PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

orodizli
14th November 2019, 08:57 PM
திருமங்கலம் - ஆனந்தா DTS., திரையரங்கில் நாளை 15-11-2019 வெள்ளிக்கிழமை முதல் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி ...வருகின்றார் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., நடித்த "ரிக்சாக்காரன்" விருதுநகர் ஆலம்பட்டி - ஸ்ரீராம் DTS., நாளையும் தொடர்கின்றார் ... "எங்கவீட்டுப்பிள்ளை"... எம்.ஜி.ஆர்., நன்றி மதுரை.எஸ் குமார்........... Thanks.........

orodizli
15th November 2019, 07:52 AM
புரட்சித்தலைவர் பற்றி அவதூறு கூறிய சிவாஜி சமுக நலப்பேரவைக்கு கடும் கண்டனம். (சமூக நல பேரவை ன்னா என்ன ஜாதி சங்கமா? இதுல எத்தனை பேர் இருக்கிங்க, யார் இது கே.சந்திரசேகரன்)


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 12 -11 -2019 அன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இனி தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கும் நடிகர்கள் எவருக்கும் சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் என்று கூறி விடட்டாராம்... உடனே பொங்கி எழுந்த சிவாஜி சமூகநல பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் என்பவர் தனது அறிக்கையில் தேவையின்றி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து வரலாறு தெரியாமல் அறிவு முதிர்ச்சியின்றி, சிறுபிள்ளைத்தனமாக கருத்து ஒன்றினை பதிவு செய்துள்ளதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது இந்த பதிவு...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது கருத்தில் வயதான பின்னர் இப்போதைய நடிகர் கட்சி துவங்குகிறார்கள் என்று கூறியுள்ளதை கே.சந்திரசேகரன் எனும் அந்த நபர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி முதல்வரின் தலைவர் எம்ஜிஆரும் வயதான பின்னர் தானே கட்சி துவங்கினார் என்பதாக சற்றும் தேவையின்றி புரட்சித்தலைவரை சீண்டியுள்ளார். முதல்வர் பழனிசாமி அவர்கள் சிவாஜி வயதான பின் கட்சி துவங்கினார் என்று கூறவில்லை.ரஜினி போன்றவர்கள் 67 வயதை கடந்த நிலையில் எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாத நிலையில் கட்சி துவங்குவதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளார்.அவர் சுட்டி காண்பித்துள்ளதும் உண்மைதானே நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துள்ள ஒன்றுதானே. இதில் என்ன தவறு உள்ளது. இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக எதற்கு இந்த நபர் கே.சந்திரசேகரன் என்பவர் தேவையின்றி காழ்ப்புணர்வின் அடிப்படையில் புரட்சித்தலைவரை சாட வேண்டும் என்பதே எனது கேள்வி.

இந்த நபர் புரட்சித்தலைவர் மீது கொண்டுள்ள வன்மம் பொறாமை காரணமாக கூறியுள்ள அனாவசிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சிவாஜி கணேசன் அவர்கள் குறித்தும் கருத்து கூற வேண்டியது எமது கடமையாகிறது. மேலும் சிவாஜி சமூகநல பேரவை செயலாளர் தனது அறிக்கையில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்த காரணத்தினால்தான் சிவாஜி அவர்கள் தோல்வியை தழுவினார் என்பதாகவும் உண்மைக்கு மாறாக கூறியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1933 களிலேயே அரசியலில் ஈடுபட்டவர் அப்போது அவருக்கு வயது 16. அதற்கு முன்னரே அதாவது அவரது 12 வயதிலேயே நாட்டு பற்று கொண்டு கள்ளுக்கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானவர். சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலத்தில் தான் கழ்டபட்டு உழைத்து சம்பாதித்த காலணாவை தனக்கு இல்லையெனினும் பரவாயில்லை நாட்டு மக்களுக்கு கொடுத்து விட வேண்டும் எனும் நாட்டு பற்று காரணமாக காந்தியடிகளிடம் {குவெட்டா பூகம்ப நிதிக்காக} கொடுத்து ஆசி பெற்றவர். [ இந்நிகழ்வு குறித்து முன்னரே "புதிய தலைமுறை" வார இதழில் புரட்சித்தலைவரின் பாதுகாவலர் கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் விரிவான கட்டுரை ஒன்றினை பதிவு செய்துள்ளார்.]

அன்று 10 வயது முதலே துவங்கியது புரட்சித்தலைவரின் அரசியல் பயணம்.அப்போது முதல் தான் உழைத்து ஈட்டிய பொருள் பணத்தையெல்லாம் தனது வாழ்நாளின் இறுதி காலம் வரை தமிழ் நாட்டின் மக்களுக்கு மட்டுமின்றி இந்திய தேசத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் கொடுத்து கொடுத்து மகிழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அதாவது திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே அரசியலில் ஈடுபட்டவர் அதன் வாயிலாக நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்துள்ளவர். அடுத்து 1953 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டவர். அப்போது அவருக்கு வயது 35 அடுத்து அவர் கட்சி துவங்கியபோது வயது 55 .அடுத்து அவர் ஆட்சியை பிடித்தபோது வயது 60 .ஏறத்தாழ 10 வருடங்கள் மக்களுக்கான நல்லாட்சியை தந்து தனது பொன்னுடலால் மட்டுமே இத்தமிழ் மண்ணிலிருந்து மறைகிறார். உணர்வுகளால் இன்றளவும் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.இத்தகைய உயர் சிறப்புக்கள் அரசியல் அனுபவங்கள் சிவாஜிக்கும் ரஜினிக்கும் கமலுக்கும் உண்டா? இதைத்தானே முதல்வர் எடப்பாடியார் அவர்கள் சுட்டி காட்டி பேசியுள்ளார்.இவைகள் வரலாற்றின் மறைக்க முடியாத பக்கங்கள்தானே. இதில் கோபப்படுவதற்கு என்ன உள்ளது? மனமுவந்து ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

இப்படி தனது [10 வயது முதல்} சிறு வயது முதலே நாட்டின் மீதும் மக்களின் மீதும் அன்பு கொண்டு அரசியலில் ஈடுபட்டு அதன் பின் காழ்ப்புணர்வு காரணமாக எதிரிகளின் எண்ணிலங்கா தாக்குதல்களையும் சோதனைகளையும் ஆண்டாண்டு காலம் வீரத்துடன் எதிர் கொண்டு பின்னர் அவற்றை நிர்மூலமாக்கி பின் தனது சாதனைகள் மூலம் ஆட்சியை பிடித்து உலக சாதனை புரிந்து பின் தனது 70 வது வயதில் தனது ஆத்மார்த்தமான மக்கள் நல பணியை நிறைவு செய்யும் அந்த தருணத்தில் நாட்டு மக்கள்மீது எவ்வித அக்கறையும் கொள்ளாது அவர்களுக்கு சொல்லும்படி எவ்வித உதவிகளும் செய்யாது தடாலடியாக தங்களது 70 வது வயதில் உடனடியாக அரசியலுக்கு வந்து இன்ஸ்டன்ட் காப்பி தயாரிப்பது போல உடனடியாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கருதும் இப்போதைய நடிகர்கள் குறித்து முதல்வர் எடப்பாடியார் கூறியுள்ளதில் என்ன தவறு உள்ளது?. இந்த உண்மையை கூறியதில் சிவாஜி நலப்பேரவை தலைவர் தேவையின்றி எதற்கு புரட்சித்தலைவரை சாட வேண்டும்?.


அடுத்து ஜானகி அம்மையாருடன் அரசியல் கூட்டணி வைத்ததாலேயே சிவாஜி அவர்கள் தோல்வியுற்றார் என்று கூறுகிறார் சிவாஜி பேரவை தலைவர். சிவாஜி அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு முன் தங்கள் சமூக மக்கள் அதிகம் வாழும் இடத்தில் போட்டியிட வேண்டும் என்று கருதியே திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார்.அங்கு குறைந்த பட்சம் அவராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.இல்லையே.நிலைமை அப்படியிருக்க கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பார் என்பதாக ஜானகி அம்மையாரை குறை சொல்வானேன். ஜானகி அம்மையார் தோல்வியுற்றதற்கும் புரட்சித்தலைவர் மீது மக்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் பாசமுமே காரணம்.தங்களின் உயிருக்கு உயிரான தலைவராம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்ததை மக்கள் ஏற்காததே அவரது தோல்விக்கு காரணம்.இந்த நிலையில் புரட்சித்தலைவர் அவர்கள் தம்பி தம்பி என்று மிகுந்த அன்புடன் அழைத்து பாசத்துடன் பழகி வந்த சிவாஜி அவர்களும் ஜானகி அம்மையாருடன் அரசியல் கூட்டணி வைத்தார்.மக்களும் தங்கள் பதிலை தந்தனர். இது புரிந்து கொள்ள கூடிய ஒன்றுதானே.? இங்கும் புரட்சித்தலைவர் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அழியா பாசத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்த தேர்தலில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தால்தான் சிவாஜி அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. சரி அதன் பின் வந்த தேர்தல்களில் சிவாஜி அவர்கள் களம் கண்டு வெற்றி பெற்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை.? காரணத்தை நாம் சொல்லியே ஆக வேண்டுமா?
வரலாறு இவ்வாறு இருக்க வயதான பின்னரே எம்ஜிஆர் கட்சி துவங்கினார் என எந்த அடிப்படையில் கூறுகிறார் இவர். சிவாஜி அவர்கள் நினைத்திருந்தால் பதவிகள் அவரை தேடி வந்திருக்கும் சுய மரியாதையை காரணமாகவே பதவிகளை அவர் நாடி செல்லவில்லை என்றெல்லாம் என்ன வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் தலைவர் குறித்து சொல்லிக்கொள்ளுங்கள்.அது பற்றி எமக்கு ஆட்ஷேபனையில்லை. வரலாற்றின் பக்கங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறைத்து விட முடியாது.

ஆனால் எதற்கு இங்கே புரட்சித்தலைவர் குறித்து கொச்சைப்படுத்தி பேச வேண்டும். முதல்வர் சிவாஜி அவர்கள் குறித்து கூறினார் என்றால் அவருக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டுமேயன்றி சந்தடி சாக்கில் புரட்சித்தலைவர் குறித்து அவதூறு கூறினால் எங்களுக்கும் அதை விட அதிகம் சொல்ல தெரியும். எனவே இனியாவது சற்றும் தேவையின்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை விமர்சனம் செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.இல்லையெனில் இன்னும் அதிகம் வரும். ...........


ஆர்.கோவிந்தராஜ்.
mgr17.blogspot com.................. Thanks.........

orodizli
15th November 2019, 10:11 AM
*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை. முழுமையாக நான் பின்பற்றுவதால் அவரின் பக்தர்கள் சிலரோடு கூட என்னால் அனுசரித்து போகமுடியவில்லை.அனைவருக்கும் ஏதோ ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நான் வணங்கும் தெய்வம் எம்ஜிஆருக்கு அப்படி ஒரு எண்ணமே இருந்தது இல்லை.
ஒரு மனிதனுக்கு தேவை உண்ண உணவு,உடை,இருப்பிடம் .அது கூட யாருக்கும் நாம் இறந்தபின் உபயோகப்படப்போவதில்லை என்று எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வத்தோடு சிலரை ஒப்பிடுவது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. யாராவது நீ ஏன் எம்ஜிஆரை விரும்புகிறாய் என்றால் அவரது உயிலை படித்துவிட்டு வந்து கேள்வி கேள் என்று தைரியமாக கேளுங்கள்��
எம்ஜிஆர் எப்படிப்பட்ட மஹான் என்று அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
இதோ என் தெய்வத்தின் உயில்��
முகவுரை எழுதியது: V. P சிவகுமார் நாமக்கல்.
(ஏதோ என்னால் முடிந்தது)

புரட்சி தலைவர் எழுதிய உயில் பின்வருமாறு������
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28-04-1986 ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18-01-1987ல் (2_வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 09-01-1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:_

செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல்_அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.

எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.

3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.

என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவை செய்யவேண்டியது.

என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27_ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27_ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27_ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.

இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்.

பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:_ சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்.

அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:_

"இந்த தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."

இவ்வாறு அவர் கூறினார்......... Thanks...........

orodizli
15th November 2019, 10:16 AM
ரசியுங்கள்

https://youtu.be/gCDhxgxVD7s......... Thanks.........

orodizli
15th November 2019, 03:05 PM
இன்று 15-11-2019 முதல் மகத்தான ஆரம்பம்... சென்ன- பாலாஜி dts., தினசரி 2 காட்சிகள்... வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும்" குலேபகாவலி" திரையிடப்பட்டுள்ளது... Thanks.........

fidowag
15th November 2019, 10:48 PM
இந்த வாரம் (15/11/19) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*

-------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை* பாலாஜி - குலேபகாவலி* - தினசரி 2 காட்சிகள் (நண்பகல் /மாலை )

மதுரை திருமங்கலம்* ஆனந்தா - ரிக்ஷாக்காரன்* - தினசரி 4 காட்சிகள்*

கோவை* சண்முகா* - தொழிலாளி - தினசரி 4 காட்சிகள்*

விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில் - எங்க வீட்டு பிள்ளை* (10/11/19 முதல் )தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

orodizli
16th November 2019, 09:07 PM
https://youtu.be/JGgBrMfD25I......... Thanks.........

orodizli
16th November 2019, 09:10 PM
https://youtu.be/_ABbM9jbVCY.......... Thanks...

.

orodizli
16th November 2019, 09:11 PM
https://youtu.be/OOveWZDotxQ........ Thanks...

orodizli
16th November 2019, 09:11 PM
https://youtu.be/tEenJfpt_5Q......... Thanks.........

orodizli
16th November 2019, 09:19 PM
https://youtu.be/hCHMTax97uA........ Thanks...

orodizli
16th November 2019, 09:19 PM
https://youtu.be/4Voc2RDF4l8........ Thanks...

orodizli
16th November 2019, 09:20 PM
https://youtu.be/mmVYuYdoY4s......... Thanks...

orodizli
16th November 2019, 09:21 PM
https://youtu.be/vYeYPtwLDLE......... Thanks...

orodizli
16th November 2019, 09:22 PM
https://youtu.be/BwSxZoD4R0U......... Thanks...

orodizli
16th November 2019, 09:26 PM
நாளை 17-11-2019 முதல் தூத்துக்குடி - சத்தியா dts., வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் குளு, குளு கலர் காவியம் "பறக்கும் பாவை" திரையிடப்படவுள்ளது... என நண்பர் தகவல்...

oygateedat
16th November 2019, 10:02 PM
https://i.postimg.cc/05VmfNzC/IMG-4275.jpg (https://postimg.cc/QVWHNhkB)
நன்றி - திரு ரஞ்சித்

oygateedat
16th November 2019, 10:03 PM
https://i.postimg.cc/hPrSxJhS/6f1cc526-bea4-4b73-a59f-ae411ddc6051.jpg (https://postimages.org/)
கோவை

சண்முகா

திரையரங்கில்

oygateedat
16th November 2019, 10:09 PM
https://i.postimg.cc/5NqR2Lym/IMG-4300.jpg (https://postimages.org/)

விரைவில்

கோவை

சண்முகா

திரையரங்கில்

oygateedat
16th November 2019, 10:10 PM
https://i.postimg.cc/g2LLKqhV/IMG-4301.jpg (https://postimages.org/)

விரைவில்

கோவை

சண்முகா

திரையரங்கில்

orodizli
16th November 2019, 10:15 PM
https://youtu.be/4a6pNLzUuCE......... Thanks.........

fidowag
17th November 2019, 11:54 AM
தினமலர் -17/11/19
--------------------------
திருமணத்தை சமாதியில் நடத்தாதீர் .
----------------------------------------------------------------
டி .ஈஸ்வரன், சென்னை .
அன்று, வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலத்தில் , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.*

அப்போது வஷியில் அ. தி.மு.க.* தொண்டர் ஒருவரின், வீட்டு கூரை மீது , இரட்டை இலை சின்னம் அலங்கார* விளக்குகளுடன் எரிந்து கொண்டிருந்தது . அங்கு எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடல்களும் ஒலி த்துக் கொண்டிருந்தன .

உடனே, காரை நிறுத்திய எம்.ஜி.ஆர். அந்த* வீட்டிற்குள் சென்றார் .* அவரை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியில் மணமகன் உறைந்து போனார் .* பரிசு தந்த எம்.ஜி.ஆரிடம் , சற்று இருங்கள்* என மர* நாற்காலியில் அமர வைத்து சென்றார் .மணமகன் சற்று நேரத்தில் ,தாலி எடுத்து மணமகளை யும் அழைத்து வந்தார் .

நீங்கள் இங்கு வந்த நேரமே , எனக்கு நல்ல நேரம் .* ஆகையால் நீங்களே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றார் மணமகன் .* அதற்கு எம்.ஜி.ஆர்.** உங்கள் வீட்டு பெரியோர் குறித்த நேரத்தில் , குறிப்பிட்ட இடத்தில தான் திருமணம் நடக்க வேண்டும் .* கண்ட நேரத்தில், கண்டஇடத்தில் நடத்தக் கூடாது*என்று கூறி விட்டு சென்றாராம் .

fidowag
17th November 2019, 11:55 AM
தினமலர் - 17/11/19
---------------------------
இது உங்கள் இடம்*
-------------------------------

எம்.ஜி.ஆர். பாணி ,* ரஜினிக்கு வெற்றி கிட்டுமா ?
---------------------------------------------------------------------------

என். சாணக்கியன் - மதுரையில் இருந்து அனுப்பிய இ* மெயில் கடிதம்*

தமிழகம் முழுவதும்* தேர்தல் பிரச்சாரம் செய்து , தி. மு.க. ஆட்சியை பிடிக்க ,பெரிதும் உதவினார் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதை விட்டு விட முடியாது*என்று எம்.ஜி.ஆர். சொன்னதால்தான், அமைச்சர் பதவியை தர மறுத்தார் கருணாநிதி .

பல காரணங்களை அபாண்டமாக எம்.ஜி.ஆர். மீது சுமத்தி , தி. மு.க. வை விட்டு நீக்க காரணமாக இருந்தார் கருணாநிதி .* அதற்கு எல்லாம் , துவண்டு விடாமல் ,சினிமாவிற்கு முழுக்கு போட்டு, அ. தி.மு.க. வை துவக்கினார் எம்.ஜி.ஆர்.*

தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டார் .* அவரை பார்க்க , மக்கள் இரவு முழுவதும், விடிய விடிய*கொட்டும் பனியிலும்* காத்திருந்தனர் .* எங்க வீட்டு பிள்ளையாக எம்.ஜி.ஆரை தத்து எடுத்து ,சீராட்டி பாராட்டினார் , தமிழக தாய்மார்கள் .* இதுவரை, வேறு எந்த நடிகருக்கும் அந்த பெருமை கிடைக்கவில்லையே .**

எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மறைவுக்கு பின் ,அ. தி.மு.கே. அம்பேல் ஆகிவிடும் என எதிர்பார்த்தனர் பலர் . அவர்கள் ஆசையை எல்லாம் நிராசையாக ஆக்கிவிட்டனர் முதல்வர் இ*. பி.எஸ். மற்றும் துணை முதல்வர்*ஓ.பி.எஸ். என்பது மறுக்க முடியாத உண்மை .**

சினிமா நடிகர்கள் அரசியலில் இறங்கி, ஆட்சியை பிடிப்பது என்பதெல்லாம் இனி*தமிழகத்தில் எடுபடாது . அரசியல் எனும்* நெருப்பாற்றில் நீந்தியோர் என தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டா லினாலேயே* முதல்வர் ஆகமுடியவில்லையே*

என் வழி தனி வழி என நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய வசனத்தை*உச்சரிக்கும் ரஜினி* கடைசி வரை, நடிகனாகத்தான் கோலோச்ச முடியும் .

அதை விட்டு, பாம்பையும், கீரியையும் மோதவிட்டு , வேடிக்கை காட்டுவதாக*மக்களின் காதுகளில் மலர் சூடும் வித்தைக்காரனுக்கும் ,அரசியல் கட்சி துவக்கி*ஆட்சியை பிடிப்பேன் , என பூச்சாண்டி காட்டும், நடிகர் ரஜினிக்கும் ,வேறுபாடு இல்லை .

எம்.ஜி.ஆர். மாதிரி நானும், முதல்வர் ஆகும்வரை தொடர்ந்து நடிப்பேன் .அரசியலில் தகுந்த ஆளுமை இல்லாததால், தமிழகத்தில் வெற்றிடம் தொடர்கிறது என நடிகர் ரஜினி திருவாய் மலர்ந்துள்ளார் .

மாங்கா மடையர்களாக தமிழக மக்கள் இருக்கும் வரையில் இதுமாதிரி அதிரடி அறிவிப்புகளை அள்ளி விடுவார்* நடிகர் ரஜினி .

orodizli
18th November 2019, 06:52 AM
அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம் பல ஆண்டுகளாக தலைவர் புகழ் பாடடுவதே தனது கடமை என்ற நோக்கத்தோடு இயங்கி வந்தாலும், தலைவரின் தலையாய கொள்கையான ஏழைகளுக்கு உதவுதல் என்ற உயரிய இலட்சியத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறைவேற்றி வருவது அனைவரும் அறிந்ததே. சங்கத்தின் கௌரவத்தலைவர் தொடங்கி கடைசி உறுப்பினர் வரை அனைவரும் இது போன்ற நற்செயல்களில் அவ்வப்போது தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். புரட்சித்தலைவரின் ஆன்மாவுக்கு இதைவிட மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் வேறு இருக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் நலன் அவர்களது முன்னேற்றம் இதை மட்டுமே தனது கொள்கையாக கடைபிடித்து, என்ன நேரினும் அதிலிருந்து சற்றும் பிறழாமல் கடமையாற்றிய கலைக்கடவுள் மக்கள் திலகம் மட்டுமே. கடந்த 11ம் தேதி சங்க கூட்டம் வடபழனியில் இனிதே நடந்தேறியது. இக்கூட்டத்தினூடே திரு முஹம்மது மீரான் என்ற ஒரு ஏழை குடும்பத்து மாணவருக்கு கல்விக் கட்டணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தாம்பரத்தில் நடைபாதை கடை நடத்தி வரும் திரு முஹம்மது மீரான் அவர்கள் தனது மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்த இயலாமற் போனதால், பள்ளி நிர்வாகம் அம்மாணவனை இடைநிலை நீக்கம் செய்திருந்தது. இதனால் அவரது படிப்பே கேள்விக்குறியாகிப் போனது. உடனடியாக வரும் 15ம் தேதிக்குள் ரூபாய் ஆறாயிரம் கட்டணமாக செலுத்த வேண்டுமென்றும், தவறினால் தனது மகன் ஒரு வருட படிப்பை இழக்க நேரிடும் என்று மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார். அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கத்தின் உறுப்பினர் மூலமாக இந்த விஷயம் சங்கத்தலைமைக்கு தெரிய வந்தது. உடனடியாக கட்டணத்தொகையை சங்கத்தின் மூலம் திரட்டி சங்கத்தின் கெளரவத் தலைவர் அரிமா திரு மணிலால் மூலம் வழங்கப்பட்டது. சாதி மத பேதங்கள் அறியா புரட்சித்தலைவர் பக்தர்கள் சரியாக மீலாது நபியன்று ரூபாய் ஆறாயிரத்தை சங்கக் கூட்டத்தில் வழங்கியது பெருமைக்குரிய ஒன்றாகும். பெற்றுக் கொண்ட திரு மீரான் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளியில் கட்டணத்தை செலுத்தி தனது மகன் படிப்பை தொடரச் செய்திருக்கிறார்.

"தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்" என்று புரட்சித் தலைவர் பாடிச் சென்றிருக்கிறார். இன்று அவரது பக்தர்கள் தன் தலைவன் கனவை நனவாக்க முயன்று வருகின்றனர்.
"எல்லாப் புகழும் புரட்சித் தலைவரருக்கே". இது நான் சொல்லவில்லை, மீரான் மிகவும் நெகிழ்ந்து நா தழுதழுக்க நன்றி தெரிவித்த போது அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச் சங்கத்தால் சொல்லப்பட்டது........... Thanks.........

orodizli
18th November 2019, 10:09 AM
எம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது! : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-15

எம்.ஜி.ஆர்

தன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

...“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். 'போடா, ரொம்ப லட்சணம்! வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா! முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்!

பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா! உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே! அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு' என்றார்.

எம்.ஜி.ஆர்

இப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.

மனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது!"- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'...என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது.

எம் ஜி ஆர்

சதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது.

சதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சி........... Thanks.........

fidowag
18th November 2019, 11:36 PM
அரசியல் விமர்சகர்* திரு.*ரவீந்திரன் துரைசாமிக்கு பத்திரிகை மற்றும் அரசியல் விமர்சகர் திரு.துரை கருணா கடும் கண்டனம் .

----------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி பற்றி உண்மைக்கு புறம்பாகவும், அபாண்டமாகவும், அநாகரீகமாகவம் செய்திகள் வெளியிட்ட திரு.ரவீந்திரன் துரைசாமிக்கு திரு.துரை கருணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு போதும் மத்திய அரசுக்கு தலை வணங்கியும்,*சரணடைந்தும் , ஆட்சியை நடத்தியதில்லை.* தமிழகம் வளம் பெறவும், பல வளர்ச்சி திட்டங்கள் நடைபெற நிதி வேண்டியும், பல நல திட்டங்கள் , நிறைவேற்றவும், பொதுநோக்கு பார்வையுடன் மத்திய அரசுடன் சுமுக உறவை நாடினார் .* எமெர்ஜென்சி காலத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முன்னாள் பிரதமர் இந்திராவிடம் சரணடையவில்லை* அப்போதைய மத்திய அரசு மாநில கட்சிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய முற்பட்டபோது அ. தி.மு.க. வை* அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்று அகில இந்திய கட்சியாக அறிவித்தார் .* எந்த பிரதமரிடமும்* அவர் சரணாகதி அடைந்த வரலாறில்லை .* ஒருமுறை பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான நிதி திரட்ட டெல்லியில் பேச்சு வார்த்தைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தபோது நிதி அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.* பின்பு தமிழக முதல்வர் அதை எதிர்த்து*வெளிநடப்பு செய்து சென்னை திரும்பினார் .* உடனடியாக மத்திய அரசு பணிந்து*சீருடைக்கான நிதியை தருவதாக அறிக்கை வெளியிட்டது .
மற்றொரு சமயம் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது , மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உடனடியாக தேவையான அளவு அரிசி மத்திய தொகுப்பில் இருந்து மாநிலத்திற்கு ஒதுக்குமாறு கேட்டு கொண்டதற்கு மத்திய அரசு மறுத்தது .எனவே முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக மக்களின் கோரிக்கைக்காக கடற்கரையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் .* அன்று மாலையே மத்திய அரசிடம் இருந்து உண்ணாவிரதத்தை உடனே கைவிடுமாறும் தேவையான அரிசியை மத்திய அரசு அனுப்பும் என்று தகவல் வந்தது . இது போன்று எவ்வளவோ விஷயங்கள் நடந்துள்ளன. உண்மை நிலை அறியாமல் பொய்யான*செய்திகளை தெரிவித்தமைக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டார் .

உடன் திரு.ரவீந்திரன் துரைசாமி, தான் கேள்விப்பட்ட விஷயங்களை தான் வெளியிட்டதாக தெரிவித்தார்.* நீங்கள் கேள்விப்பட்டவை அனைத்தும் உண்மையல்ல .எனவே செய்திகளை வெளியிடும் முன்பு* அவற்றின் உண்மை தன்மைகளை தெரிந்து வெளியிடுங்கள்.* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி*அவதூறான கருத்துக்களை இனிமேலும் வெளியிட வேண்டாம் எனவும் திரு.துரை கருணா கேட்டுக் கொண்டார் .

orodizli
18th November 2019, 11:38 PM
https://youtu.be/o6iokyhJBAE......... Thanks.........

orodizli
18th November 2019, 11:45 PM
https://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155

“Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.”........... Thanks...

fidowag
18th November 2019, 11:45 PM
காமதேனு வார இதழ்*

----------------------------------

நடிகர் கமலஹாசனின் சிறு வயதில், செவிலி தந்தையாக திரு.ராமசாமி என்பவர்*இருந்து வந்துள்ளார். கமலஹாசனின் குடும்பத்தினருக்கு பரமக்குடியில் நல்ல*பெயரும் , புகழும், மரியாதையும் இருந்த நேரம்.* எனவே பரமக்குடியில் உள்ள*அரங்கிற்கு அந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரங்கில் இலவசமாக பார்க்கும் அனுமதி இருந்தது* *அந்த வகையில் 1956ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " மதுரை வீரன் " படத்தை , கமலஹாசன் 2 வயது சிறுவனாக இருக்கும்போது பெரியவர் ராமசாமியுடன் 110 நாட்கள் தொடர்ந்து பார்த்ததாக தெரிவித்துள்ளார் .* பரமக்குடியில் மதுரை வீரன் 110 நாட்கள் ஓடியது என்பது*குறிப்பிடத்தக்கது .

orodizli
18th November 2019, 11:47 PM
*கிராமத்திலிருந்து திடீரென்று கூப்பிட்டு எடப்பாடியாரை யாரும் முதல்வர் ஆக்கவில்லை.. அவருடன் தன்னை ரஜினி ஒப்பிட்டு கொள்ளக்கூடாது*..


*அதேபோல எம்ஜிஆரோடு ஒப்பிட்டுக் கொண்டு தானும் முதல்வர் ஆவேன் என்று ரஜினி நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்.*

*அறியாமையின் வெளிப்பாடு இது..*

*மக்கள் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று கொங்கு மண்டல ஈஸ்வரன் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.*

*நேற்று விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினி, 2 வருஷத்துக்கு முன்னாடி முதலமைச்சர் ஆவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.*

*4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று எல்லாருமே அன்னைக்கு சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது... நேற்று அதிசயம் நடந்தது... இன்றும் அதிசயம் நடக்கிறது... நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும்.." என்றார்.*

*ரஜினியின் இந்த பேச்சு வழக்கம்போல சர்ச்சை, சலசலப்பு, குழப்பம், சந்தேகங்களுக்கு உட்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது*

*ரஜினி எந்த அர்த்தத்தில் இதை பேசினார், ஏன் பேசினார் என்ற விவாதங்களும் எழுந்தபடியே உள்ளன*

*இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ரஜினியின் இந்த பேச்சுக்கு தன் கருத்தினை பதிவு செய்துள்ளார்*

*கொங்கு மண்டல ஈஸ்வரனின் காட்டமான அறிக்கை இதுதான்:*

*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கனவிலும் முதல்வராக நினைக்கவில்லை என்று ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சில் சொல்லியிருக்கிறார். எதிர்பார்க்காமல் நடப்பதுதான் அதிசயம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு நடக்குமென்று நினைப்பது அதிசயம் ஆகாது..*

*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திடீரென்று கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல. அந்த இயக்கத்தின் கிளை செயலாளராக, ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..*

*அவரோடு ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆரோடு ரஜினியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த கட்சியின் பொருளாளராக இருந்தவர். நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதலமைச்சரானவர் அல்ல. இப்படி எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்..*

*ரஜினி2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அன்றைய பிரதம வேட்பாளர் மோடி அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே மோடிக்கு ஆதரவாக பணியாற்ற வந்தார்கள். எந்தளவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு இருந்தது என்பது அன்றைய தேர்தலில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்..*

*ரஜினியை சுற்றி இருக்கின்ற 10 பேர் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல ரஜினியை நம்ப வைக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான் ரஜினியின் இந்த பேச்சு..*

*அவருடைய இலக்கு எம்ஜிஆருடைய ஓட்டுக்களை பிரிப்பது. இரட்டை இலைக்கு விழுகின்ற வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர் பிரிக்கலாம். தமிழக மக்கள் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.*........... Thanks...

orodizli
18th November 2019, 11:55 PM
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடிகரின் மகன் நடிகர் யாரோ எழுதி கொடுத்ததை (சிலர் அறிக்கை என்னும் உளறல், புலம்பல் பகுதி) அப்படியே கொட்டினார் என நிகழ்ச்சி பார்த்த நண்பர் தகவல்... Thanks...

orodizli
19th November 2019, 09:56 AM
திரையுலக காவலர் புரட்சி நடிகர் அவர்களின் உற்ற தோழர் ஏராளமான காவியங்களில் உடன் நடித்தவருமான வில்ல நடிப்பு திலகம் அமரர் mn. நம்பியார் சாமிகள் நினைவு தினம் இன்று...

fidowag
19th November 2019, 02:47 PM
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்க நிர்வாகி* திரு.எம்.எஸ். மணியன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனி எம்.பி.கே. மகாலில் நேற்று மாலை (18/11/19) சிறப்பாக நடைபெற்றது .

நிகழ்ச்சியில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.எம்.ஏ. முத்து ( உடைஅலங்கார நிபுணர் ), திருநின்றவூர் எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு.கலைவாணன், உரிமைக்குரல் ஆசிரியர் திரு.ராஜு, திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ), மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .

fidowag
19th November 2019, 02:47 PM
தினமலர் -19/11/19
------------------------------

பயில்வான் ரங்கநாதன் பேட்டி*
--------------------------------------------------

உங்களுக்கு* "பயில்வான் "* என்கிற பட்டத்தை எம்.ஜி.ஆர். கொடுத்தாரா ?

ஆமாம்.* ஆனால் நான் நிஜமான பயில்வான் இல்லை .மல்யுத்தம் அல்லது குத்துச்சண்டை போட்டியில் ஜெயித்தவர் களைத்தான்* பயில்வான் என்பர் .

நான் பளு தூக்கும் போட்டியில் ஆர்வமாக இருந்ததால் , என் உடல்வாகுவை பார்த்து எம்.ஜி.ஆர். என்னை பயில்வான் என அழைப்பார் ,* என்னை ரங்கநாதன் என்று அழைத்தால்* யாருக்கும் தெரியாது .* பயில்வான் ரங்கநாதன் என்றால்தான் தெரியும் .**

தமிழகத்தில், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக* கூறுகின்றனர் .அதை* , கமல், ரஜினி இருவரில் யார் நிரப்புவார் ?

சத்தியமாக யாராலும் நிரப்ப முடியாது .* எம்.ஜி.ஆர். ஒருவர்தான் கொடை வள்ளல் .என்கிற பெயரோடு சினிமாவில் , அரசியலில் வலம் வந்து வெற்றி பெற்றார் . அவர் இடத்தை சினிமாவில் கூட யாரும் இன்னும் நிரப்பவில்லை*அரசியலிலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .* அவரை போன்ற தலைமையை யாராலும் தர முடியாது .**

உங்கள் பிட்னெஸ் ரகசியம் என்ன ?

தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியம் .* எம்.ஜி.ஆர். பக்தர் என்பதால் மது அருந்துவது இல்லை .* பசிக்கும்போது சாப்பிட வேண்டும் .* நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்க*.கூட வேண்டாம் . கெட்டது* செய்யக்கூடாது என நினைத்தால் போதும் .* நம் உடலும்,மனதும் ஆரோக்கியமாக இருக்கும் .**

fidowag
19th November 2019, 02:58 PM
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா*

-------------------------------------------------------------------------------------

மறைந்த வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று*(19/11/19) சென்னை மியூசிக் அகாடமியில் மாலை 6 மணி அளவில் சிறப்பாக நடைபெற உள்ளது .**

சிறப்பு விருந்தினராக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா , கௌரவ அழைப்பாளராக திரு.விஜயகுமார் , ஐ.பி.எஸ். (டி.ஜி.பி.) -ஓய்வு ,, ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் சிறப்பு ஆலோசகர்* ஆகியோர் கலந்து கொள்கின்றனர்* விழா ஏற்பாடுகளை நடிகர் நம்பியாரின் மகன் திரு.மோகன், மற்றும் அவரது பேரன் ஆகியோர் செய்து வருகின்றனர் .**

Gambler_whify
19th November 2019, 03:28 PM
தமிழக முதலவர் எடப்பாடி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள்.
_________________________________
உன் தலைவன் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் நோய் முற்றி சிகிட்சை எடுத்து கொண்டிருந்த போது, அண்ணனை (எம.ஜ.ஆர்) காண்பதற்கு எங்கள் அய்யன் தன் மனைவி கமலா அவர்களுடன் அமரிக்காவிற்கு சென்றார்கள்.
தம்பியை (அய்யனை) பார்த்த உடன் எம்.ஜி.ஆர் அவர்களும், ஜானகி அவர்களும் கண் கலங்க நால்வரும்(அய்யனும்,கமலா அம்மை, ஜானகி அம்மை, எம்.ஜி.ஆர்) ஒன்றாக கண்ணீர் வடித்து கட்டி பிடித்து அழுது தங்களின் கரை இல்லா பாசத்தை கண்ணீராக வெளி படுத்தினார்கள்.
மருத்துவர்களின் நிற்பந்தத்தால் இவர்களின் ஓய்வில்லா கண்ணீர் அடக்கப்பட்டன. இரண்டு நாட்கள் உடன் இருந்து விட்டு அய்யனின் குடும்பம் இந்தியா திரும்பியது.
இந்தியா திரும்பிய அய்யனை எம்.ஜி.ஆர் அவர்கள் திரு. வீரப்பனுடன் மீண்டும் அவசரமாக அமெரிக்காவிற்கு அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த அழைப்பின் விவரம், ரகசியம் ஏன் என்று, என்ன என்று, எதற்க்காக என்று கால் நக்கி பதவியில் ஒட்டி கொண்டிருக்கும் எடப்பாடியே தங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்.
அழைப்பபை ஏற்று திரு.வீரப்பன் அவர்களுடன் அய்யன் செல்கின்றார்கள் மனம் கனத்துடன். இத்தனை அவசரமாக அண்ணன் என்னை அழைக்க காரணம் என்ன? விபரீதம் ஏதாவது? மனம் கனத்துடன் இருவரும் அமெரிக்கா செல்கின்றனர்.
அங்கு சென்றதும் அய்யனுக்கு மனதிற்க்கு சிரிய சமாதானம். விபரீதம் எதுவும் இல்லை என்று.
பிறகு அண்ணன்(எம்.ஜி.ஆர்) அய்யனை அழைத்ததின் அவசரம் என்ன? 4 பேரும்( எம்.ஜி.ஆர்,அய்யன், ஜானகி, வீரப்பன்) மருத்துவமனையில், அங்கிருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டு பேசப்படுகின்றது.
தம்பி கணேசா உன் சகோதரி ஜானகிக்கு எதுவும் தெரியாது. என் கட்சியில்(அ.தி.மு.க) உள்ள எவர் மீதும் எனக்கு (எம்.ஜி.ஆர்) எள் அளவும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த இயக்கத்தை (அ.தி.மு.க) தலைமை ஏற்று நீதான் வருங்காலத்தில் வழி நடத்தி செல்ல வேண்டும் என்ற அய்யனின் கை பிடித்து அண்ணன் என்ற அன்பு கலந்த அதிகாரத்துடன் வேண்டடி கொண்டார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
இதற்கான விழா (அய்யனிடம் இயக்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற விழா) சென்னையில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட வேண்டும் என்று விரப்பன் அவர்களிடம் கட்டளை இடப்படுகின்றது. இருவரும்(அய்யனும், வீரப்பனும்)முதலில் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி அம்மை, சில மருத்துவர்களுடன் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கு அய்யனை தலைமை ஏற்க சொல்லும் பிரமாண்ட விழாவிற்கு 2 தினங்கள் மட்டுமே இருந்த நிலையில் எங்கள் அய்யனின் பாச மிகு அண்ணன் (எம்.ஜி.ஆர்) இயற்கை எய்தினார்கள்.விழாவும் நடை பெறாமல் அனைத்துமே மரண ஓலத்துடன் அடங்கி விட்டது. அனைத்தும் மரண பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது.
இதற்கு சாட்சி திரு.வீரப்பன் (அ.தி.மு.க அமைச்சர்) அவர்களே.
ஏய் சசிகலாவின் கால் நக்கி எடப்பாடியே! உன் கட்சியில் எவனையும் நம்பாது எதிர் முகாமில் இருந்த எங்கள் அய்யனை மட்டுமே தங்களின் தலைவன் (எம்.ஜி.ஆர்)நம்பினார்கள். காரணம், அ.தி.மு.கவில் உள்ள நாய்கள் அனைவருமே கால் நக்கிகள் என்று அன்றே தங்களின் தலைவன் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
அதை இப்போது மனசாட்சி இன்றி தவறாமல் செய்து, ஒரு விபத்து போல் ஆட்சியில் ஒட்டி கொண்டுருக்கும் சோமாரி நீ, மாசற்ற எங்கள் அய்யனை விமர்சிக்கின்றாய். தனது கட்சியில் உள்ள அத்னைபேரும் திருட்டு நாய்கள் என்று தனது தலைவனே முடிவு செய்து, இந்த உலகில் தனது(எம்.ஜி.ஆர்)தலைவனுக்கு நம்பிக்கை உள்ள ஒரே உத்தமன் எங்கள் அய்யன் மட்டுமே.
இவைகளை நீ தெரிந்திருக்க வழி இல்லைதான். அன்று நீ உடம்பில் துணி இன்றி ஓடிய காலமாக இருக்கலாம். உலகில் உத்தமர்கள் ஒரு சிலரே தோன்றினார்கள் அதில் எங்கள் அய்யனும் ஒருவர் என்பது எவராலும் மறுக்க முடியாத சத்தியம்.
எங்கள் அய்யன் மாற்று குறையாத இறை பிறவியாம் எங்கள் அப்பச்சியிடம்(காமராஜ்) பாடம் கற்றவர். உன்னை போல் சசியிடம் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி கொள்.
ரஜனியும், கமலும் அரசியலில் வந்தால் உன் தலைவன் போல் வெற்றி பெற இயலாது என்று நீ கூறி இருந்தால் என்ன ம.......க்கு உன்னை நாங்கள் விமர்சிக்க வேண்டும். இதன் உண்மை, நீ உன் தலைவனை மறந்து என் அய்யனையே இப்போதும் உன் மனதில், நினைவில் வைத்திருக்கின்றாயோ? ஆட்சியின் அகங்காரத்தில் ஆடை இன்றி அலையாதே. உன் முடிவு வெகு விரைவில். அப்பச்சியே போற்றி. அய்யனே போற்றி.


நன்றி Selvaraj Fernandez


நடிகர் திலகம் தனிக்கட்சியை ஏன் துவக்கினார்?
எம்ஜிஆர் இடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, எம்ஜிஆர் இன் ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசாங்கம் களைத்து விடக் கூடாது என்பதற்காக தான் வளர்த்த காங்கிரஸ் கட்சியையே எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கியது? எம்ஜிஆர் கட்சியை நம்பி அவரது மனைவியை ஆதரிப்பவர்கள் என அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜானகி ராமச்சந்திரன் முதல் மந்திரி வேட்பாளர் என பிரச்சாரம் செய்தது,
திமுக தனது கூட்டணிக்கு விரும்பி அழைத்தும் அதை நிராகரித்தது, என
மேற்கண்ட கேள்வி...
களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் முன் சொல்லப்பட்டிருக்க வேண்டும்,
அவ்வாறு மக்கள் முன் சொல்லப்பட்டிருந்தால் இப்போது தகுதியில்லாதவனெல்லாம் மைக் மு
ன் சிவாஜியை நினைத்து கருத்து சொல்ல பயந்து இருப்பான்,
இந்தச் செய்திகளை அறிந்திடாத அன்றைய சிவாஜி ரசிகர்களாவது சாந்தம் பெற்றிருப்பார்கள்,

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/76778259_2405291443121500_3259522295219093504_n.jp g?_nc_cat=106&_nc_oc=AQnxvo6gNqOCOUQOmoU_kYYKKHLAqilQcwz2pmiqW8r X40zA1bDN7MmK2k8SL2eu5So&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=e39fa2a11af4d86206ee869460d1b1ce&oe=5E41C1D1


நன்றி Sekar Parasuram

இந்த 2 செய்திகளையும் எல்லாரும் நன்றாக படிச்சுப் பாருங்கள்/

பொய்க்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சு.

அமெரிக்காவில் முதல் முறை 1984-ல் சிகிச்சை பெற்றபோதுதான் சிவாஜி கணேசன் போய் பார்த்தார். திரும்பியும் அமெரிக்கா போய் பார்க்கவில்லை. அதுவும்
புரட்சித் தலைவர் அழைத்து ஆர்.எம்.வீரப்பனயும் கூட்டிக் கொண்டு போனாராம்.

1984- தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுக தேர்தல் வியூகம் வகுப்பதில் தீவிரமா இருந்தார். புரட்சித் தலைவர் சிகிச்சை பெறும் படங்களை வீடியோக்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து ஏற்பாடு செய்து வெளியிட்டார். ஆர்.எம்.வீரப்பன் அப்போது அமெரிக்காவுக்கே போகவில்லை.
எவ்வளவு பச்ச பொய் சொல்கிறார்கள் பாருங்கள்.

மக்கள் திலகம் சொல்லித்தான் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பிச்சாராம்.
நடிகர் பிரபுவே பொய் சொல்கிறார்.

நான் 3 வருடம் கழித்து 1987-ல் இறந்துவிடுவேன். நான் இறந்த பிறகு நீ என் மனைவிக்கு அரசியலில் ஆதரவு கொடு என்று புரட்சித் தலைவர் சிவாஜி கணேசனிடம் சொன்னாரா?

ஜானகி அம்மாளுக்கு சிவாஜி கணசன் ஆதரவு தரவேண்டும் என்று புரட்சித் தலைவர் எந்த வேண்டுகோளும் வைத்ததாக ஆதாரம் இல்லை.

புரட்சித் தலைவர் அப்படி சொல்லவில்லை.

ஜானகி அம்மாவும் அப்படி சொல்லவில்லை.

அவ்வளவு ஏன் . சிவாஜி கணேசனே கடைசி வரை அப்படி சொன்னது இல்லை.

நம்பளை விடுங்கள். சிவாஜி கணேசன் அப்படி சொல்லியிருந்தால் சும்மா இருப்பார்களா? இதோ ஆதாரம் என்று குதிக்க மாட்டார்களா? கடைசி வரை சிவாஜி கணேசன் அப்படி சொல்லவே இல்லை.

ஜானகி அம்மாவுக்கு அண்ணன் எம்ஜிஆர் சொல்லித்தான் ஆதரவு கொடுத்தேன் என்று சிவாஜி கணேசன் கடைசிவரை சொல்லவே இல்லை.

அப்படி சொன்னார் என்று யாராவது சொல்ல முடியுமா?

சிவாஜி கணேசன் உள்பட சம்பந்தப்பட்ட 3 பேருமே அப்படி சொன்னது இல்லை.

அதுவும் ஜானகி அம்மாளை புரட்சித் தலைவர் எந்த அரசியல் மேடையில் ஏற்றியது இல்லை.

எனக்கு அப்புறம் ஜானகிதான் அரசியல் வாரிசு என்று சொல்லவில்லை.

அப்படி இருக்கும்போது நான் இறந்தபிறகு ஜானகி அம்மாவுக்கு அரசியலில் ஆதரவு கொடு தம்பி என்று சிவாஜி கணசேனை புரட்சித் தலைவர் எப்படி கேட்டு இருப்பார்.

பொய்ய சொன்னாலும் பொருத்தமா சொல்லணும்.

நல்லவேளை. இவர்கள் பொய்யை இவர்கள் என்னதான் கரடியா கத்தினாலும் யாரும் நம்பவில்லை. எவ்வளவுதான் கத்தினாலும் பொய் உண்மையாகாது.

orodizli
19th November 2019, 08:50 PM
இளங்கோவன், அழகிரி, இளைய திலகம் பிரபு, சமூக நலபேரவை, அண்ட புளுகன் ரவீந்திரன் துரைசாமி, ஆகாச புளுகன் மய்யம் .......இப்படி எல்லோரும் சொல்லுவது [ புரட்சித் தலைவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தான் சிவாஜி கணேசன் அவர்கள் கட்சி துவங்கினார்] இருக்கட்டும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது "சுயசரிதையில்" என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போமா:

"என்னுடன் இருந்தவர்களில் பலர் தொழில்முறை அரசியல்வாதிகள். அவர்கள் வாழ்வில் ஈடுபடுவதற்கு அவசியமாக அரசியலில் இருக்க வேண்டியிருந்தது. எனக்கு தேவையில்லை என்றாலும், அவர்களுக்காக ஒரு கட்சியைத் தொடங்க நான் நிர்பந்திக்கப்பட்டேன். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்). தேர்தலில் நின்ற 49 த. மு. மு வேட்பாளர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிவாஜியே திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரசேகரன் துரைவிடம் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று அவரே குறிப்பிடுகிறார், “நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான். இது ஒரு பெரிய ஏமாற்றம் மற்றும் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலை. ஒருவர் என்ன செய்ய முடியும்? நாம் தவறான முடிவுகளை எடுக்கும்போது, ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"

“Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.”

https://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155

நடிகர் திலகத்துக்கு ரீலில் தான் நடிக தெரியும் ரியலில் நடிக்க தெரியாது என்பது உண்மையா அல்லது இவரால் சொல்லுவது உண்மையா?????

நாடே வீடு என்று வாழ்ந்தவர் புரட்சித் தலைவர், வீடே நாடு என்று வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசன் அவர்களால் சிலர் பயன் பெற்றார்கள் என்பதை சிலர் மறுத்தாலும் ஆனால் அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக பயன்பட்டனர்என்பதை யாராலும் மறுக்க முடியாது!......... Thanks to mr.SB.,

okiiiqugiqkov
20th November 2019, 03:23 PM
இளங்கோவன், அழகிரி, இளைய திலகம் பிரபு, சமூக நலபேரவை, அண்ட புளுகன் ரவீந்திரன் துரைசாமி, ஆகாச புளுகன் மய்யம் .......இப்படி எல்லோரும் சொல்லுவது [ புரட்சித் தலைவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தான் சிவாஜி கணேசன் அவர்கள் கட்சி துவங்கினார்] இருக்கட்டும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது "சுயசரிதையில்" என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போமா:

"என்னுடன் இருந்தவர்களில் பலர் தொழில்முறை அரசியல்வாதிகள். அவர்கள் வாழ்வில் ஈடுபடுவதற்கு அவசியமாக அரசியலில் இருக்க வேண்டியிருந்தது. எனக்கு தேவையில்லை என்றாலும், அவர்களுக்காக ஒரு கட்சியைத் தொடங்க நான் நிர்பந்திக்கப்பட்டேன். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்). தேர்தலில் நின்ற 49 த. மு. மு வேட்பாளர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிவாஜியே திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரசேகரன் துரைவிடம் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று அவரே குறிப்பிடுகிறார், “நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான். இது ஒரு பெரிய ஏமாற்றம் மற்றும் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலை. ஒருவர் என்ன செய்ய முடியும்? நாம் தவறான முடிவுகளை எடுக்கும்போது, ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"

“Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.”

https://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155

நடிகர் திலகத்துக்கு ரீலில் தான் நடிக தெரியும் ரியலில் நடிக்க தெரியாது என்பது உண்மையா அல்லது இவரால் சொல்லுவது உண்மையா?????

நாடே வீடு என்று வாழ்ந்தவர் புரட்சித் தலைவர், வீடே நாடு என்று வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசன் அவர்களால் சிலர் பயன் பெற்றார்கள் என்பதை சிலர் மறுத்தாலும் ஆனால் அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக பயன்பட்டனர்என்பதை யாராலும் மறுக்க முடியாது!......... Thanks to mr.SB.,

நன்றி சுகாராம் அய்யா

fidowag
20th November 2019, 04:56 PM
சொல்லவா,,,,,,, கதை சொல்லவா* ,,,,,,,,,,திரித்த கதை சொல்லவா ,,,,,,,,,,,,,,,பொய் கதையை சொல்லவா ,,,,,,,,,,,,தலைவர்கள் மறைந்த நிலையில் கட்டு கதையை* சொல்லவா ,,,,,,,,,,,,,,


தலைவர்கள் யாவரும் உயிருடன் இல்லாத பட்சத்தில், கதை கதையாய் அளந்துவிட்டு ஆளாளுக்கு இதை சொன்னார்கள், அதை சொன்னார்கள் என்று*கதை விடுபவர்களுக்கு தகுந்த பதில் அளித்து வரும் நண்பர்கள் திரு.சுகாராம், திரு.சுந்தர பாண்டியன், திரு.மஸ்தான் சாஹிப் ஆகியோருக்கு நன்றி .


தங்கள் அபிமான நடிகருக்கு எப்படி எல்லாம் புகழ், பெருமை சேர்க்கிறார்கள்*என்பதை பார்ப்பதற்கு வினோதமாக உள்ளது . இந்த கதையை இத்தனை ஆண்டுகளாக எங்கே மறைத்து வைத்திருந்தார்களோ தெரியவில்லை. ஏனெனில்*மறைந்த தலைவர்கள் எவரும் வந்து கனவிலும் இதற்கு சம்மதமோ, பதிலோ*அளிக்க போவதில்லை என்கிற தைரியம் போலும்

fidowag
20th November 2019, 04:57 PM
குமுதம் வார இதழ்*
ஆர்.சி.சம்பத்*------------------------------------
கருணாநிதியை ஒரு நாள் மாலை நேரில் சந்தித்தேன் .* ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார் .* அப்போது எம்.ஜி.ஆர். பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை அறிவித்திருந்தார் . கருணாநிதி இதுபற்றி எங்களிடம் கருத்து கேட்டார்*நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன் . இது பெற்றோர்களை குழந்தைகள் சம்பந்தமான பொறுப்புணர்வுலிருந்து தள்ளி , சோம்பேறிகள் ஆக்க கூடும் ,* இருப்பினும் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்கள் , தங்கள் குழந்தைகள் ஒருவேளையாவது சாப்பிடும்போது எம்.ஜி.ஆரை வாழ்த்தும்போது தவிர்க்க முடியாது என்றேன் .* *

மேலும், கலைஞரிடம் , நம்மிடம் இருக்கிற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை சத்துணவு திட்டத்திற்காக தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது காசோலை பெற்று முதல்வர்*எம்.ஜி.ஆரிடம் அந்த காசோலையை கொடுக்கலாம் .* ஒருவேளை அதை அவர் வாங்க மறுத்தால் , ஒருமுறை புயல் நிவாரண நிதிக்காக தி.மு.க. திரட்டிய*நிதியை தலைமை செயலாளராக இருந்த கார்திகேயனிடம் அவர் அதை நிராகரித்ததை பெரிய அரசியலாக்கியது போல இதையும் மக்கள் முன்னால் வைத்து* பிரச்னை ஆக்கலாம் என்று நானும் மற்றவர்களும் கூறினோம் .*

நல்ல கருத்து என்று கூறிய கலைஞர் , எங்களுக்கு விடை கொடுத்தார் .* சற்று நேரத்தில் வேறு சிலர் வந்திருந்தனர் .அவர்கள் கலைஞரிடம் , ஏதோ கூறி அவர் மனதை மாற்றிவிட்டனர் . பின்னர் கருணாநிதி அத்திட்டத்தை பற்றி எங்களிடம் கேட்கவேயில்லை .

மாறாக, கழக சார்புடைய ஏடுகளிலெல்லாம் சத்துணவு திட்டத்தை குறை கூறுவது போல் சத்துணவில் பல்லி விழுந்து பத்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் , என்று நையாண்டி செய்து எழுத ஆரம்பித்தனர் .* இதுபோன்ற செயல் தி.மு.க. வின் வெற்றிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்று அன்றே உணர்ந்தேன் .*

அப்போது நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை தி.மு.க இழந்தது .* டி.வி. முன் அமர்ந்து தேர்தல் முடிவுகளை கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் அருகில் வாய் திறவாமல் அமர்ந்திருந்தேன் .என்ன கலாநிதி இப்படி ஆகிவிட்டதே என்று என்னிடம் சொன்னபோது நான் பேசாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தேன் .* பின்னர், அவரே நீ சொன்னது சரியா போச்சு .* இத்தனைக்கும் காரணம் சாப்பாடுதானோ* என்றார் .

அரசியல் அனுபவங்கள் நூலில் - டாக்டர் கலாநிதி .**

orodizli
20th November 2019, 06:44 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .

20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம் .ஜி.ஆர் ., சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ............ Thanks.........

orodizli
20th November 2019, 07:09 PM
உடன் பிறவா பாச சகோதரர்கள் திருவாளர்கள் ... லோகநாதன்... மஸ்தான் சாஹிப், சுந்தரபாண்டியன் உட்பட எல்லோருக்கும் நன்றி... நக்கலாகவோ, சம்பந்தப்பட்டவர்களை களங்க படுத்தவோ பேட்டியின்போது சொன்னதாக தெரியவில்லை... கண்ணுக்கு தெரிந்த ஒரு உதாரணத்துக்கு தான் கோடிட்டு காட்டவே என எடுத்து கொள்ள வேண்டும்... இதை பெரிது படுத்தி தேவையில்லாத... நன்றி கெட்ட தனமான, மன சாட்சியே இல்லாத கருத்துக்களை சிலர் கொட்டுகிறார்கள். அது மட்டுமல்ல... பாவம், நடிகர் பிரபு தொலைக்காட்சியில் பேசும்போது யாரோ சொல்லி கொடுத்ததை அப்படியே ஒப்பிக்கிறார்.. இதிலேயே அவரவர்களின் திறமையும்? சரக்கும் என்னவென்று பலர் அறிய உதவுகிறது.. எந்த சம்பவம் எப்போது நடந்தது! என்று கூட தெரியாமல் இருக்கிறார்களே என பரிதாபமே மேலிடுகிறது.......

orodizli
21st November 2019, 03:17 PM
ஜனநாயக நாட்டில்
சிங்கம் வளர்த்த "மன்னாதி மன்னன்" எம் ஜி ஆர்
மேல் ஆதிக்க காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியில் இருந்து மாற்றிய வீரன் எம் ஜி ஆர்
திராவிட இனத்தை ஆள வைத்த மாவீரன் எம் ஜி ஆர்
ஊழல் அரசியல் வாதிகள் உள்ள நாட்டில் ஊழல் இல்லா முதல்வராய் ஒரு பொற்க்கால ஆட்சி தந்த இளம் சூரியன் எம் ஜி ஆர்
வீரர் அலக்ஸாண்டரை கண்டதில்லை நெப்போலியனை கண்டதில்லை கண்டோம் அன்பால் வீரத்தால் கொடையால் எவரையும் வெல்லும் உலகை வென்ற மாவீரன் எம் ஜி ஆரை
எவராலும் வெல்ல முடியாத சக்தி புகழ் கொண்ட மன்னன் எம் ஜி ஆர் புகழ் காப்போம்

வாழ்க எம். ஜி .ஆர்., புகழ்......... Thanks.........

orodizli
21st November 2019, 03:22 PM
எம்.ஜி.ஆர் மடியில் உரிமையோடு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா..? - https://tamil.asianetnews.com/cinema/actor-arun-vijay-sitting-in-mgr-q19p5g.......... Thanks.........

orodizli
21st November 2019, 03:28 PM
சர்க்காரியா கமிசன் சுட்டிக்காட்டிய
திமுகவின் முக்கிய ஊழல்களில் ஒன்று , " குளோப் தியேட்டர் ஊழல் " இது என்ன புதுக்கதை ? புதுக்கதை எல்லாமில்லை ...
பழைய கதைதான் ...
சென்னை மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி அருகில் உள்ள குளோப் தியேட்டர், சிலகாலம் கழித்து அலங்கார் தியேட்டராகி இன்று ஷாப்பிங் மால் ஆக இருக்கிறது .அப்போ இது குளோப்
தியேட்டர் .இந்த இடம் வட இந்தியாவை சேர்ந்த குஷால் தாஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது .இந்த கட்டிடத்தை குஷால் தாஸ் கிட்ட இருந்து 25 வருட குத்தகை அடிப்படையில் வரதராஜ பிள்ளை என்பவர் வருடத்துக்கு ரூ 5000/- என்ற ஒப்பந்தம் அடிப்படையில் பெற்று அதில் குளோப் தியேட்டர் நடத்தி வந்தார்.தியேட்டர் மூலம் வாரத்துக்கு ரூ 8000/- வீதம் வருடத்துக்கு ரூ 4 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தார்.என்றாலும் ரூ 5000/- மட்டுமே ஆண்டிற்கு பெற்று வந்த குஷால் தாஸ் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.
குத்தகை காலம் முடிவடைந்ததும் மறு குத்தகை விடப்போவதில்லை என்றார் இட உரிமையாளர்.
வருடத்தில் எல்லா செலவும் போக சுளையாக 4 லட்சம் வருமானம் பார்த்த வரதராஜ பிள்ளை சும்மா இருப்பாரா ?
குஷால் தாஸ் & வரதராஜ பிள்ளை இருவரும் நீதிமன்றத்தில் முட்டி மோதிக்கொண்டனர் ...
நீதிமன்ற தீர்ப்பு இட உரிமையாளர்
குஷால் தாஸ்க்கு சாதகமாக வருகிறது .
6 வார காலத்தில் இடத்தை காலி செய்து உரிமையாளர் கிட்ட இடத்தை ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டது கோர்ட்.வரதராஜ பிள்ளை முரசொலி மாறன் கிட்ட போய் கண்ணை கசக்கி கொண்டு நின்றார்.
அவர் உள்ளாட்சி துறை அமைச்சர்
ப.உ.ச அவரை பார்க்கச்சொன்னார்.
ப.உ.ச வரதராஜ பிள்ளையிடம் இதற்கு ஒரேதீர்வு சட்டமன்றத் தில் குத்தகைக்காரனு க்கேஇடம் சொந்தம் என்று அவசர சட்டம் போடணும் .முதல்வர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என கூறுகிறார் .வரதராஜ பிள்ளை முன்பணமாக
ரூ 30000 /- ப.உ.ச கிட்ட கொடுக்கிறார்.பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கருணாநிதி கிட்ட அழைத்துச்சென் றார்.ஒரு லட்சம் கேட்கிறார் கருணாநிதி.
ப.உ.ச கிட்ட கொடுத்த ரூ 30,000/- மேலும் கருணாநிதி கிட்ட மேலும் ஒரு 30,000 /- ஆக ரூ 60,000/- முன்பணமாக கொடுக்கப்படுகிறது.
மீதியை பின்னர் கொடுப்பதாக வாக்குறுதிகொடுக்கிறார் வரதராஜ
பிள்ளை குத்தகை சட்டம் திருத்தப்பட்டு நீண்டகால குத்தகை யில் இருப்பவர்களுக்கு நிலம் உரிமை என்ற அவசர சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றி யது.கோர்ட் 6 வார காலத்தில் நிலத்தை உரிமையாளர் கிட்ட ஒப்படைக்க சொல்லி தீர்ப்பளித்துள்ளதால் அவசர சட்டம் அதற்குள் நிறைவேற வேண்டுமானால் ஜனாதிபதி கையொப்பமிட்டால் மட்டுமே செல்லுபடியாகும் .
அதற்காக சட்டமன்ற அவசர சட்ட
தீர்மானம் பிளைட்டில் டில்லிக்கு
கொண்டு செல்லப்படுகிறது ...
" செத்தவன் சாமான் சுமப்பவன் தலைமேலே " என்பதுபோல் பயனாளி வரதராஜ பிள்ளை அச்செலவை ஏற்றுக்கொள்கிறார் ....
ஓரிருநாளில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று
அவசர சட்டம் அமலுக்கு வந்து வரதராஜ
பிள்ளை இடத்தின் உரிமையாளராகி விடுகிறார் .மவுண்ட் ரோடு சொத்து வரதராஜ
பிள்ளைக்கு உரிமையாகி விடுகிறது .சர்க்காரியா கமிசன் குற்றச்சாட்டு களில் குளோப் தியேட்டர் குற்றச்சாட்டு பிரதானமானது.!!! ......மக்கள் திலகம் சாதாரண மக்களின் மனதில் வாழ்ந்து, சாமர்த்தியமான அரசியல் வாதியை அல்லவா வென்று, சரித்திரம் படைத்திருக்கிறார்கள்...
Shared
நன்றி.
Rambadran Sir......... Thanks...

orodizli
21st November 2019, 03:29 PM
https://m.facebook.com/story.php?story_fbid=2904307966246400&id=1541372962539914&sfnsn=scwspwa&d=w&s=100005103906616&w=y&funlid=EWbETXtLy7HAuonE.......... Thanks...

orodizli
21st November 2019, 03:34 PM
வரும் 29-11-2019 முதல் அட்டகாசமான துவக்கம்...மதுரை - சென்ட்ரல் சினிமா dts., தினசரி 4 காட்சிகள்... திரையுலக அசல் அஃக் மார்க் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும்........."ராமன் தேடிய சீதை" , குளு, குளு கலர்புல் காவியம் வருகை.........

oygateedat
21st November 2019, 08:58 PM
https://i.postimg.cc/j50cvGDw/177e4366-fdb3-4816-940f-5b3e7f250b03.jpg

oygateedat
21st November 2019, 08:59 PM
https://i.postimg.cc/k5vrQF4m/22349e2b-02af-42ca-b950-038f5e2297ce.jpg (https://postimages.org/)

oygateedat
21st November 2019, 09:01 PM
https://i.postimg.cc/q7zbRs3w/IMG-4307.jpg (https://postimg.cc/QBZkYWSK)

oygateedat
21st November 2019, 09:01 PM
https://i.postimg.cc/pTBFM7L6/IMG-4293.jpg (https://postimg.cc/bDsJQmbx)

oygateedat
21st November 2019, 09:08 PM
https://i.postimg.cc/fRtSRCKB/IMG-4314.jpg (https://postimages.org/)

oygateedat
21st November 2019, 09:10 PM
https://i.postimg.cc/5ygKjbxd/IMG-4285.jpg (https://postimg.cc/0K60BgMc)

oygateedat
21st November 2019, 10:12 PM
https://i.postimg.cc/ZKX4rBX5/IMG-4332.jpg (https://postimages.org/)
Thanks to Mr Ranjith

oygateedat
22nd November 2019, 04:14 AM
https://i.postimg.cc/Vk3h3wmf/IMG-4322.jpg (https://postimg.cc/RWLGHjWy)

oygateedat
22nd November 2019, 04:14 AM
https://i.postimg.cc/76qKkYck/3aaf78b2-1ef7-4ab1-9fc4-5961d335c4b2.jpg (https://postimages.org/)

oygateedat
22nd November 2019, 04:17 AM
https://i.postimg.cc/VN8RqkzC/c42d658f-c2bc-49fe-b247-a9d50001b16c.jpg

oygateedat
22nd November 2019, 04:24 AM
https://i.postimg.cc/jdjSZps3/IMG-4334.jpg (https://postimages.org/)

orodizli
22nd November 2019, 01:12 PM
#தொழிற்கல்வியின் #அவசியம்...

இளைஞர்கள் படிக்கவேண்டும்...
கல்வி கற்கவேண்டும்...
அதிலும் தொழிற்கல்வி மிக மிக அவசியம்...

புரட்சித்தலைவர் வாத்தியாரின் அற்புதமான இந்தக் காணொளியைப் பார்த்து மகிழுங்கள்...

https://m.facebook.com/story.php?story_fbid=298508630752254&id=100017793579364&sfnsn=scwspwa&d=w&vh=i&funlid=BZfRHcu9wMgbmyEx............ Thanks.........

orodizli
22nd November 2019, 01:31 PM
ஒரு கேள்வி பதில் 1972.........

அண்ணா தி.மு.க வின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

எம்.ஜி.ஆரி.ன் செல்வாக்கு பிரமாண்டமானது..... பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடான கோடிக்கணக்கான மக்கள் எம்.ஜி.யாருக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். சாதாரண மக்கள் கூட்டத்தை திசைதிருப்புவதற்கு ஒரு திறமையான தலைவனுக்கு அதிக காலம் எடுக்காது.

தமக்கு ஆதரவாக உள்ள லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான, மக்களை தமது கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர். ரால் முடியுமானால் அவருடைய கொடி நிச்சயமாக உயரப் பறக்கும்..... உயர பறந்துகொண்டே இருக்கும்........... Thanks.........

[கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்]������

orodizli
22nd November 2019, 01:35 PM
ஒரு கேள்வி பதில் [1972]:.........

எம்.ஜி.ஆரின் விலாசத்தை அறியத் தருவீர்களா?

எம்.ஜி.ஆருக்கு விலாசமா?! அவருடைய விலாசம்தான் தமிழ் பேசுமிடமெல்லாம் பரந்து விரிந்து இருக்கிறதே!.......... Thanks........

எம்.ஜி.ஆர், தமிழ் நாடு, இந்தியா என்று எழுதினால் போதும்.������

orodizli
22nd November 2019, 01:38 PM
பேரறிஞர் அண்ணா !

************************
புரட்சி நடிகர் MGR ரைப்பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வதற்கு சமம் உண்மை தானே !

முல்லைக்கு மனம் உண்டு என்பதை கூறவா வேண்டும் !!

எம் ஜி ஆர் நடிக மணிகளிலே வீரர் !
விவேகம் நிரம்பிய தோழர் !!
இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடைய அறிவியக்கவாதி !
இரக்கவாதி !!
இது தானே பேரறிஞர் அண்ணா வின் சேதி !

அனல் M. அமரநாதன் B.Sc,........... Thanks.........

orodizli
23rd November 2019, 06:47 AM
https://youtu.be/aLpmWHpAbAs........ Thanks...

orodizli
23rd November 2019, 06:49 AM
https://youtu.be/zxdeWXIcDX4......... Thanks...

orodizli
23rd November 2019, 03:08 PM
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,
ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !

ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு பின்னால்
நிறைய அவமானங்கள்தான் இருக்கின்றன.

அந்த மனிதன் - “எம்.ஜி.ஆர்.”

“நாடோடி மன்னன்”
– இது எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம்.

திரும்ப திரும்ப ஒரே காட்சியை படமாக்குகிறார் எம்.ஜி.ஆர்.
காரணம் , அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக !

ஆனால் இதைக் கண்டு ,
ஆத்திரம் கொண்ட கதாநாயகி பானுமதி ,
படப்பிடிப்புத் தளத்தில் , பலர் முன்னிலையில் எம்.ஜி.ஆரை அழைக்கிறார் இப்படி:

“மிஸ்டர் ராமச்சந்திரன்!"

திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.

பானுமதி படபடவென்று பொரிந்து தள்ளுகிறார் :

"ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன்.
நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல. நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க . முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க.
இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி .”

அத்தனை பேர் மத்தியிலும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி விட்டு அங்கிருந்து போய் விட்டார் பானுமதி .
ஆனால் , எம்.ஜி.ஆர். ஆத்திரம் அடையவில்லை ; அவமானம் கொள்ளவில்லை.

பானுமதி கதாபாத்திரத்தை பாதியிலேயே இறப்பது போல மாற்றி விட்டு , சரோஜா தேவியை வைத்து “நாடோடி மன்னன்” படத்தை தொடர்ந்து எடுத்து , அதை வெற்றிப் படமாகவும் ஆக்கிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

சரி , பலர் முன்னிலையில் தன்னை பரிகாசம் செய்து அவமானப்படுத்திய பானுமதியை , பதிலுக்கு பதிலாக எப்படி பழி வாங்கினார் ?

எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் அல்லவா ?

25 ஆண்டுகள் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். !

அவர் தமிழக முதல்வராக ஆனபின் -

பானுமதியின் மீதுள்ள பகையை எப்படி தீர்த்துக் கொண்டார் எம்ஜிஆர் ?

1983 இல் “கலைமாமணி” விருதை பானுமதிக்கு வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர்.
அது மட்டுமா ?
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை அமர வைத்தும் அழகு பார்த்தார்.

அவமானப்படுத்தியவருக்கு இத்தனை
வெகுமானங்களா ?
ஆச்சரியமாக இருக்கிறது!

இப்படி ஒரு தெய்வீக குணம் நமக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது.

குணம் வருகிறதோ இல்லையோ ,
ஒரு குறள் நினைவுக்கு வருகிறது .

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”

“தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்;
பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.” .......... Thanks.........

orodizli
23rd November 2019, 03:12 PM
இந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காவிய
திரைப்படங்கள் விபரம்...
----------------------------------------
சென்னை - பாலாஜி DTS.,
"தாய்க்கு தலை மகன்",
தினசரி 2 காட்சிகள்
மேட்னி/இரவு காட்சிகள்

மதுரை- ராம் dts., அரங்கில்
"நினைத்ததை முடிப்பவன் " டிஜிட்டல்
தினசரி 3 காட்சிகள்

கோவை- டிலைட் dts.,
உழைக்கும் கரங்கள்
தினசரி 2 காட்சிகள்............ Thanks.........

orodizli
24th November 2019, 12:35 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார்.

இப்போதும் கூட ‘ சோ அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.

எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவ தாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர்.

ஆனால்,
‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ,

அதற்கு சொல்லும் காரணம்,

‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’

‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார்.

‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன்..."

திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது.

சோவின் கேள்வி இது....

‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’............ Thanks.. ..........

orodizli
24th November 2019, 12:37 PM
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.

02.02.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 03.02.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .

இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .

03.02.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது

மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .

மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் ......... Thanks...

orodizli
24th November 2019, 10:03 PM
#எம்.ஜி.ஆர்.,--- ரசிகர்கள் ஏன் மற்ற நடிகர் படங்களை விரும்பறதில்ல?...

இதோ ஒரு உண்மையான ரசிகரின் பதில்...

உலகில் பிறக்கும் கோடிக்கணக்கான பேர்களில் ஒரு சிலரே வரலாற்றில் தங்கள் பெயரை பதித்துவிட்டுச் செல்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களால் இதயதெய்வம் என போற்றப்படுபவர் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்., திரை உலகிலும் மன்னர்.......சக்கரவர்த்தி...........

அரசியல் உலகிலும் சூப்பர் ஸ்டார். இது அவர் வாழ்ந்த காலத்தில்....
இன்று எம்ஜிஆரை முன்னாள் நடிகர், முன்னாள் முதல்வர் என போகிற போக்கில் சொல்லிவிட்டு போகமுடியுமா?

சில மாதங்களுக்கு முன்........

#"ரிக்சாக்காரன்", படம். 11 மாதத்தில் 4 வது முறை கோவை - ராயல் திரையரங்கில்..........
"இப்படி எங்களை அனாதையாக்கிட்டுப் போயிட்டியே தலைவா'"என்ற ஏக்கத்துடன் திரண்டு நிற்கிறார்கள்... எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்கள்.....

""எத்தனை படங்கள் வந்தாலும் பெட்டிக்குள் முடங்கிவிடும்.எம் தலைவர் படம் 48 வருசமா ஓடிக்கிட்டே இருக்கு பாத்தியா என ஒரு ரசிகர் பெருமிதத்தின் உச்சிக்கே செல்கிறார்.
தலைவர் படத்த தவிர வேற எந்த படமும் பாக்கறதில்லங்க.
பாத்த படத்தையே பாத்தாலும் மறுபடி புதுசா பாக்கறமாதறதான் இருக்கு.
அலுக்கவே இல்ல.

இந்த மாதிரி தலைவரின் எல்லாப் படங்களையும் புதுப்பிக்கணும்.
தலைவர் படத்தில் எல்லா விசயங்களையும் நிறைவு செய்துவிட்டார். இயல்பான தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்தியதால் 1971 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.சண்டைக் காட்சிகளில் தனி முத்திரைப் பதித்தார். குறிப்பாக சுருள் பட்டைக் கத்தி சண்டைக் காட்சி தலைவருக்கு முன்பும் இன்றுவரையும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை.ரிக்சாவில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு ஒற்றைக் கையாலே சிலம்பம் சுற்றி நடித்த ஸ்டைல்...ரிக்சாவை பின்னோக்கி ஓட்டி வட்டமடித்து வரும் ஸ்டைல்...இப்படி எண்ணற்ற சாகசங்களை நிகழ்த்தி காட்டியவர்.
பாடலில் பள்ளிக்கூடமே நடத்தியவர்.

கதை அமைப்பிலும் பண்பாடு கலாச்சாரம் காத்தவர். கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு , காத்தவர்......

இன்னிக்கு இந்த மாதிரி யாரு காமிக்கறா? பெத்த தகப்பனையே கேவலமா பேசறானுக.
அத பாத்து நெசத்துலயும் அவனுக ரசிகனுக பண்றானுவ. சினிமாங்கறது படு கேவலமா போச்சு.சம்பாரிக்கவா தலைவர் சினிமாவுக்கு வந்தாரு?..
ஏதாவது நல்ல சேதி சொல்லனும்.சனங்களுக்கு நல்ல கருத்து சொல்லனும், நாலு பேருக்கு உதவனும் இதான் தலைவர்.

இதைத் தாண்டி வேறொரு அதிசயத்தைக் காட்டும் ஒரு நடிகர் உண்டென்றால் சொல்லுங்கள்...நான் அவருக்கு ரசிகராகிறேன்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு ஈடாக எந்த நடிகரை காட்டுவது??
மக்களுக்கு நல்ல கருத்துள்ள படம் எங்க போய் தேடுவது?
பதில் எங்கிட்ட இல்லாததால் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

ரசிகர்களை எம்ஜிஆர் எவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருந்தாரோ.
ரசிகர்களும் அதே மாதிரி அவரை புரிந்து கொண்டுள்ளனர்..

இது போன்ற உண்மையான நேசமுள்ள ரசிகர்கள் இருக்கும் வரை எம்ஜிஆரின் புகழ் மங்காது மறையாது.....

மீண்டும் அடுத்த பதிவில்........ Thanks..........

oygateedat
24th November 2019, 10:35 PM
https://i.postimg.cc/nLqrz8kz/377307ca-c5a8-41a3-8a5e-67ed668dc6b7.jpg (https://postimages.org/)

கோவை

டிலைட்

oygateedat
24th November 2019, 10:37 PM
https://i.postimg.cc/nhbYwxCV/246468ed-b839-4fa7-8f52-ac1fbad374d1.jpg (https://postimages.org/)

oygateedat
24th November 2019, 10:39 PM
https://i.postimg.cc/xCzLPFnN/IMG-4338.jpg (https://postimages.org/)

oygateedat
24th November 2019, 10:39 PM
https://i.postimg.cc/8cTsry5S/42ff5404-2c5e-4428-888b-b39b886ea977.jpg (https://postimg.cc/S2tmBfCT)

oygateedat
24th November 2019, 10:40 PM
https://i.postimg.cc/zX65strG/d8057964-0406-411a-8521-7044ca66c532.jpg (https://postimg.cc/vcrp9vTJ)

oygateedat
24th November 2019, 10:41 PM
https://i.postimg.cc/KcKm0S6H/IMG-4347.jpg (https://postimg.cc/RqBr08V7)

oygateedat
25th November 2019, 05:12 AM
https://i.postimg.cc/rpPS9vbM/8d175570-6f2d-43cb-956b-e04534abc99b.jpg (https://postimages.org/)

oygateedat
25th November 2019, 05:26 AM
https://i.postimg.cc/yNwc32W5/IMG-4359.jpg (https://postimages.org/)

orodizli
25th November 2019, 12:00 PM
சூப்பர்ஸானிக் ஹீரோவின் சூப்பர்ஹிட் ஃபிலிம்

குலேபகாவலி

[29.7.1955 - 29.7.2013] : 59வது ஆண்டு துவக்கம்

சீர்மேவும் சென்னையின் சீரான புள்ளிவிவரம்

COMMERCIAL CLASSIC என்கின்ற அந்தஸ்தில் கண்ணியத்தோடு போற்றப்படும் கலையுலக கனவானின் "குலேபகாவலி" முதல் வெளியீட்டில், 29.7.1955 வெள்ளியன்று சென்னையில் கெயிட்டி, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி ஆகிய நான்கு திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

சென்னை 'கெயிட்டி'யில் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 நாட்கள் வெற்றிமுரசு கொட்டியது. 14.10.1955 வெள்ளியன்று 'கெயிட்டி'யில் "அனார்க்கலி" மொழிமாற்று[டப்பிங்] திரைப்படம் வெளியானது.

இதே போல 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கிலும் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 அபார வெற்றி நாட்கள். 14.10.1955 வெள்ளியன்று 'ஸ்ரீகிருஷ்ணா'வில், ஜெமினி-சாவித்திரி இணைந்து நடித்த "மாமன் மகள்" திரைப்படம் வெளியானது.

'உமா'வில் 29.7.1955 தொடங்கி 29.9.1955 முடிய 63 வளமான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று 'உமா'வில் "ஷாஹி மெஹ்மான்" என்ற ஹிந்தித் திரைப்படம் வெளியானது.

அதே போல 'ராஜகுமாரி'யிலும் 29.7.1955 அன்று ஆரம்பித்து 29.9.1955 முடிய 63 வனப்பான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று இந்த அரங்கில் 'குரு தத்'தின் "Mrs. & Mr. 1955", ஹிந்தித் திரைப்படம் வெளியானது.

ஆக, குணக்குன்றாகக் கோலோச்சியவரின் "குலேபகாவலி", முதல் வெளியீட்டில், சிங்காரச் சென்னையில் ஓடிய நாட்கள் மிகச் சரியாக:

கெயிட்டி - 77 நாட்கள்
ஸ்ரீகிருஷ்ணா - 77 நாட்கள்
உமா - 63 நாட்கள்
ராஜகுமாரி - 63 நாட்கள்

மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் மிகமிக வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ்-ஆபீஸில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கிய COMMERCIAL CLASSIC, "குலேபகாவலி"............ Thanks.........

orodizli
25th November 2019, 12:01 PM
அறிந்த தகவல் அறியாத செய்தி

புதிய தொடர் எழுவதற்கு முன் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். பாசம் படத்தில் வரும் ஒரு வசனம் இந்த உலகத்தில் நாம் எதை விரும்புகிறமோ. அது நமக்கு கிடைப்பதில்லை. .எதை ஒதுக்கிறமோ. அது நமது காலடியில் இருக்கும். .இது எந்தளவுக்கு உண்மை என்று, நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரவர் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். .வட இந்திய பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் அகில இந்தியா அறிந்த சிறந்த பின்னனி பாடகி பல விருதுகளை குவித்தவர் இது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது. . வட இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் .பல தலைவர்கள் லதா மங்கேஷ்கர் தான் அகில இந்தியாவிலேயே சிறந்த பாடகியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏன் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .ஆனால் வாத்தியார் மட்டும் அதற்கு ஒப்புதல் தரவில்லை காரணம். தமிழகத்தில் உள்ள P. சுசீலா தான் என்னைப் பொருத்தவரைக்கும் சிறந்த பாடகி. தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பாடகர் இருக்கும் போது வடமாநிலத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் எப்பவும் சுசீலா ரசிகர் லதா மங்கேஷ்கர் நல்ல பாடகிதான் அதற்காக சுசீலா விட சிறந்தவர் என்பது ஏற்றுக் கொள்ள வில்லை என்றார், வாத்தியாரின் கருத்துக்கள் அறிந்த பின் தமிழ் நாட்டில் கருத்து தெரிவித்தார்கள் தலை குனிந்தனர். .....
அதேப்போல் P. சுசீலா அவர்கள் தனது 70 வது வயதில் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கினார். . அந்த அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவும் சுசீலாவின் 75 . ம் ஆண்டு பவள விழா சேர்ந்து ஜெயா டிவி சிறப்பாக நடத்தியது. அதில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் பல தலைவர்களும் சுசீலாவை வாழ்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்கள் அப்போது தந்த தகவல்தான் நான் மேலே குறிப்பிட்டது.
அனைவரும் சுசீலாவை வாழ்த்தினர் பாராட்டினர் புகழ்ந்தனர் போற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் கடைசி நாளன்று P. சுசீலா அவர்கள் கூறினார்கள். ...

இன்று நான் அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்கிறேன் என்றால், அந்த எண்ணம் செயலும் நமக்கு வசதி வாய்ப்பு வாழ்க்கை அமைந்த பிறகு நமக்கு தேவையானது சேர்த்த பிறகு நமது தேவைக்கு அதிகமாக சேர்ந்த பிறகுதான் இந்த எண்ணம் நமக்குள் எழுந்துள்ளது என எண்ணி வருத்தம் அடைகிறேன். .காரணம்
பிறருக்காக வாழும் போதும் பிறர்க்கு உதவி செய்யும் போதும். அதன் மூலம் பிறர் அடையும் பலனும். சந்தோஷம் மகிழ்ச்சியும் அவர்கள் நம்மை மனதார வாழ்த்தும் போதும். மனம் அமைதி பெறுகிறது சாந்தம் அடைகிறது. இதை ஆரம்பத்தில் செய்யாதை எண்ணி வருத்தம் அளிக்கிறது. . இப்போது தான் எனக்கு புரிகிறது அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பேர் புகழுக்காக தர்மம் செய்ய வில்லை. அதிலே கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. பிறர்க்கு உதவிசெய்யும் போது மனம் மகிழ்ந்து செய்கிறார். கொடுப்பதில் சந்தோஷம் கண்டவர். இருக்கும் போது வசதி வந்த பிறகு செய்வது வள்ளல்தனம் அல்ல அது பிறவிலே வரணும். . அண்ணன் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே அந்த குணம் இருந்தது. அதனால் தான் அவர்க்குகொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது.
இன்று வரை அவர் பேர் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது காரணம் அவரது வள்ளல் குணம் தான். .நீங்களும் உங்கள் தேவைக்கு அதிகமாக இஇருந்ததால் பிறர்க்கு உதவி மகிழ்ச்சி கொள்ளுங்கள். .என்றார். ........... Thanks........

orodizli
25th November 2019, 12:02 PM
மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து ரசிகராக - பின்னர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவராக பணியாற்றி

பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுத்து

1980ல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பெருமைக்குரியவர்
திரு குண்டுராவ் அவர்கள் ஒரு முறை கூறிய பேட்டி

''1951ல் சர்வதிகாரி படத்தை பார்த்து எம்ஜிஆர் ரசிகனானேன் .

பின்னர் மைசூர் -குடகு பகுதியில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கி

அவரது எல்லா படங்களையும் பல முறை பார்த்து அவருடய

தீவிர ரசிகனாக மாறினேன் .

அவரது நடிப்பு - பாடல்கள் - சுறுசுறுப்பு - எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது . அவருடைய படங்களை பார்த்த பின்தான்
அரசியலில் ஈடு பட வேண்டும் என்று எண்ணம் தோன்றி
இன்று ஒரு மாநில முதல்வராக அமர்வதற்கு முழு காரணம்

மக்கள் திலகம் என்று கூறியுள்ளார் .

1970களில் மக்கள் திலகம் படங்கள் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்த நேரத்தில் திரு குண்டுராவ் பல ஒத்துழைப்பு
கொடுத்துள்ளார் .
மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்கள் திலகம் அவர்கள் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த திரு குண்டுராவை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து கௌரவ
படுத்தினார் ........... Thanks........

orodizli
26th November 2019, 12:06 PM
மதங்களை கடந்து ஜாதி, இனம் போன்றவைகளுக்கு அப்பாற் பட்டு, அனைத்து தரப்பினராலும் நேசிக்கப் பட்ட மாபெரும் தலைவர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று... அதுதான் எம்.ஜி.ஆர். மதம். பிரிவினை நாடோம், கட்டுண்டு வாழோம், சம நிலையில் இணைவோம். இதுதான் என் தலைவன் பொன்மனச் செம்மல் எனக்கு கற்றுக் கொடுத்தது. அன்புடன் : சௌ.செல்வகுமார்........... Thanks.........

orodizli
26th November 2019, 12:09 PM
முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.

இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.

மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.

இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :

"மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.

சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :

"ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.

சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.

இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ==== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.

ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.

நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ==============================

சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.

ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்........... Thanks.........

orodizli
26th November 2019, 12:15 PM
'உன் அகம்' நலம் என்றால் 'தென்னகம்' நலம்தான் தலைவா! -எம்.ஜி.ஆர்

உள்ளேயும் வெளியேயும் தங்கமாக மின்னிய தலைவர் எம்ஜிஆர்! இவரது பூர்விகம் கேரளா. பிறந்தது இலங்கையில் உள்ள கண்டி. வளர்ந்தது கும்பகோணம். உலகம் போற்றும் மனிதராக உருவா(க்)கியது சென்னை. அதனால்தானோ என்னவோ தனது பூத உடல் இந்த மண்ணில்தான் அமரத்துவம் அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு எத்தகையது? சில சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. நமது வாசகர்களுக்காக இங்கே கொஞ்சமே கொஞ்சம்...

ஒத்தவாடை தெரு-

கலைஞரும் எம்ஜிஆரும் நண்பர்களாக நடைபழகிய தெரு இது. இங்குதான் எம்ஜிஆர் வீடும் இருந்தது. கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.

ராமாவரம் தோட்டம் -

அடிப்படையில் மலையாளிதான் என்றாலும், புரட்சித்தலைவர் விரும்பிக் கொண்டாடியது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைதான். இந்த நாளில் திரைத்துறையை சார்ந்த தனது நண்பர்களை அழைத்து இங்குதான் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்.

அதே மாதிரி புத்தாண்டு தினத்தன்று வருகிற எல்லாருக்கும் தனது கையால் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்குவாராம். திரையுலகை சார்ந்த எல்லாருமே இந்த நோட்டை வாங்க ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருக்கிறார்கள். புரட்சி தலைவர் கையால் வாங்கினால் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி ஒருமுறை வந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு 100 ரூபாய் தாளுடன், பெட்டி நிறைய கேஷ¨ம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். ஏன்?

எங்கோ ஒரு கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தாராம் பாலாஜி. அங்கே மொட்டை வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் யாரோ ஒரு மூதாட்டி சென்று கொண்டிருக்க, இறக்கப்பட்ட பாலாஜி காரை நிறுத்தி ஒரு 100 ரூபாய் கொடுத்தாராம் மூதாட்டிக்கு. இதுபோல நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிற ஒரே ஜீவன் எம்ஜிஆர்தானே? நீங்க எம்ஜிஆர்தானே? நல்லாயிருக்கணும் தலைவா என்று அந்த மூதாட்டி வாழ்த்தினாராம். இதைதான் பாலாஜி அப்போது எம்ஜிஆரிடம் சொன்னார்.

என் சார்பில் அந்த மூதாட்டிக்கு உதவியதற்காகதான் இந்த பரிசு என்றுதான் ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்தாராம் எம்ஜிஆர். (ஆனால் அதை பாலாஜி வாங்கிக் கொள்ளவில்லை)

எம்ஜிஆரை வெறும் நடிகராகதான் பலர் பார்த்தார்கள். ஆனால் அவர் பெரிய படிப்பாளி என்பதை நிரூபித்த இடம் இதே ராமாவரம் தோட்டம்தான். இங்கே அண்டர் கிரவுண்டில் மிக பிரமாண்டமான நு£லகம் அமைத்திருந்தார் எம்ஜிஆர். இந்த நு£லகத்தை பார்த்து வியந்த அறிவாளிகளில் கருணாநிதியும் ஒருவர்.

மவுண்ட் ரோடு-

தமிழக முதல்வர்கள் யாருமே மக்கள் முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அந்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டும்தான். முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இதே மவுண்ட் ரோடில் அண்ணாசிலைக்கு அருகே பிரமாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் முன்னிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் புரட்சித்தலைவர்.

லாயிட்ஸ் சாலை-

இன்றைய அதிமுக வின் தலைமை அலுவலகம் இருக்கிறதே, அது ஒரு காலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. அவர் திரைத்துறையில் சம்பாதித்து வாங்கிய முதல் சொத்தும் இதுதான். இவர் வாங்கி வைத்திருக்கும் மற்ற பங்களாக்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் எம்ஜிஆர், இங்கு மட்டும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார். ஏனென்றால் இந்த மண் அவரை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷலானது.

தி.நகர் ஆற்காடு தெரு-

தனது முக்கியமான முடிவுகளை அவர் இங்குதான் எடுப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயன்றார் எம்ஜிஆர். ஆனால் அப்போது உடனிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதில் நடிக்கவில்லை என்றாலும், நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திடீரென்று என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்குமான தொடர்பு விட்டு போயிருந்தது. முதல்வர் ஆன பின்பு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்ற எம்ஜிஆர், அங்கு வாசலில் நின்று வரவேற்பளித்துக் கொண்டிருந்த ஜெ.வை சந்தித்தார். தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டு நேரம் ஒதுக்கிக் கொடுத்த இடம் இதே ஆற்காட் தெரு அலுவலகத்தில்தான்.
அடையார் சத்யா ஸ்டுடியோ-

தனது அன்னையார் சத்யபாமா அம்மையார் பெயரில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட ஸ்டுடியோ இது. திமுக விலிருந்து நீக்கிப்பட்ட நிமிடங்களில் இங்குதான் இருந்தார் எம்ஜிஆர். போனில் தகவலை சொன்ன நாஞ்சில் மனோகரன், "இப்போ என்ன செய்யப் போறீங்க?" என்று பதற்றத்தோடு கேட்க, "பால் பாயாசம் சாப்பிட போகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் எம்ஜிஆர். புதிய கட்சி என்ற முடிவை எடுத்ததும் இதே ஸ்டுடியோவில் வைத்துதான்.

மீனம்பாக்கம்-

அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சிங்கம் போல் துள்ளிக்குதித்து சென்னை வந்த புரட்சித்தலைவர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தன்னை பார்க்க துடித்த லட்சோப லட்சம் மக்களுக்கு தரிசனம் கொடுத்தது இங்கேதான். பின்பு இது திரையரங்குகளில் நியூஸ் ரீலாக காண்பிக்கப்பட்டது. இந்த ஒளிச்சுருளுக்கு பின்னணி பேசியவர் எம்.என்.ராஜம். அவர் பேசிய ஒரு வாசகம் இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே...

"எம்.ஜி.ஆர், நலமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். அதற்கு மக்கள், தலைவா... உன் அகம் நலம் என்றால், தென்னகம் நலம்தானய்யா என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.... !".......... Thanks.........

orodizli
26th November 2019, 12:17 PM
*இது அந்தக் காலம்*
*மனிதரை மதிக்கும்* *மனிதநேயமிக்க எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு*

ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி :

முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும்
மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்

இப்போது ராதா அவர்கள் விருது வாங்கச் செல்லும் போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்துத் தரச் செய்கிறார்.
திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பிய போது ஓர் அதிர்ச்சி...!!!

மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!

குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி ...!!!

திரு. ராதா ஏதோ சொல்ல முயலும் போது அவரைத் தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது :

"நான் ஆரம்ப காலத்தில் கஷடப்படும் போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும்.

"தாங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்க வேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...

திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின. ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து
திரு ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???............ Thanks...

orodizli
27th November 2019, 07:34 PM
ஒருமுறை பாராளுமன்ற தேர்தலின்போது எம்.ஜி.ஆர்.,ஜனதா கட்சிக்கு ஆதரவளித்தார். அப்போது கோவை பொதுக்கூட்டத்தில் "சோ ராமசாமி" பேசியது...

வீட்டில் அரிசிக்கு உலைத்தண்ணீர் வைத்துவிட்டு அரிசிக்காக ஒரு வீட்டிற்கு நம்பி செல்லலாம் என்றால் அது எம்ஜியார் வீடுதான். அவர் விளம்பரத்திற்காக உதவுவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் விளம்பரமே இல்லாமல் அவர் செய்த உதவிகள் ஏராளம்.

மேலும் எம்ஜியாருக்கு பிள்ளை இல்லை என்று எதிர்கட்சிகாரர்கள் பேசுகிறார்கள். இந்திராவிற்கு ஒரு சஞ்சய்காந்தி; கருணாநிதிக்கு ஒரு மு.க.முத்து,ஸ்டாலின் போன்றபிள்ளைகள் இருப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருப்பதே மேல் என்று சோ கூறினார். மேலும் அந்த தேர்தலில் எம்ஜியாருக்கு ஓட்டு சதவீதம் அதிகம் இருந்தாலும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளே கிடைத்தது. அப்போது எல்லா பத்திரிக்கைகளும் இந்திரா காந்தி, கருநாநிதியை அட்டைபடத்தில் பிரசுரித்தன. ஆனால் துக்ளக் இதழ் மட்டும் எம்ஜியார் அவர்களின் அட்டை படத்தை வெளியிட்டு "நேர்மைக்கு தோல்வி" என்று தலையங்கம் எழுதினார் சோ அவர்கள்................. Thanks.........

orodizli
27th November 2019, 07:38 PM
கவிதை !
_____________
பூ மகள் மெல்ல
வாய் மொழி சொல்ல
சொல்லிய வாரத்தை பண்ணாகும் !
காலடித் தாமரை
நாலடி நகர்ந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும் !

இது போல் எழுத என் எழுது கோலை !
பணித்தேன்
எழுது கோல் கண்சிமிட்டியது !

தலைவா... சட்டியில்
இருந்தால் தானே ?

அதன் நக்கலில்
உண்மை இருந்தது !

இயலாமை வெளிச்சம்
போட்டு காட்டியது
வெகுண்டேன் !

நிலைக் கண்ணாடி முன்
அமர்ந்து கற்பனை குதிரையை தட்டினேன் !

மிக மந்தமான குதிரை
பிளிறக்கூட தெரியவில்லை !

வன்முறையை
பயன் படுத்தி
செரிபெல்லத்தை
கசக்கினேன் !

கிறுக்கினேன்
பார்த்திபன் சாயல்
பயம் கவ்வியது !

அருவி போல் கொட்டினால் தான்
கவிஞன் !

எழுது கோல்
ஏளனத்துடன்
ஏறெடுத்து பார்த்தது !

ஆயிரம் நிலவே வா
வானொலி அழைத்து கொண்டிருந்தது !

பாடும் நிலா பாலுவுக்காக
மக்கள் திலகம்
காத்திருந்த நாட்கள் !

மக்கள் திலகத்தின்
பெருந்தன்மையை
பறை சாற்றிய நாட்களல்லவா ?

சிந்தனை திசை மாற
கண்ணயர்ந்தேன் !............ Thanks........

orodizli
27th November 2019, 07:39 PM
https://youtu.be/knCAFHrjqaE........ Thanks...

orodizli
27th November 2019, 07:41 PM
https://youtu.be/PwlJkCEGewE........ Thanks.......

orodizli
27th November 2019, 07:46 PM
*எம்.ஜி.ஆரின் தொப்பியும்,.. கண்ணாடியும் சுவாரஸ்யமான பின்னணித் தகவல்..!?*
எம்.ஜி.ஆர் என்றதும் மக்களுக்கு நினைவு வருவது,பொசு பொசுவென்ற வெள்ளைக் கலர் தொப்பி,முகத்தை மறைக்கும் கருப்புக் கலர் கூலிங் கிளாஸ்,எப்போதும் அவரது வலது கையில் டாலடிக்கும் ரேடோ வாட்ச் மூன்றும் தான் : அதற்குப் பிறகு தான் இரட்டை இலையே!

எம்.ஜி.ஆர் ஆரம்பக் காலத்தில் இருந்தே கருப்புக் கண்ணாடி மீதும் விதவிதமான தொப்பிகள் மீதும் மாறாத காதல் கொண்டிருந்தார்.
அமெரிக்க கௌபாய் தொப்பி,ஹெல்மெட்,
பிரிட்டிஷ் ஹாட்,மேஜிக் நிபுணர்கள் அணியும் தொப்பி,மீனவர்கள் அணியும் தென்னம்பாளைத் தொப்பி,இஸ்லாமியர் அணியும் துருக்கித் தொப்பிகள் (பக்கவாட்டில் ஒரு குஞ்சலம் தொங்கும் தொப்பி) என்று உலகில் இருக்கும் அத்தனை விதமான தொப்பிகளையும் அணிந்து நடித்த ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும் தான்!

சரித்திரப் படமாகவே இருந்தாலும் அதிலும் தொப்பியைப் புகுத்தி புதுமை செய்தவர் எம்.ஜி.ஆர் . அரசகட்டளை படத்தில் வரும் ' ஆடிவா….ஆடிவா 'என்கிற பாடலில் வால் முடியுடன் சேர்த்துப் பாடம் செய்த நரித்தோல் தொப்பி அணிந்து தோன்றுவார்.

இப்படி சினிமாவில் விதவிதமான தொப்பிகள் அணிந்த எம்.ஜி.ஆர் அடிமைப்பெண் படத்துக்குப் பிறகு நிஜ.வாழ்க்கையிலும் தொப்பி அணியத் தொடங்கினார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பாலைவனப் பகுதியில் நடந்த போது கடும் வெயிலால் அவர் சிரமப்படுவதைப் பார்த்த நண்பர் ஒருவர் வாங்கி வந்துக் கொடுத்த வெள்ளை நிற 'புஷ் குல்லாவும் , வெய்யிலுக்காக அணிந்த 'கருப்புக் கண்ணாடியும் தான் பிற்காலத்தில் அவரது அடையாளம் ஆயின.

சென்னைக்கு வந்ததும் ரஸாக் என்பவர் தயாரித்துத் தந்த தொப்பிகளைத் தான் அவர் தொடர்ந்து அணிந்தார். காஷ்மீர் பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரோமமும் மூன்று அடுக்குக் கொண்ட கேன்வாஸ் துணியும் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்தத் தொப்பிகளில் வியர்வையைத் தடுக்க சிறிய துளைகள் இருந்தன.

ஒவ்வொரு முறையும் ஆறு தொப்பிகள் ஆர்டர் செய்து,அதில் இருந்து இரண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராம்.ஆனால்,ரஸாக்குக்கு ஆறு தொப்பிகளுக்கான பணத்தைக் கொடுத்து விடுவாராம்.அதேபோல அவரது இன்னொரு அடையாளம் அவர் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டையின் மேல் கட்டிக் கொள்ளும் ரேடோ வாட்ச்!

எம்.ஜி.ஆர் சமாதிக்கு மேல் காதை வைத்துக் கேட்டால்,அவரது வாட்ச் ஓடும் சப்தம் கேட்கிறது, என்பதை இப்போதும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.
1953-ல் கல்லக்குடிக்கு , டால்மியாபுரம் என்கிற பெயரை ஒரு சிமெண்ட் கம்பெனியின் உரிமையாளர் நினைவாகச் சூட்டியது அன்றைய காங்கிரஸ் அரசு.அதை எதிர்த்து தி.மு.க நடத்திய போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார்.

ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் நடத்திப் பெயர் மாற்றத்தை தடுத்ததால் கருணாநிதி அன்றைக்குப் பெரிய கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சென்னைக்கு ரயிலில் புறப்பட்ட கருணாநிதியை வரவேற்க,சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பல்லாயிரம் தி.மு.க தொண்டர்கள் கூடி விட்டனர்.அவரால் ரயில் பெட்டியில் இருந்து வெளியே காலை வைக்கவே முடியவில்லை.
கருணாநிதியை வரவேற்க வந்திருந்த எம்.ஜி.ஆர் கொஞ்சமும் யோசிக்காமல்,அவரை இரண்டு கைகளாலும் அள்ளித் தூக்கிக் கொண்டு வெளியே வந்து காரில் ஏற்றி விட்டார்.அந்த நெரிசலில் எம்.ஜி.ஆர் கையில் கட்டி இருந்த கடிகாரம் காணமல் போய் விட்டது.இதைப் பார்த்த கருணாநிதி பதட்டத்தோடு எம்.ஜி.ஆரைப் பார்த்து,

'அடடா..,வெளிநாட்டு வாட்சு தொலஞ்சுடுச்சே' என்று கவலையோடு சொல்லியிருக்கிறார்.
அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் எந்தப் பதட்டமும் இல்லாமல்… ‘வெளிநாட்டு வாட்ச்சை விட நம்ம நாட்டு தலைவர் தான் எனக்கு முக்கியம்! ‘ என்று சொல்லியிருக்கிறார்.

காந்திக்குப் பிறகு, சின்னக் குழந்தைகள் கூட எளிதாக வரையக் கூடிய தலைவர் படம் எம்.ஜி.ஆர் படம் தான்.ஒரு தொப்பியும் கண்ணாடியும் வரைந்தாலே அவர் முகம் வந்து விடும்.அந்த அளவுக்கு அவரோடு இணைந்து சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது அந்தத் தொப்பி.

பகிர்வு.
FWD msg

*என்றும் அன்புடன்,*

*எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
*மதுரை*����������
*வாட்ஸ் ஆப் எண்கள்*
*9842171532*
*9444771532*������
*முகநூல்: SMS KING SK*......... Thanks.. .........

orodizli
27th November 2019, 07:52 PM
சிவகாசி - தங்கமணி DTS.,யில் ஞாயிறு முதல்(24.11.2019) தினசரி 4 காட்சிகள்... "கோடியில் ஒருவர்",... வழங்கும்..."ஆயிரத்தில் ஒருவன்".......... Thanks.........

orodizli
27th November 2019, 07:56 PM
மதுரை - சென்ட்ரல் சினிமா DTS., 29.11.2019 வெள்ளிகிழமைமுதல் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் "ராமன்தேடியசீதை"... புரட்சித்தலைவரின் காவியம் மகத்தான வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.........நன்றி... மதுரை எஸ்.குமார்......... Thanks...

orodizli
27th November 2019, 08:01 PM
மானுட உலகின் நவரத்தினம்... மக்கள் திலகம் டிசம்பர் மாதத்தில் வரும் நினைவு நாளை முன்னிட்டு கோவை - சண்முகா DTS., தினசரி 4 காட்சிகள் காட்சி தர " மலைகள்ளன்" வருவதாக தகவல்.......... Thanks.........

oygateedat
27th November 2019, 09:00 PM
https://i.postimg.cc/76g8z5hf/66827679-e868-4f21-a27d-08f58898e0a0.jpg (https://postimg.cc/BLQV9Qx0)

oygateedat
27th November 2019, 09:01 PM
https://i.postimg.cc/fLkBdLKY/b3ad3b05-c1f1-4f6c-beb4-bfbe85c0ad86.jpg (https://postimg.cc/phbfbP3d)

orodizli
28th November 2019, 10:09 AM
Mgr அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது mgr ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

இயக்குனர் : சங்கர்
இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி
படம் : பணத்தோட்டம் (1963)

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பதுதான் மீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே

இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். " ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து mgr கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு mgr ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை mgr தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்............ Thanks.........

orodizli
28th November 2019, 10:14 AM
1972 ... ஆண்டில் வந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் காவியங்கள் ...........

1. சங்கே முழங்கு ...

2. நல்ல நேரம் ...

3. ராமன் தேடிய சீதை ...

4. நான் ஏன் பிறந்தேன்...

5. அன்னமிட்ட கை ...

6. இதய வீணை ...

சங்கே முழங்கு -

மக்கள் திலகம் முருகன் -கிருபால் சிங் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்தார் .
பொம்பள சிரிச்சா போச்சு என்ற கிண்டல் பாடலில் மக்கள் திலகம் லக்ஷ்மியை கிண்டல் செய்யும்
பாடல் அட்டகாசம் .பிரமாதமாக நடனமாடி நடித்திருப்பார் . சிலர் குடிப்பது போல் நடிப்பார் என்ற பாடலில் ஹெலனுடன் நடனமாடி அசத்தியிருப்பார் . நாலு பேருக்கு நன்றி என்ற பாடலில் மௌனத்தாலே நடித்திருப்பார் . தமிழில் அது ஒரு ..... மற்றும் இரண்டு கண்கள் ... பாடலில் வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ..கிளைமாக்ஸ் காட்சியில்
கோர்ட் காட்சிகளில் குறுக்கு விசாரணையில் அசத்தியிருப்பார் . மொத்தத்தில் சங்கே முழங்கு
முழங்கியதின் மூலம் 1972 தொடர் வெற்றிக்கு வித்திட்ட காவியம் .

நல்ல நேரம் .
தேவரின் இமாலய வெற்றி . படம் . மக்கள் திலகம் அறிமுக காட்சியில் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி -இளமை - இனிமை - புதுமை .
இனிய பாடல்கள் - ஜனரஞ்சகமான படம் .
ஓடி ஓடி உழைக்கணும் பாடல் - இளமை துள்ளும் எம்ஜியாரின் வெற்றி பாடல் .

ராமன் தேடிய சீதை .

மக்கள் திலகம் நடித்த இந்த படத்தில் மொத்தம் 45 வித விதமான உடைகளில் தோன்றிய ஒரே படம் .
திருவளர்செல்வியோ
என் உள்ளம் உந்தன் ஆராதனை
நல்லது கண்ணே
முத்தான மூன்று காதல் கீதங்கள் . என்றென்றும் நம் நினைவில் சுழலும் பாடல்கள் .
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படம் .

நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகம் நடித்த குடும்ப சித்திரம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக

நான் பாடும் பாடல் .. நலமாக வேண்டும்

உனது விழியில் எனது பார்வை ..
இரண்டு பாடகள் போதும் படத்தின் வெற்றிக்கு . மக்கள் திலகத்தின் இனிய நடிப்பில் வந்த
குடும்ப காவியம் .

அன்னமிட்ட கை

மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்

மயங்கி விட்டேன் .. உன்னை கண்டு

பதினாறு வயதினிலே

அன்னமிட்ட கை . நம்மை ஆகி விட்ட கை

47ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .
மக்கள் திலகத்தின் கோல் சண்டை - விறுவிறுப்பாக இருந்தது .
தேர்தல் நேரத்தில் ஒலித்த பாடல் . 2021 தேர்தலில் ஒலிக்கபோகும் பாடல் .

இதயவீணை

மணியனின் நாவல் . இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட படம் .
மக்கள் திலகின் மாறுபட்ட சிகை அலங்காரம் இந்த படத்திற்கு ஸ்பெஷல் .
ஆரம்ப பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான ஜாலி பாடல் . மக்கள் திலகம்
அட்டகாசமாக காஷ்மீர் - காஞ்சிபுரம் பெருமைகளையும் , தன்னுடைய எதிர்கால அரசியல்
பற்றியும் கூறும் பாடல் .பொருத்தமான பாடல் .1972 அரசியல் வெற்றிக்கு பின் வந்த படம் .

1972 ஆண்டடில் மட்டும் ஆறு படங்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்த படைத்த நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்ன வென்று சொல்ல ? காவிய படைப்புகள் .

1972 அரசியலிலும் அறிமுக வெற்றி - படங்களும் வியாபார ரீதியாக அமோக வெற்றி ........அது மட்டுமல்ல... இந்த காவியங்கள் யாவும் இப்பொழுது வரையிலும் மறு வெளியீடுகள் காணும் சிறப்பான நிலையினை பெற்றுள்ளது குறிப்பிட தகுந்ததாகும்......... Thanks.........

orodizli
29th November 2019, 10:16 AM
கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்
அவர்களுக்கு 29-11-2019 பிறந்தநாள் வாழ்த்துகள்
எம்.ஜி.ஆர் ., என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.

நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு........... Thanks.........

orodizli
29th November 2019, 10:18 AM
https://youtu.be/JoL6oytchvc............ Thanks.........

orodizli
29th November 2019, 10:19 AM
திமுக தலைவர் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் 17 அக்டோபர் 1972 அன்று உருவான கட்சி அதிமுக. தொடங்கியபோது, ரசிகர்கள்தான் எம்.ஜி.ஆரின் ஆதாரபலம். அடுத்தது, கலைஞர் எதிர்ப்பாளர்கள். திடீரென வந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர் புன்னகைக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.

திமுக ஊழல் கட்சி, கலைஞர் ஊழல் தலைவர் என்று முழங்கியபடிதான் மேடையேறினார் எம்ஜிஆர். திமுக அரசு மீதான ஊழல்புகார் பட்டியலையும் மத்திய அரசிடம் கொடுத்தார். அதுதான் பின்னாளில் திமுக அரசைக் கலைக்கவும் சர்க்காரியா விசாரணை கமிஷனை அமைக்கவும் பயன்பட்டது.

ஒட்டுமொத்த தேசமே இந்திராவின் எமர்ஜென்ஸியை எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அதனைத் தீர்மானம் போட்டு வரவேற்ற கட்சி அதிமுக. அதுதான் இந்திரா காங்கிரஸையும் அதிமுகவையும் அரசியல் ரீதியாக இணைத்தது. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இந்திராவை வெறுத்து ஒதுக்கியபோது தமிழ்நாடு மட்டும் இந்திரா காந்திக்கு வெற்றிமாலை சூட்டியது. ஒரே காரணம், எம்ஜிஆர். எதிரியை முதல் ஆட்டத்திலேயே வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு 1977 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார் எம்.ஜி.ஆர். இந்திரா காங்கிரஸை விலக்கிவிட்டு மார்க்சிஸ்டுகளைச் சேர்த்துக்கொண்டபோதும், ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

ஆட்சி நிர்வாகத்தில் ஊழல், லஞ்சம் இருக்கக்கூடாது என்று சொல்லி அமைச்சர்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கே அனுமதி கொடுத்தார் எம்ஜிஆர். கட்சியின் கொள்கைத் திட்டத்தில் அறிவித்த ‘பொருளாதார இட ஒதுக்கீட்டை’ நிறைவேற்ற முயற்சி செய்தார். அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுக்குரிய சலுகைகளைப் பெறவேண்டும் என்றால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கவேண்டும். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தாக்கம் அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. 24 இடங்களில் போட்டியிட்ட அதிமுக வென்ற இடங்கள் வெறும் இரண்டு மட்டுமே.

அதன் தொடர்ச்சியாக அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலை மீண்டும் எம்.ஜி.ஆரை 1980ல் ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்த தருணம் அது. அதன் வெளிப்பாடாக வந்ததுதான் சத்துணவுத் திட்டம். ஏழைக்குழந்தைகளின் பசி துடைத்த அந்தத் திட்டம் புரட்சித்தலைவரை மக்கள் திலகமாக்கியது. ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அது. அதிமுக என்ற கட்சி இன்னமும் உயிரோட்டத்துடனும் வெற்றி முகத்துடனும் இருப்பதற்கு இந்த இரு அறிமுகங்களும் ஒரு முக்கியக் காரணம்.

1983 ஜூலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களோடு ஈழப்போராளி இயக்கத்தினரும் வந்தனர். இந்திய அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தது. மேலும், போராளி இயக்கங்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறையின் உதவியுடன் ஆயுதப்பயிற்சி கொடுத்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சி யும் ஒவ்வொரு போராளி இயக்கத்தை ஆதரித்தன. யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எம்.ஜி.ஆருக்கு எழுந்தது. இறுதியில் விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசினார். முதல் கட்டமாக இரண்டு கோடி ரூபாய் நிதி கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதைக்கொண்டுதான் விடுதலைப்புலிகள் ஆரம்பகட்ட ஆயுதக்கொள்முதலைச் செய்தனர். ஈழத்தமிழர்கள் பிரச்னையை மிகவும் கரிசனத்தோடு பார்த்த தமிழ்நாட்டுத் தலைவர்களுள் எம்.ஜி.ஆர் முக்கியமானவர்.

கட்சியும் ஆட்சியும் ஒழுங்காக இயங்கிக்கொண்டு இருக்க, திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர். மீண்டும் உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களை ஒருபக்கம் உலுக்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார். நோயுற்ற எம்.ஜி.ஆருக்கும் கொல்லப்பட்ட இந்திராவுக்கும் ஆதரவாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அனுதாப அலையை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் முனைப்பு காட்டினர். 1984 மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல். அபாரவெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

அப்போது ஈழத்தமிழர் விவகாரம் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தது. புலிகளுக்கு மீண்டும் நான்கு கோடி ரூபாய் கொடுத்தார். இன்றளவும் ஈழத்தமிழர்கள் வீடுகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் இருப்பதற்கு இப்படியான உதவிகளே பிரதான காரணம்.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவுசெய்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயார் செய்தார். ஆனால் அதனை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஏற்கவில்லை. பின்னர் நடந்த அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாக, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அரைமனத்துடன் ஏற்றுக்கொண்டார் பிரபாகரன். இலங்கையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார் எம்.ஜி.ஆர்.

1987 இறுதியில் உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு மீளவில்லை. எம்.ஜி.ஆரின் ஆளுமை செலுத்திய தாக்கத்தை சமூகம் அப்போது உணர்ந்துகொண்டது. மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததற்கும் இன்றளவும் மக்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு எம்ஜிஆர் அமர்ந்திருப்பதற்கும் பின்னணியில் இருப்பது ஒரே காரணம்தான். மக்களின் நாடித்துடிப்பையும் ஆட்சியாளர்களின் நாடித்துடிப்பையும் துல்லியமாகக் கணிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. குழந்தைகளின் பசியைப் போக்க சத்துணவுத் திட்டம். பெரியவர்களின் வயிற்றையும் பாக்கெட்டையும் பாதிக்காத வகையில் குறைந்த விலையில் அரிசி. தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவியபோது மத்திய அரசுக்கு எதிராகவே உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்குச் சென்றவர் எம்.ஜி.ஆர்.
அரசியல் ரீதியாக, மத்திய அரசுடன் இயன்றவரைக்கும் அனுசரித்துச் செல்லக்கூடியவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியுடன் நட்பு; மொரார்ஜியுடன் நேசம்; சரண் சிங்குடன் சமரசம்; ராஜீவ் காந்தியுடன் ராசி என்று எவரையும் பகைத்துக்கொள்ளாத, அதேசமயம் தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காத தலைவராக இருந்தார் எம்.ஜி.ஆர். அதுதான் அவரை அரசியல் ரீதியாக வெற்றிகரமான மனிதராக வைத்திருந்தது. அதுதான் அவர் உயிரோடு இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கட்டிலில் அசையாமல் அமர்ந்திருக்க உதவியது. வரலாறு முக்கியம் தோழரே!........... Thanks.........

orodizli
29th November 2019, 10:22 AM
எம்ஜிஆர்

சொத்து சேர்க்கவில்லை
வழக்கில் சிக்கவில்லை
நீதி மன்றத்தில் படிக்கட்டுகள் ஏறவில்லை
குற்றவாளி என்ற சொல்லையே கேட்டதில்லை
எந்த தீர்ப்பையும் பெற்றதில்லை
சிறைச்சாலைக்குள் நுழைந்ததில்லை
கண்ணீரை கண்டதில்லை
கூடா நட்பை அனுமதித்ததில்லை

சுய நினைவின்றி வாழ்ந்ததில்லை
மகன்கள் மகள்கள் பேரன்கள்
பேத்திகள் அக்கா மகன்கள் என்ற
உறவுகள் கூட்டம் இல்லவே இல்லை

மக்களை ஏமாற்றியதில்லை
தொண்டர்களை வெறுத்ததில்லை
நன்றி மறந்தவரில்லை
உயிர் பிரியும் வரை உணர்வோடு இருந்தவர் எம்ஜிஆர்

உலகமெங்கும் வாழும் மக்கள் எம்ஜிஆரை என்றுமே மறக்கவில்லை .
குற்றவாளி தலைவர்களை மக்கள் என்றுமே நினைப்பதில்லை............. Thanks.........

orodizli
29th November 2019, 10:34 AM
இன்று 29-11-2019 முதல் தினசரி 4 காட்சிகள்... சென்னை- ஸ்ரீ பாலாஜி DTS., மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே ஏக சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் " தேடி வந்த மாப்பிள்ளை"... Thanks.........

oygateedat
29th November 2019, 09:45 PM
https://i.postimg.cc/9fCrPB0j/IMG-4398.jpg (https://postimages.org/)

oygateedat
29th November 2019, 09:46 PM
https://i.postimg.cc/ZYFMWQCS/dd390b5f-dc84-44fc-b413-383149710390.jpg (https://postimages.org/)

oygateedat
29th November 2019, 09:47 PM
https://i.postimg.cc/kgx6CWTf/e66b592a-a559-4c47-a05a-b24d7c1ad1bb.jpg (https://postimages.org/)

oygateedat
29th November 2019, 09:47 PM
https://i.postimg.cc/J0VvfyPV/68807516-3098-4345-92f2-b8b9ed0c6bad.jpg (https://postimages.org/)

oygateedat
29th November 2019, 09:48 PM
https://i.postimg.cc/c4zS4JDj/IMG-4395.jpg (https://postimg.cc/Wh0K5sc6)

oygateedat
29th November 2019, 09:49 PM
https://i.postimg.cc/Z5c6d0gb/IMG-4387.jpg (https://postimages.org/)

oygateedat
29th November 2019, 09:50 PM
https://i.postimg.cc/yYTDftTn/IMG-4388.jpg

fidowag
29th November 2019, 10:32 PM
இந்த வாரம் (29/11/19) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின்*பட்டியல் விவரம்*------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பாலாஜி - தேடி வந்த மாப்பிள்ளை-தினசரி 4 காட்சிகள்*

மதுரை -சென்ட்ரல் - ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*

கோவை சண்முகா - பாக்தாத் திருடன் - தினசரி 4* காட்சிகள்*

சிவகாசி -தங்கமணி - ஆயிரத்தில் ஒருவன் (24/11/19) ஞாயிறு முதல்*தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .

fidowag
29th November 2019, 10:36 PM
குமுதம் வார இதழ்*
----------------------------

கஷ்டம் என்று வருகிறவர்களுக்கு* அள்ளி கொடுக்கும் வள்ளல் குணத்தை*கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து தான் கற்று கொண்டதாக எம்.ஜி.ஆர். ஒரு தொடர் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் .
இன்று (29/11/19)* கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் (29/11/1908)

orodizli
30th November 2019, 03:04 PM
ஜானகி இராமச்சந்திரன்.........
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ...
ஜானகி இராமச்சந்திரன் (நவம்பர் 30, 1923 – மே 19, 1996) (Janaki Ramachandran) அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.

ஜானகி இராமச்சந்திரன்
பிறப்பு
நவம்பர் 30, 1923[சான்று தேவை]
வைக்கம், கேரளா
இறப்பு
மே 19, 1996 (அகவை 73)
சென்னை, தமிழ்நாடு
பணி
நடிகை, அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
கணபதிபட்
எம். ஜி. ராமச்சந்திரன்
பிள்ளைகள்
அப்பு என்கிற சுரேந்திரன்
ஜானகி இராமச்சந்திரன்
தமிழக முதல்வர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி
அ.இ.அ.தி.மு.க............ Thanks.........

orodizli
30th November 2019, 03:05 PM
https://youtu.be/-tdzXqobAAg......... Thanks.........

orodizli
30th November 2019, 03:06 PM
" மருதநாட்டு இளவரசி " படத்திற்காக புதிதாக வசனம் எழுத ஒருவரை தேடினோம்,

எம் ஜி.ஆர் .," எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறார், கருணாநிதி என்று பெயர் திருவாரூரில் இருக்கும் அவருக்கு நல்ல எழுத்து வலம் உண்டு, அவரையே எழுத சொல்வோம் " என்று கேட்டுகொண்டார்,

மருதநாட்டு இளவரசி படத்தயாரிப்பாளர் ஜி.முத்துச்சாமி சொன்னது.......... Thanks...

orodizli
30th November 2019, 03:09 PM
அஇஅதிமுக .,இயக்கம் என்கிற சொத்தையும்,இரட்டை இலையம் இன்று நிலைத்து நின்று அரசியல் களம் காணுகிறதென்றால் அதற்கு(தலைவர் மறைவிற்குப்பிறகு) அன்னை ஜானகி அம்மையாரின் பெருந்தன்மை மட்டுமே.அவரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம்.......... Thanks.........

orodizli
30th November 2019, 03:11 PM
https://youtu.be/_5Y9-Kp70YQ........ Thanks.........

orodizli
30th November 2019, 08:55 PM
https://youtu.be/ned1wHO53GU........... Thanks...

orodizli
30th November 2019, 10:17 PM
"அடிமைப் பெண்",வெற்றி விழாவின் போது, வெள்ளி விழாவின் பொழுது பொதுமக்களுக்கும் பார்க்க வசதியாக. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார்.

தேர்தல் பிரசாரத்துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோருடன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொள்ள ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோது தான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!

திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடைவேளையின் போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழ் திரையுலகின் என்றென்றும் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!

எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!
---------------------------------------------------
மாவீரன் அலெக்சாண்டரை மிதமிஞ்சிய நம் இதயதெய்வத்தின் "அட்டகாச போஸ் "
மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் மன்றம்.......... Thanks.........

orodizli
30th November 2019, 10:24 PM
ADMK பி.கர்ணன் சாமி

https://www.facebook.com/groups/ROSAIAH/permalink/1288568201315924/?sfnsn=scwspmo&d=n&vh=i..... Thanks.........

orodizli
30th November 2019, 10:26 PM
https://youtu.be/hBRHx-cPlfw.......... Thanks.........

oygateedat
1st December 2019, 11:20 AM
https://i.postimg.cc/QdX0CnjP/IMG-4404.jpg (https://postimg.cc/fJrxgCtj)

oygateedat
1st December 2019, 11:22 AM
https://i.postimg.cc/8PwLKkVK/IMG-4409.jpg (https://postimages.org/)

oygateedat
1st December 2019, 11:23 AM
https://i.postimg.cc/WzYbZHQn/IMG-4408.jpg (https://postimages.org/)

oygateedat
1st December 2019, 11:25 AM
https://i.postimg.cc/bwDHZXKm/204963fd-e352-405f-ad13-b132edf842da.jpg (https://postimages.org/)

oygateedat
1st December 2019, 11:26 AM
https://i.postimg.cc/76VSFq2Z/f53b8054-3853-414a-ab5c-684e6af181e9.jpg (https://postimg.cc/WFdDrL8B)

fidowag
1st December 2019, 12:21 PM
அனுதாப செய்தி .

---------------------------
மலேசியா* பொன்மன செம்மல் கலைக்குழுவை சார்ந்த திரு.மேகநாதன்*தலைமையில் இயங்கும் குழுவின் இணைப்பிரியா* கலைஞரும், பல குரல் வித்தகரும் , விழா நிகழ்ச்சிகளை அழகு நடையில் தொகுத்து வழங்கும் திறமையும் கொண்ட திரு. குணா அவர்கள் நேற்று (30/11/19) அதிகாலை 5மணியளவில்* இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியை பெங்களூரு திரு.கா. நா. பழனி மூலம் அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .**

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரை சந்தித்துள்ளேன்* அப்போது கோலாலம்பூரில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளிலும் நண்பர்களுடன் கலந்து கொண்டது மறக்க முடியாத நினைவு.*.மேலும் பெங்களூரு, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாக்களில் அவர் கலந்து கொண்டு* திரு.மேகநாதன் தலைமையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .**

திரு.குணா அவர்களை பிரிந்து வாடும், குடும்பத்தினர், உற்றார் உறவினர், மலேசியா இன்னிசை கலைக்குழு, திரு.மேகநாதன் தலைமையில் இயங்கும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். கலைக்குழு, மற்றும் அவரது நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

orodizli
1st December 2019, 03:24 PM
" உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம் "

இது எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்தமான பாடல் !
இந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார் அவர் !
.
எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது ..
ஒரு மாலைப் பொழுது !

அமைச்சர் ஹண்டே கையில் அன்றைய மாலை செய்தித்தாள் இருந்ததாம் .

எம்.ஜி.ஆர். கேட்டாராம் :
" எதுவும் முக்கியமான செய்தி உண்டா ?"

ஹண்டே கொஞ்சம் தயங்கினாராம் :
" ஒண்ணும் இல்லை....ஆனால்.. "

எம்.ஜி.ஆர் ஹண்டேயை உற்றுப் பார்த்தாராம் : " என்ன விஷயம் ? ஏன் தயங்கறீங்க ? எதுவா இருந்தாலும் சொல்லுங்க !"

ஹண்டே தயக்கத்துடன் சொன்னாராம்:
"தி.மு.க.தலைவர் கருணாநிதி உங்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ."

சலனம் அற்ற முகத்துடன் எம்.ஜி.ஆர். கேட்டாராம் : " என்ன சொல்லி இருக்கிறார் ? "

" உங்களுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று பேசி இருக்கிறார். "
.
சற்று நேரம் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர்.சொன்னாராம் : "சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்.நான் பெரிய படிப்பு எல்லாம் படித்தவன் அல்ல ; இருந்தாலும் பொருளாதாரம் பற்றி எனக்கு எடுத்துச் சொல்ல உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆனால் பசி என்றால் என்னவென்று எனக்கு தெரியும். அந்த கஷ்டம் எனக்கு புரியும் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சர் , அதை மறக்காமல் நினைவு வைத்திருந்தால் போதும் ."

சலனமற்ற முகத்தோடு எம்.ஜி.ஆர். இதை சொல்லி விட்டு , தனது அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டாராம்.

ஆம் !

" தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்..
பெரும் பேரின்பம்..!"........... Thanks.........
.

orodizli
1st December 2019, 03:25 PM
எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும் போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.

முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்து போன தொண்டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.

சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்துபோன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கை போட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்தனர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!

அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். கண்கலங்கி சொன்னார்.

அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!............... Thanks..........

orodizli
1st December 2019, 03:26 PM
https://youtu.be/wEjKUSkzLOM........... Thanks...........

orodizli
2nd December 2019, 02:26 PM
சில புதிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு.

நம் வள்ளல் அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் டூப் வேடம் போட்டவர் மாடக்குளம் அழகர்சாமி.

தாழம்பூ படத்தில் ஒரு சண்டை காட்சியில் அவருக்கு கால் ஒடிந்து விட அவருக்கு பிறகு அந்த வாய்ப்பு சரவணா பிலிம்ஸ் வீ.ஜி.வேணு மூலம் மகாலிங்கம் என்பவருக்கு கிடைக்கிறது...

ஒருமுறை புதியபூமி பட சண்டை காட்சியில் மேசை முழுவதும் அசைவ உணவு வகைகள் நிரம்பி இருக்க சண்டை போது அது வீணாகி கீழே சிதற...

எல்லாம் வீணா போச்சே நம் வீட்டுக்கு கொண்டு போய் இருந்தாலும் பிள்ளைகள் சாப்பிடுமே என்று அவர் வருந்த தலைவர் காதுகளில் விழுந்த அந்த செய்தி மகாலிங்கம் அவர் சார்ந்த நடிகர்கள் வீடு திரும்பிய போது அனைத்து மட்டன் வகைகளும் அவர்கள் வீட்டில் நிரம்பி வழிந்தன.

ஒளிவிளக்கு படப்பிடிப்பு முடிந்து மன்னன் வீடு திரும்பி கொண்டு இருக்க பழைய சன் திரையரங்கம் வழியாக வீட்டுக்கு கோடம்பாக்கம் பாலம் வழியே நடந்து மகாலிங்கம் நடந்து கொண்டு சென்று இருக்க வள்ளல் தன் காரை நிறுத்தி என்ன கம்பெனி கார் இல்லயா சரி ஏறு என்று சொல்லி அவர் வீட்டில் விட்டு 2000 ரூபாய் கையில் கொடுத்து போக.

சாலி கிராமத்தில் சொந்த வீடு அப்போது வாங்க அள்ளி கொடுத்த வள்ளல் அவர்களால் எங்கள் குடும்பம் இன்றும் சிறப்புடன் வாழ்கிறது.

சிலவற்றை சொல்ல முடியாது என்கிறார் மகாலிங்கம் அவர்கள் மகன் ராஜப்பா.

வாழ்க எம்ஜியார் புகழ்.அடாத மழையில் கூட விடாது தொடரும் வாத்தியார் நிகழ்வுகள் நன்றி..நாளை............ Thanks.........

fidowag
3rd December 2019, 02:43 PM
மலேசியா நாட்டில்* பினாங்கு நகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். விழா*
------------------------------------------------------------------------------------------------------------------

மலேசியா நாட்டில் பினாங்கு நகரில் , புக்கிட் மெர்ட்ட ஜம் என்கிற பகுதியில்*மக்கள் சேவகன் திரு**எம்.ஜி.குமார்* தலைமையில் இயங்கும் ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி* எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் ,வெற்றிகரமான 10ம் ஆண்டாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை பயண விழா கடந்த 24/11/2019 (சனியன்று ) புனித மேரி அன்னை ஹாலில் , மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .**


விழாவையொட்டி அரங்கத்தின் சாலை புறத்தில் இருந்து நுழைவு வாயில் வரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன .* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்* படங்களுடன் அரங்கத்தின் நான்கு திசைகளிலும்* பேனர்கள், பதாகைகள், மற்றும் மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படங்களுடன் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது .


மலேசியா விளையாட்டுத்துறை இணை அமைச்சர் , மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .மலேசியா நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் , பக்தர்கள் , பார்வையாளர்கள் வந்து குவிந்தனர் . தமிழகத்தில் இருந்து,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.ஆர். லோகநாதன், திரு.ஜி.வெங்கடேச பெருமாள், திரு. சேமலையப்பன் (திருப்பூர் ) ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


மாலை 5 மணியளவில் பல்வேறு* நல திட்டங்கள் , மாணவ , மாணவியருக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டன .* இரவு 7 மணியளவில் திரு.எம்.ஜி.குமார், விளையாட்டுத்துறை இணை அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர், திரு..பி.எஸ். ராஜு, திரு.டத்தோ புலவேந்திரன் (இயக்கத்தின் அறங்காவலர் )ஆகியோர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி துவங்கியது .



விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று இயக்கத்தின் தலைவர்*மக்கள் சேவகன் திரு.எம்.ஜி.குமார் வரவேற்புரையில் சிறப்பு விருந்தினர்களை,யும்* தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த சிறப்பு பிரதிநிதிகள்*திருவாளர்கள் பி.எஸ். ராஜு, ஜி.வெங்கடேச பெருமாள், ஆர். லோகநாதன், சேமலையப்பன் ஆகியோரையும் விழாவை சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார்*விழாவில் பேசிய அமைச்சர், திரு.எம்.ஜி.குமார் அவர்கள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் வகையில் நற்பணி மன்றத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் . முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின்* புகழ் தமிழ்நாட்டில்,* இந்தியாவில் மட்டுமின்றி, கடல் கடந்து மலேசியாவிலும் ஓங்கி நிற்கிறது, மலேசியாவிலும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் .. மலேசியாவில் பல்வேறு அமைப்புகள் எம்.ஜி.ஆர். பெயரில் நற்பணிகள் செய்து வருகின்றதை நான் திரு.எம்.ஜி.குமார் மூலம் அறிந்து கொண்டேன் .* எம்.ஜி.ஆர். பெயரில் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்றை திரு.எம்.ஜி.குமார் உருவாக்கியுள்ளார் .*திரு.எம்.ஜி.குமார்* இயக்கத்தின் மூலமாக 52 மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றார்கள். மலேசிய அரசாங்கமும் மாணவ மாணவியருக்கு உதவும் கல்வி திட்டத்தின் அடிப்படையில், வேண்டிய உதவிகளை திரு.எம்.ஜி.குமார் அவர்களின் இயக்கத்திற்கு உதவுவதாக தெரிவித்தார் . சட்டமன்ற உறுப்பினரும் , திரு.எம்.ஜி.குமார் அவர்களின் சேவைகளை பாராட்டி பேசினார் .* இருவருக்கும் நன்றி தெரிவித்து திரு.குமார் பேசினார் .* பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு* சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன .**


பின்னர் , இயக்கத்தின் அறங்காவலர் திரு. டத்தோ புலவேந்திரன் இயக்கத்தின் செயல்பாடுகளை விவரித்து பேசினார் . அவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது .* விழாவில் சிறந்த சமூக சேவகியாக*திருமதி கோகிலவாணி,* மற்றும் மனித நேய பண்பாளர் என்கிற வகையில்*மாற்று திறனாளி நபர் ஒருவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .


தமிழகத்தில் இருந்து வந்திருந்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு,விற்கு* பொன்னாடை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கப்பட்டது . திரு.ராஜு*பேசும்போது ,ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி நற்பணி மன்றம், பினாங்கு நகரில் சிறப்பாக செயல்பட்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்து பெருமை*சேர்ப்பதற்கு நன்றி தெரிவித்தும், உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் தமிழ்நாட்டு தலைநகர் சென்னையில் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் விவரித்து*பேசினார் .* பின்னர் பேசிய திரு.ஆர். லோகநாதன், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பில் , இயக்கத்தின் தலைவர் திரு.எம்.ஜி.குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் வகையில் விழா எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தும் பேசினார் . பின்னர்* திருவாளர்கள் ஆர். லோகநாதன், ஜி.வெங்கடேச பெருமாள், சேமலையப்பன் ஆகியோருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு* நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .


நிகழ்ச்சி நடக்கும் போது, இரவு உணவு* விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த*அனைவருக்கும் வழங்கப்பட்டது .* இரவு 8.30 மணியளவில்* ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் துவங்கின .* பாடகர்கள் சித்ரன் (பினாங்கு ), ஹரிதாஸ் (சிங்கப்பூர் ) மணியம் (கோலாலம்பூர் ) ஆகியோர் உள்பட உள்ளூர் பாடகர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . இடையே நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்கள் , நான் உங்கள் வீட்டு பிள்ளை (புதிய பூமி ), கண்ணை நம்பாதே ( நினைத்ததை முடிப்பவன் ), நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டு பிள்ளை ) ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் ..* சென்னையில் இருந்து திரு.கோபால் , மற்றொரு பெண் நபருடன்* கீழ்கண்ட பாடல்களுக்கு நடனம் ஆடி பாராட்டுக்கள் பெற்றார் .1. நான் பார்த்ததிலே* (அன்பே வா )2. நாணமோ, (ஆயிரத்தில் ஒருவன் )3. நேத்து பூத்தாலே (உரிமைக்குரல் )4.தாயில்லாமல் நானில்லை (அடிமைப்பெண் )5.தாய் மேல் ஆணை ( நான் ஆணையிட்டால் )6.கடவுள் எனும் முதலாளி* (விவசாயி )

நிகழ்ச்சியில் திரு.நாமக்கல் எம்.ஜி.ஆர். , திரு.எம்.ஜி.குமாரையும், அவரது சேவைகளையும் பாராட்டி , தொடர்ந்து புரட்சி தலைவருக்கு விழா எடுத்து* *அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார் .பின்னர் நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், திரு.கோபால் ( சென்னை ) அவர்களுக்கும்* சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .அதன்பின் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விழா நடைபெற உதவிய நண்பர்கள் ஆகியோருக்கு மேடையில் சிறப்புகள் செய்யப்பட்டு நினைவுபரிசுகள் வழங்கப்பட்டன .**

நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், பக்தர்களை ஊக்குவிக்க, குலுக்கல் முறையில்*பரிசுகள் வழங்கும் வகையில் டிக்கட்டுகள் மலேசிய ரிங்கிட் 5/-* (இந்திய பணம் சுமார் ரூ.85/- )* விற்பனை செய்யப்பட்டன.* நிகழ்ச்சியின் முடிவில் இரவு 11.30மணியளவில் முதல் பரிசாக அரை பவுன் எம்.ஜி.ஆர். தங்க லாக்கெட், மற்றும்*10 இதர பரிசுகள் குலுக்கலில் தேர்வு செய்து வழங்கப்பட்டன . இறுதியில் அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்து இயக்கத்தின் தலைவர் திரு. எம்.ஜி.குமார்* பேசினார் .* இரவு 12 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது*

விழா முடிவில் சுமார் 700நபர்கள்* நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக திரு. எம்ஜி. குமார் தெரிவித்தார்* *


விழா நடக்கும் முன்தினம் இரவு திரு. எம்.ஜி.குமார் அவர்கள் அமைத்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம் கண்டுகளித்து வியந்தோம் .காரணம், எனக்கு விவரம் தெரிந்த வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*சினிமா, அரசியல் குறித்த புகைப்படங்கள், சிறிய பேனர்கள் , சிறிய சிலைகள்*தங்கமுலாம் பூசிய வெள்ளித்தட்டுக்கு முன் தலைவர் சிலை, ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் , ஆவணங்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் சில உடைமைகள் ஆகியன திரு.எம்.ஜி.குமார் அமைத்துள்ளது போல் உலகில் வேறு எந்த பகுதியிலும் எந்த ஒரு பக்தரும் /ரசிகரும் / தொண்டரும் அமைத்திருக்க வாய்ப்பில்லை .* நேரமில்லாத காரணத்தால் அருங்காட்சியகத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியவில்லை .* ஒருவேளை அடுத்த விஜயத்தின்போது சாத்தியம் ஆகலாம் .**

முன்னதாக ,பினாங்கு நகரம் செல்லும் வழியில் தைப்பிங் என்கிற ஊரில் அய்யனார் கோயில் அருகில் நடிகர்* சத்யராஜ் 2011ல் திறந்து* வைத்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையையும் , விழாவிற்கு பின்னர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மையத்தில் திரு.வி.ஜி.பி. சந்தோசம் வழங்கிய , தமிழக அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு திறந்து வைத்த*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையையும்* கண்டுகளித்து* மகிழ்ந்தோம் .கோலாலம்பூர் எம்.ஜி.ஆர். மய்யத்தை திரு. மணிவாசகம் (மலேசியா) பராமரித்து வருகிறார் .


மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு* தமிழ்நாட்டில் எப்படியோ, இங்கு மலேசியாவில் மாதந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள் அவ் வப்போது*சில சமயம் மாதமிருமுறை* நடந்து வருகின்றன* என்று**மலேசியாவில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் .

.

orodizli
3rd December 2019, 05:09 PM
#நாட்டுநலனே #முக்கியம்

புரட்சித்தலைவர் முதன்முதலாக தமிழக முதல்வராக இருந்தபோது பாரதப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். அவருக்கு ஆதரவாக எம்ஜிஆர் நடந்து கொண்டார். அதன் பின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவருக்கும் எம்ஜிஆரின் ஆதரவு தேவைப்பட்டது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவை அளித்து வந்தார். அதன் பின்னர் சரண்சிங் பிரதமரானார். அவருக்கும் ஆதரவு தேவைப்பட்டது...

இப்படி தொடர்ந்து மத்திய அரசில் யார் இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.

இதுபற்றி எம்ஜிஆரிடம் நிருபர்கள் கேட்டபோது எம்ஜிஆர் கூறிய "ப்ராக்டிகலான" விளக்கம்...

"தனிப்பட்ட எம்ஜி இராமச்சந்திரன், மத்தியில் யார் ஆட்சி செய்கிறார் என்று பார்த்து ஆதரிக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் நான் மத்திய அரசில் யாரிருந்தாலும் ஆதரிக்கிறேன். இதற்கு ஒரே காரணம்...
#தமிழக #மக்களின் #நலம் #தான்...

தேவையில்லாமல் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து அதனால் மக்களுக்கு கிடைக்கும் நல்ல திட்டங்களை, உதவிகளை ஏன் தடுக்கவேண்டும்...? அப்படி மத்திய அரசு தவறும் பட்சத்தில் நாம் நியாயமாக, பிரச்சனைகளை சரியான முறையில் அவர்களிடம் அணுகலாமே ?

"மாநில அரசு என்றால் மத்திய அரசை எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதல்ல..."

மத்திய அரசுடன் நட்புடன் இருந்து கூடுமானவரை நலத்திட்டங்கள் பெற்று தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும்.

இது தான் எனது கொள்கை, மற்றவர்களின் விமர்சனம் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை...என்றார் எம்ஜிஆர்.

இந்த உயரிய சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் மனிதநேயமும் இருந்ததால் தான் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியப் பெருந்தலைவர்களில் ஒருவராகி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார்.

அரவணைத்துப் போதல் கோழைத்தனமுமல்ல... விதண்டாவாதமும், பிடிவாத குணமும் வீரமுமல்ல...

ஒரு மன்னருக்குரிய குணங்களையும், தகுதிகளையும் பெற்றிருந்ததால் தான் வாத்தியார் "மன்னாதி மன்னனாக" என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ இயலாது........... Thanks.. ............

orodizli
3rd December 2019, 11:33 PM
https://images.app.goo.gl/BubGk9XR2E3dtbGy8.......... Thanks ...........

orodizli
3rd December 2019, 11:34 PM
https://youtu.be/I7W9IR6iHM0......... Thanks...

orodizli
3rd December 2019, 11:35 PM
https://youtu.be/7lEo9cJZbXE....... Thanks...

orodizli
3rd December 2019, 11:36 PM
https://youtu.be/SDdNnRM1O94.......... Thanks...

orodizli
3rd December 2019, 11:36 PM
https://youtu.be/mdKyJto9aj4......... Thanks...

orodizli
4th December 2019, 03:33 PM
https://youtu.be/V4e-TSpiMhs........... Thanks.........

orodizli
4th December 2019, 03:35 PM
29/11/2019 முதல் ஈரோடு- சங்கீதா DTS.,வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய
டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை", தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...
த்கவல் உதவி .ஈரோடு திரு.எம்.கே.ராஜா....... Thanks.........

fidowag
4th December 2019, 05:00 PM
கல்கண்டு வார இதழ் -04/12/19
-----------------------------------------------
பொன்மனம்* எம்.ஜி.ஆர்.*

எம்.ஜி.ஆர். அ. தி.மு.க. கட்சியினை ஆரம்பித்து அதற்கான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் .* தனக்கு மாலை அணிவிப்பவர்கள் தன்னோடு புகைப்படம் எடுத்து கொள்ள விரும்புபவர்கள் கட்சி நிதியாக பத்து*ருபாய் தர வேண்டும் என் நிபந்தனை விதித்தார் .**

ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரோடு படம் எடுத்துக் கொள்ளும்போது அவரின் தோளில்*கை போட்டு படம் எடுக்க போஸ் கொடுத்தார் .* *எம்.ஜி.ஆர். இதை எதிர்பார்க்கவில்லை . அவரின் பாதுகாவலர்கள் அந்த ரசிகரின் செயலை தடுக்க முயன்றனர் .

எம்.ஜி.ஆர். அவரை தடுக்காமல் , இவர் பணம் தந்து படம் எடுத்துக் கொள்கிறார் .* இந்த நேரத்தில் இவரை போன்றவர்கள்* நமக்கு எஜமானர்கள் போல. அவர் விருப்பப்படி படம் எடுத்துக் கொள்ளட்டும் .* தடுக்க வேண்டாம் .* என சிரித்தபடி*பாதுகாவலர்களிடம் கூறினார் .* மற்றவர்களும் அவரவர் விருப்பப்படி எம்.ஜி.ஆரோடு படம் எடுத்துக் கொண்டனர் .**

fidowag
4th December 2019, 05:00 PM
கஷ்டத்திலும் கர்ணன்*
----------------------------------
ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உடல் நலம் குன்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .* அவரை காண எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்றார் .* கலைவாணரின் உடல் நலம் குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர். பணம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால் படுக்கைத் தலையணை அடியில் ருபாய் நோட்டு கட்டு ஒன்றினை கலைவாணருக்கு தெரியாமல் வைத்துவிட்டு புறப்பட்டு சென்றார் .**

ருபாய் நோட்டு கட்டினை கண்ட கலைவாணர் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து*ஏம்பா ராமச்சந்திரா கொடுத்ததுதான் கொடுத்தாய் . சில்லறை நோட்டுகளாக*தரக் கூடாதா ?* என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்ய வசதியாக இருக்குமே என்றார் .

வறுமையிலும் கலைவாணரின் கொடைத்தன்மையை கண்ட எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின .**

fidowag
4th December 2019, 05:01 PM
எம்.ஜி.ஆர். நடத்திய திடீர் திருமணம்*
------------------------------------------------------------

1985ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சேலம் மாவட்டம் நாமக்கல் எம்.எல்..ஏ.திருமணத்தை நடத்தி வைக்க தன்* மனைவி ஜானகி அம்மையார் அவர்களுடன் வருகிறார் .* காலை 9 மணிக்கு முகூர்த்தம் .* 8 மணியளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து மண்டபம் நோக்கி புறப்படுகிறார்.* எம்.எல். ஏ .வீட்டு திருமணம் என்பதால் திருமண மண்டபம் விழா கோலம் பூண்டிருந்தது .

விஷயம் அறிந்த நாமகிரிபேட்டையை சார்ந்த ஒரு தலைவர் வெறியர் , தனக்கு அப்போது அங்கு நடக்க வேண்டிய திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுடன் இந்த மண்டபம் நோக்கி வந்து, கழுத்தில் மாலைகளுடன்*எம்.எல்.ஏ. வீட்டு திருமண மண்டப வாசலில் , தலைவர் என் திருமணத்தையும்*நடத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி நிற்க, கட்சிக்காரர்களும் , காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அந்த ஜோடியை அப்புறப்படுத்த முயல .

இந்த செய்தி காரில் வந்துகொண்டு இருந்த முதல்வருக்கு சொல்லப்பட , அவரது கார் திருமண அரங்கை நெருங்க ,அந்த ஜோடியை எவர் தடுக்க முயன்றும் முடியாமல் தன இதயதெய்வம் எம்.ஜி.ஆர். முன் வந்து நிற்க , எம்.ஜி.ஆர். அவர் தோளில் தட்டி, இதுபோல அனுமதி இல்லாமல் இப்படி நடப்பது தவறு .* நான் கட்சி தலைவன்தான் அதுசரி. ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் .* அதில் நம்மால் குழப்பம் வரக்கூடாது , என்னுடன் வாருங்கள் என அழைத்து ,அந்த ஜோடியை வர சொல்ல, , பார்ப்பவர்கள்* கண்கள் நடப்பதை நம்பமுடியாமல்*தவிக்க, அதே மணமேடையில் அந்த இரண்டு ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து , விஷயம் தெரிந்த உடன் , தன்னுடன் கொண்டு வந்திருந்த*இரண்டு பரிசு பொட்டலங்களை தனித்தனியே இரண்டு ஜோடிகளிடம் கொடுத்து விட்டு வாழ்த்தி பேசி, புறப்பட்டு சென்றார் .**

orodizli
5th December 2019, 10:08 AM
என்றும் மக்கள் செல்வாக்கில் ... முதல் இடத்தில் எம்.ஜி ஆர்., எனும் மூன்றெழுத்துதான்...

NEWS 7 தொலைக்காட்சியும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழும் இணைந்து நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பில் ருசிகரமான தகவல்கள்.
05.12.2017 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த தகவல் :

ரஜினி, கமல், விஜய் இவர்களில்
தமிழக அரசியலில் அடுத்த எம்ஜிஆர் யார்
இந்த கேள்விக்கு மக்கள் 'எம்.ஜி.ஆருக்கு இணையாக இந்த மூவரையும் நினைப்பதே தவறு' என்றனர் கோபத்துடன். சினிமாவில் இருந்துக்கொண்டே மக்களின் தலைவராக தோன்றியவர்தான் எம்.ஜி.ஆர்.எனவே எம்.ஜி.ஆருடன் இவர்களை ஒப்பிடவே முடியாது.

எனினும் அவர்களை சமாதானப்படுத்தி கேள்வி கேட்டதற்கு
எம்ஜிஆர் - 56.6%.
கமல்--16.2%
ரஜினி--14.8%
விஜய்--12.4%
என்று பதிலளித்து முதல் இடத்தை எம்.ஜி.ஆருக்கே கொடுத்தனர்.

இதில் ஒரு வியக்கத்தக்க விஷயம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர், இளைஞிகள் எம்.ஜி.ஆரை நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை என்றாலும்
எம்ஜிஆர் - 52.1 சதவீதம்
விஜய் -16.6 சதவீதம்
கமல் - 15.8 சதவீதம்
ரஜினி - 15.5 சதவீதம்
கொடுத்து, எம்ஜிஆருக்குதான் முதல் இடம் அளித்தனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் : எம்.ஜி.ஆர் -- 62.7 %
கமல்--16.1%
ரஜினி--13.8%
எக்காலத்திலும் எம்.ஜி.ஆர்தான் என்று பதிலளித்த மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள்........... Thanks.............

orodizli
5th December 2019, 10:12 AM
05/12/2019 அறிவிப்பு பகுதி
கலைசெல்வி ஜெயலலிதா அவர்கள் சம்பந்தபட்ட திரை உலக பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி.
அவரது சொந்த வாழ்க்கை --அரசியல் வாழ்க்கை பற்றிய பதிவுகள்--கமண்ட்டுகளுக்கு அனுமதி இல்லை.
பதிவுகளிலும் கமண்ட்-( பின்னூட்டங்கள்)-(COMMENT) கண்ணியமானதாகவும் நாகரீகமாகவும் இருத்தல் அவசியம்.

இன்று கோமளவள்ளி என்ற பெயரைக் கொண்ட அம்மு, 'கலைச்செல்வி' என்று தமிழ்த் திரையுலகத்தினரால் போற்றப்பட்ட, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை 'செல்வி' ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள் ஆகும்.

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர்,கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தன. இப்படி இடம் பெயர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கர்நாடக மாநிலம் மேல்கோட்டைக்குச் சென்றன. அந்தக் குடும்பங்களில் இவரது தாத்தாவுடைய குடும்பமும் ஒன்று.அவர் இந்த ஊரிலிருந்த கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதா அவர்களுக்கு பள்ளிப் படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. (இவரது சித்தி வித்யாவதியும் சிறந்த நடிகையாவார். 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் எம்.ஜி.சக்ரபாணியுடன் இணைந்து நடித்தவர்)

பள்ளிப் படிப்பில் எப்போதும் முதல் மாணவியாகவே திகழ்ந்தார் . அவர் பெங்களூரில் இருந்தபோது பிஷப் கார்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர் 1958-ஆம் ஆண்டு முதல் 1964 -ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தாய் மொழி தமிழைப் போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில ஆவணப் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.1964 -ல் ஜெயலலிதா அவர்களின் திரையுலகப் பிரவேசம் “சின்னடா கொம்பே” என்ற கன்னடப் படத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிமுகமானது. இப்படத்தின் இயங்குனர் பந்துலு அவர்கள். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் ஜோடி கல்யாண்குமார்.

1965-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய 'வெண்ணிற ஆடை' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 'வெண்ணிற ஆடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். இதில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றன. சிவாஜி அவர்களுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களிலேயே மிக அதிக வசூல் பெற்று சாதனை புரிந்தது.

1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செய்தார் ஜெயலலிதா. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று சிவாஜியிடம் வாழ்த்து பெற்றவர், பின் நாட்களில் அவருடனேயே இணைந்து 17 படங்களில் நடித்தார்.

முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடி மிகவும் புகழ் பெற்றது. ஜெயலலிதாவின் அழகு, திறமை, நாட்டியம் அவருக்கென்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவி.எம்.ராஜன்,முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அடிமைப் பெண், ரகசியபோலீஸ், காவல்காரன், குடியிருந்த கோவில், என் அண்ணன், கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், பட்டிக்காடா பட்டணமா, சுமதி என் சுந்தரி, பாட்டும் பரதமும் , யார் நீ, நான், சூரியகாந்தி, வந்தாளே மகராசி ஆகிய படங்கள் ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கற்களாக அமைந்தன. இயற்கையாகவே அழகான தோற்றம்கொண்ட ஜெயலலிதா அந்த இளவயதிலேயே படத்துக்குப் படம் நடிப்பில் வேறுபாடுகள் காட்டினார். அதனால் அவரை மானசீகமாக விரும்பக்கூடிய ரசிகர்கள் பெருகினார்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' படம் அவரது சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டியது. தெலுங்குப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்ற பிரபலங்களுடன் நடித்து அவர்களுக்கிணையாக புகழ் பெற்றார் ஜெயலலிதா. இந்தியில் தர்மேந்திராவிடன் கூட ஜோடியாக நடித்துள்ளார் ஜெயலலிதா. (Izzat 1968 ) மலையாளத்தில் 'ஜீசஸ்' என்ற ஒரு படம் மட்டுமே நடித்தார். தமிழில் 87 படங்களும், தெலுங்கில் 29 படங்களும், கன்னடத்தில் 7 படங்களிலும் நடித்துள்ளார்

புடவை, நவீன ஆடைகள் என எந்த ஆடையும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு இருந்தது. ‘வந்தாளே மகராசி’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களில் சண்டைக் காட்சிகளிலும் தான் சளைத்தவரில்லை என்று நிரூபித்தார்.
'காவிரி தந்த கலைச்செல்வி' என்று நாட்டிய நாடகங்களும் அரங்கேற்றம் செய்து அசத்தினார் ஜெயலலிதா. 'சோ'வின் நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ படமாக்கப்பட்டபோது ஜெயலலிதா அதில் நடித்தார். மிக வித்தியாசமான பாத்திரம் அது. அவருடைய உயரிய ஆற்றல் வெளிப்பட்ட படம் ‘சூரியகாந்தி’. கணவனுக்கு மனைவியிடம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை குறித்த படம். ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.

ஜெயலலிதாவின் 100 வது படமான “திருமாங்கல்யம்” 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாக அவர் குறைத்துக்கொண்டார். 1960, 70 -களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1970-களின் தொடக்கத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்று வலம் வந்தவர் ஜெயலலிதா.1980-இல் வெளிவந்த “நதியைத்தேடி வந்த கடல்” என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

மிகச் சிறந்த பாடகியாகவும் ஜெயலலிதா விளங்கினார். 'அடிமைப் பெண்' படத்தின் 'அம்மா என்றால் அன்பு' என்று இவர் பாடிய பாடல் பிரபலம். 'ஓ..மேரி தில்ரூபா' என்று டி.எம்.எஸ் அவர்களுடன் .. அவர் பாடிய பாடல் இன்றும் பிரபலம். அது போல 'வைரம்' படத்தில் எஸ்.பி.பி யுடன் இவர் பாடிய 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடல் மிகப் பிரபலம்.

ஜெயலலிதா நடித்த முக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

வெண்ணிற ஆடை
ஆயிரத்தில் ஒருவன்
கன்னித்தாய்
முகராசி
தனிப்பிறவி
சந்திரோதயம்
கௌரிக் கல்யாணம்.
மேஜர் சந்திரகாந்த்
மணி மகுடம்
குமரிப்பெண்
யார் நீ?
நீ
மோட்டார் சுந்தரம்பிள்ளை
தாய்க்குத் தலைமகன்.
நான்
மாடிவீட்டு மாப்பிள்ளை
அரச கட்டளை.
காவல்காரன்
கந்தன் கருணை
ராஜா வீட்டுப் பிள்ளை
பணக்காரப் பிள்ள
எங்க ஊர் ராஜா
புதிய பூமி.
தேர்த் திருவிழா
குடியிருந்த கோவில்
மூன்றெழுத்து
முத்துச் சிப்பி
காதல் வாகனம்.
கணவன்
கலாட்டா கல்யாணம்
பொம்மலாட்டம்
கண்ணன் என் காதலன்
ஒளி விளக்கு
ரகசிய போலீஸ் 115
அன்று கண்ட முகம்
நம் நாடு
தெய்வ மகன்.
மாட்டுக்கார வேலன்
அடிமைப்பெண்
அனாதை ஆனந்தன்
குருதட்சணை.
தேடி வந்த மாப்பிள்ளை.
எங்க மாமா
எங்கள் தங்கம்
எங்கிருந்தோ வந்தாள்
என் அண்ணன்.
பாதுகாப்பு
சுமதி என் சுந்தரி
ஆதி பராசக்தி.
அன்னை வேளாங்கண்ணி.
சவாலே சமாளி
தங்க கோபுரம்
குமரிக் கோட்டம்.
ஒரு தாய் மக்கள்.
நீரும் நெருப்பும்.
அன்னமிட்ட கை.
பட்டிக்காடா பட்டணமா
ராஜா
ராமன் தேடிய சீதை.
நீதி
திக்குத் தெரியாத காட்டில்
சக்தி லீலை
பாக்தாத் பேரழகி
பட்டிக்காட்டு பொன்னையா.
வந்தாளே மகராசி
கங்கா கவுரி
சூர்யகாந்தி
அன்பைத் தேடி
அன்புத் தங்கை
தாய்
வைரம்
திருமாங்கல்யம்
அவளுக்கு ஆயிரம் கண்கள்
யாருக்கும் வெட்கம் இல்லை
அவன்தான் மனிதன்
பாட்டும் பரதமும்
கணவன் மனைவி
சித்ரா பவுர்ணமி
ஸ்ரீ கிருஷ்ண லீலை
உன்னை சுற்றும் உலகம்
நதியை தேடி வந்த கடல்

இன்று பாடல்களுக்கு வரையறை இல்லை

கட்டுரை ஒன்று மட்டுமே

படங்கள்- 4

அரசியல் படங்களுக்கும், பதிவுகளுக்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை

நன்றி
அன்புடன்
நிர்வாகிகள்........... Thanks.........

orodizli
5th December 2019, 10:17 AM
கடந்த வாரம் கும்பகோணம்- msm dts., தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை கண்டார்... வசூல் சக்கரவர்த்தி... கோடியில் ஒருவர் வாழும் "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல்... தகவல் உதவி நண்பர் திரு mc. சேகர்...தஞ்சை...

fidowag
6th December 2019, 11:05 AM
சென்னை பாலாஜியில்* இன்று முதல் (06/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4* காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : தங்கசாலை திரு.ராமு*

fidowag
6th December 2019, 11:11 AM
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ராமன் தேடிய சீதை " ஒரு வார வசூலாக ரூ.1,10,000/- ஈட்டியுள்ளதாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
படு மோசமான பிரிண்ட் இந்த வசூலை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*என்றும் கூறினார் .*

orodizli
6th December 2019, 10:55 PM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2543993689259508/?sfnsn=scwspwa&funlid=acBvMfTthoRlMW3x......... Thanks..........

orodizli
6th December 2019, 11:00 PM
வாழும் தெய்வம் புரட்சி தலைவரின் தொலைநோக்கு பார்வை இதுவரை சோடைபோனது கிடையாது என்பதற்கு உதாரணம் தான் முன்னாள் முதல்வர் அம்மா. அந்த கழக பொதுசெயலாளர் அவர்களின் 3 வது நினைவு நாளை நினைவுகூர்ந்து கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம்.......... Thanks.........

fidowag
7th December 2019, 01:14 PM
ஜூனியர் விகடன் -11/12/19

கழுகார் கேள்வி பதில்*--------------------------------------------
சு.பிரபாகர், தேவகோட்டை*

பொதுப்பிரச்னைகளுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது குரல் கொடுக்கின்றனர் .* நடிகராக தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆர். அப்போது ஆளும்* கட்சியை விமர்சனம் செய்திருக்கிறாரா ?

என்னது ,விமர்சனம் செய்திருக்கிறாராவா ,* *அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தை தி.மு.க கைப்பற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கே இருக்கிறது .

orodizli
7th December 2019, 05:13 PM
https://m.facebook.com/story.php?story_fbid=2765658143445703&id=325775750767300&sfnsn=scwspwa&d=w&vh=e&funlid=yadukWYdHc2VFjGS............... Thanks.........

orodizli
7th December 2019, 05:15 PM
2020 ஆண்டு காலண்டர் புரட்சித்தலைவர் அற்புத புகைப்படங்கள் அடங்கிய... ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் வெளியீடும் 6 பக்க வண்ணக் காலண்டர் ....பெரிய சைஷ் (14 * 19) விலை : ரூ. 75 /- தங்களுக்கு தேவையான காலண்டர் எத்தனை என்பதை அறிவித்தால் 25 சதவீகிதம் கழிக்கப்படும்! நன்றி உரிமைக்குரல் ராஜு......... Thanks.........

orodizli
7th December 2019, 05:17 PM
புரட்சித்தலைவரின் புகழை பாடும் ஒரே மாத இதழான நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ( டிசம்பர் 2019) பல அறிய தகவல்களுடன் வெளி வந்து விட்டது.மழை காரணமாக டிசம்பர் 5 ம் தேதி முதல் அனைத்து ஊர்களிலும் கிடைக்கும். நன்றி உரிமைக்குரல் ராஜு......... Thanks...

orodizli
7th December 2019, 05:18 PM
நமது பொன்மனச் செம்மலின் திரைப்பட புகழ் சரித்திரத்தில் மைல்கல்லாக 1970 ம் ஆண்டில் வெளியான கலைப்பேரரசின் திரைப்படங்களுக்கு ( மாட்டுக்கார வேலன், என் அண்ணன், எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, தலைவன்) ஆகிய 5 திரைக்காவியங்களுக்கும் சேர்த்து ...2020 ஜனவரி மாதம் நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக எப்பொழுதும் போல் பொன்விழா ( 50 ஆண்டு திரைப்பட ) மலர் வெளியிடப் படுகிறது ! பற்பல சாதனைகள் புகைப்படங்கள், அறிய தகவல்கள் என ஒரு வரலாற்று பொக்கிஷமாக வெளிவர உள்ளது ! தலைவரின் அபிமானிகள் ஜனவரி மாதம் இப்பொன் விழா மலருக்கு வாழ்த்து செய்தி தந்து தலைவரின் புகழ்பாட ஆதரவு தாருங்கள். பொன்விழா மலர்... 2020 ஜனவரி 26 ஞாயிறு அல்லது பிப்ரவரி 2 ஞாயிறு வெளியிடப்படும்! மலர் வெளியிடபடும் நிகழ்வு மட்டும் விழாவாக நடைபெறும். நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks..........

orodizli
7th December 2019, 05:21 PM
இப்படியும் ஒரு சாதனையில் சரித்திர நாயகன்..... மக்கள் திலகத்தின் "ஒளி விளக்கு" - 100 நாளை எட்டி பிடித்த ஊர்கள் .... சென்னை - பிராட்வே 92 நாள். ஈரோடு- முத்துக்குமார் 85 நாள். மயிலாடுதுறை 90 நாள். வேலூர் இரண்டு அரங்கு இணைந்த 88 நாள். சேலம் 86 நாள். மன்னார்குடி 86 நாள். தஞ்சை 85 நாள்.7 ஊரில் 12 வாரங்களை கடந்துள்ளது. அடுத்து.... "நம்நாடு" - தஞ்சை 91 நாள் மயிலாடுதுறை 96 ஈரோடு 85 கருர் 84 பட்டுக்கோட்டை 96 தூத்துக்குடி 83 புதுச்சேரி 85 வேலூர் 80 எட்டு திரைகளில் 100 நாளை கடந்த நம்நாடு மேலும் 8 ஊரில் 100 நாள் ஒடவேண்டியது.... மேலும் தகவல்கள்
தொடர்வோம்......உரிமைக்குரல் ராஜு....... Thanks...

orodizli
7th December 2019, 05:26 PM
எங்கும், எப்பொழுதும், என்றைக்கும் , எதிலும் எழுச்சி கொண்ட எழில் வேந்தன், ஏழை பங்காளன்.... கலையிலும், காவியத்திலும் கலைமன்னராகவும்....சக்கரவர்த்தியாகவும் அரசியல் என்னும் தூய்மை பக்கத்தில் மட்டும் வலம் வந்த மன்னவரே...எதிலும் நம் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்....... அவர்களின் அன்பு வழியில்.... உண்மை பக்தர்களாகி நாம் என்றும் புகழாரம் சூட்டி மகிழ்வோம்! நன்றி! உரிமைக்குரல் ராஜு........ Thanks...........

orodizli
7th December 2019, 07:54 PM
'துக்ளக் ' இத*ழின் நிறுவனர் ம*ற்றும் ஆசிரியர், சிற*ந்த* ந*கைச்சுவை ந*டிக*ர், வ*ச*ன*க*ர்த்தா, எழுத்தாள*ர், இய*க்குன*ர், வ*ழ*க்க*றிஞ*ர், அர*சிய*ல் விம*ர்ச*க*ர், புர*ட்சித்த*லைவி, மோடி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பெரும்பாலான* த*லைவ*ர்க*ளின் அன்பைப் பெற்ற*வ*ர் ப*த்மபூஷ*ன் விருது பெற்ற சோ.ராமசாமி அவ*ர்க*ளின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்ச*லி!

இவ*ர் மக்கள் திலகத்துட*ன் க*ண்ண*ன் என் காத*லன், என் அண்ண*ன், ஒளிவிளக்கு,
ச*ங்கே முழ*ங்கு, கும*ரிக்கோட்ட*ம், ஒருதாய் மக்கள், க*ணவ*ன், அடிமைப்பெண், தேடிவ*ந்த* மாப்பிள்ளை, கும*ரிக்கோட்ட*ம், எங்க*ள் த*ங்க*ம், நீரும் நெருப்பும் வ*ரை 12 ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். இவ*ர் எம்ஜிஆரை அர*சிய*ல்ரீதியாக விம*ர்சித்த* போதும் இருவ*ருக்குமிருந்த* ந*ட்பில் விரிச*ல் விழுந்த*தில்லை. 1980 பாராளுமன்ற* தேர்த*லில் அண்ணா திமுக*விற்கு இர*ண்டு இட*ங்க*ளே கிடைத்தபோதும், எம்ஜிஆரின் அர*சை இந்திரா காந்தி க*லைத்த*போதும் த*லைவ*ருக்கு ஆதர*வாக துக்ளக்கில் எழுதியுள்ளார். அப்போது அண்ணா திமுக*விற்கு ஆத*ர*வாக சில பொதுக்கூட்ட*ங்க*ளிலும் பேசியுள்ளார். ந*ன்றியுட*ன் நினைவு கூறுகிறோம்.

துக்ளக் வாச*க*ர் விழாக்க*ள், துக்ளக் கேள்வி ப*தில், துக்ளக் திரை விம*ர்ச*ன*ம் ஆகிய*வ*ற்றில் இவ*ர*து ந*டுநிலைமை க*ருத்தை தெளிவாக* உணரலாம். ப*ழ*குவ*த*ற்கு இனிமையான*வ*ர். அணுகுவ*த*ற்கு எளிமையான*வ*ர். ப*த்திரிக்கை உலகிலும், நாட*க*த்துறையிலும் திரையுலகிலும் இவ*ர*து ப*ணி மகத்தான*து. த*னித்த*ன்மை வாய்ந்த*து. வாழ்க* திரு. சோ.ராம*சாமி அய்யா புக*ழ்......... Thanks.........

orodizli
7th December 2019, 08:23 PM
பொன்மனச்செம்மலை உயிரென நேசிக்கும் அன்பு
நெஞ்சங்களே !

அனைவருக்கும் வணக்கம்!

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
மறைந்து 32 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது பெயரும்
புகழும், பெருமையும் – நாளுக்கு நாள் உலகெங்கும் பரவி
வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக நம் அன்புத் தலைவர்
பொன்மனச்செம்மல் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்,
இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி,
மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வெகு
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அது மட்டுமல்ல, பிரான்ஸ், துபாய், கனடா, சிங்கப்பூர்,
பினாங்கு, மலேசியா, இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவு
உள்ளிட்ட – பல நாடுகளிலும் நம் தலைவரின் நூற்றாண்டு
விழாக்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 101,102, 103 – வது
பிறந்த நாள் விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்ல, வாட்ஸ் அப்–பேஸ்புக், இன்ஸ்டிராகிராம்,
யூ டியூப், உள்ளிட்ட இணையதளங்கள் வழியாகவும் இதய
தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய பல்வேறு சிறப்புக்
குரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் பரவி
வருகின்றன.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலைவரின் பக்தர்கள்
எந்தவித சுயநல நோக்கமும் இன்றி, எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் தங்களின் சொந்தப் பணத்தில், நண்பர்கள் மற்றும்
தலைவரின் அபிமானிகள், பக்தர்களின் உதவியால்
விழாக்களை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருவது கண்டு
பெருமை அடைகிறோம்.

இத்தகைய நற்செயல்களில் ஈடுபட்டு தலைவரின்
புகழ்பரப்பும் பக்தர்களை, அபிமானிகளை, ஆதரவாளர்களை
ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது.
அதற்கான தொடக்கமாகவே, இந்த வேண்டுகோள் கடிதம்
தங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள துரை
கருணா ஆகிய எனக்கு தற்போது 66 வயதாகிறது.
1970–ம் ஆண்டு வத்தலக்குண்டு நகரில் மக்கள் திலகம்,
எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில்
இருந்தவன்.
1973 திண்டுக்கல் இடைத் தேர்தலில் கழக வெற்றிக்காகப்
பாடுபட்டவன்.
1973, 1974, மற்றும் 1975 கால கட்டங்களில் விலைவாசி
உயர்வுப் போராட்டம், எம்எல்ஏக்களிடம் மனு அளிக்கும்
போராட்டம், காவல்துறை அடக்கு முறை கண்டனப்
போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று சிறை சென்றவன்.
1976, 77 கால கட்டங்களில் திருச்சி மாணவர் அணியில்
இணைந்து பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவன்.
1978 முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் நம்முடைய
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழக
தலைமைக் கழக அலுவலகத்தில் அனைத்துலக எம்ஜிஆர்
மன்றம் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி (1982) யின்
அலுவலக நிர்வாகியாக பணியாற்றியவன்.
1984 முதல் 1996 வரையிலும் அண்ணா, மன்ற முரசு,
பொன்மனம், நமது எம்ஜிஆர் ஆகிய கழக நாளேடுகளிலும்
செய்தியாளனாக பணியாற்றினேன்.
தொடர்ந்து வெற்றிமாலை, மாலைச்சுடர் ஆகிய
நாளேடுகளிலும், இதயம் பேசுகிறது, குமுதம், புதிய
தலைமுறை வாரஇதழ்களிலும் என் பங்களிப்பைச்
செலுத்தியவன்.
கடந்த 4 ஆண்டுகளாக தொலைக்காட்சி விசாதங்களில்
பங்கேற்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
பொன்மனச்செம்மல் புகழை, பெருமையை, அவரது
சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி வருகிறேன்.
எம்ஜிஆர் அரசியல்பாதை, எம்ஜிஆர் வாழ்வும் நெறியும்,
ஒரே ஒரு எம்ஜிஆர், இலங்கை பிரச்னையும் இந்திய
நிலையும், (எம்ஜிஆர் அவர்களின் பங்களிப்பு) ஆகிய
புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.
புரட்சித் தலைவரின் சிறப்புகள் குறித்து நூற்றுக்கணக்கான
கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் புகழ்பரப்பும் கூட்டங்கள்,
விழாக்கள் எங்கு நடந்தாலும் சென்று பங்கேற்கிறேன்.
அந்தவகையில், மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை,
புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று தலைவனின்
தனிச் சிறப்புக்கள், ஆட்சிக்கால சாதனைகள்
குறித்துபேசிவருகிறேன்.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிறந்துள்ள எம்ஜிஆர்
யுகம் ஒளிமயமானது. இன்றைய இளந்தலைமுறை மற்றும்
அடுத்து வரும் புதிய தலைமுறை யினருக்கு
பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் பெருமைகளை அவரது
சிறப்புக்களை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு நாம்
அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.
இந்த ஒருங்கிணைப்பின் முதற்கட்டமாக, வாட்ஸ் அப்,
பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டஇணைய தளத்தில் உள்ள
தலைவனின் பக்தர்கள், தங்களது புகைப்படத்துடன் சுய
விவர குறிப்புகளையும், தங்களுடன் தொடர்பில்உ ள்ள
புரட்சித் தலைவரின் . விசுவாசிகளுடைய சுய விவர
குறிப்புகள் மற்றும் புகைப்படங்களையும் சேகரித்து கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முகவரி:
துரை கருணா
8/23, பீட்டர்ஸ் காலனி
ராயப்பேட்டை
சென்னை 600 104
கைபேசி எண்கள்: 8939307294, 9940224183......... Thanks.........

fidowag
7th December 2019, 10:26 PM
குமுதம் வார இதழ் -11/12/19

---------------------------------------------

கற்பகம் படத்திற்கு எம்.ஜி.ஆர். போட்ட கண்டிஷன்*

------------------------------------------------------------------------------------


கற்பகம் படத்திற்கு* திரைக்கதை வசனத்தை முழுமையாக எழுதி முடித்ததும் கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு* ஒரு யோசனை தோன்றியது .* இதை ஆசை என்றும் சொல்லலாம் .* இந்த**படத்தில் ஏன் எம்.ஜி.ஆர்.அவர்களை* கதாநாயகனாக நடிக்க வைக்க கூடாது* *இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைப்பதற்கு* ஏற்பாடுகளை செய்தார் .அவரை நேரில் சந்தித்து இந்த ப டத்தின் கதையை சொன்னார்.* கதையைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது .* மருமகன்* சுந்தரம் வேடத்தில் நடிப்பதற்கு* முழுமையாக சம்மதித்தார் .





ஆனால் ஒரு கண்டிஷன். நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்* கொண்டால் நான் நடித்து தருவதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் எம்.ஜி.ஆர்.* என்ன கண்டிஷன் சொல்லுங்கள் ?* உங்கள் கண்டிஷன் ஏற்று கொள்கின்ற வகையில் இருந்தால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றார் . கே.எஸ்.ஜி.

மாமனார் நல்லசிவம் பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்க போகிறீர்கள் முதலில் அதை சொல்லுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.* நான் கதையை எழுதும்போது என் மனசுக்குள் மாமனார் கதாபாத்திரமாகவே வந்தவர் எஸ்.வி.ரங்காராவ் .* இந்த படத்தின் மாமனாராக* எஸ்.வி..ரங்காராவைத்தான் நடிக்க வைக்க* *போகிறேன் என்றார்* கே.எஸ்.ஜி.

இதை கேட்டதும், எம்.ஜி.ஆர். கொஞ்சம் நேரம்கூட யோசிக்கவிடாமல் , மாமனார் வேடத்தில் டி.எஸ். பாலையா நடிப்பதாக இருந்தால் இந்த படத்தில் நடிப்பதற்கு நான் பரிபூரணமாக சம்மதிப்பேன் என்றார் எம்.ஜி.ஆர்.* இயக்குனர் கே.எஸ்.ஜி.யும்* அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்பு கொண்டார் .* ஆனால் வீட்டிற்கு வந்ததும் ஒரு யோசனை தோன்றியது .**

மாமனார் நல்லசிவம் வேடத்தில் எஸ்.வி.ரங்காராவ் நடித்தால்தான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் .* அவரையே நடிக்க வைத்தால்தான் படத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் .* அதனால் தனது கருத்தை வலியுறுத்தினார் .* ஆனால் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் டி.எஸ். பாலையா நடிக்க வேண்டும் என பேசிவிட்ட பிறகு* அவரை மாற்ற நினைப்பது சரி எனப்படவில்லை .அதனாலேயே எம்.ஜி.ஆரும் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி கொண்டார் .* இப்படி அவர் விலகியதற்கு முக்கியமான ஒரு பிளாஷ் பேக்*கதையும் ஒன்று உண்டு.**

ஜூபிடர் பிக்ச்சர்ஸ் தயாரித்த "மோகினி " படத்தில் இரண்டு கதாநாயகர்களாக*நடிப்பதற்கு பேசப்பட்டவர்கள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் தான் .* முதலில் எம்.ஜி.ஆர். வேடத்தில் டி.எஸ். பாலையாவும் பாலையா வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிப்பதாக இருந்தது .* அதை எம்.ஜி.ஆர்.தான் அவரிடம் பேசி , நீங்கள் நடிக்கும் வேடத்தில் நான் நடிக்கிறேன் , என் வேடத்தில் நீங்கள் நடியுங்களேன் . எனது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கேட்டு கொண்டார் .* அதனால் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் கதாநாயகன் வேடத்தில் தோன்றினார் .* *பாலையா இரண்டாவது கதாநாயகனாக நடித்தார் .

டி.எஸ். பாலையாவுக்கு பதிலாக தான் நினைத்தபடியே எஸ். வி.ரங்காராவை* நடிக்க வைத்தார் கே.எஸ்.ஜி.* படமும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது .* எம்.ஜி.ஆர். அந்த படத்தில் நடிக்காமல் போனது ஒரு இழப்புதான்* என்பதை தன்னை சந்திக்கும் நெருக்கமான நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார்* கே.எஸ்.கோபால கிருஷ்ணன் .

orodizli
8th December 2019, 06:36 AM
புரட்சி தலைவர் தன் அரசியல் தலைவராக ஏற்றுகொண்ட அறிஞர் அண்ணாவை முதல்வராக்கியவர்,

தன் நண்பராக கருதிய கருணாநிதி யை முதல்வராக்கியவர்,

தன் துணைவி ஜானகி அம்மையார் முதல்வராக வரக்காரணமானவர்,

தன்னுடன் நடித்த ஜெயலலிதாவை முதல்வராக வரக்காரணமானவர்,

தன் ரசிகரான ஓ.பி.பன்னீர் செல்வம் முதல்வராக வர அடித்தளமிட்டவர்,

தன் கட்சி தொண்டரும் முதல்வராக வர மூலகாரணமாக இருந்து, எடப்பாடி பழனிச்சாமி வரை,

இப்படி பல முதல்வர்கள் தமிழகத்தை ஆள காரணமாக இருந்த "மன்னாதி மன்னன் " புரட்சி தலைவரை பார்த்து சில அரைவேக்காடுகள்

"எம்ஜிஆர் நடிகர்தானே அவர் முதல்வராக வரும்போது நாங்கள் ஆளக்கூடாதா.. "
ஏன்று கேள்விகேட்கிறார்கள், பொதுநல சேவை எதுவும் செய்யாமல் " நடிகர் " என்ற ஒரே தகுதியை வைத்துகொண்டு முதல்வராக வரத்துடிக்கிறார்கள்........... Thanks.........

orodizli
8th December 2019, 06:38 AM
Madurai-based Tamil linguist C Rajeswari presents fascinating insights into the minds of fans of the superstar-turned-politician through a series of 100 books - The Hindu - https://www.thehindu.com/entertainment/movies/madurai-based-tamil-linguist-c-rajeswari-presents-fascinating-insights-into-the-minds-of-fans-of-the-superstar-turned-politician-through-a-series-of-100-books/article29415679.ece.......... Thanks..........

orodizli
8th December 2019, 06:47 AM
இன்று காலை 7-12-2019 வீட்டில் விஜய் டிவி நிகழ்ச்சியை காண நேர்ந்தது, அதில் கமலஹாசன் திரையுலக பிரவேசம் செய்து 60ஆண்டுகள் ஆனதையொட்டி பாராட்டு விழா, சத்தியராஜ் பேசும்போது

" இந்த சாதனை யாராலும் செய்யமுடியாத உலக சாதனை "

என்று பேசினார், இதை கேட்ட எரிச்சலில் இந்த பதிவு, தமிழ்த்திரையுலக சாதனை சரித்திரத்தை படைத்தவரே மக்கள் திலகம் எம்ஜிஆர்தான் என்பதை மறந்துவிட்டு என்னன்னவோ உளருகிறார்கள், அன்றைய சினிமா விலிருந்து இன்றைய சினிமாவரை யார் யாரோ சாதனை படத்திருக்கலாம், ஆனால் புரட்சி தலைவரின் சாதனையை யாராவது படைக்கமுடியுமா..?

இன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று பீற்றிகொள்ளும் நடிகர்களே உங்களின் நேற்றைய பிரமாண்ட படங்களை இன்று வெளியிட்டு நூறு நாள் ஓட்டமுடியுமா ..?

புரட்சி தலைவரின் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் வெளியான படங்கள் இன்று வெளியிட்டாலும் நூறு நாள் ஓடுகிறதே..! இந்த ஒரு சாதனையை இன்றுள்ளவர்களால் முறியடிக்கமுடியுமா..?........... Thanks mr.Hussain...

fidowag
8th December 2019, 01:20 PM
கோவை சண்முகாவில் க்யூப் இயந்திரம் பழுதடைந்ததாலும் , ஏற்கனவே திரையிடப்பட்ட படத்திற்கு கூட்டம் இல்லாததாலும்* , பிரிண்ட் இயந்திரம் மூலம் இன்று (08/12/19) மேட்னி காட்சி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "முகராசி " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .


தகவல் உதவி: நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

orodizli
8th December 2019, 02:23 PM
திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி தனது நடிப்பை, கலையை மக்களுடைய நல்வாழ்விற்கு அர்ப்பணித்து, வியாபார ரீதியிலான சினிமா உலகை மனசாட்சியின் படி நடந்து தான் நடித்த திரைப்படங்களை, திரை காவியங்களாக உயர்த்தி, அன்றும், இன்றும், இனி என்றென்றும் பிரயோஜனமாக ஆக்கி எப்பொழுதும் வாழும் நம் மக்கள் திலகம் அவர்களின் தரமான சினிமா & அரசியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள்... திரையாட்சியின் வசூல் நிலவரங்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் அடங்கிய கருத்து பெட்டகமாக உருவாக்கி கொண்டிருக்கும் திரு பம்மல் சாமிநாதன் வழங்கும் ஆல்பம் துரிதமாக தயாராகி கொண்டிருக்கிறது எனும் சிறப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.........

fidowag
8th December 2019, 03:12 PM
கடந்த வெள்ளி முதல் (06/12/19)* காஞ்சிபுரம் பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி ;திரு.ராமு, தங்கசாலை, சென்னை** * * * * * * * * * * * * * *திரு.செல்வராஜ், ஆட்டோ இயக்குனர்,காஞ்சிபுரம்*

oygateedat
8th December 2019, 07:23 PM
https://i.postimg.cc/nr3mZ5r4/IMG-4466.jpg

oygateedat
8th December 2019, 07:24 PM
https://i.postimg.cc/D0D4NG8F/3ace5d97-e382-4b03-b377-5db73debe1c5.jpg (https://postimg.cc/CnGKBzG6)

oygateedat
8th December 2019, 07:25 PM
[url=https://postimg.cc/F7KRssfG]https://i.postimg.cc/VLqbgJzy/IMG-4462.jpg

oygateedat
8th December 2019, 07:28 PM
https://i.postimg.cc/mD3GJWkr/21bdef5f-7a3f-4677-9713-9d43b869e7bd.jpg (https://postimg.cc/8JC3f3h8)

oygateedat
8th December 2019, 07:29 PM
https://i.postimg.cc/0QGbf3qY/IMG-4454.jpg (https://postimages.org/)

oygateedat
8th December 2019, 07:30 PM
https://i.postimg.cc/dQbJ1nPv/IMG-4449.jpg

oygateedat
8th December 2019, 08:27 PM
https://i.postimg.cc/bYVKLfxp/IMG-4467.jpg

orodizli
8th December 2019, 10:21 PM
எம்.ஜி.ஆரும்..! பாரதிராஜாவும்..!

“மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ...

அப்போதெல்லாம் பாரதிராஜாவை அழைத்து சினிமா உலகம்பற்றி மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொள்வார்” என்று ரஜினி பாரதிராஜாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு பற்றி பாராட்டிப் பேசியிருந்தார்.

எம்.ஜி.ஆர் உடனான நட்பு பற்றி இயக்குநர் பாரதிராஜா...

”நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.

ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, ‘சின்னவர் வருகிறார்… சின்னவர் வருகிறார்… ‘ என்று பயங்கர பரபரப்பு.

அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.

‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.

ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.

அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.

அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.

படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

“அஞ்சு பத்து ‘அண்ணா’க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்” என்று கூறியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.

எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.

‘எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்’ என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் ‘வேதம் புதிது’. ‘வேதம் புதிது’ திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கட்சி கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்............. Thanks.........

fidowag
8th December 2019, 10:44 PM
சின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி* குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி* சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் இன்று (08/12/19) பிற்பகல் 3.30 மணியளவில்* நடைபெற்றது .* பிரபல பின்னணி பாடகர் கோவை முரளி மற்றும் இதர பாடகர்கள்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :*

1. தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*
2.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*
3.நாளை நமதே* - நாளை நமதே*
4.நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*
5.பனியில்லாத மார்கழியா* - ஆனந்த ஜோதி*
6.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்* - நம்நாடு*
7.அழகிய தமிழ்மகள் இவள்* - ரிக் ஷாக்காரன்*
8.காஷ்மீர் பியூட்டி புல் - இதயவீணை*
9.குமாரி பெண்ணின் உள்ளத்திலே* - எங்க வீட்டு பிள்ளை*
10.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ* - சந்திரோதயம்*
11.பால் வண்ணம் பருவம் கண்டு* - பாசம்*
12.பொன்னெழில் பூத்தது புதுவானில்* - கலங்கரை விளக்கம்*
13.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*
14.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை* - நேற்று இன்று நாளை*
15.எங்கிருந்தோ ஆசைகள்* - சந்திரோதயம்*
16.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*
17..பதினாறு வயதினிலே* - அன்னமிட்டகை*
18.அவள் ஒரு நவரச நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*
19.பாட்டுக்கு பாட்டெடுத்து* - படகோட்டி*
20.விழியே கதை எழுது* - உரிமைக்குரல்*

orodizli
9th December 2019, 02:15 PM
*எனக்குப் பிடித்த மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்*

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடலுக்கு உயிர் கொடுத்து இறவாப் புகழுடன் இதய தெய்வமாக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி அவரது ரசிகனாக தொண்டராக பக்தராக பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கமல்ராஜ் தெரிவித்துக் கொள்ளும் அன்பு வணக்கம் .

அன்றும் இன்றும் என்றென்றும் வானத்தில் இருப்பது ஒரு சந்திரன் , மக்கள் உள்ளத்தில் இருப்பது ஒரு சந்திரன் அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் .

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக என் உயிரோடும் உணர்வுகளோடும் கலந்து என் வாழ்க்கைப் பாதைக்கு வாத்தியராக இருந்து வழிகாட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல .

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து எட்டு வயது சிறுவனாக இருந்த காலம் முதலாக நான் பார்த்த எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன .

நம்மைப் பெற்ற தாய் தந்தையர்கள் நமக்கு சொல்லும் நல்ல அறிவுரைகளை வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி நாம் நடப்பதில்லை அவர்கள் சொல்லும் அறிவுரைகளை நாம் மிகவும் ஆர்வமாகக் கேட்பதும் இல்லை .

தாய் தந்தை சொல் கேட்பதனால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையில் அடையக்கூடிய வெற்றிகளை தன்னுடைய திரைப் படங்களில் அருமையாகப் படம்பிடித்து மக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் காட்டியிருப்பார் புரட்சித்தலைவர் .

தனக்குகொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
அதற்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி . என்று
தன் திரைப்பட பாடல்களில் இளைய தலைமுறைக்கு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி காட்டுவார் .

நீதிக்குப் பின் பாசம்
தர்மம் தலை காக்கும்
திருடாதே
என்று அவர் நடித்த
திரைப்படங்களின் தலைப்புகளையே மக்கள் உள்ளங்களில் எல்லாம்
எளிதில் பதியும் வண்ணம் நல்ல போதனையாக தந்தார் .

புரட்சித்தலைவர் மக்கள் உள்ளத்தில் ஒரு உயர்ந்த இடத்தை பிடிக்க அடிப்படையாக அவரது படங்களின் தலைப்புகளே அமைந்து இருந்தன .

மக்களும் இவரை எங்கள் வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர் என்று நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்கள் . அந்த பெயர்களிலும் தலைப்புகளாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தன . தமிழ் திரைப்பட உலகின் முன்னனி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் ஏழையாக நடித்தாலும் , செல்வந்தராக நடித்தாலும் , மன்னனாக நடித்தாலும், நடோடியாக நடித்தாலும், தொழிலாளியாக நடித்தாலும், முதலாளியாக, நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை தவறாமல் வழங்குவார்.

அவருடைய திரைப்படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மது அருந்தும் காட்சிகளிளோ புகைப்பிடிக்கும் காட்சிகளிளோ நடிக்கவே மாட்டார் .

புரட்சித்தலைவரின் திரைப்படங்களைப் பார்த்துதான் நானும் இன்னும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் புகைப் பிடிக்கும் பழக்கத்தையோ மது அருந்தும் பழக்கத்தையோ ஏற்றுக் கொள்ளமாட்டோம் .

மலேசியாவில் சிறப்பாகச் செயல்படும் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் நான் . எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் முக்கிய கொள்கையே ஊத்த மாட்டோம் ( குடி )
ஊத மாட்டோம் ( புகை )
என்பதுதான் .

புரட்சித்தலைவர் தன்னுடைய திரைப்படங்களைப் பணம் சம்பாரிக்கும் தொழிலாகப் நினைக்காமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் மேடையாக பயண்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டார் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டது .
எம்ஜிஆர் நடந்தால் ஊர்வலம் நின்றால் மாநாடு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கை சிறப்பாக புகழ்ந்துரைத்தார் .

அரசியலில் ஈடுபட்ட புரட்சித்தலைவர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக இருந்த சமயத்தில் நடைபெற்ற தேர்தலின் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களிடம் கட்சிக்கு தேர்தல் நிதியாக ஒரு பெரும் தொகையை வழங்கினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ராமச்சந்திரா நீ கொடுத்த தேர்தல் நிதியை விட திமுகழகத்திற்கு உன்னுடைய பி்ச்சாரம்தான் முக்கியம் உன் முகத்தை காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டுகள் கழகத்திற்கு கிடைத்திடும் என்று புகழ்ந்து பேசிய அண்ணாவின் கருத்தை மக்கள் உண்மை என்று ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்தார்கள் .

அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர் திமுக கட்சியிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிரடியாக நீக்கப்பட்டார் .

அதுவரை புரட்சிநடிகராக அவரைக் கொண்டாடிய தமிழ்நாடு புரட்சித்தலைவராக எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டது . அஇஅதிமுக என்ற கட்சியை துவக்கி அதன் தலைவரானார் . அதன் பின்னர் நடைபெற்ற தின்டுகல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. புரட்சித்தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான மக்களின் முதல்வராக பணியாற்றினார் .
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று மூன்று முறை முதல்வர் என்ற சாதனை படைத்தார் .

யாரும் எதிர்பாராத தருனத்தில் உடல் சுகவீனமுற்று மண்னை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் மக்கள் உள்ளங்களில் இதய தெய்வமாக வாழ்ந்து வருகின்றார் .

நன்மை செய்வதே என் கடமையாகும் என்று எட்டாவது வள்ளலாக வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள் பத்தொன்பதாவது சித்தராக மறைந்தும் மறையாது மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் .

புரட்சித்தலைவரின் அதிதீவிர ரசிகராக இருந்த நான் அவரது தொண்டராக பல நற்பணிகளை எங்கள் பகுதி மக்களுக்குச் செய்து வந்தேன் . அவரது மறைவுக்குப் பின்னர் தமிழகம் செல்லும் ஒவ்வொரு முறையும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்.

அதன் பின்னர் அவர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஊமைகள் செவிடர்கள் பள்ளியில் நல்ல தரமான உணவுகளை அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு வழங்குவேன் .

2014ஆம் ஆண்டு மலேசியாவின் புகழ்பெற்ற மேடை கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து , காமராஜர் அரங்கத்தில் புரட்சித்தலைவர் அவர்களின் 97 வது பிறந்தநாள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி என்னுடைய தலைமையில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தினோம் . அதே விழாவில் மலேசிய அரசாங்கத்தின் மூலம் புரட்சித்தலைவருக்கு தபால் தலையும் வெளியிட்டோம். அந்த விழாவிற்குப் பின்னர்தான் டாக்டர் .கமல்ராஜ் ஆகிய நான் டாக்டர் .எம்ஜிஆர் கமல்ராஜ் என்று புரட்சித்தலைவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டேன் .

ஒரு முறை நான் புரட்சித்தலைவரின் தோட்டத்திற்குச் சென்ற பொழுது என்னுடைய உடல் சிலிர்த்தது, அது போன்ற உணர்வை நான் என் வாழ் நாளில் பெற்றதில்லை.
புரட்சித்தலைவர்தான் உங்களை ஆசிர்வதிக்கின்றார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்ன பொழுது என் கண்களில் நான் அறியாமலேயே ஆணந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அன்று இரவு என் கனவில் தோன்றிய புரட்சித்தலைவர் உன்னுடைய நற்பணிகளை ஒரு இயக்கமாக தொடங்கினால் சிறப்பாகச் செய்யலாம் என்று குறிப்பிட்டார் .

அவரது வழி காட்டலிலும் ஆசிர்வாதத்தாலும் தோன்றியதுதான் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் .
புரட்சித்தலைவர் அவர்களின் அருள்வாக்கின் படி உருவாக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் மூலம் சிறப்பான நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உலகமெங்கும் வாழும் புரட்சித்தலைவரின் பக்தர் உள்ளத்திலும் தனி இடம் பிடித்து வருகின்றோம் .

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
என்று பாடிய எங்கள் புரட்சித்தலைவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் .

நன்றி , வணக்கம் ��............ Thanks.........

orodizli
9th December 2019, 02:18 PM
மதுரையில் திருமண வரவேற்ப்பு விழாவில் கல்கண்டு ஆசிரியர் திரு . லேனா தமிழ்வாணன் அவர்கள் மக்கள் திலகம் பட்டம் கொடுக்கப்பட்டது பற்றியும் மக்கள் திலகத்தை பாராட்டி பேசிய வீடியோ தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் இதில் மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட தொகுப்பு.......... Thanks.........

orodizli
10th December 2019, 02:43 PM
https://youtu.be/U8ZtcIZGMAE........... Thanks.........

fidowag
10th December 2019, 08:30 PM
மாலை மலர் -சிறப்பு மலர் - 10/12/19
-------------------------------------------------------
நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான தலைவர் எம்.ஜி.ஆர். ஒருமுறை எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடு வாடகைக்கு தரமாட்டார்கள் .* ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி இந்த நாட்டையே கொடுத்து இருக்கிறார்கள் என பாராட்டி பேசினார் .**

fidowag
10th December 2019, 08:31 PM
நடிகர் ரஜினியின் பட தயாரிப்பில் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் திரு.பத்மநாபன் .ரஜினியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் .* சரியாக சொல்ல போனால் இந்த பத்மநாபன் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி .* எம்.ஜி.ஆருக்காக*உயிரையும் விட தயங்காதவர்* என்கிற முறையில் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் . எம்.ஜி.ஆருக்காக வாழ்ந்து அவர் மறைந்த சில மாதங்களில் , அதே கவலையில் இறந்தும் போனார் .* எம்.ஜி.ஆர். நாடக கம்பெனி தொடங்கி நடத்திய போதே உடனிருந்தவர் இந்த பத்மநாபன் .* எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் உடனிருந்தவர் . எம்.ஜி.ஆர். வளர்ந்து புகழ் பெற்ற நேரத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் .* எம்.ஜி.ஆர். வெளியூர் போகின்ற நேரங்களில்* கூடும் திரளான ரசிகர்கள் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பூப்போல தாங்கி கூட்டத்தை தனது கட்டுகோப்பால் ஒழுங்கு படுத்தியவர் .*

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து முதலமைச்சர்* ஆனபோதும் அவருடன் இருந்தார் .* பத்மநாபனுக்கு 6 பெண்கள்.* குடும்ப சூழ்நிலையும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை* என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். இவருக்கு உதவ விரும்பினார் . சிகிச்சைக்காக அமேரிக்கா சென்று திரும்பிய பின்னர் , சரளமாக பேச முடியாத சூழ்நிலையில் பத்மநாபனை அழைத்த எம்.ஜி.ஆர். சைகை மூலமாக தனது உதவும் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .* ஆனால் அந்த உதவியை கண்ணீருடன் மறுத்த பத்மநாபன் , உங்கள் நலம் மட்டுமே என் சொத்து .* எனக்கு அதுவே போதும் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.* இரண்டொரு நாளில் எம்.ஜி.ஆர். மறைந்துவிட , அதன் பிறகு வாழ்ந்த ஒன்றிரண்டு மாதங்களும் மிக சிரமத்தோடு வாழ்ந்து இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் மீது விசுவாசம் வைத்தவரின் சுவாசம்* அவரை எண்ணியே போய்விட , ஆறு பெண்களுடன் பத்மநாபனின் மனைவி தவித்து வருகிறார் . இந்த விஷயங்கள் தனது கலை நண்பர்கள் மூலம் தனக்கு தெரிந்ததாக நடிகர் ரஜினி கூறினார் . தலைவருக்கான விசுவாசத்தை மட்டுமே காட்டி, அவர் மூலம் கிடைக்கவிருந்த வளமான எதிர்காலத்தையும்*துச்சமாக கருதிய பத்மநாபன் ஏற்படுத்திய பிரமிப்பு தான் அவரை பங்குதாரர் ஆக்கியதாம் .

orodizli
11th December 2019, 07:38 PM
https://youtu.be/ticwipbUZcc.......... Thanks.........

orodizli
11th December 2019, 07:39 PM
https://youtu.be/2hnVz5K876w......... Thanks.........

orodizli
12th December 2019, 12:32 PM
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!..........

ப*ழ*ம்பெரும் ந*டிகை சவுக்கார் ஜான*கியின் 88வ*து (12/12/1931) பிற*ந்த* தின*ம் இன்று.

இவ*ர் மக்கள் திலகத்துட*ன்" ப*ணம் ப*டைத்த*வ*ன்", "தாய்க்குத் த*லைமகன்", "ஒளிவிளக்கு", "பெற்றால்தான் பிள்ளையா", ஆகிய ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். "ஒளிவிளக்கு" ப*ட*த்தில் ந*டித்த*த*ற்கு சிற*ந்த* ந*டிகை ப*ட்ட*மும் பெற்றுள்ளார். அப்ப*ட*த்தை ப*ற்றிய ஒரு சிற*ப்பு க*ட்டுரை...

மக்கள் திலகம் ந*டித்த 100 வ*து வெற்றிப்ப*டைப்பு "ஒளி விளக்கு". 1968ல் வெளியாகி (20-09-1968) 100 நாட்க*ளுக்கு மேல் ஓடி, இப்போதும், எப்போதும் திரையிட்டாலும் ச*லிப்பு த*ட்டாத* அர*ங்கு நிறைந்த* காட்சிக*ளுட*ன் ஓடும் ப*ட*ம்.

இப்ப*ட*ம் 1966ல் ஹிந்தியில் வெளியான "பூல் அவ*ர் ப*த*ர்" (பூவும், பாறையும்) ப*ட*ம் த*ர்மேந்திராவிற்கு முத*ல் வெள்ளி விழா ப*ட*ம். இவ*ர் எம்ஜிஆரின் வேட*த்தை ஏற்றிருந்தார். மீனாகுமாரிக்கு ச*வுகார் ஜான*கி வேட*ம், ஷசிக*லா- ஜெய*லலிதா, மத*ன்பூரி-அசோக*ன், ஓ.பி.ரெஹ*லான் (சோவின் பாத்திர*ம்- மற்றும் இப்ப*ட*த்தின் க*தாசிரிய*ரும் இவ*ரே). இசைய*மைப்பு ர*வி.

ஒளிவிளக்கு ப*ட*த்தை ஜெமினி ஸ்டூடியோ அதிப*ர் வாச*ன் த*மிழில் த*யாரிக்க முடிவு செய்து எம்ஜிஆரை அணுகினார். எம்ஜிஆர் அவ*ர்க*ள் நீண்ட யோச*னைக்குப்பின் சில திருத்த*ங்க*ள் செய்வ*த*ற்கு அனுமதித்த*வுட*ன் ஒத்துக் கொண்டார்.

எம்ஜிஆர் செய்த* திருத்த*ங்க*ள் ஒளிவிளக்கு ப*ட*த்தையும், ப*ட*த்தின் கேர*க்ட*ர்க*ள், விறுவிறுப்பு இவ*ற்றை இன்னமும் அதிக*ப்ப*டுத்தின. அவ*ற்றை காண்போமா!

1. த*ர்மேந்திரா சிறுவ*னாக இருக்கும்போதே பிக் பாக்கெட் அடிக்கும் திருட*னாக*வும், திருட்டு தொழிலை விரும்பி செய்ப*வ*ராக*வும் வ*ருவார். மற்றும் புகை, குடிப்ப*ழ*க்க*ம் தாராளம்.

எம்ஜிஆர் இப்ப*ட*த்தில் சிறுவ*னாக இருக்கும்போது ப*சிக்கு க*டையொன்றில் ரொட்டியை திருடி மாட்டிக்கொள்வார். பின்ன*ர் திருட*னாக மாறிய*த*ற்கு ப்ளாஷ் பேக் காட்சி உண்டு. ருக்மணி பேங்க்கில் அசோக*ன், ஜெய*லலிதா மற்றும் த*ன் கூட்டாளியுட*ன் கொள்ளை அடிக்கும்போது அதை த*டுத்து ப*ணத்தை மீட்பார். அப்போது ப*ணப்பையுட*ன் எம்ஜிஆர் போலீஸிட*ம் மாட்டிக்கொண்டு த*ண்ட*னையும் பெறுவார். பின்ன*ர் வெளிவ*ந்த*தும் இன்ஸ்பெக்ட*ரிட*ம் உண்மை குற்ற*வாளிக*ளை காட்டுகிறேன் என்று கிளப்பிற்கு கூட்டிச்செல்வார். அந்த* முய*ற்சி தோல்விய*டைய பின் ஜெய*லலிதா த*ங்கியுள்ள அறைக்கே சென்று அவ*ரிட*ம் விசாரிப்பார். அப்போது ந*ட*க்கும் ச*ண்டையில் கொலைப்ப*ழி ஜெய*லலிதா மீது விழ அவ*ரைக் காப்பாற்ற அசோக*ன் சொல்ப*டி திருட்டு தொழில் செய்வார். பின் ஒருக*ட்ட*த்தில் ஜெய*லலிதாவையும் அந்த பொய்யாக ந*ட*ந்த* கொலைக்கான ஆதார*த்தை அசோக*னிடமிருந்து மீட்டு கொடுத்துவிட்டு செல்வார். மொத்த*மாக சுமார் 40 நிமிட*ங்க*ள் ந*டைபெறும் இக்காட்சி இந்தியில் கிடையாது.

2. எம்ஜிஆரை, ஜெய*லலிதா அசோக*னின் தூண்டுத*லால் ஒரு காட்சியில் குடிக்க* வைத்துவிடுவார். அதை த*வ*று என்று ர*சிக*ர்க*ள் உண*ரும்வ*ண்ண*ம் "தைரிய*மாகச் சொல் நீ மனிதன்தானா?" என்ற பாடல்மூலம் கூறுவார். இப்பாட*லும் இந்தியில் இல்லை.

3. க*ள்ளபார்ட் ந*ட*ராஜ*ன் எம்ஜிஆரை ரோட்டில் பார்த்துவிட்டு போலீசுட*ன் துர*த்தி வ*ருவார். அப்போது ஜெய*லலிதாவுட*ன் சேர்ந்து எம்ஜிஆர் ஓடி குற*வ*ர்க*ள் கூட்ட*த்தின் உத*வியுட*ன் த*ப்புவார். நாங்க புதுசா க*ட்டிக்கிட்ட சோடிதானுங்க என்ற* பாட*லும் சூப்ப*ராக இருக்கும்.

இந்தியில் இதே காட்சி ந*கைச்சுவை ந*டிக*ர் ரெஹ்லான் (பிக்பாக்கெட் வேட*த்தில் சோ) வைத்திய*ரிட*ம் த*ப்பி ஓடி த*ன் காத*லியுட*ன் மாறுவேட*மிட்டு பாடி ஆடுவ*துபோல் வ*ரும்.

4. கிளைமேக்ஸ் ச*ண்டையில் கிளப் டான்ச*ராக வ*ரும் ஷசிக*லா (ஜெய*லலிதா) மத*ன்பூரியால் கொல்லப்ப*டுகிறார். அவ*ர் போலிசால் சுட*ப்ப*ட்டு இற*க்கிறார். மீனாகுமாரியை (ச*வுகார் ஜான*கி) த*ர்மேந்திரா மண*ந்து கொள்கிறார்.

த*மிழில் ச*வுகார் ஜான*கி உயிர் துற*க்கிறார். எம்ஜிஆரும் ஜெ.வும் ஒன்று சேர்வார்க*ள்.

இப்ப*ட*த்தில் ச*வுகார்ஜான*கிக்கு 1968ஆம் ஆண்டின் சிற*ந்த* ந*டிகை விருது த*மிழ*க அர*சால் வ*ழ*ங்க*ப்ப*ட்ட*து.

" ஓளிவிளக்கு", ப*ட*மான*து 1979ல் மலையாள மொழியில் "புதிய வெளிச்ச*ம்" என்ற பெய*ரில் வெளியாகி வெற்றி பெற்ற*து. எம்ஜிஆரின் வேட*த்தை ஜெய*ன் அவ*ர்க*ளும், ச*வுகாரின் வேட*ம் ஸ்ரீவித்யாவும், ஜெய*லலிதாவின் வேட*த்தை ஜெய*பார*தியும் ஏற்று ந*டித்த*ன*ர்........... Thanks.........

fidowag
12th December 2019, 12:33 PM
கோவை டிலைட்டில் நாளை வெள்ளி முதல்* (13/12/19)* புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த தேவரின் "விவசாயி " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : கோவை நண்பர் திரு.கமலக்கண்ணன்*

fidowag
12th December 2019, 01:27 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில்* நாளை வெள்ளி முதல் (13/12/2019) முன்னாள் தமிழக முதல்வரும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அன்பு மனைவியுமான* திருமதி*வி.என். ஜானகி நடித்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது ,

தகவல்* உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
12th December 2019, 05:50 PM
குமுதம் வார இதழ் -18/12/19

வாலிப வாலி நூலில் கவிஞர் வாலி.
---------------------------------------------

எம்.ஜி.ஆர். முதன் முறையாக நாகிரெட்டி தயாரிப்பில் ஆக்ட் பண்ண படம்தான் எங்க வீட்டு பிள்ளை.* அந்த படத்துக்கு பாட்டு எழுத எம்.ஜி.ஆர். சொல்லி நாகிரெட்டியின் பி.ஏ. ராதாகிருஷ்ணன்* என்னை தேடி வந்தார் ..அந்த படத்துல*நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்கிற பாடல் மிக பிரபலம் ஆனது .


ஆனா , முதல்ல நான் எழுதினது நான் அரசன் என்றால் , என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் .என்றுதான் ரிக்கார்ட் பண்ணினோம் . இந்த பாட்டை நாகிரெட்டி கேட்டுவிட்டு இது ரொம்ப அரசியல்தனமா இருக்குன்னார் .அப்போ காங்கிரஸ் கவர்ன்மென்ட் நடந்துட்டு இருந்தது . அப்போ நாகிரெட்டியோட நண்பர் ஒருத்தர் சென்சார் ஆபீஸ்ல இருந்தாரு.* வேணும்னா அவர்கிட்ட முதல்லே போட்டுக் காட்டிடலாம்னு சொன்னார் .நாங்களும் அவர்கிட்ட* அந்த முழு பாடலை போட்டுக் காண்பித்தோம் .* அவர் அந்த பாட்டில் இருந்து பத்து வரிகளை நீக்கிவிட்டார் .


உடனே நாகிரெட்டி என்னை கூப்பிட்டு பாட்டை மாத்தணும்னு சொன்னார்.உடனே, நான் எம்.ஜி.ஆர். கிட்ட போய்* அந்த சென்சார் ஆபீசர் பத்து வரிகளை இந்த பாட்டில் இருந்து நீக்க சொல்கிறார் , என்ன பண்ணலாம்னு* கேட்டேன்.* அதுக்கு எம்.ஜி.ஆர். அந்த பாட்டை படித்து பார்த்துவிட்டு , நானா இருந்தா இந்த பிள்ளையார் சுழியை தவிர எல்லா வரிகளையும் நீக்கி இருப்பேன்னு சொன்னார் .* வேறு பாட்டும் எழுத சொன்னார் .* அப்போ பேரறிஞர் அண்ணா ஓர் மீட்டிங்கில் பேசின ஒரு வசனம் என் ஞாபகத்திற்கு வந்தது ,* நான் ஆணையிட்டால், தமிழ்நாட்டில் எந்த ரயிலும் ஓடாது ன்னு* பேசுவார்.* அந்த வார்த்தையை நான் எடுத்துக் கொண்டேன்* *இப்படி நான் எழுதின வரிகளை மாற்றித்தான் அந்த பாடல் வெளியாகி* பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மிக பிரபலம் ஆனது .

orodizli
13th December 2019, 02:36 PM
MGR .,ன் "உலகம் சுற்றும் வாலிபன் ",திரைப்படம்(திரைக்காவியம்) கருணாநிதியின் குள்ளநரித்தனத்தையும் தாண்டி எப்படி ரிலீஸ் ஆனது தெரியுங்களா?..........

அந்த படத்தை MGR தனது டைரக்*ஷனில், தனது தயாரிப்பில், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுத்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்?

ஆனால் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி இந்த படத்தின் கதை அமைப்பை உரிய ஆட்கள் மூலம் மோப்பம் பிடித்து, இந்த படம் வெளியானால் MGR இன்னும் சுலபமாக முதல்வராகி விடுவார், என்று கணக்கிட்டு இந்த படம் வெளிவராமல் தடுக்க அனைத்து உத்திகளையும் தயாராக வைத்து இருந்தார்.

இந்த விசயம் படத்தின் financial ஐ கவனிக்கும் இராம வீரப்பன் மூலம் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜப்பானில் இருக்கும் MGR அறிகிறார்.

சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று, படத்தின் எடிட்டர் குழுவை நேரே பம்பாய்க்கு வரச்சொல்லி, படச்சுருள்களும் நேரே அங்கு கொண்டுசெல்லப்பட்டு அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

தியேட்டர் ஓனர்கள் கருணாநிதியின் மிரட்டலையும் மீறி நாங்கள் வெளியிடுகிறோம் தலைவா என்று 1.05.1973. தொழிலாளர் தினத்தன்று வெளியிட தேதி முடிவாகிறது.ஆனால் ரகசியம் காக்கப்படுகிறது MGR வேண்டுகோளின்படி.

இப்பொழுது தான் ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வை MGR செய்கிறார்.இந்த படத்தில் பணியாற்றாத கவிஞர் வேதாவை மும்பைக்கு அழைத்து, சூழ்நிலையை விளக்கி அவரே ஒரு சில வாக்கியங்களை ( நீதிக்கு இது ஒரு போரட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்,...நமை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் போன்ற வரிகளை)சொல்லி, ஒரு பாடல் எழுதுங்கள் என்கிறார்.

இதனிடையே இராம வீரப்பன் மூலம் M.S.விஸ்வநாதனையும், சீர்காழி கோவிந்தராஜனையும், மும்பைக்கு வரவழைத்து இந்த பாடலுக்கு இசை போடச்சொல்கிறார்.MSV க்கு சொல்லியா தரணும்.ஒரு சரித்திர பாடல் உருவாகிறது.

எடிட்டர் உமாநாத் இந்த பாடலை எங்கு எப்படி இணைப்பது என்று குழம்புகிறார்.அதையும் எம்.ஜி.ஆரே தீர்த்து, எடுத்தவுடனே எழுத்து ரீல் ஓடாம கொஞ்சம் படத்தை ஓட விட்டு பிறகு இணைக்கிறார்.

படம் பார்த்தவங்களுக்கும், இப்பொழுது பார்க்க நினைப்பவர்களுக்கும் புரியும். இந்த பாட்டு படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தெரியும்,ஒரே ஒரு போட்டோவின்மீது தான் மொத்த பாடலும் நகரும்....அந்த பாடல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று ஆரம்பிப்பதாக இருந்தது, அதையும் நமது என்பதை நீக்கி #வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடவைக்கிறார்.

இந்த விசயம் கருணாநிதிக்கு தெரியாமல் காக்கப்படுகிறது.
தி.மு.க.வினரை அந்த அந்த தியேட்டர் முன்பு நிறுத்தி மே 1 அன்று படம் திரையிடப்படாமல் பார்த்து கொள்ளும் வேலைகள் கன கச்சிதமாக கருணாநிதியால் ஏற்பாடாகிறது.

இந்த விசயமும் மும்பைக்கு போகிறது.ஏற்கெனவே பெரிய சைசில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியதின் மேல் சிறிய அளவு போஸ்ட்டரை 11.5.1973 அன்று ரிலீஸ் என்று ஒட்டச்சொல்கிறார்.படப்பெட்டிகளுடன் சென்னை வருகிறார் M.G.R.

கருணாநிதி வழக்கல்போல் அன்றைய தேதியில் தன் கட்சிக்காரர்களை என்ன செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளுடன் அங்கங்கு செல்ல பணிக்கிறார். 10 ம் தேதி இரவு படப்பெட்டிகள் அனைத்து ஊர்களுக்கும் போய் சேர்ந்தன.

சென்னை மவுண்ட் ரோடு தேவி பாரடைஸும் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்று. தியேட்டரின் வெளி வாசலில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆவலோடு கூடி எப்பொழுது விடியும் என்று காத்து இருக்கிறார்கள். தி.மு.க.வினரும் அப்படியே கூடுகிறார்கள் ரகளை செய்து ரிலீஸை தடுக்க.

அலங்கார் தியேட்டரும் அதே மவுண்ட் ரோடில் 5 அல்லது 6 பில்டிங் தள்ளி உள்ளது.இந்த தியேட்டரில் வேறுபடம் ஓடிக்கொண்டிருக்கிறது,ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை, இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கட் எடுத்து உள்ளே போனவர்களுக்கு எடுத்த எடுப்பிலே வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று படம் ஆரம்பிக்கிறது.படம் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை? பிறகு தான் புரிந்தது நாம் பார்ப்பது நாளை ரிலீசாக வேண்டிய உலகம் சுற்றும் வாலிபன் படம் என்று!!! ஆச்சர்யம் அதிசயம் மக்கள் ஆரவாரம் வெளியே தெரியவரும்போது நடந்த கூத்தை எழுதி மாளாது...

11.05.1973 அன்று குறிப்பிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டு சிறந்த படம்,சிறந்த டைரக்*ஷன்,சிறந்த தயாரிப்பு என 3 விருதுகளை வாங்கியது.(கருணாநிதி அலங்கார் தியேட்டர் ஓனர், மேதா,சீர்காழி இவர்களை எப்படி பழிவாங்கினார் என்பதை தனிப்பதிவாகவே எழுதலாம்.அது இப்ப வேண்டாம்)

சென்னை தேவி பாரடைஸ்....182 நாட்கள்
சென்னை அகஸ்தியா.............176 நாட்கள்
மதுரை மீனாட்சி........................217 நாட்கள்
திருச்சி பேலஸ்..........................203 நாட்கள்
கோவை ராஜா...........................150 நாட்கள்
கொழும்பு கேப்பிடல்............................203 நாட்கள்...தமிழ்நாடு 20, பெங்களூர் (கர்நாடகா) 3, ஸ்ரீலங்கா 2 மொத்தத்தில் 25 திரையரங்குகளில் 100 நாட்கள்...
என ஓடி சரித்திரம் படைத்தது.

கருணாநிதியின் சூழ்ச்சியை வீழ்த்தி எப்படி தனது படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார் என்பதற்காக மட்டும் நான் இந்த பதிவை போடவில்லை.கருணாநிதியின் நிஜ முகம் இது தான் என்பதை காட்டத்தான் போட்டேன்.

காரணம் அன்று அடையார் கேன்சர் ஆஸ்பிடலில் அண்ணா இறந்தவுடன் யார் முதல்வர் என்ற சர்ச்சையின் போது, எம்.ஜி.ஆரிடம் சென்று, என்னை ஆதரிப்பதாக நீங்கள் ஒருவர் சொன்னால்போதும், மற்றவர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று வேண்டிய கருணாநிதி தான்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தனது எதேச்திகாரத்தனத்தை எம்ஜி.ஆர். எதிர்க்கிறார் என்றவுடன், நன்றி மறந்து எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதோடு அவரை அனைத்து விதத்திலும் அழிக்க முயன்றார்.

அனைத்தையும் தரையில் அடிக்கப்பட்ட பந்து போலவும்,நீரில் அமுக்கப்பட்ட பந்து போலவும்,சுவரில் மோதப்பட்ட பந்து போலவும் எதிர்கொண்டு எழுச்சி கண்டார் என்பதையும் நாடறிந்ததே. அதனால் தான் தலைமுறை கடந்து இன்றும் சரித்திர நாயகனாக மக்கள் மனதில் வாழ்கிறார்...நன்றி.(நண்பரின் பதிவில் இருந்து...)............ Thanks.........

orodizli
13th December 2019, 02:39 PM
https://youtu.be/nOCxlwvgUls....... Thanks...

orodizli
13th December 2019, 02:39 PM
https://youtu.be/gCa8b4YrZZw..... Thanks...

oygateedat
13th December 2019, 09:30 PM
https://i.postimg.cc/1RDhPhbM/e970c90b-2001-4141-854c-a5472f4f6fe4.jpg (https://postimages.org/)

oygateedat
13th December 2019, 09:31 PM
https://i.postimg.cc/SRkZk5zt/fcc0f058-b796-4004-bce9-1def29aee11e.jpg (https://postimg.cc/MM30Y95y)

oygateedat
13th December 2019, 09:32 PM
https://i.postimg.cc/c1F7vrqJ/ffcb5443-5ed2-4f73-97a3-9f7b40146e60.jpg (https://postimg.cc/kDtRZMgr)

orodizli
13th December 2019, 11:03 PM
மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

எம்.ஜி.ஆர்.அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி ............ Thanks.........

orodizli
13th December 2019, 11:04 PM
திரு.ராஜீவ் காந்தி பிரதமராகஇருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளிபிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர்.கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போது எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதைமட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு ‘‘மாலையில்வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரைசந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும்சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களை யெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை.......... Thanks.........

orodizli
13th December 2019, 11:07 PM
#முதுமையை #வென்ற #வாத்தியார்........

எம்.ஜி.ஆர் எப்போதும் எந்தப் பேட்டியிலும் பேச்சிலும் தன் வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார். ‘அது உங்களுக்கே தெரியும்’ என்று பொதுவாகச் சொல்லிவிடுவார். ஆனால், தன் ரசிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அழுத்தமாகச் சொல்லி விமர்சனக்காரர்களின் வாயை மூடிவிடுவார்.

அதேவேளையில், படத்தில் இளமையாகத் தோன்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றை மிகச்சரியாகச் செய்துவிடுவார். அந்த வகையில் தன் பிம்பம் சிதையாமல் பார்த்துக்கொள்வார். தன் திரைப் பிம்பம் வெறும் மாயை அல்ல, அதில் உண்மையும் உண்டு என்பதை அவ்வப்போது வெளியே வரும் வேளைகளில் சில வீரதீர சாகசங்களை நிறைவேற்றி உறுதிப்படுத்திவிடுவார்.

அவர் தன் எதிரிகளோடு போராடி ஜெயித்த அதே வேளையில், தன் வயதோடும் வயோதிகத்தின் பலவீனங்களோடும் போராடி ஜெயித்தார். `மீனவ நண்பன்’ [1977] படத்தில் கடற்கரை மணலில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைபோடும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு ஷாட் முடிந்ததும் ஓரமாகப் போய் அமைதியாக நின்றுகொள்வார். அவருக்கு மூச்சுவாங்குவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு சிறிது நேரம் யாரோடும் பேசாமல் நிற்பாராம். `மீனவ நண்பன்’, எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு 1977-ம் ஆண்டில் வெளிவந்தது.

எம்.ஜி.ஆர் ., வயதான காலத்திலும் தனக்கு வாய்ப்பு வந்தால் அதற்கு, தான் தகுதி உடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறு வயதிலேயே குஸ்தி, சிலம்பம், பளுதூக்குதல். உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். ஐசோமெட்ரிக் பயிற்சிக்குரிய கருவி வாங்கக் காசு இல்லாத காரணத்தால், ஒரு மரத்தில் குனிந்து சாய்ந்து நின்று அந்தப் பயிற்சியைச் செய்து வயிற்றையும் மார்பையும் வனப்பாக வைத்திருந்தார்.

பளுதூக்குவதில் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றும் நம்பியாரைத் தோற்கடிக்கும்வகையில் அதிக பளுதூக்கிக் காட்டுவார்.
இதனால்தான் ‘அன்பே வா’ படத்தில் ‘ஃபைட்டிங் புல்’ என்ற வீரரை அவரால் உயரே தூக்கி கீழே எறிய முடிந்தது. வேறு பல சண்டைக் காட்சிகளிலும் அவர் வில்லனையும் ஸ்டண்ட் ஆள்களையும் முதுகில் தூக்கி கீழே எறிவது அவருக்கு சிரமமில்லாமல் இருந்தது.

கடின முயற்சிகளை மேற்கொண்டு, வாத்தியார், மற்ற நடிகர்கள் போல் வெறும் மேக்கப்பினால் தன் இளமையைக் காண்பிக்காமல், உடலை வலுவாக்கும் கடின உடற்பயிற்சிகளை மேற்கொண்டு முதுமையை வென்று, தனது 60 வயதிலும், 20 வயதுடைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தன் இளமையை நிரூபித்துக்காட்டினார் என்றால் அது மிகையாகாது............ Thanks..........

fidowag
14th December 2019, 03:49 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்கள் இன்று* போல் என்றும் எல்லா வளமும் , நலமும் பெற்று ,இன்புற்று, பல்லாண்டு காலம் வாழ்க என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பிலும் நல்வாழ்த்துக்கள்.

fidowag
14th December 2019, 03:49 PM
நாளை ஞாயிறு முதல் (15/12/19) ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " படகோட்டி " நீண்ட இடைவெளிக்கு பிறகு*தூத்துக்குடி சத்யா அரங்கில் தினசரி 3 காட்சிகளில்* வெள்ளித்திரைக்கு வருகிறது .

தகவல் உதவி :நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
14th December 2019, 03:55 PM
வரும் வெள்ளி முதல் (20/12/19) ஏழைகளின் இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு* ,மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில்*மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
14th December 2019, 03:56 PM
27/12/19* வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் "* தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*

fidowag
14th December 2019, 11:37 PM
வேலூர் குறள் அரங்கில் வெள்ளி முதல் (13/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது*

orodizli
16th December 2019, 07:18 PM
20.12.2019 வெள்ளிகிழமை முதல் புரட்சித்தலைவரின் நினைவுநாள் வருவதையொட்டி மதுரை அனுப்பானடி -பழநி.ஆறுமுகா DTS.,திரையரங்கில் மற்றும் திண்டுக்கல் - N.V.G.B. DTS.,திரையரங்கிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அவர்களின் இருவேடநடிப்பின் மகத்துவத்தில் வெள்ளிவிழாகண்ட "எங்கவீட்டுப்பிள்ளை ", வெற்றிப்பவனி வருகின்றார் ......... நன்றி மதுரை எஸ் .குமார்...... Thanks.........

orodizli
16th December 2019, 07:22 PM
இயற்கையை படைத்த இறைவன் தங்கள் லீலைகளை ஒழுக்கம், பண்பு, வள்ளல் குணம், வீரம், அழகு, நேர்மை, வசீகரம், இரக்க உள்ளம், ஆளுமை என்று ஒன்று சேர காட்சிபடுத்திய உருவம் தான் புரட்சி தலைவர். .........அந்த மகத்தான தெய்வம் தன் லீலைகளை நிறைவேற்றி கொண்டு தன் இருப்பிடம் நோக்கி சென்ற 32 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பக்தர்கள் ஒன்று சேர்ந்து போஸ்டர் அடித்து ஊர்வலம் செல்ல அனைத்து பக்தர்களின் நீண்ட நாள் ஆவல். அதை நிறைவேற்ற சென்ற(2018) வருடம்தான் பிள்ளையார் சுழியே போடப்பட்டது.அதன் தொடக்கமாக இந்த வருடம் மேலும் விரிவுபடுத்த 08.12.2019 அன்று ஆலோசனை கூட்டம் தி.நகரில் திரு முருகு பத்மநாபன் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அமைப்புகளில் இருந்து அனைவரும் கலந்து கொண்டு பலதரபட்ட வாகனங்களில் தலைவர் புகைபடத்துடனும் பதாகைகளுடனும் நீண்ட வரிசையில் சென்னை வாலாஜா சாலை யில் உள்ள பேறறிஞர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக சென்று தலைவரின் வங்ககடலோரம் உள்ள நினைவாலயத்தில் மலர்வளையம் வழிபாடு செய்வதென ஆலோசிக்கப்பட்டது.அந்த கூட்டத்தில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம், பொன்மனசெம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம், மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள், அனைத்துலக எம்ஜிஆர் திரைபட திறனாய்வு சங்கம், தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பனி மன்றம், எங்கள் தெய்வம் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, வெற்றி தேவன் எம்ஜிஆர் மன்றம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.மற்றும் சைதை கலையுலக பேரோளி எம்ஜிஆர் தலைமை மன்றம், சென்னை கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள், பொன்மன பேரவை, மகளிர் முன்னேற்றம் கழகம், புரட்சி மன்னன் எம்ஜிஆர் மன்றம், பொன்மன செம்மல் எம்ஜிஆர் பக்தர்கள் குழு ஆகிய அமைப்புகள் தொலைபேசி யில் ஒத்துழைப்பு வழங்கின. அதன் பொருட்டு ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக ஆலோசிக்க 15.12.2019. ஞாயிறு அன்று 11.05 மணிக்கு சென்னை ராஜாஜி ஹால் அருகில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவாளர்கள் முருகு பத்மநாபன், பேராசிரியர் செல்வகுமார்,மனோகரன், தேவசகாயம், மின்னல்பிரியன், ரங்கராயல் ரங்கராஜன், S.சிவா சந்திரசேகர், மதிப்பிற்குரிய அம்மா அவர்கள், M.சத்யா, N.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக திருவாளர்கள்.பாஸ்கரன், லோகநாதன், ஷிவபெருமாள், கலைமணி, சாந்தகுமார், வேலு, வேதா, D.ரவி, பாபு,ராமமூர்த்தி, சிவா, மணி, சீனிவாசன், சரவணன், ராஜேந்திரன், காதர், ராஜேஷ், பக்தா, ரவி, R.சரவணன், கோவிந்தராஜன், சந்தானம், கணேசன், ஏழுமலை, யுவராஜ், குட்டி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு 31 வருடங்களாக தொடர்ந்து போஸ்டர் அடித்து தலைவர் திருவுத்திற்கு மாலை அணிவித்து, அன்னமிட்டு, மலர்வளையம் வழிபாடு செய்யும் அதே சேவையை 32வது வருடமும் அதே வாலாஜா சாலையில் உள்ள பாரகன் தியேட்டர் அருகில் செய்வதென முடிவெடுத்து திரு. வெற்றி லை.குமார், ம.சோ.நாராயணன், M.மகேந்திரன் தாயார் அவர்களின்(14.12.2019) மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவன். ஷிவபெருமாள். செயலாளர்.கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை .......... Thanks.........

oygateedat
16th December 2019, 10:48 PM
https://i.postimg.cc/YS6fb5XF/IMG-4481.jpg

oygateedat
16th December 2019, 10:50 PM
https://i.postimg.cc/VL4v1m6g/IMG-4473.jpg (https://postimages.org/)

oygateedat
16th December 2019, 10:51 PM
https://i.postimg.cc/ydXBPy3j/bb5169aa-1b8e-4e0a-a606-93fb31e27f70.jpg

oygateedat
16th December 2019, 10:52 PM
https://i.postimg.cc/HxKKbJBz/6a712885-1ffd-4b8b-82a0-0f7c7bf7ede5.jpg

oygateedat
16th December 2019, 10:54 PM
https://i.postimg.cc/SxkMmgkL/d2c7b04c-bb34-4d33-bf68-4e949f61c453.jpg (https://postimg.cc/QHYtbkBV)

fidowag
17th December 2019, 08:36 PM
சினிக்கூத்து - நவம்பர் 2019
--------------------------------------------

நம்பியார் நூற்றாண்டு* -1919 -- 2019
--------------------------------------------------------

மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதன் சுருக்க பெயர்தான் எம்.என்.நம்பியார் .ஜூபிடர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தங்களது படங்களில் தொடர்ந்து நடிக்க மாத சம்பளத்திற்கு நம்பியாரை ஒப்பந்தம் செய்ய விரும்பி அழைத்தது .

நம்பியாரும் அங்கே சென்றார் .* ஏற்கனவே அந்நிறுவனத்தில் மாத சம்பள நடிகராக இருந்த எம்.ஜி.ஆர். முன்பின் பரிச்சயம் இல்லாதபோதும் நம்பியார் மீது அக்கறை கொண்டு உங்கள் திறமையை வியக்கும் முதலாளிகள் உங்களுக்கு மாத சம்பளமாக ஒரு நல்ல தொகையை பேசவிருக்கிறார்கள் .* அதனால் இந்த தொகையை (உதாரணமாக நூறு ரூபாய் கேளுங்கள் ) என நம்பியாரிடம் சொன்னார் .
இந்த ஆள் இந்த கம்பெனியில் ரொம்ப நாளாக மாத சம்பள நடிகராக இருக்கிறார் .நம்மை இந்த கம்பெனி முதலாளிகள் நிராகரிக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் பெரிய தொகை கேட்க சொல்கிறாரோ என எம்.ஜி.ஆர். மீது சந்தேகம் கொண்டார் நம்பியார் .**

ஜூபிடர் முதலாளிகளான சோமசுந்தரமும், மொய்தீனும் நம்பியாரை அழைத்து பேசி மாத சம்பளம் என்ன வேண்டும் என கேட்க நம்பியார் முன்யோசனையுடன்*குறைந்த சம்பளம் கேட்டார் .* (உதாரணம் ஐம்பது ரூபாய் ).**

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த நம்பியார் , ஏதோ சந்தேகம் கேட்க மீண்டும் அறைக்குள் நுழைய போனபோது கம்பெனி முதலாளிகள் பேசிக்கொள்வது நம்பியாரின் காதில் தெளிவாக விழுந்தது .

மாத சம்பளமாக நம்பியாருக்கு நல்ல தொகை தரலாம் என நினைத்தோம்*அவரோ குறைந்த தொகை போதும் என சொல்லிவிட்டாரே என வியப்பு தெரிவித்தனர் . முதலாளிகள் இருவரும் நம்பியாருக்கு தர திட்டமிட்டிருந்த தொகையைத்தான் எம்.ஜி.ஆர். கேட்க சொன்னார் .**

இதை உணர்ந்த நம்பியார் , அடடா நமக்கு நல்லது சொன்ன ராமச்சந்திரனை சந்தேகப்பட்டு விட்டோமே, என சங்கடமானார் .* அன்றில் இருந்து தொடங்கியது*எம்.ஜி.ஆர். நம்பியார் நண்பேன்டா சரித்திரம் .

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமான ஜூபிடர் தயாரித்த ராஜகுமாரியில்*எம்.ஜி.ஆரின் நண்பராக நடித்தார் நம்பியார் .* ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். தூக்கு மாட்டி கொள்ள வேண்டும்.* ஆனால் இயற்கை அவரை சாக விடாதபடி தூக்குமேடையின் பள்ளத்தில் எம்.ஜி.ஆர். விழுந்துவிடுவதாக காட்சி.**ஆனால் திட்டமிட்டதற்கு மாறாக தூக்கு கயிறு எம்.ஜி.ஆரின் கழுத்தை இறுக்க*சட்டென விரைந்து செயல்பட்டு எம்.ஜி.ஆரை கயிற்றிலிருந்து விடுவித்தாராம் நம்பியார் .**

எம்.ஜி.ஆர். நம்பியார்* நட்பில் சிலசமயம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் உண்டு.* இதுபற்றி நம்பியாரை ஒருமுறை சந்தித்து நாம் கேட்டபோது , நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்னு தலைப்பு வைச்சு நான் சொல்றத எழுதுங்க .* எம்.ஜி.ஆர்ன்னாலே அடுத்ததா நினைவுக்கு வருவது நம்பியார்.* அப்படி இருக்கையில் நம்பியாரை அம்போனு விட்டுட்டு அரசியல்ல இறங்கி முதலமைச்சராகி விட்டாரே .* இது நண்பன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்தானே , என பதில் தந்தார் நம்பியார் .

எம்.ஜி.ஆயருக்கு வில்லனாகவே பார்த்து பழகிய நம்பியாரை ஹீரோவாக வும் மாற்றி யோசித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் எம்.ஜி.ஆர். அந்த படம் நினைத்ததை முடிப்பவன் .

orodizli
18th December 2019, 06:48 AM
https://youtu.be/JfQVIasUZD0.......... Thanks.........

orodizli
18th December 2019, 06:50 AM
https://youtu.be/LDZx8mN6P8Y............ Thanks...........

orodizli
18th December 2019, 10:00 PM
இப் புலனத்தில் உள்ள அன்புச் சகோதர - சகோதரியர் அனைவரும் அறிவது..... பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது நினைவு நாளையொட்டி , சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் காலை 24.12.19 செவ்வாய்க் கிழமை காலை 11.00 மணி அளவில், சென்னை மாநகரில் புரட்சித் தலைலவர் பெயரில் இயங்கி வரும் அனைத்து அமைப்புக்களின் சார்பில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து முகநுல் அன்பர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எனவே, தாங்கள் அவசியம் காலை 11.00 மணிக்கே அண்ணா சிலை அருகில் வந்து விடவும். மிக்க நன்றி ! அன்புடன் அழைக்கும் .... சௌ. செல்வகுமார், செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.......... Thanks.........

orodizli
18th December 2019, 10:04 PM
கோவை - சண்முகா dts., தினசரி 4 காட்சிகள் ஏக வசூல் சக்கரவர்த்தி நம் மன்னாதி மன்னர் வழங்கும்"பறக்கும் பாவை" காவியம் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

orodizli
18th December 2019, 10:08 PM
The beginning of a new history
என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் மலேசியா வீர வாலிபர்கள் ஹிமாலய மலையினை தாண்டி அன்னபூரண மலை உச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையத்தின் பெருமையினை நாட்டிய வீர மலேசியா ரத்தத்தின் ரத்தங்களை வரவேற்க்க ஆனந்த கண்ணீருடன் காத்திருக்கின்றேன் !


https://m.facebook.com/story.php?story_fbid=757010511451924&id=185268901959424.......... Thanks...

fidowag
19th December 2019, 12:45 PM
கோவை டிலைட்டில் 24/12/19* செவ்வாய் முதல், புரட்சி தலைவரின் 32 வது*நினைவு நாளை முன்னிட்டு* "பணக்கார குடும்பம் " தினசரி 2 காட்சிகள் கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும் திரையிடப்படுகிறது .

தகவல் உதவி: கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .

fidowag
19th December 2019, 12:45 PM
கோவை டிலைட்டில் 27/12/19 வெள்ளி முதல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த*தேவரின் "தாயை காத்த தனயன் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு வருகிறது .

தகவல் உதவி : கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .

orodizli
19th December 2019, 07:41 PM
*“மச்சம்யா அந்த* *மனுஷனுக்கு !”*

எம்.ஜி.ஆர். பற்றி என் நண்பர்களோடு பேசும்போது “நச்”சென்று ஒரே வாக்கியத்தில் இப்படி கமெண்ட் அடிப்பார்கள்.
ஆம். அப்படி மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்த போற்றத்தக்க மனிதர்தான் எம்.ஜி.ஆர்.

சினிமாவில் இருந்தவரை சிகரம் தொட்ட சிம்மாசனம்.
அரசியலில் நுழைந்தால் , அரசாளும் அரியாசனம் .

இப்படி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வெற்றி முகம் மட்டும்தான் தெரியும்.ஆனால் அவருக்குள் இருந்த வேதனை மனம் -
அதை யார் அறிவார் ?

தன் வாழ்க்கை பற்றி ஒரே வரியில் எம்.ஜி.ஆர். சொன்ன இந்த வாசகம் , நம் இதயத்தை உலுக்குகிறது.

எம்.ஜி.ஆர். சொன்னது :
”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது!”

இதை அவரது சாதாரண சங்கட காலங்களில் சொல்லி இருந்தால் பரவாயில்லை.
ஆனால் , புகழின் உச்சிக்குப் போனபின் , ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்.

ஆம் . போராட்டங்கள்தான் புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை , புரட்சி தலைவர் ஆக்கியது.

"எல்லோரும் எம்.ஜி.ஆர். போல ஆக முடியுமா ?" என என் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்பதுண்டு.

அவர்களிடம் நான் கேட்கும் பதில் கேள்வி :

“ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து , பசியிலும் பட்டினியிலும் சோர்ந்து ,
ஒரு நடிகராக உருவெடுப்பதற்குள் அவர் பட்ட அவமானங்கள்.
அதை நம்மில் எத்தனை பேர் பட்டிருப்போம் ; அல்லது படத் தயாராக இருப்போம் ?”

எனது இந்தக் கேள்விக்கு பல நண்பர்களின் பதில் மௌனமே !

அது மட்டுமா ?
1959 இல் நாடகத்தில் நடித்தபோது கால் முறிவு.
1967 இல் துப்பாக்கிசூடு.
1972 இல் தான் வளர்த்த சொந்தக் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்ட அவலம்.

இது எல்லாவற்றையும் விடுங்கள்.
ஒரு சாதாரண சராசரி மனிதனாக அவரது இதயத்தின் அடித்தளத்தில் இருந்த ஏக்கம்... அது ஈடில்லாத பெரும் துக்கம்.

இதோ, அந்த சோகம் -
அவரது சொந்த வார்த்தைகளில் :
“எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா ? அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது !”

நெஞ்சை நெகிழ வைக்கிறது அந்த நினைத்ததை முடிப்பவனின் நிறைவேறாத ஆசை.

நான் நண்பர்களிடம் சொல்வேன் : “இவ்வளவு சோதனைகள் , ஏக்கங்கள் , அவமானங்கள் ...
எல்லாவற்றையும் படத் தயாராக இருந்தால் , எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படலாம் , எல்லோருமே!”

இதற்கு என் நண்பர்களின் பதில் , ஏக்கப் பெருமூச்சு மட்டுமே !

ஆம் . நாம் ஏக்கத்துடன் பார்க்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை
ஏக்கங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது !✍🏼🌹............ Thanks.........

fidowag
19th December 2019, 10:27 PM
நாளை (20/12/19) வெள்ளி முதல் விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டலில் தினசரி 4* காட்சிகளில் வெள்ளி* திரைக்கு வருகிறது .

தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
19th December 2019, 10:28 PM
மாலை மலர் -19/12/19

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது :அ.தி.மு.க. நிறுவனர் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது .**

இதையொட்டி வருகிற 24ந்தேதி* செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ .தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்* துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்* அமைச்சருமான*எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும்* மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர் .

அதை தொடர்ந்து ,எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்* உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.* இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் , எம்.பி. , எம்.எல்.ஏக்கள் மற்றும் அனைத்து பிரிவு பிரதிநிதிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது .

fidowag
19th December 2019, 10:28 PM
மாலை முரசு -19/12/19

டிசம்பர் 24ந்* தேதி 32 வது நினைவுநாள்*
-------------------------------------------------------------

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி - ஓ .பி.எஸ். அஞ்சலி*
---------------------------------------------------------------------------------------------

வருகிற 24ந் தேதி எம்.ஜி.ஆரின் 32 வது* ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு*அவரது* நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர் .இது குறித்து அ. தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள* செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :

எம்.ஜி.ஆரின் 32வது* ஆண்டு நினைவு நாளான 24-12-2019 செவ்வாய்க்கிழமை*காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள*எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்*அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ,இணை* ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்* வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர் .* அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடம், வளாகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது .**

fidowag
19th December 2019, 10:58 PM
வெள்ளி முதல் (19/12/19) திருப்பூர் அனுப்பர்பாளையம், கணேஷில் புரட்சி தலைவர்*புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு விஜயம் .

தகவல் உதவி : திருப்பூர் நண்பர் திரு.நடராஜன் .

fidowag
19th December 2019, 11:25 PM
சென்னை அகஸ்தியாவில் வெள்ளி முதல் (20/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளினை முன்னிட்டு , தேவரின் "விவசாயி " தினசரி மாலை காட்சி மட்டும் திரையிடப்படுகிறது .

தகவல் உதவி : தங்கசாலை திரு.ராமு .

oygateedat
20th December 2019, 04:52 AM
https://i.postimg.cc/Rhky52Lh/b062cace-2459-4159-bc82-91dfe7c172c1.jpg (https://postimages.org/)

oygateedat
20th December 2019, 04:55 AM
https://i.postimg.cc/4NTqNRTb/IMG-4556.jpg

oygateedat
20th December 2019, 04:59 AM
https://i.postimg.cc/wMPBLxcv/c338c731-3f0a-4649-9c04-9d191754a3d8.jpg (https://postimages.org/)

orodizli
20th December 2019, 10:11 AM
அறிந்தும் அறியாதது
தெரிந்தும் தெரியாதது

புர*ட்சித்த*லைவ*ருட*ன் சிலோன் எம்ஜிஆர் என்றழைக்க*ப்ப*ட்ட* விஜ*ய* கும*ர*ணதுங்கே!

இவ*ர் 114 ப*டங்க*ளில் ந*டித்துள்ளார். பெரும்பாலும் வெற்றிப்ப*ட*ங்க*ளே. பாட*க*ர், அர*சிய*ல் த*லைவ*ர், த*யாரிப்பாள*ர் என ப*ன்முக*த்தன்மை கொண்ட*வ*ர்.

தன*து அர*சியல் எதிரிக*ளால் 1988 பிப்ர*வ*ரியில் கொடூர*மாக சுட்டுக்கொல்ல*ப்ப*ட்டார். அப்போது இவ*ர் வ*ய*து 43 மட்டுமே. விஜ*ய* கும*ர*ணதுங்கே ம*றைந்த* பிற*கும் இவ*ர் ந*டித்த சில ப*ட*ங்க*ள் வெளியாகி வெற்றி பெற்ற*ன. த*மிழில் ந*ங்கூர*ம் என்ற* ப*ட*த்தில் லட்சுமிக்கு ஜோடியாக* ந*டித்துள்ளார்.

1984ல் ஸ்ரீல*ங்கா ம*காஜ*ன க*ட்சியை விஜ*ய*குமார*துங்கே துவ*க்கினார். இவ*ர*து மனைவி ச*ந்திரிகா குமார*துங்கே 10 ஆன்டு காலம் இலங்கை அதிப*ராக இருந்துள்ளார்.......... Thanks.........

orodizli
20th December 2019, 10:19 AM
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்...
---------------------------------------------------------------------
உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..

புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், நடிக மன்னன் , நடிகர் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .

நடிகர்களில் தேசிய அளவில் "பாரத்" விருது பெற்றதில் முதல்வர் ...........

மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் ..........

1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .

1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .

1987ல் மறைந்த பின்னர், 1988 ம் ஆண்டு, மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரு.க்கு "பாரத ரத்னா" எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது ............

1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .

சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு

சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .

சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .

பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .

மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .

சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .

1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்

1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
மக்கள் திலகம் மட்டுமே .

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.

சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .

வரும் 13/06/2019 & 14/06/20/19 நாடககளில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை யின் அகில இந்திய கருத்தரங்கம்
நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .

வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .

இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்........... Thanks...........

fidowag
20th December 2019, 11:30 AM
.மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் இந்த வாரம் (20/12/19) வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல் விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை அகஸ்தியா - விவசாயி* - தினசரி மாலை காட்சி மட்டும் .-

மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகா* -* எங்க வீட்டு பிள்ளை -* * * * ** * * * * * * * * * தினசரி 3 காட்சிகள்*
திண்டுக்கல் - என்.வி.ஜி.பி.* *- எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

கோவை* - சண்முகா* - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*

கோவை - டிலைட்* * - பணக்கார குடும்பம்* -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * * * * * * * * * * * * (24/12/19 முதல் )

திருப்பூர் அனுப்பர்பாளையம்* கணேஷ் - குடியிருந்த கோயில் -* 24/12/19* அன்று சிறப்பு* காட்சி மட்டும்*

விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் -* ஆயிரத்தில் ஒருவன் _தினசரி 4 காட்சிகள்*

விவரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன். மேலும் பல நகரங்கள், துணை நகரங்கள் , கிராமங்களில் அவ்வப்போது வெளியாகும் தலைவர் படங்கள் நமக்கு தகவல் தெரியாமல் ஓடி கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .

fidowag
20th December 2019, 11:31 AM
இன்றைய தனியார் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------------
20/12/19* - கே.டிவி* *- பிற்பகல் 1 மணி* - வேட்டைக்காரன்*
* * * * * * * *** * * * * * * * * *வசந்த்* *=* பிற்பகல்* 1.30 மணி* - தாயின் மடியில்*

* * * * * * * * * *ஜெயா டிவி* *- இரவு* 11 மணி* - விக்கிரமாதித்தன்**

orodizli
20th December 2019, 01:17 PM
#காதலிலும் #கண்ணியம்

#எம்ஜிஆர் அவர்கள் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்...
நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது இப்படிக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்ஜிஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது...

அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய படங்களில் வரும் காதல் காட்சிகளைக் குடும்பத்தோடு பார்க்கவே முடியாது. காதலை விட விரசம் தான் அதிகமாக இருக்கும்...காதல் என்னும் போர்வையில் "காதலைக் கேவலமாக்கி" வைத்திருப்பர்...

ஆனால் புரட்சித்தலைவர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறைக் காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் ஒரே ஒரு திரைக்காவியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சிப் பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது...

வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்ஜிஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.

“இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும்.

“அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா?

ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா?

என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாகப் பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.

சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை

“அம்மம்மா இது புதுமை – நான்
அறியாதிருந்த …… (சிரிப்பார்)
பேச முடியாத பெருமை – இந்த
இனிமை இனிமை இனிமை

என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார்.

இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.

சண்டைக்காட்சியிலும் மனிதாபிமானம், காதலிலும் கண்ணியம்
#அதான் #வாத்தியார்.......... Thanks.........

fidowag
20th December 2019, 10:53 PM
செய்தி திருத்தம்
----------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில் இன்று முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் நடித்த "குடியிருந்த கோயில்"தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது என்பது தவறான செய்தி.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வரும் செவ்வாய் கிழமை அன்று சிறப்பு காட்சி நடைபெற உள்ளது என்பது சரியான தகவல் .தவறுக்கு வருந்துகிறேன்

orodizli
21st December 2019, 10:02 AM
பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை"
பனிவுடன் படைக்கும்
நம் தெய்வம் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் பெருமைமிகு புரட்சி வரலாறுகளை உலகெங்கும் பரப்பும் முயற்ச்சியில்...
மற்றுமொரு சாதனையாக வருகின்ற 2020ன் , 103வது பிறந்தநாளை முன்னிட்டு,
அட்வான்ஸ் கொண்டாட்ட விழாவாக விசுவாசமுள்ள புரட்சித் தொண்டர்களின் இல்லத்தில் ஜொலிக்கும் வகையில் அசத்தலான பெரிய அளவில் கண்ணை பரிக்கும் அழகு வண்ணத்தில் அபூர்வ புகைப்படங்களுடன் 2020ம் ஆண்டு எம்ஜிஆர் காலண்டர் வெளியிடப் படுகிறது.
வாங்கி பாதுகாத்து மகிழ தொடர்பு கொள்ளுங்கள்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி 6364043271
சம்பங்கி ஜி. எஸ். ஆர்.
9731185524
க. ராஜசேகர் 9880825975
டி. பிரகாஷ் 9964466361
சுதர்சன் 7019119815
��.......... Thanks.........

orodizli
21st December 2019, 10:08 AM
தலைவர் தன் குருவாக மதித்த கலைவாணர் தன் 49 ஆவது வயதில் நோய்வாய் பட்டு சிகிச்சை பெற்று வர.

அவர் உடன் இருந்த 5 முக்கிய சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன், டனால் தங்கவேலு மற்றும் அனைவருடனும் தம்பி எம்ஜியார் மிகவும் நல்லவர் நான் மறைந்து விட்டால் அவருக்கு உதவியாக இருங்கள் என்று பல முறை கூற

ஒரு நாள் சிகிச்சை பெற்று வந்த போது அசந்து தூங்கி விட கண் முழித்த பின் இங்கு என்னை பார்க்க தம்பி எம்.ஜி.ஆர் ., வந்து இருந்தாரா ?!என்று கேட்க, ஆமாம் அண்ணே... நீங்க உறங்கி கொண்டு இருப்பதால் எழுப்ப வேண்டாம் என்று சொல்லி போய் விட்டார் அவர் சொல்ல.

எப்படி எம்.ஜி.ஆர்., வந்தாரா? என்று சரியாக கேட்கிறீர்கள் என்று அனைவரும் கேட்க.

வேறு எவர் இந்த நாட்டில் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி இவ்வளவு பணத்தை வைக்க போகிறார் என்று சொல்ல.

கொடுக்கும் உதவி கூட அடுத்தவர் நிலை அறிந்து விளம்பரம் செய்யாமல் கொடுத்த வள்ளல் புகழ் என்றும் காப்போம்.

வாழ்க எம் ஜி.யார்., புகழ் நன்றி..தொடரும்............. Thanks.........

orodizli
21st December 2019, 10:14 AM
பிரான்சு எம் ஜி ஆர் பேரவை - புதுவை எம் ஜி ஆர் பேரவையினரின் அன்பான வேண்டுகோள் : வரும் 24/12/2019 செவ்வாய் கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை மாநகர அனைத்து தலைவர் அமைப்புகள் ஓரணியில் ஒருங்கிணைந்து பேரணியாய் அமைதியாக அறிஞர் அண்ணா சிலையருகில் இருந்து புறப்பட்டு வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரின் சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்துகிறார்கள் ! அதில் அயல் நாட்டு பக்தர்கள் அபுதாபி சைலீஸ்பாசு அவர்களும்,துபாய் இரவிச்சந்திரன் அவர்களும் இன்னும் சிலரும் கலந்துக் கொள்கிறார்கள் ! உள்ளூர்,வெளியூர்,வெளி மாநில பக்தர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் !நன்றி !.......... Thanks...

fidowag
21st December 2019, 03:55 PM
தினமலர் - இது உங்கள் இடம் -21/12/19
--------------------------------------------------------------

பன் ச்* டயலாக்* பேசி முதல்வரா* ?
------------------------------------------------------

கடலூர் செல்வநாதன்*

1996 லிருந்து அரசியலுக்கு வருவதாக கூறும் நடிகர் ரஜினி 22 ஆண்டுகள் கடந்தும்*இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.* அப்போது பிறந்த குழந்தைகள் ஓட்டளிக்கும் தகுதிக்கு வந்துவிட்டனர் .* ஆனால் தேர்தல் வரும் 2021ல் ரஜினி கட்சி ஆரம்பித்து, உடனே, வெற்றி பெற்று விடுவாராம் .

எம்.ஜி.ஆருக்கு அரசியல் அனுபவம் இருந்தது .* 1972ல் தி.மு.க.விலிருந்து அவர் நீக்கப்பட்ட உடனே , அ.தி.மு.க.வை துவக்கினார் .* 1973ல் திண்டுக்கல்லில் நடந்த*லோக்சபா இடை தேர்தலில் அ .தி.மு.க. வெற்றி பெற்றது .* அதன்பின் 1977ல் சட்டசபை பொது தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார் .**

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்ததால்தான் முதல்வர் ஆனார் என ரஜினி நினைத்துக் கொண்டிருக்கிறார் . அதையும் தாண்டி மனித நேயத்தால் மக்கள் அன்பை பெற்றிருந்தார் .* அதனால் எம்.ஜி.ஆரால் வெற்றி* பெற முடிந்தது .

எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகும்வரை நடித்துக் கொண்டிருந்தார் .என கூறி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் . இது உண்மைதான் .மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் முடியும் தருவாயில் இருந்ததால் அப்படங்களை முடித்து கொடுத்து முதல்வரானார் .

ரஜினி சொல்வதை பார்த்தால் , முதல்வர் பதவி மீது* ஆசை இருக்கிறது என்றே தோன்றுகிறது .

எம்.ஜி.ஆர்* மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர் .* ரஜினி மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறார் .* அவர் இன்னும் மக்கள் மத்தியில் இறங்கி பழகவில்லை .* எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகள்* தொடர்ந்து முதல்வராக இருந்து*அமரரானார் .* இன்றும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் .
ஆனால் ,ரஜினி 70 வது வயதில் கட்சியே ஆரம்பிக்காமல் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் .* அது எப்படி சாத்தியம்* . பன் ச்* டயலாக் பேசி முதல்வராக முடியாது,* மக்கள் அன்பை மிகுதியாக பெற்றால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் .* இது இல்லாத ரஜினியால், முதல்வராகும் கனவுகூட காண முடியாது .

fidowag
21st December 2019, 04:13 PM
வண்ணத்திரை வார இதழ் -கவிஞர் முத்துலிங்கம் பேட்டி .

-------------------------------------------------------------------------------------------

அரசியல் பற்றி உங்கள் கருத்து ?
என்னை அரசியல்வாதின்னுலாம் சொல்லிவிட முடியாது .* என்னோட முதன்மை*அடையாளம் கவிஞன்* என்பதுதான் .எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும், அரசவைக்கு கவிஞராகவும் இருந்தேன் .* தமிழ்த்தான் என்னை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்த்தது*

எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்தீங்க இல்லையா ?

ஆமாம். அவர் முதல்வராக இருந்த பத்தாண்டுகளில் அவரோடு நெருக்கமாக இருந்தவர்களில் நானுமஒருவன் .* அலை ஓசை பத்திரிகையில் இருந்து விலகிவிட்டேன் என்கிற* செய்தியை சொல்லுவதற்கு* அவரோட அலுவலகத்திற்கு போயிருந்தேன் .* போனவுடனேயே செய்தி கேள்விப்பட்டேன் .* செலவுக்கு கொஞ்சம் பணம் வாங்கிக்குங்க . என்று சொன்னாரு .* பணம்லாம் வேண்டாங்க .உங்க படங்களில் தொடர்ந்து வேலை கொடுங்கன்னு சொன்னேன்.* என்னோட தன்மானத்தை பெரிதும் பாராட்டினார் .* அப்போது ஸ்ரீதரின் மீனவ நண்பன் படத்திலே எல்லா பாட்டும் ரெக்கார்ட் ஆயிடிச்சு,* எனக்கு வேலை கொடுக்கணுமேன்னு இல்லாத ஒரு சிச்சுவேஷனை படத்தில் உருவாக்கிக் கொடுத்தார் .அப்போ எழுதின பாட்டு தான் , தங்கத்தில் முகமெடுத்து , ஏழெட்டு வருஷம் கழிச்சு* அவர் முதல்வர் ஆகி எனக்கு பாரதி தாசன் விருது வழங்கறப்போ மேடையிலே இந்த சம்பவத்தை எல்லாம் துல்லியமாக நினைவு கூர்ந்து சொன்னார் இது எனக்கு மறக்க முடியாத நிகழ்வு..*

fidowag
21st December 2019, 04:20 PM
ஜூனியர் விகடன் - கேள்வி பதில்*
------------------------------------------------------

சினிமா நட்சத்திரங்களில்* அரசியல் முன்னேற்றம், எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா வுடன் முடிந்ததாக கருதலாமா ?

சலசலப்புகளை உண்டாக்கலாமே தவிர, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தனிப்பட்ட வகையில் யாரும் இன்னும் வளரவில்லை .* என்பதுதான் டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோரின் அனுபவம் சொல்லும் உண்மை.* கமல்ஹாசன் இப்போதுதான் களம் இறங்கி இருக்கிறார் .* அடுத்து ரஜினியும், பாயதயாராக இருக்கிறார் .* அவர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்பதை வைத்துதான் முடிவு* சொல்ல முடியும்**

orodizli
21st December 2019, 05:25 PM
புரட்சித் தலைவரின்
நினைவு தினத்தை முன்னிட்டு.........
தலைவருக்காக...

பொன்னேரி -
வெற்றிவேல் A/C DTS.,

திரையரங்க
உரிமையாளர்
வேண்டுகோளுக்கு இணங்க...

நாளை முதல்...
தினசரி 4 காட்சிகளாக

புரட்சித் தலைவர் மாறுபட்ட
இரண்டு வேடங்களில் நடித்த தமிழ்திரையுலகில் பல சாதனைகள் படைத்த காலத்தால் அழியாத காவியம்

"எங்க வீட்டு பிள்ளை" ...

திரை காவியம்
திரையிடப்படுகிறது...

ரசிகர்களுக்காக
கட்டணத்தில்
பாதியை
குறைத்து

50/=ரூபாய்
கட்டணத்தில்
திரையிட
தியேட்டர்
உரிமையாளர்

ஒத்து கொண்டுள்ளார்...

அந்த நல்ல உள்ளத்துக்கு


புரட்சித் தலைவர் ரசிகர்கள் சார்பாகவும்
நம் குழுவின் சார்பாகவும்

திரைப்பட
விநியோகஸ்தர் என்ற
முறையிலும்

இதயங்கனிந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

நன்றி நன்றி நன்றி....... Thanks mr. Cheena kani...

orodizli
21st December 2019, 11:05 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நினைவுநாள் 89.4 தமிழ் எப்ஃஎம். (துபாய்) வானொலி
சிறப்பு நிகழ்ச்சி 24.12.2019 மற்றும் 17.01.2020 ஆகிய புரட்சித்தலைவரின் நினைவுநாள் மற்றும்
பிறந்த நாள் ஆகிய நாட்களில் இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை “எம்.ஜி.ஆர் நேரம்”
எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க.. இடம்பெறுகிறது.
உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்த புகழுடன் வாழும் மக்கள் திலகம் பற்றி.. முதன் முறையாக 89.4 தமிழ்ப் பண்பலை வானொலியில் எம்.ஜி.ஆர் நேரம் என்கிற நிகழ்ச்சி வாயிலாக அவர்தம் நினைவுநாளில் உலகெங்கும் உள்ள மக்கள் இணையத்தின் வாயிலாகக் கேட்டு இன்புறும் வண்ணம் தொடங்கியுள்ள இந்தச் சேவை.. பிரபலங்களின் கருத்துரைகளுடன்.. தலைவரின் புகழ்பரப்பும் பாடல்களுடன்.. கேட்டு மகிழுங்கள்.. உங்கள் கருத்துக்களை kkts1991@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்..
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. சைலேஷ் பாசு & கவிஞர் காவிரிமைந்தன்
இணையதள தரவுகள்.. கீழே கொடுக்கப்பட்டள்ளன.............. Thanks.. .........

orodizli
21st December 2019, 11:07 PM
https://youtu.be/Dji_xYKdT28......... Thanks.. .... ...

oygateedat
22nd December 2019, 04:56 AM
https://i.postimg.cc/pT53qQ3K/1f9d52e5-f7d3-4d72-a165-fabb07f4d401.jpg (https://postimg.cc/5Y1Ptz4t)

oygateedat
22nd December 2019, 04:57 AM
https://i.postimg.cc/YqHTzWRm/IMG-4555.jpg

oygateedat
22nd December 2019, 04:59 AM
https://i.postimg.cc/NF4D45G1/59301228-140b-4c9d-9ab0-9c315f6bcccd.jpg (https://postimages.org/)

oygateedat
22nd December 2019, 04:59 AM
https://i.postimg.cc/htwrpFn3/IMG-4563.jpg (https://postimages.org/)

oygateedat
22nd December 2019, 05:00 AM
https://i.postimg.cc/ZKnpgfwk/d2c7b04c-bb34-4d33-bf68-4e949f61c453.jpg (https://postimg.cc/D8VS4cV5)

oygateedat
22nd December 2019, 05:02 AM
https://i.postimg.cc/W3SqYrrb/IMG-4488.jpg (https://postimg.cc/8JJCj7tq)

fidowag
22nd December 2019, 11:41 AM
தினமலர் -வாரமலர் -22/12/19
----------------------------------------------

எஸ்.விஜயன் எழுதிய எம்.ஜி.ஆர். கதை என்ற நூலிலிருந்து ;

எம்.ஜி.ஆர். தன்னை பகைவனாக கருதியவரையும் நண்பனாக மாற்றி , நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார் என்பதற்கு எடுத்து காட்டாக , அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது.

திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். கொடிகட்டி பறந்தபோது அவரை கதாநாயகனாக வைத்து,பல வெற்றி படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ், சாண்டோ சின்னப்பா தேவரை யாரும் மறக்க முடியாது .* தேவருக்கும் , எம்.ஜி .ஆருக்கும் இடையே உள்ள நட்பு பட உலகில் உள்ள அனைவராலும் இன்றைக்கும் பேசப்படும் அளவுக்கு நெருக்கமானது .

இத்தனை நட்புடன் விளங்கிய எம்.ஜி.ஆரும் , தேவரும் சில ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் வினோதம் கொண்டிருந்தது , சினிமா உலகில் பலரும் அறிந்திராத தகவல் .**

அரசிளங்குமரி படம் முடியும் தருவாயில் கிளைமாக்சில் சண்டை காட்சி ஒன்று இடம் பெற வேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். அதில் தன்னோடு மோதி நடிப்பதற்கு சின்னப்பா தேவரை விட்டால் வேறு ஆளில்லை என்று எண்ணினார் .அதனால் தயாரிப்பாளரான ஜூபிடர் அதிபர்* சோமசுந்தரத்தின் மகன் காசியை தேவரிடம் அனுப்பினார் .

நடந்ததை எம்.ஜி.ஆரிடம் வந்து சொன்னார் தயாரிப்பாளர்.* தேவர் மறுத்த விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். தயாரிப்பாளரிடம், நாளைக்கு நீங்க தேவரை பார்த்து பேசும்போது எனக்கு போன் செய்யுங்க . நான் காத்திருக்கிறேன், என்றார்*

அதன்படி, தயாரிப்பாளர் மறுநாள் தேவரை சந்திக்க , மீண்டும் மறுத்த தேவர்*கோபத்துடன் ஸ்டூடியோ நோக்கி புறப்பட்டார் . அவரை எதிர்பார்த்து காத்திருந்த எம்.ஜி.ஆர். கைகளை விரித்தபடி , முருகா* முருகா என்று ஓடி வந்து , காரை விட்டு தேவர் இறங்கும் முன்பே அவரை கட்டிபிடித்துக் கொண்டார் . பின்னர் அருகில் உள்ள அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர் .தயாரிப்பாளருக்கு*ஒரே பதைபதைப்பு.* உள்ளே என்ன நடக்குமோ என்று மற்றவர்களுக்கும் எதுவும் புரியவில்லை .* நேரம் போய் கொண்டிருந்தது .* அரை மணி நேரத்திற்கு பின் கதவு திறந்தது .* வேட்டியை மடித்து கட்டி கொண்டு தேவர் வெளியே வந்தார் .சில நொடிகளில் எம்.ஜி.ஆரும் வெளியே வந்தார் .

மறுநாள் காலை 10மணிக்கு தேவர் ஸ்டுடியோவிற்கு வந்தார் ..எம்.ஜி.ஆர். தேவருடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்பட்டது .* ஏதோ சண்டை போடுவது போல் புறப்பட்ட தேவர் , எம்.ஜி.ஆரிடம் அடங்கி போன மர்மம் யாருக்கும் விளங்கவில்லை*

இந்த சம்பவத்திற்கு பின்னர்தான் வரிசையாக தேவரின் ஆறு படங்களில் நடிக்க*ஒப்பந்தம் ஆனார் எம்.ஜி.ஆர். பிரிந்திருந்த நட்பும், உறவும் முன்பைவிட பன்மடங்கு வலுவானது .

orodizli
22nd December 2019, 10:12 PM
நாகிரெட்டி நினைவுகள

எம்.ஜி.ஆரைப் பார்க்க விஜயா வாகினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் தோட்டத்துக்கு வந்தார். ""ரெட்டியார் சார் வந்து பேசி விட்டுப் போகும் வரை யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம்'' என்று தன் காவல் அதிகாரி விவேகானந்தராஜிடம் எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். ஹாலில் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

ரெட்டியார் வந்ததும் அவர்களை மட்டும் செம்மலின் உதவியாளர் மாணிக்கம் வந்து உள்ளே அழைத்துப் போனார். நான், ரெட்டியாரின் உடன் வந்த உதவியாளரிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தேன். ""ரெட்டியார் விஜயா கார்டனில் புதிதாக ஒரு ஹெல்த் சென்டர் கட்டறாங்க. அதுக்கு தலைவர் பெயர் வைக்க அனுமதி கேட்க வந்திருக்காங்க'' என்று சொன்னார்.

""நட்பு என்பது, என்ன பெறுவது என்ற எண்ணத்தில் கொள்ளும் உறவல்ல. என்ன தருவது? என்று காக்கும் உறவு என்ற பெரியோர் சொல்படி ரெட்டியார் வந்திருப்பதை உணர்ந்தேன்'' என்கிறார் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கே. ரவீந்தர் "விழா நாயகன்' புத்தகத்தில்.

எம்.ஜி.ஆருக்கும் என் தந்தையாருக்கும் இருந்த நட்புறவு எந்த அளவுக்கு வளர்ந்தது.

என் தந்தையார் சொல்லக் கேட்போம்:

""தன் மனைவி, தன் மக்கள், வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்றிருக்கும் கடுகு உள்ளம் கொண்டவர்களுக்கு மத்தியில், மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். பள்ளிக்கூடம் போகாமல் இந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த அறிவு எப்படிக் கிடைத்திருக்கும்? எம்.ஜி.ஆர். அதிகம் படிக்காதவர்தான். ஆமாம்... பள்ளியிலும் கல்லூரியிலும் சென்று படிக்காதவர். ஒருமுறை அவரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். அவர் என்னை தன் வீட்டின் அடித்தளத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே புதையலைப் போல் ஒரு பெரிய நூலகத்தையே வைத்திருந்தார். நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்பதற்காக அதை அவர் வைத்திருக்கவில்லை நேரம் ஒதுக்கி தினமும் படிக்கவேண்டும் என்பதற்காக வைத்திருந்தார். அதன்படியே தினமும் படிக்கவும் செய்தார். "ஒவ்வொரு நூலகமும் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது' என்பது போகிற போக்கில் படித்துவிட்டுப் போகிற பொன்மொழி அல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய நன்மொழி. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில் நூலகம்தான் அவருக்கு கோயில், தன் அன்னை சத்யா அம்மையார், காந்தி அடிகள், பெரியார், அண்ணா போன்ற பெரியோர்களின் படங்களை அந்தக் கோயிலில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் வெளியே கிளம்பும்போது அந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் செல்வார்.

"சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா

சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா...'

என்று பின்னாளில் ஒரு திரைப்படத்தில்கூட அவர் பாடியுள்ளார்.

பிரபல நடிகர் என்ற வகையில் மட்டும் எம்.ஜி.ஆர். பிரபலமாகவில்லை. நேர்மை, மக்கள் நலனில் குறிப்பாக, பின்தங்கிய மக்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையினாலும்தான் அவர் பிரபலமானார். தமது இளமைக் காலத்திலிருந்தே ஈர இதயமும் இரக்க சிந்தனையுடையவராகவும் வாழ்ந்தார்''.

எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். என் தந்தையாருக்கு உடல் நலம் சரியில்லாத நேரம். அவரது உடல் நலக் குறைவு பற்றிக் கேள்விப்பட்டு, பாதுகாவலர்கள் புடை சூழ விஜயா கார்டனுக்கு முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல் வந்து விட்டார். வந்தவர் காரை ரிக்கார்டிங் தியேட்டருக்கு அருகிலேயே நிறுத்திவிட்டு... கார்டனில் தந்தையார் தங்கியிருந்த இல்லத்துக்கு நடந்தே வந்து விட்டார்.

""உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப் பட்டேன். அதுதான் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்ற எம். ஜி. ஆர். ""ஏதாவது வெளிநாட்டு மருந்து வேண்டுமா... சொல்லுங்கள். வாங்கித் தருகிறேன்''... என்றார் தந்தையாரிடம்.

""என் உடம்புக்கு இப்போது ஒன்றுமில்லை... சற்று ஓய்வு தான் தேவை. ஏதாவது மருந்து தேவைப்பட்டால், நம் மருத்துவ மனையில் பார்த்துக் கொள்கிறேன்...'' என்று தந்தையார் சொல்ல, எம். ஜி.ஆர். சமாதானம் அடைந்தார்.

முதலமைச்சராகப் பல பணிகளுக்கு இடையே இருந்தவர், நேரில் வந்துதான் உடல்நலம் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. தொலைபேசியே போதும். ஆயினும் எம். ஜி. ஆர். வந்தார். மனிதத் தன்மையைப் பதித்துவிட்டுச் சென்றார்.

தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழுவில் என் தந்தையாரை உறுப்பினராக நியமித்தார் முதலமைச்சர் எம். ஜி. ஆர்., தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சத்துணவுத் திட்டக் கூட்டத்திற்கு என் தந்தையாரை அழைத்தார்; சென்றிருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது பழைய தோழமை உணர்வோடு, என் தந்தையார் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்து வந்தார் எம். ஜி. ஆர். என் தந்தையாரும் அவரை அணைத்துக் கொண்டே வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எல்லோரும் அவர்களை வேடிக்கையாகப் பார்த்தனர். "அவரோ முதலமைச்சர். நாம் சாதாரணமானவன்தானே? அவருடன் அதிகாரிகள் முன்னிலையில் சகஜமாக பழகிவிட்டோமே... அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ' என்று தந்தையார் நினைத்ததற்கு, எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைபேசி மூலமாக சமாதானம் வந்தது.

""என்னங்க ரெட்டியார்... எதற்காக வீண் வருத்தம்? சி. எம். என்பது இரண்டெழுத்து. இது தற்காலிகமானது. எம். ஜி. ஆர் என்பது மூன்றெழுத்து. இது நிரந்தரமானது. பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நீங்கள் என்றைக்கும் எனக்கு முதலாளி. நான் தொழிலாளி'' என்று அன்புடன் பேசி என் தந்தையாரைச் சமாதானப்படுத்தினார்.

எம். ஜி. ஆர். என்ற மூன்றெழுத்து இன்று நிரந்தரமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆனால்... முதலாளி தொழிலாளி என்று சொன்னாரே... அது மட்டும் யாருக்கு யார் முதலாளி, யார் தொழிலாளி... என்ற கேள்விக் குறியுடன் இருக்கிறது. ஆனால் இதற்கும் அவரே படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி என்று.

அவரது இளமைக்காலத்தில் உதவியவர்களையும், அவரது முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களையும் நினைவில் வைத்திருந்து, தனக்கு வசதி வந்த போது, அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும், படவுலக நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த சந்தர்ப்பத்தில் என் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அப்போது சென்னையில் ஷெரீப், துணை ஷெரீப் என்னும் கெளரவப் பதவிக்கு உரியவர்களை அரசு தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம்.

1986ஆம் ஆண்டில் ஷெரீப் ஆக ஏவி.எம். சரவணனையும் துணை ஷெரீப் ஆக என்னையும் எம்.ஜி.ஆர். தாமாகவே முன்வந்து நியமித்து, தொடர்ந்து இரண்டாண்டுகள் பணியாற்றும் வாய்ப்பினைத் தந்து சிறப்பித்தார்.

இரண்டு பிரபல திரைப்பட நிறுவனங்களின் வாரிசுகளை இந்தப் பதவியில் நியமித்து எம்.ஜி.ஆர். இந்த வகையிலும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று'

என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் எழுதி வைத்தார். அதை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் எம். ஜி. ஆர்.

எம்.ஜி.ஆர். மெமோரியல் எப்படி வந்தது? என் தந்தையார் சொல்லக் கேட்போம்:

""வாகினியின் மேற்குப் புறமாக ஒரு பகுதியில் விஜயா மருத்துவமனை, தென்புறமாக விஜய சேஷமகால் திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. விஜயா வாகினி யின் பரப்பளவு குறைந்தது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்து என்னால் ஈடுபடமுடியவில்லை. எனவே மனதை தொண்டு என்ற திசையில் திருப்பினேன், விஜயா மருத்துவமனையை 1972ல் நிறுவினேன்.

அப்போது அதில் 46 படுக்கை வசதிகள் இருந்தது. 15 ஆண்டுகளில் தீவிர இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் மருத்துவம் என பல பிரிவுகளை உள்ளடக்கி 200 படுக்கை வசதிகளைக் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்தது. பிற மாநிலத்தவர் மட்டுமல்ல, பிற நாட்டவரும் சிகிச்சை பெற வந்தனர். எனவே மருத்துவமனையை உலகத்தர வரிசையில் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். அப்போது உடல் நலம் இல்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆரை நான் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடத்தில், "உலகத்துலே பிறந்தோம்... இருந்தோம்.... இறந்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும்... நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்குப் போயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது. ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க... ரெட்டியார்... அமெரிக்காவில் நான் பெற்ற சிகிச்சையை மறக்க முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் முதலமைச்சராக இருந்ததால் அப்படிப்பட்ட சிகிச்சை,யைப் பெற முடிந்தது. ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகிச்சை தேவைப்படும்போது என்ன செய்வது? அதனால், நீங்கள் ஒரு ஹெல்த் சென்டர் கட்டுங்கள். ஆஸ்பத்திரி மாதிரி இல்லாமல் ஒரு ஹெல்த் ரிசார்ட் மாதிரி வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.

""கடவுள் கிருபையால் பணத்துக்குக் குறைவில்லை. உங்கள் வாழ்த்துகள் ஒன்றே போதும்... விரைவில் கட்டுகிறேன்'' என்றேன். எம். ஜி. ஆர். மிகவும் மகிழ்ந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே 1987ஆம் ஆண்டு விஜயா கார்டனில் ஹெல்த் சென்டர் பச்சைப் பசேலென்ற சுற்றுச்சூழலில் நல்ல காற்றோட்டமும் வெளிச்ச வசதியோடும் கட்டி முடிக்கப்பட்டது. நோய்கள் 25 சதவிகிதம் மருந்துகளாலும் 75 சதவிகிதம் ஆரோக்கியமான சுற்றுப்புறத்தாலும் குணமாகின்றன. ஹெல்த் சென்டருக்கு யாருடைய பெயரைச் சூட்டலாம் என்று யோசித்தேன்.

"யான் பெற்ற இன்பம், பெறுக இந்த வையகம்' என்று ஞானிகள் கூறியது போல், தான் பெற்ற நல்ல சிகிச்சை நாட்டு மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரையே சூட்டலாம் என்று முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். அவரோ, "பணியுமாம் என்றும் பெருமை' என்ற திருக்குறள் இலக்கணத்துக்கு இலக்கியமாய் ஆனார். என் பிள்ளைகள் மீது அவருக்கு எப்போதும் நல்ல பிரியம் உண்டு. அதனால், மறைந்த என் மூத்த மகன் பிரசாத் பெயரை வைக்கச் சொன்னார். அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை.

பிரசாத் மெமோரியல் என்ற பெயரில் அந்தப் புதிய ஹெல்த் சென்டரை எம்.ஜி.ஆரை வைத்தே திறந்திடலாம் என்ற இன்பக் கனவில் மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால்... கனவு நினைவு ஆவதற்குள் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார். யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக் கொள்ள முடியும்?

பிரசாத் மெமோரியல் அமைக்கச் சொன்ன, எம். ஜி. ஆர். பெயரில் மெமோரியல் அமைக்க வேண்டிய நிலை வந்தது. அதனால்தான், மருத்துவமனையின் ஒரு பகுதிக்கு அவருடைய விருப்பப்படி பிரசாத் மெமோரியல் என்றும், இன்னொரு பகுதிக்கு நான் விரும்பியபடி எம். ஜி. ஆர். மெமோரியல் என்றும் நுழை வாயிலில் வளைவுகள் அமைத்து அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

எங்கள் இருவரது ஆசையும் நிறைவேறியதில் எனக்கு நிரம்ப திருப்தி.

விஜயா ஹெல்த் சென்டரில் தீவிர சிகிச்சைப் பிரிவுடன் அனைத்துவிதமான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. 24 மணி நேர அவசர கால விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுடன் சுமார் 350 படுக்கையைக் கொண்ட மருத்துவமனையாகத் திகழ்கிறது விஜயா ஹெல்த் சென்டர்.

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு. அதிலும் மருத்துவமனை என்பது மனித இனத்துக்கு தொண்டு செய்யும் ஆலயம். அங்கே வரும் நோயாளிகளின் துன்பத்தை (வலி) போக்கி அவர்களுக்குள் இன்பத்தை (மகிழ்ச்சி) வரவழைக்கும் இடம்.

அந்தக் கண்ணோட்டத்தில் நிறுவப்பட்டதுதான் இயற்கையன்னை வாழும் விஜயா ஹெல்த் சென்டர். முப்பிறவி கண்ட எம். ஜி. ஆர். விருப்பப்படி அமைக்கப்பட்ட விஜயா ஹெல்த் சென்டரின் நுழைவாயிலுக்குள் வருபவர்களை எம். ஜி. ஆர். மெமோரியல் என்னும் வார்த்தைகள் வரவேற்கும்போதே அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைத்து விட்டதாக உணர்கிறார்கள். காரணம் அவர்களை வாழ்த்தும் தெய்வமாக அங்கே எம். ஜி. ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான்'.......... Thanks.........

orodizli
22nd December 2019, 10:21 PM
��������மிகவும்���� மகிழ்ச்சியான தருணம்����������������
9 வருடங்களாக என் கனவாகவும் லட்சியமாகவும் சுமந்த ஒன்றை பிரசவித்துவிட்டேன்.
தலைவரின் திரையுலக பவளவிழா ஆண்டில் தலைவரின் படங்களின் தலைப்புக்களை கொண்டு வாழ்கை சுவடுகளை மையப்படுத்தி ❤❤காலத்தை வென்றவன்����கவிதை மணவாழ்கை அரசியல்வாழ்கை என இரண்டு அத்தியாயம் கொண்டு 103 தலைப்புகளை பயன்படுத்தபட்டுருக்கின்றது அதனலோ என்னவே பலதடைகளை தாண்டி பல முயற்சி களுக்கு பின் 103 பிறந்த நாளில் வெளியிட நூல் வடிவம் பெற்று தயராகிவிட்டது
கடந்த ஆண்டில் இருந்து அன்புகுரிய அண்ணண் திரு பாலசுப்பிரமணியன் முன்னெடுப்பிலும் திரு சந்திரசேகர் அவர்களின் ஊக்கதாலும்
தன் கடுமையான பணி சுமைகளுக்கிடையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலீலும் அச்சகத்திற்க்கும் டைப்பிங் சென்டருக்கும் 6 மாத கலமாக அலைந்து பிழைதிருத்துகிறேன் பேர்வழி என்று அவரை நிறையமுறை தொடர்புக்கொண்டபோதும் அலுத்து கொள்ளமல் ஒவ்வொருமுறையும் சரி செய்து என்னுடைய கனவை தன்னுடைய லட்ச்சியமாக கருதி உழைத்து இன்று வெளியிடும் நூலக்கி என் கைகளில் தந்துள்ள மரியாதை குரிய �������� பேராசிரியர் சௌ. செல்வகுமார் Selva Cpcl Kumar. (அனைத்துலக MGR பொதுநலசங்கம்) அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் மேலும் இதற்க்கு வாழ்த்துரை வழங்கிய தலைவரின் தளபதிகளில் ஒருவர் நடிகராகவும் இயக்குனர் தயாரிப்பாளர் திரு லியாகாத் அலிகான் அவர்களுக்கும் நன்றிகள் பல����இதற்க்கு தனது ஒவியங்களை பயன்படுத்த அனுமதியளித்த ஒவியர் திரு திருவள்ளுவர் அய்யாவிற்க்கும் நன்றி �� இக் கவிதை நூல் வெளியிடு விரைவில் இடம் தேதி அறிவிக்கப்படும்

����������������
செம்மலின் நேசன் க.செல்வகுமார்....... Thanks.......

fidowag
23rd December 2019, 03:58 PM
நாளை (24/12/19) தூத்துக்குடி சத்யாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* 32 வது* நினைவு நாளை முன்னிட்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "குடியிருந்த கோயில் " கண்டிப்பாக ஒரு நாள் மட்டும் 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
23rd December 2019, 04:57 PM
நாளை முதல் (24/12/19) முதல் கோவை டிலைட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 32* வது* நினைவு நாளை முன்னிட்டு* "பணக்கார குடும்பம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி :கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .

fidowag
23rd December 2019, 05:03 PM
நாளை (24/12/19) முதல் கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* 32 வது* நினைவு நாளை முன்னிட்டு "தாய் சொல்லை தட்டாதே " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : கோவை நண்பர்கள் திரு.ஆறுமுகம் , திரு.கண்ணன்*

orodizli
23rd December 2019, 10:05 PM
மங்கா புகழுக்கு சொந்தக்காரர், வெற்றியின் விலாசம், சரித்திரம் படிக்காமல் சரித்திரம் படைத்தவர், தமிழக அரசியலில் கடந்த ஐம்பது ஆண்டுகள் பல முதல்வர்களை உருவாக்கியவர், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், எம்ஜிஆர் அவர்களின் நினைவுநாள் நினைவஞ்சலி ஊர்வலம் வரும் செவ்வாய்க்கிழமை (24:12:2019)காலை 11மணிக்கு சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள அண்ணா சிலையிலிருந்துதலைவர் சமாதிக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து சங்கங்கள் சார்பாக செல்கிறோம், இந்த பதிவை பார்க்கும் அனைத்து ரத்தத்தின் ரத்தங்களும் தவறாமல் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவோம்......... Thanks.........