PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

orodizli
5th July 2019, 08:06 PM
தலைவன் இருக்கிறான் ..........

மேலாதிக்க காங்கிரஸை தூக்கி வீசிய போது உணர்ந்தோம் எம் .ஜி .ஆர் ., தலைவனாக இருக்கிறார் என்று ...
திராவிட தலைவன் அண்ணாவை அரியணை ஏற்றிய போது உணர்ந்தோம் தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் என்று

தான் பதவியில் அமர்த்திய கருணாநிதி மக்களை மறந்து தன் மக்களுக்காக ஊழல்வாதி ஆனபோது எதிர்த்து வீழ்த்திய போது உணர்ந்தோம் தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் என்று

தானே ஆட்சியில் அமர்ந்து ஒரு பொற்க்கால ஆட்சி தந்த போது உணர்ந்தோம் தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் பொர்க்கால ஆட்சி எம் ஜி ஆர் ஆட்சி என உணர்ந்தோம் ..........

தான் கடவுள் ஆனபின் தன்னால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஊழல் ஆட்சி செய்த போது முதல் குற்றவாளி பட்டம் கொடுத்து கடும் தண்டனையும் கொடுத்த போது உணர்ந்தோம் ... கடவுளாய் தலைவராய் எம் ஜி ஆர் இருக்கிறார் எனபதை உணர்ந்தோம் ...

ஒரு தவறு தெரிந்து செய்தால் அவர் தேவன் என்றாலும் தண்டிக்க தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் என்ற உணர்வில் வாழ்கிறோம் நாங்கள் ...

வாழ்க எம் ஜி ஆர் புகழ்... Thanks...

fidowag
5th July 2019, 09:19 PM
புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பில் வித்தியாசமாக அசத்திய "நாளை நமதே " வெளியான நாள் :04/07/1975.
44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

இந்தியில் வெளியான யாதோன் கி பாராத் ;படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் .
சென்னை ஸ்டார் அரங்கில் 52 வாரங்கள் ஓடிய படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம். நாளை நமதே. படத்தயாரிப்பின்போதே மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இந்தி பாடல்களுக்கு இணையாக தமிழ் பாடல்கள் ஒப்பிடக்கூடாது ,யாருடைய தலையீடும் இசை அமைப்பில் இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன் இசை அமைத்து , தன் திறமையால்
பாடல்கள் நன்கு அமையும்படி செய்தார்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் பாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்தார். என் வழி தனி வழி போன்ற பஞ்ச் வசனங்கள் அதிகம் இருந்தன .இதையே பின்னாளில் நடிகர் ரஜினிகாந்த் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார் .
ராஜஸ்ரீ மக்கள் திலகத்திற்கு , (சிறு வயதில் ) தாயாக நடித்தார் . நடிகர் சந்திரமோகன் மக்கள் திலகத்திற்கு தம்பியாக நடித்தார் நடிகர் கமலஹாசன் நடிக்க ஒரு மாதம் வாய்ப்பு அளித்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் சமீபத்தில் மீடியாவில் நடிக்காமல் போனதற்கு இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார் .நடிகைகள் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வில்லன் எம்.என்.நம்பியார், கே.கண்ணன், கோபாலகிருஷ்ணன் ,
நாகேஷ்,வி.எஸ். ராகவன், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோர் அளித்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் . இயக்குனர் சேதுமாதவன் திறம்பட இயக்கினார் ,கிளைமாக்ஸ் காட்சிகளில் அமைந்த அரசியல் நெடி கொண்ட வசனங்கள் பெரிதும் வரவேற்கப்பட்டு கைதட்டல்கள் பெற்றன அனைத்து அம்சங்கள் பொருந்தியும், இந்தி படம் அளவிற்கு இல்லை என்று ஒரு கூட்டம் நெகட்டிவாக செய்திகள் பரப்பியதன் காரணமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை . ஆனால் வசூலில் சோடை போகவில்லை .50நாள் நிறைவு செய்யும் வேளையில் இதயக்கனி வெளியானதும் படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருந்தது .ஆனால் இலங்கையில் 100நாள் கடந்து மிக சிறப்பாக ஓடி ,
நல்ல ஆதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது .ஓடியன், பாண்டியனில் 63 நாட்களும் முரளிகிருஷ்ணாவில் 50 நாட்களும், ராஜகுமாரியில் 42 நாட்களும் ஓடியது .
முதல் நாள் ரசிகர்களுடன் ஓடியன் அரங்கில் மேட்னி காட்சியும், இரண்டாவது வாரம் பாண்டியனிலும் , மூன்றாவது வாரம் முரளிகிருஷ்ணாவிலும் பார்த்து ரசித்தது மறக்க முடியாதது .மறு வெளியீடுகளில் பல நகரங்களில் அவ்வப்போது வெளியாகி வெற்றிநடை போடுகிறது .
பாடல்கள் : 1.நாளை நமதே (சிறு வயதில் சகோதரர்களுடன், தாயுடன் பாடுவது )

2.நீல நயனங்களில் (காதல் பாடல் )
3.என்னை விட்டால் ( காதல் பாடல் )
4.லவ்விங் இஸ் தி கேம் (கிளப் பாடல் )
5.காதல் என்பது காவியமானால் ( காதல் பாடல் )
6.நான் ஒரு மேடை பாடகன் ( மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அருமையாக நடனம் ஆடி பாடியிருப்பார் )
7. நாளை நமதே ( சகோதரர்கள் மீண்டும் இணைவதற்கு உறுதுணையாக அமைந்த உணர்ச்சிமிக்க பாடல் )

fidowag
5th July 2019, 09:57 PM
http://i65.tinypic.com/25a56wz.jpg

fidowag
5th July 2019, 10:02 PM
http://i65.tinypic.com/c5h0w.jpg
http://i68.tinypic.com/2r5qce9.jpg
http://i63.tinypic.com/1601kr9.jpg

fidowag
5th July 2019, 10:04 PM
http://i66.tinypic.com/2nbbxw9.jpg

http://i64.tinypic.com/15e8spu.jpg

http://i68.tinypic.com/33ayoap.jpg

fidowag
5th July 2019, 10:07 PM
http://i64.tinypic.com/2wfntoi.jpg
http://i65.tinypic.com/n3x282.jpg
http://i64.tinypic.com/2vsrwgw.jpg

fidowag
5th July 2019, 10:09 PM
http://i66.tinypic.com/ftint0.jpg
http://i63.tinypic.com/2iijx3m.jpg
http://i65.tinypic.com/29nj605.jpg

fidowag
5th July 2019, 11:22 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஆனந்த ஜோதி " வெளியான நாள் 28/06/1963
56 ஆண்டுகள் நிறைவு பெற்றது . நடிகை தேவிகா புரட்சி நடிகருடன் நடித்த ஒரே படம். வில்லன் நடிகர் பி.எஸ்.,வீரப்பா தயாரித்தது .கதை வசனம் ஜாவர் சீதாராமன் .பாடல்கள் :கவிஞர் கண்ணதாசன், இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
இயக்கம் : வி.என்.ரெட்டி,மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி

நல்ல துப்பறியும் திரைக்கதை. கமலஹாசன் சிறுவனாக பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருடன் இணைந்த ஒரே படம் .கமலுக்கு ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராகவும்,தேவிகாவுக்கு கவி மணியரசராகவும் சில காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார் .சிறுவர்களுக்கு அறிவுரை கூறும் காட்சி
அபாரம் . நாட்டுப்பற்று, தேசியப்பற்று உணர்த்தும் காட்சிகளில் கூட நடிப்பு திறனை மக்கள் திலகம் வெளிப்படுத்தி இருந்தார் எப்போதும் வில்லனாக நடிக்கும் நடிகவேள் எம்.ஆர்.ராதா மனோரமாவுடன் ஜோடி சேர்ந்து நகைச்சுவையில் கலக்கியதுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு துப்பு துலங்குவதில் உதவியாக இருப்பார் .வில்லன் அசோகன், ராமதாஸ், எஸ்.வி.சகஸ்ரநாமம் ,ஜாவர் சீதாராமன்
ஆகியோர் பங்களிப்பு நன்றாக இருந்தது .பாடல்கள் மிகவும் இனிமை. டைட்டில் இசை அருமை. ஒருதாய் மக்கள் பாடல் ஒலித்தபடி இருக்கும் . படம் முழுவதும்
பின்னணி இசை நன்றாக இருந்தது . துப்பறியும் காட்சிகளில் ஆங்கில படத்திற்கு இணையான இசையமைப்பு . முதல் வெளியீட்டில் பார்க்க இயலவில்லை. 1972க்கு பின் தலைவர் கட்சி ஆரம்பித்த பின்னர் பார்த்தேன் .பலமுறை பல அரங்குகளில் பார்த்திருந்தாலும் ஒரு முறை உட்லண்ட்ஸ் அரங்கில் பகல் காட்சி (புதிய காப்பி )பார்த்து ரசித்தது சுவையான நிகழ்ச்சி .

பாடல்கள் : ஒரு தாய் மக்கள் நாமென்போம் (சமூக நல பாடல் )
2. நினைக்க தெரிந்த மனமே (சோகமான தத்துவ பாடல் )
3. பலப்பல ரகமா இருக்குது பூட்டு
4.கடவுள் இருக்கின்றார் (தத்துவ /போதனை பாடல் )
5.காலமகள் கண்திறப்பாள் சின்னையா
6.பொய்யிலே பிறந்து (காதல் பாடல் )
7.பனி இல்லாத மார்கழியா ( காதல் பாடல் )

1963ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து 9 படங்கள் வெளியாகின .பெரிய இடத்து பெண் வெளியாகி 50 வது நாளில் ஆனந்த ஜோதி வெளியாகியது .ஆனந்த ஜோதி 50நாட்கள் ஆனதும் நீதிக்கு பின் பாசம் வெளியானது .அடுத்து காஞ்சி தலைவன், பரிசு ஆகிய படங்கள் வருகையால் வெற்றி ஓட்டம் தடைபட்டது .
இருப்பினும், பாரகன், முருகன்,மேகலா அரங்குகளில் 50 நாட்கள் கடந்து ஓடியது .மறு வெளியீடுகளில் பல அரங்குகளில் திரையிடுவதை காண முடிகிறது .
http://i64.tinypic.com/s4udt5.jpg

fidowag
5th July 2019, 11:26 PM
http://i67.tinypic.com/25p4f21.jpg
http://i67.tinypic.com/4vh28h.jpg
http://i67.tinypic.com/a3hxt5.jpg

fidowag
5th July 2019, 11:30 PM
http://i65.tinypic.com/294jtkp.jpg
http://i65.tinypic.com/332w8p4.jpg
http://i63.tinypic.com/30a49zk.jpg

fidowag
5th July 2019, 11:30 PM
http://i66.tinypic.com/o69swm.jpg

orodizli
6th July 2019, 09:30 AM
ஆண்டவன் தமிழ் நாட்டை ஆண்ட காலம் அது எம் ஜி ஆர் ஆட்சி
நாட்டுக்கு மட்டுமா
தனி நபர் கூறியது கேளுங்கள்

எங்கள் குடும்பத்தை தற்கொலையில் இருந்து மீட்டவர் எம் ஜி ஆர் முரசொலி மாறன் கருணாநிதி குடும்பம்

கடும் சொற்கணையால் நான் தாக்கினேன் எம் ஜி ஆரை ஆனால் அவர் அன்பு எனும் பாணத்தால் என்னை வீழ்த்திய ராமசந்திர மூர்த்தி எம் ஜி ஆர் கண்ணதாசன் கூறியது

விறகாய் இருந்த என்னை வீணையாய் மாற்றியவர் எம் ஜி ஆர் கவிஞர் வாலி

என் உயிர் எம் ஜி ஆர் இட்ட பிச்சை வெண்ணிற ஆடை நிர்மலா

என் மனைவி என் உடமை எல்லாம் கிடைத்தது எம் ஜி ஆராலே நடிகர் ரஜினி காந்து

நான் இயக்குனர் ஆனது பிலிம் கல்லூரியில் படித்தது எம் ஜி ஆராலே தங்கர்பச்சன்

எங்கள் குடும்பம் வாழ்வதே எம் ஜி ஆராலே அவர் நினைத்திருந்தால் விலாசம் இல்லாமல் செய்து இருக்கலாம் எம் ஆர் ராதிகா கூறியது

என் குரு என் கட்சி பெயர் தெலுங்கு தேசம் என வைத்தவரே எம் . ஜி .ஆர் .,என் வெற்றி அண்ணன் எம் ஜி ஆர் வழியிலே என் டி ராமராவ் கூறியது

என் குரு நான் இவ்வளவு மதிப்போடு வாழ்வது
எம் ஜி ஆராலே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறியது

நான் பிரபலமானது எனக்கு வாழ்வு தந்தது எம் ஜி ஆர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் கூறியது

இதுபோல் ஆயிரகணக்கான பிரபலங்கள் சமானியர்கள் வாழ்வை மலர வைத்த ஆண்டவன் எம் ஜி ஆர்
மனிதனாக பிறந்து இறைவன் ஆன அற்புத பிறவி எம் ஜி ஆர்

வாழ்க எம். ஜி ஆர் .,புகழ்........... Thanks Sudharsan ..

orodizli
6th July 2019, 09:32 AM
புரட்சித்தலைவர் நடிப்பதாக இருந்த "கொடுத்து சிவந்த கை" பற்றி திரு. கலைஞானம்.

இதில் முக்கியமானது திருமதி கே.ஆர்.விஜயா தலைவரை "சேட்டா" அதாவது நம்ம தலைவரை திருமதி கே.ஆர் விஜயா "அண்ணன்" என்று தான் நினைத்தார்!!!! இப்படி திருமதி. சரோஜாதேவி சொன்னதற்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது!

இதை நான் எதற்கு சொல்லுகிறேன் என்பது அனைவர்க்கும் தெரியும்!!! இதுதான் உண்மை.������ .......... Thanks to mr. Sailesh basu...

orodizli
6th July 2019, 09:38 AM
நமது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் அட்டகாசமான காவியங்களில் ஒன்று... "குடியிருந்த கோயில்" சினிமாஸ்கோப் பாலியஸ்டர் ப்ரிண்டில் சென்னை - அஹஸ்திய 70 mm., திரையரங்கில் வெளி வருவதாக நண்பர் தகவல்..........

orodizli
6th July 2019, 11:01 PM
நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர்.

வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர்.

இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார்.

அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார்.

அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின.

அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே.

இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!......... Thanks...

orodizli
6th July 2019, 11:02 PM
நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர்.

வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர்.

இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார்.

அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார்.

அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின.

அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே.

இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!......... Thanks...

orodizli
6th July 2019, 11:04 PM
ஒரு தலைவரை தொண்டர்கள் கொண்டாடலாம்
தனக்கு பிடித்த நடிகரை
அவரது ரசிகர்கள் கொண்டாடலாம்
ஆனால் எல்லோரது
மதிப்பையும் மரியாதையும்
ஒருவருக்கு தானே தேடி வந்தது
நம்
புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டுமே
என்ற பெருமிதத்துடன்
இந்த பதிவு
படித்து பாருங்கள்

#திருமதி.#சீதாலட்சுமி எழுதிய "வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள்" கட்டுரையிலிருந்து...

எல்லாத் திட்டங்களையும் விட இந்தியாவே ஏன் உலகமே புகழும் ஓர் திட்டம் என்று ஒன்று என்றால் அது திரு. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டமாகும். குழந்தைகளின் பசி தீர்க்க வந்த திட்டம். எல்லா கிராமங்களிலும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் குழந்தைகள் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தைப் பிரித்து தனித் துறையாக ஆக்கும் முயற்சி நடந்தது. ஆனால் நான் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது பற்றிக் கூறியவுடன்... “#தாயையும் #சேயையும் #பிரிக்க #மாட்டேன்” என்று கூறி தடுத்துவிட்டார்.

எம்ஜிஆர் சினிமா உலகில் ஓர் நிர்வாகியாய் வலம் வந்தவர். அவருடைய ரசிகர்கள் தான் அவரது கட்சித் தொண்டர்கள். முதல்வரான பிறகு மற்றவர் மனம் புண்பட குத்தலாக அவர் என்றுமே பேசிய தில்லை. யாருடைய நம்பிக்கைகளையும் விமர்சிக்கவில்லை. அண்ணா அவர்கள் அறிஞர். படித்தவர். ஓர் இயக்கத்தில் இருந்து போராடி வந்தவர். அவர் சீக்கிரம் மறைந்தது ஒரு குறை.

ஆனாலும் "எம்ஜிஆர் அவர்கள் இது கட்சி கொள்கை என்று சாதீய உணர்வுகளை எழுப்பவில்லை..." எல்லோரும் அவரை விரும்பினார்கள்.

அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் விரும்பினாகள். அவர் உடல் நலம் பாதிக்கப்படவும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது உலகறிந்த உண்மை.

சில கொள்கைகளுக்காக இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் ஓர் பொறுப்பில் வந்தவுடன் அங்கே துலாக்கோலைப் போல எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்க வேண்டும். பிரிவினைகளை வளர்க்கக் கூடாது. காழ்ப்பு உணர்ச்சியைத் தூண்டக் கூடாது. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எல்லோரையும் அரவணைத்தார்...

எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் மிக நல்ல மனிதர். மிகச்சிறந்த மனிதநேயர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். #ஆனால் #நானே #என்னை #மறந்து #ஒருவரை #வணங்கினேன் #என்றால் #அது #எம்ஜிஆர் #அவர்களைத் #தான்.

பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி இருந்தார்கள்.

இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். #அந்த #தெய்வீகமுகமும் #குரலும் #என்னை #அவரை #வணங்கவைத்தது. #தாய்க்குலத்தை #மதிக்கும் #அவர் #குரலில் #அன்று #தாய்மைப்பரிவை #உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டியதில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்.

#மனிதநேயம் #உள்ளவர்கள்தான் #மனிதம் #காப்பாற்றுகின்றார்கள்.
நன்றி சீதாலெட்சுமி மேடம்
அன்புடன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����... Thanks...

fidowag
6th July 2019, 11:21 PM
கல்கி வார இதழ் -14/07/19
http://i65.tinypic.com/hx4tp3.jpg

fidowag
6th July 2019, 11:29 PM
மக்கள் குரல் -06/07/19
http://i65.tinypic.com/am5xmr.jpg

orodizli
7th July 2019, 12:15 PM
நமது தங்கமுகம். ...........தானை தலைவர்.
மக்கள்திலகம். வாழும் தெய்வம் புரட்சி தலைவரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் வழிப்பட்டு கொண்டும் தெரிந்தவழியில் புகழ் பாடியும் வருகிறோம். ஆனால் கோபிசெட்டிபாளையம் ஆசிரியர்(மாணவர்களின் வாத்தியார்)- சாமுவேல் புரட்சி தலைவரை ஆசானாக ஏற்றுக்கொண்டு (வாத்தியார் மாணவன்) என்ற அடைமொழியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் இதுவரை எவரும் செய்யாத ஓவியவடிவில் வரைவது மட்டும் அல்லாது அதற்கு ஒரு தலைப்பும் கொடுத்து நண்பர்கள் வட்டத்தையும் பெருக்கி தலைவர் புகழ் பரப்பும் தங்களை இப்பிறந்த நாளை முன்னிட்டு விசித்திர மகான் ஸ்ரீ.எம்.ஜி ஆர்., அவர்களின் ஆசி பெற்று வளமுடன் நலமுடன் இன்பமுடன் வாழ்க பல்லாண்டு என கலைவேந்தன் எம்.ஜி.ஆர் ., பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துகிறோம்..... ஷிவபெருமாள்.......... Thanks...

orodizli
7th July 2019, 10:22 PM
ஆயிரத்தில் ஒருவன் �� �� ��..........
_______________________
உங்கள் பொக்கிஷமே இடமாறினாலும் அவள் கைமாறமாட்டாள்
என்ன ஒரு ஸ்திரத்தனமான உள்ளத்தின் உறுதியை உணர்த்தும் வசனம் ...
தியாக ராஜன் என்பவர் என் நண்பர் இவருடைய மாமா ராம்மூர்த்தி தான் இந்த படத்திற்கு கேமராமேன் இவர் கூறியது ...
இந்த சண்டை காட்சியில் நம்பியார் அவர்கள் மக்கள் திலகத்தின் குத்து வாளை எடுத்துக் கொள்வார் ... மீண்டும் லாவகமாக கத்தியை
தட்டவிட்டு மக்கள் திலகம் அதை பறித்துக் கொள்வார்... மேலிருந்து விழ
ழும் கத்தியை பிடிப்பது மிகவும் கடினம்... ஆனால் ஒரே ஷாட்டில் இந்த காட்சி படமாக்கப் பட்டது
09 - 07 -1965 வெளியான தேதி இன்றும் இந்த படம் Non stop - ஆக ஒடிக்கொண்டிருக்கிறது ...
ஷிப்டிங் படங்களுக்கு கின்னஸ் ரிகார்டு என்று ஒன்றிருந்தால் நிச்சயம் "ஆயிரத்தில் ஒருவனு"க்கு தான் ...

.......Thanks... to mr.Hayath...

orodizli
7th July 2019, 10:24 PM
ராமாவர தோட்டத்தில் எம்.ஜி.யார் ., அவர்களுக்கு என்று ஒரு சூப்பர் ஏ. சி. அறையை சிறப்பாக அமைத்து கொடுத்தவர் ஏ. வி.எம்.செட்டியார்..அதை பராமரிக்க கோபால் என்பவரையும் அவரே வாத்தியார் வசம் சேர்த்து விடுகிறார்.கோபால் ஒரு தீவிர பாகவதர் ரசிகர்...தலைவர் யூனிட்டில் தொடர்கிறார் கோபால்... எங்கள்தங்கம் படத்தில் ஒரு காட்சியில் 10.கிலோவாட் லைட் மூலம் 11000 கிலோ வாட் ஓளி தலைவர் மீது விழும்.அந்த காட்சியில் எலெட்ரீசியன் கோபால் கண்கள் கூச அவருக்கு ஒரு சிறப்பு கூலிங் கண்ணாடியை வாங்கி தருகிறார் பொன்மனம்.அப்படி கூட இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து உதவினார் எம்ஜியார்...04.07.1977.இல் முதல்வராக பொறுப்பு ஏற்கவேண்டும் எம்ஜியார்... அதற்கு முதல் நாள் இரவு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இறுதி கட்ட காட்சிகள் எடுக்க பட்டன...அனைவருக்கும் சிறப்பான விருந்து வாத்தியார் செலவில்... அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு முடிகிறது....அனைவரையும் அழைத்த பொன்மனம். இதுவரை நடிகனாக உங்களோடு பயணித்த நான் நாளை முதல் இந்த நாட்டின் முதல்வர்....உங்களை எல்லாம் தொழில் ரீதியாக பிரிய வேண்டிய நேரம் இது என்று கண்ணீர் மல்க செட்டில் இருந்த அனைவருக்கும் கண்ணீர் முட்டுகிறது. யாருக்கு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் புகழ் பணம் சம்பாதித்து விட்டேன் இனி இந்த நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என்கிறார்.யாரும் எந்த உதவியும் கேட்கவில்லை..அனைவர் முகத்திலும் ஒரு தாங்க முடியாத சோகம்.. கோபால் மட்டும் அண்ணே உங்களை நெருங்கி இருந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் அதுவே ஆசை என்று சொல்ல அவரின் அந்த ஆசையையும் நிறைவேற்றி..கூட இருந்த மற்றவர்களுடன் குழு புகை படம் எடுத்து கொண்ட பின் நடிகராக இருந்த நம் மன்னன் நாடாள அதிகாலை புறப்படுகிறார் நாடாள சென்ற மன்னன் மன்னனாகவே நம்மை விட்டு மறை கிறார்....ஆம் அவர் சொன்னது போல ஒரு குற்றம் இல்லாத முதல்வனாக. தலைவனாக...மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கோவில் இல்லாத இறைவனாக....வாழ்க எம்ஜியார் புகழ்... Thanks...

orodizli
7th July 2019, 10:27 PM
எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்


by ஜெகதீஸ்வரன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

– என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

ஆதாரம் –

கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)....... .. .... Thanks mr.Gurunathan...

oygateedat
8th July 2019, 09:09 PM
https://i.postimg.cc/SsyYv5nH/IMG-20190708-WA0000.jpg (https://postimages.org/)

orodizli
8th July 2019, 10:46 PM
எம்.ஜி.ஆர் -அடிமைப்பெண் வெற்றியடைந்தது எப்படி?
அத்தியாயம் - 2
- முனைவர் இராஜேஸ்வரி செல்லையா

புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.

திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.

எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

அன்று அடிமைப்பெண்

`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

`அடிமைப்பெண்'ணின் சாதனை

தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.

இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’

‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.

பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'

`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவிஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.

புஷ் குல்லா

`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.

பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்

``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.

கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!

எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.

நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு

சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.

ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா

கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.

தாயின் வைராக்கியம்

வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.

சூரக்காடு ஏன்?

எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

ஜீவா – காதலின் கௌரவம்

எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.

குழந்தைகள், ரசிகரான கதை

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.

`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.

இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?

எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

கட்சிக் கொள்கை

எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.

`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை........... Thanks...

orodizli
8th July 2019, 10:48 PM
எங்க வீட்டு பிள்ளை !
_______________________
மக்கள் திலகம் ஹோட்டலுக்குள் நுழைவதும் சாப்பிடுவதும் பணம் தராமல் வெளியேறுவதும் நடிப்பாக கருதாமல் திரையில் ஒன்றிப்போவோம்
இதற்கு பெயர் தான்
சிறந்த நடிப்பு .

.......... Thanks...

orodizli
8th July 2019, 10:57 PM
இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.

டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவகுழு 'விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்' தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது.

இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது. இத்திட்டத்திற்கு ஒதுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. இதற்கு முன்பு ஆட்சி செய்துவிட்டுப்போன கருணாநிதி தான் போகும்போது அரசாங்க கஜானாவையும் துடைத்து வைத்துவிட்டே போயிருந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிதி நிலைமையை சரிசெய்துவரவே பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

இந்நிலையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி.

இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 50 லட்ச ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார்.

முதல்கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு ரூ.60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும், உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள் , 39 அவசர சிகிச்சை மையங்கள், போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் பெரிய அளவில் விரிவடைந்தது.

இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணிக்க காவல்துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்ப்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமேஸ்வரன் போன்றோர்களை உறுப்பினர்களாகவும், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நடேசன் அவர்களை தலைவராகவும் கொண்டு கண்காணிப்பு குழுவையும் அமைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பிட்டசில மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

பிற்காலத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்திய அளவில் செயல்படுத்திய 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த திட்டம்.

#MGR #இலவச_ஆம்புலன்ஸ் #எம்ஜிஆர்
—Nambikai Raj........ Thanks...

orodizli
8th July 2019, 11:00 PM
திமுகவை நிறுவியவர் C.N. அண்ணாதுரை தோற்றுவித்த ஆண்டு 17.9.1949 முக்கிய தலைவர்கள் ஒரு சிலரே அண்ணாவுடன் இருந்தனர். அதில் கருணாநிதி இல்லை.. தனது குடும்பத்திற்காக, வயிற்று பிழைப்புக்காக சேலத்தில் ஏதோ எழுதி பிழைத்து கொண்டிருந்தவர்.. இன்று கடைகோடி திமுக தொண்டன் போல அன்று கருணாநிதி அவ்வளவுதான்..

அண்ணாவின் உறவுமுறையோ, சொந்தமோ, பந்தமோ அல்ல கருணாநிதி.. மாபெரும் முன்ணனி தலைவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தவர் ( அதற்கு புரட்சி தலைவர் முக்கிய காரணம்) திமுக கருணாநிதி வசமானது.. அண்ணாவால் எதற்காக உருவாக்கப்பட்டதோ , அது நிறைவேறாமல் தடம் மாறி போனது.. திமுக கருணாநிதி குடும்ப சொத்தாக மாறியது.. முரசொலி மாறன், அவர் பிள்ளைகள், முதல்தாரத்து பிள்ளை, இரண்டாம் தாரத்து பிள்ளைகள், மூன்று வைப்பு மகள், பேரன்கள், பேத்திகள் இப்படி திமுகவை ஆக்ரமித்து கொண்டார்கள்..

வாழ்க..!! வாழ்க..!! என வாய்கிழிய கத்திய தொண்டன் வாசற்படி வாயிலேயே நிற்க வைக்கப்பட்டான்.. ஏதோ கருணாநிதி தான் தின்று விட்டு கையை உதறிய போது விழுந்த சோற்று பருக்கைகளை எஞ்சியவர்கள் எடுத்து உண்டார்கள்.. வீரத்திற்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொண்டது கருணாநிதியின் குள்ளநரித்தனம்..

உடன்பிறப்பே... உன்னைதான் உடன்பிறப்பே.. என முரசொலியில் கூப்பிட்டதும்.. உள்ளம் குளிர்ந்து போவான், வா..வா.. என அழைத்தால் இமயமலை உச்சிக்கே போய் விடுவான்.. மந்திரம் இல்லாமல், தந்திரம் இல்லாமல் மனோவசியத்தில் மயங்கி கிடக்கிறான் தொண்டன்.. அன்றும் சரி.. இன்றும் சரி மாறவே இல்லை.. இந்த அடிமைத்தனத்தை காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.. எழுதப்படாத சட்டமாக பின்பற்றி வருகிறார்கள் தொண்டர்கள்..

அப்பா...!!

பிள்ளை..!!

பேரன்..!!

பேரனின் பிள்ளை... அப்படியே தலைமுறை தலைமுறைக்கும் திமுகவும், அதன் தலைமையும் அவர்களுக்கு தான் சொந்தம்.. ஏன்..?? இப்படி..?? என அடிமைபட்டவன் எவனுமே கேள்வி கேட்க முடியாது.. இந்த திமுக வந்து மக்களுக்கு நல்லது செய்யப்போகிறது என அப்பாவி மக்களும் ஏக்கத்தோடு ஏங்கி காத்திருக்க வைத்திருக்கின்றனர்.. புது புது அடிமைகளும் அங்கே குவிந்த வண்ணம் இருக்கின்றனர்..

அதிமுக இப்படியா..?? இல்லே என தமிழக மக்கள் நன்கறிவார்கள்..

திமுகவின் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வீறுகொண்டு
எழுந்ததுதான் #அதிமுக அதை நிறுவியவர் மக்களின் மனதில் குடியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர்..
அவருக்கு பிறகு தன்னுடன் நடித்தவர் என்கிற சிறப்பை தவிர சொந்தமோ, பந்தமோ உறவோ இல்லாத புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமை பொறுப்புக்கு வந்தார்கள்.. அதிமுக நிறுவனரை மலையாளி என்றார்கள் அவருக்கு பிறகு வந்தவரை பாப்பாத்தி என்றார்கள் சம்மந்தமே இல்லாத உறவு, வாரிசு கலவாத தலைமை என்பதை அவர்களே ஒத்துக்கொண்டார்கள்.. அம்மாவின் தலைமைக்கு பிறகு ( உயிருடன் இருந்த போதே) பெரியகுளத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழகத்தை ஆளுவோம் என கனவிலும் காணாத வெள்ளந்தியான மனிதன் தலையில் கிரீடம் சூட்டப்பட்டது.. இவர் நிறுவனருக்கோ, அதன் பிறகு வந்த அம்மாவிற்கோ உறவோ, சொந்தமோ, பந்தமோ கிடையாது.. பால் வியாபாரம் செய்துகொண்டிருந்தவரை பல்லாக்கில் ஏற்றப்பட்டார் அவ்வளவே.. இவருக்கு பிறகு.. தெரிந்தோ தெரியாமலோ சசிகலா அம்மையாரால் முன்மொழியப்பட்ட சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் எடப்பாடி என்ற சிற்றூரில் இருந்து வந்தவர் பழனிச்சாமி.. இவரும் தலைவருக்கோ, அம்மாவிற்கோ, OP..பன்னீர்செல்வம் அவர்களுக்கோ வாரிசுதாரர் கிடையாது இது அதிமுக வரலாறு.. இங்கே தலைமை பொறுப்பு வழி வழியாக வருவதவல்ல.. உண்மை, உழைப்பு தொண்டர்கள் மேல் விஸ்வாசம் இதுவே தன்னாலே தலைமை பொறுப்புக்கு ஏற்றி விடும்.. இங்கே தலைமை பொறுப்பு வாரிசுக்காக உருவாவதல்ல நல்ல தொண்டனுக்காக தலைமை உருவாகும் என்பதே அதிமுக கடந்த கால வரலாறு... இனி மக்களுக்கான அரசு எது என்பதை மக்கள் மன்றத்தில் முடிவு செய்யட்டும்......... Thanks..

fidowag
8th July 2019, 11:23 PM
பாக்யா வார இதழ் -01/07/19
http://i66.tinypic.com/rmsdts.jpg

fidowag
8th July 2019, 11:25 PM
மாலை சுடர் -07/07/19
http://i64.tinypic.com/33faio9.jpg
http://i63.tinypic.com/5njj2t.jpg

oygateedat
9th July 2019, 07:56 AM
https://i.postimg.cc/8sgTtyqs/IMG-20190709-WA0000.jpg (https://postimg.cc/N2bh0xGw)

orodizli
9th July 2019, 09:45 AM
எம்.ஜி.ஆர்., இன்னும் மறையவில்லை; ( எப்பொழுதும் மறைய போவதில்லை) ...தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. "ஊருக்கு உழைப்பவன்" படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’............ Thanks...

orodizli
9th July 2019, 09:52 AM
வசூலில் பட்டையை கிளப்பும் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் "ரகசிய போலீஸ் 115" காவியம் மீண்டும் டிஜிட்டல் பணி சிறப்பாக செய்து நன்றாக வந்திருக்கிறது எனும் தகவல் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி ...

fidowag
9th July 2019, 01:02 PM
http://i67.tinypic.com/2chmi9s.jpg
http://i63.tinypic.com/35m4602.jpg
http://i64.tinypic.com/28qstvl.jpg

fidowag
9th July 2019, 01:04 PM
http://i64.tinypic.com/25jfpl4.jpg
http://i63.tinypic.com/20johhf.jpg
http://i64.tinypic.com/2cyftrl.jpg

fidowag
9th July 2019, 01:06 PM
http://i68.tinypic.com/2j5m1op.jpg
http://i68.tinypic.com/qwyrt5.jpg
http://i64.tinypic.com/353719h.jpg

fidowag
9th July 2019, 01:08 PM
http://i66.tinypic.com/t6rzis.jpg
http://i67.tinypic.com/1492lc3.jpg
http://i63.tinypic.com/15oxk5y.jpg

fidowag
9th July 2019, 01:11 PM
http://i63.tinypic.com/978tqd.jpg
http://i67.tinypic.com/4hqy43.jpg
http://i68.tinypic.com/jsyu0z.jpg
http://i65.tinypic.com/25q6d87.jpg

fidowag
9th July 2019, 01:12 PM
http://i66.tinypic.com/a1hj5k.jpg
http://i66.tinypic.com/2d0ksn6.jpg

fidowag
9th July 2019, 01:14 PM
http://i63.tinypic.com/1sdqwg.jpg
http://i68.tinypic.com/14caaoh.jpg

oygateedat
9th July 2019, 09:46 PM
https://i.postimg.cc/Pxt0xY6B/IMG-20190709-WA0001.jpg (https://postimages.org/)

வேங்கையன்

திருப்பூரைத் தொடர்ந்து

கோவை

வருகை

வருகின்ற வெள்ளி முதல்

கோவை சண்முகாவில்

அடிமைப்பெண்

fidowag
9th July 2019, 10:36 PM
வாரந்தோறும் தவறாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படத்திற்கு விஜயம் செய்யும் சிறுவன், சிறுமி
http://i63.tinypic.com/slnoz5.jpg

fidowag
9th July 2019, 10:46 PM
கடந்த சனிக்கிழமை முதல் (06/07/19) தென்காசி, தாய்பாலாவில் நிருத்திய வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படமான டிஜிட்டல் "அடிமைப்பெண்" தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .

http://i67.tinypic.com/flavs8.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
9th July 2019, 10:57 PM
கடந்த ஞாயிறு அன்று (07/07/19) மாலை காட்சியில் சென்னை அகஸ்தியா அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "அடிமைப்பெண் " கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்களின் புகைப்படங்கள்
http://i63.tinypic.com/2gwe5v7.jpg

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தை சார்ந்த திரு.மோகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/f3sun5.jpg

fidowag
9th July 2019, 11:00 PM
http://i68.tinypic.com/28wkx9c.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் கோவை திரு.அய்யாசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/hsssp0.jpg

fidowag
9th July 2019, 11:03 PM
தாராபுரம் வசந்தாவில் தற்போது வெற்றிநடை போடுகிறது .
http://i64.tinypic.com/1589f6f.jpg
http://i67.tinypic.com/xlxro2.jpg

fidowag
9th July 2019, 11:05 PM
http://i68.tinypic.com/14iprgi.jpg
http://i63.tinypic.com/15cng9e.jpg

fidowag
9th July 2019, 11:06 PM
http://i64.tinypic.com/alji9c.jpg

fidowag
10th July 2019, 09:11 PM
கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (12/07/19) நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
வேங்கையன் வசூல் வேட்டையாட மீண்டும் கோவை விஜயம் .
http://i64.tinypic.com/24nk8rd.jpg

fidowag
10th July 2019, 09:12 PM
http://i66.tinypic.com/xn5bww.jpg

fidowag
10th July 2019, 09:12 PM
http://i64.tinypic.com/wvahac.jpg

fidowag
10th July 2019, 09:13 PM
http://i64.tinypic.com/1x3x1.jpg

fidowag
10th July 2019, 09:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களில் எம்ஜிஆர் ரசிகர்கள் அதிகம் பார்த்த படம் ஆயிரத்தில் ஒருவன் தானாகத்தான் இருக்கும். அதே போல் 9-7-1965 வெளி வந்த நாளிலிருந்து இடைவெளி இல்லாமல் ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் யாவும் அற்புதமாக நடித்திருந்தார். சலிக்க சலிக்க பார்த்த படம்.
: சென்னை மிட்லண்ட் ஸ்ரீகிருஷ்ணா மேகலா சேலம் ஓரியண்டல் கோவை கர்னாடிக் இலங்கை கொட்டாஞ்சேனை கெயிட்டி 100 நாள் ஓடியது. மறு வெளியீட்டில் சென்னையில் 190 நாள் ஓடியது.
: மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
அட்டகாசமான சண்டை காட்சிகள்
இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு
: படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''

என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு

fidowag
10th July 2019, 10:13 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த அகிலமே போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "
முதல் வெளியீட்டில் என்னால் பார்க்க முடியவில்லை .தலைவர் கட்சி ஆரம்பித்த பின்னர் 1973ல் தான் பார்த்தேன் .அரங்கு நினைவில்லை. 1985ல் ஒருமுறை நெல்லை பாப்புலர் அரங்கில் , குற்றாலம் சுற்றுலா சென்றபோது, அரங்கு நிறைந்த
மாலை காட்சியில் பலத்த கரகோஷத்துடன் பார்த்து ரசித்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. பல அரங்குகளில் பார்த்துள்ளேன் . பிரபாத் , சரஸ்வதி அரங்குகளில் மட்டும் குறைந்த பட்சம் 1973 முதல் 1995 வரை மட்டும் சுமார் 25 வாரங்கள் ஓடியிருக்கும் மறுவெளியீட்டில் 190 நாட்கள் ஓடியது ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே .

டைட்டில் இசை மிக அருமை . ஆரம்பம் முதல் இறுதி வரையில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் பின்னணி இசை மிக பிரமாதம் . பாடல்கள் அனைத்தும் தேன்சொட்டு .வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் பாராட்டுக்குரியவர் .
இந்த படத்திற்கு டைட்டில் வைப்பதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரூ.1,000/- தருவதாக சொன்னார் . டைட்டில் வைத்த பின்பு பணத்தை வாங்கிய ஆர்.கே. சண்முகம் அழ ஆரம்பித்துவிட்டார் .விவரம் அறிந்து மக்கள் திலகம் கேட்டதும் தவறிப்போய் ஆயிரத்தில் ஒருவன் என பெயரிட்டேன் . லட்சத்தில் ஒருவன் என பெயரிட்டு இருந்தால் எனக்கு லட்சம் ருபாய் கிடைத்திருக்கும் என்றார் . அதைக் கேட்டு செட்டில் உள்ள அனைவரும் சிரித்தனர் . (ஆர்.கே. சண்முகம் பல மேடைகளில் சொன்னது ).மறக்க முடியாத, கருத்தாழமிக்க, சிந்திக்கக்கூடிய
பல பன்ச் மற்றும் எதுகை, மோனையுடன் வசனங்கள் எழுதி கைதட்டல்கள் பெற்றார் . சண்டைப்பயிற்சியாளர் ஷியாம்சுந்தரை வெகுவாக பாராட்டலாம் .
ஆசியாவிலேயே வாள் வீச்சில் சிறந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்று பெயர் வாங்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் அபாரமாகவும், சுறுசுறுப்பாகவும், ரிஸ்க் எடுத்தும் செய்துள்ளார் .வில்லன் நடிகர்கள் நம்பியாரும், மனோகரும் ஈடு கொடுத்து காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர் . நகைச்சுவை மன்னன் நாகேஷ்
மாதவி, ராமாராவ் கூட்டணி நல்ல கலகலப்பு .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட்டு மஸ்தான உடலுடன், கம்பீரமாகவும், கொள்ளை அழகுடன் , கச்சிதமான, கவர்ச்சியான உடைகள் அவருக்கு அமைந்தாற்போல் வேறு எந்த நடிகருக்கும் அமையுமா என்பது கேள்விக்குறியே . இன்றும் அரசியல் கூட்டங்களில் அவரது நிற்கும் போஸ் ( காட்சி ) வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு அமைக்கப்படுகிறது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பேரழகை படம் முழுவதும் கண்டு ரசித்து கொண்டே இருக்கலாம் .இந்த வெற்றி காவியத்தை டிஜிட்டல் வடிவில் தயாரித்த திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்பில் மீண்டும் பெருத்த நன்றி.
ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது . நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்த்து மடலை திரு.சொக்கலிங்கம் மேடையில் வாசித்தார் . நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், விவேக், இசை மேதை எம்.எஸ். விஸ்வநாதன், பி.சுசீலா ஆகியோரின் பேச்சு
மறக்க முடியாதது
மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி, தங்கமுட்டையிடும் வாத்து . கடைசியாக மகாலட்சுமியில் (அரங்கு புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு ) 2 வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .

ஆயிரத்தில் ஒருவன் வெளியான தினம் 09/07/1965. வெளியாகி 54 ஆண்டுகள் நிறைவு .சமீபத்தில் மதுரை ,ராம்நாட் ஏரியாவிற்கு மறுபடியும் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

மேகலா அரங்கில் 14/01/1965ல் எங்க வீட்டு பிள்ளை வெளியாகி 176 நாட்கள் (வெள்ளிவிழா கண்டது ) தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 100 நாட்கள் ஓடியது . ஆக மேகலாவில் தொடர்ந்து 40 வாரங்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஓடியுள்ளன .ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 50நாட்கள்
ஆனதும் போட்டிக்கு கலங்கரை விளக்கம் 28/08/65ல் வெளியாகியது பின்னர்
10/09/65ல் கன்னித்தாய் (63 நாட்கள் ஆனதும் ) வெளியானது . இதனால் ஆயிரத்தில் ஒருவன் வசூலில் சற்று பாதிப்பு ஏற்பட்டது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.படங்களுக்கு அவரது படங்களே போட்டியாக அமைந்தன என்பது வரலாறு .

fidowag
10th July 2019, 10:24 PM
http://i67.tinypic.com/10opahy.jpg
http://i67.tinypic.com/330dwu1.jpg
http://i68.tinypic.com/znornq.jpg

fidowag
10th July 2019, 10:32 PM
http://i65.tinypic.com/256hjkp.jpg
http://i63.tinypic.com/v8izon.jpg
http://i66.tinypic.com/2nbr51z.jpg

fidowag
10th July 2019, 10:34 PM
http://i68.tinypic.com/2egcwfq.jpg
http://i67.tinypic.com/jv6pt2.jpg
http://i63.tinypic.com/25pq0xi.jpg
http://i65.tinypic.com/330a7g2.jpg

fidowag
10th July 2019, 11:01 PM
http://i65.tinypic.com/10f7tp5.jpg
http://i65.tinypic.com/bdljsk.jpg

http://i65.tinypic.com/b5p0jk.jpg

orodizli
11th July 2019, 03:16 PM
#அசாதாரண #செயல்

தங்க நிழல் என்ற புனைப்பெயரில் ஒரு முஸ்லீம் பெரியவர் இருந்தார். தங்குவதற்கு நிழல் கூட இல்லாத வாத்தியார்.

ராமநாதபுரம் ஏர்வாடிக்கு அருகிலுள்ள கிராமத்தில் திண்ணைப் பள்ளிக்கு ஆசிரியர். அவரின் மாத சம்பளம் ரூ.83/- மட்டுமே. வாங்கும் சம்பளத்தில் சாப்பாட்டுக்கே சிரமம்...

ஏம்பா ஆண்டவா ! இது உனக்கே அடுக்குமா ? எம்ஜிஆர் பக்தர்களை மட்டும் ஏன் ஏழைகளாய் படைத்தாய்...? உனக்கு ஏன் இந்த பாரபட்சம்...?
(ஏன் அவங்க வறுமையை எம்ஜிஆர் தீர்ப்பார்ங்கற நம்பிக்கையினால் உன்னோட பொறுப்பை எம்ஜிஆர் கிட்டக் கொடுத்துட்டியா ???)

இதுக்கெல்லாம் ஒருக்காலும் அசராதவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்.
ஒரு வேளை உணவிற்குக் கஷ்டப்பட்டாலும், தனது எம்ஜிஆர் பக்தியில் ஒரு துளிகூடக் குறையாதவர்கள் தான் எம்ஜிஆர் பக்தர்கள்...

அதற்கு இந்த முஸ்லீம் பெரியவரும் விதிவிலக்கல்ல. தனது வறுமையிலும் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் பொன்மனச்செம்மலைப் பற்றி பாடல் புனைந்து அச்சிட்டு இலவசமாக விநியோகிப்பார். தலைவரின் நூறாவது படமான ஒளிவிளக்கு வரை 100 படங்களை வரிசைப்படுத்தி 100 வரிப்பாடலாகப் புனைந்து பொன்மனச்செம்மலிடம் காட்டி, தனக்கு அவர் மீதுள்ள அளவற்ற பக்தியை எடுத்துரைத்து, தனது புலமைக்கு ஒரு நற்சாட்சி மட்டும் கேட்டார்.

எம்ஜிஆர் படித்துவிட்டு, அவரை ஆரத்தழுவி, பணத்தைத் தனக்காக செலவழிப்பதைக் கண்டித்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்...அத்துடன் "என் புகழை பள்ளிக்குழந்தைகளுக்குச் சொல்லவேண்டாம்...காந்தி, நேரு, அண்ணா, காமராசர் போன்ற பெருந்தலைவர்களின் புகழை சொல்லிக் கொடுங்கள்..." என்றார்.

அந்த புலவர் முதல் வரியில்... " (சதி) லீலாவதியால் திரையில் பிறவி எடுத்தாய் " என ஆரம்பித்து, " உன் குணத்தால் வையகத்து ஒளிவிளக்கானாய் ..." என்று முடித்திருந்தார்.

தலைவர் அமெரிக்கா போய் சிறுநீரகம் (லீலாவதியின் சிறுநீரகம்) மாற்றி வந்த பின் அவரை (புலவரை), தனது நினைவாற்றல் குறைந்த நிலையிலும், நினைவில் வைத்து உதவியாளரிடம் கேட்டார்..."நான் அவரைப் பார்த்து பத்து வருஷம் இருக்குமா?

அதற்கு உதவியாளர், ஏன்? என்றார்.

"அன்று அவர் எழுதியது பலித்துவிட்டது. லீலாவதியால் தான் இன்று பிறவி எடுத்துள்ளேன். அவரது சொல் பலித்ததற்காக நான் அவருக்கு இன்னமும் ஏதாவது கொடுத்தாகணும் " என்றார் உறுதியாக...

கண்ணுக்கு முன்னாடி தெரிஞ்சவங்க வந்தாக் கூட கண்டுக்காம போற இந்த காலத்துல, பல வருஷத்துக்கு முன்னாடி ஒருவர் எழுதிய கவிதை வரிகளை, தனக்கு ஞாபக சக்தி குறைவான போதிலும் அவரை நினைவுல வெச்சிருக்கார்னா...இதுக்கு என்ன சொல்ல?

சாதாரண மனிதன் செய்கிற செயலா இது...???........ Thanks to mr.Ibrahim...

orodizli
11th July 2019, 03:41 PM
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!.........

புர*ட்சித்த*லைவ*ர் த*மிழ*க* முத*ல்வ*ராக* இருந்த*போது 1984 செப்ட*ம்ப*ரில் நோய்வாய்ப்ப*ட்டார். பின் அவ*ர் உலகமே அதிச*யிக்கும்
*வ*கையில் மக்களின் பிரார்த்த*ன*க*ள், மருத்துவ*ர்க*ளின் தீவிர சிகிச்சையாலும் குணமாகி 1985 பிப்ர*வரியில் நாடு திரும்பினார்.

ஒரு முத*லமைச்ச*ருக்கு சிகிச்சை அளிக்க* ஆகும் செலவு எவ்வ*ள*வு கோடியானாலும் அர*சாங்க*மே செய்யும். இது ம*ர*பு. ஆனால், கொடுத்துச்சிவ*ந்த* க*ர*ங்க*ளுக்கே சொந்த*க்கார*ரான த*லைவ*ரின் மன*ம் இத*ற்கு ஒப்ப*வில்லை. எனவே தன் சொந்த*ப்ப*ணம் மற்றும் அதிமுக சார்பில் பொதுமக்களிட*மும், க*ட்சிக்கார*ர்க*ளிட*மும் சிகிச்சைக்கான நிதியை திர*ட்ட*ச் செய்தார். மளமளவென்று சிலநாட்க*ளிலேயே ரூ.96 லட்ச*மான சிகிச்சைக்கான நிதி சேர்ந்துவிட்ட*து. உட*னே தேவையான நிதி சேர்ந்துவிட்ட*து, இனி யாரும் நிதி வ*ழ*ங்க*வேண்டாம் என்று அறிக்கையும் வெளியிட்டார். பின் 30/06/1985 அன்று அண்ணா திமுக சார்பில் ந*டைபெற்ற அண்ணா ப*வ*ள விழாவின்போது ரூ.96 லட்ச*த்திற்கான காசோலையை நிதிய*மைச்ச*ர் நாவ*ல*ர் நெடுஞ்செழிய*னிட*ம் வ*ழ*ங்கினார். உட*னிருப்ப*வ*ர்க*ள் செய்தி மற்றும் அற*நிலைய*த்துறை அமைச்ச*ர் வீர*ப்ப*ன், அதிமுக பொதுச்செய*லாள*ர் ராக*வான*ந்தம், மின்துறை அமைச்ச*ர் ப*ண்ருட்டி ராமச்ச*ந்திர*ன் ஆகியோர்.

புர*ட்சித்த*லைவ*ர் முத*ன்முத*லில் ப*தவியேற்ற ஜூன் 30,1977 ஆம் ஆண்டிலிருந்து ச*ரியாக 8 ஆண்டுக*ள் க*ழித்து ஜூன் 30,1985 அன்று ந*ட*ந்த* நிக*ழ்வு இது........... Thanks mr. Sutharsan...

orodizli
11th July 2019, 03:46 PM
MGR_ன் மூன்றெழுத்துக்கள் - ..........._ புகழ்.- 3 . திறமை.3 _ பாடல் - 3 கட்சி, - 3 பதவி 3 ஆட்சி - 3 வெற்றி _ 3 வசூல் 3. தமிழ் - 3 சினிமா - 3........... Thanks mr. Albert..

orodizli
11th July 2019, 03:51 PM
என்றென்றும் திரையுலக, கலையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எப்பொழுதும் பிரகாசிக்கும் "ஒளிவிளக்கு " காவியம் ... கோர்ட் மூலமாக உத்திரவு பெற்று மிக பெரிய விலை மதிப்போடு டிஜிட்டல், Qube வடிவில் வெளி வர உள்ளதாக நண்பர்கள் தகவல் கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சி பிரவாகம்...

orodizli
11th July 2019, 03:58 PM
மற்றும் சமீபத்தில் டிஜிட்டல் முறை சரியாக உருவாக்காமல் வெளியிடப்பட்டும்... நல்ல வெற்றி கண்ட வசூல் சக்கரவர்த்திகளின்... சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் " ரகசிய போலீஸ் 115 " இப்போது மீண்டும் அருமையான முறையில் டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்ட இக்காவியம் சென்னை & nsc ஏரியா களுக்கு மிக பெரிய விலை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது...எனும் தகவல் அறிந்து மிக்க மகிழ்ச்சி ...

orodizli
11th July 2019, 05:22 PM
குடியிருந்த கோயில் !...
_______________________
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், இசையமைப்பு திலகம் M S. விஸ்வநாதன் அவர்களுடன் நடிகை ஶ்ரீ வித்யா அவர்கள் கலந்துரையாடலில் கூறியது... இதை நானும் பார்த்தேன் ...
இயக்குனர் K சங்கர் அவர்கள் மக்கள் திலகத்திடம் இதில் பாங்கரா நடனம் உள்ளது நீங்கள் ஆட வேண்டும் என்றார் சிந்தனையில் மூழ்கிய மக்கள் திலகத்திடம் உடன் L விஜயலஷ்மி ஆடுகிறார் என்றார் வெகுண்ட மக்கள் திலகம் என்ன விளையாடு கின்றிரா ? அவர் எவ்வளவு பெரிய டான்சர் என்னால் முடியவே முடியாது என்று உறுதியுடன் மறுத்தார்
குழம்பிய இயக்குனர் காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கி சிரமத்துடன் சம்மதிக்க வைத்தார்
மக்கள் திலகமும் அரைமனதுடன் சம்மதித்தார்
காட்சி படமாக்கப் பட்டது
திரையில் நாங்கள் L விஜயலஷ்மியை எங்கே பார்த்ததோம் மக்கள் திலகத்தைதானே பார்த்தோம் !

.......... Thanks mr.Hayath...

fidowag
11th July 2019, 10:55 PM
கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக வலம் வந்த திரைப்படங்கள்
பரிசு

http://i68.tinypic.com/hwhag2.jpg
முகராசி
http://i66.tinypic.com/3448plc.jpg

சிரித்து வாழ வேண்டும்
http://i66.tinypic.com/sm93y1.jpg

fidowag
11th July 2019, 10:59 PM
என் கடமை
http://i66.tinypic.com/33usi75.jpg
தேர்த்திருவிழா
http://i68.tinypic.com/1055ijp.jpg
பல்லாண்டு வாழ்க .
http://i63.tinypic.com/15cmyoo.jpg
http://i67.tinypic.com/2hcng9g.jpg
ரகசிய போலீஸ் 115

fidowag
11th July 2019, 11:11 PM
http://i63.tinypic.com/11h6l8y.jpg
http://i65.tinypic.com/2ibnfhl.jpg
http://i66.tinypic.com/9j2dft.jpg
http://i65.tinypic.com/ej8r2f.jpg
http://i64.tinypic.com/1230b2p.jpg

ஓவியங்கள் உதவி :திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

orodizli
12th July 2019, 09:44 AM
ஆட்களை கூட்டி கொண்டு வராமல், ஆள் இல்லாமல் டிக்கெட் கிழித்து, பொய்யான விளம்பரம் செய்து ஒட்டாமல்... உண்மையிலேயே மகத்தான 2 இரண்டாவது வாரமாக ...தென்காசி - தாய்பாலா dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது... வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் பிரம்மாண்ட தயாரிப்பு " அடிமைப்பெண் "... இதுதான் நிகழ்கால உண்மை சாதனை...

orodizli
12th July 2019, 10:07 AM
மற்றுமொரு சிறப்பு தகவல்......... இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் / தலைவர்... வசூல் சக்கரவர்த்தி என சொல்லப்படுவதற்கு உண்மையான தகுதி வாய்ந்த ஒரே திலகம் மக்கள் திலகம் அவர்களின் இணையில்லா அக்மார்க் தயாரிப்பான " அடிமைப்பெண் " காவியம்... சென்னை - அகஸ்தியா 70mm திரையரங்கில் ஒரு வாரம் இரண்டு காட்சிகள் வசூல்... ரூபாய் 113000.00 ஆகி புதிய வரலாறு படைத்திருக்கிறது எனும் உன்னத தகவலை உங்களோடு பகிர்வதில் நிறைவான மகிழ்ச்சி...�� �� ��...

orodizli
12th July 2019, 10:10 AM
இன்று மக்கள் திலகம் தடைகளை தகர்த்தெறிந்து மாபெரும் வெற்றி கண்ட " நேற்று இன்று நாளை " வெளியான திருநாள்...

orodizli
12th July 2019, 03:08 PM
அன்று விஜயவாகினியில் எம்.ஜி ஆர்.ன் " பாக்தாத் திருடன் ", படப்பிடிப்பு .........

கதைப்படி குழந்தை எம்ஜிஆரை எதிரிகள் கொலை செய்ய திட்டமிடுகின்றனர் இத அறிந்த தாய் எஸ்.ன் லட்சுமி குழந்தை எம்ஜிஆரை பசு மாட்டு மடியில் கட்டி, மாட்டை விரட்டி தப்பிக்க செய்துவிடுகிறார்

அதே நேரம் பின்னாலிருந்து ஒரு புலி வந்து எஸ். என் .லட்சுமியை துரத்தி கொண்று விடும் புலியோடு எஸ் ஏன் லட்சுமி மோதிப்புறளும் இந்த காட்சியில் டூப்பாக துணை நடிகை சூர்ய குமாரி புலியோடு சண்டை போடுகிறார்

உண்மையிலே எதிர்பாராத விதமாக புலி சூர்யகுமாரியின் நெஞ்சை குதறி விடுகிறது

செய்தி அறிந்த எம்ஜிஆர் உடனடியாக விரைந்து வந்து சூர்ய குமாரியை மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க செய்கிறார்

மூன்று மாத சொந்த சிகைச்சையில் தாய் தந்தை இல்லாத சூர்யகுமாரியை கவனிக்க பகலுக்கு ஓர் ஆளையும் இரவுக்கு ஓர் ஆளையும் வைத்து சொந்த செலவில் வைத்தியம் பார்க்கிறார் எம்ஜிஆர்

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு போகிற பொழுது இனி வாடகை பிரச்சனை வயிற்று பிரச்சனை எப்படி சமாளிப்பது என்று சூர்யகுமாரி கவலையுடன் சென்று கொண்டிருந்நபோது

கார்; கோடம்பாக்கம் தாண்டி டிரஸ்ட் புரம் செல்கிறது

உடனே சூர்யகுமாரி எனது வீடு இங்கில்லை
வடபழனியை தாண்டி செல்லுங்கள் ....என்கிறார்

அப்பொழுதுதான் உடன் வந்தவர்கள் , இனி நீங்கள் வாடகை வீட்டில் தங்க அவசியம் இல்லை "டிரஸ்ட் புரம் நாலாவது தெரு உள்ள நான்காம் நம்பர் வீட்டை எம்ஜிஆர் உங்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற இனிப்பான செய்தியை சொல்கிறார்கள்

மூன்று மாத ராஜ உபச்சாரனை அளித்து , வீட்டு வாடகைக்கு என்ன செய்வது ,தன் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயந்த சூர்யகுமாரி அதிர்ச்சி சாக் ஆகிறார்

தன் தாய் தந்தையை விட எம்ஜிஆரை தெய்வமாக போற்றி புகழ்கிறார்......... Thanks ...

orodizli
12th July 2019, 03:09 PM
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’

‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’

எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்......... Thanks...

orodizli
12th July 2019, 03:20 PM
நேற்று இன்று நாளை - ........


1970 ல் துவங்கப்பட்ட படம் பொருளாதார பிரச்சனைகள் - அசோகனின் மெத்தனம் - பின்னர்

1972ல்மக்கள் திலகம் அதிமுக ஆரம்பித்த போது அசோகனின் போக்கில் மாறுதல்கள் என்ற பல

சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1974 துவக்கத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது .

நடிகர் அசோகனுக்கு எந்த வித நஷ்டமின்றி லாபத்துடன் படம் வியாபாரமாகி நல்ல வசூலை

பெற்று அதிக பட்சமாக மதுரை - நெல்லை நகரகங்களில் 125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது .

12.7.1974 தமிழகமெங்கும் திரைக்கு வந்த நேரத்தில் பல வன்முறை சம்பவங்கள் - திரை சீலை

போஸ்டர்ஸ் - கிழிப்பு சம்பவங்கள் நடந்தேறின .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை - பிரமாண்ட வெற்றி......... அது மட்டுமல்ல... இன்று வரை இந்த " நேற்று இன்று நாளை " காவியத்தின் விநியோக உரிமைகள் தான் எங்கள் குடும்பத்தை வாழ வைக்கிறது... மக்கள் திலகம் தான் காக்கின்றார்... எனவும் மறைத்திரு S A . அசோகன் அவர்கள் மகனும், இன்றைய திரைப்பட நடிகருமான திரு வின்சென்ட் அசோகன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது... Thanks...

orodizli
12th July 2019, 03:21 PM
" நேற்று இன்று நாளை "..........

திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?

“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.

ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்........ Thanks...

‘�

orodizli
12th July 2019, 08:53 PM
வருடம் 1965 - தீபாவளி.

மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.

கொழும்பு நகரில் இன, மத பேதமில்லாது மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட மக்கள் திலகம், தனது பிறப்பிடமான கண்டி செல்கிறார். தான் பிறந்த மண்ணை விழுந்து வணங்கி, கண்கள் கலங்க முத்தமிடுகிறார். கைக்குழந்தையாக தாய், அண்ணன் இவர்களோடு இந்தியா சென்றவர் மறுபடியும் இலங்கை வந்தது இப்போதுதான் என்பது சிறப்பு.

மறுநாள் மலையகத்தின் நுவரெலியா நகரில் குதிரைப்பந்தயத் திடலில் மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம். இந்திய வம்சாவழித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் அழகிய மலைநகரம். தொழிலாளப் பெண்களுக்கிடையே 'மலையக அழகிப் போட்டி' - சரோஜாதேவி அம்மா நடுவராகவும், மக்கள் திலகம் பரிசு வழங்குபவராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திடலின் மேடையைச் சுற்றிலும் பல மீட்டர்கள் தூரத்தில் பாதுகாப்புக்காக தடுப்புக்கட்டை வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் ஆரம்பிக்க அரை மணி நேரத்திற்கு முன்பதாக மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் மேடைக்கு வருகிறார்கள்.

மக்கள் திலகத்தைப் பார்த்த தொழிலாளத் தோழர்களோடு (நானும் இந்திய வம்சாவழித் தொழிலாளக் குடும்பத்தில் பிறந்தவன்தான். அப்போது 1965ல் எனக்கு பதினான்கு வயது. ஒன்பதாம் தரம் படித்துக் கொண்டிருக்கிறேன்.) மற்றைய அவரது ரசிகர்கள், அபிமானிகளின் கரஒலியும், "மக்கள் திலகம் வாழ்க" கோஷமும் விண்ணைப் பிளக்கின்றது.

மேடை முன்னால் நின்று கரங்களை உயர்த்தி, உணர்ச்சி வசப்பட்டு வணங்குகிறார். ஆனால் சுற்றுமுற்றும் பார்த்த அவரது முகத்திலே சிறிது கலவரம். கூட்ட ஒருங்கிணைப்பாளரை சைகை மூலம் அழைக்கிறார்.

"என்ன பண்ணிருக்கீங்க? எதுக்காக மக்கள் நிக்கற இடத்திற்கு முன்னாடி இவ்வளவு தடுப்புக் கட்டைகள் போட்டிருக்கீங்க?" - சிறிது கோபம் அவர் முகத்தில்.

"இல்லே சார், மேடைக்கு ரொம்பக் கிட்டே மக்கள் வந்துட்டா, உங்களைத் தொடறதுக்கு முண்டியடிப்பாங்க. காவல் துறைக்குக் கூட அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியாது. அதனாலேதான் பாதுகாப்புக்காக..............,"
இழுக்கிறார்.

"ஒன்னு சொல்றேன். இத்தினி வருஷம் கழிச்சு நான் பிறந்த நாட்டுக்கு வந்திருக்கேன். இங்கே என்னைப் பார்க்க வந்திருக்க இவங்க எல்லாமே என் சொந்தங்கள். அவங்க ஆதரவாலேதான் நான் இன்னைக்கு இந்த நிலைமைலே இருக்கேன். அவங்க இல்லேன்னா நான் இல்லே. என்ன செய்வீங்களோ தெரியாது. கொஞ்ச நேரத்திலே இந்தத் தடுப்புக் கட்டைங்கள எல்லாம் கழட்டிட்டு, மக்களை மேடை கிட்டே வரவிடுங்க. இல்லே, நான் திரும்பிப் போய்டுவேன்" - கணீரென்ற குரலில் உறுதியாகச் சொல்கிறார். (இரக்கம் மிகுந்த நம்பிக்கையூட்டும் குரலல்லவா அது?)

திகைத்த கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மற்றவர்களும் மளமளவென்று தடுப்புக்கட்டைகளை அகற்ற, "முன்னாடி வாங்க" என்று மக்கள் திலகம் கைகளை நீட்டி மக்களை அழைக்கிறார்.

உணர்ச்சி மேலீட்டால் கண்ணீர் விட்டு அழுத மக்கள் கூட்டத்தின் கரஒலியும், "மக்கள் திலகம் வாழ்க", "புரட்சி நடிகர் வாழ்க", "எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க" கோஷங்களும் விண்ணில் பட்டு எதிரொலிக்கின்றன.

அழகு ராணிப் போட்டி நிறைவு பெறுகிறது. மக்கள் திலகத்துடன், சரோஜாதேவி அம்மாவும் பரிசுகளை வழங்குகிறார். தொடர்ந்து சுமார் அரை மணி நேரமாக மக்கள் திலகம் நன்றி உரை நிகழ்த்துகிறார்.
அலை கடலென வந்த மக்கள் கூட்டம் மிக அமைதியாக அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

நிகழ்வின் இறுதியில் மேடையை விட்டிறங்கிய மக்கள் திலகம் கூட்டத்தினரின் அருகிலே சென்று அவர்களை வணங்குகிறார். தன்னைத் தொட்ட மக்களை புன்முறுவலோடு மீண்டும், மீண்டும் வணங்கி நன்றி கூறியபின் கொழும்பு புறப்படுகிறார்.

"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"

#தன்_பாடல்_வரிகளுக்கு_
#தானே_முன்னுதாரணமாக_வாழ்ந்து_
#மறைந்தவர்
#நம்_மக்கள்_திலகம்_மட்டுமே♥♥♥

(படத்தில் அப்போதைய இலங்கைப் பிரதமர் அமரர் டட்லி சேனநாயக்க அவர்களுடன் மக்கள் திலகம்)........... Thanks...

orodizli
12th July 2019, 08:54 PM
1976 ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் "நவரத்தினம்" படம் ஊட்டியில் எடுக்கப்பட்ட போது அண்ணன் பெரியவர் திரு.ராமச்சந்திரன் - டிவி நடிகர் அன்று எடுத்துக்கொண்ட புகைப்படம்.

அண்ணன் திரு.. ராமச்சந்திரனை கோவையில் உள்ள ஒரு பிளாட்டில் மூன்று வருடங்களுக்கு முன் சந்தித்தேன்..

' கல்தூண்" படத்தில் சிவாஜி கணேசன் உடன் நடித்துள்ளார். அந்த படத்தில் நாகேஷ் - இவரும் சேர்ந்து காமெடி ரோலில் கலக்கி இருப்பார்கள்.

அண்ணன் திரு ராமசந்திரன் தான் எனக்கு நடிகர் சத்தியராஜ் அவர்களையும் அறிமுகம் செய்தார்.
நடிகர் சத்திய்ராஜ் அவர்களுடன் என்னை அறிமுகம் செய்து பேசிக்கொண்டேன்.

அண்ணன் ராமசந்திரன் தனது மக்கள் திலகத்துடன் சந்தித்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

1976 ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் "நவரத்தினம்" படம் ஊட்டியில் எடுக்கப்பட்ட போது நான் ஒரு டெலிபோன் operator பார்க்கும் வேலையில் இருந்தேன். எம்ஜிஆர் தங்கி இருந்த அறையில் போன் வேலை செய்யவில்லை என்பதால் என்னை அழைத்தனர்.

மக்கள் திலகத்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவர் சாண்டோ எம் எம் சின்னப்பா தேவர் அவர்கள்தான்..

மக்கள் திலகம் தங்கி இருந்த அவர் அறையில் உள்ள டெலிபோன் வயர் மற்றும் இயக்கம் சரி செய்து கொடுத்து உள்ளேன்.

. மக்கள் திலகத்துடன் ஒரு போட்டோ எடுக்கணும் என்று விரும்பி அவரிடம் கேட்டேன். அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் என் விருப்பத்தை அன்று நிறைவேற்றினார் மக்கள் திலகம்,.அன்று எடுத்த புகைப்படம்தான் இது ..

மேலும் எனது சமகால நண்பன் நடிகர் சத்தியராஜ் தங்கை திருமணம் கோவையில் பிரமாண்டமாக 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது எம்ஜிஆர் / சிவாஜி இருவரும் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

நான் அருகில் சென்று இருவருக்கும் வணக்கம் சொன்னேன். அப்போது மக்கள் திலகம் என்னை அடையாளம் கண்டுகொண்டு ,, அன்று பேச இயலாத நேரத்திலும்.. இரண்டு கைகளையும் கூட்டி ( வயர் சுற்றி, டெலிபோன் டையல் செய்வது போல காண்பித்து) அவர்தானே நீங்கள்.."? என்று என்னை கேட்டார் மக்கள் திலகம்.

நான், "அண்ணே.. நானேதான் என்று அவர் காலில் விழ சென்றேன் என்னை தாங்கி பிடித்து வாழ்த்தினார். சம்பவம் நடந்தது 1976 / என்னை அடையாளம் கண்டு வாழ்த்தியது 1987ல்" என கூறி மக்கள் திலகத்துடன் உள்ள சந்திப்பை கூறினார்.

அண்ணே.. நான் வரேன்.." என்று புறப்பட்டபோது, என்னை மீண்டும் சந்திக்க சொன்னார். இன்றும் தொடர்பில் உள்ளேன். அருமையான சந்திப்பு . நிறைய கருத்துக்கள் சொல்வார். நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம்.

நன்றி..!.......... Thanks...

orodizli
12th July 2019, 08:57 PM
தெய்வம் மனிதவடிவில்! .........
_________________________
லண்டன் வீதிகளில்,
மலேஷியா போன்ற நாடுகளில் வீடுகளில் எம் ஜி ஆர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்
வாட்ஸாப் , முகநூல் போன்றவற்றில் அவருடைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன இது எப்படி சாத்தியம்
தான் வாழம் காலத்தில் உதவி செய்பவர்கள் வள்ளல்கள்
ஆனால் மக்கள் திலகம் குறிப்பறிந்து தாய் உள்ளத்துடன் உடல் நலிவுற்ற நிலையிலும் உதவி செய்து கொண்டே இருந்தார் இதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன ...

உண்டு ரசித்தவர்கள் நாங்கள்
உண்ணவைத்து ரசித்தவர் மக்கள் திலகம் ...ஒருவரே !

தெய்வம் மனிதவடிவில்
இதற்கு சான்று கால் உனமுற்ற நிலையிலும் ...
இவரின் மக்கள் திலகத்தின் பாதிப்பு பாரிர்.....!!!... Thanks........

orodizli
13th July 2019, 09:33 AM
கெலவரப்பள்ளி அணை :

இந்த அணை எம்.ஜி.ஆரின் தொடர் முயற்சிகளால் கட்டப்பட்ட அணை.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக ஓடிவந்து கடலூர் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

1977ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர்.,ஓசூர் தாலுகா விவசாயிகள் நலனுக்காக ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில் அணை கட்டப்படும் என அறிவித்தார். அறிவித்தபடியே அணையை கட்ட ரூபாய் 5 கோடியே 51 லட்சம் பணத்தையும் ஒதுக்கீடு செய்தார்.

1978ம் ஆண்டு அணையின் கட்டுமான பணிகள் துவங்கின.

1982ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த கமலாம்மாள் என்பவர், திடீரென இந்த அணை கட்டும் இடம் தன்னுடைய இனாம் நிலம் எனவும், அதனால், அணை கட்டக்கூடாது எனவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார். தடையுத்தரவால் அணை கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து நான்கு ஆண்டு கிடப்பில் போடப்பட்ட கெலவரப்பள்ளி அணையை கட்டியே தீர வேண்டும் என நினைத்த எம்.ஜி.ஆர்., 1987ம் ஆண்டு ஓசூருக்கே நேரடியாக வந்து தங்கினார்.
சிறப்பு அவசர கால பிரகடனம் திட்டம் மூலம் தடையானை வாங்கிய கமலாம்மாளிடம் இருந்து அணை கட்டப்படும் இனாம் நிலத்தை அதிரடியாக மீட்டார்.

அதன் பின் மீண்டும் 1987ம் ஆண்டு கெலவரப்பள்ளி அணை கட்டும் பணி துவங்கியது. ஆனால், இந்த திட்டத்தை துவங்கிய எம்.ஜி.ஆர் அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மறைந்தார்.

அவர் மறைந்தாலும் இந்த திட்டத்தில் எந்த தடையின்றி கட்டுமான பணி நடந்து 1995ம் ஆண்டு வெற்றிக்கரமாக கட்டி முடிக்கப்பட்டது.

இடது மற்றும் வலது புற காய்வாய் வெட்டி பாசனத்துக்கு அணையில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த போது, மீண்டும் கமலம்மாள் மகன் சத்தியநாராயணராவ் மூலம் அணைக்கு சோதனை வந்தது. அணையில் நீர் தேக்கினால் எங்களுடைய நிலங்கள் மூழ்கும் எனக்கூறி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அணையில் நீர் தேக்க தடை உத்தரவை பெற்றார்.

இதனால், 2002ம் ஆண்டு வரை கெலவரப்பள்ளி அணையில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை.

2002ம் ஆண்டு இரண்டாம்முறை முதலமைச்சராக அம்மா பதவிக்கு வந்தபிறகு இந்த அணை விவகாரத்தை விரைந்து முடிக்கக்கோரி அபூர்வா IAS அவர்களை ஓசூர் சப் கலெக்டராக நியமித்து உத்தரவிட்டார். அவர் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் தேக்க சிறப்பு அதிகாரிகள் நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அணையில் தண்ணீர் தேக்க வைக்கப்பட்டிருந்த தடையை உடைத்தது.

2005ம் ஆண்டு தமிழக அரசு மீண்டும் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய்களை வெட்டி அணையில் தண்ணீரை தேக்கியது.

ஓசூர் தொழிப்பேட்டைக்கு நீர் ஆதாரமாகவும்,
முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களின் விவசாய நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் (ஓசூர்) கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்காக இன்றுமுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்ட அளவான 44.28 அடிகளில், தற்போது 40.07 அடி நீர் இருப்பு உள்ளது.

1978 முதல் 2005வரை பல்வேறு தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து இந்த அணையை கட்டிக்கொடுத்த முதல்வர்கள் #MGR & #JJ
.....
#Krishnagiri | #KelavarapalliDa
...
...
Nambikai Raj......... Thanks...

orodizli
13th July 2019, 10:03 PM
நான் சொல்வதெல்லாம்
விஞ்ஞான உண்மை !..........
_________________________
சென்னையில் வசிப்பவர் குலதெய்வ கோவில் திருநெல்வேலியில் உள்ளது நான் செல்கிறேன் என்பார் என்னுள் கேள்வி இங்கு கோவில்கள் இல்லையா?
புத்தகம் ஒன்றில் இதற்கு விஞ்ஞான உண்மை அறிந்தேன்

நம்முடைய முன்னோர்கள் வழிவழியாக அக்கோவிலில் வழிபட்டு வந்திருப்பர் நம்முடைய சந்ததியினர் நலம்பெறவேண்டி மனம் உருகி வேண்டியிருப்பர் அந்த கோவிலில் நாம் வணங்கினால் நமக்கு பலன் எளிதில் ஈடேறும்

இதற்கு காரணம் நம் முன்னோரகளின் பிரார்த்தனை vibration...
எண்ண அலைகள்தான் காரணம் !

இதை நான் விளக்க காரணம் எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது 1997 - ல் முதன் முதலில் மக்கள் திலகம் வீடு சென்றேன்
என்னுள் விவரிக்கமுடியாத ஓர் உணர்வு இது தான் என் இடமோ எனற நினைப்பு
சொல்லோண்ணா மெல்லிய இழையாக ஓர் சிலிர்ப்பு இது கதையல்ல நிஜம் !.........

........... Thanks to mr. Hayath...

orodizli
13th July 2019, 10:05 PM
2017 ஜூலை மாதம் அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட " அடிமைப்பெண் " திரைகாவியம் 2 வருடங்களாக தொடர்ந்து ஊர்கள்தோறும் வெற்றிப்பவனி வருகிறது..... இன்றைய இளைஞர்களுக்கும் ஆணழகன் எம்.ஜி ஆர்., தான்.......... Thanks...

orodizli
13th July 2019, 10:08 PM
2 வருடத்தில் 4 வது தடவையாக தற்போது கோவை - சண்முகா DTS., தினசரி 4 காட்சிகள்...ஆர்ப்பரிக்கும் கூட்டத்தால் நாளை மாலை ரசிகர்கள் விழா எடுக்க உள்ளனர்.( 1969 லிருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகூட இடைவெளியில்லாமல் திரையிடப்படும் காவியம் அடிமைப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது......... Thanks to mr. Samuel... Covai...

orodizli
13th July 2019, 10:12 PM
அன்புக்கு நான் அடிமை , தமிழ் பண்புக்கு நான் அடிமை என்னும் பாடல் வரிகளில் குடிக்கும் நீரை விலைகள் பேசிக் கொடுக்கும் கூட்டம் அங்கே என்று 1976-77 ல் லேயே பாடி வைத்தார். .....உண்மையை அன்றே சொல்லிவிட்டு சென்ற ஒரே தலைவன்... யார் எங்க M. G R., ........ Thanks...

orodizli
13th July 2019, 10:15 PM
நண்பர்கள்... பகைவர்கள் ... யாரென்றும் நல்லவர் கெட்டவர் யாரென்றும் பழகும்போது தெரிவதில்லை பாழாய் போன இந்த பூமியில் அருமையான வைர வரிகள்... " நாடோடி" காவியத்தின் புரட்சி நடிகர் பாடல் இறவா புகழ் நவரத்தின வரிகள்........

orodizli
13th July 2019, 10:19 PM
ஆளே இல்லாத கடையில் ... டீ ஆத்துவது போல்...☺️ மிக குறைந்த ஆட்களை வைத்து �� படம் ஓட்டுவது ,பிரியாணி போடுவது ,புடவை தருவது இப்படி எல்லாம் செய்தும் எதிர்பாராத வெற்றியும் /,வசூலும் இல்லாத பட்சத்தில் இந்த விழா அவசியமா ,யாருக்கு புகழ் சேர்க்க பாடுபடுகிறார்கள் தெரியவில்லை... (இது மக்கள் திலகம் சார்ந்த பதிவல்ல....)

orodizli
14th July 2019, 12:22 PM
ஒரே வசூல் சக்கரவர்த்தி .......... எம்ஜிஆர்! .........
பொன்விழா ஆண்டில் "அடிமைப்பெண்! " (14.07.2019 கோவை சண்முகா DTS., வெற்றிவிழா சிறப்பு தொகுப்பு)...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வரலாறு படைத்த காவியம் ...அடிமைப்பெண். 1969ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பொன்விழா ஆண்டில் பயணிக்கிறது. எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், ஜே.பி.சந்திரபாபு, சோ, ஜோதிலட்சுமி, ராஜஸ்ரீ, பண்டரிபாய், ஓ.ஏ.கே.தேவர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆர் தயாரித்திருந்தார், அன்றைய பிரமாண்ட இயக்குனர் கே.சங்கர் இயக்கி இருந்தார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக அறிமுகமான படம். "ஆயிரம் நிலவே வா..." பாடல் இன்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. "அம்மா என்றால் அன்பு..." என்ற பாடல் மூலம் ஜெயலலிதாவும் பாடகியாக அறிமுகம் ஆனார். இதுதவிர "காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ...", "தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை...", "உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...", "ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே...", போன்ற இனிமையான பாடல்களை கொண்ட காவிய படம். ........

இன்றைக்கு பிரம்மாண்ட படமாக கொண்டாடப்படும் படங்களுக்கு சற்றும் குறைவில்லாத முன்னோடி படம் ...அடிமைப்பெண். இன்றைக்காவது கிராபிக்ஸ் வசதிகள் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத காலத்தில் பிரமாண்டமாக தயாரான படம் அடிமைப்பெண். மன்னரான தந்தை கொல்லப்பட்ட பின்னர் மகன் அதற்குப் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் தனது தாயை மீட்கிறான். இதுதான் அடிமைப்பெண்ணின் கதை.

முதன் முதலாக எம்.ஜி.ஆர் ஒரு நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டார். இதற்காக அவர் அந்த சிங்கத்தை தனது வீட்டில் வளர்த்து அதனுடன் பழகினார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தார்.

அதேப்போல மிகப் பெரிய அரண்மனை செட் போட்டும் பிரமாண்ட சண்டைக் காட்சியையும் சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கியிருந்தார். எம்.ஜி.ஆர். போட்ட கத்திச் சண்டை இந்தப் படத்தில் ரொம்ப பிரபலம். எம்.ஜி.ஆர் இதில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்.

1969 ல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளடங்கிய தென் இந்தியாவில் 46 ஏ சென்டர்களில் முதல் வெளியீட்டில் ரூ.1 கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த வெள்ளிவிழா காவியம். சென்னையில் திரையிட்ட முதல் நாள் தொடங்கி 400 காட்சிகள் ஹவுஸ்புல் ஆன முதல் காவியம். பல ஊர்களிலும் இதே புரட்சி செய்த காவியம். மதுரை 175 நாட்களும் கோவை, திருச்சி, சேலம், சென்னை ( 4 சென்டர்) நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ,வேலூர் , ஈரோடு , கர்நாடகா ( 7 சென்டர்) கேரளா (6 சென்டர்) ஆந்திரா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் 100 நாட்களை தாண்டி வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என மீண்டும் நிரூபித்த காவியம். தொடர்ந்து 1970 ல் பி மற்றும் சி சென்டர்களில் 100 நாட்கள், 50 நாட்கள் என ஓடி வசூல் பிரளயத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இன்றுவரை 50 ஆண்டுகாலமாக திரையரங்குகளில் அடிமைப்பெண் வெற்றிச் சரித்திரம் படைப்பது உலகம் அறிந்தது. 35 எம்எம், சினிமாஸ்கோப், டிஜிட்டல் போன்ற பல வெளியீடுகளில் புரட்சிசெய்து வந்த இக்காவியம் 2017 ல் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டு 100 நாட்கள் ஓடியது. 2 ஆண்டுகளாக ஊர்கள்தோறும் வெற்றிச் சரித்திரம் படைத்துவரும் அடிமைப்பெண் 2 ஆண்டுகளில் கோவைக்கு இதோ 4 வது தடவையாக வந்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இன்றும் தம் காவியங்கள் மூலம் பலபேர் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் காலத்தால் அழிக்க முடியாதவர்- நம் புரட்சித்தலைவர் ஆங்கில படங்களுக்கு இணையாக தந்துவிட்டுச் சென்ற அடிமைப்பெண் காவியம் என்றும் பேசப்படும். புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. எம்ஜிஆர் பக்தர்கள் வாழ்க, வளர்க......... அன்புடன் சாமுவேல்......... Thanks...

orodizli
14th July 2019, 12:32 PM
புரட்சித்தலைவர் பக்தர்கள் / ரசிகர்கள்.........

உண்மையான ரசிகர் / பக்தன் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம்:

1) புரட்சித்தலைவர் படம் (காவியங்கள்) எங்கு வந்தாலும் பணம் செலவு செய்து பார்க்கிறவன்.

2) திரையரங்கில் அவர் படம் வைத்து வழிபட்டு தலைவர் தோன்றும் காட்சியில் பூ தூவி மகிழ்பவன்.

3) தனது வருமான மிகவும் குறைவாக இருந்தாலும் அதற்கு தங்குதபோல பழம், ஊதுபத்தி, பூ வாங்கி புரட்சித்தலைவருக்கு காணிக்கை செலுத்துபவன்.

4) இல்லை என்று தெரிந்தால் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்பவன்.


5) புரட்சித்தலைவர் காவியங்களின் பொன்விழா/ வைரவிழா., இப்படி விழா எடுப்பவன்

நாளை சந்திரமண்டலத்தில் விழா நடக்கிறது என்று வைத்து கொள்வோம். நான் அங்கு செல்கிறேன் என்றால் சந்திரமண்டலத்தில் புரட்சித்தலைவர் பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நான் செல்லுவது தான் ஆதாரமா அல்லது அங்கு இருப்பவர் விழா எடுப்பது தான் ஆதாரமா?

புரட்சித்தலைவர் புகழ் பாடும் உண்மையான பக்தர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்சு, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் [ 1980 ஆம் ஆண்டு தலைவர் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது, தலைவர் தமிழக முதல்வர் ஆன பிறகு] போன்ற பல நாடுகளில் இரத்தத்தின் இரத்தங்கள் இருக்கிறார்கள்.

எனவே, தன்னிடம் இருக்கும் செல்வத்தின் அடிப்படையில் செயல்படுபவர்கள் , புரட்சித்தலைவரை படங்களில் பார்த்தால் தன்னையும் அறியாமேல் கண்ணீர் சிந்துபவர்கள், திரை கவிஞர்களின் பொன்விழா / வைரவிழா , பிறருக்கு உதவி செய்பவர்கள், கடமையில் தவறாதவர்கள், உண்மையை பேசுபவர்கள், “நினைவு தெரிந்த நாள் முதல் [ பிறப்பு முதல்]” தினமும் அந்த சத்திய புருஷனை வணங்குபவர்கள் தான் புரட்சித்தலைவர் புகழ் உலகமெங்கும் உள்ளது என்பதற்கு ஆதாரம்.������ . ........... Thanks mr. Sailesh Basu...

orodizli
14th July 2019, 08:18 PM
ஆட்சிக்கு வந்து ஏழை எளியவர்கள், பொது மக்கள், கட்சிக்காரர்கள் , நண்பர்கள். போன்றவர்களுக்கு செய்த உதவிகள் கொடைகள் ஆயிரம் இருந்தாலும் தான் நடிகராக இருந்து வியர்வை சிந்தி உழைத்த பணத்தை அள்ளி கொடுத்த வள்ளல் நம் பொன்மனம் மட்டுமே. கட்டி கொடுத்த வாங்கி கொடுத்த வீடுகள் அடுத்தவர்களுக்கு ஏராளம்....அந்த வரிசையில் அந்த காலத்தில் திரையுலகினர் அடகு வைத்து பின் மீட்க முடியாமல் வாத்தியார் மீட்டு கொடுத்த வீடுகள் வரிசை...இதோ.. நாகர்கோவிலில் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்ந்த வீடு, சென்னையில் நடிகை கண்ணம்மா வீடு, நடிகை குமுதினி வீடு , நடிகர் நாகேஷ் வீடு, நடிகர் எஸ்.வி. சுப்பையா வீடு , கவியரசு கண்ணதாசன் வீடு, மருதகாசி வீடு, இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வீடு, ஐசரிவேலன் மறைந்த பின் அவர் வாழ்ந்த வீடு...கடைசியில் சொன்னா நம்ப மாட்டீங்க. நம்ம சுருளிராஜன் வீடு...தெரிந்தவரைக்கும் இவை...இன்னும் தெரியாதவை எத்தனையோ.... அது எப்படி ஒரு மனிதனுக்குள் இவ்வளவு இரக்கம்...காரணம் அவர் மனிதர் இல்லை இறைத்தூதர் எம்ஜியார். அப்படித்தான் தோன்றுகிறது...வாழ்க எம்ஜியார் புகழ்...இன்னும் வெளியே வராத புது புது உண்மை நிகழ்வுகளுடன்...உங்கள் சார்பாக தொடருவேன்...நன்றி..
V P சிவகுமார் NKL........... Thanks...

orodizli
14th July 2019, 08:19 PM
உயர்ந்தவர்கள் எழுதிய கடிதங்களை விட சாமானியர் கடிதங்களை விரும்பி படிப்பார் எம்ஜிஆர்.. அந்த வகையில் 1978 இல் சென்னை திருவல்லிக்கேணி மிகவும் ஏழை பிராமண குடும்பத்தை சேர்ந்த மாணவி கௌரி தனக்கு வீணை வாசிக்கும் ஆர்வம் பற்றியும் ஆனால் சொந்தமாக ஒரு வீணை இல்லாததால் இரவல் வீணை கொண்டு தன் திறமையை வெளிக்கொண்டு வர முடியவில்லை நீங்கள் பண வசதி இல்லாமல் தங்கள் சின்ன வயதில் நாட்டிய பயிற்சி கர்நாடக சங்கீதம் என்னால் கற்று கொள்ள முடியவில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்ததை படித்தேன்...எனக்கும் வீணை மீது ஆர்வம் இருக்கு வாங்க வசதி இல்லை என்று கடிதத்தில் முடிக்க வழக்கம் போல உதவியாளர் வசம் சொல்லி ஒரு வீணை மைசூரில் இருந்து வாங்க சொல்ல உதவியாளர் பணம் அனுப்பியும் மைசூரில் இருந்து அந்த வீணை வராமல் நிற்க...இனி. 1980 சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து பள்ளிகள் இடையே நடந்த பல்வகை போட்டிகள் அதில் வெற்றி பெற்ற மாணவர் மாணவியர் களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்வு எம்ஜிஆர் தலைமை......நிகழ்வுக்கு ஒப்புக்கொள்ளும் மன்னன் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழை படிக்க வீணை இசைக்கருவி போட்டியில் முதல் பரிசு கௌரி என்று படிக்க தூக்கி வாரி போட்ட மாதிரி உடனே உதவியாளர் வசம் ரொம்ம நாட்களுக்கு முன்னால் வீணை ஒரு மாணவிக்கு கொடுக்க சொன்னது என்ன ஆனது என்று கேட்க அவர் வீணை மைசூரில் இருந்து வரா நிகழ்வை சொல்ல தலைவர் கோபமாக நீ.. போ... என்று சொல்லி நிகழ்ச்சிக்கு வந்து விட நிகழ்வு ஆரம்பம் ஆகி வரிசை ஆக எல்லோரும் பரிசு பெற வீணை கௌரி பெயர் வாசிக்க பட அவரும் தலைவர் அருகில் வந்து தலை குனிந்து ஒரு துண்டு சீட்டை நீட்ட அதில் இன்னமும் இரவல் வீணைதான் என்னை மறந்து விட்டீர்களா என்று எழுதி இருந்ததை படித்து மனம் வருந்திய நம் மன்னன் மேடையில் ஒருவருக்கு சைகை காட்ட அடுத்த சில நிமிடங்களில் வெளியே வாகனத்தில் இருந்து ஒரு புதியவீணை பூம்புகாரில் வேறு ஒருவர் மூலம் வாங்க பட்டு அதை அப்போதே அந்த கௌரி வசம் கொடுக்கிறார் நம் இறைவன்.. கௌரிக்கு மயக்கம் வாராத குறை.....யாருக்கும் எதுவும் புரியவில்லை நடந்தது நம் வாத்தியாருக்கும் கௌரிக்கும் அந்த உதவியாளருக்கும் மட்டுமே தெரியும்...எப்படி பட்ட தலைவனின் தொண்டர்கள் நாம்.
இதயவீணையின் புகழை நித்தம் மீட்டுவோம்...நன்றி...........வீணை பேசும்..பேசியது...வாழ்க எம்ஜிஆர் புகழ்......தொடரும்...........
பின்குறிப்பு...பின்னாளில் அந்த கௌரி சிறந்த வீணை இசைக்கலைஞர் ஆகி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் அரும் பெரும் தொண்டுகள் ஆற்றியது துணை நிகழ்வு......... Thanks mrs. Janani medam...

orodizli
15th July 2019, 09:53 AM
நேற்று சென்னை தி.நகரில் ஹபிபுல்லா சாலையில் உள்ள அரைமணி நேர அரங்கில் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்ற தலைவர் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நிகழ்வுகளின் ஆலோசனை கூட்டம் சிறப்பாக தலைவரின் அமைப்புகள் ............பக்தர்கள் .........சார்பாக இனிதே நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் 5 முக்கிய நிகழ்வு பற்றி பேசபட்டது. மேலும் வரும் செப்டம்பர் 22ம் தேதிசென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் ஞாயிறு அன்று நடைபெறும் தலைவரின் நம்நாடு திரைப்பட பொன்விழா பற்றியும் அதற்கான ஒத்துழைப்பு பற்றியும் பேசபட்டது. இக்கூட்டத்தில் அண்ணன் திரு. முத்து அவர்கள் திரு. துரைகாருணா அவர்கள் திரு. எம்.ஜி.சி. பிரதீப் அவர்கள். சைதைகலையுலக பேரோளி எம்.ஜி.ஆர். தலைமை மன்றத்தின் சார்பாக திரு. சைதை எஸ். மூர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்றம் (எழும்பூர் பகுதி) திரு. டி.தேவசகாயம், திரு.கே.ராமு திரு. மகாலிங்கம் திரு.பாண்டியன் திரு. எஸ்.பி. ராஜன் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு. இ. பாண்டிய ராஜ் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக திரு.ஏ. பாஸ்கரன் திரு. எஸ். தாமஸ் திரு. ஏ.கே. ராஜோந்திரன் திரு.பி.மோகன் திரு. பி.ஜி.சேகர் திரு பி.ஏ. நடராஜன் திரு. ஏ.டி. சந்திரபாபு திருமதி. சி. திலகவதி பாபு திரு எஸ். சோமசுந்தரம் திரு. டி. பத்ரிநாத் திரு.ஆர். கிரி திரு. எம்.ஜி.ஆர் ராஜன் திரு. ஆழ்வை திரு. உதயகுமார் திரு. எஸ். விஸ்வநாதன திரு. முகப்பேர் சி. நந்தா திரு. சங்கையா இவர்களுடன் உரிமைக்குரல் ராஜு கலந்து கொண்டவர்கள். மற்றும் சூழ்நிலை காரணமாக வராதவர்கள்முன் கூட்டியே சொன்னவர் திரு. வி.டி. சேஷன் . திரு. தம்பாச்சாரி திரு. பி. ரவிசங்கர் திரு. ஏம்.எஸ். மணியன் திரு. ஸ்ரீதர் பெருமாள் திரு. வி.எஸ். ராஜு திரு. ஆர். இளங்கோவன் திரு. கே.எஸ். மணி திரு. இ. பாலகுரு திரு. எல் பொன்னுசாமி திரு. ஆர். லோகநாதன் திரு. எம் தேவா திரு. வி. கிருஷ்ணசாமி திரு. சேர்மக்கனி திரு. குப்பன் திரு. ஜெ. சங்கர் திரு. ஜெய்சங்கர் திரு. கே. தேவராஜ் திரு. கவிஞர் கவிகுமரன் திரு. முருகன் திரு. கணேசன் திரு. கிருஷ்ணகுமார் திரு. மாம்பலம் குமார் அழகிரி திரு. ராஜு திரு. ஜமீல் திரு. நஸீர் திரு. ரவி மற்றும் சிலர். வந்த திருவாளர்களுக்கும் சூழ்நிலை காரணமாக வரமுடியாது தகவல் சொன்ன திருவாளார்களுக்கும் நிகழ்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்களுக்கும் விழாவுக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன நல்லவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! என்றும் தலைவர் புகழ்பாடும் ஒலிக்கிறது... உரிமைக்குரல் ராஜு...... Thanks...

orodizli
15th July 2019, 10:13 PM
பாசம்!........
________
இந்த பாடலை பிடிக்காதவர் எவரும் இலர்,
தலைவர்கள் பாராட்டியுள்ளனர் நடிகர்கள் இது போல் பாடல் தமக்கும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்...

நடிகருக்கு உடல் கட்டு கோப்பாக இருக்க வேண்டும் நம் மக்கள் திலகத்திற்கு கட்டு கோப்பாகவும்
flexible ஆகும் இருப்பதை காணுங்கள்..... கடற்கரை மணலில் பின் பக்கமாக வளைந்து சர்வசாதரணமாக எழந்து செல்வார் ...

மாட்டு வண்டியில் அமர்ந்தவாறு
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோவில் அவளே என்றும் என்தெய்வம் !

இந்த காட்சியில் மக்கள் திலகம் தன் அன்னையை உருகி வணங்குவது
நெகிழ்ச்சியின் எல்லை !

........ Thanks ..........

fidowag
16th July 2019, 03:55 PM
http://i66.tinypic.com/zsthdx.jpg

fidowag
16th July 2019, 03:59 PM
http://i63.tinypic.com/34hwhft.jpg

fidowag
16th July 2019, 04:01 PM
http://i67.tinypic.com/2whnqk1.jpg

fidowag
16th July 2019, 04:06 PM
http://i63.tinypic.com/2vt9tsy.jpg
http://i68.tinypic.com/1zczcky.jpg

fidowag
16th July 2019, 04:20 PM
http://i67.tinypic.com/lw7k2.jpg
http://i63.tinypic.com/2vcyt5h.jpg

fidowag
16th July 2019, 04:30 PM
http://i64.tinypic.com/25f166u.jpg
http://i66.tinypic.com/jzeet4.jpg

fidowag
16th July 2019, 04:47 PM
http://i67.tinypic.com/1zczitg.jpg

orodizli
16th July 2019, 08:16 PM
புரட்சித்தலைவரின் மனிதநேயத்தை என்றும் எக்காலத்திலும் பறைசாற்றும் விதமாக புதிய அமைப்பு ...... நம் தலைவரின் அபிமானிகள் பக்தர்கள் பல அமைப்பிலும் செயல்படுபவர்கள் அங்காங்கே இருப்பவர்கள் தனியாக செயல்படுபவர்கள் இப்படி தலைவர் மீது பற்றுள்ள உண்மை உள்ளங்கள்...... தென்னகமெங்கும் உள்ள பொன்மனச் செம்மலின் விசுவாசிகளை இணைக்கும் ஒரே நல் அமைப்பு .... "எம்.ஜி.ஆர்.புகழ் பரப்பும் இயக்கம் " நல்லவர்களின் ஆதரவுடன் விரைவில் .. இந்த அமைப்பில் செயலாளர்கள் மட்டும் (மாவட்டம் வாரியாக) பொருளாளர் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே! (தலைவர் துணைத் தலைவர் யாரும் கிடையாது) இன்னும் பல தீர்மானங்கள் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழில் இடம் பெறும். நம் தலைவர் எந்த ஜாதியோ....... எந்த மாதத் தலைவரோ.... எந்த மொழி போதகரோ. கண்டிப்பாக கிடையாது.
மனிதரை மனிதராக நேசித்த பாராட்டிய பெருமை சேர்த்த மனித புனிதர் உலகில் தலைவர் மட்டுமே! நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks...

fidowag
16th July 2019, 11:49 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நேற்று இன்று நாளை 12-7-1974 வெளியானது.
சென்னை பிளாசா 105 நாள் மகாராணி 105 நாள் சயானி 69 நாள் கிருஷ்ணவேணி 77 நாள் மதுரை சிந்தாமணி 124 நாள் நெல்லை பார்வதி 124 நாள் ஓடியது. காஞ்சிமாநகரில் லட்சுமி திரையரங்கில் 50 நாள் ஓடியது.
நேற்று இன்று நாளை படத்தை வெளியிட திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்தது கருணாநிதி அரசு. அப்போதிருந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.ஏ.எல்.சீனிவாசன் மூவி மேக்கர்ஸ் கவுன்சில் யாவும் வாய் மூடி மவுனியாக இருந்தார்கள். புரட்சித்தலைவர் தன்னந்தனியாக கருணாநிதி யின் திட்டங்களை தவிடு பொடி ஆக்கினார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.அசோகன் கோபாலபுரம் கருணாநிதி வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு எம்ஜிஆர் அவர்களை தாக்கி கருணாநிதி வசனம் எழதிய வண்டிக்காரன் மகன் மற்றும் ஜெய்சங்கருடன் சேர்ந்து எம்ஜிஆர் அவர்களை தாக்கி நடித்தார். எதுவும் எடுபட வில்லை.
: விஸ்வரூபம் பட பிரச்சனை வந்த போது கமல்ஹாசன் நாட்டை விட்டே போகிறேன் என்று சொல்லி மறு வாரமே ஜெயா தொலைக் காட்சி வந்து உட்கார்ந்தார். இன்னொரு நடிகர் அஜீத் என்னை விழாவுக்கு வர மிரட்டுகிறார்கள் என்று தைரியமாக முதல்வர் கருணாநிதி முன் பேசி விட்டு மறு நாள் கோபலபுரம் சென்றார். இன்னோரு சூரப்புலி விஜய் என்ற நடிகர் தலைவா என்று பெயர் வைத்து ஆளும் கட்சி கோபத்துக்கு ஆளாகி கொட நாடு வரை சென்று முதல்வரை பார்க்க முடியாமல் திரும்பினார்.
: இன்னொரு நடிகர் 1996 முதல் அரசியலுக்கு வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வருகிறார். வந.தால் தெரிந்து விடும் இவருடைய செல்வாக்கு !
: புரட்சித்தலைவர் ஒருவர் தான் ஆளும் கட்சியை எதிர்த்து தைரியமாக தன்னந்தனியாக போராடி 1972 முதல் 1976 வரை ஜெயித்தார்!
: இப்போது வாரிசு அரசியல் பேசப்படுகிறது. 1974 ல் கவிஞர் வாலி மூலம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார். தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். என்று அன்றே கருணாநிதி யின் முகமூடியை கிழித்தார்.
: No one is equal to mgr.


நேற்று இன்று நாளை திரைப்படம் வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவு ஆனது .
இனிமையான பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் , பொழுது போக்கு அம்சங்கள்
அரசியல் நெடி நிறைந்த வசனங்கள் நிறைந்த ஜனரஞ்சக படமாக அமைந்தது .
ஒரு கதாநாயகன்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (ஆனால் இரட்டை வேடம் ) மூன்று கதாநாயகிகள் , மஞ்சுளா, லதா, ராஜஸ்ரீ , திரைக்கதை நேர்த்தியாகவும், பல திருப்பங்களுடன் கிளைமாக்சில் இயக்குனர் ப.நீலகண்டன் திறம்பட இயக்கி
இறுதியில் சுபமாக முடித்தார். நடிகர்கள் அசோகன், நம்பியாரின் வில்லத்தனம் அபாரம். பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி சில காட்சிகளில் நடித்திருந்தார் .
நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுகுமாரி, மற்றும் ஐசரிவேலன் தமது நகைச்சுவையால் நன்கு சிரிக்க வைத்தனர் . வி.கே.ராமசாமி, பண்டரிபாய், கரிக்கோல் ராஜு மற்றும் பலர் நன்கு சோபித்தனர் .

பாடல்கள் :
1. பாடும்போது நான் தென்றல் காற்று ( அருமையான காதல் பாடல் )
2. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே( அந்த காலத்தில் அரசியலில் ஊழல் மற்றும்
ஆளும் கட்சியின் நிர்வாக சீர்கேடுககளை அப்பட்டமாக தோலுரித்து காட்டிய து )
3.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை ( காதல் பாடல் )

4. நெருங்கி நெருங்கி பழகும்போது (காதல் பாடல் )
5. பாடும்போது நான் தென்றல் காற்று ( 2 வது முறை -காதல் பாடல் )
6.அங்கே வருவது யாரோ (காதல் பாடல் )
7.ரோமியோ ஜூலியட் - இன்னொரு வானம் , இன்னொரு நிலவு
(இனிமையான காதல் பாடல் )

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வகையில் மிக இனிமையாக பாடல்கள் வடிவமைத்தார்
நான் முதன் முறையாக குரோம்பேட்டை வெற்றியில் முதல் நாள் மேட்னி காட்சியில் பார்த்து ரசித்தேன் வெற்றியில் 50 நாட்கள் ஓடியிருந்தது
பிறகு பிளாசா, மகாராணியில் (மூன்று முறை ) கிருஷ்ணவேணியில் பார்த்து மகிழ்ந்தேன் .பிளாசாவில் ரிசர்வேஷனில் 54 காட்சிகளும் , மகாராணியில் 63 காட்சிகளும் வெளியாகும் முன்பு அரங்கு நிறைந்தது எதிர்க்கட்சிகளின் சதியால் சயானி அரங்கில் வெள்ளித்திரை கிழிக்கப்பட்டது .இருப்பினும் அதை சரிசெய்து
திரைப்படம் ஓடியது . பார்வையாளர்களுக்கு தீப்பெட்டி, பீடி, சிகரெட் , சிகர்லைட்
போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை இந்த மாதிரி கட்டுப்பாடுகள்,
கெடுபிடிகள் ,ஆளும் கட்சியின் எதிர்ப்புகள் , போஸ்டர் விளம்பரங்கள் அனுமதி மறுப்பு எல்லாவற்றையும் மீறி வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது .இந்த நிலைமை எந்த தமிழ் படத்திற்கும் நேர்ந்ததில்லை என்பது வரலாறு என்பதை
நினைவில் கொள்ள தக்கது .

fidowag
17th July 2019, 12:02 AM
http://i64.tinypic.com/2h80rd1.jpg
http://i68.tinypic.com/29p4xt2.jpg

fidowag
17th July 2019, 12:03 AM
http://i66.tinypic.com/fksdgi.jpg
http://i66.tinypic.com/140vqck.jpg

fidowag
17th July 2019, 12:05 AM
http://i66.tinypic.com/wthpok.jpg
http://i68.tinypic.com/rwusfk.jpg

fidowag
17th July 2019, 12:06 AM
http://i67.tinypic.com/2ihbeh3.jpg
http://i68.tinypic.com/2qd39k4.jpg

fidowag
17th July 2019, 12:09 AM
http://i67.tinypic.com/5l5v2s.jpg
http://i68.tinypic.com/flaxag.jpg
http://i67.tinypic.com/2jff4mr.jpg

fidowag
17th July 2019, 12:11 AM
படத்தில் இடம் பெறாத காட்சி .
http://i64.tinypic.com/2lbnkzq.jpg
http://i65.tinypic.com/n5ftc7.jpg

fidowag
17th July 2019, 12:12 AM
http://i64.tinypic.com/21aj01u.jpg

fidowag
17th July 2019, 12:17 AM
http://i65.tinypic.com/29nthk1.jpg
பூஜை நாளன்று எடுத்த காட்சி
http://i66.tinypic.com/2w4fp8n.jpg

fidowag
17th July 2019, 12:20 AM
http://i63.tinypic.com/347k5sk.jpg
http://i65.tinypic.com/rv8rkl.jpg
http://i65.tinypic.com/2podzip.jpg

orodizli
17th July 2019, 06:42 AM
கோவையில் எம்ஜிஆரின் "அடிமைப்பெண் 50"ஆண்டு விழா! ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!! கோவை சண்முகா தியேட்டரில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது. இப்படம் 1969 ல் வெளியாகி 50 வது ஆண்டில் பயணிக்கிறது. இடையிடையே புதிய பிரிண்டுகள் போட்டு வெளியிடப்பட்டு வசூல் சாதனை படைக்கும் எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒரு புரட்சிக் காவியம். 2017 ல் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு 2 வருடமாக மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில் திரையிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை நகரில் 4 வது தடவையாக வலம் வருகிறது. இதையொட்டி எம்ஜிஆர் பக்தர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ' எம்ஜிஆர் படம் மட்டுமே ரிலீஸ் காலத்திலிருந்து இன்றுவரை வருடந்தோறும் திரையிடப்படுகிறது. அதிகமாக எம்ஜிஆர் படங்களே திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் படங்களுக்கே கூட்டம் அதிகமாக வருகிறது. வசூலும் லாபமும் இருப்பதால்தான் அடிக்கடி திரையிடப்படுகிறது. 3 மாத இடைவெளியில் மீண்டும் அதேபடம் வெளியிட்டாலும் பக்தர்கள் வந்து பார்ப்போம். என்ன படம்? சமீபத்தில்தானே பார்த்தோம் என்றில்லாமல் தலைவர் முகத்தைப் பார்ப்பதே மகிழ்ச்சி என திரும்பத் திரும்ப வருகிறோம். தலைவரின் படங்கள் எங்களுக்கு பாடங்கள். எனவே ஒரு நல்ல புத்தகத்தை மீண்டும் படிப்பதுபோல தலைவர் படம் பார்க்கும் போது உணருகிறோம்.' என்கின்றனர் கோவை எம்ஜிஆர் பக்தர்கள்............ Thanks mr. Samuel......

orodizli
17th July 2019, 06:44 AM
அன்பு நிறைந்த என் உறவுகளே உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய காலை வணக்கம் இன்றைய பொழுது மிக சிறப்பான பொழுது உங்கள் அனைவருக்கும் அமைய வேண்டும்.

டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம் ( Dr.MGR Global Research Center Malaysia ) மலேசியா நாட்டில் அமைந்திட நாம் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று முழு உரிமையும், அதிகாரப்பூர்வமாக நாம் செயல் பட மலேசியா அரசாங்கம் நமக்கு சட்டப்பூர்வமாக அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது என்பதனை உலக எம்.ஜி.ஆர் பக்தர்கள், தொண்டர்கள், அனைவர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.��✌������........... Thanks...

orodizli
17th July 2019, 02:54 PM
அப்போலோ பரபரப்பானது...!
காரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார் ..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக ..!
இது நடந்தது இந்திராகாந்தி – எம்.ஜி.ஆர்.காலத்தில்..!
.
அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் , தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் .. அக்டோபர் 1984 இல்..!
உடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
அது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை..
ஆனால் இந்திரா காந்தி , அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்..
அதிர்ந்து போனார் இந்திரா..!
அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் :
" IS THAT MGR ? OH MY GOD ,.. I CANT BELIEVE IT "
.
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள் .. இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை .. என்னுடைய கடமை ..”
சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் ,செயலில் இறங்கினார் இந்திராகாந்தி.
அடுத்த நாளே , பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அது மட்டுமா? இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .
.
எம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் சீரியஸ் ஆக ... 5.11. 1984 அன்று , ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்..
.
ஆனால்...
இதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி ....
அப்போது உயிரோடு இல்லை.
.
ஆம்.. அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் வேளையில் , அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது...!
இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் , அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்..!
ஏனென்றால் ...இந்திரா காந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்...
அந்த வேளையில் இந்த செய்தியை சொல்லி...அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால்...?
.
சில நாட்களுக்குப் பின் , அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன் பிறகுதான் , மெல்ல மெல்ல , இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்..!
அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் "வீடியோ"க்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் . வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது...!
எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார்...!
காராணம் .... தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.
ஆனால் .. இந்திரா இப்போது உயிரோடு இல்லை.
பக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட... பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால்..?
.
“வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி...”............ Thanks ...

orodizli
17th July 2019, 02:59 PM
19-07-2019 முதல் மதுரை - சண்முகா A/C dts ., தினசரி 4 காட்சிகள்... வசூல் சக்கரவர்த்தி பாரத் புரட்சி நடிகர் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றி நடை காண வருகின்றார்... Thanks mr.Kumar...

orodizli
17th July 2019, 03:03 PM
வருகின்ற 19-07-2019 முதல் கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மறு வெளியீடு காணும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் " நேற்று இன்று நாளை".......... கலக்க வருகிறார்...

orodizli
17th July 2019, 03:06 PM
மக்கள் திலகம் பரம பக்தர் திரு. லோகநாதன் அவர்களின் திருமண திருநாள் இன்று... நம் எல்லோரின் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்போம்...நன்றி...

orodizli
18th July 2019, 06:54 AM
எம்.ஜி.ஆர் பேச்சு
- R.P.ராஜநாயஹம்
விஜயா கார்டனில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் (SIFDA)நடத்திய திரைப்படத்தொழிலாளர் சம்மேளன விழா. எம்.பி.சீனிவாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது. சீனிவாசன் இசையமைப்பாளர். அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் எம்.பி.சீனிவாசன் தான் protagonist.
முதல்வர் எம்.ஜி.ஆர் விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள் உள்பட அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிரபலங்கள் ஆஜர்.
எம்.ஜி.ஆர் வந்தார். மேடையேறினார். விஜயாவாஹினி அதிபர் நாகிரெட்டி மேடையேறிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.ஆர் காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்ற கெட்டியாக பிடித்துக்கொண்டார். விஜயாவாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர் அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் lockசெய்து விட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்!
மேடையில் எம்.ஜி.ஆர் செல்லக்கோபத்துடன் ‘என்ன இப்படி? நீங்களுமா? என்று கையை விரித்து சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.அவர்களுக்குள் Nostalgia எவ்வளவோ இருக்கும் தானே.
எங்கவீட்டுப்பிள்ளை படம் எடுத்தவர் அல்லவா?
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.( ’ஆட்சி’ என்ற வார்த்தை எம்.ஜி.ஆர் ’ஆச்சி’ என்றே உச்சரிக்க முடியும்)
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)

1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:
”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்............ Thanks...

orodizli
18th July 2019, 06:56 AM
2 ஜி ஊழல் புகழ் ராசா போன்ற நபர்கள் புரட்சித்தலை வரை புகழ்ந்து பேசாவிட்டாலும், வசைபாடாமல் இருப்பது நல்ல து. ஏனெனில், நமது மக்கள் திலகம் தன்னுடைய பல திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக குரல் கொடுத்து ஆதரவு அளித்து வந்தார். இது, வேறு எந்த ஒரு நடிகனும் செய்யத்துணியாத செயல்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால், நமது தலைவர் அவர்களை அவ்வளவு எளிதாக புகழ்ந்து எழுதாத 'ஜூனியர் விகடன்' பத்திரிக்கை, தாழ்த்தப்பட்ட மக்கள், எம். ஜி. ஆர். அவர்களை இன்றும் தெய்வமாக மதிக்கிறார்கள் என்று வாரக்கட்டுரை ஒன்றில் எழுதியிருந்ததது. நன்றி மறவாத நல்ல மனம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கும் இந்த உலகத்தில், அரசியல் பிழைப்புக்காக உளறிக்கொண்டிருக்கும் ராசா போன்ற நபர்களால் தலைவர் புகழை என்றும் அழிக்க முடியாது.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........ Thanks...

fidowag
18th July 2019, 12:41 PM
கடந்த ஞாயிறு (07/07/14) அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i66.tinypic.com/qs9utv.jpg
http://i68.tinypic.com/xksspc.jpg

fidowag
18th July 2019, 12:45 PM
http://i63.tinypic.com/14uf446.jpg
எனது 33 வது திருமண நாளுக்கு அலைபேசி, கைபேசி, வாட்ஸ் அப், முகநூல், எஸ்.எம்.எஸ். மூலமும் மற்றும் நேரிலும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள், வங்கிதோழர்கள் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகள், ரசிகர்கள், பக்தர்கள், அ. தி.மு.க. பிரமுகர்கள் அனைவருக்கும்
கோடான கோடி நன்றிகள் .

ஆர். லோகநாதன்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு

fidowag
18th July 2019, 12:51 PM
http://i63.tinypic.com/nwzmh4.jpg
http://i65.tinypic.com/16bhag5.jpg
http://i63.tinypic.com/2v8ny2e.jpg

fidowag
18th July 2019, 01:01 PM
http://i65.tinypic.com/2qxx6b7.jpg
http://i63.tinypic.com/6xrp6o.jpg

fidowag
18th July 2019, 01:04 PM
http://i66.tinypic.com/2qd4swl.jpg
http://i66.tinypic.com/156yg6r.jpg
http://i63.tinypic.com/1zj1ic.jpg

fidowag
18th July 2019, 01:06 PM
http://i63.tinypic.com/nogeva.jpg
http://i65.tinypic.com/16bhag5.jpg
http://i68.tinypic.com/1zl545y.jpg

fidowag
18th July 2019, 01:11 PM
http://i67.tinypic.com/16a48qv.jpg
http://i68.tinypic.com/o6wx8g.jpg
http://i67.tinypic.com/50pt76.jpg

fidowag
18th July 2019, 01:17 PM
http://i63.tinypic.com/2ilmrq.jpg
http://i68.tinypic.com/21aikx.jpg
http://i65.tinypic.com/t89rt5.jpg

fidowag
18th July 2019, 01:19 PM
http://i67.tinypic.com/nojalj.jpg
http://i64.tinypic.com/o59x8g.jpg

fidowag
18th July 2019, 02:25 PM
http://i66.tinypic.com/537ds4.jpg
http://i63.tinypic.com/8x632f.jpg
http://i64.tinypic.com/ivct46.jpg

fidowag
18th July 2019, 02:31 PM
http://i67.tinypic.com/2ltn0wl.jpg
கன்னிப்பெண் படத்தின் பூஜை நாளன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் , மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
http://i64.tinypic.com/29crp0.jpg

orodizli
18th July 2019, 02:34 PM
தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு........18-07-1964 to 18-07-2019 55 ஆண்டுகள் நிறைவடைந்து 56 ம் ஆண்டு துவக்கம்...

இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.... Thanks...

orodizli
18th July 2019, 02:35 PM
தெய்வத்தாய் ஆரம்ப காட்சி தன் தாயாரை சந்திக்க வருவார் எம்ஜிஆர். ஏன் இவ்வளவு லேட் என்பார். அதற்கு என் எதிரிகள் என்னை தாக்க திட்ட மிட்டனர். அவர்களுடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கிவிட்டேன் என்பார்....... Thanks...

orodizli
18th July 2019, 02:38 PM
தமிழ் சினிமாவில் எம்ஜியார் படம், சிவாஜி படம் ஜெமினி படம் எஸ்.எஸ்.ஆர். படம் ஸ்ரீதர் படம் பிறகு பாலச்சந்தர் படம் என்று பேசப்பட்டது. "தெய்வத்தாய் " படத்தில் வசனம் எப்படி இருக்க வேண்டும் மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்று உணர்த்தினார்....... Thanks...

orodizli
18th July 2019, 02:39 PM
"தெய்வதாய்" வெற்றி காவியம் ...சென்னை பிளாசா கிரவுன் புவனேஸ்வரி 100 நாள் ஓடியது. மதுரை கல்பனா கோவை ராயல் தொழிலாளி வரும் வரை 69 நாள் ஓடியது. நெல்லை லட்சுமி 50 நாள் ஓடியது......... Thanks...

fidowag
18th July 2019, 02:40 PM
http://i63.tinypic.com/2zs4ck9.jpg
http://i67.tinypic.com/9leb6g.jpg

orodizli
18th July 2019, 02:42 PM
குமுதம் பத்திரிகை மக்கள் திலகம் படம் விமரிசனம் மட்ட மாக இருக்கும்....எம்ஜிஆர் .,அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழதும். தெய்வத்தாய் பற்றி தரக்குறைவாக எழுதியது. மறு வாரமே விளம்பரத்தில் கருத்துக் குருடர்களின், எழுத்துக் கணைகளை முறியடித்த படம் ...என்றுவிளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.......... Thanks...

fidowag
18th July 2019, 02:45 PM
http://i64.tinypic.com/28bhfgh.jpg
http://i67.tinypic.com/25jb2g5.jpg

fidowag
18th July 2019, 02:47 PM
http://i64.tinypic.com/2d2azkm.jpg

fidowag
18th July 2019, 02:48 PM
http://i68.tinypic.com/ru6ssl.jpg
http://i68.tinypic.com/xeep8k.jpg

fidowag
18th July 2019, 02:50 PM
http://i67.tinypic.com/2lwxds7.jpg
http://i63.tinypic.com/732zur.jpg

fidowag
18th July 2019, 02:52 PM
http://i66.tinypic.com/107pdmr.jpg
http://i66.tinypic.com/1gn2ib.jpg

fidowag
18th July 2019, 02:54 PM
http://i66.tinypic.com/zk69ft.jpg
http://i63.tinypic.com/6z5xf7.jpg

fidowag
18th July 2019, 02:58 PM
http://i67.tinypic.com/24e9mj9.jpg

fidowag
18th July 2019, 03:06 PM
http://i66.tinypic.com/xbb90j.jpg
http://i65.tinypic.com/x1n5go.jpg
http://i65.tinypic.com/zwe2i8.jpg

fidowag
18th July 2019, 03:09 PM
http://i64.tinypic.com/28i2jhy.jpg
http://i66.tinypic.com/1zfpuko.jpg

fidowag
18th July 2019, 03:11 PM
http://i66.tinypic.com/11lqtyx.jpg
http://i63.tinypic.com/11l4zgz.jpg

fidowag
18th July 2019, 03:12 PM
http://i63.tinypic.com/2cqcsvp.jpg
http://i63.tinypic.com/11h9le9.jpg

fidowag
18th July 2019, 03:14 PM
http://i64.tinypic.com/kf5wzp.jpg

fidowag
18th July 2019, 03:17 PM
http://i66.tinypic.com/hs5nbs.jpg
http://i68.tinypic.com/9gdcua.jpg

fidowag
18th July 2019, 03:20 PM
http://i68.tinypic.com/jgte7n.jpg
http://i65.tinypic.com/2m4xipx.jpg

fidowag
18th July 2019, 03:22 PM
http://i68.tinypic.com/29egoy1.jpg
http://i65.tinypic.com/xcqcxw.jpg

fidowag
18th July 2019, 03:24 PM
http://i68.tinypic.com/2zoxc91.jpg
http://i63.tinypic.com/4pe0.jpg

fidowag
18th July 2019, 03:26 PM
http://i68.tinypic.com/2j46bmg.jpg
http://i66.tinypic.com/vrd8h0.jpg

fidowag
18th July 2019, 03:28 PM
http://i67.tinypic.com/20qmn45.jpg

fidowag
18th July 2019, 03:31 PM
http://i66.tinypic.com/xf6x3n.jpg
http://i64.tinypic.com/29wjr43.jpg

fidowag
18th July 2019, 03:40 PM
http://i63.tinypic.com/nnqzk0.jpg
http://i66.tinypic.com/112e4hc.jpg

fidowag
18th July 2019, 03:43 PM
http://i66.tinypic.com/wssneg.jpg
http://i68.tinypic.com/23i6q2o.jpg

fidowag
18th July 2019, 03:46 PM
வாரக்கதிர்
http://i67.tinypic.com/2rdffyv.jpg

fidowag
18th July 2019, 03:48 PM
http://i64.tinypic.com/maate9.jpg
http://i67.tinypic.com/2sb252a.jpg
http://i67.tinypic.com/epm8vn.jpg

fidowag
18th July 2019, 03:53 PM
http://i67.tinypic.com/ioku88.jpg
http://i65.tinypic.com/2na1oh2.jpg

fidowag
18th July 2019, 05:50 PM
http://i66.tinypic.com/2nq4qbc.jpg
http://i65.tinypic.com/21kytkp.jpg
http://i65.tinypic.com/9jkrv6.jpg

fidowag
18th July 2019, 05:57 PM
http://i66.tinypic.com/2rxjjvr.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவராத படம்

fidowag
18th July 2019, 08:29 PM
பாக்யா இதழ் -16/07/19
http://i63.tinypic.com/16bkkdh.jpg
http://i65.tinypic.com/2lbgdjr.jpg

fidowag
18th July 2019, 08:32 PM
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நாடு முழுவதும் 15/7/19 அன்று அனுசரிக்கப்பட்டது . பெருந்தலைவருடன் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i64.tinypic.com/352gi9j.jpg

fidowag
18th July 2019, 08:33 PM
http://i65.tinypic.com/vobqzt.jpg

fidowag
18th July 2019, 08:34 PM
http://i68.tinypic.com/faa78m.jpg

orodizli
18th July 2019, 08:34 PM
வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் பிரம்மாண்ட வெற்றி தயாரிப்பு "அடிமைப்பெண்" 19-07-2019 முதல் செங்கோட்டை - ஆனந்த் dts தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது...

fidowag
18th July 2019, 08:36 PM
http://i64.tinypic.com/30ruvxk.jpg

orodizli
18th July 2019, 08:38 PM
புரட்சித்தலைவர் குறித்து விவரமறியாமல் பேசிய ஆண்டிமுத்து ராசாவிற்கு கடும் கண்டனம்.

எம்ஜிஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் அவர் மக்கள் நினைவில் இருக்கிறார் --திட்டங்களால் அல்ல என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் சுத்தமாக எம்ஜிஆரை மறந்து விடுவார்கள் எனவும் உதகையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களின் 96 வது பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தற்போதைய நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசா பேசியள்ளதாக காண பெற்றோம்.

கமல்ஹாசனும் சீமானும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை பொறுக்க மாட்டாது அவர்களை சாட எண்ணிய இவர் சற்றும் தேவையில்லாது புரட்சித்தலைவரை விமர்சனம் செய்துள்ளார்.

கமலின் கட்சிக்கும் சீமானின் கட்சிக்கும் மக்கள் ஆதரவு தந்தது தனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது மக்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார்கள் எனவும் பேசியுள்ள ஆண்டிமுத்துராசா தொடர்ந்து தமிழகமெங்கும் பள்ளிகளை திறந்து கல்விக்கண் கொடுத்தவர் காமராஜர் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ் நாடு என்று மாற்றியவர் அறிஞர் அண்ணா பெண்களுக்கு சம உரிமை கொடுத்தது கருணாநிதி என்றெல்லாம் கூறியுள்ளார்.சரி ஒப்புக்கொள்கிறோம். இத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் நாம் ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

-- எம்ஜிஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் அவர் மக்களின் நினைவுகளில் இருக்கிறார் திட்டங்களால் அல்ல என்பதாக தொடர்ந்து ஆண்டிமுத்து ராசா கூறுகிறார். இதற்கு பெயர்தான் வாய் கொழுப்பு என்பது. இங்கு புரட்சித்தலைவர் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது.

ஆண்டிமுத்து ராசா போன்ற தரம்தாழ்ந்த அரசியல் நாகரீகமற்ற மிக கேவலமான அரசியல்{வியாதி}வாதிகளின் இதுபோன்ற விவரமறியா சிறுபிள்ளைத்தனமான பேச்சை என்னவென்று சொல்வது? ஐயா ஆண்டிமுத்து ராசா நீங்கள் முதலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் யார்? அவரது வரலாறு என்ன? அவர் கடந்து வந்த அரசியல் தடங்களின் நிகழ்வுகள் என்னென்ன? உலக அரசியல் அரங்கில் மற்ற தலைவர்களுக்கெல்லாம் இல்லாத அவரது சிறப்புகள் என்ன? என்பது போன்ற இன்னும் ஏராளமான அவரது வரலாற்றின் பக்க்கங்களையெல்லாம் முழுமையாக அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு பேசிட முன் வர வேண்டும்.அல்லாது ஏதோ போகிற போக்கில் காழ்ப்புணர்வின் அடைப்படையில் பேசுவது என்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும்.நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு சற்றும் உகந்ததல்ல.

முதலில் ஒருவர் இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டால்தானே அவரை மக்கள் மறப்பதற்கு.புரட்சித்தலைவர் எங்கே மறைந்தார்? அவரை மக்கள் மறப்பதற்கு. தனது பொன்னுடலால் மட்டுமே இத்தமிழ் மண்ணிலிருந்து இயற்கையுடன் அவர் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டு உணர்வுகளாலும் நினைவுகளாலும் என்றென்றும் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் கோடானுகோடி தமிழ் மக்களின் இதய சிம்மாசனத்தில் குன்றிலிட்ட விளக்காக ஓங்கி ஒளிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை நொடிப்பொழுதில் மக்களின் நினைவுகளிலிருந்து மறைந்து விடக்கூடிய தரம்கெட்ட ஆண்டிமுத்து ஆண்டிமுத்து ராசா பேசுவது வேடிக்கை வினோதமாக உள்ளது.

யாரை பற்றி யார் பேசுவது?

கங்கையை சாக்கடை தூற்றுவதா?
இமயத்தை குப்பை மேடு தூற்றுவதா?
சந்தனத்தை சகதி தூற்றுவதா?
சிங்கத்தை சிறு நரி ஏளனம் பேசுவதா?
ஊழலின் மொத்த உருவம் உத்தமரை தூற்றுவதா?

இப்படியான அரசியல்வியாதி ஆண்டிமுத்து ராசா மனிதப்புனிதர் புரட்சித்தலைவரை விமர்சனம் செய்வதா? ஆண்டிமுத்து ராசா அவர்களே -- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களின் உள்ளங்களில் கடந்த 30 ஆண்டுகளாக மரணமில்லா பெரு வாழ்வு வாழ்ந்து வருகிறார். ஆனால் உங்களையெல்லாம் ஆளாக்கிய உங்கள் தலைவர் கருணாநிதி அவர்கள் மறைந்து ஓரிரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் மக்கள் அவரை மறப்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் நீங்களே அவரை மறந்து விட்டீர்களே. இப்போதைய உங்கள் கட்சியின் சில சுவரொட்டிகளில் உங்களது இப்போதைய தலைவர் ஸ்டாலின் அவர்களும் அவரது புதல்வர் உதயநிதி மட்டும்தானே உள்ளனர்.இப்போதே இப்படியென்றால் எதிர்காலத்தில் அவரது நிலை.

ஆனால் புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுகவில் அவருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லையென்றாலும் மக்கள் அவரை தாங்கி பிடித்துள்ளனரே. மக்களின் உள்ளங்களில் காலங்களை கடந்த வரலாற்று நாயகராக இன்றளவும் மிகப் பிரகாசமாக ஒளிர்கிறாரே.மறந்து விட்டீர்களா? அல்லது அதை உணர ஞானம் போதவில்லையா?

அதுதான் புரட்சித்தலைவர்.

இந்நிலை இத்தமிழ் மண் உள்ளவரை தொடரும். இவ்வுலகமே அழிந்த நிலையிலும் இத்தமிழ் மண்ணின் கடைக்கோடியில் எங்காயினும் ஒரு தமிழர் வாழ்ந்து வருவாரேயாயின் அங்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேசப்படுவார் -நினைக்கப்படுவார். இது காலதேவனின் நிச்சயம்.

எனவே ஆண்டிமுத்துராசாவே நீங்கள் கூறுவது போல் இன்னும் 25 ஆண்டுகளின் மக்களின் நினைவுகளிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து விடுவார் எனும் கூற்று விவரமறியாமல் பேசும் சிறுபிள்ளைத்தனமானது -அபத்தமானது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நீடித்த நிலைபெற்ற புகழுக்கு சினிமாவும் ஒரு காரணமேயன்றி சினிமா மட்டுமே காரணமல்ல எனும் உண்மையினை உணராமல் பேசும் ஆண்டிமுத்து ராசா அவர்களே --இதற்கான எண்ணற்ற ஆதார நிகழ்வுகள் உண்டு இது பற்றிய உண்மை தெரிய வேண்டுமென்றால் புரட்சித்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இலையென்றால் என்னிடம் வாருங்கள்.நான் விளக்குகிறேன்.

புரட்சித்தலைவர் அவர்கள் மக்களின் உள்ளங்களில் சினிமாவால் மட்டுமே வாழ்ந்து வருகிறார் திட்டங்களால் அல்ல என்று உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஏதோ ஒரு சுயநல நோக்கத்துடன் பேசும் ஆண்டிமுத்து அவர்களே- ஆயிரம் திட்டங்கள் வேண்டாம் ஒரே ஒரு திட்டம் போதுமே. ஏழை குழைந்தைகளுக்கான சத்துணவு திட்டம் -ஆயிரம் திட்டங்களுக்கு சமமானதே அத்திட்டம். இன்றளவிலும் அத்திட்டம் ஒன்றால்தானே உலகெங்கிலும் உள்ள அறிஞர் பெருமக்களால் அரசியல் வல்லுநர்களால் நல்லவர்களால் வல்லவர்களால் புரட்சித்தலைவர் அவர்கள் போற்றப்பட்டு புகழப்பட்டு வருகிறார்.

எத்தகைய மகத்தான திட்டம்.லட்சக்கணக்கான ஏழை குழந்தைகள் வளர்ச்சி பெற்றதிட்டம் ஆயிரக்கணக்கான ஏழை பெண்கள் வேலை கிடைத்து பயன் பெற்ற திட்டம்.இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகுமளவுக்கு எண்ணிலங்கா சிறப்புகளை உள்ளடக்கிய திட்டம் ஒன்றினை கொண்டுவந்த புரட்சித்தலைவரை பாராட்ட , ஊனக்கண்ணை கொண்டுள்ள கோடீஸ்வரனான, ஊழலின் முழு உருவம் கொண்ட ஆண்டிமுத்து ராசாவால் எப்படி முடியும்?

ஆண்டிமுத்து ராசா அவர்களே -உங்களை இந்நிலைக்கு உயர்த்திய மறைந்த உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களின் ஆரம்பகால திரையுலக வாழ்வின் வளர்ச்சிக்கும் அரசியல் பொது வாழ்வில் முதல்வர் வரை அவர் உயர காரணமாக எவ்வாறெல்லாம் புரட்சித்தலைவர் இருந்துள்ளார் எனும் வரலாற்று உண்மைகளை உங்கள் கட்சியின் மூத்தவர்களிடம் முன்னோடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அவர்கள் கூறுவார்கள். அப்படி இல்லையென்றால் தமிழகத்தின் கடைக்கோடி குப்பனிடமும் சுப்பனிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள். அந்த அளவிற்கு திறந்த புத்தகமாக உள்ளவைகள் அந்நிகழ்வுகள்.

உங்களுக்கெல்லாம் அந்த வரலாற்றின் தடங்கள் தெரிய நியாயமில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் மனசாட்சியில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசி கொண்டு வருகிறீர்கள். உங்கள் துரைமுருகன் முரசொலி மாறன் போன்றவர்களை படிக்கவைத்து உயர்த்தியுள்ளதோடு நீங்கள் இருக்கும் திமுகவின் வளர்ச்சிக்கும் தனது உழைப்பை நல்கி பணம் பொருள் போன்றவற்றையெல்லாம் அள்ளிக்கொடுத்து எப்படியெல்லாம் திமுகவின் வளர்ச்சிக்கும் புரட்சித்தலைவர் அவர்கள் தோள் கொடுத்து வாழ்ந்தார் எனும் உண்மைகளை இனியாவது வரலாறு தெரிந்தவர்களிடம் ஆண்டிமுத்து ராசா கேட்டு தெரிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

காரணம் மக்கள் உங்களை ஏதோ விவரம் தெரிந்தவர் என்றெண்ணி பாராளுமன்றத்திற்கு மக்கள் தேர்தெடுத்து விட்டனர். எனவே இனியாவது எதார்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும் மனசாட்சியுடன் பேச வேண்டும் மக்களின் மன நிலையை நன்கு அறிந்து உணர்ந்து பேச வேண்டும். மேடையும் ஒலி பெருக்கியும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் போகிற போக்கில் பேசக்கூடாது என்பதை ஆண்டிமுத்து ராசாவின் சிற்றறிவுக்கு உணர்த்த விரும்புகிறேன் ........... EB மோகன்... Thanks mr.Mohan... wa.,

fidowag
18th July 2019, 08:39 PM
ஆந்திர பிரதேஷ் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ்,தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சந்திப்பு
http://i64.tinypic.com/10zwb29.jpg

fidowag
18th July 2019, 08:43 PM
http://i66.tinypic.com/28i9i85.jpg
http://i65.tinypic.com/2hdcti8.jpg
பேரறிஞர் அண்ணாவுடன் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திப்பு
http://i67.tinypic.com/2mdpjk5.jpg

orodizli
18th July 2019, 08:45 PM
#சத்துணவு திட்டம் கவர்ச்சிகர திட்டம் அல்ல தமிழக குழந்தைகளின் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசத்தின் அடையாளம்.

#மதிய உணவு திட்டத்தில் போடப்படும் உணவை குழந்தைகள் சாப்பிட முடியாமல் #குப்பையில் கொட்டுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் #அரங்கநாயகம் எம்ஜிஆரிடம் சொல்ல #அய்யய்யோ சாப்பாட நிருத்திடாதீங்க என பதட்டத்துடன். #சாப்பாட்டை பள்ளிகளிலேயே சுடச்சுட சமைத்துபோட்டால் என்ன என்று கேட்க்கிறார்.. #நம்மகிட்ட சமையல் தெரிந்த ஆட்கள் அதிகம் இல்லை,நிதியும் நம்மிடம் இல்லை திட்டம்
சாத்தியமில்லை என்கிறார்கள்.
அதிகாரிகள்..

#எம்ஜிஆர் விடுவதாக இல்லை. ஒருதிட்டத்தை தயார் பண்ணுங்க என்று #திரு.அரங்கநாயகத்திடம் உத்தரவிட ஏற்கனவே கோவையை சேர்ந்த #பேராசிரியை ஒருவர்கொடுத்த குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய நியூட்ரிஷியன் புஃட் என்கிற பைல் இருக்கு என்கிற செய்தி சொல்லப்பட, எம்ஜிஆர் அந்த பைலை கேட்டு அதை படித்தபிறகு
#அந்த அம்மாவை கூப்பிடுங்க என உத்தவிட
#கோவையை சேர்ந்த #ராஜம்மாள் தேவதாஸ் #மனையியல் கல்லாரியில் வேலை பார்த்தவங்களை அழைத்து நீங்க இருந்து திட்டத்தை நடைமுறை படுத்துங்க என்று அவரை திட்டத்தில் இணையச்செய்தார்கள்.
#அவங்க கொடுத்த ப்ராஜக்டின் தலைப்பான ""நியூட்ரிஷியன் புஃட் " ஐ #சத்துணவாக மொழிமாற்றம் செய்தவர் எம்ஜிஆர்.

தமிழக #குழந்தைகளின் மீது எம்ஜிஆருக்கு இருந்த #பாசத்தாலும், #பசியின் கொடுமையை அனுபவித்தவர் வேகமாக நடைமுறைப்படுத்தினார்.

#சத்துணவு திட்டத்திற்கு இந்திராகாந்தியின் #மத்தியஅரசு பணம் ஒதுக்க மறுத்தது. அத்துடன்

#ஆர்.பி.ஐ தமிழ்நாட்டு அரசு வங்கிகளில் வாங்கிய #ஓ.டி யின் தொகைக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை செய்தது #பிரனாப் முகர்ஜி.

#ஏழைக்குழந்தைகளின் வயிறு நிரம்பி மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு போவதை கொச்சை படுத்தின
#தமிழகத்தின் எதிர்கட்சிகள் ..
யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை குழந்தைகளின் மகிழ்ச்சி முக்கியம் என தனது திரையுலக #நட்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பல இடங்களில் #நட்சத்திர இரவுகளை நடத்தி #சத்துணவிற்காக நிதி திரட்டி வெற்றிகரமாக குழந்தைகளின் நலன் முக்கியம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

#நடிகராக இருந்த காலங்களில் மற்றவர்களுக்கு #கொடுத்து பழக்கப்பட்ட அவர் தமிழக குழந்தைகளுக்காக தன்னை சந்தித்தவர்களிடமெல்லாம் சத்துணவு திட்டத்தை சிறப்பாக செய்ய உதவி செய்யுங்கள் என மகிழ்ச்சியாக
#கையேந்த தொடங்கினார் என்பதுதான் சத்துணவின் வரலாறு..
#சத்துணவு என்பது கவர்ச்சி திட்டமல்ல அது அவரது #ஆன்மா சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இடம்.

#சத்துணவை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சி இந்தியாவில் மற்ற மாநில #குழந்தைகளைவிட ஒரு மடங்கு கூடுதலாக இருந்த தால் 3 வருடங்களுக்குப்பிறகு #சத்துணவு திட்டத்தை இந்திய அரசு ஒரு திட்டமாக ஒத்துக்கொண்டது.

#சத்துணவு திட்டத்தால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்பின் மூலம் பயன்பெற்றவர்கள்......... Thanks...

fidowag
18th July 2019, 08:51 PM
http://i64.tinypic.com/20upnx2.jpg
http://i66.tinypic.com/oaoubc.jpg

fidowag
18th July 2019, 08:53 PM
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி -எம்.ஜி.ஆர். சந்திப்பு
http://i67.tinypic.com/211ktug.jpg

fidowag
18th July 2019, 08:55 PM
http://i67.tinypic.com/wjwbra.jpg
http://i66.tinypic.com/2ugp8qp.jpg
http://i67.tinypic.com/vwr5dz.jpg

fidowag
18th July 2019, 08:59 PM
முன்னாள் முதல் எம்.ஜி.ஆர். அவர்களுடன் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி
http://i67.tinypic.com/9s9iqt.jpg
http://i64.tinypic.com/zv1yj7.jpg

fidowag
18th July 2019, 09:02 PM
http://i65.tinypic.com/344unv7.jpg
http://i66.tinypic.com/2ugeyyr.jpg

fidowag
18th July 2019, 09:04 PM
பொதுமக்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.சந்திப்பு
http://i63.tinypic.com/294s5kl.jpg
http://i66.tinypic.com/es3o0n.jpg

fidowag
18th July 2019, 09:13 PM
http://i66.tinypic.com/33nj1mu.jpg

fidowag
18th July 2019, 09:16 PM
.
http://i67.tinypic.com/oumsk2.jpg
கலைத்துறை சார்பில் மக்களின் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன்,இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் மாலை அணிவிக்கும் காட்சி .

fidowag
18th July 2019, 09:22 PM
http://i65.tinypic.com/anbp1g.jpg

fidowag
18th July 2019, 09:24 PM
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இயக்குனர் பாரதிராஜா
http://i64.tinypic.com/20pc9pz.jpg
http://i64.tinypic.com/142dg2a.jpg

fidowag
18th July 2019, 09:26 PM
http://i63.tinypic.com/2cgzvba.jpg

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பார்க்க
வந்திருந்த காட்சி .

http://i65.tinypic.com/3520l13.jpg

fidowag
18th July 2019, 09:31 PM
http://i64.tinypic.com/spdob9.jpg
http://i64.tinypic.com/v4m7nm.jpg

fidowag
18th July 2019, 09:54 PM
http://i63.tinypic.com/2dt696p.jpg

fidowag
18th July 2019, 09:56 PM
http://i64.tinypic.com/j11sli.jpg

fidowag
18th July 2019, 09:57 PM
http://i66.tinypic.com/2czcwwk.jpg

fidowag
18th July 2019, 09:58 PM
http://i67.tinypic.com/35b8pxt.jpg

fidowag
18th July 2019, 09:59 PM
தினத்தந்தி
http://i67.tinypic.com/snnsde.jpg

fidowag
18th July 2019, 10:09 PM
TOMORROW THE HAPPIEST DAY OF MGR FANS THIRTY SEVEN YEARS AGO ON THIS DATE FROM 2/7/1982 FRIDAY AT MADRAS THEATRES PARAGON, AGASTHIYA(70MM, SARAVANA & LIBERTY. SARAVANA FILMS 'PADAGOTTI' RELEASED BY OUR MGR FANS LEADER Mr.MUSIRIPUTHAN. THE FILM RUN FOR 3 WEEKS AT PARAGON
: AGASTHIYA - 1 WEEK
: SARAVANA - 3 WEEKS
: LIBRARY- 1 WEEK.
: PARAGON 1ST WEEK 21 SHOWS HOUSE FULL. PARAGON 2ND WEEK 15 SHOWS HOUSE FULL. PARAGON 3RD WEEK 8 SHOWS HOUSE FULL.
: AGASTHIYA 21 SHOWS HOUSE FULL.
.: SARAVANA 1ST WEEK 21 SHOWS HOUSE FULL. I DON'T EXACTLY ABOUT THE 2ND & 3RD WEEK IN SARAVANA.
: LIBERTY 19 SHOWS HOUSE FULL.
NO ONE IS EQUAL TO MGR.
: MGR SAW THE CROWD AT PARAGON THEATRE ON 3/7/1982 SATURDAY.

http://i66.tinypic.com/2up8gp5.jpg

fidowag
18th July 2019, 10:11 PM
http://i65.tinypic.com/w1b9ed.jpg

fidowag
18th July 2019, 10:12 PM
http://i68.tinypic.com/24mvvbc.jpg

fidowag
18th July 2019, 10:15 PM
கடந்த ஞாயிறு 14/07/19 அன்று மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது .
அவர் நினைவாக சில புகைப்படங்களின் தொகுப்பு
http://i63.tinypic.com/v6qf6t.jpg

fidowag
18th July 2019, 10:16 PM
http://i64.tinypic.com/se5bpg.jpg

fidowag
18th July 2019, 10:18 PM
http://i67.tinypic.com/27x10ky.jpg

fidowag
18th July 2019, 10:21 PM
http://i64.tinypic.com/fncr2x.jpg
http://i66.tinypic.com/30lgqp4.jpg

fidowag
18th July 2019, 10:24 PM
http://i64.tinypic.com/35lzplx.jpg

fidowag
18th July 2019, 10:30 PM
http://i64.tinypic.com/a3mv80.jpg
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.வின் நிறுவனருமாகிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நினைவஞ்சலி
http://i66.tinypic.com/157irl1.jpg

fidowag
18th July 2019, 10:45 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சாமுவேல், சத்தியமங்கலம் அவர்களுக்கு
சென்னையில் நல்லாசிரியர் மற்றும் சிறப்பு விருது வழங்கி , கிறிஸ்தவ பள்ளி (சேத்துப்பட்டு ) யில் கௌரவிக்கப்பட்டார் .அந்த விருதினை கோவையில்
எம்.ஜி.ஆர். சிலை முன்பு வைத்து வணங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i64.tinypic.com/2pyyxe9.jpg
http://i68.tinypic.com/19a1l4.jpg
http://i63.tinypic.com/2q8sq6u.jpg

fidowag
18th July 2019, 10:47 PM
http://i68.tinypic.com/1442vxy.jpg
http://i64.tinypic.com/ylxsn.jpg

fidowag
18th July 2019, 10:48 PM
http://i67.tinypic.com/2s95f6s.jpg

fidowag
18th July 2019, 10:49 PM
http://i67.tinypic.com/xeg975.jpg

fidowag
18th July 2019, 10:51 PM
கூண்டுக்கிளி திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.- பி.எஸ்.சரோஜா
http://i66.tinypic.com/20h6gcx.jpg

fidowag
18th July 2019, 10:52 PM
http://i67.tinypic.com/257km7a.jpg

fidowag
18th July 2019, 10:57 PM
கோவை சண்முகாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " படத்தின் ஞாயிறு மாலை காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு
http://i63.tinypic.com/4jl3c3.jpg
http://i64.tinypic.com/25fre5d.jpg

fidowag
18th July 2019, 10:59 PM
http://i63.tinypic.com/24fkaiq.jpg
http://i68.tinypic.com/5xk9xt.jpg

fidowag
18th July 2019, 11:01 PM
http://i63.tinypic.com/122hzsz.jpg
http://i65.tinypic.com/ejvgw4.jpg

fidowag
18th July 2019, 11:02 PM
http://i65.tinypic.com/2eye1cl.jpg
http://i66.tinypic.com/2q880wl.jpg

fidowag
18th July 2019, 11:07 PM
http://i65.tinypic.com/spavqc.jpg
http://i68.tinypic.com/ohfyr.jpg

fidowag
18th July 2019, 11:09 PM
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i63.tinypic.com/s5vc5d.jpg

fidowag
18th July 2019, 11:11 PM
நாளை முதல் (19/07/19) கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i66.tinypic.com/i4kc9k.jpg

fidowag
18th July 2019, 11:20 PM
நாளை முதல் (19/07/19) மதுரை அரசரடி சண்முகா சினிமாஸ் (மாப்பிள்ளை விநாயகர் )அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் டிஜிட்டல்
"ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகளில் மீண்டும் வெற்றி விஜயம்
http://i68.tinypic.com/6yiqvk.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
18th July 2019, 11:21 PM
http://i64.tinypic.com/2vl6xro.jpg
http://i64.tinypic.com/ao83mw.jpg

fidowag
18th July 2019, 11:22 PM
http://i67.tinypic.com/nqhc9.jpg

fidowag
18th July 2019, 11:23 PM
http://i64.tinypic.com/i3z33o.jpg

fidowag
18th July 2019, 11:24 PM
http://i63.tinypic.com/2aeschx.jpg

fidowag
18th July 2019, 11:43 PM
http://i65.tinypic.com/egvomv.jpg

fidowag
18th July 2019, 11:44 PM
http://i67.tinypic.com/r1byhf.jpg

fidowag
18th July 2019, 11:50 PM
நாளை முதல் (19/07/19) செங்கோட்டை ஆனந்தில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " இணைந்த 3 வது வாரமாக தினசரி 4 காட்சிகளில் நடைபெறுகிறது .

ரசிகர்கள் , பொதுமக்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க
தென்காசி தாய்பாலாவில் 2வாரங்கள் நல்ல வசூல் ஈட்டிய வேங்கையன் செங்கோட்டைக்கு 3 வது இணைந்த வாரமாக வெற்றி விஜயம் .
http://i67.tinypic.com/2dcitrp.jpg

fidowag
18th July 2019, 11:51 PM
http://i65.tinypic.com/2meqpeu.jpg

fidowag
18th July 2019, 11:51 PM
http://i64.tinypic.com/30il5hh.jpg

fidowag
18th July 2019, 11:53 PM
http://i68.tinypic.com/w6vbtk.jpg

orodizli
19th July 2019, 02:54 PM
பாண்டிச்சேரியில் 10/8/2019 சனியன்று மாலை 5மணி முதல் இரவு 9.30 வரை கடற்கரை காந்தி திடலில் தலைவர் 102 வது பிறந்த நாள் விழா பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கின்றது ! விழா அமைப்பு : பிரான்சு எம் ஜி ஆர் பேரவை - புதுவை எம்.ஜி.ஆர் பேரவை ! அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் ! வாரீர் ! வாரீர் ! ( திடீர் ஏற்பாடு குறுகிய காலம் இருப்பதால் நம் பக்தர்கள் அனைவரும் மறுபதிவு செய்து விழா வெற்றிக்கு துணை புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ! நன்றி !........... Thanks...

orodizli
19th July 2019, 02:55 PM
"#எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் #எம்ஜியார்.

அங்கேயே பொமரேனியன் ஆண், பெண் நாய்களையும் வளர்த்தார்.

ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது.

அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார்.

அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்:

’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை.

இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை”

என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல்.

ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து

“மிஸ்டர் எம்.ஜி.ஆர்.

நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை.

மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும்.
ஸ்மோகிங் இல்லை.
காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை.
என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா?
அது அறவே கிடையாது.நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.

அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.

எம்.ஜி.ஆரின் சுபாவம் மற்றும் அவருடைய பண்பட்ட குணநலன்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக நம் மனதைக் கவர்கிறது.......... Thanks...

orodizli
19th July 2019, 02:57 PM
எம்.ஜி.ஆரின் தாய் மொழி தமிழா..மலையாளமா..?
இரண்டும் இல்லை...

இறைவனின் தாய் மொழி எதுவோ...
எம்.ஜி.ஆரின் தாய் மொழியும் அதுதான்...!

அது ...அன்பு மொழி ..!!!

எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் ...பேச்சு வராமல் பெரும்பாடு பட்டார்...
அப்போது அவருக்கு பேச்சு சிகிச்சை அளிக்க , மனோகரன் என்ற மருத்துவர் நியமிக்கப்பட்டார்..
எம்.ஜி.ஆரோடு பழகிய அந்த நாட்களைப் பற்றி டாக்டர் மனோகரன் பின்னர் ஒருமுறை அளித்த பேட்டி...

“ஒருமுறை கோவைக்குச் சென்றிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, எம்.ஜி.ஆர்.., என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து "குடிங்க" என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது.
பக்கத்தில்தான் எம்.ஜி.ஆரின் சொந்த ஊரான பாலக்காடும் இருந்தது. அங்கு கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.

நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, "ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே"...என்று கூறியவர், "உடம்ப பார்த்துக்கங்க.." என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், "மனோகரனை கவனிச்சுக்கங்க" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்...... நான் உருகிப் போனேன்...!!!”

# எப்படி உருகாமல் இருக்க முடியும்..?

எம்.ஜி.ஆரைப் பற்றி முன்னர் ஒருமுறை எழுதியது இப்போதும் நினைவுக்கு வருகிறது..!!

“ஆண்மைக்கும் தாய்மை உண்டு..”
அந்த தாய்மையின் தனி வடிவம் ..எம்.ஜி.ஆர்..!!!.......... Thanks...

orodizli
19th July 2019, 02:58 PM
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் படங்களின் தலைப்புகள் மிகவும்

பொருத்தமில்லாமலும் - ஆபாச பெயர்களும் - சமூக விரோதிகளின் பெயர்களையும் தாங்கி வருவது வேதனையான
தகவல் என்று நீதிபதிகள் கூறும் அளவிற்கு இன்றைய சினிமா
உலகம் உள்ளது .

மக்கள் திலகம் தன்னுடய படங்களின் பெயர்களை என்ன ஒரு

தீர்க்கதரிசனமாக , மங்களகரமான பெயர்களை வைத்து மக்கள் மனதில் பதியும் படி வைத்து வெற்றி கண்டார் .

மக்கள் திலகத்தின் படங்களின் மனம் கவரும் தலைப்புகள் .

இன்று போல என்றும் வாழ்க

பல்லாண்டு வாழ்க

உழைக்கும் கரங்கள்

ஊருக்கு உழைப்பவன்

உரிமைக்குரல்

சிரித்து வாழ வேண்டும்

நல்ல நேரம்

அன்னமிட்ட கை

ஒரு தாய் மக்கள்

நம்நாடு

ஒளிவிளக்கு

காவல்காரன்

தொழிலாளி

எங்க வீட்டு பிள்ளை

ஆயிரத்தில் ஒருவன்

தர்மம் தலைகாக்கும்

என்று மக்கள் மனம் கவரும் பெயர்கள் தாங்கி படம் வந்ததால் இன்றும் அவர் படங்கள் பேசப்படுகிறது .

சத்யராஜ் (நடிகர்)
நீங்கள் யாரோட ரசிகர்?

ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.

'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.

இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரதநாட்டியம் - மேலைநாட்டு நடனம் இரண்டிலும் தன்னுடைய தனி முத்திரையை காட்டி ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை அடித்திருப்பார் .

மக்கள் திலகத்தின் நடனத்தின் போது அவருடைய முக பாவங்கள் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம் .நடன அசைவுகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும் .

எனக்கு தெரிந்த வரையில் மக்கள் திலகம் ஒரு ஆல் ரவுண்டர் .

பெரிய இடத்து பெண்- அன்று வந்ததும் அதே நிலா

தெய்வத்தாய் - ஒரு பெண்ணை பார்த்து

பணத்தோட்டம் - ஒருவர் ஒருவராய் பிறந்தோம்

என்கடமை - யாரது யாரது சொந்தமா

தொழிலாளி - வளர்வது கண்ணுக்கு ....

எங்கவீட்டு பிள்ளை - பெண் போனால் ........

கலங்கரை விளக்கம் - பல்லவன் பல்லவி ....

ஆசை முகம் - என்னை காதலித்தால் மட்டும் ....

அன்பே வா - நாடோடி ..ஓடி .....

நான் ஆணையிட்டால் - நல்லவேளை நான் பிழைத்த கொண்டேன்

பறக்கும் பாவை - சுகம் எதிலே ..... மது ரசமா

தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு

காவல்காரன் - நினைத்தேன் வந்தாய்

குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை கேட்டு

ரகசிய போலீஸ் 115 - என்ன பொருத்தம் இந்த .....
நினைத்தை நடத்தியே ....

தேடிவந்த மாப்பிள்ளை - தொட்டு காட்டவா

எங்கள் தங்கம் - ஒரு நாள் கூத்துக்கு ...

சங்கே முழங்கு - பொம்பளை சிரிச்சா போச்சி

ராமன் தேடிய சீதை - திருவளர் செல்வியோ

உலகம் சுற்றும் வாலிபன் - பச்சைக்கிளி .. முத்துச்சரம் ..

உரிமைக்குரல் - நேற்று பூத்தாளே ......

நினைத்தை முடிப்பவன் - தானே .. தானே ,, தானே மேனி ....

நாளை நமதே - நானொரு மேடை பாடகன் ...

நீதிக்கு தலை வணங்கு - கனவுகளே .. ஆயிரம் ....

இன்றுபோல் என்றும் வாழ்க - என் யோக ஜாதகம்

மேற் கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றமும் , சுறுசுறுப்பான நடனமும்
என்றென்றும் மறக்க முடியாத பாடல்களாகும் .

உலக திரைப்பட வரலாற்றில் நம் மக்கள் திலகம் படைத்த சாதனைகள் இந்த தலை முறை
மட்டுமல்ல எதிர்கால தலைமுறையினரும் கண்டு மகிழ்வார்கள் என்பதற்கு இந்த பாடல்
காட்சிகளே சான்று ........... Thanks...

orodizli
19th July 2019, 02:59 PM
#தாமதம் #ஏன்?

புரட்சிதலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதறகாக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக் கிடப்பதைப் பார்த்து அந்த நபரை தன் காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நிகழ்சசிக்கோ நேரமாகிவிட்டது.

எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுத்தான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார்...!

தொடர்ந்து பேசிய புரட்சித்தலைவர் ... "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."

ஆனால்...!

"இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய #மனிதாபிமானம் #உள்ளவர்கள் #உலகிலேயே #எங்கள் #தமிழ்நாட்டினர்தான்...#என்று #பெருமையோடு #தெரிவித்துகொள்கின்றேன் ..."

என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது... .................. Thanks...

fidowag
19th July 2019, 04:26 PM
தினகரன் - வெள்ளிமலர் -சினிமா செய்திகள் -old is gold
--------------------------------------------------------------------------------------------
1.நிஜ தம்பதிகளான என்.எஸ்.கிருஷ்ணன்,-டி.ஏ.மதுரம் ஜோடி 75 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் .

2.1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

3.தமிழில் " வயது வந்தவர்களுக்கு மட்டும் "சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் படம்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "மர்மயோகி " திகில் காட்சிகளுக்காக கொடுக்கப்பட்டது .

4.மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து தயாரித்த படம் "நாம் "
மேகலா பிக்ச்சர்ஸ் தயாரிப்பு

5.பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு " திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது .முதலில் இதை நாடகமாக எழுதிய அண்ணா முழு திரைக்கதையை ஒரே இரவில் எழுதி முடித்தார்

6.நடிகர் சிவகுமாரின் முதல் படம் காக்கும் கரங்கள். 100 வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி . 100 வது படத்தின் வெற்றி விழாவிற்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.
கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் சிவகுமார் காவல்காரன், இதயவீணை படங்களில் நடித்துள்ளார் .

7.மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை சரோஜாதேவி 26 படங்களிலும் ஜெயலலிதா 28 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்

8.தமிழில் ஜனாதிபதி பரிசு (வெள்ளி பதக்கம் ) பெற்ற முதல் படம் மலைக்கள்ளன்

9.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொந்தமாக எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் பெயரில் 3 படங்களை தயாரித்தார் . அதில் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார் . இரண்டும் வெள்ளிவிழா படங்கள். மூன்றாவது படமாகிய அடிமைப்பெண் இயக்குனர் கே.சங்கர் டைரக்ட் செய்தார் .அடிமைப்பெண் படமும் வெள்ளிவிழா கொண்டாடியது .

10.1936ல்ல திரையுலத்திற்கு அறிமுகமாகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
1947ல் கதாநாயகனாக உயர்ந்து 1977 வரை தொடர்ந்து திரையுலகில் 41 ஆண்டுகள் பணியாற்றி வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் .

fidowag
19th July 2019, 05:33 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சபாஷ் மாப்பிளே 14-7-1961 வெளியானது 58 ஆண்டுகள் நிறைவு பெற்றது . சென்னை பிளாசா பாரத் மகாலட்சுமி 48 நாள் நல்லவன் வாழ்வான் வரும் 31-8-1961 வரை ஓடியது.
: இப்படத்தில் மருதகாசி இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிரிப்பவர் சில பேர் அழபவர் பல பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ ? உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை உழைப்பவர் உயர்ந்தால் போதுமையாஎன்ற அருமையான கருத்துள்ள ஏழைகள் உழைப்பாளர்கள் பற்றி எம்ஜிஆர் அவர்கள் படத்தில் தான் இந்த கருத்துக்கள் வரும். மக்கள் மனதில் படிப்படியாக இடம் பெற்றார். அதனால்தான் மற்றவர்கள் அவரை கிண்டல் கேலி பேசிய போதும் மக்கள் அதை நிராகரித்து தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.[படத்தையும் மக்கள் திலகத்தின் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பையும் பார்த்துவிட்டு அறிஞர் அண்ணா, 'சபாஷ் எம்ஜிஆர் ' என்று பாராட்டிய படம்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முழு நீள நகைச்சுவை படத்தில் கதாநாயகனாக
நடித்திருந்தார் . நடிகவேள் எம்.ஆர். ராதா முதன் முறையாக மக்கள் திலகத்துடன்
இணைந்து நடித்தார் . அதன்பின் பல படங்கள் 1966ல் பெற்றால்தான் பிள்ளையா
படம் வரையில் நடித்தார் .

1975ல் முதன் முறையாக ராம் தியேட்டரில் பார்த்தேன் . அதன்பின் பல முறை
பிரபாத், சரவணா , பத்மநாபா , பிளாசா அரங்குகளில் பார்த்துள்ளேன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நகைச்சுவை வேடத்திலும் தன்னால் நடிக்க
முடியும் என்று நிரூபித்த படம் . மும்பையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது

fidowag
19th July 2019, 05:35 PM
http://i68.tinypic.com/11vjlu8.jpg

fidowag
19th July 2019, 05:36 PM
http://i68.tinypic.com/k1cqpx.jpg
http://i64.tinypic.com/s2wffo.jpg

http://i67.tinypic.com/befpd4.jpg

fidowag
19th July 2019, 05:40 PM
http://i64.tinypic.com/20u1s7r.jpg
http://i67.tinypic.com/o77dli.jpg
http://i65.tinypic.com/wtjf4j.jpg

fidowag
19th July 2019, 05:42 PM
http://i65.tinypic.com/wsuuyg.jpg
http://i66.tinypic.com/im5qo3.jpg

fidowag
19th July 2019, 05:44 PM
http://i67.tinypic.com/rszfgh.jpg
http://i66.tinypic.com/30u9rq1.jpg

fidowag
19th July 2019, 05:46 PM
http://i66.tinypic.com/8zjvb9.jpg
http://i68.tinypic.com/2efl55c.jpg
http://i65.tinypic.com/5kkjg9.jpg

fidowag
19th July 2019, 05:49 PM
http://i67.tinypic.com/2aezfo2.jpg
http://i67.tinypic.com/rk9efc.jpg

fidowag
19th July 2019, 05:51 PM
http://i63.tinypic.com/k197qt.jpg
http://i63.tinypic.com/2rfq42c.jpg

fidowag
19th July 2019, 05:52 PM
http://i67.tinypic.com/2z8wx01.jpg
http://i66.tinypic.com/2vumwic.jpg

fidowag
19th July 2019, 05:55 PM
http://i66.tinypic.com/2cpdnpk.jpg
http://i65.tinypic.com/axzdck.jpg

fidowag
19th July 2019, 05:57 PM
http://i67.tinypic.com/4qirmw.jpg
http://i64.tinypic.com/2vn5k0i.jpg
http://i64.tinypic.com/2640tq1.jpg

fidowag
19th July 2019, 06:00 PM
http://i63.tinypic.com/1z4yghx.jpg

fidowag
19th July 2019, 06:03 PM
http://i68.tinypic.com/j5imo9.jpg

orodizli
19th July 2019, 06:03 PM
இன்று 19-07-2019 முதல் திருச்சி - கெயிட்டி திரையரங்கில், எப்பொழுதும் மறு வெளியீடு காவியங்களின் வற்றாத வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் வழங்கும் " குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண்கிறது...

fidowag
19th July 2019, 06:04 PM
http://i64.tinypic.com/357fsip.jpg

fidowag
19th July 2019, 06:05 PM
http://i66.tinypic.com/20pown9.jpg

fidowag
19th July 2019, 06:06 PM
http://i68.tinypic.com/2w5rej7.jpg

fidowag
19th July 2019, 06:07 PM
http://i64.tinypic.com/2zsxrhe.jpg

fidowag
19th July 2019, 06:10 PM
http://i68.tinypic.com/330ahsk.jpg

orodizli
19th July 2019, 08:25 PM
"நான் குற்றம் சாட்டப்பட்டவன், எல்லோரையும் போல் நானும் நின்று கொண்டே பதில் கூறுகிறேன்"

நீதி மன்றம் கொடுத்த சலுகையையே மறுத்த #மக்கள்திலகம்

அது 1973 மார்ச் மாதம் 27ம் தேதி.

திருப்பூரில் முன்னாள் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் துரைசாமி (தற்போது ம.தி.மு.க) நமது #புரட்சித்தலைவர் மேல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக, தற்போது பலர் கேட்பதைப் போல், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கவில்லை - நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள்.

மாறாக, தானே நேரில் ஆஜாராகி நீதிபதி தொடுத்த சுமார் 50 க்கும் மேலான வினாக்களுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.

தலைவரின் பதில்கள் முழுவதையும் பதிவு செய்த எழுத்தர், தயக்கத்தோடு, தலைவரின் வயதை கேட்க, தலைவரோ

"ஏன் தயங்குகிறீர்கள், நீதி மன்ற நடைமுறைகளில் ஒன்று தானே இது"

-என்று கூறி அவரது அச்சத்தை போக்கி, தனது வயதை தெரிவிக்கிறார்.

தொழில் அரசியல்தானே என்று வினவும் பொழுது, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்

"அரசியல் என் தொண்டு, சினிமாவில் நடிப்பு என் தொழில் "

-என்று கூறியது மட்டுமல்லாமல்,

"சிலர் அரசியலை தொழிலாக்கி பிழைப்பாக்கி கொண்டதால், நான் என் தொழிலை விட்டு அரசியலுக்கு வர நேர்ந்தது"

-என்று நகைச்சுவையாக மேலும் சொன்னார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வழக்கு போட்ட துரைசாமியே குற்றம் சாட்டப்பட்ட நம் தலைவர் அவர்கள் 'நாற்காலியில் அமர்ந்தவாறே பதில் சொல்லலாம்' என்று கூறிய பொழுதும், அதை நாசூக்காக மறுத்து, நீதிமன்ற நடைமுறைப்படி,

"நான் குற்றம் சாட்டப்பட்டவன், எல்லோரையும் போல் நானும் நின்று கொண்டே பதில் கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கும், அதன் நடை முறைகளுக்கும் பெரும் மதிப்பளித்து அவர் கூறிய இந்த பதில், நீதிபதி உட்பட எல்லோரையும் நெகிழ வைத்தது.

அதுதான் 'நீதிக்கு தலை வணங்கு' என்று அறிவுறுத்திய நம் மன்னன், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்பு !

அன்பின் பிறப்பிடம், பண்பின் சிகரம், பாசத்தின் உறைவிடம், நேசத்தின் இருப்பிடம். உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். !

அன்புடன்
படப்பை R.D.பாபு........... Thanks...

orodizli
19th July 2019, 08:26 PM
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு தலைவர் பட குழு ஜப்பான் வந்து சேருகிறது.

குழுவினர் நடுவில் ஒரு மன்னன் போல நடந்து வருகிறார் வாத்தியார்...

கஸ்டம்ஸ் பகுதியை கடந்து வரும் போது வேஷ்டி ஜிப்பா தலையில் தொப்பியுடன் வந்த எம்ஜிஆர் அவர்களை பார்த்த ஜப்பானிய விமானநிலய பணிப்பெண்கள் எம்ஜிஆர் இவ்வளவு எளிமையாய் இருக்கிறாரே என்று வியநதனர்

அவர் அருகில் சென்ற நான் வாருங்கள் வணக்கம் ஜப்பான் expovil அனுமதி கிடைப்பது கடினம் நம் தமிழ்நாடு போல இல்லை ஆனாலும் ஒருவாரம் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி உள்ளேன் என்றேன்...

ஒரு வாரம் இருக்கு போதும்...என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் எம்ஜிஆர்..

நடு இரவு ஒரு மணி டோக்கியோவில் உள்ள பிரபல இம்பீரியல் ஹோட்டல் முன் குழு வந்து இறங்குகிறது

நாகேஷுக்கு நடை சரியில்லை..அசோகன் அசைவு சரி இல்லை. மஞ்சுளா முகம் மங்கி இருந்தது..சந்திரகலா சரியாக பேசவில்லை...எனக்கு காரணம் புரியவில்லை. வாத்தியார் மட்டும் அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு என்னிடம் வந்து விமானத்தில் யாரும் சாப்பிடவில்லை அனைவருக்கும் நான் உள்பட சரியான பசி.

இப்போது நம்ம ஊர் சாப்பாடு எங்காவது கிடைக்குமா என்று என்னிடம் கேட்க பதறிய நான் அந்த இரவிலும் ரசமும் சோறும் கிடைத்தால் கூட போதும் என்று அவர் சொன்ன வார்த்தை உணர்ந்து ஒரு பெரிய காரில் இரவோடு இரவாக எனக்கு தெரிந்த பேங்க் ஆப் இந்தியா சந்தானம் வீட்டுக்கு சென்று கதவைத்தட்டினேன்

எம்ஜிஆர் வந்து இருக்கிறார் என்ற உடன் அந்த தம்பதியினர் அசந்து வியந்து அந்த வேளையில் சுட சுட சாதம் ரசம் அப்பளம் வத்த குழம்புடன் அனைவரும் வயிறார பசியாற அனைவரும் சாப்பிடத்தை உறுதி செய்து கொண்ட நம் வாத்தியார் அந்த சந்தானம் தம்பதியருக்கு நன்றி சொல்லி புறப்பட அவர்கள் இது கனவா நினைவா என்று திகைத்து போனார்கள்.......... Thanks...

orodizli
19th July 2019, 08:27 PM
வாலி மக்கள் திலகத்திற்காக

நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்).......... Thanks...

fidowag
20th July 2019, 04:33 PM
தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் முதல் தயாரிப்பு.வெளியான தேதி 18/07/1964. வெளியாகி 55 ஆண்டுகள் நிறைவு பெற்றது

இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

தெய்வத்தாய் ஆரம்ப காட்சி தன் தாயாரை சந்திக்க வருவார் எம்ஜிஆர். ஏன் இவ்வளவு லேட் என்பார். அதற்கு என் எதிரிகள் என்னை தாக்க திட்ட மிட்டனர். அவர்களுடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கிவிட்டேன் என்பார்.
: கலை உலகம் மட்டுமில்லை அரசியலிலும் புரட்சித்தலைவரை எதிரிகள் பல வகையில் தாக்கினார்கள். தமிழக முதல் அமைச்சராக இருந்த போது தினம் ஒரு போராட்டம் நடத்தினார் கருணாநிதி. அவரை 13 வருடங்கள் கோட்டை பக்கம் வராமல் அவருடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கினார் புரட்சித்தலைவர்.
: தமிழ் சினிமாவில் எம்ஜியார் படம் சிவாஜி படம் ஸ்ரீதர் படம் பிறகு பாலச்சந்தர் படம் என்று பேசப்பட்டது. தெய்வத்தாய் படத்தில் வசனம் எப்படி இருக்க வேண்டும் மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்று உணர்த்தினார்.

வாழைமலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா[ என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகளைத்தான் தன்னுடைய காரின் கண்ணாடியில் பதித்து வைத்திருந்தார் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருந்த மறைந்த திரு. ராமாவரம் தோட்டம் எம்ஜியார் விஜயன் அவர்கள்.

சென்னை பிளாசா கிரவுன் புவனேஸ்வரி 100 நாள் ஓடியது. மதுரை கல்பனா கோவை ராயல் தொழிலாளி வரும் வரை 69 நாள் ஓடியது. நெல்லை லட்சுமி 50 நாள் ஓடியது.
குமுதம் பத்திரிகை மக்கள் திலகம் படம் விமரிசனம் மட்ட மாக இருக்கும்.எம்ஜிஆர் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழதும். தெய்வத்தாய் பற்றி தரக்குறைவாக எழதியது. மறு வாரமே விளம்பரத்தில் கருத்துக் குருடர்களின் எழத்திக் கனைகளை முறியடித்த படம் என்றுவிளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.
: இது ஒரு சத்யா மூவிஸ் தயாரிப்பு!
: சேலம் ஓரியண்டல் 69 நாள் ஓடியது.



வசனம் : கே. பாலச்சந்தர் . இயக்கம் : பி.மாதவன் . இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமான ஜோடி என பேசப்பட்ட சரோஜாதேவி ஆடல், பாடலுடன் மிக சிறப்பாக நடித்திருந்தார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களில் புதுமையான நடன அசைவுகளை புகுத்தி
ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .
நகைச்சுவை மன்னன் நாகேஷ் தனக்கே உரிய பாணியில் சிரிக்க வைத்தார் .
நடிகர் அசோகன் தந்தையாகவும், பண்டரிபாய் தாயாகவும் நன்கு சோபித்தனர் .
வில்லன் எம்.என். நம்பியார் எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.என். லட்சுமி, மற்றும் பலர் நடிப்பில் மெருகேற்றி படத்தை சிறப்பித்தனர் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுக காட்சி அபாரம். முதன்முறையாக விமானத்தில் இருந்து வெளி வரும் காட்சி. பல காட்சிகளில் கருத்தாழமிக்க வசனங்கள் பேசி கைதட்டல்கள் பெற்றார் . துப்பறியும் அதிகாரி வேடம் கைவந்த கலை போல நடித்தார் . பாடல்கள் மிகவும் இனிமை. மெல்லிசை மன்னர்கள் டைட்டில் இசையில் இருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் வரையில் பாராட்டும்படி இருந்தது .கிளைமாக்ஸ் காட்சிகளில் குற்றவாளி யான தன் கணவன் தன் மகனுக்கு அவர்தான் தந்தை என்பது தான் உயிரோடு இருக்கும்வரை தெரியக்கூடாது என்கிற வகையில் உணரிச்சிமிக்க போராட்டமாக காட்சிகளை திறமையாக இயக்கிய
இயக்குனர் மாதவன் பாராட்டத்தக்கவர் .அதற்கு வசனகர்த்தா பாலச்சந்தரின் வசனங்கள் கைகொடுத்தன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காதல், வீரம், தீரம், துப்பறிவது சண்டை நடனம் சோகம் உணர்ச்சி , தாய்மை ஆகிய வற்றை காட்சிகளில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களை கவர்ந்தார் .


பாடல்கள் :
1. காதலிக்காதே, கவலைப்படாதே (பி.சுசீலா )
2. [பருவம் போன பாதையிலே (பி.சுசீலா )
3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ( கொள்கை பாடல் )
4. இந்த புன்னகை என்ன விலை ( மேல் நாட்டு நடனம் / கிராமிய நடனம் கலந்த காதல் பாடல் )
5. வண்ணக்கிளி சொன்ன மொழி (காதல் பாடல் )
6. ஒரு பெண்ணை பார்த்து ( அருமையான ட்விஸ்ட் நடனத்துடன் காதல் பாடல் )
7. உண்மைக்கு வேலியிட்டு 0(சீர்காழி கோவிந்தராஜன் - சோக பாடல் )

1974ல் ,முதன்முறையாக பார்த்தேன். அரங்கு ஞாபகமில்லை. ஆனால் பல அரங்குகளில் பார்த்துள்ளேன். இருப்பினும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஆனந்த் அரங்கில் பக்தர்களுடன் கண்டுகளித்து மறக்க முடியாதது .

fidowag
20th July 2019, 04:36 PM
http://i67.tinypic.com/msnn84.jpg
http://i68.tinypic.com/5wgodw.jpg