PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9

fidowag
19th January 2021, 04:19 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*104 வது*பிறந்த நாளை முன்னிட்டு**
ஞாயிறு* *அன்று* (17/01/2021)
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய* திரைக்காவியங்கள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * * * * * * * * * * *காலை 10 மணி - பணம் படைத்தவன்*

* * * * * * * * * * * * * * * மாலை 4 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
** * * * * * * * * * * * * * * இரவு* 7 மணி - இதய வீணை*

ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * * * * * * *இரவு 9* *மணி -* குமரிக்கோட்டம்*

சன் லைஃப் - காலை 11 மணி - என் கடமை*

மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

ராஜ் டிவி* - பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*

மெகா 24 - பிற்பகல் 2.30 மணி- வேட்டைக்காரன்*

* * * * * * * * * * மாலை 6 மணி - நல்ல நேரம்*


பாலிமர் டிவி - இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*

மீனாட்சி டிவி*-மதியம் 12 மணி - நல்ல நேரம்* *(உள்ளூர் கேபிள்*)

டி*திரை.எஸ்.சி.வி.- பிற்பகல் 12.30 மணி -எங்க வீட்டு*பிள்ளை*

டி. டி.வி. (உள்ளூர் கேபிள்*) -மாலை 6 மணி - எங்க வீட்டு*பிள்ளை*

புது யுகம் டிவி*- இரவு 7 மணி - நல்ல நேரம்*

டி.திரை.எஸ்.சி.வி. - இரவு 8 மணி - அடிமைப்பெண்*

மொத்தம் 17 திரைப்படங்கள் பல்வேறு சானல்களில் ஒளிபரப்பாகின.

orodizli
19th January 2021, 03:49 PM
1956 அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூபாய் 11,000 நன்கொடை வழங்கிய வள்ளல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

தியாகராய கல்லூரி நிதி : ரூ. 2500

மதுரைத் தமிழ்ச்சங்க நிதி : ரூ. 1500

அன்னபூரண உணவுச்சாலை நீதி : ரூ. 1000

தாழ்த்தப்பட்ட பள்ளிக்கூட நிதி : ரூ. 1000

சென்னை சிறுவர் பள்ளிக்கூட நீதி : ரூ. 500.

திருச்சி மழை நிவாரண நிதி : ரூ. 3000

சென்னை தீப்பிடித்த குடிசைகள் நீதி : ரூ. 1500

கொடுப்பதற்கென்றே அவதரித்த மகா உத்தமர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....SSubn

orodizli
19th January 2021, 03:50 PM
33 / 43 / 104 / 74

காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.... .

74 ஆண்டுகள் [ 1947 - 2021 ] தொடர்ந்து பயணித்து வரும் 7 தலைமுறை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் .

43 ஆண்டுகள் [ 1977-2021 ] கடந்த பின்னரும் திரை உலகில் இன்னமும் தொடர்ந்து வரும் எம்ஜிஆர் திரைப்பட தாக்கங்கள்

33 ஆண்டுகள் மறைந்தாலும் இன்னமும் மறையாமல் மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

104வது பிறந்த நாள் நாடெங்கும் கொண்டாடப்பட்ட புரட்சித்தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்த ரசிகர்கள் / மக்கள் / தொண்டர்கள் .

2021 தேர்தலை முன்னிட்டு எம்ஜிஆரின் பெயர் / கொடி / சின்னம் / முன்னிலையில் உள்ளது .

111 பட்டை நாமத்தின் அடையாளம் . எம்ஜிஆரை மறந்த , இருட்டடிப்பு செய்த அனைவருக்கும் வழங்குவோம் .

உண்மையான எம்ஜிஆர் பக்தர்களின் வேண்டுகோள்
************************************************** ************************ .

50வது ஆண்டு அதிமுக [ 2021] பொன் விழா நேரத்தில் நமது இயக்கத்தின் புகழ் கொடிகட்டி பறக்கட்டும் .தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு இயக்கம் பரிசுத்தமாக பொன்விழாவை சிறப்பிக்கட்டும் ...

அதிமுக தலைமை நிலையம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் பெயர் சூட்டவேண்டும் .

திருமதி ஜானகி எம்ஜிஆர் திருவுருவப்படம் அமைக்க வேண்டும் .

1977- 1987 எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடந்த அரசு விழாக்கள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் .

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் .

எம்ஜிஆரை பற்றி வார /மாத இதழ்கள் / எம்ஜிஆர் படத்தின் பெயரில் புத்தகம் வைத்தவர்கள் / சமூக ஊடகங்களில் தவறாக கட்டுரைகள் / செய்திகள் / ஆடியோ பேச்சுக்கள் / மிகைப்படுத்தி நடக்காத ஒன்றை எழுதியவர்கள் / பேசியவர்கள்
போலி வேடமிட்டவர்கள் / எம்ஜிஆரை களங்கப்படுத்தியவர்கள் ........அடியோடு ஒதுக்க வேண்டும் ..........vns...

orodizli
19th January 2021, 03:51 PM
ஊனமுற்றோர் வாழ்வில் பொன்மனச் செம்மலின் சேவை :
������������������������������

1980 புரட்சித் தலைவர் 2 வது முறையாக
பதவியேற்றபோது உடல் ஊனமுற்றோர் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவற்றில் சில மட்டும்:

�� 2142 பேர்களுக்கு 3 சக்கர வண்டி.

�� 1167 பேர்களுக்கு காது கேட்கும் கருவி.

�� 2211 பேர்களுக்கு பெட்டிக்கடை வைக்க
நிதியுதவி.

�� 1194 பேர்களுக்கு நிரந்தர வேலை பெறும்
அரசு தொழில்கள் மற்றும்

�� 2353 பேர்களுக்கு கல்வி அறிவு அளித்தல்.

�� 771 பேர்களுக்கு சொந்த தொழில் செய்ய
மானியம்.

�� 1000 பேர்களுக்கு மேல் செயற்கை கை
கால் உடலுறுப்புகள் பெற்றனர்....Rnjt

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

orodizli
19th January 2021, 03:53 PM
எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய முதல் காவியம் முதல் கடைசி திரைப்படம் வரை ஒரே கொள்கையுடன் ஒரே லட்சியத்துடன் நடித்து மக்கள் மன்றத்தில் நிலையான புகழ் பெற்றார்.
கொள்கையில்லாத திரைப்படங்கள் எத்தனையோ எம்.ஜி.ஆரை நாடிவந்து ஒப்பந்தம் செய்தபோது திட்டவட்டமாக மறுத்தார். இதனால் பல படங்களில் வரும் லட்சக்கணக்கான,கோடிக்கணக்கான பணத்தை இழந்து, மக்களின் ஒரே குறிக்கோளின் எண்ணப்படி திரையில் நடித்த - நடிக மன்னர், ஒரே சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். ஒருவரே.
புரட்சி என்பது மக்களின் உள்ளத்தின் தெளிவை வெளிப்படுத்துவது ஆகும். அந்த மக்களின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் நல்ல பலப் புரட்சிகரமான எண்ணங்களைத் திரைப்படத்தில் தான் நடிக்கின்ற கதாபாத்திரத்தின் கருத்தாகவும், எழுத்தின் வடிவமாகவும், பேசும் பேச்சின் மூலமாகவும் இலக்கணமாக வாழ்ந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.
மக்களின் சிந்தனைக்கும், நாட்டின் ஏற்றமிகு முன்னேற்றத்திற்கும் - மனித உழைப்பின் உன்னதக் கோட்பாட்டிற்கும் - சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், பல நல்ல கருத்துக்களைப் பல படங்கள் வாயிலாகச் சொல்லி அதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பாடமாக மாற்றி அமைத்த ஒரே திரையுலகப் பேராசிரியர் பொன்மனச் செம்மல்! அதனால்தான் உலக வானில் மக்கள் மேதையின் காவியங்கள் மட்டுமே தனி முத்திரை பதிந்து உலா வந்தன, வருகின்றன.
திரைப்பட உலகில் ஒரு கதாநாயகன் எப்படி ஒழுக்கத்துடன் மக்கள் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் விதம் இருந்தால் அந்தக் கதாநாயகன் உலக வானில் நிலையான புகழ்பெற முடியும் என்பதற்கு உதாரணமாகத் திழ்ந்தார் எம்.ஜி.ஆர். கலையுலகில் தன்னை ஒரு ஒழுக்கமுள்ள கதாநாயகனாக மற்ற நடிகர்கள் பின்பற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றார். சிகரெட் புகையின் மண்டலத்திலும், மதுவின் மயக்கத்திலும் மூழ்கி இருக்கும் சினிமா உலகில் மாறுபட்டு உலக அதிசயமாகத் தன்னை ஒருநிலைப்படுத்தி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகத்தான மனிதர் மக்கள் திலகமே.
பாதுகாப்பு நிதியாக இருந்தாலும், குடிசைகள் தீப்பற்றி எரிந்தாலும், வெள்ள நிவாரணப் பிரச்சனையில் மக்கள் அவதியுற்றாலும், வறுமைக் கோட்டின் கீழ் ஏழை மக்கள் நொடிந்தாலும், திரைப்படக் கலைஞர்களின் கஷ்டமானாலும், நமது தமிழ் மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநில இயற்கைச் சீற்ற இழப்பானாலும் அங்கு எம்.ஜி.ஆரின் பங்கு முதலிடம் பெறும் என்பதே உண்மை. அங்கு ஏழைகளின் குறை தீர்க்க எந்த நேரத்திலும் பணஉதவி, பொருள் உதவி செய்து அவர்களின் குறைகளைத் தீர்க்க முன்னிலை வகித்த ஒரே திரையுலகக் கலைஞர் எம்.ஜி.ஆர். ஒருவரே....Sujeeth Kumar

orodizli
19th January 2021, 03:54 PM
கொஞ்சம் பாலிடிக்ஸ்!!!.........
-------------------------------------ர்
இது ஒரு அரசியல் பதிவு!
இது ஒரு அரசியல் பதிவு ஆனதாலேயே காரத்தை எதிர்பார்க்கலாம்!
அது ஒரு அரசியல் பதிவு என்றவுடனேயே இதில் விமர்சனத்துக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம்!
இது ஒரு---வேண்டாம்--போதும்-பதிவுக்குள் போகலாம்-
கமலஹாசன்!
தமிழ்த் திரையுலகின் தகுதியை சர்வ தேசத்துக்கு உயர்த்தக் கூடியவர் என்பதை,,எம்.ஜி.ஆருக்குப் பின்னரான தலைமுறையில் இவரைச் சொல்லலாம்!
அந்த விதத்தில் கமலுக்கு அந்தத் தகுதி நிறையவே உண்டு.
அரசியல் கமலஹாசன்!
கருத்து சொல்வது கொஞ்சம் கஷ்டம் தான்!
காரணம்??
பொது வாழ்க்கைக்கு வரும் எந்த ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது அரங்கத்தில் நிச்சயமாக ஆராயப்படும். அலசப்படும்!
நடிப்புத் துறை--அல்லது வேறு எந்தக் கலைத்துறை--அல்லது தொழில் சார்ந்த வியாபாரம்--இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வது அவஸ்யமில்லை.
அரசியல்--ஆன்மீகம்--இந்த இரண்டில் மட்டும் அது தான் அடிப்படை என்றாகிறது! பிகாஸ்??
இவை இரண்டு மட்டுமே சேவை ஆற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது இல்லையா?
மருத்துவர்,,சட்டம்--ஆசிரியர்--காவல்துறை--ராணுவம் போன்ற பிற சேவைகளை விட மக்கள் இந்த அரசியல் ஆன்மிகம் இவற்றாளேயே முக்கியப் பயனடைவதால் இவை இரண்டும் முக்கியமாகிறது!
அப்படி கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மன்னிக்கவும்--நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது?
ஓகே! கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை இங்கே ஆராய்வது நமக்குத் தேவையில்லாத ஒன்று என்பதால் அதை விட்டு விடுவோம்!
அண்மையில் அரசியல் வாதியாகக் கமல்??
நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று ஸீன் போட்டு எம்.ஜி.ஆரை மிக உயர்த்திப் பேசியது அரசியல் ஆதாயத்துக்காகவே என்று அ.தி.மு.க கட்சியினர் வாதாடினாலும்--
பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் கமலின் இத்தகைய செயல்பாடுகள் நமக்கு வருத்தத்தை தரவில்லை என்பதுடன்,,அதை நாம் வரவேற்கிறோம் என்பதையும் அழுத்தமாக இங்கேப் பதிவு செய்கிறோம்??
இந்த இடத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி இங்கேக் குறிப்பிட வேண்டியிருக்கிறது
கட்சி ஆரம்பித்து புரட்சித் தலைவர் என்னும் விருதை அவர் அன்றைக்குப் பெற்றிருந்தாலும்,,அதை விட வலுவான புரட்சித் தலைவராக இப்போது தான் வலம் வருகிறார்--
உலக சரித்திரத்தில் மாற்றுக் கட்சியினரையும் மதிக்கச் செய்த ஒரே தலைவன் எம்.ஜி.ஆர் தான் என்பது--
உலக புரட்சியாகத் தானே உச்சரிக்கப்படுகிறது?
காந்தியைக் கொண்டாடுபவர்கள்--சுதந்திரம்--விடுதலை போன்றவற்றை முன்னெடுக்கும் காங்கிரஸில் மட்டும் தானே?
அண்ணாவை ஆராதிப்பது தென்னகத்தில் அதுவும் தமிழ் நாட்டில்--அதுவும் திராவிடம் பேசுபவர்கள் மத்தியில் மட்டும் தானே??
சவாலாகவே ஒன்றை சொல்லுவேன்--
ஒரு தி.மு.க நிர்வாகியுடன் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிப்[ பாருங்கள்--
எம்.ஜி.ஆர விடுங்க,,அவர விட்டுட்டுப் பேசுங்க--இப்படித் தான் குறிப்பிடுவார்கள். எவர் வேண்டுமானாலும் முயன்று பார்க்கலாம்.
மெகா ஸ்டாராக ஆந்திராவில் சிரஞ்சீவி!
சூப்பர் ஸ்டாராக தமிழகத்தில் ரஜினி!
மெகா சூப்பர் ஸ்டாராக எப்போதுமே இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர் ஒருவர் தானே?
சொல்லப் போனால் ஜாதி இன--மத-சமயம் கடந்து அனைவருக்குமே அவர் ஆண்டவனாகத் தானே தோன்றுகிறார்?-
ரஜினி என்ற சவாலும் இல்லை
ஆளுமையான--கவர்ச்சியான தலைமையும் அ.தி.மு.கவில் இல்லை என்னும் போது--
எம்.ஜி.ஆர் என்னும் ட்ரம்ப் கார்டை கமல் உபயோகிப்பதில் என்ன தவறு?
அ.தி.மு.க தலைமையே--
நீங்கள் எம்.ஜி.ஆரை உணர மறுப்பது எவ்வளவு பேர்களுக்கு உபயோகமாகிறது பார்த்தீர்களா?
உங்கள் கட்சியின் அனுதாபி என்ற விதத்தில் ஒன்று சொல்வேன்--
இப்போது கமலைத் தேவையில்லாமல் தூற்ற வேண்டாம்?
அப்படியாவது பறங்கி மலையான் சிறப்பு பவனி வரட்டும். சொல்ல முடியாது?
நாளையத் தேர்தலில் அதுவே இரட்டை இலையின் மகிமை இன்னும் பரவி உங்களுக்கு வாக்குகளைக் குவிக்கலாம்?
எம்.ஜி.ஆர் தொண்டர்களே--
எங்கள் எம்.ஜி.ஆருக்கு மறைவு என்பதே இல்லை என்பீர்களே?
இதோ,,ஒரு கமல்,,ஒரு மோடி இப்படிப் பலர் மூலம் மறுபடியும் ஒரு பயணத்தைத் தொடங்கி விட்டார் நம் பாரத புத்திரன்!!!.........vtr...

orodizli
19th January 2021, 03:56 PM
மக்கள் திலகத்துக்கு ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது?
என்பதில் பலரும் பலவிதமான கருத்துகள் கொண்டிருந்தாலும்
ஒன்று மட்டும் அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள் யாரும் நெருங்க முடியாத அளவு சம்பளம். ஆனால் ஒரே சம்பளத்தை அவர் எல்லா படத்துக்கும் வாங்கியதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அவரது சம்பளம் மாறுபடும். அவருடைய சம்பளம் இந்தியாவிலேயே அதிகபட்சம் சம்பளம் பெறும் இந்தி நடிகர்களை காட்டிலும் அதிகமானது.

கண்ணதாசன் தனது சுயசரிதையில் மற்றவர்களை பற்றி எழுதும்போது தான் எந்த மனநிலையில் இருக்கிறாரோ அதன் வெளிப்பாடகவே அது இருக்கும். அவருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் போதும் அதற்கு யார் காரணம் என்பதை அவரே தீர்மானித்து அவர்களை சாட ஆரம்பித்து விடுவார். பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டு விடும் என்பதைப் போல, அது சரியா தவறா என்பது கூட அவருக்கே தெரியாது. எம்ஜிஆருக்கு எழுதிய பல பாடல்களில் திருத்தம் செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க வாலியை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலையை அவரே உருவாக்கினார்.

அதன்பின் தன்னை எம்ஜிஆர் ஒதுக்க ஆரம்பித்து விட்டார் என்று அவரே முடிவு செய்து தலைவரை கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பித்தார். இவர் இல்லையெனறால் எம்ஜிஆரால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்திருந்த அவருக்கு வாலியின் வரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்போது அவர் எழுதிய 'அகமும் புறமும்' என்ற காழ்புணர்ச்சி சாடல் பதிவில் எம்ஜிஆர் வாங்கும் சம்பளத்தை பற்றி அவர் குறிப்பிடும் போது எம்ஜிஆர் கணக்கில் வருவதை காட்டிலும் 6 மடங்கு கணக்கில் இல்லாமல் வாங்குகிறார் என்று பொறாமையால் பொங்கி இருந்தார்.

அதன்படி கணக்கு பார்த்தால் எம்ஜிஆர் "அன்பே வா" படத்துக்கு கணக்கில் 3.25 லட்சமும் கணக்கில் இல்லாமல் 19.5 லட்சமும் மொத்தம் 22.75 லட்சமும் வாங்கியதாக சொல்கிறார் என்றால் தலைவரின் வியாபார விஸ்தீரணம் என்ன என்பதை யாரும் கற்பனை செய்ய முடியாதது. கண்ணதாசன் மாற்று நடிகரின் அணியில் இருந்து கொண்டே அவர் ஒரு செல்லாக்காசு என்பதை தலைவர் மீது கொண்ட பொறாமையில் ஒத்துக்கொண்டது
தெரிகிறதா? கைஸ்களே. இனியாவது தங்களின் தகுதிக்கு தக்கவர்களோடு மோதுங்கள். தலைவர் படத்துக்காக பெற்ற பணத்தின் பெரும் பகுதி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவே பயன்படுத்தினார்.

பின்னர் எம்ஜிஆரால் அரசவை கவிஞர் பதவியும் அவரது கடனும் தலைவரால் அடைக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் மீது கனிவும் பரிவும் அதிகமாக, வானளாவ புகழ ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே. ஏன் கண்ணதாசன் சந்திரபாபுவால் பட்ட பாடு நாடறியும். "கவலை இல்லாத மனிதன்" படத்தை எடுத்து ஒரு குடிகாரனை அழைத்து வர சந்திரபாபு வீட்டில் தவம் கிடந்ததையும் அவர் இவர் இருக்கிறார் என்று தெரிந்து பின்வாசல் வழியாக தப்பி ஓடி கவிஞரை தவிக்க விட்ட கதையை கண்ணதாசனே விவரித்தது நாடறியும்.

அப்படியிருக்க எளியவர்கள் மற்றும் புதியவர்கள் எப்படி புரட்சி நடிகரை வைத்து படமெடுக்க முடியும் என்ற
கேள்வி எழுவதில் வியப்பில்லை.
எம்ஜிஆரின் ஒப்புதல் கிடைத்து விட்டால் போதும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் விநியோகஸ்தர்கள் தர தயாராக இருந்தார்கள்.

அப்படித்தான் ஒரு 100 ரூ கூட அட்வான்ஸ் கொடுக்க முடியாத பந்துலு தலைவரை வைத்து "ஆயிரத்தில் ஒருவனை" லட்சக்கணக்கில் செலவழித்து பிரமாண்டமாக எடுக்கவில்லையா?
ஸ்ரீதரைக் கண்டாலே ஓடி ஒளியும் விநியோகஸ்தர்கள் எம்ஜிஆரின் கடைக்கண் பார்வை கிடைத்ததும் உரிமைக்குரலை எழுப்ப ஓடி வரவில்லையா! இது எம்ஜிஆர் தனக்கு செய்யும் உதவி என்று அடக்கத்துடன் நின்று அவர் வழியில் படத்தை தயாரிக்கும் சூட்சுமத்தை புரிந்தவர்கள் வென்றார்கள்.

அதை விடுத்து மமதை கொண்டு தானே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்று கொக்கரித்த தயாரிப்பாளர்களுக்கு தன்நிலை புரிய வைத்தபின் அவர்களை கரை சேர்ப்பார். அப்படியும் பிரமாண்ட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தில் எம்ஜிஆர் கமிட் ஆக விரும்புவதில்லை. ஒரு காலத்தில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த படத்தில் மக்கள் திலகம் நடித்ததில்லை, ஓரிரண்டு படங்களை தவிர.

ஆனால் மாற்று நடிகரோ பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அண்டியே பிழைத்து வந்தார். அவர்கள் தரும் சம்பளத்தை சிந்தாமல் சிதறாமல் அள்ளி விடுவதிலேயே குறியாக இருப்பார். அவர்களிடம் அதிக பட்சமாக ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டு வேலையை முடித்து கொடுத்து விடுவார். ஆனால் எம்ஜிஆர் நட்பின் அடிப்படையில் தேவரின் படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்தார். யாரும் நினைத்து பார்க்க முடியாத இடத்தில் இருந்தாலும் பரமஏழைகளும் நெருங்கும் விதத்தில் எளிமையாக வாழ்ந்த ஒரு மாபெரும் மனிதர் என்பதே உண்மை...........ksr...

orodizli
20th January 2021, 10:02 AM
தேசிய தலைவர்கள் பெயர்கள்
மட்டுமே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சாலைகளுக்கு (அந்தந்த மாநில தலைவர் பெயர்கள் தவிர்த்து) வைக்கப்படும்...

உதாரணமாக:-
மகாத்மா காந்தி சாலை
அம்பேத்கர் சாலை
நேரு சாலை
இந்திரா காந்தி சாலை
ராஜிவ்காந்தி சாலை
என்று ஆனால்
வேறொரு மாநில முதல்வரின்
பெயரை வேறொரு மாநில சாலைகளுக்கு சூட்ட பட்டது என்றால்
அது நம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் பெயர் மட்டுமே ஆகும்...

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக...

இனிய வணக்கம்... Sen.bu

orodizli
20th January 2021, 10:03 AM
கொஞ்சம் பாலிடிக்ஸ்!!
--------------------------------
நேற்றைய --கொஞ்சம் பாலிடிக்ஸ்-பதிவு இப்படி நீளும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இந்தப் பதிவிலும் உங்களுக்கு ஒரு முக்கிய சேதி இருக்கிறது
நேற்றையப் பதிவைக் கொஞ்சம் நினைவு கூர்வோம்--
வலுவான--மக்களை ஈர்க்கக் கூடிய தலைமை அ.தி.மு.கவில் இல்லாத இந்தச் சூழ் நிலையை,,கமல் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயல்கிறார் என்பது--அ.தி.மு.க கட்சிக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவும்-
அரசியல் கடந்த எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்றே நான் சொல்லியிருந்தேன்
இதில் எந்த இடத்தில் கமலை நான் புகழ்ந்திருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை
எம்.ஜி.ஆர் சக்தி என்பது இருட்டடிப்பு செய்யப்பட முடியாத சக்தி என்பதை இன்றைய அ.தி.மு.க உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு என்று தானே கருத வேண்டும்.
சொல்லப் போனால் பதிவின் ஆரம்பத்திலேயே பொது சேவைக்குக் கமல் லாயக்கற்றவர் என்று தானேக் குறிப்பிட்டிருக்கிறேன்?
கமலின் பிரம்மாண்ட சினிமா இமேஜ்--
ரஜினியின் ஒதுங்கலால் அவருக்கு உண்டாகியிருக்கும் சௌகர்யம் இவற்றையெல்லாம் விட--
இன்று அருவமாக அருள் ரூபமாக ஆட்சி செய்யும்-
சினிமாவை விட்டு45 வருடங்கள் கடந்தவருமான எம்.ஜி.ஆர் தான் கமலுக்கும் தேவைப்படுகிறார் என்பது நமக்குத் தானே பெருமை?
கமல் என்ன எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவது? என்ற வாதம் நகைப்புக்கு உரியது எப்போதுமே--
இருப்பவன் ஏதும் செய்யாத நிலையில்--
இல்லாதவன் முனைவதில் என்ன தவறு?
எம்.ஜி.ஆர் என்பவர் இந்திய தேச தலைவராகிவிட்டார். இந்திய அரங்கில்--சில காலத்துக்குப் பின் உலக அளவில் பேசப்படப் போகும் ஒரு சக்தியை அ.தி.மு.க என்னும் சிறு பிடிக்குள்ளேயே வைத்திருக்க எண்ணுவதும் தவறல்லவா?
இதில் ஒரு வேடிக்கை?
நான் ஐயராம்? அதனால் கமலை ஆதரிக்கிறேனாம்?
அவர் கருணா நிதியிடம் பாடம் படித்திருப்பார் போலும்?
முக நூலுக்குப் பூணூல் போடுகிறார்??
சரி,,இன்றைய விஷயத்துக்கு வருவோம்--
ஆங்காங்கே அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் வழக்கத்தை விட வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது?
அந்தக் கட்சியின் மேல் மட்ட நிர்வாகி ஒருவருடன் பேசிய போது ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்தது?
ஒன்றிய--ஊரக--வட்ட--சதுர அமைப்புகள் யாவும் வெகு விமரிசையாக எம்.ஜி.ஆரைக் கொண்டாட வேண்டும் என்பது--முதல்வரிடமிருந்து வந்திருக்கும் முக்கிய ஓலையாம்??
மகிழ்ச்சியான இந்த செய்திக்காக நாம் முதல்வரைப் பாராட்டும் அதே நேரத்தில்--
இரண்டொரு ஐயங்கள்??
அம்மாவுக்கு எதிராக வாய் திறக்கவே முடியலீங்க என்று அன்று ஒப்பாரி வைத்தவர்கள் தானே இவர்கள்?
ஜெ மறைந்து,,நான்கு வருடங்கள் கழிந்து இந்த வருடம் மட்டும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை தடபுடல் செய்வது ஏன்?
கொரோனாவின் பாதிப்பு இன்னும் முற்றிலும் அகலாத சூழல் இது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்?
இதற்கு என்ன காரணம்??
சில மாதங்களில் வரப் போகும் தேர்தல்???
சரி,,,,எம்.ஜி.ஆரை வேறு யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பது சரி என்றே வைத்துக் கொள்வோம்--
சரி,,அந்தக் கட்சியின் போஸ்டர்கள் என்ன சொல்கிறது?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்!!
இதய தெய்வம் அம்மா??
இது இவர்கள் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தும் லட்சணம்??
எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரனிடம் ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்லியிருக்கிறார்--
என் மீட்டிங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதியில் என்னிடம் இரட்டை இலையை இரட்டை விரல்களால் காட்டியே விடை தருகிறார்கள்???
மீண்டும் சொல்வேன்--
நீங்கள் உங்கள் கட்டுக்குள் எம்.ஜி.ஆர் என்னும் வீட்டை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது அவசியம்
வீட்டைத் திறந்து வைத்திருப்பது தவறில்லை
திருடன் உள்ளே வந்து திருடுவது தான் குற்றம்?? என்றால்??????...vtr

orodizli
20th January 2021, 10:04 AM
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் மூலம் நம் மக்கள் திலகம் மக்களுக்கு
கூறும் பாடல்கள் பற்றிய இந்த தொடர் பதிவை புரட்சி தலைவர் பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இருந்ததால் பதிவை இரு நாட்கள் தொடர முடியாமல் போனது மன்னிக்கவும்..
வாருங்கள் தொடரை தொடருவோம்..

1975 – ஆம் ஆண்டு, துக்ளக் சோவின் கதை வசனத்தில், இயக்கத்தில் வெளிவந்த படமே, ‘யாருக்கும் வெட்கமில்லை!’ என்ற படம்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலம். துக்ளக் சோவோ தி.மு.க, எம்.ஜி.ஆர். தொடங்கிய அண்ணா தி.மு.க, இரண்டும் தமிழகத்தில் வளர்ந்து விடாது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தவர். இதே வேகத்தில் நின்றவரே கண்ணதாசன்.

அதனால், ‘யாருக்கும் வெட்கமில்லை’, படத்தில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து ஒரு பாடல் காட்சி.

அப்பாடல் காட்சிக்கான பாடலைப் பார்ப்போமே!

“சினிமாவில் வருவது போலே – நீ
சிரித்துக் கொண்டு டூயட் பாடடி!….”

என்று தொடங்கும் பாடலில்,

ஆண்: “அழகிய தமிழ் மகளே!

பெண்: என் அன்பே! கொடை வள்ளலே!

ஆண்: புரட்சித் தலைவி நீயே!

பெண்: என் புதுமைக் கலைஞன் நீயே!
நீ இல்லை என்றால் நான் இல்லை!

ஆண்: அடி நீ அல்லை என்றால் நான் இல்லை!”

என்றெல்லாம் வரிகள் வளர்ந்து வரும்.

எம்.ஜி.ஆரைக் கேலி செய்து கவிஞர் எழுதிய பாடல் வரிகளில் கூட,

‘கொடை வள்ளல்!’ ‘புதுமைக் கலைஞன்!’ என்ற சொற்கள் வந்துதானே நிற்கின்றன.

1990 – ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவை, 1975 – ஆம் ஆண்டே கவிஞரின் பாடல் வரி,

‘புரட்சித்தலைவி நீயே!’

என்று சுட்டுவதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! அப்போது புரியும் அவரது வாக்கின் வலிமை.

ஜெயலலிதா அரசியலுக்கு வராத அக்காலகட்டத்தில், கவியரசரின் எண்ணத்தில் எழுந்து வந்த வார்த்தை, இன்று தமிழகமெங்கும் ஒலிக்கப் பெறுவதை எண்ணிப் பாருங்கள்!

பின்னர், ‘நீ இல்லை என்றால் நான் இல்லை!’ என்ற தொடருக்கு, நீங்களே பதில் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்!

எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவராய்’ அவர் நின்று காத்த இயக்கத்திற்கு, ‘புரட்சித்தலைவியாய்’ ஜெயலலிதா இறக்கும் வரை இருந்து காத்த அதிசயம், உங்கள் இதயங்களுக்குள் கவி வாக்கின் பெருமைதனைப் பேசிட வைக்கும் என்பதும் உண்மைதானே...

அன்புடன Shenthilbabu Manoharan

orodizli
20th January 2021, 10:05 AM
வரலாற்றால் எவரும் நெருங்கமுடியாத
வெற்றிக்குரியவர் எம்.ஜி.ஆர் :
��������������������������������
1977,1980,1984 இந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் 189 இடங்களில் தன்னுடைய
வெற்றியை பரவலாக்கியவர் எம்.ஜி.ஆர்.
இந்த வெற்றி அனைத்தும் எம்.ஜி.ஆர் என்ற
தனி ஆளுமைக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி ஆகும்.இதை கணக்கிட்டால் 80% மேல் வெற்றி என்று கணக்கிடப்படுகிறது.
இப்படிப்பட்ட அரசியலின் அசுர பலம் புரியாதவர்கள் இன்னும் அரைவேக்காட்டுத்தனத்துடன் காழ்ப்புணர்ச்சி கொண்டு தமிழ்நாட்டில் பிதற்றி திரிகின்றனர்.அவர்களுக்கு நாங்கள் கூறுககிறோம் "எந்த முதல்வர் ஆளும்போது
அனைத்து கிராமங்களிலும் தன்னிறைவு பெற்றதுடன் அவர்களின் அத்தியாவசிய தேவைகளில் எந்த விலையேற்றமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தார்களோ"அவரை விட சிறந்த முதல்வர் எவரும் இல்லை.அந்தவகையில்
இன்றும் மக்கள் கூறும் வார்த்தை எம்.ஜி.ஆர் ஆண்டபோது மக்கள் நிம்மதியாக இருந்தோம் என்று இன்றும் கூறுகின்றனர்.தன் குடிமக்கள் நிம்மதியாக வாழ வகை செய்பவரே சிறந்த மன்னர்.இவர் மன்னாதி மன்னர் என்று இன்றும் புகழப்படுகிறார்..........Rnjt

orodizli
20th January 2021, 10:06 AM
எங்கள் M.G.R நாத்திகவாத்தியல்ல. என்றும் நாத்தீகவாதம் பேசியவர் அல்ல.
கடவுள்களை இழிவுபடுத்திப் பேசியவர் அல்ல. மற்ற மதக் கடவுள்களை பழித்து பேசியவர் அல்ல.

"ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்" என்றும்,

"ஆண்டவன் உலகத்தின் முதலாளி" என்றும்,

"கடவுள் என்னும் முதலாளி" என்றும்,

"கடவுள் ஏன் கல் ஆனான்" என்றும்,

"கடவுள் இருக்கின்றார் அது உன் கண்களுக்கு தெரிகிறதா" என்றும்,

"கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும்" என்றும்",

ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்" என்றும்,

"கரை மேல் பிறக்க வைத்தான்" என்றும்,

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காக கொடுத்தான்" என்றெல்லாம் தன் படப்பாடல்கள் மூலம் தனது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்.

முருக பெருமானாக ஒரு பாடலில் பாடி நடித்தும், வேறு ஒன்றில் சிவபெருமானாக ருத்ர தாண்டவம் ஆடியும்,

காஞ்சி மஹாபெரியவர், கிருபானந்த வாரியார் போன்ற மகான்களுடன் ஆழமான, ஆத்மார்த்தமான நட்பிலும் இருந்தவர்.

அல்லா, புத்தர், இயேசு பற்றியெல்லாம் தன் பாடல்களில் பெருமையாக பாடியவர்.

அவர் பெரியாரை மதித்தார் என்றாலும், அவரது எந்த கொள்கைகளையும் பேசி, பாடி, பாராட்டியது இல்லை. புத்தர் ஏசு காந்தி, விவேகாந்தர், சுபாஷ் சந்திர போஸ், திருவள்ளுவர், அண்ணா மற்றும் முருகக் கடவுள் படங்கள் தன் வீட்டில் அலுவலகத்தில் மாட்டி இருப்பது போல காட்சி அமைக்க தெரிந்தவருக்கு "பெரியார்" படம் இருப்பது போல் எந்த காட்சியும் அவர் அமைக்கவில்லை. பெரியாரின் எந்த கொள்கைகளையும், செயல்களையும் M.G.R அவர்கள் ஏற்று கொண்டதில்லை.

பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்து சீர்திருத்தங்களை ஏற்று சட்டமாக்கினார். அவரை மதித்து ஈரோட்டை பெரியார் மாவட்டம் ஆக்கினார் என்பதை தவிர, அவரது நாத்திகத்தை M.G.R ஏற்று கொண்டவரல்ல.

இதயவீணை படத்தில் காவி உடையணிந்து "திருநிறை செல்வி" என்று பாடி நடித்தவர். இன்னும் பல படங்களில் காவியணிந்து நடித்தவர்.
தாய் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றிருக்கிறார். வாள் கொடுத்திருக்கிறார்.
திருப்பதி, மதுரை, மருதமலை கோவில்களுக்கு சென்றவர்.

அவர் வெளியில் நாத்திகம் பேசி விட்டு திருட்டுத்தனமாக கோயிலுக்கு போகவில்லை.

M.G.R அவர்கள் தனது நம்பிக்கையை மீறிய எந்த விஷயத்தையும் படங்களில் காட்சிகளில், டயலாக்களில், பாடல்களில் வெளிப்படுத்தியதில்லை அது நடிப்பாக இருந்தாலும். அது M.G.R ரசிகர்களுக்கு பக்தர்கள் எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து எங்களுக்கு யாரும் பாடம் சொல்லி தர வேண்டியது இல்லை....Shen Babu

orodizli
20th January 2021, 10:06 AM
"இதயக்கனி" வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் : 04.01.1976.

1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
��
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ – லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்..........Baabaa

orodizli
20th January 2021, 10:07 AM
SWEET MEMORIES....

#அன்பே_வா
#மக்கள்_திலகத்தின்_பிறந்தநாள்_சிறப்புப்பதிவு.. !!!

ஐம்பத்து ஐந்து வருடங்கள் ((14-01-1966...பொங்கலன்று வெளியானது)) கடந்தும் மக்கள் மனதில இளமையாய் நிற்கிறது "அன்பே வா".

ஏழைப்பங்காளன், புரட்சி வீரன், மக்கள் தலைவன் இந்த வேடங்களுக்குத்தான் மக்கள் திலகம் நன்றாக பொருந்துவார் என்ற 60 களின் நிலமையை அப்படியே மாற்றி, மக்கள் திலகத்தால் "சாக்லட் ஹீரோ" போன்ற வேடங்களிலும் பட்டையை கிளப்ப முடியும் என்று நிரூபித்தபடம்.படத்தில் இடம் பெற்ற அத்துணை நடிகர்களுக்கும் இப்படம் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை கொடுத்த படம்..

அசோகன் அவர்களை கொடூரமான-நையாண்டி செய்யும் வில்லன் வேடத்தில் பல படங்களில் பார்த்து ரசித்திருப்போம். இந்த படத்தில் ஒரு விமானப்படை அதிகாரியாக, மிக மென்மையான-காதலை தன் நண்பனுக்காக தியாகம் செய்கின்ற பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.

மக்கள் திலகத்தின் நடன திறமையை அப்படியே வெளிக்கொணர்ந்த படம்." புலியைப்பார் நடையிலே" பாட்டு ஒன்று போதுமே...!!!

இந்தப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கண்டிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இந்த படத்தின் பாடல்களை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அதெப்படி மெல்லிசை மன்னர் வெளிநாட்டில்-வெளி மாநிலங்களில் எடுக்கப்படும் படங்களுக்கென்று தனித்தனியாக இசையை கொடுக்கிறாரோ...!!! அற்புதம்...!!!

அன்பே வா படத்தின் புகழ்-மக்கள் திலகத்தின் புகழைப்போலவே என்றென்றும் நிலைத்திருக்கும்..........Sr.Bu...

orodizli
20th January 2021, 10:08 AM
#புரட்சித்தலைவர்னா #யாரு???

சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.

தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.

குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...

"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...

ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...

"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"

"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."...bsm...

orodizli
20th January 2021, 10:11 AM
எம்.ஜி.ஆர் பக்தர்களே புனிதமானவர்கள் ! .கொள்கையின் படி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்!!!
1958ல் "நாடோடி மன்னன்" படத்திலிருந்து 1978 "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரை எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் இன்றைய காலம் பக்தர்களாகவும் வாழ்ந்து கொள்கை கோமான்களாகவும் விளங்குகின்றனர்.புரட்சிதலைவர் எப்படி கொள்கையில் இருந்து பிறழாமல் வாழ்ந்தாரோ அதே மாதிரி அவரது பக்தர்கள் இன்று வரை கொள்கைக். கோமான்களாக வாழ்ந்து வருகின்றனர்.பாருங்கள் ஒரு உச்ச நடிகர் வாழும் காலத்தில் அவர் ஆட்சியில் ஏறி சிஸ்டம் சரி பண்ணனும் என்று அறை கூவல் விடுத்தார்.உடன் தேர்தலில் வென்று அமர வேண்டும் என்றார்.யாரை நம்பி ? அவரது ரசிகர்களை களத்தில் இறக்கி.
பின்னர் நோ கட்சி என்றார்.இன்று அவரது ரசிக சீமானிகள் கொள்கை பற்றுடயவர்களா? கொள்கையாவது மண்ணாவது .உடன் தி.மு.வில் ஐக்கியமாகிறார்கள்.சிலர் அ.தி.மு.கவில் இணைகிறார்கள்.சிஸ்டம் சரியில்லை.திராவிட கட்சிகளை அப்பறப்படுத்துவோம் என்றாரே. அவரது குஞ்சுகள் எப்படி திராவிட கட்சிகளில் இணைகிறார்கள்.? ரஜினிக்கு கொள்கை உண்டு என்றால் அவர் ரசிகர்கள் ஒரு வாரத்தில் தடம் புரள்கிறார்களே .அப்படி என்றால் உச்சநடிகர் ரசிகர்களெல்லாம் வியாபாரி என்றல்லவா பெயர் எடுக்கிறார்கள்.கட்சி மாறுகிறார்களே என்று அச்சப்பட்டு உடன் உச்ச நடிகர் எந்த கடசியிலும் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டுள்ளார்.அப்படி என்றால் உங்களது கொள்கை தான் என்ன ?
தமிழ்நாட்டு மக்களை உச்ச நடிகர் என்ன கிள்ளுக்கீரையாக நினைக்கிறாரா?
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் எம்.ஜி.ஆருக்கு இணை அவரே தான்.அதே மாதிரி அவரது பக்தர்களை வெல்லவும் யாருமில்லை ! .எம்.ஜி.ஆர் பக்தர்கள் இன்றும் கொள்கை கோமான்களே !! அவர்கள் புனிதர்களே !!!...ssm...

orodizli
20th January 2021, 10:12 AM
"அன்பே வா". ..படத்துக்கு எம்ஜிஆர் 3.25 லட்சம் சம்பளம் வாங்கினார் என்றும் உயர்ந்த மனிதன் படத்துக்கு கனேசனுக்கு ஏவி எம் மெய்யப்பச் செட்டியார் 1.5 லச்சத்துக்கு மேல் சம்பளம் குடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்றும் 2 படத்துக்கும் வசனம் எழுதின ஆரூர்தாஸ் சொல்லிருக்கார். ஏவி எம் சரவணணும் அன்பே வா க்கு எம்ஜிஆருக்கு 3.25 லட்சம் சம்பளம் கொடுத்தோம் என்று சொல்லிருக்கார். எம்ஜிஆர் வாங்கின சம்பளம் கடைசி வரைக்கும் கணேசன் vc வாங்கவில்லை. கண்ணதாசன் பாதி நேரம் போதையில் இருப்பார். குடிச்சா போதை ஏறலைன்னு பெத்தடின் ஊசிக்கு அடிமையாகிவிட்டார். இதை அவரே எழுதினார். தனக்கு பல பெண்களோடு தொடர்பு உண்டு என்றும் அவரே ஒப்புக்கொண்டார். போதையில் அந்த நேரத்தில் மனசில் தோன்றுவதை எழுதுவார். ஆனாலும் ஒரு விசயத்தை அவர் மறைச்சிட்டார். மெட்ராசில் கவிதா ஓட்டல்னு நடத்தி வந்தார். அது ஒரு விபச்சார விடுதி. வேண்டியவங்களுக்கு அங்க வெச்சு பெண்கள சப்ளை செய்வார். வாலிக்கு இதே மாதிரி பாராட்டி ஒரு பெண்ணோட இருக்க வெச்சாராம். இதை ஆனந்த விகடனில் ஒரு 7 .. 8 வருசம் முன்னாடி நினைவு நாடாக்கள் என்ற தொடரில் வாலியே எழுதினார். இப்படிப்பட்ட மாமாப் பயல்தான் கண்ணதாசன். நம்பாளு மேலே எனக்கு சமயத்தில கோபம் வரும். தன்ன திட்டினவன், திட்டாதவன், வேண்டியவன், வேண்டாதவன் எல்லாருக்கும் உதவி பண்ணுவார். பதவி குடுப்பார். அது அவர் பெரிய குணம். ஆனா நமக்கு பொறுக்கவில்லை. 1980/ வருசம் தேர்தல்ல அண்ணா நகர்ல எச்.வி.ஹண்டே கிட்ட தோத்துப்போன தீயசக்தியை பாவம் ஜெயிச்சுட்டு போகட்டும்னு விட்டார். அப்புறம் 800 சொச்சம் ஓட்டுல தீயசக்தி கேவலமா ஜெயிச்சதா அறிவிச்சாங்க.... Rajarajan...

orodizli
20th January 2021, 10:13 AM
#எம்ஜிஆர் #இன் #தமிழ்நதி #மக்கள் #சங்கம்!!!

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவதரித்த இந்நன்னாளில், அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களுக்காக தோன்றியிருக்கும் ஒரு சங்கம்...

எம்ஜிஆர் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிசெய்ய துடிப்புடன் செயல்படுத்த இருக்கும் ஒரு சங்கம்...

எந்தவித சுயலாபநோக்கின்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கம்...

அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சியை மக்களோடு மக்களாக நின்று, தோள்கொடுத்து மீண்டும் அந்த நல்லாட்சியை நிறுவ முனைப்புடன் இருக்கும் ஒரு சங்கம்...

எம்ஜிஆர் இன் தமிழ்நதி மக்கள் சங்கம்!!!

புரட்சித்தலைவரின் புகழ் போல தழைத்தோங்க எல்லாம் வல்ல நம் குலதெய்வம் பொன்மனச்செம்மல் அருளாசி புரிவாராக!!!

அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் நல்லாதரவை சிரமேற்கொண்டு வரவேற்கிறோம்!!!

புரட்சித்தலைவர் புகழ் வாழ்க!!!...bsm

orodizli
21st January 2021, 08:06 AM
#மக்கள்_திலகத்தின்_திரை_பயணத்தில்...!!!

#குமரிக்கோட்டம்..

தன் பெண் குமரியை ((ஜெயலலிதா)), தன்னுடைய நண்பன் முத்தையா (முத்தையா) வின் மகனான கோபால் (மக்கள் திலகம்) க்கு மணமுடித்து தருவதாக வாக்களிக்கிறார் சோமு (வி.கே.ராமசாமி) . இந்த திருமண உடன்படிக்கை செய்யப்படும்போது சோமு, முத்தையா இருவருமே பரம ஏழைகள். முத்தையா, சோமுவுக்கு தன் ஏழ்மையையும் பொருட்படுத்தாது பல உதவிகளை செய்கிறார்.

ஆனால் தன் தாய் வழி வந்த ஏராளமான செல்வத்தினால் செல்வந்தர் ஆகிறார் சோமு. முத்தையாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதோடு மட்டுமின்றி,தன் நண்பன், முத்தையா-கோபாலை இழிவு படுத்துகிறார் சோமு.

இதை ஒரு சவாலாக ஏற்று குமரியின் கோட்டத்தில் நுழைந்து குமரியை மணக்கிறார் கோபால்.

சிறப்பான குடும்பக்கதையானது மக்கள் திலகத்தின் பங்களிப்பாலும், மெல்லிசை மன்னரின் இன்னமும் ரசிக்கப்படும் இனிய பாடல்களாலும் வெற்றிப்படமானது.

#நாம்_ஒருவரை_ஒருவர்
#எங்கே_அவள்_என்றே_மனம்
#என்னம்மா_ராணி_பொன்னான_மேனி

தகவல் & புகைப்படம்:
https://en.m.wikipedia.org/wiki/Kumari_Kottam...Str.bu

orodizli
21st January 2021, 08:06 AM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திறன் மிகு உத்தி படத்தின் பாடலை காட்சிகளை வசனத்தை படத்துக்கும் தனக்கும் அரசியல் கொள்கைக்கும் பொருந்தி வருமாறு அமைப்பது தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திறன்மிகு தொடர்பியல் உத்தி ஆகும். இதை ஆங்கிலத்தில் Effective communication technique என்போம்.தன்னிடமிருந்த திரைப்படம் என்ற வலிமை மிகுந்த தொடர்பியல் சாதனத்தை 100 சதவீதம் ஆற்றலுடன் பயன்படுத்தி சிறுவர் முதல் பெரியவர் வரை தன் பக்கம் ஈர்த்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் !

இப்பதிவு... வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல் வரிசை 3 லிருந்து )

என் அன்புத் தலைவா தங்களின் புகழ் பல யுகங்களை கடந்தும் நிலைத்திருக்கும் வாத்தியாரே. நம் தங்கத் தலைவர் புரட்சித்தலைவரின் 104 வது பிறந்த நாள் இன்று 17.01.2021 அற்புதமான நன்னாளில் என் நெஞ்சம் நிறைந்து வணங்குகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...Sar.Swamin.........

orodizli
21st January 2021, 08:12 AM
மனிதநேயர் அரசு எம்.ஜி.ஆர் அரசு.
ஆனால் இன்று ?
இன்றைய நிலவரம் என்னவென்று பக்தர்கள் அறிவார்களா .மேற்கொண்டு படியுங்கள்.
நாகை தருமன் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர்.தலைவர் எம்.ஜி.அரின் மனம் கவர்ந்தவர்.இவர் தலைவரின் புகழ் பாடி பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அவற்றில் சில இத்துடன் பதிவு செய்துள்ளேன்.இவர் பொம்மை இதழில் தலைவர் புகழ்பாடி "பாரதரத்னா எம்.ஜி.ஆர் "எனும் தொடரை எழுதியவர்.புரட்சிதலைவரால் அண்ணா இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்.அவர் சென்னை பீட்டர்ஸ் காலனியில் குடியிருந்துவந்தார்.ஆனால் வயது மூப்பு காரணமாக படுக்கையில் தான் வாழ்நாளை கழித்து வருகிறார்.புனரமைப்பு என்ற போர்வையில் பீட்டர்ஸ் காலனி இடிக்கப்படுகிறது.அதனால் மாற்று இடம் அளிக்காமல் நாகை தருமன் வெளியேற்றப்பட்டார்.வேறு வீடு சென்று வசிக்க அவரது வயது மூப்பு இடம் தரவில்லை.என் செய்வது.
தலைவர் புகழ் பரப்பும் பணியில் இவரை வெல்ல முடியாது.அத்துணை பாசம் தலைவர் மீது வைத்திருந்தார்.தலைவரும் இவர் மீது பாசம் வைத்திருந்தார்.அதனால் பீட்டர்ஸ் காலனியில் இவருக்கு வீடு கொடுத்தார் தலைவர்.மனித நேயம் இந்த அரசில் கிடைக்குமா ? எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை நடத்தி இரட்டை இலை சின்னத்துடன் வலம் வரும் இந்த அரசு எம்.ஜி.அரின் கொள்கையான மனிதநேயத்தை கடைப்பிடிக்குமா ?.........vrh

orodizli
21st January 2021, 08:13 AM
குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின.

1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 42 ஆண்டுகளை நிறைவு செய்து 43 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.......

orodizli
21st January 2021, 08:16 AM
சாதனை!
சரித்திரம்!!
சகாப்தம்!!!
என்பது இதுதானோ?
மறைந்தும் சரித்திரம் படைக்கிறாரே
உலக தமிழர்களின் உண்மை தலைவன்..
இந்தியாவில் முதல் முறையாக வரும் நூறு ரூபாய் நாணயத்தில்
மக்கள் திலகம் எம். ஜி. ஆர் சிரிக்கும் முகம்...
தொடரட்டும் உங்களின் சாதனைகள் தலைவா........

orodizli
21st January 2021, 03:41 PM
மாலை மலர்....
சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார். எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார். எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன். ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார். ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன். எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார். உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன். இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார். நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன். எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.'' இவ்வாறு லதா கூறினார்....... Palaniappan Subbu

orodizli
21st January 2021, 03:42 PM
எம்ஜிஆர் பிறந்த நாள் பதிவு

#எம்_ஜி_ஆர்_படங்கள்!

#கண்ணதாசன்_பாடல்கள்!

எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.

இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய

‘அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிடர் உடமையடா!’

என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.

ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!

‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.

“அழகான பெண்மானைப் பார்!

அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

வாடாத ரோஜா – உன்

மடிமீதில் ராஜா!

மனமே தடை ஏனையா! – நிதம்

பொன்னாகும் காலம்

வீணாக லாமோ!

துணையோடு உலகாளவா!

என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!

“கண்ணின் கருமணியே கலாவதி – இசைசேர்

காவியம் நீயே!

கவிஞனும் நானே!”

என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,

“எண்ணம் நிறை வதனா – எழில்சேர்

ஓவியம் நீர் மதனா!”

“அன்பு மிகுந்திடும் பேரரசே!

ஆசை அமுதே என் மதனா!”

என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்

ஆடும் விழியிலே

ஆடும் விழியிலே! – கீதம்

பாடும் மொழியிலே!…”

இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.

“தேடிய இன்பம் கண்டேன்! இன்று

கண்ணா வாழ்விலே – உங்கள்

அன்பால் நேரிலே!…”

“ஸ்வாமி!

உன் அழகைப் பார்த்திருக்கும்

எந்நாளும் திருநாளே!

அலைபாயும் தென்றலாலே

சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!

கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு

வாழ்வது நமது சமுதாயம்!

மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்

மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்

தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

இவற்றுள்,

‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும் ‘கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறி’ என்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.

காலத்தை வென்ற பாடல்கள்!

‘அச்சம் என்பது மடமையடா!’

1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

“அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிடர் உடமையடா!

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!

தாயகம் காப்பது கடமையடா!”

என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

உண்மைதானே!

அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.

அவர்தானே,

‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.

நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

(திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)

1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.

(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).

மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!

தாயகம் காப்பது கடமையடா!”

என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!

தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?

“கனக விஜயரின் முடித்தலை நெறித்து

கல்லனை வைத்தான் சேரமகன்!

இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,

இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”

தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.

அடுத்து……!

“கருவினில் வளரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!

களங்கம் பிறந்தால் பெற்றவள மானம்

காத்திட எழுவான் அவள் பிள்ளை!

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர், மானம் காப்போர்,

சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”

கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?

சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?

மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!

இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.

உண்மைதானா? உண்மையே! உதாரணம்…. எம்.ஜி.ஆரே!..........nsm...

orodizli
21st January 2021, 03:42 PM
#மக்களின் #மனக்கண்ணாடி

பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுதவைத்தார்கள்.
அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடுநெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.

அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால்,கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குதெரியாதஅளவிற்கு அதிகமாக அவருக்குத்தெரியும்.
டைரக்ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.

வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு,எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்துகொள்ளுவார்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார்.

இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரி் கதை தான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.

இந்த மாதிரிப் பாத்திரங்களைஏற்றுக் கொண்டால்தான், மக்களிடையே மரியாதைஇருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும்,சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!

அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவரஅமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.

இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப்பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.

அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்டபழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்துஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.

நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும்ஆரம்பித்தோம்.

‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும்,எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலேஅவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.

அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர்கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்துநிலைத்து நிற்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்.”

மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும்ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம்,தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம்ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகியமூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில்சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும்மக்களின் மனமாற்றங்களை அறிந்து #வெள்ளித்திரையில் #வெற்றியை #எப்போதும் #காணமுடிந்த #நம்பிக்கை #நட்சத்திரமாய்த் #திகழ்ந்தவர்

#மக்கள்திலகம்
#ஒருவரே

#மக்கள்திலகம் பற்றி #கண்ணதாசன்..........bsm.........

orodizli
21st January 2021, 03:43 PM
கோப்புகளை கிடப்பில் போடாத எம்.ஜி.ஆர்., ஆட்சி
பதிவு செய்த நாள்: ஜன 16,2021 05:40

''சினிமாவில் மட்டுமின்றி, பொதுவாழ்விலும், மக்களுக்காகவே வாழ்ந்து காட்டியவர், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்.,'' எனக் கூறி, தன் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார், 'குழந்தை இலக்கிய செல்வர்' பி.வெங்கட்ராமன்.

வெங்கட்ராமன் மேலும் கூறியதாவது:இதழியல், இலக்கியம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில், 70 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.தற்போது, எனக்கு வயது, 86. என் அனுபவத்தில், சினிமா மற்றும் பொதுவாழ்வு ஆகிய இரண்டிலும், மக்களின் அபிமானத்தை பெற்ற தன்னிகரற்ற தலைவர் எம்.ஜி.ஆர்., தான்.

அவர் சினிமாக்களில், மக்கள் துயர் துடைக்கும் நாயகனாக நடித்தார். தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தாற் போல், பொதுவாழ்வில் அதே போன்ற நற்காரியங்களை செய்து காட்டினார்.அவரது ஆட்சியில் 'கோப்புகள் தேக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது' என, அப்போது அரசுப் பணியில் இருந்து என் நண்பர்கள் பலரும் சொல்வர். அவர்களின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை, நானே நேரில் கண்டபோது, எனக்கு வார்த்தை வரவில்லை.

தமிழக முதல்வராக, எம்.ஜி.ஆர்., சுற்றிச் சுழன்று பணியாற்றிய காலம் அது.நான், டி.வி.எஸ்., நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, எர்ணாகுளம் வந்த, எம்.ஜி.ஆரை, எர்ணாகுளம் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதைய அரசு செயலர் பரமசிவம், வலம்புரி ஜான் உள்ளிட்டோர் என் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில், 'கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான தமிழர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையிலிருந்து இங்குள்ள முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லாதது மிகவும் சிரமமாக உள்ளது' என, எம்.ஜி.ஆரிடம் முறையிட்டேன்.'ஆகட்டும் பார்க்கலாம்' என புன்முறுவல் பூத்து எங்களிடம் இருந்து விடைபெற்றார். அடுத்த ஒரே வாரத்தில், எர்ணாகுளம் உட்பட, கேரளாவின் முக்கிய பல நகரங்களுக்கு, சென்னையிலிருந்து நேரடி விரைவுப் பேருந்துகளை, எம்.ஜி.ஆர்., தலைமையிலான அரசு அறிவித்தது.

தமிழர்களுக்கு ஓர் பிரச்னை என்றால், சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுப்பவர், எம்.ஜி.ஆர்., என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சான்று. மவுனப்பட காலம் தொட்டே, சினிமா துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட, புதுக்கோட்டையை சேர்ந்த, ராஜா சாண்டோ பெயரில் திரைத்துறையினருக்கு விருதுகளை வழங்கினார். கத்திச் சண்டை, மல்யுத்தம் போன்ற கலைகளில் எம்.ஜி.ஆருக்கு ஆர்வம் ஏற்பட முன்னோடியாக திகழ்ந்தவர், பி.யு.சின்னப்பா.

சின்னப்பா, இறந்தபோது, அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு நேரில் சென்று, சின்னப்பாவின் குடும்பத்தாரிடம், எம்.ஜி.ஆர்., துக்கம் விசாரித்தார். மொத்தத்தில், கலைஞர்களை மதிப்பதிலும், மக்கள் குறை தீர்ப்பதிலும், எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழக அரசுக்கு பி.வெங்கட்ராமன் விடுக்கும் கோரிக்கைகள்:குழந்தை இலக்கியத்தில் பலருக்கும் முன்னோடியான, அழ.வள்ளியப்பாவை கவுரவிக்கும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த தெருவுக்கு, வள்ளியப்பா தெரு என பெயர் சூட்ட வேண்டும். அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், குழந்தைகள் பிரிவிற்கு, வள்ளியப்பா பெயர் சூட்ட வேண்டும். குழந்தை இலக்கிய படைப்பாளிகளுக்கு, வள்ளியப்பா பெயரில் விருது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பன்முகத்தன்மை!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பி.வெங்கட்ராமன், 15வது வயதில் இருந்தே சிறார் இலக்கியம் குறித்து எழுத ஆரம்பித்தார். 'டிங் டாங்' என்ற பெயரில், குழந்தை இலக்கிய இதழ் ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் விளங்கினார். சாலை விழிப்புணர்வு குறித்து, இவர் எழுதிய குழந்தைப் பாடல் மிகப் பிரபலம். ஆல் இந்தியா ரேடியோவில், மாவட்ட நிருபர், முத்தமிழ் மலர் ஆசிரியர், குழந்தை கவிஞர் பேரவை தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2018ம் ஆண்டு, பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் இருந்து, விருது பெற்றவர்........Venky

orodizli
21st January 2021, 03:44 PM
தொடர் பதிவு உ....த்தமன் 14
----------------------------------------------
"உ....த்தமனு"க்கு தொடர் HF போட வேண்டும் என்ற எண்ணம் அய்யனின் கைஸ்களுக்கு வர முன்னோடியாக இருந்த படம் ஜோஸப்பில் 1970 பொங்கலுக்கு வெளியான "மாட்டுக்கார வேலனே".
1970 ஜன 14 புதன்கிழமை வெளியான "மாட்டுக்கார வேலன்" புதன் வியாழன் 5 காட்சிகளும் வெள்ளி சனி ஞாயிறு 4 காட்சிகளும் தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள் எனவும் தெளிவாக பல வண்ணங்களில் போஸ்டருக்கு மேலே ஸ்லிப்பை ஒட்டியிருந்தார்கள்.

ஏதோ காட்சி நேரத்தை பார்த்து ரசிகர்கள் வருவார்கள் என்று நினைத்து ஒட்டினார்களோ என்னவோ?. ரசிகர்கள் வீட்டுக்கு சென்றால்தானே திரும்பிவர!. இரவுக்காட்சி டிக்கெட் விற்பனை முடியும்வரை தியேட்டரே பழியாக கிடந்தனர். திங்கள் வரை நடந்த அத்தனை காட்சிகளும் HF.
ஒவ்வொரு காட்சி முடிந்ததும் தட்டி போர்டை கழற்றி HF எண்ணிக்கையை ஒட்டி திரும்ப மாட்டுவார்கள். நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மு.பாலகிருஷ்ணனும் அடிக்கடி வந்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டி விட்டு செல்வார்.

இதற்கப்புறம் வந்த படங்களுக்கு தொடர் HF ஒட்டுவதில்லை.அந்தந்த காட்சிகள் HF ஆனால் போர்டு வைப்பார்கள், அவ்வளவுதான். "மாட்டுக்கார வேலன்" தொடர்ந்து 25 காட்சிகள் வரை HF
ஆகி தூத்துக்குடியில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது. 26 வது காட்சியாக செவ்வாய் கிழமை மாட்னி ஷோ வாக இருந்ததால் பொங்கல் லீவு முடிந்து அனைவரும் வேலைக்கு சென்றபடியால் மாட்னி ஷோவுக்கான ஷோபா டிக்கெட்களில் ஒரு 6 டிக்கெட்கள் மாட்டிக்கொண்டன.

அந்த டிக்கெட்டை கூட கிழிக்க முடியாமல் எம்ஜிஆர் ரசிகர்கள் பரிதாபத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அய்யன் படமாக இருந்திருந்தால் தொடர்ந்து100 HF. ஆக்கி ரிகார்டு கிரியேட் பண்ணியிருப்பார்கள். ஆனால் ஏழை எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அந்த எண்ணமும் கையில் காசும் கிடையாது. இதையெல்லாம் கண்ட அய்யன் ரசிகர்களின் தீராத வேட்கைக்கு தீனியாக கிடைத்த "உ...த்தமனை" விடுவார்களா?

அய்யனின் கைத்தடிகள். "உ..த்தமனு"க்கும் அதுபோல் தொடர்ந்து HF போட்டார்கள். 25 காட்சிகளை தாண்டி HF தொடர்ந்தது.
எத்தனை காட்சிகள் அரங்கை நிறைத்தார்களோ என் ஞாபகத்தில் இல்லை. அந்த சமயம் நான் மேற் படிப்புக்காக பாளையங்கோட்டை St. சேவியர் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் எனக்கு நடந்ததை நேரடியாக பார்க்க முடியவில்லை. சனி,ஞாயிறு நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதோடு சரி.

ஆனால் அதன்பிறகு ஸ்டெச்சர் பயன்படுத்தியும் பிணத்தின் வெயிட் தாங்காமல் கைபிள்ளைகள் திணற ஆரம்பித்தனர். கடப்புரத்தை ஒட்டிய பகுதியில் திரையரங்கம் அமைந்திருந்ததால் வடக்கயிறையும் பயன்படுத்தி இழுக்க முயற்சி செய்தனர். பெரிய பெரிய பணக்கார கைஸ்கள் முயற்சி செய்தும் நினைத்ததை முடிக்க முடிந்ததா?

அடுத்த பதிவில் நிறைவு பெறும்......KSR...

orodizli
22nd January 2021, 08:22 AM
#இன்றைய #தேவை

எம்ஜிஆர் போன்ற மனித நேயமிக்க தலைவர்களே! நாட்டிற்கு இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ‘டுவிட்டர்’ பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-

எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.

மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

#ஏழைகளைப்பற்றிய #அவரது #இந்த #கரிசனம் #என்னை #வெகுவாய் #அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது.

அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது...!.........bsm...

orodizli
22nd January 2021, 08:23 AM
சோவியத் ரஷ்யா கண்கொத்தி பாம்பாக உலகையே உற்று நோக்கி கொண்டிருந்த காலம் அது.

1977-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார்.

உடனடியாக ரஷ்யா எம்.ஜி.ஆரை பற்றிய தகவல்களை திரட்டியது.

சினனஞ்சிறு வயதில் தந்தையை இழந்து வறுமையான சூழ்நிலையில் தாயால் வளர்க்கப் பட்ட ஒரு மனிதன் உன்னத கலைஞானகவும் ஒப்பற்ற மக்கள் தலைவனாகவும் உருப்பெற்றதை பார்த்து வியப்படைந்தது சோவியத் ரஷ்யா.

உடனடியாக தனது இந்திய தூதரகம் மூலம் தங்களது நாட்டிற்க்கு சிறப்பு விருந்தினராக வருமாறு எம்.ஜி.ஆரை அழைத்தது.

எம்.ஜி.ஆரும் அழைப்பினை ஏற்று ரஷ்யா சென்றிருந்தார்.

சுற்றுப் பயண முடிவில் ரஷ்ய அதிபர் எம்.ஜி.ஆரிடம் " உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் " என்றார்.

" எனக்கு எதுவும் வேண்டாம்., தமிழ்நாட்டில் நிறைய குடிசை வீடுகள் கூரைகளாக உள்ளதால் தீப்பிடித்து எரிந்து விடுகிறது .ஓரளவுக்கு மேல் அரசாங்கத்தால் உதவி செய்ய முடியவில்லை.
முடிந்தால் அந்த கூரை வீடுகளை ஓட்டு வீடாக மாற்ற உதவி செய்யுங்கள்"...என்றார் எம்.ஜி.ஆர்.

ரஷ்ய அரசு உடனடியாக இந்திய அரசின் ஒப்புதலை பெற்று தமிழகத்திற்க்கு நிதி வழங்கியது.

சுவர்கள் உள்ள கூரை வீடுகளுக்கு ஓடுகள் மாட்ட மூவாயிரம் ஒதுக்கப்பட்டு கூரை வீடுகள் ஓட்டு வீடுகளாக மாறின.

பிற்பாடு கருணாநிதி ..இந்திரா..ராஜீவ் பெயரிலும் இப்போது உள்ள பசுமை வீடடுகள் திட்டத்திற்க்கெல்லாம் முன்னோடியாக இருந்ததவர் எம்.ஜி.ஆர்.......mj

orodizli
22nd January 2021, 08:23 AM
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .

இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .

மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .

ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''.........vsm...

orodizli
22nd January 2021, 08:24 AM
நடிகர் சிரஞ்சீவீ தான் முதல் முதலாக எம் ஜி ஆரை பார்த்ததை விவரித்தார் ஆந்திராவில் ஏதோ அதிகாரபூர்வ நிகழ்ச்சி முடிந்து விட்டு ஸ்டுடியோ பக்கம் வந்த எம் ஜி ஆரை பார்த்த போது ஒரு சுத்த தங்க கட்டி நடந்து வந்தது போல் இருந்தார் பிரபலமாகத நடிகனாக இருந்தபோதும் என்னை அன்போடு விசாரித்து உரையாடியதை மறக்க முடியாது

மலையாள நடிகர் ப்ரேம் நஸீர் தான் முதன் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி விவரித்தார் அன்று நான் சின்ன நடிகன் திருவனந்தபுரம் மெரிலாண்டு ஸ்டுடியோவில் படபிடிப்புக்காக வந்த போது ஒரே பரபரப்பு எம் ஜி ஆர் ராஜராஜன் என்ற படத்தின் படபிடிப்புக்கு வருகிறார் என்று அது வரை எம் ஜி ஆரை நேரில் காணத நானும் ஆவலுடன் காத்திருந்தேன் பத்து மணி அளவில் ஒரு ப்ளேன் முத்து கார் கார் வந்து நிற்க்க அதன் கதவை திறந்து கட்ஷூ போட்டு வெள்ளை வேட்டி கைகளை புஜம்வரை சுருட்டி வைத்து வாராத நிறைய சுருள் முடியோடுதங்க நிறத்தில் புன்சிப்போடு கை தொழுது நடந்து வந்த எம் ஜி ஆரை பார்த்து ஆண் ஆன நானே ஒரு கணம் மலைத்து விட்டேன் இத்தனை தேஜஸ் அழகுடைய மனிதன் உண்டா என்று

சரோஜா தேவி தான் முதல் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி கூறுகிறார்
துணை நடிகையாக கன்னடபடபிடிப்பில் இருந்தபோது அனைவரும் படபடப்போடு எழுந்து வணக்கம் சொல்ல நான் எதுவும் புரியாமல் பார்க்க தூரத்தில் ஆயிரம் சூரியன் ஒன்றாக வரும் பிரகாசத்தோடு ஒருவர் வர அனைவரும் வணங்க நான் பிரம்மிப்போடு வணங்கி நிற்க்க அவர் சென்ற பின் யார் இவர் என்று கேட்க இவர் தான் எம் ஜிஆர் என கூற நான் அதிர்வோடு நின்றேன்
அப்போது என்னை கவனித்த எம் ஜி ஆர் என்னை பற்றி விசாரித்து தன் சொந்த படமான நாடோடி மன்னன் படத்தில் நடக்க வைத்து எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை தந்தார் என் அன்பு தெய்வம் எம் ஜி ஆர்

எம் ஜி ஆர் கண்டவர் பிரம்மிக்க பழகியவர் பரவசம் கொள்ள
அறிந்தவர் வியக்க
அறிஞர்கள் வியக்க
ஆராட்சியாளர்கள் ஆராயிகிறார்கள் எம் ஜி ஆர் மனிதபிறவியா தெய்வபிறவியா என்று

வாழ்க எம். ஜி .ஆர் ., புகழ்... Arm...

orodizli
22nd January 2021, 08:24 AM
ஷாக் ட்ரீட்மென்ட்
----------------------------
எம்.ஜி.ஆர் ஒருவரை,,அதுவும் பத்திரிகையுலக ஜாம்பவான் ஒருவரை செருப்பால் அடித்தாரா?? அது என்ன கதை?? பார்ப்போமா?
சா.விஸ்வனாதன் என்னும் பிரபல பத்திரிகையாளர் அவர்!
உங்களுக்கு எளிதில் அடையாளம் தெரிய--
சாவி!!
எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய ஆனந்த விகடனில் தொடங்கிய இவரது எழுத்துப் பணி கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நீடித்தது!
ஒரு சினிமாவில் இவருக்கேத் தெரியாமல் இவர் நடித்திருக்கிறார்?
அதுவும் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தில்!
அவருக்கேத் தெரியாமல் அவர் எப்படி நடிக்க முடியும்??
அன்பே வா படப் பாடலான--
புதிய வானம் புதிய பூமி பாடல் ஷூட் ஆகும்போது இவரும் அங்கே ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருக்கும் போது சரியாக அந்த பாடல் ஷூட்டிங்கில் குளோஸப்பில் இவரும் சிக்கிக் கொண்டார்.
இன்றைக்கும்,,அப்பாடலைப் பார்த்தீர்கள் என்றால் --
அப்பாடல் காட்சியில் இவர் நடித்திருப்பது போல் தெரிவார்!
எழுத்தாளர் சாவி என்றாலே பத்திரிகையுலகில் இளமையும் ஜாலியும் நிறைந்தவர் என்று பேசப்படுவார்!
இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் நகைச்சுவையால் பின்னப்பட்டிருக்கும்!
இன்றைய ராஜேஷ்குமார்,,பட்டுக்கோட்டை பிரபாகர்,,சுபா போன்ற பல எழுத்தாளர்களை உருவாக்கிய பிரம்மா எனலாம் இவரை!!!
பெரியாரிஸத்தில் தீவிர பிடிப்புள்ள இவர் அன்றையக் காலக் கட்டத்தில் தீவிரமாக ஆதரித்த அரசியல் தலைவர்---?
கருணா நிதி??
முரசொலிக் குழுமம் குங்குமம் வார இதழைத் தொடங்கி அது வெற்றிகரமாக நடை போடுவதற்குக் காரணமே இந்த சாவி தான்!
இவர் தான் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்!
தம் எழுத்துலக அனுபவங்களாலும்,,திறமையாலும் அப்பத்திரிகையை சக்சஸ் ஃபுல் இதழாக மாற்றிய சாவி--சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ--
தேவையோ--தேவையில்லையோ--
அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை சகட்டு மேனிக்கு தம் பத்திரிகை மூலம் திட்டுவது அன்றைய சாவிக்கு சுவாரஸ்யப் பொழுது போக்கு??
அன்றைய முரசொலியை விட குங்குமம் வார இதழில் தான் எம்.ஜி.ஆர் மீதானக் கண்டனப் பதிவுகள் அதிகம் இடம் பெறும் என்றால் பார்த்துக் கொள்லுங்களேன்??
அந்த சமயத்தில் தான்--
குங்குமத்தின் கொட்டத்தை அடக்க--
மணியன் மூலம்--இதயம் பேசுகிறது பத்திரிகையும்-
வலம்புரி ஜான் ஆசிரியராக அங்கம் வகித்த --தாய்--வார இதழும் பவனி வரத் தொடங்கின!
எழுத்தாளர் சாவி,,குங்குமம் வார இதழின் ஆசிரியர் பணியைத் துறந்து--சாவி என்றப் பெயரிலேயே சொந்தமாகப் பத்திரிகை தொடங்குகிறார்!
அதிலும் வழக்கம் போல் எம்.ஜி.ஆருக்கு எதிராக--காச் மூச் தான்??
இந்த நிலையில் தான்--
சாவி பத்திரிகையில் வெகு திடீர் என்று அந்த அறிவிப்பு வெளி வருகிறது?
தோட்டத்திலிருந்து கோட்டை வரை!
முதல்வருடன் மூன்று நாட்கள்!!
சகலரும் அன்றையக் காலத்தில் அதிர்ந்து போன இதன்-பின்னணியில் தான் எம்.ஜி.ஆர்-
முன்னணியில் தெரிகிறார்!!
சாவி பத்திரிகை தொடங்கி சில இதழ்களில் கொஞ்சம் பொருளாதார நெருக்கடி அவருக்கு ஏற்பட--
கருணா நிதியிடம் உதவி கேட்டு இவர் செல்ல--
குங்குமம் பத்திரிகைக்கே ஆசிரியராக இரு. வேண்டுமானால் சம்பளத்தை உயர்த்தித் தருகிறேன் என்ற ஆணவமான பதில் கிடைத்திருக்கிறது?
ஒரு பண்பட்ட எழுத்துக் கலைஞனுக்கு இதை விட வேறு என்ன அவமானம் வேண்டும்??
முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஒரு கவர் ஸ்டோரி செய்தால் சர்க்குலேஷன் உயரும் என்ற நிச்சயத்தின் பேரில் -வெகுவாகத் தயங்கி--கூச்சப்பட்டு முதல்வர் எம்.ஜி.ஆரை அணுக--அவரோ--
உங்களை ஆணந்த விகடன் பத்திரிகையில் இருந்து தினமணி கதிர் பத்திரிகையைத் தொடர்ந்து வெகு காலம் நான் அறிவேன்.
என்னை எப்படி வேண்டுமானாலும் பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஒரு நிபந்தனை??
நான் பேட்டிக் கொடுக்கிறேனே என்று என்னை செயற்கையாகப் புகழக் கூடாது?
என்னையும் என் மந்திரி சபையையும் நியாயமான கண்னோட்டத்தில் எழுத வேண்டும்???
எழுத்தாளர் சாவி,,நெகிழ்ந்து போய் தமது நெருங்கிய சகாக்களிடம் இப்படிச் சொன்னாராம்--
வாழ்க்கைக்குத் தேவையான மனித நேயம்,,கருணா நிதியிடம் கொஞ்சங்கூட இல்லை என்பதை உணர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது!
அதை விட அதிர்ச்சி--
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் எனக்கு உதவியதுடன்--என் பத்திரிகை தர்மத்தை எனக்கு எடுத்துக் கூறி,,தன் பெருந்தன்மையால் என்னை செருப்பால் அடித்து விட்டார்???
என்ன தோழமைகளே? சாவியின் உணர்வு நியாயம் தானே???!!!...vtr...

|

orodizli
22nd January 2021, 08:25 AM
கலங்கரை விளக்கம்:
1958இல் அல்பிரட் ஹிட்ச்கொக்கின் வெர்டிகோ என்ற சைக்கோதிறில்லர் ஆங்கிலத் திரைப்படத்தை 1965ல் கே. சங்கர் கலங்கரை விளக்கம் என்ற கறுப்பு வெள்ளை திரைப்படமாக இயக்கி அமோக வெற்றி பெற்றார். (சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு, கதை - மா. லட்சுமணன், இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்).

கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் மனநிலை பாதிப்படைகிறார். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார். கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார்.

நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார்.

அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம். உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார்.

தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

4) இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடல்:

அமாவாசையானால் சித்தம் கலங்கி பிரச்சினை கொடுக்கும் நீலாவைக் குணப்படுத்த ரவி வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரச்சினைக்குள்ளான நீலா மலை உச்சிமீதேறி குதித்து தற்கொலை செய்யப் போகும் போது, ரவி சிவகாமி, சிவகாமி என அழைத்து தானும் நரசிம்ம பல்லவனாகி நீலாவைக் காப்பாற்ற இருவரும் பாடும் பாட்டே பொன்னெழில் பூத்தது புது வானில்.

பஞ்சு அருணாசலத்தின் முதற் பாட்டு. சரோஜா தேவி. பூமா தேவி, அவர் முகம் பூகோளம். அது அழும் போது உலகமே அழுகின்றது. சிரிக்கும் போது உலகமே சிரிக்கின்றது. சரணத்தில் நீலா,

ஆடலரசி சிவகாமியாகி, ரவியை நோக்கி வரும்போது, லோங் சொட்டிலிருந்து, குளொஸ் அப்புக்கு வரும்போது ரவி, நரசிம்ம பல்லவனாகி இருக்கையில், அவர்கள் இருவரின் அழகின் காலடியில் உலகமே விழுந்து

சிவகாமி..சிவகாமி....
ஒ ஓஓஓஓஓ

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...

ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,; அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலாம்.

Courtesy net...VSM...

orodizli
22nd January 2021, 08:25 AM
அன்பு எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கும் வளர்ந்து வரும் தலைவர் அனுதாபிகளுக்கும் ஆளும் அரசில் பங்குபெற்றும் எம்.ஜி.ஆர் பக்கமும் பேசி செயல்படும் நண்பர்களுக்கும் இந்த பதிவு;
அரசியல் தெளிவோம் கொஞ்சம் !
தலைவர் 1987ல் மறைந்தபிறகு கட்சிக்கு தலைமையேற்றும் ஆட்சியை நடத்தவும் ஒரு தலைமை தேவைப்பட்டது.தலைவரின் அரசியல் பாதையில் கூட நிழலாக பயணி த்தவர் ஜானகி அம்மையார்.தலைவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஜானகி அம்மையார் பின்புலமாக இருந்தார்.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வோமே அது மாதிரி.அதனால் தலைவர் மறைவுக்குப்பின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஜானகி அம்மையாரை பொறுப்பேற்க சொன்னார்கள்.அது படி நடந்தது.ஆனால் ஒரு பிரிவினர் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு அணியாக பிரிந்து இருந்தனர்.ஆக 97 சட்டமன்ற உறுப்பினர்களுடன் 7 பேர் அமைச்சர்களாக ஜானகி அம்மையார் முதல்வரானார்.இரட்டை இலை ஆட்சிதானே. யார் கவிழ்த்தார்கள்.ஜெ.ஜெ தலைமை வகுத்த அணிதானே. ஆக ஆட்சி கலைந்தது யாரால்.நாம் தான் தெரிந்து கொள்ளவேண்டும்.பின்னர் 1989ல் தேர்தல்.ஜா -ஜெ அணி போட்டி. 1975ல் ஆட்சியை இழந்த கலைஞர் வென்று 1989ல் முதல்வராகுகிறார்.இந்த சூழலை கண்டு மனம் வருந்தினார் ஜானகி அம்மையார்.எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி வலுவாக்கிட இரு அணியையும் இணைக்க ஜானகி அம்மையார் ஒருவரே தியாகம் பண்ணி ஒரே அணியாக உருவாக்கினார்.இரட்டை இலை பெற்றிட ஒப்புதல் கடிதம் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்தார்.சின்னமும் கிடைத்தது.கழகத்துக்கு தனது பெயரில் உள்ள ராயப்பேட்டை தலைமைக்கழக கட்டிடத்தை கட்சிக்கே தானமாக கொடுத்தார்.கட்சியின் இணைப்புக்கு ஒரு கோடி ருபாய் ஜெ அம்மையாரிடம் கொடுத்தார்.இந்த தியாக செயலை நெக்குறுக குறிப்பிடுகிறார் கே.ஏ.கே அவர்கள்.இதைப்பற்றி மாதவன் அவர்களும் ராசாராம் அவர்களும் மிகவும் பெருந்தன்மையாக ஜானகி அம்மையாரை பற்றி குறிப்பிடுகிறார்கள்.
மேற்குறிப்பிடும் தியாக செயலுக்காக ஜானகி அம்மையார் பெயரை தலைமைக்கழக கட்டிடத்துக்கு சூட்டிடவும் அவரது திருஉருவப்படம் தலைமைக்கழகத்தில் வைக்கவும் நாம் முறையிடுகிறோம்.நாம் ஒரு வலுவான காரணம் இல்லாமல் முயலுவதில்லை.ஆனால் இந்த வரலாறு தெரிந்தும் ஆளும் அரசு செவிசாய்க்கவில்லை.ஆனால் இன்னொரு பெண் முதல்வருக்கு 58 கோடியில் நினைவகம் கட்டுகிறது.ஏன் அ.தி.மு.கவின் முதல் பெண் முதல்வரை பாரா முகமாக இருக்குறீர்கள். ஆளும் அரசு அ.தி.மு.க 1972ல் இருந்து இன்று வரை வளர்ந்த பாதையில் பயணித்த கழக மூத்தோடிகளை கௌரவிக்கவேண்டும்.இந்த அரசு செய்யுமா ? எதிர்பார்ப்போம்.
நெல்லை எஸ்.எஸ்.மணி...

orodizli
22nd January 2021, 08:26 AM
எனது எண்ணங்கள்.........

தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.

இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.

கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.

எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.

இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.

இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.

அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.

அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.........vsm...

orodizli
23rd January 2021, 07:55 AM
ஒரு நடிகருக்கு ஒரு படம் 100 நாட்கள் ஓடி விட்டால் போதும், அவர்கள் மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்து விடும். ஆனால் அடுத்து வருகின்ற 100 நாட்கள் படத்துக்கு அவர்கள் சுமாராக 20 படங்கள் வரை காத்திருக்க நேரிடும். ஆனால் புரட்சி தலைவரின் படங்கள் தொடர்ந்து 8 படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடிய நிகழ்வை நாம் மிக சாதாரணமாக பார்க்கிறோம்.

இந்த அதிசயம் தமிழ்ப்பட வரலாற்றில் வேறு எந்த நடிகரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனையாகும்.. அதுவும் 1974 மற்றும் 1975 ம் வருடங்களில் வெளியான அத்தனை படங்களும் 100 நாட்களை தாண்டி ஓடியது ஒரு அற்புதமான சாதனையாகும். ஆனால் அய்யனுக்கோ, ஒரு மூன்று படத்தை 1972 ல் தொடர்ச்சியாக ஓட்டி விட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதை நாம் பார்க்கிறோம்.

அதிலும் "ஞானஒளி" சென்னையின் மிகச்சிறிய தியேட்டரான பிளாஸாவில் 100 நாட்கள் வடக்கயிறு போட்டு இழுத்து கொண்டு போனதை கண்டு தமிழ்நாடே கைகொட்டி சிரித்தது. ஆனால் அப்படி ஓட்டி விட்டு 1972 ல் நாங்கள்தான் என்று கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் குதிப்பதை பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. 1972 ல் "நல்லநேரம்" தான் அதிக தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடிய படம். ஒன்றிரண்டு சென்டர்களில் பணம் செலவழித்து அதிக வசூல் காட்டினால் அந்த ஆண்டின் சாதனை படமாகுமா?. "வசந்த மாளிகை"யும் "பட்டிக்காடா பட்டணமா"வும் 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரனை"யே வெல்ல முடியவில்லை.

மற்றொரு படம் பைலட்டில் படாத பாடு பட்டு 50 நாட்களை தாண்டி தனிமரமாக இழுத்துச் செல்லப்பட்ட படம். ஆங்கிலம் மற்றும் இந்தி படங்கள் திரையிடும் தியேட்டர் பைலட்டை குத்தகைக்கு எடுத்து கும்மியடித்து ஓட்டிய படம்தான் "தவப்புதல்வன்". பெயருக்கு ஏற்ற மாதிரி 100 நாட்கள் தவமிருந்து ஓட்டினாலும் முக்தா சீனிவாசன் வருத்தப்பட்டு எம்ஜிஆர் படத்தின் பெருமையை "இதயக்கனி" வெற்றி விழாவில் உண்மையை உணர்த்தினாலும் கைபிள்ளைகள் கலங்காமல் அடுத்தடுத்த படங்களை 100 நாட்கள் வடக்கயிறு போட்டு மகிழ்ந்தனர்.

1972ல் வெளியான "ஞானஒளி" மற்றும் "தவப்புதல்வன்" "தர்மம் எங்கே"? மூன்றுமே தோல்வி படங்கள் என்றாலும் "தர்மம் எங்கே"? படுதோல்வி படமாகும். "ராஜா"வும் "நீதி"யும் பாலாஜியின் பணத்தை கைஸ்கள் சிதறி விளையாடி ஓட்டிய படங்கள். அப்படியும் "நீதி"யை 100 நாட்கள் ஓட்ட முடியவில்லை. "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை" இரண்டும் மதுரை சென்னை மட்டும் ஓட்டி விட்டு மற்ற ஊர்களில் 50 நாட்கள் கூட ஓட தடுமாறிய படங்கள். 1972 ல் வசந்த மாளிகைதான் அதிக வசூலாம். கைஸ்கள் உளறுகின்றனர். "வசந்த மாளிகை" வசூலில் "ரிக்ஷாக்காரன்", "நல்லநேரம்" படங்களையே வெல்ல முடியவ்ல்லை.

"பட்டிக்காடா பட்டணமா" "வசந்த மாளிகை" எத்தனை ஊர்களில் 50 நாட்கள் ஓடியது என்று தெரிவிக்க முடியுமா? கைஸ்களே. அதைக்காட்டிலும் அதிகமாக எம்ஜிஆருடைய சாதாரண படங்கள் அதிகம் ஓடியதை நிரூபிக்க முடியும்.
அவர்கள் 50 நாட்களை பார்க்க மாட்டார்கள். எங்கே 100 நாட்கள் ஓட்டலாம் என்பதையே கணித்து ஓட்டுவார்கள். 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க 100 நாட்கள் ஓட்டி மகிழ்வார்கள்.

1974 ல் வெளியான
"நேற்று இன்று நாளை" "உரிமைக்குரல்" "சிரித்து வாழ வேண்டும்" 1975ல் வெளியான "நினைத்ததை முடிப்பவன்" "நாளை நமதே" "இதயக்கனி" "பல்லாண்டு வாழ்க" அதை தொடர்ந்து 1976 ல் வெளியான "நீதிக்கு தலை வணங்கு"
படம் வரை தொடர்ந்து 100 நாட்களும் அதைத்தாண்டி ஓடியும் தலைவர் ரசிகர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுவே அய்யன் படமாக இருந்திருந்தால் அண்டசாசரம் வரை கலக்கி அமெரிக்க அதிபரை கூட திரும்பிப் பார்க்க வைத்திருப்பார்கள் கைஸ்கள்.

இதில் "உரிமைக்குரலி"ன் வெற்றி தமிழ்ப்பட சரித்திர வெற்றி. அந்த வெற்றியை வார்த்தையால் விவரிக்க இயலாது. "இதயக்கனி"யின் வெற்றியும் சத்யமான வெற்றி. ஆமாம் சத்யத்தில் யாரும் வெல்ல முடியாத சாதனை வசூல் வெற்றியாகும். அடுத்து "பல்லாண்டு வாழ்க" "நீதிக்கு தலை வணங்கு" "நேற்று இன்று நாளை" ஆகிய படங்கள் வசூலிலும் சாதித்து காட்டியவை. நெல்லை பார்வதியில் வாழ்நாள் அதிக வசூலை பெற்ற படம்தான் "நேற்று இன்று நாளை". அதே போல் "பல்லாண்டு வாழ்க" பூர்ணகலாவில் 100 நாட்கள் ஓடி சாதனை வசூல் பெற்ற படமாகும். பூர்ணகலாவில் 100 நாட்கள் ஓடிய ஒரே படமாகும்.

"நாளை நமதே" சிவசக்தியில் தொடர்ந்து 60 காட்சிகள் வரை அரங்கம் நிறைந்தது. இலங்கையில் பல சாதனைகளை செய்து 100 நாட்களை தாண்டி ஓடி அபரிமிதமான வெற்றியை பதிவு செய்த படம். "நினைத்ததை முடிப்பவன்" தேவிபாரடைஸில் 101 காட்சிகள் தொடர் hf
ஆனாலும் படத்தை 100 நாட்கள் ஓட்டவில்லை. மாபெரும் வெற்றிப் படமான "நினைத்ததை முடிப்பவனை" தொடர்ந்து "நாளை நமதே" வெளிவந்ததால் மதுரையில் மட்டும் 100 நாட்கள் ஓடியது. இல்லையென்றால் சுமார் 7 திரையரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் கண்டிருக்கும்.

மீதி அடுத்த பதிவில்..........ksr...

fidowag
23rd January 2021, 08:04 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள்*மறு வெளியீடு தொடர்ச்சி ..........
இந்த வாரம் ( 22/01/21 முதல் ) வெளியான*படங்கள்*விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை - திருப்பரங்குன்றம் லட்சுமியில்* 23/01/21 முதல்* தென்னக
*ஜேம்ஸபாண்டாக* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ரகசிய போலீஸ் 115
தினசரி 2 காட்சிகள்,* சனி, ஞாயிறு 3 காட்சிகள்**நடைபெறுகிறது .


ராஜபாளையம் ஜெய் ஆனந்தில்* *ரகசிய போலீஸ் 115 தினசரி 4* காட்சிகள் .
இன்று முதல் (22/01/21)* நடைபெறுகிறது .


கோவை நாஸில்* எங்க வீட்டு பிள்ளை* தினசரி 4 காட்சிகள் .நடைபெறுகிறது .


சேலம் அலங்காரில்* அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*
வெற்றிகரமான 2 வது வாரம் .


திருச்சி அருணாவில்* *அடிமைப்பெண் தினசரி 4 காட்சிகள்*
வெற்றிகரமான இணைந்த 2 வது வாரம் .**

fidowag
23rd January 2021, 08:07 PM
ஆனந்த விகடன்*வார இதழ் - 27/01/21

நடிகர்*தனுஷ்*பேட்டி*

கேள்வி*:* உங்களுடைய படங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க* .நீங்க யாருடைய ரசிகர் ?

பதில் : எப்பவுமே நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்*.
இப்பவும் அவருடைய படங்களை*அவ்வப்போது பார்ப்பதுண்டு .*

orodizli
23rd January 2021, 11:01 PM
“எதையும் வெளிப்படையாகப் பேசுவதை எம்.ஜி.ஆர் ரசிப்பார்!”
- சோ
https://www.thaaii.com/?p=59759

ஒசாமஅசா தொடர் – 17 எழுத்தும், தொகுப்பும்; மணா

நான் துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்கிறபோது எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்.

“வேண்டாம் சினிமாவில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா என்னுடைய பல படங்களில் நீங்க இருக்கப் போறீங்க. ஏற்கனவே நீங்க உங்க நாடகத்திலேயே தி.மு.க.வை ரொம்பவும் கலாட்டா பண்றீங்க. பத்திரிகை ஆரம்பிச்சா இதெல்லாம் இன்னும் ஜாஸ்தியாப் போயிடும்.”

“ஆமாம் சார்… அப்படித்தான் வரும்.”

“அப்படியிருக்கும்போது பத்திரிகை ஆரம்பிக்கிறது நல்லதில்லை. உங்க சினிமா சான்ஸ் எல்லாம் கெட்டுப்போகும். இரண்டிலேயும் ஒரே நேரத்தில் காலை வைக்காதீங்க. ஏற்கனவே டி.டி.கே.வில் வேற நீங்க இருக்கிறப்போ இது தேவை தானா?” என்று எவ்வளவோ சொன்னார் எம்.ஜி.ஆர்.

அன்றைக்கு அவருடன் இருந்த ப.நீலகண்டனைப் போன்ற இயக்குநர்களும் பத்திரிகை துவக்குவதில் இருக்கிற பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்கள்.

நான் அவர் சொன்ன எதையும் கேட்காமல் பத்திரிகையைத் துவக்கியதில் அவருக்கு வருத்தம்தான்.

அவரைப்பற்றி நான் துக்ளக்கில் விமர்சித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்க மாட்டார். ஒருமுறை ‘துக்ளக்’கில் வெளியிட அவரிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.

“துக்ளக்கையே விமர்சனம் பண்ணி எழுதட்டுமா?” – என்றார்.

“சரிங்க சார்… எழுதுங்க”

“நான் எழுதினது அப்படியே வரணும்.”

“கண்டிப்பா அப்படியே வரும் சார்.”

அதன்படியே துக்ளக்கைப் பாராட்டியும், சிறிது விமர்சித்தும் மூன்று கட்டுரைகளை அவர் எழுதி துக்ளக்கில் அப்படியே வெளிவந்தது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அதற்குமேல் தொடர்ந்து அவரால் எழுத முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார்.

அவரிடம் நேரடியாக அவரையே கிண்டல் செய்து பேசினால் கோபப்படாமல் ரசிப்பார். இதே குணம் சிவாஜியிடமும் உண்டு. இவர்களைப் பற்றி வெளியே எங்கோ பேசுவதுதான் இவர்களுக்குப் பிடிக்காது.

எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ப.நீலகண்டன்தான் டைரக்டர். சினிமா விஷயத்தைக் கரைத்துக் குடித்த இயக்குநர் அவர். எம்.ஜி.ஆருக்கு அந்தக் காட்சியில் கொஞ்சம் நீளமான வசனம். நான் பதிலுக்கு “சரி” என்று சொல்ல வேண்டும். அவ்வளவுதான். இதுதான் காட்சி.

நான் “சரி” என்று சொன்னதும் ‘ஷாட்’ முடிந்தது.

“சோ.. நீங்க ‘சரி’ன்னு எப்படிச் சொன்னீங்க?” – நீலகண்டன் கேட்டார்.

“சரின்னு தானே சார் சொன்னேன்”.

“அப்படியில்லை.. சரின்னு அழுத்திச் சொல்லுங்க” – ‘சரி’யைச் சொல்லிக் காட்டினார் நீலகண்டன்.

இரண்டாவது டேக் எடுக்கப்பட்டது.

நான் “சரி”யை அழுத்திச் சொன்னபோது டைரக்டர் “கட், கட் அப்படியில்லை சோ..” என்றார்.

நான் சுதாரித்துக் கொண்டு எம்.ஜி.ஆரிடம் “இவர் என்னை விடப்போறதில்லை. இந்த சீனில் உங்க டயலாக் சரியா வரலை சார்.. அதை உங்க கிட்டே சொல்ல முடியாது. அதனால் என்னைப்போட்டு ‘சரி’ங்கிறதுக்காக இந்தப் பிழி பிழியுறார்.

சரிங்கிறதை இதைவிட எப்படி சார் சரியாச் சொல்லிற முடியும்? தயவு செஞ்சு உங்க டயலாக்கை ஒழுங்காச் சொல்லிடுங்க சார்?” – சிரித்துக் கொண்டே சொன்னேன்.

எம்.ஜி.ஆரும் சிரித்தார். ப.நீலகண்டனும் சிரித்தார். நேரடியாக நான் பேசியதை எந்த விதத்திலும் எம்.ஜி.ஆர். தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.

இன்னொரு படம் எம்.ஜி.ஆருடன் நடித்துக் கொண்டிருந்தேன். அதிலும் ப.நீலகண்டன் தான் டைரக்டர். ஷூட்டிங் நேரத்தில் என்னை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருப்பார் நீலகண்டன். அன்றும் அப்படித்தான்.

“என்ன சோ.. துக்ளக் பத்திரிகை எப்படிப் போயிட்டிருக்கு?”

“நல்லாப் போகுது சார்” – சொன்னேன். அவர் எதற்கோ பீடிகை போடுகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.

அவரே தொடர்ந்தார்.

“மஞ்சரி எப்படிப்பட்ட பத்திரிகை?”

“நல்ல பத்திரிகை சார்”.

“அதில் நல்ல விஷயங்கள் எல்லாம் வருமா?”

“வரும் சார்”.

“அதிலே வர்ற அளவுக்கு உருப்படியான விஷயங்கள் உங்க துக்ளக்கில் வருமா? மஞ்சரிக்கு என்ன விற்பனை?”

“விற்பனை குறைவுதான் சார்”

“அதாவது நல்ல சரக்குக்கு நாட்டில் நல்ல மதிப்பில்லை. துக்ளக்கிற்கு விற்பனை இருக்கிறது. அப்படித்தானே?” – சொல்லிவிட்டு என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்.

“ஆமாம் சார்… நல்ல படங்கள் நிறைய நாட்கள் ஓடுவதில்லை. ‘என் அண்ணன்’ நூறு நாட்கள் ஓடுகிறது” என்று நான் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.

பக்கத்தில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நீலகண்டனிடம் சிரித்தபடியே சொன்னார். “எதுக்கு சோ வாயைப் போய்க் கிளர்றீங்க?”

“எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணுமா? சிலதுக்குப் பதில் சொல்லாம விடக்கூடாதா நீங்க?” என்று நீலகண்டன் என்னிடம் திருப்பிக் கேட்க, அந்த உரையாடல் தமாஷாகப் போனதே ஒழிய, சீரியஸாகவிடவில்லை.

‘என் அண்ணன்’ எம்.ஜி.ஆர். நடித்த படமாக இருந்தாலும்கூட அவரும் நான் சொன்னதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு ரசித்தார். இது அவருடைய சுபாவம்.

ஒருமுறை நான் கலைஞரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்திப்பு குறித்த தகவல் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து அப்போது பரபரப்பாகி விட்டது.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். படம் ஒன்றின் வெள்ளிவிழா சென்னை ‘சில்ட்ரன்ஸ்’ தியேட்டரில் நடந்தது. விழாவில் நானும் கலந்து கொண்டேன்.

துவக்கத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., “இரண்டு நாட்களுக்கு முன்னால் சோ ஒருத்தரை சந்திச்சுட்டு வந்திருக்கார். கடுமையா விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்கிற ஒருத்தரை ஏன் இவர் சந்திச்சார்? என்ன பேசினார்ங்கிறதைத் தெரிஞ்சிக்க நீங்க எல்லாம் ஆர்வமா இருக்கீங்க.

சோ சட்டம் படித்தவர். அதனால் சட்டப்படி அவர் அதைச் சொல்லியாகணும்” என்று கூட்டத்தைப் பார்த்து சொன்னதும் ஒரே கைதட்டல். அதோடு என்னைப் பேசச் சொல்லிவிட்டார்.

நான் ஜனங்களைப் பார்த்தபடி மைக்கில் சொன்னேன்.

“இது உங்க கிட்டே சொல்லவேண்டிய விஷயமில்லை. நான் இவர் கிட்டேதான் சொல்லணும். அதுக்கேத்தபடி நான் இந்த மைக்கைத் திருப்பி வைச்சுக்கிறேன்” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்தபடி, “நான் சட்டம் படிச்சுருக்கிறதாச் சொன்னீங்க. நான் சட்டம் படிச்சவன்தான். அதனால் சட்டப்படி நழுவ வேண்டிய நேரம். அதனால் நான் சொல்ல மாட்டேன்!”

அதையும் ரசித்தார் எம்.ஜி.ஆர்.

(தொடரும்…)

orodizli
23rd January 2021, 11:02 PM
பதிவில் படத்தில் ஆந்திர மாநிலம் சித்தூரில் தனது சொந்த இடத்தில் உழைப்பில் நம் தலைவருக்கு அவர் எழுப்பி உள்ள தலைவர் சிலைக்கு வாழை தோரணம் கட்டி

104 வது பிறந்த நாளில் தன் எளிய குடும்பம் சூழ்ந்து கொண்டாடி மகிழும் அற்புத நிகழ்வு.

எல்லா நடிகர்கள் அரசியல் தலைவர்களுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் உண்டு..

ஆனால் நம் தங்க தலைவருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு.

இவர் பெயர் அவர் நடைத்தைக்கு ஏற்ப பொன்னப்பன்...
நன்றி பொன்னப்பன் அவர்களே.

நெற்றி வியர்வை நித்தம் நிலத்தில் விழுந்து உழைக்கும் வர்க்கம் உங்கள் செயல் போற்றி புகழ தக்கது.

எல்லா வளமும் சூழட்டும் உங்கள் வாழ்வில்...

உலக எம்ஜிஆர் மன்ற ரசிகர்கள் குழு தலை வணங்கி உங்கள் தலைவர் பக்தியை ஏற்று கொள்கிறோம்.

வாழ்க தலைவர் புகழ்.

என்ன ஒரு மகிழ்ச்சி அவர்கள் இல்லத்தில்.

Ever never again in the universe..
Mmm.ggg.rrr.............nmi

orodizli
23rd January 2021, 11:03 PM
எம்ஜிஆருக்கே இந்த நிலமை

உலக எம்ஜிஆர் ரசிகர்களே

நீங்கள் பார்க்கின்ற இந்த போட்டோ

எம்ஜிஆரின் நினைவு இடம்

இது கருணாநிதிஅவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்த காலத்தில்

முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவுப்படி

எம்ஜிஆர் சமாதிக்கு மேல் ஒரு குடையை வைத்தார்கள்

அதைப்பற்றிய கருணாநிதி அவர்கள் குறிப்பிடும் பொழுது

இந்த நாட்டு மக்கள் எம்ஜிஆர் அவர்களை கொடைவள்ளல் என்று அழைப்பார்கள்

எம்ஜிஆர் பலபேர்களுக்கு நிழலாக இருந்தார்

அதற்காகத்தான் என்னுடைய ஆட்சியில் எம்ஜிஆர் சமாதியின் மேல் ஒரு குடையை வைத்துள்ளேன் என்று விளக்கம் கூறினார்

1987 ஆண்டு எம்ஜிஆர் மரணம் அடைந்த பிறகு ஜானகி அம்மையார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பதவி ஏற்றார்
பதவி ஏற்றவுடன்

எம்ஜிஆர் சமாதியை அழகாக கட்டுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள கட்டிடக்கலை இன்ஜினியர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்

சிறந்த எம்ஜிஆர் நினைவு இல்லம் அமைப்பதற்கு வரைபடம் கொடுப்பவர்களுக்கு முதல் பரிசு

5 லட்சம் ரூபாய்

இரண்டாம் பரிசு மூன்று லட்சம் ரூபாய்

மூன்றாம் பரிசு இரண்டு இலட்சம் ரூபாய்

டெல்லியை சேர்ந்த 27 வயது கட்டிடக்கலை நிபுணர் இன்ஜினியர் ஒரு வரைபடத்தை சமர்ப்பித்தார்

ஒரிசாவில் உள்ள சூரியனார் கோயிலை போன்று எம்ஜிஆர் நினைவிடத்தை கட்டுவது அவருடைய திட்டம்

ஆண்டுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் வரும்

அந்த ஒரு நாள் மட்டும் ஒரிசாவில் உள்ள சூரியனார் கோயில்உள்ள

ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சூரியன் அமர்ந்திருக்கும் சிலை மீது

காலையிலிருந்து மாலை வரை சூரிய ஒளி படரும்

மற்ற எந்த நாட்களிலும் அந்த சிலை மீது சூரிய ஒளி படாது

இந்தக் கோயிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசாவில் கட்டி வைத்துள்ளார்கள்

அதை போலவே

எம்ஜிஆர் பிறந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதியும்

எம்ஜிஆர் அவர்கள் இறந்த டிசம்பர் 24ஆம் தேதியும்

இந்த இரண்டு நாட்களில் மட்டும்

எம்ஜிஆர் சமாதியின் மீது சூரிய ஒளி படுவதைப் போன்று இந்த கட்டடத்தை கட்டுவதற்கு மனு சமர்ப்பித்திருந்தார்

இந்த சமாதி கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று அந்த இன்ஜினியர் குறிப்பிட்டிருந்தார

அதை பார்வையிட்ட அதிகாரிகள் ஜானகி அம்மையார்

அந்த கட்டிடக்கலை இன்ஜினியர் கொடுத்த வரைபடத்தை தேர்ந்தெடுத்தார்கள்

அவருக்கு முதல் பரிசு ஐந்துலட்ச ரூபாய் கொடுத்தார்கள்

அந்தக் கட்டிடக்கலை நிபுணர் திட்டப்படி எம்ஜிஆர் சமாதியை கட்டுவதற்கு ஜானகி அம்மையாரின் அரசு முடிவு எடுத்தது

இந்த நேரத்தில் ஜெயலலிதா ஜானகி அம்மையாரின் அரசை கலைப்பதற்காக 30 எம்எல்ஏக்களை கடத்திவிட்டார்

அண்ணா திமுக வில் உள்ள மூத்த தலைவர்களும் மூத்த எம்எல்ஏக்களும் அமைச்சர்களும்

எம்ஜிஆர் சமாதி கட்டும் வரையில் இந்த ஆட்சி யை கலைத்து விடாதீர்கள் என்று எவ்வளவோ ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்

ஆனால் ஜெயலலிதா எம்ஜிஆரின் ஆட்சியை எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுகவிழ்த்து விட்டார்

இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்றார்

அவர் ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆர் சமாதியின் மீது ஒரு குடையை நிறுவினார்

அடுத்து ஜெயலலிதா ராஜீவ் காந்தியிடம் கூறி கருணாநிதி அவர்களின் ஆட்சியை கவிழ்த்தார்

தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்

ஜெயலலிதா முதலமைச்சராக வந்த காலத்திலிருந்து அவர் மரணமடையும் வரை

எம்ஜிஆர் சமாதியை ஜானகி அம்மையார் தயாரித்து வைத்திருந்த திட்டப்படி கட்டுங்கள் என்று

லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்கள்

நானும் மொத்தம் 85 முறை சர்டிபிகட்ஆப் போஸ்ட் மூலமாக கடிதம் எழுதினேன்

ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவே கிடையாது

ஜானகி அம்மையாரின் திட்டப்படி எம்ஜிஆர் நினைவு இல்லம் கட்டப்பட்டிருந்தால்

ஜனவரி 17ஆம் தேதியும்

டிசம்பர் 24ஆம் தேதியும்

எம்ஜிஆர் சமாதியின் மீது சூரிய ஒளி படுவதை பார்ப்பதற்காக இந்திய மக்கள் அனைவரும் சென்னை கடற்கரையில் கூடி இருப்பார்கள் அது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்திருக்கும்

பாவம் எம்ஜிஆர்

எம்ஜிஆரின் பழைய ரசிகர்கள் என்று சொல்லப்படுகிற டூப்ளிகேட் ரசிகர்கள்

இந்த விஷயத்தை பேசுவது கிடையாது
முகநூல் பதிவில் இதை கண்டிப்பதும் கிடையாது

பழைய எம்ஜிஆர் ரசிகர்கள்என்று சொல்லப்படுகிற அவர்கள் முகநூலில் ஏன் எம்ஜிஆர் சமாதியை திறம்பட கட்டவில்லை என்று பதிவு போடுவதும் கிடையாது

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள்

மழை நேரத்தில்ஒருவன். . ஒரு திண்ணையில் ஒதுங்கினான்

அந்த வீட்டின் உரிமையாளர் பரிதாபப்பட்டு திண்ணையில் உட்காரும்படி கூறியுள்ளார்

அந்த வீட்டின் உரிமையாளரை கையை பிடித்து வெளியேதுரத்திவிட்டு

வீட்டை அபகரித்துக் கொண்டான்

என்று பழமொழியை தான் நான் கேள்விப்பட்டுள்ளேன்

ஆனால் எம்ஜிஆரின் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்து விட்டது

பாவம் வாஜ்பாய் ஆட்சியையும் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார்...Pr.Mnk

orodizli
23rd January 2021, 11:03 PM
*MGR ஆட்சி ஒரு சாதனை சகாப்தம். *

அவர் ஆட்சி காலத்தில் 7 பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. வட்டங்கள் தோறும் பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது. ப்ளஸ் 2 பாட திட்டம் தொடங்கப்பட்டது.

மதுரையில் 5வது உலக தமிழ் மாநாடு நடத்தபட்டது. பெரியார் எழுத்து சீர்திருத்தம் அமுல்படுத்தபட்டது. கிராம தன்னிறைவு திட்டம் தொடங்கப்பட்டது. கிராமங்கள் தோறும் தாய் ~ சேய் நல விடுதிகள். சத்துணவு திட்டத்தின் மூலம் லட்சம் பேர்க்கு வேலை வாய்ப்பு. மகளிருக்கு தனி பேருந்து வசதி. காவல் துறையில் மகளிர். மகளிருக்கு தனி பல்கலை கழகம். கூட்டுறவு நூற்பாலைகள் ~ சர்க்கரை ஆலைகள். அமைப்புசார தொழிலாளர்களுக்கு ஊதிய விகித நிர்ணயம். புதிய காகித ஆலைகள்.வெடி மருந்து தொழிற்சாலை. ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள். சிமெண்ட் ஆலைகள். ஓசூர் ~ புதுக்கோட்டை பகுதிகளில் தொழிற்பேட்டை. சிறு குறு தொழில் தொடங்க முன்னுரிமை.

சோத்து பாறை அணை , சண்முகா நதி , நொய்யல் ஆறுகளின் குறுக்கே அணை. தென் மாவட்டங்களில் காற்றாலை மின் திட்டம். தூத்துக்குடி அனல் மின் நிலையம். காடம் பாறை புனல் மின் நிலையம். ஆம்புலன்ஸ் வசதியுடன் நடமாடும் மருத்துவமனை. கூட்டுறவு வங்கி மூலம் கிராம மகளிர்க்கு கடன் வசதி. ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் தட்டுபாடின்றி விநியோகம்.
குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி.

தொழில் அமைதி ~ சட்டம் ஒழுங்குக்கு முதலிடம். பால் உற்பத்தியில் இரண்டாம் இடம் பெற்றது. ஓவர் டிராப்ட் வாங்காத மாநிலம் என்று அன்றைய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் பாராட்டை பெற்றது. மக்கள் நல திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு மூலம் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதாக பிரபல பொருளாதார நிபுணர் அமாத்தியா சென் பாராட்டு பெற்றது. தனியார்கள் பல்கலை கழகம் ஆரம்பம். கல்வி முன்னேற்றம்.

திருத்தப்பட்ட பதிவு

Ithayakkani S Vijayan with #Venkat, France...

orodizli
23rd January 2021, 11:04 PM
நான் எம்ஜி ஆர் ரசிகன் மு க ஸ்டாலின் உரை
அ தி மு க கண்டனம்...

நான் தான் எம் ஜி ஆரின் நீட்சி
கமலஹாஸன் உரை

நான் எம் ஜி ஆர் ஆட்சியை தருவேன்
ரஜினி காந்து உரை

பொன்மனசெம்மல் வடிவை நரேந்திர மோடியை கண்டோம்
பி ஜெ பி (BJP)உரை

எந்த கட்சி ஜெயித்தாலும் அது எம் ஜி ஆர் வெற்றி

எந்த தலைவர் வென்றாலும் அது எம்ஜி ஆர் வெற்றி

எம் ஜி ஆர் புராண கணபதி போல் முதலில் எம் ஜி ஆர் வேண்டும் எல்லோர்க்கும் ...

வாழ்க எம். ஜி .ஆர் .புகழ்... Arm...

orodizli
23rd January 2021, 11:05 PM
உண்மையில் அவர்கள் அவ்வாறு கூறுவது பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் அவர்கள் மீது கொண்ட தரமான ஒரு நல்ல மதிப்பு காரணமாகும் ........... பொன்மனச்செம்மல் அவர்களை ஒரு அரசியல் தலைவராக அடையாளம் காணக்கூடாது .......।. அதையெல்லாம் தாண்டி அவர் வானத்தின் கீழ் பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒட்டுமொத்த மானிடர்களின் மானுட நல் வழி காட்டியவார்...... .புரட்சித் தலைவர் அவர்கள் தரத்துடன் வாழ்ந்து முடிந்த மாமனிதர் .......இன்றும் என்றும் அவர் மனித குலத்தின் நல்வழி காட்டி....... பொன்மனச்செம்மல் அவர்களின் பெயரை வானத்தின் கீழே பூமியின் மேற்பரப்பில் வாழும் யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்........... ஆனால் அவரை போல வாழ்ந்து காட்டுதல் அரிது ஆகும்......... ஆமாம் பகைவனை மன்னித்த பண்பாளர் அவர் .......... கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர் ........... வாழ்நாள் முழுவதும் தானதர்மம் செய்து வந்தவர் ........பசியென்று வந்தவர்க்கு புசி என்று கூறியவர் .........புரட்சித் தலைவர் அவர்கள் தனக்கு பிடிக்காதவர்களை ஒருபோதும் திட்ட மாட்டார்......... பழிச் சொற்களை கூறமாட்டார் .........வைதாரையும் வாழவைக்கும் உயரிய பண்பாளர் .........மாற்றுக் கருத்துக் கொண்ட மனிதர்கள் கூட புரட்சித் தலைவரை அவர் பெயரைச் சொல்கிறார்கள் என்றால் புரட்சித்தலைவரின் தரம் எவ்வளவு உயர்வானது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.......... இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் ........புரட்சித் தலைவர் பெயரை சொல்ல கூடாது என்று யாரையும் நாம் கண்டிக்கக் கூடாது ........புரட்சித்தலைவர் பெயரை சொல்பவர்கள் இறைவனின் பெயரை கூறுகிறார்கள்............... வைதாரையும் வாழவைக்கும் புரட்சித்தலைவரின் பண்புகளை நாமும் சொந்த வாழ்வில் கடைப்பிடிப்போம்.......... புரட்சித்தலைவரின் மனித வாழ்க்கை அனைத்து மனிதர்களுக்கும் ஒரு நல்ல பாடமாகும் ..........அவரையே முன்னுதாரணமாக சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் இம்மையில் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் பெருமையும் அடைந்து மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சம் பெறுவர் ........புரட்சித்தலைவர் நாமம் வாழ்த்துதல் வாழ்வாவதே......... ........... பொன்மனச் செம்மலின் நாமத்தால் இப்பூவுலகில் வாழும் சகல மனித இதயங்களையும் வாழ்த்துகின்றேன்........ வாழ்க வளமுடன்............Sri.Kan..

orodizli
23rd January 2021, 11:06 PM
பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே உணவு வழங்கும் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டது அந்த திட்டத்தை மேலும் மெருகூட்டி அதற்கென்று ஒரு தனி துறையையே ஒதுக்கி அதனுடன் மேலும் சத்துப் பொருட்களும் சேர்த்து சத்துணவாக புரட்சித்தலைவர் அளித்து ஏழை குழந்தைகளை பசியின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றினார் ...... புரட்சித் தலைவர் அவர்களின் இந்த மனிதநேய தன்மை சரித்திரத்தில் மறக்க முடியாத ஒன்றாகும் ..........பொன்மனச் செம்மல் அவர்களிடம் எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தது......... அதை பற்றி கூறுவதற்கு இன்றைய உலகில் யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது முக்கியமாக எனக்கு கிடையவே கிடையாது பத்து ரூபாயை 10 முறை எண்ணிப் பார்க்கும் எனக்கு புரட்சித் தலைவரை பற்றி பேசும் தகுதி கிடையாது .........புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் இம்மண்ணில் நீடூடி வாழும்........... பதிவிட்ட சகோதரராகிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்............ வாழ்க வளமுடன்.......Sri.Kan

orodizli
23rd January 2021, 11:07 PM
“மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.!”
- என்.எஸ்.கே.நல்லதம்பி
https://www.thaaii.com/?p=61589
*
எஸ்.பி.அண்ணாமலை

ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர் என்.எஸ்.கே.நல்லதம்பி.

மக்கள் திலகத்திற்கு கலைவாணருக்கும் இடையே நெருங்கிய உறவு தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது. 1935 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தான் தமிழில் வெளிவந்த படங்கள் தயாராகின. அதில் பலவற்றை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

நாடக நடிகர்கள் தான் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நடிகர்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நடிகர்களுக்கான வீடுகள் ஸ்டூடியோ வளாகத்திலேயே இருந்தன. கலைவாணர், பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். போன்ற கலைஞர்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றனர்.

கலைவாணர் மீது ஈர்ப்பும் பாசமும் மக்கள் திலகத்திற்கு அந்த காலகட்டத்திலேயே உருவாகியது என்று குறிப்பிடலாம். கலைவாணரும் மதுரம் அம்மாவும் தங்களுடைய நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனைக்குரிய கருத்துக்களாலும், பாடல்களாலும் புகழ்பெறத் தொடங்கிய காலகட்டம் அது.

தன்னுடைய நண்பர், ஆலோசகர், வழிகாட்டி என்ற வகையில் மக்கள் திலகம் கலைவாணரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். “எனக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் நான் தேடிச் சென்று ஆலோசனை பெற்றது கலைவாணர் இடம் தான்!” என்று மக்கள் திலகம் கூறியுள்ளார்.

கலைவாணரும் எம்.ஜி.ஆரால் பெரிதும் கவரப்பட்டார். கலைத்துறைக்கு அப்பாற்பட்டு இருவருக்குமிடையே இருந்த புரிதல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

கலைவாணர் சினிமாவில் கூறும் கருத்துக்களும் பாடல் வரிகள் மற்றும் காட்சி அமைப்புகளும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதைக் கூர்ந்து கவனித்த மக்கள் திலகம், “வெற்றி பெற்ற இந்த அணுகுமுறையைத் தம் வாழ்நாள் முழுவதும் திரைப்படங்களிலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நடிகர்களாகிய நமக்கு வரும் பணம் என்பது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்து வருவது. அது திரும்பவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும்” என்பது கலைவாணரின் கருத்து. அவர் கடைபிடித்த இந்தக் கொள்கை தன்னை வழிநடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

1957 ஆம் ஆண்டில் கலைவாணர் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் எங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவர் எங்களுடைய கல்வி, திருமணம் என்று எல்லா நிலைகளிலும் இன்றியமையாத பங்காற்றினார்.

நான் பள்ளிப் படிப்பு முடித்து மைசூர் மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் பொரியியல் படிப்பதற்கு தேவையான கேபிடேஷன் பீஸ் ரூபாய் 3000 கட்டி என்னுடைய பொறியியல் கனவை நனவாக்கினார் பொன்மனச்செம்மல்.

1967 – ல் அவர் கொடுத்து உதவிய அந்தத் தொகை, தற்போது பல லட்சங்களுக்கு சமமாகும். அழியாத கல்விச் செல்வத்தை எனக்கு தந்தவர் வள்ளல் எம்.ஜி.ஆர்.

“செல்வம் நிலையானதல்ல. ஆனால், கல்வி நிலையானது!” என்று நான் கல்லூரிக்குச் செல்லும்போது வாழ்த்தியது இன்றளவும் மறக்க முடியாதது. எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் திலகம் காட்டிய பரிவு, பாசம் என்பது, காலம் கலைவாணர் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றே தோன்றுகிறது.

1976-ல் எனது திருமணமும் மக்கள் திலகத்தாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அப்போது வாழ்த்திப் பேசியபோது அவர் குறிப்பிட்டார், “மணமக்களாகிய உங்களை ‘அவர்களைப் போல இருங்கள்… இவர்களைப் போல இருங்கள்’ என்று வாழ்த்துவதை விட, நல்ல மனிதர்களாக வாழுங்கள் என்று வாழ்த்தவே விரும்புகிறேன். அதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான பாதையாகும்!” என்றார். அவருடைய வாழ்த்துரை என்றும் என் மனதில் உள்ளது.

நாகர்கோவிலில் கலைவாணர் கட்டிய மதுர வனம் இல்லம், 1959-ல் ஏலத்துக்கு வந்தது. அந்த வீட்டிற்கான பணத்தைக் கட்டி, வீட்டை எங்கள் குடும்பத்திற்கு மீட்டுத் தந்த வள்ளல் பொன்மனச்செம்மல்.

சென்னை வாலாஜா சாலையில் இருந்த பாலர் அரங்கம் கட்டடம் 1971-ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் முதல் நிகழ்ச்சியாக என்னுடைய சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் புரட்சித் தலைவர். திருமணத்தில் அவர் பேசும்போது, “இந்த அரங்கம் கலைவாணர் பெயர் தாங்கி பெருமை சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களால் அப்போதே ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயரிடப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் திகழும் கலைவாணர் அரங்கம், காலம் முழுவதும் என் தந்தையாரின் பெயர் தாங்கி நினைவுச் சின்னமாகத் திகழ்வது எங்கள் குடும்பத்திற்கு பெருமை தரக்கூடியதாகும்.

மேலும் பெருமை தரக் கூடிய செயல், கலைவாணர் பிறந்த நாகர்கோவிலில் 1967-ல் மக்கள் திலகம் தன்னுடைய சொந்தச் செலவில் கலைவாணரின் முழு உருவச் சிலையை நிறுவியது புரட்சித் தலைவரின் பேருள்ளத்தைக் காட்டுகிறது.

ஏழைப்பங்காளனாக, வள்ளலாக, கருணையுள்ளம் கொண்டவரான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் இடம் பெற்றிருக்கும்.

நன்றி: 27.01.2021 தேதியிட்ட குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரை.............

orodizli
23rd January 2021, 11:10 PM
முழு மனதுடன் கலப்படமில்லாத சுத்தமான இதயத்துடன் தாங்கள் கூறிய அனைத்து கருத்துகளையும் ஆமோதிக்கிறேன் ............அந்த சினிமா நட்சத்திரங்கள் புரட்சித் தலைவர் அவர்களைப் பற்றி கூறியது உண்மைதான்.......... இதயசுத்தியுடன் அந்த நட்சத்திரங்கள் அவ்வாறு கூறி இருக்கிறார்கள்.....।. மற்ற நட்சத்திரங்கள் கூறாமல் இருக்கின்றார்கள்...... மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.............. பொன்மனச்செம்மல் அவர்களிடம் மற்ற மனிதர்களிடம் இல்லாத ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலாத முடியாத ஒரு வசீகர காந்த சக்தி உண்டு ..........அது இறை தூதர்கள் மற்றும் அவதார புருஷர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள் இவர்களை படைக்கும் போதே இறைவன் கூடவே அவர்களிடம் இந்த காந்த சக்தியை வழங்கி விடுவார் ................பரம்பொருளால் வழங்கப்பட்ட காந்த சக்தி அது அவர்கள் மரணம் பரியந்தமும் அவர்களை தொடரும்......... .. அவர்களிடம் இருக்கும்..............உயிரியல் மின்காந்த சக்தி என்று அதற்கு பெயர்............. வெட்ட வெளியில் இருந்து இந்த காந்த சக்தி அவர்கள் இந்த மண்ணுலகில் வாழும் கடைசி தருணம் வரை அவர்களுக்கு வந்துகொண்டே கொண்டே இருக்கும்.......... பாசிட்டிவ் ஆரோ என்று இவற்றை கூறுவார்கள்........ பகவான் புத்தர் பெருமான்.......... பகவான் இயேசுகிறிஸ்து ..........பகவான் வர்த்தமான மகாவீரர் ..........பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ..........பகவான் ஸ்ரீ வள்ளலார் ராமலிங்க அடிகள் .........பகவான் ஸ்ரீ மகாத்மா காந்தியடிகள் .............பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் ............. ஸ்ரீமதி இந்திராகாந்தி ...........இவர்களிடம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு விவரிக்க முடியாத ஒரு காந்த சக்தி இருக்கும்............ அவர்களின் எதிரே அமர்ந்து இருப்பவர்களை அல்லது அவர்களின் புகைப்படங்களையும் அவர்களின் நினைவுகளை சுமப்பவர்களை. அந்த காந்த சக்தி தன் வசமாக்கி வசியப்படுத்திக் கொண்டு விடும் .............பிரபஞ்ச மண்ணுலகில் இது உண்மைதான் .........முழுமைபெற்ற காந்தசக்தி புரட்சித்தலைவர் அவர்களிடம் இருந்தது............ என்றென்றும் புரட்சித்தலைவர் நாமம் இம்மண்ணுலகில் நிலைத்து நிற்கும் ...............அவர் காலத்தை வென்றவர் ...............அந்த புண்ணியவானை ஒரு அரசியல்வாதி என்ற கோணத்தில் நான் அணுகவில்லை............... அவரை ஒரு கட்சித் தலைவர் என்ற அளவில் அவரை நான் அவரின் எல்லைகளை வரையறுத்து அவரை சுற்றி வட்டமிட விரும்பவில்லை................. வானத்தின் கீழ் பூமியின் மேற்பரப்பில் உள்ள சகல மனிதர்களுக்கும் அவர் ஒரு மானுட குல நல் வழிகாட்டி.........இம் மானுடம் உய்ய பிறந்த மகாத்மா அவர். ஆவார்....... ............ வாழ்க வளமுடன் .........என்றென்றும் புரட்சி தலைவர் அவர்களின் நினைவில் உங்களில் ஒருவன். வி. ஸ்ரீனிவாசன்..........
பதிவிட்ட சகோதரருக்கு நன்றி............. புரட்சித்தலைவரின் நாமத்தால் அந்த சகோதரரை வாழ்த்துகின்றேன் .।.............. ஆசீர்வதிக்கிறேன்............Sri.Kan

orodizli
23rd January 2021, 11:13 PM
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே .........இலங்கையில் அவருக்காக சிலையே வடித்தவர் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்கள் ........துரதிஷ்டவசமாக புரட்சித்தலைவரின் புத்திமதிகளை அவர் பின்பற்ற மறுத்துவிட்டார் .......அதுதான் அவரின் வீழ்ச்சிக்கு காரணம் ........பொன்மனச்செம்மல் அவர்கள் யாருக்கு உபதேசம் செய்தாலும் அது அவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்காது ....அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும்........ பொன்மனச்செம்மல் அவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவர்கள் வழங்கிய மரியாதை மிகப்பெரியது........ ஆச்சரியமானது ........நான் எனது வாழ்க்கையின் பின்பற்றும் பின் தொடரும் முதல் மனிதராக இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலத்தில் முதலமைச்சராக உள்ள எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் எம் . ஜி. ராமச்சந்திரன் ., அவர்களையே நினைக்கின்றேன்....... என்னுடைய திரை வாழ்விற்கும் எனது மானசீக ஆசிரியர் மானசீக குருநாதர் அவர்தான் .......எனது அரசியல் பொது வாழ்விற்கும் எனது மானசீகமான ஆசிரியர் மானசீக குருநாதர் அவர்தான் .......அவரை நான் மதித்து போற்றுகிறேன்......... அவரின் காலில் விழுந்து வணங்குகின்றேன்...........
....... எமது இதயத்தின் மிக உயர்ந்த பீடத்தில் அவர் இருக்கின்றார்......... இவ்வாறு அவர் பகிரங்கமாக பட்டவர்த்தனமாக பேட்டி கொடுத்தார்...... அது அனைத்து நாளிதழ்களிலும் வந்தது ........ ரொனால்டு ரீகன் அவர்கள் கூறியது. அவரின் ஆத்மார்த்தமான வார்த்தைகள் ஆகும்..।.... இதய சுத்தியுடன் கூறப்பட்ட புனிதமான வார்த்தைகளாகும்............ நமது புரட்சித் தலைவரின் பெருமை இம் மண்ணுலக முழுவதும் பரவி இருந்தது என்பதற்கு இது ஒரு ஆதாரம் ஆகும் .......... இம் மண்ணுலகை இம்மண்ணுலகில் மணற்பரப்பை ஆள்பவர்கள் ஏராளம் ஏராளம் .......மனித இதயங்களின் மனப் பரப்பை ஆட்சி செய்பவர்கள் வெகு சிலரே ........ அந்த வெகு சிலரில் புரட்சித்தலைவர் அவர்களும் ஒருவராவார் ...........நான் நீண்ட காலமாக கூறி வருகின்றேன் .....।.புரட்சித் தலைவர் அவர்கள் ஒரு அவதார புருஷர் என்று ........அது உண்மை என்பதை இப்போது பலரும் உணர்கின்றார்கள் ........வாழ்க வளமுடன்.............. Srinivasan Kannan

orodizli
24th January 2021, 03:45 PM
சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த ஆய்வு மையம்...
chief-minister-palanisamy-inaugurated-center-for-research-on-mgr-at-madras-university...
சென்னை
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது .
இம்மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
''முதல்வர் இன்று (22.01.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் கடந்த 7.09.2018 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைர விழா ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது, "சென்னைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.
அந்த வகையில், இப்பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினைக் குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்றும், இம்மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அறிவித்தார்.

தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பை ஆராயும் முதல் உயர்கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக இம்மையம் விளங்கும். மேலும், எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த பத்து ஆண்டுகளில் அவர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிர்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாகவும் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள், எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரை வரலாற்று ரீதியில் ஆராய்தல், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட மேம்பாடுகளை ஆராய்தல், எம்.ஜி.ஆர். பெண்கள், நலிவுற்றோர், பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு ஏற்படுத்திய திட்டங்கள், அவற்றின் வெற்றி பற்றி ஆராய்தல், பொது நிர்வாகத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு குறித்து ஆராய்தல் போன்ற ஆய்வுப் பணிகள் இந்த ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...........Baabaa...

orodizli
24th January 2021, 03:49 PM
"சூரியன் உதித்ததுங்கோ இங்கே காரிருள் மறைந்ததுங்கோ" இந்த வரிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் நீக்குவது தவறு. எம்ஜிஆர் எதையுமே தீர்க்கமாக பார்த்து தான் செய்வார். அவர் அனுமதி இல்லாமல் பாடல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு காட்சியும் அவர் திரைப்படங்களில் இடம் பெற்றது கிடையாது. எம்ஜிஆரை புரிந்து கொள்ளாதவர்கள் மனப்பாங்கு இது. சூரியன் என்றால் என்ன தி.மு.க.வோ அல்லது கருணாநிதியோ கிடையாது. எம்ஜிஆர் மட்டும்தான்.ஓயாது உழைப்பதில் சூரியனாக இருப்பவரும் அவரே, ஒவ்வொரு வீட்டிலும் சந்திரோதயம் ஆக இருப்பவர்அவரே. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்த உடன் பாமர மக்களின் அறியாமை, துன்பம் என்ற இருள் நீங்கி ஒளிவீசும் என்பதாகும். பின்னால் வரும் வரிகளை கவனிக்கவேண்டும் சரித்திர மாறுது இனிமே சரியா போகும். இது மட்டுமல்ல இந்த நான்கு வரிகளும் சர்வ சாதாரணமாகவே கேட்டவுடனே தெரிந்து விடுமே எம்ஜிஆர் தீர்க்கதரிசி என்பது. இன்னும் இது போல் எத்தனையோ சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரை நன்கு புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான்அரசியல் பிரச்சாரங்களின் போது,நம்நாடு திரைப்படத்தில் உள்ள இந்தப் பாடலில் இந்த வரிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பினார்கள், அடிமைப்பெண் திரைப்பட பாடலை ஒளிபரப்பும் போது ஓயாது உழைப்பதில் சூரியன் நீ என்ற வரிகளை நீக்கி விட்டு ஒளிபரப்புகிறார்கள்.நாடோடி மன்னன் டிஜிட்டல் திரைப்படத்தில் நம்ம திராவிட குலமே என்று தொடங்கும் ஏழு நிமிடம் பாடலை வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள் வருக வருக வேந்தே என்று, எங்கள் திராவிட சூரியனே என்றெல்லாம் சிறப்பாக வரும் பாடல் அது. அதுமட்டுமல்ல 2014 ஆம் ஆண்டு டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும், எம் என் நம்பியார் எம்ஜிஆரை பார்த்து சொல்வார் வாள் சண்டையின் போது, நீ அணையப் போகும் சுடர், அஸ்தமித்த சூரியன் என்று, அதற்கு எம்ஜிஆர் அவர்கள் அஸ்தமித்த சூரியன் அடுத்த நாளே உதயம் ஆவான் என்று சொல்லி சண்டை போடுவார். இதையும் வேண்டுமென்றே கட் செய்துவிட்டு தான் எடுத்தார்கள். இதெல்லாம் தீர்க்கதரிசனமாக உங்களுக்கு தெரியவில்லையா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இந்த காட்சி எடுக்கப்பட்டபோது 64 65 இருக்கும்அந்த நேரத்திலெல்லாம் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்தபோது சூரியன் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் பலவாறாக பேசிக்கொண்டிருந்தார்கள் , அப்படி இருக்கையில் அண்ணாவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி உதய சூரியனை ஒளிர செய்தவர் எம்ஜிஆர். அதனால் தீர்க்கதரிசி இறைவன் எம்ஜிஆரை உண்மையாகப் புரிந்து கொண்டு அவர் வழி நடப்பவர் புனிதமானவர். தீர்க்கமாக பார்த்து நல்வழி நடவுங்கள். தவறு ஏதும் இருந்தால் அடியேனை மன்னித்துக் கொள்ளுங்கள். வாழ்க எம் ஜி ஆர் புகழ்! வாழ்க எம் ஜி ஆர் பக்தர்கள்..........s mm

orodizli
25th January 2021, 08:00 AM
தொடரின் இறுதி பதிவு. உ...த்தமன் 15

நீங்க ஆரம்பத்திலேயே நினைத்திருக்கலாம். "உத்தமனு"க்கு ஏன் உ போட்டு நிறைய புள்ளிகள் வைத்து பின் எழுத வேண்டிய காரணத்தை யோசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.படத்தின் உள்ளும் புறமும் இழுவையின் தன்மையை குறிப்பால் உணர்த்தவேதான் இந்த புள்ளி சமாசாரம்.

படத்தை யாரும் தனியாக சென்று பார்த்துவிட முடியாது. அப்படி ஒரு அறுவை என்று சொல்ல கேள்வி. . நானும் இந்தப்படத்தை பார்க்கவில்லை. ஆனால் அதன் இந்திப்பதிப்பு ஆ கலே லகு ஜா வில் சசிகபூர், ஷர்மிளா டாகூர் அசத்தலாக நடித்திருப்பார்கள். கதைக்கு ஏற்ற பொருத்தமான ஜோடி மற்றும் அளவான நடிப்பால் படம் வெற்றி மகுடத்தில் ஜொலிக்கும்படி அமைந்திருக்கும்.

ஆனால் "உ....த்தமனை" பார்த்தவர்கள் படம் அய்யனும் மஞ்சுளாவும் அருவருப்பாக நடித்ததாக சொன்னதும் படம் பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
ஆனால் கைபிள்ளைகள் அதை எப்படி கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை அய்யன் தன் கைபிள்ளைகளை மனச்சிதைவு ஏற்படுத்தி விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

நல்ல கதையை அய்யன் தனது மிகையான கசாப்பு நடிப்பை பயன்படுத்தி கொத்தி குதறுவதை பார்த்த உண்மை ரசிகர்கள் மனம் பதைத்து வெதும்புவதை காணமுடிந்தது. இதனால் அய்யனின் நடிப்பை ஒதுக்கி தள்ளி விட்டு வேறு சின்ன சின்ன நடிகர்களின் படங்களை பார்க்க ஆரம்பித்தார்கள். அய்யனின் மிகை நடிப்பை பார்த்து மனம் வெறுத்தவர்கள், இளையவர்களின் இயற்கை நடிப்பில் மனம் நெகிழ்ந்து அய்யனை உதறி தள்ளி விட்டு சென்று விட்டார்கள்.
அய்யனின் எதிர்காலத்தை அவரே சிதைத்துக்கொண்டு மூலையில் போய் ஒதுங்கி விட்ட பிறகு எனக்கு அரசாங்கம் விருது கொடுத்து கெளரவிக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்தார்.

அப்படியிருந்தும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கட்சி செய்த உதவி என்று நினைக்காமல் பிரதமர் பதவி கொடுக்கவில்லையே என்கிற மாதிரி ஏக்கம் வேறு. தற்போது வந்த "வியட்நாம் வீடு" அவரது தீவிர ரசிகரான சுப்புவை எங்கே கொண்டு போய் விட்டதோ தெரியவில்லை. படத்தில் அவர் போடும் கூச்சல் பக்கத்து குடும்பங்களையும் சிதைத்து விடும் அளவுக்கு இருக்கும். பட்டாசு இத்தனை டெசிபல்தான் ஒலி எழுப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பர்கள் அய்யனின் அலறலுக்கு டெசிபல் நிர்ணயித்தால் தியேட்டருக்கு வருபவர்கள் நிம்மதியாக உறங்கவாவது வழி பிறக்கும். பாதி தூக்கத்தில் அய்யனின் அலறல் ஒலி கேட்டு பயப்பட தேவையில்லை அல்லவா கைஸ்களே.

சரி "உ....த்தமனு"க்கு வருவோம். படத்தை என்ன செய்தும் நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்ததும் படத்தை 50 வது நாளில் கீழே போட்டு விட்டு ஓடிப் போயினர். அவர்கள் கனவு கலைந்து போனது. ஆனால் அந்தப் பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
அந்தப்பக்கம் போனவர்களை எல்லாம் பிடித்து தியேட்டருக்குள் போட்டதால் அந்தப் பக்கம் டிராபிக் குறைந்து வெறிச்சோடி போனது. இந்தக் காலத்தில் டிராபிக்கை கட்டுப்படுத்த கொரானா பயன்பட்ட மாதிரி அந்தக்காலத்தில் அய்யன் படங்கள் மூலமாகத்தான் டிராபிக்கை கட்டுப்படுத்தியிருப்பார்கள் போல தெரிகிறது.

படத்தை தூக்கியபிறகுதான் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவ்வளவு செய்தும் "உத்தமன்" வசூலை வெளியிட மறுத்து விட்டனர். கடல்கடந்து படத்தை ஓட்டிய படத்தின் கப்ஸா வசூலை அளந்து விட்டவர்கள் எல்லாம் உள்ளூரில் ஓட்டிய "உ....த்தமன்" வசூலை வெளியிட தயாரா? அதுதான் பட்டறை போட்டாகி விட்டதே?, பின்னர் என்ன தயக்கம் கைஸ்களே?

இந்த கத்தல் நடிகனின் முத்தல் நடிப்பில் கதிகலங்கி சித்தம் தடுமாறிய அநேகர் மக்கள் திலகத்தின் ரசிகர்களாக மாறியதால்தான் மக்கள் திலகம் நம்பர் ஒன் நடிகராக மக்கள் மனதில் கொலுவிருந்தார் என்று கூறலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் சிறந்த நடிகராக இறுதி வரை திரையுலகில் வலம் வந்தார் என்று சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

அது மட்டுமா? அவருடைய இயல்பான நடிப்பில் பல விருதுகள் பெற்ற படங்களை பார்க்கலாம். அகில இந்தியாவிலும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்து மத்திய அரசின் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற "மலைக்கள்ளன்". மிகச்சிறந்த படம் என்று உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் விருது பெற்ற "நாடோடி மன்னன்"

சென்னை வெகுஜன சினிமா ரசிகர் சங்கத்தால் சிறந்த படம் என்ற விருது பெற்ற "எங்க வீட்டுப் பிள்ளை"
தமிழக அரசால் சிறந்த படம் என அறிவிக்கப்பட்ட "காவல்காரன்" தயிழகத்திலேயே சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட "குடியிருந்த கோயில்" சிறந்த படம் என்று பிலிம்பேர் விருது பெற்ற "அடிமைப்பெண்"அகில இந்தியாவிலும் சிறந்த நடிகர் என்று பாரத் விருது பெற்ற "ரிக்ஷாக்காரன்"
என்று சொல்லிக்கொண்டே போகலாம். எந்தவித கத்தலும் கதறலும் இன்றி தெளிந்த நீரோடை போன்ற நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அத்தனை புரட்சி நடிகரின் படங்களும் விருதுக்கு தகுதியான படங்களே.

பதினைந்து வாரங்கள் தொடர்ந்து வந்த இந்த பதிவை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி.

தொடர் இத்துடன் நிறைவடைந்தது.
நன்றி வணக்கம்..........ksr.........

orodizli
25th January 2021, 08:00 AM
The definition of grandeur in cinema has changed drastically over the decades. Ambitious filmmakers world over have been pushing the envelope when it comes to enriching our big-screen experience by making expensive and visually spectacular movies. Recently, Hollywood filmmaker Christopher Nolan revealed that he crashed an actual Boeing 747 filming a sequence for his upcoming movie Tenet.
Back home in the 60s, merely showing a landing Air India passenger aircraft made a movie a large-scale production. And if the aircraft was shown in 16mm Eastmancolor film, the experience just got bigger.
AVM Production’s Anbe Vaa was one of the early colour films of Tamil cinema. It was a modern big-budget movie that established a template for future big-budget movies. There is also a noble intent behind the film’s extravagant production. Back in the day, this movie could have been the closest many members in the audience would have come to experience air travel, picturesque mountainous landscape, sprawling mansion and the lifestyle of a man who comes from money. Cinema still remains a dream portal through which many see exotic locations across the world and experience things that they may not be able to do in their lifetime.
Loosely inspired by Come September (1961), Anbe Vaa (1966) starred legendary MG Ramachandran. The screenplay by A. C. Tirulokchandar, who also helmed the movie, is a case study for how one can spin a star-vehicle without undermining the need for a strong script and logic.
MGR plays a young business magnate called J Balasubramaniam aka JB. The hectic work schedule starts affecting JB’s well-being. And to restore balance in his life, he decides to take a vacation. Man’s gotta have some fun, yo.
Cut to the next scene, JB arrives in Shimla. And he celebrates the break from his stressful life by singing the iconic “Pudhiya Vaanam” through the streets of Shimla. Wait, he is a rich businessman, but why is he walking the streets like a vagrant? Where are the expensive cars?
The first thing that JB notices soon after he deboards the train at Shimla is nobody is waiting for him to chaperone him to his mansion. He is visibly irritated. And he picks up a telephone at the railway station and calls his staff at the mansion. But, the guy who picks up the phone is a self-obsessed, cocky and money-minded newcomer who lacks basic manners and hangs up the call without knowing who is on the other end of the telephone: it is the big boss. Hence, JB had to walk home.
Maybe Tirulokchandar could have easily chosen to ignore this plot continuity and right away jumped into the first song. Well, he would have known that nobody would complain as long as they get to see MGR sprinting through hilly roads. But, no. As a writer, Tirulokchandar stayed loyal to his material and did not overlook the importance of cause and effect in his screenplay. The entire narration seamlessly develops and moves forward so organically.
The protagonist in Anbe Vaa wants to have fun and get away from his mechanical life. So he assumes an alternate identity as Balu and even tolerates Ramaiah (a wonderful Nagesh) who mistreats him without knowing his actual identity. JB plays well-meaning pranks on Geetha (B. Saroja Devi), and challenges her in good spirit. And he never vows to teach the woman a lesson by putting her in her place. He wins over everyone by his charm and good behaviour. In the meantime, the audience also learns new information about JB in every scene. He is not just a workaholic but also a fun-loving person who does not take his wealth and social status seriously. He plays golf, and he is kind, chivalrous, strong and can throw a punch if need be.
Tirulokchandar never deviates from the plot to accommodate unwanted things to serve MGR’s image. Imagine, if MGR broke into a song in Anbe Vaa that spoke about revolution, instead of pleasures of twist dance, test match and blessings of youth. Or as a side gig, he fought corrupt politicians and cops when he was not busy playing pranks on his girlfriend.
Tirulokchandar’s discipline and focus are what many big-budget, star-vehicles lack today....Baabaa

orodizli
25th January 2021, 08:02 AM
ஆமாம் தானே?
-------------------------
எம்.ஜி.ஆர் தான் 2016 வரைக்கும் ஆண்டு கொண்டிருந்தாராமே என்று முக நூலில் எவரோ நக்கலாகக் கேட்டிருந்தார்களாம்?
அதன் பாதிப்பில் பிறந்தது தான் இந்தப் பதிவில் நாம் கேட்கும் இந்தக் கேள்வி!
முக நூல் வாட்ஸ்-அப் இப்படி இனி எந்த அரசியல் கட்சிகளின் தலையெழுத்தையும் எழுதப் போவது கம்ப்யூட்டர் தான். அதாவது--
கணினி தான் பிரதானம் என்னும் போது--
கணி--நீ அ.தி.மு.கவின் வெற்றியை என்று கேட்டால்--
அ.தி.மு.கவின் ஆட்சிக் கட்டிலில்--
ஜெ டாட் காம்--
ஓ.பி.எஸ் டாட் காம்
எடப்பாடி டாட் காம்
நாளை வேறொருவர் டாட் காம்--
இப்படி யூஸர் ஐ.டிக்கள் மாறினாலும்
அவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும்-பாஸ் வோர்ட்--
எம்.ஜி.ஆர் 07 டாட் காம் மட்டும் தானே??
சரியா தப்பா என்றக் கேள்விக்கே இடமில்லாத படி
சரியாதப்பா உன் செல்வாக்கு!!
ஆம் அல்லது இல்லை--நீங்கள் அலசுங்கள்.........vtr.........

orodizli
25th January 2021, 08:08 AM
எம் ஜி ஆருக்கு அப்படி ஒரு நிலை வர கூடாது இறைவா
எஸ் . என்.லட்சுமி ...

"தொழிலாளி", "விவசாயி " போன்ற பல படங்களில் எம் ஜி ஆரின் தாய் ஆக நடித்தவர் எஸ் என்.லட்சுமி தன் ஆரம்பகால சம்பாதியத்தை சேர்த்து வைத்து ஒரு வீடு கட்டுகிறார் முக்கால் பாகம் முடிந்தது மீதி கட்ட பணம் இல்லை எவரிடமும் பணம் கேட்கும் குணம் இல்லாதவர் அதனால் வீடு அப்படியே நிற்க்க இப்படி விட்டால் பாழகிவிடும் என்று தன் உற்ற தோழிடம் கூறுகிறார் இது எப்படியோ எம் ஜி ஆர் அறிய நேரிட ஒரு நாள் வரலட்சுமி வீட்டிற்க்கு ஒருவர் வந்து சின்னவர் தரசொன்னார் என்று ஒரு பணபொட்டலத்தை கொடுத்து விட்டு செல்லுகிறார் பணத்தை திகைப்போடு பெற்று கொண்ட வரலட்சுமி நிற்க்க வீடு செய்யும் மேஸ்திரி வந்து எம் ஜி ஆரிடம் இருந்து பணம் வந்ததாக வீடு உடனே முடிக்க சொல்லி எம் ஜி ஆரிடம் இருந்து உத்தரவு வந்ததை கூற பணம் பொட்டலத்தை பிரிக்காமலே அவர் கையில் கொடுக்கிறார்

எவரிடமும் பணம் பெற விரும்பாத குணம் உடைய நான் உடனே புறபட்டு எம் ஜி ஆரிடம் சென்று உங்களுக்கு எதற்க்கு இந்த சிலவு என்று கூற
அம்மா உங்கள் குணம் எனக்கு தெரியும் இப்போது உங்களுக்கு பணம் தேவை அது என்னிடம் இருக்கு தருகிறேன் இன்னொரு முறை எனக்கு பணம் தட்டுபாடு வரும் போது தாருங்கள் வாங்கி கொள்கிறேன் என கூறி என்னை உண்ண வைத்து அனுப்பினார்
நான் உடனே இறைவனிடம் இந்த நல்ல உள்ளம் படைத்தவருக்கு அந்த நிலையை உருவாக்காதே என உளமாற இறைவனை வேண்டினேன்

அள்ள அள்ள குறையாத அட்ச பாத்திரம் எம் ஜி ஆரின் கொடை

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........

orodizli
25th January 2021, 08:11 AM
எனது எண்ணங்கள்

தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.

இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.

கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.

எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.

இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.

இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.

அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.

அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்..........

orodizli
26th January 2021, 07:46 AM
முதல் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் போட்ட முட்டுக்கட்டைகள்

-சித்ரா லட்சுமணன்

“முதலில் நீ பெண்ணைப் பார். உனக்குப் பிடித்தால் கல்யாணம் பண்ணிக் கொள். இல்லையென்றால் மதியம் ரயிலிலேயே நாம் மதராஸ் போய்விடலாம்” என்று சொல்லி ஒரு புறம் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்திய அவரது தாயார் மறுபுறத்திலே அன்று நடைபெறவிருந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் செய்தபடி இருந்தார்.

பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏழெட்டு வீடுகள் தள்ளி அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீடு இருந்தது. எம்.ஜி.ஆர் தங்கியிருந்த அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் அந்த வீடு நன்றாக தெரியும். அங்கே மணப்பந்தல் போடப் பட்டிருந்ததையும் அந்தக் திருமணத்தில் எந்த பிரச்னையும் இல்லாததுபோல அங்கே உற்சாகமாக பலர் நடமாடிக் கொண்டிருந்ததை தையும் தனது அறையிலிருந்து பார்த்த எம்.ஜி.ஆருக்கு தன்னுடைய திருமணத்தை எப்படியும் நடத்தி முடித்து விடுவது என்ற முடிவில் தன்னுடைய தாயார் இருப்பது லேசாக புரியத் தொடங்கியது

.ஆகவே தன்னுடைய திருமணத்தைத் தடுத்து நிறுத்த தன்னுடைய அண்ணன் சக்ரபாணி ஊரில் இல்லாததை ஒரு ஆயுதமாகப் பயன் படுத்திக் கொள்ள முடிவெடுத்த அவர் “கடைசியாகக் கேட்கிறேன். இந்தத் திருமணம் பற்றி உன்னுடைய முடிவு என்ன?” என்று அவரது தாயார் கேட்டபோது அண்ணன் இல்லாமல் எப்படி என்னால் திருமணம் செய்துகொள்ள முடியும்” என்ற கேள்வியை தன்னுடைய தாயாரின் முன்னே வைத்தார்.

தன்னுடைய தாயிடம் தான் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் மதராசிலிருந்து புறப்பட்டால் கூட தனது அண்ணனால் பாலக்காட்டிற்கு வந்து சேர முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும் என்பதால் திருமணத்தைத் தள்ளிப் போட மிகப்பெரிய உத்தியை பயன் படுத்தி விட்டதாக அவர் தன்னுடைய மனதளவில் ஆனந்தம் அடைந்தார்.

ஆனால் அவர் அப்படி சொல்லி முடித்த அடுத்த நிமிடமே அவருடைய திட்டத்தை ஒரு கடிதத்தின் மூலம் தவிடு பொடியாக்கினார் அவரது தாயார்
“நானும் உங்க அண்ணனும் சேர்ந்துதாண்டா இந்த ஏற்பாட்டினை செய்தோம்” என்று சொன்ன அவர் தனது மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்

“தாங்கள் சொன்னபடி தங்கள் கடிதம் கிடைத்ததும் ராமச்சந்திரனை அனுப்பி வைக்கிறேன். விரைவில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவும் செய்து விட வேண்டாம். அவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆகவே நன்கு யோசித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யவும் “என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் சக்ரபாணி.

அந்தக் கடிதத்தை தன்னுடைய தாயாரிடமிருந்து வாங்கிப் படித்த எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்ன செய்வது என்று சிறிது நேரம் புரியவில்லை. திருமணத்தை தடுத்து நிறுத்த அடுத்து என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் யோசிக்கத் தொடங்கியபோது அவருடைய மனதுக்குள் இன்னொரு யோசனை பளிச்சிட்டது .

சில காலம் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்து இருந்ததால் கதர் ஆடைகள் மீது எம். ஜி. ஆர் அளவில்லா விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவரது தாயாருக்கோ அவர் கதர் ஆடை அணிவது சுத்தமாகப் பிடிக்காது.இனி நீ கதர் ஆடைகளை அணியக்கூடாது என்று பல முறை எம்.ஜி.ஆரைக் கண்டித்திருக்கிறார் அவர்.ஆகவே தன்னுடைய திருமணத் தைத் தடுத்து நிறுத்த அந்தக் கதர் ஆடைகளையே ஒரு ஆயுதமாக பயன் படுத்த முடிவெடுத்த அவர் “இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் நான் கேட்கும் ஒரு விஷயத்துக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று தன்னுடைய தாயாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.எப்படியாவது அந்தத் திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்த சத்யபாமா அம்மையார் எம். ஜி. ஆரின் நிபந்தனை என்ன என்று கூட அவரிடம் கேட்காமல் "எந்த நிபந்தனை என்றாலும் ஏற்றுக் கொள்கிறேன் "என்று கூறிவிட்டார்.

அவர் அப்படிச் சொன்னவுடன் “இந்த திருமணத்தின் போதும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி நான் கதர் ஆடைகளைத்தான் அணிவேன்.அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால் இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக் கொள்கிறேன்”என்ற எம்.ஜி.ஆர் தான் அப்படிச் சொன்னவுடன் தன்னுடைய தாயின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்று எதிர்பார்த்தார் .

ஆனால் அவரது தாயாரோ ஒரு கணம் கூட யோசிக்காமல் "நீ விருப்பப்படும் உடைகளை அணிந்து கொள்ளலாம் .நான் எந்தத் தடையும் சொல்ல மாட்டேன்"என்றார்
அவ்வளவு எளிதாக தன்னுடைய நிபந்தனையை தாயார் ஏற்றுக் கொண்டுவிட்டதும் “பெண்ணைப் பார்க்காமலே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டோமே”என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது.

ஆனால் தான் மணக்கவிருந்த பெண்ணைப் பார்த்தபோது அவர் அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தனது தாயின் காலில் விழுந்து வணங்கிவிட்டு மணமகளின் வீட்டுக்குப் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்ததும் அங்கே இருந்த ஒரு பெரியவர் "பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள்" என்று உரத்த குரலில் உத்தரவிட்டார் .அவர் அப்படி குரல் கொடுத்தவுடன் தன்னையும் அறியாமல் எம்.ஜி.ஆர் தலையைக் குனிந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் அங்கே ஏற்பட்ட சலசலப்பிலிருந்து மணப்பெண் வந்து கொண்டிருக்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது.

அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்ப்பதா இல்லை பார்க்காமல் இருப்பதா என்று என்று ராமச்சந்திரன் தனது மனதிற்குள்ளே விவாத மேடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது "இந்தத் துணியை அந்தப் பெண்ணிடம் கொடு"என்று சொல்லியபடி ஒரு சேலையை எம்.ஜி.ஆரின் கையில் கொடுத்தார் அவரது மாமா.புடவையைக் கொடுக்கும்போது எப்படி பெண்ணைப் பார்க்காமல் இருக்க முடியும்?ஆகவே தலையை நிமிர்த்தி லேசாக அந்தப் பெண்ணைப் பார்த்தார் ராமச்சந்திரன்.

அந்தப் பெண்ணைப் பார்த்த அடுத்த நிமிடம் அவரது கண்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் அப்படியே நிலை குத்தி நின்று விட்டன.

அந்தப் பெண் அந்த புடவையை வாங்கிக் கொண்டு திரும்பிப் போனதற்குப் பிறகுதான் தனது பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்பினார் எம்.ஜி.ஆர் .

ஆனால் அப்போதும் அந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து அவர் முழுமையாக விடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு பெண் இவ்வளவு சிவப்பாகக்கூட இருக்க முடியுமா என்று தனது மனதுக்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டார் அவர்.எம். ஜி. ஆரே அப்போதுதான் மலர்ந்த ரோஜா மலரைப் போல செக்கச் சிவப்பாக இருக்கக் கூடியவ்ர் .அப்படியிருக்க அவரே அந்த மணப்பெண்ணின் நிறத்தைப் பார்த்து அந்த அளவிற்கு பிரம்மித்துப் போனார் என்றால் அந்த மணமகள் எப்படிப்பட்ட நிறத்தில் இருந்திருப்பார் என்பதை நாம் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்

ஒல்லியாக இருந்தாலும் தனது உயரத்துக்கு ஏற்ற உருவம் பெற்றிருந்த அந்த மணமகளின் தலை முடி முழங்கால் வரை நீண்டிருந்ததையும், அவரது கண்களுக்கு அபாரமான ஈர்க்கும் சக்தி இருந்ததையும் பார்த்த எம். ஜி. ஆர். மிரண்டு போனார்.

அந்தத் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்க பல உத்திகளைக் கையாண்ட அவரது தாயார் ஒரு முறை அந்தப் பெண்ணை அவரது கண் முன்னே ஒரு முறை காட்டியிருந்தார் என்றால் அடுத்த நிமிடமே மறு வார்த்தையின்றி அந்தப் பெண்ணின் கழுத்திலே அவர் தாலியைக் கட்டியிருப்பார் என்பதுதான் உண்மை.அந்த அளவிற்கு அந்த மணப்பெண்ணின் அழகு எம். ஜி. ஆரை ஈர்த்திருந்தது.

திருமணம் முடிந்து அன்று இரவு தனியறையில் இருந்தபோது"என்னை உனக்குப் பிடித்திருக்கா ?'என்று தனது மனைவி பார்கவியிடம் எம். ஜி. ஆர் கேட்டபோது கடைக்கண்ணால் அவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தரையைப் பார்த்தார் பார்கவி.

"நல்லா இருக்கேனா இல்லையா என்று பார்க்கிறியா?"என்று அவரைப் பார்த்து எம்.ஜி.ஆர் மீண்டும் கேட்டபோது "என்ன இருந்தாலும் அவளோடு ஒப்பிடும்போது உன்னை அழகன் என்று சொல்ல முடியாது " என்று ராமச்சந்திரனின் உள் மனது அவருக்குக் கூறியது

"கற்பனையில் துவங்கி நினைவில் நிலைத்து விடுவதுதானே இல்லற வாழ்க்கை.ஆனால் எங்களைப் பொறுத்தவரை அந்த முதலிரவு கற்பனையோடு நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது " என்று தன்னுடைய முதலிரவு அனுபவத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் வெளிப்படையாகக் குறிப்பட்டிருக்கிறார் எம் ஜி ஆர்

திருமணம் முடிந்ததும் எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவி பார்கவியை மதராசுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். எம்.ஜி.சக்ரபாணி, அவரது மனைவி, எம். ஜி. ஆர்,அவரது மனைவி பார்கவி.அன்னை சத்யபாமா ஆகிய அனைவரும் கூட்டுக் குடும்பமாக வால்டாக்ஸ் சாலையில் தங்கி இருந்தனர்.

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையிலே அசைவம் இல்லாமல் அவருக்கு சாப்பாடு இறங்காது.ஆனால் அவரது மனைவியான பார்கவிக்கோ அசைவ வாடையே ஆகாது. வீட்டில் அசைவம் சமைக்கின்ற நாட்களில் ஏறக்குறைய பட்டினியாகவே இருந்து விடுவார் அவர்.

மனைவிக்கு அசைவம் ஆகாது என்பதால் பல நாட்கள் சைவ சாப்பாடே போதும் என்று கூட சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்

அப்படி ஈருடல் ஒருயிர் என்று வாழ்ந்த அந்தத் தம்பதிகளை அவர்களுடைய திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே நிரந்தரமாக பிரித்து வைத்து காலம் கண்ணாமூச்சு ஆடியது....Baabaa

orodizli
26th January 2021, 07:48 AM
#மக்கள்_திலகத்தின்_ப்ளாக்பஸ்டர்

#படகோட்டி.

எத்தனையோ கடலும் கடல் சார்ந்த திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வந்தாலும், அத்தனைக்கும் மைல்கல் #படகோட்டி ஒன்றே.இந்த படத்தில் மீனவர் சமுதாயத்தை படமாக பார்க்க வைக்கவில்லை இயக்குநர் டி.பிரகாஷ் ராவ், மாறாக படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களையும் மீனவ மக்களோடும்-மீனவர் தலைவனாய் வரும் மக்கள் திலகத்தோடும் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

மாணிக்கம் பாத்திரத்தில் மீனவர்களின் தலைவனாக வாழ்ந்து காட்டியிருக்கும் மக்கள் திலகம்- அவர்களது ஒற்றுமைக்காக தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் வழங்குபவராக அற்புதமாக நடித்துள்ளார்.

திருக்கை மீனவர்கள்-சுறா மீனவர்கள் என ஜமீன்தார் நீலமேகத்தின் சூழ்ச்சியால் பிரிந்து கிடக்கும் மீனவ சமுதாயத்தை தன் தந்தையாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க,பல சூழ்ச்சிகளை முறியடித்து சேர்த்து வைக்கும் ஏழைப்பங்காளனாக அற்புதமாய் நடித்திருக்கிறார் மக்கள் திலகம்..

அவரோடு சரோஜா தேவி, நம்பியார், ராமதாஸ், அசோகன், நாகேஷ், மனோரமா ஆகியோரும் அருமையான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.அதிலும் "முத்தழகி"பாத்திரத்தில் நடிக்கும் சரோஜாதேவி அசத்தியிருக்கிறார். அவரது குறும்பான நடிப்பும்- மக்கள் திலகத்தை அவர் பார்க்கும் போதெல்லாம் சொல்லும் "அய்யோடி சொக்கி"யும் ரசிக்க வைக்கின்றன.

பாட்டுக்களை பற்றி கூறவும் வேண்டுமா? "பாட்டுக்கு ஒரு படகோட்டி" என படம் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் பாடல்களுக்கு பெயர் உண்டு...எட்டு பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டு..!!!அதே போல "ராய்" அவர்களின் ஒளிப்பதிவு இப்படம் படமாக்கப்பட்ட கேரள கடற்கறைகளுக்கே நம்மையும் பயணிக்க வைக்கிறது.

1964ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இந்தப்படம், பிற வெளியீடுகளான நவராத்திரி, முரடன் முத்து ஆகிய படங்களோடு போட்டியிட்டு தமிழகமெங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. நூறு நாட்களுக்கு மேல் அதிக திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.

பின்னாளில் மக்கள் திலகம், அரசியலில் நுழைந்த பிறகு அந்த இயக்கத்துக்கென்று நிலையான வாக்கு வங்கியை பெற்றுத்தர மிக முக்கிய காரணியாக இந்தப்படம் விளங்கியது என்பது மறுக்கமுடியாத உண்மை.

தகவல் :https://en.wikipedia.org/wiki/Padagotti.........Sr.Bu...

orodizli
26th January 2021, 07:54 AM
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!
l)தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *
எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'. *
எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆர். படத்தில்தான்
நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'. எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான். எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம். எம்.ஜி.ஆர்.
அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'. எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'. எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'. எம்.ஜி.ஆர்.
சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்',
கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ். எம்.ஜி.ஆர்.
வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார்.
'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான். 'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

orodizli
27th January 2021, 10:38 AM
"சிவந்தமண்" அதன் தயாரிப்பு செலவுக்கு வசூலான தொகை மிகவும் சொற்பம். உள்நாட்டில் தயாரித்த "கர்ணனி"ன் தயாரிப்பு செலவு ரூ40 லட்சம் என்று பேசும்படம் சொன்னது. அதுபோல் "சிவந்தமண்ணி"ன் குறைந்த பட்ச தமிழ் தயாரிப்பு செலவு ரூ 80 லட்சம் என்று பல்வேறு பத்திரிகை செய்தி மூலம் அறியப்பட்டாலும் கைஸ்கள் அதன் வசூலை போட்டு சாதனை என்று உளறி கொட்டுகிறார்கள்.

தயாரிப்பு செலவுக்கு வசூலான தொகை அவர்கள் கூற்றுப்படி ரூ 50 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் வரி நீக்கி தியேட்டர் ஷேர் போக ரூ20 லட்சம் கூட தேறாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படியானால் வரவு 20 :80 என்றால் 4ல் ஒரு பகுதி கூட வசூலாகவில்லை. அதை ஏற்றுக் கொள்ளாத கைஸ்கள் செலவு குறைந்த படங்களோடு முறையற்ற வகையில் கம்பேர் செய்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். அதையே விநியோகஸ்தர்கள் "சிவந்தமண்" 175 நாட்கள் தொடர்ந்து அத்தனை திரைகளிலும் எல்லா காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடினாலும் லாபம் வராது என்று அடித்துக் கூறியும் காதில் ஏறாமல் ஸ்ரீதர் பெரும் கடனில் சிக்கி கொண்டார்.

ஒரு வியாபாரி, இந்த சரக்கு இவ்வளவு தொகை தான் விற்கும் என்று கூட தெரியாமல் முதலீடு செய்வானா?.
ஸ்ரீதரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்?
விதியின் குற்றமா? இல்லை விதி என்ற பெயரில் வந்த வி.சி.கணேசனின் குற்றமா? என்று ஆய்வு செய்து பார்த்தால் அதில் வி.சி.கணேசனுக்கு தான் பெரும் பங்கு உண்டு என்று தெரிகிறது. தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள ஸ்ரீதரை பகடைக்காயை போல பயன்படுத்தியிருப்பதை மிக நன்றாக புரிந்து கொள்ளலாம். "சிவந்தமண்ணை" அய்யன், ஸ்ரீதர் டைரக்ஷனில் தனது சொந்த படமாகவேட தயாரித்திருக்கலாமே. தனது மார்க்கெட்டை பற்றி தெரிந்தும் அந்த தவறை கணேசன் செய்வாரா?

ஸ்ரீதர் தலையில் பெரும் கடன் சுமையை ஏற்றி வசமாக சிக்க வைத்து விட்டார் விசி கணேசு. தன்னை நம்பியவர்களை வாழ வைப்பார் கடவுள் கணேசன். தன்னை நம்பியவர்களை சீரழித்து பார்ப்பார் நம்ம வி.சி.கணேசன். அந்த பானை வயிற்றோன் பக்தர்களை காப்பவன்.
இந்த பானை வயிற்றோன் நம்பியவர்களை சீரழிப்பவன். என்னை நம்பியிருந்தால் அவர் நலமடைவார்
என்றும் அதுதானே என் விருப்பம் என்பதற்கு அடையாளமாக ஸ்ரீதரின் "உரிமைக்குரலை" ஓங்கி ஒலிக்கச் செய்த புரட்சி தலைவரின் மனிதநேயம் யாருக்கும் வராது.

அய்யன் பாடிய "அகப்பட்டுக்கொண்டார் ஸ்ரீதரே, அந்தோ பரிதாபம். ஆடிய நாடகம் புரியவில்லை அடியேன் அனுதாபம்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அதிலும் பரமார்த்த குருவின் சீடர்களை காட்டிலும் மோசமான கைஸ்கள் "சிவந்தமண்ணி"ன் வசூலை "உரிமைக்குரலோ"டு ஒப்பிடுவதை பார்க்கும் போது மூடத்தனம் போய் மொள்ளமாரித்தனம் வந்த மாதிரி தெரிகிறது.

சென்னையை போட்டவர்கள், அடுத்த ஊரான கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களை ஏன் போடவில்லை. தூத்துக்குடியில் "சிவந்தமண்" ஓட்டிய நாட்களோடு "உரிமைக்குரல்" ஓடிய நாட்களை கம்பேர் செய்திருக்கிறார்கள். எப்போதுமே தூத்துக்குடி வசூலோடு நாகர்கோவில் வசூல் மிக அதிகமாக இருக்கும். இது கைபிள்ளைகளுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால் "சிவந்தமண்" ணின் நாகர்கோவில் 50 நாட்கள் வசூலை காட்டிலும் தூத்துக்குடி 50 நாட்கள் வசூல் மிக அதிகமாக இருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது முட்டாள் கைஸ்களின் வேலையை. இதேபோல் மதுரை திருச்சி கோவை சேலம் நெல்லை தூத்துக்குடியில் "உரிமைக்குரல்" 50 நாட்கள் வசூல் அய்யனின் "சிவந்தமண்" வசூலை சுனாமி தாக்கி சீரழித்ததை நாம் புரிந்து கொள்ளலாம். எப்போதுமே அவர்களுக்கு எது தோதாக தெரிகிற தோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதைப்போல "நீதி"யின் 4 வார வசூல் "ராஜா"வை தாண்டி விட்டதாக போட்டிருப்பதால் "ராஜா"வின் வசூல் கப்ஸா வசூலோ என்ற சந்தேகம் வருகிறது. நெல்லையில் "ராஜா" 2 வார வசூல் பார்வதியில் ரூ46000 என்று போட்டவர்கள் மிகப்பெரிய திரையரங்கமான செள்ட்ரலில் "நீதி"யின் 4 வார வசூல் ரூ53000 என்று படுகேவலமான வசூலை பதிவு செய்திருக்கிறார்கள். படத்தை 5 வது வாரத்திலேயே தூக்கி வீசி விட்டார்கள். இதெல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவி கைஸ்களை ஏமாற்றவா இந்த வசூல் நாடகம்.

அதே சென்ட்ரலில் 69 ல் வெளியான அடிமைப்பெண் 4 வாரத்திலேயே 1 லட்சத்தை தாண்டி வசூலானது பாலாஜிக்கு தெரியாமல் போய் விட்டதா? இப்படியெல்லாம் ஏமாற்றி கைஸ்களை முட்டாளாக ஆக்கியிருப்பது அவர்களுக்கே புரியாது. அய்யன் நடித்த அத்தனை பிரமாண்ட படங்களும் "கர்ணன்" "சிவந்தமண்" "ராஜராஜ சோழன்" "ராஜரிஷி" உட்பட அனைத்தும் படுதோல்வி படங்களே...........ksr.........

orodizli
27th January 2021, 10:38 AM
மக்கள் திலகத்தின் வித்தியாசமான படங்கள்...

#பறக்கும்_பாவை..!!!

ஒரு தொழிலதிபரின் மகனான ஜீவா (மக்கள் திலகம்) தன் குடும்ப நண்பரும், நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கும் வேதாச்சலம் (சித்தூர் நாகையா) விற்கு அவரின் மகளான கலாவை ((சரோஜா தேவி)) எவ்வித ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்வதாகவும், பாதுகாவலனாக இருப்பதாகவும் உறுதி அளிக்கிறார். கலாவிற்கு தன் தந்தையின் சொத்துக்கள் வந்து சேரவே, அவரது உயிருக்கும் ஆபத்து வருகிறது. நிம்மதி வேண்டி தன் வீட்டை விட்டு வெளியேறி சர்க்கஸ் கம்பெனியில் சேருகிறார் கலா.அங்கே பறக்கும் பாவையாகிறார். ஆனால் கலாவிற்கு சர்க்கஸ் கம்பெனியிலும் உயிருக்கு ஆபத்து தொடர்கிறது. சிங்கக்கூண்டு கலாவை குறிவைத்து திறக்கப்படுகிறது, அவர் மேல் மர்ம நபர்களால் கத்தி வீசப்படுகிறது. அனைத்து ஆபத்துகளிலிருந்தும் ஜீவாவின் உதவியோடு தப்புகிறார்.

கலாவின் தகப்பனாருக்கு உறுதி அளித்தபடி கலாவை தேடி கண்டுபிடித்து, சர்க்கஸ் கம்பெனியில் தானும் சேர்ந்து..கலாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் ஜீவா.

இந்த படம் மக்கள் திலகத்தின் மற்ற படங்களிலிருந்து எப்படி வேறு படுகிறதென்றால், இரண்டாவது பாதி முழுவதும் சர்க்கஸை களமாக கொண்டு கதை புனையப்பட்டிருப்பதுதான். விறுவிறுப்பான திரைக்கதையோடு சர்க்கஸ் தொழிலாளர்களின் போராட்டமான வாழ்க்கையையும் முன் நிறுத்தியிருப்பதில் இயக்குநர் ராமண்ணா வெற்றி கண்டுள்ளார்.

மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்வில் அடித்தட்டு-விளிம்புநிலை மக்களின் அசைக்கமுடியாத ஆதரவு இருந்ததற்கு அம்மக்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கையை தன் படங்களில் பதிவு செய்ததுதான். "படகோட்டியில் -மீனவர் ; ரிக்ஷாகாரனில் -ரிக்ஷா இழுப்பவர்; மாட்டுக்கார வேலன்; போன்ற பல படங்களைப்போன்றே இதிலும் சர்க்கஸ் தொழிலாளியாக அசத்தியுள்ளார்.

சரோஜா தேவி, காஞ்சனா, சந்திரபாபு, மனோகர், தங்கவேலு, அசோகன், நம்பியார் ஆகியோரும் தங்களது நடிப்பால் மனம் கவர்கிறார்கள். அதிலும் கோமாளியாக வரும் சந்திரபாபு தூள். காஞ்சனாவிற்கு சற்று வில்லத்தனமான வித்தியாசமான பாத்திரம்.

வழக்கம் போல் மெல்லிசை மன்னரின் இசை காலங்களைதாண்டி நிற்கிறது. *"பட்டுப்பாவாடை எங்கே"
*"உன்னைத்தானே ஏய்"
*"கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா"
*"முத்தமோ..மோகமோ"
*" நிலவென்னும் ஆடை கொண்டாளோ"
*"சுகம் எதிலே.."
*யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்"
என வித்தியாசமான இசையமைப்பில் அசத்தியுள்ளார். அதிலும் "முத்தமோ..மோகமோ பாடலில் மிருகங்களின் உருமல்களையும், ஓசைகளையுமே இசையாக்கி இருப்பது புதுமை,அருமை.

"பறக்கும் பாவை" வணிக ரீதியாக வென்றது.

புகைப்படம் :https://www.tamil2lyrics.com/movies/parakkum-paavai/

தகவல் :
https://en.m.wikipedia.org/wiki/Parakkum_Pavai.........Sr.Bu...

orodizli
27th January 2021, 10:39 AM
வேட்டைக்காரன் எம்ஜிஆர்...

அப்பொழுதெல்லாம் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்குள்ளும் கடும் போட்டா போட்டி இருந்து வந்தது. இவர்கள் இருவரின் படங்கள் வெளிவரும் போது இரண்டு நாயகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்ளவார்கள்.
அப்படிப்பட்ட சூழ் நிலையல் தான் எம்.ஜி.ஆர்.நடித்த வேட்டைக்காரன் படமும், சிவாஜி நடித்த கர்ணன் படமும் ரெடியாகி கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் டைரக்டர் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய கர்ணன் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கலர் படம்.
இதில் முன்னணி நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருந்தது. படமும் பாதியளவில் முடிந்து அடுத்தத கட்ட படப்பிடிப்பிற்கு போகும் போதுதான் எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். அவரது சகோதரர் எம்.ஏ. திருமுகம் படத்தை இயக்கியிருந்தார்.இதில் ‘மகாதேவி’, ‘பரிசு’ படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சாவித்ரி நடித்திருந்தார்.
கருப்பு வெள்ளையில் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் வேட்டைக்காரன்.
டைரக்டர் பி.ஆர்.பந்துலு கர்ணன் படத்தின் அனைத்து கட்டப் படப்பிடிப்புகளையும் முடித்து படத்தை பொங்கலன்று (14.01.1964) வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார்.
அப்பொழுதுதான் பி.ஆர்.பந்துலுவின் நண்பர் ஒருவர் ஒரு செய்தியை வந்து சொன்னார். சிவாஜி நடித்த கர்ணன் படம் வெளியாகும் அன்றே எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படமும் வெளியாகிறது என்ற செய்திதான் அது.
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் சேர்ந்து வருவதைவிட தனித்தனியாக வந்தால் அந்தந்த படங்களுக்கு கிடைக்க வேண்டிய வசூல் கிடைக்கும். இரண்டு நடிகர்களுக்கும் நிகரான ரசிகர் பட்டாளம் உண்டு.
டைரக்டர் பந்துலு தனது படக்குழுவினருடன் கலந்து பேசினார். இதுபற்றிய செய்தியை சிவாஜி அவர்களிடமும் தெரிவித்தார்கள். சிவாஜியும் யோசனையில் ஆழ்ந்தார்.
சாண்டோ சின்னப்பா தேவரை வரவழைத்து பேசினார்கள். அவரும் படம் எடுத்திருப்பது தேவர் பிலிம்ஸ் தான்.
ஆனால் படம் வெளியாகும் தேதியை சின்னவர் (எம்.ஜி.ஆர்) தானே முடிவு பண்ணுவார் அவரிடம் எப்படி பேசுவது, ஒருவாரம் தள்ளி படத்தை வெளியிடுங்கள் என்று.
இறுதியில் படக்குழுவினர் ஒருவர் சொன்ன ஐடியாபடி சிவாஜி நடித்த கர்ணன் படத்தை எம்.ஜி.ஆருக்கு மட்டும் தனியாக போட்டு காட்டுவது.
அதன்பிறகு இதுபற்றிப் பேசுவது என்று முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள்.
கர்ணன் படத்தைத் தங்களுக்காக பிரத்யோகமாக போட்டு காட்ட விரும்புகிறோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தந்தீர்களானால் நாங்கள் படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்கின்றோம் என்று சொன்னார்கள்.
எம்.ஜி.ஆரும் ஒரு குழந்தையை போல துள்ளிகுதித்து கர்ணன் படத்தைப் பார்க்கச் சம்மதித்தார். படமும் அவருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜியை மனதார பாராட்டினார். அற்புதமாக நடித்திருக்கிறார். அப்படியே கர்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
இவரைப்போல ஒரு சிறந்த நடிகரை எங்கேயும் பார்க்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார். படத்தின் பிரம்மாண்டத்தையும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவையும் மற்ற கலைஞர்களையும் வாயாரப் புகழ்ந்தார்.படம்
வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவும் அவரிடம் வேட்டைக்காரன் படம் கொஞ்சம் தள்ளி வெளிவந்தால் உதவிகரமாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பேசத் தயங்கினார்கள்.
மறுநாள் சாண்டோ சின்னப்பா தேவரை வைத்தே எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். அவரும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘படம் பார்த்தேன் பிரம்மாண்டமாக இருக்கிறது.
நண்பர் சிவாஜியும் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தை தைரியமாக ரிலீஸ் பண்ணச்ச சொல்லுங்க..
அதே நேரம் வேட்டைக்காரன் படமும் அந்த நேரத்தில் வெளிவந்தால்தான் நல்லது.
தம்பி சிவாஜி ரசிகர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும். எனது ரசிர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும் மொத்தத்தில் எல்லா ரசிகர்களும் இந்த இரண்டு படத்தை பார்க்கட்டும்,’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
இறுதியில் இரண்டு படங்ளும் ( வேட்டைக்காரன் & கர்ணன்) 14.1.1964 அன்று வெளிவந்தன. வெளிவந்த தியேட்டர்கள் வாசலில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கர்ணன் படத்திற்கான விளம்பர பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
சூரியபகவான் பல குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வருவதுபோல் பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
வேட்டைக்காரன் ரிலிசான தியோட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான ஒரு புலியை அதில் அடைத்து வைத்தார்கள். படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் நிஜப் புலியைப் பார்க்க கூட்டம் கூடியது.
கர்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தன.ஆனால் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அளவிற்கும் படம் வெற்றி பெறவில்லை.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் மிகுந்த வசூலை அள்ளி கொடுத்தது.
பின்னாளில் எம்.ஜி.ஆர். பி.ஆர்.பந்துலுவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதிக லாபம் பெற வைத்தார் (1965)...........Baabaa

orodizli
28th January 2021, 07:46 AM
Ahead of Tamil Nadu Assembly Polls This Year, Scramble for MGR's Legacy Worries Ruling AIADMK

While the AIADMK is partially pleased at the way everyone is praising its founder, it is concerned that this could bring political gains for rivals.



MGR



Saradha V

NEWS18CHENNAI

UPDATED ON:JANUARY 27, 2021, 08:29 IST

FOLLOW US ON:

Facebook*Twitter*Instagram

MG Ramachandran, aka MGR, the matinee idol and former chief minister of Tamil Nadu, continues to be an irresistible presence in Tamil Nadu’s political space. The 104th birth anniversary of MGR, who died in 1987 and was fondly called Puratchi Thalaivar or Revolutionary Leader by many, was celebrated across the state on January 17. It was also an opportunity for many politicians from different parties to cherish and flaunt their memories and proximity with the late actor-turned-politician, who was probably one of the most influential film stars of South Asia as well as the only actor whose political career continues to survive even after three decades.
President of Dravida Munnetra Kazhagam (DMK) MK Stalin has always been careful in his remarks about MGR, the arch rival of his late father M Karunanidhi. It was MGR’s tussle with Karunanidhi that forced the former to create a new party, AIADMK, in 1972.
Advertisement
Even as Stalin would fondly recall his personal connection with MGR, he would be extra cautious when it comes to MGR’s governance or schemes.
In a meeting held at Dharmapuri a few days ago, Stalin said, "I am a great fan of MGR. I used to miss classes to watch his films. It was Karunanidhi who brought MGR into films. MGR used to make sure that nobody would call Karunanidhi by his name; that is the kind of respect he had for Kalaignar.”
Advertisement


Kamal Haasan, another film star who entered politics recently, has been claiming the legacy of MGR ever since he floated his party. Haasan’s party, Makkal Needhi Maiam, having contested on almost all seats in the state during the 2019 Lok Sabha polls, gained about a 2% vote share.
While it remains a fact that it is not easy for film stars to convert their fame into votes, aspiring politicians or chief ministers like 66-year-old Haasan are also seen by the public as personalities who entered politics as a “post-retirement plan”, after completing decades in acting.
Advertisement
Haasan has memories with MGR to cherish, like how he grew up on the legend's lap and was very close to him though not involved in politics along with him. His political slogan "Naalai Namadhe" is inspired by the title of an MGR film, he would say. Recently, Haasan accused the AIADMK of forgetting MGR and his ideals. After releasing the documentary 'Kaalathai Vendravan' at MGR's residence at Ramapuram in Chennai, he said, "MGR's photographs in ADMK posters are becoming smaller day by day. I share MGR's dreams and goals and so I can claim his legacy."
The AIADMK has been vehemently resisting anyone who tries to appropriate MGR's legacy, be it alliance partner BJP or principal opposition DMK.
MGR and Jayalalithaa are two icons of AIADMK who formed successive governments in Tamil Nadu. While no one is claiming Jayalalithaa's legacy, every party now wants to associate itself with MGR's name and politics.
It was only Jayalalithaa's image which was prominent in the party until her death. After that, the party has been facing an identity crisis and the elections ahead are not going to be easy for it.
While the AIADMK is partially pleased at the way everyone is praising its founder MGR, it is concerned that this could bring political gains for rivals.
Chief minister Edappadi Palaniswami, while speaking at one of the events held in Chennai as part of MGR 's 104th birth anniversary celebrations, said, "It is a fact that even people launching new parties have to use MGR's name." Last month, while paying homage at MGR's memorial in Chennai on his death anniversary, he pledged not to allow opponents to appropriate MGR's legacy. When the BJP used pictures of MGR in its campaign videos, juxtaposing them with Modi and party state president L Murugan, AIADMK minister Jayakumar was quick to react. He said, "Use pictures of your own leaders. Why do you use our leader's? MGR was the founder of AIADMK and he would always want only AIADMK to be in power."
Arunan, author of 'MGR- History of actors becoming chief minister', observed, "Appropriating MGR's image helps in anti-DMK politics. MGR termed Karunanidhi an 'evil force' to build a negative image around him. So BJP, Kamal Haasan, whoever wants to take on DMK uses MGR's image. DMK understands that it will gain nothing by criticising a leader who is dead. Therefore, they talk only about the warm and cozy relationship that Karunanidhi and MGR shared in the early days. It is ADMK who is in a fix now, so it is trying to bring back its founder leader."..........
News 18

orodizli
28th January 2021, 07:47 AM
கவியரசர் கண்ணதாசனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்த புரட்சித் தலைவர்...

கவியரசரின் துணைவியார் வள்ளியம்மை அவர்களின் பதிவிலிருந்து...

கவிஞருக்கு மிக்க சந்தோஷத்தை ஏற்படுத்திய விஷயம், அவருக்கு ஆயுள் கால ஆஸ்தான கவிஞர் பதவியைத் தரப்போவதாக எம்.ஜி.ஆர் போனில் தெரிவித்துதான்.
அவரை அவ்வளவு சந்தோசமாக நான் அதுவரை பார்த்ததே இல்லை. “உன் கணவன் இனிமேல் கவிஞன் இல்லை, அரசு கவிஞன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்...

வாழ்க்கையில் கணவரின் நிறைவேறாத ஆசை எம்.ஜி.ஆர் கொடுத்த தங்கப் பதக்கத்தைத் தான் இறக்கும்போது மாா்பில் வைத்து எரிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
குடும்பக் குழப்பத்தில் அதுவும் நடக்கவில்லை.
நன்றி: இந்திய டுடே...1996...

orodizli
28th January 2021, 07:47 AM
பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்களுக்கு ஓர் தனி சிறப்பு உண்டு! அவரை புகழ்ந்து போற்றுபவர்கள் மட்டுமல்ல அவரை தூற்றுபவர்கள் கூட நன்மை அடைவார்கள்; அப்படி தூற்றியவர்கள் கூட எதிர்த்தவர்கள் உட்பட பிற்காலத்தில் அவரை போற்றி வணங்குவார்கள்; இதற்க்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வளவு என்? அவரது அரசியல் நேர் எதிரி கலைஞர். அவருடைய மகன் திரு ஸ்டாலினே புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் அவர் படத்துக்கு மாலை அணிவித்து இரு கரம் கூப்பி பல தி. மு. க. தொண்டர்களுடன் வணங்கினாரே..... போன வருடம் பல கோடி செலவில் உருவான புதிய சட்டசபை வளாகத்தை திறந்து வைத்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் அவர்கள் திருமதி சோனியா, கலைஞர் மற்றும் பல காங்கிரஸ் தி. மு. க. பிரமுகர்கள் எதிரிலேயே "இன்று இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளில் பின் பற்றப்படும் மதிய உணவு திட்டத்துக்கு" காரணமாக விளங்குபவர் "அமரர் எம். ஜி. ஆர்" அவர்கள் என்று புகழாரம் சூடினாரே! அதை என்னவென்று சொல்வது? ஒரே வரியில் சொல்வதென்றால், எம். ஜி. ஆர் அவர்கள் "குற்றமில்லாத மனிதன், கோயில் இல்லாத இறைவன்" -
அன்புடன்...✌✌✌✌ ரசிகன்... Sekar Covai...

orodizli
28th January 2021, 07:48 AM
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எம்.ஜி.ஆரின் மரபு கவலைகள் போராடும் AIADMK...

AIADMK அதன் நிறுவனரை எல்லோரும் புகழ்ந்து பேசும் விதத்தில் ஓரளவு மகிழ்ச்சியடைகையில், இது போட்டியாளர்களுக்கு அரசியல் லாபத்தை தரக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது.



எம்.ஜி.ஆர்



சாரதா வி

செய்தி 18சென்னை

புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 27, 2021, 08:29 IST

எங்களைப் பின்தொடரவும்:

பேஸ்புக்*ட்விட்டர்*இன்ஸ்டாகிராம்

எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர், மேட்டினி சிலை மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தமிழகத்தின் அரசியல் இடத்தில் தவிர்க்கமுடியாத இருப்பைத் தொடர்கிறார்.*1987 ஆம் ஆண்டில் இறந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள், பலரால் "புரட்சி தலைவர்" அல்லது புரட்சிகரத் தலைவர் என்று அழைக்கப்பட்டது, ஜனவரி 17 அன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் தங்கள் நினைவுகளை மதிக்கவும், வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும். மறைந்த நடிகராக மாறிய அரசியல்வாதியுடன், தெற்காசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகவும், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் அரசியல் வாழ்க்கை தொடர்ந்து நீடிக்கும் ஒரே நடிகராகவும் இருக்கலாம்.
திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைவர் எம்.கே.ஸ்டாலின் தனது மறைந்த தந்தை எம்.கருணாநிதியின் பரம எதிரியான எம்.ஜி.ஆர் பற்றி தனது கருத்துக்களில் எப்போதும் கவனமாக இருக்கிறார்.*கருணாநிதியுடனான எம்.ஜி.ஆரின் மோதல்தான் 1972 ல் அதிமுக என்ற புதிய கட்சியை உருவாக்க முன்னாள் கட்டாயப்படுத்தியது.
விளம்பரம்
எம்.ஜி.ஆருடனான தனது தனிப்பட்ட தொடர்பை ஸ்டாலின் அன்புடன் நினைவு கூர்ந்தாலும், எம்.ஜி.ஆரின் ஆளுகை அல்லது திட்டங்களுக்கு வரும்போது அவர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பார்.
சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஸ்டாலின், "நான் எம்.ஜி.ஆரின் சிறந்த ரசிகன். அவரது படங்களைப் பார்ப்பதற்காக வகுப்புகளைத் தவறவிட்டேன். எம்.ஜி.ஆரை படங்களில் கொண்டுவந்தது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர் யாரும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதிசெய்தார் கருணாநிதியை அவரது பெயரால் அழைக்கவும்; அதுதான் கலைங்கருக்கு அவர் கொண்டிருந்த மரியாதை. ”
விளம்பரம்


அண்மையில் அரசியலில் நுழைந்த மற்றொரு திரைப்பட நட்சத்திரமான கமல்ஹாசன், எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை தனது கட்சியில் மிதந்ததிலிருந்து கூறி வருகிறார்.*2019 மக்களவைத் தேர்தலின் போது மாநிலத்தின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட ஹாசனின் கட்சியான மக்கல் நீதி மய்யம் சுமார் 2% வாக்குகளைப் பெற்றார்.
திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் புகழை வாக்குகளாக மாற்றுவது எளிதல்ல என்பது ஒரு உண்மையாக இருக்கும்போது, ​​ஆர்வமுள்ள அரசியல்வாதிகள் அல்லது 66 வயதான ஹாசன் போன்ற முதலமைச்சர்களும் அரசியலில் நுழைந்த ஆளுமைகளாக “ஓய்வூதியத்திற்கு பிந்தைய திட்டமாக” பார்க்கப்படுகிறார்கள். ”, நடிப்பில் பல தசாப்தங்கள் முடிந்த பிறகு.
விளம்பரம்
புராணத்தின் மடியில் அவர் எப்படி வளர்ந்தார், அவருடன் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது போன்ற ஹாசனுக்கு எம்.ஜி.ஆருடன் நினைவுகள் உள்ளன.*அவரது அரசியல் முழக்கம் "நாளை நமதே" ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறுவார்.*அண்மையில், எம்.ஜி.ஆர்., மற்றும் அவரது கொள்கைகளை AIADMK மறந்துவிட்டதாக கமலஹாசன் குற்றம் சாட்டினார்.*சென்னையில் உள்ள ராமபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் "காலத்தை வென்றவர்" , என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர், "ஏ.டி.எம்.கே சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் நாளுக்கு நாள் சிறியதாகி வருகின்றன. எம்.ஜி.ஆரின் கனவுகளையும் குறிக்கோள்களையும் பகிர்ந்து கொள்கிறேன், எனவே அவரது மரபுக்கு நான் உரிமை கோர முடியும்" என்றார்.
எம்.ஜி.ஆரின் மரபுக்கு பொருத்தமான எவரையும் AIADMK கடுமையாக எதிர்த்து வருகிறது, அது கூட்டணி பங்குதாரர் பாஜக அல்லது பிரதான எதிர்க்கட்சியான திமுக.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் அடுத்தடுத்து அரசாங்கங்களை அமைத்த அதிமுகவின் இரண்டு சின்னங்கள்.*ஜெயலலிதாவின் மரபுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றாலும், ஒவ்வொரு கட்சியும் இப்போது எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் அரசியலுடன் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகின்றன.
ஜெயலலிதாவின் உருவம் மட்டுமே அவர் இறக்கும் வரை கட்சியில் முக்கியத்துவம் பெற்றது.*அதன்பிறகு, கட்சி ஒரு அடையாள நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, மேலும் தேர்தல்கள் அதற்கு எளிதானதாக இருக்காது.
AIADMK அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரை அனைவரும் புகழ்ந்து பேசும் விதத்தில் ஓரளவு மகிழ்ச்சி அடைகையில், இது போட்டியாளர்களுக்கு அரசியல் லாபத்தை தரக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "புதிய கட்சிகளைத் தொடங்கும் மக்கள் கூட எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்பது உண்மைதான்" என்றார்.*கடந்த மாதம், அவரது மரண ஆண்டு விழாவில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது, ​​எம்.ஜி.ஆரின் மரபுக்கு பொருத்தமான எதிரிகளை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.*பா.ஜ.க தனது பிரச்சார வீடியோக்களில் எம்.ஜி.ஆரின் படங்களை பயன்படுத்தியபோது, ​​அவற்றை மோடி மற்றும் கட்சி மாநிலத் தலைவர் எல்.*அவர் கூறினார், "உங்கள் சொந்த தலைவர்களின் படங்களை பயன்படுத்துங்கள். எங்கள் தலைவரை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? எம்.ஜி.ஆர் AIADMK இன் நிறுவனர் ஆவார், மேலும் அவர் எப்போதும் AIADMK மட்டுமே அதிகாரத்தில் இருக்க விரும்புவார்" என்று கூறினார்.
'எம்.ஜி.ஆர்- நடிகர்கள் முதலமைச்சர் ஆனது' என்ற எழுத்தாளர் அருணன், "எம்.ஜி.ஆரின் உருவத்தை ஏற்றுக்கொள்வது திமுக எதிர்ப்பு அரசியலுக்கு உதவுகிறது. எம்.ஜி.ஆர் கருணாநிதி தன்னைச் சுற்றி ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்க ஒரு 'தீய சக்தி' என்று குறிப்பிட்டார். எனவே பாஜக, கமல்ஹாசன், டி.எம்.கே.யைப் பெற விரும்பும் எவரும் எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்துகிறார். இறந்த ஒரு தலைவரை விமர்சிப்பதன் மூலம் அது ஒன்றும் பெறாது என்பதை டி.எம்.கே புரிந்துகொள்கிறது. ஆகையால், ஆரம்ப நாட்களில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பகிர்ந்து கொண்ட அன்பான மற்றும் வசதியான உறவைப் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். ஏ.டி.எம்.கே. இப்போது ஒரு தீர்வில் உள்ளது, எனவே அதன் நிறுவனர் தலைவரை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. ".........News 18...

orodizli
28th January 2021, 07:49 AM
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!.........VRH...

orodizli
29th January 2021, 10:18 AM
தலைவரின் லட்சியப் படமான "பல்லாண்டு வாழ்க" 1975 அக் 31 ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. உதயம் புரடொக்ஷன்ஸார் தலைவரோடு இணைந்த 3 வது தயாரிப்பான "பல்லாண்டு வாழ்க" முதல் இரண்டு படங்களான "இதயவீணை" "சிரித்து வாழ வேண்டும்" ஆகியவை 100 நாட்கள் ஓடினாலும் அதனினும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் தலைவரின் கண்களுக்கு உள்ள சக்தியை அனைவரையும் உணர வைத்தது.

பாடல்கள் அத்தனையும் அருமையான இளமையான மெட்டுக்கள். 'தோ ஆங்கென் பாராகத்' என்ற சாந்தாராமின் படத்தை தழுவி எடுத்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து எடுக்கப்பட்டது. "இதயக்கனி"யின் 72 வது நாளில் வெளியாகிய போதிலும் அதற்கு அடுத்ததொரு வெற்றியை பெற்றாலும் ஒரு சில சென்டர்களில் அபரிமிதமான வசூலை கொடுத்தது எனலாம்.

நெல்லை பூர்ணகலாவில் 101 நாட்கள் ஓடி மாநகரிலேயே மாற்று நடிகரின் எந்த ஒரு படமும் நெருங்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.நெல்லை பூர்ணகலாவில் 100 நாட்கள் கண்ட ஒரே படம் "பல்லாண்டு வாழ்க" மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 101 நாட்களில் ரூ 260000 ஐ வசூலாக பெற்று அசர வைத்தது.

மதுரையில் 33 நாட்களிலேயே 3 லட்சத்தை தாண்டி சாதனை செய்தது.
சென்னையில் தேவிபாரடைஸ்(104) அகஸ்தியா(104) சரவணாவில்(70) வெளியாகி மொத்தம் 278 நாட்கள் ஓடி ரூ 1453287.36 வசூலாக பெற்றது.1975 ம் ஆண்டில் 3வது 10 லட்சம் தாண்டி வசூலான படமாக சாதனை செய்தது.

தேவிபாரடைஸில் மட்டும் ரூ 793428.80 வசூலானது. அகஸ்தியாவில் 104 நாட்களில்
ரூ 428927.19 வசூலாக பெற்றது.
சரவணாவில் 70 நாட்களில் ரு 230931.37 வசூலானது. தேவி பாரடைஸில் வெளியான அய்யனின் அனைத்து படங்களையும் வென்று முன்னணி பெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் 101 நாட்களிலேயே ரூ 260534.80 பெற்று அய்யனின் அனைத்து படங்களையும் ஓவர்டேக் செய்தது "பல்லாண்டு வாழ்க" படத்தின் தனி சிறப்பு..........ksr.........

orodizli
29th January 2021, 10:18 AM
35 ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவனாக இருந்த போது*
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று எம்.ஜி.ஆர்
விழா ஒன்றில் திருச்சியை சேர்ந்த ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்

35 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட பாலகன் இன்று வளர்ந்து 40 வயதை தொட்டு விட்டார். அவரது பெயர் கே. புஷ்பராஜ். எம்.எஸ்சி., பி.எட் படித்து உள்ள இவர் தற்போது ஆசிரியர் பணியை செய்து வருகிறார் காட்டூர் பாத்திமாபுரத்தில் வசித்து வரும் இவரது மனைவி பெயர் ஜூலி மேரி. இந்த தம்பதியினருக்கு மேஷா (வயது5) என்ற பெண் குழந்தையும் ஆண்டோ (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளன. புஷ்பராஜின் தந்தை பெயர் குழந்தைசாமி, தாயார் ஞானசவுந்தரி நிர்மலா மேரி,

மகிழ்ச்சி நிறைந்த
இனிய வணக்கம்..........*

orodizli
29th January 2021, 10:19 AM
எம்.ஜி.ஆர் சிகர சாதனையின் சிற்பி - 1970ல் பேசும்படம் புகழாரம்
நமது தலைவர் எம்.ஜி.ஆரின் மிக உன்னத மகோன்னத படைப்பு "அடிமைப்பெண்", வெள்ளிவிழா காவியம், படம்.176 நாட்கள் ஓடியது.இந்த படத்திற்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.இந்த படத்தின் பெருமைகளை நாம் பல கோணங்களில் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த படத்தை எம்.ஜி.ஆர்., ஒருவர் தான் இவ்வளவு சிறப்பாக எடுக்கவும்,இயக்கவும் முடியும் (படம் கே.சங்கர் இயக்கம் என்றாலும் இயக்கியது தலைவரே.ஒவ்வொரு பிரேமும் தலைவர் அனுமதி இல்லாமல் படம் பிடிக்கப்படவில்லை ) என்று இந்திய திரை உலகமே சொன்னது.இந்தப்படம் சென்னையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்துடன் பார்த்துவிட்டு காட்சிக்கு காட்சி தனது பிரமிப்பை தன் குடும்பத்துடன் உணர்ச்சி மேலிட்டு சொல்லிவந்தாராம்.அண்ணனை தவிர வேறு எவரும் இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுக்க முடியாது என்று சொன்னாராம்.
பேசும்படம் தனது 1970 ஜூலை இதழில் அடிமைப்பெண் படம் பற்றி வானுயர புகழ்ந்து எழுதியது.மக்கள் திலகதின் ஒரு மாபெரும் சாதனை ,புதுமையின் விளைநிலம் புரட்சிநடிகர் என்று புகழ்ந்தது."சிகர சாதனையின் சிற்பி" என்று புகழாரம் சூட்டியதோடு ,அந்த சிறப்புக்குப் பிறப்பு கொடுத்தது அடிமைப்பெண் என்றது.பேசும்படம் புகழுரை இத்துடன் பதிவு செய்துள்ளேன்..........nssm...

orodizli
29th January 2021, 10:21 AM
எங்கே_தேடுவோம் ...?!

பிரபல திரைப்பட கதை வசனகா்த்தா*
சக்தி கிருஷ்ணசாமி .

வீரபாண்டிய கட்டபொம்மன்*
போன்ற பல திரைப்படங்களுக்குக்*
கதை வசனம் எழுதியவா் .

அவரது மகளுக்குத் திருமணம்*
நடைபெறுவதாக இருந்தது .

ஒருநாள் , அமைச்சராகவும்*
பேரவைத் தலைவராகவும்*
இருந்த க.இராஜாராமிடம் இதுபற்றி*
சக்தி கிருஷ்ணசாமி பேசிக்*
கொண்டிருந்தபோது ,

'உங்களுக்குத்தான் எம்.ஜி.ஆரைத்*
தொியுமே . அவா் படங்களுக்கும்*
வசனம் எழுதி இருக்கிறீா்களே ,*
அவாிடம் உதவி கேட்கலாமே' என்றாா்*
இராஜாராம் .

'நான் தொழில் ரீதியாகத்தான்*
அவருடன் பழகி் இருக்கிறேன் .*
இதுபோல் உதவி கேட்கும் அளவுக்கு*
நெருங்கிப் பழகியதில்லையே' என்று*
சக்தி கிருஷ்ணசாமி சொல்லி இருக்கிறாா் .

'அதனால் என்ன, நான் கூட்டிப்*
போகிறேன் வாருங்கள்' என்று*
சொல்லிவிட்டு இராஜாராம் , அவரை*
அழைத்துச் சென்று எம்.ஜி.ஆாிடம்*
அவாின் நிலைமையை எடுத்துச்*
சொன்னாா்.

உடனே புரட்சித் தலைவா்*
எம்.ஜி.ஆா்., சக்தி கிருஷ்ணசாமியைப்
பாா்த்து 'எவ்வளவு பணமிருந்தால்*
திருமணத்தை நன்றாக நடத்துவீா்கள்'
என்று கேட்டாா் .

உடனே 'இருபதாயிரம் இருந்தால்*
சிறப்பாகச் செய்து விடுவேன்' என்று*
கிருஷ்ணசாமி சொல்ல ,*

உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாய்*
கொடுத்து , திருமணத்தைச் சிறப்பாக*
நடத்துங்கள்'

என்று சொல்லிவிட்டு ,

பொருளாதார ரீதியில் மேலும் உதவும்*
வகையில் , அப்போது தான் நடிக்க*
ஒப்பந்தமாயிருந்த "எங்க வீட்டுப் பிள்ளை" , படத்திற்கு வசனம் எழுதவும்*
வாய்ப்பளித்தாா் .

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்., போன்ற
ஒரு மாமனிதரை இனி நாம் எங்கே*
தேடுவோம் ?...

♥♥

orodizli
29th January 2021, 10:21 AM
நம் தங்க தலைவரின் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்", படத்தின் படப்பிடிப்பு வட மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் படம் ஆகி கொண்டு இருந்த நேரம்.

ஒரு ஓய்வு நாளில் பட குழுவினர் அருகில் இருந்த அஜ்மீர் தர்காவில் வழி பாடு நடத்த செல்ல...அங்கே வரும் பயணிகளை அழைத்து கொண்டு செல்லும் குதிரை வண்டிகளில் ஒரு வண்டி பின் புறம் ..

நம் தலைவரின் பெரிய படம் ஒட்ட பட்டு இருக்க கண்ணை நம்ப முடியாமல் குழுவினர் அருகில் சென்று அந்த வண்டியின் பின் புறம் பார்க்க அது தலைவர் படமே தான்...

தன் குதிரை வண்டி அருகில் ஒரு கூட்டம் நிற்பதை பார்த்த அதன் உரிமையாளர் அருகில் வர நம்மவர்கள் இவர் படத்தை நீங்கள் ஏன் ஒட்டி இருக்குறீர்கள் என்று வியந்து ஹிந்தி தெரிந்தவர் கேட்க.

அதற்கு அந்த வட இந்திய வண்டிக்காரர் இவர் எனக்கு கடவுள் போல...இவர் நடித்த படம் ஒன்று அதாவது "அடிமைப்பெண்", பட பிடிப்பின் போது மொத்த குழுவினருக்கும் மற்றும் ஒட்டகங்களுக்கும் எங்கு இருந்தும் தண்ணீர் நிரப்பி பட பிடிப்பு நடக்கும் இடத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்.

படத்தில் நாயகன் இவர் என் உண்மை உழைப்பை பார்த்து எல்லா காட்சிகளும் எடுக்க பட்டு அவர் ஊர் திரும்பும் வேளையில்.

நான் அணுதினம் கொடுத்த தண்ணீர் லோடுகள் கணக்கை தினம் தினம் சரியாக பணம் கொடுத்த போதும்...

ஊர் திரும்பும் நாள் அன்று இந்த எளிய குதிரை வண்டி காரன் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எனக்கு கொடுத்து என்னை கை குலுக்கி விடைபெற்றார்.

நானும் எத்தனையோ பெரிய மனிதர்கள் செல்வந்தர்கள் நடிகர்கள் எல்லோரையும் பார்த்து இருக்கிறேன்...ஆனால் அவர் கண்ணில் இருந்த நேர்மை உண்மை வேறு எங்கும் இது வரை நான் பார்க்க வில்லை...அந்த நொடி முதல் நான் என்னை அவரிடம் இழந்தேன் என்று சொல்ல...

குழுவினர் திகைத்து போய் இப்போ அவரை பார்க்க வர விருப்பம் ஆ என்று கேட்க அவரும் எங்கே எங்கே என்று ஆவலுடன் கேட்க அவரை அழைத்து கொண்டு நம் மன்னவர் முன்பு விவரம் சொல்லி அவரை நிறுத்த.

தலைவர் மனம் நெகிழ்ந்து அவரை வரவேற்று தொழில் எப்படி இருக்க என்று கேட்க உங்க புண்ணியத்தில் அருமை என்று அவர் பதில் சொல்ல..

இப்போ என்ன வேண்டும் உங்களுக்கு என்று தலைவர் கேட்க ஐயா எனக்கு ஒன்றும் வேண்டாம்...உங்கள் உடன் ஒரு புகைப்படம் படம் மட்டும் போதும் என்று சொல்ல.

அவரை அருகில் அழைத்து அவர் தோளில் கையை போட்டு கொண்டு அவர் தலைவர் உடன் எடுத்து கொண்ட அந்த படம் இன்னும் அஜ்மீர் தர்கா பகுதியில் அவர் குதிரை வண்டியில் ஒட்ட பட்டு சுற்றி கொண்டு இருப்பதை.

நம்பித்தான் ஆக வேண்டும்...வாழ்க தலைவர் புகழ்.

உங்களில் ஒருவன். நெல்லை மணி...
நன்றி தொடரும்...

பூவுடன் சேர்ந்த நாறுக்கு கிடைக்கும் புகழ் எல்லாம் பூக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது உலக பொது விதி..நன்றி.........

orodizli
29th January 2021, 10:22 AM
'கண் நிறைந்த தலைவரை இதயத்தில் பூஜிக்கும் கண்பார்வையற்ற தாய்'- உங்கள் நெஞ்சை பதம் பார்க்கும் உருக்கமான செய்தி.....'என்ன உடம்புயா...சும்மா கல்லு மாதிரி இருக்காரே தலைவரு'- இப்படி பாத்திமாபீவி மெய்சிலிர்த்தது இன்று மட்டுமல்ல. 1969 லேயே தனது இளம் வயதில் தலைவரின் மீது உள்ள அன்பில் அழகில் மெய்சிலிர்த்து சொன்ன வார்த்தைகள். சேலம் லைன்மேடு பகுதியில் வசிப்பவர் 70 வயதான மூதாட்டி பாத்திமாபீவி. கடந்த 13 நாட்களாக(28.01.2021) சேலம் அலங்காரில் வெற்றிநடைபோடும் அடிமைப்பெண் காவியத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் பார்த்து வருகிறார். தலைவரின் எந்த காவியமானாலும் வசனங்களை அச்சு பிறழாமல் மனப்பாடமாக சொல்கிறார். கண்கண்ட கணவரை இழந்த இவர் தற்போது கண் பார்வை இன்றி உள்ளார். என்றாலும் தலைவர் காவியத்தை காதால் கேட்டு ரசிக்க வருகிறார். எவரது உதவியும் இன்றி தனது பணத்தை கொண்டே டிக்கெட் எடுக்கிறார். தாயை தியேட்டருக்கு அழைத்து வருவது இந்த தெய்வத்தாயின் மகன் ரபீக். சமையல் வேலைக்கு சென்று தாயை வாழவைக்கிறார். மிகவும் ஏழ்மையில் குடிசை ஒன்றில் வசிக்கிறார்கள்." அடிமைப்பெண்" காவியத்தை 1969 ல் சாந்தி தியேட்டரில் 15 க்கும் மேற்பட்ட தடவை பார்த்தாராம். தலைவரின் கொள்ளை அழகில் மனதை பறிகொடுத்த பல்லாயிரம் ரசிகர்களில் இவரும் ஒருவர். இந்த அலங்கார் தியேட்டரில் தலைவரின் "ரிக்சாக்காரன்", "என் அண்ணன்" உள்ளிட்ட பல காவியங்கள் நூறு நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றுள்ளது என்றும் என் அண்ணன் காவியத்திற்கு 107 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது என்றும் இந்த தியேட்டரை முன்னாள் அமைச்சர் திரு. ராஜாராம் திறந்து வைத்துள்ளார் என்றும் தலைவர் இந்த தியேட்டரில் நடந்த தனது காவியத்தின் வெற்றிவிழாவுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறும் திரு. மாஸ்டர் சுப்பிரமணி, தலைவர் வீட்டில் அவரை சந்தித்து தலைவர் கைகளை பிடித்து மகிழ்ந்ததையும் நினைவூட்டினார். தீவிர தலைவர் பக்தரான மாஸ்டர் திரு.சுப்பிரமணி பல நாள் காத்திருந்து பாத்திமாபீவி அம்மாளை கண்டுபிடித்து அவருக்கு சிறப்பு செய்ய ஏற்பாடு செய்தார். இந்த அம்மாவைப்பற்றி அறிந்த நாளிலிருந்து 'எனக்கு புகைப்படம், வீடியோ பேட்டி எடுத்து அனுப்புங்கள்'என நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அதை அடிமைப்பெண் 10 வது நாள் விழாவான கடந்த ஞாயிறன்று நிறைவேற்றி வைத்தனர் தலைவர் பக்தர்கள். அதன்படி பகுதி கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு.ஜெ.மாணிக்கம் அவர்கள் பாத்தீமாபீவி மற்றும் அவரது மகனுக்கு புத்தாடைகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். தியேட்டரில் படம் பார்க்க வந்த 130 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு எவர்சில்வர் தட்டு பரிசு வழங்கினார். தியேட்டர் ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோருக்கு எவர்சில்வர் குடம் வழங்கினார். செய்தி தொகுப்பு நான்- (சாமுவேல்,சத்தியமங்கலம்).பேட்டி- சுப்பிரமணி. புகைப்படங்கள் திரு.ஜெ.மாணிக்கம் அவர்களின் மகன் திரு.சவுந்திரராஜன். உங்கள் கருத்துகளை, வாழ்த்துகளை பாத்திமாபீவி அம்மாளுக்கு நேரில் தெரிவிக்க முடியாவிட்டாலும் திரு.சுப்பிரமணி அவர்களுக்கு தெரிவிக்கலாம்.(9566537161).........

orodizli
29th January 2021, 10:23 AM
நமது தலைவர் எம்.ஜி.ஆர் திரையுலகில் கதாநாயகனாக தெரிவு செய்யப்பட்டு நடித்த முதல் படம் ராஜகுமாரி.எம்.ஜி.ஆர் கதாநாயகனாக டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி பெரு முயற்சி மேற்கொண்டவர்.ராஜகுமாரி படத்தை இயக்கியவரும் ஏ.எஸ்.ஏ சாமி தான்.படம் 11.4.1947ல் வெளியாகி வெற்றி பெற்று 168 நாட்கள் ஓடியது.அந்த ஏ.எஸ்.ஏ சாமி ,கலைமணி ஜூன் 1952 இதழில் ஒரு பேட்டி கொடுத்தார்.அதில் எம்.ஜி.ஆர் கத்திசண்டையில் கைதேர்ந்தவர்,வசனங்கள் உதவி செய்தால் வீர ரசம் இவரிடம் நன்றாக இருக்கும் என்று புகழாரம் செய்துள்ளார்.ஆம்.நமது தலைவர் சரித்திர ராஜாங்க படங்களில் பேசும் வீர வசனங்களில், தமிழ் உச்சரிப்பில் வீர ரசம் சொட்டியது உண்மைதானே !.........nssm

fidowag
29th January 2021, 08:48 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ................இந்த வாரம் வெளியான* படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை* மூலக்கடை ஐயப்பாவில்* 28/1/21* முதல்* நீரும் நெருப்பும்*
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .*

தகவல் உதவி : திரு. ராமு, மின்ட்.*



29/01/21* முதல் மதுரை* ராம் அரங்கில்* எங்க வீட்டு பிள்ளை*
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .


29/01/21 முதல் கோவை சண்முகாவில்* தொழிலாளி* தினசரி 3 காட்சிகள்*
நடைபெறுகிறது .

தகவல் உதவி : திரு.ஜெய்குமார் .,கோவை .

orodizli
30th January 2021, 05:03 PM
#வாத்தியாருன்னா #மாஸ்

#Real #Action #Hero

திரைப்படத்துறையில் பெரும்பாலான ஆக்ஷன் ஹீரோக்கள் நிஜவாழ்வில் ஆக்ஷன் ஹீரோக்களாக இருப்பதில்லை...உடலை மட்டுமே கட்டுமஸ்தமாக வைத்துக்கொண்டு என்ன பயன்? நெஞ்சுல 'தில்'லு வேணுமே!!!

வாத்தியார் நிஜவாழ்விலும் ஆக்ஷன் ஹீரோ தான்...கேள்விப்பட்ட சில சம்பவங்களைப் பகிர்கிறேன்...

என் தந்தையார் சொன்னது :

ஒருமுறை பெங்களூரில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது, படப்பிடிப்பு குழுவினரைத் தாக்கமுயன்ற கன்னடவெறியர்களை தனியொருவராக சமாளித்தது...

வாத்தியாரின் மெய்க்காப்பாளர் திரு.கே.பி.இராமகிருஷ்ணன் கூறியது :

இரயிலில் இரவு நேரம் பயணம் செய்துகொண்டிருக்கும் போது, தலைவர் இருந்த கோச்சில் 'ஐயோ, அம்மான்னு' அலறல் சத்தம்...நாங்கள் ஓடிச்சென்று பார்க்க, தன்னைத் தாக்கவந்த சில சமூகவிரோத கும்பலை தனியாளாக 'பெண்டு' நிமிர்த்துக்கொண்டிருந்தார்.

புத்தகத்தில் படித்தது :

ஒருமுறை இரவு நேரம் காரில் வரும்போது, கத்தியுடன் தன்னைத் தாக்க வந்த வழிப்பறிக்கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்கொண்டது...

மேலும், உ.சு.வா படப்பிடிப்பில் கதாநாயகியிடம் வம்பு செய்த ஜப்பான்காரனைப் பதம் பார்த்தது...

இறுமாப்புடன் அறைகூவல் விடுத்த தாராசிங்கிடம், 'தான் உங்களுடன் மல்யுத்தம் செய்யத்தயார்' என பகிரங்கமாக சவால் விட்டது...

இப்படிப் பட்டியல் நீளும்............BSM...

orodizli
30th January 2021, 05:07 PM
��"எம்.ஜி.ஆர் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்"��

மைசூரில் :

கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்..........mgn...

orodizli
30th January 2021, 05:08 PM
#வியப்பும் #பக்தியும்

பேராசிரியர். திரு.கு.ஞானசம்பந்தம் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்குச் சென்றிருந்தார்...நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் 'கண்டி' நகரம் வழியாக டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார்...

திடீரென அந்த டாக்ஸி டிரைவர் வண்டியை நிறுத்தி ஒரு காலியிடத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டு பின்னர் காரை ஓட்டத்தொடங்கினார்...

டிரைவரின் செய்கையைப் பார்த்த
ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரே வியப்பு..."அந்த இடத்தில் கோயிலோ வேறொன்றுமோ இல்லை!!! ஒரு காலியிடத்தைக் கும்பிடுகிறாரே!!!!"

ஏன் தம்பி! அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே! அதை ஏன் கும்பிட்டீர்கள்...???

அதற்கு டிரைவர்,
"இந்த இடத்தில் தான் ஒரு காலத்தில் எங்க எம்ஜிஆர் பிறந்தவீடு இருந்தது..."
என்றதும்...!!!

ஞானசம்பந்தன் அவர்கள் அப்படியே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்...
'ஒரு காலியிடத்தில் தங்கள் மனங்கவர்ந்த தலைவன் பிறந்தவீடு என்ற ஒரே காரணத்திற்காக வணங்குகிறார்களென்றால் அந்தத் தலைவன் எப்படிப்பட்ட தலைவனாக இருந்திருக்கிறார்...அப்படிப்பட்ட தலைவன் மேல் இந்த மக்களுக்கு எந்தளவு பக்தி...!

பிரமித்துப்போனார்...பேராசிரியர்.........bsm.. .

orodizli
31st January 2021, 10:51 AM
'பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டது' என்று நினைக்குமாம். அதுபோல சில கிணற்று கைஸ்கள்
அய்யனின் முதல் படம் வெளியான நாளான அக் 17 ல் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்தாராம். அதனால் யாரும் அழிக்க முடியாத பெருவெற்றி பெற முடிந்ததாம். இந்த அரை பைத்தியங்களை என்ன சொல்லி அழைப்பது என்று அகராதியை புரட்டி பார்த்தும் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அலைகிறேன்.

சரியான அரைவேக்காடுகளாக திரியும் இவர்களை போன்றோர்கள் கொடுத்த பில்ட் அப்களில்தான் பேஸ்மென்ட் வீக்காகி அய்யன் ஆல் அவுட் ஆனதை மனதில் கொள்ளாமல் இன்னமும் அதை சொல்லியே திரிகிறார்கள். இனியும் இவர்களை விட்டு வைத்தால் ஆண்டவனை படைத்தது அய்யன்தான் என்ற புது ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்கள்.

அதனால் என்ன சொன்னாலும் அய்யனின் கைஸ்கள் திருந்ந மாட்டார்கள் என்பதால் அந்த புலம்பலை காதில் வாங்காமலே விட்டு விடலாம். மக்கள் திலகம் முதல் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" வெளியான ஆண்டு 1947 ல் தான். ஆனால் அந்த முதல் படமே அந்த ஆண்டில் வெளியான படங்களில் வசூலில் முதலிடம் பெற்று சாதனையின் சிகரமாக விளங்கியது அய்யனின் அரைவேக்காடுகளுக்கு தெரியாதா?.

"ராஜகுமாரி" 9 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி அதிகபட்சமாக 168 நாட்கள் வரை ஓடி மகத்தான வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் ராஜகுமாரிதான். புரட்சி நடிகரின் நடிப்பில் தெரிந்த எழுச்சி அனைவரையும் உற்று நோக்க வைத்தது. ஆனால் "பராசக்தி"யின் வெற்றிக்கும் அய்யனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது ஓடியது தீய சக்தியின் தீயான வசனத்துக்காக மட்டும்தான் என்பதை கூட மறைக்க முயல்கிறார்கள்.

அதேபோல் "மனேகரா"விலும் தீய சக்தியின் பங்கு அபரிமிதமானது. இந்த இரண்டு படங்களுக்கும் இடையே வந்த அய்யனின் அனைத்து படங்களுமே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதே உண்மை. சில படங்கள் படுதோல்வி அடைந்தது.
அய்யனின் நடிப்பால் கூட படத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. "பராசக்தி", "மனோகரா" தவிர தீயசக்தியின் பங்களிப்பு இல்லாத அய்யனின் படங்கள் எடுபடவில்லையா? அப்படியானால் அய்யனின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அம்போவா.

ஆனால் புரட்சி நடிகரோ 1950 ல் அவர் நடித்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாக அமைந்தது. "மருதநாட்டு இளவரசி" "மந்திரி குமாரி" ஆகிய படங்கள்தான். இரண்டுமே பல சென்ட்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. "மந்திரி குமாரி" படத்தில் தலைவர் காங்கிரசில் அமைதியாக இருந்த போதிலும் திரைப்படத்தில் சீறிப் பாய்ந்ததை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.

எம்ஜிஆருக்கு புயல் வேகத்தில் ரசிகர் மன்றங்கள் தோன்றின. அடுத்து 1951ல்
வெளியான "மர்மயோகி" "சர்வாதிகாரி" போன்ற படங்கள் திரையிட்ட அநேக சென்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. "மர்மயோகி"யில் குதிரையில் புழுதியை கிளப்பி வரும்போதே எழும்பும் கரவொலியே சொல்லும் தலைவருக்கு உச்ச நடிகர் அந்தஸ்து கிடைத்தாயிற்று என்று. அவர் பேசும் 'கரிகாலன் குறி வைத்தால் குறி தவறாது' என்ற பஞ்ச் டயலாக் இளைஞர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆளுமையை என்னவென்று சொல்வது. அதுவரையில் திரைத்துறையில் கால் பதிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அய்யன் தலைவருக்கு போட்டியாக யாரால் அவரை நினைக்க முடியும். தன்னம்பிக்கை இல்லாதவன்தான் கைத்தடியாக கழகத்தை பயன்படுத்துவான் என்பதற்கு அய்யனே சாட்சி.

"மந்திரி குமாரி" 1950 ஆண்டும் "மர்மயோகி" 1951 ம் ஆண்டும் வசூலில் முதன்மை ஸ்தானத்தை பிடித்ததை எண்ணி பார்க்க வேண்டும். பலபேர் தாங்கிப் பிடித்து நடிக்க வைத்த மீன்வாய் அய்யனை, (மீன்வாய் என்று சொன்னது நானல்ல உயர்திரு மதிப்பிற்குரிய திரு ஏவிஎம் அவர்கள்), போய் தலைவருக்கு போட்டியாக நினைக்கத்தான் முடியுமா? ஆண்டிற்கு ஒரு படம் 100 நாட்கள் ஓடினால் அய்யனுக்கு அதிசயம்.ஆனால் தலைவருக்கோ ஒரு படம் ஓடாவிட்டால் அது அதிசயம். அதிசயமே அசந்து போகும் தலைவரே ஒரு பேரதிசயம்.

அதே ஆண்டு வெளியான "என்தங்கை" படம்தான் "பராசக்தி"யை காட்டிலும் அதிகமாக(351 நாட்கள்)
ஓடியதை அறியவில்லையா ஆப் பாயில்டு அய்யன் கைஸ்கள்?.
இப்படி திமுக மூலம் நுழைந்த அய்யனை தீயசக்தி தாங்கி அழைத்து வராவிட்டால் அய்யன் அன்றே புழக்கடை வழியாக சென்றிருப்பார். கனல் தெறிக்கும் வசனங்களை கத்தி பேசும் அய்யனை காட்டிலும் கனல் தெறிக்கும் விழிகளால் வசனத்தை புரட்சி நடிகர் பேசும் பாங்கு அனைவரையும் கவர்ந்திழுத்ததால்தான் இறுதி வரை நம்பர் ஒன் இடத்திலே இருந்தார் என்பதை யாரும் புறந்தள்ள முடியாது..........ksr..........

orodizli
31st January 2021, 06:22 PM
உப்பு இட்டவரை உள்ளலவும் நினை!
என்பார்கள் !அந்த வகையில் அதை சிரமேற்கொண்டு தன் உயிர் போனாலும் நிறைவேற்றுபவர்!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்!
தன் இளமைக்
காலத்தில் இதை நன்கு உணர்ந்தவர் மக்கள்திலகம் அவர்கள் !ஆரம்ப காலத்தில் தான் பட்ட அனுபவங்களை நாடகம் சினிமா அரசியல் என எல்லா நிலைகளிலும் நடத்திக்காட்டியவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ! ஒரு மனிதர் எப்படிப்பட்ட சூழ் நிலையிலும் அதை நிறைவேற்ற பகீரத முயற்ச்சி எடுத்து நடத்திக்காட்டியவர்!
நினைத்ததை முடிப்பவன் என பெயர் வாங்கியவர் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் அவர்கள்! *இந்த வைராக்கியம் எல்லோரும் எளிதில் செயல்படுத்த முடியாது !ஆனால்
அதை மிக எளிதாக நிறைவேற்றிய
ஆயிரத்தில் ஒருவர் தனிப்பிறவி எம்ஜிஆர் அவர்கள்! இந்த அரிய செயல்களை நல்ல
மனம் கொண்டவர்களாகலேயே நினைக்க முடியும் !சூது வாது வெள்ளை மனம் வெளுத்ததெல்
லாம் பால் என நினைக்கும் பொன்மனம் கொண்டவர்களால் தான் இத்தகைய காரியங்களை நிறைவேற்ற முடியும் !
அரசியலில் இவர் உருவாக்கிய திட்டங்கள் அதை நிறைவேற்ற சந்தித்த தடங்கல்கள் சிரமங்கள் உலகில் இவர் ஒருவரால்தான் கடந்து பொற்கால ஆட்சி தரமுடிந்தது !
இதற்கு சாதாரமனம் இருந்தால் போதாது !வீரம் நெஞ்சுரம் நற்சிந்தனை தாராள குணம் வாரி வழங்கும் கொடைத்திறன் இத்தனையும் ஒரு சேர இருந்ததால்தான் சாதிக்க முடிந்தது !
சரித்திரநாயகன் என பெயர் எடுக்க முடிந்தது ! இந்த நூற்றாண்டின் இனையற்ற மனிதர் வரலாற்று நாயகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவரே! 104 வது பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் அவர் புகழ் பெருமை கீர்த்தி சாதனை வெற்றி இவைகளை நாம் என்றும் நினைத்து அவர் புகழ் என்றும் ஓங்கி ஒலிக்க இரத்தத்தின் இரத்தங்கள் ! தங்கள் உயிர் போனாலும் புரட்சித்தலைவர் பெருமையை அவர் ஆட்சி சாதனைகளை ஊர் தோறும் பரப்பி வாழும் தெய்வம் !
ஏழை எளிய மக்களின் இறைவன் எங்கள் எம்ஜிஆர் என முழக்கமிட வேண்டும் அவர் இன்றி இந்த நாட்டின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது !தேர்தல்
என்று வந்தால் புரட்சித்தலைவர் புகழ் பாடுபவர்களுக்கே ஓட்டு என்ற சாதனை படைத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை வணங்கி வருவோம் !
வாழ்வில் வளம் பெறுவோம் !
இனிய மாலை வணக்கம் !����. ����✌️✌️����✌️✌️����✌️✌️�������������������� ����. -எம்.எஸ்.சேகர்
கோவை-641103..........

orodizli
31st January 2021, 06:23 PM
'டி.வியை off பண்ணு...செல்போனை off பண்ணு...எம்ஜிஆர் படம் பார்க்க தியேட்டருக்கு போவோம்'.... இதுதாங்க எம்ஜிஆர் ரசிகன். ஆனால் இன்று.... 'எம்ஜிஆரின் 110 காவியங்களை கைபேசியில் கண்டுகளியுங்கள்' என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் மக்கள் திலகம் ரசிகர்களுக்கோ இந்த செய்தி ஆச்சரியமாகப்படவில்லை என்பதே உண்மை. தியேட்டரில் அவரது காவியங்களுக்கு மவுசு குறைந்தா விட்டது? கொரோனா பீதி அடங்கியபின் இரண்டு மாதங்களுக்குபின் திறக்கப்பட்ட தியேட்டர்களில் 90 சதவீதம் மக்கள்திலகம் காவியங்களே திரையிடப்பட்டு ரசிகர்கள் ஆதரவைப் பெற்றன. எனவே திரையுலகை மீண்டும் மீட்டது நடிகப் பேரரசர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரே. இன்றைய புதுப்படங்களுக்கு வெற்றிகரமாக 2 வது நாள், 3 வது நாள் என நாளிதழ்களில் விளம்பரம் செய்கிற அவல நிலை உள்ளது. 4 வது நாளிலோ முதலுக்கே மோசம் என்ற நிலையில்... 'எம்ஜிஆர் படத்தை போடு. அப்பத்தான் தியேட்டரை ஓட்ட முடியும்' என்ற நிலை உள்ளது. இன்றுகூட 5 ஊர்களில் நமக்கு தெரிந்து மக்கள் திலகம் காவியங்கள் வெற்றிநடை போடுகிறது. கடந்த 3 மாதங்களில் சேலம் அலங்காரில் நம்நாடு, அடிமைப்பெண் தலா 2 வாரங்கள் ஓடியுள்ளன. திருப்பூரில் அன்பே வா 3 வாரங்கள் ஓடி உள்ளது. திருச்சியில் எங்க வீட்டுப் பிள்ளை 2 வாரம் ஓடி உள்ளது. தமிழகம் முழுவதும் நாம் கணக்கெடுக்க திணறும் வகையில் புள்ளி விபரங்களுடன் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே எண்ணற்ற ஊர்களில் கடந்த 3 மாதங்களாக வசூல் சாதனை படைத்து வருவதை இதே தளத்தில் அவ்வப்போது நாம் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறோம். அதிலும் தொலைக்காட்சிகளில் சுமார் 60 காவியங்கள் மாதம் ஒன்றுக்கு தலா 110 தடவை ஒளிபரப்பாகி வருகிறது. அதையும் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறோம். நிற்க......கடந்த 7 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் காவியம்தான் 190 நாட்கள் சென்னை ஆல்பர்ட், 160 நாட்கள் சத்யம்) அதிக நாட்கள் ஓடிய சாதனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இது மறுவெளியீடுதான். நிற்க. மக்கள் திலகத்தின் ஒவ்வொரு காவியங்களும் முதல் ரிலீஸ் காலத்திலிருந்து அதன் நெகடிவ் உரிமையாளர் மீண்டும் மீண்டும் பிரிண்ட் போட்டு அதன் படப்பெட்டி வைத்திருந்த விநியோகஸ்தர்கள் அந்தக் காவியம் பிலிம்ரோல் சேதமடையும் காலம் வரைக்கும் 70, 50 ஆண்டுக்கணக்கில் திரையிட்டு வாழ்ந்து வருகிறார்கள். நெகடிவ் அழிந்து போய் அல்லது திரையிட முடியாத பல எம்ஜிஆர் காவியங்கள் திரைக்கு வருமேயானால் இன்றும் அமோக வரவேற்பை பெறும். குறிப்பாக மருதநாட்டு இளவரசி, சர்வாதிகாரி, ராஜகுமாரி, மர்மயோகி ஏன் மோகினி, நாம், குமாரி போன்ற காவியங்கள் தியேட்டருக்கு வராதா...என எம்ஜிஆர் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்...அட...60.70 வயது ரசிகர்கள் மட்டும் இல்லீங்க...25, 30 வயதுடைய இளைய தலைமுறை எம்ஜிஆர் ரசிகர்களும்தாங்க. ம்...படகோட்டி காவியம் வராதா என நித்தமும் துடிதுடித்துப் போகிறார்கள் இவர்கள். வேணும்னா பாருங்க...உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வெளியிடும்போது இதெல்லாம் உண்மை என விளங்கும். ரொம்ப சந்தேகம் இருந்தால் இன்று திரையிடப்பட்டுள்ள மேற்கண்ட 5 ஊர் தியேட்டர்களிலும் பக்தி பரவசம், ஆரவாரத்தை காணலாம். எனவே... எனவே... எனவே....போலி தலைவன் போலி நடிகன், போலி ரசிகன்கள்தான் கொரோனாவிலிருந்து தியேட்டரை மீட்டார்கள் என்ற போலி செய்தியை நம்பாதீர்கள். குறிப்பாக கைபேசியில் எம்ஜிஆர் படங்கள் பாருங்கள்...டி.வியில் எம்ஜிஆர் படங்கள்...டிவிடி பிளேயரில் எம்ஜிஆர் படங்கள் பாருங்கள் என கூறி எம்ஜிஆர் ரசிகர்களிடம் காமெடி பண்ணாதீர்கள். எம்...ஜி...ஆரா....கொக்கா? யாருகிட்ட....ம்??????!!! Sml...

orodizli
31st January 2021, 06:24 PM
��இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க!��

நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.

Posted by : MG Nagarajan

orodizli
31st January 2021, 06:32 PM
"பல்லாண்டு வாழ்க"... அருமையான படம். காவியம்...ஒரிஜினல் படத்தில் வார்டன் சாந்தாராம் இறந்துவிடுவார். நமக்கு தலைவர் சாகக்கூடாது. நமக்காக , நம்ப எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி கதை மாற்றப்பட்டது. புரட்சித் தலைவர் எப்பவுமே நம்ம திருப்திக்காக படம் எடுப்பார். எங்களுக்கு அதான்யா வேணும். கல்கியில் படம் வந்த சமயத்தில் நம் தலைவன் ஓலைத் தொப்பியுடன் கூலிங்கிளாசுடன் ஸ்டைலா சிரிக்கும் புகைப்படம் போட்டிருந்தார்கள். ஓட்டை ஓட்டையா இருக்குகிற தொப்பியில் சூரிய ஓளி பாய்ஞ்சு தலைவர் முகத்தில் சூரிய ஒளி புள்ளி புள்ளியா விழும். அருமையான போட்டோ.....நம்பியாருடன் சண்டைக் காட்சி. நம்பியார் குத்தவரும் மண்வெட்டிய காலிலே தேக்கி உதைச்சு தள்ளி, சட்டுனு மின்னல் மாதிரி படுக்கையிலே இருந்து துள்ளி எழுந்து நின்று சண்டைக்கு தயாரா இந்த போஸ் கொடுப்பார். தியேட்டரில் நாற்காலிகள் உடையும்........கடைசியில் ஜீப்புக்கு ஈடு குடுத்து ஓடி வருவாரே. அதுவும் அந்த வயசுல. இதெல்லாம் எந்த நடிகனும் அந்த வயசில் இவ்வளவு சுறுசுறுப்பா நினைச்சுப் பார்க்கமுடியாது. தலைவன் டா........rrn...

orodizli
31st January 2021, 06:34 PM
கைதி மனோகரோட அம்மா கொடுக்கும் லட்டை மக்கள் திலகம் கண்ணில் தண்ணீரோட அன்போட வாங்கி சாப்பிடுவார்.கிழவியால் வளர்க்க முடியாததால் மனோகரின் 2 குழந்தைகள் இங்கியே இருக்கட்டும் நு சொல்வார். அதுக்கு அந்தக் கிழவி.. ஏழைங்க கஷ்டத்த புரிஞ்சவங்க இந்த உலகத்துல உன்ன மாதிரி யாரும் கிடையாதுப்பான்னு சொல்லும்போது தியேட்டரில் ஆனந்தக் கண்ணீர். இப்ப இந்த சீன் டிவில பாத்தாலும் நெஞ்சு விம்மி எனக்கு அழுகை வரும்..........RRN..........பல்லாண்டு வாழ்க திரைபடத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒரு சன்டை காட்சி. பரங்கிமலை ஜோதி தியேட்டரில் படம் ரிலீஸ். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அன்று மேட்னி ஷோ பார்த்தேன். அப்போது நான் 10 ம் வகுப்பு படிக்கிறேன். தியேட்டரில் அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம், எங்கும் திருவிழாக்கோலம், ஒரே எழச்சி. தலைவர் படத்தை முதல் நாளே பார்த்ததில் ஒரே பரவசம். ஜோதி தியேட்டரில் படம் 99 நாட்கள் ஓடியது. அதன் பிறகு தாம்பரம் வித்யா தியேட்டரில் 2 nd ரிலீஸ் படம் 50 நாட்கள் தாண்டி ஓடியது. அன்றைய நாட்கள் நினைவுகள் பசுமையாக இருக்கிறது........Hayadullah

orodizli
31st January 2021, 06:35 PM
A unique storyline in which MAKKAL THILAGAM MGR and his favourite and dearest villain actors took part.I heard that V.Shantharam never allows anybody to remake his stories nor his pictures.But when MAKKAL THILAGAM approached him,with the desire to do this character which Shantharam did,he readily accepted it and permitted him.If any other actor would have done this character other than MAKKAL THILAGAM it would have been a fiasco....... Albert Jayakumar Davis

orodizli
1st February 2021, 10:08 AM
நமது இதய சிம்மாசனத்தில் எம்.ஜி.ஆர் ஏன் வீற்றிருக்கிறார் தெரியுமா ! அவர் அத்துணை புகழுரைக்கும் சொந்தக்காரர் ! !.
1970 ல் சத்யா ஸ்டுடியோவில் பூனா திரைப்பட கல்லூரியில் படித்து தேர்ச்சிபெற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவிக்கும் பொருட்டு ஒரு விழா நடக்கிறது.அந்த விழாவில் என்.டி.ராமாராவ் கலந்துகொண்டு சொன்னார் "எம்.ஜி.ஆர் எதை செய்தாலும் அது வரவேற்கத்தக்கதாகத்தான் இருக்கும்".என்பதோடு எம்.ஜி.ஆர் சேர்ப்பதிலும் செலவழிப்பதிலும் நேர்மையும் நிறைவும் கொண்ட வள்ளன்மை உடையவர் என்றார்.
எம்.ஜி.ஆர் பூனா கலைஞர்களுக்கு அவர் கையொப்பமிட்ட தங்கசங்கிலியை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பூனா கலைக்குழு தலைவர் அஸ்வானி பேசுகையில் லண்டன் ராயல் அகாடமி வாயிலில் எழுதப்பட்ட "நீ சிறந்த கலைஞனாக வேண்டுமாயின் முதலில் நல்ல மனிதனாக மாறு "என்ற வார்த்தைகளின் உண்மைப்பொருளை உள்ளபடியே எம்.ஜி.யாரிடம் பிரதிபலிக்கக் கண்டதாக பிரமித்துக்கூறினார்.
எப்பேர்ப்பட்ட குணக்குன்று நமது எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் பக்த நண்பர்களே அவர் புகழை மறைத்து செயல்படும் எவரையும் நாம் அனுமதிக்கக்கூடாது..........nssm...

orodizli
1st February 2021, 10:12 AM
மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா !
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா !
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்த தில்லை !என்ற உண்மையை இந்த உலகுக்கு உணர்த்திய உழைக்கும் கரங்களே !
உங்களால் உயர்ந்தவர் கோடி
வாழ்ந்தவர் பல கோடி அதனாலேயே பாசம் கொண்ட நாங்கள் உங்களை
எங்க வீட்டுப் பிள்ளையாக வணங்கினோம் ! இதைக்கண்ட சில புல்லுறிவிகள்
அரசியலிலும் சினிமாவிலும் உங்களை பயன்படுத்தி சொந்தம் கொண்டாட துடிக்கின்றனர் ! அதற்கு உங்கள் செல்வாக்கு ஒன்றே அவர்கள் குறி!அதை தெரிந்து அவர்கள் உங்களை மாதிரி புகழ் பெற நினைக்கின்றனர் !
புலி வேஷம் போட்டவனெல்
லாம் புலியாகி விடமுடியுமா !
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து ஒன்றே இன்று தேர்தலில் வெற்றி பெற உதவும் !
இதை இன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்தால் வெற்றி நமதே !
தேர்தலில் தீய சக்தியை விரட்ட உதய சூரியனை அஸ்தமன சூரியனாக்க இது ஒன்றே வழி ! உணருங்கள் ஆட்சியாளர்களே !
உங்கள் செல்வாக்கு எல்லாம் பூஜியமே !
இந்த சூட்சமத்தை புரிந்து தேர்தல் பணியாற்றுங்கள் !
இனிய இரவு வணக்கம் !
இரத்தத்தின் இரத்தங்களே ! ������������
������������ ������������
--எம்.எஸ்.சேகர்
கோவை-641103 ..........

orodizli
1st February 2021, 10:14 AM
எம் ஜி ஆர் உலக சாதனைகள்

உலகிலே அதிக சிலை கொண்ட தலைவர் எம் ஜி ஆர்

உலகிலே அதிக நூல் தனி மனிதன் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில்

உலகிலே நாடாண்ட முதல் நடிகர் எம் ஜி ஆர்

உலகிலே ஒரு நாட்டின் பிரதமர் திறந்த ஒரே நடிகர் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்

உலகிலே அதிக செல்வாக்கு கொண்ட நடிகர் அரசியல்வாதி எம் ஜி ஆர் இரு துறைகளிலும்

உலகிலே அதிக நீளம் கொண்ட பெயர் உள்ள இரண்டாவது ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம் ஜி ராமசந்திரன் ரயில் நிலையம் முதல் ரயில் நிலையம் அமேரிக்காவில் உள்ளது

இந்தியாவில் எம் ஜி ஆர்
சாதனைகள்

இந்தியாவின் அத்தனை பட்டங்களையும் பாரத் பத்மஸ்ரீ பாரத்ரத்னா ரூபாநாணயம் பாரளுமன்றத்தில் சிலை ஸ்டாம்பு சாரணர் வெள்ளியானை ரயில்நிலையம் என அத்தனையும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் எம் ஜி ஆர்
ஒருநதியையே தன் நாட்டில் பாயவைத்த ஒரே தலைவர் எம் ஜி ஆர்

ஐ நா பாராட்டிய ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆரை

அமேரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்திய ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆர்

இந்திய யுத்த நிதி முதலில் கொடுத்த அதிக தொகை அதிகம் கொடுத்த முதல் இந்திய குடிமகன் எம் ஜி ஆர்

வெளி நாட்டில் பிரான்ஸில் சிலை கொண்ட ஒரே இந்திய தலைவன் எம் ஜி ஆர்

டெல்லி செங்கோட்டை கொடி தாழ்த்து கட்டி இந்தியா முழுவதும் விடுமுறை விட்டு இந்தியா மரியாதை செலுத்தியா ஒரே மாநில முதல்வர் எம் ஜி ஆர்

ஆசியாவின் பெரிய பஸ் நிலையம் எம் ஜி ஆர் பஸ் நிலையம்

ஒரு துளி நீர் பங்கிட முடியாத அரசியல் நடுவில் ஒரு நதியை கிருஷ்ணா நதியை தமிழகத்தில் பாயவைத்தார் எம் ஜி ஆர் இது எம் ஜி ஆரால் மட்டுமே முடியும்

இந்தியாவில் மக்களின் அதிக செல்வாக்கை அன்பை பெற்ற ஒரே முதல்வர் எம் ஜி ஆர்

வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்.........Arm.........

orodizli
1st February 2021, 10:17 AM
எங்களின் நிரந்தர புகலிடமே:
������������������������
தான் முதலமைச்சராக இருந்து எந்த ஒரு திட்டங்களுக்கும் தன் பெயரை முன்னிலை
படுத்தாத ஒரே தலைவர்.
இவரிடம் உங்கள் பெயரில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் திறக்கப் படுகிறது என்று
கூறியவர்களிடம் நாட்டில் எத்தனையோ அறிஞர் பெருமக்கள் இருக்கும்போது என் பெயர் வேண்டாம் என அன்போடு மறுத்தார்.
மீண்டும் அவர்கள் வலியுறுத்தி ஒரு தேதியை தேர்ந்தெடுத்தனர்.அந்த தேதிக்கு முன்னமே
தன் மூச்சு நின்றது,அப்படிப்பட்ட தனிப்பிறவி எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
மற்ற முதல்வர் என்று சொல்லிக்கொண்டு
அனைத்து திட்டங்களையும் தங்கள் பெயரிலே தீட்டிக் கொண்டவர்களை நாங்கள் என்றுமே பொருட்படுத்துவது இல்லை.
எங்கள் தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்,
எங்கள் இறைவன் என்றால் அது எம்.ஜி.ஆர்,
எங்கள் கோவில் என்றால் அது ராமாபுரம்,
மற்றும் மெரினாவில் தாமரையாய் வீற்றிருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர் மட்டுமே....
என்றும் அவருக்கு ரசிகர்களாக,பக்தர்களாக நாங்கள் நிரந்தரமாக இருப்போம்.

வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!����������
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨...gsn...

orodizli
1st February 2021, 10:18 AM
நாம் கழகத்தின் உண்மை தொண்டர்கள்.1972ல் கழகம் துவக்கி 1973ல் திண்டுக்கல்,பின்னர் கோவை இடைத்தேர்தல்களில் உழைத்த உழைப்பு.பின்னர் 1977,1980,1984 தேர்தல்களில் உழைப்பு.ஆதரவு.தேர்தல் பணி.பின்னர் தலைவர் 1987ல் தெய்வமானார்.பின்னர் இந்த கழகத்தை தொடர்ந்து நடத்திட ஜானகி அம்மையார் தலைமை ஏற்றார்.எம்.ஜி.ஆர்-ஜானகி அசல் அக்மார்க் ஜோடி.அப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் ஒரு தரப்பு எதிர்ப்பில் இருந்தது.அது ஜானகி அம்மையார் முதல்வராக பொறுப்பேற்றதும் அந்த காழ்ப்பு கழகத்தை உடைத்தது.உடைத்தது யார் ??? இரட்டை இலை பறிபோனது.ஜானகி அம்மையார் அசல் அக்மார்க் துணைவியாதலால் கழகத்தை ஒன்றிணைத்து பறிகொடுத்த இரட்டை இலை மீண்டும் பெற கடிதம் கொடுத்து,கழகம் வளர்ந்திட ஒரு கோடியும் கொடுத்தார்.இது கழக வரலாறு.ஆம்.ஜானகி எம்.ஜி.ஆர் நாடாண்ட முதல் முதல்வர் பெண்மணி.அ.தி.மு.க வின் முதல் பெண்மணி முதல்வர்.இந்த பெண்மணியின் பிறந்தநாளை அரசு விழாக அறிவிக்க கோரி நாம் தார்மீக அடிப்படையில் மட்டுமே முயன்று வருகிறோம்.குமுதம் இதழ் கூட ஜானகி அம்மையார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்று விரும்பி சொல்லியுள்ளது.ஆனால் 2வது பெண் முதல்வருக்கு அரசு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.ஜானகி அம்மையார் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லையே.இரட்டை இலை திரும்பப்பெற அவர்தான் மூலம். நமது கோரிக்கையை அரசு ஏற்று அறிவிப்பு செய்யவேண்டும்.அமீரகத்தில் இருக்கும் நமது உண்மை எம்.ஜி.ஆர் பக்தரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பதிவு செய்துள்ளார்கள்.
-ஒரு சாமானிய 1972அ.தி.மு.க தொண்டன்....

orodizli
1st February 2021, 10:18 AM
திரை உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான துள்ளலான துடிப்புமிக்க கதாநாயகர் நம்முடைய புரட்சித்தலைவர் மட்டுமே. அன்றும்-இன்றும் இனிவரும் காலங்களில் வரப்போகிற இளைஞர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை சில நிமிடங்கள் அமர்ந்து பார்த்து விட்டாலே போதும் புரட்சித்தலைவரின் துள்ளலான நடிப்பை கண்டு அவர்களும் ரசிகர்களாகி விடுவார்கள் அப்படி ஒரு இயற்கையான நடிப்பு எந்த நடிகர்களுக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புரட்சித்தலைவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிக அற்புதமான பொக்கிஷங்களாகும் சினிமாவில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் அதில் முக்கிய பங்கு புரட்சித்தலைவரின் திரைப்படங்களுக்கு என்றுமே உண்டு இப்போதைய இளைஞர்களும் இனி வரப்போகின்ற இளைஞர்களும் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை கண்டு ரசித்தால் நேர்மையாக வாழவும் ஒழுக்கமாக வாழவும் முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை ... இன்றும் என்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ! புரட்சித்தலைவரின் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

orodizli
1st February 2021, 10:20 AM
உதய சூரியனாக வந்த எம் ஜி ஆர்

இருண்ட மேலாதிக்க சக்தியை மாற்றி வெளிச்சம் தந்த உதயசூரியன் எம்ஜி ஆர்

தி மு க வை அரியணை காண வைத்த உதயசூரியன் எம் ஜி ஆர்
அண்ணாவை முதல்வர் ஆக்கிய உதயசூரியன் எம் ஜி ஆர்

கருணாநிதியை முதல்வர் ஆக்கிய உதயசூரியன் எம் ஜி ஆர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என உரைத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றிய உதயசூரியன் எம் ஜி ஆர்

தமிழகம் பொற்க்காலம் காண தானே ஆண்டு ஒரு பொற்க்கால ஆட்சி தந்த உதயசூரியன் எம் ஜிஆர்

உதய சூரியன் எம்ஜி ஆர் இன்றி ஒரு தலைவரும் ஜெயிக்க முடியாது

உதயசூரியன் இன்றி ஒரு அணுவும் அசையாது
உதயசூரியன் எம் ஜி ஆர் இன்றி தமிழகத்தில் ஒரு அணுவும் அசையாது

வாழ்க எம் ஜி ஆர் புகழ்...gsn...

orodizli
1st February 2021, 10:21 AM
" மக்களிடம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு "
������������������������������
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜூன் 30 ம் நாள்,"தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எழுச்சியும்,மகிழ்ச்சியும் தந்த நாளாகப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என்பதில்
அய்யமில்லை.
அன்று சென்னையில் மாமாங்கமெனப்
புரண்டோடிய மக்களின் பெருங்கூட்டத்தையும், அவர்களது முகத்தில் சுடர்விட்ட நம்பிக்கை ஒளியையும் உள்ளத்தில்
பொங்கிப் பெருகிய பேரார்வத்தையும் கண்ட
போது ஏழை மக்களிடம் எம்.ஜி.ஆர் பெற்றுள்ள செல்வாக்கு எத்தகையது என்பது
இதுவரை புரியாதவர்களுக்கும் புரிந்திருக்கும்.
(முதல்வர் எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற 10 நாளில்
ஆனந்த விகடன் எழுதிய தலையங்கம்)

இதுபோன்ற புகழ்மிக்க தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.அவருக்கு இணை எவருமில்லை.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨.........vrh...

orodizli
2nd February 2021, 07:50 AM
தகவலுக்கு நன்றி: சென்னை பாபு. தொகுப்பு: சாமுவேல். ஜனவரி மாதம் பொன்மனச்செம்மல் காவியங்கள் தொலைக்காட்சிகளில் 118 தடவை ஒளிபரப்பாகி உள்ளன. முரசு, வசந்த், சித்திரம் தொலைக்காட்சிகளில் அதேநாளில் மறு ஒளிபரப்பு உண்டு. அந்த வகையில் கூடுதல் ஒளிபரப்பு 12 தடவை. எனவே 130 தடவை ஒளிபரப்பாகி உள்ளன. [118+12=130]
ஜனவரி மாதம் ஒளிபரப்பான 66 காவியங்கள் விபரம்: 1. நினைத்ததை முடிப்பவன் 2.சந்திரோதயம் 3.நீதிக்குத் தலைவணங்கு 4. உரிமைக்குரல் 5. இதயக்கனி 6. எங்க வீட்டுப் பிள்ளை 7. நல்ல நேரம் 8. கண்ணன் என் காதலன் 9. உழைக்கும் கரங்கள் 10. என் அண்ணன் 11. புதிய பூமி 12. நாளை நமதே 13. அன்பே வா 14. குடியிருந்த கோயில் 15. நவரத்தினம் 16. என் கடமை 17. எங்கள் தங்கம் 18. தாய் சொல்லைத் தட்டாதே 19. நீரும் நெருப்பும் 20. பல்லாண்டு வாழ்க 21. தேடி வந்த மாப்பிள்ளை 22. தெய்வத்தாய் 23. காவல்காரன் 24. கணவன் 25. ரிக்சாக்காரன் 26. நான் ஏன் பிறந்தேன் 27. பெற்றால்தான் பிள்ளையா 28. தொழிலாளி 29. தாயின் மடியில் 30. கொடுத்து வைத்தவள் 31. ஆனந்த ஜோதி 32. கலங்கரை விளக்கம் 33. பெரிய இடத்துப் பெண் 34. ரகசிய போலீஸ் 115. 35. காலத்தை வென்றவன் 36. பணம் படைத்தவன் 37. உலகம் சுற்றும் வாலிபன் 38. அடிமைப் பெண் 39. நாடோடி மன்னன் 40. தாயைக் காத்த தனயன் 41. மாட்டுக்கார வேலன் 42. நாடோடி 43. பறக்கும் பாவை 44. மதுரை வீரன் 45. ராமன் தேடிய சீதை 46. தேர்த் திருவிழா 47. கன்னித்தாய் 48. வேட்டைக்காரன் 49. சக்கரவர்த்தி திருமகள் 50. திருடாதே 51. தனிப்பிறவி 52. விவசாயி 53. அரசக்கட்டளை 54. நீதிக்குப் பின் பாசம் 55. தர்மம் தலைகாக்கும் 56. குடும்பத்தலைவன் 57. முகராசி 58. அபிமன்யு 59. ஒருதாய் மக்கள் 60. இதய வீணை 61. ஆயிரத்தில் ஒருவன் 62. சிரித்து வாழ வேண்டும் 63. பட்டிக்காட்டு பொன்னையா 64. குமரிக் கோட்டம் 65. படகோட்டி 66. பணத்தோட்டம்
ஜனவரி மாதம் 17 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய காவியங்கள் எண்ணிக்கை விபரம்: சன்லைப்-26, முரசு-7, ராஜ் 18+1( பறக்கும் பாவை கூடுதலாக ஒருநாள்), புதுயுகம்-7, மெகா24-7, பாலிமர்-10, வேந்தர்-3, மீனாட்சி-5+4( நல்லநேரம்,விவசாயி கூடுதலாக பிறிதொரு நாளிலும் வேட்டைக்காரன் கூடுதலாக இரண்டு நாட்கள்) பெப்பர்ஸ்-7, சித்திரம்-1, வெளிச்சம்-1+1( நல்லநேரம்), ஜெ மூவி-5, D திரை-2, ஜெயா-3, வசந்த்-5, மூன்-1, மெகா-2+2( படகோட்டி, குடியிருந்த கோயில் கூடுதலாக தலா 1 நாள்)
மீனாட்சி, D திரை ஆகியவை சென்னை உள்ளிட்ட சில ஏரியாவில் ஒளிபரப்பாகுபவை.
நல்லநேரம் 11 தடவையும் தாய்சொல்லைத் தட்டாதே 8 தடவையும் வேட்டைக்காரன் 5 தடவையும் அதிகபட்சமாக ஒளிபரப்பாகி உள்ளன..........Babu SML...

orodizli
2nd February 2021, 07:51 AM
எம் ஜி ஆர் எடுத்தவுடன்கதாநாயகனாக உயரவில்லை ...

எம் ஜி. ஆர் !

எத்தனையோ

அவமரியாதைகளையும்,

அவமானங்களையும்

தாண்டியே அவரது

வெற்றிப் பயணம்...

ஆரம்பமானது....

அன்றும், இன்றும்

கொண்டாடப்படும்

அவரின் ஆரம்ப கால

திரை வாழ்வினைப் பற்றிப்

பார்ப்போமா!......

➖➖�� #லலிதா

����������������������

எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.

அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.

கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,

'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,

எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.

இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,

எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.

இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் அறிவர்.

அதேபோல், அமெரிக்க இயக்குனர் #எல்லீஸ் #டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.

எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு #புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.

அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய #டாக்கா #மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.

அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.

எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.

வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில் எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிக்கிறார்.

டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.

உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.

எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.

1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் பலித்து விடுகிறது.

அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.

உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.

எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.

“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.

“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.

“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.

நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.

தகவல்➖ இணையம்.........ksr...

orodizli
2nd February 2021, 07:52 AM
'கருணாநிதியின் மகன் நான்' என்ற டயலாக் எடுபடாமல் போகவே இப்ப புரட்சித்தலைவரை 'பெரியப்பா' என்கிறார் திரு.ஸ்டாலின்..

ஆக தனது தந்தையின் பெயரை சொன்னால் 'ஓட்டு விழாது' என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்திருக்கிறார்..

இன்றைக்கு, 'சீனி சக்கர சித்தப்பா, எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா' என்ற ஒரு உருட்டு...

நேற்று 'அண்ணாவுக்கு டீ வாங்கி கொடுத்தேன், பக்கோடா வாங்கி கொடுத்தேன்' என்ற ஒரு உருட்டு...

அஇஅதிமுகவினர் உங்களை போல், கிரிமினல் தனமாக, ஒரு போதும் எதிர்கட்சி தலைவர்களை வாடகைக்கு எடுத்து பிரச்சாரம் செய்யமாட்டார்கள்...spv...

தலைமுறை கடந்து, தலைவர்களையே நேரிலே சந்திக்காத தொண்டர்களே முதல்வராகும் இயக்கம் #அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம்...

எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலினை பார்த்து ஒரே ஒரு கேள்வி...

'நீங்கதான் பெரியாருக்கு பேனா வாங்கி கொடுத்தவராச்சே..

அண்ணாவுக்கு டீ வாங்கி கொடுத்தவராச்சே....

கருணாநிதிக்கு காப்பி போட்டு கொடுத்தவராச்சே....

எல்லா தலைவர்களிடமும் நெருக்கமா பழகி பால பாடம் கற்ற உங்களால அதிமுகவில் ஒரு எளிய தொண்டன் சரளமாக மேடையில் பேசுவதை போல் பேச முடிவதில்லையே ஏன்?

அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டன் முதல்வராகும் போது, உங்களால் முடிவதில்லை ஏன்?

உங்களுக்கு பெரியப்பாவாகவும், உங்கள் அப்பாவிற்கு பெரிய ஆப்பாகவும் விளங்கியவர் எங்கள் #புரட்சித்தலைவர் என்பதை மறந்துவிடாதீர்கள்..........sbb

orodizli
2nd February 2021, 07:52 AM
#இனி #உங்கள #பார்க்கமாட்டோம்

அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...

கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.

ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...

"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.

இது நித்தமும் தொடர...

ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.

மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....

ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...

அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்

நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.

"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...

பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.

அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...

"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....

இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...

வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்......bsm...

orodizli
2nd February 2021, 07:55 AM
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
#மக்கள்_திலகம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #_காலை_வணக்கம்..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்லும் பாடல்களை பாடியதோடு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதையே கடைபிடித்து வாழ்ந்து வந்தார். இதனால் தான் இன்றைக்கும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் அவர் அன்றைக்குப் பாடிய பாடல்கள் இன்றைக்கு வாழும் மக்களுக்கு ஒத்துப்போகிறது..

கவிஞர் கண்ணதாசன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு எழுதிய பாடல்களை ஒரு தொடராக பதிவிட்டு
இருந்தேன் அதில் பல பாடல்களை பற்றி
ஒரு ரசிகனாகப் பகிர்ந்து கொண்டேன்
அதே போல் புரட்சி தலைவர் தம் பாடல்களில் சிறுவர்களும், பெரியவர்களும் தவறான வழியில் செல்லாமல், அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல அவர் படங்களில் எத்தனையோ நன்னெறி பாடல்கள் உள்ளன இன்று அதை பற்றிய ஒரு சிறு கட்டுரை நண்பர்கள் பார்வைக்கு
பதிவிடுகிறேன்....
(சற்று நீண்ட பதிவு மன்னிக்கவும்)

எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அந்த படங்களில் நடித்து முடித்த உடனே, தங்கள் வேலை முடிந்தது என்று கிளம்பி விடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாக நடந்து வருவதுண்டு. சிகரெட், மது, மாது இம்மூன்றையும் தொடவே கூடாது என்று திரைப்படத்தில் நமக்கெல்லாம் புத்தராக வந்து அறிவுரை சொல்லிவிட்டு, பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் சதா சர்வகாலமும் மேற்சொன்ன அந்த மூன்று கெட்ட பழக்கங்களோடே குடும்பமும் நடத்தி வருவதுண்டு.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ திரைப்படங்களில் என்ன கருத்துக்களை சொன்னாரோ, அதையே தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடித்து வந்தார். அதனால் மக்கள் திலகம் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் இன்னும் அவரை மறக்காமல் தங்கள் நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

சின்னஞ்சிறிய வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே, எம்.ஜி.ஆர் தான் முதன் முறையாக நடித்த சமூக சீர்திருத்த படமான, திருடாதே படத்தில் இடம் பெற்ற

திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்துவிடாதே,

திறமை இருக்கு மறந்துவிடாதே

என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம்மை பயமுறத்துவதற்காகவே பேய் பிசாசு பற்றி பயமுறுத்தி வைப்பார்கள் பெரியவர்கள். ஆனால் பேய் பிசாசு எதுவும் கிடையாது என்று சொல்வதற்காகவே அரசிளங்குமரி திரைப்படத்தில் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்று தொடங்கும் பாடலில்

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க

உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே

என்று சிறுவயதிலேயே அவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் பாடியுள்ளார்.

அது மாதிரியே வருங்கால இந்தியா மாணவர்களை நம்பியே உள்ளது என்பதை சொல்லும் வகையில் நம் நாடு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

என்று பாடியுள்ளார்

மேலும், பெற்றால் தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும்.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.... இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்,

என்று நாட்டுக்கு தலைவனாவதற்கு என்னென்ன தகுதிகள் நமக்கு வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

அதே போல், ஒரு மனிதன் தன்னுடைய கடமை, பொறுப்பை உணர்ந்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக திரிபவர்களுக்காகவே பணம் படைத்தவன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உள்ளங்கள் வாழ்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

இந்த பாடலில் இடம்பெற்ற வரிகளைப் போலவே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மறைந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இந்த பூமி உள்ள வரை இன்னும் நம்மிடையே அவர் வாழ்ந்துகொண்டு இருப்பார் என்றால்,
அது மிகையாகாது... வெறும் பாடலை பாடியதோடு நிற்காமல், தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அதையோ கடைபிடித்து வந்தார் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை...

புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...

orodizli
2nd February 2021, 07:56 AM
நண்பர்களே! அதிசயம்,அற்புதமான நிகழ்வுகள் நடக்கிறது பாருங்கள்!!
எம்.ஜி.ஆர் கொடுத்த இரட்டை இலை கட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சியாக களம் காண்கிறார் ஸ்டாலின். அவர் தனது எதிர்க்கட்சி ஸ்தாபகர் எம்.ஜி.ஆர் படம் காட்டி அவர் தனக்கு நெருக்கம் என்று படம் காண்பித்து வோட்டு கேட்கிறார்.உலகத்தில் இந்தமாதிரி எதிர்க்கட்சி தலைவர் எனக்கு நெருக்கம் என்று வோட்டு வேட்டையாடும் விந்தையை யாரேனும் கேட்டதுண்டா? யாரேனும் கண்டதுண்டா ? இந்த விந்தையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் தான் மேலோங்கி இருக்கிறது.
அன்று தந்தை கலைஞர் 1984ல் செய்த அதே தகிடு தத்தம் வேலையை இன்று மகன் செய்கிறார்.அன்று 1984ல் கருணாநிதி என்ன சொன்னார்.?!நீங்கள் எனக்கு வோட்டு போடுங்கள்.எம்.ஜி.ஆர்., எனக்கு தோழர்.அவர் அமெரிக்காவில் இருந்து சுகம் பெற்று வந்தவுடன் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறேன் என்று.
அப்பாவும் பிள்ளையும் எம்.ஜி.ஆர் வோட்டு வங்கி அவர்களுக்கு வேண்டுமாம்.
ஆக நமது நண்பர்களே
தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது !!!...nssm.........

orodizli
2nd February 2021, 07:56 AM
உழைத்து பிழைக்கும் ஒருவன் காட்டில் மரம்வெட்டும் போது தன் இரும்புக்கோடாலியை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் தவறவிட்ட கதை அனைவரும் அறிவோம். ஒரு தேவதை வந்து தங்கக் கோடாலியை
எடுத்து வந்து இதோ கிடைத்து விட்டது என்று கூற இது உன்னுடையதா? என்று கேட்க, இல்லை என்று அவன் கூற அடுத்து வெள்ளி கோடாலி, மூன்றாவதாக இரும்பு கோடாலியை கொடுக்க, ஆம் இதுதான் என்னுடையது என்று அவன் பெற்றுக் கொள்ள அவனுடைய நேர்மையை பாராட்டி மூன்று கோடாலியையும் அவனுக்கு தேவதை பரிசாக அளித்து விட்டு சென்றது.

இதை கேள்விபட்ட பக்கத்து வீட்டில் உள்ள உலோபி தானும் துருப்பிடித்த இரும்பு கோடாலியை தூக்கிக் கொண்டு சீட்டியடித்துக் கொண்டு காட்டுக்கு கிளம்பி விட்டான். ஒரு மரத்தை கூட வெட்டவில்லை. அந்த துருப்பிடித்த இரும்புக் கோடாலியை எடுத்து நேரடியாகவே ஆற்றில் போட்டு விட்டு
தேவதைக்காக காத்திருந்தான். தேவதையும் வந்தது. தேவதையிடம் கோடாலி விழுந்த கதையை சொன்னான். உடனே தேவதை தங்கக் கோடாலியை காண்பித்து இது உன்னுடையதா, பார் என்றது. ஆமாம் இது என்னுடையதுதான் என்று சொல்லி விட்டு தேவதையை திரும்பி பார்க்காமலே தங்கக் கோடாலியை தூக்கிக் கொண்டு ஓடினான்.

ஆனால் கோடாலி உடனே அவனிடமிருந்து மறைந்து விட்டது. ஆனால் முதலாமவன் கொண்டு சென்ற தங்கக் கோடாலியால் நிலைத்த செல்வம் இன்று வரை உயிர்ப்போடு இருப்பதை நாமும் பார்க்கலாம். இதிலிருக்கிற உண்மை தத்துவத்தை உணரும் அளவுக்கு கைஸ்களுக்கு அறிவு பத்துமோ பத்தாதோ தெரியவில்லை. அதற்குபின் நிறைய உலோபிகளும் பேராசைகாரர்களும் முயற்சி செய்து பார்த்தும் இன்று வரை தங்கக் கோடாலி யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.

1952 லிருந்து நடிக்க ஆரம்பித்த அய்யனின் கைஸ்களுக்கு டிக்கெட் கிழிக்க பழகாததால் ஆரம்ப கால அய்யனின் படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை. "நாடோடி மன்னனி"ன் புழுதியை கிளப்பிய வெற்றிக்குப் பின்தான் அய்யனுக்கும் கைஸ்களுக்கும் டிக்கெட் கிழிக்கும் ஆர்வம் உண்டாயிற்று எனலாம். அய்யன் நடித்த முதல் 50 படங்களில் ஒரு 5 அல்லது 6 படங்கள்தான் ஓரளவு வெற்றி பெற்றது.

"தூக்கு தூக்கி", "மக்களை பெற்ற மகராசி" போன்ற 5,6 படங்களை தவிர "உத்தம புத்திரன்" உட்பட பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1959 ல் வெளியான "கட்டபொம்மனை" டிக்கெட் கிழித்து ஓட்டியதிலிருந்து கைஸ்கள் டிக்கெட் கிழிக்க பழகி விட்டனர். அது இன்றுவரை தொடர்கிறது. டிக்கெட் கிழித்த கரங்கள் இன்றுவரை ஓயவில்லை. 1954 ல் வெளியான "மலைக்கள்ளன்" மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. புரட்சிகரமான நடிப்போடு ஜனரஞ்சகமான நடிப்பையும் வெளிப்படுத்தி ஜனாதிபதியின் வெள்ளி பதக்கத்தையும் வெற்றி கொண்ட பெருமை புரட்சி நடிகரையே சாரும்.

1955 ல் வெளியான "குலேபகாவலி" அடுத்த பிளாக்பஸ்டர்.
அந்த படத்தின் மீதுள்ள ஆர்வம் இன்றுவரை சாதாரண மக்களுக்கு தொடர்கிறது. 1956 ல் வெளியான மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் என்றாலும் "மதுரைவீரன்" இன்று வரை கைஸ்களின் கனவில் 31 தியேட்டர்களும் வந்து மிரட்டுவது தொடர்கதையாக மாறி விட்டது.
1957 ல் "சக்கரவர்த்தி திருமகள்" அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஆனது.

1958 என்றாலே கைஸ்களுக்கு குளிர் ஜீரம் வந்து விடும் "நாடோடி மன்னனை" நினைத்து. "நாடோடி மன்னனி"ன் அபரிமிதமான வெற்றியை முறியடிக்க 7 ஆண்டுகள் ஆனது. அதுவும் மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" வந்துதான் முறியடித்தது. இப்படியிருக்க ஆட்டம் போடும் கைஸ்களின் ஆணவம் இன்னமும் குறைந்தபாடில்லை..........ksr.........

orodizli
3rd February 2021, 11:15 AM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொருத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்துக் கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கிய பங்கு வகிப்பார். சினி தரவரிசை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் 2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள் 2019 இல் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள் 2021 கோடைகாலத்தில் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள் : பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்பாடல்கள் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் 2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள் 2019 இல் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள் 2021 கோடைகாலத்தில் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள் : பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்பாடல்கள் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் PrevNext அப்படித் தான் நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலிபாக்கியம்' படத்திற்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது. அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார். நடிகை கண்ணாம்பா எம்.கே-. தியாகராஜ பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் (தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே) சிவாஜி அவர்களுக்கும் (உத்தமபுரத்திரன், மனோகரா) அம்மாவாக நடித்தவர். இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலிபாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜா தேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார். இந்தப் படத்திற்கு டைரக்டராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப்படம் என்பதால் தானே இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால 'தாலிபாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம் தான் இயக்கினார். இந்தப் படத்தை கண்ணாம்பா எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள். ஒரு வயதானவர் (எஸ்.வி.சுப்பையா) தனக்கு இரண்டாந் தாரமாக ஒரு பெண்ணைப் (எம்.என்.ராஜம்) பார்த்து திருமணம் செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறார். அதற்காக தனது பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கே மணப்பெண் உடன் வந்த இளைஞன் தான் மாப்பிள்ளை என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமண நாளும் வந்தது. தாலிகட்டும் போது தான் தெரிய வருகிறது மாப்பிள்ளை இளைஞனில்லை கிழவர் தான் என்று. அவளால் மறுக்க முடியவில்லை ஊருக்காக கிழவனையும், உள்ளத்தில் இளைஞனையும் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அதற்காக அவர்களது குடும்பத்தில் சூழ்ச்சிகளை செய்கிறாள். அதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகிறது. இளைஞனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இருந்து வந்த காதலிலும் பிரச்சனைகள் தலை தூக்குகிறது. இப்படி போகிறது இந்த படத்தின் திரைக்கதை. 'தாலிபாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கிய பகுதிகளில் நடந்துக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர்., எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என். நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன. ஒரு நாள் இதே போன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுது தான் தெரிய வந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது. தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்கு போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?- இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது. தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள். கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி. நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார். படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ்நாட்டிலுள்ளள சத்தியா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலிபாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி சொன்னார். படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள் என்றென்றும் நன்றியோடு இருப்போம் என்றார். கண்ணாம்பா தனது இறுதி காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார்.

Read more at: [https://tamil.filmibeat.com/news/nenjam-marappathillai-kannamba-turns-producer-mgr-041830.html](https://tamil.filmibeat.com/news/nenjam-marappathillai-kannamba-turns-producer-mgr-041830.html)...Baabaa

orodizli
3rd February 2021, 11:17 AM
ஓட்டுப் போட மாட்டோம்???!!!
-------------------------------------
எம்.ஜி.ஆர்., சந்தித்த அந்தத் தேர்தல்--
இரப்போர்க்கும்,,எதிரியாகி மறப்போர்க்கும்--
கொடுத்தபடி இருந்த எம்.ஜி.ஆரைக்
கெடுத்த படிப் பேசி,,தான் ஜெயிக்க வேண்டுகோள்
விடுத்தபடி வீதி வீதியாய் அலைந்த கருணா நிதி
அடுத்தபடி முதல்வர் தாமே என் அகம்கிழ்ந்தாலும்
படுத்த படிப் பறங்கி மலையார் வெற்றி மாலையை
தொடுத்த படி எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பிய--
1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல்
எம்.ஜி.ஆர் மேலுள்ளப் பற்றினால் தேர்தல் விதியே ஓரிடத்தில் மாறிய சம்பவத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்!
திருச்செந்தூர் பாராளுமன்றத்துக்கும்,,சேரன் மா தேவி சட்டமன்றத்துக்கும் அன்றைக்கு வாக்குப் பதிவு
திருச்செந்தூர் எம்.பிக்கு தனுஷ்கோடி ஆதித்தனும்-
சேரன் மா தேவி எம்.எல்.ஏவுக்கு பி.எச்-பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.!
கல்லிடக் குறிச்சியில் திலகர் வித்தியாலயா உள்ளிட்ட பத்து பூத்துகளில் காலையிலிருந்தே மக்கள் ஓட்டுப் போட குவிந்தவர்கள் வாக்களிக்க மறுக்கிறார்கள்??
அத்தனைக் கட்சி ஏஜெண்டுகளும் சமாதானம் சொல்லியும் மக்கள் ஏற்பதாயில்லை?
அப்படி என்ன அவர்களுக்குப் பிரச்சனை??
முதலில் பாராளுமன்றத்துக்கான ஓட்டைப் போட்டு விட்டு பிறகு சட்டமன்றத்துக்குப் போட வேண்டும்!
மரபே அது தான்!
இங்கே தான் மக்கள் வேறுபடுகிறார்கள்?
எங்க எம்.ஜி.ஆருக்கு இரட்டை இலையில முதலில் போட்டுட்டு,,அப்புறமா எம்.பி.க்கான ஓட்டப் போடறோம்??
தேர்தல் விதி அப்படி இல்லேங்க--அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கெஞ்சாதக் குறையாய் சொல்ல--
எங்களுக்கும் விதி பத்தித் தெரியுமுங்க. ஆனால் எங்க மவராசனுக்கு முதலிடம் கொடுக்க நாங்க விரும்பறோம்!
நீங்க மறுத்தா--
எம்.பி.க்கான காகிதத்தை அப்படியே பொட்டிலே போட்டுட்டு அப்புறம் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடறோம்?? மக்கள் கொஞ்சங்கூட
தாட்சண்யம் காட்டாது தீட்சண்யமாகக் கூற--
பதினோரு மணி வரைக்கும் இப்படியே நேரம் போக--
வேறு வழியின்றி,,அனைத்துக் கட்சி ஏஜண்டுகளும் தங்களுக்குள் கலந்து பேசி அந்தக் குறிப்பிட்ட பூத்துகளில் மட்டும்,,மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்க வகை செய்ய வேண்டியக் கட்டாயம்???
தருகின்ற வெற்றியில் மட்டுமல்லாது ஓட்டைப் பெறுகின்ற வரிசையிலும் --
முதலாவது இடம் எங்கள் எம்.ஜி.ஆருக்கே!--இப்படி-
தமிழகத்தில்,,--இல்லை இந்தியாவில்-,,-இல்லையில்லை உலகத்திலேயே எந்த ஒரு தலைவனுக்காகவாவது நடந்திருக்குமா???இல்லை இனி நடக்குமா???!!!.........vtr.........

orodizli
3rd February 2021, 11:17 AM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும்
என் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்...
*****************************************
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னன் நீ என்று
உலகம் உன்னை போற்றி வணங்க வேண்டும்..
******************************************
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்..?
மாபெரும் வீரம் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்....
இப்படி எந்த வரிகளை எழுதினாலும், அந்த வரிகளுள் குணத்தாலும் மனத்தாலும் அடங்கிபோகும் ஒரே திலகம் மக்கள் திலகம் மட்டுமே. வறுமைக் கோட்டில் அல்லல்பட்டு, துன்பத்தின் பிடியில் இன்னல்பட்டு, கலையில் உச்சாணம் அடைய அயார உழைக்கபட்டு, மக்களின் துயர் போக்க அரியணை ஏறபட்டு, அரசியல் சாசனத்தில் சரித்திரம் படைக்கப்பட்டு,
ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டு, மூன்றெழுத்து கொண்டு உலக மக்களால் ஈர்க்கபட்டு, புரட்சித் தலைவா என்று அழைக்கபட்டு, இறுதியில் யாருக்கும் சொல்லாமல் மூச்சைவிட்டு மக்களை தவிக்க விட்டுசென்றார் இந்த இதயதெய்வம். இன்று நம்மிடையே அவர் இல்லை என்றாலும், கசிந்துருகும் கண்களின் கண்ணீராய், பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவர் தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்..இருப்பார்..!......Baabaa

orodizli
3rd February 2021, 11:18 AM
#கேமராவையும் #தாண்டிய #கண்கள்

மக்கள்திலகம், பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களுக்கு மக்கள்திலகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம். ஆனால் தலைமை ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்து அமைதியாக இருந்தனர்... மாணவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட மக்கள்திலகம், தன்னுடன் புகைப்படமெடுக்க பேட்ச் பேட்சாக அனுமதி வாங்குகிறார்...

முதலில் சில மாணவர்களுடன் எம்ஜிஆரை வைத்து புகைப்படமெடுக்கிறார் போட்டோகிராபர்...

எம்ஜிஆர், போட்டோகிராபரிடம், 'இப்ப நீங்க எடுத்த போட்டோ சரியா வரல...இன்னொரு போட்டோ எடுங்க...' என்கிறார்...இன்னொரு போட்டோவும் எடுக்கப்பட்டது...
ஆனால்,
போட்டோகிராபருக்கு வியப்பு....'பார்க்காமலேயே சரியா வரலைன்னு சொல்றாரு...!!!'

போட்டோக்களைப் ப்ரிண்ட் போட்ட அந்த போட்டோகிராபருக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்...முதலில் எடுக்கப்பட்ட போட்டோவில், 'எம்ஜிஆரின் முகமே விழாமல் கழுத்துதான் தெரிந்தது...!'

அந்த போட்டோகிராபர் வியப்பின் உச்சிக்கே போய்விட்டார்...

ஒரு புகைப்படம் எடுக்கப்படும்போதே, அது எடுக்கப்படும் கோணத்தை வைத்து, 'அந்தப்படம் சரியாக வராது...' என்று உறுதியாகச் சொல்லுவதென்பது சாதாரண விஷயமா என்ன?
அதற்கு எவ்வளவு அபார ஆற்றல்!!!
எந்தளவு நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு இருக்கணும்...!!!

வாத்தியார்னா சும்மாவா!!!.........bsm...

orodizli
3rd February 2021, 11:35 AM
புரட்சித் தலைவரால் எனக்கு கிடைத்த
மதிப்பிற்குரிய அண்ணன் திரை உலகம்
துரைராஜ் மகன் பொன்ராஜ் :
��������������������������������
1962 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால்
தொடங்கி வைக்கப்பட்டது திரை உலகம் பத்திரிக்கை.அதன் ஆசிரியர் மதிப்பிற்குரிய
ஜி.கே துரைராஜ் அவர்கள் புரட்சித் தலைவரின் அதி தீவிர அபிமானி.புரட்சித் தலைவர் மறையும்வரை திரை உலகம் பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தியவர்.
அதன் பிறகு எத்தனை பேரோ வற்புறுத்தியும்
புரட்சித் தலைவரை எழுதிய கைகள் வேறு எவரையும் எழுதாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார்.அப்பேற்பட்ட நல்லவரின் புதல்வர் என் மதிப்பிற்குரிய அண்ணன் துரை.பொன்ராஜ் அவர்களின் நட்பு சில நாட்களுக்கு முன் கிடைத்தது.அவருடைய அன்பு என்னை நெகிழச் செய்து விட்டது.மிகவும் இயல்பாக எளிமையான அன்பே உருவான வார்த்தைகளால் என்னிடம் உரையாடி அவர் அன்பால் என்னை கட்டிப்போட்டு விட்டார்.அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய அய்யா திரை உலகம் துரைராஜ் அவர்களின் எழுத்து புரட்சித் தலைவரின் புகழுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அவருடைய குடும்பத்தின் புதல்வர் எனக்கு அன்பான அண்ணணாக அமைத்துக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு
என் வணக்கங்கள்!!������������
புரட்சித் தலைவர் புகழின் ஏணியில் இருந்தபோதும் தனக்காக எந்த பெரிய எதிர்பார்ப்புகளையும் அவரிடம் கோரிக்கை வைக்காமல் புரட்சித் தலைவர் அன்பே போதும் என வாழ்ந்த அந்த தன்னலமற்ற
நல்லவரின் குடும்பத்திற்கு புரட்சித் தலைவரின் பக்தன் என்ற முறையில் ஒரு
சல்யூட்.....����������������

orodizli
3rd February 2021, 11:35 AM
தாங்கள் கருத்துகள் உண்மையானவை....... உண்மையிலேயே நடந்து முடிந்தவை .......அதுமட்டுமல்ல அந்த பத்திரிக்கையாளர் என்று கிடையாது துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் புரட்சித்தலைவரின் மிக நெருங்கிய நண்பர் ஆவார் .......புனிதமான நட்பு அவர்களுக்கிடையே உண்டு ........ஆனாலும் துக்ளக் பாத இதழில் புரட்சித் தலைவர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1983-ம் ஆண்டு முதல் நான் அப்பொழுது மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்....... ஒவ்வொரு மாதமும் துக்ளக் பத்திரிக்கை வாங்கி படிப்பேன் .....ஏனென்றால் என் தந்தையார் துக்ளக் பத்திரிக்கை என்றால் மிகவும் உயிர் .......மிகவும் ஆர்வமாக ஒரு எழுத்து விடாமல் படிப்பார்....... எனது தகப்பனாருக்கு துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை மிகவும் பிடிக்கும் .........எல்லாம் ஒரு ஜாதி பாசம் தான்......... 1986ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் புரட்சி கீதை என்ற பெயரில் தனது துக்ளக் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுரை எழுதுவார் நமது பொன்மனச்செம்மல் அவர்களை செய்யாத கேலி கிடையாது ........பண்ணாத கிண்டல் கிடையாது......... புரட்சித் தலைவர் அவர்களின் ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்தார் ........பகவான் கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போல ஒரு தொண்டனுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உபதேசிப்பது போல அந்த புரட்சி கீதை அமைந்திருக்கும் ............ஒருவகையில் பார்த்தால் துக்ளக் ஆசிரியர் அவர்களின் நகைச்சுவை மனப்பான்மை பாராட்டுக்குரியது........... என்றாலும் புரட்சித்தலைவர் அவர்களைத்தானா அப்படியெல்லாம் விமர்சிக்கவேண்டும்........ கூடவேகூடாது........ புரட்சித்தலைவர். அல்லாமல் வேறு ஒருவர் முதலமைச்சராக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு .........புரட்சித் தலைவர் அவர்கள் பெருந்தன்மையுடன் சகிப்புத்தன்மையுடன் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரை பொறுத்துக் கொண்டார் .........அது அவரின் பெருந்தன்மைக்கு அடையாளமாகவும் திகழ்ந்தது ...........அது மட்டுமல்ல ஒரு காலத்தில் தன்னை படுகொலை செய்ய முயற்சித்த அந்த தீய சக்தியை அவர் பதவிக்கு வந்தபிறகு பழிவாங்கவே கிடையாது.......... அந்த தீய சக்தி 17 9 1979ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தது......... மிகச் சிறந்த நடிப்பு திறமை கொண்ட அந்த தீய சக்தி ஏன் அந்தக் கொடிய செயலை செய்தது ஏன் அவ்வாறு நடந்து கொண்டது என்பது தெரியவில்லை ......பொன்மனச் செம்மலின் பெருந்தன்மை உயர்ந்த மனப்பான்மைக்கு அவரின் சொந்த வாழ்வில் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்....... பொன்மனச்செம்மல் அவர்களின் உயர்ந்த வரலாற்று சம்பவங்களை தொடர்ந்து முகநூலில் பதிவு செய்யும் நெல்லை மணி அவர்கள் உண்மையில் நெல்லை மாணிக்கம் விலைமதிப்பு மிகுந்த ரத்தினம்...... புரட்சித்தலைவரின் ஆசீர்வாதத்தால் பரம்பொருளின் அருள் கடாட்சத்தால் அந்த சகோதரர் தனது சேவையை தொடர்ந்து நடத்துவார் .......நிறைய செய்திகளை இனிய சம்பவங்களை முகநூலில் பதிவு செய்யுமாறு பொன்மனச் செம்மலின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்........ வாழ்க வளமுடன்...Sri.Kann

orodizli
3rd February 2021, 11:36 AM
எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா.. ஸ்டாலின்

அன்பழகன் யாரு..??
நாவலர் நெடுஞ்செழியன் யாரு..??
சத்தியவாணி முத்து யாரு..??
EVKS சம்பத்..??
சாதிக்பாட்சா யாரு..??
மதியழகன் யாரு..??

இவங்க எல்லோருமே உன் அப்பா கூட இருந்தவங்க தானே.. இவங்களை எல்லாம் உறவுமுறை வச்சி இப்போ பேச வேண்டியது தானே..

அது என்ன எம்ஜிஆர் மட்டும் இப்போ பெரியப்பா வா தெரியறாரு..

உன் அப்பா கட்சியை விட்டு நீக்கனப்போ தெரியலே.. அவர் படங்களை ஓடவிடாம தடுத்த போது தெரியலே..

அவரை மலையாளத்தான், அட்டைகத்தி வீரன்.. இன்னும் சொல்ல கூடாத வார்த்தைகளில் அசிங்கமா ,கேவலமா முரசொலியில் எழுதிய போதும் அவர் பெரியப்பா ன்னு தெரியலே..

இன்னும் மூணு மாசத்துல தேர்தல் வரப்போகுது இப்போ அவர் பெரியப்பா ன்னு ஞாபகம் வந்திடுச்சி.. நீ பேசற பேச்சை எல்லாம் பத்து வயசு பையன் கேட்டா கூட அட சே.. நீ எல்லாம் ஒரு ஆளுய்யா.. கேவலம் பதவிக்காக கண்டபடி பேசி திரியறே.. இந்துக்களுக்கு நாங்க எதிரானவனங்க இல்லை ன்னு சொல்றே.. வேல் கையிலே பிடிச்சிட்டு விபூதியை வாயிலே போட்டுக்கறே.. பதவி மோகம் உன்னை எப்படி எல்லாம் ஆட்டி வைக்குது பார்த்தாயா..?? ன்னு காறி துப்புவான்..

அதுசரி.. அப்பாவுக்கு பிறகு தானே பெரியப்பா.. உன் அப்பவே அரசியலில் ஜகஜாலக்கில்லாடி ஆச்சே.. 6 தடவை முதல்வராக வேற இருந்து இருக்காரு.. அவர் போட்டோ காண்பித்து இவர் என் அப்பா நான் அவர் பிள்ளை , என் அப்பா கருணாநிதி, வல்லவரு, நல்லவரு.. அவரை மாதிரியே நானும் ஆட்சி செய்வேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ன்னு கேட்க வேண்டியதுதானே..

அதை விட்டு விட்டு.. இன்னொரு கட்சியோட நிறுவனர்.. அதுமட்டுமல்லாம திமுக அழிக்கவும், ஒழிக்கவுமே அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை உருவாக்கியவர்.. அவர் போட்டோ காண்பித்து கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம.. எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது.. தலைவரே உங்களாலே ன்னு நான் கேட்கலே உங்க ஊபிஸ் கேட்பாங்க... Albert Paul

orodizli
3rd February 2021, 11:38 AM
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்கள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம் ��

இவற்றில் மூன்று இடங்களில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை அவர் ஏற்க மறுத்து விட்டார் சில காரணங்களால்
நம் இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை யும் ஏற்க மறுத்து விட்டார் ஏன் என்றால் அதில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது
எனது தாய் மொழியான தமிழ் மொழியின் எழுதினால் மட்டுமே அந்த விருதை நான் பெற்றுக் கொள்வேன் என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டார்

நம் தாய் மொழியான தமிழ் மொழியின் மீது நம் புரட்சி வாத்தியார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பற்றுதலும் வைத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம் ��

பட்டம் கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கும் பலரும் இருகும் நிலையில்
தனக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை தனது கொள்கையின் காரணமாக ஏற்க மறுத்து மறுத்துள்ளார் நம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ��

வள்ளல் பெருமான் புரட்சித் தலைவா வணங்குகிறேன் இறைவா ��... Sudalai Mani

fidowag
3rd February 2021, 11:08 PM
இரங்கல் செய்தி*
-----------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* மெய் காப்பாளரும் , தனி உதவியாளரும்*ஆகிய திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று பிற்பகல்*3 .15 மணியளவில்* காலமானார் என்கிற*செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .**

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய* எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.* நல்லாசியும் அவருக்கு*துணை புரியட்டும் .*மறைந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களின்*குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு* ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை*சார்பில்*ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களை யும்*தெரிவித்து*கொள்கிறோம் .

fidowag
3rd February 2021, 11:11 PM
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
மறு வெளியீடு தொடர்ச்சி.........
_________

29/1/21 முதல் புளியங்குடி கண்ணாவில் எங்க வீட்டு பிள்ளை- தினசரி 4 காட்சிகள்


31/1/21 முதல் தூத்துக்குடி சத்யா வில்
பல்லாண்டு வாழ்க
தினசரி 3 காட்சிகள்


30/1/21 முதல் பழனி
சந்தான கிருஷ்ணா வில் அடிமைப்பெண்
தினசரி 4 காட்சிகள்
: தகவல் உதவி திரு. வி.ராஜா,நெல்லை.



செவ்வாய் முதல் (2/2/21) திருச்சி முருகன் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது

தகவல் உதவி திரு. கிருஷ்ணன், திருச்சி.

orodizli
4th February 2021, 08:07 AM
எம்.ஜி.ஆர் தன் படங்களிலும் நிஜ வாழ்விலும் சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். அவர் சிகரெட், மது, காபி, டீ குடிக்கமாட்டார் என்பதெல்லாம் தவிர வேறு பல குறிப்பிடத்தக்க பழக்க வழக்கங்களும் அவரிடம் இருந்தன.

உடை
எம்.ஜி.ஆர் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் வேட்டி கட்டும்போது வலது புறம் கரைவைத்துக் கட்டுவார். இதை அவரது அமைச்சரவை படங்களில் காணலாம். பாதம் மறையும்படி கட்டாமல் சற்று உயரே தூக்கிக் கட்டுவார். தரை பெருக்க கட்டினால் தரித்திரம் என்று அவர் அம்மா சொன்னதால் தாய் சொல்லைத் தட்டாமல் அப்படிக் கட்டினார்.
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆ ரின் உடைகளைத் துவைக்க ஒரு தனிச் சலவைக்காரர் இருந்தார். ஒரு நாளுக்கு நான்கு முறைகூட வேட்டி சட்டை மாற்றுவார். ஒரு முறை கட்டி கழற்றியதை அவர் அந்த நாளில் மறுமுறை கட்டுவதில்லை. தினமும் துவைத்த ஆடைகளையே உடுத்தினார்.
காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கதர் கட்டினார். கதர் உடுத்திதான் தன் முதல் மனைவி பார்கவியைத் திருமணம் செய்தார். தி.மு.க-வுக்கு மாறிய பின்பு கதர் உடுத்துவதை நிறுத்திவிட்டார். பட்டு உடுத்தத் தொடங்கினார்.
வேட்டியை மடித்துக் கட்டும் பழக்கம் எம்.ஜி.ஆருக்குக் கிடையாது. வெள்ள சேதத்தைப் பார்வையிடும்போது வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். என் அண்ணன் படத்தில் காலின் காயம் தெரிய வேண்டிய காட்சியில் மட்டும் வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். சண்டை காட்சிகளில் வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டுவார். வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில் சில்க் கைலி கட்டுவார்.
எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஜி.நாயுடு பின்னாளில் நாயுடு ஹால் என்ற கடையைத் தொடங்கியதாகக் கூறுவர். அவருக்குப் பல படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஏ.முத்து, தான் தைத்து தந்த சட்டையைதான் எம்.ஜி.ஆர் கடைசி வரை போட்டிருந்தார் என்று கூறும்போது எம்.ஜி.ஆர் இறந்த பிறகும் அவருக்கு அணிவித்திருந்த சட்டை எம்.ஏ.முத்து தைத்ததுதான் என்று சொல்லி மனம் நெகிழ்கிறார்.
​��
நகை
எம்.ஜி.ஆர் வெளியே வரும்போது நகை அணியும் கையில் ஒரு வாட்ச் மட்டுமே கட்டியிருப்பார். வீட்டில் இருக்கும்போது தன் சங்கிலி மோதிரங்களை எடுத்து அணிந்துகொள்வாராம். ஆனால், படத்திலும் நிஜத்திலும் அவர் நடு விரலில் மோதிரம் அணிய மாட்டார். மற்ற நடிகர் நடிகையர் அவர் ஜோடி நடிகைகள்கூட நடு விரலில் மோதிரம் அணிவர். ஆனால், அவர் சனிவிரல் எனப்படும் அந்த நடு விரலில் நகை அணியக் கூடாது என்ற பெரியவர்கள் வாக்கை மீறுவது கிடையாது. அவர் சங்கிலியில் அவர் தாயார் படம் உள்ள பென்டண்ட் தொங்கும்.

ஏன் இவ்வளவு கனமான பெரிய வாட்ச் கட்டியிருக்கிறீர்கள் என்று ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, கூட்டம் அதிகமாக இருக்கும்போது கூட்டத்தை விலக்க இது ஒரு மென்மையான ஆயுதமாகப் பயன்படும் என்றார் எம்.ஜி.ஆர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா?
வணக்கம்
எம்.ஜி.ஆர் இரண்டு கையையும் முகத்துக்கு நேரே கூப்பி வணக்கம் சொல்வார். பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று வணங்குவார். நடிகை பானுமதிதான் அவரைச் சந்திக்க போனபோது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வணங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். பானுமதி ஓர் அஷ்டாவதானி என்பதாலும் திரையுலகில் நடிப்பு, இசை, நடனம் பாட்டு இயக்கம் எனப் பல துறைகளிலும் திறமை பெற்றவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவரை எழுந்து நின்று வணங்கியிருக்கலாம்.
கறுப்புக் கண்ணாடி போட்ட காரில் பயணித்தாலும் வெளியே யாராவது இது எம்.ஜி.ஆர் கார் என்பதை அடையாளம் கண்டு வணங்கினால் இவர் உள்ளே இருந்து வணங்குவார். பொதுக்கூட்டத்தில் மேடையின் இரு புறமும் நடந்து வந்து கையை தலைக்கு மேலே உயர்த்தி சிரித்த முகத்தோடு வணங்குவார். உடனே கூட்டம் ஆரவாரிக்கும்.
கல்யாணத்துக்கு வெள்ளி டம்ளர்
பொதுவாக எம்.ஜி.ஆர் தான் செல்லும் திருமணங்களுக்கு ஆறு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்குவார். கணவன் மனைவி மாமியார் மாமனார் மகன் மகள் என்ற அழகான குடும்பத்துக்கு அவர் அளிக்கும் பரிசு ஆறு வெள்ளி டம்ளர்கள் ஆகும்.
கலை நிகழ்ச்சிக்குத் தங்கச் சங்கிலி
எம்.ஜி.ஆர் மேடை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினால் பெரும்பாலும் தங்கச்சங்கிலி பரிசளிப்பது வழக்கம். கங்கை அமரனின் மகன் மிருதங்க அரங்கேற்றத்துக்குப் பத்து பவுன் சங்கிலி பரிசளித்தார். ஒரு முறை பத்மா சுப்பிரமணியம் தன் மாணவியின் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கும்படி அழைத்திருந்தார். அப்போது மேடையில் வைத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கவிருந்த பேழையை எம்.ஜி.ஆர் திறந்து பார்க்க முயன்றார். பத்மா எம்.ஜி.ஆரை நெருங்கி அவரது காதில் அதற்குள் ஒன்றுமில்லை என்றார். உடனே எம்.ஜி.ஆர் சரி நிகழ்ச்சி தொடரட்டும் என்று சொல்லிவிட்டு தன் ஆட்களை அழைத்து ஐந்து பவுன் சங்கிலி வாங்கிவரச் சொல்லி நடனமாடிய பெண்ணுக்கு பரிசளித்தார்.
உட்காரும் ஸ்டைல்
எம்.ஜி.ஆர் எப்போதும் நேராக உட்கார்வார். ஆனால், கால் மேல் கால் போட்டு உட்காரமாட்டார். அதனால் அவர் முன்பு மற்றவர்களும் அப்படி உட்கார்வதில்லை. சிலர் தமது பழக்கம் காரணமாக அப்படி உட்கார்ந்தால் எம்.ஜி.ஆர் அதற்கு கோபிக்க மாட்டார்.
மதுரையில் உலக தமிழ்ச் சங்க அறிவிப்பு கூட்டத்தின் போது தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் மேடையில் எம்.ஜி.ஆரோடு இருந்தனர். அப்போது மேடையில் இருந்த திருமதி ராதா தியாகராஜன் சாய்ந்தபடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்.
எம்.ஜி.ஆர் முன்பு நாஞ்சில் மனோகரன் கால் மேல் கால் போட்டு உட்கார்வது குறித்து கட்சியினர் எம்.ஜி.ஆரிடம் குறைபட்டுக்கொண்ட போது ‘’அவர் பழக்கம் அப்படி இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்றார்.
ஒரு முறை ரசிகர்கள் பணம் கொடுத்து எம்.ஜி.ஆருடன் போட்டோ எடுத்த போது ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து எம்.ஜி.ஆரின் தோள் மீது கை போட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் அவரது காலை கீழே எடுத்துவிட்டபோது எம்.ஜி.ஆர் ‘’வேண்டாம் அவர் காசு கொடுத்திருக்கிறார் அவர் இஷ்டப்படி உட்காரட்டும்’’ என்று கூறிவிட்டார்..........Baabaa

orodizli
4th February 2021, 08:08 AM
திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.
திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.
தம்பி மனைவியோடு டூயட்டா?
அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார்

நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.
சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.
ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.

வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.
நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார்.
நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை...Baabaa

orodizli
4th February 2021, 08:09 AM
எல்லோருக்கும் உதவுவதால் எம் ஜி ஆர் கடவுள் தான்

டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து

அமேரிக்கா பல்கலை கழகங்களின் அழைப்பை ஏற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு வாஷிங்டன் விமானநிலையத்தில் தன் அமேரிக்கா நண்பர்களுடன் நூழைகிறார் எம் ஜி ஆர் சிறிது நடந்த எம் ஜி ஆர் கண்கள் ஓரமாக நின்று சிறுகுழந்தையோடு ஒரு ஆங்கிலபெண்மணி அழுதுகொண்டிருப்பதை. கவனிக்கிறது உடனே அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் ஏன் அழுகிறாய் என எம் ஜி ஆர் கேட்கிறார் அமேரிக்காவை பொறுத்தவரை அதிகம் எவரும் அடுத்தவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
எம் ஜி ஆர் கேட்ட உடன் அந்த பெண் தான் தன் கணவரை காண வந்ததாகவும் அவர் இங்கு ராணுவத்தில் பணி செய்வதாகவும் தான் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் இங்கு வைத்து தன் பை திருடபட்டதாகவும் தன் முக்கிய ஆவணம் பணம் எல்லாம் அதில் உள்ளது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அழுவதாகவும் கூற உடனே எம் ஜி ஆர் தன் கூடவந்த செல்வாக்கு மிக்க ஒரு நண்பரை அழைத்து நீங்கள் இந்த பெண்ணிற்க்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் சிலவிற்க்கு பணமும் கொடுங்கள் நான் ஊர் சென்று அனுப்புகிறேன் என கூறிவிட்டு அந்த பெண்ணிடம் கவலை படாதீர்கள் இவர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வார் என கூறி விடை பெற்று விமானம் நோக்கி செல்கிறார் எம் ஜி ஆர்

இதை கவனித்து கொண்டிருந்த என் மனம் என்னை அறியாமல் பொன்னின் நிறம் பிள்ளை மனம்வள்ளல் குணம் யாரோ என்ற பாடலை நினைத்தது

உண்மை நண்பர்களே கடவுள் ஒருவரே யார் என்று பாராமல் உதவுபவர் அதனால் யார் என்று பாராமல் எல்லோர்க்கும் உதவும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஒரு கடவுளே

வாழ்க எம் ஜி ஆர் புகழ்...Arm

orodizli
4th February 2021, 08:17 AM
12-8-2020--சிறப்பு பதிவு
எம். ஜி ஆரை வர்ணித்த கவியரசர்
கவியரசரை பாராட்டிய எம். ஜி ஆர்
---
எம். ஜி. ஆர் அவர்கள் தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமன்றி தூற்றுவோர்க்கும் உதவிகள் செய்வார். அது எம். ஜி அருக்கே உள்ள தனி சிறப்பு. தன்னை தாக்கி பேசுபவர்கள் திறமையாளர்களாக இருந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் திறமைக்கு உரிய கௌரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
எம். ஜி ஆர் நடித்த சூப்பர் ஹிட் படம் ''ஆயிரத்தில் ஒருவன்"" படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு ஒரு பாடல் தேவைப்பட்டது. அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காண புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல் அந்தக் காட்சிக்கு பலர் எழுதியும் எம். ஜி. ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
--
அப்போது கவிஞர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக எம். ஜி. ஆரை கடுமையாக மேடைகளில் விமர்சித்து வந்தார். ஆனாலும் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம். ஜி ஆர் கூறியதில்லை. எம். ஜி. ஆர் படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று கவிஞரும் சொன்னதில்லை. மேடைப் பேச்சு ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம். ஜி. ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவிஞரை அணுக தயங்கினார். அதனால் எம். ஜி. ஆர் படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பால் கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், கவிஞரை விட்டே பாடல் எழுத சொன்னாள் என்ன என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தை சொல்ல அவரும் எழுதிக் கொடுத்தார். எம். ஜி. ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி பாடலை ஓகே செய்தார்.
அந்தப் பாடல் தான் காலத்தால் அழியாத
'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கி பேசுவாரே தவிர மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம். ஜி. ஆருக்கு தெரியும்.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)
https://www.youtube.com/watch?v=Lqmtl7TqUR0

orodizli
4th February 2021, 12:57 PM
1977 ஆக 14 ல் வெளிவந்த தலைவரின் கடைசி பிளாக்பஸ்டர் படம்தான் மீனவ நண்பன். ஸ்ரீதரின் "உரிமைக்குரலி"ன் இமாலய வெற்றிக்கு பின்னர் வந்த படம்தான் "மீனவ நண்பன்". படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை. "தங்கத்தில் முகமெடுத்து", மற்றும் "பொங்கும் கடலோசை" பாடல்கள் எவர்கிரீன் வரிசையில் சேர்ந்து கொண்டது. எம்ஜிஆர் ஒரு படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் அதிகபட்சமாக இந்தப்படத்திற்குதான் வாங்கினார் என்று நம்பகமான செய்திகள் கூறுகிறது.

அய்யனின் கைஸ்கள் தலைவரின் வெற்றியை மிகவும் வயத்தெரிச்சலோடு ரசிப்பவர்கள் போலும்.. அதனால்தான் "மீனவ நண்பன்" "உரிமைக்குரல்" அளவு நிறைய அரங்குகளில் 100 நாட்கள் ஓடவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். "உரிமைக்குரலை"
காட்டிலும் அதிகம் ஓடாவிட்டாலும் முதல் ரவுண்டிலேயே 1 கோடியை தாண்டி வசூல் செய்த படம்.

சென்னையில் "உரிமைக்குரலை" காட்டிலும் மிக அதிக வசூலை பெற்ற படம். சென்னையில் ஓடி முடிய 319 நாளில் ரூ 1776719.00 வசூலாக பெற்று அதுவரை வெளிவந்த அய்யனின் அனைத்து படங்களை காட்டிலும் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது ஆனால் "தீபம்" 342 நாட்கள் ஓட்டி 1668722.85 வசூலாக காட்டினார்கள். தில்லு முல்லு செய்து பொய்வசூல் காட்டிய "தங்கப்பதக்கம்", "அண்ணன் ஒரு கோயில்" படங்களின் வசூலை தவிர்த்து பார்த்தால் கைஸ்களுக்கு இது புரியும்.

"தீபத்தி"ன் வசூலை முறியடித்து வெற்றி கொண்ட "மீனவ நண்பனி"ல் வரும் பாடலில் தலைவர் பாடுவார் 'நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்' என்று.
ஆனால் அவர் இருக்கும் வரை யாருக்கும் அந்த துணிவு வரவில்லை. சென்னையில் "உரிமைக்குரல்" 368 நாளில் பெற்ற வசூல் ரூ1195691.32. ஸ்ரீதர் தயாரிப்பில் அய்யன் நடித்த அனைத்து படங்களின் கந்தல் வசூலை காலில் போட்டு மிதித்த படம்தான் "மீனவ நண்பன்".

சென்னை, மதுரை, சேலம் 100 நாட்களும், இலங்கையில் இரண்டு திரையரங்குகளை சேர்த்தால் மொத்தம் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பெற்ற படம். திருச்சி பேலஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஸ்ரீதர் இயக்கத்தில் வரவிருந்த "அண்ணா நீ என் தெய்வம்" படப்பிடிப்பு
முடிவதற்குள் முதல்வர் நாற்காலியில் தலைவர் அமர்ந்ததால் "மீனவ நண்பனே" ஸ்ரீதர் இயக்கத்தில் கடைசி படமாக அமைந்தது எனலாம்.

இதில் சில கைஸ்கள் "உரிமைக்குரல்" அய்யன் நடிக்க வேண்டிய படமாம். இதேபோல் "உத்தமபுத்திரனை" தலைவர் நடித்திருக்க வேண்டிய படத்தில் புகுந்து சொதப்பி படத்தை தோல்வி படமாக்கியதை கண்டும் கைஸ்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. "உத்தம புத்திரனி"ல் தலைவர் நடித்திருந்தால் அதன் தயாரிப்பில் புதுமை காட்டி ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தயாரித்து
வெற்றி பெற்றிருப்பார். வேண்டாமப்பா! புரட்சி நடிகரின் இயல்பான நடிப்பிற்கு முன்னால் என்ன கைதட்டி டான்ஸ் ஆடினாலும் எடுபடாது என்பது திண்ணம்..........ksr...

orodizli
4th February 2021, 12:58 PM
நாடோடி மன்னன் தொடங்கி நாடாளும் நிலை வரை எம்ஜிஆருடன் பயணித்த கே.பி.ராமகிருஷ்ணன்*


எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும், எம்ஜிஆருக்கு மாற்றாக சினிமாவில் டூப் போட்டு நடித்தவரும், நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் இணைந்து நாடாண்ட காலம் வரை பயணித்து எம்ஜிஆரின் இறுதிவரை துணை நின்றவருமான கே.பி.ராமகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார் ������


மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக உடன் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 58-ல் 'நாடோடி மன்னன்' படத்தில் எம்ஜிஆருக்காக டூப் போடத் தொடங்கியவர் 1978-ம் ஆண்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் வரை இணைந்தே பணியாற்றினார்.


1930-ம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த பாலக்காடு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். 9 வயதில் சென்னைக்கு வந்துவிட்டார். சௌக்கார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலை செய்து வந்தார். 1946-களில் சௌக்கார்பேட்டையில் வாடகை வீட்டில் தனது தாயார், சகோதரருடன் குடியிருந்தார் எம்ஜிஆர்.


அந்த நேரத்தில் மாலை நேரங்களில் தனது சகோதரருடன் பால்கடைக்கு பாதாம் பால் சாப்பிட எம்ஜிஆர் வருவாராம். அப்போது ராமகிருஷ்ணன் பழக்கமாகியுள்ளார். அதன் பின்னர் எம்ஜிஆர் தொடங்கிய எம்ஜிஆர் நாடக மன்றத்தில் சேர்ந்துள்ளார். 1949-ல் 'மங்கையர்க்கரசி' என்கிற படத்தில் நடித்துத் திரையுலகில் நுழைந்துள்ளார். 'பூலோக ரம்பை' படத்தில் நம்பியாருக்கு டூப் போட்டு நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு டூப்பாக 1958-ம் ஆண்டு நாடோடி மன்னனில் நடித்தார். அன்று முதல் அவரது கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை அவருடன் இணைந்து பயணித்துள்ளார்.


எம்ஜிஆருக்கு டூப்பாக மட்டுமல்ல, அவரது படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். பின்னர் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராகவும் மாறினார். 1962 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி அனைத்துத் தேர்தல்களிலும் எம்ஜிஆருடன் மெய்க்காப்பாளராகச் சென்றவர். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல நம்பியாருக்கும் ஆஸ்தான டூப் நடிகர் கேபிஆர். பூலோக ரம்பையிலிருந்து அவருக்காக கடைசி வரை டூப் போட்டு நடித்துள்ளார்.

ராமகிருஷ்ணனுக்கு 2 மகன், 2 மகள்கள். 1976-ம் ஆண்டு மூத்த மகள் திருமணத்தை எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எம்ஜிஆர் படங்களில் பிரபலம் அவரது சண்டைக்காட்சிகள். எம்ஜிஆர் வீராவேசமாக மோதும் காட்சிகளில் பறந்து விழுவது, பாய்வது, பல்டி அடிப்பது, உயரத்திலிருந்து குதிப்பது எனப் பல சாகசக் காட்சிகள் ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெறும். அதில் நடித்தது எம்ஜிஆர் என்றே கடைசிவரை அனைவரும் நம்பியதுண்டு.


காரணம் ஒரு இடத்தில்கூட அது எம்ஜிஆர் இல்லை எனும் அளவுக்கு அவருக்கு டூப்பாக நடித்தவர் அசத்தியிருப்பார். அப்படிப் பல முறை காயம் பட்டதுண்டு, எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. ஆனாலும், திரையில் அந்தக் காட்சியில் எம்ஜிஆருக்கு இருக்கும் வரவேற்பைக் காண்பதாலும், எம்ஜிஆர் தன்னை ஒரு சகோதரனாகக் கருதிப் பார்த்துக்கொண்டதும் அவருக்கு அனைத்து வேதனைகளையும் பறந்தோடச் செய்துவிடும்.


எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்கும் காட்சிகளில் மற்றொரு எம்ஜிஆராக ராமகிருஷ்ணன் தத்ரூபமாக நடித்திருப்பார். நடிப்பது மட்டுமல்ல இரண்டு எம்ஜிஆர் மோதும் சண்டைக்காட்சிகளில் குறிப்பாக 'நீரும் நெருப்பும்', 'நினைத்ததை முடிப்பவன்' போன்ற படங்களில் இரண்டு எம்ஜிஆர் கத்திச்சண்டை போட்டு மோதும் காட்சியில் ராமகிருஷ்ணனின் அபார ஆற்றல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்னொரு எம்ஜிஆராக, எம்ஜிஆருடன் நடித்த ராமகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் அவரது பால்ய காலத்திலேயே நட்பால் இணைந்தவர்.


எம்ஜிஆரிடம் உள்ள அன்பால் அவருடனே பயணித்தவர். எம்ஜிஆரும் அவர் மீதுள்ள அன்பால் அவரைத் தனது மெய்க்காப்பாளராகவே வைத்துக்கொண்டார். அதிலும் சோதனை மிகுந்த 1972-ம் ஆண்டுகளில் அதிமுகவைத் தொடங்கிய காலகட்டத்தில் எம்ஜிஆரின் உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில், பிரச்சாரங்களில், பொதுக்கூட்ட மேடைகளில் எம்ஜிஆரின் நிழல் போலவே இருந்து பாதுகாத்தவர் ராமகிருஷ்ணன்.

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபின் பல முறை உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோதும், உங்கள் அன்பு மட்டும் போதும் தலைவா என ஒதுங்கியே வாழ்ந்தவர். எம்ஜிஆரின் பாதுகாவலராக ராமகிருஷ்ணன் இருந்தபோதும் கட்சியில் அவர் பெரிதாக பதவியை எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர் இடையில் ஜெயலலிதாவிற்குப் பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பி வைத்தார்.


எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது புகழைப் பரப்புவது மட்டுமே குறிக்கோளாகச் செயல்பட்டவர் ராமகிருஷ்ணன். மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் எம்ஜிஆரைத் தெய்வமாக மதிக்கும் ரசிகர்கள் ராமகிருஷ்ணனை அழைத்து விழா எடுத்தனர். ராமகிருஷ்ணனை எம்ஜிஆரின் நிழலாகவே பார்த்தனர். அவரும் போகும் இடமெல்லாம் எம்ஜிஆர் பற்றி மட்டுமே பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.


இயல்பிலேயே சுயமரியாதை உள்ள ராமகிருஷ்ணன் தான் தெய்வமாகப் பூஜிக்கும் எம்ஜிஆரைத் தவிர யாரிடமும் சென்று நிற்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்ததால் தனது பிள்ளைகளுக்காகக் கூட முதல்வர் ஜெயலலிதாவிடமோ அல்லது எம்ஜிஆரால் வாழ்வுபெற்ற யாரிடமும் போய் உதவி கேட்டு நின்றதில்லை. மறுபுறம் ராமகிருஷ்ணன் போன்றோருக்கு எம்ஜிஆரால் அமைந்த ஆட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தைக்கூட வெளியிட அவர் விரும்பவில்லை.

எம்ஜிஆரின் இறுதி நாள் குறித்து கே.பி.ராமகிருஷ்ணனிடம் ஒருமுறை பேசியபோது, அவரைக் கடைசியாகப் பார்த்துப் பேசியது நானாகத்தான் இருப்பேன் என்றார். எம்ஜிஆர் மறைவுக்கு முதல் நாள் இரவு அவரது படுக்கை அறையில் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த ராமகிருஷ்ணனிடம் எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே, 'என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய், நேரமாகுது. வீட்டுக்குக் கிளம்பு. காலையில் பார்க்கலாம்' என்று சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்ததைக் கூறி, 'அது கடைசி சிரிப்பு என நினைக்கவில்லை' என்று கூறி கலங்கினார்.

'எம்ஜிஆருடன் அவர் வாழ்நாள் முழுதும் பயணித்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத பேறு அது. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்'' என்பதே கே.பி.ஆரின் பதிலாக இருந்தது. அவர்பால் நலம் கொண்டவர்கள் அரசிடம் உதவி கேட்கலாம் என்று கேட்டாலும், மறுத்தே வந்ததை அவரது மகன் கோவிந்தராஜன் நினைவுகூர்ந்தார்.

நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் திரையுலகப் பயணத்தைத் தொடர்ந்த கேபி.ராமகிருஷ்ணன் நாடாளும் நிலையை எம்ஜிஆர் அடைந்த பின்னரும் மெய்க்காவலராக உடன் நின்றார். எம்ஜிஆரின் மறைவு வரை தொடர்ந்தது அவரது நட்பு. எம்ஜிஆரின் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்த பெட்டகம் ராமகிருஷ்ணன் மறைவு. எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், எம்ஜிஆரின் ஆளுமையைத் பதிவு செய்யும் ஆர்வலர்களுக்கும் இழப்பு என்றே கூறலாம்..........drn

orodizli
5th February 2021, 03:24 PM
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

மக்கள் தில*க*ம் தென் இந்திய ந*டிக*ர் ச*ங்க*த்தினை ஆர*ம்பித்த* மூலகர்த்தாவில் ஒருவ*ர்.

பிர*ப*லந*டிகை மற்றும் த*யாரிப்பாள*ர் அஞ்ச*லிதேவியை முத*ல் தென்னிந்திய* ந*டிக*ர் ச*ங்க*த்தின் த*லைவ*ராக்கினார்...

மேலும் அப்போது சினிமா ச*ம்ப*ந்த*ப்ப*ட்ட செய்திக*ளை "ந*டிக*ன் குர*ல்" என்ற மாத* இத*ழை தொட*ங்கி அதில் வெளியிட்டு வ*ந்தார்.

அத*ன் ப*திப்பாசிரிய*ராக எம்.ஜி.ஆர் செய*ல்ப*ட்டாலும் த*ன்னை முன்னிலைப்ப*டுத்திக் கொண்ட*தேயில்லை! ஒரு இத*ழில் சிவாஜியை அட்டைப்ப*ட*த்தில் போட்டு க*வுர*வ*ப்ப*டுத்தினார். முன்ன*னி ந*டிக*ர் மட்டுமல்ல! சாதார*ண நிலையில் இருந்த குணசித்திர ந*டிக*ர்க*ளையும் ஒன்றுபோலவே மதித்தார்.
அத*ற்கு உதார*ணம்தான் ந*டிக*ன் குர*ல் இத*ழின் இந்த* அட்டைப்ப*ட*ம்..

அட்டையில் "அய்யா! தெரியாத*ய்யா ராமாராவ்" இவ*ர் த*லைவ*ரின் ஒளிவிளக்கு, ர*க*சிய போலீஸ்115, ஆயிர*த்தில் ஒருவ*ன் , ந*ல்ல*வ*ன் வாழ்வான்,ரிக்ஷாக்கார*ன் மற்றும் சிவாஜியின் மோட்டார் சுந்த*ர*ம்பிள்ளை, க*லாட்டா க*ல்யாணம், க*வுர*வ*ம் மற்றும் பலமுன்னனி ப*ட*ங்க*ளில் ந*டித்த*வ*ர்.

இந்த* இத*ழ் வெளிவ*ந்த*போது அவ்வ*ள*வு பிர*ப*லமும் இல்லை. ஆனால், திற*மைசாலிக*ளை ஊக்குவிக்க*வும், புதிய வாய்ப்புக*ளை அவ*ர்க*ள் பெற*வும் அட்டைப்ப*ட*த்தில் வெளியிட்டு அந்த* சாமான்ய ந*டிக*ர்க*ளின் பேட்டி செய்திக*ளை வெளியிட்டு வ*ந்தார்.

அத*ற்கு இன்னொரு கார*ண*மும் உண்டு. த*லைவ*ர் 1937ல் ச*திலீலாவ*தியில் தொட*ங்கி ந*டித்து வ*ந்தாலும் அவ*ர*து ப*ட*மும், பெய*ரும் போஸ்ட*ர்க*ளில் இட*ம்பெற* சிலகால*ம் பிடித்த*து. க*தாநாய*க*னாக* உய*ர* 10 வ*ருட*ம் ஆன*து. அந்த* வலியும், வேத*னையும் சிறிய ந*டிக*ர்க*ள் பெற்றுவிட*க்கூடாது என்ப*தாலேயே ராமாராவ் போன்ற* சிறிய ந*டிக*ர்க*ளுக்கும் முக்கிய*த்துவ*ம் அளித்து பெருமைப்ப*டுத்தினார்...

orodizli
5th February 2021, 03:25 PM
Mohamed Thameem பாயி.. ஆமா..நீ அய்யனின் விவரம் தெரிஞ்ச பிள்ளை. துல்லியமா சொல்லுவ. இங்கயும் பதிவ படிச்சுட்டு கரெக்டா கேக்குற. ஆனா, உங்க சின்ன பிள்ளைங்க அடிச்சு விடுறதை விடு. அறியாப் பிள்ளைங்க ஆர்வத்தில் பொய் சொல்லுதுங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் 28 தியேட்டரில் 100 நாள் ஓடிச்சுன்னு அடிச்சுவுடுறாங்க. முந்தா நாள் கூட பதிவு போட்டேன். சரி விட்ருவோம். விவரம் அறிஞ்ச பிள்ளைன்னு சொல்லப்படற முரளி சீனிவாசன் இஷ்டத்துக்கு அடிச்சுவுடுறாரே. ஏற்கனவே ராஜா படம் ரிக்சாக்காரனை வசூலில் மிஞ்சியதுன்னு சொல்லி நடிகப்பேரரசர் கிட்ட ஆதாரத்துடன் வாங்கிக் கட்டிக்கிட்டார். இது போதாதுன்னு தன்னை எல்லாரும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்னு நினைக்கனும்னு இஸ்டத்துக்கு கப்ஸா அள்ளி வீசுராரே. பாபு படம் பத்தின பதிவில் 1971 ல் பாபு படம் வெளியானதற்கு முந்தின நாள் அதாவது 1971 அக்டோபர் 17 ல் மு.க.முத்து நடிச்ச பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கி வெச்சார்னு அள்ளி விட்டுருக்கார். அதுக்கு ஸ்கிரீன் சாட் ஆதாரம் இங்கு போட்டிருக்கேன். உண்மையில் பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கினது 1971 அக்டோபர் 21. இதயவீணை கெட்டப்பில் கிளாப் அடிப்பார். அந்த கிளாப் போர்டில் தேதி தெளிவா இருக்கும். அந்தப் படத்தை அடுத்த பதிவில் போடறேன். துல்லியமாக விவரம் சொல்ற நீ இந்த தப்ப எல்லாம் முரளி சீனிவாசன் கிட்ட சொல்ல வேணாமா. அவர காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சா வெளிப்படையா பதிவு போடாம அவருகிட்ட எப்பவாச்சும் போனில் பேசும்போது சொல்லுய்யா. இதோ 1971 அக்டோபர் 17 ல் எம்ஜிஆர் கிளாப் அடிச்சு பிள்ளையோ பிள்ளை படத்தை தொடங்கி வெச்சதா முரளி சீனிவாசன் சொன்ன தப்பான தகவல் ஆதாரம். நாளைக்கி வெள்ளிக்கிழமையா.. முரளி சீனிவாசன் என்ன கதை அளக்கப்போறாரோ......... Rajarajan

orodizli
5th February 2021, 03:26 PM
Mohamed ThameemMohamed Thameem பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கும் காட்சி. அதில் தேதி பார். முரளி சீனிவாசன் சொன்னா மாதிரி 1971 அக்டோபர் 17 இல்லை. அக்டோபர் 21 ந்னு போட்டிருக்கு பார். சரித்திரம் எப்பவும் பலருக்கும் பாடம் எடுக்கும்னு வேற தன் பதிவுல முரளி சீனிவாசன் சொல்றாரு. அவருக்கு முதல்ல நீ பாடம் எடுய்யா. அடுத்த பதிவில் இன்னமும் தெளிவா தேதி தெரியறா மாதிரி போட்டா போடறேன்.........RRN

orodizli
6th February 2021, 07:46 AM
பட்டு சேலை காத்தாட--pattu selai kathada
“பட்டு சேலை காத்தாட”

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை எம்ஜிஆரை கேட்காமல் தெலுங்கில் வெளியிட்டதில் தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் சிறிய மனக்கசப்பு இருந்தது.

இந்த சூழலில் ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தை ஆரம்பித்தார் தேவர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார்.

கதை வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு, தன்னை அவ்வளவாக
எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காட்சியின் தொடக்கத்தில் நாயகன் பேசும் வசனத்தை கேட்ட எம்.ஜி.ஆர், ஆரூர் தாஸை கட்டி அணைத்து ‘எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது’ என்றாராம்.
அந்த வசனம் இதுதான்.

எம்.ஜி.ஆர்: ‘எங்கப்பா இறந்ததுலேருந்து, எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்துலேயும் பங்கெடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா, கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.

ஆனா நான் விடிஞ்சதும் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு தாய் தான் தெய்வம்! அந்தத்தாய் சொல்லைத் தட்டமாட்டேன்’.

“கையில் எடுத்தால் துவண்டு விடும் …
கண்கள் இரண்டும் சிவந்து
விடும்
சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே …”

பின்னல் ஜடை முன்புறமாக, ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக ஜாடை காட்டி நடந்து வரும் சரோம்மா இந்த வர்ணனைக்கு படு பொருத்தம்.

“நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு”

என்று நாயகனை வர்ணித்தபடி எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்குவார் சரோம்மா.

இனிமை தேன் மழை பொழிந்த சுசீலாம்மா, சௌந்தர்ராஜன்…
பட்டு சேலை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்…இதுபோன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?…

“காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே”

உண்மையான காதலை வெளிப்படுத்தும் வரிகளை இப்படி எழுத கவிஞரால் மட்டுமே இயலும்.
—————————–
படம்: தாய் சொல்லை தட்டாதே
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்...

orodizli
6th February 2021, 07:46 AM
அன்புத் தம்பி
;;;;;;;;;;;;;/;;;;;;;;;;;;;;;
எம்.ஜி.சக்கரபாணி

"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.........

orodizli
6th February 2021, 07:48 AM
சிறந்த நடிகர் அயல் நாட்டில் ஓட்டெடுப்பில்
வென்ற எம்.ஜி.ஆர் :
��������������������������������

�� சிங்கப்பூர் பரிசுகள் (ஓட்டெடுப்பு மூலம்):
��������������������������������

⭐1965 எங்க வீட்டு பிள்ளை,

⭐1958 நாடோடி மன்னன்,

⭐ 1961 திருடாதே,

⭐ 1963 பெரிய இடத்துப் பெண் (தமிழ் மலர்),

⭐1967 காவல்காரன்,

⭐1968 குடியிருந்தகோயில்,(பெற்ற வாக்கு:
34,938.

⭐ 1969 அடிமைப்பெண்,நம்நாடு,

⭐ 1970 மாட்டுக்கார வேலன்,

⭐1971 ரிக்சாக்காரன்,

⭐1972 நான் ஏன் பிறந்தேன்,

⭐ 1973உலகம் சுற்றும் வாலிபன் (சிறந்த
படம்,சிறந்த டைரக்டர்),

⭐1975 பல்லாண்டு வாழ்க,

இலங்கையில் வாக்கெடுப்பில் வென்ற படங்கள் :
������������������������������
1965 எங்க வீட்டு பிள்ளை,
1968 குடியிருந்த கோயில்,
1969 அடிமைப் பெண்,
1970 மாட்டுக்கார வேலன்,
1972 நான் ஏன் பிறந்தேன்,
1975 நாளை நமதே.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨.........vrh...

orodizli
6th February 2021, 11:09 AM
ஒரு அய்யனின் கைஸ் மதுரையில் அய்யன் பட வெளியீடு அன்று டிக்கெட் எடுக்க பட்ட கஷ்டத்தை விளக்கி சொல்வதை பார்க்கும் போது நமக்கு பெரிய காமெடியாக தெரிகிறது. அவர் பேசாமல் தூத்துக்குடி வந்திருக்கலாம். எந்த கலர் டிக்கெட் வேண்டுமானாலும் முட்டாமல் மோதாமல் கவுண்டரிலேயே மிக தாராளமாக பெற்றிருக்கலாம். இங்கெல்லாம் அய்யனின் படம் முதல் காட்சி hf என்பதெல்லாம் குதிரை கொம்புதான்.

முதல் நாளில் 2வது காட்சிக்கு கால் வாசி தியேட்டர் நிரம்பினால் அதுவே பெரிய ஆச்சர்யமான விஷயம். அவர்கள் சிலாகித்து பேசுவதை பார்த்தால் சிப்பு சிப்பா வருது. அவர்களை பொறுத்தவரை ஒரு படத்தை ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விட்டால் போதும் அதை வெற்றி படமென சொல்லி கூத்தாடுவார்கள்.
அங்கே தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுக் கொள்வதை பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

1970 வரை சொந்த படத்தை தவிர வேறு எந்த படத்துக்கும் தலைவர் அதிகம் செலவு வைத்ததில்லை.
ஆனால் அய்யனின் படங்களுக்கு மல்டி ஸ்டார்ஸ் மிகவும் அவசியம்.
அதுமட்டுமல்ல அவர் படத்தை பாருங்கள் தயாரிப்பு செலவு மிக அதிகமாக இருக்கும். வீ.பா.கட்ட பொம்மன், புதியபறவை, கப்பலோட்டிய தமிழன், கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர்,
திருமால் பெருமை, பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன், ராஜரிஷி, சிவந்தமண், தர்மம் எங்கே என்று பெரும் பொருள் தயாரிப்புக்கே சென்று விடுவதால் படத்துக்கு எங்ஙனம் லாபம் வரும்?

அப்படியே வெளி வந்தாலும் ஒரு சில ஊர்களில் மட்டும் 100 நாட்கள் ஓட்டி படம் வெற்றி என்று குதிப்பார்கள். B சென்டரில் 50 நாட்கள் ஒடுவது என்பது அநேகமாக இருக்காது என்றே சொல்லலாம். ஆனால் தலைவர் படத்துக்கு b சென்டர் மற்றும் c சென்டரில்தான் ஆட்டம் அற்புதமாக இருக்கும். அதிலும் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்", 50 நாட்கள் ஓடாத b c சென்டரை தேடிப் பிடிப்பதே கஷ்டம். புதுமையான டைரக்டர் என்று பெயரெடுத்த ஸ்ரீதர் புதுமையான வெற்றியை பார்த்தது "உரிமைக்குரலி"ல்தான்.

அதே போல் a p நாகராஜன் "நவரத்தின"த்தை இயக்கி தயாரிக்கிறார் என்றவுடன்
அவரை சுற்றிய விநியோகஸ்தர்களை அவர் வாழ்நாளில் கண்டதில்லை என புளகாங்கிதமடைந்தார். தயாரிப்பில் இருக்கும் போதே "நவரத்தினம்" அத்தனை ஏரியாவும் விற்று தீர்ந்ததுடன் கணிசமான லாபத்தையும் பார்த்து விட்டார். எத்தனையோ பிரமாண்ட பக்தி படங்களை எடுத்து கையை சுட்டுக் கொண்டவருக்கு இந்த நிகழ்ச்சி அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆண்டவன் படமெடுத்து ஆண்டியானவரை மீண்டும் அரசனாக்கி பார்த்தவர் மக்கள் திலகம் என்ற மகோன்னத மனிதர்.

அய்யன் படமெடுத்து ஆண்டியான தயாரிப்பாளரெல்லாம் தலைவர் படத்தயாரிப்பாளரை பார்த்து பொறாமை கொள்வர். அந்த தலைவரே அவருக்கு படமெடுக்க சத்தர்ப்பம் கொடுத்தவுடன் வற்றாத நதியாக மீண்டும் ஜீவ மாற்றம் ஆகி விடுகிறார்கள்..........ksr.........

orodizli
7th February 2021, 07:44 AM
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில்
கண்டு பிடித்தேன்!
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல்
எம்.ஜி.ஆர் படம்!!- - -
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!- - -
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தை
உங்கள்...'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்' பாடல்
எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக் கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே' பாடல்
எனக்குச் சொல்லித் தந்தது.- - -
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற சோதி மரத்தை
யான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும்
சோலைகளாக மாற்றும்
அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்
தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!' என்று
நீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.- - -
உங்கள்...
கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
நல்ல நேரம்' படத்தில்
சுருண்ட முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட
மஞ்சள் உடையுடன் மலையருவி போல் துள்ளிக் குதித்து
மாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்
நான் வானம் ஏறினேன்! -
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'
மீண்டும் 'ராஜா'வில் ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..
ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே
ஒளி விளக்கை
மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!- - -
உங்கள் கணக்கில்
வரவு வைத்திருக்க வேண்டிய
வசந்தங்களை எல்லாம்
வறுமை...
விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...
விதி...
வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூட
மறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை வைத்துக் கொண்டே
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூட
நீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்'
செய்ய வேண்டியிருந்தது.- - -
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின்
பாதித் தூரம் வரைக்கும்
'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....
உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்
அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும்
உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம்
உங்களை
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம்
உங்கள்
ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன்
முகவரி தேடி வந்து
வட்டியும் முதலுமாக
அதிசயங்கள் நிகழ்த்த ஆரம்பிக்கிறாள்
அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு' என்று...
உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்து
விளக்கம் சொல்கிறது.- - -
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காக
யாம் காண்பவர் எல்லாம் பெறுக...'
என்று அலையும்
சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம்
இனி யாருக்கும் வேண்டாம்' என்று
சத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாக
அள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.- - -
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய்
உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்
கைக்கு எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்
தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு
உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும்
அகலமாகவே அவர்களுக்காக
திறந்து வைத்தீர்கள்.- - -
இறப்பு என்பது...
இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!
- யாழ் சுதாகர்.............Png

orodizli
7th February 2021, 07:45 AM
''எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்'' மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே... தமிழ் நூல்கள்

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை) 84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))...mj

orodizli
7th February 2021, 07:45 AM
எந்த கட்சி என்ன மதம் ஆத்தீகனா நாத்தீகனா என கடவுள் பார்பதில்லை நல்லவனுக்கு உதவுவார் எம் ஜி ஆரும் அது போல் தான்

கம்மியூனிஸ்ட் தலைவரும் சுதந்திர தியாகியும் ஆன ஜீவா சிலை அமைக்க கம்மியூனிஸ்ட் கட்சி தா பாண்டியன் தலைமையில் முடிவு எடுத்து பணம் மிகுத்த பிரமுகர்களிடம் நிதி சேர்க்கிறார்கள் பாதி தொகை கூட சேரவில்லை அப்போ தான் எம்ஜிஆர் மட்டுமே உதவ முடியும் என்று எம்ஜிஆரிடம் நிதி கேட்க முடிவாகிறது அப்போது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பாலசுப்பினமணியன் எம் ஜி ஆரை கடும் விமர்சனம் செய்பவர் அவர் எம் ஜி ஆரை காண தயங்கியவாறு செல்கிறார் தோட்டம் வந்த கம்மியூனிஸ்ட் தலைவர்களை உண்ண வைத்து கேட்கிறார் என்ன வேண்டும் என எம் ஜி ஆர் ஜீவா சிலை அமைக்க நிதி தந்து உதவ வேண்டுகிறார்கள் கம்மியூனிஸ்ட் தலைவர்கள் உடனே எம் ஜி ஆர் நல்ல விஷயம் சிலை அமைக்கும் அத்தனை சிலவையும் நானே தருகிறேன் என கூறும் எம்ஜிஆரை பார்த்து திகைத்து நிற்க்கிறார்கள் சிறு நிதி எதிர்பார்த்து வந்தவர்கள்

ஆன்மீக சுவாமி கிருபானந்த வாரியார் திருபணியாக ஒரு கல்லியாண மண்டபம் கட்ட நிதி திரட்டுகிறார் பல பணக்கார ஆன்மீகவாதிகளிடம் நிதி வசூல் செய்தும் பணி முடிக்க முடியாமல் கடைசியில் எம் ஜி ஆரை சந்தித்து நிதி கேட்க வந்த சுவாமிகளை உண்ணவைத்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என எம் ஜி ஆர் கேட்க உங்கள் மனம் போல் தாருங்கள் என சுவாமி கூற எம் ஜி ஆர் ஒரு செக்கில் தொகை எழுதாமல் கையொப்பம் இட்டு கொடுக்கிறார் சுவாமி உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை எழுதி கொள்ளுங்கள் என எம் ஜி ஆர் கூற திகைப்போடு பெற்று கொண்டு கல்லியாண மண்ட்டபம் திறப்பு விழாவில் பல பிரமுகர்கள் மத்தியில் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் என்ற பட்டம் சூட்டி மகிழ்ந்தார் சுவாமி

நல்லோர் லட்சியம் வெல்ல
எம் ஜி ஆர் துணை நிற்ப்பார்

வாழ்க எம் ஜிஆர் புகழ்..........Arm

orodizli
7th February 2021, 07:46 AM
தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள்.

நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா?

நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.

ரஜினி, கமல்தான் என்றில்லை... சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் தக்க பதில் வைத்திருப்பார்கள்..........Aiyapp.das

orodizli
7th February 2021, 07:47 AM
புராண கர்ணனை வென்றார் கலியுக கர்ணன் எம் ஜி ஆர் ...

சிலர் கேட்டனர் எப்படி?!

புராண கர்ணன் அன்னதானம் செய்யவில்லை ஆனால் ஒருதடவை ஒருவருக்கு அன்னதானம் நடக்கும் இடத்தை காட்டியதால் அடைந்தார் சொர்க்கம் இது புராணகதை

நம் கலியுக கர்ணன் ராமாவரம் தோட்டம் 24 மணி நேரம் அணையா அடுப்போடு அன்னதானம் செய்தார் எம் ஜி ஆர்

அதுவும் தன்னை காணவரும் தோட்டம் வரும் எவரும் பசி ஆற உண்டே காண்பார் எம் ஜி ஆர்
தான் உண்ணும் போது 20 நண்பர்களுடனே உண்பது வழக்கம் மற்றவர் விரும்பி உண்பதை உடனே வழங்க வைப்பார் எம் ஜி ஆர்

காமராஜை பல முறை விருந்துக்கு அழைக்க வர மறுக்கும் காமராஜ்யிடம் ஏன் மறுக்கிறீர்கள் என எம்ஜிஆர் கேட்க காமராஜ் ராமசந்திரா விருந்துக்கு வரகூடாது என்று அல்ல நான் ஒரு வித உணவோடு வாழ்கிறேன் உன் வீட்டின் சாப்பிட்டின் ருசி மகத்துவம் பலர் கூறி கேட்டுள்ளேன் ஒரு முறை வந்து உண்டால் என் நாக்கு தினம் அதை கேட்கும் அதனால் தான் மறுக்கிறேன் என கூறினார்

உணவு ஊட்டுவதில் தாய்க்கு நிகர் எம்ஜி ஆர் ஒரு மேல் மட்ட அதிகாரி எழுதிய நூலில் இப்படி எழுதியுள்ளார் ஒரு முறை நான் கோட்டையில் பணியில் உள்ள போது எம்ஜி ஆர் தோட்டத்தில் இருந்து சி எம் அழைப்பு வர உடனே சென்ற என்னை வரவேற்ற சி எம் வாங்க சாப்பிடுவோம் என அழைக்க ஏதோ அவசரமா அழைத்தீர்களே என தயக்கமாக கேட்க ஒன்றும் இல்லை முன்பு ஒரு முறை ஒரு கூட்டம் இங்கு நடந்ததே அதில் பங்கு கொண்ட நீங்கள் அன்று இங்கு உணவு உண்டீர்கள் அன்று ஒரு உணவு பரிமாறபட்டது அதை நீங்கள் விரும்பி உண்டீர்கள் அது அபூர்வமாக இங்கு தயாரிக்க படும் இன்று அந்த உணவு என்ற உடன் உங்கள் முகம் நினைவில் வந்தது அது தான் உண்ண அழைத்தேன் என கூற நான் ஒருகணம் மலைத்து நின்றேன் எதிரே நிற்பது என் அன்னையா எம் ஜி ஆரா என என் தாய்போல் எனக்கு காட்சி அளித்தார் அன்று உண்மை அன்போடு

மக்வான என்ற மத்திய மந்திரி இருந்தார் தமிழகம் வரும் போது எல்லாம் எம்ஜிஆரையும் எம் ஜி ஆர் ஆட்சியையும் விமர்சித்து கொண்டே இருந்தார் ஒரு நாள் எம் ஜி ஆர் வீட்டில் விருந்து உண்ணும் சந்தர்ப்பம் வாய்க்க அதன் பின் எப்போதும் எம் ஜி ஆர் புராணமே மனிதநேயம் அன்பு க்கு எம் ஜி ஆரே எடுத்து காட்டு என்று

சிறுவயதில் உண்ண உணவு இன்றி தவித்த எம் ஜி ஆர்
பிற்க்காலத்தில் அன்னதானத்தில் மன்னன் ஆனார்

வாழ்க எம். ஜி. ஆர்., புகழ்.........arm

orodizli
7th February 2021, 07:48 AM
முகநூல் நண்பருக்கு இனிய வணக்கம் ...

Two commemorative coins in the denomination of Rs 100 and Rs 5 were released Thursday on 17th January, 2019 to mark the 102nd birth anniversary of late Tamil Nadu Chief Minister and ruling AIADMK founder M G Ramachandran.

Chief Minister K Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam released the coins at a function held in the Tamil Nadu Dr. MGR Medical University complex, Chennai
The coins bear the portrait of Ramachandran at the centre along with the inscription 'DR M G Ramachandran Birth Centenary' on the lower periphery.
The year '1917-2017' will be flanked below the portrait of Dr M G Ramachandran,
On the obverse side, the coins will bear the Lion Capital of Ashoka Pillar in the centre with the inscription 'Satyamev Jayte'.
The Rs 100 and Rs 5 coins will weigh 35 grams and 6 grams, respectively.
The Rs 100 coin will be made of silver (50 per cent), copper (40 per cent), nickel (5 per cent) and zinc (5 per cent).
The Rs 5 coin will be made of copper (75 per cent), zinc (20 per cent) and nickel (5 per cent)..........Vel NS

orodizli
7th February 2021, 07:48 AM
அந்த சிங்கத்துக்கு உணவு வகைகள் பரிமாறி அதன் உடன் நன்கு பழகி ஒரு உற்ற நண்பன் போல இருந்தவர் ஒரு பெங்காலி நபர்...ஆள் அழகா உயரத்தில் கம்மியாக இருப்பார்.

அவரையும் முழுதாய் தங்கள் உடன் வைத்து கொண்டு வரலாற்று தலைவர் படம் அடிமைபெண்ணில் 30 அடி பள்ளத்தில் தன் தாயை காக்க தலைவன் சிங்கத்துடன் போராடி வீழ்த்தும் காட்சி...

4 நாட்களில் இறுதி சண்டை காட்சி எடுக்க பட்டு விடும் என்ற நிலையில் அந்த காட்சி எடுக்க 3 மாதம் ஆகி விட்டது சத்தியமான உண்மை....

ஆரம்ப காட்சிகள் எடுக்க பட்ட பின் 4 நாட்கள் அந்த சிங்கம் எந்த உணவையும் எடுத்து கொள்ள மறுக்க....விஷயம் அறிந்த தலைவர் பட்டினி கிடக்கும் அதை வதைத்து எடுக்க படும் காட்சிகள் தவறு...

என்று சொல்லி பட பிடிப்பு தள்ளி போய் ஒருவாரம் சிங்கத்துக்கு சிறப்பு உணவுகள் நம் பொன்மனம் செலவில் வழங்க பட வீறு கொண்டு எழுந்தது அந்த சிங்கம்...

உற்சாகம் ஆக களம் இறங்கிய அதனுடன் மோதும் காட்சிகளில் தலைவர் உடை அமைப்பில் அந்த பெங்காலி நபரும் இருக்க காட்சிகள் மாறி மாறி எடுக்க பட்டன.

ஒரு காட்சியில் சிங்கத்தின் வாலை பிடித்து இழுக்கும் போது கடும் கோபம் கொண்டு சிங்கம் ஆத்திரத்தில் பாய்ந்து வர உணவு கொடுத்து பராமரித்து வந்த அந்த வடநாட்டு நபரே திகைத்து போக..

தயார் நிலையில் இது போல ஒரு சூழ்நிலை வந்தால் அந்த சிங்கத்தை மயக்கம் வரும் நிலையில் சுட சண்டை காட்சிகள் துணை இயக்குனர் ..
என்.சங்கர் கையிலும் பள்ளதுக்கு மேலே அசோகன் நிற்கும் அந்தவாயில் பகுதியில் இன்னும் ஒரு நபர் அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை... அவர் கையிலும் துப்பாக்கி இருக்க...

பாய்ந்து வந்த சிங்கத்தின் வாயில சங்கர் அவர்கள் துப்பாக்கியை திருப்பி கொண்டு செல்ல சிங்கம் கோபம் அடங்கி மூச்சு வாங்க.

மொத்த அரங்கமும் திகிலில் திகைக்க ஏதும் அறியா மாவீரன் போல பயம் இன்றி நின்றார் நம் மன்னவர்.

பவளவல்லி பதவி வெறி கொண்டு ஆத்திரத்தில் ஆள் மாறி பள்ளத்தில் விழ அவரை இழுத்து கொண்டு போகும் காட்சி எடுக்க பட்ட பின் சிங்கம் உடல் நிலை மீண்டும் வயிற்று போக்கால் அவதி கொள்ள...

மருத்துவர் வந்து மருந்துகள் அளித்து நன்கு உடல் நலம் பெற்ற பின் மீதி காட்சிகள் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் எடுத்து முடிந்து படம் வெளிவந்த போது அனைத்து நெஞ்சங்களும் அந்த இறுதி சண்டை காட்சிகள் பற்றியே பேச .

வட இந்திய பத்திரிகை கள்... இது போல ஒரு காட்டு ராஜாவுடன் மோதும் உண்மை காட்சிகள் இந்திய திரைப்பட வரலாற்றில் இல்லை என்று விமர்சனம் எழுத.

அதை படித்து அப்படி என்ன அந்த காட்சியில் இருக்கு என்று படம் பார்க்க வந்த இந்தி திரைப்பட வல்லுனர் ராஜ்கபூர் அவரே தன்னை மறந்து பொது இடம் என்று பார்க்காமல் எழுந்து நின்று விசில் அடித்து பாராட்டிய நிகழ்வுகள் நம் தானை தலைவருக்கு மட்டுமே சொந்தம் என்று பெருமை கொள்ளுவோம்...

படத்தின் இறுதி காட்சிகள் சிறப்பிக்க காரணம் ஆன துணை ஸ்டண்ட் நிபுணர் சங்கர் அவர்கள் தலைவர் முதல்வர் பொற் கரங்கள் கொண்டு விருது பெரும் படம் பதிவில்...

அந்த சிங்கத்தை பேணிய பெங்காலி நபருக்கு உரிய மரியாதை செய்து பெரும் தொகையை கொடுத்து வழி அனுப்பி வைத்த செயல் மறக்க மறுக்க முடியாத நிகழ்வுகள்.

வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.

உங்களில் ஒருவன் நெல்லை மணி.

என் .சங்கர் அவர்கள் தலைவரின் இதயக்கனி படத்துக்கு இவரே ஸ்டண்ட் காட்சிகள் அமைப்பாளர்..

விவசாயி படத்தில் வரும் சேற்று சண்டை காட்சி நிபுணரும் இவரே ஆவார் என்பது துணை செய்திகள்...

காவல்காரன் படத்தில் தலைவரை பின்னால் இருந்து இவர் கத்தியால் குத்த வர தான் அமர்ந்து இருக்கும் நாற்காலியை எடுத்து அதை தடுக்கும் காட்சி அமர்க்களம் போங்க.............nmi

orodizli
7th February 2021, 07:50 AM
உலகில் எந்த ஒரு நடிகருக்கோ தலைவருக்கோ இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க சாதனை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு. திமுக ஆட்சிக்கு எதிராக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மதுரை வந்த போது அவரை சந்தித்து மனு கொடுக்க புரட்சித் தலைவர் திட்டமிட்டார். ஆனால் வழியெங்கும் மக்களின் எழுச்சி மிக்க வரவேற்பால் ரயில் 10 மணி நேரம் தாமதமாக மதுரைக்கு சென்றது. இதனால் இந்திரா காந்தியை புரட்சித் தலைவர் சந்திக்க முடியவில்லை.என்றாலும் மக்களின் வரவேற்பால் ரயில் 10 மணி நேரம் தாமதம் ஆனது. இது உலக வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை.இன்று இந்திரா காந்தியின் பிறந்த நாள். இந்த நாளில் இதோ அந்த வரலாற்று சம்பவம்.
--------------------

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.
மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.

நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.

எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.

எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.

சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.

நன்றி -- தி இந்து நாளிதழ்...mj

orodizli
8th February 2021, 02:20 PM
#எம்ஜிஆரை_போல்
#கோயில்களை_சீரமைப்பீர் !

பல நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த நம் கோவில்கள் பராமரிப்பின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளன.அவற்றை காப்பாற்ற வேண்டும். கோவில் நிர்வாகமும் அரசும் பக்தர்களின் பணத்தை வெவ்வேறு காரியங்களுக்கு செலவு செய்கின்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனரே தவிர கோவில்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில்லை. கோவில்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று ‘தினமலர்’ நாளிதழில் ‘இது உங்கள் இடம்’ பகுதியில் அந்த துறையால் எந்த பயனும் இல்லை என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.

முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பின்பு அப்போதைய இ.காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா பாலி இல்ல நிகழ்ச்சிக்கு வந்தார். அங்கு இருந்த பெண் ஒருவர் எம்ஜிஆரிடம் சென்று "அதிகாலையில் பார்த்தசாரதி ஆண்டவன் முகத்தில்தான் விழிப்போம்.
இப்போது தரிசிக்க முடியவில்லை. கோவில் குளம் பொது கழிப்படமாக மாறிவிட்டது. கோயிலை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் தெப்பத்தை பார்த்து நீண்ட காலம் ஆகின்றது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை" என்றார்.

அந்த பெண் கூறிய குறைகளை பொறுமையாக கேட்ட எம்ஜிஆர், "கவலை வேண்டாம், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார். திடீர் என்று ஒரு நாள் கோடைகாலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கும் மதிய நேரத்தில் பார்த்தசாரதி கோவிலுக்கு எம்ஜிஆர் காரில் வந்து இறங்கினார். வேஷ்டியை மடித்து கொண்டு ஜிப்பாவில் இருந்த கைக்குட்டைi எடுத்து முகத்தில் மாஸ்க்காக கட்டிக் கொண்டு குளத்தில் உள்ளே மைய பகுதிக்கு இறங்கி சென்றுவிட்டார்.

விஷயம் அறிந்தவுடன் இதுவரை அந்த பக்கமே வராத அதிகாரிகள் குடையை தூக்கிக் கொண்டு குளத்திற்குள் இறங்கி ஓடினார்கள். குடையை பிடிக்க வேண்டாம் என்று எம்ஜிஆர் தடுத்துவிட்டார். உடல் நிலையை பொருட்படுத்தாமல் துர்நாற்றத்தை தாங்கிக்கொண்டு குளத்தை ஆய்வு செய்த பின்பு மேலே ஏறி வந்தார்.

"கோவில் நிலையை அரசின் கவனத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை?" என்று அதிகாரிகளை கண்டித்தார். அதன் பின்பு அறநிலையத்துறை அதிகாரிகளை மாற்றவும் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை ஏற்று அமைச்சர் வி.வி.சாமிநாதனும் இரவு பகலாக அதே இடத்தில் முகாமிட்டு குளத்தை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டார். லாரிகள் மூலம் குளத்தில் தண்ணீர்விட ஏற்பாடு செய்தார். குளத்தில் தெப்பம் சென்ற பிறகுதான் அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

ஏனென்றால் எம்ஜிஆர் தன்னுடன் வந்த, அப்போது அறநிலையத் துறையை கூடுதலாக கவனித்த சுற்றுலாதுறை அமைச்சர் வி.வி.சாமிநாதனிடம் "கோயில் குளம் விரைவில் சீராக வேண்டும். அது வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது. குளத்தில் தெப்பம் விட்ட பிறகுதான் நீங்கள் இந்த இடத்தை விட்டே செல்ல வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

திடீர் என்று எம்ஜிஆர் அந்த பகுதிக்கு வந்தவுடன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்ரகாரத்து மாமி ஒருவர் தன் வீட்டில் ஜுஸ் தயார் செய்து கொண்டு ஓடி வந்து காவல் தடுப்பை மீறி வழங்கினார்.

அந்த பெண்மணிக்கு தன் இரு கரங்களால் கைகூப்பி வணங்கி "உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. மருந்து கட்டுப்பாட்டில் இருக்கின்றேன். ஜுஸ் வேண்டாம்" என்று சொல்லி விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். பார்த்தசாரதி கோயில் இந்த நிலமை என்றால் கபாலீஸ்வரர் கோயில் எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து கொள்ள சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தையும் எம்ஜிஆர் திடீரென்று பார்வையிட்டு அதையும் சீர் செய்ய உத்தரவிட்டார்.

எம்ஜிஆர் தன் ஆட்சிகாலத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு
குடமுழுக்கு விழா நடத்தி இந்து அறநிலையத் துறையை பொலிவுடன் வைத்திருந்தார். அத்துறையில் சரியாக செயல்படாத அதிகாரிகளை மாற்ற வேண்டுமே தவிர அந்த துறையையே கலைக்கக்கூடாது. மூட்டை பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்தக்கூடாது....GDR...

orodizli
8th February 2021, 02:21 PM
#பாசத்தில் #ஜெயிக்கப்போவது #யார்? #வாத்தியாரா? #பக்தர்களா?

தனது பிரமிப்பான இமாலய வளர்ச்சியின் , புகழின் ஆணிவேர் ரசிகர்களே என்பதைப் புரிந்திருந்தவர் மக்கள்திலகம்...

தினமும் தீபாவளி காணும் திரைஅரங்குகள், வாத்தியார் படங்கள் திரையிடப்படும்போது...

தன் ரசிகர்களின் மேல் உயிரையே வைத்திருந்தார்...வாத்தியார்...

1973 ம் ஆண்டு அமெரிக்க பயணம் முடித்து தாயகம் வந்த அன்று மீனம்பாக்கம் முதல் மர்லின்மன்றோ சிலை வரை மக்கள் வெள்ளம்.இதை அறிந்து விமானநிலையத்தில் இருந்து எம்ஜிஆர் வீட்டுக்கு செல்லாமல் மவுண்ட்ரோடு முழுவதும் திறந்த வேனில் வந்து ரசிகர்களை சந்தித்து விட்டே திரும்பினார் !

சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்கா பயணம்...
நடு இரவில்...
மக்களுக்கு நன்கு தெரியும் தலைவர் முகத்தை பார்க்கவே முடியாது என்பது இருந்தும் மருத்துவமனை முதல் விமானநிலையம் வரை சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் தலைவர் பயணிக்கும் ஆம்புலன்ஸ் வண்டியைப் பார்க்க, கண்களில் நீருடன்...

#இதுதாங்க #எம்ஜிஆர்

ஒருவேளை உணவிற்குக் கூட கஷ்டப்படும் வறியவர்கள் கூட தங்களுடைய சொந்த செலவில் தனது பாசத்தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்
என்றால் அது உலகிலேயே "#வாத்தியார்" ஒருவருக்குத் தான் என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய என்னால் முடியும்......bsm...

orodizli
8th February 2021, 02:25 PM
பொதுவாக, எம்ஜிஆரின் திரைப்படங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. திராவிட இயக்க படங்கள் 2.சமூக கதைகளை உள்ளடக்கிய படங்கள் 3. ஹீரோயிஸத்தை அடிப்படையாக கொண்ட ஃபார்முலா படங்கள்.

ஆரம்ப படங்களில் மாமன்னராகவும், மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்க்கும் கலகக்காரனாகவும், அரசுக்கு எதிராக சாமான்ய மக்களை திரட்டும் போராளியாகவும் எம்ஜிஆர் சித்தரிக்கப்பட்டார். இரண்டாவதாக சமூக படங்கள்தான் மக்களிடம் எம்ஜிஆருக்கு பிரபலத்தை தர ஆரம்பித்தது. நெருக்கடி ஆனால், 1960-ல் இருந்து தமிழ்த்திரையின் போக்கு வியப்பூட்டும் அளவுக்கு மாற ஆரம்பித்துவிட்டது.. ஸ்ரீதர், கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட புது புது இயக்குனர்கள் அடிப்படை பிரச்சனைகளையும், கூட்டுக்குடும்பத்தின் உள் முரண்பாடுகளையும் உள்ளடக்கிய திரைப்படங்களை வெளியிட்டனர். சரித்திர சம்பவங்கள், கத்தி சண்டைகள், வீரதீர சாகச செயல்கள் எல்லாம் அப்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. அதனால் எம்ஜிஆர் ஒரு நெருக்கடியில் நின்றார். உத்திகள் ஒரு புதிய பாதையை, புதிய பாத்திர படைப்பை அவர் தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.. மல்யுத்தம், குத்துச்சண்டை, வாள்சண்டை போன்றவை இனி எடுபடாது.. அனைத்தும் காலாவதியாகிவிட்டன. அதனால் சமூக படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார். கத்தி சண்டைகளுக்கு பதில் நடனங்களில் கவனம் செலுத்தினார். சண்டை காட்சிகளைக்கூட சரித்திர கதைகளில் இருந்த பாணியை மாற்றி புதிய உத்திகளை கையாண்டார். குடும்ப தலைவன், தாய் சொல்லை தட்டாதே, பாசம், தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், பெரிய இடத்துபெண், தெய்வதாய், படகோட்டி, பணம் படைத்தவன், அன்பே வா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், ஒளிவிளக்கு போன்ற எண்ணற்ற சமூகப்படங்கள் வெளிவந்தன. வீழ்த்தினார் கலாப்பூர்வ பார்வையில் அணுகுகிறபோது இப்படங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமானவையே.. அழகியலோ, கலை நுணுக்கமோ, உள்ளத்தை உருக வைக்கும் உணர்ச்சி குவியலோ இப்படங்களில் இருக்காது என்பது உண்மைதான். ஆனால் சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது, இப்படங்களில் முதல்தரமானவையாய் விளங்கின. மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சூதாடுதல், கற்பழிப்பு, பெண்களை ஏமாற்றுவது, வட்டிக்கொடுமையால் ஏழைகள் வாடுவது, திருடுவது, அடுத்தவரை கெடுப்பது போன்ற சமூக தீமைகளை எம்ஜிஆர் கடுமையாக எதிர்த்தார். பாதிக்கப்பட்ட பெண்களை வீரதீர சண்டைகளிட்டு காப்பாற்றினார்.. ஏழைகளுக்கு உதவினார்.. தாயை தெய்வமென வணங்கினார்.. பெண்களை தாயாக போற்றினார்.. அக்கிரமக்காரர்களை, ஆணவக்காரர்களை, காமப்பிண்டங்களை தனி ஆளாக நின்று வீழ்த்தினார். அறநெறிப்பண்பு அதனால் ஒரு புறம் பெண்களும், மறு புறம் இளைஞர்களும் எம்ஜிஆருக்கு அபிமானிகளாய் மாறினார்கள்.. அறநெறிப் பண்புகளை வலியுறுத்தியதால் நடுத்தர மக்களும் அவரை நேசித்தார்கள். இதற்கிடையே ஏற்கனவே திராவிட எழுத்தாளர்களின் படைப்புகளாலும், திமுகவின் அங்கமாக எம்ஜிஆர் இருந்ததாலும் எம்ஜிஆருக்கு ஒரு தனிப்புகழும் செல்வாக்கும் இருந்தது. திராவிட இயக்க தொண்டர்களோடு பெண்களும், இளைஞர்களும், நடுத்தர வர்க்க படிப்பாளிகளும் இணைந்ததால் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக எம்ஜிஆர் உயர்ந்தார். 60 முதல் 70-ம் ஆண்டுகளிலும் முடிசூடா மன்னனாகவே வலம்வந்தார்.. "என் இதயக்கனி" என்று அண்ணாவே பாராட்டும் அளவுக்கு செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. 3 வித தாக்கம் இறுதியில் எம்ஜிஆரின் திரைப்படங்கள் 3 வித தாக்கத்தை திரைக்கு வெளியே உருவாக்கியது. 1. சினிமாவில் முதன்முதலாக ஹீரோயிசம் உருவாகி வளர்ந்தது. 2. அடித்தட்டில் உள்ள ஏழை மக்கள் புதிய உத்வேகம் பெற்று அகரீதியாகவும், புறரீதியாகவும் அவர்களை மாற்றியது. 3. அரசியல் செல்வாக்கு பெற்று - ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி - ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு புதுமையை நிகழ்த்தியது. எத்தனையோ கலைஞர்கள் எம்ஜிஆருக்கு முன்னும், பின்னும் நடித்து புகழ்பெற்றாலும், அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாக மட்டுமே கருதப்பட்டார்கள்.. ஆனால் எம்ஜிஆர் படங்கள் நேர் எதிரானவை.. மக்கள் அவர் எந்த கேரக்டரை ஏற்றாலும், அதை நிஜ எம்ஜிஆராகத்தான் பார்த்தார்கள்.. எம்ஜிஆர் நல்லவர், தண்ணி அடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார், தன் மனைவியையோ காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. தீமைகளை எதிர்த்து போராடுவார்.. ஏழைகளை பாதுகாப்பார் என்றெல்லாம் நிஜமாகவே மக்கள் நம்பினார்கள். அதனால் ஹீரோவாக சினிமாவில் மட்டுமல்ல.. திரைக்கு வெளியேயும் உருவானார் எம்ஜிஆர். பாடல்கள் மற்ற ஹீரோக்களின் வாழ்க்கை ஸ்டுடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் முடிந்து போயிற்று என்றால், எம்ஜிஆரோ, இதையெல்லாம் தாண்டி, அரசியல் மேடைகள், மாநாடு, பேரணிகளிலும் பங்கேற்றார். ஏழை எளிய மக்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் வாரி வழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.. தியேட்டரில் இருந்த ரசிகர்கள் காலப்போக்கில் ரசிகர் மன்ற தொண்டர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், இறுதியில் வாக்காளர்களாகவும் மாறினார்கள். இதற்கு இன்னொரு காரணம் அவருக்காக பாடப்பட்ட பாடல்கள், எழுதப்பட்ட உணர்ச்சிகரமான வரிகள்தான். ஏழைகளை பற்றியும், உழைப்பின் உயர்வு குறித்தும் நற்பண்புகளின் நன்மை குறித்தும் பல பாடல்கள் எம்ஜிஆருக்காகவே எழுதப்பட்டன... இந்த பாடல்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனமும் ஆர்வமும் கொண்டிருந்தார்.. சாதாரண டூயட் பாட்டு என்றால்கூட கண்ணியமும் நயமும் கலந்திருப்பதை இப்போதும் நாம் காண முடியும். அடித்தள காரணம் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் மாறுதலை உருவாக்கியது. படகோட்டி வந்தபோது, மீனவர்கள் எம்ஜிஆரை தங்களில் ஒருவராகவும், ரிக்*ஷாக்காரன் வந்தபோது ரிக்*ஷா இழுத்தவர்கள் அவரை தங்களில் ஒருவராகவும் பாவித்தார்கள். அது மட்டுமல்ல.. தங்கள் தொழில் மீது ஒரு பற்றும் பெருமையும் ஈடுபாடும் அவர்களுக்கு உண்டாயிற்று. அழுக்கும் கிழிசலும் கொண்ட கந்தலாடையுடன் ரிக்*ஷா இழுத்தவர்கள், எம்ஜிஆரை பார்த்து முக்கால் பேண்ட்டையும், சட்டையையும் அணிந்தார்கள்.. அதேபோல் விவசாயி, தொழிலாளி, பஸ் கண்டக்டர், டிரைவர், அனாதை, போலீஸ்காரன், நரிக்குறவர், போன்ற பல கதாபாத்திரங்களை எம்ஜிஆர் ஏற்றார்.. இப் பாத்திரப் படைப்புகளில் எம்ஜிஆரை கண்டு விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன் போன்றோர் தன்னையே மறந்தனர். எம்ஜிஆரின் திரை வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும் இதுவே அடித்தள காரணமாயிற்று. எட்டாவது வள்ளல் ஆனால் பல படங்களை ஃபார்முலா படங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அடிப்படையில் சில அறநெறிப் பண்புகளை வலியுறுத்தின என்பதிலும், ஆபாசமோ, அருவருப்போ இல்லாமல், ஆரோக்கியமான - அன்றாட வாழ்க்கையின் துன்ப துயரங்களை மறந்து கொஞ்ச நேரமாவது தன்னையே மறந்து ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தன என்பதிலும் மாற்று கருத்து இல்லை.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், "வெறும் பொழுதுபோக்கு அம்சமாயிருந்த சினிமாவை மக்களோடும், சமுதாயத்தோடும், இறுதியில் அரசியலோடும் இணைத்து.. ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு மாபெரும் சக்தி படைத்த மகத்தான கலைஞர்தான் எட்டாவது வள்ளல் எனப்படும் மக்கள் திலகம் எம்ஜிஆர்!.........Baabaa

orodizli
8th February 2021, 02:26 PM
எத்தனை தலைமுறை ஆனாலும் இவர் புகழ்
நிலைத்திருக்க இந்த காரணம்தான் :
����������������������������������
எத்தனை தலைவர்களை உலகம் கண்டிருந்தாலும் புரட்சித் தலைவர்போல்
தன்னிகரற்ற தலைவர் எவரும் இல்லை.
எந்த இடத்திலும் மக்களை மதிப்பதிலும்,
மக்களுக்கு நன்மை செய்வதிலும் உலகில்
முன்னோடி இவர் மனிதநேயம்.எம்.ஜி.ஆர் என்றாலே மக்களும் எங்கள் வீட்டு பிள்ளை என்று உரிமை கொண்டாடினர்.அவரும் தன் இறுதிநாள் வரை அந்த மக்கள் செல்வாக்கை
காப்பிற்றியவர்.அவரின் அந்த கருணை குணத்தால் மக்கள் முன் அவருக்குண்டான
செல்வாக்கை இன்றைய தலைமுறை தலைவர்கள் பிரச்சாரம் செய்ய செல்லும்போதுகூட கூட்டத்தில் உள்ள தாய்மார்கள் எம்.ஜி.ஆர் பெயரை தவறாமல் அசைபோடுவதால்தான் அனைத்து சட்டமன்ற
தேர்தலின் பிரச்சாரங்களின் மூலதனமாக அனைவருக்கும் எம்.ஜி.ஆர் இருக்கிறார்.
அவரை போற்றிப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள் பெருமை அடையலாம்..........Rnjt
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

orodizli
8th February 2021, 02:27 PM
புரட்சித்தலைவர் நடித்த காலகட்டங்களில் தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் போக்கிய காவல்காரனாக இருந்தார். அதேபோல் தன்னை நம்பியிருந்த ஒட்டுமொத்த தமிழக மக்களின் காவல்காரனாக இருந்தார். இன்றைய இப்போதைய சூழ்நிலைகளில் மற்ற தலைமைகளை மனதாலும் நினைக்காதே உண்மையாக நேசிக்கின்ற புரட்சித்தலைவரின் ரசிகர்களை மற்றும் பக்தர்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறார் மற்றும் அவர்களுக்கும் காவல்காரராக இருக்கிறார் ... புரட்சித்தலைவரை உண்மையாக நம்பியவர்களுக்கு என்றும் எப்போதும் தோல்வி என்பது துளியளவும் கிடையாது.

கெத்தாக சொல்லுவோம் கம்பீரமாக சொல்லுவோம் நாம் புரட்சித்தலைவரின் மிகத் தூய்மையான அக்மார்க் வெறியர்கள் என்று நம்முடைய ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.

கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........sbm

orodizli
8th February 2021, 02:27 PM
அன்று இரவு ஜப்பான் நாட்டு விமான நிலையத்தில் அந்த பட குழு வருகைக்காக காத்து இருந்தேன்.

எனக்குள் பெரும் பட படப்பு.... என்னை நம்பி பெரும் பொருள் செலவில் ஒரு படத்தை எடுக்க விரும்பி நான் ஜப்பான் நாட்டுக்கு சில மாதங்கள் முன்பே வந்து விட்டது நினைவுக்கு வந்தது...

அந்த விமானத்தின் வருகை அறிவிக்க பட்டு விட்டது...அந்த பட குழு வருகை தெரிந்து தமிழ் மக்கள் கூட்டம் அந்த இரவிலும் அலை மோதியது...

கஸ்டம்ஸ் பகுதியை தாண்டி தன் படை பரிவாரங்கள் உடன் அந்த சந்திரன் விமான நிலைய வெளிச்சம் தாண்டி வேட்டி ஜிப்பாவில் மின்னி கொண்டு ஒரு தங்க நிலா தரையில் நடப்பதை போல இருந்தது.....பலமுறை அவர் அருகே இருந்து பார்த்த எனக்கு அது புதிதாய் இருந்தது...

பலத்த கரவொலிகள் இடையே என் அருகில் அவர் வர நான் பதட்டம் கொண்டு ஜப்பான் எக்ஸ்போ 70 பொருள் காட்சி திடலில் படம் எடுக்க அனுமதி வாங்கி விட்டேன்...

நம்ம தமிழகத்தில் அங்கே போகிறார் அனுமதி எல்லாம் கிடைக்காது என்று சிலர் பேசியது உண்மையா என்று கேட்டேன்...இப்போ எதுக்கு அது நான் வந்து விட்டேன் அல்லவா.

உங்கள் உழைப்புக்கு நன்றி....எப்படியும் படப்பிடிப்பு எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நாம் நினைத்த படி நடக்கும் வாங்க அறைக்கு போகலாம் என்று என்னை தோளில் கை போட்டு அழைத்து செல்ல..

டோக்கியோ நகரில் உள்ள பிரபல இம்பீரியல் ஹோட்டலுக்கு வந்தோம் நாங்கள்.

அசோகன் அசந்து போய் இருந்தார்.

மஞ்சுளா முகம் மங்கி போய் இருந்தது.

லதா அவர்கள் நடையில் நளினம் இல்லை..

சந்திரகலா அவர்கள் எப்போது எங்கே சாய்வோம் என்ற நிலையில்.

நாகேஷ் பாவம் நடக்கவே முடியவில்லை...

நெடும் தூர விமான பயணத்தில் அதில் கொடுக்க பட்ட உணவுகள் எவருக்கும் பிடிக்காமல் அனைவரும் பசியில் தவிக்க...

பாதி ராத்திரி 1 மணி கடந்த நேரம் தலைவர் மட்டும் அசராமல் இங்கே இப்போது அனைவருக்கும் ரசம் மோர் சாதம் கிடைத்தாலும் போதும் கிடைக்குமா என்று கேட்க.....

என்னது ரசம் மோரா என்று நான் எனக்குள் திகைத்து நிற்க என்ன நடந்தது அடுத்து...

தலைவர் ரசிகர்கள் வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி தொடரும்

வாழ்க தலைவர் புகழ்

உங்களில் ஒருவன் நெல்லை மணி நன்றி..........

orodizli
8th February 2021, 02:28 PM
1971 டிச 9 ம் தேதி வெளியான கருப்பு வெள்ளை திரைப்படம்தான் நாஞ்சில் புரடொக்ஷன்ஸ் "ஒரு தாய் மக்கள்". தயாரிப்பில் நீண்ட நாட்களாக இருந்த படம். ஆரம்பத்தில் ஜெய்சங்கர் சரோஜாதேவியுடன் நடித்து ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு முத்துராமன் ஜெயலலிதா நடிக்க படமாக்கப்பட்டது.

ஜெய்சங்கர் பல படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அவருடைய கால்ஷீட் பிரச்னையால் அவருக்கு பதில் முத்துராமன் நடித்தார். 1966 ல் பூஜை போட்டு தொடங்கிய படம் 1971 இறுதியில் வெளியானது. கருப்பு வெள்ளை படம் என்பதால் எம்ஜிஆர் இந்தப்படத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று மாற்று அணியினர் பொய் பிரசாரம் செய்தனர்.

"நீரும் நெருப்பும்" வெளியான அக் 18 க்குப் பின் அதே ஆண்டு டிச 9 ல் வெளியாகி வெற்றி பெற்ற படம். 10 க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. சென்னையில் 50 நாட்களும் அதிகபட்சமாக பிற ஊர்களில் 70 நாட்கள் வரையிலும் ஓடியது. இலங்கையில் 10 வாரங்களை கடந்து வசூலில் சாதித்த படம். பாடல்கள் அத்தனையும் படம் வெளிவரும் முன்னரே வெளியாகி வெற்றி பெற்றது.

'பாடினாள் ஒரு பாடல்' 'கண்ணன் எந்தன் காதலன்' 'ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்' 'இங்கு நல்லாயிருக்கணும் எல்லோரும்' போன்ற பாடல்கள் அத்தனையும் தேனில் தோய்த்த பலா போல் சுவைமிக்கது. பாடலுக்காகவே பலமுறை பார்த்த படம். கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதை விறுவிறுப்பாக பின்னப்பட்டிருக்கும்.
சண்டை காட்சிகளில் தனி முத்திரை பதித்திருப்பார் தலைவர்.

வேறு ஒரு நாளில் வெளியாகி யிருந்தால் படம் நிச்சயம் 100 நாட்களை எளிதில் கடந்திருக்கும். இங்கு 100 நாட்கள் ஓட்டிய அய்யனின் "மன்னவன் வந்தானடி" மற்றும் அநேக அய்யன் படங்களை இலங்கையில் ஓட ஓட விரட்டிய படம்தான் "ஒரு தாய் மக்கள்". கலர் படங்கள் வந்த நேரத்தில் கருப்பு வெள்ளை படமாக வந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதை நிரூபித்தது..........ksr...

orodizli
8th February 2021, 02:41 PM
Mgr தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.

01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .

02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .

03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை

04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்

05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்

06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க

07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி

09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .

10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்

11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை

12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்

13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்

14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா

15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி

16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை

17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்

18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்...drn

orodizli
8th February 2021, 02:44 PM
அந்தக் கார் யாருடையது, உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கார் கண்ணாடி, கூலிங்கிளாஸ் பொருத்தப்பட்டிருந்தது. அவருடன் காரில் நானும் இருந்தேன். பேசிக்கொண்டே வந்தோம்.

சாலையோரத்தில் ஏராளமானபேர் சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அவர் கையெடுத்துக் கும்பிட்டார். அவர்களை கடக்கும் வரை கும்பிட்டபடியே இருந்தார். எனக்குச் சந்தேகம். உள்ளேயிருந்து கும்பிட்டது அவர்களுக்குத் தெரியாது. ஆனா கும்பிடுறீங்களேனு குழப்பத்தோடும் தவிப்போடும் கேட்டேன்*. உடனே அவர் சொன்னார்:

'அவர்களுக்குத் தெரியணும் என்று கும்பிடும் போடணும்னு அவசியமில்லை.
இந்தக் கும்பிடு ஒரு நன்றி. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பல நாள் பசியும் பட்டினியுமா இருந்தவன் நான். இன்னைக்கு என்னை எல்லா விதமாகவும் ஏற்றுக்கொண்டு, மிகப்பெரிய பீடத்தையும் பேரையும் புகழையும் கொடுத்திருக்காங்க. மக்களைப் பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்ற விதமா கும்பிடுகிறேன். சாகற வரைக்கும் கும்பிடுவேன்'

இதைக்கேட்டதும் நெக்குருகிப் போய்விட்டேன். அவர் வேறு யாருமல்ல. அப்ப முதல்வராக இருந்த சினிமாலயும், மக்கள் மனசுலயும் எப்பவுமே முதல் முழு மனிதராக இருந்த எம்ஜிஆர் தான். இந்த நன்றி மறவாத குணம் தான் அவரை மக்கள் திலகம்னு சொல்ல வச்சி கொண்டாடவும் வச்சுச்சு. எம்ஜிஆர் உலகம் இருக்கிறவரை பேசப்படுவார், போற்றப்படுவார்!
--வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் ஒரு நேர்காணலில் சொன்னது இது.
அதன்பிறகு வந்தவர்கள்?.........

orodizli
9th February 2021, 08:00 AM
தாய்மையைப் போற்றிய மாமனிதர்

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை.

“எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ அவரைக் கண்டால் உடனே நான் எழுந்து நின்றுவிடுவேன். அவர் முன் உட்காரவே மாட்டேன்.

இதைக் கண்டு பலமுறை அவர் என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டு, “நீங்க நின்னா நானும் நிப்பேன். நீங்க உட்கார்ந்தா தான் நானும் உட்காருவேன்” என்பார். பிறகு உட்கார்ந்து கொள்வேன்.

‘தொழிலாளி’ படத்தில் ஒரு முக்கியமான காட்சி. “அம்மா எனக்கு வேலை கிடைச்சிடிச்சு”ன்னு சொல்லிகிட்டே அந்த வேலைக்கான கடிதத்தை என்னிடம் கொடுத்து ஆசி பெறுவார். அப்போது சற்றும் எதிர்பாராமல் திடுதிப்பென்று என் கால்களை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “ஐயய்யோ எந்திரிங்க…” என்றேன்.

உடனே ஸ்டில் போட்டோகிராபர் நாகராஜன்ராவை கூப்பிட்டு அந்தக் காட்சியை உடனே ஸ்டில் எடுக்கும்படி கூறினார்.

படத்தில் இதுபோல் காலைக் கட்டிப்பிடித்து ஆசி பெறுவது போல் இருக்காது. என் அம்மாவிடம் ஆசி பெறுவதாக நினைத்து இதை செய்தேன் என்றார். அதை இன்று நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது”.

நன்றி: நடிகன் குரல் இதழ்...mj

orodizli
9th February 2021, 08:01 AM
நவரத்தினம் படம் தோல்வின்னு கணேசன் ரசிகர்கள் பிதற்றுவார்கள். ஆனா, சாவித்திரிய காவு வாங்கின பிராப்தம் படம் நட்டம் இல்லை என்பார்கள். பேசும் படத்தில் 1976 வந்த செய்தி பாருங்க. நவரத்தினம் படத்தொடக்கவிழா நடக்கும் 8 நாளுக்குள் எல்லா ஏரியாவும் வித்துவிட்டது. ஏ.பி.நாகராஜனும் இதை பேட்டில சொல்லிருக்கார். பதிவோட இணைப்புல இருக்கு. நாகராஜனுக்கும் நட்டமில்லை. 100 நாள் ஓடாட்டியும் சென்னை,50 நாள் ஆசியாவின் பெரிய தியேட்டரில் மதுரை தங்கத்தில் 61 நாள், பல நகரங்களில் நன்றாக ஓடி நல்ல வசூல் பெற்றது. விவரம் அடுத்து பதிவில்....rrn...

orodizli
9th February 2021, 08:01 AM
நடிகப் பேரரசர் நண்பா.. பட்டிக்காடா பட்டணமா படத்துக்கு டிக்கட் எடுக்க மதுரயில அந்த பிள்ளை முரளி சீனிவாசன் பட்ட பாட்டை நீயும் படிச்சியா. நானும் சிரிச்சேன். இதில் ஒரு விசயம். கடைசியில அந்தாளுக்கும் அவரோட உற்வுப் பையனுக்கும் டிக்கட் கொடுத்தது நம்ம ஆளு ஒருத்தராம். எம்ஜிஆர் மாதிரியே எம்ஜிஆர் ரசிகனும் எப்பயும் குடுக்கற, ஆபத்துல அவசரத்துல காப்பாதுறவனாதான்யா இருப்பான். அப்பயும் டிக்கட்டுல கவுண்டர் பாயில் கிழிஞ்சி இருந்துச்சாம். அப்புறம் உள்ள போயிட்டாராம். கேட்டுல இருந்தவர் விட்டுட்டாரம். இதுல என்ன வேடிக்கயின்னா குரங்கு தன் குட்டிய விட்டு சூடு பாக்க சொன்னா மாதிரி முதல்ல இந்த ஆள இவரோட உறவுபையன் உள்ள விடறானா பாருன்னு டெஸ்ட் பண்ண அனுப்பிருக்காரு. இவரை உள்ள விட்டதும் அவரு வந்தாராம். பொய் டிக்கட்டுன்னா அடிவாங்கினா நான் மட்டும் வாங்கணுமா.. சுயநலமா இருக்கியே, நீயும் வா ந்னு சொல்லத்தெரியல. ஆனா, டிக்கட் கிழிஞ்சு இருந்ததைப் பாத்ததும் எம்ஜிஆர் ரசிகர் நம்மை போட்டுப் பாத்துட்டாரோன்னு நினைச்சாராம். சீ.. அற்பங்கள்....rrn

orodizli
9th February 2021, 08:02 AM
"எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!"
-இயக்குநர் எம்.ஏ.திருமுகம்

அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார். தேவரின் இளைய தம்பியான எம்.ஏ. திருமுகம், படத்தை இயக்கியிருப்பார்.

சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளை வளர்ப்பதிலும், அவற்றுடன் பழகுவதிலும் சாண்டோ சின்னப்பா தேவருக்கு நேர் எதிரானவர் எம்.ஏ.திருமுகம். விலங்குகள் என்றால் அவருக்கு அவ்வளவு பயம்!

ஒருமுறை வேட்டைக்காரன் (1964) படத்துக்காக சிங்கத்தை வைத்து வெளிப்புற படப்பிடிப்பு நடந்திருக்கிறது. பழகிய சிங்கம்தான் என்றாலும் கூண்டை விட்டு வெளியே வந்த பிறகு சிங்கத்தின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.

அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் வேறு நடிக்க இருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் அன்று படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வெளியூர் சென்றிருந்தார். எனவே, முழுவிழிப்பு நிலையில் படக்குழு இருந்தது.

சிங்கம் ஏதாவது கலாட்டா செய்தால், எடுத்த எடுப்பில் அதை கூண்டில் அடைத்து விட முடியாது. எனவே சிங்கத்தை வலையுடன் வளைத்துப் பிடிக்க, அதற்கென பயிற்சி பெற்ற தேவர் பிலிம்ஸ் குழு ஒன்று தயாராக இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் கிணறு போன்ற பத்தடி பள்ளமும் தோண்டப்பட்டு இருந்தது.

சிங்கம் ஏதாவது தகராறு செய்தால், வலையால் அதைச் சுற்றிவளைத்து முதல்வேலையாக அந்தப் பள்ளத்தில் தள்ளிவிட்டுவிடுவார்கள். சிங்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியபிறகு பள்ளத்தின் ஒருபகுதியை இடித்துத் தகர்த்து, சிங்கத்தைப் பிடித்து, மீண்டும் அதை கூண்டில் அடைப்பார்கள்.

இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது. இயக்குநர் எம்.ஏ.திருமுகம், ஒளிப்பதிவாளரின் அருகே நின்றார். ‘கேமரா ஸ்டார்ட், ரெடி’ என்று அவர் சொன்னதுதான் தாமதம், சிங்கம் திருமுகத்தை நோக்கிப் பாய்ந்தது.

தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கும் விலங்குகளில் எந்த விலங்கு குழப்பம் அடைந்தாலும் அது எம்.ஏ.திருமுகத்தை நோக்கித்தான் பாயும். அவரது ராசி அப்படி. அதனால் சிங்கம் தன்னை நோக்கி பாய்ந்து வந்தபோது திருமுகம் திரும்பி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.

ஓடிய திருமுகம் கால்தவறி அந்த பத்தடி பள்ளத்தில் விழுந்தார். (கால்தவறி விழுந்தாரா அல்லது பாதுகாப்பு கருதி பயத்தில் உள்ளே குதித்தாரா என்பது தெரியாது) ஆனால், கெடுவாய்ப்பாக சிங்கமும் அந்த பத்தடி பள்ளத்தில் குதித்து விட்டது.

இப்போது சிங்கமும், திருமுகமும் ஒரே பள்ளத்தில் கிடக்க, திருமுகம் பயந்து அலற ஆரம்பித்தார். சிங்கத்தைப் பிடிக்க வேண்டிய தேவர் பிலிம்ஸ் ஆள்களோ, பள்ளத்தைச் சூழ்ந்து நின்று செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவர் துணிச்சலாக உள்ளே குதித்தார். குதித்தவர் சிங்கத்துக்கும், திருமுகத்துக்கும் நடுவில் அரண் போல நின்று கொண்டார். அப்படி குதித்த நபர் வேறு யாருமில்லை. எம்.ஜி.ஆரேதான்.

எம்.ஜி.ஆரே உள்ளே குதித்துவிட்டார், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாண்டோ சின்னப்பா தேவருக்கு யார் பதில் சொல்வது என்ற பயத்தில் தேவர் பிலிம்ஸ் ஆள்கள் அத்தனைப் பேரும் இப்போது பொத்பொத்தென வலையுடன் பள்ளத்தில் குதித்தார்கள். வேறு வழியில்லாமல் சிங்கத்தை அவர்கள் மடக்கினார்கள்.

‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று இந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவுகூர்ந்தார் எம்.ஏ.திருமுகம்.

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.........Pgd

orodizli
9th February 2021, 08:03 AM
எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது. இது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அலுவலகமாக இருந்த இடமாகும். அவருடைய இறப்பிற்குப் பிறகு நினைவிடமாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

எம்.ஜி.ஆரின் அம்பாசடர் கார்
நினைவிடத்தின் அமைப்பு மற்றும் உள்ளவை தொகு
இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், அரசியல்வாதிகளும், கட்சி தலைவர்களும் மாலை அணிவிக்கின்றனர்.

இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய tmx 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள் தொகு
எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
எம்.ஜி.ஆர் படித்த நூல்கள்
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன் முதலாக இணைந்த 12 பேரின் உறுப்பினர் படிவங்கள்.
எம்.ஜி.ஆரின் அம்பாசிடர் கார்
எம்.ஜி.ஆர் உபயோகித்த உடற்பயிற்சி கருவிகள்.
துப்பாக்கி சூட்டினை அடுத்து அவர் கழுத்தில் இடப்பட்டிருந்த மாவுக் கட்டு போன்றவை நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்கள் உள்ளன

நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில்====

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார்

#சிவதாஸ்_கிருஷ்ணசாமி ...

.........

orodizli
9th February 2021, 08:04 AM
"எட்டு திக்கும் எம்ஜிஆர்
திருநாமம் மணக்குது"
**********************************
'ஞாபகம் வருதே' தொடர்! 'சத்துணவால் பக்தனான கதை'....1-5 ம் வகுப்புவரை கோதுமை கஞ்சி மதிய வேளை ஊற்றுவார்கள். ஒரு கரண்டி கஞ்சிதான் கிடைக்கும். ஒரு துண்டு அச்சு வெல்லம் தருவார்கள். அலுமினிய தட்டு ஒன்றன்மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் குடிக்க அலுமினிய டம்ளர் பயன்படுத்தினோம். வீட்டிலிருந்து உயரமான கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் குடிக்க கொண்டு வருவோம். புத்தகப்பை துணிப்பையாக இருக்கும். அல்லது வயர் பின்னல் பையாக இருக்கும். அதிசயமாக ஒரு பையன் சிறிய அலுமினிய பெட்டியில் புத்தகம் வைத்து எடுத்து வருவான். காலில் செருப்பு அணிந்ததில்லை. ஓரிரு பையன்களின். கால் சட்டை பின்பக்கம் கிழிந்திருக்கும். அதை ஓட்டக் கால்சட்டை என கிண்டலடிப்பார்கள். கசங்கிய சட்டையில் பட்டன்கள் பெரும்பாலும் இருக்காது. பட்டன்களுக்குப் பதிலாக ஊக்கு குத்தி இருக்கும். மதியம் சாப்பிட்ட கோதுமை கஞ்சி மாலை பள்ளிக்கூடம் முடியும் போது வயிறை பதம் பார்க்கும். புதிய புத்தகங்கள் டீச்சர் அடுக்கி வைத்து ஒவ்வொருவராக அழைத்து தருவார். புதிய புத்தகத்தை திறந்து அதை முகர்ந்து பார்ப்போம். அந்த வாசனை மனதை மகிழ்விக்கும். இடைவெளியிட்டு சில பக்கங்களில் மயில் முடி சொருகி வைத்து மறுநாள் அதை பல துண்டுகளாக்கி மயில் முடி குட்டிப் போட்டுள்ளதாக குழந்தைகளை ஏமாற்றி சிரித்து மகிழ்ந்தோம். புதிய பாடப்புத்தகத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் கண்டு பரவசமானோம். அவர் அருகில் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் புகைப்படமும் இருந்தது. திடீரென ஒருநாள் ' நம்ம பள்ளிக்கூடத்துல நாளையிலேர்ந்து சத்துணவு போடப்போறாங்க'' என்ற செய்தி கேட்டு ஓடோடிச் சென்று அம்மாவிடம் சொல்லி மகிழ்ந்தோம். சத்துணவு பொருட்கள் கொண்டு வரும் லாரியைப் பார்த்ததும் ' டீச்சர் டீச்சர் சத்துணவு அரிசி லாரி வருது' என ஆர்ப்பரிப்போம். ஜன்னல் வழியாக வேடிக்கையும் பார்த்தோம். சத்துணவு கூடத்தை எட்டிப் பார்த்து அரிசி, காய்கறிகள், தகரத்திலான கேன்களில் எண்ணெய் என உணவுக் கூடத்தில் நடந்துள்ள மாற்றங்களை ரசித்தோம்.புதிய யூனிபார்ம், பல்பொடி, காலணிகள் தரப்பட்டன. ஆரம்ப வகுப்புகளில் ஒரு கரண்டி கோதுமை கஞ்சியையும் ஒரு துண்டு அச்சு வெல்லத்தையும் சாப்பிட்டுவிட்டு இன்னொரு கரண்டி கோதுமை கஞ்சி கிடைக்காதா என அலுமினிய தட்டில் ஒட்டியிருந்த மிச்சத்தை நக்கிய காலம் போய் வயிறு நிறைய சோறு தந்த.... 1977-82 க்குள் இந்த மாற்றத்தை தந்தவர் புரட்சித்தலைவர் என்பதை அறிந்தோம். வீடுகளில் உள்ள பானைகளில் அரிசி நிரம்பி இருந்ததை முதன்முதலாக பார்த்து உணர்ச்சி வயப்பட்டோம். கடைகளில் அரிசி மிகமிக குறைந்த விலையில் விற்கப்படுவதாக அம்மா முகம் மலர கூறியது கேட்டு ஆச்சர்யமானோம்.
1984-85 இடைப்பட்ட காலத்தில் ' எம்ஜிஆர் இறந்துவிட்டார' என்றும்' இல்லை இல்லை எம்ஜிஆர் உயிருடன்தான் இருக்கிறார்' என்றும் வீடுகளில் தெருக்களில் கடைவீதிகளில் அரசியல் கட்சி மேடைகளில் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் விவாதிப்பதை உற்றுக் கவனித்தோம். டிவி பெட்டியில் வீடியோ சுமந்து வந்த வாகனங்கள் அமெரிக்க மருத்துவமனையில் 'எம்ஜிஆர் உயிர்த்தெழுந்திருந்ததைக்' காட்டியது. புரட்சித்தலைவர் மீது ஈர்ப்பு அதிகரித்தது. தியேட்டர்களில் 1980-85 கால புதிய படங்களைவிட மக்கள் திலகம் மறுவெளியீடு காவியங்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தன. தேர்தல் காலங்களில் ஊரில் நாலைந்து பேர் தவிர அனைத்தும் இரட்டை இலை வாக்குகள். எட்டுத் திக்கும் ' எம்ஜிஆர் எம்ஜிஆர்' என்ற புகழே படர்ந்திருந்தது. 1987 ல் எம்ஜிஆர் பக்தனாக மாறி இருந்தோம். இன்றோ எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றே இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.

என்றும் நம் கடவுள்
எம்ஜிஆர்

��...arm

fidowag
9th February 2021, 10:17 PM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி.......
________
சென்னை மூலக்கடை ஐயப்பாவில் இன்று முதல் (5/2/21) பல்லாண்டு வாழ்க
தினசரி 3 காட்சிகள்

தகவல் உதவி திரு. சங்கர், மணலி.


திருச்சி பேலஸ் அரங்கில் நினைத்ததை முடி ப்பவன் 6/2/21 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.
: தகவல் உதவி திரு. கிருஷ்ணன், திருச்சி

fidowag
9th February 2021, 10:18 PM
சேலம் அலங்கா ர் அரங்கில் 5/2/21 முதல்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் இரு வேடங்களில் அசத்திய எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

தகவல் உதவி திரு ராஜா, நெல்லை.

orodizli
10th February 2021, 08:04 AM
இந்துமதக் கடவுள் எவராயிருந்தாலும்-
கிருத்துவ மதத்தின் ஏசுவாக இருந்தாலும்-
இஸ்லாமியர்களின் நபிகள் நாயகமாக இருந்தாலும்-
உண்மையான பக்தனிடம்,,தாம் தாழ்ந்து அவனை உயர வைத்துப் பார்ப்பார்கள்!
எம்.ஜி.ஆர்,,எவ்வளவோ ஏழைப் பாழைகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்!
தன் லட்சியப் பிடிப்பில் அந்த எம்.ஜி.ஆருக்கே சவால் விட்ட ஒருவரின் திருமணம் தான் இன்றையப் பதிவு!
அது எம்.ஜி.ஆரின் உழைக்கும் கரங்கள் பட ஷூட்டிங்!
எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னால் அந்த ஏழை இளைஞர் விழுகிறார்?
எம்.ஜி.ஆரின் கார் டிரைவர்,கொஞ்சம் அசந்திருந்தாலும் கார்,,அந்த ஏழை மீது ஏறியிருக்கும்?
காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்,,அந்த இளைஞரைக் கண்டிக்க-- அவர் சொல்கிறார்--
போரூருக்குப் பக்கத்துல கிராமத்துல விவசாயம் பார்க்கறேங்க. ரெண்டு மூணு வருசமா எனக்குக் கண்ணாலம் கட்டி வைக்க எங்க சொந்தக்காரங்கப் பிடிவாதமா இருக்காங்க.
என் தலைவன் நீ மாலை எடுத்துக் கொடுக்காம நான் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டேங்க!
நீங்க என்னிக்கு சொல்லறீங்களோ,,எந்த இடத்துல சொல்றீங்களோ அங்கே உங்க முன்னாடி தாலி கட்டறேங்க--
அதெல்லாம் தப்பு! பெரியவங்கப் பார்த்து ஏற்பாடு பண்ணற விஷயம் தான் கல்யாணம்!
நீ,,கல்யாணப் பத்திரிகையோட வா. நான் அவசியம் வந்து கல்யாணத்த நடத்தி வைக்கறேன்!!
எம்.ஜி.ஆரின் இந்த வாக்குறுதியால் இரண்டு இறக்கைகள் இளைஞன் உடலில் ஒட்டிக் கொள்ள-ஆனந்தமாகப் பறந்து செல்கிறார் தன் கிராமத்துக்கு?
அன்றைய அந்த முகூர்த்த நாள்--
நெடு நேரம் பார்த்தும் எம்.ஜி.ஆர் வரவில்லை?
உன் மனசு நோகக் கூடாதுன்னு அவர் வர்ரதா சொல்லியிருப்பாரு! நம்ம தகுதிக்கெல்லாம் அந்த மகராசன எதிர்ப்பார்க்கறது தப்பு!
பெற்றோரின் சமாதானத்தை மீறி அந்த இளைஞர் சினக்கிறார்--
இப்பவேப் போய் என் தலைவனைக் கேக்கறேன்--
உன் தொண்டனா இருக்கறதை விடப் பெரிய தகுதியா என்னத்த எதிர்ப்பார்க்கறே நீ--
உன் பக்தனை அவ்வளவு சாதாரணமாக நினைச்சுட்டியா? உன் பேரச் சொல்லற உன் பக்தனோட நீ உசத்தியாப் போய்ட்டியா?
இப்பவே மதறாஸ் போய் என் தலைவன்ட்டே நியாயத்தக் கேக்கறேன்--
வெறி பிடித்தது போல் முழங்கிவிட்டு,,கல்யாண உடையிலேயே சென்னையை நோக்கி ஓடுகிறார் அந்த இளைஞர்??
சென்னை!
இடம்--சத்யா ஸ்டூடியோ--
தார்ப் பாய்ச்சுக் கட்டின வேட்டியோடும்,ஜிப்பாவோடும் படப்பிடிப்புக்கு தயார் ஆகும் எம்.ஜி.ஆர்,,மேக்கப்-பெட்டிக்குள் இருந்த அந்தத் திருமண அழைப்பிதழ் எம்.ஜி.ஆரைப் பார்த்துப் புன்னகைக்க--
ஏக டென்ஷனாகிறார் எம்.ஜி.ஆர்??
இந்தக் கல்யாணத்தை ஏன் எனக்கு நினைவுப்படுத்தலே??
காரமாகக் கேட்டபடியே காரில் பாய்கிறார்?
உடையை மாற்றக் கூட நேரமில்லை!
அதே ஒப்பனை உடை--வேஷ்டி--ஜிப்பா?
கடுகிப் பறந்த எம்.ஜி.ஆரின் கார் அந்த கிராமத்தை அடைய-- நெக்குருகி அவரை வரவேற்ற அந்த இளைஞரின் பெற்றோர் அழுகையோடு விபரத்தைக் கூற--
எம்.ஜி.ஆர்,,தம் டிரைவரோடு இன்னும் இரண்டு பேர்களை அனுப்புகிறார் --
சத்யா ஸ்டூடியோ அருகில்--
கல்யாண உடையோடு உன் மத்தம் கொண்டு ஓடியபடி இருக்கும் அந்த இளைஞனைக் காரில் போட்டுக் கொண்டு வர--
இனிதே நடைபெறுகிறது எம்.ஜி.ஆர் முன்னிலையில் அந்தத் திருமணம்/
இரண்டுக் கட்டு நோட்டுக்களை இளைஞன் கையில் திணித்த எம்.ஜி.ஆர்,,அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு நகர--
இந்த இளைஞன் உடலில் மீண்டும் இறக்கை?
இம்முறை தன் மனைவியோடு ஆனந்தத்தில் பறக்கிறார்??
ஆம்! மறு நாள் சத்தியா ஸ்டூடியோவில் அலங்கரிக்கப்பட்ட அந்த உயர் ரக இருக்கைகளில் அந்தக் கிராமத்து தம்பதிகள் அமர்ந்திருக்க--
சத்யா ஸ்டூடியோ ஊழியர்களுக்கு அன்று எம்.ஜி.ஆர் செலவில் விருந்து??
இங்கே ஒன்றை நன்றாக நோக்க வேண்டும்--
பக்தனை நோக்கி எம்.ஜி.ஆர் ஓடியது ஷூட்டிங் உடையில் என்றால்--
அந்த பக்தனோ,,தன் கல்யாண உடையிலேவ்யே தன் தலைவனை நோக்கி ஓடியிருக்கிறார்??
சட்டையை சட்டைப் பண்ணாத உண்மையான உணர்ச்சி வேகம் இரு தரப்பிலும்??
சரி! திருமணத்தை நடத்தி வைத்து தன் உயரத்தை எம்.ஜி.ஆர் காட்ட--
எம்.ஜி.ஆருக்கு சற்றும் சளைத்தவரா அவர் பக்தர்?
எம்.ஜி.ஆர்,,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது-
எம்.ஜி.ஆர் குணமாக வேண்டி,,தீ மிதித்த அந்த இளைஞர் காளிக்கு நேர்த்திக் கடனாக--
தம் வலது கையையே வெட்டி பலி கொடுக்கிறார்???
தலைவன் என்றால் எம்.ஜி.ஆர் போலவும்--
பக்தன் என்றால் அவரது இத்தகைய விசுவாசி போலும்--
எங்குமே இனிக் காண இயலாது என்பதில் உடன்பாடு தானே உங்களுக்கும்???...Baabaa

orodizli
10th February 2021, 08:05 AM
"ஒருதாய் மக்கள்"., 5 வருசம் நீண்ட தயாரிப்பு. துப்பாக்கி சூடு சம்பவம், தேர்தல், நடிகர்கள் மாற்றம் என இழுத்து தாமதமாய் வெளியானது. ரிக்சாக்காரன், நீரும் நெருப்பும் என்று கலரில் பிரம்மாண்ட செட்களுடன் படங்கள் வந்த நேரத்துல கறுப்பு வெள்ளையில் வந்தது. பிரம்மாண்டம் செட் எல்லாம் இல்லை. கனவுப் பாட்டு இல்லை. தனி கொள்கைப்பாட்டும் இல்லை. நம்பாளுக்கு சாதாரண காஸ்டூம் டிரஸ். தலைவர் படத்துலயே ரொம்ப சின்ன படம் .15 ரீல். படத்துக்கு பெரிய செலவும் இல்ல. மொத்தமே 3 வீடு, நம்பியார் பதுக்கல் குடோன், தலைவரை அடைச்சு வெச்சிருக்கும் டஞ்சன் ரூம், நம்பியார் சண்டை குளம் செட், பாட்டுக்கு ஸ்டுடியோ, அவுட்டோர் கிராமம் வயல், கிளைமாக்சில் அவுட்டோர் மலை அவ்வளவுதான். படத்துக்கு எதிர்பார்ப்பும் இல்ல. பெரிய வெற்றியும் இல்ல. ஆனா, 5 பாட்டும் ஒண்ணு சுசீலா ரிப்பீட்டு. முத்து. சூப்பர் இட். தலைவர வெச்சு குறைஞ்ச முதலீடு படம். அப்புறம் லாபத்துக்கு என்ன....rrn

orodizli
10th February 2021, 08:05 AM
இந்தப் படத்துல குளத்துல சண்டையில் நம்பியாருக்கு டூப்பா நடிச்ச மக்கள் திலகம் பாதுகாவலர் சமீபத்தில் இறந்த அமரர் கே. பி. ராமகிருஷ்ணனுக்கு கால் உடைஞ்சு போச்சு. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை செலவு பூராவும் தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் புரட்சித் தலைவர் ஏழைகள் வள்ளல் தானே ஏத்துக்கிட்டார். இதாவது பரவால்ல. தன்னோட பாதுகாவலர் செஞ்சாருன்னு சொல்லலாம். அந்த சமயத்தில மஞ்சக் காமாலை வந்து அதே ஆஸ்பத்திரில சேர்ந்த ( மெட்ராஸ் கே ஜே ஆஸ்பத்திரி) சாவித்திரி சிகிச்சை செலவயும் ஏழைகளின் தெய்வம் எட்டாம் வள்ளல் ஏத்துக்கிட்டார். ஒருதாய் மக்கள் படத்திலயும் நடிக்காத சாவித்திரிக்கு வைத்தியம் செய்யணும்னு தலைவருக்கு என்னய்யா அவசியம். சாவித்திரியோட அண்ணன் நொண்ணன்னு சொன்னவன்லாம் சாவித்திரிய திரும்பிக்கூட பாக்கல. வள்ளலார் புரட்சித் தலைவர் வாழ்க..........rrn...

orodizli
10th February 2021, 08:06 AM
இவன் ஒரு முட்டாள் ...னாட்டி. சுரேஷ் சுரேஷ். 72 க்கு பிறகு எம்ஜிஆர் படம் சரியா ஓடலியாம். ஏண்டா 73 ல் உலகம் சுற்றும் வாலிபன் வந்தப்ப நீ பரலோகம் போயிருந்தியா. ரஜினி, கமல், விஜயகாந்த் வெள்ளத்தில் எம்ஜிஆர் அடித்து செல்லப்பட்டிருப்பார்னு சொல்றியே. அப்படி அடிச்சிட்டு போக அவர் என்ன கணேசனா. நீ சொன்ன நடிகர்கள் படித்தில எல்லாம் துணை நடிகனா நடிச்சவர்தான் கணேசன். 1990 வரை கதாநாயகன் அந்தஸ்தில் கணேசன் இருந்தாரா. டேய் .சுரேசா. கதானாயகன்றது அப்பா, தாத்தாவா, மாமனாரா வர்ரது இல்லடா. உங்க கணேசன் கடைசி காலத்துல பூரணம் விசுவனாதன் மாதிரிதான் நடிச்சார்.விட்டா ஆசை என்ற அஜித் குமார் படத்துல பூரணம் விசுவனாதன் தான் கதாநாயகன்னு சொல்லுவ போல.முட்டாள் பயல்....rrn

orodizli
10th February 2021, 08:07 AM
இங்க வந்து ஞாயம் சொல்றவங்க நல்லா பாத்துக்குங்கய்யா. யாரோ கார்திகேயனாம். என்ன சொல்றான் பாருங்க. ஏண்டா கார்த்திகேயா பாடு ..யே. எம்ஜிஆர் படம் திமுக ஆதரவு, பத்திரிகைகாரனை அடிச்சு கஸ்டப்பட்டு ஓடிச்சுன்னு சொல்றியே ஏண்டா பத்திரிகைகாரனை அடிச்சா படம் ஓடுமா. அட விஞ்ஞானி புடுங்கி.கணேசன் படம் கஸ்டப்படாம ஓடிச்சா.. எங்கே. தியேட்டரை விட்டா. வீரபாண்டிய கட்டபொம்மன் 300 நாள், வசந்த மாளிகை 750 நாள் எங்கடா இதெல்லாம்.. தமிழ்னாடு பூராம் சேர்ந்து மொத்தமா இத்தனை வருசத்தில் ஓடினதா.. த்தா....rrn

orodizli
10th February 2021, 08:09 AM
சென்னை டூ மதுரை... புரட்சித்தலைவரை ஒன்றரை நாள் பயணிக்க வைத்த மக்கள்...

இரவு சென்னையிலிருந்த கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டியது. மாறாக மாலை 5 மணிக்குதான் மதுரை வந்தடைந்தது.. ஏன்? எதனால்? எப்படி? யாரால்?

இப்படி ஒரு சம்பவத்தை நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதே உண்மை...,

ஆம் 48 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது.

1973-எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அ.இ.தி.மு.க.வை தொடங்கியிருந்தார். மக்கள் செல்வாக்கு எப்போதும் போல நிறைந்திருந்தது.

காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.

அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தியே விட்டார்கள். அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை.

எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது.

'ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது' என்பதாலும், 'தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே' என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார்.

கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார். கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது...

இந்த செய்தியறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே புரட்சித்தலைவர் இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர்.

''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.

அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, பொன்மனச்செம்மல் உருகிப்போனார்.

நிலைமையை புரிந்து கொண்ட மக்கள்திலகம் ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார்.

வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்............vrh

orodizli
11th February 2021, 10:59 AM
சசியா--சரியா?--சரிவா??
-----------------------------------
எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருந்த அந்த விசேஷ சிறப்பை ஜெ உணராமல் போனது துரதிர்ஷ்டம் என்றும்--
ஆர்.எம்.வீயின் சில நடவடிக்கைகளைப் பற்றி,,ஜெ,,எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவித்தும் அவர் மௌனமாக இருந்தார் என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்!
அதைக் கொஞ்சம் விரிவாக இங்கே பார்ப்போம்!
எம்.ஜி.ஆரின் அந்த விசேஷ சிறப்பு--
தமக்கு ஒருவர் நல்லது செய்தோலோ,,தம்மிடம் நேர்மையாக இருந்தாலோ--குறிப்பிட்ட அந்த நபரை உடனேப் பாராட்டி விட மாட்டார்!
அந்த நபரே எதிர்பார்க்காத நிலையில்,,அந்த நபரே மறந்து விட்டாலும் கூட இரட்டிப்பாக,,மூன்று மடங்காக தம் நன்றியை திருப்பிக் காட்டி அவரை திணற அடிப்பார்!
அதில் வேடிக்கை என்னவென்றால்--
எம்.ஜி.ஆர் அவருக்கு செய்யும் நேரம் அந்த நபர் உண்மையிலேயே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்??
அஃதைப் போலவே--
ஒருவருக்கு தண்டனை வழங்க வேண்டி இருப்பின்--
எடுத்த உடனேயே அவரை தண்டித்துவிட மாட்டார்.
புத்திமதி சொல்வார். திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுப்பார்.
வேறு வழியில்லை--முற்றிப் போய்விட்டது என்னும்போது களத்தில் இறங்குவார்.
சினிமாவில் கூடப் பார்க்கலாம்--
எதிராளி அடித்த பின்னரே இவர் கை ஓங்கும்! வெற்றியை வாங்கும்.
அண்ணா காலத்திலிருந்து கருணா நிதிக்கு எம்.ஜி.ஆர் கொடுக்காத சந்தர்ப்பங்களா??
ஒரு சாதாரணத் தொண்டனுக்குக் கூட எம்.ஜி.ஆரின் இந்த குணம் தெரிந்திருக்கும்போது இதை அன்று ஜெ எப்படி தெரிந்து கொள்ளாமல் விட்டார் என்பது நமது இன்று வரையிலான ஆச்சரியங்களில் ஒன்று!
ஜெ,,புகார் செய்யும் முன்னரே,,எம்.ஜி.ஆரே ஆர்.எம்.வீயை ஆழம் பார்த்துக் கொண்டிருந்தார்?
மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால்--
தி.மு.க--அ.தி.மு.க இணைப்பு முயற்சி நடந்தபோது--
அதில் ஆர்.எம்.வீ காட்டிய அதீத ஆர்வம்,,அப்போதே எம்.ஜி.ஆரை யோசிக்க வைக்க ஆரம்பித்தது!
கொ.ப.செ வாக ஜெ கட்சியில் ஆற்றிய பணி,,அவருடைய சுறுசுறுப்பு--மக்களிடம் ஜெ வுக்கு இருந்த வரவேற்பு--மிக முக்கியமாக அன்றைய கருணா நிதியை மேடை தோறும் ஜெ சந்தித்த வேகம்--இவை அனைத்துமே இம்மி பிசகாமல் எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டு தான் வந்தார் என்பதை ஜெ கவனிக்கவில்லை??
போகும்வரை ஆர்.எம்.வீயைப் போக விட்டு,,அவருடன் எவ்வளவு பேர் ஒட்டுகிறார்கள் என்பதையும் கணக்கிட்டு,,அவரை எதிர் கொள்ள இருந்தார் எம்.ஜி.ஆர்!அந்த சமயத்தில் ஜெ கண்டறிந்து சொன்ன சில விஷயங்களும் எம்.ஜி.ஆருக்கு உதவியாகவே இருந்தன.
அன்று ஜெ மட்டும் ,எம்.ஜி.ஆர் மேல் நம்பிக்கை வைத்துக் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால்--
அரசியல் வாரிசாக,,அன்றே எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கப் பட்டிருந்திருப்பார்!!
விதி இங்கே தான் வக்கிரமாக சிரித்தது--
கட்சியில்,,தன் கை ஓங்க,,ஆர்.எம்.வீ முனைந்தது போலவே--
ஜெவும் தன் பலத்தைக் காட்ட முயற்சிகள் மேற் கொண்டார்.
ஒரு சினிமாப்பாடல் வரி இங்கே உண்மையானது--

அவன் போட்ட கணக்கொன்று
இவன் போட்ட கணக்கொன்று
இரண்டுமே தவறானது--பூம்புகார் படப் பாடல்!
ஆர்/எம்/வீ--ஜெ--இருவருக்குமே பாடம் புகட்ட நினைத்த எம்.ஜி.ஆர்--
அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில்,,கட்சியின் சின்னம் கிடையாது என்று அறிவித்ததுடன்--
தாம் பிரச்சாரமே செய்யாமல் இருவரையும் பிரச்சாரம் செய்ய வைத்தார்!
திருச்செந்தூ இடைத் தேர்தலில் இன்னொரு வேடிக்கை நடந்தது.
அற நிலையத்துறை அமைச்சரான ஆர்.எம்.வீ--வேல் சம்பந்தமாக சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாத நிலையில்--ஜெ வை அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
அப்படியும் அன்றைய அந்தத் தொகுதியின் நிலை அ.தி.மு.கவுக்கு சாதகமில்லாத சூழ் நிலையில் தாமே பிரச்சாரத்துக்குச் சென்று வெற்றிக் கனியை பறித்து வந்தார் எம்.ஜி.ஆர்
இதன் மூலம் இருவருக்குமே எம்.ஜி.ஆர் உணர்த்திய செய்தி--
நீங்கள் இருவருமே பெரியவர் அல்ல?
இரட்டை இலையும்,,நானும் இருக்கும் வரையில்???
சரி! 1990 களுக்குப் பிறகு தொண்டர்களிடம் தொலைவை மேற் கொண்ட ஜெ,,,ஆரம்பத்திலிருந்தே அப்படித் தானா என்று கேட்டால்--
இல்லை என்பதே நம் பதில்.
எம்.ஜி.ஆரது தொண்டர்களுக்காக ஜெ,,,உதவி செய்து,,,எம்.ஜி.ஆரிடமே பதில் சொல்ல வேண்டிய ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது??
அது??
நாளைப் பார்க்கலாமா???!!!...vtr

orodizli
11th February 2021, 11:01 AM
"இன்று போல் என்றும் வாழ்க" 1977
மே 5 ம் தேதியன்று வெளியான படம்.
100 நாட்களை கடந்து ஓடிய வெற்றிப் படம். ராதாசலூஜா தலைவருடன் நடித்த இரண்டாவது படம். ராதா சலூஜா நடித்த "இதயக்கனி" "இன்று போல் என்றும் வாழ்க" ஆகிய இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடி மகத்தான வெற்றியைப் பெற்ற படங்கள். சென்னையில் 50 நாட்களில் ரூ994000 வசூலாக பெற்று 50 நாட்களிலே 10 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.

சென்னையில் தேவிபாரடைஸிலும் மற்றும் மதுரை சென்ட்ரல் தியேட்டரிலும் 100 நாட்கள் ஓடியது. சென்னையில் 100 வது நாள் விழாவில் கவர்னர் பட்வாரி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சென்னையில் ஓடி முடிய ரூ 1529371.65 வசூலாக பெற்று 15 லட்சம் தாண்டிய படங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றது. சென்னையில் 15 லட்சம் கடந்த தலைவர் படங்கள் மொத்தம் 5.
அதில் ஒன்று "இன்று போல் என்றும் வாழ்க" என்றால் அந்த வெற்றியின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நெல்லை சென்ட்ரலில் 77 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. நாகர்கோவில் குறுகிய காலத்தில் வசூலில் சாதனை செய்த படம்.

திருச்சி பேலஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்தது. எம்ஜிஆரை தமிழக முதல்வராக தரிசித்துக்கொண்டே பார்த்த படம்.
'இது நாட்டை காக்கும் கை' என்ற
பாடல் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சின்னத்தை குறிப்பாக உணர்த்தியது. காங்கிரஸ் மேடைகளில் நிகழ்ச்சிக்கு முன்னால் இந்தப்பாடல் ஒரு எழுச்சியை கொடுத்தது எனலாம்.
எதிரியை வீழ்த்தி துவம்சம் செய்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டே பார்த்த ஞாபகம்.

ஆஹா! என்ன ஒரு வெற்றிக்களிப்பு! அனைவருக்குமே இருந்தது எனலாம். இனி அது போன்ற ஒரு தருணம் கிட்டுமா? தனக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் 'அன்புக்கு நான் அடிமை' என்ற பொருள் பொதிந்த பாடலை படத்தின் ஹைலைட்டாக வைத்திருந்தது அருமையாக அவர்களுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது..........ksr.........

orodizli
11th February 2021, 11:02 AM
“ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #

புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

அன்று அடிமைப்பெண்
`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

`அடிமைப்பெண்'ணின் சாதனை
தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை

வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
புஷ் குல்லா
`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
தாயின் வைராக்கியம்
வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
சூரக்காடு ஏன்?
எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
ஜீவா – காதலின் கௌரவம்
எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
குழந்தைகள், ரசிகரான கதை
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

கட்சிக் கொள்கை
எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.......... Srinivasan

orodizli
11th February 2021, 11:03 AM
(கக்கன் பெயரில் யார் வந்தாலும் இலவச மருத்துவம் செய்ய உத்தரவிட்ட ஒப்பற்ற தலைவர்)

1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள்.
முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட
வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித்
தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம்
விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது
குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார்அந்தப் பெண்மணி.
வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு
கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி
பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி
நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில்
அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார்.அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு,
பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை
அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு
வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும்
நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.
அ ந்தப் பெண்மணி… பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த
தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி
என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன்.
சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில்
பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர்
என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக
வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்
வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத
துரதிர்ஷ்டவசமானநிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்
அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம்
கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள்
வந்துவிட்டார்கள். ''வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து
வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம்
கேட்கிறார் கக்கனின் மனைவி.
கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று
நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு
சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு
நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக்
கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின்
குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத்
துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே
கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர்.
நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச்
செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட
கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர்.
கொடுத்த மரியாதை.
தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின்
தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்.
மறுநாளே உத்தரவு போட்டார்.
''முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின்
மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க
இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்குமாதம் 500
ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்'' என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட
உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப்
பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த
திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு
மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர்
ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு
புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி
கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார்என்று அவருடன் இருந்தவர்கள்
தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ''இதை ஏன் முதலிலேயே
தெரிவிக்கவில்லை?'' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில்
சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும்
எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில்தனக்கு தெரி விக்காமல்
சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு,
மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும்
உத்தரவிட்டார்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு
உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு
இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .
கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது,உண்மையும்
கூட. அவர் சொன்னார்… ''கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி
செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.''.........Pngu

orodizli
11th February 2021, 11:03 AM
எல்லோருக்கும் உதவுவதால் எம் ஜி ஆர் கடவுள் தான்..

டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து..

அமேரிக்கா பல்கலை கழகங்களின் அழைப்பை ஏற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு வாஷிங்டன் விமானநிலையத்தில் தன் அமேரிக்கா நண்பர்களுடன் நூழைகிறார் எம் ஜி ஆர் சிறிது நடந்த எம் ஜி ஆர் கண்கள் ஓரமாக நின்று சிறுகுழந்தையோடு ஒரு ஆங்கிலபெண்மணி அழுதுகொண்டிருப்பதை. கவனிக்கிறது உடனே அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் ஏன் அழுகிறாய் என எம் ஜி ஆர் கேட்கிறார் அமேரிக்காவை பொறுத்தவரை அதிகம் எவரும் அடுத்தவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
எம் ஜி ஆர் கேட்ட உடன் அந்த பெண் தான் தன் கணவரை காண வந்ததாகவும் அவர் இங்கு ராணுவத்தில் பணி செய்வதாகவும் தான் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் இங்கு வைத்து தன் பை திருடபட்டதாகவும் தன் முக்கிய ஆவணம் பணம் எல்லாம் அதில் உள்ளது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அழுவதாகவும் கூற உடனே எம் ஜி ஆர் தன் கூடவந்த செல்வாக்கு மிக்க ஒரு நண்பரை அழைத்து நீங்கள் இந்த பெண்ணிற்க்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் சிலவிற்க்கு பணமும் கொடுங்கள் நான் ஊர் சென்று அனுப்புகிறேன் என கூறிவிட்டு அந்த பெண்ணிடம் கவலை படாதீர்கள் இவர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வார் என கூறி விடை பெற்று விமானம் நோக்கி செல்கிறார் எம் ஜி ஆர்

இதை கவனித்து கொண்டிருந்த என் மனம் என்னை அறியாமல் பொன்னின் நிறம் பிள்ளை மனம்வள்ளல் குணம் யாரோ என்ற பாடலை நினைத்தது

உண்மை நண்பர்களே கடவுள் ஒருவரே யார் என்று பாராமல் உதவுபவர் அதனால் யார் என்று பாராமல் எல்லோர்க்கும் உதவும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஒரு கடவுளே

வாழ்க எம் ஜி ஆர் புகழ்...........Raja Erd

orodizli
11th February 2021, 11:04 AM
மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஒரு சமயம் மழை சரியாக பெய்யாமல் பெரிய வறட்சியாக இருந்தது.
காஞ்சி மகாபெரியவர் தமிழ்நாட்டில் இருந்து பாத யாத்திரையாகச் சென்று மற்ற மாநிலங்களில் நீண்ட காலமாகத் தங்கியிருந்தார். மகாபெரியவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தால் மழை செழிப்பாகப் பெய்யும். வறட்சி நீங்கும் என்று எம்ஜிஆரிடம் பலர் ஆலோசனை கூறினர்.
அவரும் மகாபெரியவரிடம் தமிழ்நாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மகாபெரியவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டு எல்லையில் வேலூரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரிக் ஷாவைப் கையால் பிடித்துக் கொண்டு எப்போதும் போல் மகாபெரியவர் வேகம் வேகமாக நடந்து வந்தார். அதைக் கண்ட
ஆர்.எம்.வீரப்பன் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. அப்போது அவர் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.
நாத்திகவாதியாக இருந்த அவர் ஒரு க்ஷணத்தில் instantaneous ஆக ஆத்திகவாதியாக மாறினார்.
வரவேற்பு நிகழ்சியில் ஆர்எம்வீரப்பன் பேசினார். இதற்கு முன்பு என்னிடம் யாராவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இனிமேல் என்னிடம் அதே கேள்வியைக் கேட்டால் பார்த்து விட்டேன் என்றுதான் சொல்வேன் என்று அவர் பேசினார்.
நங்கநல்லூர் ராமமந்திரம் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ மகாபெரியவா மகோத்ஸவத்தில் சிறப்புரை ஆற்றியபோது பிரபல நாட்டிய கலைஞர் பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தான் நேரில் கண்ட இந்த தகவலைத் தெரிவித்தார்.

ஹரிஹரசுப்பிரமணியன்
வெங்கடசுப்பிரமணியன்

orodizli
11th February 2021, 11:05 AM
1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில் உருவாக்கி ஏற்றி பெருமைப்பட்டவர்களும் தொண்டர்கள்தான்.

திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று தந்து இரட்டை இலைச் சின்னத்தை வெற்றி சின்னமாக்கியவர்களும் அ.தி.மு.க.தொண்டர்கள்தான்.

இதை மனதில் வைத்தோ என்னவோ எம்.ஜி.ஆர். ஒரு கூட்டத்தில் மேடையிலிருந்த தலைவர்களை கைநீட்டி சுட்டிக்காட்டி; இவர்களைவிட எதிரில் இருக்கும் தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம் என்று வெளிப்படையாகச் சொன்னார்.

தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பாரபட்சமில்லாமல் முழுக்க நம்பிக்கையுடன் தன்னை உயர்த்திய தொண்டர்களுக்கு அவர் எப்பொழுதுமே முதல் மரியாதை கொடுத்து வந்தார்.

கடைசிக் காலக் கட்டத்தில் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மாநாட்டில் கூட தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவர் பேசிய பேச்சு சர்ச்சையை உருவாக்கியது என்றாலும், அந்தளவுக்குத் தொண்டர்கள்மேல் பரிவுடன் இருந்தார் மக்கள் திலகம்.

அதே மாநாட்டில் அவருக்கு வெள்ளிச் செங்கோலை வழங்கியதும்கூட கழகத்தின் முன்னணி தொண்டர் ஒருவர்தான்.

இந்தளவுக்கு தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை....

orodizli
11th February 2021, 11:06 AM
#தமிழ்_என்னை_வளர்த்தது- #எம்ஜிஆர்.

ஒவ்வொருவருக்கும் அவரது தாயின் மொழியே அவருக்கும் உரிமையான மொழியாகும். எனது தாய் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் பேசிய மொழி மலையாளம். அப்படியானால் நான் பேசவேண்டிய மொழியும் அந்த மலையாள மொழியாகத்தான் இருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை ஒரு விசித்திரமான நிலைமை. எனது காதுகள் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றபோது கேட்ட ஒலி தமிழின் ஒலி ஆகும். என் கண்கள் முதன் முதலில் பார்க்கவும், படிக்கவும் வாய்த்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே.

என்னை சுற்றியிருந்த பழக்க வழக்கங்கள் எனக்கு சொன்னவை எல்லாம் தமிழ் பண்பாட்டின் நிழல் ஆட்டங்களைத் தான். பண்பாட்டு தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இப்படி எங்கு பார்த்தாலும், கேட்டாலும், படித்தாலும், பேசினாலும் தமிழ்தான். வாழும் முறையில் கூட தமிழ், தமிழ் என்ற நிலைமைக்குள், வட்டத்துக்குள், முட்டைக்குள் குஞ்சாக இருந்தேன்.

வெளியில் வந்த பிறகும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருக்கிற நிலையில் தான் வளர்ந்தேன். இத்தகைய சூழலில் நான் எப்படி வளர்ந்து இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளத்தான் வேண்டுமா?
நான் தமிழ் பாடல்களை கேட்டு மனம் பூரித்து அந்த கவிதை நயத்தை பற்றி திறனாய்வு செய்து மகிழ்வேன். ஆனால் மலையாள மொழியில் பாண்டித்தியம் (புலமை) இல்லை.

("எம்.ஜி.ஆர். எழுத்தும், பேச்சும்" என்ற நூலில் குமாரவேல்)

கோவை எம்.எஸ்.சேகர் எழுதி #இதயக்கனி பிப்ரவரி 2021 இதழில்
இடம் பெற்றது.............vrh

orodizli
11th February 2021, 11:06 AM
M.g.r.தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்!

1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசு மாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!

‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.

புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.

தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.

கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப் பட்டதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.

தமிழறிஞர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!

தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

உலகில் உள்ள எத்தனை மொழி களுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.

அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. தேவநேயப் பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.

‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!

அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!...vrh

orodizli
11th February 2021, 11:07 AM
கண்ணதாசனின் கருத்து

தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

Advertisement
report this ad

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

இப்படக் கதை செல்லும்.

பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

நரசப்பன்: அரசே!

சொக்கன்: போவாயாக.

(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!

சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

பார்த்தீர்களா! படித்தீர்களா?

நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே....dvr

orodizli
11th February 2021, 11:08 AM
#இதுதான் #மாஸ்

பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்...

"கொழும்புவில் உள்ள ஆங்கிலப்படம் மட்டுமே காட்டப்படும் அரங்கில் ஒரு பிரபலமான ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது...
இடைவேளையில் ஒரு படத்தின் ட்ரைலர் காட்டப்படுகிறது...
திரையில் தெரிவது.. #ஸ்கூட்டரின் #ஆக்சிலேட்டரை #முறுக்கும் #ஒரு #கரம் #மட்டுமே...
அந்த சில நொடிக் காட்சிக்காக...
அப்போதே ரசிகர்களின் #கரஒலியும், #விசிலும் காதைக் கிழித்தன...
காட்டப்பட்ட பொற்கரம் வாத்தியாருடையது..(இதிலென்ன ஆச்சரியம்ங்கறீங்களா ???)

வாத்தியார் சீனுக்கு கரகோஷங்கள் ஒன்றும் புதிதில்ல. இருப்பினும்,
இதில் வியப்பென்னவென்றால், கரகோஷம் எழுப்பிய அனைவருமே "#சிங்களர்கள்..."!!!...bsm...

fidowag
11th February 2021, 08:33 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*
ஒளிபரப்பாகிய பட்டியல்* (11/01/21* முதல்* 20/01/21* வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------------
11/01/21 -சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*

* * * * * * * ராஜ் -பிற்பகல் 1.30 மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*

* * * * * * *பாலிமர் -பிற்பகல் 2 மணி -சக்கரவர்த்தி திருமகள்*

* * * * * * * பெப்பேர்ஸ் -பிற்பகல் 2.30மணி- தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * முரசு டிவி -பிற்பகல் 3.30 மணி -கொடுத்து வைத்தவள்*

12/01/21-ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - மதுரை வீரன்*

* * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - திருடாதே*

* * * * * சன் லைப் - மாலை 4 மணி - எங்க வீட்டு பிள்ளை*

* * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - ஆனந்த ஜோதி*

13/01/21- சன் லைஃ - காலை 11 மணி - நல்ல நேரம்*

* * * * * * * ராஜ் டிவி - பிற்பகல்* .1.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * பெப்பெர்ஸ் -பிற்பகல் 2.30 மணி - முகராசி*

* * * * * * *சன்* லைப்-* மாலை 4 மணி - சந்திரோதயம்*

* * * * * * புது யுகம் - இரவு 7 மணி - என் கடமை*

15/01/21- சன் லைப் - காலை 11 மணி -நினைத்ததை முடிப்பவன்*

* * * * * * * முரசு -மதியம் 12மணி/இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * *மீனாட்சி - மதியம் 12 மணி -விவசாயி*

* * * * * * *மீனாட்சி - இரவு 9 மணி - வேட்டைக்காரன்*

16/01/21-பாலிமர் - இரவு 11 மணி -நீதிக்கு பின் பாசம்*

17/01/21- ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -ஒரு தாய் மக்கள்*

* * * * * * * *ஜெயா மூவிஸ் -காலை 10 மணி - பணம் படைத்தவன்*

* * * * * * * சன் லைப் -காலை 11 மணி - என் கடமை*

* * * * * * * மெகா டிவி - மதியம் 12 மணி -குடியிருந்த கோயில்*

* * * * * * * மீனாட்சி -மதியம் 12 மணி -நல்ல நேரம்*

* * * * * * *டி. திரை எஸ்.சி.வி.-பிற்பகல் 12.30 மணி -எங்க வீட்டு பிள்ளை*

* * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*

* * * * * *மெகா 24-பிற்பகல் 2.30 மணி -வேட்டைக்காரன்*

* * * * * *ஜெயா மூவிஸ் -மாலை 4மணி - பட்டிக்காட்டு பொன்னையா*

* * * * * * மெகா 24 -மாலை 6 மணி - நல்ல நேரம்*

* * * * * * டி.டி.வி. - மாலை 6 மணி - எங்க வீட்டு பிள்ளை*

* * * * * ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி- இதய வீணை*

* * * * *புது யுகம் டிவி- இரவு 7 மணி -* நல்ல நேரம்**

* * * * * டி.திரை எஸ்.சி.வி.-இரவு 8 மணி - அடிமைப்பெண்*

* * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி -* குமரிக்கோட்டம்*

* * * * * *பாலிமர் -இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*

18/01/21-சன்* *லைப்- காலை 11 மணி - எங்கள் தங்கம்*

* * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - என் அண்ணன்*

* * * * * * வஸந்த் - இரவு 7.30மணி - படகோட்டி*

* * * * * * மூன் டிவி - இரவு* 8 மணி - வேட்டைக்காரன்*

19/01/21- ராஜ் டிவி -பிற்பகல் 1.30மணி -தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * *புது யுகம் - இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*

20/01/21-சன் லைப்- காலை 11 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*

* * * * * * வசந்த் டிவி -இரவு 7.30 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * *பாலிமர் - இரவு 77 மணி - தாய் சொல்லை தட்டாதே**

fidowag
11th February 2021, 08:52 PM
தனியார் தொலைக்காட்சிகளில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
ஒளிபரப்பான*பட்டியல் 9 21/01/21 முதல் 31/01/21 வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------------
21/01/21-சன் லைப் - காலை 11 மணி - கண்ணன் என் காதலன்*

* * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - நாடோடி மன்னன்*

* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நவரத்தினம்*

* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*

22/01/21-சன் லைப்- காலை 11 மணி - என் அண்ணன்*

* * * * * * *முரசு -மதியம் 12மணி /இரவு 7மணி-தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * *மெகா டிவி -பிற்பகல் 1.30 மணி - படகோட்டி*

* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -தாயை காத்த தனயன்*

* * * * * * *மெகா 24-பிற்பகல் 2.30 மணி -தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * சன் லைப்- மாலை 4 மணி - புதிய பூமி*

23/01/21-மீனாட்சி - பிற்பகல் 1 மணி -வேட்டைக்காரன்*

25/01/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி -குடியிருந்த கோயில்*

* * * * * * சன் லைப்- காலை 11 மணி - நாளை நமதே*

* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - மாட்டுக்கார வேலன்*

* * * * * * பாலிமர் டிவி- இரவு 11 மணி - நவரத்தினம்*

26/01/21- சன்* லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

27/01/21-சன் லைப்- காலை 11 மணி -தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * *முரசு -மதியம் 12மணி/இரவு 7மணி- பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -கலங்கரை விளக்கம்*

* * * * * * மெகா 24-பிற்பகல் 2.30மணி -தாயை காத்த தனயன்*

* * * * * *புது யுகம் -பிற்பகல் 2 மணி* - ராமன் தேடிய சீதை*

28/01/21-வேந்தர் டிவி -காலை 10 மணி -தனிப்பிறவி*

* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - பெரிய இடத்து பெண்*

* * * * * * மீனாட்சி - இரவு 9 மணி -தலைவன்*

* * * * * * மெகா 24- இரவு 9 மணி - காலத்தை வென்றவன்*

29/01/21-சன் லைப் - காலை 11 மணி -தெய்வத்தாய்*

* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30மணி - ரகசிய போலீஸ் 115*

* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - காவல் காரன்*

* * * * * * பாலிமர் - இரவு 11 மணி - புதிய பூமி*

30/01/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி - படகோட்டி*

* * * * * * * முரசு -மதியம் 12 மணி / இரவு 7 மணி - தொழிலாளி*

* * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - காலத்தை வென்றவன்*

31/01/21-சன் லைப்- காலை 11 மணி - கணவன்*

* * * * * * * மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - தேர் திருவிழா** * * * * * * * * * * * **

orodizli
12th February 2021, 08:09 AM
#ந*ம்நாடு திரைப்ப*ட* ஷூட்டிங்கில் எம்ஜிஆரின் ட்ரீட்மெண்ட்..

விஜயா வாஹினியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு 'வாங்கய்யா வாத்யாரய்யா வரவேற்க வந்தோமய்யா ஏழைகள் உங்களை நம்பி எதிர்ப்பார்த்து நின்றோமய்யா' என்ற பாடல் காட்சிசயை 'நம்நாடு' படத்திற்காகப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். செல்வி ஜெயலலிதா. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கலந்த நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். டைரக்டர் ஜம்பு பாடல் காட்சியை பரபரப்புடன் படமாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை விஜயா இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் சார்பில் நாகிரெட்டியாரும், சக்கரபாணியும் தயாரித்தனர்.

இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுத்து முடித்ததும் மதியவேளை படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. அனைவரும் சாப்பிடப் போனார்கள். எம்.ஜி.ஆர்.சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தியாகராய நகரில் உள்ள தனது ஆற்காடு சாலை அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அன்றும் அப்பபடியே போய்விட்டார். மதிய உணவு முடிந்ததும் அனைவரையும் மேனேஜர் படப்பிடிப்புக்கு வரச் சொன்னார். எல்லோரும் பாடல் காட்சியில் நடனமாடுவதற்கு ரெடியனார்கள்.

அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய எம்ஜிஆர் நடனக் கலைஞர் ஒருவரிடம் 'சாப்பிட்டு விட்டீர்களா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியிருந்தது. நடனக் கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நடனக் காட்சியையும் படமாக்க தொடங்கினார்கள். நடனக் காட்சியை எடுத்து முடித்ததும் இறுதியாக குளோசப் காட்சியையும் எடுக்கத் தயாரனார்கள்.

அடுத்து எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சியை எடுப்பதற்காக டைரக்டர் ஜம்பு எம்.ஜி.ஆரை அழைத்து வரச் சொன்னார். படப்படிப்பில் இருந்த படம் சம்பந்தபட்ட புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர். இருக்கும் அறைக்கு ஒடிப் போய் பார்த்தார். அறை மூடப்பட்டிருந்தது கதவைத் தட்டினார். கதவு திறந்தது உள்ளிருந்து வேறு யாரோ ஒருவர் வெளியே வந்தார். புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர்.உள்ள இருக்கிறாரா என்று மெதுவான குரலில் கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றார் உள்ளே எம்.ஜி.ஆர்.இல்லை. உள்ளே இருந்தவரும் 'அவர் இங்கு வரவேயில்லையே', என்றார்.

புரொடக்ஷன் மேனேஜருக்கு டென்ஷன் ஆரம்பித்தது. இப்பதானே காரில் வந்து இறங்கினார். நானே பார்த்தேனே.. எங்கு போயிருப்பார்? தேடிக் கொண்டே வெளியேவந்தார்.

அவரது காரும் அங்கு இல்லை. நேரடியாக டைக்ரடர் ஜம்புவிடம் வந்தார். 'சின்னவர் அந்த அறையில் இல்லை. அவர் ரூமுக்கும் வரவில்லையாம்,' என்று விபரம் சொன்னார் மேனேஜர்.

அதற்கு டைரக்டர் ஜம்பு, 'அவர் கார் வந்ததை நான் பார்த்தேன். காரிலிருந்து இறங்கி யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக்கிட்டிருந்தார். திடீர்னு எங்கு போயிருப்பார்?' என்று ஸ்டுடியோ முழுவதும் போய் தேடினார்கள். எங்கும் இல்லை. அதற்குள் அவர்களுக்கு தகவல் வந்தது, எம்.ஜி.ஆர். தனது ஆற்காடு சாலையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுவிட்டார் என்று. படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

என்ன பிரச்சனை? எதற்காக எம்.ஜி.ஆர். திரும்பி போனர்? அதுக்காக இருக்குமோ? இதுக்காக இருக்குமோ? என்றுஅனுமானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் படப்பிடிப்பு குழுவினர்.

படப்பிடிப்பு நடத்துகொண்டிருந்த விஜயா வாஹினி ஸ்டுடியோ முழுவதும் பரபரப்பாகியது. அதற்குள் டைரக்டர் ஜம்பு, மேனேஜரைக் கூப்பிட்டு ஒரு யோசனை சொன்னார். 'எம்.ஜி.ஆர். இங்கு வந்த போது யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்து வா' என்றார்.

புரொடக்ஷன் மேனேஜர் அவரது உதவியாளர்களும் ஓடிப் போய் தேடினார்கள். இறுதியாக செட்டுக்குள் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்த அந்த டான்சரை அடையாளம் கண்டு அழைத்து வந்தார்கள்.

டைரக்டர் ஜம்பு அவரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் மெல்ல விசாரித்தார்.

டான்ச*ரிட*ம் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்தாரா?"

"ஆமாம்... என்னிடம் தான் பேசிக்கொண்டிருந்தார்" என்று பவ்யமாக சொன்னார் அந்த டான்ஸ் கலைஞர். "உங்களிடம் சின்னவர் என்ன கேட்டார்... நீங்கள்அவரிடம் என்ன பதில் சொன்னீங்க?"

அதற்கு டான்ஸ் கலைஞர், "சாப்பிட்டாச்சான்னு கேட்டார்... சாப்பிட்டோம்னு சொன்னோம். என்ன சாப்பிட்டீங்கன்னு திரும்பக் கேட்டார். நான் புளியோதரை, தயிர் சாதம் பொட்டலம் கட்டிக் குடுத்தாங்க... அதைத்தான் சாப்பிட்டோம்னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் என்னை எதுவுமே கேட்கவேயில்லை காரில் ஏறி வெளியே போய்விட்டார்," என்று டான்ஸர் சொல்லி முடித்ததும் புரொடக்ஷன் மேனேஜருக்கு எதனால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பது புரிந்துவிட்டது.

டைரக்டர் ஜம்புவும் எங்கே தவறு நடத்திருக்கு என்பதைப் புரிந்துக் கொண்டார்.

டைக்ரடர் ஜம்பு, புரொடக்ஷன் மேனேஜரும் சேர்ந்து ஆற்காடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆர்.அலுவலகத்திற்கு போனார்கள்.

எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினார்கள். புரொடக்ஷன் மேனேஜர்தான் பேசினார்.

"இந்த தப்புக்கு நான்தான் காரணம். மேனேஜ்மெண்டுக்கு இதுப் பற்றி எதுவும் தெரியாது லஞ்ச் பிரேக்குக்கு அப்புறம் சீக்கிரம் படப்பிடிப்பு தொடங்கணும், நிறைய டான்சர்கள் இருந்ததால் பொட்டலம் சாப்பாடு கொடுத்துட்டா சீக்கிரமா சாப்பிட்டு வந்துடுவாங்கனு நான் அப்படி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன். இனி அப்படி ஒரு தவறு நடக்காது மன்னிச்சிடுங்க," என்று மேனேஜர் பேசி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆரின் கார் ஆற்காடு சாலையிலிருந்து கிளம்பியது.

அதன்பிறகு 'நம்நாடு' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து எந்த விதமான காலதாமதமும் இல்லாமல் நடந்தது. இந்தப்பாடல் காட்சி எடுத்து முடியும் வரைஎம்.ஜி.ஆர்.அங்கேயே சக கலைஞர்களுடன் இணைந்து சாப்பிட்டார். தனக்கு என்ன உணவோ, அதுதான் படக்குழுவினர் அனைவருக்கும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

அவரது கோபத்திற்குக் காரணம் புரொடக்ஷன் மேனேஜர் கம்பெனி சார்பில் நல்ல சாப்பாடு போடாமல், பொட்டலம் சாப்பாடு கொடுத்ததுதான். அதுவும் மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாமல், மேனேஜர் எடுத்த முடிவினால் வந்த விபரீதம்தான் இது.

எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு என்றால் அனைவருக்கும் நல்ல சாப்பாடுதான் போடுவார்கள். அது எந்தக் கம்பெனி படமாக இருந்தாலும். இது அவரது படத்தில் நடித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எம்.ஜி.ஆரிடம் ஒரு குணம் உண்டு... தன்னுடைய படத்தில் நடிப்பவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்ததா? சம்பளத்தை முழுமையாக கொடுத்து விட்டார்களா? என்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார்.

இன்று வரையிலும் அவரது பேரும், புகழும் நிலைத்து நிற்பதற்கு அவரது இந்த குணமும், நல்ல மனமும்தான் காரணம்.

இந்தப் படத்திற்கு ஜம்பு டைரக்டரான பின்னணியில் ஒரு செய்தி உண்டு. 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை குறுகிய காலத்தில் எடுத்தார்கள். அந்தப் படத்தை 14.1.1965 பொங்கல் பண்டிகை நாளில் வெளியிடுவதற்காக தீவிரமாக ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் படம் சீக்கிரமாக வெளியே வருமா என்று சந்தேகம் இருந்தது. அப்பொழுது ஜம்பு அந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளுக்கு உடனிருந்து படம் சீக்கிரமாக வெளியே வருவதற்கு உதவிகள் செய்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் 'நம்நாடு' படத்தை இயக்குகின்ற வாய்ப்பை ஜம்புவுக்குக் கொடுத்தார்...........rms

orodizli
12th February 2021, 08:10 AM
க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும் க*ட்சிக்கு த*ம் ஆத*ர*வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத*லே தேர*டி திட*லில் கூட ஆர*ம்பித்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் அவ்வ*ளவு ப*ஸ் வ*ச*தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க*ளில் உள்ள மக்களெல்லாம் க*ட்டுச்சோற்றை க*ட்டிக்கொண்டு கால்ந*டையாக*வும், மாட்டு வ*ண்டியிலும், குதிரை வ*ண்டியிலும் வ*ந்து மக்கள் தேர*டியில் இட*ம் பிடிக்க* ஆர*ம்பித்து விட்டார்க*ள். 2 கிலோமீட்ட*ர் தூர*த்திற்கு மக்கள் வெள்ளம் ம*தியமே அலை மோதிய*து.
இனிமேல் அவ்வ*ளவு கூட்ட*த்தை க*லைக்க*வும் முடியாது. க*லைத்தாலும் நிலைமை விப*ரீத*மாகிவிடும் என்று மேலிட*த்திற்கு தெரிவித்துவிட்டு க*லெக்ட*ர் கூட்ட*த்திற்கு ஒருவ*ழியாக அன்று மதிய*ம் அனுமதி அளித்துவிட்டார்.
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட*த்திலோ எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மருத்துவ*ர்க*ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த*டுத்துவிட்ட*ன*ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க*வ*னித்துக் கொண்டார். நேர*மோ சென்று கொண்டிருந்த*து.
கூட்ட*த்திற்கு போகும்வ*ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க*ட்ட* ஒரு கூட்ட*மும், அவ*ர் முக*த்தில் திராவ*க*த்தை வீச ஒரு கூட்ட*மும் த*யாராக இருப்ப*தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த*க*வ*ல் கிடைத்த*து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட*ல்நிலை ச*ரியில்லாத*தால் பொதுக்கூட்ட*ம் ர*த்து என்ற செய்தியும் வ*ர* மக்கள் கொதித்து போயின*ர். ப*லர் ர*க*ளையில் ஈடுப*ட்ட*ன*ர்.
நிலைமையின் விப*ரீத*த்தை உணர்ந்த மன்றத்த*லைவ*ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற*ப்ப*ட்டார். வ*ழியில் காரை மறித்து ப*லர் என்னைய்யா! வாத்தியார் வ*ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த*ன*ர். க*ண்டிப்பாக வ*ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட*த்திற்கு சென்றார் பாலாஜி.
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய*டைந்தார். ஒருப*க்க*ம் எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மறுபுற*ம் அவ*ரை கொல்ல* காத்திருக்கும் கூட்ட*ம். க*வ*லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த*லைவ*ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட*ம் வாத*ம் செய்தார்.
உட*னே பாலாஜி, த*லைவ*ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட*த்திற்கு வ*ர*வில்லையென்றால் அந்த மாமர*த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட*, எம்ஜிஆர் மருத்துவ*ர்க*ள், ஜானகி அம்மையாரையும் ச*மாதான*ப்ப*டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப*லவ*ழியில் சுற்றி வ*ந்து காஞ்சிபுர*ம் வ*ந்த*டைந்தது. ஏற்கெனவே திட்ட*மிட்ட*ப*டி எம்ஜிஆரை வ*ய*ல்வெளி வ*ழியே 1/2 கி.மீ ந*ட*த்தியே கூட்டி வ*ந்த*ன*ர். மேடையின் பின்புற*ம் இருந்த ப*ள்ளிவாச*ல் காம்ப*வுண்ட் கேட் வ*ழியே எம்ஜிஆர் வ*ந்து திடீரென மேடையில் தோன்றிய*தும் ம*க்க*ள் ஆர*வார*த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச*ந்தோஷ*த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட*த்திற்கு த*லைமையேற்க செய்தார். க*ட்சி ஆரம்பித்து ஒருவார*மே ஆகியிருந்த* நிலையில் எம்ஜிஆர் க*ருப்பு சிவ*ப்பு க*ரைவேட்டியையே க*ட்டியிருந்தார். தோளில் க*ருப்பு சிவ*ப்பு பார்ட*ரில் துண்டும் இருந்த*து. ப*க்க*த்து க*ட்டிட*த்தில் திராவ*க*ம் வீச காத்திருந்த கும்ப*ல், இவ்வ*ளவு ப*ர*ப*ர*ப்பான கூட்ட*த்தில் திராவ*க*த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த*ப்புவ*து எளித*ல்ல என்று முடிவு செய்து இட*த்தை காலி செய்த*ன*ர்.
த*லைவ*ர்மீது மக்கள் க*ருப்பு மற்றும் சிவ*ப்பு துண்டுக*ளை கீழேயிருந்து வீசின*ர். அனைத்தையும் லாவ*க*மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக*த்தையும் பார்த்த* மக்களின் கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும் விண்ணை பிளந்த*து.
இது திமுக கூட்ட*மா அல்ல*து அண்ணா திமுக கூட்ட*மா என விய*க்கும*ளவிற்கு மேடையில் க*ருப்பு சிவ*ப்பு துண்டுக*ள் குவிந்து கிட*ந்த*து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க*தை முடிந்த*து என ஆட்சியாளர்க*ளுக்கு உரைத்த*து.
இந்த* ஆர*வார* ச*ந்தோஷத்தில் த*லைவ*ரின் காய்ச்ச*ல் ப*ற*ந்தோடிய*து. மாறாக த*லைவ*ரின் வ*ளர்ச்சியை பிடிக்காத க*ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த*மிழ*க அர*சிய*ல் க*ட்சித் த*லைவ*ர்க*ளுக்கு காய்ச்ச*ல் தொற்றிக் கொண்ட*து.
எவ்வித* குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என*து ர*த்த*த்தின் ர*த்த*மான உட*ன்பிற*ப்புக*ளே! என ஆர*ம்பித்து, நான் க*ணக்கு கேட்ட*து த*வ*றா? என்ற கேள்வியுட*ன் திமுக வ*ளர்ச்சிக்கு த*ன்னுடைய ப*ங்கு, என சுமார் இர*ண்டு மணி நேர*ம் (இர*வு 10 மணிமுத*ல் 12 மணிவ*ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின*ச*ரிக*ளிலும், எம்ஜிஆர் த*லைப்பு செய்தி ஆனார்.........vrh

orodizli
12th February 2021, 08:11 AM
புரட்சித் தலைவர் நடித்த, இயக்கிய திரைப்படங்கள் தொகுப்பு.
1930 களில் வெளிவந்த திரைப்படங்கள்.
1. 1936 சதிலீலாவதி . தயாரிப்பு மனோரமா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் ஆய்வாளர் ரெங்கைய நாயுடு. இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன். எம்ஜிஆர் அவர்கள் நடித்த முதல் திரைப்படம், சிறு வேடம்.
2. 1936 இரு சகோதரர்கள். தயாரிப்பு பரமேஸ்வரி சௌண்ட் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளம் முஸ்லிம் இளைஞன் இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன். சிறு வேடம்
3. 1938. தட்சயக்ஞம். தயாரிப்பு மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்.கதாபாத்திரம் விஷ்ணு. இயக்கம் ராஜா சந்திரசேகர். புராணப்படம்
4. 1938 வீர ஜெகதீஸ். தயாரிப்பு வி. எஸ். டாக்கீஸ் கதாபாத்திரம் பையன். இயக்கம் டி. பி. கைலாசம், ஆர். பிரகாஷ்
5. 1939 மாயா மச்சீந்திரா. தயாரிப்பு மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ். கதாபாத்திரம் சூரியகேது . இயக்கம் ராஜா சந்திரசேகர்.
6. 1939 பிரகலாதா. தயாரிப்பு சலீம் சங்கர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் இந்திரன். இயக்கம் பி. என். ராவ். புராணப்படம்
1940 களில் வெளிவந்த படங்கள்.
7. 1941 வேதவதி (சீதா ஜனனம்). தயாரிப்பு சியாமளா பிக்சர்ஸ் .கதாபாத்திரம் இந்திரஜித். இயக்கம் டி. ஆர். ரகுநாத்.
8. 1941 அசோக் குமார் . தயாரிப்பு முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனி. கதாபாத்திரம் தளபதி மகேந்திரன். இயக்கம் ராஜா சந்திரசேகர் . எம். கே. தியாகராஜ பாகவதருடன் நடித்த முதல் படம்
9. 1942 தமிழறியும் பெருமாள். தயாரிப்பு உமா பிக்சர்ஸ். கதாபாத்திரம் சந்தானம். இயக்கம் டி. ஆர். ரகுநாத்.
10. 1943 தாசிப் பெண் (ஜோதிமலர்). தயாரிப்பு புவனேஸ்வரி பிக்சர்ஸ். கௌரவ நடிகர். இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன் .
11. 1944 ஹரிச்சந்திரா. தயாரிப்பு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஃபிலிம் கம்பெனி. கதாபாத்திரம் ஒரு அமைச்சர். இயக்கம் கே. பி. நாகபூஷணம். எம்ஜிஆர் பி. யு. சின்னப்பா வுடன் நடித்த முதல் திரைப்படம்
12 . 1945. சாலிவாகனன். தயாரிப்பு பாஸ்கர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் விக்ரமாதித்யன். இயக்கம் பி. என். ராவ். எம்ஜிஆர் வில்லனாக நடித்தார்
13. 1945 மீரா. தயாரிப்பு சந்திரப்பிரபா சினிடோன். கதாபாத்திரம் தளபதி ஜெயமல் இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன் .
14. 1946 ஸ்ரீ முருகன். தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் பரமசிவன். இயக்கம் எம். சோமசுந்தரம். வி. எஸ். நாராயண். புராணப்படம். சிவ - பார்வதி நடனத்தில் சிவன் வேடத்தில் நடனமாடினார்.
ஜூபிடர் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
15. 1947 ராஜகுமாரி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் மோகன். இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி. (எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம்)
16. 1947 பைத்தியக்காரன். தயாரிப்பு என். எஸ். கே. ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் மூர்த்தி இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு (இரண்டாவது கதாநாயகன்)
17. 1948 அபிமன்யு. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் அர்ச்சுனன். இயக்கம் எம். சோமசுந்தரம் ஏ. காசிலிங்கம்.
18. 1948 ராஜ முக்தி. தயாரிப்பு நரேந்திர பிக்சர்ஸ். கதாபாத்திரம் மகேந்திரவர்மன். இயக்கம் ராஜா சந்திரசேகர். வி. என். ஜானகி, பி. பானுமதி இருவரும் இந்தப் படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
19. 1948 மோகினி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ்.கதாபாத்திரம் தளபதி விஜயகுமார் லங்கா சத்தியம் இரண்டாவது கதாநாயகன்.
வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம். டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
20. 1949 ரத்னகுமார் . தயாரிப்பு முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனி.கதாபாத்திரம் பாலதேவன். இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு பி. பானுமதி கதாநாயகியாக நடித்த முதல் படம்.
அவர் பி. யு..சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தார். எம். ஜி. ஆர். துணை நடிகர்.
1950 களில் வெளிவந்த படங்கள்.
21. 1950 மருதநாட்டு இளவரசி. தயாரிப்பு ஜி. கோவிந்தன் அன் கோ. கதாபாத்திரம் காண்டீபன் ஏ. காசிலிங்கம். (ராஜகுமாரிக்குப் பின்னர்.தனிக் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம்.)
22. 1950 மந்திரி குமாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் தளபதி வீரமோகன். எல்லிஸ் ஆர். டங்கன். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
23. 1951 மர்மயோகி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் கரிகாலன். இயக்கம் கே. ராம்நாத்.
24 . 1951 ஏக்தா ராஜா. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் கரிகாலன். இயக்கம் கே. ராம்நாத். (மர்மயோகி இந்திப் பதிப்பு)
25. 1951 சர்வாதிகாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் பிரதாப் வீரன். இயக்கம் டி. ஆர். சுந்தரம்.
26. 1951 சர்வாதிகாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் பிரதாப் வீரன். இயக்கம் டி. ஆர். சுந்தரம். சர்வாதிகாரி (தெலுங்கு பதிப்பு)
27. 1952 அந்தமான் கைதி. தயாரிப்பு ராதாகிருஷ்ணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் நடராஜ் . இயக்கம் வி. கிருஷ்ணன். (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்னணி)
28. 1952 குமாரி தயாரிப்பு ஆர். பத்மநாபன் -ராஜேஸ்வரி.கதாபாத்திரம் விஜயன் . இயக்கம் ஆர். பத்மநாபன் . கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். திரைப்படம்.
29. 1952 என் தங்கை . தயாரிப்பு அசோகா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் ராஜேந்திரன். இயக்கம் சி. ஹெச் நாராயணமூர்த்தி.
எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் முதல் திரைப்படம்
30. 1953 நாம் . தயாரிப்பு ஜூபிடர், மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் குமரன். இயக்கம் ஏ. காசிலிங்கம். எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, கருணாநிதி, பி எஸ் வீரப்பா கூட்டு தயாரிப்பு.
31. 1953 ஜெனோவா . தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் சிப்ரெக்கா. இயக்கம் எஃப். நாகூர்.முதல் மலையாள திரைப்படம்
32. 1953 ஜெனோவா . தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் சிப்ரெக்கா. இயக்கம் எஃப். நாகூர். மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பு
33. 1954 பணக்காரி தயாரிப்பு உமா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் ஆபீசர் சௌந்தர். இயக்கம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்.
34. 1954 மலைக்கள்ளன். தயாரிப்பு பட்சிராஜா ஸ்டூடியோஸ். கதாபாத்திரம் மலைக்கள்ளன் , அப்துல் ரஹீம் &
குமாரதேவன். இயக்கம் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
35. 1954 கூண்டுக்கிளி. தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ்.கதாபாத்திரம் தங்கராஜ். இயக்கம் டி. ஆர். ராமண்ணா. சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே திரைப்படம்.
36. 1955 குலேபகாவலி. தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் தாசன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம்
37. 1956. அலிபாபாவும் நாற்பது திருடர்களும். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் கதாபாத்திரம் அலிபாபா. இயக்கம் டி. ஆர். சுந்தரம். முதல் முழுநீள தமிழ் வண்ணப் படம் (கேவா கலர்)
38. 1956 மதுரை வீரன். தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் வீரன். இயக்கம் டி. யோகானந்த். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் இரண்டாவது திரைப்படம்
39. 1956 தாய்க்குப்பின் தாரம். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் முத்தையன் இயக்கம் எம். ஏ. திருமுகம். தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
40 . 1957 சக்கரவர்த்தித் திருமகள். தயாரிப்பு உமா பிக்சர்ஸ். கதாபாத்திரம் உதயசூரியன்.இயக்கம் ப. நீலகண்டன்.
ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
41. 1957 ராஜ ராஜன். தயாரிப்பு நீலா புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் இளவரசன் ராஜராஜன். இயக்கம் டி. ஆர். சுந்தரம்
42. 1957 புதுமைப்பித்தன் . தயாரிப்பு சிவகாமி பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் ஜீவகன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
43. 1957 மகாதேவி. தயாரிப்பு ஸ்ரீ கணேஷ் மூவிடோன். கதாபாத்திரம் தளபதி வல்லபன் இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்ணி .
44. 1958 நாடோடி மன்னன். தயாரிப்பு
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் மார்த்தாண்டன் & வீராங்கன். எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம்
இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம்
பி. சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
45. 1959 தாய் மகளுக்குக் கட்டிய தாலி தயாரிப்பு கல்பனா கலா மந்திர். கதாபாத்திரம் கனகு . இயக்கம் ஆர். ஆர். சந்திரன். ஜமுனாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம். அறிஞர் அண்ணா கதை, வசனம்.
1960 -களில் வெளிவந்த படங்கள்.
46. 1960 பாக்தாத் திருடன். தயாரிப்பு சதர்ன் மூவீஸ். கதாபாத்திரம் முகம்மது அலி. இயக்கம் டி. பி. சுந்தரம். வைஜயந்தி மாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்.
47. 1960 ராஜா தேசிங்கு. தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ். கதாபாத்திரம் தேசிங்கு ராஜன் & முகமதுகான். இயக்கம் டி. ஆர். ரகுநாத். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம்
48. 1960. மன்னாதி மன்னன். தயாரிப்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் மணிவண்ணன் . இயக்கம் எம். நடேசன்
49. 1961 அரசிளங்குமரி . தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் அறிவழகன். இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி
50. 1961 திருடாதே. தயாரிப்பு ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் பாலு. இயக்கம் ப. நீலகண்டன்.
51. 1961 சபாஷ் மாப்பிளே. தயாரிப்பு ராகவன் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் வாசு இயக்கம் எஸ். ராகவன் .
52. 1961 நல்லவன் வாழ்வான். தயாரிப்பு அரசு பிக்சர்ஸ். கதாபாத்திரம் முத்து. இயக்கம் ப. நீலகண்டன். அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதினார்
53. 1961 தாய் சொல்லைத் தட்டாதே. தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் போலீஸ் ஆஃபீசர் ராஜு. இயக்கம் எம். ஏ. திருமுகம்
54. 1962 ராணி சம்யுக்தா. தயாரிப்பு சரஸ்வதி பிக்சர்ஸ். கதாபாத்திரம் பிரிதிவிராஜன். இயக்கம் டி. யோகானந்த்.
55. 1962. மாடப்புறா. தயாரிப்பு பி. வி. என். புரொடக்சன்ஸ்.கதாபாத்திரம் ராமு . இயக்கம் எஸ். ஏ. சுப்பாராமன்
56. 1962 தாயைக்காத்த தனயன் . தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வேட்டைக்காரன் சேகர். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
57. 1962 குடும்பத் தலைவன். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் வாசு. இயக்கம் எம். ஏ. திருமுகம் .
58. 1962. பாசம். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ்.கதாபாத்திரம் கோபி. இயக்கம் டி. ஆர். ராமண்ணா. எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம்
59. 1962 விக்ரமாதித்தன். தயாரிப்பு பாரத் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் ராஜா விக்ரமாதித்தன். இயக்கம் டி. ஆர். ரகுநாத்
என். எஸ். ராமதாஸ் .
60. 1963 பணத்தோட்டம். தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் செல்வம். இயக்கம் கே. சங்கர். கே. சங்கர் இயக்கத்தில் நடித்த முதல் படம். சரவணா ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடித்த முதல் படம்.
61. 1963 கொடுத்து வைத்தவள். ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் முருகன். கதாபாத்திரம் கட்டிட ஒப்பந்தக்காரர் செல்வம். இயக்கம் ப. நீலகண்டன் .
62. 1963 தர்மம் தலைகாக்கும். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் டாக்டர் சந்திரன். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
63. 1963 கலை அரசி. தயாரிப்பு சரோடி பிரதர்ஸ். கதாபாத்திரம் மோகன்
வேற்றுக்கோள் கோமாளி. இயக்கம் ஏ. காசிலிங்கம்.
64. 1963 பெரிய இடத்துப் பெண். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் அழகப்பன்/முருகப்பன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
65. 1963 ஆனந்த ஜோதி . தயாரிப்பு ஹரிஹரன் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் பள்ளி ஆசிரியர் ஆனந்த். இயக்கம் வி. என். ரெட்டி. தேவிகாவுடன் நடித்த ஒரே திரைப்படம்
66. 1963 நீதிக்குப்பின் பாசம். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வழக்கறிஞர் கோபால். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
67. 1963 காஞ்சித்தலைவன் . தயாரிப்பு மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் நரசிம்ம பல்லவன். இயக்கம் ஏ. காசிலிங்கம் .
68. 1963 பரிசு. தயாரிப்பு கௌரி பிக்சர்ஸ் கதாபாத்திரம் இரகசிய போலீஸ் வேணு இயக்கம் டி. யோகானந்த் .
69. 1964. வேட்டைக்காரன். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் பாபு. இயக்கம் எம். ஏ. திருமுகம்.
70 . 1964 என் கடமை. தயாரிப்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் . கதாபாத்திரம்போலீஸ் ஆபீசர் நாதன் . இயக்கம் எம். நடேசன்
71. 1964 பணக்கார குடும்பம். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் நல்ல தம்பி. இயக்கம் டி. ஆர். ராமண்ணா
72. 1964 தெய்வத்தாய். தயாரிப்பு சத்யா மூவீஸ். கதாபாத்திரம் சிபிஐ அதிகாரி மாறன். இயக்கம் பி. மாதவன் .
73. 1964 தொழிலாளி. தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் தொழிலாளி ராஜு. இயக்கம்எம். ஏ. திருமுகம்
74. 1964 படகோட்டி. தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் மீனவர் மாணிக்கம். இயக்கம் டி. பிரகாஷ் ராவ். எம்ஜிஆர் நடித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண திரைப்படம்.
75 . 1964 தாயின் மடியில். தயாரிப்பு அன்னை ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் ஜாக்கி ராஜா. இயக்கம் ஏ. சுப்பா ராவ்.
76. 1965 எங்க வீட்டுப் பிள்ளை. தயாரிப்பு விஜயா கம்பைன்ஸ். கதாபாத்திரம் ராமு (ராமன்), இளங்கோ (லட்சுமணன்). இயக்கம் சாணக்யா. எம்ஜிஆர் இரட்டை வேடங்களில்.
77 . 1965 பணம் படைத்தவன். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் ராஜா. இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
78. 1965 ஆயிரத்தில் ஒருவன். தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் மருத்துவர் மணிமாறன். இயக்கம் பி. ஆர். பந்துலு. ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம்
79. 1965 கலங்கரை விளக்கம். தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வழக்கறிஞர் ரவி. இயக்கம் கே. சங்கர்.
80. 1965. கன்னித்தாய் தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் கேப்டன் சரவணன் இயக்கம் எம். ஏ. திருமுகம்.
81. 1965 தாழம்பூ. தயாரிப்பு ஸ்ரீ பாலமுருகன் ஃபிலிம்ஸ் .கதாபாத்திரம் துரை (பட்டதாரி). இயக்கம் என். எஸ். ராமதாஸ்
82 . 1965 ஆசை முகம். தயாரிப்பு மோகன் புரொடக்சன்ஸ்.கதாபாத்திரம் மனோகர், வஜ்ரவேலு . இயக்கம் பி. புல்லையா
83. 1966 அன்பே வா. தயாரிப்பு ஏவி. எம். புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் பாலு/முதலாளி ஜே. பி. இயக்கம் ஏ. சி. திருலோகச்சந்தர்
84. 1966 நான் ஆணையிட்டால் தயாரிப்பு சத்யா மூவீஸ். கதாபாத்திரம் பாஷா அல்லது பாண்டியன். இயக்கம் சாணக்யா .
85. 1966 முகராசி தயாரிப்பு தேவர் பிலிம்ஸ். கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி ராமு. இயக்கம் எம். ஏ. திருமுகம்.
ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
86 . 1966 நாடோடி. தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் தியாகு. இயக்கம் பி. ஆர். பந்துலு
87. 1966 சந்திரோதயம். தயாரிப்பு - சரவணா ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் பத்திரிகையாளர் சந்திரன். இயக்கம் கே. சங்கர்.
88. 1966 தாலி பாக்கியம். தயாரிப்பு வரலட்சுமி பிக்சர்ஸ். கதாபாத்திரம் - முருகன் இயக்கம் - கே. பி. நாகபூஷணம் ( இயக்குனர் நடிகை கண்ணாம்பாளின் கணவர் )
89. 1966 தனிப் பிறவி. தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - இரும்புத் தொழிலாளி முத்தையா. இயக்கம் எம். ஏ. திருமுகம்
90. 1966 பறக்கும் பாவை . தயாரிப்பு - ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ஜீவா, டாக்சி ஓட்டுநர் . இயக்கம் டி. ஆர். ராமண்ணா
91. 1966 பெற்றால்தான் பிள்ளையா. தயாரிப்பு ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ஆனந்தன் (அனாதை). இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு
எம். ஆர். ராதாவுடன் சேர்ந்து நடித்த இருபத்தைந்தாவதும் இறுதியுமான திரைப்படம்
92 . 1967 தாய்க்குத் தலைமகன். தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - மருது. இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
இத்திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் (12. சனவரி 1967) எம். ஜி. ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார்.
93. 1967 அரச கட்டளை . தயாரிப்பு - சத்தியராஜா பிக்சர்ஸ். கதாபாத்திரம் - விஜயன். இயக்கம் -எம். ஜி. சக்ரபாணி.
எம். ஜி. ஆரோடு பி. சரோஜாதேவி நடித்த கடைசித் திரைப்படம்
94 . 1967 காவல்காரன். தயாரிப்பு - சத்யா மூவீஸ். கதாபாத்திரம் - மணி (ஓட்டுநர்). இயக்கம் ப. நீலகண்டன் .
95. 1967 விவசாயி. தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் - முத்தையா . இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
96. 1968 ரகசிய போலீஸ் 115. தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ராமு, இயக்கம் - பி. ஆர். பந்துலு .
97. 1968 தேர்த் திருவிழா தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - சரவணன்
இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
98 . 1968 குடியிருந்த கோயில். தயாரிப்பு - சரவணா ஸ்க்ரீன்ஸ் .கதாபாத்திரம் - ஆனந்த் & பாபு. இயக்கம் - கே. சங்கர்.
99. 1968 கண்ணன் என் காதலன். தயாரிப்பு - சத்யா மூவீஸ் . கதாபாத்திரம் -"பியானோ" கண்ணன். இயக்கம் - ப. நீலகண்டன் .
100. 1968 ஒளி விளக்கு. தயாரிப்பு - ஜெமினி ஸ்டூடியோஸ் . கதாபாத்திரம் - முத்து. இயக்கம் - சாணக்யா. ஜெமினி நிறுவனத்தில் நடித்த ஒரே திரைப்படம்.
101 . 1968 கணவன். தயாரிப்பு - வள்ளி ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - வேலையா. இயக்கம் -ப. நீலகண்டன் .
102. 1968 புதிய பூமி. தயாரிப்பு - ஜே. ஆர். மூவீஸ். கதாபாத்திரம் -டாக்டர் கதிரவன். இயக்கம் - சாணக்யா.
103. 1968 காதல் வாகனம் . தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம்- சுந்தரம். இயக்கம் எம். ஏ. திருமுகம் .
104. 1969 அடிமைப் பெண். தயாரிப்பு -
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் - வேங்கைமலை அரசன் (தந்தை),
இளவரசன் வேங்கையன் (மகன்) இயக்கம் - கே. சங்கர். எம்ஜிஆர் சொந்த தயாரிப்பு.
105 . 1969 நம் நாடு. தயாரிப்பு - விஜயா இன்டர்நேஷனல்.கதாபாத்திரம்- துரை . இயக்கம் - சி. பி. ஜம்புலிங்கம்
1970 களில் நடித்த படங்கள்
106 . 1970 மாட்டுக்கார வேலன் தயாரிப்பு - ஜெயந்தி ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - வேலன் & ரகுநாத். இயக்கம் -ப. நீலகண்டன். இரட்டை வேடம்
107. 1970 என் அண்ணன். தயாரிப்பு - வீனஸ் பிக்சர்ஸ். கதாபாத்திரம் -ரெங்கன். இயக்கம் - ப. நீலகண்டன்
108. 1970 தலைவன். தாமஸ் பிக்சர்ஸ். கதாபாத்திரம் - இரகசிய போலீஸ் இளங்கோ. இயக்கம் - பி. ஏ. தாமஸ் & சிங்கமுத்து
109. 1970 தேடிவந்த மாப்பிள்ளை. தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ் கதாபாத்திரம் - சங்கர் . இயக்கம் -பி. ஆர். பந்துலு .
110. 1970 எங்கள் தங்கம் தயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் - தங்கம் இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு
111. 1971 குமரிக்கோட்டம் தயாரிப்பு - கே. சி. ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - கோபால். இயக்கம் ப. நீலகண்டன் .
112. 1971 ரிக்*ஷாக்காரன் தயாரிப்பு - சத்யா மூவீஸ் கதாபாத்திரம் - செல்வம் . இயக்கம் - எம். கிருஷ்ணன் நாயர். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது
113. 1971 நீரும் நெருப்பும். தயாரிப்பு - நியூ மணி ஜே சினி புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் இளவரசன் மணிவண்ணன் & இளவரசன் கரிகாலன். இயக்கம் - ப. நீலகண்டன். இரட்டை வேடம்.
114 . 1971 ஒரு தாய் மக்கள். தயாரிப்பு - நாஞ்சில் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் - கண்ணன். இயக்கம் - ப. நீலகண்டன் .
115 . 1972 சங்கே முழங்கு தயாரிப்பு - வள்ளி ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் -முருகன். இயக்கம் - ப. நீலகண்டன் . லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம்
116. 1972 நல்ல நேரம் தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - ராஜு. இயக்கம் - எம். ஏ. திருமுகம் . தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் நடித்த இறுதி திரைப்படம்
117. 1972 ராமன் தேடிய சீதை தயாரிப்பு - ஜெயந்தி ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - கோடீஸ்வரர் எஸ். ஜே. ராமன் . இயக்கம் - ப. நீலகண்டன்
118 . 1972 நான் ஏன் பிறந்தேன் தயாரிப்பு - காமாட்சி ஏஜென்சீஸ் கதாபாத்திரம் - கண்ணன். இயக்கம் -எம். கிருஷ்ணன் நாயர்
119. 1972 அன்னமிட்ட கை தயாரிப்பு - ராமச்சந்திரா புரொடக்சன்ஸ். கதாபத்திரம் - துரைராஜ். இயக்கம் -எம். கிருஷ்ணன் நாயர் எம்ஜிஆர் நடித்த கடைசி கருப்பு-வெள்ளை திரைப்படம்
120. 1972 இதய வீணை தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - சௌந்தரம் இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு . திமுக உறுப்பினராக இறுதி திரைப்படம்
121 . 1973 உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கதாபாத்திரம் - விஞ்ஞானி முருகன் &
ராஜு. எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்
122. 1973 பட்டிக்காட்டு பொன்னையா தயாரிப்பு - வசந்த் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - பொன்னையா & முத்தையா இயக்கம் - பி. எஸ். ரெங்கா. ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம்
123 . 1974 நேற்று இன்று நாளை தயாரிப்பு - அமல்ராஜ் ஃபிலிம்ஸ் (அசோகன்) கதாபாத்திரம் - மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும்
குமார். இயக்கம் - ப. நீலகண்டன் .
124 . 1974 உரிமைக்குரல் தயாரிப்பு - சித்ராலயா ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - கோபிநாத் (கோபி) இயக்கம் - சி. வி. ஸ்ரீதர் ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம்
125 . 1974 சிரித்து வாழ வேண்டும் தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான். இயக்கம் - எஸ். எஸ். பாலன்.
126 . 1975 நினைத்ததை முடிப்பவன் தயாரிப்பு - ஓரியன்டல் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - சௌந்தரம் (பாடகன்) மற்றும்
ரஞ்சித் குமார் (வியாபாரி) இயக்கம் - ப. நீலகண்டன் . எஸ். ஏ. அசோகனுடன் நடித்த 59 ஆவதும் இறுதியுமான திரைப்படம்
127. 1975 நாளை நமதே தயாரிப்பு - கஜேந்திரா ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - சங்கர் மற்றும் விஜயகுமார் இயக்கம் - கே. எஸ். சேதுமாதவன்
128. 1975 இதயக்கனி தயாரிப்பு - சத்யா மூவீஸ் கதாபாத்திரம் - போலீஸ் அதிகாரி மோகன் இயக்கம் - ஏ. ஜெகந்நாதன்
ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
129 . 1975 பல்லாண்டு வாழ்க தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - ராஜன் (சின்னையா - உதவி சிறை அதிகாரி) இயக்கம் - கே. சங்கர்.
130 . 1976 நீதிக்குத் தலைவணங்கு தயாரிப்பு - ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - விஜய் இயக்கம் ப. நீலகண்டன்
131. 1976 உழைக்கும் கரங்கள் தயாரிப்பு - கே சீ ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - ரெங்கன் இயக்கம் - கே. சங்கர். புரட்சித் தலைவர் 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ முருகன் திரைப்படத்தில் ஆடியபின் இத்திரைப்படத்தில் பரமசிவனாக நடனம் ஆடினார்.
132 1976 ஊருக்கு உழைப்பவன் தயாரிப்பு - வீனஸ் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா இயக்கம் - எம். கிருஷ்ணன் நாயர்
133. 1977 இன்றுபோல் என்றும் வாழ்க தயாரிப்பு - சுப்பு புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - விவசாயி முருகன் இயக்கம் - கே. சங்கர். ராதா சலூஜாவுடன் நடித்த இரண்டாவதும் இறுதியுமான திரைப்படம்
134. 1977 நவரத்தினம் தயாரிப்பு- சி. என். வி. மூவீஸ் கதாபாத்திரம் - கோடீஸ்வரர் தங்கம் இயக்கம் - ஏ. பி. நாகராஜன்
சிறப்பு 9 கதா நாயகிகளுடன் நடித்தார்.
135 . 1977 மீனவ நண்பன் தயாரிப்பு- முத்து எண்டர்பிரைசஸ் குமரன் இயக்கம்-ஸ்ரீதர் .
136 . 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தயாரிப்பு-சோலேஸ்வர் கம்பைன்ஸ் கதாப்பாத்திரம்-பைந்தழிழ் குமரன் அல்லது இளவரசன் சுந்தர பாண்டியன் இயக்கம்-எம்ஜிஆர் & கே. சங்கர்
1990 களில் வெளிவந்த படங்கள்
137 1990 அவசர போலீஸ் 100 சுதா சினி மூவீஸ்.கதாபாத்திரம் ராஜு. கே. பாக்யராஜ் முடிக்கப்படாத அண்ணா நீ என் தெய்வம் என்ற எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் இத் திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது. எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
138 1991 நல்லதை நாடு கேட்கும் ஜேப்பியார் பிக்சர்ஸ்..........vrh

orodizli
12th February 2021, 08:20 AM
ulagam sutrum valiban - a review by a fan

'உலகம் சுற்றும் வாலிபன்'. 1973ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம்.

தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது.

உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.

* இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.

* தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
* லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.

* மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.

* சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.

* இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
* வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை.

சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.

* படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.

* "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.

* பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.

* தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
* படத்தின் படப்பிடிப்பின்

போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
* படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
Courtsey
Net..........VSM

orodizli
12th February 2021, 08:21 AM
நவயுக பாரி வள்ளல் புரட்ச்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர் வாழ்க்கை பக்கங்களியிருந்து
ஒரு சமயம் தலைவர் வண்டி ஒரு மலையடி பாதையில் பயணிக்கிறது, வண்டியில் புரடச்சித் தலைவர், அவரின் இல்லத்தரசி ஜானகி அம்மையார், கதை மற்றும் வசனகர்த்தா திரு ரவீந்திரன் மற்றும் கார் ஓட்டுநர் பயணத்தில் இருந்தனர், காரில் உரையடிக்கொண்டு இருக்கயில் பேச்சு தலைவரின் பெயர்,பட்டம் பற்றி போனது இதில் ரவிந்தர் தலைவரிடம் " அண்ணே! இந்த உலகம் பூரா தங்களை பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது "என்று கூறினார் அதற்க்கு தலைவர் "அப்படியெல்லாம் இல்லை என்னை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார் கள் " என்று கூறினார் இருருக்கவே முடியாது பந்தயம ₹500/= என்றார் ரவீந்திர், சரி என்றார் தலைவர் வண்டி சென்று கொண்டு இருந்தது சற்று தொலைவில் ஒரு வயோத்திகர் ஒருவர் நடந்து போய்க்கொண்டு இருந்தார் தலைவர் கரை நிறுத்தி அவரிடம் யாரு,? எங்கே? செல்கிறீர்கள் என்று வினாவினார் தான் இந்த மழைபக்கத்தில் ஒரு குடுசையில் இருப்பதாகவும் விறகு வெட்டி கிழே ஒரு கடையில் விற்று விட்டு வீடு திரும்புவதாக கூறினார் காரில் ஏறுங்கள் தங்களை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்றார் தலைவர் அதற்க்கு அந்த முதியவர் பரவயில்லை பக்கம் தான் நடத்து போய் விடுவேன் என்றார் ஆனாலும் தலைவர் விடுவதாக இல்லை பரவாயில்லை வாருங்கள் நாங்கள் போகும் பாதைத்தான் சிரமம் ஏதும் இல்லை என்றார் பெரியவரும் ஏறிகொண்டார் பயணம் தொடர்ந்தது தலைவர் பெரியவரின் முழுவிபரமும் கேட்டு அறிந்தார் அதற்கு பிறகு காரில் மௌனம் நிலவியது கார் போய்க்கொண்டுருக்கையில் அந்த பெரியவர் ஓட்டுநரிடம் தம்பி அந்த ஓரத்தில் அந்த மரதிற்க்குபக்கத்தில் நிறுத்துங்கள், கரும் அவ்விடித்தில் போய் நின்றது, பெரியவர் இரங்கி " அய்யா மிக்க நன்றி! மன்னிக்கவும் தாங்கள் சற்று நேரம் இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு ஒரு ஒத்தையடி பாதையில் நடந்து மறைந்தார், தலைவர் ரவிந்த்ரை பார்த்து " பார்த்தாயா? அவருக்கு நான் யார் என்றே தெரியவில்லை என்றார், ரவிந்தார் தலைவரிடம் அவர் ஏழை, விறகு வெட்டி பிழைக்கிறார் அவருக்கு நீங்க எதுவும் உதவலேயே இது உங்கள் வழகத்திற்கு மாறாக உள்ளதே, அதற்க்கு தலைவர் அப்படியில்லை நான் அவரை காரில் ஏற சொன்ன பொழுது மறுத்தார் பார்த்தாய்யா?அதிலிருந்து புரிந்துகொண்டேன் அவர் மிகவும் தன்மானம் மிக்கவர் என்று என்வே பணம் தந்து அவர் உழைப்பை நான் அவமானப்படிதிவிட கூடாது,, தலைவர் சொல்லி முடிக்கும் தருவாயில் மூச்சிறைக்க வந்து சேர்ந்தார் பெரியவர் "தம்பி ஊருக்கெல்லாம் கொடுத்து உதவுற உன் நல்ல மனசுக்கு நான் ஏதாவது செய்யணும் என்று நினைத்துதான் வண்டியே நிறுத்தினேன் இந்தாப்பா என்னாலே முடிஞ்சது உனக்கு வாங்கிக்க என்று 3 ஆப்பிள் கணிகளை தலைவர் கையில் திணித்தார், தலைவர் பெரியவரின் கை பற்றி தன் கண்களில் ஒற்றி கொண்டார், பெரியவரிடம் விடைபெற்று கார் நாகர்ந்தது காரில் அனைவரும் மௌனம் தலைவர் மௌனம் கலைத்தார், " ஜானு அந்த பழங்களை பத்திரமாக வை அவைகளை நான் ஒருவன் மட்டும் தான் சாப்பிடப்போகிறேன் " என்றார் அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் சாப்பிடுவபவர நம் தலைவர்.....rmh

orodizli
12th February 2021, 10:28 AM
"தேர்த்திருவிழா" 1968 ம் வருடம் பிப்.23 ல் வெளியான தேவர் பிலிம்ஸின் 14 வது கருப்பு வெள்ளை படம்.
நல்ல அருமையான விறுவிறுப்பான படம். படம் வந்த நேரம் மிகவும் மோசமான ஒரு காலகட்டம். ஒரு பக்கம் "ரகசிய போலீஸ் 115" ஜன 11ல் வெளியாகி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. "தேர்த்திருவிழா" பிப்ரவரியில் வருவதை ரசிகர்களே விரும்பவில்லை. தேவர் இதைப்பற்றி யெல்லாம் கவலை கொள்ளமாட்டார். அவருக்கு சொன்ன தேதியில் படப்பிடிப்பு முடியணும். சொன்ன தேதியில் படம் வெளியாக வேண்டும். இதிலே மிகவும் கவனமாக இருப்பார்.

வசூலும் முதல் ரவுண்டில் 20-25 லட்சம் வந்தால் போதும் போட்ட முதலை எடுத்து விடுவார். அதன்பின் ஓடுவது எல்லாம் லாபம்தான். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிற நடிகர் படங்கள் எல்லாம் முதல் ரவுண்டில் வருவது மட்டும்தான் வசூல். அதோடு அந்தப் படங்கள் வசூலை நிறுத்தி விடும். அதன் பிறகு? அவ்வளவுதான்.
அதனால்தான் எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு மிகுந்த கடன்சுமையால் தேவர் பிலிம்ஸ் காணாமல் போய் விட்டது. இதில் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த படங்களின் மொத்த உரிமைகளையும் கைமாற்றியதால் வந்த வினை.

படத்தின் முதலை 2 வாரத்திலே எடுத்து விடுவார். அதன்பிறகு படத்தின் ஓட்டத்தில் தலையிட மாட்டார். அப்படித்தான் நன்றாக போய்க் கொண்டிருந்த "விவசாயி" யை மற்ற எல்லா தியேட்டரிலிலும் எடுத்து விட்டு கிருஷ்ணவேணியில் மட்டும் 50 நாட்கள் ஓட விட்டார்கள். கூட வந்த "இரு மலர்கள்" "ஊட்டி வரை உறவை" விட "விவசாயி" அதிக வசூல் ஆகியிருந்தும் படத்தை 50 நாட்கள் கூட சரியாக ஓடவிடவில்லை.

அதேபோல் "தேர்த்திருவிழா"வும் ரிலீஸ் செய்த தேதி சரியில்லை.
அடுத்து மார்ச் 15 ல் மூன்றே வாரத்தில் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான "குடியிருந்த கோயில்" வெளியீடு. ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவில் அழகிய கலைமான் என்பது போன்ற நிலை.
அதுமட்டுமல்ல பிப் 23 ல் "தேர்த்திருவிழா" கூட வந்த "பணமா பாசமா" எதிர்பாராமல் பம்பர் ஹிட்.. "பணமா பாசமா" முதல் முன்று நாட்கள் சரியாக போகவில்லை. மவுத் டாக் மூலமாக படம் பெண்களுக்கு பிடித்து போக படம் அசுரத்தனமான வெற்றியை பெற்றது. இருப்பினும் இப்போது "பணமா பாசமா" வை ஒரு காட்சி கூட தியேட்டரில் ஓட்ட முடியாது. ஆனால்
"தேர்த்திருவிழா" இப்போது திரையரங்கில் வெளியானாலும் 4,5
நாட்கள் ஓடி விடும் என்பதுதான் எம்ஜிஆர் படத்தின் மவுசுக்கு காரணம்.

இதில் சிக்குண்ட "தேர்த்திருவிழா"
ஒரளவு சுமாரான வெற்றியை பெற்றது. படத்தில் பாடல்கள் பிரமாதம். அதிலும் குறிப்பாக 'மழை முத்து முத்து பந்தலிட்டு','
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா?'
'யா யா பாத்தியா'? போன்ற அருமையான ஜோடி பாடல்களுடன் 'தஞ்சாவூரு சீமையிலே' போன்ற டப்பாங்குத்து பாடல்களும் ரசிக்கும்படி படமாக்கியிருப்பார்கள். அதில் தலைவர் கொடுக்கும் டான்ஸ் மூவ்மென்ட் மிகவும் அபாரமாக இருக்கும்.

படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் உள்ள கொள்ளிடத்தில் அமைந்திருக்கும் காவிரி கரையோரம் பரிசல் காட்சிகள் படமாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வெள்ளத்தை தடுத்தாலும் மக்கள் திலகத்தின் வருகையால் மக்கள் வெள்ளத்தை தடுக்க முடியாமல் திணறிய காவல்துறை ஒலி பெருக்கியை பயன்படுத்தியும் முடியாமல் தலைவரின் கண்ணசைவில் மக்கள் வெள்ளம் கட்டுப்பட்டதை ஒரு பேரதிசயமாக பேசிக்கொண்டனர்..

தேவர் படத்துக்குறிய சகல அம்சங்கள் நிறைந்திருந்தும் கால சூழ்நிலை சரியில்லாததால் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இருப்பினும் சென்னையில் 50 நாட்களும் பிற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடி ஒரு கெளரவமான வெற்றியை பெற்றது..........ksr...

fidowag
12th February 2021, 05:03 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
ஒளிபரப்பான*பட்டியல் (01/02/21 முதல் 10/02/21* வரை )
-----------------------------------------------------------------------------------------------------------------------
01/02/21- சன் லைப்- காலை 11 மணி - நம் நாடு*

* * * * * * * *மூன் டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*

* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*

02/02/21-வஸந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - பணத்தோட்டம்*

* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - ராமன் தேடிய சீதை*

* * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தாய்க்கு பின் தாரம்*

03/02/21-முரசு -மதியம் 12 மணி /7 மணி -வேட்டைக்காரன்*

* * * * * * * புதுயுகம்* - பிற்பகல் 2 மணி - குடும்பத்தலைவன்*
** * * * * * * சன் லைப்* -* மாலை 4 மணி - ரிக் ஷாக் காரன்*

* * * * * * * *பாலிமர் - இரவு 11 மணி - வேட்டைக்காரன்*

04/02/21-வேந்தர் டிவி - காலை 10.30 மணி - தனிப்பிறவி*

* * * * * * * சன் லைப்- காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * மூன் டிவி - இரவு 8 மணி - காதல் வாகனம்*

05/02/21-மீனாட்சி -மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*

* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - ஆனந்த ஜோதி*

* * * * * * *மீனாட்சி - இரவு 9 மாய் - நான் ஆணையிட்டால்*

* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - சங்கே முழங்கு*

06/2/21- சன் லைப்-காலை 11 மணி - ஆசைமுகம்*

* * * * * * * மீனாட்சி - இரவு 9.30 மணி -வேட்டைக்காரன்*

07/02/21-வானவில் -காலை 8 மணி -மாடப்புறா*

* * * * * * * மீனாட்சி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*

* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி -சங்கே முழங்கு*

* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - அரச கட்டளை*

* * * * * * * *மீனாட்சி -இரவு 9.30 மணி - விவசாயி*

08/02/21- மெகா 24- பிற்பகல் 2.30* மணி -நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * * சன் லைப் -மாலை 4 மணி - நவரத்தினம்*

09/02/21-வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆனந்த ஜோதி*

* * * * * * * *புது யுகம் டிவி -பிற்பகல் 2 மணி -நீரும் நெருப்பும்*

* * * * * * * *சன் லைப் -மாலை 4 மணி -குடியிருந்த கோயில்*

10/02/21-சன் லைப்- காலை 11 மணி - அன்பே வா*

* * * * * * * * எப் எம். தமிழ் - இரவு 8 மணி - வேட்டைக்காரன்*

fidowag
12th February 2021, 05:06 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி ...............
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று முதல் (12/2/21) கோவை டிலைட்டில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*
உழைக்கும் கரங்கள்* தினசரி 2 காட்சிகள்* (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .

தகவல் உதவி திரு. வி.ராஜா , நெல்லை.*

orodizli
13th February 2021, 08:12 AM
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_சனிக்கிழமை #காலை_வணக்கம்...

புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் திரைப்படங்களை பற்றிய அலசலை ஒரு தொடராக பதிவிட ஆரம்பித்து உள்ளேன்
அதில் நேற்று தலைவரின் முதல் படமான சதிலீலாவதி பற்றி பார்த்தோம்.. அதில் துணை நடிகராக ஒரு காவல்துறை அதிகாரி வேடம் பூண்டு நடித்திருப்பார்.. அதிலிருந்து 14 படங்கள் வரை துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்..
தலைவர் தனது 15வது படத்தில் தான்
கதாநாயகன் வேடம் கிடைத்தது இன்று
அந்த திரைப்படம் பற்றி பார்ப்போம்..

#ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முதல் முறை கதையின் நாயகன் ஆக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.

இயக்கம்
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்பு
எம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
எஸ். கே. மொக்தீன்
இசை
எஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்பு
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
கே.மாலதி, எம்.என்.நம்பியார்,
எம்.ஆர்.சுவாமிநாதன், டி.எஸ்.பாலையா, புளிமூட்டை ராமசாமி,
கே.தவமணி தேவி,
எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்,
எஸ்.வி.சுப்பையா,
நாராயண பிள்ளை, டி.கே.சரஸ்வதி,
எம்.எம்.ராதாபாய்
ஒளிப்பதிவு
டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி.கிருஷ்ணன்
படத்தொகுப்பு
டி. துரைராஜ்
வெளியீடு
ஏப்ரல் 11, 1947
நீளம்
14805 அடி

ராஜகுமாரி திரை படத்தின் சிறப்புகள் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,
மு.கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.

உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற
எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம்.என்.நம்பியார் வாயசைத்தார்.

இப்படத்துக்கு உரையாடலை
மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.
படத்தில் ‘கதை, வசனம், சினாரியோ & டைரக்*ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் (பெயர் கையொப்ப வடிவில்) என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் வருகிறது.

ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.

கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.

தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் மு.கருணாநிதி இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.

என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்." என்று...

தனது 15வது படத்தில் கதாநாயகனாக நடித்த பின்பும் அடுத்தடுத்து துணை கதாபாத்திரம் வேடம் தான் வருகின்றது உதாரணமாக #அபிமன்யு போன்ற 7 படங்களில் நடித்திருக்கிறார்... புரட்சி தலைவர் கதாநாயகன் வேடம் ஏற்று அதிலிருந்து கதையின் நாயகனாகவே நடித்த திரைப்படம் பற்றி நாளை பார்ப்போம்....

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........

orodizli
13th February 2021, 08:12 AM
முத்தான முதல்வரே!!
������������������
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மக்களால் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர்.இந்த வரலாறு வேறு
யாருக்கும் இல்லை.புரட்சித் தலைவருக்குப் பின் ஆள வந்தவர்கள் ஓட்டிற்கும்,கூட்டத்திற்கும் பணம் கொடுத்து சேர்த்த வரலாறை என்னாளும் மக்கள் அறிவர்.
இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர்.

திரைத்துறையின் அனைத்து உயரிய விருதையும் பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்.
தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலேயே
மக்கள் செல்வாக்கை நிரந்தரமாக பெற்ற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளானாலும் இவருடைய புகழ் இமியும் குறையாத மாசற்ற மாணிக்கம் புரட்சித் தலைவரே!! இவர் கட்சியில் தொடர்கிறார்கள் என எல்லோரையும் உண்மையான புரட்சித் தலைவரின் ரசிகன் ஆதரிக்க மாட்டான்.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
��������������������������.........Rnjh

orodizli
13th February 2021, 08:13 AM
#பார்வை #ஒன்றே #போதுமே!
மக்கள் திலகம்...
தொலைவில் இருந்து பார்க்கப்
பார்க்க ஆவலைத் தூண்டும்...

கூட்டத்தில் இருந்து நகர்ந்து அருகே சென்று பார்க்கத் தூண்டும்...
நிறைய பேசத்தூண்டும்...
பொற்கரம் பற்றத் தோன்றும்...
பொற்பாதங்களில் விழத் தோன்றும்...

ஆனால் அருகே சென்றவுடன் நம் ஐம்புலன்களும் அடங்கிவிடும்...
நம்முள் பல இரசாயன அதிர்வுகளை ஏற்படுத்திவிடும்...

அந்த தரிசனமே கோடி புண்ணியமென்று நாம் கேட்க வந்ததையே மறந்து அவருக்குள் லயித்துவிடுவோம்...

தரிசனம் பெற்றதும், இந்த
உலகையே வென்றுவிட்டது போன்ற பரவச நிலையை அடைவோம்...
பிறந்த பயனை அடைந்து விட்டதாகப் பெருமை கொள்வோம்...

#இதுதான் #உண்மையான
#எம்ஜிஆர் #பக்தர்கள்.........bsm

orodizli
13th February 2021, 08:14 AM
உ.சு.வா...திரைக்கு பின் நடந்தவை பகுதி 4.

எக்ஸ்போ அரங்கில் லொகேஷன் பார்த்து கொண்டே இருக்கும் போது திடீர் என்று கூட்டத்தின் ஒரு பகுதியை நோக்கி அவர் ஓட....அவர் வேகம் முடியாமல் நாங்கள் தொடர்ந்து ஓட....

அங்கே ஒருவர் உடன் சகஜம் ஆக பேசி கொண்டு இருந்தார் எம்ஜிஆர் அவர்கள்..
இந்த நாட்டில் யார் அவர் இந்த மக்கள் கடலில் அவரை எப்படி இவர் கண்டு கொண்டார் என்று வியந்து அருகில் போய் நாங்க பார்க்க.....

என்னை பெயர் சொல்லி மணியன் சார் வாங்க இவர் யாரு தெரியவில்லையா...
நம்ம ஊரில் பிரபல தயாரிப்பாளர் பி.எஸ்.ரங்கா அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹரிதான் இவர் என்று சொல்ல..

எம்ஜிஆர் அவர்கள் உடன் வந்த ராமமூர்த்தி அவர்கள் உடனே அடையாளம் கண்டு கொண்டு தொழில் ரீதியாக இணைய....
எம்ஜிஆர் அவர்கள் வந்த நோக்கம் புரிந்து கொண்டு அவரும் அதாவது ஹரியும் நானும் தயார் இணைந்து அருமையான காட்சிகளை கொண்டு செல்வோம் தமிழ் மண்ணுக்கு என்று சொல்ல.....

அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி...ஆனாலும் இந்த கூட்டத்தில் அவரை கண்டு பிடித்த கழுகு பார்வையை எண்ணி எண்ணி வியந்து கொள்வேன் நான்...அதுதான் அவர்.

அனைத்து இடங்களையும் தன் மன கண்ணில் உள்வாங்கி கொண்டு அடுத்த சில நாட்களில் அங்கே காட்சிகள் எடுக்க தயார் நிலையில் அனைவரும் புறப்பட்டு செல்ல.

ஒசாகா வரை விமானத்தில் செல்லும் போது ஜிப்பா வேட்டி அணிந்து என் அருகில் அமர்ந்து இருந்த பின் நான் சற்றே கண் அசர இறங்கும் இடம் வரும் போது சும்மா கோட்..சூட் உடையில் என் அருகில் ஒருவர் அமர்ந்து இருக்க...

யார் என்று பார்க்க அவரே தான்... என்ன இப்படி பயணத்தின் போதே உங்களால் எப்படி உடை மாற்றி கொள்ள முடிந்தது என்று நான் கேட்க.

அதுதான் நாடக அனுபவம்....கிடைக்கும் நேரத்தில் இடத்தில் சட்டுன்னு உடைகளை மாற்றி கொள்வது எங்கள் நாடக நடிகர்களின் வழக்கம் என்று சோலிகளை குலுக்கி கீழே போட்டது போல கல கல என்று சிரித்தார் அந்த விந்தை மனிதர்....

படத்தில் கடைசியாக வரும் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை தான் எண்ணிய படி எடுத்து முடித்தார்....

ஓர் இரு நாள் கழித்து எனக்கு தகவல் வந்தது சென்னையில் இருந்து.
படத்தின் முதல் பாடல் காட்சியை எடுத்து விட்டார் எம்ஜிஆர் என்ற தகவல் தெரிந்து..

அந்த ஒரே நாளில் விநியோக உரிமை பெற்று இருந்த நண்பர்கள் செங்கல்பட்டு...வட ஆற்காடு...தென் ஆற்காடு மற்றும் சில இடங்களில் பட வெளியீட்டு உரிமையை நினைத்ததை விட அந்த நேரத்தில் 4 லட்ச ரூபாய் அதிகம் ஆக கேட்க...

எவ்வளவு சொன்னாலும் சரி வாங்கி கொள்கிறோம் என்று முடிவாக..மற்ற தயாரிப்பாளர்கள் மனதில் படத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்க....

அப்போதே சிறு சிறு உரசல்கள் ஆரம்பித்த நேரத்தில் எதிரிகள் என்ன ஆரம்பமே இப்படி இருக்கு என்று மனதுக்குள் புகைச்சல் அடைய.....

எல்லாம் நல்லா போகி கொண்டு இருந்த அந்த நாட்கள் கடந்து ஒரு நாள் நாகேஷ் அவர்கள் திடீர் என்று...என்று...

மொத்த பட குழுவும் அதிர்ந்து போக....

தொடரும்..அடுத்த பதிவில்....

வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நன்றி...நன்றி....

orodizli
13th February 2021, 08:14 AM
# பாவம் சி.கணேசன் ரசிகர்கள்,

ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து கொண்டு அவ்வப்போது சில பதிவுகளை போட்டு அவர்களே கையும் தட்டிக் கொண்டு இருந்தார்கள்,

கூடவே எங்களின் கோயில் "அன்னை இல்லம் " என்றெல்லாம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு இடியை தலையிலே இந்த மனுஷன் இறக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லையே எங்கள் அய்யனே கணேசா?????,

தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டு வர போராடும் தற்போதைய பிரதமரே என் தலைவர் என்று முழங்கிக் கொண்டு அண்ணன் ராம்குமாரும், சூனியர் சிவாசி என்ற அடைமொழியோடு களம் இறங்கி முதல் ரவுண்டிலேயே காணாமல் போன துஷ்யந்த் சாரும் இப்படி சட்டியை கமத்துவார்கள் என்று கணேசன் குஞ்சுகள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை,

உடனே நம்ம அல்லக்கை சந்திரசேகர பூபதி கதறி அழுது அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ( இனி காங்கிரஸ்
கலைப்பிரிவு சார்பில் கணேசன் பிறந்தநாள் விழா? வுக்கும் பெப்பேதானா?)

நம்ம போண்டா மணிக்கு ஒருவர் நீண்ட அறிவுரையெல்லாம் வழங்கி பொங்கியிருக்கிறார் (அதாவது போண்டா அவர்களே இனி மேலாவது இந்த சுயநல வாதியின் அப்பனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பதிவு போடுவதை விட்டுவிட்டு உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று ஒரு குஞ்சு சொல்ல போண்டாவும் சரிங்க என்று கண்ணீர் கடலில் நீந்தி பதிவு போட்டிருக்கிறது,
What a pity?)

போண்டா மணியும் உடனே தேர்தல் அலசல்கள் பண்ண ஆரம்பிச்சுருவாரு,

80 இல் பாராளுமன்ற தேர்தலில் ஏன் எம்ஜிஆர் வெற்றி பெற முடியவில்லை என்று ஒரு பதிவு போட்டு அவங்களுக்குள்ளே சொறிஞ்சு விட்டுக்குறது (இதெல்லாம் ஒரு பொழப்பு)

தலைவர் 80 பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களை பெற்றாலும் 80 லட்சம் வாக்குகளை அள்ளினார்,
மிருக பலத்துடன் இருந்த காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்து என்ன பெரிய புடுங்கி சாதனையை ஏற்படுத்தினார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் போண்டா மணி அவர்களே, என்ன ஒரு 25 லட்சம் வாக்குகள் கூட வாங்கியிருப்பார்கள்,

ஆனால் சிவாஜி ஆரம்பித்த தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்து கணேசனார் மட்டும் மீசைய முறுக்கியதால் நம்ம ஆளு என்று மக்கள் கொஞ்சம் கருணை காட்டியதால் கோவணமாவது மிஞ்சியது,
திமுக வேட்பாளரிடம் 10643 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று கதறிக்கொண்டே கட்சியை கலைத்ததை போண்டா அப்படியே பூசி மெழுகுவார்,
ஆனால் தமிழ்நாடு முழுக்க கடும் போட்டியை 1980 பாராளுமன்ற தேர்தலில் தலைவர் கொடுத்ததை பேசாமல் விட்டு விடுவார்,

என்னதான் உங்கள் பிரச்சினை? கடைசியில் ராம்குமார் எல்லாருக்கும் சேர்த்து வச்சாரே ஆப்பு,

அதாங்க ஆப்பு, ஆப்பு,

இப்படித்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் தூதுவிட்டு வி. பி சிங் கணேசனை ஜனதாதள தமிழக தலைவராக நியமித்து தனக்குத் தானே மீள முடியாத படுகுழியை வெட்டிக் கொண்டார்,

காமராஜரும் கடைசி வரையில் நம்பி கணேசனுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றுக்கொண்டார்,

80இல் கணேசன் " என் பிறந்தவீடும் புகுந்த வீடும் ஒன்றாகி விட்டது,

நாடாள கலைஞர் இருக்கிறார், எம்ஜிஆர் நடிக்கப் போகட்டும் என்று கூறி இரண்டு கட்சிகளுக்குமே வாய்க்கரிசி போட்டுவிட்டுத்தான் கணேசனார் ஓய்ந்தார்

இதையெல்லாம் போண்டா எழுதாது,
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது ( ஏம்பா உனக்கே போரடிக்கலையா?)

கணேசன் திரை சாதனைகளை மூச்சு வாங்க விளக்கி கடைசியில் " வியட்நா ம் வீடு " படத்தை வாங்கி டிசிட்டலில்? வெளியிட்டு சாரு இப்போ எங்கே இருக்காரோ தெரியவில்லை,

இப்படி முன்பு பட்டை மீசை வைத்துக்கொண்டு திரிந்த ஒருவர் " பாசமலர் " படத்தை வெளியிட்டு அந்த மனுஷனும் படத்தில் வரும் சாவித்திரியை விட அதிகம் கண்ணீர் சிந்தியதாக கேள்வி?

இவனுங்க லட்சணத்தில் " அன்பே வா" டிஜிட்டல் படத்தைப் பற்றி விமர்சனம் வேற,

அன்பே வா தமிழகம் முழுக்க 150 திரை அரங்குகளுக்கு மேல் வெளியிட்டு அதுவும் திருப்பூர் போன்ற ஒரு சில இடங்களில் 25 நாளையும் வெற்றிகரமாக கடந்து ஒரே வாரத்தில் போட்ட காசை விட பலமடங்கு அள்ளி விட்டார் கந்தசாமி,

படம் டிஜிட்டல் செய்தது சரியில்லை என்று தலைவர் ரசிகர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பவும் Redigital செய்து கொரோனா முடிந்ததும் படத்தை வெளியிட உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் போண்டா மணி மற்றும் சில அல்லக்கைங்க,

Youtube இல் கூட எங்கு பார்த்தாலும் தலைவர் பற்றிய காணொளிகள் அப்படியே நிறைந்து கிடக்கிறது ( தலைவரை விமர்சிப்பதாக நினைப்பவன் கூட தலைவர் போட்டோ போட்டுத்தான் காசு பார்க்கிறான் )

தயாரிப்பாளர் கலைஞானம் சொல்கிறார் " மிருதங்க சக்கரவர்த்தி " படத்துக்கு கே. எஸ் கோபாலகிருஷ்ணன் 5 லட்சம் சம்பளம் கேட்டார் என்று சொல்லிவிட்டு ( சிவாஜியை விட இரண்டு மடங்கு சம்பளம் கூட கேட்டிருக்கிறார் )
அவர் சொல்லும் வார்த்தை இது " அப்போ எம்ஜிஆர் படம் டைரக்ட் செய்யும் டைரக்டரா அது வேற லெவல் சம்பளம் கொடுக்கணும் "

எங்க ஊரு சுசீந்திரம் சுப்பையா பிள்ளை கதையை எடுத்து அதில் சிவாஜி காட்டிய அங்க சேட்டைகளை பார்த்தால் உண்மையான தவில் வித்வான்கள் தவில் வாசிப்பதையே மறந்து விடுவார்கள்,

அதில் பட்ட லேசான காயத்துடன் தப்பிக்காமல் குறைந்த சம்பளம்தானே என்று மீண்டும் அய்யனை வைத்து " ராஜரிஷி " எடுத்து போர்வையை மூடி படுத்த கலைஞா னத்தை மீண்டும் வாழ்வளித்து நிமிர வைத்தது தலைவரின் கலையு லக வாரிசு பாக்கியராஜ் அவர்கள்,

அவரே காணொளி வெளியிட்டுள்ளார்,
இந்த சமையல் கட்டில் தூங்கும் பூனைகள் பார்க்கட்டும்,

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சித்ரா லட்சுமணன் அவர்களும் தலைவர் வாழ்க்கை வரலாறை சொல்லி views அள்ள ஆரம்பித்து விட்டார்,
கூடவே தலைவரின் திரை சாதனைகளை விலாவாரியாக சிலா கித்து சொல்கிறார் ( இவ்வளவுக்கும் கொஞ்ச காலம் சிவாஜி ரசிகர் மன்ற பத்திரிக்கை நடத்தியவர் சித்ரா )

இந்த பக்கத்தை பார்த்தால் யாருன்னு தெரியல " சிவாஜி முரசு " நேயர்களே அப்படீன்னு நல்ல காமெடியா தொடங்குவாரு ஒரு ஆள், அதை கேட்டால் யாருக்கும் சிரிப்பு வரும், அந்த வகையில் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி,

சில வருடங்களுக்கு முன் தினமலரில் " செலூலாய்டு சோழன் " தொடர் எழுதிய தற்சமயம் மறைந்து போன திரு. சுதாங்கன் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் " எம்ஜிஆர் படம் தோல்வி என்று சொன்னால் அந்த படத்தின் வசூல் என்பது மற்ற நடிகர்களின் மிகப்பெரிய வெற்றிப்படம் என்னும் படங்களின் வசூலுக்கு சமம் என்று விநியோகஸ்தர்கள் சொல்வார்கள் "

இதை சொல்லிவிட்டு சுதாங்கன் சொல்கிறார் வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட " மன்னவன் வந்தானடி " படமும் "அவன்தான் மனிதன் படமும் உண்மையில் தோல்விப் படங்கள் "

இதைப் படித்து விட்டு "மய்யம் " இணைய தளத்தில் அவருக்கு வண்டை வண்டையாய் கணேசன் குஞ்சுகள் அர்ச்சனை செய்தார்கள்,

இப்போது போண்டா ஒரு பதிவு போட்டிருக்கிறார்

"எம்ஜிஆர் படங்கள் B&C யில் எப்போதும் வசூலை அள்ளுவதாக சினிமா ஆவணங்கள் எல்லாவற்றிலும் சரி, இப்போது வெளியிடுகின்ற புத்தகங்களிலும் சரி அடித்து சொல்கிறார்கள் என்று வேதனைப் பட்டிருக்கிறார்,

என்ன செய்ய உண்மையை உன்னைப் போன்ற ஒரு நாலு அவதாரங்கள் சிவாஜி அப்படி சிவாஜி இப்படி என்று எழுதினால் என்ன ஆகப்போகுது ( உங்களையெல்லாம் நினைத்து பரிதாபம்தான் ஏற்படுகிறது )


கூடிய சீக்கிரம் சிவாஜி ரசிகனாக இருந்த, உங்களுக்கெல்லாம் நிறைய தகவல்கள் தந்த ஒருவர் " The World Box Office Emperor Makkal Thilagam M. G. R. " என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார்.



தலைவரின் பக்தன்...



ஜே. ஜேம்ஸ்வாட்!.........(J.JamesWatt)

orodizli
13th February 2021, 08:27 AM
��mgr முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.
��காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார்.
அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது.
��உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை.
��மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார்.
�� பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது
��. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட பொன்மனம் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
�� திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார்.
����மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை.
��கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார்
��#எட்டாவது_அதிசயம்_எம்ஜியார். செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடப்பிலும் வாழ்ந்தார் வாத்தியார்...இன்றய நடிகர்களுக்கு சமர்ப்பணம் இந்த பதிவு #வாழ்க_எம்ஜியார்_புகழ் .....
��இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...��������

orodizli
14th February 2021, 10:38 AM
தான் காதலித்த தமிழ்மொழியின் சிறப்பினை, இனிமையை உலகமெல்லாம் அறிய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை 1981 ஆம் ஆண்டு மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதுவே உலகத் தமிழ் மாநாட்டிலேயே தலைசிறந்த முதல் மாநாடாக என்றென்றும் திகழ்கிறது. பாரதி கண்ட புதுமை தமிழும் இவரே. தமிழ் தாய் பெற்றெடுத்த முதல் தலைமகனும் இவரே.தமிழ் மொழியின் சிறப்பை உலகம் அறிய தமிழறிஞர் மன்றம் ஒன்றை நிறுவ, யாம் முயற்சி எடுத்துள்ளோம் என்பதை ராஜராஜன் திரைப்படத்தில் எம்ஜிஆர் சொல்லுவார். அதுபோல் நடத்திக் காட்டிய ஒரே பச்சை தமிழன் எம்ஜிஆர் தான். இப்படி எல்லா திரைப்படங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களை அருமையாக எடுத்துக்காட்டிய ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். இப்படி எத்தனையோ எண்ணற்ற சேவைகள் தமிழுக்காக எம்ஜிஆர் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவியவர் எம்ஜிஆர். இது சாதாரணமானதல்ல. இன்று அதே தமிழ் பல்கலைக்கழகத்தில் தான் உலகத் தமிழ் ஆராய்ச்சிகள் அத்தனையும் செய்யப்படுகிறது. தாய் தமிழை போற்றி வணங்கிய தாய் மனம் கொண்ட தேவன் எம்ஜிஆரை என்னாலும் போற்றி அவர் வழி நடப்போம்....Mnkr

orodizli
14th February 2021, 10:39 AM
*"அன்பே வா" ������*
The 1961 American romantic comedy film *Come September* was adopted by A.C
Trilogchander... screenwriter for AVM Productions, for the screenplay of Anbe Vaa.

Tirulokchandar's salary was ₹ *70,000.*

Aaroor Dass wrote the film's dialogues and S. P. Muthuraman worked as an assistant director. S.
*Maruti Rao, R. G. Gope* and *A. K. Shekar* were in charge of the cinematography, editing, and art direction, respectively. *A. K. Chopra* was in charge of the film's choreography
and *Raghuram* , who later went on to become a successful choreographer in Indian cinema, worked as an assistant choreographer to him. *S.P.முத்துராமன் -* Asst.Director.

Ramachandran gave a call sheet of 72 days. MGR's Salary was
₹ *325,000.(* MGRன் வயது 48).
Final expenses for making this film was
$ *6 Million dollars.*
The exchange rate in 1966 was 4.79 Indian rupees (₹) per 1 US dollar (US$).
The sound effect of the horses' footfall in "Rajavin Paarvai" was created by *Meesai* *Murugesan.* The song " *Once A Pappa"* belongs to Baila, a Sri Lankan musical genre.

*Lead actors*
M. G. Ramachandran as J. Balasubramaniam (JB/Balu)
B. Saroja Devi as Geetha

*Male supporting actors*
S. A. Ashokan as Sekar
Nagesh as Ramaiah
T. R. Ramachandran as Punyakodi
P. D. Sambandam as Krishnaiah

*Female supporting actors*
Manorama as Kannamma
T. P. Muthulakshmi as Pappamma
Madhavi as Mary
M. S. S. Bhagyam as Govindhammal.

Famous writer " *சாவி"* acted as an extra in the song " புதிய வானம், புதிய பூமி".
MGR recommended J. *Jayalalithaa* for the role of the female lead Geetha, but it eventually went to B. Saroja Devi.She was paid ₹ *90,000* for acting in the film.Her *costume design* was done by the Anna Salai-based *Indian* *Silk House.*
As of February 2010, the costumes that Ramachandran used in the film are still preserved at AVM Studios. As of 2017, the MGTB car driven by Ramachandran in the film is preserved at the Madras Heritage Club's Vintage cars display. In August 2016, the *Studebaker* President car driven by Saroja Devi in the film was on display at the 14th annual exhibitions held at Don Bosco Matriculation Higher Secondary School, Chennai.
Anbe Vaa attained cult status in Tamil cinema,and was one of the first South Indian films to be shot in Shimla.
1966 முதல் இன்றுவரை "அன்பே வா" ஏறத்தாழ
₹ 1400 கோடிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்.
MSV வெளியிட்ட வட்ட வடிவிலான ( CD Shaped) *LP Vinyl Record* ஒன்றின் இன்றைய விலை Rs.8000.
அன்று.. *மதுரை தங்கம்* Theatreல்( seating capacity: 3000), " அன்பே வா" *House Full* ஆக ஓடியது...ஒரு.. unbreakable Record.
^^^^^^^^^^^^^^^.........Kri.Mur

orodizli
14th February 2021, 10:40 AM
புரட்சித்தலைவர்
#மக்கள்_திலகம்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுக்கிழமை_காலை_வணக்கம்...

புரட்சி தலைவர்வரின் திரைப்படங்கள்
பற்றிய இந்த தொடரில் நேற்று புரட்சி தலைவர் கதையின் நாயகனாக நடித்த
ராஜகுமாரி திரைப்படம் பற்றி பார்த்தோம்
கதாநாயகனாக நடித்த போதும் அதன் பிறகு மீண்டும் கதாநாயகன் வேடம் பெரிதும் தேடி வரவில்லை அதற்கு பதிலாக கதாபாத்திரம் வேடம் தான் வந்தது தனது 15வது படத்தில் கதாநாயகனாக நடித்த பின்பு மீன்டும்
தனது 21வது படத்தில் தான் கதாநாயகனாக நடித்தார் அதற்கு இடைப்பட்ட காலத்தில்
பைத்தியகாரன்,அபிமன்யு, ராஜமுக்தி, மோகினி, ரத்னகுமார் போன்ற படங்களில் குடும்ப சூழ்நிலை காரணமாக நடித்தார்...

#மருதநாட்டு_இளவரசி’ – புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஹீரோ அங்கீகாரம் தந்த திரைப்படம்
அதை பற்றி இன்று பார்ப்போம்..!

சற்று நீண்ட பதிவாக இருக்கும் ஆதலால் மன்னிக்கவும் முடிந்த வரை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று தான் இந்த பதிவு ஆனால் இந்த படத்தில் இருந்து தான் புரட்சி தலைவர் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது அதனால் படத்தை பற்றி பல செய்திகள் சொல்லியாக வேண்டும் என்பதால்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு.

இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக உயர்ந்து விளங்குகிறார்.

தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராத நிலையில், ஹீரோவாக நடிப்பதைத் தொடர்வதா வேண்டாமா என்று அவர் குழம்பிய தருணமது. அந்தக் காலகட்டத்தில் அவரது திசையைத் தீர்மானித்த திரைப்படங்களில் முதன்மையானது ‘மருதநாட்டு இளவரசி’.

அதன்பின்னர் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே என்று பல சூப்பர்ஹிட்களை அவர் தருவதற்கு அடித்தளமிட்ட படமும் இதுதான்.

கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்தபிறகு, எம்ஜிஆர் தனக்கான பார்முலாவை வகுத்துக் கொண்டார். அதில் சிறுதுளி மருதநாட்டு இளவரசி திரைப்படத்திலேயே தெரியும்.

1937இல் ‘சதிலீலாவதி’ திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து தன் திரை வாழ்வைத் துவக்கினார் புரட்சி தலைவர் எம்ஜிஆர். அதன்பின்னர் தக்*ஷயக்ஞம், மாயா மச்சீந்திரா உட்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

இடைப்பட்ட காலத்தில் ‘சாயா’ என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்து அது பாதியிலேயே கைவிடப்பட்டது.

சிறு வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது.

சாயாவின் இயக்குனராகப் பணியாற்றிய நந்தலால், ‘தொழிலை நேசித்துச் செய், எந்த நேரத்திலும் அது உன்னைக் கைவிடாது’ என்று அப்போது எம்ஜிஆருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு, அதனை ஒருபோதும் தலைவர் மறக்கவில்லை.

ஒருவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாதியில் நின்றுவிட்டால் மற்றொரு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த காலமது.

(தினமலர் வாரமலர் இதழில் வெளியான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர்.)

நாயகனாக நடித்தபிறகு குணசித்திர வேடம், வில்லன் பாத்திரம் போன்றவற்றில் நடிப்பது அக்காலத்தில் சகஜமான விஷயமல்ல
தனக்கு உடன்பாடில்லாத போதும், குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பல படங்களில் சிறுவேடங்களில் தலைகாட்டினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் நாயகனாக நடிக்கப் பேருதவி செய்தவர் இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பின்னாட்களில், அவரது இசையமைப்பில் மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே உட்படப் பல படங்களில் எம்ஜிஆர் பணியாற்றினார்.

மீண்டும் கதாநாயகனாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் நாயகன் ஆவதற்குத் துணை புரிந்தன மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘மந்திரிகுமாரி’ மற்றும் ஜி.கோவிந்தன் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘மருதநாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்கள்.

இவ்விரண்டிலும் தனது சிறப்பம்சம் என்னவென்று வெளிக்காட்டினார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.

எம்ஜிஆரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து படம் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை பட அதிபர்களிடம் ஏற்படுத்திய திரைப்படம் ‘மருதநாட்டு இளவரசி’.

‘நான் ஏன் பிறந்தேன்’ நூலில், தன் திரையுலக வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களில் இரண்டாவதாக இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர். அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.

‘மந்திரிகுமாரி’ திரைப்படம் மு.கருணாநிதியின் எழுத்தில், எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்தது.

அதே நேரத்தில், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தயாரானது ‘மருதநாட்டு இளவரசி’.

வாள் சண்டையிடுவது, கேமிரா நோக்கி வசனம் பேசுவது, திரையில் காதலைப் பொழிவது என்று அக்காலத்து நாயகர்களுக்கான இலக்கணங்களை இப்படத்தில் பூர்த்தி செய்தார் எம்ஜிஆர்.

#மருதநாட்டு_இளவரசி_படத்தின்_கதை #இதுதான்.

குறிஞ்சி நாட்டு மன்னருக்கு சிங்காரி, சித்ரா என்று இரண்டு மனைவிகள். சிங்காரியின் வாரிசை அரியணையில் அமர வைக்க, அவரது சகோதரர் துர்ஜயன் சித்ராவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.

இதனை அறிந்து அரண்மனையை விட்டு வெளியேறும் சித்ரா, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அக்குழந்தையை அவர் பிரிகிறார்.

கார்மேகம் என்பவரிடத்தில் காண்டீபன் எனும் பெயரில் வளர்கிறது சித்ரா பெற்றெடுத்த குழந்தை.

25 ஆண்டுகள் கழித்து, மருத நாட்டுக்குத் தன் நண்பனுடன் செல்கிறார் காண்டீபன். அந்நாட்டின் இளவரசி ராணியைச் சந்திக்கிறார்.

சாதாரண பிரஜையாக காட்டிக்கொள்ளும் ராணிக்கும் காண்டீபனுக்கும் இடையே காதல் மலர்கிறது.

இதனிடையே, மருதநாட்டு இளவரசியை குறிஞ்சி நாட்டு இளவரசன் ரவுத்திரனுக்கு மணமுடிக்கத் திட்டமிடுகிறார் துர்ஜயன். அவரது சதியை முறியடித்து, ராணியின் கைபிடிக்கிறார் காண்டீபன்.
அவர்தான் குறிஞ்சி நாட்டின் உண்மையான வாரிசு என்று தெரிய வருவதுடன் படம் முடிவடைகிறது.

படம் ஓடத் தொடங்கி 27 நிமிடங்களுக்குப் பின்னரே புரட்சி தலைவர் எம்ஜிஆரின் அறிமுகம் நிகழ்வது, அக்காலத்தில் முன்கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆனாலும், பின்பாதி முழுக்க நம் தலைவர் எம்ஜிஆர் ராஜ்ஜியம்தான்.

வழக்கமான அரச கதை என்றாலும், அழகு தமிழில் அமைந்த வசனங்கள் தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றன. அதற்கேற்றவாறு வசனங்களை தெளிவாக உச்சரித்து நடித்திருந்தனர் மருதநாட்டு இளவரசியில் நடித்த நடிகர் நடிகைகள்.

எழுச்சியூட்டும் வசனங்களைக் கூட இயல்பாக வெளிப்படுத்தித் தனது நடிப்பு பாணி வேறு என்று உணர்த்தினார் எம்ஜிஆர். தன் ஆதர்சமாக எம்.கே.ராதா போன்ற நாயகர்களை அவர் போற்றியதும், ஹாலிவுட் திரைப்படங்களின் மாபெரும் ரசிகனாகத் திகழ்ந்ததும் கூட இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம்.

புளிமூட்டை ராமசாமியை இளவரசன் ரவுத்திரனாக நடித்தவர் தாக்க, அதனைத் தடுக்கும் எம்ஜிஆர் ‘யாராவது தும்மினால் துள்ளிவிழுவது அவனது பிறவிக்குணம்’ என்பார். இதுவே இப்படத்தில் அவரது முதல் வசனம்.

பாகவதர் டைப் தலைமுடி, ஸ்லிம்மான உடல்வாகு, இயல்பான உடல்மொழி என்று வித்தியாசமான எம்ஜிஆரை இதில் பார்க்க முடியும். தனக்கென்று தனி பாணியை கைக்கொண்ட பிறகு, அவர் இம்மூன்றையும் துறந்தார்.

ராஜகுமாரி (1947), அபிமன்யூ (1948) படங்களுக்குப் பின் மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி படங்களில் கருணாநிதியின் வசனங்களைத் திரையில் ஒலித்தார் எம்ஜிஆர்.

இதே காலகட்டத்தில் கருணாநிதி கைவண்ணத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி வசனம் பேசியதற்கும், இப்படங்களில் எம்ஜிஆர் வசனங்களை உச்சரித்த பாங்கிற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

நாடக மேடை அனுபவம் உண்டு என்றாலும், சினிமா எனும் கலையின் நுட்பத்தைத் தனக்கேற்ற வகையில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வரித்துக் கொண்டார்.

இந்த வித்தியாசம்தான் எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் சிகரங்கள் தமிழ்த் திரையின் போக்கைத் தீர்மானிக்கக் காரணமாக அமைந்தது
என்றால் அது மிகையாகாது. .

திரையில் மலர்ந்த கொள்கைகள்!
“மக்கள் எல்லோரும் சமமாக வேணும்; ஏற்றத்தாழ்வு மறைந்தாகணும்” என்று தொடங்கும் பாடலில் சமூகநீதி தொடர்பான பல்வேறு கருத்துகள் மருத நாட்டு இளவரசி படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், தான் குறிஞ்சி நாட்டு இளவரசன் அல்ல என்றும், அந்நாட்டு மக்களின் தலைவன் என்றும் அவர் பேசும் வசனம் இடம்பெற்றிருக்கும். தனது திரைப்பாதை எதுவென்று அறியாத நிலையில், அவர் இவ்வாறு நடித்தது நிச்சயம் ஆச்சர்யம்தான்.

பிற்காலத்தில் தன் படங்களில் இது போன்ற கருத்துகள் இடம்பெறுவதை எம்ஜிஆர் வழக்கமாக்கிக் கொண்டார் என்பதே இதன் சிறப்பைப் பறைசாற்றுகிறது.

மருதநாட்டு இளவரசி டைட்டில் காட்சியில் எம்.ஜி.ராம்சந்தர், வி.என்.ஜானகி என்றே இருவரது பெயர்கள் இடம்பெற்றன.

எம்ஜிஆர் என்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அக்காலத்தில் தன் பெயர் இடம்பெற அவர் விரும்பவில்லை. காரணம், அந்த காலத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் புகழ்வாய்ந்த நடிகராய்த் திகழ்ந்தார்.

ராமச்சந்திரன் என்ற பெயரில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் இன்னொருவர்.

எனவே, தனது பெயர் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று ராம்சந்தர் என்று மாற்றிக்கொண்டார் புரட்சி தலைவர் எம்ஜிஆர். ராஜகுமாரி தொடங்கி கூண்டுக்கிளி வரை இது தொடர்ந்தது.

‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்தே அவரது பெயர் எம்.ஜி.ராமசந்திரன் என்று டைட்டிலில் இடம்பெறலானது.

ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் ஆகிய படங்களில் ஜானகி அம்மையாரும் எம்ஜிஆரும் இணைந்து நடித்துள்ளனர். எம்ஜிஆர், அவரது சகோதரர் சக்ரபாணி, கருணாநிதி உட்படச் சிலர் இணைந்து ‘நாம்’ படத்தைத் தயாரித்தனர்.

இப்படத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஜானகி அம்மையார். 1962ஆம் ஆண்டு ஜானகி அம்மையாரைத் திருமணம் செய்தார் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.

மகாதேவி உட்பட எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. கட்டுடலும் கரகரப்பான குரலும் மிரட்டும் கண்களும் தெளிவான உச்சரிப்பும் இவரது சிறப்பு.

இப்படத்தில் குறிஞ்சி நாட்டு மன்னராக நடித்திருந்தார் வீரப்பா.

பத்மினியின் ஸ்லிம் தோற்றம்!

இப்படத்தின் தொடக்கத்தில் வரும் ‘வீரத்தாயைப் பணிவோம்’ பாடலின் நடனக் காட்சியை வடிவமைத்தவர் காமினிகுமார் சின்ஹா. இப்பாடலில் லலிதா, பத்மினி இருவரும் தோன்றி நடனமாடியிருப்பர்.

ஸ்லிம் அழகுடன் பத்மினி தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று.

மைசூரிலுள்ள நவஜோதி ஸ்டூடியோவில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.

இப்படத்தில் எம்.எம்.மாரியப்பா, பி.லீலா, கே.வி.ஜானகி ஆகியோர் பாடல்களைப் பாடினர். ‘நதியே நீராழி’, ‘இந்த இன்பமே தந்த பைங்கிளி’ பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இருக்கும் என எண்ணுகிறேன்... ஏனென்றால் இப்போது கேட்க்கும் போதே பாடல் மனதில் பதிகின்றதே...

சிறைபிடிக்கப்பட்ட ஜானகியை மீட்டுவர, எம்ஜிஆரும் சி.கே.நாகரத்னமும் நடனமாடும் காட்சியொன்று உண்டு. அந்த இடத்தில் பாடலுக்குப் பதிலாக வெறும் இசை மட்டுமே இடம்பெற்றிருந்தது இப்போதும் நம்மைக் கவரும்.

மந்திரிகுமாரி, மர்மயோகி பெற்ற வரவேற்பை, மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மருதநாட்டு இளவரசி திரைப்படம் பெறவில்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
ஆனால், எம்ஜிஆரை நாயகனாக வைத்துப் படமெடுக்கலாம் என்ற எண்ணத்தைப் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியது இத்திரைப்படம்.

‘பராசக்தி’ திரைப்படம் சிவாஜி என்றொரு சகாப்தத்தை அடையாளம் காட்டுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மற்றொரு சக்தியாக மாறிய எம்ஜிஆரை அடையாளம் காட்டிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ‘மருதநாட்டு இளவரசி’.

படத்தின் பெயர்: மருதநாட்டு இளவரசி, தயாரிப்பு: கோ.கோவிந்தன், படத்தொகுப்பு, சீனாரியோ,
இயக்கம்: காசிலிங்கம்,
கதை, வசனம்: மு.கருணாநிதி
கலை இயக்கம்: ஓ.ஆர்.எம்பாரய்யா, பாடல்கள்: சி.ஏ.லட்சுமணதாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம்,
இசை: எம்.எஸ்.ஞானமணி,
ஒளிப்பதிவு: ஜி.துரை,
ஒலிப்பதிவு: வி.சி.சேகர்,
லாபரட்டரி: கே.சீதாராம்,
பிராசஸிங்: ஹரிகிருஷ்ணன்.

நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, புளிமூட்டை ராமசாமி, சி.கே.சரஸ்வதி மற்றும் பலர்.

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........

orodizli
14th February 2021, 10:41 AM
"நாடோடி மன்னனி"ன் வெற்றி அய்யனையும் கைஸ்களையும் நிலைகுலைய வைத்தது எனலாம்.
அடுத்து தலைவர் நடித்த சமூகப்படம் சரியாக போகவில்லை என பரவலாக பேச்சு எழுந்ததும் அய்யன் சற்று ஏளனமாக அண்ணே சரித்திரப் படத்தில் நடிப்பதை விட்டு விட்டு சமூகப்படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பொதுவான இடத்தில் கேள்வி கேட்டதும் தலைவருக்கு சங்கோஜமாகி விட்டது.

உடனே அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க முனைந்தார். அதுதான் சின்ன அண்ணாமலை தயாரிக்க "திருடாதே" படம் உருவான விதம்.. வெறும் 7000 ரூ வைத்து தொடங்கப்பட்ட படம், எம்ஜிஆர் கால்முறிவினால் படப்பிடிப்பு தாமதமானதும் பைனான்ஸ் பிரச்சினையில் படம் தேக்கமடைவதை விரும்பாத எம்ஜிஆர் படத்தை a l s க்கு விற்று சின்ன அண்ணாமலையை பைனான்ஸ் சிக்கலில் இருந்து மீட்டு
மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் போது சரோஜாதேவி மிகவும் பிஸியான நடிகையாகி நிறைய படங்களில் கமிட் ஆகியிருந்தார்.

ஒரு சில நேரங்களில் சரோஜாதேவியின் கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து நடித்துக் கொடுத்தார். அதன் பின்னர்தான் எதிர்காலத்தில் இப்படியொரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் நடிகைகளை முதல் படத்தில் புக் பண்ணும் போதே 5 வருட காண்ட்ராக்ட்டில் கையெழுத்து வாங்கினார்.

அதில் மஞ்சுளா தீயசக்தியின் மேற்பார்வையில் காண்ட்ராக்ட்டுக்கு துரோகம் செய்தார். ஆனால் லதா நல்ல ஒத்துழைப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டு நீண்ட நாள் தலைவரின் நாயகியாக வலம் வந்தார். "திருடாதே" மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எளிமையான முறையில் சமூக நீதியை போதித்து எந்த வித நட்சத்திரப்பட்டாளமும் இல்லாத சூழலில் வெற்றிக் கனியை சுவைத்ததுடன் விநியோகஸ்தர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை தந்தது.

ஆனால் "திருடாதே" கூட வந்த அய்யனின் நட்சத்திரப்பட்டாளம் நிறைந்த படத்தை சொந்தத் தியேட்டரில் வெள்ளி விழா ஓட்டினாலும் "திருடாதே" வசூலை எட்டிப்பிடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறியதை விநியோகஸ்தர்கள் போட்டு உடைத்து விட்டனர்.

அய்யன் படத்தின் வெற்றி என்ற மாயக்கோட்டை தகர்த்து வெள்ளிவிழா ஓடாவிட்டாலும் "திருடாதே" படத்தின் வெற்றி திக்கெட்டும் பரவியதால் எம்ஜிஆரின் மார்க்கெட் எங்கோ பறக்க ஆரம்பித்தது. அய்யன் மீண்டும் நட்சத்திரப் படடாளங்களை கூட்டணி அமைத்தாலும் எம்ஜிஆர் என்ற தனிமனித சக்தியை வெல்ல முடியாததால் குறுக்கு வழியில் படத்தை ஓட்ட ஆரம்பித்து வெற்றி என பொய்முகம் காட்டினர்.

1961 ல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை "திருடாதே" பெற்றது. அடுத்த இடத்தில் "தாய் சொல்லை தட்டாதே" பெற்றதுடன் கூட வந்த தேச பக்தி படத்தை தோல்வியடையச் செய்தது சற்று வருத்தத்தை தந்தாலும் அது நம் தவறல்ல. தவறான நேரத்தை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளரின் தவறு. இருப்பினும் அந்த நேரத்தில் சுமார் 7 லட்ச ரூபாயை சேதம் செய்து விட்டது.

எளிமையான படஜெட்டில் எடுக்கப்பட்ட "திருடாதே" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" போன்ற சமூகப் படத்தின் வெற்றி பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் நடித்த அய்யனின் பெரிய பட்ஜெட் படங்களை ஓட ஓட விரட்டியது. தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்பதை "திருடாதே" சமூகப்படத்தின் வெற்றியின் மூலம் நிரூபித்து காட்டினார் மக்கள் திலகம் தாய் சொல்லை தட்டாதே தொடர்ந்து 100 காட்சிகள் hf ஆக ஓடியது. ஆனால் அய்யனின் வெள்ளி விழா படங்கள் தொடர் hf ஆனதில்லை.
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அய்யன் படங்களின் வெற்றியின் ரகசியத்தை..........ksr.........

orodizli
14th February 2021, 10:43 AM
#ஐ #லவ் #யூ #வாத்தியாரே

Happy Valentine's Day Wishes

காதலுக்கு வயது தடையல்ல..
ஏனெனில் 'காதல்' என்பது வயதைப் பற்றிய விஷயமல்ல. மனதைப் பற்றிய விஷயம்...

இந்த ரீதியில் நன்கு ஆராய்ந்தோமானால் நம் புரட்சித்தலைவனே காதல் தலைவனாகிறான்...
ஏனெனில் மனதையும், வயதையும் கடைசி வரை கட்டுக்குள் வைத்திருந்தவர் நம்ம வாத்தியார் தாங்க...

திரைப்படத்துறையில்
காதல் மன்னன் ஜெமினி கணேசன் முதல்
காதல் இளவரசன் கமல் வரை கடைசி வரை... அதாவது ஒரு லெவலுக்கு மேல் காதல் காட்சியில் பரிமளிக்க முடியவில்லை. அவர்களின் உடல்வாகும், வயோதிகமும் காரணங்களாக இருக்கலாம். இனிமேல் காதல் காட்சியில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்ற லேசான அச்சமும், தன்னம்பிக்கையும் கூட காரணங்களாக இருக்கலாம்...

ஆனால் எதற்குமே அசராமல், வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருப்கும் போதும் மிகவும் துடிப்பாக காதல் காட்சியில் பட்டையைக் கிளப்பியது நம்ம வாத்தியார் தாங்க...! யாராவது மறுத்துச் சொல்லமுடியுமா ???

எந்த அளவு உடலையும் வயதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்னு நான் சொல்லத் தேவையில்லை.
60 வயதில் காதல் காட்சியில் நடிப்பதற்கு எந்த அளவு துணிவும், தன்னம்பிக்கையும் வாத்தியாருக்கு இருந்திருக்கு பாருங்க..(இந்த தில் உலகத்துல வேற யாருக்கு இருக்கமுடியும்???)

இதில் ஹைலைட் என்னன்னா...ரசிகர்களும் ஏகோபித்தமாக ஆதரிச்சாங்க வாத்தியாரை...

தனது ஆரம்பகால படங்களிலுள்ள காதல் காட்சிகளை விட தனது கடைசி கட்ட திரைப்படங்களில் தான் காதல் காட்சிகளில் உற்சாகமாகவும், ஹைஸ்பீடாகவும் தூள் கிளப்பியிருப்பார்...

உதாரணத்திற்கு,
உரிமைக்குரல், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், இதயக்கனி, நேற்று இன்று நாளை, உ.சு.வா, நாளை நமதே போன்ற திரைப்படங்களில் (பட்டியல் நீளும்) காதல் காட்சிகளில் வாத்தியார் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருந்ததுன்னு நா சொல்லவா வேணும்...

வாத்தியாரே
வீரத்துக்கும் நீ தான்
காதலுக்கும் நீ தான்

இந்த உலகத்துல "#வாலன்டைன்ஸ் #டே #கதாநாயகன்னு " சொன்னா அது நீ ஒருத்தரு தான் வாத்தியாரே.........BSM...

orodizli
15th February 2021, 07:35 AM
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_திங்கட்கிழமை #காலை_வணக்கம்...

புரட்சி தலைவர் அவர்களின் திரைப்படங்களின் திரை வரிசையில் மூன்றாவது முறையாக கதையின் நாயகனாக நடித்த ஒரு மாபெரும் வெற்றி சித்திரம் பற்றி இன்று பார்ப்போம்...

அந்த வெற்றி சித்திரம் தான்
மந்திரி குமாரி மருதநாட்டு இளவரசி படத்திற்கு பிறகு எடுக்கபட்ட ஒரு வெற்றி காவியம் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் 22 வது திரைப்படம்..

மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது குண்டலகேசியைத் தழுவி
மு.கருணாநிதி எழுதிய ஒரு நாடகமாகும். நாடகத்தைப் பார்த்த படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அதைப் படமாக்க விரும்பி, அதற்குத் திரைக்கதை, வசனத்தை
மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து தயாரித்தார்.
எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இயக்கம்
எல்லிஸ் டங்கன்
டி. ஆர். சுந்தரம்
கதை
மு. கருணாநிதி
நடிப்பு
எம். ஜி. இராமச்சந்திரன்
மாதுரி தேவி
எம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. சகுந்தலா
வெளியீடு
1950

தளபதி வீரமோகனாக தலைவர் எம்.ஜி.ஆர் ,ராஜகுருவாக நம்பியாா், கொள்ளையன் பாா்த்திபனாக எஸ்.ஏ.நடராஜன், இளவரசி ஜீவரேகாவாக ஜி.சகுந்தலா ஆகியோா் நடித்திருந்தனா். மந்திாிகுமாாி அமுதவல்லியாக மாதுாிதேவி நடித்திருந்தாா்.

இந்த படத்தில் முக்கிய வசனங்கள் இடம்பெற்றது அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

ராஜகுரு கொள்ளையனாகிய தமது மகன் பாா்த்திபனிடம் 'கொள்ளையடிப்பது கலையா?' என ஆச்சாியமும் அதிா்ச்சியுமாக கேட்கிறாா். பாா்த்திபன் அதற்கொரு விளக்கம் அளித்து தனது செய்கைகளை நியாயப்படுத்தி விளக்கமளிக்கிறான்.
ராஜகுரு: அழகான விளக்கம்! உன் கலை ஆா்வம் உன் தலையை அறுப்பதாயிருந்தால்?
பாா்த்திபன்: என் கலைக்காக தியாகம் செய்தவனாவேன்.

அமுதவல்லி: மரணம்- நான் அணைத்து மகிழ்ந்த பொன்னுடலுக்கா? என் இதயத்திலே இலட்சம் தீபங்களை ஏற்றி வைத்த தங்கள் இன்னுயிருக்கா? முடியாது, முடியவே முடியாது. பாா்த்திபன்: நீ என்ன சாவித்திாியா, சபதம் செய்கிறாய்? இந்தக் காலத்து யமன் இளிச்சவாயனல்ல..

இந்த வசனங்கள் இன்றும் கை கொட்ட வைக்கின்றது...

கதைச்சுருக்கம் காண்போம்..
முல்லை நாட்டின் அரசர் ராஜ குருவின் (எம்.என்.நம்பியார்) சொல்படி நடப்பவர். குருவின் மகன் பார்த்திபன் (எஸ்.ஏ. நடராஜன்) முல்லை நாட்டின் தளபதி ஆக வேண்டும் என்று குரு ஆசைப்பட்டார். மாறாக, வீர மோஹனை தளபதியாக (எம். ஜி. ஆர்) நியமனம் செய்தார் அரசர். அதில் கோபமுற்ற பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை (ஜி. சகுந்தலா) பார்த்திபன் மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோஹனை விரும்பினாள். பார்த்திபன் தன்னை சந்திக்க ஜீவரேகாவிற்கு ரகசிய தூது அனுப்பினான். அந்த தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை (மாதுரி தேவி) சென்றடைந்தது. அவளும் பார்த்திபனை பார்க்கச்செல்ல, இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் பார்த்திபன் அமுதவல்லியை இன்பத்திற்காக மட்டும் பயன்படுத்தினான்.

இந்நிலையில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முல்லை நாட்டு அரசர் வீர மோஹனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். கோபமடைந்த ராஜ குரு தன் மகனை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிக்கிறார். பெண்தெய்வத்தின் முன் வாதிடுகிறார் ராஜகுரு. அப்போது, அச்சிலையின் பின்னால் ஒளிந்திருந்த அமுதவல்லி, பார்த்திபன் நிரபராதி என்று கூறுகிறாள். அது தெய்வத்தின் குரல் என்று நம்பிய அமுதவல்லியின் தந்தை மந்திரி, பார்த்திபன் நிரபராதி என்று அவரும் கூறிவிடுகிறார். ராஜ குருவுடனும், மந்திரியுடனும் அரசர் கலந்து ஆலோசித்து, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோஹனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார். பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான். வீர மோஹனுடன் ஜீவரேகாவும் சென்றுவிடுகிறாள்.

பார்த்திபனை திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது வழிப்பறியில் ஈடுபடுகிறான் பார்த்திபன். வீரமோஹனை தாக்கி, ஜீவரேகாவை கடத்திவிடுகிறான் பார்த்திபன். அமுதவல்லி தன் கணவரை மாறுவேடத்தில் பின்தொடர்ந்து சென்று, ஜீவரேகாவை காப்பாற்றுகிறாள். அதனால், அமுதவல்லியை கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்கு அழைத்து செல்கிறான் பார்த்திபன். மாறாக, அமுதவல்லி பார்த்திபனை தள்ளி கொன்று, ஒரு புத்தமத துறவியாகிறாள். ஜீவரேகாவை மாறுவேடத்தில் வீர மோகன் சந்திக்க வருகிறான். அப்போது ராஜகுரு அரசரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது பார்த்துவிடுகிறான். ஆனால், அரசர் வீர மோகன் தான் தன்னை கொல்ல வந்ததாக தவறாக நினைக்கிறார். பின்னர் அந்த சூழ்நிலையிலிருந்து வீர மோகன் எவ்வாறு தப்பித்தான் என்பதே மீதிக் கதையாகும்.

கா. மு. ஷெரிப் மற்றும் ஏ. மருதகாசி எழுதிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி பாடிய பாடல் "வாராய் நீ வாராய்" மிகவும் பிரபலமான பாடலாகும். இப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தன....

அன்புடன்
படப்பை...
ஆர்.டி.பாபு......

orodizli
15th February 2021, 07:36 AM
உலக சரித்திரத்தில் உலகத்தில் பெரும் அதிசயம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒருவரே!

உலக வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரை கலைஞன் என்ற பெருமையைப் பெற்றவர் புரட்சித்தலைவர்.

உலக வரலாற்றில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை மாற்றி புதிய ஆட்சியை உருவாக்கியவர் புரட்சித்தலைவர்.

உலக வரலாற்றில் குண்டடிபட்டு மறுபிறவி எடுத்தவர் மாநிலங்கள் போற்றும் புகழுக்குரிய புகழ் வேந்தர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் ஒருவரே என்றும் எப்போதுமே.

உலக வரலாற்றில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே மாநிலத்தின் முதல்வராகி புதிய சரித்திரத்தை ஏற்படுத்திய முதன் முதல்வர் புரட்சித்தலைவர் ஒருவரே.

உலக வரலாற்றில் புரட்சித்தலைவரின் உடல் நலம் குன்றிய போது உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனைகள் செய்தனர். மிகப்பெரிய மகத்தான தலைவர் மனிதப்புனிதர் புரட்சித்தலைவர் ஒருவரே

இப்படி உலக சரித்திரத்தில் பல அருங்குணங்களை கொண்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலகின் அதிசயத்தில் முதல் மனிதர் என்பது நமக்கு பெருமைக்குரியதாகும் !

கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........

orodizli
15th February 2021, 07:37 AM
உலகை சுற்றிய வாலிபன்...பகுதி...5..

சென்னையில் இருந்து படம் எடுக்க வெளிநாடுகள் புறப்பட்ட தலைவர் அமரர் அண்ணா நினைவிடம் முதல் நாள் இரவு சென்று வணங்கினார்..

சென்னை விமான நிலையத்தில் தலைவர் அன்னை ஜானகி அம்மா மற்றும் பட குழுவினர் டெல்லிக்கு செல்லும் விமானத்தில் பயணம் போக அங்கே ஜனசமுத்திரம் போல கூட்டம்...

தலைவர் குழுவை வழி அனுப்பி வைக்க அன்றைய முதல்வரும் வந்து இருக்க....விமானத்தில் ஏறி அனைவரும் அமர மீண்டும் உள்ளே வந்து வழி அனுப்பினார் அந்த நல்லவர்..

டெல்லி விமானநிலையத்தில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காத்து இருந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தார்....அரசியல் விஷயங்களை...
தலைவர் மௌனமாக கேட்டு கொண்டு இருந்தார்...

அனைவரும் செக்கிங் பகுதிக்கு வருமாறு அழைக்க பட அவரவர் பாஸ்போர்ட்டை எடுத்து பார்க்கும் போது லதா அம்மா அவர்கள் ஐய்யோ என் பாஸ்போர்ட் இல்லையே என்று கத்த...

மொத்த கூட்டமும் தேடி அலைய சிறிது நேரம் முன்னால் அங்கே ரெஸ்ட் ரூம் அவர் போக அங்கேயே தன் கை பையை விட்டு விட்டு இருக்கை திரும்ப...

கிடைத்து விட்டது என்று மஞ்சுளா பையுடன் அங்கிருந்து ஓடி வர விமானம் புறப்பட்டது.

ஒரு வரலாற்று படத்தை உருவாக்க போகும் அனைவரையும் சுமந்து கொண்டு வெளிநாட்டுக்கு....

சென்ற பதிவில் நாகேஷ் குறித்து முடித்து இருந்த இடத்தில் இப்போ தொடர்வோம்..

நாகேஷ் ரயில்வேயில் வேலை செய்து கொண்டே நாடங்கங்கள் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர்...புகை பிடிக்கும் பழக்கம் தாண்டி பின்னர் மது பழக்கம் கூட வந்து ஒட்டி கொண்டது.......

தலைவருடன் வெளிநாட்டில் இருக்கும் போது....அங்கே அனைவரும் சாப்பிடும் பில்லுக்கு ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைவர் பார்த்து கையொப்பம் இட பணம் ஹோட்டலுக்கு அப்போ அப்போ பணம் செலுத்த பட.

ஒரு நாள் குழுவினர் பட பிடிப்புக்கு கிளம்ப நாகேஷ் திடீர் என்று மயங்கி கீழே அங்கேயே விழுந்து விட....அனைவரும் பதறி....உடனே வெளிநாட்டு மருத்துவர் வந்து சோதிக்க..

இவர் தீவிர மது பழக்கம் கொண்டவர்..
இவர் ரத்தத்தில் அது கலந்து விட கடந்த நாட்களில் இவர் மது அருந்தவில்லை....அது இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து உள்ளது என்கிறார்.

தலைவர் செய்தி அறிந்து எப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகர் இப்படி ஒரு வழக்கத்தில் சிக்கி கொண்டார் என்று வருந்தி....எனது நிறுவனம் இதை போன்ற செலவுகளை ஏற்காது.....

மருத்துவர் அறிவுரைப்படி இவருக்கு அளவோடு அந்த கேடு கெட்ட குடியை கொடுக்க சொல்லுங்கள்....
ஆனால் இவர் சம்பளத்தில் அந்த செலவு பிடித்து கொள்ள படும் என்று சொல்ல..

இருவரும் அடுத்து வந்த நாட்களில் சரி வர பேசி கொள்ளவில்லை..
அனைவர் முன்பும் தலைவர் சொன்ன கருத்துக்களே பின்னால் நாகேஷ் அவர்கள் ஒரு சில இடங்களில் தலைவரை விமர்சிக்க காரணம் ஆன ஆரம்ப புள்ளி இந்த நிகழ்வே.

ஸ்ரீகாந்த் என்று நடிகர் இருந்தார்....மாணவன் போன்ற அந்த கால படங்களில் நடித்து வில்லன் வேடங்களில் பின்பு நடித்தவர் அவரும் நாகேஷ் அவர்களும் இணை பிரியா நண்பர்கள் அனைத்து நிகழ்வுகளிலும்...

தலைவர் பின் நாட்களில் அனைத்தையும் மறந்து முழு சம்பளம் கொடுத்தது தனி கதை..

தலைவருக்கு மட்டுமே படத்தின் அத்துணை படத்தின் கதை அம்சமும் தெரியும்..
யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை அவர்.

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் சில காட்சிகளை எடுக்க சொன்ன போது என்ன இவர் சம்பந்தம் இல்லாமல் காட்சிகளை எடுக்கிறார் என்று முணு முணுக்க....

அடுத்த பதிவில் நாயர் கடையில் சந்திப்போம்.

வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்..
நன்றி.....

orodizli
16th February 2021, 07:41 AM
1967 முதல் இந்திய சினிமாவில் சிறந்த நடிக்கருக்கான தேசிய விருதுகள் மத்திய அரசு வழங்குகிறது .தமிழ் மொழியில் 1971ல் வெளியான "ரிக்க்ஷாகாரன்" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதான "பாரத் "விருது தமிழ் நாட்டில் , தென்னிந்தியாவில் முதல் முதலாக மக்கள் திலகத்திற்கு தான் கொடுக்க பட்டது . அதற்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து கமலஹாசன் மூன்றாம் பிறை படத்திற்காக வாங்கினார் . மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பிற்கான அங்கிகாரத்தை மத்திய அரசு கவுரவித்தது . பன்றி மாதிரி 200 , 300 படங்களில் ஏதோ நாமும் நடித்தோம் , கல்லா கட்டினோம் , மக்களை அழ வைத்தோம் என்று இல்லாமலும் , தான் நடிப்பை தாமே புகழ்ந்து கொண்டு எல்லா படங்களிலும் துணை, இணை நடிகர்கள் முன் அவர்களை விட தான் நன்றாக நடிப்பதாக காட்டி கொண்டு குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டி கொண்டு நடித்தவர்கள் எவரும் தேசிய விருதை நெருங்க கூட முடிய வில்லை . அளவாக நடித்து தன் இயற்கை நடிப்பால் தேசிய விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் மக்கள் திலகம் ஒருவரே..........bpgi

orodizli
16th February 2021, 07:42 AM
புர*ட்சித்த*லைவ*ரின் ஒரிஜின*ல் ட*ய*லாக்குக*ளை காப்பி அடித்த ந*டிக*ர்க*ளின் ப*ட்டிய*லும், ப*ட*மும்..

1. நான் எப்ப* வ*ருவேன் எப்ப*டி வ*ருவேன்னு யாருக்கும் தெரியாது..

ப*ட*ம்: தாய்ச்சொல்லை த*ட்டாதே..எம்ஜிஆர் ச*ரோஜாதேவியிட*ம் கூறுவ*து..

காப்பி: ர*ஜினி..முத்து ப*ட*த்தில்

2. என்வ*ழியே த*னிவ*ழி..
ப*ட*ம்: நாளை ந*ம*தே ப*ட*த்தில் எம்ஜிஆர், ந*ம்பியாரிட*ம் கூறுவ*து

காப்பி: ர*ஜினி... படையப்பா
ப*ட*த்தில்

3. அங்கே புத்த*ர் சிலை இருந்த*து..புனித*மான இந்த* புத்த*ர் ஆல*ய*த்தில் உன் ர*த்த* துளிக*ள் ப*ட*க்கூடாது என்ப*தால்தான் நான் அடி வாங்கினேன்..இப்போது என் ப*ல*த்தை காட்ட*ட்டுமா?

ப*ட*ம்: உலகம் சுற்றும் வாலிப*ன், ந*ம்பியாரிட*ம் எம்ஜிஆர் கூறுவ*து..

காப்பி: விஜ*ய*காந்த் மாந*க*ர*க்க்காவ*லில் ச*ண்டைக்காட்சி ஒன்றில் கூறுவார்...Pgdi

orodizli
16th February 2021, 07:43 AM
[அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில...

1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.

2. நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள்.

3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார்.

4. இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள்.

5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.

7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.

8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்.

9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.

10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். ]

orodizli
16th February 2021, 07:44 AM
சும்மா வந்ததில்லை நமது இரட்டை இலை !
புரட்சிதலைவர் தனது துணைவியாரின் துணையுடன் தன்னை நம்பி வரும் எம்.ஜி.ஆர் ரசிக தொண்டர்கள்,அப்போதைய கழக இளைஞர்கள் ,உடன் வந்த அரசியல் விசுவாசிகள் அனைவரின் இரவு பகல் பாராத உழைப்பை மையப்படுத்தி 1972ல் அ.தி.மு.க ஆரம்பித்தார்.அதற்கு முன்னர் வரை 1953 முதல் 1972 வரை உதயசூரியனை உலகுக்கு தெரிவித்து மக்கள் மனதில் ஆழமாக பதியச்செய்தவர் எம்.ஜி.ஆர் தான் முதன்மை.அந்த சின்னத்தை மறைத்து 1973ல் இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய செய்ய மிகவும் கஷ்டப்பட்டவர் நமது வேந்தன் எம்.ஜி.ஆர்.
1973ல் திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை முதன்முதலாக பிரகனப் படுத்தப்படுகிறது.அப்போது தலைவர் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் மக்களைப்பார்த்து "என்னை தெரியுமா " என்று கேட்கிறார்.மக்கள் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என்று ஆர்ப்பரித்தனர்.பின்னர் நமது கட்சியின் சின்னம் என்ன சொல்லுங்கள் என்று கேட்கிறார்.உடன் மக்கள் உதயசூரியன்.உதய சூரியன் என்று சொன்னார்கள்.இதைக் கேட்ட தலைவர் மனம் இறுகி சுக்கலாகி விட்டார்.பின்னர் சுதாரித்து தான் நீக்கப்பட்டு புதுகட்சி ஆரம்பித்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக நெடிய விளக்கத்தை கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.உதயசூரியனை விளம்பரப்படுத்தியதன் விளைவு அதை மறக்கவும்,புது சின்னம் இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சி சொல்லி மாளாது. ஆம் ! சும்மா வந்ததில்லை இரட்டை இலை !!.
பின்னர் மிகுந்த மன வருத்தத்தில் அறைக்கு திரும்பி உடன் இருந்த ஜேப்பியார்,தாழம்பூ பட டைரக்டர் ராமதாஸ் அவர்களிடம் இரட்டை இலை திண்டுக்கல் முதல் தேர்தலில் வெல்லுமா ?ஏனெனில் மக்களை சூரியனில் இருந்து இலைக்கு கொண்டுவர நிறைய உழைக்கவேண்டியுள்ளது என்று வருந்தி சொல்லியுள்ளார்.
ஆனால் தலைவரின் ஒப்பற்ற உழைப்பு 1973ல் முதல் தேர்தலில் இரட்டை இலை வென்றது.மக்கள் திலகம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார்.அவர் மனது எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும்.அவர் யாருக்கு நன்றி சொன்னார்.?
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற இளைஞர்கள்,கழக தோழர்கள் தங்களது செலவில் பணிபுரிந்தவர்களுக்கு. போஸ்டர்,தேர்தல் வேலைகள் அனைத்தும் தங்கள் செலவில் செய்தவர்களுக்கு.தலைவரிடம் பணம் இல்லை.சாண்டோ சின்னப்பா தேவர் பணம் கொடுத்தார். பின்னர் கோவை தேர்தல் வெற்றி.பின்னர் 1977ல் வெற்றி .இப்படி இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய வைத்தவர் நமது தலைவர்.அந்த சின்னம் புனிதமானது.
ஆக அவர் கொடுத்த இரட்டை இலை இன்று அவர் அரசு என்று சொல்ல ஆளுபவர்களுக்கு மனதில்லை.வேறு ஒருவர் அரசு அமைய இரட்டை இலைக்கு ஆதரவு தாருங்கள் என்கின்றனர்.
நாமறிவோம் எது நன்று என்று.மக்களும் இரட்டை இலை தோன்றலை அறிவார்கள்..........nssm.

orodizli
16th February 2021, 07:47 AM
அன்று எம்ஜிஆர் திமுகவை படத்தில் எப்படி வளர்த்திருக்கிறார் என்பது நாடறிந்த ஒன்றுதான்.
1.விக்கரமாதித்தன் படத்தில் தலைவர் நெற்றியில் உதயசூரியன் பொட்டு வைத்திருப்பார்
.2.புதியபூமி படத்தில் எம்ஜிஆர் பெயர் கதிரவன்
.3.நாடோடி மன்னன் அடிமைப்பெண் படத்தில் எடுத்தவுடனே திமுக கொடியைக் காட்டுவார்.4.நல்லவன்வாழ்வான் படத்தில் பாடல்களில் உதயசூரியன் எதிரில் நிற்கையில் உள்ளத்தாமரை மலராதே!எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்டபொழுதும் புலராதே!
5.விவசாயி படத்தில் இருந்திடலாம் நாட்டில் பலவண்ணக்கொடி !எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி..பாடலில் கருப்பு சிவப்பு கொடியைப் பறக்கவிடுதல்
.6.கலங்கரை விளக்கம் படத்தில் பல்லவன் பல்லவி பாடலில் எம்ஜிஆர் சட்டையில் உதயசூரியன் போட்டிருக்கும். 7.ஒருதாய்மக்கள் படத்தில் கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு !நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு என பாடலின் நடுவே வரும். 8.அடிமைப்பெண் படத்தில் நீ கடவுளைப் பார்த்தது கிடையாது.அவன் கருப்பா சிவப்பா தெரியாது.இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
என பாடலில் வரும்.
9.ரிக்சாக்காரன் படத்தில் பம்பை உடுக்கை பாடலில் எம்ஜிஆரும் ஜோதிலட்சுமியும் ஆடும் போது ஜோதிலட்சுமி கையில் கருப்பு சிவப்பு வளையல் அடுக்கி கையில் இரண்டிலும் கருப்பு சிவப்பு கர்சீப் கட்டியிருப்பார்கள். 10.நம்நாடு படத்தில் எம்ஜிஆர் கருப்புகலர் பேண்டும் சிவப்புநிற சட்டையும் படங்களில் தோன்றுவார்.பெரும்பான்மை படங்களில்.பர்ஸ் ஒன்று எடுப்பார் அதிலும் கருப்பு சிவப்புதான்.
11.சங்கே முழங்கு படத்தில் எம்ஜிஆர் முதன்முதலில் லட்சுமியை சந்திக்குமுன் தினத்தந்தி பேப்பர் படிக்கும் போது கொட்டை எழுத்தில் தி.மு.க. வெற்றி எனவரும்.
12.எங்கள் தங்கம் படத்தில் சிறு சேமிப்பு விழாவில் முரசொலி மாறன் தோன்றுவார்.பிறகு லாட்டரிசீட்டு விழுந்ததும் அண்ணா ,கருணாநிதி எல்லோரையும் காட்டுவார்கள். 13.பணக்காரகுடும்பம் எம்ஜிஆரும் மணிமாலாவும் பாடும் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே என வரும்.அதில் எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே!என வரும்
14.அன்பே வா படத்தில் உதயசூரியனின் பார்வையிலே என பாடல் வரும் ஆடியோவில்.. சென்சார் பிரச்சனையில் சிக்கி புதியசூரியன் என மாறியது. இப்படி நிறைய இருக்கு.அ.தி.மு.க. ஆரம்பிக்கும் போதும் அண்ணா,இரட்டைஇலை,அ.திமு.க கொடி இதனைத் தவறாமல் காட்டுவார்....gdr

orodizli
16th February 2021, 07:48 AM
��மக்கள் திலகம் எம் ஜி ஆர் ரசிகர் மன்றம்��

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்பது, தமது படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நடிகருக்காகத் தொடங்கப்பட்ட மன்றம் அல்ல. இந்த மன்றங்களை, நாம் சினிமா சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. `கடவுள் இல்லை’ என்ற பாரம்பர்யத்தில் தோன்றிய தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், கடவுள் பயம் இல்லாத கெட்டவர்கள், ஏழை ஏதிலி, படிக்காத பாமரர், ரெளடி, எம்.ஜி.ஆரை ரசிக்கும் பெண்கள் மோசமானவர்கள்... என்பதுபோன்ற எண்ணங்களும் பரவலாக இருந்தன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவர்மீது தீவிர அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆருக்கு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர், தன் மனைவியின் தாலியை விற்று தொடங்கினார். அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் புற்றீசல்களாகத் தோன்றின. கோயில் இல்லாத ஊர் இருக்கலாம், குளம் இல்லாத ஊர்கூட இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் மன்றம் இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் துளிர்த்தன.

Posted by : MG.Nagarajan
Published by : யாழ் இணையம்
in வண்ணத் திரை

orodizli
16th February 2021, 07:48 AM
#எம்ஜிஆர்_உரிமைக்குரல்!

M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.

எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ண யிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயா ரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.

அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறை வாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.

வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங் கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றி யைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.

‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக் கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத் தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத் தின் செயலாளர் என்ற முறையில் முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.

‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர் கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத் துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப் பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.

அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மன தார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்ற வர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக் காது. புதிய நடிகர் களை உற்சாகப் படுத்தி வாழ்த்து வார். வி.எஸ்.ராக வனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.

காட்சிப்படி மாடிப்படி களில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப் போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற் றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித் ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண் ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரை யும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!

பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவ லைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்க ளால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தி னார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.

எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!.........Pngi

orodizli
16th February 2021, 07:49 AM
கவிஞர் கண்ணதானுக்கு உதவி ....

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ...

ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார்.

யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது

அவருக்கு வேண்டிய ஒருவர்
நம்ம மாதிரி ஆள்களுக்கு

உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார்.

அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார்.

இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள்,

அய்யய்யோ வேண்டவே, வேண்டாம்

அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன்.

நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல,

இவர் சொல்கிறார்,
மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர்,

மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர்

அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை

எனவே எதையும் யோசிக்காமல்

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம்

என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்

பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார்.

அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி,

உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.

இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார்.

ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க

அவர் ரொம்பவும் தாழந்த குரலில்

எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன்

மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல்

சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.

அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து

இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல

அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து

பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து

இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார்

என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.

பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில்

பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு

உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று,

மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார்.

தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே ..

நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன்.

ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே

நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்

நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்....bpg

orodizli
16th February 2021, 07:51 AM
வெற்றி முகம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் :

யாருடைய முகமானது இலட்சோப
லட்சம் இதயங்களைக் கவருகிறதோ,
யாருடைய பண்பானது மக்களது மனதில் வேரூன்றியிருக்கிறதோ
அத்தகைய முகத்துக்குரிய அத்தகைய பண்புக்குரிய "மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர் "அவர்களை வைத்துப் படம் எடுத்தால் எல்லா
வகையிலும் வெற்றியடையலாம், என்று தயாரிப்பாளர்கள் மலரை
வண்டு மொய்ப்பதுபோல் வந்து மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- திரைத்தென்றல்-1974.

கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........Sar.Swa

orodizli
16th February 2021, 12:34 PM
1972 செப் 15 ம் தேதி வெளியான தலைவரின் கடைசி கருப்பு வெள்ளை படம்தான் "அன்னமிட்டகை". முழுக்க முழுக்க கேரளாவில் உள்ளதேயிலை தோட்டத்தில் படமாக்கப்பட்ட வெற்றிப் படம்தான் "அன்னமிட்டகை". இதிலும் பாடல்கள் அத்தனையும் அருமை. படம் கலரில் வெளியாகியிருந்தால்
வெற்றியின் வீச்சு சற்று அதிகமாக இருந்திருக்கும்.

'ஒன்னொண்ணா ஒன்னொண்ணா சொல்லு சொல்லு'
'அழகுக்கு மறுபெயர் கண்ணா' 'மயங்கி விட்டேன் உன்னை கண்டு'
'பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா' 'அன்னமிட்டகை' போன்ற பாடல்கள் kv மகாதேவன் இசையில் மனதை ஈர்க்கும். பாரதியுடன் பாடும் 'மயங்கி விட்டேன்' பாடல் தலைவர் அழகில் மனம் மயங்கி விடும். 'அழகுக்கு மறுபெயர் கண்ணா' பாடல் ஜானகியின் குரலில் தேனாய் இனிக்கும்.

அத்தனையும் தேயிலை தோட்டத்தில் எம்ஜிஆரும் ஜெயாவும் புது புது ஸ்டெப்களுடன் ஆடிப்பாட அருமையாக எடுக்கப் பட்டிருக்கும். நல்ல எளிமையான கதை அழகாக பின்னப்பட்டிருக்கும். நாகேஷ்
வி கேஆர். காமெடியில் கடைசியாக வந்த படம் என்று நினைக்கிறேன். . சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி. பிளாசாவில் 63 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. படம் வெளியாகும் போது திமுகவில் இருந்த தலைவர் அக் 17 ல் அதிமுக தொடங்கி அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்தார்.

ஆளும் தீயசக்தியின் அராஜக ஆட்சியினால் தியேட்டர்கள் மிரட்டப்பட்டு படத்தை சென்னையில் 63 நாட்களில் எடுத்து விட்டனர். திமுக காலிகள் "அன்னமிட்டகை" பேனர்களை கிழித்து அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர். பிரபாத் சரவணாவில் 49 நாட்களும் லிபர்டியில் 42 நாட்களும் ஓடியது. அக் 20 ல் வெளியான "இதயவீணை"யையும் தாண்டி ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி 33 நாட்கள் ஓடியதிலிருந்து படம் நல்ல வெற்றிப்படம் என்று தெரிந்து கொள்ளலாம். ஜோஸப்பில் வெளியான கடைசி எம்ஜிஆர் படம் இதுதான்.

ஏனென்றால் இங்கு கைஸ்கள் வெற்றிப்படம் என்று சொல்லும் "ராஜா" 21 நாட்களும் "நீதி" 17 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் "தியாகம்" 21 நாட்களும்தான் ஓடியது. மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. அடுத்து வெளியான இதயவீணை 35 நாட்களிலே வெளியானதால் 100 நாட்களை எட்ட முடியவில்லை. 100 நாட்கள் ஓட தகுதியான படம்தான் "அன்னமிட்டகை". குறுகிய காலத்தில் "இதயவீணை" வெளியாகா விட்டால் நிச்சயம் 100 நாட்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்..........ksr.........

orodizli
17th February 2021, 08:06 AM
என் கொள்கைகளை பின்பற்றி வளர்ப்பதால் மட்டுமே என் பெயர், புகழ்
காப்பாற்றப்படும் - #எம்ஜிஆர்.

#உங்களை தெய்வமாக மதித்து வணங்கும் என்னைப் போன்றவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை யாது?

MGR : என்னைத் தெய்வமாக்காதீர்கள் என்பதுதான் எனது முதல் வேண்டுகோள். நானும் சாதாரண மனிதன் தான். நான் கற்க வேண்டியது, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு நிறைய உள்ளன. என்னிடமும் குறைகள் இருக்கும். எனவே என்னை அந்த அளவிற்கு உயர்த்தாதீர்கள்.

#தங்களின் விடாமுயற்சிக்கு சவாலாக அமைந்த நிகழ்ச்சி எது?

MGR : கருணாநிதி அவர்கள் குற்றமற்ற என்னை கட்சியிலிருந்து வெளியேற்றியது.

#என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்பவர்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?

MGR : தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். பகலிருந்தால் இரவு இருக்கும். செயலிருந்தால்
விளைவிருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதை செயல்படுத்தும் முறையிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும்
செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் வேதனைபடுவதாகச் சொல்லுகின்ற வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும்.எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால், அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.

(வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர். தந்த பதில்கள்)

Ithayakkani S Vijayan...VRH

orodizli
17th February 2021, 08:06 AM
எத்தனைத் தடைகள் வந்தாலும் உதவி செய்வதை நிறுத்த மாட்டார் எம்.ஜி.ஆர்.!
- கவிஞர் முத்துலிங்கம்

புரட்சித் தலைவரைப் போலவே அவரது திரைப்பாடல்களும் சாகாவரம் பெற்றவை. மெட்டுக்களின் இனிமைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வார்த்தைகளின் புதுமைக்கும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

அதனால் தான் அவரது திரைப்படப் பாடல்கள் தலைமுறைகள் கடந்து இன்றைக்கும் பாடப்படுகிறது. கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்களால் சூழப்பட்ட எம்.ஜி.ஆரின் கவிதைத் தோட்டத்தில் பல புதிய திறமையாளர்களையும் வளர்த்தெடுக்க அவர் தவறவில்லை.

அந்த வரிசையில் வந்த மிக முக்கியமான கவிஞர் தான் முத்துலிங்கம். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழக மேல்சபை உறுப்பினராகவும் அதன் பின்னர் தமிழக அரசவைக் கவிஞர் பதவியையும் வகித்தவர் இவர்.

இந்த கௌரவமான பதவியில் கண்ணதாசன் உட்பட இதுவரை நான்கு கவிஞர்கள் மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் கவிஞர் முத்துலிங்கமும் ஒருவர். இந்தப் பதவியில் இருந்த கடைசிக் கவிஞரும் அவரே. எம்.ஜி.ஆர். உடனான தன் நீண்ட நெடிய பயணத்தில் இருந்து சில நினைவுகளை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

“தன் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு ஏன் கொடுத்தார் எம்.ஜி.ஆர். என்ற காரணத்தை ஒரு விழா மேடையில் எம்.ஜி.ஆரே சொன்னபோது தான் நானே தெரிந்து கொண்டேன்.

அது 1981ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருக்கிறார். எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது எம்.ஜி.ஆர். கைகளினால் வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் இப்படிப் பேசினார் தலைவர்.

“சினிமாதுறைக்கு வருவதற்கு முன்னர் கவிஞர் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர்.

1973ல் ‘பொண்ணுக்கு தங்க மனசு' என்ற ஒரு படத்துக்கு பாட்டு எழுதினார். அதன் பிறகு கொஞ்ச நாளில் கொள்கை காரணமாக அவர் பத்திரிகை வேலையைவிட்டு விலகும்படியான சூழ்நிலை உருவானது.

அப்போது ஒரு நாள் என்னைப் பார்ப்பதற்காக தி.நகர் அலுவலகம் வந்திருந்தார். நான் வேறு சில முக்கியமான அலுவல்களில் இருந்ததால், வெளியில் இருந்தபடியே இன்டர்காமில் என்னுடன் பேசினார்.

“வேலையை விட்டுட்டீங்கனு கேள்விப்பட்டேன். ரொம்ப சிரமமா இருக்குமே? கொஞ்சம் பணம் தரேன்... செலவுக்கு வச்சுக்குங்க” என்று நான் சொன்னதும், “பணமெல்லாம் வேண்டாம் பாட்டெழுதும் வேலை கொடுங்க” என்றார். “வேலையெல்லாம் அப்புறம் தர்றேன்... இந்தப் பணத்தை முதல்ல வாங்கிக்குங்க” என்றதற்கு, “பணம் வேண்டாம், வேலை கொடுங்க” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் படாரென நான் போனை வைத்துவிட்டேன்.

ஆனால் அந்தச் சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. சினிமாத் துறையில் உள்ள பெரும்பாலான கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன். அதெல்லாம் அவர்களாகவே வந்து என்னிடம் கேட்டபோது தான் நான் செய்தேன். ஆனால் நானாக வலியப்போய் பண உதவி செய்தபோது அதை வேண்டாம் என்று மறுத்தவர் முத்துலிங்கம்.

உழைக்காமல் யாரிடத்திலும் எதையும் இனாமாக வாங்கக்கூடாது என்ற தன்மானம் மிக்க மனிதர் இவர் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவருக்கு என் படங்களில் பாட்டெழுதும் வாய்ப்புகள் வழங்கத் தொடங்கினேன்.

கவிஞர் பாரதிதாசன் தன்மானத்துக்கு பேர்போனவர். அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை தன்மானம் மிக்க கவிஞர் முத்துலிங்கத்துக்கு வழங்காமல் வேறு யாருக்கு வழங்குவது” என்றார் எம்.ஜி.ஆர்.

இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க என்று கேட்கிறார் முத்துலிங்கம். சொல்லும்போதே அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம். எம்.ஜி.ஆர். அவர்களின் கொடைக் குணம் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவர், அவரது மனித நேயத்துக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்கு பாட்டெழுதிக் கொண்டிருந்தபோது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுப்போச்சு. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். என் கையில் இருந்ததோ ரெண்டு ரூபாய். எம்.ஜி.ஆரை பார்க்கப் போனேன்.

அப்போது அவர் சத்யா ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்தார். ஷூட்டிங் முடிந்து மேக்கப்பை கலைத்துவிட்டு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது மேக்கப் அறை வாசலில் தான் கார் வந்து நிற்கும். விறுவிறுவென வந்து அவர் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது.

அப்போது நான் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே வண்டியை நிறுத்தச் சொல்லி அருகில் அழைத்து என்னவென்று கேட்டார்.

நான் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்துக்கு நேற்று தான் சிச்சுவேஷன் சொன்னாங்க. நாளைக்கு தான் கம்போசிங். அதனால் பாட்டெழுதின பிறகு வாங்கப்போற பேமெண்ட்டை முன்பணமாக இன்றைக்கே கேட்டு வாங்கிக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன்.

சற்று யோசித்தவர், “வேண்டாம். அது நல்லா இருக்காது. நீ அந்தக் கம்பெனிக்கு இதுக்கு முன்ன பாட்டு எழுதினதில்ல. நான் தான் உன்னை சிபாரிசு செய்தேன். அதனால அவங்ககிட்ட கேட்டா அது அசிங்கம். அதுவும் நீ கேட்கவே கூடாது” என்று சொல்லிவிட்டு, அவரது உதவியாளர் மாணிக்கத்திடம் காரில் இருக்கும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்படி சொல்லிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் மேக்கப் அறைக்குள் நுழைந்தார்.

சூட்கேஸில் இருந்து 2000 ரூபாய் எடுத்துக் கொடுத்து, உடனே டாக்டரைப் போய் பாருங்க என்றார். பவுன் 400 ரூபாய் விற்ற காலம் அது. 2000 ரூபாய் என்பது இன்றைக்கு லட்ச ரூபாய்க்கு சமம். இதுதான் அவருடைய மனித நேயம். காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் மேக்கப் அறைக்கு திரும்ப மாட்டார்.

ஆனால் அன்றைக்கு என் நிலைமையைச் சொன்னபோது அவர் இறங்கி வந்தார் என்றால் அது எனக்காக என்றில்லை. என் நிலைமையில் அன்றைக்கு அவரிடம் யார் வந்து உதவி என்று நின்றிருந்தாலும் அவர் இதைத் தான் செய்திருப்பார். அப்பேற்பட்ட மனிதநேயம் மிக்க மாணிக்கம் அவர்” என்று சொல்லும்போதே முத்துலிங்கத்தின் கண்கள் கலங்கி இருந்தன.

அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார் என்பதற்கு உதாரணமாக இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்.

“மீனவ நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரைப் பார்ப்பதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வாங்க முத்துலிங்கம்... இந்தப் படத்துல நீங்க என்ன பாட்டு எழுதறீங்க?”என்று கேட்டார்.

“நான் எதுவும் எழுதலியே” என்றேன்.

“என்னது எழுதலியா? உங்களுக்கு ஒரு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே!” என்றார்.

“என்னை யாரும் கூப்பிடலியே!” என்றேன்.

உடனே ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்தார்.

“முத்துலிங்கத்துக்கு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே, ஏன் தரல?” என்றார்.

“நாங்க தேடும்போது அவர் ஊருல இல்லை” என்று பதில் வந்தது.

“ஊர்ல இல்லைனா ஏன் என்கிட்ட சொல்லல? என்ன... ஸ்ரீதர் படம்னு கொஞ்சம் சலுகை கொடுத்தா அதிகமா உரிமை எடுத்துக்கறீங்களா?” என்று கடுமையாக கோபித்துக் கொண்டவர் என்பக்கம் திரும்பி...

“கவிஞரே இனிமே ஊருக்கு போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போகணும் புரிஞ்சதா” என்று சொல்லிவிட்டு, “முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுக்க சொன்னேன்னு டைரக்டர்கிட்ட சொல்லு” என்றார்.

“சார்... படத்துல பாடலுக்கான அத்தனை சிச்சுவேஷனும் முடிஞ்சுட்டதா டைரக்டரும் ப்ரொட்யூசரும் நேத்து பேசிக்கிட்டு இருந்தாங்க” என்றார் ப்ரொடக்ஷன் மேனேஜர்.

“அப்படியா...? அப்படின்னா டைரக்டரையும், ‘சானா'வையும் கூப்பிடு” என்றார்.

டைரக்டர் என்றால் ஸ்ரீதர். சானா என்றால் அந்தப் படத்தின் ப்ரொட்யூசர் சடையப்ப செட்டியார். இருவரும் வந்தனர்.

“இவர் தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வச்சு ஒரு டிரீம் ஸாங் போடுங்க. நல்லாருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“ஸாங்குக்கான சிச்சுவேஷன் எல்லாமே முடிஞ்சிடுச்சே எங்க போடுறது?” என்று செட்டியாரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

“டிரீம் ஸாங்குக்கு என்ன சிச்சுவேஷன் வேண்டிக்கிடக்கு. சிச்சுவேஷன் இல்லாத ஒரு சிச்சுவேஷனை உருவாக்குறது தானே டிரீம் ஸாங். ஒரு ரிலாக்ஸூக்கு போடுறது தானே. சாப்பிடும்போது நினைச்சு பார்க்குற மாதிரியோ, இல்ல வேலை செய்யும்போது அசதியில கண் அசந்து கனவு காணுற மாதிரியோ போடலாமே.

‘அன்பே வா'ல போட்டமே, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...” அது என்ன சிச்சுவேஷன்? அது மாதிரி “விழியே கதை எழுது”ன்னு ‘உரிமைக்குரல்' படத்துல போட்டீங்களே அது என்ன சிச்சுவேஷன்? அதமாதிரி ஒன்னு உருவாக்குங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டு போய்விட்டார்.

அதற்கு அப்புறம் ஒரு டிரீம் சிச்சுவேஷனை உருவாக்கி போட்ட பாடல் தான் அந்தப் படத்துலயே பெரிய ஹிட் ஆச்சு. அதான் “தங்கத்தில் முகமெடுத்து... சந்தனத்தில் உடலெடுத்து”.

எல்லா பாடல்களும் முடிந்துவிட்ட நிலையிலும் எதற்காக இப்படி ஒரு பாடலை உருவாக்கினார் என்றால், தன்னை நம்பி வந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான். அதனால் தான் அவர் மறைந்தும் மறையாமல் கோடாணுகோடி இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரிடம் பாடல்களை ஓ.கே. வாங்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டை அவர் ஓ.கே. பண்றதுக்கு ஒரு மாசமும் ஆனதும் உண்டு....Rmh

orodizli
17th February 2021, 08:07 AM
நம்நாடு திரைப்படம் மக்கள் திலகம் அவாகள் நடித்து 1969ம் ஆண்டு வெளிவந்தது. இதே படம் முதலில் தெலுங்கிலும் பின் நம்நாடு தமிழ்த்திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியிலும் வெளியாகியது.

நம்நாடு திரைப்படம் தமி்ழ் திரையுலகில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பிற மொழி ஆக்கங்கள் எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை.

அந்த காலக்கட்டங்களில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாகிய திரு. சிவாஜி கணேசன் மற்றும் திரு. M.G.இராமச்சந்திரன் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இரசிகர்களை மகிழ்ச்சியில் தத்தளிக்க வைக்கும். அந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் நம்நாடு படம் வெளியாவதற்கான சமயத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சிவந்த மண் என்ற படமும் வரிசையில் இருந்தது.

மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட சிவந்தமண் படத்தோடு சேர்ந்து கதைப்படி அத்துணை பிரம்மாண்டத்திற்குத் தேவையில்லாத நம்நாடு படத்தை வெளியிட தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டியாருக்கு சிறிது கலக்கம். தன் கலக்கத்தை திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களிடம் தெரியப்படுத்தி நம்நாடு திரைப்பட வெளியீட்டைத் தள்ளிப் போடலாம் என்ற தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்கு சம்மதிக்காத திரு.M.G.இராமச்சந்திரன் அவர்கள் நம்நாடு படத்தை சிவந்தமண் படம் வெளியான அன்றைக்கே வெளியிடும்படிச் செய்தார். படம் மாபெரும் வெற்றி. மக்கள் திலகம் அவர்கள் திரு நாகிரெட்டியாரிடம் தம்பி திரு.சிவாஜிகணேசனுக்கு என்றும் தனக்கு என்றும் தனித் தனி இரசிகர்கள் உண்டு என்றும் தன் இரசிகர்கள் மீது தனக்கு என்றும் நம்பிக்கை உண்டு என்றும் கூறினார்.

படம் வெளியான அன்று திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களும் திரு. நாகிரெட்டியார் அவர்களும் மேகலா தியேட்டரில் யாரும் அறியா வண்ணம் படம் பார்த்தனர். படத்தில் வாங்கய்யா வாத்தியாரய்யா என்ற பாட்டு வரும் பொழுது அனைத்து இரசிகர்களும் ஒன்றாக எழுந்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்து Once More Once More என்று கோசம் எழுப்பினர். அன்று தியேட்டரில் அக்காட்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.

படம் மிகப் பெரிய வெற்றியை எட்டியது. வசூலில் அன்றைய காலக்கட்டத்தில் ஒரு சாதனையைப் படைத்தது....Rmh

orodizli
17th February 2021, 08:07 AM
தேவருக்கு, கோபம் ஏற்படுத்தும் மூன்று விஷயங்கள்.
தாமதம், வார்த்தை தவறுவது, மோசடி!
தேவரின் அர்த்தமுள்ள இந்த கோபத்திற்கு அனைவரும் தலை வணங்கினர். ஒழுக்கம், உண்மை, கடுமையாக உழைப்பவர்களுக்கு அவர், ஒரு குழந்தையாகவே காட்சியளித்தார். அவர், 'டென்ஷன்' அடையும் போதெல்லாம், 'ஏண்ணே டென்ஷன் ஆகறீங்க... எல்லாம் ஒழுங்கா நடக்குது; கொஞ்சம் அமைதியா இருங்க. நான், இருக்கேன்ல பாத்துக்கறேன்...' என்று அவரை சமாதானப்படுத்தி, கோபத்தைக் குறைப்பார் எம்.ஜி.ஆர்.,
ஒரு நாளில், எட்டு மணி நேரம் கால்ஷீட் வீதம், 40 கால்ஷீட்டுகளில், மொத்தப் படமும் முடிய வேண்டும். ரீ - ஷூட்டிங் என்பதே தேவர் பிலிம்ஸ் வரலாற்றில் கிடையாது.
எந்த கதாநாயகியாவது நடிக்க தெரியாமல் சொதப்புவார். அதற்காக, பிலிமை, வீணடிக்க மாட்டார் தேவர்.
நடிகை சொதப்பியதற்கு ஏற்றாற் போல் கதாசிரியர் மாராவை அழைத்து, வசனத்தை மாற்ற சொல்வார். அவரைப் பொறுத்த வரை, எல்லாமே ஒரே டேக்கில் முடிய வேண்டும். இதனாலேயே நடிக்க தெரியாத நடிகைகளை, தன் படத்தில் ஒப்பந்தம் செய்யவே மாட்டார்.
தேவர், சினிமா இடி அமீன்; யாரும் அவரிடம் யோசனை கூறக்கூடாது; அது, அங்கு சாத்தியமும் இல்லை.
பாமர மக்களுக்காகவே, படம் எடுப்பதாக கூறுவார். படத்தின் டைட்டில், வசனத்தில் வந்தாக வேண்டும். அதை, எம்.ஜி.ஆர்., மட்டும் பேசினால் போதாது; நடிக்கிறவர்கள் அத்தனை பேரும் சொல்ல வேண்டும் என நினைப்பார். ஒரு முறை, ஆரூர்தாஸ், 'அது வேணாமே... இத்தனை படங்களில் தொடர்ந்து அதையே செய்திருக்கோம்; இதிலுமா...' என்றார். அன்றைய டிஸ்கஷனை, அதோடு முடித்து கொண்டார் தேவர்; அடுத்த படத்தில், அய்யாபிள்ளையை வசனம் எழுத வைத்தார்.

தனக்கான காட்சிகள் முடிந்தவுடன், 'மேக்-அப்' அறைக்குள் போய் விடுவார் எம்.ஜி.ஆர்., அங்கு பல முக்கியஸ்தர்கள், கட்சிக்காரர்கள் அவருக்காகக் காத்திருப்பர். அவர்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமென்று சைகை செய்வார்
எம்.ஜி.ஆர்., பையன்களைத் தேடாமல், தானே காபி, டீ, கூல்டிரிங்ஸ் எடுத்துப் போவார் தேவர்.
எம்.ஜி.ஆரின் மேக்-அப் அறைக்குள், அவரது மேக் - அப் மேன் பீதாம்பரம் தவிர, அன்னியர்கள் பிரவேசிக்கவே முடியாது; கூடாது. எம்.ஜி.ஆர்., அழைக்கும் வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அங்கு செல்லலாம். பட முதலாளிகள் கூட அவரது அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது.
எம்.ஜி.ஆரின் தயாரிப்பாளர்களில், தேவர் மட்டுமே அவரது மேக்-அப் அறைக்குள் சுதந்தரமாகச் செல்வார். அது மட்டுமல்ல,
எம்.ஜி.ஆருக்கான, 'ஷாட்' தயாராகி விட்டால், 'அண்ணே மன்னிச்சுக்குங்க...' என்றபடியே எம்.ஜி.ஆரை கையைப் பிடித்து இழுத்து, செட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதிர்ந்து போய் நிற்பர் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த விருந்தினர்.
தேவர், எப்போதும் ஒன் - மேன் ஆர்மியாகவே செயல்பட்டார். சகலமும் அவரே! எம்.ஜி.ஆர்., படப்பிடிப்புக்கு வர தாமதமாவது போல தெரிந்தால், ராமாவரம் தோட்டத்திற்கு அவரே சென்று விடுவார். ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர்., இருந்தால், தேவர் அவருடனேயே இருப்பார். எம்.ஜி.ஆரும், தேவர் படங்களில் நடிக்கும் போது, ப்ரீயாக இருப்பார். அவரது தலையீடு அறவே இருக்காது. பொதுவாக, தன் படங்களின் எடிட்டிங்கில் எம்.ஜி.ஆரே நேரடியாகப் பங்கு கொள்வார். அவர் ஒப்புதல் பெறாத காட்சிகள், படத்தில் வராது; ஆனால், திருமுகமே, ஒரு எடிட்டர் என்பதால், தேவர் பிலிம்ஸில் எடிட்டிங் மேஜையில், எம்.ஜி.ஆர்., உட்கார மாட்டார்.
எம்.ஜி.ஆர்., தன் பட அதிபர்களை, 'ஆண்டவனே' என்றும், 'முதலாளி சவுக்கியமா?' என்றே நலம் விசாரிப்பார். தேவரை மட்டும், 'அண்ணே...' என்று பாசமாக அழைப்பார்.
எம்.ஜி.ஆரை வைத்து, தேவர் தயாரித்த படங்களில் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், வசனகர்த்தா என்று அனைவருக்குமே மிக அதிக சம்பளம் கிடைத்தது....vrh

orodizli
17th February 2021, 08:08 AM
ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதை உடனே செய்துவிடவேண்டும், நேரம் காலம் பார்க்கக்கூடாது, புயலோ மழையோ எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தன்னுடைய உதவி தேவைப்பட்டவருக்கு அந்த உதவியை செய்து முடித்த பின்பு தான் எம்.ஜி.ஆருக்கு சாப்பாடே இறங்கும்.

#உதவும்_வரை_நிம்மதி_ஏது

எம்.ஜி.ஆர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

#எம்_ஜி_ஆரின்_உதவியாளர்

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

#கை_விரித்த_நண்பர்கள்

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத்தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டார் கோபாலகிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

#எம்_ஜி_ஆர்_உதவி_செய்வாரா

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல்லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

#ஸ்டுடியோவில்_காத்திருப்பு

அப்போது, எம்.ஜி.ஆர் வாஹினி ஸ்டுடியோவில் பட்டிக்காட்டு பொன்னையா படப்பிடிப்பில் இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர், சோகத்துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்

#எம்_ஜி_ஆர்_ஆறுதல்
கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலைமையை எம்.ஜி.ஆர் தெரிந்துகொண்டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தனது நிலைமையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

#ஏன்_இவ்வளவு_லேட்டா_வந்தீங்க

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர், ‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை என்று அவரை அன்போடு கடிந்துகொண்டார். வாடகை பாக்கி எவ்வளவு? என்று கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு போகச் சொன்னார். அவரும் எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் தன்னுடைய முகவரியை கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.

#இந்த_மழையில்_உதவி_வருமா

எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

#மழையிலும்_தேடிவந்த_உதவி

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசாரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

#மழையுடன்_போட்டி_போட்ட_ஆனந்தக்_கண்ணீர்

இதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங்களையே வைத்துக்கொள்ளச் சொன்னார் என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். நன்றிப் பெருக்கில் மழையுடன் போட்டியிட்டபடி, கோபாலகிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பின்னர் அவருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன். அப்போது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒரு பாட்டு அந்த மழையின் சத்தத்தையும் தாண்டி ஒலித்தது அவருடைய காதுகளில் கேட்டபோது அவருடைய ஆனந்தக் கண்ணீர் மேலும் அதிகரித்தது.

அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி... வாழி

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர் சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம் என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்

#தொடரும்

சிவதாஸ்-கிருஷ்ணசாமி...

orodizli
18th February 2021, 07:58 AM
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும் #இனிய_வியாழக்கிழமை_காலை #வணக்கம்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த திரைப்படங்களை வரிசைப்படி பார்த்து வருகின்றோம் அந்த வகையில் இன்று மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட சர்வாதிகாரி திரைப்படம் பற்றி பார்ப்போம்...

சர்வதிகாரி என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், எம். என். நம்பியார் வில்லனாக நடித்தார்.

இது நம்பியாரை ஒரு முக்கிய நட்சத்திரமாக இந்த திரைப்படம் நிறுவியது. இந்தபடம் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் திருச்சியில் அதிகபட்ச ஓட்டம் - 141 நாட்கள். இந்த திரைப்படம் நடிகை
டி. பி.முத்துலட்சுமியை நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகையாகவும் தன்னை நிலை நிறுத்த
வைத்தது

இயக்கியது டி. ஆர்.சுந்தரம்
தயாரித்த டி. ஆர்.சுந்தரம்
எழுதியது ஏ.வி.பி.ஆசைதம்பி
கதை மற்றும் திரைக்கதை
கோ.தா.சண்முகசுந்தரம்

எம்.ஜி.ஆர்
அஞ்சலி தேவி
எம்.என்.நம்பியார்
சித்தூர் வி.நாகையா
ஏ.கருணாநிதி
டி. பி.முத்துலட்சுமி

இசை எஸ்.தட்சிணாமூர்த்தி சினிமாடோகிராபி எம்.மஸ்தான்
ஜி. ஆர். நாதன்
எடிட்டிங் எல்.பாலு

மன்னர் வகை படங்களில் இந்த படமும் ஒன்று மணிப்பூரின் கைப்பாவை மன்னரை (புலிமூட்டை ராமசாமி) கவிழ்ப்பதற்கான வடிவமைப்புகளைக் கொண்ட ஒரு லட்சிய மந்திரி (மகாவர்மன்) தளபதி (உக்ரேசனார்) மற்றும் அவரது மெய்க்காப்பாளர் (பிரதாபன்) ஆகியோரின் பிரபலத்தால் ஒரு தடுமாற்றத்தைக் காண்கிறார் . பிரதாபனை கவர்ந்திழுக்க அவர் ஒரு இளம் பெண்ணை (மீனா தேவி) அனுப்புகிறார், ஆனால் அவள் அவனை காதலிக்கிறாள். பல திருப்பங்களுக்கு பிறகு, மகாவர்மன் பிரதாபனுடன் ஒரு அற்புதமான சண்டையில் அம்பலப்படுத்தப்படுகிறார்.
அன்று முதல் ஜனாதிபதியாக உக்ரேசனார் தேர்ந்தெடுக்கப்பட்டார், பிரதாபன் புதிய தளபதியாக நியமிக்கப்படுகிறார். கடைசியில் மணிப்பூரி இராச்சியம் இப்போது ஒரு குடியரசாக காட்டப்படுகின்றது..

படத்தின் நடிகர்கள் மற்றும் அவர்களின்
கதாபாத்திரம்

பிரதாபனாக
எம்.ஜி.ஆர்

உக்ரேசனராக
வி.நாகையா

மகாவர்மனாக
எம்.என்.நம்பியார்

ராஜாவாக
புலிமூட்டை ராமசாமி

வைராகியமாக
ஏ.கருணாநிதி

பாலாதேவாக
வி.கே.ராமசாமி

மோகனாக
கே.கே.சவுந்தர்

மீனா தேவியாக அஞ்சலி தேவி

கற்பகமாக எம்.சரோஜா

ஜெயலட்சுமி

எஸ். ஆர். ஜானகி

அங்கமுத்து

பூஞ்சோலை என முத்துலட்சுமி

நடனம்

குமாரி கமலா

அன்புடன்
படப்பை
ஆர். டி. பாபு...

orodizli
18th February 2021, 07:59 AM
[#கேட்காமலே #கொடுப்பவர்

பழம்பெரும் நடிகர் வீரப்பன் அவர்களின் அளித்து பேட்டியில் இருந்து:

#மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது
ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.

அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'
என்று கேட்டேன்.

அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்... என்றார்!

சரி உட்காருங்க...! 'சின்னவர் வெளிய
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்...

சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
"இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்"
என்று சொல்லி விட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.

அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
"இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல, மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்...

"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.

'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்...
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்ஜிஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.

அந்த நடிகரிடம், மதியம் திரும்ப
எம்ஜிஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். "சரி.." என்றார்.

வெளியே வந்த எம்ஜிஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார். அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது. எம்ஜிஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்ஜிஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது. அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத்தான் அதிக சந்தோஷம்...

மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்ஜிஆரிடம்
கேட்டேன்...

"கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க, ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க...
திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க...
அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு...
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க... ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க...? என்று கேட்டேன்.

சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.

"எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார். அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும்..." என்றார்.

எனக்குத்தான் இப்ப கண்கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறுகருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.

அதனால் தான் அவர் இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்!...bpn

orodizli
18th February 2021, 07:59 AM
இரட்டையர்கள் சேகர் மற்றும் ஆனந்த்,(எம் ஜி ஆர்) அவர்களின் தாய் மங்களத்துடன் (பண்டரிபாய்) சேர்ந்து, தந்தை ராம்நாதன் (ராமதாஸ்) நாகப்பனால் (நம்பியார்) கொலை செய்யப்பட்டதைக் காண்கிறார், இது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடர குடும்பத்தை மெட்ராஸுக்குச் செல்லத் தூண்டுகிறது. ஆனால் சேகர் (அண்ணன் எம்ஜி.ஆர்) கொஞ்சம் தண்ணீர் எடுக்க ரயிலில் இருந்து இறங்கும்போது, ​​ரயில் போய்விடுகிறது. நாகப்பன் தப்பித்து வரும் போது தண்டவாளத்தில் சேகரை கண்டு தூக்கி செல்கிறான். அதே மனிதன் தான் தன் தந்தையை கொன்றான் என்பது சேகருக்குத் தெரியாது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தன்னை "பாபு" என்று அழைக்கும் சேகர், ஒரு குற்றவாளி. நகரத்தில் வாழும் ஆனந்த் (தம்பி எம்.ஜி.ஆர்) ஒரு கிளப்-நடனக் கலைஞர், அவரோ பாபுவோ ஒருவருக்கொருவர் இருப்பதை அறிந்திருக்கவில்லை. ஒரு கொள்ளை சம்பவத்தின் போது, ​​பாபு கடுமையாக காயமடைந்து மங்களத்தின் வீட்டில் தஞ்சம் புகுந்தாலும், அவளை தனது தாய் என தெரியாமல் அவள் மேல் ஒரு பாசம் வைக்கிறார்., ஆனால் நாகப்பன் (இப்போது பூபதி என்று அழைக்கப்படுகிறார்) இதைப் பற்றி அறிந்ததும், அவர் பாபுவிடமிருந்து பாசத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்.

மற்றொரு போலிஸ் என்கவுண்டரின் போது, ​​பாபு மீண்டும் காயமடைகிறார், ஆனால் இந்த முறை பைத்தியக்காரத்தனமாகி, மறதி நோயாகவும் மாறுகிறார். டி. ஐ. ஜி. மோகன் (சுந்தர்ராஜன்)ஆனந்தைக் காண்கிறார், அவருக்கும் பாபுவுக்கும் இடையிலான ஒற்றுமையைப் பார்த்தபின், கும்பலின் அனைத்து ரகசியங்களையும் பெற்று அவர்களை கைது செய்ய பாபுவாக செயல்பட அறிவுறுத்துகிறார். ஆனந்த் ஒப்புக்கொள்கிறார், ஆனால் பின்னர் பாபு தனது சகோதரர் என்பதை உணர்ந்தார். இதை உணராத ஆனந்தின் காதலி ஜெயா (ஜே.ஜே) ஆனந்தின் பிரீஃப்கேஸில் நிறைய பணம் இருப்பதைக் கண்டு, உண்மையை அறியாத அவர், ஆனந் ஒரு குற்றவாளியாக மாறிவிட்டதாக நினைத்து, அவருடன் பேச மறுக்கிறார். மங்களமும் இதை அறிந்து, மனம் உடைந்து போகிறது. இருப்பினும், மங்கலமும் ஜெயாவும் ஆனந்தின் உண்மையை அறிந்தவுடன் விரைவில் சமரசம் செய்து கொள்கிறார்கள், மேலும் பாபு அவருடைய சகோதரர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

ஆனந்த், பாபுவாக ஆள்மாறாட்டம் செய்கிறார் என்பதை பாபுவின் காதலி ஆஷா (ராஜ ஶ்ரீ) கண்டுபிடித்தார், ஆனால் அவர் அவளிடம் சரணடைந்து பாபுவின் மருத்துவ நிலை குறித்து விளக்குகிறார், பின்னர் தன்னை பாபுவின் சகோதரர் என்று வெளிப்படுத்துகிறார். ஆஷா அவரை மன்னிக்கிறார், பின்னர் இருவரும் நாகப்பனையும் அவரது ஆட்களையும் தோற்கடிக்க அணிவகுக்கின்றனர். ஆனந்தைப் பற்றி அறியும்போது அவரைக் கொல்ல பாபு பின்னர் சிறையிலிருந்து தப்பிக்கிறான், ஆனால் ஜெயாவால் ஆனந்த் தனது சகோதரன் என்று அறிகிறான். ஆனால் பாபு இதை நம்பவில்லை, ஜெயாவைக் கடத்துகிறான். பின்னர் அவரை மங்களம் தடுத்து நிறுத்துகிறார், அவர் தனது மகன் என்றும் ஆனந்த் அவரது சகோதரர் என்றும் உணர வைக்கிறார். நாகப்பன் தனது தந்தையை கொன்றதை நினைவில் கொண்டு, நாகப்பனை தோற்கடிக்க ஆனந்த் உடன் இணைகிறார், பின்னர் கைது செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, பாபு "சேகர்" ஆகத் திரும்பி, தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைகிறார்.
அருமையான பாடல்கள் கொண்ட அற்புத திரைப்படம் .நாகேஷ் அவர்கள் கிழவி வேடத்தில் வந்து வி.கே.ராமசாமியுடன் பண்ணும் காமெடி கலாட்டா ஹைலைட்.........Sr.Bu

orodizli
18th February 2021, 08:00 AM
#புரட்சித்தலைவர் கொடுங்கோலன் ஜெயவர்த்தனே-வுக்கு விடுத்த தில்லான எச்சரிக்கை..!

தமிழக முதல்வர் #எம்ஜிஆர் 1983-ஆம் ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

"தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள். கட்டுண்டு இருக்கிறார்கள். ஜெயவர்த்தனே தயவு செய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண்டாம்’ என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு,

‘இருப்பது ஓர் உயிர் தான், போவதும் ஒருமுறைதான்’ என்ற அறிஞர் அண்ணா கூறியதை தெரிவித்துக் கொள்வேன்.

'ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படு கொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்துகோடி தமிழர்களும் சீறிப்பாயக்கூடிய நிலைமையை ஜெயவர்த்தனே நிச்சயமாக ஏற்படுத்தக் கூடாது' என்று தமிழக முதல்வர் என்ற முறையிலும் அனைத்திந்திய அண்ணா தி.மு.கவை நிறுவியவன் என்ற
முறையிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

#மக்கள்திலகத்தின் இந்த அறிக்கை, எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத
துணிச்சலை பறைசாட்டியது...

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நம் தலைவர் ஹீரோதான்..........Rmh

orodizli
18th February 2021, 08:01 AM
அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...

எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர். எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்... எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து... தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு... நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர். பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.

"அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்..." என தயங்கியிருக்கிறார்.

"நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.." என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.

முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....

"இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க... கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....'

-என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
"சாப்பிட்டீங்களா... என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?' என கேட்டிருக்கிறார்.

திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.

ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...

"அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி..." என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

ஊருக்கு வந்தவர்... திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்....Baabaa

orodizli
18th February 2021, 08:02 AM
நிலைத்து நிற்கும் புகழ் மன்னர்
நீடித்து நிற்கும் பெருமைக்குரிய பேரரசர்
அழியாத புகழின் அதிபதி பூலோக சக்கரவர்த்தி
மக்கள் அனைவரும் இறைவனாக கடவுளாக நம்பிக்கையுடன் போற்றி வணங்கப்படுகிற ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் பெருந்தகை மக்கள் திலகம்

கிட்டத்தட்ட சுமார் 100/ ஆண்டுகளாக தொடர்ந்து அனைவரது இதயத்திலும் பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் கலந்து நிறைந்து நிற்கும் ஒரேயொரு திருநாமம் உண்டு என்றால் அது எம் ஜி ஆர் என்ற புனித பெயர்தான் ��

தினம் தோறும் அனைவராலும் உச்சரிக்க படுகின்ற ஒரேயொரு திருநாமம் எம் ஜி ஆர் என்ற புனிதமான தெய்வீக திருப்புகழ் பெற்ற பெயர் தான் ��

100/ ஆண்டுகள் என்ன 1000/ ஆண்டுகள்
என்ன
ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் ஆனாலும் அழியாத புகழின் அதிபதி பேரரசர் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் ��

பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக நல்லாசி களுடன் ��

எனதருமை நண்பர்கள் அனைவருக்கும் இனிதான நல் அழகிய இளம் காலை பொழுது வணக்கம் அன்பர்களே ��

எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் என்றும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் ��

என்றும் என்றென்றும் அன்புடன் நன்றியுடன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் கோடானுகோடி ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளில் நானும் ஒருவன்✌️������.........smn

orodizli
18th February 2021, 08:02 AM
[பல முறை, காயப்படுத்திய, பத்திரிக்கையாளருக்காக ...
கண்கலங்கிய எம் ஜி ஆர்.!!.

அவர் முற்போக்கு கட்சியின் பத்திரிகையாளர். எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து தொங்க விட்டுக்கொண்டிருந்தவர். அமைச்சர்களின் பல ஊழல்களை எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.

செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.

ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிலுந்து புறப்பட்ட எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள் என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.
அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள் என்கிறார்.

அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். அவர் மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

நிலையை புரிந்துகொண்ட எம்ஜிஆர், வாகனத்தை கல்யாணி மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் மருத்துவர்களை அழைத்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார்.

ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் அந்த நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக் கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார். எம்ஜிஆரும் பத்திரிகையாளருக்கு சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த சமரசமும் இருக்காது.

தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை.

காலம் ஓடியது. ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

எம்.ஜி.ஆருடன் இருந்த ‘தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார் எம்ஜிஆர்.

மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்..........bpng

orodizli
18th February 2021, 08:04 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது படங்கள் பிரமாண்டமாகவும், சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்க வேண்டும், தன்னை நம்பிய ரசிகர்களுக்கு நிறைவான படமாக இருக்கவேண்டும் என்று விரும்புவார். இதற்காக அவர் பிறமொழி படங்கள், ஹாலிவுட் படங்களை பார்த்து அதன் சாயலில் தனது படம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அப்படி அவருக்கு பிடித்த ஒரு ஹாலிவுட் படம். ஹிட்சாக் இயக்கிய நார்த் பை நார்த்வெஸ்ட். இது ஒரு ஆள்மாறாட்ட கதை. அதாவது ஒருவன் ஒரு கொலை செய்துவிட்டு அதன் மூலம் கிடைத்த பணம், சொத்துக்களை கொண்டு இன்னொருவன் பெயரில் வாழ்வான். அவனது நிஜ முகத்தை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது அந்த படத்தின் ஒன்லைன்.

அதேபோன்ற நம் நாட்டுக்கு ஏற்றமாதிரி ஒரு கதை பண்ணுமாறு பி.ஆர்.பந்துலுவிடம் கேட்டிருந்தார் எம்.ஜி.ஆர், அப்படி உருவான படம்தான் தேடிவந்த மாப்பிள்ளை. இந்த கதை தயாரானாதும் எம்.ஜி.ஆர் வேறொரு படத்தில் பிசியாக இருந்தார். இதனால் அவரது ஒப்புதலுடன் அந்த கதையை ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் பீடி பசவன்னா என்ற பெயரில் எடுத்தார். அங்கு அது பெரிய வெற்றி பெற்றது. பின்னர்தான் தேடி வந்த மாப்பிள்ளையாக தமிழில் தயாரானது.

இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயஸ்ரீ, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்பட பலர் நடித்திருந்தார்கள். இயக்குனர் பி.ஆர்.பந்துலு இதில் எம்.ஜி.ஆரின் அப்பாவாக நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், வெற்றி மீது வெற்றி வந்த என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும், இடமோ சுகமானது , தொட்டு காட்டவா, மாணிக்கத்தேரில் மரகத கவசம் மின்னுவதென்ன உள்பட தேனினும் இனிய பாடல்கள் இடம்பெற்ற படம். திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாள் ஓடி வசூலை குவித்த படம்.......Devi Ravichandran

orodizli
18th February 2021, 08:05 AM
1961 ன் பிளாக்பஸ்டர் "திருடாதே"யும்
"தாய் சொல்லை தட்டாதே"யும் தான்.
அதைப்போல் 1962 ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் தேவரின் "தாயை காத்த தனயன்"தான். "தாய் சொல்லை தட்டாதே" படத்தைக் காட்டிலும் ஒருபடி
அதிகம் வெற்றியை பெற்ற படம்தான் "தாயை காத்த தனயன்".
அய்யனுக்கு 1962 ல் 9 படங்கள் வந்தாலும் அதில் தேறியது "பார்த்தால் பசி தீரும்" மற்றும் "படித்தால் மட்டும் போதுமா"? மட்டும்தான். இரண்டையும் ஒரிரு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓட்டி மகிழ்ந்தனர்.

"தாயை காத்த தனயன்" 1962 ல் மீண்டும் 8 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பிரமிக்கத் தக்க வெற்றியை பெற்றது. 1959 லிருந்து 1962 வரை பீம்சிங் ஒருவரே மூழ்கும் படகை கரை சேர்த்தவர். 63, 64 ல் அய்யனுக்கு சொல்லி கொள்ளும்படி பெரிய வெற்றி ஒன்றும் இல்லை.
அதன்பின் ap நாகராஜனை பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் ஸ்ரீதர்,பாலாஜி என்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து அய்யனை கை கொடுத்து தூக்கி விட்டார்கள். யார் கைகொடுத்தாலும் தலைவரின் வெற்றியை நெருங்க முடியவில்லை என்ற மனக்குறைதான் அய்யனின் படங்களை ஓட்ட ஆரம்பித்த காரணம்.

அய்யனின் படத்தின் தரமறிந்துதான் தியேட்டருக்கு மக்கள் சென்றனர். ஆனால் எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டவுடனே தியேட்டருக்கு சென்று விடுவார்கள். இதற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சியை நான் சொல்லுகிறேன்.
சென்ற வாரம் தூத்துக்குடி சத்யாவில் "நாளை நமதே" என்ற விளம்பரம் பார்த்தவுடன் தியேட்டருக்கு சென்றேன். தியேட்டரை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டிருந்தது. நடைபாதையை மட்டும் சற்று மண்மேடாக்கி அங்கு படத்தை திரையிட்டார்கள். ஒரு மாத வெள்ளநீர் பச்சை கலரில் இருந்தது.
உள்ளே சென்று பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டர் அருகில் சென்ற போது 'ஒரு பக்கம் பாக்குறா' என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

என்னப்பா "நாளை நமதே" என்று போஸ்டர் ஒட்டி விட்டு "மாட்டுக்கார வேலன்" ஓடுகிறதே என்று கேட்டேன்.
அதற்கு சைக்கிள் ஸ்டாண்டு பாதுகாவலர் "நாளை நமதே" பெட்டி வரவில்லை, அதனால் "மாட்டுக்கார வேலனை" திரையிட்டார்கள் என்றார். இதென்ன "நாளை நமதே" புதுப்படமா? பெட்டி வரவில்லை என்று சொல்கிறார்களே என்று நினைத்தேன். சுற்றிலும் எந்த விளம்பர போஸ்டர் ஏன் தியேட்டரில் கூட போஸ்டர் ஒட்டாமல் "மாட்டுக்கார வேலனை" ஒட்டுகிறார்கள்.

படத்திற்கு கூட்டம் எப்படி என்று கேட்டேன்.
டூ வீலர் மட்டும் மொத்தம் 100 ஐ தாண்டி வந்திருக்கிறது. மொத்தம் 150.பேர் பார்க்கிறார்கள் என்றவுடன் ஆச்சர்யமடைந்தேன். என்ன படம் என்ற கேள்வியில்லாமல் எம்ஜிஆர் படம் பார்க்க நிறைந்திருந்த கூட்டம் அது. தலைவரின் முகம் பார்த்து மலரும் தாமரை கூட்டம் அது. அதனால்தான் அந்த திரையரங்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் எம்ஜிஆர் படம் மட்டுமே திரையிட்டு சாதனை செய்தார்கள்.

"தாயை காத்த தனயன்" சென்னையில் 112 நாட்களும் மற்ற ஊர்களில் 137 நாட்கள் வரை ஓடியது. மதுரை கல்பனாவில் 137 நாட்கள் ஓடி ரூ 239712.67 வசூலாக பெற்றது. பாடல்கள் kv மகாதேவன் இசையில் பிரமாதமாக அமைந்தது.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலுக்குமுன் சிறந்த காதல் பாடலாக 'காவேரி கரையிருக்கு' பாடலை சொல்லலாம்.

எம்ஜிஆருக்கு தேவர் படம் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது எனலாம். எம்ஜிஆரால் பட அதிபர்கள் பலனடைந்தார்கள். ஆனால் மாற்று நடிகருக்கோ படஅதிபர்களால்தான் அவர் பலனடைந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தூத்துக்குடியிலும் 50 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது..........ksr.........

fidowag
18th February 2021, 10:15 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி.........
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை
*முன்னிட்டு* *(19/02/21 முதல் )* * * * * * * * *
-----------------------------------------------------------------------------------------------------------------------------* * *
** * * *மதுரை சென்ட்ரல் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

கோவை சண்முகா - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி* 4 காட்சிகள்*

தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை ,
* * * * * * * * * * * * * * * திரு.சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ் .


திருச்சி - பேலஸ் - நம் நாடு**- தினசரி 4 காட்சிகள்*
கரூர் -லட்சுமி ராம் - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்*

தகவல் உதவி : திரு. கிருஷ்ணன், திருச்சி .


கொழிஞ்சாம்பாறை (கேரளா )- ரவிராஜாவில் - எங்க வீட்டு பிள்ளை*
தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.* வி.ராஜா ., நெல்லை .*


மேலும் சில அரங்குகளில் தலைவரின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது .
அவை நாளை தெரியவரும் .



* * * * * * **

orodizli
19th February 2021, 07:53 AM
#எம்ஜிஆர் கரங்களில்
ரத்தக் கீறல்கள் !
___________________________

"எம்ஜிஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்" எனும் தலைப்பில் வார இதழ் ஒன்றில், "சந்தித்தேன்- சிந்தித்தேன்" தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அந்த படைப்பு சமூக வெளியில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது.

1980-ஆம் மே மாதத்தில் ஆற்காடு முதலி தெருவில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், 3 ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர்1980 மே மாதவாக்கில் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை சந்திப்பதில் எம்ஜிஆர் படு சுறுசுறுப்பாக இருந்த காலகட்டம் அது.

"ஆட்சி பறி போய்விட்டது. தேர்தலைச் சந்திக்கிறோம். ஆட்சியை மீட்போமா?" என்ற கவலை இல்லாமல் எம்ஜிஆர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் 'தினமலர்' செய்தியாளனாக நான் களமாடிக் கொண்டிருந்தேன்.தேர்தல் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் பொதுத் தேர்தல்.

லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை செய்தியாளர்களாகிய நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம் நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது அவர் தந்த பதில் இதோ:

"காரணத்தைச் சொல்லாமலேயே கலைத்து விட்டார்கள். எங்கள் ஆட்சியைக் குலைத்து விட்டார்கள். மக்கள் அளித்த ஆட்சியை மத்திய அரசு பறித்துக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல். மக்களிடமே சென்று நான், "என்ன தவறு செய்தேன்? ஏன் டிஸ்மிஸ் செய்தார்கள்?" என்று வினா வைத்து இருக்கிறேன். இனி விடையளிக்க வேண்டியவர்கள் அவர்கள் தான்.

"என் கடமையை நான் நிறைவாக செய்து முடித்து இருக்கிறேன். தேர்தல் பிரச்சாரப் பணிகளைப் பொருத்தவரை முழுமையாக நடத்தி முடித்து விட்டேன். இனி மக்கள் என்ன தீர்ப்பு தந்தாலும் அதை ஏற்க நான் தயாராகிவிட்டேன்.

நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்தார்கள். முண்டியடித்துக் கொண்டு நெருங்கினர்.என்னுடன் கை குலுக்கவும், பேசவும், முகத்துக்கு நேரே நின்று நோக்கவும் முனைந்தனர்.

ஒரே நேரத்தில் பலரும் என் கைகளைத் தொட முயன்றனர். கைகுலுக்கக் கரம் நீட்டினர். நானும் இருகரங்களையும் அவர்களுக்கு வழங்கினேன். அவர்கள் ஆர்வமிகுதியால் என் கைகளை வேகமாக தொட்டு இழுக்கும் பொழுது அவர்களின் கைவிரல் நகங்களால் கீறப்பட்டு என் கைகளில் எல்லாம் ரத்தக் கீறல்கள். கைகளைப் பாருங்கள்... " -இவ்வாறு பேசியபடியே அவர் தன் கரங்களை விரித்துக் காட்டினார். அவற்றில் சின்னக் குழந்தை சிலேட்டில் கிறுக்கியது போல ரத்தக் கீற்றுகள் தென்பட்டன.

எம்ஜிஆர் நா தழுதழுத்த குரலில் கூறினார், "என் ரத்தத்தையே மக்களுக்குத் தத்தம் அளித்து விட்டேன். இனி அவர்கள் என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்பேன்" என்று சுருக்கமாக, ஆனால் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

"நிச்சயம் வென்று விடுவோம்" என்ற நம்பிக்கை அவரின் பேச்சில் இல்லை. நாங்களோ, "வெற்றி உங்களுக்குத்தான்" என்று உற்சாகமூட்டி விட்டு வந்தோம்.
தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன*.

அவர் கோட்டைக்கு மீண்டு வந்தார் வெற்றியோடு மீண்டும் வந்தார்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின் திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். அப்போது ரசிகர்களின் கூட்டம், பொது மக்களின் திரள் என ஜன சமுத்திரத்தினுள் திறந்த ஜீப்பில் பயணம் மேற்கொண்டார்.
போலீஸ் பாதுகாப்பு போதிய அளவுக்கில்லை.

எம்ஜிஆரின் கைகுலுக்க அக்கூட்டம் கட்டுப்பாடின்றிப் பாய்ந்தது. ஏக காலத்தில் பல பேர் எம்ஜிஆரின் கரங்களைப் பற்றினர். அவர்களிடம் ஆர்வமிகு ஆவேசம் ஆட்கொண்ட நிலையில் எம்ஜிஆரின் கரங்கள் கீறப்பட்டன. இந்நிலையோ பல முறை.

அப்போது சென்னையில் தினமலர் பதிப்பு இல்லை. திருச்சி பதிப்பில்
ஞான பாண்டியன் எனும் சப் எடிட்டர், பணியில் இருந்தார். அவர் அப்போதே, "தொண்டர்களின் அன்புத் தொல்லை.
எம்ஜிஆர் கைகளில் ரத்தக்கறை"
என்று தலைப்பிட்டு அந்துமணியின் பாராட்டைப் பெற்றார்.
80 வயதையும் தாண்டி அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
கடந்த ஆண்டு அவரின் இல்லம் சென்று அவருடன் உரையாடி மகிழ்வித்தேன்.
அப்போது எடுத்த படம் இப்போது இங்கே...

நூருல்லா ஆர். ஊடகன் 05-09-2020

திருத்தப்பட்டது.

Ithayakkani S Vijayan...

orodizli
19th February 2021, 07:54 AM
ஒவ்வொரு ஏழை தாய்மார்களின் உள்ளத்தில் மகனாகவே வாழ்ந்தார் நம் #மக்கள்திலகம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு..

திருவண்ணாமலை பக்கத்தில் உள்ள ஊர் சர்ச்சில் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். நாம் 25 பைசா கொடுத்தால் ஒரு ஜெபம் செய்துவிட்டு பாடல் ஒன்றை போடுவார்கள்.

ஒருநாள் மாலை நேரம், ஒரு 70 வயதான பாட்டி, ஈரமான புடவையுடன் வந்து 25 பைசா கொடுத்து,

"எனது மகனை உடல் நலம் இல்லாமல் ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் சேர்த்து இருக்கின்றனர். அவருக்குதான் நீ ஜெபம் செய்து பாட்டு போடவேண்டும்" என்றார்.

அங்கிருந்தவர்களுக்கு ஒரே வியப்பு..!

"பாட்டி, நீயோ ஏழை. எப்படி உன் மகனை அமெரிக்க ஆஸ்பத்திரியில் சேர்த்தாய்" என கேட்டதற்கு...

அந்தற்கு அவர்.. "என் மகன் என்று கூறியது எம்ஜியாரைத்தான்" என்றார்.

"எப்படி பாட்டி அவர் உன் மகன்" என்று கேட்டபோது...

"என் மகன் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டான். இந்த மவராசன் தான் எனக்கு மாசம் 30 ரூபாய் பென்ஷன் தருகிறார்.

அதில் நான் 50 பைசாவிற்கு தினமும் 5 இட்லி வாங்கி சாப்பிடுவேன். மதியம் பால்வாடியில் சாப்பாடு. எம்ஜியார் குடுத்த 10 கிலோ அரிசியில் சோறு.

வருடத்திற்கு இரண்டு புடவை. இவ்வளவும் செய்த எம்ஜியாரு என் மகன் இல்லாமல் வேற யாரு..!?"

- என்று அந்த மூதாட்டி கூறினார்.

எப்படி ஏழைகளின் உள்ளத்தில் அந்த மனிதர் எல்வாரு குடியிருந்தார் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாகவே உள்ளது..! Baabaa

orodizli
19th February 2021, 08:00 AM
1984-ஆம் ஆண்டு, புரட்சித் தலைவரின் அன்பிற்குரிய ஜே.சி.டி.பிரபாகரனின்
உதவியாளர் கண்ணையாவின் திருமணம்.

அந்த எளிய தொண்டணின் திருமணத்திற்கு தலைமையே ஏழைகளின் ஏந்தல் நமது முதல்வர் புரட்சித்தலைவர்..

அந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய #மக்கள்திலகம்..

“எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் எனக்கு வாழ்த்த வயதில்லை என்று பிரபாகரன் பேசினார்.

பிரபாகரனின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு வந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

அவர்களிடம் ஒரு வேண்டுகோள். பிரபாகரனுக்கு நீங்கள் பெண் பார்க்கப் போகிறீர்களா? அல்லது, இன்றே எனது மனைவி ஜானகியை அனுப்பிப் பெண் பார்க்க வைக்கவா?

எனக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால், அவளை நான் பிரபாகரனுக்குத் தான் கொடுப்பேன்!”

-என்று பேசி பிரபாகரனை மட்டுமல்ல, மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ வைக்கிறார்.

மக்கள் திலகம் பேசி முடித்த மறு ஆண்டே பிரபாகரனுக்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவரது பெற்றோர்.

ஆனால் அந்த நேரத்தில் தான் மக்கள் திலகம் உடல் நலக் குறைவால், அமெரிக்காவுக்குச் சிகிச்சை பெறச் செல்ல நேரிடுகிறது.

திருமணம் முடிந்து 1985, ஆகஸ்டு 25-ஆம் தேதி சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை -ஜே.சி.டி பிரபாகரன் தன் மனைவியுடன் சந்திக்கிறார்.

சிறிது நேரம் இருவரையும் இமை கொட்டாமல் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திலகம், பிரபாகரனைப் பார்த்து மழலைப் பேச்சில்

“திருமணப் பரிசாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.

பிரபாகரன் பொன் கேட்பார். பொருள் கேட்பார் என்று எதிர்பார்த்த மக்கள் திலகத்திடம்,

“நாடார்கள்-சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள்.

மீனவர்களும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள.

அதே போல் மதம் மாறிய வன்னிய (படையாச்சி) கிறிஸ்துவர்களையும், சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்!

இதுவே தாங்கள் எனக்குக் கொடுக்கும் திருமணப் பரிசு” என்று ஒரு பேப்பரில் எழுதித் தருகிறார் ஜே.சி.டி. பிரபாகரன்.

வாங்கிப் படித்த மக்கள் திலகம் மீண்டும் மழலை மொழியில்,

“அன்னிக்கு முதன்முதலாக, உனக்காக இல்லாம, மாணவர்கள் பசிக்காக உதவி கேட்டே..!

இன்னிக்குக் கூட திருமணப்பரிசாக உனக்காக இல்லாம, மக்களுக்காகத்தானே கேட்கறே!”

-என்று ஆனந்தக் கண்ணீருடன் ‘ஆவன செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

ஆகஸ்டில் உறுதி அளித்த மக்கள்திலகம், சொல்லியபடி டிசம்பரில் பிரபாகரனின் கோரிக்கையை நிறைவேற்றி அமுலாக்குகிறார்.

இதுதான் மக்கள் திலகம். இதுதான் புரட்சித்தலைவரின் தொண்டர்கள்..

தலைவருடன் ஜெ.சி.டி.பிரபாகரன்...

தகவல் உதவி: பிரபாகரனின் அண்ணன் மகன் விஜய்.........

orodizli
19th February 2021, 08:01 AM
கவிஞர் கண்ணதானுக்கு உதவி ....

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ...

ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார்.

யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது

அவருக்கு வேண்டிய ஒருவர்
நம்ம மாதிரி ஆள்களுக்கு

உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார்.

அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார்.

இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள்,

அய்யய்யோ வேண்டவே, வேண்டாம்

அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன்.

நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல,

இவர் சொல்கிறார்,
மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர்,

மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர்

அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை

எனவே எதையும் யோசிக்காமல்

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம்

என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்

பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார்.

அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி,

உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.

இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார்.

ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க

அவர் ரொம்பவும் தாழந்த குரலில்

எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன்

மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல்

சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.

அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து

இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல

அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து

பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து

இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார்

என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.

பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில்

பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு

உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று,

மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார்.

தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே ..

நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன்.

ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே

நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்

நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்....Mu

orodizli
19th February 2021, 08:02 AM
காசே கடவுள்!!
---------------------------
எம்.ஜி.ஆர் பற்றிய இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!
நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?
டைப்பிஸ்ட் கோபு!!
அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!
அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!
சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!
1978!!
வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-
அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??
அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?
இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??
ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?
வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--
நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--
என்ன பண்ணறது கோபு? விதி வலியது??
இதில் சிவாஜி மட்டும்--
நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??
ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --
உதவி??--ம்ஹூம்!!
எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!
தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!
குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--
வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!
டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-
ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??
நான் பாத்துக்கறேன்??
வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?
மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?
அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?
மறு நாள் காலை ஆபரேஷன்?--
மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?
கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?
எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு மாயாஜாலம் காத்திருக்கிறது?
ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--
மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--
இதயத்துக்குப் பால் வார்க்கிறார் மருத்துவர்?
ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??
மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!
ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!
தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,
கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!
சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!
உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?
பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???
சரி!!
எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?
முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --
ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?
காசேதான் கடவுளடா??
உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--
மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--
ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!
தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!
அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!!
கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்
பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???...vtr

orodizli
19th February 2021, 08:02 AM
'நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.

ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்... ' என்று பயங்கர பரபரப்பு.

அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.

‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.

ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.

அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.

அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.

படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

"அஞ்சு பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.

எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.

'எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்' என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.

அடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ' புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன்."

-பாரதிராஜா என்கிற அல்லிநகரம்
சின்னசாமி | சினிமா விகடன்

orodizli
19th February 2021, 08:04 AM
"#எம்ஜிஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”

''நான் பிறந்தது ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில்தான்.

ஆனால், வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்த ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என் வாழ்க்கையின் அழகான நாட்கள்.

சலவைத் தொழிலாளர்கள் அதிகம் வசிச்சதாலும், சலவைத் துறை இருந்ததாலும் இது வண்ணாரப்பேட்டை ஆச்சுங்கற கதை ஊருக்கேத் தெரியும். இன்னைக்கு இது கட்பீஸ் ஜங்ஷனா மாறிடுச்சு!.

வண்ணாரப்பேட்டையின் புழுதி பறக்கும் தெருக்களுக்கும் எனக்கும் அப்படி ஓர் அந்நியோன்யம் உண்டு.

ஆதம் சாகிப் தெருவுல ஆரம்பிச்சு ராமநாயக்கர் தெரு, ஆண்டியப்ப முதலித் தெரு, பேரம்பாலு செட்டித் தெரு, நாராயண நாயக்கர் தெரு, ராமானுஜர்கூடம் தெரு, சண்முகராயன் தெரு, கைலாயச்செட்டித் தெரு, பசவையர் தெருன்னு என் கால்படாத தெருக்கள் இங்கே இல்லை.

சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இருக்கிற கார்ப்பரேஷன் நடுநிலைப் பள்ளியில் படிச்சேன்.

படிப்பு, பாட்டு, பேச்சு எல்லாத்துலயும் முதல் இடம் எனக்குத்தான். பின்னாடி கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியிலும் சர் பி.டி.தியாகராயர் கல்லூரியிலும் படிச்சேன்.

அந்த காலேஜுக்கு டிரஸ்டியா இருந்த எம்.ஜி.ஆர்., பிரின்சி பாலுடன் மீட்டிங்குக்கு வருவார்.

அங்க இருந்த அரங்கத்துல 'இன்பக் கனவு’ நாடகம் நடக்கும். அப்போ ஸ்டேஜுக்குப் பின்னாடி இருந்து வந்து எம்.ஜி.ஆரைத் தொட்டுப் பார்த்திருக்கேன்.

நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ராயபுரம் பிரைட்டன் தியேட்டர்ல 'மலைக் கள்ளன்’,

பாரத் தியேட்டர்ல 'தாய்ச்சொல்லைத் தட்டாதே’, 'குடும்பத் தலைவன்’, 'தாய்க்குப் பின் தாரம்’,

கிருஷ்ணா தியேட்டர்ல 'நாடோடி மன்னன்’,

கிரவுன் தியேட்டர்ல 'பணம் படைத்தவன்’னு ஓடி ஓடி எம்.ஜி.ஆர். படங்களைப்பார்த்து வளர்ந்தேன்.

அதே மாதிரி பிரபாத்தியேட்டர்ல பார்த்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’,

மகாராணி தியேட்டர்ல பார்த்த 'காட்டு ரோஜா’வும் மறக்க முடியாது. 'காட்டு ரோஜா’ படம் பார்க்க 35 பைசா டிக்கெட்டு எடுக்க எகிறிக் குதிச்சு, பல்லு ஒடைஞ்சு ரத்தம் வழியுது. ஆனாலும் படம் பார்த்துட்டுதான் திரும்பினேன்.

இன்னைக்கு கிருஷ்ணா, கிரவுன், பிரபாத் தியேட்டர்கள் இல்லை. பாரத், மகாராணி எல்லாம் இருக்கு. பிரைட்டன் தியேட்டர் ஹை-ட்ரீம்ஸா மாறிடுச்சு."

- கலைபுலி எஸ்.தாணு.........

orodizli
19th February 2021, 08:04 AM
நான் ஒரு துணை நடிகன்....என்னை போன்றவர்களுக்கு பட வாய்ப்புக்கள் வரும் வராமலும் இருக்கும்.

மக்கள் திலகத்துடன் நான் நவரத்தினம் போன்ற படங்களில் நடித்து உள்ளேன்...ஒரு முறை அவர் முதல்வர் ஆக இருந்த நேரம் எனக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் எனது குழந்தைகளுக்கு கல்வி செலவுகளுக்கு பணம் தேவை பட...

யாரிடம் போய் கேட்க என்று ஒரே குழப்பம்....
ஏன் எம்ஜிஆர் அண்ணன் இடம் கேட்க கூடாது...மற்றவர்கள் உதவினால் அது கடன். அவர் கொடுத்தால் அது கொடை என்று தொலைபேசியை எடுத்து தொடர்பு கொள்ள....

என் நல்ல நேரம் அவரே அதை எடுத்து பேச நான் விவரம் சொல்ல மறுநாள் காலை அவர் வீட்டுக்கு வர சொன்னார்......

எனது அன்றைய தேவை 250 ரூபாய்கள் மட்டுமே....நான் மறுநாள் போய் வீட்டில் காத்து இருக்க...அரசு அதிகாரிகள்...அமைச்சர்கள்....கட்சிக்காரர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.....

அனைவரும் அவரை பார்த்து பார்த்து சென்று கொண்டு இருக்க எனக்கு இன்று என்னை எங்கே அவர் பார்க்க இனி யாரிடம் போய் உதவி கேட்க என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.

அன்று தான் பள்ளியில் பரீட்சை பணம் செலுத்த கடைசி நாள்.
அப்போது நானே எதிர் பார்க்காமல் என்னை நோக்கி வந்த தலைவர் சார்ந்த மாணிக்கம் அண்ணன் என்னை தனியாக அழைத்து இந்த கவரை உங்களிடம் முதல்வர் கொடுக்க சொன்னார் என்று சொல்ல..

நான் நடப்பது நிஜமா அல்லது கனவா என்று நம்பாமல் வாங்கி கொண்டு ஒரு ஓரம் ஆக போய் அந்த கவரில் நான் கேட்ட தொகை இருக்குமா என்று பார்த்தேன்.

ஆமாம் இருந்தது பத்து மடங்கு அதிகம் ஆக..
என்னால் என்னையே நம்ப முடியவில்லை.
ஆன நேரம் ஆகட்டும் அதான் பணம் இருக்கே என்று நான் அவரை பார்க்க காத்து இருக்க.

கோட்டைக்கு கிளம்பி வந்த அவரை பார்த்த உடன் என் கண்கள் குளம் ஆக நான் இருகரம் கூப்பி வணங்க.....என்னை அருகில் அழைத்து நமக்கு துன்பங்கள் வரும் போகும் அதை பற்றி கவலை கொள்ளாமல் நாம் உழைத்து கொண்டே இருக்கும் எண்ணத்தில் நிலைத்து நிற்க வேண்டும்..... என்று என் காதில் மட்டும் சொல்லி சிரித்தார்....

எனக்கு அவர் அன்று செய்த உதவி அடுத்த சில மாதங்களுக்கு போதும் ஆனதாக இருக்க ....அந்த மாதம் முதல் அடுத்து அடுத்து பட வாய்ப்புகள் எனக்கு குவிந்தன.....

அடுத்த சில மாதங்களில் நலிந்த நடிகர் நடிகை திரைப்பட துறை சார்ந்த அனைவருக்கும் நடந்த ஒரு விழாவில் அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஆளுக்கு ஒரு தங்க மோதிரம் அரசு முத்திரை உடன் கொடுக்க பட்டு உடன் நிதியும் தனியாக வழங்க பட்டது...

உலகில் ஆயிரம் உதவி செய்பவர்கள் வரலாம் போகலாம் ஆனால் இனி ஒருவர் புரட்சிதலைவர் போல எண்ணம் அறிந்து உதவி செய்பவர் இனி பிறப்பது கடினம் என்கிறார் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்.

வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன்............

orodizli
19th February 2021, 08:05 AM
#பிறந்துகொண்டிருக்கும் #எம்ஜிஆர் #பக்தர்கள்

MY LAST YEAR FB MEMORY

Ram Manohar Bokkisa Digital Analytics, Movie Buff, Aspiring Entrepreneur ANDHRA PRADESH

#மேற்கண்ட #ஆந்திரஇளைஞரின் #எம்ஜிஆர் & #என்டிஆர் குறித்த கருத்துக்களின் தமிழாக்கத்தைப் பதிவு செய்துள்ளேன்.......

வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் மனதில் எந்த அளவு எம்ஜிஆர் ஆக்ரமித்துள்ளார் என்பதற்கு இது பெரும் சான்று. இத்தனைக்கும் அந்த இளைஞன் எம்ஜிஆரைப் பார்த்திருக்கக்கூட மாட்டார். இது என்டிஆர் அவர்களைக் குறைகூறும் பதிவல்ல. எம்ஜிஆர் எந்தளவு மக்களின் மனதில் இன்றளவும் தன்னிகரற்று விளங்குகிறார் என்பதற்கான மீச்சிறு உதாரணமே...

இதைப் பதிவு செய்யும் போது எனக்கு ஏற்பட்ட பரவசநிலையை வெறும் வார்த்தைகளினால் கூற இயலாது...

எம்ஜிஆர் பக்தனாக இருக்க நாம் எத்தனை ஆண்டுகாலம் தவம் செய்தோமோ? எம்ஜிஆர் பக்தி நமது அடுத்த பிறவியிலும் தொடரவேண்டும் என்பதே நான் இறைவனிடம் கேட்கும் வரம்...

இதோ அந்த சிறப்புமிக்க பதிவு
--------------------------------------------------------------------

என் தாய் மொழி தெலுங்கு. நான் ஆந்திராவில் இருந்து வருகிறேன்.

எம்ஜிஆர் மற்றும் என்டிஆர், இருவரும் நடிப்பு மற்றும் பிற அம்சங்களில் தங்கள் சொந்த முயற்சியில் உயர்ந்தவர்கள். ஆனால், எம்ஜிஆரைப் பொறுத்தவரை, தனது சொந்த கட்சியை துவக்கி தைரியமாக கோலோச்சியவர். முதன்முதலில் இந்தியாவில் ஒரு நட்சத்திர நடிகர், முதல்வரான பெருமையைப் பெற்றவர். என்.டி.ஆரும் முதல்வரானார். ஆனால் அவர் முதலாமிடம் இல்லை. எம்ஜிஆர் தான் முதல்வராக வேண்டுமென்று மக்கள் நியமித்தனர். ஆனால் என்.டி.ஆர் அப்படி அல்ல.

எம்ஜிஆர் பல பிரபலமான சமூகநலத் திட்டங்களைத் தொடங்கினார், இது இந்தியா முழுவதும் பல அரசியல்வாதிகளாலும், என்.டி.ஆராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்பட்டது.

என் வாழ்நாளில் எந்த வீட்டிலும் என்டிஆரின் ஒரு புகைப்படத்தையும் நான் பார்த்ததில்லை...
ஆனால் எம்ஜிஆரின் புகைப்படங்கள், வீடுகள், கடைகள் மற்றும் பிற இடங்களில் நான் நிறையப் பார்த்து மெய்சிலிர்த்துள்ளேன். இன்றும் அவரது பிறப்பு அல்லது இறப்பு ஆண்டு விழாவில், பலர் அவரது புகைப்படங்களை தங்கள் வீடுகளுக்குள் வைத்து ஆராதிக்கின்றனர் என்பது உலகில் யாருக்குமே கிடைக்காத சிறப்பு.

என்.டி.ஆருக்காக இறக்கத் தயாராக இருக்கும் ஒரு நபரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை.
ஆனால் எம்ஜிஆருக்காக இன்றளவும் தங்களின் உயரையே கொடுக்கத்துணியும் மக்களை தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் பார்க்கிறேன்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பெரும்பாலான இடங்களில் என்.டி.ஆர் முறைகேடுகள் செய்ததாக வழக்குகள் உள்ளன. ஆனால் அத்தகைய வழக்குகள் எம்.ஜி.ஆரிடம் இல்லை.

எம்ஜிஆர் மறையும் வரை முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். ஆனால் என்டிஆர் விஷயத்தில் அப்படியில்லை.

நான் ஒரு விவாதத்தை தொடங்க விரும்பவில்லை ஆனால் எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்து தான் என்.டி.ஆ ரிடம் பிரதிபலித்தது..........BSM...

orodizli
19th February 2021, 08:06 AM
மக்கள் திலகம் ரசிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு அவரின் திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற தானை தலைவரின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்கள்..

எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...

உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...

1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...

நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்

எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...

திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.

108 அடி உயர கட் - அவுட்...

உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: என் அண்ணன், அரங்கு சேலம் அலங்கார்.

தலைவர் இயக்கிய திரைப்படங்கள்...

1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...

செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,

எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...

திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்

எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...

தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்

எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...

திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்

அதிக பாடல்கள் பாடியவர்கள்...

திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா

வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...

100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் (என் தங்கை, உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...

முதன் முதலில் தணிக்கையில் a சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
சிறந்த தமிழ் நடிகர் - ரிக்க்ஷாக்காரன்.........

orodizli
19th February 2021, 08:07 AM
ருசி கண்டறியாத பசி தீராத வயதில்...!

எழுத்தாளர் மாலனின் வலைப்பூவிலிருந்து....

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனம். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

lஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையில சோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்தது அவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%.

Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !

Ithayakkani S Vijayan...

orodizli
19th February 2021, 08:09 AM
1983 டிசம்பர் மாதம்.. இன்று போல் கடும் மழையால் பாதிக்கப்பட்டது தஞ்சை,
நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை காண தமிழக முதல்வர் #எம்ஜிஆர் வருகிறார்..

காட்டு மன்னார் கோவில், கோட்டைப் பட்டினம் போன்ற பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், பின் மதிய உணவுக்காக அறந்தாங்கி நெடும்சாலைத்துறை பயணியர் விடுதிக்கு வருகிறார்.

அவருடன் அன்றைய அமைச்சர்கள் திருநாவுக்கரசு, திருச்சி சௌந்திரராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வருகிறார்கள்.

முதல்வர் கூட வந்தவர்கள் சாப்பிட பின் மற்ற அரசு அதிகாரிகள், ஓட்டுனர்கள் இரண்டாம் பந்தியில் சாப்பிட உக்கார்ந்தனர்.

அப்போது திடீரென முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்து அடுத்த பகுதிகளை பார்க்க புறப்படுகிறார்.

மற்றவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அன்றைய கற்பூர சுந்தர பாண்டியன் ias அவர்கள் விவரத்தை தயங்கியபடி முதல்வரிடம் சொல்கிறார்.

வாத்தியாரும் சிரித்துக்கொண்டே தன் அறைக்கு திரும்புகிறார். சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடம் 'அவசரம் வேண்டாம் முதல்வர் தன் அறைக்கு திரும்பி விட்டார். பொறுமையாக சாப்பிட்டு வாருங்கள்' என்ற விவரம் சொல்லபட்டு அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர்.

முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்து தன் காரில் ஏறாமல் அடுத்து இருந்த ஒரு காவல்துறை அதிகாரி காரின் முன் போய் நின்று கொண்டு அந்த காரின் ஓட்டுனரை அழைத்து

'சாப்பிடீர்களா?' என்று கேட்க

அவரும் 'ஆமாம்' என்று சொல்ல

'இங்கே வாருங்கள்' என்று அவரை அழைக்கிறார்.

அவர் பதறி நம்மவர் முன் வந்து நிற்க, யாரும் எதிர்பாராவண்ணம் அவர் கையை எடுத்து தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து அவர் சாப்பிடத்தை உறுதி செய்து கொள்கிறார் ஏழைகளின் ஏந்தல், எம்ஜியார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன பின்னும் கூட அடுத்தவர் பசிக்கு முக்கியத்துவம் கொடுத்து 'நாம் தான் சாப்பிட்டு விட்டோமே எவன் எப்படி போனால் என்ன' என்று நினைக்காத அவரின் இந்த குணம்தான் இன்று வரை அவர் புகழ் நிலைத்து நிற்க காரணம் ஆகிறது.

ஒரு முதல்வர் தனக்கு கீழே உள்ளவர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்த விதம் அலாதியானது.

இன்றும் புயல் பாதித்த பகுதிகளில் பல நாட்களாக தன் குடும்பம் பிள்ளை குட்டிகள் அனைவரையும் விட்டு விட்டு அல்லும் பகலும் உழைத்து கொண்டு இருக்கும் நல்ல மனம் கொண்ட மின் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் அனைவருக்கும் #புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம்
#அம்மா அவர்களின் சார்பாக
நன்றிகள்...

நன்றி: நெல்லை மணி

படம்: 13.12.1978 அன்று சேதமடைந்த படகுகளையும் மண்டபம் பகுதியில் பார்வையிடும் முதல்வர்...மக்கள் திலகம்.........

orodizli
19th February 2021, 08:14 AM
"சகல கலா வல்லவர்", நமது எம்.ஜி.ஆர். !
சொல்கிறார் 1958 காலகட்டத்தில் மக்கள்திலகத்திற்கு உடையலங்காரம் செய்தவர் !!
நாடோடிமன்னன்,மர்மயோகி,தாய்க்குப்பின்தாரம்,கலை அரசி போன்ற படங்களுக்கு நமது தலைவருக்கு உடை அலங்காரம் செய்தவர் பி.சி.பிரான்சிஸ் என்பவர்.அவர் அப்போதே சொன்னாராம்,சினிமா பற்றிய அனைத்து விஷயங்களும் எம்.ஜி.ஆருக்கு தெரியும் என்பதோடலல்லாமல் ஒப்பனை,உடை போன்றவற்றிலும் ஞானம் உள்ள அவர் ஒரு சகலகலா வல்லவர் என்று.
உடைகள் பற்றிய டிசைனை அவரே பென்சிலில் போட்டுக்காட்டுவாராம்.என்ன துணி வாங்கினால் உடை சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை சொல்வாராம்.அதே போல் ஒப்பனையிலும் புதுப்புது ஆலோசனைகள் சொல்வாராம்.
அருமை பக்தர்களே,நமது தலைவர் இன்றைய சூழல் சினிமா வரை அவரே சகலகலா வல்லவர்.அவர் அரசியலில் கோலோச்சிய காலத்தில் ஒரு சொத்து கூட வாங்காத ,ஓர் ஊழல் வழக்கும் இல்லாத சகல கலா வல்லவர், வித்தகர்.........nssm

fidowag
19th February 2021, 08:53 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி ..............
(19/02/21 முதல் )
----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மூலக்கடை ஐயப்பாவில்* நேற்று இன்று நாளை தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.ராமு, மின்ட்.


ஏரல்* சந்திராவில் ( நெல்லை மாவட்டம் ) நம் நாடு - தினசரி 3காட்சிகள் .

தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .

orodizli
20th February 2021, 07:50 AM
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும் #இனிய_வெள்ளிக்கிழமை_காலை #வணக்கம்...

புரட்சி தலைவர் படங்களின் வரிசையில் இன்று அவரின் நடிப்பில் வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் பற்றி காண்போம்...

ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் தயாரித்தார்
கு. சா. கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை

எம்.ஜி.ராமச்சந்திரன்
திக்குரிசி சுகுமாரன் நாயர்
பி.கே.சரஸ்வதி
எம்.எஸ். திரௌபதி
கே.சரங்கப்பணி
டி.எஸ். பாலையா
இசை g. கோவிந்தராஜுலு நாயுடு சினிமாடோகிராபி வி.கிருஷ்ணன்
எடிட்டிங் மாணிக்கம்

அந்தமான் கைதி என்பது இந்திய சுதந்திரம் மற்றும் பிரிவினையை கையாளும் கதை. இந்த கதையை டி.கே.சண்முகம் மேடையில் இருந்து தழுவி சினிமாவாக எடுத்தனர் மேலும் அந்தமான் கைதி மிகவும் வெற்றிகரமான நாடகம்.

#சகோதரியின்_வாழ்க்கையை #சொர்க்கமாக #தன்னுடைய_வாழ்க்கையை #நரகமாக்கி_கொண்ட_ஒரு
#சகோதரனின் #கதை_தான்_இந்த_அந்தமான்_கைதி..

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் தலைவர் நடராஜ்
(எம். ஜி. ராமச்சந்திரன்) மாமா பொன்னம்பலம்
(கே. பொன்னம்பலம் தனது தந்தையை எவ்வாறு கொலை செய்தார், தனது தாயின் சொத்துக்களை எவ்வாறு மோசடி செய்தார் மற்றும் அவரது சகோதரி லீலாவை (பி. கே. சரஸ்வதி) திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினார் என்று நடராஜ் கூறுகிறார். நடராஜ் வேட்டையாடி மாமாவைக் கொன்றுவிடுகிறார், இது அவரது கதையைச் சொல்ல சிறையில் இறங்குகிறது.

1947. தொலைதூர கராச்சியில் குடியேறிய தனது மைத்துனர் சிதம்பரம் பிள்ளையின் சொத்துக்கள் மற்றும் செல்வங்களுக்கு பொன்னம்பலம் பிள்ளை தன்னை உதவுகிறார். பொன்னம்பலம் அவரது கையால் ஜம்பு மற்றும் நீதிமன்ற எழுத்தர் முனியாண்டி ஆகியோரால் உதவுகிறார். சிதம்பரம் பிள்ளை வீடு திரும்பி பொன்னம்பலத்தை கேள்வி கேட்கத் தொடங்கும் போது, ​​அவர் கொல்லப்படுகிறார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், சிதம்பரம் பிள்ளை குடும்பம் கராச்சியில் இருந்து தப்பிக்க முடிகிறது. அவரது மனைவி, மகன் நடராஜன் மற்றும் மகள் லீலா ஆகியோர் தங்கள் சொந்த ஊரை அடைகிறார்கள், சிதம்பரம் பிள்ளை இறந்து கிடப்பதைக் காண மட்டுமே. அவர்கள் இதயமற்ற பொன்னம்பலத்தால் விரட்டப்படுகிறார்கள். ஒரு நேர்மையான இளைஞர் பாலு, அவர்களின் அவலத்தால் தூண்டப்பட்டு, அவர்களுக்கு தனது வீட்டில் தங்குமிடம் அளித்து, லீலாவைக் காதலிக்கிறார். பொன்னம்பலத்தின் காமத்திற்கு பலியாகிய வள்ளிகண்ணுவிடம் பரிதாபப்பட்ட நடராஜன் விரைவில் காதலுக்கு மாறுகிறார்.

ஜம்பூ நடராஜனை மோசமான குற்றச்சாட்டில் கைது செய்து, லீலாவை பொன்னம்பலத்துடன் திருமணம் செய்து கொள்வதில் வெற்றி பெறுகிறார். லீலா ஒரு பேயால் வேட்டையாடப்படுவதாக நடித்து, கட்டாய திருமணத்தை முடிப்பதை ஒத்திவைக்கிறார். ஆனால் ஜம்பு தனது பாசாங்குகளைப் பார்த்து, அவளைத் துன்புறுத்துவதற்கு தைரியமாக இருக்கிறான். லீலாவை அவளது சோதனையிலிருந்து காப்பாற்ற பாலு விரைகிறான், ஆனால் அவன் அவள் வீட்டை அடைந்ததும் லீலா கிழிந்து காயமடைவதைக் காண்கிறான், பொன்னம்பலம் இறந்து கிடந்தான். பாலு மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறது
விறுவிறுப்பாக போகும் இந்த திரைப்படம் வெற்றி பெற்ற ஒரு அருமையான திரை காவியம் ஆகும்

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...

orodizli
20th February 2021, 07:51 AM
ஒரு சமயம் 1978 ஆம் வருடம் இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் உருவான ஒரேவானம் ஒரே பூமி படப்பிடிப்பு ஜப்பான் நாட்டில் நடைபெற அங்கு ஒரு பாடல் காட்சி எடுக்கும் போது இடைவேளையில் நடிகர் ஜெய்சங்கர், மற்றும் கே.ஆர். விஜயா ஓய்வாக அமர்ந்து கொண்டு இருக்க.

பக்கத்தில் இருந்து ஒரு ஜப்பானியர் தலைமையில் ஒரு 6 பேர் கொண்ட குழுவினர் வந்து இருவருக்கும் வணக்கம் சொல்லி நீங்கள் இந்தியாவில் தமிழக நடிகர்களா என்று கேட்க.

ஜெய்சங்கர் ஆமாம் சொல்லுங்கள் என்ன விஷயம் என்று கேட்க அவர் நாங்கள் சீன ஸ்டண்ட் நடிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு...

எப்படி இருக்கிறார் உங்கள் எம்ஜிஆர் என்று கேட்க ஜெய்யும் கே.ஆர்.விஜயாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்ள.

அந்த ஜப்பானியர் அவர் உங்கள் மாகாண முதல்வர் ஆகிவிட்டாராமே... நல்ல செயல் உங்கள் மக்களுக்கு நன்றி சொல்லுங்கள் நாங்கள் சொன்னதாக என்று சொல்ல.

அதுசரி உங்களுக்கு இவை எல்லாம் எப்படி தெரியும்...அதற்கு அவர் இதே இடத்துக்கு அருகில் இருந்த எக்ஸ்போ அரங்கில் அன்று ஒரு சண்டை காட்சியில் எங்கள் குழுவினர் ஒரு ஹெலிகாப்டரில் தொங்கி கொண்டு சண்டை போடும் காட்சிகள் எடுக்க பட்டு கொண்டு இருந்த போது அதில் மேலே தொங்கி கொண்டு நடித்தவர் பேலன்ஸ் தவறி...

500 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மண்டை உடைந்து அங்கேயே துடிதுடித்து இறந்து போனார்...அங்கே முழுவதும் ஒரே கூச்சல் அலறல்....

பக்கத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்து கொண்டு இருந்த உங்கள் எம்ஜிஆர் உடனே தன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஓடி வந்து தன் மேக்கப் உடன் கீழே இறந்து கிடந்த அந்த ஸ்டண்ட் நடிகரை தூக்கி உயிர் பிழைக்க முயற்சி செய்தார்.

அந்த நடிகரின் உடல் அருகே சென்ற 7 பேரில் அவர் ஒருவர்...அவரை அறியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்ததை நாங்கள் பார்த்தோம்.

அந்த நடிகரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் வரை வந்து மலர் சூடி மரியாதை செய்தார் அவர்...எங்கள் பட நிறுவனம் கிட்டே கூட வரவில்லை..அவர்களை பொறுத்த வரை அது ஒரு விபத்து..

ஆனால் உங்கள் எம்ஜிஆர் அவர்களின் மனிதாபிமானம் எங்கள் நெஞ்சை பிழிந்தது... எங்கோ பிறந்த ஒரு பெரிய நடிகர் எங்கள் நாட்டு துணை நடிகருக்கு வருந்தியது இந்த உலகில் வேறு எங்கு நடக்கும்.

அன்று முதல் அவரை பற்றிய செய்திகளை நான் சேகரித்து வைத்து உள்ளேன்...அவரது அந்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பெரு வெற்றி பெற நாங்கள் வேண்டாத நாட்கள் இல்லை....எங்கள் குழு உங்கள் முதல்வருக்கு வாழ்த்துக்கள் சொன்னதை மறக்காமல் அவரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி கண்கள் பனிக்க விடை பெற.

உறைந்து போனார்கள்..நடிகர் ஜெய்யும் , நடிகை கே.ஆர்.விஜயாவும் மற்றும் அந்த பட குழுவினரும்..

அவர்கள் மட்டுமா எங்கு சென்றாலும் தன் தனி முத்திரை பதித்து மக்கள் நெஞ்சங்களில் குடி இருக்கும் உண்மையான உலகம் சுற்றிய வாலிபர் ரசிகர்களும் இந்த நிகழ்வை படித்து உறைந்து போவது திண்ணம்.

அந்த ஒரேவானம் ஒரே பூமி படம் 1979 இல் வெளிவந்தது....bpn

orodizli
20th February 2021, 07:52 AM
#அதிசயங்களின் #பிறப்பிடம்.........

திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாகத் தான் நிகழ்கின்றனவோ...!!!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’

சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.

விஜயா கம்பைன்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’

ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.

ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’.

சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.

தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.

இதில் என்ன ஒரு விசேஷம் எனில், எல்லா படங்களிலும் #ஹீரோ #நம்ம #வாத்தியாரு #தாங்க.........bsm...

orodizli
20th February 2021, 07:57 AM
சூப்பர், இதில் RR பிக்சர்ஸ் "பறக்கும் பாவை", ஜெயந்தி பிலிம்ஸ் முதல் வண்ணப்படம் "மாட்டுக்கார வேலன்", மேகலா பிக்சர்ஸ் "எங்கள் தங்கம்", நியோமணிஜெ புரொடக்ஷன்ஸ் "நீரும் நெருப்பும்", வள்ளி பிலிம்ஸ் "சங்கே முழங்கு", காமாட்சி ஏஜென்ஸிஸ் "நான் ஏன் பிறந்தேன்", உதயம் பிலிம்ஸ் "இதய வீணை", வசந்த் Creations "பட்டிக்காட்டு பொன்னையா", அமல்ராஜ் பிக்சர்ஸ் "நேற்று இன்று நாளை", கஜேந்திரா பிலிம்ஸ் " நாளை நமதே", ஒரியண்டல் பிக்சர்ஸ் "நினைத்ததை முடிப்பவன்", உமையம்பிக்கை பிலிம்ஸ் "நீதிக்கு தலை வணங்கு", சுப்புவின் "இன்று போல் என்றும் வாழ்க", முத்துவின் "மீனவ நண்பன்", லிஸ்ட்டில் இணைத்து கொள்ள வேண்டும்............Rmh

orodizli
20th February 2021, 07:58 AM
1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று..

பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனர்.

சிறிது நேரத்தில் tmx 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.

காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.

காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..

பாதுகாவலர்கள் புடைசூழ அலுவலகத்திற்குள் விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.

"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"

-என்று மாவட்ட ஆட்சியர்களிடமும், உயர் அலுவலர்களிடமும் , ஆலோசனை கேட்கிறார்.

அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.

காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..

"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.

நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.

இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.

அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.

கூறியவன் ஒரு எளியவன்தானே என்று நினைக்காமல், அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.

கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.

என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.

என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.

என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.

உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"

-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.

அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.

உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்..

ஒரு எளிய குடிமகன் வைத்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.........gdr

orodizli
20th February 2021, 07:59 AM
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்இனிய_சனிக்கிழமை #காலை_வணக்கம்..

புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த திரைப்படங்கள் பற்றிய தகவல்களை
அவர் நடித்த ஓவ்வொரு திரைப்படங்களையும் வரிசையாக பதிவிட்டு வரும் எனது இந்த புதிய தொடர் பதிவில் இன்று அவரது 26 வது படமான #குமாரி பற்றிய தகவல்கள் பற்றி காண்போம். ..

இயக்கியவர் ஆர்.பத்மநாபன்
தயாரித்தவர் ஆர்.பத்மநாபன்
கதை சா.கிருஷ்ணமூர்த்தி
இசை கே.வி.மகாதேவன்
ஒளிப்பதிவு டி.மார்கோனி
எடிட்டிங் வி.பி.நடராஜா முதலியார்

வெளிவந்த தேதி

11 ஏப்ரல் 1952

இளவரசி குமாரி, குதிரை சவாரி செய்வது பிடிக்கும் அவ்வாறு ஒருநாள் குதிரையேற்றம் செய்ய குதிரை வண்டியில் பயணம் செய்யும் போது, ​​குதிரைகள் காட்டுக்குள் ஓடும்போது விபத்தை சந்திக்க நேர்கிறது.. விஜயன் என்ற மனிதனால் விபத்தில் இருந்து மீட்கப்படுகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள் மற்றும் இளவரசி அவருக்கு ஒரு பரிசு கொடுத்து, அவளுடைய அரண்மனைக்கு அழைக்கிறார்... ராஜா இளவரசியை திருமணம் செய்து கொள்ள விரும்பும்போது, ​​ராணி சந்திரவலி தனது பயனற்ற சகோதரர் சஹாரானை திருமணம் செய்து கொள்ள சொல்லி விரும்பும்போது பிரச்சினைகள் எழுகின்றன. பல பரபரப்பான சம்பவங்களுக்குப் பிறகு, காதலர்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன இணைவதே கதை..

விஜயனாக புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்

மந்தாராவாக சேருகலத்தூர் சாமா

பிரதாப்பாக விஜயகுமார்

வல்லபனாக சோமு ஸ்டண்ட்

சஹாரனாக டி.எஸ். துரைராஜ்

புலிமூட்டை புலிமூட்டை ராமசாமி

விஹாரனாக சயிராம்

அமைச்சராக கோட்டாபுலி ஜெயரம்

அமைச்சராக ராஜமணி

அமைச்சராக ராமராஜ்

மணி சிங்காக கே.கே.மணி



சந்திரவலியாக மாதுரி தேவி

குமரியாக ஸ்ரீ ரஞ்சனி (ஜூனியர்)

ஜீலாவாக காந்தா சோஹன்லால்

கே.எஸ்.அங்கமுத்து

தாயாக

சந்திரிகாவாக சி. ராஜகாந்தம்

மங்களாவாக பத்மாவதி அம்மாள்

இப்படத்தை ஆர்.பத்மநாபன் தயாரித்து இயக்கியுள்ளார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.எம்.சந்தனம் ஆகியோர் கதை மற்றும் வசனங்களை எழுதினர். ஒளிப்பதிவை டி.மர்கோனி செய்ததும், வி. பி. நடராஜா முதலியார் எடிட்டிங் கையாண்டார். நடனத்தை சோஹன்லால் செய்தார்,
ஸ்டில் புகைப்படம் எடுத்தல்
ஆர்.என். நாகராஜ ராவ்.

இந்த படம் தெலுங்கிலும் ராஜேஸ்வரி என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது.

கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகள்
எம். பி. சிவம், டி.கே.சுந்தர வதியார் மற்றும் கு. சா. கிருஷ்ணமூர்த்தி.
பின்னணி பாடகர்கள்
கே.வி.மகாதேவன், ஏ.எம். ராஜா, ஜிக்கி, பி.லீலா, ஏ.பி.கோமலா மற்றும்
என்.எல்.கணசரஸ்வதி.

சோஹன்லால் நடனம் அமைத்தார்
ஜிப்சி நடனங்களும் இருந்தன.
ஜிக்கி ஆஃப்-ஸ்கிரீன் வழங்கிய ஒரு பாடல், ‘லாலாலி லாலீ… .. பிரபலமானது.

சுவாரஸ்யமான திரை கதை, புத்திசாலித்தனமான இசை மற்றும் மார்கோனியின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் எம்.ஜி.ஆர், செருகலாதர் சாமா மற்றும் பிறரின் அற்புதமான நடிப்பு இருந்தபோதிலும், குமாரி சிறப்பாக செயல்படவில்லை...

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...

orodizli
20th February 2021, 08:01 AM
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
*****************************

எம் ஜி ஆர் எடுத்தவுடன்கதாநாயகனாக உயரவில்லை

எம் ஜி. ஆர் !

எத்தனையோ

அவமரியாதைகளையும்,

அவமானங்களையும்

தாண்டியே அவரது

வெற்றிப் பயணம்

ஆரம்பமானது....

அன்றும், இன்றும்

கொண்டாடப்படும்

அவரின் ஆரம்ப கால

திரை வாழ்வினைப் பற்றிப்

பார்ப்போமா!......
********************************

எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.

அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.

கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,

'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,

எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.

இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,

எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.

இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் அறிவர்.

அதேபோல், அமெரிக்க இயக்குனர் #எல்லீஸ் #டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.

எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு #புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.

அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய #டாக்கா #மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.

அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.

எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.

வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில் எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிக்கிறார்.

டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.

உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.

எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.

1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் பலித்து விடுகிறது.

அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.

உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.

எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.

“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.

“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.

“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.

நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.........Rosaiya

orodizli
20th February 2021, 10:54 AM
"நீதிக்கு தலை வணங்கு" புரட்சி தலைவரின் 128 வது படம். தவறு செய்தவன் யாராயினும் சட்டம் தண்டிக்க தவறினாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற நியாயத்தை உணர்த்தும் சிறந்த படம். முதலில் "யாரையும் அழ வைக்காதே" என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்கள். பின் தலைப்பில் அமங்கலம் வேண்டாம் என்று கருதி "நீதிக்கு தலை வணங்கு" என்று மக்களுக்கு
தர்மநீதியை அறிவுருத்தி நல்ல டைட்டிலாக மாற்றினார்கள்.

சுறுசுறுப்பாக வேகமாக செயல்படும் கல்லூரி மாணவனாக தோன்றி. ஆரம்பக்காட்சிகளில் படத்தின் விறுவிறுப்பை கூட்டுவார். பணக்கார கல்லூரி மாணவன் வேடம் தலைவருக்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்நது. பாடல்களும் மிக அருமையாக அமைந்தது. ஜாதி பிரிவினை வேண்டாம் என்று காய்கறி மூலமாக பாடியிருப்பது நல்லதொரு விளக்கம். 'இந்த பச்சைக்கிளிக்கொரு' பாடல் வரலட்சுமியின் குரலில் 'வெள்ளிமலை மன்னவா' பாடலுக்கு பிறகு எவர்கிரீன் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 'கனவுகளே' பாடல் தலைவரின் இளமைக்கு அதிஅற்புதமாக துள்ளல் நடையுடன் அமைந்த பாடல். அந்தப் பாடலுக்காகவே பலமுறை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.

'எத்தனை மனிதர்கள் உலகத்திலே' பாடல் சோகமாக இருந்தாலும் கருத்துசெறிவுடன் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஆனால் க்ளைமாக்ஸில் எம்ஜிஆர் ரசிகர்கள் அவர் தண்டனை பெறும் காட்சியை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதே உண்மை. ரசிகர்களுக்கு சோகக் காட்சிகள் அவ்வளவாக பிடிக்காது. இந்தப்படத்தில் கொஞ்சம் அதிகமான சோகக் காட்சிகள் நிரம்பி இருந்ததால் திரும்ப திரும்ப பார்ப்பவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் படம் வெற்றிகரமாக ஓடியது. பொதுமக்களின் பார்வைக்கு படம் சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது.

1976 ன் பிளாக்பஸ்டர் படம்தான் "நீதிக்கு தலை வணங்கு." அய்யனுக்கு 1972 க்கு பின்னர் எந்த படமும் கைகொடுக்கவில்லை. 1976 ல் 6 படங்கள் வந்தும் அனைத்தும் குப்பைக்குள் போய் விட்டன. "உத்தமனை" மட்டும் வடக்கயிறு கட்டி மதுரையில் மட்டும் ஆஸ்தான தியேட்டரான நியூசினிமாவில் 100 நாட்கள் ஓட்டி களைத்தனர். ஆனால் புரட்சி தலைவருக்கோ ஆண்டுக்கு ஆண்டு பிளாக் பஸ்டர் படங்களாக
வந்து கொண்டிருந்தன. 1973 ல் "உலகம் சுற்றும் வாலிபன்",1974 ல்
"உரிமைக்குரல்" 1975 ல் "இதயக்கனி",1976 ல் "நீதிக்கு தலை வணங்கு" 1977ல் "மீனவ நண்பன்" என்று ஜெயக்கொடி இறுதிவரை பறந்து கொண்டே இருந்தது.

சென்னையில் 5 திரையரங்கில் வெளியாகி மொத்தம் 369 நாட்களில் ரூ13,10,697.30 வசூலாக பெற்று அரிய சாதனை படைத்தது. சென்னையில் நான்கே வாரத்தில் ரூ 651325.50 சாதனை வசூலாக பெற்று தமிழ் திரையுலகத்தை கலக்கியது. மதுரை சென்ட்ரலில் 100 நாட்கள் ஓடாமலே 86 நாட்களில் ரூ 409751.10 வசூலாக பெற்றது. மூக்கையனின் "பட்டிக்காடா பட்டணமா" 84 நாட்களில் அதே சென்ட்ரலில் பெற்ற வசூல் ரூ 371310.25 . ஆனால் படத்தை 182 நாட்கள் ஓட்டி விட்டனர்.

திருச்சியில் "நீதிக்கு தலை வணங்கு" 61 நாட்களில் பெற்ற வசூலை அகில இந்தியாவிலும் அசுர வெற்றி பெற்ற
"ஷோலே" ஹிந்தி திரைப்படத்தால் 70 நாட்களில் கூட நெருங்க முடியாமல் அடிபணிந்த கதை ஆச்சர்யத்தை தருகிறது. திருச்சி தஞ்சை மாவட்டங்களில் அய்யனின் 175 படமான "அவன்தான் மனிதனை" அலறவிட்ட கதை
மிகவும் அற்புதமானது.

அய்யன் படங்கள் 100 நாட்கள் ஓட்டியும் 2 லட்சம் கூட பெறாத படங்கள் அநேகமிருக்க "நீதிக்கு தலை வணங்கு" வின் சாதனை மகத்தானது. தமிழ்நாட்டில் சுமார் 30 அரங்குகளில் 50 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆண்டுக்கு ஆண்டு சாதனையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர். சென்னை தேவிகலா மகாராணி, சேலம் சங்கம், திருச்சி ஜீபிடர் என்று நான்கு திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியது. மேலும் பல ஊர்களில் வியத்தகு வசூலை பெற்று முன்னணி பெற்றது தனி சிறப்பாகும்..........ksr.........

orodizli
20th February 2021, 10:54 AM
"நான் பார்த்தா பைத்தியக்காரன்", பாட்டு கருத்துள்ள பாட்டு. நடிகர் கணேசனின் மூத்த பையன் ராம்குமார் பிஜேபில சேந்துட்டார். கணேசன் ரசிகர்களிடம் பலரிடம் அதுக்கு எதிர்ப்பு. இதுல உத்து பார்த்தா எதிர்ப்பு தெரிவிக்கிறவங்க பிஜேபிய பிடிக்காத வேற மதத்தை சேர்ந்தவங்களா இருப்பாங்க. இல்ல திமுககாரனா இருப்பான். ராமக்குமார ஆதரிக்கிறவங்க திருட்டு திராவிடம்னு சொல்ற கோஸ்டியா இருப்பாங்க. கணேசன் இருந்த காலத்திலேயே கணேசனுக்கே ஓட்டுபோடாம திமுகவுக்கு ஓட்டுபோட்ட ரசிகர்கள் நிறைய. கேட்டா கட்சி வேற. அரசியல் வேறன்னு அறிவு விளக்கம் சொல்லி கணேசனை காலி பண்ணாங்க. ஏற்கனவே அவங்களுக்குள்ளே ஒத்துமை இல்ல. இப்ப இன்னும் சிதற்றாங்க. சாதியாலயும் மதத்தாலயும் பிரிஞ்சுருக்காங்க. சரி. அதெல்லாம் இங்க எதுக்குய்யா சொல்றன்னு நீங்க கேக்கலாம். அதுக்குதான் இந்த தலைவர் பாட்டு. "பாதுகாவல் போர்வையிலெ ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ, ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ"... என்ன கருத்து பாருங்க. அன்னிக்கி தீயசக்திக்கு எதிரா தலைவன் பாடின பாட்டு இன்னிக்கும் பொருத்தமா இருக்குய்யா. இதெல்லாம் கேட்டு வளந்ததாலதான் நாம்ப ஒண்ணா ஒத்துமையா இருக்கோம். உலக்த்துல எம்ஜிஆர் ரசிகர் யாரா இருந்தாலும் சரி. நம்ம மதம் எம்ஜிஆர் மதம். நம்ம ஜாதி எம்ஜிஆர் ஜாதி..........rrn...

orodizli
21st February 2021, 05:14 PM
ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அணையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை ... லட்சியம்..ஆகும் ...#புரட்சித்தலைவர் காண வந்த #N.T.ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் . அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரேஅவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ...வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள், வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...

புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..

தமிழ்நாடு முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்பொழுதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது...
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்...

பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து.. .மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவானதுக்கு காரணம்...

நமது தெய்வம் #பொன்மனச்செம்மல்.........Png

orodizli
21st February 2021, 05:15 PM
எம் ஜி ஆர் , முகமது அலி மற்றும் மீன் குழம்பு
1980-ம் ஆண்டு !
அண்மையில் மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி., எம் ஜி ஆர் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார்
ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை போட்டி
20 ஆயிரம் பேர்களுக்கு மேல் மக்கள் கூட்டம் ! போட்டி நடந்துமுடிந்தது .
முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் கேட்டார் :
“எங்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.ரொம்ப சந்தோஷம்... உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் ..
அதைத் தருவதில்தான் எங்களுக்கு முழுமையான சந்தோஷம்..”
ஒரு முடிவுக்கு வந்த முகமது அலி ஒரு முதல் அமைச்சரிடம் போய் இதை எப்படிக் கேட்பது என்று கொஞ்சம் தயங்க ...
“ பரவாயில்லை .. எதுவானாலும் தயங்காமல் கேளுங்க..” என்றாராம் எம்.ஜி.ஆர்.
முகமது அலி கேட்டு விட்டார் : “சென்னையில் மீன் உணவு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் என்கிறார்களே... அது எங்கே கிடைக்கும்? "
சிரித்த எம்ஜிஆர் தகவல் அனுப்பினார் .
வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு ,
இறால் ஃப்ரை , சிக்கன் வறுவல், வெள்ளை சாதம் , பாயாசம் .... எல்லாம் வந்து சேர்ந்தது...!
அத்தனை வகைகளையும் மொத்தமாக ஒரு பிடி பிடித்த முகமது அலியிடம் , எம்.ஜி.ஆர்.
“நன்றாக சாப்பிட்டீர்களா..? திருப்தியாக இருந்ததா..?”" என்று கேட்க ,
முகமது அலி முழு திருப்தியுடன் தலையாட்டியபடி சொன்னாராம் : “ஓ...ரொம்ப ரசித்து சாப்பிட்டேன்..எந்த ஹோட்டல் சாப்பாடு இது..?”
எம்ஜிஆர் ஒரு புன்னகையோடு “என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் நீங்கள் ..உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடா..?”
முகமது அலி எதுவும் புரியாமல் எம்.ஜி.ஆரைப் பார்க்க,
தொடர்ந்த எம்ஜிஆர் : “எல்லாமே என் ராமாவரம் வீட்டில் வைத்து , என் மனைவி ஜானகியின் மேற்பார்வையில் ,
மணி என்பவர் உங்களுக்காகவே ஸ்பெஷலாகத் தயார் செய்தது..!”
நெகிழ்ந்து போய் எம்.ஜி.ஆரின் கைகளைப் பிடித்துக் கொண்ட முகமது அலி , : “ நான் இந்த உலகத்தில் எங்கே போனாலும் விதம் விதமான உணவைத் தர ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள் ..
அவை எல்லாமே சுவையானதுதான்...!
ஆனால் , நீங்கள் அளித்த உணவில் மட்டும் , சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்..
இதை என்னால் மறக்கவே முடியாது .. ”
முகமது அலி இப்படிச் சொன்னதும் , எம்.ஜி.ஆரும் நெகிழ்ந்துதான் போனார்
பின் குறிப்பு : இருவரின் பிறந்த தேதியும் ஜனவரி 17.........Bpng

orodizli
21st February 2021, 05:16 PM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதன்மைகள்:-

தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.

* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
*
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.

* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.

* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.

* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.

* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.

* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.

எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

நாடோடி மன்னன் சாதனை.

அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் நாடோடி மன்னன் தயாரித்தார்கள். 1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது.

நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில் தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படமும் இதுதான்...........bpng

orodizli
21st February 2021, 05:16 PM
நம் தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு அழகின் அம்சமா! இல்லை அழகின் உச்சமே அவர் !!
அவர் 1958ல் நாடோடிமன்னனில் துவங்கினார் தனது அழகை தான் தரித்திரிந்த ஆடைகள் மூலமா? அல்லது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அணிந்திருந்த ஆடைகள் மூலமாகவா ?
இத்துடன் சில படங்கள் பதிவு செய்துள்ளேன்.அதில் நமது தலைவர் அந்த ஆடைகளில் எவ்வளவு வசீகரமாக கனக்கச்சிதமாக எவ்வளவு அழகை கொடுக்கிறார் பாருங்கள்.
இதில் ஒரு வினா எழுந்தது.தலைவருக்கு எந்த ஆடைகள் போட்டாலும் கனக் கச்சிதமாக பொருந்தும்.மற்ற நடிகர்களுக்கு சொதப்பும் என்ற வழக்கமும் உண்டு.
ஆனால் உண்மை என்ன ?
தலைவருக்கு எந்த ஆடை அணிந்தாலும் அவருக்கு பொருந்தும்.ஆனால் இதில் பெருமை என்னவெனில் தலைவர் அணியும் ஆடைகளால் அந்த ஆடைகள் தான் பெருமை பெறுகிறது .எப்படி. இந்த அழகன் அணியும் ஆடைகள் தான் பெற்ற பேறை அடைகிறது.
தலைவரால் யாருக்கெல்லாம் பெருமை கிடைக்கிறது பாருங்கள்.இதே கருத்தை அமீரகம் சைலேஷ் பாசு அவர்கள் ஒரு பதிவில் சொன்னார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை...nssm

orodizli
21st February 2021, 05:17 PM
#புரட்சிதலைவர்MGRபுகழ்ஓங்குக!!!!!! உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/87அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை...

orodizli
21st February 2021, 05:21 PM
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுக்கிழமை_காலை_வணக்கம்..

புரட்சி தலைவர் எம்ஜியாரின் திரைப்படங்கள் பற்றிய அலசல் தொடரில் இன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 27 வது
படமான என் தங்கை பற்றி பார்ப்போம்..

என் தங்கை 1952 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தார். இந்த படம் அதே பெயரில் டி.எஸ். நடராஜனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த கதை நாடகமாக நடைபெற்று கொண்டிருக்கும் போது திரையில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்து முடித்தார்...

சி.எச். நாராயண மூர்த்தி தயாரித்தவர் அசோகா பிக்சர்ஸ் எழுதியது
டி.எஸ்.நடராஜன்
கே.எம். கோவிந்தராஜன்
திரைக்கதை
நாராயண மூர்த்தி
எம்.ஜி.ராமச்சந்திரன்
பி.எஸ்.கோவிந்தன்
பி.வி.நரசிம்ம பாரதி
இ.வி.சரோஜா
மாதுரி தேவி
வி. சுஷீலா
சி.என். பாண்டுரங்கன் அவர்களின் இசையில், ஒளிப்பதிவு ஜிதன் பானர்ஜி எடிட்டிங் சி.எச். நாராயண மூர்த்தி

அசோகா பிக்சர்ஸ் தயாரித்து
விநியோகித்தது வெளிவந்த தேதி
மே 31, 1952

மூத்த சகோதரர் ராஜேந்திரன் (எம்.ஜி.ராமச்சந்திரன், குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் நல்ல மனம் படைத்தவர், அவரது இளைய சகோதரர் செல்வம் (பி.வி. நரசிம்ம பாரதி), ஒரு மாணவர், அவரது தங்கை மீனா (ஈ.வி.சரோஜா) மற்றும் அவர்களது உடல்நிலை சரியில்லாத தாய் குணவதி (எஸ்.ஆர்.ஜனகி) ). அவர்களின் தந்தைவழி மாமா கருணாகரன் பிள்ளை (எம்.ஜி. சக்ரபாணி), தேசபக்தர் காணாமல் போன பின்னர் அவர்களின் செல்வத்தை கொள்ளையடித்து, ராஜேந்திரனின் எம்ஜிஆர் அவர்களின் குடும்ப நிதி உதவிக்கான அனைத்து கோரிக்கைகளையும் மறுக்கிறார். மறுபுறம், கருணாகரனின் மகன் சூரியமூர்த்தி (பி.எஸ். கோவிந்தன்) தனது உறவினர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்...
ஒரு மாலை, ஒரு இடியுடன் கூடிய
விபத்தில், மீனா தனது பார்வையை இழக்கிறாள்.அப்போது அவள் செல்வத்தின் செல்வந்த மனைவி ராஜம் (மாதுரி தேவி), அவளுடைய மைத்துனரின் பலிகடாவாக மாறுகிறாள். .. அதிலிருந்து
மீனாவை வெறுக்கத் தொடங்குகிறார். முன்னர் நிலைமையை அறியாத ராஜேந்திரன், இறுதியாக தனது தங்கையின் குடும்பத்தில் படும் கஷ்டங்களை கண்டுபிடிப்பார்... கடுமையான சண்டையைத் தொடர்ந்து, செல்வமும் ராஜமும் குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார்கள், ராஜேந்திரனை முற்றிலும் கலக்கமடையச் செய்கிறார்கள்.
இதனால் நோயுற்ற அவர்களின் தாய் இறந்துவிடுகிறார், இதன் பிறகு அவரின் மாமாவால், ராஜேந்திரன் மற்றும் மீனா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

அவர்களது உறவினர் ஒருவர் சூரியமூர்த்தி, தனது தந்தையிடமிருந்து தலைநகருக்கு வேலை தேடி ஓடிவருகிறார், அங்கு அவர் ஒரு ரிக்*ஷா டிரைவராக வேலை செய்து கொண்டு இருக்கிறார்..
ராஜேந்திரன் மற்றும் மீனா ஆகியோருக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்குகிறார். இதற்கிடையில், இளைய சகோதரர் செல்வம் தனது மாமியார் (ஆர். பி. ராவ்) போலவே குதிரை பந்தயத்திற்கு அடிமையாகி, தனது குடும்பத்தை நிதி அழிவுக்குள்ளாக்கி, ராஜமை புறக்கணிக்கிறார். ராஜேந்திரன் தம்பதியரை சமரசம் செய்த பிறகு, ராஜம் சாலை விபத்தில் இறந்து விடுகிறாள் கருணாகரன் தன் மகனைத் தேடி வருகிறான், அவனும் ஒரு வாகனத்தால் தட்டப்படுகிறான். இறக்கும் தருவாயில் அவர்,தன் மகன் சூரியமூர்த்திக்கு ஒரு கிறிஸ்தவரான மேரி (வி. சுஷீலா) என்பவரை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறார். ராஜேந்திரனைப் பொறுத்தவரை, அவர் இறுதியாக, தனது எல்லைக்குத் தள்ளப்பட்டு, தனது சகோதரியைக் கடலுக்குள் கொண்டு செல்கிறார், அவர்கள் இருவரும் அலைகளின் கீழ் மறைந்து விடுகிறார்கள்.



ராஜேந்திரனாக எம்.ஜி.ஆர்

சூர்யமூர்த்தியாக பி.எஸ்.கோவிந்தன்

செல்வமாக பி.வி.நரசிம்மபாரதி

கருணாகரம் பிள்ளையாக எம்.ஜி.சக்ரபணி

வீரசாமி பிள்ளையாக டி. ஆர். பி. ராவ்

அசாகனாக சி.எஸ். பாண்டியன்

வீரையன் ஆக எஸ்.என்.நாராயணசாமி

சித்ரகுப்தனாக கோட்டாபுலி ஜெயராமன்

இடியட் பாயாக மாஸ்டர் கிருஷ்ணன்

குண்டு செட்டியாக என்.ஜஸ்வர்



ராஜமாக மாதுரி தேவி

மேரியாக வி.சுஷீலா

குணவதியாக எஸ்.ஆர்.ஜானகி

மீனாவாக ஈ.வி.சரோஜா

அசாகியாக எம். என். ராஜம்

இப்படத்தை தெலுங்கில்
சி.எம். நாராயண மூர்த்தி
நா செல்லெல்லு மற்றும் அதே அணியுடன். இது 1953 இல் வெளியிடப்பட்டது. இந்த படத்தை
எல்.வி.பிரசாத் இந்தி மொழியில் சோதி பஹேன் என்ற தலைப்பில் ரீமேக் செய்து 1959 இல் வெளியிடப்பட்டது.

சி.என். பாண்டுரங்கன் இசையமைத்தார்.
பாடல்களை பாரதிதாசன், ஏ.மருதகாசி, சரவனபவனந்தர், சூரதா,
கி.ராஜகோபால் மற்றும் நரசிம்மன்.
ஆகியோர் எழுதினார்

பாடகர்கள் பி.எஸ். கோவிந்தன் மற்றும் சி.எஸ். பாண்டியன்.
பின்னணி பாடகர்கள்
எம்.எல். வசந்தகுமாரி,
பி.லீலா, என்.லலிதா, ஏ.பி.கோமலா, கே.வி.ஜானகி, ஏ.ஜி.ரத்னமாலா,
டி.ஏ.மோதி, மற்றும் ஏ.எம்.ராஜா.

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...Skt...

orodizli
22nd February 2021, 08:36 PM
எச்சூழ்நிலையிலும் மனிதநேயத்தில் முதன்மையாக இருப்பார் எம்.ஜி.ஆர் !
1972ல் நமது தலைவர் இயக்கம் ஆரம்பித்து ஒவ்வொரு இடங்களுக்கும் மக்களை சந்திக்க செல்வது வழக்கம்.அப்படி 1973ல் திண்டிவனம் வழியாக கழக கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.அப்போது திண்டிவனத்திற்கு முன்பே ஒரு தரப்பினர் தலைவர் வருவதை அறிந்து அவரை ரோட்டில் வரவேற்று வேனில் இருந்தபடியே பேசச்சொன்னார்கள்.கூட்டம் கூடிவிட்டது.பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு மூதாட்டி முண்டியடித்து முன்வர முயற்சித்தும் வர முடியவில்லை.இந்தக்காட்சியை கண்டார் தலைவர்.உடனே அந்த மூதாட்டியை காரின் அருகே அழைத்து என்னவென்று கேட்டார்.உடன் அந்த மூதாட்டி அகமகிழ்ந்து முகமகிழ்ந்து ராசா என்வீட்டில் உனது பாதம் படவேண்டும் அது தான் என் ஆசை.வேற எதுவும் வேண்டாம் என்று சொல்லியதைக் கேட்டதும் தலைவர் கண் கலங்கிவிட்டார்.சரி என்று சொல்லிவிட்டு அந்த மூதாட்டியை கூட்டம் முடிந்தவுடன் தன் காரில் ஏற்றிக்கொண்டு அந்த மூதாட்டியின் இல்லத்திற்கு சென்றார்.அது ஒரு அநேக ஓட்டைகள் நிறைந்த குடிசை.தலைவர் உள்ளே சென்று அமர்ந்து ஏதாவது குடிக்க கொடுங்கள் என்று கேட்டார்.அந்த மூதாட்டியோ ராசா இங்கு என்னிடம் கூழ் மட்டும் தான் உள்ளது.அது குடிக்கிற மாதிரி இருக்காது என்றாள். தலைவரோ அம்மா கொடுக்கும் கூழ்தானே கொடுங்கள் என்றார்.உடன் அதை பருகிக்கொண்டிருக்கும் போதே தலைவர் மூதாட்டியை பார்த்தார்.அந்த மூதாட்டி மகிழ்ச்சி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டார்.பின்னர் அந்த மூதாட்டியின் மகிழ்ச்சியில் திளைத்து அவருக்கு வேண்டியதை செய்து விட்டு விடைபெற்றார்.அந்த மூதாட்டி ஒரு இஸ்லாமியப்பெண். தலைவர் எங்கு சென்றாலும் முதலில் மனிதநேயத்தில் தான் கவனம் செலுத்துவார்.இந்த நிகழ்வின் கார்ட்டூன் படம் தான் இத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த படத்தை செய்தியுடன் வெளியிட்டது குமுதம் இதழ்..........nssm.........

orodizli
22nd February 2021, 08:38 PM
#பொக்கிஷம்

மக்கள் திலகம் 1967 ம் வருட இடைத்தேர்தலில் பரங்கி மலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்...

இந்த பதவிலியிருந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து 1977 ம் வருடத்தில் அஇஅதிமுக எனும் தனி இயக்கம் கண்டு தமிழக முதலமைச்சரானார் மக்கள் திலகம்.

இன்று புதிய கட்சியை துவங்குபவர்கள், களத்தில் படு தோல்வி அடைந்தாலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றாலே வெற்றி பெற்றதாக கொண்டாடுகிறார்கள். மக்கள் திலகமோ கட்சி துவங்கிய சில வருடத்திலேயே தமிழக முதல்வராகி சாதனை படைத்தார் , அஇஅதிமுக என்னும் இயக்கத்தை தமிழகத்தின் அதிக நாட்கள் ஆண்ட கட்சி என்ற சாதனையை படைக்க வைத்தார்.... Sr.Bu..

orodizli
22nd February 2021, 08:39 PM
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...

இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.

அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.

01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.

02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.

03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது

04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா Amma ஆளுயர செங்கோல் வழங்கினார்.

05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாAmma அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் Amma ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.

06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.

07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.

08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.

09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.

10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.

11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் பெயர்…."மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்".......BPNG

orodizli
22nd February 2021, 08:41 PM
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள்
அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை
காலை வணக்கம்...

புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த ஓவ்வொரு காவியங்களை பற்றிய தகவல்கள் மற்றும் அந்த படத்தின் விமர்சனம் பற்றிய என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்று அவருடைய 28-வது படமான #"நாம்", திரைப்படம் பற்றி பார்ப்போம்...

நாம் திரைப்படம் ஏ.காசிலிங்கம் இயக்கத்தில்
ஜூபிட்டர் பிக்சர்ஸ்
மேகலா பிக்சர்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவானது பி.எஸ்.வீரப்பா மற்றும் கருணாநிதி அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம் வசனம் எழுதியவர்
மற்றும் திரைக்கதை எழுதியவர்
மு.கருணாநி

இசை சி.எஸ்.ஜெயராமன்
ஒளிப்பதிவு ஜி.கே.ராமு
எடிட்டிங் ஏ.காசிலிங்கம்

வெளியிட்ட தேதி

5 மார்ச் 1953



குமரன் (எம்.ஜி.ஆர்) ஒரு ஜமீன்தார் குடும்பத்தின் வாரிசு, அவர் இறக்கும் தனது தாயிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொள்கிறார். இருப்பினும், விருப்பமும் சொத்து தொடர்பான சாட்சியமும் மலையப்பன் (வீரப்பா) அவர்களால் மறைக்கப்படுகின்றது.
ஒரு மருத்துவர் சஞ்சீவி
(எம்.ஜி.சக்ரபாணி) அவர்களும் எம்ஜியாரின் சொத்தின் மீது ஆர்வம் கொண்டு இவரும் ஒரு புறம் சூழ்ச்சி செய்து வருகின்றார் மேலும் அவரது மகள் (சரஸ்வதி) எம்ஜிஆரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக, குமாரன் மலையப்பனின் சகோதரி மீனாவை (ஜானகி அம்மையார்) காதலிக்கிறார். மீனாவும் விருப்பம் கொள்ளும் போது, ​​குமரன் தனது நோக்கங்களை சந்தேகித்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். பின்பு நகரத்திற்கு சென்று நகரில், அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் ஆகிறார். இதற்கிடையில், மலையப்பன் குமாரனின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு, குமரன் இறந்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கின்றார்... இருப்பினும், அவர் மீனாவால் காப்பாற்றப்படுகிறார். காணாமல் போனவர் பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, அதே நேரத்தில், ஒரு சிதைக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் இரவில் சுற்றி வருகிறார், இது கிராமத்தில் ஒரு பேய் பற்றிய வதந்திகளுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், உண்மை இறுதியில் வெளிப்படுகிறது, மேலும் காதலர்கள் எவ்வாறு ஒன்றுபடுகிறார்கள் என்பதே கதைக்களம்.

குமாரனாக எம்.ஜி.ராமச்சந்திரன்

மீனாவாக வி.என்.ஜானகி

மலையப்பனாக பி.எஸ்.வீரப்பா

எம்.என்.நம்பியார்

சஞ்சீவியாக எம். ஜி. சக்ரபாணி

சஞ்சீவியின் மகளாக பி.கே.சரஸ்வதி

எஸ். ஆர். ஜானகி

ஆர்.எம்.செதுபதி

எஸ்.எம்.திருபதிசாமி

டி.எம். கோபால்

எம்.ஜெயஸ்ரீ

ஏ. சி. இருசப்பன்

சாண்டோ எம்.எம். ஏ. சின்னப்பா தேவர்

ஆகியோர் நடித்து உள்ளனர்..

திரைக்கதை எழுத்தாளர் காசியின் கதையான கதல் கண்ணீரை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை,
படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், என்று பெயர் இடம் பெறாது அவர் அப்போது பிரபலமான ஐகான் அல்ல, அவரது பெயரை "ராமச்சந்தர்" என்று திரையில் உச்சரித்தார், ஏனெனில் அது "ஸ்டைலானது" என்று நினைத்ததாலும் ஏற்கனவே பிரபலமான நடிகர்
டி. ஆர். ராமச்சந்திரனிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள விரும்பினார்.

சி.எஸ். ஜெயராமன் இசையமைத்துள்ளார்,
எம்.கருணாநிதி எழுதிய பாடல். ஜெயராமன், நாகூர் ஈ.எம்.ஹனிஃபா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி,
எம்.எல்.வசந்தகுமாரி, ஏ.பி.கோமலா, கே.ஆர்.செல்லமுத்து மற்றும்
டி. ஆர்.கஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்...

5 மார்ச் 1953 அன்று வெளியிடப்பட்டது. படம் வெற்றிகரமாக இல்லை, ஆனால் அவர் "சுவாரஸ்யமான கதைக்களம், அர்த்தமுள்ள உரையாடல், பயனுள்ள இயக்கம், எம்.ஜி.ஆர், சக்ரபாணி, வீரப்பா, ஜானகி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் நல்ல நடிப்பைப் பாராட்டினார். ".

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........

orodizli
22nd February 2021, 08:42 PM
எம்ஜிஆர் நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.

அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.

இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.

இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’… பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’… எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.

‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’… இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்..........bpg

orodizli
22nd February 2021, 08:43 PM
வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.

தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.

‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய் !

- தி இந்து............

orodizli
23rd February 2021, 03:17 PM
தெய்வம் "எம்.ஜி.ஆர்."
பட்ட அவமானங்கள்....!!
********************************
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.

அடைப்பக் காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய்,
கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம்... தான் , எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது.

திரையுலகில் விரக்தியில் இருந்த
எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான
டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.

கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச் செய்வார்.
இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம்
எம்.ஜி.ஆர் ஏதோ மனக் குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்க முடியவில்லை , பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்
கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள்.
என் மனைவியை அவமானப் படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.

இதை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.

இதே குமுதினி,
எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந் நாட்களில் யாவரும் அறிவர்.

அதேபோல், அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு
”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.

எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.

அன்று, சேர்வராயன்மலை,
சுடு பாறையில் சூட்டிங், ஏ.எஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார். அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில்
எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.

எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.

வேண்டுமென்றே
எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில்
எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிகிறார். டங்கன் காட்சி முடிந்தவுடன்
எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.

உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப் படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.

1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தைகள் 1981-இல் பலித்து விடுகிறது.

அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.

உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் ஆர். டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.

எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்து விட்டாரே,
உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற
எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.

“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

“இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.

“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.

“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.

நாம் செய்த தீமைகளுக்கு
எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு
எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்து விட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.

---- நன்றி��...bpg