PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

orodizli
27th June 2019, 04:58 PM
இந்தப் பாடல் காட்சியில் ( புதிய பூமி... "சின்னவளே, முகம் சிவந்தவளே" பாடல் காட்சி ) டிஎம்எஸ் ஐயா அவர்களும் சுசீலாம்மா அவர்களும் மிகவும் சிறப்பாக பாடி உள்ளனர்... புரட்சித் தலைவரும் பாடல் முழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார் சிரித்த முகத்துடன் பாடலுக்கு வாய் அசைப்பது என்பது பொதுவாகவே ...புரட்சித்தலைவர் மட்டும்தான் அனைத்து படங்களிலும் செய்து காட்டி இருப்பார் மேலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த படத்தில் சிறந்த நடனமாடி இருப்பார். ....நன்றி.
குருராஜன். டிஎம்எஸ் பக்தர்தளம்��......... Thanks wa.,

orodizli
27th June 2019, 07:30 PM
புகழ் எனும் மாயையே உணர்ந்த ஒரே தெய்வம். எம் .ஜி.ஆர் .,மட்டுமே அது எந்த வடிவில் நடமாடும் என்பதை நன்கு அறிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்ஜிஆர். அதை உணராத சிவாஜி ரசிகர்கள் அன்றும் சரி இன்றும் சரி எம்ஜிஆரை தோற்கடித்து விடலாம் என்று நினைத்து மாயையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். உண்மை தலைவனை தோற்கடிக்க யாராலும் முடியாது. உண்மையான வழியில் தலைவர் எம்ஜிஆர் சொன்ன வழியில் அவருக்கு புகழ் சேர்ப்பவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள். இப்படி பொய்யும் புரட்டும் துணையாய்க் கொண்டு பிழைப்பவர் எல்லாம் மூலைக்கு தான் போக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்ததால் புரட்சித் தலைவர் திரைப்படங்களை சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்காமல் சேட்டை செய்தது. கணேசன் காங்கிரஸ் இருந்ததால் கணேசன் திரைப்படத்தை மற்றும் நல்லதென்று தேர்ந்தெடுத்தது. அதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கணேசன் திரைப்படத்தை மட்டும் எடுக்காமல் வேண்டுமென்றே அதிக நாட்கள் ஓட்டினார்கள். ஆனால் பார்த்த மக்கள் தொகையும் மிக கம்மி தான் ஆனால் அன்றும் அதிகம் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாத்தியார் எம்ஜிஆர் திரைப்படங்களை மட்டும் வேண்டுமென்றே சில திரையரங்குகள் கொஞ்ச நாட்களிலேயே எடுத்துவிட்டன. ஆனால் , திரையரங்கில் வாத்தியார் படத்தை பார்த்த மக்கள் தொகையும் வசூலும் முதல் இடத்தில் நிற்கும். இதிலிருந்து அவர் உண்மையான அன்பு வசூல் சக்ரவர்த்தி மக்கள் நடிகர் என்பது தெரியும். கொள்கையோடு இருந்து மக்களை வாழ்வித்த தால் மக்களும் அவர் கொள்கைப்படி என்றும் நடந்து வருகிறார்கள். ஆனால் கணேசன் ரசிகர்கள் அப்படி இல்லை காரணம் அவர்கள் தலைவனே படங்களில் மோசமான காட்சிகள் நடித்து ரசிகர்களை கெடுத்து விட்ட காரணத்தால். மாயையில் சிக்கி தவிக்கும் கணேசன் ரசிகர்களுக்கு தன் தலைவன் திரையில் நடித்த காண்பித்த "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்ற தத்துவத்தை உணராத திலிருந்து தெரிகிறதா கொள்கையற்ற சிவாஜி புகழ் நிலையற்றது. உண்மையான கொள்கையுள்ள எம்ஜிஆர் புகழ் என்றும் நிலையானது. வாழ்க எம். ஜி .ஆர் .,புகழ்!.............. Thanks wa.,

orodizli
27th June 2019, 08:31 PM
பழனி- சாமி DTS தினசரி 4 காட்சிகள் 28.06.2019
வெள்ளிமுதல் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் இருவேடத்தில் தூள்கிளப்பிய வெள்ளிவிழாக்காவியம் "எங்கவீட்டுப்பிள்ளை " வெற்றி. வெளியிடு ............மதுரை எஸ்.குமார்........ Thanks wa.,

orodizli
27th June 2019, 08:38 PM
சிவாஜியைப் பற்றி எழுதி நம் நேரத்தை வீண்டிக்க வேண்டாமே, யாருமே சிவாஜியை நினைப்பதில்லை ....
தயவுசெய்து எவனோ எழுதினான் என்று நாம் எழுதி பிரபலப்படுத்தவேண்டாமே, யார் வசூல் சக்கரவர்த்தி, யாரை மக்கள்விரும்பி நேசித்தார்கள், யார் இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.....என்பது தமிழ் உள்ளவரை தெரியும், மக்களால் மறந்து விட்ட நபரை ஞாபகப்படுத்த வேண்டாமே........ 22 வயது வாலிபரின் கருத்தை பதிவிட்ட மதுரை திரு S. குமார் அவர்களுக்கு நன்றி. ....... Thanks wa.,

orodizli
27th June 2019, 08:39 PM
தலைவரின் பள்ளி பருவ
நினைவலைகள்
சிறிய வயது முதல் நடந்த
வாழ்க்கை பயண
போராட்டத்தில் தடம் பதித்து
எந்த ஆதரவும் பின்புலம் இல்லாமல்
ஒரு மனிதன்
உச்சம் தொட முடியுமா

படித்து பாருங்கள்

எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி பரவசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில்

பல ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.

இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917 ரேவதி நட்சத்திரத்தில்.

எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.

முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்கரபாணி.

பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.

கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.

பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த 'லவகுசா' என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

தன்னையும் சேர்த்துக் கொண்டால்தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.

நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜீ.ஆர்., சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர்., தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.

ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு 'காளி' என்.ரத்தினம் ஆவார்.சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.

இந்த சமயத்தில் தான் 'சதிலீலாவதி' படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.

அதைத் தொடர்ந்து டி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த 'இரு சகோதரர்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி, சக்கரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'saalivaganan' படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.

அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். 'ராஜகுமாரி' என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம்" என்றார்.
செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.

'ராஜகுமாரி' படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.

எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தது

எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ளபள்ளிபழையஇடத்திலிருந்துசற்றுஇடம்உபெயர்ந்திருக் கிறது.

அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் 'நாகேஸ்வரம் வடக்கு வீதி' என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.

ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானயையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.

கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.
பள்ளியில் நடந்த 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.

இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.
பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார்.

30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.

எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.
நன்றி வள்ளியம்மை
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����........... Thanks wa.,

orodizli
27th June 2019, 10:38 PM
கோவை சண்முகா DTS., நாளை முதல் (28/06/2019) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ",இதய வீணை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது..........மறு வெளியீடு சாதனை என்றால் இதுதான் சாதனையோ... சாதனை......... Thanks wa.,

orodizli
28th June 2019, 09:44 AM
புரட்சித்தலைவர், மக்கள் திலகம் அவர்களின் நெரு ங்கிய நண்பர் ஐயா சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் பிறந்த நாள் இன்று......28-06 தலைவரை வைத்து சினிமாப்படம் எடுக்க தயங்கியிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பணக்கார தயாரிப்பாளர்களுக்கு, எங்கள் எம். ஜி. ஆர். தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்து காட்டிய பெருமை, ஐயா சின்னப்பா தேவர் அவர்களுக்கு உண்டு. ....தலைவருக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களை வணங்கி ஆசி பெற்றுக்கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் ......அறக்கட்டளை.......... Thanks wa.,

orodizli
28th June 2019, 09:45 AM
புரட்சித் தலைவரின்
சமூக கருத்துள்ள திரைப்பயணம்
எங்கே எப்படி எப்போது
ஆரம்பம் ஆனது
இந்த பதிவில் அதற்கான
விடையை காணலாம்

படித்து பாருங்கள்

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம்.

வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல்

"திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து பல ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோதவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது

" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.

"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."

அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு

தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது.

அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.
"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு.

அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.

அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது
நன்றி வள்ளியம்மை
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����.......... Thanks wa.,

orodizli
28th June 2019, 09:50 AM
பாவம்... மாற்று முகாம் ரசிக பிள்ளைகள் போன வார விளம்பரத்தில் உள்ள பெயர்களை அப்படியே போட்டுள்ளார்கள் போலிருக்கிறது. எப்பவும் செய்ற மாதிரியே இதுல தகிடுத்தனம். அப்புறம் வேற எப்படி செய்வாங்க?........ Thanks wa.,

orodizli
28th June 2019, 02:41 PM
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்

காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்

மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !

மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்

பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்

தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்..........�� �� �� ... Thanks wa.,

orodizli
28th June 2019, 04:47 PM
எம்.ஜி.ஆர் ., - மனிதமும் , மதநல்லிணக்கமும்,.........

M.G.R., தனது படங்களில்(காவியங்களில்) தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.

தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..

வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.

அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.

தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!

1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.

அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.

அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?

1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’

மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.
அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.............. Thanks wa.,

orodizli
28th June 2019, 08:59 PM
சாண்டோ சின்னப்பா தேவர் (28 சூன் 1915 – 8 செப்டம்பர் 1978)) என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்....... Thanks wa.,

orodizli
28th June 2019, 09:07 PM
ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு, சரவணா பிலிம்ஸ் G N வேலுமணி, பத்மினி பிக்சர்ஸ் B R பந்துலு...ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களை வைத்து வேறு எவரும் செய்ய இயலாத, 16 படைப்புகள் உருவாக்கி திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்........... Thanks wa.,

orodizli
28th June 2019, 09:11 PM
பணத்தோட்டம் !
__________________
இந்த படம் ஷூட்டிங்கில் டைரக்டர் அவர்கள் மக்கள் திலகத்திற்கு நிறைய கட் கொடுத்து கொண்டிருந்திருந்தார்
பொதுவாக மக்கள் திலகம் ஒரே டேக்கில் முடித்து கொள்வார் என்று கேள்வி ?
இதை உணர்ந்த மக்கள் திலகம் டைரக்டரின் தோளில் கையை போட்டவாரே மெல்ல உலா சென்றார்
சார் நீங்கள் காலையில் எங்கிருந்து வருகிறிர் என்று எனக்குத் தெரியும் அவருக்கு அது தான் செட்ஆகும் எனக்கு என்பாணிதான் செட் ஆகும் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் ...
புரிந்து கொண்ட இயக்குனர் மடமடவென்று காட்சிகளை படமாக்கினார் ...
டைரக்டர் பெயர் சங்கர்
காலையில் ஷூட்டிங் நடந்த படம் ஆலயமணி !

இந்த பாடலில் சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா என்ற வரி வரும் சிலாகித்த மக்கள் திலகம் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு வைர மோதிரம் பரிசளித்தார் .........

இந்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள் !

ஹயாத்!........... Thanks wa.,

orodizli
28th June 2019, 10:11 PM
#கேட்காமலே #கொடுப்பவர்

பழம்பெரும் நடிகர் வீரப்பன் அவர்களின் அளித்து பேட்டியில் இருந்து:

மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது
ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.

அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'
என்று கேட்டேன்.

அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்... என்றார்!

சரி உட்காருங்க...! 'சின்னவர் வெளிய
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்...

சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
"இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்"
என்று சொல்லி விட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.

அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
"இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல, மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்...

"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.

'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்...
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்ஜிஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.

அந்த நடிகரிடம், மதியம் திரும்ப
எம்ஜிஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். "சரி.." என்றார்.

வெளியே வந்த எம்ஜிஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார். அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது. எம்ஜிஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்ஜிஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது. அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத்தான் அதிக சந்தோஷம்...

மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்ஜிஆரிடம்
கேட்டேன்...

"கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க, ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க...
திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க...
அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு...
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க... ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க...? என்று கேட்டேன்.

சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.

"எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார். அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும்..." என்றார்.

எனக்குத்தான் இப்ப கண்கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறுகருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.

அதனால் தான் அவர் இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்!............ Courtesy : fb.,

oygateedat
29th June 2019, 02:42 AM
https://i.postimg.cc/SsfP5WPJ/IMG-20190628-WA0000.jpg (https://postimages.org/)
மக்கள் திலகத்தோடு என் அண்ணன் திரைக்காவியத்தில் நடித்த விஜய நிர்மலா அவர்கள் காலமானார். அவருக்கு நமது திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க்கொள்கிறோம்.

orodizli
29th June 2019, 03:24 PM
மக்கள் திலகம் காவியங்கள்... ..........உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, மாட்டுக்காரவேலன் டிஜிட்டலில் திரையிட தயாராக உள்ளன. இந்த நிலையில் நான் ஆணையிட்டால், மதுரைவீரன், காவல்காரன், நம்நாடு, ரகசிய போலீஸ் 115 போன்ற காவியங்கள் டிஜிட்டல் தயாரிப்பு பணியில் உள்ளன. ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன்( 2008) நாடோடி மன்னன்( 2 முறை டிஜிட்டலில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளியீடு) அடிமைப்பெண்( 2 முறை டிஜிட்டலில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளியீடு) தர்மம் தலைகாக்கும், நினைத்ததை முடிப்பவன், ரிக்சாக்காரன், எங்கவீட்டுப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 போன்ற காவியங்கள் வெளிவந்தன..( உலகம் சுற்றும் வாலிபனும் ரகசிய போலீஸ் 115 ம் 2 வது தடவையாக டிஜிட்டலில் வெளிவர உள்ளன)............ Thanks wa.,

fidowag
29th June 2019, 10:26 PM
சென்னை அகஸ்தியாவில் கடந்த 21/06/19 முதல் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெற்றது
http://i64.tinypic.com/2552uqb.jpg

fidowag
29th June 2019, 10:28 PM
http://i64.tinypic.com/6i43eb.jpg

fidowag
29th June 2019, 10:29 PM
http://i67.tinypic.com/2ll1w83.jpg

fidowag
29th June 2019, 10:30 PM
http://i64.tinypic.com/rtgd9k.jpg

fidowag
29th June 2019, 10:31 PM
தினத்தந்தி -23/06/19
http://i67.tinypic.com/2v18186.jpg

fidowag
29th June 2019, 10:57 PM
ஞாயிறு மாலை காட்சி (23/06/2019) கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள்
நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/oglafo.jpg
http://i68.tinypic.com/2ajnxo5.jpg

fidowag
29th June 2019, 11:01 PM
http://i63.tinypic.com/2prvgur.jpg
http://i65.tinypic.com/20p69v9.jpg

fidowag
29th June 2019, 11:04 PM
http://i63.tinypic.com/2e1t18m.jpg
http://i64.tinypic.com/e03479.jpg
http://i67.tinypic.com/2hn9dhv.jpg

fidowag
29th June 2019, 11:06 PM
http://i63.tinypic.com/2k3gk0.jpg
http://i65.tinypic.com/dlrja8.jpg
http://i68.tinypic.com/2ypaw3k.jpg

fidowag
29th June 2019, 11:14 PM
http://i64.tinypic.com/21o4vab.jpg
http://i66.tinypic.com/2im98h.jpg
http://i67.tinypic.com/2ptdw21.jpg

fidowag
29th June 2019, 11:17 PM
http://i68.tinypic.com/n2efkg.jpg
http://i64.tinypic.com/2937cxx.jpg

fidowag
29th June 2019, 11:19 PM
http://i68.tinypic.com/nesub7.jpg

fidowag
29th June 2019, 11:23 PM
சென்னை பாலாஜியில் கடந்த 21/06/19 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .

http://i66.tinypic.com/mays08.jpg

fidowag
29th June 2019, 11:23 PM
http://i66.tinypic.com/28isvid.jpg

fidowag
29th June 2019, 11:24 PM
http://i65.tinypic.com/b6vn9g.jpg

fidowag
29th June 2019, 11:29 PM
கோவை சண்முகாவில் 28/06/2019 முதல் புரட்சி நடிகர், பாரத் எம்.ஜி.ஆர். வழங்கும் "இதய வீணை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2z5jf6c.jpg

fidowag
29th June 2019, 11:33 PM
பழனி (அறுபடைவீடு ) நகரம் சாமி திரையரங்கில் வெள்ளி முதல் (28/06/19)
நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i65.tinypic.com/5anew1.jpg

fidowag
29th June 2019, 11:35 PM
http://i66.tinypic.com/358yz5s.jpg

fidowag
29th June 2019, 11:37 PM
http://i67.tinypic.com/24g3llj.jpg

fidowag
29th June 2019, 11:39 PM
http://i65.tinypic.com/2s01szn.jpg

fidowag
29th June 2019, 11:39 PM
http://i65.tinypic.com/2dgrdwy.jpg

fidowag
29th June 2019, 11:40 PM
http://i63.tinypic.com/2el5tsy.jpg

fidowag
29th June 2019, 11:42 PM
http://i65.tinypic.com/10n9pxg.jpg

fidowag
29th June 2019, 11:42 PM
http://i65.tinypic.com/21jvuih.jpg

fidowag
29th June 2019, 11:43 PM
http://i63.tinypic.com/73mbh4.jpg

fidowag
29th June 2019, 11:47 PM
மக்கள் குரல் _ 22/06/19
http://i64.tinypic.com/2l8i4pt.jpg
http://i63.tinypic.com/1zqrdas.jpg

http://i65.tinypic.com/2ekjj2e.jpg

http://i66.tinypic.com/ay2bfc.jpg

fidowag
29th June 2019, 11:51 PM
http://i66.tinypic.com/vnjy2u.jpg

fidowag
29th June 2019, 11:52 PM
http://i64.tinypic.com/ojkmxy.jpg

fidowag
29th June 2019, 11:53 PM
http://i63.tinypic.com/5fj33o.jpg

fidowag
30th June 2019, 11:23 AM
http://i66.tinypic.com/11gq6is.jpg

fidowag
30th June 2019, 11:27 AM
http://i66.tinypic.com/5yexk9.jpg

fidowag
30th June 2019, 11:34 AM
http://i64.tinypic.com/1zo9h0j.jpg

fidowag
30th June 2019, 11:35 AM
http://i65.tinypic.com/2yv6nax.jpg

fidowag
30th June 2019, 11:41 AM
உலக இசை தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் திரு.சாமுவேல் தொகுத்து அனுப்பிய புகைப்பட வரிசை
http://i64.tinypic.com/2vmzr6w.jpg
http://i64.tinypic.com/1zqppop.jpg
http://i67.tinypic.com/m8iah1.jpg

fidowag
30th June 2019, 11:44 AM
http://i68.tinypic.com/ddceg2.jpg
http://i68.tinypic.com/351s2z6.jpg
http://i64.tinypic.com/15gefdc.jpg

fidowag
30th June 2019, 11:49 AM
http://i64.tinypic.com/2lvn61w.jpg
http://i68.tinypic.com/rr6xkz.jpg
http://i64.tinypic.com/24g6sua.jpg

fidowag
30th June 2019, 11:53 AM
http://i68.tinypic.com/x5nrrb.jpg
http://i66.tinypic.com/5ujo2f.jpg
http://i64.tinypic.com/2ywwgpj.jpg

fidowag
30th June 2019, 11:55 AM
http://i63.tinypic.com/15yzslh.jpg
http://i66.tinypic.com/30m5vgz.jpg
http://i65.tinypic.com/8zdykz.jpg

fidowag
30th June 2019, 11:59 AM
http://i64.tinypic.com/34qrdky.jpg
http://i64.tinypic.com/zn8oc2.jpg
http://i63.tinypic.com/2zqxyqb.jpg

fidowag
30th June 2019, 12:03 PM
http://i65.tinypic.com/34ycwlt.jpg
http://i65.tinypic.com/2epr289.jpg
http://i65.tinypic.com/z0k04.jpg

fidowag
30th June 2019, 12:36 PM
நாமக்கல் நகராட்சியில் செலம்ப கவுண்டர் பூங்காவில் கோவை நண்பர் திரு.சேகர் தன நண்பருடன் விஜயம் செய்தபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையுடன்
எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/15nuf5w.jpg

fidowag
30th June 2019, 12:37 PM
http://i64.tinypic.com/2il1wmb.jpg

fidowag
30th June 2019, 12:38 PM
http://i66.tinypic.com/5bu4b5.jpg

fidowag
30th June 2019, 12:39 PM
http://i63.tinypic.com/9s74mx.jpg

fidowag
30th June 2019, 12:40 PM
http://i63.tinypic.com/s0vgpj.jpg

fidowag
30th June 2019, 12:42 PM
http://i68.tinypic.com/jgpfkl.jpg

fidowag
30th June 2019, 12:43 PM
http://i67.tinypic.com/2qcmbmb.jpg

fidowag
30th June 2019, 12:45 PM
http://i63.tinypic.com/2lacx3c.jpg

fidowag
30th June 2019, 12:48 PM
http://i63.tinypic.com/2zzqdqw.jpg

fidowag
30th June 2019, 12:49 PM
http://i63.tinypic.com/a46kgp.jpg

fidowag
30th June 2019, 12:51 PM
http://i64.tinypic.com/2j0nwio.jpg

fidowag
30th June 2019, 12:53 PM
http://i64.tinypic.com/2eal40n.jpg
http://i67.tinypic.com/2a6p2mr.jpg

fidowag
30th June 2019, 12:55 PM
http://i67.tinypic.com/mbjygp.jpg

fidowag
30th June 2019, 12:57 PM
அரிய புகைப்படங்கள் சில
http://i66.tinypic.com/dcptlf.jpg

fidowag
30th June 2019, 12:58 PM
http://i67.tinypic.com/2le3va.jpg

fidowag
30th June 2019, 01:02 PM
http://i66.tinypic.com/akwjm0.jpg

fidowag
30th June 2019, 01:04 PM
http://i64.tinypic.com/5sizs.jpg

fidowag
30th June 2019, 01:07 PM
http://i65.tinypic.com/ae9pvq.jpg

oygateedat
30th June 2019, 01:07 PM
https://i.postimg.cc/KvDxJPJg/IMG-20190630-WA0000.jpg (https://postimages.org/)

மக்கள் திலகம் திரைப்படங்களில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்த திரு சங்கர்ராவ் காலமானார். மக்கள் திலகம் விழாக்களில் இவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் கோவை வந்திருந்தார். அப்பொழுது நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் கேட்ட மக்கள் திலகம் புகைப்படங்களை சிலவற்றை எனக்கு கொடுத்தார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்

fidowag
30th June 2019, 01:07 PM
http://i63.tinypic.com/2lnxnxz.jpg

fidowag
30th June 2019, 01:08 PM
http://i67.tinypic.com/10qwa4h.jpg

fidowag
30th June 2019, 01:09 PM
http://i67.tinypic.com/2qdwld4.jpg

fidowag
30th June 2019, 01:10 PM
http://i66.tinypic.com/j6r8me.jpg

fidowag
30th June 2019, 01:10 PM
http://i63.tinypic.com/6s6yie.jpg

fidowag
30th June 2019, 01:11 PM
http://i65.tinypic.com/34s1m9u.jpg

fidowag
30th June 2019, 01:12 PM
http://i63.tinypic.com/2ymhr0g.jpg

fidowag
30th June 2019, 01:21 PM
http://i68.tinypic.com/2nsp0uu.jpg

fidowag
30th June 2019, 01:22 PM
http://i65.tinypic.com/106is10.jpg

fidowag
30th June 2019, 01:23 PM
http://i63.tinypic.com/13yi5ap.jpg

fidowag
30th June 2019, 01:26 PM
http://i65.tinypic.com/2u7cbus.jpg
http://i66.tinypic.com/2lcqn1x.jpg

fidowag
30th June 2019, 01:33 PM
http://i68.tinypic.com/4t9a2e.jpg
http://i66.tinypic.com/2dankle.jpg

oygateedat
30th June 2019, 01:34 PM
https://i.postimg.cc/JzNwtWdX/images.jpg (https://postimg.cc/QFdYnvDN)
மக்கள் திலகத்தோடு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடுகள் சென்றபோது அவருடன் சென்று பல அரிய புகைப்படங்களை எடுத்தவர் திரு சங்கர் ராவ் அவர்கள். இவர் காலஞ்சென்ற மக்கள் திலகத்தின் ஆஸ்தான புகைப்படக்கலைஞர் திரு நாகராஜ ராவ் அவர்களின் நெருங்கிய உறவினர்.

fidowag
30th June 2019, 01:35 PM
http://i68.tinypic.com/6gk94z.jpg

fidowag
30th June 2019, 01:37 PM
முன்னாள் ஜனாதிபதி திரு.ஆர், வெங்கட்ராமனுடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i67.tinypic.com/11ltnyg.jpg

oygateedat
30th June 2019, 02:45 PM
திருப்பூர்

மணீஸ் சினிமாஸில்

மக்கள் திலகத்தின்

ரிக்க்ஷாக்காரன்

fidowag
30th June 2019, 03:35 PM
http://i65.tinypic.com/2i28opc.jpg

fidowag
30th June 2019, 03:36 PM
http://i66.tinypic.com/iykmmx.jpg

fidowag
30th June 2019, 03:38 PM
http://i64.tinypic.com/2vbwt9j.jpg
http://i68.tinypic.com/33nvw44.jpg

fidowag
30th June 2019, 03:41 PM
http://i65.tinypic.com/2iqo03b.jpg

fidowag
30th June 2019, 03:44 PM
http://i63.tinypic.com/359bjhv.jpg
http://i65.tinypic.com/2qlzbsi.jpg
http://i67.tinypic.com/2n6d7k4.jpg

fidowag
30th June 2019, 03:46 PM
http://i66.tinypic.com/2l42lk.jpg
http://i64.tinypic.com/30sfypu.jpg

fidowag
30th June 2019, 03:47 PM
http://i63.tinypic.com/34j8v84.jpg

fidowag
30th June 2019, 03:58 PM
மக்களின் ஏகோபித்த தீர்ப்பை ஏற்று மக்கள் திலகம் , மக்கள் தலைவராக , தமிழக முதல்வராக , முதன்முறையாக பதவி ஏற்ற நாள் இன்று (30/06/1977)
http://i66.tinypic.com/2uq0jrd.jpg
http://i67.tinypic.com/14ty0d1.jpg
http://i68.tinypic.com/28vdm5d.jpg
http://i64.tinypic.com/97sk6o.jpg
http://i63.tinypic.com/28im1li.jpg

fidowag
30th June 2019, 04:01 PM
காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளன்று வெளியான புகைப்படங்கள்
http://i67.tinypic.com/t6wff4.jpg
http://i67.tinypic.com/20r9wf9.jpg

fidowag
30th June 2019, 04:07 PM
மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாளன்று வெளியான புகைப்படங்கள்
http://i68.tinypic.com/2r6icg7.jpg
http://i64.tinypic.com/2nls7d0.jpg

fidowag
30th June 2019, 04:13 PM
http://i65.tinypic.com/eefie.jpg
திரு.ம.பொ.சி.அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புகைப்படம் .

fidowag
30th June 2019, 04:21 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 16 படங்களை தயாரித்து வெளியிட்ட தேவர் பிலிம்ஸ் அதிபர் சாண்டோ எம்.எம்.ஏ..சின்னப்பா தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான புகைப்படங்கள்
http://i66.tinypic.com/23mpmrn.jpg
http://i65.tinypic.com/30ieueu.jpg

fidowag
30th June 2019, 04:24 PM
http://i65.tinypic.com/23r02z9.jpg
http://i65.tinypic.com/1zceqma.jpg

fidowag
30th June 2019, 04:34 PM
http://i67.tinypic.com/o6bn7o.jpg
http://i66.tinypic.com/1zeuibm.jpg
http://i64.tinypic.com/34i1bbm.jpg

fidowag
30th June 2019, 04:38 PM
http://i66.tinypic.com/21chx0y.jpg
http://i64.tinypic.com/2h2h3yt.jpg
http://i68.tinypic.com/rh0tuc.jpg

fidowag
30th June 2019, 04:42 PM
காவல்காரன் படப்பிடிப்பின் இடைவேளையின்போது
http://i64.tinypic.com/33w13qt.jpg
http://i64.tinypic.com/or2iat.jpg
http://i64.tinypic.com/23r26vr.jpg

fidowag
30th June 2019, 04:55 PM
http://i63.tinypic.com/259v7ty.jpg
http://i68.tinypic.com/f59hub.jpg
http://i67.tinypic.com/2airoye.jpg

fidowag
30th June 2019, 04:57 PM
http://i65.tinypic.com/2dc7uqx.jpg

fidowag
30th June 2019, 05:00 PM
http://i64.tinypic.com/2hz1zdw.jpg

fidowag
30th June 2019, 05:01 PM
http://i64.tinypic.com/286txs9.jpg

fidowag
30th June 2019, 05:05 PM
http://i65.tinypic.com/260txl2.jpg
http://i68.tinypic.com/2nk2c05.jpg
http://i63.tinypic.com/2ij42w.jpg

fidowag
30th June 2019, 05:10 PM
http://i63.tinypic.com/b6994h.jpg
http://i63.tinypic.com/ta6mnq.jpg
http://i63.tinypic.com/300fxuc.jpg

fidowag
30th June 2019, 05:12 PM
http://i68.tinypic.com/23wwfvs.jpg

fidowag
30th June 2019, 05:13 PM
http://i66.tinypic.com/2628eti.jpg

fidowag
30th June 2019, 05:34 PM
http://i64.tinypic.com/2yvo3ux.jpg
http://i63.tinypic.com/117yeew.jpg
http://i66.tinypic.com/2wnoa4z.jpg

fidowag
30th June 2019, 05:35 PM
http://i68.tinypic.com/2my94ja.jpg

fidowag
30th June 2019, 05:36 PM
http://i64.tinypic.com/2ns5ob8.jpg

fidowag
30th June 2019, 05:41 PM
புகைப்படத்தில் தவறான செய்திகள் பதிவு -
--------------------------------------------------------------------

படம் : பணத்தோட்டம் .
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயக்கம் : கே. சங்கர் .
http://i63.tinypic.com/oktl5c.jpg

fidowag
30th June 2019, 05:42 PM
http://i64.tinypic.com/2z7lms9.jpg
http://i63.tinypic.com/dwszr4.jpg

orodizli
30th June 2019, 08:44 PM
1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ம் தேதியை மறக்க முடியுமா....
1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ம் தேதி காலை 09:15 மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் அமைச்சர்கள் அன்றைய கவர்னர் பட்வாரி முன்னிலையில் எந்த ஆடம்பரமும் இன்றி மிக எளிமையான முறையில் பதவியேற்றார்கள்.பின்பு பேரறிஞர் அண்ணா சாலையில் திறந்த வேனில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து அறிஞர் அண்ணா சிலைக்கு வந்து மக்களிடையே எழுச்சி உரை ஆற்றினார்.. அறிஞர் அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்,, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது ஒரு சம்பிரதாய விழா.. தற்போது உங்கள் மத்தியில் தான் நாங்கள் பொறுப்பேற்கிறோம்.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அறிஞர் அண்ணா சொன்னார்.. அண்ணா வழியில் லஞ்சமற்ற, ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு தருவோம்.. எங்கள் பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள் என்று ரத்தின சுருக்கமாக பேசினார்..பின்பு தலைமை செயலகம் சென்று முறைப்படி முதலமைச்சர் பணியை தொடங்கினார்..04.07.1977--ம் நாள் அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியதன் நினைவாக தான் மன்னாதி மன்னன் தலைவர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அம்பாசிடர் கார்கள் அனைத்திற்கும் வெளிர் நீல நிறத்தில் TMA 4777,TMX 4777,TMG 4777 என்ற எண்களை கொண்ட அம்பாசிடர் காரை இறுதி வரை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது............. Thanks wa.,

orodizli
30th June 2019, 08:48 PM
*"எம்.ஜி.இராமச்சந்திரன் எனும் நான்....."*

கழகத்தின் நிறுவனர், *புரட்சித்தலைவர்*
'நாடோடி மன்னன்' நாடாளும் மன்னராக 42-ஆண்டுகளுக்கு முன் பதவி ஏற்ற தினம் 30.6.1977 இன்று..

1977-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 144 இடங்களைப்பெற்று *அதிமுக* வென்றது.

அருப்புக்கோட்டையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட *எம்ஜிஆர்* சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியின் அழைப்பை ஏற்று *அதிமுக* ஆட்சிப்பொறுப்பேற்றது


*01. நாஞ்சில் மனோகரன்*

*02. நாராயணசாமி*

*03 எட்மண்ட்*

*04 பண்ருட்டி ராமச்சந்திரன்*

*05 ஆர்.எம்.வீரப்பன்*

*06. அரங்கநாயகம்*

*07. பெ.சவுந்தரபாண்டியன்*

*08. காளிமுத்து*

*09. ராகவானந்தம்*

*10. பொன்னையன்*

*11. பி.டி.சரசுவதி*

*12. ஜி.குழந்தைவேலு*

*13. கே.ராஜா முகமது*

-போன்ற படித்த இளைஞர்கள், அனுபவமுள்ள தலைவர்களைத் தனது அமைச்சரவையில் இடம்பெறச்செய்தார் *எம்ஜியார்*

பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளை எம்.ஜி.ஆர் வைத்துக்கொண்டார்.

ராஜாஜி மண்டபத்தில் இந்தப் பதவியேற்பு வைபவம் நடந்து முடிந்ததும் நேரே எம்.ஜி.ஆர் தன் அமைச்சரவை சகாக்களோடு சென்றது அண்ணா சாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடைக்கு..

ஆம் 'தன்னை, தன் வாழ்வை இத்தனை உயரத்துக்குக் கொண்டு சென்ற மக்கள் முன்னேதான் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும்' என மக்களுக்கு உறுதியளித்தார்.

'தணிக்கை செய்யப்படாமல் ஓரிரு படங்களை மட்டும் என்னை எடுக்க அனுமதித்தால் நான் திராவிடத்தை வென்று காட்டுவேன்' என்றார் *பேரறிஞர் அண்ணா*

அண்ணாவின் ஆசையைத் தணிக்கை செய்யப்பட்ட படங்களைக் கொண்டே நிகழ்த்திக்காட்டியவர் அண்ணாவால் *இதயக்கனி* என அழைக்கப்பட்ட *மக்கள்திலகம்* எம்.ஜி.ஆர்.

அண்ணாவின் ஆசையை நிறைவேற்றி தமிழகத்தின் அசைக்க முடியாத முதலமைச்சராக மக்கள் தலைவராக இருந்தார் என்பது உலகமறிந்த வரலாறு.......... Thanks wa.,

orodizli
30th June 2019, 08:51 PM
*தமிழக வரலாற்றில் இந்நாள் ஒரு பொன்நாள்.. 30/6/1977*

*எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான்...*

*மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், பாரதரத்னா, இதயதெய்வம், டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் அரியணை ஏறிய மகத்தான, மறக்கமுடியாத, மகிழ்ச்சியான நாள்*
*சி.ரங்கநாதன்* ����........... Thanks wa.,

orodizli
30th June 2019, 09:01 PM
இன்று..........30-06-1977... பல நடிகர்கள் சினிமாவில் யாரோ எழுதி கொடுத்ததை பேசி, எவரோ வசனம் எழுதி, இன்னொருவர் இயக்கம் செய்து, தயாரித்து நடந்து கொண்டிருக்கும் திரைப்பட வரலாற்றில்... உண்மையாக சினிமாவில் நடைபெற்ற காட்சிகளை, நிழலை நிஜமாக்கிய ஒப்பற்ற ஒரே மேதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஆட்சி கட்டிலில் அமர்ந்த திருநாள் ...

orodizli
30th June 2019, 09:03 PM
தற்போது மக்கள் திலகம் "தாய் சொல்லை தட்டாதே" முரசு தொலைக்காட்சியில்......

oygateedat
1st July 2019, 06:11 AM
https://i.postimg.cc/PfKRtP9H/IMG-20190701-WA0007.jpg (https://postimg.cc/F1dZpshC)
கோவை சண்முகா நேற்று மாலைக்காட்சி

oygateedat
1st July 2019, 06:12 AM
https://i.postimg.cc/Dy9dFhvF/IMG-20190701-WA0006.jpg (https://postimg.cc/N5xr7W2P)

oygateedat
1st July 2019, 06:14 AM
https://i.postimg.cc/pTrnzcWq/IMG-20190701-WA0009.jpg (https://postimg.cc/DJVZKgbX)

oygateedat
1st July 2019, 06:14 AM
https://i.postimg.cc/TPYcN92W/IMG-20190701-WA0008.jpg (https://postimg.cc/Sn38JcMy)

oygateedat
1st July 2019, 06:20 AM
https://i.postimg.cc/DZh7K8Ds/IMG-20190701-WA0010.jpg (https://postimages.org/)
நன்றி - நண்பர் திரு சாமுவேல்

oygateedat
1st July 2019, 06:45 AM
https://i.postimg.cc/Qdx3m27g/IMG-20190701-WA0012.jpg (https://postimg.cc/SJ53NtDj)

பழனி சாமி திரையரங்கம்

oygateedat
1st July 2019, 06:48 AM
https://i.postimg.cc/RZ3PvGx5/IMG-20190701-WA0011.jpg (https://postimg.cc/rDkGJ1pQ)
நன்றி திரு குமார் - மதுரை

orodizli
1st July 2019, 02:30 PM
முகநூலிலும், whatsapp போன்ற சமூக வலை தளங்களிலும், வசந்தமாளிகை படத்தின் சாதனைகள் பற்றி உண்மைக்கு மாறான தகவல்கள் தந்து அற்ப சந்தோஷம் அடைந்த பிள்ளைகள் நிலைமை கண்டு பரிதாபம் அடைகிறோம் . இந்திய திரை உலக வரலாற்றில் வசூல் மன்னன் யார்?, வசூல் சக்கரவர்த்தி யார்?, என்றால் எம்.ஜி.ஆர்., என்பதை உலகமே அறியும்!!! . சாதனைகளின் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் . , திரை உலகில் சொன்னதை நிஜ வாழ்க்கையில் நடத்தி காட்டியவர் . & நடைமுறையில் நடத்தி காட்டி, அதை அப்படியே நிரூபித்தும் காட்டி ,ஆதாரம் படுத்தியவர்... ஆவணம் செய்து காட்டியவர், அதிகாரத்திற்கு வந்தவர், முறையாக ஆட்சி கட்டிலில் அற்புதமாக அமர்ந்தவர், பொது மக்களின் ஏகோபித்த நல்லாதரவோடும், நல்லாசியோடும் வெற்றி களம் கண்ட பெருந்தகை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,..........
பிள்ளைகள் தகப்பனை ஏமாற்றிய பெருமை சிவாஜி ரசிகர்களுக்கு என்றுமே நிலைத்திருக்கும் . சிவாஜியை நம்ப வைத்து பல படங்களை பெட்டிக்குள் அடைத்த பெருமை இந்த வீராப்பு பிள்ளைகளுக்கு உண்டு .அரசியலில் கேட்கவே வேண்டாம் .சிவாஜியின் உழைப்பை நடுத்தெருவில் நிற்க வைத்த புண்ணியவான்கள் இந்த பிள்ளைகள் . சென்னையில் இருக்கும் சிவாஜி மண்டபத்தை தரிசிக்க மனமில்லாத சுகவாசிகள் . மொத்தத்தில் சமூக வலை தளத்திலும் சிவாஜியை அவமான படுத்தி கொண்டு வருகிறார்கள் ............ Thanks wa.,

orodizli
1st July 2019, 02:43 PM
இன்று 01-07-1982 - 01-07-2019... தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் ஐ. நா. சபை (United Nations) உட்பட உலக நாடுகள் எல்லாம் பாராட்டி, அங்கிகாரம் அளித்த மகத்தான மாபெரும் திட்டம் " சத்துணவு எனும் சத்தான திட்டம் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களால் துவங்கப்பட்ட புனித தினம்... எந்தவொரு ஆட்சியாளர்களாலும் ஒதுக்க வைக்க முடியாத சமூக நல சிறப்பான திட்டம்.........

orodizli
1st July 2019, 02:45 PM
இன்று ஜூலை 01
புரட்சித் தலைவர் அவர்கள்
தமிழகத்தில் முதன் முதலில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தினம். (01-07-1982)
இத்திட்டம் திருச்சி காட்டூரிலுள்ள உள்ள பாப்பாக்குறிச்சியில் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை எழுப்பி, நன்கொடையாக அளித்தவர் 'தினத்தந்தி'அதிபர் திரு.சிவந்தி ஆதித்தன்.
திறப்பு விழாவிற்கு முதல் நாளிலிருந்தே கடும் மழை. நிகழ்ச்சியை தள்ளி வைத்திடலாம் என்று அனைவரும் சொன்னதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. அதனால் அன்றை மாவட்ட கலைக்டர் சாந்தா ஷீலா நாயர் .
இரவோடு இரவாக கொட்டும் மழையிலும் ஜெனரேட்டர் உதவியுடன் விளக்குகளைப் பொரித்தி சத்துணவுக் கூடம் வழியிலுள்ள சில கி.மீ.தூர சேற்றை நீக்கி, கருங்கல் ஜல்லி நிறப்பி, ரோடு ரோலர் வரவழைத்து தற்காலிக சாலை அமைத்து அதிகாலைக்குள் தயாராக்கி விட்டனர்.
முதல்வர், தினத்தந்தி அதிபர், கலெக்டர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியின் வாகனங்கள் மட்டும் சென்று சத்துணவுக் கூடம் திறந்து வைக்கப்பட்டது.
தகவல் உதவி: தினத்தந்தி........ Thanks wa.,

orodizli
1st July 2019, 02:47 PM
எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் ஜெயசங்கர்...

" ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..

நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா

தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.

ஒரு தவறும் புரியாமல்

பதவி விட்டு சென்றாய் - பொருந்தாத

பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.

சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே

வாரி வாரி தந்தவனும் நீயே.

சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - நீ

சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.

மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா - அதற்கு

நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா "

- தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ' பணக்காரப் பெண்' என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு 'அரசியல் பிராண்டு' பெற்றிருந்தது இப்பாடல்.

தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.

“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி .....தெரிவிக்கிரார்.......... Thanks wa.,
.

orodizli
1st July 2019, 02:51 PM
தலைவரின் பள்ளி பருவ
நினைவலைகள்
சிறிய வயது முதல் நடந்த
வாழ்க்கை பயண
போராட்டத்தில் தடம் பதித்து
எந்த ஆதரவும் பின்புலம் இல்லாமல்
ஒரு மனிதன்
உச்சம் தொட முடியுமா

படித்து பாருங்கள்

எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி பரவசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில்

பல ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.

இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917 ரேவதி நட்சத்திரத்தில்.

எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.

முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்கரபாணி.

பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.

கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.

பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த 'லவகுசா' என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

தன்னையும் சேர்த்துக் கொண்டால்தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.

நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜீ.ஆர்., சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர்., தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.

ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு 'காளி' என்.ரத்தினம் ஆவார்.சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.

இந்த சமயத்தில் தான் 'சதிலீலாவதி' படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.

அதைத் தொடர்ந்து டி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த 'இரு சகோதரர்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி, சக்கரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'saalivaganan' படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.

அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். 'ராஜகுமாரி' என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம்" என்றார்.
செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.

'ராஜகுமாரி' படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.

எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தது

எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ளபள்ளிபழையஇடத்திலிருந்துசற்றுஇடம்உபெயர்ந்திருக் கிறது.

அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் 'நாகேஸ்வரம் வடக்கு வீதி' என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.

ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானயையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.

கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.
பள்ளியில் நடந்த 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.

இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.
பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார்.

30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.

எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.

நன்றி வள்ளியம்மை
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����........ Thanks wa.,

orodizli
1st July 2019, 03:00 PM
Iஆட்சியில் இல்லை. . அதிகாரம் இல்லை . .
கோட்டை இல்லை . .கொடியும் இல்லை ..
இப்படி பேசி பேசியே தங்களை ஏமாற்றிக்கொள்ளும் , நொந்து போய் கொண்டேயிருக்கும் பிள்ளைகளே ..
கொஞ்சம் சிந்தியுங்கள் .....
சிவாஜியின் பல படங்கள் தோற்றது ஏன் ?
அரசியலில் வெற்றி பெறாமல் போனது ஏன் ?
மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறமுடியாமல் போனது ஏன் ?
பிள்ளைகள் உழைப்பை மறந்து ஏன் ?
உண்மை விசுவாசம் இரண்டையும் துறந்தது ஏன் ?
கையில் கோப்பையும் சுற்றிலும் மங்கையரையும் ஏந்தி கொண்டு ''ஏன் ஏன் '' என்று சிவாஜி பாடியது படத்திற்காக .
சிந்திப்பதற்கு அல்ல .
தன்னுடைய சுகத்திற்காக .
போதைக்காக .... பொலப்புக்காக..
எனவே பிள்ளைகளும் எல்லா கேள்விகளையும் மறந்தார்கள் .
போதை தெளிந்தாலும் இன்னமும் பதில் கிடைக்கவில்லை .
மயக்கத்தில் இருந்து மீளுங்கள் பிள்ளைகளே .
என்றுமே உங்களுக்கு மன அமைதி இல்லவே இல்லை.. Thanks wa.,

fidowag
1st July 2019, 05:03 PM
பாக்யா வார இதழ் -16/06/2019
http://i67.tinypic.com/1ypphk.jpg
http://i64.tinypic.com/20qm32a.jpg

fidowag
1st July 2019, 05:05 PM
மக்கள் குரல் -30/06/19
http://i68.tinypic.com/2dumtyb.jpg
http://i67.tinypic.com/1elyxz.jpg

fidowag
1st July 2019, 05:09 PM
தினமலர் /வாரமலர் ,நெல்லை -02/06/19
http://i67.tinypic.com/168d9c5.jpg
http://i64.tinypic.com/20hoxfn.jpg

fidowag
1st July 2019, 05:11 PM
தினமலர் /வாரமலர் ,நெல்லை -09/06/19
http://i68.tinypic.com/2vsloj5.jpg
http://i63.tinypic.com/zvjvr.jpg

fidowag
1st July 2019, 05:13 PM
http://i66.tinypic.com/29lbq5v.jpg
http://i65.tinypic.com/102uqvt.jpg

fidowag
1st July 2019, 05:15 PM
தினமலர் /வாரமலர் ,நெல்லை - 16/06/19
http://i67.tinypic.com/ux5ic.jpg

fidowag
1st July 2019, 05:16 PM
http://i64.tinypic.com/16gfm6e.jpg
http://i67.tinypic.com/20sezh3.jpg

fidowag
1st July 2019, 05:18 PM
தினமணி கதிர் -30/06/19
http://i64.tinypic.com/j0xxec.jpg
http://i65.tinypic.com/2pt3sar.jpg

gingerbeehk
1st July 2019, 06:04 PM
புரட்சி தலைவரை பற்றிய அருமையான, அரிதான தகவல்களை தேடிப்பிடித்து உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
ஜாக்

orodizli
1st July 2019, 07:13 PM
ஆனால்......... அகில உலக திரைப்பட வசூல் சக்கரவர்த்தி... கலையுலக மகா மாமேதை... புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களோ... அப்பப்பா... அவர் பாத்திரம் தாங்கி நடித்த, வாழ்ந்த ஒவ்வொரு காவியங்களிலும் சமூக சிந்தனையோடு படிப்பினைகளை ரசிகர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும் வழங்கியது வேறு எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது...

orodizli
1st July 2019, 10:26 PM
விகடன் பொக்கிஷம்
கழுகார் பதில்கள்!

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். இந்த வாத்தியார் பாடம் போதுமே!...அந்த மஹான் எப்பேர்ப்பட்ட மன பக்குவம் கண்டிருந்தால் இந்த வார்த்தைகள் வெளி வரும்?!.........�� �� ��

orodizli
1st July 2019, 10:27 PM
#மக்கள் திலகத்துட*ன் அவ*ர*து ச*ம்ப*ந்தியும், இய*க்குன*ருமான கே. ச*ங்க*ரின் அனுப*வ*ங்க*ள்#

M.G.R. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.

‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முதலாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.

ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடிக்கும் ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.

‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய்தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுலகில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கினீர்களே? இப்போது என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’

பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்திரோதயம்’, ‘குடியிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங்கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இருவர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் ப*ல வந்தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.

சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக்கும் எந்த குறையும் வைக்காமல் தாராளமாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.

‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத்தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுகமான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனையில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.

‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.

அதற்கு, ‘‘ராமுவை நான்தான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத்தின்போது, அவருக்கு பண உதவி செய்வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.

‘‘மகாபாரதக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே
மற்றவர்களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’

மேலே உள்ள ப*ட*ம் ச*ங்க*ர் இய*க்குவ*தாக இருந்து பின் த*லைவ*ர், முத*ல்வ*ரானதால் கைவிட*ப்ப*ட்ட "வெற்றிப்பாதை"யில் க*ராத்தே வீரராக எம்ஜிஆர் ந*டிக்க இருந்து பின்ன*ர் கைவிட*ப்ப*ட்ட*து.

இப்ப*ட*ம் தெலுங்கில் என்.டி.ஆர், ல*தா ந*டிக்க கே.ச*ங்க*ர் இய*க்க*த்தில் சிருங்கார* ராமுடு என்ற* பெய*ரில் வெளியாகி வெற்றி பெற்ற*து......... Thanks wa.,

orodizli
1st July 2019, 10:29 PM
பட்டினி அனுபவம்...தனக்கு ஏற்பட்ட பசி பிறருக்கு வரக்கூடாது என்று புரட்சி தலைவர் 01.07.1982 ல் பசியை போக்கிய தினம்...

சத்துணவு திட்டம் தினம்......... Thanks wa.,

orodizli
1st July 2019, 10:31 PM
உலகத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் அன்றும் இன்றும் என்றும் வசூல் சக்ரவர்த்தி நமது மக்கள் திலகம் மட்டுமே தினசரி வானொலி தொலைக்காட்சி, கல்யாணம் மற்றும் சுப நிகழ்சிகள் கட்சி மீட்டிங் ஆகியவற்றில் மக்கள் திலகத்தின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் தினசரி ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தலைவர் பாடம் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கிறது அதே போல் எல்லா ஊர்களிலும் ஏதாவது திரையரங்குகளிலும் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது அது போல் இப்போது முதல் வாரம் 10, 25, 50, 75, 100, 125, 150, 175 வெள்ளி விழா போன்ற திரைப்பட விளம்பரங்கள் செய்தி தாள்களில் விளம்பரங்கள் ஆகியவற்றினை பார்ப்பது அரிதாகிவிட்டது மக்கள் திலகம் காலத்தில் திரைப்பட துறைகளில் இருப்பவர்களை வாழ வாழவைத்தார் திரை அரங்கில் 100 நாட்கள் ஓடினால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது இப்போது பணம் வசூல் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது அன்றும் இன்றும் திரைப்பட துறையினரை வாழ வைக்கும் ஒரே தலைவர் நமது மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ஒருவர் மட்டுமே இதனை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது (இந்த பதிவு பற்றி தங்கள் எண்ணங்களை பதிவிடவும்).......... Thanks wa.,

orodizli
1st July 2019, 10:32 PM
ராமன் தேடிய சீதை
_____________________
மெளனம்
என்பதொரு பாவம்
முத்தமென்பதொரு
பாடல்
மங்காத சங்கிதம்
என் மேனியே !
கண்ணதாசன் வரிகளின் ராஜ்ஜியம் இதிலும் தொடர்கிறது

13-4-1972 -ம் ஆண்டு வெளியானது 47 ஆண்டுகள் கடந்து விட்டன ஆனால் இப்பாடலின் இசையும் காமிரா விழங்கிய காட்சிகளும் இனி வரப்போகிற படம் என்றே தோன்றுகிறது

இருவரும் இருமலராக காட்சியளிக்கின்றனர்
ஆணை மலோரோடு ஒப்பிடலாமா ?
ஏன் கூடாது ? மக்கள் திலகத்தின் மனம் மென்மையானது தானே !
சரி விடுங்கள்
இருவரும்
இரட்டை இலைகள் !

ஹயாத்!.............. Thanks wa.,

fidowag
1st July 2019, 10:57 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய பதிவுகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்த நண்பர் திரு.ஜாக் அவர்களுக்கு மிகவும் நன்றி .
http://i65.tinypic.com/33p8xoo.jpg

தினமலர்/வாரமலர் /நெல்லை செய்திகள் திரியில் பதிவிட உதவிய நெல்லை நண்பர் திரு.வி.ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .

fidowag
1st July 2019, 11:03 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக ,முதல் முறையாக பதவி ஏற்ற தினம் 30/06/1977. நேற்றுடன் 42 ஆண்டுகள் நிறைவு
http://i63.tinypic.com/kcxf74.jpg

fidowag
1st July 2019, 11:04 PM
http://i67.tinypic.com/2znzwuf.jpg

fidowag
1st July 2019, 11:05 PM
http://i64.tinypic.com/35jwk9h.jpg

fidowag
1st July 2019, 11:06 PM
http://i63.tinypic.com/28m1gyr.jpg

fidowag
1st July 2019, 11:12 PM
http://i64.tinypic.com/316upp3.jpg
http://i67.tinypic.com/oa0rk2.jpg
http://i66.tinypic.com/358bgjt.jpg

fidowag
1st July 2019, 11:14 PM
http://i65.tinypic.com/2j2hogp.jpg
http://i64.tinypic.com/35aq07q.jpg
http://i65.tinypic.com/24yoldj.jpg

fidowag
1st July 2019, 11:17 PM
http://i64.tinypic.com/jj3ccg.jpg
http://i65.tinypic.com/2gseg3l.jpg
http://i66.tinypic.com/fkxjd2.jpg

fidowag
1st July 2019, 11:19 PM
http://i64.tinypic.com/mbqp3p.jpg
http://i64.tinypic.com/207s584.jpg
http://i66.tinypic.com/25q6s1v.jpg

fidowag
1st July 2019, 11:21 PM
http://i68.tinypic.com/2qvtum8.jpg
http://i67.tinypic.com/ta4l0j.jpg
http://i63.tinypic.com/4vipmq.jpg

fidowag
1st July 2019, 11:23 PM
http://i64.tinypic.com/27xjmzp.jpg
http://i66.tinypic.com/2q8ro8h.jpg
http://i67.tinypic.com/107q5ac.jpg

fidowag
1st July 2019, 11:26 PM
http://i67.tinypic.com/mty1e0.jpg
http://i66.tinypic.com/111qvs5.jpg
http://i66.tinypic.com/2u3y74p.jpg

fidowag
1st July 2019, 11:43 PM
http://i68.tinypic.com/dwticm.jpg
http://i64.tinypic.com/28upuli.jpg
http://i67.tinypic.com/e8lrtt.jpg

fidowag
1st July 2019, 11:44 PM
http://i64.tinypic.com/2mmshub.jpg

fidowag
1st July 2019, 11:45 PM
http://i65.tinypic.com/fattvs.jpg

fidowag
1st July 2019, 11:46 PM
http://i68.tinypic.com/rqx73r.jpg

fidowag
1st July 2019, 11:50 PM
http://i67.tinypic.com/5vxj7q.jpg

fidowag
1st July 2019, 11:50 PM
http://i68.tinypic.com/21ovo9l.jpg

fidowag
1st July 2019, 11:51 PM
http://i67.tinypic.com/2cmxlj4.jpg

fidowag
1st July 2019, 11:52 PM
http://i68.tinypic.com/24mcm5z.jpg

fidowag
1st July 2019, 11:53 PM
http://i68.tinypic.com/whgza.jpg
http://i67.tinypic.com/zydbiu.jpg

fidowag
1st July 2019, 11:54 PM
http://i64.tinypic.com/n62l5d.jpg

orodizli
2nd July 2019, 04:55 AM
ஒளி விளக்கு
______________
இப்பாடல் காட்சியை கூரந்து கவனியுங்கள் இவர்களின் மொத்த அவயங்களுமே நடிக்கின்றன
முகபாவனை பாடிலாங்வேஜ் அமர்களபடுத்தியிருப்பார்கள்
மக்கள் திலகத்தின் உடலில் எந்த ஒரு இடத்திலும் எக்ஸ்ட்ரா சதை காணமுடியாது சதை குறைய மணிக்கணக்கில் ஏரோபிக்ஸ்ஸே கதி என்று தவமாய் இருப்பவர்களை கண்கூடாக பார்த்துள்ளேன்
இந்த ஆடல் பாடலில் தான் எத்தனை உயர்ந்த கருத்துக்கள் மக்கள் மனதில் படிகின்றன
வன்முறையில்லாத இரத்தம் சிந்தாத மக்கள் மனதை செம்மைபடுத்துவதுதான் உலகிலேயே உண்மையான புரட்சி
புதியதாக முளைத்திருக்கும் அறிவு ஜிவிகள் புரிந்து கொள்ளட்டும்
மக்கள் திலகம் ஓர் அதிசயப்பிறவியே !

ஹயாத் !........... Thanks wa.,

orodizli
2nd July 2019, 04:58 AM
Today THE HAPPIEST DAY OF MGR FANS THIRTY SEVEN YEARS AGO ON THIS DATE FROM 02/07/1982 , FRIDAY AT MADRAS THEATRES PARAGON, AGASTHIYA(70MM, SARAVANA & LIBERTY. SARAVANA FILMS ... "PADAGOTTI" RELEASED BY OUR MGR FANS LEADER Mr.MUSIRIPUTHAN. THE FILM RUN FOR 3 WEEKS AT PARAGON.......... Thanks wa.,

orodizli
2nd July 2019, 09:44 AM
தெய்வீக முகம் எம் ஜி ஆர் புகழுக்கு ஒரு காரணம்
இவ்வளவு ஒளி அந்த முகத்தில் ஒளிர காரணம் அகம் நல் எண்ணம் கொண்டு நிறைந்தது அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது
எவரையும் ஒருமையில் பேசாத ஒரே தலைவர் எம் ஜி ஆர்
எம் ஜி ஆருக்கு இருந்த பலத்திற்க்கும் செல்வாக்கிற்க்கும் எம் ஜி ஆர் எவரையும் எதிரியாக நினுப்பதில்லை அதனாலே எல்லோரையும் அரவணைத்து சென்றார்
தன்னை வெல்ல எவராலும் முடியாது என தெரிந்தும் கர்வம் கொள்ளாமல் நான் என்ற அகந்தை கொள்ளாமல் நிறைகுடமாக தமிழகம் ஆண்ட எம் ஜி ஆர் ஒரு ஆண்டவன் அவதாரமே

வாழ்க எம் .ஜி .ஆர் .,புகழ் ........... Thanks wa.,

orodizli
2nd July 2019, 11:07 PM
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே

நம்நாடு - அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர்............. Thanks wa.,

orodizli
2nd July 2019, 11:10 PM
# "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தைத் தொடர்ந்து "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு", என்ற படத்தை தயாரிக்க புரட்சித்தலைவர் அவர்கள் முடிவு செய்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. அப்படம் மட்டும் தயாரித்து வெளியிட்டிருந்தால் அது உலகம் சுற்றும் வாலிபனையும் மிஞ்சியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். பல சாதனைகளையும் அது படைத்திருக்கும்........


#அன்றே வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தயாரிக்க எண்ணியிருக்கிறார் புரட்சித்தலைவர்.

#அப்படத்திற்கு கென்யா அரசு அனுமதி அளித்த செய்தி.

#எம்.ஜி.ஆர் படம் எடுக்க கென்யா அரசு அனுமதி.

____________________________

எம்.ஜி.ஆர்.பிக்சர்சார் நைரோபியிலுள்ள ஒரு நிறுவனத்தாருடன் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு எனும் படத்தை தயாரிக்க இருக்கின்றனர். இந்த வண்ணப்படத்தை எடுக்க கென்யா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நேராபி, நேஷனல் பார்க், மவுண்ட்கென்யா, டி.நீர்வீழ்ச்சி, மாராகேம் ரிசர்வ் காடுகள், மரைன் பார்க்ஸ், மோம்பாஸா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

3 மணி நேர முழு நீளப்படத்திற்கான அனுமதியை கென்யா அரசு அளித்துள்ளது-

#எம்ஜிஆர் , லதாவுக்கு அழைப்பு...

_________________________

படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. துவக்கப் பணிகளை பார்வையிட வருகை தர எம்.ஜி.ஆருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நடிகை லதா, டைரக்டர் ப.நீலகண்டன், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் கலாச்சார முறைகளையும், மக்களின் நடைமுறைகளையும் அருங்கலைகளையும் அறிவதற்கு வாய்ப்பளிக்கும் அழைப்பு இது.

கூட்டுத் தயாரிப்பு நிறுவனத்தாருடன் சேர்ந்து படப்பிடிப்பு சம்பந்தமாக முடிவு செய்ய வருகிற மார்ச் 2-ம் தேதி எம்.ஜி.ஆரை வருமாறு அழைத்திருக்கின்றனர்............. Thanks wa.,

orodizli
2nd July 2019, 11:11 PM
தனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய திறமைகளைப் பற்றியறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார். அந்த உதவித் தொகையின் உதவியில படிச்ச அவர், எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு, வளர்ந்த பின்னர், ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத்’ தானாகவே வளர்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வளர்ந்த அவருக்கு, அவரைப் போலவே மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டுமென்று எண்ணம் தோன்றியது. அவர், தனது பள்ளிப்படிப்பை முடித்தப் பின்னர், திரையுலகில் கால்பதிக்க எண்ணினார், அவரது இந்த எண்ணத்திற்கு அவரது தந்தையும், அக்காவும் துணை நின்றதால், அவர் திரையுலகில் நுழைந்தார்......... Thanks wa.,

orodizli
2nd July 2019, 11:19 PM
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்

சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.

நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.

நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது......... Thanks wa.,

orodizli
2nd July 2019, 11:25 PM
ஒரு நடிகனால் நாடாள முடியுமா? என்று கல்கண்டு நாளிதழில் எம்.ஜி.ஆர். குறித்து பல விமர்சனங்களும் கேள்விகளும், கட்டுரைகளும் வெளிவந்தன. ஆனால் அதே நாளிதழ் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனதும் ஒரு நடிகனால் ஏன் நாடாள முடியாது? என்று எழுதியது. சந்தர்ப்பமும் சாதனையும் விமர்சனங்களுக்கு அப்பாரற்பட்டவை என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். தமது செல்வாக்காலும், சொல் வாக்காலும் , தம்மை மக்களிடத்தில் எளிமையாக இணைத்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர்.

இதனால் 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப்பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் விளங்கினார். இவை எல்லாம் இவரது வெற்றியின் உச்சம் என்றும் சொல்லலாம்.............. Thanks wa.,

orodizli
2nd July 2019, 11:34 PM
வருகிற 05-07-2019 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான, பிரம்மாண்ட வெற்றி வெளியீடு... சென்னை - அகஸ்தியா 70 mm, மதியம் & மாலை காட்சிகள் வசூல் சக்கரவர்த்திகளின் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் " அடிமைப்பெண்" ...........

orodizli
2nd July 2019, 11:36 PM
சென்னை - ரெட் ஹில்ஸ் அம்பிகா dts அரங்கில் " ரிக்க்ஷாக்காரன்" நடைபெறுவதாக நண்பர்கள் தகவல்...

oygateedat
3rd July 2019, 03:26 AM
https://i.postimg.cc/Y0CN2tzn/IMG-20190702-WA0002.jpg (https://postimages.org/)
திருப்பூர்

மணீஸ் சினிமாஸில்

அடிமைப்பெண்

சென்ற வாரம்

திரையிடப்பட்டு

ஒரு வாரம் ஓடியது

அதைத்தொடர்ந்து

இந்த வாரம்

ரிக்க்ஷாக்காரன்

திரையிடப்பட்டுள்ளது

oygateedat
3rd July 2019, 03:33 AM
https://i.postimg.cc/Fzc28hh1/IMG-20190702-WA0001.jpg (https://postimages.org/)
திரையரங்கு முன்புவைக்கப்பட்டுள்ள கட் அவுட்

orodizli
3rd July 2019, 09:53 AM
#கற்றுக்கொள்ளவேண்டிய #பாடம்

மற்றவர்களை மதித்து உபசரிப்பதில் நம்ம வாத்தியாருக்கு இணையே கிடையாது...

ஒரு சில உதாரணங்கள்:

நவரத்தினம் படம் குறித்து இயக்குனர் ஏபி நாகராஜன் அவர்களை தன் வீட்டிற்குப் பேச அழைத்தார் மக்கள்திலகம். அப்போது அவருக்கு காபி கொடுக்கப்பட்டது. சூடு அதிகமாக இருக்கவே காபியை நாகராஜன் சற்று கீழே வைக்கையில், அதை கவனித்த எம்ஜிஆர் உடனே எழுந்து அந்த காபியை எடுத்து டீக்கடையில் ஆற்றுவது போல ஆற்றி பக்குவமாக ஏபி நாகராஜனிடம் தந்தார்.

சிவாஜிகணேசனுக்கு மவுண்ட் ரோடில் நடந்த ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் எம்ஜிஆர் ஒரு இடத்தில் நிற்காமல் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க பணிகள் செய்து கொண்டிருந்தார். ஏனெனில் அப்போது எம்ஜிஆர் தான் நடிகர் சங்கத்தலைவர். எல்லோருக்கும் குளிர்பானங்கள் கொடுக்கவேண்டியிருந்ததால், எம்ஜிஆரே ஒவ்வொரு பாட்டிலாக ஓபன் பண்ணி ஒரு பணியாளர் போல பானங்களை வழங்கிக்கொண்டிருந்தார். எம்ஜிஆரின் இந்த குணம் எல்லோரையும் கவர்ந்தது.

பொதுவாக நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர்களின் கார் டிரைவர்களுக்கு படக்கம்பெனியிலிருந்து பேட்டா பணம் தரப்படும்.
ஆனால் நம்ம வாத்தியார் தனது டிரைவர்களிடம் படக்கம்பெனியிலிருந்து தரும் பேட்டா பணத்தை வாங்கவேண்டாமென சொல்வதுடன் அந்தப் பணத்தைத் தானே அவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.

தனது இல்லத்திருமண நிகழ்ச்சிகளில், யாரும் சாப்பிடாமல் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக வெளியே நின்று கொள்வார். ஒவ்வொருவரையும் சாப்பிட்டபின் தான் வெளியே செல்ல அனுமதிப்பார்.

அரசியல் சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சமயங்களில், தனக்கு எந்த ஊரில் சாப்பாடு தரப்பட இருக்கிறது என்பதை அறிந்து குறிப்பிட்ட நேரத்தில் அந்த ஊருக்குச் செல்வதில் கவனமாக இருப்பார். அவருக்குப் பசியைத் தாங்கமுடியமென்றாலும், தன்னோடு வருபவர்களை உத்தேசித்து சரியான நேரத்தில் சாப்பிடச் சொல்வார்.

அதுபோல அங்கு மற்றவர்களைத் தான் முதலில் சாப்பிடச் செய்வார். ஏனெனில் தான் முதலில் சாப்பிட்டு எழுந்துவிட்டால், மற்றவர்கள் தனக்காக அரைகுறையாக சாப்பிட்டோ அல்லது நேரமின்மை காரணமாக அவர்கள் சாப்பிடாமலே வரநேரலாம் என்ற ஒரே காரணத்தினாலேயே முதலில் மற்றவர்களைச் சாப்பிடச் சொல்லிவிட்டு பின்னர் தான் அவர் சாப்பிடத் துவங்குவார்.

இது வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லாத குணம்.

கட்சிப் பாகுபாடின்றி
பல ஏழைத்தொண்டர்கள் இல்லத்திருமணங்களுக்கு பண உதவிகளும், பொருளுதவிகளும் செய்துள்ளார். குறிப்பாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், அக்கட்சித்தொண்டர்களுக்கு பாகுபாடின்றி எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறார்.

சாதாரணமாக வாத்தியார் கால் மேல் கால் போட்டு அமரமாட்டார். படப்பிடிப்பின் போது அலுப்பினால் தன்னையுமறியாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாலும், எதிரே ஒரு கடைநிலை ஊழியர் வந்தால் கூட உடனே காலை மடக்கி உட்கார்ந்துவிடுவார். அத்தகு பண்பு மிக்கவர் மக்கள்திலகம்...

இன்றைய தலைமுறையினர் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய பண்புகள் இவை............. Thanks wa.,

orodizli
3rd July 2019, 09:59 AM
இதயக்கனி இதய காவியங்கள் தொலைக்காட்சிகளில்............இன்று 3-7-2019 புதன் கிழமை ராஜ் டிஜிட்டல் பிளஸ் பணம் படைத்தவன், மதியம் 1.30 மணிக்கு மதியம் 1.30 க்கு வசந்த் டி.வி கலையரசி.
பகல் 12 மணிக்கு தாயின் மடியில்.
பகல் 1.30 க்கு புது யுகம் டி.வி. நல்ல நேரம்.

orodizli
3rd July 2019, 12:56 PM
இந்த படத்தில் முன்னாள் நாட்டின் முதல் பாரத பிரதமர் ஜவர்ஹலால் நேரு அவர்கள், தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜ், C.சுப்பிரமணி மற்றும் முன்னனி தலைவர்களுடன் 1962. ல் இந்திய திருநாட்டின் மீது சீனா படையெடுத்தது.
நேருஜி நாட்டுமக்களிடம் யுத்தநிதி வேண்டினார்.
மேலே உள்ள படத்தில் அன்று மலர்ந்த செந்தாமரை போன்று ஜொலிக்கும் நம் தலைவர் M.G.R அவர்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவிலே அதிக தொகையும், முதன் முதலில் ரூபாய் 75,000 நிதி கொடுப்பதாக அறிவித்து, முதல் தவணையாக ரூ.25000 அதற்கான காசோலையை சுற்றுபயணம் செய்ய எழும்பூர் ரயில் நிலைத்தில் இருந்த தமிழக முதல்வர் கர்ம வீரரிடம் ஒப்படைத்தார்.
நேரு அவர்கள் நம் தலைவர் M.G.R அவர்களுக்கு தன் கைபட எழுதிய கடிதத்தில் ராணுவவீரர்களுக்கு நாட்டிலே இவ்வளவு பெரிய தொகையை மற்றும் முதலில் கொடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த MGR
அவர்கள் பெரிய உள்ளம்படைத்தவர் என புகழ்ந்தார்.
நாட்டு பற்றுடைய நம் தலைவரை புகழ்ந்து எழுதியுள்ளார்.
அப்படிப்பட்ட தலைவனின் உலகம் முழுவதும் இருக்கும் எண்ணிலடங்காத தொண்டர்களில் நாமும் ஒருவராக மகிழ்வோம், தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே...........இந்த படத்தில் திருவாளர்கள் நேரு, காமராஜ், எம்.ஜி.ஆர்., சுப்ரமணியம் ஆகிய 4 "பாரத் ரத்னா" விருது பெற்ற புண்ணியவான்கள் ... இடம்பெற்ற அரிய புகைப்படம்... Thanks wa.,

orodizli
3rd July 2019, 07:17 PM
கடவுள், இறைவன், ஆண்டவன், தெய்வம், கோவில், என்ற சொல்லை தனது பாடல்களில் அதிகமான அளவில் புகுத்தி, தெய்வ உணர்வினை எளிதாக மக்கள் மனதில் வலியுறுத்தி, நிலை நிறுத்தி "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்" "வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்" என்று நிரூபித்து, மெய்ப்பித்து காட்டிய தலைவன் பொன்மன செம்மல், புரட்சி தலைவன், எங்க வீட்டு பிள்ளை, வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்.

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே.

கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்.

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா.

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை.

ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்.

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்.

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை.

உள்ளமென்றொரு கோவிலிலே
தெய்வம் கண்டேன்
அன்பே வா.

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்.

காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது.

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...
(ஆண்டவனே)

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
(ஆண்டவனே)

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு
இறைவா....இறைவா....இறைவா....

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.

தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை.

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

கருணை கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும்.

என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்

என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ.

காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க.

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்.

கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே........... Thanks wa.,

orodizli
3rd July 2019, 07:20 PM
முகராசி ..........
__________
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் எந்த
காரியத்தை செய்வதற்கும் தேதி
குறிப்பார் நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்துவிட்டதடியோ
கணக்கில் மீதி
வைக்கவில்லையடியோ

கவிஞர் கண்ணதாசன்

என் அனுபவம்
__________________
அறிவு மட்டும் சுயநலம்
கருணை மட்டும் அப்பாவித்தனம்
இவை இரண்டும் கலந்தது தான் முழு மனிதன் இவை மக்கள் திலகத்திடம்
மிகுந்து காணப்பட்டதால் தான்
மனிதநேயம் மிளிர்ந்தது !

ஹயாத் ! Thanks wa.,

fidowag
3rd July 2019, 08:25 PM
குமுதம் வார இதழ் -10/07/19
http://i68.tinypic.com/znkmms.jpg
http://i68.tinypic.com/2pyw4rm.jpg
http://i63.tinypic.com/2vn592v.jpg

fidowag
3rd July 2019, 08:26 PM
http://i66.tinypic.com/a2dffa.jpg

fidowag
3rd July 2019, 08:31 PM
சென்னை அகஸ்தியாவில் தொடர்ந்து 5 வது வாரமாக தர்மம் தலை காக்கும், காவல்காரன் , எங்க வீட்டு பிள்ளை , நினைத்ததை முடிப்பவன் படங்களை அடுத்து
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .

கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் வெளியாகி வெற்றிநடை போட்டது .மீண்டும்
இரண்டாவது முறையாக குறைந்த இடைவெளியில் வெளியாகியுள்ளது .
http://i63.tinypic.com/2v0efkj.jpg

fidowag
3rd July 2019, 08:33 PM
http://i65.tinypic.com/6sxjcx.jpg

fidowag
3rd July 2019, 09:14 PM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " வெளியாகிய நாள் : 27/06/1968
51 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
கதிரவன் என்கிற பெயரில் மருத்துவராக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஏழை எளியோர்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் உன்னத கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார் . ஜெயலலிதா வெகுளிப்பெண்ணாகவும் நடிகை ஷீலா மருத்துவராகவும் சிறப்பித்தனர் .
திரைக்கதை :வி.சி.குகநாதன் வசனம் : தென்னரசு, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் : சாணக்யா . ஜேயார் மூவிஸ் தயாரிப்பு . பாடல்கள் அனைத்தும் இனிமை .
1.நான்தாண்டி காத்தி 2. நெத்தியிலே போட்டு வைச்சேன்
3.விழியே விழியே . 4.சின்னவளை முகம் சிவந்தவளை (காதல் பாடல்கள் ) கேட்க கேட்க ,பார்க்க, பார்க்க சலிக்காதவை
5.நான் உங்கள் வீட்டு பிள்ளை -பூவை செங்குட்டுவன் எழுதிய பல பல்லவிகளில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான பாடல். தேர்தல் பிரச்சார காலங்களில்
அதிகம் பிரயோகப்படுத்தும் பாடல்களில் ஒன்று .ரசிகர்கள் /பக்தர்கள் கைபேசியில்
இந்த பாடலை காலர் ட்யூன் ஆக பெரும்பான்மையாக பயன்படுத்துகின்றனர் .
நாகேஷ் ரமாப்ரபா, ராமராவ் நகைச்சுவை கூடுதல் பலம் .
முதல் வெளியீட்டில் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும், மறுவெளியீடுகளில்
பகல் காட்சி மற்றும் ரெகுலர் காட்சிகளில் தொய்வில்லாமல் வெற்றிநடை போட்ட படம் .

http://i63.tinypic.com/vrx99e.jpg

fidowag
3rd July 2019, 09:15 PM
http://i64.tinypic.com/9fur9l.jpg
http://i64.tinypic.com/mrzqet.jpg

fidowag
3rd July 2019, 09:17 PM
http://i65.tinypic.com/2v30do2.jpg

fidowag
3rd July 2019, 09:18 PM
http://i67.tinypic.com/27y9yed.jpg
http://i65.tinypic.com/bgy0x5.jpg

fidowag
3rd July 2019, 09:21 PM
http://i66.tinypic.com/xcj31s.jpg
http://i65.tinypic.com/2a5kodz.jpg
நானும் என் அண்ணனுடன் முதல் நாள் மேட்னி காட்சிக்கு டிக்கட் கிடைக்காமல் மாலை காட்சி ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்து ரசித்த படம் .

fidowag
3rd July 2019, 09:24 PM
http://i67.tinypic.com/5xnznc.jpg

fidowag
3rd July 2019, 09:25 PM
http://i63.tinypic.com/250tvfm.jpg
http://i67.tinypic.com/23ts8xh.jpg

fidowag
3rd July 2019, 09:27 PM
http://i67.tinypic.com/vhaomf.jpg
http://i65.tinypic.com/ftq81w.jpg
http://i65.tinypic.com/2n6g3k6.jpg

fidowag
3rd July 2019, 09:29 PM
http://i66.tinypic.com/2s7b5ox.jpg
http://i68.tinypic.com/2wc3cx3.jpg

fidowag
3rd July 2019, 09:30 PM
http://i67.tinypic.com/jah1c4.jpg

oygateedat
3rd July 2019, 09:34 PM
நமது திரியைப்பற்றி சிறப்பாக செய்தி வெளியிட்ட இதயக்கனி ஆசிரியர் திரு எஸ் விஜயன் அவர்களுக்கு நமது மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ் ரவிச்சந்திரன்

https://i.postimg.cc/8C8JNBHP/1562173571655-Full-Size-Render.jpg (https://postimg.cc/pmZXBj4g)fallout fun facts (https://falloutfacts.com/)

fidowag
3rd July 2019, 09:35 PM
http://i68.tinypic.com/whgza.jpg
http://i67.tinypic.com/zydbiu.jpg

fidowag
3rd July 2019, 09:41 PM
http://i67.tinypic.com/33ti2vm.jpg
கடந்த வெள்ளி முதல் சென்னை ரெட் ஹில்ஸ் நடராஜாவில் (28/06/19)
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

fidowag
3rd July 2019, 09:55 PM
http://i64.tinypic.com/1675qpc.jpg

fidowag
3rd July 2019, 09:56 PM
http://i63.tinypic.com/332rnzt.jpg

fidowag
3rd July 2019, 09:59 PM
http://i67.tinypic.com/2cxatjr.jpg
http://i68.tinypic.com/9pypsg.jpg
http://i68.tinypic.com/2yubx9h.jpg

fidowag
3rd July 2019, 10:01 PM
http://i66.tinypic.com/i1wd1s.jpg
http://i65.tinypic.com/2i1m42e.jpg

fidowag
3rd July 2019, 10:02 PM
http://i67.tinypic.com/25u6s8g.jpg
http://i63.tinypic.com/xndkxc.jpg

fidowag
3rd July 2019, 10:05 PM
http://i64.tinypic.com/2lmpcuf.jpg
http://i63.tinypic.com/hrwrxc.jpg

fidowag
3rd July 2019, 10:06 PM
http://i63.tinypic.com/hrwrxc.jpg
http://i68.tinypic.com/2d1utz9.jpg

fidowag
3rd July 2019, 10:08 PM
http://i68.tinypic.com/68fq0x.jpg
http://i64.tinypic.com/r7jarp.jpg

fidowag
3rd July 2019, 10:10 PM
http://i66.tinypic.com/waseac.jpg
http://i68.tinypic.com/f5te1.jpg

fidowag
3rd July 2019, 10:12 PM
http://i68.tinypic.com/aewi1s.jpg
http://i63.tinypic.com/34i4rh4.jpg

fidowag
3rd July 2019, 10:13 PM
http://i63.tinypic.com/711tg8.jpg
http://i63.tinypic.com/kdmrz6.jpg

fidowag
3rd July 2019, 10:17 PM
http://i64.tinypic.com/2usjtzb.jpg
http://i68.tinypic.com/ve0qk0.jpg
http://i65.tinypic.com/295ai3m.jpg

fidowag
3rd July 2019, 10:24 PM
கன்னட எம்.ஜி.ஆர். ராஜ்குமார் மகன் திருமண நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
http://i67.tinypic.com/uo3ns.jpg

fidowag
3rd July 2019, 10:28 PM
http://i67.tinypic.com/2n35zr.jpg
http://i65.tinypic.com/o53iog.jpg

oygateedat
3rd July 2019, 10:33 PM
http://i63.tinypic.com/711tg8.jpg
http://i63.tinypic.com/kdmrz6.jpg
நண்பர்களின் கவனத்திற்கு

இந்தப்படங்கள் உட்பட பல படங்களும் மற்றும் குமுதம் பத்திரிக்கை வெளியிட்ட மேலே பதியப்பட்ட செய்திகளும் என்னால் முன்னரே நமது திரியில் பதியப்பட்டவை. ஆகவே மீள் பதிவுகளை தவிர்க்கவும்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்

fidowag
3rd July 2019, 10:35 PM
http://i65.tinypic.com/i3ax38.jpg
http://i65.tinypic.com/ejvng1.jpg

fidowag
3rd July 2019, 10:36 PM
http://i68.tinypic.com/1zg95py.jpg

fidowag
3rd July 2019, 10:37 PM
http://i65.tinypic.com/2j1mmad.jpg

fidowag
3rd July 2019, 10:38 PM
http://i63.tinypic.com/2j46mx0.jpg

orodizli
4th July 2019, 09:32 AM
இன்று 04-07-1977 to 04-07-2019......... திரைப்பட நடிகராக இருந்து... தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய பின் அரசாங்க கோப்புகளில் கையெழுத்து இட்ட பொன்னாள்...�� �� ��...

orodizli
4th July 2019, 09:51 AM
தலைவர் புதியகார் வாங்கி அதை பதிவு செய்ய 1975 ல் மேனேஜர் பத்மநாபன் மூலம் முயற்சித்தபோது 7 என்ற எண்ணில் கூட்டுத்தொகை வரவேண்டும் என கூறினாராம். மேனேஜரிடம் அதிகாரி, 4777 என்ற பேன்சி நம்பர் உள்ளது தலைவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என தெரிவித்தாராம். அந்த வகையில் இந்த நம்பர் 1975 லேயே பதிவுசெய்யப்பட்டது. தலைவரின் கார்கள் பற்றிய சிறப்பு பேட்டி ஒன்றை திரு.சைதையார் கொடுத்து உள்ளார். அதை நேற்றுதான் தலைவர் பெயரிலான முகநூல் ஒன்றில் பார்த்தேன்.அதை கண்டுபிடித்து இன்று மாலைக்குள் பதிவிடுகிறேன்........ Thanks mr.Samuevel...

orodizli
4th July 2019, 03:16 PM
#எதிரிகளுக்கு #நெற்றிப்பொட்டில் #அடித்த #புரட்சித்தலைவரின் #அபாரமான #விளக்கம்...

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள் - : 1973 மே 21 ம் தேதி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவு...

தொகுதி முழுவதும் பரபரப்பு. ஆண்களை விடப் பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பதைக் கண்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது...

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியலில் #எம்ஜிஆர் #ஒரு #மாபெரும் #சக்தியாக உருவெடுக்கிறார் என்று எல்லா பத்திரிகைகளும் எழுதின...

வழக்கம் போல கருணாநிதி இது கவர்ச்சி அரசியல் என்று பிதற்ற ஆரம்பித்தார்...காமராஜர் கூட புரட்சித்தலைவரைக் கடுமையாக விமர்சித்தார்.

அதற்கு மக்கள் திலகம் அளித்த அற்புதமான பதில் தான் #இப்பதிவின் #ஹைலைட்...

ஒரு கொள்கையின் மீது பற்று ஏற்படுவதற்கு கவர்ச்சி எனலாம். தனிமனிதனின் செயலாற்றல் அல்லது தொண்டின் மீது வைக்கின்ற நம்பிக்கைக்கும் கவர்ச்சி எனக் கூறலாம். அதாவது கவர்ச்சி என்பது "ஈர்க்கும் சக்தி" என்று தான் பொருள்படும். அந்த ஈர்க்கும் சக்தி அழகின் மீதோ, ஒரு உருவத்தின் மீதோ மட்டும் தான் ஏற்படும் என்பது தரம் குறைந்த வாதமாகும்.

மகாத்மாவின் அகிம்சை வழிப்போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொண்டது அவரின் தன்னலமற்ற தியாகசீலத்தின் ஈர்ப்புசக்தி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

மூதறிஞர் ராஜாஜியின் ஆழமிக்க கருத்துக்கள், மனதிற்குப்பட்டதை நியாயமான வாதத்தோடு எடுத்துவைக்கும் ஆற்றல், படித்தவர்களையும், ஏன் பாமரமக்களையும் அவர்பால் ஈர்த்தன என்றால் அந்த கவர்ச்சியை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...

அண்ணாவின் தத்துவங்களும், பாச உணர்வும், எழுத்தும், பேச்சும் அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்தன. அந்த ஈர்ப்புசக்தி அவரின் கொள்கைகளை செயல்படுத்தப் பாடுபடும் அதிமுகவிற்கும் உண்டு. இதை ஒப்புக்கொள்ளத் துணிவில்லாதவர்கள் "கவர்ச்சி" என்னும் வார்த்தைக்கு தரக்குறைவான பொருள் கொடுக்கிறார்கள்...

தங்களுடைய பலவீனத்தையும், மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அவர்களின் பரிதாப நிலையையும் உலகத்தின் முன் மறைத்துக்கொள்ள 'கவர்ச்சி' எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

மக்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இயலாதபோது ஆத்திர உணர்ச்சியால் தங்கள் தகுதியையும் மறந்து சொல்லும் வேதனைச்சொல் தான் "கவர்ச்சி" என்ற சொல்லாகும்...

இப்படி #நெற்றிப்பொட்டில் #அடித்தார்போல அதே சமயம் நேர்மையான நியாயமான முறையில் #புரட்சித்தலைவர் #அளித்த #விளக்கம் அனைவரையும் அவர் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது... நன்றி முகநூலில் பாலு சார்............ Thanks wa.,

orodizli
4th July 2019, 03:20 PM
04.07.1977

நாளை நமதே .

04.07.1975ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 125 வது காவியம் ''நாளை நமதே ''

எம்ஜிஆரின் தாரக மந்திரம் ''நாளை நமதே ''

1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 30.6.1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று 4.7.1977 ல் தமிழக முதல்வராக கோட்டைக்குள் சென்ற இனிய திருநாள் தினம் இன்று .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்

1950 களில் மக்கள் திலகம் பல படஙக்ளில் இளவரசனாகவும் , படைத்தளபதியாகவும் , போர் வீரராகவும் மன்னராகவும் நடித்து புகழ் பெற்று வந்த நேரத்தில் திமுகவில் இணைந்து அக் கட்சியின் கொள்கைகளை தான் நடித்த எல்லா படங்களிலும் பாடல்கள் மூலமும் காட்சிகள் மூலமும் இடம் பெற செய்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்றார் . லட்சக்கணக்கான ரசிகர்கள் திமுக உறுப்பினர்களாகவும் , கோடானுகோடி அனுதாபிகளாகவும், மாறி எம்ஜிஆரின் செல்வாக்கை உயர்த்தினார்கள் ...........

அறிஞர் அண்ணா அவர்கள் எம்ஜிஆரின் ஆளுமையை நன்கு உணர்ந்திருந்தார் .எம்ஜிஆரின் செல்வாக்கை பெற்று 1967ல் திமுக ஆட்சி அமைந்திட எம்ஜிஆரின் உழைப்பு மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களின் ஈடில்லா பிரச்சாரம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது .

1972ல் எம்ஜிஆரின் சினிமா & அரசியல் புகழ் உச்சத்தில் இருந்தது .கருணாநிதியின் பேராசை காரணமாக எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் .
லட்சக்கனக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் அவர் பின்னால் அணிவகுத்து நின்றனர் . அண்ணா திமுக உதயம் .. புரட்சிநடிகர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் .அதிமுக நிறுவனர் ஆனார் .

1947-1977
30 ஆண்டுகள் இந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர் எம்ஜிஆர் . வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் .
1977-2019 எம்ஜிஆரின் பழைய படங்கள் 42 ஆண்டுகளாக பல்வேறு வெளியீடுகளில் பல திரை அரங்குகளில் தென்னகமெங்கும் வசூலை வரிக்குவித்து சாதனைகள் படைத்தன .சாதனைகள் தொடர்கிறது .... சாதனைகள் தொடரும்

உலகில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கிடைத்துள்ளது .

எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவை தமிழக முதல்வராக்கி அழகு பார்த்தார் .
எம்ஜிஆரை நம்பி இருந்த கருணாநிதியை தமிழக முதல்வராக்கி அழகு பார்த்தார் .

எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் என்று தப்பு கணக்கு போட்டவர்கள் எண்ணத்தில் இடி விழுந்தது .

திருமதி ஜானகி எம்ஜிஆர்
செல்வி ஜெயலலிதா
திரு ஓ.பன்னீர்செல்வம்
திரு .பழனிசாமி

4 முதல்வர்களை அதிமுக இயக்கம் கண்டுள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் , செல்வாக்கு , இரட்டை இலை சின்னம் கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலைத்து விட்டது . விரைவில் அதிமுக இயக்கத்தின் பொன்விழா ஆண்டு [ 1972- 2022] நம்மை எல்லாம் வரவேற்க இருப்பதை எண்ணி மகிழ்கிறோம் .

இந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் நிரந்தரமாக நிலைத்து விட்டது
மக்கள் திலகம் எம்.ஜி ஆர்., ரசிகர்கள் பல தலை முறைகள் தாண்டியும் இன்னமும் உயிர்ப்புடன் எம். ஜி . ஆரை நினைத்து வாழ்ந்து வருவது உலகில் எங்குமே நடக்காத அதிசயம் .........👌 👍 💐 ........... Thanks wa.,

orodizli
4th July 2019, 03:22 PM
04.07.1977 அன்று நம் தலைவர் மன்னாதி மன்னன் இதயதெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் *எம்ஜிஆர்* அவர்கள் தமிழ்நாடு *முதலமைச்சர்* சிம்மாசனத்தில் அமர்ந்து *முதல் கையெழுத்து இட்ட நாள்*
அதன் ஞாபகமாகத்தான் தன் காரின் *எண் 4777* என்று வாங்கினார்.......... Thanks wa.,

fidowag
4th July 2019, 05:12 PM
நாளை முதல் (05/07/19) வட சென்னை அகஸ்தியாவில் வேங்கையன் வெற்றி விஜயம் . தொடர்ந்து 5 வது வாரமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் வசூலில் சமீபத்தில் வெளியான புதிய படங்களின் வசூலை முறியடித்து சாதனை
வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் அகஸ்தியாவில் புதிய படங்களை வசூலில் மிஞ்சவோ, அதற்கு இணையாகவோ சமீபத்தில் சாதித்த வரலாறில்லை
என்பதை நிரூபிக்கும் வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் தொடர்வெற்றியை பதிவு செய்து வருகின்றன .
http://i63.tinypic.com/346t8yg.jpg

fidowag
4th July 2019, 05:14 PM
http://i66.tinypic.com/21ernd5.jpg

fidowag
4th July 2019, 05:15 PM
http://i67.tinypic.com/rhir8z.jpg

fidowag
4th July 2019, 05:16 PM
http://i67.tinypic.com/308hdma.jpg

fidowag
4th July 2019, 05:26 PM
நேற்று (03/07/19) வெவ்வேறு தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திரை காவியங்கள் ஒளிபரப்பாகிய செய்தி
http://i66.tinypic.com/mh381w.jpg

fidowag
4th July 2019, 10:51 PM
தாராபுரம் வசந்தாவில் நாளை முதல் (05/07/19) வீராங்கன்/மார்த்தாண்டன் வெற்றி விஜயம் .புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து , இயக்கிய "நாடோடி மன்னன் ". தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/11qp951.jpg

fidowag
4th July 2019, 10:52 PM
http://i63.tinypic.com/xav38y.jpg

fidowag
4th July 2019, 10:53 PM
http://i64.tinypic.com/2a5d7gp.jpg
http://i66.tinypic.com/ajlzsj.jpg

fidowag
4th July 2019, 10:55 PM
http://i63.tinypic.com/2nia1pi.jpg

fidowag
4th July 2019, 10:55 PM
http://i64.tinypic.com/33v2csh.jpg

fidowag
4th July 2019, 10:58 PM
http://i65.tinypic.com/2laelwj.jpg

fidowag
4th July 2019, 11:01 PM
நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
http://i68.tinypic.com/2u6dwqu.jpg

fidowag
4th July 2019, 11:03 PM
http://i67.tinypic.com/seoc1x.jpg

orodizli
5th July 2019, 06:46 AM
மறு வெளியீடு காவியங்களின் வெற்றி வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "நாடோடி மன்னன்" , "அடிமைப்பெண்", மீண்டும் வலம் வருவது மிக்க மகிழ்ச்சி நம் பக்தர்களுக்கு......... என்றும் வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்.........

orodizli
5th July 2019, 12:15 PM
நமது தங்க தலைவரின் ஒரு சிறிய தொகுப்பு உங்கள் பார்வைக்கு.....

1917. தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் பிறந்தார்
1920ம் ஆண்டில் தந்தை மருதூர் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
1940–ல் தனது 23 வயதில், தன்னைக் காட்டிலும் 5 வயது குறைவான 18 வயது தங்கமணியை அவர் பிறந்த பூர்வீக ‘தெக்கின்கூட்டில்’ இல்லத்திலேயே வைத்து திருமணம் புரிந்து கொண்டார்.
1941ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு "அசோக்குமார்" படத்தின் மூலமாக கிடைத்தது.
1942. எம் ஜி ஆரின் முதல் மனைவி தங்கமணி இறப்பு &
எம்.ஜி.ஆர். சதானந்தவதி திருமணம் 1942ம் ஆண்டு ஆனி மாதம் 16ந்தேதி நடந்தது.
1946ல் பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.
1947 முதல் கதாநாயகன் வேடம் : ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1952. எம் ஜி யாருக்கு மிகவும் பிடித்த படமான "என் தங்கை" வெளியானது.
1956. எம் ஜி ஆர் பிக்சர்ஸ் துவக்கம்
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
1958 தனது முதல் தயாரிப்பான "நாடோடி மன்னன்" திரைப்படம் வெளியானது
1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.
1959. சீர்காழியில் "இன்பகனவு" நாடகத்தில் கால் முறிவு
1961. 50-வது படமான " நல்லவன் வாழ்வான் வெளியானது
1962. எம் ஜி ஆரின் இரண்டாவது மனைவி சதாந்தவதி மரணம் மற்றும் எம் ஜி ஆர் ஜானகி அம்மாள் திருமணம் ,
சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
1962 யுத்த நிதி அளித்தற்க்கு பிரதமரே கைபட எம் ஜி ஆருக்கு நன்றி கடிதம் எழுதினார்
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1965இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
1966. "சமநீதி" பத்திரிகையின் பொறுப்பாசிரியர்.
1966 * அன்பே வா **- தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967 சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1967 எம் ஜி ஆர் எம் ஆர் ராதா அவர்களால் சுடப்பட்டார்.
1968. எம் ஜி ஆரின் 100-வது படமான "ஒளி விளக்கு" வெளிவந்தது
1971 . இந்தியாவின் சிறந்த நடிகர் எம் ஜி ஆருக்கு "பாரத்" விருது நல்கியது மத்திய அரசு
1969. எம் ஜி ஆரின் சொந்த தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவந்த படம் "அடிமைப் பெண்"
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்*. -
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை துவங்கினார்.
@ சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
1973. எம் ஜி ஆரின் மூன்றாவது சொந்த தயாரிப்பில் வெளிவந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியானது
1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
1974. கெளரவ டாக்டர் பட்டம் -
புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார்.
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்
1977. தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்றார்
1978. எம் ஜி ஆர் நடித்த கடைசி படம் " மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வெளிவந்தது.
1978 தேவரின் இல்லம் அமைந்திருந்த கோவை இராமநாதபுரத்திலிருந்து ந*ஞ்சுண்டாபுரம் ம*யானம் வ*ரை 3 கிலோ மீட்ட*ர் ந*ட*ந்தே வ*ந்து தேவ*ரின் இறுதி ஊர்வ*ல*த்தில் க*ல*ந்துகொண்டார். அனைத்து திரை ந*ட்ச*த்திர*ங்க*ளும் ந*ட*ந்தே சென்ற*ன*ர்.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
தமிழக முதல்வராக இரண்டாம் முறையாக பதவி வகித்தார்.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982. சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது
1984. தலைவர் உடல் நிலை பாதிப்பு -
அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை.
1985 தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் , -
எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவினை தனது இயக்கம், கட்சிக்காரர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து பெற்று தமிழக அரசிடம், அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-85 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்
1986. மதுரையில் வெள்ளி செங்கோல் பரிசளிக்கபட்டது
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார். -
1987 தமிழக முதல்வராக இருந்த போது மரணம் அடைந்தார்
1988. "பாரத் ரத்னா", விருது
1990. இந்திய தபால் துறை எம் ஜி ஆர் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
1996. ஜானகி ராமச்சந்திரன் மறைவு

வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்..

இது ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே..
விடுபட்ட செய்திகளை தெரியப்படுத்தவும்....

நன்றி.....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........... Thanks wa.,

orodizli
5th July 2019, 12:17 PM
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு மக்கள் திலகம்எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது.

மாலை அணிவிப்பதற்காக வந்தமக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படிமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.......... Thanks wa.,