PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9

orodizli
8th November 2020, 02:42 PM
தென்னகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் சிவாஜியிடம் பட்ட பாட்டை பார்க்கலாம். பாகவதர் கதாநாயகனாக நடித்த "சிந்தாமணி" "அம்பிகாபதி" ஆகிய படங்கள் 1937 ல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்று பாகவதரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று கொடுத்தது. அப்படி சூப்பர் ஸ்டாரான பாகவதரை சிவாஜியை வைத்து ஏஎல்எஸ் தயாரித்த "அம்பிகாபதி"யில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க கேட்டதற்கு பாகவதர் நடிக்க மறுத்து விட்டார்.

சிவாஜியை விட அதிகமாக ரு10000 வரை அதிக சம்பளம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டியும் பாகவதர் நடிக்க மறுத்து விட்டார். அவர் காலத்தில் அவர் பார்க்காத பணமா? புகழா?. புது பணக்காரன்தான் பவுசோடு அலைவான். அவர் மவுசோடு வாழ்ந்தவர். ஏற்கனவே சிவாஜியின் ராசியை அறிந்துதான் அவர் இந்த முடிவெடுத்தார் என்று சொல்பவர்களும் உண்டு. அவர் அதற்கு சொன்ன காரணம் சிவாஜிக்கு தந்தையாக நடிக்கிறேன்.
ஆனால் "அம்பிகாபதி"க்கு தந்தையாக
என்னால் நடிக்க முடியாது என்று.

அவரை "அம்பிகாபதி"யாக பார்த்த அவரது ரசிகர்கள் எப்படி அவரது தந்தையாக பார்ப்பார்கள் என்ற ரசிகர்களின் உணர்ச்சியை மையமாக வைத்துதான் மறுத்தார். அவரில்லாமல் வெளியான "அம்பிகாபதி" படத்தில் பாகவதரின் நடிப்பில் இருந்த திருப்தி கணேசனின் நடிப்பில் இல்லாமல் படம் எடுபடாமல் போனதோடு மிகுந்த அறுவை படமாகவும் அமைந்ததால் படம் படுதோல்வி அடைந்தது.

அதன்பிறகு சிவாஜிக்கு தந்தையாக நடிக்க தயார் என்பதை காட்ட சிவாஜியை வைத்து "பாக்ய சக்கரம்" என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார் பாகவதர். ஆனால் சிவாஜி "அம்பிகாபதி"யில் பாகவதர் நடிக்க மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு "பாக்ய சக்கரத்தி"ற்கு கால்ஷீட் தராமலே இழுத்தடித்தார். அதனால் பாகவதர் தனது கைபொருளையும் இழந்து,
அதிர்ச்சியில் கண்பார்வையும் இழந்து, முடிவில் வறுமையையும், மரணத்தையும் ஒருசேர தழுவிக் கொண்டது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் எம்ஜிஆர் அவர்களோ திருm.k. ராதாவை தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்ட உயர்பண்பை பெற்றவர்.
அது மட்டுமல்ல கண்ணாம்பாவுக்கு பணம் பெற்றுக் கொள்ளாமலே "தாலி பாக்கிய"த்தை முடித்துக் கொடுத்தார்.
ஒரு சமயத்தில் அவர்கள் இழந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார். கே.பி.எஸ் போன்ற சீனியர்களை மதித்து அவர்களுக்கு உதவி செய்தார். இன்னும் எண்ணிலா உதவிகள் செய்து பலரை இன்னலிலிருந்து மீட்டார்.

இதைதான் அன்றே சொன்னேன் பாராண்ட மன்னனும் கணேசனுடன் கைகோர்த்தால் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. இதையெல்லாம் கணேசன் ரசிகர்கள் பேச மாட்டார்கள், சந்திரபாபு என்ன ஆனான்? என்று கேள்வியெழுப்புவார்கள். ஆனானப்பட்ட முதல் சூப்பர் ஸ்டாரையே இல்லாமல் செய்து விட்ட கணேசனின் ராசி பல தயாரிப்பாளர்களை சிதைத்து வதைத்தது ஒன்றும் பெரிய கதை இல்லை என்கிறார்களா? கைபிள்ளைங்க.

நன்றி: திரு சைலேஷ் பாசு.........ksr.........

orodizli
8th November 2020, 02:52 PM
எம்ஜிஆர் வெறும் நடிகராக மட்டுமல்ல.அனைவரது கஷ்டத்தையும் உணர்ந்து தன்னால் ஆன உதவியை தயங்காமல் செய்பவர்.இதெல்லாம் நாடகம் என பொய்புரட்டிகள் சொல்வார்கள்.அப்படியானால் அவர்கள் செய்த நற்காரியம் சொல்லுங்க டா என சொல்ல சொன்னால் கால் பிடரியில் அடிக்க ஓடிருவானுக. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கஷ்டம் நஷ்டம் வந்த போதெல்லாம் இவர் படங்கள் தான் அவர்களை காப்பாற்றி உள்ளது. அதனால் தான் அவர் பொன்மனச் செம்மல்��...ssk...சந்திர பாபு அழிந்தது குடி கூத்தியாள் சகவாசத்தால் தான் எம்ஜியார் எல்லாவாற்றையும் மறந்து தன் அடிமை பெண்ணில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னரும் எம்ஜியாரை பத்தி வசை பாடினான் நன்றி இல்லாமல் .......சந்திர பாபு கடைசியாக நடிச்ச படம் கனேசனின் அவன்தான் மனிதன் தான்.........ap....

orodizli
9th November 2020, 07:58 AM
��புரட்சித் தலைவர் பெயரில் வெளிவந்த
ஏடுகள் :

திரையுலகம் - திரைச் செய்தி- புரட்சி ஏடு
மக்கள் திலகம் - புரட்சியார் ரசிகன் -
ஜேம்ஸ்பாண்டு - கலைப் பூங்கா - சத்திய
புதல்வன் - இதயக்கனி - உதய சூரியன்
உரிமைக்குரல் - உழைக்கும் கரங்கள்
நாடோடி மன்னன் - மன்றம்.

�� தினசரி பத்திரிகைகள் :

தென்னகம் - மன்றமுரசு - மக்கள் குரல்
போர் முரசு - திரையுலகம் - அலைஓசை
நீரோட்டம் - தினத்தூது - அண்ணா
பொன்மனம்.

அது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை அவர் பெயரில் வெளிவந்த மாத இதழ்கள்
கணக்கிலடங்காதவை.அவரைப் பற்றி எழுதிய தனி நபர் வரலாற்று நூல்களும்
எண்ணிலடங்காதவை.மேலும் அவருடைய தாக்கங்கள் இல்லாத செய்தித்தாள்கள் இன்றுவரை இல்லை.அப்பேர்ப்பட்ட வரலாறு
வாழும் வரலாறு என்பது இவர் ஒருவருக்கே பொருந்தும்.
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் புகழ்!!!.........
������������������������������

orodizli
9th November 2020, 07:59 AM
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய "நாடோடி மன்னன்" காவிய படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..

‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..


நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..


எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..


ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.

1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..

அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.


இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..


படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..

கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.


இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..

நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..

நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.

திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.

நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்து.

புரட்சித் தலைவரின் திரை துறை அரசியல் வெற்றிக்கு காரணம் அவரின் தனிப்பட்ட அறிவு திரன் உழைப்பு மட்டுமே இதில் வேறு யாருக்கும் பங்கில்லை.
புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக..........kn...

orodizli
9th November 2020, 08:04 AM
1974 நவ 7 ம் தேதி திரைக்கு வந்த "உரிமைக்குரல்" "உலகம் சுற்றும் வாலிபனை" ஒரு சில இடங்களில் முந்தியது ஒரு ஆச்சரியமான ஆனந்தமான தகவல். அதிலும் திரைக்கு வந்து 23 நாட்களிலே ஆன நிலையில் புரட்சி தலைவரின் மற்றொரு படமான "சிரித்து வாழ வேண்டும்" படமும் வெளியாகி இரண்டும் 100 நாட்களை தாண்டினாலும் "உரிமைக்குரல்" யாரும் எட்ட முடியாத சாதனையாக வெள்ளிவிழா கண்டதுடன் வசூலில் புதிய புரட்சியை உண்டாக்கியது.

மதுரை,கோவை,நெல்லை. உள்ளிட்ட நகரங்களிலும் மேலும் பல ஊர்களிலும் உலகம் சுற்றும் வாலிபனை பிரேக் செய்து புதிய ரெக்கார்டு ஏற்படுத்தியது. மக்கள் திலகம் முதல்வர் ஆகும் வரை அந்த சாதனையை வேறு எந்த படங்களாலும் நெருங்க முடியவில்லை.

உதாரணமாக கோவையில் "உரிமைக்குரல்" 150 நாட்களில் கீதாலயாவில் சுமார்₹869000 வசூலாக பெற்றது. சென்னையை தவிர்த்து வேறு எந்த ஊரிலும் எந்த தியேட்டரிலும் எந்த நடிகரின் படமும் ஒரே திரையரங்கில் 8 லட்சத்தை தாண்டி இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியது கிடையாது. எட்டக்கூடிய வசூலாக இருந்தால் முயற்சி செய்து பார்ப்பார்கள். ஆனால் இது பல சொத்துக்களை விற்றாலும் எட்டாக்கனி என நினைத்து பிள்ளைகள் அடங்கி போய் விட்டனர்.

"உலகம் சுற்றும் வாலிபன்" 152 நாட்களில் . ₹ 701000 வசூலாக பெற்றது. ஆனால் "தங்கப் பதக்கம்" 100 நாட்களில் ₹ 496000 தான் வசூலாக பெற முடிந்தது. அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர முதல்வராகவே இருந்தார். மக்கள் அன்பு என்ற நூலைக் கொண்டு ஏற்றிய பட்டம் அல்லவா? எப்போதும்
யாராலும் வீழ்த்த முடியாமல் வானில் வலம் வந்தது ஒரு அபூர்வமான நிகழ்வு என்றே சொல்லலாம் 7.11.1974 ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆன நாள்...

orodizli
9th November 2020, 08:05 AM
#மக்கள்_திலகத்தின்_திரைபயணத்தில்

#மக்கள்_என்_பக்கம்...

எவ்வளவோ தயாரிப்பாளர்களுக்கு ((சத்யா மூவீஸ், தேவர் பிலிம்ஸ், தன் சொந்த எம்.ஜி.ஆர் புரொடக்ஷன்ஸ், விஜயா புரொடக்ஷன்ஸ்)) படம் நடித்து கொடுத்த மக்கள் திலகத்திற்கு, "முழுக்க முழுக்க தன் ரசிகர்களுக்காக மட்டுமே ஒரு படம் செய்ய வேண்டும், அதில் வரக்கூடிய வசூல் நலிவடைந்த தன் ரசிகர்களை சென்றடைய வேண்டும்" என்று இந்தியாவில் யாருமே செய்யாத ஒரு முயற்சியை தொடங்கினார் மக்கள் திலகம். தன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவரும், தன் முரட்டு பக்தருமான முசிறிப்புத்தன் தயாரிப்பில் இப்படம் துவக்கப்பட்டது.

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவன், தமிழக மக்களின் உதவியோடு உயர்ந்த இடத்தை அடைவது போன்ற கதையமைப்பில் படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படம் தயாராகி வெளிவந்திருந்தால், நவரத்தினம் படத்திற்கு அடுத்து வெளிவந்திருக்கவேண்டும். ஆனால் மக்கள் திலகத்தின் அரசியல் பணிகள் குறுக்கிட்ட படியாலும், அன்றைய அரசியல் சூழ்நிலைகளினாலும் இப்படம் சில அடிகள் படப்பிடிப்போடு நிறுத்தப்பட்டது.

பின்னாளில் சத்யராஜ், அம்பிகா நடிக்க, கே.பாலாஜி தயாரிப்பில் இதே பெயரில் படம் வெளியானது. ஆனால் அது மக்கள் திலகத்துக்காக உருவாக்கப்பட்ட கதையா? என்பது தெரியவில்லை.

இந்த படம் வெளிவராவிட்டாலும் கூட இன்று வரை மக்கள்-மக்கள் திலகத்தின் பக்கம்தானே இருக்கிறார்கள்...........

fidowag
9th November 2020, 08:26 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------

மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தாலும் , சிறந்த*நடிகர்*என்று பரிசு பெற்று பலரால்*பாராட்டப்பட்டாலும், தன்னை*எம்.ஜி.ஆர். என்று அழைப்பதையே தான் அவர் பெரிதும் விரும்பினார் .* அதனால்தான் சொந்த*படம் தயாரிக்கும்போது அந்த நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் என்று பெயரிட்டார் .கண்ணனை எப்படி, கோபிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் என்று அழைத்தார்களோ, அப்படி பலர் பலவாறு எம்.ஜி.ஆரை* அழைத்தார்கள்.* சின்னவர், தலைவர், ராமச்சந்திரன், புரட்சி தலைவர், மக்கள் தலைவர் என்று பல பேர்* அழைத்தாலும்* வாழ்நாள் முழுவதும்** எம்.ஜி.ஆர். என்று அழைப்பதையே* அவர் பெரிதும் விரும்பினார் .***


கவிதைநயமிக்க ஒப்பாரிகளில் மிக சிறந்தது*எதுவென்றால் கம்ப ராமாயணத்தில் வரும் ஒப்பாரியை சொல்வார்கள். ராவணன்* மாண்டுவிட்டான்* ராமனுடைய அம்பு துளைத்து , காயங்களால் உடம்பு புண்ணாகி*கிடக்கிறான்.* அப்போது மண்டோதரி சொன்னதாக கம்பன்*ராமாயணத்தில் சொல்கிறார்.* உன் இதயத்தில் என்னை வைத்திருப்பதாக* சொன்னாயே, ராமன்*பானத்தை*விட்டபோது, உன் இதயத்தை*துளைத்த*போது ,நான் அல்லவா இறந்து*கிட க்க வேண்டும்* அண்ணா*ஏன்* பொய் சொன்னாய். என்று சகோதரனை கட்டிப்பிடித்து அழுகிறாள் .அப்படி ஒப்பாரி* விடுவதற்கான துக்க*சம்பவம்*எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் நடந்தது . அதாவது பேரறிஞர் அண்ணா*நோய்வாய்ப்பட்டு இறந்து*போகிறார் .அவரது இறுதி ஊர்வலம் நடந்து , வங்க*கடலோரம், மெரினா*கடற்கரையில் அண்ணாவின் நினைவிடம் அமைகிறது .* எம்.ஜி.ஆர்.அவர்கள் சில*நாட்கள்*தனிமையில் வாடுகிறார் .* அப்போது உடன் இருந்த*உதவியாளர் ரவீந்தர்*, பேரறிஞர் அண்ணாவின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்புதான் என்கிறார் .* அப்போது எம்.ஜி.ஆர். சொல்கிறார். அண்ணா*அவர்கள் மேடையில்*பேசி கொண்டே* மூன்று பக்கமும்*பார்த்தபடி*வேட்டி கட்டி கொண்டு*நடக்கிற அழகை*பார்த்து கொண்டே இருக்கலாம் .* மேடைக்கு முன்னாள் லட்சோப*லட்சம் மக்கள் முன்னிலையில் யாருக்கும் தெரியாமல்* அவர் பொடி போடும் லாவகம் .என்னை*தம்பி என்று அழைக்கும்போது அடி வயிற்றில்*இருந்து எழுகின்ற உணர்ச்சி மிக்க* பாசம் , அன்பு,* இவற்றையெல்லாம் பற்றி நினைக்கும்போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது .*என் தந்தையார்*இறந்த விவரம் பற்றி எனக்கு*தெரியாது . என் தாயாரின்* மறைவு எனக்கு* மிக பெரிய துக்கம் .* என்னை*அளவற்ற*அன்புடன், பாசத்துடன் தம்பி என்று அழைத்து*வந்தாரே, அதை எப்படி என்னால்*மறக்க முடியும்**என்று வாய்விட்டு கதறி அழுகிறார் .* ராவணனின் மறைவுக்கு*எப்படி மண்டோதரி ஒப்பாரி வைத்தாரோ, அதற்கு*நிகராக* அண்ணாவின் மறைவிற்கு*எம்.ஜி.ஆர். அவர்களின்*ஒப்பாரியை ரவீந்தர்*அவர்கள் தன் நூலில்*எழுதியுள்ளார் .**


1968ல்* சென்னையில் உலக தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி, கடற்கரை சாலையில் வரலாற்று சிறப்பு* *வாய்ந்த தலைவர்களுக்கு 10 சிலைகள்*வைக்கப்படுகின்றன .* அதே*போல பேரறிஞர் அண்ணாவிற்கு அண்ணா சாலையில் தன் சொந்த*செலவில்*எம்.ஜி.ஆர். அவர்கள்* சிலை**வைக்க முற்படுகிறார் .* அப்போது அண்ணாவை*அமர செய்து அந்த சிலையை*அவர் முன் வடிவமைத்தார்கள் . அந்த சமயம்*அண்ணா* அவர்கள் தம்பி எம்.ஜி.ஆரின் அஸ்திவாரத்தில் நான் நிற்போது*போலுள்ளது இந்த சிலை என்று குறிப்பிட்டாராம் .தி.மு.க.வின் அஸ்திவாரமாக எம்.ஜி.ஆர். அவர்களை கருதித்தான் அன்றே*பேரறிஞர் அண்ணா சொன்னார். ஆனால் அவருக்கு*பின்னால் முதல்வரான கருணாநிதி அந்த அஸ்திவாரத்தையே தூக்கி எறிந்தார் . அதன் பலனாக*கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வனவாசம் சென்றது போல*ஆட்சியை*அவரால்*எட்டி பிடிக்க இயலவில்லை .**


திரு. கா. லியாகத்*அலிகான் பேட்டி : பெருந்தலைவர் காமராஜார் ஆட்சி காலத்தில் தமிழக அரசு பட்ஜட்,அனைத்து துறைகளுக்கும் சேர்த்து** எடுத்து கொண்டால்*47 கோடி*ரூபாய்தான் .* பிறகு* பேரறிஞர் அண்ணா*காலத்தில் அதுவே*90 கோடி*ரூபாயாக*இருந்தது .* 1968 பிப்ரவரி மாதம் தமிழக அரசு பட்ஜட்* தாக்கல் செய்யும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்போது சட்ட மன்ற*உறுப்பினராக இருந்த*காங்கிரஸ் கட்சியை சார்ந்த*திரு.சி.சுப்பிரமணியம் அவர்களிடம் நான் சதம்* அடிக்க போகிறேன் . அதாவது 100 கோடி*ரூபாய்க்கு பட்ஜட்*தாக்கல் செய்கிறேன் என்று சொன்னாராம்*.* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து*பட்ஜட்* தாக்கல் செய்யும்போது ரூ2,000* கோடி*ருபாய், ரூ.3,000 கோடி*ருபாய் என்ற அளவில் இருந்தது*.* அப்போது அரசு அதிகாரிகளிடமும், என்.ஜி.ஓ .சங்க தலைவராக இருந்த சிவ*.இளங்கோவிடமும் நேரடியாகவும், பத்திரிகைகள் மூலமும் அறிக்கை* வெளியிட்டு கேட்டார். அதாவது வருகின்ற வருமானம் அரசுக்கு இவ்வளவுதான் .அதில் பாதிக்கு மேலாக அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளமாக*போய்விடுகிறது .* நான் மக்களுக்கு*எப்படி அரசு இயந்திரம் மூலம் பணியாற்றுவது . மக்களுக்கான நல திட்டங்களில் எப்படி முடிவெடுப்பது .தயவு செய்து நீங்களே*இதற்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அவர்கள் . 1980 [படஜெட்டுக்கு பிறகு பொருளாதார முன்னேற்றம்* மாநில அளவிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டு* வருமானங்கள் பெருகிய*காலத்தில் அதிகமாக நிதி ஒதுக்க முடியாத சூழலில்*, சத்துணவு திட்டத்தை அமுல் படுத்த முடிவெடுத்த நேரத்தில், இந்த திட்டத்தின்* மூலம் 60 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தர வேண்டும் என்று சொல்கிறீர்கள், அது எப்படி சாத்தியம்**இது முடியாத காரியம் என்று அரசு அதிகாரிகள் மறுத்தபோது, என்ன ஆனாலும் சரி, இதை அமுல்படுத்தியே தீர வேண்டும்.* பெருந்தலைவர் காமராஜர் மதிய* உணவு திட்டத்தை கொண்டுவந்தார்* இது சத்துணவு திட்டமாக இருக்கட்டும்.அவர் வசூலித்தது போல* நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வசூல் செய்து குழந்தைகளின் படிப்பிற்காக*, உணவிற்காக ,கல்வி நிலையங்களுக்கு குழந்தைகள் வர முடியாத நிலையை மாற்றி எல்லோருக்கும் கல்வி தர வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை நிலை, பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்று முடிவெடுத்த தலைவர் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


நான் வீடு வீடாக பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை* நிறைவேற்றுவேன் என்று சொன்னார். அதையே எதிர்க்கட்சியினர் இது பிச்சைக்கார திட்டம் என்று கிண்டலும் கேலியும் செய்தனர் . குறிப்பாக தி.மு.க. வினர் ஏளனம் செய்தனர் .*அதே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தபோது, இந்த திட்டத்தை நிறுத்த முடியாமல்,மாற்ற முடியாமல்**மேற்கொண்டு சத்துணவுடன் முட்டை அளித்த சம்பவங்களும் நிகழ்ந்தன .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சத்துணவு திட்டத்தை இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிக சிறப்பாக*நடத்தி வருகிறார் . 1982ல்* சத்துணவு திட்டத்தின் குழுவின் உறுப்பினராக செல்வி ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார் .புரட்சி தலைவர்* உருவாக்கிய திட்டத்தை மேலும் மேம்படுத்தி, ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஆட்சி புரிந்த காலத்தில் சிறப்பாக நடத்தி வந்தார் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தமிழகம்* முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்களை முக்கிய நகரங்கள், கிராமங்களுக்கு அனுப்பி, பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடத்துவதை கண்காணிக்க* வேண்டியும் அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார் .***புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த திட்டத்தை திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி யில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.* *குழந்தைகள் இளம் பருவத்தில் பள்ளிக்கு*செல்லும் காலத்தில் பசியால் வாடக்கூடாதுஎன்று கருதி**.நானே*போட போறேன் சட்டம். .பொதுவில்*நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும்*திட்டம்* .என்று நாடோடி மன்னன் படத்தில் பாடியது*போல , சட்டங்களை எல்லாம் கொண்டு வந்து இந்த மக்களுடைய மறுமலர்ச்சிக்காகத்தான் அவருடைய வாழ்க்கை இருந்தது,நடந்தது என்பதை*நாமும் நினைத்து பார்த்து நாமும்*எல்லோரும்***அமைச்சராக, முதல்வராக, அதிகாரியாக வேண்டும் என்று வாழ்க்கையின் வசந்தங்களை இழந்துவிடாமல் நாம்* எந்த இடத்தில*, எந்த நிலையில் இருக்கிறோமோ, எப்படி வாழ்கிறோமோ, அந்த வாழ்க்கை நெறிமுறையில்* யாருக்காவது ஒருவருக்கு*உதவி செய்ய முடியுமேயானால் ,அந்த உதவியை செய்வதற்கு நாம் உறுதி எடுத்து கொள்ள வேண்டும். சிறிய*உதவியாக கூட இருக்கலாம் .**


கர்ணன் என்பவர் மிக பெரிய கொடை வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த*கரம் உடையவர் .* அந்த* வாரி வழங்கிய**கர்ணன்*சொர்க்கத்திற்கு போகும்போது*அவருக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது . ஏனென்றால் அவர் கொடைத்தன்மை*பெற்றிருந்தாரே ஒழிய வயிற்று பசியை*போக்கவில்லை .**போதிய அளவு அன்னதானம் செய்யவில்லை. எனவே சொர்க்கத்தில் இடம் மறுக்கிற*நிலை வரும்போது , அவருக்கு வேண்டியவர்கள் ஒரு உதவியை செய்கிறார்கள். கர்ணன் ஒரு உதவியை செய்திருக்கிறார் .* பசியோடு வந்த ஒரு முதியவர்*அன்னதானம் நடக்கும் இடம் எங்கே என்று கேட்டபோது ,தன் ஆள்காட்டி விரலால்*,அந்த இடத்தை காண்பித்து*நீங்கள் அங்கு சென்று உணவருந்துங்கள் என்று சொல்லி, வயிற்று பசியை போக்கியதால்*, நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்தில் இடம் தரவேண்டும் என்று சிபாரிசு*செய்தார்களாம்* இந்திரனுக்கு கர்ணன் மீது ஒரு கோபம் வந்தது .* கடவுளிடம் சென்று இந்திரன் முறையிடுகிறார் . நானும் வாரி வாரி கொடுக்கிறேன் .* கர்ணனும் வாரி வாரி கொடுக்கிறார் .* ஆனால் என்னை யாரும் வள்ளல் என்று அழைப்பதில்லை .இந்திரன் என்றுதான்*அழைக்கிறார்கள். கர்ணனை வள்ளல் என்று குறிப்பிடுகிற இதே* சமூகம் என்னை ஏன் அவ்வாறு அழைப்பதில்லை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் பல நடிகர்கள் , தலைவர்கள் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை எல்லாம்* வள்ளல் என்று குறிப்பிடாமல்* ஏன்* எம்.ஜி.ஆர். அவர்களை மட்டும் வள்ளல் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு நான் கண்ட* உதாரணம் இதுதான்*.இந்திரனின் கேள்விகளை கேட்ட*கடவுள், பதிலுக்கு நான்* ஒன்றை**காட்டுகிறேன்* .கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்லி*அவரை பக்கத்தில் இருக்கவைத்து, அருகில் உள்ள**மலையை பார்த்து கடவுள்* தன்* கையை காட்டுகிறார் .* உடனே அந்த மலை தங்கமாக மாறிவிடுகிறது .* உனக்கும், கர்ணனுக்கும் ஒரு போட்டி. நீ இந்த தங்கத்தை*இந்த காலை நேரத்தில் இருந்து , மாலை சூரியன்*அஸ்தமனம் ஆவதற்குள்* சிறு பகுதிகளாக* வெட்டியெடுத்து*மக்களுக்கு*, ஏழை எளியோருக்கு* கொடுத்துவிடு .*. உடனே இந்திரன்* என்ன செய்கிறார் என்றால் அதற்குரிய உபகரணங்கள் ஆகிய கோடாரி,கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றை எடுத்து கொண்டு, அருகில் உள்ள ஊர் மக்களை அழைத்து, தங்கமலையை வெட்டி எடுத்து, வாரி, வாரி கொடுக்கிறார். மக்களும்* மகிழ்ச்சியோடு வாங்கி செல்கிறார்கள். அப்படி கொடுத்தும் கூட, மலையில் பாதிகூட* தீரவில்லை* அப்படியே இருக்கிறது .இந்திரனை சற்று தூரத்தில்* உட்காரவைத்துவிட்டு, கர்ணனை*அழைக்கிறார் கடவுள்*. கர்ணனுக்கு அருகில் உள்ள** மலையை காட்டி, தங்கமாக்கிவிட்டு*இன்று காலையில் இருந்து ,மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இந்த மலையை முழுவதும் வெட்டி எடுத்து, ஊர் மக்களுக்கு , கிராமங்களுக்கு கொடுத்துவிடு என்கிறார் .* கர்ணன்*அந்த ஊரில்*போய் நிற்கிறார் . ஊரில்*இரண்டுபட்ட*போன மக்கள் இரு பிரிவுகளாக உள்ளார்கள். அவர்க ளுக்கு இரு தலைவர்கள் உள்ளார்கள். அந்த தலைவர்களை அழைத்து, நீங்கள் இந்த தங்க மலையை*வெட்டி உங்கள் ஊர் மக்கள் அனைவருக்கும்**சரிசமமாக, பாகுபாடு இல்லாமல். தாராளமாக, வேண்டிய அளவில் எடுத்து கொடுத்து விடுங்கள்*என்கிறார் .இன்று மாலைக்குள்*முழுவதையும் வெட்டி எடுத்துக்கொண்டு மலையே இல்லாத அளவிற்கு நிறைவு செய்துவிடுங்கள் என்கிறார் .* இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து, ஊர் மக்களை வரவழைத்து,*அந்த மலையை*வெட்டி எடுத்து ,அன்று மாலைக்குள்*மலையே இல்லாத அளவிற்கு** செய்துவிடுகிறார்கள் .* இந்திரன் சற்று தூரத்தில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கிறார் .* பிறகு கர்ணனை*கடவுள் போகச்சொல்லிவிட்டு, இந்திரனை அழைத்து*சொல்லும்போது, கர்ணன்* தன்னுடைய ஆழ்மனதில் இந்த தங்க மலையானது*தனக்குரியது என்று கொஞ்சம் கூட*நினைக்கவில்லை.. ஆனால் நீ இந்த தங்க மலையானது*எனக்குரியது என்று உன் ஆழ்மனதில் நீ நினைத்தாய்.* அதன் காரணமாக அதை வெட்டி கொடுப்பதில் நீ பேதம் பார்த்திருக்கிறாய் .* அதனால்தான் அந்த தங்க மலையை முழுவதும் வெட்டி எடுத்து தீர்க்கமுடியவில்லை .உன்னுடைய எண்ணத்திற்கு மாறான எண்ணம் கர்ணன் கொண்டிருந்ததால் ,அந்த மலையை*மதியத்திற்குள்ளாகவே,ஏழை எளியோர்கள் தாங்களாகவே, வேண்டிய அளவு வெட்டி எடுத்து கொள்ளும்படி செய்துள்ளான்**எனவே தன் ஆழ்மனதில் எந்த பொருளையும் தனக்குரியது என்று எண்ணாத*கர்ணன்*கொடை வள்ளலாக வாழ்கிறான். நீ இந்திரனாக வாழ்கிறாய். இதுதான் உண்மை என்கிறார் கடவுள் .**

அதை போல தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆழ்மனதில் எந்த பொருளையும், பணத்தையும்*தனக்குரியது அல்ல, ஏழை எளியோருக்கானது, மக்களுக்கானது என்று நினைத்து* வாழ்ந்த*மாபெரும் கொடை வள்ளல், வற்றாத ஜீவநதி, ஏழைகளின் இதயவேந்தன் , புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் ,கதையை,வாழ்க்கை வரலாறை*நாம் பேசி கொண்டே இருந்தால், நம் இதயமெல்லாம் சுத்திகரிக்கப்பட்டு* நம் இதயத்தில் இந்த பொருட்கள், பணம் எல்லாம் நமக்குரியது என்கிற* ஆசைகள் எல்லாம் குறைந்து, உழைத்தாக வேண்டும் ,ஊருக்கெல்லாம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உற்பத்தி ஆகும்போது நமக்கெல்லாம் அவருடைய* வாழ்க்கை முறையானது, அடிப்படையாக*அமையும் என்பதை இந்த நல்ல நேரத்திலே*உணர்ந்து**,நம்முடைய எண்ணங்களை எல்லாம் எளிமையாக்கி கொண்டு, யார்மீதும் பகைமை பாராட்டாமல் , பொறாமைப்படாமல் ,நமக்கு உள்ள நிலையிலே*என்ன செய்து* முன்னேற**முடியும் என்பதை நினைத்து பார்த்து ,*மன ஆறுதலோடு, அமைதிப்படுத்தி கொண்டு*வாழ்க்கை முறையை*அமைத்து கொண்டோமேயானால், எம்.ஜி.ஆர். அவர்களுடைய நடைமுறையில் கொஞ்சமாவது பின்பற்றுவோமேயானால்,நிச்சயமாக*நாம் மனமகிழ்ச்சியோடு, மனநிறைவோடு வாழ முடியும் என்பதை*கடந்த காலங்களில் பலபேர் நிரூபித்து இருக்கிறார்கள் . அந்த எண்ணங்களை எல்லாம் நாம் மனதிலே கொண்டு*வாழவேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே,வின் டிவியின் உரிமையாளர் திரு.தேவநாதன்*அவர்களுடைய அன்பால், ஒத்துழைப்பால் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி கூறி, உங்களுக்கும் நன்றியை*கூறி,இவற்றையெல்லாம் நாம் வாழ்விலே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி* பணிவோடு கேட்டு கொண்டு*,இந்த நிகழ்ச்சியில் யார் பெயராவது விடுபட்டு இருக்கும் என்றால், வேண்டுமென்றே நடந்திருக்காது சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் அல்லது மறதியின் காரணமாக*இருந்திருக்குமே தவிர, மற்றபடி அனைவரை பற்றியும்*சொல்லக்கூடிய வாய்ப்பு படிப்படியாக வரும்*என்பதை*தெரியப்படுத்தி, இந்த வாய்ப்புக்கு அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் .நன்றி, வணக்கம்.* இவ்வாறு திரு.லியாகத் அலிகான்*பேட்டி அளித்தார் .**

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------

-1. ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் - தாய் சொல்லை தட்டாதே*

2. பேரை சொல்லலாமா, கணவன் பேரை*-தாயை காத்த*தனயன்*

3.நான் செத்து பிழைச்சவன்டா* -எங்கள் தங்கம்*

4.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*

.*** **

fidowag
9th November 2020, 09:38 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள் பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மறுவெளியீடு* ஆரம்பத்தில் புதிய சாதனை தொடர்கிறது*
-------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை சண்முகா - 11/11/20 முதல் -தர்மம் தலை காக்கும் -தினசரி 3காட்சிகள்*

கோவை சண்முகா -14/11/20 முதல் -காவல்காரன் -தினசரி 3 காட்சிகள்*

10/11/20* முதல் தஞ்சை* ஜி.வி.** திருவானை காவல் -வெங்கடேஸ்வரா***சீர்காழி - ஓ.எஸ்.எம்.

* திருவாரூர்* தைலம்மை* அரங்குகளில்*

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல்* வெளியீடு .

மதுரை -சென்ட்ரல் சினிமா -14/11/20* (தீபாவளி முதல் ) மக்கள் தலைவர்*
எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

மற்ற நகரங்கள் பற்றிய தகவல்கள் தொடரும் ..............!!!!!!!

orodizli
10th November 2020, 07:10 AM
தேவாரம் கண்டிப்பான அதிகாரி தலைவர், எப்பவுமே 2 அடுக்கு பாதுகாப்பு போட்டுவருவார் அது ரொம்ப பேருக்கு தெரியாது முதல் அடுக்கு ஸ்டண்ட் குழுவினர்கள் 2வது அடுக்கு போலீஸ் பாதுகாப்பு இதை கவணித்த தேவாரம் அப்ப நாங்கள் எதற்கு என கேட்க அவர் புன்முறுவலுடன் நீங்கள் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அவர்கள் சம்பவமே வராமல் பார்த்துகொள்ளும் பிரதிபலன் எதிர்பார்க்காத என் உயிரை காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் .......நான் நியமித்தவர்கள் அல்ல அவர்கள் 4 கோடி தமிழ் நாட்டுமக்களின் பாதுகாவலனாக எனை நினைக்கிறார்கள் ஒன்று செய்யுங்கள் முடிந்தால் நீங்களே அவர்களை அனுப்பிவிடுங்கள் என சொல்ல மறுநாள் தேவாரம் அப்படியே சொல்ல அவர்கள் சிரித்துக்கொன்டே ஐயா நாங்கள் அவ்வாறு செய்தால் எங்கள் அனைவரையும் தமிழ் நாட்டு மக்கள் கண்டிப்பதுடன் தலைவரை வீட்டிற்கு ஒருவராக பட்டியல் போட்டு பாதுகாப்பார்கள் அவர்கள் அப்போது தினமும் இதை சொல்லமுடியுமா என கேட்க தேவாரம் அவர்கள் தலைவரின் திருபுகழை நினைத்து பெருமைபட்டவுடன் ....இவரை பின்னாளில் தலைவருக்கு பாதுகாவல் அதிகாரியாக நியமிக்க சொன்னது அன்னை இந்திரா காந்தி என தெரிந்த உடன் மனிதர் ஆடிப்போனதுடன் இந்திரா மறைவிற்கு பிறகும் தலைவர் மறைவுநாள் வரை பாதுகாவல் படை பிரிவு அதிகாரியாக நியமித்தது ராஜீவ்காந்தி அவர்கள் என்னே கரிசனம் தலைவர்மீது இந்தபாக்கியம் என் தங்க தலைவனுக்கு தவிர வேறு எவருக்கும் கிடைக்கவில்லை...Vairam...

orodizli
10th November 2020, 07:11 AM
#தலைமுறையாய் #தொடரும் #பக்தி

#சோ, தன் துக்ளக் பத்திரிகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தை மிக வியப்புடன் குறிப்பிட்டிருப்பார்...

அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார்.

அவனை அழைத்து ` இப்ப என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `#எம்ஜிஆரை #கும்பிட்டால் #நல்லா #படிப்பு #வரும். #அதனால #கும்பிட்டுட்டுப் #போறேன்' என்றதும் சோ அதிர்ந்திருக்கிறார்...

இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி பெருமிதம் கொள்வான்...

அவர்களும் `என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படி எம்ஜிஆர் மீதான அன்பு, பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது...

எம்ஜிஆரைத் தவிர வேறு ஒருவரும் உலகில் இப்படி இருந்ததில்லை..
இருக்கப்போவதுமில்லை...

orodizli
10th November 2020, 07:11 AM
#நடிப்பு_என்றால்_என்ன?

ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரிடம் ஒரு நிருபர் ‘நீங்கள் நூறு வயது வரை வாழுங்கள் ஆனால் அதுவரை இப்படித்தான் இளைஞராக நடிப்பீர்களா? உங்கள் வயதுக்கேற்ற கதாபத்திரங்களை ஏற்று நடித்தால் என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ஒரு கடை இலாபமாக நடக்கும்போது யாராவது வியாபாரத்தை நிறுத்துவார்களா என்றார். தன் படம் வசூலை அள்ளிக்கொட்டும்போது தான் ஏன் இளைஞனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர் கூற விரும்பிய கருத்து. மேலும் அவர் நடிப்பு என்றால் என்ன? இருபது வயதுக்காரர் 80 வயது முதியவராக நடிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அது சிறப்பான நடிப்பு என்றால் அதைப்போல நான் இருபது வயது இளைஞனை போல நடிப்பதும் சிறப்பான நடிப்பு தானே என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினார்.

நடிப்பில் வயது வித்தியாசம் இருப்பது குறித்து விளக்க அப்போது மேலும் ஓர் உதாரணத்தையும் எடுத்துரைத்தார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் தன் முதிர்ந்த வயதில் மனோகரா நாடகத்தில் நடிக்கும்போது தர்பாருக்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரை இழுத்து வரும் காட்சியில் இந்தப் பதினாறு வயது பாலகனை என்று தன்னைக் குறிப்பிட்டபடி ஒரு நீண்ட வசனம் பேசுவார். அப்போது அந்நாடகத்தைப் பார்த்த அனைவருக்கும் அவர் வயது 60 என்பது தெரியும். இருந்தும் அந்நாடகம் வெற்றி பெற்றது. ஏன் தெரியுமா? பார்ப்போர் நடிப்பைப் பார்த்து ரசிக்கிறார்களே தவிர நடிப்பவரின் வயதைக் கருதுவதில்லை. அதனால்தான் இன்னும் என் படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன என்றார்.

முதியவர் வேடம் ஏன்?

எம்.ஜி.ஆர்

தமிழ் பாரம்பர்யத்தில் வள்ளி திருமணம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. அதில் முருகனாக நடிப்பவர் வேலன் [இளைஞன்] விருத்தன் [முதியவர்] என்று இரு வேடம் போடுவார். யானையைக் கண்டு அஞ்சி ஓடும் வள்ளியை முதியவர் வேடத்தில் வந்து முருகன் காப்பாற்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி சத்தியம் வாங்குவார். எனவே, மாறு வேடங்களில் முதியவர் வேடம் என்பது தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்து ஏற்றுக்கொண்ட ஒரு வேடம் ஆகும். முதியவராக வரும்போது ரசிகர்களிடையே ஒரு ‘சிம்பதி’ கிடைக்கும். எனவே எம்.ஜி.ஆர் பாரம்பர்ய வெற்றி ஃபார்முலாவான முதியவர் வேடத்தை தன் பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் தன் படங்களில் ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்ததால் பிற வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே அவர் போலீஸாக வரும்போதும் அவர்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு தப்பிக்கும் போதும் கதாநாயகியை வேற்றுருவில் வந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் மாறு வேடங்களைத் தெரிவு செய்தார். முதியவர் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் வெவ்வேறு வகையான முதியவர் வேடங்கள். அவற்றை இப்போது விரிவாகக் காண்போம்.

வேடப் பொருத்தம்

முதியவர் வேடத்துக்குரிய நரைத்த தலை, தளர்ந்த உடல், சுருங்கிய கண்கள், ஒளியிழந்த முகம், நடுங்கும் குரல் என மேக்கப், காஸ்டியூம், நடிப்பு என அனைத்திலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தியிருப்பார். குலேபகாவலி, மலைக்கள்ளன், மகாதேவி, பாக்தாத் திருடன், படகோட்டி, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற சில படங்களில் முதியவராக மாறு வேடமிட்டு வந்து சில முக்கியக் காட்சிகளில் நடித்திருப்பார்.

குலேபகாவலியில் முதியவர் வேடத்தில் வந்து லக்பேஷ்வாக நடிக்கும் டி.ஆர் ராஜகுமாரியை பகடையில் ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்து அவரை வெல்வார். மலைக்கள்ளன் படத்தில் முதியவராக வந்து பி.பானுமதியைக் காப்பாற்றுவார் பின்னர் அவரை ரகசியமாகச் சந்திக்க இரவில் வந்த போது கூட முதியவரைப் போல நடுங்கும் குரலில் பேசி தன்னை வெளிப்படுத்துவார்

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சாக்ரட்டீஸ் போன்ற தோற்றத்தில் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவர் பாடிய மனுசன் பொறக்கும்போது பொறந்த புத்தி போகபோக மாறுது என்ற பாடலில் வரும் ‘கணக்குத் தெரியாம சிலது கம்பையும் கொம்பையும் ஆட்டுது. ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுது’ என்ற வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தவை ஆகும். இந்தப் பாட்டு வரிகள் சிலர் தம் செல்வாக்கு நிரந்தரமானது என நினைத்து ஆடும் ஆட்டங்களின் நிலையாமையை விளக்குவதால் அவருக்கு மிகவும் பிடித்தன. அவர் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தெரியாமல் போனதை நேரில் கண்டவர் என்பதால் நிலையாமை தத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். இந்தப்படம் திமுகவின் முதல் வெற்றி வாய்ப்புக்கு வழிகோலிய படமும் ஆகும்

எம்.ஜி.ஆர்

உதய சூரியன் என்ற பெயரில் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்த எம்.ஜி.ஆர் திமுகவின் முதல் தேர்தல் பிரவேசத்தை முன்னிட்டு சாக்ரட்டீஸ் முதியவர் வேடத்தில் வந்து பாட்டிலேயே பகுத்தறிவு பிரசாரமும் செய்தார். ‘உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் -- அதை ஒப்புக்கொள்ளும் வீரருக்கு முன்னால -- நாம் கத்தி என்ன கதறி என்ன -- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா’ என்று பாடுவார்.

பாக்தாத் திருடனில் வைஜயந்திமாலாவை ஏலத்தில் வாங்கும் அருவருப்பான முதியவராக வருவார். அவருக்குக் கூரிய ஒட்டு மூக்கும் பெரிய தொந்தியும் இருப்பதால ஆள் அடையாளமே தெரியாது. அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் வைஜெயந்திமாலாவின் காலில் சுருக்குப் போட்டு ‘’சூத்திரக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு – உன் பாச்சா ஒன்னும் பலிக்காது இங்கே செல்லு ‘’ என்று அவரை மீண்டும் குகைக்குள்ளே அனுப்பிவிடுவார். இந்த வேஷத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

படகோட்டியில் இரண்டு குப்பத்தையும் ஒற்றுமைப்படுத்த முதியவர் வேஷம் போட்டிருப்பார். சரோஜாதேவியைக் குழந்தே குழந்தே என்று கூப்பிடுவார். அதற்கு அவர் ‘’சதா குழந்தே குழந்தேன்னுட்டு விலைக்கு வாங்குன சனியன் மாதிரி’’ என்று திட்டுவார். ‘’நானொரு குழந்தை நீயொரு குழந்தை – ஒருவர் மடியிலே ஒருவரடி’’ என்ற பாட்டு இந்தத் தாத்தா வேடத்துடன் தொடங்கும் பிறகு அந்த வேடம் கலைந்து மாணிக்கமாக காட்சியளிப்பார்.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவுக்கு இங்கிலீஷ் மியூசிக் கற்றுத்தரும் வாத்தியாராக வருவார். இவரது தோற்றம் தலையில் தொப்பியும் செம்பட்டை தாடியும் வட்டக் கறுப்புக் கண்ணாடியும் பார்க்க சற்று அருவருப்பாக இருக்கும். ஆனால் ஆறுமுகம் இது யாரு முகம் – தாடியை வச்சா வேறு முகம் -- தாடியை எடுத்தா தங்க முகம்’’ என்ற பாட்டு தாத்தா வேடத்துடன் தொடங்கும்.

எம்.ஜி.ஆர்

தாய் சொல்லை தட்டாதே படத்தில் சந்தையில் சுற்றித் திரியும் ஒரு நாடோடி முதியவராக மாறு வேடம் போட்டு வழக்கம் போல குற்றவாளிகளைப் பிடிக்க வருவார். அதில் வேடம் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். உச்சியில் வழுக்கை நரைத்த முடி மீசை தாடி, கிழிந்து ஒட்டுப் போட்ட பழைய நைந்த கோட், தோளில் ஒரு பச்சைக்கிளி கை மடக்கில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, கக்கத்தில் இடுக்கிய ஒரு குடை, கையில் ஒரு தடியோடு தளர்ந்து தடுமாறும் நடை, சில சமயம் அந்தக் குரங்கு சங்கிலியைப் பிடித்த படியும் நடப்பார், கூடவே அந்தக் குரங்கு ஓடி வரும். சந்தையில் பிக்பாக்கெட் அடித்தல், பெண்களை, ஃபாலோ செய்தல், அவர்களோடு நடந்து வந்தபடி விசிலடித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாக்கை துருத்தி முறைத்துப் பார்த்து குற்றவாளிகளை அதட்டுவார். கூடவே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைப் படைத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே’’ என்று பாட்டும் பாடுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். காவல் நிலையத்துக்கு வந்து வேடத்தைக் கலைக்கும்போது எம்.ஜி.ஆர் என்பது தெரிய வரும். முதல் முறை இப்படம் பார்ப்போருக்கு எம்.ஜி.ஆர் என்று தெரியாது.

ஆசைமுகம் படம் தமிழில் அந்த முதல் ப்லாஸ்டிக் சர்ஜரி பற்றிய படம் ஆகும். எம்.ஜி.ஆர் வஜ்ரவேல் என்ற ராம்தாஸ் தன்னைப் போல முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து தன் வீட்டில் புகுந்துவிட்டதை அறிந்து தன் அப்பாவின் சித்தப்பாவைப் போல ஒரு கோட் சூட் போட்ட வெளிநாட்டு முதியவர் போல மாறு வேடத்துடன் வந்து தன் வீட்டிலேயே தங்குவார். அப்போது ராம்தாசை கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை எம்.ஜி.ஆர் பாடுவார் அதுதான் 'எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு' என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நாகேஷும் சரோஜாதேவியும் மாறு வேடமிட்ட எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவார்கள் ராம்தாசுக்கு இது கோபத்தை ஏற்படுத்தும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர் ஒரு காலை சாய்த்து சாய்த்து ஒரு கைத்தடியை ஆதரவாகக் கொண்டு நடப்பார். இதில் தலைமுடி கறுப்பும் வெளுப்புமாகக் காணப்படும் தாடி இருக்கும் கண்ணில் கூலிங்க் கிளாஸ் போட்டிருப்பார். ஒரு ஸ்டைலான கோட் சூட் போட்ட தாத்தாவாக வெளிநாட்டிலிருந்து வந்தவராகத் தோன்றுவார். இந்த மேக்கப் காஸ்டியூம் அனைத்தும் நவீன காலத்து தாத்தா போல இருக்கும்.


எம்.ஜி.ஆர் முதியவர் வேடத்தில் தோற்றம் உடை, குரல் மற்றும் வசனம் நடிப்பு முக பாவனை கை கால் அசைவு என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு அந்த வேடத்திலேயே பல படங்களில் சமூக சிந்தனையுள்ள பாட்டும் பாடியிருக்கிறார்....nsm...

orodizli
10th November 2020, 07:13 AM
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல #எம்_ஜி_ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. #எம்_ஜி_ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

உடம்பை பார்த்துக்கொள்

சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

திருமணம் செய்துகொள்

ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார்.

தெலுங்கு கத்துக்கலாம்

‘கொக்கு சைவ கொக்கு’ பாட்டில் ரஜினியுடனும் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ என்ற பாட்டில் விக்ரமுடனும் ஆடிய ஜோதிலட்சுமி ஆடல் பாடல் கலைகளில் கை தேர்ந்தவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் பாட்டி தமயந்தியும் அம்மா தனலட்சுமியும் நடிகையராய் இருந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு இவர்கள் நல்ல பரிச்சயம் ஆனவர்கள்.

ஒரு நாள் ஜோதிலட்சுமியின் தாயார் எம்.ஜி.ஆரிடம் பேசும்போது ‘இப்போது தமிழில் ஜோதிக்கு அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் அழைப்பு வருகிறது, ஆனால் இவள் நடிக்க மறுக்கிறாள்’ என்று குறைபட்டுக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் ஜோதிலட்சுமியிடம் ‘ஏன் உனக்குத் தெலுங்கில் நடிச்சா கசக்குதா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிலட்சுமி ‘இல்லண்ணே தெலுங்கு பாஷை தெரியாது. என்ன பேசுறாங்கன்னே எனக்குப் புரியாது’ என்றார். ‘அதெல்லாம் புரியும் புரியும். போய் நடி அப்படியே தெலுங்கு கத்துக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார். அதன்பிறகு சண்டை காட்சி நிறைந்த படங்களில் ஜோதிலட்சுமி ஒரு ரவுண்ட் வந்தார். ‘நடிகைக்கு ஃபீல்டில் இருந்தால்தான் மதிப்பு. ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டால் யாரும் அவரை தேடப் போவதில்லை’ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டதால் அவர் சாகும்வரை நடித்தார். விவேக்குடன் நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து பேர் வாங்கினார்.

நடிகையும் குடும்பப் பெண்தான்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மாதந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். நடிகர் சங்க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதில் கூறினர். ஒரு நிருபர் எம்.என்.ராஜத்திடம் ஏன் குடும்பப்பெண்கள் நடிக்க வருவதில்லை என்றார். இதற்கு பதிலளிக்க ராஜம் தடுமாறினார். உடனே எம்.ஜி.ஆர் எழுந்து ‘ஏன் வருவதில்லை. இப்போது ராஜம் வந்திருக்கிறாரே. இவரும் குடும்பப் பெண்தானே. இவருக்கும் குடும்பம் இருக்கிறது. கணவர் குழந்தைகள் இருக்கின்றனர்’ என்றார்.

நடிகை எப்படி இருக்க வேண்டும்?

நடிப்பு என்பது நடிகையருக்கு வாழ்வாதாரம் தரும் ஒரு தொழில் என்பதை எம்.ஜி.ஆர் அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவுபடுத்தினார். நாடக நடிகையர் நாடகம் முடிந்ததும் மறுநாள் ஊரைச் சுற்றிப் பார்க்க போகக் கூடாது. ஜவுளி எடுக்க வேண்டும் என்றால். வீட்டுக்கு கொண்டுவரச் சொல்லி சேலை துணிமணிகளை எடுக்க வேண்டும். அனாவசியமாக வெளியே போய் ரசிகர்களின் மத்தியில் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை ஜி.சகுந்தலாவின் பேட்டி வாயிலாக அறிகிறோம்.

வீண் அரட்டை கூடாது

சினிமாவிலும் தன் செட்டில் இருக்கும் நடிகையரும் பெண்ணின் பெருமை காப்பவராக இருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாகவும் இருந்தார். பெண்கள் யாரோடும் பேசி சிரித்து அரட்டை அடிப்பது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. நடிக்க வந்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நடிகையரிடம் யாரும் கதையளந்தால் அவருக்கு அடி விழும்; நடிகையருக்கும் திட்டு விழும்.

இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க

எம்.ஜி.ஆர்

நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.

குடும்ப உறவை மதித்த எம்.ஜி.ஆர்

நடிகையும் குடும்பப் பெண்தான் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்தார். ஈ.வி.சரோஜாவின் சொந்தத் தயாரிப்பான கொடுத்து வைத்தவளில் நடித்தபோது காதல் காட்சிகளை மட்டும் ப.நீலகண்டன் இயக்கட்டும். சரோஜாவின் கணவர் இயக்க வேண்டாம். அது சரோஜாவுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று ராமண்ணாவை தவிர்த்துவிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் திருமண உறவை மதித்தார்.

முழங்காலுக்கு மேல் ஏறிய பாவாடை

சர்வாதிகாரி படப்பிடிப்பில் அஞ்சலிதேவி ஒரு சுற்று சுற்றி கீழே விழும் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆர் ரீடேக் எடுக்கும்படி கூறினார். இயக்குனரும் அஞ்சலி தேவியும் ஏன் சரியாகத்தானே இருந்தது என்றனர். எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் அஞ்சலி சுற்றி வந்து கீழே விழுந்தபோது அவர் பாவாடை முட்டிக்கு மேலேறிவிட்டது என்றார். சட்டென்று அதிர்ந்து போனார் அஞ்சலிதேவி. தனது மானத்தை காப்பாற்றிய எம் ஜி ஆருக்கு நன்றி கூறினார்.

முற்காலத்தில் உயர் குடிப்பெண்கள் மட்டுமே முட்டியை மறைத்து உடை அணியும் அதிகாரம் பெற்றிருந்தனர். சினிமாவில் கதாநாயகிகளும் முழங்காலை மறைத்து தான் உடை அணிவர். எனவே முட்டி தெரிவது ஆபாசம் என்பதால் எம் ஜி ஆரை ஆபத்பாந்தவனாக அஞ்சலி கருதினார். உடனே ரீடேக் எடுக்கப்பட்டது. கதாநாயகியின் நடை உடையில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்பதை எம் ஜி ஆர் விரும்பினார். நடிகை என்றாலும் அவளும் பெண் தானே? அவருக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? என்று எம் ஜி ஆர் கருதியதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறார் அஞ்சலிதேவி.

அவர் குணச்சித்திர நடிகை

பணம் படைத்தவன் படத்திற்காக ‘’கண் போன போக்கிலே கால் போகலாமா’’ என்ற பாட்டுக்கான படப்பிடிப்பு நடந்த போது அந்தப் பாட்டு ஒரு கிளப் டான்ஸ் என்பதால் சௌகார் ஜானகிக்கு கால்கள் தெரியும்படியான குட்டை பாவாடை தரப்பட்டது. செட்டுக்கு வந்த எம் ஜி ஆர் சௌகார் ஜானகியின் உடையை பார்த்துவிட்டு காஸ்டியூமரை அழைத்தார். ‘’அவர் கவர்ச்சி நடிகை அல்ல. குணச்சித்திர நடிகை. அவருக்கு பெண் குழந்தைகள் உண்டு. இந்த டிரஸ் வேண்டாம் உடம்பை மூடியிருக்கும் உடை கொடுங்கள்’’ என்றார். பின்பு கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பாவாடையும் மேல் சட்டையும் அணிந்து சௌகார் ஜானகி நடித்தார். பாட்டு இன்றும் எம் ஜி ஆரின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

என் மகன் விவரம் தெரிந்தவன்

திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.

திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.

தம்பி மனைவியோடு டூயட்டா?

அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார். [எஸ் எஸ் ஆரோடு ஒரு மோதிரமோ மாலையோ கூட மாற்றிக்கொள்ளாமல் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த விஜயகுமாரி அவர் தன் சினிமா வாய்ப்புகளை கெடுப்பதைக் கண்டு மனம் வெதும்பி பிரிந்துவிட்டார். பின்பு பராசக்தி படத்தை தயாரித்த பெருமாள் முதலியாரை முறையாகத் திருமணம் செய்துகொண்டார்]

வெளியூர்களில் நடிகையர்களுக்கு பாதுகாப்பு

நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.

சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

காஷ்மீரில்

எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.

மைசூரில்

கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

எம்.ஜி.ஆர்

ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.

ஜப்பானில்

வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.

யாராக இருந்தாலும் கண்டித்தார்

நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார்.

நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

ஆயிரம் ரூபாய் பந்தயம்

ஒரு பட தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.ஆரை, தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது மூத்த தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் ஒரு தகவலை தெரிவித்தார். ‘இந்த நிறுவனம் அழகான சாகசமான பெண்களைக் காட்டி கதாநாயக நடிகர்களைக் கவிழ்த்துவிடும். உங்களையும் கவிழ்த்துவிட திட்டமிடுவார்கள்’ என்றார். அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், ‘என்னை யாரும் அப்படிக் கவிழ்க்க முடியாது. எவ்வளவு பந்தயம்’ என்றார். முக்தாவும் ‘ஆயிரம் ரூபாய்’ என்றார். இது நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு மேடையில் முக்தா இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘எம்.ஜி.ஆர் மிகுந்த கட்டுப்பாடு உடையவர் அவரை யாரும் கவிழ்க்க முடியாது’ என்றார். எம்.ஜி.ஆர் உடனே அவரை ஆழமாக பார்த்தார். முக்தா, ‘என்னண்ணே’ என்றார். ‘அந்த ஆயிரம் ரூபாய் எங்கே’ என்றார் எம்.ஜி.ஆர். கூட்டம் வெடித்துச் சிரித்தது.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை..........ns...

orodizli
10th November 2020, 07:14 AM
#மக்கள்_திலகத்தின்-ப்ளாக்பஸ்டர்

"ரிக்க்ஷாக்காரன்"
#மக்கள்_திலகம்

மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், ராம்தாஸ், சோ, ஜி.சகுந்தலா மற்றும் பலர்

படம் வெளியான ஆண்டு:1971
இயக்குநர் : எம்.கிருஷ்ணன்
தயாரிப்பு: இராம.வீரப்பன்
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்..

ஒரு ரிக்க்ஷாகாரரான செல்வம் (மக்கள் திலகம்) பெரிய மனிதர்கள் போலிருந்து பெண் கடத்தல், கொலை ஆகிய கொடுஞ்செயல்களை புரியும் இரு கொடுங்கோலர்களான, தர்மராஜ், கைலாசம் (மேஜர் சுந்தர்ராஜன், அசோகன்) ஆகியோர்களை சமூகத்தில் அம்பலப்படுத்துவது ஒரு பகுதியாகவும்...

தன் காதலியான உமா (மஞ்சுளா)வின் வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? பார்வதியை (பத்மினி) அவள் குடிசைக்கே சென்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன? அவளுடைய தகப்பனார் யார்? தர்மராஜ், உமாவின் தகப்பனாரா? .ஏன் பார்வதி மறைந்து ஒரு சேரியில் அனாதை போல் வாழ வேண்டிய அவசியமென்ன? தான் உமாவின் மானத்தையும், கற்பையும் காப்பாற்றும் பொருட்டு, போலீசில் எதிரிகளின் பொய்வழக்கில் சிக்கும்போதெல்லாம், தன்னை காப்பாற்றாமல், நீதிமன்றத்தில் மெளனம் சாதிக்கவேண்டிய அவசியமென்ன? பார்வதி, கார்மேகத்தின் (மனோகர்) விடுதலையை கவலையோடு எதிர் நோக்குகிறாளே? அவன் யார்?போன்ற இந்த புதிர்களுக்கும் விடை தேடுகிறார் மக்கள் திலகம். இந்த கதையில் வழக்கம் போல் இனிமையான பாடல்கள், விறு விறுப்பான ரிக்ஷா ரேஸ், சண்டை, நகைச்சுவை ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.

மக்கள் திலகதிற்கு மக்கள் மனதில் சிம்மாசனம் அமைத்து உட்கார வைத்த படங்களில் இது முக்கியமானது முதன்மையானது. இந்த படத்தின் மூலம் தான் அடித்தட்டு மக்களின் வாழ்வில்
அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியானார்.

மஞ்சுளாவுடனான காதல் காட்சிகளில், பத்மினியுடனான சென்டிமென்ட் காட்சிகளில், மேஜர் சுந்தர்ராஜனை அவர் வீட்டுக்கே சென்று தவறை உணர வைக்கின்ற காட்சிகளில் மக்கள் திலகம் வேற லெவல். அதிலும் அந்த ரிக் ஷா ரேசில் மக்கள் திலகம் வென்ற உடன் அவரை அனைத்து ரிக் ஷா காரர்களும் தலைக்குமேல் தூக்கி ஆரவாரம் செய்யும் போது அந்த உற்சாகம் பார்ப்பவரையும் தொற்றிக்கொள்கிறது.

மஞ்சுளா, பத்மினி, மேஜர், அசோகன், மனோகர், சோ ஆகியோர் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

மெல்லிசை மன்னருக்கு மக்கள் திலகத்தின் படங்கள் என்றாலே தனி உற்சாகம் பிறந்துவிடுமே : "கடலோரம் வாங்கிய காற்று...; அழகிய தமிழ்மகள் இவள்..; அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு ; பம்பை உடுக்கை கட்டி ; பொன்னழகுப் பெண்மை கொஞ்சும் .." என்று அத்தனை பாடல்களும் இன்றுவரை லைம்லைட்டில் உள்ளது.

இந்த படத்திற்காக மக்கள் திலகம், 1971ம் ஆண்டுக்கான இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான #பாரத் விருது பெற்றார். இந்த விருதை பெரும் முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகமே...இது தமிழகமெங்கும் மாநாடு போல் கொண்டாட பட்டது.

இந்த படம் சென்னை தேவி பாரடைசில் வெள்ளி விழாவும், தமிழகமெங்கும் பனிரெண்டுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், தனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததற்காகவும் சென்னை முழுவதுமுள்ள 6000 க்கும் மேற்பட்ட ரிக் ஷா தொழிலாளர்களுக்கு ரயின்கோட், ஸ்வெட்டர்கள் வழங்கி சிறப்பித்தார் மக்கள் திலகம்...

"ரிக்க்ஷாக்காரன்" - மக்கள் திலகத்தின் மைல் கல்.

Source :https://en.m.wikipedia.org/wiki/Rickshawkaran....... Sridhar Babu...

orodizli
10th November 2020, 07:14 AM
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..

‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..


நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..


எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..


ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.

1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..

அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.


இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..


படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..

கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.


இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..

நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..

நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.

திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.

நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்து.

புரட்சித் தலைவரின் திரை துறை அரசியல் வெற்றிக்கு காரணம் அவரின் தனிப்பட்ட அறிவு திரன் உழைப்பு மட்டுமே இதில் வேறு யாருக்கும் பங்கில்லை.
புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக.......sbb...

orodizli
10th November 2020, 07:15 AM
ஒருநாள் இரவு சற்றே பட படப்புடன் தலைவர் தோட்டம் வந்து அன்னை ஜானகி அவர்களை எல்லோரும் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.

சத்தம் இன்றி என் பின்னால் வா என்று அழைத்து கையில் பதிவில் படத்தில் இருக்கும் ஒரு டைமேர் வாட்ச் எடுத்து கொண்டு அழைக்க.

தலைவன் பின்னால் நடக்கிறார் அன்னை ஜானகி அவர்கள்..தன் வீட்டில் இருந்த நீச்சல் குளம் வந்த பின் ஜானு நான் இப்போது உள்ளே இறங்கும் போது எழும் அலைகள் ஓய்ந்த பின் நீ இந்த டைமேரை ஆன் செய்து நான் மேலே வந்த உடன் அதை ஆப் செய்யவேண்டும் என்று சொல்ல.

அவரும் திகைத்து அவர் சொன்னபடி செய்ய தலைவன் கீழே தண்ணீருக்குள் போய் அலைகள் ஓய்ந்து வினாடிகள் என்ன பட்டு மேலே அவர் வர தாமதம் ஆக ஜானு அம்மா பதற சிரித்து கொண்டே மேலே வந்த தலைவர் எத்தனை வினாடிகள் ஜானு.

என்று ஆர்வமுடன் கேட்க அலைகள் தவிர்த்து நீங்கள் உள்ளே இருந்தது 18 வினாடிகள் தாண்டி மொத்தம் அதிகம் என்று சொல்ல சரி வா என்று போய் அதற்கு பின் சாப்பிட்டு தூங்கி விட...

மறுநாள் அதிகாலை விழித்து தன் தொழில் சார்ந்த பட படப்பிடிப்புக்கு செல்ல அங்கே தயாரிப்பாளர் தாமஸ் அவர்கள் அன்று எடுக்க வேண்டிய காட்சிக்கு ஒரு டூப் நடிகர் உடன் தயார் ஆக இருக்க..

வேண்டாம் இதில் என்ன ரிஸ்க்....அப்போ அவருக்கும் அதே ரிஸ்க் தானே நானே பண்ணுகிறேன் என்று சொல்ல....அந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி பொறுத்த பட்ட அடி பாகத்தில் இருந்து அந்த காட்சி படம் ஆக்க பட்டது.

தலைவர் தண்ணீருக்கு அடியில் யோகா நிலையில் தியானம் செய்வது போன்ற ஒரு காட்சி....தலைவன் படத்தில் வருமே அதே காட்சி....நீரலைகள் ஓய்ந்து தலைவர் உள்ளே இறங்கி காட்சி எடுக்க பட்ட பின் பல அடிகள் கீழே இருந்த தலைவர் மேலே வர.

என்ன எப்படி என்று ஆர்வமுடன் கேட்க சூப்பர் சார் என்னால் நம்ப முடியவில்லை காட்சியில் 35 வினாடிகள் மொத்தம் அதை தாண்டி நீங்கள் அந்த யோகா அமைப்பில் உள்ளே அமர்ந்து இருந்தீர்கள் அற்புதம் என்று பாராட்ட...

அவர் தான் தலைவன் அன்னை சத்தியாவின் புதல்வர்....

சித்த வைத்தியத்தின் மகிமை சொல்லும் படம் அது...1999 இல் தாமஸ் அவர்கள் மதுரையில் இந்த நிகழ்வை பற்றி சொல்லி தலைவர் நினைவில் மூழ்குகிறார்.

1984 இல் தாமஸ் அவர்களை ஒரு நிகழ்ச்சியின் போது சந்தித்த தலைவர் அவரை அழைத்து எனக்கு பல சண்டை முறைகள் உடல் பயிற்சி முறைகள் தெரிந்து இருந்தாலும் யோகா மூச்சு பயிற்சி முறை தலைவன் படம் மூலம் அறிமுகம் ஆக அதை நான் தொடர்ந்து செய்து வந்தேன்.

மிக்க நன்றி உங்களுக்கு அதுவே அமெரிக்க மருத்துவ மனையில் நான் சிகிச்சை பெற்ற போது மிகவும் உதவியது என்று சொல்லி கண் கலங்குகிறார் நம் இதயதெய்வம் எம்ஜிஆர்....

என்றும் அவர் புகழ் காப்போம்....நன்றி.

தலைவனின் ரசிகர்களின் ஒருவன் குரலாக உங்களில் ஒருவன்...

நன்றி தொடரும்............

orodizli
10th November 2020, 07:16 AM
சாதனைகள் படைத்த "உலகம் சுற்றும் வாலிபன்"
எம்.ஜி .ஆர் . நடித்து 1973 _ ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்" , பல சாதனைகளைப் படைத்தது . திரை உலகில் எம். ஜி . ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும் , சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்" .
*
ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி (" எக்ஸ்போ 70 ") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி , கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம். ஜி . ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி , எம் .ஜி . ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர் . வசனத்தை சொர்ணம் எழுதினார் .
*
பாடல்களை கண்ணதாசன் , வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத , எம் . எஸ் . விஸ்வநாதன் இசை அமைத்தார் . இதில் எம். ஜி .ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா , லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம். என். நம்பியார் , அசோகன், மனோகர் , நாகேஷ் , வி .கோபால கிருஷ்ணன் , ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர் . லதாவுக்கு இதுதான் முதல் படம் . விஞ்ஞானி முருகனாகவும் , அவன் தம்பி ராஜ× வாகவும் எம்.ஜி .ஆர் . நடித்தார் .
*
விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான் . அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க , பைரவன் (அசோகன் ) எண்ணுகிறான் .
*
இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல் , பல்வேறு நாடுகளில் , பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான் . இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான் . அதனால் முருகன் நினைவு இழந்து , மயக்க நிலையை அடைகிறான் .
*
இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜ× வருகிறான் . எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான் . ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன .
அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன . மற்றும் டோக்கியோ டவர் , மாபெரும் கடை வீதியான "கின்சா " , பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது .
*
அத்துடன் மலேசியா, சிங்கப்பூர் , தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது . ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா " என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது. சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன .
*
கண்ணதாசன் எழுதிய " அவள் ஒரு நவரச நாடகம்" , "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம் . .. உலகம் " ஆகிய பாடல்களும் , வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்" , "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ ", "பன்சாயி .. ." ஆகிய பாடல்களும் , புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும் , பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன . " நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை , சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார் . இதை எழுதியவர் புலவர் வேதா . 11 -05 -1973 _ல் இப்படம் திரையிடப்பட்டது .
*
சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9 -ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில் , ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன . சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் " ஹவுஸ் புல் " ஆயின .
*
இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு " என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து " இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம் " என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை , " உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது . 182 நாட்களில் , ரூ .13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.
*
சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும் , அகஸ்தியாவில் 175 நாட்களும் , உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 20 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100 _வது நாளைக் கண்டன.
*
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் , 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது . அந்தக் காலக்கட்டத்தில் , மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்" தான்
��������������������������
இந்த படத்தின் முக்கிய அம்சமே ஜப்பானின்
ஒசாகா நகரில் நடந்த expo 70 தான்.
படத்திலே கதை என்று எதுவும் கிடையாது,ஆனாலும்
இதை படமாக்க எம்ஜிஆர் குறைவான பண கையிருப்புடன்
தான் சென்றாராம். இதயம் பேசுகிறது மணியன் செய்த
ஏற்பாட்டின்படி எம்ஜிஆர் ஜப்பான் வந்தார். ஜப்பான்
வரும்போது அவர் கூடசிலரே வந்தார்கள்.
புறப்படும் முன்னர்
எம்ஜிஆர் மெட்ராஸில் பட்ட கஸ்டங்கள் அதிகம்.
கடைசியாக எம்ஜி ஆர் ஜப்பானில் வந்து தங்கிவேலையை தோடங்கினார்.
அவரது கார் , கார் பார்கிங்கில் தடை செய்யபட்டதும் ஒரு செய்தி.
தனது தோளிலேயே காமிராவை தூக்கிகொண்டு அந்த expo பூராவும்
சலிக்காது ஓய்வே இல்லாது நடந்தே அத்தனை இடத்தையும் தானே
படமாக்கினார் திரு எம்ஜி ஆர். என்ற மாமனிதன் அப்போது அவரது
வயது 53. தேவையான மற்றும் ரசிக்ககூடிய இடங்களையும் கண்டு
கொண்டு அடுத்த நாளே உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை
படமாக்கினார் எம்ஜி ஆர்.இந்த பாட்டு மட்டும் 200 shot ஆயின.
அப்படத்தின் எடிட்டர் திகைப்போடுதான்
இந்த பாடலை எடிட் செய்தார். ஓரு தமிழ் பாட்டுக்கு இந்தனை
shotவைத்தது இதுதான் முதல்.
இந்த பாட்டிலேயே முக்கியமான இடங்களை படமாக்கியது ஒரு சாதனையாகும்
expo 70 யை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த படமே ஆரம்பிக்கப்பட்டதாம்….
ஓடிக்கொண்டே இருக்கும் எம் ஜி ஆரோடு ஒடமுடியாத சந்திரகலா……
எழுபதுகளில் இப்படி ஒரு உலகம் இருந்ததை நம்பத்தானே வேண்டும்.........gdr...

orodizli
10th November 2020, 08:32 AM
காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை பார்த்தால் பக்தி தன்னால் ஊற்றெடுக்கும். பய பக்தியுடன் அவரை தரிசித்து விட்டு வந்தால் மனம் நிம்மதியடையும். நம் துன்பத்துக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி நமக்கு தன்னம்பிக்கை உண்டாகும்.

அப்பேர்ப்பட்ட சங்கராச்சாரியார் ஆரம்பத்தில் பாதரட்சை எனப்படும் மரக்கட்டையில் செய்த மர காலணியை அணிந்திருந்தார். அதன்பின் காலணி அணிவதை விட்டு விட்டு வெற்று காலாகத்தான் நடப்பார். அத்தகைய மகானை மனதில் வைத்து "திருவருட்செல்வரி"ல் அப்பர் வேடத்தில் தோன்றிய சிவாஜி அவரை இமிடேட் செய்யும் போது அவர் அணிந்திருக்கும் காலணியை பார்த்திருக்க வேண்டாமா?

அம்பாள், எந்தக்காலத்திலடா பேசினாள்? அறிவுகெட்டவனே!
என்பது காசுக்காக கணேசன் பேசிய வசனம் "பராசக்தி"யில். அதையே சற்று மாற்றி அப்பர் எந்தக்காலத்தில் பேட்டா செருப்பு மாட்டி நடந்தார் கணேசா? என்று கேட்க வேண்டும் போல இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் காரணமாக அவர் நிற்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றி வைத்திருப்பதையும் பார்க்கலாம்.

இதுதான் நமது கணேசன் அவர்கள் பந்தா இல்லாமல் இயல்பாக நடிக்கும் முறை. அவரது கைபுள்ளைங்க அவரை பற்றி மிகவும் பெருமையாக கப்ஸா விடுவதில் கைதேர்ந்தவர்கள். சிவாஜி நடிக்கும் போது பத்து நாட்களுக்குமேல் அந்த கதாபாத்திரம் போலவே வாழ்ந்து விட்டுதான் நடிப்பார் என்பார்கள்.

இப்படித்தான் போலியாக 555 சிகரெட்டை புகைத்துக் கொண்டு காலில் செருப்பு மற்றும் இத்யாதிகளுடன் அவர் வாழ்ந்து விட்டுதான் நடிக்கப் போவார் போல.
ஆனால் புரட்சி நடிகரை பாருங்கள்.
கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ செய்யும் தொழிலில் மிகவும் கவனமாக இருப்பார். காலில் செருப்பு அணியாமல் முருகன் வேடமேற்று நடிக்கும் போது ஆகா!
என்ன ஒரு கருணை பார்வை! அருள் வீசும் முகப் பொலிவு. யாருக்கு வரும் இந்த ஆன்மீக தெளிவு.

இதை உணர்ந்து கொண்ட வாரியார் சுவாமிகள் தலைவருக்கு 'பொன்மனச்செம்மல்' என்ற பட்டத்தை கொடுத்து மனமார வாழ்த்தியதை நினைவு கூறலாம். ஆன்மீகவாதியான கணேசனை தேடிப் போகாத வாரியார் தலைவரை தேடி போக காரணம், முன்னவரிடம் டொனேஷன் என்று போனால் அவர் திடீரென்று நாஸ்திகனாக மாறி வாரியாரை பகைத்து விடுவார் என்ற பயத்தின் காரணமாக இருக்கலாம்.

"புதிய பறவை"யில் ஒரு கண்ணில் சோகமும் ஒரு கண்ணில் அதிர்ச்சி யும் காட்டி நடித்தாராம் கணேசன் என்று புதிய கப்ஸா ஒன்றை கிளப்பி விட்டார்கள் கைபுள்ளைங்க. அது வரைந்த படம். படத்தின் வலது பக்க ஓரத்தில் வரைந்தவரின் பெயரை குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கலாம். இந்த மோடி மஸ்தான் பில்ட்அப் கொடுப்பதை போல கணேசனை பற்றி அவர்களே பில்ட்அப் கொடுத்து சிலாகித்து பேசுவதில் வல்லவர்கள் இந்த கைபிள்ளைங்க. ஏய்த்து பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க!

"பாக்ய சக்கரத்தா"ல் வாழ்விழந்து, பார்வை இழந்து, வறுமையில் வாடி மறைந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் குடும்பத்துக்கு1981 காந்தி ஜெயந்தி அன்று தலைவர் திருச்சி கலையரங்கத்தில் வைத்து தனது மந்திரி சகாக்களுடன் விழா ஏற்பாடு செய்து ரூ 1 லட்சம் நிதி உதவியளித்து அவரின் குடும்பத்தை வறுமையின் கோரப்பிடியில் இருந்த காப்பாற்றியதுடன் அவர் நினைவை போற்றும் வகையில் அந்த அரங்குக்கு 'தியாகராஜ மன்றம்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

'வாழ்ந்தவர் கோடி(கணேசன் உட்பட) மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர், மானம் காப்போர்(எம்ஜிஆர்)
சரித்திரம் தனிலே நிற்கின்றார்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் புரட்சித் தலைவர்.

நன்றி: திரு சைலேஷ் பாசு..............ksr.........

orodizli
10th November 2020, 09:49 PM
#கனடா நியூ மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் + தமிழக லொள்ளு சபா மனோகர், போண்டா மணி இணைந்து வழங்கும் இடை விடாத சிரிப்புடன் கூடிய காமெடித் திருவிழா #



இந்த இரண்டு குரூப்புகளும் சேர்ந்து அவர்களின் பதிவுகளை படிக்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போல் இருக்கிறது ( என்ன செய்ய நாமளும் வாழ்த்து சொல்லித் தொலைப்போம் வேற வழி? )

2020 மார்ச்சில் ஆரம்பித்த லாக் டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு இப்போது நவம்பர் மாதம்தான் இன்று முதல் 50 சதவிகிதம் ஆட்கள் நிரப்பிக் கொள்ளலாம் என்னும் நிபந்தனையுடன் திரை அரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது,

உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல் தலைவர் படங்களை திரையிட ஆரம்பித்து விட்டார்கள் திரை அரங்க நிர்வாகங்கள்

தஞ்சை, கரூர், திருவானைக் காவல், சீர்காழி, திருவாரூர் இங்குள்ள அரங்குகளில் தலைவரின் அகிலமே சொல்லும் "ஆயிரத்தில் ஒருவன் " இன்று முதல் திரையிடப் பட்டுள்ளது,


இது தவிர மதுரை சென்ட்ரல் அரங்கில் தீபாவளித் திருநாள் முதல் தலைவரின் " தர்மம் தலை காக்கும் " திரையிட உள்ளதாக தகவல்,

மேலும் கோவை ஷண்முகா அரங்கில் நாளை முதல் " தர்மம் தலை காக்கும் " திரைக் காவியமும், தீபாவளித் திருநாள் முதல் தமிழக மக்களின் " காவல் காரனு"ம் திரையிடப் பட உள்ளது

மற்ற நகரங்களில் தலைவரின் திரை விபரங்கள் அடுத்தடுத்த
பதிவுகளில் பதிவிடப்படும்

இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம்
இந்த கொரோனா பேரிடர் மட்டும் வராதிருந்தால் இதற்கு முன் மறு வெளியீடு படங்களில் தலைவரின் டிஜிட்டல் செய்து வெளியிடப்பட்ட படங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய record brake செய்திருக்கும்


இப்படி தலைவரின் விண்முட்டும் சாதனைகளைப் பார்த்து நாமெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்க மேலே நான் குறிப்பிட்ட இரண்டு குரூப்புகளும் பழைய கீறல் விழுந்த ரெகார்டைப் போல திரும்பத் திரும்ப " செத்த மண்" படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் 50 நாளைக் கண்டது என்றும், 9 அரங்கில் 100 நாள் கண்ட மாபெரும் வெற்றிப்படம் என்றும் அம்புலிமாமா கதையில் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீண்டும் மீண்டும் வெட்டி தோளில் சுமப்பது மாதிரி பதிவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,

நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இப்படி பதிவு போட்டு யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறீர்கள்? நமக்குப் புரியவில்லை

இதுல ஒரு சிறப்பான சம்பவம் என்னவென்றால் இவர்கள் 50 நாட்கள் ஓடியதாக குறிப்பிடும் சித்ராலயா சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரமே ஒரு பச்சைப் புளுகல் காரணம் அதில் நிறைய அரங்குகள் 3 வாரங்கள் நான்கு வாரங்கள் கழித்து திரையிடப் பட்ட அரங்குகள் ஆனால் 50 நாள் விளம்பரம் வெளியிடப்பட்ட போது நைசாக அதையும் சேர்த்து வெளியிட்டது சித்ராலயா நிறுவனம்

இந்த மோசடியை அப்போதே தலைவர் ஆதரவுப் பத்திரிக்கைகள் கண்டம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் ( ஆனால் போண்டா மணிக்கும், லொள்ளு சபா மனோகருக்கும், டுபாக்கூர் தங்கவேலுவுக்கு மட்டும் நினைவிருக்காது காரணம் ஒரு வேளை ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவது மாதிரி செலக்டிவ் அம்னீஷியாவாகக் கூட இருக்கலாம், )


அப்புறம் 9 அரங்கில் 100 நாளாம் சரி இருந்துட்டுப் போகட்டும்

இந்த அரங்கில் தூத்துக்குடியும் ஒன்று
அங்கு ஏற்கனவே அந்த படம் எப்படி ஓட்டப்பட்டது என்பதை சங்கர் சார் அக்கு வேறு ஆணி வேறு லெவலில் கிழித்து காயப்போட்டிருந்தார்

அதாவது 50 நாளில் 91 ஆயிரம் வசூலும் 100 நாளில் 105, 000 வசூலும் வந்திருக்கிறது
அதாவது 50 நாளைக்குப் பிறகு ஒரு ஷோவுக்கு 100 ரூபாய் கூட வசூல் வரவில்லை (சனி, ஞாயிறு ஷோ கூட உண்டுல்ல )

இதுதான் 100 நாள் ஓடிய லட்சணம் , இதுவும் சாதனை பட்டியல் அப்படித்தானே?

அதே தூத்துக்குடி சிவாஜி ரசிகர்கள் அடித்த மலரில் இந்த படத்தை நஷ்டம் என்று ஸ்ரீதர் சொன்னதாக கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள், இதிலிருந்து ஸ்ரீதர் நஷ்டம் என்று சொன்னதும் ஊர்ஜிதமாகி விட்டது,

ஒரு அழகான சூத்திரம் ஒன்று கடைபிடிப்பார்கள்

அதாவது எங்கேயாவது நாள் கூடினால் அங்கே வசூலை தெரிவிக்க மாட்டார்கள், அதே மாதிரி வசூல் கூடினால் நாளை விட்டு விடுவது

உதாரணம் சென்னை நகர வசூலை ஒப்பிடுவது

உதாரணம் உரிமைக்குரல் படத்தை ஒப்பிட்டு உள்ளீர்கள் ரொம்ப சரிதான்

அன்றைய ஆளும்கட்சியின் மிரட்டல்களின் காரணமாக மிகவும் சிறிய அரங்குகளான ஒடியன், நூர்ஜஹான், உமா முதலான அரங்குகளில் உரிமைக் குரல் திரையிடப் பட்டு இவ்வளவு வசூலை எடுத்தது,


நான் ரொம்பவும் அன்பாகத்தான் கேட்கிறேன் இப்படி ஏதாவது ஒரு கணேசன் படம் இந்த மாதிரியான அரங்குகளில் அந்த நேரத்தில் திரையிடப் பட்டு இதில் பாதியாவது
வசூல் செய்யுமா? என்ற
கேள்வியை போண்டா மணி குழுவினரிடம் முன் வைக்கிறேன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்,

இவர்கள் இப்படி மல்லுக் கட்டுவது எப்படி இருக்கிறது என்றால்
1968ஆம் ஆண்டு அமெரிக்கா வியட்நாம் மீது நடத்திய "பியன்தியன்பு " குன்றுத் தாக்குதல் மற்றும் உலக சரித்திரத்தில் ரத்தத்தால் எழுதப்பட்ட
"டெட் தாக்குதல் " பற்றியும் படித்திருப்பீர்கள்

அந்த தாக்குதலில் 25 லட்சம் அப்பாவி வியட்நாம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்
அதே நேரம் பெரிய ஆயுத பலம் இல்லாத வியட்நாம் ராணுவம் மிகப்பெரிய மாவீரன் ஜெனரல் " வோ குயன் கியாப் தலைமையில் சர்வ வல்லமை படைத்த அமெரிக்க ராணுவத்தை எதிர்த்து "சயான் " நகர அமெரிக்க தூதரகம் உட்பட 57 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி 58000 அமெரிக்க ஆக்கிரமிப்பு
ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள்,

இறுதியில் பட்டது போதும் என்று அமெரிக்கா தன் படைகளை வாபஸ் பெற்று முகம் முழுவதும்
கரி பூசிக் கொண்டது

இந்த நிகழ்வு அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய அவமானம்
என்று உலக சரித்திரம் பறை சாற்றுகிறது,

ஆனால் இன்று வரை அமெரிக்கா அதை தோல்வி என்று ஒப்புக்கொள்ளவே இல்லை

அதே குணம்தான் இந்த போண்டா மணி குரூப்புக்கும் இறுதி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்

அப்போது ஜெனரல் வோ குயன் கியாப் அவர்கள் சொன்னார்கள்

" வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்கள் அல்ல

" மக்கள் " அவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் "

அது போல தலைவரின் வெற்றி மக்களால் அவருக்கு சூட்டப்பட்ட கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட மகுடம்

அதைப் பார்த்து இப்போதும் இப்படிப்பட்ட
அரை வேக்காடுகள் வறட்டு இருமலுடன் ஊளையிடுவது என்பது ஏற்கக் கூடிய ஒன்றா?

வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் ஜாக்கிரதை

அடுத்தது " அண்ணன் ஒரு கோயில் " படம் சென்னை நகர வசூல் 19 லட்சத்து 95 ஆயிரமாம்

ஏண்டா போண்டா சாந்தி தியேட்டர் மற்றும் குத்தகை அரங்கங்களின் DAILY COLLECTION REPORT உங்கள் கையில்

அப்படியிருக்க இப்படி ஒரு வசூல் கணக்கை வெளியிட உனக்கு வெட்கம் இல்லை?

உனக்கு துணிவிருந்தால் தமிழகம் முழுக்க வசூலை வெளியிடு பார்ப்போம் ( இப்படி கேட்டால் சங்கர் சார் சொல்லுவது மாதிரி பட்டறை வசூலாவது வெளி வரும் என்று நம்புவோம் )

கடைசியா ஒன்று
எங்க அய்யன் எப்புடி நடிச்சிருக்கார் தெரியுமா என்று கதை வசனத்துடன் செத்த மண் பட விமர்சனம் வேற

இந்த புண்ணாக்கை விட்டால் எழுதுவதற்கு ஒரு மண்ணும் கிடையாது காஞ்சனாவை அப்படி இழுத்தார், இப்படி முத்தம் கொடுத்தார்

இதெல்லாம் ஒரு ரசிப்பு,
கணேசன் மூக்கைக் கூட விட்டு வைக்க வில்லை

போங்கடா நீங்களும் உங்க ரசனையும் !



தலைவரின் பக்தன் ...


ஜே.ஜேம்ஸ் வாட்.....(J.JamesWatt)...

orodizli
10th November 2020, 09:55 PM
நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.
ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.

எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.
��
பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால் "யானை படுத்தாலும் குதிரை மட்டம்" எனும் சொல் வழக்குபடி மற்ற, மாற்று நடிகர்கள் படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது என்பதனையும் கூறவும் வேணுமோ?!...sbb...

orodizli
10th November 2020, 10:02 PM
மனம் எம் ஜி ஆருக்கு பொன்...

நடிகர் நாகேஷ் சிலகாலம் எம் ஜி ஆர் ரிடம் இருந்து விலகி எதிர் அணிகளிடம் நெருக்கமானவராக வாழ்ந்தார் தன் பணம் முழுவதும் சிலவு செய்து தியேட்டர் நாகேஷ் என்ற அரங்கை கட்டுகிறார் முடிவில் பள்ளியின் அருகில் தியேட்டர் இருப்பதால் திறக்க முடியாமல் தவிக்கிறார் எங்கெல்லாமோ எவரை எல்லாம் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை கடைசியில் எல்லாவல்ல எம் ஜி ஆர் ஒருவரால் தான் தன்னை காப்பாற்ற முடியும் என்று எம் ஜி ஆர் தோட்டம் வருகிறார் அங்குள்ள மெய்காவலர்கள் இவரை எம் ஜி ஆர் காண அனுமதிக்காமல் விரட்டுகிறார் பல நாள் வந்தார் ஒருநாள் இந்த செய்தி எம் ஜி ஆரை அடைய எம் ஜிஆர் மெய்காவலர்கள் கண்டித்து எவர் என்றாலும் கஷ்டபடும் போது உதவணும் என்று கூறி இனி வந்தால் என்னிடம் அனுப்புங்கள் என கூற நாகேஷ் அடுத்த நாள் வர எம் ஜி ஆரை கண்டு என்னுடைய அத்தனை பணமும் முடங்கி விட்டது நீங்கள் உதவினால் மட்டுமே நான் வாழமுடியும் என தன் விவரங்களை கூறுகிறார் நாகேஷ்
எம் ஜி ஆர் அவரிடம் சரி நான் பார்த்து கொள்கிறேன் என கூறி அனுப்பினார் பின் அந்தபள்ளி நிர்வாகத்திடம் அதன் நுழைவாயிலை பின் புறமாக மாற்ற வேண்டுகிறார் எம் ஜி ஆர் நிர்வாகமும் சம்மதித்து மாற்றுகிறது இப்போது சட்ட சிக்கல் மாறி தியேட்டர் திறக்கிறார் நாகேஷ்
உதவி என்று எவர்வந்தாலும் உதவும் தெய்வ குணம் கோண்டவராக வாழ்ந்தவர் எம் ஜி ஆர்
நன்றி யுடியூப்...

வாழ்க எம் ஜி ஆர் புகழ்............

orodizli
11th November 2020, 07:43 AM
நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.
ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.

எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.
��
பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையே பெற்றது.......sbb...

orodizli
11th November 2020, 02:05 PM
கைபிள்ளைங்க "சிவந்த மண்" சென்னையில் "உரிமைக்குரல்" வசூலை முந்தி விட்டதாம். அப்பப்பா!
என்ன சந்தோஷம். இது நாள் வரையில் சாந்தி தியேட்டரை காரணம் காட்டியே ஏமாற்றி வந்தவர்கள் இப்போது "சிவந்த மண்ணு"க்கு வந்திருக்கிறார்கள்.
சாந்தி தியேட்டர் ஹவுஸ்புல் வசூல் மற்ற திரையரங்கை விட அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இருப்பினும் சாந்தியை வைத்தே வசூலில் சாதனை என்பார்கள். அதே போல் "சிவந்தமண்" திரையிட்ட குளோப், அகஸ்தியா, மேகலா, நூர்ஜகான் திரையரங்குகள் "உரிமைக்குரல்" திரையிட்ட அரங்குகளை விட மிகப்பெரியது. அதனால் வசூல் சற்று அதிகம் வந்ததில் வியப்பில்லை. அப்படி கம்பேர் செய்பவர்கள் தமிழகம் முழுவதும் வசூலை கம்பேர் செய்ய வேண்டும். மற்ற இடங்களிலெல்லாம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அது ஏன்? புரியவில்லையா கைபிள்ளைகளுக்கு?. "சிவந்தமண்தா"ன் ஸ்ரீதரையே சீரழித்த மண்ணாயிற்றே.

அதேபோல் "உரிமைக்குரல்" வசூலை தருகிறேன் வேறு எங்காவது ஒரு திரையரங்கில் "சிவந்தமண்" முந்தியிருந்தால் பதிவிடவும். தியேட்டர் வசூல் அதிகமிருந்தால் முதல் வாரத்தில் தெரிந்து விடும். இது கூட தெரியாதா கைபிள்ளைகளுக்கு. இப்போது "சிவந்தமண்" ஒரு வார வசூலை வெளியிட்டிருக்கிறார்கள். இதைவிட வசூல் அதிகம் வந்தால் "சிவந்தமண்" படுதோல்விப்படம் என்பதை ஒத்துக்கொள்வீர்களா?

நான் தலைவரின் 69க்குப்பின் வந்த புதிய படங்களை பற்றி சொல்லவில்லை. 1965 ல் சபையரில். வெளிவந்த
"கன்னித்தாய்" முதல் வார வசூலை எடுத்துக் கொள்வோம். "சிவந்தமண்ணி"ன் 4 திரையரங்குகளில் ஏதாவது ஒரு அரங்கிலாவது "கன்னித்தாய்" வசூலை முந்த முடிந்ததா?
அப்படியானால் "கன்னித்தாய்" காலடியில் "சிவந்த மண்" என்று சொல்லலாமா? சொல்லுங்க கைபிள்ளைகளே.

தமிழ்நாடு முழுவதும் சிவாஜி படங்களில் "தங்கப்பதக்கம்தா"ன் அதிகம் வசூலான படம் என்று கைபுள்ளைங்க சொல்கிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் மட்டும் "தங்கப்பதக்க"த்தை காட்டிலும் "சிவந்தமண்தா"ன் அதிகம் வசூல் பெற்ற படம் என்றால் சிரிப்பு வருகிறதா?. அந்த அளவுக்கு "சிவந்த மண்"ணை செத்துப் போன பிணத்தை வெறித்தனமா தூக்கிக் கொண்டு 101 நாட்கள் ஓடியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" பெற்ற மொத்த வசூலே ரு105000 தான். ஆனால் "சிவந்தமண்" வசூலோ ரூ 107000 . இது என்ன கொடுமை sp சவுத்ரி. சினிமாவில்தான் யோக்கியமான போலீஸ் அதிகாரி.
ஆனால் வெளியே சகல மோசடிகளையும் கைபிள்ளைகள் அரங்கேற்றும் போது பார்த்துக் கொண்டு அதற்கு உடந்தையாகவும் இருக்கும் போலி சவுத்ரி.

சவுத்ரி மாமா!
ஊருக்கு ஒரு பிரச்னைனா போலீஸ் கிட்ட சொல்வாங்க! போலீஸூக்கு ஒரு பிரச்னைனா sp சவுத்ரி கிட்ட சொல்லுவாங்க. சவுத்ரியோட கைபிள்ளைகளே மோசடி செய்தால் யாருகிட்ட போய் முறையிடுவாங்க.
சொல்லுங்க சவுத்ரி மாமா! சொல்லுங்க!

அது மட்டுமா? "சிவந்த மண்" 101 நாட்கள் ஓட்டினார்களாம்.
ஆனால் "உரிமைக்குரலோ" 68 நாட்கள் தான் ஓடியதாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் "சிவந்தமண்ணை" என்னா ஓட்டு ஓட்டினார்கள் என்று. "சிவந்த மண்" 50 நாட்கள் வசூல் ரூ 91000. "உரிமைக்குரல்" 50 நாட்கள் வசூல் ரு 145000/ இதில் எது அதிகம். நம்ம செந்தில் சொன்ன ஜோக் ஞாபகத்துக்கு வருதா? நீங்க 10 ம் கிளாஸ் பெயில் நான் 8ம் கிளாஸ் பாஸ். பாஸ் பெரிசா?பெயில் பெரிசா? சொல்லுங்கண்ணே.

"சிவந்த மண்" பிற்பகுதி 51 நாட்கள் வசூல் வெறும் ரூ 15000 தான். ஆனால் "உரிமைக்குரல்" பிற்பகுதி 18 நாட்களில் பெற்ற வசூல் ரூ23000.
ஆனாலும் படத்தை 100 நாட்கள் ஓட்டவில்லை. "சிவந்த மண்" பிற்பகுதி 51 நாட்களில்
1 நாள் சராசரி வசூல் சுமார் ரூ300 தான். ஆனால் "உரிமைக்குரல்" பிற்பகுதி 18 நாளில் 1 நாள் சராசரி வசூல் சுமார் ரூ1300 .
சொல்லுங்க, கைபிள்ளைகளே 300 பெரிசா?1300 பெரிசா? இதில் வெற்றி வெளியீடு என்ற கேள்விக்குறி வேறு.

மேலும் கோவை ராயலில் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட "சிவந்த மண்" 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ255000 .இன்னொரு பதிவில் 259000 என்று கொடுத்திருக்கிறீர்கள். பொய் சொன்னாலும் ஒரே மாதிரி சொல்லுங்கள் கைபிள்ளைகளே.
பல கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற புரட்சி தலைவரின் "உரிமைக்குரல்" கோவை கீதாலயாவில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 426000/ போதுமா ஆதாரம்?.

மதுரையை எடுத்துக் கொண்டால் "சிவந்தமண்" சென்ட்ரலில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 227530.50. ஆனால் "உரிமைக்குரல்" சினிப்பிரியாவில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 350728.40. மதுரையில் ஓடிமுடிய "சிவந்தமண்" மொத்தமே ரு337000 தான். "உரிமைக்குரலோ" ஓடி முடிய ரு701000/ . என்ன கண்கட்டுதா? இல்லை தலை சுற்றுதா? ஸ்ரீதர் ஏன் "சிவந்தமண்ணா"ல் சீரழிந்தார் என்று தெரிந்திருக்குமே. பிணந்தூக்கி பிழைத்தவன் வேறு தொழிலுக்கு போக மாட்டான் என்பது திண்ணம்.

ஊழலின் ஊற்றுக்கண்ணான உங்களை நாடாள விட்டால் தீயசக்திக்கு சற்றும் குறைந்தவனில்லை என்பதை நிரூபித்திருப்பீர்கள் என்பதால் அறிவார்ந்த தமிழக மக்கள் உங்களை முளையிலே கிள்ளி எறிந்து தமிழகத்தை காப்பாற்றினார்கள் என்றே சொல்லலாம்.........ksr.........

fidowag
11th November 2020, 07:08 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாடோடி மன்னன்,மன்னாதி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, உங்க வீட்டு பிள்ளை யாக இன்றைக்கும் நமது இல்லங்களில் எல்லாம் தெய்வமாக திகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறை*தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் .* அவர் காலத்தை வென்று காவியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்றைக்கும் சாட்சியாக எத்தனை* ஆயிரம் பேர், லட்சம் பேர், கோடி க்கணக்கானவர்கள்* வின் டிவி*தொலைபேசியை தேடி தேடி* பொழிச்சலூர் மகாலட்சுமி , ஆண்டிபட்டி வசந்தி, தேனீ பிரேமலதா, திருச்சி*அப்துல் மஜீத், மும்பை*தாராவி*ராமச்சந்திரன் ,போன்றவர்கள் தொடர்பில்*இருந்து பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் .*சென்னையில் உள்ள* லோகநாதன் என்பவர் தினசரி நமக்கு*தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள்* ஒளிபரப்பாகும் விவரங்கள், தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்* எந்தெந்த நகரங்களில் வெளியாகின்றன ,மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றையும் நமக்கு*ஆர்வமாக*பகிர்ந்து கொண்டு தகவல்கள் தெரிவித்து கொண்டிருக்கிறார் .* தங்களுடைய வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக*மாற்றி கொள்வதற்காக, எம்.ஜி.ஆர். அவர்களின்*செய்திகள், தகவல்களை*மக்களோடு*மக்களாக*மக்களுக்கு எடுத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள் .அப்படி ஒரு மகோன்னதமான வாழ்க்கையை*அவர் வாழ்ந்து காட்டினார்**என்பதற்காகத்தான் இந்த சகாப்தம் நிகழ்ச்சி இவ்வளவு பெரிய சரித்திரம் படைத்திருக்கிறது* *இந்த தொடர் 150 நாட்களை கடந்து இப்படி ஒரு பெரிய வரவேற்பைமக்கள் மத்தியில்* பெற்றிருக்கிறது என்றால் அந்த மாமனிதரின் ஆன்மா நமக்கு அளித்த ஆசிர்வாதம்தான் .**


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும்*வினோதமான பின்னணி*உடைய திரைக்கதை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்*.* அதனால்தான் அவர் அந்த காலத்திலேயே அரேபிய இரவுகள்*கதைகளான அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன் போன்ற திரைப்படங்களில் மிகுந்த ஆர்வத்துடன் நடித்தார் .* அவர் அந்த காலத்தில் நிறைய ஆங்கில படங்களை*பார்த்ததுண்டு*.* பென்* ஹர்*போன்ற பிரம்மாண்ட*படங்களை பார்த்து*விட்டு, அவரது சொந்த படங்களில் அந்த பிரம்மாண்டங்களை புகுத்தியதுண்டு .**அடிமைப்பெண் படத்தில்*வரும் ஆயிரம் நிலவே வா பாடலை* நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் மிகவும் ரசித்து, தான் விரும்பிய*பாடலாக*அடிக்கடி* கேட்டதாக* ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் .* அது மட்டுமல்ல . அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த படத்தை*மிக சிறப்பாக**எடுத்துள்ளார் . எந்த ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் இப்படி ஒரு ரிஸ்க்*எடுக்கும்*துணிச்சல், திறமை போன்றவை*வருமா என்பது*சந்தேகம்*என்று கூறி இருக்கிறார். அடிமைப்பெண் படம் மும்பையில்*பிலிம்*பேர் பரிசு பெற்ற படம் .* 1969ம் ஆண்டின்*ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கண்ட*படம் .* தமிழக அரசால்*சிறந்த படம் என*தேர்வான படம்*இந்த படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின்*வித்தியாசமான தோற்றங்கள், உடைகள்,*சிங்கத்துடன் போடும் சண்டை,* எழில்மிகு*ஒகேனக்கல் அருவி காட்சிகள்,*ஜெய்ப்பூர் அரண்மனை காட்சிகள், ஜோத்பூர் கோட்டை கள், ராஜஸ்தானில் தார் பாலைவன காட்சிகள் , ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம், திரை இசை திலகம் கே.வி. மகாதேவனின்* இனிமையான பாடல்கள், பின்னணி இசை , ஜெயலலிதாராணியாக*அறிமுகம் செய்யும் காட்சி, அரங்க அமைப்புகள், திரைக்கதை அமைப்பு, கம்பீரமான சண்டை*காட்சிகள் , தொழில்நுட்பம் எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு ஒரு விஷன்*,அதாவது சொந்த படத்தை, பிரமாண்டமாக,*இதைவிட* வேறு**யாரும்*தயாரித்து வெளியிட முடியாத வகையில்*இருக்க நினைப்பது*என்று சொல்லிக்கொண்டே போகலாம் .**

திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி ;* *ஒருமுறை அமைச்சர் காளிமுத்து அவர்கள் அனுப்பிய ஒரு கோப்பிலே*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு எழுதுகிறார் .அக்ரோ*வாரியத்தின் தலைவராக*உள்ள திரு. லியாகத் அலிகான்*குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர் ,,மலேசியா ,தாய்லாந்து*போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள இன்னும் பிற நாடுகளில்* எந்த நாட்டிற்கு அவர் செல்ல*விரும்புகிறாரோ, அந்த நாட்டிற்கு சென்று* அந்த நாட்டின்* முக்கிய*வேளாண்*பணிகளை அறிந்து வர நான் அனுமதிக்கறேன் என்று அந்த கோப்பிலே*எழுதிய போது, அரசு அதிகாரிகள் ,*ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எல்லாம் மிரண்டு போய் விட்டார்கள் என்று சொல்லலாம் .* உங்கள் மீது இந்த அளவிற்கு*அன்பு வைத்து, உலகத்தின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் லியாகத் அலிகான் சென்று வர நான் அனுமதிக்கிறேன் என்று கோப்பில்*எழுதி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.அவர்கள் .* வேறு ஏதாவது நாட்டிற்கு*செல்லுகிறீர்களா என்று கேட்ட நேரத்தில் இல்லை, குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு மட்டும் சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டு வந்த நினைவுகள் எல்லாம் என் நெஞ்சை*துளைத்துக் கொண்டிருக்கின்றன . அடுத்த முறையாக* எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்ட அமேரிக்கா*, ரஷ்யா , இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு நான் சென்றுவர, ஓராண்டு இடைவெளியில்*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு*நல்லதொரு வாய்ப்பை*வழங்கி அதே போன்று இன்னொரு குழுவின் மூலம் சென்று வரும் வாய்ப்பை பெற்றேன் .* இப்படிப்பட்ட சாமான்ய*மனிதன் லியாகத்*அலிகான், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் இயக்கத்திற்கு உழைத்தேன்* ஆனால் உரிய அளவிற்கு*உழைத்தேனா என்றால் எனக்கு திருப்தி இல்லை . தலைவருக்காக இன்னும் உழைத்திருக்கலாம் ,உழைத்திருக்க வேண்டும் என்கிற மன உளைச்சல் என்றுமே எனக்கு இருக்கிறது. காரணம் என்னை போன்று பன்மடங்கு உழைத்தவர்கள் எங்களை போன்று**பதவிகள் எதுவம்*பெறாமல்*சாதாரண தொண்டர்களாகவே இருந்து மறைந்தும்*போய்விட்டார்கள்* பலபேர் . அப்படி இருக்கின்ற சிலர்* மிகவும் கடினமான, கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றபோது அவர்களை எல்லாம்* பார்த்து* நான்**குறிப்பிட்டு* கொள்வதெல்லாம் என்னிடத்திலே வின் டிவி*மூலம் தொலைக்காட்சியில் நான் பேசும்போது*கணிசமான நபர்களின் தொலைபேசி அழைப்புகள் எனக்கு*வந்துவிடும் . நான் அதை உரிய நேரத்தில் பேசுவதை பார்த்தால் , பல பேர் மிக அருமையாக*பேசினீர்கள் என்று* பாராட்டியதோடு, தலைவர் எம்.ஜி.ஆருடன் உள்ள தங்களின் தொடர்புகளை பற்றி பேசும்போது எங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கிடைத்தது*போலுள்ளது என்கிறபோது, நான் மனதார பூரிப்பு அடைவதோடு* என் கண்கள் எல்லாம் குளமாகி விடுகின்றன .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்மீது*இவ்வளவு, அன்பு ,பாசம் வைத்திருக்கும் நீங்கள் என்ன தொழில், வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் சிரமத்தில் உள்ளது போல் இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் நிலையறிந்து வேதனைப்பட்டு*சொல்வேன், ஜெயலலிதா*அவர்களுக்கு பிறகு, எடப்பாடி*பழனிசாமி*அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அ.தி.மு.க. தலைமை நிலையத்திற்கு அடிக்கொரு தடவை வருகிறார்கள் .* நீங்கள் உங்கள் குறைகளை,கஷ்டங்களை விவரித்து*அவர்களுக்கு கிடைக்கும் வகையில்*தலைமை நிலையத்திற்கு எழுதுங்கள் .நிச்சயம் உங்களுக்கு ஆதரவான*பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் .*இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.போயும் போயும்*மனிதனுக்கு இந்த - தாய் சொல்லை தட்டாதே*

2.ஒன்றே சொல்வான் , நன்றே செய்வான்*-சிரித்து வாழ வேண்டும்*

3.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*

4.திரு.லியாகத் அலிகான் பேட்டி .

fidowag
11th November 2020, 07:18 PM
துக்ளக்*வார இதழ் - 11/11/20
-------------------------------------------
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு*
கேள்வி*:* எம்.ஜி.ஆர். படத்தை*அ. தி.மு.க. வினரை தவிர மற்றவர்கள் பயன்படுத்த கூடாது*என்று அ. தி.மு.க. வினர்*கூறுவது பற்றி ?


பதில் : கம்யூனிஸ்ட்களின் நாயகனான* காரல்*மார்க்சின்*படம் இப்போது பா.ம.க.வுக்கும் , வி.சி.க.வுக்கும் சொந்தம்*.* தி. மு.க. கூட சமயத்தில் அதற்கு*சொந்தம் கொண்டாடுகிறது .* டாக்டர் அம்பேத்கார் துவக்கிய குடியரசு கட்சியின்* அவரது பிம்பம், இன்று திருமாவளவன்* கட்சியின்*பிராண்ட்*அம்பாசிடர்*காரல்*மார்க்ஸ், அம்பேத்கார்* படங்கள் திராவிட*, ஜாதி கட்சிகளின் மேடைகளை*அலங்கரிக்கின்றன .

* எம்.ஜி.ஆர். படத்திற்கு*வருவோம் . கருணாநிதி காலத்திலேயே எம்.ஜி.ஆர். படத்தை*போட்டது*தி.மு.க.* *அது தி.மு.க.விற்கு தலைகுனிவே*தவிர, எம்.ஜி.ஆருக்கும் , அ . தி.மு.க.விற்கும் பெருமையே .* டீ கடை துவங்கி, மளிகை கடைவரையில்*எங்கும்,எதிலும்*பிள்ளையார் படம் போல மிக பிரபலமான எம்.ஜி.ஆர்.. படத்தை*யார் வேண்டுமானாலும் போடலாம் .* எம்.ஜி.ஆர். படத்தை போட்டு பொன்மன செம்மலின் அம்சமாக*மோடியை*கண்டோமே, என்று பா.ஜ.க.பாடுவது ,அவர்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ , எம்.ஜி.ஆருக்கும்*அ .தி.மு.க.விற்கும்*பெருமையே.**

orodizli
12th November 2020, 07:45 PM
மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. 10-11-20 முதல் தஞ்சாவூர் ஜி.வி, திருவானக்காவல் வெங்கடேசுவரா, கரூர் அமுதா, சீர்காழி ஓ எச் எம் தெயேட்டர், திருவாரூர் தைலம்மை ஆகிய தியேட்டர்களில் புரட்சித் தலைவர் டிஜிட்டலில் மினுங்கும் ஆயிரத்தில் ஒருவர். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு ஆயிரத்தில் ஒருவர் இன்னும் அள்ளிக் கொடுக்கின்றார்.வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது....மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. திருச்சி பேலசில்.. 10-11-2020 முதல் உரிமைக்குரல்.. வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது.......மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. மதுரை செண்ட்ரல் 14 -11-2020 தீபாவளி முதல் தர்மம் தலைகாக்கும்..வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது........மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. திருச்சி முருகன் தியேட்டர் 14 -11-2020 தீபாவாளி முதல் ரிக்*ஷாக்காரன்..வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது......rrn.........

orodizli
12th November 2020, 07:46 PM
#இனிய_நினைவுகளில்...

#"உலகம்_சுற்றும்_வாலிபன்"...

மக்கள் திலகம் (இரு வேடங்களில்),அசோகன், நம்பியார்(சிறப்பு தோற்றம்), மனோகர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, மீட்டாருங்ராட்....

இயக்கம்: மக்கள் திலகம்
வெளியான வருடம்:1973
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.


இடியின் முழுச்சக்தியையும் ஒரு மாத்திரை வடிவத்தில் அடக்கி சாதனை புரிகிறார் விஞ்ஞானி முருகன் (மக்கள் திலகம்) அதை ஹாங்காக் விஞ்ஞானிகள் மாநாட்டில் சோதித்தும் காட்டுகிறார். அதனை உலக மார்க்கெட்டில் விட்டால் கோடிக்கணககில் பணம் பார்க்கலாம் என்றும், தானே அந்த விஞ்ஞான பார்முலாவை பல மில்லியன் டாலர் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக பைரவன் (அசோகன்) கூறுகிறார்.

விஞ்ஞானிமுருகன், இந்த அணு ஆயுதத்தை போன்ற அழிவு சக்தியை வெளிவிட்டால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்து, அழிவுக்கு காரணமாகும் என்று கூறி அந்த ஃபார்முலாவை அங்கேயே எரித்து அழித்து விடுகிறார்.

பின்னர் தன் காதலி விமலா (மஞ்சுளா)வுடன் சுற்றுப்பயணம் செல்லும்போது, உண்மையில் தான் அந்த ஃபார்முலாவை அழிக்கவில்லை என்றும், அதனை நான்கு பகுதிகளாக பிரித்து உலகின் நான்கு மூலையில் உள்ள நல்லவர்களிடம் ஒப்படைத்திருப்பதாகவும், நேரம் வரும் போது பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.

இதனை ஒட்டுக்கேட்ட பைரவன் ஒரு புதுவித துப்பாக்கியால் முருகனை சுட்டு மனச்சிதைவு ஏற்படுத்தி அவரையும், விமலாவையும் ஃபார்முலா இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள பணயக்கைதி போல் வைத்திருக்கிறார்.

இப்போது அண்ணன் முருகனை தேடி வருகிறார் சி.ஐடி.ராஜீ (மக்கள் திலகம்) அவர் லில்லி(லதா) ரத்னா(சந்திரகலா) மார்க்கண்டேயன் (நாகேஷ்) உதவியுடன் இந்த ஃபார்முலாவையும் கண்டுபிடித்து அண்ணன் முருகனையும் மீட்கிறார்.

மக்கள் திலகத்தின் வழக்கமான படங்களிலிீருந்து இது மிகவும் மாறுபட்டது...தாய்ப்பாசம், ஏழைகளின் பங்காளன், தொழிலாளர்களின் போராளி என்ற வழக்கமான தனது களத்திலிருந்து மாறி..ஒரு விஞ்ஞான காரணியை கையிலெடுத்து, ஒரு Treasure hunt போல தெரிக்க விட்டிருக்கிறார் மக்கள் திலகம்.

அந்த கப் அண்ட் சாசர் பாட்டு; எக்ஸ் போ 70யில் லட்சக்கணக்கானவர் முன்னிலையில்ஆடல் பாடல் ; அவள் ஒரு நவரச நாடகம் பாடலில் வித்தியாசமாக தண்ணீருக்கடியில் படமாக்கியிருக்கும் விதம்,; மீட்டா ருங்ராட் என்ற தாய்லாந்து பெண்ணை "பச்சைக்கிளி " பாடலுக்கு வாயசைத்து நடனமாட விட்டிருக்கும் விதம்; குறுகலான நீரோடையில் போட் சேசிங்; டால்பின் ஷோ; இறுதியில் சுழன்றடிக்கும் காமிராவுடன் பொறிபறக்கும் அந்த ஸ்கேட்டிங் ஸ்டன்ட் ; என்ற இந்த விஷயமெல்லாம் 70 களிலே, தொழில் நுட்ப வசதி அறவே இல்லாத காலத்தில் மக்கள் திலகத்துக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்பது அதிசயத்திலும் அதிசயம்.

இந்த படம் வெளியான போது ஏற்பட்ட அரசியல் சூழலை சமாளித்து போஸ்டரே ஒட்டாமல் படத்தை வெளியிட்டது; படத்தை ரஷ் போட்டு பார்த்தபோது பல இடங்களில் நிழல் படிந்து இருந்ததை கண்டு தளராமல் சத்யா ஸ்டூடியோவில் அச்சு அசலாக செட்டுபோட்டு, நிஜமா, நிழலா என தெரியாமல் படம் எடுத்த சாமர்த்தியம்; இவையெல்லாம் மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கைக்கும், பாதகத்தை சாதகமாக்க தன்னால் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணங்கள்.

மற்ற அத்தனை பேரும், நம்பியார் தவிர மக்கள் திலகத்தின் விஸ்வரூபத்தின் முன் காணாமல் போகிறார்கள்.

" பாட்சா" படத்தில் ரஜினியை பார்த்து , போலீஸ்காரரான அவர் தம்பி சொல்வார் " நாடி நரம்பெல்லாம் ரத்தவெறி உள்ளவனால்தான் இந்த அடி அடிக்கமுடியும்" என்பார். இந்த வரிகள் இந்த படத்தை பொருத்த வரை மக்கள் திலகத்துக்கு அப்படியே பொருந்தும்...வெறும் நடிப்போடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல், தாயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கதை-திரைக்கதை என அத்தனை துறைகளிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமானால் சினிமாவை அவர் நாடி நரம்பிலிருந்து எவ்வளவு நேசித்திருக்கவேண்டும்..???

இந்த படத்தின் பாடல்களை பொருத்த வரை இசை மெல்லிசை மன்னராக இருந்தாலும்...அத்தனை பாடல் ட்யூன்களையும் சிறப்பாக வரும் வரை விடாமல் தெரிவு செய்தவர் மக்கள் திலகம். மெல்லிசை மன்னர் இதை பற்றி பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்த படம் உலகெங்கும் வசூல் மழை பொழிந்தது...ப்ளாக் பஸ்டர், சூப்பர் ஹிட் எல்லாம் இந்த படத்தை பொருத்தவரை மிக சாதாரண வார்த்தைகள். இந்த படம் நிகழ்த்திய வசூல் சாதனை 90 கள் வரை முறியடிக்கபடாமலே இருந்தது.

உ.சு.வா...என்றென்றும் வாலிபன்.....Sr.Bu...

orodizli
12th November 2020, 07:48 PM
குழுவினர் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்...

படத்தில் பதிவில் தன் குடும்பத்துடன் இருப்பவர் மறைந்த மலேசிய நாட்டின் புகழ் பெற்ற நடிகர் பி.ரெம்லி அவர்கள்....

என்ன அதற்கு என்று கேட்டால் அங்கேயே பதிவு ஆரம்பம்...அந்த நாட்டின் புகழ் பெற்ற நடிகர் ஆக விளங்கிய ரெம்லி அவர்கள் நம் இதயதெய்வத்தின் தீவிர ரசிகர்..

நம் தலைவரின் நடிப்பில் வெளிவந்த "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்தை அப்பிடியே உள்வாங்கி அந்த நாட்டு மொழியில் அப்போதே நடித்து அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது...

ஒரு சாதாரண தலைவர் ரசிகர் போல அங்கே வெளியாகும் தலைவர் படங்களை முதல் காட்சி பார்த்து விட்டு தலைவரிடம் படத்தை பற்றி பகிர்ந்து கொள்பவர் இந்த ரெம்லி.....

தலைவர் பாரத் பட்டம் வென்ற படம் "ரிக்க்ஷாக்காரன்" படத்தை அப்பிடியே எடுத்து அந்த படம் வரலாறு காணாத வெற்றியை அந்த நாட்டில் பெற்றது.

ஒரு மாபெரும் நடிகருக்கு ஒரு மாபெரும் நடிகர் ரசிகர் ஆக இருந்த செய்தி புதுமையானதே...

பி.ரெம்லி அவர்கள் மறைந்த உடன் அந்த நாட்டு அரசு அவருக்கு மிக பெரிய நினைவு இல்லம் அமைத்தது..

திரு ரெம்லி அவர்களை தன் உ.சு.வா...படத்தில் நடிக்க தலைவர் ஒப்பந்தம் செய்த செய்தி அதிசயம் ஆனது...அவரும் மகிழ்வுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தலைவர் மலேசியா சென்று காட்சிகள் எடுக்க வேண்டிய இடங்கள் கூட முடிவாகி அப்போது இங்கே ஆட்சியில் இருந்த ஒரு சக்தி அந்த நாட்டு அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மிரட்ட அந்த தலைவரின் எண்ணம் கை விட பட்டது.

அந்த நடிகர் ரெம்லி அவர்கள் நலன் கருதி தலைவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.
படத்தின் காட்சி அமைப்பு சம்பந்தம் ஆக அந்த நாட்டில் தலைவர் அவருடன் மற்றும் உ.சு.வா...நடிகைகள் உடன் எடுத்து கொண்ட அபூர்வ படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது...

மறைந்த ரெம்லி அவர்கள் நினைவில்லத்தில் தலைவருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வரவேற்பு அறையில் இன்றும் ஜொலிக்கிறது.

நினைவில்லம் வாசலில் ரெம்லி அவர்கள் பயன்படுத்திய காரும் அவர் தலைவர் படத்தை தழுவி எடுத்த படத்தில் இடம் பெற்ற ரிஃசாவும்
அங்கே இன்னும் இடம் பெற்று இருப்பது அதிசியமே....

புரட்சிநடிகர்..... தலைவர் புகழ் என்பது நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் போல அல்ல... அவை காவியம் ஆனவை...காலத்தை வென்றவை.

வாழ்க தலைவர் புகழ்.

நன்றி...தொடரும்..
உங்களில் குரல் ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி.

சந்திப்போம் சாதிப்போம் அடுத்த பதிவில் நன்றி நன்றி.......

orodizli
12th November 2020, 07:49 PM
#மக்கள்_திலகத்தின்_வெற்றிப்படங்கள்...

#உழைக்கும்_கரங்கள்...!!!

கோவை செழியன் தயாரிப்பு- கே.சங்கரின் இயக்கம்-நாஞ்சில்.கி.மனோகரனின் வசனம்-மெல்லிசை மன்னரின் இசை ஆகியவற்றோடு 1976 ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.

மக்கள் திலகம் தனி இயக்கம் கண்டு, 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ஏழைப்பங்களனாய் வருகிறார்.அசத்துகிறார்.

ஊரை அடித்து ஊழல் செய்யும் சேர்மேன் நாகலிங்கத்தையும் (தங்கவேலு) அவரது கலப்பட தொழிலையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.

நாகலிங்கத்தின் விதவை தங்கை கெளரி ((குமாரி பத்மினி)) ஒரு போலிச்சாமியார் கபாலியிடம் ((தேங்காய் சீனிவாசன்))தன்னை இழக்கும் போது, அவனுக்கே அவளை மணமுடித்து தன் தாய் போல மதிக்கும் அன்னம்மாளின் ((பண்டரிபாய்))குடும்ப மானத்தை காக்கிறார்

தன்னை காதலிக்கும் கிராமத்து முத்தம்மா ((லதா)) விற்கு வாழ்வளிக்கிறார்.

பக்தி வேண்டியதுதான்..ஆனால் பக்தி என்ற போர்வையில் போலிச்சாமியார்களுக்கு ((தேங்காய்-நாகேஷ்)) இடமளிக்கவே கூடாது என சொல்கிறார்.

தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணை பங்கஜம்.. ((பவானி)) இசையரசியாய் வாழ வைக்கிறார்.

விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை படம் முழவதும் கிராமத்து விவசாயியாய் வாழ்ந்து காட்டுகிறார்.

இந்த படத்தில் அன்றும்-இன்றும்-என்றும் பேசப்பட்டது கோவில் திருவிழாவில் நடக்கும் அந்த மான் கொம்பு சண்டை, மக்கள் திலகத்தின் வேகத்தில், காமிராவே திணறுகிறது. அதே போல வைக்கோல் போரில் ஜஸ்டினுடன் போடும் சண்டையும ரசிகர்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டது.அப்போது மக்கள் திலகத்திற்கு 59 வயது, இந்த வயதிலும் மான் கொம்பு, சிலம்பாட்டம் என்று பட்டையை கிளப்பினார் மக்கள் திலகம்.

"நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே" இந்த பாடலாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் இன்று வரை ஒலிக்கிறது. இதை தவிர "வாரேன்...வழி காத்திருப்பேன்", "கந்தனுக்கு மாலையிட்டாள்" பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.

அருமையான கதை, நடிப்பு,பாடல்கள், வசனங்களை கொண்ட இப்படம் நூறு நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது..!!!

Source :https://en.m.wikipedia.org/wiki/Uzhaikkum_Karangal Sr.babu

fidowag
12th November 2020, 11:35 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ...............
------------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் -* தினசரி இரவு 8 மண் காட்சி மட்டும்*
10/11/20,11/11/20, 12/11/20* நாட்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*
நீதிக்கு தலை வணங்கு .


கரிக்கலாம்பாக்கம்* திவ்யாவில்* இன்று முதல் (12/11/20) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
*இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன்*
தினசரி 3 காட்சிகள் .

fidowag
12th November 2020, 11:36 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*07/11/20 முதல் 12/11/20 வரை ஒளிபரப்பான*பட்டியல்*
------------------------------------------------------------------------------------------------------------------------
07/11/20* முரசு டிவி - மதியம் 12 மணி/இரவு 7 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 12.30 மணி - மாட்டுக்கார வேலன்*

* * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*

08/11/20 -மெகா 24- பிற்பகல் 2.30 மணி - குடும்ப தலைவன்*

* * * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 10 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*

09/11/20 - சன் லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*

* * * * * * * * வசந்த் டிவி -பிற்பகல் 1.30மணி - சங்கே முழங்கு*

* * * * * * * *பாலிமர் டிவி- இரவு 11 மணி - நவரத்தினம்*

10/11/20* வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - தாயை காத்த தனயன்*

* * * * * * * சன் லைப் - மாலை 4 மணி - எங்கள் தங்கம்*

* * * * * * *புது யுகம் -இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*

* * * * * * *ராஜ்*டிஜிட்டல் - இரவு 7 மணி - பறக்கும் பாவை*
** * * * * * மீனாட்சி*டிவி*-இரவு* 10.30 மணி - வேட்டைக்காரன்*

11/11/20- சன் லைப்*- காலை*11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

* * * * * * * சித்திரம் டிவி*-காலை*11 மணி/மாலை 6மணி -அபிமன்யு*

* * * * * * * மெகா டிவி*- மதியம் 12 மணி - தாயின் மடியில்*

* * * * * * *மூன்*டிவி* - பிற்பகல் 12.30 மணி - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * வசந்த் டிவி*- பிற்பகல் 1.30 மணி - ராமன்*தேடிய சீதை*

* * * * * * வெளிச்சம் டிவி*- பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*

* * * * * * *பாலிமர் டிவி*-இரவு 11 மணி* -* ராமன் தேடிய சீதை*


12/11/20 சன்* லைப்*-* *மாலை 4 மணி -* திருடாதே*

* * * * * * *

orodizli
13th November 2020, 09:15 AM
#முதல்வரின் #சிலம்பாட்டம்

தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "#தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
ஆண்களும், பெண்களுமென அலைமோதியது..
அதனால் நெரிசல் அதிகமாகியது...

வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "#காவலர்கள் #தங்களிடமுள்ள #லத்திக்கம்புகளை #உடனே #மேடையில் #ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்...
நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..

நிகழ்ச்சி முடியும் போது #நம்ம #முதல்வர் என்ன செய்தார் தெரியுமா ?

கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... #வேட்டியை #மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...

இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தனர்...

பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

#முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #நமக்கு #பாசமிகு #வாத்தியார் #தான்.........bsm...

orodizli
13th November 2020, 09:15 AM
#மக்கள்_திலகத்தின்_வெற்றிப்படங்கள்...

#உழைக்கும்_கரங்கள்...!!!

கோவை செழியன் தயாரிப்பு- கே.சங்கரின் இயக்கம்-நாஞ்சில்.கி.மனோகரனின் வசனம்-மெல்லிசை மன்னரின் இசை ஆகியவற்றோடு 1976 ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.

மக்கள் திலகம் தனி இயக்கம் கண்டு, 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ஏழைப்பங்களனாய் வருகிறார்.அசத்துகிறார்.

ஊரை அடித்து ஊழல் செய்யும் சேர்மேன் நாகலிங்கத்தையும் (தங்கவேலு) அவரது கலப்பட தொழிலையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.

நாகலிங்கத்தின் விதவை தங்கை கெளரி ((குமாரி பத்மினி)) ஒரு போலிச்சாமியார் கபாலியிடம் ((தேங்காய் சீனிவாசன்))தன்னை இழக்கும் போது, அவனுக்கே அவளை மணமுடித்து தன் தாய் போல மதிக்கும் அன்னம்மாளின் ((பண்டரிபாய்))குடும்ப மானத்தை காக்கிறார்

தன்னை காதலிக்கும் கிராமத்து முத்தம்மா ((லதா)) விற்கு வாழ்வளிக்கிறார்.

பக்தி வேண்டியதுதான்..ஆனால் பக்தி என்ற போர்வையில் போலிச்சாமியார்களுக்கு ((தேங்காய்-நாகேஷ்)) இடமளிக்கவே கூடாது என சொல்கிறார்.

தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணை பங்கஜம்.. ((பவானி)) இசையரசியாய் வாழ வைக்கிறார்.

விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை படம் முழவதும் கிராமத்து விவசாயியாய் வாழ்ந்து காட்டுகிறார்.

இந்த படத்தில் அன்றும்-இன்றும்-என்றும் பேசப்பட்டது கோவில் திருவிழாவில் நடக்கும் அந்த மான் கொம்பு சண்டை, மக்கள் திலகத்தின் வேகத்தில், காமிராவே திணறுகிறது. அதே போல வைக்கோல் போரில் ஜஸ்டினுடன் போடும் சண்டையும ரசிகர்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டது.அப்போது மக்கள் திலகத்திற்கு 59 வயது, இந்த வயதிலும் மான் கொம்பு, சிலம்பாட்டம் என்று பட்டையை கிளப்பினார் மக்கள் திலகம்.

"நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே" இந்த பாடலாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் இன்று வரை ஒலிக்கிறது. இதை தவிர "வாரேன்...வழி காத்திருப்பேன்", "கந்தனுக்கு மாலையிட்டாள்" பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.

அருமையான கதை, நடிப்பு,பாடல்கள், வசனங்களை கொண்ட இப்படம் நூறு நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது..!!!

Source :https://en.m.wikipedia.org/wiki/Uzhaikkum_Karangal...Sr.babu...

orodizli
13th November 2020, 09:18 AM
கடந்த 10.11.2020 முதல் பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களே திரையிடப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி வீட்டில் ஏராளமான வேலைகள் உண்டு. கடைவீதிகளுக்கு செல்ல வேண்டும். கனமழை பெய்யும் காலம் இது. கொரோனா பீதி ஒருபக்கம். இத்தனை மோசமான சூழலில் திரையரங்கை திறந்தாச்சு எப்படி மக்களை தியேட்டர்பக்கம் வரவழைப்பது என்ற யோசனையில் ஆழ்ந்த திரையரங்கினர் எம்ஜிஆர் படம் ஒன்றால்தான் இத்தனை மோசமான நிலையை சமாளிக்க முடியும் என நல்ல முடிவெடுத்து எம்ஜிஆர் படங்களை திரையிட்ட வண்ணம் உள்ளனர். வேற ஒரு நடிகர் படம் திரையிடுவது என்பது நினைத்தே பார்க்க முடியாது. எனவே 'எம்ஜிஆர் படங்களைப் போடு...மக்களை திரட்டு...பணத்தை அள்ளு' என வழக்கமான பாணியை கையிலெடுத்தனர். எண்ணம் சரிதான்.... ஆனால்....ஆனால்...ஊர் முழுக்க போஸ்டர் விளம்பரம் முன்பைவிட அதிகமாக செய்யணுமா, வேண்டாமா? டிக்கெட் விலையை குறைக்க வேணுமா வேண்டாமா? டிஜிட்டலில் வெளிவந்த தலைவர் படங்களை களமிறக்க வேணுமா வேண்டாமா? நாளிதழில் விளம்பரம் கொடுக்கணுமா வேண்டாமா? (சில ஊர்களில் தியேட்டர் வாசலில் மட்டும் போஸ்டர் வைத்துள்ளனர்.) 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை' என்ற தலைவரின் வாக்கை நினைத்துப் பார்க்க வேணுமா வேண்டாமா? இதை வாசிக்கும் நீங்கள் உங்க ஏரியா தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட வலியுறுத்த வேணுமா வேண்டாமா? இந்த செய்தியை share பண்ண வேணுமா வேண்டாமா????????????
இப்பொழுது தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது....திருச்சி- பேலஸ்-10.11.2020
முதல் - உரிமைக்குரல் - தினசரி 4 காட்சிகள்.
மதுரை வண்டியூர்
கல்லானையி ல்
11.11.2020 முதல்
நினைத்ததை முடிப்பவ ன்- தினசரி 3 காட்சிகள் கோவை சண்முகா 11.11.2020 முதல் தர்மம் தலைகாக்கும். 10.11.2020 திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் நீதிக்கு தலை வணங்கு. 10.11.2020 முதல் தஞ்சை GV , கரூர் அமுதா, திருவானை காவல் வெங்கடேஷ்வரா, சீர்காழி osm, திருவாரூர் தைலம்மை ஆகிய நவீன வசதிகள் கொண்ட தியேட்டர்களில் 10.11.2020 முதல் திருச்சி ஶ்ரீரங்கம் வெங்கடேஸ்வராவில் நவீன திரையரங்கில் 12.11.2020 முதல் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டுள்ளது. காலை 11, பிற்பகல் 3, மாலை 7 மணி என 3 காட்சிகள். (இன்னும் பல்வேறு ஊர் தியேட்டர்களில் தலைவர் படங்கள் திரையிடப்பட்டிருக்கலாம்.).......SML...

orodizli
13th November 2020, 11:49 AM
"தங்கப்பதக்கம்" சென்னையில் வசூல் மோசடி செய்த படம். ஒரு படம் வெளியான உடனே கைபிள்ளைங்க கணக்கு போட்டு விடுவார்கள். இந்தப்படத்துக்கு பிணந்தூக்க வேண்டியது வரும் என்று. உடனே சுறுசுறுப்பாக ஆக வேண்டிய காரியத்தை முன்னமே செய்து வைத்து விடுவார்கள். வடக்கயிறு, ஸ்டெச்சர் எல்லாம் ரெடியாக வைத்திருப்பார்கள்.

படம் பிணமாக விழுந்தவுடன் அவர்கள் கண்காணிப்பு மிக அதிகமாக இருக்கும். சில பிணங்களை 50 நாட்கள் தூக்கி சுமக்க வேண்டியதிருக்கும். சில பிணங்கள் 75 நாட்கள் வரை தூக்கி சுமப்பதால் செலவு அதிகம் பிடிக்கும். அதெல்லாம் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அப்படி தூக்கி செல்லும் பிணங்கள் சிலதுகள் தாங்களாகவே தற்கொலை செய்து கொள்வதுமுண்டு.

ஆனால் இந்த "தங்கப்பதக்கம்" பிணத்தை நெடுந்தூரம் தூக்கிசெல்ல வேண்டியிருந்ததால் ஸ்டெச்சர் உதவியுடன் தூக்கி செல்லும் வழியில் 23வது வாரத்தில் பிணம் தாங்கமுடியாத
துர்நாற்றம் வீசியதால் இதற்குமேல் முடியாது என்று கைவிட்டவுடன் பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்து 23 வது வாரம் கடைசி என்று பத்திரிகை தகவல் முதற்கொண்டு அறிவித்தபின் பிணத்தின் சொந்தக்காரர் தலையிட்டு பிணத்தை சுத்தம் செய்து புதிய கட்டுக்கள் போட்டு சானடைசர் மற்றும் சென்ட் உதவியுடன் மீண்டும் பாடையில் ஏற்றி மேளதாளத்துடன் 176 வது நாள் அடக்கம் செய்த கதை யாருக்கு புரிகிறதோ இல்லையோ கைபிள்ளைகளுக்கு நிச்சயம் புரியும்.

ஏன்னா பிணந்தூக்கியே அவர்கள்தானே. நான் சொன்னது சென்னையில் "தங்கப்பதக்கம்" ஓட்ட படாதபாடு பட்ட கதை. ஏற்கெனவே இழுத்து ஓட்டப்பட்டதால் வந்த வசூலோடு பிணத்தின் சொந்தக்காரர் போட்ட பணத்தையும் சேர்த்து வந்த பொய்வசூலை காட்டி ஊரை ஏமாற்றி பிழைக்கும் கைபிள்ளைகளே! உங்களுக்கு ஏற்ற ஐயன்தான் செளத்ரி பையனும். படத்திலே நேர்மையான போலீஸ் அதிகாரி. ஆனால் உண்மையில் கபட வேடதாரி.

சாந்தியில் "தங்கப்பதக்கம்"
168 நாளில் பெற்ற வசூல் ரூ 11,03,644.40 . 176 நாட்களில் பெற்ற வசூல் ரூ 11,65,185.50. அதாவது கடைசி 8 நாட்களின் வசூலான ரூ61,541.10 ஐ நடைபெற்ற 24 காட்சிகளையும் ஹவுஸ்புல்லாக்கி இந்த போலி சாதனையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடைசி 24 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடும் போது படத்தை ஏன் 176 நாளோடு தூக்க வேண்டும்.? இதுபோன்ற கேள்விகளை நீங்கள் கேட்க கூடாது. ஏன் தமிழ்நாடு முழுவதும் அதை செய்ய முடியவில்லை?. ஐயனின் பணம் தண்ணீராக செலவாகும் என்பதாலா? ஆனால் இதையெல்லாம் எம்ஜிஆர் கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால் மனசுக்குள்ளே தம்பி கணேசன் படும் பாட்டை எண்ணி சிரித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

இப்படி ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட "உலகம் சுற்றும் வாலிபனி"ன் வெற்றியை பணநாயகத்தின் மூலம் விலைக்கு வாங்க நினைத்ததுதான் அரசியலில் சிவாஜி அடைந்த படுதோல்விக்கு அஸ்திவாரம் என்று கூட சொல்லலாம். சிவாஜி சினிமாவிலேயே இவ்வளவு தில்லுமுல்லு செய்து பணத்தால் வெற்றியை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று நினைத்த ஊழல்வாதிதான் என்பதை அவரே நிரூபித்து விட்டார். அதனால்தான் அவரை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட மக்கள் அவரை அரசியலை விட்டே விரட்டி அடித்தனர்..

நீங்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். சிவாஜி படங்களை பார்த்து விட்டு வருபவர்களிடம் நாங்கள் கேட்கும் முதல் கேள்வியே தியேட்டரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதுதான். அவர்கள் சொல்லும் பதில் என்னையும் சேர்த்து ஒரு 20லிருந்து 25 பேர்கள்தான் இருந்தார்கள் என்றதும் புரிந்து விடும் இது பிணந்தூக்கிகளின் வேலை என்பது.
இப்படி ஜனநாயகத்தை மதிக்காமல் ஒவ்வொரு படத்துக்கும் பிணந்தூக்கி நீங்கள் பெற்ற போலி வெற்றி எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து விட்டது. ஆனால் மற்ற ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் இது போன்ற வெறுப்பு அடையாமல் போட்டி மனப்பான்மையுடன் மட்டும் இருக்கிறார்கள் என்பதற்கு காரணம் இப்போது தெளிவாகிறதா?

இதைப்போல் அரசியலிலும் கட்சி ஆரம்பித்து இந்த 'குல்மால்' வேலைகளை செய்து பதவிக்கு வந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட கணேசனை ஏமாற்றிய கைபுள்ளைங்க பிணந்தூக்கிகள் எஸ்கேப் ஆகி தீயசக்தியிடம் சரண்டர் ஆனதால் மானமிழந்த கணேசன் கைபிள்ளைகளை நம்பி ஏமாந்தேன் என்று அழுதது பழைய கதை. தப்பு செய்தவன் தண்டனை அடைவான் என்ற ஆண்டவன் கட்டளை இங்கு அரசியலில் வேலை செய்தது. 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என்று விரக்தியடைந்து எல்லாவற்றையும் துறந்து வீட்டிலேயே இருந்து ஓய்வு பெற்றார் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது..........ksr.........

fidowag
13th November 2020, 11:19 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ...........
--------------------------------------------------------------------------------------------------------------------
14/11/20-தீபாவளி முதல் சென்னை சரவணாவில் தேடி வந்த மாப்பிள்ளை*தினசரி 3 காட்சிகள்*

14/11/20-தீபாவளி முதல் கோவை டிலைட்டில் -தேடி வந்த மாப்பிள்ளை**தினசரி* 2 காட்சிகள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
14/11/20* தீபாவளி முதல் சேலம் அலங்காரில்* *நம் நாடு -தினசரி 4* காட்சிகள்*

*10/11/20 முதல் ஓமலூர் (சேலம் மாவட்டம் ) தங்கம் அரங்கில் -தினசரி 3 காட்சிகள்**ரகசிய போலீஸ் 115


10/11/20- முதல்* மேட்டூர் - (அரங்கின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் _**ராமன் தேடிய சீதை - தினசரி 3 காட்சிகள்* நடைபெறுகிறது*


11/11/20 முதல் சேலம் புறநகர் - ஜெயராம் (கொண்டலாம்பட்டி ) தர்மம் தலை காக்கும்* - தினசரி 3 காட்சிகள்* நடைபெறுகிறது .
(முதல் நாளன்று அரங்கு முறையாக சுத்தம் செய்யப்படாமல், கிருமிநாசினி தெளிக்கப்படாமல் இருந்ததால் சேலம் மாநகராட்சி பணியாளர்கள் அரங்கை திறக்க அனுமதிக்கவில்லை . என்பதே உண்மை செய்தி .ஆனால் சன் செய்திகளில் 10/11/20 அன்று குறைந்த* ஆட்கள் வந்ததால்* காட்சி ரத்து ஆனதாக செய்தி தவறாக* ஒளிபரப்பானது )


தகவல்கள் உதவி : திரு.சுப்பிரமணி, சேலம்*

12/11/20 முதல் தூத்துக்குடி சத்யாவில்* (கண்டிப்பாக 2 நாள் மட்டும் ) சிரித்து* வாழ வேண்டும் - தினசரி* 2 காட்சிகள்*

தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .*

fidowag
13th November 2020, 11:27 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 10/11/20 அன்று* திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கும் இவ்வளவு பேர்* அவரது ரசிகர்களாக ,அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ,ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் உற்று கவனிப்பவர்களாக இருக்கிறார்கள்* என்றால் அந்த மகோன்னதம் வேறு ஒரு மனிதருக்கு இருக்கிறது* என்று*சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு ரத்த சாட்சியாக நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் .* அந்த ரத்த சாட்சியை நமக்கு வைத்து விட்டு போன பண்பாடுகள் ஏராளம் ஏராளம் . எம்.ஜி.ஆர். அவர்கள் பிறரை உயர்வாக நினைப்பது, தன்னை தாழ்த்தி கொள்வது என்கிற பணிவான பண்பை கொண்டவர் .ஒரு சிறிய பொறுப்பு, பதவி வந்தாலே, மற்றவர்களை ஏளனமாக பார்ப்பது, அவர்களை அலட்சியப்படுத்துவது, ஒருமையில் அழைப்பது போன்ற பண்புகள் கொண்ட மனிதர்கள் அன்றாடம் வாழ்க்கையில் நாம் பார்த்து வருகிறோம் .சாதாரண கவுன்சிலர் பதவியை பெற்றாலே, தலைக்கனம் பிடித்து அலைபவர்கள் இருக்கிறார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள்* எம்.எல்.சி.,யாக, எம்.எல்.ஏவாக, சிறு சேமிப்பு துறையின் துணை தலைவராக ஏன் முதல்வராகவே இருந்தார் .ஆனால் ஒரு போதும் அவர் கர்வம், தலைக்கனம் பிடித்தவராக நடந்து கொண்டதில்லை .* எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று தற்பெருமை பேசியதில்லை*


பெரும்புள்ளிகள் காரில் செல்லும்போது கார் கதவின்* கண்ணாடியை மூடியபடி,பின்னால் உட்கார்ந்து கொண்டு* ஏதாவது புத்தகம் படித்து கொண்டு அல்லது ஏதோ மோனையில் சிந்தித்தபடியோதான் போவது வழக்கம் .**ஏனென்றால் அவர்கள் காரில் செல்லும்போது சாலையில் செல்லும்* பழைய நண்பர்கள் யாராவது* இவர்களை பார்த்துவிட கூடாது**என்பதற்காக அப்படி நடந்து கொள்வார்கள்.* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுத்தவரை**ராமாவரம் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு காரில் செல்லும்வரையில்*பின்னிருக்கையில் அமர்ந்தபடி, கார் கதவின் கண்ணாடியை இறக்கி விட்டு*சாலையில் செல்பவர்களை கவனித்தபடி பார்த்து புன்னகைத்துவிட்டு, தன்னை பார்த்து வணக்கம்*,சொல்வது போல கையை தூக்கி வணக்கம் சொல்லியபடி*செல்வதுதான் வழக்கம் .***அதனாலதான் அவர் மக்கள் திலகமாக கொண்டாடப்படுகிறார் .* ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் மக்களை சந்திப்பது, நேசிப்பது, அவர்களுடன் உரையாடுவது, அவர்கள் குறைகளை தீர்க்க முற்படுவது* மக்கள் தன்னை பார்க்க வருவதை ஆவலோடு எதிர்பார்ப்பது என்று சில நடைமுறைகளை வாழ்க்கையில் கடைபிடித்தார் .அதனால்தான் மக்களால் நேசிக்கப்பட்ட மக்கள் தலைவரானார் .


திரு.கா. லியாகத் அலிகான் :* என்னை போல பல சகாக்கள், நண்பர்கள் பல பதவிகளை, பொறுப்புகளை அனுபவித்து உழைத்திருக்கிறோம் .* தலைவரின் பெருமைகள் பற்றி சொல்வதென்றால் ஒரு* நாளெல்லாம் சொல்லி கொண்டே இருக்கலாம் .* 1981ல் மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெற்ற நேரம்.*அப்போது மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் வருகை தருகிறார்கள்.* *பல அமைச்சர்கள்* சென்று வரவேற்றார்கள்* *நானும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தேன்.**இந்திரா அம்மையார் விமானத்தில் வந்து இறங்கியதும்*.என்னை கவனித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அருகில் வர** சொல்லி சைகை செய்து, அமைச்சர்களின் வரவேற்பு முடிந்ததும், என்னையும்* பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார் .* அது மட்டுமல்ல. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் அவர்கள் 1982ல் சென்னைக்கு வந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் .* அப்போது பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவரையும் ஒருசேர கண்ட போது ,தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சார்லஸை விட மிகவும் அழகாக , காட்சியளித்தார் .என்பதை நான் உணர்ந்தேன். இதை* *நான் மிகை படுத்தி சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த காட்சியை கண்ட பலர், அமைச்சர்கள் கூட பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்கள்.** அந்த இடத்திலே, சிரித்த முகத்தோடு, சிவந்த நிறத்தோடு , கருத்த*முடியோடு, கருப்பு கண்ணாடியோடு கூர்ந்த கண்களோடு, காட்சியளித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மென்மையான அணுகுமுறைகள்* அங்கு கூடியிருந்த அனைத்து கண்களையும், இதயங்களையும்* ஈர்த்தன என்பதுதான் உண்மை . தலைவரின் தோற்றம் எங்களை மட்டுமல்ல எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூட ஈர்த்தன என்று சொல்லலாம் . அந்த நேரத்தில் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலரை**உதாரணத்திற்கு துரை முருகன், ரகுமான்கான் போன்றவர்களை இளவரசர் சார்லசிடம் அறிமுகம் செய்து வைத்ததை நானே நேரில் கண்டேன் .*தலைவர் அவர்கள் கட்சி பாகுபாடின்றி, பேதம் இன்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி, அனைவரையும் சமமாக பார்த்தார் . மேலும் சற்று தூரத்தில் இருந்த என்னையும் அழைத்து இளவரசர் சார்லசுக்கு அறிமுகப்படுத்திய பெருந்தன்மை மிக்க தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* சாதாரண தொண்டனாக விளங்கிய என்னை மதித்து, மற்றவர்களை போல இவனும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவனுடைய பெருமைகள் இந்த உலகிற்கு தெரியட்டும் என்கிற வகையில், என் உணர்வுகளை புரிந்து கொண்டு* என்னை இளவரசர் சார்லசுக்கு அறிமுகம்* செய்த பெருமை படைத்த தலைவர்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் .****


அதே போல ஏழை எளியோர்களிடத்தில்யாராக இருந்தாலும்* அன்பு காட்டுவதில், அவர்களை நேசிப்பதில், அவர்களின் குறைகளை தீர்ப்பதில் அவருக்கு இணையான ஒரு தலைவரை, ஒரு மகானை*, இனம் காணுவது* மிகவும் கடினமான காரியம் .* ராமாவரம் தோட்டத்தில் எடுத்து கொண்டால், அன்றாடம் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். நம்மைத்தான் தலைவர் முதலில் சந்திப்பார் என மனக்கோட்டை கட்டியபடி இருப்பார்கள் . ஆனால் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் தலைவர் அவர்கள் நேரடியாக தொண்டர்கள் காத்திருக்கும் பகுதிக்கு முதலில் சென்று, அவர்களை சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிந்து,ஏதாவது உதவி என்றால் அப்போதே செய்து முடித்து* , அவர்களின் குறைகளை தீர்க்கவல்ல பண்புமிக்க ஒரு தீர்க்கதரிசியாக திகழ்ந்தார் .* ஒருமுறை தற்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ள தமிழ் மகன் உசேன்* அவர்கள் தலைவரால் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் .* விவரம் அறிந்த தமிழ் மகன் உசேன் ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறார் .*அன்றைக்கு மற்ற முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் பலரை பார்த்தபின் தமிழ் மகன் உசேன் தலைவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார் .நான்தான் உன்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டேனே. இங்கு எதற்காக வந்தாய் என்று கேட்க, நான் முதல்வரை பார்க்க வரவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க வந்துள்ளேன் என்று ஒரு நண்பரை போல மிகவும் சாதாரண முறையில் தலைவரிடம் பேசினார் .* மிகவும் தைரியத்துடன் தமிழ் மகன் உசேன் பேசியதை*கண்டு கோபப்படாமல் தலைவர் சிரித்தார்* *சரி, எம்.ஜி.ஆரிடம் என்ன சொல்ல போகிறாய் என்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் தலைவர் கேட்டார் .*தமிழ் மகன் உசேன் பேச்சை கனிவோடு கேட்ட தலைவர் , ஒரு தொண்டனின்*எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மீண்டும் அவரை பதவியில் அமர்த்திஅழகு பார்த்தார் தலைவர் .* தொடர்ந்து ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்திலும், இப்போதைய எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி காலத்திலும் தமிழ் மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக* பதவியில் நீடித்து வருகிறார் .** **


இன்றைக்கு சிறுபான்மை நல* பிரிவு துணை செயலாளராக நானும், செயலாளராக அன்பு ராஜாவும் பணியில் இருந்து வருகிறோம் .என்று சொன்னால் நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆட்பட்டு, பல்வேறு தரப்பினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை மானசீகமாக குருவாக ஏற்று கொண்டதோடு, தொடர்ந்து ஜெயலலிதா அவர்கள் தலைமையிலும் இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தி கொண்டு , இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் சமமாக பழகிய சகோதரர்களாக இருந்தாலும் கூட ,அவர்களுடைய தலைமையை ஏற்று, சொல்லுக்கு கட்டுப்பட்டு ,செயல்பட்டு, இந்த இயக்கம், தொடர்ந்து வளர்வதற்கு, வாழ்வதற்கு, ஆலமரமாக பெருகுவதற்கு நாங்கள் பாடுபடுவோம் என்று சொன்னால் இந்த இயக்கம் வளர்ந்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின், புகழும்,*வளரும் .ஏழை எளிய மக்கள் நலம் பெறுவார்கள், வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்கிற வகையில் நாங்களும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம், உழைத்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், புரட்சி* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் என் மீது காட்டிய அன்பை, பாசத்தை, பரிவை, கருணையை* எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை .* நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் . உங்கள் இளமைக்கு காரணம் என்ன என்று. என் இளமைக்கு காரணம் புரட்சி தலைவர்தான்.* அவருடைய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை பின்பற்றியதே அதற்கு காரணம் . உள்ளபடியே சொன்னால் என் வயதை சொல்ல கூடாது. நானும் அதை விரும்பவில்லை.பொதுவாக பெண்ணின் வயதை கேட்க கூடாது. ஆணின் வருமானத்தை கேட்க கூடாது என்று சொல்வார்கள் . ஆனால் இங்கு இளமையை குறிப்பிட்டு காட்டி* பேசுவதால் அதற்கும் காரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் .என்று சொல்லுவேன் .* அக்ரோ வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட எனக்கு டைபாயிடு காய்ச்சல் வந்தபோது நான் உயிர் வாழ்வேனா அல்லது செத்து மடிவேனா என்று சொல்ல முடியாத ஒரு நிலையில்* இருந்த கால கட்டத்தில், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நேரத்தில் ,சேலத்தில் போஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடைபெறுகிறது .அந்த மாநாட்டில் எனக்கே தெரியாமல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆலோசனையின் படி ,லியாகத் அலிகான் இந்த மாநாட்டில் பேசுவார் என்று துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்,பத்திரிகை விளம்பரங்கள்* தயார் செய்யப்பட்டன .***அந்த சமயத்தில் டைபாய்டு காய்ச்சலுடன் ஜாண்டிஸ் எனப்படும் மலேரியாவும் சேர்ந்து தாக்கியதில் மிகவும் அவதிப்பட்டேன் .* மிகவும் கடுமையான நோய் தாக்கத்தில் இருந்தேன்.* நான் கண்டிப்பாக சில மாதங்கள் ஒய்வு பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தது .* ஓரளவு நோய் தோற்று குறைந்து, 75 % காய்ச்சலின் தாக்கம் தீர்ந்து குணமாகியதும் இரண்டொரு நாளில்*சேலத்தில் மாநாடு துவங்க இருப்பதை*அறிந்தேன்*. அப்போது மாநாட்டின் தலைவராக*திரு.முசிறிபுத்தன்* அவர்கள் இருந்தார்கள் . இந்த சூழ்நிலையில் என்னால் மருத்துவமனையில் படுத்திருக்க முடியாமல்* நேரடியாக என் மாமா முஸ்தபா* வீட்டிற்கு சென்று*, காய்ச்சல் எப்படி இருந்தாலும் நான் மாநாட்டிற்கு சென்றாக வேண்டும் என்று கூறி ,என் மனைவி, பெற்றோர்களை வரவழைத்து சேலத்தில்*ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி ,அங்கிருந்தபடியே முசிறிபுத்தன்* அவர்களை தொடர்பு கொண்டு*, அண்ணே*எனக்கு காய்ச்சல் முழுவதும் குணமாகவில்லை ,இருப்பினும் மாநாட்டில்*கலந்து கொள்ள வந்துவிட்டேன்.என்ன செய்யலாம் என்று கேட்டபோது, அவர் தலைவரிடம் ,லியாகத் அலிகான் சேலத்திற்கு வந்து தங்கியுள்ளார். காய்ச்சல் முழுவதும் தீரவில்லை. குரலிலும் பாதிப்பு தெரிகிறது*என்ன செய்யலாம் என்று கேட்க, தலைவர்* வேண்டாம் காய்ச்சலுடன் அவர் ஏன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார். முழுவதும் குணமாகும் வரையில் மருத்துவமனையில் இருந்து இருக்கலாமே*.பரவாயில்லை .ஒய்வு எடுக்க சொல்லுங்கள் என்று கூறினாராம் .அதன்படி நான் உடுமலைப்பேட்டை சென்று*இரண்டு மாத காலம் ஒய்வு எடுத்த பின்* உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது .உடல்நலம் பெற்ற பின் அகோர* பசியெடுத்து* தேவைக்கு அதிமாக*உணவு உண்பது, அதிக நேரம் ஒய்வு கொள்வது என்று இருந்ததால் உடல் பருத்துவிட்டது* *மூன்று மாதம் கழித்து தலைவர் அவர்கள் சேலத்திற்கு 3 நாட்கள்*தங்கி , நடிகர் பாக்யராஜ் அவர்களின்*பாராட்டு விழாவில்*கலந்து கொள்ள* வந்திருந்தார் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------------
1.தொட்டுவிட தொட்டுவிட தொடரும்*- தர்மம் தலை காக்கும்*

2.தர்மம் தலை காக்கும் பாடல்* - தர்மம் தலை காக்கும்*

3.ஒருவன் மனது ஒன்பதடா*- தர்மம் தலை காக்கும்*

4.நான் உங்கள் வீட்டு பிள்ளை* - புதிய பூமி*

5.திரு. கா. லியாகத்*அலிகான் பேட்டி*

*


*

fidowag
13th November 2020, 11:35 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதள பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

orodizli
14th November 2020, 08:24 AM
Happy "Deepavali" Greetings to All of You...������������������

orodizli
14th November 2020, 08:25 AM
#என்றும்_எம்ஜிஆர் நினைவலைகள்.

எம்ஜிஆர் பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘மும்பையில் மாதுங்கா, டெல்லியில் கரோல்பாக் போல கொல்கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.

எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.

மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.

ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.

அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்

அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.

- தி இந்து .மீள்/...nsm.........

orodizli
14th November 2020, 08:27 AM
1974 ஆம் ஆண்டில் ஒரு இரவு நேரம் மணி 9 தாண்டி தலைவர் ஓய்வு எடுக்க செல்லும் நேரம் ஒரு அழைப்பு வருகிறது டெலிபோனில் தலைவருக்கு...

எடுத்து பேசி விஷயம் அறிந்து கொண்ட மன்னவன் உடனே மாம்பலம் கட்சி அலுவலகத்தில் இருந்த ஐயா மகாலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு...

எனது கட்சி அலுவலக ஓய்வறையில் பணம் இருக்கும் இடம் சொல்லி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொண்டு போய் ஒருவர் பெயர் சொல்லி அவர் வீட்டுக்கு உடனே போங்க..

அவர் நெஞ்சுவலியால் துடித்து கொண்டு இருக்கிறேன் என்கிறார் என்னிடம் அவரை பிரபல இதய நோய் நிபுணர் மறைந்த திரு...ஆர்.எஸ். ராஜகோபால் அவரிடம் கூட்டி செல்லுங்கள் என்று சொல்ல மருத்துவருக்கு விவரம் சொல்லி விட்டு உங்களிடம் பேசுகிறேன் என்கிறார்.

தேனாம் பேட்டை எல்லை அம்மன் கோவில் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு பதறி பணத்துடன் சென்ற மகாலிங்கம் ஐயா அவரை அள்ளி போட்டு கொண்டு மருத்துவர் இல்லம் நோக்கி பறக்கிறார்.

அங்கே முழு சோதனைகள் செய்த ராஜகோபால் அவர்கள் இவருக்கு இருதயத்தில் எந்த குழப்பமும் இல்லை...பயந்து போய் சொல்லி இருக்கிறார் அது வயிற்று பிரச்னை என்று சொல்லி மருந்து மாத்திரைகள் கொடுத்து இருவரையும் திருப்பி அனுப்புகிறார்.

சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் அவர் இல்லத்தில் விட்டு விட்டு தலைவருக்கு நடு இரவில் தகவல் சொல்கிறார் மகாலிங்கம் அவர்கள்.

தலைவர் நிம்மதியுடன் உறங்க செல்கிறார்.
பாதிக்க பட்ட அந்த நபரிடம் ஏன் இப்படி அவருக்கு தொலை பேசியில் சொன்னீங்க எனக்கு சொன்னால் நான் வரமாட்டேன் என்று சொல்லுவேனா என்று தலைவர் உதவியாளர் அவரிடம் கேட்க.

அதற்கு அவர் சொல்கிறார்... நடு இரவில் கூட என்னை காப்பாற்றும் ஒரே மனித தெய்வம் அவர் என்றே என் மூளைக்கு எட்டியது....வேறு ஒன்றும் இல்லை என்கிறார் அவர்.

அவர் வேறு யாரும் இல்லை...பிறப்பில் இஸ்லாம் மதத்தில் பிறந்தவர்....தன் பெயரை ரவீந்தர் என்று மாற்றி கொண்டு தலைவரின் கதை இலாகாவில் முக்கிய பங்கு வகித்த அந்த நல்லவரே அவர்.

அவரை தெரியாத தலைவர் நெஞ்சங்கள் இருக்கமுடியாது.
தலைவர் நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு அவரை கதை எழுத சொல்லி ஒரு மாபெரும் படத்தை தயாரிக்க எண்ணி அருமையான கதை உடன் அந்த படம் உருவாக விளம்பரம் கூட வந்தது.

முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படம் ஆக்க திட்டமிட்ட அந்த படத்தின் பெயர் இணைந்த கைகள்.

ஈரான் நாட்டின் புகழ் பெற்ற கதாநாயகி தலைவருக்கு ஜோடி ஆக நடிக்க அவர் ஒப்பு கொண்டு அந்த அரசாங்கம் அங்கே அந்த நாட்டில் இந்த கதையை படம் ஆக்க மறுப்பு சொல்ல தலைவரும் கதை ஆசிரியர் ரவீந்தர் அவர்களும் மனம் கொஞ்சம் வருந்த..

அதன் பின்னே வேண்டாம் அந்த திசை என்று தலைவர் முடிவெடுத்து அங்கு இல்லாவிட்டால் என்ன உலகம் பெரியது என்று எண்ணி உருவான மாபெரும் வெற்றி படமே காலத்தால் அழிக்க முடியாத

உ.சு.வா...உருவானது.

தலைவர் தலைவரே என்றும்....

தீபாவளி சிறப்பு பதிவில் மேலும் ஒரு கொசுறு செய்தி.

தலைவர் படம் உ.சு வா. படத்துக்கு போதிய ஆடைகள் தைக்க இங்கே கால அவகாசம் இடம் கொடுக்காததால் தலைவரின் அட்டகாசம் ஆன உடைகள் அமைப்புடன் வந்த.

1972 இல் வெளிவந்த ஜெயந்தி பிலிம்ஸ் ராமன் தேடிய சீதை படத்தின் தயாரிப்பாளர் அவர்கள் செய்தி அறிந்து இந்த படத்தின் சூப்பர் உடைகள் இருக்கு அள்ளி கொண்டு செல்லுங்கள் என்று தலைவரிடம் சொல்ல..

அவரும் மிகவும் மனம் நெகிழ்ந்து அந்த உடைகள் உடன் வெளிநாடுகள் பறக்க உ..சு.வா...படத்தின் சில காட்சிகளில் தலைவர் அந்த படத்தின் உடைகளை பயன் படுத்தி இருப்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்..

வாழ்க தலைவர் புகழ்.

என்றும் தொடரும் உங்களில் ஒருவன்
நன்றி நன்றி நன்றி...

fidowag
14th November 2020, 03:20 PM
தமிழகமெங்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டும், தமிழக அரசின்*உத்தரவின் பேரில் திரை அரங்குகள் திறக்க அனுமதி கிடைத்ததும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீட்டில் புதிய சாதனை . வேறு எந்த நடிகரின்*பழைய படங்களும் இந்த அளவில் வெளியாகவில்லை*என்பது குறிப்பிடத்தக்கது .
---------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை மாநகரம்*
-----------------------------
11/11/20 முதல்* சண்முகா* - தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள்*

14/11/20* முதல்* -சண்முகா - காவல்காரன் - தினசரி 3 காட்சிகள்*

14/11/20* முதல்* டிலைட்* - தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 2 காட்சிகள்*


மதுரை மாநகரம்*
------------------------------
14/11/20* முதல் சென்ட்ரல் சினிமா -தர்மம் தலை காக்கும்-தினசரி 3 காட்சிகள்*

14/11/20 - ஷா அரங்கு* -* எங்க வீட்டு பிள்ளை* - தினசரி 3 காட்சிகள்*

11/11/20 -வண்டியூர் -கல்லானை-நினைத்ததை முடிப்பவன்*தினசரி 3 காட்சிகள் - 3 நாட்கள் மட்டும் .


திருச்சி மாநகரம்*
----------------------------
10/11/20* முதல் பேலஸ்* -உரிமைக்குரல் - தினசரி 3 காட்சிகள்*

10/11/20* *முதல் திருவானைக்காவல் - வெங்கடேஸ்வரா ,** தஞ்சை - ஜி.வி., கரூர்- அமுதா,* சீர்காழி - ஓ.எஸ்.எம்.
* * * * * * * * *திருவாரூர் -தைலம்மை* அரங்குகளில்*
* * * * * * * * *ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*

14/11/20-* முருகன்* - ரகசிய போலீஸ் 115- தினசரி 3 காட்சிகள்*

14/11/20* - ஸ்ரீரங்கம் ரங்கராஜா* - நம் நாடு - தினசரி* 3 காட்சிகள்*


சேலம் மாநகரம்*
------------------------------
11/11/20* -சேலம் புறநகர் - ஜெயராம் (கொண்டலாம்பட்டி _*
* * * * * * * * *தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள் - 3 நாட்கள் மட்டும்*

14/11/20* -அலங்கார - நம் நாடு - தினசரி 3 காட்சிகள்*

10/11/20 முதல் ஓமலூர் -தங்கம் (சேலம் மாவட்டம் ) -ரகசிய போலீஸ் 115
* * * * * * * * * * * * * * தினசரி 3 காட்சிகள்*

சென்னை பெருநகரம்*
------------------------------------
13/11/20 முதல் சரவணா - தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 3 காட்சிகள்*

திருப்பூர் நகரம்*
------------------------
10/11/20,11/11/20,12/11/20 - அனுப்பர்பாளையம் -கணேஷ்*
நீதிக்கு தலை வணங்கு - தினசரி இரவு 8 மணி காட்சி மட்டும்*


தூத்துக்குடி மாநகரம்*
---------------------------------
13/11/20* முதல் சத்யா - சிரித்து வாழ வேண்டும் - தினசரி 3 காட்சிகள்*
* * * * * * * * *கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும்*
----------------------------------------------------------------------------------------------------------------
கரிக்கலாம்பாளையம் - திவ்யா -12/11/20 முதல் தினசரி 3 காட்சிகள்*
நினைத்ததை முடிப்பவன் -


குறிப்பு : விவரங்கள் கிடைத்த வகையில் பதிவு செய்துள்ளேன்.* நமக்கு தெரியாமல் எத்தனையோ படங்கள் , விவரங்கள் கிடைக்காமல் தமிழகம் முழுவதும்* வெளியாகி உள்ளன என்று தெரிய வருகிறது . யாருக்காவது*நண்பர்கள் மூலம் தெரிந்தால் பகிரவும் .**

orodizli
15th November 2020, 06:46 AM
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மாரப்பாடி திருவரம்பு தொகுதியில் ஒரு பாலம் கட்ட அரசிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து "இந்த இடத்தில் #ஐந்தடியில் #பாலம் கட்டினால் போதுமானது என்று கூற...
அந்த ஊர் மக்கள் கொதித்துப் போயினர்...

அப்போது எம்எல்ஏ வாக இருந்த நான்
(திருவட்டாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், கடந்த 24 வருடங்களில் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி சி.பி.எம் கட்சிக்காரருமான ஹேமச்சந்திரன்)

இந்தப் பிரச்சனையை உடனே முதல்வர் எம்ஜிஆரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைப் பொறுமையாகக் கேட்ட முதல்வர், '#நானே #நேர்ல #வந்து #பாக்கறேன்' என்று சொல்லிவிட்டு அடுத்த நாளை அந்த ஊருக்குச் சென்று பாலம் கட்டப்போகும் இடத்தை சில நிமிடங்கள் பார்த்தார்...

"மழைக்காலத்துல ஜனங்க போய்வருவதற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் பெரிய பாலம் கட்டினால் தான் சரியா இருக்கும். ஐந்தடியில் கட்டினால் மாட்டுவண்டி கூடப் போகமுடியாதே ? அவங்க என்னத்த ஆய்வு செஞ்சாங்க..." அப்படின்னு சொல்லிட்டு அதே இடத்தில் #இருபத்தியோரு #அடி #பாலம் #கட்ட #உத்தரவிட்டு உடனே கட்டவும் ஏற்பாடு செய்தார்.

ஆளைப் பார்த்து, தொகுதியைப் பார்த்து நலத்திட்டங்கள் புரிந்தவரவல்ல...
மக்களின் தேவையை மட்டுமே மனதிற்கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் பொன்மனச்செம்மல்............cks...

orodizli
15th November 2020, 06:52 AM
எப்பொழுதும் போல் கொரான காலத்திலும் திரையரங்குகளை வாழ வைக்கும் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் காவியங்களே சாட்சியாக நின்று நிலைத்திருக்கிறது என்பது நாமெல்லோருக்கும் பெருமையும், பெருமிதமும் அளிக்கின்ற நல்ல விடயமாகும்... தொடர்ந்து பல்வேறு இடங்களில் தலைவர் காவியங்கள் திரையிட பேச்சு வார்த்தைகள் நடைபெறும் தகவல்கள் மகிழ்ச்சியடைய செய்கிறது.........

orodizli
15th November 2020, 06:53 AM
#இனிய_தீபாவளி_வாழ்த்துக்கள்..!!!

#இனிய_நினைவுகளில்

#சக்ரவர்த்தித்_திருமகள்

மக்கள் திலகம், அஞ்சலிதேவி,S.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம், தங்கவேலு, முத்துலட்சுமி

இயக்கம்: ப.நீலகண்டன்
எழுதியவர்: இளங்கோவன்
இசை: ஜி.ராமநாதன்
வெளியான ஆண்டு: 1957 ((ஜனவரி 18))
________________________________

இளவரசி கலாமாலினி ((அஞ்சலி தேவி)) யை மணக்கவேண்டும் என்றால்,இளவரசர்கள் கடுமையான போட்டிகளான பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, தளபதி பைரவனோடு (வீரப்பா)வாட்போர் ஆகிய அனைத்திலும் வெற்றி காணவேண்டும். இல்லையேல் சிறையிலடைக்கப்படுவர்.

அத்தகைய போட்டியில் கலந்து கொள்ள வருகிறார் இளவரசர் உதயசூரியன் (மக்கள் திலகம்), இளவரசி கலாமாலினியை போட்டிக்கு முன்பே ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி அவள் அன்புக்கு பாத்திரமாகிறார் உதயசூரியன்..அத்தனை போட்டிகளிலும் வெல்கிறார். முன்பே தனக்கு ஆண் வேடத்திலும், பின் இளவரசியின் தோழி என்றும் அறிமுகமான பெண்தான் இளவரசி கலாமாலினி என்று தெரியவர , இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்து இளவரசியை ஏற்றுக்கொள்ள தாயாராகிறார் உதயசூரியன்.

ஆனால், நாட்டின் தளபதியானா பைரவன் இளவரசி கலாமாலினி தனக்குத்தான் எனற கனவு உதயசூரியனால் கலைகிறது; ,இளாவரசி கலாமாலினியின் அந்தரங்க தோழியான துர்கா (எஸ்.வரலட்சுமி)வும் இளவரசன் உதயசூரியனை ஒரு தலையாய் விரும்புகிறாள். இதுவும் நடக்காத ஒன்றாகிவிடவே உதயசூரியன் இருவருக்கும் பொது எதிரியாகிவிடுகிறான். துர்காவின் திட்டப்படி இளவரசி காலிமாலினி,பைரவனால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்படுகிறாள். துர்கா இளவரசியின் இடத்தில் தன்னை மணந்துகொள்ள உதயசூரியனை கட்டாயப்படுத்துகிறாள். இந்த சூழ்ச்சியை உடைத்து இளவரசன் உதயசூரியன்,சக்கரவர்த்தி திருமகள் கலாமாலினியை மீட்டாரா? என்பது படத்தின் மீதிக்கதை..!!!

இளவரசன் உதயசூரியனாக, அசத்தியிருக்கிறார் மக்கள் திலகம். ஆரம்ப காலங்களில் வெறும் "வந்து-போன" திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ஐம்பதுகளில் திருப்புமுனை தந்து அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படங்களில் இத்திரைப்படம் முக்கியமானது.

இப்படத்தில், இளவரசியை மணக்க வைக்கப்படும் போட்டிகளெல்லாம் மக்கள் திலகத்தின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவே ஆமைந்திருக்கின்றன. என்.எஸ்.கே யுடன் ஆட்டகாசமான பாட்டு; ஈ.வி.சரோஜா-சகுந்தலாவோடு அசத்தலான நடனம்; வீரப்பாவோடு மட்டுமல்ல, இப்படத்தின் பல இடங்களில் நடக்கும் வாட்போர் ஆகிய அனைத்திலுமே தூள் கிளப்பியுள்ளார் மக்கள் திலகம்.

குறும்பு+குழந்தைதனத்துடன் அஞ்சலி தேவி; நயவஞ்சகத்தோடு வரலட்சுமி; நகைச்சுவை வீரத்தோடு மதுரம், முத்துலட்சுமி; என படத்தின் பெண் கதாபாத்திரங்கள் படத்தின் கதையோட்டத்தோடு பொருந்துகின்றன.

அதே போன்று வீரம் கம்பீரத்துடன் மக்கள் திலகம்; கொடூர வில்லனாக வீரப்பா; நகைச்சுவைக்கு என்.எஸ்.கே.-தங்கவேலு என்று அனைத்து பாத்திரங்களும் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் ப.நீலகண்டன். 1957 ல் வந்த படம் இப்போதும் விறுவிறுப்பாக இருக்கிறது. பின் நாளில் மக்கள் திலகத்தோடு இணைந்து பல வெற்றிப்படங்களை ப.நீலகண்டன் கொடுத்ததற்கு இந்த படத்தின் மாபெரும் வெற்றியும் காரணம்.

இசை ஜி.ராமநாதன். "சீர்மேவும் குருபாதம்" மக்கள் திலகம்-என்.எஸ்.கே போட்டிப்பாடல்; "வாங்க வாங்க அண்ணாத்தே"; "அத்தானும் நாந்தானே சட்ட பொத்தானும் நாந்தானே..;" "பொறக்கும் போது பொறந்த குணம்"; காதலென்னும் சோலையிலே ராதே ராதே"; ஆகிய பாடல்களில் அசத்தியிருக்கிறார்.

இப்படம் மக்கள் திலகத்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல். ப்ளாக்பஸ்டர்ஹிட்டாக தமிழகமெங்கும் எட்டு இடங்களில் நூறு நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது

Source :
https://en.m.wikipedia.org/wiki/Chakravarthi_Thirumagal...NS...

orodizli
15th November 2020, 03:22 PM
சங்கம் வளர்த்த மதுரை புரட்சி நடிகரின் கோட்டை என்பது தமிழறிந்த நல்லுலகம் புரிந்து கொண்டிருந்தாலும் ஒரு சில புல்லுருவிகள் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் புலம்பித் திரிவதை நாம் காணலாம். மதுரையில் முதன்முறையாக வெள்ளி விழா கொண்டாடிய படம் திரையுலகின் தலைமகனின்
'மதுரை வீரன்' என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். (வசூல் 180 நாட்களில் ரூ 367000)

அதனை முறியடிக்க "கட்ட பொம்மனை" மல்லுக்கட்டி இழுத்து வெள்ளி விழா ஓட்டினாலும் வசூலில் பல்லிளித்து விட்டதை நாம் அறியாவிட்டாலும் கணேசனின் கைபிள்ளைகள் நன்கு அறிவார்கள்.வீ.பா.க.பொம்மன் 181 நாட்களின் பட்டறை வசூல் வெறும் ரூ 287000. தான். அதற்கு அடுத்தாற்போல்
வெளிவந்த "பாகப்பிரிவினை"
ஓரளவு சுமாராக போனதால் படத்தை ஜவ்வு மிட்டாய் ரேஞ்சுக்கு இழுத்து 216 நாட்கள் ஓட்டி புளகாங்கிதமடைந்தனர் கைபுள்ளைங்க. பட்டறை வசூல் ரூ 336000.

அதன்பிறகு வந்த
"எங்க வீட்டு பிள்ளை" மதுரை சென்ட்ரலில் 176 நாட்கள் ஓடி சாதனை வசூலை பெற்றது.(385000) அதுவரை வெளியான அனைத்து படங்களையும் துவம்சம் செய்தாலும் 176 நாட்களில் தூக்கப்பட்டது. "மதுரைவீரனு"ம் சென்ட்ரலில் வெளியாகி "பாகப்பிரிவினை"யை காட்டிலும் அதிக வசூலை பெற்றாலும் 181 நாட்களில் தூக்கப்பட்டது. (வசூல் 357000)இரண்டுமே சிவாஜி படங்கள் ஓட்டக்கூடிய தியேட்டர்.

"நாடோடி மன்னன்" மிகக் குறுகிய காலத்தில் 133.நாட்களில் அதிக வசூல் பெற்ற படம்.(ரூ322000) இந்த மூன்று படங்களை காட்டிலும் மிகக் குறைந்த வசூலை பெற்ற "பாகப்பிரிவினை"யை மட்டும் எப்படி 216 நாட்கள் ஓட்டினார்கள் என்றால் அதுதான் கைபுள்ளைங்களின் சாமர்த்தியம்.அதன்பிறகு வெளிவந்த "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" இரண்டுமே 4 லட்சத்தை தாண்டி வசூல் பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. ஆனாலும் 200 நாட்கள் கூட ஒட்டப்படவில்லை.

அதன்பின் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்" 217 நாட்கள் ஓடி ஒரு புது சாதனையை உருவாக்கியது. சரியாக 31 வாரங்களில் எடுக்கப்பட்டது. ஓட்ட வேண்டும் என்றால் வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஓட்டி எடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. மேலும் படத்தின் கடைசி நாட்கள் வரை ஒரு நாள் வசூல் 500 க்கும் குறையவில்லை.
படம் மேலும் சில வாரங்கள் ஓடக்கூடிய தகுதிபெற்றும் படத்தை ஓட்டாமல் தூக்கி விட்டார்கள்.

படத்தை பார்த்த பார்வையாளர்கள் அடிப்படையில் பார்த்தால் "உலகம் சுற்றும் வாலிபனை" சுமார் 7.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் கண்டுகளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் "பாகப்பிரிவினை"யின் மொத்த பார்வையாளர்கள் 5.5 லட்சத்தை தாண்டவில்லை என்பதை கைபிள்ளைகள் உணர வேண்டும். இதன்பிறகு வந்த "உரிமைக்குரல்" 200 நாட்கள் ஓடி வசூல் ரூ 7 லட்சத்தையும் தாண்டி சாதனை படைத்தது.

இப்படி ஒரு படம் மட்டும் அவர்களுக்கு கிடைத்திருந்தால் 1 வருடம் ஓட்டி மகிழ்ந்திருப்பார்கள். என்ன செய்வது கைபிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே! கிடைக்க!வில்லையே! என்ன பார்க்கிறாய்! அந்த இழுவை மன்னன் யாரென்றா? அதோ அந்த கண்ணாடியை என் முகத்துக்கு நேரா திருப்பு. சாட்சாத் அந்த இழுவை மன்னன் நானேதான் என்கிறாரா கைபிள்ளை நாயகன்.........ksr.........

fidowag
15th November 2020, 06:50 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*11/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வீட்டில் எம்.ஜி.ஆர். பக்தரின் குடும்பத்தில் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளனர் என்பதற்கு உதாரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.சங்கரன் ,பி.எஸ்.சி.,எம்.ஏ.எம்..எட் .என்பவரை சொல்லலாம் .* அந்த குடும்பத்தின் சார்பில் சகாப்தம் நிகழ்ச்சியை பற்றி பாராட்டி, ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்று வந்துள்ளது .அதில் இந்த நிகழ்ச்சியின் தொடர்*தற்போது 150 நாளை கடந்து வெற்றிநடை போடுகிறது அதற்கு எங்களது நல்வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி மேலும் 500, 1000 என்று தொடரவேண்டும் என்பது எங்கள் விருப்பம் .* என்று எழுதி இருக்கிறார்கள் . மற்ற பட்டதாரிகள் பற்றி நான் குறிப்பிட்டே ஆகவேண்டும் .* திரு.சங்கர் அவர்களின் மனைவி திருமதி சுமதி சங்கர் .மகள் எஸ்.ப்ரியா* பி.எஸ்.சி.,எம்.ஏ., பி.எட். , மருமகன் திரு.சந்திரமோகன் பி.எஸ்.சி., எம்.ஏ..பி.எட்.* அறிவியல் ஆசிரியர்**,பேத்தி டாக்டர்* மோனிகா, எம்..பி.பி.எஸ்.,* இளைய பேத்தி* ப்ரீத்திகா* எம்.பி.பி.எஸ்., இரண்டாம் வருடம் .கள்ளக்குறிச்சி உலகப்ப செட்டி தெருவில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் சகாப்தம் நிகழ்ச்சியின் 150 வது* தொடரை பார்த்து மகிழ்ந்ததாகவும், தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வருவதாகவும்* நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்கள் இப்படி குடும்பம் குடும்பமாக சகாப்தம் நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருப்பதே அந்த மகோன்னதமான மாமனிதரின் புகழ் மேலும் மெருகேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக உள்ளது .**

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சிறு* *வேடங்கள்**, துணை வேடங்களில் நடித்து வந்தாலும், கதாநாயகன் ஆன பிறகு, பன்முக தன்மை வாய்ந்த கலைஞராக+உருவானார் .**அதாவது திரைக்கதை , வசனங்கள், பாடல்கள், இசை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு , சண்டை*காட்சிகள்* என்று திரையுலகில் அனைத்து விஷயங்களையும் கற்றறிந்தவர் .* 1958ல் நாடோடி மன்னன் படத்தை*தயாரித்தபோது ,அந்த படத்தில்*உலக மக்களுக்கு*ஜனநாயகத்தை போதிப்பது,* மன்னராட்சிக்கு**எதிரான* தத்துவத்தை*எடுத்துரைப்பது , மக்களாட்சி மூலம்* என்னென்ன நல திட்டங்கள்*செய்ய முடியும்*என்று கதையமைப்பில் புதுமையை*புகுத்தி , அந்த காலத்தில் யாரும்*பேசாத, சொல்லாத கருத்துக்களை*மக்களுக்கு*அறிமுகம் செய்தார் .**இரட்டை வேடத்தில்*நடித்த* எம்.ஜி.ஆர். இரட்டையர்களை ஒன்றிணைக்கும் காட்சி*பற்றி முடிவெடுக்க*ஒரு நிபுணரை கலந்து ஆலோசித்தார் . காமிரா கோணங்கள், சண்டை காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக*அமைய*வேண்டி*பலவிதமான*அரங்கங்களை * அமைத்து*,இப்படி ஒவ்வொரு துறையிலும்*தன்*கனவுகளை விதைத்தார் .* அந்த கனவுகளை நனவாக்க, வேண்டிய பணம் திரட்டி*முதலீடு செய்தார் .* இந்த படம் வெளியானபோது, திரையுலகில் இருந்த*அத்தனை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவரை*பார்த்து வணக்கம் சொல்லும்படி தகுதிகளை*வளர்த்து* கொண்ட*சிறந்த*இயக்குனர், தயாரிப்பாளர்*என்று பெயரெடுத்தவர் .* இந்த வெற்றிகளுக்கு காரணம்*அவருக்கு*24 மணி நேரமும் இருந்த*தொழிற்*சிந்தனையே .**


அடிமைப்பெண் படத்தை தயாரிக்கும்போது பல்வேறு, புதுவிதமான*உடை அமைப்புகளில் கவனம் செலுத்தினார். அதற்காக*பல ஆங்கில*படங்களான,பென்* ஹர்*, போன்ற, சாதனை*படைத்த**படங்களை*பார்த்தார் . தன்னுடைய உதவியாளர்களுடன் படங்களை*பார்த்து ஆலோசனை கேட்டு, காட்சிகளை அமைப்பது பற்றி முடிவெடுப்பார் .* இந்தி நடிகர்*ராஜ்கபூர்*தந்தை பிருத்விராஜ்கபூர் நடித்த*படத்தை*பார்த்துள்ளார். சில*படங்களில் உள்ள முக்கிய*காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள்* ஆகியவற்றை பார்த்து* அதன்படி சில*மாற்றங்கள் செய்து காட்சிகளை அமைக்க* உதவியாளர், இயக்குனருடன் ஆலோசிப்பார் .* அடிமை பெண் படத்தில்*பல காட்சிகளில் கழுத்தில்*காலர்*போல* *பல வண்ணங்களில் செய்த*ஒரு பிளாஸ்டிக் பட்டையை*அணிந்து நடித்தார். இதற்கு*யோசனை,**தூண்டுகோலாக இருந்தது என்னவென்றால் ,குண்டடிபட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது சில*மாதங்கள்*கழுத்தில்*மாவுக்கட்டுடன் இருந்தார். 1967 பொது தேர்தலில் கூட* இந்த மாவுக்கட்டுடன் காட்சி அளித்த*புகைப்படம்தான்*தமிழகம் எங்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டு* அன்றைய தி.மு.க. அமோக வெற்றி பெற்று ,பேரறிஞர் அண்ணா முதல்வராகுவதற்கு* பெரிதும் துணை புரிந்தது .* அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த உடைகள், அன்றைய கால கட்டத்தில், தமிழ் திரையுலகிற்கு புதுமையாக இருந்தது . அது மட்டுமல்ல*அந்த உடைகள் வேறு எந்த நடிகருக்காவது பொருந்துமா என்பது சந்தேகம். ஏனென்றால் எம்.ஜி.ஆர். அவர்கள்* தீவிர*உடற்பயிற்சி மூலம் தன் உடலை*கட்டுக்கோப்பாக வைத்திருந்ததுடன், எந்த உடை அணிந்தாலும், அது அவருக்கு*பொருத்தமாகவும், எடுப்பாகவும் இருந்தது என்பதே . இப்படி ஒவ்வொரு படத்திலும், புதுமையை புகுத்துவது, தன் திறமைகளை வளர்த்து* கொள்வது,* அதிகரித்து கொள்வது, மற்ற நடிகர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி கொள்வது, வித்தியாசமாக காட்டி கொள்வது , மக்களின் ரசனை அறிந்து*,அவர்கள் ரசிக்கும்படி ,காட்சிகள், பாடல்கள், திரைக்கதை அமைத்து வெற்றி படங்களாக*அளித்ததால்தான்* இன்றும்*மக்கள் திலகமாக*புகழப்படுகிறார் .**


திரு.கா*. லியாகத் அலிகான் பேட்டி* :* ஒருமுறை அமைச்சர் காளிமுத்து என் கையை*பிடித்து நன்றாக குலுக்கிவிட்டு மிகவும் நன்றி லியாகத்*என்று பாராட்டினார் .நான் அவரிடம்*சொன்னேன். இதில்*செய்வதற்கு ஒன்றுமில்லை*தலைவர் எம்.ஜி.ஆர். மந்திரிசபையில் அமைச்சராக உள்ள திரு.காளிமுத்து*அவர்கள் எனக்கு*நன்றி சொல்ல வேண்டியது இல்லை ..இருப்பினும் அவர் நன்றியை குறிப்பிட்டு பேசிய பிறகு, இன்னும் 3 நாட்களில்*பட்ஜெட்*தொடர் ஆரம்பமாக*உள்ளது .* அதற்குள்* சமூக*ஆய்வு நடத்தி 300 சனோலா எண்ணெய் பாட்டில்கள் கொடுத்துவிடும்படி சொன்னார்.*. அதன்படி* 234 எம்.எல்.ஏக்கள், சில*அதிகாரிகள்* என்று**கணக்கிட்டு 300 சனோலா*எண்ணெய் பாட்டில்களை கொண்டு*வந்து வைத்துவிட்டோம் .அதை முறைப்படி வேளாண்துறை அமைச்சர் காளிமுத்துவிடம் தெரிவித்துவிட்டேன்.* அவரும் பட்ஜெட்*தொடரின்போது* அனைவருக்கும் அக்ரோ*வாரியத்தின் மூலம்* சனோலா*எண்ணெய் பாட்டில் வழங்கப்படும் என்று அறிவித்தார் .அடுத்த 1 மணி நேரத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும்* சனோலா*எண்ணெய் பாட்டில் கொடுக்கப்பட்டது .* அப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவையில் இல்லை. மேலே தன்னுடைய அலுவலத்தில் இருந்துள்ளார் .* இந்த விஷயம் முதலில் அவருக்கு தெரியப்படுத்தவில்லை*. பின்பு தலைவர் அவர்கள் மாலையில்*காரில்*புறப்படும்போது நானும்*அண்ணன்* காளிமுத்துவும் இணைந்து*அனைவருக்கும் சனோலா*எண்ணெய் பாட்டில்கள் கொடுத்தோம்.*உங்களுக்கான சனோலா* 5 லிட்டர் எண்ணெய் பாட்டிலை வாங்கி கொள்ளுங்கள் என்றேன் . என்ன இது. இந்த வழக்கம் புதிதாக உள்ளது என்றார். அண்ணே, இது வழக்கமாக*கொடுப்பதுதான் என்றதற்கு,* கொடுப்பதற்கு முன்பு என்னிடம் அனுமதி வாங்கினீர்களா , யாரிடம்*அனுமதி பெற்றீர்கள்..இதற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா*. உடனே கொடுப்பதை நிறுத்து என்றார் . நான் உடனே பதறிவிட்டேன். இருந்தாலும் தைரியத்தை*வரவழைத்து கொண்டு*,அண்ணே* உங்களுக்கு தெரியாமலே*எல்லோருக்கும் கொடுப்பதாக அறிவித்துவிட்டு ,கொடுத்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள் என்றேன் .***ஒரு நிமிடம் யோசித்தபடி என்னை முறைக்கிறார் . அவர் முறைக்கிறாரா அல்லது எச்சரிக்கை விடுக்கிறாரா என்று ஒரு கனம்*தெரியவில்லை .*நான் 5 லிட்டர்*சனோலா எண்ணெய் பாட்டிலை*நீட்டியபடி நின்று இருந்தேன். பிறகு இது என்ன, யாருக்கு*என்றார்.*அண்ணே ,இது உங்களுக்காகத்தான் என்றேன் . எனக்கெல்லாம் வேண்டாம் .நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றார். இல்லை அண்ணே* ,நீங்கள் வாங்கினால்தான் நன்றாக இருக்கும் என்றேன் . வாங்காமல் இருந்தால் என் மனம் சங்கபடப்படும் என்று நினைத்து , தன்* உதவியாளரிடம் கொடுக்க*சொல்லி, வண்டியின்*பின்புறம் வைக்க சொன்னார் .* ஆனால் பணம் கொடுக்காமல் நான் வாங்க மாட்டேன்**இதன் விலை என்ன என்று கேட்டார். அண்ணே* இதன் விலை ரூ.90/-தான் என்றேன் .அந்த காலத்தில் சனோலா 5 லி.பாட்டில் விலை அவ்வளவுதான் .* உடனே பாக்கெட்டில் இருந்து ரூ.100/- எடுத்து கொடுத்து , மீதி 10 ரூபாயை*நீயே வைத்து கொள். இதற்கான பில்லை*கட்டிவிட்டு*தகவல் கொடு என்றார் . அரசு பணத்தை கூட*தவறாக உபயோகப்படுத்த கூடாது* என்று சொல்லிஇலவசமாக பெற்று கொள்ள மறுத்து*, தன் சொந்த பணத்தை*கொடுத்து, மீதி பணத்தை என்னையே வைத்து கொள்ள*வைத்து ,அதற்குரிய பில்லை*முறையாக கட்டிவிடு* என்று சொன்ன*முதல்வர் எம்.ஜி.ஆரின்*செயல்பாட்டை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஒரு முதல்வராக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பதற்கு*முன்னோடியாக, மற்றவர்களுக்கு படிப்பினையாக*, மறந்தும் தவறு செய்யாதவராக வாழ்ந்து காட்டினார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுசேமிப்பு துறையின்*துணை தலைவராக இருந்தபோது பேரறிஞர் அண்ணா*முதல்வராக இருந்து அவருக்கு*தனியாக*ஒரு* தொலைபேசி எண்* கொடுத்திருந்தார் . அரசு,மற்றும் அலுவலக வேலை குறித்து பேசும்போது*தான் அந்த தொலைபேசியில் பேசுவார்*. தன் சொந்த*வேலைக்கு, விஷயத்திற்கு பேசுவதாக இருந்தால், அலுவலகத்தில் ஒரு பெட்டி இருக்கும். அதில் அன்றைக்கான கட்டணம்*25 பைசாவை*அந்த பெட்டியில் போட்டுவிட்டுத்தான் பேசுவது வழக்கம்.* இப்படி தலைவர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை முறையை*நெறியோடு* நடத்தி, வாழ பழகிய*அந்த தலைவரிடத்தில்வாழ பழகிய*என்னை போன்ற தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம்**அதுபோன்ற அவருடைய சிந்தனைகளில்* வளர்ந்த*,வாழ்ந்த,காரணத்தினால்தான் அவருடைய நல்ல பழக்க வழக்கங்கள்,*உடற்பயிற்சி செய்து உடலை*கட்டு கோப்போடு வைத்து கொள்ளுதல்,தோற்ற பொலிவை* பேணி காப்பது*போன்ற விஷயங்களில் என்னை போன்றவர்க;ள்*முழு கவனம் செலுத்தி வந்தோம் . இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது*ஒருவன்* *வீட்டில்* உணவருந்துவதாக இருந்தால்***அது பிரியாணியா*அல்லது பழைய சோறா என்பது எவருக்கும் தெரியாது.* ஆனால் உன் முக பொலிவு தோற்ற பொலிவுடன் இருந்தால்*மட்டுமே உன்னை மதிப்பார்கள், அவர்களும் அதை* போல இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளதாக சொல்வார்கள். அது போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்* அந்த கருத்தை*தன்னுடைய வாழ்க்கையில்* கடைபிடித்தார் .* நபிகள் நாயகம் ஏதாவது வாசனை திரவியங்கள் கிடைத்தால் பூசி கொள்வதில் அக்கறை காட்டுவார் . தன் சகாக்கள் எப்போதும் தோற்ற பொலிவுடன் இருக்கவேண்டும் என்பதில்*கவனம் செலுத்தி* வலியுறுத்தி பேசுவார். அதுபோல*தானும் இருக்க வேண்டும் என்று விரும்புவார் . அதுபோல*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் லுங்கி* கட்டாத முஸ்லிமாக, சிலுவை அணியாத கிறிஸ்துவாக, நெற்றியில் பட்டை போடாத*இந்துவாக , மொட்டை போடாத**புத்தனாக*பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எம்மதமும் சம்மதம் ,என்று சொல்லி எல்லா மதங்களிலும் உள்ள நல்ல பல கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு*, அதன்படி, தன்னை வழிநடத்தி, நாட்டில் மத கலவரங்கள், ஜாதி கலவரங்கள் என்கிற சண்டைகளே இல்லாத அளவில் ஆட்சி புரிந்த,அற்புத**முதல்வர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த வகையில்*. அண்ணாவின் வழியில்**பின்பற்றிய தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் யாருக்கும்*சளைத்தவர் அல்ல ..**


எதிர்க்கட்சி தலைவராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றதும்*,, பெருந்தலைவர் காமராஜுக்கு காஸ்மோபாலிடன் கிளப்பில்*சிலை*அமைத்து பெருமை சேர்த்தார்*என்பது வரலாறு . அரசியலில் பேரறிஞர் அண்ணாவும், காமராஜரும் எதிரெதிர் துருவங்களாக* இருந்தாலும் , ஒரு தமிழனாக இருந்து ,தமிழகத்திற்கு* நீங்கள் செய்த சேவைக்கு,பாராட்டி* உங்களுக்கு சிலை*வைக்கிறோம்*என்று அவர் சம்மதத்தை* கேட்டதோடு, அந்த சிலையை* முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவை*கொண்டு* திறந்து*வைக்க* ஏற்பாடு செய்யும் அரிய வாய்ப்பை*உருவாக்கி காட்டிய* பேரறிஞர் அண்ணா வழியில்**இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெறும் நேரத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலையைதனது சொந்த செலவில்**திறந்து வைத்தவர்தான் நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆளும்*கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் எப்போதும்*,என்றைக்கும் ஒரே நிலையோடு, சமமான எண்ணத்தோடு ,அனைவரையும் சமநிலையில் நடத்தி அனைத்து தலைவர்களுக்கும் ஒரு பாடமாக, படிப்பினையாக வாழ்ந்து காட்டிய தலைவர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.* இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.உறவு சொல்ல ஒருவரின்று வாழ்பவன் - பாசம்*

2.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி மன்னன்*

3.சின்னவளை , முகம் சிவந்தவளை - புதிய பூமி*

4.தாயில்லாமல் நானில்லை*- அடிமைப்பெண்*

5.திரு. கா.லியாகத் அலிகான் பேட்டி*

orodizli
16th November 2020, 09:02 AM
நம் இதயதெய்வத்தின் சென்டிமென்ட் 2020 இலும் தொடரும் அதிசயம்..

ஒரு காலத்தில் தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு திரையரங்கம் புதிதாக கட்டப்பட்டால் அங்கு திரை இட படும் முதல் படம் நம்ம வாத்தியார் படங்களே..

தீபாவளி வந்தால் போதும் தலைவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

1945இல்.....மீரா

1948 இல்...மோகினி

1960 இல் ....மன்னாதி மன்னன்

1961 இல்....தாய் சொல்லை தட்டாதே..

1962 இல் விக்கிரமாதித்தன்...

1963 இல்.....பரிசு..

1964 இல் படகோட்டி

1965 இல் ....தாழம்பூ

1966 இல்.....பறக்கும் பாவை.

1967 இல் ....விவசாயி

1968 இல் காதல் வாகனம்...

1969 இல்....நம்நாடு

1971 இல்....நீரும் நெருப்பும்..

1975 இல்....பல்லாண்டு வாழ்க.

இந்த படமே தலைவர் இருக்கும் போது தீபாவளி அன்று கடைசி படம்...

1990 இல்....அண்ணா நீ என் தெய்வம்....அவரச போலீஸ் ஆகி தலைவர் .........போது வந்த தீபாவளி படம்.

பல தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் துவங்க பட்ட போதும் அவற்றில் வந்த முதல் படம் தலைவர் படங்களே.

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் படம் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்.

இன்றும் கூட கொரோனோ தடை முடிந்து தமிழகம் எங்கும் இந்த தீபாவளிக்கு திரை இட பட்ட அரங்குகளில் 90 சதவிகிதம் தலைவர் படங்களே....

வரலாறு தலைமுறைகள் தாண்டி தலைவருக்கு தலைவருடன் மட்டுமே என்றும் தொடரும்.

நன்றி...வாழ்க தலைவர் புகழ்...

உங்களில் ஒருவன்...

இவை இப்படி நடக்க காரணம் ஏன் என்றால் உண்மையில் .....

அவர் ஒரு சரித்திரம்..........சகாப்தம்... அபூர்வ தோன்றல்...

orodizli
16th November 2020, 09:09 AM
# இருட்டிலிருந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் #



நேற்று தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்த நம் சொந்தங்களே மீண்டும் ஒரு முறை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Corona virus dicease,

World Health Organization 2019 இல் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வைரஸ் ஒன்றுக்கு covid 19 என்று பெயர் சூட்டினார்கள்,

இந்த வைரஸ் தாக்கம் நம் இந்தியாவை மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை உண்ண வழியின்றி பெரும் துயரத்தில் தள்ளி விட்டது,
குறிப்பாக தினசரி கூலி வாங்கி பிழைத்த ஏழை மக்களை மட்டுமல்ல பெரிய உத்தியோகங்களில் இருந்தவர்களைக் கூட பஞ்சப் பராரிகளாக்கி விட்டது,
அந்த வகையில் இந்த வருட தீபாவளி மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமையவில்லை,

நம் இந்தியாவில் மட்டும் பத்து கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்,

லாக் டவுன் காலத்தில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 14.5 டன் பழைய தங்கம் பொது மக்களால் வறுமையின் சுமையால் விற்கப்பட்டிருக்கிறது

இந்தியாவில் Economical Recession என்னும் பொருளாதார மந்த நிலை வந்து விட்டதாக உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது,

நான் இதையெல்லாம் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் அடுத்து வரப்போகும் 2021 ஆம் ஆண்டாவது அனைத்து மக்களுக்கும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும்,

நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வறுமை காரணமாக சிவகாசியில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு " குட்டி ஜப்பான் " என்று சொல்லக்கூடிய அளவுக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதோடு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றது,

ஆனால் சமீப காலமாக சுற்றுப்புற சூழலை காரணம் காட்டி நிறைய மாநிலங்களில் பட்டாசை தடை செய்து விட்டார்கள்,

வருடம் முழுக்க எந்த கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் அள்ளி உமிழும் கரும் புகையைப்பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை மாறாக எத்தனையோ பேரின் வாழ்வாதாரமாக விளங்கும் வருடத்தில் நான்கைந்து நாள்களே வெடிக்கப்படும் இந்த பட்டாசுகளால் சுற்றுச் சூழல் கெடுவதாக சொல்கிறார்கள்,

லாக் டவுன் காலத்தில் வாகனங்கள் ஓட தடை செய்யப் பட்ட போது ஆக்ராவின் தாஜ்மஹாலை தூரத்தில் இருந்து கூட தெளிவாக பார்க்க முடிந்தது,
ஆனால் பட்டாசை மட்டும் தடை செய்து இன்று சிவகாசி நகரமே இருளில் மூழ்கி விட்டது,

அடுத்த வருடமாவது இந்த துயரங்கள் அனைத்தும் நீங்கட்டும்,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் அணுகுண்டு வீசி
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட போதும் ஜப்பான் மீண்டும் கடும் உழைப்பின் மூலம் உலக அரங்கில் விஸ்வரூபம் எடுத்தது
அதுபோல் இந்த கொரோனா உலகத்தையே முடக்கிப் போட்டாலும்
அடுத்த வருடத்துக்குள் பீ னிக்ஸ் பறவை போலநாம் அனைவரும் கடின உழைப்பின் மூலம் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ...


சரி இனி விஷயத்துக்கு வருவோம்...

இந்த பேரிடர் காலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்த உடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பெரிய நகரங்களிலும் விநியோகஸ்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தலைவர் படங்களை திரையிடத் தொடங்கி விட்டார்கள்,

எனக்குத் தெரிந்து மகா நகரங்களில் "தர்மம் தலை காக்கும், ரகசியப்போலீஸ் 115, நம்நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, எங்க வீட்டுப் பிள்ளை, சிரித்து வாழ வேண்டும், காவல் காரன், ஆயிரத்தில் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், நீதிக்குத் தலை வணங்கு முதலான படங்கள் வெற்றி முரசு கொட்டி பவனி வருகிறது ( கிடைத்த தகவல் படி, இன்னும் பல படங்கள் திரையிட்டிருக்கப்பட்டிருக்கலாம் ) இப்படி நம் தலைவரின் மறு வெளியீட்டு சாதனைகள் மறுபடியும் தொடர்கிறது,

திரவுபதியின் மானம் காக்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எப்படி துகில் தந்து காத்தாரோ அதே போல விநியோகஸ்தர்களின் மானம் காத்த கிருஷ்ண பகவான் நம் தலைவர் என்று சொன்னால் அது மிகையாகாது,

இதே போல் கணேசனுக்கு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தது என்றால் இதற்கு முன் வலை தளங்கள் அனைத்தும் திணறி இருக்கும்,

பாருங்கையா பாருங்க எங்க அய்யனோட புகழ்
எப்பூடி என்று வானத்துக்கும் பூமிக்கும் கணேச குஞ்சுகள் குதித்திருக்கும்

ஆனால் நாம் நிறைகுடம் தளும்பாததைப்போல அமைதியுடன் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

ஆனால் இந்த கனடா மன்னாரன் கம்பெனி தங்க வேலு, போண்டா மணி க்ரூப்புகள் கொசுத் தொல்லை தாங்க முடியல ...

1964 இல் வெளியாகி முதல் முறையோடு மண்ணோடு மண்ணாய்ப் போன " "கொசு ராத்திரி, தேவிகா கட்டளை, கை கொடுக்காத தெய்வம், சிவப்பு விளக்கு, குறட்டை முத்து இன்னும் என்னவோ ஒண்ணு இந்த படங்களுக்கெல்லாம் நினைவு அஞ்சலி செலுத்தி பதிவு வேற போட்டிருக்கிறார்கள்,

தொடருங்கப்பா உங்க நினைவேந்தல் நிகழ்ச்சிய, காரணம் வெளியிட்ட கையோட அனைத்து தரப்புக்கும் பெரிய போர்வைய முக்காடா கொடுத்த படங்கள் அல்லவா,
அதனால் மறக்காம ஒவ்வொரு வருடமும் தொடருங்கள்,

அப்புறம் நூறு நாட்கள் ஓடியும் தயாரிப்பாளர்களின் தலையில் பெரிய குற்றாலம் துண்டு போட்ட படங்களைப் பற்றி பார்ப்போமா?

பழைய குப்பைகளை விட்டு விடுவோம்
கொஞ்சம் 1967 லிருந்து பாப்போம்

" ஊட்டி வரை உறவு "

அய்யோ பாவம் கோவை செழியன் அந்த படத்தை 100 நாள் ஓட்ட தான் பட்ட கஷ்டத்தை, படத்தினால் அடைந்த நஷ்டத்தை பின்னாளில் மூக்கை சீந்திக் கொண்டே பிலிமாலயா இதழில் பேட்டி கொடுத்ததை கணேசன் குஞ்சுகள் அறிவார்கள் ( கணேசனும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார் )

ஒரே ஒரு அரங்கில் ஓட்டப்பட்ட 100 நாள் படம்" ஞான ஒளி " அந்த படத்தை ஜேயார் மூவீஸ்
தென்காசி சங்கரன் ஆறுமுகம் சகோதரர்களிடம் பேசும் பட வாசகர்கள் வெற்றிப்படமா? என்று கேட்டபோது அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று பதில் அளித்தார்கள்,

"தவப் புதல்வன் " படம் பற்றி திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் சொன்னது " படத்தில் மாலைக் கண் நோய் பாதித்தது சிவாஜிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சேர்த்துதான் ( 100 நாள் சாதனை பைலட் அரங்கம் என்று நினைக்கிறேன் )

" 1975 இல் வெளியான
" அவன்தான் மனிதனைப் பற்றி தினத்தந்தி காலச் சுவடுகள் பகுதியில் திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்கள் கவலையோடு குறிப்பிட்டது " அந்தப் படம் 100 நாட்கள் ஓடினாலும் எங்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது,

அதே ஆண்டில் வெளி வந்த " மன்னவன் வந்தானடி " திரைப்படம் பற்றி சமீபத்தில் மறைந்த சிவாஜி ரசிகன் என்று பறை சாற்றிக் கொண்ட எழுத்தாளர் சுதாங்கன் அவர்கள் " தின மலர் " பல்சுவை மலரில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய " செலூலாயிட்சோழன் " தொடரில் மிகப்பெரிய தோல்விப்படம் என்று சொன்னாரோ இல்லையோ மய்யம் இணைய தளத்தில் கணேசன் குஞ்சுகள் துள்ளிக் குதித்தார்கள்
கூடவே அர்ச்சனையும் சேர்த்து திட்டித் தீர்த்தார் கள் " இவன் யாருடைய கையாளோ" என்று,

அதே தொடரில் சுதாங்கன் குறிப்பிட்ட இன்னொரு விஷயம்
" சில சிவாஜி ரசிகர்கள் என்னிடம் கேட்டார்கள்
எம்ஜிஆர் வருடத்துக்கு இரண்டோ, அல்லது மூன்று படம்தான் நடிக்கிறார், ஆனால் சிவாஜி வருடத்தில் நிறைய படங்கள் நடிக்கிறார் எனவே சிவாஜி படங்கள்தான் அதிக வசூல் வரவேண்டும் அப்படியானால் சிவாஜியும் வசூல் மன்னனாக ஏன் நாங்கள் நினைக்கக் கூடாது?

அதற்கு சுதாங்கன் குறிப்பிட்ட பதில் " அவர்களின் வாதம் அவர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் உண்மை நிலவரம் வேறு,
இந்த விஷயத்தில் எம்ஜிஆர் படங்களை ஒப்பிட முடியாது காரணம் அந்த படங்களின் வியாபாரமும், வசூலும் வேறு லெவல், பக்கத்தில் நெருங்கக் கூட வாய்ப்பில்லை,
இதையும் ஒரு சிவாஜி ரசிகனாக நான் சொல்லவில்லை, விநியோக வட்டாரங்கள்
சொல்வது " என்று குறிப்பிட்டிருந்தார்

இப்போது போண்டா மணி, "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி கோஷ்டிகள் புதிதாக ஒரு ட்ரெண்டை கடை பிடிக்கிறார்கள்

வேலை மெனக்கிட்டு "யூ ட்யூப் " பில் உட்கார்ந்து கொண்டு "சித்ராலயா " கோபு சொன்னார் என்று கதை சொல்லுவது,

படம் எடுத்த ஸ்ரீதருக்கு அல்லவா அதன் வலி தெரியும், சும்மா கூட உட்கார்ந்திருந்த அல்லக்கைகள் பேசினால் அது சபையில் எடுபடுமா வைத்தி? ( எலுமிச்சம் பழமும் வச்சிருந்தா நல்லா தலைக்கு தேச்சு குளி)

அடுத்ததா இவர்களின் சென்னை நகர வசூல் மொள்ளமாரித்தனம் பற்றி சங்கர் சார் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டார்,
நாமும் நம் பங்குக்கு கொஞ்சம் தண்ணி தெளிச்சு வைப்போம் சரியா?

இவர்கள் அடிக்கடி சிலாகிப்பது 1972 படங்களைப் பற்றி,
ஆனால் பொத்தாம் பொதுவாக அளந்து விட்டு அமைதியாகி விடுவது,

சரி அதைப் பற்றி பார்ப்போம்

தர்மம் எங்கே? - சட்டியே உடைஞ்சி போச்சு,

தவப் புதல்வன் - பைலட்டில் மட்டும் முக்தாவினால் பாக்கெட்டை தடவித் தடவி ஓட்டிய ஓட்டைப்புதல்வன்,

ஞான ஒளி - சாரதாகிட்ட நெஞ்சில அடிச்சு காட்னதுதான் மிச்சம்,
சங்கரன் ஆறுமுகம் சகோதரர்கள் நெஞ்சுல அடிச்சு அழுததுதான் கடைசி க்ளைமாக்ஸ்

ராசா - சென்னையில் மட்டும் தேவி பாரடைஸ் அரங்கில் ஒரு ஐம்பது நாளைக்கு தில்லுமுல்லு பண்ணி ரிக் ஷாக்காரனை விட கூட வசூல் வந்ததா டமாரம் அடிச்சுட்டு அப்புறம் ராசா கூசா ஆயிட்டார் B &C சென்டர் களில் ராசா 4 வாரம் கூட நடக்க முடியாமல் கோமாவில் படுத்துட்டார்,

பட்டிக் காடா பட்டணமா - மதுரையிலும், சேலம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 3 வாரத்தில் மூக்கையன் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்,

வசந்த மாளிகை - எல்லா இடங்களிலும் ரிக் ஷாக்காரனை முந்த முடியாமல் வாணிஸ்ரீ சீலை புழியிறத பார்த்ததுதான் மிச்சம்

இப்படி ஆறு படத்துல இடிந்த மாளிகையும், பட்டணமும், ராசாவும் சேர்ந்து மூன்றும் ஓடி முடிய ரிக் ஷாக்காரன் காலடியில் மிதி பட்டு சேறாகிப் போன கதையை தலைவரின் ரசிகர்கள் சாந்தி தியேட்டர் வளாகத்தின் உள்ளேயே வந்து போஸ்டர் அடித்து ஒட்டிய
வரலாறு இந்த போண்டா மணிக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்,

அது எப்படிப்பா சென்னையில் மட்டும் தலைவர் படம் வசூல் செய்து முடித்தபிறகு ஏதாவது ஒரு படத்தை சாந்தி மற்றும் கிரவுன், புவனேஸ் வரியில் போட்டு தலைவர் வசூலை விட கூட காண்பிப்பது

உதாரணம் தலைவர் படம் 13 லட்சம் வசூல் செய்த பிறகு கணேசன் படத்தை அதே 13 லட்சத்தை விட கொஞ்சம் கூட காண்பித்து தம்பட்டம் அடிப்பது,
சரி போடுறத ஒரு 15 லட்சமா கணக்கு காட்ட வேண்டியதுதானே?

அதே மாதிரி தலைவர் படம் 23 லட்சம் வசூலா?
நைசா அதை விட 500 ரூபாய் கூட காட்டுவது
சரி ஒரு 30 லட்சமா காட்ட வேண்டியது தானே?

ஒரு இரண்டு நாளைக்கு முன்பு சங்கர் சார் காறித் துப்பாத குறையா எல்லா ஆதாரங்களையும் காட்டி தோலை உரித்திருந்தார்.

தலைவர் படம் வசூல் சாதனை செய்வதற்குப் பிறகு தான் கணக்கு வரும்,
அதையே தலைவர் படத்துக்கு முன்பு சாதனை செய்யத் தெரியாது,

த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு?

அப்புறம் A சென்டர் ஒரு சில இடங்களில் சுமாரா ஓடிய" அண்ணன் ஒரு கோயில் வெற்றிப்படமா?

சென்னை வாந்தி பூந்தி வசூலை மட்டும் எடுத்துப் போட்டு விட்டு மற்ற இடங்களில் வசூலை பார்த்தால் காறி துப்பத் தோன்றும்

அதையே இன்னொரு அல்லக்கை கடலூரில் 40 நாள் ஓடினால் சென்னையில் 100 நாள் ஓடுவதற்கு சமம் என்று கதை வசனத்துடன் வாந்தி எடுத்துள்ளது

சரிதான் எத்தனையோ தலைவர் படங்கள் கடலூர் நகரில் 100, 75, 50 என்று ஓடியிருக்கிறது அப்போ அதெல்லாம் சென்னையில் 500 நாள், 1000 நாள் ஓடுவதற்கு சமமா என்ன?

" தங்கச் சுரங்கம் " படம் தற்போது கிடைத்த தகவல் படி 25 நாளில் 23 லட்சம் வசூலாம்?

அடப்பாவிங்களா இப்படி பச்சையாய் புளுகுகிறீர்களே கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?

ராமண்னா தன் மைத்துனர் ராஜன் பேனரில் இயக்கி படம் படு தோல்வி அடைந்தவுடன் அடுத்து விநாயகா பிக்சர்ஸ் பெயரில் சொர்க்கம் படத்தை எடுத்தார்

ஆனால் விநியோகஸ்தர்கள் ராமண்னாவை தொடர்ந்து தொந்தரவு செய்ததால் " என்னைப் போல் ஒருவன் " படம் முதலில் சென்னையில் வெளியிட முடியாமல் மற்ற மாவட்டங்களில் வெளியிட்ட வரலாற்றை
கொஞ்சம் போண்டா மணி புரட்டிப் பார்க்கட்டும்

அந்த படத்தைப்பற்றி சிவாஜியே " என்னைப் பிடித்து கிணற்றில் தள்ளி விட்டார்கள் " என்று பரிதாபமாக புலம்பிய செத்த கழுதை 23 லட்சம் வசூல் பண்ணுச்சாம்,

கடைசியா ஒரு தும்பா ஒரு அரசியல் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்

எல்லோரும் சொல்வதுதானே

"ஆமை புகுந்த வீடும்
சிவாஜி புகுந்த கட்சியும் உருப்படாது என்று,

அதை நிரூபிப்பது போலவே முன்பு காங்கிரஸ் பிறகு ஜானகி அம்மையார்
இவருடன் சேராமல் ஜானகி அம்மையார் தனித்து நின்றிருந்தால்
நிச்சயம் வெற்றி அடைந்திருப்பார்,
அவரது போறாத காலம்
இந்த அதிர்ஷ்டக் கட்டையுடன் சேர்ந்து அவரும் காணாமல் போனார்,

அடுத்து காமராஜருக்கு துரோகம் செய்யவே இல்லையாம் கணேசன்,
சரிங்க ஆபீசர் இந்திரா அம்மையார் அவசர நிலை கொண்டு வந்த போது காமராஜரை சிறையில் அடைக்கத் துடித்தார் என்பது வரலாறு,

அந்த நிகழ்வுகளினால் தான் காமராசர் மனம் உடைந்து மறைந்தார்,
அப்படி அவர் மறைந்தது ம் கணேசன் ஏன் இந்திரா அம்மையார் காலில் போய் விழுந்தார் என்று விளக்க முடியுமா ஆபீசர்? ( ஒரு ராஜ்ய சபா எம். பி பதவியும், சொத்து பத்துக்கெல்லாம் நல்லா பாதுகாப்பும் கிடைச்சுது சரிதானே ஆபீசர்? )

1953 இல் திருவாரூர் தி. மு. க கூட்டத்தில் அண்ணா, தலைவர், கருணாநிதி எல்லாம் இருந்த போதும் தி. மு க வினர் சிவாஜியை பேச ச் சொல்லி கூச்சல் போட்டார்களாம், இவர் பேசியவுடன் கூட்டம் கலைந்து விட்டதாம் ( தும்பா உனக்கு நல்லா காமெடி வருதடே பரவாயில்ல அப்படியே maintain பண்ணுங்கப்பு )

இந்த நாஞ்சில் தும்பு தான் தமிழக அரசியல் பத்திரிகையில் மனோகரா படம் ஒரே வாரத்தில் 84 லட்சம் வசூல் செய்தது என்று சொன்ன பராக்கிரம பூபதி ( என்னே காலக் கொடுமை? )

அடுத்து குமுதம் பத்திரிக்கை 1983 இல் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதாம் அதில் தலைவர் கணேசனை காட்டிலும் பின் தங்கி தான் இருந்தாராம்,

சரிங்கப்பு அதே குமுதம்
1980 இல் வெளியிட்ட கருத்து கணிப்பில் இனி எக்காலத்திலும் எம்ஜிஆர் ஆட்சிக்கே வர முடியாது என்று கணிப்பு சொன்னது ஆனால் என்ன நடந்தது?

கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் ஒரு 2000 பேரிடம் கருத்து கேட்டால் அதுதான் சரி அப்படித்தானே?

இப்போது சமீபத்தில் பீகார் மாநிலத்தில் தேர்தல் கருத்து கணிப்பு நடந்தது

அவர்கள் சொன்னது என்ன? நடந்தது என்ன ஆபீசர்?
அமெரிக்கா வில் டிரம்ப் ஜெயிப்பார் என்று நம் நாட்டு எண் கணித நிபுணர்கள் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை அறுதியிட்டு உறுதியிட்டு கூறினர்

முடிவு ஜோ பிடன் பதவி ஏற்கப் போகிறார்
அதனால தும்பு இந்த மாதிரி பாப்பா கதையை வெளில சொல்லாதே மூஞ்சி யில் புளுக் என்று யாரும் துப்பிறாம! இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி???!!! இவ்வளவு தப்பாக முட்டு கொடுத்து, சப்பை கட்டு கட்டி, என்னத்த சாதிக்க போரானுங்க?!



தலைவரின் பக்தன்


ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

orodizli
16th November 2020, 09:12 AM
1968 லயே மக்கள் திலகம் "வசூல் சக்ரவர்த்தி" என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த "ரகசிய போலீஸ் 115" விளம்பரம். அதை நிரூபிக்கிறா மாதிரி 10 நாளில் சென்னயில மட்டும் 2 லட்சத்து 37 ஆயிர ம் வசூல். வெறும் 10 நாளில். 1969 ல் வெளியான மாற்று முகாம் படம் ஒன்று விளம்பரம் பாத்தேன்.சென்னையில் 4 வாரம் (28 நாள் )ஓடியே 3 லட்ச்த்து 65 ஆயரம்தான் வசூல். ரகசிய போலீஸ் 4 வாரத்தில சென்னையில்் 4 லச்சத்தை தாண்டிவிட்டார். தமிழ்நாடு பூராம் 4 வாரத்தில் கணக்கு போட்டு பாருங்கள். விளம்பரத்தில் உள்ளபடி மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்று புரியாதவங்களுக்கும் புரியும்..........rr...

orodizli
16th November 2020, 09:22 AM
செல்வராஜ் பெர்னாண்டஸ் என்று ஒருத்தர். அவர் எம்ஜிஆர மரியாதயாகத்தான் எழுதியிருக்கார். அதனால் நாம்பளும் அவரை அவர்,,, இவர் என்று மரியாதயா அழைப்போம். கணேசன்தான் வசூல் சக்கரவர்த்தியாம். செல்வராஜ் பெர்ணான்டாச் சொல்றாரு. எம்ஜிஆரை தேடி தயாரிப்பாளர்கள் போகாதது ஏன்? குறைச்சலான படங்களில் நடிச்சது ஏன்? என்று கேட்கின்றார்.

எம்ஜிஆரை நோக்கி தயாரிப்பாளர்கள் வரவில்லை என்று யார் சொன்னது? முதல்வராகும்போது பல படங்கள் அப்படியே நின்றது. அதில் அண்ணா என் தெய்வம் (2 பாட்டு மொத்தம் 15 நிமிடம்தான் வருவார்) அவசர போலீஸாவும், நல்லதை நாடு கேட்கும் (பாட்டு கிடயாது. மொத்தம் 5 நிமிடம் மட்டும் மக்கள் திலகம் வருவார்) இந்த 2 படமும் அவர் மறைஞ்ச பிறகு வந்தது. இன்னொன்று கணேசன் மாதிரி பணத்துக்காக கண்ட படங்களில் எல்லாம் எம்ஜிஆர் நடிக்க மாட்டார் . பெண்களை விபச்சாரிங்க சொல்ற மாதிரி இருக்குன்னு ராணி லலிதாங்கி கதையை மாத்தச் சொன்னார். முடியாதுன்னாங்க. படத்திலேருந்து விலகிவிட்டார். அதில் அப்புறம் கணேசன் நடிச்சார். காத்தவராயன் அப்படித்தான் கணேசன் நடிச்சார்.

ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் கூட 300 படம் நடிச்சாங்க. அதனால் அவங்க வசூல் சக்கரவர்த்தியா? தென்னக வசூல் சக்கரவர்த்தி யாரு? என்ற கேள்விக்கு பேசும்படம் 1971ல் எம்ஜிஆர் என்று பதில் சொன்னார்கள். (பேசும் படம், கலை, பொம்மை, பிலிமாலயா உட்பட எந்த பத்திரிகைகளும் எம்.ஜி.ஆர்., அவர்களை பாராட்டி போட்டாலும், இல்லை எதிர்த்து கருத்து இட்டாலும்
அவரை எதுவும் கட்டு படுத்தாது என்பது வேறு விடயம்) இது திமுகவினர் சொன்னதா? மார்க்கெட், வசூலுக்கு தகுந்தா மாதரிதான் சம்பளம் தருவாங்க. எம்ஜிஆர விட கணேசன் கம்மியாத்தான் சம்பளம் வாங்கினார். வசூல் சக்ரவர்த்தின்னா ஏன் எம்ஜிஆர விட கம்மியா கணேசனுக்கு சம்பளம் குடுத்தார்கள்? அன்பேவா படத்துக்கு 3 லட்சம் 25 ஆயிரம் எம்ஜிஆருக்கு சம்பளம் குடுத்த ஏவிஎம் உயர்ந்த மனிதனுக்கு கணேசனுக்கு ஒண்ணறை லட்சம் மேல சம்பளம் கிடயாது சொன்னது ஏன்? உங்கள் மார்க்கெட் அவ்வளவுதான் ராஜா. புரிஞ்சுக்கங்க. எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்ற 100% உண்மை மாறவே மாறாது..........rrn...

orodizli
16th November 2020, 07:56 PM
பன்சாயி...

நேற்று இரவு வழக்கம் போல தொலைக்காட்சி சேனல்களை துழாவிக் கொண்டே சென்றேன். திடீரென இன்ப அதிர்ச்சி. டி.வியில் உலகம் சுற்றும் வாலிபன் படம். கண்டு களித்தேன். இதுதவிர, நேற்று பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வியில் அரச கட்டளை. இரவு 7.30க்கு முரசு டி.வியில் தாயின் மடியில். இன்று காலை சன் லைப் டி.வியில் தாய் சொல்லை தட்டாதே. ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா....’ என்று பாடிய பாரதியார் இன்று இருந்திருந்தால் ‘எங்கெங்கு காணிணும் எம்ஜிஆரடா, தம்பி, ஏழு கடல் அவன் வண்ணமடா.... விண்டுரைக்க முடியாத விந்தையடா’ என்று பாடியிருப்பார்.

பாரதியார் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாரதியார் மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னர் தலைவர் ஆட்சியின்போதுதான் அவரது குடும்பத்துக்கு தியாகிகள் பென்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், முதல் மாத பென்ஷன் வந்த அன்று அதை வாங்கிக் கொள்ள பாரதியாரின் மனைவி செல்லம்மாள் இல்லை. அன்று காலையில்தான் அவர் இறந்திருந்தார். ஏன்? சுதந்திர வீரனின் வரலாற்றை விளக்கும் திரைப்படமான திரு.சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கூட தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் (1983 அல்லது 84 என்று நினைக்கிறேன்) வரிவிலக்கு தரப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சியையோ ,ஆட்சியையோ குறை கூறுவதற்காக சொல்லவில்லை. தியாகிகளுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் உரிய மரியாதை அளிப்பவர் தலைவர் என்பதை, அதுவும் பாரதியார் பற்றி பேச்சு வந்ததால் குறிப்பிடுகிறேன்.

சரி.. உ.சு.வா.வுக்கு வருகிறேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். விரைவில் டிஜிட்டலில் பெரிய திரையிலும் காணப் போகிறோம். இந்த படத்தை பற்றி இதுவரை புத்தர் கோயில் மற்றும் ஹோட்டல் துசித் தானி ஆகியவை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். எழுத நிறைய உள்ளது. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது எழுதுவேன். இப்போது, பன்சாயி பாடலை பார்ப்போம்.

அணுசக்தி குறிப்பின் அடுத்த பகுதி ‘ஜப்பானில் உள்ள புத்த பிட்சு வீட்டில் இருக்கிறது’ என்ற ரகசிய குறிப்பை சந்திரகலா படித்ததுமே உடனே நாகேஷ், ‘அண்ணே, ஜப்பானுக்கு போலாம்ணே’ என்றதும் அடுத்த காட்சியே இந்தப் பாடல். மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையமைப்பில். படத்தின் கதையும் ஜப்பானிலேயே முடியும். இரண்டாம் உலகப் போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் முறையே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகள் வீசிய நாள். லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த உலக வரலாற்றின் கறுப்பு நாள். அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிலேயே, அழிவுக்கு காரணமான அணுசக்தி குறிப்பை எதிரிகளின் கைகளுக்கு கிடைக்காமல் தலைவர் கைப்பற்றி அணுஆயுத ஆபத்தில் இருந்து உலகை காப்பாற்றுவது போன்ற கதையமைப்பும், அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு ஏற்றார் போல அங்கு நடத்த எக்ஸ்போ 70 விழாவும், அதை காட்சிப்படுத்திய தலைவருக்கும், இப்போதும் கண்டுகளிக்கும் நமக்கும் இயற்கை அளித்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பன்சாயி பாடலின் ஆரம்பத்தில் சந்திரகலா அணிந்து வரும் உடைதான் ஜப்பானின் தேசிய உடை. புத்த பிட்சு வீட்டில் குறிப்பு உள்ள சங்கேத வார்த்தைகளான தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்று வருமே. அதில் கடைசியாக வரும் ‘கிமோனா’தான் சந்திரகலா அணிந்திருக்கும் உடை. தலைவர் செம ஸ்மார்ட் என்று திரும்ப திரும்ப நான் சொல்லப் போவதில்லை, தெரிந்ததுதானே.

பாடலை படமாக்க தலைவர் தேர்ந்தெடுத்துள்ள லொகேஷன்கள் அற்புதம். ‘தொட்டிலைப் போல நானும்... பிள்ளையைப் போல நீயும்..’ என்ற வரிகள் வரும்போது காட்டப்படும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசம் கண்களுக்கு விருந்து. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடத்தில் ஆறு. அந்த இடத்தில் அன்னபட்சி போன்ற பிரம்மாண்ட படகு போன்ற ஒரு கட்டமைப்பு. அந்த வரிகள் இடம் பெறும்போது மேலே ஓடும் மோனோ ரயில். அந்த இடத்தை தேர்வு செய்ததுடன் மோனோ ரயிலுக்காக காத்திருந்து, நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்தில் அதற்குள் காட்சியை அழகாக எடுக்க எத்தனை திட்டமிடலும் டைமிங் சென்சும் வேண்டும்?

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜப்பானில் இந்தக் காட்சி 1970ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு வீச்சுக்குப் பின் 25 ஆண்டுகளில் ஜப்பான் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு எக்ஸ்போ 70யும் இந்தக் காட்சியில் காட்டப்படும் மோனோ ரயிலுமே சான்று. சிங்காரச் சென்னையிலே இன்னும் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பாடில்லை. மோனோ ரயில் இன்னும் திட்ட வடிவிலேயே இருக்கிறது. இதற்கு மாநில அரசை குறை சொல்லி அர்த்தமில்லை. இரண்டரை ஆண்டுக்கு முன் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை உலகத் தமிழர்களுக்கு ‘மகிழ்ச்சியுடன்’ தெரிவிக்கிறோம்.

அந்தப் பாடலில் வரும் டால்பின் கண்காட்சி. இதற்கு முன் தமிழ் படங்களில் வந்ததில்லை. தலைவர் படம் எடுக்கும்போது சிறப்பானவற்றை எல்லாம் கேமராவுக்குள் அடக்கியுள்ளார். சரியான இடங்களில் அந்தக் காட்சிகளை இணைத்து நமது கண்களுக்கு விருந்தாக்கிய அவரது மேதைமையையும் தொழில்நுட்பத் திறனையும் என்னென்பது? மீன் கண்காட்சியின்போது தலையில் தொப்பியுடன் தடுப்பு கம்பியில் கைகளை ஊன்றியபடி தலைவர் கொடுக்கும் இரண்டு அட்டகாச போஸ்கள் அற்புதம்.

கடைசி பாராவின் போது ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற எரிமலையை காட்டியிருப்பார்கள். படகில் தலைவரும் சந்திரகலாவும் செல்லும் இந்த காட்சியை இன்னொரு படகில் இருந்து படமாக்கியிருப்பார்கள். கேமரா தலைவரையும் சந்திரகலாவையும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிமலையை காட்ட விட்டு விட்டால் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். கேமராக்காரருக்கு நினைவுபடுத்துவதுபோல எரிமலையை நோக்கி தலைவர் சிரித்தபடியே கை காட்டுவார். அவரது கையை தொடர்ந்து செல்லும் கேமரா எரிமலையை காட்டும். இந்த காட்சியை பாடலில் பார்க்க முடியும். இதயம் கவர்ந்த பாடல்களில் ஒன்று..

Courtesy
KALAIVENDHAN...........Vnd...

orodizli
16th November 2020, 07:56 PM
# கம்ப ராமாயணத்தில் கம்பர் தன்னுடைய கவித் திறமையால் படிப்பவர்கள் அனைவரையும் அந்த இதிகாச காவியத்தில் கரைந்து போய் விடும் அளவுக்கு உருகச் செய்யும் பகுதி ஒன்று உண்டு,

அதுதான் "சிறந்த சிவபக்தன் ராவணன்
ராமனால் வீழ்த்தப்பட்ட பிறகு அவனுடைய மனைவி
மண்டோதரி அவனைப் பிரிந்த துக்கத்தை அழுகையோடு கூடிய புலம்பலாக வெளிப்படுத்திய புலம்பல் காண்டம்,

இந்த புலம்பல்தான் கம்ப ராமாயணத்தில் மிகச் சிறந்த கவித் திறன் கொண்டதாக போற்றப்படுகிறது,


அதே மாதிரியான புலம்பல்கள் தான் இப்போது கணேசன் பிள்ளைகள் புலம்பும் புலம்பல்களும்,

தினமும் ஏதாவது ஒரு பெயரில் பதிவு என்ற பெயரில் தலைவரை தரமற்ற முறையில் திட்டுவது,

"டோப்பா"வாம் , பரவாயில்லை , மல்லாந்து படுத்துக் கொண்டு இப்போதா எச்சில் துப்புகிறீர்கள்?

காலம் காலமாக உங்களின் இயலாத் தன்மையை, கேவலமான தோல்வியை, அழுகையை, ஆற்றாமையை இப்படி ஏதாவது ஒரு பெயரை சூட்டி அர்ச்சனை செய்வதில் உங்களுக்கெல்லாம் ஒரு ஆத்ம திருப்தி,

ஆனால் தலைவரின் பக்தர்களாகிய நாங்கள் ஒருகாலமும்
கணேசனை "குடிகாரப்பய, கருங்குரங்கு, அண்டா வயிறன், டிக்கி தள்ளி என்றெல்லாம் ஒரு காலமும் சொல்வதில்லை அது உங்களுக்கே தெரியும்,

இந்த "படித்துறைபாண்டி " எங்குள்ள ராசாவோ தெரியவில்லை,
யாருக்கும் தெரியாத ரகசியம் இந்த அல்லக்கைக்கு தெரிந்திருக்கிறது,

தலைவர் "ஜென்டாவின் கைதி " என்ற ஒரு கதையின் பின்னணியில் நாடோடி மன்னனை இயக்கியதை அவரே பல தடவை வெளிப்படுத்திய ஒரு விஷயம் ( இந்த புண்ணாக்கு, ட்யூப்லைட் இப்போ வந்து கேணத் தனமா தகவல் சொல்றார்
அதுல இளிப்பு வேற,
சகிக்கல சுட்ட அப்பள கூமுட்டை )
"ஸ்லேவரி மதர் " நாவலை தழுவி " அடிமைப்பெண் "படம் எடுத்தாராம்,

இது யாருக்கும் தெரியாதா அண்டிப்பருப்பு?

இன்னொரு கதை வேற விட்டுருக்கான் சல்லிப்பய " நாடோடி மன்னன் " படத்தின் இறுதியில் எமது அடுத்த தயாரிப்பு " அடிமைப் பெண் " என்று டைட்டில் காட்டப்பட்டதாம்,

எனக்கு தெரிந்து " நான் ஆணையிட்டால் " படத்தில் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடலின் இடையில் அடிமைப்பெண் விளம்பரம் காட்டப்பட்டது,

ஆனால் இந்த புண்ணாக்கு, தவிட்டு மட்டை இப்படி சொல்றான் ( ராத்திரி போட்டது தெளியாம வந்து எழுதிருப்பான் போல)

சரி நீயா அந்த நாவல்களின்
authorized person?
இல்ல உனக்குத்தான்
Power of attorney தந்திருக்குதா என்ன?

அடுத்து இன்னொரு மரியாதை ராமன்
அவரே கேள்வியும் கேட்டு அவரே பதிலும் சொல்லியிருக்கிறார்.

கருப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் பட்டிக்காடா பட்டணமா படத்துக்காம், கலர் படங்களில் திரிசூலம் படத்துக்கு அதிக வசூலாம்,

விக்கிபீடியா காரனே
திரிசூலம் படத்தின் வசூல் விபரம் என்ன என்பதை தெளிவாக கொடுத்து விட்டான்,

அப்புறம் 40 லட்சம் கூட வசூல் வராத பட்டணம் படம் அதிக வசூலாம்?
ஏற்கனவே 50 நாள் வசூல் விபரம் அருண் பிரசாத் மூவீஸ் சார்பில் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விபரம் தெரிந்து கொண்டே இப்படி ஒரு பீலா,

மதுரை, சேலம் இந்த ஊர்களைத் தவிர எங்கேயாவது இந்த
படம் "ரிக் ஷாக்காரன் பக்கத்துல கூட வர முடிந்ததா? இதுக்கு இடையில் முழுப் பூசணிக் காயை இந்த ராசு சோத்துல அமுக்கியிருக்கிறார்

அது மட்டும் இல்லாமல் இவர் தலைவரை வசூல் சக்கரவர்த்தி என்று ஒத்துக் கொள்ள மாட்டாராம்,

ஆமா உன்னை யார் ஒத்துக்க சொன்னது?...

அகிலமே சொல்லும்,
இந்தியா முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க எங்கெல்லாம் தமிழ் திரைப்படங்கள் விநியோகம் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் இன்றும் உரத்த குரலில் சொல்கிறார்கள் யார் வசூல் சக்கரவர்த்தி என்று, அப்படியிருக்க வண்டு முருகன்களும், படித்துறை பாண்டிகளும், போண்டா மணி, லொள்ளு சபா மனோகர், கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு கூட்டத்தை யார் ஒத்துக்க சொன்னது?

நம் நண்பர் ஒருவர் சொன்ன தகவலில் விட்டுப் போன ஒரு விஷயம் " உயர்ந்த மனிதன் "படத்துக்கு மெய்யப்ப செட்டியார் கணேசனுக்கு கொடுத்த தொகை வெறும் ஒரு லட்சம் மட்டும்தான், அதற்கு மேல் 25000 தன் தம்பி சண்முகம் மூலம் கேட்டு அனுப்பிய போது செட்டியார் அவமானப்படுத்தி அனுப்பியது வரலாறு
அப்படியிருக்க வசூல் பற்றி பேச வந்திருக்கார் லபக்கு தாஸ்,

தலைவரின் சம்பளம் என்பது பெரும் பாலும் சென்னை நகர விநியோகம் போக பேசப்படும்,
அது போக படத்தில் வரும் லாபத்தில் ஷேர் கொடுக்கப்படுவது உண்டு
இதை எல்லாம் கணக்கில் எடுத்தால் எவ்வளவு சம்பளம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்( இந்த தகவல்கள் எல்லாமே சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் கொடுத்த பேசும் படம் பத்திரிகையில் வந்த தகவல், இதை ஊர்ஜிதப்படுத்தி தான் கண்ணதாசன் கூட ராணி வார இதழில் 1974 இல் எழுதினார்

1968 இல் வெளி வந்த தலைவரின் "ஒளி விளக்கு " படத்துக்கு எஸ். எஸ் வாசன் எப்படி சம்பளம் கொடுத்தார் என்பதை மறைந்த எழுத்தாளர் மணியன் அவர்கள் தன் " இதயம் பேசுகிறது " இதழில் விரிவாக 1990 களின் துவக்கத்தில் எழுதினார், அந்த படத்துக்கு தலைவர் அது வரை வாங்கிய சம்பளம் இரு மடங்கு கொடுக்கப்பட்டது,

" பறக்கும் பாவை படத்துக்கு 1966 இல் ஏழு லட்சம் சம்பளம், 1965 இல் "பணம் படைத்தவன் " படத்துக்கு நான்கு லட்சம் சம்பளம் கொடுத்ததை ராமண்ணா "இதயக் கனி" விஜயனிடம் நேரடியாக சொன்னதை விஜயன் தன் " எம்ஜிஆர் கதை " புத்தகத்தில் எழுதியுள்ளார், சந்தேகம் இருப்பவர்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளட்டும்
( அவர் தலைவர் பெயரில் பத்திரிக்கை நடத்தினாலும் அவரும் ஒரு சிவாஜி ரசிகர்தான் )

ஒரு நடிகரின் வியாபாரத்தை வைத்தே அவரின் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்,

1991 ஆம் ஆண்டு வெளி வந்த " ராசாவின் மனசிலே " படத்தின் வெற்றிக்குப் பிறகு திரு. ராஜ்கிரண் அவர்களின் சம்பளம் எங்கேயோ போனது,

முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான், ஆனால் கால ஓட்டத்தில் அதே சம்பளம் அவரால் வாங்க முடிந்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் வரும்,

" மாணிக்கம் " என்ற படத்தின் மூலம் தன் அனைத்து செல்வங்களையும் இழந்ததோடு தன் மார்க்கெட்டையும் இழந்தார் ( அதற்கு பல காரணங்கள் அது நமக்கு தேவையில்லை )

" மக்கள் நாயகன் " ராமராஜன் கரகாட்டக்காரன் படத்துக்குப் பிறகு அப்போது இருந்த நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிப் போனார்,
தொடர்ந்து அவர் படங்கள் வசூல் குவிப்பதைப் பார்த்து
அவருடைய படங்களுக்கு அதி அற்புதமாக பாடல்கள் போட்டுக் கொடுத்த இளையராஜா அவர்களுக்கு கட்டுமரம் நெருக்கடி கொடுத்த சம்பவங்கள் எல்லாம் அப்போதைய பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த ஒன்று,

பின்னாளில் உடம்பு பெருத்து நட்சத்திர அந்தஸ்து இழந்தபோது அந்த சம்பளம் அவரால் வாங்க முடியவில்லை,

" வசந்த மாளிகை " படத்துக்குப் பிறகுதான் சிவாஜி இரண்டு லட்சம் வாங்கியதாக "தினத்தந்தி " பத்திரிக்கையில் செய்தியே வந்தது,

" மீனவ நண்பன் " படத்துக்கு சடையப்ப செட்டியார் எவ்வளவு சம்பளம் கொடுத்தார் என்பதை தலைவரின் மெய்க்காப்பாளர் திரு. K.P.ராமகிருஷ்ணன் பேட்டிகளில் சொன்னது இந்த சொளவ ராசுக்கு தெரியுமா?

சிவாஜியை வைத்து படம் எடுத்த முக்தா.வி. சீனிவாசன்தானே சொன்னார் " எம்ஜிஆரின் ஒரு படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம்,
எம்ஜிஆர் சாதாரண படம் ஒன்று 50 லட்சம் வரி செலுத்துகிறது என்றால் அவரின் பெரிய படம் ஒரு கோடி ரூபாயை வரியாக செலுத்துகிறது,
எனவே சர்க்காரின் மிகச் சிறந்த நண்பராகவே எம்ஜிஆர் விளங்குகிறார் "

இந்த பேச்சு அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது, குறிப்பாக" இந்து " பத்திரிக்கை இந்த செய்தியைப் பெரிய அளவில் வெளியிட்டது,

கணேசன் இந்த செய்தியைப் பார்த்து நிரம்பவும் வருத்தப் பட்டதாகவும் செய்திகள் வந்ததை இங்கே நினைவு கூறுகிறேன்,

சிவாஜி முகாம் எழுத்தாளர் என்று பேசப்படும் திரு. ஆரூர் தாஸ் அவர்கள் தினத்தந்தியில் சொன்ன விஷயம் 2015 கால கட்டத்தில் வெளி வந்தது
" எம்ஜிஆரின் தோல்விப்படம் என்று சொல்லப்படுபவைகள் கூட வசூலைப் பொறுத்தவரை " யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்கிற கதைதான் என்று சொல்லியிருந்ததை கண்டிப்பாக அனைவரும் படித்திருக்கலாம்,

இந்த மாதிரி தலைவரை வசூல் மன்னன் என்று சொன்ன நடிகர் விவேக் நாயாம்,

சரி அண்மையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசியது இது ...

" சிவாஜியை விட மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்து, சிவாஜியை விட மிகப்பெரிய சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் யாரும் பிடிக்க முடியாத உயரத்தில் எம்ஜிஆர் அவர்கள் இருந்தார்கள், அவரைப் பற்றி தெரியத் தெரிய நான் அவருடைய முழுமையான ரசிகனாகவே மாறி விட்டேன் "

சரி இவருக்கு என்ன பட்டம் கொடுப்பார்களோ தெரியவில்லை?!

எங்கள் தலைவரின் வானளாவிய செல்வாக்கு என்ன என்பதை கொரோனா
தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்த பிறகு தமிழகம் முழுவதும் தலைவரின் படங்கள் எப்படி கொடி கட்டிப் பறக்கிறது என்பதை சன் டி. வி செய்திகளிலும் மற்ற சமூக வலை தளங்களிலும் பார்த்திருப்பீர்கள் ...( ஏகப்பட்ட கணேசன் குஞ்சுகளுக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்,
வயிறு அதிகமாக எரிந்தால் gelusil குடிப்பது நல்லது என்று சொல்லுகிறார்கள் )

ஓடிக்கொண்டிருக்கும் காரை சில சமயம் ஆக்ரோஷமாக சில தெரு நாய்கள் விரட்டு வதை பார்த்திருக்கலாம்
அதனால் காருக்கு என்ன நஷ்டம்?
தெரு நாய்தான் அடிபட்டு சாகும்,

எனவே ராசுகளே இந்த மாதிரி பாப்பா கதையை எங்கள்ட்ட ஓட்ட வேண்டாம்,

ஓரமா தள்ளிப் போய்
விளையாடுங்க சரியா?


தலைவரின் பக்தன் ...


ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

fidowag
16th November 2020, 08:45 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/11/20* அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
நடிகர்கள் பாலாஜியும் ,நாகேஷும் காரில் பயணிக்கிறார்கள் .ஒரு ஊரில் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த குடிசையில் தங்கியிருந்த* பெண்களிடம் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள்.* ஒரு மூதாட்டி ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் . அதை குடித்த பின் நடிகர் பாலாஜி அந்த மூதாட்டியிடம் நன்றி தெரிவித்து ரூ.100/- தருகிறார் .* அதை பெற்று கொண்ட அந்த மூதாட்டி* ரொம்ப நன்றி, எம்.ஜி.ஆர். வாழ்க என்கிறார் .* நடிகர் நாகேஷ் அந்த மூதாட்டியை கேட்கிறார் .என்னம்மா பணம் கொடுத்தது நாங்கள். நீங்கள் எம்.ஜி.ஆர். வாழ்க என்றால் என்ன அர்த்தம் என்கிறார் . ஆமாம் ஐயா, அவர் இப்படி கொடுத்து பழகியதால்தான் நீங்கள் எல்லாம் கொடுக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு மனம் வருமா என்று கூறி,மீண்டும் எம்.ஜி.ஆர். வாழ்க என்கிறார் .* நாகேஷ், பாலாஜியிடம் மீண்டும் காரில் பயணிக்கும்போது, ஒரு நடிகர்** நல்ல சிவப்பு நிறத்துடன் வந்து ஏழை எளியோருக்கு பணம் கொடுக்கிறார்* என்றால் அநேகமாக அவர் எம்.ஜி.ஆர். அல்லது அவரது உதவியாளராகத்தான் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதை மாற்ற நம்மால் முடியாது என்றாராம் . அதே போல சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை எந்த ஊர், எந்த கிராமத்திற்கு சென்றாலும் மனமுவந்து ஏழை எளியோருக்கு ஒருவர் உதவி செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் எம்.ஜி.ஆராகத்தான்* இருப்பார் என்கிற விதையை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு போன வற்றாத ஜீவநதி, அமுதசுரபி, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். மறைந்தும் மறையாமல் இன்னும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த புதிதில், கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையுடன் கருப்பு சிவப்பு நிறம் கலந்து துண்டு ஒன்று தோள்களில் அணிந்து இருப்பது* ஒரு ட்ரேட் மார்க் ஆக இருந்தது . டீக்கடை தொழிலாளர்கள், ஓட்டலில் வேலை செய்பவர்கள், மூட்டை தூங்குபவர்கள் ,ரிக் ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் , தொழிலாளி வர்க்கத்தினர் அனைவரின் தோள்களிலும் அந்த துண்டுகள் காணப்பட்டன . அதனால்தான் ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்தபோது, திருச்சிக்கு செல்வதற்கு* மட்டும் 12 மணி நேரம் தாமதம் ஆனது . . வழக்கமான பயண* நேரம் 5 மணி 30நிமிடம்* ஒவ்வொரு பெரிய ஊரிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் பயணித்த ரயில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு வழி நெடுக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரவேற்பு கொடுத்ததால் இந்த நிலை ஏற்பட்டது .ரயில்வே வரலாற்றில்*ஒரு ரயில் திருச்சிக்கும், மதுரைக்கும் இவ்வளவு தாமதமாக சென்று சேர்ந்த வரலாறில்லை .*


ஒவ்வொரு ஊரிலும் அப்போதுதான் கட்சி தொடங்கி இருப்பார்கள் . அந்த ஆர்வத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை வரவேற்கும் பொருட்டு, தங்கள்* மார்பில், குண்டூசியால் குத்தி ரத்தம் வழிய அண்ணாவின் உருவத்தை ,மாரியம்மன் ,மற்றும் முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது போல மக்கள்**கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களுக்கு படையெடுத்து தங்கள் தங்க தலைவருக்கு மகத்தான வரவேற்பு அளித்தார்கள் .* அப்படிதான் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்* *இப்படி ஒவ்வொரு தொண்டனும் ரத்தம் சிந்தி ,கட்சியை வளர்த்தது மட்டுமின்றி தங்களின் அபரிமிதமான ஆதரவை ,அன்பை ,பாசத்தை, ,மழை போல் தங்கள் தலைவர்மீது பொழிந்தனர் .**எம்.ஜி.ஆர். அவர்களும் மக்கள் மீது மாறாத அன்பையும், பாசத்தையும், காட்டி*மக்கள் வெள்ளத்தில், கூட்டத்தில், மிதந்து, நீந்தி வந்தார் என்று செய்திகள்*தெரிவித்தன.**


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களுக்காக எந்த அளவிற்கு துன்பங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் தாங்க முடியுமோ, அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் எதையும் சாதிக்க துணிந்து கட்சியை ஆரம்பித்து மக்கள் ஆதரவை திரட்டினார்* *அதனால்தான் இன்றைக்கும் அவர் மக்கள் திலகமாக இருந்து மக்கள் தலைவராக உயர்ந்து நிற்கிறார் . தன்னம்பிக்கை,* மக்கள் மீது நம்பிக்கை* வைத்து , ஜெயிக்க முடியும்** என்பதில் நம்பிக்கை கொண்டவர் .ஏழ்மை, வறுமை, அவமானம், கிண்டல், கேலி, பரிகாசம் எல்லாவற்றையும் தாங்கியவர்**,அனைத்தையும் மீறி, ஒரு சாதாரண, சாமான்ய மனிதன், மிக பெரிய படிப்பில்லாமல் , எந்த ஒரு ஜாதி பாகுபாடில்லாமல்,**மிக பெரியவர்கள் ஆதரவில்லாமல், போதிய பணவசதி இல்லாமல்,**மிக பெரிய நிலை இல்லாமல்*இப்படி எதுவும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்* தன்னம்பிக்கை என்று ஒன்று இருந்தால் போதும், மக்கள் ஆதரவுடன், செல்வாக்குடன் நினைத்ததை சாதிக்கலாம், வெற்றி பெறலாம், ஏன் இந்த நாட்டையே பலர் அதிசயிக்கத்தக்க வகையில் பல ஆண்டுகள் ஆளலாம் .என்பதற்கு சாகாவரம் பெற்ற ஒரு மந்திரச்சொல்தான் எம்.ஜி.ஆர். .**


திரு.கா.லியாகத் அலிகான்*:* *சேலத்தில்*நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக நான் கலந்து கொண்டு*பேச முடியாமல் போனதை*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மனதில் நிலை நிறுத்தி, ஓராண்டுக்கு பிறகு கடலூரில் நடைபெற்ற* அ . தி.மு. க. மாநில மாநாட்டில்*பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கியபோது , எனக்கே தெரியாமல், லியாகத்*அலிகான் பேசுவார்*என்று தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிபாரிசு செய்துள்ளார் . அந்த மாநாட்டில்*பொது செயலாளராக இருந்த*ப.உ.சண்முகம் அவர்கள் ,மேடையில்*லியாகத் அலிகான் தற்போது ராஜேந்திரனின் படத்தை*திறந்து வைத்து பேசுவார்* என்று அறிவிப்பு செய்தார் . ஏனென்று இதை சொல்கிறேன் என்றால் ,சேலம் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக ஒருவன் பேச முடியவில்லை,வாய்ப்பு கிடைக்கவில்லை*. அவனுக்கு இந்த கடலூர் மாநாட்டிலாவது பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று*மனதளவில் நினைத்து, ஓராண்டுக்கு பிறகு அந்த வாய்ப்பை அளித்ததோடு,சேலத்தில்*பேச முடியாமல் போனதால் அவனுடைய உள்ளம் வருத்தம் அடைந்திருக்கும். அந்த வருத்தம் தீரவேண்டும் என்றால் அவன் பேசியாக வேண்டும் என்று கருதி வாய்ப்பு அளித்தவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.* அந்த கடலூர் மாநாட்டில்*தான் செல்வி ஜெயலலிதா அவர்கள்*அ. தி.மு.க.விற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். ஜெயலலிதா அவர்கள் மாநாட்டில் பெண்ணின் பெருமை ,மற்றும் மகளிர் சிறப்பு*பற்றியும்*விவரித்து பேசினார்கள் . அந்த அம்மையார் பேசும்*அதே மேடையில் என்னையும் பேச வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், என் பேச்சை கேட்டு 86 தடவைகள் பார்வையாளர்கள் கைதட்டியதை நேரில் கண்டு, நான் பேசி முடித்ததும் ,என்னை தேடி வந்து கன்னத்தில் ஒரு தட்டு தட்டியதோடு,**மாநாடு முடிந்ததும்* என் அருகில் வந்து என் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திய* தலைவரின் நெஞ்சத்தை**இன்று நினைத்தாலும் என். உள்ளமெல்லாம் பூரிக்கிறது, புல்லரிக்கிறது.*


இன்னொரு சம்பவம்*ஒன்றை சொல்கிறேன்.* அடிமைப்பெண் படத்தில்*இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா என்கிற பாடலை*பாடுவதற்கு*மறைந்த*திரு.எஸ்.பி.பாலசுப்ரம ணியம் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது .ஆனால் பாடல் பதிவிட இருந்த நேரத்தில் அவருக்கு*டைபாய்டு காய்ச்சல் வந்துவிடுகிறது .அவரால் பாட முடியவில்லை.**அவர் நல்ல முறையில் குணமாகி வந்தபின்*பாடல் பதிவை வைத்து கொள்ளலாம். படப்பிடிப்பையும் தள்ளி வைக்கலாம் என்று தலைவர் எம்.ஜி.ஆர். முடிவு செய்கிறார் .* இடையில் சிலர்*வேறு யாரையாவது வைத்தோ, அல்லது டி.எம்.எஸ்.அவர்களை வைத்தோ பாடல் பதிவு செய்யலாமே என்று யோசனை தெரிவிக்கிறார்கள்.* ஆனால் தலைவர் அவர்கள், நாம் ரிகர்சல் செய்து அறிமுகம் செய்துவிட்டதால் ,அவருடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், எம்.ஜி.ஆர்.படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதுபாடலை நன்றாக பாடியுள்ளேன். நன்றாக வந்திருக்கிறது* என்றுபெருமையாக* சொல்லியிருப்பார் .* வேறு யாரையாவது வைத்து பாடல் பதிவு செய்துவிடலாம்.* அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. ஆனால்* எஸ்.பி.பி* ஒரு . இளைஞர். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய நம்மை போன்றவர்கள்தான் வழி காட்ட வேண்டும்.* அவரது முன்னேற்றத்திற்கு நாமே*இடையூறாக, தடையாக இருப்பது தவறு. கொஞ்ச காலம் பொறுத்திருப்பதில் தவறு ஒன்றுமில்லை. என்று கூறினார் . பின்னர் அவர் குணமாகியதும், மீண்டும் அழைத்து பாடல் பதிவில்*பாடியதும்*,அந்த பாடல் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் உலக புகழ் பெற்றார்*என்பது வரலாறு. அந்த பாடலை*பாடிய பின் எஸ்.பி.பி. அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பணிவாக சில கேள்விகள் கேட்டு திருப்தி அடைந்தார். அதாவது இந்த சிறிய வனுக்காக நான் குணமாகும்வரை*இத்தனை நாட்கள்*காத்திருந்து வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.**ஆனால் இடையில் நீங்கள் வேறு யாரையாவது வைத்து பாடல் பதிவை*முடித்து இருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன். எனக்காக படப்பிடிப்பையும் சில மாதம் தள்ளி வைத்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு மிகவும் பெரிய மனது. உங்களுடைய பெருந்தன்மைக்கு நன்றி கூறி, இந்த இளைஞனின் எதிர்காலம் சிறப்பாக அமைய*தாங்கள் வழிகாட்டியதற்கு வணக்கம் தெரிவிக்கிறேன் என்று நெகிழ்வுடன் பேசியுள்ளார் .* சேலம் மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக**பேச முடியாத எனக்கு*கடலூர் மாநாட்டில் ஓராண்டுக்கு பிறகு ஞாபகத்தில் வைத்து கொண்டு மீண்டும் பேச வாய்ப்பு அளித்த*பெருந்தகைதான்*திரு.எஸ்.பி.பி.க்கு*1969 ல்* தன் சொந்த படத்தில் பாட வாய்ப்பளித்து, அவர் உலக புகழ் அடைய காரணகர்த்தாவாக திகழ்ந்த வற்றாத ஜீவநதி, எட்டாம் வள்ளல், காடம்பாறை நீரேற்று திட்டததை அமுல்படுத்திய கருணை கடல், ஓடும் பாம்பை மிதிக்கும் உள்ள துணிவு, வாழும் தொண்டனின் பரவச சிரிப்பாக வாழ்ந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்து பார்க்கின்றபோது, நான் மட்டுமல்ல, ஏழை எளியோர்கள், அற்புதமான தொண்டர்கள் என அனைவரும் எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்து இன்றைக்கு எங்களை நாங்கள் உற்சாகப்படுத்தி கொண்டு,*ஆசுவாசப்படுத்தி கொண்டு 2021ல் மீண்டும் புரட்சி தலைவர் எம்ஜி.ஆர். ஆட்சி அமைய இ .பி.எஸ்.அவர்கள், ஓ.பி.எஸ்.அவர்கள் இணைந்து பாடுபட வேண்டும் என்றும் அதற்கு தொண்டர்கள் பட்டாளம் தேனீக்கள் போல சுற்றி வந்து கட்சிக்காக பாடுபட தயாராக உள்ளார்கள் என்பதோடு, குற்றம் , குறைகள் சொல்வது ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சிகளின் வேலை. அவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் . நாம் நமது பணியினை செவ்வனே செய்வோம் என்று*கவிஞர் பாரதிதாசன் வார்த்தைகளான* போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்* என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எம்ஜி.ஆர்.அவர்களை மனதில் நினைத்து, நாம் எல்லோரும் பணியாற்றவேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே உங்களுக்கு எடுத்து சொல்லி*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் முன்னாள் ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் உரையாடியதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .*


முன்னாள் குடியரசு தலைவர் திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்தபோது,மரியாதை நிமித்தம்* அவரை சந்திக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விருப்பம் தெரிவிக்கிறார். அதற்கு சம்மதம் கிடைத்தவுடன் சந்திக்கிறார் .* திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் உலக விஷயங்கள் அறிந்த ஒரு தத்துவ மேதை .* அவர் அன்றைய கால கட்டத்தில்*ஹிட்லர் இருந்தபோது* ஹிட்லரின் தோள்மீது*தட்டியபடி, ஹலோ என்று* குரல் கொடுத்து*உரையாடி இருக்கிறார் என்று சொல்லுவார்கள் .* ஹிட்லரும் இவர் மீது பாசம் வைத்துள்ளதாக* நான் படித்திருக்கிறேன் . அப்படிப்பட்டவரை புரட்சி தலைவர் சந்திக்க செல்கிறார் .* அப்போது ஜனாதிபதி அவர்கள் தலைவருக்கு*தேனீர் அருந்தும்படி கேட்டு கொள்கிறார். தலைவர் அவர்கள் தேனீர்*காபி போன்ற பானங்கள் அருந்தமாட்டார் என்பது பொதுவாக அனைவரும் அறிந்தது .* தேனீர் வழங்கப்பட்ட போது தலைவர் அவர்கள் ஐயா* நான் தேனீர்*அருந்துவதில்லை .வேறு ஏதாவது பானங்கள் இருந்தால்*கொடுக்க சொல்லுங்கள் என்றார் .*பேரறிஞர் அண்ணாவின் தி.மு.க.வில் தலைவர் இருந்த சமயம் அது .அவருக்கு குடிக்க பால் தரப்படுகிறது . அதற்குள் இரண்டாவது முறை ஜனாதிபதி அவர்கள் தேனீர் அருந்துகிறார் . பின்பு தலைவர் அவர்கள் தான் சந்திக்க வந்த நோக்கம் ,மற்றும் பொதுவான விஷயங்கள்*பற்றி பேசுகிறார் .அப்படி பேசும்போது*மூன்றாவது முறை தேனீர்*அருந்துகிறார் .***அப்போது தலைவர் அவர்கள் ஐயா, நான் தவறாக கேட்பதாக தாங்கள் நினைக்க கூடாது*என்று தயங்கியபடி, குறுகிய நேரத்தில் இத்தனை தேனீர்* பல முறை அருந்துவது உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காதா என்று கேட்கிறார் .* தேனீர் பலமுறை அருந்துவது உடலுக்கு கெடுதல் என்று நீங்கள் கருத்து சொல்கிறீர்கள் .ஆனால் பல விஷயங்களுக்கு நமக்கு*டீ தேவைப்படுகிறது .* முதலில் ட்யூட்டி*நம் எல்லோருக்கும் அவசியம் . டிக்னிட்டி , பங்க்சுவாலிடி , எபிலிட்டி , எலிஜிபிலிட்டி**இவை எல்லாம் கூட நமக்கு தேவையானவை . இவற்றோடு நமக்கு*போதிய பப்ளீசிட்டி* கிடைத்தால் அதுவே*நமக்கு*பல நன்மைகளும், பதவிகளும், உதவிகளும், பல நேரங்களில்**கிடைப்பதற்கு ஏதுவாகும் .எனக்கு*மேற்கண்ட இந்த 5 டீக்களும் உள்ளது என்று நான் நம்புகிறேன்.* உங்களுக்கு இந்த 5 டீக்களுடன் முக்கியமானதொரு டீ இருக்கிறது என்று**தெரியுமா என்று கேட்கிறார் . எனக்கு தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் என்கிறார் தலைவர் .அதுதான்*உங்களுடைய பர்சனாலிட்டி . ஆனால் எனக்கு அது இல்லை. இந்த பர்சனாலிட்டி உள்ள உங்களை இந்த உலகமே போற்றும்*அளவில் ஒரு உயர்ந்த நிலையை*நீங்கள் அடைவீர்கள் என்று அன்றைக்கே*ஜனாதிபதி அவர்கள் ஆருடம் சொன்னார் .* இந்த செய்திகளை நான் ஒரு நூலில் படித்திருக்கிறேன்*


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் உரையாடிவிட்டு*விடை பெறுகிறார் .* திரு.ராதாகிருஷ்ணன் நினைவு தினத்தை ஆசிரியர் தினமாக*அனுஷ்டிக்கப்படுகிறது .* ஒரு சாதாரண ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் நாட்டின் உயரிய பதவியான*குடியரசு தலைவர் பதவிக்கு*உயர்ந்து*பெருமை சேர்த்தவர் .* ஜனாதிபதி அவர்களிடம் விடை பெற்று வணக்கம் தெரிவித்து காரில் பயணிக்கும்போது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உதவியாளரிடம் ஜனாதிபதி அவர்களுக்கு 5 டீக்கள் இருக்கின்றன என்று அவரே குறிப்பிட்டார் . எனக்கு*அந்த 5 டீக்களுடன் ஆறாவது*டீயான*பர்சனாலிட்டி இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அந்த ஆறாவது*டீ எனக்கு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவருக்கு அந்த ஆறாவது*டீயான பெண்டாட்டீ* அமைந்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் .*கலோக்கியலாக சகஜ நிலையில்*பேரறிஞர் அண்ணா பேசுவதை போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அந்த பண்பு நிறையவே இருந்தது . அவருடைய நண்பர்களாக நேசித்தவர்கள் கூட,* பதவி வந்த உடனே, பயந்துபோய் அப்படியே ஒதுங்கி, ஒதுங்கி*நின்றவர்களை எல்லாம் அருகில் அழைத்து, உட்கார வைத்து* ஒரு நண்பனை போல் பேசக்கூடிய பண்பாளர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இவ்வாறு, திரு.லியாகத் அலிகான் பேசினார் .*



1.

fidowag
16th November 2020, 11:42 PM
நண்பர் திரு.ஜேம்ஸ் வாட்*அவர்களுக்கு வணக்கம்.

மாற்று முகாம் நண்பர்களுக்கு தாங்கள் அளித்து வரும் சூடான, சுவையான,பதில்கள், கண்டு மகிழ்ச்சி.* தாங்கள் குறிப்பிட்ட படி இந்த அகிலமே*சொல்லும்*அவர் வசூல் சக்கரவர்த்தி.* என்று .* திரைப்பட*உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரியாததா*. மீரான் சாஹிப் தெருவில்*சென்று*தலைவரின்*படங்களுக்கு உள்ள மார்க்கெட், மவுசு, இத்யாதிகள் பற்றி விசாரித்து*, இதர நடிகர்களுக்கு உள்ளவற்றோடு ஒப்பிட்டு*கொள்ளட்டும்.* அப்போதும்.அவர்கள் இதே*தேய்ந்து போன ரிகார்டைத்தான் போடுவார்கள்.* கொரோனா காலத்திற்கு பிறகு ,தமிழக அரசின்*அனுமதியின்படி அரங்குகள் திறக்கப்பட்டதும், தலைவரின்*படங்கள்தான் பெருநகரம், மாநகரம், துணை நகரம், கிராமங்கள் அனைத்தையும்*ஆக்கிரமித்து உள்ளன. எல்லாம் தெரிந்தும்*நாங்கள் அப்படித்தான் புலம்புவோம். தெரியாத மாதிரி நடிப்போம், தூங்குவது போல பாசாங்கு செய்வோம்*என்பவர்களை திருத்த நம்மால்*முடியாது .தொடரட்டும்*உங்களின்*தாக்குதல்கள் .நன்றி .* **
பாகப்பிரிவினை சாதனையை*ஒரு நாள்* அதிகமாக ஒட்டி உ.சு.வாலிபன் படத்தை*சாதனை*என்று புலம்புவதாக கூறும்*அய்யனின் பிள்ளைகளே , எங்க வீட்டு*பிள்ளை வெள்ளிவிழா* 7 அரங்குகளில் சாதனையை*1965ல்* நிகழ்த்தியது . 14 ஆண்டுகள்*கழித்து தலைவர் திரை உலகை விட்டு முதல்வரான பின்புதான்*ஒரு அரங்கு அதிகப்படுத்தி 8 அரங்குகளில் தெருசூலம்*படத்தின்*வெள்ளிவிழா சாதனையை*நிகழ்த்த முடிந்தது .வேலூரில்*வடக்கயிறு, ஸ்ட்ரெச்சர் எல்லாம் வைத்து இழுத்தார்களே அதை என்னவென்று சொல்வது .பைத்தியக்காரன்*பத்தும் சொல்வான்*போகட்டும் விட்டுவிடு .**

orodizli
17th November 2020, 07:16 AM
உலகம் சுற்றும் வாலிபன் !
---------------------------
இது ஓர் உலகச் சாதனை படம்

போஸ்டர் ஒட்டாமலே இமாலய வெற்றி தேவி பேரடைசில் 213 -ம் நாள் 80 சதவீத கூட்டம் ஏற்கனவே அமிதாப்பின் ஹீராபேரி படம் புக் ஆனதால் எடுக்கப்பட்டது

ஷிப்டிங்கில் பல திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த படம் .
அதிக திரையரங்குகள் பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் .

ஆளும் கட்சியின் சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்கிய படம் .

ஒர் அரசாங்கத்தையே மாற்றிய படம் .

இயக்குனர் எம் ஜி ஆரால் காட்சிகள் செதுக்கப்பட்டன .

இப்படி சாதனைகளை சொல்லிக் கொண்டு போனால் வாரக்கணக்கு தாண்டி வருடகணக்காகிவிடும் .

படத்தின் வெளிப்பற படப்பிடிப்பால் வண்ணக் கனவுகளில் மிதந்தோம் .

கிள்ளை மொழி , வெள்ளை மனம் . கொஞசும் குமரியின் பிள்ளைத் தமிழ் கேட்டு பித்தனாகியோர் ஏராளம் .

ஆம் தாய்லாந்து நடிகை
மேத்தா ரூங்ரேட்டா இன்றும் நம் நினைவில்
இளமை மாறாமல் வலம்
வருகிறார் .

இப்பாடலின் துள்ளல் இசைக்கு மயங்காதவர்
இலர் .

பச்சைக்கிளி முத்துச்சரம் ..........Hd...

orodizli
17th November 2020, 07:17 AM
1968 லயே மக்கள் திலகம் வசூல் சக்ரவர்த்தி என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த ரகசிய போலீஸ் விளம்பரம். அதை நிரூபிக்கிறா மாதிரி 10 நாளில் சென்னயில மட்டும் 2 லட்சத்து 37 ஆயிர ம் வசூல். வெறும் 10 நாளில். 1969 ல் வெளியான மாற்று முகாம் படம் ஒன்று விளம்பரம் பாத்தேன்.சென்னையில் 4 வாரம் (28 நாள் )ஓடியே 3 லட்ச்த்து 65 ஆயரம்தான் வசூல். ரகசிய போலீஸ் 4 வாரத்தில சென்னையில்் 4 லச்சத்தை தாண்டிவிட்டார். தமிழ்நாடு பூராம் 4 வாரத்தில் கணக்கு போட்டு பாருங்கள். விளம்பரத்தில் உள்ளபடி மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்று புரியாதவங்களுக்கும் புரியும்.rrn...

orodizli
17th November 2020, 07:18 AM
தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பது உறுதியானதும் தலைவர் பக்தர்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கத்தினர் தலைவர் படங்களில் எதை திரையிடுவது என பரபரப்பாகினர். ஒரு மாதம் முன்பே மதுரையிலிருந்து உறுதிபடுத்தினர் உலகுக்கு சத்தமாக! போஸ்டர் விளம்பரங்களை ஒட்டி அமர்க்களத்தை தொடங்கி வைத்தது மதுரை. அடுத்து கோவையில் இரண்டு தியேட்டர்களில் உறுதியானது. தலைவர் படங்கள் அனைத்தையும் டிஜிட்டலில் தயாரிக்க வேண்டும் என்ற நமது வேண்டுகோளை தினமலர் அறிவித்தது. அடுத்தடுத்து பல ஊர்களில் தலைவர் படங்கள் ஆரவாரமாக திரையிட தயார் என அறிவித்தனர் திரையரங்க நிர்வாகத்தினர். அந்த நாளும் விடிந்தது. பெருமழை வரும் முன் இடி இடிப்பது போல தீபாவளிக்கு முன் 10 ம்தேதி பல ஊர்களில் தலைவர் காவியங்களால் திரையுலகம் அதிர உலகமே தமிழகத்தை திரும்பி பார்த்தது.தினமும் நேரில் சென்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கொரோனா விழிப்புணர்வை கடைபிடித்து தலைவரை தரிசித்து உலகுக்கே முன் உதாரணமாக நடந்து காட்டினர் புரட்சித் தலைவர் பக்தர்கள். எனக்கு இந்த தியேட்டருக்கு சென்று வீடியோ , புகைப்படம் வேண்டும் என்றவுடன் மூத்த அண்ணன்கள் மற்றும் 17 வயது தம்பிகள் வரை தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு உடனே எடுத்து அனுப்பினர். படம் பார்க்க முதல் ஆளாக சென்று 100 ரூபாய் டிக்கெட்டுடன் தலைவர் முகம் பார்க்க நவீன திரையரங்கில் நுழைந்த மூதாட்டி நம்மை எல்லாம் பரவசப்படுத்திய நிகழ்வை மறக்க முடியுமா? மூத்த அண்ணன் ஒருவர் குடும்ப சகிதமாக சென்று நம்மை போல ஆர்வத்துடன் பலவித கோணங்களில் புகைப்படம் வீடியோ எடுத்து 2 நாட்களாக நம்மை ஆச்சரியப்பட வைத்ததை பதிவிடவா...கூலி தொழிலாளி ஒருவர் இரண்டு தியேட்டர்களில் பேனர் வைத்து பூஜை வழிபாடு நடத்தியதை பதிவிடவா...வெளியூர் சென்று தலைவர் படத்தை கண்டுகளித்த சகோதரர்களைப் பற்றி பதிவிடவா... எங்கு தலைவர் படம் திரையிடப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரங்களை உடனுக்குடன் தந்த, தந்து கொண்டிருக்கிற சகோதரர்களைப் பற்றி பதிவிடவா...சுவர் விளம்பரம் உள்பட தியேட்டரை சுழன்றடித்து தகவல் தந்த சகோதரர் பற்றி பதிவிடவா...தென்மாவட்டத்தில் எழுப்பிய வாழ்த்து கோஷம் தீபாவளி சத்தத்தை தோற்கடித்து இன்றும் நம் காதுகளில் அதிர்கிறதே அதற்கு காரணமான மதுரையை வணங்கி மகிழ்வதை பதிவிடவா...தங்கள் ஊரில் தரிசிக்க முடியாவிட்டால் என்ன முத்து நகரத்தில் தலைவரை தரிசிப்போம் என கடல் அலையென பொங்கி சென்ற நெல்லை அடலேறுகளின் உணர்ச்சியை விவரிக்கவா... சென்னையில் நடந்த வழிபாட்டால் தீயகிருமி விடைபெற்றதோ என நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளதே...எதை விவரிப்பேன்...யாரைப் பாராட்டாமல் விட்டுவிட்டேன்...என எண்ணி எண்ணி வியந்தபடி இத்தொகுப்பை தற்காலிகமாக நிறைவு செய்கிறேன்...நன்றி வணக்கத்துடன் சாமுவேல்....

orodizli
17th November 2020, 07:19 AM
#மக்கள்_திலகத்தின்_திரையுலக_பயணம்

#ஊருக்கு_உழைப்பவன்...

ராஜா (மக்கள் திலகம்) பெரும் செல்வந்தர் ..கொள்ளைக்கூட்டத்தாரால் கடத்தப்படுகிறார். ஏற்கனவே அந்தக்கூட்டத்தினை பிடிக்க பெரும் முயற்சி காவல் துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பலனாக ராஜாவை போலவே தோற்றம் கொண்ட ரகசிய போலீஸ் அதிகாரி செல்வம் (மக்கள் திலகம்-இரு வேடத்தில்) வருகிறார். அவர் கொள்ளையர்களை பிடித்து ராஜாவை மீட்டாரா என்பதே படத்தின் கதை.

இந்த படத்தை வித்தியாசப்படுத்துவது மக்கள் திலகத்தின் அசத்தலான நடிப்பு . துப்பறியும் ஏஜண்ட் செல்வம், எதிர்பாராமல் மல்லிகாவை (வாணிஸ்ரீ) யை திருமணம் செய்கிறார். அதே சமயத்தில் எந்த அதிர்ச்சியையும் தாங்கமுடியாத செல்வந்தர் ராஜாவின் மனைவி காஞ்சனா (வெ.ஆ.நிர்மலா)விற்கும் கணவனாக நடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இதனால் ஏற்படும் குழப்பத்தில் தன் ஒரே மகனையும் இழக்க நேரிடுகிறது. இந்த காட்சிகளெல்லாம் அந்த காலத்தில் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை கவர்ந்தது.

கொள்ளைக்கூட்டம்-சண்டடைக்காட்சிகள்-கொலை, கொள்ளை என காட்சியமைக்காமல்,படத்தின் பெரும்பகுதி மக்கள் திலகம்-வாணிஸ்ரீ-வெ.ஆ.நிர்மலா ஆகியோரிடையேயான குடும்ப நிகழ்வுகளை காட்சிகளாக அமைத்திருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

படத்தில் க்ளைமேக்சில் வரும் ஹெலிகாப்டர் சேசிங் நன்றாக படமாக்கப்பட்டிருந்தது. மெல்லிசை மன்னரின் இசையில் முதல் முறையாக டி.எம்எஸ் இல்லாமல் பாடல்கள் முழுவதையும் மக்கள் திலகத்திற்கு ஏசுதாஸ் பாடினார். "இது தான் முதல் ராத்திரி" "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்" "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" "அழகென்னும் ஓவியம் இங்கே" போன்ற பாடல்கள் இன்றைக்கும் கேட்க வைக்கின்றன.

மக்கள் திலகத்தோடு...வீரப்பா, தேங்காய் சீனிவாசன், குமாரி பத்மினி ஆகியோரும் நடித்திருந்தனர்.

உலகம் சுற்றும் வாலிபன்,, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களைப்போல் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையாவிட்டாலும், வசூலில் வெற்றி பெற்ற படமானது "ஊருக்கு உழைப்பவன்".........Sr.babu...

orodizli
17th November 2020, 07:20 AM
என் மனதை கவர்ந்த நடிகர் -Makkal Thilagam MGR

எத்தனையோ பல மொழி திரைப்படங்களை பார்த்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்ஜிஆர் தான் என்பதை பெருமையுடன் கூறுகிறேன் . எம்ஜிஆரின் ஆரம்ப கால படங்களில் அவரின் வசீகர தோற்றம் ,வெண்கல குரல் ,

வீர தீர விளையாட்டுக்கள் நிறைந்த சாகசங்கள் ,என்று ராஜா -காலத்து கதைகளாக இருந்தது . ராஜகுமாரி - மருதநாட்டு இளவரசி -மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மர்மயோகி -குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன்
புதுமை பித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி -விக்கிரமாதித்தன் - காஞ்சித்தலைவன் போன்ற படங்களில் எம்ஜிஆர் அவர்கள் அரச உடையில் ஒரு நிஜ மன்னராகவே
தோற்றமளித்தார் .

எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லா படங்களிலும் காணலாம் . எம்ஜிஆர் ஒரு சகலாகலாவல்லவர் என்பதை
நாடோடிமன்னன் - அடிமைப்பெண் - உலகம் சுற்றும் வாலிபன் படங்கள நிரூபித்தது .

என் தங்கை - மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - நல்லவன் வாழ்வான் - பாசம் - பெற்றால்தான் பிள்ளையா படங்களில்
அவரின் சோக நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது .

பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - குடியிருந்த கோயில் -மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - உரிமைக்குரல் - இதயக்கனி போன்ற படங்களில் எம்ஜிஆரின் நடிப்பும் காட்சிகளும்
பாடல்களும் சிறப்பாக இருந்தது . சண்டை பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம் .எல்லாவிதமான சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆரின் ஸ்டைல் தனி சிறப்பு இருந்தது.

எம்ஜிஆர் பட பாடல்கள் - தேனிசை விருந்து . காதல் பாடல் - அறிவுரை தத்துவ பாடல் - சோக பாடல் என்று இவரின் பாடல்கள் என்றுமே தோற்றதில்லை .எம்ஜிஆர் ஒரு புதுமை விரும்பி என்பதை அவரின் பல படங்களில்அணிந்திருந்த
உடைகளே சாட்சி .மாறு வேட காட்சிகளில் எம்ஜிஆரை போல் வேறு எந்த நடிகரும் இது வரை நடித்ததில்லை .
பெரும்பாலான படங்களில் எம்ஜிஆர் ஓடி வரும் அழகே தனி அழகு . சண்டை காட்சிகளில் அவர் அடிக்கும் டைவ்
எதிரிகளை பந்தாடும் பாங்கு ,சிரித்து கொண்டே சண்டை போடும் முக பாவம் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

காதல் காட்சிகளில் அவரின் புன்னகை தோற்றம் , காந்த விழிகள் , நம்மை மயக்கி விடும் . எம்ஜிஆரின் காதல் பாடல்கள்
எல்லாமே படு சூப்பர் . எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தது 115 படங்கள் .குறைந்தது 100 படங்கள் இன்று பார்த்தாலும்
மனதிற்கு நிறைவாகவும் , தெம்பாகவும் , புத்துணர்ச்சியும் அளிக்கிறது .

இப்படி பல பெருமைகளை திரை உலகிற்கு வழங்கிய எம்ஜிஆரை நான் என் மானசீக குருவாக ஏற்று கொண்டது என் வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் . Vnd.........

orodizli
17th November 2020, 01:55 PM
'Age cannot wither her', 'Her infinite variety of Cleopatra' என்று Antony &
Cleopatra வில் Shakespeare கிளியோபாட்ராவை வர்ணித்திருப்பார். தமிழில் சொன்னால் வயது 'அவளை வாட்டாது'. 'அவள் ஒரு நவரச நாடகம்'
என்று எங்கள் ஆங்கில கல்லூரி பேராசிரியர் பாடம் நடத்தியது என் ஞாபகத்துக்கு வருகிறது.

அவர், 'அவள் ஒரு நவரச நாடகம்' என்று சொல்லி நிறுத்தியவுடன் நாங்கள் அனைவரும் கோரஸாக 'ஆனந்த கவிதையின் ஆலயம்' என்று பாட ஆரம்பித்தவுடன் ஸ்டாப் ஸ்டாப் என்று 5 நிமிடம் நிறுத்தியவுடன்தான் மாணவர்கள் நிறுத்துவார்கள். பாடம் நடத்தும் ஒவ்வொரு முறையும் இதே மாதிரிதான் நடக்கும். மாணவர்கள் உற்சாகத்தின் விளிம்புக்கே சென்று விடுவார்கள்.

ஆம். காலங்கள் எத்தனை கடந்தாலும் கிளியோபாட்ராவின் அழகு குறையவில்லை என்பதை ஷேக்ஸ்பியர் மிக அருமையாக சொல்லியிருப்பார். இதையே கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சர்வர் சுந்தரம் படத்தில் 'சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு' பாடலில் அற்புதமாக சொல்லியிருப்பார். 'அன்னமிவள் வயதோ பதினாறு ஆண்டுகள் போயின ஆறுநூறு.
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை, என்னதான் ரகசியம் தெரியவில்லை' என்ன ஒரு கற்பனை நயம். ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் சொன்ன அந்த வசனம் உலகபிரசித்தி பெற்றது. அதற்கு சற்றும் குறையாத வார்த்தை ஜாலம்.

காலங்கள் பல கடந்தாலும் சிலைவடிவில் நின்றிருக்கும் பெண்ணின் வனப்பு சற்றும் குறையவில்லையாம். அதேபோல் 'காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன'? என்று கவிஞர் பாடிய அத்தனையும் காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்த உயிரோவியங்களின் வர்ணனை என்றே சொல்ல வேண்டும்.

அதைப்போல் காலங்கள் கடந்தும் நிலைபெற்றிருக்கும் காவியம் யாவும் புரட்சி தலைவரின் வண்ண ஓவியங்களான அவரது திரைப்படங்கள்தான். மற்ற திரைப்படங்கள் யாவும் காலத்தில் மறைந்து மலரும் நினைவுகளாக இருக்கும் வேளையிலே புரட்சி நடிகரின் வண்ணக் காவியங்கள்
யாவும் அழியா சிரஞ்சீவியாக இன்றும் மக்கள் விரும்பக்கூடிய திரைப்படங்களாக திரையில் வலம் வருவதை பார்க்கும் போது கவிஞர் பாடிய காலம்தான் நினைவில் நிழலாடுகிறது.

'பராசக்தி', 'மனேகரா'வின் காலங்கள் மங்கி விட்டன. 'கட்டபொம்மன்', கெட்ட கனவாகி விட்டான். 'பாகப்பிரிவினை', 'பாசமலர்' மக்களின் நேசம் இழந்து நிற்கிறது. 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்' யாவும் பக்தியின் பரிணாமத்தில் நவீனமாகி விட்டது.
'வசந்த மாளிகை', 'தங்கப்பதக்கம்', 'திரி சூலம்' யாவுமே நூலிழந்த பட்டம் போல எங்கோ சென்று மறைந்தது.
ஆனால் ஆண்டுகள் போயின 62. இன்னமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற "நாடோடி மன்னனை" மறக்க முடியுமா?

எத்தனை இளந்தளிர் வந்தாலுமே காலத்தால் மறையா என்றும் "எங்க வீட்டு பிள்ளை" யாய் திகழும் காவியத்தை மறக்க முடியுமா? "படகோட்டி" "ஆயிரத்தில் ஒருவன்" "அன்பே வா" "குடியிருந்த கோயில்" "ஒளிவிளக்கு" "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" "உலகம் சுற்றும் வாலிபன்" "உரிமைக்குரல்" "இதயக்கனி" போன்ற படங்கள் மக்கள் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்கிறது.

அதுபோல் இன்னும் பல கலர் காவியங்கள் மட்டுமல்ல கருப்பு வெள்ளை காவியங்களும் சேர்ந்து ரவிவர்மன் ஓவியமாய் இன்றும் மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கின்றன. கொரானாவை தாண்டி திரைக்கு வந்த படங்களில் மதுரை சென்ட்ரலில் வெளியான "தர்மம் தலைகாக்கும்" தீபாவளியன்று ரூ30 டிக்கெட்டில் 146 பேரும் ரூ40 டிக்கெட்டில் 90 பேரும் பார்த்து ரூ9000 ஒரு காட்சியின் மொத்த வசூலாக பெற்றது மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்தாலும் எங்களுக்கு அது அதிசயமில்லை. அன்றைய தினத்தில் பல படங்களுக்கு 2,3 பேர் கூட இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையும் கைபுள்ளைங்க கண்டிருப்பார்கள். கவிஞர் பாடியதைப்போல் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் வலம் வருவது உலக வரலாற்றில் காணமுடியாத விந்தை எனலாம்.

நமது கைபிள்ளைகளுக்கு ஒரு படமும் வெளியாகவில்லையா?
கொரானாவுக்கு பயப்படாதவன் கூட கணேசனின் படங்களுக்கு பயப்படாமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். கொரானா கொல்வதற்காக 15 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நம்ம கணேசன் படங்கள் அவ்வளவு கால அவகாசம் கொடுப்பதில்லை என்று கேள்வி..........KSR.........

fidowag
17th November 2020, 11:51 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-* வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 13/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருநாள் காரில் பயணிக்கும்போது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தவண்ணம் வருகிறார் . தி.நகர் வாணி மகால் அருகில் உள்ள ஒரு வீட்டின் கேட்டின் மீது 3* வயது மிக்க குழந்தை ஏறிவிட்டது .இறங்குவதற்கு வழி தெரியாமல் கேட்டை பிடித்தபடி அழுது கொண்டு இருக்கிறது. வீட்டின் உரிமையாளர் யாரும் அருகில் இல்லை .* எம்.ஜி.ஆர். அவர்கள் ஓட்டுனரிடம் உடனே காரை நிறுத்த சொல்லி , அந்த குழந்தையை கேட்டில் இருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டு ,வீட்டின் உள்ளே செல் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .* படப்பிடிப்பிற்கு அவசரமாக செல்லும் வேளையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, தாய்மை உணர்வோடு, வண்டியை நிறுத்த சொல்லி,ஓடி சென்று* குழந்தையை பாதுகாப்பாக இறக்கி வீட்டின் உள்ளே அனுப்பிய பண்பு இருக்கிறதே ,அது எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது . இந்த மாதிரியான பண்புகள், குணங்கள்தான் மக்களால் ஆட்கொள்ளப்பட்டு மக்கள் தலைவரானார் எம்.ஜி.ஆர்.*


உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள், பல உயர்ந்த அந்தஸ்துகளை பெற்றவர்கள்*எல்லாம் ஒருபோதும் ,உனக்கு சமானம் நான் என்று எண்ணாமல், எனக்கு சமானம் நீ என்று* அழைத்து பேசுகிற, அன்போடு பழகுகிற ,அந்த பண்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டு சென்றார் என்பதற்கு உதாரணமாக* நாம் சொல்லப்போனால் இப்போது நமது சகாப்தம் தொடரில் பேட்டி அளித்து வரும் திரு.லியாகத் அலிகான் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.* அவர் மிக பெரிய பதவியில் இருந்தவர் .* அவர் வாழ்க்கையில் மாமன்னர்* எம்.ஜி.ஆரின் கரங்களை,தொட்டு பழகியவர் .அப்படிப்பட்டவரை சமமாக நடத்துகிறார் . வின் டிவியின் உரிமையாளர் திரு.தேவநாதன் அவர்கள் ஒருபோதும் ஒவ்வொருவரையும், உனக்கு சமானம் நான் என்று பேசியதில்லை .எனக்கு சமானம் நீ என்று ஒவ்வொருவரையும் மதித்து, பல்வேறு நிர்வாக விஷயங்களை பகிர்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டு சென்ற பண்பாட்டு குணங்களை கடைபிடித்து வருகிறார் . அந்த பண்பாடு இன்றைய இளையதலைமுறைக்கு வரவேற்பு தொட்டிலாக, பதாகையாக மலரவேண்டும் என்பதற்காக சகாப்தம் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது .**.***


,முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு நாள் கோட்டைக்கு* காரில்**செல்லும்போது சென்னை பல்கலை கழக கட்டிடத்தில் உள்ள கடிகாரம் ஓடவில்லை என்பதை கவனிக்கிறார் .* கோட்டைக்கு சென்றுவிடுகிறார் .* மறுநாள் சாலையில் செல்லும்போது அந்த* கடிகாரம் சரிசெய்யப்படாமல் பழுதாகி நிற்கிறது .**மூன்றாவது நாள் அந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு ,ஓட்டுனரை சென்னை பல்கலை கழக வளாகத்தில் காரை* நிறுத்த சொல்கிறார் . அங்கிருந்த காவலாளியை அழைத்து, இந்த கடிகாரம் ஓடாமல் நிற்கிறது . இந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாதா..நானும் கடந்த மூன்று நாட்களாக கவனித்து வருகிறேன். பழுது பார்க்கப்படாமல் இருக்கிறது என்றவுடன், ஐயா நான் அதிகாரிகளிடம் சொல்லி உடனே கவனிக்க சொல்கிறேன் .என்று காவலாளி சொன்னதும் எம்.ஜி.ஆர். புறப்பட்டு சென்றார் .இந்த விஷயம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அன்று மாலைக்குள் சரி செய்யப்படுகிறது .* கோட்டையில் இருந்து மாலையில் எம்.ஜி.ஆர். காரில் வரும்போது கடிகாரத்தை கவனிக்கிறார். அது ஓடி கொண்டிருந்தது .ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் .* அவர் நினைத்திருந்தால் தன் உதவியாளரை அனுப்பி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் இந்த தவறை சொல்லி பழுது பார்க்க செய்திருக்கலாம். அல்லது கோட்டையில் இருந்தவாறே, தொலைபேசியில் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, உடனே பழுது பார்க்கும்படி உத்தரவு பிறப்பித்து இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில்தானே இறங்கி வந்து தகவல் தெரிவித்ததற்கு காரணம்* அவர் எடுத்து கொண்ட அக்கறை,**பல்வேறு சிறிய விஷயங்களில் அவர் காட்டுகிற அந்த நுட்பமான கவனிப்பு ஆகியவைதான் மக்களின் ஆழ்மனதில் அவர் குடிகொண்டுள்ளார் என்பதை பறை சாற்றுகிறது .

திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் பொதுக்குழுவில்*பேசும்போது*அமைச்சர்கள் சிலர்*தவறு செய்கிறார்கள் , அவர்களை என்ன செய்யலாம் என்று கேட்டபோது , பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர்*அந்த அமைச்சர்கள் பெயரை சொல்லி* அவர்கள்* எல்லாம் சரியாக*பணியாற்றவில்லை. மேலும் அவர்கள் மீது சில குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து எழுதி போடும்*நேரத்தில் ஒட்டு மொத்தமாக 10 அமைச்சர்களை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதவியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள் . அந்த பட்டியலில்*அமைச்சர் அரங்கநாயகமும்* உள்ளார் . இது நடந்ததும்* மிகுந்த வருத்தம் அடைந்த*அமைச்சர் அரங்க*நாயகம் தலைவரை சந்திக்க வருகிறார் .அப்போது அங்கே மேலும் 6 அமைச்சர்கள் காத்திருக்கின்றனர் .* அவர்களை பார்க்க வந்த தலைவர் அமைச்சர் அரங்கநாயகத்தை மட்டும் தனியே உள்ளே அழைத்து செல்கிறார் .* தலைவர் அவர்கள் அமைச்சர் அரங்கநாயகத்தை பக்கத்தில் அமர வைத்து ,மாலை சிற்றுண்டியில் ஆளுக்கு இரண்டு*வெங்காய*பஜ்ஜிகளை***இருவர்*தட்டிலேயும் வைக்க சொல்லி*, இருவரும் சாப்பிடுகிறார்கள் .அதன்பின் பால் இருவருக்கும் தரப்படுகிறது .*தலைவர் சாப்பிட ஆரம்பித்தால் தட்டிலே*வைத்த அனைத்தும் காலியாகிவிடும் .ஆனால் அமைச்சர் அரங்கநாயகம் அரைகுறை மனதோடு*ஒன்றரை*பஜ்ஜியை*சாப்பிட்டுவிட்டு அரை பஜ்ஜியை*மீதம் வைக்கிறார் .* மேலும் இரண்டு பஜ்ஜிகளை பணியாளிடம் எடுத்து வர சொல்லிவிட்டு , அரங்கநாயகம் மீதம் வைத்திருந்த அரை பஜ்ஜியை*எடுத்து தன்* தட்டிலே*வைத்து சாப்பிட்டு விடுகிறார் . இந்த சம்பவத்தை என்னிடம் அரங்கநாயகம் அவர்கள் சொல்லும்போது ,தலைவர் அவர்கள் எப்படிப்பட்ட மாமனிதர். வெளியில் 6 அமைச்சர்களை அமரவைத்துவிட்டு, நான் வந்த*நோக்கத்தை அறிந்து*பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்* ,என்னை*மட்டும் அழைத்து*சிற்றுண்டி தருகிறார் . நான் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த பஜ்ஜியை*எடுத்து சாப்பிடுகிறார் என்றால் எந்த அளவிற்கு*நம் மீது பாசமும், நேசமும் வைத்திருக்கிறார் பாருங்கள் என்று மிகவும் சிலாகித்து சொன்னார் .* தலைவர் அவர்கள் இந்த அமைச்சரை நீக்கிவிட்டோமே, அவர் மிகுந்த வருத்தத்தில்*இருப்பாரே என்று எண்ணி, அவருடைய வருத்தத்தை வேறு விதத்தில்*போக்கும் வகையில்*, அவரை*சமாதானம் செய்கிறார். .அப்படித்தான்** அமைச்சர் காளிமுத்துவை* நீக்கியபின்*தலைவர் மதுரைக்கு செல்கிறார் . அங்கு தலைவரோடு*சில அமைச்சர்கள் நின்று பேசி கொண்டிருக்கிறார்கள் .* பதவி நீக்கத்தால் மிகுந்த வருத்தம் அடைந்த*அமைச்சர் காளிமுத்து அங்கே வருகிறார் .* தலைவர் காரில்*அமர்ந்து புறப்படும்*நேரம் அது. மற்ற சில*அமைச்சர்கள் தலைவருடன் காரில் பயணிக்க தயாராக உள்ளனர் .* அந்த நேரத்திலே வந்த அமைச்சர் காளிமுத்துவை அழைத்து*,சில நிமிடங்கள் தலைவர் தனியே பேசுகிறார் .பின்னர் புறப்படும்போது தலைவருடன் சில*அமைச்சர்கள் பயணிக்க தயாராக இருந்த நிலையில்*சிலரை* இறங்க* சொல்லி, காளிமுத்துவை அழைத்து , காரில்*தன்* பக்கத்தில் அமரச்செய்து , அவரை*பதவி* நீக்கம் செய்துவிட்டோமே, அவர் மிகுந்த வருத்தத்தில் இருப்பாரே என்று எண்ணி, அந்த வருத்தத்தை*வேறு விதத்தில்*போக்கும் வகையில்*அவரை சமாதானப்படுத்தி பேசிய மாபெரும்*தலைவர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


நான் எத்தனையோ இலக்கியங்களை படித்திருக்கிறேன் .* மிக பெரிய புராணங்களை எல்லாம் படித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம்.* அவர்கள் எல்லாம் தங்களுடைய செயலை நியாயப்படுத்தி , தண்டனையை*நியாயப்படுத்தினால் கூட*, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் அளித்த*தண்டனையை*வெகு நாட்கள்*ஜீரணித்து கொள்ள முடியாமல்*அவர்களை பக்கத்தில் அமரவைத்து*ஆசுவாசப்படுத்தி அன்பு, பாசம் காட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.* இப்படிப்பட்ட தலைவரோடு*நான் பழகும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்ததை*எண்ணி* பார்க்கின்றபோது ,* அவருடைய தலைமையிலேதான் என்னுடைய திருமண*வாழ்த்துக்கள்* பெற்று, அவருடைய வாழ்த்துரை*வழங்கப்பட்டது என்பதை*நினைத்து* பார்க்கின்றபோது உள்ளபடியே நான் பெரிதும் உவகையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் .* அதே தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* தலைமையில், கோவையில்*மாணவர் மாநில*மாநாடு நடைபெறுகிறது .* அந்த மாநாட்டிற்கு வெள்ளோட்டமாக , ஒரு மாதத்திற்கு முன்னதாக அங்கே வந்து, அந்த மாநாட்டு*ஏற்பாடுகளை எல்லாம் சுமார்*ஒரு மணி நேரம் கலந்து ஆலோசிக்கிறார். அப்போது வந்தவர்கள், கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன், ராமசாமி, முனிரத்தினம், முன்னாள், இந்நாள் மாவட்ட செயலாளர்கள் ,போன்றவர்களுடன், மாணவர்களையும் அவர் அழைத்திருந்தார் .அப்போது திரு.வெள்ளைச்சாமியையும் கோவை*சர்க்யூட் ஹவுஸுக்கு வர செய்தார்* எங்களோடு, பொள்ளாச்சி*ஜெயராமன், வேலுச்சாமி,லிங்கராஜ் ,ராஜேந்திரன் போன்ற மாணவர்களுடன் நானும் செல்கிறேன் .* நான் பேண்ட்,சட்டை அணிந்து அந்த மாணவர்கள் கும்பலுடன் நிற்கின்றேன் .நான் வேட்டி அணிந்து சில கூட்டங்களில் கலந்து கொண்டதையும் தலைவர் பார்த்திருக்கிறார் . தலைவர் அவர்கள் பேசிக்கொண்டே, தொலைபேசியில் சென்னையில் உள்ள திரு.குழந்தைவேலுவுடன் பேசுகிறார் . . கோவையில் மாணவர் மாநில மாநாடு நடைபெறுகிறது அதுபற்றி தெரியுமா உனக்கு என்று சொல்லிவிட்டு வெள்ளைச்சாமியிடம் பேசுகிறார் .நானும் பக்கத்திலேயே நிற்கிறேன்.தலைவர் அவர்கள் என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். என்னுடைய பெயரை, பல குழந்தைகளுக்குதேர்தல் நேரத்தில்**பெயர் சூட்டி இருக்கிறார் .**


நான் பதினைந்து மாணவர்களுடன் கும்பலாக நிற்கிறபோது என்னை அடையாளம் கண்டு கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை*வெள்ளைச்சாமியிடம் எங்கே லியாகத் அலிகானை காணவில்லை என்று கேட்கிறார் .* நான் பக்கத்திலேயே நிற்கிறேன். அண்ணே நான் தான் லியாகத் அலிகான் என்கிறேன் .நீ சும்மா இரு. உன்னை* *எனக்கு தெரியாதா , நான் விளையாட்டுக்காக வெள்ளைச்சாமியிடம் கேட்டேன் என்றார் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு என்னுடைய பெயர் எப்போதும் நன்றாக நினைவில் இருக்கும்.* சில நேரங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருக்கும்போது*என்னுடைய பெயர் சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வருவது கடினம்*ஏனென்றால் கம்பம் தொகுதியில்,என் பெயரை நினைவில் வைத்து* என்னை வேட்பாளராக அறிமுகம் செய்த தலைவரை சந்திப்பதற்கு* நான் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றேன். அப்போது அங்கு 2000 பேர் கூடியிருந்தனர் . தலைவர் முதல்வர் ஆன பின்பு* அவருக்கு** ஒரு சால்வை அணிவித்து, கையில் ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்தபோது, அவரது உதவியாளர்கள் என்னை பிடித்து அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள். நான் உடனே, அண்ணே* நான்தான் லியாகத் அலிகான் என்றவுடன், தலைவர் உதவியாளர்களிடம் அவனை விடுங்கள் என்று சொல்லி, தன்னருகே அழைத்து, என் தோளின்மீது கையை போட்டு, எப்போது வந்தாய், எங்கே தங்கி இருக்கிறாய்* என்று சில நிமிடங்கள் விசாரித்துவிட்டு, சரி, நீ கவலைப்படாதே, ஒரு வாரத்திற்கு இங்கேயே தங்கிவிடு. நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி, அந்த மாபெரும் கூட்டத்தினர் இடையே எனக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் .* கோவையில் நடைபெற்ற மாணவர் மாநில மாநாட்டில் என்னை வரவேற்பு குழு தலைவராக பரிந்துரை செய்கிறார் .**அப்போது வெறும் 26 வயது நிரம்பிய எனக்கு அந்த பொறுப்பை தந்தது சாதாரண விஷயமல்ல.* அப்படி நியமிக்கப்பட்ட நான், வெள்ளைச்சாமி, மற்றும் சில மாணவர்களுடன் பேசி கொண்டிருந்தபோது நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். தலைவரே, மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக தாங்கள் வந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவை இந்த நேரத்தில் கோவையில் நடத்தினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் யோசனை தெரிவித்தோம். அதற்கு ஆரம்பத்தில் பயம் இருந்தாலும், தைரியத்தை வரவழைத்து கொண்டு தலைவரிடம் துணிந்து சொன்னோம் .* ஏனென்றால் எங்கள் வயது அப்படி. எல்லோரும் இளைஞர்கள்..* அப்போது அங்கு வந்திருந்த அண்ணா பத்திரிகை ஆசிரியரிடம்* மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சென்னையில் நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் கோவையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடும்படி செய்தார் .* கோவையில் ப்ரெசிடென்சி ஓட்டலில் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உத்தரவின்படி செயற்குழு, பொதுக்குழு நடத்தப்பட்டது . அடுத்த நாள் கோவையில் மாணவர் மாநில மாநாடு நடைபெற்றது . வரவேற்பு குழு தலைவராகிய என் தலைமையில்* ஒரு நாள், வெள்ளைச்சாமி தலைமையில் ஒருநாள் ,ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன், கம்பம் வரதன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டு உரையாற்றுகிறோம் என்று சொன்னால், இளைஞரகளை அவ்வளவு* உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு தனி பொறுப்பை கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். பயப்பட மாட்டார் .இவர்களால் இதை செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்து* துணிந்து முடிவு எடுத்து எங்களை எல்லாம் வளர்த்துவிட்ட,உருவாக்கி விட்ட* தலைவர்***எம்.ஜி.ஆர். அவர்கள் .என்றைக்குமே மறக்கலாகாத தலைவராக*33ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும்* மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒப்பற்ற தலைவராக*,ஓய்வில்லாமால் உழைத்த காரணத்தால்தான் அவருடைய 70 வது* வயதிலேயே அவர் நம்மைவிட்டு பிரியும் ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது .* அவர் ஒருநாளும் சும்மா உட்கார்ந்ததில்லை. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்*என்று வெறுமனே அவர் பாடவில்லை. அதன்படி நடந்து ஒரு வரலாறு*படைத்தார் .* இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*

2.இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி*

3.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

orodizli
18th November 2020, 07:43 AM
12.11.1972- அன்று திரு.கருணாநிதி அரசு மீதான ஊழல் பட்டியலை குடியரசுத்தலைவர் கே.கே.ஷாவிடம் கொடுத்தார் #புரட்சித்தலைவர்..

புரட்சித்தலைவருடன் கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.

'தமிழகத்தில் இயல்புக்கு மாறான நிலையும், பெருங் குழப்பமும்
நிலவுவதாக குற்றம் சாட்டி,
உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்'

- என்று அன்றைக்கு தமிழகத்திலுள்ள அனைத்து எதிர் கட்சிகளும் குரல் எழுப்பிய நிலையில் நவம்பர் 13-சட்டமன்ற மன்றம் கூடுவதாக அறிவிக்கபட்டது.

இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொன்டது...

அப்போது சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 5...

திமுகவிலிருந்து மேலும் அதிமுகவிற்கு யாரும் செல்லாமல் இருக்கவும், சட்டமன்ற உறுப்பினர்களை கண்காணிக்கவும், திமுக மாவட்ட செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தார் திரு.கருணாநிதி.

திரு.கருணாநிதியின் ஆசை வார்த்தைகளுக்கும், பதவி சுகத்திற்கும் திமுகவின் சுயநலக் கூட்டம் அடி பணிந்தது.

ஆனால் #எம்ஜிஆர் என்கிற வார்த்தையை உயிர் மூச்சாய்க் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்களை திரு.கருணாநிதியால் விலைக்கு வாங்க முடியவில்லை.

பரபரப்பான சூழ்நிலையில்தான்
சட்டமன்றம் கூடியது...

அதற்கு பின்னால் நடந்ததுதான் நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே...........vr...

orodizli
18th November 2020, 07:44 AM
கார்த்திகை மாதம் 1 திங்கள்கிழமை
உலக எம்ஜிஆர் ரசிகர்களே
இந்திய எம்ஜிஆர் ரசிகர்களே
தமிழக எம்ஜிஆர் ரசிகர்களே
உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் உங்கள் முன் அமர்ந்து வீடியோவில் பேசுகின்றவர்பெயர்

கலைஞானம் அவர்கள்
சிவாஜி அவர்களை வைத்து. மிருதங்க சக்கரவர்த்தி என்ற படத்தை தயாரித்தவர்

இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்தும் படம் தயாரித்துள்ளார்

வேறு பல நடிகர்களை வைத்தும் படம் தயாரித்துள்ளார்

இவர் கதை வசனம் எழுதக்கூடியவர்
இவர் எம்ஜிஆர் அவர்களுக்காக. கொடுத்து சிவந்த கரம் என்ற ஒரு கதையை எழுதி வைத்திருந்தார் அந்தக் கதையை பெங்களூரில் இருந்த எம்ஜிஆர் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்

கதையைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்தை நாம் தயாரிக்கலாம்
சென்னை சென்று ஆர் எம் வீரப்பன் இடம் மற்ற வேலைகளை ஆரம்பிக்க சொல்லுங்கள் என்று இவரை பெங்களூரிலிருந்து சென்னைக்கு எம்ஜிஆர் அனுப்பிவிட்டார்
பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக அந்தப் படம் தயாரிக்கப்படவில்லை எம்ஜிஆர் முதலமைச்சராக வந்துவிட்டார்
இந்தத் தகவலை கலைஞானம் அவர்களே வீடியோவில் கூறியிருக்கிறார்
அந்த வீடியோவை நான் துளைவிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தவுடன் உங்களுக்கு பதிவு செய்கிறேன்

1955 ஆண்டில் பாடலாசிரியர் காமாட்சி அவர்கள் இறந்த பொழுதுநடந்த நிகழ்ச்சியை கலைஞானம் கூறுகிறார்

யார் வாயை திறந்தாலும் எம்ஜிஆர் பணம் கொடுத்தார் கொடுத்தார் என்றுதான் கூறுகிறார்கள்

எந்த நடிகையாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி மற்றவருக்கு உதவி செய்திருந்தால்
அதை பேப்பரில் படித்திருந்தால்
அல்லது டிவியில் கேட்டிருந்தாலும்

அந்த நடிகையின் ரசிகர்கள் முகநூலில்அந்த

அற்புத செய்தியை
ஆனந்த செய்தியை
அதிசிய செய்தியை
அடுத்தவர்கள் கேட்டு வாயைப் பிளக்கும் அந்த செய்தியை
அடுத்தவர்கள் கேட்டு ஆர்பரிக்கும்செய்தியை
அடுத்தவர்கள் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அந்த செய்தியை

அந்த நடிகையின் பெயரில் ரசிகர் மன்றம் வைத்த அந்த ரசிகர்கள் முகநூலில் அதை வெளியிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
. பதிவிட கேட்டுக்கொள்கிறேன்

தர்மம் செய்வதில் எம்ஜிஆருக்கு ஈடு இணை யாரும் கிடையாது

எம்ஜிஆர் கால் தூசுக்கு கூட அவர்கள் நிகராக மாட்டார்கள்.........vr...

orodizli
18th November 2020, 07:45 AM
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!

இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.

சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'

என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.

கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!...

orodizli
19th November 2020, 07:27 AM
#மக்கள்_திலகம்...

#மீனவ_நண்பனாக..

உரிமைக்குரல் என்ற ப்ளாக்பஸ்டரை படத்தை 1974ம வருடத்தில் கொடுத்து,மக்கள் திலகம் +இயக்குநர் ஸ்ரீதர் கூட்டணி அசைக்க முடியாத வெற்றிக்கூட்டணி ஆனது.

அந்த வெற்றிக்கூட்டணியின் இரண்டாவது படைப்புதான் மீனவ நண்பன்.இந்த படத்தை துவக்கும்போது அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த மக்கள் திலகம் , படம் 1977 ம் ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளிவந்தபோது கோட்டையில் கொடியேற்றும் முதல்வராகிவிட்டார்.

திரைப்படத்தில் குமரன் என்ற மீனவ நண்பராய் வரும் மக்கள் திலகம், வி.கே.ராமசாமி-நம்பியார்-வீரப்பா கூட்டத்தினர் மீனவர்கள், அடிமாட்டு விலைக்கு மீன்களை தங்களிடம்தான் விற்க வேண்டும் என்ற ஏகாதிபதியத்தை எதிர்த்து போராடுகிறார். மோட்டார் போட்டில் மீன் பிடித்து மீனவர்கள் நல்ல விலைக்கு மீன்களை விற்க உதவுகிறார். எதிர்ப்பை மீறி கமலி ((லதா))யை மணக்கிறார். இறுதியில் தவறு செய்தவர்கள் மனம் திருந்துகின்றனர்.

இயக்குநர் ஸ்ரீதருக்கு முக்கோண காதல் கதைகள்தான் எடுக்க முடியும் என்பதை இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் உடைத்துக்காட்டினார் ஸ்ரீதர்.

"எங்கிட்ட நெருங்காதே..நெருங்கின சுட்ருவேன்" என நம்பியார் துப்பாக்கியுடன் எச்சரிக்கை விடுக்க..
மக்கள் திலகம் " சும்மா சுடு..எனக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட அனுபவம் ஏற்கனவே உண்டு" என சொல்லும் போது எழுந்த கைதட்டலும் ஆரவாரமும் இன்னும் காதில் ஒலிக்கிறது.

மக்கள் திலகத்தோடு ..லதா, வெ.ஆ.நிர்மலா, நம்பியார், வி.கே.ஆர், ,நாகேஷ் என பலர் நடித்திருந்தாலும் மக்கள் திலகமே கடைசி வரை படத்தை தனி மனிதனாக தூக்கி நிறுத்தியுள்ளார்.

வழக்கம்போல் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் மெல்லிசை மன்னர் இசையில் விருந்துபடைக்கின்றன. "பொங்கும் கடலோசை".."நேருக்கு நேராய் வரட்டும்".."தங்கத்தில் முகமெடுத்து".." கண்ணழகு சிங்காரிக்கு".."பட்டத்துராஜாவும் பட்டாள சிப்பாயும்".."நேரம் பெளர்னமி நேரம்" ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

இந்த படம் தமிழகமெங்கும் நூறு நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்து சூப்பர் ஹிட்டானது. அறுபதுகளில் படகோட்டியாய் வென்றவர்..எழுபதுகளில் "மீனவ நண்பராயும்" வென்றார்.கோட்டையையும் பிடித்தார்.

தகவல் :https://en.m.wikipedia.org/wiki/Meenava_Nanban...Sr.bu...

orodizli
19th November 2020, 07:28 AM
# சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் திருயருனி,
அவனுடைய ஏக புத்திரன் சத்தியவிரதன்,
தந்தை சொல்லைக் கேட்காமல் சுற்றித் திரிந்தான்,
மன்னனும் அதைக் கண்டு மனம் வருந்தி மகரிஷி "வசிஷ்டரி டம் " அனுப்பி வைத்தான்,
அந்த மகானுடைய போதனையாவது தன் மகனை திருத்தி விடாதா என்று மன்னன் நினைத்துக் கொண்டிருக்க கடைசியில் அந்த மகன் மகரிஷி வசிஷ்டருக்கே அடங்கவில்லை, அதனால் மனம் வெதும்பிய மகான் தகப்பனுக்கு சொல்லி அனுப்பி விட்டு ஆசிரமத்தை விட்டே துரத்தி விட்டார், அதைத் தொடர்ந்து மன்னனும் இனி என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லி அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விட்டார்,

ஆனால் சத்திய விரதனோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்,

அந்த நேரத்தில் மகரிஷி "விஷ்வாமித்திரர் கடும் தவம் புரிய வேண்டி தன் மனைவி, பிள்ளைகளை காட்டில் தனியாக விட்டு விட்டு இன்னொரு காட்டுக்கு சென்று விட்டார்,

தனியே விடப்பட்ட முனிவரின் குடும்பத்துக்கு இந்த சத்தியவிரதன் உணவுக்கான தேவையை கவனித்துக் கொண்டான்,

அப்போது ஒரு சமயம் மழைப்பொழிவு இல்லாததால் காடு வறண்டு உணவுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது, அந்த நேரத்தில் நம் சத்தியவிரதன் வேறு வழி இல்லாமல் வசிஷ்டர் வளர்த்த பசுவைக் கொன்று அதன் இறைச்சியை தானும் உண்டு விஷ்வாமித்திரர் குடும்பத்துக்கும் கொடுத்து விட்டான்,

சம்பவத்தை அறிந்த வசிஷ்டர் கடும் கோபம் கொண்டு நீ மூன்று பாவங்களை செய்திருக்கிறாய்
" முதல் பாவம் தகப்பன் சொல் பேச்சு கேட்காதது, இரண்டாவது பாவம் பசுவைக் கொன்றது,
மூன்றாவது பாவம் பசு என்றும் பாராமல் அதன் இறைச்சியை உண்டது,
இந்த மூன்று பாவங்களை நீ செய்ததால் இன்று முதல் உன் பெயர் "திரி சங்கு " என்று அழைக்கப்படட்டும், அது மட்டும் அல்லாமல் உன் உருவமும் அருவருப்பாக மாறிப் போகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்,

இந்த நேரத்தில் கடும் தவம் முடிந்து வந்த விஷ்வாமித்திரர் நடந்த சம்பவங்களை எல்லாம் அறிந்து கொண்டார்,

ஆனால் அவருக்குள் ஒருவித இரக்கம் சத்தியவிரதன் மேல் ஏற்பட்டது, தன் குடும்பத்திற்காகத்தானே பசுவைக் கொன்றிருக்கிறான் எனவே அதை பாவமாக நான் கருத மாட்டேன் என்று சொல்லி திரி சங்குவைப் பார்த்து என் குடும்பத்துக்கு உதவியதால் நீ இந்த நிலையை அடைந்தாய் எனவே அதற்கு பரிகாரமாக உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று சொல்லி விட்டார்,

யோசித்துப் பார்த்த திரி சங்குவும் பசுவை கொன்றதால் இந்த ஜென்மத்தில் நான் சொர்க்கம் போக முடியாது என்று வசிஷ்டர் சாபம் கொடுத்து விட்டார் எனவே இந்த உடலுதான் நான் சொர்க்கம் போக நீங்கள் அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்,

உடனே விஷ்வாமித்ர முனிவரும் திரி சங்கு சொர்க்கம் போக வேண்டி அதற்க்கான வேள்வியை ஆரம்பித்தார்,

திரி சங்குவும் சொர்க்கத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தான், அதை க் கண்ட இந்திரன் இந்த பூத உடலோடு நீ சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்று சொல்லி தடுத்தாலும் திரி சங்கு அதை பொருட்படுத்தாமல் மேலும் முன்னேறவும் இந்திரன் கோபத்தில் திரி சங்குவை எட்டி உதைக்கவும் திரி சங்கு கீழே விழ ஆரம்பித்தான்,
இதைப் பார்த்த விஷ்வாமித்ரர் சொர்க்கத்துக்கும், பூமிக்கும் இடையில் வந்து கொண்டிருந்த திரி சங்குவைப் பார்த்து திரி சங்குவே நில் என்று சொல்லி இடையிலேயே ஒரு சொர்க்கத்தை அவனுக்காக படைத்தார் என்று புராணம் சொல்லுகிறது,

அதைத்தான் நாமும் திரி சங்கு சொர்க்கம் என்று அழைக்கிறோம்,

சரி என்னடா இவன் எதற்காக இந்த கதையை சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்?
காரணம் இருக்கிறது

" தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரே குரலில் "பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்றால் அது மக்கள் திலகம் மட்டும்தான் அங்கே உனக்கு இடமில்லை என்று ஒரே உதையாக கணேசனை உதைத்தாலும் கணேசனின் பிள்ளைகள் இப்போது இவர்களே ஒரு இடைவசூல் சொர்க்கத்தை கணேசனுக்காக உருவாக்கி கணேசனை அங்கு குடியேற்றி வைத்திருக்கிறார்கள்,


பின்ன என்னங்க சண்டித் தனத்துக்கு ஒரு அளவில்லியா?

" பாவ மன்னிப்பு " படம் சென்னையில் முதன் முதலாக 10 லட்சம் வசூல் பண்ணுச்சாம்,

ஏண்டா கோக்கு மாக்கு கோமாளிப் பயலுவளா 10 லட்சம் என்பது 1961 இல் உங்களுக்கெல்லாம் நிசாரமாப் போச்சு இல்லே?

"சாந்தி " தியேட்டர் ஆரம்பித்து முதல் முதலாக திரையிட்ட படம் இந்த பாவ மன்னிப்பு, அது மட்டும் அல்லாமல் அந்த படத்தை 100 நாட்கள் அல்லது வெள்ளி விழா? (வெட்டி விழா )கொண்டாடுவதற்கு கணேசன் செய்த தில்லு முல்லுகள் அனைத்தையும் " கல்கண்டு " இதழில் அமரர் தமிழ் வாணன் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் ( அப்போது தமிழ் வாணன் நடு நிலையாளராகத்தான் இருந்தார், அதன் பிறகுதான் தலைவரின் எதிர்ப்பாளராக மாறிப் போனார் )

பலூன் பறக்க விட்டது, எந்த பாடல், காட்சிகள் நன்றாக உள்ளது என்று பரிசுப் போட்டி( பாதி டிக்கெட் இணைத்து அனுப்ப வேண்டும், மற்றபடி ஜி. என். வேலுமணியின் " சரவணா பிலிம்ஸ் " அலுவலகம் மூலமாக ஆட்கள் பிடித்து தியேட்டருக்கு அனுப்பி வைத்தது என்று ஏகப்பட்ட டிங்கிரி, பிங்கிரி வேலைகளை எல்லாம் தமிழ் வாணன் அன்போடு வெளிப்படுத்தியிருந்தார் ( படத்தை தயாரித்தது ஏ. வி. எம் மற்றும் பீம் சிங்கின் புத்தா பிலிம்ஸ் பேனராக இருந்தாலும் இந்த மோசடிகளில் ஜி. என். வேலுமணிக்கும் பங்கு இருந்தது காரணம் அப்போது வேலுமணி சிவாஜியை வைத்து படம் தயாரித்ததுதான் )இது மட்டும் அல்லாமல் அதே வருடத்தில் தெலுங்கிலும் "பாப்பா பரிகாரம் " என்ற பெயரில் டப் செய்து அங்கேயும் பீப் பீ ஊதியது இந்த பாவ மன்னிப்பு ,

அப்படியிருக்க இந்த 10 லட்சம் எங்கேயிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா கோப்பால்? ( இந்த கோப்பால் என்னும் வார்த்தையை புதிய பறவையில் சரோஜா தேவி சொல்லுவது மாதிரி நினைத்துக் கொள்வது இன்னும் கொஞ்சம் காமெடியாக இருக்கும் )

சரி இதையெல்லாம் தாண்டி இதே வருடம் வெளி வந்த தலைவரின் " திருடாதே" படமும், தாய் சொல்லைத் தட்டாதே படமும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் உலகையே புரட்டிப் போட்டது, அப்படியிருக்க பாவ மன்னிப்பு படம் எங்கேயும் மன்னிக்கப்பட்ட மாதிரி தெரியலையே
கோப்பால்?

சரி இதையெல்லாம் விடுவோம் " பேசும் படம் " சினிமா பத்திரிக்கை சிவாஜியின் ஊதுகுழலாக வெளி வந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான் ( நடிகர் திலகம்? பட்டம் கொடுத்ததும் அவர்கள்தானே )
அந்த பத்திரிக்கையில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி இது : "பாவ மன்னிப்பு, திருடாதே இரண்டில் எது சிறந்த படம்?

பேசும் படம் கொடுத்த பதில் : நடிப்புக்கு பாவ மன்னிப்பு, வசூலில் "திருடாதே "
பேசும் படத்தில் வந்த இந்த பதிலை நம் அன்பர்கள் "மய்யம் " இணைய தளத்திலும் ஆதார பூர்வமாக வெளியிட்டதை போண்டா மணி, வைத்தி, மன்னாரன் கம்பெனி தங்கவேலு மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்,

அடுத்தது " திருவிளையாடல் " படம் சென்னையில் 13. 80லட்சம் வசூல் செய்ததாக ஒரு அணுகுண்டை இந்த அல்லக்கைகள் குரூப் பதிவாக போட்டிருக்கிறது,

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , 1969ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் தென்னகத்தை மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் ஜெய பேரிகை கொட்டிய "அடிமைப் பெண் " படம் சென்னையில் வெளியிட்ட நான்கு திரையரங்கிலும் 450 காட்சிக்கு மேல் அரங்கு நிறைந்தது,

அந்த விபரங்கள் எல்லாம் அதிகாரப் பூர்வமாக வெளி வந்தது, அப்படியிருந்தும் " அடிமைப் பெண் " சென்னை வசூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது 13 லட்சத்து 60ஆயிரம்தான்,

அப்படியிருக்க சாந்தி மற்றும் குத்தகை அரங்குகள் கிரவுன், புவன்னேசுவரியில் மொத்தம் 100 காட்சிகள் கூட அரங்கு நிறையாத " திருவிளையாடல் " படம் எப்படி இவ்வளவு வசூல் செய்தது என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா? 1965 இல் வந்த படம் தெரு விளையாடல்,
இவ்வளவு வசூல் வருவதற்கு சாந்தி மற்றும் குத்தகை அரங்குகள் திருப்பதி உண்டியலா என்ன?

பொய் சொல்லுவதற்கும் ஒரு அளவு உள்ளது, இது உலக மகா பொய்யாக உங்களுக்கே தெரியவில்லையா போண்டா மணி குரூப்ஸ்?

சென்னையில் மட்டும் வசூல்? வெளியிட்டு மகிழ்ச்சி கொள்ளும் இந்த கூட்டத்திற்கு தெரியவில்லையா என்ன? சென்னை இவர்கள் அரங்குகள் தவிர தமிழ்நாடு முழுவதும் " எங்க வீட்டுப் பிள்ளை" செய்த வசூலில் நான்கில் ஒரு பங்கு கூட தெரு விளையாடல் செய்யவில்லை,

இந்த விபரம் பேசும் படத்தில் வெளி வந்த விபரம்தான்

சாந்தி தியேட்டர் சாதனை என்பது எப்படி என்பதற்கு ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்

1972 இல் வெளி வந்த " வசந்த மாளிகை " படம் 175 நாளில் வசூல் பண்ணிய தொகை 8.50 லட்சம் மட்டும்தான்,
ஆனால் அதே சாந்தியில் 1974 இல் வெளி வந்த " தங்கப்பதக்கம் "175 நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
11 லட்சத்து 65000,
இப்படி கணக்கு வெளியிடுவதற்கு முன் யோசிக்க வேண்டாமா? இது சாத்தியம் ஆகுமா? கட்டணம் உயர்ந்தாலும் கூட இவ்வளவு வித்தியாசம் எப்படி வரும் என்பதை இந்த போண்டா மணி குழுவினர் யோசிக்கவே மாட்டார்கள் போல் தெரிகிறது,
இப்படி பொய் வசூல் கணக்கு கொடுக்க காரணம் " வாலிபனை " மிஞ்சி சென்னையில் மட்டுமாவது காட்ட வேண்டும் என்ற வெறி,

மற்ற இடங்களில் பார்க்கும் போது இந்த தகர கூஜா வாலிபன் செய்த வசூலில் பத்தில் ஒரு மடங்கு கூட செய்யவில்லை,

1965 முதல் 1977 வரை சிவாஜி படங்கள் சாந்தி தவிர வெளி தியேட்டர்களில் மொத்தம் 57 படங்கள் வெளியானது,
இதில் மொத்தமே 100 நாள் ஓடிய படங்கள் 9 மட்டுமே,

இந்த 9 படத்திலும்
ஒரு தியேட்டரில் மட்டும் 100 நாள் ஓடிய படங்கள்

இரு மலர்கள் : வெலிங்டன் மட்டும்

ஞான ஒளி : பிளாசா மட்டும்

குலமா குணமா :பிளாசா மட்டும்

தவப்புதல்வன் :பைலட் மட்டும்

சொர்க்கம் : தேவி பாரடைஸ் மட்டும்

இரண்டு தியேட்டர் 100 நாள் படங்கள்

ராஜா : தேவி பாரடைஸ், ராக்சி

கந்தன் கருணை : சித்ரா, சயானி


நான்கு தியேட்டர் 100 நாள் ஓடிய படம்

சிவந்த மண் மட்டும்

இதில் இந்த செத்த மண் படத்தைப் பற்றி பேசும் படம் பத்திரிக்கை போட்ட விமர்சனம் என்ன தெரியுமா?

போட்ட முதலை எடுப்பதற்கே இந்த படம் வெள்ளி விழா ஓடினாலும் சாத்தியம் மிகவும் குறைவு காரணம் 80 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்

அப்படியிருக்க 50 நாளைக்குப் பிறகு குளோப் அரங்கில் இப்படி ஆளில்லாமல் ஓட்டுகிறீர்களே என்று கேட்டதற்கு 84 பைசா டிக்கெட்டிற்கு மட்டும் கொஞ்சம் ஆள்கள் வருகிறது,
தியேட்டர் வாடகையும் வருகிறது என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்,

இந்த செய்தி அப்போதைய திரை உலக பத்திரிக்கையிலும் வெளி வந்தது, என்னிடமும் காப்பி உள்ளது,

1965 முதல் 77 வரை சாந்தி யில் வெளியான சிவாஜி படம் மொத்தம் 34 படங்கள்,

இதில் 100 நாள் ஓடிய படங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

21 படங்கள் 100 நாள்

இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் சாந்தி அரங்கம் எப்படிப்பட்டது??!!!

இவர்கள் காட்டும் வசூல் விபரங்கள் எப்படிப்பட்டது என்பதை ?!



தலைவரின் பக்தன்...


ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

orodizli
19th November 2020, 01:11 PM
விஜயா இன்டர்நேஷனலின் தயாரிப்பான "நம்நாடு"
தலைவர் நடித்த படங்களில் தனி இடத்தை பிடித்தது என்றே சொல்ல வேண்டும்.அதோடு மோதவந்த "சிவந்த மண்" அதன் தயாரிப்பாளர் உட்பட பலரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியது என்றால் அது மிகையாகாது. நம்நாட்டில் தொடங்கிய பருவகால (வசூல்) மழை சிவந்தமண்ணை சேறாக்கி சின்னாபின்னமாக ஆக்கிவிட்டது. எத்தனையோ பேர் ஸ்ரீதரிடம் எடுத்துச் சொல்லியும்
கேட்காமல் அவர் அந்தப் படத்துக்காக மெனக்கெட்டு கண்மூடித்தனமாக செலவு செய்து மிகுந்த பேராபத்தில் சிக்கி கொண்டார்.

படத்தை வெளியிட்ட முதல் வாரத்திலேயே படத்தின் முடிவு தூத்துக்குடியில் தெரிந்து விட்டது. "சிவந்தமண்" கூட வெளிவந்த "நம்நாடு" முதல் வாரத்திலேயே வெற்றிக்கொடியை பறக்க விட்டது. மிகவும் அதிகமான செலவில் எடுக்கப்பட்ட "சிவந்தமண்ணை" சிதறடித்து வெற்றி கொண்டது குறைந்த நாட்களில் சொற்ப செலவில் எடுக்கப்பட்ட "நம்நாடு". இருப்பினும் 100 நாட்கள் ஓடவே தடுமாறிய "சிவந்தமண்ணை" வெள்ளிவிழா ஓட்ட பயன்படுத்திய ஸ்டெச்சர், வடக்கயிறு எதுவுமே பலனளிக்காமல் நியூகுளாப் தியேட்டரில் குப்புற கவிழ்ந்து கைபிள்ளைகளின் சோகத்தை அதிகப் படுத்தியது.

ஈரமண்ணை "சிவந்தமண்ணா"க்கிய
கண்ணீர் கதை கைபிள்ளைகளுக்கு மிக்க அதிர்ச்சியை கொடுத்தாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற கைபிள்ளைகள்தானே, இதையும் தாங்கி கொண்டதில் வியப்பேதுமில்லை. இதிலிருந்தே 'சிவந்தமண்" ஒரு படு தோல்விப்படம் என்பது ஊர்ஜிதமாகிறது. 80 லட்சம் செலவில் தமிழில் தயாரான. சிவந்தமண்" தயாரிப்பாளர் தலையில் ஈரமண்ணை கொட்டி 20 லட்சம் கூட வசூலாகாமல் "நம்நாட்டி"ன் காலடியில் வீழ்ந்தது.

"அடிமைப்பெண்ணு"டன் வசூலை ஒப்பீடு செய்தால் ஏன் "நம்நாடு" என்னவாயிற்று என்றவர்களுக்காக "சிவந்தமண்ணை" "நம்நாடு" வசூலுடன் சேர்த்து பார்க்கலாம்.
"சிவந்தமண்" யூனிட்டின் விமானக்கட்டணம் கூட
திரும்பக் கிடைக்கவில்லை என்ற பேச்சு வெளிவந்தது நினைவிருக்கலாம். ஆனால் "நம்நாடு" வெளிநாடு செல்லாமல் உள்நாட்டிலேயே புரட்சி நடிகரின் நடிப்பாற்றலால் வெளிவந்து வெற்றிக்கொடியை உயர்த்தி பிடித்த காட்சியை பலரும் புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது.

அந்த மூன்றெழுத்தில்(எம்ஜிஆர்) தமிழக மக்கள் மூச்சிருக்கும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய உன்னத திரைப்படம்தான் "நம்நாடு". நினைத்ததை 'நடத்தியே முடிப்பவன் நான் நான்' எனறு தலைவர் பாடும் பாடலின் உள்ளர்த்தம் யாருக்கு புரிகிறதோ இல்லையோ மாற்று முகாம் அணியினருக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும். முதல் வாரத்திலேயே "சிவந்தமண்" திரையிட்ட திரையரங்கு காற்று வாங்க ஆரம்பித்ததை பொருட்படுத்தாமல் வடக்கயிறு சகிதம் லட்சிய வேகத்துடன் அவர்கள் சென்றதை பார்க்கும் போது நாட்டை பேரழிவில் இருந்து காக்க செல்கிறார்களோ என்று நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

அதிலும் ஒரு கைபுள்ளை "சிவந்தமண்" ஒரு சிறந்த தேசபக்தி படம் என்று குறிப்பிட்டதை எண்ணி அழுவதா? சிரிப்பதா? ஒண்ணும் புரியவில்லை.தேசபக்தி என்று எதை சொல்கிறார்கள். "நாடோடி மன்னனி"ல் முதல் காட்சியிலேயே மக்கள் போராட்டத்தை மையமாக காட்டியிருப்பார்கள். "அடிமைப்பெண்ணி"லும் மக்கள் போராட்டத்தை தலைவர் காட்டியிருப்பார். ஆனால் "சிவந்தமண்ணி"ல் நண்பன் சிந்திய ரத்தத்திற்கும், "தர்மம் எங்கே"யில், குடும்பச்சண்டையையும், பதவிச்சண்டையையும் காண்பித்து விட்டு தேசபக்தி என்று சொல்வது வெகு காமெடியான ஒரு விஷயம்.

அதிலும் இன்னொரு கைபிள்ளை "சிவந்தமண்ணி"ற்கு பிறகுதான் எல்லோரும் வெளிநாட்டில் படமெடுக்கவே ஆரம்பித்தார்களாம். அண்டப்புளுகன் என்பார்களே? அது இதுதான். எப்படி 6 கஜம் போர்வையில் அய்யனின் அண்டாவயிறை மறைக்க முடியாதோ அது போலதான் இந்த அண்டப்புளுகும். "சிவந்தமண்ணி"ன் படுதோல்விக்குப்பின் 4 ஆண்டுகளாக எந்தப்படமும் வெளிநாட்டில் எடுக்கப்படவில்லை "வாலிபனை" தவிர. "வாலிபனி"ன் நிகரற்ற வெற்றிக்குப்பின்தான் வெளிநாட்டில் தமிழ்ப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள். தனக்கு "பாரத்" பட்டம் கிடைக்காது என்பதை முன்னமே அறிந்து கொண்ட அய்யன் தனது பெயரை 'பாரத்' என்று வைத்துக் கொண்டு செய்யும் வீரதீர சாகசச் செயல்கள் சொல்லி மாளாது.

"அந்நியன்" படையெடுத்தால் பதுங்கி திரியும் இவர்கள் அந்நிய மண்ணில் எடுத்த ஆபாச படத்துக்கு போர்க்கால அடிப்படையில் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக அலைந்தது அருவருப்பை தந்தாலும் அவர்கள் வேட்கையை எண்ணிப் பார்க்கையில் சற்று பரிதாபமாகத்தான் தோன்றியது. சச்சுவை வேறெந்த படத்திலும் இவ்வளவு கவர்ச்சியாக ஆடவிட்டது கிடையாது. ஒருவேளை சிவந்த தேசத்தை காப்பாற்றுவதற்காக சச்சு குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து ஆடியதை தேசபக்தி டான்ஸ் என்று கைபுள்ளைங்க சொல்லியிருக்கலாம்.

சிவாஜியால் படத்தை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த ஸ்ரீதர் சச்சுவுக்கு உடல் முழுவதும் மேக்கப் போட்டு கவர்ச்சி பாடல் காட்சியை வைத்து காப்பாற்றி விடலாம் என நினைத்ததில் வியப்பில்லை. அந்த பாடல் காட்சி முடிந்ததும் இருந்த ஒருசிலரும் தியேட்டரை விட்டு வெளியேறுவதை பார்த்ததும்தான் புரிந்தது. மற்றொரு காட்சியில் மேஜிக் ராதிகாவை கவர்ச்சி உடையில் ஆடவிட்டு, ஆனால் அதில் வரும் பின்னணி இசை அற்புதம், படத்தை ஒப்பேத்தி விடலாம் என்று நினைத்ததோடு நில்லாமல், கலர் கதாநாயகி காஞ்சனாவை படத்தின் கதைப்படி இளவரசியை, ஆபாசமாக ஜிகு ஜிகு டைட் பேண்ட்டில் ஆட வைத்த கொடுமையை சொல்லவோ?அது சுகமான கதையல்லவோ? இதுவும் படத்தை காப்பாற்றும் என்று நினைத்தார்கள்.

க்ளைமாக்ஸில் சிவாஜியின் கொடூரமான நடிப்பை பார்க்க தியேட்டரில் ஆளே இல்லை. இதில் பலூன் சண்டை வேறு. அதற்கு நம்பியாரை விரட்டிச்சென்று பலூனில் ஏறி பலூனை கிழித்த பின்தான் பலூன் கீழே இறங்குமாம். கீழே இருந்து ஒரு கத்தியை விட்டெறிந்தாலே பலூன் தன்னால் இறங்கி விடும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்து சொன்ன கதாசிரியர் வாழ்க! இதே போல ஒரு காட்சியை "லிங்கா"வில் வைத்து படத்துக்கு சங்கு ஊதினார் ரவிகுமார்.

இதுபோன்ற அறுவை காட்சிகள் படத்தின் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. எல்லோரும் இறுதி காட்சிவரை இருக்காமல் கைபிள்ளைங்க உட்பட தியேட்டரை காலி செய்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் கிழிக்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டதை பார்க்கும் போது புல்லரித்து போய்விடும் நமக்கு. கவர்ச்சிக்காக ஒரிரு வாரங்கள் ஓடியதும் படம் சண்டிமாடு படுத்ததை போல படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணியது.

அதன்பிறகு icu வில் இருந்த பேஷண்ட் போல தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு பிறகு கோமா ஸ்டேஜிக்கு போய் ஸ்டெச்சரில் தூக்கி வைத்துக் கொண்டு "வசூல் ராஜா எம்பிபிஎஸ்ஸி"ல் வரும் கோமா நோயாளி போல கணேசன் ரசிகர்கள் தூக்கிக் கொண்டு அலைந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் "மனதுக்குள் மத்தாப்பூ"
தோன்றி "புன்னகை பூ"க்க வைக்கிறது. 100 நாட்கள் ஸ்டெச்சர் தூக்கிய களைப்பில் கைபுள்ளைங்க வெகுநாளாக ஓய்வெடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்..........ksr.........

orodizli
19th November 2020, 01:12 PM
19.11.2020இன்று...

முன்னாள் பிரதமர் அன்னை
"இந்திரா காந்தி" பிறந்தநாள்....

புரட்சி தலைவர் நிர்வாக திறமைக்கும், சாதுர்யத்திற்க்கும் மற்றுமொறு எடுத்துக்காட்டு.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் நினைவுகளை சுருக்கமாக பதிவு செய்கிறேன்...

ஆந்திரா மாநிலத்தில் புரட்சி தலைவரை
பின்பற்றி நாமும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது திரு.என்.டி.ஆர்
அவர்களின் லட்சியம்.
பிறகு எம். ஜி. ஆர் அவர்களிடம் ஆலோசனை பெற்று தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார் என்.டி.ஆர்
அவர்கள்.

பின்பு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை பார்த்து நன்றி
தெரிவிக்க வேண்டும் என்று புரட்சி தலைவர் அவர்களை சந்தித்து பேசினார்
என்.டி.ஆர்.

பேச்சுவார்த்தையின் பொழுது நான் வெற்றி பெறுவதற்க்கு உங்களின் ஆலோசனை பெரிதும் முக்கிய உதவியாக இருந்தது
தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று
நினைக்கிறேன்.என்ன உதவி வேண்டும்
கேளுங்கள் என்று என்.டி.ஆர் கேட்க?

மக்களின் நலனை மட்டுமே நினைக்கும்
நமது புரட்சி தலைவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

எனக்கு என்ன உதவி தேவையிருக்கு?
எனது கடமையை செய்தாலே போதும்.

ஆனாலும் நீங்கள் கேட்பதால் மக்கள் பயன்பெறும் வகையில் எனக்கு ஒரு யோசனை உள்ளது.
சென்னைவாசி மக்களுக்கு தண்ணீர் பற்றாகுறை உள்ளது.
அதற்க்காக
தங்களின் மாநிலத்தில் தண்ணீர் தேவை தன்னிறைவு அடைந்துள்ளதை
நான் அறிவேன்.
ஆகையால் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் தந்தால் தமிழக மக்கள் பயனடைவார்கள்
என்று கேட்டார்.
தலைவர் கேட்டால் மறுப்பு ஏது?
அப்பொழுது தோன்றியதுதான் "கிருஷ்ணா நதிநீர்" திட்டம்.

கிருஷ்ணா நதிநீர் தொடக்க நிகழ்ச்சியில்
பாரத பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டால் நன்மையாக இருக்கும்
என்பது புரட்சி தலைவரின் யோசனை.

தலைவர் என்.டி.ஆர் அவர்களிடம் கூற
மறுத்தார் என்.டி.ஆர் காரணம் ஆந்திராவில் காங்கிரஸை எதிர்த்துதான் என்.டி.ஆர் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறகு எம்ஜிஆர் அவர்கள் என்.டி.ஆர்
அவரிடம் தேர்தலில் போட்டி என்பது வேறு?
நம்மை மக்கள் முதல்வர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இப்பொழுது நாம் மக்களின் முதல்வர்கள்
மக்களுக்கான நல்ல செயல்கள்
நாம் செய்ய கடமை பட்டுள்ளோம்.
மக்களுக்கான நல்ல திட்டத்தை செயல்படுத்தும் பொழுது பிரதமர் தலைமையில் துவங்கினால் நன்மையாக இருக்கும் என்று தெளிவுபடுத்த ஏற்றுக்கொண்டார்
என்.டி.ஆர்.

அப்படி துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் இந்திரா காந்தி கையினால் "கிருஷ்ணா நதிநீர்" திட்டத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 30 கோடிக்கான காசோலையை வழங்கினார் நமது புரட்சி தலைவர்.

Remembering The IRON LADY , INDIRA GANDHI 103th Birth Anniversary
தியாகத்தலைவியை வாழ்த்துவோம்.........Ml.Jn...

fidowag
19th November 2020, 11:26 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/11/20* அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி யாராவது தவறாக பேசினாலோ, இழிவாக பழித்தாலோ, யாராவது தகுந்த காரணமின்றி விமர்சித்தால் அவரது பக்தர்கள், ரசிகர்கள், ஏன் பொதுமக்கள் கூட கோபம் அடைந்தார்கள் .* அதற்கு காரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன்.* 1968ல் வெளியான பணமா பாசமா இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்டது .* அதன் வெற்றி விழா ஆசியாவின் மிக பெரிய திரை அரங்கான மதுரை தங்கத்தில் நடைபெற்றது .* *கோபாலகிருஷ்ணன் விழாவை கொண்டாடுவதற்காக* புதிய கார் ஒன்றை வாங்கி ,சென்னையில் இருந்து மதுரைக்கு பயணித்தார் .* அந்த விழாவில் நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சரோஜாதேவி போன்றவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கோபாலகிருஷ்ணன் எனது இயக்கத்தில் வெளிவந்த பணமா பாசமா படம் ,தமிழகத்தின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர்களின் படங்களை* *வென்று புதிய சகாப்தம் படைத்தது .* என்னுடைய படத்தின் வெற்றிக்கு நிகர் வேறு யாருமில்லை நான்தான் என்று கனத்த குரலில் உணர்ச்சி போங்க பேசினார் .பலத்த கைதட்டல்கள், ஆரவாரங்கள். மெய்சிலிர்த்து போனார் கோபாலகிருஷ்ணன் .அப்படியே ஏகாந்தமாகிவிட்டார். தமிழ் திரையுலகமே தன்னுடைய காலடியில் கிடப்பதாக ஒரு நினைப்பு .* விழா முடிந்து அரங்கை விட்டு வெளியேறுகிறார் சென்னையில் இருந்து பயணித்து வந்த புதிய கார் நொறுங்கி போய் கிடக்கிறது உடனே அரங்க மேலாளரை சந்தித்து விசாரிக்கிறார் .* எங்கே எனது புதிய காரை காணவில்லை என்று கேட்க. மேலாளர் இதோ உங்கள் கார்தான்* நொறுங்கி கிடக்கிறது என்று காட்டுகிறார் .**


மன்னாதி மன்னன், வசூல் மன்னன் என்று பெயர் கொண்டவர்களின் படங்களை என்னுடைய படம் வென்றுள்ளது வசூலில் சாதனை புரிந்துள்ளது என்று சொன்ன வார்த்தைகள் மதுரைவாழ்* எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் உள்ளங்களை காய படுத்தி உள்ளது . அந்த வார்த்தைகளின் விளைவு, தான் விருப்பப்பட்டு, ஆசைப்பட்டு, வாங்கிய புதிய கார்* சின்னா பின்னமாக நொறுக்கப்பட்டுள்ளது .அதை கண்டு பதறி போன கோபாலகிருஷ்ணன் ,ஐயோ, நான் சொல்லக்கூடாததை சொல்லவில்லையே. நான் இயக்கிய*படம் வெற்றி அடைந்தது பற்றிதானே* பேசினேன் . அதனால்*யார் மனமோ*புண்பட்டுவிட்டதே என்று நினைத்து ஓடோடி வந்து அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவை*சந்தித்தார் .* என்னுடைய பணமா பாசமா*படத்தின் வெற்றிவிழாவில் மதுரை*தங்கம் அரங்கில்*நான் சில கருத்துக்களை வெளியிட்டேன்.* எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நான் தவறாக பேசிவிட்டதாக கருதி, என் காரை அடித்து சுக்கு*நூறாக*நொறுக்கிவிட்டார்கள் .என்று புகார் தெரிவித்தார்.*பேரறிஞர் அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர். வேண்டப்பட்டவர் என்பதால் ஒருவேளை இது குறித்து*முதல்வர் அண்ணா*நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவாரோ என்ற கவலையுடன் வீட்டுக்கு திரும்பினார் .*


சில நாட்கள் கழித்து வேறு ஒரு காரில்*இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்*குற்றாலம் சென்றார் . அங்கு அருவிகளில் குளிக்கும்போது யாரோ சிலர் தன்னை* கூர்ந்து**கவனித்து கொண்டிருப்பதை உணர்ந்தார் .* சில* முரட்டு ஆசாமிகள் இவர் லாட்ஜுக்கு , கோயிலுக்கு* ஓட்டலுக்கு எங்கு போனாலும்*தொடர்ந்து வந்து பின்பற்றி கண்காணித்து கொண்டிருந்தார்கள் .* இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு*விசாரித்தபோது, முதல்வர் அண்ணாதான் பாதுகாப்பிற்காக சிலரை*அனுப்பி கண்காணிக்க சொன்னாராம் . அதாவது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்ற போர்வையில்*விஷமிகள்*யாராவது*தொல்லை தராமல் இருக்க பேரறிஞர் அண்ணா*பாதுகாவலர்களை அனுப்பினாராம் .* இந்த விஷயங்கள் அறிந்ததும், கோபாலகிருஷ்ணன் ,அண்ணாவை*நேரில் சந்தித்து,* தங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் என்னை மிகவும் நெகிழ செய்துவிட்டன. மிகவும் நன்றி ஐயா என்று குறிப்பிட்டாராம் .* தம்பி. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. தெரிந்தாலும் அவர் கோபப்பட்டிருக்க மாட்டார். எதற்கும் நீங்கள் ஒன்று செய்யுங்கள். நீங்கள் தம்பி எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடுங்கள். எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிடும் என்று யோசனை தெரிவித்தாராம் .அதன்படி வந்த அறிவிப்புதான்* கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குவதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாக இருந்த படம் தங்கத்திலே வைரம் .* விளம்பரம் வெளியானதோடு சரி. படம் வெளியாகவில்லை .**.

.திரு.கா. லியாகத் அலிகான்*:* தான் முதல்வராகிவிட்டோமே ,சரி,அதைப்பற்றி என்ன கவலை என அவர் நினைத்ததில்லை. வீட்டில்*ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஓய்வெடுப்பார். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய உடலை*ஆசுவாசப்படுத்தி, உற்சாகப்படுத்தி கொண்டால்*மீண்டும் உழைத்து ,உடல் களைப்பே*அடையாத வகையில்*உழைப்பார். அந்த உழைப்பு அனைத்துமே*இந்த நாட்டு மக்களுக்காக, தொண்டர்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக மட்டுமே இருக்குமே ஒழிய, வேறு யாருக்காகவும் இருக்காது .அப்படிப்பட்ட தலைவர்தான்*,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை*நடந்த*பின்னர் முறையாக ஒய்வு எடுத்திருக்க வேண்டும் . எப்படி பேரறிஞர் அண்ணா*அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று திரும்பிய பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி*முறையாக ஒய்வு*எடுக்காது ,தொடர்ந்து உழைத்த*காரணத்தால் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்து* அவர் நம்மைவிட்டு வெகு விரைவில் பிரிந்துவிட்டார் .* அவருடைய 60 வது*வயதிலேயே அவர் மறைய நேரிடும்*நிர்பந்தத்திற்கு உள்ளானார் .*அதே போல அமெரிக்க மருத்துவர்களும், ஜப்பான்*டாக்டர் கானு* போன்றவர்கள் எவ்வளவோ* .எடுத்து சொல்லியும்** நான் உழைப்பேன்*, உழைப்பேன் ,இந்த நாட்டு மக்களுக்காக நாள்தோறும் உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி தேனீயை போல் உழைத்தார் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தலைமை கழகத்தில் அவர் நேரில் வந்து தொண்டர்களிடம், மனுதாரர்களிடம் விண்ணப்பம் வாங்க வேண்டிய* அவசியமே கிடையாது .ஆனால் வாங்கினார் ..* கோட்டைக்கு சென்றால்,அங்கு பிற்பகல் 1 மணி வரை பணியாற்றிவிட்டு, 1.30 மணியளவில் தலைமை கழகத்திற்கு தலைவர் நிச்சயம் வந்துவிடுவார் என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களை வரிசையாக நிறுத்தி ,*அந்த கூட்டத்திலே அனைவரையும் அழைத்து பேசுவார். நலம் விசாரிப்பார் .அந்த நேரத்தில் மதிய உணவை பற்றிக்கூட கவலைப்படாமல் பேசி கொண்டிருப்பார் .* அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும்* விஷயத்தில்தான் அதிகம் அக்கறை காட்டுவார். அதிலேதான் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் .* அன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட கூட்டங்களில் செல்வி ஜெயலலிதா அவர்களும் கலந்து கொள்வார் . தலைவர் அவருக்கு யோசனைகள் சொல்லி தொண்டர்களின் குறைகள் நிறைவேறும் வகையில் உத்தரவுகள் பிறப்பித்து கொண்டிருப்பதை பல சமயங்களில் நானே நேரில் கண்டிருக்கிறேன் .**

*ஒருமுறை கடலூரை சார்ந்த நண்பர் ஒருவருக்கு எஸ்.ஐ.பதவி தேர்வில் குறைபாடு ஏற்படுகிறது .* தலைவரை பார்த்து, இந்த விஷயத்தில் இவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது அண்ணே என்று சொன்னபோது , உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு இந்த அநீதியின் தன்மையை பற்றி தெரிந்து கொண்டதோடு முடிவில் அந்த* நபருக்கு எஸ்.ஐ. பதவி தருவதற்கு தகுந்த உத்தரவு இடுகிறார்* தவறு இழைத்தவர் அதிகாரியாக இருந்தாலும் கூட அதை முறையாக விசாரித்து , கண்டித்து ,மீண்டும் தவறு நடக்கா வண்ணம் அறிவுரை சொல்லி, அந்த பதவி உரியவருக்கு அளிப்பதில்*முன்னுரிமை தரக்கூடிய பக்குவமிக்க தலைவர் எம்.ஜி.ஆர்* அவர்கள் .அந்த எஸ்.ஐ.அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வளர்ந்து,எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார் .* அந்த அநீதியை அங்கேயே தடுத்து அவருக்கு உத்யோகம் தரப்படாமல் இருந்து இருந்தால் ,அவர் வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார் .அதற்கு நல்ல முடிவு எடுத்து பேருதவி புரிந்தவர் புரட்சி தலைவர் .இப்படி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில்தான் அவருக்கு உற்சாகமும், திருப்தியும் ஏற்படும்* இதனால் அவர்* உள்ளமெல்லாம் பூரித்து,உடலெல்லாம் களைப்பு அடையும் வகையில் உழைத்து* பசி வேளையில் அதை கூட மறந்து செயல்பட்ட பாங்கினை நாங்கள் எல்லாம் கண்டு வியப்பு அடைந்திருக்கிறோம் .* அவரோடு, பழகினோம். வாழ்ந்தோம் என்கிற வாய்ப்பு கிடைத்தது பற்றி மிகவும் பெருமை அடைகிறேன் .* பழகுகிறவன் என்று சொல்வதால் , நான் தலைவருடன் மிக சரிசமமாக பழகியதாக நீங்கள் யாரும் தவறாக எடுத்து கொள்ள கூடாது .* எங்களை பொறுத்தவரை தலைவருக்கு நாங்கள் எல்லாம் தொண்டர்கள்தான் .அந்த தொண்டர்களுக்கு தலைவர் மரியாதை செய்வார். மகத்துவம் கொடுப்பார் .* அநீதி இழைக்கப்பட்ட எஸ்.ஐக்கு*தலைவர் பதவி அளித்தார் என்று நான் குறிப்பிட்டேன் அல்லவா. அவர் பெயர் இப்போதுதான் ஞாபகம் வருகிறது அப்துல் கனி என்று .* அந்த அப்துல் கனியை அழைத்து கொண்டு வந்து, முருகுமணி என்பவர் என்னை கேட்டு கொண்ட காரணத்தால் புரட்சி தலைவரிடம் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி முறையிட்டேன் .* அன்றைக்கு அந்த அநீதியை தடுத்து அவருக்கு முறையான*பணி உத்தரவை பிறப்பித்த தலைவர்தான்ஏழை எளியோரின் இதயங்களில் மட்டுமின்றி* எல்லா இன மக்களின் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .* தலைவரை பற்றி குற்றம் குறை சொல்லிவிட்டு யாரும்* சென்றுவிட முடியாது . அந்த அளவிற்கு மாற்று முகாம்***நண்பர்கள் கூட புரட்சி தலைவரை மதிக்கிறார்கள் என்று சொன்னால் அமரர் ஆகிவிட்டார் தலைவர் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார் ஜெயலலிதா, அமரர் ஆகிவிட்டார் கருணாநிதி ஆதலால், அ.தி.மு.க.வினர் கருணாநிதியின் மறைவிற்கு தி.மு.க. தலைவர் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்கள் .அதே போல ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு தி.மு.க.வில் இருந்து தலைவர்கள் வந்து துக்கம் விசாரித்தார்கள் .* அதே போல தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைந்தபோது, அதிகாலையில் கருணாநிதி ,ராமாவரம் தோட்டத்திற்கு சென்று அன்னை ஜானகி அம்மையாரிடம் துக்கம் விசாரித்தார் .இப்படி அமரர்கள் ஆகிவிட்ட தலைவர்களை பற்றி பெரிதாக* விமர்சனம் செய்யாத நாகரிகம் மிகுந்த இந்த கால கட்டத்தில் முரசொலியில்* இன்றைக்கு*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி மிகவும் கேவலமாக ,கிண்டல், கேலி செய்துமீண்டும்* விமர்சிக்கிறார்கள் என்று சொல்லும்போது எனக்கு அவர்கள்மீது வருத்தமாக இருந்தது . எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி அவர்களிடம் சொல்லி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கடந்த பேட்டியில்* நான் வருத்தப்பட்டு கொண்டேன் .* இதுபோன்ற நிகழ்வுகளை, மறைந்த தலைவர்களை, பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள் . பேரறிஞர் அண்ணாவே, காமராஜரை விமர்சனம் செய்திருக்கிறார் .* ராஜாஜி அவர்களை அண்ணா செய்திருக்கிறார் .* அவர்களும் திரும்பி பேரறிஞர் அண்ணா அவர்களை விமர்சித்து இருக்கிறார்கள் .* அனால் தலைவர்கள் மறைந்த பிறகு யாரும் விமர்சனம் செய்வதில்லை .* காமராஜர் அங்கிருந்தபோது அவருடைய செல்வாக்கு உயரும் வகையில் காங்கிரஸ் கட்சி பாடுபட்டால் தவறில்லை .அதை வரவேற்கலாம் .* ஆனால் தி.மு.க.வே* காமராஜர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பியதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா .குடியாத்தம் தொகுதியில் காமராஜர் நிற்கிறார். வென்று முதல்வரும் ஆகிவிட்டார் .* அரசியல் சட்டத்தில் முதல்வராக தேர்வு ஆகுவதற்கு 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது ,பேரறிஞர் அண்ணா அவருக்கு ஆதரவு தரும் வகையில் தி.மு க. அந்த தொகுதியில் போட்டியிடாது என்று அறிவித்தார் . அன்றைக்கு காமராஜர் வெற்றி பெற**பெரிதும் துணை புரிந்த பேரறிஞர் அண்ணாவின் நாகரிக செயலை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.*காமராஜருக்கு சிலை வைக்க செய்தவர் பேரறிஞர் அண்ணா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் .* தந்தை பெரியாரை எடுத்து கொண்டால், காமராஜரை பச்சை தமிழன் என்றதோடு, அவர் ஆட்சியில் அமர்ந்ததால்தான் குழந்தைகள் பள்ளிக்கு தரவும், படிக்கவும் முடிந்தது .* அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், காமராஜரின் மதிய உணவு திட்டம் இடையில் நிறுத்தப்பட்ட போது 1982ல் சத்துணவு திட்டம் என்று அமுல்படுத்தினார்*இந்த திட்டத்தை அமுல்படுத்த அரசிடம் பணமில்லை என்று தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் சொன்னபோது , நான் பிச்சை எடுத்தாவது, வீடு வீடாக சென்றாவது, இந்த இளம் குழந்தைகள், பிஞ்சுகள் படித்து முன்னேற பாடுபடுவேன் . *அதற்கு பசி ஒரு தடையாக இருக்க கூடாது .* அந்த பசி கொடுமையால்தான் இந்த ராமச்சந்திரன் சிறு வயதில் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாமல் போனது . அந்த நேரத்தில் நானும், அண்ணன் சக்கரபாணி அவர்களும் படிப்பை தொடர முடியாமல், பசி கொடுமையால், நாடக துறையில் புகுந்து நடித்து குடும்பத்தை காக்க வேண்டிய* ஒரு சூழ்நிலை ஏற்பட்டது . அந்த நிலைமை இந்த நாட்டு மக்கள் எவருக்கும் வரக்கூடாது .**அதை நான் உருவாக்குவேன். எல்லோரையும் படிக்க வைப்பேன் என்று சொல்லி,*படித்த அனைத்து மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரிகளில் எளிதாக*மேற்கல்வி படிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளை செய்தவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேசினார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.புத்தன் இயேசு, காந்தி பிறந்தது -* சந்திரோதயம்*

2.தூவானம் இது தூவானம் - தாழம்பூ*

3.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

4..திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
**

fidowag
19th November 2020, 11:48 PM
20/11/20 முதல் திருச்சி அருணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த"ரகசிய*போலீஸ் 115" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .வெற்றிகரமான 2 வது* இணைந்த வாரம்*

தகவல் உதவி : மதுரை. திரு.எஸ்..குமார்.*

fidowag
19th November 2020, 11:49 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (12/11/20 முதல் 19/11/20 வரை)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-12/11/20* *சன்* லைப்* - மாலை* 4 மணி - திருடாதே*

13/11/20* - சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*

* * * * * * மெகா 24- பிற்பகல் 2.30மணி - தேர்த்திருவிழா*

14/11/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 7 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

15/11/20-மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *புது யுகம்* - இரவு 10 மணி - மாட்டுக்கார வேலன்*

16/11/20- சன் லைப் - காலை 11 மணி - ரிக் ஷாக் காரன்*

* * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - தேர் திருவிழா*

* * * * * * * * *பாலிமர் - பிற்பகல் 2 மணி* -இன்று போல் என்றும் வாழ்க*

* * * * * * * * சன் லைப்* -மாலை 4 மணி - ஆசைமுகம்*

17/11/20 சன் லைப் -மாலை 4 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * புதுயுகம்* - இரவு* 7 மணி* - நல்ல நேரம்*

* * * * * * * * *பாலிமர்* *- இரவு* 11 மணி - தனிப்பிறவி*

18/11/20-வேந்தர் டிவி -காலை 10 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * * *சன் லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*

* * * * * * * *மெகா டிவி - மதியம்* 12 மணி - பணத்தோட்டம்*

* * * * * * * வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*

19/11/20 மெகா டிவி - அதிகாலை 1 மணி* - தாயின் மடியில்*

* * * * * * * மீனாட்சி* - மதியம் 12 மணி - விவசாயி*

* * * * * * * *மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - முகராசி*

* * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - கன்னி தாய்*

* * * * * * * *சன் லைப் - மாலை* 4 மணி - என் அண்ணன்**

* * * * * * * புதுயுகம் - இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - தொழிலாளி*** * * * * * * **

orodizli
20th November 2020, 08:09 AM
# இப்போதெல்லாம் நன்றாக காமெடி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது, வடிவேலு வேற இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில்லை, சந்தானம் ஹீரோ ஆயிட்டார் எனவே தமிழ் சினிமாவுக்கே கொஞ்சம் காமெடிப்
பஞ்சம் வந்து விட்டது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி,

அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், இந்தா வந்துட்டுல்ல புதிய டீம்,

ஏற்கனவே இருக்கும் போண்டா மணி, "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி, லொள்ளு சபா மனோகர், கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு இவர்களுடன் அதிரடியாக உங்களையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதற்கு இன்னும் ஒரு நாலைந்து நகைச்சுவை மன்னர்கள் இதோ வந்து விட்டார்கள் உங்களைத் தேடி

முறையே "அல்டாப்" அருணாச்சலம், "மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், "குபீர் சிரிப்பு "குமரப்பா, காமெடி கந்தன் இவர்களெல்லாம் உங்களை சிரிக்க வைக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்,

இனி ஷோவுக்குள்ள போவோமா !( மேலே வந்த டயலாக் எல்லாம் "விஜய் " டி. வி யில் " அது, இது, எது நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுவது மாதிரி நினைத்துக்கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் )

" கப்பலோட்டிய தமிழன் " வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு என்னுடைய பணிவான வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,

அவரின் வீர வரலாற்றை திரு. பந்துலு அவர்கள் திரைப்படமாக எடுக்க நினைத்தது தவறில்லை, ஆனால் கணேசனை வைத்து எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து படத்தை தொடங்கினார் பாருங்கள் அங்கேதான் விதி விளையாடி விட்டது,

அந்த படத்தை நன்றாகப் பாருங்கள்,
வ. உ.சி கதாபாத்திரத்தில் நடித்த கணேசனை விட " பாரதியார் " வேடத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா, சுப்பிரமணிய சிவா வாக நடித்த திரு. அவ்வை சண்முகம், இளம் காதலர்கள் வேடத்தில் வரும் ஜெமினி கணேசன் சாவித்திரி இப்படி அனைவருமே வெகு இயல்பாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பார்கள்,

அதிலும் "காற்று வெளியிடை கண்ணம்மா "பாடலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்,

என்ன இருந்து என்ன பயன் சிதம்பரனார் வேடத்தில் வந்த கணேசனின் இயல்புக்கு மாறான ஓவர் அலட்டல் நடிப்பால் படம் படுத்து விட்டது ( கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழே தெரியாத நடிகர் சாயாஜி ஷிண்டே அவர்களை வைத்து பாரதியார் படம் வெளி வந்தது, அதில் அவர் அவ்வளவு எதார்த்தமாக, இயல்பான முறையில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்,

நம்முடைய கணேசன் "கை கொடுத்த தெய்வம் " படத்தில் ஒரு பாடலில் பாரதியார் வேடத்தில் நடித்து அந்த முக பாவனைகளை பார்த்தவர்களுக்கு பயத்தில் காய்ச்சல் வந்ததுதான் மிச்சம் )

அந்த படத்தை எடுத்த வகையில் பந்துலு அவர்களுக்கு அந்த சமயத்தில் 7 லட்ச ரூபாய் நஷ்டம் என்று படத்தில் நடித்த கணேசன் பேசும் படம் சினிமா பத்திரிக்கையில் 1993 ஆம் வருடம் மிகவும் வருத்தப்பட்டிருந்தார்,

இப்போ அதற்கு என்னா என்கிறீர்களா?
வேறு ஒன்றுமில்லை

படத்தில் நடித்த கணேசன், படத்தை தயாரித்த பந்துலு இருவருமே பகிரங்கமாக ஒத்துக்கொண்ட விஷயத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது கணேசன் ரசிகர்கள் என்னும் பெயரில்
ஒரு குபீர் சிரிப்பை வரவழைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கள்,

அதாவது படம் வெளியான 25 நாளில் 40 லட்சம் பேர் படம் பார்த்தார்களாம்
குறைந்த பட்சம் 35 லட்சம் வசூல் ஆகி இருக்குமாம்,
தயாரிப்பு செலவு 15 லட்சம் போக மீதி 20 லட்சம் லாபம் தானே அப்படியிருக்க அந்த படம் எப்படி வசூலில் தோல்வி என்று சொல்லப்படுகிறது என்று மிகவும் வேதனைப் பட்டிருக்கிறார்கள்,

நமக்கும் மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய்ய உங்களைப்போல் அந்தக் காலத்தில் CHARTED ACCOUNT
படித்துவிட்டு சூப்பராக கணக்குப்
போடும் ஆடிட்டர்கள் இல்லை போல் இருக்கிறது, what a pitty?

ஒரு வேளை 400, 000 என்பதற்குப் பதில் 40, 00000 என்று தவறாக கணக்கு கொடுத்து விட்டார்களோ என்னவோ, எதற்கும் இன்னொரு முறை நன்றாக check செய்து கொள்ளுங்கள் சரியா !

ஹீரோ 72 என்று பூஜை போட்ட கையோடு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது,
அதற்கு முன்பே சிவந்த மண் கொடுத்த மரண அடியையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் இந்த படத்திற்கு பூஜை போடக் காரணம் ஒரு வேளை இதாவது நம்மை கரை சேர்த்து விடாதா என்ற நப்பாசைதான், ( ஏற்கனவே " அன்று சிந்திய ரத்தம் " என்ற பெயரில் தலைவரை வைத்து படம் எடுத்து விட்டு ஒரு சிறிய பிரச்சனையினால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் தலைவரிடமும் போவதற்கு தயக்கம் )

ஆனால் கணேசன் புதிய படத்திற்கு கால் ஷீட் தராமல் இழுத்தடி த்தார்,
அதற்கு என்ன காரணம் என்றால் ஸ்ரீதர் பலரிடமும் சிவந்த மண் படத்தால் எனக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்று சொன்னதாக ஒரு டாக் கணேசன் காதில் விழுந்திருந்தது, அதை உறுதிப் படுத்தும் விதமாக அப்போதைய பத்திரிக்கைகளிலும் அதே செய்தி பரபரப்பாக வெளி வந்திருந்தது,

இதை மனதில் வைத்துக்கொண்டுதான் கணேசன் கால்ஷீட் தராமல் ஸ்ரீதரை அலைய விட்டார் , அதை அரசல் புரசலாக தெரிந்து கொண்ட ஸ்ரீ தர் வேறு வழி இல்லாமல் இந்தி நடிகர் ராஜேந்திரகுமாரை சந்தித்து ஒரு படம் நடித்துத் தருமாறு உதவி கேட்டார்,

ஆனால் அவர் கொடுத்த idea தான் ஸ்ரீதர் மீண்டும் தலைவரை வைத்து உரிமைக்குரல் படம் எடுத்து பெரிய நரகத்திலிருந்து மீண்ட கதை அனைவருக்கும் தெரியும்,

ஸ்ரீதர் சிவந்த மண் படத்தால் நஷ்டம் அடைந்தேன் என்று சொன்னதாக சிவாஜி ரசிகர்கள் நன்றி கெட்ட ஸ்ரீதர் என்ற வசனத்துடன் போஸ்டரும் அடித்திருந்தார்கள்,
அந்த போஸ்டர் விளம்பரத்தையும் சங்கர் சார் ஏற்கனவே ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார்

இன்றைக்கும் சிவந்த மண்ணு நம் நாடு படத்துடன் மோதி செத்த மண்ணாகப் போன ஆதாரங்களை
வெகு சிறப்பாக வெளியிட்டிருந்தார் ( இதற்கு மேலும் செத்த மண்ணு வெற்றிப்படம்தான் என்று பீப்பீ ஊதுவீர்கள் என்றால்????????? )

வைர நெஞ்சம் பட ஷூட்டிங்கில் ஸ்ரீதர்
உரிமைக் குரல் கதையை சொல்லி o. k வாங்கியிருந்தாராம் கணேசனிடம் ( நம்பிட்டோம் போண்டா மணி குரூப்ஸ், அது மட்டுமில்ல தலைவர் இடத்தில் கணேசனை கொஞ்சம் பொருத்திப் பாருங்களேன், காமெடியா இல்ல? )

1977 இல் பாக்ஸ் ஆபீசை அலற விட்ட " மீனவ நண்பன் " படத்தைப் பற்றி இவர்கள் ஒரு விமர்சனம் போட்டிருக்கிறார்கள்
படிக்கும் போது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை

" மீனும் கிடைக்கவில்லை, நண்பனின் வரமும் கிடைக்க வில்லை "

இந்த டைமிங் காமெடி எனக்குப் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது புரிகிறதா பாருங்கள்

ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வசூலை அள்ளிக் குவித்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் என்றால் வேறு எந்த படத்தை வெற்றிப்படம் என்று சொல்வார்கள்?

ஒரு வேளை "இளைய தலைமுறை, ரோஜாவின் ராஜா, உத்தமன், நாம் பிறந்த மண், மன்னவன் வந்தானடி, அவன் ஒரு சரித்திரம் மாதிரியான படங்களைத்தான் சூப்பர் என்று சொல்வார்களோ தெரிய வில்லை,

1976 ஆம் ஆண்டில்
சிவாஜியின் சினிமா வாழ்க்கை முடிகிறதா? என்று அட்டைப்படம் போட்டு "கல்கி " பத்திரிக்கை கட்டுரை எழுதியது இந்த குழுவினருக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்...

" மோகனப் புன்னகை " படம் கணேசன் ஸ்ரீதருக்கு இலவசமாக நடித்துக் கொடுத்தாராம்,

இப்படி ஒரு படம் வந்ததே நிறைய பேருக்குத் தெரியாது, அதுவும் ஸ்ரீதர் கடன், மனவேதனையால் இவரிடம் வந்தாராம் ...

ஏண்டா புளுகல் மன்னன்களா கதை விட்டாலும் கொஞ்சம் நம்பும் படியா விடுங்கடா, உங்க அய்யன் புத்தி தான உங்களுக்கும் வரும்,

மோகனப்புன்னகை படம் எடுத்தவர் சாரதி, ஸ்ரீதர் அல்ல
அப்படியிருக்கும் போது ஸ்ரீதருக்கு எப்படி இலவசமாக நடிச்சுக் கொடுத்தார்?

மோகனப்புன்னகை வருவதற்கு முன்பே "அழகே உன்னை ஆராதிக்கிறேன், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களை எடுத்து நல்ல நிலையில் இருந்த ஸ்ரீதர் இவரிடம் போனாராம்,

அட முண்டங்களா, அய்யனை வைத்து இந்த ஓட்டை டப்பா படத்தை எடுத்த பின்பு அவர் எடுத்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை,

ஒரு ஓடை நதியாகிறது, ஆலய தீபம், யாரோ எழுதிய கவிதை, இனிய உறவு பூத்தது,

அதிலும் குறிப்பாக 1985 இல் மோகன், ஜெயஸ்ரீ நடித்து வெளி வந்த " தென்றலே என்னைத் தொடு" அதிரி, புதிரி ஹிட்,

பாடல்களும் சரி, இயக்கம், நடிப்பு எல்லாமே வேற லெவல்,

உண்மை இப்படி இருக்க எப்படி மீட்டர் மீட்டரா பூவை அளக்கிறானுவப்பா?

நாலு நாள் தாக்குப்
பிடிக்காத அவிஞ்ச புன்னகைக்கு இவ்வளவு பில்டப்,
கஷ்டம்டா சாமி !

அப்புறம் செத்த மண்ணு படத்துக்கு தலைவர் ரசிகர்கள் இவர்களிடம் டிக்கெட் கேட்டார்களாம்,

பெரிய அவதார் படம்
பிளாக்கில் வாங்கிதான் பார்க்கணும்

நீங்களே இலவசமாக டிக்கெட் கொடுத்தும் கூட நாய் கூட கிளத் தி மோளாத படத்துக்கு என்ன ஒரு
பில்டப்பு

" சிரித்து வாழ வேண்டும் " அழுது கொண்டே ஓடுச்சாம்,

மதுரை நியூ சினிமா அரங்கில் 104 நாள் ஓடி திரையிட்ட அரங்குகளில் எல்லாம் 50 நாளை நிறைவு செய்து பல அரங்குகளில் 75 நாட்களைக் கடந்து 75 லட்சத்துக்கு மேல் வாரிக் குவித்த படம் அழுது கொண்டே ஓடியது என்றால் , வெளியான நாளில் இருந்து இன்று வரை இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் படம்,
இப்போ கொரோனா தளர்வுக்குப் பிறகு கழிந்த 10 ந் தேதி தூத்துக்குடி சத்யா வில் திரையிடப் பட்ட படம் சிரித்து வாழ வேண்டும்...

அதைப் பற்றி சொல்ல ஒரு அருகதை வேண்டாமா?

அய்யன் நடிச்ச 300 படத்தில் மறு வெளியீடு கண்டவை எத்தனை?

2, 3 படங்கள் ஒரு நான்கைந்து தடவை வெளி வந்ததோடு சரி,

ரிலீஸ் ஆன கையோடு மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்ட படங்களுக்கே இவ்வளவு தெனாவெட்டு காட்டினால் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கும் தலைவரின் ரசிகர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

இப்போ கொஞ்ச நாளைக்கு முன்பு புடவை, ஜாக்கெட் எல்லாம் கொடுத்து நீங்களே திரையிட்டு நீங்களே கை தட்டிக் கொண்ட டிசிட்டல் படம் ஒன்றும் வரலையாக்கும் ?!!!

கேவலம் ஒரு பைசாவுக்கு மதிக்க ஆளில்லை ,
உங்களையெல்லாம்??????????????

தலைவரின் பக்தன் ...

ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt).........

orodizli
20th November 2020, 08:20 AM
P.s.சரோஜா !

"எனது கணவர் டி.ஆர்.ராமண்னா இரண்டு பேருடனும் நெருங்கிய நட்புடன் இருந்தார். ஒருவரை ஒருவர் அண்ணா என்றே அழைத்துக்கொள்வார்கள். பல நேரங்களில், எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது பற்றிய பேச்சு வரும். தான் சொல்லும் தேவைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்று என் கணவர் அவர்களிடமே சொல்வார்.

இருவருமே அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தபோது, இருவரையும் அழைத்து, இருவரையுமே தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து என் கணவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் தான் படத்தின் நாயகி" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் பி.எஸ்.சரோஜா.

படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் தங்கராஜ். அவருக்கு மனைவியாக சரோஜா நடித்திருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகள் 'கூண்டுக்கிளி' படத்தில் குறைவே.

"ஆனால் அந்தக் காட்சிகள் கதைக்கு முக்கியமானவை. அதிகம் பேசப்பட்டவை. இருவருடனும் சேர்ந்து நடிப்பது எனக்கும் அதுதான் முதல் முறை. நான் எப்போதுமே அவர்களைக் கண்டு ஆச்சரியத்தில் இருப்பேன். ஆனால், அவர்களின் தோழமை அணுகுமுறையால் என்னால் எளிதாக நடித்து முடிந்தது" என்றார் சரோஜா.

தற்போது 93 வயதாகும் சரோஜா தனது மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார்.
நன்றி !
இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து .............

orodizli
20th November 2020, 08:20 AM
இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதநேயர் எம்.ஜி.ஆர். அவர்களை தமிழகம் தத்தெடுத்துக் கொண்டது.
அவர் வாழ்வில் உயர உயர தமிழகத்தை தத்தெடுத்துக் கொண்டார். அவர் தத்தெடுத்துக் கொண்ட குடும்பங்களில் ஒன்று நடிகர் குண்டு கருப்பையாவின் குடும்பம். கருப்பையாவின் மறைவிற்கு பின் அந்த குடும்பத்தினரை பாதுகாத்து மகன்கள், மகள்களுக்கு திருமணம் நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்.

இங்கே அவர் திருமணம் நடத்தி வைப்பது அ.தி.மு.க. தலைமைக் கழக
நிர்வாகியாக இருந்த, (தற்போது
சென்னை தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர்.
நினைவில்ல நிர்வாகியான)
திரு கே.சுவாமிநாதன்.

அ.தி.மு.க. வின் வரலாறை முழுமையாகத் தெரிந்த வெகு சிலரில் முக்கியமானவர் இவர். ஆனால் இவரை எம்.ஜி.ஆருக்குப் பின் இந்த இயக்கம்
கண்டுகொள்ளவில்லை. காரணம் இவருக்கு துதிபாடத் தெரியாது.

திரு சுவாமிநாதன், அவரது மனைவி
விஜயலட்சுமி இருவருக்குமே நேற்று
ஒரே நாள் பிறந்த நாள். அவர்களுக்கு
நமது நல்வாழ்த்துக்கள்.

Ithayakkani S Vijayan.........

fidowag
20th November 2020, 11:27 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீட்டு சாதனை*தொடர்ச்சி ............20/11/20 (* வெள்ளி முதல் )
---------------------------------------------------------------------------------------------------------
சென்னை* மகாலட்சுமி - தென்னக ஜேம்ஸபாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*
நடித்த ரகசிய போலீஸ் 115- தினசரி மாலை 4 மணி / இரவு 7 மணி காட்சிகள் .


திருச்சி - அருணாவில் - ரகசிய போலீஸ் 115- வெற்றிகரமான 2 வது* இணைந்த*
வாரம் - தினசரி* 3 காட்சிகள் -தகவல் உதவி :மதுரை திரு.எஸ். குமார் .


சேலம் -அலங்காரில் -நம் நாடு -தினசரி 3 காட்சிகள் - வெற்றிகரமான 2வது வாரம்*
தகவல் உதவி : சேலம் திரு.சத்தியமூர்த்தி .


ஏரல்* (நெல்லை மாவட்டம் ) சந்திராவில் -எங்க வீட்டு பிள்ளை*
தினசரி 3 காட்சிகள்*


திருச்சி - பேலஸில் (21/11/20) முதல் எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3காட்சிகள்*

தகவல்* உதவி : மதுரை திரு.எஸ். குமார் .

orodizli
21st November 2020, 07:16 AM
ஒருமுறை பாய்ஸ் கம்பெனி நாடக குழுவில் தலைவரும் பெரியவரும் தலைவருக்கு அப்போது வயது 7 இல் நடித்து கொண்டு இருக்க.

உணவு இடைவேளை நேரம்....அந்த கம்பெனி வழக்கம் படி ஹீரோ ஹீரோயின் மற்றும் முக்கிய வேடம் போடும் நடிகர்கள்களுக்கு சிறப்பு பந்தி உணவு.

சாதம் சாம்பார் பொரியல் கூட்டு அப்பளம் போன்றவை உடன்...உடன் கெட்டி தயிர் உண்டு.

பசியில் வாடிய தலைவர் ஒருநாள் அந்த முக்கிய நபர்கள் பந்தியில் போய் சாப்பிட அமர்ந்து விட்டார். .இதை கண்காணிக்க அமர்த்த பட்ட ஒருவர் தலைவரை தூக்கி உனக்கு என்ன இங்கே சாப்பிடும் அவசரம் எழுந்து போய் விடு என்று விரட்ட.

அவமானத்தில் கூனி குறுகி போகிறார்கள் தலைவரும் பெரியவரும்...அவர்களை போன்றவர்களுக்கு சிறப்பு பந்தி முடிந்து மீதம் இருக்கும் சாதம் வெந்நீர் கலக்க பட்ட சாம்பார் நீர் மோர் ஆகியவை தினம் தினம்...

கண்களில் முட்டி நிற்கும் கண்ணீருடன் அந்த 7 வயதில் நம் தலைவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது....அதை பின் நாட்களில் அவரே பலமுறை பேட்டிகளில் சொல்கிறார். .

என்றாவது ஒருநாள் எனக்கு மற்றவர்களுக்கு சாப்பாடு போடும் நிலை வந்தால் ஏழை செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே வகை ஆன உணவு அளிப்பேன் என்று அன்று தீர்மானிக்கிறார்.

அதுவே பின் நாட்களில் நடந்தது....ராமாவரம் தோட்ட இல்லத்தில் தன்னை சந்திக்க வரும் பெரும் செல்வந்தர்களும் அழுக்கு வேட்டி புடவை உடன் வரும் சாமானிய மக்களும் ஒரே இடத்தில் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து ...

அனுதினமும் விதம் விதம் ஆன அமோக விருந்து சாப்பாடு கொடுத்து மகிழ்ந்தார் நம் மன்னவன்...

அதுவே நம் புரட்சிதலைவர்...
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

உலக நாடுகள் இன்று வரை தீர்க்க முடியாத ஏழை பணக்காரன் சம நிலையை தன் வீட்டில் ஆரம்பித்து வைத்த சமுதாயத்தின் நாட்காட்டி அவர்.

ஆள்காட்டி பிழைக்கும் அற்ப அரசியல் தலைவர் இல்லை.

வாழ்க நம் தலைவர் புகழ்....உங்களின் குரல் ஆக உங்களில் ஒருவன்.

நன்றி...இன்னும் தொடரும் தலைவரின் சிந்தனைகள்..நன்றி.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று உலகம் சொல்லவேண்டும்.

உலகம் சொல்லியது.
சொல்லி கொண்டு இருக்கிறது....

இன்னும் சொல்லும் என்றும்....

புவி உள்ளவரை புரட்சிதலைவர் புகழ் என்றும் நிலைக்கும்..........vrh...

orodizli
21st November 2020, 07:19 AM
மக்கள் திலகம் என்றென்றும்

#"இதயக்கனி"

சத்யா மூவீஸ் தயாரிப்பில், ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம். ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் எந்த வருடமானாலும் மக்கள் திலகம் வசூல் மன்னன் என்பதனை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த படம்.

இலட்சங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 2.5 கோடி வசூலை குவித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 57 கோடிக்கு சமமாகும்.

தேயிலை எஸ்டேட் உரிமையாளரும், கடமை தவறா காவல் துறை அதிகாரியுமான மோகன் ((மக்கள் திலகம்)) ஒரு பொதுஉடமைவாதி. தன் எஸ்டேட்டில் வருகிற லாபம், செல்வம் அனைத்தையும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவில் வைத்து அவர்கள் அன்பை பெற்றவர். ஒரு நாள் தன்னை அடைக்கலமாக வந்தடைந்த லட்சுமி யை((ராதா சலூஜா)) தன் எஸ்டேட் வீட்டில் தங்க வைக்கிறார். பின் பெரியவர்களின் ஆசியோடு லட்சுமியை மணந்து கொள்கிறார்.

ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி கொலையின் பின்னணியில் கொள்ளைக்கூட்டம் இருப்பதை தன் மேலதிகாரியின் மூலம் அறிந்து கொள்கிறார் மோகன். அந்த கொலைக்கான முக்கிய சந்தேகப்படும் குற்றவாளியாக தன் மனைவி லட்சுமியின் புகைப்படமும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் மோகன். தன் மனைவி குற்றவாளியா? நிரபராதியா? என மோகன் கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

மக்கள் திலகத்தின் த்ரில்லர் வகை படங்களில் இது முக்கியமானது. வழக்கம் போல் தெறிக்க விடுகிறார் மக்கள் திலகம். அதுவும் மிஸ்டர்.ரெட் வேடத்தில் கொள்ளைக்கூட்ட தலைவி ராஜசுலோசனாவுடன் மோதும் இடம், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் போடும் ஆட்டம், வெடித்து சிதறும் குண்டுகளிடையேயான போட் சேசிங், இதை தவிற ராதா சலூஜாவுடன் ரொமேன்ஸ் என்று தெரிக்க விடுகிறார் மக்கள் திலகம்.

படத்தின் இன்னொரு கதாநாயகர் சந்தேகமில்லாமல் மெல்லிசை மன்னர்தான்."நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற "என்ற அட்டகாசமான இன்ட்ரோ வில் தொடங்கி-"இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" என்ற அதகள டூயட் பாடல், "இதழே இதழே கனி வேண்டும்" என்ற ரொமான்ஸ் டூயட், "ஒன்றும் அறியாத பொண்ணோ"-"எங்கேயோ பார்த்த நியாபகம்" என்று இன்று வரை பாடல்களை நிற்க வைத்துள்ளார் மெல்லிசை மன்னர்.

மக்கள் திலகம், அமெரிக்கா-ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது "நீங்க நல்லாயிருக்கணும்" பாடலும் அனைத்து இடங்களிலும்-குறிப்பாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. மக்கள் திலகத்தின் படத்திங்களுக்கு இசையமைத்த, மெல்லிசை மன்னர் பாடல்கள் வெறும பாடல்கள் அல்ல- மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உணர்வோடும், உள்ளத்தோடும் கலந்து விட்ட ஒன்று என்பது படம் வெளிவந்த புதிதிலும் சரி, மக்கள் திலகம் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெறும்போதும் சரி, மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

இந்தப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி அந்த வருடத்தின் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புரிந்தது. அதே போல தமிழகம் எங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு, படம் வெளியான நாள்முதல் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த சாதனை முறியடிக்கப்படவே இல்லை. இலங்கையில் 25 வாரங்கள் ஓடி பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த காவியம்...

1978 ம் ஆண்டு தாஷ்கண்ட் ((அன்றைய ரஷ்யா-இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர்)) உலக திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் திரையிடப்பட்ட ஒரே படம் என்ற பெருமையையும் "இதயக்கனி" தட்டிச்சென்றது..!!!

அண்ணாவின் "இதயக்கனி" என்றென்றும் மக்களிடமே...!!!

தகவல் & புகைப்படம் :https://en.m.wikipedia.org/wiki/Idhayakkani...Sr.bu...

orodizli
21st November 2020, 07:20 AM
1967 ஆம் ஆண்டு தமிழக அரசியலில்
சரித்திரம் படைத்த வருடம். ...
நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அது
வரலாற்றை மாற்றி எழுதியது.....
கொலை செய்தால் கதை முடிந்தது
என்று நினைத்தான் ஒரு அயோக்கியன்
ஆனால் கதை இப்போதுதான் ஆரம்பிக்கிறது
என்று நினைத்தான் இறைவன். ....

உலக அரசியல் வரலாற்றில் எத்தனையோ
கொலை முயற்சி வழக்குகளை பார்த்திருக்கிறோம் ஆனால் உயிரை எடுக்க
நினைத்து அது எங்கேனும் ஆட்சியில் போய்
அமர்த்தியதை நாம் இதுவரை பார்த்ததில்லை

கொலை முயற்சி வழக்கு சென்னை செசன்ஸ்
நீதிமன்றத்தில் நடந்தது
தலைவருக்கு --- பி.ஆர் கோகுலகிருஷ்ணன்
அயோக்கியனுக்கு --- என்டி. வானமாமலை
இந்த இரண்டு வழக்கறிஞர்கள்
வாதாடினார்கள். ....
வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கியது-
நீதியரசர் --- ஜி.ஆர் . லக்ஷ்மணன்,
7 வருட கடுங்காவல் தண்டனை. ....

கொலை செய்ய வந்தவனை சிறையிலிருந்து
சிறப்பு சலுகை மூலம் தண்டனை காலம்
முடியும் முன்பே விடுதலை செய்தான்
இன்னொரு நன்றி கெட்டவன், ஏற்றிவிட்ட
ஏணியை மறந்தவன். ....

மீண்டும் சரித்திரம் உதயமானது
நம் இரத்தத்தின் இரத்தமான
கழகம் தோன்றியது. .



காலத்தை வென்றவன் நீ...
காவியமானவன் நீ ....
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றி திருமகன் நீ ..........

orodizli
21st November 2020, 11:23 AM
தொடர் வெளியீடுகளில் பொங்கி வரும் மக்கள் திலகத்தின் சாதனை.
----------------------------------------------------------
மக்கள் திலகத்தின் படங்கள் முதல் சுற்றின் தொடர்ச்சியாக வெளியான ஊர்களில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்த விபரங்களை பார்க்கலாம்.
முதல் வெளியீட்டில் 12 திரையரங்கில் 50 நாட்கள் ஓட்டி விட்டு ஒரு அரங்கில் மட்டும் வெள்ளிவிழா வரைக்கும் ஒட்டும் கைபிள்ளைகளே வெற்றி என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் வெளியீட்டிலே 40 அரங்குகளுக்கு மேலே 50 நாட்கள் ஓடிய "உரிமைக்குரல்" தொடர் வெளியீட்டில் மீண்டும் 25 தியேட்டருக்கு மேல் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடியதை எண்ணிப் பார்த்து நம்ம ஆள் நாலந்தரம்தான்
என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்."உரிமைக்குரல்" மட்டுமல்ல எம்ஜிஆரின் பல படங்கள் தொடர் வெளியீட்டில் சாதித்ததை அய்யனின் படங்கள் கனவிலும்
நினைத்து பார்க்க முடியுமா? இது போன்ற சாதனைகளை. நான் இங்கு கொடுத்தது டிரைலர்தான். முழு விபரங்களும் பதிவு செய்ய இந்த இடம் காணாது.

ஆனாலும் ஒரு சில கைபிள்ளைகள் உரிமைக்குரல் படத்தை அய்யனை வைத்து எடுக்க ஸ்ரீதர் ஆசைப்பட்டதாகவும் காலமாற்றத்தால் எம்ஜிஆரை வைத்து எடுக்க வேண்டியதாயிற்று என்றும் கதை விட்டுள்ளனர். அய்யனை வைத்து உரிமைக்குரலை
எடுத்தால் ஏற்கனவே "சிவந்தமண்ணை" எடுத்து அம்போவான ஸ்ரீதர் மீண்டும் அதலபாதாளத்தில் விழுந்தால் என்னவாகும். "அம்பிகையே ஈஸ்வரியே" என்று சாமியாடுபவரை பிடித்து "அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு" என்று பாடினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

"எங்க வீட்டு பிள்ளை", "உரிமைக்குரல்", "மா.வேலன்" இதை போன்ற வேறு எந்த எம்ஜிஆர் படத்திலும் அய்யனால் நடிக்க முடியாது. எம்ஜிஆரின் உடல் மொழி நடிப்புத்திறன் அய்யனுக்கு கிடையாது. சண்டை காட்சி பாடல் காட்சி மற்றும் பல முக்கிய காட்சிகளில் இயல்பான நடிப்பு இது அனைத்திலும் அய்யன் சொதப்பி மிகை நடிப்பை கையில் எடுத்து படத்தின் கதையை முடித்து விடுவார்.பாடல் காட்சிகளில் ஓவராக வாயசைத்து நடிகையை வாய்ச்சாரலில் நனைய வைப்பது ஐயனின் மாமூல் செயல்.

இவை அனைத்திலும் புரட்சி நடிகர் தனி முத்திரை பதிப்பதால் வெற்றிக்கனி அவரை தேடி வருகிறது. அய்யனுக்கென்று 2 அல்லது 3 பொண்டாட்டி கதை 10,15 புள்ளகுட்டி கதை, 2,3 மொள்ளமாரி ரெளடி அண்ணன் தம்பி பிரச்னை இது போன்ற படங்களில் மிகை நடிப்பை புகுத்தி படம் பார்க்க வந்தவர்களை வதைத்து அனுப்புவதில் கில்லாடி. கைபுள்ளைங்களுக்கும் இது போன்ற மொள்ளமாரி கதைகள் மிகவும் பிடிக்கும்.

வசூல் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் எங்கு வரை செல்கிறது என்பதும் எதற்காக அவருக்கு இத்தனை சம்பளம் என்றும். வருமானவரி பாக்கியே இவ்வளவு என்றால் அவருடைய வருமானத்தை அளவிட முடியுமா?. ஆனால் கணேசனோ வரி கட்டும் அளவுக்கு வருமானமே வரவில்லையாம். ஐயோ பாவம். ஸ்ரீதர் சொல்வதை கவனியுங்கள் சிவாஜி ஒரு சீப் ரேட் நடிகன் என்று ஒரு கேள்வி பதிலில் சொல்வதை பார்த்தால் உண்மை அனைவருக்கும் புலப்படும். உங்கள் அய்யன் நடிகைகளை விட கம்மியாக வருமானவரி கட்டினாராம். வருமானம் கம்மியா? இல்லை வேறு ஏதாவது காரணமா? புரட்சி நடிகரின் சம்பளத்தை தெரிந்து கொண்டால் உங்கள் அய்யன் ஒரு சிறு பையன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள்.

தன்னுடைய வருமானம் அத்தனையும் ஏழைகளுக்கும், சமுதாய நல திட்டங்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் பெருமானுடன் ஒப்பிடக்கூட தகுதியில்லாத கணேசனின் கைபிள்ளைகளின் செயல் வெட்கப்பட வேண்டியது. வேதனை தரக்கூடியது.
இனிமேல் சற்று ஓரமா சென்று சிறு நடிகர்களுடன் வசூல் விளையாட்டு விளையாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்..........ksr.........

fidowag
21st November 2020, 10:26 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/11/20 அன்று*அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
கால வெள்ளத்திலே கரைந்து விடுகிற ஒரு கற்பூரம் அல்ல என்பதை இன்றைக்கும் நினைவுபடுத்தி உலக தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் வீற்றிருக்கின்ற அந்த மன்னாதி மன்னன் அவர்களின் சகாப்தம் தொடர் நிகழ்ச்சி இன்று பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது .* வாட்ஸ் அப் குழுக்களில்**மட்டும் எம்.ஜி.ஆருக்கென்று*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ், எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம், எவர்க்ரீன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள், மன்னாதி மன்னன், எங்கள் தங்கம் , எம்.ஜி.ஆர். மலேசியா 2000, புரட்சி தலைவர் கோவை ரசிகர்கள் , ஒளி விளக்கு, ஒளி விளக்கு எம்.ஜி.ஆர். குடும்பம் , வள்ளல் எம்.ஜி.ஆர். பக்தர்கள், வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். , புகழ் வேந்தர் எம்.ஜி.ஆர். புரட்சி படை, எம்.ஜி.ஆர். டிவி* குழு, ஆண்டவன் எம்.ஜி.ஆர். குடும்பம் , எம்.ஜி.ஆர். புரட்சி மன்றம் , எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர். , டாக்டர் புரட்சி தலைவர் ரசிகர்கள் , எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டைரி ,உழைக்கும் குரல் தளம் , என்று பல்வேறு தலைப்புகளிலும் ,எண்ணற்ற குழுக்கள் உள்ளன. பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள், தொண்டர்கள் என்று ஏராளமானோர் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்**அப் குரூப்பில் உள்ளனர் . என்று நமக்கு கிடைத்த* தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .*

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் இந்த கொரோனா காலத்தில் ,திரை அரங்குகள் அரசு உத்தரவின் பேரில் திறக்கப்பட்டதும், தமிழகம் எங்கும் டிஜிட்டல் வடிவிலும், சாதாரண படங்களும் முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியாகி உள்ளதை* புள்ளி விவரங்களுடன், பல்வேறு வெளியூர் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு சேகரித்து* நமக்கு வாட்ஸ் அப்பில் சென்னை நண்பர் திரு.லோகநாதன் அவர்கள் நமக்கு தெரிவித்துள்ளார் .* அதுமட்டுமல்ல வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் இந்த அளவில் தமிழகத்தில் வெளியாகவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் .தனியார் தொலைக்காட்சிகளில் தினசரி வெளியாகும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியலும் அவ்வப்போது செய்திகளாக தெரிவிக்கப்படுகிறது . மேலும், எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் பல அரிய* செய்திகள், புகைப்படங்கள் ,அவை எந்த மொழியில் பிரசுரம் ஆகி இருந்தாலும் அவற்றை எல்லாம் திரட்டி பலர் நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி ஒரு அரிய பொக்கிஷமாக, கற்பகவிருட்சமாக , தாமரை மலராக, காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கிற அவரது சகாப்தத்தில்* அவருடைய மனிதம் என்கிற கோட்பாடுதான்* இந்த நாளிலும் நம் எண்ணங்களில் எல்லாம் மன்னாதி மன்னனாக வீற்றிருக்க செய்கிறது ..**


கே.பி. காமாட்சி என்பவர் காளி கோயில் பூசாரியாக பராசக்தி படத்தில் நடித்திருப்பார் .* அவர் எம்.ஜி.ஆர். நாடக மன்ற உறுப்பினராக இருந்து முக்கிய பங்காற்றியவர் . நாடக துறையில் இருந்த எம்.ஜி.ஆர்.* அவரது சகோதரர் எம்.ஜி..சக்கரபாணி இருவரையும் நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையாரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.பி.காமாட்சி .* ஒரு கால கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் விலகிவிடுவதோடு, ஓரங்கட்டப்படுகிறார் .* அவர் தன் இறுதி காலத்தில் தி.நகரிலே வசித்து வந்தார் . வயது முதிர்ந்த நிலையில், உடல்**நல குறைவால்*காலமாகி விடுகிறார் .* அப்போது நடிகர் சங்க கட்டிடம் இருந்த பகுதியில் குடிசைகள் அதிகம் இருக்கின்றன .* அந்த குடிசை பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார் .* விவரம் அறிந்ததும், எம்.ஜி.ஆர்.,எம்.ஆர். ராதா ,வி.கே. ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள் .* கே.பி.காமாட்சி மறைந்த பிறகு அவரது உடலை சுமப்பதற்கு அவரது உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை .* கே.பி. காமாட்சியின் பூத உடலை எம்.ஜி.ஆர். ,என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி ,மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் நால்வரும் சுமந்தபடி ஊர்வலமாக சென்று , தி.நகர் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு சுமார் 2 கி.மீ.தூரம் சென்று நல்லடக்கம் செய்கிறார்கள் .* ஒரு சந்தர்ப்பத்தில் வளர்ந்து வரும் நடிகராக எம்.ஜி.ஆர். இருந்தபோது கே.பி.காமாட்சி செய்த உதவிக்கு நன்றி மறவாமல் அவரது பூத உடலை தன் தோளில் சுமந்தவர் எம்.ஜி.ஆர். .மயானத்தில் நல்லடக்கம் முடிந்தவுடன் அங்கிருந்த ஒரு சில உறவினர்களிடம் கே.பி.காமாட்சி பற்றி சில விவரங்களை எம்.ஜி. ஆர் சேகரித்துள்ளார் . அதாவது அவருக்கு ஏதாவது கடன் பிரச்னை உள்ளதா, எவ்வளவு பணம் திருப்பி தரவேண்டி உள்ளது என்று கேட்டு தெரிந்து கொண்டார் .* அப்போது கே.பி.காமாட்சியின் உறவினராக கலைஞானம் அறிமுகம் ஆகிறார் . கலைஞானத்திற்கு பிற்காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் .* அந்த கலைஞானம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான் கே.பி.காமாட்சிக்கு ஒன்றுவிட்ட தம்பி என்கிறார் .* இவருக்கு ஏதாவது கடன் பிரச்னை உள்ளதா என்று எம்.ஜி. ஆர். கேட்க ,கலைஞானம் சில ஆயிரங்கள் உள்ளன என்றார் . உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்கள் நாளை எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் அலுவலகத்திற்கு சென்று அந்த சில ஆயிரங்களை நான்* சொன்னதாக கேட்டு* வாங்கி சென்று கடனை அடைத்து விடுங்கள் என்றாராம் . இப்படி என்றோ ஒரு நாள் செய்த உதவிக்காக அவரது பூத* உடலை தன் தோளில் சுமந்து மயானம் வரை சென்று நல்லடக்கம் செய்ததோடு,செய்நன்றி மறவாததோடு**அவரது கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.**


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : சுய நிதி கல்லூரிகள் அதிகமாக உருவாகிய காரணத்தால்*, பல்வேறு வகையான பொறியியல் மாணவ மாணவிகள் பற்றாக்குறையால் ,கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் காண்கின்றோம் .அது வேறு விஷயம். ஆனால்*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி காலத்தில் இந்த கல்லூரிகள்* கொண்டு வந்ததால்தான் நம்முடைய பணம் நம் தமிழ் நாட்டிலேயே சுற்றி சுழன்று , இங்குள்ள மக்களுக்கு பயன்படும் வகையில்ஒரு* சிறந்த ஏற்பாட்டை** செய்தவர் யாரென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான் .வெறும் மூன்றாவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாமான்ய மனிதர் , பி.இ ,எம்.இ , எம்.பி.பி.எஸ். என்று* படிப்பதற்கு**மாணவ மாணவியர்களின் கனவு படிப்புகளை உருவாக்கி, ஆந்த கனவுகளை நிறைவேற்றி காட்டிய தலைவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று நான் சொல்லவில்லை தோழர்களே, எம்.இ, பி. எச் .டி., . பி.எல்,பி.டி.*. படித்த நமது முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அவர்கள்* ஒரு கூட்டத்தில் இப்படி ஒரு வசன நடையாக பேசியதை இந்த நேரத்தில்* ஞாபகம் வந்த காரணத்தால்* சொல்கிறேன் .அப்படி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், ஏழை குழந்தைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும். பசி கொடுமையால் அவர்கள் வாடுவதோடு படிக்காமல் இருந்துவிட கூடாது என்று கருதி அவர்களை எல்லாம்*படிக்க வைத்தவர்தான் நமது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* குலசேகரன் என்று ஒரு எம்.எல்.ஏ இருந்தார் .* அவர் மூலமாக ஒரு வாரியத்தை உருவாக்கி, அந்த வாரியம் செருப்பு தைக்கின்ற ஒரு தொழிலை உருவாக்கியது*, அந்த செருப்பை கூட ஏழை குழந்தைகள் , ,எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு ஊருக்கு சுற்று பயணம் சென்றபோது , கால்களில் செருப்பு இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் கொதிக்க கொதிக்க நடந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு பகல் 3 மணியளவில் நடந்து சென்றார்களாம் . இதை கவனித்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த குழந்தைகளின் நிலையை எண்ணி வருந்தி , உடனடியாக தமிழகத்தில் சுமார் 45 லட்சம் ஏழை குழந்தைகள் அணியும் வகையில் ஒரு காலணி திட்டத்தை உருவாக்கியவர்தான் புரட்சி தலைவர்* எம்.ஜி.ஆர். . அந்த கால கட்டத்தில். சிறு குழந்தைகள், இளம் பிஞ்சுகள், பலவித பல்நோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவதை அறிந்து , ஒரு தேர்ந்த பல்மருத்துவரை வரச்செய்து, ஆலோசனை செய்தபோது, பல்நோய்களுக்கான காரண காரியங்களை ஆய்வு செய்ததில் குழந்தைகள்*செங்கல், அடுப்பு கரி, போன்றவற்றை வைத்து பல் தேய்ப்பதால் பல் ஈறுகளில் காயங்கள் பட்டு, சீழ் வடிதல், பல் சொத்தை ஆகுதல்* போன்ற பாதிப்புக்கு உள்ளாகின்றனர் . இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, நல்ல*தகுதியான பற்பொடியை குழந்தைகளுக்கு அளித்தால் ,இந்த உபாதைகளில் இருந்து அவர்களை காப்பாற்றலாம் .அவர் குறிப்பிட்டதை மனதில் வைத்து இலவச பற்பொடி திட்டம் அறிவித்தார் .* அந்த குழந்தைகளுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்கிற வகையில் வசதியுள்ள குழந்தை, வசதியில்லாத குழந்தை என்ற ஏற்றத்தாழ்வு அறவே இருக்க கூடாது*.என்று சீருடைத்திட்டம் ஒன்றை காமராஜர் காலத்தில் கொண்டு வந்ததை மீண்டும் வலுப்படுத்தி, அந்த சீருடை திட்டத்தை , வசதியான குழந்தைகள் பட்டு, டெரி* காட்டன் வகையிலும் ,வசதியற்ற குழந்தைகள் பருத்தி ஆடைகளில் அணிந்து வருகிறார்கள் என்கிற வித்தியாசம் வருவதை**தவிர்க்கும் பொருட்டு, அரசே அனைத்து குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் சீருடை திட்டம் ஒன்றை அறிமுகம்* செய்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைத்து பாருங்கள் ,அந்த பிஞ்சு உள்ளங்களில் , மாற்று எண்ணம், தாழ்வு மனப்பான்மை**ஆகியன அவர்களுக்கு வர கூடாது என்று அவர் நினைத்து பார்க்கிறார் என்றால், எவ்வளவு பெரிய ஒரு மகானாக, மாமேதையாக , அவர் இருக்க வேண்டும். அதற்கும் அவர் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் நான் நடிக்கின்ற காலங்களில், கதாநாயகனாக நடிக்கின்றவர்களுக்கு, குழந்தை நட்சத்திரங்களுக்கு ஒரு வகையான சாப்பாடு, எங்களுக்கு அதைவிட ஒரு படி கீழான உணவு,எங்களுக்கு தனி தட்டு, அவர்களுக்கு தனி தட்டு ,எங்களுக்கென்று தனியான குவளை எல்லாம் இருந்தபோது என்னுடைய மனம் பொங்கி எழுந்தது . இந்த பாகுபாடுகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்து இருந்தது .அதனுடைய விளைவுதான் இந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்று அவர்களுக்கு சீருடை , காலணி , பற்பொடி ஆகியவற்றை இலவசமாக தந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.*

செல்வி ஜெயலலிதா அவர்கள்* முதல்வரான பின்பு, மாணவ மாணவியருக்கு இலவசமாக சைக்கிள்கள், லேப்டாப்* தரும் திட்டத்தை* திரு.எடப்பாடி பழனிசாமி, திரு. செங்கோட்டையன், திரு.கே.பி.அன்பழகன் போன்றவர்கள் மூலமாக கல்லூரி வரையில் பல* பேருக்கு லேப்டாப்புடன் பல உபகரணங்கள் கொடுத்து*கல்லூரி படிப்பு வரை இலவச கல்வியைத் தரும் ஒரு அரசை, பலர் குற்றம் சொல்லலாம், குற்றச்சாட்டுகள் ,விமர்சனங்கள் கூறலாம் .* குற்றம் பார்க்கின்*சுற்றம் இல்லை .* எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்கின்ற*எண்ணத்தை கவிஞர் கண்ணதாசன் வெளியிட்டது*போல எல்லோருக்கும் எல்லாமும் தரவேண்டும்*என்கிற*ஏற்றமிகு திட்டத்தை கொண்டுவந்த அ. தி.மு.க. வின்*தானை தலைவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ,செல்வி ஜெயலலிதா, இந்த கால தலைவர்கள் இ.பி.எஸ்., ஓ .பி.எஸ். போன்றவர்கள் வழியில்*இன்றைக்கு அ தி.மு.க. ஆட்சி நடைபெறுகின்ற நேரத்தில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால்*நீங்கள் பொறுமை காத்து, அ.தி.மு.க.விற்கு உங்களது மேலான ஆதரவை தர வேண்டும் என்று இந்த நல்லநேரத்திலே கேட்டு ,இன்னும் தொடரும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அற்புத* பணிகளை நான் இன்னும் வின் டிவி உரிமையாளர் திரு.தேவநாதன் அன்பால் அருளால், பாசத்தால் நான் மீண்டும் தொடர்வேன் என்று காஷ்மீரத்து சால்வை அணிந்து காஞ்சி பட்டு அணிந்து, கருப்பு கண்ணாடியோடு, குதிகால் செருப்பணிந்து , அரேபிய நாட்டு குதிரையில் வரும் பட்டத்து இளவரசர் போல் நகர்ந்து வந்த நமது தானை தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே,*, உங்களை ராமாவரம் தோட்டத்தில் பார்த்தால் இருகரம் கூப்பி வணங்குவீர்களே,அந்த கைகளில் தாமரை மலரை நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம் .* ரோஜாக்களை பார்க்க நினைத்தால் உங்களது கனிவான சிரிப்பினில் ரோஜாக்களை பார்த்து மகிழ்ந்தோம்* முத்துக்களை பார்க்க நினைத்தால் எங்கள் முத்தமிழ் காவலனே,*உங்களது 32 பற்களிலே நாங்கள் முத்துக்களை பார்த்து மகிழ்ந்தோம்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சியில் என்னை பேச பணித்த*அருமை சகோதரர் திரு.தேவநாதன் அவர்களுக்கும் இங்குள்ள நண்பர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்து விடை பெறுகிறேன். மீண்டும் தொடர்வேன். நன்றி . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.இடி இடிச்சி மழை பொழிஞ்சி - நீதிக்கு பின் பாசம்*

2.ஆடை முழுதும் நனைய நனைய - நம் நாடு*

3.மழை முத்து முத்து பந்தலிட்டு - தேர் திருவிழா*

4.தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி*

5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*.

orodizli
22nd November 2020, 07:25 AM
அன்பான mgr ரசிகர்களுக்கு[பக்தர்களுக்கு]
*********************************
சரித்திரம் தெரியாத தரித்தரங்கள் வாழும் காலம் இது.

எத்தனையோ இன்னல்கள்
போட்டியும் பொறாமையும்
திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தகர்த்து எரிந்து
வெற்றி வாகை சூடியவர் நம் தலைவர் mgr.

அதற்க்காக அவர் அனுபவித்த
துயரங்கள் கொஞ்சமல்ல
இரவு பகல் பாராது உழைத்த உழைப்பின் உதியத்தை
மக்களுக்காக வாரிக் கொடுத்த வள்ளல் அவர்.

அன்பையும்
பாசத்தையும்
கலந்து கொடுத்து
அதில் ஒழுக்கத்தையும்
கற்றுக் கொடுத்து
வீரத்தை நெஞ்சிலே வளர்த்த
வெற்றி திருமகன் mgr.

கோழைகள் அல்ல நாங்கள்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
என்று மக்களின்
உணர்ச்சியை தட்டி எழுப்பியவர்.

மாபெரும் சபைதனில்
நீ நடந்தால்
உனக்கு மாலைகள்
விழவேண்டும்
என்று பாடம்
நடத்திய வாத்தியார்.

ஏழையாக பிறந்து
ஏழைகளுக்கவே வழ்ந்தவர்.

அவரது அரசியல் வரலாறு ஒன்றும்
மிகச் சாதாரணமாக அமைந்து
விடவில்லை.

எத்தனை தொண்டர்களின்
இரத்தங்களால் தியாகங்களால் உருவானது.
அதை
என்னிப் பார்க்கவே பேசுவதற்க்கோ இன்று யாருமே இல்லை.

ஆனாலும் இன்றைக்கும்
எம்ஜிஆர் இருக்கிறார் நம்மை அவர் காப்பாற்றுவார்
என்று நினைப்பார்கள் ஏராளம்.

இன்றைக்கு அரசியலுக்கு வருபவர்கள் கூட
எம்ஜிஆர் பெயரை செல்லி ஏமாற்றி விடலாம்
என்று நினைக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்தில் வேண்டுமானால் குடியரசுத் தலைவராக, பாரதப் பிரதமராக,
கவர்னராக, மாநில முதல்வராக, நடிக்கலாம்... பன்ச் டயலாக் பேசலாம்...
அது இரண்டு மணி நேர பொழுது போக்கு மாயயை
மக்கள் ரசிப்பார்கள்...
கைதட்டி
ஆராவாரம் செய்வார்கள். ஆனால்
நிஜ வாழ்க்கை என்பது வேறு?!.

Mgr அவர்கள்
மக்கள் மனது அறிந்து நடித்தவர்...
நடித்ததுபோல் வாழ்ந்தவர்...
அதனால் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.....

மக்களின் அறியாமை என்ற
இருளை அகற்றி
மூட நம்பிக்கையை ஒழித்தார்
அவர் திரைப்படங்கள் பாடமாக
இருந்தது.

இறை நம்பிக்கை,
மாய மந்திர காட்சிகளில் கூட அவர் நடித்ததில்லை
உழைப்பின் பயனையும்
விவசாயத்தின் பெருமையையும்தான்
பல படங்களில் பாடமாக அமைந்து இருக்கும்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றெ கையெழுத்திடுவார்
mgr.,

mgr திரைப்படங்களில்
வீரத்தையும் விவேகத்தையும்
இளைஞர்கள் மனதில் புகுத்தினார்.
குடும்பத்தில் ஒருவராக மக்கள் இதயங்களில் குடி புகுந்தார்
அவரை எங்க வீட்டு பிள்ளையாக்கி கொண்டார்கள் தமிழக மக்கள்.

Mgr என்றெரு மகான் வாழ்ந்தார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இன்னமும் வாழ்வார்
நேற்று அல்ல...
இன்று அல்ல...
நாளை யும்...
அவர்தான்
மக்களின் இதயத்தில் நிரந்தரமான முதல்வர்.
என்றும் அவர் புகழ் வாழும்
வாழ்ந்து கொண்டு இருக்கும்.

இன்று அவர் படத்தை மறைத்து விட்டால் அவர் புகழை
மறைத்து விட முடியுமா?

Mgrரை பற்றி நேரத்திற்கு தகுந்தபடி பலர் அலங்காரமாக பேசுவார்கள் அடுக்கு மெழியில் பேசி புகழ்வார்கள்
கைத் தட்டல் பெறுவார்கள்.

அங்கே கைதட்டி ஆரவாரம் செய்பவன் எதையும் எதிர் பார்க்காத அடிமட்ட தொண்டன்
அவனுக்கு வேண்டியது எல்லாம்
mgrரை பற்றி பேச வேண்டும்
mgrரை புகழ வேண்டும்
அதை அவன் கேட்க வேண்டும்.

இப்படித்தான்
எத்தனை எத்தனை ரசிகர்கள்
வாழ்கிறார்கள்.
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர் புகழை அளிக்க நினைப்பவர்கள்
வரலாற்றில் அழிந்து போவார்கள்...

என்றும் எம்ஜிஆர்
புகழ்பாடும் உங்கள்
*எம்ஜிஆர்நேசன்*.........

orodizli
22nd November 2020, 07:25 AM
#கற்பனைக்கும் #எட்டாத #அற்புதமே

தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போகிறார். கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.

எம்.ஜி.ஆர். அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

‘யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.

‘ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்’ என்றான்.

எம்.ஜி.ஆர் குழந்தையைத் தொட்டுப் பார்த்தார். அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்’ என்றார்.

‘தலைவா என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.

‘ஒரு குழந்தை காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும்போது நான் வீட்டுக்குப் போறதுதான் முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

‘எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். மகராசன் வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை.
வாத்தியார் நினைத்திருந்தால் தனது உதவியாளர்களை அனுப்பி அக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்திருக்கலாம்....அப்படிச் செய்யவில்லை...
ஏனெனில் அக்குழந்தையைத் தன் குழந்தையாகவே பாவித்ததன் விளைவு தான்...இது...

இதைப்போல...பல கற்பனைக்குக் கூட எட்ட முடியாத செயல்களைப் புரிந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்...

தலைவர்கள் தெய்வமாவதுண்டு...
ஆனால்...
தெய்வமே தலைவராக வந்து மக்களை வழிநடத்தியது என்றால் அது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலைத் தவிர யாராக இருக்கமுடியும் ??? Bsm...

orodizli
22nd November 2020, 07:26 AM
தேர்தலுக்கு மட்டும் தான் எம்.ஜி.ஆரா?
https://www.thaaii.com/?p=55137

அ.தி.மு.க.வில் சுயநலக்காரர்கள் அதிகமாகி விட்டனர். கண்ணை மறைக்கக் கூடிய அளவிற்கு, அவர்கள் வசதியாகி விட்டனர். அந்த மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரையே மறந்து விட்டனர்.

அ.தி.மு.க.வை துவக்கி மாபெரும் கட்சியாக வளர்த்து ஆட்சி அமைத்துக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர். என்பதை இப்போதைய ஆட்சியாளர்கள் மறந்து விட்டனர்.

எம்.ஜி.ஆர். உத்தரவுபடி, அண்ணாதுரை உருவத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் உடலில் பச்சை குத்திக்கொண்ட அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் வருத்தத்தில் தான் உள்ளனர்.

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தவில்லை.

குடிநீர், உணவகம், உப்பு, உடல் பரிசோதனைத் திட்டம், மருந்தகம் என எங்கும், 'அம்மா' என்று, தன்னைத்தான் முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

தன்னை அரசியலில் ஆளாக்கிய எம்.ஜி.ஆர். பெயரை, உணவகத்திற்கு சூட்டியிருக்கலாம்; அது, பொருத்தமாக இருந்திருக்கும்.

ஜெயலலிதா முதல் இ.பி.எஸ். வரை தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எம்.ஜி.ஆர். படத்தையும் பெயரையும், ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர்; மற்ற நேரங்களில் அவரை மறந்து விடுகின்றனர்.

இப்போது நடக்கும் அரசு நிகழ்ச்சி விளம்பரங்களில் ஜெயலலிதா, இ.பி.எஸ். படங்கள் பெரிதாக இருக்கின்றன; அதில், எம்.ஜி.ஆர். படத்தைக் காணவில்லை.

மறைந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடும், அ.தி.மு.க. தலைமையிலான அரசு, தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் பிறந்தநாளை ஏன் கண்டுகொள்வதில்லை.

இப்போதுள்ள அ.தி.மு.க. கூட்டுத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் அருமை தெரியாமல் போய் விட்டது. தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டுக்காக அவரின் பெயர் நினைவுக்கு வந்துவிடும்.
****

இன்றைய தினமலர் (20.11.2020) நாளிதழில் வாசகர் கடிதங்கள் பக்கத்தில், சென்னையைச் சேர்ந்த டி.ஈஸ்வரன் என்ற வாசகர் எழுதிய கடிதம்.

நன்றி: தினமலர்

#எம்ஜிஆர் #அதிமுக #ஜானகிஎம்ஜிஆர் #அண்ணாதுரை #ஜெயலலிதா #இரட்டைஇலைசின்னம் #இபிஎஸ் #MGR #AIADMK #JanakiMGR #Annathurai #Jayalalithaa #EPS.........

orodizli
22nd November 2020, 07:27 AM
கண்ணன் என் காதலன் 26.4.1968
.காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்கப்பட்ட வாழ்த்து மடல் .

வாழ்த்து மடல்

பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க ....vs...

orodizli
22nd November 2020, 07:28 AM
#இனிய_நினைவுகளில்

#மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்

இந்த படம் 1978 ம் ஆண்டு வெளிவந்த போது வழக்கமான மக்கள் திலகத்தின் படங்களுக்கே உரிய பரபரப்பு இல்லை...ஏனென்றால் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்சி தொண்டர்களாகவும்; ரசிகர் மன்ற தலைவர்கள் அமைச்சர்களாகவும்; புரட்சி நடிகர் - மக்கள் திலகம்...புரட்சித்தலைவராகி தமிழக முதல்வராகவும் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். அதாவது மக்கள் திலகம், திரையுலக முதல்வராயிருந்தவர், தமிழக முதல்வராக பதவி உயர்வு பெற்று திரையுலகை விட்டே விலகிவிட்டார்.இது அவருடைய கடைசிபடமாகவும் அமைந்தது.

பிரபல சரித்திர எழுத்தாளர் "அகிலனின்" கயல்விழி என்ற புதினத்தை சிறு மாறுதல்களுடன் படமாக்கினார் மக்கள் திலகம்.

சோழ நாட்டின் அடிமை நாடாக, அவர்களுக்கு கப்பம் கட்டும் நாடாக இருந்த பாண்டிய நாட்டை, அதன் இளவரசன் சுந்தரபாண்டியன், பைந்தமிழ் குமரன் என்ற புலவர் வேடத்தில் நாடெங்கிலும் சென்று புரட்சிக்கவி பாடி மக்களை தட்டி எழுப்பி, மதுரையை-பாண்டிய நாட்டை மீட்பதுதான் கதை. இதை விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார் மக்கள் திலகம்.

சரித்திர கதைகள், போர் காட்சிகள், வாள் சண்டைகள், இலக்கண தமிழில் உரையாடல் போன்றவைகளெல்லாமே கிட்டத்தட்ட முடிந்து போய் தமிழ் திரையுலகம் கிராமங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில், அன்றைய தேதியில் பெரும் பொருட்ச்செலவில் ஒரு சரித்திர கதையை படமாக்க துணிந்த மக்கள் திலகத்தின் துணிவு பாராட்ட தக்கது.

இந்த படத்தில் மக்கள் திலகத்துடன்-லதா, பத்மபிரியா, நம்பியார், வீரப்பா, சுப்பையா,போன்றோரும சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்கள்.

"கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்" என்ற வரிகள் கொண்ட "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" என்ற பாடல் அன்றைய அரசியல் மேடைகள்-அரசு விழாக்களில் ஒலிக்காத இடமே இல்லை...மீண்டும் மெல்லிசை மன்னரின் இசை மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்வுக்கு பேருதவி புரிந்தது.இது தவிர "வெற்றி மகன் போராட" "தென்றலில் ஆடும்" "அமுத தமிழில் எழுதும் கவிதை" போன்ற மெலடியிலும் தூள் கிளப்பினார் எம்.எஸ்.வி.

இந்த படம் தோல்விப்படமல்ல..கமார்ஷியலாக வெற்றி கண்டது.

சுந்தரபாண்டியன் என்றென்றும் வீரபாண்டியன்தான்.........Sr.bu.

fidowag
22nd November 2020, 01:34 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் , பேரறிஞர் அண்ணாவின் யோசனைப்படி மேலும் பிரச்னைகள் உருவாகாமல் இருக்க தங்கத்திலே வைரம் பட விளம்பரம் வெளியானது . ஆனால் படம் பல்வேறு காரணங்களுக்காக தயாரிக்கப்படவில்லை .* அதற்கு பதிலாக வ*ள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் சங்கே முழங்கு படத்திற்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பு கே.எஸ்.கோபாலக்ரிஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது .* படத்தை இயக்கியவர் ப. நீலகண்டன் .* மதுரையில் கே.எஸ்.ஜியின் கார் அடித்து நொறுக்கப்பட்ட விஷயம் அதை தொடர்ந்த சம்பவங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை .* மதுரை சம்பவத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள்*கே.எஸ்.ஜியின் விஷயத்தில் தலையிடாமல் அமைதி காத்தார்கள் . அதன் பின்னர் உலக பட விழாவில் பங்கேற்க ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றார் கே.எஸ்.ஜி..அங்கு பணமா பாசமா படம் திரையிடப்பட்டது .* அங்கு ஒரு மாதகாலம் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . அந்த கால கட்டத்தில் அவரது இளைய மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமுற்று, மருத்துவமனையில் அவசர* சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார் .* விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். உடனே அந்த மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அதிகாரிகளை சந்தித்து ,எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் . அந்த குழந்தையின் உயிர் காப்பாற்ற பட வேண்டும். பழையபடி அவன் நடமாட வேண்டும். அதற்கு தகுந்தாற்போல உயர்தர சிகிச்சை அளியுங்கள் என்று கேட்டு கொண்டார் . அந்த குழந்தை குணமாகி வீட்டுக்கு வந்தபின், கே.எஸ்.ஜி. ரஷ்யாவில் இருந்து சென்னை வந்ததும் நடந்த விவரங்களை சொல்லி அழுதாராம்,கே.எஸ்.ஜி.யின்*மனைவி .*. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இல்லாவிட்டால் நம் குழந்தையை நாம் உயிருடன்* பார்த்திருக்க முடியாது .எப்பேர்ப்பட்ட மாமனிதர் . எம்.ஜி.ஆர். அவர்கள் என்று வானளாவ புகழ்ந்தாராம் .தன்னை எதிரியாக பாவிக்கிறவர்களுக்கு ஒருபோதும் துரோகம் நினைக்காமல் ஓடோடி சென்று வேண்டிய உதவிகள் செய்து ஒரு உயிரை காப்பாற்றும் நல்ல உள்ளம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்தது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி*


சென்னையில் பி.டி.தியாகராயர் என்பவர் மேயராக இருக்கும்போதுதான் முதன் முதலாக குழந்தைகளுக்கு பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார் . இந்த திட்டத்தைத்தான் 1982ல் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வரானதும் சத்துணவு திட்டமாக விரிவாக்கம் செய்தார்* *செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது சைதை திரு.துரைசாமி அவர்கள் சென்னை மேயராக பதவி ஏற்றபின் அம்மா உணவகம் என்கிற திட்டத்தை அமுல்படுத்தினார் .* செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் இதர மாநகராட்சிகளிலும் செயல்படுத்தும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்தார். பிற்காலத்தில் நடமாடும் அம்மா உணவகம் உருவாக*இந்த திட்டம் பேருதவியாக இருந்தது .* நீங்கள் எப்போதெல்லாம் மக்களுடைய பசியை பற்றி திட்டம் வகுத்து, அதை போக்குவதற்கு உரிய சிந்தனையுடன்*திட்டங்களை செயல்படுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு வாக்கு வங்கி சாதகமாக இருப்பதோடு உங்கள் மனமும் குளிரும் என்பது போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , செல்வி ஜெயலலிதா அவர்களும் செயல்பட்டார்கள் .ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு வசனம் வரும். அதாவது ஒரு ரிக்ஷா தொழிலாளி வண்டி ஒட்டாமல் உடல்நல குறைவால் வீட்டில் இருக்கும்போது எம்.ஜி.ஆர். விவரம் அறிந்து தான் அரைகுறையாக சாப்பிட்டு , கணிசமான அளவு சாப்பாட்டை அந்த ரிக்ஷா தொழிலாளி வீட்டுக்கு அனுப்பி வைப்பார் . அப்போது*சக தொழிலாளி எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சாப்பிடவில்லையா என்றதற்கு மற்றொரு தொழிலாளி தான் குறைவாக சாப்பிட்டு, உடல் நலம் பாதித்த தொழிலாளி குடும்பம் நிறைவாக சாப்பிடட்டும் என்ற கொள்கை உடையவர் எம்.ஜி.ஆர்..இது தெரிந்த விஷயம்தானே என்பார் .* மேலும் மற்றவர்கள் வயிறு நிறைஞ்சா இவர் மனசு நிறைஞ்சா மாதிரி என்பார். அதற்கு எம்.ஜி.ஆர்* சிலர் அரை மனதுடன் வாழ்த்துவார்கள்.அதை ஏற்று கொள்ள கூடாது . ஆனால் வயிறுநிறைஞ்சு* வாழ்த்தினால் சரி என்பார் .பசிப்பிணியை போக்கும் வள்ளலார் போல எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்தார் .*

தமிழகம் முழுவதும் இருக்கின்ற சைக்கிள்*ரிக்ஷா ஸ்டாண்டுகள், ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்டுகளில்* எம்.ஜி.ஆர். கோட் அணிந்து*கைகளில் பூச்செண்டுடன் ,கழுத்தில்*மாலையணிந்த படம் ஒட்டப்பட்டிருக்கும் . இந்த மாதிரியான படங்கள்*சைக்கிள் ரிக்*ஷா*வின்*பின்புறமும்* சில*ஆட்டோக்களில் முன்புறமும் ஒட்டப்பட்டிருக்கும் .தலைவர் படம் வண்டியில் இருந்தால்*நல்ல சவாரி*கிடைக்கும் என்பது*அவர்களுடைய நம்பிக்கை . பல டீக்கடைகளில் கல்லா பெட்டியில்*அல்லது கடையின் உள்ளே எம்.ஜி.ஆர். படம் இருக்கும்.**பல அமைச்சர்களின் கார்களில் வெளியே இருந்து பார்த்தால்*, செல்வி*ஜெயலலிதா*படமும்*உள்ளே கார் இருக்கைகளில் தலைவர் எம்.ஜி.ஆர். படமும் இருக்கும் .* அந்த காலத்தில் முகராசி என்று எம்.ஜி.ஆர். படம் வெளியானதில் இருந்தே*அப்படி* எம்.ஜி.ஆர். படம் ஒட்டினாலே, நல்ல சவாரி கிடைக்கும். வருமானம் பெருகும் , தொழில் முன்னேற்றம் அடையும் என்கிற*நம்பிக்கை இன்றைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் உண்டு .* தலைவருடைய முகராசிதான்* இந்த முன்னேற்றத்திற்கு காரணம்* என்று சொல்பவர்கள் இன்றைக்கும் உண்டு .* அதே*போல ரிக்ஷாக்காரன் படத்தில்*சைக்கிள்*ரிக்ஷா*தொழிலாளரை பற்றி உயர்வான*வசனங்கள் அமைந்திருக்கும்.* பொதுவாக ரிக்ஷாக்காரர் என்றாலே*உங்களுக்கு எல்லாம் ஒரு தப்பான அபிப்பிராயம் உள்ளது . அதை மாற்றுவதற்காகத்தான் இந்த போர்டு. அதாவது நியாயமான கட்டணம் .* கூலி குறைவாக கொடுத்தாலும், அதிகமாக கொடுத்தாலும்* வாங்க மாட்டோம். முதல் வண்டிக்கு கிராக்கி வந்து போனால்தான் இரண்டாவது வண்டி நகரும்.* குடித்துவிட்டு ஓட்டுபவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை . என்று எம்.ஜி.ஆர். அவர்கள் பேசுவதாக வசனம் இருக்கும்.* இன்றைக்கும் இந்த வசனங்களை பார்த்தீர்களானால், அவை ஒரு பாடமாக, படிப்பினையாக*இன்றைக்கு வண்டி ஓட்டுபவர்களுக்கும்,அதில் சவாரி செய்பவர்களுக்கும் கற்று தரும் பாடங்களாக அமைந்திருக்கும் .**

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1. கண் பட்டது கொஞ்சம் , புண் பட்டது*நெஞ்சம் - தாலி பாக்கியம்*

2.இரண்டு கண்கள்* சேரும்போது*- சங்கே*முழங்கு*

3.காற்று வாங்க போனேன்* - கலங்கரை விளக்கம்*



.***

orodizli
22nd November 2020, 08:00 PM
#மக்கள்_திலகத்தின்

#இதயவீணை..

இந்தப்படம் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வெளிவந்தது..1972ம் ஆண்டு மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்திலிருந்து வெளியேறி,தனி இயக்கம் தொடங்கி அப்போதுதான் சில நாட்கள் ஆகியிருந்தன. அந்த சூழ்நிலையில் இப்படத்திற்கு மக்களின் // ரசிகர்கள் அளிக்கப்போகும் ஆதரவை அனைத்து தரப்பினருமே எதிர்நோக்கியிருந்தார்கள். படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள், மக்கள் திலகத்தின் அபிமானத்துக்குறிய "இதயம் பேசுகிறது" மணியன் மற்றும் வித்வான் வே.இலட்சுமணன் ஆவார்கள். மணியன் ஆனந்தவிகடன் இதழில் இதே பெயரில் தொடர்கதையாக வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற கதையை, மக்கள் திலகத்திற்காக சிறு மாறுதல்களுடன் படமாக்கி வெற்றி கண்டுள்ளளர்.

கண்டிப்பான தகப்பனாரும், புகழ் பெற்ற வக்கீலுமான சிவராமன் (சக்ரபாணி) தன் மகன் சுந்தரம் (மக்கள் திலகம்)செய்யாத தவறை, மன்னிக்காமல் வீட்டை விட்டு துறத்தி விடுகிறார். எதிர்காலத்தில் சிவராமன், சுந்தரம்தான் தன் மகன் எனக்கூறும் வரை வீட்டை - தன் தந்தையை - பார்க்க வர மாட்டேன் என வீட்டை விட்டு வெளியேறி, காஷ்மீரில் சுற்றுலா கைடாக பணிபுரிகிறார் சுந்தரம்.

ஒரு நாள் காஷ்மீருக்கு வரும் கல்லூரி மாணவிகளோடு தன் தங்கை நளினி (லட்சுமி)யை பார்த்து தன் தந்தை பற்றி அறிந்துகொள்கிறார் சுந்தரம். அங்கே விமலா (மஞ்சுளா) வையும் சந்தித்து காதல் கொள்கிறார். சென்னை திரும்பிய சுந்தரத்திற்கு நளினியின் காதலன் கிரி (சிவக்குமார்) அண்ணாமலை(நம்பியார்) கார்மேகம் (மனோகர்) ஆகியோரால் பல பிரச்சனைகள் வருகின்றன. அவற்றை சுந்தரம் எவ்வாறு எதிர்கொண்டார்.தன் தந்தையை ஏற்றுக்கொண்டாரா? என்பதே கதையின் இதர பகுதி.

மக்கள் திலகத்தின் ஒரு குடும்பம் சார்ந்த பொழுதுபோக்கு படம். காஷ்மீரில் சுற்றுலா கைடாகவும், சென்னையில் பாசமுள்ள அதே சமயத்தின் தன் நெருங்கிய உறவுகளைகூட வெளிக்காட்டி கொள்முடியாதவராக தூள் கிளப்பியிருக்கிறார் மக்கள் திலகம்.மக்கள் திலகத்திற்கு ஏற்ற பாத்திரத்தை கொடுத்ததோடு, படத்தை விறு விறுப்பாகவும் இயக்கியுள்ளனர் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள்.

சங்கர்-கணேஷின் இசையில் "காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்".."பொன்னந்தி மாலைப்பொழுது".."ஆனந்தம் இன்று ஆரம்பம்".."திருநிறைசெல்வி மங்கையர்கரசி".."ஒரு வாலும் இல்லே.." ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

சிக்கலான சூழ்நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் "இதயவீணை" நூறு நாட்களை கடந்தது மட்டுமல்ல, இரு மடங்கும் வசூலித்தது.

தகவல் & புகைப்படம் :
https://en.m.wikipedia.org/wiki/Idhaya_Veenai..........Sr.bu...

orodizli
22nd November 2020, 08:01 PM
1965 இல் தாழம்பூ பட பிடிப்பின் போது தயாரிப்பாளர் சுலைமான் அவர்களுடன் தலைவர் செட்டில் பேசி கொண்டு இருக்க...

படத்தின் ஸ்டில் புகைப்பட நிபுணர் கண்ணப்பன் தனது திருமண அழைப்பிதழை தலைவரிடம் கொடுக்க..

வழக்கம் போல சிறிது நேரம் கழித்து தலைவர் ஒரு தொகை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுக்க அதை அவர் வாங்க மறுக்கிறார்.

ஏன் என்று தலைவர் கேட்க நேற்று நடந்த சண்டை காட்சி போது உடைந்த உங்கள் ப்ளோ அப் க்கு பதிலா நிறைய போட சொல்லி நிறைய பணம் அதில் தயாரிப்பாளர் மூலம் கிடைத்து விட்டது என்று சொல்ல...

இன்னும் ஒன்று அனைத்து தரப்பினருக்கும் சம்பள பாக்கி கொடுக்க நீங்கள் சொல்ல அதன் படி அவரும் கொடுக்க இந்த தொகை போதும் என்று சொல்கிறார்.

சிரித்து கொண்டே அது வேறு இதை வைத்து கொள்ளுங்கள் திருமணம் என்றால் ஆயிரம் செலவு இருக்கும் என்று அவர் கையில் பணத்தை திணிக்கிறார்....

1977 இல் வள்ளல் மக்கள் விருப்பப்படி முதல்வர் ஆக பின் கோட்டைக்கு வருகிறார்...அவ்வளவு கூட்டம் நிருபர்கள் புகை பட வல்லுநர்கள் அங்கே குழுமி இருக்க.

ஒரு மெலிந்த உருவம் கொண்ட ஒருவர் கூட்டத்தில் முன்னுக்கு வர முடியாமல் தன் காமெராவுடன் தள்ளாடி போராட.

அவருக்கு வழி விடுங்கள் என்று முதல்வர் சொல்ல நதி பிளந்தது போல நம் தங்க தலைவர் அருகில் அவர் தள்ளாடி நடந்து செல்ல....

அவர் விருப்பப்படி படங்களை அவர் எடுக்க தலைவர் நீங்க தாழம்பூ கண்ணப்பன் தானே என்ன ஆச்சு என்று சொல்லி அருகில் இருந்த உதவியாளர் இடம் இவர் விவரம் வாங்கி என்னிடம் சேருங்கள் என்று சொல்ல.

சுற்றி இருந்த மற்ற கேமராக்கள் பளிச் பளிச் என்று தொடர்ந்து மின்ன அனைவரும் மெலிந்த தேகம் கொண்ட கண்ணப்பனை வியப்புடன் பார்க்க.

நிகழ்வு முடிந்து மூன்றாம் நாள் கண்ணப்பன் வீட்டு கதவை தட்டி ஒரு சீட்டில் எழுத பட்ட கே.கே நகர் விலாசம் கொடுத்து நீங்கள் நாளை இந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு முதல்வர் உங்களை குடி போக சொன்னார்...இதோ அந்த வீட்டின் சாவி இது என்று நீட்ட...

நடுங்கிய கரங்கள் உடன் சாவியை பெற்று கொண்ட கண்ணப்பன் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருகி ஓடுவதை கண்டு அவர் குடும்பத்தினர் திகைத்து நிற்கின்றனர்...

அவர் தான் தலைவர்.
அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்

உங்களில் ஒருவன்

நன்றி வாழ்க தலைவர் புகழ்..தொடரும்...

கண்ணப்பன் அவர்களுக்கு அன்று கண்ணப்ப நாயகன் ஆக நம் காவிய நாயகன் தோன்றி இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்...

என்ன தலைவர் நெஞ்சங்களே...நன்றி..........

orodizli
22nd November 2020, 08:01 PM
# பிரான்ஸ் நாட்டில் 1503 ஆம் ஆண்டு பிறந்து 1566ஆம் ஆண்டு மறைந்தவர் பிரபல தத்துவ ஞானி, ASTROLOGER
நாஸ்டர்டாமஸ் அவர்கள்,

அவர் வாழ்ந்த காலத்தில் எழுதி வைத்த பல குறிப்புகள் மற்றும் அவர் கணித்த இயற்கை சீற்றங்கள்,
கொள்ளை நோய்கள்
இன்னும் இப்போது நடந்து கொண்டிருக்கும் பல சம்பவங்கள் இவைகளையெல்லாம் நாஸ்டர்டாமஸ் வாழ்ந்த காலத்திலேயே கணித்து வைத்து விட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்கள் இப்போதைய ஆராய்ச்சியாளர்கள்,

அவரைப் போலவே இப்போது சிலபேர் ஆராய்ச்சிகள் செய்து அவரையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் ( என்ன புரியலயா?
விளக்கமாக சொல்கிறேன் )

போண்டா மணி இப்போது போட்டிருக்கும் ஒரு பதிவு 1959ஆம் ஆண்டில் வெளியான, அதன் பிறகு வெளியில் தலையையே காட்டாமல் போன நம்
"கண்ணையன் " நடித்த "பாகப் பிரிவினை " படத்தைப் பற்றிய பதிவு,

போண்டா மணியின் ஆராய்ச்சிப்படி மதுரையில் முதன் முதலாக 3 லட்சம் வசூல் செய்தது பாகப் பிரிவினை படம்தானாம், அதற்காக மெனக்கெட்டு உட்கார்ந்து ஏகப்பட்ட ஆராய்ச்சி, கணக்கு எல்லாம் போட்டு பாகப் பிரிவினைதான் 3 லட்சம் வசூல் செய்தது, ஆனால் இந்த முட்டாள் விநியோகஸ்தர்கள் எப்படி சொல்லலாம்?
"மதுரை வீரனும்", "நாடோடி மன்னன்"ம் முதல் முதலாக 3 லட்சம் வசூல் செய்ததாக என்று போட்டு விட்டு எம்ஜிஆர் ரசிகர்கள் சொல்லுவது பொய்,
இப்போ நாம் சொல்லியிருக்கோம் பாருங்க அதுதான் உண்மை என்று ஏதோ " கீழடி " ஆராய்ச்சிக்கு இணையாக ஆராய்ச்சி முடிவுகளை பரபரப்பாக அறிவித்திருக்கிறார்,

உடனே இதற்க்காகவே காத்திருக்கும் கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு துள்ளிக் கொண்டு அப்படிப் போடு, ஆமா ய்யா இதுதான் உண்மை என்று காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு குதூகலம் அடைந்திருக்கிறது,
( ஒண்ணு செய் இந்த ஆராய்ச்சிக் குறிப்பை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு நீயும் பக்கத்தில உட்கார்ந்து க்க, கூடவே போண்டா மணியையும் வேணா கூப்டுக்க, இரண்டு பேரும் சேர்ந்து கல்வெட்டை பார்க்க வரும் இப்போதைய சந்ததியினருக்கு இந்த ஆராய்ச்சியைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருங்க சரியா? )

போண்டா மணி இந்த ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வனிலா ஐஸ் குச்சி குமாரனுக்கு அன்போடு நன்றியை தெரிவித்துக் கொண்டு, பாருங்களேன் ஐஸ் குச்சி சார் எவ்வளவு துல்லியமாக கணக்கு ப் போட்டு வசூல் விபரங்கள் சொல்கிறார்,
அது மட்டுமா தியேட்டர்காரர்கள் பங்கு, விநியோகஸ்தர்கள் பங்கு என்று துல்லியமாக சொல்வதை பார்க்கும் போது நமக்கு அப்படியே ரோமாஞ்சனம் வருதப்பா என்று புகழ் மாலை சூட்டியிருக்கிறார் ( பின்ன சென்ட்ரல் தியேட்டர்ல டிக்கெட்
கிழிச்சவனப் புடிச்சி புதுசு புதுசா எங்களுக்கு எவ்வளவு தோணுதோ அந்த வசூலையெல்லாம் இட்டு நிரப்பி போடுவதற்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று ஐஸ் குச்சி அப்படியே கண்ணடிக்குது பாரு )

இன்னும் ஒன்றிரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு படி மேலே போய்

எம்ஜிஆர் ஏன் வருடா வருடம் குறைவான படங்களில் நடிக்க வேண்டும்?
பெரிய கம்பெனி படங்களில் ஏன் நடிக்க வில்லை? என்று அந்த அல்லக்கைகளே கேள்வியும் கேட்டு பதிலையும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்,

ஏண்டா ,தலைவர் உன்னைப் போல சினிமா மட்டும்தான் கதி என்று கிடப்பவரா என்ன, காலையில் சினிமா மாலையில் கட்சிப் பணிகள் என்று எப்போதும் பிசியாய் இருப்பவர்,

அதனால்தான் சில படங்கள் காலம் கடந்து ரிலீஸ் ஆக வேண்டி வந்தது,
அசோகன் போன்ற பச்சை நாதாரிப் பயலுவள்ளாம் முறுக்கியதற்கு அதுதான் காரணம்,

ஆனால் எவ்வளவு காலம் கடந்தாலும் படம் ரிலீஸ் ஆகும் போது மடி நிறைய பணத்தை கட்டிக்கொண்டு போனவர்கள்தான் அனைவரும்,

இப்போது வரைக்கும் அசோகன் குடும்பத்துக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது
" நேற்று இன்று நாளை " காவியம்,

விரைவில் வின்சென்ட் அசோகன் அந்த படத்தை டிஜிட்டல் செய்து வெளியிடுவார் என்று நம்புவோம்,

அது மட்டும் அல்ல நீ கோணல் மாணலா கத்திக் கதறி 25 படங்களில் நடித்து வாங்கும் பணத்தை தலைவர் ஒரே படத்தில் வாங்கிக்கொண்டு போயிட்டே இருப்பார்,
அதனாலதான் 1970 களில் " நிச்சய தாம்பூலம் " பட டைரக்டர் திரு B. S ரங்கா அவர்கள் சொன்னார் " எம்ஜிஆர் அவர்களுக்கு 25 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு படத்தை முடித்துத் தர வேண்டும் "

ஆனால் அய்யனோட நிலைமை என்ன தெரியுமா?

1975, 76 இல் தொடர் தோல்விகளுக்குப் பிறகு கணேசன் படத் தயாரிப்பாளர்களிடம்" நீங்கள் கொடுப்பதை கொடுங்கள், நான் வந்து நடித்துத் தருகிறேன் என்று கெஞ்சும் நிலைதான் இருந்தது, இந்த செய்தி அப்போதைய பத்திரிக்கைகளில் வந்து நாறியது அனைவருக்கும் தெரியும், ( இந்த செய்தி ஆதாரம் என்னிடம் காப்பி உள்ளது, தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளலாம் )

இப்படி ஒவ்வொரு நாளும் போண்டா மணி மற்றும் ஐஸ் குச்சி போடும் பதிவுகளைப் பார்த்தால் நாளைக்கே இப்படி ஒரு பதிவு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை

" முன்பு ஒரு காலத்தில் கண்ணகி மதுரை நகரை அழித்த பிறகு கண்ணகி, கோவலன் இருவரையும் வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து அழைத்துச் சென்றது, அது போலவே எங்கள் அய்யனையும் கண்ணம்மா பேட்டையில் இருந்து வானத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய தனி சார்ட்டடு புஷ்பக விமானம் வந்து கூட்டிக் கொண்டு போனதை எங்கள் கண்ணால பார்த்தோம் "

எகிப்தில் பழைய கால மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களை இறந்தபிறகு புதைக்கும்" மம்மி "களில் கூட நிறைய தங்க, வைர, வைடூரியங்கள் இப்போது தோண்டும் போது கிடைக்கிறது

ஆனால் நீங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போன உங்கள் பொய்யனின்
படங்களை தோண்டி எடுத்து பதிவுகள் போடுவது உங்களுக்கே வேடிக்கையாய் இல்லை?

இரண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விடுகிறோம்,

அதில் ஒன்று துவக்கத்தில் மிகவும் நன்றாக ஓடி கார் உரிமையாளருக்கு காசை அள்ளிக் குவிக்கிறது, காலம் செல்லச் செல்ல புதிய கார்களின் வரவு காரணமாக அந்த கார் கொஞ்சம் பழையதாக போனாலும் மவுசு குறையாமல் கார் ஓனருக்கு வருமானத்தை தந்து கொண்டே இருக்கிறது,

ஆனால் இன்னொரு காரோ வாங்கின புதிதில் சொற்ப வருமானத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு ரிப்பேர் ஆகி காயலான் கடைக்கு போனால் ஓனர் எதை மதிப்பார்?

அதே போல்தான் தலைவர் படங்களும்,
கணேசன் படங்களும்

தலைவர் படங்கள் கொரோனாவால் திரை அரங்குகளுக்கு
வராமல் இருந்த நிலையில் இப்போது தமிழ்நாடு முழுவதும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டு வருகிறது,
இப்போது சிங்காரச் சென்னையிலும் தலைவரின் திரைக் கொண்டாட்டங்கள் களை கட்டத் துவங்கியாச்சு,

முதற் கட்டமாக சென்னை மகாலட்சுமி அரங்கில் தலைவரின் டிஜிட்டல் " ரகசியப் போலீஸ் 115" நவம்பர் 20 முதல் கோலாகலத் துவக்கம், ...


ஒண்ணு செய்ங்க, ஒரு இடிந்த மாளிகை படத்தை தூக்கிக் கொண்டு திரிவீர்கள் அல்லவா அதை உங்கள் விநியோகக் கம்பெனி மூலமே வாங்கி ஏதாச்சும் தியேட்டர் கிடைத்தால் வெளியே ஒரு கட் அவுட் வைத்து ஒரு லட்ச ரூபாய்? மாலை போட்டு நீங்கள் நாலைந்து பேர் உள்ளே போய் நீங்களே கை தட்டி ஆனந்தப் படுங்கள்
சரியா?

" கீதா கோவிந்தம் " தெலுங்கு படத்தில் சூப்பராக நடித்து பார்ப்போர் மனதை எல்லாம் கொள்ளை அடித்த நடிகை " ராஷ்மிகா மந்தனா " வுக்கு இந்த வருடம்

"NATIONAL CRUSH OF THE YEAR " என்னும் பெருமை கிடைத்திருக்கிறது,

அதே போல் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும்
போண்டா மணிக்கு, ஐஸ் குச்சிக்கு

"NATIONAL LIER OF THE YEAR " என்னும் பெயர் கிடைக்க வேண்டும், கண்டிப்பாக கிடைக்கும் என்று அன்போடு வாழ்த்தி மகிழும் ...


தலைவரின் பக்தன்...

ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...........

orodizli
23rd November 2020, 07:36 AM
நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு..

சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்...

ஆனால் தன் பொன் பொருள் அனைத்தையும் அடகு வைத்து அதையும் தாண்டி கடன் வாங்கி அவர் எடுத்த முதல் சொந்த படம் நாடோடிமன்னன் நாம் அறிவோம்...

சுப்பிரமணி என்ற பெரியவர் தலைவர் உடன் நாடக குழுவில் பயணித்து பின் தலைவர் இடமே பணிக்கு சேர்ந்தார்.

வயதில் மூத்தவர்...அரங்க நிர்மாண பொறுப்புகளை கவனித்து வந்தவர்....
ஆயிரம் தடங்கல்கள் தாண்டி அந்த படம் தயார் ஆகி கொண்டு இருந்தநேரம்.

படத்தில் பானுமதி சிறையுள் இருக்கும் தலைவரை மேலே அறையில் இருந்து பார்ப்பது....

மன்னன் நாடோடி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஆகியவை அந்த காலத்தில் ஸ்டாண்ட் வைத்து நாலு பேர் சேர்ந்து உருட்டி கொண்டு கொண்டு வரும் அளவுக்கு கணம் வாய்ந்த ஒரு காமெரா வைத்து எடுக்க பட்ட காட்சிகள் அவை.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் சம்பந்த பட்ட காட்சிகளுக்கு தயார் ஆக ஆட்கள் வர தாமதம் ஆனதால் அந்த கேமராவை அந்த வயதானவர் மணி மட்டும் உடன் ஒருவர் இருக்க அவரும் தள்ளி கொண்டு வர...

தரையில் இருந்த விரிப்பில் தட்டி கேமரா குப்புற கவிழ்ந்து கீழே விழுந்து சுக்கல் சுக்கல் ஆக லென்ஸ் நொறுங்கி போக அங்கே சத்தம் கேட்டு அனைவரும் விபரீதம் அறிந்து உறைந்து போயினர்.

தலைவர் சுறுசுறுப்புடன் வர எடுக்க பட வேண்டிய காட்சிக்கு தயார் ஆக போக மற்ற அனைத்து முகங்களும் மாறி போய் இருப்பதை அரை நொடியில் கணித்து விடுகிறார் மன்னன்.

என்ன விஷயம் என்று கேட்க.....ஒருவர் மட்டும் தயங்கி தயங்கி சம்பவம் சொல்ல...
இதற்கு காரணம் யார் என்று தலைவர் கேட்க.

அவர் பதில் சொல்ல.
நடுங்கிய படி அந்த மூத்தவர் இன்றுடன் இங்கே சரி என்ற முடிவுடன் தலைவர் அருகில் நடுக்கத்துடன் செல்ல.

வாங்க....இது சரியா..

உங்க வயதுக்கு ஏற்ற வேலையை நீங்க செய்ய வேண்டும்...
உங்கள் மேலே அல்லது காலில் விழுந்து அடி பட்டு இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு?

போகட்டும் விடுங்கள். இனி நீங்கள் மற்றவரை இங்கே வேலை வாங்க வேண்டும்...இதே போல ஒன்று விரைவில் நாளைக்குள் தயார் செய்கிறேன்....யாரும் அவர் மீது கோவம் கொள்ள வேண்டாம்.

என்று அந்த பெரியவர் தோள் மீது கை போட்டு கொண்டு ஓய்வரை நோக்கி ஒன்றும் நடக்காதது போல நடந்து கடந்து செல்கிறார் பொன்மனம்.

சும்மா இல்லை நாம் அவரை பற்றி இந்த நிமிடம் வரை பேச எழுத அதை பலர் ரசிக்க.

இந்த உலகில் அன்றும் இன்றும் என்றும் ஒரே மன்னன் மனிதாபிமானி என்றால் அது நம் தங்க தலைவர் மட்டும் தானே?...

கருத்துக்கள் வரவேற்க படுகின்றன....நன்றி.

உங்களில் ஒருவன்.

வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்.............

orodizli
23rd November 2020, 07:37 AM
1980-அது ஒரு
இலையுதிர் காலம்
***************
பேரறிஞர் அண்ணா ,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் ஆட்சியில்
சாதாரண சுப்பனும்,குப்பனும்,
பதவிக்கு வர முடிந்தது.

இன்றைய அரசியலில் பணம் இருந்தால் மட்டுமே பதவி
என்கிற நிலை உருவாகிப் போனது.

எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் கொள்கை இல்லாத மனிதர்கள்
கட்சி மாறும் பச்சோந்தி கூட்டம்
ஆட்சிகள் மாறும்போது சொரணையற்ற சுயநலவாதிகள்
காட்சிகள் மாற்றிக் கொள்ளும்
கட்சி மாறிகள்
சுயமரியாதை இல்லாதவர்கள்
இருந்தார்கள்.

1980ல் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது
அதிமுக

அது ஒரு இலையுதிர் காலம்
பழத்தை மட்டுமே ருசிக்க வந்த
வவ்வால்கள்
துரோக கூட்டம்
கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டாவர்கள்.

நேற்றுவரை எம்ஜிஆரை
போற்றிய கூட்டம்
அனி மாறியதால் புழுதி வாரி தூற்றி திமுக விற்கு ஒடிப்போனார்கள்.
அன்றைக்கு எம்ஜிஆர் அவர்கள் பெருந்தன்மையாக
நம்மை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியதை
இன்றைக்கும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.

இன்றைய சூழலில் பா ஜ க தமிழகத்தில் தாமரையை
மலர வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் ஆதாயத்தை மட்டுமே எதிரபார்த்து வலை விரித்து
காத்துக் கொண்டு இருக்கிறது பாஜக,

பதவியை பயன் படுத்தி
பலர் அடித்த கொள்ளை பணத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பாதுகாப்பு தேடியும்
காவிக் கொடி ஏந்த தயாராகி விட்டார்கள்.

கழகமே குடும்பம்
குடும்பமே கழகம் என்றாகிப்போன
மு.க.& கம்பெனி பிரைவேட் லிமிடெட்
அடிக்கிற காற்றில் தனக்கு ஆதாயம் கிடைக்குமா?
முதல்வர் பதவி என்பது
வெறும் கனவா?
என்கிற நிலையில்
இலவு காத்த கிளியாக காத்து கிடக்கிறது ஒரு குடும்பம்.

2021-ல் எதிர்பாராத பல திருப்பங்களும் மாற்றங்களும் நடைபெறலாம்
சிலருக்கு ஏமாற்றங்களே மிச்சமாக இருக்கலாம்.

2021- ல் எம்ஜிஆரை பலரும் சொந்தம் கொண்டாடும்
நிலை உருவாகலாம்...

*எம்ஜிஆர்நேசன்*...

orodizli
23rd November 2020, 07:40 AM
முரசொலிக்கு ப*தில*டி..

புர*ட்சித்த*லைவ*ர் அமெரிக்காவில் சிறுநீர*க* மாற்று அறுவை சிகிச்சை முடிந்து த*மிழ்நாடு திரும்பிய*போது ந*ல்ல ஆரோக்கிய*த்துட*னே வ*ந்தார்..இல்லையெனில் சுமார் 36 ம*ணிநேர*ம் விமான*த்தில் ப*ற*ந்து வ*ர*முடியுமா? சென்னை வ*ந்த*வுட*ன் த*ன*து இல்ல*த்திலோ/ந*ட்ச*த்திர* ஓட்ட*லிலோ சென்று த*ங்க*வில்லை..நேராக* வ*ர*வேற்பு திட*ல் மேடைக்கு வ*ந்து வ*ர*வேற்பை ஏற்றுக்கொண்டார்..மேடையின் கீழே அம*ர்ந்திருந்த* எஸ்.எஸ்.ராஜேந்திர*ன், திருச்சி ச*வுந்திர*ராஜ*ன் ம*ற்றும் சில பிர*ப*ல*ங்க*ளை அடையாள*ங்க*ண்டு அவ*ரே மேடைக்கு அழைத்து ந*லம் விசாரித்தார். அவ*ர் சென்னை அப்ப*லோவில் அட்மிட் ஆன*திலிருந்து புருக்ளீன் சிகிச்சை வ*ரையிலும் அவ*ர*து உட*ல்நிலை த*க*வ*ல்க*ள் ப*த்திரிக்கைக*ளுக்கு நாள்தோறும் வ*ழ*ங்க*ப்பட்ட*ன..மூளையில் ஏற்ப*ட்ட* க*ட்டியால் பேசும்ச*க்தி சிறிது பாதிக்க*ப்ப*ட்ட*தும் அனைவ*ருக்கும் தெரியும். அத*ற்காக* பேச்சுப்ப*யிற்சி எடுத்து வ*ந்த*தை ப*த்திரிக்கைக*ளுக்கும் அறிவித்த*ன*ர்..அவ*ர் முழு ஆரோக்கிய*த்துட*னும், ந*ல்ல ம*ன*நிலையிலும் இருந்த*தால்தான் க*வ*ர்ன*ர் குரானா ப*த*வியேற்க*வே அழைத்தார். எம்ஜிஆருக்கு சிகிச்சை முடிந்து சிலநாட்க*ளே ஆன*தால் நோய்தொற்று ஏதும் வ*ந்துவிட*க்கூடாது என்ப*தாலேயே மூன்றாவ*து முறை ப*த*விப்பிர*மாண*த்தை க*வ*ர்ன*ர் மாளிகையில் உள்ள ஒரு ஹாலில் அதிக* கூட்ட*த்திற்கு இட*ம் த*ராம*ல் ந*ட*த்தின*ர். ஆனால் அந்த* நிக*ழ்ச்சியின் வீடியோ/புகைப்ப*ட*ங்க*ள் அனைத்து ஊட*க*ங்க*ளுக்கும் வ*ழ*ங்க*ப்ப*ட்ட*ன..அண்ட*ப்புழுகே..ஆகாச*ப்புழுகே..இ ன்ன*மும் உன*து புழுகு மூட்டைக*ளுக்கு ப*தில் தொட*ரும்............vr...

orodizli
23rd November 2020, 01:58 PM
'

கைபிள்ளைகளின் முதல் கதறலை எடுத்துக் கொள்வோம். இந்த கைபிள்ளையின் பதிவை பார்த்தவுடன் அய்யன் பாடிய 'சில முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே' என்ற பாடல் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் "பாகப்பிரிவினை"யும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,

கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,

அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக "பாகப்பிரிவினை" மட்டுமே.என்ற
இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் "மதுரை வீரன்" தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் "பாகப்பிரிவினை" எனக் குறிப்பிட்டார்,

விவரங்களை அலசுவோம்,

"பாகப்பிரிவினை" வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
100 நாட்களுக்கான 15 வாரங்களில்
15weeksX16 shows
= 240 shows
240 showsX 1560 seats
= 3,74,400 viewers

1959 வெளியான "பாகப்பிரிவினை"யின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்

100 நாட்களில்
3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060

அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,

அதற்கான பதில்.

பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி!'
பாரதியாரின் பாடல் வீச்சு புரிந்த கைபிள்ளைகள் அய்யன் மீது கொண்ட பக்தி அதிகமானதால் பார்த்த முகமெல்லாம் அய்யனைப் போல் தெரிகிறதாம். இது அய்ய பக்தியின் அசுர வெளிப்பாடு. சமீபத்தில் எனது முகத்தை உற்று நோக்கிய அய்யன் பக்தர்கள் அமுல் டப்பா மூஞ்சி என்று சொன்னதும் எனக்கு அவர்கள் அய்யன் பக்தியின் வெளிப்பாடு புரிந்தது. நன்றி. அவரது திரைப்படங்களும் விநியோகஸ்தர்கள் ஆபிஸில் தகர டப்பா போல் இடத்தை அடைத்துக் கொண்டு வெட்டி வாடகை கொடுக்க வேண்டியதால் அய்யன் படத்தின் தகர டப்பாக்களை காலால் உதைத்து தள்ளுவதாக கேள்வி. சில பேர் அந்த தகர டப்பாவை அமரும் சீட்டாக பயன்படுத்துவதை அய்யன் கைபிள்ளைகள் கவனிக்க வேண்டும்.

'உண்மையை சொன்னவன் சதிகாரன் இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்' தலைவர் பாடிய பாடலின் சாரம்.
சகட்டுமேனிக்கு புளுகிக் கொண்டிருந்த அய்யன் கைபிள்ளைங்களுக்கு நாம் உண்மையை ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னவுடன் கைபிள்ளைகள் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்து விட்டனர். நம்முடைய ஆதாரங்களுக்கு தெளிவான ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்காமல் ஆத்திரத்தில் வெறுப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர். அய்யனின் அண்டப்புளுகு சாதனையை எல்லோரும் புறந்தள்ளி விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.

அய்யனின் தீவிர பக்தரான திரு பம்மலார் அவர்கள் சமீபத்தில் உண்மையை உணர்ந்து 'Box Office emperor' என்றால் அது புரட்சி நடிகர் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டு
அதற்காக தனி புத்தகம் போடப் போவதாக நண்யரிடம் கூறி சிலாகித்ததை கைபிள்ளைகள் அறிவார்களா? தெரியவில்லை. அவரிடம்தான் "மதுரைவீரன்" 33 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் இருப்பதாக அவரே தெரிவித்தார். கருத்துப்போன துருப்பிடித்த பித்தளையை எடுத்து தங்கமாக மாற்றி தரும் மோடி மஸ்தான் வேலையை எங்களிடமா காட்டுவது சுருளி "துணிவே துணை"யில் செய்வதை போல.

சரி முதல் அண்டப்புளுகை
பார்க்கலாம். அய்யனின் முதல் சாதனை முதன் முதலில் மதுரையில் "பாகப்பிரிவினை" ரூ 3 லட்சம் வசூல் ஈட்டியதாம். ஆனால் உண்மையான சாதனை என்னவென்றால் ரிலீஸானது முதல் "பாகப்பிரிவினை" தீபாவளி முதலே தினசரி 2 காட்சிகள் தானாம். இது ஒரு பயங்கரமான சாதனை. ஆனால் 100 நாட்கள் வரை நடைபெற்ற அத்தனை காட்சியும் ஹவுஸ்புல்தானாம்.அதுவும் 100 நாட் களுக்கு 15 வாரங்கள் என்பது கைபிள்ளையின் கண்டுபிடிப்பு. இத்தகைய சாதனைகள் எல்லாம் நம்ம அய்யனால்தான் செய்ய முடியும். தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகக்கூடிய படத்துக்கு எப்படி ஷோவை குறைக்கிறார்களோ தெரியவில்லை.

அந்தக் காலத்தில் தினசரி 2 காட்சிகள்தானாம். என்ன ஒரு அறிவுஜீவிகள். இவர்கள்தான் அய்யன் படுதோல்வி அடைய காரணமானவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரே நடைமுறை தான்
"கர்ணன்" 100 வது நாளில்கூட தினசரி 3 சனி,ஞாயிறு 4, பராசக்தி 1952 லேயே தினசரி 3 , மனோகரா சென்னையில் முதல் வாரத்தில் 5 திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன.. இதெல்லாம் அவர்கள் படத்துக்குதான். தலைவரின் பல படங்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. தூத்துக்குடியில் "ஆயிரத்தில் ஒருவன்" தினசரி 4 காட்சிகளாக 10 தினங்கள் நடைபெற்றதுதான் முதல் தூத்துக்குடி சாதனை. "நாடோடி மன்னன்" வெளியாகும் போது தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள்தான். அது தவிர ஸ்பெஷல் காட்சிகளும் நடைபெற்றன. இதையெல்லாம் விட 1948 ல் வெளியான ஜெமினியின் சக்ரதாரி சென்னையில் தினசரி 3 காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி 1950 க்கு முன்பே எல்லா திரையரங்குகளிலும் தினசரி 3 சனிஞாயிறு 4 நடைமுறைக்கு வந்தது கூட தெரியாத கைபிள்ளைகள் கண்டபடி உளறுகின்றனர். மேலும் முதன்முதலில் 3 லட்சம் வசூல் வந்த படம் "மதுரை வீரன்", பின்னர் "நாடோடி மன்னன்"தான். ஆனால் "பாகப்பிரிவினை" மதுரையில் 3 லட்சம் தொடவில்லை. அவர்களின் பட்டறை வசூலை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பட்டறை வசூலை போட்டு எல்லோரையும் நம்ப வைத்து விடலாம் என்ற மனப்பால் குடிக்க வேண்டாம். "பாகப்பிரிவினை" 2வது 100 நாட்கள் வசூல் சுமார் 60000 கூட வரவில்லை.
இப்படிப்பட்ட நம்பமுடியாத கணக்குகளின் அடிப்படையில் கைபிள்ளைகளே கணக்கு பார்த்து தனக்கு தானே புளகாங்கிதமடைவதை என்ன சொல்வது. மூடர் கூட்டம் என்று புறந்தள்ளி விடலாம் என்றாலும் சும்மா கிடக்காமல் எதையாவது ஊதி விடுகின்றனர். இன்று அய்யனின் மிகைநடிப்பை ஊரறிய கலக்கியTV
நிகழ்ச்சியை பார்த்து கலங்கி நின்ற கைபிள்ளைகளே! நிதானத்துக்கு வந்தால் அய்யனின் நடிப்பில் அலறிய மக்கள் நிலை புரியும்.

இது போல தான் "தங்கப்பதக்கமும்" கடைசி வாரத்தில் சாந்தியில் நடைபெற்ற எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் தானாம். ஆனால் ஹவுஸ்புல்லா ஓடும்போதுதான் படத்தை தூக்குவார்களாம். இது போல தூத்துக்குடியிலும் "சிவந்தமண்" கடைசி வாரத்தில் எல்லா காட்சிகளும் மேலும் நடக்காத எக்ஸ்டிரா காட்சிகளும் ஹவுஸ்புல். ஆனால் அதே வாரத்தில் படம் காலி.

"ஹிட்லர் உமாநாத்" படத்தில் சுருளி சொல்லுவார். இந்தப் பக்கத்தில் வட்ட வடிவில் ஒரு பள்ளிகூடம் கட்டியிருப்பார்கள். அங்கு 0 மார்க் எடுத்தாதான் பாஸ் என்பார். அது "உமாநாத்து"க்கு மட்டுமல்ல அய்யனின் எல்லா படங்களுக்கும் பொருந்தும். 10,20 பேர் வந்தால் மட்டுமே தொடர்ந்து ஓடும் அய்யன் படங்கள் தொடர் ஹவுஸ்புல் ஆரம்பித்ததும் தூக்கி விடுவார்கள். இது எப்படி இருக்கு?. ஊழல் மன்னன் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சினிமா ஊழலில் மன்னாதி மன்னனை இப்போதுதான் பார்க்கிறோம்.

என் பெயர் சங்கரோ, டொங்கரோ என்று விளிக்கும் போலி சிவனடியாரே! வக்கிரன் நக்கீரரே! ஆனாலும் தைரியமாக பெயரை சொல்கிறேன். கைபிள்ளைங்க நாலைந்து புனைப்பெயரில் அதுவும் பொம்பளைங்க படத்தை போட்டு அசிங்கமான கமெண்ட் கொடுத்து விட்டு அய்யனை போலவே தலைவரிடம் தோற்று, புறமுதுகு காட்டி ஓடியதைப்போல் ஓடுவதில் வல்லவர்கள்.
உங்க சொந்த பெயரை போட்டு பதிவு செய்யுங்கப்பா கைபிள்ளைகளா. 'தைரியமாக சொல்! நீ மனிதன்தானா!'
என்று கேட்ட புரட்சி நடிகரிடம், நான் மனிதன்தான்! என்று சொல்ல தைரியமில்லாமல் 'யாரடா மனிதன் இங்கே?' என்று புலம்பியவர் அல்லவா உங்கள் அய்யன்.

தொடரும்..........KSR.........

orodizli
24th November 2020, 07:34 AM
க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும் க*ட்சிக்கு த*ம் ஆத*ர*வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத*லே தேர*டி திட*லில் கூட ஆர*ம்பித்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் அவ்வ*ளவு ப*ஸ் வ*ச*தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க*ளில் உள்ள மக்களெல்லாம் க*ட்டுச்சோற்றை க*ட்டிக்கொண்டு கால்ந*டையாக*வும், மாட்டு வ*ண்டியிலும், குதிரை வ*ண்டியிலும் வ*ந்து மக்கள் தேர*டியில் இட*ம் பிடிக்க* ஆர*ம்பித்து விட்டார்க*ள். 2 கிலோமீட்ட*ர் தூர*த்திற்கு மக்கள் வெள்ளம் ம*தியமே அலை மோதிய*து.
இனிமேல் அவ்வ*ளவு கூட்ட*த்தை க*லைக்க*வும் முடியாது. க*லைத்தாலும் நிலைமை விப*ரீத*மாகிவிடும் என்று மேலிட*த்திற்கு தெரிவித்துவிட்டு க*லெக்ட*ர் கூட்ட*த்திற்கு ஒருவ*ழியாக அன்று மதிய*ம் அனுமதி அளித்துவிட்டார்.
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட*த்திலோ எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மருத்துவ*ர்க*ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த*டுத்துவிட்ட*ன*ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க*வ*னித்துக் கொண்டார். நேர*மோ சென்று கொண்டிருந்த*து.
கூட்ட*த்திற்கு போகும்வ*ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க*ட்ட* ஒரு கூட்ட*மும், அவ*ர் முக*த்தில் திராவ*க*த்தை வீச ஒரு கூட்ட*மும் த*யாராக இருப்ப*தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த*க*வ*ல் கிடைத்த*து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட*ல்நிலை ச*ரியில்லாத*தால் பொதுக்கூட்ட*ம் ர*த்து என்ற செய்தியும் வ*ர* மக்கள் கொதித்து போயின*ர். ப*லர் ர*க*ளையில் ஈடுப*ட்ட*ன*ர்.
நிலைமையின் விப*ரீத*த்தை உணர்ந்த மன்றத்த*லைவ*ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற*ப்ப*ட்டார். வ*ழியில் காரை மறித்து ப*லர் என்னைய்யா! வாத்தியார் வ*ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த*ன*ர். க*ண்டிப்பாக வ*ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட*த்திற்கு சென்றார் பாலாஜி.
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய*டைந்தார். ஒருப*க்க*ம் எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மறுபுற*ம் அவ*ரை கொல்ல* காத்திருக்கும் கூட்ட*ம். க*வ*லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த*லைவ*ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட*ம் வாத*ம் செய்தார்.
உட*னே பாலாஜி, த*லைவ*ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட*த்திற்கு வ*ர*வில்லையென்றால் அந்த மாமர*த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட*, எம்ஜிஆர் மருத்துவ*ர்க*ள், ஜானகி அம்மையாரையும் ச*மாதான*ப்ப*டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப*லவ*ழியில் சுற்றி வ*ந்து காஞ்சிபுர*ம் வ*ந்த*டைந்தது. ஏற்கெனவே திட்ட*மிட்ட*ப*டி எம்ஜிஆரை வ*ய*ல்வெளி வ*ழியே 1/2 கி.மீ ந*ட*த்தியே கூட்டி வ*ந்த*ன*ர். மேடையின் பின்புற*ம் இருந்த ப*ள்ளிவாச*ல் காம்ப*வுண்ட் கேட் வ*ழியே எம்ஜிஆர் வ*ந்து திடீரென மேடையில் தோன்றிய*தும் ம*க்க*ள் ஆர*வார*த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச*ந்தோஷ*த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட*த்திற்கு த*லைமையேற்க செய்தார். க*ட்சி ஆரம்பித்து ஒருவார*மே ஆகியிருந்த* நிலையில் எம்ஜிஆர் க*ருப்பு சிவ*ப்பு க*ரைவேட்டியையே க*ட்டியிருந்தார். தோளில் க*ருப்பு சிவ*ப்பு பார்ட*ரில் துண்டும் இருந்த*து. ப*க்க*த்து க*ட்டிட*த்தில் திராவ*க*ம் வீச காத்திருந்த கும்ப*ல், இவ்வ*ளவு ப*ர*ப*ர*ப்பான கூட்ட*த்தில் திராவ*க*த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த*ப்புவ*து எளித*ல்ல என்று முடிவு செய்து இட*த்தை காலி செய்த*ன*ர்.
த*லைவ*ர்மீது மக்கள் க*ருப்பு மற்றும் சிவ*ப்பு துண்டுக*ளை கீழேயிருந்து வீசின*ர். அனைத்தையும் லாவ*க*மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக*த்தையும் பார்த்த* மக்களின் கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும் விண்ணை பிளந்த*து.
இது திமுக கூட்ட*மா அல்ல*து அண்ணா திமுக கூட்ட*மா என விய*க்கும*ளவிற்கு மேடையில் க*ருப்பு சிவ*ப்பு துண்டுக*ள் குவிந்து கிட*ந்த*து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க*தை முடிந்த*து என ஆட்சியாளர்க*ளுக்கு உரைத்த*து.
இந்த* ஆர*வார* ச*ந்தோஷத்தில் த*லைவ*ரின் காய்ச்ச*ல் ப*ற*ந்தோடிய*து. மாறாக த*லைவ*ரின் வ*ளர்ச்சியை பிடிக்காத க*ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த*மிழ*க அர*சிய*ல் க*ட்சித் த*லைவ*ர்க*ளுக்கு காய்ச்ச*ல் தொற்றிக் கொண்ட*து.
எவ்வித* குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என*து ர*த்த*த்தின் ர*த்த*மான உட*ன்பிற*ப்புக*ளே! என ஆர*ம்பித்து, நான் க*ணக்கு கேட்ட*து த*வ*றா? என்ற கேள்வியுட*ன் திமுக வ*ளர்ச்சிக்கு த*ன்னுடைய ப*ங்கு, என சுமார் இர*ண்டு மணி நேர*ம் (இர*வு 10 மணிமுத*ல் 12 மணிவ*ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின*ச*ரிக*ளிலும், எம்ஜிஆர் த*லைப்பு செய்தி ஆனார்.
இனிய காலை வ*ணக்கத்துட*ன்.............Ch.muthu

orodizli
24th November 2020, 07:34 AM
நண்பா, சங்கர். நல்லா விளக்கம் சொல்லிருக்கீங்க. சிறுசா இருந்தாலும் பரவால்ல. தினம் பதிவு போடு நண்பா. கணேசன் ரசிகர்கள் பொய்யை தினமும் உடைத்து எறி. கணேசன் ரசிகர்களுக்கு சினிமாவப் பத்தியும் தெரியாது. அரசியல் பத்தியும் தெரியாது. இப்ப என்னடான்னா எம்ஜிஆரால் 1957, ஆண்டு 1962 ல் திமுகவுக்கு தேர்தலில் அவர் பிரச்சாரம் செஞ்சும் வெற்றி கிடைக்கவில்லை, 1967 தேர்தலில் அவர் ஆஸுபத்திரியில் இருக்காம பிரச்ச்சாரம் செய்தால் முடிவு மாறியிருக்குமோ என்று கேட்கின்றார்கள். ஒண்ணே ஒண்ணு.. சொல்றேன். எம்ஜிஆர் தொடர்ச்சியா 3 தடவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனார்.். வேறு யாரும் தமிழ்நாட்டில் இந்த சாதனை செய்யவில்லை. இனிமேலயும் செய்ய முடியாது. அவர் முதல்வராகஇருந்ததை மறுக்க மாட்டாங்க. ஆனால் நடிகர் கணேசன் திருவையாறு தொகுதியில் தோற்றது ஏன்? ஒரு வார்டு கவுன்சிலராக்கூட ஆக முடியாதது ஏன்? அதுக்கு அவங்ககிட்டயே பதில் இருக்கு. சிவம் வல்லிபுரம் என்பவர் சொல்கிறார். 1967 தேர்தலில் அண்ணா போட்டியிட்டு தோற்றாராம். திமுக அதிக இடத்தில் ஜெயித்ததால் வேற ஒத்தரை எம் எல் ஏ பதவிய ராஜினாமா பண்ண்ச் சொல்லிவிட்டு அங்கே இடைத்தேர்தலில் நின்று ஜெயிச்சு முதல்வராக இருந்தாராம். அட ஞானசூனியங்களா. அண்ணா அந்த 1967 தேர்தலில் போட்டியே போடலை. அப்புறம் எப்படி அண்ணா முதல்வர் ஆனார்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. இவங்களை வெச்சிக்கிட்டு கணேசன் எப்படி ஜெயிப்பாரு. பரவால்ல.இவங்க அறிவு அப்படியே இருக்கட்டும். அப்பதான் இவங்க போற இடம் எல்லாம் தோத்துபோகும். எல்லாரும் இவங்களை விரட்டுவாங்க. நமக்கு ஜாலியாஇருக்கும். கணேசன் எவ்வழி. பிள்ளைங்க அவ்வழி. அவங்க அறிவு அவ்வளவு தான். இதுங்கள்ளாம் எம்ஜி ஆரையும் அவர் செல்வாக்கு பத்தியும் பேசுதுங்க. 1967 தேர்தல் பத்தி சிவம் வல்லிபுரம் சொல்லிருக்கிறதப் பாருங்க... இவங்க போற இடம் எப்படி விளங்கும். இப்படி தப்பான தகவல் சொல்லி நடிகர் கணேசனுக்கு குழி வெட்டி ஊத்தி மூடினாங்க. கணேசன் ராசி அப்படி. அவரு பிள்ளைங்க ராசி இப்படி......rrn...

orodizli
24th November 2020, 07:36 AM
எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் !

இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின் பொருளாளர்
செ. மாதவன், வலதுபுறம் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம்.
1983 என்று நினைவு. அப்போது தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இருந்தது. சத்துணவு திட்டம் வந்தபின்
அரிசிக்கு அதிக தேவை இருந்தது என்றாலும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தருவதில் தாமதம் செய்தனர். அதனால் பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.,
அ.தி.மு.க. சார்பில் இப்படி உண்ணாவிரத வழியை கையாண்டார்.

காலை வந்தவர், மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் வந்தபின் மாலை விரதம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரண்டு தினங்களில் அரிசி வந்து சேர்ந்தது.

ஊழல் காரணமாக தி.மு.க தான் காங்கிரசிடம் அடிமையாக இருந்ததன்றி, எம்.ஜி.ஆருக்கு பின்பும் செல்வி ஜெயலலிதா, இன்றைய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகட்டும் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. எம்.ஜி.ஆர். என்ற சக்தி அ.தி.முகவை காத்து நிற்கும்.

அ.தி.மு.க. யாருக்கும் அடிமையில்லை.
யாரும் அடிமைப்படுத்த முடியாது என்பதை கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர்.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.........

orodizli
24th November 2020, 07:37 AM
குறவர் வேஷம் போட்டு
குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?

படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?

என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?

பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?

காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?

அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?

மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?

பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?

தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?

யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?

யார்தான் அவர்?

புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!

courtesy
புதுவை வேலு.........

orodizli
25th November 2020, 08:25 AM
எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் !

இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின் பொருளாளர்
செ. மாதவன், வலதுபுறம் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம்.
1983 என்று நினைவு. அப்போது தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இருந்தது. சத்துணவு திட்டம் வந்தபின்
அரிசிக்கு அதிக தேவை இருந்தது என்றாலும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தருவதில் தாமதம் செய்தனர். அதனால் பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.,
அ.தி.மு.க. சார்பில் இப்படி உண்ணாவிரத வழியை கையாண்டார்.

காலை வந்தவர், மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் வந்தபின் மாலை விரதம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரண்டு தினங்களில் அரிசி வந்து சேர்ந்தது.

ஊழல் காரணமாக தி.மு.க தான் காங்கிரசிடம் அடிமையாக இருந்ததன்றி, எம்.ஜி.ஆருக்கு பின்பும் செல்வி ஜெயலலிதா, இன்றைய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகட்டும் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. எம்.ஜி.ஆர். என்ற சக்தி அ.தி.முகவை காத்து நிற்கும்.

அ.தி.மு.க. யாருக்கும் அடிமையில்லை.
யாரும் அடிமைப்படுத்த முடியாது என்பதை கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர்.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..........

orodizli
25th November 2020, 08:26 AM
# இந்த போண்டா மணி, ஐஸ் குச்சி குமாரன், முக்கியமா கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு, இப்போ புதுசா நாலைந்து அல்லக்கைகள் தொல்லை தாங்க முடியலப்பா !

கொஞ்ச நாளைக்கு முன்னாடி "தேவி பாரடைஸ் " தியேட்டரில் வெறுமனே பாலாஜியின் கைங்கர்யத்தால் ஒரு 50 நாளைக்கு "பூச்சி " காட்டிய " ராசா " காலொடிஞ்சு நம்ம தலைவரின் " ரிக் ஷாக்கார"னிடம் சரணாகதி அடைந்த கதையை தக்க ஆதாரங்களுடன் சங்கர் சார் புட்டுப் புட்டு வைத்தார்,

அதன் பிறகு அதற்கு எந்த பதிலும் இல்லை மாறாக ஆதாரங்களுடன் விளக்கிய சங்கர் சாரை தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்,

இது ஆரோக்கியமான விஷயம் இல்லை கொஞ்சம் யோசித்து பதிவு போடவும்

இப்போ புதுசா 1974 இல் வந்து கொஞ்சம் சலசலப்பு காட்டிய " தங்கப்பதக்கம் " படத்தை தூக்கிக் கொண்டு வந்து பதிவு போடத் தொடங்கியிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கனடா தங்கவேலு அந்தக் காலத்தில் எல்லோராலும் " மட ஒளி " என்று அழைக்கப்பட்ட புளுகு மூட்டைக் கூடாரமான
மதி ஒளி பத்திரிக்கை யில் வந்த செய்தியை எடுத்துப் போட்டு வழக்கம் போலவே அல்லக்கைகளுடன் சேர்ந்து புளங்காகிதம் அடைந்திருக்கிறார்,

சரி அந்த தகரப்பதக்கத்தின் கதையை கொஞ்சம் அலசுவோமா?

1973 இல் இருந்தே கணேசனின் அதல பாதாள சறுக்கல் ஆரம்பித்து விட்டது,

அதிலும் குறிப்பாக " பாரத விலாஸ் " படம் தள்ளாடினாலும் கொஞ்ச காயங்களுடன் தப்பித்துக் கொண்டது,

பின்னர்தான் ஏழரை நாட்டு சனி ஆரம்பமானது,

"பேசும் படம் " பத்திரிக்கையோடு ஜி. உமாபதி போதும் என்ற மனத்தோடு வாழ்ந்திருக்கலாம் ஆனால் விதி வலியதல்லவா, அது யாரையும் வீழ்த்த சக்தி படைத்தது,
அதற்கு உமாபதியும் விதி விலக்கு அல்லவே !

அவருக்கு விதி கணேசனின் ரூபத்தில் வந்தது,

அமரர் கல்கி அவர்கள் எழுதி லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து இன்பமுற்ற "பொன்னியின் செல்வன் நாவலை உமாபதி அவர்களும் படித்திருப்பார் போல் தெரிகிறது ,

அதையே படமாக எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்திருக்கலாம்
ஆனால் "வந்தியத்தேவன் " வேடத்தில் ஒரே ஒருவரைத்தான் நினைத்திருப்பார்,
ஆனால் அது சாத்தியப்படாமல் போகவே "மாமன்னன் " ராஜராஜசோழன் " கதையையாவது படமாக்குவோம் என்று நினைத்து கடைசியில் ஒரு பெரிய திருப்பூர் ஜமக்காளத்தை தலையில் போடக் காரணமான " ராஜராஜ சோழன் " படத்தை எடுத்து மாட்டிக் கொண்டார்,

படம் ரிலீஸ் ஆன புதிதில் அவரும் தம் பிடித்துக்கொண்டு இத்தனை ஷோ அரங்கு நிறைந்தது, அத்தனை ஷோ அரங்கு நிறைந்தது என்று விளம்பரம் எல்லாம் கொடுத்தும் கடைசியில் ஒரு பருப்பும் வேகாமல் கணேசனால் அந்த படம் தலை குப்புற விழுந்தது,

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்காக உமாபதி அவர்கள் அவருக்கு சொந்தமான " ஆனந்த் " அரங்கில் 99 நாள் ஓட்டி வெடித்து வந்த அழுகையை திருப்பூர்
போர்வையால் மறைத்துக் கொண்டார் பாவம்,

அந்த படம் வந்த புதிதில் அதை எடுத்து பட்ட அவமானத்தை மறைந்த தலைவரின் பக்தர் திரு. முத்தையன் அம்மு அவர்கள் மய்யம் இணைய தளத்தில் முன்பு விளக்கியிருந்தார்கள்
அடுத்தது பொன் ஊஞ்சல் ஆட நினைத்த தயாரிப்பாளர் ஊஞ்சல் அறுந்து பலத்த அடி,
அடுத்து எங்க தங்க ராசா கொஞ்சம் தேறின மாதிரி தெரிஞ்சது
அடுத்து வந்த கவுரவம் போன போக்கு " இந்து " ரங்கராஜனிடம் யாராவது கோடம்பாக்கத்துக்கு வழி கேட்டால் கூட சொல்லியிருக்க மாட்டார்,

கிளைமாக்ஸ் இனிமேதான் இருக்கு
மனிதரில் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை (வி. சி குகநாதனின் போறாத காலம் )
சிவகாமியின் செல்வன் ( பாவம் கனகசபை " விநாசகாலே விபரீத புத்தி "
ஜெயந்தி பிலிம்சே பிப்பிப்பீ )
" தாய் " (அய்யோ பாவம் ஏ. சி திருலோகச்சந்தர் )

இப்படி அனைத்து படங்களும் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் போகவும் கடைசியில் இந்த தகரப்பதக்கத்தை ஓட்டியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் முன்னேற்பாடாக சாந்தி, கிரவுன், புவநேஸ்வரி( DCR நம்ம கையில் இருக்கும் அல்லவா? ) தமிழ்நாடு முழுக்க பிள்ளைகள் கையை ஊணி கரணம் அடிக்காத குறையாக ஓட்டியும் ஒண்ணும் புடுங்க முடியல

" சிவந்த மண்ணை 100 நாள் தூத்துக்குடியில் ஓட்டியவர்களுக்கு இந்த தகரத்தை 41நாளைக்கு மேல் ஓட்ட முடியவில்லை,
எங்கள் குமரியில் 61 நாள் ஓட்டி கேவலமான வசூல் 1, 14000(நேற்று இன்று நாளை இந்த படத்தை புற வாலில் கட்டி அடித்தது )

இவர்கள் இப்படி மட ஒளி யில் சுட்ட இந்த ஊத்தப்பம் தமிழ் நாடு முழுக்க "வெள்ளிக்கிழமை விரதம் " படத்துடன் மோத முடியாமல் குப்பைக்கு போனது வேறு விஷயம்
அது மட்டுமல்ல நிறைய B&C சென்டர்களில் ஜெய்சங்கர் நடித்த "திருடி " யுடன் மோதிய
S.P. சௌத்ரி மூக்கறுபட்டு தலை குனிந்ததெல்லாம் தனிக்கதை (நமக்கு இதெல்லாம் சகஜம்தானே பாஸ்,
ஆனா வெறப்பா நிப்போம்ல )

இப்படி தமிழ் நாடு முழுக்க 100 நாட்களில் ஒரு கோடியை நெருங்கி விட்டதாக அயோக்கியன் சண்முகம் நடத்திய மட ஒளி பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது,


நல்லா கவனிச்சுக்கோங்க 100 நாளில் ஒரு கோடியை நெருங்கிய தகரம் 175 நாள் ஓடி முடிய கூட பத்து லட்சம்தான் வசூல் செய்ததா? அது மட்டுமல்ல வெற்றி விளம்பரத்தில் இந்தியா
முழுவதும் என்று வேறு போட்டிருந்தீர்கள் அப்படியிருக்க இவ்வளவுதான் வசூலா?

அதுவும் சென்னை சாந்தியில் 168 வது நாளில் இன்றே கடைசி, நாளை முதல் pocket maar என்னும் படம் திரையிடப்படும் என்று அறிவித்தபிறகு திடீரென்று கூட 8 நாள் ஓட்ட வேண்டிய காரணம் என்ன?

அதுவும் தியேட்டர் நிர்வாகம் சொன்ன தகவல் 23 வாரத்திலேயே வாராந்திர நெட் விழுந்து விட்டது,
அப்படியிருக்க கடைசி எட்டு நாட்களும் 24 ஷோ எப்படிப்பா ஹவுஸ் புல் ஆகியது?

மொத்தம் 60 லட்சம் கூட தேறாத தகரத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையா பாஸ்?

இது ஒரு miracle தான்
நேற்று சங்கர் சார் போட்ட பதிவில் அனைத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்

எனவே இந்த தகரத்தின் பெருமை பூச்சை உங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

சொன்னது கொஞ்சம்தான் ,
போதாது இன்னமும் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எல்லாம் கிழிந்து தொங்கி விடும்
ஜாக்கிரதை !


அடுத்து நாஞ்சில் தும்பு
"தமிழக அரசியல் " பத்திரிக்கையில் முன்பு வாந்தி எடுத்த சில விஷயங்களை நம்ம கனடா தங்கவேலு எடுத்து போட்டிருக்கார்,

இந்த தும்பு தான் அதே பத்திரிக்கையில் எழுதியது மனோகரா படம் சென்னையில் ஒரே வாரத்தில் 84 லட்சம் வசூல் செய்தது

அப்புறம் ஜெமினி நிறுவனத்துக்கு மூடு விழா நடத்திய " விளையாட்டுப்பிள்ளை " படம் வசூலைக் கொட்டியது என்று

அதே போல அவர் எழுதிய வீர வரிகள் பின்னே வருகிறது ( யாரும் சிரிக்க வேண்டாம், அடக்கிக் கொள்ளுங்கள் )

" நடிகர் திலகத்துடன் நேரடியாக மோத முடியாதவர்களுக்கெல்லாம் " வசூல் சக்கரவர்த்தி " பட்டம் கொடுத்திருக்கிறார்கள்

" எங்க மாமா " வெலிங்டன் தியேட்டரில் நன்றாக ஓடினாராம் ஆனால் யாருடைய வற்புறுத்தலின் பேரிலோ படத்தை எடுத்து விட்டார்களாம் ...

அதுவும் முதல் வாரத்தில் அதிக வசூலாம், அப்படியிருந்தும் படத்தை எடுத்து விட்டார்களாம் ( அப்போ இரு மலர்கள் 100 நாள் ஆளே இல்லாமல் எப்படி ஓடியது தும்பு? )

அதே போல நிறை குடம் படமும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் போதே யாரோ சொல்லி எடுத்து விட்டார்களாம் ( யாருக்கும் தெரியாத இந்த தங்கமலை ரகசியம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது பாஸ், கொஞ்சம் என் காதிலும் அந்த ரகசியத்தை சொல்ல முடியுமா பாஸ் ப்ளீஸ் )

ஆமா " மாட்டுக்கார வேலன் " நான்கு அரங்கிலும் 400 ஷோ full அப்படீன்னு விளம்பரம் வந்த மாதிரி ஒரு ஞாபகம் அது எப்படிப்பா? ( உங்க அய்யன் இப்படித்தானே பேசுவாப்பல )

" சின்னக் கவுண்டர் " படத்துல கவுண்டமணி செந்தில்ட்ட கேப்பாரே
" ஏண்டா இதெல்லாம் நீயா கேக்குறியா இல்ல யாராவது சொல்லித் தந்து இப்படி கேக்குறியா என்று,

அதேபோல் தும்பு இதெல்லாம் உன் கற்பனையில் உதிச்சதா இல்ல யாராவது சொல்லித் தந்து இப்படி பெனாத்துறியா?

சரி அந்த யாரோ யாரு ?!
முத்து ராமனா இல்ல ஜெய்சங்கரா?
இப்படி வற்புறுத்தி படத்தை எடுக்கச் சொல்ல என்ன காரணம்? (நிறை குடம் படத்துல வாணிஸ்ரீ அண்ணனா நடிச்சது முத்து ராமன் தானே?
முக்தா சீனிவாசன் கூட இப்படி யோசித்திருக்க முடியாதேப்பா )

சரி அடுத்து சீக்கிரம் எதையாவது போடுங்கப்பா, போரடிக்குது !


தலைவரின் பக்தன்...


ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

orodizli
25th November 2020, 08:27 AM
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..

இதோ உலக எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த தளத்தில்....

59 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.

இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...

1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..

2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)

3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)

4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)

5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)

6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)

7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)

8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )

9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)

10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.

11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.

12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..

13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..

14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.

15...பரமபிதா.

16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..

17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..

18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.

19...பாகன் மகள்..

20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.

22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.

23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.

24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.

25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.

27...புரட்சி பித்தன்.

28....வேலுத்தேவன்..

29...ஏசுநாதர்..

30....மண்ணில் தெரியுது வானம்.

31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.

32..உன்னை விட மாட்டேன்.

33...எல்லை காவலன்.

35...கேப்டன் ராஜு.

36....தியாகத்தின் வெற்றி..

37...இதுதான் பதில்.

38.....வேலு தம்பி...

39.. ஊரே என் உறவு.

40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..

41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...

43...இன்ப நிலா.

44.. வாழ்வே வா..

45...காணிக்கை.

46....அண்ணா பிறந்தநாடு.

47....அண்ணா நீ என் தெய்வம்..

48...நல்லதை நாடு கேட்கும்..

49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.

50....மரகத சிலை.

51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..

52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..

53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..

54....உங்களுக்காக நான்...

55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.

56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..

57.....இமயத்தின் உச்சியிலே..

58...கர்ணன் இயக்கத்தில் குதிரை வீரன்.

59 .சி.என்.வி.மூவிஸ்
தங்கத்திலே வைரம்.

வாழ்க எம்ஜிஆர் புகழ்..........

orodizli
25th November 2020, 12:56 PM
பரமார்த்த குரு கதை தெரியுமா?
அநேகமாக அந்தக்கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சீடர்கள் வேறு யாரும் இல்லை. நம்ம அய்யனின் கைபிள்ளைங்கதான். அதில் வரும் சீடர்கள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு முட்டாள்தனமான முடிவெடுப்பதில் வல்லவர்கள். அதற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல நமது கைபிள்ளைகள். ஒரு 4 பேர் இருந்து கொண்டு சகட்டுமேனிக்கு முட்டாள்தனமாக எதையாவது எந்த ஆதாரமில்லாமல் பேசுவது,அவர்களுக்குள்ளே முடிவு செய்து கொள்வது என்று பார்க்க ரொம்ப தமாஷாக இருக்கும்.

சிவந்தமண் படத்தை தயாரித்த ஸ்ரீதரே படத்துக்கு பல லட்சம் நஷ்டம் என்று சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களே தயாரிப்பு செலவை முடிவு செய்து இவர்களே வசூலையும் முடிவு செய்து இவர்களே லாபத்தையும் பேப்பரிலே போட்டு கொடுத்து விடுவார்கள். அந்த லாபத்தை ஸ்ரீதரிடம் கொடுத்திருந்தால் பாவம் அவர் அய்யனை வைத்தே கணக்கை தொடர்ந்திருப்பார்.

கலங்கிய விழிகளோடு ஆதரிப்பார் யாருமின்றி கலியுக கர்ணனை நாடி வந்து உதவி கேட்டதற்கு யார் காரணம். கையில் காசு இல்லையென்றால் கதவை சாத்தடி
என்ற வேசியின் செயலைப்போல கால்ஷீட் கொடுக்காமல் ஹீரோ 72 வை தவிக்க விட்டதால்தானே.

"தர்த்தி 8 திரை அரங்கில் 200 நாட்கள் மேல் ஓடிய படம். 266 நாட்கள் கல்கத்தா இம்பீரியல் திரை அரங்கில் ஓடியது krishna rao
இந்தியிலும் அருமையான வெற்றிப் படமாக அமைந்தது ஆனால் தயாரிப்பாளர் நேரடி பார்வையில் வெளியிடு செய்ததால் சரியாக கணக்கு காட்டப்படவில்லை என்றும் தகவல்"

இதோ கைபுள்ளைங்களின் காட்டுத்தனமான உளறல். "இதுவரை இந்தி "தர்த்தி" தான் தோல்வி என்றவர்கள் இப்போது திடீரென்று தர்த்தி படம் பயங்கர ஹிட்டாம். பல திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் 200 நாட்கள் தாண்டியும் ஓடி வெற்றி பெற்ற படமாம். அண்டப் புளுகை தாண்டி ஆகாசப் புளுகனாக கைபிள்ளைங்க மாறிவிட்டார்கள்.அய்யன் தலையை காட்டினாலே போதும் எந்த மொழிப்படமானாலும் பணால்தான்.

சுத்த லூஸுப் பயல்களாக இருப்பாங்க போல தெரியுதா? அதைவிட ஒருவன் பாகப்பிரிவினை வெளியான நாள் முதல் தினசரி 2 காட்சிகளாம். 100 நாட்கள் வரை நடந்த அத்தனை காட்சிகளும் ஹவுஸ்புல்லாம். பேஸிக் நாலெட்ஜ் இல்லாதவனெல்லாம் பேஸ்புக்கில் நுழைய தடைவிதித்தால்தான் மீதமுள்ளவர்களாவது நல்ல புத்தியை காப்பாற்றிக் கொள்ள முடியும். அந்தக் காலத்தில் சென்னைக்கு ஒரு சட்டம், மதுரைக்கு ஒன்று என்று ஊர்ஊருக்கு சட்டங்கள் தனித்தனியாக இயற்றியிருப்பார்கள் போல தெரிகிறது."கர்ணனு"ம் லாபம் கொட்டியதாம்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பரமார்த்தனின் சீடர்களுக்கு உண்மையை சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். கர்ணனின் தயாரிப்பு செலவு 40 லட்சம் என்று தயாரிப்பாளர்களே சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே போல் சிவந்தமண் 80 லட்சம் என்று ஸ்ரீதர் சொன்னாலும் இவர்கள் சொல்லுகின்ற கணக்கைதான் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உடனே "உலகம் சுற்றும் வாலிபனி"ன் தயாரிப்பு செலவு மற்றும் லாப வரவுகளை இவர்களே சொல்லி ஆகா உ.சு.வா நஷ்டம் என்று பிதற்றுவதை பார்த்தால் முற்றிய நிலையில் திரிகிறார்கள் போல தெரிகிறது. "உ.சு.வாலிபனி"ன் சரியான தயாரிப்பு செலவு படத்தை தயாரித்த எம்ஜிஆருக்கே தெரியாது.
கை நிறைய அள்ளிக்கொடுப்பதற்கே கணக்கு வைத்து கொள்வதில்லை. படத்தை எடுப்பதற்கா கணக்கு வைத்திருப்பார். அதற்கான கணக்கு எந்த பத்திரிகையிலாவது வந்திருந்தால் தெரியப் படுத்துங்கள் கைபிள்ளைகளே. ஆனால் எம்ஜிஆர் யாரிடமும் போய் "உ.சு.வாலிபன்" நஷ்டம் என்று சொல்லவில்லையே ஸ்ரீதர் பந்துலு நாகராஜனை போல.

ஆனால் "உலகம் சுற்றும் வாலிபனின்" வசூல் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. முதல் வெளியீட்டில் ஓடி முடிய 4.5 கோடி வந்தாலும் தொடர் வெளியீடுகளில் ஈட்டிய லாபம் கணக்கு வழக்கிற்கு அப்பாற்பட்டது. சுமார் 10 கோடியை தாண்டி வசூலாகிக் கொண்டிருக்கும் படம். கங்கை வெள்ளம் ஒரு சங்குக்குள் அடைபடாது என்பதை கைபிள்ளைகள் உணரும் அறிவு கிடையாது. ஆனால் உங்கள் "சிவந்தமண்", "தங்கப்பதக்கம்", "திரிசூலம்" ஆகிய படங்கள் அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் "சிவந்தமண்" "கர்ணன்" போன்ற படங்களின் நஷ்டத்தை ஒத்துக்கொண்டால்தான் அடுத்தடுத்து அய்யனால் அல்லல்பட்ட தயாரிப்பாளர்களை பற்றி எழுதமுடியும். ஆதலால் சீக்கிரம் ஒத்துக் கொள்ளுங்கள் கைபிள்ளைகளே. எல்லோருக்கும் ஒரே படத்தை பற்றி எழுதினால் போரடிக்கும் அல்லவா?

எம்ஜிஆர் எங்காவது சென்று படமெடுத்ததில் இவ்வளவு நஷ்டம் என்று கூறினாரா?
ஆனால் ஸ்ரீதரும் BR பந்துலுவும் நாகராஜனும் உமாபதியும் கதறிக்கொண்டு கம்பெனி கடனில் மூழ்கும் சூழ்நிலையில் தலைவரிடம் வந்து மானத்தையும் பணத்தையும் காப்பாற்றி கொண்டதை அவர்களே ஒப்புக்கொண்டாலும் கைபிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தனை தயாரிப்பாளர்களையும் சூரசம்ஹாரம் பண்ணி தொலைத்து விட்டு வீட்டில் அய்யன் மனம் வெதும்பி விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாரே, ஏன் கைபிள்ளைகளுக்கு தெரியவில்லையா? ஆனால் பாலாஜியும் பீம்சிங்கும் அய்யன் அகோரமாக எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அய்யனை விட்டு ஓடாதகாலிகளாம். மற்றவர்கள் எல்லோரும் ஓடுகாலிகளாம். கைபிள்ளைகளின் கொள்கைகள் வளர காமெடியாயிட்டு உண்டு.

அப்போது வசதி உள்ள கைபிள்ளைங்க அய்யனைப் போட்டு ஒரு படம் எடுத்து இதைப்போல் கணக்கு கொடுத்திருக்கலாம். அய்யன் சீப் ரேட் நடிகர்தானே நீங்கள் டிக்கெட் கிழிக்கும் பணத்தில் அய்யனை வைத்து 5,6 படமாவது எடுத்திருக்கலாம். அப்போதுதான் ஸ்ரீதர் பந்துலு நாகராஜன் உமாபதி பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு புலப்படும். என்ன அய்யனை
வைத்து படம் எடுக்க சொல்லி கைபிள்ளைகளுக்கு மரணபயம் காட்டி விட்டேனா?.அய்யனின் மிகை நடிப்பை நாடே சொல்வதை உணர்ந்து டிவி மீடியாக்கள் அய்யனின் நடிப்பை கேலி செய்வதை மக்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கைபிள்ளைகள் வசூலிலும் வாய் வீச்சிலும் உண்மையோடு நடந்தால் இங்கு எனக்கு வேலையே இருக்காது. அவர்கள் கப்ஸாவும் கரடியுமாக விட்டதால்தான் உண்மையை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இதை பதிவு செய்கிறேன்..........KSR.........

fidowag
25th November 2020, 05:58 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*19/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் நாலு பேருக்கு நன்றி என்பது சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்றது .* அந்த பாடல் எழுதப்படும்போது , இரண்டாவது சரணத்தில் போகும்போது வார்த்தையில்லை. போகுமுன்னே நன்றி சொல்லி வைப்போம் என்று எழுதுகிறார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் பொதுவாக அறச்சொற்கள் வருவதை பெரும்பாலும் விரும்பமாட்டார் .* அந்த வார்த்தைகளில் சில மாற்றங்கள் தேவை என்று வேண்டுகோள் வைத்தார் . அதன் பின்னர் கண்ணதாசன் அவர்கள் வரிகளை* மாற்றி எழுதி கொடுத்தார் .வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே* நன்றி சொல்வோம். வார்த்தையின்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம் என்று எழுதி கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இறுதி காலத்தில் சரளமாக பேசமுடியாத காலத்தில் சில முக்கியஸ்தர்களுக்கு* கைகளால் தொட்டு நன்றி தெரிவித்துள்ளார் .* அதனால்தான் தான் பட்ட துன்பங்கள் சிறு குழந்தைகள் ,வளர்ந்த மாணவ மாணவியர் படக்கூடாது என்பதற்காக வாய் பேசமுடியாத, காது கேளாதோர் பள்ளி உருவாக தன் சொத்தில்*ஒரு பகுதியை ராமாவரம் தோட்டத்தில் உயில் எழுதி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*


மு.கருணாநிதி அவர்கள் மிக பெரிய கதாசிரியர், பல ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர். ராஜதந்திரி, திறமையான நிர்வாகி என்றெல்லாம் பெயரெடுத்தவர் .நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி அவருக்கு எதிராக ஆட்சியில் அமர்ந்து பதவியில் நீடிக்க முடியும் என்று நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். ,கருணாநிதி அவர்கள் நல்ல கதாசிரியர் தான் .அவரது கதை வசனத்தில் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன் . அவர் திரைப்படங்களில் எந்த இடங்களில் எந்த மாதிரி திருப்பங்கள் வைத்த மாதிரி கதை வசனம் எழுதுவார் என்பது எனக்கு அத்துப்படி .* அவர் ஒரு கதாசிரியர்தான் .* நான் ஒரு நடிகன் .* நான் 100 கதாசிரியர்களிடம் கதைகள் கேட்டுள்ளேன். வசனங்களை உச்சரித்துள்ளேன் .* அந்த 100 கதாசிரியர்களும் திரைப்படங்களில் எப்படி எல்லாம் திருப்பங்கள் ஏற்படுத்துவார்கள் என்பதும் எனக்கு தெரியும்.* ஆகவே அதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்றாராம் .*


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : வின்*டிவி நேயர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பக்தர்களுக்கும் ,எனது பணிவான வணக்கங்கள் .* தொடர்ந்து வின்*டிவியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பெயரில் சகாப்தம் என்கிற*நிகழ்ச்சியை*ஒளிபரப்பி வரும் நண்பர் திரு.தேவநாதன்*அவர்களுக்கு*எனது அன்பான*வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் .பல விஷயங்களை*புரட்சி தலைவருடைய கடந்த கால*வாழ்க்கையில்*நடைபெற்ற*சம்பவங்களை , அவருடன் தொடர்பில் இருந்த*எங்களை போன்றவர்களுடைய அனுபவங்களை எல்லாம் சொல்லி*அதன் மூலமாக*பல்வேறு தரப்பில் இருந்து எங்களுக்கு அன்பான*அழைப்புகளும், தொலைபேசி மூலம் மிகுந்த**ஆறுதலான*செய்திகளும் பொதுமக்களும், எம்.ஜி.ஆர். பக்தர்களும்**தரும்போது*உள்ளபடியே* *எனது உள்ளமெல்லாம் பூரிக்கின்றது . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய பல்வேறு சம்பவங்களை, செய்திகளை ஒருநாள்*முழுக்க பேசி கொண்டே இருக்கலாம்.**அந்த அளவிற்கு*இதிகாசங்கள், புராணங்கள் போல அவர் வாழ்க்கையில்*நடைபெற்ற*சம்பவங்கள் அவருடைய வாழிவியல் முறையே**எதிர்கால சந்ததினுடைய* நடைமுறையாக*மாறிவிட்டது என்பதை*நம்முடைய*அனுபவத்திலே* *தெரிந்து கொள்ள முடிகிறது .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் குழந்தைகளிடத்தில் மாறாத*பற்று கொண்டவர் .யாரிடமும் பேசும்போது கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் .***அவர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. வில் இருந்தபோதே குழந்தைகளின் மீது பற்றும்*பாசமும் கொண்டவர் .அந்த பற்று, பாசத்தை*ஆட்சிக்கு வந்ததும்*சத்துணவு வழங்குதல், இலவச*காலணி*,*இலவச பற்பொடி, இலவச சீருடை**என்று பல்வேறு திட்டங்களை*அமுல்படுத்தினார் .* எதிர்க்கட்சியாக இருந்தபோது தலைவர் அவர்கள் காலையில்*படப்பிடிப்புக்கு செல்லும்போது தி.நகர் ,ஆற்காடு*தெருவில்*உள்ள அவரது*அலுவலகம் (தற்போது எம்.ஜி .ஆர். நினைவு இல்லம் )செயல்பட்டது .அங்கிருந்து செல்லும்போது வழியில்*ஒரு பள்ளிக்கூடம் உள்ளது**அந்த பள்ளியில்*குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பார்கள் மாலை நேரத்தில்..சில*குழந்தைகள்* 1 அடி ஆழத்தில் உள்ள ஒரு குழாய் அருகே தண்ணீர் பிடிக்க கூட்டமாய் நிற்பார்கள்**அந்த இடத்தில சிறிது தண்ணீர் தேங்கி இருக்கும் .அங்குள்ள**குழாய்*மூலம் தாங்கள் சாப்பிட்ட*தட்டுக்களை*கழுவி*சுத்தம் செய்துவிட்டு ,அந்த குழாய்*நீரை*பிடித்து*குடிப்பார்கள். இந்த காட்சிகளை எல்லாம் புரட்சி தலைவர் ஒருநாள்*காரை நிறுத்தி கவனித்துள்ளார் . அங்கிருந்து தலைவர் புறப்படும்போது ,கவனித்த அந்த குழந்தைகள் அதோ எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று குரல் கொடுத்த வண்ணம் காரை*நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தார்கள் . இதை*பார்த்து பூரிப்பு அடைந்த*தலைவர் மெதுவாக அங்கிருந்து புறப்படுகிறார் . அடுத்த நாள் தலைவர் எம்.ஜி.ஆர். வருவார் என்கிற எதிர்பார்ப்பில் குழந்தைகள் தங்களது வழக்கமான*தட்டுக்களை சுத்தம் செய்வது, தண்ணீர் குடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதை பார்த்துவிட்டு , அந்த குழந்தைகள் காரை பார்த்து சத்தம் போட்டவுடன்*தலைவர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார் . அதற்கு அடுத்த நாள்* தலைவரின் கார்*அந்த வழக்கமான இடத்தில நிற்கும்போது குழந்தைகள் யாரையும் காணவில்லை .* அது**குறித்து* *விசாரித்ததில்தலைவரின் அன்பை பெற்ற சடகோபன் என்ற கட்சி பிரமுகர் அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் தலைவர் காரில் வரும்போது*குழந்தைகள் சத்தம்*போட்டு தொந்தரவு செய்வதாக புகார் அளித்ததன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தன் கார்*ஓட்டுநர் மூலம் தலைவர் தெரிந்து கொண்டார் .* மேலும் கார்*ஓட்டுநர் தலைவரிடம் நாம் படப்பிடிப்புக்கு செல்லும் சமயம்*குழந்தைகள் இடையூறு செய்வதாக நான்தான்*சடகோபனிடம் சொன்னேன்*.அவர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்துள்ளார் என்று சொன்னார் . குழந்தைகளின் நெருக்கடி, பிரச்னைகளை உணர்ந்த*தலைவர் அடுத்த நாள்,குழந்தைகள் குடிப்பதற்காக குடிநீரை நிரப்பும் ஒரு* பெரிய எவர்சில்வர் ட்ரம்*,அதில் குழந்தைகள் குடிநீர்*பிடிப்பதற்கு வசதியாக*ஒரு குழாயை பொருத்தி, அத்துடன் 4 டம்ளர்கள்*சேர்த்து*இலவச*பரிசாக*பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது .*இது ஒரு குறைந்தபட்ச செலவுதான் என்றாலும் கூட, அந்த பகுதியில்*வாழக்கூடிய*எத்தனையோ, தொழிலதிபர்கள் , ,மிக* பிரபலமானவர்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்டும்*காணாமல்தான் சென்றிருக்கிறார்களே தவிர* ஒருவருக்கும் அந்த குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்குப்பொருட்டு எந்தவித*உதவி செய்யவும் தயாராக இல்லை .ஆனால் தலைவர் அவர்களுக்கு நல்லெண்ணம் இருந்த காரணத்தால் இந்த உதவியை*செய்தார் . அது மட்டுமல்ல . அந்த குழந்தைகளை தலைவர் நேசித்தார்*என்பதுடன் எல்லா குழந்தைகளையும் அவர் நேசித்தார்*என்பதை*அவரது*முதல்வர் பதவி காலத்தில் நான் நேரடியாக*பார்த்து உணர்ந்தவன், மகிழ்ந்தவன் .**.****


1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்து அதற்கு*ஆகின்ற*செலவு*எவ்வளவு என்று* ஆலோசித்த நேரத்தில் இந்த திட்டத்தை*நிறைவேற்றும்*நிலையில்*நிதி ஒதுக்கும் வகையில்*அரசு இல்லை. கஜானாவும் காலியாகிவிடும் என்று அரசு அதிகாரிகள் சொன்னபோது ,கவலை வேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை*,*குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சத்துணவு தரவேண்டும்*என்கிற*என் லட்சிய*கனவை*நிறைவேற்றுவேன் என்று அந்த நிலையை உருவாக்கிய* சரித்திர நாயகன்**புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 60 லட்சம் குழந்தைகளுக்குதிட்டம் தீட்டினார்*.இன்றைக்கு எடப்பாடி திரு.பழனிசாமி*தலைமையிலான அரசு சுமார்*70 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும்*திட்டமாக*விரிவாக்கம் அடைந்துள்ளது .ஆரம்பத்தில் யாரோ ஒரு தனி மனிதனின்*திட்டமாக உருவாகியதை ,பிற்காலத்தில்** புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதனின்*இந்த திட்டமானது இன்றைக்கு 70 லட்சம் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் சூழ்நிலை*உருவானதை பாராட்டி யுனிசெப் என்கிற அமெரிக்க*நிறுவனம் 1982ல் சத்துணவு அருந்திய குழந்தைகள் ஒரு சில*ஆண்டுகளில் இம்மியூனிட்டி பவர்*அதிகமாகி, நல்ல வலுவுள்ள , எதிர்ப்பு சக்தி*நிறைந்த*குழந்தைகளாக மாறி உள்ளதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் ஒன்றை அளித்திருப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி*ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள் .* அந்த நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அமுல்படுத்திய சத்துணவு திட்டத்தை பாராட்டியதோடு, அதை தொடர்ந்து செயல்படுத்த பொறுப்புடன்* செல்வி. ஜெயலலிதா அவர்கள் பணியாற்றினார்*என்பது குறிப்பிடத்தக்கது .* இந்த சிறிய வயது குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல போதனைகளையும் கற்று*தர வேண்டியது மிகவும் அவசியம் . இந்த கால கட்டத்தில் நல்ல போதனைகள், ஒழுக்கங்களை குழந்தைகள் ஏற்று கொள்ள கூடிய*நிலை இல்லாமல் இருக்கலாம்**அந்த நேரத்தில் அவற்றை*வலுக்கட்டாயமாக திணிக்காமல், அன்பான முறையில் எடுத்து சொல்வோமேயானால்* அந்த குழந்தைகள் இன்னும் மிக பெரிய இடங்களுக்கு,*உயர் பதவிகளுக்கு தகுதி உள்ளவர்களாக வருவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* *நமக்கெல்லாம் எடுத்து சொல்லி இருக்கின்றார் .* அவர் நடத்திய பள்ளிக்கூடம்எதிர்க்கட்சியில் பேரறிஞர் அண்ணாவின் தி.மு.க வில் இருந்தபோது அன்னை ஜானகி அம்மையார் பெயரில் ஒரு பெரிய கூரை வீட்டை உருவாக்கி, அதில் குழந்தைகளை படிக்க வைத்து .அந்த பள்ளியை பராமரித்து வந்த நேரம், ஒரு கட்டத்தில் மழை அதிகமாகி ,சாலைகளில் வெள்ளம் தேங்கி, வாகனங்கள் செல்ல*முடியாத நிலையில்*ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்து வெளியே வரும்போது ஒரு குடையில் தன்னை*மறைத்தபடி நடந்து வந்தார்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அப்போது அவரை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.அந்த கூரைப்பள்ளியில் குழந்தைகள் நனைந்து விடுவார்கள் என்று கருதி,தாயுள்ளத்தோடு, ஒரு தந்தையின் பராமரிப்பு உள்ளதோடு , அங்கிருந்து நடந்து வந்துவடபழனியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கவைக்க நினைத்தால் அங்கு ஒரே வெள்ளக்காடாக இருக்கிறது . பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை வெளியே அழைத்து**உரிய* இடத்திலே தங்கவைத்து, விட்டு, தன சொந்த செலவில் ஒட்டு வீடு போன்ற ஒரு பள்ளிக்கூடம் அமைத்து*மழையால்*ஒழுகா வண்ணம் அமைத்து கொடுத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இது நடந்த ஆண்டு 1959;ல். இந்த சேவைகளை எல்லாம் எதிர்காலத்தில் நாம் அரசியலுக்கு வருவோம்,ஆட்சி பீடத்தில்*பதவியில்**அமருவோம்*என்பதற்காக அல்ல. இயற்கையாகவே அவரது உள்ளத்தில் ஊறியிருந்த சேவை*மனப்பான்மையானது குழந்தைகளின் மீது அவர் காட்டிய அளவு கடந்த பாசம் ,அன்பு ஆகியன என்பது வரலாற்று பதிவுகளில் பொறிக்கப்படவேண்டிய*முக்கிய செய்தி .* அந்த பள்ளியிலே*குழந்தைகளை பராமரிக்கின்ற நேரத்தை பார்த்தால்*ஒரு குழந்தை கண்ணுக்கு தெரிகிறது. அந்த குழந்தையை அழைத்து*நீ தர்மபுரியில் இருந்து வந்தவள்தானே.நீ எங்கே இப்படி என்று கேட்டிருக்கிறார் .ஆமாம் ஐயா, உங்களை எங்கள் ஊரில்*பார்த்திருக்கிறேன். இப்போது உங்கள் உதவியில்தான்* உங்கள் பள்ளியில்**படித்து வருகிறேன் என்று சொன்னாள்*.அதை கேட்டு சிரித்து கொண்ட தலைவர், நான் தருமபுரி வந்தபோது உன்னுடைய பெற்றோரிடம் கேட்டேன். இந்த குழந்தையை நான் நன்றாக வளர்த்து படிக்க வைக்கிறேன் என்றபோது*உன்னுடைய தந்தை சம்மதிக்கவில்லை* எனக்கு இருப்பது ஒரே ஒரு குழந்தை என்றார் .சரி,நீங்களே வளர்த்து கொள்ளுங்கள் என்றேன்.* ஆனால் இப்போது பார்த்தால்*எனக்கே வியப்பாக இருக்கிறது .நீ இங்கே படிப்பது* எனக்கு*மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .நன்கு புகழடைந்த தலைவர் ,மிக பிரபலமான தலைவர் ஒரு ஊருக்கு*2* ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த**குழந்தையை இனம் கண்டு* ,நன்கு நினைவில் கொண்டு*,ஞாபகத்தை வரவைத்து* அந்த குழநதையை*நலம் விசாரித்து ,,தன்* பள்ளியில்*படித்து வருவதை அறிந்து*மகிழ்வுற்றார் அல்லவா இதில் இருந்து அவருடைய ஞாபக சக்தியின் வலிமையை* நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் எல்லா குழந்தைகளின் மீதும் அபரிமிதமான*பாசம், அன்பு காட்டிய*அந்த பாசமிக்க தலைவர் குழந்தைகளையே தத்து எடுத்து வளர்க்க ஆசைப்பட்டவர் .அதுபோலவே அ.தி.மு.க. அரசு குழந்தைகளை தத்து எடுத்து கொள்ள முனைந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சத்துணவு, ஜாதி மதம் பேதமின்றி,, உயர்வு தாழ்வு மனப்பான்மை தவிர்த்து* அனைவருக்கும் சீருடை, காலணி, பற்பொடி, அனைத்தும் இலவசமாக*தருகின்ற அரசாக*அ.தி.மு.க. அரசு அமைந்தது*என்பது குறிப்பிடத்தக்கது .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.யாரது*யாரது தங்கமா*- என் கடமை*

2.நாலு பேருக்கு*நன்றி - சங்கே முழங்கு*

3.நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்*-நான் ஆணையிட்டால்*

.4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

fidowag
25th November 2020, 06:18 PM
மக்கள் திலகம் எம்.ஜி..ஆர்* அகிலம் போற்றும்*ஆயிரத்தில் ஒருவன்* தொடர்ந்து மறு வெளியீட்டில்*சாதனை*..........................
------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆலங்குளம் ( நெல்லை மாவட்டம்) டி.பி.வி. மல்டிபிளக்ஸ்* ஸ்க்ரீன் 1ல்*23/11/20முதல் தினசரி 3 காட்சிகள்*

சங்கரன் கோயில் (நெல்லை மாவட்டம் ) கீதாலயாவில் 24/11/20 முதல்*(3 நாட்கள் மட்டும் )* -தினசரி மாலை /இரவு -2 காட்சிகள்*


சாத்தான்குளம் லட்சுமியில்* 24/11/20 முதல் 3 நாட்கள் மட்டும் -*தினசரி மாலை / இரவு - 2 காட்சிகள் .

orodizli
26th November 2020, 07:30 AM
#நாடோடி_மன்னன் படம் குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்...

'மலைக்கள்ளன், 'அலிபாபாவும் 40 திருடர்களும், 'மதுரை வீரன், 'தாய்க்குப் பின் தாரம் என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் 'நாடோடி மன்னன்' படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.

''நான் சொந்தத்தில் 'நாடோடி மன்னன்' படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், 'நாடோடி மன்னன்' ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.

'நாடோடி மன்னன்' படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு 'இஃப் ஐ வேர் கிங்' என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் 'நாடோடி மன்னன்.'

படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரமாண்டத்துக்கு மட்டுமல்ல...படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.

படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் 'ஓவல்டின்' என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் 'ஓவல்டின்' குடித்ததே அப்போதுதான்.

படம் முடிந்த பிறகு ''வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர். மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது 'நாடோடி மன்னன்'.

19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது 'நாடோடி மன்னன்'.

மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார். இந்தக் கூட்டத்தில்தான், ''மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்'' என்று அண்ணா பேசினார்....ns...

orodizli
26th November 2020, 07:31 AM
நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்

எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.

எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது.

கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.

எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில், மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்.

அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!

ஆஸ்தான வில்லன்

‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.

நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.

அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை

‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.

நகைச்சுவை மன்னர்!

நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி,வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்கள்.

அந்த அளவுக்கு அவர் நகைச்சுவை மன்னர்! எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..

படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.

‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது.எம்.ஜி.ஆர். என்ன லேசா?.. ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.

எப்படிப்பட்ட துரோகம்!

எம்.ஜி.ஆர். முதல்வரானபின், திரையுலகை விட்டு விலகி, முதல் அமைச்சர் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து நம்பியாரின் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியானது. ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று பேட்டியில் கூறியிருந்தார் நம்பியார்! அந்த வார இதழின் போஸ்டரிலும் இந்த தலைப்பு.

எங்கும் ஒரே பரபரப்பு. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது குறை கூறியிருக்கிறாரா என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கடைசியில், அந்தப் பேட்டியில் நகைச்சுவை ததும்ப நம்பியார் கூறியது இதுதான்:

‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தான் மட்டும் இளைஞராகவே நடித்து, திரையுலகில் என்னை வயதானவனாகத் தவிக்க விட்டு எம்.ஜி.ஆர். அரசியலுக்குப் போய்விட்டார். எம்.ஜி.ஆர்.எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!’’

1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நேரம். சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் பலருக்கு குருசாமியாக நம்பியார் இருந்தார். மாலை அணிந்துவிட்டால் விரதத்தை முறிக்க மாட்டார்.

அதனால், மறைந்த தனது நண்பரை இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை. தகவல் அறிந்து நம்பியார் மூர்ச்சையானார். மயக்கம் தெளிந்து எழுந்து, ‘‘ஏற்கெனவே அரசியலுக்குப் போனதன் மூலம் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர். என்னை விட்டுப் பிரிந்தார். இப்போது வாழ்க்கையிலும் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாரே..’’ என்று நண்பரின் பிரிவைத் தாங்காமல் கலங்கிய நம்பியாருக்கு ஆறுதல் கூறமுடியாமல் சுற்றி இருந்தவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

சபரிமலை சென்று வந்த பிறகு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று நம்பியார் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாய் நம்பியாரின் கன்னங்களில் உருண்டது கண்ணீர்....ns......

orodizli
26th November 2020, 07:31 AM
#மீண்டும்_கிளம்பும்_நாித்தனம்

புரட்சித் தலைவர் காலத்தில் ,
நிவாரண பணிகளில் இடையூறு செய்தனா் , திமுகவினர் .....

ஆம் , அது 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் .....

இன்று போல இதே தஞ்சாவூர் , புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில் பெரும் வெள்ளம் , பெரும் சேதம் .....

மழையால் மக்கள் மிகவும்
பாதிக்கப்பட்டு இருந்தனர் . டிசம்பர் 22 அன்று வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட அன்றைய தமிழக முதல்வர் நமது மக்கள்திலகம் வந்தார்கள் .

திருச்சியில் இருந்து
காலை 9 மணிக்குபம புறப்பட்டு
தஞ்சைப் பகுதி கந்தர்வக்கோட்டைக்கு வந்தார் . பாலத்தின் இருபுறமும் நின்று சேதங்களைப் பார்வையிட்டார் .

அருகில் கூடி இருந்த பொதுமக்களிடம் "உணவு உதவிகள் கிடைத்ததா ?" என்று கேட்டார் .

எல்லோரும் "ஆம்" என்று சொல்ல .....

ஒரு பெரியவர் மட்டும் "எங்கள் கிராமத்துக்கு யாரும் வரவில்லை . எந்த உதவியும் சாப்பாடும் கிடைக்கவில்லை" என்றார் .

கோபமாகத் திரும்பி "அவர் சொல்லும் ஊரை குறித்துக் கொள்ளுங்கள்" என்று அரசு துணைச் செயலாளர் மூர்த்தியிடம் சொன்னார் .

உடனே அருகில் இருந்த அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன் , "அய்யா அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களாக உணவு தயார் செய்யபட்டு மூன்று வேளையும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது" என்றார் .

உடனே எம்ஜிஆர் அவா்கள் அந்த பெரியவரைப் பார்த்து "உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் உள்ளதா ? அங்கு உணவு வழங்கப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்க ......

தயங்கிய பெரியவர் ,
"நான் ஊருக்குப் போய் 3 நாள் ஆச்சு" என்று சொன்னார் .

உடனே புரட்சித் தலைவா் ,
"அய்யா , நீங்கள் விவரம் தெரியாமல் அரசைக் குறை கூறுகிறீர்கள் . இது மிகவும் தவறு . எல்லோரும் பாதிக்கப்பட்ட நேரத்தில் உண்மை நிலவரங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்" என்று சற்று கோபமாகக் கூறினார் .

பிறகு அங்கு இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளான காட்டுமன்னார் கோவில் , கோட்டைப்பட்டினம் பகுதிக்குச் செல்லும் போது கூட்டமாக நின்ற மக்கள் தலைவர் காரை மறித்தனர் .

கோபம் கொள்ளாமல் இறங்கிய எம்ஜிஆர் , "என்ன சொல்லுங்கள்" என்று கேட்டார் .

"நாங்கள் பலமுறை விண்ணப்பித்தும் தாசில்தார் , ஆட்சியர் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை" என்று சொன்னார்கள் .

உடனே முதல்வர் அவர்களைப் பார்த்து "கடைசியாக ஆட்சியரை எப்ப பார்த்தீர்கள்" என்று கேட்டாா் .

அவர்களும் "ஒரு 15 நாட்களுக்கு முன் இருக்கும்" என்றார்கள் .

"ஓ அப்படியா ? சரி நல்லது . இங்கு என்னுடன் வந்தவர்களில் ஆட்சியரும் வந்து உள்ளார் . அவரை அடையாளம் காட்டுங்கள்" எனக் கேட்க .....

அவர்களுக்கு அருகில் உயரமாக
இருந்த ஒருவரைக் காட்டி "இவர்தான் ஐயா" என்றனர் .

ஆனால் அவர் அரசுப் பொதுப்பணித் துறைச் செயலாளர் .

முதல்வருக்கு வந்ததே கோபம் ...*..

"எங்கே எஸ்.பி." என்று கேட்க ......

பதறிப் போய் எஸ்.பி ஓடி வந்தார் .

உடனே முதல்வா் எம்ஜிஆர்
"இவர்கள் எல்லோரையும் காவலில் எடுத்து விசாரியுங்கள் . இவர்கள் உண்மை சொல்லவில்லை . என் பணி நேரத்தை வீண் செய்கிறார்கள்" என்றார் .

உடனே கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் ,
"அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் .
எங்கள் பகுதியைச் சேர்ந்த திமுக
தலைவர்கள் , 'இன்று எம்ஜிஆர்
வருகிறார் . அவரை மறித்து நாங்கள்
சொல்வதுபோல செய்யுங்கள் அப்பதான்
உங்களுக்கு பட்டா கிடைக்கும்' என்று
எங்களைத் தூண்டி விட்டார்கள்" என்று
சொல்ல .....

"இதை நான் முன்பே கணித்து விட்டேன் .
உங்கள் வாயில் இருந்து வரட்டும் என்று
தான் போலீசை அழைத்தேன் . எப்பவும்
மக்கள் கஷ்டபடும்போதுகூட இருந்து
உதவ வேண்டும் .

'அவன் சொன்னான் , இவன்
சொன்னான்' என்று அரசு வேலைகளை
முடக்கக் கூடாது . குறை இருந்தால்
சொல்ல வேண்டும் . உங்களுக்கு
இன்னும் 10 தினங்களில் பட்டா கிடைத்து
விடும்." என்றார் .

யாரையும் எந்தச் சூழலிலும் தலைவர்
எப்படி கணித்து செயல்பட்டார்
பாருங்கள் .

நயவஞ்சக நரித்தனத்தில் , தில்லுமுல்லு
வேலைகளில் திமுகவினரை மிஞ்ச
ஆளில்லை .*

கழக ஆட்சிகளில் எல்லாம்
திமுகவினாின் கேவல அரசியல்
இப்படித்தான் இருக்கும் .

இப்போதுகூட அப்படியே அந்தக் கூட்டம்
தொடரலாம் ..............

orodizli
26th November 2020, 07:32 AM
நம் வள்ளலுக்கு இருந்த பல நல்ல குணங்களில் அவரின் நன்றி மறவாத குணம் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்று ஆகும்.

ஒரு முறை 1972 இல் தனிக்கட்சி கண்ட தலைவர் திருப்பூர் நகருக்கு செல்ல அங்கே திருப்பூர் மணிமாறன் ராயல் நடராஜன் ஜெகந்நாதன் போன்ற கழக தோழர்கள் மற்றும் அலை கடல் என ரசிகர்கள் குவிந்து இருந்தனர் ரயில் நிலையத்தில்.

ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்த தலைவர் எங்கு தங்க போகிறார் என்று அனைவரும் காத்து இருக்க.....

தலைவர் கூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்து உங்கள் கார் எங்கே என்று கேட்டு 6360 என்ற எண் கொண்ட அந்த காரில் ஏறி அந்த கார் உரிமையாளர் எங்கே இப்போ போகவேண்டும் என்று கேட்க....

தலைவர் முத்துக்களை கொட்டியது போல சிரித்து எங்கே உங்கள் இல்லத்துக்கு தான் என்று சொல்ல வியந்து போகிறார் அவர்.

மன்னனை சுமந்து அந்த கார் அவர் வீடு நோக்கி செல்ல அதற்குள் தகவல் பறந்து வாசலில் ரவிக்குமார் சிவகுமார் ஆகிய இருவரும் அந்த வீட்டை சார்ந்தவர்கள் காத்து நிற்க.

மன்னன் அந்த வீட்டுக்குள் இருகரம் குவித்த படி உள்ளே செல்கிறார்...

வள்ளல் காலை கடன்களை முடித்து குளித்து காலை உணவு அருந்தி கொண்டு இருக்கும் போது அன்று தலைவர் உடுத்த வேண்டிய உடைகள் சற்றே கலைந்து இருக்க அந்த சகோதரர்கள் இருவரும் அவற்றை தங்கள் வீட்டில் தேய்த்து கொடுக்க அதுவரை பொறுமை காத்து இருந்து கூப்பிய கரங்கள் உடன் நன்றி சொல்லி நிகழ்வுகள் நோக்கி மன்னவர் கிளம்பி செல்கிறார்.

ஆமாம் யார் அவர்கள் என்று கேட்டால் அவர்கள் தான் திருப்பூர் உஷா திரை அரங்க உரிமையாளர்கள்.....

வள்ளலின் படங்களை நிரப்ப படாத காசோலைகள் கொடுத்து விநியோகம் செய்யும் நபர்கள் இடம் வாங்கி தங்கள் திரை அரங்கத்தில் வெளி இடும் அரங்க முதலாளிகள்.

1973 இல் வள்ளலின் வரலாற்று படம் உ.சு.வா வை தடைகள் மிரட்டல்கள் மீறி அந்த உஷா அரங்கில் வெளியிட்டு தினம் 6 காட்சி 7 காட்சிகள் வரை நடத்தி அந்த படம் அந்த அரங்கில் வெள்ளி விழா காண.

அந்த விழாவுக்கும் வந்து கலந்து கொள்கிறார்...அன்று அந்த விழா நடந்த போது எழுந்த எழுச்சியை போல இன்று வரை திருப்பூர் நகரம் அப்படி ஒரு உணர்ச்சிமிக்க கூட்டத்தை கண்ட வரலாறு இல்லை.

நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் என்று பாடி விட்டு மட்டும் போகவில்லை தலைவர்.

அதன் படி அவரே முதலில் வாழ்ந்து காட்டினார் என்பதில் ஒரு ஐயம் இல்லை என்ன ...சரிதானே தலைவர் நெஞ்சங்களே.

அடாத நிபர் புயலிலும் விடாமல் தலைவர் புகழ் பாடும் இந்த நபர்.

என்றும் உங்களில் ஒருவன்...நன்றி.

வாழ்க தலைவர் புகழ்.

தொடரும்...

அன்று அந்த நேரத்தில் இருந்த திருப்பூர் தலைவர் நெஞ்சங்கள் யாரும் இந்த பதிவை பார்த்து பதில் சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

இந்த உலக எம்ஜிஆர் ரசிகர்கள் குழுவினர்..............

orodizli
27th November 2020, 07:58 AM
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மக்கள் திலகம் 16 படங்களில் இரட்டை வேடங்களை ஏற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து முதலில் வெளியான படம்" நாடோடி மன்னன்". 1958ல் வெளியான இந்தப்படத்தில் மன்னர் மார்த்தாண்டன் மற்றும் புரட்சியாளர் வீராங்கன் ஆகிய இரண்டு வேடங்களில் புரட்சித் தலைவர் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கத்தாலும், மக்களின் ரசனையை முழுவதுமாக அறிந்ததாலும் பின்னர் 15 படங்களில் தொடர்ந்து இரட்டை வேடங்களை ஏற்றார்.

image



1960ஆம் ஆண்டில் ராஜா தேசிங்கு படத்தில் ராஜா தேசிங்கு மற்றும் தாவூத் கான் ஆகிய இரண்டு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார். விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் திரைப்படமான கலை அரசி திரைப்படம் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1963ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் பூமியில் வாழும் மோகனாகவும், வேற்று கிரகத்தில் வாழும் கோமாளியாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாத்திரம் ஏற்றார். 1964ஆம் ஆண்டில் வெளியான ஆசைமுகம் திரைப்படத்தில் மனோகர், வஜ்ரவேலு ஆகிய கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.



எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வந்த எங்கள்வீட்டுப் பிள்ளை திரைப்படம் இரட்டை வேடப் படங்களின் இலக்கணமாகவே அமைந்தது. அதில் ராமு என்கிற ராமன், இளங்கோ என்கிற லட்சுமணன் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்.



1968ஆம் ஆண்டில் குடியிருந்த கோவில் படத்தில் ஆனந்த் மற்றும் பாபு என்கிற சேகர் ஆகிய இரண்டுவேடங்களில் புரட்சித்தலைவர் நடித்தார். 1969ஆம் ஆண்டில் வந்த அடிமைப் பெண் திரைப்படத்தில் வேங்கை மலை அரசனாகவும் இளவரசன் வேங்கையனாகவும் எம்.ஜி.ஆர். தோன்றினார்.

image



1970ஆம் ஆண்டில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன், ரகுநாத் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். 1971ஆம் ஆண்டில் வெளியான நீரும் நெருப்பும் படத்தில் இளவரசன் மணிவண்ணன், இளவரசன் கரிகாலன் ஆகிய இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்தார். எம்.ஜி.ஆரின் பெயருக்கு முன்னர் ‘பொன்மனச் செம்மல்’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்ட முதல் படம் நீரும் நெருப்பும் ஆகும். இந்தப் படத்தின் ஒரு கத்திச் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.ஆரே கத்தியைக் கொடுத்து உதவும் போது, அன்றைக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்த காட்சி திரையரங்குகள் காணாததாக இருந்தது.



1973ஆம் ஆண்டில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முருகன், ராஜு ஆகிய இரண்டு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் புரட்சித் தலைவர் தோன்றினார். அதே 1973ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு படமான பட்டிக்காட்டு பொன்னையா-வில் பொன்னையா மற்றும் முத்தையா ஆகிய இரு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார்.



1974ஆம் ஆண்டில் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும் குமார் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். அதே 1974ஆம் ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் படத்தில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் ஆகிய வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.

image



பின்னர் 1975ஆம் ஆண்டில் வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் படத்தில், பாடகர் சௌந்தரம், வியாபாரி ரஞ்சித் குமார் ஆகிய பாத்திரங்களை மக்கள் திலகம் ஏற்றார். 1975ஆம் ஆண்டில் வெளியான நாளை நமதே திரைப்படத்தில் சங்கர், விஜயகுமார் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தோன்றினார். இதில் இளவயதில் தொலைந்துபோன சகோதரர்கள், ஒருவரை ஒருவர் அடையாளம் காணப்பாடும் ‘அன்பு மலர்களே’ பாடல், இன்றும் தமிழக திரையுலகின் பெரிதும் விரும்பப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.



1976ஆம் ஆண்டில் வெளியான ஊருக்கு உழைப்பவன் படத்தில் போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா ஆகிய பாத்திரங்களை பொன்மனச் செம்மல் ஏற்றார். இதுவே எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.



அரசியலில் ஒருபோதும் இரட்டை வேடம் போடாத பொன்மனச் செம்மல் அவர்கள், திரைத்துறையில் அதிக இரட்டை வேடங்களை ஏற்றது ஒரு இனிய வரலாற்று முரண்..........MJ.........

orodizli
27th November 2020, 08:03 AM
**********mgr மதகு************

1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக
நெய்யல் ஆற்றில்
வெள்ளம் கரைபுரன்டு ஒடியது.

கோவையை சுற்றி உள்ள 32 குளங்களும் நீர் நிரம்பி வழிந்தது.
அதில் செல்வ சிந்தாமணி குளம் மற்று சிங்காநல்லூர் குளங்கள் கரை உடைந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து.

கோவையின் ஒரு பகுதி வெள்ளக்காடாய் மாறியது. செட்டிவீதி,செல்வபுரம்
சுண்டக்காமுத்தூர்
ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி
ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.

இதனால்
ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி
ஆகிய கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

அன்றைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார்.
வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி,
நிவாரண உதவிகளை
வழங்க உத்தரவிட்டார்.

எம்ஜிஆருடன் அன்றைய
அமைச்சர்கள்
செ அரங்கநாயகம்,
பா குழந்தைவேலு அவர்களும்
வெள்ள நீரில் நடந்துசென்றார்கள்.

மழை வெள்ளச் சேற்றில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற எம்.ஜி.ஆருக்கு முள்குத்தி ரத்தம் வந்தது.

மக்களின்துயரத்தையும்
வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆருக்கு அது பெரிய வலியாக தெரியவில்லை.

குளத்தின் கரை உடைந்து பிரதான தார் சாலையை மூழ்கடித்து, இருந்தது வெள்ளம்.

அதிகாரிகளுடன் உடனடி
ஆலோசனையில் இறங்கிய
எம்ஜிஆர்
ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு திருப்பி
விட ஆலோசிக்கப்பட்டது.

போர்கால அடிப்படையில் பனிகள் நடந்தது.
பாலம் கட்டி
புதிய மதகும்,
தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.

இப்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.

மக்கள் பிரச்சினை என்றால் அங்கே நேரடியாக சென்ற
ஒரே முதல்வர் mgr மட்டுமே !

*எம்ஜிஆர்நேசன்*.........

orodizli
27th November 2020, 08:04 AM
என்றும் என்றென்றும் கலையுலகின் தனிப்பிறவி மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்...

கத்திப் பேசுவது தான் நடிப்பு! கத்தியுடன் நடிப்பது நடிப்பா? எனக் கேட்டு பின்னர் கேட்டதையும் சொன்னதையும் மறந்து இன்று கத்தியுடன் தோன்றும் கலைஞர்களையும் தன் உயர்வுக்காக உழைத்த உத்தம நண்பர்களை மறந்து, தனது பெருமைக்கும் புகழுக்கும் பாடுபட்டவர்களை மறந்து , செய்நன்றி கொன்ற கலைஞர்களையும், குறிப்பிட்ட படங்களிலே தான் நடித்த காரணத்தால் தான் மற்ற கலைஞர்களுக்கு பேரும் புகழும் வந்தது என இறுமாப்புடன் கூறும் கலைஞர்களையும், தற்பெருமையுடன் வாழும் கலைஞர்களையும் தாங்கியுள்ள இக்கலையுலகில் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒர் பிறவி இருந்தார் என்றால் அவர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான். அவர் ஒரு தனிப்பிறவி மக்கள் திலகமும் மக்கள் திலகத்தின் அன்பும் , கொடைத் தன்மையும் , புகழும் சாகாவரம் பெற்றவை.

தமிழ் கலை உலகில் நல்லொழுக்கமும் இனிய குணமும் பண்பட்ட இதயம் கொண்ட மக்கள் திலகம், புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தரணி புகழும் தனிப்பிறவி தான்.

மாபெரும் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க............am ...

orodizli
27th November 2020, 08:10 AM
இன்று முதல் (27-11-2020) கோடிகளில் ஒருவர் வழங்கும்..."ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல் காவியம்...
1.நெல்லை- ரத்னா
2.தூத்துக்குடி - கிளியோபாட்ரா
3. சங்கரன்கோவில் -கீத்யாலயா,
4.. சாத்தான்குளம் - லட்சுமி,
5ஆலங்குளம் - டிகேவி
6, காட்டுப்புத்தூர்- செந்தில்
குதூகல ஆரம்பம்.........

orodizli
27th November 2020, 02:38 PM
கைபிள்ளைகள் கோபத்தில் விட்ட சாபம்.

மற்ற தரமான MGR ரசிகர் குரூப்பை நாம் ,மதிப்போம் நட்பு பாராட்டுவோம் , முன்ஜென்ம பாவியான ,(பல பேரில் உலாவரும் )டொங்கர் ,தொடர்ந்து, "தெய்வப்பிறவி "யான நடிகர்திலகத்தை ,அவதூறக பேசுவதை கொள்கையாக வைத்துள்ளான் ,மறுஜென்மத்தில் இழி பிறவியாக பிறப்பான் என்பது திண்ணம் !nakiran நக்.குப்தன்.)

"சொர்க்கத்து"க்கு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும்.
போர்டை பார்த்து அவசரமாக "சொர்க்கத்து"க்கு 2 டிக்கெட் கேட்டால் அது நிஜ சொர்க்கமாம். அந்த சொர்க்கத்துக்கு மண்டையை போட்டால் அல்லவா போக முடியும்.
ஆமாம் இங்கே "சொர்க்கம்" தியேட்டரில் டிக்கெட் கிழித்தவனெல்லாம் தேவர்களால் நடத்தப்படுகிற "சொர்க்கத்து"க்கும் டிக்கெட் கிழிக்க கிளம்பி விட்டனர்.
செத்தால் கூட கைபிள்ளைகள் டிக்கெட் கிழிக்கும் பழக்கத்தை கைவிட மாட்டார்கள் போல தெரிகிறது.

அதுவும் அய்யனை துதிப்பவர்களுக்கு "சொர்க்க"மும் அய்யனை பற்றி உண்மையான தகவல் கொடுத்தால் "நரகத்து"க்கும் அனுப்புவார்களாம். அதற்கு முன்னால் "எமனுக்கு எமன்" அய்யன் முன் விசாரணை நடக்குமாம்.
இதோ எமதர்ம ராஜன் முன்னிலையில் வக்கிரன் நக்கீர குப்தன் கணக்கை வாசிக்கும் காட்சி.

நரன்:1. அய்யா சொர்க்கத்தின் வாசலை எனக்காக திறவுங்கள் அய்யா?
நக்.குப்தன்: ம்! நீ பூலோகத்தில் என்ன நன்மை செய்தாய்,அதை முதலில். சொல்!
நரன்:1 அய்யா, நான் பலருக்கும் பயனடைய உணவுச்சாலைகளே கட்டி அவர்களுக்கு இலவச உணவளித்தேன்.

நக்.குப்தன்: அதை யாரையா கேட்டது. நீஅய்யனுக்கு என்ன சேவை செய்தாய்? அய்யன் நடித்த படங்களை பார்த்தாயா? அய்யனின் மிகை நடிப்பை ரசித்தாயா? இல்லை அதை புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்தாயா? இல்லை அய்யனின் படத்தை பார்க்க அழைத்து வரப்படும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் வைத்து தானம் செய்தாயா? குறைந்த பட்சம் அய்யனின் படங்களுக்கு ஒரு 100 டிக்கெட்டாவது கிழித்தாயா? அய்யன் சிவனாக நடித்த திருவிளையாடல்
படத்தை பார்த்த பிறகும் போலி சிவனடியாரை போற்ற வில்லையா?

நரன்:1. இல்லை ஐயா.

நக்.குப்தன்: ஆ! மகா பாவி! நீ பூலோகத்தில் அய்யனை நிந்தனை செய்த பெரும் பாவத்தை பெற்றாய்.
இனி நரகலோகம்தான் உன் வாசம்.
உன்னை அய்யன் நரகத்தில் கவனித்து கொள்வார்.

நரன்:1. ஐயோ அய்யனே நான் ஒரு பாவமும் அறியேன்.

நக் குப்தன் :அடுத்தது யாரப்பா?

பரசு மினி குப்தன்: யாரோ சங்கரோ! டொங்கரோ! பேரிலேயே குழப்பம் அதிகம் நக் குப்தா?

நக் குப்தன். வரச்சொல் அவனை!

சங்கர்: ஐயா: நான் எங்கு இருக்கிறேன்?

நக்.குப்தன்: நீ தேவலோகத்தில் எமனுக்கு எமன் விசாரணை வளயத்தில். உன் பெயர்?

சங்கர்: சங்கர் என்று அழைப்பார்கள்
டொங்கர் என்றும் இன்னும் அமுல் டப்பா மூஞ்சி என்றும் பல பெயர்களில் என்னை அழைப்பதுண்டு அய்யனின் கைபிள்ளைகள்.

நக்.குப்தன். ம்! என்ன திமிர்? உனக்கு இத்தனை பெயரா?

சங்கர்: நானாக வைத்துக் கொள்ளவில்லை.

நக்.குப்தன். இவன் கணக்கு?

கணக்கு வாசிக்கப்படுகிறது.
கணக்கை கேட்ட நக்.குப்தன் அதிர்ச்சியில் மகா பாவி, மகா பாவி.
நீ அய்யனுக்கு பயங்கர துரோகம் செய்திருக்கிறாய்! ஒவ்வொன்றாக வாசிக்கிறேன் கேள்!

நீ அய்யனின் மிகை நடிப்பை விமர்சித்து கைபிள்ளைகளின் பகையை சம்பாதித்திருக்கிறாய்?
அய்யன் பாக்கெட்டிலேயே காசு வைத்துக்கொள்ள மாட்டார் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அய்யனை தருமி ரேஞ்சுக்கு கொண்டு போய் கருமி என்று விமர்சித்தாய்.

அய்யன் செய்யாத தான தர்மத்தை நாங்கள் வானளாவ புகழ நீ உண்மையை போட்டு உடைத்தாய்.

அது மட்டுமல்ல, நாங்களே இங்கு கணக்கை சரியாக பார்ப்பதில்லை.
ஆனால் பூலோகத்தில் நாங்கள் டிக்கெட் கிழித்த கணக்கு நாங்களே பார்த்ததில்லை நீ துல்லியமாக கணக்கு பார்த்து சொல்லியிருக்கிறாய்!

அந்த சிவனே எங்கள் அய்யனின் நடிப்பை பார்த்துவிட்டு பதவி வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டு ஓடி விட்டார் என்று தெரியுமா? உனக்கு? நாங்கள் எல்லாம் அய்யனின் போலி சிவனடியார்கள்.

இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா? இங்கேயிருக்கும் காலத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியின்மேல் நின்று நரகத்தின் வாசலில் டிக்கெட் கிழிக்க வேண்டும். இது உன்னைப்போல் அய்யனின் புகழ் பாடாதவர்களுக்கு கொடுக்கும் சிறப்பு தண்டனையாகும்.
அய்யன் அதை நேரடியாக பார்வை செய்வார்.

சங்கர்: அப்போ உங்க அய்யனும் அங்கேதான் இருப்பாரா???.........KSR.........

orodizli
28th November 2020, 07:07 AM
**********mgr மதகு************

1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக
நெய்யல் ஆற்றில்
வெள்ளம் கரைபுரன்டு ஒடியது.

கோவையை சுற்றி உள்ள 32 குளங்களும் நீர் நிரம்பி வழிந்தது.
அதில் செல்வ சிந்தாமணி குளம் மற்று சிங்காநல்லூர் குளங்கள் கரை உடைந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து.

கோவையின் ஒரு பகுதி வெள்ளக்காடாய் மாறியது. செட்டிவீதி,செல்வபுரம்
சுண்டக்காமுத்தூர்
ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி
ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.

இதனால்
ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி
ஆகிய கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.

அன்றைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார்.
வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி,
நிவாரண உதவிகளை
வழங்க உத்தரவிட்டார்.

எம்ஜிஆருடன் அன்றைய
அமைச்சர்கள்
செ அரங்கநாயகம்,
பா குழந்தைவேலு அவர்களும்
வெள்ள நீரில் நடந்துசென்றார்கள்.

மழை வெள்ளச் சேற்றில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற எம்.ஜி.ஆருக்கு முள்குத்தி ரத்தம் வந்தது.

மக்களின்துயரத்தையும்
வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆருக்கு அது பெரிய வலியாக தெரியவில்லை.

குளத்தின் கரை உடைந்து பிரதான தார் சாலையை மூழ்கடித்து, இருந்தது வெள்ளம்.

அதிகாரிகளுடன் உடனடி
ஆலோசனையில் இறங்கிய
எம்ஜிஆர்
ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு திருப்பி
விட ஆலோசிக்கப்பட்டது.

போர்கால அடிப்படையில் பனிகள் நடந்தது.
பாலம் கட்டி
புதிய மதகும்,
தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.

இப்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.

மக்கள் பிரச்சினை என்றால் அங்கே நேரடியாக சென்ற
ஒரே முதல்வர் mgr மட்டுமே !

*எம்ஜிஆர்நேசன்*.........

orodizli
28th November 2020, 02:29 PM
' ஹலோ தியேட்டர் மேனேஜர் பேசுறேன்...இப்ப ஓடிகிட்டிருக்கிற படத்தைப் போட்டு ரொம்ப பேஜாராப் போச்சு...கட்டுப்படி ஆகலீங்க...உடனே எம்ஜிஆர் படம் போட்டே ஆகனும்...இன்னிக்கே எம்ஜிஆர் படம் அனுப்புங்க....' இப்படித்தான் இன்று பெரும்பாலான தியேட்டர்கள் நிலவரம். ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், நினைத்ததை முடிப்பவன், தர்மம் தலை காக்கும், எங்க வீட்டுப் பிள்ளை, ரகசிய போலீஸ் 115, நம்நாடு என டிஜிட்டலில் கடந்த சில ஆண்டுகளாக சக்கை போடு போட்டு வரும் காவியங்கள் கடந்த 10.11.2020 முதல் நவீன திரையரங்குகளில் அதிரடியாக திரையிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன. காவல்காரன் தேடி வந்த மாப்பிள்ளை, பல்லாண்டு வாழ்க, சிரித்துவாழ வேண்டும், உரிமைக்குரல், நாளை நமதே என பழைய புரஜக்டர் மூலம் திரையிடும் படச்சுருள் உள்ள எம்ஜிஆர் காவியங்கள் இன்னொரு பக்கம் பட்டைய கிளப்பி வருகின்றன. இது மட்டும்தானா? என்று கேட்டால் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. படம் போட்டால் ரசிகர்கள் வருவார்களா என்ற தயக்கத்தில் இருந்த தியேட்டர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து உள்ளனர் எம்ஜிஆரும் அவர்தம் ரசிகர்களும். சமூக இடைவெளி கடைபிடித்து அமைதியாக தியேட்டருக்குள் நுழைந்து அமர்ந்தாலும் திரையில் வாத்தியாரைப் பார்த்ததும் 3 மணி நேரமும் ' தலைவா...தெய்வமே...வாத்தியாரே...' என்ற ஆரவாரத்தால் அதிர்கின்றன திரையரங்குகள். 'நவீன திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கும் எம்ஜிஆர் பக்தர்கள், கடந்த 3 வாரங்களாக திரையிடப்பட்டு வரும் எம்ஜிஆர் படங்களை வாட்சப் முகநூல் மூலமாகவும் நண்பர்கள் போன் மூலமாகவும் தகவல் அறிய முடிகிறது என்றும் எம்ஜிஆர் படங்களுக்கு நாளிதழிலோ உள்ளூரிலோ போதிய விளம்பரம் செய்யவேண்டும் என்றும் ' வலியுறுத்துகின்றனர். எம்ஜிஆர் பக்தர் சாமுவேல் கூறும்போது, ' புரட்சித்தலைவர் காவியங்கள் 1950,1960,1970 காலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டதிலிருந்து நெகடிவ் உரிமை மற்றும் பிரிண்ட உள்ள காவியங்கள் இன்றுவரை தியேட்டர்களில் அடிக்கடி திரையிடப்பட்டுத்தான் வருகின்றன. வசூலிலும் அன்றுபோலவே சாதனை படைக்கின்றன. புரட்சித்தலைவருக்கு அரசியலில் இன்று எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதைப்போல அவரது காவியங்களுக்கும் தனி மவுசு உள்ளது. எனவே அனைத்து எம்ஜிஆர் காவியங்களையும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றினால் உலகம் உள்ளவரை எம்ஜிஆர் படங்களுக்கு இப்போது உள்ள மாஸ் என்றுமே இருக்கும்' என தெரிவித்தார்..........gs.........

orodizli
28th November 2020, 02:47 PM
கொரனா காலமாகட்டும், இல்லை இந்த நிவர் புயல், மழை, பனி காலமாக இருக்கட்டும் ஆஹா, திரையுலகை என்றும் வாழ வைக்க இதோ..........நான் இருக்கிறேன்... என்று ஆபத்பாந்தவனாக, அனாதைரட்சகனாக இறைவன் வழியில் காப்பாற்றுபவர் வேறு யார் உள்ளார்கள்???!!! நமது இதயதெய்வம் புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், என்றென்றும் கலை,திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தியாம் எம்.ஜி.ஆர்., அவர்கள்... இப்பொழுதும் தம் கலை காவியங்கள்- படங்கள்- பாடங்கள் வழியே உயிர் கொடுக்கிறார்கள். இத்தகைய அருட்பெருஞ் சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்து கொண்டிருக்க உங்களை விட்டால் வேறு என்ன வழி?!...எப்பொழுதும் வளர்க, வாழ்க நின் புனித பணி...திரையரங்குகள் மற்றும் அதனை சார்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், அரங்க உரிமையாளர்கள், & பணியாளர்கள் சார்பாக புரட்சி தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை மானசிகமாக தெரிவிப்போம்------------

orodizli
28th November 2020, 02:51 PM
தமிழகமெங்கும் புதிய படங்கள் வெளியீட்டும் காலாவதியாகிறது...
நேற்று சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் லஷ்மி தியேட்டரில் புதியபடம் திரையிட்டு பார்க்க 10 பேரகள் கூட வரவில்லை...
தியேட்டர் மூடபட்டது..
உடனே "நாடோடி மன்னன்" திரைப்பட காவியத்தை திண்டுக்கல் திரு. நாகராஜன் அவர்களிடம் வாங்கி
இன்று முதல் திரையிட்டு உள்ளனர்...
மேலும்
தலைவரின் க்யூப் சிஸ்டம் படங்கள் தான் பழைய திரைப்படங்களில் அதிகம் உள்ளது...
நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன்
தர்மம் தலைக்காக்கும்
எங்க வீட்டுப்பிள்ளை
அடிமைப்பெண்
ரகசியபோலிஸ் 115
நினைத்ததை முடிப்பவன்
நம்நாடு
ரிக்க்ஷாக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
மற்றும் பல திரைப்படங்கள் க்யூப்பில் தயாரிப்பில் உள்ளது....

விரைவில்
நாடோடி மன்னன்...
அடிமைப்பெண்
மேலும் பல ஊர்களில் திரையிடப்படுகிறது...

கொராணாவுக்கு பின்
1200 திரையரங்கில்...
700 தியேட்டர் திறக்கபட்டது...
இன்று 28.11.2020 முதல்
55 தியேட்டர்கள் மூடப் பட்டது...... Ur...

fidowag
28th November 2020, 03:48 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*20/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இன்று எட்டு திக்கிலும் வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பில்*எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல திரும்புகிற திசையெல்லாம்* மறைந்தும் மறையாத**மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு தகவல்கள், நெகிழ்வான நிகழ்வுகள் வந்து கொண்டே* இருக்கின்றன .* ஒரு பேரருவியாக,அவருடைய வாழ்க்கை வரலாறு என்பது இந்த மனித ஜீவியத்தில்*,பரவி கொண்டே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .*


பாடம் கற்பிக்கின்ற ஒரு பல்கலை கழகமாக திரை அரங்குகளை நினைத்தார் .அதனால்தான் ஒரு* திரைப்படம் என்பது* பல லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது .* அதில் அமையும், ஒவ்வொரு பாடலும், வரியும் , வசனமும், காட்சியும் படிப்பினையாக இருக்க வேண்டும்**மக்களுக்கு அதன் மூலம் பல நல்ல சமூக கருத்துக்கள் பயனுள்ளதாக தரவேண்டும் என்பதை கட்டாயமாக தன்* திரையுலக வாழ்க்கையில் கடைபிடித்தார் . தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் நடித்தார்கள், சம்பளம் வாங்கினார்கள், புகழ் அடைந்தார்கள், பிரபலம் ஆனார்கள்**ஆனாலும் அவர்களால் சாதிக்க முடியாததை, தனி ஒரு மனிதனாக திரையுலகில் முடிசூடா மன்னனாக, வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்ததோடு,அரசியல் உலகில் நுழைந்து, பட்டொளி வீசி, கொடி கட்டி பறந்து, மக்களை நேசித்து, அபரிமிதமான செல்வாக்கை பெற்று , பத்தாண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து பொற்கால ஆட்சி புரிந்தார் .என்பது சாதனை, சரித்திரம், சகாப்தம் . இந்த வெற்றிகளுக்கு மூல காரணம் என்னவென்றால், திரையுலகில் தான் சம்பாதித்த பணத்தை தனக்கென்று வைத்து கொள்ளாமல் மக்களுக்கு வாரி வாரி இறைத்தார்**


நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களுடன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது தன்* கையில் இருந்த பணத்தை*மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தபடி சென்றாராம் . அதை கண்ட பாகவதர் இப்படி அள்ளி அள்ளி கொடுத்துவிட்டால் எப்படி சம்பாதிப்பீர்கள் என்று கேட்டுள்ளார் .அன்று மாலையில் ஒரு திரைப்படத்தின் 100 வது நாள் விழா நடைபெற்றது .அதில் இருவரும் கலந்துகொண்டனர் . அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எம்.ஜி.ஆர். சொன்னது என்னவென்றால் காலையில் நான் பார்த்தவர்கள் ஆங்காங்கே அமர்ந்துள்ளார்கள் ,நான் கொடுத்த பணம் எனக்கு திரும்பி வருகிறது . அவர்கள் மூலம் கிடைத்த பணத்தை திரும்ப அவர்களுக்கே கொடுப்பதில்தான் எனக்கு ஆத்ம திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது .என்றாராம் .***


மாட்டுக்கார வேலன் திரைப்படத்தை ஒரு மூதாட்டி 100 நாட்களும் தொடர்ந்து பார்த்தார் .* அந்த படத்தின் 100* வது* நாள் விழாவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அரங்கிற்கு வருகை தந்தார் . அரங்கின் மேலாளர் அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அவர் தொடர்ந்து 100 நாட்கள் படம் பார்த்த விவரத்தையும் சொன்னார் .* எம்.ஜி.ஆ.ர் அவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து ஒரு படத்தை ஒருமுறை பார்க்கலாம்.படம் நன்றாக இருந்து தங்களுக்கு பிடித்து** இருந்தால் தொடர்ந்து ஒருசில முறை பார்க்கலாம் . ஆனால் நீங்களோ தொடர்ந்து 100 நாட்கள் இந்த படத்தை பார்த்து இருக்கிறீர்கள். அதற்கு கணிசமான பணம் செலவழித்து இருக்கிறீர்கள்.நான் கேட்பதற்காக தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் . அப்படி 100 நாட்கள் தொடர்ந்து பார்ப்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்டாராம்.**அதற்கு அந்த மூதாட்டி ஐயா, எனக்கு வேலன் என்று ஒரு மகன் உண்மையில் இருந்தான் .அவன் மாடு மேய்த்து கொண்டிருந்தான்* நன்றாக ஆடி பாடி கொண்டிருந்தான் .திருமணத்திற்கு முன்பாக ,குறைந்த வயதில் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டான் .அவன் பெயரில் இந்த படம் வெளியானதால் தினசரி என் மகனை பார்க்கும் விதமாக இந்த படத்தை 100 நாட்கள் பார்த்து வந்தேன் . என் மகனை பார்ப்பதற்கு எனக்கு கசக்குமா, இதெல்லாம் ஒரு பெரிய செலவா என்று சொன்னாராம் . நீங்கள் நான் இது விஷயமாக பணம் , தங்கம் கொடுப்பதற்கு* தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்**என்றாராம் எம்.ஜி.ஆர். யாராவது தன் பிள்ளையை பார்த்ததற்காக கூலி தருவார்களா ,என்று கூறி அந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கொடுத்த 100 ரூபாயை திருப்பி கொடுத்தாராம் . உனக்கு தங்கம் போல மிக பெரிய மனசு, அதனால் உன் நினைவாகவும், என் மகன் நினைவாகவும் நீங்கள் அளித்த இந்த ஒரு சவரன்* தங்கத்தை மட்டும் நான் வைத்து கொள்கிறேன் என்று மூதாட்டி சொன்னாராம் .* எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களிடம் இருந்து பெற்ற* பணத்தை மக்களிடமே தருகின்ற குணம் உடையவர் . மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று செல்வி ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் அவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகத்திற்கு சால பொருந்தும்

.நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆகட்டுமடா*தம்பி ராஜா - நல்ல நேரம்*

2.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

3.கண்ணை*நம்பாதே*- நினைத்ததை முடிப்பவன்*

4.ஒரு பக்கம் பாக்குறா*-- மாட்டுக்கார வேலன்*

fidowag
28th November 2020, 03:51 PM
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
தனியார் டிவிக்களில்
20/11/20 முதல் 26/11/20 வரை ஒளிபரப்பான விவரம்
_________
20/11/20
சன் லைஃப்- மாலை 4 மணி- ஆனந்த ஜோதி


21/11/20- சன் லைஃப் - மாலை 4 மணி- கணவன்


மூன் டிவி- பிற்பகல் 12.30 மணி- காதல் வாகனம்


மீனாட்சி - பிற்பகல் 1. மணி- நல்ல நேரம்


22/11/20 - முரசு டிவியில் மதியம் 12 மணி/ இரவு 7 மணி
தாய் சொல்லை தட்டாதே


மீனாட்சி- மதியம் 12 மணி - விவசாயி


மெகா டிவி- பிற்பகல் 2.30 மணி- விவசாயி


23/11/20- சன் லைஃப்
காலை 11 மணி- குடியிருந்த கோயில்


சன் லைஃப் - மாலை 4 மணி- அன்ன மிட்டகை


ஜெயா மூவிஸ்- இரவு 10 மணி- கு லே பகா வலி


24/11/20- மூன் டிவியில் பிற்பகல் 12.30 மணி-
குடும்ப தலைவன்


வசந்த்- பிற்பகல் 1.30 மணி-ஒரு தாய் மக்கள்


சன் லைஃப்- மாலை 4 மணி- அரச கட்டளை


புது யுகம் டிவியில் இரவு 7 மணி- அரச கட்டளை


வசந்த்- இரவு 7 மணி-
நான் ஏ ன் பிறந்தேன்


பா லிமர்- இரவு 11 மணி - ஆனந்த ஜோதி


25/11/20 சன் லைஃப்- காலை 11 மணி-
பல்லாண்டு வாழ்க


வசந்த்- பிற்பகல் 1.30 மணி - குடும்ப தலைவன்


மெகா24 - பிற்பகல் 2.30 மணி- தொழிலாளி


சன் லைஃப் - மாலை 4 மணி- தாயை காத்த தனயன்


ஜெயா மூவிஸ் இரவு-10 மணி- பாசம்


வேந்தர் டிவி - இரவு 10.30 மணி- ஆனந்த ஜோதி


26/11/20- மெகா - அதிகாலை 1 மணி- பணதோ ட்டம்


முரசு டிவியில் மதியம் 12 மணி/ இரவு 7 மணி-
பெற்றால்தான் பிள்ளையா


மெகா- பிற்பகல் 1.30 மணி- சந்திரோதயம்



சன் லைஃப்- மாலை 4 மணி- தேடி வந்த மாப்பிள்ளை


வசந்த்- இரவு 7.30 மணி- பட்டிக்காட்டு பொன்னையா


புது யுகம் டிவியில் இரவு 7 மணி- என் கடமை


ஜெயா மூவிஸ் இரவு 10 மணி- இதய வீணை

fidowag
28th November 2020, 03:52 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அகிலம் போற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்களும், சத்யம் காம்ப்ளக் சில் 161 நாட்களும் திரையிடப்பட்டு அரிய சாதனை படைத்தது

தற்போது கொரோனா காலத்தின் இடையில் மீண்டும் மறு வெளியீடு களி ல் பல அரங்குகளில் தென்னகம் எங்கும் வெற்றி வலம் வந்து புதிய சாதனை படைத் து வருகிறது.

இன்று முதல்(27/11/20)
நெல்லை ரத்னா

தூத்துக்குடி கிளியோபாட்ரா

காட்டுபுத்தூர் செந்தில்
தினசரி 4 காட்சிகள்

தகவல் உதவி திரு.சொக்கலிங்கம்
திவ்யா பிலிம்ஸ் மற்றும் நெல்லை திரு வி.ராஜா

மதுரை நாகமலை புதுக்கோட்டை காசி அரங்கில் தினசரி 4 காட்சிகள்

தகவல் உதவி திரு எஸ் .குமார்

_________
இன்று முதல் (27/11/20)
கோவை டிலைட்டி ல்
பல்லாண்டு வாழ்க
தினசரி 2 காட்சிகள்

fidowag
28th November 2020, 03:52 PM
இன்று முதல் (27/11/20) சென்னை பாலாஜியி ல்
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் பெரிய இடத்து பெண் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

fidowag
28th November 2020, 03:55 PM
இன்று முதல் (28/11/20)* குமாரபாளையம் ஸ்ரீ லட்சுமியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய*நாடோடி மன்னன்*தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை*திரு.வி.ராஜா .

orodizli
29th November 2020, 07:45 AM
எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்

எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

“ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

பங்க்ரா நடனம்

பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

மேலை நாட்டு நடனம்

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்

டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

டான்ஸ் மாஸ்டர்கள்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.

ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.

Courtesy - net...VND...

orodizli
29th November 2020, 07:45 AM
இதேபோல் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த நேரம். வெளி நாட்டு கலைஞர்கள் ஸ்வர்ட் பைட்(வாள் சண்டை) பார்க்க ஆசைப் பட்டார்கள். உடனே தலைவர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சம்பந்தப்பட்ட ஆட்களை வரவழைத்து தலைவர் நடித்த சில முக்கியமான வாட்சண்டை காட்சிகளை போட்டு காட்டச் சொன்னார். அப்போதுதான் சர்வாதிகாரி,அரசிளங்குமரி போன்ற எம்ஜிஆர் படங்களை பார்த்து அவர்கள் வியந்து போனார்கள். தமிழ் படங்கள் வாள் சண்டையில் மிகவும் சிறந்து விளங்குவதாக பாராட்டினார்கள்.

ஏன் எம்ஜிஆர், சிவாஜியின் வாள் சண்டை படங்களை பார்க்கச் சொல்லியிருக்கலாமே. என் தம்பி,மருத நாட்டு வீரன்,வணங்காமுடி போன்ற படங்களை போட்டுக் காட்டியிருக்கலாமே. அப்படி போட்டு காட்டியிருந்தால் பார்த்தவர்கள் சிவாஜியின் வாள் சண்டையும் அந்த நேரத்தில் அவரது உடல்மொழியையும் பார்த்து சண்டை காட்சியை காட்டச்சொன்னால் காமெடி காட்சியை காட்டுகிறார்களே
என்று தவறாக நினைத்து விட மாட்டார்களா.

எம்ஜிஆர் எப்போதும் யார் மீதும் துவேஷம் காட்ட மாட்டார்.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன். எல்லோரும்
தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் நாட்டிய போட்டி முடிந்தவுடன் சகாதேவன் கத்தியை தூக்கி சிவாஜி கையின்மேல் எறிவாரே அந்த காட்சியில் சிவாஜியின் நடிப்பை கவனியுங்கள். சிறு பிள்ளைகள் மிட்டாய் கேட்டு தாயிடம் தரையில் உருண்டு அடம் பிடிப்பார்களே அதை மிஞ்சி விடும் அந்த காட்சி. அப்படி உருளும் போது கையில் குத்தி நீளமாக இருக்கும் கத்தி கையில் மேலும் உள்ளே இறங்கி விடாதா. கொஞ்சம் பணம் அதிகம் A P N கொடுத்து விட்டார் என்றே நினைக்கிறேன். அதற்கு தகுந்தாற்போல் நடித்திருப்பார்
சிவாஜி.

உலகத்திலேயே ஒரு சாதாரண கத்திக்குத்துக்கு இவ்வளவு தூரம் உருண்டு புரண்டு நடித்தவர் யாரும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
இதேபோல் குடியிருந்த கோயில் படத்தில் ஒரு காட்சி வரும். எம்ஜிஆர் கையில் குண்டடிபட்டவுடன் முகத்தில் அந்த வேதனையை காட்டுவார். உடனே கத்தியை எடுத்து கையை குத்தி ரவையை வெளியே எடுக்கும் காட்சி நம்மையே அதிர வைக்கும்.
அதில் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியதால் தான் அந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை வென்றார் எங்கள் நடிகப்பேரரசர்.

சிலர் எம்ஜிஆரின் மனிதநேயத்துக்காகவும்,
ஏழைகளுக்கு அவர் கொடுக்கும் கொடைக்காகவும் படத்தை பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அப்படியானால் அவருடைய எல்லா படங்களும் ஒரே மாதிரி அல்லவா ஓட வேண்டும், இல்லையே. சில நல்ல கதையம்சமும், நடிப்பும் உள்ள படங்கள் மிகச்சிறப்பாக ஓடுகின்றன.
மற்ற படங்கள் சுமாரான வெற்றியை
பெறுகின்றன. எனவே மற்றவர்கள் நடிப்பைக் காட்டிலும் நடிகப்பேரரசர் எம்ஜிஆருடைய நடிப்பையும், அவருடைய நடிப்புடன் கூடிய துடிப்பையும் ரசிகர்களும்,மக்களும் விரும்பி பார்ப்பதால் தான் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் மிகப் பெரிய வெற்றியை பெறுகின்றன.

மாமா பத்திரிகை அதிமுக வை சீண்டுவதை நிறுத்தாவிட்டால் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் குருஜி..........Suje.Kum..

orodizli
29th November 2020, 07:46 AM
நம் அனைவரையும் அந்த காலத்து பத்திரிகைகள் குறிப்பாக "தினத்தந்தி" குடும்ப பத்திரிகைகள் மற்றும் "குமுதம்" போன்ற ஆபாசத்தை அரங்கேற்றும் பத்திரிக்கைகள் எம்ஜிஆரை சிறுமை படுத்துவதாக எண்ணி அவரது படங்களுக்கு தரக்குறைவான விமர்சனங்கள் எழுதுவதை கடமையாக நினைத்தன.அதிலும் "அடிமைப்பெண்" படத்திற்கு அவர்கள் எழுதிய விமர்சனம் ஆத்திரமூட்டுவதாக இருக்கும்.

எம்ஜிஆர் கூனனாக குனிந்து இருக்கும் வரை படம் நிமிர்ந்து நின்றது. எம்ஜிஆர் நிமிர்ந்தவுடன் படம் குனிந்து விட்டது என்றும் எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடுகிறார் (கேமராவுடன் அல்ல)என்றும், படம் முழுவதும் ஒரே காட்டுக்கத்தல் என்றும் எம்ஜிஆர் எவ்வளவு சிரமப்பட்டாரோ அத்தனையும் கிண்டல் செய்தனர் விமர்சனம் என்ற பெயரில். இப்படி பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுவதில் தலை சிறந்து விளங்கியது குமுதம்.

நான் சொல்வதை சற்று கவனமாக கேட்டு பதிவிடுங்கள் உங்கள் கருத்துகளை.. அதற்கு முன் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்ற எண்ணத்தை மறந்து விட்டு பாருங்கள். அப்பாதுதான் நேர்மையான விமர்சனம் கிடைக்கும்.

அனைத்து சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, நமது எம்ஜிஆர் ரசிகர்களும் தலைவரே, "தில்லானா மோகனாம்பாள்" படத்தை பார்க்க சொல்லியிருக்கிறார் என்றால் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்று தானே அர்த்தம் என்கிறார்கள். ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் சொன்னது உண்மைதான். ஆனால் எதற்காக "தில்லானா மோகனாம்பாள்" படத்தை பார்க்க சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டினர் சிலர் தலைவரை அணுகி தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் தெரிந்து கொள்ள வசதியாக எங்களுக்கு ஒரு தமிழ் படத்தை காட்டுங்கள் என்றதும் எம்ஜிஆர்
நாதத்தையும்,பரதத்தையும் விளக்கி சொல்லும் படமான தில்லானா மோகனாம்பாள் படத்தை சிபாரிசு செய்தார். படத்தில் A P நாகராஜன் தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வரத்தின் பெருமையை அழகாக சொல்லி இருப்பார். அதுபோல் பரதநாட்டியக்
கலையையும் பெருமை படுத்தி இருப்பார்.

படம் முழுவதும் நாதமும் பரதமும் தமிழகத்தின் பெருமை மிகுந்த கலைகள் என்று சொல்லியிருப்பார்கள். மதுரை
பொன்னுசாமி, சேதுராமனின் அற்புதமான நாதஸ்வர இசையையும் பத்மினி அவர்களின் தெய்வீக
நாட்டியமும் போட்டி போட்டுக்கொண்டு படம் முழுவதும்
நமது கலாசாரத்தை பரப்பும் விதமாக அமைந்திருப்பதால் தலைவர் படத்தை பார்க்க சொன்னார்.

மதுரை பொன்னுசாமி,சேதுராமனின் நாதஸ்வர இசையை அந்த காலத்திலேயே கவர்னர் மாளிகையில் அவர்கள் வாசிக்க கவர்னர் ரசித்திருக்கிறார். காமராஜரும் இவர்களின் வாசிப்பை மிகவும் ரசிப்பார். நமது தலைவரும் ஒரு அற்புதமான இசை ரசிகரே. அதனால் அவர்களை பார்க்க சொன்னதில் வியப்பில்லை..

இதை வைத்துக் கொண்டு ஏதோ நாதஸ்வரமே சிவாஜி ஊதிதான் நாதஸ்வர இசையே கிடைத்த மாதிரி பெருமை கொள்வதேன்? நாதஸ்வரத்திற்கு சிவாஜி நன்றாக வாயசைப்பார் போய் பாருங்கள் என்றா எம்ஜிஆர் சொன்னார்...........Su.Ku..

orodizli
29th November 2020, 07:47 AM
"எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும் பிரிக்க முடியாத பந்தம்."

இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.

பழ நெடுமாறன் கருத்து
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்[மூலத்தைத் தொகு]
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

இயக்குனர் சீமான் நம்பிக்கை
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்..........mgn.........

orodizli
29th November 2020, 06:34 PM
அய்யன் நடித்த "தெய்வ மகன்" ஒரு மாபெரும் மிகை நடிப்பின் உச்சக்கட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல.. மூன்று வேடங்களிலும் மிகை நடிப்பை புகுத்தி வெகு நேர்த்தியாக இதைவிட வேறு எந்த நடிகரும் மிகை நடிப்பை காட்ட முடியாது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய படம்.
அதனால் ஆஸ்கருக்கு அனுப்பி ஹாலிவுட் நடிகர்களை பதற வைக்கலாம் என்று பார்த்தால் படம்
தேசத்தை தாண்டி வெளியே போகாததால் தமிழர்களின் மானம் காக்கப்பட்டது.

மேலும் ஆஸ்கருக்கு போகாத படத்தை அய்யனின் மூன்று வேடங்களையும் செய்தது ஒரே ஆள் என்பதை நம்ப மறுத்தார்களாம். எப்பேர்ப்பட்ட கரடி விடுகிறார்கள்.
தகப்பனும் மகனும் அச்சு அசலாக ஒரே ஆள் போல தோன்றுகிறார்கள்.
முகத்தில் உள்ள கசடுகளை வழித்தால் இன்னொரு மகனின் முகம். இதில் எங்கு இருக்கிறது வித்தியாசம். உலகத்திலேயே இப்படி ஒரு செல்ல பணக்கார மகன் போல
யாரும் கிடையாது என்றே நினைக்கிறேன். அவருடைய நடிப்பு கொஞ்சம் அலியின் நடிப்பை ஒத்து போகிறது. அலிகளின் பிரதிபலிப்பில் தெரியும் மிகை அய்யன் நாணி கோணி நடிப்பதில் தெரிகிறது.

பிறகு யாரை பார்த்து அய்யன் காப்பி பண்ணினார்? அலியை பார்த்தா? என்று தெரியவில்லை.
டணால் தங்கவேலு போல கைபிள்ளைகள் காமெடி குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் மேலும் மேலும் அவர்கள் காமெடி தொடருவது எப்படி அடித்தாலும் தாங்குறான்யா என்ற வடிவேலு காமெடியையும் நினைவு படுத்துகிறது. அய்யன் முக்கி முக்கி நடித்தும் அவரால் வித்யாசம் காட்ட முடியவில்லை.

ஆனால் புரட்சி தலைவர் "உலகம் சுற்றும் வாலிபனு"க்காக மேடா ரூங்ராத்தை புக் பண்ணும் போது தொப்பி கண்ணாடி சகிதம் ஒரிஜினல் கெட்டப்பிலே இருந்திருக்கிறார். அதன்பின் 'பச்சைக்கிளி' பாடலுக்கு எம்ஜிஆர் மேக்கப்புடன் வந்ததும் மேடா ரூங்ராத் வேர் இஸ் மிஸ்டர் எம்ஜிஆர்? என்று கேட்டதும் எல்லோரும் எம்ஜிஆரை அடையாளம் காட்டியவுடன் அவர் நம்ப மறுத்திருக்கிறார். அதுதான் அற்புதமான கெட்-அப். இனி கைபிள்ளைகள் கண்படி டூப் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே தலை சிறந்த நடிகரான பாரத் எம்ஜிஆர் இருக்கும் போது மாற்று நடிகரின் மிகை நடிப்பை இங்கு பினாத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

நல்லவேளை ஆங்கில நடிகர்களும் ஆஸ்கர் தேர்வுக்குழுவினரும் தப்பித்துக் கொண்டார்கள். நடிப்பா அது? பதறி குதறி கதறி வளைந்து நெளிந்து நாணி கோணி என்று அத்தனை விதமான நடிப்புகளையும் ஒருங்கே காண்பித்து பார்த்தவர்களை கண் மண் தெரியாமல் பர்லாங்கு தூரம் ஓட வைத்து சினிமா ரசிகர்களை திக்கு முக்காட செய்த படம்தான் "தெய்வ மகன்".

சரி ஆஸ்கர் வேண்டாம், உள்ளூர் மக்களாவது ரசித்தார்களா? என்றால் ஐயோ பாவம் 'ஜில்லு என்னை கொல்லாதே' என்று எள்ளி நகையாடுவதை போல அய்யா எங்களை விட்டு விடுங்கள் என்று பார்த்தவர்கள் 'சாமி என்ன நாங்க தப்பு செய்தோம்' என ஓடியதால் படம் சென்னை சாந்தியில் 50.நாட்களுக்குள்ளே வாயை பிளந்து விட்டது. கிரவுனில் 5 வாரமும் புவனேசுவரியில் 4 வாரமும் ஓடிய பின்பு 100 நாட்கள் பெரிய பெரிய வடக்கயிறு துணையுடன் ஓட்டப்பட்டது. ஒரு சில படங்களுக்கு பட்டறை வசூலை வாரி வழங்கும் கைபிள்ளைகள் "தெய்வ மகனு"க்கு அதைக்கூட தரவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் "தெய்வ மகனி"ன் நிலையை.

படத்தின் தயாரிப்பு அய்யனின் குடும்ப நண்பர் பெரியண்ணன் என்று நினைக்கிறேன். இதற்குமுன் "பந்த பாசம்" "அன்புக் கரங்கள்" ஆகிய படங்களை எடுத்து தானும் ஒரு தயாரிப்பாளர் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். "தெய்வ மகனு"ம் வசூல் ரீதியில் தோல்விப்படமானவுடன் தன் முழு சக்தியையும் திரட்டி "தர்மம் எங்கே"?
என்ற கேள்வியை எழுப்பி தர்மம் அவர் பக்கம் இல்லை என்பதை உறுதி செய்ததுடன் அய்யனின் ராசி வேலை செய்து அத்துடன் அவரின் படத்தயாரிப்பு முடிவுக்கு வத்தது.

இந்தப் பெரியண்ணன்தான் திருச்சி பிரபாத் தியேட்டர் அதிபர். அய்யனின் அருமை குடும்ப நண்பர் என்பதை உணர்ந்து ஆப்பு வைக்கப் பட்டது . சென்னை சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் இந்த 4 சொந்த மற்றும் குத்தகை தியேட்டர் தவிர வேறு மற்ற தியேட்டர்களின் கணக்கை பார்த்தால் மிக சொற்பமாகத்தான் 100 நாட்கள் கண்டிருக்கும். அதிலும் இழுவை தியேட்டர்கள்தான் அதிகம் இருக்கும்..........ksr...

orodizli
29th November 2020, 06:57 PM
அனைவருக்கும் வணக்கம்...������... நமது ரசிக சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் என்றும் விரும்பும், பூஜிக்கும், நிழலை உண்மையிலேயே நிஜமாகவே, நிஜமாக்கிய வள்ளல் பெருந்தகை இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் எப்பொழுதும் வற்றாத ஜீவ நதியாக அவர் தம் புகழ், மாண்புகள், பெருமைகளை எடுத்து கூறவே நேரமில்லை..... அவ்வளவு தகவல்கள் ஒவ்வொரு அணு தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. அப்படிப்பட்ட நம் ரசிகர்கள் சில தேவையில்லாத நபர்களின் தவறான, அடிப்படையில் ஆதாரங்கள் இல்லாத செய்திகளுக்கு சரியான நேர்மறையான, இன்றைய தலைமுறையினர் (அறியாதவர்கள்) நற் விளக்கங்கள் அளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் பிறருக்கு தெரியப்படுகிறோம். அப்படி தான் சில விடயங்களை தெளிவு படுத்த பதில் பதிவுகள் சொல்ல நேரிடுகிறது. அவ்வாறு சில முட்டாள்தனமான மாற்று முகாம் குழுவினர் பொய்யான, கேலித்தனமாக எழுதும் பதிவுகளுக்கு திரு சங்கர் அவர்கள் பதில் அளிக்கிறார்கள்... சில மடத்தனமான உதாரணங்கள்... நவராத்திரி படத்தில் 9 நபர்கள் நடிப்பை திரைப்பட தேர்வு குழுவினர் மற்றும் நீதிபதிகள் நம்பவில்லை. நடித்தது ஒரே ஆள் இல்லை. அதேபோல் தெய்வ மகன் படம், கௌரவம் படம் இதெற்கெல்லாம் அந்த ரசிக குரூப் இட்டுகட்டிய படு மோசமான பொய் சொல்லி வேறு என்ன சாதிக்க முடியும்? தங்கள் நிலை இன்னும், இன்னும் மோசமாக கீழிருங்கி போய் கொண்டுள்ளதை உணராத மடையர்களாக உள்ளது உள்ளபடி வேதனை தரும் செய்தி...

fidowag
29th November 2020, 11:22 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -* வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*24/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
சத்யா*ஸ்டுடியோவில் உழைக்கும்*கரங்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது .அதில் கலந்து*கொண்டு*நடித்த*பின் வீட்டுக்கு காரில்*புறப்படும்*சமயம்*ஒருவர் காரை*மறித்து* பத்திரிகையை*எம்.ஜி.ஆர். அவர்களிடம் தருகிறார்*.* காரின்*குறுக்கே*அவர் விழுந்ததும்*,கார்*ஓட்டுநர் நல்ல வேளையாக*பிரேக்கை* வேகமாக அழுத்தி வண்டியை*நிறுத்துகிறார் .பதற்றமான எம்.ஜி.ஆர். அவர்கள்* அவரை*அழைத்து*ஏன் இப்படி குறுக்கே*விழுந்தாய். தவறிப்போய் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால்*என்ன செய்வது*,உன்னுடைய நல்ல நேரம் .நல்லபடியாக ஒன்றும் பாதிப்பில்லை. சரி*என்ன விஷயம் என்று கேட்க, தலைவரே*, உங்கள் தலைமையில் திருமணம் நடந்தால்தான் திருமணத்திற்கு நான் ஒத்து கொள்வதாக,கடந்த*இரண்டு வருடமாக* குடும்பத்தினரிடம் சபதம் செய்துள்ளேன் . நீங்கள் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை*தருவீர்கள் என்றும் சொல்லிவிட்டேன் .* ஆகவே நீங்கள் அவசியம் வந்து எங்களை*ஆசிர்வதிக்க வேண்டும் என்றார்.* தலைவர் என்றைக்கு , எங்கே திருமணம் என்று கேட்க , ஒரு குறிப்பிட்ட தேதியில்*காலை*9 மணிக்கு*திருமணம் நடைபெறுகிறது என்கிறார் .பத்திரிகையை*வாங்க பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். தன்* உதவியாளரிடம்*திருமண*தேதியை*முன்கூட்டியே எனக்கு*ஞாபகப்படுத்து* என்கிறார் . ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில்*திருமண*ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்றன. மணமக்கள் தயாராகி விட்டனர் .* முகூர்த்த*நேரம் முடியும்*தருவாயில்*உள்ளது ஆனால் தலைவர் எம்.ஜி.ஆர். வருவதாக*எந்த சகுணமும்* தெரியவில்லை*.


அந்த குறிப்பிட்ட நாளன்று*எம்.ஜி.ஆர். அவர்கள் ஸ்டுடியோவிற்கு வந்து மேக்கப்*அறையில்*நுழைகிறார் . மேஜையின்மீது ஒப்பனை பெட்டி அருகில் அந்த திருமண*பத்திரிகை கிடக்கிறது .* எதேச்சையாக* எடுத்து பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் பதறிப்போய் தன் உதவியாளரிடம் உடனே இந்த திருமணத்திற்கு போக வேண்டும்.* உடன் ஏற்பாடு செய்து, புறப்படு என்கிறார் .* ஆனால் அந்த திருமணம் நடைபெறும் கிராமத்திற்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் குறைந்த பட்சம்*ஒரு மணி நேரமாவது*ஆகும் .* உழைக்கும்*கரங்கள் படப்பிடிப்புக்கான ஒப்பனையுடன் காரில்*புறப்படுகிறார் .* ஆனால் முகூர்த்த*நேரம் தவறிவிட்டது .**திருமண*மண்டபத்திற்கு எம்.ஜி.ஆர். வந்தடைகிறார் .* திருமண*வீட்டார், மணமகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் . ஆனால் மணமகனை*காணவில்லை .* ஒரே குழப்ப*நிலை. அனைவரும் பதற்றமாக உள்ளனர் . நிலைமையை*நேரில் கண்டறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் வேதனை அடைந்து, தன் உதவியாளரை*அழைத்து*எதற்கும் சத்யா*ஸ்டுடியோவிற்கு* உடனே புறப்படலாம் என்று காரில் செல்கிறார் . அங்கு கண்ட*காட்சி*எம்.ஜி.ஆர் அவர்களை வியப்படைய செய்தது.தலைவர் வந்து நடத்திவைத்தால்தான் திருமணம் செய்து கொள்வது என்று மணமகன் ஸ்டூடியோ*வாசலில்*தவம் கிடக்கிறார் . தலைவர் எம்.ஜி.ஆர்.** . உடனே மணமகனை*அழைத்து கொண்டு*மீண்டும் திருமண*மண்டபத்திற்கு வந்தடைந்தார் .தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முகூர்த்தம் தவறினாலும் பரவாயில்லை . நான் தாலி எடுத்து தருகிறேன். அதை மணமகள் கழுத்தில்*கட்டு என்றார் . தாலி கட்டி முடித்ததும்*,மணமகன் காதில்*சில*அறிவுரைகள்*எம்.ஜி.ஆர். சொல்கிறார். பின்னர் மணமக்கள்* இருவரையும்** சத்யா*ஸ்டுடியோவிற்கு அழைத்து*செல்கிறார் . அங்கு ஒரு பெரிய திருமண*பந்தல் அமைக்கப்பட்டு ,விருந்திற்கு சிறப்பான*ஏற்பாடுகள் செய்யப்பட்டன* .திருமண*வீட்டார் அனைவரையும்*வரவழைத்து சிறப்பான, , வகை வகையான*உணவுகள் பரிமாறப்பட்டன .* மணமக்கள் அருகில் எம்.ஜி.ஆர். அமர்ந்து*உணவருந்துகிறார் .* படப்பிடிப்பு குழுவினருக்கும் திருமண*விருந்து*அளிக்கப்பட்டது . மணமக்கள் மனம் குளிர*சிறப்பான*ஏற்பாடுகளை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உதவியாளர் மூலம் செய்திருந்தார் . திருமண விருந்து சாப்பிட்டு*மணமக்கள் புறப்படும்போது ஒரு லாரியில்*மனமக்களுக்கான கட்டில்*,* பீரோ, பித்தளை ,அலுமினியம், எவர்சில்வர் சாமான்கள் ,வெள்ளி பூஜை சாமான்கள் அனைத்தும் சீர் வரிசை பொருட்களாக* வந்து இறங்கின . அந்த சீர்*வரிசை பொருட்கள்*தனி லாரியிலும் , மணமக்கள் ஒரு காரிலும்*தொடர்ந்து செல்லும்படி ஏற்பாடுகள் செய்திருந்தார் தலைவர் எம்.ஜி.ஆர் .* *


திரு. கா. லியாகத்*அலிகான்*பேட்டி*
-----------------------------------------------------------மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பலருக்கும்*பல உதவிகள்*செய்த வண்ணம் இருந்தபோது சிலர்*நீங்கள் எதற்காக* ஒருவருக்கு*மீனை*கொடுக்கிறீர்கள். அவருக்கு*மீன் பிடிக்க கற்று கொடுங்கள் என்று சொன்னார்கள் . அப்போது தலைவர் எம்.ஜி.ஆர். அவனுக்கு மீன் பிடிக்க , வலை, மற்றும் உபகரணங்கள் வாங்கி கொடுத்து*, மீன் பிடிக்க கற்று*கொடுப்பதற்குள் அவன் இறந்துவிடுவான்*மீன் பிடிக்க கற்று கொடுக்கிறேனோ இல்லையோ, அவனுக்கு மீனை கொடுத்து*அவனை*பிழைக்க வைக்க வேண்டும் என்பதுதான் எனது கொள்கை*என்று தான் ஆட்சி செய்த*தமிழக*மக்கள் அனைவர்க்கும் உணவு கிடைக்க வேண்டும்* என்கிற*சித்தாந்தத்தின் அடிப்படையில்தான்* ரேஷன் கடைகள்*மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசியின் விலையை*கிலோவுக்கு*ரூ.1/- க்கு*மேலாக உயராத*வண்ணம் பார்த்து கொண்டவர்தான் நமது*அருமைத்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . 1984ல் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று கொண்டிருந்த அந்த கால கட்டத்தில்**சிகிச்சை முடிந்து மூன்று மாத காலம் தொடர்ந்து அமெரிக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலையில்*நிதியமைச்சராக இருந்த*நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்* ரேஷன் கடைகளில் பொது வினியோகத்தில் கிலோ*ரூ.1/-க்கு அரிசி போடுவது*அரசிற்கு பெரிதும் இழப்பு ஏற்படுகிறது . ஆகவே 25 பைசாவை கூட்டி*ரூ.1.25க்கு அரிசி போட்டால்*வருவாய் இழப்பு ஏற்படாது. அதற்கு முதல்வரின் அனுமதி வேண்டும்*என்று கருதி*அந்த கோப்புகளை*விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர் . அந்த கோப்புகளை கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்* 1 நயா*பைசா கூட*விலை ஏற்றம் செய்து பொதுமக்கள் மீது திணிக்க நான் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் இதைவிட* குறைந்த விலையில் அரிசி விநியோகம் பொதுமக்களுக்கு செய்ய முடியுமானால் அதை நான் வரவேற்பேன் என்று முடிவு எடுத்தவர்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**


ஏழை உலை வைக்கின்ற*அந்த அரிசிதான்*ஒருவனுக்கு உயிர் கொடுக்கும்*உயிர்நீராக இருக்கும் .. ஒரு பழமொழியை*சொல்வார்கள் . தவிப்பவனுக்கு தாகத்திற்கு தண்ணீர் தரவேண்டுமே* ஒழிய ,அவன் இறந்த பிறகு வாயில் பாலை ஊற்றக்கூடாது என்பார்கள் .***அந்த தத்துவத்தின்படி ஏழை, எளியோர்*அரிசியை ரூ.1/-க்குத்தான் வாங்க முடியும்*என்று சொன்னவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அவருக்கு*பின்னால் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா*அவர்கள்**ஏழை எளியோருக்கு இலவச அரிசி திட்டத்தை*அமுல்படுத்தினார் . அதை செவ்வனே இன்றைய அ.தி.மு.க. அரசு எடப்பாடி*பழனிசாமி அவர்கள் தலைமையில் அதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது . அரிசிதானே* என்று ஏளனமாக*நினைக்கவேண்டாம். ஒரு காலத்தில் இதே அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.4.25 க்கு விற்றது .* இதை விமர்சிப்பவர்களை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் ,நீங்கள் பருத்தியை சாப்பிடுங்கள். எலியை*சமைத்து சாப்பிடுங்கள் என்று பதில் சொன்னார்கள்* இவற்றையெல்லாம் பேரறிஞர் அண்ணா*மேடைகளில் விமர்சித்து பேசினார்*இப்படியெல்லாம் பேசுபவர்கள் ஆட்சியில் நீடிப்பது*அவசியமா*என்று கேள்வி எழுப்பினார் . பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும், அந்த ரூ.4.25 க்கு*விற்ற அரிசியை*படிக்கு ஒரு ரூபாய் நிச்சயம், மூன்று படி நிச்சயம் என்ற கொள்கையின்படி ரூ.1/-க்கு படி அரிசி தந்ததை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இறுதி காலம் வரையில் கடைபிடித்து பொதுமக்களுக்கு பொது விநியோகம் மூலம் அரிசி கிடைக்க செய்தது வரலாறு .*மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள்*விழ வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா பாராட்டினாரே , அவருடைய நெறிமுறையில் வழிநடந்தாரே*. .நிச்சயமாக பெருமைப்படத்தக்க இடத்தை நாம் அடைவோம்*என்பதில் எந்த குறையும்** கிடையாது. அதை எப்படியும் அடையலாம். அதை மனதில்*கொண்டு குறைந்தபட்சம் தினசரி 8 மணி நேரம் உழைக்க வேண்டும் . 8 மணி நேரம் ஒய்வு. 8 மணி நேரம் உறக்கம். இவைதான் வாழ்க்கையின் சித்தாந்தம் என்பது*சிக்காகோ*நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரணி, மற்றும் மாநாட்டில் எடுத்த முடிவு . 8* மணி நேரம் வேலை என்பது* 12 மணி நேரம்* 14 மணி நேரம் என்று* உழைத்த காரணத்தால்**புரட்சி வெடித்து* அங்கே தொழிலாளர்களுக்கு தரப்பட்ட*8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஒய்வு, 8 மணி நேரம் உறக்கம்* என்கிற*சித்தாந்தத்தின் அடிப்படையில் அ. தி.மு.க. அரசு .செயல்படுகின்ற வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதிப்படுத்தி தொழிலாளர்களுக்காக தன்னுடைய*வாழ்க்கையை அர்ப்பணித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .


ஒரு கால கட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி*குறிப்பிட்டு சொல்லும்போது திருச்சியில்*ரகுநாதன் என்கிற தோழர்* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கூட்டத்தில் பார்க்கின்றபோது இன்றைக்கு தொழிலாளர்களுக்கு*கடை சட்டம் என்கிற கடையில் வேலை செய்பவர்களுக்கு உரிய சட்டத்தை கொண்டு வந்தால்*நன்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டு எழுதி கொடுத்ததை*எம்.ஜி.ஆர் அவர்கள் பெற்று கொண்டார். ஆனால் தலைவர்**அவருக்கு இருக்கும் நெருக்கடியில்*இதை*எங்கே பார்க்க போகிறார் என்ற*சந்தேகம் எழுந்ததாம். ஆனால் மனுவை வாங்கிய தலைவர் ஓரிரு மாதங்களில் சட்ட மன்றத்தில்* அமைப்பு சாரா*தொழிலாளர்களுக்காக கடை சட்டம் ஒன்றை*அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்றி காட்டி ,செய்திகளை பத்திரிகைகளில் வெளிவரச்செய்தபோது அதை கண்ட*திருச்சி*ரகுநாதன் என்பவர் பூரித்து போய்*தலைவர் அவர்களுக்கு நன்றியை காணிக்கையாக்கி ,பெருமைப்படுத்தி*திருச்சியில்*கழக*தோழர்களிடம் பேசியிருக்கிறார் . புரட்சி தலைவரின்*ஆட்சி காலத்தில், ஒரு விஷயத்தை, பிரச்னையை*பெரிய அளவில் பிரபலமான ஒருவர்தான்*அவருடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற நியதி இல்லை. ஒரு சாதாரண, சாமான்ய*மனிதனின், வேண்டுகோள் அல்லது மனு என்பது*அவரது கவனத்திற்கு சென்றால் அதை நினைவில் வைத்து உரிய கால*நேரத்தில் முடிவு எடுத்து செயல்படுத்த கூடியவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**

ஒரு இஸ்லாமியர் தலைவரிடத்தில் ஒரு பிரச்னையை*அவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். சைக்கிளில் செல்பவர்கள் பொதுவாக ஏழை எளியோர்கள் .கணவன்*மனைவி இருவர் சைக்கிளில் செல்லும்போது ,எதிரில் காவலர்*தென்பட்டால் சைக்கிளை*நிறுத்தியதும், மனைவி இறங்கி*ஓடக்கூடிய சூழ்நிலை உள்ளது . மனைவி தவித்து கொண்டிருக்க, கணவன்*காவல் நிலையத்திற்கு அழைத்து*செல்லப்பட்டு*தண்டனைக்கு உள்ளாவான் .**இந்த நிலை மாற வேண்டும் .அதற்குரிய சட்டம் இயற்ற*வேண்டும். சைக்கிளில் இருவர் செல்ல முறையான சட்டம் இயற்றி*ஏழை எளியோரை*வழக்கில் இருந்தும், தண்டனையில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் .தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும்*சில சட்டங்களை உடனடியாக நிறைவேற்றினார். அதில் சைக்கிளை*இருவர்*செல்லலாம் என்பதும் ஒன்று . புகழின் உச்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு சாதாரண*தொண்டனின் கோரிக்கையை ஏற்று ,அதை சட்டமாக்கி,நிறைவேற்றியதால்* ,தொண்டர்கள்* மீது எவ்வளவு அன்பு, பாசம் காட்டினார் என்பதை*இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம் இன்றைக்கு எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். முகலாயர் ஆட்சியில் பாபர்*தன*மகன் ஹுமாயூனிடம் சொன்னாராம். எனக்கு பின்னால் நீதான்*குடும்ப வாரிசு .பின்னர் அமைச்சர்களிடம் சொன்னாராம்.என்னுடைய காலம்,நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது . நான் எப்போது இறப்பேன் என்பது*எனக்கே தெரியாது .அதனால் எனது வாரிசாக*என் மகன் ஹுமாயூனை*அறிவிக்கிறேன் .அந்த காலத்தில்**வாரிசுதாரரை முன்கூட்டியே அறிவிக்கலாம் . பாபர்*தன் மகன் ஹுமாயூனிடம் மகுடம் தலையில்*ஏறிவிட்டதால் மமதையோடு*அலையாதே*.ஏழை எளியோரை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உதாசீனப்படுத்தாதே நாம் முஸ்லீம்*மதத்தை சார்ந்தவர்கள். ஆனால் இங்கு வசிக்கும்*மக்களில் பெரும்பாலானோர்*இந்து மதத்தை சார்ந்தவர்கள் . இந்துக்கள் மனம் புண்படும்படி நீ எந்த காரியமும் செய்ய கூடாது. நம்முடைய மூதாதையர்*.பலர் இந்து கோயில்களை அடித்து நொறுக்கி இருக்க கூடும். அந்த செயலை*மட்டும் நீ கண்டிப்பாக செய்ய கூடாது .இந்துக்கள் வழிபடும்*பசுக்களுக்கும் நீ எந்த இடையூறும் செய்யக்கூடாது .என்று பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு அறிவுரைகள் கூறினாராம் .****


முகலாய*மன்னர்*பாபர்*போல ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு அரசியல் வாரிசாக*யாரையும் அறிவிக்கவில்லை .* ஆனால் கலையுலக வாரிசாக*நடிகரும், இயக்குநருமாகிய பாக்யராஜ் அவர்களை கலைவாணர் அரங்கில்*ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார் . தான் எழுதிய உயிலில்*நான் வாரிசு என்று யாரையும்*நியமிக்கவோ, அறிவிக்கவோ மாட்டேன் .ஏனென்றால் இது மன்னராட்சி காலமல்ல. மக்களாட்சி காலம் . இந்த காலத்திலே, அ.தி.மு.க. ஆட்சியில் 80 % யாருக்கு ஆதரவாக*இருக்கிறார்களோ, அவர்தான் இந்த கட்சியை வழிநடத்த வேண்டும்* ஒரு வேளை கட்சியில் பிளவு ஏற்படுமேயானால் 80% பேர் யாருக்கு*ஆதரவு தருகிறார்களோ, அவர்தான் கட்சியையும், அரசையும்*வழிநடத்த கூடியவர் . என்று உயில் எழுதி இருக்கிறார் அன்னை ஜானகி அம்மையார் அவர்கள் பெயரில் இருந்த அலுவலகத்தை* அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு*. நான் தானமாக தருகிறேன் என்று எழுதி கொடுத்து , முறைப்படி*ஜானகி அம்மையாரை*நேரில் அழைத்து வந்து**கட்சியின் பெயரில் பதிவு செய்து ,தானமாக*வழங்க செய்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.**அதற்கு பின்னால், ஒரு கால கட்டத்தில் ,ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகள்*ஏற்பட்ட*போது செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு அமோக ஆதரவு பெருகி இருந்த காரணத்தை முன்னிட்டு, ஜானகி அம்மையார் அவர்கள்*ஜெயலலிதா அவர்களுக்கு இருந்த*மக்கள் செல்வாக்கை உணர்ந்து, நான் கட்சி, ஆட்சி பொறுப்புகளில் இருந்து விலகி கொள்கிறேன். நீங்கள் கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நல்லபடியாக வழி நடத்துங்கள் .என்று சொல்லி*அ.தி.மு.க. அலுவலகத்தையும் எழுதி கொடுத்து , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தொடர்ந்து செல்வி ஜெயலலிதா*தலைமையில் ஆட்சியை*பிடித்து, இன்றைக்கு எடப்பாடி*பழனிசாமி அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது . தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மட்டும் 8 முறை ஆட்சி பீடத்தில் அமர்ந்து*சாதனை படைத்துள்ளது*


.ஆரம்ப*காலத்தில் இருந்து தன் இறுதி காலம் வரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களாட்சி தத்துவம் என்பதில் இருந்து இம்மியளவு கூட*மாறியதில்லை . மன்னராட்சியின் கொடுமைகளை விவரிக்க நாடோடி மன்னன் படத்தை உருவாக்கினார் .* அந்த படத்தில் புரட்சிக்காரராக வரும் வீராங்கன் தாடி வைத்திருப்பார்**மன்னராட்சியை எதிர்த்து நடிகர் சந்திரபாபுவுடன் புரட்சி செய்யும்போது காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் .* மன்னர் மார்தாண்டனை சந்திக்கும்போது மக்கள் படும் அவதிகளையும் . பிரச்னைகளையும் விவரமாக எடுத்து சொல்வார் . அதை தெளிவாக கேட்ட மன்னர் நானும் உங்கள் புரட்சி கூட்டத்தில் சேர்ந்து விடுகிறேன் என்பார் .அப்போது வீராங்கன்* பலமாக வாய்விட்டு சிரித்து, நீங்களும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்துவிட்டால் நாங்கள் யாரை எதிர்த்து போராடுவது என்பார் . புரட்சி என்றதும் பயந்துவிடாதீர்கள்.*புரட்சி என்றால் ஆயுத புரட்சி அல்ல. ஆட்களை நாங்கள் கொல்வதில்லை*நாங்கள் கொள்ளை அடிப்போம் மக்களின் உள்ளங்களை. தீயிடுவோம் தீமைக்கு*என்பார். மன்னர் நாம் இருவரும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களுக்கு எதிராக போராடுவோம் என்பார் . வீராங்கன், மன்னரை பார்த்து ,மன்னா நீங்கள் இவ்வளவு நல்லவரா என்று கேட்பார் . அதுபோலத்தான் உண்மையான உள்ளம் கொண்டவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் .* இவ்வாறு*திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*

2.அன்பே வா சோக பாடல்* - அன்பே வா*

3.வாரேன் , வழி பார்த்திருப்பேன் -உழைக்கும் கரங்கள்*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி**


* *.***



*

orodizli
30th November 2020, 08:13 AM
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974

7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .

நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .

மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .

உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது.........VND.........
.

orodizli
30th November 2020, 08:13 AM
சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்

டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.....vs.........

orodizli
30th November 2020, 08:17 AM
#mgr_அவர்களின்_தமிழ்ப்_புலமை

m.g.r. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.

சினிமா, அரசியல் என்று இருதுறைகளிலும் முதல் இடத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங்கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக்கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.

பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங்களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:

‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்

கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’

பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத்தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர்களுக்கு ஆசிரியர் திருக்குறளை கரும்பலகையில் எழுதி பாடம் நடத்துவது போல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவனித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.

நீதியரசர் மு.மு.இஸ்மாயிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறுவடிவமாக விளங்கிய நடுநிலை தவறாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்பராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம்பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட்டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்பராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேசமுடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.

இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.

விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.

பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங்களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!

எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.

அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத்துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...

‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;

சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’

நன்றி : இந்து தமிழ் நாளிதழ்.........vsk.........

orodizli
30th November 2020, 08:17 AM
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜியார்.
மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்.
இளமையில் வறுமையில் வாடினாலும் திரைத்துறைக்கு வந்தபின் செல்வச் செழிப்பில் மகாராஜாவாகவே வாழ்ந்தார்.
தமிழகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் கூட்டம்.அவர் படங்கள் திரையரங்கத்துக்கு வந்தால் அது ஒரு திருவிழா.
அரசியலிலும் வெறித்தனமான தொண்டர்கள்.அவர் கட்சிக்கு மட்டுமே ஓட்டுப்போடும் வழக்கம் கொண்டவர்கள். யார் எந்த விமர்சனம் வைத்தாலும் அது உண்மையா பொய்யா என அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.ஓட்டு அவர் கட்சிக்குத்தான்.
திரையுலகையும் சரி அரசியலையும் சரி தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.அவர் எது சொன்னாலும் அதுவே இறுதி முடிவானது.பத்தரை ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்துள்ளார்.
இவ்வளவு செல்வாக்கு,பணம்,புகழ்,பதவி, படைபலம் என அவ்வளவும் இருந்தும் இவர் தனது பிறந்தநாளை தன் வாழ்நாளில் கொண்டாடியதே இல்லை.இவருடைய தொண்டர்களும் ரசிகர்களும்கூட இவர் மறையும்வரை இவருடைய பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை.
இன்றைய இளைஞர்களுக்கு இது நம்ப முடியாத தகவலாக இருக்கும்.ஆனால் இதுதான் உண்மை.
இவரின் மறைவுக்குப் பிறகே இவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் இவருக்கு வெகு விமரிசையாகப் பிறந்தநாள்விழா கொண்டாடப்படுகிறது........ Rajendran Raj

orodizli
30th November 2020, 08:20 AM
மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் வாங்கிய சத்தியம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக நம்முடன் பகிர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் சிவகுமார்.

சிவகுமாரின் தாயார் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த மரியாதை, குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் “அம்மா எப்படி இருக்காங்க?” என்று கனிவுடன் விசாரித்த பண்பு என ஒவ்வொரு வாரமும் பல உருக்கமான சம்பவங்களை விவரித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆரை முதன்முறையாக சந்திக்க தன் தாயாரை அழைத்து சென்றதை பற்றியும், எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்போது அவரை பார்க்க வந்த இந்திராகாந்தி அடைந்த அதிர்ச்சி குறித்தும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் கலையுலக மார்கண்டேயன்.

“எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் நாகப்பட்டணத்தில் புயல் வீசி பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செய்து வந்தது தமிழக அரசு. என் பங்காக முதல்வரிடம் 10,000 ரூபாய் கொடுக்க விரும்பினேன்.

அப்போது என் சம்பளம் 25,000 ரூபாய். என் வீட்டுக்கு பின்னாடி தெருவில் தான் எம்.ஜி.ஆர். அலுவலகம் இருந்தது. போன் செய்து புயல் நிவாரண நிதி தரணும்ணே என்று சொன்னதும். “நீ இப்ப எங்க இருக்க” என்று கேட்டார். “வீட்டுல தான்ணே இருக்கேன்” என்றேன்.

“இங்க கூட்டம் அதிகமா இருக்கு. நீ கோட்டைக்கு வந்திடேன்” என்றார்.

எம்.ஜி.ஆரை பார்க்கணும்னு எங்கம்மா ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருந்தது ஞாபகம் வர, “அம்மா… எம்.ஜி.ஆரை பார்க்க போறேன் வர்றியா”ன்னு கேட்டேன்.

அன்னைக்கு அவங்களுக்கு காய்ச்சல் வேற. எதுவுமே பேசல. கடகடனு உள்ள போச்சு. முகத்தை கழுவி, புடவையை மாத்திகிட்டு, நெத்தி நிறைய விபூதியை பூசிக்கிட்டு, கண்ணாடி போட்டுகிட்டு ரெடியாகி வந்து நின்னுட்டாங்க.

கோட்டைக்கு போய் தகவல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். முதல் மாடியில் தான் முதல்வர் அறை. சிவகுமார் தன் அம்மாவோடு வந்திருக்கார்னு தகவல் சொல்லி இருக்கிறார்கள். சொன்னா நம்பமாட்டீங்க… அடுத்த அஞ்சாவது நிமிஷம், எம்.ஜி.ஆர். மேலே இருந்து இறங்கி வந்தார். அம்மாவை கையெடுத்து கும்பிட்டு எங்களை அவரே மாடிக்கு அழைத்துச் சென்றார்.

பெரியவர்களை வரவேற்கையில் தங்கள் பிருஷ்ட்டத்தை (பின் பகுதி) காட்டக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் படிக்கட்டுகளில் ஏறும்போது கூட வாங்கம்மா… வாங்க…. என்று அம்மாவை வரவேற்றபடி ரிவர்ஸிலேயே படியேறினார். அவரது அறைக்கு சென்றதும், அம்மா தன் கையால் எம்.ஜி.ஆர் இடம் செக்கை கொடுத்தார்.

அம்மாவைப் பார்த்து, “அம்மா… இதமாதிரி ஒரு பிள்ளை உங்களுக்கு கிடைக்க மாட்டான்மா…” என்றார்.

என்னைப் பார்த்து, “டேய்… தம்பி, இதமாதிரி உனக்கொரு அம்மா கிடைக்க மாட்டாங்க. அவங்கள நல்லா பார்த்துக்க” என்றார்.

அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.

அதன்பிறகு 1979-ல் என்னுடைய 100-வது பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். மேடையில் என் அம்மாவையும் அமர வைத்திருந்தேன்.

அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பேசும்போது, “இந்தக் கோலத்திலே ஒரு தாய் வீட்டில் இருந்தால், அந்தத் தாயாரை அழைத்து வந்து இந்த மேடையிலே அமர்த்துகின்ற துணிவு, தைரியம் இங்கு இருக்கும் எத்தனை பேருக்கு இருக்கிறது.

தான் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு காரணமான தெய்வம், அன்னையை மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் வேறில்லை என்ற எண்ணம் கொண்ட ஒருவரால் தான் இப்படி செய்ய முடியும். சிவகுமாரை நான் போற்றுகிறேன்” என்று பேசினார்.

இப்படி என் அம்மாவை சந்தித்த இரண்டு சந்தர்பங்களிலும் அவர் மீதிருந்த பெரும் மதிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்” என்று சொன்ன சிவகுமார், அடுத்து சொன்ன சம்பவம் எம்.ஜி.ஆரின் மன உறுதியை இந்தத் தலைமுறையினருக்கு விளக்கும் ஒரு அற்புதமான அனுபவம்.

“எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு போவதையே சுத்தமாக வெறுத்தவர் அவர். ஒருமுறை கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னபோது அந்தக் கருவிகளையெல்லாம் வீட்டுக்கு எடுத்துவர சொன்னார்.

“சார்…. அதெல்லாம் நட், போல்ட் பதியம் போட்டு தரையோட தரையா நிரந்தரமா ஃபிக்ஸ் பண்ணின மிஷின்ஸ்” என்றதற்கு, “அப்படி தூக்க முடியாம உலகத்துல ஒன்னு இருக்குதா? எடுத்துட்டு வரசொல்லுய்யா. என்ன செலவோ நான் கொடுத்திடறேன்” என்றார். ஒரு கண் ஆபரேஷனுக்கே ஆஸ்பத்திரியை தூக்கி வர சொன்னவர், வேற வழி இல்லாம அன்னிக்கி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போனார்.

அதன் உரிமையாளர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியிடம், “என் முழு ரகசியத்தையும் நான் உங்க முன்னாடி வைக்கிறேன். இது எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே போகக்கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் அட்மிட் ஆனார்.

ஜானகி அம்மாவைத் வேற யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டார் ரெட்டி. ஜானகி அம்மாவைத் தவிர ரெண்டாவதா உள்ளே சென்று எம்.ஜி.ஆரை சந்தித்த வெளி ஆள் இந்திராகாந்தி ஒருவர் மட்டும் தான்.

உடல் மெலிந்து, கண்களில் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய், சோர்ந்து போன மனிதராக ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். படுத்திருந்த நிலைமையைக் கண்டு அதிர்ந்து போனார் இந்திரா.

நான்கு மாதங்களுக்கு முன்னால் தெலுங்கு கங்கா திட்டத்தில் கையெழுத்திடுவதற்காக இந்திரா சென்னை வந்திருந்தபோது பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விழா மேடையின் மிக நீண்ட படிக்கட்டுகளில் அன்று இளைஞனைப் போல துள்ளிக் குதித்து படியேறி வந்த எம்.ஜி.ஆர். இன்று ஆஸ்பத்திரியில் கிடக்கும் கோலத்தைக் கண்டு, “இஸ் ஹி த சேம் மேன், ஐ மெட் ஃபோர் மன்த்ஸ் பேக்?” என்று அதிர்ச்சியில் கேட்டார் இந்திரா.

“எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை, அமெரிக்காவுக்கு மாத்துங்க” என்று சொல்லிவிட்டு சென்றார். உடனடியாக ஒரு நாள் நள்ளிரவில் டாக்டர்கள் குழுவோடு எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கும் புரூக்ளின் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இனி எம்.ஜி.ஆர். பிழைத்து வர மாட்டார் என்று தமிழகத்தில் செய்தி பரவத் தொடங்கியது. அவரது அமைச்சரவையைச் சேர்ந்தவர்களே நம்பிக்கையின்றி இருந்தனர்.

எனவே, அவருக்கு பிறகு யார் முதல்வர், யார் நிதியமைச்சர், யார் கல்வி அமைச்சர் என்று அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசி ஒரு உடன்படிக்கையை கூட எட்டிவிட்டிருந்தனர். அவர்கள் யார் யார் என்று இப்போது பெயர் சொல்ல விரும்பவில்லை.

சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. ஆம்புலன்சில் படுத்தபடுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்த கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.

யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.

புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.

ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்…!
தாய் வார இதழ்
Published – அருண் சுவாமிநாதன்

Posted : MG.Nagarajan .........

orodizli
1st December 2020, 08:15 AM
மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பெயர் #எம்ஜிஆர்

எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம் வடபழனியில் உள்ள பிரபல மண்டபத்தில் காலையில் நிகழ்ச்சி
காலையில் கோட்டைக்கு சென்றிருந்த எம்ஜிஆர் கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது மண்டபத்தில் இருந்தவர் மத்தியில், எம்ஜிஆர் வருகிறார் என்று ஒரே பரபரப்பு/

ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் வந்தவுடன் பாலத்தின் மேல் செல்லாமல் முன்னே செல்லும் கான்வாய் கார்களுக்கும் தெரியாமல் திடீரென உஸ்மான் ரோடு திரும்பி தியாராய நகர் வழியாக முதலமைச்சரின் கார் பயணிக்கிறது நேராக சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலதுபுறம் திரும்பி சலவைத்தொழிலாளார்கள் குடியிருப்புக்கு செல்கிறார் எம்ஜிஆர்

ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது ஆனால் எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கொண்டு சரசரவென ஒரு சந்தில் கால்நடையாக செல்கிறார்.. பாதுகாப்பு அதிகாரிகளும் புரியாமல் அவர் பின்னே ஓடுகிறார்கள்.

கடைசியில் அங்கே ஒரு வீட்டில் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது
எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் அவசரமாக நாற்காலியை தேடுகிறார்கள் ஒரு காலுடைந்துபோன நாற்காலிக்கு நான்கைந்து செங்கற்களை முட்டுக்கொடுத்து அதிலே எம்ஜிஆரை உட்கார வைக்கிறார்கள்.

எம்ஜிஆரும் மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் யாருமே எதிர்பார்க்காத பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதனபிறகு அவர் கோட்டைக்கு மீண்டும் பறந்துவிடுகிறார்.
முதலமைச்சர் எம்ஜிஆர் போன திருமணம் வேறு யாருயுடையதுமல்ல, அவருக்கு வழக்கமாக துணிகளை சலவைசெய்துகொடுப்பவரின் குடும்பத்துடையது.

அப்படியே, சின்ன பிளாஷ்பேக்

அந்த சலவைத்தொழிலாளி தன் குடும்பத்து திருமண அழைப்பிதழை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார் ஜானகியும் அதை வாங்கிக்கொண்டு அப்போதே ஒரு தொகையை திருமண சீதனமாக கொடுத்திருக்கிறார்
முடிந்தால் மட்டுமே தலைவர் திருமணத்துக்கு வருவார் என்று சொல்லிஅனுப்புகிறார்.

அப்போது சலவைத்தொழிலாளி, தலைவர் திருமணத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை
பத்திரிகையையாவது பார்க்கும்படி செய்துவிட்டால் அதுவே போதும் என்கிறார். ஜானகியும் உடனே வாக்குறுதி அளித்துவிட்டு எம்ஜிஆர் தினமும் எழுதும் டைரியில் தேதிக்கேற்ற இடத்தில் அந்த பத்திரிகையை வைத்துவிடுகிறார் அதைப்பார்த்துதான் முதலமைச்சர் எம்ஜிஆர் திருமணத்திற்கு போயிருக்கிறார்.........sk...

orodizli
1st December 2020, 01:46 PM
பதவி ஆசை ...
கோடிகள் சேர்த்த பின் ஆசை... முதல்வர் ஆக நடிகர்களுக்கு

சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை...
நடிகர்களுக்கு

வயதாகி மார்கெட் போன பின் பொழுதை கழிக்க தமிழக அரசியலில் இறங்கும் நடிகர்கள் நினைப்பது கிடைத்தால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் பொழுது போகுமே என்று

நடிக்க வரும் முன்னே கதர் உடையுடன் நாட்டு சுதந்தரம் வேட்கையோடு வாழ்ந்து கொள்கையால் ஈர்க்க பட்டு தி மு க வில் இணைந்து பொருள் கொடுத்து உழைப்பை கொடுத்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்த எம் ஜி ஆர் கருணாநிதி ஊழல் ஆட்சி செய்ததால் தனியாக கட்சி கண்டு முதல்வர் ஆகி ஒரு பொற்க்கால ஆட்சி கொடுத்தார் ,தன் பொருள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்ததார் எம் ஜி ஆர் தமிழகத்தில்

எம் ஜி ஆரை கண்டு எம் ஜி ஆர் ஆக துடிக்கும் நடிகர்களுக்கு
எம் ஜி ஆர் போல் பதவி இல்லாத பொழுதும் மக்கள் சேவை செய்து மக்களை காக்காத உங்களை மக்கள் துரத்தி அடிப்பார்கள் ...

வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்.........am.........

orodizli
1st December 2020, 01:47 PM
தமிழக மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தி௫க்கும் சாதனை மனிதா் மக்கள்திலகம் எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக
இ௫ந்தவா் தோட்டத்தம்மா என்று அழைக்கப்பட்ட தி௫மதி ஜானகி எம்ஜிஆா் !தி௫.பி .நாராயணனின் உடன்பிறந்த மூத்த சகோதாிதான் தி௫மதி ஜானகி ராமச்சந்திரன் கேரள மாநிலம் வைக்கம் எனும் ஊாில் பொன்மனச்சோி இல்லத்தில் 1923ஆம் ஆண்டு நவம்பா் 30ம்தேதி (30/11/1923) ராஜகோபால் அய்யா் வைக்கம் நாராயணி தம்பதிய௫க்கு மகளாய்ப் பிறந்தவா் வி.என்.ஜானகி .இவரது தந்தை கும்பகோணத்தை பூா்விகமாக கொண்டவா்!
சிறந்த தமிழாசிாியரான இவா் பல திரைப் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளாா்.இவரது தம்பி தமிழ்த்தியாகராஜா் என்று அழைக்கப்பட்ட பாபநாசம் சிவன் ஆவாா்!ராஜ
கோபால் அய்யா் ஜெமினி ஸ்டுடியோ மாா்டன் தியேட்டா்ஸ்உள்பட இடங்களில் பணியற்றியவா் அவ௫டைய மனைவி வைக்கம நாராயணி கேரள மாநிலம் வைக்கத்தை பூா்விகமாகக்
கொண்டவா் !
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த வி.என்.ஜானகி.தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராட்டியம் ஆங்கிலம் என பன்மொழிப் புலமைப்பெற்றவா் தென்னிந்திய
நடனக்கலை
கலைகளான பரத நாட்டியம் மோகினி ஆட்டம் குச்சிப்புடி போன்றவற்றில் சிறப்பான பயிற்சி பெற்றவா் !
இயக்குநா் கே.சுப்பிரமணியம் தோற்றுவித்த நி௫த்யோதயா நடனப் பள்ளியின் முதல் மாணவி ,நடன கலாசேவா என்ற நாட்டியக்
குழுவில் சோ்ந்து பல ஊா்களில் ஏராளமான நாட்டிய நாடகங்களில் நடித்துள்ளாா் . அது தவிர சிலம்பம் கத்திச சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலைகளிலும் இவா் கைதோ்ந்தவா் !
1937 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவா் 25க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா் !
திரைத்துறையில் இ௫ந்த காலங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவா்!எம்ஜிஆா் திரைத்துறை
யிலும் அரசியலிலும் வளரத் தொடங்கிய காலக்கட்டத்தில் இ௫ந்தே தோட்டத்தம்மா எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக இ௫ந்தாா் .சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் வீட்டிலி௫ந்து உணவைக் கொண்டுவரச்
சொல்லி அதையும் தோட்டத்தம்மா கையால் பாிமாறிச்
சொல்லி சாப்பிடுவதையே வி௫ம்பி இ௫க்கிறாா் எம்ஜிஆா் !
உண்மையில் எம்ஜிஆா் கொடுக்கும் குணத்திற்கு சற்றும் சளைத்தவரல்ல தோட்டத்தம்மா உதவி கேட்டு வந்தவரை எம்ஜிஆா் வீட்டுக்கு அனுப்பினால் வந்தவாின் சூழ்நிலைப்புாிந்து எம்ஜிஆா் சொன்ன தொகையை விட ௯டுதலாகவே கொடுத்து அனுப்புவாராம் தோட்டத்தம்மா !
1950 களில் சென்னை லாயிட்ஸ் சந்தில் உள்ள ஒ௫ வீட்டில் எம்ஜிஆ௫ம் தோட்டத்தம்மாவும் வசித்து வந்தனா் .அப்போது தோட்டத்தம்மாவின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது
தான் தற்போதைய அஇஅதிமுக வின் தலைமை அலுவலமாகவுள்ள இடம் !
1956ல் எம்ஜிஆா் பிக்சா்ஸ் தொடங்கப்பட்ட போது எம்ஜிஆ௫டன் தோட்டத்தம்மாவும் எம்ஜிஆாின் சகோதரா் எம்ஜி.சக்ரபாணியும் நிறுவனத்தின் இயக்குநா்களாக இ௫ந்தனா்!எம்ஜிஆா் தயாாித்து இயக்கிய "நாடோடி மன்னன் " வெற்றித்திரைப்
படம் உ௫வாக மிக முக்கியக்காரண
மாக இ௫ந்தவா் தோட்டத்தம்மா !
எம்ஜிஆ௫ம் ஜானகி அம்மையா௫ம் திரை உலகில் உச்சம் தொட்டி௫ந்த காலத்தில் எம்ஜிஆாின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப்பின் 1962 ஆம் ஆண்டு எம்ஜிஆ௫க்கும் ஜானகி அம்மையா௫க்கும் தி௫மணம் நடைப்பெற்றது ! தி௫மதி ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று ! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சா் இவரே ! ������������������������ --எம்.எஸ்.சேகா்
கோவை-641103.

orodizli
1st December 2020, 01:48 PM
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

போட்டி மனப்பான்மை வளரவேண்டும்
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை வழங்கி இசைப்பட வாழலாம். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி இசைபட வாழலாம். நல்ல எண்ணங்களை வழங்கியும் இசைபட வாழலாம்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.! "

( டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய சென்னை
அவ்வை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்ஜியார்
ரூ.30 ஆயிரம் நன்கொடை வழங்கிய விழாவில்
அறிஞர் அண்ணா . விழா தலைவர் , அப்போதைய
நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் , 30 - 01 - 1961).........sk...

orodizli
1st December 2020, 01:59 PM
'நான் பார்த்தால் பைத்தியக்காரன் கைபிள்ளைகளுக்கும் வைத்தியம் பார்ப்பேன்', அப்படி வைத்தியம் பார்த்து கைபிள்ளைகளுக்கு உண்மை என்ற கசப்பு மருந்து கொடுத்ததால் எதிரில் பார்ப்பவர்களை எல்லாம் மனநிலை தவறியவர் போலவும் ஒருவரே 10,15 ஐடி வைத்திருப்பவராக தெரிவதும் கைபிள்ளைகளுக்கு சகஜமே.! மேலும் சில நாட்கள் உண்மை என்னும் கசப்பு மருந்து குடித்தால் எல்லாம் சரியாகி விடும்.

"ஒளிவிளக்கு" தலைவரின் 100 வது படம். சென்னையில் ஒரு திரையரங்கில் கூட 100 நாட்கள் ஓடவில்லை. ( ஓட்டுவதற்கு கிஞ்சித்தும் முயற்சிக்காத மஹான்) ஆனால் 1968 ல் வெளியான "ஒளிவிளக்கு" எண்ணற்ற சாதனைகளை குவித்து வசூலில் இந்தியாவிலும் இலங்கையிலும் நிகரற்ற சாதனையை செய்தது.

அதே நேரத்தில் மாற்று நடிகரின் 100 வது படம் "நவராத்திரி". சென்னையில் திரையிட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாட்கள் முரட்டு வடக்கயிற்றின் உதவியால் ஓட்டப்பட்டு கண்ணுக்கு தெரியாத வசூலை சாதனையாக சமர்ப்பித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டப்பட்டு மொத்தம் 6 திரைகளில் 100 நாட்கள் ஓட்ட......ப்பட்டது.. ஒரு வேடத்தில் நடித்தாலே மிகை நடிப்பில் பதறும் பாமரர்கள் அய்யன் 9 வேடத்தில் வந்தால் தாங்குவார்களா? மேக்கப்புக்கு பெருந்தொகை பிலிம்சுருளுக்கு பெரும்தொகை என்று மிகவும் கஷ்டகாலத்தில் நாகராஜன் சிக்கி அதில் இருந்து படிப்படியாக முழுவதுமாக கடனில் மூழ்கிய சோகம் பரிதாபகரமானது.

மதுரை தேவியில் 108 நாட்கள் ஓட்டப்பட்டு மொத்த வசூலாக ரூ 187738.13 பெற்றது. இதுவும் அவர்கள் அளித்த சினிமா பட்டறை வசூல்தான். ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் மொத்தம் 3 திரையரங்குகளில்தான் 100 நாட்கள் ஓடியது. இலங்கையில் முதல் வெளியீட்டில் 4 திரையரங்கில் 100 நாட்களை கொண்டாடியது. 2வது 3வது மற்றும் 4வது வெள்யீடுகளில் தலா 1 தியேட்டரில் 100 நாட்களும் ஓடி 9 திரையரங்கில் 100 நாட்கள் ஓடி யது.

இருப்பினும் சென்னையில் 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டப்பட்ட "ஆலயமணி""நவராத்திரி" "கை கொடுத்த தெய்வம்" போன்ற படங்களின் மொத்த வசூலை வெறும் 40 நாட்களில் ஒளிவிளக்கு தூக்கியெறிந்தது கைபிள்ளைகளுக்கு பேரதிர்ச்சியாக இருக்கத்தானே செய்யும்... 9 வேடமல்ல, 100 வேடங்கள் போட்டு பாமர மக்களை விரட்டி அடித்தாலும் புரட்சி நடிகரின் ஒரே முகமான தன் திருமுகத்தை காட்டி மீண்டும் வரவழைக்க முடியும் என்பதை நிரூபித்த படம்தான் "ஒளிவிளக்கு".

மதுரையில் மீனாட்சி திரையரங்கில் 147 நாட்கள் ஓடி ரூ316714.80 ஐ வசூலாக பெற்றது. தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் அதிகமாக அரங்கு நிறைந்து சாதனையை தொடர்ந்தது. நெறி கெட்டு 100 நாட்கள் ஓட்டிய அய்யனின் படத்தை தறி கெட்டு ஓடி புழுதி பறக்க வெற்றிக் கொடியை பறக்க விட்ட படம்தான் தலைவரின் "ஒளிவிளக்கு".

சென்னையில் 100 நாட்கள் ஓடாமலே "ஒளிவிளக்கு" பெற்ற வசூல் ரூ928171.28 ஆனால் 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டப்பட்ட "நவராத்திரி" பெற்ற வசூல் 6 லட்சத்தை கூட
எட்டவில்லை என்பது கைபிள்ளைகளின் சோகம்.
இப்படித்தான் தகுதியில்லாத படங்களை 100 நாட்கள் ஓட்டி தியேட்டர் முதலாளிகளை வாழ வைத்த தெய்வங்கள்தான் அய்யனின் கைபிள்ளைகள்.

ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் மொத்தம் 64 அரங்குகளில் 50 நாட்களும் இலங்கையில் 8 அரங்குகள் சேர்த்து மொத்தம் 72 அரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்ததே 100 வது படங்களில் செய்த அதிகபட்ச சாதனையாக திகழ்கிறது. கைபிள்ளை நாயகனின் சாதனை கையளவே, ஆனால் மக்கள் திலகத்தின் சாதனை மலையளவு என்பதை மனதில் கொண்டு மனம் வெம்பாமல் புரட்சி நடிகரை நினைத்து பெருமை படுங்கள் கைபிள்ளைகளே.

இப்படி வடக்கயிறு போட்டு ஓட்டியே அய்யன் தனக்கு ஆதரவு இருப்பதாக நினைத்து ஏமாந்து தேர்தலில் தான் படுதோல்வி அடைந்ததுடன் தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட்டை பறிகொடுத்தது அவரது கட்சியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
அந்த டெப்பாசிட்டையாவது திரும்ப கொடுத்திருந்தால் வேட்பாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். அதை செய்தாரா உங்கள் அய்யன்?....(அதோடு அன்னை திருமதி ஜானகி அம்மையாரையும் ஏரு கட்ட வைத்தது)

அனைத்திந்தியாவிலும் வசூலில் தன்னிகரற்று விளங்கிய "சக்கரவர்த்தி திருமகனை" நினைத்து பெருமைபடுவதை விடுத்து அவரிடம் போட்டி போட கனவிலும் எண்ண வேண்டாம். நாம் தகுந்த ஆதாரங்களோடு பதிவிடுவதால் கைபிள்ளைகள் கதறுவதும் பதறுவதும் தெளிவாக தெரிகிறது..........ksr.........

orodizli
2nd December 2020, 08:05 AM
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

1. பிரஹலாதா 12.12.1939

2. ரத்னகுமார் 15.12.1949

3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.

4.தாயின் மடியில் 18.12.1964.

5. ஆசைமுகம் 10.12.1965

6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.

7. ஒரு தாய் மக்கள் 9.12.1971..........vs...

orodizli
2nd December 2020, 08:06 AM
பதவி ஆசை
கோடிகள் சேர்த்த பின் ஆசை முதல்வர் ஆக நடிகர்களுக்கு

சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை
நடிகர்களுக்கு

வயதாகி மார்கெட் போன பின் பொழுதை கழிக்க தமிழக அரசியலில் இறங்கும் நடிகர்கள் நினைப்பது கிடைத்தால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் பொழுது போகுமே என்று

நடிக்க வரும் முன்னே கதர் உடையுடன் நாட்டு சுதந்தரம் வேட்கையோடு வாழ்ந்து கொள்கையால் ஈர்க்க பட்டு தி மு க வில் இணைந்து பொருள் கொடுத்து உழைப்பை கொடுத்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்த எம் ஜி ஆர் கருணாநிதி ஊழல் ஆட்சி செய்ததால் தனியாக கட்சி கண்டு முதல்வர் ஆகி ஒரு பொற்க்கால ஆட்சி கொடுத்தார் தன் பொருள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்ததார் எம் ஜி ஆர் தமிழகத்தில்

எம் ஜி ஆரை கண்டு எம் ஜி ஆர் ஆக துடிக்கும் நடிகர்களுக்கு
எம் ஜி ஆர் போல் பதவி இல்லாத போதும் மக்கள் சேவை செய்து மக்களை காக்காத உங்களை மக்கள் துரத்தி அடிப்பார்கள்

வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்..........va...

orodizli
2nd December 2020, 08:07 AM
"சிரித்து வாழ வேண்டும்"

‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

* இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

*தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

*ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

*தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

*அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

* இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

*சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

* நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

*பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

*‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

*படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்..........vs.........

orodizli
2nd December 2020, 08:08 AM
‘"துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்"..! -

"நிஜத்திலும் நடிகையரின் காவலர் எம்.ஜி.ஆர்"

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.

"எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்"....

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

Published: யாழ் இணையம் in வண்ணத் திரை......... MGN...

orodizli
2nd December 2020, 08:11 AM
புரட்சி தலைவர் MGR அவர்களுக்கு ரசிகர் மேல் உள்ள பாசம், அன்பு போல், வேறு எந்த நடிகருக்கும் கிடையாது. இதை பல முறை நான் நேரில் பார்த்து உள்ளேன். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி மூலம் நடந்ததை தெரிவிக்க ஆசை படுகிறேன். மும்பையில் எங்க ரசிகர் மன்றத்தின் சார்பாக "இதயக்கனி" படம் ரிலீஸ் அன்று இரவு காட்சியில் படத்தின் நாயகி ராதாசலுஜா அவர்களை வரவைத்து விழா எடுத்து கொண்டாடினோம். மன்றம் சார்பாக சிறப்பு மலர் ஒன்றை ராதாசலுஜா கையால் வெளியிட்டோம். தலைவர் சந்தித்து மலர் காண்பிக்க சென்னை புறப்பட்டு சத்யா ஸ்டூடியோ சென்றோம். தலைவர் அவர்களை சந்திக்க டைரக்டர்கள், படம் அதிபர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் என்று பல பேர் காத்து கொண்டு இருந்தார்கள். தலைவர் உதவியாளர் மூலம் நாங்க வந்த விஷயம் தெரிந்தவுடன் உடனே தலைவர் எங்களை உள்ளே வருமாறு கூறினார். தலைவர் சந்தித்து மலர் கொடுத்தோம். முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம்வரை படித்தார். மிகவும் சந்தோசம் அடைந்தார். விழாவை அதிகம் செலவு செய்து நடத்தி உள்ளீர்கள் என்று அன்புடன் கடிந்து கொண்டார்.சுமார் 10 நிமிடம்வரை எங்களுடன் இருந்தார். நாளை தோட்டத்தில் வந்து சந்திக்கவும் என்று கூறி அன்புடன் எங்களை வழிஅனுப்பி வைத்தார். எவ்வளவு பேர் காத்து இருந்தும் எங்களை உடனே சந்தித்து பேசியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது. ரசிகர் மேல் தலைவருக்கு உள்ள பாசம் பரிவு, அன்பு கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். இது போல பல நிகழ்ச்சிகளை பிறகு தெரிவிக்கிறேன். இது போல தலைவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நண்பர்கள் பகிந்து கொள்ளலாம். நன்றி.... Albert Paul...

orodizli
2nd December 2020, 08:11 AM
"படகோட்டி"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்.........
------------------
இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள்

மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம்

தான் எவ்வளவு முயன்றும் இவர்களின் அறியாமையை போக்க முடியவில்லையென்ற ஆதங்கம்

உழைத்தவர்கள் தெருவில் நின்று விட்ட விரக்தி

தன் ஆற்றாமையை , மனக்குமுறலை முகபாவங்களாலும் தன் நடையினாலும் வெளிக் கொணரும் விதம் அபாரம்

வார்த்தைகளையும் , வாக்கியங்களையும்
தன் உடல் மொழியால் நம்மை முழுமையாக உணரவைக்கும் நடிகர் உலகிலேயே எம் ஜி ஆர் ஒருவர் தான் .

குறிப்பு : இப்பாடலில் ஒரு முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று அம்முதியவருக்கு மக்கள் திலகம் பணம் இரண்டாயிரம் கொடுத்து உதவினார் ....Hyd...

fidowag
2nd December 2020, 07:12 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீடு*தொடர்ச்சி .................
------------------------------------------------------------------------------------------------------------------------
26/11/20 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி -மக்கள் திலகம் /புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய*டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன்* தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .**
தகவல் உதவி : திரு.பந்தமுத்து , மம்சாபுரம்*.

27/11/20 முதல் ஆத்தூர்*என்.எஸ். அரங்கில்*கலை*வேந்தன்*எம்.ஜி.ஆர். வழங்கும்*நம் நாடு தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .


30/11/20 முதல் ஆலங்குளம்*டி.பி.வி. மல்டிப்ளக்ஸ் அரங்கு ஸ்க்ரீன் 2ல்*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்*தர்மம் தலை காக்கும்*தினசரி 3 காட்சிகள்*

30/11/20 முதல் விக்கிரமசிங்கபுரம் (தென்காசி மாவட்டம் )தாய் சினீஸ்*அரங்கில்*பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் தினசரி 2 காட்சிகள்*(மாலை / இரவு ) நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.வி. ராஜா, நெல்லை.*

30/11/20 முதல் சேலம்*ராஜேஸ்வரியில் நடிக மன்னன் /நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய* எங்க*வீட்டு*பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.சத்தியமூர்த்தி, சேலம்*.* *

fidowag
2nd December 2020, 09:14 PM
பாட்டாலே* புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 25/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கால கட்டத்தில் தவிர்க்க முடியாத தலைவராகவும், திரை உலகின் முடிசூடா மன்னனாகவும் விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.வில் இருந்து எப்படி நீக்கப்பட்டார் ,அதற்கான நெருக்கடிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை காலம் அறியாதது அல்ல.* மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன், குமரிக்கோட்டம், நல்லநேரம் போன்ற வெற்றி படங்கள் வந்த கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தன் மகன் மு.க. முத்து நடிப்பில் பிள்ளையோ பிள்ளை படம் தயாரித்து வெளியிட்டார். அந்த படத்தின் பூஜை நாளன்று* கிளாப் அடித்து துவக்கி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .* படம் முடிவுற்று ,பிரிவியூ காட்சிக்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் . முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் வருகை தருகின்றனர் .* பொதுவாக எம்.ஜி.ஆர். அவர்களின் படங்கள் வெளியாகின்றபோது மு.க.ஸ்டாலின் , மு.க. முத்து, மு.க. அழகிரி போன்றவர்கள்*எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பாடல், இந்த காட்சி, இந்த வசனம் நன்றாக இருந்தது . சண்டை காட்சிகள் அபாரம் என்று குழந்தை பருவத்தில் இருந்தே பாராட்டுவது வழக்கம் . பிள்ளையோ பிள்ளை படத்தை பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் அவரவர்க்கென்று தனி பாணி இருக்க வேண்டும்* யாரும் மற்றவர்களை போல நடிக்க முயற்சிக்க கூடாது. தனித்தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்று விமர்சனம் செய்து பேசியதோடு மு.க. முத்து வுக்கு*கடிகாரம் பரிசளித்தார் .* *.**


இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர்க்கு பதிலடி கொடுப்பதற்காக வந்திருக்கிறது பிள்ளையோ பிள்ளை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது .தமிழகம் முழுவதும் பல இடங்களில் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு,*மு.க. முத்து மன்றம் துவக்கப்பட்டது .* எம்.ஜி.ஆர். அவர்கள் மனம் புண்படும்படி*தி.மு.க.வினரின் செயல்பாடுகளும், தலைமையின் செயலும் அமைந்தன .*அந்த கால கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டார் .* உதாசீனப்படுத்தப்பட்டார் .* அந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் கணக்கு கேட்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது*இந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்த பலர் மூலம் ரகசியமாக தகவல்கள் கிடைத்தன .* மு.கருணாநிதி, கே.அன்பழகன் போன்றவர்களின் வீட்டு மின்சார கட்டணங்கள் தி.மு.க. கட்சி நிதியில் இருந்து கட்டுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன .* கட்சி பணத்தை பல்வேறு வகைகளில் கையாடல் செய்கிறார்கள் என்று பகிரங்கமாக தெரிந்தபின்னர் தான் கணக்கு கேட்கும் விவகாரத்தை எம்.ஜி.ஆர். அவர்கள் எழுப்பினார் .* இன்றைய கால கட்டத்தில் முரசொலியில் எழுதுகிறார்களே* அது போல துரோக மனப்பான்மையுடன் எம்.ஜி.ஆர். அவர்கள் செயல்படவில்லை .* எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த ஓ.ஏ .கே..தேவர்* சிவாஜி நாடக மன்றத்திலும், சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார் .எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் . தி.மு.க. வின் பிரச்சார நாடக குழுவில் உறுப்பினராக இருந்தவர ஓ.ஏ.கே. தேவர் . ஓ.ஏ..கே.தேவர்*மறைந்ததும் ,முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தியவர் எம்.ஜி.ஆர். தான் .


திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி ::* நாடோடி மன்னன் படத்தில் மன்னன் மார்த்தாண்டன் முடிசூட்டு விழாவிற்கு முன்பு புரட்சிக்காரன் வீராங்கன்*மந்திரிகள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்வார் . அதில் மன்னரை கொல்ல பழ ரசத்தில் விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு நடக்கும்.* விஷம் கலந்த பழ ரசத்தை அருந்தியதும் மன்னர் மயக்கமடைவார் . அப்போது மந்திரிகள், வீராங்கனை மன்னராக வேஷமிட்டு தற்காலிகமாக நடிக்க சொல்வார்கள். வீராங்கன்* நடிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. சட்டம் இயற்றும் அதிகாரம் என் கையில் இருக்க வேண்டும். அப்போதுதான் மன்னனாக நடிக்க இணங்குவேன்* என்பார் . அப்போது மந்திரிகள் முன்பின் தெரியாதவனிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது ஆபத்தை விளைவிக்கும் .நீ புதியவன். விவரங்கள் போதாது என்று மறுத்து பேசுவார்கள் . வீராங்கன்* எனக்கு ஏர் பிடித்து உழவும் தெரியும். கத்தி பிடித்து களத்தில் சண்டையிடவும் தெரியும். உழ முடியாத மாடு, உதவாத கலப்பை இவற்றை நாங்கள் நம்புவதே இல்லை .* அமைச்சர்கள் உன் பேச்சை நம்பி அதிகாரத்தை உன் கையில் ஒப்படைக்கிறோம் . நம்பிக்கை துரோகம் செய்யமாட்டாய் என்று நம்புகிறோம். அப்போது வீராங்கன் சொல்வார் .அமைச்சரே, என்னை நம்பாமல் கெட்டவர் பலர். நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை என்பார்.* பின்னர் மன்னராக முடிசூட்டி கொண்டு வீராங்கன் மக்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பார் . குடிசைகள் அகற்றப்பட்டு . தேவையில்லாத காரணத்தால் அவை கொளுத்தப்படும் .எதிர்க்கட்சியினர்* கேள்வியில் அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்களா என்பதற்கு பணக்காரர்கள் இருப்பார்கள்,* ஏழைகள் இருக்கமாட்டார்கள் என்பார் .* 1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் அறிவித்த பல திட்டங்களை 1977ல் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றினார் .*பல இடங்களில் குடிசைகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் மூலம்*கட்டிடடங்கள் கட்டப்பட்டு ஏழைகள் அதில் குடி புகுவதற்கு வழி வகுத்தவர்தான்* தங்க தலைவர் ,வாரி கொடுத்த வள்ளல், ஏழைகளின் இதயவேந்தன், வற்றாத ஜீவநதி, மறைந்து 33 ஆண்டுகளுக்கு பின்னரும் என்றும் ஏழைகளின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்*ஏழை* எளியோர் மீது அளவு கடந்த அன்பு, பாசம்* வைத்திருந்தார் .****


குடிசை வாழ் மக்களை ஒருமுக்கிய கட்சி பிரமுகர் , வந்து என்னுடைய இடத்தில நான் மருத்துவமனை கட்ட வேண்டி இருப்பதால் அங்குள்ள 40 குடிசை வாழ் மக்களை காவல்துறையினரை விட்டு விரட்ட சொல்லுங்கள் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் விண்ணப்பிக்கிறார் . பதிலுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ,நீங்கள் அந்த ஏழை மக்களுக்கு வேண்டிய பணம் கொடுத்தால் அவர்கள் இடம் பெயர்ந்து அந்த பணத்தில் வீடு கட்டி கொள்வார்கள்.* என்றதும். அந்த பிரமுகர் அதற்கு ரூ.40 லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் கைவசம் இல்லை. நீங்கள் காவல்துறைக்கு தகுந்த உத்தரவிட்டு அந்த குடிசை வாழ் மக்களை அந்த இடத்தில இருந்து விரட்டி அடித்து ,காலி செய்து தாருங்கள் என்று மீண்டும் கேட்டு கொண்டார் .இதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர். அவர்க.ள் , குடிசை வாழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த பிரச்னைக்கு தீர்வு காண என்னைத்தான் அணுகுவார்கள் நீங்கள் எனக்கு முக்கியமானவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்*.* அவர்களை நிராதரவாக விட நான் தயாரில்லை. அந்த இடம் உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும், நீங்கள் பணம் கொடுத்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க பாருங்கள். இல்லையேல் ,இந்த பிரச்னையில் உங்களுக்கு சாதகமாக எந்த முடிவும் ,ஏழைகளுக்கு எதிராக எடுக்க என்னால் முடியாது. நீங்கள்போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .* இதனால் மன வருத்தத்தோடு வீடு திரும்பிய அந்த பிரமுகரிடம், அவரது கார் ஓட்டுநர் ,ஐயா, தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் பணம் வந்துள்ளது . கார் டிக்கியில் ஒருவர் வைத்துவிட்டு உங்களுக்கு தகவல் தரும்படி சொல்லிவிட்டு போனார் என்றதும். ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி அடைந்தார் அந்த பிரமுகர் . கட்சி பிரமுகரின் மனம் புண்படும்படி பேசிவிட்டோம். அனால் அவரை விடக்கூடாது என்று . அவருக்கு ஆறுதல் தரும் வகையில் பணத்தை கொடுத்து அனுப்பினார் தலைவர் நேரடியாக அந்த பிரமுகரிடம் கொடுத்திருந்தால் அது கௌரவ பிரச்னையாக இருந்திருக்கும் .அதனால் அவர் தலைவர் எம்.ஜி.ஆர். அளித்த தேநீர் அருந்தும் வேளையில் அவருடைய கார் ஓட்டுநர் மூலம் ரகசியமாக பணம் கொடுத்து உதவியிருந்தார் .****. அதே சமயத்தில் ஏழைகள் மனம் வாட கூடாது என்று கருதி கட்சி பிரமுகர் மூலம் உரிய பணத்தை கொடுக்க செய்தார்* எம்.ஜி .ஆர் . எம்.ஜி.ஆர். அவர்கள் நினைத்திருந்தால் ஒரே உத்தரவின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு சாராருக்கு சாதகத்தையும் .ஒரு சாராருக்கு பாதகத்தையும் அது விளைவித்திருக்கும். ஆனால் ஒரே சமயத்தில் இரு சாராருக்கும் உதவும் வகையில் செயல்பட்டு பிரச்னையை சுமுகமாக முடித்தார் எம்.ஜி.ஆர். இந்த பிரச்னைக்கு பிறகு, அந்த பிரமுகர் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார் .**அத்தகைய பெருமைமிகு தலைவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்..


யாராவது புகார் கொடுத்து*விட்டால்,**அவர்கள் வேண்டியவர்கள் என்பதற்காக, அந்த புகாரின் நியாயத்தை உணர்ந்து பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து எதிர் முகாமில் உள்ளவர்கள் வேதனை அடையும்படி எந்த நிகழ்வையும் நடத்த மாட்டார் .தலைவர் எம்.ஜி.ஆர்.* ஈரோடு மாவட்டம், சென்னிமலை*பகுதியில்**உள்ள கந்தசாமி என்பவர் அ.தி.மு.க. அலுவலகத்தில்**குறை*கேட்கும் நேரத்தில் தலைவரை சந்தித்து* முறையிடுகிறார் . எங்கள் பகுதியில்*வரும் தண்ணீரை சென்டெக்ஸ் என்கிற நிறுவனம் பெரும்பாலான*அளவில் எடுத்து கொள்வதால் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் . தலைவர் நேரடியாக*இந்த விஷயத்தில் உத்தரவிடாமல், அந்த தண்ணீரை* சென்டெக்ஸ் நிறுவனம் எப்படி பயன்படுத்துகிறது .என்று கேட்கிறார் .தொழிற்சாலைக்கு பயன்படுத்துகிறீர்களா. அந்த தொழிற்சாலையில் எத்தனை பேர்* வேலையில்**இருக்கிறார்கள். சுமார்*200 பேர்.* அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால் வேலை இழப்பு ஏற்படும். தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கும். உரிமையாளருக்கு வருமானம் இருக்காது*,இதற்கு மாற்று வழி காண வேண்டும் ,பொதுமக்களுக்கும் தண்ணீர் பிரச்னை தீரவேண்டும்*,*. என்று கருதி*சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே*அவர்களிடம் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண சென்னிமலை பகுதி முழுவதும் 60 ஆழ்துளை கிணறுகள் அமைத்து*உதவுங்கள் என்றார். அமைச்சர் அங்கு* .ஆழ்துளை கிணறுகள்** சுமார்*30 அமைத்து தண்ணீர் போதுமான அளவிற்கு மேலாக வருவதை அறிந்து*, மீதம் உள்ள 30 ஆழ்துளை கிணறுகளை சென்னிமலையின் சுற்றுவட்டார பகுதிகளில் அமைத்து* தண்ணீர் பிரச்னையில் இருந்து அந்த பகுதி பொதுமக்களும்* நிரந்தரமாக* விடுபட*. வித்திட்டு உதவியவர்*தலைவர் எம்.ஜி.ஆர்.**இந்த வேலைகள்*நடந்து பொதுமக்கள் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்ததற்கு தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி செலுத்தியதை நண்பர்கள் சென்னிமலை*விஸ்வநாதன், தங்கவேலு போன்றவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்கள் . இப்படி ஒரு பிரச்னையை அணுகும்போது தொழிலாளர்கள் வேலை இழப்பு, தொழிற்சாலை முடக்கம், உற்பத்தி பாதிப்பு, உரிமையாளர் வருமானம் , ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொள்ளாமல்,*பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாது*தண்ணீர் பிரச்னையை*தீர்த்து*வைத்து,சமயோசிதமாக* சிந்தித்து**செயல்பட்டு அவர்களது உள்ளங்களில் எல்லாம் ஊடுருவிஅவர்களது இல்லங்களில் தந்தையாக, தாயாக, தனயனாக,அண்ணனாக, தம்பியாக மாறுபட்ட* பல்வேறு உருவங்களில் வாழ்ந்துஅனைவரும்*இதயதெய்வம் என்று போற்றுகிறார்கள் என்று சொன்னால்*எப்போதும் ஏழைகளுக்காகவே சிந்தித்து***இரு சாராரின் பிரச்னைகளையும் ஒரே சமயத்தில் தீர்த்து வைத்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.**


கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஏழைகளை பற்றி மட்டுமே சிந்தித்த*, ஏழைகளுக்காகவே வாழ்ந்த லெனின்*என்கிற மாபெரும் புரட்சி வீரன் பற்றி கவிஞர் பாரதிதாசன்*எழுதிய கவிதை*. யுகமாக வாழ்ந்த*லெனினே, உலகாக*நின்ற**லெனினே*, உறவாக, அகமாக*, அறிவாக, அரசாக*நின்ற லெனினே*என்று வடித்ததை அப்படியே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு யுகமாக, உலகாக*, உறவாக, அகமாக*. அறிவாக, அரசாக, ஆள பிறந்த , ஆண்டு கொண்டிருக்கிற எம்.ஜி.ஆர். அவர்களே என்று நம் உள்ளங்களில் எல்லாம் மனநிறைவோடு* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய இயக்கத்தை வெற்றிகரமாக இன்றைக்கு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெறும் வேளையில்*கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை*மனதில் நிலை நிறுத்தி கொண்டவர்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .காரல் மார்க்ஸ், பிரடெரிக்*ஏன்ஜெல்ஸ்**ஆகியோர் முதலீட்டு கொள்கையை உருவாக்கியவர்கள் . காரல் மார்க்ஸ் சொல்கிறார். எங்கே வேண்டுமானாலும் புரட்சி வரும் .*புரட்சி வராத இடம் என்று சொன்னால்ஒரு இடம்தான் உள்ளது அது**இந்தியாவில்தான் .* மிக எளிதாக* இந்தியாவில் புரட்சி வெடிக்க வாய்ப்பில்லை . காரணம்*மதங்கள், கொள்கைகளால் சூழப்பட்டு,* ,தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்தி கொண்டு, அடிமை வாழ்வோ, அரசன் வாழ்வோ, எந்த வாழ்வாக இருந்தாலும் ,அவர்கள் ஏற்று கொள்வார்கள்** என்று சொன்ன அந்த நெறியில்தான் இந்தியாவில்தைமூர் காலம்,* முகலாயர்கள், காலம்** மங்கோலியர்கள், ஆங்கிலேயர்கள் காலம் வரையில் பல்வேறு வகைகளில், பல்வேறு காரணங்களுக்காக நாம் அடிமைப்பட்டு கிடந்தோம் .நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சி வெடித்தது . சுதந்திரம்*கிடைத்தபின், தமிழகத்தில் 1972ல் புரட்சி வெடித்தது .வெறும் 4 எம்.எல்.ஏக்களை எதிர்த்து அல்ல. 184 எம்.எல்.எங்களுடன் மிருகபலம் கொண்ட*தி.மு.க. ஆட்சிக்கு வந்த*ஓராண்டிலேயே**தனியொரு, சாமான்ய*மனிதராக இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கேள்வி கணைகள்*தொடுத்தார் .* நான் அனைவரையும்*கணக்கு கேட்பேன். சாதாரண நிலையில் இருந்தவர்களில் பலர்*ஊழல்கள், குற்றங்கள், தவறுகள் செய்து கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கிறார்கள் . அவர்கள் முறையாக கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும். குற்றமற்றவர்கள் என்று தங்களை*நிரூபித்து கொள்ள வேண்டும் .என்று தைரியமாக, பயப்படாமல், ஒரு புரட்சி வீரனாக***தன்னை மக்களுக்கு அடையாளம் காட்டி கொண்டு*காரல்*மார்க்ஸ்*,ஏன்ஜெல்ஸ் போன்றவர்களை மிஞ்சியவர்,தான் நமது*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* அவர் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது தனியொரு தலைவராக இருந்தார். அவரை பின்பற்றி வந்தவர்கள்தான்* எம்.எம்.துரைராஜ், முனு ஆதி, ஜி.ஆர். எட்மண்ட் ,வேலப்பன், எஸ்.ஆர்.ராதா, காளிமுத்து*போன்றவர்கள் .*அதன் பின்னால் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள்* கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்கள் வந்தார்கள் . இவர்களை மட்டுமே வைத்து, கட்சி ஆரம்பித்து ,தமிழகத்தின் ஏழை எளியோருக்காக நான் புரட்சி செய்வேன் .ஊழலை ஒழிப்பேன் என்று**கூறி, காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.25க்கு தந்த அரிசியை* கிலோவுக்கு ரூ.1/- கொடுத்த பேரறிஞர் அண்ணாவை போல* தன்னுடைய இறுதி காலம் வரையில் முதல்வராக இருந்து அதை நீடிக்க செய்த ஒப்பற்ற தலைவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் ;/காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*

2.பேசுவது கிளியா , இல்லை பெண்ணரசி மொழியா - பணத்தோட்டம்*

3.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - மகாதேவி*


4.எம்.ஜி.ஆர். - ஓ.ஏ.கே.தேவர் உரையாடல் -மதுரை வீரன்*


5..திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*




***
****

orodizli
3rd December 2020, 08:05 AM
இந்த காட்சியை எல்லாம் பார்க்கும் போது விழிகள் பனிக்கின்றது , இப்படி எல்லாம் இனி ஒரு சீன் இப்ப வரும் படத்தில பார்க்க முடிகிறதா! தயவுசெய்து குழந்தைகளுக்கு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுங்கள், நல்ல படத்திற்கு அழைத்து செல்லுங்கள், இளவயசிலேயே நாம் நல்லவற்றை நல்ல எண்ணங்களை விதைத்தால் தான் அன்பு, பாசம், இரக்கம், மனிதாபிமானம், மரியாதை, கீழ்படிதல், இதை எல்லாம் கற்றுக் கொள்வார்கள். தலைவரோட தலைப்பே பாடம் சொல்லும். நான் மார்தட்டி மண்டை கர்வத்தோட கூட சொல்வேன் எங்கள் தலைவர் மாதிரி தலைப்பு வைக்க உலக சினிமா சரித்திரத்தில யாருமே கிடையாது . தர்மம் தான் ஜெயிக்கும், உண்மைக்கு அழிவேயில்லை, நல்ல குணங்களே சிறந்த மனிதனாக்கும், நற்செயல்களே பண்புள்ளவனாக மாற்றும். தலைவர் திரையுலக ஔவையார் னு கூட சொல்லலாம். தயவுசெய்து கண்டநாதாரிப்பயலுக படத்துக்கு கூட்டிட்டு போகாதீங்க! சின்ன மச்சான், கிறுக்கு மச்சான் பாட்டெல்லாம் கேட்க சொல்லாதீங்க. தலைப்ப பாருங்க "உங்களை நல்லா போடணும் சார்" னு ஒரு படமாம் கேவலமா இல்லை.இப்ப படமெடுக்கும் எல்லாருக்கும் அடுத்தவனுடைய பசிக்கு சோறு வைக்கவும் தெரியாது, அவங்க படத்துக்கு பேரு வைக்கவும் தெரியாது. அதனால தான் பழைய படப் பெயர்களையே மீண்டும் திருப்பி சூட்டுகிறார்கள் என்னதான் இருந்தாலும் மீதியுள்ள உணவை பிரிஜ்க்குள்ள வச்சு பரிமாருகிற மாதிரி தான் , சொந்த புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை. எனவே நான்கு தலைவர் படம் வாங்கி வீடியோவில் போட்டு காட்டுங்கள் அதுவே போதும் ....gvn...

orodizli
3rd December 2020, 08:06 AM
அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் வணக்கங்கள் பல.

தலைவரின் நாளை நமதே படத்தில தலைவருக்கு அப்பா வாக சிறந்த குணசித்திர நடிகர் ராகவன் அவர்கள் நடித்து இருப்பார்.

ராகவன் அவர்கள் தலைவரை விட எட்டு வயது மூத்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவும்...ஜாலி ஆக சுற்றி திரியும் தலைவர் படத்தில் ஒரு நண்பர் அழைப்பின் பேரில் வெளிஊர் சென்று வேலைக்கு போகும் காட்சி படத்தில்.

புறப்படும் முன் மகன் எம்ஜிஆர் அப்பா வி.எஸ்.ராகவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி புறப்படுவது போல காட்சி அமைப்பு.

இயக்குனர் சேது மாதவன் அவர்களிடம் ராகவன் அவர்கள் அவர் என் காலில் விழுவது போல காட்சி வேண்டாம்...கொஞ்சம் முடிந்தால் மாற்றுங்கள் என்று சொல்ல...

தலைவர் செய்தி அறிந்து ஏன் அவர் விருப்பம் போல காட்சியை மாற்றுங்கள் என்று சொல்ல அதன் படி...

வெளிஊர் புறப்படும் தலைவர் தந்தை அவரிடம் சொல்லி விட்டு கை கூப்பி அவரை வணங்கி புறப்படுவது போல காட்சி மாற்ற பட..

அந்த காட்சியில் தலைவர் ராகவன் அவர்களை கும்பிடும் போது அவர் தந்தை ஆக வாழ்த்து சொல்லுவது போல காட்சிகள் எடுக்கப்படும் போது ஆசீர்வாதம் செய்வதற்கு பதில் தலைவர் கும்பிட அவரும் திருப்பி கும்பிட்டு விட..

6 முறை திருப்பி திருப்பி எடுத்தும் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார் ராகவன் அவர்கள்.

ஒரு கட்டத்தில் தலைவர் விடுங்க அப்பிடியே காட்சி இருந்து விட்டு போகட்டும் என்று சொல்ல படத்தில் காட்சி அப்பிடியே வந்த புகைப்படம் பதிவில்.

இந்த காட்சி பற்றி ஐயா வி.எஸ்.ராகவன் சொல்லும் போது என்னை விட மூத்தவர் அவர் என்றாலும் என் மீது அவர் கொண்ட பாசத்தில் அவரை ஆசீர்வாதம் செய்வதை என் மனம் ஒப்பவில்லை.

எனக்கு அவர் செய்த பல உதவிகள் கண் முன் எப்போதும் நிற்கும்... அவர் முதல்வர் ஆகி ஒரு விழாவில் எனக்கு கேடயம் வழங்கி சிறப்பித்த போது அந்த மேடைக்கு நான் வந்த போது...

என் குடும்ப சூழ்நிலை காரணம் ஆக அன்று என் முகத்தில் சந்தோசம் இல்லை.
அவருக்கு என்றே விழாவுக்கு வந்தேன்.

எனக்கு கேடயம் வழங்கும் போது என் வாடிய முகத்தை கவனித்த அவர் அதை கொடுத்த பின்.

என் காதில் என்ன 7 டேக் அப்பா என்ன வருத்தம் என்று கேட்க நான் கவலை மறந்து சிரித்து விட்டேன் என்று பொன்மனம் பற்றி சொல்லி மகிழ்கிறார் அவர்.

மேடையில் கவலை தோய்ந்த முகத்துடன் தலைவர் கையால் பரிசு வாங்கும் அவரின் படமும் பதிவில் இணைக்க பட்டுள்ளது.

நடிப்புக்கு கூட நம் தங்க தலைவரை வாழ்த்தும் தகுதி உலகில் ஒரு சிலருக்கே உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்து காட்டி இருக்கும் என்று நம்பும் நம் குழுவினர் சார்பாக.

உங்களில் ஒருவன்.
நன்றி...தொடரும்.

வாழ்க தலைவர் புகழ்

அடுத்து அடுத்து சந்திப்போம்.......

orodizli
3rd December 2020, 08:07 AM
இன்றைக்கு சில பல நடிகர்கள் புதுக்கட்சி துவங்கி அல்லது துவங்க பயணம் கொண்டு இருக்கும் நேரம்..

ஆனால் நெருப்பு ஆற்றை கடந்து வந்து வெற்றி கொடி ஏற்றிய ஒரே இயக்கம் இந்த உலகில் தலைவர் கண்ட இயக்கம் மட்டுமே.

10.10.1972 இல் குண்டு துளைக்க முடியாத நம் இதயக்கனியை வண்டு துளைத்து விட்டது என்று ஒரு மண்டு கண்டு பிடித்து அவரை புறந்தள்ள நினைத்த நாட்கள் அவை.

அப்போது தலைவர் தனிக்கட்சி கண்ட ஆறாம் நாள்...
விருத்தாசலம் நகரில் மாணவர்கள் தலைவருக்கு ஆதரவாக ஊர்வலம் போக தீயசக்தி உத்தரவில் காவல்துறை தடியடி நடத்தி பலர் காயம்.

இந்த நிகழ்வை பார்த்த தேனி உத்தமபாளையம் போடி z.k.m. உயர்நிலை பள்ளி மாணவர்கள் அன்று கௌரி மனோகர் என்ற மாணவர் தலைமையில் திலகர், முத்துவேல், போதுமணி ஆகியோர்

பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை திரட்டி மாபெரும் ஊர்வலம் நடந்தது தலைவருக்கு ஆதரவு தெரிவித்து.

எதிரே தனது ஜீப்பில் வந்த தீயசக்தி எம்.எல்.ஏ... சுருளிவேல் ஊர்வலத்தில் வந்த மாணவ செல்வங்களை பார்த்து தமிழ் அகராதியில் இல்லாத பொல்லாத வார்த்தைகள் கொண்டு நம் பொன்மன செம்மலையும் அதற்கு துணை நின்ற மாணவர்களையும் காவல்துறை முன்னிலையில் அவ்வளவு சிறப்பாக அவரின் தரத்துக்கு ஏற்றபடி பேசுகிறார்.

மாணவர்கள் கொந்தளித்து புது வேகத்துடன் புறப்பட்டு அவரை நோக்கி ஓட தன் சொந்த ஜீப்பை திருப்பி கொண்டு தன் சொந்த ஊர் சில்ல மரத்து பட்டியில் தஞ்சம் அடைகிறார்.

கொதித்து போன மாணவர் சமுதாயம் மூன்று நாட்களுக்குள் அந்த சட்டமன்ற உறுப்பினர் தன் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும் என்று சொல்ல.

சுருளிவேல் பயந்து வீட்டுக்குள் சுருண்டு விட மூன்று நாட்கள் கழித்து 10000 பேர் கொண்ட மாபெரும் ஊர்வலம் மாணவர்கள் திரண்டு கௌரிமனோகர் தலைமையில் நடத்த..

காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகை குண்டு வீச்சில் 242 பேர் நிலைமை மோசம் ஆகி மயக்கம் அடைய.

விளைவுகளின் விபரீதம் புரிந்த தலைவர் மாணவர் குழுவினருக்கு உதவிகள் செய்ய ஆணை இட... அவர்கள் சற்றே நலம் பெற்று வீடு திரும்பிய மறுநாள் முக்கிய மேலே குறிப்பிட்ட அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்து இனி இப்படி நீங்கள் செய்யக்கூடாது.

உங்கள் எதிர்காலம் பாதிக்க பட்டு விட கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி அவர்கள் கையில் அந்த காலத்தில் அவர்கள் கண்டு இருக்க முடியாத பணத்தை கொடுக்க.

சொந்த ஊர் திரும்பிய அவர்கள் அந்த பணத்தை கொண்டு போடி நாயக்கன் ஊர் பகுதியில் முப்பது வீடுகளுக்கு மின்சார இணைப்புக்கு முன் பணம் கட்ட...

தலைவர் அடுத்த நாட்களில் முதல்வர் ஆக பொறுப்பை ஏற்ற பின் மாணவர் கௌரி மனோகர் அனுப்பிய வேண்டுகோள் கடிதத்தை படித்து முதல் முக்கியத்துவம் கொடுத்து.....

அவரின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தார்...

பின்னாட்களில் அதே கௌரிமனோகர் தலைவரின் கொள்கைகளை இன்று வரை கடைபிடித்து வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் நிலனவில்..

பணம் சம்பாதிக்க என் பக்கம் யாரும் வரவேண்டாம் என்று சிலர் பகிரங்கமாக அறிக்கை விடும் அளவுக்கு இன்றைக்கு பொது வாழ்வு சீர் கெட்டு கிடக்கும் நம் நாட்டில்....தலைவர் போலவே வாழ வேண்டி அதன் படி நடந்து கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு.

இந்த பதிவு சமர்ப்பணம்....

Z.k.m.. உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளி ஆக தரம் உயர்த்த பட்ட நிகழ்வு, பதினெட்டாம் கால்வாய் திட்டத்தில் சோத்து பாறை அணை கட்டுதல் திட்டம், தாங்கள் முன்பணம் செலுத்திய 30 கிராமத்து வீடுகளுக்கு ஒளி விளக்கு ஏற்றியவை போன்ற நிகழ்வுகள் அந்த கௌரிமனோகர் கடிதத்தில் குறிப்பிட பட்டு இருந்தவை.

உலகத்தில் பல கட்சிகள் தோன்றி இருக்கலாம்... இன்னும் தோன்ற இருக்கலாம் ஆனால் தான் போட்டி இட்ட முதல் பொது தேர்தலில் தான் கண்ட மக்கள் இயக்கத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்திய ஒரே தலைவன்...

இந்த உலகில் நம்

எம்...ஜி... ஆர்...என்ற அந்த மந்திர சொல் நாயகன் மட்டுமே.

நன்றி...தொடரும்.

உங்களில் ஒருவன்..

நெல்லை மணி.

பதிவில் படத்தில் தலைவர் நினைவு இடத்தில் இன்று நடைபெற்ற பூ அலங்காரம்...நன்றி.

அடுத்தவர்களை குறை சொல்ல இல்ல இந்த பதிவு..

நம்மையும் நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மட்டும்.

தலைவர் நெஞ்சங்கள் எப்படி என்பதை உணர்த்தவே.............nm...

orodizli
3rd December 2020, 08:08 AM
கொஞ்சம் ரிலாக்ஸ் 29
--------------------------------
இன்றையப் பதிவு முக்கியமானது மட்டுமல்ல,,சுவாரஸ்யமானதும் கூட.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் தமிழுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகங்களுக்கும் அதிக வளர்ச்சி ஏற்பட்டது என்பது நமக்குத் தெரியும்!
அண்ணா,,,பாராதியார் ,,பெரியார்,,பாரதி தாசன்--இப்படி ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவர் பெயர்களிலும் பல்கலைக் கழகங்கள் துவங்கங்கப்பட்டதுடன்--
தஞ்சை தமிழ்க் கல்லூரி விருத்தி செய்யப்பட்டதுடன் தமிழ் ஆராய்ச்சி மன்றங்களும் நிறுவப்பட்டன!
எம்.ஜி.ஆர் மலையாளி. ஒரு நடிகன் என்றெல்லாம் அன்னாட்களில் ஏகடியம் செய்தோருக்கும்,,அவரது வம்சாவளியினருக்கும் மேற் குறிப்பிட்டவை சமர்ப்பணம்!!
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல--
உலகத் தமிழ் நாடு மதுரையில் நடக்கிறது!
அரசவைக் கவிஞர் கண்ணதாசன் தலைமையிலும் புலமைப் பித்தன் தலைமையிலும் கவி அரங்கம் நடத்தப் பெற ஏற்பாடாகிறது!
விழாக் கமிட்டியின் ஏற்பாட்டாளர் அவ்வை நடராஜன்!
கண்ணதாசன்,,வாலியைத் தொடர்பு கொண்டு ஒரு உதவி கோருகிறார்--
அதாவது அவரது கவியரங்கத்தை வாலி துவக்கி வைக்கும்படியும்,,பின்னால் தாம் வந்து சேர்ந்து கொள்வதாகவும் கூறுகிறார்!
வாலி,,அவ்வை நடராஜனைத் தொடர்பு கொண்டு தம் கருத்தைத் தெரிவிக்கிறார்--
சீனியர் கண்ணதாசனின் தலைமையிலான கவியரங்கத்தை அவரது சீடனான நான் துவங்கி வைப்பது நன்றாக இருக்காது. தவிர அது மரியாதையாகவும் இல்லை. சின்னவரிடம் -எம்.ஜி.ஆரிடம் சொல்லி என் தலைமையில் ஒரு கவியரங்கத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள்!!
அவ்வை நடராஜன்,,தயங்கியபடியே இதனை எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க--
எம்.ஜி.ஆரோ திகைக்கிறார்--
வாலி நல்லாப் பாட்டெழுதுவார்ன்னு தெரியும். அவருக்கு இதுமாதிரியான கவியரங்கத்தை நடத்துவது சிரமமாக இராதா?
அவ்வையார் அடக்கத்துடன் செவ் வையாரிடம் சொல்கிறார்--
இல்லேங்க வாலிக்கு அந்த அனுபவம் இருக்கு. சொல்லப்போனால் கம்பன் கழகத்தில் கண்ணதாசனுக்குப் பிறகு கவியரங்கத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் வாலி தான்!
எம்.ஜி.ஆர் உடனே சொல்கிறார்--
சரி! அப்ப மா நாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் வாலியின் தலைமையில் ஒரு கவிரங்கத்தை ஏற்பாடு செய்துடுங்க!!
ஆனால்??
மறு நாளே வாலிக்குப் போன் செய்து காய்ச்சுகிறார் எம்.ஜி.ஆர்--
இங்க நான் முதல்வரா நீங்க சி.எம் மான்னு தெரியலே? நீங்க சொல்லறதை நான் கேட்க வேண்டியிருக்கு??
இந்த இடத்தில் உன்னிப்பாக நோக்க வேண்டும்--
புலமைப் பித்தனைப் போல் வாலி கட்சிக்காரர் இல்லை. எம்.ஜி.ஆரோ நாட்டின் முதலமைச்சர்!
வாலியின் வேண்டுகோளை சிரித்தபடியே மறுத்திருக்கலாம்!
வாலியின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டு வாலியிடம் சீறுகிறார் என்றால்--
ஒரு குடும்பத் தலைவன் தன் பிள்ளையிடம் காட்டும் பாசம் கலந்த கோபத்தைப் போல் தானே--
நீ சுற்றுலா போவதற்கு அம்மா கிட்டே பணம் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோ. ஆனால் சும்மா இப்படி ஊர் சுத்தக் கூடாது--அப்பா!!
இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்---
தம் கவியரங்கத்தை வாலியை விட்டு துவங்க வைக்க இசைந்த கண்ணதாசனின் நம்பிக்கை சார்ந்த பெருந்தன்மை---
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாமல்,,கண்ணதாசனுக்கு தம்மால் சிறுமை ஏற்படக் கூடாது என்ற விதத்திலான வாலியின் அடக்கம் சார்ந்த பெருந்தன்மை---
நாட்டின் முதல்வராயிருந்தும் வாலியின் கவியரங்கச் சிறப்பைக் கேள்வியுற்ற மாத்திரம் அவர் தலைமையில் கவியரங்கம் நடத்த உத்தரவிட்ட எம்.ஜி.ஆரின்--பெருந்தன்மை சார்ந்த பெருந்தன்மை!!
அன்று தமிழ் எட்டு திசைகளிலும் ஏகாந்தமாக மணம் பரப்பியது என்றால் ஏன் பரப்பாது???.........vt...

orodizli
3rd December 2020, 08:09 AM
#எம்_ஜி_ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.

சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”

அதே போல உற்சாகத்தையும்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் சம்பத் அன்று ”பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா ” பாடலின் பிரத்யேக விசேஷத்துவம் பற்றி சொல்வார் “ ’பேசுவது கிளியா’ பாடலில் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளின் இனிமையும் Sychronize ஆனது போல எந்த பாட்டுக்கும் ஆனதேயில்லை.”

”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”

சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’

ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’

‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.

”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்

ராஜநாயகம்............NS...

orodizli
3rd December 2020, 08:10 AM
"படகோட்டி"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்.........
------------------
இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள்

மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம்

தான் எவ்வளவு முயன்றும் இவர்களின் அறியாமையை போக்க முடியவில்லையென்ற ஆதங்கம்

உழைத்தவர்கள் தெருவில் நின்று விட்ட விரக்தி

தன் ஆற்றாமையை , மனக்குமுறலை முகபாவங்களாலும் தன் நடையினாலும் வெளிக் கொணரும் விதம் அபாரம்

வார்த்தைகளையும் , வாக்கியங்களையும்
தன் உடல் மொழியால் நம்மை முழுமையாக உணரவைக்கும் நடிகர் உலகிலேயே எம் ஜி ஆர் ஒருவர் தான் .

குறிப்பு : இப்பாடலில் ஒரு முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று அம்முதியவருக்கு மக்கள் திலகம் பணம் இரண்டாயிரம் கொடுத்து உதவினார் ....Hyd...

orodizli
3rd December 2020, 08:11 AM
எம்.ஜி.ஆரின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள்

மொழி எல்லைகளைக் கடந்து நின்ற எம்.ஜி.ஆர் மத எல்லைகளையும் கடந்து நின்றார். அவர் திமுகவில் இருந்த வரை இந்துச் சமயப் பழக்க வழக்கங்களை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. அண்ணா அவர்கள் சொன்ன ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்ற கொள்கையைப் பின்பற்றினார். அதுபோல கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களைத் தன் படங்களில் காட்டினாலும் அவற்றின் கொள்கைகளைப் பெரிதாக ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை.

எம்.ஜி.ஆர்கிறிஸ்தவ மதமும் மக்களும்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம் படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும். ரிக்*ஷாக்காரன் படத்தில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப் பிடித்து நிற்கும் காட்சி வரும்.

எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு. பரமபிதா என்ற பெயரில் அவரை இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை சவுக்கால் அடித்து அவர் தலையில் முள்கிரீடம் வைத்து அழுத்துவதை ரசிகர்கள் காணப் பொறுக்க மாட்டார்கள். திரையைக் கிழித்து விடுவர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும் படம் கேரளாவில் பலர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி கொளுத்துகிறார்களா’ என்று சிரித்தாராம்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும்போது அந்த வீட்டில் திருவள்ளுவர் பாரதியார் அறிஞர் அண்ணா ஆகியோர் படங்களோடு இயேசு கிறிஸ்து படத்தையும் மாட்டியிருப்பார். இதனால் கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட் கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர் தனிக் கட்சி ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.

எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நோவா அவரைப் பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும் சம்மதித்தார். அப்போது நோவா அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர் உடனே செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆர் காலத்தில்தான் சிறை கைதிகளின் அறைகளுக்குக் கழிப்பறை வசதி கிடைத்தது. அதுவரை அறையில் வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள் இரவில் சிறுநீர் மலம் கழித்தனர். மறுநாள் அதை கொண்டு போய் கொட்டிவிட்டு சுத்தம் செய்து கொண்டு வந்து வைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில் ஒரு மணி வரை உயிரோடு இருந்ததாக சில செய்திகள் வந்த போது கிறிஸ்தவர்கள் பலர் அவர் கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே கருதினர். எம்.ஜி.ஆர் மீதிருந்த நன்மதிப்பு காரணமாக அவர் கிறிஸ்தவர் அதிகமாக வாழும் சாத்தான் குளம் தொகுதியில் நீலமேகம் என்ற இந்துவை நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.

Published: யாழ் இணையம்.
20 September 2017 வண்ணத்திரை.

Posted : MG.Nagarajan
2 December 2020 2:19 AM

orodizli
3rd December 2020, 08:11 AM
#m_g_r. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்........ns...

orodizli
3rd December 2020, 01:55 PM
"தாய் சொல்லை தட்டாதே" தேவர் பிலிம்ஸில் புரட்சி நடிகரின் 2வது படம். பெயரிலே புதுமை. பாடலில் புதுமை+இனிமை. இசையில் எழுச்சி, நடிப்பில் புரட்சி என்று சகல அம்சங்களும் நிறைந்து வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற சமூகப்படம். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல.

"ஆயிரத்தில் ஒருவனில்" நம்பியார் ஒரு கொள்ளைக்காரன் கப்பலையே கொள்ளையடித்து கொண்டு வரும் ஆற்றல் உன்னைத்தவிர வேறு யாருக்கு வரும் என்று தலைவரை பார்த்து கூறுவாரே! அதைப்போல அதுவரை வெளியான தமிழ்ப்படங்களின் வசூலை ("மதுரை வீரன்" "நாடோடி மன்னனை" தவிர்த்து.) தூக்கி தூர எறிந்து விட்டு புதிய வெற்றியை பதிவு செய்த படம். கூட வந்த வி.சி.அய்யனின் படம் கடலில் கவிழ்ந்த போதிலும் தலைவர் படம் வெற்றிக்கொடி ஏந்தி வீரபவனி வந்தது விந்தைக்குறியது. வி.சி.அய்யன் நடித்த 300 படங்களில் மதுரையில் நன்றாக ஓடிய படங்கள் இரண்டே இரண்டுதான்.

ஒன்று "பாகப்பிரிவினை" மற்றொன்று "பட்டிக்காட பட்டணமா".
இரண்டுமே மதுரை நேட்டிவிட்டியை மையமாக வைத்து எடுத்ததால் மதுரையில் மட்டும் இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியது. மற்றபடி ஸ்டார் வேல்யூ எல்லாம் கிடையாது. "பாகப்பிரிவினை" மட்டும்தான் அந்தக்காலத்தில் 100 நாட்களில் 2 லட்சத்தை தாண்டி வசூல் செய்த படமாகும். ஆனால் தலைவருக்கோ "மதுரை வீரன்" "நாடோடி மன்னன்" "தாய் சொல்லை தட்டாதே" "தாயைக் காத்த தனயன்" என்று ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்கள் எளிதில் 2 லட்சத்தை தாண்டி வசூலை பெற்றது.

ஆனால் அய்யனின் மற்ற இழுவை படங்களில் வெள்ளி விழா இழுவையான "கட்டபொம்மன்" போன்ற படங்கள் கூட 2 லட்சத்தை தொடவில்லை. ஆனால் கைபிள்ளைகள் நிறைய படங்களுக்கு பட்டறை வசூலை தயார் செய்து கப்ஸாவை அரங்கேற்றி வருகின்றனர். வி.சி. அய்யனின் படங்களை 6 மாதம் 1வருடம் என பெரும் பொருட்செலவில் எடுத்த எல்லாவற்றையும் 15 நாட்கள் 25 நாட்களில் எடுத்த தலைவர் படங்கள் எல்லாம் கால்பந்தாடி தள்ளி விட்டு சென்றதால் கைபிள்ளைகள் கலக்கத்துடன் கப்ஸா வசூலை பட்டறை மூலம் தயாரித்து திருப்தி அடைந்து வருகின்றனர்.

பிளாசாவில் சாதனையாக தொடர்ந்து 100 காட்சிகள் hf ஆன படம். கைபிள்ளைகள் "கட்டபொம்மன்" என்பார்கள்,"பாவமன்னிப்பு" என்பார்கள் "பாசமலர்" என்பார்கள் "தாய் சொல்லை தட்டாதே" வெற்றியின் ஆழத்தை உணராதவர்கள். 1961 ம் ஆண்டிலே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தைரியமிருந்தால்
"பாவ மன்னிப்பு" "பாச மலர்" வசூலை வெளியிடுங்கள் கைபிள்ளைகளே.

"தாய் சொல்லை தட்டாதே" சென்னையில் குறுகிய காலத்தில் 7 லட்சத்தை கடந்து சாதனையை வெளிப்படுத்தியது.
ஆனால் "பாவமன்னிப்பு" சென்னையில் 7 லட்சத்தை தொடவில்லை. இவ்வளவுக்கும் சாந்தியில் 177 நாட்கள் ஓடி ரூ4,01,696.46 வசூல் பெற்றும் 7 லட்சத்தை கடக்க முடியவில்லை.
படம் பார்த்தவர்கள் சாந்தியிலேதான் அதிகம்.

படத்தை பார்க்க வந்த கூட்டமல்ல. சாந்தி தியேட்டரை பார்க்க வந்த கூட்டம். சென்னைக்கு சென்று வந்த மக்கள் சாந்தியை சுற்றுலா தளமாக நினைத்து தியேட்டருக்கு சென்று வருவதையே பெருமையாக சொல்வார்கள். சென்னைக்கு சென்று வந்தவுடன் சாந்தியை பார்த்தாயா? என்பதுதான் சொந்தங்களின் முதல் கேள்வியாக இருந்தது. சாந்தியில் முதன்முதலாக வசூல் 4 லட்சத்தை தொட வைத்த பெருமை கைபிள்ளைகளையும்,
சுற்றுலா பயணிகளையும் சேரும்.

படத்தின் சிறப்புக்காக வந்த வசூல் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும். இதன் தொடர்ச்சியாக வந்த "பாலும் பழமும்" 3 லட்சத்தைதான் தொட்டது."பாலும் பழமும்" 127 நாட்களில் பெற்ற வசூல் ரூ 3,06,167.68. ஆனால் மதுரையில் "தாய் சொல்லை தட்டாதே" கல்பனாவில் வெளியாகி 126 நாட்களில் வசூலாக ரூ 2,33,251.08 பெற்று மாற்று நடிகரின் படத்தை தோற்று ஓட வைத்தது குறிப்பிடத்தக்கது.

சிந்தாமணியில் வெளியாகி இருந்தால் வசூல் சிந்தாமல். சிதறாமல் கிடைத்திருக்கும். மேலும் வி.சி.அய்யனின் படங்கள் சிந்தாமணி சென்ட்ரல் நியூசினிமா அரங்கில்தான் ஓரளவு வசூலை காட்டுவார்கள்.ஆனால் தலைவர் படத்துக்கு தியேட்டர் பிரச்னை அல்ல.
மீனாட்சி சினிப்பிரியா சிந்தாமணி சென்ட்ரல் கல்பனா அலங்கார் நியூசினிமா என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

மாற்று நடிகரின்படங்களுக்கு போலியான பட்டறை வசூலை தயார் செய்து கைபிள்ளைகள் ஏமாற்றி வருகின்றனர். சென்னை சாந்தியில்
"பந்தபாசம்" 55 நாட்கள் வசூல் ரூ 1,35,040.45 "அறிவாளி" "சாந்தி"யில் 28 நாட்கள் வசூல் ரூ
84,087.61.பொதுவாக சாந்தியில் ஏற்படுத்திய வசூலை வேறு எந்த தியேட்டரும் பாதி கூட பெறுவது கடினம்.

ஆனால் அதிலும் கைபிள்ளைகள் மதுரை வசூல் பட்டறையில் தயார் பண்ணிய "அறிவாளி" மதுரை சிந்தாமணியில் 77நாளில் ரூ 1,14,611.36 என்றும் "பந்தபாசம்" 77 நாளில் ரூ1,41,556.45 பெற்றதாக கண்மூடித்தனமாக கப்ஸா விடுகிறார்கள். "அறிவாளி" மதுரையில் ரூ 40,000, மும், "பந்தபாசம்". ரூ
ரூ65,000 தான் வசூலாக பெற்றிருக்க முடியும்.

சென்னை சாந்தியில் 10 லட்சத்துக்கு மேலே கணக்கு காட்டிய "தங்கப்பதக்கத்து"க்கு மதுரையில் கணக்கு காட்டிய தொகை ரூ 5 லட்சம்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும் கைபிள்ளைகளே. பொய் வசூல் தயார் பண்ணும் போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து கப்ஸாவை அவிழ்த்து விடுங்கள்.

நன்றி: திரு சைலேஷ் பாசு............ksr.........

fidowag
3rd December 2020, 11:36 PM
பிறந்த நாள் வாழ்த்து செய்தி .
------------------------------------------------
மதுரை*மாநகர*மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்* திரு.எஸ். குமார்* அவர்கள்* 62 வது*பிறந்த நாள் விழா காணும்*இன்று (04/12/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* இன்று போல் என்றும் எல்லா*வளமும், எல்லா*நலமும்*பெற்று*பல்லாண்டு காலம் வாழ்ந்து, தொடர்ந்து* புரட்சி தலைவர்* அருமை, பெருமைகளை*புகழ்ந்து பாடுவார்* என்ற நம்பிக்கையுடன், என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சென்னை*சார்பிலும்*இனிய பிறந்த நாள்* நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .**

மதுரை*மற்றும் இதர மாவட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றிய நிகழ்ச்சிகள், மறு வெளியீடு , டிஜிட்டல் வெளியீடு திரைப்படங்கள் பற்றிய தகவல்களை*உடனுக்குடன் அனுப்பி, வாட்ஸ்*அப்*மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் . முகநூல்*ஆகியவற்றின் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*/ரசிகர்கள் /விசுவாசிகள் /அபிமானிகள்* அறிந்து கொள்ளும்*வகையில்*செயல்பட்டு வரும் திரு. எஸ். குமார்*அவர்கள் தொடர்ந்து*அவரது*பணியை*செவ்வனே செய்து வர வேண்டும் என்பது*அன்பு வேண்டுகோள் .

இந்த நன்னாளில் , திரு.எஸ். குமார்*அவர்கள் இன்புற்று, இல்லற*வாழ்க்கையில்*மகிழ்ச்சியுடன்* இனிதே*வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை* தெரிவிக்கும்படி அனைத்து நண்பர்களையும் கேட்டுக்*கொள்கிறேன் .*

ஆர். லோகநாதன்,ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .

fidowag
3rd December 2020, 11:51 PM
பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் (27/11/20 முதல் 03/12/20* வரை ) ஒளிபரப்பான*பட்டியல்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
27/11/20* வசந்த்* - பிற்பகல் 1.30 மணி - தாயின் மடியில்*

* * * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - என் கடமை*

28/11/20* சன்* லைஃப் - காலை 11 மணி - கொடுத்து வைத்தவள்*

* * * * * * * மீனாட்சி* - பிற்பகல் 1 மணி - வேட்டைக்காரன்*

29/11/20- சன்* லைஃப் - காலை 11 மணி - மந்திரி குமாரி*

* * * * * * * மீனாட்சி* *- மதியம் 12 மணி - நல்ல நேரம்*

* * * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - தனிப்பிறவி*

30/11/20 - சன் லைஃப் -* காலை 11 மணி - அன்பே வா*

* * * * * * * * பெப்பேர்ஸ் -பிற்பகல் 2.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - குமரிக்கோட்டம்*

01/12/20= வேந்தர் - காலை 10 மணி - தொழிலாளி*

* * * * * * * முரசு* -மதியம் 12 மணி /இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * * வேந்தர் - பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *சன் லைஃப் -மாலை 4 மணி - நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - குடும்ப தலைவன்*

02/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - திருடாதே*

* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*

03/12/20* வேந்தர் - காலை 10 மணி - கன்னித்தாய்*

* * * * * * * மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - காதல் வாகனம்*

* * * * * * * சன் லைஃப் - மாலை 4 மணி - சந்திரோதயம்*

* * * * * * * **

orodizli
4th December 2020, 07:48 AM
#புரட்சி_தலைவர்
#மக்கள்திலகம்
#இதயதெய்வம்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும்_இனிய
#வியாழக்கிழமை_காலை_வணக்கம்..

புரட்சி தலைவருக்கு
கண்ணதாசன் அவர்கள் எழுதிய
பாடல்களை தொகுத்து தொடர் பதிவிடும்
இந்த பதிவில் இன்றைய பதிவை காண்போம்..

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்து 1962 – ஆம் ஆண்டில் வெளியான படங்கள் ஆறு. இவற்றில் சமூகப் படங்கள், ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’, ‘பாசம்’, ‘மாடப்புறா’ உள்ளிட்ட நான்கு படங்கள்.

‘ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

இப்படத்தில் புரட்சி தலைவரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

அதனை இப்போது காண்போமா?

“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருங்கள்!

“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும்
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே...

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

நம் இதயதெய்வம்
எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே...

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

– என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன்
நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது....

தாயைக் காத்த தனயன்
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே!”

என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு, இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவரே புரட்சித்தலைவர்.

தாய்ப்பாசத்தில் தன்னிகரற்று விளங்கியதுபோலவே, பிறந்த தாய்த்திரு நாட்டின்மீதும் அளவில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்தவரே நான் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்பதனை எல்லோரும் அறிவர்.

அவரது தாய்ப்பாசத்தை நன்கறிந்த தேவர் திருமகனார், அவருக்கேற்றவாறே தனது படங்களில் பெயரினைச் சூட்டி மகிழ்வார் என்பதும் நாமறிந்த ஒன்றே.

‘தாயைக்காத்த தனயன்’ படம், 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் திரையிட்ப் பெற்று, பெரும் வெற்றியை ஈட்டியது.

இப்படத்தின் இனிய பாடல்கள் அனைத்தையும் கவியரசரே எழுதினார்,

“கட்டித் தங்கம் வெட்டி எடுத்து,
காதல் என்னும் சாறு பிழிந்து,
தட்டி தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! – அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!”

என்று, என்றும் புதுமையாய்ப் பூத்துக் குலுங்கி, நிலைத்து நிற்கும் காதல் ஓவியப்பாடலை யார்தான் மறக்கமுடியும்?

புரட்சி தலைவரும், ‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவியும் இணைந்து நடித்த அப்பாடல் காட்சியை இன்றும் இரசிக்காதவர் யாரேனும் உண்டா?

“பேரைச் சொல்லலாமா?
கணவன் பேரைச் சொல்லலாமா?”

என்று வினாக்களை எழுப்பி,

“பெருமைக்கு உரியவன் தலைவன் – ஒரு
பெண்ணுக்கு இறைவன் கணவன்!”

எனத் தமிழ்ப் பண்பாட்டைப் பதியம் போட்டுச் செல்லும் பாடலை இனி யார் தருவார்?

“காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலப் பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு!”

இப்படி மலர்ந்து;

“காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறிவரும்!
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்!”

என்றே, பிறந்த மண்ணின் மகிமையைக் கண்ணயத்தோடு, காதல் பாடலில் தந்தால் சுவைக்காத உள்ளங்களும் சுவைக்குமே!

இன்னும் நம் இதயங்களை இனிமையாக்கும் பாடல்களோடு,

“நடக்கும் என்பார் நடக்காது!
நடக்கா தென்பார் நடந்துவிடும்!
கிடைக்கும் என்பார் கிடைக்காது!
கிடைக்கா தென்பார் கிடைத்துவிடும்!”

என்ற, நாட்டு நடப்பை நன்றாகக் கணித்துக் கூறும் தத்துவப்பாடலையும் தந்து, புரட்சித் தலைவரின் படத்தில் வெற்றிக்குப் பக்கபலமாய்க் கவியரசர் நின்றதுண்டு.

சரி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடல்களை மட்டும் பார்ப்போம் என்றீர்? இப்போது ஒரு படம் என்றால் அதில் வரும் பாடல்களை, ஏறத்தாழ எல்லாவற்றையும் குறிப்பிட்டு விடுகிறீர்களே! இது என்ன விந்தை? என்று நீங்கள் கேட்கலாம்!

நான் என்ன செய்வது? புரட்சித்தலைவர் படத்திற்கென்று பாடல்கள் எழுதத் தொடங்கினால், கவியரசர் அனைத்துப் பாடல்களையும் நன்முத்துக்களாகவே படைத்து விடுகிறார்! நான் எதை விடுப்பது? எதைக் குறிப்பிடுவது?
வாழ்க..புரட்சி தலைவர் புகழ்.........dr...

orodizli
4th December 2020, 07:48 AM
கொஞ்சம் ரிலாக்ஸ்--30!
---------------------------------
மன்னிக்கவும் 30 பதிவுகளில் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் நீள்கிறது!
மறுபடியும் மன்னிக்கவும்--இன்றையப் பதிவு சற்றே நீளமாகும் வாய்ப்பு இருக்கிறது
கண்ணதாசனுக்கும் வாலிக்கும் பாடல் எழுதும் பாணியில் இருக்கும் வேறுபாடுகளை முந்தையப் பதிவுகளில் சொல்லியிருந்தேன். எவ்வளவு பேர் அதைப் பரிசோதித்துப் பார்த்தார்களோ தெரியவில்லை!
இன்றையப் பதிவில்--
எம்.ஜி.ஆர்ப் பாடல்களில் இருவரின் வீச்சையும் பார்க்கலாம்!
வாலி,,தன் சுய சரிதையில் தாமே சொல்லியிருந்தபடி-எம்.ஜி.ஆர் என்ற கரீஷ்மா என்னும் பிரம்மாண்ட ஈர்ப்பை வைத்தேப் பாடல்கள் எழுதியிருப்பார்!
கொள்கைப் பாடல்களில் எம்.ஜி.ஆர் மட்டுமேப் பிரதானமாயிருப்பார் அவரது கட்சி சூரியனும் கூடிய வரையில் இடம் பெறும்

கடவுள் வாழ்த்துப் பாடும்
இளங்காலை நேரக் காற்றில்
என் கைகள் வணக்கம் சொல்லும் கதிரவனைப் பார்த்து!!

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்

தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணைத் திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்--இப்படி நிறைய சொல்லலாம்!
கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆரின் அழகைக் குறிப்பிடுவதில் தனி கவனம் இருக்கும்!
எம்.ஜி.ஆருக்கானக் கொள்கைப் பாடல்களில் பொதுவாக அந்தக் காட்சியை தான் வார்த்தையில் கொண்டு வருவார்

மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது--பாடலில்
தேக்கு மரம் உடலைத் தந்தது --வரியைக் கூட விட்டுவிடலாம்--

சின்னயானை நடையைத் தந்தது--இதில் தான் கவிஞர் தெரிவார்!
வாலியாய் இருந்திருந்தால்,, இந்த வரியில் சிங்கம் என்னும் காட்டு ராஜாவைத் தான் உருவகப்படுத்தி இருப்பார்!
மிரட்டல் கம்பீரமாக இல்லாமல் கண்ணுக்கினிய அழகைத் தருவது சின்ன யானையின் நடை!

எம்.ஜி.ஆருக்கானக் காதல் பாடல்களை எடுத்துக் கொண்டாலோ--
அழகான தமிழ் வார்த்தைகளின் அணி வகுப்பை வாலி உலா விடுவார் என்றால்--
புதிய உவமைகளையும் நிதர்சன நிஜங்களையும் நீந்த விடுவார் கவிஞர்!
கொண்டை ஒரு பக்கம் சரிய--சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
கெண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க--பாடலில் நாயகி ஜெ,,எம்.ஜி.ஆரை இப்படிக் கூறுவார்--

பொட்டிவண்டி மேலிருந்து
தட்டி தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ளத் தோணுதய்யா கண்களுக்கு--உன்
கட்டழகைக் காட்டாதே பெண்களுக்கு!!

அதே படத்தில்--

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்--பாடலில்--
எம்.ஜி.ஆர்,,ஜெவைப் பார்த்து--
தாமரைப் பூவிலே
உந்தன் இதழ்கள் தந்ததோ சிவப்போ--என்று கேட்கிறோர்
சாதாரணமாகக் கவிஞர்கள் தாமரையை முகத்துக்கு ஒப்பிடும் போது உறுத்தாத,,வெண்மை கலந்த சிவப்பாக தாமரையின் உள் புறத்தை பெண்ணுக்கு ஒப்பிடுவது புதுமை தானே?

பூ வைத்தப் பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூச்சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா--பாடலில்--

பசும்பாலோ பழத்துடன் தேன் கலந்துக்
கன்னி வைத்தப் பொங்கலோ--அருமையான வீச்சு!
இதைப் பாடும் நாயகன் மாட்டுக்காரன் என்பதால் இங்கே பொங்கலை உவமானம் காட்டியவர்--
அதேப் பாடலில்--

பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன்
காதல் வழக்கு--இன்னொரு எம்.ஜி.ஆர் இப்படிப் பாடுவார்!
காரணம் அந்த எம்.ஜி.ஆர் வக்கீல் என்பதால் --
வழக்குத் தொடுப்பதாய் வாய் மொழிகிறார்

உலகம் சுற்றும் வாலிபனில்--

லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
--பாடலில்--
எம்.ஜி.ஆரும் மஞ்சுளாவும் வெளி நாட்டில் டூயட் பாடுவதால்--
அந்த நாடுகளின் இயற்கையான--
லில்லி மலரையும் செர்ரிப் பழத்தையும் ஒப்பிடுகிறார்!
இதே பாடலில்--மஞ்சுளா எம்.ஜி.ஆரைப் பார்த்து--

அந்த நூற்றாண்டு சிற்பங்களும்
உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெக்கத்திலே!!
சாதாரணமாக சிற்பங்கள்--சிலைகளைப் பெண்களின் பேரழக்குக்குக் கூறுவார்கள்!
அந்த சிற்பத்தை எம்.ஜி.ஆருக்கு உவமானமாக்கி--
எம்.ஜி.ஆரின் அழகைக் காட்டுகிறாரல்லவா கவிஞர்!!
இன்னமும் வரும்...vt.........

orodizli
4th December 2020, 07:51 AM
புலம்பல், பொய் பி.சேகர் கழகத்தினர் சரியாக தான் சொல்கிறார்கள் உனக்கு தான் உண்மை தெரியாமல் இப்படி பிதற்றுகிறாய்"

"1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்,

அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்,
அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,

காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,

மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,"

உங்கள் அய்யன் சுயசரிதையில் என்ன சொல்லியிருக்கிறார் "“நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான்"

மற்ற மாட்சி என்றால் திமுக, காங்கிரஸ் கிடையாது பிறகு அதிமுக தானே"

"பி" சேகர் நீ அழுதுபுரண்டாலும், உளறினாலும் கணேசமூர்த்தி தோல்வி அவரது கட்சியில் ஆள் இருந்தால் தானே வாக்கே பெறுவதற்கு? https://sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155.......Saileshbasu..... ....

fidowag
4th December 2020, 11:24 PM
இன்று (04/12/20) முதல் மறு வெளியீடுகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்*தொடர்ச்சி .......
-------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை - வி .சி.மாளிகையில் - ஆயிரத்தில் ஒருவன்*தினசரி 3 காட்சிகள்*

மதுரை - ராம் அரங்கில் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*

கோவை -சண்முகா - தாய்க்கு தலைமகன் -தினசரி 3 காட்சிகள்*

சென்னை - எம்.எம்.தியேட்டர் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்*(மேட்னி /மாலை)

சென்னை - சரவணாவில் தனிப்பிறவி - தினசரி 3காட்சிகள்*

கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள்*
-----------------------------------------------------------------
திருச்செந்தூர் கிருஷ்ணா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 3* காட்சிகள்*

கடையம் - பாம்பே - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள் .

orodizli
5th December 2020, 09:08 AM
அதிகமாக வசூல் விபரங்கள் பதிவிட்ட படியால் வந்த களைப்பில் ஒரு கதையை சொல்லுகிறேன். உங்களுக்கும் சற்று பொழுது போகுமல்லவா. வந்த கதைதான் என்றாலும் வளமான கதையல்லவா? வி.சி.அய்யனின் முன்னாள் ஆன்மீக கதாசிரியர் உருவாக்கியதல்லவா! ஆன்மீக கட்சிகள் உருவாகும் இந்த நேரத்தில் திரை ஆன்மீக கதையும் இன்பம் சேர்க்கட்டுமே!

வி.சி.அய்யனின் கப்ஸா குழு சாகர் விரசராமன் தலைமையில் குழுமியிருக்க புருடா பவா,சிவனடி நக். கப்ஸா கண்ணிலா,மதுரை பட்டறை பாண்டி பவாநாத் கோபு ஆகியோரும் கப்ஸா குழுவின் செயற்குழு உறுப்பினராக அசிங்கப் படுத்தினர்.
உடனே சாகர் எழுந்து என்னோட போட்டியிடப்போகும் அந்த பாமரன் யார் ? அவனைப் பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்கிறேன்.

அவன் பெயர், டொங்கர்! என்று நக்.சொல்ல இல்லையில்லை பொங்கர் என்று புருடா பவா எடுத்துரைக்க, மூன்றாமவர் எழுந்து டொங்கரும் இல்லை, பொங்கரும் இல்லை, யாரோ சங்கராம், எம்ஜிஆர் படங்களின் உண்மை வசூலை மட்டுமல்ல அய்யன் பட வசூல் கப்ஸாவையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருபவராம்.
ஏன் வேறு ஒரு நல்லா கப்ஸா விடுபவன் கிடைக்கவில்லையா?
என்னடா இந்த சென்னை சாந்திக்கும், மதுரைக்கும் வந்த சோதனை?
இனி நம் கப்ஸாவுக்கு எல்லா ரசிகர் கூட்டமும் அடிமை.

கேவலம்! கேவலம்! ஏன் நம்மைப் போல் கப்ஸா மன்னர்கள் யாருமே அங்கு இல்லையா?. இன்னும் சற்று நேரத்தில் நமது கப்ஸாவிற்கு இந்த
எம்ஜிஆர் ரசிகர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறப் போகிறார்கள் எனறு சொல்லி விட்டு சாகர் விரசராமன் பாட ஆரம்பித்தார்.
ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? கப்ஸாவா? பட்டறை வசூலா? அதை நான் போட இன்றொரு நாள் போதுமா?

பாடி விட்டு படுத்து விட்ட சாகர் விரசராமன்
எங்கிருந்தோ வந்த தேவகான வசூல் பாடலை கேட்டு மதி மயங்கி கிடந்தார்.
"திரை வசூல் நீ செய்த அருஞ்சாதனை, தலைவா! அதை ஏற்க மறுத்த பொய்யருக்கு பெரும் சோதனை"

ஆகா! என்ன அருமையான பாடலய்யா இது! அவை அனைத்தும் உண்மை வசூல்! தேவ கானமய்யா அது. தம்பி நீ யாருப்பா?
நானா?
நான் பொங்கரும் இல்லை டொங்கரும் இல்லை. நான் இந்த வசூல் விபரங்கள் எல்லாம் போடுவாரே சங்கர், அவருக்கு பக்கத்து வீட்டில குடியிருப்பவன் என்று கூறியதும் இரவோடு இரவாக ஊரை காலி பண்ணி ஒருவன் புருடாவுக்கும் மற்றவர்கள் கண்மண் தெரியாமல் தெரியாத ஊர்களுக்கும் ஓடி மறைந்தனர்.

போகும் போது, நமது கப்ஸா ஒன்றும் தெரியாதவர்கள் மத்தியில்தான் எடுபடும். இவனோ அத்தனையும் உண்மை வசூலாக சொல்வதால் எத்தனை தடவை கேட்டாலும் ஒரே மாதிரிதான் சொல்வான். நாம் கப்ஸா விடுவதால் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு வசூல் வந்து நம்மை தோல்வியடைய செய்து விடும். நல்லவேளை அந்த
அந்த புரட்சியின் கருணையால் மானம் பிழைத்தோம் என்று பதறி சிதறி ஆளுக்கொரு திசையில் தலை தெறிக்க ஓடி மறைந்தனர்.

அன்றைய தினத்திலிருந்து மிஸ்டர் நக். சிவனடி நக். காக மாறி சிவா(ஜி) கப்ஸா தொண்டாற்ற கிளம்பி அப்போ அப்போ வைக்கோல் கட்டுடன் மாடு மேய்க்கும் திறனையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. என்ன ரசிகர்களே கதை ரசிக்கும்படி இருந்ததா?

நன்றி! வணக்கம்..........ksr.........

orodizli
5th December 2020, 09:11 AM
NEWS

*

STATES

*

TAMIL NADU

TAMIL NADU

Rajini entry: Replicating MGR’s legacy not possible without political work



B. KolappanCHENNAI*04 DECEMBER 2020 03:08 IST

UPDATED:*04 DECEMBER 2020 12:23 IST

****

Can the actor catapult himself into the big league?

In a State where cinema and politics are intricately woven, actor Rajinikanth’s politcial entry inevitably gets compared to the success of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran, and his successor Jayalalithaa. But comparisons have proved odious, in the past, when actors who launched political parties met with limited success.
Opinions differ if Mr. Rajinikanth can catapult himself into the big league.
“Not at all. He is a person with no background in political work and has not engaged with the people. At best, he is running a fan club. I do not undermine him by saying he is an actor. He has been inconsistent, but sees configurations of the BJP’s stratagem in Tamil Nadu and is willing to roll with them,” said Ramu Manivannan, professor, Department of Politics and Public Administration, University of Madras. Though there is no dispute about Mr. Rajinikanth’s appeal as a film hero, his lack of grounding in politics is a fact to reckon with. While actor Vijayakant achieved reasonable success in politics, thespian Sivaji Ganesan, representing the Congress and the Janata Dal, T. Raajendhar and Bhagyaraj have failed miserably.





“What is significant about the phenomenon of MGR is that he was not merely a political personality, but was a film star and a politician at once,” wrote M.S.S. Pandian in the preface to his book,*The Image Trap: M.G. Ramachandran in Film and Politics. MGR and DMK benefited from each other.
“Given the DMK’s overt allegiance to cinema as a vehicle for political communication, it skilfully transferred MGR’s cinematic image to the domain of politics and invested it with certain life-like authenticity,” wrote Pandian.
When he was expelled, MGR walked away with his politically-oriented fans, a chunk of DMK cadre and leaders.
Though Mr. Rajinikanth has strong fan clubs, he will not be able to convert them into a political organisation like MGR, because the latter had done political work before launching his party, said Mr. Manivannan.
“MGR has been part of the Dravidian movement and the struggles launched by it. What political work has Rajinikanth done to claim the legacy of MGR? At best, he is a pawn in the BJP’s moves in Tamil Nadu. The BJP does not want him to come to power, but wants a deterrent to someone coming to power. He is a negative instrument,” he argued.
DMK deputy general secretary A. Raja pointed out that even MGR’s was an incidental growth as a politician, as he travelled with the DMK and propagated the ideology. “He could not have emerged externally by depending only on his film personality. He launched and sustained the AIADMK, and Jayalalithaa came and took over the leadership. It was like a CEO assuming charge in a well-established company. On her own, she would not have achieved much in politics,” he said.
TNCC president K.S. Alagiri said after MGR, it was Mr. Rajinikanth who was accorded a great status by Tamils in the film world. “The attempt to project him as a non-Tamil failed to cut ice with the Tamil people. But he has betrayed Tamils by allowing the BJP to handle him,” he said.

.........The Hindu.........

orodizli
5th December 2020, 09:14 AM
செய்தி

*

மாநிலங்களில்

*

தமிழ்நாடு

தமிழ்நாடு

ரஜினி நுழைவு: எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை அரசியல் வேலை இல்லாமல் சாத்தியமில்லை



பி. கோலப்பன்சென்னை*04 டிசம்பர் 2020 03:08 ist

புதுப்பிக்கப்பட்டது:*04 டிசம்பர் 2020 12:23 ist

****

நடிகர் தன்னை பெரிய லீக்கில் இணைக்க முடியுமா?

சினிமாவும் அரசியலும் சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்தில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தவிர்க்க முடியாமல் அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அவரது வாரிசான ஜெயலலிதா ஆகியோரின் வெற்றியுடன் ஒப்பிடப்படுகிறது.*கடந்த காலங்களில், அரசியல் கட்சிகளை ஆரம்பித்த நடிகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை சந்தித்தபோது ஒப்பீடுகள் மோசமானவை என்பதை நிரூபித்துள்ளன.
திரு. ரஜினிகாந்த் தன்னை பெரிய லீக்கில் இணைக்க முடியும் என்றால் கருத்துக்கள் வேறுபடுகின்றன.
“இல்லவே இல்லை.*அவர் அரசியல் பணிகளில் பின்னணி இல்லாதவர், மக்களுடன் ஈடுபடவில்லை.*சிறந்தது, அவர் ஒரு ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார்.*அவர் ஒரு நடிகர் என்று கூறி நான் அவரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை.*அவர் முரணாக இருந்தார், ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவின் மூலோபாயத்தின் உள்ளமைவுகளைக் காண்கிறார், அவர்களுடன் உருட்ட தயாராக இருக்கிறார், ”என்று மெட்ராஸ் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறினார்.*திரு. ரஜினிகாந்த் ஒரு திரைப்பட ஹீரோவாக முறையிட்டதைப் பற்றி எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்றாலும், அரசியலில் அவருக்கு அடிப்படை இல்லாதது கணக்கிட வேண்டிய உண்மை.*நடிகர் விஜயகாந்த் அரசியலில் நியாயமான வெற்றியைப் பெற்றாலும், காங்கிரஸையும் ஜனதா தளத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தெஸ்பியன் நடிகர் சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் பரிதாபமாக தோல்வியடைந்துள்ளனர்.



"எம்.ஜி.ஆரின் நிகழ்வில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் வெறுமனே ஒரு அரசியல் ஆளுமை அல்ல, ஆனால் ஒரு திரைப்பட நட்சத்திரம் மற்றும் ஒரே நேரத்தில் ஒரு அரசியல்வாதி" என்று எம்.எஸ்.எஸ். பாண்டியன் தனது புத்தகமான*தி இமேஜ் ட்ராப்: எம்.ஜி.ராமச்சந்திரன் திரைப்படத்தில்*முன்னுரையில் எழுதினார்.*அரசியல்*.*எம்.ஜி.ஆர் மற்றும் டி.எம்.கே ஒருவருக்கொருவர் பயனடைந்தனர்.
"அரசியல் தகவல்தொடர்புக்கான ஒரு வாகனமாக சினிமாவுடன் திமுகவின் வெளிப்படையான விசுவாசத்தைக் கருத்தில் கொண்டு, இது எம்.ஜி.ஆரின் சினிமா உருவத்தை அரசியலின் களத்திற்கு திறமையாக மாற்றி, சில வாழ்க்கை போன்ற நம்பகத்தன்மையுடன் முதலீடு செய்தது" என்று பாண்டியன் எழுதினார்.
அவர் வெளியேற்றப்பட்டபோது, ​​எம்.ஜி.ஆர் தனது அரசியல் சார்ந்த ரசிகர்கள், திமுக கேடர் மற்றும் தலைவர்களுடன் வெளியேறினார்.
திரு. ரஜினிகாந்திற்கு வலுவான ரசிகர் மன்றங்கள் இருந்தாலும், அவர்களை எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் அமைப்பாக மாற்ற முடியாது, ஏனென்றால் பிந்தையவர் தனது கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு அரசியல் பணிகளைச் செய்திருந்தார் என்று திரு மணிவண்ணன் கூறினார்.
"எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், அது தொடங்கிய போராட்டங்களாகவும் இருந்து வருகிறது.*எம்.ஜி.ஆரின் மரபுக்கு உரிமை கோர ரஜினிகாந்த் என்ன அரசியல் வேலை செய்துள்ளார்?*சிறந்தது, அவர் தமிழகத்தில் பாஜகவின் நகர்வுகளில் ஒரு சிப்பாய்.*அவர் ஆட்சிக்கு வருவதை பாஜக விரும்பவில்லை, ஆனால் ஒருவர் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க விரும்புகிறார்.*அவர் ஒரு எதிர்மறை கருவி, ”என்று அவர் வாதிட்டார்.
திமுக துணை பொதுச் செயலாளர் ஏ.ராஜா, எம்.ஜி.ஆரின் அரசியல்வாதியாக தற்செயலான வளர்ச்சியாக இருப்பதை சுட்டிக்காட்டினார், ஏனெனில் அவர் திமுகவுடன் பயணம் செய்து சித்தாந்தத்தை பரப்பினார்.*“அவரது திரைப்பட ஆளுமையை மட்டுமே பொறுத்து அவர் வெளிப்புறமாக வெளிவந்திருக்க முடியாது.*அவர் அதிமுகவைத் தொடங்கினார், பராமரித்தார், ஜெயலலிதா வந்து தலைமையை ஏற்றுக்கொண்டார்.*இது ஒரு சி.இ.ஓ ஒரு நன்கு நிறுவப்பட்ட நிறுவனத்தில் பொறுப்பேற்பது போல் இருந்தது.*சொந்தமாக, அவர் அரசியலில் அதிகம் சாதித்திருக்க மாட்டார், ”என்று அவர் கூறினார்.
டி.என்.சி.சி தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு, திரு.ரஜினிகாந்த் தான் திரைப்பட உலகில் தமிழர்களால் ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெற்றார்.*"அவரை ஒரு தமிழர் அல்லாதவர் என்று காட்ட முயற்சித்த முயற்சி தமிழ் மக்களுடன் பனியை வெட்டத் தவறிவிட்டது.*ஆனால், அவரை கையாள பாஜகவை அனுமதிப்பதன் மூலம் அவர் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார், ”என்றார்.





முந்தைய கதை'ரஜினி முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார்'

அடுத்த கதை ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு சக்திகளின் மறுசீரமைப்பு பற்றிய பேச்சைத் தூண்டுகிறது...தி ஹிந்து...

orodizli
5th December 2020, 09:14 AM
புரட்சித்தலைவர் பாரதரத்னா பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் #MGR அவர்கள் Interesting facts

எம்ஜிஆர் - சரித்திர நாயகன்

எம்ஜிஆர். மூன்றெழுத்து மந்திரம். தொட்டதெல்லாம் வெற்றி. நினைத்ததை எல்லாம் செய்து முடித்த ரசவாதி. உண்மையான மக்களாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்திய அரசியல் நாயகன். ஆனால் அவரது அரசியல் வாழ்வு அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. துரோகங்களையும், தோல்விகளையும் எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை நாயகன். கட்சி துவங்கிய நாள் முதல் அந்திம காலம் வரை அவரது அரசியல் வாழ்க்கை என்றென்றும் ஏறுமுகம் தான். தமிழ்நாட்டின் பொற்கால அரசியல் சரித்திரம்..

1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை சந்திக்கிறார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அவரை இருகரம் ஏந்தி வரவேற்று அன்புடன் அரவணைத்துக் கொண்டார் அண்ணா. காரணம், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை முழுமையாக அறிந்தவர் அண்ணா. 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணாவின் ஆணையை ஏற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 1958-ல் அப்போதைய பிரதமர் நேரு தமிழகம் வந்தபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடும் என்று கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்களில் எம்ஜிஆரும் ஒருவர். 1959-ல் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெருதெருவாக பிரசாரம் மேற்கொண்டு திமுக வெற்றிபெற காரணமானார்.

1962-ல் தமது மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத் தான் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார். அந்த கொள்கைபிடிப்பும், நெஞ்சுரமும் தான் மக்கள் திலகத்தை புரட்சித் தலைவராக உயர்த்தியது. அந்த தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி வரிசையில் அமர எம்ஜிஆர் தான் முழுமுதற்காரணம். அதற்கு கிடைத்த பரிசுதான் எம்ஜிஆருக்கு எம்எல்சி பதவி. ஆனால் துரோகிகளின் பொறாமை பேச்சுக்களை அடுத்து பதவியை துச்சமென தூக்கி எறிந்த மாண்பாளர் எம்ஜிஆர்.

1967- சட்டமன்ற தேர்தலில் பரங்கிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் எம்ஜிஆர். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் திடீரென சுடப்பட்டார். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சுவரொட்டிகளாக தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாமலேயே தொகுதி மக்களை சந்திக்காமலேயே மகத்தான வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக ஆனார். அந்த தேர்தலில் 137 இடங்களை கைப்பற்றி பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்ததால் அண்ணா தர விழைந்தும் அமைச்சர் பதவியை வேண்டாமென்று கூறிய எம்ஜிஆரை கவுரப்படுத்த அமைச்சரின் அந்தஸ்துடன் கூடிய சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவியை வழங்கினார் அண்ணா.

1969-ல் அண்ணா உயிரிழந்த சூழலில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு எம்ஜிஆர் தான் விடை பகர்ந்தார். அவரது ஆதரவால் மட்டுமே கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் பதவியில் அமர முடிந்தது. 1971-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற தன்னுடைய பிரசாரத்தை முன்னெடுத்தார். ஆனால் அதிகாரம் கொடுத்த மமதையில் யாரால் வெற்றி பெற்றோம் என்பதை மறந்த கருணாநிதி அவர்கள் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்தார். ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற கொள்கை பிடிப்பு உடைய எம்ஜிஆர் அதனை தட்டிக் கேட்டார். இதுபொறுக்க முடியாத கருணாநிதி அவர்கள் 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி எம்ஜிஆரை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆதரவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். கருப்பு சிவப்பு கொடியின் நடுவே அண்ணாவின் உருவம் பதிக்கப்பட்டு அதிமுகவின் கொடி உதயமானது.

1973-ல் மே மாதம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. கட்சி உருவாகி ஆறே மாதத்தில் அதனை எதிர்கொண்டது அதிமுக. அந்த தேர்தலில் தான் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் அறிமுகமானது. எம்ஜிஆர் அடையாளம் காட்டிய அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
1974-ல் நடைபெற்ற கோவை மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதுமட்டுமல்ல, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ராமசாமி முதலமைச்சரானார்.

1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 130 இடங்களை கைப்பற்றியது அதிமுக. 1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்ஜிஆர். 4.7.77- அன்று முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதன் நினைவாகவே, தான் பயன்படுத்திய கார்கள் அனைத்திற்கும் 4777 என்ற எண்ணையை பயன்படுத்தினார். 1980-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி துணையுடன் அதிமுக அரசு கவிழ்க்கப்பட்டது. ஆனாலும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் எம்ஜிஆர். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடல் வரிகள் அவருக்கு மட்டுமே பொருந்தும்.

1984-ம் ஆண்டு முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. அப்போது உடல்நலம் குன்றியிருந்த எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருந்தும் அவர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது.

1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி மண்ணுலகை ஆண்ட மக்கள் திலகம் விண்ணுலகை ஆள தன் இன்னுயிரை ஈந்து மறைந்தார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!! என்ற வரிகளுக்கு ஏற்ப மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் #MGR.

#46புதூர் #மொடக்குறிச்சி #ஈரோடு
#46pudhur #Modakurichi #Erode.........

fidowag
5th December 2020, 08:22 PM
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு தொடர்ச்சி............
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
04/12/20 முதல் கடலூர் கமலம் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்*

06/12/20 முதல் கிருஷ்ணகிரி ராஜா -தர்மம் தலை காக்கும் -தினசரி 3காட்சிகள்*

06/12/20 முதல் -புதுக்கோட்டை வெஸ்ட் -ரகசியபோலிஸ் 115-தினசரி 4காட்சிகள்*

06/12/20 முதல் ,மாயூரம் பியர்லஸ் -ரகசியபோலிஸ் 115-தினசரி 4 காட்சிகள்*


06/12/20 முதல் தூத்துக்குடி சத்யா - என் அண்ணன் - தினசரி 3 காட்சிகள்*

orodizli
6th December 2020, 08:26 AM
#மக்கள்_திலகத்தின்_ப்ளாக்பஸ்டர்

#வேட்டைக்காரன்..

பாபு (மக்கள் திலகம்) ஒரு வேட்டைக்காரன்...சதா காடே கதி என்றிருப்பவர்... ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச்செல்லும் போது காட்டில் மாட்டிக்கொண்ட லதா (நடிகையர் திலகம் சாவித்திரி) வை காப்பாற்றுகிறார்...இருவரும் காதலிக்கிறார்கள். பாபுவின் சாகசங்களை லதா திருமணத்திற்கு முன் ரசித்தாலும், திருமணத்திற்கு பின் இந்த அபாயமான வேட்டைத்தொழிலை விரும்பவில்லை...பாபு-லதா தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை ராஜாவையும் தன்னைப்போலவே வேட்டைக்காரனாக உருவாக்க முயல்கிறார் பாபு...!!!

இதற்குபின் லதாவிற்கு TB நோயின் அறிகுறிகள் தென்படவே லதாவை குழந்தை ராஜாவிடம் இருந்து பிரித்து வைககிறார் பாபு.

பாபு-லதா தம்பதிகள், லதாவின் நோயால் இருவரும் பிரிந்து வாழ்வதையும் அறிந்துகொண்ட மாயவன் (நம்பியார்) என்ற கொள்ளைக்காரன் பாபுவின் சொத்துக்களை கைப்பற்றவும், லதாவையும் குழந்தை ராஜாவையும் தீர்த்துக்கட்ட, இருவரையும் காட்டிற்குள் வரவழைக்கிறான்...பாபு இருவரையும் காப்பாற்றுகிறார்.

இந்த படத்தில் பாபுவாக வரும் மக்கள் திலகம், படத்தில் ..குதிரைஏற்றம், மிருகங்களுடன் பயிற்சி, சாவித்திரியுடன் காதல், வில்லன்களை பந்தாடுவது, மனைவி பிரிந்ததும் மகனிடம் பாசம் என்று தூள் கிளப்புகிறார். சுறுசுறுப்புக்கு கேட்கவா வேண்டும் ? வீட்டிற்குள்ளும் கூட அப்படி ஒரு ஓட்டமும் நடையுமாகத்தான் அப்படி ஒரு Energetic ஆக இருப்பார். மக்கள் திலகம் இந்த படத்தில் அணிந்திருக்கும் வேட்டைக்காரன் டிரஸ் அந்தகால ட்ரண்ட்செட்.

நடிகையர் திலகம் சாவித்திரி என்றாலே நமக்கு பாசமிகு தங்கை, அன்பான அடக்கமான மனைவி ஆகியவைதான் நினைவுக்கு வரும்...இந்த படத்தில் நேர் எதிராக மாடர்ன் பெண்ணாக, துணிச்சலான பெண்ணாக வந்து கலக்குகிறார். சாவித்திரியை இப்படம் ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடையே சேர்த்தது..."மெதுவா..மெதுவா தொடலாமா" பாடலில் மட்டுமல்ல, படம் முழுவதும் மக்கள் திலகத்துடன் கவர்ச்சியான ரொமான்சில் கலக்குகிறார் லதாவாக நடிக்கும் நடிகையர் திலகம்.

படத்தில் மேலும் நம்பியார், எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா, ஆகியோரும் சிறப்பான நடிப்பால் படத்திற்கு துணை புரிகிறார்கள்.

இசை கே.வி.எம்....புகுந்து விளையாடி இருக்கிறார்..." உன்னை அறிந்தால்...; மெதுவா மெதுவா தொடலாமா....; வெள்ளி நிலா முற்றத்திலே; மஞ்சள் முகமே வருக; சீட்டுக்கட்டு ராஜா; " என்று அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.

மக்கள் திலகம்+தேவர் கூட்டணியில் படம் 1964 பொங்கலன்று வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது...மக்கள் திலகம், நடிகையர் திலகம், மற்றும் இனிமையான பாடல்களுக்காகவே, ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு இப்படம் வரவழைத்தது.

இந்த படத்தை திரையிட்ட சித்ரா திரையரங்கில் (சென்னை) அடர்ந்த காட்டின் செட்டை போட்டு அசத்தியிருந்தார்கள். அதே போல் திரையரங்கின் உட்புறம் ஒரு கூண்டில் வைக்கப்பட்ட புலியையும் வைத்திருந்தார்கள்.

வேட்டைக்காரன்.....வசூலிலும் வேட்டைக்காரன்...!!!

தகவல் & புகைப்பட உதவி:https://en.m.wikipedia.org/wiki/Vettaikaaran_(1964_film).........Sr.bu...

orodizli
6th December 2020, 08:27 AM
����
இன்று கலைச்செல்வி என்று தமிழ் திரையுலகத்தினரால் போற்றப்பட்ட பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள் ����������
பிறப்பு: 24 பிப்ரவரி 1948
பிறந்த இடம்: மைசூர், இந்தியா
இயற்பெயர்: கோமலவல்லி (பள்ளியில் சேர்ப்பதற்காக, அவருக்கு ஒரு வயது இருக்கும்போது இயற்பெயரான கோமலவல்லியை மாற்றி, அவருக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டப்பட்டது)
பெற்றோர்: ஜெயராம் - வேதவல்லி
தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை அவர் இழந்தார். அதன் பிறகு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட அவருடைய குடும்பம், தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றது

பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவருடைய குடும்பம் சென்னைக்கு வந்தது.

பள்ளிக் கல்வி: சென்னையிலுள்ள சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர். 1964 இல் அவர் பத்தாம் வகுப்பை முடித்தார். அப்போது மேல்படிப்பை மேற்கொள்ள அரசிடமிருந்து கல்வி உதவித் தொகை கிடைத்தபோதும், அதை ஏற்காமல் தனது 15 வயதிலேயே திரைப்படத் துறையில் அவர் கால் பதித்தார்.

கலை ஈடுபாடு: தனது 4 வயது முதலே கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் கற்றுத் தேர்ந்தார். அதோடு மோகினி ஆட்டம், கதக்களி, மணிப்புரி போன்ற நடனங்களிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனது பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார். திரைப்படங்களில் ஏராளமான பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.

மொழி புலமை: ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புலமைபெற்ற அவர், மலையாளத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும் பெற்றிருந்தார்

ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்.

ஜெயலலிதா 1961 - 1980 வரை திரையுலகில் நடித்த திரைப்படங்களின் பட்டியல்.
1961 -சிறிசைல மகாத்மா (Shrishaila Mahatme) ராஜ்குமார் (கன்னடப்படம்)
1961 -எபிஸில் ஷங்கர்.வி.கிரி இயக்கிய (ஆங்கிலப் படம்)
1962 -மேன்-மனுஷி (Man-Mauji) கிசோர்குமார் கன்னடப்படம். தலைப்பில் பெயரிப்படவில்லை. குமாரி ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
1964 -முரடன் முத்து சிவாஜி கணேசன் (தமிழ்)
1964 -மனே அலியா(Mane Aliya) பால்கிருசுணா கன்னடம்)
1964 -சின்னடா கொம்பே (கன்னடம்)
1965 -ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், கன்னி தாய் (தமிழ்) மவனா மகளூ (கன்னடம்), மனசுலு மமதலு (தெலுங்கு), நன்னா கர்தவ்யா (கன்னடம்)
1965 -ஆகஸ்ட் 21 நீ ஜெய்சங்கர் (தமிழ்) மவன மகலு (கன்னடம்), மனஷுலு மமதலு (தெலுங்கு)
1966 -ஜனவரி 26 மோட்டார் சுந்தரம்பிள்ளை சிவாஜி கணேசன் (சிவாஜியின் மகள் வேடம்)
1966 -ஏப்ரல் 14 யார் நீ ஜெய்சங்கர்
1966 -மே 6 குமரிப் பெண் ரவிசந்திரன்
1966 -மே 27 சந்திரோதயம் எம்.ஜி.ஆர்
1966 -சூன் 16 தனிப் பிறவி எம்.ஜி.ஆர்
1966 -ஆகஸ்ட் 18 முகராசி எம்.ஜி.ஆர்
1966 -நவம்பர் 11 கௌரி கல்யாணம் ஜெய்சங்கர், முகராசி
1966 -நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த் ஏவி.எம்.ராசன், மணி மகுடம்
1967 -ஜனவரி 13 தாய்க்குத் தலைமகன் எம்.ஜி.ஆர்
1967 -ஏப்ரல் 14 மகராசி ரவிசந்திரன்
1967 -மே 19 அரச கட்டளை எம்.ஜி.ஆர்
1967 -சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை ரவிச்சந்திரன்
1967 -செப்டம்பர் 7 காவல்காரன் எம்.ஜி.ஆர்
1967 -நவம்பர் 1 நான் ரவிசந்திரன்
1967 -கந்தன் கருணை சிவகுமார் வள்ளி வேடம்
1967 -ராஜா வீட்டுப் பிள்ளை ஜெய்சங்கர்
1968 -ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்
1968 -ஜனவரி 15 அன்று கண்ட முகம் ரவிசந்திரன்
1968 -பிப்ரவரி 23 தேர்த் திருவிழா எம்.ஜி.ஆர்
1968 -மார்ச் 15 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர்
1968 -ஏப்ரல் 12 கலாட்டா கல்யாணம் சிவாஜி கணேசன்
1968 -ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் எம்.ஜி.ஆர்
1968 -மே 10 மூன்றெழுத்து ரவிசந்திரன்
1968 -மே 31 பொம்மலாட்டம் ஜெய்சங்கர்
1968 -சூன் 27 புதிய பூமி எம்.ஜி.ஆர்
1968 -ஆகஸ்டு 15 கணவன் எம்.ஜி.ஆர்
1968 -செப்டம்பர் 6 முத்துச் சிப்பி ஜெய்சங்கர்
1968 -செப்டம்பர் 20 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்
1968 -அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா சிவாஜி கணேசன்
1968 -அக்டோபர் 21 காதல் வாகனம் எம்.ஜி.ஆர்.
1969 -சூன் 14 குருதட்சணை சிவாஜி கணேசன்
1969 -செப்டம்பர் 5 தெய்வமகன் சிவாஜி கணேசன்
1969 -நவம்பர் 7 நம் நாடு எம்.ஜி.ஆர்.
1969 -அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்.
1970 -ஜனவரி 14 எங்க மாமா சிவாஜி கணேசன்
1970 -ஜனவரி 14 மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர்.
1970 -மே 21 என் அண்ணன் எம்.ஜி.ஆர்.
1970 -ஆகஸ்ட் 29 தேடிவந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர்.
1970 -செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன் ஏவி. எம். ராசன்
1970 -அக்டோபர் 9 எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
1970 -அக்டோபர் 29 எங்கிருந்தோ வந்தாள் சிவாஜி கணேசன்
1970 -நவம்பர் 27 பாதுகாப்பு சிவாஜி கணேசன்
1971 -ஆகஸ்ட் 15 அன்னை வேளாங்கண்ணி ஜெமினி கணேசன்
1971 -ஜனவரி 26 குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர்.
1971 -ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி சிவாஜி கணேசன்
1971 -சூலை 3 சவாலே சமாளி சிவாஜி கணேசன்
1971 -ஆகஸ்ட் 12 தங்க கோபுரம் ஜெய்சங்கர்
1971 -அக்டோபர் 17 ஆதி பராசக்தி ஜெமினி கணேசன்
1971 -அக்டோபர் 18 நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர்.
1971 -திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர்
1971 -பிப்ரவரி 11 திக்குதெரியாத காட்டில் முத்துராமன்
1972 -ஜனவரி 26 ராஜா சிவாஜி கணேசன்
1972 -ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர்.
1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமா சிவாஜி கணேசன்
1972 -சூலை 15 தர்மம் எங்கே சிவாஜி கணேசன்
1972 -செப்டம்பர் 15 அன்னமிட்ட கை எம்.ஜி.ஆர்.
1972 -திசம்பர் 7 நீதி சிவாஜி கணேசன்
1973 -கங்கா கௌரி, வந்தாளே மகாராசி, பட்டிக்காட்டு பொன்னையா, சூரியகாந்தி, பாக்தாத் பேரழகி
1974 -ஜனவரி 11 திருமாங்கல்யம், அன்பைத்தேடி. அன்பு தங்கை, தாய், இரு தெய்வங்கள், வைரம், ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு, அன்புத்தங்கை
1975- அவளுக்கு ஆயிரம் கண்கள், யாருக்கும் வெட்கம் இல்லை, அவன்தான் மனிதன், பாட்டும் பாரதமும்
1976 கணவன் மனைவி (தமிழ்), சித்ரா பவுர்ணமி (தமிழ்)
1977 -ஸ்ரீ கிருஷ்ண லீலா (தமிழ்), உன்னை சுற்றும் உலகம் (தமிழ்)
1980 -ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல் சரத் பாபு 127ஆவது படம்
1992 -ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர், இயக்குநர் விசுவின் இயக்கத்தில் நீங்க நல்லா இருக்கணும் என்ற விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார். அந்தப் படத்தில் முதல்வராகவே நடித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு, எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
எம்.ஜி.ஆருடன் 27 படங்கள்: எம்.ஜி.ஆரை தனது அரசியல் வழிகாட்டிய ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
123 திரைப்படங்கள்: ஆங்கிலப் படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, மொத்தம் 123 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலம் 1. மலையாளம் 1. கன்னடம் 6. தெலுங்கு 29. தமிழ் 86.✨✨✨

orodizli
6th December 2020, 08:27 AM
சரித்திர வெற்றி அடிமைப்பெண் :
������������������������
அடிமைப்பெண் படக்குழு ஜெய்ப்பூரில் போய் இறங்கிய உடனேயே ராஜஸ்தான் மாநில வறட்சி நிதிக்காக 50,000 ரூபாய்களைக் கொடுத்தார்.அது அங்கேயே அவருக்கு பெரிய பாராட்டை ஏற்படுத்தியது.அதனால் ஜெய்ப்பூரில் எந்த இடத்திலும் படப்பிடிப்பை நடத்தலாம் என்கிற நிலைமையை உருவாக்கியது.ஜெய்ப்பூர் அரண்மனை ஆறாவது வது மாடியில் மன்னரின் படுக்கை அறை உள்ளது."இங்கே பாடல் காட்சியை எடுத்தால் நன்றாக
இருக்கும்" என்றேன்.'என்ன பெட்ரூமிலேயா?
என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தார்."ஆமாம் ஆனால் இங்கே ஒரு குறை நாம் படமெடுக்க முடியாதபடி உள்ளது.அதை நிவர்த்தி செய்தால் எடுக்கலாம்" என்றேன்.
அந்த அறையில் "கார்பெட்" மட்டும்தான் உள்ளது.அதற்கு பதிலாக "சன் மைக்கா" பதித்து காட்சி எடுத்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்."சன்மைக்கா" அப்போதுதான் அறிமுகமான சமயம்.டெல்லிக்கு ஒருவரை விமானத்தில் அனுப்பி சன்மைக்காவை வரவழைத்து விட்டார்.அந்தநாளில் அதன்விலை 40,000 ரூபாய்கள்.
பாடலின் சில வரிகளை மட்டும் எடுத்தால் போதும் என்றிருந்த நாங்கள் பாடலின் முக்கால்வாசியை அந்த அறையிலேயே எடுத்தோம்.அந்தக் காட்சியை பார்த்த சின்னவர் எம்.ஜி.ஆர் முதல்முறையாக என்னை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.படம் திரையிட்டபிறகு ரசிகர்களின் பெரிய பாராட்டை பெற்ற அந்தப் பாடல் "ஆயிரம் நிலவே வா" என்ற பம்பர் ஹிட் பாடல்.ஜெய்ப்பூரில் ஷூட்டிங் முடிந்தவுடன் அங்கேயே படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினார்.
சரியாகத் திட்டமிடபட்டு செலவைப்பற்றி கவலைப்படாமல் எடுக்கப்பட்டதால்தான் "அடிமைப்பெண்" பட உலக வரலாற்றில் இடம் பெற்றது.

-அடிமைப்பெண் இயக்குனர் கே.சங்கர்..........

orodizli
6th December 2020, 08:28 AM
தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜாஅக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார்

"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"
��
தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1965ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா
��
அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
��
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.
��
வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
��
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.
��
எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

Article From: மணி ஸ்ரீகாந்தன்
tamilvamban.blogspot.in.........SBB...

orodizli
6th December 2020, 08:30 AM
அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்...

அமரர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்..

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்த நாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அண்ணா அவர்களை நோக்கி முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது அது உங்கள் சொந்த பணமா அல்லது அரசு பணமா அல்லது உங்கள் கட்சி செலவா என்று கேட்க.

அண்ணா அவர்கள் சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.

மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அவர் மீண்டும் கேட்க.

அமரர் அண்ணா அவர்கள் எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை.
தமிழக அரசும் கொடுக்கவில்லை.
எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை.

செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருப்பது ஐயாயிரம் ரூபாய் மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ....

நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டிடம் தாண்டி கேட்டது.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முகத்தில் சோகம் சூழ்ந்தது...எங்கும் வந்து நிற்கும் எம்ஜிஆர் ஒருவரே என்பது அவர்களுக்கு அன்று புரிந்த காலம் அது.

வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கி செதுக்கி தன்னை பக்குவ படுத்தி கொண்டவர் நம் இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.

பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாத ஒரே தலைவன்

அவர் புகழ் என்றும் காப்போம்....
உங்களின் எண்ணம் கருத்து ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி.

வாழ்க தலைவர் புகழ்.
எண்ணமும் ஆக்கமும் ஊக்கமும் அன்பு தலைவர் நெஞ்சம் எம்ஜிஆர் நேசன்..நன்றி.

தொடருவோம் என்றும்...........

orodizli
7th December 2020, 08:43 AM
ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க

ஊழல் செய்யாத உத்தமரே வாழ்க

லஞ்சம் வாங்கி சிறைச்சாலைக்கு செல்லாதவரே வாழ்க

லஞ்சம் வாங்கி விசாரணை கமிஷனில் மாட்டாதவரே. வாழ்க

உங்களுடைய அன்பிற்கு ஈடு உண்டோ
உன்னுடைய அழகுக்கு ஈடு உண்டோ
உன்னுடைய ஆட்டத்திற்கு ஈடு உண்டோ

உன்னுடைய ஆட்சிக்கு ஈடு உண்டோ

உன்னுடைய பாட்டிற்கு ஈடு உண்டோ

உன்னுடைய பண்புக்கு ஈடு உண்டா

உன்னுடைய ரசிகர் படைக்கு ஈடு உண்டோ

நீ ஏழை மக்களுக்கு பணங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாயேஉனக்குயாராவது ஈடு உண்டோ..........am.........

orodizli
7th December 2020, 08:44 AM
��சரித்திரநாயகன்��

எல்லோருக்கும் இவரைப்போல் ஆகவேண்டும் என்று ஆசைதான் என்ன செய்வது...
ஆரம்பகாலவாழ்கையில்
இவர் பட்ட கஷ்டங்களை
பட யாரும்ஆசைபடுவதில்லை.. ..

உயிரை பணயம்வைத்து திரைப்படங்களில் நடித்தாரே அதற்க்கு ஆசைபடுவதில்லை...

மக்கள் முதல் தொண்டர்கள்வரை
அவர்களின் தேவையரிந்து கேட்பதற்க்கு முன்னால் கொடுக்கும் .
வள்ளாக வாழ ஆசைபடுவதில்லை...

காலம் பலரின் ஞாபகங்களை
மறக்கவைத்துக்கொண்டுதான்
இருக்கிறது...
இன்று வரை எத்தனை நடிகர்கள்... தலைவர்களை எத்தனை பேர் இன்னும் மக்கள்மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

இன்றும் பலர் புரட்சித்தலைவர் .. வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தான்
இருக்கிறார்கள்...

என்று அவர் ரசிகர்கள்
தொண்டர்கள்
மனதில்(அமரராக)

������..........vr, am...

orodizli
7th December 2020, 08:45 AM
நடிப்பவன் எல்லாம் எம் ஜி ஆரா

நடிப்பது என் தொழில்
கொடுப்பது என் குணம்
எம் ஜி ஆர்

நடிப்பில் கொள்கை
நடப்பில் லட்சியம் அது
எம் ஜி ஆர்

மக்கள் துயர் கண்ட போது
எல்லாம் முதலில் வந்தது எம் ஜி ஆர் உதவி அது எம் ஜி ஆர்

போர் வந்த போதும்
தனஸ்கோடி புயல் வந்த போதும்
இலங்கை புயல் வந்த போதும்
அதிக பணம் கொடுத்த தனி மனிதன் எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்

குண்டு பட்டபோதும் உடல் தளர்ந்தபோதும் மாறாத மக்கள் சேவை அது எம் ஜி ஆர்

எந்த பயம் இல்லாமல் இலங்கை போரின் போது தமிழரை காக்க உதவிய எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்

தன் உடமை எல்லாம் தமிழ் மக்களுக்கு என தந்த பொன்மனம் கொண்ட எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்

இதில் ஒரு தகுயியும் இன்றி நடிகன் என்று நாடாள நினைக்கும் நடிகர்களை மக்கள் ஏற்க்க மாட்டார்கள்

தன் வெற்றி தோல்வியை மக்கள் வெற்றி தோல்வி என மக்களை ஏமாற்றும் வித்தை

தமிழ் மக்களை சினிமா பைத்தியம் என ஏமாற்ற நினைக்கும் நடிகர்கள் ஏமாறபோவது உறுதி
தமிழனுக்கு உண்மை ஏது போலி ஏது என உணரும் சக்தி கொண்டவன்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்...am...

orodizli
7th December 2020, 08:48 AM
இனிய* வண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே!...

புர*ட்சித்த*லைவ*ர் ஒன்றும் நேற்று பெய்த* ம*ழையில் இன்று முளைத்த* காளான் போல் அர*சிய*லுக்கு வ*ந்த* 4 மாத*த்திலேயே முத*ல்வ*ராக* வேண்டும் என்று சொல்லிவிட்டு வ*ர*வில்லை..அவ*ர*து அர*சிய*ல் பொதுவாழ்வு திரையுல*க* வாழ்வை விட* நீள*மான*து..1930 முத*ல் 1950வ*ரை காங்கிர*ஸ் க*ட்சி உறுப்பின*ராக* இருந்தார்..க*த*ர் ஆடையே உடுத்தி வ*ந்தார். பின்ன*ர் காங்கிர*ஸில் உள்ள ஏற்ற* தாழ்வுக*ள், ஜாதி பாகுபாடுக*ள் ஆகிய*வ*ற்றால் வெறுத்து விலகி எந்த* அர*சிய*லிலும் இல்லாம*ல் சில கால*ம் இருந்தார்..பின் அண்ணாவின் உரைக*ளாலும், சிந்த*னைக*ளாலும் க*வ*ர*ப்ப*ட்டு திமுக*வில் தானாக*வே இணைந்தார். திமுக* த*மிழ*க*த்தின் சின்ன*மான உத*ய*சூரிய*னையும், அறிஞ*ர் அண்ணாவின் கொள்கைக*ளையும் ப*ட்டி தொட்டியெங்கும் பிர*ப*ல*ப்ப*டுத்தினார். 1967ல் திமுக*வை ஆட்சிக்க*ட்டிலில் அம*ர்த்த* முழுமுத*ற்கார*ண*மே எம்.ஜி.ஆர்தான். அதை அண்ணாவே சொல்லியுமிருக்கிறார்.

பின்ன*ர் 1969ல் அண்ணாவின் திடீர் ம*றைவிற்குப்பின் நிலைகுலைந்து போயிருந்த* திமுக*வை தூக்கி நிறுத்தி த*மிழ*க* முத*ல்வ*ராக* க*ருணாநிதியை நிய*மிக்க* ஆத*ர*வு அளித்து அக்க*ருத்தை பிற* ச*ட்ட*ம*ன்ற* உறுப்பின*ர்க*ளுக்கும் எடுத்துச்சொல்லி நிறைவேற்றினார்.

1971ல் ச*ட்ட* ம*ன்ற* தேர்த*ல் ந*டைபெறும்போது காமராஜ*ர்தான் வெல்வார் என்று ப*த்திரிக்கைக*ள் ப*ல*வும் எழுதின*. திமுக*வின் மீதும் சில அதிருப்திக*ள் மக்களிட*ம் இருந்த*து..அப்போது எம்.ஜி.ஆர் த*மிழ*க*மெங்கும் சூராவ*ளி சுற்றுப்ப*ய*ண*ம் செய்து 180 தொகுதிக*ளில் பிர*ம்மாண்ட* வெற்றியை பெற*வைத்தார். 1967ல் ப*ர*ங்கிம*லையில் நின்ற*போதும் துப்பாக்கி சூட்டினால் ஆஸ்ப*த்திரியில் ப*டுத்துக்கொண்டே ஜெயித்தார். ஆனால், 1971ல் மீண்டும் ப*ர*ங்கிம*லையில் நின்ற*போதும் த*ன*து தொகுதி பிர*ச்சார*த்திற்காக* க*டைசி நாளில் சில ம*ணி நேர*ம் ம*ட்டும் ஒதுக்கி பிற*நாட்க*ள் முழுதும் ம*ற்ற* வேட்பாள*ர்க*ளுக்காக பிர*ச்சார*ம் செய்த*வ*ர் எம்.ஜி.ஆர்..

அதும*ட்டும*ல்ல, பெரும்புய*ல், வெள்ள*ம், தீவிப*த்து போன்ற* பேரிட*ர் கால*ங்க*ளில் பொருளுத*வி செய்வ*து ம*ட்டுமின்றி க*ள*த்திலே இற*ங்கி துணைநின்ற*வ*ர்..அதே போல் இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய* அண்டைநாடுக*ளுட*ன் போர் ஏற்ப*ட்ட* போதெல்லாம் யுத்த* நிதி வ*ழ*ங்கிய*வ*ர்.

த*ன்னை 1971ல் மீண்டும் முத*ல்வ*ராக்கிய* எம்ஜிஆரையே ஆடாத* ஆட்ட*மெல்லாம் ஆடி 1972 அக்டோப*ரில் க*ட்சியை விட்டு நீக்கினார் க*ருணாநிதி. அத*ற்கு மிக* முக்கிய* கார*ண*ம் எம்ஜிஆருக்கு ம*க்க*ளிட*ம் ஏற்ப*ட்டுவ*ரும் அப*ரித* செல்வாக்கு, 1976 மே வ*ரை த*ன்னை அசைக்க* முடியாது என்ற* த*ப்புக்க*ண*க்கு, குடும்ப* அர*சிய*லுக்கு தொந்த*ர*வு வ*ர*க்கூடாது, எம்ஜிஆரின் வ*ய*து அப்போது 55 (1972ல்) 1976 தேர்த*லின்போது 60 வ*ய*து ஆகிவிடும்..திரையுல*கிலிருந்தும் வில*கிவிடுவார்..த*ன்னை அடுத்த* தேர்த*லிலும் அசைக்க* முடியாது என்ற* த*வ*றான* எண்ண*மே ஆகும்.

தான் சார்ந்திருந்த* க*ட்சிக்கே ஓடிஓடி உழைத்த* எம்.ஜி.ஆர் தான் 1972 அக்டோப*ரில் துவ*க்கிய* அண்ணா திமுக*விற்காக* போராடாம*ல் இருப்பாரா? உண்மையிலேயே அவ*ர் உயிருக்கு ஆப*த்து ஏற்ப*டுத்தும் சூழ்நிலைக*ள் இருந்த*போதும் த*ன் வீட்டில் முட*ங்கிக் கொள்ளவில்லை. ம*க்க*ள் வெள்ள*த்தில் மித*ந்து பிர*ச்சார*ம் செய்து த*ன*து புதிய* க*ட்சியையும், இர*ட்டை இலை சின்ன*த்தையும் பிர*ப*ல*ப்ப*டுத்தினார்.

1972ல் க*ட்சி ஆர*ம்பித்த*போதும் 1977 மே மாத*ம்தான் ஆட்சியை பிடித்தார்..ஏனெனில் அப்போது தான் பொதுத்தேர்த*ல் வ*ந்த*து. அதேநேர*ம் 1973ல் ந*ட*ந்த* திண்டுக்க*ல் பாராளும*ன்ற* தேர்த*ல், பின்ன*ர் ந*டைபெற்ற* கோவை பாராளுமன்ற* தொகுதி தேர்த*ல், கோவை மேற்கு ச*ட்ட*ம*ன்ற* இடைத்தேர்த*ல், புதுச்சேரியில் ச*ட்ட*ம*ன்ற* பொதுத்தேர்த*லில் முத*ன்முத*லில் ஆட்சியை பிடித்த*து, செய்யாறு இடைத்தேர்த*ல் என* அனைத்திலும் வெற்றி..அப்போது க*ருணாநிதி த*விர* காமராஜ*ர், இந்திராகாந்தி என்ற* பெரும்த*லைவ*ர்க*ளின் க*ட்சிக*ளையும் 2வ*து, 3வ*து இட*ங்க*ளுக்கு த*ள்ளினார்.

பின்ன*ர் 1977 தேர்த*லில் ஒரே நேர*த்தில் த*மிழ*க* ச*ட்ட*ம*ன்ற*த்தையும், புதுச்சேரியில் 2வ*து முறையாக*வும் ஆட்சியை பிடித்தார்.

அவ*ர*து ம*க்க*ள் ந*லத்திட்ட*ங்க*ள், மனித*நேய*ம், க*ருணையுள்ள*ம் கார*ண*மாக* தொட*ர்ந்து 1980, 1984 ச*ட்ட*ம*ன்ற* தேர்த*ல்க*ளிலும் பெருவெற்றி பெற்றார்..1984ல் உட*ல்ந*லம் பாதித்து சில மாத*ம் ம*ட்டும் மக்களிட*மிருந்து வில*கியிருந்தாலும் 1985 பிப்ர*வ*ரி முத*ல் தான் ம*றைந்த* 1987 டிச*.24வ*ரை மக்களை ச*ந்திப்ப*திலும், பொது நிக*ழ்ச்சிக*ளிலும் த*ன் உட*ல்நிலை, நோய்த்தொற்று போன்ற* நொண்டிச்சாக்குக*ளை கூறிக்கொண்டு முட*ங்கியிருக்காம*ல் பொதுவாழ்வில் த*ன்னை ஈடுப*டுத்திக் கொண்டார்..அவ*ர் ம*ட்டும் த*ன் உட*ல்ந*ல பாதிப்பிற்குப்பின் பொதுவெளிக்கு வ*ராம*லும், உட*ல் ந*ல*த்தில் ம*ட்டும் க*வ*ன*ம் செலுத்தியிருந்தால் மேலும் 15 ஆண்டுக*ள் வ*ரை வாழ்ந்திருப்பார்..

ம*க்க*ள் ந*ல*ம்..ம*க்க*ள் ந*ல*ம் என்று சொல்ப*வ*ர்க*ள் த*ம் ந*லத்தையும், த*ம் ம*க்க*ள் ந*லத்தை ம*ட்டும் பாராம*ல் வெற்று அர*சிய*ல் அறிக்கை, பேட்டிக*ள் விடாம*ல் இற*ங்கி க*ளப்ப*ணி ஆற்ற* வேண்டும்..ப*த*வி கிடைத்தால்தான் அர*சிய*ல் ப*ணி இல்லையேல் த*ன் ப*ணி (சினிமா, வீடு, சொத்து) என்று இருப்ப*வ*ரெல்லாம் த*லைவ*ன*ல்ல..இதை த*மிழ*க* ம*க்க*ள் வெகு சீக்கிர*மே உண*ர*வைப்பார்க*ள்..

கூரைக*ளெல்லாம் கூடி வ*ள*ர்ந்தால் கோபுர*ம் ஆவ*தில்லை.
குருவிக*ளெல்லாம் உய*ர*ப் ப*ற*ந்தால் ப*ருந்துக*ள் ஆவ*தில்லை...........vr...

orodizli
7th December 2020, 08:49 AM
#நான்நாகேஷ்

��என்ற புத்தகத்தில் எம்ஜிஆர் பற்றிய சுவராஸ்மான தகவல்

��மக்கள் திலகம் பட்டம் அவரை தவீர வேறு யாருக்கும் பொருந்தாது அவர் என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் அவருடன் நடிக்கும் படங்களில் கால தாமதமாக நான் சென்றது உண்டு எனது இக்கட்டமான நிலையை புரிந்து கொண்டு அவர் வரும் வரை வேறு காட்சிகளை எடுங்கள் அவர் வந்ததும் மீதி எடுத்து முடிக்கலாம் என்று எல்லோரையும் அரவனைத்து செல்லும் தாயுள்ளம் கொண்டவர்

��உண்மையிலே அவரை வெறுப்பவரும் ஒரு விசயத்தில் ஏற்று கொள்வார் அது அவரின் ஈகை குணம் யாராலும் மறுக்க முடியாத குணம் நானே பல முறை அவர் உதவியால் வாழ்ந்தவன்

��ஒரு முறை சேலத்தில் நாடகம் ஒன்றில் நடிக்க என்னை நடிகர் பாலாஜி காரில் அழைத்து சென்றார். நல்ல வெயில் காலம் உளுந்தூர் பேட்டையை அடுத்து ஒரு சிறு கிராமம் வழியாக செல்லும் போது நல்ல தண்ணி தாகம் எடுத்தது உடனே ஒரு குடிசை முன் காரை நிறுத்தினார்கள் கார் நின்றதை அறிந்த ஒரு வயதான பாட்டி என்னப்பா ஆச்சு என்றதும் குடிக்க தண்ணீ வேணும் என்றோம் அது தான் கிராமம் உடனே பெரிய சொம்பு நிறைய தண்ணீர் வந்தது தாகம் அடங்கியது ஜில்லுனு மண்பானை தண்ணீர் சொர்க்கமாக இருந்தது கண் மங்கள் என நினைக்கிறேன் பாட்டிக்கு நீங்க எல்லாம் யாருப்பா என்றதும் நாங்க சினிமாங்காரவுங்க என்றோம் புறப்படும் முன் பாலாஜி தன் பர்ஸ்சில் இருந்து 100 ரூபாய் எடுத்து கொடுத்தார் உடனே அந்த பாட்டி ஏப்பா நான் தான் எம்ஜிஆர் னூ சொல்லக்கூடாதா? வாயா...ராசா.. நல்லா இருக்குய்யா ஒரு வா.. வந்து சாப்பிட்டு போ.. என்றதும் எல்லோரும் திகைத்து மெளனம் ஆனோம் என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தோம் சரிங்க.. பாட்டி.. நாங்க வர்றோம் என்று எல்லோரும் கை எடுத்து கும்பிட்டே விடை பெற்றோம் அந்த நிகழ்வு வாழ்க்கையில் யாரும் மறக்க முடியாது

��அந்த மூதாட்டியை பொருத்த வரை முன் பின் தெரியாதவர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்வது பொன்மனசெம்மலை தவீர வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை

��இந்த நிகழ்வை நான் எம்ஜிஆரிடம் கூறிய போது அவர் உடனே பாலாஜியை வரவழைத்து 100 ரூபாயை கொடுத்தார் அதை அவர் வாங்க மறுத்தார். அதற்கு அவர் சொன்ன வார்த்தை நீங்கள் பணம் கொடுத்தாலும் அது என் பணம் எனது தர்ம கணக்கில் சேர்ந்து விட்டது அதனால் இதை நீங்க வாங்கியே ஆகனும் என்று வம்பாக பணத்தை திணித்தார்
நான் ஒன்றும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்து கொண்டே இருந்தேன் சினிமாக்காரர்கள் கொடுக்கும் ஒவ்வொரு தர்மமும் எம்ஜிஆர் அவர்களையே சாரும்...

��மீண்டும் இணைவோம்��

#வாழ்கவள்ளல்.........vr...

orodizli
7th December 2020, 08:50 AM
தலைவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் "நீரும் நெருப்பும்".
ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் மறுபதிப்பு தான் "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் உருவானது. இரட்டை வேடங்களில் தலைவர் பிரமாதமாக நடித்திருப்பார். ஆனாலும் ஜனரஞ்சகமான படத்தில் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடு சிறுவர்கள் கேட்கும் சந்தேகத்தை விளக்க முடியாமல் பெரியவர்கள் சிறுவர்களுடன் படம் பார்ப்பதை தவிர்த்தனர். அதனால் மாபெரும் வெற்றியை இழக்க நேரிட்டது நமக்கு பெரிய வருத்தம்தான்.

படம் வரும் போது "ரிக்ஷாக்காரனை" காட்டிலும்அதிக வரவேற்பு இருந்தது. படம் பார்த்த சிறுவர்களுக்கு கரிகாலனைத்தான் அனைவருக்கும் பிடித்தது. அந்த கரிகாலன் இறந்ததும் படம் வேண்டாம் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவர் ஏன் செத்தாரு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகளால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய வெற்றியை அது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். கதையை எப்படி மாற்றினாலும் எம்ஜிஆர் சாகாமல் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியாகி விடும்.

"நீரும் நெருப்பும்" பெயரைக் கேட்டவுடனே கைபுள்ளைங்க கலக்கம் அடைந்தார்கள். ஏற்கனவே "ரிக்ஷாக்காரனின்" வெற்றியில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தவர்கள் மேலும் "நீரும் நெருப்பும்" வந்து என்ன செய்யப் போகுதோ என்ற கலக்கம். ரிசர்வேசனுக்கு குதிரை போலீஸ் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதை கண்டு மனம் வெதும்பி பிதற்றலானார்கள். அந்த பதட்டத்தில்தான் "நீரும் நெருப்பும்" மீது சொல்ல முடியாத கோபம்.

அந்தப் படத்தின் பெயரை கேட்டாலே காய்வார்கள். அதனால் அப்போதே அதனோடு வந்த
"பாபு" வில்"ரிக்ஷாக்காரனை" பிச்சைக்காரன் போல இழிவாக காட்டியிருப்பார்கள். ஏதோ ஒரு "ரிக்ஷாக்காரனை" பார்த்து காப்பியடித்து மிகையாக நடித்து நம்மை பெருத்த இம்சைக்கு உள்ளாக்கிவிடுவார். ஏதோ சிவகுமார் வந்ததால் படம் பெருந்தோல்வியில் இருந்து பிழைத்தது. படத்தை 100 நாட்கள் ஓட்ட முடிவு செய்து சாந்தி கிரவுன் புவனேஸ்வரி யில் திரையிட்டு 100 நாட்கள் வடக்கயிறு உதவியுடன் ஓட்டினார்கள். வழக்கம் போல் அந்த மூன்று திரையரங்கில் ஓட்டி விட்டு "பாபு" வெற்றி என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

பரீட்சைக்கு ஒருவன் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டு தடவி தடவி எழுதி விட்டு நான் பாஸ் என்பதை போல இருக்கிறது. குறுகிய காலத்தில் "நீரும் நெருப்பும்" அதிக வசூலை பெற்றதை போற்றாமல் குடும்ப தியேட்டரில் திரையிட்டு மனம் குதூகலிப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறதய்யா!. சென்னையில் தேவிபாரடைஸில்
நாட்கள் 67 416715.90
கிருஷ்ணா. " 67. 265278.45
மேகலா. " 53. 187112.65
---------------------------
மொத்தம் 187. 869107.00

ஆனால் "பாபு" 300 நாட்கள் கஷ்டப்பட்டு ஓட்டி இழுவை வசூல் 10 லட்சத்தை தொட்டதாக சொல்லுகிறார்கள். மேலும் மதுரையில் "நீரும் நெருப்பும்" சென்ட்ரலில் 84 நாட்களில் ரூ. 239171.39 .
வசூலாக பெற்றது. ஆனால் "பாபு", அவர்கள் பட்டறை வசூல்படி 89 நாட்களில் ஸ்ரீதேவியில் ரூ. 189491.55 வசூலாக பெற்று தோற்று தெற்கு சீமையிலே தலைவர் புகழை நிலை நாட்டியது. "பாபு" படத்தின் முழு வசூலை வெளியிட்டால் "நீரும் நெருப்பும்" "பாபு" வின் உண்மையான வெற்றி தெரிந்து விடும் என்பதால் வசூலை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.

"எங்கிருந்தோ வந்தாள்" 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1021000 தான். அதனால் "பாபு" நிச்சயம் 10 லட்சம் வந்திருக்காது.
சாந்தி 100 நாட்கள் வசூல் "நீரும் நெருப்பும்" 67 நாட்கள் வசூலை முறியடித்திருக்க வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் 8 லட்சத்தை தொட்டால் அதுவே மிகப் பெரும் ஆச்சர்யமே. முதல் நாள் தீபாவளி அன்றே தூத்துக்குடியில் அனாதை போல் கிடந்த "பாபு" அன்று 6 மணி காட்சி கூட நிதானமாகத்தான் நிறைந்தது. அதனால் பாபுவும் ஒரு. 100 நாள் இழுவை படம்தான் என்பது உறுதியாகிறது.

"பாபு"வுக்கு வசூல் பட்டறையில் இன்னமும் பட்டி டிங்கரிங் முடியாமல் வசூல் தயாராகவில்லை போலும். "நீரும் நெருப்பும்" 44 அரங்கில் திரையிட்டு 22 தியேட்டரில்
50 நாட்கள் ஓடியது. ஓடி முடிய கிட்டத்தட்ட 50 லட்சத்தை வசூலாக பெற்று சாதனை படைத்தது. ஆனால் கணேசனின் "பாபு" மொத்தம் வெளியானதே 28
அரங்கில்தான் அதில் 50 நாட்கள் 8 திரையரங்கில் ஓடி மொத்த வசூலாக 22 லட்சத்தை கூட பெற முடியாத பரிதாப "பாபு" எங்கேயப்பா "நீரும் நெருப்பை" வென்றது.

50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "தர்மம் எங்கே"?
படத்தின் வசூல் தெரியுமா? மொத்தம் 4 தியேட்டர்களில் வெளியாகி (ஓடியன் மகாராணி மேகலா ராம்) 50
நாட்கள் கூட ஓட முடியாமல் மொத்தம் ரூ 378112 வசூலாக பெற்று சினிமா உலகத்துக்கே அவமானமாகி கேவலமாக தோற்றது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

"நீரும் நெருப்பும்" தேவி பாரடைஸில் பெற்ற வசூலை கூட மொத்த வசூலாக பெறமுடியாத படத்தின் கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூவே கிடையாதா? நீங்கெல்லாம் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லலாமா? அதற்கான அருகதை இருக்கிறதா? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்துக் சொல்லுங்கள்......ksr...

orodizli
7th December 2020, 03:40 PM
சாகர் விரசராமனுக்கு ஒரு சந்தேகம்.
------------------------------------------------------------
எங்களது சந்தேகம் என்பது
1956 ல் வெளியான மதுரை வீரன் மதுரையில் 180 நாளில் ரூபாய் 3, 67, 000/- வசூலித்தது என்றால்
அதே மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 1965 ல் 9ஆண்டுகள் கழித்து வெளியான எங்க வீட்டு பிள்ளை 175 நாளில் ஏன் ரூபாய் 3, 85, 000 மட்டுமே வசூலித்தது,
9 வருஷமா டிக்கெட் விலை உயராமல் இருந்ததா என்ன?
"எங்க வீட்டு பிள்ளை" குறைந்த படசம் 5 லடசம் வசூலித்து இருக்க வேண்டுமே?

அல்லது

"மதுரை வீரன்" வசூல் என்பது உண்மையா?
"எங்க விட்டு பிள்ளை" வசூல் என்பது உண்மையா?

அதுக்கு விளக்கம் கண்டு புடி,

Thanks Sekar .P

நம்ம ஊர் தலைமை கைபிள்ளை சாகர் விரசராமனுக்கு ஒரு சந்தேகம்.
"மதுரை வீரன்" வசூல் "எங்க வீட்டு பிள்ளை"யை நெருங்கி வந்திருக்கிறதே அதெப்படி? என்பதுதான். இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு கைபிள்ளைகள் சார்பில் வாத்தியார் பட்டம் வழங்கப்படுமாம்..

அறிவிப்பை பார்த்தவுடன் வழக்கம் போல் டொங்கர் சாரி சங்கர் கிளம்பி விட்டார். பரமார்த்த குரு சீடர்களுக்கு புரிய வைக்க மிகவும் கடினம் என்பதால் அவர்கள் பட பட்டறை வசூலையே எடுத்துக் கொண்டால் எளிதில் புரியும் என்பதற்காக பட்டறை வசூலையும் எடுத்துக் கொண்டு இங்கே விளக்கம் அளிக்கிறார்.

கைபிள்ளைகளே, 1959 ல் வெளியான "பாகப்பிரிவினை"யின் மதுரை வசூல் ரூ 336000 என்று குறிப்பிட்டீர்கள். "திருவிளையாடல்" படத்தின் மதுரை வசூலும் சுமார் 354000 என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அதே கேள்வியை நானும் கேட்கிறேன்.
1959 ல் வெளியான "பாகப்பிரிவினை" 3லட்சத்து சொச்சம் என்கிற போது
"திருவிளையாடலு"ம் 3லட்சத்து சொச்சம்தானா? ஏன் 5 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் தாண்டவில்லை சாகர் விரசு.

அதெப்படி? 1959 முதல் 6ஆண்டுகளாக தியேட்டர் கட்டணம் உயரவே இல்லையா? அதெப்படி? அதுவும் உங்கள் கூற்றுப்படி தினசரி 2 காட்சிகள் ஓடிய "பாகப்பிரிவினை" ரூ 336000 தினசரி 3 சனிஞாயிறு 4 ஓடிய "திருவிளையாடல்" ரூ 3,54,000 அதெப்படி? எது உண்மையான வசூல்? "பாகப்பிரிவினையா"? அல்லது "திருவிளையாடலா"? தமிழ்நாட்டில் மதுரையை தவிர வேறு எங்கும் ஓடாத "பாகப்பிரிவினை" மதுரையில் மட்டும் 200 நாட்களை தாண்டியது. அதெப்படி? அப்படியானால் எது உண்மையான வசூல்? சொல்லுங்க சாகர் விரசு?

உனக்கு வந்தா இரத்தம்? மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நம்ம வடிவேல் ரேஞ்சுக்கு இறங்கி கைபிள்ளைங்க காமெடியில் கலக்குறாப்பல. இந்த வசனத்தை பார்த்தா "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் மாடர்ன் மூக்கையா ஞாபகம் வருதா? ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது அல்லவா? அதுதான் சேர்வையை விட்டு விட்டேன் சாகர் விரசு.

அதேபோல் மதுரையில் 3 லட்சத்தை தொடவே தகிடுதத்தம் போடும் வி.சி அய்யனின் படங்களில் "பட்டிக்காடா பட்டணமா" படம் மட்டும் 5,61000 வசூலாக பெற்றது எப்படி?. யோசியுங்கள். பரமார்த்த குருவின் சீடர்களுக்கு ஏதாவது புரிந்ததா?
புரியவில்லை?. 'தேரோடும் எங்கள் சீரான மதுரையின்' நேட்டிவிட்டியுடன் வந்த படங்களில் மக்கள் விரும்பிய படங்கள் மற்ற ஊர்களை காட்டிலும் அபரிமிதமான வசூலை பெற்றிருக்கிறது என்ற தெளிவு கிடைத்ததா? இல்லையா?

அதைப்போல தான் "மதுரை வீரன்" வசூலும். தமிழகத்தில் 33 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடுகிறதென்றால் மதுரையில் அதன் வசூல் என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் கைபிள்ளைகளே. அந்த பரிசை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்களே அரைகுறை. உங்கள் கையால் விருது வாங்கினால் பார்ப்பவர்கள் என்னையும் உங்களோடு சேர்த்து விடுவார்கள். நன்றி கைபிள்ளைகளே.

மீண்டும் உங்கள் அடுத்ததொரு முட்டாள் பதிவில் சந்திப்போம். அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் டொங்கர் இல்லையில்லை K.சங்கர்..........

orodizli
8th December 2020, 08:52 AM
எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.

அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.

லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.

''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழுவினர் வியந்தனர்.

- தி இந்து.........

orodizli
8th December 2020, 08:55 AM
தொடர் (7)

எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?

அரசியல்

எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?

1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.

இதையும் படிங்க

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.

அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.

1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி. அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது.
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றார்கள்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
மக்கள் நலன்:
நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது. பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
குறிப்பு:ஆனால்! மனித நேயம் கொண்ட தமிழகமக்கள் தலைவர்எம் ஜி ஆர் போல் பிறகுயாருமே இன்றுவரை தமிழக மக்களுக்கு அமையவில்லை என்பதுதான் நிஜமான உண்மை-தொடரும்..........vr...

orodizli
8th December 2020, 08:56 AM
ஆனந்த விகடன் ஜீலை 10, 1977

தமிழக முதல்வரின் சிறப்புச் செய்தி ....

என்னை வாழவைக்கும் தெய்வங்களே !

அமரர் அண்ணாவின் சீரிய கொள்கைகளான ஊழலற்ற , லஞ்சக் கொடுமைகளற்ற, " எல்லோரும் ஒர் குலம் " , " ஒன்றே குலம் ஒருவனே தேவன் " எல்லோரும் ஒர் நிலை, எல்லோரும் ஓர் விலை " என்ற அறவழியில் நல்லாட்சி அமைய உங்கள் ஆசியுடன் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்கிறேன்.

உயர்திரு ஓமந்தூரார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்ற மேதைகள் இருந்த ஆட்சி செய்த இடத்தில் உங்களை மட்டும் நம்பியே அமருகிறேன்.

அமரர் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் என்னை இதுவரை ஆதரித்துத் துணை நின்றது போல் இந்த மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றும் போதும் எனக்குத் துணை நிற்க வேண்டுமாய் தமிழகத்து மக்களாகிய உங்களை உங்களைக் கைகூப்பி வேண்டுகிறேன்.

அன்பன்,
எம்.ஜி.ராமச்சந்திரன்
30.06.1977

எண்ணற்ற ஏழை எளியோர்களின் நல்வாழ்விற்க்கு உறுதுணையாய் நின்று அணையா தீபவொளி தரும் அருட்ஜோதி புரட்சித்தலைவர்.

புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க ..........vrh...

orodizli
9th December 2020, 08:55 AM
#ரசிகரின் #வாழ்வை #மீட்ட #சுந்தரபாண்டியன்

புரட்சித்தலைவர் - கலையரசி எம்ஜிஆர் லதா நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைக்காவியம் வெளிவந்த சமயம்...

மதுரையில் வெளியான அந்தத் திரைப்படத்தைப் பார்க்க வெளியூர் இரசிகர் ஒருவர் வந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் நிரம்பியிருந்தது. அந்த ரசிகரோ பாவம் ஏழை. சிரமப்பட்டு வேறு வெளியூரிலிருந்து வந்திருந்தார்.

மனதில் இப்படி நினைத்து வருந்திக்கொண்டிருந்தார்...

'நான் ரொம்ப கஷ்டப்படறேன்...உன் முகத்தைப் பார்த்தாவது சந்தோஷம் அடையலாம்னா...டிக்கட் கூட கிடைக்கல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எனக்கு நீ தான் நல்ல வழி காட்டணும்...எனக் கண்ணீர் விட்டார்.

பிறகு, ஊருக்கு பஸ் ஏறுமுன் வேண்டாவெறுப்பாக ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கினார். அந்த லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் பரிசு விழுந்திருந்தது...அந்த ஏழை ரசிகரின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா ???

இந்த செய்தி அன்றைய தினசரி நாளிதழ்களில், "#மதுரையை #மீட்ட #சுந்தரபாண்டியன் #பெற்றுத்தந்த #ஒரு #லட்சம்" என்று வந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

தன்னை உண்மையாக உருகி வேண்டுபவர்களுக்கு இதயதெய்வம் வாத்தியார் கைவிடுவதேயில்லை............bsm...

orodizli
9th December 2020, 08:56 AM
#இனிய_நினைவுகளில்

#ராமன்_தேடிய_சீதை



மக்கள் திலகம், அம்மா ஜெயலலிதா,மனோரமா, நாகேஷ்,வி.கே.ராமசாமி, நம்பியார், அசோகன்,வி.எஸ்.ராகவன், ஓ.ஏ.கே.தேவர், ரமாபிரபா.ஜி.சகுந்தலா..!!!

இயக்கம்: ப.நீலகண்டன்
உரையாடல் : சொர்னம்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வெளியான ஆண்டு :1972 ((ஏப்ரல் 13)
_________________________________

பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான ராமன் ((மக்கள் திலகம்)) தன் சிற்றப்பா சிவசங்கரால் (வி.கே.ஆர்) வளர்க்கப்படுபவர். தன் எஸ்டேட்டுக்கு செல்லும் போது ஒரு வயதான , நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தம்பதியை கண்டு, நல்ல மனைவிக்கு தகுதியான ஆறு நற்குணங்கள் எவை என தெரிந்து கொண்டு, அதன் படியே தன் வீட்டிற்கு அழகு சாதனங்களை விற்க வந்த சீதாவை (ஜெயலலிதா) தெரிவு செய்கிறார். இதனை தன் சிற்றப்பாவிடம் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யும் போது சீதாவும் அவளது தந்தை கார்மேகமும் (வி.எஸ்.ராகவன்) மர்ம நபர்களால் வீட்டோடு எரிக்கப்பட்டு மரணமடைகிறார்கள்.

மனம் உடைந்து போன ராமு, சீதாவை போலவே தோற்றமுள்ளவரும், பாம்பாட்டியின் மகளான ரம்பாவையும்(ஜெயலலிதா) அதே போன்று எஸ்டேட் உரிமையாளர் மாநாட்டில் காஷ்மீரில் ராணியையும் ((ஜெயலலிதா)) சந்திக்கிறார். சீதா, ரம்பா, ராணி மூன்று பேர்களும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்து தத்துக்கொடுக்கப்பட்ட பெண்கள் என்ற விபரமும் ராமுவுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

சீதாவுடன் பழகி தன் மனைவியாகவே நினைத்துவிட்ட ராமுவிற்கு சீதாவைப்போலவே தோற்றமுள்ள ரம்பா, ராணியை தன் வாழ்க்கை துணையாக நினைக்கமுடியவில்லை.இவர்களிடம் சீதாவிடமிருந்த சிறந்த மனைவிக்குறிய ஆறு நற்குணங்கள் இல்லை என்ற முடிவுடன் அவர்களை பிரிகிறார்.

பின்னர், சிம்லாவில் தமிழ்ச்சங்கம் நடத்திய கலைவிழாவில் மீண்டும் சீதாவை சந்திக்கிறார் ராமு. வீடு எரிக்கப்பட்ட போது தன் தந்தை மட்டுமே இறநதுபோய் தான் தப்பித்துவிட்டதாக கூறுகிறார் சீதா. சிம்லாவில் தன்னுடைய அத்தை (ஜி.சகுந்தலா) நடத்திவரும் நடனப்பள்ளியில் ஒரு மனமாறுதலுக்காக இருப்பதாகவும் ராமுவிடம் தெரிவிக்கிறார் சீதா.

அளவுகடந்த மகிழ்வுடன் சீதாவை திருமணம் செய்து கொள்ளவும், தன் சிற்றப்பாவிடம் சம்மதம் பெறவும் சென்னை வரும் ராமுவிற்கு, தான் எஸ்டேட்டில் சந்தித்த ரம்பா, காஷ்மீரில் சந்தித்த ராணி, சிம்லாவில் சந்தித்த சீதா,இவர்கள் மூவரும் உண்மையான சீதா அல்ல, மாறுவேடமிட்டு எதற்காகவோ தன்னை தொடர அனுப்பப்பட்ட தன் உறவுக்கார பெண் ஆஷா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் ராமு.

ஆஷா என்ன நோக்கத்தோடு மாறுவேடத்தில் அனுப்பப்பட்டார்? இவரை அனுப்பியது யார்? உண்மையான சீதா என்ன ஆனார்..? ராமன் சீதையை தேடி கண்டுபிடித்து மணந்து கொண்டாரா? என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிப்பகுதி.

மக்கள் திலகத்தின் படங்களில் இருந்து வேறு பட்டது இந்த படம்..."எம்.ஜி.ஆர் ஃபார்முலா" என்ற எதுவும் இல்லாமல் தன் வாழ்க்கை துணையை தேடுகிற, கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதையில் நடித்திருப்பது வித்தியாசமான ஒன்று.

அதே போல் மக்கள் திலகத்தின் படங்களில் க்ளைமேக்சில் வழக்கமாக இடம் பெறும் போட் சேஸ், ஹெலிகாப்டர் விரட்டு , பயங்கர சண்டை போன்ற எதுவுமே இல்லாமல் வில்லனிடம் உண்மையை வரவழைப்பதும் புதுமையான ஒன்று.சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் மிகவும் குறைவு.

மக்கள் திலகம் அசத்தியிருக்கிறார். வயதான தம்பதிகளிடம் ஆரம்பித்து காஷ்மீர், சிம்லா என பயணிக்கும் கதையோடு ஒன்றி நடித்துள்ளார்.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்குதான் மக்கள் திலகத்தைவிட அதிக வாய்ப்பு. அடக்கமான சீதாவாக, தைரியமான பாம்பாட்டிப்பெண் ரம்பாவாக, சற்றே மனநிலை சரியில்லாத ராணியாக, வில்லி ஆஷாவாக வெரைட்டியாக அருமையாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்காக 1972ம் ஆண்டு,சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை அவர் இப்படதிற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஷ், ரமாபிரபா, ஓ.ஏ.கே தேவர் காமெடி ட்ராக் ரசிக்கும்படி இருந்தாலும் படத்தோடு ஒட்டவில்லை. நம்பியார், அசோகன், வி.கே.ஆர். போன்றவர்கள் குறைவான நேரமே வந்தாலும் நிறைவாக செய்துள்ளார்கள்.

மெல்லிசை மன்னர் படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். "நல்லது கண்ணே"; "என் உள்ளம் உந்தன் ஆராதனை"; "திருவளர் செல்வியோ"; "மாமாவா மச்சானா" ஆகிய பாடல்கள் இன்னமும் இசை ரசிகர்களால் ஆராதிக்கப்படுகின்றன.

இந்தப்படம் 1972ம் ஆண்டின் வெற்றிப்படமாகியது.

தகவல்:https://en.m.wikipedia.org/wiki/Raman_Thediya_Seethai_(1972_film)...Sr.bu...

orodizli
9th December 2020, 08:57 AM
#எம்ஜிஆருக்கு #விஷமா!!!

1962-ம் வருடம் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பிற்காக பெங்களூர் அருகில் காரில் தன் உதவியாளர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தார்.ஒரு கிராமப்பகுதியில் ஒரு ரயில்வே கேட்டில் வண்டி நின்றது.ரெயில்வே கேட் திறக்கப்படும்வரை எம்.ஜி.ஆர் காரில் காத்துக் கொண்டிருந்த நிலையில் எம்.ஜி.ஆரை கிராம மக்கள் பார்த்து விட்டனர்.

சாலை ஓரத்திலிருந்த ஒரு குடிசையிலிருந்த மூதாட்டி காருக்கு அருகில் வந்து எம்.ஜி.ஆரை தன் குடிசைக்கு வரவேண்டும் என அழைத்தார். மூதாட்டியின் அன்பு வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். காரிலிருந்து இறங்கி மூதாட்டியின் குடிசைக்கு சென்றார்.கூடவே உதவியாளர்களும் தொடர்ந்தனர்.

'அய்யா, நீங்க எங்க குடிசைக்கு வருவதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ?? சூடா பசும்பால் இருக்கு, கொஞ்சம் சாப்பிடுங்க அய்யா' என்ற வேண்டுகோளுடன் பசும்பாலை எடுக்க ஓடினாள்.

பசும்பாலை ஆற்றி எம்.ஜி.ஆரிடம் கொடுக்கும்போது அவர் உதவியாளர் ஒருவர் அதை வாங்கி குடித்துபார்த்து, பிறகுதான் எம்.ஜி.ஆரிடம் குடிக்க கொடுத்தார்கள். பிறகு ரெயில்வேகேட் திறந்ததும் வண்டி புறப்பட்டது.

காரில் அமர்ந்ததும், உதவியாளரிடம் ' தம்பி, உனக்கு ரொம்ப பசியா? பசும்பாலை பிடுங்கி முதலில் குடித்தாயே' என்று எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே கேட்டார்.

அதற்கு அந்த உதவியாளர் "அண்ணே, நீங்க யார் எதை கொடுத்தாலும் குடித்து விடுகிறீர்கள். அவங்க ஏதாவது கலந்து கொடுத்திருந்தால் என்ன ஆவது? அதனால்தான் நாங்கள் குடித்து பார்த்தோம், மன்னிச்சிடுங்க அண்ணே" என்றார்.

இதைக்கேட்டதும் கோபமடைந்த எம்.ஜி.ஆர்., "மூதாட்டி எனக்கு ஏன் விஷம் கொடுக்க வேண்டும்? ஒரு நல்ல தலைவனுக்கு அஸ்திவாரம் என்ன தெரியுமா? மக்கள் நம் பேரில் வைத்திருக்கின்ற மதிப்பும், நாம் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும் தான் " என்றார்.

#அந்த #உணர்வுதான் #தலைவர் #மறைந்து 33#வருடங்கள் #கழித்தும் #அத்தகைய #மாபெரும் #தலைவரை #நாம் #அனைவரும் #மறவாமல் #நூற்றாண்டு #விழா #கொணடாடிக்கொண்டிருக்கிறோம்.இத்தகவல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பேசியது.............vrh...

orodizli
9th December 2020, 01:51 PM
மீண்டும் சாகர் கைஸுக்கு(கைபிள்ளை) ஒரு சந்தேகம்.
-----------------------------------------------------------
எங்களது சந்தேகம் என்பது,

"கர்ணன்" 40 லடசம் செலவு என்றால் "அடிமைப்பெண்" செலவு எவ்வளவு?
1964 ல் "கர்ணன்" 40 லடசம் என்றால்
1969 ல் "அடிமைப்பெண்" 70 லடசம் ஆகியிருக்குமே,( உங்க வாத்தி சம்பளம் மட்டுமே பல மடங்கு அதிகமாச்சே?)

அப்படி பார்த்தால் லாபம் பெற "அடிமைப்பெண்" குறைந்த படசம் 1.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வேண்டுமே?
ஆனால் வசூலித்தது 55 லடசம் தானே?

இந்த கணக்கெல்லாம் போட தெரியாதா?

ஆனால் "சிவந்த மண்", "கர்ணன்" இந்த இரண்டு படங்களை பற்றிய கணக்கு மட்டுமே உங்க வாத்தி சொல்லி கொடுத்தாரா?

Thanks Sekar .P

"சிவந்தமண்" சந்தேகம் கைபிள்ளைகளுக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை. மீண்டும் மீண்டும் கேள்வியை எழுப்புகிறார்கள். இப்போதாவது "கர்ணன்" செலவு 40 லட்சம் என்று ஒத்துக் கொண்டார்கள்.
இல்லையில்லை, ஆதாரத்துடன் கைபிள்ளைகளை ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறோம்.

அவர்கள் சந்தேகம் இப்போது "அடிமைப்பெண்" செலவு எவ்வளவு என்பதுதான்.
அது எம்ஜிஆருக்கே தெரியாது என்று சொன்னாலும் கைபிள்ளைகள் விட முடியாது என்கிறார்கள். ஜெய்ப்பூர் அரசுக்கு ரூ50000 நிதியாக அளித்தவுடன் அரண்மனையில் "ஷீட்" செய்ய அனுமதி கிடைத்து, தரையில் சன்மைகா பொருத்தும் செலவுகள் உட்பட ஒரு சில செலவை தானே ஏற்றுக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தார். ஒட்டகங்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் ரூ 20000 வரை செலவாகியிருக்கலாம்.

மேற்கொண்டு ஒரு சில செட்டிங் செலவு பாலைவனக்சாட்சிகள் செலவு என்று அதிகமில்லை. சுமார் 40 லட்சம் வரை செலவு ஆகியிருக்கலாம். சிங்கமும் சொந்த சிங்கம்தான். அதற்கு மட்டன் செலவு தலைவரே சொந்தக்கணக்கில் பார்த்துக் கொள்வார். ஆனால் "சிவந்தமண்ணு"க்கு ஆன பல முட்டாள்தனமான செலவுகள் வியப்பளிக்கின்றன. அதில் நடித்த ஹெலிகாப்டர் வாடகை மணிக்கு ரூ3000. மொத்த வாடகையாக ரூ 60000 வரை செலவானதாம். மொத்தம் 20 மணி நேர வாடகை. லட்சக்கணக்கில் செலவு செய்த பலூன் சண்டை காமெடி காட்சிகள் அநாவசியம்.

ஆனால் அய்யனின் சம்பளம் ரூ100000 தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு ஷூட்டிங்கே 25 நாட்கள் ஆனதாம். அப்போ குறைந்த பட்சம் 50 கால்ஷீட் ஆகியிருக்கும். மற்ற கால்ஷீட்டையும் சேர்த்தால் குறைந்த பட்சம் 100 கால்ஷீட்டையும் தாண்டி போயிருக்கலாம். 100 கால்ஷீட்டுக்கு 800 மணி நேரம் என்று கணக்கு வைத்து கொண்டால் கூட 1மணி நேரத்துக்கு வி.சி.அய்யனின் வாடகை இல்லையில்லை சம்பளம் ரூ125 தான். ஆகா? எவ்வளவு அடிமாட்டு சம்பளம்.

அதுமட்டுமா? செயற்கை ஆறு என்று ஒரு பெரிய பாத்டப்பை உருவாக்க ரூ 4 லட்சம் செலவானதாம். அய்யனை விட செலவு அதிகம் பிடித்த கதாநாயகன் படத்தில் நிறைய இருக்கும் போது அய்யனை ஏனப்பா முன்னிலை படுத்துகிறீர்கள். ஹெலிகாப்டர் பெரிய பாத்டப் நடிக்கும் "சிவந்தமண்" என்றுதான் நியாயமாக விளம்பரம் செய்ய வேண்டும். அய்யன் நான்காம் நிலை நடிகராகத்தான் இருந்தார்.
ஆனால் புரட்சி நடிகரின் சம்பளமே அவரின் படங்களில் பிரதானமாக இருக்கும். கைபிள்ளைகளே வாத்தியாரின் சம்பளம் பல மடங்கு இருக்குமென ஏற்றுக் கொள்கிறார்கள்.

மேலும் அவர்கள் போடும் தப்புக்கணக்கு அய்யன் படங்கள் முதல் சுற்றிலேயே முடங்கி போய் விடும். அதன்பின் படப்பெட்டி வருவோர் போவோரை வரவேற்கும் ஸ்டூலாகத்தான் பயன்படும். "அடிமைப்பெண்" முதல் சுற்றில் சுமார் 55 லட்சம்தான் வசூல் என்று குறிப்பிட்டது உங்களுக்கே விந்தையாக இல்லை. அய்யனின் படங்களைப் போல் முதல் சுற்றிலே முடங்கிப் போய் விடும் என்று நினைத்தீர்களா?
இனிமேல்தான் புரட்சியின் ஆட்டமே ஆரம்பம் ஆகும். இப்போது தமிழ் நாட்டில் சுமார் 1500 திரையரங்குகள் தான் உயிரோடு இருக்கின்றன.

ஆனால் 1970 களில் கிட்டத்தட்ட சுமார் 3000 திரையரங்குகள் இருந்தன. இவைகளில் பிரைமரி தியேட்டர் என்று 500 தியேட்டரை கழித்தாலும் மிச்சம் வருபவை சுமார் 2500 திரையரங்குகள் உண்டு. முதல் 5 ஆண்டுகளில் இந்த 2500 அரங்குகளில் பலமுறை தலைவர் படங்கள் சுழற்சியில் சுற்றி வரும்.
இவற்றில் ஒருமுறை வெளியாகி 1 வாரம் ஓடினாலே, வார சராசரி வசூல்
ரூ10000 என்று எடுத்துக்கொண்டால் கூட சுமார் 2.5 கோடி வசூலாக
கொட்டும். இது குறைந்த பட்ச
வசூல் அடிப்படை கணக்கு.

அப்படியானால் முதல் 5 வருடங்களுக்கு புரட்சி நடிகரின் படங்கள் சுமார் 3 கோடியை எளிதில் பெற்று விடும்.அதன் அடிப்படையில் பார்த்தால் குறைந்த பட்சம் ரூ 2 கோடி லாபம் கிடைக்கும். ஆனால் அய்யனின் 98 சதவிகித படங்கள் கிடப்பிலே கிடப்பதால் தான் அய்யனின் சம்பளத்தை விட எம்ஜிஆரின் சம்பளம் 10 மடங்குக்கு மேல் அதிகம் தரப்படுகிறது என்ற உண்மை புரிந்து விட்டதா கைபிள்ளைகளுக்கு. ஆனாலும் அடுத்த பதிவிலும் புரியாத மாதிரி முதல் வெளியீட்டை கம்பேர் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். அதுவும் சாந்தி வசூலையும் மதுரை வசூலையும் தாண்டி பேச மாட்டார்கள்.

அதற்காகத்தான் அவரை இந்தியாவில் "வசூல் சக்கரவர்த்தி" என்றும் இலங்கையில் "நிர்த்திய சக்கரவர்த்தி" என்றும் விநியோகஸ்தர்கள் செல்லாக அழைத்தார்கள். தகதகக்கும் வைரத்தை கூழாங்கற்களோடு இணைத்து பேச வேண்டாம். அய்யனோட அறுவை படங்களின் மிகை நடிப்பை 10 பக்கம் நீ புகழ்ந்தாலும் அதை படிக்கக் கூடிய பொறுமை எங்களுக்கு இல்லை. நாங்கள் படிக்கவும் மாட்டோம். ஏனென்றால் படத்தையே யாரும் பார்க்க முடியாது. இதில் நேரடி ஒளிபரப்பு விமர்சனம் வேறு. நீங்கள் எல்லாம் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என்று நான் சந்தேகப்பட்டதுண்டு.
சரி சாகர் விரசு, இத்தோட நிறுத்திக்கொள். மீண்டும் மீண்டும் வாத்தியாரை வம்புக்கு இழுக்காதே..........KSR.........

fidowag
9th December 2020, 11:50 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டியல் ( 04/12/20 முதல் 09/12/20* *வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------
04/12/20 - மெகா டிவி - அதிகாலை 1 மணி -* சந்திரோதயம்*

* * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*

* * * * * * * * வசந்த் டிவி - இரவு 7.30 மணி - நீதிக்கு தலை வணங்கு*

* * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - பணம் படைத்தவன்*

05/12/20 -ஜெயா மூவிஸ் - காலை 10 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * * *சன் லைஃப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*

* * * * * * * *முரசு -மதியம் 2 மணி /இரவு 7 மணி - தொழிலாளி*

* * * * * * * *ஜெயா டிவி =பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - முகராசி*

* * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி - ராமன் தேடிய சீதை*

* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*

* * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - குமரிக்கோட்டம்*

* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தலைவன்*

06/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - நான் ஆணையிட்டால்*

* * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * வசந்த் - பிற்பகல் 1.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

* * * * * * *புதுயுகம் - இரவு* 10 மணி - நவரத்தினம்*

07/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - இதயக்கனி*

* * * * * * * * *மூன் டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*

08/12/20 -சன்* லைஃப் - மாலை 4 மணி - நவரத்தினம்*

* * * * * * * *மெகா டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*

* * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி -தொழிலாளி*

* * * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - அரச கட்டளை*

09/12/20- சன்* லைஃப் -காலை 11 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - கன்னித்தாய்** * * * * * * * **

fidowag
9th December 2020, 11:59 PM
கடந்த*வெள்ளி முதல் (04/12/20) திருவண்ணாமலை ,அண்ணாமலை அரங்கில்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்த*"ரகசிய*போலீஸ் 115"தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி :திரு.கலீல்*பாட்சா, திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் .

வரும் வெள்ளி முதல் (11/12/20)* மணலி*மீனாட்சியில்*புரட்சி நடிகர்*/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் புரட்சி செய்த*டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : திரு.சேர்மக்கனி ,விநியோகஸ்தர், சென்னை.*

வரும் வெள்ளி முதல் (11/12/20) மதுரை*பழங்காநத்தம் ஜெயம் அரங்கில்* நடிக*மன்னன் /நடிக*பேரரசர்*எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய*டிஜிட்டல்* எங்க*வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .*

orodizli
10th December 2020, 01:53 PM
உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்கள் / தொண்டர்கள் அன்றும் இன்றும் என்றென்றும் ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் தங்களுடைய அடையாளத்தை மாற்றவே மாட்டார்கள் .கனவிலும் துரோகம் செய்ய நினைக்க மாட்டார்கள் .பதவி , பணம் இரண்டிற்காக ஒரு நாளும் விலை போகமாட்டார்கள் . அதே நேரத்தில் மற்றவர்களுடன் எம்ஜிஆரை ஒப்பீடு செய்ய மாட்டார்கள் .

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட சில தலைவர்கள் தங்களுடைய சுயநலத்திற்க்காக எதிர்முகாமிற்கும் ,ஆன்மீக கூடத்திற்கும் செல்ல முடிவு செய்து விட்டால் தாரளமாக போகட்டும் அவர்கள் .கடந்த காலத்தில் எம்ஜிஆர் புகழ் பாடிய இனிய நினைவுகளை நாம் நன்றியுடன் நினைவு கூர்வோம் .ஆனால் நன்றியினை மறந்த அவர்களுக்கு எம்ஜிஆர் பாடிய பாடலை பரிசாக தருகிறோம்

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லானது.

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு ஆ,,,,,,ஆ,,,,,,,,,,, (பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாக லாம்...............vs............

orodizli
10th December 2020, 01:54 PM
#யார் #கடவுள்

அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் கடவுளாக கும்பிடணும்...?

ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க...ஏன் அவர்களை கடவுளாக நினைக்கக்கூடாதா ??
(சரியான கேள்வி...)

யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதாரத்திருந்த வழிவகுக்கிறதோ...!!!

பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ !!!

எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ...!

அவர் தான் மக்களின் மனதில் இறைவனாக நிலைக்கமுடியும்...

இந்த வீடியோவைப் பாருங்க...

இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, கடவுளை Atleast நேரிலாவது பார்த்திருப்பவர்களா!!!

இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...

#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்...........BSM...

orodizli
10th December 2020, 01:55 PM
தலைவரை வைத்து வெற்றி படங்களை தயாரித்த தேவர் அவர்கள் வடநாட்டில் தன் பட தயாரிப்பு வேலைகளை விரிவு படுத்த...

அப்போது பெரும் பிரபலம் ஆக இருந்த ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்களை கதாநாயகன் ஆக கொண்டு ஹாத்தி மேரே சாத்தி என்ற படத்தை எடுக்க மும்பை சென்றார்.

பட பூஜை அன்று வழக்கம் போல சட்டை அணியாமல் அவர் காட்சி அளிக்க அன்று மும்பையில் இருந்து வந்த மிட் டே என்ற பத்திரிகை தென் நாட்டில் இருந்து ஒரு சாமியார் படம் எடுக்க இங்கே வந்து இருக்கிறார் என்று கேலி சித்திரம் போட்டு அவரை விமர்சித்து மகிழ்ந்தது...

ஆனால் அந்த படம் ஹாத்தி மெரா சாத்தி வெளிவந்து ஹிந்தி பட உலகை திருப்பி போட்டது....ராஜேஷ் கண்ணா அவர்கள் அதுவரை நடித்து வெளிவந்த வசூல் சாதனையை அந்த படம் முறியடித்து வென்றது.

பட வெற்றி விழாவில் அதே சட்டை போடாத நிலையில் அந்த காலத்தில் 60 பவுன் தங்க சங்கிலியை தேவர் அவருக்கு போட்டு மகிழ்ச்சி அடைய...

அதே மும்பை மிட் டே பத்திரிகை முதல் பக்கத்தில் அந்த படத்தை போட்டு கொண்டாடியது..

அந்த படத்தின் வசூலை பின் பாபி பின் வந்த ஷோலே போன்ற படங்கள் முறியடிக்க முடிந்தது..

அதே படம் நம் பொன் மனம் தலைவர் நடிக்க நல்லநேரம் ஆக வந்து இங்கும் வெற்றிவாகை சூடியது...

இனிதான் பதிவின் நோக்கம் வருகிறது...

தேவர் அவர்கள் மறைவுக்கு பின் தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற பெயரில் அவர் குடும்பத்தார் எடுத்த சில படங்கள் ஓட சில படங்கள் தடுமாற அவர்கள் பெரும் சரிவை சந்தித்த நேரம்.

தலைவர் முதல்வர் ஆக மாறிவிட்ட நேரம் அப்போது.... நிலை அறிந்து தாய் வீடு என்ற படத்தை ரஜினி அவர்கள் நடிப்பில் தயாரிக்க சொல்லி அந்த படத்தின் தயாரிப்பு நிலைக்கு பெரும் பின் பலமாக நின்று பொருளாதார உதவிகள் செய்தார்.

தேவர் அவர்கள் குடும்பத்துக்கு முடிந்த உதவிகளை தகுந்த நேரங்களில் செய்து உதவினார்...

படங்கள் வெற்றி பெறும் போது அதை எடுத்தவர்களை கொண்டாடுவது...ஒரு காலத்தில் அதே அவர்கள் நிலை தடுமாறி நிற்கும் போது டீயை குடித்து கொண்டே நாளிதழ்களில் அதை ஒரு செய்தியாக பார்க்கும் இன்றைய நடிகர்கள் மத்தியில்.

பழைய நினைவுகளை மறக்காமல் பலருக்கு பல உதவிகளை செய்த ஒரே மாமனிதர் இந்த உலக திரை உலக வரலாற்றில் நம் இதயதெய்வம் தலைவர் மட்டுமே.

அதனால் தான் என்னை எளியவர்கள் போன்றவர்கள் பலர் தலைவர் நினைவுகளை சொல்ல.

எழுத அதை படிக்கும் உணரும் தலைவர் நெஞ்சங்கள் மிக்க உணர்வு பூர்வமாக அதை வரவேற்க...

என்றும் நம் எம்ஜிஆர் நிறைந்து வாழ்வார் நம் இதயங்களில்..

60 பவுன் போயே போச்சு...It's gone. போயிந்தி. மர்க்கையா. இதை போல இன்னும் உண்மை சம்பவங்கள் என்றும் தொடரும்.

வாழ்க தலைவர் புகழ்.

உங்களின் எண்ணம் ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி.

நன்றி...தொடரும்............

fidowag
10th December 2020, 10:24 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது*நினைவு நாளை முன்னிட்டு*தமிழகமெங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.* முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் ,மற்றும் டிஜிட்டல் வடிவில்*தோன்றும்*அன்பே*வா திரைப்படம் 18/12/2020 முதல் வெளியாக உள்ளது .**
மதுரை*மாவட்ட வெளியீடு விவரம் .
------------------------------------------------------
மதுரை*- சினிப்பிரியா, அண்ணாமலை, சோலைமலை அரங்குகள் .

திண்டுக்கல்*-ராஜேந்திரா*,* * பழனி*- வள்ளுவர்*,*

ராஜபாளையம் - மீனாட்சி* * *சிவகாசி*- பழனி*ஆண்டவர்*

அருப்புக்கோட்டை -தமிழ்மணி* * போடிநாயக்கனூர் - ஆரா*

சின்னமனூர் - வெங்கடேஸ்வரா* , பொன்னுசாமி*அரங்குகள்*

மேலூர்*- கணேஷ்* * * பெரியகுளம்*-பார்வதி .* *கூடலூர்*- எஸ்.டி.பி.

ஒட்டன்*சத்திரம்*- இந்தியன்* * சோழவந்தான் - வி*. தியேட்டர்* .

உசிலம்பட்டி - பொன்னுசாமி*


தகவல் உதவி : மதுரை*எம்.ஜி.ஆர். பக்தர்*திரு.எஸ்*குமார் .

orodizli
11th December 2020, 07:58 AM
சரித்திரத்தில் பல தலைவர்கள் வருகிறார்கள் ஆனால் சரித்திரம் படைத்த தலைவர்களில் மிக மிகச் சிலரே அவர்களில் முக்கியமாவர்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர் பல சாதனைகளை புரிந்து சரித்திரங்களை படைத்தார்.

தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு பல சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் என்றும் நீங்காத இதயக்கனியாக விளங்குகிறார்.

அவருக்கு நடிக்க தெரியாது என்று சொன்னார்கள். ஆனால் நம் நாட்டில் அரசாங்கத்தால் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான "பாரத் "விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் நடித்த படம் ஓடாது என்று சொன்னார்கள்.ஆனால் அவர் நடித்த படம் பலநூறு நாட்களையும் கடந்து ஓடி வசூலில் சாதனை படைத்தன.

அவருடைய முகம் திரைக்கு ஏற்றதாக இல்லையென்று ஒரு பிரபல டைரக்டர் சொன்னார்.ஆனால் அந்த முகத்தை திரையில் காண இலட்சக்கணக்கான, கோடானுகோடி ரசிகர்கள் தவமிருந்தார்கள்.

அவருடைய கட்சி அதிக நாட்களுக்கு நிலைக்காது என்று ஆரூடம் கூறினார்கள். ஆனால் அவர் காலஞ்சென்ற பின்னும் அவருடைய கட்சி தமிழகத்தை ஆட்சி புரிந்து வருகிறது. அம்மஹான் மறைந்த பிறகு இந்திய திரு நாட்டின் மிக உயர்ந்த, உயரிய விருது "பாரத ரத்னா" வழங்கப்பட்டு அவ்விருதும் மகத்தான பெருமையை சூடிக்கொண்டது.

அவர் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற போது அவரால் சிறப்பாக ஆட்சி செய்ய முடியாதென்று சொன்னார்கள். ஆனால் அவர் ஆட்சி செய்த நாட்களே தமிழகத்தின் பொற்காலம் என்று சொல்லுமளவிற்கு மிகமிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார் . ஆனால் இன்று அந்த வள்ளல் பெருமான் இல்லாதது தமிழ் நாட்டிற்க்கு பேரிழப்பாகிவிட்டது என்பதை இன்று எல்லோரும் உணர்ந்துள்ளனர்.

அருடைய சாதனைகள் மகத்தானவவை. சரித்திரம் , சகாப்தம் படைத்த அந்த மாபெரும் தலைவரின் சாதனைகள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புகழ் வாழ்க.........Sar.Sub....

orodizli
11th December 2020, 07:59 AM
என்றுமே தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரங்களில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய
நீங்காத சாதனைகளும்... வெற்றிகளும்... அதிக
நபர்களின் பேசு பொருள்களாகும்.அப்படித்தான் 'தந்தி 'டி.வியின் நேற்றைய ஆய்த எழுத்து நிகழ்ச்சியும் ,இன்றைய 'புதிய தலைமுறை'
நேர்படப்பேசு நிகழ்ச்சியும் கூறும் ஒரே கருத்து என்னவென்றால் தமிழ்நாட்டின் நிரந்தர வெற்றியின் ஒரே அதிசயம் எம்.ஜி.ஆர்.அவருடைய நல்ல கொள்கைகளையும் மக்களின் செல்வாக்கையும் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டி அவரின்
முகத்தை தங்கள் கட்சிகளில் காட்டி பெருமைப்படுத்த போட்டி போடுகின்றனர்.இந்த நேரத்தில் அ.தி.மு.க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் அவருடைய இரட்டை இலை இரண்டும் எங்களுக்கு முக்கியம் என்றும் வாதாடுகின்றனர்.இவர்கள் மற்ற நேரங்களில் இந்த அ.தி.மு.க வை அம்மா அரசு என்றும் எம்.ஜி.ஆரை மறந்துவிடுகின்றனர் என்றும் மற்ற கட்சியினர் உண்மை நிலையை கூறி வாதிடுகின்றனர்.இந்த நிலையில் எம்.ஜி.ஆர். என்ற வெற்றியை மட்டும் கண்ட தலைவரை நாங்களும் பாராட்டுவோம் என்றும் அவர் புகழை நீங்கள் ஏன் உங்கள் கட்சிக்கு மட்டும் பயன்படுத்த நினைக்கிறீர்கள் எனவும் அனைவரும் வாதிடுகிறார்கள்.அவர்களின் வாதம் நியாயமானதுதானே! எம்.ஜி.ஆர் ஒரு தலைசிறந்த தலைவர் அவரை அனைவரும் ஆராதிக்கின்றனர்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!��������... Ranjith...

orodizli
11th December 2020, 08:02 AM
டிசம்பர்...ஜனவரி ஏதாவது ஒரு மாதத்தில் மீண்டும் வருகிறார் புத்தம் புதிய பொலிவுடன்...

காத்து இருக்கிறோம் எங்கள் தலைவா.

உங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..
எங்கள் இரு விழிகளும் ஒரு போதும் இமைப்பதில்லை இமைப்பதில்லை.

ஏன் என்றால் நீங்கள் அழகிய தமிழ் மகன்..

உலக திரைப்பட வரலாற்றில் நம் தலைவர் படங்களை போல வேறு எந்த நடிகர் படங்களும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை.

Ever never in the universe..the one and only..m..g..r..

நமது பொன்மனம் உடன் நடித்த படங்கள் தவிர வேறு எந்த புகழ் பெற்றவர் படங்களும்....எங்கும் திரையிடப்பட்டு நாமும் பார்க்கவில்லை..
நாடும் பார்க்கவில்லை

ஒண்ணா இருக்க கத்துக்கணம்..பல உண்மையை சொன்னா ஒத்துக்கணும்............nm.........

orodizli
11th December 2020, 10:54 AM
"எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும், இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதியபூமி" என்று மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையூட்டி பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றலை உருவாக்கினார் மக்கள் திலகம். வாழ்க்கையை தர்மநீதியுடன் போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கற்றுக் கொடுத்தவர்.

எந்த எம்ஜிஆர் ரசிகர்களும் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழைகளாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய உலகில்
தற்கொலை மிகவும் மலிந்து காணப்படுகிறது. வாழ்க்கையில் நிறைவேறாத எண்ணங்களை தோல்வியாக நினைத்து உடனே தற்கொலைக்கு விழைகின்றனர் இன்றைய இளைஞர்கள். அவர்களுக்கு மாற்றுப்பாதையை காட்டி வாழ்வில் நம்பிக்கையூட்ட தகுந்த தலைவரில்லை.

அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டி சீரான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க இன்று தகுந்ததோர் தலைவர் இல்லை. ஆனால் அன்று திரைப்படத்தின் மூலம் மக்களின் வாழ்வியல் நீதியை கற்றுக் கொடுத்தவர் எம்ஜிஆர். தாயை போற்றினால் தரணியில் உயர்வுண்டு என்பதை எடுத்து சொன்னார். எதிரிகளை திருத்த வேண்டுமேயொழிய அழிக்கும் எண்ணம் கூடாது.

நிராயுதபாணியாக நிற்கும் எதிரிக்கு கூட கருணை காட்ட வேண்டும் என்ற
ராஜபுத்திர வீரர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க சொன்னவர். சண்டை காட்சிகளில் கூட முறை தவறி வெற்றி பெற நினைக்க மாட்டார். "தர்மம் தலை காக்கும்" என்று இல்லாதவர்களுக்கு உதவி செய்து அவர்கள் தொழில் செய்து பிழைக்க வழி வகை
ஏற்படுத்திக் கொடுக்கச் சொன்னது மட்டுமின்றி அவரே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். மொத்தத்தில் நல்லொழுக்கங்களை மக்களுக்கு போதித்த வாத்தியார் என்பதால் "வாத்யார்" என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

தாயை போற்றும் பாடல்கள் அவரது படத்தில் இடம் பெற்றிருக்கும். மாற்று நடிகர் தாயை பழித்து பாடிய பாடலை கவனியுங்கள். "அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம், என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம், உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம், நீ சொன்னது எப்படி உண்மையாகலாம், நம்பமுடியவில்லை". புரட்சி நடிகர் படத்தில் இப்படி ஒரு பாடலை தாயை வைத்து அறம் பாட அனுமதிப்பாரா?

"அன்னை தந்த பால் அமிர்தம் அல்லவா? என்னை பெற்ற தாய் தெய்வமல்லவா? உன்னை பிரிந்து உயிர் பறந்து போகலாம்? நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்? நம்ப முடியவில்லை"! என்றல்லவா கவிஞரை நேர்மறையாக மாற்ற சொல்லியிருப்பார். "ஒரு குடம் பாலுக்கு ஒரு துளிவிஷம்" என்பார்கள். அதுபோல பல
நல்ல படங்களில் தன்னுடைய மிகைநடிப்பு என்ற விஷத்தை கலந்து முழு படத்தையும் கெடுத்து குட்டிச்சுவர். ஆக்கி விடுபவர்.

அதிகமான குளோஸப் ஷாட்களை வைத்து படத்தின் கதையிலிருந்து விலகி தன்னை முன்னிலைப்படுத்தியவர். அவரின் படங்களின் தோல்விக்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.
முழு முதற் காரணம் அவரேதான் என்பது மிகையல்ல. அவரை என்.டி.
என்று கைஸ் அழைப்பார்கள். ஆம் அது உண்மைதான். 'நடிப்பின் துயரத்தை' அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை, மிகப் பொருத்தம்தான்.

மேலும் கைஸ் "தியாகத்தை"யும் "திரிசூல"த்தையும் சாதனை என்று புளகாங்கிதமடைவதை பார்த்தால் காமெடியா இருக்கு. ஏதோ 1977 தேர்தலில் தலைவரோடு சேர்ந்து மேடைக்கு வந்த காரணத்தால் எம்ஜிஆர் ரசிகர்கள் அந்த இரண்டு படங்களையும் ஓரளவு சகித்துக் கொண்டு பார்த்ததால் தான் இந்த வசூலும் வந்தது. 1980 தேர்தலில் மீண்டும் அய்யன் தீயசக்தியோடு சேர்ந்து முகத்தில் சேரும் சகதியும் அப்பிக்கொண்டு போனதால் அடுத்து வந்த அய்யனின் ஆக்ரோஷ மிகை நடிப்பு படங்களை நமது ரசிகர்கள் கைவிட்டதால் அத்தோடு திரையுலகில் இருந்தும் தூக்கி வீசப்பட்டார்.

புரட்சி தலைவரின் அடிப்பொடியாக இருந்தால் கூட ஏதாவது பதவி கிடைத்திருக்கும். எதிரிக்கட்சிக்கு போய் முகத்தில் சேரும் சகதியும் அப்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். தலைவருக்கு வந்த கூட்டத்தில் பாதி தனக்கு வந்தது என்று நினைத்த அய்யனை என்னவென்று அழைப்பது. கழுத்தறுபட்டாலும் தான் சாகவில்லை என்ற எண்ணத்தில் சிங்க நடை போட்டு தலை இல்லை என்று தெரிந்ததும் விழுந்து விடும் வாத்தை நாம் என்ன சொல்வோம்.
அதைப்போல அழைத்தாலும் தகுமென்றே நினைக்கிறேன். தான் பெரிய சக்தி என்று நினைத்துக் கொண்டு தானும் கட்சியை ஆரம்பித்து 50 ல் நின்று(ஒன்றைத்தவிர) அத்தனையிலும் அய்யன் டெபாசிட் இழந்த சோகத்தில் கைஸ் பிதற்ற ஆரம்பித்து விட்டனர் என்றே தெரிகிறது..........ksr.........

orodizli
11th December 2020, 10:55 AM
சூரியன் நெருங்க முடியாது...
சந்திரன் வாழ முடியாது...
எம் ஜி ஆர் ஆக முடியாது ...

மலையை தோளில் தூக்குவேன் என்று ஒருவன் கூறினாலும் நம்பும் கூட்டம் உண்டு தமிழகத்தில்
நேரா கதாநாயகன் வேஷம் தான் தமிழகத்தின் அவல நிலை லட்சியம் இல்லா வாழ்க்கை கொள்கை இல்லா திரைபடம் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளமை துயரபடுவோர்க்கு உதவாத மனம் இவை கொண்ட ஒருவர் நடிகன் என்ற தகுதி மட்டும் கொண்டு தமிழகத்தை ஆளநினைப்பதும் அதை ஒரு கூட்டம் ஆதரிப்பதும் தமிழகத்தின் அரசியல் நிலையின் பரிதாப நிலை

ஆடுகள் சண்டையிட நரிகள் கொண்டாடம் போட்டது

தமிழன் என்று இனம் உண்டு
தனியே அவர் கொரு குணம் உண்டு

வாழ்க எம்ஜிஆர் புகழ்...am...

orodizli
12th December 2020, 07:50 AM
நிலைக்கும் எம்.ஜி.ஆர் புகழ் :
����������������������
இந்த நேரத்தில் நடக்கும் விவாதங்களில் இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டுகளை இருவரும் மாறி மாறி கூறிக்கொள்ளும் பொழுது விவாதிப்பவர்கள் புரட்சித் தலைவருக்குப் பின் வந்த ஆளுமைகளைத்தான் ஊழல் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.ஆனால் அங்கே விவாதிப்பவர்கள் எதிர்க் கட்சி அணியிடம் எம்.ஜி.ஆர் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதாபிமான தலைவர் அவரைப் பற்றி குறை சொல்ல எதுவுமே இல்லை எனவும் அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்துபவர் எனவும் அவர் சிறந்த தலைவர் எனவும் எதிர் தரப்பினர் கூட புகழாரம் சூட்டுகின்றனர்.மேலும் எம்.ஜி.ஆரும் இரட்டை இலையும் இல்லாமல் எந்த கொம்பனும் ஜெயித்திருக்க முடியாது எனவும் சவால் விடுகின்றனர்.இது முற்றிலும் உண்மையே!
எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றும் அனைத்துக் கட்சியினருக்கு மத்தியில் எங்கள் தலைவர் படத்தை சிறிதாக செய்தவர்கள் எப்போதுதான் திருந்துவார்கள்?...Rnj...

orodizli
12th December 2020, 07:51 AM
திரையுலகின் வரையறை தனித்தன்மையின்
புகலிடம் எம்.ஜி.ஆர் :
����������������������������������
இவர் முதல் படத்திலேயே பெரிய கதாநாயக அந்தஸ்து எதுவும் கிடைத்து விடவில்லை.ஆனால் தான் சினிமாவில் அறிமுகமான ஆண்டிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டையும் செதுக்கி செதுக்கி வரையறை செய்தவர். திரையில் எப்படித் தோன்றினாலும் ரசித்த மக்களிடம் இப்படித்தான் கதாநாயகன் இருக்க வேண்டும் என்பதற்கு உட்சபட்ச வரம்பு எம்.ஜி.ஆர்.கதாநாயகன் நேர்வழியின் நேர்த்தியாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்
மட்டுமே.அவர் காலத்தின் மற்ற நடிகர்கள் படத்தையும் எம்.ஜி.ஆர் படத்தையும் பார்க்கும் பொழுது புரட்சித் தலைவரின் நேர்த்தியான மிக யதார்த்த இயற்கை நடிப்பு அற்புதமாகவும்
அறிவுரை கூறும் ஆசானாகவும் அமையும். அவரின் அந்த இயற்கையான நடிப்பு இன்றுவரை அவர் புகழை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொள்கிறது.இன்றுகூட அவருக்கு உண்டான புகழைத் தாங்க முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் நிறைய உள்ளனர்.
பிறந்தால் அவரைப்போல் பிறக்கவேண்டும்,வாழ்ந்தால் அவரைப் போல் வாழ வேண்டும்,புகழடைந்தால் அவரைப் போல் அடைய வேண்டும் என்பது இன்றைய அனைவரின் வயிற்றெரிச்சல்.அவர்களுக்கெல்லாம் ஒரே சொல்:இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் பொன்மனச் செம்மல் புகழ் என்றுமே நிலைத்திருக்கும்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்����������...Rnjt...

orodizli
12th December 2020, 07:52 AM
ஐயா பக்தவச்சலம் மறைவுக்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது...அப்போது நடை முறைப்படி சென்னை நகர செரீப் ஆக அப்போது இருந்த ஐயா ஏ.வி.எம்.சரவணன் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில் தலைவர் கலந்து கொண்டார்.

அமைச்சர் பெருமக்கள்* முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை ராமானுஜம் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்.

நிகழ்ச்சி நடுவில் அவர் ஒரு செய்தியை தலைவருக்கு சொல்ல சொல்லி ஐயா ஏ.வி
எம்.* அவர்களிடம் சொல்ல அவரும் தலைவர் இடம்.

ராமானுஜம் அவர்கள் வீட்டில் பணி புரியும் ஒரு ஏழை பெண்ணுக்கு உயர் சிகிச்சை மேற் கொள்ள அதிகம் பணம் தேவை படுகிறது.

அதற்கு என்று நாங்கள் முக்கிய நண்பர்களிடம் ஒரு பெரிய தொகையை வசூல் செய்து வைத்து உள்ளோம்...

இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் சிகிச்சை செலவு இலக்கை எட்டி விடுவோம் என்று சொல்ல.

தலைவர் மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவர்கள் மொத்த செலவு தொகை சொல்லி எங்களுக்கு இப்போ வசூல் ஆன தொகை போக மீதி இவ்வளவு போதும் என்று சொல்ல.

மன்னவர் மாணிக்கத்தை அழைத்து காதில் ஏதோ சொல்ல உடன் 2 நிமிடங்களில் தலைவர் காரில் இருந்து ஒரு பண்டில் செய்யப்பட்ட தொகை உடன் அவர் வர...

தலைவர் அவர்கள் இருவரிடமும் அந்த தொகையை கொடுக்க அண்ணே என்ன இது நாங்க இவ்வளவு கேட்கவில்லை என்று சொல்ல.

தலைவர் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏழை பெண்ணின் சிகிச்சை மொத்த பணமும் இதில் இருக்கு...வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல.

அவர்கள் அப்போ நாங்க வசூல் செய்த பணத்தை என்ன செய்வது என்று கேட்க

சிகிச்சைக்கு பிறகு அந்த ஏழை பெண்ணின் செலவுக்கு அவர் யாரிடம் போவார் அதற்கு உங்கள் நிதி உதவட்டுமே என்று சொல்ல..

ஒரு நிமிடம் வாய் அடைத்து போகிறார்கள் அந்த* முக்கிய பிரமுகர்கள்.

உதவி செய்ய நினைத்து விட்டால் அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி அல்லது அஞ்சலி செலுத்த வந்த இடம் ஆக இருந்தாலும் சரி நம்மவரை போல வரம் கேட்ட உடன் கொடுக்கின்ற கடவுள் இவரை தவிர வேறு இவரை இனி எப்போது எங்கே காண முடியும்?

முடிந்தால் எங்கள் தலைவர் போல ஆகுங்கள்...இருந்தால் தொண்டர்கள் ஆகிறோம்.

ஒருபோதும் வாய்ப்பு இல்லை...

The one and only*
m
g
r.....in the universe.
Ever never again.

நன்றி...தொடரும்..

உங்களில் ஒருவன் நெல்லை மணி...

வாழ்க தலைவர் புகழ்.

அடுத்து நிகழ்வதையும் சிந்திக்க உங்களை போல ஒருவரை எங்கள் தலைவர் என்று அடைந்ததை எங்கள் பிறவி பயன் என்று கருதும்..........
����������*.........nm.........

orodizli
12th December 2020, 07:52 AM
மக்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

புரட்சித் தலைவருக்கு எண்ணற்ற பட்டங்கள் இருந்தாலும் , இயற்கையாகவே அவருக்குள் இருந்த மனிதநேயம் தான் இன்றுவரை அவரது புகழுக்கு அஸ்திவாரமாக உள்ளது. இன்று சினிமாவில் தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் பட்டம் போடுகின்றனர். தனது அற்புதமான பண்புள்ள குணத்தின் மூலமாகவும். இல்லை என்று வருபவர்களுக்கு அவர்களின் முகத்தைப் பார்த்து கேட்காமலேயே அள்ளிக்கொடுத்ததாலும் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தானாகவே தேடிச்சென்று உதவிய வள்ளல் குணத்தாலும் அரசியலில் நல்ல தலைவராக உருவானார். இன்று தலைவர்களை செயற்கையாக உருவாக்குகின்றனர். "ஊருக்கு உழைப்பவன்", திரைப்படத்தில் புரட்சித்தலைவர் பேசும் ஒரு வசனம் தகுதி இல்லாத பட்டமும் அஸ்திவாரம் இல்லாத கட்டிடமும் ரொம்ப நாள் நீடிக்காது. மாபெரும் தலைவர் புரட்சித்தலைவரின் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........ssm...

fidowag
12th December 2020, 10:48 PM
இன்று முதல் (12/12/20) பழனி*மினிரமேஷில்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*அகிலம் போற்றும்*" ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .**


வெள்ளி முதல் (18/12/20) மதுரை*கோபுரம்*அரங்கில்*( பழைய சரஸ்வதி )நடிக*மன்னன் / கலை* மன்னன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த*நாடோடி மன்னன் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .


தகவல் உதவி : மதுரை*பக்தர்*திரு.எஸ்*குமார் .*

fidowag
12th December 2020, 11:04 PM
அன்பே*வா -கோவை* நகர அரங்குகளில் வெளியீடு விவரம்*
--------------------------------------------------------------------------------------------
18/12/20 முதல்* அர்ச்சனா*தியேட்டர்,* * கே.ஜி. காம்ப்ளக்ஸ்* ,
* * * * ** * * * * * * * * * * * * * ப்ரூக்ளின் மால்*


தகவல் உதவி : கோவை*பக்தர்*திரு.முருகானந்தம் .*

orodizli
13th December 2020, 08:03 AM
உன் திசை நோக்கி---
------------------------------------

வேங்கையனிடம் சொல்லிடுவேன் என்று மிரட்ட-சோவை அவர்கள் விடுவிக்க--
தலைவன் என்றால் இவன் தான் தலைவன்!!-அடிமைப்பெண்!!
வாத்யாரே வாத்யாரே ஒரே தடவை உன்னைத் தொட்டுப் பார்த்துக்கறேன் வாத்யாரே--எங்கள் தங்கம்!
இந்த வாத்யாரே இப்படித் தான்!! திடீர்ன்னு யாருமே நினைச்சுப் பார்க்காத விஷயத்தை செய்வாரு--ஒளி விளக்கு!
படத்தின் வெறும் காமெடி வசனமாக இல்லாமல் எம்.ஜி.ஆர் தொண்டர்களின் நாடித் துடிப்பை வெளிப்படுத்திய சினிமா எக்ஸ்-ரே!!
உள்ளத்தில் இருப்பதை ஒளிக்காமல் உரைக்கும் இவரது கண்ணாடி இதயம் சில சமயம் தம்மையே கூட குறை சொன்னதுண்டு!
எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர் சோ1 என்று சில முக நூல் மேதாவிகள் முழங்குவார்கள்!
மிகவும் தவறான வாதம்!!
தி.மு.க விலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது இவர்-கண்ணதாசனிடம் பந்தயம் கட்டுகிறார்!
எம்.ஜி.ஆரின் ஆட்சி தான் இனி தமிழகத்தில்!!
தோற்ற கவிஞர் சோ விடம் வியப்பாகக் கேட்கும்போது--சோ சொன்ன பதில்--
எம்.ஜி.ஆருக்குப் பின்னால் திருவிழாக் கூட்ட பக்தர்கள் போல் கூட்டம் செல்கிறதே அதை வைத்து ஊகிக்கலாமே??
சினிமா போன்ற கவர்ச்சியான விஷயங்கள் இல்லாமலேயே கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக துக்ளக் வெற்றி நடை போடுகிறது என்றால் அது சோ என்னும் தனி ஒரு மனிதரால் தான் என்பது அசாதாரண விஷயம்!!
ஒருவரது பொது வாழ்வை சுட்டிக்காட்டும் போது எரிமலையாகக் கிளம்பும் இவரது கட்டுரையில் அந்த நபரின் தனிப்பட்ட விஷயங்கள் கடுகளவும் இருக்காது!
தி.மு.க என்னும் தீய சக்தியை வளர விடக் கூடாது என்று தன் பத்திரிகையில் தம் இறுதிக் காலம் வரை முழங்கியும்--அதற்கு ஏற்ப இயங்கியும் வந்த இவர்--
தன் மகள் திருமணத்துக்கு அதே கலைஞர் வீட்டுக்குச் சென்று அழைத்தவர்!
கலைஞரின் தமிழ்--உழைப்பு--விடா முயற்சி ஆகியவற்றை பகிரங்கமாகப் புகழ்ந்தவர்!
அன்று இந்திரா அம்மையாரால் இவரது துக்ளக் த்டை செய்யப்பட்டு--மறைமுகமாக ரூ 30 என்று அந்தக்கால பண மதிப்பில் விற்கப்பட்டது?? என்றால் இவரது எழுத்தின் தாக்கம் எப்படி இருந்திருக்கும்??
வில்லன் நடிகர் திரு ஆர்.எஸ்.மனோகருக்கு நான் ஒரு விஷயத்தில் உதவப் போய்--சோ அவர்களிடம் மாட்டிக் கொண்ட அடியேன் அனுபவத்தைப் பின்னொரு சமயம் பதிவிடுகிறேன்.!
அரசியல் சாணக்கியர் என்று இவரைக் கூறலாம்!
ஒரு சாதாரணப் பத்திரிகை ஆசிரியரின் உடல் நலம் விசாரிக்க தமிழக முதல்வரும்--பாரதப் பிரதமரும் செல்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயமா என்ன??
முகம்மது பின் துக்ளக் படத்துக்கு வாலி தான் பாடல் எழுத வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவரும் இவர் தான்!
அதே வாலி,,கலைஞருடன் நெருக்கம் காட்டியபோது பகிரங்கமாக பொது விழா ஒன்றில் அதே வாலியை நையாண்டி செய்தவரும் இவர் தான்!!
எனக்குள் எம்.ஜி.ஆர் என்ற தொடரைத் தம் துக்ளக்கில் அதே வாலியை எழுதச் சொன்னவரும் இவர் தான்!!
எம்.ஜி.ஆரை நையாண்டி செய்வார்! ஆனால் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர் தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வரிந்து கட்டி எழுதுவார்!!
ஒரு வாசகரின் கேள்விக்கு--சோ வின் பதில்--
தான தர்மத்தில் எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு முன்பும் எவருமில்லை! இனியும் அப்படி ஒருவர் பிறக்கப் போவதில்லை??
1996இல் இவர் ஜெ வை சாடியது போல் எந்தப் பத்திரிகையும் சாடியதில்லை! அதே ஜெ வின் ஆளுமையை இவர் போல் எவரும் பாடியதும் இல்லை!
இதே சோ விடம்-- ஜெ- ஒரு விஷயத்தில் வாதம் செய்து வெற்றி பெற்றதை நம்மால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை??
எனக்குன்னு இருக்கும் ஒரே அண்ணா நீங்க தான்!
நான் போன பிறகு தான் அண்னா நீங்கள் போகணும்???
கோரிக்கை வைத்த ஜெ என்னும் காரிக்கை அதில் ஜெயித்ததில் வாரிக்-கை கொண்டு வருந்தாமல் வெற்றி--பேரிக்கை கொட்டவா முடியும்??
சோ இன்று இருந்திருந்தால் தமிழ் நாட்டு அரசியலில் ஒரு ஸ்திரத் தன்மை வெகு நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை!
இன்றைய இவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் --இவரையும்--இவரால் நடை பெற முடியாமல் போன இன்றைய அரசியல் நிலைப்பாட்டையும் நினைத்து நாமும் வருந்துவோமா-அச்சச்--சோ???...vt.........

orodizli
13th December 2020, 08:06 AM
ரஜினிகாந்த் உண்மையில் அடுத்த எம்.ஜி.ஆர் அல்லது என்.டி.ஆர்?

மூன்று நடிகர்கள் முதல்வர்களாக மாறிய ஒரு மாநிலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு எதிர்பார்ப்புகளின் எடையுடன் வந்துள்ளது.

*********1996 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தின் ரஜினிகாந்தின் பஞ்ச் உரையாடல் 2020 ஆம் ஆண்டில் அவரது அரசியல் போட்டியாளர்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதை பலர் பார்த்திருக்க மாட்டார்கள், தமிழில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளன நாடு.*ஆனால் சினிமாவும் அரசியலும் ஆழமாகப் பிணைந்திருக்கும் மூன்று நடிகர்கள் முதலமைச்சர்களாக மாறுவதைக் கண்ட ஒரு மாநிலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு எதிர்பார்ப்புகளின் எடையுடன் வந்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் காட்சியில் ரஜினியின் வருகையை மூன்று முறை முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பார்த்தார், அவர் தனது வெகுஜன ரசிகர்களைப் பின்தொடர்வதை வாக்குகளாக மொழிபெயர்த்தார், இறுதியில் அவரை 1977 ல் ஆட்சிக்கு கொண்டுவந்தார். தமிழ்நாட்டில், ஒப்பீடு நியாயமா?

"பொது வாழ்க்கையில் நுழையும் எந்தவொரு நடிகரும் எப்போதும் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடப்படுவார், ஏனெனில் எம்.ஜி.ஆர் ஒரு சாதனை படைத்தவர், அந்த ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை" என்று எம்.ஜி.ஆர்: எ லைஃப் ஆசிரியர் ஆர் கண்ணன் கூறுகிறார்.*கண்ணனைப் பொறுத்தவரை, ஒப்பீடுகள் செல்லுபடியாகும், ஏனெனில் ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் புகழின் உச்சத்தை அடைந்துள்ளனர், அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு கடவுள் மற்றும் வெளிநாட்டவர்கள் (ரஜினி பெங்களூரில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார், எம்.ஜி.ஆர் இலங்கையில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார்) தமிழகம் அவர்களுக்கு நன்றாக இருந்தது.
ஆனால் சூழல் மாறிவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.*“எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதி.*அவர் ஆரம்பத்திலிருந்தே அவரது மனதிலும் இதயத்திலும் ஒரு பொது வாழ்க்கையை கொண்டிருந்தார்.*அது அவருக்கு பணக்கார ஈவுத்தொகையை அளித்தது, ”என்று கண்ணன் விளக்குகிறார், முன்னாள் முதல்வர் சினிமா மூலம் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டார்.*"எம்.ஜி.ஆர் தனக்கு ஒரு நல்ல உருவத்தை உருவாக்கினார்.*அவர் எந்த ஹீரோ எதிர்ப்பு பாத்திரத்தையும் செய்யவில்லை.*ரஜினிகாந்த் ஏராளமான பாத்திரங்களைச் செய்துள்ளார் - நல்லது மற்றும் கெட்டது மற்றும் அவர் படங்களில் புகைபிடித்தார், அவர் எப்படி ஒரு சிகரெட்டை புரட்டுகிறார் என்பதில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.*அவர் படங்களில் குடிப்பார்.*எம்.ஜி.ஆர் ஒருபோதும் செய்யாத விஷயங்கள் இவை.*ஆனால் சூழல் முற்றிலும் மாறிவிட்டது.*உங்களுக்கு இனி ஒரு படம் தேவையில்லை.*அங்குதான் ரஜினிகாந்த் முக்கியத்துவம் பெறுகிறார், ஏனென்றால் எம்.ஜி.ஆருக்கு ஓரளவிற்கு ரஜினிகாந்திடம் உள்ளது, இது கவர்ச்சி. “
ஆனால் எம்.ஜி.ஆரைப் போலல்லாமல், அவரது அரசியல் வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது மற்றும் 1972 இல் அதிமுகவை மிதப்பதற்கு முன்பு எம்.எல்.சி மற்றும் எம்.எல்.ஏ.வாக நியமித்தது, ரஜினிகாந்த் ஒரு அரசியல் புதியவர்.
மூத்த பத்திரிகையாளரும்*அம்மாவின்*ஆசிரியருமான**வசந்த ி: மூவி ஸ்டாரில் இருந்து அரசியல் ராணி*மற்றும்**கருணாநிதி: தி டெஃபனிட்டிவ் பயோகிராபி*வரை ஜெயலலிதாவின் பயணம்**கூறுகிறது, “எம்.ஜி.ஆர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறும்போது ஏற்கனவே ஒரு அரசியல்வாதியாக இருந்தார்.*அவர் திமுக உறுப்பினராக இருந்தார்.*அவர் முதலில் காங்கிரசில் சேர்ந்தார், பின்னர் அவர் திமுகவில் சேர்ந்தார், அதில் அவர் ஆழ்ந்திருந்தார்.*அவர் ஒரு அரசியல் எதிர்காலத்திற்காக வருவார்.*ரஜினிகாந்திற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. ”*
எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி ரசிகர் மன்றங்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.*"எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கிளப்புகளை உருவாக்கினர், ஏனென்றால் அவர்கள் அவருடைய ரசிகர்கள், ஆனால் அவர்களும் அவருடைய அரசியல் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.*அவர்கள் திமுக கட்சியின் ஒரு பகுதியாக மாறினர், மேலும் அவர்கள் அவருடைய ரசிகர்களும் கூட.*அவர்கள் 1962 முதல் தேர்தல் பிரச்சாரம் மற்றும் சாவடி நிர்வாகத்தின் போது பணியாற்றத் தொடங்கினர்.*எனவே அவர்கள் அதை நன்கு அறிந்தவர்கள்.*அவர்கள் அவருடைய விக்கிரகாராதனை மட்டுமல்ல.*ரஜினிகாந்த் ஒரு நிகழ்வாக மாறியது.*ஆனால் பின்னர் அவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்படவில்லை.*எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையும் அரசியலும் ஒருவருக்கொருவர் சென்றன.*எந்தவிதமான இருதரப்பும் இல்லை, ”என்கிறார் வசந்தி.*
ஆனால் மிக முக்கியமாக, 1987 ல் இறக்கும் வரை முதல்வரின் நாற்காலியில் இருந்த எம்.ஜி.ஆரைப் போலல்லாமல், ரஜினிகாந்த் மாநிலத்திற்கு தலைமை தாங்க விரும்புவதில் தயக்கம் காட்டுகிறார்.*"நான் ஒருபோதும் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை. உண்மையில், சட்டசபையில் அமர்ந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி என்னால் யோசிக்க கூட முடியாது! நான் கட்சித் தலைவராக இருப்பேன், முதல்வர் படித்தவர், தொலைநோக்குடையவர் அவர் ஆட்சி செய்யக்கூடிய ஒரு நபராக இருப்பார். மேலும் கட்சித் தலைவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் போலவே இருப்பார் - ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் முதலில் கேள்வி எழுப்புவோம். நாங்கள் ஆட்சியில் தலையிட மாட்டோம் - இரண்டு இணையான அதிகாரம் இருக்காது மையங்கள், ”அவர்***மார்ச் மாதம்*கூறினார்*.
இந்த காரணத்தினாலேயே, ரஜினி அதிமுக தலைவருடனான எந்தவொரு ஒப்பீட்டையும் குறைக்கிறார்.*"எம்.ஜி.ஆர் ஒரு புரட்சியாளராக இருந்தார். ஆயிரம் ஆண்டுகளில் மற்றொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது. அவர் அடுத்த எம்.ஜி.ஆராக இருப்பார் என்று யாராவது சொன்னால், அவர் பைத்தியக்காரர். ஆனால் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு கொடுத்த மக்கள் அரசாங்கத்தை என்னால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," சூப்பர் ஸ்டார் மார்ச் 2018 இல் கூறியிருந்தார்.*
எம்.ஜி.ஆர் ஒப்பீடு சிலருடன் ஒப்பிடமுடியாது என்றாலும், மற்றவர்கள், ரஜினியின் அரசியல் நுழைவு தெலுங்கு நட்சத்திரம் என்.டி.ராமராவ் என்பவருக்கு ஒத்ததாக இருக்கிறது, 1982 ஆம் ஆண்டில் ஆந்திர தேர்தலுக்கு செல்ல ஒன்பது மாதங்களுடன் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார்.*"என்.டி.ஆரை நாட்டில் பொது சேவை அல்லது பொது நிகழ்வுகள் பற்றி எதுவும் கூறாத ஒரு மனிதராக யாரும் அறிந்திருக்கவில்லை (அவர் தனது கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு)" என்று கண்ணன் கூறுகிறார்.
*அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி ஆந்திர முதல்வர் டி.அஞ்சயாவை**பகிரங்கமாக அவமானப்படுத்தியதன்*பின்னணியில் என்.டி.ஆர் அரசியல்*சரிவை எடுத்தார்.*1983 சட்டமன்றத் தேர்தலில் த.தே.கூ காங்கிரஸை தோற்கடித்ததால், தெலுங்கின் சுய மரியாதை மற்றும் பெருமை அவரது மனதை வென்றது.
எவ்வாறாயினும், இந்த*ஒப்பீடும் பலவீனமானது என்று பத்திரிகையாளரும்*போர்க்கள தெலுங்கானாவின்*ஆசிரியருமான கிங்ஷுக் நாக்**கூறுகிறார்.*“காலம் வேறு.*ஒரே விஷயம் என்னவென்றால், அவர்கள் திரைப்பட நடிகர்கள், ஆனால் என்.டி.ஆர் காட்சிக்கு வந்தது, ஏனெனில் காங்கிரஸ் மாநிலத்தை ஆளுகிறது, மக்கள் அடிப்படையில் ஒரு மாற்றீட்டை எதிர்பார்க்கிறார்கள்.*அவர் அந்த மாற்றீட்டை வழங்க முடிந்தது, திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர், அவர் கூட்டத்தை ஊக்குவிக்க முடிந்தது, ”என்று அவர் கூறுகிறார், என்.டி.ஆரும் ஆந்திராவில் உள்ள சாதிக் காரணிகளைத் தட்டிக் கூறினார், கம்மாக்களை அவருக்குப் பின்னால் அணிதிரட்டினார்.
அதிமுகவின் ஜெயலலிதா மற்றும் திமுகவின் கருணாநிதி ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்த ரஜினி நம்புகையில், அவரது நட்சத்திர மதிப்பில் மட்டும் வங்கி அவரை அதிகாரத்திற்குத் தள்ள வாய்ப்பில்லை.*சிவாஜி கணேசன், சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றனர்.
70 வயதில், ரஜினிகாந்த் தனது வாழ்நாளில் நடிக்கத் தயாராகி வருகிறார்.*ஆனால் அரசியல் களத்திற்கு தாமதமாக வந்ததில், அவர் திராவிடக் கட்சிகளைப் பெறுவதற்கான ஒரு மேல்நோக்கிய போரை அமைத்துக் கொண்டார்.*எல்லாவற்றிற்கும் மேலாக, ரீல் வாழ்க்கையைப் போலல்லாமல், சூப்பர் ஸ்டார் வாக்கெடுப்புப் போரில் இருந்து வெளியேற முடியாது.**.............The News...


*

*







நான் எப்போ வருவன் எப்பாடி வருவன்-நு யாரூக்கம் தேரியத்து, அனா வரா வெண்டியா நெரதுலா கரெக்ட்-ஆ வர்வென்**(நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நான் வர வேண்டிய போது நான் அங்கே இருப்பேன்).

orodizli
13th December 2020, 08:07 AM
எம்.ஜி.ஆரின் ''அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார்.

ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார்.

ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு.

இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான்
'அன்பே வா'.

சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார்பாலுவாக
எம் ஜி ஆர்

நாடோடி' பாடலில் எம் ஜி ஆர் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார்.
அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே அபாரம்

மக்கள்திலகம் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.

கீதா என்கிற 'சின்ன பாப்பாவாகன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம்,

காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள்.

சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.

'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம்.

சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ்.
ஈஸ்ட்மெண் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார்.

பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம்.

புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை.

வசனம், ஆரூர் தாஸ்.

'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது',

ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார்.

கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை.
படத்தை தயாரித்தது, AVM Productions.
உதவிபிரசாத்....
திருச்சிராப்பள்ளி
" எம்ஜிஆர் " பேரவை!.........

orodizli
13th December 2020, 08:10 AM
#மக்கள்திலகம் #எம்ஜிஆரின் தனிப்பெரும், மஹாச் #சிறப்பு !

ஒரு துறையில் மிகப் பெரிய, பிரமிப்பூட்டும் சாதனைகளைச் செய்தவரை அச்சாதனைகளின் நினைவு என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தவரை ' சரித்திரம் போற்றுபவர் ' என்று குறிப்பிடுகிறோம்.

அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆரை பல சரித்திரங்களைப் படைத்தவர் என்றுதான் குறிப்பிட வேண்டும். தவிர தமிழக மக்களின் ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்து மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் என்றும் குறிப்பிடவேண்டும்.

இன்னும் விளக்கமாகச் சொல்வாதாக இருந்தால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எத்துறையிலெல்லாம் அடியெடுத்து வைத்தாரோ அத்துறை அனைத்திலும் சரித்திரத்தைப் படைத்திருக்கிறார்.

சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.வரலாற்றில் இடம் பெறத்தக்க சாதனைகளைப் புரிந்தவர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குண நலன்களைப் பெற்றிருக்கிறார்கள்.

மன உறுதி , எதையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல், மனம் தளராமல் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல், பதட்டமின்மை போன்ற குணநலன்கள் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அனைவரிடமுமே காணப்படுகிறன.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த குணநலன்கள் அனைத்தும் அவரிடம் அபரிதமாகவே குடிகொண்டிருந்தனவென்று சொல்லலாம்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க .

orodizli
13th December 2020, 11:21 AM
தூத்துக்குடி

நகரில் அதிக நாள் ஓடிய ஒரே படம் எம் ஜீ ஆரின் உ.சு வாலிபன் (சார்லஸ் 104 நாள்)

நகரில் அதிக வசூல் பெற்றபடம் சிவாஜியின் நல்லதொரு குடும்பம்.
Rs. 1.97.545.90 (மினி சார்லஸ் for 50 days)

எம் ஜீ ஆர் படங்களிலே உ.சு .வாலிபன் திரைப்படம் ஒன்றே
Rs.1,65,155.50 அதிக வசூலாகப்பெற்றுள்ளது.

நகரில் சிவாஜியின் படங்களிலே 100 நாள் கண்ட படம்,
சிவந்த மண் ( பாலகிருஷ்ணா 101 days)

(இமேஜில் உள்ளவை)
கைபிள்ளைகளின் கனவில் தோன்றிய வசூல் ரகளை இதுதான்.

சப்பாணிக்கு கோபம் வந்தவுடன் "சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசைக்கொடு" என்று சொன்னதையே சொல்லி பிதற்ற ஆரம்பித்து விடுவான். அதைப்போல நமது பதிவால் கைஸ்கள் ஆத்திரத்தில் உளற ஆரம்பித்து விட்டனர். அதுவும் சாதாரண உளறல் அல்ல ஜன்னி வந்தவன் கை கால் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டு உளறுவானே அதைப்போன்ற அலறல்.

உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் நாம் பார்ப்போம். அனைத்தையும் பார்த்தால் பிறகு நமக்கும் ஜன்னி வந்து விடும். நாம் தூத்துக்குடியை அடிக்கடி குறிப்பிடுவதால் கைஸ்கள் தூத்துக்குடி மேல் செம காண்டாக உள்ளனர். அதனால் தூத்துக்குடியில் அய்யனின் சாதனைக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த படம் "நல்லதோர் குடும்பம்". படம் திரையிட்டதோ மினி தியேட்டரான மினி சார்லஸில்.

அந்த படத்தை மினி தியேட்டர் என்ற காரணத்தால் 10 பேர் கூட வராத நிலையில் கைஸ் 50 நாட்கள் வாடகை கொடுத்து ஓட்டி முடித்தனர்.
50 வது நாளன்று கூட தியேட்டருக்கு வராத கைஸ் அந்த படத்தின் 50 நாள் வசூல் ஆண்டவனுக்கு கூட தெரியாது ஆனால் அய்யன் கைஸ்
வாய்க்கு வந்ததை வசூலாக போட்டு திருப்தியடைகின்றனர். வாத்து மடையர் அய்யன் மட்டுமல்ல அய்யன் வீட்டு ஆட்டுக்குட்டியும் கூட. அது மட்டுமா? உ....த்தமனை தூக்கிக் கொண்டு தீவு தீவாக திரிகிறார்கள்.

தமிழ்நாட்டில் எங்குமே 50 நாட்களை தாண்டி ஓட்ட முடியாத உ........த்தமனை 100 நாட்கள் ஓட்ட தேர்ந்தெடுத்த இடம் மதுரை. ஆனால் மதுரையில் கைஸ்களால் வடக்கயிறை இழுக்க முடியாததால் தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்தும் வெட்டி
கைஸ்கள் வரவழைக்கப்பட்டு படத்தை இழுத்து 100 நாட்கள் ஓட்டி விளம்பரம் கொடுத்தபின்தான் ஓய்ந்தார்கள். உள்ளூரில் பருப்பு வேகாது என தெரிந்து இலங்கை தீவு பகுதியில் உ....த்தமனை தூக்கி விளையாட ஆரம்பித்து விட்டனர். கைஸ்கள் இன்னும் நித்யானந்தாவின் கைலாஷில் மட்டும் உ....த்தமன் வசூலை போடவில்லை என்று நினைக்கிறேன். என்ன கைஸ் உ.....த்தமனின் கைலாஷ் வசூல், பட்டறையில் ரெடியாகி விட்டதா?.உலகமெல்லாம் தேடினாலும் இப்படி ஒரு உ............த்தமனை காண முடியாது.

முதலில் பொய் சொல்லும் போது நன்றாக விபரம் தெரிந்து வைத்துக் கொண்டு பொய் சொ ல்ல வேண்டும். மினி சார்லஸின் மொத்த இருக்கைகள் சுமார் ஐநூத்தி சொச்சம். சார்லஸின் மொத்த இருக்கைகள் சுமார் 1400 க்கு மேல். "உலகம் சுற்றும் வாலிபன்" ஓடிய 104 நாட்களில் 50 நாட்கள் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் அளவுக்கு ஓடியது. அந்த வசூலை
அய்யனின் ஆபாசபடமான "நல்லதொரு குடும்பம்" முறியடித்து விட்டதாம். வெறும் காலை காட்சியில் 50 நாட்கள் ஓட்டிய படம் வெளியான 4 வது நாளிலேயே முக்கால்வாசி இருக்கைகளில் மூட்டை பூச்சிதான் படத்தை பார்த்துக் கொண்டிருந்தன.

மனசாட்சியை விற்று வந்த காசில் மசால் வடை சாப்பிடுவார்கள் போல் தெரிகிறது. இப்படியெல்லாம் போட்டால் நாம் கோபமடைவோம் என்று நினைப்பது போல தெரிகிறது. ரோட்டில் திரியும் பைத்தியகாரர்களை பார்த்து யாருக்காவது கோபம் வருமா? பாவம் பரிதாப உணர்ச்சிதான் வரும். இந்த ஆண்டு குற்றாலத்தில் குளிக்க தடைவிதித்ததால் பாவம் கைஸுகள் சற்று அதிகம் முற்றிப் போய் ரோட்டில் திரிய ஆரம்பித்து விட்டனர்.

பைத்தியக்காரன் உளறியதற்கு நாம் பதில் சொன்னால் பிறகு நம்மையும் அதோடு சேர்த்து விடுவார்கள். அதனால் அவர்கள் உளறியதை மட்டும் பதிவு செய்திருக்கிறேன். ஜன்னி எந்த அளவுக்கு முற்றிப்போய் இருக்கிறது என்பதை அதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். "தங்கப்பதக்கதை"யே 41 நாட்களில்(21+20) தூக்கி வீசிய தூத்துக்குடி மக்கள் இதைப்பார்த்தால் கல்லால் அடித்து பைத்தியத்தை விரட்டி விடுவார்கள்.

தூத்துக்குடியில் இதே சார்லஸில் "தியாகத்தை" ஓட்டியது அதிகமில்லை (வெளியூர்) ஜென்டில் கைஸ் இருபத்தொன்றே(21) நாட்கள்தான். ஐயனின் அதிகபட்ச மதிப்பே இங்கு 21 நாட்கள்தான். இதை தாண்டி ஒரு படத்தை ஓட்டினால் அங்கு கைஸ்கள் நிச்சயம் ஒளிந்திருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்..........KSR.........

orodizli
14th December 2020, 08:11 AM
M g r சிறபப்புக்கள்.........

இந்திய தலைவர்களிலே எம்ஜிஆர் சிலை மட்டுமே பிரான்சில் உள்ளது

இலங்கையில் இந்திய தலைவர்களில் எம்ஜிஆர் சிலை மட்டுமே உள்ளது

மொரீஸ் சுதந்திர விழாவிற்க்கு அழைத்து அன்நாட்டின் பிரதமருக்கு அடுத்த இருக்கை கொடுத்து சிறப்பித்தது எம்ஜிஆரை

அமேரிக்கா ப்ரூக்கிளின் மருத்துவமனை எம்ஜிஆர் நலம் காண மக்களின் பிராத்தனை பிரசாதம் பாதுகாக்க தனி பிளாக் கட்டினார்கள் அதை சுற்றுலா சார்ட்டில் இணைக்கபட்டது

மலேசியா எம்ஜிஆர் கோவிலை மலேசிய சுற்றுலா துறை சேர்த்துள்ளது சிறப்பு

எம்ஜிஆருக்கு முதல் தபால் தலை வெளியிட்டது கனடா

பிரன்ஸ் மலேசியா விலும் தபால்தலை வெளியிடப்பட்டுளது

மலேசியாவிலும் எம்ஜிஆர் சிலை திறக்கபட்டது சிலை வடிவமைத்தது விஜி பி
அமேரிக்கா பல்கலைகழகம் கொடுத்த டாக்டர் பட்டம் எம்ஜிஆருக்கு

இந்திய முதல்வர்களிலே எம்ஜிஆருக்கு மட்டுமே அமேரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்தியுள்ளது

அந்தமானில் எம்ஜிஆர் மன்றம் திறந்தது இந்திய பரதமர் லால்பகதூர் சாஸ்த்திரி இது ஒரு சரித்திரம்

உலகிலே தனி நபர் மேல் எழுதப்படட நூல்களில் அதிகம் எழுதப்பட்டது எம்ஜிஆர் பெயரில் இது ஒரு கின்னஸ் சாதனை

தமிழக தலைவர்களில் வெளிநாட்டில் அதிக சிலை உள்ளது எம்ஜிஆருக்கு மட்டுமே

சாதனை திலகம் எம்ஜிஆர்

வாழ்க எம்ஜிஆர் புகழ் #mgr ��✌️��...amm...

orodizli
14th December 2020, 08:11 AM
“எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட ,
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்..”
இந்த தத்துவம் .. கண்ணதாசன் அன்று சொன்னது....அதில் அர்த்தம் உள்ளது..!

அர்த்தம் உள்ள தத்துவங்கள் பலவற்றைச் சொன்ன கண்ணதாசன் , காமராஜர் மேல் அளவில்லா மரியாதை வைத்திருந்தவர்...கழக ஆட்சிகளின் காலம் முடிந்து ...மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என அவரின் ஆழ்மனத்தின் அடித்தளத்தில் ,அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது...
அந்த ஏக்கத்தை , சிவாஜி நடித்த திரைப்படப் பாடல்களில் இலை மறை காயாக எழுதிக் காட்டினார்...

1972 - ல் வெளிவந்த “பட்டிக்காடா பட்டணமா” படத்தின் “அம்பிகையே…. ஈஸ்வரியே..” பாடலில் வெளிப்படையாகவே தன் விருப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கண்ணதாசன் ...

“சிவகாமி உமையவளே முத்துமாரி – உன்
செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி..”

கண்ணதாசன் இப்படிக் கனவு கண்டு கொண்டிருக்க ...
1972 –ல் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க வைத் தொடங்க ...
அத்தனை மக்களும் அவர் பின்னே போக ஆரம்பித்தார்கள் ..!

கண்ணதாசனின் காமராஜர் ஆட்சிக் கனவு கலைந்து , காற்றோடு காற்றாக காணாமல் போவது கண்கூடாகத் தெரிந்தது .

விரக்தியின் உச்சத்துக்குப் போன கண்ணதாசன் , 1974 –ல் வெளியான சிவாஜி நடித்த “என்மகன்” படத்தில் .. “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...” என ஆரம்பமாகும் பாடலில் , எம்.ஜி.ஆர். மீதுள்ள வெறுப்பை நெருப்பாக வெளிப்படுத்தினார் இப்படி...

“அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்..”

“வள்ளல்” என்றாலே எம்.ஜி.ஆரைக் குறிப்பிடுவது என சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரியும் சினிமா உலகத்தில்...கண்ணதாசன் தைரியமாக எழுதினார் இப்படி...

“கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்..
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்..”

கண்ணதாசன் இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கொண்டிருந்த காலத்தில் , முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கண்ணதாசனுக்கு போன் செய்தார்...

கண்ணதாசனிடம் , எம்.ஜி.ஆர். சொன்னது இவ்வளவுதான்..: "நான் இப்போது சொல்லப் போகும் செய்திக்கு , உங்களிடமிருந்து ஒரு வார்த்தையை மட்டுமே பதிலாக எதிர்பார்க்கிறேன்.."

“என்ன..?” என்று கேட்டார் கண்ணதாசன்...

“ சம்மதம் என்ற வார்த்தை மட்டுமே உங்கள் பதிலாக இருக்க வேண்டும்..” என்ற எம்.ஜி.ஆர். தொடர்ந்து சொன்னார் இப்படி....
“தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக கவிஞர் கண்ணதாசனாகிய உங்களை நான் நியமிக்கப்போகிறேன்... சம்மதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் நீங்கள் சொல்லக் கூடாது..” என்று எம்.ஜி.ஆர். சொல்ல , நடப்பதை நம்ப முடியாமல் திக்கு முக்காடிப் போனார் கண்ணதாசன்....

எம்.ஜி.ஆர். , கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.

“எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்..”
இது கண்ணதாசன் தத்துவம்...

ஆனால் எம்.ஜி.ஆரின் தத்துவம் , எவரும் எதிர்பாராதது.....!

“ எதிரியை அன்பென்னும் பிடிக்குள் அடங்கச் செய்து விட்டால் , ஆயுதத்தை ஏன் அவசியமில்லாமல் பிடுங்க வேண்டும் ..?”
இது எம்.ஜி.ஆர். தத்துவம்...!

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே !
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே..”.............kvb.........

orodizli
14th December 2020, 08:12 AM
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "ஒளிவிளக்கு" படம் வெளியாகி பரபரப்பாய் ஓடி கொண்டு இருந்த நேரம் அது.

எனது வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எம்ஜிஆர் அவர்களின் அலுவலகம் தெரியும். நான் அங்கே அமர்ந்து பார்த்து கொண்டு இருப்பேன்..படத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை பற்றி ஒரு பாடல் வந்து இருக்க..

அதிகாலையில் அந்த சமுதாய மக்கள் அலுவலக வாசலில் கூட்டம் கூட்டம் ஆக தினம் தினம் வருவர்.

எம்ஜிஆர் அவர்கள் வருவார்...உள்ளே நுழைந்து சற்று நேரத்தில் வெளியே மீண்டும் வந்து அந்த சமுதாய மக்களை அருகே அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொள்வார்.

சாமியோ சாமியோ என்ற கோஷம் தெரு எங்கும் எதிர் ஒலிக்கும்.
தன் ஜிப்பா பாக்கெட்டில் கை விட்டு வரும் கட்டு பணத்தில் இருந்து பிரித்து பிரித்து அனைவருக்கும் ஒருவர் விடாமல் கொடுப்பார்.
அவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி இங்கு இருந்து பார்க்கும் போதே தெரியும்...

எந்த வித சலனம் நடிப்பு இல்லாமல் அந்த குழந்தைகளை கொஞ்சி மகிழ்வார்.
எனது மனம் இப்படி ஒரு நடிகரா மனிதரா என்று ஆச்சர்யம் கொள்ளும்....

எனது மகன் கார்த்தி என்பவர் 2000 ஆண்டில் அமெரிக்க நாட்டில் மேல் படிப்புக்கு புறப்பட்டு கொண்டு விமானம் ஏற வேண்டிய நாள் அது.

எனது மனைவி ஆசை ஆசையாக அவனுக்கு என்று உணவு பொருட்கள் மற்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொடுத்து கொண்டு இருந்தார்.

எனது மகன் அப்பா நான் கிளம்புகிறேன் ஆசி வழங்குங்கள் என்று எங்கள் இருவர் காலிலும் விழுந்து வணங்க..

ஒரு நிமிடம் இரு வருகிறேன் ...உன் பெட்டியை பூட்டி விடாதே உனக்கு ஒன்றை அம்மா தந்தது போக நான் அப்பா ஒன்றை தர விரும்புகிறேன் என்று சொல்லி அதை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தேன்.

உனக்கு எப்போது அங்கே படிப்பு நேரம் போக நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் இந்த புத்தகத்தை படி என்று அவனிடம் கொடுத்தேன்.

எப்படி பட்ட மனிதர்களும் இந்த நூலை படித்தால் ஒரு புது வேகம் வந்து தனது வாழ்க்கை பாதையில் நேர் கொண்ட நடையை போடுவார்கள் என்றேன் நான்.

புத்தகத்தின் அட்டை படத்தை பார்த்த உடன் முகம் மலர்ந்து அந்த படத்தை கண்ணில் ஒற்றி கொண்டு தன் பெட்டியில் மேலாக வைத்து கொண்டான் கார்த்தி என்கிறார்.

அது என்ன புத்தகம் என்றால் நம் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூலே அது...

தன் சுயவாழ்வில் நல்ல ஒழுக்கத்தை நடிகர் ஆக இருந்தாலும் இன்று வரை நல்ல பழக்க வழக்கம் கொண்ட ஒருவர் ஆக இருக்கும் நடிகர் சிவகுமார் அவர்கள்..

நடிகர் சிவகுமார் தம்பதிகளை நம் இதய தெய்வம் அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும் அபூர்வ படம் நம் குழுவினர் பார்வைக்கு...

வாழ்க நம் தங்க தலைவர் புகழ்..

வரும் டிசம்பர் 24 தலைவர் நினைவுநாள் வரை நம் தலைவர் பற்றி அதிசய உண்மை நிகழ்வுகள் தொடரும்.

உங்களில் ஒருவன் ஆக உங்களின் எண்ணங்களை வெளி கொண்டு வரும்.
நெல்லை மணி..நன்றி..........

orodizli
14th December 2020, 08:13 AM
#வாத்தியார் #நல்லாயிட்டாரு

எம்ஜிஆருக்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

குண்டுபாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்ஜிஆர்.

அந்த சமயத்தில் பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்) மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை குடியிருந்த கோயில் ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக குடியிருந்த கோயில் படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்ஜிஆர். அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

‘’உன் விழியும் என் வாலும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று #மொத்த #கூட்டமும் #அவர் #வாயையே #பார்த்துக்கொண்டிருந்தது.

அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி (சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா #வாத்தியார் #நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.


வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும்

#பழையபடி #பார்க்கமுடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வாத்தியார் ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் விசிலடித்துக்கொண்டும், உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்....bsm...

orodizli
14th December 2020, 08:14 AM
#எம்ஜிஆர் #பைத்தியம்

தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...

ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...

#எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...

இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...

ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...

இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!

முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....

தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!

பக்தியின் உச்சநிலை இது...
எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...

இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...

எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...

#நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...

உங்களுக்கு ???..........vtr.........

orodizli
14th December 2020, 08:15 AM
ரொம்ப பதிவு சினிமாவைப் பற்றி போட்டாச்சு!. இனி அரசியல் பதிவு ஒன்றை போடலாம் என்று இந்தப் பதிவை வரைய விரும்புகிறேன்.
தலைவரின் அந்தக்கால சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கதாநாயகியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளேந்தி எதிரிகளை அவர்கள் கோட்டைக்குள்ளே வீழ்த்தி
ஆட்சியை கைப்பற்றி நாயகியையும் காப்பாற்றி கை பிடிப்பது போல் காட்சி அமைத்திருப்பார்கள்.

அதே காட்சி அவரது வாழ்க்கையிலும் அரசியலில் நடைபெற்றது. 1980 ல்
தலைவரது ஆட்சி கலைக்கப்பட்டதும்
அருகிலிருந்த அரசியல் துரோகிகள் அணி மாறிய காட்சி தீயசக்தியின் தூண்டுதலால் அவரின் திரைக்கதையில் தோன்றியவாறு நிகழ்ந்தது.

ஆனால் சற்றும் பதட்டமடையாத தலைவர், தன்னை நம்பி வருபவர்களை மட்டும். இருகம்யூனிஸ்ட், காகாதேகா போன்ற கட்சிகளை மட்டும் அரவணைத்துக் கொண்டு தமிழகத்தின் பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்த இ.காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை எதிர்த்து தனியொருவனாக களத்தில் நிராயுதபாணியாக மக்கள் ஆதரவு
என்ற தேரில் ஏறி அமர்ந்து அதர்மத்தை அழிக்க சங்கொலி முழங்க களத்தில் முன்னேறி வரும் போது மற்றொரு பக்கம் தீயசக்தி தேர்தலுக்கு பின் அமையப்போகும் மந்திரி சபையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற
பட்டியலை தயாரிக்கும் அதிகார,சதிகார பணியில் இறங்கியிருந்தார்.

அத்தோடு நிற்கவில்லை. வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு பதவியேற்பு விழாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. புரட்சித்தலைவரோ
சூறாவளி சுற்றுப் பயணத்தில், நான் செய்த தவறென்ன? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்ப
மக்களோ மகராசா! உன்னிடம் ஏதும் குறை காணவில்லை. அதோ அந்த தவறான பொருந்தாத கூட்டணி மீதுதான் தவறு! என்று மனமேங்கிக் கொண்டு தர்ம தேவனுக்கு வாக்களிப்பது என்ற சங்கல்பத்தை
மேற்கொண்டு செல்லும் இடமெல்லாம் மலர்தூவி நின்றனர்
நம் காவிய நாயகனுக்கு. தேர்தல் வேளை வந்து விட்டது.

தம்முடன் அணி சேர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காகாதேகா ஆகிய சிறிய அணிகளுடன் பெரும் போரை நடத்தி எதிரிகளை முன்பைவிட பலமாக தாக்கி ஓட ஓட விரட்டி ஆட்சியை கைப்பற்றிய மாட்சி இருக்கிறதே அது சொல்லில் அடங்கா. இதே காட்சியை சிவாஜிக்கு நினைத்து பாருங்கள். ஆட்சி டிஸ்மிஸ் செய்தவுடன் "தில்லானா மோகனாம்பா"ளில் கத்திகுத்துக்கு உருண்ட மாதிரி இந்திரா அம்மையாரின் காலிலும் தீயசக்தியின் காலிலும் கதறி உருண்டு அழுதிருப்பார். புரட்சித்தலைவரின் வீரத்தையும், ஆற்றலையும் பார்த்தும் சில கோழைகளுக்கு வீரம் வரவில்லையே? என்ன செய்ய! கடவுள் வீரத்தை வாயிலேயே வைத்து விட்டான் வசனம் பேசுவதற்கு.

ஆனால் நம் தலைவரோ 'எதையும் தாங்கும் இதயம் கொண்டு' துரோகிகளை மக்கள் முன் நிறுத்தி தோலுரித்து காட்டி வெற்றி கண்டார். அந்தக் காட்சி "மந்திரி குமாரி"யில் கதாநாயகியை தூக்கிக் கொண்டு போர்புரியும் காட்சியை நினைவு படுத்தவில்லை? "மன்னாதி மன்னனி"ல் கட்டவிழ்த்து பாதபூஜை செய்யச் சொல்லும் போது கொதித்தெழுந்து சோழனின் குலப்பெண்ணையும் தூக்கிக் கொண்டு 'தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீரத்தின் உச்சியில் எக்காளமிட்டு ரதத்தில் ஏறி அனைவரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி விட்டு தாயகம் திரும்பும் காட்சி நிழாலாடுகிறதா?.

சினிமாவில் மட்டுமல்ல வீரம்? அரசு வித்தைகளிலும் அவர் காட்டும் வீரத்தை மறக்க முடியுமா? 'புறமுதுகு காட்டி ஓடியவர்களுக்கு' இதெல்லாம் புரியுமா என்ன? ஒரு தேர்தலில் தோற்றதற்கு புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியவர்களுக்கு புரியுமா வீரத்தின் விளையாட்டை?. மீண்டும் சதிகாரனோடு சேர்ந்து சபையில் சங்கமித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
அந்த தேர்தலில் தன்னை நம்பிய கம்யூனிஸ்ட்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியே இதுவாகத்தான் இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் 20 சீட்களில் வெற்றி பெற்றார்கள். குமரி அனந்தனின் காகாதேகாவோ 6 சீட் வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை முதலிலே புரட்சித் தலைவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. மதுரை மேற்கில் சுமார் 20000 ஓட்டுகள் அதிகம் பெற்ற வெற்றியடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவு நெஞ்சை விட்டகலா!. தீயசக்தி ஹண்டேயிடம்
வெற்றிக்கு அண்ணா நகரில் போராடி பின் தலைவரின் கடைக்கண் பார்வையால் வெற்றி கிடைத்த காட்சியை கண்டு தமிழகமே எள்ளி நகையாடியதும் மறக்க முடியாத காட்சி.

இந்திரா அம்மையாருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையோடு கை கோர்த்தது தவறு என்பதை உணர வைத்த அற்புதமான தேர்தல்.
புரட்சித்தலைவரின் புனிதப் போரில் அதிமுகவின் வெற்றியின் வீச்சு கூடியிருந்தது. தீயசக்திக்கு கணிசமான அளவு ஆதரவு குறைந்து காணப்பட்டது. அவருடைய ஆர்ப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

தீயசக்தியின் பதவி ஏற்புக்கு அடிக்கப்பட்ட 'வால்போஸ்டர்' என்ன கதி ஆனதோ தெரியவில்லை. இது போன்ற ஒரு வித்தியாசமான தேர்தலை மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். இது ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்..........shr...

orodizli
15th December 2020, 07:51 AM
எத்தனை முகம் காட்டினாலும் அந்த முகம் ஆசைமுகம் ஆஹா அது அவதார முகம் ! நம்மை என்றும் வாழ வைக்கும் முகராசி முகம் ! அ௫ள்த௫ம் வெற்றிமுகம்! எதிாிகளை விரட்டியடிக்கும் சிங்க முகம் ! அற்புதம் நடக்கும் என புரடாவிடும் கிறுக்கா்களை சறுக்கிவிடும் ஆவேச முகம் ! ஆா்ப்பாிக்கும் அழகு முகம் !���� ������������������������

எம்ஜிஆர் முகம்...
ஆசைமுகம்..
அவர் ராசி ..முகராசி...
அந்த முப்பிறவி...
தனிப்பிறவி...
அவரின் சத்யா தாய்..
தாய் சொல்லைத் தட்டாதவர்.
அவர் நாடு...நம்நாடு...
அவர் ஓட்டும் கார் வாகனம்
அதுவே ஜானகி அம்மாளின் காதல்வாகனம்.
அவர் தங்கம்..
ஆம் நமக்கு எங்கள் தங்கம்.

அவர் இளம்தலைமுறையினருக்கு தலைவன்.
அவர் கரங்கள் உழைக்கும் கரங்கள்.பொதுவாக
அவர் ஊருக்கு உழைப்பவன்(ர்)
அவர் விஜயகுமாரியை அடிக்கடி என் தங்கை என்பார்.அவர் புகழ்
இன்றுபோல் இன்றும் வாழ்க!
மேலும்... பல்லாண்டு வாழ்க!

எம்ஜிஆர் மன்னன். ஆம் மன்னாதி மன்னன்.அந்த தலைவர்(ன்)ஒரு குடும்பத்தலைவன்(ர்)

நம் தலைவர் வீட்டிற்கு செல்லும் பக்தர்களை ரசிகர்களை தொண்டர்களை என்றேனும் அவரில்லை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்களா? அவரைப் பார்க்கச் செல்லும் அனைவரும் வயிறார உண்டு தலைவரைப் பார்த்து ரசித்து பின் வீட்டிற்கு திரும்புவார் பார்த்து செல்லும் அனைவரையும் அழைத்து அன்பான முறையில் அனுசரித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று யோசித்து உதவி செய்யக்கூடிய மனிதன் நம் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்...gdr...

orodizli
15th December 2020, 07:52 AM
வேண்டாம்--விலகு!!
-------------------------------
உன்னைத் திட்டறவங்களுக்கு தான்ணா நீ உதவி செய்யறே/ அது உன் ராசி!
நினைத்ததை முடிப்பவன் படத்தில் சாரதா,,தன் அண்ணன் எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறுவார்!
வசனம் மட்டுமல்ல இது உண்மையான விசனம்!
எம்.ஜி.ஆரால் உயர்ந்தவர்கள் தான் பெருமளவில் அவரை உதாசீனம் செய்தும் இருக்கிறார்கள்!
அந்த வகையில்--
எம்.ஜி.ஆரை இழிவு படுத்தி,,அந்த விளம்பரத்தில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்!
காலச் சக்கரம் கடந்து வந்த பாதையை நோக்கினால் இத்தகையோர் நிறைய பேர்களைப் பார்க்கலாம்!
தற்போதோ--கேட்கவே வேண்டாம்|
ஆலங்குடி வெள்ளைச்சாமி!!
சொற் பொழிவாளராம் சொல்லிக் கொள்கிறார்
அறிஞராம்! அலட்டிக் கொள்கிறார்!
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!
குறிக் கோளிலும்,,,கொள்கையிலும் குறைபாடு இருக்கக் கூடாதல்லவா?
யு--டியூப் சேனலில்,,அடுக்கடுக்காக எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி வருகிறார்--
உற்று கவனித்தால் அதில் எம்.ஜி.ஆரை விகாரமாக சித்தரிப்பது புலனாகும்!
சினிமா,,பொது வாழ்வில் இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் எம்.ஜி.ஆரை கேவலப் படுத்தும் இவரது கற்பனை நிகழ்வுகளில் இன்று நாம் பார்க்கப் போகும் விஷயம் அவதூறின் உச்சம் மட்டுமல்ல,,பயங்கரத்தின் உச்சமும் கூட!
எம்.ஆர் ராதா,,எம்.ஜி.ஆரை சுட்டதற்கு அவர் கூறும் காரணம்--இதோ---
காமராஜர்,,,அன்றைய தி.மு.கவுக்கு எதிராகப் போட்டியிடும்போது,,,ராமசாமி நாயக்கர்,,காமராஜரை ஆதரிக்க--
அவர்கள் தேர்தலில் ஜெயித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக---
எம்.ஜி.ஆர்,,காமராஜரைக் கொல்ல முடிவு செய்தாராம்???
தன் நண்பர்கள் சிலரிடம் தம் பயங்கர திட்டத்தை எம்.ஜி.ஆர் தெரிவித்தாராம்??
அன்றைய பத்திரிகைகள் இரண்டொன்றில் கூட இது வெளி வந்திருந்ததாம்
நாயக்கரின் நெருங்கிய நண்பரான எம்.ஆர்.ராதா இதனால் ஆத்திரமுற்று,,எம்.ஜி.ஆரைக் கொல்லப் போவதாக நாயக்கரிடம் தெரிவித்தாராம்
நாயக்கர் தடுத்தும்,,ராதா,,ஆத்திரம் அடங்காமல்--
எம்.ஜி.ஆரை டுமீலாம்??
லட்சக் கணக்கானோர் பார்வையிடும் யு-டியூப் சேனலில் இப்படிப்பட்ட விஷத்தைக் கக்கியிருக்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி!!
தம்மை அறிஞராகப் பிரகடனப் படுத்திக் கொள்ளும் அந்த பிரகஸ்பதிக்கு வரலாறு தெரியுமோ தெரியாதோ--
காமராஜர் என் தலைவர்
அண்ணா என் வழிக்காட்டி என்று பொது மேடையில் சொன்னவர் எம்.ஜி.ஆர்!
அதனாலேயே என் கடமை உட்பட அவரது இரண்டொரு படங்கள் வசூலில் பாதிக்கப்பட்டன என்பதை நாமறிவோம்
இந்திய சீன யுத்தத்தின் போது இந்தியாவிலேயே முதல் நபராக நிதி கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என்பதும்,,அதுவும் அந்த நிதியை அவர் காமராஜரிடம் தான் கொடுத்தார் என்பதையும் இந்த வெள்ளைச்சாமி அறிவாரா?
காமராஜர் மீதான தோல்வி பயமா??
1972--இல் சிண்டிகேட் காமராஜர்,,இந்திரா தலைமையிலான காங்கிரஸ்,,அன்றைய ஆளுங்கட்சி தி.மு.க இவற்றையெல்லாம் ஒற்றை ஆளாய் எதிர்த்து நின்று வெற்றியை ஈட்டிய எம்.ஜி.ஆருக்குக் காமராஜர் மீது பயம் இருந்ததாம்??
இத்தனைக்கும் எம்.ஜி.ஆர்,,கட்சி துவக்கியப் புதிது
கேட்பதற்கு நமக்கு வேடிக்கையாய் இருந்தாலும்--
சொல்வதற்கு அவருக்கு வெட்கமாயில்லை??
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலிருக்கும் காங்கிரஸ் இன்று காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றுக் கூவிக் கொண்டு திரிகிறது
அன்று இவர்களின் முதலாளியம்மா இந்திரா தான் செய் நன்றி மறந்து காமராஜரை ஓரங்கட்டியது!
இன்று வெள்ளைச்சாமி என்னும் புளுகு மூட்டைக்--
கோயபல்ஸ் புதிதாகக் கண்டு பிடிக்கும்
கொலம்பஸ் கணக்காக அள்ளி வீசுகிறார்_-
எம்.ஜி.ஆர்,,காமராஜரைக் கொல்ல முடிவு செய்தார் என்று??
வெள்ளைச் சாமி!
பெயரில் மட்டும் வெள்ளை இருந்தால் போதாது
உள்ளத்திலும் கொஞ்சமாவது இருத்தல் வேண்டும்!!
உணருங்கள்!--இல்லையேல்
உணர்த்தப்படுவீர்கள்!!!.........vtr...

orodizli
15th December 2020, 07:52 AM
1977 இல் நம் தங்கதலைவர் பொது தேர்தலில் தனி இயக்கம் கண்டு போட்டியிட்ட வரலாற்று தருணம்..

4 முனை போட்டி அந்த தேர்தலில்...வரலாற்று நாயகன் தமிழகம் எங்கும் ஒற்றை படை தலைவனாய் தளபதியாக சுற்றி சுழன்று தன் இறுதி கட்ட பிரச்சாரத்தை அருப்புக்கோட்டை தொகுதியில் நிறைவு செய்யும் நாள் அன்று.

அரைக்கால் ட்ரவுசர்கள் விசில் அடித்த குஞ்சுகளை நம்பி அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் இவர் இயக்கம் எங்கே வெற்றி பெற போகிறது என்று ஒரு செல்வந்தர் தான் போட்டி இடும் தொகுதியில் படுவேகமாக தலைவரை பேசி கொண்டு இருந்தார்.

அருப்புக்கோட்டை கூட்டம் பேசி முடித்து இன்னும் பிரச்சாரம் ஓய மாலை 4 தாண்டி நேரம் இருக்க..

தலைவர் கழக தோழர்களை அழைத்து இன்னும் ஒரு கூட்டம் பேசிவிடுகிறேன் எங்கே போகலாம் என்று கேட்க.

அவர்கள் அண்ணே காரைக்குடி நகரில் அழகப்பா திடலில் பேசலாம் என்று சொல்ல ...வேண்டாம் சாக்கோட்டை ஒன்றிய அலுவலகம் அருகில் பேசுகிறேன் என்று மாமன்னர் சொல்ல.

அங்கே புரட்சிதலைவர் வருகிறார் என்றவுடன் கட்டு கடங்காத மக்கள் வெள்ளம்.. பிரச்சார வாகனம் அங்கே வர மணி 4.15 தாண்டி விட தலைவர் தேர்தல் விதி முறைகள் படி பேச முடியாத நிலை.

தலைவர் சற்றும் யோசிக்காமல் கூட்டத்தில் இருந்து ஒரு மிக சாதாரணம் ஆக அழுக்கு லுங்கி கிழிந்த சட்டை மெலிந்த தேகம் கொண்ட ஒருவரை தன் அருகில் அழைத்து கூட்டத்தில் அவரை காட்டி..

அவர் நெஞ்சில் கை வைத்து... இவரின் மன சாட்சியாக நான் நடப்பேன் என்று சைகையில் சொல்ல புரிந்து கொண்ட மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்து கொண்டாட..

தேர்தல் முடிவுகள் எண்ண படும் அந்த நாளில் பலம் பணம் சமுதாய அந்தஸ்து உடைய அந்த செல்வ சீமான் மற்ற வாக்கு சாவடிகளில் தலைவர் சின்னத்தை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணி நிலையில் வர..

சாதாரண தொண்டன் அந்த தொகுதியில் போட்டி இட்ட காளியப்பன் என்பவரின் பூத் ஏஜெண்டுகள் சோகத்தில் மூழ்க.

அடுத்த ஒரு சுற்று மட்டும் எண்ண பட வேண்டிய நிலையில் தலைவர் தன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு சைகையில் பேசிய சாக்கோட்டை ஒன்றியம் உட்பட்ட வாக்குகள் எண்ண பட ஆரம்பிக்க பட..

16 செல்லாத வாக்குகள் தவிர எண்ணி முடிக்க பட்ட அந்த சுற்றில் மட்டும் செல்வாசீமான் வாக்குகளை விட ஏழை தொண்டன் காளி அப்பன் சுமார் 420 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற அந்த நிகழ்வை நினைத்தால் இன்றும் புல்லரிக்கும்..

புரட்சிதலைவர் செல்வாக்கை எண்ணி மனம் பத பதைக்கும் என்றும்...

தீயசக்தி கட்சி மூன்றாம் இடம் பெற்று படுதோல்வி அந்த தொகுதியில் அடைய இரண்டாம் இடத்தில் வந்து வெற்றி வாய்ப்பை இழந்த ..

ப..சிதம்பரம் அவர்களுக்கு அன்று தலைவர் மீது ஏற்பட்ட கோவம்........

நன்றி ..வாழ்க தலைவர் புகழ்..

உங்களின் உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் உங்களில் ஒருவன் நெல்லை மணி...

கழுத்துக்கு மேலே தலை இருக்கும் எல்லோரும் தலைவர் ஆகி விட முடியாது.

கட்சிகள் ஆரம்பிக்கும் சில பல நடிகர்கள் எங்கள் எம்ஜிஆர் போல வர முடியாது....நன்றி..........

orodizli
15th December 2020, 07:53 AM
#மீனவர் #பிரச்சனைகளை #அன்றே #கையிலெடுத்த #எம்ஜிஆர்

#தெரிந்த #விஷயமென்றாலும்

படகோட்டி படத்தில் அறிமுகப்பாடல் காட்சி கடலோடிகளின் துன்பத்தை பறை சாற்றுவதாக அமைந்திருக்கும்.

“தலைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

பாடல்...
தற்கால துயரத்தை வெளிப்படுத்தும் அந்தப்படம் ...

முழுக்க முழுக்க படகோட்டிகளுக்கு அவர்கள் மீனுக்கு நல்ல விலை கிடைக்கவும் வந்து கந்து வட்டிக்காரர் கொடுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயனடையவும் உழைக்கும் மாணிக்கமாக பாத்திரம் ஏற்று நடித்திருப்பார்...

படம் நெடுக படக்கோட்டிகளின் அவலமும் பாடுகளும் அவநம்பிக்கையும் தொடரும் ...

இறுதியில் இரண்டு மீனவ குப்பங்களும் ஒன்று பட்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று தனிநபர் கொடுமையிலிருந்து விடுபடும்...என்பது போல மிக அற்புதமாக...
பாசிடிவ் ஆக காட்சியமைத்திருப்பார்...

ஆத்மார்த்தமாக இந்த எண்ணங்கள் பொன்மனச்செம்மலின் ஆழ்மனதில் இருந்ததால் காட்சியிலும் வெளிவந்தது....bsm...

orodizli
15th December 2020, 07:54 AM
இது நிஜமா??
-----------------------
அது 1945.
எம்.ஜி.ராமச்சந்தர் என்ற பெயரில்---எம்.ஜி.ஆர்--
மின்னல் போல் எப்போதோ ஒரு முறை வருமானமும்,
பின்னல் போல் இன்னல் என்னும் பெறுமானமும் கண்டு,வாழ்வில் உழன்று கொண்டும் அதே சமயம் நம்பிக்கையோடு சுழன்று கொண்டும் காலத்தோடு போராடிக் கொண்டிருந்த காலம்!!

வி.கே ராமசாமி நடத்தி வந்த நாடகத்துக்கு தினமும் மாலையில் ஆஜர் ஆகிவிடுவாராம் எம்.ஜி.ஆர்!!
ஒரு நாள் வி.கே ஆரைக் காணமுடியவில்லை எம்.ஜி.ஆரால்??
மறு நாள் வி.கே ஆரிடம் காரணம் கேட்கிறார் செம்மல்!

சென்னையை சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன். எல்லா இடங்களையும் பார்த்தேன் கோட்டையை மட்டும் பார்க்க முடியலே??

சுத்தி போலீஸ்காரங்க நிக்கறாங்க--சுட்டுப் புடுவாங்களாம்?? அதனால அதை மட்டும் பார்க்க முடியலே--வருத்தத்தோடு மிகுந்த வருத்தத்தோடு சொன்ன வி.கே ஆரை சமாதானம் செய்கிறார் எம்.ஜி.ஆர்!!
விடுங்க!!

அது என்ன? விண்ணில் இருக்கும் வினோதப் பொருளா?? பார்க்க முடியாமல் போவதற்கு???

அது 1977!!
எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டு முதல்வராகிறார்!!
ஒரு நாள் அவரை வாழ்த்த அவர் தோட்டத்துக்கு சென்ற வி.கே.ஆரை அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்த எம்.ஜி.ஆர்,,,,,,தன் காரில் அவரை ஏறிக் கொள்ளச் சொல்லி ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறார்??

அங்கே,,முதல்வர் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த மரியாதை யாவும்
வி.கே ஆருக்கும் கிடைக்கிறது!!
அந்த இடத்தை இடுக்கு விடாமல் பார்த்து வரச் சொல்லி,,,மிடுக்கு இல்லாமல் வேண்டுகிறார் வி.கே.ஆரை!!

சுற்றிப் பார்த்து விட்டு வந்த வி.கே.ஆர்--நா தழுதழுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார்??
அன்னிக்கு என் நாடகத்துக்கான மரியாதை இன்னிக்குத் தான் எனக்குக் கிடைச்சுது??

அது தான்---அந்த காலத்தில் அவர் பார்க்க விரும்பிய-
செயின்ட் ஜார்ஜ் கோட்டை???
கண்ணதாசன் ஒரு பாடலில் இப்படி எழுதியிருக்கிறார்- காலம் நம்மைப் பார்த்துக் கண்ணடித்தால்
பதவி வரும்!!--அதுவே
மெதுவாக ஜாடை செய்தால்
சிறையும் வரும்???--ஆனால் இங்கே--
காலத்தையும் வென்று தன் தன்னம்பிக்கையால் கோட்டையைப் பிடித்தும்--தன் அபாரமான நினைவாற்றலால்,

32 ஆண்டுகள் கழிந்தும் --
வி.கே ஆரின் விருப்பத்தை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர்???
அன்று வி.கே ராமசாமிக்கு மட்டுமா புல்லரித்திருக்கும்?? ---
பதிவைப் படிக்கும் நமக்கும் தானே?????

மகிழ்ச்சி நிறைந்த
இனிய வணக்கம்.......... Nm...

orodizli
15th December 2020, 10:07 AM
தொடர் பதிவு. உ...த்தமன் பதிவு- 1
-----------------------------------------------------

இதுவரை நாம் கைபிள்ளைகளின் வடக்கயிற்றின் ஆற்றலை பார்த்தோம். ஆனால் ஒரே பதிவில் அவர்களின் திறமையை விளக்கமுடியவில்லை என்பதால் "உ...த்தமனி"ன் தூத்துக்குடி வடக்கயிறு இழுவை மேட்டரை பற்றி தொடராக எழுதுகிறேன். அத்தனையும் உண்மை. பொழுதுபோக்காக கொஞ்சம் காமெடி கலந்து சொல்கிறேன்.

சென்ற பதிவில் "உ......த்தமனி"ன் அகில உலக சாதனையை பார்த்தோம். அப்படியானால் தூத்துக்குடியில் உ....த்தமனின் சாதனை என்ன? தூத்துக்குடி கைஸ் விளக்குவார்களா? இல்லை நான் விளக்கட்டுமா?. அய்யனின் கைஸ் "சிவந்தமண்ணு"க்கு பிறகு வெகுவாக எதிர்பார்த்த படம் "உ....த்தமன்தா"ன்.
"எங்கள் தங்க ராஜா" கொடுத்த உற்சாகத்தில் "உ...த்தமனை" ரொம்ப நம்பியிருந்தார்கள். ஆனால் சரியாக விளக்காததால் அவன் "ஊத்தமன்" ஆகி விட்டான்.

ஹிந்தியில் இயல் நடிப்பால் பெரிய ஹிட் அடித்த படமெல்லாம் இங்கு அய்யனின் மிகை நடிப்பால் பணால் ஆவது வழக்கம்தானே. ஆனாலும் கைஸ் எடுத்த காரியத்தை முடிக்க கையில் போர் தளவாடங்களுடன் (வடக்கயிறு ஸ்டெச்சர் சகிதம்) கிளம்பி விட்டார்கள். கைஸ் கையில் ஆயுதங்களுடன் கிளம்பி விட்டார்கள் என்றவுடன் தூத்துக்குடி இனி இழுவை பூமிதான் என்று நினைத்தவர்களும் உண்டு.

இதில் ஒரு சில கைஸ் சபாரி அணிந்து கொண்டு பெரிய ஆபிஸர் போல் லுக் கொடுத்துக் கொண்டு தியேட்டரை சுற்றி அலைந்தவுடன் காரனேஷன் தியேட்டரை சுற்றி பரபரப்பு தொற்றிக் கொண்டது. அய்யனுக்கு அன்புப் பரிசாக கைஸ் ஒரு 105 நாள் படத்தை உருவாக்கி தருவார்கள் என்ற எண்ணத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த முறை 105 நாட்களோடு 100 தொடர்hf போட வேண்டும் என்ற ஆசையும் கைஸ்களுக்கு உருவாகி விட்டது. பெரிய ஊர்களிலெல்லாம் 100 hf போடுவது பார்த்து எங்க ஊர் கைஸ்களுக்கு பேராசை வந்து விட்டது. நிற்க.

அதற்குமுன் தூத்துக்குடி காரனேஷன் தியேட்டரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் அமைந்த ஒரு பழமையான தியேட்டர்தான் காரனேஷன். இங்கு இன்னொரு தியேட்டர் ஜோஸப் என்ற பெயரில் இவர்களின் சகோதரர் தியேட்டர் ஒன்று உண்டு. இவற்றின் அதிபர்தான் கர்டோஸா சகோதரர்கள். காரனேஷனை பொறுத்தவரை மார்க்கெட் பகுதி என்பதால் எந்த நேரமும் மக்கள் போக்குவரத்து சற்று அதிகமாக இருக்கும்.

இங்கு பொதுவாக திரையிடும் திரைப்படங்களுக்கு சராசரி கூட்டம் வந்து விடும் என்பதால் பெரிய படங்களை இவர்கள் திரையிடுவது கிடையாது. அதிகமாக பிற நடிகர்கள் நடித்த படம்தான் அதிகமாக திரையிடப்படும். ஏனென்றால் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பார்ப்பார்கள். எந்த படத்தை வெளியிட்டாலும் அதிகபட்சம் 2 வாரம்தான். மூன்றாவது வாரத்தில் புதிய அல்லது பழைய படங்களை விநியோகஸ்தர்களுக்கே தெரியாமல் கூட திரையிட்டு விடுவார்கள்.

அதிகமாக எம்ஜிஆரின் பழைய படங்களை திரையிட்டவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
"ஆயிரத்தில் ஒருவன்" "நாடோடி மன்னன்' "புதுமைப்பித்தன்" "மன்னாதி மன்னன்" தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா "பெரிய இடத்துப் பெண்"
"பணக்கார குடும்பம்" போன்ற படங்களின் வருகை 6 மாதங்களுக்கு ஒரு முறை இருக்கும். புது படங்களை காட்டிலும் எம்ஜிஆரின் பழைய படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூலை ஈட்டுவதால் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

அவர்கள் வசூல் கணக்கு எல்லாம் ரூ7000 லிருந்து ரூ10000 க்குள்தான் இருக்கும். படப்பெட்டியின் விலை ரூ3000 தான் இருக்கும். பழைய கட்டான பிரிண்ட் தான் அதிகம் வெளியிடுவார்கள். புதிய பிரிண்ட் என்றால் ரூ 5000 வரை கேட்பார்கள் என்பதால் கிடைத்த பிரிண்ட்டை போட்டு காசை அள்ள பார்ப்பார்கள்.

தொடர்ந்து வரும்..........ksr.........

orodizli
16th December 2020, 09:50 AM
எம்.ஜி.ஆர்.சமாதி - டிக்.. டிக்..டிக்

எம்.ஜி.ஆர் The Man we called GOD - புரட்சித்தலைவர் பாரதரத்னா பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர் #MGR அவர்கள் சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.#MGR #merina .

நடிகராகவும்,சிறந்த அரசியல் தலைவராகவும் எம்.ஜி.ஆர் தமிழகத்தில் அறியப்பட்டாலும்,அவருடைய வள்ளல் தன்மையும்,எளிய மக்களுடன் பழகும் மனப்பாங்கும்தான் தற்போது வரை அவரை நம் நினைவில் நிறுத்தியுள்ளது.எம்.ஜி.ஆரிம் வள்ளல் தன்மையை பார்த்த அருட்திரு.கிருபானந்த வாரியர்தான்,அவருக்கு ‘பொன் மனச் செம்மல்’ என்ற பட்டத்தை கொடுத்தவர்.அதற்கேற்றார் தன் கையில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுத்து,கொடுத்தே சிவந்த கரம் அவருடையது.

சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவதற்கு முன்னால் கூட,அவரின் வள்ளல் பண்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.குறிப்பாக அந்த காலத்தில் ஓரளவுக்கு பெரிய பணமாக பார்க்கப்படும் பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை தனது கை சட்டையின் மடிப்பில் எம்.ஜி.ஆர் வைத்துக் கொள்வாராம்.எளியவர்கள்,ஏழைகள் யாரையாவது அவர் பார்த்துவிட்டால்,உடனடியாக பத்து ரூபாய் தாள்களில் ஒன்றை கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம்.

தனது வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர் எவ்வளவோ பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார்.ஆனால் அது குறித்து அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.அப்படி ஒரு வேளை அவர் உதவி செய்த நபர்களை கணக்கில் கொண்டால்,அது பல்லாயிரத்தை தாண்டும் என்கின்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தமிழக முதல்வராக 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அதிகாலையில் மரணமடைந்த எம்.ஜி.ஆர். மறுநாள் (டிச.25) மாலையில் மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டார். அவரது வழக்கமான அடையாளமான தொப்பி -கறுப்புக்கண்ணாடி, வலதுகையில் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்துடன்தான் புதைக்கப் பட்டார்.

மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. குறிப்பாக ஏழை எளிய மக்கள், கிராமப்புறங் களில் இருந்து சென்னைக்கு வருபவர்களிடையே இந்த நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. சமாதியில் காதை வைத்து கேட்டு விட்டு ஆமா... எனக்கு கடிகாரம் ஓடுற சத்தம் கேட்டது என்று ஒருவர் கூறியதும், பெரும் பாலானோரும் அதே கருத்தையே பிரதிபலிக்கும் நிலையையே எம்.ஜி.ஆர். சமாதியில் காண முடிகிறது.

அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள் என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் அவர்களை கடவுளாகவே பார்க்கும் ஏழை எளியோரின் நம்பிக்கை இது, அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம்..........Dev..........

orodizli
16th December 2020, 09:51 AM
நம் இதயதெய்வம் முதல்வர் ஆன பின் ஒரு இந்திய பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டி கொடுத்து இருந்தார் அதில் ஒரு சிறந்த பதில்...

கேள்வி...

கருணாநிதி அவர்கள் ஒரு முன்னாள் முதல்வர் சிறந்த வசன கர்த்தா மற்றும் படைப்பாளி....அவரை நீங்கள் சந்தித்த முதல் களத்திலேயே எப்படி உங்களால அவரை வெல்ல முடிந்தது?

தலைவர் பதில்....
அவருக்கு நீங்கள் குறிப்பிட்ட அனைத்து திறமைகளையும் நான் நன்கு அறிவேன்..

அவர் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்றால் நான் அதை உணர்ந்து நடித்து கொண்டு இருந்த நடிகர்..

காட்சிகளில் அவர் எங்கு எங்கு ட்விஸ்ட் அதாவது திருப்பங்கள் வைப்பார் என்று நான் நன்கு உணர்ந்தவன்

அவரை போல பல கதாசிரியர்களை சந்தித்தவன் நான் என்பதை ஏனோ அவர் மறந்து விட்டார்...அதனால் ஏற்பட்ட சம்பவங்களே பின்னால் நடந்தவை என்றார்.

ஆங்கில பத்திரிகை நிருபர் வியப்பில் ஆழ்ந்து விட்டார்... அடுத்த கேள்வி கேட்க அவருக்கு சில நிமிடங்கள் ஆகிவிட்டன

அதுதான் நம்ம தலைவர்..... வாழ்க அவர் என்றும்...நன்றி.

உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்....

orodizli
16th December 2020, 09:52 AM
#கண்ணியவானா

நடிகை விஜயகுமாரியை
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக்க பலர் , பலமுறை முயச்சித்தபோதும் திட்டவட்டமாக முடியாது என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

தங்கையாக நடிக்க மட்டுமே சம்மதித்திருக்கிறார் . நடித்தும்
இருக்கிறார் .

இதை விஜயகுமாரியும் உறுதிச்
செய்திருக்கிறார்.

தன் நண்பன் , தன் இயக்கத் தோழன்
எஸ்.எஸ்.ஆருடைய மனைவி என்ற ஒரே
காரணத்திற்காக விஜயகுமாரியோடு
ஜோடியாக நடிக்க மறுத்தவர் புரட்சித்
தலைவா் .

ஆனால் , ரஜினியோ நண்பனின்
மனைவியுடன் அல்ல , நண்பனின்
மகளுடனே ஜோடி சேர்ந்து நட்புக்கும்
மூப்புக்கும் ஒவ்வாத அடையாளத்தைச்
செய்தார் .

‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக
நடித்தவர் சோனாக்சி சின்ஹா , சத்ருகன்
சின்ஹா – நடிகை பூனம் தம்பதியரின்
மகள் .

ஆனாலும் நம் வருங்கால முதல்வர் (!) ,
ஆமாம் ரஜினி எந்த மேடையில்
ஏறினாலும் , நமது பண்பாடு ,
கண்ணியம் என்று பேசத் தவறியதே
இல்லை .

அவரின் பண்பாடு சார்ந்த மேடை
வசனங்களுக்கு விசிலடித்துக் கை
தட்டுபவர்கள் இதனை ஒருபோதும்
கருத்தில் கொள்வதில்லை .....sk...
.

orodizli
16th December 2020, 09:53 AM
எம் ஜி ஆர் உருவாகணும் இயற்க்கையாக

எம் ஜி ஆரை உருவாக்க முடியாது சேர்க்கையாக

நடிப்பவர் எல்லாம் எம் ஜி ஆர் அல்ல

எம் ஜி ஆரிம் வள்ளல் குணம் இயற்க்கையிலே இருந்தது

மனிதநேயம் பிறவியிலே இருந்தது

கருணனை மனம் கூடபிறந்தது
எம் ஜி ஆரோடு

திறமை பிறப்பிலே பதிந்திருந்தது

துணிவு ரத்ததிலே எம் ஜி ஆரிடம் இருந்தது

வீரம் என்றும் எதிலும் வெல்லும் அளவுக்கு இந்தது எம் ஜி ஆரிடம்

சுயநலம் என்றும் இல்லாதிருந்தது எம் ஜி ஆரிடம்

சொத்து சுகம் தன் குடும்பத்தார்க்கு மட்டும் என்று எண்ணாத மனம் எம் ஜி ஆருக்கு இந்தது

தன் உடமைகள் எல்லாம் மக்களுக்கே என கொடுக்கும் பொன்மனம் எம் ஜி ஆரிடம் இருந்தது

பாமரை தமிழரை கயவர் துன்புறித்த போதும் தமிழரை இலங்கை படை தாக்கிய போது காக்கும் வீரமனம் எம் ஜி ஆரிடம் இருந்தது

இது போல் சகலகலாவல்லவனாக நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவராக ஏழைகளின் ஒளிவிளக்காக மின்னியதாலே தமிழ் மக்கள் எம் ஜி ஆரை தன் தலைவராக தன் முதல்வராக தங்கள் காவல் தெய்வமாக கொண்டனர்

ஆனால் இன்று
தமிழ் மக்களை சினிமா பைத்தியமா நினைத்து தமிழ் திரையில் நடித்து பல கோடிகளை சேர்த்து அதை தமிழர்களுக்கு எதற்க்கும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் சுயநலமாக தன் மாநிலத்தில் சொத்துக்களை முதலீடு செய்து சுகவாழ்வு வாழ்தந்து விட்டு வயதாகி பொழுது போக்க என்பது போல் தமிழர் அரசியலில் இறங்கி பதவி அடைய துடிப்பதும் அதை ஒர் கும்பல் ஆதரிப்பதும் வடிகட்டிய சுயநலம் ஆன்மீகம் மதம் என்று மக்களை குழப்பி தன் தோல்வியை மக்கள் தோல்வி என மக்களை கேவைபடுத்தி நடக்கும் அரசியலை மக்கள் தக்க நேரத்தில் நல்ல பாடம் புகட்டி உணர்த்துவார்கள் தமிழன் சினிமா பைத்தியம் அல்ல என்று

நடிப்பவன் எல்லாம் நாடாளமுடியாது...
எம். ஜி .ஆர் ., பொன்மனத்தோடு நடப்பவன் தான் நாடாளமுடியும்...

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........arm...

orodizli
16th December 2020, 09:56 AM
# எல்லோருக்கும் வணக்கம்,

பதிவுகள் போட கொஞ்சம் தாமதமாகி விட்டது, காரணம் ஒரு மாதம் கூடுதலாக இடை விடாத பணிச் சுமை,
அதனால் தலைவரின்
புகழ் பாட முடியாமல் தவித்துப் போய் விட்டேன்,

இனி தொடர்ந்து பதிவுகள் போட முயற்சிக்கிறேன்,


#என்னதான் பணிச் சுமை இருந்தாலும் நம்ம கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு பதிவையும், சென்னை "நகைச்சுவை மணி " போண்டா மணி பதிவையும் படிக்க தவறுவதில்லை, காரணம் எவ்வளவு தான் உடல் மனம் இரண்டும் கஷ்டப்பட்டாலும் இவர்கள் இருவரின் பதிவுகளைப் பார்த்ததும் குபீர் என்று சிரிப்பும் வந்து விடும் கூடவே நம் உடல் வேதனையும் பறந்து விடும்,

அந்த அளவுக்கு சென்ஸ் ஆப் ஹியூமர் இரண்டு பேருக்கும் அதிகம், அதுவும் யார் அதிகமாக பிறரை சிரிக்க வைப்பது என்னும் போட்டியில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை ( ஏங்க நம்பலியா? சத்தியமாங்க)

உதாரணத்துக்கு நம்ம " போண்டா மணி " போட்டிருக்கும் ஒரு பதிவை பாருங்கள்

அதை படித்த பிறகாவது நான் சொல்றது சரிதான்னு
கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,

சரி பதிவுக்கு போவோமா !

" வரும் 2020" சட்ட மன்ற தேர்தலுக்காக
எல்லா அரசியல் கட்சி களும் போட்டி போட்டுக் கொண்டு யார் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதில் தொடங்கி மக்களைக் கவர என்ன செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்,

போதாக் குறைக்கு இரண்டு மூன்று நாளைக்கு முன்பு 70 ஆவது பிறந்தநாள்? ( நம்பித் தொலைப்போம் ) கொண்டாடிய பெரிய தாத்தா வேறு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து தமிழ் நாட்டை சிங்கப்பூர் லெவலுக்கு கொண்டு வராமல் ஓய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு
ஹைதெராபாத்தில் தமிழ் மக்களுக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு உயிரே போனாலும் பரவாயில்லை என்று நடித்துக்கொண்டிருக்கிறார், ( இந்த ஒண்ணுக்காகவாவது இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி அவர் நடிச்சு முடிஞ்சதும் முதலமைச்சர் நாற்காலியில் தமிழக மக்கள் உட்கார வைத்து விட மாட்டார்களா என்ன? )

இன்னொரு பக்கம் பார்த்தால் " அம்மா மினி கிளினிக் " திட்டத்தை தொடங்கி வைத்து நம்ம எடப்பாடியார் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்,

இன்னொரு பக்கம் அய்யா ஸ்டாலின் அவர் மகன் உதயநிதி யுடன் சேர்ந்து பழைய
"நமக்கு நாமே " மாதிரி " தமிழகத்தை" மீட்டெடுக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைத்து களம் இறங்கியிருக்கிறார்,

நம்ம "மக்கள் நீதி மய்யம் " கமல் அய்யா வுக்கு "பேட்டரி லைட் "
சின்னம் கிடைக்கலயாம்,

அவர் வேற என்னை விஸ்வரூபம் எடுக்க வைத்து விடாதீர்கள் என்று கொதித்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்( ஒரு வேளை தலைவர்
"காவல்காரன் " படத்தில் டார்ச் லைட்டுடன் சுரங்கப் பாதைக்குள் ஸ்டைலா வருவாரே
அந்த ஸ்டில்லைப் போட்டு ஓட்டு கேட்க முடியாதோ என்று வருத்தப் படுறார் போல)

இப்படி ஆளாளுக்கு ஆலாப் பறந்து கொண்டிருக்க , அட ஏன்யா இப்படி பறக்குறிய உங்களுக்கெல்லாம் நான் ஒரு சுலபமான வழி சொல்லித் தாரேன் அதை மட்டும் செய்யுங்க வர்ற தேர்தல்ல நீங்கதான் முதலமைச்சர் என்று சொல்லி ஒரு வழியையும் சொல்லியிருக்கிறார்,

அது வேற ஒண்ணும் இல்லீங்க சென்னை கடற்கரையில் இருந்து புடுங்கி எடுத்து மணிமண்டபத்தில்(? )
வைத்துள்ள கணேசன் சிலையை யார் பழையபடி கடற்கரையில் கொண்டு வைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போவது நிச்சயம் என்று நம் "போண்டா மணி " அவர்கள் ஒரு அருமையான கருத்தை சொல்லி பதிவு போட்டிருக்கிறார் ( இந்த ரகசியத்தை கண்டிப்பாக அனைத்து கட்சிகளும் செயல் படுத்துவார்கள் என்று நம்புவோம்,

என்ன ஒரே ஒரு சிக்கல் எல்லா கட்சிகளும் இந்த ஒற்றை வாக்குறுதியை கொடுக்கும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும் அது ஒன்றுதான் பெரிய சிக்கலாக இருக்கப் போகிறது,

யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும், ( அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவேன் என்ற ஒரே ஒரு வாக்குறுதி கொடுத்ததன் மூலம்தான் ஒரு சதவிகித வாக்குகள் கூடக் கிடைத்து ஜெயலலிதா ஆட்சியை பிடித்தாராம்,

எனவே அரசியல் கட்சிகள் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்

( நம்ம " போண்டா மணி " நல்லா காமெடி பண்ணுவாப்பல என்று நான் சொன்னதற்கு சில பேர் நம்பியிருக்க மாட்டீர்கள், இப்போ என்ன சொல்றீங்க? )


சரி அடுத்தது நம்ம கனடா தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி க்கு வருவோம் ( பாவம் ராத்திரியெல்லாம் கொட்டக் கொட்ட முழிச்சி முன்னர் இலங்கையில் இருந்த போது தானே
நடத்தி வந்து நாலு பேர் கூட படிக்காத " சிம்மக் குரல் " என்னும் எவரும் சீந்தாக்குரல் நிறைய ஸ்டாக் இருக்கும் போல ,

அதில் தான் முன்பு எழுதிய பொய் பித்தலாட்டங்களை இப்போதும் பெரிய எழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு தினசரி இருக்கும் நாலைந்து வட்டுகளுக்கு கடை பரப்பி சாந்தி அடைய முயற்சிக்கும் தங்கவேலுவே உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்,

சரி விஷயத்துக்கு வருவோம்

" பாபு " படம் தலைவரின் " நீரும் நெருப்பும் " படத்தை வென்றதாம்

சரி "பாபு " படத்தின் தமிழ் நாடு முழுக்க உள்ள வசூல் விபரத்தை வெளியிடு பார்ப்போம்,

எத்தனை அரங்கில் 50 நாள் ஓடியது, எத்தனை அரங்கில் 100 நாள் ஓடியது?
B & C யில் அதன் ஓடிய விபரங்கள் என்ன? வசூல் என்ன?

வெளியிட முடியுமா புளுகுண்ணி தங்க வேலு?

A சென்டர் என்று சொல்லப் படும் நகரங்களில் ஒன்றிரெண்டை தவிர வேறு எங்கு "பாபு " ஓடியது?

B& C சென்டர்களில் ஒரு வாரம், இரண்டு வாரம் கூட ஓடாத ஒரு படத்தை வெற்றிப்படம் என்று சொல்லி நீ மட்டும்தான் சொறிந்து கொள்ள வேண்டும், கூடவே போண்டாவையும் கூப்டுக்க,

உனக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லையா? இப்படி பொய்யா புளுகித் தள்ளுற?

உங்கள் குத்தகை அரங்கங்களிலும் சொந்த அரங்கிலும் 100 நாள் ஓட்டி விட்டால் வெற்றிப்படம் ஆகி விடுமா? ( சென்னையில் மட்டும் வசூல் வேற பத்து லட்சம் என்று புருடா விடுவது, வேறு எங்கும் வசூல் காண்பிக்க முடியாது
காரணம் படம் எப்படிப்பட்ட தோல்வி என்று எடுத்த திருலோகச் சந்தருக்கே நன்றாகத் தெரியும் )


ஆனால் " நீரும் நெருப்பும் " சென்னை யில் 100 நாட்கள் ஓடா மலே தேவி பாரடைஸ் மற்றும் அரங்குகளிலும் எத்தனை லட்சம் வசூல் என்ற விபரம் உனக்குத் தெரியுமா புளுகுண்ணி?

தமிழ் நாடு முழுக்க A, B, C மூன்று சென்டர்களிலும் ஜெய பேரிகை கொட்டிய படம், இன்று வரை கொட்டிக் கொண்டிருக்கும் படம்
அந்த படத்தைப் பற்றி விமர்சிக்க ஒரு தகுதி வேண்டாமா?

தலைவர் " சந்திரோதயம் " படத்தில் சொல்வது போல எனக்கு எதிரியாய் இருக்கக்கூட ஒரு தகுதி வேண்டும்,

அப்படிப்பட்ட தகுதி கணேசனுக்கு உள்ளதா என்ன?

முதல் தடவை வெளியாவதுடன் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படும் கணேசன் படங்கள் என் தலைவனுடன் போட்டி போட முடியுமா?

வெட்டிப்பயலுக்கு பேச்சு என்ன வேண்டிக் கிடக்கு?

இதே போல் இங்கே வெற்றி என்று சொல்லப்பட்ட " சவாலே சமாளி " இலங்கையில் " நீரும் நெருப்புடன் மோத முடியாமல் சரணாகதி அடைந்த கதை உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,

இல்லை என்றால் நினைவூட்ட ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன்
தெரிந்து கொள்,

இந்த கொரோனா காலத்தில் யாருடைய படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை

கடைசி கட்ட முயற்சியாக மதுரை சென்ட்ரலில் கழிந்த ஞாயிறு "ராசபார்ட் ரங்கதுரை "க்கு ஒரு 50 டிக்கெட் கிழித்து விட்டு என்னா ஒரு பில்டப்பு,

அது மட்டுமா திருப்பூர்
மனிஷ் அரங்கில் பள்ளி மாணவர்கள் படம் பார்க்க வந்தார்களாம் ( பள்ளிக்கூடம் திறந்தாச்சா என்ன? )

தலைவர் படங்கள் தமிழகம் முழுக்க ஓடுகிறதே, இதைப் பற்றி தங்கவேலு என்ன சொல்வாரோ தெரியவில்லை,

போதாக்குறைக்கு " அன்பே வா " வேறு 18 ந் தேதி முதல் தமிழகம் முழுக்க பவனி வரப்போகுது
( இதுவும் அமெரிக்க சதியாய் இருக்குமோ?
காரணம் கணேசன் படத்தை தியேட்டர்காரங்க எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்களாமே அப்படியா? )


அடுத்தது நம்ம தங்கவேலு இலங்கை தகவல்கள் என்ற பெயரில் சும்மா அள்ளி விடுறது,

காரணம் யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைப்பு

" உலகம் சுற்றும் வாலிபன் " படத்தைப் பற்றி அன்றைய நாட்களில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதை அப்போதே அன்றைய
" உரிமைக்குரல் பத்திரிகையில் டேவிட் சார் அம்பலப் படுத்தியிருந்தார்

அதை மீண்டும் கோடாங்கி உனக்கு ஞாபகப் படுத்துகிறேன்


யாழில் 115 நாள் ஓடி "தங்கப்பதக்கம் " வசூல் 4, 20, 903

"உலகம் சுற்றும் வாலிபன் " வெறும் 67 நாளில் 4, 22, 302 வசூலை ஏற்படுத்தி தகரத்தை தூக்கி எறிந்தது

அது மட்டுமல்ல நீ தொண்டை வறள கத்திக் கொண்டிருக்கும்
" வசந்த மாளிகை " லி டோ, வெலிங்டன் இரண்டிலும் 106 நாள் மொத்த வசூல் 3, 46, 148

" உலகம் சுற்றும் வாலிபன்" ஸ்ரீதர், மனோகரா இரண்டிலும் வெறும் 50 நாள் வசூல் 3, 75, 502

அடுத்து யாழ் மனோகராவில் தலைவரின் "இதயக்கனி " 14நாளில் மொத்த வசூல் 104, 545
"நினைத்ததை முடிப்பவன்" 14 நாளில் மொத்த வசூல் 102, 926

"தங்கப்பதக்கம் " 14நாள் மொத்த வசூல் 102, 173

இன்னும் நிறைய இருக்கு,

யாரிடம் கயிறு திரிக்கிறாய்? அதை வேற எங்காவது வச்சு க்க புளுகுண்ணி ( ஆதாரம் எல்லாமும் இத்துடன் இணைத்துள்ளேன் )



அடுத்து தலைவரின் " நாளை நமதே " சாதனைகள்

யாழ் ராணி யில் வெறும் 24 நாளில் ஹவுஸ்புல் காட்சிகள் 101

இதற்கு முன் 102 நாள் ஓடி " அவள் ஒரு தொடர்கதை மொத்த வசூல் 3, 34, 862

"நாளை நமதே " வெறும் 69 நாளில் பெற்ற வசூல் 3, 35, 404

இந்த சாதனை மட்டுமல்ல " நாளை நமதே " காலை 10.30 க்கு முன் காண்பிக்கப்படாது என்று அறிவிப்பு வைத்த பிறகும் ரசிகர்களின் நெரிசல் காரணமாக அதிகாலை 2.20 க்கே திரையிடப் பட்டது

மேலும் முதல் நாளில் திரையிட்ட 8 காட்சிகளும் ஹவுஸ்புல்,

கணேசன் எந்த படமும் திரையிட்ட நாளில் 8 காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதா சரித்திரமே இல்லை,

அது வரை திரையிட்ட கணேசனின் அத்தனை படங்களையும் வெறும் ஆறு வாரத்தில் ஓட ஓட அடித்த பெருமையும் " நாளை நமதே " க்கு உண்டு,

அடுத்து ஈழத்தின் மட்டுநகரில் " உலகம் சுற்றும் வாலிபன் " ஓடிய நாட்கள் 116

தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகள் 27,
மொத்த ஹவுஸ் புல் காட்சிகள் 112

நள்ளிரவுக் காட்சிகள்
10
அனைத்தும் ஹவுஸ் புல்

மொத்தம் காண்பிக்கப்பட்ட காட்சிகள் 341

மொத்த வசூல் 1, 94, 726


" தங்கப்பதக்கம் " முதல் நாள் வசூல் 780 ரூபாய் 30 சதம்

" உலகம் சுற்றும் வாலிபன் 341 ஆவது காட்சி வசூல் 788 ரூபாய் 85 சதம்

மட்டு நகரில் கணேசன் படங்கள் ஓடி முடிய வசூல்

வசந்த மாளிகை 49 நாள் ஓடி முடிய 78, 362, 75
தங்கப்பதக்கம் 43 நாள் ஓடி முடிய வசூல் 49, 102, 60
எங்கள் தங்க ராஜா 30 நாள் ஓடி முடிய வசூல் 40, 112, 30
மன்னவன் வந்தானடி 22 நாள் ஓடி முடிய வசூல் 14, 435, 10

நாலு படமும் சேர்த்து மொத்த வசூல் 182, 012.75


இந்த பன்றிக் குட்டிகளுக்கு தலைவரின் பதிலடி ஒரே படம் "உலகம் சுற்றும் வாலிபன்" 116 நாள் மொத்த வசூல் 1, 94, 726.00

மட்டு நகர் ரீகல் அரங்கில் 50 ஹவுஸ் புல் காட்சிகள் ஓடிய ஒரே படம் தலைவரின் " இதயக் கனி " மட்டுமே


ஓடிய நாட்கள் 70
மொத்த வசூல் 1, 15, 701

தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 14,

மொத்த ஹவுஸ் புல் காட்சிகள் 56

இன்னும் நிறைய இருக்கிறது,

தேவைப்பட்டால் தங்கவேலுக்கு இன்னும்
கொடுப்போம் !.....J.JamesWatt...

fidowag
16th December 2020, 11:36 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே*வா " டிஜிட்டல் திரைப்படம்* 18/12/20* முதல் வெளியாகும்*அரங்குகள் விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை :* தேவி காம்ப்ளெக்ஸ்* -தினசரி* பிற்பகல் 12.45* *மாலை 4 .00 மணி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *இரவு* 07.15 மணி*

* * * * * * * * * * * ஆல்பட் காம்ப்ளெக்ஸ் -பிற்பகல் 3 மணி /மாலை 6.30 மணி*


* * * * * * * * * * *பி.வி.ஆர்..அண்ணா நகர் - தினசரி மாலை 6 மணி*

* * * * * * * * * * *பி.வி.ஆர். ஸ்கைவாக் -தினசரி பிற்பகல் 3 மணி*

* * * * * * * * * *பி.வி.ஆர்.,க்ராண்ட் மால், வேளச்சேரி -தினசரி* பிற்பகல் 2.45மணி*

* * * * * * * * ஏ.ஜி.எஸ்., வில்லிவாக்கம் -தினசரி மதியம் 12 மணி*

* * * * * * * *ஏ. ஜி.எஸ்., நாவலூர்* - தினசரி பிற்பகல் 3.15 மணி*

* * * * * * * * * ஏ.ஜி.எஸ். மதுரவாயல் - தினசரி மாலை 6 மணி*


* * * * * * * * *ஏ.ஜி.எஸ்., தி. நகர்* -* தினசரி* -பிற்பகல் 3.45 மணி*

* * * * * * * * *வேலா சினிமாஸ், திருநின்றவூர் -தினசரி காலை 11.30 மணி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *மாலை 6.30 மணி*

* * * * * * * * *பி.வி.ஆர். பல்லாவரம்* -காலை 11.30 மணி*

* * * * * * * * மூலக்கடை- சண்முகா - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 9.45மணி*


மதுரை - சினிப்பிரியா, அண்ணாமலை , சோலைமலை*

கோவை - ப்ரூக்ளின் , கே.ஜி.காம்ப்ளெக்ஸ், அர்ச்சனா தியேட்டர் .

நெல்லை - முத்துராம் காம்ப்ளெக்ஸ், ரத்னா தியேட்டர் .

திண்டுக்கல் - உமா*

போத்தனூர் - அரசன்*

மற்ற அரங்குகள் விவரம் அறிந்ததும் அறிவிக்கப்படும்* .

* * * * * * * * **

orodizli
17th December 2020, 08:08 AM
1965 ஆம் ஆண்டு வெளிமாநிலத்தில் கார்வார் என்ற கடல் பகுதியில் நம் மன்னரின் "ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பு அங்கே நடந்து கொண்டு இருந்தது..

இப்போது இருக்கும் பெப்சி விஜயன் அப்பா சாமிநாதன் அவர்கள் ஏற்பாட்டில் 60 க்கும் மேற்பட்ட துணை சண்டை காட்சி நடிகர்கள் இதரர்கள் அங்கு சென்று இருந்தனர்...

அந்த குழுவுக்கு பொறுப்பு தாதா மிராசி, மற்றும் சித்திரா லட்சுமணன் ஆவர்.
நம்பமுடியாது....இதுவே உண்மை...

அதிகாலை 6 மணிக்கு கடலுக்குள் 15 கிலோ மீட்டர் உள்ளே போய் 2 மிக பெரிய கப்பல்களில் படப்பிடிப்பு நடைபெறும்

தலைவர் அம்மையார் நம்பியார் நாகேஷ் மற்றவர்கள் அனைவரும் ஒரு மின் மோட்டார் பொறுத்த பட்ட படகில் இணைத்து இழுத்து செல்ல பட பின் துணை நடிகர்கள் மீண்டும் கரைக்கு அந்த மின் மோட்டார் படகின் மூலம் அந்த கப்பல் களுக்கு போய் சேர்வர்.

உணவு உடை மாற்றம் மற்றவை எல்லாம் கடலுக்குள் அந்த கப்பல்களில் தான்..
மாலை 5 மணி ஆனவுடன் படப்பிடிப்பு முடிந்து மேலே சொன்ன படி அவர்கள் கரை திரும்ப பின் துணை நடிகர்கள் அடுத்து கரை திரும்புவார்கள்.

ஒரு நாள் துணை நடிகர்கள் வந்த படகை இழுத்து வந்த மின் மோட்டார் படகு கரைக்கு வந்து சேர பின்னால் துணை நடிகர்கள் வந்த படகு கயிறு அறுந்து விட கரை வந்து சேரவில்லை.

மின் படகை ஓட்டி வந்தவர் திகைத்து மீண்டும் திரும்பி இணைப்பு கயிறை சரி செய்து கடலுக்குள் செல்வதற்குள்.

அங்கே காற்றின் வேகம் காரணம் ஆக துணை நடிகர்கள் வந்த படகில் தண்ணீர் நிரம்ப துவங்க அனைவரும் துடி துடித்து போகின்றனர்....தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலம் அது.

படகில் புகுந்த கடல் நீரை வாரி வாரி இறைத்து ஊற்றி கொண்டு இருக்கும் போது அந்த மின் படகு மீண்டும் வந்து கயிறை கட்டி கரை நோக்கி பயணம் செய்தது.

கரையில் இருட்டில் அதுவரை நடந்தது அறியாமல் அவரவர் களைத்து போய் முன்னணி நடிகர்கள் ஓய்வெடுக்க போக.

தப்பித்து பிழைத்து வந்த அந்த துணை நடிகர்கள் கரை அருகில் வந்து சேர்ந்த போது அங்கே இருட்டில் ஒரு உருவம் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது.

கரையில் இவர்கள் அனைவரும் பத்திரம் ஆக இறங்கிய உடன் அவர்கள் அனைவரையும் தனி தனி தனியாக கட்டி அணைத்து கண்ணீருடன் வரவேற்க நின்ற அவர்.

இந்த உலகின் மாபெரும் மனித நேய செம்மல் நம் தங்க தலைவனை பார்த்த உடன்....

ஒட்டு மொத்த கூட்டமும் கண்ணீர் கடலில் மூழ்கியது....

அதனால் தான் அகிலமே சொன்னது சொல்கிறது...சொல்ல போகிறது...தலைவா. நீ " ஆயிரத்தில் ஒருவன்", "லட்சத்தில் ஒருவன்", "கோடியில் கோடிகளில் ஒருவன்", என்று.

வாழ்க தங்கதலைவர் எம்ஜிஆர் புகழ்..நன்றி

தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி......

எனக்கு என்ன என்று இல்லாமல் இக்கரை அவர்கள் திரும்பும் வரை அக்கறை ஓடு நின்ற நெருங்கும் தலைவரின் நினைவு நாள் பதிவுகளில் அனல் பறக்கும்...

விழிகளில் வழியும் கண்ணீருடன்.....

orodizli
17th December 2020, 08:09 AM
எம். ஜி. ஆர்., உருவாகணும் இயற்கையாக

எம் ஜி ஆரை உருவாக்க முடியாது சேர்க்கையாக

நடிப்பவர் எல்லாம் எம் ஜி ஆர் அல்ல

எம் ஜி ஆரிம் வள்ளல் குணம் இயற்க்கையிலே இருந்தது

மனிதநேயம் பிறவியிலே இருந்தது

கருணனை மனம் கூடபிறந்தது
எம் ஜி ஆரோடு

திறமை பிறப்பிலே பதிந்திருந்தது

துணிவு ரத்ததிலே எம் ஜி ஆரிடம் இருந்தது

வீரம் என்றும் எதிலும் வெல்லும் அளவுக்கு இந்தது எம் ஜி ஆரிடம்

சுயநலம் என்றும் இல்லாதிருந்தது எம் ஜி ஆரிடம்

சொத்து சுகம் தன் குடும்பத்தார்க்கு மட்டும் என்று எண்ணாத மனம் எம் ஜி ஆருக்கு இந்தது

தன் உடமைகள் எல்லாம் மக்களுக்கே என கொடுக்கும் பொன்மனம் எம் ஜி ஆரிடம் இருந்தது

பாமரை தமிழரை கயவர் துன்புறித்த போதும் தமிழரை இலங்கை படை தாக்கிய போது காக்கும் வீரமனம் எம் ஜி ஆரிடம் இருந்தது

இது போல் சகலகலாவல்லவனாக நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவராக ஏழைகளின் ஒளிவிளக்காக மின்னியதாலே தமிழ் மக்கள் எம் ஜி ஆரை தன் தலைவராக தன் முதல்வராக தங்கள் காவல் தெய்வமாக கொண்டனர்

ஆனால் இன்று
தமிழ் மக்களை சினிமா பைத்தியமா நினைத்து தமிழ் திரையில் நடித்து பல கோடிகளை சேர்த்து அதை தமிழர்களுக்கு எதற்க்கும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் சுயநலமாக தன் மாநிலத்தில் சொத்துக்களை முதலீடு செய்து சுகவாழ்வு வாழ்தந்து விட்டு வயதாகி பொழுது போக்க என்பது போல் தமிழர் அரசியலில் இறங்கி பதவி அடைய துடிப்பதும் அதை ஒர் கும்பல் ஆதரிப்பதும் வடிகட்டிய சுயநலம் ஆன்மீகம் மதம் என்று மக்களை குழப்பி தன் தோல்வியை மக்கள் தோல்வி என மக்களை கேவைபடுத்தி நடக்கும் அரசியலை மக்கள் தக்க நேரத்தில் நல்ல பாடம் புகட்டி உணர்த்துவார்கள் தமிழன் சினிமா பைத்தியம் அல்ல என்று

நடிப்பன் எல்லாம் நாடளமுடியாது
எம் ஜி ஆர் பொன்மனத்தோடு நடப்பவன் தான் நாடாளமுடியும்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........arm...

orodizli
17th December 2020, 08:09 AM
எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .

எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.

வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .

காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .

கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு

படங்களை தந்தவர் .

எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி

படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .

எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்

போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்

ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே

என்பது வரலாற்று உண்மையாகும் .

எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .

ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-

ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....

திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...

மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....

உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் ..........

orodizli
17th December 2020, 08:10 AM
#பக்தியும் #பிரசாதமும்

நம்ம வாத்தியாரின் தீவிர ரசிகர்
ஒருவர்...எப்படிப்பட்ட ரசிகர் தெரியுமா???

வாத்தியார் சேலத்திற்கு ஷூட்டிங் வரும்போதெல்லாம், உணவு சாப்பிட்ட பின் அந்த இலையை அந்த ரசிகர் தான் எடுப்பார்...(அந்த ரசிகரின் பெயர் சரியாக நினைவில் இல்லை)
அப்படிப்பட்ட ஒரு பாசம், பக்தி
வாத்தியார் மீது...

இப்படியே வருடங்கள் கடந்தது...
வாத்தியார் அஇஅதிமுகவைத் தோற்றுவித்த சமயம்...

சேலத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடந்தது. அதில் அஇஅதிமுகவும் நின்றது...

அதற்கு கழகத்தின் சார்பில் சில விஐபிக்களும் வேட்பாளராகப் போட்டியிட ஆவலாக இருந்தனர்...

எதிர்பாராவிதமாக வாத்தியார் அந்த ரசிகரைக் கூப்பிட்டு... 'நீங்க தான் வேட்பாளர்...' னு அறிவித்தார்...

அவ்வளவு தான், அந்த ரசிகர் பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்...
அந்த ரசிகருக்கும் தான் வேட்பாளராக நிற்க ஆசை...!!!
அதை எப்படித் தெரிவிப்பது என்று சங்கோஜப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தான், வாத்தியார் அப்படித் திருவாய் மலர்ந்தருளினார், முக்காலமும் உணர்ந்த வாத்தியார்...

பின்ன...

தனக்கு எதுவுமே செய்யவில்லையென்றாலும் கூட மற்றவர் வாழ்வில் ஒளியேற்றும் ஒளிவிளக்காகிய நம்ம வாத்தியார்.... தனக்குப் பல காலம் சேவை செய்த ஒரு அதிதீவிர பக்தருக்குத் தம் கருணைமழையைப் பொழியாமலா இருப்பார் .....?!?!?!.........bsm.........

orodizli
17th December 2020, 08:12 AM
Mgr ஆட்சியை தருவேன் - ரஜினிகாந்த்

mgr போல ஆட்சி செய்வேன் - கமல்ஹாசன்

நான் கருப்பு mgr - விஜயகாந்த்

mgr போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் - விஜய்

mgr போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் - t.ராஜேந்தர்

*ஒருத்தன் கூட கருணாநிதி போல னு சொல்லல...����������*.........

fidowag
17th December 2020, 02:10 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே வா டிஜிட்டல் வெளியீடு அரங்குகள் தொடர்ச்சி........ ( 18/10/20 வெள்ளி முதல் )
------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை*- சினிப்பொலிஸ் ,பி.எஸ்.ஆர். மால், ஓ.எம்.ஆர் .* துரைப்பாக்கம்* * * தினசரி மாலை 6.15 மணி*


* * * * * * * * * * ஐநாக்ஸ் , மெரினா*மால்,* ஓ.எம்.ஆர். -தினசரி பிற்பகல் 3.15 மணி*


* * * * * * * * * * *பி.வி.ஆர்.- எஸ்.கே..எல்.எஸ்.காலக்சி மால், ரெட்*ஹில்ஸ்*
* * * * * * * * * * *தினசரி* மாலை 6.30 மணி*


* * * * * * * * * * *எஸ்கேப் -எக்ஸ்பிரஸ் மால், ராயப்பேட்டை*
* * * * * * * * * * *தினசரி பிற்பகல் 12.15 மணி*


* * * * * * * * * * பலாஸோ*,விஜயா*போரம் மால், வடபழனி ,
* * * * * * * * * *தினசரி மாலை 6 மணி*


* * * * * * * * * *பரங்கிமலை*ஜோதி -தினசரி பிற்பகல் 2.30 மணி /இரவு 10 மணி*

* * * * * * * * * லக்ஸ்*சினிமாஸ் - தினசரி இரவு 7.10 மணி*


* * * * * * * * *பி.வி.ஆர். ,அம்பா*மால், நெல்சன் மாணிக்கம் சாலை*
* * * * * * * * *தினசரி பிற்பகல் 3.10 மணி*


* * * * * * * * *சத்யம்*சினிமாஸ் -தினசரி பிற்பகல் 3 மணி*


* * * * * * * * உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ் -தினசரி பிற்பகல் 3 மணி /மாலை 6.30மணி*

* * * * * * * * *

fidowag
17th December 2020, 04:18 PM
தென் மாவட்டங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே வா டிஜிட்டல் வெளியீடு தொடர்ச்சி ...............(18/12/20 முதல் )
------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி -கே.எஸ்.பி.எஸ். கணபதி*

கோவில்பட்டி -லட்சுமி*

நாகர்கோவில் - வள்ளி*

தென்காசி*- பி.எஸ்.எஸ். காம்ப்ளக்ஸ்*

ஆலங்குளம்*- டி.பி.வி. காம்ப்ளக்ஸ்*

சங்கரன் கோவில்*- கீதாலயா*

சுரண்டை*- கவிதா*

சாத்தான்குளம் - லட்சுமி*

புளியம்பட்டி - மீனாட்சி*

அம்பாசமுத்திரம் - பாலாஜி*

தகவல் உதவி :நெல்லை திரு.வி.ராஜா .

fidowag
17th December 2020, 04:35 PM
மாலை மலர் - 16/12/20
---------------------------------------
எம்.ஜி.ஆர். வேடம் குறித்து*நடிகர்*அரவிந்த்சாமி நெகிழ்ச்சி .
------------------------------------------------------------------------------------------------
*இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி , பாலிவுட் நடிகை கங்கனா* ரனாவத் , சமுத்திரக்கனி, பூர்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி.* ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை கூறும் படமாக*தலைவி படம் அமைந்துள்ளதால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் .

இந்தப்படத்திற்காக புரட்சி தலைவரின் அழகையும், வசீகரத்தையும் முடிந்த அளவிற்கு நெருக்கமாக என்னிடம் அந்த* * *வித்தையை* கடைசி முறையாக கொண்டு வரும் ரஷீத் சாருக்கு எனது நன்றி என* நடிகர் அரவிந்த்சாமி**தெரிவித்துள்ளார் .**

fidowag
17th December 2020, 04:51 PM
துக்ளக் வார இதழ் - 23/12/20
----------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாட்டு பாடிய மத்திய பிரதேச முதல்வர்*
சிவராஜ் சிங் சவுகான்*
----------------------------------------------------------------------------------------------------------

பா. ஜ.க.வின்* தமிழக தலைவர் திரு. முருகன் 6/11/20;ல்* திருத்தணியில் துவக்கிய வேல் யாத்திரை* 07/12/20ல் திருச்செந்தூரில் நிறைவடைந்தது . யாத்திரையின் நிறைவு விழா திருச்செந்தூரில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது ..

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விழாவிற்கு தமிழர்கள் பாணியில்*வேஷ்டி, சட்டை துண்டுடன் , வந்தார் .* தமிழில் வணக்கம் சொல்லி பேச்சை துவக்கிய அவர் , மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படகோட்டி பட பாடலை பாடி அசத்தினார் . கொடுத்ததெல்லாம் கொடுத்தான் , அவன் யாருக்காக கொடுத்தான் ,ஒருத்தருக்கா கொடுத்தான் , இல்லை ஊருக்காக கொடுத்தான் .என்று அவர் பாடியதும் , கூட்டத்தில் பலத்த கைதட்டல்கள் விழுந்தனவாம்

orodizli
18th December 2020, 09:37 AM
அஇஅதிமுக., செய்யத் தவறியதை.. கையில் எடுத்த ரஜினி, கமல், பாஜக.

சென்னை: அதிமுக செய்யாததை, பாஜக, கமல், ரஜினி என வேற்று கட்சிக்காரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆம்.. "எம்ஜிஆர் அரசியலை" கையில் எடுத்துள்ளனர் இவர்கள் எல்லாரும்..!

தமிழக அரசியல் வரலாற்றிலேயே கரீஷ்மா என்று சொல்வார்களே, அது எக்கச்சக்கமாக கொட்டி கிடந்தது எம்ஜிஆரிடம்தான்.. எம்ஜிஆருக்கு பிறகு இப்படி ஒரு வசீகர தலைவரை இந்த தமிழ்நாடு பார்த்ததில்லை.(இனிமேலும் பார்க்க, முடியாத இயலாத சூழ்நிலை)

கொள்கைகள், திட்டங்கள், அதிரடிகள் இருந்தாலும், எம்ஜிஆரை கடைசிவரை மக்கள் மனசில் நிறைந்திருக்க காரணம் அவரது தோற்றம்தான்!

தன் பிம்பத்திற்கு மவுசு இருக்கிறது என்று எம்ஜிஆருக்கு அன்றே தெரிந்தாலும், அதற்காக அரசியலை அசால்ட்டாக அவர் நடத்தவில்லை.. கணக்கு போட்டுதான் தன் வெற்றியை ஒவ்வொரு முறையும் நிரூபித்தார்.. சொல்லி சொல்லியே எதிர்க்கட்சிகளை திணறடித்தார்.. 10 வருட ஆட்சி காலத்தில் எத்தனையோ விமர்சனங்களை எம்ஜிஆர் சுமந்தாலும் அத்தனையையும் முறியடித்துவிட்டுதான் எம்ஜிஆர் ஓய்ந்தார்!

ஆளுமை
அதனால்தானோ என்னவோ, எம்ஜிஆரின் ஆளுமை, அவரது சிறப்புகள், தொடர்ந்து 3 முறை பெற்ற மகத்தான வெற்றி போன்றவைகளை முன்னிறுத்தியே, அவருக்கு பின் வருபவர்கள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.. இதில் ஜெயலலிதா முதல் வெற்றியை பெற்று, எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துக்கு பிறகு, அம்மா என்ற மூன்றெழுத்தில் நிலைகொண்டுவிட்டார்.

மூன்றெழுத்து
அதற்காக கமல், ரஜினி, பாஜக போன்ற மூன்றெழுத்துக்களும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை.. விஜயகாந்த்தை கூட, நடிக்கும்போதே கறுப்பு எம்ஜிஆர் என்று சொன்னார்கள்.. இதற்கு காரணம் நடிப்பு இல்லை, விஜயகாந்தின் மனசுதான்.. அந்த வள்ளல்குணம்தான்.. அதனால்தான், எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் நல்லாட்சி என்று மக்கள் நினைத்து, மாஸ் வெற்றியை ஆரம்ப காலங்களில் தந்தனர்.

கமல்
இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் எம்ஜிஆரின் ஆசை, தனது ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று சொல்லி உள்ளார்.. தனது திட்டத்துக்கும் நாளை நமதே என்று பெயர் வைத்திருக்கிறார்.. சின்ன வயசில் நாளை நமதே படத்தில் கமல் நடிக்க வேண்டி இருந்ததாம்.. ஆனால், அது முடியாமல் போகவும், கட்சிக்குள்ளாவது இந்த பெயர் இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டு வைத்துள்ளார். "நான் அவர் மடியில் வளர்ந்தவன்... நினைவிருக்கட்டும்" என்று ட்வீட் போட்டு அதிமுக, அமமுக தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தி விட்டுள்ளார்.

ரஜினி
ரஜினியும் எம்ஜிஆரை விட்டுவைக்கவில்லை.. "அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி... அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.. இன்னைக்கு நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவே அவர்தான் முக்கிய காரணம்.. அவர் சிபாரிசு செய்துதான் என் கல்யாணம் நடந்தது" என்று ஒரு விழாவில் பேசியிருந்ததை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையேதான் லீலா பேலஸ் ஓட்டலிலும் சொன்னார்.

பாஜக
இவர்களாவது பரவாயில்லை, எம்ஜிஆருடன் ஏதோ ஒரு தொடர்பில் இருந்தவர்கள், சினிமாவில் பயணித்தவர்கள்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பாஜக இதில் நுழைந்து, எம்ஜிஆரை தன் பக்கம் வாரிக் கொண்டது, மொத்த தமிழ்நாட்டிற்குமே ஆச்சரியத்தை தந்தது.. ஆச்சரியம் என்று சொல்வதைவிட, திருவள்ளுவர் முதல் பாரதியார் வரை விட்டுவைக்காத பாஜக, எம்ஜிஆரை மட்டும் ஏன் சொந்தம் கொண்டாடியது என்ற குழப்பம்தான் அதிகமாக இருந்தது. வேல் யாத்திரை கொடியில் எம்ஜிஆர் இருந்ததுதான் ஹைலைட்!

சந்தேகம்
நியாயப்படி பார்த்தால், இதையெல்லாம் அதிமுகதான் செய்ய வேண்டும்.. இந்த 4 வருடகாலமாக, "மாண்புமிகு அம்மாவின் ஆட்சி..." என்று சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், எம்ஜிஆர் பெயரை அவ்வளவாக உச்சரிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.. ஒருவேளை இவர்கள் உச்சரிக்க தவறியதால், மற்றவர்கள் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி கொள்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.

மறக்க முடியவில்லை
தங்கள் அதிமுக நிகழ்ச்சிகளில், ஒருசில அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தவிர எம்ஜிஆரை பற்றி பேசுவதும், நினைவுகூர்வதும் குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.. ஆனால் மற்றவர்கள் எம்ஜிஆரிடம் நெருங்கினால், அதை மட்டும் அதிமுகவால் ஜீரணிக்கவும் முடியவில்லை.. உண்மையிலேயே எம்ஜிஆர் யாருக்கு சொந்தம்? தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மறக்கடிக்கப்பட்டு விடுவாரா? என்று சொல்ல தெரியவில்லை.. ஆனால் இறந்து 33 வருஷமாகியும் எம்ஜிஆர் பளிச்சென ஜொலித்து கொண்டே இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது!!
கட்டுரை-Hema Vandhana-நன்றி..........

orodizli
18th December 2020, 09:38 AM
அகில உலக அரசியல் பொது வாழ்வில் தன் வியர்வை சிந்தி பசி பட்டினி கிடந்து நினைத்த இடத்தை திரை உலகில் அடைந்த பிறகும்..

சின்ன நடிகர் ஆக வந்து பின் புரட்சிநடிகர் ஆக உருவெடுத்து....தான் சார்ந்த தொழிலில் இருக்கும் போது தான் ரத்த கண்ணீர் விட்டு உழைத்து சம்பாதித்த பொன் பொருளை அடுத்தவருக்கு கொடுக்கும் போது முகம் வாடாமல் சிரித்து கொண்டே வழங்கிய ஒரே ஒப்பற்ற வள்ளல்.

திரையுலகம் உச்சம் தொட்டு பொது வாழ்வு அரசியலில் பலர் உச்சம் தொட காரணம் ஆக இருந்து...

நானே எல்லாம் என்று ஒரு இடத்தில் கூட தன் பெருமை பேசாமல்
முதுகில் குத்திய ஒருவரை வீழ்த்த வேண்டும் நீங்கள் என்று தமிழ்நாடே ஆணையிட.... அதன் பின் அரியணை தான் ஏறி அதற்கு பின்னும் பலரை அரியணை ஏற்றி..

தான் மறையும் நாட்கள் முன்பே தான் சம்பாதித்த சொத்துக்களின் பெரும் பகுதியை இந்த நாட்டு மக்களுக்கு என்று எழுதி வைத்த தலைவர் பொது வாழ்வில் எவரும் எங்கும் உண்டா என்று ஊர் எங்கும் நாடெங்கும் உலகெங்கும் தேடியும் ஒருவரும் இல்லை.

அவரை போல நாங்களும் வருவோம் என்று சொல்லும் அனைவருக்கும் ஒரே விண்ணப்பம்.

அவரை போல நீங்கள் உழைத்து சம்பாதித்த பெரும் சொத்துக்களை அவரை போல கண் காது உடல் குறை பாடு உள்ளவர்கள் முன்னேற்றத்துக்கு எழுதி வைத்து விட்டு வருவீர்களா?.

பாவிகள் பலர் வாழும் இந்த உலகில் பாவம் நீங்கள் அவர் பெயரை சொல்வதில் மகிழ்ச்சியே எங்களுக்கு....

உங்களை நோக்கி எங்கள் எதிர்வினை என்றும் இல்லை .உங்களுக்கு ஒரு சின்ன யோசனை மட்டுமே...

சின்ன குழந்தை போல மனம் எங்கள் தலைவருக்கு...படமே சாட்சி..ஒரு தொப்பியை ஒரு கடையில் பார்த்து ரசித்து வாங்கி உடனே தலையில் போட்டு கொண்டு நடந்து வரும் இளகிய மனம் கொண்ட எங்கள் எம்ஜிஆர் போல ஒருவர்

இந்த உலகில் மீண்டும் அவரை போல ஒருவர் தோன்றுவது அரிது அரிது..

வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன் நன்றி..நன்றி..தொடரும்

படத்தில் தலைவர் அள்ளி அள்ளி கொடுப்பதை என்றும் தடுக்காத ராமன் தேடிய ஜானகி ...அவர்கள்....nm...

orodizli
18th December 2020, 09:39 AM
" மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.

ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.

ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.

அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".

மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது

"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."

##கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!..........gdr...

orodizli
18th December 2020, 09:41 AM
உ...த்தமன். பதிவு 2
-----------------------------------
இந்த தொடர், டைரி எழுதும் பழக்கம் இல்லாததால், முழுக்க முழுக்க என் ஞாபக சக்தியின் அடிப்படையில் எழுதுவதால் ஒரு சில தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காரனேஷன் தியேட்டரில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுகிறதென்றால் அது மிகுந்த ஆச்சர்யமான விஷயம். ஆனால் ஜோஸப் தியேட்டர் அப்படி அல்ல. கொஞ்சம் பெரிய படங்களை வெளியிடுவார்கள். ஆனால் அய்யன் படத்தை நன்றாக ஓட்டுவார்கள் என்பதால் கைஸ்களுக்கு ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். ஏதாவது அய்யன் படம் ஜோஸப்பில் வெளியானால் படம் ஓரளவு ஓடினால் போதும்,கைஸ்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடும்.

பின்னர் எளிதில் 50 நாட்களை கடத்தி விடுவார்கள். ஆனால் 50 வது நாளிலேயே கடைசி போட்டு விடுவார்கள். தியேட்டரிலேயே காபி, டீ ஸ்டால் என்று ஒன்று இருக்கும். அதை காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் தினசரி வாடகையை தியேட்டர் காரர்களுக்கு கட்ட வேண்டியதிருக்கும். அதனால் தியேட்டரில் குறைந்த பட்சம் 200 பேராவது இருந்தால்தான் ஸ்டால் நடத்த முடியும். அப்படியும் அய்யனின் 1964 ல் வெளியான அய்யனின் சொந்த கலர் படம் ஒன்றை 50 நாட்கள் ஓட்ட முயன்றனர்.

அன்றைய கால கட்டத்தில் தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள் போட்டாலும் ஒரே வாரத்தில் அதாவது 10 அல்லது 11 வது நாளோடு மாட்னி காட்சியை ரத்து செய்து விட்டு தினசரி 2 ஞாயிறு 3 காட்சிகள் ஆக்கி விடுவார்கள். அய்யனின் படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இரவு 10 மணி காட்சிக்கு ஆட்கள் வருவது மிகவும் சிரமமான விஷயம். அந்த படத்திற்கு 3வது வாரத்திலிருந்து இரவுக்காட்சிக்கு 50 பேர்களுக்கும் குறைவாக வருகை இருந்ததால் ஸ்டால் நடத்துபவருக்கு கட்டுபடியாகவில்லை. அவர் ஸ்டாலை அடைத்து விட்டு சென்று விட்டார்.

அதை பேப்பரில். பெட்டி செய்தியாக போட்டு விட்டார்கள்.
ஜோஸப் தியேட்டரில் பீடா கடை அடைப்பு என்ற தலைப்பில் செய்தியை போட்டு விட்டு படத்தின் பெயரை குறிப்பிடவில்லை. எங்கள் ஊரில் இரவுக் காட்சிக்கு வருபவர்களில் ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் மிகவும் சொற்பமாகவும்தான் வருவார்கள். அதிலும் ஆண்கள் வேலைக்கு போய் விட்டு இரவுக் காட்சி சினிமாவுக்கு செல்பவர்களே அதிகம். பொதுவாக எம்ஜிஆர் படம் ஒன்றுதான் இரவுக் காட்சி ஓரளவு நிறைந்து காணப்படும்.
ம கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் ரசிகர்கள் அங்கே உள்ள பீடா கடையில் ஏதாவது வாங்கி விட்டு என்னண்ணே படம் எப்படி போகுது என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

அதனால் எம்ஜிஆர் படம் போட்டால் 2 வது காட்சிக்கு எப்படியாவது கூட்டம் வந்து விடும் என்பதால் ஸ்டால் உரிமையாளர்கள் அதையே விரும்புவார்கள். அதனால் அடிக்கடி வரும் எம்ஜிஆர் ரசிகர்கள் ஸ்டால் நடத்துபவரிடம் நட்பாக பழகுவார்கள்.
அவர்கள் மூலமாக அடுத்த படம் என்ன? எப்போது வெளியாகும் என்பதையும் தெரிந்து வெளியே சொல்வார்கள். ஜோஸப் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய படமென்றால் அது எம்ஜிஆரின் "மாட்டுக்கார வேலன்"தான். "எங்க மாமா" முதல் வெளியீட்டில் வெளிவரவில்லை.

"வேலனின்" ஆவேசத்தை கண்டு பதுங்கிய"மாமா" 2 மாதம் கழித்தே பாலகிருஷ்ணாவில் திரைக்கு வந்ததுடன் 15 நாளில் வேறு ஊருக்கு தூக்கி வீசப்பட்டார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் அலாவுதீன் கில்ஜி குத்திட்டீயில் சிக்கிய மங்கோலிய மன்னனின் தலை மாதிரி வி.சி.அய்யனின் படங்கள் புரட்சி நடிகரின் படங்களோடு மோதி முதலை இழந்ததுதான் மிச்சம். வெள்ளம் வருகிறது தெரிந்து எவனாவது வெள்ளாமை வைப்பானா? இந்த புறமுதுகு காயங்கள் புரையோடிய வைராக்யமாக மாறி "உ....த்தமனி"ன்
களப்பணிக்கு வித்திட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..

"மாட்டுக்கார வேலன்" இங்கு 76 நாட்கள் ஓடியது. இறுதி வரை தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகளாக ஓடியது ஒரு மிகப் பெரும் ஆச்சர்யமே. 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை திடீரென்று காவல்துறை உதவியுடன் தூக்கி விட்டு அடுத்து ஒரு பழைய படத்தை திரையிட்டார்கள். முதல் நாளும் இறுதி நாளும் காவல்துறை உதவியுடன் ஓடிய ஒரே படம் "மாட்டுக்கார வேலன்தா"ன். ஆனால் "மாட்டுக்கார வேலன்" கடைசி நாளன்று ஹவுஸ்புல் அளவுக்கு கூட்டம் இருந்தது. மறுநாள் திரையிட்ட படத்துக்கு மிகவும் சொற்பமாகவே கூட்டம் வந்தது குறிப்பிடத்தக்கது..

தொடர்ந்து பேசுகிறேன்...........ksr.........

orodizli
18th December 2020, 09:42 AM
எம்ஜியாரை நெருங்க முடியாமல் திணறும் தமிழ் ஹீரோக்கள்..!! தலைவர் மறைந்தாலும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை..!!


மக்கள் திலகம் , புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் நடிப்பில், மக்கள் புகழில் அவரை மிஞ்சும் அளவிற்கு இன்னும் தமிழித்திரையில் கதாநாயகர்கள் உருவாகவில்லை என்ற நிலையே உள்ளது. எம்ஜிஆர் நடித்து பெயர் வாங்கிய தலைப்புகளை தங்கள் படத்திற்கு வைப்பதில் இளம் கதாநாயகர்களிடேயை கடும் போட்டி நிலவுவதே இதற்கு காரணம்.
அசுரன் படத்தை முடித்த கையோடு இயக்குனர் சுப்புராஜ்ஜின் மற்றொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதி லண்டனில் படமாக்கப்பட இருக்கிறது. அப் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. எம்ஜிஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை நிகழ்த்திய பெருமை இப்படத்திற்கு உண்டு. இந்த படத்தின் தலைப்பை பெறும் முயற்ச்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே. எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் வீட்டுப் பிள்ளை என்ற பெயரை நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது எனவே இடையில் படத்தின் பெயரை நம்ம வீட்டு பிள்ளை என்று அவர்கள் பெயர்மாற்றிவிட்டனர். 
இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தலைப்பை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அது குறித்து கூறிய தயாரிப்பாளர் சாய் நாகராஜ், எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜட்டலில் புதிப்பித்து வருகிறோம் விரைவில் படம் புதுப்பொலிவுடன் திரைக்கு வர உள்ளது என்றார். படத்தின் உரிமை தன்னிடத்தில் உள்ளது அதை யாருக்கும் எப்போதும் தரமாட்டேன் என்று அவர் காராரக கூறியுள்ளார் இந்த நிலையில் தனுஷ் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற தலைப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னதான் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் மக்களின் இதயங்களை வென்ற எம்ஜிஆரின் பெயரைச் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டும் அளவில்தான் தமிழ்த் திரை ஹீரோக்கள் உள்ளனர். எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் உச்சத்தை நெருங்க கதாநாயகர்கள் இன்னும் பிறக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது....dev...

orodizli
18th December 2020, 09:43 AM
உ.சு.வா. படம் பற்றி... அன்றைய தி.மு.க. அரசு சிவகாசியில் போஸ்டர்கள் அடிக்க கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் ஒரு உழைப்பாளி தந்த ஐடியா தான் ஸ்டிக்கர் மூலமாக விளம்பரங்கள் செய்யலாம் என்பது.. அந்த ஸ்டிக்கரில் தான் நமது புரட்சி தலைவர் மஞ்சள் நிற ஆடையுடன் ஒரு தொப்பி போட்டுக் கொண்டு தனது வலது கையினைத் தூக்கிக் கொண்டு கொடுத்த போஸ் பிரிண்ட் ஆகியிருந்தது.. அதேபோல் படத்தின் பிரிண்ட்கள் மும்பையில் தான் போடப்பட்டது. அதை விமானத்தில் கொண்டு வருவதாக செய்திகள் பரப்பிவிட்டு சாதாரணமாக ரயில் மூலமாக தமிழகம் வந்தது. தி.மு.க. குண்டாஸ் விமானம் மூலமாக வந்த படப்பெட்டியில் உள்ள ஃபிலிம் ரோல்களை இடை மறித்து எரித்தது ஒரு கேவலமான சரித்திரம். நமது புரட்சித்தலைவர் அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது ' இந்த படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனங்கள் வரட்டும்.. எனக்கு கவலையில்லை.. ஆனால் 50 பைசா கட்டணத்தில் என் நாட்டு மக்கள் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளைப் பார்க்கும்போதும் அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி ஒன்றே போதும் எனக் கூறியதுதான் அவரது உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது...Dvn...

orodizli
18th December 2020, 09:43 AM
#அன்பே_வா...மக்கள் திலகம் MGR.,

#AnbeVaa Digitally Remastered Movie Theatre List, Chennai - 18.12.2020 :

Bookings Open now...

Devi Ciniplex, Anna salai- 12.45 Pm, 4.00 Pm, 7.15 Pm

Albert Complex, Egmore- 3.00 Pm, 6.30 Pm

Woodlands Complex, Royapettah - 3.00 Pm, 6.30 Pm

Sri Shanmuga 4K Dolby Atmos, G.N.T Road, Moolakadai - 3.00 Pm, 9.45 Pm

Jothi Theatre, St.Thomas Mount - 2.30 Pm, 10.00 Pm

Vela Cinemas, Thiruninravur - 11.30 Am, 6.30 Pm

PVR - Annanagar - 6.00 Pm

PVR, Velachery - 2.50 Pm

PVR Ampa Skywalk Mall, Aminjikarai - 3.10 Pm

PVR Grand Galada, Pallavaram - 11.30 Pm

PVR SKLS Galaxy Mall, Red Hills - 6.30 Pm

INOX The Marina Mall, OMR - 3.15 Pm (Screen 8)

Ags Cinemas, Villivakkam - 12.00 Pm

Ags Cinemas, OMR Navalur - 3.15 Pm

Ags Cinemas, Maduravoyal - 6.05 Pm

Ags Cinemas, T.Nagar - 3.45 Pm

SPI: Sarhyam Cinemas, Royapettah - 3.00 Pm

SPI: Escape Cinemas, Royapettah - 12.15 Pm

SPI: Pallazo, Vadapazhani - 6.00 Pm

Luxe Cinemas, Velachery - 7.10 Pm

Cinepolis, OMR, Thoraipakkam - 6.15 Pm...UBU.............

orodizli
18th December 2020, 09:54 AM
"அன்பே வா" காலத்தை வென்ற காவியம் இன்று ஏறத்தாழ 150- 200 திரையரங்குகளில் வெளியாவது நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... கொரனா காலத்துக்கு பின் வெளியிடப்படும் ஒரு மிக முக்கியமான திரைப்பட காவியத்திற்கு எப்படியெல்லாம் நாளிதழ்கள், சஞ்சிகைகள் போன்றவற்றில் விளம்பரங்கள், பல வகையான டிசைன் போஸ்டர்கள் வெளியிட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?! படத்தை மொத்தமாக வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் அல்லவா செய்ய வேண்டும்?! அதுவும் இப்பொழுது தொடர்ந்து மழை பெய்யும் நேரத்தில்... மக்கள் திலகம் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் எனும் தைரியத்தில் தானே?! இவ்வளவு திரையரங்குகளில் இப்படிப்பட்ட கால நேரத்தில் வசூலித்தால் அதுவும் ஒரு பிரம்மாண்டமான சாதனையாக திகழும் என..........

orodizli
19th December 2020, 09:58 AM
நில் கவனி தாக்கு!!
---------------------------
கமலிடம் முதல்வர் எடப்பாடியும் இரண்டொரு அமைச்சர்களும் வாய்க் கொடுத்தாலும் கொடுத்தார்கள்,,தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது?
கமலஹாசன் படங்களைக் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று சொல்லப் போக--
பிக் பாஸ் பார்ப்பதற்கு நன்றி என்ற நக்கலான பதில்! அதைத் தொடர்ந்து--கமல் அணியிலிருந்து--
எம்.ஜி.ஆர்--மஞ்சுளா,,எம்.ஜி.ஆர் லதா படங்களைப் பற்றிய அலசல். ?
தேவையா இது??
ஒரு நாட்டின் முதலமைச்சரே,,கமலஹாசன் போன்ற டாஸ்மாக்கு ஆசாமிகளுக்கு பதில் சொல்வது தேவையா என்ற கேள்வி தான் பலமாக எழுந்திருக்கிறது! அந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது!
தண்ணியடிச்சுட்டு ஒருத்தன் சாலையில் ஏறு மாறான விஷயங்களைத் தாறுமாறாக உளறிக் கொண்டு போனால் அவனுக்கு சமமாகவா நாமும் பேசுவது?
இன்றைய நிலையில் முதல்வர் எடப்பாடியின் ஆட்சியில் மக்களுக்கு திருப்தி இருக்கிறது!
அதைவிட,,தி.மு.க மீது அச்சமும் இருக்கிறது!
முதல்வர் சந்திக்க வேண்டியதும் பதில் சொல்ல வேண்டியதும் மக்களுக்குத் தானே தவிர கமல் போன்ற மாக்களுக்கு இல்லையே?
அது என்னவோ தெரியவில்லை,,தி.மு.க சகட்டு மேனிக்கு சாக்கடையை தெளித்தாலும் சகித்துக் கொள்ளும் அமைச்சர் பரிவாரங்கள்--
கமல்--ரஜினி வகையறாக்களுக்கு மட்டும் வரிந்து கட்டுகிறார்கள்??
ஒரு வேளை கமலின் கட்சியை,,தமக்கு சமமாகவும்,,தி.மு.கவை தமக்கு மேலானதாகவும் கருதுகிறதா அ.தி.மு.க மேலிடம்??
பொண்ணுக்கும்,,பொண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவுக்கா பரிதாப நிலையில் இருக்கிறது அ.தி.மு.க??
எம்.ஜி.ஆர்ப் படங்களை விமர்சிக்கும் அளவுக்கு கமலுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லாத நிலையில்--
கமல் போன்ற ஸ்கூல் பசங்க விளையாட்டுகளுக்கு பதில் சொல்ல அ.தி.மு.கவின் ஐ.டி விங்கும்,,முக நூல் வாட்ஸ்-அப் அ.தி.மு.க கட்சியினரும் போதுமே?
அவர்கள் தான் அழுத்தமாகவும்,,ஆதாரப் பூர்வமாகவும் எதிர்க் கட்சியினரை வறுத்து எடுக்கறார்களேர்!
அ.தி.மு.கவை மட்டுமேக் குறி வைத்து தான் அத்தனைக் கட்சிகளும் தாக்குதல் நடத்துகின்றன!
எம்.ஜி.ஆரை முன்னிலைப் படுத்துங்கள் என்று நாம் சொல்வதை--இன்றைய தேதியில்--அ.தி.மு.கவைத் தவிர மற்ற அத்தனைக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு அவர்கள் தான் எம்.ஜி.ஆரை அதிகம் பேசுகிறார்கள்??
எம்.ஜி.ஆரின் சாதனைகள் பிரமிப்பானவை என்கிறார் பா.ஜ.க மோடி!
எம்.ஜி.ஆர் செய்த சேவைகளில் பத்து சதவீதமாவது நான் செய்வேன் என்கிறார் ரஜினி!
எம்.ஜி.ஆர் சத்துணவு தான் உலக அளவில் உன்னத திட்டம் என்று மாய்ந்து போகிறார் காங்கிரஸில் ராகுல்காந்தி!
எல்லோரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு--
எம்.ஜி.ஆர் மடியில் தான் வளர்ந்தேன் என்று பொக்கரான் குண்டைப் போடுகிறார் கமல்??
எம்.ஜி.ஆர் ஓட்டுக்குத் தான் எத்தனை பேர் போட்டி??
இவை மட்டுமல்லாமல்,,ஜெ வின் கடந்த கால நிர்வாக சாதனைகள் வேறு அ.தி.மு.கவுக்குப் ப்ளஸ்-பாயிண்ட்!
இவர்கள் இருவருமே,,,மக்களை சந்தித்த அளவுக்கு சின்னக் கட்சிகளை சீந்தியதே இல்லை!
உதிரிகளையா எதிரிகளாக நினைக்க வேண்டும்??
அ.தி.மு.கவில் வாய்த்திருக்கும் தொண்டர்களைப் போல் வேறு எந்தக் கட்சிக்கும் அமையவில்லை!
இத்தனைக்கும்,,அ.தி.மு.க மேலிடம் ஒரு சமயம் சசிகலாவுக்கு அஷ்டோத்ரம் சொல்லி,,சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபோதும் அடிப்படைத் தொண்டர்கள் அமைதி காத்து நின்றது பெரிய விஷயம்??
ஜெவின் தனிப்பட்ட ஆளுமையால் தாய்க்குலங்களின் தாராள பரிவு வேறு அக்கட்சிக்கு இருக்கிறது?
இப்போது அ.தி.மு.க ஒன்றையேக் குறி பார்த்து அத்தனை பேரும் ஆயுதங்களைத் தொடுப்பது போதாது என்று--
பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டுக்கு எழுந்தருளும் சசிகலா என்னும் திவ்ய ஸ்வரூபம் என்னன்னக் கூத்தடிக்கப் போகிறதோ??
எம்.ஜி.ஆரை அத்தனை பேரும் பிய்த்து ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அ.தி.மு.க மேலிடம் விழித்துக் கொண்டால் சரி!
தானும் படுக்க மாட்டேன். தள்ளியும் படுக்க மாட்டேன் என்று இப்படியே இருந்தால்--???
வெற்றி என்ற கோஷத்துக்கு சங்கு தான்???
அருமையானவர்களின் விமர்சங்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்!.........vtr...

orodizli
19th December 2020, 09:59 AM
திரை உலக சக்கிரவர்த்தி நம் தலைவர் ஒரு நாள் தன் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்து கொள்ளுங்கள்..

உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ...திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகம் செய்பவர்கள், மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கூட்டு அமைப்பை சேர்ந்தவர்களை அழைக்க..

அவர்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பு விருந்து உண்ட பின்...தலைவர் சொல்கிறார் நாளை முதல் எனது நடிப்பு சம்பளத்தை 50000 ரூபாய் அதிகம் ஆக கேட்க போகிறேன்.

சொல்லாமல் சம்பளம் உயர்த்தி விட்டார் எம்ஜிஆர் என்று நீங்கள் நினைக்க கூடாதே என்றே இந்த சந்திப்பு .

உங்கள் கருத்து என்ன என்று தலைவர் கேட்க அவர்கள் அனைவரும் கோரஸ் ஆக என்ன இப்படி எங்களை கேட்டு நீங்கள் இந்த நாட்டின் முக்கிய நடிகர் உங்கள் சம்பளம் உங்கள் விருப்பம் தருகிறோம் என்று சொல்ல.

உடனே தலைவர் சிரித்து கொண்டே நீங்கள் ஒப்பு கொள்வீர்கள் என்று தெரியும்...ஆனால் எனது சம்பளைத்தை நான் உயர்த்த அதை பார்த்து மற்ற நடிகர்கள் அதிகம் கேட்க.

இது தான் சமயம் என்று திரை அரங்க உரிமையாளர்கள் நீங்கள் பட டிக்கெட் கட்டணத்தை உயரத்திவிட்டால் எனது ரசிகர்கள் பாவம் தினம் வேலை செய்து பிழைக்கும் அன்றாட பறவைகள்....

அவர்கள் தலையில் நீங்கள் இந்த பாரத்தை சுமத்த கூடாது என்று எனக்கு உறுதி அளித்தால் சம்பளம் அதிகம் கொடுங்கள் அல்லது வேண்டாம் என்றார்.

நீங்கள் சொன்ன படி நடப்போம்... ஒரு போதும் அரங்க கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லி அனைவரும் விடை பெற...

வெளியில் நடக்கும் போது பலர் என்ன ஒரு பெருந்தன்மை உள்ள மனிதர் இவர் என்று மனதுக்குள் பேசி கொண்டே சென்றதை எப்போது நினைத்தாலும் இனிக்கும் நினைவுகள் அல்லவா தலைவர் நெஞ்சங்களே.

அகில உலக திரை பட வரலாற்றில் இவரை போன்ற ஒருவரை இனி எங்கே காண்போம்.

வாழ்க தலைவர் புகழ்.
உங்களின் குரல் ஆக உங்களில் ஒருவன். ..
நெல்லை மணி....

நன்றி தொடரும்....

அதிக சம்பளத்தை வாங்கி அதிகம் அள்ளி கொடுக்கவே...என்று நமக்கு புரிகிறது............nmn...

orodizli
19th December 2020, 09:59 AM
பொதுவாக திரு. சத்தியராஜ் மேலே எம்ஜிஆர் பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. அவர் எங்கும் எப்போதும் தன்னை ஒரு எம்ஜிஆர் ரசிகராக வெளிப்படுத்துபவர் என்பதால்.

இரண்டு நாட்களாக, சத்தியராஜ் அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ண போகிறார் என்று வலைத்தளங்களில் பதிவுகள் வருகின்றன. நம்புவதற்கு கஷ்ட்டமாக உள்ளது. சத்தியராஜ் தரப்பில் இதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மறுப்பும் காணவில்லை என்பதும் கவலையாகதான் இருக்கு.

காரணம், திமுகவுக்கு ஓட்டு கேட்டு போன எந்த நடிகரும், அதன் பின் உருப்பட்டதா சரித்திரம் இல்லை. பாக்கியராஜ், ராஜேந்தர், வடிவேலு போன்றவர்கள் அன்று விழுந்ததுதான். இன்னும் எழுந்து உட்கார கூட முடியவில்லை. அன்று ஏன் அப்படி செய்தோம் என்று இன்றுவரை புலம்பி கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் இருவரும்.

சத்தியராஜ் அவர்கள் நல்ல நடிகர். இந்த வயதிலும் வலுவான கேரக்டர்களில் வந்து மக்கள் மனங்களில் நிற்கிறார்.
எம்ஜிஆர் பக்தர்களால், அதிமுக தொண்டர்கள், கட்சிகாரர்களால் "இவர் நம்ம ஆள்" என்று அன்புடனும், மரியாதையுடனும் பார்க்கப்படுபவர்.

சத்தியராஜ் அவர்கள் ரொம்ப விவரமானவர். பாக்கியராஜ், விடிவேலு நிலைகள் பார்த்தும், அது போன்ற சாக்கடைகளில் இறங்கி, தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த நற்பெயருக்கு தானே களங்கம் செய்ய மாட்டார் என்று நம்புவோம்.

இதயக்கனி ஆசிரியர் திரு. Ithayakkani S Vijayan அவர்கள், சத்தியராஜ் அவர்களிடம் பேசி, பரவி கொண்டிருக்கும் வதந்தீக்கு மறுப்பு வெளியிட செய்து இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

கட்டப்பா... எம்ஜிஆர் பக்தர்களுக்கு எட்டப்பன் ஆகி விட்டார் என்று எல்லோரும் பேசுவதற்கு இடம் கொடுக்காதீங்க சத்தியராஜ் சார்.

Jayaprakash Padma Siva Sankaran...

orodizli
19th December 2020, 10:00 AM
���� அடுத்த MGR யார் ����

கமலா ?
ரஜினியா ?
எனக்கு தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை

அடுத்த எம்.ஜி.ஆரா.க இருவருக்கும் வாய்ப்பு இல்லை !

காரணம் எம்ஜிஆர் ஒரு அரசியல்அவதாரம் மாதிரி
அவர் ஒரு பிறவி அரசியல்வாதி 1937 ல் காங்கிரசில் இருந்து பிறகு நடிகனாகி 1949 ல் திமுகவில் இருந்தவர்

அவர் தன் அரசியலுக்கு சினிமாவை உண்மையாக பயன்படுத்தி கொண்டார்
அவருக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற இலட்சியமும் இருந்தது

அது சினிமாவில்
பாடல் சண்டைகாட்சிகள் மக்களுக்கு உதவும் மனபாங்கு அதே நேரம் குடி சிகரெட் என்று மக்கள் பாதை மாறாமல் இருக்க அதிக கவனம் எடுத்து கொண்டார்

அதே நேரம் கொடுப்பதில் வள்ளல்
இரக்க குணமும்
ரசிகனை மதிக்கும் குணம் கொண்டவர்
குறிப்பாக தாய்குலத்தை ரொம்ப மதிப்பார்

அதனால் அவரை மக்கள் பெருவாரியாக ஏற்று கொண்டார்கள்

ஆனால் கமல் பாதை வேறு
ரஜினி பாதை வேறு

இருவரும் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும்
தன் தொழிலில் தான் அதிக கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்கள்

ரஜினி ஜனரஞ்சகரமான படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தன் ரசிகனை பெருக்கி கொள்ள மட்டுமே ஆசை பட்டார் ?

அவருக்கும் ஒரு கூட்டம் எம்ஜிஆர் போல் உருவாகி விட்டது மறுக்க முடியாது
ஆனால் இவர் எம்ஜிஆர் மாதிரி நாட்டுபற்று மொழி நல்ல பழக்க வழக்கம் தன் திரையில் சொல்லி கொடுக்கவில்லை
அவர் நோக்கம் வெற்றி வசூல் ரசிகன் என்ற சுயநலமாக இருந்து விட்டார் இன்று வரை

அவரை அதை ஒத்து கொண்டும் உள்ளார் நான் குடி சிகரெட் என்று ஒரு தலைமுறையை மாற்றி விட்டேன் என்று
ஆகா இவர் எம்ஜிஆர் அல்ல என் பார்வையில் மட்டுமே

கமல்ஹாசன்
தன் சினிமாவில் எம்ஜிஆர் போல் ஒரு செண்டிமெண்டுக்குள் தன்னை அடைத்து கொள்ளாமல்

தான் நேசிக்கும் சினிமாவை உலகதரத்துக்கு கொண்டு சென்றார்
சினிமாவில் அரைத்த மாவையை மீண்டும் மீண்டும் அரைக்காமல்

தமிழ் சினிமாவை உலகம் உற்று பார்க்கும் உயரத்துக்கு கொண்டு சென்றார்
அதே நேரம் தன் ரசிகனை வெறும் விசிலடிச்சான் குஞ்சாக வைத்து கொள்ளாமல்

எம்ஜிஆர் அன்று செய்யமுடியாததை
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றார் போல் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியவர் அதன் மூலமாக

கண் தானம்
இரத்த தானம் உடல் தானம் கல்விக்கு உதவி எய்ட்ஸ் விழிப்புணர்வு
பெற்றால் தான் பிள்ளையா என்று இன்றை தேவைக்கு ஏற்றால் போல் மாற்றி விட்டார்

கமலின் பல நல்ல செயல்கள் பெரிதாக வெளியே தெரியாது அதே போல் கமலின் ரசிகர்கள் இன்று வரை. ஒரு சிலிப்பர் செல் போல் தான் இருப்பார்கள் இவர்கள் செய்யும் செயலும் சத்தம் இல்லாமல் நடக்கும் அதுவும் கர்வம் கொள்ளாமல்

கமலுக்கும் ரஜினிக்கும் அரசியல் கனவு இருந்ததே இல்லை

எம்ஜிஆர் கட்சியிலே இருந்து பயணித்தால் ஒரு கட்டத்தில் தான் பழி வாங்கபட்டதால் உதயமானது தான்
அதிமுக ����

கமலுக்கும் ரஜினிக்கும் காலத்தின் கட்டாயம் இந்த அரசியல்

இருப்பினும் ரஜினியை விட கமலுக்கு அரசியல் வாய்ப்பு பலமுறை வந்தும்
அதை அவர் ஏறகவில்லை
இன்றும் சசிகலா பெயர் அடிபடவில்லை என்றால் இன்னும் வந்து இருக்க மாட்டார்

தனக்கு. இருக்கும் பெயரையும் புகழையும் தவறாக பயன்படுத்த விரும்பாதவர் கமல்ஹாசன்

அதே நேரம் எம்ஜிஆர் தன் அரசியல் வாரிசாக கமல்ஹாசன் வர வேண்டும் என்று ஆசை பட்டார்
இது அன்று இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும் தெரியும்
அந்தளவு கமல் மீது நம்பிக்கையும் பாசமும் உண்டு எம்ஜிஆரிடம்

ரஜினியை விட கமலுக்கு தான் அதிக வாய்ப்பு கிட்டியது எம்ஜிஆரிடம்
கமல் எம்ஜிஆர், சிவாஜி தோளில் விளையாடிய செல்ல பிள்ளை

எம்ஜிஆர் பெயரை கமல் உச்சரித்தாலும்
கமலின் தொலை நோக்கு பார்வை தான் அவர் அரசியலில் தெரியும்

அதிலும் உண்மையை உரக்க சொல்லும் குணமும்
நேர்மையை மட்டும் பேசுவது
அதிலும் இன்றையை அரசியல்வாதிகள் சொல்லவே முடியாத வார்த்தை

ஒட்டுக்கு பணம் �� கொடுக்க மாட்டேன்
என் கட்சிகாரர்கள் செயல்பாடு சரி இல்லை என்றால் பதவியை நீக்குவேன் என்று எந்த கட்சி சொல்லும் ஆக கமலின்

அரசியலிலும் புதுமை தான் இருக்கும்

இதில் யார் MGR ...
முடிவு மக்கள் கையில் �� ?!

நன்றி....வணக்கம்..��✊������ J.Deepam news channels...

orodizli
19th December 2020, 10:01 AM
#இப்பேர்ப்பட்ட #பக்தர்கள் #உலகில் #வாத்தியாருக்கு #மட்டுமே #உண்டு...

இப்பதிவை டைப் பண்ணும்போது பொங்கி வந்த கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை...
------------------------------------------------------

சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்*ஷாகாரர்.
ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…

”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக்ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”

“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்*ஷா ஓனர் இல்ல…!

“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”
அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

“95 ரூபாய் ஆகுது”
“இந்தா எடுத்துக்க..
அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.
“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து...

“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!

“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்...

“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”
காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.

”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”...

ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.

“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று
நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…

ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?
அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?

வேறு நேரமாயிருந்தால், ரிக்ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்...

“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது.

"ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்."

“என்னப்பா சொல்ற..?

“ ஆமா சார்..!
இந்த ரிக்ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..

அதிகம் பேச வரவில்லை……
பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.

படித்த நமக்கே, படிக்காத ரிக்*ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்...

யாரை நினைத்து நெகிழ்வது ... இப்பேர்ப்பட்ட தலைவனையா...? அல்லது பக்தனையா ...?...bsm...

orodizli
19th December 2020, 10:01 AM
அனைவராலும் கொண்டாடப்படும் ஒப்பற்ற. தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் :
������������������������������
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நிரந்தர
புகழுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்.
காரணம் என்ன?

��இவர் முதல்வராக இருந்தவரை
தமிழ்நாட்டிலோ அல்லது பிற
மாநிலத்திலோ ஒரு செண்ட் இடம்கூட
வாங்கியதில்லை.

�� தன் ஆட்சி அதிகாரத்தில் தன்
குடும்பத்தினர்களோ அல்லது
உறவினர்களோ தலையீடு இருக்கக்
கூடாது என பகிரங்க அறிவிப்பு விட்டவர்.

�� நான் ஊழல் செய்தேன் என நிரூபித்தால்
என்னை நாடு கடத்துங்கள் என பகிரங்க
அறிவிப்பு விட்டவர்.

�� அத்தியாவசிய பொருள்களின் விலையை
எப்பொழுதும் ஒரே கட்டுப்பாட்டில்
வைத்திருந்தவர்.

�� ஏழைகளுக்கு அரிசி தட்டுப்பாடு
வரக்கூடாது என்பதற்காக உண்ணா
விரதம் இருந்தவர்.அதிலும் வெற்றி
பெற்றவர்.

�� சத்துணவு திட்டத்திற்கு போதிய நிதி
தராவிட்டால் நான் பிச்சையெடுத்தாவது
திட்டத்தை நடத்துவேன் என துணிந்து
சொன்னவர்.

�� தனக்கு ஆன மருத்துவ செலவைக்கூட
அரசிற்கு சுமை வைக்கக்கூடாது
என்பதற்காக பணத்தை திருப்பி
செலுத்தியவர்.

�� கடைசிவரை தன் வீட்டில் குடிநீர் குழாய்
கூட பயன்படுத்தாமல் தன் கிணற்று நீரை
பயன்படுத்தியவர்.

�� தான் சம்பாதித்த சொத்துக்களில்
முக்கால்வாசியை ஏழைகளுக்கு எழுதி
வைத்தவர்.

�� தனக்குப் பின் தன் நினைவில்லத்தைக்
கூட அரசுக்கு செலவு வைக்காமல் தன்
சொந்த பணத்திலே அமைத்து சென்ற
தீர்க்கத்தரிசி.

புரட்சித் தலைவரின் சிறப்புகள் இன்னும் எண்ணிலடங்காதவை.அவைகளை பட்டியலிட பல நாட்கள் ஆகும்.அப்பேற்பட்ட
சிறப்புக்குரியவரை இன்று அனைவரும் கொண்டாடுவதைப் போல் வேறு தலைவர்களை கொண்டாடுவதில்லை.காரணம் மற்றவர்கள் சேர்த்த சொத்துக்கள் ஊழலாக பேசப்படுகிறது.புரட்சித் தலைவர் சம்பாதித்த
சொத்து மக்கள் என்பதை ஊரே கொண்டாடுகிறது.
தலைவா.....உங்கள் உண்மைத் தொண்டர்கள்
என்றுமே உங்கள் புகழ் பாடுவோம்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!����������.........Rnjt

orodizli
19th December 2020, 10:02 AM
இனிய வணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

மக்கள் திலகம் அண்ணா திமுக*வை தொட*ங்கிய பிற*கு 1974ல் "அண்ணா பிற*ந்த நாடு" என்ற* பெய*ரில் ஒரு வ*ண்ண*ப்ப*ட*ம் ந*டிக்க முடிவாகி விளம்பர*மும் வெளியான*து. ஜெய*ப்பிர*தா மூவீஸ் சார்பில் பி.வாசுவின் த*ந்தை பீதாம்ப*ர*ம் மற்றும் இன்னொருவ*ரும் சேர்ந்து த*யாரிக்கவிருந்த*ன*ர். இதில் ஒடுக்க*ப்ப*ட்ட மக்கள் மற்றும் ச*மூக அவ*லங்க*ளை எதிர்த்து போராடும் வ*ழ*க்க*றிஞ*ர் வேட*ம் எம்ஜிஆருக்கு. நேர*மின்மையால் கைவிட*ப் ப*ட்ட*து.

ஒருமுறை உய*ர்நீதிமன்ற* கூடுத*ல் க*ட்டிட திற*ப்புவிழா சென்னையில் ந*ட*ந்த*து. த*மிழ*க முத*ல்வ*ர் எம்ஜிஆர் த*லைமையில்..ஏராளமான நீதிப*திக*ள், வ*க்கீல்க*ள், பொதுமக்கள் உள்ளிட்டோர் க*ல*ந்துகொண்ட*ன*ர். அத*ற்கு சிலநாட்க*ள் முன்புதான் எம்ஜிஆர், த*மிழ*க மக்களின் ந*லன்க*ருதி, த*மிழ்நாட்டின் மைய*ப்ப*குதியான திருச்சியை த*லைந*க*ராக மாற்றினால் அனைத்து மாவ*ட்ட* மக்களுக்கும் சென்றுவ*ர* வ*ச*தியாக இருக்கும், சென்னையில் இடநெருக்க*டி குறையும். திருச்சியிலும் ப*ல்வேறு க*ட்ட*மைப்பு வ*ச*திக*ள் உருவாக்கி அம்மாவ*ட்ட*மும் மேம்ப*டும் என்ற நோக்கத்தை வெளியிட்டார். இக்க*ருத்துக்கு ஆத*ர*வும், எதிர்ப்பும் ப*ர*வ*லாக இருந்த*து.

இந்நிலையில் அந்த* நீதிம*ன்ற* க*ட்டிட திற*ப்புவிழாவில் முத*ல்வ*ர் எம்ஜிஆர் முன்னிலையில் பிர*ப*ல வ*ழ*க்க*றிஞ*ர் ராம்ஜெத் மலானி பேசிய*தாவ*து: சென்னையை விட்டு திருச்சியை த*லைந*க*ராக மாற்றவேண்டும் என்ற முத*ல்வ*ரின் க*ருத்து த*வ*றான*து. சென்னை த*மிழ*க*த்தின் எல்லா மாவ*ட்ட*ங்க*ளுக்கும் மேலே மனித*னின் மூளை போல் உள்ள*து. என*வே அதை மாற்றுவ*து த*வ*று என்று பேசினார்.

பிற*கு, முத*ல்வ*ர் எம்ஜிஆர் பேசும்போது "மனித*னுக்கு மூளை மிகவும் முக்கிய*ம்தான். ஆனால் அதைவிட முக்கிய*ம் இத*ய*ம்தான். மூளை ச*ரியின்றி மனநிலை மாறுபாட்டுட*ன் இருந்தாலும் ஒரு மனித*ன் ப*ல ஆண்டுக*ள் உயிர்வாழ முடியும். ஆனால், இத*ய*ம் ச*ரிவ*ர இய*ங்காமலோ அல்லது நின்றுவிட்டால்.. என்று கூறி பேச்சை ச*ற்று நிறுத்தினார். அர*ங்கமே க*ர*கோஷ*த்தால் அதிர்ந்த*து. பிறகு எம்ஜிஆர் மனித*னுக்கு இத*ய*ம் மிக முக்கிய*ம். அது மைய*ப்ப*குதியில்தான் உள்ளது. அத*ற்காக நான் திருச்சியை இர*ண்டாவ*து த*லைந*க*ர*மாக மாற்ற*லாம் என்ற* என் க*ருத்தைதான் சொன்னேனே த*விர அதுவே முடிவ*ல்ல. இதுப*ற்றி ப*ல்வேறு வ*ல்லுன*ர்க*ளின் ஆலோசனையைக் கேட்டு வ*ருகிறேன் என்றார்.

திருச்சியில் சோம*ர*ச*ம்பேட்டை ப*குதியில் புர*ட்சித்தலைவ*ர் த*ன*து சொந்த* ப*ண*த்தில் ஒரு இட*ம் வாங்கி அங்கு ஒரு வீடும் க*ட்டியுள்ளார்...ஆனால், அவ்வீடு ப*ய*ன்ப*டுத்த*ப்ப*டாம*ல் இன்றும் உள்ள*து............Shnm.........

orodizli
19th December 2020, 10:04 AM
காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல் ரஜினி - கமலுக்கு கை கொடுக்குமா?

பதிவு: டிசம்பர் 18, 2020 15:36


தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல் ரஜினி - கமலுக்கு கை கொடுக்குமா?
கமல்ஹாசன் - ரஜினிகாந்த்


சென்னை:

எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் முதன்மையானவர். “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்?” என்ற அவரது பாடலுக்கு ஏற்ப காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

சினிமாவில் தனது பாடல்கள் மற்றும் புரட்சிகரமான வசனங்களால் மக்களை ஈர்த்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்.

சினிமாவில் மாபெரும் வெற்றியை ஈட்டியது போல அரசியல் களத்திலும் தனி முத்திரை பதித்தார்.

தி.மு.க.வில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே திண்டுக்கல் தொகுதியில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

பின்னர் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். சாகும் வரை முதல்-அமைச்சராகவே இருந்தார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நோய் வாய்ப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு மக்களின் மனதை அவர் வென்று இருந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்டம் கண்ட அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வழி நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் வாக்குகளே இப்போதும் அ.தி.மு.க.வை பலம் வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்த போதிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான வெற்றியை பெற்றது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் செல்வாக்கே இதற்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாகவே மாறி இருக்கிறது.

கருணாநிதி இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஆட்சியில் அமரும் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படி 2 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியும், கமலும் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வுக்கு போட்டியாக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் இப்போதும் எம்.ஜி.ஆர். பாடல்களும், பேச்சுக்களும் மறக்காமல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அவரது பெயரை சொல்லியும் ஓட்டு கேட்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆனால் அரசியலில் புதிய தலைவர்களாக அவதாரம் எடுத்துள்ள ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தர முடியும் என்று ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், கமல் ஒரு படி மேலே சென்று, நான் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி, வாரிசு என்று மேடைகள் தோறும் பேசி வருகிறார்.

“நாளை நமதே” என்கிற எம்.ஜி.ஆரின் பாடலையும், தனது பிரசார கோ*ஷமாக கமல் முன்னெடுத்து செல்கிறார். எம்.ஜி.ஆர். பாடலை போட்டு டுவிட் செய்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்திலும் கமல் ஈடுபட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். மரணம் அடைந்து 33 ஆண்டுகள் ஓடி விட்டன. இப்படி காலங்கள் கடந்த பிறகும் தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் விட்டுச் சென்றுள்ள ‘மக்கள் ஆதரவே’ முழுமையான காரணமாகும்.

தமிழக அரசியலில் எம்.ஜி. ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதற்கு அ.தி.மு.க.வினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். கமலுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தாலேயே எம்.ஜி.ஆரின் பெயரை அவர் கூறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்று ரஜினி கூறிய கருத்துக்கும், அ.தி.மு.க.வினர் முன்பு பதில் அளித்துள்ளனர். நாங்கள் நடத்தி வருவதே எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் என்று ரஜினிக்கும், அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க தொடங்கி உள்ள ரஜினிக்கும், கமலுக்கும் அது எந்த அளவுக்கு கை கொடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Courtesy malaimalar.......UKB...