PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

orodizli
24th April 2020, 08:36 AM
நேற்று 23-04-2020 இரவு 11.06 க்கு பல வீடுகளில் அலறல் சத்தம். எம்.ஜி.ஆர்., நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்துக்கு பொழைப்பு குடுக்குரார். அதான் MGR the Great
இதை எம்.ஜி.ஆரின் புகைப்படத்துடன் முக நூலில் பதித்து இருப்பவர் நடிகர் எஸ்.வி.சேகர்1
இவரது எம்.ஜி.ஆர் பற்றை இதன் மூலம் அறியலாம்......... Thanks.........

orodizli
24th April 2020, 08:38 AM
ஆமாம் குருநாதாரே...
அன்புடன் காலை வணக்கம்...

"நான் ஆணையிட்டாள் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்" என்ற பாடல் வரிகளை உண்மையாக்கியவர்...

"எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்"
என்று தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றியதும்

முன்னரே தாம் அரசியலில் செய்யப்போவதை மக்களுக்கு தெரியபடுத்திய பாடல்
தலைவரின் அரசியல் வாழ்விற்கு அஸ்திவாரமிட்ட படம் தான்
"எங்க வீட்டு பிள்ளை"

கடந்த, 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான, எங்க வீட்டுப் பிள்ளை தான் முறியடித்தது. ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும், பழைய கதை தான்... ஆனால், அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது.

ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார். நம்பியாரின் கொடுமை தாங்காமல், ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார். மறுபுறம், இளங்கோ என்பவர், வீரனாக வளர்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால், இருவரும் இடம் மாறுகின்றனர். இதனால் நிகழும் மாற்றாங்களே கதைகளம்.

'ராமு, இளங்கோ' என, இரு கதாபாத்திரங்களிலும், எம்.ஜி.ஆர்., புகுந்து விளையாடி இருப்பார். அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் அடி வாங்கும் போது, 'அட, எம்.ஜி.ஆரா இது' என விமர்சகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
ஹிந்தியில், திலிப்குமார் நடிப்பில், ராம் அவுர் ஷ்யாம் என, வெளியானது.
எங்க வீட்டுப்பிள்ளை படப்பிடிப்பு, 45 நாட்களில் நிறைவடைந்தது. பட பூஜை போட்ட இரண்டே மாதத்தில் வெளியானது. மாடிப்படியில் ஏறியும், இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கும் போது, 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...' என்ற பாடல் இடம் பெறும்; இதற்காகவே, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், எங்க வீட்டுப்பிள்ளை படத்தை!... Thanks...

orodizli
24th April 2020, 08:39 AM
அவர் பெயரை சொன்னவர்கள் எல்லோரும் வாழும்போது அவர் படத்தையே காட்டும்போது வாழ முடியாதா என்ன?!...... Thanks...

orodizli
24th April 2020, 08:41 AM
பொதுவாக வீர நடிப்பை அதிகம் விரும்புகின்ற நான், 'எங்க வீட்டுப்பிள்ளை'யில் எம்.ஜி.ஆரின் பயந்த சுபாவமுள்ள கோழைத்தனமான
நடிப்பை கண்டு ரசித்திருக்கிறேன்....
இப்போதும் ரசிக்கிறேன். அதில் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்தது எப்படி என்று இன்று வரை விடை தேடிக்கொண்டிருக்கிறேன்.

Ithayakkani S Vijayan...... Thanks...

orodizli
24th April 2020, 08:42 AM
சன் டீவியின்....வருமானம்...
நேற்று..விண்ணைதாண்டியது..
தலைவா....தலைவா...நீங்கள்.
.........வள்ளல்................. Thanks...

orodizli
24th April 2020, 08:45 AM
இன்று தொலைக்காட்சியில்
"எங்க வீட்டுப் பிள்ளை".
இதுவரை
எத்தனை முறை பார்த்தேன்
என்ற கணக்கே தெரியவில்லை!
எத்தனை முறை பார்த்தாலும்
ஒவ்வொரு முறையும்
அழகாக இருக்கிறது. புதுசாக தெரிகின்றார் நிருத்திய சக்கரவர்த்தி... Thanks...

orodizli
24th April 2020, 08:46 AM
எம்.ஜி.ஆர். பற்றி 100 சுவாரஸ்ய தகவல்கள் (நன்றி விகடன்) :

1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.

3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.

4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.

7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.

8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.

9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.

10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.

11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.

12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.

13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.

15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.

16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.

17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.

18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'

19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.

20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.

21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.

22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.

23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.

24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.

25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.

26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.

27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.

28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.

29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.

30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.

31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.

32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.

33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.

34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.

35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.

36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.

37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.

38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.

39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.

40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா

எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.

42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.

43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.

44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.

45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'

46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.

48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.

49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.

50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.

51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.

52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.

53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.

54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.

55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.

56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.

57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.

58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.

59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.

60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.

62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.

63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.

64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.

65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.

66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.

67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.

68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.

70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.

71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.

72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.

73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.

74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.

75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.

76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.

77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.

78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.

79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.

80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.

82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.

83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.

86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.

87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.

88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.

89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.

90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.

91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.

92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.

93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.

94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.

95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.

96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.

97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.

99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.

100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார். ......(மீள்பதிவு)... Thanks...

orodizli
24th April 2020, 12:17 PM
"லலிதாங்கி" எம்ஜிஆர் பானுமதி நடிக்க டிஎன்ஆர் புரடொக்ஷன்ஸ் தயாரிக்கT R ரகுநாத் இயக்கத்தில் 1957 ல் உருவாக இருந்த படத்தில் திரைக்கதையில் இருந்த குழப்பத்தால் எம்ஜிஆர் நடிக்க மறுத்த படத்தை அதே கம்பெனி"ராணி லலிதாங்கி" என்ற பெயரில் எம்ஜிஆருக்கு பதில் சிவாஜியை நடிக்க வைத்து எடுத்தார்கள். மற்ற கலைஞர்கள் யாரையும் மாற்றாமல் எடுத்த படத்தின் திரைக்கதை குளறுபடியால் படம் வெளியான வேகத்தில் ஒரு சில வாரங்களில் "பூமாரங்" மாதிரி புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டது. ............ Thanks.........

orodizli
24th April 2020, 12:21 PM
படத்தில் தலைவருக்கு அடுத்து நிற்பவர் பெயர் கோலப்பன்.... இவர் தன் கடைசி காலம் வரை தலைவர் மெய்காப்பாளர்களில் ஒருவர் ஆக இருந்தவர்.

அடுத்த படத்தில் அம்மா அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் படத்தில் நடிகர் ராமராஜன் பக்கத்தில் நிற்பவர் மொகபேர் செழியன்..

கோலப்பன் அவர்களின் மருமகன் தான் இந்த செழியன்

செழியனின் தகப்பனார் சைக்கிள் வீரர் எம்.ஆர்.நடராஜன் என்று அழைக்க பட்டவர்....தலைவரின் அன்பை பெற்றவர்..அந்த காலத்தில் கவுன்சிலர் அந்த பகுதியில்.

செழியன் அவர்களை அம்மா அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்... பேர் சொல்லி என்ன முகப்பேர் என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு இருந்தவர்.

பாடி படவட்டம்மன் கோவில் அறங்காவலர் ஆக அம்மா அவர்களால் நியமிக்க பட்டவர்.. நாகவேலு முருகேச முதலியார் அறக்கட்டளை தலைவர் ஆகவும் இருந்தவர்.

இப்போது கழகத்தில் முகப்பேர் பகுதி அம்மா பேரவை இணை செயலாளர்.

இவரை போல கட்சிக்கு உழைத்த குடும்பம் சார்ந்தோர் போயஸ் தோட்டத்தில் விழுந்த இரும்பு திரைக்கு பிறகு இன்றும் கழகத்தில் உண்மையாக உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெல்க அதிமுக...நன்றி.

தலைவர் கோவில் படத்தில் அண்ணன் சைதையார் அருகில் இருப்பவர் தற்போதைய செழியன் ஆவார்.... Thanks.........

orodizli
24th April 2020, 12:25 PM
Cont-1
* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார், எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.
* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன், -சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்.ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார், எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்.
* ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே...!’ என்றுதான் அழைப்பார் !
* அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே, அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
* எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார், எம்.ஜி.ஆர்.
* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோவில் கட்டி வைத்திருந்தார்.
* ‘நான் ஏன் பிறந்தேன்?’ -ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் பெருமைகளும் முற்றுப் பெறவில்லை.சுவையான குறிப்புகள்...... Thanks...

orodizli
24th April 2020, 12:34 PM
சன் டிவி நேற்று" எங்க வீட்டு பிள்ளை", படத்தின் மூலமாக சன் டிவி மீண்டும் உயிர் பிழைக்க வைத்தது...

தலைவர் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் அந்த படம்..என் தங்கை.. பாசம் இறுதி காட்சி அந்த நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் புரட்சித் தலைவர் தலைசிறந்த நடிகர் உதாரணம் இந்தி நடிகர் ராஜ்கபூர் எம் ஜி ஆர் போல் நடிக்கவும் தெரியாது... அவர் மாதிரி படம் எடுக்க முடியாது ...அவர் ஒரு இயற்கை நடிப்பில் நான் ரசிகன் ... யாரையும் இப்படி புகழ்ந்தது கிடையாது... ராஜ்கபூர் அவர்கள்.......... Thanks... to BMV.,

orodizli
24th April 2020, 12:40 PM
நான்ராகவேந்திரா மணடபம் கட்டும் போது ஒரு பெரிய புள்ளி இடைஞ்சலாக தொல்லை கொடுக்க நான் எவரை எல்லாமோ பார்த்து டெல்லி வரை சென்றும் ஒருபலனில்லை கடைசியாக எம்ஜிஆரிடம் முறையிட்டேன் எம்ஜிஆர் நீ இப்போது வெளியூர் செல்லுகிறாய் சென்று வா எனகூறி அனுப்பி வைத்தார் பின் ஒருநாள் தோட்டத்திற்க்கு வர சொன்னார்எம்ஜிஆர் நான் சென்ற போது எனக்கு இடைஞ்சல் செய்த பெரும்புள்ளி வாய் பொத்தி கைகட்டி எம்ஜிஆர் முன் இருந்தார் பின் சுகமாக மண்டபம் கட்டி முடித்தேன் அது தான் எம்ஜிஆர்

எம்ஜிஆர் சிலை திறந்து ரஜினி காந்து உரையில்

நீ பழைய படங்களில் பீலா விட்டு பஞ்சு வசனம் கூறுவது போல அல்ல அல்ல எம்ஜிஆர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடாத எம்ஜிஆர் டா

வாழ்க எம்ஜிஆர்புகழ்....... Thanks...

orodizli
24th April 2020, 12:41 PM
உழைத்து ஈட்டிய பணத்தில் வாழ்ந்தேன்
உழைத்து ஈட்டிய பணத்தை மற்றவர்க்கு கொடுத்து மகிழ்ந்தேன்
ஒன்றும் இல்லாமல் வந்தேன்
மக்கள் அன்பு மட்டும் எனக்கு என்று சேர்த்து வைததேன்்
அதுவே என் மூலதனம்
அன்பன் எம்ஜிஆர்

வாழ்க எம்ஜிஆர் புகழ்..... Thanks...

orodizli
24th April 2020, 01:08 PM
MGR Filmography Film 43 Poster

1958ஆம் வெளிவந்த எம்ஜியாரின் ஒரே படமான "நாடோடி மன்னன்" பெற்ற மாபெரும் வெற்றியைப் பார்த்தோம்.

எந்த ஒரு சாதனைக்குப் பிறகும் திருஷ்டி கழிப்பது அவசியம்தானே! சிகரத்தைத் தொட்ட பிறகு அடுத்த அடி இறக்கம்தானே! அதேதான் நிகழ்ந்தது 1959ஆம் ஆண்டு வெளிவந்த ஒரே எம்ஜியார் படமான "தாய் மகளுக்குக் கட்டிய தாலி"க்கு.

சி.என் அண்ணாதுரையின் கதைக்கு ராம அரங்கண்ணல் வசனம் எழுதி, முதல் மற்றும் இறுதி முறையாக ஜமுனா எம்ஜியாருடன் ஜோடி சேர்ந்து டி.ஆர்.பாப்பா இசையில் ஓரிரு இனிய பாடல்களையும் ('சின்னஞ்சிறு வயது முதல்) கொண்டிருந்த இந்தப்படம் யாருக்கும் பயனின்றி
பெரிய வெற்றி அடையவில்லை. தமிழ்த்திரை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராண்டார் கையின் சொற்களில் சொல்வதானால்: 'இந்தப் படம் இன்றும் எவருக்கேனும் நினைவிருந்தால், அதன் விசித்திரமான தலைப்புக்காகத்தான்!'

எம்ஜியாரின் படங்கள் பலவற்றிலும் குணசித்திர பாத்திரங்களில் பங்களித்த அவரது மூத்த சகோதரர் எம்ஜி சக்ரபாணி இதில் வில்லன் வேடம் தாங்கி அருமையாக நடித்தாராம்! யாருக்குத் தெரியும்! .சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை படத்திற்கு சுமார் சறுக்கல் இராம அரங்கலுக்காக சம்பளம் வாங்கமல் நடித்த படம் என்று பேச்சு உறுதியாக தெரியவில்லை

வசூல் சக்ரவர்த்தியின் திரை வாழ்க்கையிலும் கடந்து போக வேண்டிய, மறந்து போக வேண்டிய படங்கள் இருந்தன; அவற்றுள் இதுவும் ஒன்று!...... Thanks...

orodizli
24th April 2020, 01:19 PM
MGR Filmography Film 44 (1960) Poster

1958ஆம் வருடம் உச்சத்துக்குச் சென்ற எம்ஜியாரின் திரைப்பயணம் அடுத்த வருடம் வெளியான ஒரே ஒரு படத்தின் மூலம் சறுக்கியது என்பதைப் பார்த்தோம்; அதற்கு அடுத்த வருடமான 1960 எம்ஜியாருக்கு ஆவரேஜாகவே அமைந்தது. அந்த வருடம் மொத்தம் 3 படங்கள் அவருக்கு வெளியாயின; அவற்றுள் முதலாவதாக வந்தது பாக்தாத் திருடன்.
இதற்கு முந்தைய தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ஜமுனா எம்ஜியாருடன் இணைந்த ஒரே படமாக அமைந்தைப் போல, பாக்தாத் திருடனும் வைஜயந்தி மாலா எம்ஜியாருடன் நடித்த ஒரே படமாக அமைந்தது.
அலிபாபாவைப் போல அராபியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதைப் போல பெரிய வெற்றி அளவுக்கு இல்லாமல் வெற்றி பெற்றது. பொதுவாக எம்ஜியாரின் படப்பாடல்கள் பெரிதும் பாப்புலராகும்; ஆனால், கோவிந்தராஜுலு இசையமைத்த இந்தப் படப் பாடல்கள் அந்த அளவிற்குச் செல்லவில்லை. பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படம் அதிகபட்சம் முதலுக்கு மோசமில்லை ,லாப நிலை அடைந்தது....... Thanks...

orodizli
24th April 2020, 01:22 PM
MGR Filmography Film 45 (1960) Poster

1960ஆம் ஆண்டில் வெளிவந்த இரண்டாவது எம்ஜியார் படம் ஆவரேஜாகத்தான் போனது.
18ஆம் நூற்றாண்டில் செஞ்சிக் கோட்டையை ஆண்டு தேசிங்கு என்று தமிழ் மண்ணில் அமரத்துவம் பெற்று நாட்டுப் பாடல்களிலும் இடம் பெற்ற தேஜ் சிங் என்னும் ராஜபுத்திர அரசன் வரலாற்றைச் சொல்வதாக அமைந்த இப்படத்தில் எம்ஜியாருடன் எஸ்எஸ்ஆர் பானுமதி பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். தேசிங்கு ராஜாவாகவும், அவர் தகப்பனாருக்கு ஒரு இஸ்லாமியப் பெண்ணுடனான தொடர்பில் பிறந்த மற்றொரு மகனாகவும் இரு வேடங்களில் எம்ஜியார் நடித்தார். ஜி. ராமநாதனின் இசையில் வனமேவும் ராஜகுமாரி (சீர்காழி, ஜிக்கி) சரசராணி கல்யாணி (சிஎஸ் ஜெயராமன்/ பானுமதி) ஆகியவை இன்றும் ஒலிக்கக் கேட்கலாம். எம்ஜியாரின் வெற்றிப்படங்களான மதுரை வீரன், நாடோடி மன்னன், மகாதேவி ஆகியவற்றிற்கு வசனம் எழுதிய கண்ணதாசன்தான் இதிலும் பணியாற்றினார்.
ஒரு எம்ஜியார் படத்துக்குத் தேவையான படிமங்கள் எல்லாம் இருந்தும், படத்தின் இறுதியில் ஒரு எம்ஜியாரை இன்னொரு எம்ஜியாரே போரில் கொன்றுவிட்டுப் பிறகு அது தனது உடன் பிறந்த சகோதரன் என்று அறிந்து தானும் தன் மீதே வாளைப் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போகும் கிளைமாக்ஸ் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை
இதில் ஒரு சுவாரசியமான தகவல்: துவக்கத்தில் எம்ஜியாருக்கு ஜோடியாக பத்மினியும், பானுமதி எஸ்எஸ்ஆரின் காதலியாகவும் ஒப்பந்தமாகி, பத்மினிக்கு ஒரு பரதநாட்டியப் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. பின்னர் பானுமதியின் பிடிவாதம் காரணமாக அவரை எம்ஜியாரின் ஜோடியாக்கி, பத்மினியை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றி அவரது நாட்டியக் காட்சியை வெட்டினார்கள். இப்படிக் கதையும் கதாபாத்திரங்களும் பல கட்டங்களில் மாற்றப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால், படம் எழுபது நாட்கள் ஓடின......... Thanks...

orodizli
24th April 2020, 02:55 PM
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது. அதுபற்றி லதா கூறியதாவது:-

நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன். இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார்.

கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும் என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன். நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும் என்று பாராட்டினார்.

இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது. இவ்வாறு லதா கூறினார். தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜு, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள். சிரித்து வாழவேண்டும் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார்.
(மும்மொழிப் படத்தில் கதாநாயகி)........ Thanks...

orodizli
24th April 2020, 02:56 PM
வீரப்பன் சொல்கிறார்...
*எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
*தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
*ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
*அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
*அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
*பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
*சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
'*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
" இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
" இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்.
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். சரி..என்றார்.
வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று
தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
" எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும் " என்றார்.
எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
*அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
*வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*.......... Thanks...

orodizli
24th April 2020, 03:14 PM
#வாழவைக்கும் #தெய்வம்

S.Ve.Shekar commented in Twitter...

நடிகர் எஸ்வீ.சேகரின் டிவிட்டர் பின்னூட்டம்

நேற்று இரவு 11.06 க்கு பல வீடுகளில் அலறல் சத்தம். எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்துக்கு பொழைப்பு குடுக்குரார்.

#அதான் #MGR #the #Great........ Thanks...

orodizli
24th April 2020, 03:15 PM
சன் டிவியில் பழைய எம்ஜியார் படங்களை பகல் நேரத்தில் தான் போடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் பார்க்க முடியாது. முதன் முறையாக இரவு 9.30 மணிக்கு ஒளி பரப்பினர். பெரு வாரியான மக்கள் கண்டி களிக்க டிஆர்பி எகிறியது. இனியாவது மாதம் ஒருமுறை மாலை 7 மணி அல்லது இரவு 9 மணிக்கு எம்ஜியார் படங்களை போடவும். இந்த திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பப்படங்கள் எல்லாம் வேண்டாம்........ Thanks...

orodizli
24th April 2020, 03:19 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

நாளை போடப்போறேன் #சட்டம் – பொதுவில்
நன்மை புரிந்திடும் #திட்டம்
நாடு நலம் பெறும் #திட்டம்

என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.

#தொழிலாளியாக_எம்ஜிஆரின்_நலத்_திட்டங்கள்

ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்*ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்...... Thanks...

orodizli
24th April 2020, 03:26 PM
Omega Sea Foods ஆயிரத்தில் ஒருவன் ஆங்கில படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்ட படம். அதனால்தான் காலஞ்செல்ல செல்ல அமோக வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர் படத்துக்கு சிவாஜி படம் போட்டியே கிடையாது. எம்ஜிஆர் படத்துக்கு போட்டி இன்னொரு எம்ஜிஆர் படம்தான். பந்துலு தயாரித்த அத்தனை படங்களிலும் ஆயிரத்தில் ஒருவன் படம்தான் அதிக வசூலை பெற்று அவரின் கடனை அடைக்க உதவியது என்று அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்...... Thanks...

orodizli
24th April 2020, 03:26 PM
நடிகப்பேரரசர் எம்ஜிஆர் நண்பரே ஆண்டவரின் ஆயிரத்தில் ஒருவன் படம் MV ராஜம்மா பந்துலுக்கு வசூலை வாரி வழங்கியது பந்துலு ஆண்டவரை வைத்து எடுத்த படங்களிலேயே பெரிய உச்சமாகும் இதில் பி ஆர் பந்துலுவிக்கும் ஏ பி நாகராஜனுக்கும் சபாஷ் சரியான போட்டியாக தான் அமைந்தது நண்பர்களே..... Thanks...

orodizli
24th April 2020, 07:48 PM
திமுக குடும்பத்திற்கு பிழைப்பு தரும் எம்ஜிஆர்.. எஸ்வி சேகர் டிவீட்.. திட்டி தீர்க்கும் திமுகவினர்

சென்னை: "திமுக குடும்பத்திற்கு பிழைப்பு கொடுக்கிறார் எம்ஜிஆர்.. இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி பிழைப்பு தரும் MGR the Great என்று பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில், "கொரோனாவைரஸ் பெருந்தோற்று காலத்தில் அமெரிக்கவாக இருந்தாலும் சரி, ஏழை நாடாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்குத் தேவையான பொருளுதவி மற்றும் பண உதவிகளை அரசு முன்வந்து தருகிறது. ஆனால், நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள்... மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு தான்" என்று தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், இரவு 11.06- க்கு பல வீடுகளில் அலறல் சத்தம்... எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்திற்குப் பிழைப்பு கொடுக்கிறார். அதுதான் MGR the Great என்றும், கற்பூரவாசனை தமிழகத்தில் அறிய முடியவில்லையாமே. வாழ்த்துகள் மோடி அவர்களே" என்று பதிவிட்டுள்ளார். திமுக இந்த ட்வீட் படு வைரலாகி வருகிறது.. இதை பதிவை பார்த்ததும் ஏற்கனவே தயாநிதியை விமர்சித்த விவகாரத்தில் கொந்தளித்த திமுக தரப்பினர் இப்போது மேலும் சூடாகி உள்ளனர்... காட்டமான பதிலடிகள் விழுந்து கொண்டிருக்கின்றன... எனினும் திமுக தரப்பில், ஒருசிலரோ இதை "பல வீடுகளில் சன் டிவி. Great" என்று பாசிட்டிவ் கமெண்ட்களாகவும் பதிவிட்டு வருகின்றனர் ...... Thanks...

orodizli
24th April 2020, 07:52 PM
இன்றைக்கு வரும் புது திரைப்படங்கள் 4 வாரம் ஓடுவதற்குள் நாக்கு தள்ளுகிறது.

ஆனால் ஒரு படம் முதல்முறை வந்து ஓடி முடிந்து மறுவெளியீட்டில் தினசரி 3 காட்சிகளுடன் 100 நாட்கள் ஓடியதை நம்ப முடியுமா....

ஆம் நம் தலைவரின் நாடோடிமன்னன் படம் திருவண்ணாமலை நகரில் 100 நாட்கள் மறுவெளியீட்டில் ஓடியது...

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி...... Thanks...

orodizli
24th April 2020, 08:03 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவில் தலைவரது எங்கவீட்டுப்பிள்ளை குடும்பத்துடன் பார்தேன் மூன்றாவது தலைமுறையான பலரும் நேற்று இரவு இந்த திரைபடத்தை பார்திருக்கிறார்கள் (சில காட்சிகள் கட்) அருமையாக இருந்தது இருந்தும் _மறைந்தும் கருணாநிதி குடும்பம் எம்ஜிஆர் அவர்களை வைத்து வசூல் செய்கிறார்கள் சிவாஜி முதல் இன்றய முண்ணனி நடிகர்கள் வரை எந்த திரைபடங்களும் நினைவில் நிற்பதில்லை
எம்ஜிஆர் குறைந்தளவு படங்களே நடித்திருக்கிறார் ஒவ்வொன்றும் மணி மணியாக இருக்கிறது அத்துனை டிவி சேனல்களிலும் எதாவது ஒரு தலைவர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது தலைமுறைகடந்து வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்.......... Thanks............

orodizli
24th April 2020, 08:07 PM
#கருணையில்லா #நிதி

தமிழகத்தில் ஒரு குடும்பக்கட்சி விளைவித்த இன்னல்கள் வெகு அதிகம்..... இலட்சாதிபதி, கோடீஸ்வரர் என்ற கணக்கை எல்லாம் தள்ளிவிட்டு, மில்லினியர் பில்லினியர் குடும்பத்தை உருவாக்கி மாபெரும் சாதனையைப் படைத்த கட்சி.....

ஆனால், புரட்சித்தலைவரோ #ஏழைப்பங்காளன் என்ற பெயரோடு, பெரிதாக தனக்கென்று சொத்து சுகம் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கும், மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்துவிட்டுப் போன தெய்வம்...!.......... Thanks...

orodizli
24th April 2020, 08:30 PM
மக்கள் திலகம் திமுக வில் 1953 ல் இணைந்து 1962 பொதுத்தேர்தலில் அதன் வெற்றிக்காக பிரச்சாரம் செய்கிறார் ஐம்பது இடங்களில் திமுக வெற்றி பெறுகிறது அதற்கு பரிசாக அறிஞர் அண்ணா எம்ஜிஆர் அவர்களுக்கு எம்*எல்சி.பதவி*வழங்கினார்.67 தேர்தலுக்கு பல லட்சம் ரூபாய் திமுக வுக்கு*வழங்கிய போது*அண்ணா தம்பி உன்னுடைய பணம் வேண்டாம் உன் முகத்தை மட்டும் மக்களிடம் காட்டினால் போதும் தேர்தல் பிரச்சாரம் செய் என்று சொல்கிறார் அண்ணா.பெரியார் காமராஜரை ஆதரித்து வந்தார் அவரது தொண்டர் எம்.ஆர்.ராதா எம்ஜிஆர் அவர்களுடன் தொழிலாளி படத்தில் நடித்தபோது கழக கொள்கை யை கழகத்தின் சின்னம் உதய சூரியனை தனது வசனத்தில் குறிப்பிட்ட தற்காக தகராறு செய்த நிலையில் பெற்றால்தான்பிள்ளையா படத்தின் சம்பள பாக்கியை கேட்டதற்காகவும் கோபமடைந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களை ராதா சுட்டு விடுகிறார்.உயிருக்கு போராடிய நிலையில் எம்ஜிஆர் கட்டுகளுடன் இருக்கும் படத்தை நாடெங்கும் ஒட்டி திமுக வுக்கு ஆதரவாக எம்ஜிஆர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் ராதா எம்.ஜி.ஆரை.கொலை செய்ய த்திட்டமிட்டு சுட்டுவிட்டார் என்று திமுக பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.அண்ணா இந்த வெற்றி தம்பி எம்ஜிஆர் அவர்களால் கிடைத்தது என பெருமிதமாக சொனானார் அமைச்சரவை பட்டியலை என்.வி.என்.அவர்கள் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர் அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்னர் செயல் படுத்தினார் எம்ஜிஆர் ஆட்சேபித்த ஆதித்தனாரை அமைச்சர் ஆக்காமல் எம்ஜிஆர் சம்மதத்துடன் சபாநாயகர் ஆக்கினார்.எம்.ஜி.ஆர்.அவர்களை அமைச்சர் அந்தஸ்தில் சிறு சேமிப்பு துணை தலைவர் ஆக்கினார் அண்ணா.அண்ணா மறைவுக்கு பின்னர் நாவலர் முதல்வர் ஆவார் என எண்ணிய நிலையில் எம்ஜிஆர் ஆதரவு பெற்ற கருணாநிதி முதல்வர் ஆனார் . அதற்கு பரிசாக *எம்ஜிஆர் அவர்களை கழக பொருளாளர் ஆக்கினார் கருணாநிதி . நாளடைவில் கருணாநிதி ஆட்சியில் லஞ்சம் ஊழலுக்கு இடம் இடம் கொடுத்தார் *அதனால் கட்சி மும் ஆட்சியும் செல்வாக்கு சரிந்து விழுந்தது.இத்தகைய சூழலில் 71 ல் பொதுத்தேர்தலில் காமராஜர் ராஜாஜி கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து வலுவான நிலையில் கருத்து கணிப்பில் அக்கூட்டணியே வெற்றி நிச்சயம் என்ற சூழலில் எம்ஜிஆர் அவர்கள் பட்டி தொட்டி நகரம் ஆகியவற்றில் *இரவு பகல் பாராது நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டார் 67 ல் வால் போஸ்டரில் பார்த்த எம் ஜி ஆர்.ஐ*மக்கள் நேரில் காண்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து காத்திருந்து கண்டார்கள்.மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.தேர்தலில் எம்ஜிஆர் பிரச்சாரம் காரணமாக திமுக மாபெரும் வெற்றி பெற்றது.184 தொகுதிகள் திமுக பெற்றது இதுவரை இந்த சரித்திரம் முறியடிக்கப்படவில்லை.சுயநல குடும்ப அரசியலுக்காக திமுக விலிருந்து விலக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுக வை தொடங்கி தொடர்ந்து திமுக வுக்கு தோல்வி ஐ கொடுத்தார் . திமுக விலிருந்து விலக்கப்பட்ட பின்னர் நல்லநேரம் இதயவீணை உ.சு.வா. சிரித்து வாழவேண்டும் நினைத்ததை முடிப்பவன் உரிமைக்குரல் மீனவ நண்பன் பல்லாண்டு வாழ்க 77 ல் தேர்தலில் வெற்றிபெற்று *அதிமுக ஆட்சி அமைக்க மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் கால்சீட் காரணத்தால் பதவி ஏற்பு வரையில் தொடர்ந்தது நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார் புரட்சி தலைவர். அவர் உயிர் உள்ளவரை கருணாநிதி தோல்வி யை கண்டார் புரட்சி தலைவர் மறையும் வரை முதல்வராக இருந்தார்....... Thanks...

orodizli
24th April 2020, 08:33 PM
Karthikeyan Ks அண்ணா உ.சு.வா. 1973.1974ல் அதிக வசூல் உரிமைகுரல்.1975 இதயக்கனி.1976 நீதிக்கு தலைவணங்கு.1977 ல் மீனவ நண்பன் தலைவர் முதல்அமைச்சர்.1977ல் ரஜினி இரண்டாம் கதாநாயகன் 1978ல் பைரவி. 1977ல் கமலின் வளர்ச்சி கதையின் நாயகனாக 16 வயதினிலே. இளஞ்சூரியன் முகமுத்துக்காக நடிக்கவில்லை என்று கூறினால் 1977ல் முகமுத்து நிலையும் கூறலாம் ......Fb fb.... Thanks...

orodizli
24th April 2020, 08:40 PM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது. அது திரைத்துறையாக இருந்தாலும் சரி.. அரசியலாக இருந்தாலும் சரி..!

திரைத்துறையில் எம்ஜிஆர் வளர்ந்து கொண்டிருந்த நேரம்...
திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார்.
மாடர்ன் தியேட்டர்ஸ்
தயாரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீரவாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றியதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலிதேவி நடித்தார். நடிகை அஞ்சலிதேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலைவராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலிதேவி.

‘சர்வாதிகாரி’ படப்பிடிப்பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலிதேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடியும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என்றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக்கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை.
டி.ஆர் சுந்தரம்.. எம்ஜிஆர் சொன்னால் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணியவர் காட்சியை திரும்பவும் எடுக்க உத்தரவிட்டார்.
காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. மறுபடியும் அஞ்சலிதேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம்முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்..! எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன்னார்..? என்று சுற்றிலுமிருந்த எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.

எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் அது விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக்கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார்.
இயக்குனர் கூட கவனிக்காத சிறு தவறை எம்ஜிஆர் கவனித்திருக்கிறார் என்பதை நினைத்து
அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமும் எம்ஜிஆர் மீது மதிப்பும் ஏற்பட்டது ..!

தாய்மையையும் பெண்மையையும் எப்போதும் போற்றியவர் புரட்சித்தலைவர்..!....... Thanks...

orodizli
24th April 2020, 08:44 PM
ஸ்ரீ MGR வாழ்க

சித்திரை 11 வெள்ளி

எம்ஜிஆர் பக்தர்களே

படத்தில் நம் அருமை தலைவனை

வணங்குபவர் பெயர்

வி பி பாலசுப்ரமணியன்

துணை சபாநாயகர்

வேடசந்தூர் தொகுதி

++++++++++++++++++++++++++++++++++

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை

,இந்தத் தொகுதியில்

நஞ்சுண்டையா

. என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான்

தொடந்து எம்எல்ஏவாக வருவார்

இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர்

++++++++++++++++++++++++++++++++++

1977. ஆண்டு வாசன் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் MGR

1980 ஆண்டு வி பி பாலசுப்ரமணியன் என்பவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்

வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்

1984 ஆண்டு மீண்டும் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியனை

வெற்றிபெற வைத்தார் MGR

உப்பிட்ட MGR குடும்பத்திற்கு உறுதுணையாக இருநதவர்

உண்டவீட்டிற்கு ரெண்டகம்

நினைக்காதவர்

ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்தவர்

இவர் சிறந்த பேச்சாற்றல் உடையவர்

வேடசந்தூர் மிகவும் வறச்சியானதொகுதி அந்தததொகுயில்பலமில்களை உருவாக்கியவர் இவர்

வேடசந்தூரில் இருந்து கரூர்

செல்லும் ரோட்டில் பல மில் / பல. தொழிற்சாலைகளை

இவர் காலத்தில் உறுவாக்கினார்

இவரைபோன்ற. MGR ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான் ஜெயலிதா எடப்பாடி முதல்வராக. வர முடிந்தது

இவரைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது...... Thanks...

orodizli
24th April 2020, 08:46 PM
மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!

உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?

அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.

பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.

‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’

கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?

‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’

அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.

‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’

எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.

‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’

இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.

‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’

முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.

ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா........ Thanks...

orodizli
24th April 2020, 08:51 PM
M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்

.அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.
அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.
வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.
முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.
மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
‘உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்;
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

தொடரும்...

Posted : MG.Nagarajan
24 April 2020 01:34 AM
........... Thanks...

orodizli
24th April 2020, 08:52 PM
[சொந்தப் படமெடுத்து சொத்தை இழந்தவர்களில் நடிகை சாவித்திரி அவர்களும் ஒருவர்.

சென்னை ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்திரியின் பெரிய மாளிகையும் ஏலத்தில் போனது. இப்படி தன்னிடமிருந்த ஒவ்வொரு பொருளும் கைவிட்டு போய் மிகவும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் ஒரு நாள் எம்ஜிஆரின் மாம்பலம் அலுவலகத்திற்குச் சென்று தலைவரை சந்தித்தார் சாவித்திரி. தலைவரோ சாவித்திரி வசம் ஒருபையில் பணத்தை வைத்துக் கொடுத்ததுடன், சாவித்திரி தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.

அந்தப் பையில் இருந்ததோ பணம் ஒரு லட்சம். ஆனால் சாவித்திரி அதை வைத்து முன்னேறப்போவது கிடையாது. சாவித்திரி எப்படி செலவழிப்பார் என்பதும் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் மாபெரும் நடிகை வந்துக் கேட்கும்போது உதவாமல் இருக்கவும் முடியாது, உதவினார். இது தலைவரின் மனித நேயத்தை காட்டுகிறது.]........ Thanks...

orodizli
24th April 2020, 08:56 PM
நடிகர் திரு. சத்தியராஜ் தன் "வாட்ஸ் ஆப்" பில் பதித்துள்ள வாசகங்கள் "உலகம் சுற்றும் வாலிபன்"
படத்தில் வரும் "உலகம் அழகு கலைகளின் சுரங்கம்" பாடலில் இடம்பெற்ற "உள்ளம் மட்டும் அள்ளிக் கொள்ளும் மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்" என்ற வரிகளை.

திரு.சத்தியராஜ் தன் இல்ல வரவேற்பறையில் ஒரு சிறிய பாட்டிலில் தனக்கு பரிசளிக்கப்பட்ட (இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அளித்தது) முள்ளிவாய்க்கால் போரின் நினைவாக வீரம் செறிந்த தமிழ் ஈழ மண்ணையும், நாம் இலங்கையில் 2017 ஏப்ரலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வீட்டில் (இலங்கை ராணுவம்
சிதைத்து மண் குவியல் மட்டுமே மிச்சம்) சேகரித்த மண்ணையும் நிரப்பி காட்சி பொருளாக வைத்திருக்கிறார்.

#இதயக்கனி எஸ். விஜயன்....... Thanks....

orodizli
24th April 2020, 09:00 PM
சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம்.
'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி "நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.
அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும், பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.
எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!"
- கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகளிலிருந்து......... Thanks...

fidowag
24th April 2020, 09:11 PM
தினத்தந்தி*-24/04/20
----------------------------------

நெல்லை*கொரோனா*நிவாரண*மையத்தில்* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்*பார்த்து ரசித்த ஆதரவற்றோர் .* - மன*அழுத்தத்தை*குறைக்க*ஏற்பாடு*
------------------------------------------------------------------------------------------------------------------------------

நெல்லை கொரோனா நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவுப்படி ,மாநகராட்சி ஆணையர் கண்ணன், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் தன்னார்வலர்கள், ஆதரவற்றோர்கள்* 105 பேர்களை* அடையாளம் கண்டு நெல்லை டவுன்* கல்லணை மாநகராட்சி பெண்கள்* மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள* நிவாரண மையத்தில் , அங்குள்ள திறந்த வெளி அரங்கத்தில் பழைய திரைப்படங்களை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது . அதில் முதலாவதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் நேற்று முன்தினம்* இரவு திரையிடப்பட்டது .

ஆதரவற்றோருக்கு அங்கு போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் சமூக இடைவெளியிட்டு அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தனர் .* இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் ஆறுதலாகவும், மன அழுத்தத்தை குறைக்க சரியான ஏற்பாடு என்றும் அனைவரும் பாராட்டினார்கள் .

fidowag
24th April 2020, 09:12 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலை மன்னன் எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------
18/04/20* * -மெகா டிவி* -காலை 10 மணி* - படகோட்டி*

* * * * * * * * * சன் லைப்* - காலை 11 மணி* - சங்கே முழங்கு*

19/04/20* - சன் லைப்* - காலை 11 மணி* - தொழிலாளி*

20/04/20* *- ஜெயா டிவி* -காலை 10 மணி - இதய வீணை*

* * * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்* -காலை 10 மணி -மாட்டுக்கார வேலன்*

21/04/20-* ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி - ஊருக்கு உழைப்பவன்*

** * * * * * * *ஜெயா டிவி* * * * - காலை 10 மணி* - பணக்கார குடும்பம்*

* * * * * * * * முரசு டிவி* *- பிற்பகல் 2 மணி* *- அபிமன்யு*

* * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி -* தாய்க்கு தலைமகன்*

* * * * * * * * சன் டிவி* * * * - இரவு 9.30 மணி* - அன்பே வா*

22/04/20 -* ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * * * மீனாட்சி டிவி* *- காலை 7 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * * ஜெயா டிவி* * - காலை 10 மணி* - தாய்க்கு பின் தாரம்*


23/04/20* -* ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - குமரிக்கோட்டம்*

* * * * * * * * * ஜெயா டிவி* *- காலை 10 மணி* - குலேபகாவலி*

* * * * * * * * * *முரசு டிவி* - பிற்பகல் 2 மணி - கொடுத்து வைத்தவள்*

* * * * * * * * * சன் டிவி* *- இரவு 9.30 மணி* - எங்க வீட்டு பிள்ளை*

23/04/20* *மெகா*டிவி* - நள்ளிரவு 12 மணி - கலங்கரை விளக்கம்*

24/04/20* *ஜெயா டிவி* - காலை 10 மணி - பெரிய இடத்து பெண்*

* * * * * * * * புதுயுகம் டிவி**-* இரவு 7 மணி* --சங்கே முழங்கு*

orodizli
24th April 2020, 10:56 PM
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.

எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கு அவரைப் பற்றி வெளியான நூல்களின் மொத்தத் தொகுப்பையும் அளித்தால் மகிழக்கூடும் தானே?!

எம்ஜிஆர் குறித்து வெளிவந்த நூல்களின் மொத்தத் தொகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...

எம்ஜி ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன, சில தமிழ் நூல்கள் எப்போது வெளியிடப்பட்டன? யாரால் வெளியிடப்பட்டன? என்ற விவரங்களேதுமின்றியும் கூடக் கிடைத்துள்ளன.

001. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))

002. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))

003. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))

004. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))

005. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))

006.0புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))

007. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))

008. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))

009. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))

010. எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))

011. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))

012. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))

013. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))

014. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))

015. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))

016. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))

017. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))

018. அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))

019. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))

020. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))

021. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))

022. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))

023. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))

024. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))

025. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))

026. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

027. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))

028. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

029 .அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))

030. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))

031. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

032. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))

033. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))

034. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

035. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))

036. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))

037. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

038. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))

039. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))

040. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))

041. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))

042. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))

043. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))

044. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))

045. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))

046. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))

047. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))

048. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))

049. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

050. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))

051. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

052. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))

053. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

054. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))

055. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))

056. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))

057. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))

058. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))

059. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))

060. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))

061. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))

062. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))

063. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))

064. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))

065. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

066. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))

067. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))

068. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))

069. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))

070. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))

071. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))

072. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))

073. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))

074. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))

075. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))

076. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))

077. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))

078. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))

079. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))

080. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

081. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))

082. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))

083. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

084. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))

085. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))

086. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))

087. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

088. எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016

089. எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007

090. பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007

091. நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009

092. எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987

093. எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011

094. விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009

095.காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004

096. எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015

097. பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎

098. செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985

099. 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎

100. எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010

101. எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎

102. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011

103. மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –

104. எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013

105. எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016

106. எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008

107. எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013

108. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015

109. பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -

110. மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்

111. நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎

112. வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011

113. எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000

114. வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009

115. எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007 –

116. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்.

#ஆங்கில_நூல்கள் (English Books)

01. Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))

02. All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))

03. Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))

04. Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))

05. The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))

06. M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))

07. The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

08. On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.

09. Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

10. Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

#முழு_விபரங்கள்_கிடைக்கப்_பெறாத_நூல்கள்:-

01. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))

02. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

03. குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))

04. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

05. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))

06. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

07. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

08. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

09. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.

19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

20. C.M. Speech's

தொகுப்பு: மல்லிகா பிரபாகரன் | வழக்கறிஞர் சி.பி. சரவணன் | தினமணி......... Thanks.........

orodizli
24th April 2020, 11:05 PM
MGR Filmography Film 46 (1960) Poster

1960ஆம் ஆண்டில் எம்ஜியாரின் மூன்றாவது மட்டும் அந்த ஆண்டின் இறுதிப் படமாக வெளியான மன்னாதி மன்னன் முதலிரண்டில் இடறியதை சரி செய்து வெற்றிப் படமானது, காதலுக்கும் அரச கடமைக்கும் இடையில் அல்லாடும் இளவரசனும் அவனிடம் காதல் கொண்ட இரு மங்கையருமாக வடிக்கப்பட்ட கதையில் நடனராணியாக பத்மினியும், இளவரசியாக அஞ்சலிதேவியும் வேடமேற்றனர். எம்ஜியாரின் பல வெற்றிப்படங்களுக்கு வசனமெழுதிய கண்ணதாசன் இதிலும் பணியாற்ற, எம்.நடேசன் தயாரித்து இயக்கினார்.
மொத்தம் 14 பாடல்களைக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு ம்யூசிக்கல் என்றே அமைந்து விட்ட காதலும் நடனங்களுமே நிறைந்திருந்த இப்படத்தில் பொதுவாக எம்ஜியார் படங்களில் மிகுந்து காணப்படும் சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும், பத்மினியுடன் எம்ஜியார் ஆடும் போட்டி நடனம் பிரபலமானது;
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. எம்எல்வியின் குரலில் ஆடாத மனமும் உண்டோ கர்நாடக இசைப்பிரியர்களை மயக்கியது என்றால், படத்தின் துவக்கத்தில் ஒலிக்கும் அச்சம் என்பது மடமையடா பாடல் ஏறத்தாழ திராவிட இயக்கத்தின் தேசிய கீதமாகவே மாறியது; இன்றளவும் இசைக்கப்படுகிறது. சுசீலாவின் கண்கள் இரண்டும் பாடல் எவர்க்ரீன் நிலை பெற்றது. கனியக் கனிய, மற்றும் நீயோ நானா போன்றவை மிகுந்த இனிமையோடு துலங்கின. இதில் இரண்டாவதில் பிபி ஸ்ரீனிவாஸ் எம்ஜியாருக்குப் பின்னணி கொடுத்திருந்தார்........ Thanks.........

orodizli
24th April 2020, 11:23 PM
படங்களில் தந்த நம்பிக்கை !

எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.

அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.

''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.

(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )

எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :

''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.

நன்றி : தினமலர்........ Thanks...

orodizli
24th April 2020, 11:29 PM
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

தலைவரின் அருமையான பாடல் வரி...

நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால

நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால........ Thanks...

orodizli
25th April 2020, 08:14 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில்*இன்று (17/04/20) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரு.இருகூர்*இளவரசன்(எழுத்தாளர் )*அளித்த*தகவல்கள் விவரம் :


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு*தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்*, தனது*உதவியாளர்* மூலம் அழைத்து**அவர்களின்*துன்பத்தை*போக்குவது*என்பது *அவரி ன்*வாழ்க்கையில்*அன்றாடம் நடக்கும்*விஷயங்கள்* நான் கோடம்பாக்கத்தில்,பூபதி நகரில்**குடிசை*மாற்று வாரியம் அருகில் குடியிருந்தபோது , சங்கரய்யா என்பவர் (தந்தை பெரியாரின்* சீடர்) என் வீட்டிற்கு கீழே குடியிருந்தார் . *திரு.சங்கரய்யா , தந்தை பெரியாரிடம் இருந்து பின்னர் பேரறிஞர் அண்ணா*, மு.கருணாநிதி ஆகியோரின் நட்பில்*இருந்தார்*. அப்போது முரசொலி*பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார் . திரு.சங்கரய்யா தனது முதிர்ந்த வயதில்*மனைவியுடன் வாழ்ந்து வந்தார் .* அப்போது அவர் மனைவிக்கு உடல் நலம் குன்றியது* மருத்துவ*சிகிச்சைக்கு பலரிடம்*பணம் கேட்டு கிடைத்த*பாடில்லை, தான் சார்ந்த இயக்கத்தினரிடம் கேட்டும் பலனில்லை. நோய் என்றால் அரசு மருத்துவமனை இருக்கிறதே .அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று பரிகசித்தனர் .*.இதுபற்றி*என்னிடம்* தெரிவித்தபோது , நான்* உடனே நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று*எம்.ஜி.ஆரை*பாருங்கள்*.* நிச்சயம் உதவி கிடைக்கும்*என்று யோசனை சொன்னேன் . . ஆனால் ஆரம்பத்தில் .சங்கரய்யா சற்று*தயக்கத்துடன்* எம்.ஜி.ஆர். கட்சிக்கு*எதிரான இயக்கத்தில் நான் இருந்து அவரை வசை பாடியிருக்கிறேன் . அவரது அரசியலை*விமர்சனம் செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன் .* ஆகவே என் பிரச்சனையை*காது கொடுத்து கேட்பாரா*, எனக்கு*உதவி கிடைக்குமா*என்பது சந்தேகத்திற்கு உரியது*என்று என்னிடம்**சொன்னார் .* பதிலுக்கு*நான்* , முதலில் நீங்கள் அவரை*போய்* சந்தியுங்கள் . தன்னை*விமர்சனம் செய்தவர்களை கூட*, தன்னை*நேரில் வந்து சந்தித்து*உதவி கேட்டால்*மறுத்ததாக*நான் கேள்விப்பட்டதில்லை . எனவே நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்றேன்* .வேறு வழியில்லை*என்பதால் , ஒருநாள்*காலை*7 மணியளவில் எம்.ஜி.ஆரை சந்திக்க*ராமாவரம் சென்றார் .


தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தினசரி தன் வீட்டில்*பொதுமக்களிடம் கோட்டைக்கு செல்வதற்கு முன்பு வரிசையில்*நிற்கும்*பொதுமக்கள் சிலரிடம்*மனுக்கள்*வாங்குவது வாடிக்கை. அந்த வரிசையில்*.சங்கரய்யா நின்றிருந்தார் .அவர் உருவத்தில் குள்ளமாக இருப்பார் . அவரை*பார்த்துவிட்ட*எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவரை*தனியே அழைத்து வரும்படி கூற , அவர் வந்ததும்*என்ன வரிசையில் நிற்கிறீர்கள்.*என்ன விஷயம் .தயங்காதீர்கள் .விரைவாக சொல்லுங்கள் என்றார்*எம்.ஜி.ஆர்.*ஐயா, என் மனைவிக்கு*உடல்நலம் சரியில்லை . நானிருக்கும் இடத்தில உள்ள உறவினர்கள் , நண்பர்கள்,கட்சி*பிரமுகர்கள் பலரிடம் கேட்டு பார்த்து ஒன்றும் பலனில்லை . உடனடியாக மருத்துவ*சிகிச்சை அளிக்க*வேண்டிய சூழ்நிலை .நண்பர் ஒருவரின்*யோசனைப்படி , நம்பிக்கையுடன் உங்களை*நாடி வந்திருக்கிறேன் .என்றார்*.சங்கரய்யா .* எம்.ஜி.ஆர். சிறிது நேரம் இருக்க சொல்லி,பொதுமக்களை*அனுப்பியதும், விவரங்கள் கேட்டறிந்தார் . பின்னர் தனது*உதவியாளரிடம் சைகை காட்டி ரூ,50,000/- வரவழைத்து , சங்கரய்யாவிடம் அளித்து*உடனே ஆவன*செய்து எனக்கு*தகவல் அளியுங்கள் என்று சொல்லி அனுப்பினார் . சங்கரய்யாவுக்கு தேவைப்பட்ட*பணம் வெறும் ரூ.3,000/- தான் .வீட்டிற்கு சென்று*பணக்கட்டை*பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்*சங்கரய்யா . இது நடந்தது*1979ல், எம்.ஜி.ஆர். அளித்த பணம் இப்போதைய*மதிப்பில்*பல லட்சங்கள் இருக்கும்*.


சங்கரய்யா தன்* மனைவியை*ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதித்து*நல்ல சிகிச்சை*அளித்து ,ரூ.15,000/- செலவு* செய்து* அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த*பின்னர் , சங்கரய்யா தன் வீட்டு*ஹாலில்*பெரிய எம்.ஜி.ஆர். புகைப்படம் ஒன்றை*மாட்டி வைத்தார் .விவரம் அறிந்து*நான் சங்கரய்யாவிடம் விசாரித்தேன் . எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு பெற்றீர்கள் என்று அறிந்தேன் . நீங்கள் திராவிடர்*கழக கட்சியை சார்ந்தவர் ஆயிற்றே. எப்படி எம்.ஜி.ஆர். படம் வீட்டில்*வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் . பதிலுக்கு சங்கரய்யா என் மனைவியின்*மருத்துவ*சிகிச்சைக்கு நான் பணம் கேட்காத* ஆளில்லை. ஒருவரும்*உதவிக்கு வரவில்லை . எம்.ஜி.ஆரை கடுமையாக அரசியல் ரீதியில் விமர்சனம் செய்தும்*, பகைவனுக்கு* அருள்வது போல் , காலத்தின் அருமை கருதி*,நிலைமையை உணர்ந்து*உடனடி உதவி செய்து , என் மனைவியின்*உயிரையம், குடும்ப மானத்தையும்* காப்பாற்றிய**அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றார்*சங்கரய்யா .


சிறிது*காலத்திற்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் சங்கரய்யாவின் 75*வது*பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர் . சங்கரய்யாவும் எம்.ஜி.ஆரை சந்தித்து*ஆசி பெற்று ,தன் 75 வது* பிறந்த நாள் பற்றி கூறி , தன்*வீட்டில்*மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துவிட்டு வந்தார் .* அன்று மாலை குடும்பத்தினர் , மற்றும் பேர குழந்தைகள் அனைவரும் குதூகலமாக கொண்டாட ஆயத்தமாக இருந்தனர்*.இரவு 7 மணியளவில் அந்த குடிசைமாற்று வாரிய பகுதியில்*திடீரென* அம்பாசிடர் கார் ஒன்று வந்தது .அப்போது சாலையில் கொஞ்சம்*மழையால்**சேறு*இருந்தது .எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி*அந்த சேற்றை*பொருட்படுத்தாமல் , வேட்டியை*தூக்கியவாறு லாவகமாக தாண்டி வீட்டுக்குள்*நுழையும்போது குடும்பத்தினர் அனைவருக்கும்**இன்ப அதிர்ச்சி* . சங்கரய்யா உடன் விரைந்து வந்து எம்.ஜி.ஆரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு உடன் தெருவாசல்* கதவை மூடிவிட்டார் . ஏனெனில் விவரம் அறிந்தால்*அந்த இடமே*பொதுமக்களால் சூழப்படும் .


எம்.ஜி.ஆர். சங்கரய்யாவின் மனைவியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் . சங்கரய்யாவின் மனைவி , உங்கள் புண்ணியத்தால் நான் உடல்நலம் தேறிவிட்டேன் ,* என்று என் கணவர்*உங்கள் வீட்டுக்கு காலடி*வைத்து உங்களிடம் உதவியை நாடினாரோ*, அன்று முதல் எங்கள் குடும்பம்*நன்றாக இருக்கிறது . நாங்கள் மூன்று வேளை திருப்தியாக உண்டு வாழ்கிறோம் .மிகவும் நன்றி ஐயா என்றார் .* வேறு ஏதாவது உதவி தங்களுக்கு தேவைப்படுகிறதா ,சொல்லுங்கள் . சங்கரய்யா என்னிடம் கேட்க மாட்டார் என்றுதான்*நான் உங்களை கேட்கிறேன். தயக்கம் வேண்டாம். தைரியமாக கேளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் தனது உதவியாளரை*அழைத்து*ரூ.75,000/-பணத்தை ,* 75 வயதை*கணக்கில் கொண்டு*சங்கரய்யாவின் மனைவியிடம் அளித்தார் . பின்பு*சங்கரய்யாவிடம் அ. தி.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம்*சாலையில் உள்ளது . அந்த அலுவலகத்தில் வரும் தொலைபேசி எண்களை தினசரி பதிவேடுகளில் பதிவு செய்து தாருங்கள்*உங்களுக்கு சம்பளமாக*ரூ.10,000/-தரப்படும் என்று சொல்லி*விடை பெற்றார் எம்.ஜி.ஆர். சங்கரய்யா அப்போது தன் வாழ்நாளில்*ரூ.600/- க்கு*மேல் சம்பளம் வாங்கியதில்லை. எனவே உண்மையில் எம்.ஜி.ஆரை தன் கடவுளாகவே பார்த்தார் சங்கரய்யா .


மேற்கண்ட சம்பவத்தை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதுபோல ஏராளமான பேர்களுக்கு எந்த பிரதிபலனோ, பிரதி உபகாரமோ இல்லாமல் அவர்களின் நிலை அறிந்து, காலத்தே எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் எண்ணற்றவை .இதனால்தான் இன்றும் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்பட பாடல்கள் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகின்றன .* இந்த மாதிரி*செய்கைகளால்தான் , மக்கள் திலகம், தமிழக முதல்வர் என்கிற நிலைப்பாடுகளை கடந்து , காலங்கள் மறைந்தாலும், காட்சிகள் மாறினாலும் ,*மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்..


தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமான காலத்தில் , எம்.ஜி.ஆர். நாடக மன்றம், சிவாஜி நாடக மன்றம், எஸ்.எஸ். ஆர். நாடக மன்றம் , எம்.ஆர். ராதா நாடக மன்றம் , மனோரமா நாடக மன்றம் ,மனோகர் நாடக மன்றம் என பல மன்றங்கள் இருந்தன .எம்.ஜி.ஆர். நாடக மன்றம் சார்பில் 1959ல் இன்ப கனவு என்ற நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது , கதைப்படி, நடிகர் குண்டுமணி (150 கிலோ எடை ) யை தூக்கி கீழே கிடத்த வேண்டும் .* அப்போதுதலைக்கு மேல் தூக்கும்போது* வழுக்கி, எம்.ஜி.ஆர். கால் மீது குண்டுமணி விழ , உடனே படுதா* போடப்பட்டது . அப்போது எம்.ஜி.ஆர்.கால் முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார் . அந்த மாதிரி நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். வாத்தியார் போல சிறு குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி அளிப்பது போல காட்சி அமைக்கப்பட்டது . அந்த காட்சி முடிந்து குழந்தைகள் புறப்படும்போது , போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது , அனைவருக்கும் சாக்லேட் (இனிப்பு ) வழங்குவார் எம்.ஜி.ஆர். அப்போது தங்கை பாத்திரத்தில் நடித்த நடிகை என்ன அண்ணா , நீங்கள் அளிப்பதே இலவச கல்வி* பயிற்சி . இனிப்பு வழங்க ஏன் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர். என்ன செய்யறது தங்கச்சி, எனக்கு இருக்கிற வருமானத்தில் செய்கிறேன். வருமானம் மட்டும் அதிகம் கிடைத்தால் இவர்களுக்கு இனிப்பு என்ன சாப்பாடே போட்டு அனுப்புவேன் என்று கூறுவாராம் .7 வயதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல* என்று ம் சொன்னாராம். இந்த அனுபவங்கள்தான் தான் பட்ட கஷ்டம் போல சிறு குழந்தைகள் சாப்பாட்டிற்கு அவதிப்பட கூடாது என்கிற வகையில் , பிற்காலத்தில், தான் முதல்வரானதும்*சத்துணவு திட்டம், இலவச செருப்பு, இலவச பல்பொடி இலவச சீருடை போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்* எம்.ஜி.ஆர்.*



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் நிகழ்ச்சியில் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ( படகோட்டி*), ஒரு பக்கம் பாக்குறா*(மாட்டுக்கார வேலன்), சிரித்து*வாழ வேண்டும் (உலகம் சுற்றும் வாலிபன் ) ஆகிய பாடல்கள்*ஒளிபரப்பாகின .......... Thanks.........

orodizli
25th April 2020, 08:15 AM
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது. அதுபற்றி லதா கூறியதாவது:-

நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன். இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார்.

கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும் என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன். நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும் என்று பாராட்டினார்.

இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது. இவ்வாறு லதா கூறினார். தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜு, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள். சிரித்து வாழவேண்டும் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார்.
(மும்மொழிப் படத்தில் கதாநாயகி)........ Thanks...

orodizli
25th April 2020, 08:16 AM
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.

ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட

'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..

நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..

உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.

அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.

உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..

“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."

-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..

“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”

உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..

“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR

இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்

“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.

“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.

திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”

SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”

இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.

“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.

ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.

சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”


*இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்.ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்*

"திண்ணை" பதிவிலிருந்து............ Thanks...

orodizli
25th April 2020, 08:18 AM
என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள்

தமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் மக்கள் மனதில் எவர் கிரீன் ஹீரோவாக இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர். லாக்டவுன் நேரத்தில், அவரது ரசிகர்களுக்கு அவரின் திரைப்படங்கள் மூலம் ஒரு பாசிட்டி எனர்ஜி கிடைத்திருக்கிறது. Sponsored Upskill in AI and Data Science | Start free Trial Great Learning Sponsored Explore a new world from your sofa with one simple tool! ExpressVPN சினி தரவரிசை 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாத டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாத டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் PrevNext அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பின்னர் அதிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனிக்கட்சி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வரானார். தமிழக மக்களின் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பல கோணங்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், இன்றும் மக்களின் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரை நினைவூட்டும் வகையில் இன்றும் அவரின் திரைப்படங்கள் பேசப்படுகிற்ன. செல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் ! சமூக அக்கறை, பெண்ணூரிமை, அரசியல், காதல், குடும்பம், தத்துவ பாடல்கள், பட்டயை கிளப்பும் சண்டைக்காட்சிகள், உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என இவர் திரைப்படங்களில் இல்லாத அம்சங்களே இல்லை. அனைத்து வயதினராலும் ஈர்க்கப்பட்ட முதல் நடிகர் என்றால் அது நம் பொன்மனச்செம்மல்தான். அவரை மீண்டும் திரும்பிபார்க்க வைக்கும் விதமாக மார்ச் 20ல் லிருந்து கடந்த ஏப்ரல் 20 வரை அவரின் 62 திரைப்படங்கள் ஜெயா-டிவி தொலைக்காட்சி, சன்-லைஃப், ராஜ் டி.வி, மெகா-டிவி, முரசு, வசந்த்-டிவி ஆகிய சேனல்கள் மூலமாக ஒளிபரப்பானது. இந்த தகவலை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லாக் டவுன் முடிவதற்குள் 100 வித்தியாசமான படங்களை அனைத்து தொலைகாட்சிகளும் நிச்சயம் ஒளிபரப்பி விடும் என்று நம்புகிறார்கள். ஹோட்டல் படுக்கையறையில்… Sponsored Karan won 10 Lacs from ₹100 by playing Poker at home Adda52 எத்தனை முறை பார்த்தாலும் பார்த்த படத்தையே திரும்பி திரும்பி பல முறை பார்ப்பது, தற்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பரவசப்படுவது, டிவி யில் பாடல் ஒலிக்கும் போது கூட சேர்ந்து பாடுவது, சபாஷ் என்று அலறுவது, உடம்பில் ஒரு புது உத்வேகம் வந்தது போல் துடிப்பது இவை எல்லாம் எம் ஜி ஆர் பக்தர்களால் மட்டுமே முடியும். சின்ன குழந்தைகள் போல் இவர்கள் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது, இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் மிக பெரிய ஆனந்தமே . காலங்கள் கடந்தும் தத்துவ பாடல்கள் மூலம் நம்பிக்கை ஊட்டும் எம் ஜி ஆர் படங்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் சல்யூட் தான்.......... Thanks.........

orodizli
25th April 2020, 08:19 AM
https://m.facebook.com/story.php?story_fbid=3775425422530509&id=100001892643632&sfnsn=wiwspwa&extid=tdnIbVCN6CKwClyS...... Thanks...

orodizli
25th April 2020, 08:20 AM
ரஜினி நடித்த படையப்பா படத்தில் ஸ்டைலாக ரஜினி கால் மேல் கால் போடும் காட்சி ஹைலட்டாகக் காட்டப்பட்டது,அனால் அந்தக் காட்சி" பெரிய இடத்துப் பெண்"ணில் தலைவரால் மிகச் சாதாரணமாகச் செய்த காட்சி,அதை அப்பட்டமாகக் காப்பி அடித்துத்தான் படையப்பாவில் சேர்த்து பில்டப் செய்துவிட்டனர்............. Thanks.........

orodizli
25th April 2020, 08:21 AM
https://youtu.be/At4jSPvu7yc........ Thanks...

orodizli
25th April 2020, 08:23 AM
ஒன்று. அதிசயபிறவிகளில் ஒன்று.
இரண்டு
இரட்டை இலை தனது இரண்டு விரலால் காட்டி
வெற்றி கண்டவர்.
மூன்று.
மூன்று பிறவிகளைக் கண்டவர்.
நான்கு
தலைவர் மேடையில் பேசும்போது நான்கு பக்கத்திலும் கண்கள்
கவனம் செலுத்தும்.
ஐந்து.
ஐந்து புலன்களையும்
அடங்கி ஆண்டவர்.
ஆறு
ஆறு கோடி மக்களின் தலைவர்.
ஏழு.
தலைவரின் அதிர்ஷட எண் ஏழு.
எட்டு.
எட்டாவது வள்ளல்(8)
ஒன்பது.
நவரத்தினம் படத்தில்
வித்தியாசமாக ஒன்பது
கதாநாயகியுடன் நடித்தவர் இவர் ஒருவரே.
பத்து
பத்திரமாத்து தங்கம்
நம் தலைவர்......... Thanks.........

orodizli
25th April 2020, 11:59 AM
https://youtu.be/VsW1HQlZbVY.........பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ அவர்கள் மக்கள் திலகம் அவர்களின் நடிப்பையும், கொடை தன்மையையையும் விவரிக்கும் காட்சிகள், பேட்டி...( பேட்டியை முழுவதும் பார்க்கவும்)......... Thanks.........

orodizli
25th April 2020, 12:09 PM
https://sangam.org/mgr-remembered-part-55/..... Thanks

orodizli
25th April 2020, 12:17 PM
https://www.facebook.com/1963271093886422/posts/2620548928158632/?sfnsn=wiwspwa&extid=UZ8PPLIwGgqtF0tf&d=w&vh=e.... Thanks...

orodizli
25th April 2020, 12:20 PM
https://m.facebook.com/story.php?story_fbid=3775425422530509&id=100001892643632&sfnsn=wiwspwa&extid=tdnIbVCN6CKwClyS... Thanks...

orodizli
25th April 2020, 12:25 PM
#நேரம் #பொன்னானது

கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பிரச்சனையினால் வெளியில் செல்லமுடிவதில்லை, பாதுகாப்பு காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறோம்...! ��

எவ்வளவு நேரம் மொபைலையும், டிவியையும் பார்ப்பது?
எப்படி நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்துவது? ��

நம்ம எம்ஜிஆர் லதாம்மா எப்படி உபயோகமாக
நேரத்தை செலவிடுகிறார்? ����

அதைத்தான் இக்காணொளியில் சொல்லியிருக்கிறார்!!!

அவர் கூறியதில் ஒரு விஷயத்தை மட்டும் நான் உருப்படியாக செய்துகொண்டிருக்கிறேன்...! ��

உடற்பயிற்சி தான் அது...��....... Thanks.........

oygateedat
25th April 2020, 12:34 PM
#MGR_sSuccess_movies
MGR started his career in acting (small roles) from 1937. By 1947 his leading role movie Rajakumari was released. From 1948 to 1950 he has acted as Hero and as well as Second Hero character, then from 1950 to 1977 (or 1978) he was the Hero.

Total films released up to 1978 is 136, Hero acted movies are 117. In this 117, one movie is Telugu movie Sarvathikari and one Malayalam movie Jenovah. Both these movies are released in Tamil version also. The Tamil movies only taken into account that is 115. His success rate follows:

350 plus days - En Thangai – 1952

301 to 349 days – Nil

251 to 300 days – Nil
----------------------------------

#200 to 250 days –

Nadodi Mannan – 1958

Enga Veetu Pillai – 1965

Ulagam Sutrum Valiban – 1973

Urimai Kural – 1974
------------------------------------

#175 to 199 days –

Madurai Veeran – 1956

Anbay Vaa – 1966

Oli Vilakku – 1968

Adimai Penn – 1969

Mattukara Velan - 1970

Rickshawkaran – 1971
------------------------------

150 to 174 days –

Rajakumari – 1947

Manthiri Kumari – 1950

Marmayogi – 1951

Malai Kallan – 1954

Kulabaghavali – 1955

Alibabavum Narpathu Thirudargalum – 19556

Thaiku Pin Tharam – 1956

Thirudathae – 1961

Kavalkaran – 1967

Neethiku Thalaivangku – 1976

-----------------------------

125 days to 149 days:

Mohini 1948
Maruthanattu Illavarasi 1950
Sarvathikari 1951
Andaman Kaithi 1952
Jenovah 1953
Chakravarthi Thirumagal 1957
Thai Sollai Thattathae 1961
Thayai Katha Thanaiyan 1962
Vettaikaran 1964
Panakara Kudumbam 1964
Deiva Thai 1964
Ayirathil Oruvan 1965
Kudieruntha Kovil 1968
Nam Nadu 1969
Ithaya Veenai 1972
Nallai Namathae 1975
Ithayakani 1975

-----------------------------

110 days to 124 days:

Kumari 1952
Puthumai Pithan 1957
Mahadevi 1957
Baghdad Thirudan 1960
Kudumba Thalaivan 1962
Dharmam Thalaikakum 1963
Ragisya Police 115 1968
En Annan 1970
Engal Thangam 1970
Kumarikottam 1971
Nalla Neram 1972
Netru Indru Nalai 1974
Ninaithathai Mudipavan 1975
Pallandu Vazhga 1975
Indru Pol Endrum Vazhga 1977
Meenava Nanban 1978

---------------------------------

100 days to 109 days

Periya Idathu Penn 1963
Nithiku Pin Pasam 1963
Parisu 1963
Padagotti 1964
Mugarasi 1966
Petral Than Pillaiya 1966
Thedi Vantha Mapillai 1970
Neerum Nerupum 1971
Raman Thediya Seethai 1972
Sirithu Vazha Vendum 1974
Uzhaikum Karangal 1976
Uruku Uzhaipavan 1976
-------------------------------

90 days to 99 days:

Mannathi Mannan 1960
Arasilangkumari 1961
Koduthu Vaithaval 1963
Chandrodayam 1966
Kannan En Kadalan 1968
Nan En Piranthan 1972

-------------------------------

80 days to 89 days:

Nam 1953
Thai Magaluku Katiya Thaali 1959
Nallavan Vazhvan 1961
Pasam 1962
Panathottam 1963
Kalangarai Vilakkam 1965
Parakum Pavai 1966
Thaiku Thalai Magan 1967
Vivasahi 1967
-----------------------

70 days to 79 days:

Panakari 1954
Kundukili 1954
Rajarajan 1957
Raja Desingh 1960
Sabash Mapillai 1961
Rani Samyuktha 1962
Madapura 1962
Vikramadityan 1962
Ananda Jothi 1963
Kanchi Thalaivan 1963
En Kadamai 1964
Thozhilalli 1964
Thayin Madiyil 1964
Panam Padaithavan 1965
Kannithai 1965
Thazhampoo 1965
Asai Mugam 1965
Nadodi 1966
Thanipiravi 1966
Arasakattalai 1967
Puthiya Bhoomi 1968
Kanavan 1968
Thalaivan 1970
Oru Thai Makkal 1971
Sangay Muzhangu 1972
Annamittakai 1972
Pattikattu Ponniah 1973
Madurai Meeta Sundarapandiyan 1978

-----------------------------

60 days to 69 days:

Kalai Arasi 1963
Nan Aanai Ittal 1966
Thalibaghayam 1966
Theru Thiruvizha 1968
Navarathinam 1977

----------------------

50 days to 59 days:

Kadhal Vaghanam 1968
Info: Number days for this movie is 56.

30 days to 49 days: NIL

10 days to 29 days: NIL

---------------

Days

Number of Movies

350 plus days 1 Movie
200 days to 250 days 4 Movies
175 days to 199 days 6 Movies
150 days to 174 days 10 Movies
125 days to 149 days 17 Movies
110 days to 124 days 16 Movies
100 days to 109 days 12 Movies
90 days to 99 days 6 Movies
80 days to 89 days 9 Movies
70 days to 79 days 28 Movies
60 days to 69 days 5 Movies
50 days to 59 days 1 Movie

#blogspot.com இணைய தகவல். உங்களுக்காக.... மேலும் தலைவரின் எந்த படமும் 50 நாட்களுக்கு கீழ் ஓடியதில்லை என்பது கூடுதல் தகவல்!

oygateedat
25th April 2020, 12:35 PM
தற்பொழுது முரசு தொலைக்காட்சியில் தாயைக் காத்த தனயன் மற்றும் sunlife தொலைக்காட்சியில் உழைக்கும் கரங்கள்

orodizli
25th April 2020, 12:38 PM
நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.

நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளை இட்டவன் நீதான்...’ என்ற போட்டிப் பாடலில் லதாவும் மஞ்சுளாவும் ஆடியுள்ளனர். அதைப் பார்த்து, ‘ரெண்டு பேருமே பிரமாதமா ஆடுனீங்க’ என்று எம்.ஜி.ஆரே பாராட்டினார்.

தொடரும்....... Thanks...

orodizli
25th April 2020, 12:39 PM
அளவின்றி அள்ளி கொடுத்தவர் எம்ஜிஆர்
எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே விழா தமிழர் திருநாள்
அன்று கட்டு கணக்கான பணத்தோடு அள்ளி கொடுப்பார் வருவோர் அனைவருக்கும்
காஷ்மீர் படபிடிப்பிற்க்கு சென்ற எம்ஜிஆர் அங்கு நடந்த ராணுவ நிதிதிரட்டும் விழாவில் கலந்து கொள்ள அழைக்க படுகிறார் அதில்கலந்து கொணட எம்ஜிஆர் அன்று கலந்து கொண்டவர்கள் கொடுத்த தொகையை போல்.தொகையை தான் தன் பங்குக்கு அளிக்கிறார்
கொடையில் எம்ஜிஆரை வென்றவர்உண்டோ

வாழ்க எம்ஜிஆர் புகழ்.... Thanks...

orodizli
25th April 2020, 12:40 PM
[படங்களில் தந்த நம்பிக்கை !

எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.

அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.

''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.

(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )

எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :

''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
......... Thanks...
நன்றி : தினமலர்]

orodizli
25th April 2020, 12:54 PM
[#புரட்சித்தலைவர்

திரையுலக வாழ்க்கை :

7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு உணர்த்தினார்.

தொண்டுகள் :

பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம், காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத் திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார் அதனால், அவரை மக்கள், 'பொன்மனச் செம்மல்', 'புரட்சித்தலைவர்'என்று அழைத்தனர்.

மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 -ம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின், 1988-ல், இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

சுவையான குறிப்புகள் :

* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார், பிரபாகரன்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹூக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.

* முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

* நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா அடுத்தது சரோஜா தேவி

* எம்.ஜி.ஆர்- ன் வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள். சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.

* எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.

Cont...]......... Thanks...

orodizli
25th April 2020, 12:56 PM
[மதுரை ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வர் #எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டது..

பாராட்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சீர்காழி சிவ சிதம்பரத்தின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

அப்போது மேடைக்கு வந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள், சிவசிதம்பரத்தின் அருகில் போய் அமர்ந்தபடி ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.

உடனே சிவசிதம்பரம்..

'பண்டு தமிழ் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன்'

-என்ற பாரதிதாசன் பாடலை பொன்மனச்செம்மலை சுட்டிக்காட்டி பாடியவுடன் வள்ளுவர் கோட்டத்தில் எழுந்த ஆரவாரத்தில் விண்ணேஅதிர்ந்தது.

இசைக் கச்சேரிகளில் எம்.ஜி,ஆர். தரையில் அமர்ந்து ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார்.

தலைவரின் எளிமைக்கு இந்த நிகழ்வு ஒர் சான்று.] https://m.helo-app.com/al/mfFQwkSNe...... Thanks...

orodizli
25th April 2020, 01:00 PM
ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!
������������������������������

M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின்,

‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’

என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.

முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.

அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து,

‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’

என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.

அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி,

‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’
என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.

அந்த இளைஞர் சென்ற பிறகு,

‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’
என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து,

‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’
என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம்---

‘சக்கவர்த்தி திருமகள்.’

அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.

எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்---

‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’

என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.அவருடன், நடன தாரகை E V சரோஜாவும், G சகுந்தலாவும் போட்டி நடனம் ஆடி அசத்தி இருப்பார்கள்--!

அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார்.

‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’

என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.

விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார்.

‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’
என்று உதவியாளரை விரட்டினார்.

அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும்,

‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’
என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி இன்றளவும் வியக்கும்படி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.

அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது.

"எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர்"

என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று

‘காவல்காரன்’
படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....

‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.01.1957-ம் ஆண்டு வெளியான

‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி,

18.03.1976-ம் ஆண்டு வெளியான

‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை

எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்............. Thanks...

orodizli
25th April 2020, 01:20 PM
#அபூர்வசக்தி...#

வணக்கம் தோழர்களே... இன்று மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்களிடத்தில் இருக்கும் அபூர்வ சக்தியை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்!
1972 ஆம் ஆண்டு திமுகவில் உள்ளே இருந்து கொண்டு மேடையில் பகிரங்கமாக கணக்கு கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் #எம்ஜிஆர் ஒருவரே
கட்சியில் இருந்து நீக்கப் பட்ட நேரம் புதிய கட்சியான அதிமுக வும் அரங்கேறிய வேளை "உலகம் சுற்றும் வாலிபன்" படம் துவக்கத்தில் அதிமுக கொடியுடன் துவங்குகிறது இதற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றம் வரை தடை வாங்குகிறார்கள்(விளம்பரம் போஸ்டர் இல்லாமல் வெளி வந்து கின்னஸை தொட்டது வேறு கதை) திமுக வினர் அப்போது மதுரையில் நடந்த திமுகவின் பெரிய பொது கூட்ட மேடையில் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் மதுரை முத்து (பல ரவுடிகளை கையில் வைத்திருப்பவர்) பேசுகிறார் அடேய் ராமசந்திரா நீ சினிமாவில் அட்டைக்கத்தி வைத்து மக்களை ஏமாற்றி சண்டை போடுவாய் நான் ஒரிஜினல் கத்தியுடன் மோதும் உண்மையான நிஜ ஹுரோ நீ கலைஞரை பாத்தா கணக்கு கேக்குற உன்னை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் உன் படம் ரிலீஸ் ஆனால் சேலைக் கட்டிக்கொள்கிறேன் என்று வீர முழக்கமிடுகிறார்
உன்னை எங்கும் வாழ விட மாட்டேன் என்றார் அன்று தினமணியில் கார்டூன் படம் எம்ஜிஆர் அண்ணா படம் இனி இங்கு இருக்கக் கூடாது என்று எடுத்து செல்வது போல் அதை பார்த்த கலைஞர் எனக்கு இனி அண்ணா எல்லாம் மதுரை முத்து தான் என்று அவரை கட்டி தழுவுகிறார்
அதே மேடையில் நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் என்னை பத்மினியுடன் நெருங்கி நடிக்க விடாமல் சூழ்ச்சி செய்தவர் தான் இந்த இராமசந்திரன் இராஜாதேசிங்கு படத்தில் இதை நாடு மறக்காது என்று அவரும் கரீத்து கொட்டினார் எம்ஜிஆரை
மறுநாள் துக்ளக் பத்திரிக்கையில் சோ நீங்களும் பத்மினியும் நெருங்கி பழகுவதை எம்ஜிஆர் தடுத்தார் இதை நாடு மறந்தால் நாட்டுக்கு என்ன பேராபத்தா வரும்? என்று கிண்டல் கேள்வி எழுப்பினார்?
அடுத்து பேசியவர் திண்டுக்கல் எம் பி இராஜங்கம் பேசும் போது அருமை நண்பர் எஸ்.எஸ் ஆரை தன் வக்கிர புத்தியால் சினிமாவை விட்டே விரட்டியவர் இந்த இராமசந்திரன் தான் இனி உன்னை அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தலை காட்ட விடமாட்டோம் என்று குரலை உயர்த்தி நெஞ்சை உயர்த்தி மார் தட்டி சவால் விட்டார் மேடையில்
பின்பு அவர் பேச்சை முடித்து தன் காரில் போகும் போது திண்டுக்கல் சேரும் முன் மாரடைப்பால் ரோட்டிலே இறந்தார். பின்பு திண்டுக்கல் எம்பி தொகுதிக்கு இடை தேர்தல் வந்தது அதிமுக சார்பில் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தில் முதன் முதல் அமோக வெற்றி பெற்றார் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவதூறு பேசிய இராஜாங்கம் ஆவார் எதிர்த்து போட்டியிட்ட பொன்ராமலிங்க தேவரை மதுரை முத்து திமுகா சார்பில் நிறுத்தினார் அவர் டெபாசிட் தொகையை இழந்தார் எம்ஜிஆர் செல்வாக்கை வெளியில் மறைக்க கருணாநிதி தந்திரத்திற்கு மதுரை முத்து மீது பழி போட்டார் உன்னால் தான் திமுக தோற்றது ஆகையால் மேயர் பதவியை பறித்தார் கட்சிக்காக கத்தீ பேசும் போதெல்லாம் கைதட்டியவர்கள் என்னை முதுகில் குத்தி விட்டார்கள் என கூறி எம்ஜிஆர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதிமுகாவில் சரணாகதி ஆனார் மதுரை முத்து
பின்பு காலபோக்கில் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தில் புகுந்து ஆட்சி செய்ய தொடங்கினார் கருணாநிதி அப்போதைய நாளேடுகளில் விஜயகுமாரியையும் கருணாநிதியையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்க இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவிக்க வில்லை (ஒரு நாள் உண்ணாவிரத்தின் போதும் அவரது கால்மாட்டில் அமர்ந்திருந்தார் நடிகை விஜயகுமாரி நாடறியும்) காலப்போக்கில் மனம் நொந்து கருணாநிதி செய்த துரோகத்தால் எம்ஜிஆர் அவர்களிடமே எஸ்.எஸ்.ஆர் சரணாகதி அடைந்தார்
இப்படி எம்ஜிஆரை எதிர்த்து பொது மேடையிலே சவால் விட்டு தோற்றவர்கள் நான் இராஜங்கம் எஸ்.எஸ்.ஆர்
இதனை 1977 ல் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரம் அதே மதுரை மேடையில் மேயரான பின்பு மதுரை முத்து எடுத்து கூறி எம்ஜிஆரின் அபூர்வ சக்தியை சொல்லி பாராட்டினார்

ஆனால்,கடைசி வரை எம்ஜிஆர் அவர்கள் தன்னை தாக்கி பேசியவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட யாரையும் தரம் தாழ்த்தி பேசியதே இல்லை மாறாக தனது பொன் மனத்தால் அவர்களாக திருந்தி வரும் வரை காத்திருந்து வெற்றி கண்டவர்

#குறிப்பு
அப்போதெல்லாம் சூட்கேஸ் கொடுத்து ஆள் பிடிப்பது கிடையாது

#எல்லாப்புகழும் எம்.ஜி.ஆர்., க்கே....... Thanks...

orodizli
25th April 2020, 01:34 PM
What a Style....!!!

வாத்தியாரின் ஃபைட்டை அணுஅணுவா ரசிப்பதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தானே செய்யுது....

எனது பள்ளிப்பருவத்தில் எம்ஜிஆர் என்று சொல்வதை விட வாத்தியார்னு சொன்னது தான் அதிகம்...!

மிக நுட்பமாக சண்டைக்கலைகள் தெரிந்தால் மட்டுமே இத்தகைய ஸ்டைல் பண்ணமுடியும்!!!

நான் சொல்றது சரிதானே!!!( "ஆயிரத்தில் ஒருவன்" ஸ்டைல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் - நம்பியார் Fight Scene... அலசல்... சிலாகித்து பதிவுகள்... Thanks...

orodizli
25th April 2020, 01:35 PM
ஆஹா... தலைவரின் ஸ்டைல்.. அழகு யாருக்கும் வராது தம்பி.. கண்கொள்ளாக் காட்சி... Thanks...
����������

orodizli
25th April 2020, 01:36 PM
❤️ ❤️❤️அவருக்கு அதுக்கு தகுந்தாப்படி எதிராளிகளும் இருந்தாங்க.
டி.எஸ்.பாலையாவோ, பி.எஸ்.வீரப்பாவோ, எம்.என்.நம்பியாரோ, எஸ்.ஏ.அசோகனோ, ராமதாஸோ, ஏன் பிற்காலத்தில் வந்த ஜஸ்டின்கூட, தலைவருக்கு சமமான பலத்துடனும், வீரத்துடனும் இருந்தாங்க.
தலைவரென்ன இந்த #...... மாதிரி சோப்ளாங்கியா !!!.... Thanks...

orodizli
25th April 2020, 01:38 PM
Pasupathy Parasaram நான் கதாநாயகனாக நடித்து பாதியில் நின்றுபோன "சித்தாடை கட்டிக்கிட்டு"படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக எனக்கு சினிமா சண்டை போட கற்று கொடுத்தவர் எம் ஜி ஆரின் மனதுக்குப் பிடித்த, அவருடைய பல படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் அவருடன் மோதிய ஜஸ்டின் அவர்கள்தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்
Bala Subramanian ரகசிய போலீஸ் 115 படத்தில் ஜஸ்டின் எம்ஜிஆருடன் மோதும் ஒரு சண்டை காட்சி உள்ளது அந்த சமயத்தில் வந்து கொண்டிருந்த பல ஆங்கிலப் படங்களின் சிறந்த சண்டை காட்சிகளுக்கு நிகராக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளதாக நான் இன்றும் நினைக்கிறேன். சண்டைக் காட்சி மிகவும் ஸ்டைலிஷாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. அந்த சண்டைக்காட்சியை நீங்கள் உங்கள் பக்கத்தில் பதிவிட வேண்டுகிறேன்.... Thanks...

orodizli
25th April 2020, 01:39 PM
Pasupathy Parasaram anna! தனக்கு நிகரான வலிமையையோ அல்லது தன்னைவிட பலம் மிக்கவரோடு தான் வாத்தியார் மோதுவார்... Thanks...

orodizli
25th April 2020, 01:40 PM
மிக உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள் அருமை சகோ .என்ன ஸ்டைல் என்ன நுட்பம் என்ன அழகு!
சும்மா இல்லை இவருக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லப்படுவது..... Thanks...

orodizli
25th April 2020, 01:41 PM
அருமையான கத்திச் சண்டை
அட்டகாசமான கையசைவுகள்
ஆதிக்கமே பொங்கும் முகம்
அத்தனையும் அண்ணனின் சாகசங்கள் .....மறக்கலாகுமா.......... Thanks...

orodizli
25th April 2020, 01:42 PM
ரிக் ஷாக் காரன் படத்தில் ரிக் ஷாவில் இருந்தபடியே சிலம்பு சண்டையிடுகையில் ஒரு கட்டத்தில் சிலம்பை தூக்கி எறிந்து விட்டு ரிக் ஷாவை ஓட்டிய படியே இடது கையால் ஸ்டைலாக குத்து விடுவார். அந்த அரை நிமிஷக் காட்சிக்காகவே அந்த காட்சியை எதிர்பார்த்து காத்திருப்போம்....... Thanks...

orodizli
25th April 2020, 01:43 PM
Bala Subramanian சகோ, MGR எம்ஜிஆர் பற்றிய பதிவுகள் நான் எதை போட்டாலும் அதில் அவரை வாத்தியார்.. எங்க வாத்தியார்.. மக்கள் திலகம்.. பொன்மனச்செம்மல்.. பொன்னார் மேனியன்.. ஆகிய அடைமொழிகளை தான் அதிகமாக பயன்படுத்தி பதிவிடுவேன். இவை அனைத்துமே எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் என்ற போதிலும் அந்த "வாத்தியார்" என்ற சொல்லை சொல்லும் பொழுதே என் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறும் என்பதை நான் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும். ..... Thanks...

orodizli
25th April 2020, 01:47 PM
Always and all places number one is the one and only EVERGREEN HERO MGR...... Thanks...

orodizli
25th April 2020, 01:51 PM
காலத்தை வென்றவர் கொரானா காலத்திலும் மக்களுக்கு மன உறுதியை தன் திரைக்காவியம் மூலம் வந்து மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு மக்களை காப்பாற்றுகிறார் எந்த நிலையிலும் மக்களை காப்பாற்றும் சக்தி மக்கள் தெய்வம் மன்னாதி மன்னன் ஒருவர் மட்டுமே..... Thanks...

orodizli
25th April 2020, 01:53 PM
மக்கள் திலகம் அவ*ர்க*ள் கொடுமுடியில் கே.பி.எஸ் அவ*ர்க*ள*து திரைய*ர*ங்கு திற*ப்பு விழாவிற்கு வ*ந்திருந்தார். அப்போது அவ*ர*து இல்லத்தில் உள்ள பூஜைய*றையில் மக்கள் திலகத்திற்கு அன்புட*ன் விபூதி, குங்குமம் நெற்றியில் இடும் காட்சி.

கே.பி.எஸ்., மக்கள் திலகம் இருவ*ருக்குமிடையே மகனுக்கும், தாய்க்குமான பாச*ம் மிகுந்திருந்த*து. கே.பி.எஸ். அவ*ர்க*ள் என்னை பெறாது பெற்ற* அன்னை. நான் சிறுவ*னாக நாட*க*ங்க*ளில் ந*டித்த*போது எனக்கு ஒப்ப*னை செய்து மேடையேற்றிய*வ*ர் கே.பி.எஸ். எனக்கூறியுள்ளார். கே.பி எஸ்.1980ல் மறைந்த* போது அர*சு ம*ரியாதையுட*ன் இறுதிச்ச*ட*ங்கை ந*ட*த்தினார் முத*ல்வ*ர் எம்ஜிஆர்....... Thanks...

orodizli
25th April 2020, 02:00 PM
#உலகம்_சுற்றும்_வாலிபன்
#திரைக்கு_பின்_நடந்தது - #நம்_தலைவர் #கூறியது_உங்களுக்காக

#கம்போடியா, வியட்நாமுக்கு அருகே உள்ள நாடு; விமான நிலையத்தில் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

விமான நிலையத்தில் பெரிய, 'பேனர்'கள், சிவப்பு நிற எழுத்துக்களைக் கொண்டு, ஆங்காங்கே காட்சி அளித்தன.
அவற்றில் ஒன்றில் கீழ்க்காணும் வாக்கியங்கள், ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருந்தன...

'கம்போடியர்கள் தங்கள் நாட்டை வாடகைக்கு விட மாட்டார்கள்; வியட்காங்குகளோ, வடக்கு வியட்நாமியர்களோ, அதை விழுங்க முடியாது...'

வியட்நாம் சண்டை, கம்போடியாவிலும் பரவி விடுமோ என்பது, அன்றைய நிலைமை. அதனால்தான் கம்போடிய மக்கள், இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருந்தனர்.

'பானம் பான்' விமான நிலையத்தில், நாங்கள் கூட்டமாக இறங்கிச் சென்றபோது, அங்கே அமர்ந்திருந்த, அமெரிக்கர்கள், எங்களை வியப்புடன் பார்த்தனர்.
'இந்தியர்கள் எல்லாம், ஏன் இந்தியாவிலிருந்து ஓடி வருகின்றனர்; அங்கே என்ன நேர்ந்து விட்டது?' என்று, ஓர் அமெரிக்கர் கேட்க, நாங்கள் திரைப்படக் குழுவினர்
என்பதை, அவர்களிடம் விளக்கினார் நாகேஷ்.

பதினொன்றரை மணிக்கு கம்போடியா விமான நிலையத்தைவிட்டுப் புறப்பட்டோம். இடையில் மேகத்தால், விமானம் சற்று நிலை தடுமாறியவாறு சென்றது.

விமானத்தில் அறிவிப்பாளர், 'ஹாங்காங்குக்கு அருகில் செல்லச் செல்ல மேக மூட்டம், அதிகமிருக்கும்; பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, 'மேக மூட்டம் அதிகமாக இருப்பினும், உங்கள் கழுத்தையோ, முதுகையோ உடைக்காமல், ஹாங்காங் கொண்டு சேர்க்க முயலுகிறேன்...' என்று, நகைச்சுவையாக சொன்ன போது, 'ஆபத்து' என்று அச்சப்பட்டவர்களும் கூட, வாய்விட்டு சிரித்தனர்.

நாங்கள் பயணம் செய்த விமானம், 1:15 மணிக்கு, ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கியது. விமான நிலையத்தின் முன்பும், இரு புறங்களிலும் நீர்ப்பரப்பு. விமான ஓட்டி கொஞ்சம் கவனம் தவறிடினும், சமுத்திரத்தில் இறங்கி விடுவார்.
சமுத்திரத்தைக் தூர்த்து, நிலப்பரப்பை அதிகப்படுத்தி, விமான நிலையத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து தமிழ் மக்கள், எங்களைக் கண்டதும், அவர்கள் காட்டிய ஆர்வம் கலந்த அன்பு, வரவேற்பு, மறக்க இயலாதது.

இளைப்பாறுமிடத்தில் புத்தகங்கள், கலைப்பொருள்கள் முதலியவைகளைப் பார்த்து கொண்டிருக்கும் போதே, இயக்குனர் ப. நீலகண்டனிடம், ஹாங்காங் விமான நிலையத்தில், எந்தெந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்பதையும், கதையின் ஒரு பகுதியையும் சொன்னேன். அருகில் ஒன்றும் கவனியாதவர் போலிருந்த சொர்ணம் குறித்துக் கொள்வதை, நானும் ஒன்றுமறியாதவன் போலவே கவனித்தேன்.

விமானம் ஜப்பானுக்கு புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டது. எல்லாரும், அவசர அவரசரமாக புறப்பட்டோம். சிறிது நேரம் தங்குவதற்கும், திரும்ப விமானத்திற்குள் செல்வதற்கும், அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த அட்டைக்கு, 'டிரான்சிட் கார்டு' என்று பெயர்.

ஆண்கள் எல்லாரும் அடையாள அட்டைகளைக் கொடுத்து, விமானத்திற்குப் போய் கொண்டிருந்தனர். பெண்களும், தங்களிடம் தரப்பட்டிருந்த அட்டைகளை காவலர்களிடம், கொடுத்தனர்.

ஆனால், லதாவின் அடையாள அட்டை காணவில்லை. எல்லாப் பெண்களும், விமானத்திற்கு போகாமல், லதாவின் அட்டையைத் தேடினர்; நேரம் ஆகிக் கொண்டிருந்தது.
'பயணத்தை நிறுத்தி, லதாவை எங்கள் குழுவைச் சேர்ந்தவர் என்று, உறுதிப்படுத்தி அழைத்து செல்வதா அல்லது மேலதிகாரிகளிடம் ஆதாரங்களை காட்டி, அவர்கள் சம்மதம் பெற்று அழைத்துச் செல்வதா...' என்று, ஒரே குழப்பம்.

அதற்குள், 'கிடைத்து விட்டது கிடைத்து விட்டது...' என்று சந்திரகலாவும், மஞ்சுளாவும் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர். லதாவும், ஓடி வந்தார்; எல்லாருடைய முகத்திலும் நிம்மதி தெரிந்தது.

முகம் கழுவ, குளியல் அறைக்குள் சென்ற லதா, அங்கு அதை வைத்துவிட்டு வந்திருக்கிறாள்.
'இனிமேல் லதா தன்னுடைய பாஸ்போர்ட் முதற்கொண்டு, அனைத்தையும், வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துவிட வேண்டும். தன்னிடம் வைத்துக் கொள்ளகூடாது...' என்றாள் என் மனைவி.

மணி, 2.20க்கு விமானம் புறப்பட்டது.
ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம், ஜப்பான் கடலைக் கடந்து, ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

'மிஸ்டர் நாகேஷ், நாம இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்...' என்று கேட்டார் ஒருவர்.
'கொஞ்சம் இரு; வெளியே எட்டிப் பார்த்து சொல்றேன். மைல் கல் வெளியே தானே, நட்டிருப்பான், பாத்துட்டாப் போறது...' என்றார் நாகேஷ். அவ்வளவுதான்! சொர்ணமும், மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர்.

ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம், மேலும் கீழும் ஆடியது.
அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அசோகன், 'என்ன நாகேஷ்... இப்படி மேலும் கீழும் ஆட்டி பயமுறுத்துறான்...' என்றார்.

'ஒண்ணுமில்லே. ஒசாகா எங்கே இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்...' என்று, பதில் சொன்னார் நாகேஷ்.
இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு, யாரால் தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

சரியாக, 5.50 மணிக்கு, ஒசாகா விமான நிலையத்தில் இறங்கிய விமானம், மணி, 6:20க்கு அங்கிருந்து புறப்பட்டு, 7.20 மணிக்கு, டோக்கியோ விமான நிலையத்தை அடைந்தது.
இது, இந்திய நேரத்தைக் காட்டுவதாகும். அப்போது டோக்கியோவின் நேரம் இரவு, மணி, 10.30௦; பாஸ்போர்ட், விசா போன்றவைகளை, விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பித்துக் கொண்டிருந்தோம். வெளியே ஓரிரு தமிழன்பர்கள், குடும்பத்தோடு நிற்பதை கண்டேன்.

பாஸ்போர்ட், விசா போன்றவைகளைக் காண்பித்துவிட்டு, காவலரைத் தாண்டி, இடுப்பளவு உயரமே உள்ள கம்பிக் கதவுகளுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்தேன். நாகேசும், தன்னுடைய பாஸ்போர்ட், விசாக்களைக் காண்பித்துவிட்டு வந்தவர், என்னருகில் வந்ததும், அதுவரையில் நான் காணாத ஒரு பெரிய பயங்கர மாற்றம், அவரிடம் தெரிந்தது.

அவருடைய கண்கள் பெரிதாயின. முகம், ஒரு பக்கமாக, விகாரமாக இழுக்கப்பட்டது. சொல்ல முடியாத, ஏதோ ஒரு வார்த்தை வெளியே வந்தது.
பேச இயலாத ஒருவன், தன்னைப் பயங்கரமான ஆயுதங்களால், தாக்க வருபவர்களை பற்றி, மற்றவர்களுக்கு சொல்ல விரும்பினால், என்ன செய்வான்? பயத்தினாலும், தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என்கிற கோழைத்தனத்தோடும், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, சப்தமிட விரும்பி கத்தினால், எப்படி இருக்கும்... உருவில்லாத வார்த்தைகள், அடிவயிற்றிலிருந்து அழுத்தித் தள்ளப்பட்ட காற்றின் உதவியால், வார்த்தைகளுக்குப் பதில், இனம் புரியாத கூச்சல் கரகரத்த குரலில் வெளிவருமே, அதுபோல், இல்லை அதைவிடப் பயங்கரமாக அலறியவாறு, கீழே விழுந்து விட்டார் நாகேஷ்.

அவரது வாயிலிருந்து, நுரை நுரையாக வந்தது. நான் பிடிக்காவிட்டால், அவர் தரையில் அப்படியே விழுந்திருப்பார். மீண்டும் மீண்டும் மிரண்ட பார்வைகளோடு அலறினார். பாஸ்போர்ட் முதலியவைகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் கூட, ஏதும் புரியாத நிலையில், தங்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்றனர். நான், அவருடைய நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

-- எம்.ஜி.ஆர்.,.... Thanks...

orodizli
25th April 2020, 02:09 PM
வணக்கம் நண்பர்களே!! உலகில் 7என்ற எண்ணுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.
அதிசயங்கள் 7
வாரத்தில் நாட்கள் 7
லோகங்கள் 7
நம்நாட்டில் கூட
கடை 7வள்ளல்கள் என '7'ம் நம்பரை ஒரு தனித்துவமான எண்ணாகவே பார்க்கிறது...

புரட்சித்தலைவரின் வாழ்விலும் 7என்ற எண்ணுக்கு மிக முக்கியமான இடம் உண்டு...

அவர் பிறந்தது. 1917

வீட்டு விட்டு பிழைப்புக்காக நாடக கம்பெனியில் சேர்ந்தது. 1927

முதன் முதலில் சினிமாவில் நடித்தது. 1937
பெயர் பொதுவில் தெரிய தொடங்கியது
முதன் முதலில் கதாநாயகனாக
நடித்தது. 1947

அவர் சார்ந்த திமுக முதல் தேர்தல்.

1957

முதன்முதலில் எம்எல்ஏ ஆனது. 1967

முதல்வராக ஆனது. 1977

இவ்வுலகை விட்டு மறைந்தது. 1987

மொத்தமாக அவர் வாழ்ந்த ஆண்டுகள் '7'0

கடையெழுவள்ளல்களின் குணம் மற்றும் 7அதிசயங்களின் தன்மை இரண்டும் ஒருசேர அமைந்ததால் இந்த அபூர்வ நிகழ்வு நடந்தது போலும்......... Thanks...

orodizli
25th April 2020, 02:20 PM
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழிக்கு ஒப்ப எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள்....... Thanks...

orodizli
25th April 2020, 02:21 PM
எங்கள் இதய தெய்வம் இருந்தபோதும் கோடிப்பொண் மறைந்தும் (மன்னிக்கவும் சகோதர ர்களே நம்முள் என்றேன்றும் வாழ்ந்தக்கொண்டிருப்பவர்) கோடிப்பொண்!!!..... Thanks...

orodizli
25th April 2020, 02:22 PM
பாலா எம்.ஜி.ஆர் பதிவேற்றம் செய்ததில் எந்தத்தவறும் இல்லை. புரட்சித்தலைவரின் படம் எந்த நேரத்தில் போட்டாலும் மக்களின் ஆராவாரம் குறைவதில்லை என்று எஸ்.வி.சேகர் சொன்னதில் என்ன தவறு அதை அண்ணா பதிவேற்றம் செய்ததில் என்ன தவறை கண்டுபிடித்துள்ளீர்கள் மனசாட்சிப்படி சொல்லுங்கள் பாலா எம்.ஜிஆர் போன்ற ஒரு சிலர்தான் தலைவரின் புகழை மங்காமல் நம்மிடையே வைத்துள்ளனர் அதிலும் பாலா அண்ணா சேவை அளப்பறியது. சும்மா சும்மா பதிவேற்றங்களை குறைசொல்வது அழகல்ல. குறை சொல்லும் யாரும் தலைவரை பற்றி பதிவேற்றம் செய்துள்ளனரா? எந்தக்கட்சிக்கும் சொந்தக்காரர் நம் தலைவர். நன்றி மறந்த சிவாஜி., வாலி இப்படிப்பட்டவர்களே தலைவரை போற்றியதை பதிவேற்றம் செய்ததில் என்ன தவறு. பாலா அண்ணா தங்களின் சேவை தலைவரின் புகழை மங்காதிருக்க மேலும் மேலும் பதிவேற்றம் தொடருங்கள். குறை கூறுவோரை விட்டுத்தள்ளுங்கள். சும்மா சும்மா குறை கூறுவதே வேலை இவர்களுக்கு. ஒரு பதிவை காப்பி அடித்து போட்டேனாம் உடனே அதில் ஆயிரம் குறை கண்டனர். தலைவரின் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. தலைவரின் பதிவேற்றமும் அப்படியே. புறம் சொல்லுவோர் பற்றி கவலை வேண்டாம் வீணே பதிலுரை தந்து அவர்களை மீண்டும் பெரிய ஆளாக்க வேண்டாம். தோழரே பதிலுரை தந்திருக்க மாட்டேன். உம்மை குறை கூறியதால் சபைக்கு வந்தேன். தொடரட்டும் தங்கள் பணி.... Thanks...

fidowag
25th April 2020, 03:15 PM
தினமலர் -25/04/20- மறக்க முடியுமா*? - உலகம் சுற்றும் வாலிபனை*
---------------------------------------------------------------------------------------------------------
உலகம் சுற்றும் வாலிபன் வெளியான*நாள் -11/05/1973
தயாரிப்பு "எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் .* இயக்கம் : எம்.ஜி.ஆர்.*
நடிப்பு : எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம் ) மஞ்சுளா, லதா, சந்திரகலா ,மேத்தா*(தாய்லாந்து*நடிகை ) நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன் , அசோகன், நம்பியார், மனோகர்*,வி.கோபாலகிருஷ்ணன் , மற்றும் பலர்*
இசை : மெல்லிசை மன்னர்*எம்.எஸ். விஸ்வநாதன் .
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில்*ஏற்பட்ட*, பெரும் திருப்பத்தின்போது வெளியான*படம் .* எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டு , அ.தி.மு.க. துவங்கியபின் , இப்படம், அந்த கட்சி கொடியுடன் வெளியானது*
இப்படத்திற்கு அப்போதைய ஆளுங்கட்சியான* தி.மு.க. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது .* அதை தகர்த்தெறிந்து எம்.ஜி.ஆர். வெற்றிவாகை சூடினார் .**

இப்படத்தால் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம் .* விஞ்ஞானியான முருகன் மின்னலை*சேமித்து வைத்து, அதை ஆக்கபூர்வ*பணிக்கு*பயன்படுத்த நினைப்பார் .அத்திட்டத்தின் பார்முலாவை*வில்லன் கூட்டம் , அபகரிக்க முயற்சி செய்யும்*.இதை*விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வு துறை அதிகாரியுமான, ராஜு*எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் .என்பது*தான் கதை .

முருகன், ராஜு*என்ற இரு கதாபாத்திரங்களையும் , எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருப்பார் .* மஞ்சுளா, லதா, சந்திரகலா, என்று மூன்று கதாநாயகிகள் .நாடு நாடாக பயணிக்கும் சர்வதேச கதை .* அதை வெகு திறமையாக கையாண்டு இருப்பார்*இயக்குனர்* எம்.ஜி.ஆர்.*

விஸ்வநாதன் இசையில்*கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர்*பாடல்களை எழுதினர் .* நமது வெற்றியை*நாளை சரித்திரம் சொல்லும், லில்லி*மலருக்கு கொண்டாட்டம், சிரித்து வாழ வேண்டும்,*நிலவு ஒரு பெண்ணாகி, தங்க தோணியிலே*, பச்சைக்கிளி முத்துச்சரம்,பன்சாயி, உலகம் அழகு கலைகளின் சுரங்கம்*, ஆகிய அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன .*

மசாலா நடிகர்*என*நினைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் , உலகம் சுற்றும்*வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி*என்பதை*புரிந்துக் கொள்வர் .

எப்போதும்*இளமையாக இருப்பான், உலகம் சுற்றும் வாலிபன் , மறக்காமல் பார்த்து மகிழுங்கள் .

orodizli
25th April 2020, 05:27 PM
******************************* கண்ணன் என் காதலன் ******************************* மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் வாணிஶ்ரீ இணைந்து நடித்த படம் "கண்ணன் என் காதலன்" (சத்யா மூவிஸ் தயாரிப்பு)நடிகர்கள் "சோ" " தேங்காய் சீனிவாசன்" மற்றும் பலர் நடித்த இப் படம் 1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி அதாவது ,
இன்றைய...நாளான 25/04/ ல் வெளியானது.
மக்கள் திலகம் அவர்கள் , மிகவும் அழகாக தோன்றிய படங்களில் இதுவும் ஒன்று.
நடிகை வாணிஶ்ரீ புரட்சித்தலைவருடன் இணைந்து நடித்த முதல் படம் "கண்ணன் என் காதலன்".
(கண்ணன் என் காதலன் பிறகு தலைவன் , ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்கள் நடித்தார்)
நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் புரட்சித்தைவருடன் சேர்ந்து நடித்த முதல் படம்.... "கண்ணன் என் காதலன்"
(கண்ணன் என் காதலன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 26 படங்கள் நடித்துள்ளார்)
அதை போன்றே...
நகைச்சுவை நடிகர் "சோ" மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் சேர்ந்து நடித்த முதல் படம் "கண்ணன் என் காதலன்"
(கண்ணன் என் காதலன் முதல் சங்கே முழங்கு வரை 13 படங்கள் நடித்துள்ளார்)
அந்நாளில் இப்படம் சென்னை ஸ்டார் அரங்கில் 50 நாட்கள் , பிரபாத் 56 , மேகலா 56 , நூர்ஜகான் அரங்கில் 50 நாட்களும் , மதுரை சிந்தாமணி அரங்கில் மட்டும் 92 நாட்கள் ஓடியது *

" KANNAN EN KAADHALAN "
(transl. Kannan my lover)
is a 1968 indian tamil language film , starring M.G.Ramachandran , in the lead role and jayalalithaa with Vanisree , S.A. Ashokan and Cho Ramaswamy , among others.
Kannan en kaadalan

Directed by :
pa.Neelakantan
Produced by :
R.M.Veerappan
Written by :
Vidwan Ve. Lakshman &
Na. Pandurangan
Screenplay by :
R.M. Veerappan
Story by :
A.S.Pragasam
Starring :
M.G. Ramachandran
Jayalalitha
Vanisree
Music by :
M.S.Vishvanathan
Cinematography :
V.Ramamoorthy
Edited by :
C.P.Jambulingam
Production company :
Sathya Movies
Distributed by :
Sathya movies
Release date :
25 /04/1968
Running time :
142 minutes
Country :
India
Language :
Tamil
Music composed by
M.S.Vishwanathan (1)(2)The films soundtrack was under label Saregama (3)

No.song singers Lyrics Lenth (m:ss)
a opening tittle music M.S.Vishwanathan no lyrics 01 : 52 (instrumental)
b kannan on the piano Mallika on the floor 01:02 (instrumental)
1 - Gettigaariyin poyyum
T.M.Soundararajan & P.Suseela
Lyric : Alangudi somu
03:27 / 03:37 (film Version)
2 - Paaduvor Paadinaal
T.M.Soundararajan
Lyric : Vaali
03:06 / 04:41 (film Version)
c - Kannan , Malathi & action on music (part 1)
M.S.Vishwanathan No Lyrics 02:42 (instrumental)
d - kannan Malathi & action on music (part 2) 01:32 (instrumental)
3 - kangal irandum
T.M.Soundararajan & P.Suseela
Lyric : Vaali
03:07 / 03:37 (film version)
4 - Sirithaal thangapadumai
T.M.Soundararajan & P.Suseela
Lyric : Aalanvudi somu
03:12 / 04:02 (film version)
5 - Minminiyai kanmaniyai
T.M.Soundararajan & L.R.Eswari
Lyric : Vaali
03:57 / 03:54 (film Version)
6 - Paaduvor Paadinaal
(reprise 1)
T.M.Soundararajan &
Jayalalithaa (dialogues) 02:57 / 02:58 (film version)
7 - Paaduvor Paadinaal
(reprise 2)
T.M.Soundararajan & P.Suseela
0:49 (film version)

All type message created by :
MGR in kaaladi nizhal
Ka. Palani
Admin :
" UZAIKKUM KURAL "
Whatsup group

தகவல் கிரியேட்டிவ் :
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
அட்மீன் :
" உழைக்கும் குரல் " தளம்
��.......... Thanks.........

orodizli
25th April 2020, 05:30 PM
Really, I'm very much amazing that how wonderful Dr.M.G.R is. He's. known for camera, screen play, direction, lighting and everything and sum up, he's multifaceted and his name and fame will remain till the earth exists.
This is a very beautiful post.

He is God in all 7 worlds.

Congratulations.
P.Radhakridhnan, M.A.,
B Ed,
Sub-Inspector of Police (Retd)........ Thanks...

orodizli
25th April 2020, 05:31 PM
Really, I'm very much amazing that how wonderful Dr.M.G.R is. He's. known for camera, screen play, direction, lighting and everything and sum up, he's multifaceted and his name and fame will remain till the earth exists.
This is a very beautiful post.

He is God in all 7 worlds.

Congratulations.
P.Radhakridhnan, M.A.,
B Ed,
Sub-Inspector of Police (Retd)........ Thanks...

orodizli
25th April 2020, 05:32 PM
Radhakrishnan P
Thank you sir.
Tamil people are very cautious to believe a person &will get faith after a very good analysis about him or her.
In that manner, they found MGR as their. Real hero & then they began to worship him.According to their logic,
A leader must be---
-- brave enough to rescue his people
---kind enough on his citizens
---mercy enough among the poor people
---having enough respect among women esp.motherhood
---good enough. to donate his wealth for others
---talented enough to tackle any difficult situation
---moreover his dazzling beauty is the bonus point for him.
They saw all the above qualities in MGR
as well as in the screen and also in the real life.
So the fame of MGR remains glowing now itself....... Thanks...

orodizli
25th April 2020, 05:35 PM
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

தலைவரின் அருமையான பாடல் வரி...

நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால

நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால....... Thanks...

orodizli
25th April 2020, 05:36 PM
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

தலைவரின் அருமையான பாடல் வரி...

நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால

நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால....... Thanks...

orodizli
25th April 2020, 05:41 PM
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள் பணம் சேர்ந்ததும் ஒரு வீடு வாங்க நினைத்தார் . அதனை தலைவரிடமும் சொன்னார் . அந்த சந்தர்பத்தில்தான் தனது மைத்துனருக்கு பார்த்த வீட்டை சந்தியா வாங்கும்படி செய்தார் புரட்சிதலைவர் . அப்போது சாதாரண வீடாக இருந்ததை பின்னாளில் ஜெயலலிதா முன்னணி நடிகையாக ஆகிய பின் அதனை புதுப்பித்து கட்டினார் . அவரது துரதிருஷ்டம் அந்த வீட்டில் குடிபுகும் முன்பே அவரது தாயாரை இழந்தார் ...
இவருக்கு மட்டுமல்ல திரையுலகை சார்ந்த பலருக்கும் இதுபோல் வீடு வாங்கி தர உதவி செய்துள்ளார் அவரவர் பணத்தில் .
இது போக பலருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து முழுமையாகவோ , அல்லது ஒரு பகுதியோ தந்தும் வாங்கி தந்துள்ளார் ....... Thanks...

orodizli
25th April 2020, 05:45 PM
“நான் சதிலீலாவதியில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, கம்பெனி ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம் அது...

எங்கள் கம்பெனியில் இருந்த மணி என்பவர் பிராமண வகுப்பைச் சேர்நதவர். ஆகவே, சாப்பிடும் போது தனியாக உட்கார்ந்துதான் சாப்பிட விரும்புவார்.

அதாவது வேறு வகுப்பாருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடமாட்டார்.

இந்தத் தவறான போக்கை நீக்கக் கருதிய என்.எஸ்.கே. கடைசியாக எப்படியும் தடுக்க வேண்டுமென முடிவு செய்து திட்டமும் தீட்டி எங்களுக்கெல்லாம் யார் யார் என்னென்ன செய்யவேண்டுமென்று யோசனையும் கூறினார்.

ஒரு நாள் மணி அவர்களும், மற்றவர்களும் சமையல் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்.எஸ்.கே ஏதோ வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தவர்,

“என்னய்யா இது, எவ்வளவு நாழியா ரசம் கேக்கிறது? சேச்சே” என்று சொல்லியபடி எழுந்து, ரசப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டுவந்தார்.

முன்பே திட்டமிட்டபடி நானும் மற்றவர்களும் சமையலறைக்குள் சென்று பொரியல், மோர், சாம்பார், முதலியவைகளைப் பாத்திரத்தோடு தூக்கிக் கொண்டு வந்து, நாங்களே பரிமாறிக் கொண்டோம்.

உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், சாம்பார் சாதத்தோடு அப்படியே உட்காந்திருந்தார்கள்.

ரசம், மோர், கறி முதலியனவெல்லாம் மற்றவர்களால் தீண்டப்பட்டு விட்டதால், தீட்டாகிவிட்டதே என்ன செய்வார்கள்?

மணி அவர்களுக்கு ஒரே ஆத்திரம். அவரோடு உணவருந்திய மற்ற பிராமண நண்பர்களும் கோபத்தோடு எழுந்து வெளியே வந்தார்கள்.

நாங்களோ பெருவாரியானவர்கள். என்ன செய்வார்கள் என்.எஸ்.கே-யைக் கண்டிப்பதற்கோ பயம்.”

- 30-09-1957 ல் வெளிவந்த ‘நடிகன் குரல்’ இதழில் #மக்கள்திலகம் #எம்ஜிஆர்........ Thanks...

orodizli
25th April 2020, 05:46 PM
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்களே...

நீங்கள் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கும் சப்பளத்திலிருந்து ஒரு துரும்பை கிள்ளி முதல்வர் நிவாரண நிதி கொடுக்க யோசிக்கிறீர்களே..

அன்று எங்களின் #மக்கள்திலகம் தனது ஒரு படத்தின் சம்பளம் முழுவதையும் நாட்டின் பாதுகாப்பு நிதியாக கொடுத்தாரே..

பாருங்கள்... நன்றாக பாருங்கள்.. அவர் பெயரை சொல்லி ஆட்சிக்கு வர ஆசைப்பட்டால் மட்டும் போதாது..

முதலில் அவரைப்போல செயலில் காட்டுங்கள்...

முடியாது... அது உங்களால் முடியவே முடியாது..

அதற்கெல்லாம் ஒரு குணம் வேண்டும்...

அந்த வள்ளல் குணம் அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது.. வரவே வராது....... Thanks...

orodizli
25th April 2020, 05:47 PM
வாரிக்கொடுப்பது என்பது இயல்பாய் வரவேண்டும். மக்களை நேசிப்பதற்கு உண்மையான பரிவு வேண்டும். மக்களிடம் பயப்படுவதற்கு உண்மையான.மரியாதை வேண்டும்.இதனையொத்த பல இயல்புகள் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர்.மக்கள்திலகம்...... Thanks...

orodizli
25th April 2020, 08:01 PM
https://youtu.be/PnUbbsrkNUA......... Thanks...

orodizli
25th April 2020, 08:02 PM
https://youtu.be/YLDnd1nTdmE... Thanks......

orodizli
25th April 2020, 08:03 PM
https://youtu.be/MMmNXYbj87Y... Thanks...

orodizli
25th April 2020, 08:04 PM
https://youtu.be/5p6qPk48F28... Thanks...

orodizli
25th April 2020, 08:15 PM
தற்போது பல தொலைக்காட்சிகளில் பல புகழ் பெற்ற புது படங்கள் ஒளிபரப்பு ஆகிறபோது தான் அதற்கெல்லாம் counter கொடுக்க புரட்சி நடிகர் படங்கள் தான் தேவைப்படுகிறது... அதுதான் அதிசயம், அற்புதம்... Thanks...

orodizli
25th April 2020, 08:23 PM
நல்ல பதிவு...
ஆனால் தன்னுடைய (AVM) அடுத்த படத்திற்காக வெள்ளிவிழா ஓட வேண்டிய அன்பே வா வை ஓடமால் தூக்கியது அவர்தான்....feedback... Thanks...

orodizli
25th April 2020, 08:24 PM
A good personality,
A very nice gentleman.
A very good director.
I pray those who want to be a good personality, see Dr.M.G.R films and definitely they will never do ant harm like me.
I love and pray M.G.R daily and all the credits would go to Him.(God)..... Thanks...

orodizli
25th April 2020, 08:27 PM
இந்த* " சர்வாதிகாரி" படத்தில்*.எம்*ஜிஆர்*அவர்களின் வாள் வீச்சை பார்க்கவேண்டுமே.எவ்வளவு*நளினம்.அதுவும்*கடைசியில்.ந ம்பியாருடன்*மோதும்போது**ஆஹா...அபாரம்*தியேட்டரில்.அ த*களமாகும்.இப்போதுள்ள*பொரி உருண்டைகளுக்கு தெரியாது... Thanks...

orodizli
25th April 2020, 08:29 PM
அரசு பாடப்புத்தகங்களில் எம்ஜிஆர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை பாடமாக வைத்தால் எல்லா மாணவ மாணவிகளும் மனிதாபிமானம் , கஷ்டத்தில உதவுவது, தாய் மீது பாசம், நேர்மை , மக்கள் பணி ஆகியவற்றை கற்றாலே போதும், நல்ல மனிதனாக வாழ முடியும்...... Thanks...

orodizli
25th April 2020, 08:37 PM
இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் 'தேவதாஸ்’ படத்தின் இசைக் கோர்ப்பை முடிக்கும் முன்னரே இறந்துவிட, மீதி இருந்த இரண்டு பாடல்களையும் அவருடைய பிரதான உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும்தான் முடித்துக்கொடுத்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கே., இவர்கள் இருவரையும் இணைத்து 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி’ எனப் பெயர் போட்டு தான் தயாரித்த 'பணம்’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு தந்தார். இசைக் குழு நண்பர்களான இருவரும் 'மெலடி பார்ட்னர்கள்’ ஆனது இப்படித்தான். ஒருகட்டத்துக்குப் பின்னர் ராமமூர்த்தி விலகிக்கொள்ள, அதன் பிறகு தமிழ்த் திரையிசையின் மன்னர், மந்திரி, தளபதி, பட்டாளம்... என அனைத்துமாக விஸ்வரூபம் எடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

எம்.எஸ்.வி-யுடன் இசைபடப் பயணித்த புலவர் புலமைப்பித்தன், அவரை 'குழந்தை’ என்றே சொல்கிறார்...

''உலக விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். 'காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது சொன்னால், 'அப்படியா... எப்ப வந்தார்?’ என எட்டிப்பார்த்து விசாரிக்கும் அளவுக்கு வேட்டி கட்டிய வெள்ளந்திப் பிள்ளை. வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார்.வரும்போது பத்து, பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கிய இட்லிகளைக் கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். 'வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க. இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துரும்’ என என்னிடம் சொல்லிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படி சிரிப்பார். அப்படி ஒரு பிள்ளை மனசு.

எம்.எஸ்.வி ஒரு பாடலுக்கு மெட்டு போட அமர்ந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரம் சரமாகக் கொட்டும். 'நேற்று இன்று நாளை’ படத்துக்காக நான் எழுதிய 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை...’ பாடலுக்கு கடகடவென, அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார்.

அந்தப் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த சமயம், சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்குச் சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று

எம்.எஸ்.வி-யிடம், எம்.ஜி.ஆர் அண்ணனுக்கு நீ முத்து முத்தா பாட்டு போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ எனக் கேட்க, அது கிண்டல் எனக்கூடப் புரியாமல் பதறிவிட்டார்

எம்.எஸ்.வி. 'அண்ணே... எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டும்தான் நானு. பாட்டு எழுதினது எல்லாம் வாத்தியார் அய்யாதான். நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்து எம்.எஸ்.வி-யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

எம்.எஸ்.வி மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். 'தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறாரா?!’ என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்.

அப்போது தேவர் ஃபிலிம்ஸுக்குப் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்தான். ஆனால், ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, 'தம்பி... நம்ம கம்பெனியோட புதுப் படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க’ எனச் சொல்லி, பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., 'மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர், எம்.எஸ்.வி-யின் அம்மா நாராயணி அம்மையாரிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் 'என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி. அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். வளமான வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல், அதிலும் பண்பாடு காத்தவர் அவர்.

பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் சம்பந்தப்பட்ட கவிஞரைப் பாராட்டு மழையில் நனைத்துவிடுவார் எம்.எஸ்.வி. அதுவும் ஒருமுறை எனக்கு அவர் அளித்த பாராட்டு வாழ்நாளுக்கான வரம். 'வரம்’ படத்தில் ஒரு பாடலில் 'அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா...’ என ஒரு வரி எழுதினேன். அதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய், என் காலைத் தொட்டுப் பாராட்டினார். 'இப்படி நீங்க செஞ்சா, நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், 'வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா, அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜனம்?’ என்றார். அந்த அளவுக்கு வார்த்தைகள் மீது காதல்கொண்ட மகா கலைஞன் அவர். ஒரு பாடல் நன்கு வந்துவிட்டால் அதற்கான பெருமையை, 'வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனசுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு, துட்டு வாங்கியது கிடையாது.

10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்; 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்.
டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது.

டி.எம்.எஸ்., ட்யூன் கற்றுக்கொள்ளும் வரை விட மாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும், அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார் எம்.எஸ்.வி.

அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். 'மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்...’ பாடலை அழுதுகொண்டே மெட்டு அமைத்துப் பாடினார் எம்.எஸ்.வி.

நாங்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அ.தி.மு.க பிரசாரப் பாடல்களும், தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி இசையமைக்க நான் எழுதிய, 'வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல், ஒலிக்காத ஊரே கிடையாது. 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டே மணி நேரத்தில் ஒன்பது பாடல்களுக்கு மெட்டு அமைத்து, இரண்டு நாட்களில் பதிவுசெய்தும் அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி....... Thanks...

orodizli
25th April 2020, 08:39 PM
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!....... Thanks...

orodizli
25th April 2020, 08:42 PM
Varalaatru padhivu. Arumai. Ratham sindhi valarthaar. MGR pictures emblem DMK kodi. Chakravarthi Thirumahal padathil Thalaivar name was Udhaiya Suriyan. Thannudaiya padathil yaedho oru idathil Katchiyin kolhaiyai solliduvar. Basement of DMK was MGR only...... Thanks...

orodizli
25th April 2020, 08:45 PM
மக்கள் திலகத்தை தேடி பதவியும் புகழும் வந்தன.கருணாநிதி தேடி சென்று பெற்றவைதான் எல்லாம் இருக்கும் போதும், இறந்த பிறகும்.ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.?கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?...... Thanks...

orodizli
25th April 2020, 08:45 PM
Ulaka arasial varalaatril oru thanimanithan katchiyai vittu thookki eriyapattavar thanikatchi aarambitchu kurukiya kaalaththil oru byeelectionil panam aal palam ulla aalum katchiyai oru laksham vaaku viththiaasaththil thorkatiththathu sariththira saathanai purinthavar namathu mahonnatha vasool chakravarthi Makkal Thilakam M G R avarkal........ Thanks...

orodizli
25th April 2020, 08:48 PM
MGR-கவிஞர் வாலி

கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.

சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.

அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'

சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.

முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.

எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.

இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.

ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.

இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியை அழைத்து ‘அடிமைப் பெண்' படத்தில் அம்முவை (ஜெயலலிதா) சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடச் சொல்லப் போகிறேன். அதற்கான ஒரு பாடலை எழுதுங்கள் என்றார். வாலியும் ‘அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதை செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடினார்.

ஒரு நாள் கவிஞர் வாலி எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணா நீங்கள் பின்னாளில் அவரைப் (ஜெயலலிதா) பாட வைக்கப் போறீங்க என்று தெரிந்ததான் அன்றே ஒரு பாடலை எழுதிவிட்டேன். அந்தப் பாடல்
‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன் தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் கோயில் இல்லாத இறைவன்''
இதை ‘அரசகட்டளை' படத்தில் செல்வி ஜெயலலிதாவே பாடி நடித்திருப்பார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.

அதே போன்று ‘அன்னமிட்டகை' படத்தில்
‘அன்னமிட்ட கை இது ஆக்கிவிட்ட கை'
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம்
வாழவைத்த அன்னமிட்ட கை'
என்று எழுதியிருந்தார் வாலி. இந்தப் பாடலின் கருத்துப்படி எம்.ஜி.ஆர். முதல்வரானதும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அவருடைய கை எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட கையாகத் திகழ்ந்தது.

‘பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்று ஒரு பாடலை எழுதினார் வாலி. எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும் நல்ல நல்ல பிள்ளைகள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அவரை நாடாள வைத்தார்கள். ‘காவல்காரன்' படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது, கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' என்ற பாடலை எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அப்பொழுது எம்.ஜி.ஆர் குண்டடிப்படிருந்தார். அவர் உடல் நலம் பெற்று வந்து இந்தப் பாடல் காட்சியில் பாடி நடித்தார்.

இப்படி பதினாறாயிரம் பாடல்களுக்கு மேல் ஓய்வின்றி எழுதி சாதனைப் புரிந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மட்டும் நான்காயிரம் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி.

எல்லா தலைமுறையினருக்கும் பாடல்கள் எழுதிய ஒரே பாடலாசிரியர் கவிஞர் வாலி மட்டும்தான். இவர் ஒரு முருக பக்தர் அதனால் தான் இவர் எழுதிய பாடல் வரிகளிளெல்லாம் சக்திப்பெற்று நிஜங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பாடலாசிரியராக மட்டுமல்ல.. ஒரு எழுத்தாளராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர்.

நடிகராக அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். பொய்க்கால் குதிரையில் நடித்ததோடு, கதை வசனத்தையும் எழுதினார்.

1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் கவிஞர் வாலி. சொந்தப் பெயர் ரங்கராஜன். இவருக்கு வாலி என்று புனைப்பெயர் வைத்தவர் பாபு என்ற பள்ளி நண்பர்....... Thanks...

orodizli
25th April 2020, 09:04 PM
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த நடிகை கண்ணம்மா அவர்கள் ஆரம்பத்தில் நாடங்கங்களில் நடிக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பின் அரிச்சந்திரா என்ற படத்தில் நடிகை ஆகி.

பின் பி.யு.சின்னப்பா அவர்கள் உடன் புகழ் பெற்ற ஜோடியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.. வயதான பின் அனைத்து தமிழ் முன்னணி நாயகர்களின் அம்மாவாக நடிக்க துவங்கி பெயர் பெற்றார்.

அந்த காலத்தில் 85000 ரூபாய் சம்பளம் வாங்கினார்... ஆந்திராவில் புகழ் பெற்ற வார நகைகள் என்று திங்கள் செவ்வாய் என்று தினம் தினம் போடும் நகைகளை வாங்கி குவித்தார்.

பின் தன் கணவர் நாகபூஷனம் உடன் இணைந்து 25 படங்களை தொடர் தோல்வி படங்களை தயாரித்து பொன் பொருட்களை இழந்தார்.

இழந்தவற்றை மீட்க தலைவர் சரோஜாதேவி நடித்த தாலி பாக்கியம் படத்தை எடுத்தார்.. அவர் கணவரே இயக்குனர்.

படப்பிடிப்பு கர்நாடகாவில் 150 பேர் கொண்டு நடந்து கொண்டு வரும் போது இவர் கொண்டு போன 5 லட்ச ரூபாய் பணம் களவு போக அங்கு உள்ளவர்களுக்கு பணம் கொடுக்க இல்லாமல் தவிக்க.

விஷயம் அறிந்த தலைவர் அங்கு இருந்து சென்னை மானேஜர் குஞ்சப்பன் மூலம் 5 லட்சம் வரவழைத்து கண்ணம்மா கையில் கொடுத்து அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றினார்.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி அடையாமல் பெரிய அளவில் லாபம் வராமல் நஷ்டம் இல்லாமல் ஓடினாலும் ,அவரின் கடன்களை அடைக்க போதவில்லை.

பின் சென்னையில் அவர் கணவர் மிச்சம் மீதி இருந்த சொத்து களையும் தொலைக்க அவர் வீடு மட்டும் மிஞ்ச

அதை ஏமாற்றி பிடுங்க பலர் தயார் ஆக ஒருவர் சொன்ன யோசனை படி அந்த வீட்டை எம்ஜியார் பெயருக்கு எழுதி கொடுங்கள் ஒரு பயல் கிட்ட வரமாட்டான் என்று சொல்ல.

அதன் படி தலைவருடன் அவர் பேச உங்கள் யோசனை சரி ஆனால் வீட்டு பத்திரம் உங்கள் கையில் இருக்கட்டும் என் பெயருக்கு எழுதி கொடுத்தது போல இருக்கட்டும் என்றார் பொன்மனம்.

அதன் படி கண்ணம்மா அவர்கள் 1964 மே மாதம் 7 ஆம் தேதி இறப்பதற்கு 4 நாட்கள் முன்னால் அந்த வீட்டு பத்திரத்தை தலைவர் இடம் கொடுக்கிறார்.

அவர் புதைக்க பட்ட போது அவரிடம் மீதி இருந்த கொஞ்சம் நகைகளை அவர் விருப்பப்படி அவரோடு சேர்த்து அடக்கம் செய்தார்களாம்..

பின் குறிப்பு...

நகைகள் உடன் கண்ணம்மா அவர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்ட சேதி நெருப்பாய் பரவ அன்று முதல் அந்த இடுகாடு கண்ணம்மா பேட்டை என்று அழைக்க பட ஆரம்பித்ததாக ஒரு ஊர்ஜிதம் செய்ய படாத தகவலும் உண்டு.

அந்த அவரின் வீட்டை கஷ்டம் போக்க அந்த காலத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பெரும் தொகையை அவரிடம் கொடுத்து இருக்கிறார் நம் தலைவர்....

மற்ற புகழ் பெற்ற நடிகர்கள் அம்மாவாக அவர் நடித்து இருந்தாலும் தாயை காத்த தனயன் நம் தலைவர் மட்டுமே.

நன்றி....வாழ்க எம்ஜியார் புகழ்...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி..

படத்தில் கே.பி. சுந்தராம்பாள் அவர்களிடம் ஆசி பெரும் தலைவர்....... Thanks...

orodizli
25th April 2020, 09:05 PM
நாகபூஷணம் தெலுங்கு நடிகர் ! 1974 புதுவை சட்டமன்ற பொது தேர்தல் ! புதுவையை சேர்ந்த ஒரு தொகுதி ஆந்திர அருகில் உள்ள ஏனம் தொகுதிக்கு அண்ணா தி மு க வேட்பாளரை நிறுத்த வேண்டும் ! அங்கு நம் கட்சி கிடையாது ,நிற்க்க வேட்பாளரும் கிடையாது ! கட்சி மானம் காப்பாற்ற புதுவையை சேர்ந்த அன்றய மகளிரணி செயலாளர் தெலுங்கு பேசும் ஜெயலட்சுமி என்ற அம்மையாரை ஏனம் வேட்பாளராக அறிவித்து அழைத்துச் சென்று தலைவர் செலவுலேயே தேர்தல் நடந்தது ! நடிகர் நாகபூழனம் அவர்களை இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்ய வைத்தார் நம் தலைவர் ! வெற்றி வாய்ப்பை இழந்ததோம் ! பழைய நினைவுகள் ! நன்றி ! ...... Thanks...

fidowag
25th April 2020, 09:06 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -24/04/2020 அன்று* வின்*டிவியில் வெளியான* தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த கருத்தான பாடல்கள் அமைப்பதில் முனைப்புடன் இருந்தார் .* குழந்தைகள்தான்* எதிர்காலத்தில் வளர்ந்த சக்திகள் , நாட்டை முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தும் தலைவர்களாக வரக்கூடியவர்கள்*பல உயர்ந்த பட்டம், பதவிகளை அடைந்து மத்தியிலும், மாநிலத்திலும் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியை செவ்வனே நடத்தக் கூடியவர்கள்* அப்படிப்பட்ட குழந்தைகளின் கருத்தை கவரும் வண்ணம் ஏராளமான பாடல்கள் தன் படங்களில் அமையும்படி பார்த்துக் கொண்டார் .**


ஒருமுறை படப்பிடிப்பில் நடிகை கே.ஆர். விஜயாவுடன் நடித்து வந்தார். நடிகைக்கு காலையில் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருந்தது .* காபியில் உள்ள நச்சுத்தன்மைகளை விளக்கி நடிகை கே.ஆர். விஜயா அந்த பழக்கத்தை கைவிடும்படி செய்தார் .* இதுபோன்று படப்பிடிப்புகளில் பல கலைஞர்கள் உடன் நடிக்கும்போது அறிவுரைகள், போதனைகள் செய்ய தவறுவதில்லை .


எம்.ஜி.ஆர். தன் படங்களில் வரும் பாடல்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடும்படி அமைய வேண்டும் ,அவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,என்று கூறியதோடு , குழந்தைகள் மீது அளவற்ற*அன்பு, பாசம் வைத்திருந்தார் .*நீதி போதனைகள், சமூக*சீர்திருத்த*கருத்துக்கள்*அடங்கிய*பாடல்கள ுக்கு முக்கியத்துவம் அளித்தார் .அந்த பாடல்கள்*சமூகத்தில் பெரிய தாக்கத்தை*ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையில்*கவிஞர்**பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரம் எழுதிய*சின்ன*பயலே*, சின்னப்பயலே சேதி*கேளடா*,.......* ஆளும் வளரனும் , அறிவும்*வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை*ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்*மகிழ்ச்சி ..... மனிதனாக வாழ்ந்திட வேணும்*மனதில் வையடா*, தம்பி மனதில்*வையடா ....* வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா*.. ... என்று காலம் கடந்து*நிற்கும்*வைர வரிகளை* அரசிளங்குமரி திரைப்படத்தில்*அறிமுகப்படுத்தினார்.**


சில*காலம்* சந்தர்ப்ப சூழ்நிலை, சமுதாய சீரழிவு*காரணமாக*திருடனாக வாழ்ந்தவன் ,நல்லவனாக திருந்தி வாழ்வதற்கு ஏற்ப ஒரு திரைக்கதை தயாரானது . அதற்கு*டைட்டில்**பெயர் வைப்பதற்கு* பல பேர் சொன்ன*தலைப்புகளை நிராகரித்து , அந்த சமயத்தில் வித்வான் லட்சுமணன் அவர்களின்*யோசனைப்படி திருடாதே*என்று தலைப்பை*தேர்வு செய்து , அதற்காக*அவருக்கு*ரூ.500/- பரிசளித்தார்* எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் படத்தின்*தலைப்புகளை தேர்வு செய்வதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக*இருந்தார்.எதிர்மறை கருத்துக்கள்*மக்களை சென்றடையக்கூடாது என்று* .*மக்களுக்கு*பாசிட்டிவ்*ஆன* தலைப்புகள், செய்திகள், கருத்துக்கள்*தன் படத்தில் புகுத்துவதில் ஆர்வம் செலுத்தினார் .இந்த படத்தில்*கவிஞர் பட்டுக்கோட்டை*கல்யாண சுந்தரத்தின் திருடாதே, பாப்பா திருடாதே,வறுமை நிலைக்கு*பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே .......சிந்தித்து*பார்த்து செய்கையை*மாத்து, சிறிசாய் இருக்கையில் திருத்திக்கோ,தெரிஞ்சும்*தெரியாம*நடந்திருந்தா திரும்பவும் வராமல்*பாத்துக்கோ*..........திருடனாய்*பார்த்த ு திருந்தாவிட்டால் திருட்டை*ஒழிக்க முடியாது*போன்ற*வரிகள்*எக்காலத்திற்கும் பொருந்தும்*.


கன்னித்தாய் என்கிற*படத்தில்*குழந்தைக்கு அறிவுரை சொல்லும்*பாடலில்*தவிதவிக்கிற ஏழைக்கெல்லாம் திட்டம் போடணும்*, அதை சரிசமமான*பங்கு போட சட்டம் போடணும், குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்*ஏழை குடிசை*பகுதியில்*பாலும் தேனும்*ஆறா*ஓடணும்*. ... கேளம்மா*சின்ன*பொண்ணு கேளு*என்ற பாடலில் இந்த வரிகள்*இருக்கும்.*ஏழை எளியோரின் துயர் துடைக்கும் வகையில்*தன் எண்ணங்கள் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்பதை*இந்த பாடலில்*வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.*


*வேட்டைக்காரன் படத்தில்*எம்.ஜி.ஆர். கௌபாய்*வேடத்தில்*நடித்தார்.எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான வேடம்.* அந்த படத்தில்*மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓடியாடி*நடித்தார். சில*காட்சிகளில் துள்ளல்கள் அதிகம்.* ஒரு இடத்தில உட்காராமல் படுவேகத்துடன், பம்பரம் போல சுழன்று சில காட்சிகளில் நடித்திருப்பார் படம் முழுவதும் மிகவும் உற்சாகமாக*நடித்திருப்பார் ..* இந்த படத்தில் வெள்ளி நிலா முற்றத்திலே என்ற பாடலில்*, தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லும்போது, நான்கு பேர்கள்*போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும், மானத்தோடு வாழ்வதுதான் சுய மரியாதை ......என்கிற வரிகளில் சுய மரியாதை பற்றிய விளக்கத்தை மிகவும் எளிதாக*குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில்*இருந்தது*.


நான் ஏன் பிறந்தேன் என்கிற படத்தில்*குடும்ப*பாங்கான கதை.* அவரது குடும்பத்தில் குழந்தைகள் நால்வர் இருப்பர்.* எம்.ஜி.ஆர். நடித்த*குடும்ப*பாங்கான படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது . வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற , திருமணம் ஆனவர்*என்ற உண்மையை*சொல்ல முடியாமல் , தன்னை காதலிப்பவரின் உடல்நலத்தையும், உயிரையும்*காப்பாற்ற வேண்டிய பொறுப்புகளை சுமந்து*பல துன்பங்களை கடந்து*இறுதியில் குடும்பத்துடன் ஐக்கியம் ஆவதுதான் கதை .இந்த படத்தில்*, தம்பிக்கு*ஒரு பாட்டு*அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடலில்* உயர்ந்தவர் யாரும் சுயநலம் இருந்தால்*தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே, உழைப்பால் பிழைப்போர்*தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே என்கிற* வரிகளில் ஜனநாயக*நாட்டிற்கு*தேவையான பொது உடைமை கருத்துக்கள்*அடங்கி இருக்கும் . வளரும் குழந்தைகளுக்கான நீதி போதனைகள், அறிவுரைகள் இந்த பாடலில் அமைந்தன .


எம்.ஜி.ஆர். தான் நடித்த**தனக்கு*பிடித்த*ஒரு சில*படங்களில் பெற்றால்தான் பிள்ளையா முக்கியமானது .* அதில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்கிற பாடலில் , கருணை இருந்தால்*வள்ளலாகலாம்.* கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,* இந்த மூன்றும் இருந்தால்*தலைவனாகலாம். என்ற வரிகள் அமைந்திருக்கும்.* வளரும் குழந்தைகள் நாளைய தலைவர்களாகவும், கடமை வீரனாகவும், பொறுப்பு மிகுந்த தேசியவாதியாகவும் உருவாக*இந்த பாடல் நல்ல படிப்பினையாக*இருக்கும் .இந்த பாடலில்*மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று ஒரு வரி இருக்கும். எம்.ஜி.ஆரின் உச்சரிப்பு அப்படியே இருக்கும். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனபோது* , இந்த படம் மறு தணிக்கைக்கு*சென்ற போது பாடல் வரியில்*அறிஞர் அண்ணா*போல் என்பதற்கு பதிலாக திரு.வி.க . போல் என்று வரும்படி செய்தார்கள்.* அப்போதைய அரசியல் சூழலில் சில*எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு இப்படி சில*சோதனைகள்*கொடுத்து*அவரது*தேர்தல் வெற்றிக்கு*தடை ஏற்படுத்தினர். ஆனால் அதையெல்லாம் மீறி*அவற்றை*தவிடு பொடியாக்கி*எம்.ஜி.ஆர். ஆட்சி பீடத்தில்*அமர்ந்தார் என்பது வரலாறு .


ஆனந்த ஜோதி படத்தில்*எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்தார் .இந்த படத்தில்*வரும் ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்,* தலைவன் ஒருவன்தான்*என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்*என்ற பாடலில் , தர்மத்தின்*சங்கொலி*முழங்கிடுவோம், தமிழ்த்தாயின் மலரடி*வணங்கிடுவோம்**என்கிற வரிகளில் மொழிப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகள் அடங்கிய கருத்துக்கள்*இருக்கும்.* அந்த காலத்தில் , இந்த பாடல்*பல பள்ளிகளில், சுதந்திர*தினம், குடியரசு தின*விழாக்களில்*மாணவ மாணவிகள்*பாடும் பாடலாக*அமைந்தது .


நம் நாடு படத்தில்தனது அண்ணனின் குழந்தைகளுக்காக** நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, என்கிற பாடலில்* விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் . தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் . என்ற வரிகள்*குழந்தைகளுக்கு நீதி போதிக்கும்* *வாத்தியாராக இருந்து சொன்ன கருத்துக்கள்*, நிஜத்தில்*எம்.ஜி.ஆர். தனது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குழந்தைகளை* தன் குழந்தைகளாக பாவித்து அவர்களை*படிக்க வைப்பதில் இருந்து , திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தானே* முன்னின்று நடத்தி வைத்துள்ளார்*


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல்**சினிமா , அரசியல் , பொது வாழ்க்கை என்று மூன்று உலகிலும்*உச்சத்தை*தொட்டவர் வேறு எவருமில்லை .ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஒரு மனக்குறை*இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்*கவிஞர் வாலி எழுதிய பாடலில்*பணம் படைத்தவன் படத்தில்*தனக்கொரு குழந்தை பிறக்கும்*தருவாயில், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான், தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்* (பேரறிஞர் அண்ணா*) வழியிலே*நடப்பான்*என்ற*பாடலில் நடித்தார் .பொதுவாக* எம்.ஜி.ஆர். குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் . அதனால்தான் , வறுமை, பசிப்பிணி காரணமாக எந்த குழந்தையும் பாதிக்க கூடாது என்கிற வகையில்*பள்ளிகளில், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் .* ஆரம்பத்தில் நிதிநிலை நெருக்கடி, எதிர்க்கட்சிகள் விமர்சனம் , அமுல்படுத்துவதில் சிக்கல்*இவையெல்லாம் இருந்தும்*திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை*அமுல்படுத்தி வருகின்றன தமிழகத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகள் சத்துணவு கூடம் என்ற பெயரில் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது . உலகமே இந்த திட்டத்தை வியந்து பாராட்டுகிறது . இதன் காரணமாக*பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .


எம்.ஜி.ஆர். சொந்தமாக இயக்கி தயாரித்த*நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் கண்ணதாசன், இன்னொருவர் எம்.ஜி.ஆர். கதை இலாகாவை சார்ந்த*ரவீந்தர். ரவீந்தருக்கு ஒரு சமயம்*திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது .எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மூலம் எம்.ஜி.ஆருக்கு*விஷயம் தெரிய வருகிறது .* எம்.ஜி.ஆர். ரவீந்தரை*திருமண பரிசாக*என்ன வேண்டும் கேள்,ஏதுவாகிலும் செய்கிறேன் என்று சொன்னபோது மாங்கல்யம் வாங்குவதற்கு ரூ.16/- வேண்டும் என்று கேட்டார் .அதை நீங்கள்தான்*தரவேண்டும் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். மறுத்ததோடு*, நான் இருமுறை*திருமணமாகி* மனைவியரை இழந்தவன். எனக்கு குழந்தை இல்லை.* எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். நீ வாழ வேண்டியவன். எனவேதான்*என் அண்ணனை*தரும்படி*கேட்டுக் கொண்டேன் என்று விளக்கினார் .**


ஊருக்கு உழைப்பவன் படத்தில்*கவிஞர் முத்துலிங்கத்தின் பிள்ளை தமிழ் பாடுகிறேன், ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் என்ற பாடல்* வரும்.,இந்த பாடலில்*எம்.ஜி.ஆருக்கு பிள்ளை இல்லை என்ற மனக்குறை, துயரம், சோர்வு*எல்லாம் தன்னுடைய முகபாவத்தில் தெரியும்படி***உணர்வுபூர்வமாக*நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்*, எல்லா துறையிலும் சாதித்த*எம்.ஜி.ஆர். தனக்கு*வாரிசு இல்லை என்ற மனக்குறையை போக்க தவித்தது போல் இந்த பாடல் அமைந்தது .*


உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே*, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே*என்கிற தத்துவப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பாடலின்*கருத்துக்கள் அமைந்தன . எம்.ஜி.ஆர். குழந்தைகளை நேசித்ததன்*பலனாக*, அவர்களது*ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு ,எந்தெந்த சொற்களை கேட்டால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்களோ ,அதற்கு தகுந்தபடி ,அவர்களின் சிரிக்கும் பாஷையில்* சிக்கு*மங்கு சாச்சா பாப்பா என்று குழந்தைகளே கோரஸாக பாடும்படி*பாடலில் முதல் வரியில் அமைத்திருந்தார் .


1972ல் தி.மு.க.வில் இருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அவர் கட்சி பதவி ஆசையினாலோ, அதிகார பதவி ஆசை யினாலோ அப்படி கேட்கவில்லை .* தவறு எங்கிருந்தாலும் தட்டி கேட்பது என்பது அவரது சிறிய வயதில் இருந்தே இருந்த வழக்கத்தில் ஒன்று .*** அவர் கும்பகோணம் ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும்போது கோடையில் மண்பானை வாங்க வேண்டி பள்ளி ஆசிரியர் சிறுவர்களிடம் தலா 3 பைசா, 5 பைசா என்று வசூல் செய்து ,திட்டமிட்டபடி, பெரிய பானை வாங்காமல் , சிறிய பானை வாங்கி , காசு மிச்சம் சேர்த்திருந்தார் . இதை அறிந்து சிறுவர்களிடம் கலந்து ஆலோசித்த அவர் அதை தட்டி கேட்க முற்பட்டார் என்று தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .


தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தனது பாடல்கள்மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை ,பாட வகுப்பில் சொல்வது போல , ஒரு பல்கலை கழகமாக , வாத்தியார் எம்.ஜி.ஆர். திகழ்ந்திருப்பார் .* தனது ஒவ்வொரு செயலிலும் யாருக்காவது , எதையாவது நல்ல முறையில் செய்ய வேண்டும், எளிதாக சொல்ல வேண்டும்* தனது ஒவ்வொரு மூச்சிலும் , தன்னுடன் பழகுபவர்கள், தொடர்புடையவர்கள் வாழ்க்கைத்தரம் உயர தன்னாலான உதவிகள் தன் வாழ்நாள் முழுவதும்*செய்யவேண்டும் என்பதை, கொள்கையாக எந்தவித* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வந்தார் ..**


மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் தி.மு.க. வின் கொள்கை பாடலாக இருந்தது எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் அவர்* காரில் பயணித்தபோது இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை என்று சொல்லலாம் .**

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம் :
1.சின்ன பயலே சின்ன பயலே - அரசிளங்குமரி*
2.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*
3.கேளம்மா சின்ன பொன்னு -* *கன்னித்தாய்*
4.வெள்ளி நிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
5.தம்பிக்கு ஒரு பாட்டு -நான் ஏன் பிறந்தேன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
7.ஒருதாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
8. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம் நாடு*
9.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
10..பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் -* ஊருக்கு உழைப்பவன்*

11.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

12.ஏன் என்ற கேள்வி* -ஆயிரத்தில் ஒருவன்*

orodizli
25th April 2020, 09:07 PM
கண்ணாம்பாள் அருமையான பழம் பெரும் நடிகை. பி.யு.சின்னப்பாவோடு கண்ணகி திரைப்பாடல் நடித்திருப்பார்கள். இப்படத்தில் இரு வேறு காட்சிகளில் சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். ஒரு காட்சியில் முருகனாக தலைவர் அமர்ந்து கொண்டு, பரமசிவன் பார்வதி நடனத்தை ரசித்தபடி "ஆஹா..ஓகோ...பேஸ் பேஸ்" என்பார். வசனமும், நடிப்பும் அவ்வளவுதான். அதே படத்தில்; பால் கோவலனாக எம்.ஜி.ஆர் , சிறு பெண்ணான கண்ணகியுடன் ஒரு பாடல். இந்த காட்டியே மெகா டிவியில், சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆர். என்று ஒரு புதிர் போட்டு, இவர் யார் என்று தெரிகிறதா? என்று கோர்வையாக காட்டி இப்போது இவர் யார் என்று நாங்களே விளக்குகிறோம் என்று. நமது எம்.ஜி.ஆர் பாடலை போட்டு என்றத் தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் நல்ல ரசிகன் என்னை தெரியுமா? விளக்கினார்கள். மெகா டி.வில் ஒளிபரப்பான அந்த காட்சியை நானும் வெளியிட ஆசை . முயற்சிகள் செய்கிறேன். நன்றி!..... Thanks...........

orodizli
25th April 2020, 09:08 PM
பல எண்ணற்ற நன்மைகளை பலருக்கு செய்து மறைந்த "எம்.ஜி.ஆர்" எனும் "மாமனிதனை" நினைக்கும் போது கண்களில் கண்ணீர் பெருக்கின்றது! அவர் வாழ்ந்த காலத்தில் அவரை பார்த்தும், வாழ்ந்தும் வந்ததிற்க்கு இறைவனுக்கு நன்றி!"..... Thanks...

orodizli
25th April 2020, 09:12 PM
100-ஐக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர்..!

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் ஆகிய சிறப்புப் பெயர்களால் சினிமா உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் அழைக்கப்பட்டவர்.

எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டு அரசியல் உணர்வால் துவங்கப்பட்ட அதிமுக., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. காமராசரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் நிறைவேற்றப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் மாணவ மாணவியர் பலர் பசி இன்றி, இன்று கல்வி பயின்று வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வருடம்தோறும்... பலர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் இன்று அவரது புகைப்படம் வைத்து, மைக் செட் கட்டி, அவர் நடித்த சினிமாப் பாடல்களைப் போட்டு, அவருடைய பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.

வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த இவரின் புகழ் என்றும் அழியாதது.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, நாடகக் குழுக்கள் பலவற்றில் பிரபலமாகத் திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்ததால், இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

எம்.ஜி.ராமச்சந்திரன், தனது சொந்தக் கட்சியாக, அ.தி.மு.கவை உருவாக்கினார். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கியக் காரணம், அவர் ஏழைகளின் மீது வைத்த அன்பும் பரிவும்தான். அதனால்தான் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்த முதல் இந்தியத் திரையுலகப் பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருந்த போது, தந்தை காலமானார். அதனால், அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தினார்.

1960ல், எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ அறிவித்தது. ஆனால், அரசின் மீதான பற்றற்ற நடத்தையின் காரணமாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த விருதில் பாரம்பரிய ஹிந்தி சொற்களுக்குப் பதிலாக தமிழில் அவை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

‘ரிக்சாக்காரன்’ படத்தில் அவரது தேர்ந்த நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல் பெற்றார் எம்.ஜி.ஆர்.

சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.

தமிழகத்தில் சமுதாய நன்மைக்காக அவரின் பங்களிப்பை மரியாதை செய்யும் விதமாக அவர் மறைந்த பின்னர் 1988ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

என்னதான் விருதுகள் பெற்றாலும், இன்றும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

அவர பி்றந்துநூற்றாண்டு கடந்தும் மறைந்து 33 ஆண்டுகள் ஆகியும் எம் ஜி ஆரின் பிறந்த நாட்கள்வெகு சிறப்புடன் கொண்டாடப் படுகிறது........ Thanks...

orodizli
25th April 2020, 09:13 PM
அபூர்வ மனிதர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எமஜிஆரின் புகழ் சாகாவரம் பெற்றது.
என்றுமே அழியாது..... Thanks...

orodizli
25th April 2020, 09:14 PM
வணக்கம்...
அவர் ஒரு அவதாரபுருஷர்.
அவரை என்னால் ஒரு சித்தராகத்தான் நினைக்கத் தோன்றுகிறது........ Thanks...

orodizli
25th April 2020, 09:17 PM
இறைவா எங்கள் புரட்சித்தலைவரை தி௫ம்ப தா ஏழைகள் தங்கள் தலைவனின் வி௫ந்தோம்பலை பொிதும் எதிா்பாா்கிறாா்கள் காரணம் அவரைப்போல் ஒ௫வா் இந்த பூமியில் இல்லை வாழ்க எம்மான் எம்ஜிஆா் எழுந்து வா தலைவா... Thanks...

orodizli
25th April 2020, 09:19 PM
அவனவன் வீட்டில் அவனுகளுக்கே சோறு பொங்கி போடரது கிடையாது.ஓட்டலில் இருந்து வாங்கி போட்டாங்க.இதல தொண்டர்களுக்கு வேரையா ? . யாரோடு யாரை ஒப்பிடுகிறீர்கள் (தலைவரோடு?!)அந்த தகுதியெல்லாம் இப்ப இருக்கிற எவனுக்கும் இல்லை......... Thanks...

orodizli
25th April 2020, 09:23 PM
இனிமேல் எந்த நடிகருக்கும் அமையாது ...தலைவர் க்கு நிகர் தலைவர் தான்... மற்ற எந்த கயவர்கள் இடம் கிடைக்காது... இப்போது தலைவர் புகழும் வளர்ந்து கொண்டிருக்கிறது அடுத்த தலைமுறை யில் புரட்சி தலைவர் புகழும் வளர்ந்து கொண்டிருக்கிறது ...நன்றி ...வணக்கம்... Thanks...

orodizli
25th April 2020, 10:24 PM
இனிமேல் எந்த நடிகர் தலைவர் அவர் போல வீட்டில் வருவோருக்கு பொங்கி போட்டு சாப்பிட வைப்பார் ...இந்த உலகில்
வாழ்க... அவர் புகழ்..நன்றி... Thanks...

orodizli
25th April 2020, 10:28 PM
பள்ளிகளில் மக்கள் திலகம் கருத்துக்களை பாடப் புத்தகங்களாக அச்சிட்டு அனைத்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் போதிக்கவேண்டும் நாடு முன்னேற சிறப்பான ஒரே வழி...... Thanks...

orodizli
25th April 2020, 10:36 PM
இது வேறு உலகம்!!
--------------------------------
பொதுவில் அனைவருக்குமே மகிழ்ச்சி தரும் பதிவுகளை இட்டாலும்--
அடியேன் டேஸ்ட்டுக்கும் அவ்வப்போது பதிவுகள் இடுவேன்.
அந்த வகையில் இன்று--
மரணம் தந்த மயான அதிர்ச்சியை எம்.ஜி.ஆருக்கு இணையாக என் இதயத்தில் அப்பியது கண்ணதாசன்!!
எந்தவிதமான பிற ஈடுபாடுகளும் அவனுக்கு இல்லாதிருந்தால் அவன் உலகின் ஒப்பற்றக் கவியாய் மிளிர்ந்திருப்பான் என்ற பலரின் வாதத்தை நான் பலமாக மறுப்பேன்!!
நண்பர்கள்,,கட்சி ,,ஜாமீன் கையெழுத்து இப்படி ஏதும் இல்லாதிருந்தால் இந்தக் கவியிடமிருந்து உன்னதக் கவிதைகளே உருவாகியிருக்காது என்பதே என உரத்துச் சொல்வேன்!
ஒருவேளை இவன் மேலை நாட்டில் பிறந்திருந்தால் உலகக் கவியாக உலா வந்திருக்கக் கூடும்!!
குறைந்த பட்சம் வட இந்தியாவில் மலர்ந்திருந்தாலாவது,,காளிதாசனை இவன் வடிவில் நாம் கண்டிருக்கலாம்!!
இவனது சிறப்பா--நமது விருந்தா என்னும் பட்டி மன்றத்தில் நம் ஆசையே வெல்வதால்-
சிறுகூடற்பட்டியில் இவன் சிரித்து எழுந்ததே நமக்குப் போதும்?
மக்கள் திலகம் என்ற அடைமொழி எம்.ஜி.ஆருக்கும்-
கவியரசு என்றக் கட்டளை இவனுக்கும் கொடுக்காத சிறப்பையா வேறு விருதுகள் இவர்களுக்குக் கொடுக்கப் போகிறது??
கண்ணதாசனைத் தம் கருத்தில்,,தம் கடைசிப் பயணம் வரை வைத்து மகிழ்ந்தவர்--
எனது எழுத்துலக பிரமிப்பு சோ!!!
சோ கண்ணதாசனை நேசித்த அளவு,,கவிஞரை அவர் குடுப்பத்தாரேக் கொண்டாடியிருப்பார்களா என்பது சந்தேகமே??
இத்தனைக்கும்---
இரண்டு பேரும் காட்டுத் தனமாக தாக்கிக் கொண்டவர்கள்!!
திராவிட அரசியலை கவிஞர் கொண்டிருந்தபோது-
திராவக அரசியல் அது என்று சொன்னவர் சோ?
தேசியக் கட்சியில் பயணித்தபோதோ--
கர்மவீரரைக் கருத்துல் கொண்டார் சோ என்றால்--
காமராஜர் காலத்திலேயே,,அவருடன் பயணித்த கவிஞர் இந்திராவை ஏற்றுக் கொண்டார்?
மாறுபட்ட கருத்துடைய இருவரையும்
கூறுபட்ட விரோதம் எந்த காலத்திலும் அணைத்ததே இல்லை!! சொல்லப் போனால்--
இக்கட்டான சமயங்களில் எல்லாம் சோவிடம் கருத்து கேட்டு,,அதன்படி நடப்பார் கவிஞர்?
தமிழ் நாடு அரசு,,கவிஞருக்குக் கலைமாமணி விருதை வழங்கியபோது-
சோவின் ஆலோசனையின் பேரில் அதை வாங்க மறுத்துவிட்டாராம் கண்ணதாசன்?
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கொடுக்க வேண்டியதை இப்போதுக் கொடுப்பது விருதுக்குப் பெருமை. ஆனால் உங்களுக்கு அவமானம் என்று தடுத்தாராம் சோ??
சோவும்,,கவிஞரும் குமுதம் வார இதழுக்காக சந்தித்துக் கொண்டபோது,,கவிஞரின் அரசியல் நையாண்டி சோவையே வியக்க வைத்திருக்கிறது?
சாம்பிளுக்கு ஒன்றிரண்டு--
சன்னியாசி,,சன்னியாசினியுடன் கூடியதால் பிறந்த குழந்தை---ஜன நாயகம்?
தனிப்பட்ட தகுதிகள் தேவையில்லாத துறைகள்--சினிமா,,அரசியல்!! காரணம் இந்த இரண்டிலும் நான் இருந்திருக்கிறேன் என்று கவிஞர் சொல்ல--
பத்திரிகையை விட்டுவிட்டீர்களே என்று தன்னையேக் குறிப்பிட்டு சோ கேட்க--
அதைக் குறிப்பிடுவாய் இருந்தால் அதிலும் உங்களுக்கு முன்னர் நான் இருந்திருக்கிறேனே என்றாராம் கவிஞர்!!
தங்கள் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் இருவருக்கும் இடையே எத்தனை போட்டி?
கவிஞர் சொன்னது--
திருடனை போலீஸ் பிடித்தால்--சட்டம்!
போலீசை திருடன் பிடித்தால்--ஜன நாயகம்???
எண்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் துக்ளக்கில் கவிஞரை தொடர்ந்து எழுத வைத்த சோ--
கவிஞர் மீதான தம் அன்பை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்--
சோ எழுதிய அந்த நாலுவரிப் பாட்டு--
வீடு வரை விஸ்கி
வீதி வரை பஞ்சு!
காடு வரை அரசியல்-
கடைசி வரை சோ???
என் சிறப்புக்களை உங்களுக்கு வைப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. முதற்கண் சிறப்பான விஷயமே என்னிடம் இல்லை?
நான் எதில் அழிந்தேன் என்று சோ குறிப்பிட்டிருக்கும் இந்த நாலுவரியை உங்களுக்கு என் சொத்தாக நான் வைக்கிறேன் என்றாராம் கவிஞர்??
வெள்ளை9 அறிக்கையென வாழ்ந்த இரு மேதைகளின் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நான் பெருமைப் படுவேன். நீங்கள்???... Thanks...

orodizli
25th April 2020, 10:44 PM
இன்றைய தினமலரில் 25/4/2020
உலகம் சுற்றும் வாலிபன் (1973) திரைப்பட விமர்சனம்......மறைந்தே 33 வருசமாச்சு...இன்னும் இவ்வளவு ஈர்ப்பா.....O god..... Thanks...

orodizli
25th April 2020, 10:46 PM
தினமலர் பத்திரிக்கை
பழையப்படத்திற்கு
விமர்சனம் போடும்
புதுமையும் புரட்சித்
தலைவர் செத்தும்
கொடுக்கும் சீதக்காதி யாக விளங்கும்
அதிசயமும் நான்
என் வாழ்நாளில்
எப்போதும் கண்டது
இல்லை. TRP ரேட்டுக்காக சன் டிவி
தலைவர் படத்தைப்
போட்டு தன்னை தக்க வைத்துகொள்ளும்ஆச்சரியமும்
இப்போது நடக்கின்றது.......... Thanks...

orodizli
25th April 2020, 10:48 PM
"உலகம் சுற்றும் வாலிபன்" சாதனை படைத்த திரைக் காவியம் ! கொழும்பில் இரண்டு தியேட்டரில் 225 நாள் கடந்து ஓடியது !...Zia Abdul Razak... Thanks...

orodizli
25th April 2020, 10:48 PM
பார்க்காதவர்கள் புதுமையாக பார்த்தவர்கள். பார்த்தவர்கள் மீண்டும் பார்த்து பரவசமடைந்தார்கள். புதிய தலைமுறைக்கு பார்க்கின்ற வாய்ப்பு வரப்பிரசாதம். Night Show பார்க்கின்ற அனுபவம்.... Thanks...

orodizli
25th April 2020, 10:50 PM
Unbelievable editing
Brilliant direction
With evergreen songs...
He utilised the actors properly.......... His directorial touch was great in this movie. Photography was too good. Especially in Thanga thoniyile song you will find an aeroplane will pass through thalivar's legs...... Thanks...

orodizli
25th April 2020, 10:54 PM
மிகவும் அற்புதமான பதிவு இதய தெய்வத்தை பற்றி. அவர் தொடர முடியாத கல்வியை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான நோக்கோடு அவர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப் பட்டவை தான் தொழில் கல்விக் கல்லூரிகள் என்பதை சேர்த்திருந்தால் இக்கால தலைமுறைக்கும் சென்றடைந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அருமை. வாழ்த்துக்கள் சகோ...... Thanks....

orodizli
25th April 2020, 10:57 PM
MGR Filmography Film 47 (1961) Poster

1960ஆம் ஆண்டு வெளியான எம்ஜியாரின் மூன்று படங்களில் இரண்டு ஆவரேஜாகத்தான் போனது; மூன்றாவது படமான மன்னாதி மன்னன் பிக்அப் செய்து கொண்டது. ஆனால், அதை நூறு நாள் வெற்றிப்படமாக்காது விதி சதி செய்து விட்டது!
நெடுங்காலம் அண்டர் ப்ரொடக்ஷனில் இருந்த அரசிளங்குமரி 1961ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியானதும், 1960 தீபாவளியில் ரிலீஸாகி இன்னமும் ஓடிக்கொண்டிருந்த மன்னாதி மன்னன் இந்தப் புதுப்படத்திற்கு பலியாக்கப்பட்டு தூக்கப்பட்டது! ஆனால், விதியின் விளையாட்டுதான் என்னே!
ம.மன்னனையே தொடர்ந்து ஓட விட்டிருக்கலாம் என்பதைப் போல புதிதாக வெளியான அரசிளங்குமரி .எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை
கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தில் பத்மினி எம்ஜியாரின் சகோதரியாக நம்பியாருக்கு ஜோடியாகத் தோன்றியது பெரும்பாலாரோல் ரசிக்கப்படவில்லை.
இப்படத்தின் இசையை ஜி.ராமநாதன் அமைத்திருந்தார். மொத்தம் 11 பாடல்களில் ஐந்தினை எழுதியவர் இடதுசாரி கருத்துகளுக்குப் பெயர் பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பின்னாளில் இயக்குனர் திலகமாகிய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு பாடல் வரைந்தார்.
ஸ்காராமுஷ் என்னும் ஆங்கிலப்படத்தின் தழுவலான இப்படத்தின் சேவிங் கிரேஸ் என்றால் பட்டுக்கோட்டையின் பாடலான டிஎம்எஸ் பாடிய எவர்க்ரீன் ஹிட்டான சின்னப்பயலே பாடலை மட்டுமேதான் கூற இயலும். ASA. சாமி இயக்கத்தில் தொடங்கபட்ட படம் காசிலிங்கம் பின்பு இயக்கினார்
கதை .
தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப்பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாள்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!

எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
ஆனால், எம்ஜியார் ரசிகர்கள் கலங்கத் தேவையின்றி அவரது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் உறுதி செய்வதாக அடுத்த படம் அமைந்தது!..... Thanks...

orodizli
25th April 2020, 11:07 PM
எம் ஜி ஆரின் தனிப் பெரும் கொடை பண்பு.

அவர் கேட்டாலும் கொடுப்பார், கேட்காவிட்டாலும் கொடுப்பார், கேட்க விடாமலும் கொடுப்பார்.

கொடுப்பதில் எத்தனை வழி உண்டோ அத்தனை வழியிலும் கொடுப்பார். கொடுத்துக்கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருக்க மாட்டார்.

அவன் கொடுத்தது எத்தனை கோடி _அந்த
கோமகன் திருமுகம்
வாழி வாழி....... Thanks Prof. RC...

orodizli
25th April 2020, 11:20 PM
நாளை (26/04/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் எம்.ஜி.ஆர்.கதை எழுதிய "கணவன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது... Thanks..........

orodizli
26th April 2020, 09:16 AM
1977-ம் ஆண்டு ஜூன் 30 அன்று, புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும், சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல, அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.
அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது, அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு, உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும்.

உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.
மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.
இதனை எங்கள் மனத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று உறுதியிட்டுக் கூறினார், புரட்சித் தலைவர்.
அப்பொழுதும், அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!
அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார், புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.!!!....... Thanks.........

orodizli
26th April 2020, 09:20 AM
#பட்டங்களுக்கு #நான் #தகுதியானவனா???

மக்கள்திலகம், புரட்சிநடிகர் என்று பட்டம் வாங்குவது அற்புதம் அல்லவா?
என்று ஒரு நிருபர் வார இதழுக்காக 1970ல் எடுத்த பேட்டியின் ஓர் முக்கிய கேள்வி இது.

இதற்கு வாத்தியாரின் பதில்...

அது அற்புதமே இல்லையே, என் மேல் அனுதாபம் கொண்டவர்கள், #பாவம் #பிழைத்துப்போகட்டும் என்று அந்த பட்டங்களைக் கட்டிவிட்டார்கள். அப்படிப்பட்ட தகுதி எனக்கு இல்லாவிடினும், முழுத்தன்மை வாய்ந்த ஒருவனாக என்னை ஆக்கிக்கொள்ள முடியாவிட்டலும், கொஞ்சமாவது அவைகளுக்குப் பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று #நிரப்பந்தம் என் மீது சுமத்துப்பட்டு விட்டது என்பது தான் உண்மை...��������

அதேபோல் வேறு ஒரு பேட்டியில்...

நமது பாரத நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற எத்தனை தலைமுறை ஆகும் ? என்ற கேள்விக்கு...

#நமது #நாடு என்று சொல்லும் #நல்லுணர்வை எந்த தலைமுறை முழுமையாகப் பெறுகிறதோ, அந்த தலைமுறைதான் உங்கள் கேள்விக்கு நல்ல விடை கூறும்...!

என்ற பதிலே சொல்லும் எவ்வளவு நுட்பமான அரசியல் நோக்காளர் எம்ஜிஆர் என்று...��������
---------------------------------------------------------------------------

ரிக்ஷாகாரன் படத்திலிருந்து தான் வாத்தியார் என்ற பெயர் ஃபெமிலியர் ஆனதோ!!!...... Thanks...

orodizli
26th April 2020, 09:24 AM
#Part2

#உலகம்_சுற்றும்_வாலிபன்
#திரைக்கு_பின்_நடந்தது - #நம்_தலைவர் #கூறியது_உங்களுக்காக

டோக்கியோ விமான நிலையத்தை அடைந்ததும், நாகேஷ் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த பத்திரிகையாளர் மணியன், எங்கோ விரைந்து சென்று, சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு டாக்டரோடு வந்தார்.

அந்த டாக்டர் பரிசோதித்து, 'பலவீனம்; ஓய்வு எடுத்தா சரியா போகும்...' என்றார். வேண்டுமாயின், நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சிறிது விவாதத்திற்குப் பின், வேண்டாமென்று முடிவு செய்தோம்.
அதற்குள் நாகேஷுக்கு, கொஞ்சம் சரியானது.

மெல்ல எழச் செய்து, வேறு ஒரு இடத்தில் இருந்த சோபாவில் உட்கார வைத்து, விவரம் கேட்டேன். அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டோம்.

நாகேஷை, அந்த நிலையில் விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி டோக்கியோவிற்குள் நுழைவது? நாகேஷ் ஓரளவிற்கு குணமாகும் வரை, காத்திருந்து, பின், ஓட்டலுக்குப் புறப்பட்டோம்.

அவரும், வேறொரு காரில் வந்தார். அவருக்கு துணையாக அசோகனை தங்க வைக்க, ஏற்பாடு செய்திருந்தேன்.
விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் கம்பெனி குழுவினர் படம் எடுத்தனர்.
பாங்க் ஆப் இந்தியாவில், பணிபுரியும் நண்பர் சந்தானம், அவரது மனைவி நிர்மலா மற்றும் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்.

சந்தானத்தின், இரு குழந்தைகளும் ஜப்பானிய உடை அணிந்திருந்தனர். சில ஜப்பானியப் பெண்கள் எனக்கு மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.
விமான நிலைய சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பின், டோக்கியோவின் மிகப் பெரிய ஓட்டல்களில் ஒன்றான, இம்பீரியல் ஓட்டலை அடைந்தோம்.

ஓட்டலை அடைந்தோமே தவிர, அறைகள் கிடைக்கவில்லை. எங்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை, மறுநாள் காலையிலிருந்து தான், 'புக்' செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, இரவு, 12:00 மணிக்கு முன், அந்த அறைக்குச் சென்றோமானால், ஒரு நாள் வாடகை கொடுத்தாக வேண்டும்.

அதாவது, பதினோரு மணி, ஐம்பத்தொன்பது நிமிடத்தில், அந்த அறைக்குள் நுழைந்தால் கூட, முதல் நாள் வாடகையைச் செலுத்தியாக வேண்டும். எனக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தின் அளவோ மிகக் குறைவு. எனவே தான், என்னோடு வந்து, பயணத்தினால் சோர்ந்து போயிருந்த பெண்களைக் கூட, உடனே அறைகளுக்கு அனுப்ப முடியவில்லை.

அவர்களும் இதை உணர்ந்திருந்த காரணத்தால், எந்தவித மனக்கஷ்டமும் கொள்ளாது, ஒருவருக்கொருவர், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு வெகு நேரமாகி விட்டதால், அவர்களுக்கு ரொட்டி, கேக் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமென்று எண்ணிக் கேட்டேன்.

பன்னிரெண்டு மணிக்கு மேல், அறைக்குச் சென்ற பின் தான் கிடைக்கும்; அதுவும் முன்னமேயே குறிப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று தெரிவித்தனர். எனக்கு, இவைகௌல்லாம் புரியாத புதிராகவே இருந்தது.

இதைக் கேட்டு கொண்டிருந்த பெண்கள், தங்களை அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் கேக், ரொட்டி போன்ற பெயர்களைக் கேட்டதும், அதற்கு மேல் தங்களுக்கிருந்த பசியை மறைக்க சக்தியற்று, ஆவலோடு விசாரித்தனர்.

அங்கு, அந்த வேளையில் ஏதும் கிடைக்காதென்பதை அறிந்தபோது, என் மீதே, எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
என்னை நம்பி வந்த அந்த இளம் பெண்களுக்கு, முதல் நாளிலேயே பசிக்கு உணவு கொடுக்க இயலாதவனாகி விட்டேனே என்று, வேதனையாக இருந்தது. 'மோராவது கிடைக்குமா?' என்று கேட்டேன்.

என் உடன் வந்திருந்த சந்தானம், இதையெல்லாம் கவனித்து, 'அரை மணி நேரம் அவகாசம் தருவதாயின், உணவு தயார் செய்து விடுவேன். எல்லாரும் சாப்பிடலாம்...' என்றார்.
நான் மரியாதைக்கு, 'வீண் சிரமம் வேண்டாம்; ரொட்டி கிடைத்தாலே போதும்...' என்றேன்.

ஆனால், அவர், 'உங்கள் தகுதிக்குச் ஏற்ற முறையில், உணவு படைக்க எங்களால் இயலாது; ரசம் சாதம், அப்பளம் இவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று சொல்லியவாறே, எங்களுடைய அனுமதியைப் பெறாமலேயே, தன் மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

சாப்பாடு கிடைக்கும் என்று தெரிந்ததும், மூன்று பெண்களின் பேச்சும், சிரிப்பும் மீண்டும் தொடர்ந்தன.

சினிமா உலகத்தில், எத்தனையோ நடிக, நடிகையரை பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட வசதிக் குறைவுகள் நேரிடும் போது, எப்படியெல்லாம் ஆத்திரப்பட்டிருக்கின்றனர், கேவலமாய் பேசியிருக்கின்றனர், தங்களின் தகுதிக்கும் குறைவான செயலில் இறங்கியிருக்கின்றனர் என்பதை, கண்கூடாகக் கண்டறிந்தவன் நான்.

ஆனால், இந்தப் பெண்கள் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சந்தானம், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. அறைகளின் சாவிகளைப் பெறவும், சாமான்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்கவும், தன் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதுமாக, 'துருதுரு'வென்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற் கெல்லாம், 'உணவு தயார், போகலாம்...' என்று அழைத்தார். அவரே தன் காரில், எங்களை அழைத்துப் போனார். அவர் வீட்டிற்குப் போனோம். மாடியில் தான், அவரது குடியிருப்பு.
விசாலமான நடுத்தரமான, ஒரு அறையில், மேசை, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

சுவரில், கலையழகு நிரம்பிய படங்கள்; சிலை வடிவங்கள். அவைகளில் பெரும்பாலானவை, சந்தானத்தின் மனைவி நிர்மலா கை வண்ணத்தில் மிளிர்ந்தன.

குடும்பத்தின் சிறந்த தலைவி, கணவனுக்கு பண்புள்ள மனைவி, விருந்தினருக்குப் பாசமுள்ள உறவினர், குழந்தைகளுக்கு அன்புத் தாய், இப்படிப்பட்ட, ஒருவர் கையால், உணவு பரிமாறப்பட்டு, உண்டோம்.
வயிறு புடைக்க சாப்பிட்டோம். எங்களின் அதிர்ஷ்டம் அன்று, சந்தானத்தின் தாயார் இந்தியாவிலிருந்து ஜப்பான் வந்திருந்தார். அவர்கள், தின்பண்டங்களைச் செய்து கொண்டு வந்திருந்தார். அவைகளும் எங்களுக்குப் பரிமாறப்பட்டன.

ஜப்பான் நாட்டிற்குப் புதியவர்களாக அடியெடுத்து வைத்த எங்களுக்கு, இரவு, மிகப் பெரிய விருந்தே நடைபெறுகிறதென்றால், தமிழ்ப் பண்பின் தனித் தன்மைக்கு, நற்சான்று என்றுதானே கொள்ள முடியும்.

உணவு உண்டு மூச்சு விடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, சந்தானம் ஒரு சிறிய படம் பிடிக்கும் கருவியையும், படங்கள் ஒட்டப்பட்டிருந்த ஆல்பம் ஒன்றையும் கொண்டு வந்து, எங்களைப் படம் எடுக்க விரும்புவதாய் சொல்லி படமெடுத்தார்.

அதோடு, அவர் எடுத்த படங்கள் நிறைந்த, அந்த ஆல்பத்தை பிரித்துக் காண்பித்தார்.
அதில், ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து, ஒரு கணம் திகைத்தேன். அது வேறு யாருடைய படமுமல்ல! இதயதெய்வம் அமரர் அண்ணாதுரையின் உருவம்தான். எங்கு சென்றாலும், என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும், அந்த அமரரின் உருவத்தை, திரும்பத் திரும்பப் பார்த்தேன்.

நான், என் வாழ்க்கைப் பாதையில், எங்கெங்கு காலடி எடுத்து வைக்கிறேனோ, வைக்க இருக்கிறேனோ அங்கெல்லாம், அமரர் அண்ணாதுரை முன்சென்று, நான் நடக்கும் பாதைகளை சீர் செய்து, அரசியலிலும், கலைத் துறையிலும் எனக்குத் தேவையான அத்தனையையும் நிறைவேற்றி வைத்திருப்பதை, இன்னமும் நிறைவேற்றி வைப்பதை எண்ணி, என் கைகள், அவர் இருக்கும் திசை நோக்கித் தானாக உயர்ந்தது.

ஜப்பானில் நாங்கள் சந்தித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்த சந்தானம், இப்போது ஒரு படி உயர்ந்து நின்றார்.
அவர், அண்ணாதுரை பற்றிச் சொன்ன கருத்து, என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அது...
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

-- எம்.ஜி.ஆர்.,........ Thanks...

orodizli
26th April 2020, 09:26 AM
#எம்ஜிஆர் அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது........ Thanks...

orodizli
26th April 2020, 09:30 AM
மக்கள் திலகம் என்ற மாமனிதர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் தன்னை எவ்வாறு தன் ரசிகர்களிடம் கொண்டு சென்றார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் எங்க வீட்டு பிள்ளை படம். இந்த படத்தில் நாம் ரசித்து ரசித்து பார்த்த காட்சிகள் எதையுமே இதன் இந்தி பதிப்பான ராம் ஔர் ஷ்யாமில் திலீப்குமாரிடம் பார்க்க முடியாது. ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வரும் மக்கள் திலகம் தான் செய்த தவறுக்கு தன்னையே நொந்து கொள்ளும் காட்சி மக்கள் திலகத்தின் குணத்தை பிரதிபலிக்கும்.இந்த காட்சியே இந்தியில் இருக்காது.மேலும் எ.வீபி.என்றவுடன் நம் நினைவிற்கு வரும் நான் ஆணையிட்டால் பாடலும் இந்தியில் கிடையாது.தெலுங்கிலும் கிடையாது. மக்கள் திலகத்திற்காகவே வைக்கப் பட்ட பாடல் அது.மலையாளத்தில் இந்த பாடல் உண்டு ஆனால் மக்கள் திலகத்தை பார்த்த கண்களுக்கு பிரேம்நசீர் காமெடியாக தெரிவார்.மொத்தத்தில் எல்லா மொழிகளிலும் முன்னணி கலைஞர்கள் நடித்திருந்தாலும் மக்கள் திலகத்தின் அழகும் கம்பீரமும் சுறுசுறுப்பும் வேறு யாரிடமும் பார்க்க முடியாது....... Thanks...

orodizli
26th April 2020, 09:33 AM
ஸ்ரீ MGR வாழ்க

சித்திரை 12 சனி

எம்ஜிஆர் பக்தர்களே

அருமை தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர் பெயர்

ப.உ. சண்முகம்

இவர் திமுக-வின் ஆரம்பகால மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர

++++++++++++++++++++++++++++++++++

எம்ஜிஆர் பக்தர்களே

மறைந்த அண்ணா அவர்களுக்கு பவள விழா கொண்டாடினார்கள்

அப்பொழுது பவளவிழா மலர் என்று ஒரு மிகப்பெரிய. புத்தகம் ஒன்றை வெளியிட்டார்கள்

அந்த புத்தகத்தில்

பா உ,சண்முகம்

அவர்கள் எழுதிய கட்டுரை இது

++++++++++++++++++++++++++++++++++

1959 ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா அவர்கள் என்னைதிமுக வேட்பாளராக அறிவித்து விட்டார்

என்னை எதிர்த்து நின்ற. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மிகப்பெரிய கோடீஸ்வரர்

,இதை அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டார்கள்

மிகப் பெரிய கோடீஸ்வரரிடம் ப.உ. சண்முகம் மாட்டிக்கொண்டார் என்று அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களும் பேசிக்கொண்டார்கள்

திமுக தலைமையிடமும் பணம் வசதி கிடையாது

திமுக தலைவர்களிடமும் பணம் வசதி கிடையாது

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பணத்தை நிறைய செலவு செய்கின்றார்கள்

அதில் நான்கில் ஒரு பகுதி பணம் கூட

தேர்தல் செலவிற்கு என்னிடம் கிடையாது

மிகவும் கவலையோடு நான் வீட்டில் அமர்ந்து இருந்தேன்

என் வீட்டிற்கு முன்பாக ஒரு பியட் கார் வந்து நின்றது

அந்தக் காரில் இருந்து எம்ஜிஆர் அவர்களின் மேனேஜர்

R.M.வீரப்பன்

இறங்கி என் வீட்டுக்குள்வந்தார்

என் முன்னால் பெரிய பை ஒன்றை வைத்தார்

இந்தப் பணத்தை எம்ஜிஆர் உங்களிடம் கொடுத்து வரச் சொன்னார்

உங்களை எதிர்த்து நிற்பவர் மிகப்பெரிய கோடீஸ்வரர்

ஆகவே இந்தப் பணத்தை தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்

தேர்தல் வேலை பார்க்கும் ஏழை தொண்டனுக்கு இந்தபணத்தில் டீ பலகாரம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் MGR

என்று கூறிவிட்டு R.M.வீரப்பன் புறப்பட்டார்

நானும் வீரப்பன் அவர்களோடு வீட்டுக்குள் இருந்து கார் வரைக்கும் வந்தேன்

காரில் ஏறி அமர்ந்தவீரப்பன்

காரை விட்டு கீழே இறங்கினார்

என்னை அழைத்து எம்ஜிஆர் அவர்கள் தேர்தல் வால்போஸ்டர் களை சென்னையில் ஸ்டுடியோவில் தயாரித்து அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்

,இந்தப் பணத்தை தாராளமாக செலவழியுங்கள்

அடுத்த சில நாட்களில் எம்ஜிஆர் மீண்டும் உங்களுக்கு பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று என்னிடம் கூறியுள்ளார்

என்று வீரப்பன் கூறிவிட்டு சென்னை சென்று விட்டார்

மீண்டும் எம்ஜிஆரிடம் இருந்து எனக்கு பணம் வந்தது

தேர்தல் தேர்தலில் நான் வெற்றி அடைந்தேன்

இவ்வாறு அண்ணா பவள விழா மலரில் பா,உசண்முகம் அவர்கள் கட்டுரை எழுதி உள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்

அப்பொழுது பா உ சண்முகம் அவர்கள்

கருணாநிதியின் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார்

1976. ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு

பா உ சண்முகம் அண்ணா திமுகவில் சேர்ந்தார்

திருவண்ணாமலை தொகுதியில் அண்ணா திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்

எம்ஜிஆர் அமைச்சரவையில் 1984ல் இவர் அமைச்சராக பதவி வகித்தார்

எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சர் ஆக்கியவர்களிள்இவரும் ஒருவர்

உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்

இப்படிப்பட்ட வள்ளல் எம்ஜிஆருக்கும்

ஒரு சனியன் கூட இருந்தே துரோகம் செய்துள்ளது......... Thanks...

orodizli
26th April 2020, 09:35 AM
'நான் ஆணையிட்டால்' பாடலை இந்தி வடிவத்தில் அதன் நாயகன் திலீப் குமார்
ஸ்டைல் காட்டுகிறார். அவர் எம்.ஜி.ஆர்.
போல் நடிக்க முயன்றார். ஆனால்...?

'ராம் அவுர் ஷ்யாம்' தமிழ் 'எங்க வீட்டுப் பிள்ளை'யின் இந்தி வடிவம். சரோஜாதேவி, ரத்னா வேடங்களில்
இந்தியில் வஹீதா ரஹ்மான், மும்தாஜ்
நடித்தனர்.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..... Thanks...

orodizli
26th April 2020, 09:40 AM
ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர் ஸ்டைல் யாருக்கும் வராது.....ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர் ஸ்டைல் யாருக்கும் வராது...தலைவர் அளவுக்கு யாராலும் ஜொலித்து இருக்க முடியாது.... Thanks...

orodizli
26th April 2020, 09:41 AM
தலைவரின் gym body யும் , ஆளுமை மிக்க அதிகார நடிப்பும் இந்தி நடிகர் திலீப் குமாரிடம் Missing .........இயற்கையின் சீதனம் தலைவர்...... Thanks...

orodizli
26th April 2020, 09:42 AM
எம் ஜி ஆர், படம் நன்றாக வர வேண்டும், தயாரிப்பாளர், லாபம் அடைய வேண்டும் என்று நடித்தார் ,பிறகு தான் சம்பளம்-ஆனால் மற்றவர்கள் பணம் பெற்றுக் கொண்டு நடிக்கின்றனர் ,படம் ஒடினாலும் ஓடாவிட்டாலும் கவலை இல்லை அது எம்ஜிஆரின் தொழில் பக்தி....... Thanks...

orodizli
26th April 2020, 09:43 AM
தெலுங்கில் என் டி ராமாராவ் அவர்கள் ஆனால் நம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் போல் அந்த ஸ்டைல் இல்லை....... Thanks...

orodizli
26th April 2020, 09:44 AM
இந்த படம் தெலுங்கில் எடுத்து கொண்டு இருக்கும் போது ராம்லு பீமலு சில காட்சிகள் தலைவர் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க போது திரு.சாணக்கிய இப்போது பார்க்கலாம் என்றார் நாகிரெட்டி என்டிஆர் நடிகை ரத்னா தலைவர் உடனே நான் ரெடி என்று கூறி விட்டார் ரெட்டியார் கலரில் எடுக்க வேண்டும் என்றார் தலைவர்க்கு நல்ல மகிழ்ச்சியாக நடித்துள்ளனர் தெலுங்கு கருப்பு வெள்ளை படம் தெலுங்கில் அக்கா கணவர் வீட்டைவிட்டு வெளியே போய் விடுவார்கள் ஆனால்.. நம்பியார் திருத்திக் கொள்ள இருவரும்க்கு திருமண . எல்லாம் மறப்போம் மன்னிப்போம் அண்ணா வின் கொள்கை விளக்கக் முடிவுகள் தான் படம் சுபம் .. தெலுங்கு.. மலையாள.இந்தி.மூன்று மொழி களில் நான் படத்தை தியேட்டரில் படம் கோயம்புத்தூரில் பார்த்து தேன்........ Thanks to BMV

orodizli
26th April 2020, 09:45 AM
திலீப் குமாரும் சரி என்டி ராமாராவும் சரி,
இருவருமே ஒப்புக்கொண்டார்கள் அண்ணனை போல் எங்களால் நடிக்க முடியாது என்று!.
அது மட்டுமல்ல வேறு எவராலுமே அந்த இரண்டு கதாப்பாத்திரங்களையுமே எவராலுமே நடிக்க முடியாதாம்......உண்மையிலேயே முடியாதுதான்....... Thanks Manavalan Sir....

orodizli
26th April 2020, 09:46 AM
கைகளை எப்படி அசைத்தாலும் அதிலே... கம்பீரம் கலந்த அழகு.. எழுச்சிமிகு ஏற்றம் என்பதெல்லாம்... எம்ஜிஆர் என்கிற ஒருவருக்கு மட்டுமே பொருந்தி வரக்கூடிய ஒன்று.. அப்படி ஒருவர் அவருக்கு முன்னும் இல்லை.. பின்னும் இல்லை.. எம்ஜிஆர் ஒரு அவதாரம்........ Thanks Suruli subbu...

orodizli
26th April 2020, 09:50 AM
காரை நிறுத்தச்சொல்லி நடைபாதை கடையை நோக்கி வேகமாக சொன்ற புரட்சித்தலைவர்... திகைத்துப் போன கடைக்கார்..
ஒரு நாள் காலை பொழுது..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார்.
அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார்.
அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார்.
வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது.
அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார்.
பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார்.
அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார்.
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது.
‪புரட்சித்தலைவர்‬ நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல.
வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

#ஏழைகளின்தலைவர் எம் ஜி ஆர்...... Thanks...

orodizli
26th April 2020, 09:54 AM
[#பொழைக்கத்தெரியாத #எம்ஜிஆர்

லாயிட்ஸ் ரோடு தாய்வீட்டில் ஒரு நாள் எம்ஜிஆரை, பெரியவர் ஒருவர் காணவந்தார். எம்ஜிஆர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்... அப்பெரியவர் எம்ஜிஆருடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு கிளம்பிவிட்டார்...

அப்பெரியவர் தான் "#ஜெனோவா" திரைப்பட இயக்குனர் திரு.நாகூர்...

அன்றிரவு எம்ஜி.சக்ரபாணி, எம்ஜிஆரிடம் "ராமச்சந்திரா, நாகூர் உன்ன வந்து பாத்துட்டுப்போனாரா? எதுக்காக..? அவரு நேத்து என்னே பாத்தபோது 'ஜெனோவா' படத்துக்கு அவரு கேட்ட கால்ஷீட்டுக்கு மேலே ஒண்ணரை பங்கு கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற உன் மார்க்கெட் சம்பளத்தையும் கொடுக்க ஒத்துக்கிட்டார்...அதன் பிறகும் ஏன் உன்னை வந்து பார்த்தார்...? இப்படி கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார்.

அதற்கு எம்ஜிஆரின் நெகிழ்ச்சியான பதில் :

அண்ணா...! அவங்களுக்குப் படம் எடுக்கத் தெரியும், பிஸினஸ் தெரியாது. வித்த விலையைவிட செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு...டெக்னீஷியன்ஸ் எல்லாம் பிஸினஸ்மேன் ஆகிடமுடியாது...போதாகுறைக்கு அவர் மகள் இறந்ததுல மனசு உடைஞ்சு போயிட்டார். பாவம் அந்தப் பெரியவர் அழுதுட்டாரரு, என்னால தாங்கமுடியல..."

அதற்கு சக்ரபாணி, "அப்ப அவர் கொடுக்குற பணத்தை வாங்கினாப் போதும்னு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே ???? "

"இல்லண்ணா...#அவர் #கொடுக்கவேண்டிய #இருபதாயிரத்தையும் #வேண்டாம்னுட்டேன்...#படத்தை #முடிச்சுத்தரேன் கவலைப்படாதீங்கன்னுட்டேன்" என்றார் எம்ஜிஆர் கூலாக...

அதற்கு சக்ரபாணி, "நீ சொல்றது சரிதான், இருந்தாலும் சம்பாதிக்கிற நேரத்துல தானப்பா சம்பாதிக்க முடியும்...? இப்படியே போனா நம்ம குடும்ப நிலைமை என்னாவது? நம்ம குடும்பநிலை உனக்குத் தெரியாதா? "

அதற்கு எம்ஜிஆர்,
"போவுது அண்ணா, பணத்தை விட மனுஷங்க பெரிசு. அவங்க நம்ம மேல வெச்சுருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், நா செஞ்சது ஒண்ணும் பெரிசில்ல...

மேலும் "நாளைங்கிறது நம்பளோடது கிடையாது...அது கடவுளோடது...விடுங்கண்ணா " ன்னு சொன்னார்.

என்ன செய்ய #பெரியவருக்கு #வீட்டுக்கவலை...#சின்னவருக்கு #ஊர்க்கவலை...
]...... Thanks...

orodizli
26th April 2020, 10:00 AM
[கோவை செழியன் இரண்டாவது படம் தயாரிப்பு கேசி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான உழைக்கும் கரங்கள் டைரக்ஷன் கே சங்கர் இசை மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வசனம் நாஞ்சில் மனோகரன் பாடல்கள் கவிஞர் வாலி கவியரசு கண்ணதாசன் மக்கள் திலகம் முதல்முதலாக ஆந்திராவின் பாணியில் வேட்டி கட்டிய படம் உரிமைக்குரல் இரண்டாவது படம் உழைக்கும் கரங்கள் இந்த திரைப்படத்தில் நமது தலைவர் நடக்கும் நடை பார்க்கும் பார்வை அனைத்தும் புதுமையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மான் கொம்பு சண்டை இன்றுவரை பேசப்படக்கூடிய சண்டையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தலைவருக்கு 55 வயது வயது எத்தனை வேகம் எத்தனை வேகம் எத்தனை சுழற்சி அப்பப்பா பார்க்க கண்களுக்குள் சந்தோஷம் பிறக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு எத்தனையோ நடிகைகள் முயற்சி செய்து பார்த்தார்கள் ஆனால் முன்னிலை அடைய முடியவில்லைபொதுவாக கே சங்கர் அவர்கள் மீது எந்த ஒரு திரைப்படம் இயக்கினாலும் அந்த திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிக அருமையாக இருக்கும் ரொம்ப வேகமாகவும் விறுவிறுப்பாக இருக்கும் அதற்கு முதல் சான்று குடியிருந்த கோயில் கே சங்கர் அவர்கள் பின்னாளில் நமது புரட்சித்தலைவரின் சம்பந்தனார் காரணம் சக்கரபாணி அவருடைய மகளைசங்கர் அவர்கள் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் இந்த திரைப்படம் இப்போது வெளியிட்டாலும் அல்லது தொலைக்காட்சி பார்த்தாலும் அந்த எட்டு நிமிடங்கள் வேறு எந்த சிந்தனையும் தோன்றாது அவ்வளவு அருமையான ஒளிப்பதிவு..... Thanks...

orodizli
26th April 2020, 10:01 AM
வணக்கம் நண்பர்களே!!

"எம்ஜிஆர் சண்டை "என தமிழகத்தில் பிரபலமான வார்த்தை உண்டு... வெறும் பாடல்கள் அதை ஒட்டிய சிறு கதை என தமிழ்சினிமா சற்று போரடித்துக்கொண்டிருந்த காலத்தில் தன் சண்டைக்காட்சிகள் மூலம் வேறொரு ட்ரென்டை உருவாக்கிய பெருமை எம்ஜிஆர் அவர்களுக்கு உண்டு.... அதற்கெல்லாம் வித்திட்டது " மருதநாட்டு இளவரசி"

அதில் வரும் ஒரு அற்புதமான சண்டைக்காட்சி உங்கள் பார்வைக்கு...

இன்று வரை தொழில்நுட்பம் பல வளர்ந்தாலும் இந்த சண்டைக்காட்சியின் எதார்த்தத்தை வேறெதுவும் முறியடிக்க வில்லை.... கடைசியில் தலைவர் தடுக்கி விழுவார் அவ்வளவு இயல்பாக இருக்கும்...
(குறிப்பு:இதில் வரும் காட்சிகள் பாஸ்ட் பார்வர்டு இல்லை... ஆனால் பாருங்கள் எவ்வளவு வேகம் என...).... Thanks...

orodizli
26th April 2020, 10:03 AM
#எம்ஜிஆர் அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது..... Thanks...

orodizli
26th April 2020, 10:04 AM
புரட்சி நடிகர் MGR இரு வேடங்களில் நடிக்கும் - உத்தமபுத்திரன்,,,
தயாரிப்பு ; MGR PICTURES
காலை நேரம் தினதந்தியில் விளம்பரம்.
ஆனால் தமிழக திரையுலகம்
அதிர காரணம்
அதே நாளிதழில்
நடிகர்திலகம் சிவாஜிகணேஷன் இரு வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன்
தயாரிப்பு: வீனஸ் பிக்சர்ஸ்( ஸ்ரீதர்)
விளம்பரம் தான்.
The man in the iron mask ஆங்கில
பட தழுவல் தான்
1940 ல் மாடர்ன் தியேட்டர்ஸ்
வெற்றிபடம் உத்தமபுத்திரன்.
MGR - அவர்களோ The man in the iron mask ஆங்கில படத்தை தன் பாணிக்கு ஏற்ப தழுவி எடுக்கலாம்
டைரக்டர்; K.ராம்நாத்
என முடிவு செய்தார்.
K.ராம்நாத் யை சந்தித்த ஸ்ரீதர்
இதை அறிந்து
உத்தமபுத்திரன் ரைட்ஸை மாடர்ன் தியேட்டரிடம் பெற்று சிவாஜியை வைத்து தயாரிக்க முடிவு செய்தார்.
இப் பிரச்சனை என்னாகுமோ என திரையுலகமே தவித்தது.
இச்சமயம்
N.S கிருஷ்ணன் MGR யை சந்தித்து ராமச்சந்திரா அவர்கள்
மாடர்ன் தியேட்டரிடம்
ரைட்ஸ் வாங்கி வைத்துள்ளார்கள்.
நீ வேறு கதையை தயார்
செய்து எடு என்றார்.
N.S கிருஷ்ணன் மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவர் MGR. அவர் சொல்லை மதித்து அந்த படத்தை கைவிட்ட MGR,
இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற
ஆசையை மட்டும் விடவேயில்லை.
அப்படி அவர் ஆசைபட்டு மிகுந்த பொருட் செலவில் ,தன் வாழ்கையையே பயணம் வைத்து, டைரக்ட் செய்து
இமாலய சாதனை
படைத்த வெள்ளி விழா படம் தான்
"" நாடோடி மன்னன் "
- சித்ரா லட்சுமணன் பேட்டியிலிருந்து,,
பின் குறிப்பு:
நடிகர் திலகம்
சிவாஜியின் உத்தம புத்திரன் 7.2 1958 வெளியாகி 100 நாட்கள் ஓடியது.
********
அதே ஆண்டு 22.8.1958
புரட்சி தலைவர் MGR நடித்த
நாடோடி மன்னன் வெளியாகி தமிழக முழுதும் " வெள்ளி விழா"- 175 நாள் கண்டது.
பல திரையரங்கில் 200- 250 நாட்கள் ஓடியது.
தயாரிப்பு செலவு : Rs 12, 50, 000
( 1.8 million) ரூ 12 .50 லட்சம்
Box office collection; Rs 76, 36, 000
( 11 million) கலெக்சன் ரு 76.36 லட்சம்
ஆதாரம் Google.com விக்கிபீடியா.
தொகுப்பு : OKR.ரமேஷ்
இதுதான் நம் தலைவரின் சாதனை..... Thanks...

orodizli
26th April 2020, 10:06 AM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -24/04/2020 அன்று* வின்*டிவியில் வெளியான* தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த கருத்தான பாடல்கள் அமைப்பதில் முனைப்புடன் இருந்தார் .* குழந்தைகள்தான்* எதிர்காலத்தில் வளர்ந்த சக்திகள் , நாட்டை முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தும் தலைவர்களாக வரக்கூடியவர்கள்*பல உயர்ந்த பட்டம், பதவிகளை அடைந்து மத்தியிலும், மாநிலத்திலும் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியை செவ்வனே நடத்தக் கூடியவர்கள்* அப்படிப்பட்ட குழந்தைகளின் கருத்தை கவரும் வண்ணம் ஏராளமான பாடல்கள் தன் படங்களில் அமையும்படி பார்த்துக் கொண்டார் .**


ஒருமுறை படப்பிடிப்பில் நடிகை கே.ஆர். விஜயாவுடன் நடித்து வந்தார். நடிகைக்கு காலையில் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருந்தது .* காபியில் உள்ள நச்சுத்தன்மைகளை விளக்கி நடிகை கே.ஆர். விஜயா அந்த பழக்கத்தை கைவிடும்படி செய்தார் .* இதுபோன்று படப்பிடிப்புகளில் பல கலைஞர்கள் உடன் நடிக்கும்போது அறிவுரைகள், போதனைகள் செய்ய தவறுவதில்லை .


எம்.ஜி.ஆர். தன் படங்களில் வரும் பாடல்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடும்படி அமைய வேண்டும் ,அவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,என்று கூறியதோடு , குழந்தைகள் மீது அளவற்ற*அன்பு, பாசம் வைத்திருந்தார் .*நீதி போதனைகள், சமூக*சீர்திருத்த*கருத்துக்கள்*அடங்கிய*பாடல்கள ுக்கு முக்கியத்துவம் அளித்தார் .அந்த பாடல்கள்*சமூகத்தில் பெரிய தாக்கத்தை*ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையில்*கவிஞர்**பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரம் எழுதிய*சின்ன*பயலே*, சின்னப்பயலே சேதி*கேளடா*,.......* ஆளும் வளரனும் , அறிவும்*வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை*ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்*மகிழ்ச்சி ..... மனிதனாக வாழ்ந்திட வேணும்*மனதில் வையடா*, தம்பி மனதில்*வையடா ....* வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா*.. ... என்று காலம் கடந்து*நிற்கும்*வைர வரிகளை* அரசிளங்குமரி திரைப்படத்தில்*அறிமுகப்படுத்தினார்.**


சில*காலம்* சந்தர்ப்ப சூழ்நிலை, சமுதாய சீரழிவு*காரணமாக*திருடனாக வாழ்ந்தவன் ,நல்லவனாக திருந்தி வாழ்வதற்கு ஏற்ப ஒரு திரைக்கதை தயாரானது . அதற்கு*டைட்டில்**பெயர் வைப்பதற்கு* பல பேர் சொன்ன*தலைப்புகளை நிராகரித்து , அந்த சமயத்தில் வித்வான் லட்சுமணன் அவர்களின்*யோசனைப்படி திருடாதே*என்று தலைப்பை*தேர்வு செய்து , அதற்காக*அவருக்கு*ரூ.500/- பரிசளித்தார்* எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் படத்தின்*தலைப்புகளை தேர்வு செய்வதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக*இருந்தார்.எதிர்மறை கருத்துக்கள்*மக்களை சென்றடையக்கூடாது என்று* .*மக்களுக்கு*பாசிட்டிவ்*ஆன* தலைப்புகள், செய்திகள், கருத்துக்கள்*தன் படத்தில் புகுத்துவதில் ஆர்வம் செலுத்தினார் .இந்த படத்தில்*கவிஞர் பட்டுக்கோட்டை*கல்யாண சுந்தரத்தின் திருடாதே, பாப்பா திருடாதே,வறுமை நிலைக்கு*பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே .......சிந்தித்து*பார்த்து செய்கையை*மாத்து, சிறிசாய் இருக்கையில் திருத்திக்கோ,தெரிஞ்சும்*தெரியாம*நடந்திருந்தா திரும்பவும் வராமல்*பாத்துக்கோ*..........திருடனாய்*பார்த்த ு திருந்தாவிட்டால் திருட்டை*ஒழிக்க முடியாது*போன்ற*வரிகள்*எக்காலத்திற்கும் பொருந்தும்*.


கன்னித்தாய் என்கிற*படத்தில்*குழந்தைக்கு அறிவுரை சொல்லும்*பாடலில்*தவிதவிக்கிற ஏழைக்கெல்லாம் திட்டம் போடணும்*, அதை சரிசமமான*பங்கு போட சட்டம் போடணும், குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்*ஏழை குடிசை*பகுதியில்*பாலும் தேனும்*ஆறா*ஓடணும்*. ... கேளம்மா*சின்ன*பொண்ணு கேளு*என்ற பாடலில் இந்த வரிகள்*இருக்கும்.*ஏழை எளியோரின் துயர் துடைக்கும் வகையில்*தன் எண்ணங்கள் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்பதை*இந்த பாடலில்*வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.*


*வேட்டைக்காரன் படத்தில்*எம்.ஜி.ஆர். கௌபாய்*வேடத்தில்*நடித்தார்.எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான வேடம்.* அந்த படத்தில்*மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓடியாடி*நடித்தார். சில*காட்சிகளில் துள்ளல்கள் அதிகம்.* ஒரு இடத்தில உட்காராமல் படுவேகத்துடன், பம்பரம் போல சுழன்று சில காட்சிகளில் நடித்திருப்பார் படம் முழுவதும் மிகவும் உற்சாகமாக*நடித்திருப்பார் ..* இந்த படத்தில் வெள்ளி நிலா முற்றத்திலே என்ற பாடலில்*, தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லும்போது, நான்கு பேர்கள்*போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும், மானத்தோடு வாழ்வதுதான் சுய மரியாதை ......என்கிற வரிகளில் சுய மரியாதை பற்றிய விளக்கத்தை மிகவும் எளிதாக*குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில்*இருந்தது*.


நான் ஏன் பிறந்தேன் என்கிற படத்தில்*குடும்ப*பாங்கான கதை.* அவரது குடும்பத்தில் குழந்தைகள் நால்வர் இருப்பர்.* எம்.ஜி.ஆர். நடித்த*குடும்ப*பாங்கான படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது . வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற , திருமணம் ஆனவர்*என்ற உண்மையை*சொல்ல முடியாமல் , தன்னை காதலிப்பவரின் உடல்நலத்தையும், உயிரையும்*காப்பாற்ற வேண்டிய பொறுப்புகளை சுமந்து*பல துன்பங்களை கடந்து*இறுதியில் குடும்பத்துடன் ஐக்கியம் ஆவதுதான் கதை .இந்த படத்தில்*, தம்பிக்கு*ஒரு பாட்டு*அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடலில்* உயர்ந்தவர் யாரும் சுயநலம் இருந்தால்*தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே, உழைப்பால் பிழைப்போர்*தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே என்கிற* வரிகளில் ஜனநாயக*நாட்டிற்கு*தேவையான பொது உடைமை கருத்துக்கள்*அடங்கி இருக்கும் . வளரும் குழந்தைகளுக்கான நீதி போதனைகள், அறிவுரைகள் இந்த பாடலில் அமைந்தன .


எம்.ஜி.ஆர். தான் நடித்த**தனக்கு*பிடித்த*ஒரு சில*படங்களில் பெற்றால்தான் பிள்ளையா முக்கியமானது .* அதில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்கிற பாடலில் , கருணை இருந்தால்*வள்ளலாகலாம்.* கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,* இந்த மூன்றும் இருந்தால்*தலைவனாகலாம். என்ற வரிகள் அமைந்திருக்கும்.* வளரும் குழந்தைகள் நாளைய தலைவர்களாகவும், கடமை வீரனாகவும், பொறுப்பு மிகுந்த தேசியவாதியாகவும் உருவாக*இந்த பாடல் நல்ல படிப்பினையாக*இருக்கும் .இந்த பாடலில்*மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று ஒரு வரி இருக்கும். எம்.ஜி.ஆரின் உச்சரிப்பு அப்படியே இருக்கும். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனபோது* , இந்த படம் மறு தணிக்கைக்கு*சென்ற போது பாடல் வரியில்*அறிஞர் அண்ணா*போல் என்பதற்கு பதிலாக திரு.வி.க . போல் என்று வரும்படி செய்தார்கள்.* அப்போதைய அரசியல் சூழலில் சில*எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு இப்படி சில*சோதனைகள்*கொடுத்து*அவரது*தேர்தல் வெற்றிக்கு*தடை ஏற்படுத்தினர். ஆனால் அதையெல்லாம் மீறி*அவற்றை*தவிடு பொடியாக்கி*எம்.ஜி.ஆர். ஆட்சி பீடத்தில்*அமர்ந்தார் என்பது வரலாறு .


ஆனந்த ஜோதி படத்தில்*எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்தார் .இந்த படத்தில்*வரும் ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்,* தலைவன் ஒருவன்தான்*என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்*என்ற பாடலில் , தர்மத்தின்*சங்கொலி*முழங்கிடுவோம், தமிழ்த்தாயின் மலரடி*வணங்கிடுவோம்**என்கிற வரிகளில் மொழிப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகள் அடங்கிய கருத்துக்கள்*இருக்கும்.* அந்த காலத்தில் , இந்த பாடல்*பல பள்ளிகளில், சுதந்திர*தினம், குடியரசு தின*விழாக்களில்*மாணவ மாணவிகள்*பாடும் பாடலாக*அமைந்தது .


நம் நாடு படத்தில்தனது அண்ணனின் குழந்தைகளுக்காக** நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, என்கிற பாடலில்* விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் . தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் . என்ற வரிகள்*குழந்தைகளுக்கு நீதி போதிக்கும்* *வாத்தியாராக இருந்து சொன்ன கருத்துக்கள்*, நிஜத்தில்*எம்.ஜி.ஆர். தனது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குழந்தைகளை* தன் குழந்தைகளாக பாவித்து அவர்களை*படிக்க வைப்பதில் இருந்து , திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தானே* முன்னின்று நடத்தி வைத்துள்ளார்*


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல்**சினிமா , அரசியல் , பொது வாழ்க்கை என்று மூன்று உலகிலும்*உச்சத்தை*தொட்டவர் வேறு எவருமில்லை .ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஒரு மனக்குறை*இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்*கவிஞர் வாலி எழுதிய பாடலில்*பணம் படைத்தவன் படத்தில்*தனக்கொரு குழந்தை பிறக்கும்*தருவாயில், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான், தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்* (பேரறிஞர் அண்ணா*) வழியிலே*நடப்பான்*என்ற*பாடலில் நடித்தார் .பொதுவாக* எம்.ஜி.ஆர். குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் . அதனால்தான் , வறுமை, பசிப்பிணி காரணமாக எந்த குழந்தையும் பாதிக்க கூடாது என்கிற வகையில்*பள்ளிகளில், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் .* ஆரம்பத்தில் நிதிநிலை நெருக்கடி, எதிர்க்கட்சிகள் விமர்சனம் , அமுல்படுத்துவதில் சிக்கல்*இவையெல்லாம் இருந்தும்*திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை*அமுல்படுத்தி வருகின்றன தமிழகத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகள் சத்துணவு கூடம் என்ற பெயரில் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது . உலகமே இந்த திட்டத்தை வியந்து பாராட்டுகிறது . இதன் காரணமாக*பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .


எம்.ஜி.ஆர். சொந்தமாக இயக்கி தயாரித்த*நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் கண்ணதாசன், இன்னொருவர் எம்.ஜி.ஆர். கதை இலாகாவை சார்ந்த*ரவீந்தர். ரவீந்தருக்கு ஒரு சமயம்*திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது .எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மூலம் எம்.ஜி.ஆருக்கு*விஷயம் தெரிய வருகிறது .* எம்.ஜி.ஆர். ரவீந்தரை*திருமண பரிசாக*என்ன வேண்டும் கேள்,ஏதுவாகிலும் செய்கிறேன் என்று சொன்னபோது மாங்கல்யம் வாங்குவதற்கு ரூ.16/- வேண்டும் என்று கேட்டார் .அதை நீங்கள்தான்*தரவேண்டும் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். மறுத்ததோடு*, நான் இருமுறை*திருமணமாகி* மனைவியரை இழந்தவன். எனக்கு குழந்தை இல்லை.* எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். நீ வாழ வேண்டியவன். எனவேதான்*என் அண்ணனை*தரும்படி*கேட்டுக் கொண்டேன் என்று விளக்கினார் .**


ஊருக்கு உழைப்பவன் படத்தில்*கவிஞர் முத்துலிங்கத்தின் பிள்ளை தமிழ் பாடுகிறேன், ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் என்ற பாடல்* வரும்.,இந்த பாடலில்*எம்.ஜி.ஆருக்கு பிள்ளை இல்லை என்ற மனக்குறை, துயரம், சோர்வு*எல்லாம் தன்னுடைய முகபாவத்தில் தெரியும்படி***உணர்வுபூர்வமாக*நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்*, எல்லா துறையிலும் சாதித்த*எம்.ஜி.ஆர். தனக்கு*வாரிசு இல்லை என்ற மனக்குறையை போக்க தவித்தது போல் இந்த பாடல் அமைந்தது .*


உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே*, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே*என்கிற தத்துவப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பாடலின்*கருத்துக்கள் அமைந்தன . எம்.ஜி.ஆர். குழந்தைகளை நேசித்ததன்*பலனாக*, அவர்களது*ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு ,எந்தெந்த சொற்களை கேட்டால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்களோ ,அதற்கு தகுந்தபடி ,அவர்களின் சிரிக்கும் பாஷையில்* சிக்கு*மங்கு சாச்சா பாப்பா என்று குழந்தைகளே கோரஸாக பாடும்படி*பாடலில் முதல் வரியில் அமைத்திருந்தார் .


1972ல் தி.மு.க.வில் இருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அவர் கட்சி பதவி ஆசையினாலோ, அதிகார பதவி ஆசை யினாலோ அப்படி கேட்கவில்லை .* தவறு எங்கிருந்தாலும் தட்டி கேட்பது என்பது அவரது சிறிய வயதில் இருந்தே இருந்த வழக்கத்தில் ஒன்று .*** அவர் கும்பகோணம் ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும்போது கோடையில் மண்பானை வாங்க வேண்டி பள்ளி ஆசிரியர் சிறுவர்களிடம் தலா 3 பைசா, 5 பைசா என்று வசூல் செய்து ,திட்டமிட்டபடி, பெரிய பானை வாங்காமல் , சிறிய பானை வாங்கி , காசு மிச்சம் சேர்த்திருந்தார் . இதை அறிந்து சிறுவர்களிடம் கலந்து ஆலோசித்த அவர் அதை தட்டி கேட்க முற்பட்டார் என்று தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .


தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தனது பாடல்கள்மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை ,பாட வகுப்பில் சொல்வது போல , ஒரு பல்கலை கழகமாக , வாத்தியார் எம்.ஜி.ஆர். திகழ்ந்திருப்பார் .* தனது ஒவ்வொரு செயலிலும் யாருக்காவது , எதையாவது நல்ல முறையில் செய்ய வேண்டும், எளிதாக சொல்ல வேண்டும்* தனது ஒவ்வொரு மூச்சிலும் , தன்னுடன் பழகுபவர்கள், தொடர்புடையவர்கள் வாழ்க்கைத்தரம் உயர தன்னாலான உதவிகள் தன் வாழ்நாள் முழுவதும்*செய்யவேண்டும் என்பதை, கொள்கையாக எந்தவித* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வந்தார் ..**


மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் தி.மு.க. வின் கொள்கை பாடலாக இருந்தது எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் அவர்* காரில் பயணித்தபோது இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை என்று சொல்லலாம் .**

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம் :
1.சின்ன பயலே சின்ன பயலே - அரசிளங்குமரி*
2.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*
3.கேளம்மா சின்ன பொன்னு -* *கன்னித்தாய்*
4.வெள்ளி நிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
5.தம்பிக்கு ஒரு பாட்டு -நான் ஏன் பிறந்தேன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
7.ஒருதாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
8. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம் நாடு*
9.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
10..பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் -* ஊருக்கு உழைப்பவன்*

11.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

12.ஏன் என்ற கேள்வி* -ஆயிரத்தில் ஒருவன்*....... Thanks...

orodizli
26th April 2020, 11:48 AM
தன்னை சுட்டவனையே மன்னித்தவர் எம்ஜிஆர்
தன்னை ஏசிய கண்ணதாசனுக்கு பதவி கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர்
தனக்கு இடைஞ்சல் கொடுத்த பானுமதியை இசைக்காக பதவி கொடுத்து மதித்தவர் எம்ஜிஆர்
எதிரியின் திறமையை ரசிப்பவர் எம்ஜிஆர்
எம்ஜிஆரின் சக்தியின் முன் எவராலும் எதிரியாக இருக்க முடியாது
அதனால் தான் அவர்களை மன்னித்தாரா எம்ஜிஆர்

வாழ்க எம்ஜிஆர் புகழ் ......... Thanks.........

orodizli
26th April 2020, 12:14 PM
******************************** "ராஜராஜன் / Rajarajan"
********************************
மக்கள் திலகம் எம்ஜிஆர் , பத்மினி , ராகிணி , எம்.ஜி.சக்ரபாணி , பி.எஸ்.வீரப்பா , எம்.என்.நம்பியார் , திருப்பதி சாமி மற்றும் பலரது நடிப்பி்ல் 26 / 04 / 1957 ல் வெளியான திரைப்படம் "ராஜராஜன்".
கதை - வசனம் இளங்கோவன் , இசை - மகாதேவன்.
திருவனந்தபுரம் மெரிலாண்ட் சுப்ரமணியம் , வீரப்பா , நம்பியார் இவர்களது கத்தி சண்டை அபாரம்.
சீர்காழி கோவிந்தராஜன் / ஏ.பி.கோமளா குரலில்...
"நிலவோடு வான்முகில் விளையாடுதே" எனும் அருமையான பாடலை கு. சா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதியிருந்தார்.

************
RAJA RAJAN is a Tamil Language film.
Starring : M.G.Ramachandran , Padmini and Lalitha in the lead role.
The film was released in the 26th April 1957 (1) Though it is a good entertainer with hit songs the film didn't do well at box office and ran for just above 50 days.
(it was screened at Raja theatre Vellore also.
Vananghamudi , Maya bazhaar andRaja Rajan came at the same time. Lalitha and Padmini look very pretty in this good entertainer.)
The film has exellent meaningful dialogues by Elangovan. The dialogues can be enjoyed even now (2)

RAJA RAJAN
Directed by :
T.V. Sundaram
Produced by :
S.G.A.Cars
Written by :
Saravanan .P
Story by :
Raja
Starring :
M.G.Ramachandran
Padmini
Lalitha
P.S.Veerappa
M.N.Nambhiyar
M.G.Chakrabhani
Music by :
K.V.Mahadevan
Cinematography :
N.S.Mani
P.B.Mani
Edited by :
K.D.George
Production company :
Neela Productions
Distributted by :
Merryland Productions
Release date
26 April 1957
Running time
170 mints
Country
India
Language
Tamil

********************
M.G.Ramachandran as Prince RAJA RAJAN
M.N.Nambhiyar as Udhayachandran
P.S.Veerappa asGeneral Nagavelan
M.G.Chakrapani as Uthselan kavirayar

Friend Ramasami as sargunam
T.N.Sivathanu
C.V.V. Panthulu
N.M.Muthu koothan
R.M.Somasundaram
Jose prakash
Female cast
Padmini as princess Rama
Lalitha as priya mohini
S.D.Subbu lakshmi as queen senbagavalli
G.Sakunthala
S.V.Vasantha
R.Balsubramaniam as king keerthivarman

Producer :
T.V.Sundaram
Production company :
Neela productions
Director :
T.V.Sundaram
Music :
K.V.Mahadevan
Lyrics :
Mahakavi bharathiyar /
Kavi Lakshmanadass / A.Marudakasi / Ku.Sa.Krishnamoorthy /Muthukoothan / Pugazhendhi
Story , Screenplay ,dialogues :
Elangovan
Art Direction :
M.V.Kochappu
Editing:
K.D.George
Choreography :
P.S.Gopalakrishnan / Balaram
Cinematography :
N.S.Mani & P.B.Mani
Stunt :
R.N.Nambhiyar
Dance :
None
Music Composed :
K.V.Mahadevan (3) (4)
playback singers :
Seergazhi Govindarajan , Thiruchi Loganadan , S.C.Krishnan , R.Balasaraswathi Devi , A.P.Komala , P.Leela , Soolamangalam Rajalakshmi ana Vadivambal.
No song singers :

1 - Aadum Azhage Azhagu :
P.Leela / Soolamangalam Rajalakshmi
Pugazhendi 05:06
2 - Aala piranda Rajapaadu
Tiruchi Loganadan /Muthukoothan & vadivaambhal Muthukoothan 01:35
3 - Haiyahoo jingadi jayya
Srinivasan & party
Kavi Lakshmana dass 02:27
4 - Idhayam Thannayye
Seerghazhi govindarajan & A.P.Komala / A.Marudhakasi 03:32
5 - Kalaiyaada Aasai kanave
R.BhalaSarashwathi Devi / A.Marudhakasi 02:19
6 - Kaththinaale Kaariyam Saadhik
S.C.Krishnan / Vadivaambhaal Muthukoothan 02:28
7 - Mahamaayi Anghaala deviye
S.C.Krishnan / Muthukoothan 04:32
8 - Nilavodu Vaanmughil
Seerghaazhi govindarajan / A.P.Komala and Ku.sa.krishnamurthy
9 - Senthamizh Naadennum
Udutha Sarojini & Chores
Mahakavi Bharathiyaar 03:47
10 - Vettaiyaada Vaarum Mannavaa
Tiruchi Loganathan / S.C.Krishnan & Vadivaambhaal Muthu koothan 02:16
11 - Kalaiyaadha Aasai Kanave (pathos)
R.Balasaraswathi Devi / A.Marudhakasi
��
(Thanks : Makkal Thilagam MGR .
நன்றி : மக்கள் திலகம் எம்ஜிஆர்)


Tipping & editting
Creative by :
MGR in Kaaladi Nizhal
Ka. PALANI
Admin :
"Uzhaikkum Kural"
(Whatsapp Group)

எழுத்தாக்கம் & தொகுப்பு
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி
அட்மீன் :
" உழைக்கும் குரல் " தளம்

உதவி :
ஆர்.ஜி. சுதர்சன்
அட்மீன் :
"ஆண்டவன் mgr குடும்பத்தளம்"

வெளியீடு :
"உழைக்கும் குரல் " மாத இதழ்......... Thanks...

orodizli
26th April 2020, 12:26 PM
தற்போது " கணவன்" மக்கள் திலகத்தின் அசால்ட்டாக நடிக்கும் துள்ளல் performance, "நான் உயிர் பிழைத்தேன்" பாடல் காட்சிக்கு முன்பாக வந்து ஒரு கலக்கு கலக்குவாரே... சான்சே இல்லை... என்ன மாதிரி ஸ்டைல்?! ரகளை... அப்புறம் பாட்டு scene லும் தலைவர் அட்டகாசம்... தூள் தான் போங்கள்......... Thanks...

orodizli
26th April 2020, 12:27 PM
https://youtu.be/x0nEIdpUAGE......... Thanks...

orodizli
26th April 2020, 12:31 PM
https://youtu.be/KSFTdt6I1n8... Thanks...

orodizli
26th April 2020, 12:32 PM
https://youtu.be/0jXad1bT4gg... Thanks...

orodizli
26th April 2020, 12:32 PM
https://youtu.be/K7uJ8Pq5ht8... Thanks...

orodizli
26th April 2020, 12:33 PM
https://youtu.be/19RKBdTh0kk... Thanks...

orodizli
26th April 2020, 12:43 PM
https://www.hindutamil.in/news/blogs/550673-anbe-vaa-mgr.html.... Thanks...

orodizli
26th April 2020, 12:53 PM
********************************
கருணை உள்ள ,
இதயத்தில்...
கடவுள் எம்ஜிஆர்
குடி இருப்பார்.....!!!
********************************
அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு .....
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு -
என்று சொன்னார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்.
அவரது வாக்கு தத்துவப்படி
மலேசியா நாட்டில் ,
"மலேசிய தமிழ் கலைஞர்கள் குரல் இயக்கம் " (Persatam Suara Artis Tamil Malaysia) சார்பில் , தலைவர் அப்பு என்கிற பாலசந்திரன் தலைமையில் , துணைத் தலைவர் திரு. ராமசந்திரன் மற்றும் ,கலைக் குடும்பத்தை சேர்ந்த திரு. மதன் (பொருளாளர்)உதவித் தலைவர்கள் மூர்த்தி , ரமேஷ் , சேகர் (ட்ரம்மர்) இணைந்து ,
கொரோனா (covid -19) வைரஸ் தாக்கத்தினால் , அரசின் ஆணைக்கிணங்க வீட்டை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கும் நலிந்த கலைஞர்களுக்காக நிதி திரட்டி ,,,,உதவிக்கரம் நீட்டி , கருணை வள்ளல் எம்ஜிஆர் அவர்களின் வழியில் மனிதநேயத்தை தமது உழைப்பின் மூலம் பதிவு செய்துள்ளார்கள்.
ஆம் , கலைத்தொழில் ஒன்றையே நம்பி முடங்கிய நிலையில் இருந்த சக கலைஞர்களின் வீடுகளை தேடிச்சென்று , தரம் உயர்ந்த மளிகை பொருட்களை கொடுத்து , ஆதரவு கரம் நீட்டியதில்...மலேசிய தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நமக்கு கிடைத்த தகவல்படி உதவிக்கரம் நீட்டியவர்களின் விவரம் மற்றும் உதவி பெற்றவர்களின் விவரம் , உங்களது பார்வைக்காக....
( உதவி கொடுத்தவர்கள் / பெற்றவர்கள் சிலரது பெயர் விடுபட்டதற்கு மன்னிக்கவும்)

SPONSORS DETAILS
*************************
1 - Balachandar - 5 pax
2 - Gurudevar - 5 pax
3 - Mathan. - 100 Rm
4 - Moorthy - 100 Rm
5 - Ramesh - 100 Rm
6 - Rama Dp - 100 Rm
7 - Gandi Dasan - 100 Rm
8 - Sai Lilli - 200 Rm
9 - John - 100 Rm
10 - Mgr Suresh - 100Rm
11 - Kalai @ boy - 100 Rm
12 - Elavarasu - 100 Rm
13 - Boy se'ban - 100 Rm
14 - Magin guitar - 100Rm
15 - Kalai singer -100 Rm
16 - Annapoorani - 100Rm
17 - Dato Kamalanadan - 100 Rm
18 - Kalaiyarasan kapar - 200 Rm
19 - Joseph - 100 Rm
20 - Gv Shan - 50 Rm

****************************

உதவி பெற்றவர்கள் விவரம்....

பாடகர்கள் :
1 - K.S. கதிரவன்
2 - Tms. பழனி
3 - ராஜ் ( ஈப்போ)
4 - தர்மென்
5 - பாலா - புவனேஷ்வரி
6 - மேகநாதன்
7 - ஜான்சன்
8 - சிவா சாகா
9 - பரம்
10 - விஷ்ணு
11 - லேட் ஜேசுதாஸ் family

பாடகிகள் :
****************
12 - ரோகிணி
13 - லட்சுமி
14 - மலர் கமல்சுகு
15 - நளினா
16 - விசால் குமுதா
17 - கிறிஸ்டினா fly
18 - சாலினி
19 - ப்ரஸிலியா fly
20 - காயத்ரி fly
21 - அருணா
22 - ப்ரியா
23 - சித்ரா
24 - சௌம்யா
25 - ரோஸிலின்
மேலும்.......

Drummer
***********,**
26 - Kutti
27 - Mahalingam

Bango player
*****************
28 - Anbu
29 - Late.Balakrishnan fly
30 - Arokya sami
31 - Shekar

Comedian
*************
32 - Late AMR.Perumal fly

Clarinetist
**************
33 - Balan

Keyboardist
****************
34 - Late. George fly
35 - Steven

Lyricist
************
36 - Shankar

Percussionist
******************
37 - Ramu
38 - M.C. Albert

Guitarist
***********
39 - Aaru
40 - Krishnadass @ Appu

Actor
********,
41 - Hari krishna fly

*******************************

இன்னும்...இன்னும்..
உதவிக்கரம் நீட்டிய கருணை உள்ளங்கள் மற்றும் ,
உதவிகள் பெற்ற நம் உறவுகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
(இது முதல் பாகம்)

*******************************

நல் மனதோடு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் ,
மலேசிய தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டுள்ளது��

Tittle & Edited by :
Amudha Surabhi Dr. MGR Charitable Trust - B' lore
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை - பெங்களூர்

என்றும்....
உப்பிட்டவரை உள்ளலவு நினைக்கும் ,

நனறி மறவாத...
இதயதெய்வத்தின்
புனித வழியில் ,
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
அட்மீன் ,
"உழைக்கும் குரல்" தளம்
&
ஆர்.ஜி.சுதர்சன்
அட்மீன் ,
ஆண்டவன் mgr குடும்பத் தளம்

தகவல் வெளியீடு :
"உழைக்கும் குரல்" மாத இதழ்

��...... Thanks...

orodizli
26th April 2020, 12:56 PM
கருத்தாழமிக்க பாடல்கள் அனைத்தையும் ரசித்து கேட்டு மகிழ்ந்து கருத்துகளை உள்வாங்கி வியந்தேன்

பகிர்கிறேன் நண்பர்களுக்காக...

♦ *அனைத்தும் முத்தான பாடல் தொகுப்பு*

*காசிவிஸ்வநாதன் ராம்* 👍
*பாடல்கள்:*
1.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா
♦2. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
3. வாங்கய்யா வாத்தியா ரய்யா
♦4. விவசாயி விவசாயி
5. ஒரு தாய் மக்கள் நாமென்போம்
6. தர்மம் தலை காக்கும்
7. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
8. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு
♦9. ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
10. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
♦11. உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
12. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
♦13. கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
♦14. மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
15. போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே.
♦ 16. ஏய் மனுசன மனுசன சாப்பிடுறான்டா தம்பி பயலே
♦ 17. உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
18. சத்தியம் நீயே தர்மத்தாயே
19. ஆண்டவன் உலகத்தின் முதலாளி



https://youtu.be/DaskSr_6ruo... Thanks...

orodizli
26th April 2020, 12:58 PM
https://youtu.be/U0d5RZG0FXQ... Thanks...

orodizli
26th April 2020, 01:06 PM
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...

இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.

அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.

01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.

02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.

03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம்....... Thanks...

orodizli
26th April 2020, 01:09 PM
திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் மருத்துவ கல்லூரி ஒன்று முதலமைச்சர் கோட்டாவாக 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது முதலமைச்சரின் பார்வைக்கும் வந்தது. அப்போது பலரும் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனுக்களும் வந்தவண்ணம் இருந்தது அப்போது புரட்சித் தலைவரோடு இருந்த ஒரு அன்பர் திரு டாக்டர் புரட்சித் தலைவரிடம் நமக்கு வந்த 25 கோட்டாவை கட்சி நிதிக்காக செயல்படுத்தலாம் என்று கூறுகிறார் அதற்கு நம் புரட்சித்தலைவர் சிரித்துக் கொண்டு சரி பார்ப்போம் என்றார். பின்பு ஒரு அதிகாரியை அழைத்து நமக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வந்து இருக்கிறதல்லவா அந்த மனுக்களை எல்லாம் எடுத்து வாருங்கள் என்று கூறினார். அந்த அதிகாரியும் எடுத்து வந்தார் அந்த மனுக்களை பத்து நாட்கள் ஆராய வேண்டிய மனுவை பத்து நிமிடங்களில் 25 நபரையும் தேர்ந்தெடுத்தார். அப்போது அங்கிருந்த அன்பர் ஒருவர் புரட்சித்தலைவர் இடம் கேட்டார் என்ன தலைவரே இவ்வளவு சீக்கிரத்தில் தெரிந்தெடுத்து விட்டீர்கள் எப்படி என்று கேட்டார். அதற்கு திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் அவரிடம் கூறிய வார்த்தை என்னவென்றால் எரியாத விளக்கில் எண்ணெய் ஊற்றி ஒளியைக் கொடுக்கவேண்டும் அதைத்தான் செய்தேன் என்றார். அந்த அன்பருக்கு புரியாததால் மீண்டும் கேட்டார் புரியவில்லை தலைவரே 10 நிமிடங்களில் எவ்வாறு 25 கோட்டாவும் 25 நபர்களின் மனுக்களுக்கும் தேர்வு செய்தீர்கள் என்றார். அதற்கு புரட்சித் தலைவர் அவர்கள் என்ன செய்தார் என்றால் மனுக்களில் தகப்பனார் அல்லது காப்பாளரின் கையெழுத்து மனுவில் கட்டாயம் தேவை அதை வைத்து தேர்ந்தெடுத்தார் அதாவது ஆங்கில் இருக்கும் கையெழுத்து இட்டது தனியாகவும் தமிழில் கையொப்பமிட்ட மனுவை தனியாகவும் பிரித்து, அதில் எதுவும் தேர்ந்தெடுக்காமல் கைநாட்டு இட்ட மனுக்களை மட்டும் கையெழுத்திட்டு தேர்ந்தெடுத்தார். இப்போது உங்களுக்கு அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது இப்போது நமக்கும் புரிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு இறைவன் வாழ்ந்த மண்ணில் தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....!!
நன்றி அன்பர்களே... .......... Thanks...

orodizli
26th April 2020, 01:10 PM
https://youtu.be/bSZdl1O2MfI... Thanks...

orodizli
26th April 2020, 01:13 PM
நள்ளிரவு நேரம் திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்திலிருந்து ராமாபுரம் வீடு செல்வதற்காக காரில் புறப்படுகிறார். வந்து கொண்டிருக்கும்போது ஒரு சாலையோரத்தில் ஒரு மனிதர் கந்தல் துணியுடன் காலில் செருப்பு இல்லாது ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். அதை நம் திரு தலைவர் காரிலிருந்து ஜன்னலோரமாக காண்கிறார் உடனே உத்தரவிடுகிறார் யாரோ ஒருவர் ஒரு குழந்தையை கடத்திக்கொண்டு போகிறார் போல் உள்ளது அவரை வலி மறையும் என்று உத்தரவிடுகிறார் அதேபோல் காவல் அதிகாரிகளும் அவரை தடுத்து கையில் உள்ள குழந்தையை பார்க்கிறார்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது அதைக்கண்ட வாத்தியார் குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்கிறார் மேலும் இது யாருடைய குழந்தை? என்று கேட்கிறார் அதற்கு அந்த மனிதர் என்னுடைய குழந்தை ஐயா மிகவும் ஜுரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆகையால் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றார் அந்த மனிதர் அதற்கு நம் வாத்தியார் குழந்தையின் உடலை தொட்டு பார்க்கிறார் குழந்தைக்கு ஜுரம் வீசுகிறது என்று அறிகிறார் அறிந்த உடனே சரி வாருங்கள் காரிலே ஏருங்கள் என்று தமது காரில் ஏறச் சொல்கிறார் ஆனால் அந்த மனிதர் ஏற மறுக்கிறார் பரவாயில்லை ஏறுங்கள் என்று மீண்டும் வாத்தியார் கூறுகிறார் பின்பு அந்த மனிதர் காரில் ஏறி தலைவரோடு பயணம் செய்கிறார் வாத்தியாரின் கார் ஒரு டாக்டர் வீட்டின் அருகில் நிற்கிறது வாத்தியார் காரைவிட்டு இறங்கி அந்த வீட்டின் கதவை தட்டுகிறார் உடனே கதவு திறக்கப்படுகிறது திறந்ததும் அந்த டாக்டர் வாத்தியாரை பார்த்து வியப்படைந்தார் ஐயா நீங்கள் இந்த நேரத்தில் என்று கூற அதற்கு நம் வாத்தியார் இந்த குழந்தையின் உடல்நலம் சரியில்லை ஆகையால் இக்குழந்தைக்கு வைத்தியம் செய்ய வேண்டும் ஆகையால் தான் தங்களை நாடி வந்தோம் என்கிறார் வாத்தியார். அதைக்கேட்ட டாக்டர் குழந்தைக்கு சிகிச்சை செய்கிறார் சிகிச்சை செய்த டாக்டருக்கு ஊதியம் கொடுக்கிறார் நம் வாத்தியார் டாக்டர் வேண்டாம் என்கிறார் அதற்கு நம் வாத்தியார் நீங்கள் செய்த வேலைக்கு தகுந்த ஊதியத்தை நாம் கொடுத்தே ஆகவேண்டும் ஆகையால் இதை படியுங்கள் என்று வலுக்கட்டாயப்படுத்தி கொடுக்கிறார் வேறுவழியின்றி அந்த டாக்டரும் வாங்கிக் கொள்கிறார் பின்பு வாத்தியாருக்கு ஒரு யோசனை வருகிறது மருத்துவமனைக்கு மக்கள் தகுந்த நேரத்தில் செல்ல வேண்டுமென்றால் நாம் அரசு சார்பாக ஆம்புலன்ஸ் வசதியை செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அதேபோல் செயல்படுத்தியும் காண்பித்தார் இதை அறியாது வரலாறு தெரியாத திமுக தங்களால் தான் 108 என்னும் ஆம்புலன்ஸ் அமைக்கப்பெற்றது என்று இன்று பதிவிட்டு வருகிறார்கள் உண்மையிலே சொல்லப்போனால் நம் திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் கொண்டுவந்ததுதான் ஆம்புலன்ஸ் வசதி என்பதை நாம் அறிவோம் தற்போதும்... ............ Thanks...

orodizli
26th April 2020, 01:14 PM
https://youtu.be/PBsTTMVjKkQ... Thanks...

orodizli
26th April 2020, 01:17 PM
அன்பேவா அன்றும் இன்றும் என்றும் காலத்தால் அழியாத காதல் காவியம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இவர்களின் இனிமையான நடிப்பு வாலியின் அருமையான பாடல் எம் எஸ் வி யின் இனிமையான இசை ஆருர்தாஸ் அவர்களின் சுவை குன்றா வசனம் ஏ சிதிருலோக சந்தரின் இயக்கம் தயாரித்த avm மற்றும் ஒளிபரப்பிய சன் tv மற்றும் பங்குகொன்ட அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் இது போல ஒரு படம் எந்த ஜென்மத்திலும் வரபோவதுமில்லை இதற்கு ஈடுஇணை ஈதுமில்லை அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணிசங்கம்💐🙏🏽... Thanks...

orodizli
26th April 2020, 01:18 PM
கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!

அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.

நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!

இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.

தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!

"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"

போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.

எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!..... Thanks...

orodizli
26th April 2020, 01:19 PM
https://g.co/kgs/mbmeuK... Thanks...

orodizli
26th April 2020, 01:24 PM
மக்களின் நேரடி தொடர்பாளர், மக்களின் நேசக்கரம், மக்களின் ஏழைப்பங்காளன், மக்களின் இதய தொடர்பாளர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் பற்றாளர், மக்களின் தேவையை புரிந்தவர், மக்களின் பசியைப் போக்க துடித்தவர், மக்களின் துன்பத்தை போக்க நினைத்தவர், மக்களின் கண்ணீர் துடைக்க வந்தவர், மக்களின் எண்ணத்தை புரிந்தவர், மக்களின் பொறுப்பாளர், மக்களின் தேவையை அரிந்தவர், மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர், மக்களுக்காக வருபவர், மக்களோடு மக்களாக வாழ துடிப்பவர், மக்களுக்காக சேவை செய்தவர், சதா மக்களை நினைப்பவர், மக்களோடு மக்களாக உறைந்துச் செல்பவர், மக்கள்திலகம் ஆனவர், மக்கள் என்ற சொல்லுக்குச் சொந்தமானவர், உலகையே காக்க துடிப்பவர், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர், புரட்சித் தலைவர் என்று போற்றப்பட்டவர்.... நம் குலதெய்வம் ஆனவர், முற்றுப்புள்ளி அற்றவர், நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர், நாம் வாழும் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தவர், நாம் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர், நம்மை புரிந்து கொண்டவர், நம்மை தெரிந்து கொண்டவர், நம்மில் கலந்தவர், இவையெல்லாம் தற்போது வரை நடந்தவை........... Thanks.........

orodizli
26th April 2020, 01:26 PM
"கண்ணதாசனை ஆச்சரியப்படுத்திய கதை... எம்ஜிஆர் கொடுத்த 5000 ரூபாய்" - 'சாரைப்பாம்பு' சுப்புராஜ் சொன்ன அடேங்கப்பா சம்பவங்கள்! | nakkheeran - https://www.nakkheeran.in/cinema/cinema-news/actor-subburaj-speaks-about-mgr..... Thanks...

orodizli
26th April 2020, 01:27 PM
நன்றி மறவாத நல்ல மனம் சரோஜாதேவி இன்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் போட்ட சோறுதான் நான் சாப்பிடுவது என்று எல்லோர் முன்னிலையும் கூறுகின்றாரே இந்த மனம் யாருக்கு இருக்கிறது அவரால் உதவி பெற்றவர்கள் எத்தனை பேர் உண்மையை உலகிர்க்கு தெரிய படுத்துகிறார்கள் புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி இப்பொழுது அவர் படமே இல்லை இதர்க்கு யார் காரணம் என்பது புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தமானா உடன்பிறப்புகளுக்கு தெரியும் இது யாரால் நன்றி மறந்த செயலால் அப்பொழுது இருந்தே ஓரம் கட்டப்பட்டது..... Thanks...

orodizli
26th April 2020, 01:28 PM
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"

தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.

பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?

"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
"பாசவலை" படத்தில் எழுதிய....

"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்

குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்

தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்

சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"

உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா?

-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்........ Thanks...

orodizli
26th April 2020, 01:30 PM
அகவை திருநாள்
வாழ்த்துக்கள்������
******************************
மலேசியா நாட்டின் மேடைப் பாடகர் டி.எம்.எஸ். குரல்வழி பாடகர் பாசமிகு சகோதரர் திரு. டி.எம்.எஸ். சித்திரன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
புரட்சித்தலைவரின் பற்றுமிகு பக்தரான திரு. சித்திரன் அவர்கள் ஏராளமான மேடை நிகழ்வுகளில் அதாவது , மலேசியா , சிங்கப்பூர் , இந்தியா உட்பட பல மேடை நிகழ்ச்சிகளில்... சரித்திர நாயகர் , பொன்மனத் தங்கம் , ஏழைகளின் இதயத் தலைவன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பல திரைப்படத்தின் பாடல்களை , மேடையில் பாடி இதயத்தில் பதிந்தவர்.
மலேசியா நட்டில் 2019 ம் ஆண்டு மாத கடைசியில் நடந்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழ்பாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள , நானும் ஆண்டவன் mgr குடும்பத் தளத்தின் அட்மீன் சகோ.ஆர்.ஜி.சுதர்சன் அவர்களும் கலந்து கொள்ள சென்றபோது ...
நாங்கள் தங்கியிருந்த ரெஷ்ட்ராண்ட்டுக்கு நேரில் வந்து சந்தித்து ,
மரியாதை , கௌரவத்துடன் அருமையான விருந்தும் கொடுத்து எங்ஙளை மகிழ்வித்த திரு.டி.எம்.எஸ். சித்திரன் சகோதரர் அவர்களுடைய பிறந்த நாளுக்கு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" "உழைக்கும் குரல்" மாத இதழ் மற்றும் ஆண்டவன் mgr குடும்பத்தளத்தின் சார்பாகவும்...
பல்லாண்டு காலம் சந்தோஷம் பொங்க வாழ , மனிதக்கடவுள் இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறோம்.
வாழ்க..வாழ்க ,
நோய்நொடியின்றி என்றும் சீறோடும்...சிறப்போடும்����
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
&
ஆர்.ஜி.சுதர்சன்
(அட்மீன்)
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
��...... Thanks...

orodizli
26th April 2020, 01:31 PM
1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் மக்கள் திலகம்நடித்த " என் அண்ணன்" படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி பிரம்மாண்டமான கட் அவுட் இது. இதை நிறுவ மொத்தம் 70கிலோ ஆணிகள் பயன்படுத்த பட்டன.இந்த கட் அவுட் கீழே நிற்கும் மனிதர்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும் . ........ Thanks...

orodizli
26th April 2020, 01:35 PM
காலங்களில் மாறினாலும் தலைவா என்றிட நீ இருக்கிறாய் எனது இதயக்கனியாய்..

புரட்சிமிகு கருத்துகளால் என் இதயம் கவர்ந்தவனே,
உன்னை எதிர்த்தவரும் இதயத்தால் வாழ்த்தி,
உன் பிரிவால் கலங்கிட உனக்குக்கிணையாய் எத்தலைவனும் தமிழக வரலாற்றில் நான் கண்டதில்லை.

அண்ணலின் வழிவந்த அன்பு சிகரமே,
உன்னை நேரில் காணாவிட்டாலும் எம் உள்ளங்களில் வாழ்கிறாய்..

மக்கள் திலகமாய் திகழ்ந்த உன் பெயரில் கயவர்களும் நீயாக முயற்சிக்கிறார்கள்.
காலம் தரும் அவர்களுக்கு பெரும்தோல்வி என்னும் பரிசு..

கட்சியும் வேண்டாம்.
பதவியும் வேண்டாம்.
உன் கருத்துகள் போதும்..
தமிழ் பற்று போதும்....... Thanks...

orodizli
26th April 2020, 01:36 PM
https://youtu.be/UDZssz_4t2Q... Thanks...

orodizli
26th April 2020, 01:38 PM
மலேசிய தமிழ்க்கலைஞர்கள் குரலியக்க அமைப்பிற்காக...
÷×÷÷÷×÷÷××××××××××××
மக்கள்திலகமெனில்
எம்.ஜி.ராமச்சந்திரன்!
மலேசியத்திலகமெனில்
பாலச்சந்திரன்!(எ)அப்பு!!
அய்யா உந்தன் பிறந்த நாள்...
மனிதநேய மாண்பில்
உயர்ந்தநாள்!
அளப்பரிய உந்தன் தொண்டு...
தமிழ்த்தாயே பாடும்
தகைமிகு சிந்து!
மணித்தமிழ் மணக்கும்
கலையினத்தை நாடி
கவலை போக்குகிறாய் தேடி!
உனது தருமதானம்
உலகுள்ளவரை!
யாருமில்லை உன்னால் வாடி!
உனை நன்றியோடு
தினம் போற்றும்
மனங்கள் கோடி!
பொருள்திரட்டி
நிதிதிரட்டி
துயர்படுவோர்
களிப்புறவே
புயலாக செயல்படுகிறாய்!
மற்றவர் வாழ்விலே
நிழலாக நீ இருக்கிறாய்!
கலைவளர்க்கும்
காலப்பெட்டகமே!
அலையொலிக்கும்
நுரையாழி...
உனக்குச்சொல்கிறது...நீ நீடு வாழி!
பொன்மனச்செம்மல்
புரட்சித்தலைவர்
இதயதெய்வம்
மனிதப்புனிதர்
இத்தரைச்செல்வம்
மெய்அவதாரம்
மக்கள்ஆதாரம் நமது எம்.ஜி.ஆர் வழியிலே
ஏற்றமுடன் தொண்டாற்று!
இன்றுபோல் என்றும் நீ
வாழிய பல்லாண்டு!
இந்தியாவில் இருந்து
மங்காத பாசமுடன் பாலச்சந்திரா(அப்பு)
சிந்தை குளிர
சிந்தனை வளர
வாழ்த்துகின்றோம்
வாழியநலம்!
சூழிய வளம்!!
என்றென்றும் நட்பிற்கினிய
அமுதசுரபிஎம்.ஜி.ஆர்.அறக்கட்டளை பெங்களூரு....... Thanks...

orodizli
26th April 2020, 01:39 PM
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!! மங்காத தங்கம் எங்கள் தங்கம் புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்..... ...... Thanks...

orodizli
26th April 2020, 01:43 PM
தமிழகத்தின் முதல்வராக நான்குமுறை பதவி வகித்த ஜெயலலிதா ஜெயராம் எனப்படும் செல்வி ஜெ. ஜெயலலிதா, தனக்கு முந்தைய நான்கு முதலமைச்சர்களைப் போலவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சினிமாத் துறையில் இருந்தவர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.

எம்ஜிஆருடன் ஜெயலலிதா
அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் 1982ல் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஜெயலலிதா, அடுத்த ஆண்டிலேயே கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக்கப்பட்டார்.

1984ல் உடல்நலம் குன்றுவதற்கு முன்பாக, ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கே இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது
1984ல் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ஜெயலலிதாவின் பிரசாரத்தை ஏற்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அவரைச் சந்திக்கவும் ஜெயலலிதாவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

பிளவுபட்டது அஇஅதிமுக

எம்.ஜி.ஆருடன் பிரசார வாகனத்தில்
ஆனால், சிறிது காலத்திலேயே முதலமைச்சருடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவரை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவதற்கு நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு ராயபுரத்தில் நடந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

முதலமைச்சரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஜெயலலிதாவின் ஆங்கிலப் புலமையை கவனத்தில் கொண்டு, அவரை 1984-ஆம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.

1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும் ஜெயலலிதா தலைமையிலும் மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியின் தலைமையிலுமாக அ.இ.அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. ...1989 ம் ஆண்டு இரு அணிகளும் ஒன்று சேர்ந்து சரித்திரம் படைக்க தொடங்கியது... Thanks...

orodizli
26th April 2020, 01:45 PM
ஷாலின் மசரியா லாரன்ஸ் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் பற்றி ஒவ்வொரு நடைஉடை பாவனை மற்றும் அவர் வெற்றிக்கான காரணம் இளமையாய் இருந்தால்தான் இனிமையாக இருக்க முடியும் பாடல் வரிகளையும் இசையையும் மக்களுக்கு எளிதாக போய் சேரவேண்டும் என்று கவனம் செலுத்துவார் பணம் வாங்கினோம் ஒவர் நடிப்பு நடித்தோம் என்று இல்லாமல் எதார்தத்தைமக்களிடம் கொண்டு சேர்த்த இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.... Thanks...

orodizli
26th April 2020, 01:48 PM
தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன் அல்லவா நிறத்தை தந்தது
சூரியன் அல்லவா தேஜஸ் தந்தது
கருணை அல்லவா மனதை தந்தது
இறைவன் அல்லவா உன்னை தநதது எங்களுக்கு இறைவனாக

வாழ்க எம்ஜிஆர் புகழ் ... Thanks...

orodizli
26th April 2020, 01:54 PM
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

எம்.ஜி.ஆர்.

அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..

— புவனா, மும்பை..... Thanks...

orodizli
26th April 2020, 01:57 PM
https://youtu.be/eQwfybCCefg... Thanks...

orodizli
26th April 2020, 02:00 PM
மக்கள் திலகம் MGR , சரோஜாதேவி , பாரதி மற்றும் பலர் நடித்த " நாடோடி" 14 / 04 / 1966வெளிவந்தது.
1966 ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத் திரைப்படத்தை , பத்மினி பிக்சர்ஸ் சார்பாக பி.ஆர்.பந்துலு அவர்களே தயாரிப்பும் கூட , இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக எம்ஜிஆர் அவர்கள் , சாதி கொடுமைகளை சாடி கண் பார்வையற்றவராக சிறப்புடன் நடித்த இப்படத்தின் நீளம் 4698 மீட்டர் ஆகும். மக்கள் திலகம் அவர்கள் 1966 ம் ஆண்டு மொத்தம் 9 படங்கள் நடித்தார்.
நாடோடி திரைப்படம்
சென்னையில்... பிளாசா , பிராட்வே , உமா திரையரங்குகளில் 57 நாட்கள் ஓடியது.

*
NADODI (transl.Vagabond : Tamil pronunciation : (na:do:di) is a 1966 Indian Tamil - Language film produced and directed by B.R. Panthulu.
The film Stars M.G.Ramachandran and B.Sarojadevi in the Lead roles.
Direct and produced by :
B.R. panthulu
Written by :
R.K.Shanmugam
Story by :
G.Balasubramaniam
Starring :
M.G.Ramachandiran
B. Sarojadevi
Bharathi

Music by :
M.S.Vishvanathan
Cinematography
V.Ramamoorthy
Edited by :
R.Devarajan
Production company :
Padmini pictures release
Date : 14 April 1966
Running time 155 minutes
Country : India
Language : Tamil
Budget : 7 Lakhs
Box office : 17 Lakhs

Ulagamengum ore mozhi
T.M.Soundararajan / P.Suseela 3 : 24
Liric : Kannadasan

Kadavul seida paavam
T.M.Soundararajan 4 : 43
Liric : Kannadasan

Androru naal
T.M.Soundararajan / P.Suseela
Liric : Kannadasan

Naadu adhai Naadu
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali

Paadum Kural
P.Suseela
Liric : Kannadasan

Rasikka Thaane indha
P.Suseela
Liric : Kannadasan

Thirumbhi Vaa Oliye
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali

Kadavul Thandha Paadam
T.M.Soundararajan
Liric : Kannadasan

Kanghalil
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali

Four productions of padmini pictures , with M.G.R , Nadodi was the only film in block and white .
B.R.Panthulu has an uncredited role in the film as a poet.
One theme of the film deals with caste system.
K.R.Ramasamy plays the doctor Nagendran while N.M.Nambiyar plays jambu. Bharathi in her debut plays Meena.
P.S.Venkatachalam after this film plays. Thyagu's father Arumugam Mudhaliar.... Thanks...

orodizli
26th April 2020, 02:04 PM
பாடலாசிரியர் வாலி எழுதிய பாடல்கள் டெலிவிஷன் களிலும் குக்கிராமங்களிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தலைவர் காகவே எழுதிய பல பாடல்கள் சாகாவரம் பெற்று ஒலித்துக்கொண்டு இருப்பதை நாம் காணலாம். கழக கூட்டங்களிலும் இவர் பாடல்கள் முதன்மை பெற்று திகழ்கின்றன வாலி எழுதிய கீழ்காணும் பாடல்கள் மக்கள் திலகத்தின் கீர்த்தியை என்றும் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது எனலாம். தெய்வத்தாய்1964 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படகோட்டி 1964 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ஆசை முகம்1965 எத்தனை பெரிய மனிதனுக்கு ஆயிரத்தில் ஒருவன்1965 எங்க வீட்டுப் பிள்ளை1965 பணம் படைத்தவன் கண் போன போக்கிலே கலங்கரை விளக்கம்1965 காற்று வாங்கப் போனேன் அன்பே வா1966 புதிய வானம் புதிய பூமி சந்திரோதயம்1966 புத்தன் இயேசு காந்தி பிறந்தது பெற்றால் தான் பிள்ளையா1966 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி காவல்காரன்1967 நினைத்தேன் வந்தாய் நூறு வயது ஒளிவிளக்கு1968 இறைவா உன் மாளிகையில் அடிமைப்பெண்1969 உன்னைப் பார்த்து இந்த உலகம் நம் நாடு1969 நல்ல பேரை வாங்க வேண்டும் நாளை நமதே1975 நாளை நமதே முதலிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை நன்றி நெல்லை எஸ் எஸ் மணி அவர்கள்.... Thanks...

orodizli
26th April 2020, 02:38 PM
MGR Filmography Film 49 (1961) Poster
"சபாஷ் மாப்பிள்ளே"
வித்தியாசமான எம்ஜியார் படங்கள் என்று, ஒரு மிகச் சிறு பட்டியலிட்டால், அதில் அடங்கக் கூடிய ஒரு படமாக இந்தப் படமும் அடங்கும் என்பதே இதன் சிறப்பு. எம்ஜியார் நடித்த முழு நீள காமெடி படம் இது ஒன்றே.

எஸ் ராகவனின் தயாரிப்பு இயக்கத்தில் கேவி மஹாதேவனின் இசையுடன் வெளியாகி பாடல்கள் பிரபலமாயின. ஆக்ஷன் ஹீரோவான எம்ஜியாரை ஃபுல் டைம் காமெடி ரோலில் ரசிகர்கள் அதிகமாக விரும்பவில்லை; காமெடி + ஆக்ஷன் என்று உருவாக்கிய ஃபார்முலா எம்ஜியார் காலத்தில் ரசிக்கப்படவில்லை. வீராதிவீரனாக மக்கள் மனதில் நிலைபெற்று விட்டவரை ஒரு சாதாரண ஜேப்படித் திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்து வேலை இழந்து போலிசுக்குப் பயந்து பம்பாய்க்கு திருட்டு ரயிலேறும் ரோலில் எப்படி ஏற்றுக் கொள்வதாம்! ஒருவேளை இது மாபெறும் வெற்றி பெற்றிருந்தால் , எம்ஜியார் தன் இமேஜிலிருந்து வெளிவந்திருக்கலாம்; வாய்ப்பில்லாமல் போனது.
எம்ஜியாரின் இசைக்குரலாக டிஎம்எஸ் நிலை பெற்றுவிட்டபோதிலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனையும் பிபி ஸ்ரீனிவாசனையுமே கேவிஎம் பயன்படுத்தினார் என்பதும் சுவாரசியமான தகவல்.

இதன் நாயகி மாலினியின் பொருளாதார நிலை அறிந்து இலவசமாய் நடித்து கொடுத்தார் என்ற பேச்சும் உண்டு........ Thanks...

orodizli
26th April 2020, 02:41 PM
MGR Filmography Film 48 (1961) Poster

ஏற்கனவே சில சமூகப்படங்களில் நடித்து அவற்றில் ஒன்றிரண்டு .மாபெரும்வெற்றி பெற்றிருந்தாலும் ராஜாராணி கதைகளின்.கதாநாயகனாகவே பெயர் பெற்றிருந்த எம்ஜியாரை சமூக கதைகளின் ட் வெற்றி நாயகனாக நிலைநிறுத்திய படம் என்ற பெயர் பெற்றது ஏஎல்எஸ் தயாரிப்பில் 1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படம்.
இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே எம்ஜியாருக்கு இரண்டாம் நாயகியாக நாடோடி மன்னனில் தோன்றியிருந்தாலும், அவரது மோஸ்ட் லவபிள் ஜோடி என்று சரோஜாதேவியை உறுதி செய்ததும் இப்படம்தான். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு அந்த ஜோடி தொடர்ந்து ஒரு இருபத்தைந்து படங்களில் தோன்றியது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்களும் கூட. எம்ஜியாருக்கு மிகப் பொருத்தமாக அமைந்த ஜோடி என்று மூன்று நடிகைகளைச் சொல்வார்கள்; அதில் முதல் சரோஜாதேவி அமைய இப்படமே முதற்கல் ஆனது.
எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு ஜாலியான திருடனாகத் துவங்கும் எம்ஜியார் தனது பிக்பாக்கெட்டால் ஒரு உயிர் பறிபோனதை அறிந்து வருந்தி திருந்துவதாக கண்ணதாசனின் திரைக்கதை வசனம் அமைய எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் பிரபலமாயின. அவற்றில் திருடாதே பாப்பா திருடாதே எனத்துவங்கும் பட்டுக்கோட்டையின் பாடலும், என்னருகே நீயிருந்தால் என்று துவங்கி எம்ஜியாருக்காக பிபிஎஸ் குரல்கொடுத்த பாடலும் எவர்க்ரீன் அந்தஸ்தை அடைந்தன.
இந்தப் படம் பற்றி ஒரு சுவாரசியமான தகவல். பொதுவாக எம்ஜியார் வசனம் பேசும்போது கைகால்களை அதிகம் ஆட்டிப் பேசுகிறார் என்றொரு விமர்சனம் உண்டு; இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தன் கைகள் இரண்டையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டுதான் அவர் நடித்தாராம்!
தெலுங்கில் டப் செய்யப்பட்ட எம்ஜியார் படங்களில் இதுவும் ஒன்று; ஜெபுடொங்கா என்ற பெயரில் வெளியானது.இத்திரைபடத்திற்க்கு சிறந்த தலைப்பு சொல்பவர்க்கு பரிசு அறிவித்து திருடாதேனு தலைப்பு சொன்னவர் பரிசு பெற்றார்.எம்.ஜி.ஆர் அவர்களின் சமூக படங்களின் டிரெண்ட் செட்டர் என கூறலாம்.1961 ல் அதிக வசூல் ஆன திரைப்படம்..... Thanks...

orodizli
26th April 2020, 03:06 PM
படத்தில் பாடம் நடத்திய ஒரே தலைவர் நம் தலைவர் அவருக்கு நிகர் யாருமில்லை வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்...அதனால் தான் வாத்தியார்... Thanks...

orodizli
26th April 2020, 03:07 PM
பேச்சு வழக்குல இந்த குஸ்தி சிலம்பம் பயிற்றுவிற்பவர்களை வாத்தியார்னுதான் சொல்லுவாங்க ! தலைவர் சிலம்பத்தில் நிபுணர் . ஆகையால் வாத்தியார் என அழைக்கப்பட்டார்... Thanks...

orodizli
26th April 2020, 03:07 PM
மூகராசிபடத்லெயெ தலைவர்க்கு வாத்தியார் என்று பெயர் வந்துவிட்டது. இதுதான் சரி ��... Thanks...

orodizli
26th April 2020, 03:09 PM
சிலம்பச் சண்டைக் காட்சிகளில் OAKதேவர், சின்னப்பதேவர் போன்ற திறமைசாலிகளுடன் புரட்சித்தலைவர் சண்டையிடுவது எதிரிக்கு பாடம் நடத்துவது போல் அமைந்திருக்கும்! அதனாலேயே அவர் வாத்தியார் என்று ரசிகப் பெருமக்களால் அழைக்கப்பட்டார் என்பதே உண்மை!... Thanks...

orodizli
26th April 2020, 03:10 PM
நாங்கள் வாத்தியாரே என்றுதான் அழைப்போம் தலைவரை. அப்படி வாத்தியாரே என்று கூறும்பொழுது அந்த வாத்தியாருக்கு அழுத்தம் கொடுத்து சொல்லும் பொழுது அவர் நமக்கே சொந்தம் என்று தோன்றும் நாம் அனைவருமே அவரை நமக்குத்தான் சொந்தம் என்று போட்டி போட்டுக்கொண்டு சொல்லுவோம் ��������வாத்தியாரே என்று கூப்பிடும் பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அதை ஒரு முறை சொல்லிக் கொண்டு இப்பதிவை பதிவு செய்தேன்.... Thanks...

orodizli
26th April 2020, 03:10 PM
நாமக்கல் மாவட்டம குமாரபாளையம், கலைமகள் தெருவில் எம்ஜிஆர் பெயரில் உடற்பயிற்சி நிலையத்தில் நான் பயற்சி செய்து உள்ளேன்!...
எனக்கு தெரிந்து மலைக்கள்ளன் திரைப்படம் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு,
வாத்தியார் POSTING கிடைத்திருக்கும்,
அருமையான வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க!..... Thanks...

orodizli
26th April 2020, 03:11 PM
எப்படியோ பட்டங்கள் படித்து மூளை கல்வி வாத்தியர்களை விட தன் வாழ்க்கையை பாடமாக சினிமா என்ற ஊடகம்மூலம் வாத்தியராகி விட்டார் ஓவ்வொரு படமும் ஒரு பாடம்..... Thanks...

orodizli
26th April 2020, 03:12 PM
சும்மா சொல்ல கூடாது."வாத்தியார்" என்பது எவ்வளவு உயர்ந்த, உன்னத அந்தஸ்து தெரியுமா?! நம் முன்னோர்கள் "மாதா, பிதா, குரு, தெய்வம், என வகைப்படுத்தி கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அம்மா, அப்பா, பிறகு குரு (வாத்தியார், உபாத்தியாயர்) எனும் மிக சிறந்த இடத்தையல்லவா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு வழங்கியுள்ளனர் பொதுமக்கள். இந்தவொரு அசைக்க முடியாத நெறியுடைய பெயர் நிச்சயமாக இறைவன் அருளால் கிடைத்தது என்றால் மிகையாகாது......... Thanks.........

orodizli
26th April 2020, 03:14 PM
நம் நாடு படத்திலேயே " வாங்கையா வாத்தியாரையா " என்ற பாடல் உள்ளது . அதற்கு முன்பாகவே தலைவரை வாத்தியார் என்று அழைத்தோம்..... Thanks...

orodizli
26th April 2020, 03:15 PM
எது எப்படியோ
நமக்கு
எதிலும்
எப்போதும்
வாத்தியார்
புரட்சி தலைவர் ஒருவரே.........நாடோடி மன்னன் காலத்திலிருந்தே வாத்தியார் பட்டபெயர் வந்துவிட்டது....... Thanks...

orodizli
26th April 2020, 03:21 PM
இந்த போட்டோ 1985ல் நான் நடத்திய விழா.யோகேந்திர மக்வானா என்ற மத்திய மந்திரியும் அவரது மனைவியும் மேடையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.கௌரவிப்பது எனது மனைவி.இந்த மந்திரி நமது தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தலைவருக்கு நெருக்கடி அதிகம் கொடுத்தார்.தரக்குறைவாக விமர்சனமும் டெல்லியில் இருந்து செய்து வந்தார்.அவர் தமிழகம் வந்தார்.கன்னியாகுமரிக்கு மனைவியுடன் வந்தார்.தலைவர் தரப்பில் இருந்து எனக்கு உத்தரவு வந்து ,நான் அவர்களை குமரியில் சுற்றிக்காண்பித்து நான் நடத்திய அரசு விழாவில் அவர்களை கௌரவித்தேன்.சிறந்த விருந்தோம்பல்.மனம் குளிர்ந்து தமிழர்களின் விருந்தோம்பலை புகழ்ந்து மேடையில் பேசினார். பின்னர் சென்னை சென்று தலைவர் முதல்வரை சந்தித்தார்.முதல்வர் விருந்தோம்பலின் சக்கரவர்த்தி ஆயிற்றே. மக்வானா மனம் குளிர்ந்தார்.பின்னர் தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர் புகழை டெல்லியில் பாடும் பக்தனானார் என்பது வரலாறு....... Thanks...

orodizli
26th April 2020, 03:24 PM
காரை நிறுத்தச்சொல்லி நடைபாதை கடையை நோக்கி வேகமாக சொன்ற புரட்சித்தலைவர்... திகைத்துப் போன கடைக்கார்..
ஒரு நாள் காலை பொழுது..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார்.
அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார்.
அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார்.
வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது.
அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார்.
பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார்.
அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார்.
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது.
‪புரட்சித்தலைவர்‬ நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல.
வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

#ஏழைகளின்தலைவர் எம் ஜி ஆர்..... Thanks...

orodizli
26th April 2020, 03:30 PM
உ. எம்ஜிஆர் துணை... அட்சயதிதி. கொடுப்பதும் கேட்பதும் பன்மடங்காக உயரும் நாள்... ..நினைவு தெரிந்த நாள் முதல் ஒரே உருவம்.ஒரே குரல்.ஒரே கொள்கை பரப்புதல். ஒரே புகழ் பாடுதல் என்று எல்லா நிலையிலும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் ஆகிய எங்களை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களை ஆட் கொண்டு இருக்கும் எங்கள் இதய தெய்வமே.. மக்கள் திலகமே.... இன் நன்நாளில் வேண்டுவது.... (1) எதிர்கால சந்ததிகள் நல்ல பண்பாகவும் ஒழுக்கமாகவும் ஈவுகுணமாகவும் வளரவேண்டும் என்றாலும் மக்கள் தங்களை என்றும் வழிபடவேண்டும் என்றாலும் சரித்திர சாதனையாக விளங்கும் 136 படங்களில் ஒரு சிலவற்றை தவிர இருப்பதையாவது மெருகேற்றி பாதுகாக்க வழி ஏற்படவேண்டும். (2) தங்கள் பெயரில் பொதுவான பத்திரிகை தொலைகாட்சி அமையவேண்டும். (3) மெரினா கடற்கரையில் உள்ள நினைவு இல்லத்தில் ஒரு கோபுரம் அமைத்து அதன் உள் வழியாக பிறந்த நாளில் சூரிய ஒளி பட வேண்டும். (4) சென்னை அண்ணா சாலையில் ஒரு ஆலயம் எழுப்பி அதன் அருகிலேயே ஒரு சிறிய திரையரங்கு கட்டி அதில் தங்கள் திரைபடம் மட்டுமே திரையிட வேண்டும்.அதன் அருகிலேயே பக்தர்களின் தலைமை அலுவலகம் செயல்படவேண்டும்... (5). தங்கள் நாமமும் தங்கள் திருவுருவமும் தங்கள் கொள்கையையும் மட்டுமே பயன்படுத்துகிற நல்லாட்சி தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் உழைப்பால் அமையவேண்டும் என்று என் ஆசை. இது மட்டும் அல்லாமல் வேறு என்ன என்ன வேண்டினால் நல்லது என்று இதை படிக்கும் தலைவர் பக்தர்களாகிய உங்கள் ஆசையை தெரிந்தவற்றை (தமிழ் நாட்டிற்கே தலைவர் பெயர் வைக்கவேண்டும் என்று கூறாமல்) நியாயமானதாக கூறவேண்டும். இவன் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர்..ஷிவபெருமாள்..... Thanks...

orodizli
26th April 2020, 03:33 PM
https://youtu.be/xFEZeBDZ9wE... Thanks...

orodizli
26th April 2020, 03:48 PM
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 12/04/2020

"இந்தப் பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்! நானும்
'நாடோடி மன்ன'னில் ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்"
என்றேன்.
“நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும் என்
படத்தில் ஒப்பந்தம் செய்யறேன்'' என்றார் ஏ.எல்.எஸ். அவர்கள்.
"நான் எந்தத் தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து
நடிக்கணும். அதை மறக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து
கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் நினைவு படுத்தினேன்.
முதலில் நான் சொன்னது யோசனை.
ஆனால், அதுவே 'நிபந்தனை' ஆயிற்று.
பிறகு அது ‘கட்டளை'யாகி விட்டது.
"காரியத்தை இந்த வகையில் செய்தால் நல்லதாச்சே" என்று
கூறுவது யோசனை. "அப்படிச் செய்தால்தான் நான் உங்களோடு
இருக்க முடியும்” என்று சொல்வது நிபந்தனை.
"நீங்க இப்படித்தான் செய்ய வேண்டும்; செய்து விடுங்கள்"
என்று அவர்களைக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு நிலையை
உண்டாக்குவது கட்டளை...!
ஆனால், ஏ.எல்.எஸ். அவர்கள் நான் கட்டளையிட்டதாக
நினைத்தார் என்று சொல்ல முடியாது.
“நான் கொடுக்கும் கால்ஷீட்டுகளிலெல்லாம் அந்தப் புதுமுக
நடிகை வந்து நடிக்கணும்” என்று நான் சொன்னேனே, அது
கட்டளையில்லாமல் வேறென்ன?
இப்படிக் கட்டளையிடத் தூண்டியது எது? அறிவுதானே!
அதன் விளைவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள
வேண்டாமா?
ஏனென்றால் நான்தான் தெரிந்து, அனுபவித்து கண்ணீர்
வடித்துத் திருந்தியவனாயிற்றே!
எனது அகம்பாவத்திற்குக் கிடைத்த அடையாளச் சின்னத்தை
அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா?
மறக்கத்தான் கூடுமா?

"அகந்தைக்குக் கிடைத்த அறிவுரை"

"வெற்றியும் தோல்வியும்"

அறிவுதான் ஒரு மனிதனுக்கு
வழிகாட்டியாக அமைகிறது.
அனுபவந்தான் தெளிவைத் தருகிறது.
ஒருவன் தனது முயற்சியில் வெற்றி
அடையும்போது 'அறிவாளி' ஆகிறான்;
தோல்வி அடையும் போது 'முட்டாள்'
ஆகிறான்.
இவை புறத் தோற்றத்திற்கு.
ஒரு கலைஞன் தன்னுடைய செயலிலே,
நடிப்புத் தொழிலிலே தோல்வி அடைந்து
விடுகிறான். அதாவது மற்றவர்கள்
அவனைத் தோல்வி அடையச் செய்து
விட்டார்கள் என்பதே அதன் பொருள்.
ஆனால், அனுபவ அறிவுத் தெளிவுள்ள
கலைஞன் அதைத் தோல்வியாக எடுத்துக்
கொள்ளமாட்டான்.
வேறொரு சமயம் அதே கலைஞன்
பிறரால் வெற்றி மகுடம் சூட்டப்படு
கிறான். ஆனாலும் அப்போது, அவனது
லட்சியம் நிறைவேறவில்லை என்று அவன்
உணருவதால் அவனுடைய உள்ளம்
வருந்துகிறது. “நான் தோல்வி அடைந்து
விட்டேன்'' என்று.
பாவம்! மக்களுக்கு எப்படித் தெரிய முடியும், அந்தக்
கலைஞனுக்கு ஏற்பட்ட தலைகுனிவும், உண்டாக்கப்பட்ட
சோதனையும், அவன் அடைந்த வேதனையும்?
இதே நிலையில்தான் நானிருந்தேன், ‘திருடாதே' என்ற அந்தச்
சமூகப்படம் வெளிவந்து வெற்றி பெற்று, மக்களால் நான்
பாராட்டப்பட்ட அந்த நேரத்தில்!
அதற்கு என்ன காரணம்?
நான் அடைந்த வெற்றியையும் பாராட்டுகளையும்விடப்
பன்மடங்கு பலமுடையதாக, என் அகம்பாவத்திற்குக் கிடைத்த
தண்டனை அல்லவா என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது!
நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று புகழ் மாலை சூட்டப்
பட்ட அந்த நேரத்தில், அந்த வெற்றியின் பின்னணியில் அணு
அணுவாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த
வேதனையில் அல்லவா நான் சோர்ந்து துவண்டு போயிருந்தேன்.

"தலையை முட்டிக்கொண்ட பிறகு..."

திரு.ஏ.எல்.எஸ். சீனிவாசன் அவர்கள் 'திருடாதே' படத்தில்
நான் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டுக்கொண்ட
போது, அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி என் கருத்னை
வெளியிட்டதற்கு, இப்பேர்ப்பட்ட தண்டனையா கிடைக்
வேண்டும்!
நான் அவரிடம் சொன்னது இருக்கட்டும். அவ்வாறு நான்
சொன்னதற்கு அடிப்படையாக, என் உள்ளத்தில் தோன்றிய அந்த
எண்ணம் என்ன?
"அவரது படம் ஒழுங்காக நடைபெற்று முடிய வேண்டும்!"
என்பது ஒன்று.
மேலும், "பரபரப்பான சூழ்நிலையில் என்னைப் போலவே
கதாநாயகி வேடம் ஏற்பவரும் இருந்தால், நான் கொடுக்கும்
நேரத்தில் அவரும் அவர் கொடுக்கும் நேரத்தில் நானும் 'கால்ஷீட்,
கொடுக்க முடியாமல் போக நேர்ந்து, படப்பிடிப்பு தடைப்
படக்கூடுமே” என்ற எண்ணமும் உண்டாகவே புது முகமாகவும்,
என் கால்ஷீட்டை அனுசரித்து நடிக்க வருபவராகவும் உள்ள
ஒருவரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! ஒருவகையில்
அந்த எண்ணம் சரிதான் அல்லவா? ஆயினும் எனது நல்ல ஆசை
அதை வெளிப்படுத்தும்போது நிபந்தனையாகவும் கட்டளையாகவும்
அல்லவா அது மாறிவிட்டது!
ஆனால், அப்போது எனக்கு அது ஒரு நிபந்தனை என்றோ ,
கட்டளை என்றோ புலப்படவில்லை! தலையை முட்டிக்கொண்ட
பிறகு குனிந்து போவது போல் அல்லவா என் நிலைமை
ஆகிவிட்டது! முன்னதாகவே புலப்பட்டிருந்தால் அப்படிச்
சொல்லியிருக்கவே மாட்டேனே! ஆயினும் ஒன்றைத் தெரியாமல்
செய்தாலும் தெரிந்து செய்தாலும், செய்து விட்ட குற்றத்திற்குத்
தண்டனையை ஏற்கத்தானே வேண்டும்?
நண்பர்களா? நயவஞ்சகர்களா?
"திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்பிய
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதற்கும்

திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.......... Thanks.........

orodizli
26th April 2020, 03:49 PM
����������
தருமம் செய்யும் குணம் உள்ளவர்கள்,
விளம்பரம் தேடுவதில்லை.
விளம்பரம் தேடுவோர்கள்...
யார் ? எங்கே ?
இலவசப் பொருள் தருகிறார்களோ...?
அங்கே இருப்பார்கள்
படம்பிடித்து
தனது பெயரை விளம்பர படுத்திக்கொள்ள ,
வலது கை கொடுப்பது
இடது கைக்கு தெரியாமல் இருப்பதே ,
தர்மம்...உயர்ந்த தர்மம்
சிறந்த தர்மம்.
பசித்த வயிறு வாயார வாழ்த்தினாலே ,
வாழ்வாங்கு வாழலாம்.
அதைத் தான் தருமம் தலைக் காக்கும்என்று சொன்னார்....
தரும மகாபிரபு
தர்மதேவன்
தங்கத்தலைவன்
எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள்.
அதுதான் பண்புள்ள தர்மம்........ Thanks...

orodizli
26th April 2020, 03:52 PM
முதல் முறையாக.....
நமது ,
" உழைக்கும் குரல் " தளம்
மற்றும் ,
ஆண்டவன் MGR குடும்பத் தளத்தில் ,

"இலங்கை நாளிதழ்கள்"
" வார மலர்கள்"

பார்த்து... படித்து...பரவசம்
அடையுங்கள்.

இந்த முயற்ச்சி ,
முழுக்க...முழுக்க நமது...
புரட்சித்தரைவரின் மீது உண்மை விசுவாசமுள்ள பக்தர்களாகிய உங்களுக்காக....!

நன்றியுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
&
ஆர்.ஜி.சுதர்சன்........ Thanks.........

orodizli
26th April 2020, 03:55 PM
https://www.facebook.com/groups/1860399027616671/permalink/2689313188058580/?sfnsn=wiwspwa&extid=Cr8CEk5uX4Fy2MdK&d=w&vh=i...... Thanks...

orodizli
26th April 2020, 04:00 PM
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 11/04/2020

உடனே நான்.
"அந்தப் புதுமுகம் நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து
நடிக்கத் தயாராக இருக்கணும்! எந்த நேரத்தில் நான் கால்ஷீட்,
கொடுத்தாலும் வந்து நடிக்கணும். சேர்ந்தாற்போல் நான்
பத்துநாள் கால்ஷீட் தந்தாலும் நடிக்க வரணும். இந்த நிபந்தனை
யோட அந்தப் புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யணும்" என்றேன்.
அதற்கு ஏ.எஸ்.எஸ். அவர்களும் சம்மதித்தார்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள் என்னிடம்,
''ஒண்ணு செய்யலாமே! பத்மினி பிக்சர்ஸ் 'தங்கமலை
ரகசியம்' படத்துக்காக ஒரு 'குரூப்டான்ஸ்' காட்சியை நான்
இயக்கினேன். அதுலே ஆடின ஒரு பெண் நல்லாவே இருந்தது"
என்று சிபாரிசு செய்தார்.
"யார்?" என்று விவரம் கேட்டேன்?
"அந்தப் பொண்ணுக்கு சரோஜாதேவின்னு பேராம். இந்தப்
பக்கம் பார்த்தா வைஜயந்திமாலா மாதிரி இருக்கு. அந்தப்பக்கம்
பார்த்தா பத்மினி மாதிரி இருக்கு. தாய்மொழி கன்னடம், தமிழ்
பாஷை அவ்வளவாகத்தெரியாது. ஆனால் நாளடைவிலே
பேசிப்பேசிப் பழக்கிடலாம்! ஒரு நல்ல கதாநாயகியாக அந்தப்
பெண்ணை ஆக்கிட முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
என்றார்.
இதற்கு முன்னால் சரோஜாதேவி அவர்களைப் பார்த்த நினைவு
எனக்கு வந்தது. நான் 'நாடோடி மன்னன்' படப்பிடிப்புத்
துவக்கியிருந்த நேரம்.
புது முகத்தின் அறிமுகம்!
இப்போது 'விஜயா ஸ்டூடியோ' என்று அழைக்கப்படும்
அப்போதைய 'ரேவதி' ஸ்டூடியோவில் இயக்குநர் திரு. கே. சுப்ப
மணியம் அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்
'கச்சதேவயானை' என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பு நடந்து
கொண்டிருந்தது.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள் சொன்ன இதே பெ
(சரோஜா தேவி) அந்தப் படப்பிடிப்பில் தேவயானையாக
நடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். ஒரு குடத்தை இடுப்பில்
எடுத்துச் சுமந்து கொண்டு, அவர் நடந்த காட்சி அப்போது படம்
பிடிக்கப்பட்டது. படத்தில் நடிப்பதற்குத் தேவையான தோற்றம்,
உடம்பு இருப்பதை அறிந்தேன்.
இரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் எனக்கு சரோஜா தேவியை
அறிமுகம் செய்து வைத்தார்.
நான் திருமதி சரோஜா தேவியிடம் "டான்ஸ் ஆடத்
தெரியுமா?" என்று கேட்டேன்.
"ஓ! ஆடுவேனே!" என்றார்.
"தமிழ் பேசத் தெரியுமா?" என்று கேட்டேன்.
"தெரியும்" என்றார்.
அப்போது சரியாகத் தமிழ் பேச வராது என்றாலும், ஆர்வத்தில்
அப்படிச் சொன்னார்.
இந்த நினைவு வரவே, நான் திரு.ப. நீலகண்டன் அவர்களிடம்
''நீங்க சொன்ன அந்த சரோஜாதேவி, "கச்சதேவயானை ”யிலே
நடிக்கிற பெண்தானே?" என்று கேட்டேன்.
"ஆமாம்" என்றார்.
"டெஸ்ட் எடுத்துப் பாருங்க” என்றேன்.
"செய்யறேன்! நான் பொறுப்பேத்துச் செய்யறேன்'' என்றார்.
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள், "தமிழ் பேசத் தெரியாத
பெண்ணைப் போட்டால், அப்புறம் சங்கடமாக இருக்குமே" -
என்றார்.
"இல்லைங்க. முதலில் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்.
அப்புறம் முடிவு செய்யலாம்" என்றேன்.
தொடர்ந்து இருவரும் கலந்து பேசியதன் விளைவாக அவரை
நான் சம்மதிக்க வைத்தேன்.
மிரட்சியும், கவர்ச்சியும்
இன்றைக்கு இயக்குநராக உள்ள கதை. உரையாடல்
ஆசிரியரான திரு.மா. லட்சுமணனுடன் திருமதி சரோஜா
பர்கள் வந்த
தேவியை நடிக்க வைத்து (டெஸ்டுக்காக) ஒரு காட்சியைப்
எடுத்தார்கள்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் அவர்கள் வ
போது, "டெஸ்ட் எடுத்ததிலே எப்படியிருக்கு?'' என்
கேட்டேன்.
"திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் "டயலாக்கு சரியா இல்லையே
நாம கன்னடப் படம் எடுக்கறதானா போடலாம்'' என்றும்
எப்போதும் போல மற்றவரைக் கேலி செய்கிறோமே என்பது
புரியாமல் கூறினார்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள்
"பரவாயில்லை! பேச்சு கொச்சையாக இருந்தாலும்
இயற்கையா இருக்கும். பழகப்பழகச் சரியாகிவிடும்'' என்றார்.
பிறகு நான் படத்தைப் போட்டுப் பார்த்தேன்.
தமிழ்ப் பேச்சு கொச்சையாகத்தான் இருந்தது.
தோற்றத்தில் ஒரு மிரட்சி இருந்தது என்றாலும் ஒரு கவர்ச்சியும்
இருக்கவே செய்தது.

நான் திரு.ஏ.எல்.எஸ். அவர்களிடம்,
( தொடரும்)

திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். .... Thanks...

fidowag
26th April 2020, 07:09 PM
நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.* வெகு விரைவாக குறுகிய*காலத்தில் 4000 பதிவுகள்*என்கிற*சிகரத்தை*தொட்டதற்கும், தனியொரு*பதிவாளராக*தற்போது* இந்த பாகம் வேகமெடுத்து பயணிக்க காரணகர்த்தாவாக இருப்பதற்கும், பல்வேறு சுவையான*தகவல்களை*பகிர்ந்து வருவதற்கும் எனது இதயங்கனிந்த , பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.*இதன் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில்*99000 பதிவுகள்*என்கிற*நிலையை*எட்டுவதற்கு தங்கள் பங்கும் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து*மட்டற்ற மகிழ்ச்சி.* விரைவில் தங்களின் பதிவுகள்*5000என்கிற சிகரத்தை அடையவும், ஒட்டு மொத்தமாக 1,00,000 பதிவுகள்*என்ற நிலையை*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.* திரி*அடைவதற்கும் அட்வான்ஸ்*வாழ்த்துக்கள்.*

orodizli
26th April 2020, 08:49 PM
அருமை சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் எம்மை ஊக்கப்படுத்தும் பொருட்டு கொஞ்சம் அதிகமாக பாராட்டு தெரிவிப்பதாக கருதுகிறேன். நீங்கள் படைத்த 27000+ பதிவுகள், மற்றும் சகோதரர் திரு வினோத் அவர்கள் கண்டிருக்கும் பதிவுகள் முன்னால் இது நிரம்ப சாதாரணம். நம் கலைவேந்தன் மக்கள் திலகம் சாதனை, சரித்திரங்களை இயன்ற வரையில் பதிவு செய்ய வேண்டுமென்பதே நம் முக்கிய லட்சியம். சிறு தொண்டு...அதை நோக்கி நாம் பயணிக்கும்பொழுது உங்கள் எல்லோரின் ஆசியும், நமது மற்ற திரி உறுப்பினர்கள் தக்க ஒத்துழைப்பு அளித்து இங்கு பதிவுகள் இட்டால் அதுவே நம் எதிர்பார்ப்பாகும், நன்றி...வணக்கம்...

orodizli
26th April 2020, 08:51 PM
"தர்மம் ஒருவருடைய இல்லத்திலிருந்து தான் புறப்படுகிறது"

எம்..ஜி.ஆர். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘நாடோடி மன்னன்’எடுத்துக் கொண்டிருந்த 1957 காலகட்டம் அது. அந்த சமயத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து செல்வராஜ் என்ற ஓர் இளைஞர் – எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் – அவரை நேரில் பார்த்து பேசி மகிழவேண்டும் என்று ஆவல் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். எம்.ஜி.ஆரின் ‘தாய் வீடு’ இல்லம் அமைந்திருந்த ‘லாயிட்ஸ்’ ரோட்டில் (தற்போதைய அவ்வை சண்முகம் சாலை) அவர் வீட்டின் எதிரே நடைபாதையில், தினமும் நின்று கொண்டு எம்.ஜி.ஆர். முகத்தைக் காண ‘தவம்’ இருந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டைவிட்டுப் புறப்படும்போதும், திரும்பி வீட்டிற்கு வரும்போதும் கார் கதவின் கண்ணாடி முழுவதுமாக ஏற்றப்பட்டிக்கும். இதனால் அவர் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாமல் செல்வராஜ் தவித்தார். உள்ளே இருந்தபடி தினமும் அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர்., ஒருநாள் காரை அவர் அருகில் நிறுத்தச் செய்து கதவின் கண்ணாடியை இறக்கி அவரைப் பார்த்துக் கேட்டார்:-
எம்.ஜி.ஆர்:- நீ யாரு? தினமும் ஏன் இங்கேயே நின்னுகிட்டிருக்கே? உனக்கு என்ன வேணும்?
செல்வராஜ்:- (கும்பிட்டு) என் தெய்வமே! நான் உங்கள் பக்தன். உங்களைத் தரிசிக்கிறதுக்காக குமாரபாளையத்தில் இருந்து வந்து தினமும் இங்கே தவம் இருக்கிறேன்.
இன்னிக்குத்தான் உங்களைப் பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆர்:- சரி. கார்ல உட்காரு என்று கூறி முன் கதவை திறந்து விட்டார். அவ்வளவுதான். பக்தர் செல்வராஜ் உள்ளே பாய்ந்து உட்கார்ந்து விட்டார்.
எம்.ஜி.ஆரின் கார் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, மேக்-அப் அறைகளுக்கு அருகில் நின்றது. எம்.ஜி.ஆரோடு சேர்ந்து செல்வராஜூம் காரிலிருந்து இறங்கி வேரறுந்த மரம் போல ‘தடால்’ என்று நெடுஞ்சாண் கிடையாக, அவர் காலடியில் குப்புற விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. வேறு வழியின்றி எம்.ஜி.ஆர். குனிந்து அவரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். கள்ளங்கபடம் இல்லாத அந்த அப்பாவியின் கண்களிலிருந்து கங்கை கரை புரண்டது! அதைக்கண்ட எம்.ஜி.ஆர். இதயம் இளகிப்போய் தன் அன்புக்கரங்களால் அவர் கண்ணீரைத் துடைத்து விட்டு…
எம்.ஜி.ஆர்:- உன் பேரென்ன?
செல்வராஜ்:- செல்வராஜ்.
எம்.ஜி.ஆர். செல்வராஜின் முகத்தை ஒரு கணம் உற்று நோக்கி அதில் ஒருவித வெகுளித்தனமும், கோமாளித்தனமும் நிறைந்திருப்பதைக் கவனித்து:-
எம்.ஜி.ஆர்:- உனக்கு நடிக்க வருமா?
செல்வராஜ்:- நல்லா நடிப்பேண்ணே. ஊர்ல பள்ளிக்கூட நாடகத்துல நிறைய நடிச்சிருக்கேன்.
எம்.ஜி.ஆர்:- என்ன வேஷம் போடுவே?
செல்வராஜ்:- காமெடி வேஷம் போட்டு கற்பனையா பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பேன்.
எம்.ஜி.ஆர்:- (புன்னகையுடன்) அப்படியா? சரி. நீ இங்கேயே இரு. தினமும் காலையில் வந்து ஷ¨ட்டிங்ல கலந்துக்க. உன்னை கம்பனியில் கவனிச்சுக்குவாங்க. செல்வராஜ்:- ரொம்ப நன்றிங்கண்ணே. எம்.ஜி.ஆர்:- (உதவித் தயாரிப்பு நிர்வாகியைக் கூப்பிட்டு) இந்தப் பையனுக்கு மேக்-அப் போட்டு நம்ம கம்பெனி நடிகர் குழுவோட சேத்துவச்சிக்க. தினமும் அவனுக்குச் சாப்பாடு மத்த சம்பள விஷயத்தையும் கவனிச்சிக்க. பாவம்! வெளியூர்லேருந்து வந்திருக்கான்.
நிர்வாகி:- சரிங்கண்ணே. நான் பார்த்துக்குறேன்.
எங்கிருந்தோ வந்த இளைஞர் செல்வராஜ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நடிகர் குழுவில் இடம் பெற்று நாளடைவில் அவருடைய இதயத்திலும் இடம் பெறலானார். ஒருநாள் எம்.ஜி.ஆர். அவரை அழைத்து:-
எம்.ஜி.ஆர்:- நீ தமிழ் நல்லா பிழை இல்லாம எழுதுவியா?
செல்வராஜ்:- எழுதுவேண்ணே.
எம்.ஜி.ஆர்:- எங்கே? ஏதாவது எழுதிக்காட்டு என்று உதவி இயக்குநரிடமிருந்து பேப்பர் பேடை வாங்கிக்கொடுக்க, செல்வராஜ் அதில்,
‘என் தெய்வம் எம்.ஜி.ஆர். வாழ்க’
‘வள்ளல் எம்.ஜி.ஆர். வாழ்க’
‘என்னை ஆதரித்து அன்பு காட்டிய அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!’என்று எழுதிக்காட்ட அதைப்பார்த்த எம்.ஜி.ஆர். வாய்விட்டுச் சிரித்து:-
எம்.ஜி.ஆர்:- ஏம்பா? ஏதாவது எழுதுன்னு சொன்னா எனக்கு வாழ்த்து பாடி இருக்கியே. பரவாயில்லை. குண்டு குண்டா கையெழுத்து அழகா இருக்கு. (உதவி இயக்குநரிடம்) இவனை உன்னோட வச்சிக்கிட்டு, வசனங்களை காப்பி எடுக்கிறது, கிளாப் அடிக்கிறது, கன்டினியூட்டி எழுதுறது, எல்லா வேலையும் கத்துக்கொடு. அதோடகூட சின்னச்சின்ன நகைச்சுவை வேஷங்கள்ளேயும் மேக்கப் போட்டு நடிக்க வைச்சிப்பார்த்துக்க.
உதவி டைரக்டர்:- நல்லதுங்கண்ணே!
அவ்வளவுதான். அடுத்த நாளிலிருந்து குமாரபாளையம் செல்வராஜ் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ‘நாடோடி மன்னன்’படத்தில் டைரக்டர் எம்.ஜி.ஆரின் குழுவில் இடம் பெற்று மாதச் சம்பளத்தில் ‘அஸிஸ்டெண்ட் டைரக்டர்’ ஆகிவிட்டார். செல்வராஜின் இடுப்பில் கட்டியிருந்த கைத்தறி நாலுமுழ வேஷ்டிக்குப் பதிலாக இப்பொழுது முழுக்கால் ‘பேண்ட்’ சட்டை ஏறிவிட்டது. முகமும் மாறிவிட்டது.

முற்காலத்தில் தமிழில் ‘அடைப்பக்காரன்’ என்ற ஒரு சொல் உண்டு. பெரும் செல்வந்தர்கள், மிட்டா மிராசுதாரர்கள், ஜமீன்தார்களின் பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி,
கைதுடைக்கும் துணி முதலியவற்றை வைத்துக்கொண்டு நிற்கும் சிப்பந்திக்கு ‘அடைப்பக்காரன்’ என்று பெயர். அதைப்போல இந்த செல்வராஜ் உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட அந்தஸ்து நிலையில் எம்.ஜி.ஆரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அன்றாடம் ஸ்டூடியோவில், படப்பிடிப்பில் அவருக்கு உண்மையான உள்ளத்துடன் ஊழியம் புரிந்தார். எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் தனக்காக வீட்டிலிருந்து கொண்டு வரும் பணம், அவருடைய மூக்குக்கண்ணாடி மற்றும் முக்கிய பொருள்களை செல்வராஜிடம்தான் கொடுத்து வைத்திருப்பார்.
வாழ்க்கையில், உண்மையான அன்பு உள்ள ஒருவரிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கும். அதைப்போல உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவரிடத்தில் அதிக அன்பும் இருக்கும். அன்பும், நம்பிக்கையும் உடன் பிறந்தவை! இது அனுபவபூர்வமான உண்மை!
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் பாசத்திற்குப் பாத்திரமான உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர்தான் என் அன்பிற்கினிய அருமைத்தம்பி ‘இடிச்சபுளி’ செல்வராஜ்.
ஒரு படத்தில் ‘இடிச்சபுளி’ என்று பெயர் கொண்ட நகைச்சுவை வேடத்தில் நடித்ததை வைத்து அவருக்கு ‘இடிச்சபுளி’ என்ற ஒட்டுப்பெயர் உண்டானது.
பின்நாட்களில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த தம்பி ‘பாண்டு’, செல்வராஜின் சகோதரர் ஆவார். அன்றைய நாட்களில் எம்.ஜி.ஆருக்கு நான் நிறைய படங்கள் எழுதி அவற்றின் படப்பிடிப்பு சமயத்தில், அவரைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வராஜ் வருவார். அப்பொழுது அவரை எம்.ஜி.ஆர். எனக்கு அறிமுகம் செய்வித்து, நான் எழுதும் படங்களில் வேஷம் கொடுக்கச் சொல்வார். அதிலிருந்துதான் செல்வராஜூக்கு என்னுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. எனது தமிழாக்கப்படங்களில் குரல் கொடுக்கும் குழுவிலும் இடம் பெற்று, என்னிடம் அதிக அன்பு செலுத்தினார்.

எனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மறக்காமல் நினைவு வைத்திருந்து வாழ்த்துக்கடிதம் அனுப்புவதுடன், தொலைபேசி வாயிலாகவும் என்னை அழைத்து வாழ்த்து தெரிவிப்பார். நேரிலும் வந்து சந்திப்பார். அத்தகைய அன்பும், பண்பும் உள்ளவர் அவர்.
எம்.ஜி.ஆர். 1972-ல் தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோதும், 1977-ல் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆனபோதும் செல்வராஜ் அவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் மூலம் தியாகராயநகர், சத்தியமூர்த்தி நகரில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராஜூக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டு, தன் மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தார்.
எம்.ஜி.ஆரின் இறுதிக்கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு 1987-ல் சரியாக – தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்தார். அப்பொழுது, தன்னைப்பார்க்க வருவோருக்கெல்லாம் – அவர்கள் கேட்டும், கேட்காமலும், கல்யாணம் முதலிய நல்ல காரியங்களுக்குப் பொருளுதவி செய்து வந்தார். வாழ்க்கையில் வசதி குறைவானவர்களுடன், வசதி நிறைந்திருந்த நடிகர்கள் மற்றும் திரைப்படக்கலைஞர்கள் பலரும் கூட பணமாகவும், மற்றும் தங்க ஆபரணங்களாகவும் பெற்றுப் பயன் அடைந்தனர். 1987 டிசம்பர் மாதம் 23-வாழ்நாள்ல நான் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கேன். ஆனா உன் ஒருத்தனுக்கு மட்டும் நான் கொடுக்கிறதா சொல்லி கொடுக்காம கடன்பட்டுட்டேன். ஆனா, அது என் தவறு இல்லை. நீதான் வந்து வாங்கிக்காம இருந்திட்டே. பரவாயில்லை. அடுத்த ஜென்மத்துல உனக்கு நான் பட்ட கடனை அடைச்சிடுவேன். கவலைப்படாதே… “
எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சர் ஆன பிறகும் சபாபதி அவரை விட்டுப் பிரியாமல், முன்பு போல அன்றாட வழக்கப்படி அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். சென்னையை விட்டு எம்.ஜி.ஆர். வெளியூர் முகாம் செல்லும் போதெல்லாம், அவர் கூடவே சென்று அம்மாவின் அறிவுரைப்படி அவரைத் தன் கண் போலக் காத்துக் கவனித்துக்கொள்வார்.
ஒருநாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியூர் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னாலும், பின்னாலும் உதவியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் மிஞ்சிய ஆரம்பகால எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான அருமைத்தம்பி சபாபதி ஒரு ‘ஜீப்’ வண்டியில் வந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட அந்த ஜீப் விதிவசமாக கோயம்புத்தூரில் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே சபாபதி அகால மரணம் அடைய நேரிட்டு விட்டது. இதுநாள் வரையில், இமைகள் கண்களைக் காப்பதுபோல எந்த பிள்ளை தன்னைக் கவனித்துக் காத்து வந்ததோ – அந்த சபாபதி இப்போது இறந்து கண் மூடிக்கிடந்ததைக்கண்டு எம்.ஜி.ஆர். கதறி அழுதார். அந்த அழுகையை அதற்கு முன்பு தன் வாழ்நாளில் அவர் அழுததே இல்லை.
எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை
இந்தக் ‘கொடுக்கும் குணம்’, ‘வள்ளல் தன்மை’ பெயரும், புகழும், வசதிகளும் பெற்று வாழ்ந்த பிற்காலத்தில் மட்டும் வந்தது அல்ல. அதற்கு முற்காலத்திலும் வசதிகள் அதிகம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த ஆரம்ப நாட்களிலும், எம்.ஜி.ஆரிடம் அதே வள்ளல் தன்மை இருந்ததை பல பழைய மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 10 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக மதிக்கப்பட்ட அந்தக்காலத்தில், அவர் சில 10 ரூபாய் நோட்டுகளை மடித்து தனது முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டி அதற்குள் வைத்திருப்பார். நலிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர்கள் கேட்காமலேயே பத்து, இருபது என்று கைக்கு வந்ததை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார்.
* தர்மத்தின் பொருட்டு தன் தலையைக்கூட கொடுக்கத் தயாரான குமணன்.
* வேடனிடமிருந்து அவன் விரட்டி வந்த கள்ளங்கபடம் இல்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காக அதை தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்குச் சமமாகத் தனது சதையை அறுத்து நிறுத்துக்கொடுத்த சோழப் பெருமன்னன் ‘சிபிச்சக்ரவர்த்தி!’
* படர்வதற்குத் தக்கக் கொம்பு எதுவும் இன்றி தரையில் சுருண்டு கிடந்த முல்லைக் கொடியை எடுத்து தனது தேரில் படரவிட்டு, அதன் அழகைக்கண்டு மகிழ்ந்து கால்நடையாக நடந்து அரண்மனைக்குத் திரும்பிய கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ‘பாரிவேந்தன்!’
* தன் ஆரோக்கியத்திற்கும், ஆயுள் விருத்திக்காகவும் வேடுவர்கள் கொண்டு வந்து கொடுத்த அரிய கருநெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வை பிராட்டிக்கு அளித்து அகம் மகிழ்ந்த வள்ளல் அதியமான்! * மழையிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலைக்கண்டு மனம் இரங்கி, உடனே தனது தங்க இழை வைத்து நெய்யப்பட்ட அங்க வஸ்திரத்தை எடுத்து அந்தக் கோல மயிலின் மீது போர்த்தி அதன் குளிரைத் தவிர்த்த கோமான் ‘பேகன்!’ ‘கவிச்சக்ரவர்த்தி’ கம்பனை ஆதரித்து, அவன் தமிழை வளர்த்த சடையப்ப வள்ளல்! * ஊர்தோறும் அன்னச்சத்திரங்கள் நிறுவிய கருணை வள்ளல் காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார்!
* இறந்து அடக்கமான பிறகும்கூட வெளியே தனது விரலை நீட்டி அதில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொள்ளச் செய்த செத்தும் கொடை கொடுத்த ‘சீதக்காதி’ போன்ற வள்ளல் பெருமான்களின் இனத்தைச் சார்ந்து, அவர்களின் குணத்தைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவராலும் அறியப்பட்ட ஓர் உண்மையே! அதனால்தான் ‘திருமுருக கிருபானந்த வாரியார்’ அவருக்கு ‘பொன்மனச்செம்மல்’ என்று புகழாரம் சூட்டினார்.
‘சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அதற்கு, ‘தர்மம் ஒருவருடைய இல்லத்தில் இருந்துதான் புறப்படுகிறது’ என்று பொருள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் – வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன்.

"படித்ததில் பிடித்தது"
MG.Nagarajan 19 April 2020 10:32 AM
Thanks for: Kalai vithagar Aaroordas
சினிமாவின் மறுபக்கம்........ Thanks.........

orodizli
26th April 2020, 08:52 PM
MGR-ன் மெய்க்காப்பாளர் கே பி ராமகிருஷ்ணன் பற்றிய ஒரு முன்னோட்டம் - MGR's bodyguard K P Ramakrishnan....https://www.youtube.com/watch?v=t__BCtdMb7k....... Thanks...

orodizli
26th April 2020, 08:53 PM
https://youtu.be/WSCI5r__AjM.... Thanks...

orodizli
26th April 2020, 08:55 PM
https://youtu.be/IcmJazeQ-Vc... Thanks...

orodizli
26th April 2020, 08:56 PM
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.��
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்"... Thanks...

orodizli
26th April 2020, 08:57 PM
#என் #பிள்ளைகள்...!!!

முதல்வர் பதவிக்கு வந்தபின்,
"தன் இல்லம்... ராமாவரம் தோட்டம் தான்... அது போல தனது அலுவலகம் ...
எம்ஜிஆர் புரொடக்ஷன்ஸ் இருந்த அலுவலகம் தான் " என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்...��

"தோட்டத்து மேசை நாற்காலிகளெல்லாம் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருந்தன... அவைகளை மாற்றலாமா ? என உதவியாளர் கேட்டதற்கு ... '#இவை #என் #பிள்ளைகள் #போல...#அதனால #இதுவேபோதும்'
என்று சொல்லிவிட்டார்...��

அதே போல தனது வீட்டு முன் ஹாலில் உள்ள நாற்காலி மேசையை குண்டடி பட்டபோதே மாற்றப் போனார்கள்...புரட்சித்தலைவர் தடுத்து "#வேணாம் #என்ரத்தம்பட்ட #இந்த #மேசைநாற்காலி #இருக்கட்டும்...#பணம் #நல்லவர்களையும் #எப்படி #மாற்றிவிடுகிறது என்பதற்கு இதெல்லாம் தான் எனக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்" என்றார்...��

இப்படி ...! உயிரற்ற
பொருட்களிடமும் அன்பு காட்டியவர் பொன்மனச்செம்மல்....��....... Thanks.........

orodizli
26th April 2020, 09:06 PM
1978 மார்ச் மாதம் ஒருநாள் பட தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ் அவருடன் ஒளிப்பதிவாளர் மாருதிராவ் இருவரும் கவி வாலி அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.

ஒரு முக்கிய புள்ளி படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்துக்கு கதை வசனம் பாடல்கள் நீங்கள் எழுத வேண்டும் இதை அவரே எங்களிடம் சொல்லி உங்களை சந்திக்க சொன்னார் என்று சொல்ல.

யார் அந்த வி.ஐ.பி. என்று வாலி அவர்கள் கேட்க அவர்தான் தமிழக முதல்வர் எம்ஜியார் என்று சொல்ல தூக்கிவாரி போட்டது வாலிக்கு.

என்ன எம்ஜியார் மீண்டும் படத்தில் நடிப்பதா என்று சந்தேகம் கொண்டு மறுநாள் காலை முதல்வரை பார்க்க அவரும் ஆமாம் என்று சொல்ல...

அது எப்படி சாத்தியம் என்று வாலி யோசிக்க படம் பெயர் உன்னை விடமாட்டேன் என்று முடிவாக....ஒரு சில நாட்களில் மாநில முதல்வர் படங்களில் நடிப்பது தவறல்ல என்று பிரதமர் விளக்கம் பத்திரிகையில் வர படம் சூடு பிடித்தது.

கதை 10 நாட்களில் தயார் ஆக தலைவருடன் சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் போய் கொண்டே வாலி கதை சொல்ல தலைவர் அருமை என்று ஒப்புதல் தர.

ஏப்ரல் 14 அன்று பட துவக்க விழாவில் முதலில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த கவர்னர் பட்வாரி அவர்கள் பின்னர் வராமல் பட பூஜை பிரசாத் அரங்கில் கோலாகலமாக நடந்தது.

இயக்குனர் ஆக கே.சங்கர், தயாரிப்பு ஜி.கே.தர்மராஜ்....இசை இளையராஜா என்று முடிவாகி விழா முடிந்து வாலி எழுதிய பாடல் டி.எம்.எஸ்.அவர்கள் பாட தலைவர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது..

வழக்கம் போல பாடலில் ஏதோ ஒன்று குறைவதாக தலைவர் சொல்ல மீண்டும் டி.எம்.எஸ்..பாடி அதுவும் சரிவராமல் பின்பு ஒருநாள் பாடகர் மாற்றி மலேசியா வாசுதேவன் பாடி அதை இளையராஜா அவர்கள் தலைவரிடம் போட்டு காட்ட....

அதுவும் திருப்தி அளிக்காமல் கடைசியில் தலைவர் பேசாமல் நீங்களே எனக்கு குரல் கொடுத்து பாடுங்கள் என்று சொல்ல உடனே ராஜா அது சரிவருமா ஐயா என்று கேட்க நீங்கள் எப்படிவேண்டுமானாலும் பாடுங்கள் அதற்கு ஏற்ப நடிப்பது என் பொறுப்பு என்று தலைவர் சொல்ல.

அதன் படி அந்த பாடல் பாட பட்டு ஒலிப்பதிவு செய்ய பட்டது...ஆனால் அன்று தமிழகம் எங்கும் பரபரப்பாக பேச பட்ட அந்த படம் ஒரு சில காரணங்களால் நின்று போனது..

அல்லது இளையராஜா அவர்கள் இசை அமைப்பில் தலைவர் தலைவர் நடித்த படம் வெளிவந்து இருக்கும்

படத்தில் பட துவக்க விழாவில் தலைவர் இளையராஜா மீசை முறுக்கி வைத்து இருப்பவர் தயாரிப்பாளர் தர்மராஜ் நடுவில் இருப்பவர் 1977 பொது தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆக சென்னை மயிலை தொகுதியில் போட்டி இட்ட திரு சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்..

ஒரு தலைவர் படம் போச்சு.... நன்றி..
வாழ்க எம்ஜியார் புகழ்

நன்றி... உங்களில் ஒருவன் நெல்லை மணி ..நன்றி..தொடரும்........ Thanks...

orodizli
26th April 2020, 09:08 PM
#சிவாஜி #ரசிகனை #எம்ஜிஆர் #ரசிகனாக #மாற்றிய #என் #வரலாறு
பசுபதி பரசுராம் சார் அவர்களின் பதிவைப் பார்த்தவுடன் என் கல்லூரி கால நினைவு ஒன்று என் முன்னால் நிழலாடுகிறது.என்னுடன் கோவையில் கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒரே டெஸ்க், ஒரே ரூம் அதுமட்டுமின்றி ஊரும் ஒன்றே, அப்படிப்பட்ட நண்பனைப் பற்றிய நிகழ்வு.அப்போது ஹாஸ்டலில் இரு குழுக்கள்.ஆம்.நீங்கள் நினைத்ததுதான்.ஒன்று எம்.ஜி.ஆர் குரூப் மற்றொன்று சிவாஜி குரூப்.நான் எம்.ஜி.ஆர் குழு.நாங்கள் அனைவரும் எப்போதும் குழுவாகவே தலைவர் ரிலீஸ் படங்களுக்கு செல்வோம்.
மேலே சொன்ன என் ஊர் நண்பன் பக்கா சிவாஜி ரசிகன்.எனக்கு தெரிந்து அதுவரை எம்.ஜிஆர் படங்களே பார்த்தது இல்லைஅவனுக்கும் எனக்கும் அடிக்கடி எம்.ஜிிஆர்-சிவாஜி சண்டை வரும்.இங்கே ஒன்றை நேர்மையாக குறிப்பிட வேண்டும்.நான் தலைவர் ரசிகனாக இருந்தாலும் சிவாஜி படங்களையும் பார்ப்பவன். நான் என் நண்பனோடு சிவாஜி படங்களுக்கு செல்வேன்.ஆனால் என் நண்பன் எங்கள் குழுவோடு எம்.ஜி.ஆர் படங்களுக்கு வரமாட்டான்.ஆனால் நான் அவ்வப்போது எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களையும் தெரிவிப்பேன்.கல்லூரியில் முதல் வருடம் இவ்வாறே கழிந்தது.இரண்டாம் வருடம் ஆரம்பம். எங்கள் கல்லூரி இருந்த ஊரில் ஒரு தியேட்டர் இருந்தது.அதில் பழைய படங்கள் தான் திரையிடப்படும்.(ரீலீஸ் படங்கள் இல்லை- ரீலிஸாகி ஆறு மாதங்கள் கழித்து) அப்போது அந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிட்டார்கள்.நான் என் நண்பனிடம் ஒரு பந்தயம் வைத்தேன்.இந்த படத்திற்கு நாம் இருவரும் செல்வோம்.இந்த படம் உனக்கு பிடித்தால், என்னுடன் அடுத்த இரு எம்.ஜி.ஆர் படங்களுக்கு கட்டாயமாக என்னுடன் வரவேண்டும்.என் செலவில் அழைத்து செல்வேன்.அப்படி பிடிக்க வில்லையென்றால் நான் இனி உன்னுடன் சிவாஜி படங்களுக்கு வரமாட்டேன்.இதுதான் பந்தயம்.அவனும் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டான். என்னுடன் முதல் முதலாக எம்.ஜி.ஆர் படத்துக்கு வந்தான்.படம் ஓடும்போது நான் அவனையே கவனித்துக் கொண்டிருந்தேன்.(நான் ஏற்கனவே 5 தடவைகளுக்கு மேல் படத்தை பார்த்திருந்தேன்.) என் நண்பன் படத்தை நனறாக ரசிப்பது புரிந்தது.இந்த படத்தை எவர்தான் ரசிக்க மாட்டார்? பந்தயத்தின் படி நான் அடுத்த இரு தலைவர் படங்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றேன்.கல்லூரியின் மூன்றாவது வருடம் முடிவடைவதற்குள் என் நண்பன் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் நாளன்றே பார்க்க ஆசைப்படும் அளவுக்கு மாறிவிட்டான்.இதுதான் சிவாஜி ரசிகனை எம்.ஜி.ஆர் ரசிகனாக மாற்றிய வரலாறு.(பரவாயில்லையே தனி பதிவு போடும் அளவுக்கு விபரம் நீண்டு விட்டது.)....... Thanks mr. VN.,

orodizli
26th April 2020, 09:09 PM
சூப்பர் சார்.எனது வாழ்நாட்களில் பல நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
அக்காலத்தில் சிவாஜி ரசிகர்கள் எம் ஜி ஆர் படம் பார்க்கக்கூடாது என வெறி பிடித்து அலைந்தனர்........ Thanks GK.,

orodizli
26th April 2020, 09:09 PM
ஆம்.சார்.மேற் சொன்ன பதிவில் நான் கூறியது 100% முற்றிலும் உண்மை.எங்குமே என் கற்பனை கிடையாது.அக்காலத்தை இப்போது நினைத்துப் பார்த்தால், என் மனதில் ஒரு நோஸ்டால்ஜியா(சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) உணர்வு தோன்றுகிறது.தலைவர் படங்களை ரசித்தது, தலைவர் உயிருடன் இருந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தது, ரேடியோவில் ஞாயிறு மதியம் ' நீங்கள் கேட்டவை' நிகழ்ச்சியில் முதல் பாடலாக 'ஆடலுடன் பாடலைக் கேட்டு, அழகிய தமிழ் மகள் இவள், போன்ற பாடல்கள் வருமா என ஏங்கியது போன்றவை...... Thanks...

orodizli
26th April 2020, 09:10 PM
நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெயரைக்குறிப்பிடுவார்கள்.எல்லோரும் தலைவர் பாட்டை விரும்பி கேட்டவர் எண்ணிக்கையை கேட்டுக் கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்... Thanks...

orodizli
26th April 2020, 09:11 PM
மனிதாபிமானம், தாய்ப்பற்று, தேசப்பற்று, கண்ணியம், இவையெல்லாம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் எம்ஜிஆர் ரசிகர்களே..... Thanks...

orodizli
26th April 2020, 09:11 PM
அன்பானவரே! எனக்கும் இதேப்போல் நிகழ்வு ஒன்று என் வாழ்க்கையில் நடந்து.எனக்கு அப்போது 22வயது,என் எதிர் வீட்டில் 62 வயது நிறைந்த B& C மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்,குடும்பமே காங்கிரஸ் குடும்பம். எம்.ஜி. ஆர் படங்கள் ஒன்றுகூட பார்க்காதவர்கள். அவரை முதல் முறையாக பல்லாண்டு வாழ்க M.G.R.படத்துக்கு அழைத்துச்சென்றேன். அதைப்பார்த்த அவர், M.G.R.ரின்,அழகையும்,சுறுசுறுப்பையும்,பாடல் காட்சிகளையும்,சண்டைக் காட்சிகளையும்,பார்த்துவிட்டு
அன்றிலிருந்து 36M.G.R. படங்களைப்பார்த்தார்.M.G.R.வெறியராகவே மாறிவிட்டார்....... Thanks...

orodizli
26th April 2020, 09:12 PM
எனக்கு தெரிந்து மற்றொரு நடிகரின் ரசிகராக இருந்து எம்.ஜி.ஆரின் ரசிகராக பிற்பாடு மாறியவர்கள் ஏராளம்.ஆனால் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தன் உயிர் உள்ளவரை தலைவரின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.இதுதான் நிதர்சனமான உண்மை....... Thanks.........

orodizli
26th April 2020, 09:13 PM
கோடி கொடுத்தாலும் இடம் மாறமாட்டார்கள், இறக்கும்வரை.... Thanks...

orodizli
26th April 2020, 10:05 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வரும் அனைவருக்கும் தன் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார்.

ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்கள் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.

வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆர் அவர்களை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.

முதல்நாள் எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டதற்கு, ‘‘உங்களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., அவர்கள் ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்...... Thanks...

orodizli
26th April 2020, 10:07 PM
இசை வந்த திசை நோக்கி !

திருச்செந்தூர் ,பெரியதாழை, பகுதியில் வசிக்கக்கூடிய, அருமைச்சகோதரர்,
ஆர் எஸ் கணேச பாண்டியன் அவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, திருச்செந்தூரில் இருந்து, தன்னுடைய மனைவிக்கு , சிகிச்சை பெற்றிட அரசு அனுமதி பெற்று, காரில் பயணித்து,
மதுரை நகருக்கு வந்தார்கள்

ஓரிடத்தில், சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காலைச் சிற்றுண்டி
அருந்தி கொண்டிருந்த வேளையிலே, அருகிலிருந்த தோப்பில் இருந்து, தொடர்ந்து எம்ஜிஆர் பாடல்கள், ஒலித்துக் கொண்டே, இருக்கின்றன. ஆனால் , ஆளரவம் எதுவும் தட்டுப்படவில்லை .

எனவே, எம்ஜிஆர் பக்தனான அண்ணன் அவர்களும், அந்த திசையை நோக்கி, நடந்து சென்று பார்த்த பொழுது,
மிகவும் வயதான நபர் ஒருவர்,
எம்ஜிஆர் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

அந்த நபரிடம், இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மருத்துவமனைக்குச் செல்லும் அவசரத்திலும், அவருடைய எம்ஜிஆர் பற்றினை, வியந்து போற்றி, ஒரு சிறு பேட்டி எடுத்திருக்கிறார்.
அந்த பேட்டி தான் இது....... Thanks...

orodizli
26th April 2020, 10:09 PM
மற்றவர் துயர் கண்டு இரங்குபவன் மனிதன்

மற்றவர் துயர் கண்டு உதவநினைப்பன் வள்ளல்

மற்றவர் துயர் நீக்குபவன் கடவுள்

இந்த மூன்றும் இணைந்தது M G R என்ற மூன்று எழுத்தில்

வாழ்க எம்ஜிஆர் புகழ்... Thanks...

orodizli
26th April 2020, 10:11 PM
97 வயது ரசிகர். தலைவர் தான் என் தெய்வம் என்கிறார். இவரைப் போல் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் நம் தலைவர்........ Thanks...

orodizli
26th April 2020, 10:11 PM
இதோ கழகத்தின் அடிமட்ட தொண்டராக இருந்து அமைச்சராக உயர்ந்தவரின் கதை இது..

பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிக எளிய குடுப்பத்தில் பிறந்தவர் இவர்.

சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கியவர்...

சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

'ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்,
அமைச்சர்' என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர்...

பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று #புரட்சித்தலைவர் அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர்...

வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தவர்...

அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தவர்..

பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்டு வந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து பல ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி புதிய பேருந்துகளை இயக்க வழிவகை செய்தவர்..

பேராவூரணியில் புதிதாக தியனைப்பு நிலையத்தை நிறுவியவர்....

கால்நடை மருத்துவமனைகளை கொண்டு வந்தவர்..

பேராவூரணி தொகுதியில் பல கிராமங்களை இணைக்கின்ற வாட்டாத்திக்கொள்ளைக்காடு காட்டாற்று பாலம் கட்டிவர்... கட்டயங்கங்காடு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியவர்.*..

பேராவூரணியில் பல துவக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும், பெருமகளூர் உள்ளிட்ட பல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல புதிய பள்ளி கட்டிடங்களை
கட்டியவர்...

பேராவூரணி தொகுதியில் எழுபதுபேருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை, நூற்றி ஐம்பது பேருக்கு தலையாரி வேலை. இருநூருக்கு மேற்பட்டோருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி. பலருக்கு சமையலர் பணி என்று எவரிடத்திலும் ஒரு ரூயாய் பெறாமல் வேலை கிடைக்க வழிவகை செய்தவர்...

தான் பதவியில் இருந்த காலத்தில் பேராவூரணி பகுதியில் பலருக்கு அரசுவேலை பெற்றுத்தந்தார்...

பேராவூரணி பகுதியில் அரசியல் அதிகாரமற்று கிடந்தவர்களை "ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், தனது கட்சியில் ஒன்றியச் செயலாளர், நகரச்செயலாளர்' என்று வெல்லவைத்து அழகு பார்த்தவர்.

ஆம் அவர்தான் அந்த கடைக்கோடி தொண்டன் தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி கோவேந்தன்...

இப்படிப்பட்ட அடிமட்டத்திலிருந்து கழகத்தின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்தோர் பலருண்டு...
அவரில் ஒருவர்தான் இவர்...

இதுதான் எங்களின் #அஇஅதிமுக.......... Thanks...

orodizli
26th April 2020, 10:14 PM
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

தலைவரின் அருமையான பாடல் வரி...
நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால

நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால.... Thanks...

orodizli
26th April 2020, 10:21 PM
[அமெரிக்காவில் பேசிய புரட்சிதலைவரின் பேச்சு!!!

புரட்சிதலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதறகாக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக்கிடப்பதைப் பார்த்து அந்த நபரை தன் காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நிகழ்சசிக்கோ நேரமாகிவிட்டது.

எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார்... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .

தொடர்ந்து பேசிய புரட்சித்தலைவர் ... "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."

ஆனால்...!


"இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய #மனிதாபிமானம் #உள்ளவர்கள் #உலகிலேயே #எங்கள் #தமிழ்நாட்டினர்தான்...#என்று #பெருமையோடு #தெரிவித்துகொள்கின்றேன் ..."

என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது........ Thanks...

orodizli
26th April 2020, 10:22 PM
தன் கண்முன்னே நடக்கும் எந்த செயலையும் பாா்த்து விட்டால் உடனே ஓடிச்சென்று உதவி புாிவாா் மக்கள்திலகம் அவா் சிறு வயது முதலே இந்த குணம் அவ௫க்கு உண்டு அந்த வகையில் அவா் ஒ௫ தனிப்பிறவி சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் உதவுவதில் இவா் ஒ௫ மன்னா் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலாரை போல் துன்படுவரைக் கண்டால் உதவிக்கரம் நீட்டுபவா் இத்தகைய தெய்வத்தை நாம் தினம் தினம் நினைத்து வாழுவோம் வாழ்க மக்கள் திலகம் வளா்க அவரது பண்பு நம்எல்லோ௫க்கும்....... Thanks...

orodizli
26th April 2020, 10:36 PM
https://youtu.be/GkBkO6k_qiI... Thanks...

orodizli
26th April 2020, 10:40 PM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் Hits.- Audio Time- �� 03:25:45

���� பாடல்கள் விவரம் ����

00:00:05 - Kumari Pennin Ullatthile
00:05:44 - Naan Paarthathile
00:10:16 - Thottaal Poomalarum
00:14:48 - Vizhiyae Kathai Ezhuthu
00:18:25 - Un Vizhiyum
00:21:37 - Methuva Methuva
00:25:02 - Neela Niram
00:29:24 - Nanga Pudusa
00:32:35 - Aval Oru Navarasa
00:36:04 - Kalyana Naal Paarkka
00:40:27 - Mellappo Mellappo
00:44:42 - Naam Oruvarai Oruvar
00:48:55 - Kadaloram
00:52:17 - Poovaitha
00:55:40 - Androru Naal
00:58:48 - Endrum Pathinaaru
01:02:19 - Ponnezhil Poothathu
01:07:04 - Nethu Poothale
01:11:30 - Andru Vanthathum
01:15:44 - Vaanga Machan Vaanga
01:21:56 - Puttam Puthiya
01:25:08 - Kattodu Kuzhal Aada
01:29:50 - Thuliuvatho Ilamai
01:33:16 - Thedralil Aadum
01:37:49 - Hallo Hallo
01:40:51 - Yenna Porutham
01:44:35 - Ponnandhi Maalai Pozhuthu
01:50:22 - Katti Thangam
01:54:02 - Nilladi Nilladi
01:57:34 - Siriththu Siriththu
02:01:20 - Pattu Selai Kaatthaada
02:04:22 - Aanandam
02:07:48 - Thottuvida Thottuvida
02:11:35 - Vettaiyaadu Vilaiyadu
02:17:23 - Yennai Kathalithal
02:20:37 - Ithuthan Muthal Raaththiri
02:24:54 - Paartthukondathu
02:28:01 - Naan Alavodu
02:31:46 - Maasilaa Unmai Kaathalae
02:35:00 - Rajaavin Paarvai
02:39:22 - Azhagiya Tamizh
02:45:53 - Pani Illaatha
02:49:21 - Javvadhu Mediayittu
02:54:10 - Vannakkili
02:57:47 - Intha Punnagai
03:02:58 - Aasai Irukku Nenjil
03:06:35 - Paadinaal Oru Paattu
03:09:51 - Muthamo Mogamo
03:15:13 - Konja Neram Ennai
03:20:46 - Nerungi Nerungi..... Thanks...

orodizli
26th April 2020, 10:42 PM
https://youtu.be/K6w6Zgwik20..... Thanks...

orodizli
26th April 2020, 10:44 PM
https://youtu.be/5Cr ku_Ida92vQ... Thanks...

orodizli
26th April 2020, 10:45 PM
https://youtu.be/GkBkO6k_qiI... Thanks...

orodizli
26th April 2020, 10:48 PM
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 10/04/2020

"நல்லதுதான் செய்கின்றோம்; நியாயமாகத்தான் பேசுகின்றோம்"
என்று நினைக்கவும் நம்பவும் வைக்கும் அந்தச் சந்தர்ப்பம்.
ஆனால், பேசுகிறவனுக்கு நியாயமாகத் தோன்றக்கூடிய அந்தச்
செய்தி, கேட்கின்றவனுக்கும் நியாயமாகத் தோன்ற வேண்டுமே!
அறிவுக்கு மாறுபடாமல், அந்த அறிவின் தூண்டுதலாலேதான்
பேசுகிறான் என்றாலும், மற்றவர்களின் அறிவுக்கும் கருத்துக்கும்
அது ஏற்புடையதாயிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஆகவே, நாம் நமது அறிவின்படி பேசுவது மற்றவருக்கும் நியாயம்
என்று தோன்றினால்தான் அதன் விளைவு சரியாக இருக்கும்.
நமக்கு மட்டும் அது நியாயமாக இருந்து, எதிர்த் தரப்புக்கு
நியாயமாக இராவிட்டால், ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியை அது
இழப்பதுடன், அதற்கு ஒரு தண்டனையும் கிடைப்பதுண்டு.
ஆனால், அந்தத் தண்டனை தன்னுடைய அகந்தைக்குக்
கிடைத்த அறிவுரை என்று எடுத்துக்கொள்ள எத்தனை பேர்
தயாராக இருக்கிறார்கள்?
"சந்தர்ப்பம் பார்த்து நம்மைப் பழிவாங்கி விட்டார்கள்' என்று
அல்லவா மற்றவர் மீது ஆத்திரப்படுகிறோம்
யோசனை, நிபந்தனை, கட்டளை!
நான் என் வாழ்க்கையில் ஒரு நேரத்தில், 'நல்லதையே
நினைக்கிறேன், நல்லதையே செய்கிறேன்' என்ற நம்பிக்கையுடன்,
என் அறிவுக்கேற்ற வகையில் பிறருக்கு ஒரு யோசனையை - ஒரு
நிபந்தனையை - ஒரு கட்டளையை விதித்தேன். ஆனால், அதே
யோசனை - நிபந்தனை - கட்டளை பின்னர் அவர்களால் எனக்கு
விதிக்கப்படவும் நான் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் நேர்ந்த
போது நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா!
திரு.ஏ.எல். சீனிவாசன் அவர்கள், 'பாக்கெட் மார்' என்ற
இந்திப் படத்தை எனக்குக் காட்டினார். அந்தப் படக்கதையைத்
தழுவித் தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான்
கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவருக்கு அப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற
விருப்பம் இருந்தது போல், எனக்கும் நல்ல கதையுள்ள அந்தப்
படத்தில் நடிக்கும் விருப்பம் நிறைய இருந்தது.

"என்னுடைய நிலைமை"

இதே தயாரிப்பாளரின் 'ரத்னாவளி' என்ற படத்தில் அப்பே
நான் நடித்துக்கொண்டிருந்தேன். இதில் திருமதி பத்மினி அவர்கள்
என்னுடன் கதாநாயகியாக நடித்தார். மேலும், திருமதி அன்
தேவி, திருமதி பானுமதி முதலிய பெரிய நடிகையரோடு லே
சில படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தேன். அவர்கள்
படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது உள்ளதைப்
போல், அப்போது எனக்குப் பல படங்களும் இல்லை .
இப்போது நான் வாங்குகிற சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு
கூட அப்போது நான் வாங்கவும் இல்லை.
எனக்குப் படங்கள் அதிகம் இல்லை என்றாலும், நாடகங்களில்
நடித்துக்கொண்டிருந்தேன். அதோடு வேறு பல பொது
நிகழ்ச்சிகளிலும், பொதுப்பணிகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்து
வந்தது.
இரண்டு மூன்று நாடகங்கள் நடத்த வெளியூர்களுக்குப்
போகிற நிலை ஏற்பட்டுவிட்டால் போதும், ஐந்தாறு நாட்கள்
ஓடிவிடும்.
அதனால் படப்பிடிப்பில் தொடர்புகொள்ள நேரம் இல்லாமல்
போய்விடும்.
ஆகையால், அதிகப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்
மற்றவர்களுக்கு, படப்பிடிப்புக்குக் 'கால் ஷீட்' கொடுப்பதில்
எவ்வளவு கஷ்டம் இருந்ததோ, அவ்வளவு கஷ்டம் எனக்கும்
இருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் திரு.ஏ.எல்.எஸ். அவர்கள்
புதுப்படத்தில் நடிக்க அழைத்தார்.
நானும் விரும்பினேன்.
வெள்ளை மனம் படைத்தவர்
'திருடாதே' என்பது அப்படத்தின் பெயர். தயாரிப்பாளர்
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் உடனேயே படத்தைத் தொடங்க
வேண்டும் என்றார்.
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் எப்போதும் சிரித்தபடியே பேசுவார்
என்ன தொல்லை ஏற்பட்டாலும்
அவரது சிரிப்புப் பேச்சு ஓயாது.
அவருடைய இயல்பு. மனத்தில்
பட்டதைக் கூறிவிடுவது, எதிராளியை
அவமானப்படுத்த வேண்டு
மென்றோ, தலைகுனிவுக்கு
ஆளாக்க வேண்டுமென்றோ
யாதொரு கெட்ட எண்ணமும்
அவருடைய உள்ளத்தில் இராது.
ஆனால், கள்ளமின்றி அவரால்
விமரிசனம் செய்யப்படுகிற மனிதர்
அவருக்கு விரோதியாக மாறக்
கூடிய நிலைகூட ஏற்படலாம்.
அப்போதும், கோபித்துக்
கொண்டவரை அவர் விரோதியாக
நினைக்கமாட்டார்!
திரு. ஏ.எல். சீனிவாசனுடன்
'விளையாட்டாகப் பேசினோம்!
அது ஒரு வேடிக்கை தானே! அதிலென்ன விபரீதம் வந்து விடும்'
என்ற வெள்ளை மனம் படைத்தவர் அவர். எனக்கு அருமை
நண்பர்.
"என்னைக் கதாநாயகனாகப் போட்டு நீங்க இந்தப் படம்
எடுக்கறதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனா, படம் வேகமாக
வளரணும் என்றால், கதாநாயகி, வேடத்திற்கு விளம்பரமான
பெரிய நடிகையரைப் போட்டால் சரிவராது. கால்ஷீட்
'ப்ராப்ளம்' வரும். நான் கொடுக்கற கால்ஷீட்டுகளை நீங்க
வீணாக்காமல் பயன்படுத்திக்கிட்டாதான் படம் வளர முடியும்”
என்று சொன்னேன்.
"அப்படியே செய்யறேன். முதல்லே கதாநாயகி வேஷத்துக்கு
யாரைப் போடலாம்? சொல்லுங்க! புதுமுகமே போடலாம்னாலும்
போடறேன்" என்றார் அவர்.
இயக்குநர் சொன்ன புது முகம்!
அந்தப் படத்தின் இயக்குநரான திரு.ப. நீலகண்டன் அவர்கள்,
"தாராளமா புதுமுகத்தையே போடலாம்” என்றார்.

திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ...... Thanks...

orodizli
26th April 2020, 10:50 PM
சென்னை பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழா 20.09.1983 இல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது அறிவிக்கும்போது .மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவைக்காகவும், வள்ளல் தன்மைக்காகவும் இந்த பட்டம் வழங்கப்படுவதாக துணைவேந்தர் சாந்தப்பா தெரிவித்தார்.

விழாவிற்கு தமிழக கவர்னர் எஸ்.எல். குரானா தலைமைத்தாங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் குரானா வழங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் கைகுலுக்கி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி திரையுலகம் சார்பில் சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி நடிகர்- நடிகைகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.

பிறகு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் விழா நடந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தார். சத்துணவுத் திட்டத்திற்கு திரையுலகின் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை பாரதிராஜா வழங்கினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க. .... Thanks...

orodizli
26th April 2020, 10:56 PM
ஏசுவாக நடிக்க விரும்பி எம்ஜிஆர் நடிக்க கருணை நிரம்பிய எம்ஜிஆர் முகம் ஏசுவாகவே மாற இந்த படம் பிரபலமானால் எம்ஜிஆரையே ஏசுவாக வணங்க படுவார் என்பதை பலர் கூற படம் பாதியில் கைவிடபட்டது
கருணை தேவன் ஏசு
கருணை எம்ஜிஆரிடம்

வாழ்க எம்ஜிஆர் புகழ் ..... Thanks...

orodizli
26th April 2020, 10:59 PM
மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கி

சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’

இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்ற

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.

அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது...... Thanks...

orodizli
26th April 2020, 11:00 PM
#கேள்விக்குப் #பதில்

ஒரு சமயம் பொங்கல் பண்டிகையின் போது தன் ஊழியா்களுக்கு தர பணம் இன்றி தவித்துள்ளாா் மக்கள்திலகம்...

அப்போது ஒரு தயாாிப்பாளா் தலைவாிடம் கால்ஷீட் கேட்பதற்கு தயக்கத்துடன் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரை வரச்சொல்லி கால்ஷீட் கொடுத்து பதினெட்டு இலட்சம் பெற்று அதனைஅப்படியே ஒருவர் விடாமல் அனைத்து ஊழியா்களுக்கும் கொடுத்துள்ளார்...

அந்த படம் தான்
#நான் #ஏன் #பிறந்தேன்....!

பொன்மனச்செம்மல், 'நான் ஏன் பிறந்தேன்' என்ற தனது படத்தலைப்பின் கேள்விக்குத் தன் இந்தச் செயலையே பதிலாக்கிவிட்டார்...... Thanks...

orodizli
26th April 2020, 11:02 PM
https://youtu.be/9HbOStmdq5Q..... Thanks...

orodizli
26th April 2020, 11:04 PM
எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!

M.G.R. எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்..... Thanks...

orodizli
26th April 2020, 11:05 PM
புரட்சிநடிகர் எம்ஜியார் திமுகவில் இருந்து நீக்க பட்ட உடன் எம்ஜியார் ரசிகர்கள் ,பொதுமக்கள் தவிர சில திமுக நல்ல உள்ளங்களும் அந்த செயலை கண்டித்தன.

தென்னகம் என்ற பத்திரிகையை திரு. கே.ஏ.கே. அவர்கள் நடத்தி வந்தார்

தலைவர் நீக்க பட்டதும் அந்த பத்திரிகையில் கண்டனம் தெரிவித்து எழுதினார். அப்போது அவர் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆகவும் இருந்தார்.

இவர் மறைந்த கே.ஏ. மதியழகன் சகோதரர் ஆவார். எம்ஜியார் இல்லாத திமுக மணமக்கள் இல்லாத திருமணவீடு என்று எழுதினார்.

தீயசக்தி கோவம் கொண்டு இவரையும் கட்சியில் இருந்து நீக்கியது. கவலை கொள்ளாத இவர் நம் தலைவர் உடன் இணைந்து செயல் பட தொடங்கினார்.

அக்டோபர் புரட்சி 1972 இல் ஏற்பட்ட போது தலைவர் அதிமுகவின் முதல் உறுப்பினர் ஆக இவர் இரண்டாம் உறுப்பினர் ஆனார்.

ஆர்.எம்.வீ போன்றவர்கள் அப்போது கட்சியில் இணையவில்லை. அக்டோபர் மாதம் 72 இல் 29 ஆம் தேதி அன்று சென்னை சீரணி அரங்கில் அதாவது மெரினா கடற்கரையில் மாபெரும் அதிமுக பொது கூட்டம்.

மறைந்த சிகப்பு கொடி தோழர்கள் கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, மற்றும் கே.டி.கே. தங்கமணி இந்த பொது கூட்டத்தில் கலந்து கொள்ள.

அப்போது ஆவேசமாக பேசிய திரு கே.ஏ. கே. அவர்கள் நம் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களுக்கு அந்த தீய சக்தி கொடுத்த புரட்சிநடிகர் என்ற பட்டம் இனி தேவை இல்லை.

இனி நம் தலைவர் இன்று முதல் புரட்சிதலைவர் என்று அழைக்க படுவார் என்று அறிவிக்க அப்போது எழுந்த கரகோஷம் கடல் அலைகள் சத்தத்தை விட அதிகமாக எழுந்தது வரலாறு.

இதுதான் புரட்சிநடிகர், புரட்சிதலைவர் ஆன வரலாறு.

நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி...வாழ்க எம்ஜியார் புகழ்....... Thanks...

orodizli
26th April 2020, 11:06 PM
https://youtu.be/g2SjA1WCQOU.... Thanks...

orodizli
26th April 2020, 11:09 PM
புர*ட்சித்த*லைவ*ர் 1977ல் திரையுலகை விட்டு விலகி முத*ல்வ*ரானார். அப்போதும் அவ*ர்தான் நெ.1. அதிகப*ட்ச ஊதிய*மும் பெற்றார். அப்போது மட்டும் அவ*ர் கைவ*ச*ம் இருந்த ப*ட*ங்க*ள் எந்த ந*டிக*ருக்கும் இருந்ததில்லை. அதன் ப*ட்டிய*ல் இதோ!
1. அண்ணா நீ என் தெய்வ*ம்
2. ந*ல்லதை நாடு கேட்கும்
3. நானும் ஒரு தொழிலாளி
4. மக்கள் என் ப*க்க*ம்
5. தியாக*த்தின் வெற்றி
6. இதுதான் ப*தில்
7. ச*மூக*மே நான் உனக்கே
சொந்த*ம்
8. உன்னை விடமாட்டேன்
9. இமய*த்தின் உச்சியிலே
10. கேப்ட*ன் ராஜா
11. உங்க*ளுக்காக நான்
12. அண்ணா பிற*ந்த நாடு
13. ஊரே என் உற*வு
14. கிழ*க்கு ஆப்பிரிக்காவில் ராஜு
15. எல்லைக்காவ*லன்
16. மீண்டும் வ*ருவேன்.
17. புர*ட்சிப்பித்த*ன்
இவ*ற்றில் ந*ல்லதை நாடுகேட்கும் மற்றும் அண்ணா நீ என் தெய்வ*ம் ஆகிய ப*ட*ங்க*ளின் காட்சிக*ள் வேறு இயக்குனர்க*ளின் ப*ட*ங்க*ளில் இட*ம்பெற்று வெளிவ*ந்த*து.

இவை த*விர எம்ஜிஆர் மறைந்த* பிற*கு அவ*ர*து வாழ்க்கை வ*ர*லாற்றை ப*திவு செய்யும் வ*கையில் காலத்தை வென்ற*வ*ன், ந*மது தெய்வ*ம், த*ர்ம தேவ*ன் ஆகிய ப*ட*ங்க*ள் வெளியாகி உள்ளன.
இன்னமும் அவ*ர் ப*ழைய ப*ட*ங்க*ளில் 80 ச*த*வீத*ம் தியேட்ட*ர்க*ளில் வெளியிட*ப்ப*ட்டு வ*சூலை வாரி கொடுக்கின்ற*ன.

புர*ட்சித்த*லைவ*ர் ச*ரித்திர நாய*க*ர் மட்டுமல்ல! சாத*னை நாய*கரும் ஆவார்!..... Thanks...

orodizli
26th April 2020, 11:10 PM
M G R
வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது

வாழ்க எம்ஜிஆர்புகழ்... Thanks...