர். கட்சிக்கு*எதிரான இயக்கத்தில் நான் இருந்து அவரை வசை பாடியிருக்கிறேன் . அவரது அரசியலை*விமர்சனம் செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன் .* ஆகவே என் பிரச்சனையை*காது கொடுத்து கேட்பாரா*, எனக்கு*உதவி கிடைக்குமா*என்பது சந்தேகத்திற்கு உரியது*என்று என்னிடம்**சொன்னார் .* பதிலுக்கு*நான்* , முதலில் நீங்கள் அவரை*போய்* சந்தியுங்கள் . தன்னை*விமர்சனம் செய்தவர்களை கூட*, தன்னை*நேரில் வந்து சந்தித்து*உதவி கேட்டால்*மறுத்ததாக*நான் கேள்விப்பட்டதில்லை . எனவே நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்றேன்* .வேறு வழியில்லை*என்பதால் , ஒருநாள்*காலை*7 மணியளவில் எம்.ஜி.ஆரை சந்திக்க*ராமாவரம் சென்றார் .


தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தினசரி தன் வீட்டில்*பொதுமக்களிடம் கோட்டைக்கு செல்வதற்கு முன்பு வரிசையில்*நிற்கும்*பொதுமக்கள் சிலரிடம்*மனுக்கள்*வாங்குவது வாடிக்கை. அந்த வரிசையில்*.சங்கரய்யா நின்றிருந்தார் .அவர் உருவத்தில் குள்ளமாக இருப்பார் . அவரை*பார்த்துவிட்ட*எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவரை*தனியே அழைத்து வரும்படி கூற , அவர் வந்ததும்*என்ன வரிசையில் நிற்கிறீர்கள்.*என்ன விஷயம் .தயங்காதீர்கள் .விரைவாக சொல்லுங்கள் என்றார்*எம்.ஜி.ஆர்.*ஐயா, என் மனைவிக்கு*உடல்நலம் சரியில்லை . நானிருக்கும் இடத்தில உள்ள உறவினர்கள் , நண்பர்கள்,கட்சி*பிரமுகர்கள் பலரிடம் கேட்டு பார்த்து ஒன்றும் பலனில்லை . உடனடியாக மருத்துவ*சிகிச்சை அளிக்க*வேண்டிய சூழ்நிலை .நண்பர் ஒருவரின்*யோசனைப்படி , நம்பிக்கையுடன் உங்களை*நாடி வந்திருக்கிறேன் .என்றார்*.சங்கரய்யா .* எம்.ஜி.ஆர். சிறிது நேரம் இருக்க சொல்லி,பொதுமக்களை*அனுப்பியதும், விவரங்கள் கேட்டறிந்தார் . பின்னர் தனது*உதவியாளரிடம் சைகை காட்டி ரூ,50,000/- வரவழைத்து , சங்கரய்யாவிடம் அளித்து*உடனே ஆவன*செய்து எனக்கு*தகவல் அளியுங்கள் என்று சொல்லி அனுப்பினார் . சங்கரய்யாவுக்கு தேவைப்பட்ட*பணம் வெறும் ரூ.3,000/- தான் .வீட்டிற்கு சென்று*பணக்கட்டை*பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்*சங்கரய்யா . இது நடந்தது*1979ல், எம்.ஜி.ஆர். அளித்த பணம் இப்போதைய*மதிப்பில்*பல லட்சங்கள் இருக்கும்*.


சங்கரய்யா தன்* மனைவியை*ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதித்து*நல்ல சிகிச்சை*அளித்து ,ரூ.15,000/- செலவு* செய்து* அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த*பின்னர் , சங்கரய்யா தன் வீட்டு*ஹாலில்*பெரிய எம்.ஜி.ஆர். புகைப்படம் ஒன்றை*மாட்டி வைத்தார் .விவரம் அறிந்து*நான் சங்கரய்யாவிடம் விசாரித்தேன் . எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு பெற்றீர்கள் என்று அறிந்தேன் . நீங்கள் திராவிடர்*கழக கட்சியை சார்ந்தவர் ஆயிற்றே. எப்படி எம்.ஜி.ஆர். படம் வீட்டில்*வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் . பதிலுக்கு சங்கரய்யா என் மனைவியின்*மருத்துவ*சிகிச்சைக்கு நான் பணம் கேட்காத* ஆளில்லை. ஒருவரும்*உதவிக்கு வரவில்லை . எம்.ஜி.ஆரை கடுமையாக அரசியல் ரீதியில் விமர்சனம் செய்தும்*, பகைவனுக்கு* அருள்வது போல் , காலத்தின் அருமை கருதி*,நிலைமையை உணர்ந்து*உடனடி உதவி செய்து , என் மனைவியின்*உயிரையம், குடும்ப மானத்தையும்* காப்பாற்றிய**அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றார்*சங்கரய்யா .


சிறிது*காலத்திற்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் சங்கரய்யாவின் 75*வது*பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர் . சங்கரய்யாவும் எம்.ஜி.ஆரை சந்தித்து*ஆசி பெற்று ,தன் 75 வது* பிறந்த நாள் பற்றி கூறி , தன்*வீட்டில்*மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துவிட்டு வந்தார் .* அன்று மாலை குடும்பத்தினர் , மற்றும் பேர குழந்தைகள் அனைவரும் குதூகலமாக கொண்டாட ஆயத்தமாக இருந்தனர்*.இரவு 7 மணியளவில் அந்த குடிசைமாற்று வாரிய பகுதியில்*திடீரென* அம்பாசிடர் கார் ஒன்று வந்தது .அப்போது சாலையில் கொஞ்சம்*மழையால்**சேறு*இருந்தது .எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி*அந்த சேற்றை*பொருட்படுத்தாமல் , வேட்டியை*தூக்கியவாறு லாவகமாக தாண்டி வீட்டுக்குள்*நுழையும்போது குடும்பத்தினர் அனைவருக்கும்**இன்ப அதிர்ச்சி* . சங்கரய்யா உடன் விரைந்து வந்து எம்.ஜி.ஆரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு உடன் தெருவாசல்* கதவை மூடிவிட்டார் . ஏனெனில் விவரம் அறிந்தால்*அந்த இடமே*பொதுமக்களால் சூழப்படும் .


எம்.ஜி.ஆர். சங்கரய்யாவின் மனைவியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் . சங்கரய்யாவின் மனைவி , உங்கள் புண்ணியத்தால் நான் உடல்நலம் தேறிவிட்டேன் ,* என்று என் கணவர்*உங்கள் வீட்டுக்கு காலடி*வைத்து உங்களிடம் உதவியை நாடினாரோ*, அன்று முதல் எங்கள் குடும்பம்*நன்றாக இருக்கிறது . நாங்கள் மூன்று வேளை திருப்தியாக உண்டு வாழ்கிறோம் .மிகவும் நன்றி ஐயா என்றார் .* வேறு ஏதாவது உதவி தங்களுக்கு தேவைப்படுகிறதா ,சொல்லுங்கள் . சங்கரய்யா என்னிடம் கேட்க மாட்டார் என்றுதான்*நான் உங்களை கேட்கிறேன். தயக்கம் வேண்டாம். தைரியமாக கேளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் தனது உதவியாளரை*அழைத்து*ரூ.75,000/-பணத்தை ,* 75 வயதை*கணக்கில் கொண்டு*சங்கரய்யாவின் மனைவியிடம் அளித்தார் . பின்பு*சங்கரய்யாவிடம் அ. தி.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம்*சாலையில் உள்ளது . அந்த அலுவலகத்தில் வரும் தொலைபேசி எண்களை தினசரி பதிவேடுகளில் பதிவு செய்து தாருங்கள்*உங்களுக்கு சம்பளமாக*ரூ.10,000/-தரப்படும் என்று சொல்லி*விடை பெற்றார் எம்.ஜி.ஆர். சங்கரய்யா அப்போது தன் வாழ்நாளில்*ரூ.600/- க்கு*மேல் சம்பளம் வாங்கியதில்லை. எனவே உண்மையில் எம்.ஜி.ஆரை தன் கடவுளாகவே பார்த்தார் சங்கரய்யா .


மேற்கண்ட சம்பவத்தை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதுபோல ஏராளமான பேர்களுக்கு எந்த பிரதிபலனோ, பிரதி உபகாரமோ இல்லாமல் அவர்களின் நிலை அறிந்து, காலத்தே எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் எண்ணற்றவை .இதனால்தான் இன்றும் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்பட பாடல்கள் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகின்றன .* இந்த மாதிரி*செய்கைகளால்தான் , மக்கள் திலகம், தமிழக முதல்வர் என்கிற நிலைப்பாடுகளை கடந்து , காலங்கள் மறைந்தாலும், காட்சிகள் மாறினாலும் ,*மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்..


தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமான காலத்தில் , எம்.ஜி.ஆர். நாடக மன்றம், சிவாஜி நாடக மன்றம், எஸ்.எஸ். ஆர். நாடக மன்றம் , எம்.ஆர். ராதா நாடக மன்றம் , மனோரமா நாடக மன்றம் ,மனோகர் நாடக மன்றம் என பல மன்றங்கள் இருந்தன .எம்.ஜி.ஆர். நாடக மன்றம் சார்பில் 1959ல் இன்ப கனவு என்ற நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது , கதைப்படி, நடிகர் குண்டுமணி (150 கிலோ எடை ) யை தூக்கி கீழே கிடத்த வேண்டும் .* அப்போதுதலைக்கு மேல் தூக்கும்போது* வழுக்கி, எம்.ஜி.ஆர். கால் மீது குண்டுமணி விழ , உடனே படுதா* போடப்பட்டது . அப்போது எம்.ஜி.ஆர்.கால் முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார் . அந்த மாதிரி நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். வாத்தியார் போல சிறு குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி அளிப்பது போல காட்சி அமைக்கப்பட்டது . அந்த காட்சி முடிந்து குழந்தைகள் புறப்படும்போது , போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது , அனைவருக்கும் சாக்லேட் (இனிப்பு ) வழங்குவார் எம்.ஜி.ஆர். அப்போது தங்கை பாத்திரத்தில் நடித்த நடிகை என்ன அண்ணா , நீங்கள் அளிப்பதே இலவச கல்வி* பயிற்சி . இனிப்பு வழங்க ஏன் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர். என்ன செய்யறது தங்கச்சி, எனக்கு இருக்கிற வருமானத்தில் செய்கிறேன். வருமானம் மட்டும் அதிகம் கிடைத்தால் இவர்களுக்கு இனிப்பு என்ன சாப்பாடே போட்டு அனுப்புவேன் என்று கூறுவாராம் .7 வயதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல* என்று ம் சொன்னாராம். இந்த அனுபவங்கள்தான் தான் பட்ட கஷ்டம் போல சிறு குழந்தைகள் சாப்பாட்டிற்கு அவதிப்பட கூடாது என்கிற வகையில் , பிற்காலத்தில், தான் முதல்வரானதும்*சத்துணவு திட்டம், இலவச செருப்பு, இலவச பல்பொடி இலவச சீருடை போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்* எம்.ஜி.ஆர்.*



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் நிகழ்ச்சியில் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ( படகோட்டி*), ஒரு பக்கம் பாக்குறா*(மாட்டுக்கார வேலன்), சிரித்து*வாழ வேண்டும் (உலகம் சுற்றும் வாலிபன் ) ஆகிய பாடல்கள்*ஒளிபரப்பாகின .

orodizli
17th April 2020, 07:35 PM
எதிரிகளைப் பந்தாடும் #MGR ஆரம்ப காலப் படங்களில் கடுமையாகச் சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார்.

சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார், உன்னைத் தாக்குவது என் நோக்க மல்ல என்று சொல்வது போல. வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். ‘

'நான் ஆணையிட்டால்’ என்று தங்களுக்காக முழங்கிய திரைப் பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்குப் பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்த பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காகத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.

‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘பாசம்’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல் காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கு இடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார்.

சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். பாடல்களில் நாம் கண்ணதாசனையோ ,வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் பாடல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கும்.

‘குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்’ என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன் படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. பல கோடானுகோடி கணக்கானோரை impress செய்யும் வகையில் பயன்படுத்தினார். திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும்

எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரை, சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக வைத்திருந்தது.

-கட்டுரையாளர் திரு.மதன்.......... Thanks.........

orodizli
17th April 2020, 07:41 PM
12.07.1974 இல் தடைகளை தாண்டி வருகிறது புரட்சிதலைவரின் "நேற்று இன்று நாளை", படம்..

உ.சு.வா. மாதிரி கோட்டை விட்டுவிடாமல் படத்தை வரவிடாமல் செய்ய அன்று ஆண்ட தீயசக்தி வழக்கம் போல தூண்டி விட்டது.

கும்பகோணம் நகரில் பெரும் பதட்டம் ஆரம்பம் ஆனது.. சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த ஐ.ஜி.அருள் அவர்கள் ஆளும் கட்சி மன்னை நாராயணசாமி என்றாலும் சரி அதிமுக பிரமுகர் எஸ்.ஆர்.ராதா குழுவை சேர்ந்த எம்ஜியார் மன்றம் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கலவரம் வராமல் தடுக்க இரு தரப்பினரையும் அழைத்து ஒரு அதிகாரி மூலம் பேச்சு நடத்த.

அந்த நாளும் வந்தது....நகர் எங்கும் இருந்த தலைவரின் விளம்பர போர்டுகள், பட போஸ்டர்கள் கிழித்து எறிய பட்டன.

படம் ஓடவேண்டிய அரங்கை கொளுத்தி விட ரவுடிகள் பட்டாளம் தயார் ஆகின.......அவர்கள் அரங்கை நெருங்கும் போது அங்கே நூற்றுக்கணக்கில் எம்ஜியார் படை திரண்டு அவர்களை தடுத்தனர்.

இருதரப்பிற்கும் ஏற்பட்ட கடும் மோதலில் சேதம் இருபுறமும் ஏற்பட அங்கே அரங்கில் படம் அமர்க்களமாக ஓட துவங்கியது.

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே பாடலுக்கு எழுந்த கரவொலி கும்பகோணம் நகர் எங்கும் ஒலித்தது.

இதை தாங்க முடியாத தீயசக்தி கும்பல் எஸ்.ஆர் ராதாவுக்கு சொந்தம் ஆன அவர் பிரிண்டிங் பிரெஸ்ஸை அடித்து நொறுக்கி சேதம் செய்தது...தடுக்க முயற்சி செய்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விஷயம் அறிந்த மன்னர் ஏன் இப்படி ப்ரெஸ்க்கு ஆட்கள் காவல் இல்லையா என்று வருந்த உடனே கிளம்பி கும்பகோணம் வருகிறேன் என்று தகவல் சொல்ல.

அதை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் துள்ள....அடுத்த வாரம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தலைவர் பேசி முடிந்து சேதம் அடைந்த பிரஸ் ஐ பார்வை இட்டபின்.

எஸ் .ஆர்.ராதாவை அழைத்து ரூபாய் 25000 கொடுக்க அதை உடனே பிரஸ் சேதத்துக்கு 11000 ரூபாய் மற்றும் காயம் அடைந்த இருவருக்கு ஆளுக்கு 2000 போக மீதி 10000 ரூபாயை தலைவர் வசம் திருப்பி கொடுக்க.

வள்ளல் அவரை பார்க்க அவர் வள்ளலை பார்க்க எப்படிப்பட்ட தலைவர் எப்படிப்பட்ட தொண்டர் என்று அருகில் இருந்தவர்கள் வியக்க.

1977 சட்டமன்ற பொது தேர்தலில் கும்பகோணம் தொகுதிக்கு கழகம் சார்பில் 10 பேர் மனு செய்ய...எஸ்.ஆர்.ராதா மனு செய்யவில்லை.

ஏன் என்று தலைவர் பட்டியல் பார்த்து விசாரிக்க நான் கட்சிக்கு உழைக்கவே இருக்கேன் பதவிக்கு உங்க கிட்ட வரவில்லை என்று சொல்ல.

வேட்பாளர் பட்டியலில் எஸ் .ஆர்.ராதா பெயர் வர அவரும் மற்ற எம்ஜியார் மன்ற தோழர்கள் கட்சியினர் பம்பரமாக சுற்றி பணியாற்ற...

30 ஆண்டுகள் ஆக காங்கிரஸ் கட்சி கோட்டை ஆக இருந்த கும்பகோணம் தொகுதியில் மன்னவர் எம்ஜியார் கண்ட கொடி வெற்றி பெற்று பட்டொளி வீசி பறந்தது.

வெற்றி பெற்ற தொண்டர் எஸ்.ஆர்.ராதா அவர்களை வீட்டு வசதி துறை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் தொண்டர்களின் காவலர் புரட்சிதலைவர்..

வாழ்க. எம்ஜியார் புகழ்.

நன்றி....தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.

பின்குறிப்பு.

அப்படிப்பட்ட எஸ் ஆர்.ராதா அவர்கள் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு எம்ஜியார் விழாவில் அருமையாக தலைவர் பற்றி பேசினார்...விழா தி.நகரில் நடைபெற்றது....நன்றி.

படத்தில் தலைவருடன் நடந்து வருபவர் எஸ்.ஆர்.ராதா அண்ணன் அவர்கள்....... Thanks...

orodizli
17th April 2020, 08:02 PM
சென்ற பதிவில் தங்க சுரங்கம் மற்றும் அடிமைப்பெண்ணை பற்றி சொல்லியிருந்தேன். இந்த பதிவில் 1969ம் வருட கடைசியில் வெளிவந்த இரண்டு படங்களை பற்றி சொல்கிறேன். அதில் ஒன்று நம்நாடு மற்றொன்று சிவந்த மண்.

நம்நாடு தீபாவளிக்கு ஒரு நாள் முன் நவ 7ம் தேதியும் சிவந்த மண் தீபாவளிக்கு ஒரு நாள் பின்னால் நவ 9ம் தேதியும் வெளிவந்தது. நம்நாட்டை பொறுத்தவரை அடிமைப்பெண்ணின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த படம் என்பதாலும் ,விஜயா கம்பெனி நாகிரெட்டியின் படம் என்பதாலும் படத்தின் வெற்றியை பற்றி எந்தவித சந்தேகமும் எழவில்லை. படமும் வெளிவந்து நல்ல விமர்சனமும் எழுந்ததால் படம் 50 நாட்கள் சார்லஸில் ஓடியது. அதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லோரும் சிவந்த மண்ணின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

நவ 9ம் தேதியும் வந்தது. படம் வெளியானவுடன் முதல் காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒன்றிரண்டு எம்ஜிஆர் ரசிகர்களும் ஆரம்ப காட்சியை பார்த்து விட்டு ரொம்ப குஷியாக வந்தார்கள். படம் டப்பா, குப்பை நான்கு வாரங்கள் கூட ஓடாது என்ற விமர்சனங்களை அனைவரிடமும் சொன்ன போதிலும் படம் முதல் வாரம் சிவாஜி ரசிகர்களால் நன்றாகவே போனது. அதுமட்டுமல்ல
அந்த படத்திற்கு வந்த விளம்பரம், பிரம்மாண்டம், வெளிநாட்டு காட்சிகள், பிரமிட் காட்சிகள் ,வெற்றி பெற்ற பாடல்கள் போன்ற காரணத்தால் எல்லோரும் ஒரு தடவை படம் நன்றாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் பார்க்க விரும்பினார்கள். எப்படியும் நான்கு வாரங்களுக்கு மேல் ஓட வாய்ப்பில்லாத ஒரு படத்தை 100நாட்கள் ஓட்டுவதென்றால் சிவாஜி ரசிகர்களின் திறமையை என்னவென்று சொல்லுவது.

ஆனாலும் ரசிகர்களும் இந்த படத்தை விட்டால் சிவாஜிக்கு வேறு பிரமாண்ட படம் கிடையாது என்ற காரணத்தால் என்ன விலை கொடுத்தாவது படத்தை 100 நாள் ஓட்ட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். படம் இரண்டாவது வாரம் காலை காட்சி மற்றும் செவ்வாய் வெள்ளி மாட்னி காட்சிகள் பாதி தியேட்டர் கூட நிரம்ப சிரமப் பட்டதால் ரசிகர்கள் தங்களது இந்திரஜித் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே வசூலில் பின் தங்கி விட்டால் பின் அதை ஈடு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு முதலில் இருந்தே அடிமைப்பெண்ணின் ஷோ பை ஷோ வசூல் ரிப்போர்ட்டை தியேட்டர்காரர்களிடமிருந்து வாங்கி அதை கம்பேர் பண்ணியே வசூலை ஏற்றத் துவங்கினார்கள்.

இரண்டும் ஒரே தியேட்டரில் வெளிவந்ததால் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் வசதியாகப்போனது. தியேட்டர் வழியாக எப்போது யார் சென்றாலும் ப்ரீ டிக்கெட் ரசிகர்கள் மூலமாக கிடைத்து விடும். சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் வசதியானவர்கள்,பணக்கார வீட்டு பையன்கள். தெய்வ மகன் படத்தில் செல்ல மகனாக சிவாஜி வருவாரே அதை போலதான் அவரது ரசிகர்களும். பெற்றவர்களும் பிள்ளையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் முழு ஒத்துழைப்பை நல்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பணத்தை தண்ணீராக செலவு செய்த போதிலும் 50 நாட்களில் ௹ 73000 க்கு மேல் முடியவில்லை.அடிமைப்பெண் ௹ 78678 வசூல் செய்தது. ௹5000 க்கு மேல் வித்தியாசம்.

ஒரு ஷோ ஹவுஸ்புல் ஆனால் அதிக பட்சம் ௹800 தான் கிடைக்கும். இப்படியே தொடர்ந்து டிக்கெட் கிழித்து 13 வார முடிவில் அடிமைப்பெண்ணை தாண்ட சுமார் 7000க்கும் அதிகமாக தேவைப்பட்டது. அப்போது சிவந்த மண் தினசரி 2 காட்சிகள் தான் நடந்தது. உடனே சிவாஜி ரசிகர்கள் ஒரு ஐடியா பண்ணினார்கள். தினசரி மாட்னி காட்சிக்கு வேறு மொழிப்படம் குறைந்த பட்ஜெட்டில் திரையிடுவது அந்த படம் ஹவுஸ்புல் ஆன மாதிரி D C R எழுதுவது ரிகார்டுகளில் சிவந்த மண் 3 காட்சிகள் ஓடிய மாதிரி எழுதி மொத்த வசூலையும் சிவந்த மண் கணக்கில் சேர்த்து விடுவது என்று பல ஜகஜ்ஜால வித்தைகளை செய்து சிவந்த மண்ணை 101 நாட்கள் ஓட்டி வசூலிலும் ௹ 106200. என்று கொண்டு வந்து வெற்றி விழாவை எம்ஜிஆர் ரசிகர்களின் வயிற்றெரிச்சலோடு கொண்டாடினார்கள். அடிமைப்பெண் மொத்த வசூல் ௹ 105816 /13 பை.
ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். சிவந்த மண் 100 வது நாள் விளம்பரத்தில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா மட்டும் தனியாக தெரிவதை பாருங்கள்.திருநெல்வேலி நாகர்கோவில் ஈரோடு தஞ்சாவூர் வேலூர் திண்டுக்கல் முதலான ஊர்களை காணவில்லை. அப்படி என்றால் தூத்துக்குடி மக்கள் மட்டும் விரும்பி பார்த்து ஓடிய படமா? பொதுவாக திருநெல்வேலியை விட தூத்துக்குடி வசூலும் ஓடுகின்ற நாட்களும் 40 சதவீதம் குறைவு. இது விநியோகஸ்தர்கள் கணக்கு. திருநெல்வேலியில் ஓடிய நாட்கள்
76. அப்படியென்றால் தூத்துக்குடியில் அதிக பட்சசமாக 42 நாட்கள் ஓடலாம். ஆனால் 101 நாட்கள் ஒட்டப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்றாகிப் போனது.

ஆமாம் இவ்வளவு பணத்தை சிவாஜி ரசிகர்கள் எப்படி கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்கு பலியானவர் ஒரு வெறி பிடித்த சிவாஜி ரசிகர். தூத்துக்குடியை பொறுத்தவரை சிவாஜி படம் நல்ல படமாக இருந்தால் 3 வாரம் ஓடுவதே பெரிய விஷயம். ராஜா 21 நாட்களும் சொர்க்கம் 21 நாட்களும்
ஞானஒளி 18 நாட்களும்தான் ஓடின.
இவ்வளவு ஏன்? தியாகம் 3 வாரம்தான் ஓடியது. அதைவிட சிவாஜி ரசிகர்களால் பெரிதும் சாதனை என்று போற்றப்பட்ட திரிசூலம் இங்கே சிறிய தியேட்டரான காரனேஷனில் 50 நாட்கள் ஓடுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. ஏனென்றால் சிவாஜி படத்தை திரும்ப திரும்ப பார்க்க யாரும் முன்வரமாட்டார்கள். அதனால் எம்ஜிஆர் ரசிகர்களின் கேலிக்கு ஆளாகியதால் எப்படியும் சிவந்த மண்ணை ஓட்டி சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி அவர்களை அப்படி செய்ய தூண்டியது என நான் நினைத்ததுண்டு.

அப்படிப்பட்ட ஊரில் ஒரு சிவாஜி படத்தை 100 நாட்கள் ஓட்டுவதென்பது கற்பனைக்கெட்டாத
ஒரு விஷயம். அதை திறம்பட செய்து முடிப்பதற்கு அந்த சிவாஜி வெறியர் செய்த காரியம்தான் காரணம். அப்படி என்ன செய்தார் என்றால் அவர் தனக்கு சொந்தமான வீட்டை இந்த படத்திற்காகவே விற்று அதை அப்படியே சிவந்த மண் வசூலை உயர்த்துவதற்காக பயன்படுத்தி கொண்டார். இத்தனைக்கும் அவர் ஒரு நல்ல எண்ணெய் வியாபாரி.
அவர் பெயரிலேயே பிராண்டட் நல்லெண்ணை வியாபாரம் செய்பவர். ஆனால் சமீபத்தில் அவரை பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் எல்லா சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடுகிறார் என்கிறார்கள். இன்று அவர் விற்ற சொத்து மட்டும் இருந்தால் பல லட்சங்களுக்கு மேல் விலை போகும்.
எல்லாம் காலம் செய்த கோலம். சரி அந்த வெற்றியாவது நிலைத்ததா என்றால் அதுவுமில்லை. எப்படி படத்தின் தயாரிப்பாளர் படத்தை எடுத்து கடன்காரர் ஆனாரோ அதை போல் படத்தை ஓட்டி அவரது ரசிகரும் இன்று கடன்காரனாக நிற்பது வேதனையாக இருக்கிறது.

அடுத்து வந்த மாட்டுக்கார வேலன் 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 77 நாளில் எடுத்தது அவர்களுக்கு வசதியாய் போனது. அதற்கடுத்து வந்த ரிக்ஷாக்காரன் 50 நாளிலேயே 85000 தாண்டி சிவந்த மண்ணை விட 12000 அதிகம் வசூல் செய்தது. அதையும் அதிக நாள் ஓட்டினால் பிரச்னை ஆகும் என்று தூக்கி விட்டார்கள். அதற்கு அடுத்து வந்த உலகம் சுற்றும் வாலிபன் இனிமேல் யாரும் சாதனையை பற்றி பேசக்கூடாது என்பதற்காகவே படம் 104 நாட்கள் ஓடி ௹186000 தாண்டி வசூல் செய்ததாக கணக்கு காண்பித்தாலும் கணக்கில் வராமல் சுமார் ௹100000 க்கும் அதிகமான வசூலை ஏப்பமிட்டார்கள் என்பதே எல்லோருடைய கணிப்பும். மூன்று வருடம் மட்டும் நீடித்த சிவந்த மண்ணின் சாதனையை உலகம் சுற்றும் வாலிபன் வந்து தகர்த்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதான் புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையின் கதை............ Courtesy by: Mr. Shankar, fb.,

orodizli
17th April 2020, 08:04 PM
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!........ Thanks to mr. Aiyappadas fb.,

orodizli
17th April 2020, 08:31 PM
"நேற்று இன்று நாளை", படம் என்றவுடன் எனக்கு ஒரு மறக்க முடியா புரட்சி நினைவு.
ஈரோட்டில் படம் ரிலீசன்று போடக் கூடாது என்று அப்போதைய ஆட்சியாளர்களால் வெளியிட இருந்த செண்ட்ரல் தியேட்டர் நிர்வாகத்தை மிரட்டி தடுத்தனர்,தியேட்டர் வாசலில் படம் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான,ரசிகரகளும் கழக தொண்டர்களும் எம் ஜி.ஆர் மன்றத் தலைவராக இருந்த ஈரோடு அழகரசன் என்பவர் தலைமையில் ஒன்று கூடி தலைவரின் படம் திரையிடவில்லை என்றால் வேறு எந்தத் தியேட்டரிலும் படம் ஓடாது என்று அனைத்துத் தியேட்டரிலும் ஒரு வாரகாலம் நிறுத்திக் காட்டினோம்,அதோடு மட்டுமல்லாமல் அன்றைக்கு வீரப்பன் சத்திரம் எனும் இடத்தில் தி.மு.க அமைச்சர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டது,ஆட்சி,அதிகாரத்தை மண்டியிட வைத்து தலைவர் படம் ரிலீஸ் ஆன பிறகுதான் மற்ற தியேட்டர்கள் திறக்கப்பட்டன....... Thanks...

orodizli
17th April 2020, 08:31 PM
பாமரர்,படித்தவர்,உடன் நடித்தவர், கட்சிக்காரர் இவர்களுக்கு தலைவர் உதவினார் சரி.

10 வயது பாலகன் செந்திலுக்கு எப்படி...

1977 தலைவர் முதல்வர். ..பெரம்பலூர் மாவட்டம் சூரப்பனூர் நம்ம செந்தில் குமரனுக்கு.

செந்தில் குமரன் அப்பா திருச்சி கூட்டுறவு வங்கி மேலாளர்..ஒரு நாள் அவருக்கு வெகுதொலைவில் உள்ள பஞ்சம்பட்டி கிளைக்கு மாறுதல் உத்தரவு வர குடும்பத்தில் ஒரே சோகம்.

அங்கு போய் வரவே 7 மணி நேரம் ஆகும் என்பதால் செந்தில்குமரன் அப்பா அந்த ஊர் அருகில் தங்கி வேலை பார்த்து விட்டு சனிக்கிழமை வீட்டுக்கு வந்து அடுத்த நாள் மாலை வேலைக்கு திரும்பிவிட.

நரக வாழ்க்கை செந்தில் குடும்பத்துக்கு....ஊரில் வேறு கடும் குடிநீர் தட்டுப்பாடு...பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க அம்மா மதியம் போனால் இரவு ஆகிவிடும் சிலநாள் வீட்டுக்கு வர.

ஒரு நாள் டீக்கடையில் சிலர் எம்ஜியார் பற்றி பெருமையாக பேசி கொண்டு இருக்க உடனே செந்தில் ஊரில் இருந்த தபால் நிலையத்தில் ஒரு இன்லாண்ட் கவர் வாங்கி.

அதில் அவனுக்கு தோன்றிய படி......முதல்வர் எம்ஜியார் அண்ணா என்று ஆரம்பித்து... குடும்ப சூழல்... ஊர் குடிநீர் கஷ்டம் எல்லாம் மை ஒழுகும் குண்டு பேனா கொண்டு எழுதி ஒட்டி

முதல்வர்...எம்ஜியார் அவர்கள்...சென்னை கோட்டை என்று முகவரி எழுதி போஸ்ட் செய்து விட.

அடுத்த வெள்ளிக்கிழமை இரவு செந்தில் தூங்கி கொண்டு இருக்க அவன் அப்பா டேய் எழுந்திரு என்று மிரட்டி எழுப்பி ஒரு கவரை அவனிடம் காட்ட.

உயர்த்த பட்ட விளக்கின் ஒளியில் அதை செந்தில்குமரன் படிக்க....அதில்..

பெருனர்.... கே.சாமிநாதன்...என்று ஆரம்பித்து... உங்கள் மகன் செந்தில்குமரன் அவர்கள் எழுதிய வேண்டுகோள் கடிதத்தின் படி உங்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு நீங்கள் மீண்டும் அரும்பாவலூர் கிளைக்கு மாற்றம் செய்ய படுகிறீர்கள் என்று இருக்க.

மறுநாள் காலை சூரப்பனூர் கிராமத்துக்கு அரசு அதிகாரிகள் படை எடுத்து அந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளும் தூர் வார பட்டு பெரிய பொது கிணற்றில் மின் மோட்டார் பொறுத்த பட்டு தண்ணீர் விடாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட.

அன்று முதல் செந்தில்குமரன் மனதில் மட்டுமல்ல அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் எம்ஜியார் நிரந்தர ஹீரோ ஆனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?...

வாழ்க எம்ஜியார் புகழ்..தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி.......... Thanks...

orodizli
17th April 2020, 08:38 PM
#தொண்டர்களின் #மைண்ட்வாய்ஸ்

1977 பொதுத்தேர்தலில் பொன்மனச்செம்மல் அருப்புக்கோட்டையில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். ஆனால் அந்த தொகுதிக்கு எளிமையும், மகளுக்குத் தொண்டாற்றும் கடமை உணர்வும் கொண்ட பஞ்சவர்ணம் என்பவருக்குத்தான் சீட் கிடைக்கும், என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரு சில முக்கிய காரணங்களால் புரட்சித்தலைவரே அத்தொகுதியில் நிற்கும்படி ஆகிவிட்டது.
ஆனால்.. மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம், தனக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது, நம் பொன்மனச்செம்மலுக்கும் தெரியும்.

தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெறுகிறார். முதல்வர் ஆகிறார். நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு வள்ளல் பெருந்தகை அருப்புக் கோட்டைகு வருகிறார். பஞ்சவர்ணம், அங்கே, கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார்.

கட்டுக்கடங்காத லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில், மக்கள்திலகம் மைக்கைப் பிடித்து,

“நீங்களெல்லாம் ஏன்-எதிர்க்கட்சிகள் கூட, சென்னை கோட்டையில் அமர்ந்திருக்கும் இந்த ராமச்சந்திரனை, அருப்புக் கோட்டை தொகுதியில் இனி பார்க்க முடியுமா? இவரால் இந்தத் தொகுதிக்கு என்ன விமோசனம் பிறக்கப் போகிறது! அவசர தேவைக்கு எப்படி பார்க்க முடியும்? என்றெல்லாம் நினைக்கலாம். எதிர்க்கட்சிகள் விமர்சனமே செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ராமச்சந்திரனை இனி இங்கே இருக்கிற உங்கள் அனைபை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம் வடிவில் பார்க்கலாம். இனி அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம். கோரிக்கைகளை வைக்கலாம். அதையெல்லாம் உடனடியாக தீர்த்து, வைப்பேன். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போகிறேன். என்று வள்ளல் சொன்னவுடன் கூட்டமே ஆர்ப்பரிக்கிறது.

விழிகளில் வேதனையை தேக்கி வைத்திருந்த பஞ்சவர்ணத்தின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. இனி அருப்புக்கோட்டைக்கு இவர்தான் எம்.எல்.ஏ. என்று சொல்லும் அளவுக்கு நம் வளல் பஞ்சவர்ணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்...

தொண்டனிடம் உண்மையான அன்பு, கொள்கை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு...இப்பல்லாம் காணாமல் போனவைகளில் "லிஸ்ட்" ல போயிருச்சுன்னு சொல்கிற
உங்களின் "மைண்ட் வாய்ஸ்" நான் 'கேட்ச்' பண்ணிட்டேன்............. Thanks.........

fidowag
17th April 2020, 09:07 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலை*வேந்தன்*எம்.ஜி.ஆர்.படங்கள் ஒளிபரப்பு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

15/04/20* *-சன் லைப் -* * * *காலை 11மணி* -* * * நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * * *முரசு டிவி* * - காலை 11 மணி &இரவு 7 மணி _நீதிக்கு தலைவணங்கு*

* * * * * * * * *மூன்* டிவி* * - இரவு* 7 மணி* * - நல்ல நேரம்*

* * * * * * * * *மெகா 24 டிவி _ இரவு 9 மணி -தர்மம் தலை காக்கும்*

16/04/20* * சன்* லைப்* *- காலை 11 மணி* - தனிப்பிறவி*

* * * * * * * * * *மெகா டிவி* *- மதியம் 12 மணி* *- கலங்கரை விளக்கம்*

* * * * * * * * * *வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி _ நீரும் நெருப்பும்*

17/04/20* * புதுயுகம் டிவி -இரவு 7 மணி* - நீரும் நெருப்பும்*

18/04/20* முரசு டிவி - காலை 11 மணி & இரவு 7 மணி- விவசாயி*

20/04/20* *-ஜெயா டிவி* *-காலை 10 மணி -இதய வீணை*

21/04/20* -ஜெயா டிவி* *- காலை 11 மணி* - பணக்கார குடும்பம்*

* * * * * * * * * *சன் டிவி* * - இரவு 9.30 மணி - அன்பே வா*

22/04/20* *- ஜெயா டிவி* -காலை 10 மணி -தாய்க்கு பின் தாரம்*

23/04/20* -ஜெயா டிவி* - காலை 11 மணி* -குலேபகாவலி*

* * * * * * * * * சன் டிவி* * *-இரவு 9.30 மணி* - எங்க வீட்டு பிள்ளை*

24/04/20* *ஜெயா டிவி* - காலை 10 மணி - பெரிய இடத்து பெண்*

orodizli
17th April 2020, 09:22 PM
“நீயும் நாடோடி மன்னன் தான்” – வாலி
https://www.thaaii.com/?p=25493
*****

“மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

திருச்சி தியாகராஜ பாகவதர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.

சிலம்புச் செல்வர் திரு.ம.பொ.சி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்கள்.

சிலம்புச் செல்வரைக் குறித்துப் பாடிவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது-

“செங்கோட்டை சாய்ந்தாலும்

உன் கோட்டை சாயாது” என்று பாடினேன்.

இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு புலவர் பெருமக்கள் சிரக்கம்பம் செய்தார்கள்.

இதே விழாவில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாராட்ட அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும் வந்திருந்தார்கள்.

நான் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது –

“நீ

இந்தியாவில் பிறந்து

இலங்கைக்குச் சென்ற

இராமச்சந்தினல்ல;

இலங்கையில் பிறந்து

இந்தியாவிற்கு வந்த

இராமச்சந்திரன் !

இருப்பினும்

என்னளவில்

இருவரும் ஒன்றே !

அந்த ராமச்சந்திரன்

சூரிய குலத்தில் வந்தவன்;

நீயும்

உதயசூரியனின்

வழித்தோன்றல் தான்.

அவனும்

ஜானகி மணாளன்;

நீயும்

ஜானகி மணாளன்.

அவனும்

பதவியாசை

பிடித்தவர்களால்

வெளியேற்றப்பட்டான்;

நீயும் அப்படியே.

அவனும்

நாடோடியாகத் திரிந்து

மன்னன் ஆனான்.

நீயும்

நாடோடி மன்னன் தான்.

அவனிடத்தில்

இருந்தது போலவே-

உன்னிடத்திலும்

‘வில் பவர்’ இருந்தது.

அவனும்

குகன் என்னும்

படகோட்டியை

குவலயம் அறியச் செய்தான்;

நீயும்

படகோட்டியின்

பெருமையைப்

பாரறியச் செய்தாய்.

நீயும்

அவனைப் போல்

மீனவ நண்பன்.

அன்று

அவன் வாக்கு

அரச கட்டளை.

இன்று

உன் வாக்கு

அரச கட்டளை.

அந்த ராமசந்திரன்

தெய்வமாக இருந்து

மனிதனாக மாறியவன்

நீ

மனிதனாக இருந்து

தெய்வமாக

மாறியவன்;

அதனால் தான்

உன்னை

இதய தெய்வம் என்கிறோம்.

ஆனால் ஒன்று

அவன்

வாலியை

அம்பு கொண்டு வீழ்த்தியவன்.

நீயோ

வாலியை

அன்பு கொண்டு வாழ்த்தியவன்.

நீயே

எனக்கு

நிஜமான கருணாநிதி”

இப்படி நான் பாடியதும் தொந்தி குலுங்கச் சிரித்தார்கள் வாரியார் ஸ்வாமிகள்.

பிறகு வாரியார் பேசும்போது சொன்னார்கள்.

“பொன்மனச் செம்மலைப் பாராட்டி ‘வாலியார்’ சொன்னதை இந்த ‘வாரியார்’ அப்படியே வழிமொழிகிறேன்”.

வாரியார் ஸ்வாமிகள் இப்படிச் சொன்னதும், அண்ணன் எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“இந்தப் புன்னகை என்ன விலை?’ என்று ஒரு காலத்தில் நான் பாடியது என் நினைவுக்கு வந்தது.”

புதிய பார்வை – இதழில் தொடராக வெளிவந்த வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்கிற தொடரிலிருந்து ஒரு பகுதி........ Thanks...

orodizli
17th April 2020, 09:25 PM
“மக்களிடம் மனச்சலவை செய்த ஒரு திரை வரலாறு எம்.ஜி.ஆர்”- மு.ராமசாமி
https://www.thaaii.com/?p=25219
***

“இந்த நிமிடம் வரையும் எம்.ஜி.ஆர் எனக்குள் அரணாய் நின்று, தன் ஆட்சியை எனக்குள் நீட்சி பெற வைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது.

இன்றைக்கும் என்னுள் விருட்சமாகி நிற்கும் அந்த விதையின் நிழலில் நின்று கொண்டுதான், எந்தவித அசூசையுமின்றி நாடகக்காரனாய் உலகத்தை அதன் போக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடிகிறது.


“என்னடா.. பொல்லாத வாழ்க்கை.. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?” வகையறாப் பாடல்கள் எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் எந்தக் காலத்திலும் வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை என்னால் இப்பொழுதும் உறுதியாகக் கூற முடியும்.

“நாம பாடுற பாட்டும், ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்…
நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்”

என்பது தான் எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களின், பாடல்களின் அடிச்சரடாயும், அழகியலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவிறக்கம் தான் எம்.ஜி.ஆர் படங்கள் என்று ஒற்றை வரியில் எளிமைப்படுத்திக் கொள்ள முடியும்.

1969 ல் ‘நம்நாடு’ திரைப்படத்தில்

“பாலூட்டும் அன்னை
அவள் நடமாடும் தெய்வம்

அறிவூட்டும் தந்தை
நல்வழி காட்டும் தலைவன்

துணையாகக் கொண்டு நடைபோடு இன்று

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று…”

– என எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திப் பிஞ்சு நெஞ்சங்களைப் பஞ்சினால் போர்த்தியிருப்பார்.

43 ஆண்டுகளுக்கு முன் பாரிய படைப்புகளால் சமூகக் கருத்துக்களை மக்களிடம் மனச்சலவை செய்த ஒரு திரை வரலாறு எம்.ஜி.ஆர்!

அதே போல்,

“மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை”

என்று நிழல் பிம்பமாய் வாயசைத்து,

“அஞ்சாமை திராவிடர் உடைமையடா”

என்று புதுக்கணக்கில் அதைப் பெயர்த்தெழுதி, அதில் பொதுவுடமைக்கான வித்தை, அந்தப் பொடி வயதிலேயே என் மனசுக்குள் நிஜமாய் ஒளித்து வைத்ததும் எம்.ஜி.ஆர் தான்.

அந்த வயதில், என் சூழலில், என் வயதுப் பையன்களின் சமூகக் கோபத்திற்கு வடிகாலாய் அமைந்திருந்தது,


“நாளை உயிர் போகும்; இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா” என்ற எம்.ஜி.ஆர் தான்!

‘தோன்றத் தான் போகிறது சம உரிமைச் சமுதாயம்’ என்கிற அவரின் கனவு தான்!

பட்டுக்கோட்டையாரின் பாடல்களாக இருந்தாலும் சரி, அல்லது தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, மருதகாசி, கண்ணதாசன், லட்சுமண தாஸ், புலமைப்பித்தன், வாலி என்று எவருடைய பாடல்களாய் இருந்தாலும் சரி, படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கிற பாடல்கள் எல்லாமே,

அவரின் முத்திரை அறிவிக்கைகள் தாம்!

“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?”

என்ற கேள்வியை அவரே எழுப்பி, ‘மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார்’ என்ற பதிலையும் தந்து நிற்கிற எம்.ஜி.ஆர், அப்போது என் இளம் நெஞ்சுக்குள் இலவம் பஞ்சாய்க் கிடந்தார்.


“ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை” என்றும்,

“சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா,
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவம் அம்மா” – என்றும்,

“வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே” – என்றும்,

திரையில் அவர் நடத்திய சமதர்மப் பாடம் தான், பசுமையாய் எனக்குள் இன்னமும் இனிமை பேசிக் கொண்டிருக்கிறது.

பாடல்கள் பலவிதமாக இருக்கலாம். பலரால் புனையப்பட்டும் இருக்கலாம். ஆனால் பாடலின் உள்ளடக்கம் என்பது எம்.ஜி.ஆர் தான்!

“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே” என்பது தான்!

“உழைப்பவர்கள் உரிமை பெறுவதில் தான் இன்பம்
உண்டாகுமென்றே நீ சொல் தோழா” என்கிற அவரின் கனவு தான்!

“உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்கிற அவரின் பெரு வியப்பு தான்!

“கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்துத் தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக” என்கிற அவரின் சிந்தனைச் சிறகு தான்!

“அழுதவர் சிரிப்பதும்,
சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை” என்கிற அவரின் உறுதி மிக்கத் தெளிவு தான்!

அதனால் தான் ராஜா காலத்துக் கதைப் பின்புலத்தில் கூட அவரால், “தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று உணர்வுபூர்வமாய் வாயசைத்துவிட முடிகிறது.

அவரின் கடைசிப்படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனிலும்’,

“புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்” என்று தான் உண்மையாய் அவர் வாயசைக்கிறார்.


அவரின் அத்தனைப் படங்களையும் இணைக்கின்ற பொதுக்கோடு,
“எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்” என்பது தான்!

பொதுவுடமை பேசும் இந்தவகைச் சிந்தனைத் தடத்தில் தான், அதற்கான சூழல்களைத் திரைப்படத்தில் உருவாக்கித் தன் கருத்தைப் பதிவு செய்தபடி, அவரின் திரைப்பயணமும் அமைந்திருந்தது.

அன்று அவர் உள்ளுக்குள் விதைத்த விதை, அறுபதிலும் வளையாமல் புதுக்கதைகள் எனக்குள் பேசிக் கொண்டேயிருக்கிறது”

(முனைவர்.மு.ராமசாமி எழுதிய “திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை” என்ற நூலில் இருந்து ஒரு பகுதி…)........ Thanks...

orodizli
17th April 2020, 09:28 PM
#எம்ஜிஆர் #நினைவலைகள்
#நான்கு #காட்சிகள்...!
(தலைப்பே அமர்க்களமாயிருக்கே!! )

You tube channel ல்

https://youtu.be/58M4Xw3MntY (காலை)
https://youtu.be/rDgTVyjV4KE (பகல்)
https://youtu.be/gDPj0RgpgEU (மாலை)
https://youtu.be/GqdzayISogI (இரவு)

வாத்தியார் பிறந்த இந்நன்னாளில்
வித்தியாசமான சிந்தனை...
பாராட்டுக்கள்...!

#தமிழ்நதி @ #எம்ஜிஆர் #சேனல் குடும்பத்திற்கு உலகிலுள்ள புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நமஸ்காரங்கள் ������������

எம்ஜிஆர் நினைவாயலத்தைப் பற்றி நிறைய சேனல்களில் பார்த்திருப்போம். மிகப் பிரமாதமாகவும் இருந்திருக்கலாம்...பின்னணிக் குரலிலும், தொழில் நுட்பத்திலும்...பின்னியிருக்கலாம்...
மறுப்பதற்கில்லை...

ஆனால் இந்தக் காணொளியில் #உயிர் #இருக்கிறது என்பது தான் இதன் தனிப்பெரும் சிறப்பு...! ஏனெனில் இதில், வர்ணனையாளர், பேட்டியளிப்பவர் என அனைவருமே தீவிர எம்ஜிஆர் பக்தர்களாயிற்றே! எனவே இதைப் "#புனிதப்பேட்டி" என்று கூறலாம்...����

இந்தக் காணொளிகளின் மூலம் நம் புரட்சித்தலைவர் இந்த இல்லத்தில் நடமாடுவதை ஆத்மார்த்தமாக நாம் உணரலாம்...

எல்லாக் காணொளிகளுமே சிறப்பென்றாலும், அந்த இரவுக்காட்சிக் காணொளி இருக்கிறதே!!! அடடா!!! பார்ப்பவர்களை அப்படியே மனம் உருகச்செய்துவிடும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது...!

இந்தப் பேட்டியில் நாம் இடம்பெறாமல் போய்விட்டோமே! என ஒவ்வொருவரையும் அவர்களையுமறியாமல் நெஞ்சம் கனக்கச் செய்வது திண்ணம்...!

வாத்தியார் வாழை போல...! தலைமுறை தலைமுறைகளாய் நம்மை எப்படித் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் பாருங்கள்...!
உலகில் யாருக்குமே இல்லாத சிறப்பு இது ....!

வாழ்க...!
புரட்சித்தலைவர் திருநாமம் ������������( Thalaivar Birthday Functions... Posts....... Thanks...

orodizli
17th April 2020, 09:30 PM
எல். ஆர் . ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ... 14.

அன்று பெரும்பாலும் வானொலி மூலமாகத்தான் பல பாடல்களும் நமக்கு அறிமுகமாகும் . பொதுவாக கவர்ச்சிப் பாடல்களுக்கே பயன் போன ஈஸ்வரி அவர்களின் குரலில் , அந்த வயதிற்கு முதன் முறையாக ஒரு தனிப்பாடலை ...ஒரு வாழ்த்துப்பாடலாக கேட்க , அவரின் குரலின் இனிமை ..எண்ணெய் வெகுவாகக் கவர்ந்தது. மற்றுமொரு சங்கதி அதில் நாதஸ்வர இசையும் கலந்து ஒழிக்க என் மனம் வரிகளில் புகுந்தது ...

"பிறந்த இடம் தேடி .
நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரையில்
தேசம் நன்மை பெறுக ..."

"ஆல மரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட .."

புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே .."

ஆலங்குடி சோமு அவர்கள் எழுதியது . இவர் மிகவும் சுருக்கமாகவே எழுதியுள்ளார் . கதைக்கு எழுத சற்று மிகைப்படுத்தியே கதைக்கு பொருந்தாத வரிகள் .. எம்.ஜி. ஆர். பார்த்து கே.ஆர். விஜயா. பாடுவதாக இருக்கும் . நான் ஆணையிட்டால் .. திரையில் ஒரு புரட்சி நாயகனை வாழ்த்தும் பாடல் .

ஆயினும் ஈஸ்வரி அம்மா குரலில் , மெல்லிசை மன்னர்கள் இசையில் இந்தப் பாடல் என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் . பின்னாளில் தனது கட்சிப்பரப்புக்காக இப்பாடல் மூளை முடுக்கெல்லாம் ஒலி பரப்பப்பட்டது .

கோதை தனபாலன்
..https://www.youtube.com/watch?v=HRLSkhnGWu0....... Thanks.........

orodizli
17th April 2020, 09:35 PM
#புரட்சித்தலைவர்னா #யாரு???

சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.

தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.

குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...

"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...

ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...

"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"

"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."......... Thanks...

orodizli
17th April 2020, 09:38 PM
#மக்களின் #மனக்கண்ணாடி

பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுதவைத்தார்கள்.
அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடுநெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.

அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால்,கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குதெரியாதஅளவிற்கு அதிகமாக அவருக்குத்தெரியும்.
டைரக்ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.

வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு,எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்துகொள்ளுவார்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார்.

இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரி் கதை தான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.

இந்த மாதிரிப் பாத்திரங்களைஏற்றுக் கொண்டால்தான், மக்களிடையே மரியாதைஇருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும்,சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!

அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவரஅமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.

இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப்பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.

அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்டபழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்துஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.

நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும்ஆரம்பித்தோம்.

‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும்,எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலேஅவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.

அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர்கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்துநிலைத்து நிற்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்.”

மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும்ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம்,தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடிமன்னன்’ 1969 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம்ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகியமூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில்சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும்மக்களின் மனமாற்றங்களை அறிந்து #வெள்ளித்திரையில் #வெற்றியை #எப்போதும் #காணமுடிந்த #நம்பிக்கை #நட்சத்திரமாய்த் #திகழ்ந்தவர்

#மக்கள்திலகம்
#ஒருவரே

#மக்கள்திலகம் பற்றி #கண்ணதாசன்....... Thanks...

orodizli
17th April 2020, 09:40 PM
#இன்றைய #தேவை

எம்ஜிஆர் போன்ற மனித நேயமிக்க தலைவர்களே! நாட்டிற்கு இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ‘டுவிட்டர்’ பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-

எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.

மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

#ஏழைகளைப்பற்றிய #அவரது #இந்த #கரிசனம் #என்னை #வெகுவாய் #அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது.

அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது...!......... Thanks...

orodizli
17th April 2020, 09:44 PM
#இறைவனின் #சித்தம்

திருப்பதி அருகில் கைலாசநாதர் கோனை என்னும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி.

அங்கு ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள்திலகத்துடன் எல்லோரும் உணவுக்காக உட்கார்ந்திருந்தனர்...

சற்றுத் தள்ளி, அழுக்கு உடை, தாடி மீசை கலைந்த கேசத்துடன் கூடிய கோவணம் கட்டிய ஆண்டி ஒருவர் மக்கள்திலகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்...

நான் ரொம்ப நேரமா கவனித்துக்கொண்டேயிருக்கேன். அந்த மனிதர் என்னையே பாத்துட்டு இருக்காரு...ஏதாவது தேவையா இருக்கும்னு நெனைக்கறேன்...என்ன வேணும்னு கேளுங்க அவருக்கு? அப்படின்னாரு மக்கள்திலகம்... (பாருங்களேன்...எப்பவுமே கொடுக்கணுங்கற எண்ணம் தான் வாத்தியாருக்கு)

போய்க்கேட்டபோது, 'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லி...மூர்த்தியின் (டைரக்டர் சேதுமாதவனின் தம்பி) பாக்கெட்டில் கைவிட்டு பால்பாயிண்ட் பேனாவை எடுத்தார்...

பிறகு கீழே கிடந்த ஒரு பிரவுன் பேப்பர் துண்டை எடுத்து விறுவிறுவென ஏதோ எழுதி, 'அந்த மனிதனிடம் கொடு' என்று எம்ஜிஆரைச் சுட்டிக் காண்பிக்கிறார் அந்த ஆண்டி...

மூர்த்தியும் கொடுக்க, அதைப் படித்து லேசான வியப்புடன் புன்முறுவல் பூக்கிறார்...

துண்டுப்பேப்பரில் எழுதியிருந்த அந்த வாசகம்...

"#நீதான் #நாளை #இந்நாட்டுக்கு #முதல்வர்...இது இறைவனின் சித்தம்...உன் முடிவு மிகச் சிறப்பு..."

இச்சம்பவத்திற்குப் பிறகு எவ்வளவு தேடியும் அந்த ஆண்டியைக் காணவில்லை........ Thanks...

orodizli
17th April 2020, 09:45 PM
#வியப்பும் #பக்தியும்

பேராசிரியர். திரு.கு.ஞானசம்பந்தம் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்குச் சென்றிருந்தார்...நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் 'கண்டி' நகரம் வழியாக டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார்...

திடீரென அந்த டாக்ஸி டிரைவர் வண்டியை நிறுத்தி ஒரு காலியிடத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டு பின்னர் காரை ஓட்டத்தொடங்கினார்...

டிரைவரின் செய்கையைப் பார்த்த
ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரே வியப்பு..."அந்த இடத்தில் கோயிலோ வேறொன்றுமோ இல்லை!!! ஒரு காலியிடத்தைக் கும்பிடுகிறாரே!!!!"

ஏன் தம்பி! அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே! அதை ஏன் கும்பிட்டீர்கள்...???

அதற்கு டிரைவர்,
"இந்த இடத்தில் தான் ஒரு காலத்தில் எங்க எம்ஜிஆர் பிறந்தவீடு இருந்தது..."
என்றதும்...!!!

ஞானசம்பந்தன் அவர்கள் அப்படியே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்...
'ஒரு காலியிடத்தில் தங்கள் மனங்கவர்ந்த தலைவன் பிறந்தவீடு என்ற ஒரே காரணத்திற்காக வணங்குகிறார்களென்றால் அந்தத் தலைவன் எப்படிப்பட்ட தலைவனாக இருந்திருக்கிறார்...அப்படிப்பட்ட தலைவன் மேல் இந்த மக்களுக்கு எந்தளவு பக்தி...!

பிரமித்துப்போனார்...பேராசிரியர்...... Thanks...

orodizli
17th April 2020, 09:48 PM
“எம்.ஜி.ஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்”
- கவிஞர் கண்ணதாசன்
https://www.thaaii.com/?p=25662
#

1980 ஆம் ஆண்டு மே மாதம்.

தமிழகத்தில் அப்போது தான் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.

கலைத்தவர் இந்திராகாந்தி.

சளைக்கவில்லை எம்.ஜி.ஆர். இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டு 129 தொகுதிகளில் வெற்றி.

மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.

அதற்கான தேர்தல் வேலைகளில் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரைச் சந்தித்த கவிஞர் கண்ணதாசன் அந்த அனுபவத்தை அப்போது வார இதழ் ஒன்றில் எழுதிக் கொண்டிருந்த “சந்தித்தேன்.. சிந்தித்தேன்” தொடரில் எழுதினார்.

அந்த அனுபவம் உங்களுடைய பார்வைக்கு :

“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்”

“அவர் உற்சாகமாக இருக்கிறார். சிரித்த முகத்தோடிருக்கிறார். திடகாத்திரமாகவும், சுறுசுறுப்போடும் இருக்கிறார், முன்பைவிடப் பளபளப்பாக இருக்கிறார்.

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்னை வந்த எம்.ஜி.ஆரை இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஆற்காடு முதலி தெருவில் சந்தித்த போது, நான் ஆச்சர்யப்படவில்லை.

சுமார் ஒன்றரை மணி நேரம் என்னோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். அதிலே தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் தெரிந்தது.

நியாயம்தான். தமிழ்நாடு பூராவிலும் அவர் மீது ஓர் அனுதாபம் இருக்கிறது.

“நாங்கள் இந்திரா வரவேண்டும் என்று விரும்பினோமே தவிர, எம்.ஜி.ஆர் போக வேண்டும் என்று விரும்பவில்லை” என்பது ஏழை எளிய மக்களின் வாதம்.

“டில்லிக்கு இந்திரா, நம் ஊருக்கு எம்.ஜிஆர்” என்றே எங்கே பார்த்தாலும் பேசுகிறார்கள்.

அதை நேரிலேயே கேட்டு, மக்கள் வெள்ளத்தைச் சந்தித்துத் திரும்பிய அவர், நாணயமான நடத்தையை இந்த நாட்டு மக்கள் மதிக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

அவரைவிட்டு விலகிச் சென்றவர்கள் கூட அவரைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லையே!

சட்டசபை கலைக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கவில்லை. காரணம் இந்திரா காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அவர் தவற விட்டதில் எனக்கு வருத்தம் இருந்தது.

ஆனால் நான் அவர் மீது காட்டிய பகையையும், அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்? ஆகவே இன்று அவரைச் சந்தித்தேன்.

குறைந்தபட்சம் 135 இடங்களை அ.தி.மு.க பெறும் என்று அவர் நம்புகிறார்.

நாட்டு மக்கள் ஓட்டுப் போடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். இனி அவர்கள் மனோபாவத்தைக் கணிப்பது கடினமான காரியமல்ல.

வங்காளத்தையும், கேரளாவையும் போல அவருக்குப் பத்து, இவருக்குப் பத்து என்ற நிலைமை எப்போதுமே தமிழ்நாட்டில் இல்லை. ஓட்டுச் சீட்டை ஒரே மாதிரிப் போட்டு ஒரு கட்சியை மெஜாரிட்டிக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர் ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோபவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் என்னிடம் அரசியலைப் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக என்னோடு வந்திருந்த என் மகன் கலைவாணனுக்கு ஒரு மணி நேரம் புத்திமதிகளைக் கூறினார்.

சினிமாவில் நடிக்கும் கலைவாணன் உடம்பை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் சில ஆசனங்களைச் செய்து காட்டினார்.

கலைத்துறையில் அரை நூற்றாண்டாக வளர்ந்து கொண்டிருக்கும் அவர், உடம்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முறை கண்டு என் மகனே கூட ஆச்சர்யமடைந்தான்.


தேர்தல் சூடு பிடித்திருக்கும், இந்த நேரத்தில் அது பற்றிப் பரபரப்பே கொஞ்சம் கூட அவரிடம் காணப்படவில்லை.

“வெறும் கறி, மீனிலே உடம்பைக் காப்பாற்ற முடியாது. கீரை வகைகள் நிறையச் சாப்பிடு” என்றார் அவர்.

இடையிடையே வருகிற டெலிபோன் கால்களுக்கு அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் நிதி கொடுப்பதற்கென்றே, ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.

நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்குப் பாத்திரமான ஒரு மகா மனிதனைத் தான் அப்போது சந்தித்தேன்.

‘எழுதினால் கண்ணதாசன் தான் எழுத வேண்டும்’ என்று அவர் சொன்ன காலங்களும் உண்டு. ‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல, யாரையும் ரசித்ததில்லை.


‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே அவரது கொள்கை. நண்பன் என்று சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

ஒரு படத்தில் அவருக்காக நான் வசனம் எழுதினேன்.

“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இல்லை” என்று.

அது இன்று பலிக்கிறது.

நம்பாமல் சென்று விட்டவர்கள் இன்று அஞ்சாத வாசம் செய்கிறார்கள். நம்பித் துணை நிற்போர், நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம், விழுவது போல் தெரியும், எழுந்து விடுவார். நீண்டகால வீழ்ச்சியை அவர் சந்தித்ததே இல்லை.

தமிழர்கள், அவரைத் ‘தமிழன்’ என்றே அறிவார்கள். அவரை வேறு பாஷைக்காரர் என்றோ, கப்பல் பேரத்தில் ஊழல் செய்தவர் என்றோ சொல்லப்படுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

நாட்டு மக்கள் முழுக்க முழுக்க அரசியல் தெளிவு பெற்றுவிட்ட நேரத்தில், இந்தத் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் அறிக்கைகளும், விதவிதமான சுவரொட்டிகளும், மேடை முழக்கங்களும் வெறும் தேர்தல் காலக் கடமைகளே! அவற்றைப் பார்த்துவிட்டோ, கேட்டுவிட்டோ மக்கள் ஓட்டுப் போடுவதில்லை.

கம்யூனிஸ்டுகளும், முக்குலத்தோரும், நெடுமாறனும் செல்வாக்குப் பெற்ற மதுரையைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவரது ஆழ்ந்த அறிவு தெரியவில்லையா?

‘இந்திராவா, எம்.ஜி.ஆரா?’ என்று வந்தபோது மக்கள் இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

எம்.ஜி.ஆரா, தி.மு.க வா என்று வரும் போது…

பொறுத்திருந்து பார்ப்போம்.”

நன்றி : ‘சந்தித்தேன்.. சிந்தித்தேன்’ – கவிஞர் கண்ணதாசனின் நூலில் இருந்து… கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

****
#mgr
#MGRforever
#Kannadasan
#MGRamachandran............ Thanks.........

orodizli
17th April 2020, 09:50 PM
.#அன்று...! #இன்று...?

கருணாநிதி குடும்பம் நொடித்திருந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் 1971ல் உதவிய சினிமாத் தொழிலில் சுய தயாரிப்பில் கருணாநிதி, முரசொலி மாறன் பல படங்களை எடுத்து தங்கள் வீடு வரை அடமானத்தில் இருந்த போது மக்கள்திலகம் நடித்து கொடுத்த படமே #எங்கள்_தங்கம்.

#எங்கள்_தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நிகழ்வில்..

அரங்கில் பேசிய மாறன்..

எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. #முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் #வட்டி கூட கட்ட முடியாத நிலை..

என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் #புரட்சி_நடிகர் அவர்கள். பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்... அது மட்டுமின்றி, #ஒரு_பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்..

இன்று எங்கள் குடும்பம் அனைத்து #கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர் தான்.. கோபாலபுரம் வீடு அவர் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...

நானும், எங்கள் குடும்பமும் #ஆயுள் உள்ளவரை அவரை மறக்கக் கூடாது..

அடுத்து பேசிய #கருணாநிதி:

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
உண்மையைச் சொன்னால் #எனது #வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...

இவை அனைத்தும் அடுத்த நாள் 17-01-1971 ....#முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது............ Thanks...

orodizli
17th April 2020, 09:51 PM
#லதாம்மாவின் #சேவை #கட்சிக்குத் #தேவை

எம்ஜிஆர் லதாம்மா வின் வழக்கம்
போல மனம்திறந்த, யதார்த்தமான, நேர்மையான பேட்டி...இன்று பிற்பகல் 2மணிக்கு....தந்தி டிவியில்...

புரட்சித்தலைவரைப் பற்றிய சுவாரசியமான பல விஷயங்கள் அலசப்பட்டன...

தன் தாய்க்கு புரட்சித்தலைவர் செய்த முக்கியமான உதவியைப் பற்றி லதாம்மா பகிர்ந்தது இதுவரை யாருமே கேள்விப்படாத, நெகிழ்ச்சியான ஒன்று...

இதுவரையிலும் எந்தப்பதவியியையும் எதிர்பாராத, உண்மையான, தூய எம்ஜிஆர் விசுவாசிகளில், லதாம்மா மிக முக்கியமானவர்...

எம்ஜிஆர் லதாம்மாவிற்கு, கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு, முக்கியப் பதவி வழங்கப்பட வேண்டுமென்பது எம்ஜிஆர் பக்தர்களின் விருப்பம் மட்டுமல்ல...
தமிழக மக்களின் விருப்பமும் கூட...

இன்றைய சூழலில் கழகத்திற்கு எம்ஜிஆர் லதாம்மாவின் பங்களிப்பு மிக மிக அவசியம் என்பதை மனிதிற்கொண்டு கட்சி மேலிடம் இனியும் தாமதிக்காது எம்ஜிஆர் லதாம்மாவிற்கு, #கட்சியில் #முக்கியப் #பொறுப்பு வழங்கவேண்டுமென்று எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கிறேன்...

YOU TUBE LINK...
https://youtu.be/DlhLcH0kL78........ Thanks...

orodizli
17th April 2020, 09:53 PM
#மூன்றெழுத்தில் #என் #மூச்சிருக்கும்”

என்று கடமையை மூச்சாக கொண்ட நம்ம வாத்தியாருக்கு அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட லட்சோபலட்சம் பக்தர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்ஜிஆரை குறிப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்ஜிஆருக்கும் #மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரம்பித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்...!
அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.

அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்ஜிஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்ஜிஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்ஜிஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்ஜிஆருக்கு வயது மூன்று.

என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்ஜிஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்ஜிஆர்.

நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்ஜிஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்ஜிஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்ஜிஆர் மட்டுமே.

1967 ஜனவரி 12 ந்தேதி எம்ஜிஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்ஜிஆர் கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.

ஜானகி அம்மையார் எம்ஜிஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”, எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த “ராஜமுக்தி”, ஜுபிடர் தயாரித்த “மோகினி”.

எம்ஜிஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை (மூன்று கைகள்) கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ..."#ஈகை" எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.

நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்ஜிஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார்...

எம்ஜிஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் தன் வாழ்நாளிலேயே மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர்.

“செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்ற பாடல் வரிகள் வாத்தியாருக்கு மட்டுமே பொருந்தும் ......... Thanks...

orodizli
17th April 2020, 09:56 PM
ஸ்ரீலங்காவில் தமிழ் ரீபல்ஸ் மூலம் கெரில்லா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ராமச்சந்திரன் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

வறுமைக்கு எதிரான சர்வதேச யுத்தத்தில் எம்.ஜி.ஆர் தனது குறியீட்டை செய்துள்ளார். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம் உலக வங்கி இதேபோன்ற வறுமை ஒழிப்பு திட்டங்களை வேறு எங்கும் நடத்துவதற்கும் ஒரு அளவுகோல்.

--வாஷிங்டன் போஸ்ட் [அமெரிக்கா]

Ramachandran was a central figure in efforts to end the guerrilla war by Tamil Rebels in Sri Lanka.

MGR has also made his mark in International War against poverty. The Tamil Nadu Nutrition Scheme launched by MGR is not the standard by which the World Bank measures similar anti-poverty schemes elsewhere.
--Washington Post[USA]........... Thanks to mr.SB.,

orodizli
17th April 2020, 10:02 PM
கோடிகள் கொடுத்தத் தலைவர்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர்...

இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல...

அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் தலைவர் அவ்வளவு நேசித்தார்...

சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்...

தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார்...

தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர்...

'அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’......... Thanks.........

orodizli
18th April 2020, 08:30 AM
கோடிகள் கொடுத்தத் தலைவர்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர்...

இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல...

அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் தலைவர் அவ்வளவு நேசித்தார்...

சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்...

தலைவர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார்...

தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர்...

'அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’......... Thanks.........

orodizli
18th April 2020, 08:34 AM
#நாடோடி_மன்னன்

'தீன் தீன்கா சுல்தான்' என்ற இந்தி படத்தைப் பாா்த்தாா் பேரறிஞா் அண்ணா அவா்கள் .

மூன்று நாட்கள் மட்டுமே ஒரு நாட்டிற்கு இராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன் ,

அந்த குறுகிய காலத்திற்குள் அந்த நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பதுதான் என்பதுதான் அப்படத்தின் கதை .

இப்படம் அண்ணாவை மிகவும் கவா்ந்து விட்டது . அதனால் ஒரு கூட்டத்தில் பேசும்போது , " தீன் தின்கா சுல்தான்' என்ற ஒரு திரைப்படத்தைப்பாா்த்தேன் ;

மூன்று நாட்கள் மட்டும இராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன் , அந்நாட்களுக்குள் , நாட்டிற்குத் தேவையான ,

பல திட்டங்களைத் தீட்டி , அந்த நாட்டை எப்படி செல்வச் செழிப்படையச் செய்கிறான் என்பதுதான் கதை ..

இந்த நாட்டை ஆள , எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள் . அதாவது என்னை , ஏக் தின்கா சுல்தான் - ஒருநாள் இராஜாவாக ஆக்குங்கள் ; இந்த உலகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன் " என்ற வகையில் பேசினாா் .

இப்பேச்சு , புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்.,மனதில் பதிந்து போனது . இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானதுதான் 'நாடோடி மன்னன்' திரைப்படம் .

இப்படத்தை , பெரும் பொருட் செலவில் , தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றும் , கடன் வாங்கியும் , தயாாித்தாா்
எம்.ஜி.ஆா்.,

இப்படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் , எம்.ஜி.ஆாின் எதிா்காலம் என்ற பேச்சு எழுந்தபோது ,

" இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் ; இல்லையென்றால் நாடோடி ....." என்று தன் நிலையைக் கூறினாா் எம்.ஜி.ஆா் .

ஆனால் இப்படம் மிகப் பொிய வெற்றியைப் பெற்றது .

'நான் மன்னன்தான் ....' என்பதை நிரூபித்தாா் எம்.ஜி.ஆா்., தான் தான் சக்கரவர்த்தி என்பதையும் நீக்கமர நிரூபித்தார் புரட்சி நடிகர்......... Thanks.........

orodizli
18th April 2020, 08:54 AM
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!.......... Thanks.........

orodizli
18th April 2020, 08:55 AM
Thanks
John Durai Asir Chelliah

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.

கொஞ்சம் பெரிய படிப்புதான்.
எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.

1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !

யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?

ஒரே ஒருவர் நினைவுதான் அவனுக்கு உடனே வந்தது.

தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.

அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.

மறு நாள்.
பணத்தை எதிர்பார்த்து சென்ற
அந்த மாணவன் கையில் ஒரு காகிதத்தை கொடுத்தார் அந்த மனிதர். புரியாமல் அந்த காகிதத்தை புரட்டிப் பார்த்தான்.
அது ஒரு ரசீது.
1000 ரூபாயை அந்த கல்லூரியில் தன் பெயரிலேயே செலுத்தி, அதற்கு ரசீது வாங்கி வைத்திருந்தார் அந்த மனிதர்.

ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.

கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.

சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?

இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.

காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.

அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
கட கடவென்ற ஓசைக்குப் பின்...
பணத்தை கொடுப்பது எல்லோரின் கண்களுக்கும் எந்திரமாக தெரிகிறது.
சம்பந்தப்பட்ட இந்த மனிதருக்கு மட்டும் அது எம்ஜிஆராக தெரிகிறது.

ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.

இதோ, நல்ல தம்பி சொல்லும் அந்த நன்றிக் கதை..

"1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
அதை Laminate செய்து வைத்துள்ளேன்.
கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "கலைவாணர் பல கோடிகள் சம்பாதித்தார். ஆனால் அதையெல்லம் தர்மம் செய்துவிட்டு அழியாத புகழை விட்டு சென்றுள்ளார்.
எனவே செல்வம் அழிந்து போகும். ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.

உண்மை. படித்து வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். இன்றும் ATM சென்று ஓய்வூதியம் பெறும்போது "தலைவர் " எனக்கு கொடுப்பதாக நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்."

நன்றி நல்லதம்பி அவர்களே !
நீண்ட கால ஃபேஸ்புக் நண்பராக நீங்கள் என்னுடன் இருப்பதில், ஜான் ஆகிய நான் நிறைவான பெருமிதம் கொள்கிறேன்.

உங்கள்
நல்ல மனம் வாழ்க !
நன்றி மறவாத
அந்த தெய்வ குணம்
வாழ்க !

"நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே
என் மூலதனம் ஆகும்"
எனப் பாடிய அந்த எம்ஜிஆர் புகழ்...
அது என்றென்றும்
வாழ்க வாழ்க !

அண்ணன் நல்லதம்பி கல்லூரியில் சேர்ந்துவிட்டு, ம.கோ.ரா அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார். கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார். அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ம.கோ.ரா சொன்னார் 'மாதா மாதம் செலவுக்கு இங்கு வந்து பணம் பெற்றுக் கொள்' என்கிறார்.

அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது ம.கோ.ரா வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் எண்ண, இவரை பார்த்த ம.கோ.ரா, சானகி அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். சானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

John Durai Asir Chelliah.......... Thanks.........

orodizli
18th April 2020, 12:11 PM
படங்களில் தந்த நம்பிக்கை !

மாலை போடும்போது எடுக்கும் படங்களில் பெரும்பாலும் ஒருவர் முகம் தெளிவாக தெரியும். இன்னொருவர் முகம் மாலை அல்லது கை இடையே வந்து முகம் தெரியாமல்
மறைத்துவிடும், பல பேர் எடுத்த படங்களிலும் நான் இந்த குறையைக் கண்டிருக்கிறேன். ஆனால், நான் எம்.ஜி.ஆர். யாருக்காவது மாலை அணிவித்தாலோ அல்லது எம்.ஜி.ஆருக்கு யார் மாலை அணிவித்தாலோ இருவரது முகம் மறைக்காமல் தெளிவாகத் தெரியும்படி பார்த்துக்கொள்வார்.

தனக்கு யாராவது மாலை அணிவித்தால், போட்டோ எடுக்க வசதியாக கழுத்தில் மாலை இருந்தபடியே, போட்டவரது இரு கைகளையும் லாவகமாக எம்.ஜி.ஆர். இறுக்கிப் பிடித்துக் கொள்வார். அதனால் இருவர் முகமும் நன்றாக தெரியும், அருமையான போஸ் கிடைக்கும்”. எம்.ஜி.ஆர். புகைப்பட தொழில் நுட்பம் தெரிந்தவர் என்பதற்கு இந்த வாக்குமூலம் ஒரு சான்று என்கிறார் புகைப்பட நிரூபர் எஸ்.எஸ்.ராமகிருஷ்¬ணன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு செயலிலும் கவனம் செலுத்தியவர். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின் வந்த சினிமா படங்களின் பெயர்கள் மக்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல இருக்கின்றன. படப்பெயர்களில் வன்முறை, இரட்டை அர்த்தம், ஆங்கிலம் பிறமொழி கலவையில் இருக்கும். இன்னும் சில பெயர்கள் படத்துக்கும், கதைக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.

ஆனால், புரட்சித் தலைவர் படங்களுக்கு பெயர் வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார். அவரது திரைப்பட பெயர்கள் எளிமையாக எல்லோரும் படிப்பறிவு குறைந்த பாமரனும் உச்சரிக்கக் கூடியதாக, பொருள் புரியும் படியாக இருக்கும், அது மட்டுமல்ல படப் பெயர்களிலும் ஒரு நல்ல செய்தியிருக்கும், ஒரு தத்துவம் பொதிந்திருக்கும்.

நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தாலி பாக்கியம், புதிய பூமி, எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், நம் நாடு, எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், அன்னமிட்ட கை, சிரித்து வாழ வேண்டும், நீதிக்குத் தலை வணங்கு, பல்லாண்டு வாழ்க, இன்று போல என்றும் வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நான் ஏன் பிறந்தேன்?, உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன் இப்படி அவரது படங்களின் பெயர்களில் உள்ள எளிமையும், கருத்தாழமும், அழகும் படிக்காத பாமரர்களும் புரிந்து உச்சரித்து மகிழும் வகையில் இருக்கும்.

படத்திற்குப் பெயர் வைக்கும்போது அவர் எத்தனை கவனமாக இருந்தார். அதில் கருத்தாக இருந்தார் என்பதற்கு பிரபல பேச்சாளர், தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை சொன்ன ஒரு நிகழ்ச்சி.

நல்ல பெயர் சொன்னால் 500 ரூபாய் :

“பாக்கெட் மார்” என்ற இந்திப் படக்கதையை தமிழில் எடுப்பதற்கென்று நாங்கள் முடிவு செய்து… படத்திற்கு என்ன தலைப்பு வைப்பதென்று சிந்தித்த போது எம்.ஜி.ஆர். சொன்னார்.
“எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம், அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்கவேண்டும்.

அதேபோல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும், பணம் செலவு செய்து போஸ்டர் ஒட்டுகிறோம், பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம், ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கான பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரை படத்திற்கு வைக்க வேண்டும்”, என்று கூறிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து, “அப்படி யார் இந்த படத்திற்கு நல்ல பெயரைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 500 பரிசு அளிப்பதாகவும்” கூறினார்.

படத்திற்கு ‘திருடாதே’ என பெயர் வைக்கலாம் என்று மா.லெட்சுமணன் சொன்னதும் அது அவருக்கும் பிடித்துப் போனதும் உடனே ரூபாய் 500 கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆக படத்திற்கான பெயரும் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவர் மக்கள் திலகம்.

நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்......... Thanks.........

orodizli
18th April 2020, 12:41 PM
வாலி சினி*மா*விற்கு பாட்*டெ*ழு*தத் துவங்*கி*ய*தும், எம்.ஜி.ஆருக்*கும் அவ*ருக்*கு*மி*டையே நெருக்*கம் ஏற்*பட்*டது. எம்.ஜி.ஆர்., மக்*க*ளால் ஏற்*றுக்*கொள்*ளப்*பட்ட ஒரு பெரிய நடி*கர். மேலும், தன் படங்*க*ளின் மூல*மாக பல சமூக கருத்*துக்*களை சொல்ல ஆசைப்*பட்*ட*வர் எம்.ஜி.ஆர்.

வாலி அதற்கு துணை நின்*றார். எம். ஜி. ஆரின் சமூக கோட்*பா*டு*க*ளுக்கு திரைப்*பா*டல் மூல*மாக முத*லில் துணை நின்*ற*வர் பட்*டுக்*கோட்டை கல்*யா*ண* சுந்*த*ரம். அவர் ஆரம்ப காலங்*க*ளில் எம்.ஜி.ஆர்., படங்*க*ளில் தத்*துவ பாடல்*களை எழு*தி*னார்.

‘சின்*னப் பயலே சின்*னப் பயலே

சேதி கேளடா

நான் சொல்*லப் போகும் – வார்த்*தையை

நல்லா எண்*ணிப் பாரடா

வேப்*ப*மர உச்*சி*யில் நின்னு

பேய் ஒண்ணு ஆடு*துன்னு

விளை*யா*டப் போகும்*போது

சொல்லி வைப்*பாங்க

வேலை*யற்ற வீணர்*க*ளின்

தேவை*யற்ற வார்த்*தை*களை

வேடிக்*கை*யா*கக் கூட நீ நம்*பி*வி*டாதே’

என்ற பாட*லும்

‘தூங்*காதே தம்பி தூங்*காதே

சோம்*பேறி என்ற பெயர் வாங்*காதே.

என்ற பாடலை ‘நாடோடி மன்*னன்’ படத்*தி*லும் எழு*தி*ய*வர் பட்*டுக்*கோட்டை. அதற்*குப் பிறகு கண்*ண*தா*சன் எம்.ஜி.ஆரின் தர்ம சிந்*தனை குறித்து ‘தர்*மம் தலை*காக்*கும்’ படத்*தில்

‘தர்*மம் தலை*காக்*கும் – தக்க

சம*யத்*தில் உயிர்*காக்*கும் – கூட

இருந்தே குழி பறித்*தா*லும் – கொடுத்*தது

காத்து நிற்*கும்’

போன்ற பாடல்*களை எழு*தி*னார்.

பிறகு வாலி எம்.ஜி.ஆரோடு இணைந்*தார். அப்*போது எம்.ஜி.ஆர்., திமு*க*வில் இருந்த நேரம். கட்*சி*யும் மூன்*றெ*ழுத்து. எம்.ஜி. ஆரும் மூன்*றெ*ழுத்து. அத*னால்.

‘மூன்*றெ*ழுத்*தில் என் மூச்*சி*ருக்*கும்

அது முடிந்த பின்*னா*லும் பேச்*சி*ருக்*கும்’ என்று ‘தெய்*வத்*தாய்’ படத்*தில் ‘எழு*தி*னார் வாலி’

நான் ஆணை*யிட்*டால் அது நடந்*து*விட்*டால்

இங்கு ஏழை*கள் வேதனை பட*மாட்*டார்

உயிர் உள்*ள*வரை ஒரு துன்*ப*மில்லை

அவர் கண்*ணீர் கட*லிலே விழ*மாட்*டார்.

இந்த பாடலை ‘எங்க வீட்*டுப் பிள்ளை’ படத்*தின் வெற்*றிக்கே வழி*வ*குத்*தது. அது எம்.ஜி.ஆரை மக்*கள் மன*தில் ஆழ*மாக கொண்டு போய் உட்*கார வைத்*தது.

நல்ல நல்ல பிள்*ளை*களை நம்பி – இந்த

நாடே இருக்*குது தம்பி

சின்*னஞ்*சிறு கைகளை நம்பி – ஒரு

சரித்*தி*ரம் இருக்*குது தம்பி’

இந்த பாடலை ‘பெற்*றால் தான் பிள்*ளையா’ படத்*திற்*காக எழு*தி*னார் வாலி. இந்*தப் பாட*லின் சர*ணத்*தில்

‘அறி*வுக்கு இணங்கு வள்*ளு*வ*ரைப் போல்

அன்*புக்கு வணங்கு வள்*ள*லா*ரைப் போல்

கவி*தை*கள் வழங்கு பார*தி*யைப் போல்

மேடை*யில் முழங்கு அறி*ஞர் அண்ணா போல்

என்று எழு*தி*யி*ருந்*தார். அப்*போது காங்*கி*ரஸ் ஆட்சி. சென்*சார் அறி*ஞர் அண்ணா ‘என்*கிற வார்த்*தை’யை அனு*ம*திக்க மறுத்*து*விட்*டார்*கள். அத*னால் படத்*தில் இந்த வரி*கள், மேடை*யில் முழங்கு திரு விக போல் என்*று*தான் வரும். அதே போல் ‘அன்பே வா’ படத்*தில்

புதிய வானம், ‘புதிய பூமி

எங்*கும் பனி*மழை பொழி*கி*றது.

நான் வரு*கை*யிலே என்னை வர*வேற்க

வண்*ணப் பூ மழை பொழி*கி*றது

உத*ய*சூ*ரி*ய*னின் பார்*வை*யிலே

உல*கம் விழித்*துக் கொண்ட வேளை*யிலே

என்று எழு*தி*யி*ருந்*தார். ‘அன்பே வா’ படம் 1965ல் வெளி*யா*னது. ‘உத*ய*சூ*ரி*யன்’ என்ற வார்த்*தையை சென்*சார் அனு*ம*திக்*க*வில்லை. அத*னால் படத்*தில் இந்த வரி*கள் ‘புதி*ய*சூ*ரி*ய*னின் பார்*வை*யிலே’ என்*று*தான் வந்*தது.

அதே போல் `பட*கோட்டி’ படத்*தில் வாலி எழு*திய பாடல்*கள் எல்*லாமே எம்.ஜி.ஆரை மீனவ மக்*கள் மன*தில் கொண்டு போய் நிறுத்*தி*யது. மீன*வர்*க*ளுக்*காக இப்*ப*டி*யொரு பாடல் அமைந்*த*தில்லை என்று சொல்*கிற மாதிரி அரு*மை*யாக வாலி எழு*தி*யி*ருந்*தார்.

‘தரை*மேல் பிறக்க வைத்*தான் – எங்*களை

தண்*ணீ*ரில் பிழைக்க வைத்*தான்

கரை*மேல் இருக்க வைத்*தான் – பெண்*களை

கண்*ணீ*ரில் குளிக்க வைத்*தான்’

இந்த பாட*லில் சர*ணத்*தில்

‘ஒரு*நாள் போவார் ஒரு நாள் வரு*வார்

ஒவ்*வொரு நாளும் துய*ரம்

ஒரு சாண் வயிறை வளர்ப்*ப*வர் உயிரை

ஊரார் நினைப்*பது சுல*பம்’

இந்த வரி*க*ளெல்*லாம் ஒவ்*வொரு மீனவ குடும்*பங்*க*ளி*லும் ‘தேசிய கீதம்’ ஆனது. அவர்*க*ளுக்கு இந்*தப் பாடலை திரை*யில் பாடிய எம்.ஜி.ஆர் ஒரு ‘மீனவ மகா*னா’*கவே தெரிந்*தார். அதே போல் அதே ‘பட*கோட்டி’ படத்*தில்

‘கொடுத்*த*தெல்*லாம் கொடுத்*தான் – அவன்

யாருக்*காக கொடுத்*தான்

ஒருத்*த*ருக்கா கொடுத்*தான் – இல்லை

ஊருக்*காக கொடுத்*தான்

மண்*கு*டிசை வாச*லென்*றால்

தென்*றல் வர வெறுத்*தி*டுமா

மாலை நிலா ஏழை*யென்*றால்

வெளிச்*சம் தர மறுத்*தி*டுமா

உனக்*காக ஒன்று எனக்*காக ஒன்று

ஒரு*போ*தும் தெய்*வம் கொடுத்*த*தில்லை’

என்று எழு*திய இந்த வரி*க*ளி*னால் பல பொது*வு*டைமை சிந்*த*னை*யா*ளர்*கள் கூட எம்.ஜி.ஆரை நேசிக்*கத் தொடங்*கி*னார்*கள். வாலி, எம்.ஜி.ஆருக்*காக எழு*திய வரி*கள், எல்*லாமே ` கவி*ஞன் வாய்க்கு பொய்க்*காது’ என்*ப*தைப் போல பலித்*தது.

அவர் எழு*திய ஒரு பாடல் மட்*டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்*க*வில்லை.

‘பணம் படைத்*த*வன்’ படத்*தில்

‘எனக்*கொரு மகன் பிறப்*பான் – அவன்

என்*னைப் போலவே இருப்*பான்

தனக்*கொரு பாதையை வகுக்*கா*மல் என்

தலை*வன் வழி*யிலே நடப்*பான்’

என்ற இந்த வரி*கள் மட்*டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்*க*வில்லை.

ஒரு முறை எம்.ஜி.ஆர்., முதல்*வர் ஆன பிறகு அவ*ரு*டைய ஆற்*காடு சாலை இல்*லத்*தில் எம்.ஜி.ஆரும் – வாலி*யும் பேசிக்*கொண்*டி*ருந்* தார்*கள். அப்*போது அங்கே வந்த மதுரை முத்து வாலி*யைப் பார்த்து ` நீங்*கள் இவ*ருக்கு எழு*தின எல்*லாப் பாடல்*க*ளுமே பலித்*தது. ஆனால் ‘எனக்*கொரு மகன் பிறப்*பான்’ பாடல் மட்*டும் பலிக்*கலை’ என்*றார். எம்.ஜி.ஆர்., – வாலி இரு*வ*ருக்*குமே தர்*ம*சங்*க*ட*மா*கிப் போனது.

`அவர் சத்*து*ணவு போட*ற*த*னால, தமிழ்*நாட்டு குழந்*தை*கள் எல்*லாமே அவர் குழந்*தை*கள்* தானே’ என்று சொல்லி சமா*ளித்*தார் வாலி.

அதே போல் எம்.ஜி.ஆர்., திமு*க*வி*லி*ருந்து வெளியே வந்*தி*ருந்த நேரம். அப்*போது அவர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படத்*தில் ஒரு பாட*லில் அப்*போது ஆட்*சி*யில் இருந்த திமு*கவை சாடு*கிற மாதிரி ஒரு பாடல் வேண்*டும் என்று எம்.ஜி.ஆர்., வாலியை கேட்*டுக்*கொண்*டார். அது*வ*ரை*யில் வாலி தானா*க*வே*தான் எம்.ஜி.ஆரின் இமேஜை புரிந்து கொண்டு எழு*தி*னார்.

முதல் முறை*யாக எம்.ஜி.ஆர் கேட்*டுக் கொண்*ட*தால் அந்த படத்*தில்

‘தம்பி நான் படித்*தேன்

காஞ்*சி*யிலே நேற்று – அதை

நான் உனக்கு சொல்*லட்*டுமா இன்று’ என்று எழு*தி*னார். இந்த பாட*லின் சர*ணத்*தில்-–

‘தெரு தெரு*வாய் கூட்*டு*வது

பொது*ந*லத் தொண்டு

ஊரார் தெரிந்து கொள்ள

படம் பிடித்*தால் சுய*ந*லம் உண்டு’

என்று திமுக தலை*வர்*களை கிண்*டல் செய்து எழு*தி*னார்.......... Thanks.........

orodizli
18th April 2020, 01:09 PM
நான் பார்த்த MGR...

MGR அவர்கள் முதல் சட்டமன்ற தேர்தல்
சேலம் அயோத்தியாப்பட்டினம் வருகிறார்.
MGR 10-மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால் மிக தாமதமாக
விடியற்காலை 3.30-க்கு வந்து சேர்ந்தார்.
தங்க நிறத்தில் மிக ஜொலிப்பாக MGR
அசந்துவிட்டேன்.மறுநாள் பள்ளி சென்று நாள் முழுதும் தலைவர் புராணம்தான்.

பனமரத்துப்பட்டி தொகுதிக்கு உட்பட்டது
எங்கள் பகுதி.
என் தந்தை O.K.Ramasamy
சுப்புராயன் MLA க்கு நெருங்கிய நண்பர்.

2 வருடங்களிலேயே MLA புற்று நோயால் பாதிக்கப்பட்டார்
MGR அவர்கள் எவ்வளவோ மருத்துவ உதவி செய்தும் காப்பாற்ற இயலவில்லை.

MLA மறைந்து சில நாட்கள் கழித்து
மங்களபுரம் ( சேலம்)
MGR அவர்கள் ஆறுதல் சொல்ல வந்தார்.
MGR யை பார்க்க பயங்கர கூட்டம்.
நாங்கள் தலைவரை பார்த்துவிட்டு அவர் கார் ஏறுவதை பார்க்க முதல் மாடிக்கு சென்றோம்.
வீட்டிற்கு வெளியில் மனுக்களோடு ஏகப்பட்ட மக்கள்.
MGR வெளியே வந்தவுடன் சூழ்ந்து கொண்டனர்.
ஒரு கை ஊனமுற்றோரை கண்டுவிட்ட MGR
அவரை அருகில் வர சொன்னார்.
தலைவரிடம் மனு கொடுத்த அவர்
ஒரு கையால் தலைவர் தோள்பட்டை பிடித்து கொண்டு தன் ஊனமுற்ற பாதி கையால் MGR கழுத்தின் அருகே வைத்து
பிடித்து இரு கன்னங்களிலிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.
இவையெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டது.
சுதாரித்த காவலர்கள் அவரை பிடித்து இழுக்க வந்தனர்.
MGR காவலர்களை சைகையால் தடுத்து
ஊனமுற்றோரை தட்டி கொடுத்து கவலை வேண்டாம் உதவி செய்கிறேன் என உறுதிகூறினார்.
நிச்சயமாக சொல்வேன் இதுபோல தொண்டரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து சிறு முகசுழிப்பு இன்றி ,
கன்னத்தில் எச்சில் பட்டுவிட்டதே என கருதாமல் கர்ச்சிப் கொண்டு துடைக்ககூட இல்லை.
இப்படிப்பட்ட மக்களை நேசித்தார் நம் தலைவர்

(அன்று எனக்கு வயது 13 இன்று 52)

வாழ்க பொன்மனச் செம்மல் புகழ்!!!........... Thanks...

orodizli
18th April 2020, 01:12 PM
எம்.ஜி.ஆரின் விளக்கம்!
---------------------------------------
வி.பி.ராமன்!!
அந்த நாளைய பிரபல வழக்கறிஞர்!!
தம் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த எம்.ஜி.ஆருக்கே அந்த வீட்டை உடைமை ஆக்க முடிவு செய்து,,எம்.ஜி.ஆர் கொடுத்த வாடகையையே மாதா மாதம் கணக்கில் வரவு வைத்து அந்த வீட்டை அன்புடன் எம்.ஜி.ஆருக்குக் கிரயம் செய்து கொடுக்கிறார்!!
காலத்தின் கட்டாயத்தில் எம்.ஜி.ஆர் ,,ராமாவரம் தோட்டத்தை பின்னாட்களில் வாங்குகிறார்!1
அப்போதும்,,வி.பி.ராமனுடனான தொடர்பு நீடித்தது!!
தன் தோட்டத்து வீட்டின் மைய அறையின் கீழே ஒரு நிலவறையைக் கட்டி அதில் சில பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்??
ஒரு முறை வி.பி.ஆர்,,எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு வந்தபோது,,அவருக்கு அந்த நிலவறையைக் காட்ட--
சுற்றிலும் அலமாரிகளில் பல நூறு அறிவு நூல்கள்!! சொத்தைப் பதுக்கியிருக்கிறார் என்ற எதிரிகளின் பற்கள் சொத்தையாகிப் போனது தான் மிச்சம்??
இவ்வளவு புத்தகங்களா?? என்று ஆச்சரியத்துடன் கேட்ட வி.பி.ஆரிடம்,,எம்.ஜி.ஆர்--
உங்களைப் பார்க்க வரும்போதெல்லாம் நீங்களும் புத்தகங்கள் மத்தியில் தானே முகம் பதித்து இருப்பீர்கள்?? ஆனால் அவை சட்ட புத்தகங்கள்!! அடியேன் சேகரித்து வைத்திருப்பது அபூர்வமான காவியம்--தத்துவம்-கவிதைகள்-சிறந்த பல அற நெறிக் கதைகள் கலந்த கதம்பம்!!!
ஒரு முறை தமிழ் அறிஞரும்,,புத்தகப் பிரியரும் ஆன ம.பொ.சி இந்த நிலவறையைப் பார்த்து பிரமித்து-எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார்? இவ்வளவு அருமையான நூலகத்தை கீழே ஏன் வைத்திருக்கிறீர்கள்??
அமைதியாக எம்.ஜி.ஆர் சொன்ன பதில்??
அறிவு என்பது நீர் போன்று குளுமையானது!! நீர் எப்போதும் தரையில் தான் தேங்கும்??
ஆணவம் என்பது நெருப்பு போன்றது!! அது மேலே தானே பற்றிக் கொண்டு எரியும்???
நூலகம் போல் அகம் அறிவு என்னும் அரு மனத்தால்
வானகம் போன்று விரிந்தாலே--
தான் அகம் என்னும் கர்வம் விலகாதோ???
அந்தப் பெரிய அரு நூலகம் சில வருடங்களுக்கு முன் செம்பரம் பாக்கம் ஏரி திறப்பால் சிதறுண்டு போனது மிகக் கொடுமையான விஷயம்!!
இறுதி வரை எம்.ஜி.ஆரின் அந்தரங்கத் தோழனாகக் குலவியும் நிலவியும் வந்தது அந்த நூலகம் தான்!!!!!......... Thanks...

orodizli
18th April 2020, 01:16 PM
அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!

M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.

1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.

பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.

அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

அறிவிக்கும் போதினிலே

அறிந்ததுதான் என்றாலும்

எத்துணை அழகம்மா? என்று

அறிந்தோரையும் வியக்க வைக்கும்

அருங்கலையே கவிதையாகும்’

... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!........ Thanks...

orodizli
18th April 2020, 01:19 PM
1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது

அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்

இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்

புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்

படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?

கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?

ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்

அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை

ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.

இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்

இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
என்று தலைப்பு செய்தியாக வந்தது

சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்.......... Thanks........
..

orodizli
18th April 2020, 01:42 PM
நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.

தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் . பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.

அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.

தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''

- புலவர் புலமைப்பித்தன்........... Thanks.........

orodizli
18th April 2020, 01:46 PM
எம்ஜிஆரின் அரசியல் வரலாறு..

.அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.

ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.


எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்



எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016

24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.

(இந்த பதிவில் ஏதாவது தவறு இருப்பின் கமெண்ட் பண்ணினால் சரி செய்யப்படும்)....... Thanks Bai...

orodizli
18th April 2020, 01:49 PM
இதில் விடுபட்டது ...

1950 வரை காந்தியக் கொள்கைகள்
காரைக்குடி பொதுக்கூட்டத்தில் காந்திஜியை சந்தித்து குவெட்டா பூகம்ப நிதி வழங்கினார்.
1953 பிப்ரவரியில் சென்னை நகர் தமிழருக்கே சொந்தம் என்ற பெரியாரின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்
1953ஏப்ரலில் லால்குடியில் நடந்த
தி மு க மாநாட்டில் கலந்து கொண்டார்
, சட்ட மேலவை உறுப்பினர் 1963 என்று நினைக்கிறேன்
1967 ஜூலையில் தி மு க பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....... Thanks...

orodizli
18th April 2020, 01:53 PM
1973-To-1974,ல் திண்டுக்கல்
நாடாளுமன்ற தேர்தலில்
மாயத்தேவர் வெற்றிப்
பெற்றப்பின்னால்தான்...
மத்திய,மாநில,அரசு மற்றும்
தொண்டர்கள் மத்தியில்
கவனயீர்ப்பு ஏற்ப்பட்டதை
குறிப்பிட்டிருக்கலாமேத்
தலைவா.?........ Thanks...

orodizli
18th April 2020, 02:01 PM
#நாடோடிமன்னன் #வந்தபோது
(07-09-1958) #விகடனில் #வந்த
#விமர்சனம்.

நன்றி, விகடன்!

முனுசாமி : மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு : வில்லன் யாரு ?

மாணி : ராஜகுருவாக வரும் வீரப்பா...
நல்லவன் போல நடிக்கும் வில்லன்... தனக்கென்று சிலரை வைத்துக்கொண்டு அட்டூழியம் புரிவார்! கன்னித்தீவுல தன் வளர்ப்புமகளை சிறைப்பூட்டி அந்த மகளையே தாரமாக்கிக் கொள்ள நினைக்கும் கொடூரவில்லனாக நடிச்சிருப்பாரு..
... அப்புறம் தளபதியாக நம்பியார்...தன்னோட வேலையை சிறப்பா செஞ்சிருப்பாரு..

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

மார்க் : 7.5 / 10 - A Grade

நன்றி! விகடன்......... Thanks...

orodizli
18th April 2020, 02:05 PM
தலைவருடன் ஏற்பட்ட நடிகர் சிவகுமாரின் அனுபவம் !

1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் தலைவரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தலைவர் தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

சிவகுமாரும் தன் தாயார் பற்றி தலைவரிடம் கூறினார்.

இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.

குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

நன்றி : மாலை மலர்........ Thanks...

orodizli
18th April 2020, 02:42 PM
1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர்,

ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.

'அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போல கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும்'

-என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.

அதுதான் ‘அண்ணாயிஸம்’!

தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான #அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித்தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.

1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு..ஶ்ரீ

”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார்.

அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.

நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்" என்றார்.

'திடீரென்று அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே' என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர்,

”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். .

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.

உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.

”அண்ணா தி.மு.க-வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன?" என்று கேட்டனர்.

அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.......... Thanks.........

orodizli
18th April 2020, 02:44 PM
எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.

ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.

சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக்காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!

ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத்தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப்புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.
‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!......... Thanks.........

orodizli
18th April 2020, 02:49 PM
எம்.ஜி.ஆரால் மழையா??
--------------------------------------------
மேற்கண்ட கேள்விக்கு--
ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
இயற்கை--
வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
மக்கள்---
தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????... Thanks...

orodizli
18th April 2020, 03:02 PM
"அன்னமிட்டக்கை", படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்களுடன் பதிவை தொடர்கிறேன் ...
1.வெள்ளத்துக்கு அணை போடலாம் ஆனால் உள்ளத்தோடு பாசத்துக்கு அணை போட முடியாது ...

2 .ஊதுபத்திக்குப் பக்கத்தில் சிகரெட் இருக்க கூடாது. பாத்ரூம் பக்கத்தில் பூஜை அறை இருக்க கூடாது.

3. நல்லதைச் சொல்றவன்தான் நண்பனாக இருக்க முடியும்.

4. வீட்டுப் பாதுகாப்புக்கு பூட்டு போடற மாதிரி ஒமுக்கத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கனும்.

5. அவமானம் படுத்துவது வேறு அறிவுரை கூறுவது வேறு. இரண்டையும் ஒன்றாக நினைக்க கூடாது.

6. உடையை மட்டும் மாற்றினால் போதாது. உள்ளத்தையும் மாற்றியாகனும். அதற்கு அன்பு காட்டனும் அடுத்தங்களை மதிக்கனும்.

7..ஆடம்பரமாக அவியலும் பொறியலும் போட வேண்டாம். பாசத்தோடு பழைய சோறு போட்டா போதும் ..

8. .ஏமாற்ற நினைக்கறவங்கத்தான் அடிக்கடி இடத்தை மாற்றுவாங்க.

9. மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அன்பு காட்டனும் அதிகாரம் காட்டக் கூடாது.

10. வீட்டைக் பாதுக்காத்தான் நாயை வளர்க்கறாங்க அது வெறி பிடித்து அலைந்தா நாயை குறை கூற மாட்டாங்க வளர்த்தவங்கத்தான் குறை சொல்வாங்க.

11. சமுதாயத்தில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருடையை கையே தொட்டுப் பார்த்து நோயை தீர்ப்பவங்க டாக்டர்தான் ..

12 இதயத்தை சத்திரமாக வைத்தால் எல்லோரும் தங்குவாங்க அதே நேரத்தில் பத்திரமாகவும் இருக்கனும்.

13. ரத்த வெறிக்கொண்ட புலிக்கிட்ட தற்புகழ்ச்சி பற்றி பேசினால் அது கேட்காது. அழிவில்தான் நியாயம் என்று பேசினவங்க கிட்ட அன்பைப் பற்றி பேசினால் கேட்க மாட்டாங்க.

14 ஒரு முறை கேட்டு நியாயம் கிடைக்கலைன்னா மறு முறை வேறு வழியில் முயற்சி பண்ணனும்.

15 மரத்திலே ஏறி தவறி விழுந்துட்டாங்கன்னா அதற்காக மரத்தை வெட்ட மாட்டாங்க ஏறின விதம் தவறு என்றுத்தான் நினைப்பாங்க.

16. இன்னார்கிட்ட இன்னார் பற்றித்தான் பேசனும் என்கிற விதிமுறை இருக்கிறது.

17. டாக்டர் எக்ஸ்ரே எடுத்தா இதயத்தைத்தான் பார்ப்பாங்க அதில் உள்ள எண்ணங்களை பார்க்க முடியாது.

18. செடிக்கிட்ட மலர் கைமாறு எதிர்ப்பார்க்காது பிள்ளைக்கிட்ட தந்தை கைமாறு எதிர்ப்பார்க்கக்கூடாது.

19. எதிரியை யாராலும் கண்டுபிடிக்கப் முடியாது. உண்மையே யாராலும் அழிக்கவும் முடியாது.

20 அனாதைகள் மேல் யாராவது அக்கறைப்பட்டுத்தான் ஆகனும். உண்மையே பலமாக பேசும் போது மிரட்டுகிற மாதிரித்தான் இருக்கும்.

21.எந்த தாய்மீதும் யாரும் பாசம் காட்டலாம் தவறைக் மன்னிக்கிற ஒரே தெய்வம் பெற்றத்தாய்தான்

பின்குறிப்பு ..15-09-1972 ஆண்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வெளியிட.பட்டது. படத்திற்கு வசனம் எழுதியவர் .A .L. நாரயணன்
அடுத்த பதிவு வள்ளல் புகழ் தொடரும் ......... Thanks.............

orodizli
18th April 2020, 07:21 PM
1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.

தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...

கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.

அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.

அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.

தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...

அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .

ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.

அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.

அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.

இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....

வாழ்க எம்ஜியார் புகழ்

நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி......... Thanks.........

orodizli
18th April 2020, 07:32 PM
'அண்ணா ஒரு தேசியவாதி' - #புரட்சித்தலைவர் பார்வையில் அண்ணா

"என்னைப் பொறுத்தவரை பேரறிஞர் அமரர் அண்ணா அவர்களை முதன் முதலில் சந்தித்துத் தொடர்பு கொள்ளத் தொடங்கியது..

நாட்டின் தலை சிறந்த அந்தத் தலைமகனோடு உறவு அரும்பியது..

என்னுடைய வாழ்க்கைப் பாதையில் தன்னுடைய தீர்க்கமான பிடிப்பை, முத்திரையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பித்தது...

இவையெல்லாம் 1944-ம் ஆண்டு நடைபெற்றவை.

அந்த ஆண்டில்தான் நடிகமணி டி.வி.என். அவர்கள் என்னை அழைத்துச் சென்று, பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

அந்த வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதி பகுதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணா அவர்களுடன் தொடர்பு கொண்டவன்.

அதாவது அண்ணா அவர்களோடு பழகியவன், அன்பு செலுத்தியவன், கவரப்பட்டவன், பின்பற்றியவன், அவருடைய இலட்சியப் பாதையில் பயணம் செய்து வருபவன் என்ற வகையில் எனக்கு அண்ணா எனும் நிறுவனத்தோடு 40 ஆண்டு தொடர்பு உண்டு.

அவரே பலமுறை கூறியதுபோல அண்ணா அவர்களுடைய இதயத்தில் தனியானதோர் இடம் பெறுகிற அளவு நாளுக்கு நாள் தகுதிகளைப் பெற்றிடுவதே வாழ்வின் குறிக்கோள் என்று கருதியவன் என்பதை இந்நேரத்தில் நினைவுகூருவது பெருமிதத்தையும், ஓரளவு கர்வத்தையும் என்னிடம் ஏற்படுத்துகின்றன.

அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, நமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், கொள்கையிலும், செயல் திட்டங்களிலும் அண்ணா அவர்களே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதன் காரணமாக நான் மிகக்
கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். ஆனால் பிற்கால வரலாறு என்னை விமர்சித்தவர்களை எங்கே வைத்தது, என்னை எங்கே அமர்த்தியிருக்கிறது என்பதை இன்று கண்கூடாகக் காணலாம்.

இந்த அற்புதமான மாற்றத்திற்கு என்ன காரணம்?

தனிப்பட்ட என் பலம், சாமர்த்தியம், அரசியல் என்று என்பால் அன்பு கொண்டோர் கூறினாலும், நான் அவர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வது

''என்னை வழிநடத்தும் தெய்வமான அமரர் பேரறிஞர் அண்ணா எனும் சக்தியின் வெற்றியே இந்த மாற்றத்திற்குக் காரணம்" என்பதைத்தான்."........... Thanks.........

orodizli
18th April 2020, 07:37 PM
பொன் மனம் அது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கே உரியதாகும் ��

வள்ளல் குணம் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களிடம் மட்டுமே தான் உண்டு

கருணை உள்ளம் அது பொன் மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களிடம் மட்டுமே தான் உண்டு

புரட்சித் தலைவா
வெற்றி தேவதை
வீர தேவதை
கருணை தேவதை
தர்ம தேவதை
மொத்தத்தில் அனைத்து தேவதைகளும்
தங்களின் பக்கம் தான் ��

எங்களின் அன்புக்குரிய ஒரேத் தலைவரான நீங்கள் என்றுமே எங்கள் பக்கம் தான் ��

உங்களின் அன்புக்குரிய ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளான நாங்கள் அனைவரும் என்றென்றும் உங்கள் பக்கம் தான் ��

அன்பு பண்பு பாசம் நேசம் கருணை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற என் உயிர் மூச்சான புரட்சித் தலைவா தங்களை நான் வணங்குகிறேன் இறைவா ��
என்றும் என்றென்றும் ��

பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசி களுடன் ��
அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்துடன் ��

இனிதான நல் அழகிய இளம் காலை பொழுது வணக்கம் அன்பர்களே ��
��✌️�� நன்றியுடன் ��............ Thanks.........

orodizli
18th April 2020, 08:06 PM
871-R-54

மனித மன வள மேம்பாடு

நம்பிக்கை

Never give up HOPE

இதற்கு
திருவாளர்
எம்ஜிஆர் ஒரு சிறந்த உதாரணம்

1967ல்
குண்டடிபட்டு
ஆஸ்பத்திரியில் இருந்தபடி
தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தார்

மக்களின் அபரிமிதமான அன்பால்
தேர்தலில் வென்றார்

கட்டுமரத்தின் பேயாட்டத்தை
தட்டிக்கேட்கிறார்
தனிக்கட்சி துவங்குகிறார்

பின்
மூன்று முறை
முதல்வர் ஆகிறார்

இருபது ஆண்டுகள்
அரசனாக ஆண்டார்

இறந்தபின்பும்
இறவாப்புகழ் பெற்றார்

இன்றும்
தேர்தலில் வெற்றி பெற
இவரது
பாட்டு
கட்டவுட் போதும்

உலகில்
சத்தியா பெற்ற
பிள்ளையைப் போல்
ஓர் சத்திய பிள்ளையை கண்டதுண்டோ

வெற்றியின் சொந்தக்காரன்
ஏழைகளின் உறவுக்காரன்

நமது வாத்தியார்......... Thanks.........

orodizli
18th April 2020, 08:08 PM
ராமாவரம் வீட்டில் வெகு இயல்பாக எம்.ஜி.ஆர்!
https://www.thaaii.com/?p=35053

‘நாடோடி மன்னன்’ பட வெற்றிக்குப் பிறகு போரூர் சாலையோரத்தில் வாங்கப்பட்டது ராமாவரம் தோட்டம்.


தமிழக முதல்வரான பிறகும் இந்த வீட்டிற்கு மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாமல் கிணற்று நீர், சமையலுக்குச் சாண எரிவாயு என்று எளிமையான வாழ்க்கை.

வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், பனியன், லுங்கிக்கு மாறுகிற எம்.ஜி.ஆருக்குத் தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடுவது தான் பிடித்தமானது.

ராமாவரம் தோட்டத்தில் தான் வளர்த்த நாயுடன் கேஷூவலான உடையில் எம்.ஜி.ஆர்.

#ராமாவரம்_தோட்டம் #எம்ஜிஆர் #நாடோடி_மன்னன் #Nadodi_Mannan #MGR #Ramapuram_Garden #TamilNadu #Chief_Minister #Makkal_Thilagam #PonmanaChemmal... Thanks...

orodizli
18th April 2020, 08:12 PM
நீ வருவாய் என---
------------------------------------
அ.தி.மு.க கட்சி நலனுக்கான பதிவு இது!!
காலங்களாலே காரியம் நடக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்!!
உலகின் எந்தவொரு மூலையில் எது நடந்தாலும்,,அதற்கான காரணம் முன்னோ பின்னோ முழங்கியே தீரும் என்ற கண்ணதாசனின் வார்த்தைகள் நம்மைப் பொறுத்தவரை சத்தியம் கலந்த ஒன்றே!!
கேட்ட கணக்கைக் கொடுத்திருந்தால் கலைஞரின்
கெட்ட கணக்கு வெளி வந்திருக்குமா?
கொரானா விஷயம் கூட--
ஆட்சியாளர்களின் நிர்வாகத்தைப் பரீட்சை செய்யவும்-
மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு இன்னமும் வளரவும் காலம் தந்த வினாப் பேப்பர் தானே?
அடுத்த வருடம் அக்னி நட்சத்திரத்தோடு தேர்தல் அக்னியும் சேர்ந்தே நாட்டை தகிக்கும்!!
எம்.ஜி.ஆர் பேனர்கள் கரிசனத்தோடு தூசி தட்டப்படும்?
இவ்வளவு இடங்கள் வாங்கி தி.மு.க ஜெயிக்கும் என்ற வழக்கமான நக்கீரப் புளுகலை ஊடகங்கள் ஆதரிக்கும்?
பூங்குன்றன் சங்கரலிங்கம்!!
புலவர் சங்கரலிங்கம் பற்றியும்,,அவரது எம்.ஜி.ஆர் பக்தி பற்றியும் நாம் தனியாகவே பதிவிட இருப்பதால்-
பூங்குன்றன் மட்டுமே இன்றையப் பதிவில்!
ஜெ வால் மிகப் பாசத்தோடு பேணப்பட்டவர்!
இளைய தலைமுறையின் இனிய வாரிசாம் இவரது எளிமையைப் பார்த்து நாம் வியந்திருக்கிறோம்!
ஒரு சமயம் இவர் போயஸ் தோட்டத்தில் அலுவலில் இருந்த போது--
சிவகாசியைச் சேர்ந்த சில எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தோட்டத்துக்கு வருகை தர--
அவர்களிடமிருந்து ,, எம்.ஜி.ஆர் பற்றிய விபரங்களை தம்மை மறந்து பூங்குன்றன் கேட்டுக் கொண்டே இருந்தவர் பலமாக அதிர்ந்திருக்கிறார்?
இவரைத் தொந்தரவு செய்யாமல்,,அதே சமயம் இவரிடம் ஒரு முக்கிய அலுவலுக்காக ஓ.பி.எஸ் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்??
மனிதரை விட்டால் ஒரு கௌபீணத்தோடு இமயமலைப் போய் விடுவார் போல?
அவ்வளவு ஆன்மிகப் பற்று!!
இளைஞரான இவர்,,தம்மிலும் மூத்தவர்களைக் கண்டால் உரிய மரியாதை அளித்தல்--
சராசரி மனிதனாகவே மற்றவர்களுடன் பழகுதல்-
எம்.ஜி.ஆர் பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள விழைதல்--
எதையுமேக் கூர்மையாக கவனித்தல்--
கவனித்தவற்றை ஆழமாக மனதில் பதித்துக் கொள்ளுதல்--
இப்படிப் பல குணாதிசயங்களை இவரிடம் கண்டிருப்பதால்--
இளைய சமுதாயத்திலிருந்து இவரைப் போன்றவர்கள் கட்சியில் இணைந்து,,கட்சியையும்,,கட்சி மூலம் ஆட்சியையும் சிறப்பாக்க தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பது நமது அவா!
ஒன்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும்?
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முக நூலில் அலசிய ஒரு விஷயம் இன்னமும் பூங்குன்றன் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது?
எம்.ஜி.ஆர் டி.வி!
நம்மைப் பார்க்கும்போதெல்லாம் எந்த விஷயங்களை நாங்கள் பேசினாலும்,,கடைசியில் எம்.ஜி.ஆர் டி.வி விஷயத்தைப் பூங்குன்றன் தொடாமலேயே இருக்க மாட்டார்?
போயஸ் தோட்டப் பூங்குன்றனை அடியேன் அறிந்ததில்லை?
தமிழ்ப் புலவர்,,எம்.ஜி.ஆர் விசுவாசி திரு சங்கரலிங்கம் சந்ததியாகவே இவரைத் தெரியும்.
போயஸ் தோட்டத்தில் இவர் கற்றுக் கொண்ட பாடங்களில்?? இருந்து இவர் இன்றைய தேதியில் பல படிப்பினைகளைக் கொண்டிருப்பார்!!
முக நூலிலும்--
சுஜீத்,,ரமேஷ்கோபால்,,சக்தி rdb,,ஸ்ரீ நாத்,,சுபாஷ்--இப்படிப் பல இளைஞர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி கலக்கி வருகிறார்கள்!1
அவர்கள் வழியில் பூங்குன்றன் போன்றவர்கள் சிந்தித்தால் நல்லது!1
வழக்கம் போல் நல்ல விஷயங்களில் மௌனம் காக்கும் அந்தக் கட்சியின் தலைமை இதிலாவது வேகம் காட்டும் என்றே நம்புகிறோம்!!
ஊதுவது நம் கடமை!
விழித்தெழுவது அவர்கள் உரிமை???....... Thanks...

orodizli
18th April 2020, 08:36 PM
#மக்கள்_திலகம்_எம்ஜிஆர்_அவர்கள் #பெற்ற_பட்டங்கள்.

சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை புரட்சி நடிகர் என்று முதன் முதலில் அழைத்தவர் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பருமான கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான்.

அன்று முதல் அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் எம்ஜிஆரை புரட்சி நடிகர் என்றே அழைத்து வந்தனர் .

புரட்சி நடிகர் எம் ஜி ஆருக்கு இலங்கை ரசிகர்கள் நிருத்திய சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் ,

சிங்கப்பூர் ரசிகர்கள் கலைவேந்தன் என்ற பட்டத்தையும் வழங்கினார்கள்.

மக்கள் நடிகர் என்ற பட்டத்தை நாகர்கோவில் ரசிகர்களும் ,

மக்கள் கலைஞன் என்ற பட்டத்தை காரைக்குடி ரசிகர்களும் வழங்கினார்கள்.

மறைந்த தமிழ் எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் அவர்கள் எம்ஜிஆரை மக்கள் திலகம் என்று குறிப்பிட்டும் எழுதியும் வந்தார்.

திருமுருக கிருபானந்த வாரியார் கரூரில் எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி வாழ்த்தினார்.

1983 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

இந்தப் பட்டங்கள் எல்லாவற்றை காட்டிலும் தமிழ்நாட்டு தாய்குலமும் அவரது ரசிகர்களும் அன்போடு எம்ஜிஆரை எங்கவிட்டுபிள்ளை என்று தாய்ப்பாசத்துடன் அழைப்பதையே பெரிதாக மதித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை முதல்வர் எம் ஜி ஆருக்கு அவர் மறைவுக்குப் பின் மத்திய அரசு வழங்கி அந்த விருதுக்கு புதிய கௌரவத்தை கொடுத்தது .

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர் மூச்சு உள்ளவரை பாடுபட்டவர் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது .

இதற்கு முன் தமிழகத்தை சேர்ந்த மூதறிஞர் ராஜாஜி கர்மவீரர் காமராஜர் ஆகிய இருவருக்கும் மட்டும்தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருந்தது.

அன்றைய தினத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை பாரத ரத்னா விருது அலங்கரிக்கப்படும் மூன்றாவது தலைவர் எம்ஜிஆர் .

அகில இந்திய அளவில் இந்த விருதை அணிந்துகொள்ளும் இரண்டாவது தலைவர் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் .

ஜவஹர்லால் நேரு ராஜேந்திரப் பிரசாத் ஜாகீர்உசேன் லால் பகதூர் சாஸ்திரி இந்திரா காந்தி அன்னை தெரசா எல்லைக் காந்தி கான் அப்துல் கபார்கான் , வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கும் மற்றும் ஒரு சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழக திரைப்பட வானில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

பின்னாளில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு சித்திரங்களாக கருதப்படாமல் சமுதாயத்தில் நிலவும் உண்மைகளை பிரதிபலிக்கும் கருத்துக் கருவூலங்கள் ஆக கருதப்பட்டன .

அப்படி கருதப்பட்ட படங்கள் இவருக்குப் பெற்றுத் தந்த பரிசுகள் விபரம்

படம் மலைக்கள்ளன் இந்திய அரசின் வெள்ளிப்பதக்கம் 1954 .

படம் அலிபாபாவும் 40 திருடர்களும் சினிமா ரசிகர் சங்கப் பரிசு 1956.

படம் நாடோடி மன்னன் சினிமா கதிர் சிறந்த இயக்குனர் பரிசு 1958 .

படம் எங்க வீட்டுப் பிள்ளை சினிமா ரசிகர் சங்கம் பரிசு 1965 .

படம் காவல்காரன் தமிழக அரசின் பரிசு 1967 .

படம் குடியிருந்த கோயில் தமிழக அரசின் பரிசு 1968 .

படம் நம் நாடு சினிமா ரசிகர் சங்கம் பரிசு 1969 .

படம் அடிமைப்பெண் பிலிம்பேர் பரிசும் தமிழக அரசின் பரிசும் 1969 .

படம் எங்கள் தங்கம் சிறந்த இரண்டாவது படத்திற்கான தமிழக அரசின் பரிசு 1970

படம் ரிக்ஷாக்காரன் பாரத் விருது 1971.

படம் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழக அரசின் பரிசு 1978. அதற்கப்புறம் சர்வதேச - உலகளவில் " நோபல்" பரிசு விருது கமிட்டிக்கு 1986ம் வருடம் புரட்சி தலைவர் பெயர் தேர்வு செய்யும் குழுவினருக்கு சிபாரிசு செய்துள்ளது மிக முக்கியமான பெருமையான செய்திகள்............. Thanks.........

orodizli
18th April 2020, 08:44 PM
புரட்சித் தலைவரின்
ரசிகன் பக்தன்
என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு

த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
---------------------------------------------------------------
குறு விவசாயிகளுக்கு
--------------------------------------
இலவச மின்சாரம்--
விவசாயக் கடன் தள்ளுபடி--
பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.

பெரு விவசாயிகளுக்கு
குந்தா மின் நிலையம்--
TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
காற்றாலை மின்சாரம்

ஏழைகளுக்கு
------------------------
குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.

பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.

அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.

விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.

அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.

இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.

இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி

காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.

ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.

புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.

உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.

த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.

எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.

15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.

ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.

முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.

ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.

ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.

இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்றவர்களுக்கு---
சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
நினைவூட்ட விரும்புகிறோம்??
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!

இனிய மதிய வ*ணக்கத்துட*ன்.......... Thanks...

orodizli
18th April 2020, 08:48 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 46.

தங்கமும் தகரமும் தரையிலே கிடைத்தாலும் தகுதியிலே மலையும் மடுவும் போல. வாழ்க்கையை ஒரு போர்களம் அதிலே கோழைக்கு இடம் இல்லை. .
உயிருக்கு உயிரான நண்பனாக இருந்தாலும் எந்த நேரத்திலும் விரோதியாக மாறலாம் என்று எச்சரிக்கையாக பழகக்கூடிய காலம் இது. ..
இன்பமும் துன்பமும் எந்த தொழிலுக்கும் பொருந்தும். கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்து எடுப்பவன் நீண்ட நாள் ஆயுளுடன் இருக்கிறான். பணப்பெட்டியே பக்கத்தில் வைத்து எண்ணிக்கொண்டிருப்பவன் சீக்கிரமே மரணத்தைத் சந்திக்கிறான் ஆதலால் வாழ்க்கையில் மரணம் என்பது ஒரு விபத்து போல அது முடிவு அல்ல...
நன்றி என்பது மனுசனை பொருத்தவரைக்கும் உணரக்கூடிய காலம் வரைக்கும் தான்.

ஒடி ஒடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். என்ற பாடல் காட்சி எடுக்கும் முன்பு சில கழைக்கூத்தாடிகள் அழைத்து அவர்கள் காட்டும் வித்தைகளை சிலவற்றை கற்றார். .அதில் என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்.
இப்பாடலை பார்க்காதவர்கள் இல்லை என்பது நான் அறிவேன். ஆனால் இப்பதிவு படித்தபிறகு மீண்டும் ஒரு முறை பாருங்கள் நான் சொல்வது உண்மை என்பது புரியும்.வாத்தியார் இரண்டு கைகளையும் கீழே ஊன்று கர்ணம் போடுவார்..
இரண்டு கைகளையும் கீழே படியாமல் கர்ணம் போட முடியாது. .ஆனால் வாத்தியார் கைகள் இரண்டும் பூமியில் படமாள் தத்ரூபமாக கர்ணம் போட்டுகாண்பித்தார் .படபிடிப்பில் இருந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கும் மத்தியில் இக்காட்சி எடுக்கப்பட்டது வாத்தியாரின் அசத்தலான திறமைக்கண்டு கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. கற்றுத்தந்தவர்களே செய்யமுடியாததை வாத்தியார் செய்தார் அதிலும் 55 வயதில் இதை செய்வது ஆச்சரியமான விஷயம் ஆகும். கற்று தந்தவர்கள் சொல்படி செய்தால் அது கற்று தந்தவர்களுக்கு பெருமை. அதை விட நன்றாக செய்தால் அது கற்றுக் கொண்டதுக்கு பெருமையாகும். .இது தான் வாத்தியார் கொள்கையாகும். .பாடல் வரிகள் ஏற்றபடி வாத்தியார் மிகவும் சுறுசுறுப்பாக நடித்து இருப்பார். .ஒவ்வொரு வரிகள் அர்த்ததுக்கும் வாத்தியார் தனது நடிப்பால் நிருப்பித்திருப்பார். வாத்தியாரின் புன்னகையும் சுறுசுறுப்புக்கும் உழைப்பும் புலமைப்பித்தன் வாழ்க்கை வரிகள் ..
T. M, செளந்தரராஜன் குரலில் கணீரும். கே வி மகாதேவன் இசையில் பாடல் சூப்பர் ஹிட் மெகா ஹிட் ஆனது. .பட்டித்தொட்டி எங்கும் இப்பாடல்தான் பேசப்பட்டது இப்பாடலை கேட்டுத்தான் நடிகர் சிவாஜி கணேசன் கூறியுள்ளார். .அண்ணனுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட பாடல்கள் அமைந்திருக்கு
எனக்கு இது போன்ற பாடல் எழுத மாட்டாயா என புலமைப்பித்தன் பார்த்து கேட்டு உள்ளார். .அதுமட்டுமல்ல பாடலின் கருத்துக்கள் கூறி பாராட்டினார். .முரசொலி மாறனிடம் ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டதற்கு அவர் கூறுகையில் எம்ஜிஆர் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான் இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக ஒரு பாடல் குறிபிடுகிறேன் ஒடி ஒடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும் என்ற பாடல்தான் என் மனதில் அடிக்கடி ரீங்காரம் இடும் என்று, கூறினார் . . ஒவ்வொரு மே தினம் அன்று இந்த பாடல்தான் அனைத்து தொலைக்காட்சி வானொலில் ஒளிபரப்பாகும். உழைப்பை பற்றி அதிகமாக பாடல்கள் வாத்தியார் படத்தில் தான் காண முடியும். ........

இன்னும் முடியலங்க... மேலும் சாதனைகள்... தொடரும் ...தொடரும் ...தொடரும்... Thanks...

orodizli
18th April 2020, 08:49 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 47.

சந்தேகம் என்பது பேயை விடப்பயங்கரமானது நோயை விடக் கொடுமையாது
கண்ணு குருடாகலாம் கருத்து குருடாகக் கூடாது. .
உத்தமர்களின் தியாகத்தை அவங்க இறந்த பிறகு தான் இந்த உலகம் ஏற்றுக் கொள்கிறது,
நல்ல நேரம் படத்தில் முமு பாடல்களும் ஆரம்பத்தில் கவியரசு கண்ணதாசன்தான் எழுதினார். ஏற்கனவே உழைப்பு பற்றி தனிபிறவி படத்தில் கண்ணதாசன் எழுதி இருந்தார். அதனால் வேறு ஒரு கவிஞரிடம் ஒப்படையுங்கள் என்றார். அதன் பிறகு ஆலங்குடி சோமு தேர்ந்தெடுத்தார் அதற்கும் வாத்தியார் ஒப்புதல் கொடுக்கவில்லை. .ஏற்கனவே அவரும் உழைப்பு பற்றி தொழிலாளி படத்தில் எழுதி இருந்ததால். அதற்கு காரணம் ஆகும். .பிறகு வாத்தியாரே புலவர் புலமைப்பித்தன் அழைத்து வந்து. சின்னப்பர் தேவரிடம் இவர் உங்கள் படத்தில் பாடல் எழுத வில்லை. சிறுவயதிலேயே திறமையான கவிஞர் அதனால் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.என்றார். சின்னப்பர் தேவருக்கு கண்ணதாசன் பாடல் எழுதினால் தான் விருப்பம். இருந்தாலும் வாத்தியாரே நேரில் அழைத்து கூறும் போது. அவரால் மறுப்பு சொல்ல முடியல.
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர்
வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி
இந்த வரிகள்தான் முதலில் எழுதி வாத்தியாரிடம் காட்டினார் அதற்கு வாத்தியார் கூறினார் உன்னுடைய திறமையை நான் அறிவேன். முதலாளியிடம் காட்டு என்றார். புலமைப்பித்தன் அவர்கள் சின்னப்பர் தேவரிடம் இந்த பாடல் வரிகள் காட்டியதும். சின்னப்பர் தேவரால் ஒன்று பேச முடியல மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார்
ஆண்டவன் ஆண்டவன்தான். .புரட்சியில் நீ புலவன்தான் என்று பாராட்டினார். .
வாத்தியாரால் அறிமுகம் படுத்த பட்ட எந்த கவிஞரும் சோடை போனதில்லை..என்பதற்கு இப்பாடல் ஒர் சமர்ப்பணம் உதாரணம் ஆகும். .
அதிலும் குறிப்பாக ஒரு வரி கூறனும் என்றால்...
அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தால் இனிக்கும். ...இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்போடு.
இந்த வரியைத்தான் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் உதாரணமாக கூறுவார்கள் ஏன் ஒவ்வொரு குடும்பத்திலும் மனித வாழ்க்கையிலும் இந்த வரிகள் தான் உதாரணமாக திகழ்கிறது. . இன்னும் சொல்லனும் என்றால் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் இந்த பாடல் வரிகள்தான் குறிப்பிட்டு கூறுவார்கள். .அந்தளவுக்கு இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மனித சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. . அவ்வளவு கருத்தாழமிக்க பாடல் ஆகும் மேலும் எனது அடுத்த பதிவில்
தாய்க்கு பின் தாரம் படத்தின் வெற்றியும் சாதனையும் தொடரும் தொடரும் தொடரும் ... Thanks...

orodizli
18th April 2020, 08:50 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 48. .

முகம்நக நட்பது நட்பன்று. .நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு. .
சாண்டோ சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் கொண்ட நட்பு எத்தகையது என்பதற்கு இந்த குறள் உதாரணமாக கூறலாம். .1945. ம் ஆண்டு வெளிவந்த சாலிவாஹனன் என்ற திரைப்படம் தான் வாத்தியாருடன் சின்னப்பர் தேவர் நட்பு ஏற்பட்டது. . வாத்தியார்க்கு இது 12 . வது திரைப்படம். .சின்னப்பர் தேவர்க்கு இது தான் முதல் அறிமுகமான படம். .முதல் படம் முதல் சந்திப்பு இருவரும் நட்பு இரும்பும் காந்தகம் போல் இனைந்து கொண்டனர்.
கதாநாயகன் ரஞ்சன் சாலிவாஹனாகவும் எம்ஜிஆர் விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பர் தேவரும் நடித்தார்கள். .படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்ஜிஆரும் ராஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது. கதையில் ரஞ்சனின் கை ஒங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமரா ஒடிக்கொண்டிருக்கும் போது ரஞ்சனை விட எம்ஜிஆரின் வாள் வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்ஜிஆருக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. அதனால் கேமிராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன் டைரக்டர் பி என் ராவிடம் எம்ஜிஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார். என்று புகார் செய்தார். டைரக்டர் எம்ஜிஆரை அழைத்து விசாரிக்க எம்ஜிஆர் தான் செய்தது சரி என்று விளக்கினார்
அதன் பிறகு ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும் படி எம்ஜிஆருக்கு டைரக்டர் யோசனை கூறினார். .எம்ஜிஆர் மனம் நொந்து போனார். தமது உண்மையான திறமையை எப்படித்தான் வெளிபடுத்துவது. .என்று சின்னப்பர் தேவரிடம் கூறி வேதனைப்பட்டார். .அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடம் உள்ள ஒரு நாள் உலகுக்கு தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். .

அன்று தொடங்கிய நட்பு சின்னப்பர் தேவர் இறுதி ஊர்வலம் வரை நீடித்தது..வாத்தியாரின் அழகும் இளமையும் சின்னப்பர் தேவரை கவர்ந்தது அதேப்போல் சின்னப்பர் தேவரின் கம்பீரமான தோற்றமும் கட்டுமஸ்தான உடலும் வாத்தியாரை கவர்ந்தது. . இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உடற்பயிற்சி செய்வார்கள். வாத்தியார்க்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் சின்னப்பர் தேவர்க்கு கற்றுக் கொடுத்தார். .சின்னப்பர் தேவர்க்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் வாத்தியாருக்கு கற்றுக் கொடுத்தார். . இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் அல்ல இரண்டு மலைகளும் மோதுவது போல் இருவரது பயிற்சி இருந்தது. நட்பும் நகமும் சதையும் போல் இருந்தார்கள். .

இந்த சூழ்நிலையில் தான் வாத்தியாருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. .அந்த படம்தான் ராஜகுமாரி. படமும் வேகமாக வளர்ந்தது படத்தில் வாத்தியாருடன் மோதுவதுக்கு வட இந்திய நடிகர் ஒருவரை அழைத்து வந்தார்கள் ஆனால் அதிலே சிறிது கூட சம்பந்தம் இல்லை. படத்தின் இயக்குனர் A S சாமியிடம் சென்று தமிழ் நடிகர்களில் பல பேர் திறமையானவர்கள் இருக்கும் போது வேறு மாநிலங்களில் இருந்து ஏன் அழைத்து வந்தீர்கள் என்றார். எனக்கு தெரிந்து திறமையான நடிகர் ஒருவர் இருக்கிறார் அவரை போடுங்கள் என்றார். உடனே இயக்குநர் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் நீங்கள் இன்னொருவர்க்கு வாய்ப்பு கேட்கீர்கள் என்று கூறி வாத்தியாரை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு வட இந்திய நடிகர் சரியாக படப்பிடிப்புக்கு வராது அப்படியே வந்தால் போதையில் வருவது. இதனால் படபிடிப்பில் சரியாக நடத்த முடியல. பிறகு வாத்தியாரே கூப்பிட்டு நீங்கள் கூறிய நடிகரை அழைத்து வாருங்கள் என்றார் சின்னப்பர் தேவரை அழைத்து வந்து படத்தில் நடிக்க வாய்ப்பு அமைத்து கொடுத்தார். .தொடரும் தொடரும் தொடரும்.......... Thanks...

orodizli
18th April 2020, 08:53 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 49. .

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம். ...இதை ஆரம்பம் முதல் தனது கடைசி மூச்சு வரை கடைப்பிடித்தார். .
அதனால் தான் அவர் புரட்சி நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்தார். .
அன்று முதல் இன்று வரை அனைத்து நடிகர்களும். எம்ஜிஆர் போல் புகழ் பெற வேண்டும். எம் ஜி ஆரை போற்றுவது போல் நம்மையும் போற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர எம்ஜிஆர் போல் வாழ வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அதனால் தான் அவர்கள் வாழ்க்கை கனவு போல் களவு போகிறது. வாத்தியார்க்கு வந்த எதிர்ப்பு வதந்தி விமர்சனம் போல் எந்த நடிகர்களுக்கும் இல்லை அப்படி இருந்தால் விலாசம் இல்லாமல் போயிருப்பார்கள் மக்கள் செல்வாக்கு வள்ளல்தனம் உழைப்பு ஒழுக்கம் இது தான் அவர் புகழுக்கு புகழ் சேர்த்தது. ...தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தனது நண்பர் சாண்டோ சின்னப்பர் தேவர்க்கு பல படங்கள் வாய்ப்பு தேடி தந்தார். .ராஜகுமாரி. .மருதநாட்டு இளவரசி. ..மோகினி. .
சர்வாதிகாரி. .நாம் குலேபகாவலி மதுரை வீரன் அரசிளங்குமரி போன்ற படங்கள் வாத்தியார் சிபாரிசு செய்து சின்னப்பர் தேவர்க்கு கிடைத்த வாய்ப்புகள் ஆகும். .

சாதாரண நடிகராக சில காட்சிகளில் மட்டும் நடித்து வந்த சின்னப்பர் தேவரை மிக பெரிய தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை வாத்தியாரே சேரும். .அன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து படம் எடுத்து ஆயிரக்கணக்கான பணம் வருமானம் கூட வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு படுத்தோல்வி அடைந்து கடன்காரனாக மாறிய பல தயாரிப்பாளர்கள் மத்தியில் வெரும் 45 , ஆயிரம் ரூபாய் செலவில் படம் எடுத்து லட்சக்கணக்கான பணம் வருமானம் பார்த்த ஒரே தயாரிப்பாளர். சின்னப்பர் தேவர் தான். .அதற்கு
மூல காரணம் முதல் காரணம் வாத்தியார்தான். .இத்தனைக்கும் வாத்தியார் கால்ஷீட் தர முடியாத அளவுக்கு அதிகமாக படங்கள் ஒப்பந்தம் செய்து இருந்தார். மலைக்கள்ளன் குலேபகாவலி மதுரை வீரன் அலிபாபாவும் 40 திருடர்களும் என தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். . அவருக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் பல பேர். .இருந்தாலும் நட்புக்கும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற நடித்து கொடுத்தார். .
படத்தின் தயாரிப்பாளர் சின்னப்பர் தேவர் கதாநாயகியாக நடிக்க யாரை போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்போது வாத்தியார் வெற்றி ஜோடியாக திகழ்ந்த பானுமதி அணுகினார். பானுமதியும் மிகவும் பிசியாக இருந்தார். சம்பளம் அதிகமாக கேட்டார். உடனே வாத்தியார் தலையிட்டு பானுமதியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்தார். ..படபிடிப்பும் குறுகிய காலத்தில் நடத்தி 21 -09- 1956 ம் ஆண்டு "தாய்க்கு பின் தாரம்", படம் வெளிவந்தது. .பலவிதமான சாதனையை படைத்து மாபெரும் வெற்றி பெற்று சின்னப்பர் தேவர் வாழ்வில் மிக பெரிய அந்தஸ்து பெற்று உயர்வுக்கு வழி காட்டியது........

தாய்க்கு பின் தாரம் படத்தின் வெற்றியும் சாதனையும் அடுத்த பதிவில் காண்போம் தொடரும் தொடரும் தொடரும்... Thanks...

orodizli
18th April 2020, 08:55 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 50.

திறமையுள்ளவர் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. திறமைக்கான தகுதி இருக்க வேண்டும். எல்லோரும் திறமைசாலிகள்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளோ ஒவ்வொரு திறமை இருக்கிறது. ஆனால் அதை அவன் பயன்படுத்தும் விதமும் அதை செயல்படுத்தும் முறையும் சரியாக இருந்தால் அவன் வாழ்க்கையும் சரியாக இருக்கும். அதற்க்கான தகுதியும் பேரும் புகழும் அவனை தேடிவரும். அதேப்போல் தான் நம்ம வாத்தியார். அவருக்குள் உள்ள திறமையை எங்கே எப்போ எப்படி பயன்படுத்தனுமோ செயல்படுத்தனுமோ அதை அந்தந்த நேரத்தில் முறையா செய்ததால்தான் இன்று வரை அவரது பேரும் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது .அதைக்கண்டு பல தகர டப்பாக்கள் பொறாமை கொள்கிறது. அதனால் தான் அவை துரும்பு பிடித்து உள்ளது. .
சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் ஒளிவிளக்கா வந்த படம் தான் 21. 9. 1956 ம் ஆண்டு வெளிவந்த தாய்க்கு பின் தாரம். வெரும் 45 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 45 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது. சென்னையில் சித்ரா கிருஷ்ணா உமா மூன்று தியேட்டரிலும் 100 நாட்கள் மேல் ஒடியது. மதுரையில் முதல் முதலாக இரண்டு தியேட்டரில் வெளியிடப்பட்ட முதல் படம். .தேவி சந்திரா இரண்டிலும் 100 நாட்கள் மேல் ஒடியது. .படத்தில் வாத்தியார் காளையே அடக்குவார். மிகவும் தத்ரூபமாக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. வாத்தியார் அதற்க்கான பயிற்சியில் ஈடுபட்டு பிறகு எடுக்கப்பட்டது.1957 .ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சின்னம் காளையாக இருந்தது. .திமுகவில் தேர்தல் பிரசாரத்துக்கு தாய்க்கு பின் தாரம் ஒரு விளம்பரமாக அமைந்தது. காளைகளை அடக்க வந்த புரட்சி நடிகர் என்றும். .காளைகளை அடக்க வந்த காங்கேயம் புரட்சி நடிகர் என்றும். பிரச்சாரம் செய்து ஓட்டுகள் அள்ளினார்கள். .

படத்தில் A . மருதகாசி எமுதிய மனுசனை மனுசன் சாப்பிடறான்டா தம்பி பயலே என்ற பாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர் நகரங்களிலும் மெகா ஹிட் சூப்பர் ஹிட் இன்னும் சொல்லனும் என்றால் இந்த பாடல் முனுமுனுக்காத உதடுகள் இல்லை. அன்று முதல் இன்று வரை இனிவரும் தலைமுறைக்கு ஒர் உதாரணம் வாழ்க்கை பாடமாகும். பள்ளி பாடத்திலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது
ஒவ்வொரு வரிகளும் மனிதனின் குற்றத்தை உணர்த்தும் உண்ணதகாவிய பாடல் ஆகும். குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த வரி அறிவுள்ளது அடங்கிடக்கிறது வீட்டிலே எதற்கும் ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே. தவறான பாதையில் போறவங்களை பார்க்கும் போதும் தவறு செய்பவர்களை காணும் போதும் இந்த பாடல் வரிகள்தான் ஞாபகம் வரும். பாடலில் வரும் ஒவ்வொரு அடி வரிகளுக்கும் ஒவ்வொரு பக்கம் கருத்துக்கள் எமுத வேண்டியிருக்கும் அந்தளவுக்கு கருத்தாழமிக்க ஒர் அற்புதமான பகுத்தறிவு மிக்க கொள்கை பாடல் ஆகும். .

படத்தில் சாண்டோ சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் மோதுவது போல் எடுக்கப்பட்ட சிலம்பாட்டம் சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபளமாக பேசப்பட்டது கேமரா ஓடவிட்டு இருவரும் மோதும் காட்சி சிங்கமும் சிங்கமும் மோதுவது போல் இருக்கும். மலையும் மலையும் மோதுவது போல் இருக்கும். இரண்டு மதயானைகள் மோதுவது போல் இருக்கும் அவ்வளவு சூப்பர் சிலம்பாட்டம்.
படத்தில் ஒன்பது பாடல்களும் சூப்பர் ஹிட் பாட்டுக்காக பைட்டுக்காக காளையே அடக்கும் காட்சிக்காக வாத்தியார் அழகுக்காக இப்படி இதற்காகத்தான் படம் சூப்பர் ஹிட் வசூல் மழை பொழிந்தது என்று குறிப்பிட்டு கூறமுடியாது. .

பொதுவாக தாய்பற்றித்தான் பாடல்கள் நிறைய உண்டு ஆனால் முதல் முதலாக தந்தையைப் பற்றி வந்த முதல் படம் பாடல் இடம் பெற்றது இதுதான். அதிலும் சுடுகாட்டில் தந்தை பிணத்தை பார்த்து அழும் காட்சி படம் பார்க்கும் அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும். . இந்த காட்சியினை பற்றி அடுத்த பதிவில் விரிவாக கூறுகிறேன். .தொடரும் தொடரும் தொடரும்... Thanks...

orodizli
18th April 2020, 08:57 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 51

இரண்டு கண்கள் இல்லாதவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்திருப்பார்
தர்மராஜா என்று பெயர் இருக்கும் ஆனால் எடுப்பதோ பிச்சை. .சிறுவயதிலேயே இறந்துள்ளார் பெயர் கேட்டா சிரஞ்சீவி என்பார்கள். .ஏழ்மையும் வறுமையும் உள்ளவனிடம் பெயர் கேட்டால் கோட்டீஸ்வரன் என்பான். இப்படி பெயருக்கும் அவன் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. பலபேர்க்கு கிடைக்கும் பட்டங்களும் அப்படித்தான் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். .நேற்று இன்று நாளை படத்தில் வாத்தியார் கூறுவார். மற்றவர்களா பார்த்து கொடுப்பதுதான் பட்டம் நாமே வைத்துக் கொண்டால் அதற்கு பெயர் தம்பட்டம். .பலபேர் வைத்திருக்கும் பட்டமும் தம்பட்டம்தான். .வாத்தியார் தனது ஒவ்வொரு படத்திலும் கொள்கையை கடைபிடிப்பதால் அவரது நடிப்பு திறமை பல பேர் அறிவதில்லை. அதற்கு காரணம். அரசியல். பொதுசேவை சினிமா மூன்று விதமான வாழ்க்கைக்கும் பதில் சொல்லனும். அரசியலுக்காகவும் கொள்கைக்காகவும் பொழுதுபோக்குக்காவும் ஒவ்வொரு திரைப்படமும் தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. .வெறும் சினிமா மட்டுமே வாழ்க்கையா இருந்தால் அவர் ஆயிரக்கணக்கான படங்கள் நடித்திருப்பார் உலகிலேயே சிறந்த நடிகராக திகழ்ந்திருப்பார். ஆனால் சுயநலத்திற்காக சினிமாவில் நடிக்க வில்லை என்பதுதான். 100. /சதவீதம் உண்மையாகும். அப்படி இருந்தும் தனது நடிப்பு திறமையை பல படங்களில் நிருப்பித்துள்ளார். பல பேரை ஆச்சரியபடுத்தியுள்ளார். .அதிலே ஒரு திரைப்படம் தான் தாய்க்கு பின் தாரம் ....

சசுடுகாட்டில் தனது தந்தையின் உடல் எரிவதைக்கண்டு அழும் காட்சி பார்ப்பவர்கள் கண்கள் குளமாக்கி விடும். உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு தத்ரூபமாக நடித்துள்ளார். .இக்காட்சி எடுக்கும் போது படபிடிப்பில் இருந்த அனைவருக்கும் நெஞ்சு உருகியது. அதற்கு காரணம் என்னவென்றால். .இக்காட்சி எடுக்கப்படுவதற்கு முன் சின்னப்பர் தேவர் வாத்தியாரிடம் ஏற்கனவே வந்த சில படங்களில் காட்சிகள் கூறி நடிக்க சொன்னார் ஆனால் வாத்தியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. .சிறிது யோசனைக்கு பிறகு சின்னப்பர் தேவர் வாத்தியாரிடம் அவரது முதல் மனைவி தங்கமணி இறப்பு நினைவு படுத்தினார். அதை கேட்டவுடன் வாத்தியார் முகம் வாடியது. பிறகு அந்த நினைவே அக்காட்சியில் நடிக்க தத்ரூபமாக அமைந்தது . (( வாத்தியார் முதல் மனைவி தங்கமணி பிரிவு பற்றி அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் எழுதியுள்ளார் ) ) படத்தில் இக்காட்சி பற்றி பல பத்திரிகைகளில் பாராட்டி எழுதினார்கள். ..இக்காட்சி பார்த்து தான் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் அரண்மனைகிளி படத்தில் நடித்திருப்பார். அப்படத்தின் 100 வது நாள் விழாவில் ராஜ்கிரண் கூறியது. படத்தில் என்தாய் இறந்த செய்தி அறிந்து எப்படி நடிக்க போகிறேன் என்று தவித்தேன் உடனே இளையராஜா அவர்கள் கூறினார். தாய்க்கு பின் தாரம் படத்தில் வாத்தியார் நடிப்பை பார்த்து நடிக்க கற்றுக்கொள் என்றார். அதன்படி வாத்தியார் படத்தின் நடிப்பு பார்த்துதான் நடித்தேன். ஆனால் இந்த காட்சி இந்தளவுக்கு பேர் வாங்கும் என்று பாராட்டு பெறும் என்றும் நினைத்துக்கூட பார்க்க வில்லை. .இந்த பேர் புகழுக்கு வாத்தியார் தான் காரணம் என்று புகழாரம் சூட்டினார். .வாத்தியார் நடிப்புக்கு இப்படம் கலங்கரைக்விளக்கம் ஆகும். .

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நான் எழுதிய 51 பாகம் தொடர்ந்து படித்து அதற்கு லைக் கமெண்ட்ஸ் சேர் தந்து மேலும் உற்சாகம் தந்து ஆதரவு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். .இத்தொடர் இத்துடன் முடிகிறது. .மீண்டும் சந்திப்போம். ...
மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....... Thanks...

orodizli
18th April 2020, 08:59 PM
அறிந்த தகவல் ... அறியாத செய்தி ......

புதிய தொடர் எழுவதற்கு முன் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். பாசம் படத்தில் வரும் ஒரு வசனம் இந்த உலகத்தில் நாம் எதை விரும்புகிறமோ. அது நமக்கு கிடைப்பதில்லை. .எதை ஒதுக்கிறமோ. அது நமது காலடியில் இருக்கும். .இது எந்தளவுக்கு உண்மை என்று, நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரவர் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். .வட இந்திய பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் அகில இந்தியா அறிந்த சிறந்த பின்னனி பாடகி பல விருதுகளை குவித்தவர் இது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது. . வட இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் .பல தலைவர்கள் லதா மங்கேஷ்கர் தான் அகில இந்தியாவிலேயே சிறந்த பாடகியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏன் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .ஆனால் வாத்தியார் மட்டும் அதற்கு ஒப்புதல் தரவில்லை காரணம். தமிழகத்தில் உள்ள P. சுசீலா தான் என்னைப் பொருத்தவரைக்கும் சிறந்த பாடகி. தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பாடகர் இருக்கும் போது வடமாநிலத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் எப்பவும் சுசீலா ரசிகர் லதா மங்கேஷ்கர் நல்ல பாடகிதான் அதற்காக சுசீலா விட சிறந்தவர் என்பது ஏற்றுக் கொள்ள வில்லை என்றார், வாத்தியாரின் கருத்துக்கள் அறிந்த பின் தமிழ் நாட்டில் கருத்து தெரிவித்தார்கள் தலை குனிந்தனர். .....
அதேப்போல் P. சுசீலா அவர்கள் தனது 70 வது வயதில் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கினார். . அந்த அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவும் சுசீலாவின் 75 . ம் ஆண்டு பவள விழா சேர்ந்து ஜெயா டிவி சிறப்பாக நடத்தியது. அதில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் பல தலைவர்களும் சுசீலாவை வாழ்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்கள் அப்போது தந்த தகவல்தான் நான் மேலே குறிப்பிட்டது.
அனைவரும் சுசீலாவை வாழ்த்தினர் பாராட்டினர் புகழ்ந்தனர் போற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் கடைசி நாளன்று P. சுசீலா அவர்கள் கூறினார்கள். ...

இன்று நான் அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்கிறேன் என்றால், அந்த எண்ணம் செயலும் நமக்கு வசதி வாய்ப்பு வாழ்க்கை அமைந்த பிறகு நமக்கு தேவையானது சேர்த்த பிறகு நமது தேவைக்கு அதிகமாக சேர்ந்த பிறகுதான் இந்த எண்ணம் நமக்குள் எழுந்துள்ளது என எண்ணி வருத்தம் அடைகிறேன். .காரணம்
பிறருக்காக வாழும் போதும் பிறர்க்கு உதவி செய்யும் போதும். அதன் மூலம் பிறர் அடையும் பலனும். சந்தோஷம் மகிழ்ச்சியும் அவர்கள் நம்மை மனதார வாழ்த்தும் போதும். மனம் அமைதி பெறுகிறது சாந்தம் அடைகிறது. இதை ஆரம்பத்தில் செய்யாதை எண்ணி வருத்தம் அளிக்கிறது. . இப்போது தான் எனக்கு புரிகிறது அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பேர் புகழுக்காக தர்மம் செய்ய வில்லை. அதிலே கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. பிறர்க்கு உதவிசெய்யும் போது மனம் மகிழ்ந்து செய்கிறார். கொடுப்பதில் சந்தோஷம் கண்டவர். இருக்கும் போது வசதி வந்த பிறகு செய்வது வள்ளல்தனம் அல்ல அது பிறவிலே வரணும். . அண்ணன் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே அந்த குணம் இருந்தது. அதனால் தான் அவர்க்குகொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது.
இன்று வரை அவர் பேர் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது காரணம் அவரது வள்ளல் குணம் தான். .நீங்களும் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததால் பிறர்க்கு உதவி மகிழ்ச்சி கொள்ளுங்கள். .என்றார். ....... Thanks to GS.,

orodizli
18th April 2020, 09:00 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2. பாகம் 52 . பேரறிஞர் அண்ணா

பெயரிலேயே மரியாதை உள்ள பெயர் அண்ணா. எல்லோரும் அன்புடன் அழைக்கப்படும் பெயர் அண்ணா. .உறவு இல்லாதவர்களுக்கு உறவோடு அழைக்கும் பெயர் அண்ணா. .ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்கிற வார்த்தையை கண்டறிந்தவர் அண்ணா. ....எதையும் தாங்கும் இதயம் உள்ளவர் அண்ணா. ..பேச்சிலே கனிவு. .செயலிலே தெளிவு. .முயற்சியிலே முடிவு. .சொல்லிலே சொல்மிக்கவர் அண்ணா. ..கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்டவர் அண்ணா. ..எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தென்னாட்டு காந்தி அண்ணா. ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. ..திராவிட இயக்கத்தின் தலைவர் அண்ணா. ..தமிழகத்தில் விடிவெள்ளி அண்ணா...அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா..அடுக்கு மொழி பேசுவதில் அண்ணாவுக்கு இனை அண்ணாதான். .பொன்மனச்செம்மலை கண்டெடுத்த அண்ணா. ..பார்வேந்தரும் பார்கவிஞர்கள் போற்றும் அண்ணா. .தமிழுக்கு பெருமை சேர்த்த பெருமைமிக்க அண்ணா ..காஞ்சி மாநகரில் அவதரித்த எங்கள் மன்னவன் அண்ணா. .இப்படி அண்ணாவைப்பற்றி எத்தனையோ புகழ் மாலைகள் சூடிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட அண்ணா அவர்கள் அதிகமாக புகழ்ந்தது நமது பொன்மனச்செம்மலை த்தான். அப்படி அண்ணாவால் புகழப்பட்ட வார்த்தைகள் என்ன வரலாறு என்ன என்பதுதான் இத்தொடரின் முதல் அத்தியாயமாக தொடங்கிறேன். .இத்தொடர் விளக்கம் அண்ணா புரட்சித்தலைவர் பற்றி என்னன்ன சொன்னார். என்பதைப்பற்றி முதலில் பார்ப்போம். .??

ஒரு முறை அண்ணாவிடம் மா பொ. சிவஞானம். .நாவலர் நெடுஞ்செழியன். .
ஈ வி கே சம்பத். போன்றோர் ஒரு நிகழ்ச்சிக்கு நிதி வசூல் செய்ய வேண்டும் அதற்கு தாங்கள் வரவேண்டும். என்று கேட்டனர். அதற்கு அண்ணா கூறினார் தம்பி ரராமச்சந்திரனை அழைத்து செல்லுங்கள் என்றார். .அதற்கு அவர்கள் அண்ணாவிடம் சொன்னது. .ஐயா எம்ஜிஆரை நீங்கள் நிதி வசூல் செய்வதற்கும் .
தேர்தல் வேலை பார்ப்பதற்கும். .மாநாட்டில் கூட்டம் சேர்ப்பதற்கும்...இப்படி முக்கியமான நிகழ்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துகீறிர்களே மற்ற நேரங்களில் அவரை முக்கியமானவராக நினைப்பதில்லை யே. .என்று சிலர் உங்களை குறை கூறுகின்றனர். . அதனால் தாங்களே வரவேண்டும் என்றனர். .

அதற்கு பேரறிஞர் அண்ணா கூறியது என்ன வென்றால். .சிறிது காத்திருங்கள். அடுத்த பதிவில் பதில் வரும் தொடரும் தொடரும் தொடரும் ........ Thanks...

orodizli
18th April 2020, 09:01 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2. பாகம் 53. பேரறிஞர் அண்ணா. ..

அன்னை உலகில் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி..
இதன் பொருள் பலபேர் அறியாதது. . யாரெல்லாம் தாயைக் நேசிக்கிறார்களோ தாயைப் மதிக்கிறார்களோ .தாயைக் வணங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் தான். அவர்களை நானும் நேசிப்பேன் மதிக்கிறேன் வணங்குகிறேன். என்பதே இதன் அர்த்தம் ஆகும். . இதயதெய்வம் அண்ணாவை இதயத்தில் வைத்து பூஜித்தார். நமது வள்ளல் எம்ஜிஆர் ...அதேப்போல் பேரரறிஞரும் வள்ளலை தனது சகோதராக நினைத்துத்தான் ஒருநாளும் விட்டு கொடுத்தது இல்லை. ஈ. வி. கே மா பொ. சி. நாவலர். மூவரும் கேள்விக்கும். இதோ அண்ணா தந்த விளக்கம். ..

அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னார். .வெள்ளி சரிகைப்போட்ட விலை உயர்ந்த பட்டு புடவை போன்றவர் எம்ஜிஆர். . அவரை எல்லா நேரமும் பயன்படுத்தி அசிங்கம் படுத்தக்கூடாது. .திருமணம் திருவிழா போன்ற வைபவங்களுக்கு மட்டுமே உடுத்தி அழுகு பார்க்க வேண்டும். .மிக பெரிய துணிக்கடையில் கூட பட்டுப்புடவைகளை தனியாக வைத்துத்தான் அழுகு பார்ப்பார்கள். .மற்ற துணிகளுடன் சேர்த்துக்வைக்கமாட்டார்கள். .ஏன் என்றால் வாங்குபவர்களின் தரம் தெரியாமல் போய் விடும். .அதுபோன்றுதான் எம்ஜிஆர் மதிப்பு என்னவென்று என்போன்றோர்களுக்குத்த்ன் தெரியும். .அதுமட்டுமல்ல. உங்கள் நிகழ்ச்சிக்கு நான் வந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்காது. .எம் ஜி ஆர் வந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். .நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடக்கும்.
நான் எம்ஜிஆர் பற்றி என்ன நினைக்கிறேன் என்று எம் ஜி ஆர் ஒருவருக்குத்தான் தெரியும். .அதனால் மற்றவர்கள் நினைவைப்பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். .அதேப்போல் என்னைப் பற்றி தவறான தகவல் யார் எம்ஜிஆரிடம் போய் கூறினாலும். அவர் கூறும் காரணம், காது கேட்கல மீண்டும் கூறுங்கள் என்பார் மீண்டும் மீண்டும் கூறினாலும் அதே வார்த்தைகள்தான் வரும். என்னைப்பற்றி தவறான தகவல் யார் தந்தாலும் அதேநேரத்தில் மட்டும் காது கேளாத மனிதராக இருப்பார் அதுதான் அவர் என்மீது வைத்திருக்கும் உண்மையான பாசம். அப்படி இருக்கையில் நாம் மட்டும் இதுபோன்ற தவறான தகவல்களை காது கொடுத்து கேட்கலாமா. ?என்று கூறினார். .இதைக்கேட்டதும் மூவரும் பிரமித்துப் போய் விட்டார்கள் ..
பின்னே அண்ணாவின் இதயக்கனி அல்லவா நமது பொன்மனச்செம்மல் இப்படி பொன்மனச்செம்மலுக்கும் அண்ணாவுக்கும் உள்ள அன்பின் பரிமாற்றமே இத்தொடரின் குறிக்கோள் ஆகும். . இது போன்ற பல நிகழ்வுகளை காண்போம். .
தொடரும் தொடரும் தொடரும்...... Thanks...

orodizli
18th April 2020, 09:02 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் . 2 பாகம் 54. பேரரறிஞர் அண்ணா. ..

புரட்சித்தலைவர் தன் தாய் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாரோ. அதே அளவு அன்பு பாசமும் அண்ணா மீதும் வைத்திருந்தார். .எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பு கொண்டிருந்தார். .அதேப்போல் அண்ணாவும் எம்ஜிஆர் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டியிருந்தார். .என் இதயக்கனி என்று எம் ஜி ஆரை கொண்டாடினார்..ஒரு குடும்பத்தில் பல குழைந்தைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட குழந்தை மட்டும் செல்ல குழந்தையாக எல்லோருடைய அன்புக்கு உரியதாக இருப்பதைப்போல கழகத்தில் புரட்சித்தலைவர் இருந்தார். . என் தாயிடம் காணப்படும் மன்னிக்கும் மனப்பான்மை அறிஞர் அண்ணாவிடம் காண்கிறேன்.அதனால்தான் நான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டேன்.என்று சொன்னவர் நமது புரட்சித்தலைவர். .

1967 ம் ஆண்டு சிறந்த படமாக காவல் காரன் படம் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட து. பரிசு தொகையாக 50. 000. ரூபாய் கிடைக்கும். .பரிசுக்கான தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த வெங்கட்ராமன் என்பவர்.அண்ணாவிடம் இந்த பட்டியலை காட்டிய போது எதற்கும் எம் ஜி ஆரிடம் காட்டி விடுங்கள் அவருடைய கருத்தையும் தெரிந்துக்கொண்டு வாருங்கள். என்றார் அண்ணா. . வெங்கட்ராமன் அவர்கள் பட்டியலை புரட்சித்தலைவர் விடம் காண்பிக்க புரட்சித்தலைவர் முதல் படமாக விவசாயி படத்தை தேர்ந்தெடுத்தார். .ஆனால் அண்ணா இல்லை காவல்காரன் படத்துக்கு தருவதுதான் சரியானது என்று நான் சொன்னதாக எம் ஜி ஆரிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்வி பட்ட எம் ஜி ஆர் அப்படியா ரொம்ப மகிழ்ச்சி என்று ஏற்றுக் கொண்டார். காவல்காரன் படத்தை நான் பரிந்துரை செய்யாதற்கு ஒரு காரணம் உண்டு என்று கூறினார். வீரப்பன் என்னிடம் வேலை செய்பவர் சத்யாமூவிஸ் என்னுடைய சொந்த நிறுவனம் போல இந்த நிலையில் நான் காவல்காரன் பரிந்துரை செய்திருந்தால். மற்றவர்கள் தவறாக நினைக்ககூடும். அதனால்தான் விவசாயி படத்திற்கு பரிந்துரை செய்தேன். மற்றபடி காவல்காரன் படத்திற்குதான் தரவேண்டும் என்று முதல்வர் பேரரறிஞர் அண்ணாவே சொல்லிவிட்டதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்..

1967. ம் ஆண்டு தமிழக அரசால் முதல் முதலாக தேசியவிருது பெற்ற முதல் படம் காவல்காரன் முதல் நடிகர் புரட்சித்தலைவர். .நாடோடிமன்னன் படத்திற்கு பிறகு வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே கருப்பு வெள்ளை படம் காவல்காரன். ..பேரரறிஞர் அண்ணா அவர்கள் தியேட்டர் சென்று பார்த்த ஒரே திரைப்படம் காவல்காரன் ..
இப்படி அண்ணா எம் ஜி ஆர் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக இருந்த அன்புக்கு இலக்கணமாக வேறு ஒருவரை உதாரணமாக கூற முடியாது. ........ Thanks...

orodizli
18th April 2020, 09:03 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 55. பேரரறிஞர் அண்ணா. .

30. 11. 1958. ஞாயிற்றுக்கிழமை. இந்திய திரையுலகமே எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி படமான நாடோடிமன்னன்.மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் வெற்றிவிழா நடைபெற்றது. 10. லட்சம் பொதுமக்கள் ரசிகர்கள் கலந்துக்கொண்ட ஒரே வெற்றிவிழா திரைப்படம் இதுதான். உலகிலேயே வேறு எந்த ஒரு திரைப்பட வெற்றிவிழாக்கும் இவ்வளவு லட்சம் மக்கள் கலந்துக்கொண்டதில்லை. மதுரையில் நடைபெற்றது போல் அதற்கு ஈடு இணையாக அதே பத்து லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட நாடோடிமன்னன் வெற்றிவிழா பேரரறிஞர் அண்ணா சார்பில் சென்னையில் எஸ். ஐ. ஏ. ஏ. திடல், மைதானத்தில். அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள்.அனைவருக்கும் கேடயங்கள் வழங்கி கெளரவித்தார்.பேரரறிஞர் அண்ணா அவர்கள். ...
நடனகுழு . ஸ்டண்ட் மாஸ்டர் நடிகர்கள் , ஒப்பனையாளர்கள் ஒளிப்பதிவாளர்கள்.எடிட்டிங் செய்பவர்கள். இப்படி தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும். அரை சவனில் மோதிரம் வழங்கப்பட்டது. அந்த மோதிரத்தில் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்துக்கள் ஆங்கிலத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பொறிக்கப்பட்டியிருந்தது. அனைவரது விரல்களிலும் மோதிரத்தை அணிவித்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். ..விழாவில் கலந்துக்கொண்டு புரட்சித்தலைவர் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள். .நாவலர் நெடுஞ்செழியன், என் வி நடராஜன், சத்தியவாணி முத்து. மு. கருணாநிதி, மற்றும் பல தலைவர்கள் மற்ற கலைஞர்கள் அனைவரும் புரட்சித்தலைவரைப் பாராட்டி பேசினார்கள். ..

பேரரறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து பேசிய பொன்வார்த்தைகள் சில இதோ
மாமரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கின்றன. அதில் ஒரு பழம் மட்டும் தங்கம் போல் ஜொலித்தது. இந்த பழம் எங்கள் மடியில் விழாதோ என்று பலரும் மடியை விரித்தனர். காமராஜரும் மடியை விரித்தார் நானும் மடியை விரித்தேன். .அந்த பழம் என் மடியில் விழுந்தது. அதை எடுத்து நான் என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். அந்த பழம்தான் இதோ இங்கே வீற்றிருக்கும் புரட்சிநடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் என் இதயக்கனி என்று எம் ஜி ஆரை புகழ்ந்து பேசினார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .அண்ணா அவர்கள் அப்படி கூறியதும் அவரின் பேச்சு கேட்டு மக்களின் கரவோலி அடங்க அரைமணி நேரம் ஆனது. பல பேர் புரட்சித்தலைவரைப் புகழந்து பேசினாலும் அங்கே அண்ணாவின் பேச்சுக்குத்தான் கரவோலி அதிகமாக கேட்டது. பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஒருவரை மனம் குளிர பாராட்டுகிறார் என்றால் அது புரட்சித்தலைவர் ஒருவரை மட்டும் தான் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று ஆகும். அதேப்போல் அண்ணாவின் பேச்சு கூடியிருந்த அனைவரையும் காந்தம் போல் இழுத்தது. புரட்சித்தலைவரும் அதேப்போல் அஅண்ணாவின் பேச்சைக் கேட்டு மயங்கியது உண்டு என்பதற்கு மற்றொரு நிகழ்வில் பார்ப்போம் ...... Thanks...

orodizli
18th April 2020, 09:05 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 56. பேரரறிஞர் அண்ணா. .

புரட்சித்தலைவர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தின் படபிடிப்பு வாகினி ஸ்டியோவில் நடைபெற்றது. அப்போது பேரரறிஞர் அண்ணாவுக்கு உடல் நலம் குறைவு என்பதை கேள்வி பட்டு நுங்கம்பாக்கம் வில்லேஜ் ரோட்டில் உள்ள அண்ணாவின் வீட்டுக்கு சென்றார் புரட்சித்தலைவர். . எம்ஜிஆரை வரவேற்று சகஜமாக
உற்சாகமாக பேசினார் அண்ணா அவர்கள். .அப்போது அண்ணாவின் வளர்ப்பு மகன்கள் டாக்டர் பரிமளம் .இளங்கோ .மற்றும் சத்யாஸ்டியோ மானேஜர் பத்மநாபன். .புத்தூர் நடராஜன். ..அண்ணாவின் துணைவியார் ராணியம்மையார். .அனைவரும் அங்கு இருந்தனர். . அப்போது தேர்தல் பற்றி பேச்சு வந்தது. அப்போது அண்ணா அவர்கள் ஏற்கனவே நடந்த நிகழ்வு ஒன்றை நினைவூட்டினார். .அவை என்னவென்றால். .

அண்ணாவின் தலைமையில் 1967 ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக திமுக ஆட்சியில் அமர்ந்தது. அப்போது நடந்த தேர்தலில். தேர்தல் பிரசாரத்திற்காக. ஒரு காரில் அண்ணாதுரை. .மாயாவரம் தொகுதியில் திமுக வேட்பாளராக தேர்தலில் நின்ற.
கிட்டப்பா அவர்கள் மற்றும் இராம அரங்ண்ணல். .மதியழகன், .. என் வி நடராஜன்...
ஆகியோர் விழுப்புரம் வழியாக திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தற்காக சென்று கொண்டியிருந்தார். . விழுப்புரம் அருகே தீடிரென்று வண்டிநின்று விட்டது. என்னப்பா
மணி ((டிரைவர் பெயர் ))வண்டி ஏன் நின்று விட்டது என்று கேட்டார் அண்ணா அவர்கள். பெட்ரோல் தீர்ந்து விட்டது. கொஞ்சமா இருந்தது அடுத்த டவுனில் போய் போட்டுக்கலாம். என்று நினைத்து இருந்தேன் அதுக்குள்ளே டாங்க் காலியாகி விட்டது. என்றார். கொஞ்சம் பொறுங்கய்யா எதாவது வண்டி வந்தா பெட்ரோல் வாங்கி வருகிறேன் என்றார். டிரைவர். .அப்போதெல்லாம் கட்சி மூத்த தலைவர்கள் கூட புடைசூழ செல்லாமல் தனி காரிலே சென்றனர். .கார் நின்று போன இடத்தில் இருபக்கமும் வயல்கள். .நிறைய பேர் விவசாய வயல்களில் வேலைச்செய்துக் கொண்டியிருந்தார்கள் ஆண்களும் பெண்களும் காரை சூழ்ந்துக்கொண்டனர். .காரின் பேனட்டின் மீது பறந்துக்கொண்டிருந்த திமுக கொடியை பார்த்து காரை சுற்றி சுற்றி வந்தனர். . எம்ஜிஆர் கொடி பறக்குது எம் ஜி ஆர் இருக்காரு பாரு என்று ஆரவாரம் செய்தனர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். .காரை விட்டு இறங்கி அவர்களை சந்தித்தார் அண்ணா. . இது அவர் வண்டிதான் எம் ஜி ஆர் எங்களுடன் இல்லை. .திருச்சி வரை உள்ள கூட்டத்திற்கு போக சொல்லி எம் ஜி ஆர் தான் எங்களை அனுப்பினார் என்றார். .அது உண்மை இஇல்லையென்றாலும் எம் ஜி ஆரை நன்கு அறிந்திருந்த கிராம மக்கள் தன்னை திருச்சி சென்று, வர எம்ஜிஆர் பணிந்தார் என்று அண்ணா கூறியது. .அவரது பெருதன்மைய காட்டியது.. எம்ஜிஆர் காரில் பெட்ரோல் தீர்ந்து போச்சா இதோ ஒரு நிமிடத்தில் பெட்ரோல் கொண்டு வருகிறோம். .என்று கூறி சில இளைஞர்கள் தங்களுக்குள் கொஞ்சம் பணம் போட்டு சைக்கிளில் வேகமாக சென்று ஒரு டின்னில் பெட்ரோல் வாங்கி கொண்டு வந்து கொடுத்தனர். அண்ணாவும் மற்றவர்களும் அதற்கான பணம் கொடுக்க முன் வந்த போது பணத்தை வாங்க மறுத்து விட்டார்கள் .அந்தளவுக்கு எம் ஜி ஆர் மீது ரசிகர்கள் உயிரை வைத்திருந்தார்கள். .இந்த நிகழ்வு அண்ணா கூறி முடித்தார். என்னை அவங்களுக்கு தெரியல உங்கள் பெயர்தான். தெரிகிறது என்றார் அண்ணாஅவர்கள்? ...இதற்கு புரட்சித்தலைவர் சொன்ன பதில் அடுத்த பதிவில் பார்ப்போம். ....... Thanks...

orodizli
18th April 2020, 09:05 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 57. பேரரறிஞர் அண்ணா

அண்ணா அவர்கள் அப்படி பெருந்தன்மையுடன் கூறினாலும் எம் ஜி ஆர் அதை ஏற்க வில்லை. . அப்படி சொல்லாதீங்க அண்ணா உங்களை தெரியாமல் உங்கள் பேச்சைக் ரசிக்காமல் தமிழகத்தில் யாராவது இருக்க முடியுமா.?.என்றார். .எம்ஜிஆர் எந்த கூட்டத்தில் பேசினாலும் அவர் பேசியதும் கூட்டம் கலைந்து விடும். எனவே தேர்தல் பொதுக்கூட்டத்தற்காக தமிழகத்தில் எங்கு பேசினாலும் மற்ற எல்லா பேச்சாளர்களையும் பேசி முடித்தபின்னரே எம் ஜி ஆரை பேச அழைப்பார்கள். ஆனால் அண்ணா பேசும் கூட்டங்களில் எம் ஜி ஆர் பேசி முடித்த பின்னும் கூட்டம் கலைந்து போகாது. கூட்டம் தொடர்ந்து அப்படியேஇருக்கும். பேரரறிஞர் அண்ணா பேசி முடித்த பின்னர்தான் கூட்டம் கலையும். .தமிழக அரசியலில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை அண்ணாவுக்கு எம்ஜிஆருக்கு உண்டு. இருவருக்கும் உள்ள
ஈடுபாடு அலாதியானது.

முதலில் காங்கிரஸ் கட்சியில் எம்ஜிஆர் இருந்தார். நெற்றியில் விபூதி கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிவார். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டியிருந்தார்..திமுக கட்சியில் நீங்கள் எப்படி சேர்ந்தீர்கள் என்று ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு எம்ஜிஆர் தந்த பதில். பேரரறிஞர் அண்ணா எழுதிய சந்திரோதயம். .பணத்தோட்டம் ஆகிய இரு புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பால் ஈர்க்கப்பட்டேன். பிறகு அண்ணாவின் பேச்சைக் கேட்டேன் காந்தம் மாதிரி அவர் பேச்சு என்னை இழுத்தது அப்படித்தான் நான் திமுகவில் சேர்ந்தேன். என்று விளக்கம் அளித்துள்ளார். பிற்காலத்தில் அண்ணாவின் இதயத்தில் எம்ஜிஆர் காந்தம் போல் பதிந்தார்.

1962 ம் ஆண்டு சென்னை எஸ் ஐ. ஏ. ஏ. திடலில் நிதி திரட்டும் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் கீழே நின்றுக்கொண்டு நிதி வழங்குபவர்களை வரிசையாக நிற்க வைத்து மேடைக்கு அனுப்பிக்கொண்டியிருந்தார் மேலே ஒலிபெருக்கின் முன்பே கருணாநிதி நின்று கொண்டியிருந்தார் நிதி வழங்குபவர்கள் தங்கள் பெயரை சொல்லி பணத்தை தந்தனர். அவர்கள் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்தார் கருணாநிதி. . அறிஞர் அண்ணா அந்த காணிக்கையை
பெற்றுக்கொண்டார் பேராசிரியர் அன்பழகன் கணக்கு புத்தகத்தோடு அமர்ந்து விபரத்தை எழுதிக்கொண்டார். .இதைத் தவிர ஐம்பது பேர் உண்டியலோடு மக்கள் மத்தியில் நிதி சேகரித்துக்கொண்டிருந்தனர். மாலை 6. 30. மணிக்கு தொடங்கி இரவு
9. 30. மணிக்கு நிதிவசூல் முடித்துக் கொள்ளப்பட்டது..அதன் பிறகு மக்கள் திலகம்
எம் ஜி ஆர் தனக்கு மதுரையில் மக்கள் தந்த 110. சவரன் தங்க வாளை பேரரறிஞர் அண்ணாவிடம் பாதுகாப்பு நிதிக்காக வழங்கினார்.
வரலாறு இனிமேல் தான் ஆரம்பம் அவசர படாதீங்க அடுத்த பதிவில் சந்திப்போம். ..... Thanks..........

orodizli
18th April 2020, 09:06 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 58. பேரரறிஞர் அண்ணா

ஒவ்வொரு முறையும் வாத்தியாரின் வள்ளல்தனமும் மனிதநேயமும் இயற்கையானது பிறவியிலேயே ஏற்பட்டது என்பதற்கு பல உதாரணங்கள் ஆதாரங்கள் அவரிடம் உதவிபெற்றவர்களால் மட்டுமே அறிய முடியும், பாதுகாப்பு நிதிக்காக 110. சவரன் தங்க வாளை பேரரறிஞர் அண்ணாவிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அண்ணா அவர்கள் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தங்கவாளை ஏலமிட்டார். பார்த்தால் பசி தீர்க்கும் பளப்பளப்போ கண்ணை பறிக்கும். தங்கத்தால் செய்யப்பட்ட வாள் இதிலே வெள்ளி இருக்கிறது. வேலைப்பாடுகள் நிறைந்திருக்கிறது. எம்ஜிஆர் வள்ளல் குணமும் வாங்குபவர்கள் மனமும் பார்ப்பவர்கள் இதயத்தில் மகிழ்வு உண்டாகும். முதல் முறையாக பதினோன்யிரம் அண்ணாவின் சொற்கள் கேட்டு எழுந்த ஆரவாரம் எல்லோருடைய இதயத்திலும் ஒலித்தது முடிவில் தங்கவாளை பதிமூன்றாயிரம் ரூபாய்க்கு வி. எஸ் இ. படநிறுவனத்தினர் ஏலத்தில் வாங்கினார்.பாதுகாப்பு நிதியாக எல்லாம் சேர்த்து 35. ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. இது தவிர தங்க நகைகள் பல ஆயிரக்கணக்கான மதிப்பு இருக்கும். .ஏலத்தில் எடுக்கப்பட்ட தங்கவாளை மீண்டும் விலைக்கொடுத்து மக்கள் திலகம் வாங்கினார். .அதனை கொல்லுரில் கோவில் கொண்ட மூகாம்பிகை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டார். தாயின் கையனைப்பில் தனயன் இருப்பது போல். தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கையில் இன்றும் உள்ளது. வாத்தியார் வள்ளல் தனத்துக்கு ஆதாரம் கேட்கும் சில மூடர்களுக்கு இதுவே ஆதாரம். செல்லுங்கள் மைசூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு இன்றும் அம்மன் கையில் இருக்கும் வாள் எங்கள் தெய்வம் பொன்மனச்செம்மல் தந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள் மனிதர்கள் இறக்கலாம் அவன் உடல் அழியலாம் ஆனால் அவன் செய்த தர்மமும் வள்ளல் தனமும் ஒரு நாளும் அழியாது அது இறைவனின் சன்னதியில் போய் சேரும் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும் ஆதாரம் ஆகும் .

இந்தியா சீனா போர் நிதிக்காக மக்கள் திலகம் அப்போதைய பிரதமர் நேருவிடம் உடனே பாதுகாப்பு நிதி என்று 75. ஆயிரம் வழங்கினார். பணம் எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஜவஹர்லால் நேரு. . நேருவின் உயர்ந்த உள்ளத்தை அது காட்டியது. . அதற்கு பதிலளித்துப் மக்கள் திலகம் பேசிய வைர வரிகள் சில. நேருவின் பேச்சைக் கேட்டு நான் உருகினேன் என்றால் அது யார் தந்த மனப்பண்பு அறிஞர் அண்ணாவின் வழியில் நடப்பதால் பெற்ற சிறப்பல்லவா. ரூபாய் 75 ஆயிரம் தந்தது எனக்கு பெருமையல்ல. . என் தாய் தந்தை குடும்பத்தினருக்கும் பெருமையல்ல. பேரரறிஞர் அண்ணா அவர்களுக்கு உரிய பெருமையிது. வாழ்க்கையை சுகமாக கழிக்க வளமிருக்கிறது என்றாலும். நான் மக்கள் மன்றத்தில் வருவதும் மக்களுக்குக்காக போராட நினைப்பதும், மக்கள் கருத்தை எடுத்து சொல்ல விரும்புவதும் அறிஞர் அண்ணாவின் தொண்டன் என்பதற்காகவும். அவரது கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்திற்குக்காவும். கொடுத்தேன். என்றார் மக்கள் திலகம் இதைக்கேட்டு அண்ணாவும். திமுக சேர்ந்த அனைவரும் பூரிப்பு அடைந்தனர். இப்படி அண்ணாவும் எம்ஜிஆரும் ஒருவர் மீது ஒருவர் பற்று வைத்திருந்தார்கள்
மேலும் தொடரும். தொடரும்.... Thanks...

orodizli
18th April 2020, 09:07 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 59. பேரரறிஞர் அண்ணா

எம்ஜிஆருக்கும் எனக்கு இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்ஜிஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வதாக கருதப்படும். உண்மைதானே எம்ஜிஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். .முல்லைக்கு மணம் உண்டு. என்பதை கூறவா வேண்டும். . இந்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர் பார்த்தனர். ஆனால் அது என் மடியில் வந்து விழுந்தது, என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். ( 1958. ம் ஆண்டு நாடோடிமன்னன் வெற்றிவிழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை ) ..
நமது எம்ஜிஆர் அவர்கள் பேசும் போது அழுகும் உள்ள உணர்ச்சியும் உள்ளதுதான் கவிதை என்று சொன்னார். இதை சொல்லும் போது நீங்கள் எல்லாம் கைத்தட்டி மகிழ்ந்தீர்கள். எதற்காக கைதட்டீர்கள் என்று எண்ணி பார்த்தேன். அப்போது தான் அவர் தன்னைப் பற்றி பேசினார் என்று புரிந்தது. அது அவர்க்கு மட்டுமே பொருந்தும் ( இரண்டாம் உலக தமிழ் மாநாடு 1968. ல் நடந்தபோது அண்ணாவின் புன்னகை உரை ) )
தமிழர் பண்பாடு அவதாரம் எடுத்து நா. மணக்க நடமாடிய நாவுக்கரசர் அறிஞர் அண்ணா அவர்கள். .நாடு இருந்தும் அதற்கு பெயரில்லாமல் தவிர்த்த ஒரு இனத்தின் மானத்தை காக்க தமிழ் நாடு என்று தான் பிறந்த மண்ணுக்கு பெயர் சூட்டிய தமிழ் தாயின் பண்பாட்டு தலைமகன் அறிஞர் அண்ணா ( அண்ணாவைப்பற்றி எம்ஜிஆர் கூறியது. )
புயல் மழையில் சேதம் வரும் இடங்களில் எல்லாம் எங்கள் புரட்சி நடிகர் உதவினை காணலாம். தன்னை தேடி வருகிறவன் கண்ணீரை துடைப்பவன் வள்ளல். .தன்னை தேடி வருகிறவனின் துன்பத்தை போக்குபவன் வள்ளல். . ஆனால் புரட்சிநடிகர் எம்ஜிஆர் அப்படி அல்ல சமுதாயத்தில் துன்பபடுகிறவன் எங்கே என்று தேடிபோய் அவன் கண்ணீரை துடைத்து கைக்கொடுக்கிற எம்ஜிஆர் வள்ளலுக்கெலாலாம் வள்ளல் ஆவார். ( 1961 . ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கும் போது அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள். )

பேரரறிஞர் அண்ணா மறைந்த போது மக்கள் திலகம் பேசிய மணிமொழிகள். .நெஞ்சு பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுள்ளனர் ..அண்ணா அவர்கள் புறத்தில் வேண்டுமானால் நம்மை விட்டு அகன்று இருக்கலாம். அகத்தில் நாம் சாகும் வரை இருந்துக்கொண்டுத்தான் இருப்பார். இருள் விலக அகல்விளக்காக இருந்ததாவது பயன் பட வேண்டும். என்பது பேரரறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் தந்த பாடம். எதையும் தாங்கும் இதயம் நம்மை விட்டு போகாமல் நமது இதயத்தில் தங்கி விட்டார்........ Thanks...

orodizli
18th April 2020, 09:08 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 60. பேரரறிஞர் அண்ணா

1. பொதுவாக எம் ஜி ஆர் அவர்கள் தன்னிடம் கையெழுத்து வாங்க விரும்பி அணுகும் ரசிகர்களுக்கு அண்ணா நாமம் வாழ்க என்று எழுதித்தான் கையெழுத்து போட்டு தருவார்..
2, அதேப்போல் கலந்துக்கொண்ட எந்த விழாவிலும் தனது உரையை அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லியே முடிப்பார்.
3. 1977 ம் ஆண்டு முதல் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் அண்ணா சிலை அருகில் கூடியிருந்த மக்கள் கடல் மத்தியில் முதல் முதலாக அவர் வாக்குறுதி எடுத்துக் கொண்டார். இந்த ஆட்சி அண்ணாவுக்கு காணிக்கையாக்கிறேன் இது அண்ணாவின் அரசு என்றார்...
4, கட்சியின் பெயரில் கொடியில் கொள்கையில் இயக்க பத்திரிக்கையில் அண்ணா என்ற முத்திரை பதித்தார். .அவர் எண்ணம் செயல் சொல் அனைத்திலும் அண்ணா வாழ்ந்தார். .அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லாமல் புரட்சித்தலைவர் பேச்சை முடித்துக்கொள்ளவில்லை. .
5. அண்ணாவை தாங்கள் வளருவதற்கு மட்டும் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் புரட்சித்தலைவர் வளர்ந்த பின்பும் அண்ணாவை மறக்க வில்லை. ..
6. புரட்சித்தலைவரின் அண்ணா பக்தியே யாராலும் கண்களால் பார்க்க முடியாது. காதுகளால் கேட்க முடியாது. இதயத்தால் மட்டுமே உணர முடியும்...
7. இப்படி தனது வாழ்நாளில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க போது ஒவ்வொரு வெற்றியும் அண்ணாவால் கிடைத்தது என்று கூறியுள்ளார். காஞ்சித்தலைவரை நினைக்கவும் வணங்கவும் தவறியது இல்லை. .
8. தனது ஒவ்வொரு படத்திலும் அண்ணாவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் பாடல் வரிகள் வசனம் வரிகள் அல்லது அவரது கொள்கை மறக்காமல் இடம் பெற செய்வார். .
9. வள்ளல் எம்ஜிஆர் ரிக்ஷாக்காரர்களுக்கு மழை கோட்டு கொடுத்தார் அந்த பெரிய விழாவையும் அண்ணா அவர்கள் தன் பக்கம் வைத்துக்கொண்டுத்தான் நடத்தினார். .
10. கலைவாணர் என். எஸ். கே.யின் புதல்விகளுக்கு எம்ஜிஆர் தன் செலவில் திருமணம் நடத்திய போதும் அண்ணாவை தலமை தாங்க வைத்து பெருமைப்பட்டார்.
11. எங்கவீட்டுபிள்ளை படத்தின் வெள்ளிவிழாவின் போது. அவர் அண்ணாவை மறந்து விடாமல் தலமை ஏற்க சொன்னார். .தனது சொந்த தயாரிப்பான நாடோடிமன்னன் வெற்றிவிழாவினையும் அண்ணாவின் தலைமையில் நடத்தினார். .
12. அண்ணாவுக்கு சென்னை நீதிமன்றத்தில் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட போது அங்கேயே எம்ஜிஆர் விக்கி விக்கி சிறு குழந்தை போல் அழுது விட்டார். .இந்த நாட்டிலேயே அண்ணா தண்டனை நினைத்து முதல் சொட்டு கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது எம்ஜிஆரின் கண்களிலிருந்துதான்.
13. என்னை பெற்ற அன்னை பெரும் செல்வமாக எனக்கு ஒரு அண்ணனை தந்தார்கள். ஆனால் கலைத்தாய் தமிழ் தாய் எனக்கு இரண்டு அண்ணன்கள் தந்தது. . ஓன்று அண்ணன் கலைவாணர். இரண்டு அரசியலில் அறிவு செல்வமான பேரரறிஞர் அண்ணாவை எனக்கு பெரும் சொத்தாக வழிக்காட்டியாக இணையற்ற தலைவராக எல்லா வடிவமாக ஒரு அண்ணனை தந்தது, ஒரு தாய் வயிற்றில் பிறந்தால்தான் பாசம் இருக்கும் என்பது இல்லை. ........ Thanks...

orodizli
18th April 2020, 09:09 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 61. பேரரறிஞர் அண்ணா

1969. ம் ஆண்டு எல்லோரும் தாங்கிக்கொள்ளமுடியாத சோதனை ஏற்பட்ட ஆண்டாகும்
எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும் என்றும். .தம்பி உன் முகத்தை காட்டினால் போதும்? ...உன்னை என் இதயத்தில் வைத்திருக்கிறான். .என்று மக்கள் திலகத்தை பார்த்து சொன்னவர் அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா அவர்கள். ..
அண்ணா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட பிறகு கடைசி கட்டத்தில் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருந்த நேரம். அண்ணாவை பார்க்க வெளியூரில் இருந்து வந்து பலபேர் பார்த்தனர். .கட்சி பிரமுகர்கள் பிரபலமான வி ஐ பி க்கள் .அரசு அதிகாரிகள். .தொண்டர்கள் இப்படி பலபேர் அண்ணாவை பார்த்து விட்டு சென்றனர். ..யாருமே செய்யாத ஒரு அற்புதமான காரியத்தை புரட்சித்தலைவர் செய்தார். சத்யாஸ்டியோவில் பெரிய பந்தல் போட்டு பத்து சமையல்காரர்கள் நியமித்து அண்ணாவை பார்த்து விட்டு போகும் அத்தனை பேர்களுக்கும் காலை மதியம் என இரு வேலையும் சாப்பாடு போட்டார். .தொடர்ந்து இரண்டு வாரங்கள் இப்படி வந்த அனைவரும் சாப்பிட்டு விட்டுதான் போனார்கள். .அப்போது எத்தனையோ பேரு அண்ணா மீது பற்று இருந்தாலும் எம்ஜிஆர் போட்ட சாப்பாடு யாரும் போடவும் இல்லை. உடல் நலம் சரியில்லை என்றாலும் இச்செய்தி யாரிந்த பேரரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது. எம்ஜிஆரை பெற்ற தாய் பாக்கியவதியா இப்படி ஒரு தம்பியை அடைந்த நான் பாக்கியசாலி என்று நினைத்து பெருமைப்படுகிறேன். .

1969 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அன்று அண்ணா மறைந்தார். அண்ணா அவர்கள் இறந்த நாளன்று மக்கள் திலகம் அவர்கள் ஒவ்வொரு வருடமும். அன்று காலை அவரது சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வணங்கி விட்டு பிறகு அன்று முழுவதும் யாரிடமும் பேசமாட்டார். அன்று முழுவதும் மெளனமாக இருந்து சாப்பிடாமல் விரதம் இருப்பார். இது புரட்சித்தலைவர் வரலாற்றில் முக்கியமான விஷயமாகும் நாளாகும். ..

16. 6. 1984. ம் ஆண்டு அன்று புரட்சித்தலைவர் சட்டசபையில் சொன்னது. ...மக்கள் கொடுக்கும் வரி பணம். மக்களின் நல்வாழ்வுக்காக.பயன்படவேண்டும். .மக்களுடன் கூடியிரு. .மக்களுடன் பழகு. .மக்களுடன்வாழ். .மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படு மக்களிடம் நீ போய் செய் என்றெல்லாம் அமரர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் நான் செய்கிறேன். இந்த அரசும் செய்கிறது. .அண்ணா அவர்களின் கொள்கையை நிறைவேற்றி வரிப்பணம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை மக்களுக்கு செலவு செய்வதுதான் எங்கள் பணி என்றார். ..நான் எனது என்ற வார்த்தையை ஒருநாளும் எங்கும் எதிலும் பயன்படுத்தியதில்லை. இது எந்த தலைவரிடம் காணாத ஒர் அதிசயம் ஆகும். ....... Thanks...

orodizli
18th April 2020, 09:10 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர். 2 பாகம் 62 பேரரறிஞர் அண்ணா

1961 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம். நடந்தது. இந்த போராட்டத்தில் எம்ஜிஆர் கே. ஆர் ராமசாமி எஸ் எஸ் ஆர் போன்றவர்கள் கலந்துக்கொள்ளக்கூடாது. .என்று பேரரறிஞர் அண்ணா அறிவித்தார்.ஏன் கலந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கமும் அளித்தார். அதன் விளக்கம் இதோ இங்கே.
கலைதுறையில் புரட்சிநடிகர் எம் ஜி ஆரை ஒழிக்க சதி நடக்கிறது. திமுக கழக கலைஞர்களை கலைத்துறையில் இருந்து அழித்து விடக் கூடிய பயங்கர சக்தி உருவெடுத்து வருகிறது. . . இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்தி போராட்டத்தில் ஈடுபட முடியவில்லையே என்று அவர்கள் என் மீது வருத்தபடலாம். ஆனால் அவர்கள் ஈடுபட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். புரட்சிநடிகர் எம் ஜி ஆரும் மற்ற கலைஞர்களும் இந்தி போராட்டத்தில் கலந்துக்கொண்டால். அவர்கள் கலைத்துறையை இழந்து விட நேரிடும். .அத்தகைய பயங்கரசக்தி எம் ஜி ஆரை ஒழிக்க சதி செய்து வருகிறது. .எம்ஜிஆர் மற்றும் கழக கலைஞர்கள் இந்தி போரில் ககலந்துக்கொண்டு சிறைச்சென்றால் அவர்கள் சிறையில் இருந்து திரும்பி வர ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து திரும்பியவுடன். அவர்கள் கலைதுறையை இழந்து விட நேரிடும். அப்படிப்பட்ட பயங்கர சக்தி நம் கழக கலைஞர்களை ஒழித்து கட்ட சதி செய்து வருகிறது. எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தி போரில் ஈடுபடுவதால் கழகம் கலைதுறையில் பெற்றுள்ள செல்வாக்கு இழந்து விடும். அதனால் திமுக கழகத்துக்கு கலைஞர்கள் இல்லாமல் போய் விடுவார்கள் இதனால் தான் நான்கலைஞர்களை இந்தி போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று விதிவிலக்களித்திருக்கிறேன்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தி போரில் கலந்து கொள்ளாதது. அவருக்கு கைபோய்விடும் கால் போய் விடும் அடிப்பார்கள் என்பதனால் அல்ல. .எம்ஜிஆர் அடிக்கும் கழகத்துக்காக செய்ய வேண்டிய துணிகரச்செயலுக்கும் பயந்தவர் அல்ல. அவரை போலிஸார் அடித்தால் தாங்கிக்கொள்ளக்கூடிய. .மனவலிமை பெற்றவர். . அவரை அடிக்க யாரும் கிட்ட நெருங்கமுடியாது. .எம்ஜிஆரை அடிக்க வரும் காவல்துறையினர் கூட அடிக்காமல் நின்று விட்டு. ஆ....என்று எம் ஜி ஆரை நான் இப்போது பார்த்து விட்டேன். என்று சந்தோஷப்பட்டு துள்ளி குதிப்பார். .அவர் வாழ்வில் அதுவே பெரும் பாக்கியமாக கருதுவார்கள்.தவிர அடிக்க மாட்டார்கள். . ஆகையால் புரட்சிநடிகரால் திரைப்பட உலகிற்கு பெருமைகள் பல பலன்கள் உள்ள இந்த நேரத்தில் அவரை இந்தி எதிர்ப்பு போரில் பங்கு எடுத்துக்கொள்ளவிடமாட்டேன். புரட்சிநடிகரும் மற்ற கலைஞர்களும் இந்தி போரில் ஈடுபட முடியாது. என விதி விளக்கமும் அளித்தார். என்று கூறினார் அறிஞர் அண்ணா அவர்கள். ....... Thanks........

orodizli
18th April 2020, 09:11 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 63. பேரரறிஞர் அண்ணா

நம்முடைய இதயத்தில் நீங்காத நினைவாக வாழ்ந்துக்கொண்டிருப்பவர் பேரரறிஞர் அண்ணா. ..அண்ணாவின் உள்ளம் அரசியல் உளைக்களத்தில் காய்ச்சிய உருக்கல்ல.
அரசியல் பாலைவனத்தில் அன்பை சொறியும் ஊற்றாகும். அவரது உள்ளம். . அரசியல் தலைவர்களுக்கு இல்லாத பல்வேறு அருங்குணம் பெற்றிருந்தார் அண்ணா. அண்ணா அவர்கள் ஒரு நாடக ஆசிரியர். .சிறந்த எழுத்தாளர். .மிகச்சிறந்த பேச்சாளர். அனுபவமிக்க பத்திரிக்கையாளர். .பண்புமிக்க மாபெரும் அரசியல் அறிஞர். என்பதெல்லாம் இவருடைய சிறப்புகள் என்றாலும். எல்லாவற்றையும் விட தூய்மையான அன்புள்ளம் கொண்ட அண்ணா என்று சொல்வதிலே முழுமையாக காணமுடியும். . அண்ணாவின் உடலை காண முடியாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய உள்ளத்தை உயர்ந்த ககுணங்களை எப்படி காணமுடியாமல் இருக்க முடியும். ..நம்முடைய இதயத்திலே வாழும் அண்ணாவுக்கு பிறந்த நாள் என்றவுடன் நமக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படுகிறது. எத்தனை பூரிப்போடு அவ்விழாவை கொண்டாடிகிறோம். .அண்ணா பிறந்த நாளில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவர் வழியில் நடக்க நாமெல்லாம் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம். .அண்ணா நாமம் வாழ்க வளர்க அண்ணாவின் புகழ் .
( 1970 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15. ந்தேதி பேரரறிஞர் அண்ணாவின் 61. வது பிறந்த நாள் விழாவில் பொன்மனச்செம்மல் பொன் வாழ்த்துக்கள். )
உழைப்பின் பலனை நல்ல பல நற்பணிகளுக்கு செலவிட்டு வருபவர் தோழர் எம்ஜிஆர். அன்பு காட்டவே பிறந்த இதயம் அவருடையது. எம்ஜிஆர் அவர்களது உள்ளம் பெரியது
குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம். இரக்கம் இதயம் படைத்தவரை நண்பராக பெற்றிருக்கிறோம். என்று எண்ணி பெருமைப்படுகிறேன். .திமுக கழகத்தின் வளர்ச்சியில் புரட்சிநடிகரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. .என்பது ஊரறிந்த உண்மையாகும். .திமுகவில் மக்கள் திலகத்துக்கு இருந்த செல்வாக்குக்கு எதிராக சூழ்ச்சி வலைவீசிய போதும் கழகத்தில் இருந்து புரட்சிநடிகர் விலகுவதோ. கழகம் அவரை துறப்பதோ நான் கனவிலும் கற்பனை செய்திட முடியாது. .என்று கைப்பட கடிதத்தில் தெளிவாக எழுதி இருந்தார் அறிஞர் அண்ணா அவர்கள். .

அறிஞர் அண்ணா புரட்சிநடிகரை எப்படி சரியாக புரிந்து வைத்திருக்கிறார் அவர் மீது அதிக படியான பாசமும் வைத்து உள்ளது. தெளிவாக தெரிகிறது. அதேப்போல் அறிஞர் அண்ணா மீதும் மக்கள் திலகம் கொண்டியிருந்த அன்பும் பாசமும் மதிப்பும் அளவு கடந்ததாக இருந்தது. தன்னுடைய படங்களில் திமுக கழக கொடி சின்னத்தையும் அண்ணாவின் கருத்துக்களையும் பகிரங்கமாக நுழைத்து கொள்கை பிரசாரம் செய்தவர். .முதல் முதலில் சினிமாவில் அரசியலை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர்.
அரசியல் வசனம். அரசியல் காட்சி. அரசியல் பங்கு இப்படி சினிமாவில் காண்பித்தது பொன்மனச்செம்மல். .அந்த காலகட்டத்திலும் அதன் பின் வந்த காலகட்டத்திலும். அதற்கு முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கியவர் நமது தெய்வம் புரட்சித்தலைவர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ...... Thanks...

orodizli
18th April 2020, 10:56 PM
*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...*

*ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.*

*அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .*

*"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.*

*1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.*


*அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.*

*திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!*........ Thanks...

orodizli
18th April 2020, 11:00 PM
மைனாரிட்டி திமுக - ஒரு எளிய விளக்கம்

1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.

தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.

அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.

இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.

வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,... இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.

அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.

பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.

அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்... என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.

சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்.... இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.

சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.

வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.

திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

இது தான் திமுக தலைமைக்கு "மைனாரிட்டி" மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:

அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.

திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.

80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.

இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் "மதச்சார்பற்ற அமைப்புகள்" என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.

சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.

இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.

பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று - விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்... போன்ற காமெடிகள் நடக்கும்.

இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.

இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்.......( WA., நண்பரின் ஆதங்க பதிவு)... Thanks...

orodizli
18th April 2020, 11:07 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம். 64. பேரரறிஞர் அண்ணா .

வாழ்க்கைக்கு அவசியமான பதிவு தவறாமல் படியுங்கள். .
1966. ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த பெற்றால் தான் பிள்ளையா படத்தின் வெற்றி விழா 1967. ம் ஆண்டு பேரரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. . அந்த விழாவில் பலபேர் புரட்சித்தலைவரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்கள். .அதிலே அண்ணாவும் புரட்சித்தலைவரும் பேசியவை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். .
முதலில் அண்ணா கூறியது பார்ப்போம். .

எளிமையான இயற்கையான நடிப்பை திரையில் வழங்கி எல்லோருடைய மனதிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். புரட்சிநடிகர் எம்ஜிஆர்..எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்தவர். மாபெரும் ஜாம்பவான்கள் படங்களுக்கு மத்தியில் வலம் வந்தவர். அகில உலகமே திரும்பி பார்க்க செய்தவர்.அப்படிப்பட்ட ஒரு நடிகர் இன்று பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு குழந்தைதனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். .என்றால் அவர் இமெஜ்க்கும் கெளரவித்துக்கும் இடம் கொடுக்காமல் நடிப்புக்கும் நல்ல கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். .இந்தியாவிலேயே சிறந்த ஆக்ஷன் நடிகர் பிரமாண்டமான .
திரைப்படங்களில் நடித்தவர் பிரமாண்டமான தயாரிப்பாளர் இதெல்லாம் இல்லாமல். கதையில் பிரமாண்டம் வெற்றியில் பிரமாண்டம் தந்துள்ளார். .ஒரு நல்ல கருத்துள்ள கதையாக இருந்தால். மக்கள் மனம் நாடி செல்லும் கதையாக இருந்தால் அது எம்ஜிஆர் ஒருவரால் தான் நடிக்க முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையை இப்படம் மூலம் தந்துள்ளார் நிருப்பித்துள்ளார். அவரது இயற்கை நடிப்பு மேலும் தொடர வாழ்த்துக்கிறேன். என்றார் பேரறிஞர் அண்ணா. ..

புரட்சித்தலைவர் கூறிய கருத்துள்ள பேச்சு இதோ உங்கள் பார்வைக்கு. .
பெற்றால் தான் பிள்ளையா என்பது நம்நாட்டில் உள்ள மனிதர்களை மட்டும் குறிப்பிடாது.உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நம் பிள்ளைகள்தான்..ஒவ்வொரும் வீட்டியிலும் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருப்பதுபோல் நாம் வளர்க்க வேண்டிய பிள்ளைகள் தென்னம்பிள்ளை வாழைப்பிள்ளை ...வேப்பிலை கருவேப்பிலை .அணில் பிள்ளை கிளிபிள்ளை இவையெல்லாம் நமது பிள்ளைகள் தான். தென்னம்பிள்ளை ஆண்பிள்ளைக்கு சமமானது. தென்னம்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம் அதற்கு மண் நீர் பராமரிப்பு இல்லாமல் வளர்ந்து விடும். .நம் பிள்ளைகள் நமது தலைமுறை வரைதான் ஆனால் தென்னம்பிள்ளை பல தலைமுறை தாண்டி வம்சங்களை காக்கும்..அதேப்போல் வாழைப்பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு சமமானது. அதற்கு முறையான மண்வளம் தேவை. . தேவையான தண்ணீர் தேவை. முறையான பராமரிப்பு தேவை. அதேப்போல் தான் பெண்பிள்ளை பெற்றவர்கள் முறையான பராமரிப்புவுடன் கவனக்குறைவில்லாமல் வளர்க்க வேண்டும்.. வாழை வெட்ட வெட்ட வளர்ந்துக்கொண்டே இருக்கும். அது போல் பெண்பிள்ளையை பெற்றவர்கள் வீடும் தலைமுறை தலைமுறையாக வளர்ச்சி அடைந்துக்கொண்டே போகும். வாழையடி வாழையாக வம்சங்களை குறிப்பிடுவது பெண்பிள்ளைகளைத்தான். அதனால் யாரும் பிள்ளை இல்லை என்று கவலை படாமல் ஒவ்வொரும் வாழைப்பிள்ளை தென்னம்பிள்ளை வளர்த்து தமது பிள்ளைகளாக கருதி வளர்க்க வேண்டும் அதனால் நாட்டுக்கும் நன்மை வீட்டுக்கும் நன்மை. அனைத்து ஜீவராசிகளும் நாம் பெற்ற பிள்ளைகளாக நினைக்க வேண்டும். என்றார் புரட்சித்தலைவர். . எல்லோரும் புரட்சித்தலைவர் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் படத்தில் பங்குபெற்றவர்களைப்பற்றியும் கூற புரட்சித்தலைவர் மட்டும் படத்தின் தலைப்பும் அதன் கருத்தையும் கூறியது கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் கரவோலி விண்னை பிளந்து நிற்க வெகு நேரமாகிவிட்டது. ....... Thanks...

orodizli
18th April 2020, 11:07 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 65. பேரரறிஞர் அண்ணா

1. பேரரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தி.மு.க ( திராவிட முன்னேற்றக் கழகம் ) . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அதிமுக ( அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் )
2, 1967. ம் ஆண்டு முதல் முதலாக திராவிட இயக்கம் தலைவர் பேரரறிஞர் அண்ணா அவர்கள் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார்.
1977 ம் ஆண்டு முதல் முதலாக அண்ணா திராவிட இயக்கம் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புதிய முதலமை*ச்ச*ராக பதவி ஏற்றார்.
3. 1969 ம் ஆண்டு பேரரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார். வங்க கடலோரம் துயில் கொண்டார்.
1987 ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார். அண்ணாவின் அருகிலேயே வங்க கடலோரம் துயில் கொண்டார். .
4, தமிழில் அண்ணா என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில் ஐந்து எழுத்து. . ஆங்கிலத்தில் M. G . R. என்பது மூன்று எழுத்து தமிழில் ஐந்து எழுத்து. .
5. தியாகராய கல்லூரியில் எம் ஜி ஆர் படத்தை திறந்து வைத்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .அண்ணா சாலையில் அண்ணா சிலை நிறுவினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். .
6. பேரரறிஞர் அண்ணா அவர்கள் பெயரை உச்சரித்து முதல்வர் ஆனார் எம்ஜிஆர் அவர்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் முதல்வர் ஆனார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .
இவையெல்லாம் அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.

புரட்சிநடிகர் என மக்கள் போற்றவும் ..நல்லவர் என நண்பர்கள் வாழ்த்தவும். ..தோழர்களின் தோழர் என கழகத்தார் கூறவும் உரிமை உள்ளவர் எம்ஜிஆர்... அவர் அண்மையில் சென்னை தியாகராய கல்லூரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் திரட்டி தந்துள்ளார். என்பதை கேள்வி பட்டு மகிழ்ந்தோம் பரவசம் படுகிறோம். அவர் குணம் கண்டு அவரது பண்பை பாராட்டும் வகையில் தியாகராய கல்லூரியினர் சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தலைவர் கிருஷ்ணராவின் தலைமையில் என்னைக் கொண்டு எம்ஜிஆரின் படத்தை திறந்து வைக்க சொன்னார்கள். ..கூத்தாடிகள் நாடகமாடிகள் என்று ஏளனமாகப் பேசப்பட்ட நிலைமாறி அவர்களது திருவுருவங்களை கல்லுரியிகளில் வைக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டு வருவது கண்டு மகிழ்கிறோம். பணம் வருவது கடினம். ஆனால் வருகின்ற பணத்தை வகையறிந்து செலவழிப்பது..மிக மிக கடினம். அதுவும் நடிப்புலகில் இது மிகவும் கடினம். இருந்தும் பணத்தை நல்ல காரியங்களுக்காகவே பயன்படுத்திடும் கண்மணியாக இருந்திடும் எம்ஜிஆர் நம்மவராக இருப்பதில். நமக்கு ஒரு பெருமை இருக்கிறது. .இருக்கின்ற இடத்திற்கும். தனக்கும் பெருமை தேடித் தரும் புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க வளர்க அவர்தம் பணி தொடர்க. . ( என்று எம்ஜிஆர் பற்றி பேரரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். .அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இல்லை. ஆதாரம் 13. 4, 1958
திராவிட நாடு பத்திரிகை, )........ Thanks...

orodizli
18th April 2020, 11:08 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 66. பேரரறிஞர் அண்ணா. .

அகமும் புறமும். புரட்சித்தலைவர் பற்றி அண்ணா கூறியது, .
புரட்சிநடிகர் வேண்டும் அதனால் அவர் புகுந்த அரசியலும் வேண்டும். என்று கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் உண்டு. .புரட்சிநடிகர் சேர்ந்து விட்டாரே நாமும் சேர்ந்தால் என்ன என்று சேர்ந்தவர்கள் பலர் உண்டு. .புரட்சிநடிகர் நல்லவர் அதனால் அவர் சேர்ந்த கட்சியும் நல்லாத்தான் இருக்கும் என்று சேர்ந்தவர்கள் பலர் உண்டு. பங்கு கொண்டவர் களும் பலர் உண்டு. .புரட்சிநடிகர் தயவு நமக்கு வேண்டும் ஆகவே அவரது கட்சியின் கொள்கையும் நமக்கு வேண்டும் என்று ஒப்புக் கொண்டு சேர்ந்தவர்களும் பலர் உண்டு
புரட்சிநடிகரை பிடிக்காத காரணத்தால் எம்ஜிஆர் சேர்ந்த கட்சி நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் சிலர் உண்டு? . .

பொதுவாக அகம் புறம் என்று கூறபடுவைகளுக்கு பல வகையான கருத்துக்களை கூறுகின்றனர். . அவற்றில் எது சிறந்தது என்று வாதிடுகின்றனர் . அவற்றுக்கு ரத்தின சுருக்கமாக ஒன்றை கூற வேண்டுமானால். . எண்ணமென்பது அகமென்றும். செயலென்பது புறம் என்றும் கூறலாம். இவற்றில் எது சிறந்தது அகமா? ?புறமா ??.தமிழ் மக்கள் அகத்தையும் புறத்தையும் சமமாக பாவித்து வந்துள்ளனர். .அகத்துக்கு ஐநூறோ புறத்துக்கு முந்நூறோ அல்லது புறத்துக்கோ ஐந்நூறோ அகத்துக்கு முந்நூறோ என்று பாடவில்லை. தமிழன் அகநானூறு புறநானூறு எஎன்றுதானே பாடினான். அகமும் புறமும் தமிழனுக்கு ஒரே எடை இவற்றில் எதாவது ஒன்றை குறிக்கோளாக கொண்டு சிறந்து விளங்கும் நாடு என்றைக்கும் சிறப்பாக வாழ முடியாது. .
உதாரணமாக அக வாழ்க்கையில் சிறந்த நாடு கிரேக்க நாடு. .புற வாழ்க்கையில் சிறந்த நாடு எகிப்து நாடு. இவ்விரு நாடுகளின் நீடுழி புகழ் அறியாதவர்கள் சிலரே. ஆனால் அந்த நீடுழி புகழ் இன்று எங்கே? .? நமது நாடு அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் ஒழுங்கே சிறந்து விளங்குகிறது. .அந்த சிறப்பு தமிழனுக்கு இல்லையென்றால் தனது வீட்டில் பால் பொங்கியது போதாதென்று பிறரையும் பால் பொங்கிற்றா என்று கேட்டிருக்க முடியுமா. ? அதனால்தான் இத்தனை சிறப்பு கொண்டிருக்கிறது இந்நாடு ஆகவே தமிழனை ஈதல் இசை வாழ்ந்தான். என்கின்றனர்.
இதனை நம் நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும். அகம் புறம் இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும். நடிகன் நடிகனாக இருந்து விடக்கூடாது. அதேப்போல் கலை கலைக்காகவே இருந்து விடக் கூடாது. நடிகரும் மக்கள் இனமே .அதுபோல் வாழ்வின் வளத்துக்கே கலை உதவ வேண்டும். என்ற சீரிய நோக்கம் கொண்டவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர். .இந்த நோக்கம் தனக்கு மட்டும் இருந்தால் பயன் இல்லை. ஏனைய கலைஞர்களுக்கும் புக வேண்டும். தான் பெற்ற இன்பத்தை அவர்களும் அடைய வேண்டும். என்று தடுத்தவர் பகைத்தவர் வெறுத்தவர் மத்தியில் அரசியலில் தாவி புகுந்தார். மக்களுக்கு உதவுகிறார் உதவ வேண்டும் என்று துடிக்கிறார். செய்துக்கொண்ட இருக்கிறார். .அகத்தில் நடிப்பிலும் புறத்தில் அரசியலும் ஒழுங்கே சிறப்பை எட்டி பிடிக்கிறார். எம்ஜிஆர். ...... Thanks...

orodizli
18th April 2020, 11:09 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 67. பேரரறிஞர் அண்ணா

அரசியலில் அன்பையும் பண்பையும் விதைத்தவர் அறிவுலக மேதை பேரரறிஞர் அண்ணா. .தேர்தலில் போட்டியிடலாமா? ? வேண்டாமா? ? 1957 .ம் ஆண்டு மக்கள் மாநாட்டில் மக்கள் தீர்ப்பையும் கருத்தையும் அறிந்துக்கொண்டுத்தான் தேர்தல் களத்தில் இறங்கினார். பேரரறிஞர் அண்ணா அவர்கள். .6. 3. 1967. அன்று சென்னை மாநில முதலமை*ச்ச*ராக பொறுப்பேற்றார். இந்த அரசை தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கிறேன்.என்றார். . அதன் பின் அண்ணாவின் வழியிலே 1972. ம் ஆண்டு தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மன்றத்தில் மக்கள் தீர்ப்பையும் கருத்தையும் அறிந்துக்கொண்டுத்தான் கட்சி தொடங்கினார். அண்ணாவின் அரசை அமைத்தே தீருவேன் என்று ஆளுரைத்தப் புறப்பட்ட புரட்சித்தலைவர் தமிழகம் தன் பக்கம் என்றும் மக்கள் சக்தியெனும் மகத்தான சக்தி மூலம் 56. மாதங்களில் நிருப்பித்தார் தமிழ் நாடு முதலமை*ச்ச*ராக
30. 6. 1977 ல் புரட்சித்தலைவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அதற்கு முன் அண்ணா சிலை அருகில் முதல் முதலாக வாக்குறுதி எடுத்துக் கொண்டார். வாழ்த்துக்கள் பெற்றார் என்பதை அனைவரும் அறிவர். இந்த ஆட்சி அண்ணாவுக்கு காணிக்கையாக்கிறேன் இது அண்ணாவின் அரசு என்றார் பொன்மனச்செம்மல். அவர் எண்ணம் செயல் சொல் அனைத்திலும் அண்ணா வாழ்ந்தார் .பொன்மனச்செம்மல் ஆட்சியில் பேரரறிஞர் அண்ணாவுக்காக அவர் ஆற்றிய பல பணிகள் பல சாதனைகள் இனி பார்ப்போம். .

1. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா உருவம் பொறித்த கொடி அண்ணா உருவம் கொண்ட கட்சி கொடி. .
2, அண்ணா பெயரில் அண்ணாயிசம் என்ற கொள்கை பரப்பினார்.
3. அண்ணா பெயரில் அண்ணா சாலை என்று பெயரிட்டார்.
4, அண்ணா பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்தார்.
5. வண்டலூரில் உள்ள பூங்காவுக்கு அண்ணா உயிரியல் பூங்கா என பெயரிட்டார்.
6. சென்னையில் அண்ணாவுக்கு பவளவிழா நினைவு வளைவு அமைத்தார். .
7. பல இடங்களில் அண்ணா சிலை அமைத்தார்.
8. சென்னையில் அண்ணா நகர் என்று பெயரிட்டார்.
9. சென்னையில் அண்ணா பவளவிழா கட்டிடங்கள் அமைத்தார். .
10. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவகம் அமைத்தார். .
11. சென்னையில் அண்ணா பவளவிழா பிரமாண்டமான மாநாடு நடத்தி அண்ணா பவளவிழா மலர் வெளியிட்டார். .
12. அண்ணா பெயரில் மாவட்டம் அமைத்தார். .
13, அண்ணா போக்குவரத்து கழகம் அமைத்தார்.
14. அண்ணா பெயரில் விருதுகள் வழங்கி கெளரவித்தார்
15. அண்ணா பெயரில் பொறியல் கல்லுரி கழகம் அமைத்தார். .
16. அண்ணா பெயரில் அண்ணா அனாதை இல்லம் அண்ணா முதியோர் இல்லம் அண்ணா சமூக நலக்கூடம் அமைத்தார்.
17. அண்ணா நூலகம் அண்ணா பெயரில் பள்ளி பாடப்புத்தகங்கள் அண்ணா இரவு பாடசாலை அமைத்தார். .
18. அண்ணா பெயரில் சமூக நல மாணவர் அணி அண்ணா பெயரில் அரசு ஆனைகள் அண்ணா திரையரங்கு திறந்தார்.
19. அண்ணா பெயரில் பத்திரிகை நாளேடு தொடங்கினார். .
20. தமிழக அரசு செய்திகுறிப்பில் அண்ணா பொன்மொழி இடம் பெற செய்தார்.
21. கட்சி பொதுக்கூட்டங்களில் அண்ணா உருவம் அண்ணா பேச்சு அண்ணா பற்றிய அறிவுரைகள் போஸ்டர்களில் அண்ணா உருவத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படி செய்தார்.
22. அண்ணா பேருந்து நிலையம் அண்ணா கவியரங்கம் அண்ணா பெயரில் படமானியம். வழங்கினார்.
மேலும் அண்ணா பெயரில் சாதனைகள் தொடரும். ........ Thanks...

orodizli
18th April 2020, 11:10 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 68. பேரரறிஞர் அண்ணா

திரையுலகில் அண்ணாவின் புகழ்.
1. நாடோடிமன்னன் படத்தில் முதன் முதலாக அண்ணா கொடி காண்பித்தார் அதன் பிறகு அடிமைப்பெண் . உலகம் சுற்றும் வாலிபன் . நேற்று இன்று நாளை இதயக்கனி. . நாளை நமதே. . உழைக்கும் கரங்கள், . நவரத்தினம். .போன்ற திரைப்படங்களில் கட்சி கொடி அண்ணா கொடி காண்பித்தார்.
2. அண்ணா நீ என் தெய்வம். அண்ணா பிறந்த நாடு. அண்ணா காட்டிய வழி. என்று படத்திற்கு பெயர் வைத்தார். ஆனால் படம் எடுக்காமல் பாதியில் நின்றது.

3. . நான் செல்லுகின்ற பாதை பேரரறிஞர் காட்டும் பாதை என்று புதிய பூமி படத்திலும். 2. மேடையிலே முழங்க வேண்டும் அறிஞர் அண்ணா போல். என்று பெற்றதால் பிள்ளையா படத்திலும்.
3. சந்தனபெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார். என்று எங்கள் தங்கம் படத்திலும்.
4, அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் என்று இதயவீணை படத்திலும்
5. அண்ணமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை என்று அண்ணமிட்ட கை படத்திலும். .
6. நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். என்று நேற்று இன்று நாளை படத்திலும்.
7. அண்ணன் போற்றும் தம்பி என்று நீயே கூறலாம். உரிமைக்குரல் படத்திலும்.
8. அண்ணாவை என் உள்ளம் ஒருநாளும் மறவாது. .என்று நினைத்தைப் முடிப்பவன் படத்திலும்.
9. எதையும் தாங்கிடும் இதயம் என்றும் மாறாது. என்று நாளை நமதே படத்திலும். .
10. அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுவே சத்தியம் என்றும் , கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க உரிமைக்குரல் படத்திலும். .
11. தென்னாட்டு காந்தி அண்ணாவே சொன்னார் என்று நம்நாடு படத்திலும்.
12. அண்ணா சொன்ன வழி கண்டு நம்மை தேடுங்கள் என்று இதயக்கனி படத்திலும்.
13, இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார். அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார். என்று பல்லாண்டு வாழ்க படத்திலும். .
14. உங்களின் நம் அண்ணாவை பார்க்கிறேன் என்று நவரத்தினம் படத்திலும்.
15. அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம் என்று மீணவநண்பன் படத்திலும் .
16. கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறந்து போனீர்களே என்று இன்று போல் என்றும் வாழ்க படத்திலும். இவையெல்லாம் அண்ணாவைப்பற்றி படத்தில் பாடிய பாடல்கள் ஆகும்.
4, உலகம் சுற்றும் வாலிபன். எங்கள் தங்கம். இதயக்கனி. நேற்று இன்று நாளை. .பல்லாண்டு வாழ்க. .சிரித்து வாழ வேண்டும்..போன்ற திரைப்படங்களில் அண்ணாவின் பேச்சுகள் ஒலிக்கும். .
5, சுமார் 40. திரைப்படங்களுக்கு மேல் அண்ணாவின் புகழ் பாடி வசனங்கள் அமைந்திருக்கும். .
6. அண்ணாவின் கதை வசனம் எழுதிய தாய்மகளுக்கு கட்டிய தாலி நல்லவன் வாழ்வான். .இதில் நல்லவன் வாழ்வான் படம் சம்பளம் வாங்காமல் நடித்தார். .
7. திரைப்படங்களில் அண்ணாவின் உருவம் காண்பித்தார் அண்ணாவின் காட்சிகளை காண்பித்தார்.
8. அண்ணா கலந்துக்கொண்ட திரைப்படங்களின் நிகழ்ச்சிகள்.
நாடோடிமன்னன் .எங்க வீட்டு பிள்ளை. ..காவல்காரன்..பெற்றால் தான் பிள்ளையா.
குடியிந்தக்கோயில்.
9. பாண்டிச்சேரியில் அண்ணா ஆட்சி நிறுவினார்.
10. கட்சி ஆரம்பித்து முதல் முதலாக அண்ணா பிறந்த காஞ்சியிலே முதல் கூட்டம் நடத்தினார். .
11. அண்ணா கண்காட்சி தொடங்கினார். .அண்ணா பிறந்த நாள் போட்டிகள். .பிறந்த நாள் பரிசுகள் வழங்கினார்.
12. முடிவாக பேரரறிஞர் அண்ணா அருகிலேயே அமரரானர். .அண்ணாவும் ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார். .பொன்மனச்செம்மலும் ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார். ...... Thanks...

orodizli
18th April 2020, 11:11 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 69 பேரரறிஞர் அண்ணா.

1967. ம் ஆண்டு திமுக கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் பேரரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக கூடிய சட்டசபையில் புரட்சிநடிகர் எம்ஜிஆர் பற்றி சில வாக்கியங்கள் பேசிய பிறகுதான் சட்டசபை நடைபெற்றது. அப்போது பேரரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய சில முத்தான வாக்கியங்கள். .

காந்தி சுடப்பட்டார் இறந்து போனார். கென்னடி சுடப்பட்டார் இறந்து போனார் .ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார் இறந்து போனார் .எம்ஜிஆர் சுடப்பட்டார் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன் நல்ல வேளை யார் செய்த முற்பயனோ உயிர் பிழைத்துக்கொண்டார். அவரை நாம் இழந்திருந்தால் அது ஒரு சாதாரண தனிமனிதனின் இழப்பாக இருந்திருக்காது. ஈகை குணம் கொண்ட ஒரு நல்ல மனிதரை. பண்பாளரை .ஒரு நல்ல நடிகரை. தேசப்பற்றுமிக்க மனிதரை. .நமது கட்சியின் போர் கொடி மக்களின் இதயத்தை தொட்டவர். இப்படி எத்தனையோ பேரை எம்ஜிஆர் என்ற தனிமனிதர் மூலம் இழந்திருக்க வேண்டியிருக்கும். .இந்த ஆட்சி அவர் மூலம் கிடைத்தது. அதனால் நாம் அவர்க்கு செய்யும் நன்றி கடனாக ஒரு முறை கரவோலி வீசுவோம் என்று சட்டசபையில் அண்ணா பேசிய பிறகு கரவோலி மூலம் எம்ஜிஆருக்கு நன்றி கூறிய பிறகு தான் சபை நடத்தப்பட்டது. அப்போது இருந்த அனைத்து கட்சியினரும் அதை வரவேற்று ஆமோதித்தனர்.

ஒரு முறை அறிஞர் அண்ணாவுடன் எம்ஜிஆர் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். .அண்ணா வழக்கம் போல் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். .எம்ஜிஆர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். பெரம்பலூர்க்கு அப்பால் சென்ற பொழுது .காரை சாலையின் ஒரமாக நிறுத்தினார். .அப்போது அந்த பகுதியில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டியிருந்த இளைஞர்கள் விவசாயிகள் முதியோர்கள். காரில் இருந்த திமுக கொடியை பார்த்து விட்டு எம்ஜிஆர் கார் என கூவிக்கொண்டு ஓடிவந்து எம்ஜிஆர் இருக்கிறாரா என எட்டிப் பார்த்தனர். அதற்குள் கிராம மக்களும் ஒடி வந்து காரை சூழ்ந்துக்கொண்டு எம்ஜிஆரை தேடினார்கள். முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவரை அண்ணா என்று தெரியாமல் எம்ஜிஆர் வந்திருக்கிறரா என்று கேட்டனர். அதற்கு அண்ணா முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் எம்ஜிஆர்,என்றுகூறி அண்ணா கீழே இறங்கி கார் கதவை திறந்து எம்ஜிஆரை வெளிவர செய்தார். எம்ஜிஆர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போனார்
அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும். தன்னோடு இருப்பவர்கள் தன்னை விட மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருக்கும் போது. பொறாமை படுவதற்கு பதிலாக பெருமைப்பட்டார். அதை எண்ணி மனம் திகைத்தார். எம்ஜிஆர் இறுதி வரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணமாக விளங்குபவர் பேரரறிஞர் அண்ணா. என்றால் தகுதியான வாரிசுக்கு இலக்கணம் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர்தான் என்பதற்கு இது ஒரு சான்றாகும்........ Thanks...

orodizli
18th April 2020, 11:12 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 70, பேரரறிஞர் அண்ணா. .

ஒரு முறை அறிஞர் அண்ணா அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன். நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி. .ஆர் எம் வீரப்பன். ..எஸ் எஸ் ஆர்.ராஜேந்திரன், .முசிறி பித்தன். .கருணாநிதி. .நாவலர் நெடுஞ்செழியன். .மற்றும் சில முக்கிய நண்பர்களை கூப்பிட்டு எம்ஜிஆரை விட்டு எந்த காரணத்தைக் கொண்டும்.
விலகி போகாதீர்கள் அவர் பக்கத்திலே எப்போதும் இருங்கள்.. ஏன் என்றால் எம்ஜிஆர் ரசிகர்களை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்டது தான் அவர் மன்றங்கள். . இந்த மன்றங்களில் பதினைந்து வயதில் இருந்து இருப்பத்தி நான்கு வயதுக்குள்ளான எதற்கும் அஞ்சாத எம்ஜிஆர்க்காக உயிரை தரக்கூடிய பத்து லட்சம் பேர் உறுப்பினர்களாகவும். மேலும் பத்து லட்சம் பேர் உறுப்பினர் இல்லாமல் அவரது ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுதான் அவரது சொத்து அவரது உறவினர்கள். அவர் நம்மை விட்டு விலகினாலும் நாம் அவரை விட்டு விலகினாலும். அவரது சொத்துக்களான ரசிகர்களும் நம்மைவிட்டு விலகுவார்கள். என்று அண்ணா உணர்ச்சிவசப்பட்டு கூறினாலும். அண்ணாவின் அன்புக்கட்டளையே ஏற்று அதன் படி இன்றும் நாங்கள் எம்ஜிஆர் பக்கத்திலே இரூக்கின்றோம். .ஆனால் பலர் அண்ணா எம்ஜிஆரை மறந்து வேறு இடத்தில் உள்ளனர். என்ன செய்வது உலகத்திலேயே எந்த சினிமா நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றம் ஒரு தமிழ்பட நடிகரான எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே இருப்பது சரித்திரத்தில் இடம் பெற கூடிய சாதனையாகும். .( 1976 ம் ஆண்டு கல்கண்டு பத்திரிக்கையில் வந்த கட்டுரையில் எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவர் முசிறி புத்தனின் மனதில் வந்த வார்த்தைகள் எழுத்துக்கள் ஆகும். )

பேரரறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நோயுடு போராடிக்கொண்டியிருந்த நேரம். அமெரிக்க நாட்டுக்கு அனுப்பி மீண்டும் வருவார் என்று ஏங்கியிருந்த நேரம். அன்றைக்கு பம்பாய் சாந்தா குரூஸ் விமான நிலையத்தில் அண்ணாவை வழி அனுப்ப எல்லாரும் பக்கத்தில் இருந்தார்கள். ஆனால் பேரரறிஞர் அண்ணா அவர்கள் நள்ளிரவு வேளையிலும். ஒருவரை தேடினார். அவரும் அடிக்கடி முந்திரிக்கொட்டைப்போல் முன்னாலே உட்கார்ந்து கொள்பவர் அல்லவா. ..அதைப்போலத்தான் அன்றைக்கும் தாளமுடியாத தாக்கத்தினால். கண்ணீரைத் துடைத்து கொண்டு. பேரரறிஞர் அண்ணா அவர்களை காலை ஐந்து மணிக்கு விமானத்தில் அனுப்ப போகிறமே அவர்கள் மீண்டும் நம்மிடத்தில் நலம்பெற்று வரவேண்டும். என்று எங்கேயோ உட்கார்ந்து தேம்பிக்கொண்டியிருக்கிற ஒருவரைத்தான் பேரரறிஞர் அண்ணா அவர்கள் தேடிக்கொண்டிருந்தார். யார் அவர் என்றால் அந்த மூன்றெழுத்து மோகனவார்த்தைக்கு சொந்தக்காரர்.புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான் பேரரறிஞர் அண்ணா அவர்கள் எங்கே என்று கேட்டார்கள். தொண்டர்கள் ஒடிப்போய் அழைத்து வருகிறார்கள். அப்போது தான் அண்ணா தான் வாங்கிய புதிய ஆங்கில புத்தகத்திடைய அட்டையை கிழித்து எம்ஜிஆரிடம் கொடுத்தார்..அந்த அட்டையில் என்ன படம் என்றால். வலிமைமிக்க கரம் அந்த கரம் ஒரு ஸ்பானரைப் பிடித்திருக்கிறது. அந்த படத்தை ஏன் புரட்சித்தலைவரிடம் அண்ணா அவர்கள் கொடுத்தார்கள் என்பதற்கு இன்று வரை யாருக்கும் விளங்கவில்லை. அந்த படத்தைதான் அண்ணா அவர்கள் திமுக கழகத்தின் தொழிற்சங்க கொடியாக மாற்றினார். ( கட்சி பல்வேறு குழப்பங்கள் உள்ளது அதை நீதான் ஸ்பானரை கொண்டு சரி செய்ய வேண்டும். உங்கள் ஒருவரால் தான் அது முடியும் என்று பொருள் விளங்க கொடுத்தார். ) எம் ஜி ஆர் ஆற்றல் எப்படிப்பட்டது என்று யாராலும் கண்டுக்கொள்ள முடியாது. அண்ணா மட்டும் தான் அவர் ஆற்றலை கண்டுக்கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். ....... Thanks...

orodizli
18th April 2020, 11:13 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 71. .பேரரறிஞர் அண்ணா

1967. ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக கட்சி தேர்தலில் போட்டியிட தயாரானது . . நாவலர் நெடுஞ்செழியன், .பேராசிரியர் அன்பழகன். .கருணாநிதி. . ஆர் எம் வீரப்பன். . என் வி சோமு. . என் வி சம்பத், . எஸ் எஸ் ஆர் ராஜேந்திரன். .நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி. .மதியழகன். .மற்றும் பல முன்னணி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நிதி சேர்த்தனர். . அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் எவ்வளவு நிதி கேட்கலாம். அல்லது நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து அதில் எம்ஜிஆரை வரவேற்று கலந்து கொள்வது. அதன் மூலம் நிதி வசூல் செய்யலாம். அல்லது எம்ஜிஆர் நாடகம் அமைத்து நாடகம் மூலம் வசூல் செய்யலாம். .அதுவும் இல்லையென்றால் எம்ஜிஆர் திரைப்படங்கள் பல தியேட்டர்களில் போட்டு அதன் மூலம் வசூல் காணலாம். .இப்படி பல வகையான யோசனையில் எம்ஜிஆரை வைத்து எப்படியெல்லாம் நிதி வசூல் செய்யலாம் என எண்ணி யோசித்திருந்தனர். .எதற்கும் கட்சி தலைவர் அண்ணாவிடம் கேட்டு செய்வோம். என்று எண்ணி அண்ணாவிடம் சென்று எம்ஜிஆரிடம் எவ்வளவு வசூல் செய்யலாம் என கேட்டனர். . எம்ஜிஆரும் இந்த தகவலை தெரிந்து அண்ணா எவ்வளவு கேட்டாலும் நான் தர தயார் என்றார். .அதற்கு அண்ணா தந்த விளக்கம். ... எனது தம்பியும் நண்பர் எம் ஜி ஆர் அவர்கள் நான் கட்டளையிட்டால் ஒரு லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக தருவதாக கூறினார். .நான் கேட்டா ஒரு லட்சம் ரூபாய் என்ன ஐந்து லட்சம் கூட கொடுக்கக்கூடிய மனமும் திறமையும் படைத்தவர். .நான் இப்போது அவர்களிடத்தில் லட்சத்தில் பணத்தை எதிர் பார்க்க வில்லை. .அவர் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நாடெங்கும் ஒரு முறை சுற்றி வந்து அவரது இனிய முகத்தை பொதுமக்களிடம் காட்டினால் போதும் ..எனக்கு பல லட்சக்கணக்கான வாக்குகள் கிடைக்கும். . என்ற உறுதி பாடு உண்டு. கலைஞன் என்பவன் மிக நுணுக்கமானவன் மனிதர்களிடமிருந்து மாறுப்பட்டவன். உண்மையே உணர மறுப்பவர்களுக்கு உணர வைப்பவன். அப்படி உணர வைத்த கலைஞர்களில் தலைசிறந்தவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். அவர் வழியில் கருத்தாற்றலும் கடமையாற்றலும். .சிறந்த ஒரே கலைஞர் தம்பி எம்ஜிஆர் ஒருவர்தான். என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். .

1969 ம் ஆண்டு என் தந்தை மறைந்த பிறகு நான் பரிமளம் பதிப்பகத்தின் மூலம் அண்ணாவின் நாடகங்களை. அண்ணாவின் சிறு கதைகள். .என்கின்ற தொகுப்புகளை கொண்டு வந்தேன். அதை விற்க தெரியாமல் கடன் ஏற்பட்டு. ஏ வி எம் அச்சகம் என் மீது வழக்கு தொடர்ந்தது. .இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் என்னை உரிமையோடு கண்டித்து. என்னிடம் ஏன் கூறவில்லை என்று கோபப்பட்டார். .ஊரில் பிறர்க்கு நான் செய்வது உதவி. .அண்ணாவின் குடும்பத்தினருக்கும் என் எஸ் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் நான் செய்வது கடமையாகும். .என்று கூறி கட்ட வேண்டிய அனைத்து தொகையும் திரு எம்ஜிஆர் அவர்கள் கட்டினார். அதுமட்டுமல்ல வழக்கு மன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து என்னை மீட்டனர். ..என் அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது. என்று படத்திற்காக மட்டும் அல்ல நிஜவாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர்.
( பேரரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மைந்தன் டாக்டர் பரிமளம் எழுதிய கட்டுரையில் )...... Thanks...

orodizli
18th April 2020, 11:14 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 72. பேரரறிஞர் அண்ணா

பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியதும் அமைச்சர்களின் பட்டியலை தயாரிக்க அந்த பட்டியலில் எம்ஜிஆர் பெயர் இருந்தது. ஆனால் எம் ஜி ஆரோ அந்த பட்டியலில் இருந்து எனது பெயரை எடுத்து விடுங்கள் எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. வேண்டாம். என்றார். அதற்கான காரணம் சொன்னார். நான் நடிப்பு துறையில் இருக்கிறேன். மக்களை நம்பக்கம் வைக்க திரையுலகம் ஒரு சாதனை ஏடு அதை மக்களுக்காக நான் பயன்படுத்த வேண்டும். அதனால் கட்சிக்காக உழைத்தவர்கள் நம்மோடு கட்சியில் இருப்பவர்களுக்கு அந்த பதவியே கொடுங்கள் என்றார். அண்ணா கொடுத்த பதவியை மறுப்பது. அண்ணாவை மதிக்காதுப்போல் ஆகும் என்று கட்சியில் உள்ள ஒரு சிலர் குறை கூறினார்கள். இதை அறிந்த அண்ணா அவர்கள் தந்த விளக்கம். .
எத்தனையோ பேர்கள் பதவிக்காக போட்டி போடுவார்கள் பதவி தரவில்லை என்பதற்காக கட்சி தாவுவார்கள். .பதவிக்காக பகையாளியாக மாறுபவர்கள் உண்டு ஏன் பதவிக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவர்கள் உண்டு. .இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில். பதவி வேண்டாம் என்று உதறி தள்ளும் எம்ஜிஆர் பெருதன்மைய காட்டுகிறது. அவரால் பெற்ற ஆட்சி இது அதற்காக தனது கொள்கையே தர்மம் செய்து உள்ளார். கட்சிக்காக தனது உழைப்பை தர்மம் செய்து உள்ளார். கட்சியில் உழைத்தவர்களுக்காக தனது பதவியை தர்மம் செய்து உள்ளார். இப்படியும் தர்மம் செய்யலாம் என்பதை கற்றுத் தந்துள்ளார். .தம்பி ராமச்சந்திரன் மக்கள் மனதில் மகா ராஜா திரையுலகுக்கு சக்கரவர்த்தி .அதனால் மந்திரி பதவி அவருக்கு பெரிய விஷயமல்ல. தம்பி எப்போதும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இருக்கட்டும். என்றார். .
அண்ணாவுக்கு எப்போதும் எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு பிடிக்கும். அண்ணா பலமுறை எம்ஜிஆருடன் அவரது வீட்டில் உணவு உண்டு உள்ளார். ஒரு நாள் அப்படி உணவு உண்ணும் போது. எம்ஜிஆரும் அண்ணாவும் சில பிரச்சினைகள் குறித்து பேசினார்கள் இறுதியாக அண்ணா அவர்கள் எம்ஜிஆர் பற்றி சொன்னது. மறக்க முடியாத வார்த்தைகள் ஆகும். .தம்பி உன் பேர்லே பலர் குறை சொன்னார்கள். நீ ஆட்சி. . அரசியல். .விவகாரங்களில் கலந்துக்கொள்வதில்லை எப்பவும் நடிப்பிலே இருக்கிற சட்டசபை கூட்டத்துக்கு வர்றதில்லை. சொன்னாங்க. .? அவங்களுக்கு தெரியாது நீ தினமும் மேக்கப் போடுறது கட்சிக்காகத்தான் .. ஆயிரம் மேடையிலே நாங்கெல்லாம் சொல்ல முடியாததை நீ ஒரு படத்திலே ஒரு காட்சியிலே ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிற. .நீ ராமச்சந்திரன் ஆனால் வானத்துக்கும் சந்திரன் எட்டியிருந்து ஒளி கொடுக்கிறவன். நீ மற்றவங்களுக்கு கைவிளக்கு. கிட்டேயிருந்து ஒளி கொடுப்பவன். உறுதியோடு இருப்பதால் சில பிரச்சினைகளும் தடங்களும் வரத்தான் செய்யும்.
எதையும் நீ மற்றவங்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும். தவிர மற்றவர்கள் குறையை ஒரு பொருட்டா நினைக்ககூடாது என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ....... Thanks...

orodizli
18th April 2020, 11:16 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 73 . பேரரறிஞர் அண்ணா

அண்ணா மீது அதிக பாசம் வைத்த எம்ஜிஆர் அண்ணா மரணம் அடைந்தபோது கதறி அழுதார். அழுதுக்கொண்டே இருந்தார். என் தந்தை இறந்த போது தெரியாது அப்போது நான் சிறுவன் தாயை இழந்த போது எனக்கு அதிகமாக துக்கம் இருந்தது. இருந்தாலும் என் கண்ணீரை அடக்கினேன். .அண்ணாவின் மரணம் என்னை கலங்க வைத்து விட்டது என் அழுகையை அடக்கமுடியல என்று தங்கதமிழ் மகனை வங்க கடலோரம் அடக்கிய பின் சொன்னார். என் பெரும் இழப்பு அண்ணாவின் இறப்பு என்று பலர் முன் புலம்பினார். .என்னை சந்திரன் என்றார்கள் அவர்களோ சூரியன். .சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ? என்று வருந்தினார். ஒப்பாரியில் மிகவும் ரசிக்கத்தக்கதும் வருனை மிகுந்ததும் ராவணன் மனைவி காந்தாரி புலம்பியதும் கம்பன் வருனையில் களைக்கட்டி நிற்கும். .தமிழ் என்னை உன் இதயத்தில் வைத்திருப்பதாக சொன்னீர்களே ராமபாணம் அந்த இதயத்தை துளைத்த போது என்னையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று பொய் சொன்னீர்களா என கேட்டு அழுதாராம். அப்படி இந்த கோமகனும் தனக்குள் புலம்பினார். நடந்துக்கொண்டே வேட்டிக்கட்டும் அழகு எப்போ பார்ப்பேன். .மேடையிலே பிரசாங்கம் செய்யப்போறப்போ யாருக்கும் தெரியாமல் பொடி போடற பக்குவம் யாருக்கு வரும். என் உடன்பிறந்தவர்கள் கூட தம்பி என்று கூப்பிடறது இல்லை. நீங்கதானே கூப்பிடுவீங்க இனிமேல் யார் என்னை கூப்பிடற போறாங்க. என்றார். .

பேரரறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நாடகம் மன்றம் சார்பில் இன்பகனவு, .இடிந்தக்கோயில். ,மற்றும் அட்வகேட் அமரன். முதலிய நாடகங்கள் நடத்தி கட்சிக்கு நிதி சேர்த்துக்கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதல்லாம் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் இனைந்து வெளியூர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்தார். .எம்ஜிஆர் கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டங்களில் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. .மக்களும் காசு கொடுத்து கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வந்தனர். .அந்த நிதி முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. திமுக கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் முதன்மையானவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான். முன்னப்போதும் கேள்வி படாத சரித்திர சாதனையாகும் இது? அதைப் பார்த்து அண்ணா பூரித்துப் போனார். அன்று நம்நாடு பத்திரிகைகளில் இப்படி எழுதினார். .
நண்பர் எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை நாடு அறியும். எம்ஜிஆரை நான் பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றதாகும். ..
அவர் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதை கூறவா வேண்டும். ? தி.மு.க கட்சியினால் எம்ஜிஆர். எம்ஜிஆரால் திமுக கட்சி. . இரவு பகல்.. உயர்வு தாழ்வு. ..கொடுப்பவன் வாங்குபவன். ..மேடு பள்ளம். .
இவையெல்லாம் எப்படி இயற்கையில் மாற்ற முடியாதோ. அதுபோல் தான் எம் ஜி ஆர் இல்லையென்றால் கட்சி இல்லை. கட்சியில்லையென்றால் எம்ஜிஆர் இல்லை. கட்சியும் எம்ஜிஆரையும் மாற்ற முடியாது. .என்று காந்தகம் போல் ஆகிவிட்டது. .என்று அருமையாக எழுதியிருக்கார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். அதைவைத்துதான்எம்ஜிஆரை அண்ணாவின் இதயக்கனி என்று எல்லோரும் சொல்கிறார்கள்........ Thanks...

orodizli
18th April 2020, 11:17 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 74 பேரரறிஞர் அண்ணா. .

அண்ணாவுக்கும்எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். .
2, நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள். .
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். .எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார். 4, இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள். .
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். 8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்...
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு அறிஞர் அண்ணா என் வி நடராஜன் வுடன் பொதுக்கூட்டத்தற்காக செல்லும் போது கோவில்பட்டி அருகே அண்ணாவின் கார் ஒரு மரத்தடியில் அருகே நிறுத்தப்படுகிறது. வயல்வெளியில் தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் காரில் திமுக கொடி பறப்பதை கண்டு ஒடி வந்தனர். கார் அருகே வந்து நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் கட்சியா என்று அண்ணாவையும் நடராஜனையும் பார்த்து கேட்டனர். அதற்கு அண்ணாவும் ஆம் நாங்களெல்லாம் எம்ஜிஆர் கட்சித்தான் என்றவர் உங்களுக்கு எம்ஜிஆரை பிடிக்குமா? ? என்று கேட்டார்? ? .எம்ஜிஆர் எங்கள் உசுரு என்று சிலரும் அவர்தான் எங்கள் தலைவர் என்று சிலரும் எங்கள் வாத்தியார் அவர்தான் என்றும் அவரவர்க்கு தகுந்த பதில் கூறினார்கள். உடனே அங்குள்ள மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்கள் காய்கறிகள் டவல் துண்டுகள் யாவும் அண்ணாவிடம் கொடுத்து. இது எங்கள் தலைவர் எம்ஜிஆரிடம் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் அன்போடு கொடுத்ததை அண்ணா மறுக்காமல் வாங்கி கொண்டார். அதே நேரத்தில் அண்ணாவின் காரை துடைத்து தூய்மை படுத்தினார்கள். .எம்ஜிஆரிடம் நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என்றனர்..தான் ஒரு திமுகவின் தலைவராக இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை. .திமுக கொடி எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் எம்ஜிஆர் கட்சி கொடி என்றுதான் சொல்கிறார்கள் தவிர திமுக வில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அவர்கள் மனதிலும் இல்லை பார்வையிலும் இல்லை. என்று நினைத்து பெருமைப்பட்டு என் வி நடராஜனிடம் கூறினார். எம்ஜிஆர் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தனை பேர்களுக்கும் முன்னாள் கூறினார். அதனால்தான் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த பேச்சியிலும் செயலிலும் எம்ஜிஆரை விட்டு கொடுக்காமல் இருந்தார். .எம்ஜிஆரின் செல்வாக்கு எத்தகையற்றது என்பதை விளக்கும் இச்சம்பவம் ஆகுக..ககுருவின் பெயரையும் மிஞ்சி குருவுக்கு புகழ் தேடி தந்த உண்மையான சீடனாக எம்ஜிஆர் இருந்தார். ........ Thanks...

orodizli
18th April 2020, 11:18 PM
அனைவருக்கும் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரை புதிய ஆண்டு தொடக்கமாக எழுதுகிறேன். .பார்த்தால்நீளமாக இருக்கும் படித்தால் சுலபமாக இருக்கும்

சந்திரோதயம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரைகள்
1. தற்கொலை கேவலமானது. பலவீனமானது. .கோழைதனமாது..

2, குடை பிடித்தால் சூரியன் மறையாது மற்றவங்க பார்வையில் நாம் தான் மறைவோம்

3. அநீதியின் போர்வையில் கொஞ்சநாள் மறைந்திருக்கலாம் நீதியின் பார்வையில் எப்பவும் தப்பிக்க முடியாது..

4, ,வசதியுள்ளவங்க வாழ்க்கையில் நொறுங்கி போனவங்களுக்கு சுமை தாங்கி இருந்தா இங்கு மட்டும் அல்ல உலகத்தில் எங்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் இருக்கும். .

5. ஏழைகளும் நம்மைப்போல பத்து மாதம் தான் ஆனால் உடல் கறுப்பு உள்ளம் வெண்மை உதிரம் சிவப்பு. .

6. வீட்டுக் கூரையிலே ஒட்டடை படியனும் என்று யாரும் விரும்புவதில்லை. அது தானாகத்தாத்தான் படியும். அதுப்போல்தான் நமது வாழ்க்கையில் வரும் துன்பமும். .அதை மன உறுதியால் தான் போக்கனும். .

7. வாழ்க்கையில் முன்னுக்கு வரனும் என்று முயற்சி பன்றது தப்பில்லை. அதற்காக குறுக்கு வழியில் கோபுரம் ஏறக்கூடாது. .

8. பெண்களை தெய்வமாக மதிக்கிற நாடு இது. கல்விக்கு சரஸ்வதியும். .செல்வத்துக்கு லஷ்மியும். .பொறுமைக்கு பூமாதேவியும் குறிப்பிடுக்கிறோம். .அப்படிப்பட்ட நாட்டில் தான் பெண்ணை இழிவு படுத்துகிறார்கள்.

9. தனிப்பட்ட விரோதத்திற்க்காகவும். .நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்துவது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யற மிகப்பெரிய துரோகம். ஆகும். .

10. நாட்டிலே பெண்களுக்கு பஞ்சம் இல்லை பெண்களின் உரிமைக்குத்தான் பஞ்சம். அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத ஆண்களின் அறிவுக்குதான் பஞ்சம்

11. கேவலம் பணத்துக்காக பண்பை பகுத்தறிவை மனிதாபிமானத்தை முறிக்க கூடாது.

12. அசிங்கமான ஏழைகளின் பணத்தால்தான் பத்திரிகை வளர்கிறது பணக்காரர்களின் வாழ்வு மலருகிறது

13. கூண்டுக்குள் போர்வையில் இருக்கிற புலிகள் எவ்வளவோ மேலானது. .வெளியே மனித உருவில் ஆயிரக்கணக்கான புலிகள் இருக்கின்றன அவங்க இதயத்தைப் போர்வையாக்கி இருக்கிறாங்க. .

14. என்னதான் கருப்பாக இருந்தாலும் காகம் குயிலாக மாறாது. காரணம் நல்லா இருந்தா பொய்யைக்கூட அனுமதிக்கலாம். என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். .

15. பெண்கள் முட்டைக்குள் இருக்கிற மஞ்சள் கரு மாதிரி. . என்ன நடந்தாலும் நான்கு சுவற்றுக்குள்தான் இருக்கனும். நான்கு சுவர் என்பது. அச்சம். .மடம். .நாணம். .பயிர்ப்பு. .பண்புகள் தான். .

16. பெண்கள் கடவுள் சிலை மாதிரி கோயிலை விட்டு வெளியே போனால் வெறும் கல்தான் இறைவன் கழுத்தில் உள்ள மாலை போல் இருக்கிற வரைக்கும் மரியாதை செய்வார்கள் கும்பிடுவார்கள். அதே மாலை வெளியே வந்து விழுந்தா யார் வேண்டுமானாலும் மிதிப்பார்கள்.

17. மனிதனின் முகம் இருக்கிற அதே இடத்தில் இதயம் இருந்தால் உலகத்திலேயே குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். . என்ன செய்யறது கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருக்கிறதனால்தான் உலகத்தில் இத்தனை அக்கிரமம் நடக்கிறது. .

18. மழைத்துளியில் எந்த வித்தியாசமும் இல்லை அதுவே நத்தையின் வாயிலே விழும் போது முத்தாக இருக்கிறது குப்பையில் விழும் போது சேறு ஆகிறது. .

19. குப்பையில் விழுந்தாலும் அது மாணிக்கமாக இருந்தா குனிந்து எடுக்கிறோம் இல்லையா? ? .

20. பத்திரிகையில் பொய்யான செய்தி வெளியிடுவதால் நாட்டினிலே எத்தனையோ குடும்பங்கள் திசை மாறி போய். ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. .

21. இந்த நாட்டிலேயே இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் யாராவது ஒருவருக்கு தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் இருக்கிறார்கள் என்கிற கருத்து நமக்குள் இருக்க வேண்டும். .

22. ஆண்டவன் நிரபராதிகளை கைவிடுவதில்லை. குறைந்த அறிவுள்ள கோழிக்கூட தன் குஞ்சுகளை அடைக்காத்து வளர்க்கிறது. .
என்ன நண்பர்களே இந்த ஆண்டு வாத்தியார் கூறிய கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுங்கள் அதுவே இந்த ஆண்டு முதல் தொடக்கமாக இருக்கட்டும்.
வாழ்க தமிழ் வளர்க புரட்சித்தலைவர் புகழ் தொடரட்டும் உங்கள் தொண்டு........ Thanks...

orodizli
18th April 2020, 11:20 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 75. பேரரறிஞர் அண்ணா

மதுரையில் ஒரு தடவை பேரரறிஞர் அண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பற்றி கூறுகையில் எம்ஜிஆர் அவர்கள் என் மீது முமு அன்பு செலுத்துப்பவர். எங்கும் எதிலும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பவர். அப்படி கூறுகையில் இடைமறித்து கருணாநிதி அண்ணாவிடம் கேட்டார். அப்படியானால் நாங்கெல்லாம் உங்கள் மீது குறைவான அன்பு செலுத்துபவர்களா அல்லது நாங்கள் வைத்திருக்கும் அன்பு பொய்யானாதா? ? என்று கேட்டார். அதற்கு அண்ணா கூறியது. மனித அளவில் நீங்கள் அன்பு செலுத்திகிற நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் என் மீது தெய்வீக அன்பு செலுத்துப்பவர் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு அவர் தாய் மீது கொண்ட அன்புக்கு இணையானது. என்று பதில் அளித்தார். .

அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் 1962, ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது. காங்கிரஸ் வேட்பாளர் பஸ் அதிபர் நடேசன் முதலியார் என்பவரிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. .பொன்மனச்செம்மல் எம்ஜிஆரும் சோகத்தில் மூழ்கினார். அண்ணா அவர்கள் தமது தோல்வியே மறக்க கர்நாடகவில் உள்ள சிரவனவெலகுலா. என்ற இடத்திற்கு சென்று அங்கு தவமிருந்து முக்தி அடைந்த பாகுபலியின் 58. அடி உயர கல்லால் உருவாக்கப்பட்ட சிலையை கண்டு ஆறுதல் பெற்றார். இந்த நேரத்தில் தனது ஆறுதலை வெளிப்படுத்த வேண்டி கண்ணதாசனிடம் தனது மனநிலையை எடுத்து கூறி பாடல் எழுத சொன்னார். தர்மம் தலைக்காக்கும் என்ற படத்தில் வரும் மூடு பனி குளிரெடுத்து என்ற பாடலில் வரியை புகுத்தி எழுதியது. தேர்தலில் தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பது உண்டு காதலில் தோற்றவர்கள் ஜெயிப்பதில்லை. .என்று எழுதினார். .காதல் பாடலில் இப்படி ஆறுதல் தரும் வார்த்தையும் வரியும் எழுதியதற்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு நன்றி கூறினார். .தனக்காகத்தான் எம்ஜிஆர் இந்த வரியை ககண்ணதாசனிடம் எழுத சொல்லிருப்பார் என்பதை அண்ணாவும் புரிந்துக்கொண்டார். .

புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் என்னிடம் தேர்தல் நிதிக்காக கணிசமான தொகை தருவதாக கூறினார். .ஆனால் நான் எம்ஜிஆரிடம் கூறினேன். நீங்கள் தரும் கணிசமான தொகையை விட உங்கள் முகத்தை மக்கள் பார்த்தால் 30 ஆயிரம் ஒட்டுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் எனக்கு கிடைக்கும். . உங்கள் பேச்சைக் மக்கள் கேட்டால் பத்து லட்சம் பேர் மனம் திரும்புவார்கள். ஆகையால் நீங்கள் ஜனவரியில் இருந்து பிப்ரவரி வரை எத்தனை நாட்கள் ஒதுக்க முடியும் என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர் கூறினார். ஜனவரி 20. முதல் பிப்ரவரி 13. வரை முழுக்க முழுக்க இந்த தேர்தல் பிரச்சாரம் பணியில் ஈடுப்படுகிறேன் என்றார். பல்லாவரம் தொகுதிக்கு மட்டும் அல்லாமல் மற்ற தொகுதிக்களுக்கும் வரவேண்டும் என்றேன். சரி என்று கூறி விட்டார். இப்போது நான் சொல்லவேண்டியவர்களிடம் கூறிவிட்டேன். அவரை பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியுள்ளார். (. 1967 ம் ஆண்டு விருகம்பாக்கம் தேர்தல் கூட்டத்தில் ஆற்றிய உரை ).
திரையுலகில் பலரையும் நான் அறிவேன் அந்த உலகத்தில் செல்லும் யாருக்குமே ஒரு கணம் தலையைசுற்றும் அப்படிப்பட்ட அந்த உலகத்தில் அப்பமுக்கற்றவராக இருப்பவர் எம்ஜிஆர். தாய்மார்கள் சொல்வார்கள் நம்ப எம்ஜிஆர் நம்ப எம்ஜிஆர் என்றும் புரட்சிநடிகர் அவர்களை உங்கள் வீட்டில் உள்ள ஒருவரைப் போல் சொந்தத்துடன் பந்தத்துடன் பேசிகீறிர்கள். அப்படிப்பட்ட நல்லவர் நீங்கள் பெரியவராக இருந்தால் அவர் உங்கள் பிள்ளை சற்று வயதானவராக இருந்தால் அவர் உங்கள் தம்பி இளையவராக இருந்தால் அவர் உங்கள் அண்ணன் எம்ஜிஆர் அவர்களை விடவா நல்ல பிள்ளை நல்ல குணம் படைத்தவர் உங்களுக்கு கிடைக்க போகீறார்களா? ? . (10- 02 -1967
பல்லாவரம் நகரில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து ) )....... Thanks...

orodizli
18th April 2020, 11:21 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 76. பேரரறிஞர் அண்ணா

சென்னை காசினோ தியேட்டரில் எங்க வீட்டு பிள்ளை படத்தின் 175 வது நாள் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி. .தமிழ் திரைப்படவுலகில் முதல் முதலாக அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம் மதுரை வீரன் என்றார்கள். மதுரை வீரன் வசூலை நாடோடிமன்னன் வீராங்கன் மார்த்தாண்டன் முறியடித்தார்கள். நாடோடிமன்னன் படத்தின் வசூலை எங்கவீட்டுபிள்ளை படம் முறியடித்தது. என்றார்கள். . எம்ஜிஆர் திரைப்படத்தின் வசூலை யாராலும் முறியடிக்க முடியாது. அது ஒருவரால் தான் முடியும். அவர்தான் எம்ஜிஆர். .. எம்ஜிஆர் படத்தின் வசூலை முறியடிக்க எம்ஜிஆரால் மட்டுமே முடியும். எம்ஜிஆரை வெல்ல யாரால் முடியும் எம்ஜிஆரால் தான் முடியும். .?.

இன்று மிகப்பெரிய ஜான்பாவான்கள் எல்லாம் எம்ஜிஆரை நாடி வந்துக்கொண்டியிருக்கிறார்கள். இது கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமைப்படவிஷயம். எம்ஜிஆர் கட்சிக்கு மட்டும் பெருமை சேர்க்க வில்லை. தமிழுக்கும். தமிழக மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் திரைப்படவுலகிற்கும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் தமிழ் இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கும் பெருமை மிக்க பெருமை சேர்த்து உள்ளார். இதை நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. அகில இந்தியாவிலே மிகப்பெரிய மதிக்கத்தக்க நடிகராக விளங்கும் எம்ஜிஆருக்கு எங்கவீட்டுபிள்ளை அவரது நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். .நான்கேள்விப்பட்டேன். எங்கவீட்டுபிள்ளை படத்தை பார்த்து விட்டு வட இந்தியா
தென்னிந்தியா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆங்கில பட இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் , அத்தனை பேர்களும் எம்ஜிஆர் வீட்டை படையெடுத்து. அவரவர் தகுதிக்கேற்ப கதை கூறி நடிக்க அழைத்தனர். .ஆனால் எம்ஜிஆர் யாருடைய மொழியிலும் நடிக்க விரும்பவில்லை. என்று கூறியுள்ளார். நான் தமிழ் மொழியில்தான் அறிமுகம் ஆனேன். தமிழில் நடித்துத்தான் பிரபலம் ஆனேன். .தமிழில் நடித்ததால் தான் என்னை உலகம் அறிந்தது. தமிழ் தான் எனக்கு பேரும் புகழும் தந்தது. அதனால் எனக்கு பேரும் புகழும் தமிழில் இருந்து கிடைக்கிறது என்றால் அது தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். மாற்று மொழியில் நடித்துத்தான் எனக்கு எந்த வித பேரும் புகழும் பணமும் வேண்டாம். இந்த உலகம் என்னை தமிழ் நடிகராக த்தான் பார்க்க வேண்டும் தவிர அகில உலக நடிகராக பார்க்க எனக்கு விருப்பமில்லை. .என்று கூறி அனுப்பி விட்டார். இப்படி எத்தனை நடிகர்கள் கூறுவார்கள் இது போன்ற கொள்கையும். புரட்சியும் எந்த நடிகர்களுக்கு உண்டு. அதனால் தான் அவரை புரட்சிநடிகர் என்று கூறுகிறோம். .ஒருவகையில் பார்த்தால் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எம்ஜிஆர் ஒரு பொக்கிஷமாகும்.

இன்று உலகளவில் எம்ஜிஆருக்கு மட்டுமே அதிக அளவில் ரசிகர் மன்றம் உள்ளது. .தமிழில் மட்டும் நடித்து ஒரு தமிழ் நடிகர்க்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டும் தான். இதைவிட நம் தமிழுக்கு என்ன பெருமை வேண்டும்? ?இன்று எங்கவீட்டுபிள்ளை படத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்து முஸ்லிம் கிருஸ்துவ மதம் ஜாதி எந்த வித வேறுபாடின்றி மக்கள் எம்ஜிஆர் என்ற ஒரு மனிதரை நேசித்து எங்கவீட்டுபிள்ளை படத்தை காண வருகின்றனர். இதை விட ஒரு நடிகருக்கு என்ன பெருமை வேண்டும். அது எம்ஜிஆர் ஒருவரால் தான் தர முடியும் என்பதற்கு எங்கவீட்டுபிள்ளை ஒரு சான்றாகும். எம்ஜிஆரை வாத்தியார் என்று கூறுகிறார்கள். ஆம் அதன் பொருள் இப்போது தான் புரிந்தது. எவன் ஒருவன் மற்றவர்கள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்டியாக விளங்குகிறாரோ அவர் தான் வாத்தியார். எங்கவீட்டுபிள்ளை எத்தனையோ பேர்களுக்கு. வழிக்காட்டியாகவும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அதனால் அவரை வாத்தியார் என்று கூறுவது எந்தளவுக்கு பொருந்தும் என்பதை உணர்ந்தேன். மகிழ்ந்தேன். ஆம் இனி எம்ஜிஆர் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் அவங்க வீட்டு பிள்ளை தான்........ Thanks.........

orodizli
18th April 2020, 11:22 PM
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 77. பேரரறிஞர் அண்ணா

பொன்மனச்செம்மல் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நேரத்தில். அமைச்சரவை அமைத்துக்கொண்டிருந்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். ஒரு நாள் நாவலர் நெடுஞ்செழியன் தம்பி இளவல் திரு இரா செழியன் அவர்கள் அமைச்சரவை பட்டியலுடன் பொன்மனச்செம்மலை . காண சென்றார். பொன்மனச்செம்மல் உடல் நலம் விசாரித்து விட்டு அமைச்சர் பட்டியலை எம்ஜிஆரிடம் காட்டினார். .இந்த குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு தரப்படும் இலாகாக்கள் பெயர்களும் இருக்கின்றன. என்றார் இர செழியன் அவர்கள். .இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள் என்று கேட்டார் எம்ஜிஆர், .அண்ணா அவர்கள் இதை உங்களிடம் காண்பிக்க சொன்னார் என்றார். அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில்? ?

நான் யார்? அண்ணா அவர்கள் யார்? கழகத்துக்கு நேரடியாக நான் செய்த தியாகம் என்ன? ? அண்ணா அவர்கள் செய்த தியாகம் என்ன. ? என்னுடைய அறிவு
ஆற்றல் செல்வாக்கு இவை எந்த அளவுடையவை. ? அண்ணா அவர்களின் ஆற்றல் அறிவு செல்வாக்கு இவை எந்த அளவுடையவை? ? அப்பப்பா மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா? ? சாதாரண தொண்டனிடம் அண்ணா காட்டும் மரியாதை எண்ணி பார்க்கும் போது பேரன்பு கொண்ட அவருடைய பெரிய மனதை உள்ளத்தை எப்படியாப்பட்ட வார்த்தைகளால் விளக்குவது. போற்றுவது என்று புரியவில்லை. .இப்படி கூறிவிட்டு அந்த பட்டியலில் உள்ள பெயர்களைப்பார்த்தார். .அதிலே ஒருவருடைய பெயர் அமைச்சர் பட்டியலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து இரா. செழியனிடம் கூறினார். சமீப காலமாக திமுக கழகத்துக்கும். பேரரறிஞர் அண்ணா அவர்களுக்கும் எதிராககருத்துக்களை பரப்பி கொண்டியிருந்தவருக்கு அமைச்சர் பதவியா. ? இத்தனை நாட்களாக கழகத்துக்காக உழைத்த எத்தனையோ பேர் அனுபவம் கல்வி அறிவு பெற்றவர்கள் இருக்க. கழக தொண்டர்களின் உள்ளத்தில் பெரும் எதிர்பை சம்பாதித்துக்கொண்டியிருப்பவர்க்கு அமைச்சர் பதவியா? ? இது என்ன நியாயம் என்று பதறினார். .லஞ்சம் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ள இலாகா. என்று கேள்விப்பட்டு உள்ளேன். எனவே இதை வேறு யாரிடமும் கொடுக்காமல் நாவலர் நெடுஞ்செழியனுக்கு இந்த இலாகாவை சேர்த்து கொடுக்கலாம். என்று கூறினார்? ?
அதற்கு இரா செழியன் அவர்கள் சொன்னார். எனது தமையனுக்கு இந்த இலாகாவை கொடுக்க சொல்கிறீர்கள். இதை நானே போய் அண்ணாவிடம் எப்படி கூறுவேன். நான் உங்கள் வாயிலாக இந்த கருத்தை சொல்ல வைத்து விட்டேன் என்று எண்ணினால்?இப்படிப்பட்ட சந்தேகம் என் மீது ஏற்பட்டு விட்டால்? ? இத்தனை நாட்களாக நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உருவாக்கிய. நல்லெண்ணத்தை நானே அண்ணாவிடம் இழந்து விடுவேனோ? ? . இந்த பட்டியலை குறிப்பிட்டு வேறுயாருக்காவது சொல்லுங்கள். என்றார். . அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில். ?
நீங்கள் அண்ணாவுடைய நிழலாக இருப்பவர். அண்ணா ஒரு போதும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்.நம்மையெல்லாம் சரியாக எடைப்போட்டுவைத்திருப்பார் தைரியமாக செல்லுங்கள் என்றார். ஓரிரு நாட்களில் இரா செழியன் புதிய பட்டியலுடன் பொன்மனச்செம்மலை காண வந்தார் புரட்சித்தலைவரிடம் காண்பித்தார். நாவலர் நெடுஞ்செழியனுக்கு தொழில் இலாகா தரப்பட்டிருந்தது. அந்த நண்பர்க்கு அமைச்சர் பதவி இல்லை வேறு ஒரு பதவி குறிப்பிட்டு இருந்தது. அதற்கான காரணங்கள் அண்ணா குறிப்பிட்டு இருந்தார். அண்ணாவுக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதை அவர் செய்யலாம். நானும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். என்றார் புரட்சித்தலைவர்.

மாபெரும் தலைவரும் மேதையுமான அண்ணா அவர்கள் கருத்துக்கு மாறுப்பட்ட கருத்து எம்ஜிஆர் சொன்னாலும். அவர் மீது வெறுப்போ பழிவாங்குவதோ அலட்சியப்படுத்துவதோ இல்லாமல். சாமானிய தோழனின் கருத்துக்கு மரியாதை அளித்த விந்தையை என்ன என்று சொல்வது. அண்ணாவின் பேச்சுக்கு எம்ஜிஆரும் எம்ஜிஆரின் பேச்சுக்கு அண்ணாவும். ஒரு போதும் எதிர்மறையான கருத்துக்கள் கூறியது இல்லை. என்பதற்கு இது ஒரு சான்றாகும். ....... Thanks...

orodizli
18th April 2020, 11:27 PM
#நண்பர்கள்_அனைவருக்கும்
#பார்_போற்றும்_பாரத_ரத்னா எம்ஜிஆர் #ஆசியோடு_இனிய_காலை_வணக்கம்

#புரட்சிதலைவரும்_பொம்மை_ரவீந்தரும்

#ரவீந்தரும்_சத்யராஜும்

ஆரம்பகாலம் முதற்கொண்டு மக்கள் திலகம் அவர்களுடைய அதிதீவிர ரசிகராக நடிகர் சத்யராஜ் இருந்தார் என்பது பலரும் அறிந்த ஒன்று.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய தங்கையின் திருமணத்திற்கு நேரில் சென்று அழைத்தபோது, அவர் சற்றும் எதிர்பாக்காதவண்ணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி கோயமுத்தூரில் நடந்த திருமணத்திற்கு ஆஜாராகி அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து அன்பினால் அவரை திக்குமுக்காடச் செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அதன் பிறகு, தன் தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியதற்கு நன்றி கூற தன் மனைவியுடன் அவரது வீட்டுக்குச் சென்றபோது, “உங்கள் ஞாபகமாக ஏதாவதொரு நினைவுப் பொருளைத் தாருங்கள்” என்று சத்யராஜ் வேண்டுகோள் விடுக்க, எம்.ஜி.ஆர். தினமும் தான் உடற்பயிற்சி செய்துவந்த கர்லா கட்டையை தன் உதவியாளர் மாணிக்கத்தை அனுப்பி மேல்மாடியிலிருந்த அந்த சாதனத்தை வரவழைத்து அவருக்கு பரிசாக அளித்தார். அத்துடன் “தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம்” என்று அறிவுரையும் கூறி வாழ்த்தி அனுப்பினார் அந்த பண்பாளர்.

சத்யராஜ் தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து தினமும் வணங்கி வருகிறார். அந்த அளவுக்கு அவர் எம்.ஜி,ஆரின் முரட்டு பக்தர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சத்யராஜ் பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே “பொம்மை” பத்திரிக்கையை தவறாமல் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு ஐந்து தங்கைகள். மாதந்தோறும் 1-ஆம் தேதி வீட்டுக்கு வரும் “பொம்மை” இதழை யார் முதலில் படிப்பது என்பதில் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். காரணம் அதில் தொடர் கட்டுரையாக வெளிவந்த ரவீந்தர் அவர்களின் கட்டுரையைப் படிக்கத்தான் இத்தனை போட்டா போட்டிகள்.

“போன மாசத்து ‘பொம்மை’யை நீ படிச்சே இல்லையா? இந்த மாசத்து பொம்மையை இவங்க முதலில் படிக்கட்டும்” என்று சத்யராஜின் தாயார் இவர்களுடைய சண்டையை மத்திசம் செய்து வைப்பார்.

“சாண்டில்யன் அவர்கள் ‘கடல் புறா’ என்ற நாவலை எழுதினார். அதை படிக்கும்போது அந்தக் கப்பலில் நாம் பயணிப்பதைப் போன்ற உணர்வு இருக்கும். ‘யவனராணி’ என்னும் நாவலில் யவனராணி உடைந்த கப்பல் கரை ஒதுங்கும்போது நாமும் அங்கே கரை ஒதுங்குவதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அதாவது அந்த காலகட்டத்திற்கே அழைத்துப் போய் நிறுத்தும் எழுத்து. – அதுவே அந்த எழுத்தாளரின் சிறப்பு. ரவீந்தர் அவர்களின் “பொன்மனச்செம்மல்” தொடரை படிக்கும்போது எம்.ஜி,ஆர் அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே ஓர் உணர்வு எனக்குள் ஏற்பட்டது.” என்று ரவீந்தரின் எழுத்தாற்றலுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் சத்யராஜ்.

இன்னும் ஒருபடி மேலே சென்று “சினிமாவில் கதாபாத்திரங்களை காட்சியமைப்பு மூலமாக சுலபத்தில் காட்டிட முடியும். ஆனால் எழுத்து மூலமாக கதாபாத்திரங்களை, அவற்றின் சிறப்புகளை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. ‘பொன்மனச்செம்மல்’ தொடரைப் படிக்கும்போது அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என்று அவருடைய எழுத்துத்திறமைக்கு மகுடம் சூட்டுகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எத்தனையோ பேர்கள் எழுதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தரின் எழுத்துக்களில் மட்டும் அப்படியென்ன ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா…?

ஆம். வேரு யாருடைய எழுத்துக்களுக்கும் இல்லாத நம்பகத்தன்மை, துல்லியம், சுவையான அனுபவங்கள் ரவீந்தரின் கைவண்ணத்தில் காணப்படுவது தனிச்சிறப்பு . அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல இந்த ஒரு சம்பவமே போதுமானது.

1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இயற்கை எய்திய பின்னர் ‘பொம்மை’ இதழை நடத்திவந்த நாகிரெட்டியாருக்கு தனது பத்திரிக்கையில் அவரைப்பற்றிய தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.

ஜானகியம்மாள் சொன்ன ஒரே ஒரு பதில் எம்.ஜி.ஆருக்கும் வசனகர்த்தா ரவீந்தர் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பின் இறுக்கத்தை எடுத்துக்காட்ட போதுமானது.

“மக்கள் திலகம் என்னும் மாமனிதருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் திரு கே.ரவீந்தர் அவர்களிடம் தமக்கேற்பட்ட அனுபவங்களை ‘பொம்மை’யில் எழுதச் சொல்லுங்கள். சுவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். என் கணவரைப் பற்றி எழுத அவரைவிட தகுதியான நபர் வேறு யாரும் கிடையாது”

மக்கள் திலகம் மறைந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தேறியது. நாகிரெட்டியாரின் விருப்பத்திற்கு ரவீந்தர் அவர்கள் இசைந்து “நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தலைப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்து 30 இதழ்களில் தொடராக எழுதியபோது அது வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. ‘பொம்மை’ இதழின் வருமானமும் எகிறியது.

“எம்.ஜி.ஆர் என்னும் அந்த மாமனிதரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டதையும், படித்ததையும் கொண்டு பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்தபோதிலும் எம்.ஜி.ஆருடன் பல்லாண்டுகள் உடனிருந்து பழகிய ஒருவர் எழுதுகிறார் என்றால் அதற்குள்ள சிறப்பே தனித்துவமானது. அந்த எழுத்து திரு ரவீந்தருடையது” என்று புகழாரம் சூட்டுகிறார் ‘பொம்மை’ பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர்.

இந்த தொடர் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷமாகவும், பெருத்த கொண்டாட்டமாகவும் இருந்தது. யாரும் அறிந்திராத அத்தனை சுவையான நிகழ்வுகள். இந்த தொடரைப் படித்த பிறகு இன்னமும் கூடுதலாக எம்.ஜி.ஆரின் பித்தனாகிப் போனவர் நடிகர் சத்யராஜ்.

ஒருநாள் பொம்மை பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பொறுப்பாசிரியர் வீரபத்திரன் என்பவரிடம் பேசுகிறார்.

“நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தொடரை எழுதும் திரு.ரவீந்தர் அவர்களை நான் எப்படியாவது சந்திக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். சத்யராஜின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வீரபத்திரன் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறார்.

சென்னையிலுள்ள ரவீந்தரின் இல்லம் சென்று சத்யராஜ் முதன் முதலாக அவரை சந்தித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தான் வணங்கும் தலைவனின் அன்புக்கு பாத்திரமானவரை கண்டபோது மக்கள் திலகத்தையே நேரில் பார்த்ததுபோன்று பரவசமடைகிறார். பொன்மனச் செம்மலுடன் ரவீந்தர் பழகுகையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும், அந்த தொடர் கட்டுரைகளில் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவங்களும் சத்யராஜ் அவர்களின் மனக்கண்ணில் வந்து நிழலாடுகிறது.

முகமன் கூறி வரவேற்று உபசரித்த ரவீந்தர் அவர்கள் ஒரு இனிப்பு பொட்டலத்தை சத்யராஜிடம் பரிவுடன் தந்து “புரட்சித் தலைவர் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு இது. இதை திருவல்லிக்கேணியில் உள்ள இனிப்பகத்திலிருந்து வாங்கி வந்தேன்” என்று சொல்ல சத்யராஜ் அப்படியே எம்.ஜி.ஆரின் நினைவில் மூழ்கிப் போகிறார்.

ரவீந்தர் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பைக் குறித்து பேசும்போது “புரட்சித்தலைவர் அவர்களை பார்க்கும்போது முதலில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார். தலைவரைப் போலவே அவரிடம் பணியாற்றியவர்களும் அந்த பண்பை தொடர்ந்தது… எனக்கு ஒரு ஸ்வீட் பாக்கெட் தந்தபோது எனக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் சத்யராஜ்.

ரவீந்தரிடம் விடைபெற்று சென்ற சத்யராஜுக்கு சினிமா உலகத்தில் இத்தனை காலங்கள் ரவீந்தர் சத்தமின்றி சாதனைகள் புரிந்தும் அது வெளியுலகிற்கு தெரியாமலே போய்விட்டதே என்ற ஆதங்கம் மனதுக்குள் தேங்கி இருந்தது. ரவீந்தரை எப்படியாவது ஒரு பொதுநிகழ்ச்சியில் கெளரவிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்

சத்யராஜ் கொண்டிருந்த நாட்டத்திற்கேற்ப அதற்கான ஒரு நல்ல வாய்ப்பும் அமைந்தது. 1993-ஆம் ஆண்டு பி.வாசுவின் இயக்கத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “வால்டர் வெற்றிவேல்” என்ற திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடி 200-வது நாள் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தொண்ணூறுகளில் வெளியான சத்யராஜ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் “எஸ்.பி. பரசுராம்” என தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் “குத்தார்” என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

வால்டர் வெற்றிவேல் 200-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு ரவீந்தர் அவர்களுக்கு சத்யராஜ் பிரத்யேக அழைப்பு விடுத்திருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த மேடையிலேயே ரவீந்தர் அவர்களுக்கு புரட்சித்தலைவரின் உருவப்படம் பதித்த மோதிரத்தை வழங்கி கெளரவித்தபோது ரவீந்தர் நெகிழ்ந்துப் போனார்.

தன்னை கண்ணியப்படுத்திய சத்யராஜ் அவர்களின் சிறந்த பண்பை பாராட்டி அதே ‘பொம்மை’ பத்திரிக்கையில் கட்டுரையாக வரைந்தார்.

“எம்.ஜி,ஆர். அவர்கள் என் வாழ்க்கையில் எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால் மோதிரம் மட்டும் எனக்கு அணிவிக்கவில்லை. அதை சத்யராஜ் நிறைவேற்றிவிட்டார். அதன் மூலமாக எம்.ஜி.ஆர் தமது படத்தில் பாடிய எல்லா பாடல்களையும் ஜெயித்து விட்டார். “நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்” உட்பட. ஆனால் ஒரேயொரு பாடல் மட்டும் அவரது வாழ்க்கையில் நிறைவேறாமல் இருந்தது. அது “எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப்போலவே இருப்பான்” என்பது. அவரது நிஜவாழ்க்கையில் மகன் இல்லை. ஆனால் இந்த மோதிரத்தை அணிவித்ததன் மூலமாக சத்யராஜ் அவருக்கு மகன் மாதிரி. பெற்றால்தான் பிள்ளையா?” என்று அந்த கட்டுரையை ரவீந்தர் முடித்திருந்தார். சத்யராஜ் இந்த நிகழ்வினை நினைத்துக் கூறும்போது “இதைப்படித்து என் கண்கள் குளமாகின” என்று மனம் நெகிழ்கிறார்.

முத்தாய்ப்பாக இதோ சத்யராஜ் கூறும் விஷயங்கள் நம் மனதில் ரவீந்தர் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையும் மேலும் அதிகப்படுத்துகின்றன.

“ரவீந்தர் அவர்கள் பொன்மனச்செம்மலைப் பற்றி நிறைய விஷயங்கள் சுவைபடச் சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கும்போது நான் ரசிகனாக.. தூரத்தில் இருந்து புரட்சித் தலைவரைப் பார்த்தபோது அவரை நடிகராக, அரசியல் கட்சித் தலைவராக, ஏழைகளின் பசியைத் தீர்த்தவராக, சத்துணவு திட்டம் கொண்டு வந்தவராக… இப்படி பெரிய பெரிய விஷயங்கள்தாம் வெளியே தெரியுமே தவிர, நெருக்கமாக நட்பு முறையில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வாய்ப்பில்லை. அவற்றை கூடவே இருந்து தன்னலம் கருதாமல் புரட்சித் தலைவரை நேசித்து பழகியவர்களால் மட்டுமே எழுத முடியும்” என்று புகழாரம் சூட்டுகிறார்...

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks...

orodizli
18th April 2020, 11:30 PM
#நண்பர்களுக்கு_இனிய_மாலை
#வணக்கம்

#செம்மளுக்கு_வந்த_கடிதமும்
#செம்மலின்_கொடைகுணமும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரபரப்பான காலை நேரம்
முதல்வர் கோட்டைக்கு கிளம்ப
தயார் ஆகிறார்

தலைவருக்கு வந்து இருந்த கடிதங்களில்
ஒன்றை தலைவரின் உதவியாளர் தலைவரிடம் கொடுக்கின்றார்.

அந்த கடிதத்தின் முகவரியில்
எம்ஜிஆர்
சென்னை
என்று மட்டும் இருந்தது,எழுதியவர் விலாசம் இல்லை.
கடிதத்தின் உள்ளே:-

வணக்கம் என் பெயர் கவிதா நான் நான்காம் வகுப்பு படிக்கின்றேன் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உள்ளேன் எனக்கு வீணை வாசிப்பதில் மிகவும் இஷ்டம் அழகாக வாசிப்பேன்.. குடும்ப சூழ்நிலை காரணமாக என்னிடம் சொந்தமாக வீணை வாங்க முடியவில்லை ஆதலால் எனக்கு ஒரு வீணை வாங்கி கொடுத்து உதவ வேண்டும்.
இப்படிக்கு
கவிதா
என்று எழுதி இருந்தது பொன்மனமும்
கடிதத்தை படித்து விட்டு உதவியாளரிடம்
அந்த சிறுமி யார் என்று விசாரித்து வீணையை வாங்கி கொடுங்கள் என்று சொல்லி விட்டார்

மாதங்கள் உருண்டோடின
மாநில அளவில் பள்ளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசு வழங்க முதல்வர் தலைமையில் விழா நடக்க ஏற்பாடு நடக்கின்றது..

நாளை விழா பற்றிய நிகழ்வுகள் முதல்வரின் பார்வைக்கு வருகின்றது அப்போது மன்னவன் பார்வைக்கு வீணை வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெயரை பார்க்கின்றார் உடனே உதவியாளரிடம் நாம் வீணை வாங்கி கொடுத்த அந்த பெண்தான் முதல் பரிசு பெற்ற விவரத்தை தெரிவித்து ஆனந்த பாடுகின்றார்

உடனே உதவியாளர் "அண்ணே நாம் அந்த பெண்ணுக்கு வீணை வாங்கி தரவில்லை என்றும் சரியான விலாசம் கிடைக்கவில்லை என்றும் நம் மன்னனிடம் தெரிவிக்கின்றனர்..
மறுநாள் விழா மேடையில் அனைவருக்கும் மன்னன் தன் கொடுத்து சிவந்த கரங்களால் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்குகிறார்
அப்போது வீணை வாசிப்பு போட்டியில் கலந்து வெற்றி பெற்ற அந்த பெண்ணும் மன்னவன் கையினால் பரிசு பெற வருகின்றாள்.. பரிசை வாங்கும் போது மன்னவன் கையில் ஒரு துண்டு சீட்டை தருகிறாள்..

அதில்:-

வணக்கம் உங்களிடம் உதவி என்று கேட்டால் உடனே கிடைக்கும் என்று கேள்விபட்டேன்,ஆனால் நான் எழுதிய கடிதம் ஒருவேளை உங்கள் கையில் கிடைக்கவில்லை போலும், இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற கூட நான் வீணையை இரவல் வாங்கி கொண்டு தான் வந்து கலந்து கொண்டேன்
என்று எழுதி இருந்தது...

தலைவரிடம் பரிசை பெற்று கொண்டு அந்த சிறுமி திரும்பும்போது அவள் தோள்களை கொடுத்து சிவந்த கரங்கள் பற்றியது,சிறுமி திரும்பி பார்க்கும் போது அவளின் தோள்களை மன்னவன் பற்றி கொண்டு உதவியாளரை மன்னவன் பார்க்க தலைவரின் மகிழுந்தில் இருந்து புது வீணையை கொண்டு வந்து சிறுமியின் கரங்களில் கொடுத்து வாழ்த்தினார்
பொன்மனச்செம்மல்...

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...... Thanks...

orodizli
18th April 2020, 11:32 PM
#புரட்சிதலைவர்_ஆசியுடன்
#நண்பர்கள்_அனைவருக்கும்
#இனிய_காலை_வணக்கம்....

#எம்ஜிஆரின்_பிம்பமும்_ரசிகர்
#மன்றங்களும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என் போன்ற இளம்வயதினர்
தலைவரை பற்றி அறிந்துகொள்ள அவர் புகழை போற்றிட ஊக்கம் அளித்துவரும்
#குருநாதர்_வெங்கட்ராமன்_தியாகு,
#அய்யா_சரவணன்_ராஜகோபால்,
#அண்ணன்_நெல்லைமணி,
#அன்பின்_இலக்கணம்_அம்மா
#புண்ணியக்குமாரி, அவர்களுக்கும்
மற்றும்
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்
தலைவரை பற்றிய இந்த சிறு
கட்டுரை சமர்ப்பணம்...

எம்ஜிஆர் மறைந்து முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம்ஜிஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம்ஜிஆர் இன்றும் வாழ்கிறார்.

இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது.

கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின் போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் வேறு எவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.

#ஒருநடிகராகவோ #அரசியல்வாதியாகவோஅல்ல; #கிட்டத்தட்ட_நாட்டுப்புற_தெய்வமாகவே #தலைவர்_இங்கு_திகழ்கிறார்

அவருக்காகப் பலர்
அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்;
அவருடைய 'கட் அவுட்' தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகுச் சதையில் பிணைத்துக்கொண்டு 9 கி.மீ., இழுத்துச் சென்றார்.
சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

'தன் காதலியின் அருகில் இருக்கும் போது கூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா' என்கிறார் ஒரு ரசிகர். 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்' என்று பதிலளித்திருக்கிறார்.
எது நிஜம்?, எது நிழல்? என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம் தமிழக மக்களின் மனதில் குறிப்பாக அவரது ரசிகர்களின் மனதில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது

எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை வலுவாக்குவதில் அவரது வில்லன்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
எடுத்துக்காட்டாக
#நம்பியாரின்_கதாபாத்திரத்தை மிக மோசமானதாக படைப்பதன் மூலம் தனது கதாபாத்திரம் மிக நல்லவனாக, மக்கள் மனதில் தங்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அதைச் செய்து வந்தார்.

அதேபோல், திரைத்துறையில் சக கலைஞர்கள் அவரை மரியாதையாக அழைக்கும் ‘வாத்தியார்’ போன்ற வார்த்தைகளை தேங்காய் சீனிவாசன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மூலம் திரைப்படத்திலும் பேசவைத்தார். இதன்மூலம் பொதுமக்களிடையே எம்ஜிஆர் என்ற பிம்பம் எந்த மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவர் தனக்குத்தானே வடிவமைத்தார்.

பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்ஜிஆரைச் சொல்லலாம்.
‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்ஜிஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம்.

ஏழைப்பங்காளன்,
வெல்ல முடியாதவன்,
தர்மத்தின் காவலன்,
பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல்,
அன்னையைப் போற்றும் உத்தமன்,
நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன்,
சமூகப் போராளி,
சீர்திருத்தவாதி,
நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன்,
பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!

இந்த பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன.
#என்னை_நம்பிக்_கெட்டவர்கள் #யாருமில்லை_நம்பாமல்_கெட்டவர்கள் #பலர்உண்டு”, “

#கரிகாலன்_குறிவைக்கமாட்டான், #வைத்தால்_தவற_மாட்டான்”

என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்ஜிஆரின் திரைப்படிமம் வெகு ஜனங்களின் மனவார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம்.

“அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு,
அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்ஜிஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார்.
சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார்.
அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்ஜிஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார்.
சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்ஜிஆர் நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.

“நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

தனது படங்களில் மது குடிக்காதவராக நடித்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரைப் போலவே இறுதிவரை தன் வாழ்வில் அதை கடைப்பிடித்தார். அது, பெண்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராக இருந்தபோது 1984ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்து திரையில் கதாநாயகனாகத் தோன்றிய தனது கதாபாத்திரங்களுக்கும் தமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபித்தார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த எம்ஜிஆர் இயல்பாகவே தாய்ப்பாசம் மிக்கவராக இருந்தார். தனது திரைப்படங்களிலும் தாய்ப்பாசம் மிக்கவராக தோன்றினார். அது, அவரை தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது .

எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக
#நாடோடி_மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும்
#எங்க_வீட்டுப்_பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம்.

இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.

‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார்.

#சிவாஜி, ஜெமினி, ssr,பாடல்களில்_நாம் #கண்ணதாசனையோ_வாலியையோ #உணர்வோம்.
#எம்ஜிஆரின்_பாடல்களில்_எல்லாமே
#தலைவர்_வார்த்தை_என்பதை_விட
#வாக்காகவே_மாறியிருக்கும். #குயில்கள்_பாடும்கலைக்கூடம், #கொண்டது_எனது_அரசாங்கம்”
என்பது கவிஞனின் கனவு.
அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.

தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர்.

அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர்.

#இன்றும்_எம்ஜிஆர்_பாணியை #பின்பற்றும்_ரஜினி_விஜய்_போன்ற ஆக் ஷன்
ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும்
#சிவாஜியின்_பாதையில்_செல்லும் #கமல்_போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்

முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன்,
அண்ணா நம்பி,
திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள்.

எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.

#இவன்
என்றும் தலைவரை
வணங்கும்

படப்பை
ஆர்.டி.பாபு........நன்றி...

orodizli
18th April 2020, 11:33 PM
நான்டவுசர்போட்டசிறுவயதில்இரட்டைமாட்டுவண்டியில்கோம் பைராஜ்கமால்தியோட்டரில்எம்ஜிஆர்படங்கள்திரையிடும்நாட ்களில்இருபுறமும்தட்டிகள்வைத்துஊர், ஊராகவிளம்பரம்செய்வார்கள், ஊர்துவக்கத்திலிருந்துஊர்எல்லைமுடிவுவரைபோஸ்டரில்உள் ளதலைவர்படத்தைபார்த்துக்கொண்டேதெருமுழுவதும்பின்தொடர ்ந்துஎம்ஜிஆரின்அழகுமுகத்தில்சொக்கியவன், அறுத்தேழில்எம்ஜிஆர்மன்றம்துவக்கிபணிசெய்தேன், எழுபத்திரண்டில்கிளைக்கழகத்தில்எம்ஜிஆருக்காககொடிஏற் றியவன், எண்பதில்தலைவர்இருக்கும்காலத்தில்போடிசட்டமன்றத்தில் போட்டியிடமனுசெய்தவன், பொன்னையன்தான்நேர்முகத்திற்குவந்தார், தலைவர்சொன்னவாக்காளர்பேரணிஉட்படஅனைத்திலும்பங்கேற்றவ ன், அன்றையபோடிஎம்எல்ஏவைஊருக்குள்நுழையக்கூடாதுஎன்றுமறிய ல்செய்தவன், போடிதொகுதியில்நின்றஅனைத்துவேட்பாளர்களுக்கும்அயராது பணிசெய்துவெற்றிக்குப்பாடுபட்டவன், அன்றிலிருந்துஇன்றுவரைகட்சியேபிரதானம்என்றுபணிசெய்து வருகிறேன், என்போன்றஅயராதுபாடுபட்டதொண்டர்களைகலக்காமல்காசுவாங்க ிக்கொண்டு, நகரச்செயலாளர், கூட்டுறவுதலைவர்பதவிகளைவிற்றுவிட்டார்கள், அவர்கள்திமுகாவில்இருக்கும்போதுஎன்னோடுமோதியவர் கள், இன்றுஅவர்கள்பதவியில், என்னைப்போன்றஅயராதுஉழைத்தவர்கள்சாதாரணகட்சிஉறுப்பினர ்கள், நான்கட்சிப்பணிமட்டும்செய்துவருகிறேன், இன்றுமேற்படிநபர்கள்கட்சிக்காரர்களைமதிப்பதில்ல ை, பணம்சுருட்டுவதிலேஅக்கறையோடுஇருக்கிறார்கள், இவர்களால்வாக்காளர்கள்மிகவும்விரக்தியில்உள்ளார ்கள், இன்றுபணஅரசியல், அன்றுஎன்சொந்தக்காசுசெலவுசெய்துகட்சிவளர்த்தவர்களையா ரும்கண்டுகொள்வதில்லை... Thanks...

orodizli
18th April 2020, 11:35 PM
������ வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤����

திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇

➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?
நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... ��������

���� நான் ஒரு அரசியல்வாதி...❗����

☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... ������

❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗

������ என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... ������

������ ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... ��������

������ ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... ������

✨⭐�� தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡...... Thanks...

orodizli
18th April 2020, 11:36 PM
#இதயதெய்வம்
#புரட்சிதலைவர்_பொற்பாதம்
#வணங்கி_இனிய_காலை_வணக்கம்

#விடுதலைப்_புலிகளை_வளர்த்த #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது.

எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன.

ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.

ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.



“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.



சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.



எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.



இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.



எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.



“இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.

“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.

“ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.

எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பாhத்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.

அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.

“அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.

இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். உங்களது தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வாயிலாக அதிகாரபூர்வமான வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.

இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.

அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.

ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.

“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.

“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.

“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.

- இவ்வாறு அன்டன் பாலசிங்கம் எழுதியுள்ளார்.

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks...

orodizli
19th April 2020, 08:21 AM
#MGR-ரின் வெற்றியும் 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தியும்....

" 'அன்புக்கு நானடிமை...' என்ற பாடல் இடம்பெற்ற "இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் இன்னொரு பாடலையும் எழுதினேன். அந்த பாடல்தான்....

"இது - நாட்டைக் காக்கும் கை
உன் - வீட்டைக் காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை"

"இது- எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை" என்றுதான் முதலின் எழுதினேன். பாரதத்தின் என்ற சொல்லை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

"அன்புக்கை இது ஆக்கும் கை - இது
அழிக்கும் கையல்ல...
சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது
திருடும் கையல்ல....
நேர்மை காக்கும்கை - நல்ல
நெஞ்சை வாழ்த்தும்கை - இது
ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப்
பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும்.

நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

இப்போது போல அப்போது சி.டி.யோ கேஸட்டோ இல்லாத காலம். எந்தப் பாடலாக இருந்தாலும் அதாவது சினிமாப் பாடலாக இருந்தாலும், கட்சிப் பாடலாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும் எல்லாம் கல்கத்தாவுக்கு அனுப்பி இசைத்தட்டாக வெளிவரச் செய்த பிறகுதான் பயன்படுத்துவார்கள். அதற்கான வசதி அப்போது சென்னையில் கிடையாது.
அதனால் கல்கத்தாவிலுள்ள HMV இசைத்தடு கம்பெனிக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார்.

படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே.

சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்?
சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு.

எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா? சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது.

சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம்.

'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி "நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.

அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும், பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.

எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!"

- கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகளிலிருந்து........... Thanks.........

orodizli
19th April 2020, 08:24 AM
"எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி.

தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்.

அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.

அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்பு முனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார்.

மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.

அந்தக் கட்டிடத்தின் பின் பகுதியில்தான் ஆரம் பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன.

அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.

ஒரு நாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். 'அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.

'தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்'

'ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

'இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்' என்றார்.

'சரி' என்றேன்..

சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி,

'என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்' என்றார்.

அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?

சரி என கூறிவிட்டு விடைபெற்றேன். அறை வாசல்வரை வந்தார்.

'சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்' என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.

கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை.

செயலாளர் பதவி கேட்கவில்லை.

கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்லவில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை.

ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம் பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.

அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாடலுக்கு நடுவே,

'பெரியவர் அழைத்தார்' என்றோம்.

'என்ன?'

'அவருக்கு ஒரு பெரிய ஆசை'

'என்ன?'

சற்றுத் தயங்கினேன். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு..

'அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்' என்றேன்.

அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.

'இல்லை. அதாவது… வந்து…' என்று இழுத்தேன். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.

'சும்மா இருக்கமாட்டீர்களா?' -கோபத்தோடு கேட்டார்.

நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.

எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை.

ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார்.

அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.

'துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' என்றார் எம்ஜிஆர்.

நான் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.

துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.

துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார்.

"தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்' என்றார்.

ஏறிட்டுப் பார்த்தோம்.

'இனிமேல் பெரியவரை யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று தலைவர் சொல்லச் சொன்னார்.

'இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார் துரை.

அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.

'சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?' என்றார்.

மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.

'அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு' என்று விளக்கம் தந்தார்.

அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.

அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!"

-எழுத்தாளர் சோலை......... Thanks.........

orodizli
19th April 2020, 08:28 AM
சேலம் மாவட்டத்துக்கு அப்போது சில அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
அதில் ஒன்று, சேலம் மாவட்ட பால் பண்ணையில் (பால்வளக் கூட்டுறவு ஒன்றியம்) நடந்த அரசு விழா.

அதன் தலைவரை ‘பெருந்தலைவர்’ என்று பொறித்து அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்த எம்.ஜி.ஆர். முகம் சுழித்தார். சற்று நேரத்துக்கு பின் ‘மைக்’ பிடித்தார்.

“பெருந்தலைவர் என்றால் அது-காமராஜர் மட்டுமே. பெருந்தலைவர் என்ற பெயர் காமராஜருக்கு மட்டுமே சொந்தம்.
இனிமேல் யாரும் தங்கள் பெயருக்கு முன்னால் பெருந்தலைவர் என்று போட்டுகொள்ளக்கூடாது.
ஒன்றிய பெருந்தலைவர்கள், பால் வள கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்கள் இனி தலைவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தபோது கர ஒலியால் சேலம் அதிர்ந்தது............. Thanks.........

orodizli
19th April 2020, 08:29 AM
கொடுத்துக் ,கொடுத்துச் சிவந்த கைக்கு...! அனைத்தையுமே கொடுத்து விட்டோம்...!! என்ற நிம்மதிப் பெருமூச்சில் சிரித்தமையால் புரட்சித் தலைவரின் முகமும் சிவந்து...!!!
இவ்வளவும் நடந்தும். அவரது வலது கை கொடுத்ததை அவரது இடது கைக்கு இதுவரை தெரியாது. இவ்வாறாக வாழ்ந்த தலைவர் அப்போதும், இப்போதும், எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்...
இது காலத்தின் கட்டாயம்.......... Thanks...

orodizli
19th April 2020, 08:30 AM
இனிய காலை வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#பாரத்_விருது

ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.

1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:

‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.

மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’

ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.

#சிறு_குறிப்பு :எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்........ Thanks.........

orodizli
19th April 2020, 08:32 AM
வீரம் எங்கிருக்கிறதோ அதைப் பயன்படுத்தி கொள்வது தான் விவேகமான அரசியல் இது ஜெஜெ பேசும் வசனம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அது போல இதய தெய்வம் அவரின் பாடும் ஆற்றலை கண்டு நல்ல சமயம் பார்த்து காத்திருந்து பாடும் வாய்ப்பை வழங்கினார்.
ஒரு முறை ஷூட்டிங் இடைவேளையின் போது ஜெஜெ தனியாக அமர்ந்து கொண்டு ஹம் செய்வதை இதய தெய்வம் அவரை கடந்து செல்லும் போது கேட்டு விட்டார். அதன் பிறகு தான் இந்த நிகழ்ச்சி. அருமை சகோ. வாழ்த்துக்கள்......... Thanks...

orodizli
19th April 2020, 08:40 AM
#உயிர் #காத்த #தெய்வம்

புரட்சித்தலைவரின் கடைசிப்படமான `#மதுரையை #மீட்ட #சுந்தரபாண்டியன்'

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் புரட்சித்தலைவரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.

திடீரென "லதா! உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது.

புரட்சித்தலைவர் மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கதை முடிந்திருக்கும்.''

----#எம்ஜிஆர் #லதாம்மா----............ Thanks BSM

orodizli
19th April 2020, 09:01 AM
தெய்வபக்தி பற்றி தத்துவ மேதை! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., விளக்கம்...
எங்கள் தெய்வத்தின் விளக்கம்...

தெய்வபக்தியில் நான் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.
!ஆம்!
தெய்வபக்தி என்றால் எந்த மதத்திற்க்கும் சாராத ஆனால் எல்லோருக்கும் பொதுவான உருவமில்லாத சக்திக்கு நான் தலைவணங்குகிறேன்..

முன்பு கடவுளை தங்கள் உள்ளத்தில் வைத்திருந்தார்கள்.
இபபோது கோயிலில் தான் இருப்பதாக நினைக்கிறார்கள்.

.இதனால் தான் பிரச்சனைகள் வந்தன..எண்ணற்ற கோயில்களை வைத்துகொண்டு வளக்க முடியாத பக்தியை திரைபடங்களா வளர்த்து விட போகிறது..ஒரு படத்தின் மூலமாக உயர்ந்த கருத்துக்களை புகட்டி மக்கள் மனங்களில் எல்லா சமயத்திலும் ஒழுங்கு முறையை வளர்த்தால் அதுவே ஒருபக்தி படம்தான்
தாயிடத்தில் அன்பு,,தந்தையிடத்தில் மரியாதை,
ஆசானிடத்தில் பயபக்தி,
நண்பனிடத்தில் பாசம்,
ஏழைகளிடத்தில் இரக்கம்,என்ற பண்புகள் தான் தெய்வபக்தி.மனதில் தூய்மை ஏற்பட்டால் அது தான் பக்தி.
அந்த தூய்மையை ஏற்படுத்துவதற்க்கு நான் கடவுள் வேடம் போட்டுத்தான் நடிக்க வேண்டுமா என்ன?
எந்த கதாபாத்திரத்தின் வாயிலாகவும் நல்ல கருத்துக்களை சொல்லாமே,
ஆகவே நான் நடிக்கும் படங்கள் எல்லாம் பக்தி படங்கள் தான்

[ஆனந்த விகடன் பேட்டியில் 17.08.1969]..... Thanks...

orodizli
19th April 2020, 09:03 AM
அமெரிக்காவிலும்
வள்ளலாக
எங்கள் தெய்வம்....
அமெரிக்காவில் நான் படித்து கொண்டிருந்த சமயம்.
தலைவர் அங்கு வந்த போது எங்கள் கல்லூரியில் வரவேற்ப்பு தரபட்டது.
தமிழ் தெரிந்தவன் நான் மட்டுமே.
நான் அவரிடம் சென்றபோது -!தம்பி,அமெரிக்காவில் இப்படி குளிருதே..நீ சாதாரண சட்டை தானே போட்டிருக்கே.
ஸ்வெட்டர் ஏன் போடவில்லை?
என்றவர் சட்டென்று தனது பாக்கெட்டுக்குள் கையை விட்டு
ஸ்வெட்டர் கம்பளி வாங்கிக்கோ!
என்றார் .திறந்து பார்த்தால் 157 டாலர் இருந்தது.

என்னை அவருக்க தெரியாது.
இருந்தாலும் பணம் கொடுத்தார் என்றால் அவரது வள்ளல் குணத்தை என்னவென்று
சொல்வது.?
அவர் தந்ததில் 100 டாலர் நோட்டு
இன்னமும் இருக்கிறது...
நடிகர்,தயாரிப்பாளர்,
குரோதம்,-பிரேம்...
1998ல் தினத்தந்தியில் அளித்த பேட்டியிலிருந்து............ Thanks.........

orodizli
19th April 2020, 09:06 AM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த Science fiction Film கலையரசி 19-04-1963 வெளியானது !
Kalai Arasi was released on 19 April 1963. The film was distributed by Emgeeyar Pictures in Madras.[7] The Indian Express said, "[T]he film has all the ingredients that make a successful box office production. The film is exceptionally good in outdoor and trick photography, for which credit goes to the cinematographer J. G. Vijayam......... Thanks...

orodizli
19th April 2020, 09:07 AM
தமிழ் சினிமாவை பொறுத்தவரை Commercial என்கின்ற ஒரு தலைப்பை தாண்டி, வெகுசில படங்கள் மட்டுமே தனித்துவமான தன்மையை கொண்டுள்ளது. 1963ம் ஆண்டு MGR நடிப்பில் வெளியான ‘கலையரசி’ என்கின்ற படமே தமிழில் வெளியான முதல் space movie. வேற்று கிரகத்திலிருந்து வந்து மக்களை கடத்திக்கொண்டு போகும் வேற்றுகிரக வாசியாக நம்பியார் அவர்கள் நடித்திருப்பார்....... Thanks...

orodizli
19th April 2020, 09:08 AM
கலையரசியில் தலைவர் பாடும்,அதிசயம் பார்த்தேன் மண்ணிலே என்ற பாடல் தென்னகத்தின் சிறப்பை அற்புதமாக விளக்கும்,.......

orodizli
19th April 2020, 09:11 AM
தலைவர் அப்போதே வெளிக் கிரகம் செல்வதுபோல் எடுக்கப்பட்ட படம்,அமெரிக்கர்கள் சந்திரமண்டலம் போவதற்கு முன்பே தலைவர் அதைக்காட்டினார்,அங்கே செருப்புகூட(ஷூ)தனித்தன்மையாக இருக்கவேண்டும்,எனக்காட்டினார்,பின்நாளில்1969ம்ஆண்ட ு அமெரிக்கர்கள் சந்திரனுக்குச் செல்லும்போது ஸபெஷல் ஷூ அணிந்து சென்றனர்.......தலைவரின் தீர்க்கதரிசனம்... Thanks...

orodizli
19th April 2020, 09:13 AM
https://youtu.be/3kyZLF7HIfY...... Thanks...

orodizli
19th April 2020, 11:53 AM
காலங்களில் மாறினாலும் தலைவா என்றிட நீ இருக்கிறாய் எனது இதயக்கனியாய்..

புரட்சிமிகு கருத்துகளால் என் இதயம் கவர்ந்தவனே,
உன்னை எதிர்த்தவரும் இதயத்தால் வாழ்த்தி,
உன் பிரிவால் கலங்கிட உனக்குக்கிணையாய் எத்தலைவனும் தமிழக வரலாற்றில் நான் கண்டதில்லை.

அண்ணலின் வழிவந்த அன்பு சிகரமே,
உன்னை நேரில் காணாவிட்டாலும் எம் உள்ளங்களில் வாழ்கிறாய்..

மக்கள் திலகமாய் திகழ்ந்த உன் பெயரில் கயவர்களும் நீயாக முயற்சிக்கிறார்கள்.
காலம் தரும் அவர்களுக்கு பெரும்தோல்வி என்னும் பரிசு..

கட்சியும் வேண்டாம்.
பதவியும் வேண்டாம்.
உன் கருத்துகள் போதும்.. .
தமிழ் பற்று போதும்.......... Thanks.........

orodizli
19th April 2020, 11:57 AM
"எங்க வீட்டு பிள்ளை" காவியத்தில் மக்கள் திலகம் சாப்பிடும் இந்த காட்சியில் கரகோஷம் தியேட்டரை தாண்டி வெளியே அடுத்த காட்சிக்கு நின்றிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும்
பரவசத்தையும் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். நம்பியார் உள்ளே நுழையும் போது எம்ஜிஆர் சாப்பிட்டு கொண்டிருப்பார். நம்பியார் அதை பார்த்து அருவருப்பாக முகத்தை சுழித்து கொண்டிருப்பார்.

மக்கள் திலகமோ அவர் முகத்தை பார்த்தவுடன் மேலும் அவருக்கு எரிச்சலூட்டும் விதமாக முகத்தை அஷ்டகோணலாக எகத்தாளத்துடன் சாப்பிடும் அழகு இருக்கிறதே வசனத்தை உரக்க கத்தி பேசாமல் முகம் துடிக்காமல் இயல்பாக நடித்து தான் ஒரு நடிகப் பேரரசர் என்பதை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி. நம்பியாருக்கும் எம்ஜிஆருக்கும் வரப்போகும் மோதலை எண்ணி சாப்பிடும் காட்சியில் எம்ஜிஆர் காட்டும் சேஷ்டையை மக்கள் வெகுவாக
அபரிமிதமாக ரசித்தார்கள்.......... Thanks.........

orodizli
19th April 2020, 11:58 AM
https://youtu.be/1pVXvQwrNBU..... Thanks...

orodizli
19th April 2020, 11:59 AM
https://youtu.be/a6WJ8n0e-NA....... Thanks...

orodizli
19th April 2020, 11:59 AM
https://youtu.be/x0nEIdpUAGE...... Thanks...

orodizli
19th April 2020, 12:00 PM
https://youtu.be/86CnPom_kgQ.......... Thanks...

orodizli
19th April 2020, 12:00 PM
https://youtu.be/Z6xhMKIA9vg...... Thanks...

orodizli
19th April 2020, 12:03 PM
https://youtu.be/YArGYA-4dc4........ Thanks...

orodizli
19th April 2020, 12:04 PM
https://youtu.be/rtpO9JvXbmA......... Thanks.........