PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26



Pages : [1] 2 3 4 5 6 7 8 9

orodizli
29th April 2020, 10:54 AM
With all our friends blessings to day I am starting our MAKKAL THILAGAM MGR PART 26.

oygateedat
29th April 2020, 11:18 AM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாகம் 26
இன்று வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது

இந்தப்பாகத்தை துவங்கி வைத்த திரு சுகாராம்
அவர்களுக்கு நன்றி.

மக்கள் திலகத்தின் திரையுலக அரசியல் சாதனைகளை
அன்பு நண்பர்கள் தொடர்ந்து பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

orodizli
29th April 2020, 11:52 AM
அனைவருக்கும் நல் வணக்கம்... நல்வரவு... நல்வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல இறைவன் அருளால் உலகமெங்கும் சுபிட்சமாக வாழ கடைக்கண் பார்வை பார்த்து ஆசிர்வதிகட்டும்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புதிய பாகம் 26 தொடங்கப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி... நம் சகோதரர்கள் எல்லோரும் மக்கள் திலகம் மாண்பினை பல்வேறு கோணங்களில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்... நன்றி...

oygateedat
29th April 2020, 11:56 AM
தற்பொழுது

சன் லைப் தொலைக்காட்சியில்

அரச கட்டளை

orodizli
29th April 2020, 12:43 PM
MGR Filmography (1962 Film 53) Poster

1962ஆம் ஆண்டு ராணி சம்யுக்தா மாடப்புறா ஆகிய இரண்டு சராசரி படங்களுக்கு பிறகு அந்த வருட சித்திரைப் பிறப்பன்று எம்ஜியாருக்குப் புத்துயிர் கொடுக்க வெளியானது தாயைக் காத்த தனயன்.
எம்ஜியாரின் ஆஸ்தான ப்ரொட்யூசர்களில் ஒருவரான சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு வழக்கம்போல ஆரூர்தாசின் கதை வசனத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க, எம்ஏ திருமுகம் இயக்க, எம்ஜியார் படங்களில் தவறாது தோன்றும் சரோஜாதேவி, அசோகன், எம் ஆர் ராதா அனைவரும் நடித்தனர். படத்தில் மிருகங்களுடனான சண்டைக்காட்சிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றன. தாய்க்குப் பின் தாரம் படத்திலிருந்தே தேவரின் படங்களில் ஏதேனும் ஒரு மிருகம் முக்கியத்துவம் பெறுவது என்பது வழக்கமாக இருந்தது. இதில் புலியின் உறுமலும் சீற்றமும் விசேஷம் பெற்றன.
மொத்தம் ஏழு பாடல்கள், ஏழும் ஹிட் ஆகின. வழக்கமான ஆக்ஷன் சீக்வன்ஸுகள் மட்டுமல்லாமல் எம்ஜியாருக்குப் பல உணர்ச்சிகரமான காட்சிகளையும் கொண்டிருந்தது இந்தப் படம். எம்ஆர் ராதா இரட்டை வேடம் ஏற்றிருந்ததும் அதை அழகான சஸ்பென்ஸ்ஃபுல் த்ரில்லராகச் செய்திருந்ததும் படத்தின் வெயிட்டை அதிகரித்தன.
சென்னையில் எம்ஜியார் படங்கள் வழக்கமாக வெளியாகும் ப்ளாசா, மஹாலஷ்மி, பாரத் ஆகிய தியேட்டர்களிலும், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் நூறு நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது இப்படம். இலங்கையிலும் அவ்வாறே நூறு நாள் படமானது.
ஆக்ஷன், செண்டிமெண்ட், இசை போன்ற மசாலாக்களை எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து பர்ஃபெக்ட்லி பேக்கேஜ்ட் ஃபிலிம் என்பதற்கான உதாரணங்களில் இப்படமும் ஒன்றானது........ Thanks...

orodizli
29th April 2020, 12:53 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் வீரமும்
இன்றைய கோழை கஞ்ச நடிகர்களும்

பணம் அதிகம் இல்லை பிரபலம் ஆகிவரும் காலம் என்ற போதும் இந்தியா சைனா போர் பிரமரின் வேண்டுகோள் இந்தியாவிலே முதல் குடிமகனாய் அதிக பணம் கொடுத்தது எம்.ஜி.ஆர்.

உலகிலே ஒரு கட்சி கொடியை தன் ஸ்தாபனத்தின் அடையாளமாக திரையில் காட்டிய முதல் வீரநடிகர் எம்ஜிஆர் . உலகத்திலேயே ஒரு கட்சி எதிர் கட்சியாக கூட வராத காலத்தில் துணிந்து அக்கட்சியின் கொடியை தன் படத்தில் காண்பித்த அடலேறு மாவீரர் எம்.ஜி.ஆர்., மட்டுமே.
ஊழலை எதிர்த்து தனி கட்சி அமைத்ததால் தன் லட்சிய படம் இறங்க ஆளும் கட்சி அதிகாரம் குண்டர் படை கொண்டு தடுத்த போதும் படத்தை வெளியிட்டு அதுவரை தமிழ் திரையுலகம் கண்ட அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தார் எம்ஜிஆர்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை எம்ஜிஆர் குணமடா

இன்றைய நடிகர்கள் பதவி மோகம் கொண்டு பைத்தியமா ஆட்சியை பிடிக்க நடிகன் என்ற ஒரே தகுதி போதும் என உளறி கொண்டு திரிகிறார்கள்
தமிழனை படுகொலை செய்து கொத்து கொத்தாக குண்டு வீசி அளித்த போது களம் இறங்காத நடிகர்கள் பதவி அடைய வயதாகி மார்கெட் போன பின் களம் இறங்க போறாங்களாம்

எம்ஜிஆர் நடிகன் என்பதால் மட்டும் மக்கள் ஆதரிக்க வில்லை மனிதநேய வள்ளல் ஒரு தெய்வப்பிறவி என்பதால் தான் என்பதை உணரவேண்டும்

வாழ்க எம்ஜிஆர் புகழ்........ Thanks...

orodizli
29th April 2020, 12:57 PM
#தலைவரின்_நேற்றுஇன்றுநாளை
[ 12 - 07 - 1974 ]

தலைவர் இயக்கம் கண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியான சூப்பர் ஹிட் காவியம்.

திமுக ஆட்சியை இழந்ததற்கும் அதன் பின்பு தலைவர் இருக்கும் காலம் வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் தலைவரின் இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக 1974 நேற்று இன்று நாளை
ரிலீஸான நாள் முதல் 1977 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை கிராமங்களில் நடைபெறும் இல்ல சுபகாரியங்களில் கூட இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலி பரப்புவார்கள்...

திமுகவினருக்கு வரும் ஆத்திரத்திற்கு அளவே கிடையாது.

இந்தப் பாடலில் வரும் வரிகளான...

மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்...
தம் மக்கள் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...

என்ற வரிகள் நேரடியாக கலைஞரையே தாக்குவதாக உள்ளதால் திமுகவினரின் ஆத்திரம் தலைவர் மீது மட்டுமல்ல...

இந்தப் பாடலை எழுதிய வாலி அவர்களையும் தயாரிப்பாளர்
நடிகர் S.A. அசோகன் அவர்களையும்
விட்டு வைக்கவில்லை.

மக்கள்திலகம் ரசிகர்களின் பேராதரவில் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்ல...
தலைவர் அரியணை ஏறுவதற்கும் கலைஞர் சொன்னாரே 14 ஆண்டு கால வனவாசம் என்று...

அதை நிறைவேற்றியதில் பெரும்பங்கு வகித்த பாடல் இது...

நெல்லை எழில்மிகு பார்வதி திரையரங்கில் இந்த திரைப்படத்திற்கு திரண்ட மக்கள் சமுத்திரம் போல் பார்வதி திரையரங்கில் எந்த திரைப்படத்திற்கும் வந்ததில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கொடுக்கும் சாட்சியாகும்.

இத் திரைக்காவியத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

�� வளர்க புரட்சித்தலைவர் புகழ் ��

#இதயதெய்வம்........... Thanks.........

orodizli
29th April 2020, 01:07 PM
Cont-1
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.......... Thanks.........

orodizli
29th April 2020, 01:11 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

நாளை போடப்போறேன் #சட்டம் – பொதுவில்
நன்மை புரிந்திடும் #திட்டம்
நாடு நலம் பெறும் #திட்டம்

என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.

#தொழிலாளியாக_எம்ஜிஆரின்_நலத்_திட்டங்கள்

ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்*ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்....... Thanks...

Stynagt
29th April 2020, 01:27 PM
ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகப்படுத்தினார்.

மதிய உணவுத்திட்டம் என்று ஏற்கனவே ஒரு சில பள்ளிகளில் மட்டுமே இருந்த திட்டம் சரிவர நடத்த முடியாமல்இருந்ததால் இத்திட்டத்தை மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சாதாரண உணவாக இல்லாமல் சரிவிகித சத்துணவுத்திட்டமாக மாற்றினார். இதற்கு அதிகாரிகள் அதிகமாக செலவாகும் என்றும் செயல்படுத்துவது கடினம் என்றும் கூற இத்திட்டத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றுவேன் என்று கூறி சாதித்தும் காட்டினார். இன்றைக்கு உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் நீதிபதிகள் என நிறைய பேர் இத்திட்டத்தினால் பயன்பெற்றவரே. இதை அவர்களே பல நேரங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இத்திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றி பின்னர் ஐ. நா சபையே அதை பாராட்டியது. ஆனால் முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் இந்த சாதனையை இன்றைய தலைமுறையினருக்கு சரிவர கொண்டு சேர்க்கவில்லை. இனிமேல் பக்தர்களாகிய நாம் நம் ஆண்டவன் நிகழ்த்திய சாதனைகளை ஒவ்வொன்றாய் இன்றைய தலைமுறையினர் நன்கு அறியும் வண்ணம் செய்ய வேண்டியது நமது கடமையாகும். நம் உறுப்பினர்கள் இந்த சாதனை சம்பந்தமாய் தாங்கள் அறிந்தவற்றை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

வி. கலியபெருமாள். புதுச்சேரி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.

orodizli
29th April 2020, 01:43 PM
ரசிகர்களும் மக்களும் விரும்பிய ஒரே நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .( அதற்க்கான results பல தடவைகள் நிரூபிக்கபட்டுள்ளது உலகறிந்த உண்மை)
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் தலைப்பே அதற்கு உதாரணம் .

நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
தர்மம் தலைகாக்கும்
நல்லவன் வாழ்வான்
நீதிக்கு பின் பாசம்
என் கடமை
தொழிலாளி
தெய்வத்தாய்
படகோட்டி
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரை விளக்கம்
ஆசை முகம்
நான் ஆணையிட்டால்
முகராசி
சந்திரோதயம்
தனிப்பிறவி
காவல்காரன்
விவசாயி
குடியிருந்த கோயில்
புதியபூமி
ஒளிவிளக்கு
நம்நாடு
தலைவன்
எங்கள் தங்கம்
நீரும் நெருப்பும்
சங்கே முழங்கு
நல்ல நேரம்
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
நீதிக்கு தலை வணங்கு
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
இன்று போல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ...... Thanks...

orodizli
29th April 2020, 03:02 PM
[எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

Cont...]......... Thanks...

orodizli
29th April 2020, 03:12 PM
Cont-2
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்தது புரட்சி தலைவர்,அவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !....... Thanks...

orodizli
29th April 2020, 05:15 PM
தலைவர் மறைந்தபோது எனக்கு 10 வயது எங்க வீட்டுக்கு பின்புறம் இரயில் பாதை அந்த இரண்டு நாட்களும் எல்லா ரயில்களும் இது போலவே சென்றது அப்பா என்னை அழைத்து கொண்டு தலைவரை பார்த்து விட வேண்டும் என்று கிளம்பினார் ஆனால் அம்மா ஒவ்வொரு ரெயிலிலும் இவ்வளவு கூட்டம் போகிறது பிள்ளையை அனுப்ப மாட்டேன் என்று சொல்லி விட்டார் தலைவரை பார்க்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறாமலே போய்விட்டது...... Thanks Chezhiyan...

orodizli
29th April 2020, 05:16 PM
மறக்க முடியாத பயணம்...
நிறைய ரத்தத்தின் ரத்தங்களுக்கு--
இதைத்தான் நடிகர் சோ சொல்வார்---
"எல்லா நடிகளுக்கும் ரசிகர்கள் உண்டு.ஆனால் MGR க்கு மட்டுமே
பக்தர்கள் உண்டு"....... Thanks... Kumaravel...

orodizli
29th April 2020, 05:24 PM
சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரையிலும் உச்ச வேகத்தில், உயரத்தில் #எம்.ஜி.ஆர் பயணித்துக்கொண்டு இருந்த சமயம் அது...

ஆனந்த விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதினார்... #மக்கள்திலகம்...

வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் அத்தியாயமே எம்.ஜி.ஆரின் கையெழுத்தில் இப்படித்தான் தொடங்கியது...... Thanks...

orodizli
29th April 2020, 05:27 PM
Cont-2
மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.
அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா....... Thanks...

orodizli
29th April 2020, 05:28 PM
தலைவர் தலைமையில் ஒன்றிய செயலாளர் திருமணம் pmv ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தலைவர் குறித்த நேரத்தில் வர இயலவில்லை வரும் வழி எங்கும் தொண்டர்கள் கூட்டம் மிக தாமதமாக தலைவர் வந்து சேர்ந்தார் வந்தவுடனே தலைவர் கேட்டது நல்ல நேரத்தில் முகூர்த்தம் முடித்திருக்கலமே என்றார் ஒன்றியச் செயலர் ஒற்றை வரியில் சொன்னது தலைவர் அருகில் இருக்கும் போது ராகு கேது மற்றும் எமகண்டம் என்னை நெருங்காது தாலியை நீங்கள் தொட்டு தாருங்கள் இதுவே என் வாழ்க்கையில் பொன்னான நாள் என்றார்.... Thanks...

orodizli
29th April 2020, 05:29 PM
ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்து வரும் முறையை ஒழித்து..

'கிராம நிர்வாக அலுவலர்' என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் #எம்ஜிஆர்.

இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போதுதான், தெரு பெயர்களில் 'ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது' என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.

சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக நடைமுறைக்கு வந்தது !........ Thanks...

orodizli
29th April 2020, 05:35 PM
கௌரவம் பார்த்தால்
கௌரவம் பார்க்காதே?
---------------------------------------------

எம்.ஜி.ஆரின் சிறப்பை வகை வகையாய் ஒவ்வொருத்தரும்,, தங்கள் தனித் திறமையால் வித விதமாக முக நூல்,,வாட்ஸ்-அப்புகளில் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஒரு குண நலனை,,அதுவும் அவர் முதல்வராக இருக்கும்போதும் செயல்படுத்தியதை இங்கேப் பார்க்கலாம்!
அது,,சத்யா மூவீஸின் மாஸ்டர் பீஸ் படம்--
ரிக்ஷாக்காரன்!!
சோ வையும்,,இன்னொரு சிறந்த நடிகரையும் தனது விருப்பத் தேர்வாக,,அந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எம்.ஜி.ஆர்!
தேங்காய் ஸ்ரீனிவாசனோடு ஈடு கட்டும் ஐயராக சோ நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு சரியானது என்பதைப் படம் பார்த்த நாம் புரிந்து கொள்ளலாம்!
தேங்காயோடு சேர்ந்து கலக்கியிருப்பார் சோ!!
வக்கீலாக,,ஒரு குணச்சித்திர நடிகரை தம் மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்!
கதையே,,அந்த வக்கீலால் தான் அமைந்திருக்கிறது என்பதையும்,,அந்த நடிகரால் தான் அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க் கொடுக்க முடியும் என்றும் திடமாக நம்பினார் எம்.ஜி.ஆர்!
குணச் சித்திர நடிகராக எவர் பொருத்தமானவர் என்று எம்.ஜி.ஆர் கருதினாரோ,,அவரால் எம்.ஜி.ஆரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை?
சிவாஜி படங்களுடன் வேறு நடிகர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் கால்ஷீட்டைக் கூட ரிக்ஷாக்காரனுக்காக அவரால் ஒதுக்க முடியவில்லை!
தயாரிப்பாளர் சார்பிலும்,,இயக்குனர் சார்பிலும் கேட்கப் பட்டும் சாதகமான பதிலை அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை!
வத்தி வைக்கவும்,,வளைத்துப் பேசவும் தான் வகை வகையாய் மனிதர்கள் இருக்கிறார்களே?
ரொம்ப அலட்சியமா மாட்டேன்னு சொல்லிட்டார்!
சிவாஜி படங்களில் நடிக்கறோம்ங்கற திமிரு?
உங்கள வச்சு தாண்ணே படமே!
அந்தாளு கிட்டே எதுக்குக் கெஞ்சணும்?
இப்படியாக உப்புக் காரம் சேர்த்து??
பதில் ஏதும் சொல்லாத எம்.ஜி.ஆர்,,தொலைபேசியைக் கையில் எடுக்கிறார்--
சாதாரணமாக,, மறு முனையில் பேசிய அந்த நடிகர் பேசுவது எம்.ஜி.ஆர் எனத் தெரிந்ததும் டென்ஷனாகிறார்?
என் படத்துல நீங்க நடிச்சா நான் சந்தோசப்படுவேன். உங்களுக்குக் கால்ஷீட்டு பிரச்சனை இருக்குங்கறதையும் நான் மறுக்கலே.
உங்களுக்காக ஒரு ரெண்டு மாசம் காத்திருக்கணும்ன்னாலும் பரவாயில்லே--
எம்.ஜி.ஆர் போய் இப்படி--அதுவும் நம்மப் போல சாதாரண நடிகரிடம்??
நெகிழ்ச்சியில் கண் கலங்கிய அந்த நடிகர் பல்வேறு முறைகளில் தன் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்துக் கொடுத்து,,தம் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு இருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்!1
ஆம்! அவர் மேஜர் சுந்தரராஜன்!!!
ஒரு கலைஞனாக மட்டுமே தம்மை இருத்தி,,ஒரு படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதோடு,,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்,,தன் நிலையைத் தாழ்த்தி மேஜரிடம் பேசிய எம்.ஜி.ஆர்??
இதே எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பிரதமராக எவர் இருந்தாலும் தன் ஆதரவைக் காட்டினார்--
நான் இப்போ தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதி!
ராமச்சந்திரனுக்குன்னு நான் கவுரவம் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியிலேர்ந்து வரும் உதவிகள் தடைபடுமே??
எவன் ஒருவன்--
தன்னிலைத் தாழ்ந்து மற்றவர்க்காக குரல் கொடுத்தால்--
விண் நிலைக்கு உயரமாட்டானா ஒருவன்?
என் நிலை இதுவென்று எம்.ஜி.ஆர். சொன்னதைக் கடைப் பிடித்தால்-
இன் நிலை தானே எல்லோருக்கும் இறுதி வரைக்கும்!!
இதுவென்று நாமும் பணிவைக் கொள்வோம்!
இது வென்று கொடுக்கும் நம் முயற்சிகளை!!!...Thanks...

orodizli
29th April 2020, 09:43 PM
https://www.facebook.com/952306474825887/posts/2971826362873878/?sfnsn=wiwspwa&extid=vaNGKGzUrh4MIfmT&d=w&vh=e........... Thanks...

orodizli
29th April 2020, 09:46 PM
மக்கள் திலகத்தின் பெரும் மதிப்பிற்குரிய கலைவாணர் தன் 49 ஆம் வயதில் உடல் நலம் மிகவும் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடன் அவர் சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் , டனால் தங்கவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

கலைவாணர் ஒருவேளை நான் இல்லாமல் போனால் தம்பி ராமச்சந்திரனை நன்கு கவனித்து கொள்ளுங்கள் ..அவன் மிகவும் நல்லவர் என்று சொல்லி கொண்டே இருக்க.

ஒரு நாள் இரவு மருத்துவ மனைக்கு அவரை நலம் விசாரிக்க தலைவர் போகிறார்...அங்கே மருந்து சாப்பிட்டு விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் கலைவாணர்.

வெளியே காத்து இருந்த மேலே சொன்ன இருவரிடமும் நான் வந்து போனதாக சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தலைவர் புறப்பட.

மறுநாள் விடிந்தது..காலை கடன்களை முடித்த பின் கலைவாணர் இருவரையும் அழைத்து நேற்று இரவு என்னை பார்க்க எம்ஜிஆர் வந்தாரா என்று கேட்க.

தங்கவேலும், ராதா கிருஷ்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஆமாம் அண்ணே எப்படி சரியா சொன்னீங்க....என்று கேட்க.

பசங்களா இந்த நாட்டுல வேறு எவர் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி கட்டு கணக்கில் பணத்தை வைத்து இருக்க போறாங்க...என்று சொல்ல.

வியப்பில் அசந்து போனது அவர்கள் மட்டும் அல்ல நாமும் தானே...

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி... திரு.நெல்லை மணி அவர்களின் பதிவிலிருந்து........ Thanks...

orodizli
29th April 2020, 10:16 PM
https://youtu.be/xpKElg_KJTY... Thanks...

orodizli
29th April 2020, 10:22 PM
https://youtu.be/xpKElg_KJTY... Thanks...

orodizli
29th April 2020, 10:24 PM
https://youtu.be/benpvS6aEKw... Thanks......

orodizli
29th April 2020, 10:38 PM
தங்கத்தின் தங்கமான தலைவருக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்த கலைவாணர் ஒரு நாள் அவரின் வீட்டு வழியே தினமும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய் கொடுப்பாராம். இதை கவனித்த நம் தங்கத்தின் தங்கம் அவரிடம் ஏன் அண்ணே என கேட்க , அவன் அதைவைத்து என்ன வீடா கட்ட போகிறான் என்றவுடன் வள்ளல் பெருமை அடைந்தும், பிறர் இன்னும் எத்தனையோ கண்கள் குளமாகின்றன. மீண்டும் வரவேண்டும் என்ற வலிகளுடன் தினமும் கண்ணீருடன்......
Thanks...

orodizli
29th April 2020, 10:40 PM
இந்த வருடம் என் பிறந்தநாளுக்கு அமெரிக்காவில் வசிக்கும் என் அன்பு சகோதரியின் வாழ்த்துக்களுடன் கூடிய பரிசு. இந்த புகை படங்களை வரைந்தவர் என் சகோதரியின் அன்பு தோழி திருமதி. ரேவதி மோகன் அமெரிக்காவில் வசிக்கும் இவர் இதய தெய்வத்தின் தீவிர அபிமானி என்பது குறிப்பிடதக்க ஒன்று. கடல் கடந்து வசிக்கும் இவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்பது நம் கடமையாகும். முக நூல் நண்பர்களுக்கு... Saravanan... Thanks...

orodizli
29th April 2020, 10:42 PM
இன்று :
சர்வதேச நடன தினம் கொண்டாடபடுகிறது.
எம்.ஜி. ஆர். இரு வேடங்களில் நடித்த 'குடியிருந்த கோயில்' திரைப்படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்டு..." என்ற பாட்டில் அவர் எல். விஜயலட்சுமி உடன் ஆடுவதுபோன்ற காட்சியை அமைத்திருப்பார் டைரக்டர் சங்கர். ஆனால் எம். ஜி. ஆர். இப்பாடலுக்காக ( பங்கரா டான்ஸ் ) கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். அதன் பயனாக இந்த பாடல் இன்று வரை ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெறுகின்ற ஒன்றாகும். தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுபோல ஒரு நடனக்காட்சி இதுவரை வந்ததில்லை.

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் இப்பாடல் ரீமிக்ஸ் செய்யபட்டிருக்கும் .ஆனால் இதுபோல் நடனக்காட்சி இல்லை. இருப்பினும் பாடலின் இறுதியில் எம். ஜி. ஆர். படத்துக்கு பூக்களை தூவி, "பொன்மனச்செம்மல் நூற்றாண்டை வரவேற்போம்" என்பார் லாரன்ஸ்.
'மன்னாதி மன்னன்' படத்தில் பதமினியுடன் போட்டி நடனமும்,
'கலங்கரை விளக்கம்' படத்தில் 'பல்லவன் பல்லவி' பாடல் காட்சியும் , 'அன்பே வா' படத்தில் 'நாடோடி போகவேண்டும் ஓடோடி ' பாடலிலும், 'என் அண்ணன்' படத்தில் வரும் 'ஆயிரம் எண்ணம் கொண்ட 'பாடலில் என்று பல பாடல் காட்சிகளில் எம். ஜி. ஆர். , நடனம் பயின்ற நாயகியருக்கு ஈடாக அழகுபட நடனமாடி நடித்திருப்பார்.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan... Thanks...

orodizli
29th April 2020, 10:45 PM
இனிய மாலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

"விவ*சாயி" திரைப்ப*ட*த்தில் மக்கள் திலகம்.. இப்ப*ட*த்தின் பெரும்பாலான வெளிப்புற* ப*ட*ப்பிடிப்பு கோவை அக்ரி யுனிவ*ர்சிட்டி மற்றும் ம*ருத*ம*லை அடிவார*த்தில் எடுக்க*ப்ப*ட்ட*து. 1.க*ட*வுள் என்னும் முத*லாளி 2. ந*ல்ல ந*ல்ல நிலம் பார்த்து..3. இப்ப*டித்தான் இருக்க*வேணும் பொம்ப*ள 4. காத*ல் எந்த*ன் மீதில் என்றால் 5. எவ*ரிட*த்தும் த*வ*றுமில்லை..6. என்ன*ம்மா, சிங்கார* க*ண்ண*ம்மா.. ஆகிய இனிய பாட*ல்க*ள் உண்டு.

ச*ண்டைக்காட்சிக*ள் மிக*ச்சிற*ப்பு..

கோரிக்கை நிறைவேறாவிட்டால் க*ல்லால் அடிப்ப*தா?

த*வ*று செய்ப*வ*ர்க*ளைப்ப*ற்றி த*க*வ*ல் கொடுக்குமுன் அதே த*வ*று ந*ம்மிட*ம் இருக்கிற*தா? என பார்த்துக்கொள்ள வேண்டும்..

நாடே உண*வுப்ப*ஞ்ச*த்தில் த*விக்கும்போது விளைநிலங்க*ளை அழித்து க*ட்டிட*ம் க*ட்ட* அனும*திக்க* கூடாது..

நெல் விளையும் நிலத்தில் நெல்தான் விளைவிக்க வேண்டும்..

கூட்டுப்ப*ண்ணை திட்ட*ம், கூட்டுற*வு விவ*சாய*ம் போனேஅவ*ற்றை வ*லியுறுத்தும் காட்சிக*ள்..

விவ*சாய*த்தொழிலே அனைத்து தொழில்க*ளிலும் முத*ன்மையான*து..

த*வ*று செய்த*வ*னை த*ண்டிப்ப*தைவிட மன்னித்து ஏற்றுக்கொண்டால் அவ*னும் ந*ல்ல மனித*னாக மாறுவான்.. போன்ற* க*ருத்துக்க*ளை வ*லியுறுத்தும் காட்சிக*ள் கொண்ட*து..

மக்கள் திலகம் துப்பாக்கி சூட்டில் பாதிக்க*ப்ப*ட்டு சிகிச்சையில் இருந்த*போது அவ*ர் உயிர் பிழைத்து வ*ருவாரா? அப்ப*டியே மீண்டு வ*ந்தாலும் மீண்டும் சினிமாவில் முன்புபோல் ந*டிக்க* இய*லுமா? என திரையுலகமும், அவ*ர*து எதிர்முகாமைச் சார்ந்த*வ*ர்க*ளும் வ*த*ந்தி ப*ர*ப்பிக்கொண்டிருந்த*ன*ர். அப்போது சின்ன*ப்பா தேவ*ர் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுவ*ரும் ம*ருத்துவ*ம*னைக்கே வ*ந்து முருகா! நீங்க*ள் குண*ம*டைந்து ந*ல்லப*டியாக* திரும்பி வ*ருவீர்க*ள்..முன்பைவிட* சுறுசுறுப்புட*ன் திரைப்ப*ட*த்திலும் ந*டிப்பீர்க*ள் என்று ஆறுத*ல் கூறி மக்கள் திலக*த்தின் நெற்றியில் விபூதியை இட்டார். மேலும் ஒரு பெரிய தொகையை த*ன*து அடுத்த* ப*ட*த்தில் ந*டிப்ப*த*ற்கு முன்ப*ண*மாக* அளித்துச்சென்றார். அத*ன்ப*டியே எம்ஜிஆர் குணமாகி வ*ந்ததும் காவ*ல்கார*ன் ப*ட*த்தில் மீதியிருந்த* காட்சிக*ள் மற்றும் ட*ப்பிங் வேல*க*ளை முடித்ததும் விவ*சாயி ப*ட*த்தில் ந*டித்து கொடுத்தார். குறுகிய காலத் த*யாரிப்பான விவ*சாயி பெரும் வெற்றிப்ப*ட*மாக*வும் அடிக்க*டி திரைய*ர*ங்குக*ளிலும், தொலைக்காட்சிக*ளிலும் இன்றும் திரையிட*ப்ப*டும் ப*ட*மாக*வும் அமைந்துள்ள*து குறிப்பிட*த்த*க்க*து..

மேலும் இப்ப*ட*த்தில் த*லைவ*ர*து ப*ஞ்ச் ட*ய*லாக் ஒரு காட்சியில்..ந*ம்பியாரிட*ம் ச*மாதான*ம் பேச* அவ*ர் வீட்டிற்கே எம்ஜிஆர் வ*ருவார். பின் எதிர்பாராத* நேர*த்தில் தாக்க* வ*ரும் ந*ம்பியாரை புர*ட்டி எடுப்பார். பிற*கு நம்பியாரிட*ம் என்ன? நீங்க கேட்ட*து கிடைச்சுதா? ப*த்த*லைனா சொல்லுங்க..வ*ந்து குடுத்துட்டுப் போகிறேன்.. என்னும் காட்சியில் க*ர*வொலி அதிரும்..... Thanks...

orodizli
29th April 2020, 10:55 PM
[மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம்:
(டிசம்பர் 1984, ஜனவரி மற்றும் பிப்ரவரி 1985 பொம்மை இதழ்களிலிருந்து)

"அண்ணன் எம்.ஜி.ஆரைப் போல நானும், என்னைப் போல அண்ணன் எம்.ஜி.ஆரும் தாய்ப்பாசத்தில் அதிகமாகப் பற்று கொண்டவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள். தாயை தெய்வமாக மதிப்பவர்கள். அந்நாளிலும் இந்நாளிலும் நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், குறித்த நேரத்தில், சந்திக்க வேண்டிய இடத்தில், பேசுகின்ற பாஷையில், கண்களில் அன்பு நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து நிற்கின்ற அந்த நிலையை யாரால் விளக்க முடியும்?! இதை வெளியிலே கூற முடியுமா? சொன்னால் மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்?! படிப்புக்கு பலர் இலக்கணம் வகுத்திருப்பார்கள். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

ராஜாமணி அம்மையாருக்கு உடம்பு செளகரியமில்லை என்றால் தன் உடம்புக்கு வந்து விட்ட மாதிரி அண்ணன் இருப்பார். மூதாட்டி யாரைப் பார்த்தாலும் அண்ணன் தாய்ப்பாசத்தைப் பொழிவார். அந்த மூதாட்டியை அணைத்துக் கொள்வார். அரசியலுக்காக இதைக் கிண்டல் பண்ணலாம். ஆனால் அவருடைய மனதில் எங்கோ ஒரு மூலையில் தாய்ப்பாசம் இருப்பதனால் தானே இப்படிச் செய்கிறார். மற்றவர்களால் முடியுமா?!

திரையுலகில் அண்ணனின் பாணி வேறு. என்னுடைய வழி வேறு. நம்மாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தேன். தம்மாலும் நடிக்க முடியும் என்பதை அவரும் பல படங்களில் காண்பித்தார். எவ்வளவு தான் இருந்தாலும் அவர் அண்ணன், நான் தம்பி. அரசியலில் என்னை விட அவர் திறமைசாலி. நினைத்ததை செய்து காட்டியவர். நான் இன்றும் தொண்டனாகத் தான் இருக்கிறேன். அதனால் தான் அவர் அண்ணன், நான் தம்பி.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் நான் சென்று பார்ப்பேன். அவருக்கு கால் உடைந்த போது தொடர்ந்தாற் போல் சிரமங்கள் வந்து கொண்டு இருந்தன. அவருடைய மூத்த மனைவி இறந்து விட்டார். நான் அவருடன் இரண்டு தினங்கள் இருந்தேன். அவருடன் மயானத்திற்குப் போனேன். அங்கு அவருக்கு மயக்கம் வந்து விட்டது. அவரைக் காரில் வீட்டிற்கு அழைத்து வந்து நானே அவருக்கு குளிப்பாட்டி, தலை துவட்டி விட்டு 'ஒரு வாயாவது ஹார்லிக்ஸ் குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தி, அவர் ஹார்லிக்ஸ் குடித்த பிறகே நான் காபி குடித்தேன். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அண்ணன். நாம் அவருடன் பேசும் போது சென்டிமென்டைத் தொட்டு விட்டால் மற்றவற்றை அவர் மறந்து விடுவார். அப்போது அண்ணன் குழந்தை ஆகி விடுவார்.

அவர் மக்களுக்கு இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று கருதிய ஆண்டவன், நம் பிரார்த்தனைகளை ஏற்று அண்ணன் அவர்களை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடல் நலத்துடன் திருப்பி அனுப்பி இருக்கிறான். அவர் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால் இனிமேலாவது மற்றவர்களுக்காகப் பணியாற்றும் போது அண்ணன் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய இந்த சிறு வேண்டுகோளை அண்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டும்#அரசியலில் இரு துருவங்கள்,உண்மையில் இரு சகோதரர்கள்! ]...... Thanks Poongodi...

orodizli
29th April 2020, 11:00 PM
அப்பொழுது தொலைக்காட்சி வசதிகள் அதிகமாக இல்லை ஒரு 5 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தோம் அப்போது கூட்டம் அதிகமாக அந்த செல்வந்தர் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த கலையரங்கில் தொலைக்காட்சி பெட்டியை வைத்து அனைவரையும் பார்க்க வைத்தார் ஒரே அழுகை அலரல் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத சோகம் .வள்ளல் அவர்களின் இறுதி ஊர்வலம் முடிந்து அடக்கம் வரை அனைவரையும் பார்க்க வைத்த அந்த செல்வந்தர் காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவர் என்றும் ஆனாலும் தலைவரின் அபிமானி என்பதை என் தந்தையார் சொல்லி தெரிந்து கொண்டேன் .
அருமை பதிவு ங்க அண்ணா. ����������..... Thanks...Rathnavel Kumaran

orodizli
29th April 2020, 11:06 PM
இரண்டு நாளுக்கு முன்னர் வந்த என் பதிவுக்கு வந்த வரவேற்பை கண்டு மலைத்துவிட்டேன்! ஏன் என்றால் தலைவரைப்பற்றிய நிகழ்வுகள் அரசியல் பற்றிய அனுபவங்கள் நடக்கும் போது நமக்கு புரியாத வயது! அதனால் அதுபற்றி தெரியாது! படங்கள் பற்றி நிறைய எழுதிவிட்டேன்! பாடல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் புதுமையாக ஏதாவது பதியலாம் என்று இதனை பதிவிட்டேன்! அதன் தொடர்ச்சி இது:-
நான்:- ஏண்டா தலைவரைப்பற்றி படங்களை பற்றி பெருமையாக பதிவிட்டால் என்னையா சுனாமி தூக்கனும்கற? உனக்கு என்னடா தெரியும்? தலைவரைப் பற்றி!
நண்பன்:- சொல்லுடா கேட்கிறேன்!
நான்:- 40 பாடல்கள் ஆலாபனை வசன நடை என்று போன தமிழ் சினிமாவை புதிய பாதைல திருப்பிவிட்டதே எங்க தங்க தலைவர் தான்!
வசனத்திற்கு:- மதுரை வீரன்
எழில் தோற்றம்:- அலிபாபாவும் 40 திருடர்களும்
கத்திவீச்சுக்கு:- சர்வாதிகாரி
சிலம்ப சுழற்றுக்கு:- படகோட்டி: தாயை காத்த தனயன், அன்னமிட்டகை
களரி, மல்யுத்தம்:- சக்கரவர்த்தி திருமகள், அன்பே வா
குத்து சண்டைக்கு:- காவல்காரன்! பட்டிக்காட்டு பொன்னையா!
புதுமையான ரிக்ஷா சண்டை, சுருள் செயின் வீச்சு:- ரிக்ஷாக்காரன்
சண்டை புதுபரிமாணங்கள்:- உலகம் சுற்றும் வாலிபன்
பதுப்பு கண்ண அழகுக்கு:- தேவர் படங்கள்
சுருள் முடி அழகிற்கு:- குலேபகாவலி,சக்கரவர்த்தி திருமகள் புதுமைப்பித்தன்,
வேட்டி கட்டழகு:- உரிமைக்குரல்; உழைக்கும் கரங்கள்
பெல்பாட்ட அழகு:- மீனவநண்பன், நீதிக்கு தலைவணங்கு
புதுமை கதை அமைப்பு:- நான் ஏன் பிறந்தேன்?
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்! மற்ற எந்த நடிகர் படங்களானாலும் இது பீம்சிங் படம், திருலோகசந்தர் படம், மாதவன் படம் ஸ்ரீதர் படம், பாலசந்தர் பாடம் அட்லி படம் புட்லி படம், சின்னப்பய முருகதாசு படம் என சொல்வார்கள்! அது தற்போது வரை உள்ள எந்த நடிகப்பயல்களுக்கும் பொருந்தும்! ஆனால் எங்க தலைவர் படங்கள் எவன் டைரக்ட் செய்தாலும் வாத்தியார் படம்டா?
நண்பன்:- உங்கிட்ட பேசமுடியுமா! ஆளவிடுடா சாமி! என்னத்தான் சுனாமி தூக்கணும்! ஒங்கிட்ட பேசவந்தேன் பாரு!!!...... Thanks SR.,

orodizli
29th April 2020, 11:16 PM
தொடர்ச்சி.
***********

புரட்சித்தலைவர் அவர்கள்.!

வறுமையின் கொடுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் போக, அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்.

அந்த அற்புத தலைவர்.! பொன்மன தலைவர்.! கல்வியைப் பற்றி நன்கு அறிந்தவர்.

1977- ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

ஆட்சிக்கு வந்த கையுடன், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

மாணவர்களுக்கு தொழில் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

இதற்கெல்லாம் ஆதாரமாக.. அச்சாரமாக அண்ணா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

இன்றைக்கு இருக்கின்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரட்சித்தலைவரின் மானியத்தால் தொடங்கப்பட்ட கல்லூரிகளே ஆகும்.

இன்றைக்கு இருக்கின்ற அத்தனை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தவை ஆகும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இன்ஜினியர் பிரிவுகளில் இருக்கும் அத்தனை பாடத்திட்டங்களையும் புரட்சித் தலைவரே கொண்டுவந்தார்.

தமிழ்நாட்டு மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர் அவர்களே ...

இன்றைக்கு மாணவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ...

அதற்கு காரணம், நம் புரட்சித் தலைவரே புரட்சித் தலைவரே....

இதை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

என்கிற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வாழ்க புரட்சித் தலைவர்.!!
வாழ்க பொன்மனச்செம்மல் ..!!
வாழ்க மக்கள் திலகம் ...!!!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் புரட்சித் தலைவா வாழ்க வாழ்க வாழ்கவே ....

( 2. ).

������������������������������..... Thanks...

orodizli
29th April 2020, 11:20 PM
'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத்தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். படத்தில் நஷ்டம் வந்ததால் ஈட்டுத் தொகையை கொடுக்க தயாரிப்பாளரை,விநியோகஸ்தர் வலியுறுத்தும் காலம் இப்போது.
ஆனால் அக்காலத்தில எம்.ஜி.ஆர். செய்தது என்ன தெரியுமா? கூடுதலாகக் கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டுமல்ல, கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்தான்.
அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி(இதுவும் இக்காலத்தில் காண இயலாதது.) மறுத்து விட்டார். "நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இத்தொகையைப் பயனபடுத்திக் கொள்ளுங்கள்" என்று அந்த காசோலையைத் திருப்பி அனுப்பி விட்டார்.எம்.ஜி.ஆரிடம்.திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயர் துடைத்ததோ யாருக்குத் தெரியும்?..... Thanks...

orodizli
29th April 2020, 11:27 PM
[எம்ஜிஆர் அவர்களின் அருமை நண்பர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் கோயம்புத்தூரில் மாருதி உடற்பயிற்சி நிலையம் என்று ஒரு அமைப்பு வைத்திருந்தார் எம் ஜி ஆர் ஷூட்டிங்க் இல்லாத வேளையில் அங்கு சென்று விடுவார் அவருடன் சண்டை போடுவார் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே கம்புச் சண்டை நடந்துகொண்டிருக்கும் இடைவெளி இல்லாமல் அவர்கள் 2 பேரும் சூழ்ந்து தன்னை தாக்கி கொள்வார்கள் அப்படி உருவானது அவர்கள் நட்பு கம்பு வீச்சு என்றால் அது தேவருக்கும் எம்ஜிஆருக்கும் தான் சரியாக இருக்கும்..... Thanks...

orodizli
29th April 2020, 11:29 PM
எம்ஜிஆா் சினிமாவில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினாா்
அண்ணன் சக்கரபாணியை "யேட்டா" என்று எம்ஜிஆா் அழைப்பாா். ஒ௫ போதும் பெயா் சொல்லி அழைத்ததில்லை.அண்ணன் பிள்ளைகளிடமும் அதை பிரதிபலிக்கச் செய்தாா். சக்கரபாணியின் மகன்களில் இளையவா் மூத்தவரை அண்ணன் என்றே அழைக்க வேண்டும் பெயா் சொல்லி அழைக்கக் ௯டாது. மூத்தவா் இளையவரைப் பெயர் சொல்லிக் ௯ப்பிடலாம் இந்த மாியாதை விஷயத்தில் எம்ஜிஆா் ரொம்ப உஷாராக உறுதியாக இ௫ந்தாா்
அந்தக் குடும்பத்துப் பணியாளா்களைக்௯ட வயதில் சிறியவா்கள் அணணே என்றுதான் அழைக்க வேண்டும் சக்கரபாணியின் பிள்ளைகள் ாிக் ஷாவில் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவாா்கள் அதற்காக வ௫ம் இ௫சப்பன் என்ற ாிக் ஷாக்காரரை இ௫சப்பண்ணே என்றோ அண்ணே என்றோதான் பிள்ளைகள் மாியாதை காட்டியி௫க்கிறாா்கள் பணியாளா்கள் யாராக இ௫ந்தாலும் அவா்களுக்கும் இத்த மாியாதை உண்டு
உணவு விஷயத்தில் எம்ஜிஆாிடம் எந்தளவு தாராளம் உண்டோ அந்தளவு நிபந்தனைகளும் உண்டு வீட்டில் எந்த உணவு சமைத்தாலும் எல்லோ௫ம் அதைச் சாப்பிட்டாக வேண்டும். யா௫ம் இது எனக்குப் பிடிக்காது என்று மறுக்கக்௯டாது பாகற்காய் கசக்கிறதே என்று முகம் சுழிக்கக் ௯டாது.கசப்பான உணவுகளையும் பழகிக்கொள்ள வேண்டும் என்பாா் எம்ஜிஆா்
சாப்பிடும்போது உணவைத் தட்டில் பாிமாறி விட்டால் அதை மீதம் வைக்காமல் சாப்பிடவேண்டும். தேவைக்கேற்ப உணவை பாிமாறிக் கொள்ளலாம். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது ஆனால் தட்டில் மீதம் வைக்கக்௯டாது. சாப்பிட்டு விடவேண்டும் சாப்பிட்டபின் அவரவா் தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவி வைத்துவிட வேண்டும்
எம்ஜிஆா் அதிகாலையில் 4.30 அல்லது 5மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவாா் அவா் எழுந்தி௫க்கும் நேரத்தில் பிள்ளைகளும் எழுந்தாக வேண்டும் எழுந்து அவா்களும் உடற்பயிற்சி செய்யவேண்டும் படிக்கவேண்டும் அவா்கள் எல்லாம் அ௫கிலுள்ள வி்.கே. ஆச்சாாி என்பவரது உடற்பயிற்சி ௯டத்திற்குச்சென்று பயிற்சிகளை மேற் கொள்வாா்கள் இதில் சிலம்பு வீரதீரமான பயிற்சிகளும் அடங்கும்
படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரமென்றால் எம்ஜிஆா் எல்லோ௫டனும் சாப்பிட உட்காா்ந்துவிடுவாா் எறா தொக்கு சாப்ஸ் என்றால் அதைச்சோற்றுடன் எம்ஜிஆரே பிசைந்து ஒ௫ பொிய பாத்திரத்தில் போட்டுக்கொள்வாா் அண்ணன் பிள்ளைகளை உட்காரவைத்து அவா்களுக்குத் த௫வாா் அப்போது மீண்டும் அவாிடம் உ௫ண்டை பெற ஒ௫ போட்டியே நடக்கும் அதெல்லாம் கண்டிப்பு இல்லாத கலகலப்பான நேரம்
எம். எஸ். சேகா் இ௫௯ா் கோவை...... Thanks...

orodizli
30th April 2020, 09:07 AM
#வணக்கம் #முதலாளி

பொதுவாக தமிழ்த்திரைப்பட உலகில் எம்ஜிஆரை, 'சின்னவர்', 'முதலாளி' என்றழைப்பர்...

ஆனால் எம்ஜிஆர், திரைப்படத்துறையில் சிலரைப் பார்த்து, 'முதலாளி' என்றழைப்பதுண்டு...

அந்தப் பெருமைக்குரியவர்கள் பலருண்டு. ஏவி.மெய்யப்பச் செட்டியார், பி.நாகிரெட்டியார், எஸ்எஸ் போன்றோர் சிலர்...
நேற்று இன்று நாளை படப்பிடிப்பில், நடிகர் அசோகனைப் பார்த்து, 'வணக்கம் முதலாளி வாங்க' என்றார்.

உடனே அசோகன் எம்ஜிஆரின் காலைப் பிடித்துக்கொண்டு, "ஐயோ! என் தெய்வமே! நீங்க என்னை பார்த்து முதலாளின்னு சொல்வதா ? இனிமேல் அப்படிச் சொல்லமாட்டேன்னு சொன்னால் தான் காலை விடுவேன் " ன்னு சொல்லி எம்ஜிஆரின் காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டார்.

உடனே எம்ஜிஆர், அசோகனைத் தூக்கி, கட்டிப்பிடித்து முத்தமிட்டு, "அட மண்டு, நான் படத்தில் நடிப்பவன், நீ எனக்கு சம்பளம் கொடுப்பவன். உன்னை முதலாளின்னு சொல்வதில் என்ன தவறு இருக்குறது !? தயாரிப்பாளரான உனக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் !!! உன்னை எல்லோரும் முதலாளி என்று தான் அழைக்கவேண்டும். இப்போது நீ நடிகன் மட்டுமல்ல...ஒரு படத்தயாரிப்பாளரும் கூட...பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்..."

இந்த அறிவுரைகளைக் கேட்ட அசோகனும் படப்பிடிப்புக் குழுவினரும் கண்ணீர் மல்கினர்...

இதுபோல மற்றவர்களை மதிக்கும் மாண்பு தான் வாத்தியாரை தெய்வீகநிலைக்கு உயர்த்தியது.......... Thanks.........

orodizli
30th April 2020, 09:08 AM
#தலைவரின்_நேற்றுஇன்றுநாளை
[ 12 - 07 - 1974 ]

தலைவர் இயக்கம் கண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியான சூப்பர் ஹிட் காவியம்.

திமுக ஆட்சியை இழந்ததற்கும் அதன் பின்பு தலைவர் இருக்கும் காலம் வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் தலைவரின் இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக 1974 நேற்று இன்று நாளை
ரிலீஸான நாள் முதல் 1977 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை கிராமங்களில் நடைபெறும் இல்ல சுபகாரியங்களில் கூட இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலி பரப்புவார்கள்...

திமுகவினருக்கு வரும் ஆத்திரத்திற்கு அளவே கிடையாது.

இந்தப் பாடலில் வரும் வரிகளான...

மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்...
தம் மக்கள் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...

என்ற வரிகள் நேரடியாக கலைஞரையே தாக்குவதாக உள்ளதால் திமுகவினரின் ஆத்திரம் தலைவர் மீது மட்டுமல்ல...

இந்தப் பாடலை எழுதிய வாலி அவர்களையும் தயாரிப்பாளர்
நடிகர் S.A. அசோகன் அவர்களையும்
விட்டு வைக்கவில்லை.

மக்கள்திலகம் ரசிகர்களின் பேராதரவில் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்ல...
தலைவர் அரியணை ஏறுவதற்கும் கலைஞர் சொன்னாரே 14 ஆண்டு கால வனவாசம் என்று...

அதை நிறைவேற்றியதில் பெரும்பங்கு வகித்த பாடல் இது...

நெல்லை எழில்மிகு பார்வதி திரையரங்கில் இந்த திரைப்படத்திற்கு திரண்ட மக்கள் சமுத்திரம் போல் பார்வதி திரையரங்கில் எந்த திரைப்படத்திற்கும் வந்ததில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கொடுக்கும் சாட்சியாகும்.

இத் திரைக்காவியத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

�� வளர்க புரட்சித்தலைவர் புகழ் ��

#இதயதெய்வம்......... Thanks...

orodizli
30th April 2020, 09:11 AM
Cont-1
ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்....... Thanks...

orodizli
30th April 2020, 09:12 AM
தொடர்ச்சி.
***********

புரட்சித்தலைவர் அவர்கள்.!

வறுமையின் கொடுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் போக, அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்.

அந்த அற்புத தலைவர்.! பொன்மன தலைவர்.! கல்வியைப் பற்றி நன்கு அறிந்தவர்.

1977- ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

ஆட்சிக்கு வந்த கையுடன், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

மாணவர்களுக்கு தொழில் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

இதற்கெல்லாம் ஆதாரமாக.. அச்சாரமாக அண்ணா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

இன்றைக்கு இருக்கின்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரட்சித்தலைவரின் மானியத்தால் தொடங்கப்பட்ட கல்லூரிகளே ஆகும்.

இன்றைக்கு இருக்கின்ற அத்தனை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தவை ஆகும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இன்ஜினியர் பிரிவுகளில் இருக்கும் அத்தனை பாடத்திட்டங்களையும் புரட்சித் தலைவரே கொண்டுவந்தார்.

தமிழ்நாட்டு மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர் அவர்களே ...

இன்றைக்கு மாணவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ...

அதற்கு காரணம், நம் புரட்சித் தலைவரே புரட்சித் தலைவரே....

இதை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

என்கிற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வாழ்க புரட்சித் தலைவர்.!!
வாழ்க பொன்மனச்செம்மல் ..!!
வாழ்க மக்கள் திலகம் ...!!!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் புரட்சித் தலைவா வாழ்க வாழ்க வாழ்கவே ....

( 2. ).

������������������������������... Thanks...

orodizli
30th April 2020, 09:15 AM
"நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"
நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கை பயணம்..! (அத்தியாயம் : 1)

சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.

கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.

அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.

குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.

உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.

அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

(தொடரும்)
Posted : M.G.Nagarajan
30 April 2020 1:07 AM
Thanks for _ Published : Naveenan
20:17 in
"வண்ணத்திரை"
யாழ் இணையம்........... Thanks...

orodizli
30th April 2020, 09:17 AM
தந்தை இறந்த பிறகு தாய் சத்தியமா அனுபவித்த சொல்லொண்ணா துயரத்தின் வெளிப்பாடு தலைவரை ஏழைகளின் பால் ஈர்ப்பதற்கும்,ஈகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.நாகராஜன் சார் அரிய கிடைக்காத அருமையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி........ Thanks...

orodizli
30th April 2020, 09:17 AM
M Soundararajan கொடுமையிலும் கொடியது, இளமையில் வறுமை. நீதி மொழிகளில் நாம் படித்திருக்கிறோம். அதை எம்ஜி.ஆர் அவர்கள் சிறுவயதில் அனுபவித்ததினால்; தான் பட்ட கஷ்டங்கள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தனக்கு வருகின்ற வருமானம் அனைத்தையும் வாரி வழங்கி உதவி செய்தார். அதனால்தான், சுவாமிகள் கிருபானந்த வாரியார் அவர்கள் பொன்மனச்செம்மல் என்று அழைத்தார். மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்று இறையானார்....... Thanks...

orodizli
30th April 2020, 09:18 AM
காலம் தன் கடமையை செவ்வனே செய்யும் என்பதற்கு இந்த பதிவும் ஒரு எடுத்துக்காட்டு.அதனால் தான் தெய்வதாய் சத்யபாமா அவர்களை வேலைக்காரி அவமானம் செய்ய கொதித்தெழுந்த அம்மா தமிழகம் படையெடுக்க நமக்கு இதய தெய்வம் புரட்சி தலைவர் கிடைத்தது.......... Thanks...

orodizli
30th April 2020, 09:19 AM
திரு. N.G.Nagarajan, அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள். நான் ஒரு போலீஸ் ஆபிசர். எனக்கும் தெரியாத விஷயங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன. நான் தலைவரையே காற்றாக சுவாசிப்பவன்.. நன்றி.
எனக்கு இரண்டு விஷயங்கள் புரியவில்லை. நாம் தலைவரிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. உயிரை வைத்திருக்கிறோம். ஆனால் சிலர் எம்.ஜி.ஆர் பணத்தை சாப்பிட்டவர்கள் வேறு கட்சியில் சேர்ந்து வாழ்க என்று சொல்கிறார்கள். இரக்கம் இல்லாதவர்கள். அவர்கள் உடலில் ரத்தம் ஓடுகிறார்..தெரியவில்லை..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய......... Thanks...

orodizli
30th April 2020, 09:20 AM
Radhakrishnan P ஆம் நண்பரே �� என்ன செய்வது. நாம் தலைவரின் மேல் உள்ள பாசத்தால் அவர் நம்மிடத்தில் வைத்துப்போன அன்பின் வட்டத்துக்கு உள்ளாகவே இருக்கிறோம். அவர்கள் பணத்தின்மேல் குறிக்கோளாகக் இருப்பவர்கள். பணம் பதவி வருகின்ற பக்கம் எல்லாம் போவார்கள்...... Thanks...

orodizli
30th April 2020, 11:50 AM
#நண்பர்கள்_அனைவரும்
#இனிய_மதியவேளை_வணக்கம்

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.

கொஞ்சம் பெரிய படிப்புதான்.
எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.

1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !

யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?

#ஒரே_ஒருவர்_நினைவுதான்_அவனுக்கு #உடனே_வந்தது.

தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.

அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.

#மறுநாள்_பணத்தை_எதிர்பார்த்து #சென்ற_அந்த_மாணவன்_கையில்
#ஒரு_காகிதத்தை_கொடுத்தார்_அந்த #மனிதர்_புரியாமல்_அந்த_காகிதத்தை #புரட்டிப்_பார்த்தான்.
#அது_ஒரு_ரசீது_1000_ரூபாயை
#அந்த_கல்லூரியில்_தன்_பெயரிலேயே #செலுத்தி_அதற்கு_ரசீது_வாங்கி #வைத்திருந்தார்_அந்த_மனிதர்.

ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.

கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.

சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?

இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.

காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.

அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
கட கடவென்ற ஓசைக்குப் பின்...

#பணத்தை_கொடுப்பது_எல்லோரின் #கண்களுக்கும்_எந்திரமாக_தெரிகிறது.
#சம்பந்தப்பட்ட_இந்த_மனிதருக்கு
#மட்டும்_அது_எம்ஜிஆராக_தெரிகிறது.

ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.

#இதோ_நல்லதம்பி_அவர்களே
#சொல்லும்_அந்த_நன்றிக்_கதை..

"1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
அதை Laminate செய்து வைத்துள்ளேன்.

கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "
#கலைவாணர்_பல #கோடிகள்_சம்பாதித்தார்_ஆனால் #அதையெல்லம்_தர்மம்_செய்துவிட்டு #அழியாத_புகழை_விட்டு_சென்றுள்ளார்.
#எனவே_செல்வம்_அழிந்து_போகும்.
ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.

#படித்து_வேலை_செய்து_ஓய்வு
#பெற்றுவிட்டேன்_இன்றும்_ATM_சென்று #ஓய்வூதியம்_பெறும்போது_அரசாங்கம்
#கொடுப்பதாக_எனது_கண்களுக்கு
#தெரியவில்லை
#தலைவர்எனக்கு_கொடுப்பதாக #நன்றியோடு_நினைத்துக் #கொள்கிறேன்."

நன்றி நல்லதம்பி அவர்களே !

உங்கள்
நல்ல மனம் வாழ்க !
நன்றி மறவாத
அந்த தெய்வ குணம்
வாழ்க !

#நன்றி_மறவாத_நல்ல_மனம்_போதும்
#என்றும்_அதுவே_என்_மூலதனம்_ஆகும்
#எனப்_பாடிய_வரிகளுக்கும்
#அது_போல_வாழ்ந்து_காட்டிய
#மன்னாதி_மன்னன்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்_புகழ்...
#என்றென்றும்
#வாழ்க_வாழ்க... !

அண்ணன் நல்லதம்பி அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டு,
#மக்கள்திலகம் அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார்...

கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார் நம் #வள்ளல் அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

#நம்_இறைவன்_சொன்னார்_மாதா #மாதம்_செலவுக்கு_இங்கு_வந்து_பணம் #பெற்றுக்கொள்_என்கிறார்.

அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது #தலைவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் நல்லதம்பி யோசிக்க...
இவரை பார்த்த #பொன்மனச்செம்மல் #ஜானகி_அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். ஜானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks.........

orodizli
30th April 2020, 11:51 AM
தமிழகம் நலம் பெற #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் என்கிற பெயரை மூன்றெழுத்து மந்திரமாக சட்டமன்றத்திலும்.. மேடைகளிலும்.. உச்சரித்து மக்கள் திலகத்தின் மாண்பு சிறக்க பொன்மனச்செம்மலின் சாதனைகளை முன்மொழிந்து.. "புரட்சித் தலைவரின் அரசு" என்று என்று "மனதார ஏற்று"செயலாற்றும் எவருமே ...
எவரானாலும்.. புரட்சித் தலைவரின் பக்தராக இருந்தால்...
வெற்றிபெறுவது நிச்சயம்..
இனிவரப்போவது புரட்சித் தலைவரின் தீர்ப்பு.. மக்களின் மகிழ்ச்சி மட்டுமே எதிர்காலம் ..
அச்சம் தவிர்.. விழித்துக் கொண்டோரெல்லாம்..
பிழைத்துக் கொண்டார்..
உள்ளதைச் சோல்லி நல்லதைச் செய்து..வருவது வரட்டும் என்றிருப்போம்..
வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்.இனிய வணக்கம் அன்புள்ளங்களே......... Thanks Mrs.Hanna George Medam...

orodizli
30th April 2020, 11:54 AM
1984-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல்... 👑👑👑

👑 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்கா ப்ரூக்ளின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்... 😭😭😭

⭐ அதனால், அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான இராம.வீரப்பன் திட்டமிட்டு நடத்தினார்...💐🌸🌺

☀ அப்போது, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தில், எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை என்று கடும் சொற்களால் வறுத்தெடுத்த வண்ணம் நாக்கில் நரம்பில்லாமல் போசினர்...😡😡😡

♥ மிக நேர்த்தியாக #இராம_வீரப்பன் அவர்கள், தலைவர் சிகிச்சை பெற்று உடல்நலத்துடன் இருக்கும் வீடியோவைத் தயாரித்து ஒளி பரப்பினார்... 💗💗💗

💚 அதிமுக பிரச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாக அமைந்தது தான் இந்த வீடியோ...
⬇⬇⬇⬇⬇⬇....... Thanks...

orodizli
30th April 2020, 11:55 AM
������ வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤����

திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇

➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?
நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... ��������

���� நான் ஒரு அரசியல்வாதி...❗����

☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... ������

❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗

������ என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... ������

������ ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... ��������

������ ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... ������

✨⭐�� தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡...... Thanks...

orodizli
30th April 2020, 11:56 AM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...

ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.

அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .

"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.

1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.

அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.

திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!...... Thanks...

orodizli
30th April 2020, 11:59 AM
😊🌹என் அன்பு நெஞ்சங்களே..🌹😊

🔥மனிதன் என்பவன் வெளிச்சம் தரும்
தீபமாவதும்..
ஊரைக் கொழுத்தும்
தீயாவதும்..
அவனிடம் உள்ள பகுத்தறிவு
தன்மையால் தான்..🔥
🔥புரட்சி என்னும் தீ எதன்
அடிப்படையில் அமைகிறதோ..
அதனை பொருத்தே அதன்
பின்விளைவுகள் அமையும்..🔥
🔥ஒவ்வொரு நாட்டிற்கும்
ஒவ்வொரு பண்பாடு..
ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொரு சட்டதிட்ட முறைகள்..
ஆராய்ந்து பார் ஏதும்
பயனில்லை - காரணம்
தனிமனிதனின் மனசாட்சி
விழிப்படையாமல் இருப்பது தான்..🔥
🔥அகிலத்தில் விதிமுறைகள் பல
அகம் ஏற்பதை மட்டும்
அறிந்து ஆனந்தமாய் செய்க..🔥
🔥நெஞ்சில் துணிவு கொண்டு
நேர் வழியில் செல்..
🔥பாகுபாடு ஒழித்து
பகுத்தறிவுடன் பயன்படு..
🔥ஏற்றமிகு எண்ணங்களை
எல்லுலகும் எடுத்துரை..
🔥அள்ளக்குறையாத அன்பை ,
ஞான ஊற்றாய் பெருக்கெடு..
🔥அச்சம் அவசியமற்றது
தன்மானத்துடன் இரு..
🔥வலுவாக்கி கொள் உடலுடன் , மனதையும் .,
எந்த நோயும் எட்டியும் பார்க்காது..!!
😍🔥நம் ஞானத்தால் நம் வாழ்வும்
சுடர் ஒளியாய் மிளிரட்டும்..🔥😍
😍🔥🙏நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் பொன்னார் மேனியன் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் துணை இருக்கிறார்..!!🙏🔥😍

😍🌹என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்..!!🌹??

😊🔥👍என்றும் நம் #புரட்சித்தலைவர் புகழ் ஓங்கும்..!!!👍🔥😊........ Thanks...

orodizli
30th April 2020, 12:03 PM
மே 1 தொழிலாளர் தினம்! உழைக்கும் தோழர்களே! ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள், மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று பாருங்கள் என்று புரட்சி தலைவர் பாடியது போல,
தனது பெரும்பாலான படங்களில் தொழிலாளராக நடித்ததுடன் அவர்களின் சிறப்பான வாழ்வுக்கு பல நல்ல கருத்துக்களை சொன்னதோடு நில்லாமல் அவர்களுக்கு அநேக உதவிகளை செய்தவர் மக்கள் திலகம்.
ரிக்ஷாக்கார்களுக்கு மழை கோட்டு வழங்கினார். அவர்களுக்கு தேவைப்படும் போது பல உதவிகளை செய்ய தயங்கியதில்லை.

அதனால்தான் அவர் "ஏழைப்பங்காளன்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இன்றைய நாளில் புரட்சி தலைவரை அன்போடு நினைவு கூர்ந்து மே தினத்தை வரவேற்போம். இதே மே நாளில்தான் தலைவரின்"அடிமைப்பெண்" வெளியானது என்பதை நினைவில் கொள்வோம். உழைக்கும் தொழிலாளர்களுக்கு தொடர் இடர் தந்த கொரானாவை விரட்டி மீண்டும் சுறுசுறுப்பாக பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டுவோம்......... Thanks...

orodizli
30th April 2020, 12:09 PM
"ராம்சந்தருக்கு பால் கொண்டுவா டா..! எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்',"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 2

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.

படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.

இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.

நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.

'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.

தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.


வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.

சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?

தொடரும்...
Posted M.G.Nagarajan
30 April 2020 8:01 AM
Published : Naveenan

விகடன்
யாழ் இணையம்......... Thanks...

orodizli
30th April 2020, 12:12 PM
1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்....... Thanks...

orodizli
30th April 2020, 01:24 PM
காங்கிரஸ் காமராஜ் ஆட்சிகாலம் பஞ்சம் பசி யில் மக்கள்
சிலகாலம் அண்ணாவின் சீர்திருத்த ஆட்சி
பின் கருணாநிதி ஊழல் ஆட்சி

பலகாலம் எம்ஜிஆர் பொற்கால ஆட்சி
கல்வியில் முதலிடம்
தன்னிறைவு திட்டம் கிராமவளர்ச்சி முதலிடம்
கிருஷ்ணா நதி சத்துணவு என தமிழகம் கண்ட நன்மைகள் பல

வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks...

orodizli
30th April 2020, 01:35 PM
One Single Man Army ruled over 60 years in the hearts of people especially from the day he joined in DMK (1951). Though Anna is a great leader but needed extra support from the popular personality from MGR, well known for helping tendency from olden days and his face, campaign speech brought in DMK into power slow growth from 1957, 1962 and finally in 1967 (mainly because of MGR - indirect power) even Annadurai accepted his popularity when and how DMK came to power because & more of his bullet shooted photo) and then in 1971 (Karu became because of MGR campaign and even he accepted how he became CM with full support from MGR) and then MGR direct power from 1977 onwards and still in 2021........ Thanks.........

oygateedat
30th April 2020, 02:16 PM
MGR, dominated like no other, the films and politics of India's Tamil Nadu state. A charismatic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of fans and tamils all over the world became Tamil Nadu's chief minister. ..more than 10 years continiously...



There probably will never be a man that held the entire state of Tamil Nadu under his control like Puratchi Thalaivar M.G.R did. His films introduced the genre of entertainment into the Tamil Industry and thousands to millions flocked to see the man who had an naturally spell-binding aura on screen. From his dialogue delivery to his solo singing moments, he was an enigma at capturing hearts. The words devotees and fansclub were birthed for him. The unrivalled craze to see the man didn't stop inside his state. His popularity outside his home, grew larger than one could ever dream of ever. And he soon became a force that could not be touched. But his magic didn't stop in cinema. After his departure from the film world, his stint in Politics as the Chief Minister of Tamil Nadu will forever be the imprinted as the backbone of Tamil politics forever. It is fair to say that M.G.R had his fair share of negative influences, but the huge positive impact he had on society will always leave a mark on Tamil Nadu forever.



43 years ...and so on MGR RULING THE TAMIL FILM.

Even after his retirment from cinefield 1977 till today 2020 most of his movies running with packed houses in entire south india with box office .No other actor in the world have charisma l

Audience: Almost all commercial cinema lovers were fans of his films.

Thanks to Mr Vinod - Bangalore

orodizli
30th April 2020, 02:37 PM
"எம்.ஜி.ஆர் குருவிடம் அறை வாங்கியது ஏன்...?"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் : 3

அந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.

பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம் இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு. அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை.

சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.

நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம்.

ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல் ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம்.

முதல்நாள் நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார். எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?

“முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! ” என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர் எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.

அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில் புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது.

அப்போது பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?

தொடரும் ...
Posted : M.G.Nagarajan
30 April 2020 12:34 PM
Thanks for: Published : Naveenan

Vikatan News
யாழ் இணையம்........ Thanks...

orodizli
30th April 2020, 02:42 PM
[1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்]....... Thanks...

orodizli
30th April 2020, 02:43 PM
தலைவா உமக்காக திரைப்படம் பார்க்க பழகினோம் , ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தை இறுதி வரை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலே , இறுதியிலும் உள்ள சொத்துக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அள்ளி இறைத்த இறைவா , நீர் கூட எவரையும் , எம்மதத்தையும் இழிவு படுத்தியதில்லை , உமது கலைத்துறையை பயன்படுத்தி உமது தமிழக மக்களால் வளர்ந்த சில கழிசடை நாய்கள் இன்று நெறிமுறையின்றி வாழ்வதும் அறிவுரை கூறுவதும் எம்மால் சகிக்க முடியவில்லை இறைவா............. Thanks...

orodizli
30th April 2020, 02:47 PM
உங்கள்(MGR) குணம் இவர்களுக்குயில்லை...
ஆனால் உங்களைப்போல் நாடாளும் ஆசை ...எல்லா கூத்தாடிகளுக்கும் உள்ளது... அதை என்னவென்று சொல்வது?!..... Thanks...

orodizli
30th April 2020, 02:54 PM
�� வெளிச்சப்பாடு
மருதூர்,. பாலக்காட்டை ஒட்டி கேரள எல்லையில் உள்ள அழகான கிராமம். பசுமை மஞ்சம் விரித்த நிலப்பரப்பு,
அதில் ஓர் அம்மன் ஆலயம், அதன் விழாவுக்காக வெளிச்சப் பாடு நடக்கவிருக்கிறது. வெளிச்சப்பாடு என்றால் நம் நாட்டில், தன்னைத்தானே பிழைப்புக்காக சாட்டையால் அடித்துக் கொள்வதை போல தன்னைத்தானே கத்தியால் வெட்டிக் கொள்வது.
இதற்குரிய பக்தரை மஞ்சள் உடை கட்டி மேளதாளம் முழங்க அழைக்க வருகிறார்கள்.
அம்மன் முன் நிற்கிறார். ஆக்ரோஷமாக பால கண்ணனோ குமரகுரு முருகனோ என வியக்கும் அளவுக்கு சிறுவன் ஒரு ஐந்து வயது சிறுவன் கம்பீரமாக நடந்து அம்மன் முன் போகிறான்.
அவனைவிட உயரமான வாள் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பால் மனம் மாறாத சிறுவன் தனது பிஞ்சு கரங்களினால் தூக்கி வருகிறான். அந்த கொடுமையான தோற்றமுள்ள பக்தரிடம் நீட்டுகிறான். அவர் வாங்கி தன் கண்களில் ஒற்றி அதனால் தன் மேனியை காயப்படுத்தி அந்த ரத்தத்தை எடுத்து சிறுவன் நெற்றியில் வைத்து ஆசி கூறுகிறார்.
சிறுவனும் வணங்குகிறான், மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்,


கண்ணுக்கினிய அந்த சிறுவன் யார் தெரியுமா????
பிற்காலத்தில் கோடான கோடி மக்களின் அரவணைப்பை யும் ஆரவாரத்தையும், ஆசிகளையும் பெற்ற நம் நெஞ்சுக்கு இனிய நாயகர் எம்ஜிஆர் அவர்கள்தான்,
இலங்கையில் தந்தையை பரிகொடுத்து தாய் நாடு திரும்பி மாமனின் சூழ்ச்சிக்கு ஆளாகி வறுமையின் பிடியில் அன்புத் தாயின் மடியில் இருந்த போது அந்தக் குடும்பத்தின் பெருமையே இந்த ஆலயத்துக்கு கத்தி கொடுக்கும் உரிமையில் தான் இருந்தது
அப்படி அம்மன் கத்தி கொடுத்து வளர்ந்ததால் கத்தி பிடித்து வாழ்ந்தார்
கத்தியை சுழற்றி நடித்தார் கத்தி வேந்தர் ஆனார், கத்தி பிடித்து வாழ்ந்தார்
கத்தி பிடித்து நடித்தார்
வேடத்தில் மட்டுமல்ல,,, வாழ்விலும் மன்னராகி மன்னராக திகழ்ந்தார் நமது எம்.ஜி.ஆர்.......... Thanks...

orodizli
30th April 2020, 03:11 PM
ஸ்ரீ MGR வாழ்க

சித்திரை 17 வியாழன்

எம்ஜிஆர் பக்தர்களே

நமது வள்ளல் எம்ஜிஆர் அவர்கள்

,தனிமனிதனாக சினிமா உலகில் சம்பாதித்த பணத்தை

நாட்டு மக்களுக்கு எப்படியெல்லாம் கொடுத்து உதவி இருக்கிறார்

++++++++++++++++++++++++++++++++++

எம்ஜிஆர் அவர்கள் வறுமையோடு இருந்த காலகட்டத்திலும்

தன் அண்ணன் எம் ஜி சக்கரபாணி அவர்களுடைய குடும்பத்தையும் கூட்டுக்குடும்பமாக இருந்து வழி நடத்தினார்

எம்ஜிஆர் அவர்களுக்கு நிரந்தரமான வருமானம் வந்த பிறகு

அண்ணன் சக்கரபாணி குடும்பத்திற்கும் அவருடைய மகன்களுக்கும் நல்ல தொழிலை அமைத்துக் கொடுத்தார்

அவருடைய குழந்தைகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார்

அவர்களுடைய குடும்பம் கஷ்டமில்லாமல் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

எம்ஜிஆரின் இறந்துபோன முதல் மனைவியின் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்து அவர்களை முன்னேற்றம் செய்துள்ளார்

எம்ஜிஆரின் இறந்துபோன இரண்டாவது மனைவியின் குடும்பத்தினருக்கும் பண உதவி செய்து அவர்கள் குடும்பத்தை கஷ்டம் இல்லாமல் வாழ வைத்தார்

அடுத்து ஜானகி அம்மையாரின் அண்ணன் தம்பி குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்தார்

+++++++++++++++++++++++++++++++++

அடுத்து ராமாவரம் தோட்டத்தில் வேலைபார்த்த

சமையல்காரர்கள்

தோட்டத் தொழிலாளர்கள்

ஆடு மாடு மேய்த்த தொழிலாளர்கள்

எம்ஜிஆரின் பாதுகாப்பாளர்கள்

ஆகியோர் களுடைய வீட்டில் நடைபெறுகின்றன

அத்துனை நல்ல நிகழ்ச்சிகளுக்கும் பண உதவி செய்துள்ளார்

//////////?//////?/////////////?////////////?/?/.?

1949 ல் திமுக ஆரம்பிக்கப்பட்டது

1952 ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் சேருகிறார்

1972 ஆண்டு எம்ஜிஆர் அவர்களை கருணாநிதி அவர்கள் திமுகவில் இருந்து நீக்கினார்

இந்த 20 ஆண்டுகளில் திமுக சந்தித்த தேர்தல்கள்

1952 திமுக சந்தித்த முதல் சட்டசபை தேர்தல்

1957. திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்

1962 திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்

1967ஆம் ஆண்டு திமுக சந்தித்த சட்டசபைத் தேர்தல்

1971ஆம் ஆண்டு திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்

இத்தனை தேர்தலிலும் எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்

பல இடங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் எம்ஜிஆர் சென்று திமுக வேட்பாளர் களுக்காக பிரச்சாரம் செய்தார்

இப்படி எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் திமுக வேட்பாளர் களுக்காக பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது

எம்ஜிஆருக்கு ஆரத்தி எடுக்கின்ற மக்களுக்கு

எம்ஜிஆர் தன் சொந்தப் பணத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார்

பல இடங்களில் வேட்பாளர் தனக்கு பணம் பத்தவில்லை என்று எம்ஜிஆரிடம் கேட்டு வாங்கி தேர்தல் செலவு செய்கிறார்கள்

மாநகராட்சி தேர்தல்களிலும் நகராட்சித் தேர்தலுக்கும் எம்ஜிஆர் பிரச்சாரத்திற்கு சென்றார்

அப்பொழுதும் எம்ஜிஆர் தன் கை பணத்தை தான் மக்களுக்கு கொடுத்தார்

இப்படி எல்லாம் எம்ஜிஆர் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னுடைய பணத்தை செலவழித்தார்

அந்தக் காலத்தில் திமுக நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள்

தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரிடம் சென்று கொடுப்பார்கள்

அவர்களுக்கும் பண உதவி செய்தவர் எம்ஜிஆர்

இப்படியெல்லாம் பாடுபட்டு தன்னுடைய பணத்தை திமுகவிற்கு செலவழித்த எம்ஜிஆர் அவர்கள்

திமுகவை கைப்பற்ற முயற்சி செய்யவில்லை

கருணாநிதி அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டு தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எம்ஜிஆர் துரோகம் செய்யவில்லை

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை கொல்லைப்புற வழியாக எம்ஜிஆர் சந்தித்து

கருணாநிதி அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்குவதற்கு எம்ஜிஆர் முயற்சி செய்யவில்லை

+++++++++++++++++++++++++++++++++(

எம்ஜிஆர் புகழ் பெறத் தொடங்கிய பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் எம்ஜிஆர் மன்றம் உருவாகியது

தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு திருமணம் காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு எம்ஜிஆரிடம் பத்திரிக்கை கொண்டுபோய் கொடுப்பார்கள்

அவர்களுக்கும் பண உதவி செய்தவர் எம்ஜிஆர்

++++++++++++++++++++++++++++++++++

எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கின்ற தொழிலாளர்களுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு எம்ஜிஆர் தன் பணத்தை கொடுத்து உதவி செய்தார்

எம்ஜிஆர் நாடக மன்றத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் குடும்ப கஷ்டத்திற்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்தார்

சென்னையில் உள்ள அனைத்து சினிமா ஸ்டூடியோக்களில் எம்ஜிஆர் நடிப்பார்

அந்த ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலை பார்க்கின்றார் தொழிலாளி அனைவருக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்வார்

எம்ஜிஆர் படத்திற்கு கதை வசனம் எழுதுகிற அவர்களுக்கும்

எம்ஜிஆர் படத்திற்கு பாடல்
எழுதுகிற வர்களுக்கும்

எம்ஜிஆர் படத்தில் பணிபுரிந்த உதவி கேமராமேன் உதவி டைரக்டர்கள்

எம்ஜிஆர் படங்களுக்கு செட்டிங்ஸ் அமைக்கிற தொழிலாளிகளுக்கும்

அவர்கள் வீட்டில் நடக்கின்ற விசேஷங்களுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

அடுத்து எம்ஜிஆர் சினிமாவில் கை நிறைய சம்பாதித்த அக்காலத்தில் இருந்து எம்ஜிஆர் மரணமடையும் வரை

தமிழ் நாட்டில் நடக்கின்ற தீவிபத்து வெள்ளம்

பஸ் விபத்து ரயில் விபத்து
இதைப்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனை வருகின்ற காலகட்டத்தில் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தன் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

அடுத்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார்

அண்ணா திமுகவை ஆரம்பித்து அந்த கட்சி ஆட்சிக்கு வரும்வரை

அண்ணா திமுகவில் உள்ள கட்சித் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் எம்ஜிஆர் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

இதைத்தவிர இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்பட்ட போரின்போது நிதி கொடுத்துள்ளார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தபோது நிதி கொடுத்துள்ளார்

இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த வறட்சி நிவாரண நிதி வெள்ள நிவாரண நிதி

இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு எம்ஜிஆர் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

,அடுத்து எம்ஜிஆர் அவர்கள் சினிமா உலகில் புகழ் பெறத் தொடங்கிய காலத்திலிருந்து

அவர் மரணம் அடையும் வரை

தமிழ்நாட்டில்இருந்து வெளி வருகின்ற அனைத்து தினசரி பத்திரிக்கைகள் வாரப் பத்திரிக்கைகள் மாதப் பத்திரிகைகள் பணிபுரிகின்ற தொழிலாளி கள்வீட்டில் நடைபெறுகிற அனைத்து விசேஷங்களுக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்துள்ளார்

தமிழ்நாட்டில் இருந்து வெளி வருகிறான் அனைத்து சினிமா பத்திரிக்கையில்

பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு

அவர்கள் பத்திரிக்கை கொடுக்கும் போது அவர்களுக்கும் பண உதவி செய்துள்ளார்

++++++++++++++++++++++++++++++++++

எம்ஜிஆர் என்ற ஒரு மனிதன் சம்பாதித்த பணத்தை

இத்தனை வகையில்

நல்ல காரியங்களுக்காக எம்ஜிஆர் தர்மம் செய்து உள்ளார்

எம்ஜிஆர் செய்த தர்மம்தான்

எம் ஜி ஆருக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருந்தது

எம்ஜிஆரின் எதிரிகள் தோல்விமேல்தோல்வி அடைவார்கள்

எம்ஜிஆர் அவர்களுக்காக எம்ஜிஆரின் குடும்ப. ஜோதிடர் வித்வான் லட்சுமணன் அவர்கள்

நான் ஆணையிட்டால் என்ற சினிமா படத்தில் ஒரு பாடல் எழுதினார்

+++++++++++++++++++++++++++++++++

ஆலமரம் போல நீ வாழ

அங்கு ஆயிரம் கிளிகள் இளைப்பாற

காலமகள் உன்னைத் தாலாட்ட

அந்தக் கருணையை நாங்கள் பாராட்ட

++++++++++++++++++++++++++++++++++

இந்தப் பாடல் எவ்வளவு பொருத்தமான பாடல்

இப்படி எல்லாம் எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான்

ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது

இப்படி எல்லாம் எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான் இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது

அண்ணா திமுகவிற்கு சினிமாமார்க்கெட் இழந்த கழுதைகள் வந்து மாலை மரியாதை பெற்றுக்கொள்கிறார்கள்

பிறகு எம்ஜிஆருக்கு துரோகம் செய்கிறார்கள்

ஆனால் அந்தக் கழுதைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது

இந்த மாதிரி எம்ஜிஆர் தர்மம் செய்ததை போல் அந்த கழுதைகள் யாருக்காவது தர்மம் செய்து இருக்கிறார்களா

எந்த நடிகராவது எந்த நடிகையாவது எம்ஜிஆரை போல் சினிமா உலகில் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி இருந்தால் உடனடியாக அவருடைய ரசிகர்கள் அதைஒரு பதிவாக வெளியிடவும்

எம்ஜிஆருக்கு துரோகம் செய்த

தெருப்பொறுக்கி கழுதை கள்

ஊழல் வழக்கில் விசாரணை கமிஷனில் சிக்கி சீரழிந்து

நல்ல சாவு சாக மாட்டார்கள் ....... Thanks PM.,

orodizli
30th April 2020, 05:40 PM
[MGR முதல்வரான பின் பாராளுமன்ற தேர்தல் க.இராசாராம் , எனது தந்தை OKR
மற்றும் நிர்வாகிகள் கள்ளகுறிச்சி சென்று
வரவேற்று சேலம் அழைத்து வருகின்றனர்.
ஏற்கனவேபெத்தநாயக்கன் பாளைய-கழக பிரமுகர் MGR இங்கு பேசவேண்டும் என அடம்பிடித்தார்.

கழக நிர்வாகிகள் பொது கூட்டம் அதிகம் உள்ளது நேரமில்லை என விளக்கி சமாதனபடுத்தினர். MGR கார் பெத்தநாயக்கன் பாளையம் வரும்
போது கழக பிரமுகர் திடிரென ரோட்டில் பாய்ந்து கையசைக்க ஒரு நொடி பொழுதில்
எல்லா கார்களும் பிரேக் பிடித்து நிறுத்தினர்.
இதை யாருமே எதிர்பார்கவில்லை.

அதிகாரிகள் ஓடி சென்று முதல்வரிடம் சென்று நடந்ததை கூறினர். MGR காரைவிட்டு வெளியே வந்து மக்களை நோக்கி கையசைத்துவிட்டு காரில் அமர்ந்தவர், குறுக்கே வந்த பிரமுகரை ஜுப்பில் ஏற்றி வாருங்கள் உத்தரவிட்டார்.
சிறிது தூரம் வந்தவுடன் எல்லா காரையும்
நிறுத்த சொல்லிவிட்டு குறுக்கே வந்தவரை அழைத்துவர சொன்னார்.

இதுவரை அடக்கிவைத்த கடுங் கோபத்துடன் திடிரென குறுக்கே வந்தாயே பிரேக் அடிக்கவில்லை எனில் உன் உயிருக்கு அல்லவா ஆபத்தாயிருக்கும் என கோபத்தோடு நாளு அறைவிட்டு போ என
என்று கூறிவிட்டு சட்டென காரில் அமந்து புறப்பட்டார்.சேலம் வந்தவுடன் வந்தவர் நிர்வாகிகளை அழைத்து தான் அடித்தவரை பற்றி விசாரித்தார்.

அவர்கள் தலைவரே அவன் உங்கள் தீவிர ரசிகன் அ.தி.மு.க ஆரம்பித்தவுடன் அப்
பகுதி பொது மக்களையும் நம் கட்சியில்
சேர்த்துள்ளான்.ஏதோ ஆர்வகோளாரால் ஏதோ செய்துவிட்டான் என்றனர்.
MGR - சரி நான் பேசி முடிப்பதற்குள்
விருந்தினர் மாளிகைக்கு அழைத்துவாருங்கள் என்றார்.

MGR அவர்கள் அறைக்கு வந்தவுடன்
அடிபட்டவர் அழைத்துவரப்பட்டார்.என்ன ஆகபோகிறதோ என அவரும், மற்றவர்களும்
பயந்து நிற்க,்MGR ரோ அவரை கண்டவுடன் இழுத்து அனைத்து வாஞ்சையுடன் கன்னத்தை தடவி கொடுத்து வலிக்குதாப்பா என கேட்டதுதான் தாமதம்.

அவர் தேம்பி , தேம்பி அழுதபடி தலைவரின்
கையைபிடித்து அவர்கன்னத்திலேயே அறைந்து கொண்டு தவறு செய்த என்னை அடி தலைவா உனக்கு தான் உரிமை உள்ளது என்றார்.

MGR கண் கலங்கி உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் எனக்கு எவ்வளவு மனக்கஷ்டம் என கூறி அவரை அணைத்து
ஆறுதல் சொல்லி ஊருக்கு அனுப்பிவைத்தார். ஒரு தொண்டனின் உயிருக்கு ஆபத்து எனும் போது அடித்த கரமும் அவன் உணர்வுக்கு ஆறுதலாக நினைத்து அனைத்த கரங்களும்
என் புரட்சி வாத்தியார் கரங்களே!!!]......... Thanks...

orodizli
30th April 2020, 05:46 PM
"கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 4

பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது.

அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.

முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும் விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார்.


உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர்.

எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.

பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?

வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று.

“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!

'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைபடத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். பெற்ற மகத்தான (முதலிடம்) வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர்.

பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.

ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து அவரது காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.

தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.

ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.

இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன.

ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள்.

இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.

விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.

"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.

அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."

காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.

மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர்.

கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம் கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...

தொடரும் ...

Posted : M.G.Nagarajan
30 April 2020 3:42 PM
Thanks for :
Published : Naveenan

Vikatan News
யாழ் இணையம்........ Thanks...

orodizli
30th April 2020, 05:52 PM
#தலைவரின்_இதயக்கனி...
[ 22 - 08 - 1975 ]

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்...

காலத்தால் அழிக்க முடியாத பாடல்...

இதயதெய்வம் புரட்சித்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்ப்பதில் என்றென்றும் மிஞ்சி நிற்கும் பாடல்...

சென்னை சத்யம் தியேட்டர் முதல்...
நாகர்கோவில் பயோனியர் முத்து தியேட்டர் வரை திரையிட்ட திரையரங்கம் முழுவதும் திருவிழா கோலம்தான்...

தலைவரின் அறிமுகக் காட்சி பேரறிஞர் அண்ணாவின் இதயத்திலிருந்து தலைவர் தோன்றுவது போல் இருக்கும்.

இதற்காகவே தலைவர் பக்தர்கள் வெள்ளித்திரையில் தலைவர் தோன்றும்போது ரோஜா மலர்களையும் கற்பூரம் மெழுகுவர்த்தி ஏந்தியும் வரவேற்பார்கள்.

உணர்ச்சிமிக்க தலைவர் தொண்டர்களின் ஆரவாரத்தை தியேட்டர் அதிபர்கள் கட்டுப்படுத்த படாத பாடு பட்டு விடுவார்கள்.

இப்பாடலில் வரும் ஆரம்ப தொகையறா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலாகும்...

இதன் ஒளிப்பதிவு தலைக்காவிரி தொடங்கி பிலிகுண்டு, ஒக்கேனக்கல், மேட்டூர், குளித்தலை, முக்கொம்பு, கொள்ளிடம், திருச்சி கல்லணை, தஞ்சாவூர் என்று காவிரி ஆறு கடைசியாக கலக்கும் இடம் வரை சென்றுள்ளது...

தலைவரின் சத்யா தோட்டத் தொழிலாளர்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தலைவரின் புகழுக்கு மேலும் மேலும் மகுடம் சேர்ப்பது போல் ஜொலிக்கிறது.

எங்கள் நாகர்கோவிலில் பயோனியர் முத்து திரையரங்கில் இதயக்கனி ரிலீசான அன்று அனைவருக்கும் ஆப்பிள் பழம் மாவட்ட தலைமை மன்றத்தால் வழங்கப்பட்டது பசுமையான நினைவுகள்...

ஒரு சுவாரஸ்யமான தகவல்...

படம் வெளியான மாதம் ஆவணி மாதம் என்பதால் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்...

ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நாகர்கோவில் நகரத்திற்கு வரும் குடும்பத்தினர் மதியம், மாலைக் காட்சிகளில் மூன்று வாரமும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி சென்றவர்கள் கடைசியில் இரவு 10.30 மணிக்காட்சி பார்த்து பஸ் கிடைக்காமல் விடிந்த பிறகு ஊர் திரும்பி வந்த மறக்க முடியாத நிகழ்வுகள் ஏராளம்...

நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகேதான் பயோனியர் முத்து திரையரங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்...
நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற பாடலை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

தலைவர் நம் அருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு விடுகிறது...

45 ஆண்டுகள் கடந்தாலும் இன்று ரிலீசானது போன்ற தோற்றம்...

💐 வளர்க புரட்சித்தலைவர் புகழ் 💐

#இதயதெய்வம்........ Thanks...

orodizli
30th April 2020, 06:05 PM
காசே கடவுள்!!
---------------------------
எம்.ஜி.ஆர் பற்றிய இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!
நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?
டைப்பிஸ்ட் கோபு!!
அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!
அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!
சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!
1978!!
வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-
அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??
அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?
இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??
ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?
வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--
நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--
என்ன பண்ணறது கோபு? விதி வலியது??
இதில் சிவாஜி மட்டும்--
நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??
ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --
உதவி??--ம்ஹூம்!!
எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!
தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!
குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--
வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!
டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-
ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??
நான் பாத்துக்கறேன்??
வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?
மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?
அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?
மறு நாள் காலை ஆபரேஷன்?--
மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?
கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?
எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு மாயாஜாலம் காத்திருக்கிறது?
ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--
மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--
இதயத்துக்குப் பால் வார்க்கிறார் மருத்துவர்?
ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??
மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!
ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!
தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,
கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!
சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!
உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?
பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???
சரி!!
எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?
முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --
ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?
காசேதான் கடவுளடா??
உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--
மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--
ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!
தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!
அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!!
கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்
பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???...... Thanks..."அன்பே வா" படத்தில் கோபு ஒரு காட்சியில் வருவார்...

orodizli
30th April 2020, 06:07 PM
[எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.]......... Thanks...

oygateedat
30th April 2020, 07:21 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் , 7மணிநேர சாதனை உண்ணாவிரதம்...!!!
**********************************
(ஜூனியர் விகடன்: 16.2.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் முடிந்தது.


செய்தி :
"உழைக்கும் குரல்" தளம்
க.பழனி

நன்றி🙏

orodizli
30th April 2020, 09:00 PM
MGR, dominated like no other, the films and politics of India's Tamil Nadu state. A charismatic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of fans and tamils all over the world became Tamil Nadu's chief minister. ..more than 10 years continiously...



There probably will never be a man that held the entire state of Tamil Nadu under his control like Puratchi Thalaivar M.G.R did. His films introduced the genre of entertainment into the Tamil Industry and thousands to millions flocked to see the man who had an naturally spell-binding aura on screen. From his dialogue delivery to his solo singing moments, he was an enigma at capturing hearts. The words devotees and fansclub were birthed for him. The unrivalled craze to see the man didn't stop inside his state. His popularity outside his home, grew larger than one could ever dream of ever. And he soon became a force that could not be touched. But his magic didn't stop in cinema. After his departure from the film world, his stint in Politics as the Chief Minister of Tamil Nadu will forever be the imprinted as the backbone of Tamil politics forever. It is fair to say that M.G.R had his fair share of negative influences, but the huge positive impact he had on society will always leave a mark on Tamil Nadu forever.



43 years ...and so on MGR RULING THE TAMIL FILM.

Even after his retirment from cinefield 1977 till today 2020 most of his movies running with packed houses in entire south india with box office .No other actor in the world have charisma l

Audience: Almost all commercial cinema lovers were fans of his films.......... Thanks.........

orodizli
30th April 2020, 09:04 PM
தலைவருக்கும், ஆந்திர என்.டி.ராமாராவ் அவர்களுக்கும் உள்ள நல்ல நட்பு அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

ஒரு முறை சென்னைக்கு வந்த என்.டி.ஆர்...தலைவரை பார்க்க வந்த போது நம்மவர் படப்பிடிப்பில் இருக்க அங்கே வந்த என்.டி.ஆர்...முகத்தில் மூக்கில் சிவந்து காயம் போல தெரிய பதறி தலைவர் என்ன அது கேட்க.

போன வாரம் ஷெட்டி என்ற ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் உடன் படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியின் போது அவர் மூக்கில் குத்தி விட்டார்.

மூக்கு உடைந்து சரியான காயம்...அடி பட்டது கூட பரவாயில்லை அண்ணே அவர் அதன் சண்டை காட்சிகளில் இது எல்லாம் சகஜம் என்று அசால்டா சொல்லி விட்டார் என்று வருந்த.

கொஞ்ச நாட்கள் கழித்து ஷோலே, தீவார் போன்ற பல இந்தி படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர் ஷெட்டி தலைவருடன் நடிக்க ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களில் புக் செய்ய பட்டார்.

தலைவருக்கு என்.டி.ஆர் அனுபவம் நினைவுக்கு வர ஷெட்டியின் உடல் பயிற்சி விவரங்கள் சேகரித்து அவர் 350 கிலோ வரை வெயிட் எடுப்பார் என்பதை தெரிந்து கொண்டு.

தலைவரும் ஒரு வாரம் 350 தாண்டி 375 கிலோ வரை எடைகள் தூக்கி தன்னை தயார் செய்து கொண்டார். ஊருக்கு உழைப்பவன் படத்துக்கு அப்புறம் வந்த நவரத்தினம் படத்தில் ஹிந்தி நடிகை ஜரீனா வகாப் அவர்களுடன் ஒரு பாடல் காட்சி முடிந்து வரும் சண்டை காட்சியில் ஒரு கையில் ஈட்டி மறு கையில் கேடயம் கொண்டு ஷெட்டி சண்டை காட்சியில் தலைவர் லாவகம் ஆக நகர்ந்து தன் வலது கை கொண்டு ஷெட்டி மூக்கில் ஒரு குத்து விட அவர் மூக்குவுடைந்து ரத்தம் சிந்த ஆரம்பித்தது.

படத்தில் அந்த சண்டை காட்சி அரை குறையாக போய்விடும்...நீக்கள் அடுத்த முறை படம் பார்த்தால் சரி பார்த்து கொள்ளவும்.

உடனே தலைவர் அடடா சண்டை காட்சிகளில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லி அவர் மூக்கை துடைத்து மருத்துவ செலவுகளை அவரே ஏற்று கொண்டு.

அதன் பின் இருநாட்கள் கழித்து ஷெட்டியை தன் வீட்டுக்கு கூட்டி கொண்டு போய் விருந்து கொடுத்து தன் உடற்பயிற்சி கூடத்தை சுற்றி காட்டி ஏராளமான பரிசு பொருட்களையும் ஒரு கவரில் ஒரு பெரிய தொகையை கொடுத்து.

மும்பை விமானத்துக்கு அவரை ஒரு ஆள் அனுப்பி வழி அனுப்பி வைக்க...

தன் மூக்கை தடவி கொண்டே என்ன மனிதர் இவர் என்று யோசித்து கொண்டே விமானத்தில் பறந்தார் ஷெட்டி.

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.....

விரைவில் ....... தலைவர் காலத்தில் போடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தவை பற்றி......... Thanks.........

orodizli
30th April 2020, 09:07 PM
அன்பு நண்பர்களே....
வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்...!!!

தமிழ்நாட்டில்.! கல்வி அறிவு பெற்றவர்கள் உயர்வதற்கு காரணம் என்ன என்று ...

ஐ.நா. சபை ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்த தகவலை உலகத்திற்கு தெரிவித்தார்கள்.

அது யாதெனில் ....
தமிழ்நாட்டில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகமாக இருபதற்கு மிக முக்கிய காரணம்.

"#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்_அவர்கள்."

கொண்டுவந்த "#சத்துணவுத்_திட்டமே " முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது என்று... ஐ.நா.சபை கூறியது.

இந்த தகவலை நான் கூறவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளராக உள்ள, கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.. கூறினார்கள்.

இன்றும்.. CPM... மாநில செயலாளராக,
கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் உள்ளார்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வாழிய வாழிய வாழியவே....!!!
புரட்சித்தலைவர் நாமம் வாழியவே ...!!

������������������������������......... Thanks...

orodizli
30th April 2020, 09:08 PM
#தீய_சக்தியின் தூண்டுதலால் தாக்குதல்

1972-ம் ஆண்டில், பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காகச் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார். அவரைப் போலவே, பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், நாஞ்சிலாரைக் கண்டதும் பதட்டமடைந்தனர்.

”டேய் துரோகி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே நாஞ்சிலார் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்கள்; இதய நோயாளியான அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார்கள். அங்கிருந்து பதறி ஓடிய நாஞ்சிலார், விமான நிலைய நிர்வாகியின் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். அங்கிருந்து தொலைபேசியின் மூலம் புரட்சித்தலைவருடன் தொடர்புகொண்டு தம்மைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.

புரட்சித்தலைவர் மனோகரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ”கவலைப்படாதீர்கள், இன்னும் பத்தே நிமிடத்தில் நம் ஆட்கள் பறந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள்!” என்றும் கூறினார். புரட்சித்தலைவர் தொலைப்பேசியைக் கீழே வைத்துவிட்டு சத்யா ஸ்டுடியோ பத்மநாபனிடம் நாஞ்சில் மனோகரனின் நிலைமையைச் சொல்லி, ”உடனே தேவையான ஆள்களோடு போய் நாஞ்சிலாரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்.

அடுத்த நிமிடம் பத்மநாபன் பத்துப் பேரோடு ஒரு காரில் ஏறி மீனம்பாக்கத்தை நோக்கிப் பறந்து சென்றார். புரட்சித்தலைவருக்கோ அவர் நண்பர்களுக்கோ ஓர் ஆபத்து என்றால், தம்மைப் பலி கொடுத்தாவது காப்பாற்றத் துடிக்கின்ற அற்புதமான தொண்டர், பத்மநாபன்.

பத்மநாபன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் புயல்போல் புகுந்து, தி.மு.க. எம்.பி.க்களின் முற்றுகையைத் தகர்த்தெறிந்தார்; நாஞ்சிலாரை மீட்டுக்கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் புரட்சித்தலைவரிடம் ஒப்படைத்தார். இப்படி இன்னும் எத்தனையோ கொலை வெறித்தாக்குதல்களுக்கு அ.தி.மு.க.வினர், ஆளாகியுள்ளனர்.

அதே நாஞ்சில் மனோகரன் நன்றி மறந்து 1980–ம் ஆண்டு மறுபடியும் தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொண்டார்........ Thanks...

orodizli
30th April 2020, 10:01 PM
[நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்த காயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’ என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக் காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத் தாய்க்கு. எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார்.

அந்த தாயின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே புரட்சித்தலைவர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார்.சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் செலவிலேயே அவருக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் புரட்சித்தலைவர் உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார்.

நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர். அதற்கு புரட்சித்தலைவர் அளித்த பதில் இது...

‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத் தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் சகோதரனாக நினைத்துத்தான் உதவி செய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன்.வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும். அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம் .."

என்ன ஒரு பணிவு!
என்ன ஒரு தன்னடக்கம்!

33 வருடங்களாக அவரது பூவுடல் இப் பூமியில் இல்லாவிடினும்
நமது மனங்களில்
MGR என்றும் வாழ்வார்!......... Thanks...

orodizli
30th April 2020, 10:23 PM
"எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!"...
" நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"...!
🍁 அத்தியாயம் : 5🍁

கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.

மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.

'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.


சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.

மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.

பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.

பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.

ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.

வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, “அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! ” என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.

கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது

தொடரும்...
Posted : M.G.Nagarajan
30 April 2020 6:31 PM
Thanks for :
Published : Naveenan

விகடன் வண்ணத்திரை
யாழ் இணையம்......... Thanks...

orodizli
30th April 2020, 10:28 PM
பெருந்தன்மைக்கு ஒரு எம்.ஜி.ஆர்!
மனம் திறந்த இயக்குநர் ஸ்ரீதர்
https://www.thaaii.com/?p=36162

‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.

நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:

“இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னைக்கு வந்தால், என் வீட்டில் ஒரு வேளையாவது உணவருந்தி, சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் போவார்.

இம்முறை சென்னை வந்திருந்தபோது, என் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த அவர், சித்ராலயாவின் நிலைமை பற்றி விசாரித்தார்.

“பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க, ஹிந்தி ஹீரோ-72 பெற்ற வெற்றி உதவியது என்றாலும், முழுவதுமாகத் தீரவில்லை’’ என்றேன்.

“தமிழில் ‘ஹீரோ 72’ என்ன ஆயிற்று?’’

“சிவாஜியும், தம்பி ஷண்முகமும் எவ்வளவோ முயன்றும், எனக்குக் கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க முடியவில்லை. படம் தொங்கலில் தான் இருக்கிறது’’

சிரத்தையுடன் கேட்டுக் கொண்ட ராஜேந்திர குமார், சற்று நேரம் மௌனமாக யோசித்துவிட்டுத் திடீரென்று, “ஏன் ஸ்ரீதர், நீங்க ஏன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது?’’ என்று கேட்டார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், நான் தயங்கித் தடுமாற, அவரே தொடர்ந்து “எனக்கென்னமோ உங்க பிரச்சினை தீர அது தான் வழி என்று தோன்றுகிறது’’ என்றார்.

நான் நிதானமாக “உங்களுக்கு என் மேல் உள்ள அக்கறை எனக்குப் புரிகிறது. ஆனால் உங்கள் ஆலோசனையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை’’ என்றேன்.


“ஏன், எம்.ஜி.ஆர் உங்களுக்கு கால்ஷீட் தர மாட்டாரா?’’

“அப்படியில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்து, சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், படத்தை அப்படியே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

பிறகு நானே அதே கதையில் சில மாற்றங்களைச் செய்து, சிவாஜியை வைத்துப் படம் எடுத்ததும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அப்படியிருக்க…’’

“ஸ்ரீதர்! இப்போ அந்தப் பழைய கதையை நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் ஒத்துழைப்புத் தர மறுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை’’


“நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு தர்ம சங்கடம். இப்போ எம்.ஜி.ஆர் கால்ஷீட் தருவதாக வைத்துக் கொண்டால், சிவாஜி என்ன நினைப்பார்?

“ஓஹோ.. நம்ம படம் பாதியிலேயே நிற்க, எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்கப் போய்விட்டாரா ஸ்ரீதர்’’ என்று சிவாஜி தப்பு அர்த்தம் செய்து கொள்ளக்கூடும். அல்லது எம்.ஜி.ஆரே ‘முதலில் சிவாஜி படத்தை முடித்துவிட்டு வா; அப்புறம் பார்க்கலாம்’’ என்று கூறலாம்..’’

ராஜேந்திரகுமார் என் சமாதானங்களை ஏற்கவில்லை.

“ஸ்ரீதர், யோசித்து யோசித்துத் தயங்காதீர்கள். எதற்கும் எம்.ஜி.ஆரை அணுகுங்கள். அவர் ஒப்புக் கொள்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்க பிரச்சினை எல்லாம் தீர அது தான் வழி’’

“பெரிய ரிஸ்க் இல்லையா?’’

“ரிஸ்க் தான். துணிந்து ரிஸ்க் எடுங்க’’

ராஜேந்திரகுமார் உறுதியாகக் கூற, நானும் அவர் யோசனையை ஏற்பது என்று தீர்மானித்தேன்.

இதற்கு முன்பு ஓரிரு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆரை நான் சந்திக்க நேர்ந்தபோது அவர் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்; முன்பு ஒருமுறை ஆரம்பித்த படம் கூட நின்று போய்விட்டதே’’ என்று கூறியது எனக்கு நினைவில் இருந்தது.

அதை ஒருவேளை உபச்சாரமாகக் கூறியிருப்பாரோ?

யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி, எம்.ஜி.ஆரை அணுகுவது என்று தீர்மானத்துக்கு வந்தேன். ஆனாலும் உள்ளூர ஒரு தயக்கம்.

எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்ன பதில் கூறுவாரோ?

எனவே நான் நேரில் எம்..ஜி.ஆரைப் பார்த்துப் பேசாமல், கன்னையா என்ற நண்பரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்,

‘சின்னத்தம்பி’ போன்ற படங்களை டைரக்ட் செய்தாரோ பி.வாசு, அவருடைய அப்பா பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப் மேனாக இருந்தார்.

அவரிடம் என் விருப்பத்தை கன்னையா தெரிவிக்க, பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்ல, எம்.ஜி.ஆரின் பதில் திரும்பவும் கன்னையா மூலமாக எனக்கு வந்து சேர்ந்தது.

அதிலே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது.

பதில் இது தான்.

“ஸ்ரீதர் படத்தில் நடிக்கச் சம்மதம். ஆனால் மேலே இது குறித்துப் பேச வேண்டும். நாங்கள் சந்திப்பது ஸ்ரீதர் வீட்டிலும் வேண்டாம்; என் வீட்டிலும் வேண்டாம் ஒரு பொது நண்பரின் வீடாக இருக்கலாம். நம்பியார் வீடாக இருந்தால் சௌகரியம்’’

நான் நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.

எம்.ஜி.ஆர் என் வீடு தேடி வந்தால் நன்றாயிராது. அதே சமயம் அவர் வீட்டுக்கு நான் போனால், மற்றவர்கள் என்னைக் கேவலமாக- ‘அவர் வீடு தேடி அவர் காலில் விழபோனேன்’’ என்று பேசுவார்கள்.

அந்த அவமானம் எனக்கு வரக்கூடாது என்று அவர் நினைத்தார். அதனால் பொது நண்பர் வீட்டில் சந்திக்கலாம் என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.

நான் கன்னையாவிடம் சொன்னேன்,

“எம்.ஜி.ஆரை நான் சென்று சந்திப்பது தான் முறை. எனக்கு இதில் தயக்கமோ, சங்கடமோ கிடையாது. அவர் உள்ளம் எனக்குப் புரிந்து விட்டது. ‘தோட்டத்தில் வந்து சந்திக்கிறேன்’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்’’.

மறுநாள் காலை தோட்டத்தில் சிற்றுண்டிக்கு வரும்படி எம்.ஜி.ஆரிடம் இருந்து தகவல் கிடைத்தது.

ராமாவரத்தில் ‘தடபுடலான’ சிற்றுண்டி.

“உங்களை வைத்துப் படம் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.’’ என்று நான் கூற,

“உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதில் எனக்கும் சந்தோஷம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.”

அதன் பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் – ‘உரிமைக்குரல்’.

#ஸ்ரீதர் #உரிமைக்குரல் #எம்ஜிஆர் #பீதாம்பரம் #சின்னத்தம்பி....... Thanks...

orodizli
30th April 2020, 10:48 PM
மக்கள் திலகம் அவர்கள் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மகனுக்கு உதவியது சம்பந்தமாக நண்பர்கள் கொடுத்த கருத்துகள்.......
டைப்பிஸ்ட் கோபு க்கு எம்ஜிஆர் உதவினார் என்பது நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனென்றால் நமக்கு அது வழக்கமான செய்திதான் பிறருக்கு உதவுவதை தலைவர் எப்போதுமே தன் கடமையாகக் கொண்டிருந்தார் ஆனால் அந்த காலகட்டத்தில் நடிகர்களில் மனிதராக இருந்தவர் ஜெய்சங்கர் அல்லவா அவர் கூடவா உதவவில்லை........ Thanks...

orodizli
30th April 2020, 10:49 PM
எப்பேர்ப்பட்ட உதவி!!! மேனி புல்லரிக்குது நான் பாத்துக்குறேன் அந்த ஒத்த வார்த்தைக்கு எப்படிபட்ட பலம் என்பது நானறிவேன் இன்னொருவர் பிறக்கவில்லை தங்கதலைவனைப்போல் அள்ளித்தந்த வள்ளல் நினைவுகளே காலத்தை வெல்லும்
அருமையான பதிவு...... Thanks...

orodizli
30th April 2020, 10:50 PM
நடிகர் சிவக்குமார் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் மற்றவர்க்குத் தெரிந்து கொடுத்தது கொஞ்சமே. தெரியாமல் கொடுத்தது அதிகம். உலக வள்ளல் என்று இதயக்கனி ஆசிரியர் சொன்னது 100 % உண்மை..... Thanks...

orodizli
30th April 2020, 10:52 PM
தயாள குணம் படைத்தவர்களை தவிர பிறர் எவரும் , உதவி என்று சென்று கேட்டால் , இவனால் திருப்பி தர முடியுமா அல்லது இவனால் பின்னால் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றபடி பதில் சொல்லி அனுப்பி விடுவார்கள் .
திரு டைபிஸ்ட் கோபு அவர்களின் நிலைமையும் அப்படித்தான் அமைந்தது .
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல நமது இதய தெய்வம் உதவி செய்தது , திரு கோபு அவர்கள் புரட்சிதலைவர் அவர்களை பற்றியும் , உடனிருந்தே கை விட்ட மற்றவர்களையும் புரிய வைத்துவிட்டது ...
இது போன்ற பதிவுகள் இன்னும் தொடரட்டும் ....... Thanks...

orodizli
30th April 2020, 10:55 PM
குருநாதாரே... அருமையான பதிவு
புராணத்தில் கர்ணன் பற்றி படித்து தெரிந்து கொண்டும்..
இந்த காலத்தில் தலைவரை பார்த்து தெரிந்து கொண்டோம் கர்ணன் என்றால் இப்படி தான் இருப்பர் என்று...

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்
நடிகர் சிகணேசன் யாருக்கும் உதவி என்பதே செய்தது இல்லையா....... Thanks...

orodizli
30th April 2020, 10:56 PM
தலைவரின் வள்ளல் குணம் எப்போதும் நம்பிக்கையின் உச்சம் ஆனாலும் சிவாஜி சிறந்த நடிகராக இருந்தும் கூட நம்பிக்கையானவர்களுக்கு கூட பெரிய உதவிகள் செய்ததில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன் குருஜி உண்மையா அது...... Thanks...

orodizli
30th April 2020, 10:59 PM
Eppadi Thalaivar seitha veliye theriyaatha aayiramaayiram vuthavikal veli pattukkonde eruppathu,Evar saathaarana manitha piravi alla,
Kaakkum Kadavul
enbathu pulanaakirathu ayyaa.Pathivitta thangalukku ....nandri....... Thanks...

orodizli
30th April 2020, 11:01 PM
ஒரே வரியில் இதய தெய்வம் ஒரு தெய்வப் பிறவி. கண்களுக்கு தெரியாத தெய்வத்திடம் முறையிட்டால் எந்த காரியமும் சுபமாய் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் இந்த கலியுகத்தில் வாழ்ந்து உதவி என்று வந்தவர்களுக்கு வேண்டியதை செய்தார் இந்த மனித தெய்வம். நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தில் இறுதி காட்சியில் வில்லன் M.N. நம்பியார் காஞ்சனாவை சிறைப்பிடித்து வந்து தேங்காய் சீனிவாசனுடன் திருமணம் நடக்கும் இடம் அந்த திரைப்படத்தில் இதய தெய்வம் பெயர் கண்ணன் காஞ்சனா பெயர் ராதா. அந்த காட்சியில் ராதா கண்ணன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூக்குறலிட உடனே வில்லன் நம்பியார் நீ கூப்பிட்டவுடன் உடனே வந்து காப்பாத்த உன் கண்ணன் ஒன்னும் புராணகாலத்து கண்ணன் இல்லை என்று கூற உடனே கண்ணனாகிய இதய தெய்வம் கூறுவார் புராண காலத்து கண்ணன் வேண்டுமானால் கொஞ்சம் தாமதமாக வரலாம் ஆனால் இந்த கண்ணன் பெண்களுக்கு ஆபத்தென்றால் அடுத்த நொடியே அவங்கள காப்பாத்த முதலில் நிப்பான் தெரிஞ்சுக்க அடுத்து நடப்பத்து என்னவென்று அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே. எதிரிகளை துவம்சம் செய்து விட்டு கலியுக ராதாவை காப்பாற்றுவார் கலியுக கண்ணனாகிய நம் இதய தெய்வம். கோபுவின் பதட்டம் இறுதிவரை இதய தெய்வத்தை பற்றிய ஒன்று அவர் முழுவதுமாக அறிந்திருக்க தனிப்பட்ட அனுபவம் இல்லாதது தான். தன்னுடன் நடிக்காவிட்டாலும் கலை குடும்பத்தை சேர்ந்த ஒரு சக நடிகர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று அறிந்து அவர்களுக்கு உதவுவதை இதய தெய்வம் தன் கடமையாகவே கொண்டிருந்தார் என்றே கூற வேண்டும். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு குருநாதா. வாழ்த்துக்கள்......... Thanks.........

orodizli
30th April 2020, 11:05 PM
தலைவர் வாழ்நாளில் இதைப்போன்று எத்தனை ஆயிரம் நிகழ்வுகள் சார்.
தலைவர் பிறந்தது பிறருக்கு உதவுவதற்காகவேவா.
என்ன ஓர் பிறவி சார். ?!
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே ஓர் பாக்கியம்........ Thanks...

orodizli
30th April 2020, 11:09 PM
இதுவரை நான் கேள்விப்படாத ஒரு அருமையான, நெகிழ வைக்கும் பதிவு ......முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் தான் குருஜி.......... Thanks...

orodizli
30th April 2020, 11:36 PM
மக்கள் திலகம் "ரிக்க்ஷாக்காரன்" காவியத்தை உருவாக்கும்போது வக்கீல்/ நீதிபதி கதாப்பாத்திரம் நடிகர் மேஜர் சுந்தராஜன் ஏற்று நடித்தால் பொருத்தமாக இருக்கும் என காத்திருந்து பிறகு நடித்த சம்பவம் தொடர்பாக பதிந்த பதிவு ...கருத்து பின்னூட்டங்கள் ஒரு பார்வை.......எந்த நடிகர் மேஜருக்கு மாற்றாக நடித்திருந்தாலும் படம் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் இவர்தான் இந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று தலைவர் கருதுவதும் தீர்மானிப்பதும் அவரது திருப்திக்காக ரசனைக்காக அல்ல. மக்களுக்கு நன்றிலும் நன்றாக சிறப்பானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால்தான் அவருக்கு உறக்கம் வரும். படத்தின் நீளத்திற்கும் அதிகமாகப் பன்மடங்கு எடுத்து ஆகச்சிறந்ததைத் தேர்ந்து கோர்த்து சிறந்த படமாக உருவாக்க பொருள் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாத தலைசிறந்த நல்ல எடிட்டர் தயாரிப்பாளர் இயக்குனர் இசைமேதை அவர். கலையை மக்களுக்காக சமூக ஏற்றத்திற்காக மறுமலர்ச்சிக்காகப் பயன்பெறச் செய்த கலைஞானி அவர். திறமையை மதிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. SPB பாடலுக்கு மாதக்கணக்கில் காத்திருந்தார். மாணவப் பருவத்து பாடகரை இவர் மதித்து வாய்ப்பளித்ததால் கின்னஸ் சாதனை படைத்த பாடகராக அவர் விஸ்வரூபம் எடுக்க தலைவரே காரணம். கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் கூட அவரே வள்ளல்......... Thanks....

orodizli
30th April 2020, 11:40 PM
அறியப்படாத தகவல்
வாழ்த்துகள் பதிவிற்கு நன்றி����
தலைவர் புகழுக்கு
மேலும் ஒரு வைரக்கல்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் காலை வெற்றி வணக்கம் நம்வாழ்வு நம் கையில் வீட்டில் உள்ளே இருப்போம் நல்லது நடக்கும்........ Thanks...

orodizli
30th April 2020, 11:40 PM
நிறைகுடம் என்றும் தளும்பாது.தலைவர் மக்கள் நலன்கருதி,மத்தியஅரசுடன் இணக்கமாக இருந்து காரியம் சாதித்தார்.தங்களால்,அதுபோல செய்ய முடியாவிட்டால்,மக்களிடம் பெயர்கெட்டுவிடுமே என்பதால் எதிரிகட்சிகள்,அதையெல்லாம் குறைகூறிப் பேசின.இன்றைக்கும் அப்படித்தான் நடக்கிறது.
தலைவர் நம்வேலை நடிப்பது,வாங்குற கூலிக்கு மாரடிப்போம் என்றில்லாமல்,இது என்படம்,வெற்றிபெறத்தான் வேண்டும் என்று மொத்த பட விஷயங்களையும் தனதாக்கி,நடித்தூ,வெற்றிபெறச் செய்ததால்தான் இன்றும் நம்மில் வாழ்கிறார்......... Thanks...

orodizli
30th April 2020, 11:44 PM
1958-ல் வெளிவந்து சரித்திரம் படைத்த சாதனை படம் நாடோடி மன்னன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பு, தயாரிப்பு,
இயக்கம் என தனது முழு திறமையையும்
வெளிப்படுத்திய வெற்றிப் படம்.
பகுதி மட்டும் வண்ணத்தில் எடுக்கப்பட்டது.

பேசும்படம் சினிமா மாத இதழ்,
"நாடோடி மன்னன்" சிறந்த படமென தேர்ந்தெடுத்து பாராட்டு பத்திரம் வழங்கியது....... Thanks.........

orodizli
30th April 2020, 11:50 PM
"கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை..."
"குருவிகளெல்லாம் உயரப் பறந்தால் பருந்துகளாவதில்லை.."
#புரட்சித்தலைவர். #எம்ஜிஆர் பெயரை எவ்வளவுதான் மறைக்கவோ...மறுக்கவோ ஒரு கூட்டம் முயற்சி செய்தாலும் .. தலைவரின் பெயரை ..புகழை... சாதனைகளை யாராலும் அழிக்கவோ..
மறைக்கவோ நெருங்கவோ முடியாது..."
இது புரட்சித் தலைவர்.எம்ஜிஆரின் அரசு.." அவர் பாடுபட்டு வளர்த்து கட்டிக் காத்த..ஊழலற்ற பொற்கால ஆட்சி செய்த கட்சி.. . மக்கள் திலகத்தை இதயதெய்வமாக வணங்கிக் கொண்டு.. தலைவர் மறுபடியும் வரமாட்டாரா...என்ற ஏக்கத்துடன் ...
தலைவரை வேண்டி நிற்கிறார்கள்... நம் தலைவரின் பக்தர்கள்...
நம்மிடையே மஹானாக..சித்தராக வாழும் நம் தலைவரின் வெளிப்பாடு...???
எதிர்பார்ப்போம்... என் உள்ளம் என்னும் உலகில் புரட்சித் தலைவர்.எம்ஜிஆர்..
மட்டுமே என் நிரந்தர தலைவர்...
இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே...
வாழ்க புரட்சித் தலைவரின் புகழ் என்றும்.......
Thanks...

orodizli
1st May 2020, 09:00 AM
#தொழிலாளர்தின #வாழ்த்துக்கள் ...

தொழிலாளர்களின் நலத்தைத் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பேணி, அவர்களைப் போற்றி...தான் முதல்வரான பின்பும் தொழிலாளர்களுக்காக பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திய நம்ம வாத்தியாருக்கு, அவர்தம் பொற்பாதங்களுக்கு இப்பதிவினைச் சமர்ப்பிக்கின்றேன்.

#MAY #DAY - Dedicated to our Beloved God "VAATHIYAR"

அன்பே வா திரைப்படத்தில் சரோஜாதேவிக்கு உடைகள் வடிவமைத்தவர் திரு ரஹ்மான் பாய் படத்தின் பெயர்ப்பகுதியில்(டைட்டிலில்) காணலாம்.

ரஹ்மான் பாய்...!

சிம்லா மிகவும் குளிர்ப் பிரதேசம் ரஹ்மான்பாய் அதற்குத் தகுந்தாற்போல் உடைகள் இருக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆயத்தமாக இருந்த உடைகளை ரஹ்மான்பாய் காண்பிக்க, மகிழ்ச்சியில் கட்டியணைத்து வாழ்த்து சொன்னார் வாத்தியார்.

படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் வாத்தியார் & சரோஜா போட்டிருக்கும் உடைகளைத்தைத்து வாத்தியாரிடம் காண்பிக்க, அப்படியே மகிழ்ந்து, தனது சொந்தப் பணத்தை எடுத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பேசிய தொகை கிடைத்துவிட்டது. கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்தேன் அதிகப்படியாக வேண்டாம் என்றிருக்கிறார் ரஹ்மான் பாய்...

"இல்லை ரஹ்மான்பாய்.." கொடுக்கப்பட்டதைவிட அதிக வேலைப்பாடுள்ள உடைகளைத் தயாரித்திருக்கிறீர்கள் அதிகப்பணமல்ல... என் அன்பு இது. என் அன்பு வேண்டாமா உங்களுக்கு ? என்றிருக்கிறார் வாத்தியார்.
திக்குமுக்காடிப்போன பாய் பணத்தை வாங்கிக்கொண்டு, அந்தப் பணத்தை நிறைய வருடங்கள் செலவழிக்காமல் வைத்திருந்திருக்கிறார்.

திரைப்படங்களில் கொடைவள்ளல்களாக நடிப்பவர்கள் சொந்தவாழ்வில் கருமிகளாகத் தானிருந்திருக்கிறார்கள். நடிப்பதில் செய்ததை, சொந்த வாழ்வில் நடிக்காமல் செய்தவர்.

மற்றொரு சம்பவம்...!

ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்திற்காக காரைக்குடிக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்தது. வழக்கம்போல் 9 மணிக்கு வந்தார்கள். சுற்றுவட்டார மக்கள் காலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டார்கள். தாமதமானதால் அவரது வாகனம் வேகமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தது.

காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள் அதையும்மீறி எம்ஜிஆரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 8 வயதுச் சிறுவன் கூட்டத்திலிருந்து நடுச்சாலைக்குள் வந்துவிட்டான்.

பிரேக் போட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் சிறுவனைக் கார் இடித்துவிட்டது. முதலில் காரிலிருந்து இறங்கியது யார் தெரியுமா? எம்ஜிஆர் தான்... " குழந்தை... குழந்தை... " என்று
அவர் பதறிவந்து தூக்கியதை, அங்கிருந்த யாரும் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. தன் காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சைக்கான செலவு, சிறுவனின் படிப்பு, உணவு, உடை எல்லாவற்றையும் தானே ஏற்றுக்கொண்டார்...

அடிபட்ட சிறுவன் யார் தெரியுமா? அவன் பெயர் முருகேசன்... சலவைத் தொழிலாளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி, காட்டுத்தலைவாசல் என்னும் இடத்தில் சலவைத்தொழிலாளியாக அவன் குடும்பத்தினர் இருந்தனர்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனை எத்தனை...ஒன்றா! இரண்டா! எடுத்துச்சொல்ல...

வாத்தியாரின் வழியில் தொழிலாளர் நலம் பேணுவோம்... போற்றுவோம்........... Thanks.........

orodizli
1st May 2020, 09:06 AM
தலைவா உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் இவ்வுலகில் அதாவது இந்த உலகத்திலேயே!
ஆம் யாருக்குமே எந்த ஒரு தனிமனிதனுக்கும் கிடைக்காத மிகப்பெரிய தொண்டர்படை கூட்டம் ஒன்று உங்கள் நினைவுகளோடு வாழுகிறது தலைவா.
எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உங்களையும் ,உங்கள் கருத்துக்களையும் உங்கள் நல்ல செய்கைகளையும்,எதிர்பாராமல் இல்லாதார்க்கு கொடுத்து வாழவைத்த வள்ளல் குணத்தையும் நினைத்து மறக்கவேமுடியாமல் வாழ்ந்து வருகிறோம் மன்னவா*

உங்களைவைத்து பல்லாயிரம்கோடி சம்பாதித்தவர்களுக்கும் சம்பாதித்துகொண்டிருப்பவர்களுக்கும் எந்தவிதத்திலும் ஜால்ரா போடாமல், எங்கள் தலைவன் காட்டிய வழியில் உங்கள் நினைவோடு உங்களை மட்டுமே தலைவனாக ஏற்று உங்கள் நல்ல கருத்துக்களை,வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி நீங்கள்கூறியதுபோல் எங்கள் உழைப்பில் (நன்றியில்லாமல் வாழ்ந்த, வாழ்ந்துகொன்டிருக்கிறவர்கள் மத்தியில் )வாழும் நாங்கள் மட்டுமின்றி,, உங்கள்வழி இன்னும் பலதலமுறைகளையும் வாழவைக்கும் என்பதுமட்டும் எவராலும் மறுக்கவே முடியாது.
இந்த உலகத்தில் நிறந்தர புகழுக்கு சொந்தகாரர் ஒருவர் உண்டென்றால் அது நீங்கள் மட்டுமே.ஒருசிலர் குறைகூறினால் அவர்கள் மனிதனாக வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள்.
மான்புகெட்டவர்களை பின்பற்றிய நன்றிகெட்டவர்கள் உங்கள் புகழை மறைப்பதாக நினைக்கலாம்.நீங்கள் ஆலமரம் .வற்றாத கடல்.வீசுகின்ற காற்று.
வேண்டுமென்றால் தலைவனுடைய வரலாற்றை தெரியாதவர்கள் ஒருமுறைபடித்துபாருங்கள்.உங்களுக்கு ஒருவித மயக்கமே வரும்.பின்னர் நீங்களும் எங்கள் தலைவனின் மெய்சிலிர்க்கவைக்கும் புகழை தானாகவே எடுத்துறைப்பீர்கள் .
தலைவா உலகமே உங்கள்புகழை எண்ணி எண்ணி தினமும் வியக்கிறது, வியர்க்கிறது. தகுதியேயில்லாதவர்களெல்லாம் பிரதமர், ஜனாதிபதி பதவியை குறிவைத்தார்கள்.எல்லா தகுதியுமுள்ள மேதை நீங்கள் தமிழ்நாட்டை மட்டுமே, தமிழையே நேசித்தீர்கள்.
உங்கள் மேல் உயர்ந்த எண்ணம்கொண்ட பல கோடி உண்மை பிரியர்களில் நானும் ஒருவன் என்று பெருமை பீற்றிக்கொள்ளும்
என்றும் உங்கள்
N RGM
அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துக்கள்......... Thanks.........

orodizli
1st May 2020, 09:10 AM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே,!

அடிமைப் பெண் - 01-05-1969

அடிமைப் பெண் 1969 ஆம்
ஆண்டு இதே தொழிலாளர் தினத்தில் ( மே 1 -ஆம் ) வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.

அடிமைப் பெண்:-
இயக்குனர் : கே.சங்கர்
தயாரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
கதை : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
நடிப்பு : எம். ஜி. இராமச்சந்திரன்,
ஜெயலலிதா, சோ , சந்திரபாபு
S.A. அசோகன் , R.S. மனோகர் ,
ஜோதிலட்சுமி , பண்டரிபாய் ,
ஜஸ்டின் , பேபிராணி , ராஜசிரி
ஒளிப்பதிவு : ராமமூர்த்தி
வசனம் : சொர்ணம்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : வாலி, சோமூ, புலமைப்பித்தன்
வெளியீடு : 01.05.1969

கதைச்சுருக்கம் :-

வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார்தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடுதிரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற பாடல் : -
@ . ஆயிரம் நிலவே வா -
@. தாயில்லாமல் நானில்லை
@. காலத்தை வென்றவன் நீ
@. ஏமாற்றதே.. ஏமாற்றதே..
@. உன்னை பார்த்து இந்த
@. அம்மா என்றால் அன்பு

சிறப்பு :
@. வெளியானது தொழிலாளர் தினத்தில்
@ புரட்சி நடிகர் நடித்த 102 வது படம்
@. புரட்சி நடிகர் கதாநாயகனாக வலம் வந்த 82-வது படம்.
@. புரட்சி நடிகர் 2 வேடத்தில் பங்கு கொண்ட 7-வது படைப்பு
@. மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா நடித்த 17-வது படம்
@. தலைவரின் 11-வது வண்ண படம்
@. மக்கள் திலகத்துடன் ராஜசிரி நடித்த 4-வது படம்.
@. மக்கள் திலகத்துடன் K.V.மகாதோவன் இசை அமைத்த 22-வது படம்
@. அதிகமான இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த பட்ட படம்
@. K.சங்கர் தலைவருக்க இயக்கிய 5-வது படம்.
@ வெள்ளி விழா படம் 25-வாரம் - மதுரை சிந்தாமணி
@. தொழிலாளர் தினத்தில் வந்த ஒரேயொரு தலைவர் படம்.
@. அதிகமான பொருட்செலவில் உருவானது

நன்றி.. B.S.Raju, Urimaikural
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........ Thanks.........

orodizli
1st May 2020, 09:21 AM
சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?”

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தான் கரத்தையே நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி”
*******

“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே...”

" உழைக்கும் கைகளே.. உருவாக்கும் கைகளே.."

போன்ற பாடல்களின் வழியாக.. தன்னுடைய திரைப்படங்களில் உழைக்கும் மக்களின் மேன்மையை புரட்சித்தலைவர் உயர்த்தினார்.. இன்றைக்கும் இந்தப் பாடல்களை கேட்கும் போது உழைக்கும்
தொழிலாளிக்கு வாழ்த்துகள் சொல்லி ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்படுவோம்.

நாட்டின் மூலதனத்தை விட தொழிலாளியின் சக்தியே வீரியமானது. அதனை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். வேர்வை நிலத்தில் பட உழைக்கும் தொழிலாளி இல்லையென்றால் உலகில்
எந்தப் பராக்கிரமங்களும் கிடையாது.

எப்படித் தொழிலாளர்களை மேதினத்தில் நினைத்துப் பார்க்கின்றோமோ, அதுபோல விளைநிலத்தில் பாடுபடும் விவசாயிகளைக் கொண்டாட வருடத்தின் 365நாட்களில் ஒரு நாள் கூட கிடையாது.

பாடுபடும் விவசாயிகளைப் பற்றி எண்ணும் போது பட்டுக்கோட்டைக் கவிஞன் சொன்னது போல, “காடு வெளஞ்சென்ன மச்சான் –நமக்கு கையும் காலும் தானே மிச்சம்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.

“கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி ....” என்று பாடல்களில் உழவனைச் சிறப்பித்து சொல்லப்படுகிறது..
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்”,
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றார் அய்யன் வள்ளுவர்.

பாடல்களால் விவசாயத்தைச் சிறப்பிப்பது ஒருபுறம் இருந்தாலும் தங்கள் உழவுத் தொழிலை கொண்டாடுகின்ற தைத்திங்களை எல்லோரும் கொண்டாடினாலும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தங்கள் உழைப்பை, உழைப்பின் உன்னதத்தை மே 1-ம் நாளில் சிறப்பித்துக் கொண்டாடுவது போல,
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும் தாங்கள் படுகின்ற பாட்டைப் பாடுகின்ற வகையில், ”உழவர் தினம்” என்று வருடத்தில் ஒர்நாள் சர்வதேச அளவில் அறிவிக்கப்பட வேண்டும்.

இது விவசாயத்தையும், விவசாயத் தொழிலாளிகளையும் சிறப்பிக்கின்ற முக்கிய நடவடிக்கையாக அமையும்...
அனைவருக்கும் இனிய மேதின வாழ்த்துக்கள் ...!.......... Thanks.........

orodizli
1st May 2020, 09:25 AM
ராஜாதி ராஜா... ரஜினிகாந்த்.....வேல்..சூரியா.... சட்டம் என்கையில்... கமல்...வாணிராணி.. வாணி ஸ்ரீ .., வந்தாளே மகராசி.. ஜெயலலிதா... தங்கமடி தங்கம் அம்பிகா... இத்தனை படங்கள் ... "எங்க வீட்டு பிள்ளை" கதையின் மூலக்கரு........ Thanks...

orodizli
1st May 2020, 12:16 PM
எங்க வீட்டு பிள்ளை படத்தை கிட்டத்தட்ட 4 தடவை பார்த்து விட்டேன். அதோடு நில்லாமல் ஒரு 40 , 50 பேரிடமாவது கதையை சொல்லியிருப்பேன். நண்பர்கள் சேர்ந்து விட்டால் போதும் விளையாட்டை முடித்துவிட்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம். அப்போது எங்க வீட்டு பிள்ளையில் வரும் ஒவ்வொரு காட்சியாக சொல்லி பேசி மகிழ்வோம்.

அப்படி பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் எம்ஜிஆர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் சென்று விடுவாரே, அவரை மாதிரி சாப்பிட்டு விட்டு தைரியமாக காசு கொடுக்காமல் வரமுடியுமா? என்று எங்களுக்குள் சவால் எழுந்தது.
உடனே நான் இதென்னடா பிரமாதம் நான் செய்கிறேண்டானு சொல்லிட்டேன். எல்லோரும் உடனே சம்மதித்து விட்டு சரிடா! நீ செய்டா! அப்படி செஞ்சுட்டா உன்னையும் எம்ஜிஆர் மாதிரி தைரியமானவன்னு ஒத்துகொள்வோம் என்றனர்.

4,5 நாட்கள் ஆன பிறகு டேய் இவன் பயந்துட்டான். இவன் ரெளடி எம்ஜிஆர் கிடையாது.கோழை எம்ஜிஆர் என்று என்னை அழைக்க ஆரம்பித்தார்கள். உடனே எனக்கு ஆவேசம் வந்து விட்டது. உடனே ஒரு திட்டம் மனதுக்குள் தோன்றியது.
நாம நாலு பேரும் ஹோட்டலுக்கு போவோம். சாப்பிட்டு முடித்தவுடன் சர்வர் பில் தரும்போது தனித்தனி பில் கேட்போம். சர்வர் தந்தவுடன் நீங்கள் சர்வர் பார்க்கும் போதே அத்தனை பில்லையும் ஏங்கிட்ட குடுத்துட்டு நீங்க வெளியே போய் விடுங்கள். நான் மூன்று பில்லை மறைத்து வைத்து விட்டு என் பில்லை மட்டும் கட்டி விட்டு வருகிறேன் என்றேன்.
எல்லோரும் பலே நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று என்னை பாராட்டினார்கள். ஒன்றை மறந்து விட்டோம். ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் வயது எங்களில் யாருக்கும் கிடையாது.அனைவருடைய பார்வையும் எங்கள் மீதுதான் இருக்கும் என்பதை நாங்கள் நினைக்கவில்லை.

சரி அதற்கான ஹோட்டலை தேர்ந்தெடுக்க வேண்டுமே! என்று ஹோட்டலை தேடினோம். அந்த காலகட்டத்தில் சாதாரண ஹோட்டல்தான் அதிகமிருக்கும். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவார்கள். அங்கெல்லாம் சென்றால் நாம் மாட்டிக் கொள்வோம். அங்கெல்லாம் செல்லாமல் காரனேஷன் தியேட்டர் அருகே சரவண பவ என்ற ஹோட்டலை தேர்ந்தெடுத்தோம். படம் விடுகிற வேளையில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரம் பார்த்து நுழைந்து விடுவோம்.

2,3 நாள் நோட்டம் விட்டதில் திருப்தியான அளவுக்கு கூட்டம் இல்லை. ஒரு நாள் வெள்ளிக்கிழமை புதிய படம் போட்டதால் படத்துக்கு கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. ஹோட்டலிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் நால்வரும் ஹோட்டலில் நுழைந்து விட்டோம். நால்வரும் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம்.சாப்பாட்டில் கவனம் செல்லவில்லை. எப்படி காரியத்தை வெற்றிகரமாக முடிப்பது என்ற எண்ணத்தில் இருந்ததால் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. எங்கள் நாலு பேருக்கும் சேர்த்து மொத்தம் ₹2 தான் வந்தது.

உடனே சர்வரை கூப்பிட்டு தனித்தனி பில்லாக கொண்டு வா என்றேன். அவனும் ஆளுக்கு 50 பைசானு தனித்தனி பில்லாக கொடுத்து விட்டு சென்று விட்டான். அடுத்த டேபிளுக்கு ஆள் வரும்வரை சர்வர் கல்லாவுக்கு எதிரேதான் நிற்பான். அதுவரை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மூவரின் பில்லை நான் வாங்குவதை சர்வர் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அங்கேயே நின்றான். திடீரென்று அடுத்த டேபிளுக்கு 4 பேர் வந்து அமர்ந்து ரொம்ப அவசரம் படம் போட்டு விடுவான் சீக்கிரம் ஆளுக்கு 2 தோசை போட்டு கையோடு எடுத்துட்டு வா என்றதும் சர்வர் வேகமாக தண்ணி எடுத்து வைத்து விட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தவுடன் அவசரமாக இலையை எடுத்து போட்டு விட்டு கவுண்டருக்கு போய் 50 பைசா பில்லை காண்பித்து காசை கொடுத்து விட்டு கிளம்பினேன்.தம்பி உன் கூட வந்தவங்களை எங்கே? என்று கேட்க வெளியே நிக்கிறாங்கனு சொல்லிட்டு திரும்பி பார்க்காமலே நடந்து, நடந்து என்ன ஒட்டமும் நடையுமாக சென்று விட்டேன்.

இதை என் உடன்பிறந்தவர்களிடம் சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தேன்.
அதில் ஒருவன் என் தந்தையிடம் போட்டுக்கொடுத்து விட்டான். என் தந்தை என்னை கூப்பிட்டார்கள். விளையாடிக் கொண்டிருந்த நான் என் தந்தை அழைத்ததும் என்னப்பா! என்று தந்தையிடம் சென்றேன். டேய் பரவாயில்லைடா நீ பெரிய சாமர்த்தியசாலி எப்படிடா ஏமாற்றினாய் என்று கேட்டவுடன் ஆர்வம் தாங்காமல் அத்தனையும் மிகவும் பெருமையாக சொல்லி முடிப்பதற்குள் ஒரே மிதிதான். தள்ளிப்போய் விழுந்தேன். நான் அந்த பகுதிக்கு அடிக்கடி போகிறவன். எனக்கு என்று ஒரு கெளரவம் இருக்கு நீ அதை கெடுத்திருவே போல இருக்குனு சொல்லிட்டு இனிமே இப்படி ஏதாவது கேள்விப்பட்டேன் உனக்கு அன்றைக்கே சமாதிதானு சொல்லிட்டு போயிட்டாரு. அதோடு அந்த எண்ணங்கள் மாறி விட்டது.
அப்பறம்தான் படத்தை நினைத்து பார்க்கையில் தலைவர் சொல்வது நினைவுக்கு வந்தது. சே! சாப்பிட்டு விட்டு இப்படி காசு கொடுக்காம வந்துட்டோமே! வெட்கமா இல்லை! எப்படியும் இந்த தாயத்தை விற்றாவது காசை கொடுத்திருவோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது.

இரண்டு நாள் கழித்து என் தந்தை அம்மாவிடம் பேசியதை கேட்ட போதுதான் தெரிந்தது அந்த ₹1/50 பைசாவையும் சேர்த்து கொடுத்தார்களாம் ஆனால் ஹோட்டல்காரர் வாங்க மறுத்து விட்டாராம். அதற்கு முதலாளி, அது நம்ம தம்பியா தெரியாமல் போய் விட்டதே! முன்னமே தெரிந்திருந்தால் நல்லா சாப்பிட வைத்து அனுப்பியிருப்போமே! என்றாராம். என் தந்தையை வைத்து ஒரு நாளைக்கு 40 காபி, டீக்கு மேல் விற்பனை நடக்குமாம்.

இருவரும் நல்ல நண்பர்களாம். அதற்கு என் தந்தை சொன்னார்கள் நீ. பிடிபட்டவுடன்
உன்னை யாரென்று எல்லாம் விசாரிக்க மாட்டார்கள் ஆளாளுக்கு தர்மஅடி கொடுத்தபின்புதான் விசாரிப்பார்கள். அதற்குள் அந்த பகுதி முழுவதும் தெரிந்து விடும். இன்னார் மகன் என்று என் பெயரைத்தான் கேவலமாக பேசுவார்கள் என்றார். அதுவும் எனக்கு நியாயமாக பட்டது. அன்றிலிருந்து. தம்பி தங்கக்கம்பியாக மாறி விட்டேன்........தோழர் S K அவர்களின் நீண்ட பதிவு..... Thanks...

orodizli
1st May 2020, 12:35 PM
#தொழிலாளி

தொழிலாளிகளைப் பற்றி உலகத்தில் எத்தனையோ தலைவர்களும், அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்....ஏன் சில திரைப்படங்களில் கூட தொழிலாளர்களைப் போற்றியுள்ளார்கள்...

ஆயிரம் பேர் போற்றியிருந்தாலும்...
நம்ம வாத்தியார், தொழிலாளர்களைப் போற்றியதற்கு ஈடாகுமா!!!

ஏனெனில் மேற்குறிப்பிட்ட யாவரும் சொல்லி மட்டும் தான் இருக்கின்றார்கள்...அறிவுரை சொல்வது எளிது...அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

ஆனால் #அடிமட்டத்தொழிலாளியாக இருந்து , தன் உழைப்பினால் தானும் உயர்ந்து, திரைப்பட துறையில் சிறிய அளவில் நடிகராக நடிக்க தொடங்கி கடும் உழைப்பினால் முன்னேறி முதல் ரேங்க் உச்ச நடிகர் அந்தஸ்தில் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் வரையிலும், தம்மை சார்ந்தவர்களையும் வாழவைத்து, ஒரு மாநிலத்திற்கே முதல்வராய்த் திகழ்ந்து...நமக்கெல்லாம் இதயதெய்வமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற...

தொழிலாளர் வர்க்கத்திற்கே என்றென்றும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்...

"#வாத்தியாரின் #பாதகமலங்களுக்கு இக்காணொளியை" சமர்ப்பிக்கின்றேன்...

உண்மையான தொழிலாளிக்குத்தான் உண்மையான தொழிலாளர்களின் பிரச்சனை தெரியும்.

வாத்தியார் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் #வெறும் #நடிப்பல்ல...எவ்வளவு ஆத்மார்த்தமானது என்பதை இக்காட்சிகளில் அறிந்துகொள்ளலாம்...எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது......... Thanks.........

orodizli
1st May 2020, 12:37 PM
"எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்"

" மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்"

1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.

பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.

ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.

'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.

இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
Posted : M.G.Nagarajan
30 April 2020 2:13 AM
தகவல்களுக்கு நன்றி: விகடன் பிரசுரம்...... Thanks........

orodizli
1st May 2020, 12:41 PM
வாத்தியார் தன் தாயிடம் பேசும்பொழுது நான் பார்க்கிறது நம் வாத்தியார்தான் ஏனென்றால் தாய் பாசத்தை கண்டேன் அந்தத் தாய் உள்ளத்தை அவர் மூலம் தெரியும் பொழுது அதை பார்த்தவுடன் கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது 💪💪💪💪👌👌👌👌 அந்தத் தாய் பாசம் ஒரு துடிப்போடு பிள்ளைகளை கே உரித்தானது அதை தலைவர் அந்த இடத்தில் உண்மையாகவே வாழ்ந்து காட்டினார் அருமை அருமை மிக மிக அருமை மே தினத்தில் இப்படி ஒரு பதிவு போட்ட உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்...... Thanks...

orodizli
1st May 2020, 12:43 PM
தொழிலாளர் தினத்தன்று மிக சரியான காட்சிகளை பதிவிட்டு இருக்கிறீர்கள். அருமை!
இந்த மாதிரி இன்று சொல்ல கூடியவர்கள் யாருமில்லை என்பதை உணரும்போது தலைவரின் அருமை மேலும் மேலும் தெரிகிறது.......... Thanks...

orodizli
1st May 2020, 12:45 PM
மே மாதம் 1ம் தேதி ..1996 அன்று நம் நிரந்தர தலைவர். புரட்சித் தலைவரின் மனைவி..
முன்னாள் முதலமைச்சர்.திருமதி*.வி.என்.ஜானகி அம்மையார் அவர்கள்..ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆஞ்ஜியோ பிளாஸ்டி .. Angioplasty..கிளிப் பரிசோதனைக்கு காத்..லேப் புக்கு வந்தபோது... அங்கு A6 ஆபரேஷன் தியேட்டர் செவிலியர்கள் தலைமை பொறுப்பில் ( Nursing Manager & Lecturer for operating theatre technology ..phycisian assistance group..of Deemed University Sri.Ramachandra Medical College and hospital.. இருந்தேன்.. .. காத் லேபில் cath lab இருந்து என் தோழி காயத்ரி..in charge..cath lab.. என்னை அழைத்ததன் பேரில் திருமதி.ஜானகி அம்மா அவர்களுக்கு அருகில் இருந்து அவர்களுடன் பேசவும் உறுதுணையாக இருந்து நர்சிங் சேவை செய்யும் பாக்கியமும் பெற்றேன்.. நம் புரட்சித் தலைவருக்கும் என் 23 வயதில் ..அப்பல்லோ மருத்துவமனையில் சேவை செய்த நினைவுகளையும் ஜானகி அம்மாவுடன் பகிர்ந்துக் கொண்டேன்.. தலைவருக்கும்..அவரது இல்லத்தரசிக்கும்.. சேவை செய்யும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்..!!!
இறைவனுக்கு நன்றி..
மே 1 என்றுமே எனக்கு ஜானகி அம்மாவை என் நினைவுக்கு கொண்டு வரும்..
வணக்கம் அன்புள்ளங்களே....... Thanks...

orodizli
1st May 2020, 12:49 PM
#யாருக்கு கிடைக்கும் இந்த #அதிர்ஷ்டம் ..!!

1) #தமிழகத்தில் தேர்தல் மூலம் வெற்றி பெற்று #பெண் முதலமைச்சரை கொண்ட கட்சி #அஇஅதிமுகழகம்...

2) #தமிழகத்தில் மிக இளம் வயது முதல்வரை பெற்ற கட்சி #அஇஅதிமுகழகம்...

3) #தமிழகத்தில் முதலாவது பெரிய கட்சியும் #இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி #அஇஅதிமுகழகம்...

4) #மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 10ம் வெற்றி பெற்ற ஒரே கட்சி #அஇஅதிமுகழகம்...

5) #தமிழ்நாட்டில்
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது #தனித்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஒரே கட்சி #அஇஅதிமுகழகம்...

6) #இந்திய வரலாற்றில் ஒரு #இடைத்தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த கட்சி #அஇஅதிமுகழகம்...

7) #இந்தியாவிலேயே தலைமைக்கு கட்டுப்படுவது மட்டுமின்றி, மிகுந்த #விசுவாசம் நிறைந்த #தொண்டர்களை,
#தொழிலாளர்களையும் கொண்ட கட்சி #அஇஅதிமுகழகமே...

#அனைத்து_இந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம ் சார்பில் கழக நண்பர்கள் அனைவருக்கும் #மே 01 #தொழிலாளர் தின நல் #வாழ்த்துக்கள்...

இவன்...
#சேலம்_மாநகர்_மாவட்டம்.

அன்புடன்
மு #மன்சூர்யாசின்
சேலம் மாநகர் மாவட்ட துணை #செயலாளர் #சிறுபான்மையினர் நலப்பிரிவு......... Thanks...

orodizli
1st May 2020, 12:51 PM
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றுரைத்த மகாகவி எப்போது வெற்றி பெறுகிறான்?,,வாடிய,வயிரை கண்டபோதெல்லாம் ஓடிசென்று காத்த வள்ளல் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனபின்புதான்...... Thanks...

orodizli
1st May 2020, 12:53 PM
😍🌹உழைக்கும் வர்க்கமே - நம்
வாழ்வின் சொர்க்கம்..
😍🌹உழைப்பவர்களுக்காக பிறர்
உழைப்பில் வாழ்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.,
உழைப்பாளர் தினத்தை..!!
உழைப்பவர்கள் நாம் தானே
உலா வருவோம் ,
உள்ளத்தால் மகிழ்ந்து - வாருங்கள்...!!
😍🌹உழைக்க தெரிந்தவன் மனித சாதி..
😍🌹உழைக்க தெரியாதவன் இனத்தின் ஏமாளி..
😍🌹உழைப்பாளர்கள் உயரவும்..
😍🌹களிப்போடும் வாழவும்..
😍🌹வியர்வை சிந்தினால் ,
😍🌹வாழ்வு வைரமாய் மின்னிடும்...!!
😍🌹உடல் எடை குறைக்க நடக்கும்
கூட்டம் இருக்கையில்..
ஒருவேளை உணவிற்கு ஓடி உழைக்கும்
கூட்டமும் இருக்க தான் செய்கிறார்கள்..!!🌹😍
😍🌹தனக்கான ஆடையை உடுத்தி கொள்ள ,
அடுத்தவர் உதவி நாடுவோர் கூட்டம் பலர்..!!
தாம் ஆடையை தானே நெய்து உடுத்தும் ,
எம் நெசவாளர் கூட்டமும் சிலர்..!!🌹😍
😍🌹விண்ணின் கூரை பிளந்து..
😍🌹எதிர்வரும் தடையை மாய்த்து..
😍🌹சொல்லும் செயலும் ஒன்றினைந்து..
😍🌹உழைப்புடன் உறுதியும் சுமந்து..
😍🌹💪வரும் காலங்களில் - நம்
வாழ்வு செம்மையாய்
ஓங்கிட செய்வோம்..!!!💪🌹😍

😍🌹தர்மத்தை காக்கவே
தரணியில் மலர்ந்த - எங்கள்
தர்ம தேவன்..
😍🌹எம் இதயம் வணங்கும் ,
எங்கள் மன்னாதி மன்னன் துணை இருக்க
உள்ளத்தில் உறுதிக்கு ஓர் பஞ்சமா..!! ?
😍🌹நினைத்ததை முடிப்பவரை
நினைவில் பூஜித்தாலே - நாம்
நினைப்பது எல்லாம் வெற்றி தான்...!!!🌹😍
😍🌹என் அன்பு நெஞ்சங்களுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்..🌹😍

😍🌹வாழ்வோம் மனம் மகிழ்ந்து..🌹😍

😍🌹🙏என்றும் நம் #புரட்சித்தலைவர் புகழ் ஓங்கி ஒலிக்கும்..!!🌹🙏😍

அன்பன்.,........
#தஞ்சை_சுபாஷ். 😍💪......... Thanks...

orodizli
1st May 2020, 01:02 PM
பத்திரிகையில் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை – உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கா நாட்டில் வெளிவரும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்......முத்துலிங்கம்...... Thanks...

orodizli
1st May 2020, 01:11 PM
தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின் ஏழைகளின் சிம்ம சொப்பனமான மிதிவண்டியில் இரண்டு பேர் செல்ல தடையை தகர்த்து எறிந்தார்
#புரட்சிதலைவர்
வகுப்பு வாரியமாக வேலை வாய்ப்பு வழங்குவதை அனைத்து பிரிவுகளிலும் ஏழை பணக்காரன் இருக்கிறான் ஆகையால் வேலைவாய்ப்பை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவருக்கு முன்னுரிமை என்ற சட்ட மசோதாவை நிறை வேற்ற வந்தார் தலைவர் அப்போது எதிர்கட்சியான கருணாநிதி முழுக்க தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஜாதி கலவரத்தை தூண்டிய தால் அது நிறைவேறாமல் போனதை நினைத்து இரத்த கண்ணீர் வடித்தார் #மக்கள்திலகம்
ஏழைகளை பற்றியே சிந்தித்து ஆட்சி புரிந்த ஒரே தலைவர்
#எம்ஜிஆர்........ Thanks...

orodizli
1st May 2020, 01:32 PM
உழைப்பவன் வியர்வை காய்யும் முன் உழைப்பின் ஊதியத்தை கொடு
தன்னோடு பங்கேற்றவர் அனைவரின் ஊதியம் வழங்க பட்டதா என அறிந்த பின் தான் தன் ஊதியத்தை பெறுவார் படத்தை முடிப்பார் எம்ஜிஆர்
தொழிலாளிக்கே தன் ஸ்டுடியோ நடத்த கொடுத்தவர் எம்ஜிஆர்

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...... Thanks...

orodizli
1st May 2020, 01:34 PM
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தினம் என்றால் மக்கள் திலகம் நினைவு இல்லாமலா?

தன் படங்கள் அனைத்திலும் உழைப்பவர் வாழ்வு மலரவும் உயரவும் வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தவர் அதற்காகவே வாழ்ந்தவர்.

அவர் படங்களிலிருந்து சில வரிகள்.

1) தானே தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில்

உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா

2) அடுத்து அதே படத்தில்
காடு வேளஞ்சசென்ன மச்சான் பாடலில்
"மாட உழைச்சவன் வாழ்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி"

3) அதே படத்தில் சிரிப்பு நடிகர்களுக்கான பாடல்
பாடு பட்டா தன்னாலே பலன் இருக்குது தன்னாலே

4) அடுத்து அவர் தயாரித்து இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

5) அடுத்து அவர் இயக்கி நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில்
தாயகத்தின் சுந்தந்திரமே எங்கள் கொள்கை பாடலில்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

6) அன்று வந்த மகாதேவி படத்தில் தாயத்து தாயத்து பாடலில்
உடம்ப வளைச்சி நல்லா உழைச்சு பாரப்பா உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு

7) அரசிளங்குமரி படத்தில் ஏற்றமுன்னா ஏற்றம் அதில் இருக்குது முன்னேற்றம் எல்லோரும் பாடு பட்டா இன்பம் விளையும் தோட்டம்..........
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறனும் வேலை செய்ஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறணும்

8) கன்னித்தாய் படத்தில் கேளம்மா சின்னப்பொண்ணு கேளு பாடலில்
ஏழை படும் பாடு அதில் எழுந்து நிக்குது வீடு அவன் இருப்பதுவும் படுப்பதுவும் குருவி வாழும் கூடு

9) படகோட்டி படத்தில்
உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்கை உயராதோ

10) தொழிலாளி படத்தில்
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

11) நீரும் நெருப்பும் படத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடும் பாடலில் ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ

இன்னும் சில பாடல்கள்

12) நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற பாடலில்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
13) உழைக்கும் கைகளே உருவாக்க்கும் கைகளே
14) கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
15) ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
16) நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
17) ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் பாடலில்
18) ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
19) சித்திரச் சோலைகளே

இன்னும் நிறைய உள்ளது.

மக்கள் திலகம் பொன்மன செம்மல் இல்லாமல் மே தினம் எனும் உழைப்பாளர் தினத்தை நினைக்க முடியுமா?

நண்பர்களே விட்டுப் போனதைப் பதிவிடுங்கள்......... Thanks...

orodizli
1st May 2020, 02:37 PM
நானும் ஸ்முல் மற்றும் ஸ்டார் மேக்கர் ஆப்களில் மொத்தமாக 2300 பாடல்கள் பாடி விட்டேன்! அதில் "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்" என்ற குடியிருந்த கோயில் தலைவர் பாடலை பாடமுடியவேயில்லை! மிகவும் சிரமப்படுகிறேன்! குரல் சில இடங்களில் உச்ச ஸ்தாயி, சில இடங்களில் மூச்சடக்கி தம் கட்டவேண்டியுள்ளது! கண்ணருகில் பெண்மை குடியேற-வில் தொடங்கி உலகையே மறந்து விளையாடு உகுகு உகுகு உகுகு ஹோ என முடிக்கவேண்டும்! மூச்சு விடாமல் முடிக்கவேண்டும்! T.M.சௌந்தரராஜன் மிகவும் சிரமப்பட்டிருப்பார்! குரல் சில சமயம் பிசிருகிறது! மூச்சு போகிறது! சில சமயம் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா சரியா வரவில்லை! இரண்டுமுறை பதிவு செய்து ட்ராப்ட்டில்(draft) சேமித்துள்ளேன்! எதற்கு சொல்கின்றேனெனில் தற்போது மூச்சுவிடாமல் பாடியது இது என அடிக்கடி பீலா விடுகிறார்கள்!நம் பாடக/ இசை வித்தகர்கள் எல்லாம் இப்படியா பீற்றிக் கொண்டார்கள்? எனது கணிப்பு:- ஒரு திறமையான வாய்ப்பாட்டு பாடகன் ஆகவேண்டும் என்றால் புரட்சித்தலைவனின் இந்த ஒரு பாடலை மட்டும் சாதனை செய்தால் போதும்! எப்படிப் பட்ட பாடலையும் பாடி விடலாம்!! பாடுவேன்! முடிப்பேன்! வெற்றி பெற்று உங்களுக்காக பதிவிடுவேன்! நம்பிக்கை இருக்கிறது. தலைவரை/ குரலழகரை/ மெல்லிசை மாமன்னரை வணங்கி எனக்கருள வேண்டும் என வேண்டிக்கொண்டு ஏகலைவனாகி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...காலை வணக்கம்!...... Thanks SR

orodizli
1st May 2020, 02:42 PM
MGR Filmography (1962 Film 55) Poster

1962ஆம் ஆண்டு சித்திரைப் பிறப்பன்று எம்ஜியாருக்குப் புத்துயிர் கொடுக்க வெளியானது தாயைக் காத்த தனயன்.அதே ஆண்டு சுதந்திர தினத்தில் முத்திரைபதித்தது எம்ஜிஆரின் அடுத்த படமான குடும்ப தலைவன்.

எம்ஜியாரின் ஆஸ்தான தயாரிப்பாளரில் ஒருவரான சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு வழக்கம்போல ஆரூர்தாசின் கதை வசனத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க, எம்ஏ திருமுகம் இயக்க, எம்ஜியார் படங்களில் தவறாது தோன்றும் சரோஜாதேவி, அசோகன், எம் ஆர் ராதா அனைவரும் நடித்தனர்.
மொத்தம் ஏழு பாடல்கள், ஏழும் ஹிட் ஆகின. மாறாதைய்யா மாறாது பாடலுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து அருமையாக இருந்தார்

வழக்கமான ஆக்ஷன் சீக்வன்ஸுகள் மட்டுமல்லாமல் எம்ஜியாருக்கும் அசோகனுக்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான கடைசி 15நிமிடங்ள் பல உணர்ச்சிகரமான காட்சிகளையும் கொண்டிருந்தது இந்தப் படம். எம்ஆர் ராதாவின் தந்தை வேடமும். பொய் சீதா(கதாநாயகி பெயர்) வேடமும் அதை அழகான சஸ்பென்ஸ்ஃபுல் த்ரில்லராகச் செய்திருந்ததும் எம்ஜிஆர் உண்மையான சீதாவை கண்டுபிடிப்பதும் படத்தின் வெயிட்டை அதிகரித்தன.
ஆக்ஷன், செண்டிமெண்ட், இசை போன்ற மசாலாக்களை எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து பர்ஃபெக்ட்லி பேக்கேஜ்ட் ஃபிலிம் என்பதற்கான உதாரணங்களில் இப்படமும் ஒன்றானது.120 நாட்கள் ஓடி வெற்றிபடமாகியதுடன் எம்.ஜிஆர்க்கு என்று குடும்ப செண்டிமெண்ட் உடன் கதைகள் எழுதபட்டன........ Thanks...

orodizli
1st May 2020, 03:36 PM
*வணக்கம்.*

*ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...*

*கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...*


*உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவது எங்கே சொல் என் தோழா...*

*உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே...*

*ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் குடுக்கனும்...*

*உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்...*

*உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...*

*நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே*
*இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே...*

*உழைப்பவரே உயர்ந்தவர்*
*மேதின வாழ்த்துகள்...*..........
💪🏻 🙏🏻........ Thanks...

orodizli
1st May 2020, 03:40 PM
கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்...

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்....

ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்...

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்...

காரில் தலைவர் செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்........ Thanks mr.Sendra Sigaram...

orodizli
1st May 2020, 04:55 PM
#சமூக நலத்திட்டங்களின் பிதாமகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்:

__________________________________

#மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் "அம்மா உணவகம்" இன்று அனைவராலும் பாரட்டப்படுகிற திட்டமாக உள்ளது. ஆனால் 1982ஆம் ஆண்டே புரட்சித்தலைவரின் சிந்தையில் உதித்த அற்புத திட்டம்தான் இது. புரட்சித்தலைவர் 1982ஆம் ஆண்டு செயல்படுத்திய் அந்த திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் "அம்மா உணவகம்".

________________________

*#விதவைகள், கைவிடப்பட்ட தாய்மார்களுக்கு வேலைவாய்ப்பு

*நியாய விலையில் பொருள்கள் வழங்கி, சமையற் கூடங்கள் அமைத்து மலிவு விலையில் இட்லி-தோசை-சாதம்.

________________________

#திட்டம்:

______

#இந்த திட்டத்தின் கீழ் விதவைகளும், ஆதரவற்ற தாய்மார்களும் பணிபுரிவார்கள்.

#முதலாவதாக இந்த திட்டம் 5 நகரங்களிலும் திட்டம் "ஏ"யின் கீழ் 30 பிரிவுகள் அமைக்கவும், திட்டம் "பி"யின் கீழ் 30 பிரிவுகள் அமைக்கவும் அரசு அனுமதி அளித்தது.

#முதற்கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

#தாய்மார்களே இந்த உணவு வகைகளை சுகாதாரமாக தயாரித்து தருவார்கள். பாக்கெட்டில் அடைத்து சுத்தமான முறையில் விற்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டது.

#சென்னை நகரில் பத்து பிரிவுகளும், கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் தலா 5 பிரிவுகளும் அமைக்கப்பட்டது.

#முதல் திட்டத்தின்படி இதனை ஏற்கும் தாய்மார்கள் தங்கள் வீடுகளிலேயே உணவு வகைகளை சமைத்து அவைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வார்கள். இந்தத் தாய்மார்கள் உணவு வகைகளை உள்ளூர் பள்ளிகளிலும், அலுவலங்கள் மற்றும் இதர பொது இடங்களில் விற்பார்கள்.

#சுகாதார உணவு:

_____________

#சுகாதாரத்தை காப்பதற்காக உணவு வகைகளை பைகளில் அடைத்து விநியோகம் செய்ய சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி செயல்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கடனில் 25 சதவிகிதம் மானியமாக தரப்படும். அது அதிகபட்சமாக 500 ரூபாய்க்கு மேல் இருக்காது.

#மானியம்:

_______

#இரண்டாவது திட்டத்தின்படி (பி வகை) ஒரு பொது இடத்திலிருந்து உணவுப் பொருகள் விற்பனை செய்யப்படும்.

#பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகிய சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் வாடகை கட்டிடம் ஒன்றில் உணவுகளை வைத்து விற்பனை செய்வது இதன் நோக்கமாகும் அல்லது வேலையற்றோர் அமைத்துள்ள சிற்றுண்டி ஸ்டால்கள் போல ஏற்படுத்தி அதன் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம்.கடை உரிமையாளரை தவிர இரு உதவியாளர்களையும் அவர்கள் அமர்த்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின்படி தொழில் தொடங்கும் பெண்களுக்கு உதவியில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 2500 ரூபாய் வரை மானியமாக கொடுக்கப்படும்.உணவுப் பொருள்களை நியாய விலையில் வழங்குதற்காக இந்த இரு திட்டங்களும் சிபாரிசு செய்யப்பட்டது.

#துரிதமாக செய்ய குழு:

_________________

#இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவும், அதனை மேற்பார்வையிடவும் சமூக நல இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.இந்தக் குழு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனிடமிருந்து நியாய விலையில் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுத் தரும்.

#இந்தத் தொழில் தொடங்க முன்வரும் தாய்மார்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெறவும், உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடைகளை அமைக்கவும் குழு உதவி செய்யும்.

#உள்ளூர் நிலைமைகள் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு உணவுப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் பொறுப்பையும் கமிட்டி ஏற்றுக் கொள்ளும்.

#குறுகிய காலப் பயிற்சி:

__________________

#இதில் ஈடுபடும் பெண்களுக்கு சமையல் செய்வதில் குறுகிய கால பயிற்சி ஒன்றும் தரப்பட்டது. சமையல் தொடர்பான முக்கிய பாடங்கள், சுகாதாரம் போன்றவற்றில் அவர்களுக்கு பயிற்சிகள் தரப்பட்டது. பயிற்சி காலத்திலேயே கடன் கொடுக்கும் வங்கிகளுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது........... Thanks mr.Jayaraman.........

orodizli
1st May 2020, 04:58 PM
*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...*

*ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.*

*அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .*

*"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.*

*1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.*

*அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.*

*திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!....... Thanks...

orodizli
1st May 2020, 05:11 PM
ஸ்ரீ MGR வாழ்க

சித்திரை 18 வெள்ளிக்கிழமை

முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது ஊழல் செய்து

அண்ணா திமுக ஒரு ஊழல் கட்சி என்ற பெயரை வாங்கிக் கொடுக்காத

உத்தமத் தலைவன் MGR

நம்வள்ளலுடன்இருப்பவர்

கன்னட நடிகர் ராஜ்குமார்

1966 ஆம் ஆண்டு பெங்களூரில்

கண் இழந்தோர்கள்கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது

நம்தங்கத்தலைவர் MGR

. ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

அப்போது நம்வள்ளல் கண்இழந்தோர்களுக்கு

50000 ரூபாய் நன்கொடையாக கொடுத்தார்

நம் வள்ளல் பேசும் போது நான் கால்ஒடிந்து வீட்டில் இருந்த போது

கண்இழந்தோர்கள் இரண்டுபேர்என்னை பார்க்க வந்தனர் .
நீங்கள் என்னைபார்ப்பதற்க்கு ஏன் சிரமத்துடன் வந்தீர்கள் என்று கேட்டேன்

அவர்கள் சொன்ன பதில் எங்களுக்கு கண் இல்லை என்றாலும்

உங்களை நாங்கள் தொட்டுப்பார்த்துகொள்கிறோம் என்று
என்னை தோட்டுப்பார்த்தார்கள்
அந்த அன்பை என்னால் மறக்க முடியவில்லை

MGR திமுகவில் இருந்த போது

இந்த நிகழ்ச்சி நடந்தது

இப்படி பட்ட வள்ளலுக்கு சில பூச்சிகள்

துரோகம் செய்ததை என்னால்

மறக்க முடியவில்லை...

++++++++++++++++++++++++++++++++++

இப்படிப்பட்ட தர்மங்களை எல்லாம் எம்ஜிஆர் நடிகராக இருந்த காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்து செய்து வருகிறார்

எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான் ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது

எம்ஜிஆர் இப்படிப்பட்ட தர்மங்களை செய்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் இன்னும் எம்ஜிஆர் கட்சி ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது

++++++++++++++++(+++++++++++?+++++

சினிமா உலகில் மார்க்கெட் இழந்த பலநடிகர் / பலநடிகை
மண்ணாங்கட்டி கள்அண்ணா திமுகவில் சேர்ந்தார்கள் /அவர்கள எம்ஜிஆர் கூடவே இருந்து குழி பறிக்க ஆரம்பித்தார்கள்

அந்த மண்ணாங்கட்டிகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்

தன்னுடைய சொந்த பணத்தில்

எம்ஜிஆரை போல் ஏழை மக்களுக்கு பண உதவி செய்திருந்தால்

அந்த மண்ணாங்கட்டியின் ரசிகர்கள்

முகநூலில் தங்களுடைய ஐடியில் பதிவாக வெளியிடவும்

+++++++++++++++++++++++/+++++/++

300 கோடியில் வளர்ப்பு மகனுக்கு கல்யாணம்

கஞ்சா வியாபாரம் செய்தார் எண்று

வளர்ப்பு மகனை சிறையில் அடைத்தார்கள்

+++++++++++++++++++++++++++++++

கல்லுக்கு நீதி சொல்ல முடியாது

பாறையில் நெல் விதைக்க முடியாது

மாயா உலகமடா பரமானந்தம்

சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்

குன்னக்குடிக்கு அன்னக் காவடிஎடுத்தாலும்

எம்ஜிஆரின் கால் தூசிக்கு யாரும் ஈடாக முடியாது..... இணையாக முடியாது....... Thanks PM.,

orodizli
1st May 2020, 05:19 PM
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.

உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .

கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்

ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்

புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........... Thanks...

orodizli
1st May 2020, 05:20 PM
தமிழ் மக்கள் எம் ஜி ஆருக்கு கொடுத்த ஆதரவு உலக சரித்திரத்தில் பொறிக்க வேண்டியது
எம் ஜி ஆர் பணத்தை விட மனிதநேயத்தை நேசித்தார் மக்கள் தங்களை விட எம் ஜி ஆரை அதிகம் நேசித்தார்கள்

தன்பசியை விட மற்றவர் பசி ஆறி பார்பதில் சுகம் கண்டார் எம் ஜி ஆர் மக்கள் எம் ஜி ஆர் புகழ் வளர்ச்சி கண்டு சுகம் பெற்றார்கள்

அனாதையாக வந்த தன்னை ஆளாக்கி நாட்டை ஆளவைத்த மக்களுக்கு அரணாக இருந்து காத்தார் எம் ஜி ஆர் மக்கள் தங்களை காத்த எம் ஜி ஆரை காவல்தெய்வமாக கொண்டாடுகிறார்கள்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்..... Thanks...

orodizli
1st May 2020, 05:21 PM
*“தாயே துணை”-தாயைத் தெய்வமாகப் போற்றிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!*

*“தாயில்லாமல் நானில்லை*
*தானே எவரும் பிறந்ததில்லை*
*எனக்கொரு தாய் இருக்கின்றாள்*
*என்றும் என்னைக் காக்கின்றாள்”*

*-‘அடிமைப் பெண்’ படத்தில் மக்கள் திலகம் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள். ‘அவள் தான் அன்னை மகாசக்தி’ என்று முடியும் பாடலில் வெளிப்பட்டிருக்கும் அவருடைய தாயின் மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்...*

*“அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்” – என்று பாடியிருப்பார் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ படத்தில்...*

*வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடியிருப்பார் ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தில்...*

*“அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி” என்று உணர்த்தியிருப்பார் ‘தொழிலாளி’ படத்தில்...*

*“தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்னல்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா?” என்றிருப்பார் ‘தாயின் மடியில்’ படத்தில்...*

*தெய்வத் தாய்’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, தாயைக் காத்த தனயன், குடியிருந்த கோவில் – இவை எல்லாமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களின் பெயர்கள்.*

*இதற்கெல்லாம் மூலம் எம்.ஜி.ஆர் தன்னுடைய தாய் ‘சத்யா அம்மையார்’ மீது வைத்திருந்த உண்மையான நேசமும், அன்பும் தான்...*

*இளமைக் காலத்தில் அவர் கஷ்டப்பட்டபோது, தாயின் அன்பு தான் அவரை அரவணைத்திருக்கிறது. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைத்திருக்கிறது.*

*தான் வசித்த ராமாவரம் தோட்டத்தில் “தாயிற் சிறந்த கோவிலுமில்லை” என்ற முதுமொழிக்கேற்ப தன்னுடைய தாய் சத்யா அம்மையாருக்குக் கோவில் எழுப்பி, தினமும் அங்கு வணங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.*

*எத்தனையோ கோப்புகளிலும், கடிதங்களிலும் கையெழுத்திட்டிருக்கிற புரட்சித்தலைவர் அதைத் துவங்கும் முன்பு “தாயே துணை” என்று தமிழில் எழுதியே ஆரம்பித்திருக்கிறார்.*

*மற்றவர்கள் தாயைப் பற்றி மேடையில் பேசுவார்கள், எழுதுவார்கள்...*

*ஆனால் தாய் மீது வைத்திருந்த பேரன்பைச் செயலில் காட்டி வாழ்ந்திருக்கிறார் சத்தியத்தாயின் மகத்தான புதல்வர்...*....... Thanks...

orodizli
1st May 2020, 05:22 PM
#புரட்சித்தலைவர்னா #யாரு???

சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.

தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.

குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...

"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?

தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...

ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...

"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"

"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."........... Thanks...

orodizli
1st May 2020, 05:23 PM
1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது

அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்

இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்

புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்

படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?

கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?

ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்

அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை

ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.

இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்

இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
என்று தலைப்பு செய்தியாக வந்தது

சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்............. Thanks...

orodizli
1st May 2020, 05:24 PM
��☘��☘��☘��☘��☘��☘

*��மலரும் நினைவுகள்....*

*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*

*விகடன் : -*

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?

*எம்.ஜி.ஆர் :-*

சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.

என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.

ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.

இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

*- விகடன் பொக்கிஷம்*.......... Thanks...

orodizli
1st May 2020, 05:25 PM
இனிய காலை வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#திருமணம்_அழைப்பு

எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.

நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்....... Thanks...

orodizli
1st May 2020, 05:26 PM
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்கிற நிலை. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துவிடலாம். ஆனால் பசி. அதற்கு வழி. பிதுங்குமா இல்லையா விழி..?

அந்த பிதுங்கும் விழிகளுக்கு வழி சொல்லியிருக்கிறது நம்ம ரேஷன் கடைகள். மொத்தம் கிட்டத்தட்ட 35000 நியாயவிலை கடைகள். ஏழு கோடி தமிழ்மக்கள். கிட்டத்தட்ட 2 கோடி ரேஷன் அட்டைகள்.

நம்ப முடிகிறதா இப்படிப்பட்ட சூழலை இன்றைய அரசு இலகுவாக சமாளிக்கக் காரணம் ஒரு மாமனிதன். அம்மாமனிதனின் தொலைநோக்கு பார்வை. அந்த மனிதனின் பசியறிந்த மனசு.

யார் அவர்..?

ஆம். புரட்சித்தலைவர் எம்ஜியார்.

இந்த சினிமாரக்காரனுக்கு என்ன தெரியும் நிர்வாகம் பற்றி..? அந்தாளு கூட ஒரு நூறு விசிலடிச்சான் குஞ்சுகள் சுத்திகிட்டு திரியுவானுக அவனுகளுக்குலாம் அரசு நிர்வாகம் ன்னா என்னான்னு தெரியுமா..? அதுவுமில்லாம அந்த நடிகன் கூட இருப்பவனெல்லாம் படிக்காத ஆட்கள். இதுகளை லாம் வச்சிக்கிட்டு இந்தாளு எண்ணத்தப் பண்ணிடுவான்னு பார்த்திடுவோம்.

இப்படி எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானவர் வேறுயாருமல்ல நம்ம மக்கள் திலகம் எம்ஜியார் தான்.

அப்படிப்பட்டவர் தான், 1980 இல் ஒரே ஒரு கையெழுத்தில் 22000 கடைகளை திறந்தார். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்பதை இலக்காக கொண்டு இந்த structure ஐ மிகச்சிறப்பாக உருவாக்கி, அவசர காலத்திற்கு தமிழனுக்கு உணவாக்கிய, உன்னதமான மனசு நம் தலைவருடையது.

அது மட்டுமா தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் PHC மருத்துவமனைகளை ஏற்படுத்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரரும் அவரே.

சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு முன்பே இதன் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றியவர்
மக்கள் திலகம். அதனால் தான் அவர் மக்களின் திலகம்.......... Thanks...

orodizli
1st May 2020, 05:28 PM
எம்ஜிஆர் பக்தர்களே

1974 ஆம் ஆண்டு நடந்த அற்புதம்

அண்ணன் சிவாஜி அவர்களின் அதிகபடங்களுக்கு கதைவசனம் எழுதிய வர்
A.L.நாராயணன்

இவர் MGR அவர்கள் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில்

உதவி வசனகர்த்தாவாக அறிமுகமானவர்

A.L. நாராயணன் எழுதி வெளியிட்ட

அவர்வாழ்க்கை வரலாறு புஸ்தகத்தில்

இந்த செய்தி வந்துள்ளது

இந்த செய்தியை நம்பாதவர்கள்

இப்போது உயிரோடு உள்ள

A.L.நாராயணனிடம் கேட்டுக்கொள்ளவும்

/////////////////////////////////////////////$$$$/////

நான் வசனம் எழுதியபடம் ஒன்று சத்தியாஸ்டுடியோவில் படம்எடுத்துக்கொண்டுஇருந்தனர்

ஆகவேநான் அங்கு சென்றுஇருந்தேன் .

MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிது
வெளியூர் சென்று கூட்டத்தில் பேசிவிட்டு
அன்று சத்தியா ஸ்டுடியோ வந்திருந்தார்

இதையறிந்த நான்

MGR அவர்களைசந்திக்க. அவருடைய அறைக்குசென்று அவருடன் பேசிக்கொண்டுஇருந்தேன்

அப்போது வெளியூரில் இருந்து வந்த தந்தையும் மகனும்

MGR அவர்களை சந்தித்தார்கள்
தந்தைஅவர்கள் எம்ஜிஆர் அவர்களிடம் என்னுடைய மகன் அதிகமார்க் எடுத்துள்ளான்

மெடிக்கல் காலேஜில் இவனுக்கு இடம்தரமறுக்கிறார்கள் /

ஆகவே நீங்கள் என்மகனுக்கு டாக்டர் சீட் வாங்கித்தரவும்
என்று கூறினார்/

அதற்கு MGR அவர்கள் மெடிக்கல்காலேஜில்
சீட்கிடைத்தாலும் 5 வருடம் ஹாஸ்டலில்
தங்கி படிக்க வேண்டும் அதற்கு சில லட்சம்
செலவு ஆகும் பணத்திற்க்கு என்ன. செய்வீர்கள்என்றுகேட்டார் அதற்கு அந்த தந்தை எங்களுக்கு ஒருவீடுஉள்ளது
அதைவிற்றும் கடனை வாங்கியும்படிக்க வைக்கிறேன் என்று கூறினார்

பிறகு MGR அவர்கள் அந்த மாணவனின்
மார்க்லிஸ்டைப்பார்த்தார் பிறகு பல மெடிக்கல்கல்லூரிக்கு போண்செய்தார்
கடைசியில் அந்த மாணவனுக்கு சீட்
கிடைத்துவிட்டது இதை அறிந்த மாணவனும் / தந்தையும் MGR அவர்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டுவெளியேரினார்கள்

உடனே MGR அவர்கள் சத்யாஸ்டுடியோ முன் கேட்டில் உள்ள காவலாளியை

இண்டர்காம்போண் மூலம் அழைத்து
தந்தையும் மகனும் வெளியே வருகிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லுகின்ற செய்தியைசொல்லிவிடுங்கள்

இந்த மாணவனின் 5 வருட மெடிக்கல் காலேஜின் / புஸ்தக சிலவு சாப்பாட்டு சிலவு
ஹாஸ்டல்பீஸ் அனைத்தையும்

MGR அவர்கள்

ஏற்றுக்கொண்டார்என்று சொல்லிவிடுங்கள் இதைகேட்டவுடன்
என்னைசந்தித்து நன்றிசொல்ல என்னிடம் அவர்கள் வருவார்கள்

அவர்களை என்னிடம் வர விட வேண்டாம்

அவர்களிடம் உங்கள் மகன்
டாக்டரானவுடன் வந்து MGR பார்க்க சொன்னார் ஆகவே நீங்கள் உங்கள் ஊருக்கு
செல்லுங்கள் என்று சொல்லிவிடவும் எண்று

MGR கூறினார்

இதைக்கேட்டவுடன் நான்
அசந்துவிட்டேன்

இதனால்தான் தமிழ்

நாட்டுமக்கள்இவரை தெய்வமாக நினைத்து

முதலமைச்சர்பதவியில் அமர்த்தினார்கள்

இவ்வாறு AL நாராயணன் எழுதிஉள்ளார்....... Thanks.........

orodizli
1st May 2020, 05:47 PM
திரை உலகில் எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்ட நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

எம்ஜிஆர் படங்கள் என்றாலே முதலில் அவருடைய பாடல்கள் .

எம்ஜிஆரின் புதுமையான சண்டை காட்சிகள் .

எம்ஜிஆரின் இனிமையான காதல் காட்சிகள் .

எம்ஜிஆரின் மாறு பட்ட நடிப்பு.

எம்ஜிஆரின் அறிவுரை காட்சிகள்.

எம்ஜிஆர் படம் என்றால் பொழுது போக்கு படமாகவும் , மக்களின் மன மகிழ் படமாகவும் சமுதாய சீர்திருத்த படமாகவும் இருந்தது .

எம்ஜிஆரின் கொள்கை - பிரகடனங்கள் .

1947 முதல் 1978 வரை வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களை எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லா கட்சியினரும் , பெண்களும் பார்த்து மகிழ்ந்தனர் .

எம்ஜிஆர் படங்களுக்கு repeated audience ஏராளம் . எனவேதான் அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியது .

எம்ஜிஆரின் சினிமா - அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ள முடியாதவர்களின் வாதங்கள் எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் முன் மங்கி விட்டது .

எம்ஜிஆரின் செல்வாக்கு - புகழ் இரண்டையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வெற்றி பெற்றவர்கள்காங்கிரஸ் முதலாளிகள் .அவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றர்கள்.கட்சியில் கூட்டு வைத்தும் வெற்றி பெற்றார்கள் .

தோல்விகளுக்கு ஆயிரம் கரணங்கள் கூறலாம் . வெற்றிக்கு ஒரே காரணம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் ...... Thanks...

orodizli
1st May 2020, 05:48 PM
எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.

இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.

ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.

படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.
தமிழக அரசியலில் மறக்க முடியாத எழுத்தாளர் சோலை!- சில நினைவுகள்

எம்ஜிஆருடன் அறிமுகம்
நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார்.
ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார். திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, "கடைசி வரை என்னுடன் இருப்பாயா?" என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.
எம்ஜிஆரின் பெருந்தன்மை
எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்து, அண்ணா பத்திரிக்கை விளம்பரத்தில் ஆசிரியர் சோலை என வெளிவந்தது. விளம்பரத்தை எடுத்துக்கொண்டு நேராக எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று, ஆசிரியர் என உங்கள் பெயர் போடுவதுதானே சரி என கேட்டார் . அதற்கு எம்.ஜி.ஆர்.,"வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐ விட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்" என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, ஆசிரியர் எம்.ஜி.ஆர்., துணை ஆசிரியர் சோலை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அனால் விளம்பரத்தில் துணை ஆசிரியருக்குப் பதில் இணையாசிரியர் சோலை என்றே போடச் சொன்னார் எம்ஜிஆர்.
வினோபா பாவேயின் சீடருக்காக
எண்பதுகளின் துவக்கத்தில், காந்தியவாதி வினோபா பாவே பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் அவர்களின் குரல் நக்சல் இயக்கத்திற்கு ஆதரவானது என கருதி தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட எனது அப்பா, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க ஆற்காடு முதலி சாலைக்குச் சென்றார். எப்பொழுது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கக்கூடிய நபராக இருந்தாலும் முன் அழைப்பு இல்லாமல் அதற்கு முன் வரை சென்றதில்லை. ‘‘அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை தகர்க்கும்,'' என தன் உள்ளக் குமுறலை வெளிபடுத்தினார்.
சோலையின் மற்றுமொரு முகத்தை கண்ட எம்.ஜி.ஆர். சாப்பிடக் கூட மனமின்றி அடுத்த நாளே தருமபுரியில் இருந்த அதிகாரிகள் அத்தனை பேரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதன் அவர்களை அழைத்து அடையாளம் காட்டச்சொன்னார். ஆனால் ஜெகநாதன் அவர்களோ, "நடவடிக்கை வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார். ஏனெனில் அடித்த அதிகாரி, ஜெகநாதன் அவர்களின் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர் என்ற தகவலையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அய்யா ஜெகநாதன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு சமீபத்தில் விஜய் தொலைகாட்சி "சிறந்த பெண்மணி" விருது கொடுத்து கௌரவித்தது.
எம்ஜிஆர் தந்த வீடு
ஒரு முறை எம்.ஜி.ஆர். எனது தந்தையை அழைத்து பெரியகுளம் தொகுதி தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியும் திட்டவட்டமாக மறுத்து, அவர் நண்பருக்கு அந்த தொகுதியைப் பரிந்துரை செய்ய, அந் நண்பரும் அத்தேர்தலில் வெற்றி கண்டார்.
அப்பாவுக்கு சொந்த ஊரில் வீடு இல்லை என அறிந்த எம்.ஜி.ஆர், பொருளுதவி செய்து, புதுமனை புகுவிழாவிற்கு தனது அமைச்சர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினார்.
எங்களது குடும்ப நபர்கள் சென்னையில் இருத்த சமயம் என்பதால், அந்த விழாவிற்கு, அவ்வூரிலிருந்த தனது தங்கையை தவிர யாருக்கும் தெரிவிக்க வில்லை. நானோ எனது உடன் பிறந்தவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை. எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்ததுண்டு , அனால் குடும்பதினர் யாரையும் எந்த ஒரு அரசியல் பிரமுகருக்கும் அறிமுகப்படுத்தியது இல்லை என் தந்தை. வார்டு கவுன்சிலர்கூட தனது அதிகார வட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தும் சூழ்நிலையில், தனது செல்வாக்கை தானும் பயன்படுத்தியதில்லை, தனது குடும்பத்தினரையும் பயன்படுத்த அனுமதித்ததில்லை.
அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .

ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,

அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .

இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .

இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....

கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .

தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது ....... Thanks...

orodizli
1st May 2020, 05:48 PM
நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை

திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்

திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்

உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்

தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்

தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்

குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்

வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்

வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்

கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்

உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்

தரக்குறைவான வசனங்களை பேசாதவர்

எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்

இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்

இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....

நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து...... Thanks...

orodizli
1st May 2020, 05:50 PM
திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.

இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.

கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.

எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்......... Thanks....

orodizli
1st May 2020, 05:50 PM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
'அன்னை மடியை விரித்தாள் எனக்காக' எனும்போது கைகளை விரித்துகாட்டுவார்!
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார்.
கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!...... Thanks......

orodizli
1st May 2020, 08:05 PM
எஸ்! வீ!! சேகர்!!
--------------------------
மனித நேயத்தின் பொருளைப் பார்த்தோம் என்றால்-
தானம்,,தர்மம்,,கொடை,,உதவி--இப்படிப் பலவகை நற்காரியங்களுக்கும் அடிப்படை மனித நேயேம் தான்!
அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மேல் காட்டும் அன்பு என்றாலும்-
எந்தவித பிரதியும் எதிர் நோக்காமல்,,அதே சமயம் அடுத்தவர் மீது அன்பு காட்டுதலையும் மீறி,,அவரைத் தானாக நினைத்துக் கொண்டு அவருக்கு உதவுவது மனித நேயம்!! அந்த மனித நேயம் புரிவதில்-
இன்றைய உதாரணமாகத் திகழும் மிகச் சிலரில் எஸ்.வி.சேகரையும் கொள்ளலாம்!
கொரானா வில் பாதி இறந்து,--
குரானில் நல்வழித் தேட விழையும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கஞ்சி ஊற்றும் மார்க்கமாக ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ என்ற வகையில் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவி வருகிறார், எஸ்.வி.சேகர்!
மதம் பார்த்துப் பழகினால் வம்பு!
மனம் பார்த்துப் பழகினால் அன்பு!!--இந்த இலக்கணத்தை இனிய முறையில் பேணுபவர்களில் நமக்குத் தெரிந்து சேகரும் ஒருவர்!
இந்த உதவி மட்டும் என்றில்லாமல்--
வருடந்தோறும் மாணவர்கள் சிலருக்கு மடிக் கணிணி,,
அவர்கள் படிப்புக்கான நிதி உதவி..
மாற்றுத் தொழிலாளிகள் சிறக்க,,அவர்களுக்குப் பொருளுதவி--இப்படிப் பல வகையிலும்,,தமது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். அதையும் சத்தம் இல்லாமல் செய்கிறார்!!
உங்களுக்கு இப்படி உதவுவதில் உந்து சக்தி யார் என்று கேட்டால்--
WHETHER EAST OR WEST
M.G.R. JS THE BEST!!--என்று சொல்லி சிரிக்கிறார்!!
அ.தி.மு.க அரசின் இன்றைய செம்மையான ஆட்சியைப் பாராட்டும் அதே சமயம்--
தி.மு.க என்ற தீய சக்தியைக் களத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும். அதை அ.தி.மு.க வால் மட்டுமே செய்ய முடியும்-- அதற்கு அக்கட்சி,,
எம்.ஜி.ஆர்,,ஜெ இருவரை மட்டுமே கட்சியில் முன்னிலைப் படுத்திக் கொண்டு செல்லவேண்டும் என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
அ.தி.மு.கவுடனான புரிதலுடன் கூடிய இவரது தொடர்பைப் பதிவிலுள்ள படத்திலிருந்து அறியலாம்!
மனதில் எதையும் வைத்துப் பழகத் தெரியாதவர் மேடம் என்பது இவரது அனுபவம் உரைக்கும் வார்த்தை/
சோவுக்கும்,,ஜெவுக்கும் சரியானப் புரிதல் இல்லாமல் இடைப்பட்ட சிறிது காலம் இருந்தபோது இருவரிடமும் தைரியமாகத் தமது கருத்தை உரிமையுடன் கூறி,,அவர்கள் இருவரும் இணையப் பின்புலமாக இவர் செயல்பட்டதைக் கேட்கும்போது பிரமிப்பாகவும் இருக்கும். பெருமையாகவும் இருக்கும்!
அந்த நிகழ்வை அப்படியே இங்கே விவரிக்க இயலாத நிலை?
எல்லாரும் சொல்றா மாதிரி இல்லே,
மேடத்துக்கிட்டே ரொம்ப தைரியமா யாரு வேணாப் பேசலாம். ஆனா நம்ம மனசுல ஏதாவது குறுக்கு புத்தி இருந்தா தான் பிராப்ளம்! அவங்க ரொம்ப ஷார்ப். ஈஸியா கண்டு பிடிச்சுடுவாங்க என்று சர்ட்டிஃபிகேட் தரும் சேகரின் வார்த்தைக்கு உதாரணம்--
திரு சைதையாருக்குக் கிடைத்த மேயர் பதவி!
மேடம்,,சைதையார் மாதிரியான சீனியர்களுக்கு உரிய பதவி கொடுத்தா நன்னாயிருக்கும் என்று சைதையாருக்காக,,ஜெ விடம் துணிச்சலாகப் பேசினாராம் சேகர்??
இதை நம்மிடம் சேகர் சொல்லவில்லை.
சைதையாரே நம்மிடம் தெரிவித்தது இது!!
திட்டம் போட்டு வருஷக் கணக்காக் காத்திருந்து வேலை செய்ய ஒரு கூட்டமே மேடத்துக்குப் பின்னால் வேல செய்யும்போது நம்ம மாதிரியான ,,,நேராப் பேசறவங்களுக்கு சங்கடம் தானே?
சேகர் வைக்கும் பொடியில் காரமும் சாரமும் இருக்கத் தான் செய்கிறது!
தேசத்தைப் பத்தி உண்மையாக்க் கவலைப்படும் மனிதர்கள் தாம் இப்போதைய இந்திய அரசியலுக்குத் தேவை!!
சேகர் மாதிரியானவர்களை மத்திய அரசோ,,மானில அரசோ உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நம் அவா!!
இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இன்ன பிறர்க்கும் சேகர் செய்து வரும் உதவிகளுக்காக அவரைப் பாராட்டலாம் தானே பாச உறவுகளே???!!!........ Thanks.........

orodizli
1st May 2020, 08:13 PM
தற்போது சன் தொலைக்காட்சி புதிய படம் தனுஷ், சினேகா நடித்த பட்டாசு படம் ஒளிபரப்பாகிறது... ஒரு காட்சியில் சினேகா தனுஷிடம் "எம்.ஜி.ஆர்." மாதிரி மாப்பிள்ளை பார்க்க போகிறோம் என சொல்லும் காட்சி வருகிறது... மக்கள் திலகம் பெயர் வராத புது படமா?! என்ன?......��

orodizli
1st May 2020, 08:26 PM
1957 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தலைவர் ஒரு ஜோடி சிங்கம் வாங்கினார்...அவை ஸ்வஸ்திக் பிலிம்ஸ் அரங்கில் பராமரிக்க பட்டன...

ஒரு மதியம் பள்ளி விட்டு வந்த பெரியவர் சக்கிரபாணி அவர்களின் குழந்தைகள் அந்த சிங்கங்களை பார்க்க அழைத்து செல்ல பட்ட போது அப்படி ஒரு துர்நாற்றம் அங்கே.. அவர்கள் வாந்தி எடுத்து விடுகின்றனர்.

சிறிது நாட்கள் கழித்து ஒரு பெரிய கூண்டு தயார் ஆகி அவை அங்கே அடைக்கப்பட்டன. நம்மவர் போய் அடிக்கடி பார்வையிட்டு வந்தார்...

ராஜா ராணி என்று அந்த சிங்கங்களுக்கு பெயர் வைக்க பட்டன.
தோட்டகாரர் மணி சமையல் வேலைகள் தவிர அந்த சிங்கங்களுக்கு நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை அவைகளுக்கு உணவாக கொடுத்து பராமரித்து வந்தார்.

ஒரு நாள் பவானி என்ற படத்தின் படப்பிடிப்பு அந்த ஸ்வஸ்திக் அரங்கில் மாடியில் நடைபெறும் போது சிங்கங்களை நடைப்பயிற்சி போல அழைத்து கொண்டு வாசல் கேட் அருகில் சங்கிலிகளுடன் அழைத்து கொண்டு மணி வர.

ராணி சிங்கத்தின் சங்கிலி சற்று தளர்ந்து இருக்க ராஜா சிங்கத்தின் கண்ணில் ஏதோ காயம் போல இருக்க அதை மணி அவர்கள் பார்த்து கொண்டு இருக்கும் போது.

சற்றே திறந்து இருந்த வாசல் கேட் வழியாக ராணி சிட்டாய் வெளியே ஓடி எதிர் பக்கம் ஒரு கம்பில் கட்ட பட்டு இருந்த ஒரு எருமை மாட்டை முழு பலம் கொண்டு ராணி அறைய.

நகங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அந்த மாடு தப்ப மாடு முழுபலம் கொண்டு கட்ட பட்டு இருந்த கம்பை பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடிக்க.

படப்பிடிப்பில் இருந்த நடிகர்கள் மேலே இருந்து பார்த்து கொண்டு இருக்க இரண்டு வீடுகள் தள்ளி ராவ் பகதூர் ராம சாஸ்திரி வீட்டில் சிங்கம் நுழைய.

அவர் தங்கை அலறி வீட்டுக்குள் ஓடி கதவை மூடி கொள்ள...சிங்கம் கதவை சுரண்ட...அதற்குள் ராஜாவை கட்டி போட்டு வந்த மணி ராணி அருகில் போக ராணி அவர் மேல் பாய இருவரும் உருண்டு புரண்டு தன் கையில் கொண்டு வந்த ஒரு சுருள் கம்பி போல இருந்ததை கொண்டு ராணி வாயில் நுழைக்க அதன் இரண்டு பற்கள் தெறித்து கீழே விழ.

பின் ஒருவழியாக அந்த ராணியை தூக்கி கொண்டு கூண்டில் கொண்டு மணி போட்டு காயம் கண்ட இடத்தில் ரத்த கசிவு நின்ற பின் உணவு கொடுக்கப்பட்டது.

சில மாதங்களில் ராஜா இறந்துவிட 6 மாதங்கள் கழித்து பதப்படுத்தப்பட்ட அதன் உடலை முதலில் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் பின் தலைவரின் ராமாவரம் வீட்டில் தலைவர் மாடிக்கு போகும் படிகள் இருக்கும் அறையில் அந்த ராஜா வைக்க பட்டு பின் தலைவரின் நினைவு இல்லத்தை இன்றும் அலங்கரித்து கொண்டு இருக்கிறது.

கொஞ்ச காலம் கழித்து மூர் மார்க்கெட் அருகில் முதலில் இருந்த மிருகக்காட்சி அரங்கில் விட பட்ட ராணி பின் சென்னை வண்டலூர் zoo வில் விடப்பட்டு அங்கே இறந்தது.

தலைவர் நடித்த அடிமைப்பெண் சிங்கத்துக்கும் தலைவர் நினைவு இல்லத்தில் இருக்கும் சிங்கத்துக்கும் தொடர்பு கிடையாது என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.

சிங்கம் வளர்த்த தங்கம் எம்ஜியார் புகழ் வாழ்க

நன்றி...தொடரும்....உங்களில் ஒருவன் நெல்லை மணி...

மேலே சொல்லப்பட்ட ராஜா ராணி சிங்கங்கள் தலைவரின் நாடோடிமன்னன் படத்தில் நடிக்க வாங்க பட்டு பின் முடிவுகள் மாற்றி கொள்ளப்பட்டன.......... Thanks Nellai Mani...

orodizli
1st May 2020, 08:30 PM
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சுடச்சுட சாப்பிட வெண்பொங்கல் கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆர்.!
சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"......... Thanks...

orodizli
1st May 2020, 08:37 PM
"கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்!" - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
�� அத்தியாயம் : 7��

நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.

அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே! தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார்.

ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.

நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார்.

சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.

வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி.

ராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது. ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.

வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே, ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார்.

அங்கே தாயும் அண்ணியாரும் பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

“ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.

“இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு விறுவிறுவென

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...
தொடரும்...
Posted : M.G.Nagarajan
1 May 2020 6:56 PM
Thanks for :
Published : Naveenan
Vikatan Vanna Thirai
யாழ் இணையம்......... Thanks...

orodizli
1st May 2020, 09:05 PM
ஊழலை எதிர்த்து உழைப்பை மதித்து உழைப்பவர்களை பாதுகாத்திட உழைப்பவர்களை உயர்த்திட.....
பல தியாகிகளின் ரத்தம் சிந்தி ஆரம்பித்த கட்சி....
நமது புரட்சித்தலைவர் ஊழலை இல்லாமல் லஞ்சம் இல்லாமல் மக்களை வைத்து பணம் பார்க்காமல் அவரு உழைப்பால் சம்பாதித்த அவரது சொத்தையும் மக்களுக்காகவே அள்ளிக்கொடுத்த நாம் நேரில் பார்த்து பழகிய வள்ளல்...
நமது புரட்சித் தலைவர் ஆட்சியில் லஞ்சம் இல்லை ஊழல் இல்லை ஏன் நமது புரட்சித்தலைவர் இருக்கும் வரை எதிர்க் கட்சி கருணாநிதி அவர்கள் மெரினா பீச்சில் ஓய்வெடுத்தார்...
புரட்சித்தலைவர் மறைந்த பிறகு கருணாநிதி அவர்கள் முதலமைச்சரான பிறகு கண்ணில் எண்ணெய் ஊற்றி புரட்சித்தலைவர் ஆட்சியில் ஊழல் நடந்ததா என்று தனி படையை வைத்து தேடிப்பார்த்தேன் அலசி ஆராய்ந்து பார்த்தால் அதில் அவருக்கு கிடைத்த தகவல் நமது புரட்சித்தலைவர் உழைத்து சம்பாதித்த அவரது சொத்துக்களை விற்றதாக தான் அவருக்கு தகவல் கிடைத்தது தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை ஏன் நமது புரட்சித் தலைவர் ஆட்சியில் இருந்தபோது எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் யார் மேலேயும் குற்றம் சாட்ட முடியவில்லை.
1987 வரலாறு மாறியது இதை யாராலும் மறுக்க முடியாது....
இன்று உழைப்பாளர் தினத்தன்று தலைவர் சொன்னது போல் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு 2021 இதுவும் மாறும் என்று எதிர்பார்ப்போம்......... Thanks.........

orodizli
1st May 2020, 09:08 PM
தற்போது (01-05-2020) இரவு 7 மணி முதல் புதுயுகம் டிவியில் "பெற்றால் தான் பிள்ளையா" திரைப்படம் ஒளிபரப்பாகி கொன்டிருக்கிறது
அடுத்த வாரம் சன் லைப் டிவியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் திரைப்படங்கள்
O3 - 05-2020 திங்கள் காலை 11 மணிக்கு "நாளை நமதே "
05-05-2020 புதன் காலை 11 மணிக்கு "வேட்டைக்காரன்"
O7-05 2020 வெள்ளி காலை 11 மணிக்கு "ஆனந்த ஜோதி " ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும்
தகவல் : மதுரை ராமகிருஷ்ணன்....... Thanks...

orodizli
1st May 2020, 09:12 PM
வரும் வாரம் சன் டிவியில் இரவு காவியங்கள் ஒளி பரபாகும் விபரங்கள்... மே 5ம் தேதி "ரிக்க்ஷாக்காரன்"......... மே 7ம் தேதி "குடியிருந்த கோயில்".........

orodizli
1st May 2020, 09:54 PM
ஆமாம். யாரையும் கூட்டி கட்சி ஆரம்பிக்கலாமா? வேண்டாமா! இது சரியாக வருமா?! முதல்வர் பதவி யாருக்கு?! என்றெல்லாம் ஆலோசிக்காமல் தலைவர் நீதான் கட்சி இதுதான் என்று ரசிகர்களாகிய தொண்டர்களால் துவங்கப்பட்ட கட்சி இது. உலக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது இல்லை. இதுவே சரித்திரம், சாதனை, சகாப்தம்......... Thanks to mr.Thiagarajan.........

orodizli
1st May 2020, 09:58 PM
எங்கவீட்டுப்பிள்ளை அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு பின் அதன் வெளியீடு உரிமையை ஒரு சில இடங்களுக்கு வாங்கி இருந்த தலைவர் மிக பெரிய லாபம் பெற்றார்.

நடித்த சம்பளம் போக அதிலும் பணம் கொட்டியதால் ஒரு நாள் 5 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் நாகிரேட்டி அவர்களிடம் சேரும் படி கொடுத்துவிட.

இரு நாட்களுக்கு பின் 5 லட்சத்தி ஒரு ரூபாய் பணத்தை இது உங்களையே சேரும் என்று அவர் திருப்பி கொடுத்து விட.

அப்படி நல்லவர்கள் இருந்த சினிமாத்துறை இன்று...

வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன்...நெல்லை மணி........ Thanks...

orodizli
1st May 2020, 11:20 PM
"எம்.ஜி.ஆரின் பலமே; அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிதான்".

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான் எல்லாமுமாக நினைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.

தன் அண்ணனின் திடீர் மறைவை எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போய்விட்டது போல் உணர்ந்தார். அதன் காரணமாகவோ என்னவோ அண்ணன் மறைந்த ஒரு வருடத்திலேயே தானும் விண்ணுலகை அடைந்துவிட்டார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி மறைந்த அன்று ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியை எம்.ஜி.ஆரின் விசுவாசி இப்போது வெளியிட்டுள்ளார். அதில்:
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் திரு. எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னும் உடல் நிலை சீரடையாமல் 1986 ஆகஸ்ட் 17ஆம் நாள் இரவு 12.00 மணி அளவில் உயிர் பிரிந்தது.
அண்ணனின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி அம்மையாருடன் அன்று இரவு 8 மணிக்கு மருத்துவமனை வந்தடைந்தார். அண்ணன் உயிர் பிரியும்போதும் அருகிலேயே இருந்த எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
எம்.ஜி.ஆருடன், சக்கரபாணியின் மனைவி மீனாட்சி அம்மாளும், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையிலிருந்த சக்கரபாணியின் இல்லத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எம்ஜிஆர் ஒரு பெரிய மலர் மாலையை தன் அண்ணனின் உடல்மேல் சார்த்திவிட்டு மீண்டும் கதறி அழுதார். கவர்னர் குரானா எம்ஜிஆரை தேற்றினார். பின் எம்.ஜி.ஆரை அருகில் உள்ள அறையில் அமர வைத்தனர்.
மறுநாள் உடல் அடக்கத்தின் போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் வந்தனர். திரு.கருப்பையா மூப்பனார் அவர்கள் எம்ஜிஆருடனேயே கடைசி வரை இருந்தார். இறுதிச் சடங்கின் போது சக்கரபாணிக்கு வாய்க்கரிசி போடும் நிலையில் எம்.ஜி.ஆர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.
அவர் கையிலிருந்த அரிசியை அண்ணனின் வாயில் போட எம்.ஜி.ஆரால் இயலவில்லை. சூழ்நிலையை உணர்ந்த மூப்பனார் அவர்கள், எம்.ஜி.ஆரின் கையை பிடித்து தட்டிவிட அரிசி அண்ணனின் வாயில் விழுந்தது. பிறகு எம்ஜிஆரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றனர்.

Posted : M.G.Nagarajan
1 May 2020 9:31 PM
Thanks for : Vinoth R
Film beat Tamil News
Published : 19:10 IST...... Thanks...

orodizli
2nd May 2020, 08:03 AM
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும.........
மூன்று எழுத்து நாவிலிருக்கும்........

பேரில் என்ன இருக்கிறது என்பார்.........
சேக்ஸ்பியர்.

சமீபத்தில் கோவைக்கு ஒரு கல்லூரியில் உரையாற்ற சென்று விட்டு சென்னை திரும்புவதற்கு கோவை ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்தேன்.

புகை வண்டிகள் வருவதற்கான அறிவிப்பு வருகிறது உன்னிப்பாக கவனித்து கேட்டேன் "புரட்சி தலைவர் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையம்" செல்லும் கோவை விரைவு வண்டி 3 ம் நடைமேடையில் வரவிருக்கிறது...
மறுபடியும் அறிவிப்பு. ஆங்கிலத்தில் ஹிந்தியில் மூன்று முறை வருகிறது.
ஒவ்வொரு தொடர்வண்டிக்கும்
ஒவ்வொரு அறிவிப்பிலும் தலைவர் பெயர் உச்சரிக்கப் படுகிறது .

இங்கு ஒரு சிறிய கணிதம்...
எம்ஜிஆர். சென்ட்ரலில் இறங்கி நிலைய அதிகாரி யிடம் சென்று
விவரங்கள் சேகரித்து ஒரு சிறிய கணக்கு போட்டேன்...

சென்னை எம் ஜிஆர் சென்ட்ரலிருந்து கிளம்பும் இரெயில் வண்டிகள்: 103

103 வண்டிகளும் வழிதடத்திற்கேற்ப 2லிருந்து 40ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

(உதாரணமாக சென்னையிலிருந்து மும்பைக்கு 11வண்டிகள் செல்கின்றன . ரயில்வே அட்டவணை படி
சென்னைக்கும் மும்பைக்கும் நடுவில்
10 இரயில் நிலையங்களில் நிற்கும்...

9 அறிவிப்புகள் சென்னையில் ஒலிக்கும்.
9 அறிவிப்புகள் மும்பையில் ஒலிக்கும்.
10 இடைப்பட்ட ரயிலில்வே நிலையங்களில் (நின்று செல்லும்.)
ஒவ்வொரு நிலையத்திலும் 9அறிவிப்புகள் ஒலிக்கும்.

ஒவ்வொரு அறிவிப்பிலும் தலைவர் பெயர் ஒலிக்கும் ...
போகும் போதும் ஒலிக்கும்.
வரும் போதும் ஒலிக்கும்.

மொத்தம். 1*9*12*2தடவை தலைவர் பெயர் ஒலிக்கும்...

சராசரி யாக 20 நிலையங்களில் ஒரு வண்டி நின்று செல்கிறது என்று வைத்து கொள்வோம்.
மொத்த அறிவிப்புகள் 103*20*9*2
இந்த கணக்குப்படி...
ஒருநாள் இந்தியா முழுவதும் 40ஆயிரம் தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது.

ஒரு மாதத்தில் இந்தியா முழுவதும் 12(1.2 மில்லியன்) லட்சம் தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது.

ஒரு வருடத்தில் இந்தியா முழுவதும் ஒன்றை கோடி(1.5) தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது...

இதைவிட பேர் வலிமைக்கு என்ன உதாரணமாம் வேண்டும்...
தலைவர் பேர் வைப்பதற்கு காரணமான அனைவருக்கும் கோடானுகோடி நன்றி.........��......... Thanks.........

orodizli
2nd May 2020, 08:03 AM
#இறப்பு #உண்டா???

ஒரு ரசிகனின் நெகிழ்ச்சியான நினைவுகள்...
#யாழ்ப்பாணத்திலிருந்து

மக்கள் திலகத்தின் '#ஒளிவிளக்கு' திரைப்படம் 'யாழ்' ராஜா திரையரங்கில் வெளிவந்து 169 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்ற படம். பின்னர் இரண்டாவது முறையும் எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த சமயம் மாணவர்களான நாங்கள் (நானும் நண்பர்கள் சிலரும்) மூன்று நாட்களாக முயன்று டிக்கட் கிடைக்காத நிலையில்,

நான்காவது நாள்...

காலைக் காட்சியின்போது 'பால்கனி' டிக்கட் பெற்றுப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சியில்.. மரணப்படுக்கையிலிருக்கும் எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளை வேண்டி செளகார் ஜானகி 'ஆண்டவனே உன் பாதங்களைக் கண்ணீரால் நீராட்டுவேன்' என்று பாடுவார். அப்பாடலின் இடையில் 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை, விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' என்று வரிகள் வரும்.

அச்சமயத்தில் 'பால்கனி'யிலிருந்து பலர் விசும்பி அழத் தொடங்கினார்கள். அழுதவர்கள் அனைவரும் எம்ஜிஆரின் தீவிர பக்தர்களான ஆண் இரசிகர்கள் தான். பொதுவாக சிவாஜியின் திரைப்படங்களைப் பார்த்துப் பெண்கள் மூக்குச்சிந்தி அழுவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் எம்ஜிஆரின் படமொன்றிற்கு அதுவும் ஆண் இரசிகர்கள் அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன்.

இதன் காரணமாகவே அந்தப் பாடலும், செளகார் ஜானகியும், எம்ஜிஆரும், அழுத இரசிகர்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமொன்றின் பங்காளிகளாகி விட்டார்கள். அப்பொழுது நாங்கள் நினைப்போம்...! உண்மையிலேயே

எம்ஜிஆர் இறந்தால் என்ன நடக்கும்? அவருக்கு 'இறப்பு' என்பது உண்டா? அந்த வயதில் எங்களால் எம்ஜிஆர் இறப்பதைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமலிருந்தது?.......... Thanks...

orodizli
2nd May 2020, 08:08 AM
"என் புள்ளய பாக்க நான் கூலி வாங்கனுமா... பொன்மனச்செம்மல் நமது எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்க மறுத்த மூதாட்டி".

சென்னை: எம்.ஜி.ஆர், மூதாட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த போது வாங்க மறுத்து, உனக்கு அம்மான்னா உசுராமே, தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன, வச்சுக்கோ, ஆண்டவன் கொடுக்குறது போதும், என்றார் அந்த மூதாட்டி இதைக் கேட்ட மக்கள் திலகம் வாயடைத்துப் போனார்.

ஃபிலிமி சீட்டில் வந்த துணுக்கு செய்தி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐,
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு, ஃபிலிமி சீட்டில் வந்த குறுஞ்செய்தியை; பொன் மனச்செம்மளின் பாசமிகும் நட்புகளுடன் பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.

தலைவரை பற்றி வேறு என்ன பதிவு போடலாம் என நான் இணையத்தில் தேடியபோது. இது என் கண்ணில் பட்டது.

எம்.ஜி.நாகராஜன். 1 மே 2020 11:06 pm.,...... Thanks...

orodizli
2nd May 2020, 08:14 AM
��"துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்"��

"துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் என்பது இறைவனுக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும் தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு கஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ( ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த ஆண்டுகளில்) சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.

நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை அந்த கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம்.

இவரும் நடிகைகளிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

Posted : M.G.Nagarajan
2 May 2020 12:10 AM
Thanks for :
Published : Naveenan

Vikatan Vanna Thirai
யாழ் இணையம்....... Thanks...

orodizli
2nd May 2020, 08:16 AM
எம்.ஜி.ஆர் குடும்பத்திற்குப் பால்யத்தில் உதவிய அந்தத் தாய்!
https://www.thaaii.com/?p=36251

“ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளைக் கட்டாயப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும்.

தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு’’- இது ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம் பெற்ற வசனம்.

இப்படித் திரையில் முக்கியத்துவம் கொடுத்த எம்.ஜி.ஆர் படித்த பள்ளி கும்பகோணத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தபோது, இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும்.


எளிமையான இந்தப் பள்ளியில் அவருடைய ஆறாவது வயதிலிருந்து ஒன்பதாவது வயது வரை படித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

அவர் படித்திருப்பதை நினைவூட்டும் ரிக்கார்டுகள் இன்னும் இங்கிருக்கின்றன.

அதன் படி அவர் இங்கு சேர்ந்த தேதி 22.03.1922.

பள்ளியிலிருந்து விலகிய தேதி 27.07.1925.

அதன் பிறகு தான் ஆரம்பித்தது அவருடைய பாய்ஸ் கம்பெனி நாடக வாழ்க்கை.

தமிழக முதல்வரான பிறகு இதே பள்ளிக்கு வருகை தந்திருக்கிற எம்.ஜி.ஆர் தன்னுடைய கும்பகோணத்து பால்ய வாழ்க்கை பற்றியும், பக்கத்து வீட்டிலிருந்த பெண்மணியிடம் அரிசி வாங்கிச் சாப்பிட்ட காலத்தையும் பற்றியும் குறிப்பிட்டுவிட்டுப் பேசியிருக்கிறார்.

“அன்றைக்கு நாங்கள் பசியில் வாடியபோது, அந்தத் தாய் எங்கள் அம்மாவிடம் அரிசி கொடுத்திருக்கா விட்டால், நாங்கள் உயிரோடு இருந்திருப்போம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?’’

பசியைப் பற்றிய நினைவுகள் கூட எப்போதும் வெப்பமானவை தான்....... Thanks...

orodizli
2nd May 2020, 08:18 AM
ஸ்ரீ MGR வாழ்க

சித்திரை 18 வெள்ளி

இந்தப்படம் ராமாவரம் தோட்டத்தில் எடுக்கப்பட்டது

இன்று உழைப்பாளர் தினம்

பாட்டாளி மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும்

MGR

எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் நடித்த காலத்திலிருந்து

முதலமைச்சராக அமர்ந்து மரணமடையும் வரை தான்

உழைத்து



சம்பாதித்த. பணத்தை ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த நடிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை

உலகத்திலுள்ள எந்த முதலமைச்சரும் எம்ஜிஆரை போல் மரணமடையும் வரை ஏழை மக்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தை வாரி வழங்கியவர்கள் யாரும் கிடையாது........ Thanks...

orodizli
2nd May 2020, 08:25 AM
தாயைக் காத்த தனயன் !
_______________________
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும் !
மங்கையென்று சொன்னவரும் மனைவியென்று சொல்லவரும் !

கனவுகளை யதார்த்தங்களாக மாற்ற துடிக்கும் காதலர்கள் !

இப்பாடல் காட்சியை பார்க்கும் வன்முறையாளனும் வாழ்க்கையின் வசந்தத்தை காண துடிப்பான் !....... Thanks...

orodizli
2nd May 2020, 12:02 PM
https://youtu.be/15MmSk2mEVw.......... Thanks.........

orodizli
2nd May 2020, 12:04 PM
நாளை நமதே !
_________________
மக்கள் திலகம் கட்சி தொடங்கிய நேரம் இரவும் பகலும் சந்து முனைகளில் கூட தொடர் கூட்டங்கள் ஆளுங்கட்சியின் இரும்புக்கரங்கள், சொல்லொண்ணா தொல்லைகள் !

மக்கள் திலகத்திற்கு பணநெருக்கடி , வன்முறையால் தொண்டர்கள் மீது இரக்கமற்ற தடியடிகள்
பாதித்த தொண்டர்களை காண தொடர் ஓட்டம் அப்பப்பா இயந்திரத்தை மீறிய கடும் உழைப்பு , தாங்க முடியாத மனஉளைச்சல் !

இன்று தி மு க , அ தி மு க வில் உள்ள அனைத்து பதவிகளில் மக்கள் திலகத்தின் இரத்தம் உள்ளது !

தி மு க , அ தி மு க வை சேரந்த அனைவரின் முன்னேற்றங்களுக்கும் மக்கள் திலகத்தின் உழைப்பே காரணம் இது சத்தியனான உண்மை !

இத்தனை இடர்பாடுகளிலும் அவரால் சினிமாவில் கவலைகளின் ரேகைகள் தென்படாமல் நடித்துள்ளார் என்றால் இது நிச்சயம் உலக சாதனையே ! அதுவும் நாளை நமதே என்ற பாடல் உலகபிரசித்தி பெற்றது நீங்களும் பாருங்கள் ........ Thanks.........

orodizli
2nd May 2020, 12:42 PM
கருணை உள்ளமே .....புரட்சித்தலைவரின் உள்ளம் !!

கிராமப்புறத்தில் பெண்கள் நீர் நிலைகளில் குளித்துவிட்டு , தங்களிடம் உள்ள "ஒரே" சேலையை பாதி அணிந்துகொண்டு மீதியை " வெயிலில்" நின்று காயவைத்து பின் அணிந்து கொள்கிறார்கள் என்பதால் முதல்வர் "மக்கள் திலகம்" MGR அவர்கள் , பண்டிகை நாட்களில் பெண்களுக்கு " இரண்டு சேலைகள் " வழங்க ஆணை பிறப்பித்தார்கள் ....

#இனிய காலை வணக்கம்........ Thanks...

orodizli
2nd May 2020, 12:43 PM
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
நமது மக்கள் திலகம் முதல்வராக பதவியேற்ற புதிதில் 1977 ல் சென்னை கன்னிமாரா ஓட்டலலில் சில வெளிநாட்டு பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து தலைவர் வீட்டுக்கு புறப்பட இரவு 11 மணி ஆகிவிட்டது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது டிரைவரிடம் " நீ சாப்பிட்டியா " என கேட்க அவரும் சாப்பிட்டேனய்யா என பதில் கூற அவர் சொன்ன பதிலால் சந்தேகம் வரவே என்ன சாப்பிட்ட சொல்லு என கேட்க டிரைவர் சில உணவுகளைச் சொல்ல .இந்த உணவு இன்றைய டின்னரில் பரிமாறவே இல்லையே உண்மையைச் சொல் சாப்பிட்டாயா இல்லையா என சற்று கோபத்துடன் கேட்க இல்லிங்கய்யா சாப்பிடலை எனக் கூற மற்ற டிரைவர்கள் சாப்பிட்டார்களா எனக்கேட்க "யாருமே சாப்பிடலய்யா "ஏன் அதற்கு பாதுகாப்பு அதிகாரி அரசு சார்பில் விழா நடந்தால் டிரைவர்களுக்கு சாப்பாடு கிடையாது எனக்கூற அவ்வளவு தான் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாகி மறுநாள் காலை தலைமச் செயலகம் வந்து எல்லா அலுவல்களையெல்லாம் ஒத்திப் போட்டு பொதுத்துறை, நிதித்துறை அதிகாரிகளை கூப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள். அதிகாரிகள். விருத்தினர்களுக்கு மட்டும் தான் வயிறு இருக்கிறதா? டிரைவர்களுக்கு இல்லையா ? அவர்களுக்கு பசிக்காதா? இது என்ன உத்தரவு ? யார் போட்டது? எனக் கேட்க அதிகாரிகள் விளக்க நேற்றைம விருந்தின்படி நபர் 1க்கு ரூ 256 மட்டுமே அனுமதி விருந்துக்கு வந்தவரை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாது என தயங்கியபடியே சொல்ல இதை கேட்டும் சமாதானமடையாமல், இனி இதுமாதிரி விழா நடந்தால் டிரைவர்களுக்கும் உணவுக்கு வழி செய்திட வேண்டும் இந்தச் செலவுகளை அரசின் கணக்கில் எழுத முடியாதென்றால் கூறிவிடுங்கள் எனது சொந்த பணத்திலிருந்து கொடுக்கிறேன் இது முடியாதென்றால் என்னை அழைக்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் இந்த சம்பவத்துக்கு பின் அரசாங்க டிரைவர்கள் விருந்துக்கு வந்தால் அவர்கள் தனியே சாப்பிடலாம் எனவும் அவ்வாறு சாப்பிடலைன்னா அந்த உரிய தொகை படியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தங்களுக்காக முதல்வரே வாதாடினார் எனக் கேட்ட டிரைவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லேயே இல்லை. [நாளை போடப் போறேன் சட்டம் பாரு அது நாடு புகழும் திட்டம்] .எவ்வளவு தீர்க்கதரிசி நமது தெய்வம்........ Thanks..........

orodizli
2nd May 2020, 12:44 PM
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
==================

#இனிய மதிய வணக்கம் ,
#என் இரத்தத்தின் இரத்தங்களே... Thanks...

orodizli
2nd May 2020, 12:47 PM
இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்

============================

பேரன்பு கொண்ட தாய்மார்களே, பெருமைக்குரிய தமிழ் பெருமக்களே, என்ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அமரர் அண்ணா அவர்கள். அதைதான் மக்கள் ஆட்சி தத்துவமாக அறிவித்தார்கள் அரசியல் அறிஞர்கள் . மக்களுக்காக மக்களால் மக்களே அமைத்து கொள்கின்ற ஆட்சி மக்கள் ஆட்சி. அந்த மக்கள் ஆட்சிக்கு அஸ்திவாரம் போன்றதுதான் மக்களின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் மீது எழுப்பப்படும் அற்புதமான மாளிகைதான் நல்லரசு. அந்த அரசு நடத்தும் ஆட்சிதான் மக்கள் ஆட்சி. அத்தகைய ஆட்சி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நா நயம் மிக்கவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நாணயம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். நெஞ்சுரம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக மட்டும் அமைய கூடாது. இப்படி மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வருபவர்கள், அரசில் இடம் பெறுபவர்கள் தூய்மை உள்ளவர்களாக, தொண்டுள்ளும் கொண்டவர்களாக, ஏழை எளிய மக்களின் தோழர்களாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதவர்களாக, அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பே தவிர மக்களை ஆட்டி படைக்கும் உரிமையை தரும் சாதனமாக கருதாதவர்கலாக, மக்களோடு மக்களாய், மக்களின் தொண்டர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு அளித்த அரசியல் நெறியாகும்..........👌 Thanks...

fidowag
2nd May 2020, 12:49 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாக.ம்* 26-ஐ* துவக்கி வைத்துதிரியை*பயணிக்க வைக்கும்*நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் /நல்வாழ்த்துக்கள்.,*

orodizli
2nd May 2020, 12:50 PM
திரையில் மட்டும்தான் நடிப்பு
அரசியலில் இல்லை.

போலி நாத்திகன் போர்வையில் இருந்தது கிடையாது.

பெரியாரின் நெறியிலே
அண்ணாவின் வழியிலே
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் அவரின் நம்பிக்கை

இனம், மதம், மொழி என அனைத்திற்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தூக்கி வைத்து கொண்டாடிய திராவிடத் தலைவன்.

தன்னை எதிர்த்தவருக்கும் ஏற்றத்தை மட்டுமே பரிசாய் அளித்த ஏழைப் பங்காளன்.

தான் வாழ்ந்த காலத்தில் இவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு இன்று அவரின் நினைவு தினத்தில் ரோட்டோரங்களிலும், ஆட்டோ ஸ்டெண்ட்களிலும், தொழிலாளர் கூடங்களிலும் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு கடந்த 32 ஆண்டுகளாக எரிந்து வரும் விளக்கும் ஊதுபத்தியுமே சாட்சி.

லோகநாதன் சேகர்

#என்றும்எம்ஜிஆர்..... Thanks...

orodizli
2nd May 2020, 12:51 PM
விண்ணும் அழுதது , மண்ணும் அழுதது
மன்னவன் மறைகையிலே - நகக்
கண்ணும் அழுதது , கவிதையும் அழுதது
காவலன் பிரிகையிலே .......
இப்படி ஒருவன் பிறந்ததில்லை
இனியும் ஒருவன் பிறப்பதில்லை !
சந்திர , சூரியர் வாழ்கின்ற வரையிலும்
சந்திரன் புகழ் இருக்கும் ;
ராமச்சந்திரன் என்னும் பேருக்குள்ளே
சரித்திரம் ஒளிந்திருக்கும் !

#மறக்க முடியாத மாமனிதரை
வணங்குகிறேன்.......... Thanks...

orodizli
2nd May 2020, 12:55 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 33 வது ஆண்டு தொடக்கம் .... .

கடத்த 33 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு பசுமையான நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு வருகிறார். இன்னமும் நம்மோடு தொடர்ந்து பயணிப்பர் . உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று அவருடைய பிறந்த தினத்தை அனுசரித்து கொண்டு வருகிறார்கள் .

1987 முதல் 2020 இன்றுவரை மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆளுமைகள் நம்மை பிரமிக்க வைக்கிறது . உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவர்க்கு மட்டுமே கிடைத்துள்ளது .

32ஆண்டுகள்
இடைவெளி இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் தமிழகமெங்கும் திரை அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .
மக்கள் திலகம் புகழ் பாடும் புதிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .
எல்லா தரப்பிலிருந்தும் பல்வேறு எம்ஜிஆர் விழாக்கள் உலகமெங்கும் தெடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது .
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பல்வேறு அமைப்புகள் மூலம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது .
அனைத்து ஊடகங்களும் எம்ஜிஆர் நினவு நாளை சிறப்பித்தார்கள் .
பத்திரிகைகள் அனைத்தும் எம்ஜிஆர் நினைவு நாளை கூர்ந்து கட்டுரைகளை பதிவிட்டார்கள்

மக்கள் திலகமே
நாங்கள்
கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்கள்
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்களின் திருவுருவம் தினமும் காணாத நாளே இல்லை .
தினமும் உங்கள் படங்கள் , பாடல்கள் எங்களுக்கு விருந்தது .
உங்கள் பெயரை சொல்லி வெற்றி கண்டோர்கள் பட்டியல் ..... நீள்கிறது .
இன்றும் உங்கள் அரசாங்கம் நடக்கிறது .
தமிழக அரசியலில் நீங்களதான் மைய்யம்
வாழ்ந்த காலத்தில் பலரையும் வாழ வைத்தீர்கள் .
33 ஆண்டுகளாக உங்கள் பெயரை உச்சரித்தவர்களை வாழ வைத்தீர்கள் .
உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயம்
உங்கள் ரசிகனாக நாங்கள் வாழ்வதை எண்ணி பெருமை கொள்கிறோம்........... Thanks...

orodizli
2nd May 2020, 12:57 PM
புரட்சித் தலைவரின்
ரசிகன் பக்தன்
என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு

த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
---------------------------------------------------------------
குறு விவசாயிகளுக்கு
--------------------------------------
இலவச மின்சாரம்--
விவசாயக் கடன் தள்ளுபடி--
பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.

பெரு விவசாயிகளுக்கு
குந்தா மின் நிலையம்--
TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
காற்றாலை மின்சாரம்

ஏழைகளுக்கு
------------------------
குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.

பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.

அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.

விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.

அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.

இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.

இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி

காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.

ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.

புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.

உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.

த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.

எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.

15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.

ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.

முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.

ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.

ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.

இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்றவர்களுக்கு---
சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
நினைவூட்ட விரும்புகிறோம்??
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!

இனிய மதிய வ*ணக்கத்துட*ன்....... Thanks...

fidowag
2nd May 2020, 12:58 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பாக*உள்ள விவரங்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி.-----------------
05/05/20* செவ்வாய் - இரவு 9.30 மணி* -ரிக்ஷாக் காரன்*

07/05/20 - வியாழன் -இரவு 9.30 மணி - குடியிருந்த கோயில்*

சன் லைப்*-
-----------------

-04/05/20 -திங்கள்* காலை 11 மணி - நாளை நமதே*

06/05/20-புதன்* - காலை 11 மணி* *- வேட்டைக்காரன்*

08/05/20 -வெள்ளி -காலை 11 மணி -ஆனந்த ஜோதி*

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்*-
----------------------------------

-05/05/20-செவ்வாய் - பிற்பகல் 1.30 மணி -ரகசிய போலீஸ் 115

6/05/20-புதன்* * - பிற்பகல் 1.30 மணி -குடியிருந்த கோயில்*

07/05/20* * -வியாழன் -பிற்பகல் 1.30மணி -தேடி வந்த மாப்பிள்ளை*

08/05/20 -வெள்ளி* - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*

orodizli
2nd May 2020, 12:59 PM
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!..... Thanks...

orodizli
2nd May 2020, 01:03 PM
எம்ஜிஆர் என்ற விந்தை மனிதர்.....
************

அவரிடம் ஒரு அரிதான குணம் இருந்தது. அதாவது ஆங்கிலத்தில் எம்பதி என்று சொல்வார்கள்.
அடுத்தவர்களின் தேவைகளை நாமே புரிந்துகொண்டு அதற்கேற்ப உதவிசெய்வது...

உதாரணத்திற்கு, ஒருவர் எம்ஜிஆரை சந்தித்து உதவிகேட்பார்..என்ன ஆச்சர்யம்..!

அடுத்த நிமிடமே அவருக்க போதுமான பணமோ, தேவையான பொருளோ எம்ஜிஆரிடமிருந்து கிடைத்துவிடும்...

அது காலேஜ் சீட்டாக இருக்கலாம்,, பணம் கட்டி கல்யாண மண்டபம் புக் பண்ணியதற்கான ரசீதாக இருக்கலாம்..நகையாக இருக்கலாம்..

இதெல்லாம் மாயஜாலமா என்றுகூட பலரும் வியந்ததுண்டு...
ஆனால் உண்மை என்ன தெரியுமா? எம்ஜிஆர் என்ற மாமனிதன் சக மனிதர்களை நேசித்த விதத்திற்கான வியப்பூட்டும் மார்க்கம் அது..

எம்ஜிஆரை சந்திக்க ஒருவர் நேரம் கேட்கிறார் என்றாலே, அவர் எதற்காக சந்திக்க விரும்புகிறார், அவரின் உண்மையான தேவை என்ன என்பது போன்ற விவரங்கள் அடுத்தடுத்து ரகசியமாக திரட்டப்பட்டுவிடும்...

சம்மந்தப்பட்டவரிடமோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடமோ எதுவுமே காட்டிக்கொள்ளாமல் ஜாடைமாடையாக பேசி எம்ஜிஆரின் உதவியாளர்கள் வட்டாரம், விஷயத்தை திறமையாக கறந்துவிடும்.

அந்த தகவல்கள் அப்படியே எம்ஜிஆரின் காதுகளுக்கு போகும்.. இதன் பிறகு உதவி கேட்டு வருபவருக்கு தேவையான விஷயம் ரெடியாக ஆரம்பிக்கும்.

விஷயம் கைக்கு கிடைத்ததும், சந்திக்க விரும்பியவரை வரச்சொல்வார் எம்ஜிஆர்..

உதவி வேண்டும் என்று உதடுகள் ஆரம்பிக்கும் முன்பே அந்த மனிதரிடம் அவருக்கு தேவையான விஷயத்தை கைமேல் வைத்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துவிடுவார் மக்கள் திலகம்...

அதனால்தான், வீட்டில் உலைவைத்து விட்டு நம்பிக்கையோடு எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றால் கண்டிப்பாக அரிசியோடு திரும்பலாம் என்று பெருமையோடு சொல்வார்கள்....... Thanks...

orodizli
2nd May 2020, 01:04 PM
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
================================================== ======
#"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!

அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.

ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"

"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!

புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!..... Thanks...

orodizli
2nd May 2020, 01:06 PM
" ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறார் . சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்....... Thanks...

orodizli
2nd May 2020, 01:19 PM
எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.03.1973.
மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
இந்த அறிவிப்பு 8.02.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
“எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.
ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் அன்பன்
எம்.ஜி.ராமச்சந்திரன்........ ( இத்தகைய மதிப்பு, மரியாதை மிகுந்த ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய விருதை, இது போன்ற ஒரு விமர்சனம் செய்ய பட்டது என்ற ஒரு காரணத்திற்காக விருதை திரும்பி உங்களிடமே அனுப்பி விடுகிறேன் என கூறிய சம்பவம் உலகளாவிய தேசங்களில் எங்காவது நடைபெற்றிருக்கிறதா?! அப்பப்பா... எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு தான் என்னவொரு தில்?!) ....Thanks.........

orodizli
2nd May 2020, 01:22 PM
அன்று மட்டுமல்ல ஏன்றென்றும் பாரத் விருதுக்கு தகுதி பெற்ற ஒரே நடிகர் தலைவர் புரட்சித்தலைவர் மட்டுமே. அவருக்கு வழங்கியது முற்றிலும் நியாயமானதே.
இதில் கருணாநிதி சிபாரிசால் தலைவருக்கு கிடைத்தது என்பதை கண்டிப்பாக ஏற்கமுடியாது. கருணாநிதி அந்தளவிற்கு தலைவருக்கு உதவி செய்யும் மனிதர் அல்ல. அவர் தன் மகன் மு.க.முத்துவிற்காக வேண்டுமானால் சிபாரிசு செய்திருப்பாரே ஒழிய கண்டிப்பாக எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு கிடைக்க செய்திருக்க மாட்டார். அவருக்கு கிடைத்த விருது தன்னால்தான் என்று பொய் பிரச்சாரம் செய்திருப்பார்கள். அது திமு.க.வின் வழக்கம்.
இவர்களுக்காக இந்திய அரசாங்கம் கொடுத்த பாரத் பட்டத்தை திருப்பி அளித்தது வருத்தத்திற்குறிய செயல்.......சத்யகாந்த்..... Thanks...

orodizli
2nd May 2020, 01:25 PM
நோபல் பரிசு அளிக்க தகுதி படைத்த எம். ஜி .ஆரூ.க்கு இது ஒரு ஜுஜுபி... ஆறுமுகம்.... Thanks...

orodizli
2nd May 2020, 05:21 PM
"குலேபகாவலி" காவியம்; மூன்று திரைக்கதை அமைப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் ...குலேபகாவலி எம்ஜிஆர் இளமை துள்ளல் காணக்கிடைக்காத காட்சி இந்த திரைப்படத்தின் புலியுடன் மோதும் காட்சியில் பெரிய பள்ளத்தை வெட்டி எம்ஜிஆர் இறங்கிவிட்டார்கள் எப்போதும் எம்ஜிஆர் தற்பாதுகாப்பு துப்பாக்கி வைத்திருப்பார்முதலில் சண்டைக்காட்சி ஆரம்பித்தவுடன் புலி கொஞ்சம் மிரள ஆரம்பித்தது எம்ஜிஆரின் கொஞ்சம் துரத்த ஆரம்பித்தது தலைவர் உடனே சமாளித்துக் கொண்டு தன் கையில் இருந்த துப்பாக்கி எடுத்து மேல் நோக்கி சுட்டு விட்டு மேலே வந்து விட்டார்பிறகு புலி யை பழகி வைத்திருக்கும் மனிதனின் மீண்டும் புலி யை நன்றாக பழகி விட்டு பிறகு இரண்டாவது சாட்எடுக்கப்பட்டது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்த திரைப்படம் குறிப்பாக தங்கவேலு எம் ஜி ஆர் ஈ பி சரோஜா சந்திரபாபு இவர்கள் இணைந்து கலக்கும் காமெடி எப்போதும் காண முடியாது... எந் த சோகத்தில் இருந்தாலும் அந்த நிகழ்வை பார்த்தால் மனது சந்தோஷமாகி விடும்.... Thanks...

orodizli
3rd May 2020, 10:10 AM
#வாத்தியார் #படம்...!

வீட்ல ஏதும் வேலைகளிருந்தா சீக்கரம் முடிங்க...

இன்று காலை 10:30 மணிக்கு ராஜ்டிவியில்....!

ராஜ்டிவி நிர்வாகத்திற்கு...
தயவு செய்து காட்சிகளை கட் பண்ணாதீங்க...எப்போதும் போல்...

விளம்பரங்களைக்கூட பொறுத்துக்கொள்கிறோம்...

#உலகம் #சுற்றும் #வாலிபன்.......... Thanks...

orodizli
3rd May 2020, 10:34 AM
புரட்சி தலைவர் அன்றே ஆராச்சியில் உலகத்தை அளிக்கும் ஒரு மருத்துவ வெப்பனை கண்ட றிந்து அதை பயர் செய்தால் உலகமே எரிவது போன்று காட்டினார்.
அன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றது போன்றும்
அதன் ரகசியத்தை பாதுகாப்பார்.

அதே போன்று இன்று அந்த விஷப் பொருள் காற்றில் பரவி ஏரியும்.
இன்று அதே போன்று ஒரு விஷப் பொருள் பரவி உலக மனித உயிர் செத்து மடிகிறார்கள்.
இது இன்று உண்மை ஆகி விட்டது.
எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி,தெய்வபிறவி, அபூர்வப்பிறவி, அதிசயபிறவி, மறுபிறவி.
இவண்.
ரோட்டரியன். ஆசிரியன்
மோகன் ராஜ் என்ற
மோகன் குருசாமி............ Thanks.........

orodizli
3rd May 2020, 10:41 AM
கறுப்பு வெள்ளையில் கடைசியாக சூப்பர் ஹிட்டான படம் காவல்காரன். அலிபாபா,மற்றும் நாடோடி மன்னன் பகுதி கலர் படத்துக்கு பிறகு வெளிவந்த கலர் படம்தான்"படகோட்டி". அதன்பின் தொடர்ச்சியாக எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா இது போன்ற காவிய படங்கள் வெளியான பிறகு ரசிகர்களுக்கு கலர் படம் என்றால் ஒரு மயக்கம் என்றே சொல்லலாம்.

அதன்பிறகு எம்ஜிஆரை வைத்து படம் எடுப்பவர்கள் அனைவரும் கலர் படத்தையே எடுக்க விரும்பினார்கள்.
தேவர் மற்றும் ஓரிரு பழைய தயாரிப்பாளர்கள் எடுத்த கறுப்பு வெள்ளை படங்களை தவிர புதிய படங்கள் அனைத்தும் கலர் படங்களாகவே தயாரிக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆரை கலர் பட கதாநாயகன் என்றே அழைத்தார்கள். குண்டடி பட்ட பின் வெளியான முதல் படம் "அரச கட்டளை". மே 19 , 1967 அன்று வெளியானது. எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி டைரக்ட் செய்த ஒரே படம்.

கூடவே சிவாஜியின் "தங்கை" படமும் வெளியானது. பாலாஜி தயாரிப்பான இந்த படத்தில் சிவாஜி தனது பாணியை மாற்றி எம்ஜிஆர் பட பாணியில் எடுத்த படம். பக்திபட வரிசையும் குடும்ப கதை வரிசையும் இனி வேலைக்காகாது என்று எம்ஜிஆர் பார்முலாவுக்கு மாறி எடுத்த படம். எம்ஜிஆருக்கு சமூக படம் சரியாக வராது என்று கூறியவர் இன்று எம்ஜிஆரின் பாணிக்கு மாறி எடுத்த படம்தான் தங்கை. படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் பாலாஜிக்கு போட்ட காசு கைக்கு வந்து விட்டது.

அரசகட்டளையில் டச்அப் ஒர்க் மட்டுமே பாக்கி இருந்ததால் படம் முதல் படமாக வெளிவந்தது. படத்தின் எடிட்டிங் ஒர்க்கில் எம்ஜிஆர் பணியாற்றவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

"அரசகட்டளை" கவர்ச்சிகரமான வால் போஸ்டருடன் வெளிவந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகம். அதுவும் தலைவர் வரும் காட்சிகள் என்றால் அனைவரும் கண்டு .ரசிப்பார்கள். ஆனால் நாகேஷின் பொருந்தாத நீளமான காமெடி படத்தை சலிப்படைய வைத்தது. ரசிகர்கள் தியேட்டரில் நாகேஷ் வரும் காட்சியில் எல்லாம் விசிலடித்து கத்தி தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.

ஆரம்ப காட்சி பார்த்து விட்டு வந்தவுடனே ரசிகர்கள் நாகேஷ் காமெடியை குறைத்து படத்தின் நீளத்தை குறைத்தால் படம் விறுவிறுப்பாக அமையும் என்ற வலியுறுத்திய பிறகு காமெடி காட்சிகளை குறைத்து மீண்டும் இடைவேளை காட்சியை மாற்றி அமைத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்ய தவறியது.

சென்னையில் 42 நாட்கள் மட்டுமே ஓடியது. மற்ற ஊர்களில் அதிக பட்சமாக 63 நாட்கள் ஓடியது.அடுத்தடுத்த வெளியீடுகளில் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டியது.முதல் வெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட படங்கள் அடுத்த வெளியீடுகளே காணாத நிலையில் எத்தனை தடவை வந்தாலும் வெற்றி பெறும் "அரச கட்டளை" என்பது ஆண்டவன் இட்ட கட்டளை.

குண்டடி பட்டபின் வந்த முதல் படம் என்பதால் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமானதால் அடுத்த படமான காவல்காரனை வெகுவாக நம்பியிருந்தார்கள்.

அடுத்த பதிவு விரைவில்......SK.,....... Thanks...

orodizli
3rd May 2020, 10:42 AM
எம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கு எல்லையுண்டா ?

அந்த பத்திரிகையாளர் முதல்வர்
எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து
எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.

ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள்" என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.

"அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள்" என்கிறார்.

அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். 'அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான்' என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, "பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு" என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.

அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளரின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.

அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்" என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்" எனக்கூறி வருந்தினார்கள்.

நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஆர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

#கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர் . பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.

தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

காலம் ஓடியது.

ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.

மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்! (Edited version)
----------------------------------------------------------
இப்படி 'குமுதம்' இதழில் எழுதியதாக
திரு பா.ஏகலைவன் தன் முகநூலில்
பதிவு செய்துள்ளார். அந்த நான்கெழுத்து பத்திரிகையாளரை பற்றி 'தினமலர்'
திரு நூருல்லா எழுதி 'இதயக்கனி' இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளேன். அந்த பத்திரிகையாளர் 'அண்ணா' நாளிதழில்
எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில்
பணி செய்ததுமுண்டு....... Thanks...

orodizli
3rd May 2020, 10:44 AM
#இந்தக்காலத்தில் #இப்படியுமா!

யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக் கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், #இதிகாசத்தலைவன் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கும் பொருந்தும்.

இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த தில்லையாடி சிவராமன் என்பவர். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்ஜிஆர்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்ஜிஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்கிறார் அவர்.

அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்ஜிஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது அவர் அங்கு இல்லை.

நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்ஜிஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் #மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.

‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.

இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்ஜிஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். “இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.

எம்ஜிஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்ஜிஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் #நாடகத்தை #இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.

தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். "#இந்தகாலத்தில் #இப்படியும் #ஒரு #மனிதரா...?" மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.

நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்ஜிஆர் எப்படி #இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார்...

வீரப்பா...!
"தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும்... என்று நான் நினைத்திருந்தேன். இன்று அதை செய்தும்விட்டேன். என் மனதில் இருந்த மிகப்பெரிய #குறை #நீங்கியது. இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..." என்று கண்ணீர் மல்கினார்.

நமக்கு இதையெல்லாம் பார்க்கும்போது வாத்தியார் தெய்வத்திற்கும் மேலாகத் தான் தெரிகிறார்...BSM.... Thanks...

orodizli
3rd May 2020, 10:45 AM
சத்தணவு திட்டம் பற்றிய ........
புரட்சி தலைவரின் ....

கண்ணீர் வரவழைக்கும் ......
பேட்டி .......

அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?

(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.

சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.

நல்ல பசி.
இலை போட்டாச்சு.
காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.

சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்

நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.

வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு

கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,

கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?

எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.

இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது

எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.

அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க

ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்

விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்....... Thanks...

orodizli
3rd May 2020, 10:48 AM
"எம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்"

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.

அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை

2 May 2020 7;16 PM..... Thanks...

orodizli
3rd May 2020, 12:59 PM
என்னுடன் மோதத் தயாரா?" குத்து சண்டை வீரர் தாரசிங்கிற்கு ஆவேசமாக சவால் விட்ட புரட்சித்தலைவர்...

1965-ம் ஆண்டு காலகட்டத்தில் திருச்சியில் "மல்யுத்த "போட்டி நடைபெற்றது, அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் வட இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் தாராசிங்.

வெற்றி களிப்பில் அவர்..

"தமிழ்நாட்டில் என்னை வெல்வதற்கு எவருமில்லையா "என்றார்.

இதனை கேள்வியுற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்..

"மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற சகோதரர் தாராசிங்கிற்கு வாழ்த்துக்கள், அவர் வெற்றி பெற்றதோடு போயிருந்தால் நான் பேட்டி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது,

ஆனால் தமிழ்நாட்டில் என்னுடன் மோத எவருமில்லையா? என்று கேட்டிருக்கிறார், அதனால் நான் சொல்கிறேன் எனக்கு மல்யுத்தம் தெரியும் அவர் விருப்பபட்டால் என்னுடன் மோதட்டும் தயாரா?"

என்று ஆவேசமாக பேட்டியளித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்......

orodizli
3rd May 2020, 01:01 PM
அன்பு நண்பர்களே....
வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்...!!!

தமிழ்நாட்டில்.! ஏழைகள் அதி எண்ணிக்கையில் கல்வி அறிவு பெற்றதற்கு காரணம் என்னவென்று ஐ.நா. சபை ஆய்வு செய்தது.

அந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்த தகவலை உலகத்திற்கு தெரிவித்தார்கள்.

அது யாதெனில் ....
தமிழ்நாட்டில்.! எழைகள் அதிக அளவில் கல்வி அறிவு பெற்றதற்கு மிக முக்கிய காரணம்.

"#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்_அவர்கள்."

கொண்டுவந்த "#சத்துணவுத்_திட்டமே " மிக முக்கிய காரணமாக விளங்கியது என்றும்... ஆய்வில் தெரியவந்தது என்றும்.... ஐ.நா.சபை கூறியது.

இந்த தகவலை நான் கூறவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளராக உள்ள, கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.. கூறினார்கள்.

இன்றும்.. Cpm... மாநில செயலாளராக,
கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் உள்ளார்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வாழிய வாழிய வாழியவே....!!!
புரட்சித்தலைவர் நாமம் வாழியவே ...!!

������������������������������.........

orodizli
3rd May 2020, 01:05 PM
குண்டுமணி – பழம்பெரும் தமிழ்த் திரைப்பட வில்லன் நடிகர். சபாஷ் தம்பி, தாயின் மேல் ஆணை, நாடோடி மன்னன் போன்ற ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒவ்வொன்றிலும் இவரைக் காணலாம்.

குண்டுமணியை திரையில் பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரோடு எம்.ஜி.ஆர் மோதும்போது திரையரங்கில் ரசிகர்களின் விசில் சப்தம் காதுகளைப் பிளக்கும். ......

orodizli
3rd May 2020, 04:45 PM
"நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"
நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கை பயணம்..!
🍁 அத்தியாயம் : 1🍁

சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.

கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.

அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.

குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.

உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.

அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

(தொடரும்).....




"வண்ணத்திரை"
யாழ் இணையம்

orodizli
3rd May 2020, 04:48 PM
"ராம்சந்தருக்கு பால் கொண்டுவா டா..! எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்',"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
�� அத்தியாயம் : 2��

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.

படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.

இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.

நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.

'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.

தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.


வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.

சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?

தொடரும்... .....




விகடன்
யாழ் இணையம்

orodizli
3rd May 2020, 04:49 PM
"எம்.ஜி.ஆர் குருவிடம் அறை வாங்கியது ஏன்...?"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
�� அத்தியாயம் : 3��

அந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.

பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம் இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு. அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை.

சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.

நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம்.

ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல் ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம்.

முதல்நாள் நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார். எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?

“முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! ” என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர் எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.

அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில் புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது.

அப்போது பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?

தொடரும் ..........




Vikatan News
யாழ் இணையம்.

orodizli
3rd May 2020, 04:51 PM
"கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -.
�� அத்தியாயம் : 4��

பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது.

அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.

முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும் விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார்.


உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர்.

எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.

பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?

வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று.

“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!

'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைத்துறையில் அரசியலிலும் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர்.

பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.

ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து அவரது காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.

தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.

ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.

இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன.

ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள்.

இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.

விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.

"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.

அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."

காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.

மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர்.

கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம் கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...

தொடரும் ........

orodizli
3rd May 2020, 04:53 PM
"எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!"...
" நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"...!
🍁 அத்தியாயம் : 5🍁

கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.

மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.

'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.


சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.

மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.

பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.

பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.

ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.

வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, “அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! ” என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.

கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது

தொடரும்.........

orodizli
3rd May 2020, 04:55 PM
"எம்.ஜிஆரை சிறைக்கு அனுப்பிய காந்தி!" -

நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
�� அத்தியாயம் : 6��

மகரக்கட்டினால் கம்பெனியிலிருந்து வெளியேறி பர்மாவில் வேறொரு குழுவுடன் நாடகம் நடிக்கச் சென்றிருந்த ராம்சந்தர் நாடகத்தன்று முதன்முறையாக பூகம்பம் என்ற ஒன்றை நேரில் உணர்ந்தார்கள்

ஆம் நாடக மேடையில் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது கட்டிடம் ஒரு கணம் குலுங்கி நின்றது. அதிர்ச்சிக்கு ஆளானார்கள் அத்தனைபேரும். என்னவாயிற்று என்பதை உணர்வதற்குள் இன்னொரு முறை நிகழ்ந்தது அந்த சம்பவம். பதறியபடி தெருக்களில் சிதறி ஓடினர் நாடகம் பார்க்கவந்தவர்கள். சக்கரபாணி, தம்பியை தேடினார். சிறிதுநேரத்திற்குப்பின்னர்தான் தம்பியை கண்டுபிடித்தார். இது பூமி அதிர்ச்சி என்றார்கள். சகோதரர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில தினங்கள் பிடித்தன.

பர்மாவில் நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம் பி.யு.சின்னப்பாவும் பல இடங்களில் வாயப்புத் தேடி அலைந்து திரிந்து இறுதியாக மொய்தீன் குழுவில் நடிக்க பர்மாவுக்கு வந்திருந்தார். குறைவான ஆட்களே அழைத்துவரப்பட்டிருந்ததால் சமயங்களில் ராம்சந்தரே பெண் வேடமிட வேண்டியிருந்தது ஒருநாடகத்தில் பி.யு.சின்னப்பா ராஜபார்ட்டாகவும் ஸ்திரீ பார்ட்டாக ராம்சந்தரும் நடித்தனர். பர்மாவில் வெற்றிகரமாக நாடகங்கள் முடிந்து 6 மாதங்களுக்குப்பின் சென்னை வந்துசேர்ந்தனர் நாடக குழுவினர். அப்போது சென்னை யானைக்கவுனியில் ராம்சந்தர் குடும்பம் வசித்தது.

சொல்பேச்சு கேளாமல் இப்படி கண்டபடி அங்கும் இங்கும் திரிவது சத்தியபாமாவுக்கு அறவே பிடிக்கவில்லை. பிள்ளைகளை திட்டித்தீர்த்தார். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை சகோதரர்களிடம். ஆனாலும் அவர்கள் நாடகங்களை பார்ப்பதை கைவிடவில்லை. சென்னையில் எங்கு நாடகங்கள் நடந்தாலும் சகோதரர்கள் போய் பார்ப்பார்கள். வீட்டிற்கு வந்தபின் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்வர். ஒரு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் வேலுநாயர் ராம்சந்தரின் வீட்டுக்கு வந்தார்.

குடும்பத்தின் நலத்தை விசாரித்தவர், சகோதரர்களின் செயலை கண்டித்ததுடன், முதலாளி இன்னமும் அவர்கள் மீது அக்கறையாக இருப்பதை சுட்டிக்காட்டி திரும்ப பாய்ஸ் கம்பெனிக்கு வரும்படி அழைத்தார். அப்போதெல்லாம் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் மாதம் 30 நாட்களும் நாடகங்கள் நடக்கும். வேலுநாயர் ராம்சந்தர் - சக்கரபாணியை சந்தித்த நேரத்தில் அங்கு பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் நடத்திவந்தது. இதனால் வேலுநாயருடன் அன்றே முதலாளியை பார்க்க கிளம்பினர் சகோதரர்கள்.

முதலாளியை பார்த்ததும் சகோதரர்களுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. “ஏம்பா நான் உங்களுக்கு என்ன குறைவெச்சேன். ஒழுக்கமான பசங்க நீங்க... குரல் கெட்டா என்ன கொஞ்சநாள் சாதகம் பண்ணி சரியாக்கிட்டா பழையபடி நடிக்கவேண்டியதுதானே...அதுக்காக கம்பெனியை விட்டு ஒடுறதா...சரி இனிமே அப்படி செய்யாதீங்க..போய் பாடத்தை படிங்க“ என பெரிய மனதுடன் பேசிவிட்டு கிளம்பினார்.

மீண்டும் உற்சாகத்துடன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர் சகோதரர்கள். கதர்பக்தி நாடகம் இப்போது மீண்டும் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கதர்த்துணி உடுத்த ஆரம்பித்த காலகட்டம் அது.

ஒரு பக்கம் காந்தியத்தின்மீது பற்று. அதன்பேரில் காந்தியக்கொள்கைகளில் தீவிர பிடிப்பு உண்டாகி இக்காலத்தில் நிறைய புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆர் தீவிர ஆத்திகராகவும் இக்காலத்தில் இருந்தார். சத்தியபாமா குடும்பத்தினரின் குலதெய்வம் காளி. என்றாலும் சிவனையும் நாராயணனையும் அவர்கள் தீவிரமாக வணங்கிவந்தனர். இதனால் இயல்பாகவே தாயின் வழக்கம் பிள்ளைகளுக்கு தொற்றிக்கொண்டது. எம்.ஜி.ஆர் வெங்கடேசபெருமாளை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவரது கழுத்தில் தாமரை மணி மாலை ஒன்று எப்போதும் அவரது கழுத்தை அலங்கரிக்கும். பாய்ஸ் கம்பெனியில் பாலநடிகனா இருந்தபோது சிலமுறை திருப்பதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் அவர்.

"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான். நமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.

நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா? போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன். 'மர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.
நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.

ஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.

சற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம். அவர், "உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்"... என்றார் அந்த நண்பர்.

என் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.

'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா?' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா?' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா?

எனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது."- 1968-ல் நாடகம் ஒன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய அவர் தன் கடவுள் நம்பிக்கை பற்றி இப்படி குறிப்பிட்டார்.
கடவுள் மறுப்புக்கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியாரின் மீதும், அவரின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் மீதும் பி்ன்னாளில் எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு உருவானபோதும் கூட எம்.ஜி.ஆர் தன் ஆத்திக கொள்கையை விட்டுவிடவில்லை. அண்ணா உருவாக்கிய திமுகவில் அவர் இணைந்தார். பெரியார் அளவுக்கு நாத்திக கொள்கையில் அண்ணா உறுதியாக இல்லாதது திமுகவில் எம்.ஜி.ஆர் சேர ஒரு முக்கிய காரணமானது எனலாம். ஆனால் எக்காலத்திலும் அவர் கடவுளை மறுத்ததில்லை. ஆனால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட படங்களை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிவாஜி நடித்த காத்தவராயன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம்.

பாய்ஸ் கம்பெனிக்கு திரும்ப வருவோமே...கதர்பக்தி நாடகம் திரும்ப நடத்தப்பட்டபோது எம்.ஜி.ஆர் உள்ளத்தில் காந்தியக்கொள்கைகள் கனன்று கொண்டிருந்தது.

காரணம் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த அந்நாளில் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் துவங்கும் முன் “மகாத்மாக காந்திக்கு”....என மேடையில் இருந்து குரல் வரும். பார்வையாளர்கள் ஜே என்பார்கள். நாடகத்தின் கதையும் குடிப்பழக்கத்தின் தீமையை சொல்வது.

'சுதந்திரத்துக்காக இந்த தள்ளாத வயதில் காந்தி போராட்டங்களை நடத்தும்போது இளம்வயதில் நாம் பொறுப்பற்று இருக்கிறோமே' என்ற எண்ணம் அவரது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒருகடடத்தில் நாமும் எதையாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, ராம்சந்தர் காங்கிரஸில் காலணா உறுப்பினராக சேர்ந்தார்.

சேர்ந்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அதையும் மீறி எதையாவது செய்யும் எண்ணம் அவருக்குள் தீவிரமானது... அது, இறுதியில் அவரை சிறைக்குக் கொண்டு போய் நிறுத்தியது...என்ன நடந்தது?

தொடரும்.........

orodizli
3rd May 2020, 04:57 PM
"கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்!" - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
�� அத்தியாயம் : 7��

நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.

அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே! தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார்.

ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.

நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார்.

சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.

வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி.

ராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது. ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.

வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே, ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார்.

அங்கே தாயும் அண்ணியாரும் பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

“ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.

“இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு விறுவிறுவென

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...
தொடரும்.........

orodizli
3rd May 2020, 05:01 PM
"எம்.ஜி.ஆர் இவரிடம் தான் நடிப்பு கற்றார்!"...
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - �� அத்தியாயம் : 8, 9��


எம்.கந்தசாமி முதலியார்... உட்பட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பல்வேறு நபர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களில் எம்.கந்தசாமி முதலியார் முக்கியமானவர். வறுமையினால் பள்ளிப்படிப்பைத் துறந்து எம்.ஜி.ஆரும் அவர் சகோதரரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்தபோது கம்பெனியின் நாடகங்களை எழுதி இயக்கிக்கொண்டிருந்தவர்தான் எம்.கந்தசாமி முதலியார். சத்தியபாமா தன் இரு மகன்களை ஒப்படைத்தது இவரிடம்தான். அப்போது சத்தியபாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “உங்க பிள்ளைங்க குறித்து இனி கவலைப்படாதீங்கம்மா... இனி அவங்களுடன் சேர்த்து எனக்கு 3 பிள்ளைங்க. எதிர்காலத்தில் அவுங்க நல்ல நிலைக்கு வர நான் பொறுப்பு” என ஆறுதல் சொன்னவர் எம்.கந்தசாமி முதலியார்.

அந்தக் காலத்திலேயே பி.ஏ பட்டதாரியான எம்.கந்தசாமி முதலியார், புராண நாடகங்கள் மட்டுமே போடப்பட்டுவந்த காலத்தில் சமூக நாடகங்களைத் துணிச்சலுடன் அரங்கேற்றியவர். நாடகத்தில் பகல் காட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். படிக்கும் காலத்திலேயே கல்லூரி முதல்வர் முல்லர் என்பவரால் நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டு பின்னாளில் அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவருடைய புதல்வர்தான் ஜெமினி நிறுவனத்தில் ’சந்திரலேகா’, ’அபூர்வ சகோதரர்கள்’ படங்களில் நடித்துப் புகழ்பெற்ற எம்.கே ராதா.

தந்தையில்லாத எம்.ஜி.ஆர் சகோதரர்களை, சத்தியபாமாவுக்கு வாக்கு கொடுத்தபடியே தம் பிள்ளைகளில் ஒருவராகப் பாவித்தார் எம்.கே. நாடகம் மட்டுமின்றி அச்சு, விளம்பரம் போன்ற துறைகளிலும் ஞானம் பெற்றவர் எம்.கே.

நாடகக் குழுவில், தாய் தந்தையைப் பிரிந்து வந்திருக்கும் சிறுவர்களுக்குத் தந்தையைப்போல் இருந்து பாதுகாத்தவர் அவர். அவரது பிள்ளையான எம்.கே.ராதாவுக்கும் தந்தையில்லாமல், தாயைப் பிரிந்துவந்தவர்கள் என்பதால் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் மீது ஓர் இனம்புரியாத ஒரு பாசம் இருந்தது.

தந்தையுடன் எங்கு சென்றாலும் சகோதரர்களுக்கும் சேர்த்து தின்பண்டங்களை வாங்கி மறைத்துவைத்துக்கொண்டு கொட்டகைக்கு வந்தபின், சகோதரர்களுக்குத் தருவார் அவர். இது மற்ற பிள்ளைகளுக்கு வருத்தத்தைத் தந்தது. வாத்தியார் மகன் நம்மைவிட ராம்சந்தருக்கும் சக்கரபாணிக்கும் தனிக் கவனிப்பு தருகிறாரே என்ற தங்கள் ஆதங்கத்தை ஒருமுறை வாத்தியாரிடமே தெரிவித்தனர்.

மகனை அழைத்த எம்.கே., ’’நண்பர்களிடம் பேதம் காட்டக் கூடாது. உனக்கு ராம்சந்தர் சகோதரர்கள் மீது அதிக பாசம் இருப்பது தவறில்லை. ஆனால், அதை நீ இப்படி வெளிப்படையாக காட்டக் கூடாது. ஒருவர் மீது அதிகம் பிரியம் காட்டினால், அது மற்றவர்களை ஒதுக்குவதுபோல் ஆகிவிடும். இனி அப்படிச் செய்யாதே” என அறிவுரை கூறினார். இப்படி நாடகக் குழுவில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.கே.

நாடகக் குழுவில் சிறுவர்கள் யார் தவறு செய்தாலும் தன் பிள்ளை எம்.கே.ராதாவைத்தான் அடிப்பார், எம்.கே. அப்படிக் கண்டிப்பதைப் பார்த்து அடுத்தமுறை அந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள் என்பது அவரின் கணக்கு. “யாரோ செய்கிற தவறுக்கு என்னை ஏன் கண்டிக்கிறீர்கள்” என ஆற்றாமையாக ஒருநாள் கேட்டார் எம்.கே.ராதா. அதற்கு, “தாய் தந்தையரைப் பிரிந்து பல மைல் துாரங்களில் இருந்துவந்து எப்போது வீடு திரும்புவோம் எனத் தெரியாமல் நம்முடன் தங்கியிருக்கிறார்கள். தவறுக்காக அவர்களைக் கண்டித்தால் அவர்கள் யாரிடம் ஆறுதல் தேடிப்போவார்கள். நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், உனக்கு அது பெரிய வருத்தத்தைத் தராது. அதனால், நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.” - தந்தையின் மனிதநேயத்தைப் புரிந்துகொண்டு அமைதியானார் எம்.கே.ராதா.

ராம்சந்தர் சகோதரர்கள் பாய்ஸ் கம்பெனியில் இணைந்தபோது... ஆரம்பத்தில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்தது. சமூக நாடகங்களில் முதன்முதலாகப் பிரதான வேடங்களை அவர்களுக்கு அளித்து உற்சாகப்படுத்தியதும் கந்தசாமி முதலியார்தான். கம்பெனி உரிமையாளரிடம் கோபித்துக்கொண்டு எம்.கே. மற்றும் அவரது மகன் எம்.கே.ராதா வேறு குழுவில் இடம்பெற்று வெளிநாடுகளில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ராம்சந்தர் சகோதரர்களையும், தங்களுடன் இணைத்துக்கொள்ள பல முறை முயன்றனர். ஆரம்பத்தில் சகோதரர்கள் மறுத்தனர். ஆனால், பின்னாளில் சகோதரர்களுக்குக் குழுவைவிட்டுப் பிரியும் மனநிலைக்கு வந்தபோது அவர்களுக்குக் கைகொடுத்தவர் எம்.கே-தான். அவர்களுடனான முதல் பயணமே பர்மா.

கந்தசாமி முதலியாரைத் தவிர, வேறு யாராக இருந்தாலும் கடல்கடந்த அந்தப் பயணத்துக்கு அனுமதித்திருக்கமாட்டார் சத்தியபாமா. அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார் கந்தசாமி முதலியார் மீது.

தந்தைக்கு நிகராக அவரது தனயனும் சகோதரர்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார். பின்னாளில் புகழ்பெற்ற நடிகரான எம்.ஜி.ஆர்., ’’தனக்கு எம்.கே.ராதாவுடன் சேர்த்து இரண்டு அண்ணன்கள்" என்று வாஞ்சையுடன் புகழ்ந்தார். முன்னரே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆரால் பொதுமேடையில் காலில் விழுந்து வணங்கப்பட்டவர்களில் ஒருவர் எம்.கே.ராதா. இன்னொருவர் சாந்தாராம். அத்தனை மரியாதைக்குரிய இடத்தில் எம்.கே.ராதாவை வைத்திருந்தார்.

பின்னாளில், எம்.ஜி.ஆர் முதல்வரான சமயம்... முதன்முதலில் அவர் வீடு தேடிச்சென்று வாழ்த்து பெற்றது எம்.கே.ராதாவிடம்தான். சுமார் ஒரு மணிநேரம் அவரது வீட்டில் இருந்து பூஜையறையில் இருந்த கந்தசாமி முதலியார் படத்தின் முன் 10 நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டுத் திரும்பினார்.

“நாடகத்துல நடிக்கும் காலத்திலேயே தம்பி, தான் நடித்து முடித்துவிட்டாலும் அங்கிருந்து போய்விடாமல் மற்றவர்களின் நடிப்பை அரங்கின் ஓரமாக நின்று ரசிக்கும். அபாரமான பாடம் செய்யும் சக்தியும், கேள்விஞானமும் அதிகம் அவருக்கு. உடன் நடிப்பவர்களுக்கு உதவுவதில் முன்நிற்பார். மனிதநேயம், விடாமுயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை இவைதான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்தன” 70-களின் மத்தியில், தம்பி எம்.ஜி.ஆரை சிலாகித்துச் சொன்னவர் எம்.கே.ராதா.

எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆருக்கு நாடகக் குரு மட்டுமல்ல; அவரது திரையுலகப் பிரவேசத்துக்கும் அவர்தான் வித்திட்டார்.

எம்.ஜி.ஆரின் முதல்படமான 'சதிலீலாவதி' யில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுத்தந்தவர் அவரே... ராம்சந்தருக்கு முதல்பட வாய்ப்பு எப்படிக் கிடைத்ததுத் தெரியுமா...?

தொடரும்..............

orodizli
3rd May 2020, 05:02 PM
"முதலாளிமார் சிறை வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்"..! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜிஆர். �� அத்தியாயம் 10 ��

எம்.ஜி.ஆரின் முதற்படம் 1936 ம்ஆண்டு வெளியானது. இந்தியத் திரைப்படங்கள் மௌனம் கலைந்து பேச ஆரம்பித்த காலத்தில் நாடக நடிகர்கள் மெல்ல திரைப்பட ஆசையில் திளைக்க ஆரம்பித்தனர். பார்வையாளர்களின் கைதட்டலையும் கூச்சலையும் நேரில் கண்டு அனுபவித்தவர்கள், சினிமா மாயைக்குள் சிக்குண்டனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெறுவது அவர்களின் கனவாக ஆனது. ராம்சந்தர் சகோதரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. என்றாலும் அவர்கள் திரைத்துறையில் எளிதாக வாய்ப்பு பெறும் அளவு நாடகத்துறையில் புகழ்பெற்றவர்களாக அப்போது இல்லை. இளமையும் நடிப்புத்திறமையும் அவர்களிடம் மூலதனமாக இருந்தபோதும் சினிமா வாய்ப்பு பெறும் அளவுக்கு பரவலான நட்புவட்டத்தை பெற்றிருக்கவில்லை அவர்கள். வெளியுலகத்தைப்பற்றியோ, மனிதர்களின் சுபாவம் பற்றியோ பெரிய அளவில் அறிந்துகொள்ளாத பக்குவம்தான் அவர்களுக்கு இருந்தது. உலக அனுபவமும் அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. 'நாடகத்தில் நடிக்கிறோம், பணம் கிடைக்கிறது, குறைந்தபட்ச வசதியான வாழ்க்கை' இப்படித்தான் கழிந்தன ராம்சந்தரின் நாடக வாழ்க்கை.

திரைப்பட ஆசையில் நாடக கம்பெனியில் இருந்து ஒவ்வொருவராக கழன்று சென்றுகொண்டிருந்தனர். ஆசான் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே.ராதா, கே.பி கேசவன், பி.யு சின்னப்பா, கே.ஆர். ராமசாமி...என அந்நாளில் புகழ்பெற்ற நாடகக்கலைஞர்கள் மற்றும் இன்னும் பலர் அப்படி விலகியிருந்தனர். சினிமா ஆசை சகோதரர்கள் மனதில் மெல்லத் துளிர்விட ஆரம்பித்தது. அரைகுறை மனதுடன் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வந்தது சகோதரர்களுக்கு. ஆம் நாடக கம்பெனியின் முதலாளி சொந்தமாக திரைப்படம் எடுக்கப்போகிறார் என்ற தகவல்.

சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. ஆஹா, நாமும் திரைப்பட நடிகர்களாகப்போகிறோம். கும்பிடப்போன காமிரா குறுக்கே வந்ததுபோல், துள்ளிக்குதித்தனர் இருவரும்.

அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 'பதிபக்தி' என்ற நாடகத்தை நடத்திவந்தது. தமிழகத்தில் அந்த நாடகம் நடக்காத ஊர் இல்லை என்ற அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றது அந்த நாடகம். அதன் விளைவாக அதை படமாகத் தயாரிக்க திட்டமிட்டது நாடக கம்பெனி. அதேசமயம் நாடகக்குழுவை கலைத்துவிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. அது, சகோதரர்கள் மனதில் பயத்தை உண்டுபண்ணியது. காரணம் அக்காலத்தில் சினிமா தயாரிப்பு என்பது புனே, மும்பை என சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் அந்நாட்களில் வசதியான ஸ்டுடியோக்கள் அரிதாகவே இருந்தன. இதனால் ஒரு படத்தை தயாரித்து முடிக்க பல மாதங்கள் ஆகின. 'நாடகம் தினமும் நடக்கிறது. தினமும் நிச்சயமான வருமானம். ஆனால் சினிமாவில் ஒரு படத்திற்கான குறைவான சம்பளத்தில் வருடம் முழுக்க உழைப்பையும் நேரத்தையும் செலவிடவேண்டியதிருக்கும். அப்படியானால் நாடகத்தை முற்றாக துறக்கவேண்டும். இதுதான் கவலை தந்தது சகோதரர்களுக்கு. சினிமாவை நம்பி நிரந்தர வருமானத்தை இழக்கமுடியாது. எப்படியோ மனதை தேற்றிக்கொண்ட நேரத்தில் இடியென வந்தது அந்த தகவல்.

முதற்படம் என்பதால் ஏற்கெனவே சினிமாவில் பிரபலமானவர்களைக் கொண்டே தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் தொடர்ந்து கம்பெனி நாடகங்களில் நடிக்கவேண்டும் என கம்பெனி முடிவெடுத்த தகவல் அது. .நொந்துபோனார்கள் சகோதரர்கள்.

இத்தனை வருடங்கள் கம்பெனிக்காக உழைத்த நமக்கு கம்பெனியின் சொந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது தொடர்ந்து இங்கு நம் உழைப்பை வீணாக்கவேண்டுமா என்ற எண்ணம் ராம்சந்தர் மனதில் தோன்றியது. கம்பெனியை விட்டு விலகுவதென சகோதரர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல். முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை ரொம்ப கறார் பேர்வழி. விருப்பப்பட்ட நேரத்தில் விடுமுறையே அளிக்கமாட்டார். விலகுவதென்றால் விடுவாரா...அதுவும் கம்பெனியில் ஆட்கள் இல்லாத இந்த நேரத்தில்.

ஒருமுறை வேலுாரில் முகாம் போட்டிருந்த நேரம், ஊரெல்லாம் காலரா பரவியது. பலர் இறக்கவும் நேரிட்டது. உச்சகட்டமாக நாடகக்குழுவில் இருந்த ஒருவரும் காலரா பாதிப்பில் இறந்தார். ஊரை உடனே காலி செய்வது நல்லது என குழுவினர் முடிவெடுத்தனர். ஆனால் முதலாளி சச்சிதானந்தம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி ஒப்பந்தம் முடிந்த பின்னரே செல்வது என உறுதியாக இருந்தார். இத்தனைக்கும் ராம்சந்தரே கூட காலராவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்தனை முரட்டு மனிதர் அவர். சகோதரர்களுக்கு இப்போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கிலி தந்தது.

மன உளைச்சலுக்கு ஆறுதல் தேடி அவர்கள் சென்ற இடம் எம்.கந்தசாமி முதலியார் வீடு. தங்கள் பிரச்னைகள் முழுவதையும் அவரிடம் சொல்லி அழுதனர். இளமையும் அழகும் கொண்ட தங்கள் எதிர்காலம் நாடகத்திலேயே முடங்கிவிடக்கூடுமோ என்ற தங்கள் அச்சத்தை சொல்லி வேதனைப்பட்டனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட எம்.கே. மனதில் ஒரு திட்டத்துடன் சகோதரர்களிடம், கம்பெனியை விட்டு வந்துவிடுங்கள்...உங்களுக்கு நான் ஒரு வழி செய்கிறேன்”- எம்.கே வின் வார்த்தைகளில் ஆறுதலடைந்து வீடு திரும்பினர் சகோதரர்கள்.

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மறுநாள் முதலாளி முன்போய் நின்று தங்கள் முடிவை சொன்னார்கள். “ஏலே பயலுகளா...நல்லா நடிச்சி பேரு கிடைச்சி, நாலு காசும் பார்த்தபின்னாடி திமிரு வந்திடுச்சா...கம்பெனியில ஆளு குறைவா இருக்கு. உங்களை வெளிய அனுப்பமுடியாது. அப்படி தெரியாம ஓடிப்போக நினைச்சிங்கன்னா, கம்பெனி சாமான்களை திருடிட்டுப் போயிட்டதா போலீஸ்ல புகார் தந்து புடிச்சி கொடுத்திடுவேன். ஜாக்கிரதை”- முதலாளியின் பேச்சால் அதிர்ந்தனர் சகோதரர்கள்.

சினிமா வாய்ப்பும் மறுக்கப்பட்டதோடு, விரும்பியபடி வெளியேறவும் செல்லமுடியாமல் கிட்டதட்ட சிறைக்காவல் போல தாங்கள் வைக்கப்பட்டதை நினைத்து இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சகோதரர்கள் சத்தியபாமாவிடம் அதைச் சொல்லி வேதனைப்பட்டனர். “அட, இதற்காகவா விசனப்பட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். என் பிள்ளைகளை மிரட்டறானா அந்த முதலாளி.. போய் ஒரு வெள்ளைத்தாளை கொண்டுவாங்கடா, சீக்கிரம்...” அம்மா ஏன் வெள்ளைத்தாளை கொண்டுவரச் சொல்கிறார்" என்ற குழப்பத்துடன் தாயாரைப் பாரத்தார்கள் சகோதரர்கள்...அம்மா சொன்ன அதிரடி யோசனையை கேட்டு அதிர்ந்து நின்றனர் இருவரும்.

தொடரும்...............

orodizli
3rd May 2020, 05:04 PM
"எம்.ஜி.ஆருக்கு தியேட்டரில் கிடைத்த அனுபவம்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். �� அத்தியாயம் 11��

நாடக முதலாளியால் தன் பிள்ளைகள் மிரட்டப்பட்டதைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்தார் சத்தியபாமா. “அவரு என்னடா புகார் தர்றது...நாம தருவோம் அவர் மேல...”- எம் ஜி ஆர் பேப்பர் கொண்டுவர, விடுவிடுவென சொல்லச் சொல்ல சக்கரபாணி எழுத ஆரம்பித்தார்.

“மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துவரும் எங்களுக்கு கம்பெனி எடுக்கும் சொந்தப் பணத்தில் வாய்ப்பு தராததோடு தொடர்ந்து தங்கள் நாடகத்தில் நடிக்கவேண்டும் எனவும், மறுத்தால் கம்பெனி சாமான்களை திருடிச்சென்றுவிட்டதாக எங்கள் மீது முதலாளி பழிபோட்டு சிறைக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறார். எங்களை இந்த இக்கட்டிலிருந்து காக்கவேண்டும்.” இதுதான் கடிதத்தின் சாராம்சம்.

தாயின் சொல்படி, கடிதத்தை உள்ளுர் காவல்நிலையத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தனர் சகோதரர்கள். “இப்போ போய் சினிமாவாய்ப்பை தேடுங்கடா...உங்க முதலாளி என்ன பண்ணிடுவார்னு பார்ப்போம்” - தாயின் சாதுர்யமான முடிவை எண்ணி வியந்த சகோதரர்கள், மனநிம்மதியுடன் வாய்ப்பு தேடும் முடிவுக்கு வந்தனர்.

அப்போது அவர்களுக்கு நினைவுக்கு வந்தவர், நாடக உலகில் மேடைப் புலி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கே.பி கேசவன். அவரது நாடகத்திற்கு நிச்சயமான வசூல் என்பது அந்நாளில் உறுதி. பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது சகோதரர்களுடன் நெருங்கிப்பழகியவர். அழகும், கணீர்க்குரலில் அவர் பேசும் வசனமும் அப்போது நாடகமேடையில் அவரை பிரபலப்படுத்தியிருந்தது. நாடகத்துறையில் இருந்து விலகி சினிமாப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், ராஜ்மோகன் என்ற படத்தில் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டிருந்தார். கம்பெனியில் இருக்கும்போது அத்தனை பேரும் புகழும் பெற்றிருந்த அவர், “ராம்சந்தரா உன் அழகுக்கும் கலருக்கும் நீ ஒருநாள் இந்த சினிமாவை ஆளப்போறேடா”- என எம்.ஜி.ஆரை பார்க்கும்போதெல்லாம் சொல்வார். அப்போதெல்லாம் வெட்கப்பட்டு சிரிப்பார் எம்.ஜி.ஆர். காரணம் சினிமாவில் நடிப்பது குதிரைக்கொம்பான காலம் அல்லவா.

ஆனால் பின்னாளில் அதுதானே நடந்தது. பின்னாளில் பெரும் போராட்டங்களுக்கிடையில் சினிமா உலகில் தனக்காக ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், அங்கு தொடர்ந்து நிலைத்து நிற்கவும் கே.பி கேசவனே காரணமானார்.

சினிமா உலகில் புகழின் உச்சியை தொட்டபோதும், தன்னைச்சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக எம்.ஜி.ஆர் கற்பனை செய்துகொள்ளவில்லை. வெற்றிகளின்போது வெறி கொண்டு ஆடாமலும், தோல்விகளின்போது துவண்டுவிடாமல் போராடவும் இருக்க அவருக்கு பாடமாக இருந்தவர் கே.பி கேசவன்தான்.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நடந்தது. சென்னை 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் அப்போது 'இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்த அவருடன் எம்.ஜி.ஆரும் வேறு சிலரும் படத்தைப் பார்க்க சென்றிருந்தனர்.

இடைவேளையின்போது, படத்தின் கதாநாயகனே படம் பார்க்க வந்த தகவல் ரசிகர்களுக்கு எட்டியது. ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறி வாழ்த்துக் கோஷமிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர், இதைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். கதாநாயகனை தங்கள் அன்பில் திளைக்கவைத்தனர் ரசிகர்கள். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்ற ஒரு நடிகனின் அருகில் தான் அமர்ந்திருந்தது பெருமையாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.

படம் முடிந்த பின் புறப்பட்டால் ரசிகர்கள் அன்பிலிருந்து விடுபடமுடியாது என்பதால் கதாநாயக நடிகர் அதற்கு முன்பே புறப்பட்டார். ஆனால் அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். கதாநாயக நடிகர் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்க்குள் ரசிகர்கள் அவரை சூழந்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை பெரும் சிரமத்துடன் காப்பாற்றி அன்று பாதுகாப்பாக காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தது எம்.ஜி.ஆர்தான்.

அன்று மக்களுக்கு எம். ஜி.ஆர் என்ற துணைநடிகரைத் தெரியாது. ரசிகர்களிடம் அவர் சண்டையிட்டு கதாநாயக நடிகரை மீட்டபோது கூட அவரும் அந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒருவர் என்பதை அவர்கள் அறியவில்லை. அன்றைக்கு எம்.ஜி.ஆரின் பிரபல்யம் அவ்வளவுதான்.

காலச் சக்கரம் சுழன்றது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், எம்.ஜி.ஆர் நடித்த 'மர்மயோகி' திரைப்படம் வெளியானது. படத்தின் வெற்றியால் மூலைமுடுக்கெல்லாம் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும், அநாயாசமான நடிப்பும், இளமையும், அழகும் மக்களால் சிலாகிக்கப்பட்டது. அப்போது சென்னை 'நியூ குளோப்' தியேட்டரில் அதே கதாநாயக நடிகருடன் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

இடைவேளையின்போது 'மர்மயோகி' எம்.ஜி.ஆர் படத்திற்கு வந்திருந்த தகவல்
அறிந்து ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த முன்னாள் கதாநாயக நடிகரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவரைத் தள்ளிக்கொண்டுச் சென்று எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கினர் ரசிகர்கள். பலர் அந்த முன்னாள் கதாநாயக நடிகரிடமே தங்கள் நோட்டுப்புத்தகங்களை தந்து எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கித்தரக்கோரினர். பொறுமையுடன் அதை செய்தார் அவர். அந்த அளவிற்கு அந்த முன்னாள் கதாநாயகன் மக்களின் மனங்களில் இருந்த மறக்கப்பட்டிருந்தார்.

படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்தது. அந்த ரசிகர் கூட்டத்திடமிருந்து எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார் அந்த 'முன்னாள்'. எம்.ஜி.ஆர் ஏறி அமர்ந்த டாக்ஸி அங்கிருந்து சீறிக்கிளம்பியது. வண்டியின் பின் கண்ணாடி வழியாக எம்.ஜி.ஆர் திரும்பிப்பார்த்தார். திரண்டு நின்ற மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக அந்த முன்னாள் கதாநாயகனும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு வயதாகிவிடவுமில்லை; நடிப்பு வன்மையும் குறைந்துவிடவில்லை.

எம்.ஜி.ஆர் மனதில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அன்றுதான், எவ்வளவுதான் புகழ் கிடைத்தாலும் அதன் போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

“எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும். கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு! - என 1968 ம்ஆண்டு ஏப்ரலில் சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேற்சொன்ன சம்பவங்களைக் கூறி பேட்டியளித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு படிப்பினையை ஏற்படுத்திய அந்த கதாநாயக நடிகர் வேறு யாருமல்ல; சினிமா வாய்ப்புக்காக முதன்முதலாக எம்.ஜி.ஆர் நாடிச் சென்ற அதே கே.பி.கேசவன்தான்!

வாய்ப்பு பெற்று தந்தாரா கே.பி.கேசவன்?

தொடரும்... .........

orodizli
3rd May 2020, 05:06 PM
"எஸ்.எஸ்.வாசன் கதையில் திரைப்பட வாழ்வைத் துவக்கிய எம்.ஜி.ஆர்"! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
�� அத்தியாயம் 12��

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.

அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை )...........

orodizli
3rd May 2020, 05:07 PM
"முதல் படத்தில் எம்.ஜி.ஆரின் சம்பளம் எவ்வளவு"?- நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். �� அத்தியாயம்-13��

கே.பி கேசவன் மூலம் தேடிவந்த வாய்ப்பு, தன் முகவாய்கட்டையில் இருந்த தழும்பினால் தவறிப்போன வருத்தத்துடன் இருந்த நேரத்தில்தான், எம்.கந்தசாமி முதலியாரைச் சந்தித்தனர் எம்.ஜி.ஆர் சகோதரர்கள். அவர்களின் நலம் விசாரித்த எம்.கே, உடனடியாக அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர முன்வந்தார். தங்களின் நாடக குரு மூலம் ராம்சந்தர் முதன்முதலாக படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றாலும், அத்தனை எளிதாக அது கைகூடவில்லை. படத்தின் படப்பிடிப்பு துவங்கும்வரை, அதில் தான் நடிப்போமா இல்லையா என்று குழப்பத்தின் உச்சிக்கே செல்லும்படி பல சம்பவங்கள் நடந்தேறின. 1966 -ம் ஆண்டில், தான் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய சமநீதி இதழில் சுவாரஸ்யமான அந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

பதவிப் போராட்டம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், சதி லீலாவதி செய்த சதிகளை சுவாரஸ்யமாக எழுதுகிறார் இப்படி...
நான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த நேரம். வெளியுலகத்தைப் பற்றியோ, மக்கள் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதையோ, எந்தெந்தக் குணத்தினர், எப்படிப்பட்ட தரத்தினர் என்பதையோ சிறிதும் தெரிந்துக்கொள்ளாத, தெரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். (இப்போது எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டேன் என்று கருதுவதாக யாரும் எண்ண வேண்டாம்.) உலக அனுபவம் சிறிதும் பெறாத நிலையில் இருந்தேன் என்பதையே குறிப்பிடுகிறேன்.

அந்தப் பருவத்தில், அதுவரை எனக்குக் கிடைத்திருந்த அனுபவமெல்லாம், “நாடகத்திலே நடிக்கிறோம்; பணம் கிடைக்கிறது. கிடைக்கிற பணம் வாழ்க்கைக்குப் போதாது. அதிகப் பணம் தேவை. அந்த அதிகப் பணத்திற்காக ,அதிகச் சம்பளம் வாங்குவதற்கு வேறு கம்பெனிக்குப் போக வேண்டுமென்றால், அதற்கு வேண்டிய தகுதிகள் இல்லை. ஏதோ கிடைத்ததைக்கொண்டு, இதாவது கிடைக்கிறதே என்று வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போகவேண்டியதுதான்” என்று சுற்றிச்சுற்றி இந்தப் பிரச்னையிலேயே உழன்று கொண்டிருந்தேன்.

இப்போது சில சமயம் வேலை செய்வதற்கு நேரம் போதவில்லையே என்ற கவலை! அப்போது நிறைய நேரமிருக்கிறது, வேலையில்லையே என்ற கவலை.

இத்தகைய நிலையில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நல்ல வசூலோடும், வெற்றியோடும் நடத்திக்கொண்டிருந்த 'பதிபக்தி' என்ற நாடகத்தைச் சினிமாவாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்ற செய்தி விபத்தைப்போல எங்கள் செவிகளில் விழுந்தது. படம் எடுப்பதனால் நாடகக் கம்பெனியை நிறுத்திவிடப்போவதாகவும், அவர்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படமெடுக்கத் தீர்மானித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டதுதான் அந்தச் செய்தி. அது, விபத்தைப் போன்று என்னையும், என் தமயனாரையும் உலுக்கியது.

“ஆமாம், நாடகக் கம்பெனியை நிறுத்திவிட்டால் என்ன? படம்தான் எடுக்கிறார்களே! அதில் வேலை (வேடம்) கிடைக்காதா என்ன? அந்த நம்பிக்கை இருக்குமல்லவா?”: என்று கேட்டுவிடாதீர்கள்! நாடகக் கம்பெனி என்றால், தினமும் நாடகம் நடக்கும். மாதா மாதம் சம்பளமும் கிடைக்கும். எப்போதோ படம் எடுப்பார்கள்; என்றோ ஓரிரு நாள் வேலையிருக்கும். மாதச் சம்பளம் எப்படிக் கிடைக்கும்! அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், எதிர்பார்க்காவிட்டால் எப்படித்தான் வாழ்வு..? எங்களுக்கு இந்த நல்ல குணம் (தேவையற்ற குணம்) யாரிடமாவது சென்று வேலை கேட்கும் பழக்கமும் கிடையாது; எப்படிக் கேட்பது என்றும் தெரியாது. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்! சரி, பால் எந்தத் தாயிடமிருந்து கிடைக்கும் என்றாவது குழந்தைக்குத் தெரிய வேண்டுமே!

வறுமையின் காரணமாக பால் கொடுக்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு தாயிடம், அதன் குழந்தை எவ்வளவு பெரியதாக அழுதால்தான் என்ன, எத்தனை நேரம் அழுதால்தான் என்ன? அந்த நிலையில் உள்ள குழந்தைகளைப் போன்றவர்களானோம் நாங்களும். ஒரு நாள் ,எதிர்பாராதவிதமாக எங்களுடைய நாடக ஆசிரியரும், எம்.கே.ராதா அவர்களின் காலஞ்சென்ற தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று எப்போதும்போல அக்கறையோடும், அன்போடும் அவர் விசாரித்தார். “படம் எடுக்கப்போகிறார்கள்... அதிலே ஏதாவது வேடம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” இதுவே எங்கள் பதில்.

‘இல்லை’ என்று சொல்வதற்கும் வெட்கம்! “இருக்கிறது” என்று சொல்வதற்கும் அச்சம்!

அவர் சொன்னார், “நல்லவேடம் கொடுத்தால் நடிக்கலாம் இல்லையா? ஒரு பட முதலாளி ‘சதிலீலாவதி’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கு நான்தான் உரையாடல் எழுதப்போகிறேன்! எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அமெரிக்க டைரக்டர் படத்தை இயக்கப்போகிறார். அதில் ஒரு துப்பறிபவன் வேடம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம் அந்த வேடத்திற்கு உள்ளன. நீ வருவதாயிருந்தால், அந்த வேடத்தை உனக்குத் தர ஏற்பாடுசெய்கிறேன்” என்றார்.

கரும்பு தின்னக் கூலியா கேட்போம்! 'பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று' என்ற நிலையிலிருந்த எனக்குத் துப்பறிபவன் வேடம்!
'பதிபக்தி' என்ற நாடகத்திலும் 'துப்பறியும் சந்தானம்' என்ற ஒரு வேடம் உண்டு. அந்த வேடத்தை ஏற்று நடிப்பவர் எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்த ஆசிரியரான காளி என். ரத்தினம் அவர்கள். அந்த நாடகம் பெருமை பெறக்காரணமாக இருந்த சிறப்புகளில் ஒன்று காளி. என். ரத்தினம். அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட துப்பறியும் வேடத்திற்கேற்ப நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் போடும் சண்டைக் காட்சி தவிர கே.பி. கேசவன் அவர்களின் குடிகார நடிப்பும், நல்ல கதையமைப்பும் அதன் வெற்றிக்குக் காரணங்களாகும்.

'சதிலீலாவதி' யின் கதையும் ‘பதிபக்தி’போன்றே ஒரே மாதிரியான பல சம்பவங்களைக் கொண்ட கதைதான். 'பதிபக்தி' யின் கதாசிரியர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். “சதிலீலாவதி”யின் கதை ஆசிரியர் எஸ்.எஸ். வாசன். என்னுடைய ஆசிரியர் நடிக்கிற அதே வேடம். அதேபோன்ற படத்தில் எனக்குக் கிடைக்கிறதென்றால் எப்படி அதை வரவேற்காமல் இருக்க முடியும்? “எப்பொழுது வரவேண்டும்?” என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. “முதலாளி வந்துவிடுவார்கள்; வந்ததும் பாரு, ஒப்பந்தம் செய்து வைக்கிறேன் ’’ என்றார்.

அதன்பின், படத்தின் முதலாளி வந்துவிட்டார் என்ற செய்தி வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது என்றால் மிகையாகாது.

எங்கள் நாடக் கம்பெனி நாடகங்கள் சென்னை ராயல் தியேட்டரில் (சால் கொட்டர்ஸ்) தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேறொரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படப் போகிறோம் என்ற செய்தி எங்கள் இருவரையும், எங்கள் தாயாரையும் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. நாங்களும் சொல்லவில்லை. வேண்டுமென்றேதான் மறைத்து வைத்திருந்தோம். ஒருநாள் ஆசிரியர் எம்.கே. அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் எங்களை அழைத்துப்போய் ஒப்பந்தம் செய்துவைத்து முன்பணம் வாங்கித் தருவதாக கிடைத்த தகவல்.

எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காத்திருந்தோம்; காலமும் வந்தது, கைநீட்டிப் பணம் வாங்க நானும், என் தமையனாரும் நாடக ஆசிரியரோடு சென்றோம். ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார்; கோவையைச் சேர்ந்தவர்; நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார்.

பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சட்டைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப்புரிந்துக் கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர் “உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்‘ என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டை கூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்! நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான ‘மகிழ்ச்சி விம்மல்’ என்று பெயரோ?

அண்ணனை நான் பார்த்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார். மருதாசலம் செட்டியார் என்ன நினைத்தார் என்று தெரியாது. முதல் படம் தானே! கொடுக்கிறதை வாங்கிக்குங்க முன்னே பின்ன இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கத்தான் வேணும் ...அப்புறம் தருவோம். நல்லா நடிச்சுப்பெயர் வாங்குங்க...” என்று கூறினார் அவர். அவர்கள் இருவருக்கும் நமஸ்காரத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். “வணக்கம்“ சொல்வதற்கு எங்களுக்கு என்ன தெரியும்? ஆசிரியர் கீழே வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

எங்களுக்கு இப்படிப்பட்ட பேருதவியைச் செய்தாரே, அதற்காக அவர் எங்களிடமிருந்து உபசாரத்திற்காக நாங்கள் சொல்லவேண்டிய ஒரு நன்றி வார்த்தையைக் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டியது ஒரு கடமை என்று கருதியவராக எந்தவித மறுமொழியையும் எதிர்பார்க்காமல் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் வண்டியில் செல்வதாவது? அதற்கு ஏது எங்களிடம் காசு! நானும் அண்ணனும் நடந்தே வீடுநோக்கி புறப்பட்டோம்.

வீடு செல்லும் வழியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன அது?...

தொடரும்............

orodizli
3rd May 2020, 05:10 PM
"ஒரு வேடத்துக்கு இருவர்..! 'சதி லீலாவதி' யில் சதி!.. - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
🍁 அத்தியாயம்-14🍁

நாடகத்திலிருந்து திரைப்பட உலகுக்குள் நுழையும் பெரும் கனவு, அந்நாளைய நாடக நடிகர்களைப் போலவே எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கும் இருந்தது. பல போராட்டங்களுக்கிடையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள். அதற்கு நுாறு ரூபாய் சம்பளமும் பெற்றார்கள் ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததா?... அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன...தொடர்ந்து பேசுகிறார் எம்.ஜி.ஆர்.

”செல்லும் வழியில் நான் தமயனாரிடம் கேட்டேன். “ஏன் அண்ணே! இது உண்மையான நோட்டா இருக்குமா? சரியான நூறு ரூபாய் நோட்டுதானே?“ என்று.

'இதுக்கு முன்னாலே நான் எங்கேடா பார்த்தேன்?' என்று சொன்ன அண்ணன், 'ஆமாம் உனக்கு ஏன் திடீர் சந்தேகம்?' என்று கேட்டார்.
'ஏன் அண்ணே நீங்க கவனிக்கலையா? நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தாரே! அவர் போட்டுக்கிட்டிருந்த சட்டையிலே கைப் பொத்தான் கிடையாது. கயிறுதான் கட்டியிருந்தாரு. பாத்தீங்க இல்லே? அதனால்தான் சந்தேகம். நூறு ரூபாய் முன்பணம் கொடுக்கிறவர் ஏன் பொத்தான்கூடப் போட்டுக்காம கயிற்றைக் கட்டிக்கிட்டிருக்காரு?' என்றேன்.

'நானும் கவனிச்சேன். இந்தக் கயிறு கட்டினதுனாலே அவரு முதலாளியா இருக்கக் கூடாதுங்கறது இல்லையே! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்றுமில்லாதவங்கதானேடா வெளிச்சம் போடணும்! நாமெல்லாம் நல்ல சட்டை, வேட்டியில்லாம போனா கேலி பண்ணுவாங்க! அதுக்காக எல்லாம் சரியாப் போட்டுக்கிட்டுப் போகவேண்டியிருக்கு. அவங்களை யாரு கேள்விகேட்க முடியும்? யாரு கேலி பேச முடியும்?' என்றார் அண்ணன். அதுவும் சரியான நியாயமாகத்தான் எனக்குப்பட்டது.

வீட்டுக்குப்போய் தாயாரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தோம். அப்போது இரவு நேரம். அவர்கள் நோட்டைப் பார்த்தார். பார்க்கும்போதே என்னுடைய சந்தேகத்தை அண்ணன் தாயாரிடம் சொன்னார். தாயார் உடனே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்கள். 'நீரோட்டம் இருக்கேடா! எப்படிப் பொய்யாக முடியும்?' என்று சொல்லிவிட்டார்.

அந்த நோட்டை அப்படியே எடுத்துத் தாயார் அவர்கள் எப்போதும் வணங்கும் விஷ்ணுவின் படத்தடியில் வைத்துவிட்டு, 'நாளைக் காலையில் இதைப்போய் மாத்திக்கிட்டு வரலாம்' என்றார். அந்த இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. வீடு நிறையப் பணமாக இறைந்து கிடப்பதுபோல ஒரு பிரமை. நடப்பதற்குக்கூட இடமில்லாதபடி வெள்ளி ரூபாய்களாகக் குவிந்து கிடப்பது போல எனக்குத் தெரிந்தது.

தூங்கினேனோ, இல்லையோ தெரியாது. விடிந்து எழுந்தேன். உடனே நாடகக் கம்பெனிக்குச் சென்று எல்லோரையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை. என் சக நண்பர்களிடம் போய் இந்த முன்பணம் சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டுமென்று பேராவல்.

எப்படித்தான் தாயார் என் மனக்குறிப்பைத் தெரிந்துக் கொண்டார்களோ, அறியேன். சட்டையைப் போட்டுக் கொண்டு நான் புறப்பட்டபோது அழைத்தார்கள்; சென்றேன்.

“நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. நாடகக் கம்பெனி முறையெல்லாம் தெரியுமில்லே? ஜாக்கிரதை!” என்றார்கள். எவ்வளவு பெருமையோடு புறப்பட்டேனோ அவ்வளவுக்கவ்வளவு தாழ்ந்து, குறுகி, சோர்ந்து ஒரு மூலையில் போய் உட்கார்ந்தேன்.

ஒருநாள் நாடகத்தின்போது நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் நண்பர்களையெல்லாம் பார்த்தேன். என் தோழர்கள் எவ்வித மாற்றத்தோடும் இல்லை; எப்போதும் போலத்தான் இருந்தார்கள். ஆனால், என் கண்களுக்கு அவர்கள் என்னைவிடத் தகுதி குறைந்தவர்களாகத் தோன்றினார்கள்! ஏனென்றால் நூறு ரூபாய் முன்பணம் வாங்கினவன் அல்லவா நான்!
அவர்கள் என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுவிட்ட நிலையில் ஏதேதோ கேட்கத் தொடங்கினார்கள்.
நான் சொல்லவும் முடியாமல், மனதிலே வைத்துக்கொள்ளவும் முடியாமல் தடுமாறினேன். நெருங்கிய நண்பன் ஒருவனிடமாவது சொல்லலாமா என்று ஆசை.

தாயாரின் கட்டளையை நினைத்தவுடன் ஆசை எப்படி பறந்தோடிற்றோ எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் நாடகத்தின்போது காலஞ்சென்ற ஜட்ஜ் எம்.வி.மணி ஐயர் என்பவர் கொட்டகைக்கு வந்தார். எங்கள் நாடகக் கம்பெனியிலேயே நாங்கள் சேர்வதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தவர் அவர். ஜட்ஜாக நடித்து மக்களால் பாராட்டப்பட்டதன் காரணமாக ‘ஜட்ஜ் எம்.வி. மணி ஐயர்’ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. அவரிடம் காளி என். ரத்தினம் அவர்கள், 'ஏன் மணி எங்கே வந்திருக்கே?' என்று கேட்டார்.

“சினிமாப் படத்திலே நடிக்க வந்திருக்கேன். உங்க ‘பதிபக்தி’ மாதிரிதான்; சதிலீலாவதி. அந்தப் படத்திலே நடிக்க வந்திருக்கேன்” என்றார். எங்களுக்கு ஒரே பயம். எங்கே நாங்கள் ஒப்பந்தமாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி விடுவாரோ என்ற திகில். ஆனால், அவர் மேலும் பேசுவதற்குள் டி.ஆர்.பி. ராவ் அவர்கள் அவரைக் கேட்டார். “நீ என்ன வேஷம் போடப் போகிறாய்?” என்று 'துப்பறியும் வேடம்' என்றார் அவர். அவ்வளவுதான்! என் தலை சுற்றுவதுபோல் இருந்தது. அந்த வேடத்துக்குத்தானே சம்பளம் பெற்று வந்திருக்கிறோம். “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ என்னவோ, என்ன ஆனாலும் மறுநாள் ஆசிரியரைப் பார்த்து விடுவது” என்று முடிவெடுத்தேன்.

ஜட்ஜ் எம்.வி. மணி இந்தச் சேதியைச் சொன்ன பிறகு சிறிது நேரத்துக்கு முன்னால் எந்த நண்பர்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்களாக என்முன் தெரிந்தார்களோ, அதே நண்பர்கள் இப்போது என்னைவிட உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள் எனக்கு! மனிதனுடைய மனம் எத்தனை பலவீனமானது என்பதை அப்போது தான் ஒரு சிறிது நேரத்தில் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மனதின் உள்ளம் மிகக் கடினமானது, வலிவுமிக்கது, எதனாலும், யாராலும் கலங்கவோ, கலக்கப்படவோ முடியாத சக்தி வாய்ந்த ஒன்று என்பது பல புராணக் கதைகள் மூலமாகவும், வீரப் பெருமக்களின் சரிதை மூலமாகவும், என் தாயின் வாய்மொழி வழியாகவும் ஓரளவு புரிந்துக்கொண்ட முடிவாகும்.

இளகிய மனம் படைத்தவர்கள் பலரை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஏன், என் தாயார் செய்த பல அருஞ்செயல்களை மகனான நான் கண்முன் அறிந்து உணர்ந்திருக்கிறேன்.

இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்ததொரு நிகழ்ச்சிக்கு என் மனம் என்னை ஈர்த்துச் செல்கிறது. இங்கே அதை வெளியிடவும் விரும்புகிறேன்.

அந்தச் சமயம் நாங்கள் குடியிருந்த வீட்டில் இன்னும் சில குடித்தனக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் ‘டீ’ விற்கும் தொழிலாளி; அவருக்கு தொழில் செய்யும் உபகரணங்கள் சேதமாகிவிட்டது ஒருநாள். தாயாருக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. தொழில் செய்யத்துடிக்கும் அந்த எளியவர்களுக்கு அதற்குத் தேவையான கருவி இல்லாமல் பிழைப்பே கெட்டுப்போகிறதே என்று அவர்களின் அல்லலை நினைத்து அனுதாபத்தோடு வேதனையும் அடைந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் உயர்ந்த நிலையில் வசதியோடு இருந்தோம் என்று யாரும் தப்புக்கணக்குப் போட்டுவிட வேண்டாம். எப்படியோ சிரமத்துடன் ஒருவிதமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்து பட்டினி கிடக்கவில்லை என்பதுதான் அப்போதைய நிலைமை.

அந்தத் தொழிலாளருக்கு உதவுவேண்டும் என்ற நல்ல எண்ணம் தாயாருக்குப் பிறந்தது. எண்ணம் பிறந்தால் போதுமா! செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அதாவது, பணம் வேண்டாமா? பணம் தான் இல்லையே!

நாங்கள் பற்று வரவுக் கணக்கில் கடையில் வாங்கும் உணவுப் பண்டங்களை வேண்டுமானால் கொடுக்கலாம். எத்தனை நாளைக்கு முடியும்? அப்படியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பின்புதான் கடைசியாக முடிவுக்கு வந்து எங்களுக்குக்கூடத் தெரியாமல் பணம் ஏற்பாடு செய்து அவருக்குத் தேவையான அந்தப் பணத்தைக்கொடுத்திருக்கிறார். இதன்பின் அந்தக் குடும்பத்தினர் டீ விற்பதையும், சம்பாதிப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எப்படித்தான் அவர்களின் வாழ்க்கை நடந்து வருகிறது என்பது தெரியாது.

ஒருநாள் வீடு திரும்பிய நேரத்தில் ஆறு மாதக் கடன்காரன் என்று அழைக்கப்படுகிற ஈட்டிக்காரனுக்கும், தாயாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கக் கண்டோம்.

ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு ஈட்டிக்காரன் என்றாலே பிடிக்காது. அவன் பயங்கரமானவன் என்ற எண்ணமுள்ளவர்கள் நாங்கள். அவன் வீட்டுக்கு வருவதே தலைகுனிவு என்பதும் எங்கள் முடிவு. அப்படிப்பட்ட ஒருவன் என் தாயிடம் வந்து 'பணத்தை வைத்துவிட்டு மறுவேலை பார்' என்றால் அதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வோம். அதுவரை நாங்கள் தாயாரை எதிர்த்துப் பேசியதோ, முரண்பாட்டுடன் பார்த்ததோ கிடையாது. என்னவென்று விசாரித்தோம். எங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பார்த்துப் புரிந்துக்கொண்ட தாயார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்பைக் கழற்றி அவன் மேல் விட்டெறிந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விற்று உன் பணம்போக மீதத்தைக்கொண்டு வந்து கொடு' என்றார்கள்.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஈட்டிக்காரன், 'நாளைக்கு வரேன். நீங்களே நாளைக்குக் கொடுங்க' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அதோடு காலையில் 10 மணிக்கு வந்துவிடுவேன் என்று எச்சரிக்கையும் செய்தான். அவன் போனதும் நாங்கள் தாயாரைப் பார்த்தோம். அழுகையோடும்; ஆத்திரத்தோடும் எங்கள் வார்த்தைகள் வெளிப்பட்டன. தாயார் அவர்கள் சிறிதும் சலனமுறவில்லை. 'நான் கைநீட்டி வாங்கினேன் திருப்பிக் கொடுக்கலன்னா அவன் திட்டத்தானே செய்வான்.'

'எதுக்காக வாங்கனும்? அவன் கிட்டே எதுக்காக வாங்கினீங்க?'- கொஞ்சம் அதிகமாகவே வார்த்தைகள் எங்களிடமிருந்து வெளிவந்தன. எதுக்காகவோ வாங்கினேன்; ஏன் எனக்காகத்தான் வாங்கினேன்! அதை யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.'
இழிவான, கேவலமான வார்த்தைகள் அல்ல. 'நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கண்டிக்கும் வார்த்தைகள்'. இதுவரை அவர்கள்தான் எங்களைக் கேட்டதும், கண்டிப்பதும் வழக்கம்.

இப்போது நாங்கள் கேட்கும் படியாக நேர்ந்ததை எங்களாலேயே பொறுத்துக் கொள்ளமுடியாதபோது தாயாருக்கு அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்! ஆனாலும் கடைசி வரையில் அவர்கள் எதற்குப்பணம் வாங்கினார்கள் என்பதைத் தெரிவிக்கவே இல்லை. இந்தக் குழப்பத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளியின் மனைவி எங்களிடம் வந்து அழுதபடியே உண்மையைச் சொன்னார்.

அவர்களுக்குக் கெட்டிலுக்குப் பணம் தருவதற்காகவும், வியாபாரம் நன்றாக நடப்பதற்காகவும் அவர்கள் மீது ஈட்டிக்காரனுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் என் தாயார் தன் பேரில் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. வரவுக்கும், செலவுக்கும் தான் சரியாக இருக்கிறதே! எப்படிக் கொடுப்பார்கள். அதனால் தாயார் ஈட்டிக்காரனுக்குப் பதில் சொல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட இளகிய மனத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.

மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்னுடைய பதவிப் போராட்ட காலத்துக்குப் பின்னால் சில ஆண்டுகள் கழித்து நடந்ததுதான் என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

எப்படியோ ஆசிரியரின் மனத்தை எங்கள் பக்கம் திருப்பி எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.

தொடரும்............

orodizli
3rd May 2020, 05:11 PM
"எனக்கு இழைக்கப்பட்ட அநீதி!... எம்.ஜி.ஆர் முதல் பட அனுபவம்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
�� அத்தியாயம் - 15��

நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார் மூலம் எஸ்.எஸ் வாசன் எழுதிய கதையான சதிலீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் பல சிரமங்களைச் சந்திக்கவேண்டியதிருந்தது. அந்த அனுபவத்தைத் தொடர்ந்து விவரிக்கிறார் இங்கே...

“அந்த நேரத்தில் நாடக் கம்பெனியில் ஆசிரியருடைய மகன் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அரக்கோணத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்த நேரம். அரக்கோணத்துக்குப் போய்ப்பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை.சென்னையிலேயே தினமும் எங்கள் கம்பெனி நாடகம் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் அங்கே போகமுடியவில்லை. கடைசியாக நாங்கள் எங்கள் கம்பெனியைவிட்டு விலகி சினிமா கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கே போய்ச் சேரவேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுவிட்டது.

நாங்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து எப்படி அங்கே குடி போனோம் என்பதே நெருக்கடி நிறைந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். அதைப் பிறகு சொல்வோம். நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையிலிருந்த அந்தக் கம்பெனி வீட்டில் குடிபுகுந்தோம். வேடத்தைப் பற்றிய பிரச்னை எங்கள் முன்னால் பெரிய உருவெடுத்துச் சோதனைக் குறியாக நின்று கொண்டிருந்தது.

ஒருநாள் நாங்கள் அரக்கோணத்துக்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்தோம். அங்கு சதிலீலாவதி நாடகம் நடந்துகொண்டிருந்தது. என்னை வற்புறுத்தினார்கள் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்படியாக. நான் நடிக்கவும் செய்தேன். மறுநாள் ஆசிரியரிடம் நாங்கள் எங்கள் அச்சத்தைச் சொன்னோம். எனக்குக் குறிப்பிட்ட வேடத்தை எம்.வி. மணி அவர்களுக்குக் கொடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாமே, என்னுடைய நிலைமைதான் என்ன, எனக்கு என்னதான் வேடம் என்று நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.

ஆசிரியருக்குத் தெரியாமலேயே பட முதலாளிகள் எம்.வி. மணி அவர்களுடைய நடிப்பை வேறு கம்பெனி நடத்திய பதிபக்தி என்ற நாடகத்தில் கண்டு வியந்து அவரை ஒப்பந்தம் செய்துவிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததாம்.

இதைச் சொல்லிவிட்டு அந்த வேடம் கிடைக்க முடியாமல் போய்விட்டதாலும், அதைப்போலவே இன்னொரு வேடம் இருக்கிறது. அதை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். அவர் குறிப்பிட்ட வேடம் உண்மையிலேயே நல்ல வேடம் தான். கதாநாயகனால் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவர். அந்தக் கதாநாயகனுடைய நெருங்கிய நண்பர். கதாநாயகனுக்கு தொல்லை வரக்கூடாது என்பதற்காகவும், கொலையாளிகளைப் போலீசிடம் ஒப்படைப்பதற்காகவும் மாறு வேடத்தில் இருந்து கொண்டே நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வழக்கு மன்றத்தில் உண்மையை நிரூபித்து நண்பரைக் காப்பாற்றும் ஒரு நல்ல பாத்திரம். மனத்துக்கு ஒரு பெரிய நிம்மதி. மகிழ்ச்சியோடு நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தோம்.

விரைவில் படப்பிடிப்புத் துவங்கவிருக்கிற செய்தி வெளிவந்தது. படப்பிடிப்புத் துவங்க ஒருசில நாட்களுக்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த செய்தி குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஆசிரியர் அவர்களுடைய கம்பெனியில் அவர் மகனுடன் கதாநாயகியாக நடித்த நண்பர் நம்மாழ்வார் என்பவருக்கு சதிலீலாவதி படத்தில் எந்த வேடமும் குறிப்பிடப்படவில்லை என்பதாகவும், அதனால் ஆசிரியருக்கும், அவருக்கும் மனத்தாங்கல்கூட ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் வந்த செய்திதான் அது.

நம்மாழ்வார் என்பவர் பல ஆண்டுகள் நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் ஆசிரியருக்கு வலதுகை போல் இருந்து எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் ஆசிரியரை விட்டுப் பிரியாது அந்தக் கம்பெனியிலேயே இருந்து நிறையச் சேவை செய்தவர். ஆசிரியருடைய நன்மதிப்புக்கும், நன்றிக்கும்கூடப் பாத்திரமாகும் தகுதியைப் பெற்றவர். இந்த உண்மையை நாங்கள் முன்பே நன்றாக அறிந்தவர்கள்.

அனுதாபத்தின் பேரால் வேலைகொடுக்கப்பட்ட எனக்கே வேடம் மாற்றப்படுகிறது என்ற செய்தியை தாங்க முடியாதிருக்கும்போது பல ஆண்டுகளாக ஓடாக்கிக் கொண்டவருக்கு வேலையே இல்லை என்றால் எப்படி அவரால் தாங்கிக்கொள்ளமுடியும்!
அவர் விரும்பியதோ, கேட்டதோ நியாயம் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால், அப்போது அதைப்பற்றிச் சிந்திக்க நேரமும் இல்லை. மனதில் அந்த எண்ணத்துக்கு இடமும் இல்லை.

அவருடைய நியாயமான வாதத்தை உணர்ந்த ஆசிரியர், நம்மாழ்வாருக்குச் செய்யவேண்டிய கடமையைச் சரிவரத்தான் செய்தார். ஆனால், அது சரிவரச் செய்ததாக என் உள்ளத்துக்கு எப்படித் தோன்ற முடியும்!

ஏனெனில், அந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவன் நான் எப்படியெனில் எனக்கு என்று சொல்லப்பட்ட\இரண்டாவது முறையாகத் தீர்மானிக்கப்பட்ட “பரசுராமன்” (கதாநாயகனின் நண்பன்) என்ற வேடம் நம்மாழ்வாருக்கு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.
இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நான் கருதினேன். நீதியோ, அநீதியோ முடிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. எனக்கு அந்த வேடம் இல்லையென்று. வேடம் இல்லை என்று சொல்லிவிட்டால் போதுமா! என் வேதனையைத் தீர்க்க யாரால் மருந்து கொடுக்க முடியும்?

தாயாரிடம் போய்ச் சொல்வதற்கும் எங்களுக்குத் துணிவில்லை; அவரைத் தவிர நாங்கள் போய் எங்கள் குறைகளைச் சொல்ல வேறு யாருமில்லை.

எப்படியோ மனதில் இருக்கிற பாரம் குறையவேண்டும். மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் கொட்டி விடவேண்டும். திறந்த மனதோடு கொட்டப்படுகிற அந்த வார்த்தைகளில் எந்தவிதமான இடையூறும் வந்துவிடக்கூடாது. சே இவ்வளவு மோசமா! என்று கேலியும் வந்துவிடக்கூடாது. கேலி செய்யப்பட்டால் அவமானம் மிஞ்சும். அதனால் சொல்லப்படுகிற திசையிலிருப்பவரிடமிருந்து எந்தவித மறுமொழியும் இல்லாதிருக்கவேண்டும். ஆனால், ஒருவரிடம் மனச்சுமையை இறக்கிவிட்டோம். அதாவது நம் குறைகளைக் கொட்டிவிட்டோம். அவர்கேட்டுவிட்டார் என்கிற நம்பிக்கை பிறக்கவேண்டும். அந்த நேரத்தில் முறையீட்டைக் கேட்டவரிடமிருந்து வந்த மறுமொழியும் இல்லாவிட்டாலும் பின்பு என்றைக்காவது அவரால் ஒருவழி காட்டப்பட்டே தீரும் என்ற நம்பிக்கை உதயமாகும்.
இதற்கு ஏற்ற ஒரே இடம் கடவுள் சிலைதான் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

எங்களுக்கு ஆறுதலோ, தேறுதலோ உண்டாக வேண்டுமானால் எங்கள் தாயாரிடமிருந்துதான் உண்டாக வேண்டும். உண்டாவது வழக்கம். அவர்கள் சொல்கிற பதில் எப்போதும் உறுதியூட்டுவதாகவும், தன்னம்பிக்கையை உண்டாக்குவதாகவும் இருக்கும்.

அம்மாவிடம் சொல்லாமல் இருக்க முடியாது. சொன்னால் அவர்களுடைய முகபாவம் நிச்சயமாக அவருடைய துன்பத்தையும், வேதனையையும் அல்லவா வெளிக்காட்டும்!

கடவுள் சிலையைப் போல் மவுனமாக இருக்க அவர்களால் முடியாதே! தன்னுடைய மகனுக்கு ஏற்படும் இன்னலை எப்படி ஒரு தாயால் பதில் உணர்வைக் காட்டாமல் மறைத்துக் கொள்ளமுடியும். ஆனால், சொல்லாமலிருக்க முடியாதே! தாயிடம் கூறினோம். நாங்கள் சொல்லுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டேயிருந்தார். தாயார் அவர்கள் என்ன சொல்வார்களோ, வேதனைப் படுவார்களோ என்று அவர் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்...

பிள்ளைகளிடம் என்ன சொன்னார் சத்தியபாமா?

அடுத்த அத்தியாயத்தில்.............

orodizli
3rd May 2020, 05:14 PM
"எம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது"! : நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
�� அத்தியாயம் :16��

தன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

...“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். 'போடா, ரொம்ப லட்சணம்! வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா! முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்!

பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா! உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே! அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு' என்றார்.

இப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.

மனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது!"- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'...என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது.

சதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது..........

சதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சி....இப்பதிவில் இணைத்துள்ளேன்....

orodizli
3rd May 2020, 05:30 PM
கௌரவம் பார்த்தால்
கௌரவம் பார்க்காதே?
---------------------------------------------

எம்.ஜி.ஆரின் சிறப்பை வகை வகையாய் ஒவ்வொருத்தரும்,, தங்கள் தனித் திறமையால் வித விதமாக முக நூல்,,வாட்ஸ்-அப்புகளில் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஒரு குண நலனை,,அதுவும் அவர் முதல்வராக இருக்கும்போதும் செயல்படுத்தியதை இங்கேப் பார்க்கலாம்!
அது,,சத்யா மூவீஸின் மாஸ்டர் பீஸ் படம்--
ரிக்ஷாக்காரன்!!
சோ வையும்,,இன்னொரு சிறந்த நடிகரையும் தனது விருப்பத் தேர்வாக,,அந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எம்.ஜி.ஆர்!
தேங்காய் ஸ்ரீனிவாசனோடு ஈடு கட்டும் ஐயராக சோ நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு சரியானது என்பதைப் படம் பார்த்த நாம் புரிந்து கொள்ளலாம்!
தேங்காயோடு சேர்ந்து கலக்கியிருப்பார் சோ!!
வக்கீலாக,,ஒரு குணச்சித்திர நடிகரை தம் மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்!
கதையே,,அந்த வக்கீலால் தான் அமைந்திருக்கிறது என்பதையும்,,அந்த நடிகரால் தான் அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க் கொடுக்க முடியும் என்றும் திடமாக நம்பினார் எம்.ஜி.ஆர்!
குணச் சித்திர நடிகராக எவர் பொருத்தமானவர் என்று எம்.ஜி.ஆர் கருதினாரோ,,அவரால் எம்.ஜி.ஆரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை?
சிவாஜி படங்களுடன் வேறு நடிகர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் கால்ஷீட்டைக் கூட ரிக்ஷாக்காரனுக்காக அவரால் ஒதுக்க முடியவில்லை!
தயாரிப்பாளர் சார்பிலும்,,இயக்குனர் சார்பிலும் கேட்கப் பட்டும் சாதகமான பதிலை அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை!
வத்தி வைக்கவும்,,வளைத்துப் பேசவும் தான் வகை வகையாய் மனிதர்கள் இருக்கிறார்களே?
ரொம்ப அலட்சியமா மாட்டேன்னு சொல்லிட்டார்!
சிவாஜி படங்களில் நடிக்கறோம்ங்கற திமிரு?
உங்கள வச்சு தாண்ணே படமே!
அந்தாளு கிட்டே எதுக்குக் கெஞ்சணும்?
இப்படியாக உப்புக் காரம் சேர்த்து??
பதில் ஏதும் சொல்லாத எம்.ஜி.ஆர்,,தொலைபேசியைக் கையில் எடுக்கிறார்--
சாதாரணமாக,, மறு முனையில் பேசிய அந்த நடிகர் பேசுவது எம்.ஜி.ஆர் எனத் தெரிந்ததும் டென்ஷனாகிறார்?
என் படத்துல நீங்க நடிச்சா நான் சந்தோசப்படுவேன். உங்களுக்குக் கால்ஷீட்டு பிரச்சனை இருக்குங்கறதையும் நான் மறுக்கலே.
உங்களுக்காக ஒரு ரெண்டு மாசம் காத்திருக்கணும்ன்னாலும் பரவாயில்லே--
எம்.ஜி.ஆர் போய் இப்படி--அதுவும் நம்மப் போல சாதாரண நடிகரிடம்??
நெகிழ்ச்சியில் கண் கலங்கிய அந்த நடிகர் பல்வேறு முறைகளில் தன் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்துக் கொடுத்து,,தம் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு இருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்!1
ஆம்! அவர் மேஜர் சுந்தரராஜன்!!!
ஒரு கலைஞனாக மட்டுமே தம்மை இருத்தி,,ஒரு படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதோடு,,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்,,தன் நிலையைத் தாழ்த்தி மேஜரிடம் பேசிய எம்.ஜி.ஆர்??
இதே எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பிரதமராக எவர் இருந்தாலும் தன் ஆதரவைக் காட்டினார்--
நான் இப்போ தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதி!
ராமச்சந்திரனுக்குன்னு நான் கவுரவம் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியிலேர்ந்து வரும் உதவிகள் தடைபடுமே??
எவன் ஒருவன்--
தன்னிலைத் தாழ்ந்து மற்றவர்க்காக குரல் கொடுத்தால்--
விண் நிலைக்கு உயரமாட்டானா ஒருவன்?
என் நிலை இதுவென்று எம்.ஜி.ஆர் சொன்னதைக் கடைப் பிடித்தால்-
இன் நிலை தானே எல்லோருக்கும் இறுதி வரைக்கும்!!
இதுவென்று நாமும் பணிவைக் கொள்வோம்!
இது வென்று கொடுக்கும் நம் முயற்சிகளை!!!.........

orodizli
3rd May 2020, 05:33 PM
"எம் ஜி.ஆரின் முதல் காதல்"...! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
�� அத்தியாயம்-17��

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. 'சதி லீலாவதி' படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை.

பார்வையாளர்களுக்கும் நாடகமேடைக்கும் பல அடி துார இடைவெளி இருக்கும் என்பதால் அந்நாளைய நாடக நடிகர்கள் வசனங்களையும் பாடல்களையும் உச்சஸ்தாயியில் பாடி நடிப்பார்கள். சினிமாவும் புதிது; சினிமாவுக்கு எம்.ஜி.ஆரும் புதிது. சொல்லவேண்டுமா எம்.ஜி.ஆர் நிலையை?...நாடக பாணியிலான நடிப்பை திரைப்படத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டார் அவர்.

வழக்கம்போலவே சினிமா வசனங்களையும் நாடக பாணியிலேயே உரத்தக் குரலில் பேசினார். சினிமாவின் நுணுக்கங்களை அவரால் முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லை. இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் படம்தான் என்றாலும், அமெரிக்கரான அவர் மேலைநாடுகளின் மென்மையான வசனபாணியைப் பின்பற்றி படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அத்தகையவருக்கு எம்.ஜி.ஆரின் நாடக பாணி நடிப்பும், வசன உச்சரிப்பும் எரிச்சலைத் தந்தது. ஆவேசத்தோடு இப்படி பேசுகையில் நடிப்பும் மிகையாக வெளிப்பட்டது. டங்கன் பலமுறை சொல்லியும் எம்.ஜி.ஆர் திருத்திக்கொள்ளவில்லை.

ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆரை தனியே அழைத்துச்சென்று, “மிஸ்டர் ராமச்சந்திரன், சினிமா மனித உழைப்பினால் மட்டும் உருவாவது அல்ல; பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களின் ஒருங்கிணைப்பில் உருவாகிறது. நீங்கள் இயல்பாக பேசி நடியுங்கள். நான் பார்வையாளனுக்கு தக்கபடி அதைக் கொண்டு சேர்க்கிறேன். இது தொடர்ந்தால் உங்கள் சினிமா வாழ்வு பாதிக்கப்படும்” என மென்மையாக சொல்லிப் புரியவைத்தார்.

இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் கிடைத்த அரியவாய்ப்பை இழக்க விரும்பாத எம்.ஜி.ஆர் பெரும் முயற்சிகளுக்குப்பின் நாடக பாணி நடிப்பிலிருந்து வெளிவந்தார். சில நாட்களில் இயக்குநர் டங்கனே ஆச்சர்யப்படும்வகையில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிளிர்ந்தது.

திரைப்படத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டாலும் நாடகத்தைத்தான் எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். சினிமாவின் யதார்த்தங்களை உணர்ந்ததால் அவர் சினிமாவுக்குரிய உடல்மொழியில் நடித்து வெற்றிபெற்றார். ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு திருப்தியளித்த விஷயமல்ல. சினிமாவின் வெற்றிக்காக அவர் விருப்பமின்றி சில விஷயங்களை தியாகம் செய்யவேண்டியதானது.

'எம்.ஜி.ஆரின் அழுகை நடிப்பு சோபிக்காது என்றும், அழுகிற காட்சிகளில் அவர் முகத்தை காமிராவுக்கு காட்டமாட்டார்' என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் ஆரம்பநாட்களில் நாடகங்களில் கூட கிளிசரின் பயன்படுத்தமாட்டார். இயல்பாக நடிப்பதையே அவர் விரும்பினார். 'என் தங்கை' நாடகத்தில் துயரமான காட்சிகளுக்குத் தக்கபடி முகத்தில் உணர்ச்சிகளை வரவழைத்துக்கொண்டு அவர் அழும்போது அவரின் அழுகை பார்வையாளர்களை உருகவைத்துவிடும். சினிமாவிலும் அப்படியே நடிக்க அவர் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சில படங்களில் கிளிசரினை பயன்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை காட்சிகளில் நடித்தார். ஒரு படத்தில் நடித்துமுடித்து 'ரஷ்' பார்த்தபோது அவரது அழுகை நடிப்பு சோபிக்கவேயில்லை. காரணம் படமாக்கப்பட்டபோது இருந்த மின்விளக்கின் சூட்டினால் அவரது கன்னத்தில் வழிந்த நீர் உடனடியாக காய்ந்து உலர்ந்துபோனது. காட்சி எடுபடாமல் போனது. நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை அன்றுதான் முழுமையாக புரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர்.

சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி அபார வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியைவிட திரையுலகில் நாமும் நுழைந்துவிட்டோம் என்பதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சி. சதி லீலாவதியைத் தொடர்ந்து 'இரு சகோதரர்கள்' வாய்ப்பு. முதல் இரண்டு படங்களுக்குப்பின் வாய்ப்பின்றி இருந்தவருக்கு மீண்டும் எம்.கே.ராதா மூலம் 3-வது படவாய்ப்பு கிடைத்தது. 1938-ம் ஆண்டு 3-வது படமாக 'தட்சயக்ஞம்' வெளியானது. இதில் கதாநாயகன் தட்சனாக எம்.ஜி.நடராஜபிள்ளை என்பவர் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மகாவிஷ்ணு வேடம். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கல்கத்தாவிலேயே நடந்தது. இது கம்பெனி தயாரித்த மாயா மச்சீந்திரா படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளியான படம் வீர ஜெகதீஸ்....இந்த படம் வெளியான சமயம் எம்.ஜி.சக்கரபாணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.

இதனால் பெரியவனைப்போல் சின்னவனுக்கும் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படவில்லை. “சினிமாவில் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். திருமணம் அதற்குத் தடையாக இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு நிலையை எட்டியபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திப்பேன்” என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

உள்ளம் உறுதி காட்டினாலும் 22 வயது வாலிபனால் இயற்கையான உணர்ச்சிகளை ஒளித்துவைக்கமுடியுமா?... அப்போது எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம்பெண் வசித்துவந்தார். இளமையும் அழகும் இணைந்த வசீகரமான இந்த இளம்பெண் மீது எம்.ஜி.ஆருக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது.

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமயங்களில் அந்தப் பெண் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வருவார். அப்போது அவளைக் கவர்வதற்காக எம்.ஜி.ஆர் ஒரு ஆர்மோனியப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு ஏதாவது கத்திப்பாடுவார். அதை அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்தபடி செல்வதைக் கண்டு ரசிப்பார் எம்.ஜி.ஆர்.

கொஞ்சநாளில் இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்ளத்துவங்கினர். அரசல் புரசலாக சத்தியபாமாவின் காதுகளுக்கு இந்த சேதி வந்துசேர்ந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என பழுத்த அனுபவசாலியான அவருக்குத் தெரியாதா?! கொஞ்சநாட்களில் அந்த வீட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்கு குடிபுகுந்தார்.எம்.ஜி.ஆர் தாடிவிட ஆரம்பித்தார்.

அதன்பின் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார் சத்தியபாமா. சக்கரபாணியுடன் கலந்துபேசியவர், எம்.ஜி.ஆரின் 'வீரஜெகதீஷ்' பட ஸ்டில் ஒன்றைப் பையில் பத்திரப்படுத்தியடி பாலக்காட்டுக்கு ரயில் ஏறினார்...

சத்தியபாமா எதற்கு பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்...
தொடரும்... .........

orodizli
3rd May 2020, 05:36 PM
#1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் திமுக கட்சியினரின் எம்ஜிஆரின் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

#ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜை மீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்..............

orodizli
3rd May 2020, 05:38 PM
சத்தணவு திட்டம் பற்றிய ........
புரட்சி தலைவரின் ....

கண்ணீர் வரவழைக்கும் ......
பேட்டி .......

அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?

(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.

சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.

நல்ல பசி.
இலை போட்டாச்சு.
காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.

சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்

நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.

வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு

கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,

கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?

எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.

இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது

எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.

அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க

ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்

விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்.........

orodizli
3rd May 2020, 05:43 PM
1984 வருடம் டிசம்பர் மாதம் தமிழகமே தவித்து நின்றது சோகத்தில் தினசரி ஊடங்களில் மேல் சிகிச்சைக்காக சென்ற முதல்வர் எம்ஜிஆர் எப்போது திரும்பி வருவார்? என்ற செய்தியை தவீர வேற செய்திகள் வந்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது மக்களுக்கு விரதம் இருக்கும் தாய்மார்களும் மூன்று மதத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்த வண்ணம் உள்ளது

"இறைவா! உன் காலடியில் எத்தனையோ மணிவிலக்கு?
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒலி விளக்கு!"

என்ற பாடலை தேசியகீதம் போல் ஒவ்வொரு காட்சிக்கும் முதலில் காண்பித்து எல்லா திரையரங்கமும் எம்ஜிஆருக்காக நன்றி கடன் செழுத்திக் கொண்டிருந்தனர் ஏன்? தலைவர் படத்தை வைத்து சம்பாரிக்காத திரையரங்கே கிடையாது என்றே சொல்லலாம்.
எம்ஜிஆர் அவர்களுக்கு மூளையில் கட்டி வந்ததை அப்போலோவில் நீக்கிய பின் தனி விமானத்தில் சிறுநீரகம் மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா புரூக்ளீன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவர் உயிருடன் இல்லை என்றல்லாம் எதிர்கட்சிகள் பரப்புரை செய்கிறார்கள் கிராமங்களில் அழுகுரல் ஓலமிட தமிழகமே உருக்கமாக நின்ற வேலையில்
அண்ணே ஒரு தந்தி கொடுக்கனும் ம்ம்.. சொல்லுங்க என்ன விஷயமாக "தலைவா.. நீங்க நல்லபடியா சிகிச்சைப்பெற்று திரும்பி வரனும் இது வீரகாளி அம்மன் மீது ஆனை சரி அட்ரஸ் என்ன என் தலைவர் எந்த ஆஸ்பத்திரிக்கு எங்க போனாரோ? அங்க அனுப்பு சரி உன் பேர் சொல்லு ஏழுமலை மொத்தம் 28 ரூபாய் ஆச்சு இந்தா ரசீது
மீண்டும் மறு நாள் அதே தந்தி அதே வார்த்தைகள் அனுப்பு யோவ் ஒனக்கு பைத்தியமா நேத்துதா ஒரு தந்தி கொடுத்த அதுக்கே பதில் இல்ல? இன்னைக்கு இன்னோரு தந்தி வேறயா? உங்க தலைவர் எவ்வளவு பெரிய ஆளு உன்னை எல்லாம் யாருன்னே அவருக்கு தெரியாது நீ ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி சம்பாரிக்கிற காச இப்புடி ஏ? வீணடிக்கிற?
யோவ் உன் வாய கழுவுயா நீ இங்க வந்து பாரூய்யா... இந்த சைக்கிள்ரிக்ஷா அவர் கொடுத்தது இன்னைக்கு என்னோட குடும்பத்துக்கே சோறு போடுது அதுக்கு என்னால முடுஞ்சது என் தெய்வத்துக்கு செலவு செய்யாம வேற யாருக்குயா செய்ய சொல்ற... ஏழுமலை ஓட்டி சென்ற சைக்கிள்ரிக்ஷாவையே பார்க்க பின்னால் உள்ள தலைவர் முகம் சிரித்தபடியே ஓடி சென்று மறைகிறது
இடம் நுங்கபாக்கம் தலைமை தபால் நிலையம்

மீண்டும் தலைவரின் நினைவில் சந்திப்போம்

#எல்லா புகழும் எம்ஜிஆர்கே..........

orodizli
3rd May 2020, 05:51 PM
நமது மக்கள் திலகம் புகழ் பரப்பும் எண்ணற்ற தகவல்கள் புதிதாக வந்து கொண்டே இருக்கிறது..... சக சகோதரர்கள் புதுவை திரு கலியபெருமாள், சௌ.செல்வகுமார், esvee, லோகநாதன் உட்பட அனைத்து நல் உள்ளங்களும் அவரவர்களுக்கு இயன்ற அருமையான பதிவுகள் பகிர்ந்து புரட்சி நடிகர் அவர்களுக்கு தொண்டுகள் புரிய மனமார அழைக்கின்றோம், நன்றிகள் உரித்தாகுக.........

orodizli
3rd May 2020, 08:31 PM
தமிழ் திரையுலகில் அன்றும்... இன்றும் ...வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து..... கடந்த சில தினங்களுக்கு முன் தந்தி டிவி யில் பேசிய ரவீந்திரன் துரைசாமி என்ற நபர் தலைவரை பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்கள் தகவல்கள் கொடுத்திருக்கிறார். இந்த லாக்அவுட் நேரத்தில் யார் படங்கள் அதிகம் ஒளிபரப்பப்பட்டது என்பது பற்றி. தமிழில் மொத்தம் 60 சேனல்கள் உள்ளது. ஆனால் பழைய படங்கள் ரெகுலராக ஒளிபரப்பபடுவது 3சேனல்கள தான் .அந்த ரவீந்திரன் துரைசாமி மொத்த சேனல்களையும் கணக்கில் எடுத்து கொண்டு தலைவர் படங்கள் குறைந்த அளவில்தான்(வாரத்திற்கு ஒரு படம் தான்) ஒளிபரப்பபடுகிறது என்றும் மற்றவர்கள் படங்கள் தான் அதிகமாக ஒளிபரப்பபடுவது என நரித்தனமாக பேசியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 80 தலைவர் படங்கள் ஒளிபரப்பட்டிருபது எல்லோரும் அறிந்த உண்மை. இந்த உண்மையை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அந்த பேர்வழி பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. புரட்சித்தலைவரின் ரசிகர்கள், அபிமானிகள், பக்தர்கள் அனைவரும் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்து நமது
ஒற்றுமையை காட்டவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்........

orodizli
3rd May 2020, 08:39 PM
#இந்தக்காலத்தில் #இப்படியுமா!

யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக் கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், #இதிகாசத்தலைவன் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கும் பொருந்தும்.

இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த தில்லையாடி சிவராமன் என்பவர். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்ஜிஆர்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்ஜிஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்கிறார் அவர்.

அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்ஜிஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது அவர் அங்கு இல்லை.

நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்ஜிஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் #மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.

‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.

இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்ஜிஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். “இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.

எம்ஜிஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்ஜிஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் #நாடகத்தை #இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.

தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். "#இந்தகாலத்தில் #இப்படியும் #ஒரு #மனிதரா...?" மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.

நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்ஜிஆர் எப்படி #இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார்...

வீரப்பா...!
"தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும்... என்று நான் நினைத்திருந்தேன். இன்று அதை செய்தும்விட்டேன். என் மனதில் இருந்த மிகப்பெரிய #குறை #நீங்கியது. இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..." என்று கண்ணீர் மல்கினார்.

நமக்கு இதையெல்லாம் பார்க்கும்போது வாத்தியார் தெய்வத்திற்கும் மேலாகத் தான் தெரிகிறார்.........

orodizli
3rd May 2020, 08:43 PM
அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?

அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி...

இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓட.

விசில் அடிச்சான் குஞ்சுகளா...விரைவில் வெம்பி பழுத்த பிஞ்சுகளா.

இவை எல்லாம் ரசிகர்கள் மன்றம் கண்ட தோழர்களுக்கு வழங்க பட்ட சர்டிபிகேட்கள்.

அந்த பொன்மன செம்மல் ஆட்சியில்.

1.முதன் முதலாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2....விவசாய விளைநிலங்கள் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக 10 ஆண்டுகளில் உயர்ந்தது.

3....கரும்பு விளைச்சலில் இந்தியாவில் 10 ஆண்டுகள் முதல் இடம்.

4...நெல் உற்பத்தியில் 2 ஆம் இடம்.

5....மின் உற்பத்தியில் 3 ஆம் இடம்.

6....ஆலயங்கள் தோறும் விளக்கேற்றி வைக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக இங்கே தமிழகத்தில்.

7....விளைச்சல் இல்லாத நேரங்களில் விவசாயிகளின் சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை கடனுக்கு பதில் பறிமுதல் செய்யக்கூடாது என்ற சட்டம் முதலில் இந்தியாவில் இங்கே.

8....குடிசை வீடுகளுக்கு குண்டு பல்பு இப்ப இருந்தா எல்.ஈ.டி.. போட்டு இலவச மின்சாரம்.

9....முதன் முதலாக விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்.

10....அரசு சார் ஓட்டுனர்களுக்கு உணவு படி.

11....முதன் முதலில் குடும்ப ரேஷன் அட்டைகள் வழங்க பட்டது தலைவர் ஆட்சியில்.

12..காவலர் உடை சீர்திருத்தம், மகளிர் காவல் துறை....கொண்டு வந்தார்.

13....அறநிலையத்துறை மூலம் சிறப்பு திருமணம்..வசதி இல்லா ஜோடிகளுக்கு சீரவேட்டி, புடவை, தாலி மற்ற சீர்பொருள்கள் வழங்க பட்டு திருமணம்

இன்னும் இருக்கு ஏராளம்....தொடரும்...

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி...உங்களில் ஒருவன்..

இந்திய அளவில் எந்த லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்காத ஒரு சில முதல்வர்களில் ஒருவர் நம் தலைவர்.........

orodizli
3rd May 2020, 09:02 PM
"எம்.ஜி.ஆரின் இசை ஞானம்"

M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!

பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.

வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’
‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...’


____________________________________________

எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் ‘மீரா’. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு போன்ற கலைஞர்களின் கச்சேரிகளை ரசித்துக் கேட்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்..........
____________________________________________

orodizli
3rd May 2020, 09:08 PM
"எம்.ஜி.ஆர், சினிமாவிலும் பின்பற்றிய தர்மம்"!

M.g.r. தனது படங்களின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சென்றார். படங்களின் கதை, வசனம், பாடல்கள் மட்டுமின்றி, படத்தின் பெயரே மக்களுக்கு நேர்மறையான, நல்ல செய்திகளை சொல்வதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது ஒரு வியாபாரமும் கூட. நேரடியாகவும் மறைமுகமா கவும் அந்த தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் இருக்கின்றனர். அப்படி ஒரு தொழிலாக செய்யும்போது அதை லாப நோக்கோடுதான் செய்யமுடியும். லாபம் வந்தால்தான் அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் பிழைக்க முடியும். அதற்காக படங்களில் மசாலா விஷயங் கள் சேர்ப்பது தவிர்க்க முடியாதது. பொழுதுபோக்கும், வணிக வெற்றிக் கான லாப நோக்கமும் இருந்தாலும் கூட, அதிலும் ஒரு தர்மத்தை கடைபிடித்து சினிமாவின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். பதிய வைத்தார்.
சினிமா திரையரங்கு சென்று படம் பார்க் காதவர்களுக்கு கூட, சுவரொட்டிகளும் படத்தின் பெயரும் கண்களில்படும். எனவே, படத்தின் பெயரே நல்ல கருத்துக் களையும் உழைப்பின் மேன்மையையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். அதன் விளைவுதான் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலை காக்கும்', 'தொழிலாளி', 'விவசாயி' , 'நீதிக்குத் தலைவணங்கு', 'உழைக்கும் கரங்கள்'… என்று நீளும் அவரது படங்களின் பெயர்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.
லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.
''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழு வினர் வியந்தனர்.

'நல்ல நேரம்' படத்தில் உழைப்பின் மேன் மையை வலியுறுத்தும் வகையில் கவிஞர் புலமைப் பித்தன் எழுதிய ''ஓடி ஓடி உழைக் கணும்…' என்ற அற்புதமான சூப்பர் ஹிட் பாடல் உண்டு. எம்.ஜி.ஆரின் அழகும் இளமையும் கூடிய வழக்கமான சுறுசுறுப்பு, காட்சிக்கு கூடுதல் பிளஸ். இந்தப் பாடலில் கவனிக்கத் தவறக் கூடாத ஒரு விஷயம். மக்களுக்கு வித்தை காட்டிக் கொண்டே பாடும் இந்தப் பாடலின்போது, ஒரு இடத்தில் கைகளை தரையில் ஊன்றி எம்.ஜி.ஆர். மூன்று முறை 'பல்டி' அடிப்பார்.அப்போது, அவ ரது உள்ளங்கைகள் தரையில் பதியாது. விரல்களை மட்டுமே ஊன்றிக் கொள்வார். இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல் எடை முழுவதையும் விரல்களில் தாங்குகிறார் என்றால் அவரது விரல் களுக்கு உள்ள வலிமை புரியும்.
படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்தப் பாடலில் அமைந்த வரிகள்...
'நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்'

இதுதான் எம்.ஜி.ஆர்............

orodizli
3rd May 2020, 09:10 PM
" எம்.ஜி.ஆர், - அவர் புகழுக்கு முடிவேது?"
��������������������

m.g.r.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!
பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.
பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.
இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.
எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.
அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.
முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!
மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!

முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.
‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.
எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!
பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.
தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!
‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.
**********.........

orodizli
3rd May 2020, 09:18 PM
சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் புலிதான் . அவர் படங்களிற்க்கு விளம்பரம் தேவையில்லை.

எம்.ஜி.ஆர். நடித்து 1971-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘ரிக் ஷாக்காரன்’. பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகிய திரையரங்குகளில் 1972 இல் "ரிக்க்ஷாக்காரன்"
திரையிடப்பட்டது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட "குத்துவிளக்கு" என்கிற திரைப்படம் 1972 இல் யாழ் Windsor தியேட்டரில் திரையிடப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள அதிகமான பாடசாலைகளில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. காலை 9:00 மணிக்கு பாடசாலையிலிருந்து பஸ் மூலம் எங்களை Windsor தியேட்டருக்கு அழைத்து ச்சென்றார்கள். Windsor தியேட்டர் கோலாகலமாக தோரணங்களால் ஜோடிக்கப்பட்டிருந்தது.
Windsor தியேட்டருக்கு அருகாமையில் Lido தியேட்டரில் " இன்று முதல் எம்ஜிஆர், மஞ்சுளா நடித்த "ரிக்சாக்காரன்" என்று சிறிய பலகை வைக்கப்பட்டிருந்தது. இரு தியேட்டர்களையும் ஒரு சிறிய சுவர் பிரிக்கிறது . குத்துவிளக்கு படத்திற்கு வந்தவர்களில் அரைவாசிக்கு மேட்பட்டவர்கள் Lido தியேட்டர் மதில் பாய்ந்து ரிக்க்ஷாகாரன் படத்தை பார்க்க நுழைந்துவிட்டோம் . இப்படம் யாழ் welington தியேட்டரில் House Full காட்சியாக காலை 8:00 மணியிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. காலை 9;00 மணிக்கு Lido தியேட்டர் House Full ஆகிவிட்டது. இரு தியேட்டர்களும் 3 நிமிடம் நடக்கும் தூரத்தில் உள்ளது. மறக்கமுடியாத அந்த நாட்கள் .......
"பூனையல்ல புலிதானென்று போகப்போக காட்டுகிறேன் ....."........

orodizli
3rd May 2020, 10:26 PM
'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்...
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்
�� அத்தியாயம்: 18��

21 வயதில் எம்.ஜி.ஆருக்கு அந்த வயதுக்கே உரிய காதல் எண்ணம் அரும்பியது. திரைப்படங்களில் கதாநாயகிகளை உருகி உருகி காதலித்து வெற்றிபெற்ற எம்.ஜி.ஆரால் தன் முதல் காதலில் வெற்றிபெற முடியாமல் போனது ஆச்சர்யமல்ல. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாயிற்றே!

இளைய மகனும் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த சத்தியபாமா, பெரிய பிள்ளையைப் போன்றே ராம்சந்தருக்கும் உறவிலேயே பெண் பார்த்து திருமணத்தை முடித்துவைக்க முடிவெடுத்தார். பாலக்காட்டில் சில நாட்கள் தங்கி அப்படி ஒரு பெண்ணை தேடிப்பிடித்தார்.

பாலக்காட்டில் துாரத்து உறவினர் ஒருவருடைய மகள்தான். பெயர் பார்கவி. நல்ல கோதுமை நிறம். கேரளாவுக்கே உரிய அழகு. மகனுக்கு நிச்சயம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் திருமணத் தேதியையே குறித்துவிட்ட சத்தியபாமா, “என்ன செய்வாய் என்று தெரியாது. தம்பியை உடனே பாலக்காட்டிற்கு அனுப்பிவை. நீயும் வந்துவிடு”- என நிலைமையைச் சொல்லி சக்கரபாணிக்கு கடிதம் எழுதினார். ஆனால் தம்பியின் சுபாவம் அறிந்தவரான சக்கரபாணி, திருமணம் நிச்சயமான தகவலை சொன்னால் கோபப்படுவானே தவிர ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதை உணர்ந்திருந்தார்.

அம்மாவின் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு அன்றிரவு முழுவதும் யோசித்து ஒரு தீர்வு கண்டார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றுதான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே...பெரியவர் சக்கரபாணி சொன்னது ஒரே பொய்தான்.

“ஊருக்கு போன இடத்தில் அம்மாவுக்கு உடல் சுகமில்லையாம். உடனே உன்னையும் மணியையும் பார்க்கனும்னு புலம்பறதா உறவினர்கள்ட்ட இருந்து தபால் வந்திருக்கு. உடனே புறப்பட்டுப் போ... நானும் அண்ணியும் பின்னாடியே வர்றோம்”

'அம்மாவுக்கு உடல் சுகமில்லையா'

- அதிர்ந்துபோன எம்.ஜி.ஆர் அடுத்த ரயிலிலேயே பாலக்காட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு போனபின்தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து தாயிடம் கோபப்பட்டார். 'திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் தான் பாலக்காட்டிலேயே செத்துப்போவேன் என சத்தியபாமா மிரட்டிப் பணியவைத்தார். ஆனாலும் கோபம் இருந்தது. எல்லாம் பார்கவியை பார்க்கும்வரையில்தான். மணமேடையில் பார்கவியை பார்த்தபின் அவரது கோபம் போன திசை தெரியவில்லை.

'திருமண உடையாக தான் கதர்தான் அணிவேன்' என்ற ஒற்றை நிபந்தனையுடன் பார்கவி கழுத்தில் தாலி கட்டினார் எம்.ஜி.ஆர். (பார்கவியுடனான எம்.ஜி.ஆரின் திருமணம் நடந்தது 1939 ம் ஆண்டின் பிற்பகுதி என்றே கணிக்கமுடிகிறது. அதுபற்றிய தெளிவான குறிப்பு எங்கும் கிடைக்கப்பெறவில்லை.)

சென்னையில் எம்.ஜி.ஆரின் இல்லற வாழ்வு துவங்கியது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் நடித்து 'மாயா மச்சீந்திரா' படம் வெளியாகி இருந்தது. அப்போதுதான் தனது கணவர் சினிமா நடிகர் என்ற விஷயமே பார்கவிக்கு தெரியவந்தது.

சுத்த சைவமான பார்கவி கணவருக்காக சைவ உணவுகளை சமைக்கக் கற்றுக்கொண்டார். சக்கரபாணி குடும்பத்தினருடன் எளிதாக ஒட்டிக்கொண்டார். எந்த மனவேறுபாடுமின்றி இயல்பாக அவர் எல்லோரிடமும் பழகிய விதம் சத்தியபாமாவுக்கு மகிழ்ச்சியளித்தது. மகனுக்கு நல்லதொரு மனைவி வாய்த்ததில் அவருக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. தனது மகள் தங்கமணி உயிரோடு இருந்தால் எப்படியெல்லாம் இருப்பார் என கற்பனை செய்திருந்தாரோ அப்படியே பார்கவியின் குணம் இருந்ததும் அவருக்கு கூடுதல் சந்தோஷம்.

இதனால் மருமகளை தங்கமணி என்ற தனது மகளின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார். பார்கவி என்ற தனது சொந்தப் பெயரையே மறந்துவிடும்படி கொஞ்சநாளில் உறவினர்கள் அனைவராலும் தங்கமணி என்றே அழைக்கப்பட்டார் பார்கவி.

இல்லற வாழ்க்கை இனிதாக கடந்துகொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அரிதாகவே வாய்ப்புகள் வந்தன. அதுவும் சிறுசிறு பாத்திரங்கள். கதாநாயகன் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு அவை வெறுப்பையே தந்தன. என்றாலும் பொருளாதார சூழலுக்காக அவற்றில் நடித்துவந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அவர் எதிர்பார்த்த கதாநாயகன் கனவு நிறைவேறும் நாள் வந்தது.

நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய சிலநாட்களில் தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குனர் நந்தலால் என்பவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்கும் மனவருத்தமடையச் செய்யும் சில சம்பவங்கள் நடந்தன. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார். கதாநாயகி அவரின்
முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து, 'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார். எம்.ஜி.ஆர் மனதில் இது நீங்காத காயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆயினும் அரிதாக கிடைத்த கதாநாயகன் வாய்ப்பை அவசரப்பட்டு இழந்து எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என தன் வேதனையை வெளிக்காட்டாமல் தொடர்ந்து நடித்தார்.

ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்தது. அடுத்த சில நாட்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் முற்றி படமே நின்றது. கதாநாயகன் கனவு கலைந்த விரக்தியில் எம்.ஜி.ஆர் வீட்டில் முடங்கிக்கிடந்தார் சில மாதங்கள். அதேசமயம் அவருக்கு சினிமாத்துறை மீது கோபமும் எழுந்தது. அந்தக் கோபத்தில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவெடுத்தார் அவர்.

என்ன முடிவு அது..?

http://www.vikatan.com/news/coverstory/82552-mgrs-first-marriage-held-at-palakkad---life-history-of-mgr--episode--18.html
Quote
நவீனன் 1,007
Posted March 7, 2017
"சினிமாவை வெறுத்து இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19

சினிமா வாய்ப்புகள் இல்லாததும், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பும் கடைசி நேரத்தில் கைநழுவிப்போன விரக்தியில் எம்.ஜி.ஆர் தீவிர சிந்தனை வயப்பட்டார். 'திருமணமாகிவிட்டதால் அடுத்தடுத்து குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கலாம்; நாடக சம்பாத்தியத்தில் அவற்றை ஈடுகட்டமுடியாது. அதேசமயம், “டேய் நம்ம ராம்சந்தர் சினிமாவில் நடிக்கிறான்டா” என அவனது நண்பர்கள் அவரை உயரத்தில் வைத்து கொண்டாடிக்கொண்டிக்கிறார்கள். இந்த நேரத்தில் சினிமாவில் கிடைத்த தோல்வியோடு நாடகத்திற்கே திரும்பினால் அவர்கள் முகங்களில் எப்படி விழிப்பது”.. 'ராம்சந்தர் தோத்துட்டான்டா' என அதே வாயால் அவர்கள் கேலி செய்ய மாட்டார்களா..' பல இரவுகள் எம்.ஜி.ஆருக்கு இதே சிந்தனை. தீவிர சிந்தனைக்குப்பின் சினிமா சாராத ஒரு தொழிலுக்கு சென்றுவிடுவதென்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அதாவது யாருக்கும் தெரியாமல் சினிமாவை விட்டே முற்றாக விலகுவது என்ற முடிவு!

சென்னையில் அப்போது இரண்டாம் உலகப்போருக்கான சூழல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று எம்.ஜி.ஆர் நம்பினார். ராணுவத்திற்கான தேர்விலும் பங்கேற்றுவிட்டு கடிதத்திற்காக காத்துக்கொண்டிருந்தநேரத்தில் மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது அவருக்கு. சாதாரண வேடம் இல்லை... கதாநாயகனாக!

அதேசமயம் எம்.ஜி.ஆர் ராணுவத்தில் வேலைக்கு சேருவதென எடுத்த முடிவு தாயார் சத்தியபாமாவுக்கு தெரியவர கொதித்துப்போனார். “ தங்கம்போல இரண்டு பசங்களை பெத்திருக்கேன். எங்கேயோ கண்காணாத இடத்துல போய் நீ இருக்கியா இல்லையான்னு சந்தேகத்தோட நான் என் வாழ்க்கையை வாழனுமா...அப்படி ஒண்ணும் நீ லட்சம் லட்சமாக சம்பாதிக்கத்தேவையில்ல...இங்கவே இரு....”

மீண்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் சொன்னபடி வாய்ப்பு தரவில்லை அந்த சினிமா நிறுவனம். ஆனால் இந்த முறை விரக்தியடையவில்லை, சினிமா வாய்ப்புகளுக்காக ஸ்டுடியோக்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தார்.

அப்படி கிடைத்ததுதான் அசோக்குமார் பட வாய்ப்பு. அன்றைய சூப்பர் தியாகராஜ பாகவதருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சியளி்த்தது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் பார்கவியுடனும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தமுடியவில்லை அவரால். அத்தனை மன்ச்சோர்வுக்குள்ளாகியிருந்தார் அக்காலத்தில். இருந்தாலும் 'சினிமாவில் என்றாவது ஒருநாள் நாம் வென்றுவிடுவோம்' என்ற நம்பிக்கை மட்டும் மனதில் கனன்றுகொண்டேயிருந்தது.

அப்போது இரண்டாம் உலகப்போருக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. போரின் விளைவாக சென்னை நகரத்தின் மீது குண்டுகள் பொழியும் என்று பீதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. சென்னையின் பிரபலஸ்தர்கள் பலரும் வந்தவிலைக்கு தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு ரயில் ஏறினார்கள் சொந்த ஊருக்கு. சத்தியபாமாவும் அந்த யோசனையை தெரிவித்தார் மகன்களிடம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சினிமாவில் வெற்றிபெறுவதற்கான காலம் கனிந்துவரும் சூழலி்ல் உயிருக்கு பயந்துபோய் ஓடிவிடுவதா என சகோதரர்கள் இருவருமே
தெளிவாக சொன்னார்கள். சத்தியபாமா, “குறைந்தது மருமகள் பிள்ளைகளை மட்டுமாவது பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம். போர் முடிந்து ஆபத்து இல்லையென்பது முடிவானபின் அழைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். அதை ஏற்றார்கள் மகன்கள்.

ஆனால்கணவரைப் பிரிய இரு மருமகள்களுமே சம்மதிக்கவில்லை. இறுதியாக ஒப்புக்கொண்டனர். ரயில் நிலையத்தில் தங்கமணியும், சக்கரபாணி மனைவி நாணிக்குட்டியும் அழுது அழுது விங்கிய கண்களுடன் பாலக்காட்டிற்கு புறப்பட்டனர். பாலக்காட்டிலிருந்து தங்கமணி கணவருக்கு கடிதம் எழுதியபடியே இருந்தார். பார்கவி புறப்பட்டுச் சென்ற 20 வது எம்.ஜி.ஆருக்கு திடீரென மனைவியின் ஞாபகம் நினைவில் வந்துவந்து சென்றது. மறுநாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் எம்.ஜி.ஆர் புறப்பட்ட அதேநேரத்தில் பாலக்காட்டிலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது.

தந்தி சென்னை வந்துசேர்ந்த சமயம் எம்.ஜி.ஆர் பாலக்காட்டில் தங்கமணி வீட்டை அடைந்துவிட்டார். மகிழ்ச்சியான மனநிலையில் வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அதிர்ச்சி. தங்கமணியின் படத்திற்கு மாலைபோட்டி வத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 'ஐயோ' என்று அலறியபடி கீழே விழுந்தார் எம்.ஜி.ஆர். சக்கரபாணி மனைவி நாணிக்குட்டி மச்சினரைத் தேற்றி விஸயத்தைச் சொன்னார்.

முன்தினம் காலை மார்பு வலிப்பதாக சொல்லி தண்ணீர் வாங்கிக்குடித்த தங்கமணி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்கள். தந்தி வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டதால் இந்த விபரங்கள் தெரியாமல் அவர் வந்து சேர்ந்திருக்கிறார். நாயர் வகுப்பினரின் குல வழக்கப்படி உடலை சீக்கிரம் புதைத்துவிட்டிருக்கிறார்கள். பேரிடியாக சொல்லப்பட்ட இந்த தகவலால் நொந்துபோனார் எம்.ஜி.ஆர். மனைவியின் உடலைக்கூடபார்க்கமுடியாமல் போன சோகத்திலிருந்து அவர் மீள பல மாதங்கள் ஆனது.

இதனிடையே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சிறுசிறுவேடங்கள் என்றாலும் நடிக்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் தமிழறியும் பெருமாள், தாசிப்பெண், ஹரிச்சந்திரா படங்கள் வெளியாகின. இதன்பிறகு சாலிவாஹனன். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தினால் பெரிய புகழ் ஒன்றும் கிடைத்துவிடவில்லை என்றாலும் வேறொரு வகையில் இந்தப் படம் எம்.ஜி.ஆர் வாழ்வி்ல் முக்கியத்துவம் பெற்றது. ஆம்... இந்த படத்தில்தான் தன் வாழ்வின் பிற்பகுதியில் தன்னுடைய நெருங்கிய நண்பராகப்போகிற முக்கிய நபர் ஒருவரை அவர் சந்தித்தார். அந்த சந்திப்பிற்குப்பிறகு எம்.ஜி.ஆர் தன் திரைப்பட வாழ்வின் வளர்ச்சிக்கான முக்கியமான முடிவுகளை எடுத்தார்.

யார் அவர்....

தொடரும்...........

orodizli
3rd May 2020, 10:46 PM
சூப்பர் தகவல்... கடந்த 18-04-2020 முதல் 24-04-2020 வரையிலான Television Rating Points (TRP) சன் டிவியில் ஒளிபரப்பான படங்களில் "எங்க வீட்டு பிள்ளை" 5 வது இடத்தை கைப்பற்றி மாபெரும் மகத்தான சாதனை படைத்திருக்கிறார் இன்றும் மக்கள் திலகம்... அதற்கு முன் 4 இடங்களில் விஜய், சூர்யா படங்கள், செய்தி சேனல் இடம் பெற்றுள்ளன. தகவல் தெரியப்படுத்திய நண்பருக்கு நன்றி...

fidowag
3rd May 2020, 11:18 PM
தினமணி*-கொண்டாட்டம் -03/05/20
---------------------------------------------------------
குரலை மாற்றி பாட முடியாது*
------------------------------------------------
மறைந்த பிரபல தமிழ் பின்னணி* * *பாடகர் டி.எம்.சவுந்தரராஜனைப்போல குரலை*மாற்றிப்பாட யாராலும்** முடியாது .

1950ஆம் ஆண்டு முதல் 70களின் கதாநாயகர்கள், துணை நடிகர்கள் , நகைச்சுவை நடிகர்கள் , சில வில்லன் நடிகர்கள் எல்லாம் டி.எம்.எஸ். தமக்கு பாடமாட்டாரா என்று தவம் கிடந்தார்கள் .**

எம்.ஜி.ஆரிலிருந்து* நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன், அசோகன், எம்.ஆர். ராதா வரை எவரையும் டி.எம்.எஸ். விட்டுவைக்கவில்லை .

புதிய படங்களின் இசை தட்டுக்கள் புதிதாய் வெளியாகிறபோது* அவற்றை வீதியெங்கும் கேட்கும்படி ஒலிபரப்பிப்* பிரபலபடுத்துவது அந்தக்கால சவுண்ட் சர்வீஸ் கடைகளின் வழக்கமாக இருந்தது .**
காவல்காரன் ரிலீசான புதிதில்* நினைத்தேன் வந்தாய் நூறுவயது , கேட்டேன் தந்தாய் ஆசை மனது என்கிற பாட்டு காந்தமாக* இழுத்தது*

(ஏ. எ . ஹெச் .கே. கோரி எழுதிய ஊருக்கு ரெண்டு கதை நூலில் இருந்து*-தங்க சங்கர பாண்டியன், சென்னை .

orodizli
4th May 2020, 08:43 AM
#எழுத்தாளர் #கிரிதரன் #என்பவரின் #பக்கங்களிலிருந்து :

நீங்கள் சினிமா ரசனை உள்ளவர் என்பதை உங்கள் முகநூல் காட்டித் தருகின்றது. அதிலும் எம்ஜிஆர் பற்றி உங்கள் ரசனை அபரிமிதமாக உள்ளது... கொஞ்சம் அதைப்பற்றிச் ?சொல்லுங்கள்...?

என்னைப்பொறுத்தவரையில் பல்வேறு கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை, பாடகர்களின் குரல், பாடல்வரிகள் ஆகியவற்றுக்காகச் சினிமாப்பாடல்கள் என்னைக் கவர்வன. உண்மையில் நான் அதிகமாகச் சினிமாப்படங்களைப் பார்த்தவனல்லன். சிறுவயதில் அறுபதுகளில் எம்ஜிஆரின் படங்களை அதிகமாகக் பார்த்த காரணத்தால் அவரின் திரைப்படங்கள் மூலமே நான் சினிமா பார்க்கத் தொடங்கியதன் காரணமாக என் பால்ய காலத்தின் என் விருப்பத்துக்குரிய நடிகராக எம்ஜிஆர் இருந்தார்.

அவ்விதம் என் நெஞ்சில் ஆழமாக எம்ஜிஆர் பதிந்ததற்கு முக்கிய காரணங்கள் அவரது வசீகரம் மிக்க முகராசி. அடுத்து அவரது திரைப்படங்களில் வரும் ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் கருத்துள்ள பாடல்கள். அப்பாடல்களே எனக்கு எம்ஜிஆர் திரைப்படங்கள் பிடிக்கக் காரணம்...

அதுவும் குறிப்பாக அறுபதுகளில் , ஐம்பதுகளில் வெளியான அவரது திரைப்படங்கள். அவரின் இறுதிக்காலப்படங்கள் பலவற்றை நான் அதிகம் பார்க்கவில்லை. அவற்றிலுமுள்ள ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் பாடல்களை நான் இரசிப்பதுண்டு.

உளவியல் அறிஞர்தம் கோட்பாடுகளின்படி ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் தனக்குத்தானே கூறிக்கொண்டு வருவாரானால் #அக்கோட்பாடுகள் அவருடன் #ஒட்டிப்பிறந்தவையாய் இருந்திருக்கும். மேலும் அதைக்கேட்கும் மனிதரின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து அம்மனிதரின் வாழ்வை #ஆரோக்கியப் #பாதைக்குத் திருப்பும். உண்மையில் எம்ஜிஆரின் திரைப்படப்பாடல்கள், ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் திரைப்படப்பாடல்கள், மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது , கேட்பவர்கள் மனதில் ஆழமாகப்பதிந்து விடுகின்றன.

இவ்வகையில் ஆரோக்கியமான விளைவினைக் கேட்பவருக்கு ஏற்படுத்துகின்றன. உண்மையில் எம்ஜிஆரின் இரசிகர்களான #பாமர #மக்கள் பலருக்கு நூல்கள் வாங்க, வாசிக்க எல்லாம் நேரம், சந்தர்ப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரின் பாடல்களை அவர்கள் கேட்டார்கள். அவை அவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஆரோக்கியமான விளைவுகளை, சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்குமென்றே நிச்சயமாகக் கருதுகின்றேன்.

இலக்கியத்திலுள்ளது போல் கலைகளிலின்றான சினிமாவிலும் பல பிரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்கான படம், பக்திப்படம், அறிவியற்படம், பொழுதுபோக்கு வெகுசனத்திரைப்படம், #கலைத்துவம் மிக்க திரைப்படம் என்று பிரிவுகள் பல.

எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பொழுது போக்குப் படங்களில் வைத்துக்கணிப்பிட்டாலும், நல்ல கருத்துகளைப் போதித்ததால் அவை சமுதாயத்திற்கு #ஆரோக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ளன என்பது என் உறுதியான கருத்து.............

orodizli
4th May 2020, 08:45 AM
தெரியாதது #கடலளவு

சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.

"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...

பின்னர்,

அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.

அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,

#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...

வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

படித்ததைப் பகிர்கிறேன்...

வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'.........

orodizli
4th May 2020, 08:52 AM
#பண்பு

1977 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மதுரை மாவட்டம் தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்...

அப்போது விஷமி ( வேற யாரு, கட்டுமரம் கும்பல் தான்...) ஒருவர், ஒரு பொட்டலத்தை எம்ஜிஆர் மீது வீசினார்.
எம்ஜிஆர் தற்செயலாக விலக, அந்தப் பொட்டலம் அருகிலிருந்த பாதுகாவலர் மேல் விழுந்தது...

அது மாட்டுச்சாணம் என்பதைத் தெரிந்துகொண்ட மக்கள்திலகம், 'என் மீது விழுந்தது பூ பொட்டலம்... அதனால் அனைவரும் அமைதியாக இருக்கவும்...' என்று கூறினார்...

உடனே அருகிலிருந்த மக்கள், 'இது பூ பொட்டலம் இல்லை, மாட்டுச்சாணம்.. என்று சொல்லி அதைக் காண்பிக்கவும் செய்தனர்...

அப்போது மக்கள்திலகம், 'இதனாலனென்ன குறைந்துவிடப்போகிறது, மாட்டுச்சாணத்தைப் பூவாக நினைத்துக் கொள்வோம்.....'
என்றார் பெருந்தன்மையுடன்........

orodizli
4th May 2020, 08:55 AM
"நான் ஆணையிட்டால் அது நடந்தது விட்டால், இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்; உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, அவர் கண்ணீர் கடலிலேயே விழமாட்டார்."

எம்.ஜி.ஆரின் திரைப்பட கொள்கை அரசியல்...

எம்.ஜி.ஆர் திரைத்துறைக்கு வந்தது எந்த நோக்கத்திற்கு என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றாலும், அவரது ஒவ்வொரு அடியும் தன் தாயார் பட்ட கஷ்டங்கள், அண்ணன் சக்கரபாணி மும் தானும் சிறுவயதில் அனுபவித்த சிரமங்களை, வேறு எவருக்கும் ஏற்பட்டு அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தில் இருந்ததை அவருடைய நகர்வுகள் தெரிவிக்கின்றன. வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.

துவக்கத்தில் துணை நடிகராக கால் பதித்தார். சிறிது சிறிதாக முன்னேறி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். காங்கிரஸ் சார்புடைய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு நட்பாகி, அண்ணாவின் பிடித்தமானவரானார். நாடகங்களில் வசனம் எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி நட்பாகி, மார்டன் தியேட்டரில் வசனகர்த்தா வாக் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்கிறார். அதனால் எம்.ஜி.ஆர் தான் நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து எம்.ஜி.ஆர், யார் வசனம் பாடல்கள் எழுதினாலும் மக்களுக்கு புரியும்படி யாகவும் நல்ல கருத்துக்கள் கொண்டதாகவும் பார்த்து கொள்வார்.

1950 களில் மருதநாட்டு இளவரசி, மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதில்தான், எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் இடம் பெற்றது. எம்.ஜி.ஆரின் முதல் அரசியல் பாடலும் அதுதான். அதிலிருந்து கட்சியின் கொள்கைகளை கதைகளிலும் பாடல்களிலும் இடம்பெற செய்தார். அரசியலிலும் தீவிரமானார்.
"மலைக்கள்ளன்" திரைப்படம் அந்த வரிசையில் எம்.ஜி.ஆருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கும் "ராபின் ஹுட்" கேரக்டர்.
டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய படம். ஆங்கிலப் படத்தின் தழுவலாக, வெற்றிக்கான கதையாக இயக்குநர் இக்கதையை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். ஆனால் இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாதைக்கு திசை காட்டியாக அமைந்தது.
திரைப்படத்தின் பெயர் மலைக்கள்ளன் ஆக இருந்தாலும் கதாநாயகன் திருடுவதாகக் காட்சி அமைப்பு கிடையாது. மற்றவர்கள் கொள்ளை அடித்ததை பறித்து காவல்துறையிடம் ஒப்படைக்கும் பாத்திரமாகத் தான் படைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்திற்கும் வசனகர்த்தா மு.க தான். வசனங்களில் ஆங்காங்கு லேசாக அரசியல் தூவப் பட்டிருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அந்த கால சமூக வாழ்க்கையையும், அரசியலையும் இடித்துக் காட்டும் வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று துவங்கும் பாடலில் ஒரு அரசிற்கான கொள்கைத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும்.
"எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் -
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் -
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் -
அதில்ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் திரட்டுவோம்".
ஒரு அரசு அமைந்தால் செய்யப் போகிற பணிகளை தொகுத்து அறிவிப்பது " தேர்தல் அறிக்கை". இந்தப் பாடல் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கை போலவே அமைந்திருக்கிறது. கல்வி, தொழில், வீடு என அடிப்படை தேவைகளை செய்வதான வாக்குறுதிகள் இந்தப் பாடலில் அளிக்கப்படுகின்றன.
தவறு இழைக்கிற ஒரு அரசாங்கத்தை இடித்துக் காட்ட, இன்றைய தேதிக்கும் இந்தப் பாடல் பயன்படுகிறது என்பது இந்தப் பாடலின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் திரைபடத்தின் அரசியல் பார்வையை வெளிப்படுத்திய முதல் பாடல்.

அடுத்து "மர்மயோகி" திரைப்படம் எம்.ஜி.ஆரின் நாயக பிம்பத்தை கட்டமைத்த வரிசைப் படம். அரசை தவறான வழியில் கைப்பற்றிய அரசியிடம் இருந்து நாட்டை மீட்கும் போராட்டம். அதே சமயம் ஏழை, எளியோருக்கு பாடுபடும் நாயகன் வேடம். அப்படியே மக்கள் மனம் கவர்ந்த நாயகனாக உருவாக்கப்பட்டது 'கரிகாலன்' கதாப்பாத்திரம்.
"மதுரை வீரன்" திரைப்படம் ஒரு குல தெய்வமாக விளங்கும் மதுரை வட்டார வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் மதுரைவீரன் சாமியை வணங்கும் ஒரு சமூகத்திற்கு எம்.ஜி.ஆர் ஆதர்ச நாயகன் ஆனார். இந்தத் திரைப்படத்தினால் அவர் பின் அணி திரண்டவர்கள், எம்.ஜி.ஆரின் இறுதி காலம் வரை அவருக்கு அரசியல் ரீதியாக பலமாக இருந்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஏய்ச்சிப் பிழைக்கும் பிழைப்பே சரிதானா" என்றப் பாடல் சமூக பிரச்சினைகளை பட்டியலிடுகிறது. நுணுக்கமாக இப்படி பாடல்கள் மூலம் அரசியல் செறிவூட்டப்பட்டன

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அரசியல் கருத்துகளை கொண்டிருந்தன. அவருக்கு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தின. அவரை அரசியல்வாதியாக்கின.
இந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அரசியல் புகுத்தி ஒரு திரைப்படத்தை கொண்டு வந்தார். அது "நாடோடி மன்னன்". அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குநர், அவரே கதாநாயகன். அதிலும் இரட்டை வேடம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவரே செதுக்கி, செதுக்கி உருவாகினார். இசையை அவரே தேர்ந்தெடுத்தார். பாடல் வரிகளை அவரே தீர்மானித்தார். நாயக பிம்பத்தை கட்டியமைப்பதாக ஒவ்வொரு காட்சியையும் அமைத்தார்.
"நாடோடி மன்னன் " திரைப்படத்திற்கு பின்னதான படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும், கதை, காட்சி, வசனம், இசை, பாடல் என அத்தனையிலும் எம்.ஜி.ஆரின் பங்களிப்பும், தலையீடும் இருந்தன. தனக்கான அரசியல் இவை அத்தனையிலும் பிரதிபலிக்குமாறு பார்த்துக் கொண்டார்.
இந்தப் படத்தின் ஹிட் பாடல்,

"தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா".
இனத்தின் பெருமைகளை அடுக்கி, கேட்போரை தன்வயப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளை தரும் பாடல். பகுத்தறிவுக் கருத்துகளை சொல்லும் பாடல் முடியும் போது அரசியல் பேசுகிறது. இப்படியான அறிவுரை கூறும் 'கொள்கைப் பாடல்' தவறாமல் எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பிடித்தது.
அதேப் படத்தில், மற்றொருப் பாடல் தமிழை வணங்கி அதன் பெருமைகளை எடுத்துரைக்கிறது. அதே சமயம் அரசியலையும் சொல்கிறது.

"செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி
மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே
செந்தமிழே வணக்கம்
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய் ".
தமிழ், திராவிடம் என்ற திராவிட இயக்க அரசியலை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியதால், திராவிடப் பற்றாளர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். திராவிட, தமிழ் உணர்வை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்தார்.
இதற்கு பிறகு எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அவருக்கான அரசியலை மையமாக வைத்தே பின்னப்பட்டன. அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் அவருக்காகவே வடிவமைக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் ஏற்று நடித்த பாத்திரங்கள் மது அருந்த மாட்டார்கள், புகை பிடிக்க மாட்டார்கள், தவறான வார்த்தைகளை பிரயோகிக்க மாட்டார்கள்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் குரல் கொடுப்பவராக, பாடுபடுபவராக, தன்னையே தியாகம் செய்பவராக எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் அமைக்கப்படும். ஒரு கட்டத்தில் கதாபாத்திரம் என்பதைத் தாண்டி எம்.ஜி.ஆரே அப்படித் தான். வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். தான் கொண்ட கொள்கையை மக்களும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தாது. அவர்களின் மனங்களில் நீங்கா இடம்பெறலானார்.

கதாநாயகியை தவிர மற்ற பெண்களை தாயாக, சகோதரியாகத் தான் பாவிப்பார்.
அரசர் காலத்து படம் என்றால், இழந்த நாட்டை மீட்பவராக, புரட்சியாளராக, அரசை நேர் வழிப்படுத்துபவராக எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். இது மெல்ல, மெல்ல மக்கள் மனதில் அவர் தான் நாட்டை வழிநடத்த சரியானவர் என்ற எண்ணத்தை பதியம் போட்டது.
பிறகு உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக தன் கதாபாத்திரங்களை அமைத்துக் கொண்டார். விவசாயியாக, தொழிலாளியாக, மீனவராக, ரிக்*ஷா ஒட்டுபவராக என அவர் ஏற்கும் கதாபாத்திரம், அந்த சாராரின் மனதில் தங்களை அந்தக் கதாபாத்திரமாக வரித்துக் கொள்ளும் மனோ நிலைக்கு கொண்டு சென்றது.
ஒரு கட்டத்தில் தங்களை அவர்கள் எம்.ஜி.ஆராகவே வரித்துக் கொண்டார்கள். அதில் தான் எம்.ஜி.ஆரின் வெற்றி அடங்கியிருந்தது.
தம்மால் முடியாதவற்றை, கதாநாயகன் செய்யும் போது தாங்களே அந்த இடத்தில் இருப்பதாக நினைத்து கைத்தட்டி விசில் அடிக்கும் மனப்பான்மையை ரசிகர்களிடம் ஏற்படுத்துவதில் தான் திரைப்படத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது. அதை மிக அழகாக, நைச்சியமாக தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரை நிஜ வாழ்க்கை வில்லனாக நினைக்கும் அளவிற்கு மக்கள் மனநிலை இருந்தது.
திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரை தாக்க வரும் நம்பியாரை பார்த்த உடன், "தலைவரே, எழுந்திருங்க. கத்தியால குத்த வர்றான்", என்று குரல் எழுப்புமளவிற்கு அவரது ரசிகர்கள் அப்பாவிகளாக இருந்தது அவருக்கு இன்னும் வசதியாகப் போனது.
ரசிகர்களை தொண்டர்களாகவும், மக்களை ரசிகர்களாகவும் மாற்றும் ரசவாதத்துடன் தான் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் திரைக்கதையும், வசனமும், பாடலும் அமைக்கப்பட்டன.
அப்படி தான் நாடோடி மன்னன் திரைப்பட வசனங்கள். எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் மனதில் இடம்பிடித்தார் என்பதற்கான உதாரணம்.
அரசன் இறந்து விட்ட நேரத்தில் மார்த்தாண்டன் அரசவையால் அரசனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆனால் இன்னொரு கும்பல் பின்னிருந்து ஆள்கிறது. உணவு இல்லாமல் சமூகத்தில் பதற்றம். மக்கள் வீராங்கன் தலைமையில் போராடுகிறார்கள். மார்த்தாண்டன், வீராங்கன் இரு பாத்திரங்களையும் எம்.ஜி.ஆரே ஏற்று நடித்தார்.
மார்த்தாண்டன் இடத்தில், வீராங்கன் எம்.ஜி.ஆர் மன்னராகப் பதவி ஏற்க வேண்டிய சூழல். அப்போது சில நிபந்தனைகளை விதிக்கிறார் வீராங்கன். அப்போது நடக்கும் உரையாடல்.
"நான் சாதாரணக்குடியில் பிறந்தவன். பலமில்லாத மாடு, உழமுடியாத கலப்பை, அதிகாரமில்லாதப் பதவி இவைகளை நான் விரும்புவதே இல்லை. உங்கள் கட்டாயத்திற்காக மன்னனாக இருக்க சம்மதிக்கிறேன். ஆனால் சட்டமியற்றும் அதிகாரம் என் கையில் தான் இருக்க வேண்டும்", வீராங்கன்.
"மக்களின் நிலை அறியா புதியவனை பதவியில் அமர்த்தி, அதிகாரத்தை அவன் கையில் கொடுப்பது ஆபத்து வீராங்கா".
"மக்களின் நிலை அறியாதவன் நானா, நீங்களா ?. அமைச்சரே நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன். பெரிய இடத்தின் உள்ளே புகுந்து தான் என் உலகம் மாறியிருக்கிறது. என் உள்ளம் மாறிவிடவில்லை".
வீராங்கனாக எம்.ஜி.ஆரின் இந்த வசனங்கள் ஒரு எதிர்காலத் தலைவரின் பிரகடனமாகவே மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
மன்னனாகப் பொறுப்பேற்கும் வீராங்கன் அரசவையில் வெளியிடும் அறிவிப்புகள் அடுத்து.
"மற்றவர்கள் பின்பற்றுவதற்காக நானே முதலில் செய்து காட்ட விரும்புகிறேன்.
வேலை செய்ய முடியாத வயோதிகர்களுக்காகவும், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைப்பதற்காகவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன்", வீராங்கனாக எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு உண்மையாக எம்.ஜி.ஆர் அறிவித்ததாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இதுவே பிற்காலத்தில் அவர் வள்ளலாக பார்க்கப்பட அடிப்படையாக அமைந்திருக்கும்.
"பெரியோர்களே, பொதுமக்களே நம் நாட்டின் நலன் கருதி சில புதிய சட்டங்களை அவசரமாக நிறைவேற்றி, உடனடியாக அமலுக்கு கொண்டு வர விரும்புகிறேன்", மன்னன் அறிவிக்க, அறிவிப்பு துவங்குகிறது.
"உழுபவனுக்கே நிலம் உரிமையாக்கப் படுகிறது. உரிமைக்காரருக்கு நஷ்ட ஈடு, நிலத்தின் வருமானத்தில் கால் பங்கு.
விளைச்சல் காலத்தில் நிலவரி விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு, இரண்டாண்டுகள் தொடர்ந்து விளையாமல் போனால் குடும்பத்தின் தேவைக்கேற்ப மானியம் வழங்கப்படும்.
பெரிய மாளிகைகளில், சிறு எண்ணிக்கை கொண்ட குடும்பங்கள் வாழ்வது கூடாது. ஒரு பகுதி அவர்களுக்கு போக, மீதிப் பகுதி குடிசை வாழ்வோரை கொண்டு வைக்கப்படும். "
"குடிசைகளை என்ன செய்வது?" , அமைச்சர் குறுக்கிட
"தேவை இல்லாத காரணத்தால் குடிசைகள் கொளுத்தப்படும்", மன்னர் பதில் அளிக்கிறார்.
அறிவிப்பு தொடர்கிறது,

" தொழில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பத்து சதவீதமும்மற்றவை தொழிலாளர்களுக்கும் பிரித்துத் தரப் பட வேண்டும்."
"அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்களா?", கேள்வி குறுக்கிடுகிறது.
" தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள் ", அரசனாக வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர் புன்னகையோடு அறிவிக்கிறார்.
திரையரங்குகளில் இருந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆர் தம்மிடம் நேரடியாக இதை அறிவித்ததாக உணர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பு , " அய்ந்து வயதான உடனே குழந்தைகளை கட்டாயமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோர்களுக்கு தண்டனை உண்டு".
"வசதி இல்லாத பெற்றோர்கள் என்ன செய்வது?", நக்கல் கேள்வி.
" அவசரப்படாதீர்கள்", கையமர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
"பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரை, மாணவர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது", அறிவிப்பாளர்.
" பொக்கிஷம் காலி", வில்லன் நம்பியார் பொங்குகிறார்.
"மக்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தை மக்களுக்காக செலவிடுகிறோம்", அரசர் எம்.ஜி.ஆர் பதிலளிக்கிறார்.

கலப்பு மணம் செய்வோருக்கு அரசாங்க செலவில் திருமணம் செய்து வைக்கப்படும். கலப்பு மணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்க உத்தியோகத்தில் முதல் சலுகை அளிக்கப்படும். "
திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பிற்கான புரட்சிகர நடவடிக்கை இங்கு வீராங்கன் அறிவிப்பாக வெளிப்பட்டது.
"பிச்சை எடுப்பது குற்றம், பிச்சை இடுவதும் குற்றம்.
விவசாயிகள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ஒரு வீடு, அய்ந்து காணி நிலம், இரண்டு காளைகள், நாலு மூட்டை விதை நெல், ஒரு கலப்பை தரப்படும்."
"விவசாயிகளையே பார்க்கிறார் மன்னர். நகரத்தைப் பற்றி கவலையேப் படவில்லையே", ஒரு கலகக் குரல்.
முழுவதையும் கேளுங்கள் ", அரசர் எம்.ஜி.ஆர்.
" நகரத்தில் வாழ்பவருக்கு திறமைக்கேற்ற தொழில் கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும். ", அறிவிப்பை கேட்ட மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். " இதுவல்லவா சட்டம் ", என்று குரல் எழுப்புகிறார்கள்.
" இந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம்", கொதிக்கிறார் வில்லன் நம்பியார். அவருக்கு துணையாக அரசவையோரும் எதிர்க்கின்றனர்.
"தேவை இல்லையா. இந்த சட்டங்கள் உங்களுக்கானது மட்டுமல்ல.", என்று அரசவையை பார்த்து கூறிய மன்னர் எம்.ஜி.ஆர் மக்களை பார்த்து," உங்கள் அபிப்ராயம் என்ன?" என்று கேட்கிறார்.
"எங்களுக்கு இந்த சட்டங்கள் தான் தேவை", மக்கள் குரல் உயர்ந்து எழுகிறது. ஆரவாரம் உச்சம் அடைகிறது.
"பார்த்தீர்களா, உட்காருங்கள்", என்று அரச சபையினரை பார்த்து இந்தப் படத்தின் அவரது தனி செய்கையான, தன் மூக்கை விரலால் சுண்டி விடுவார்.
பிறகு மக்களைப் பார்த்து, " கூடிய விரைவில் உங்கள் ஆட்சி நிறுவப்படும்", என் புன்னகைப்பார்.
அது தமிழக மக்களை பார்த்துக் கூறிய வார்த்தைகள்.
பாமர மக்களுக்கு இந்தப் புரட்சிகர திட்டங்கள் பிடித்துப் போனது.
"எம்.ஜி.ராம்சந்தர் ஆக அறிமுகமானவர், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகி, எம்.ஜி.ஆர் எனப்பட்டு "புரட்சி நடிகர்" ஆகிப் போனார்.
ஒரு ஆட்சிக்கான செயல்திட்டங்கள் மொத்தமும், வீராங்கன் எம்.ஜி.ஆர் திட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
விமர்சகர்கள் தி.மு.கவின் திட்டங்களை திரைப்படங்களில் புகுத்துகிறார் எம்.ஜி.ஆர் என்று சொன்னார்கள்.
"நாடோடி மன்னன் " திரைப்பட வெற்றி விழாவில் பேசிய எம்.ஜி.ஆர், "தி.மு.க நாட்டு மக்களுக்கு பணியாற்றுகிறது
ஆளுகின்ற அரசானது இப்படித்தான் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும்
என்பதை சொல்லவே நாடோடி மன்னன் தயாரிக்கப்பட்டது", என்று உரையாற்றினார்.
நாடோடி மன்னன் திரைப்படத்தை, பெரும் முதலீட்டில் தயாரித்த பிறகு எம்.ஜி.ஆர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு. "படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி". படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதும் , எந்த கொள்கைக்கா திரைப்படத்தில் நடித்தாரோ, அதன்படி வாழ்ந்து காட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று எம்.ஜி.ஆர், மன்னரானதும் வரலாறு..........

orodizli
4th May 2020, 08:59 AM
''எம்.ஜி.ஆரைக் கண்டு பிரமித்த சின்னப்பா தேவர்": நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். ��அத்தியாயம்-20��

1945 ல் வெளியான 'சாலிவாஹனன்' எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் பெரிய அளவு அந்தஸ்து அளித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் திரையுலகில் வெற்றிபெறுவதற்காக எம்.ஜி.ஆர் சில முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்ளக் காரணமான படம் எனலாம். பின்னாளில் தன் திரைப்பட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறப்போகும் தயாரி்ப்பாளர் ஒருவரை சாதாரண நடிகராக இந்தப் படத்தயாரிப்பின்போதுதான் எம்.ஜி.ஆர் சந்தித்தார். அவர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர்!

எம்.ஜி.ஆர் தன் நெருங்கிய நண்பர்களில் சிலரைத்தான் 'முதலாளி' என அழைப்பார். அந்த அரிதான மனிதர்களில் சின்னப்பா தேவர் குறிப்பிடத்தக்கவர். தேவர், எம்.ஜி.ஆரை 'ஆண்டவனே' என்று அழைப்பார். அத்தகைய நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர்.

கோவை ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28-ம் தேதி பிறந்தவர், மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்கிற எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் அவர்.

வறுமையினால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல்,கோவை "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளியாக சேர்ந்து, தொடர்ந்து பால் முகவர், அரிசி வியாபாரி என அடுத்தடுத்து பல தொழில்களில் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் நட்டமடைந்து பிறகு சோடா கம்பெனி ஒன்றையும் கொஞ்ச காலம் நடத்தியவர். ஆனால் சோர்ந்துபோகாமல் தன் உழைப்பின்மீது நம்பிக்கையோடு தொடர்ந்து உழைத்தவர் சின்னப்பா தேவர்.

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடையவரான சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். ஓய்வு நேரங்களில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதனால் கட்டு மஸ்தான தேகத்துடன் கம்பீரமாக இருப்பார். இதுவே அவரது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்றிருந்த புராண இதிகாச படங்களே, திரைப்படங்களாக மீண்டும் தயாரிக்கப்பட்டன. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. புராண வேடங்களுக்கு ஏற்ற உடற்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். புராண படங்களை எடுப்பதில் அப்போது புகழ்பெற்றிருந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் அப்போது வரிசையாக அம்மாதிரி திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. பின்னாளில் பிரபலமாக விளங்கிய கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாதச் சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மற்ற சில நிறுவனங்களிலும் அவர் தொடர்ந்து நடித்துவந்தார்.

அப்படி கிடைத்த ஒரு வாய்ப்புதான் 'சாலிவாஹனனி'ல் பட்டி என்கிற வேடம். முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்த அவர் அந்தப் படத்தில், தான் எம்.ஜி.ஆரை சந்தித்த அனுபவத்தை அந்நாளைய பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்...

“கோவையில் 'சாலிவாஹனன்' படம் தயாராக ஆரம்பித்திருந்த சமயம், விக்ரமாதித்தனுக்கு துணையான பட்டி வேஷத்தை எனக்கு அதில் கொடுத்திருந்தார்கள். ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து முருகா என்று சொல்லியபடி வேஷம் அணிந்து வெளியே வந்தபோது, எதிரே கம்பீரத்துடன் ராஜ உடையில் ஒருவர் நின்றிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே வசீகரப்படுத்தும் உருவம். தங்கத்தை ஒத்த மினுமினுப்பான தேகம்.உள்ளத்தின் தெளிந்த நிலையையும், களங்கமற்றத் தன்மையையும் காட்டும் முகம். கருணை கொண்ட ஒளி வீசும் கண்கள். நான் ஒரு வினாடி நின்றுவிட்டேன். என்னைப் பார்த்த அவரும் அப்படியே நின்றுவி்ட்டார். என் கண்கள் முதலில் பேசின. உதடுகள்மெல்ல அசைந்தன. 'நீங்கதான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா...' குரலில் வெண்கலத்தின் எதிரொலி.

'ஆமாம்.'

மேலே நான் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை அவர் எப்படியோ புரிந்துகொண்டுவிட்டார்.

'நான்தான் இதிலே விக்கிரமாதித்தன். என் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன். உங்கள் பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா?' என்றார் அடக்கத்துடன்.

ஆச்சர்யம் விலகாமல் என் பெயர் ஊர் வகுப்பு இவற்றை சொல்ல ஆரம்பித்தேன்.

அப்போது நான் நல்ல திடகாத்திரமாக இருப்பேன். அகன்ற மார்பு, குன்றுகளை நிகர்த்த தோள்கள் என்றெல்லாம் சொல்வார்களே அதேபோல எனது தேகமும் இருக்கும். இதற்குக் காரணம் நான் செய்துவந்த தேகப்பயிற்சியும் கலந்துகொண்ட விளையாட்டுக்களுமே.

எனது தேகத்தை பார்த்த எம்.ஜி.ஆர், 'உங்க பாடியை நன்றாக வைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறீர்களா' என்று வினவினார். 'ஆம்' என்றேன். இப்படி எங்களது அறிமுகம் எங்களுக்குள்ளேயே நடந்தது. வேறு யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை வணக்கம் என்ற வார்த்தையுடன் அன்று நாங்கள் பிரிந்தோம். ஆனால் அதே வார்த்தையுடன் மறுநாள் மீண்டும் சந்தித்தோம்.

தொடர்ந்து எங்களைப்பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. ஆலவிருட்சத்தின் வேர்களைப் போன்று ஆழமாகப் பதிந்து அதன் விழுதுகளைப்போல படர ஆரம்பித்தது.

கோவை ராமநாதபுரத்தில் வீரமாருதி தேகப்பயிற்சி சாலை என ஒன்றுள்ளது. அங்கு அடிக்கடி நான் போய் தேகப்பயற்சி செய்வேன். எம்.ஜி.ஆருடன் அறிமுகமானபின் அங்கு நாங்கள் சேர்ந்தே செல்வோம். எம்.ஜி.ஆர் அங்கு அடிக்கடி வந்து பலவிதமான தேகப்பயிற்சிகளை செய்வார். பளுதூக்குதல், பார் வேலைகள் செய்தல், மல்யுத்தம், குத்துச்சண்டை கத்திச்சண்டை சிலம்பம், கட்டாரி இப்படியாக பலப் பயிற்சிகளில் ஈடுபடுவார்.

அவர் மட்டுமே பயிற்சிகளைச் செய்துவிட்டு போக மாட்டார். அங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் இவற்றை பொறுமையுடன் சொல்லிக்கொடுப்பார். அவர் கற்றுக்கொடுப்பாரே தவிர, அவருக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுத்து நான் பார்த்ததில்லை. இவற்றையெல்லாம் நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கும் இம்மாதிரியான ஸ்டண்ட் வேலைகளில் விருப்பம் அதிகமுண்டு என்பதை தெரிந்துகொண்ட அவர், என்னை அழைத்து. 'சினிமாவில் இப்படித்தான் கத்திச்சண்டை இருக்கவேண்டும். கம்புச் சண்டைகளும் சிலம்புச் சண்டைகளும் இப்படித்தான் அமைக்கவேண்டும்' என்று சொல்வார்.

குறிப்பாக சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளை எப்படி புகுத்தவேண்டும் எந்த இடத்தில் புகுத்தவேண்டும், எப்படி அமைக்கவேண்டும் என்பதையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான்.

கோவையில் என் வீடும் அவர் தங்கியிருந்த இடமும் சில அடி தூரங்களில்தான் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நாங்கள் உலாவுவோம். அப்படி பல சமயங்களில் மருதமலை முருகன் கோவிலுக்குப் போவோம்.

ஜுபிடரில் ஸ்ரீமுருகன் படத்தில் நடித்து முடித்தபின் அவருக்கு 'ராஜகுமாரி' வாய்ப்பு வந்தது. ஆனால் அத்தனை எளிதாக அது கிடைக்கவில்லை. போராடித்தான் அப்படியொரு வாய்ப்பை பெற்றார். அதுவும் நிச்சயமானதா என்று நிலையில்லை.

அந்த படத்தில் கதாநாயகனுடன் சண்டையிடும் ஒரு முரடன்வேடம் உண்டு. 'அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்' என்றார். எனக்கு மகிழ்ச்சிதான். மறுநாள் தயாரிப்பாளர்களை சந்தித்து என்னை அந்த வேடத்துக்குப் போடும்படி சிபாரிசு செய்தார்.
'உங்களை கதாநாயகனாகப்போட்டு படம் எடுப்பது இதுதான் முதல்தடவை. அப்படியிருக்க பிரபலமில்லாத ஒருவரைப்போய் நீங்கள் இப்படி சிபாரிசு செய்யலாமா?... பெரிய ஆளாகப்போட்டு எடுத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும்' என்று அவர்கள் எதிர்வாதம் செய்தார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர் விடவில்லை.

'நம்மிடையே திறமையுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப்பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக்கொள்வோம். எந்தவித வாய்ப்பும் தராமல் ஒருவரின் திறமையை எடைபோட்டுவிடக்கூடாது தேவரையே போடுங்கள்' என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். தனது நிலையே ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் எதிராளிக்கு சிபாரிசு செய்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு நடிகரை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.

இறுதியாக அந்த வேடத்தை எனக்கே தந்தார்கள்.

'அண்ணே இந்த ஃபைட்டிங் சீன்ல பிச்சு உதறுறீங்க.. பிரமாதமாக செய்யுங்க...' என்று படம் முழுக்க உற்சாகப்படுத்தினார்.

முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம். அதேசமயம் எனக்கும் அவருக்கும் சேர்ந்து கிடைத்திருக்கும் முதல் பெரிய சந்தர்ப்பம். இரண்டும் எங்கள் உற்சாகத்தை வளர்த்தன.”

இப்படி தான் புகழடையாத காலத்திலேயே மனிதாபிமானம் மிக்கவராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததை விவரித்திருக்கிறார் தேவர்.
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பரான தேவர் பின்னாளில் படத்தயாரிப்பாளராக மாறி படங்களைத் தயாரித்தபோது எம்.ஜி.ஆர் மீதான ஒரு அவப்பெயரை நீக்கி எம்.ஜி.ஆரின் வாழ்வில் முக்கியமான ஒரு நபராகவும் மாறினார்.

திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அவப்பெயர் என்ன...அதை தேவர் எப்படி நீக்கினார்?...

தொடரும்.... .........

orodizli
4th May 2020, 12:32 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு மிகவும் ராசியான "மே " மாதம் .....

மே மாதத்தில் வெளிவந்து வெற்றி கண்ட படங்கள் ..........

பெரிய இடத்துப் பெண் - 1963
சந்திரோதயம் - 1966
அடிமைப்பெண் - 1969
என் அண்ணன் - 1970
ரிக்க்ஷாக்காரன்- 1971
உலகம் சுற்றும் வாலிபன் -1973
நினைத்ததை முடிப்பவன் - 1975
உழைக்கும் கரங்கள் - 1976
இன்றுபோல் என்றும் வாழ்க -1977

உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி இயக்கம் கண்டு கட்சி துவங்கிய 6 மாத நிறைவடைந்து, 7ம் மாதம் தொடங்கிய
சமயத்தில் நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் புரட்சித்தலைவரின் அதிமுக மாபெரும் வெற்றி அடைந்த வரலாற்று சிறப்பு மிக்க மாதம் மே -1973............

orodizli
4th May 2020, 12:50 PM
"ஒளி விளக்கு" ... காவியம் மன்னர் மன்னவரின்
"100" பெருமிதம் ததும்பும் நிறைவான படைப்பு... இந்த காவியம் அடைந்த அற்புதமான வெற்றியை நமது ரசிகர்களே சில சமயங்களில் 1968ம் ஆண்டில் 2ம் ரேங் (இரண்டாமிடம்) வசூலில் என கருத்து தெரிவிக்கின்றனர்... 1 ரேங் எது?! அதுவும் நமது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் மற்றுமொரு அற்புதமான படைப்பு "குடியிருந்த கோயில்" ...மேற்கண்ட 2 படங்களும் ஹிந்தி பட தழுவல் தாம். ஆனாலும் நம் சிற்பி அவர்கள் தம் எண்ணத்திற்கேற்ப பல்வேறு விடயங்களை தான் நமகேற்ப மாற்றி அளிக்கும் அதி உன்னத கலை மேதையாயிற்றே... அவ்வாறு உளி கொண்டு செதுக்கப்பட்ட காவியங்கள் தான் சோடை போயிருமா?!... இரண்டும் இரு வேறு முறைகளில் சிறப்பான அமைப்பாக வெளியானவை... அதனால் தான் இரண்டு காவியங்களும் முதலிடம் என கருத தக்கவை தரத்திலும், வசூலிலும்...

orodizli
4th May 2020, 01:07 PM
உதாரணமாக திருச்சி & தஞ்சை (tt) ஏரியாவில் " ஒளி விளக்கு" பல இடங்களில் 50 நாட்கள் தாண்டி ஓடி வசூலில் தனி பெரும் சாதனை செய்திருக்கிறார் மக்கள் திலகம்... திருச்சி - ராஜா, கும்பகோணம்- ஸ்ரீ விஜயலட்சுமி திரையரங்குகளில் மட்டும் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் வந்தது. ஆனால் தஞ்சை- ஸ்ரீ கிருஷ்ணா, மன்னார்குடி - ஸ்ரீ செண்பகா அரங்குகளில் 99 நாட்களில் நல்ல வசூலுடன் ஓடி கொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது. காரணம் 100 நாட்கள் ஓடியதற்கு போனஸ் உட்பட பல பரிசுகள் அளிக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க இது போல திரையரங்க உரிமையாளர்கள், பட விநியோகஸ்தர்கள் செய்து பலி கொடுக்க நம் தலைவர் படங்கள் மாட்டிக்கொண்டன... பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி ஊர்களில் வெற்றிகரமாக 11 வாரங்கள் அட்டகாசமாக ஓடியது ஒளி விளக்கு. அதேபோல் " குடியிருந்த கோயில்" பல்வேறு இடங்களில் 10 - 13 வாரங்கள் சூப்பர் வசூலுடன் 1968ம் வருடத்தை கலக்கியது எனில் மிகையாகாது...

orodizli
4th May 2020, 01:14 PM
#எம்ஜிஆர் #மதித்த #தாய்குலம்
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர்.அவர் அனைத்துப் பெண்களையும் தாயாக பாவித்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார்.இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்.உடனடியாக எம்.ஜி.ஆர் அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் உட்கார செய்யுமாறு உத்தரவிட்டார்.அதன்படி உதவியாளரும் செய்தார்.

சிறிது நேரம் சென்றபின் எம்.ஜி.ஆர். வரும் நேரம்.உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்தியாவின் முழு உருவப் படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார்.தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம்.அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.

ஆனால் அறையில் உட்கார வைக்கப்பட்ட பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.

அதே நேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார்.அவர் அந்த பெண் அசந்து தூங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மின் விசிறியைப் போட்டு விட்டார்.பின்னர் அங்கு விளையாடிக்கொண்டியிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.

அந்த பெண் கண் விழித்தபோது, அஞ்சிய பெண்ணைப் பார்த்து, "உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும். நீ செல் அம்மா" என்று எம்.ஜி.ஆர் கூறி வழியனுப்பி வைத்தார்.

இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு.எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர். இந்த சம்பவம் இலக்கியத்தில், முரசுக்கட்டிலில் அமர்ந்த பிசிராந்தையாருக்கு சேர அரசன் வெண்சாமரம் வீசிய நிகழ்ச்சியை ஒத்துள்ளது அல்லவா!!

எம்.ஜி.ஆர் வெள்ளை மனம் கொண்டவர்.எவராலும் வெல்ல முடியாத 'வெல்ல' மனம் கொண்டவர்.திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள்.அதைப் போலவே நிஜத்திலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.அவர் வெற்றி பெற்ற போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமாக தமக்கு ஆதரவளித்த மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்களாட்சியைக் கொடுத்தார்..........

orodizli
4th May 2020, 04:21 PM
தேவருடன் எம்.ஜி.ஆர் செய்துக்கொண்ட ஒப்பந்தம்; நூற்றாண்டு நாயகன் எம்*.ஜி.ஆர். �� அத்தியாயம் -21��.

'சாலிவாஹனன்' படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட சாண்டோ சின்னப்பா தேவர் - எம்.ஜி.ஆர் நட்பு இறுகி இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பிரபலமாகாத காலத்தில் பழக்கமான இருவரும் புகழடைந்தபின்னும் அதைத் தொடர்ந்தனர். நடிகரிலிருந்து தயாரிப்பாளராக உயர்ந்த சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரைக் கொண்டே தன் முதற்படத்தைத் துவக்கினார். தேவர் படங்களில் தொடர்ந்து நடித்ததன்மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர் தன்மீதிருந்த அவப்பெயரை நீக்கிக்கொண்டார்.

ஆம், 'எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த தேதியில் வெளிவராது. அந்தளவுக்கு கால்ஷீட் சொதப்புவார். தன் விருப்பம்போல்தான் படத்தைத் திரையிட அனுமதிப்பார். தயாரிப்பாளரை படுத்தி எடுத்துவிடுவார். மொத்தத்தில் எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுப்பது லாபம்தான் என்றாலும் அது யானையைக் கட்டித் தீனிபோடுவது போன்ற பெரும் பணி' - இவைதாம் அந்தப் புகார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த இந்தக் களங்கத்தைத் துடைத்தவர் சின்னப்பா தேவர்தான். 50 களின் மத்தியில் தேவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்திருந்தது. அதேசமயம் கையில் கொஞ்சம் காசும் இருந்தது. தன் தம்பி திருமுகமும் சினிமாவில் எடிட்டிங் மற்றும் இயக்கத்தில் அனுபவம் பெற்றிருந்ததால் சினிமாப்படங்கள் தயாரிப்பதென்ற முடிவுக்கு வந்தார். முடிவெடுத்ததும் நேரே போய் அவர் நின்றது எம்.ஜி.ஆரின் லாயிட்ஸ் சாலை இல்லத்தில்தான்.

வீட்டின் வாசலில் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், “முருகா நான் படம் தயாரிக்கிறேன். நீங்கதான் ஹீரோ. நல்லபடியா நடிச்சுக்கொடுங்க... இந்தாங்க அட்வான்ஸ்” என வெள்ளந்தியாக சொன்ன தேவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் எம்.ஜி.ஆர். காரணம் எம்.ஜி.ஆருக்கு அப்போது கொஞ்சம் மார்க்கெட் குறைந்திருந்த நேரம். தன் படங்கள் சரிவர போகாத நேரத்திலும் தன் மீது நம்பிக்கை வைத்து தேவர் தன்னை ஒப்பந்தம் செய்யவந்ததே எம்.ஜி.ஆரின் ஆச்சர்யத்துக்கு காரணம்.

அதேசமயம் மார்க்கெட் குறைந்திருந்த அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்போது தேவை ஒரு நல்ல கதையும் அதை எடுக்க சினிமாவில் அனுபவமும் நிர்வாகத்திறமையும் கொண்ட ஒரு பெரிய நிறுவனம். இதனாலேயே பல சிறுநிறுவனங்கள், அனுபவமில்லாதவர்களிள் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் அப்போது தவிர்த்துவந்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் திரையுலகில் புகழ்வெளிச்சம் கிடைக்க ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் முன்பணத்துடன் அவரைத்தேடி வந்தார் தேவர்.

படம் இல்லாத நேரத்தில் வரும் பட வாய்ப்பை ஒப்புக்கொள்வது புத்திசாலித்தனம் என்றாலும், 'சினிமா தயாரிப்பில் தேவருக்கு இது முதல்முயற்சி.. சினிமா தயாரிப்புக்கு முற்றிலும் புதியவர். ஏற்கெனவே, தான் ஆரம்பித்த சில தொழில்களில் நட்டங்களை சந்தித்தவர். அனுபவமிக்க புகழ்பெற்ற நிறுவனங்களே வெற்றியைத் தக்கவைக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவர் படம் தனக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தரும்' என்ற சிந்தனை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. ஆனாலும் யோசித்து நேரம் கடத்தவில்லை. தேவர் மீது முழு நம்பிக்கையோடு மறுபேச்சின்றி வீட்டின் வாசலிலேயே வைத்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரின் இந்த உடனடி சம்மதத்திற்குப் பின்னணி ஒன்றுண்டு.

அது என்ன பின்னணி?!

எம்.ஜி.ஆரும் தேவரும் தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்துக்கொண்டிருந்த நேரம் அது. 'மர்மயோகி' படத்தில் தேவரும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்துக்கொண்டிருந்த போது இருவருமே சினிமாவில் வெற்றிக்கோட்டைத் தொடப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

கோவையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் இருவருக்கும் ஓய்வு கிடைத்தால் மருதமலைக்குச் செல்வார்கள். ஒருமுறை அப்படிச் சென்றபோது, “முருகா, திறமையும் உழைப்பையும் போட்டு சினிமாவுல நாம் போராடுகிறோம். ஒருநாள் நாம இதில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அப்படி நம்மில் யார் ஒருவர் நல்ல நிலைக்கு வந்தாலும் மற்றொருவரை மறக்காமல் கைதூக்கிவிடவேண்டும்”- என்றார் தேவர். அதற்கு எம்.ஜி.ஆர், “கண்டிப்பாண்ணே” என உறுதி கொடுத்தார். தேவர் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது இந்த 'பழைய ஒப்பந்தம் எம்.ஜி.ஆரின் நினைவில் ஒருகணம் வந்துபோயிருக்கவேண்டும். அதனால்தான் படத்தின் வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திக்காமல் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இரண்டு நண்பர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. 'தாய்க்குப்பின் தாரம்' வெளியானபின் எம்.ஜி.ஆரின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்களின் கார்கள் லாயிட்ஸ் சாலையில் அணிவகுக்க ஆரம்பித்தன. தேவரும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய பெரிய நிறுவனங்களே மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு படத்தயாரிப்பில் தேவர் ஒரு விஷயத்தைச் செயல்படுத்திக் காட்டினார். ஆம், தன் படங்களின் பூஜையன்றே அதன் வெளியீட்டுத்தேதியையும் அறிவிப்பார்.
ஒருநாள் முன்னதாகவோ தள்ளியோ இன்றி, குறித்தநேரத்தில் அது வெளியாகும். பெரிய நிறுவனங்களே பின்பற்றமுடியாத இந்த விஷயத்தை தேவர் எளிதாக சாத்தியப்படுத்தினார்.

தாய்க்குப்பின் தாரம் படத்தில் துவங்கி 1973 ல் வெளியான நல்லநேரம் வரை மொத்தம் 16 படங்கள் தேவர் ஃபிலிம்சுக்கு நடித்துக்கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆச்சர்யம் என்னவென்றால், 'படத்தைத் தாமதமாக முடித்துக்கொடுப்பார்’ என்றும் ’சரியான ஒத்துழைப்பு தரமாட்டார்' என்றும் கூறப்பட்ட எம்.ஜி.ஆரின் இந்தப் படங்கள் அனைத்தும் குறித்த தேதியில் வெளியாயின என்பதுதான். இதில் 'தேர்த்திருவிழா' என்ற படம் 16 நாட்களில் தயாரிக்கப்பட்டு வெளியானது என்பது திரையுலகம் இன்றும் நம்பாத விஷயம். இப்படி எம்.ஜி.ஆரை வைத்து, தான் தயாரித்த படங்களை குறித்த தேதியில் வெளியிட்டு அவருக்கு இருந்த அவப்பெயரை நீக்கினார் தேவர். எம்.ஜி.ஆர் படங்கள் தாமதமாவதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணமில்லை என்று திரையுலகம் அப்போதுதான் உணர்ந்தது.

தன் திரையுலக வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில் எம்.ஜி.ஆர் அதிகம் நடித்திருக்கிறார் என்றால் அவர், சின்னப்பா தேவர் ஒருவர்தான். எம்.ஜி.ஆர், ஜானகியை மணந்தபோது சாட்சிக் கையெழுத்திட்டதும் தேவர்தான் என்பது பலரும் அறியாத செய்தி.

தொடரும்.........

orodizli
4th May 2020, 04:23 PM
எம்.ஜி.ஆர். நூல் வரிசை : 002

“எம்.ஜி.ஆர் கதை”,

(எம்.ஜி.ஆர். வாழ்ந்த இடங்களுக்கு சென்று சேகரித்தது)

நூல் ஆசிரியர் – இதயக்கனி எஸ் விஜயன்.,

குறிப்பு : எம்.ஜி.ஆர். அவர்களின் கேரளா தொடர்ப்புகளிருந்து சுவாரசியமாக ஆரம்பிக்கும் அருமையான நூல்.

நூல் விலை : Rs.200.00 (நான் வாங்கிய காலத்தின் விலை இது. தற்போதைய புதிய பதிப்புகளில் விலை மாறுபடலாம்)

பதிப்பகம் : இதயக்கனி பிரசுரம், 12/32, வீரபாண்டி நகர் 2 வது குறுக்கு தெரு, சூளைமேடு, சென்னை – 94.

தொலைபேசி – 9344554777.

தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் எம்.ஜி.ஆர். நூல்களை தேடித்தேடி சேகரித்து படிப்பவன். அவரை பற்றிய நூல்கள் 500க்கும் மேல் வெளியாகியுள்ள நிலையில், என்னிடம் 120 நூல்கள் மட்டுமே உள்ளது. என்னிடம் இருக்கும் நூல்களின் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விபரங்களையும் முடிந்தளவு தினம் ஒன்றாக வெளியிட முயற்சிக்கின்றேன். என்னை போன்ற எம்.ஜி.ஆர். நூல் சேகரிப்பாளர்களுக்கு இந்த நூல்களை வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த முயற்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கிலே. எம்.ஜி.ஆர். நூல்களை பற்றிய எனது இரண்டாவது பதிவாகும் இது.

நீங்களும் உங்கள் சேகரிப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்களின் முன்புறத் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விவரங்களையும் Commend பகுதியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து Inboxல் இட வேண்டாம். எல்லோரும் பார்க்கும் வகையில் Commend பகுதியிலியே வெளியிடுங்கள். இது நாம் எல்லோரும் நமக்குள் பரஸ்பரம் உதவி செய்வது போன்ற ஒரு நல்ல ஏற்பாடுதான். இன்றிலிருந்து நூல் வரிசை 120 வரும்வரை (அதாவது என்னிடம் இருக்கும் நூல் வரை) வேறு எந்த பதிவுகளும் இந்த முகநூலில் வராது.

மேலும், நீங்கள் Commend பகுதியில் வெளியிடும் உங்கள் வசம் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்கள் எனது சேகரிப்பில் இல்லை என்றால்.. அதையும் இதே போலவே வெளியிடுகிறேன் விபரங்கள் தந்த உங்கள் பெயருடனேயே. அதற்க்கு முன்புறத் அட்டைப்படம், நூல் பற்றிய விவரங்கள் அச்சிடபட்ட பகுதிகள் போட்டோ எடுத்து அனுப்புங்கள். ஆசிரியர் பெயர், விலை, பதிப்பக விலாசம், தொலைபேசி எண் எல்லாம் உள்அடங்கியதாக இருந்தால் மிகவும் நலம். இப்போது நான் வெளியிட்டது போலவே.

முடிந்தளவு இந்த பதிவை SHARE செய்யுங்கள். அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களிடமும் சென்று சேர வசதியாகும்.

நன்றி ஒரு எம்.ஜி.ஆர். பக்தனாக........

orodizli
4th May 2020, 04:25 PM
#எம்ஜிஆர் #மதித்த #தாய்குலம்
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர்.அவர் அனைத்துப் பெண்களையும் தாயாக பாவித்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார்.இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்.உடனடியாக எம்.ஜி.ஆர் அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் உட்கார செய்யுமாறு உத்தரவிட்டார்.அதன்படி உதவியாளரும் செய்தார்.

சிறிது நேரம் சென்றபின் எம்.ஜி.ஆர். வரும் நேரம்.உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்தியாவின் முழு உருவப் படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார்.தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம்.அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.

ஆனால் அறையில் உட்கார வைக்கப்பட்ட பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.

அதே நேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார்.அவர் அந்த பெண் அசந்து தூங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மின் விசிறியைப் போட்டு விட்டார்.பின்னர் அங்கு விளையாடிக்கொண்டியிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.

அந்த பெண் கண் விழித்தபோது, அஞ்சிய பெண்ணைப் பார்த்து, "உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும். நீ செல் அம்மா" என்று எம்.ஜி.ஆர் கூறி வழியனுப்பி வைத்தார்.

இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு.எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர். இந்த சம்பவம் இலக்கியத்தில், முரசுக்கட்டிலில் அமர்ந்த பிசிராந்தையாருக்கு சேர அரசன் வெண்சாமரம் வீசிய நிகழ்ச்சியை ஒத்துள்ளது அல்லவா!!

எம்.ஜி.ஆர் வெள்ளை மனம் கொண்டவர்.எவராலும் வெல்ல முடியாத 'வெல்ல' மனம் கொண்டவர்.திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள்.அதைப் போலவே நிஜத்திலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.அவர் வெற்றி பெற்ற போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமாக தமக்கு ஆதரவளித்த மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்களாட்சியைக் கொடுத்தார்...........
.

orodizli
4th May 2020, 04:27 PM
[என்ன பெயர் வைப்பது
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு..?

ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.

அது 1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க , அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?

ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !

ஆம்... அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...

ஆஹா..!!!

# இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :

“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து...”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

எந்தப் பல்கலைக்கழகம் சொல்லிக் கொடுத்தது
எம்.ஜி.ஆருக்கு இந்தப் பக்குவம் எனும் பாடத்தை...?]..........

orodizli
4th May 2020, 04:28 PM
அள்ளிக்கொடுத்த வள்ளல்...

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சிகள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணராமல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப்பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’

எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டிலேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960-களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது......

orodizli
4th May 2020, 04:29 PM
#என் #காலில் #விழாதீங்க

ராமாவரம் தோட்டத்துக்கு ஒருமுறை திருக்குறள் முனுசாமி தன் மகனுடன் வந்திருந்தார்.
"நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்" என்று கண்ணீர் மல்க பொன்மனச்செம்மலின் பொற்கரங்களைப் பிடித்தவாறு கண்ணீர் மல்கினார்...

அந்த சமயம் ஒரு முதியவர் தனது மகளுக்கு வேலைக்கு சிபாரிசு செய்ததற்காக நன்றி கூறியதோடு மட்டுமல்லாமல், தடாலென்று எம்ஜிஆரின் காலில் விழப்போனார்...

#அதிர்ச்சியுற்ற #எம்ஜிஆர் அந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி, "#பெற்றோர்களின் #காலில் பிள்ளைகள் வணங்கலாம். உலக நன்மைக்காகப் பாடுபடும் #மகான்கள் #கால்களில் பக்தர்கள் விழுந்து வணங்குவது போற்றுதலுக்குரியது. பெரியவரே, உங்களுக்குத் தெரியாததில்லை...

மேலும், பொதுவாக மற்றவர்கள் நம் காலில் விழுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. #விழுபவரின் #பாவங்களை #சுட்டெரிக்கும் ஆற்றல் நம்மிடத்தில் இல்லை. நாம் செய்த பாவங்களுக்கே நம்மால் பரிகாரம் காணமுடியாத போது #மற்றவர்களின் #பாவங்களைக் கரைக்கும் சக்தி நமக்கேது...? "
என்றார் பொன்மனச்செம்மல்...........

orodizli
4th May 2020, 04:30 PM
#தலைவரின்_சிரித்துவாழவேண்டும்
[ 30 - 11 - 1974 ]

சென்னை பிளாசா, கிருஷ்ணா, மகாலெட்சுமி, கிருஷ்ணவேணி தியேட்டர் முதல் நாகர்கோவில் தங்கம் திரையரங்கம் வரை வெளியான தலைவரின் வெற்றிக் காவியம்...

தலைவர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் தலைவரின் அப்துல் ரஹ்மான் கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது...

தலைவரின் இந்தக் கதாபாத்திரம்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது...

இதே மாதத்தின் முதல் வாரத்தில் தலைவரின் உரிமைக்குரல் வெளியாகி மெகா ஹிட் ஆனது.

இருப்பினும் இந்த திரைப்படமும் தலைவரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடித்தது...

தற்போது நோன்பு காலம்...

அனைவரும் மீண்டும் ஒரு முறை தலைவரின் இந்தப் பாடலை பார்ப்போம்.

�� வளர்க புரட்சித்தலைவர் புகழ் ��

#இதயதெய்வம்.........

orodizli
4th May 2020, 06:13 PM
ஒன்று மட்டும் சொல்ல ஆசைப் படுகிறேன்!
பல நாட்கள், அவர் படப்பிடிப்புக்கு நாட்களைக் கொடுத்து விட்டு. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அதை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் வீணடித்து விட்டதை நான் அறிந்திருக்கிறேன். சரியான திட்டமின்றி வரும் இவர்கள் என்னை வீணே குறை கூறுகிறார்களே' என்று, இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் மனம் குமுறியிருக்கிறார் அவர். "பழி ஓரிடம் 'பாவம் ஓரிடம்' என்ற பழ மொழி யின் உண்மையை இம்மாதியான சந்தர்ப்பங்களில் தான் நான் அறிந்தேன்.
எனக்கு மட்டுமில்லை, நல்ல திட்டத்தோடு நாணயத்தோடு, யார் வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தை நிச்சயம் முடித்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இதிலே சின்னவர்கள், பெரியவர்கள், பழகியவர்கள், பழகாதவர்கள் என்றெல்லாம் வித்தியாசமே அவர் பாராட்டுவதில்லை. தொழில் வேறு நட்பு வேறு என்று சொல்லி வரும் அவர், நான் இரண்டையுமே ஏமாற்ற விரும்புவதில்லை ' என்று அடித்துச் சொல்வார். "எம்.ஜி.ஆர். கதை அமைப்பில் குறுக்கிடுவார்; படப்பிடிப்பில் வந்து வசனத்தை மாற்றச் சொல்லுவார். காட்சியைத் திருத்துவார்' என்றெல்லாம் ஒரு புகார் இருந்து வருகிறது. என்னைப் பொறுத்த அளவில், அவர் இம் மாதிரி எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்தது கிடையாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ! கதையை அவர் ஆரம்பத்தில் படிக்கிறார். தனக்கேற்றதாக இல்லை யென்று பட்டால், திருத்தி அமைக்கும்படிச் சொல்கிறார். அப்படிச் செய்ய இயலாவிட்டால் அந்தக் கதையில் நடிப்பதையே ஒதுக்கி விடுவார் அவர்.
கஷ்டம் என்று யார் வந்து அவரிடம் முறையிட்டாலும் உடனே அவர் அந்த ஆளை வேலும் கீழுமாகப் பார்ப்பார். அவர் சொல்வது. உண்மை என. தனக்குப்பட்டால் யார் தடுத்தும் உதவி செய்வதை அவர் நிறுத்த மாட்டார்!
எம். ஜி. ஆர். நாஸ்திகரல்ல என்று தான் நான் நினைத்து வருகிறேன். மருதமலையில் நான் வேண்டிக் கொண்டபடி போட்ட மின் விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் பேசிய எம். ஜி. ஆர். தன் கொள்கை பற்றி விளக்கம் கொடுத்தார்.
தெய்வம் இல்லை என்று நாங்கள் சொன்னதில்லை. அதேபோல் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று நாங்கள் யாரையும் தடுத்ததுமில்லை. கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையே கண்டிக்கிறோம். நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுள் என்றும் நாங்கள் கருதுகிறோம் '' என்றார்.
சமீபத்தில், சென்னையில் தியாகராய நகரில் நான் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்தேன்.
கிரகப்பிரவேசத்தன்று காலை பூஜை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல், பானையில் பொங்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். திடுதிடுப்பென்று உள்ளே வந்து நின்றார்.
'வாங்க வாங்க! பால் பொங்குது. நல்ல நேரத்திலே தான் உங்க காலை வச்சிருக்கீங்க' என்று என் தாயார், வாய் நிரம்ப அழைத்தார். எம்.ஜி.ஆர். அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டார். பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்.
நான் அழைக்காமலேயே, விஷயத்தைத் தெரிந்து. என் வீட்டிற்கும் வந்து, என்னை வாழ்த்தி விட்டுப் போன அந்த மனித தெய்வத்தின் தன்மையை நான் என்னென்பது? அதனால் தான் முருகனுக்கு அடுத்தபடியாக நான் எம்.ஜி. ஆரைப் போற்றி வருகிறேன்!.......சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்...

- பேசும் படம் 1963.........

orodizli
4th May 2020, 06:19 PM
22.05.1973

புதிய வரலாற்றை உருவாக்கிய திண்டுக்கல் இடைத்தேர்தல் ......

எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அஇஅதிமுக இயக்கம் முதல் முறையாக கட்சி துவங்கிய 215 வது நாளில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியும் ஆளுங்கட்சியுமான காங்கிரஸ் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி , தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக முதல்வர் கருணாநிதி ஸ்தாபன காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் காமராஜரின் சீடர்களான நடிகர் சிவாஜிகணேசன் , அவரின் ஆதரவு நடிகர்கள் அவருடைய ரசிகர்கள் பத்திரிகை ஆசிரியர் சோ மற்றும் அனைத்து பத்திரிகைகள் எம்ஜிஆர் என்ற தனி மனிதரை எதிர்த்து அரசியல் பிரச்சாரம் செய்தார்கள் .

எம்ஜிஆர் தன்னுடைய உயிரான ரசிகர்களையும் , பொதுமக்களையும் நட்பு கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியையும் மட்டுமே நம்பி இரவு பகலாக உழைத்து வெற்றி கனியை பறித்து அரசியல் உலக வரலாற்றில் '' அண்ணா திமுக - இரட்டை இலை ''- எம்ஜிஆர்'' என்ற பிம்பத்தை உருவாக்கிய தினம் இன்று 22.05.1973. எம்ஜிஆர் 103 வது ஆண்டில் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 46வது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது .

எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலைமுறைகள் கடந்தும் இன்னும் துடிப்புடன் செயலில் இயங்கி கொண்டிருப்பது உலக வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் தலைவருக்கும் கிடைக்காத பெருமை ......
சினிமாவில் எம்ஜிஆர் ஒரு சரித்திரம் ...
அரசியலில் எம்ஜிஆர் ஒரு சகாப்தம் ...
மக்கள் உள்ளங்களில் எம்.ஜி.ஆர்., ஒரு மனித நேய தலைவர் ............

orodizli
4th May 2020, 07:35 PM
விஜயாவாகினி தலைவர் வைஜெயந்திமாலா நடித்து கொண்டிருந்த பாக்தாத்திருடன் பட பிடிப்பு...

பாக்தாத் வாரிசான குழந்தை எம்ஜியார் அவர்களை எதிரிகள் கொலை செய்ய திட்டமிடும் காட்சி...சூது அறிந்த தலைவரின் அம்மா எஸ்.என்.லட்சுமி பால எம்ஜியாரை ஒரு பசு மாட்டின் மடியில் கட்டி விரட்டி தப்பிக்க விடும் காட்சி.

அப்போது மாடு ஓடிய பின் ஒரு புலி வந்து தலைவரின் அம்மாவை துரத்தி கொன்றுவிடும்......புலியுடன் என்.என்.லட்சுமி மோதி புரளும் காட்சியில் டூப் நடிகை நடிக்க.

காட்சி எடுக்கப்பட்டு வரும் போது அந்த புலி டூப் நடிகை மார்பில் பாய்ந்து கடித்து குதறி விட ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைகிறார் அந்த டூப் நடிகை.

செய்தி அறிந்த செம்மல் பறந்தோடி வந்து அந்த நடிகையை அள்ளி கொண்டு ஓடி அரசு மருத்துவமனையில் சேர்கிறார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட 3 மாத காலம் நீடித்த சிகிச்சையில் தலைவர் ஒரு ஆள் போட்டு தாய் தகப்பன் கணவர் இல்லாத அந்த நடிகையின் உடல்நிலை முன்னேறும் வரை இதர செலவுகளை பராமரிக்கிறார்.

3 மாதங்கள் கழித்து டிஸ்சார்ஜ் ஆகி தலைவர் அனுப்பிய காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த அந்த துணை நடிகை வீட்டில் கொண்டு விட போகிறார்கள்....வீட்டு வாடகை 3 மாத பாக்கி, தொடர்ந்து நடிக்க நாட்கள் ஆகும் என்பதால் வயிற்று கவலைகளை சுமந்த படி கார் செல்ல.

கார் கோடம்பாக்கம் தாண்டி வலதுபுறம் ட்ரஸ்ட் புரம் நோக்கி செல்ல....அந்த நடிகை என் வீடு இங்கே இல்லை எங்கே போகிறீர்கள் என்று கேட்க...

அம்மா டிரஸ்ட் புரம் 4 வது தெருவில் உங்களுக்கு இனி சொந்த வீடு சாவி என்னிடம் இருக்கு மற்ற செலவுகள் நீங்கள் செய்ய பணமும் இருக்கு என்று சொல்ல அந்த நடிகையின் நெஞ்சில் கடவுளாக தோன்றுகிறார் நம் தலைவர்.

தலைவர் நம்மை விட்டு பிரிந்த போது சென்னை எம்ஜியார் நகரில் இருந்து திருச்சி சென்று ஒரு மகள் தன் தகப்பனுக்கு செய்வது போல ஓர் ஐயர் கொண்டு காவிரி கரையில் ஈமகிரியை செய்கிறார் அந்த தங்கப்பன் என்ற நடன மாஸ்டரின் உதவியாளர் ஆன அந்த டூப் நடிகை சூரியகுமாரி..

வாழும் போதே வரலாறாக மாறி போன புரட்சிதலைவர் புகழ் காப்போம்.........

நன்றி...தொடரும்..........

orodizli
4th May 2020, 07:49 PM
"கலங்கரை விளக்கம்" பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.

வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.

“சொல்லுங்க!”

“பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குதாம். அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கிச தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.

எல்லாவற்றையும் பொறுமையாக்க்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டா இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.

மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.03.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.

“ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.

கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டுக்காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோமு சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.........

orodizli
4th May 2020, 07:52 PM
ஒரு சமயம் தலைவர் "பொம்மை" என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.

ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்...

நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.

அதற்கு தலைவர் பதில்.
படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.

ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.

தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.

யார் அவர் என்றால்

அவர் பெயர் 'பாரதி'...தலைவருடன் அவர் நடித்த படம் "நாடோடி".

நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.

வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன...நன்றி...

orodizli
4th May 2020, 08:14 PM
ஒரு சமயம் தலைவர் "பொம்மை" என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.

ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்...

நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.

அதற்கு தலைவர் பதில்.
படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.

ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.

தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.

யார் அவர் என்றால்

அவர் பெயர் 'பாரதி'...தலைவருடன் அவர் நடித்த படம் "நாடோடி".

நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.

வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன்...நன்றி...

orodizli
4th May 2020, 08:20 PM
#இந்த விழாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி.
பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த கத்திப்பாரா நேரு சிலை திறப்பு விழா.
__________________________________________

புரட்சித்தலைவர் இறந்த போது ராஜீவ்காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தி:

"மிகச் சிறந்த பாரதக் குடிமகனின் மரணத்துக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எம்.ஜி.ஆர். சிறந்த தேசபக்தர். நாட்டுப்பற்று அவர் இதயத்தில் ஆழப் பதிந்து இருந்தது. இந்தியாவின் பாரம்பரியத்தில் அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாகவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை புனிதமான கடமையாகவும் அவர் கருதினார். இந்திய மக்களால் மட்டும் அல்லாமல் இலங்கை நாட்டு மக்களாலும் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது மரணத்தில் என் சொந்த இழப்பு மிகப்பெரியது ஆகும். எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி, என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். அவரது முடிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பாக அந்த விழா நடந்தது. அப்போது என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக் கூறினார். இது அவரது விடைபெறும் நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது," என ராஜீவ் காந்தி கூறி இருந்தார்...........

orodizli
4th May 2020, 08:28 PM
உலகின் முதல் #எம்ஜிஆர். சிலை எது ?

எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர், அ.தி.மு.க. கொடியை
வடிவமைத்தவர் திரு அங்கமுத்து.
அவர் 1988 ல் தன் கைப்பட தனது தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிளாஸ்டர் ஆப்
பாரிஸில் சிலை வடித்து தன் திருப்திக்காக இல்லத்திலேயே வைத்திருந்தார். அங்கமுத்து காலமாகிய பின் அவர் வசித்த மாடி அறை பாதுகாக்கப்பட்டு வருகின்றது
எம்.ஜி.ஆர். சிலையுடன், உலகின் முதல் சிலை என்ற பெருமையுடன்.

அங்கமுத்துவின் அனுபவங்களை
திரு கொற்றவன் பேட்டி கண்டு 'இதயக்கனி' யில் எழுதினார். அப்போதே எம்.ஜி.ஆர். சிலையும் படமெடுக்கப்பட்டு 'இதயக்கனி' யில் இடம் பெற்றது.

Ithayakkani S Vijayan with Angamuthu Shanmugam........

orodizli
4th May 2020, 08:35 PM
ரவீந்தர் என்பவர் #எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட்டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வரவில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபதுலட்ச ரூபாய்க்கு சமம்.

ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங்கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரியாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டார்..........

orodizli
4th May 2020, 08:37 PM
எம்.ஜி.ஆர். நூல் வரிசை : 003

“எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்”,

நூலாசிரியர் – கே.பி. ராமகிருஷ்ணன்.,

குறிப்பு : எம்.ஜி.ஆர். அவர்களின் மெயக்காபாளராக, அவரது பல படங்களுக்கு டூப்பாக, ஸ்டன்ட் நடிகராக 1957 முதல் அவர் அமரராகும் 1987வரை 30 ஆண்டுக்காலம் அவருடனேயே பயணித்தவர் என்பதால் இவர் சொல்லும் செய்திகள் அனைத்தும் அரிய பொக்கிஷமாக சுவையான நடையில் விறுவிறுப்பாக இருக்கும் அருமையான நூல்.

நூல் விலை : Rs.100.00 (நான் வாங்கிய காலத்தின் விலை இது. தற்போதைய புதிய பதிப்புகளின் விலை மாறுபடலாம்)

பதிப்பகம் : விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002.

தொலைபேசி – 044 28524074.

தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் எம்.ஜி.ஆர். நூல்களை தேடித்தேடி சேகரித்து படிப்பவன். அவரை பற்றிய நூல்கள் 500க்கும் மேல் வெளியாகியுள்ள நிலையில், என்னிடம் 120 நூல்கள் மட்டுமே உள்ளது. என்னிடம் இருக்கும் நூல்களின் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விபரங்களையும் முடிந்தளவு தினம் ஒன்றாக வெளியிட முயற்சிக்கின்றேன். என்னை போன்ற எம்.ஜி.ஆர். நூல் சேகரிப்பாளர்களுக்கு இந்த நூல்களை வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த முயற்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கிலே. எம்.ஜி.ஆர். நூல்களை பற்றிய எனது மூன்றாவது பதிவாகும் இது.

நீங்களும் உங்கள் சேகரிப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்களின் முன்புறத் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விவரங்களையும் Commend பகுதியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து Inboxல் இட வேண்டாம். எல்லோரும் பார்க்கும் வகையில் Commend பகுதியிலியே வெளியிடுங்கள். இது நாம் எல்லோரும் நமக்குள் பரஸ்பரம் உதவி செய்வது போன்ற ஒரு நல்ல ஏற்பாடுதான். இன்றிலிருந்து நூல் வரிசை 120 வரும்வரை (அதாவது என்னிடம் இருக்கும் நூல் வரை) வேறு எந்த பதிவுகளும் இந்த முகநூலில் வராது.

மேலும், நீங்கள் Commend பகுதியில் வெளியிடும் உங்கள் வசம் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்கள் எனது சேகரிப்பில் இல்லை என்றால்.. அதையும் இதே போலவே வெளியிடுகிறேன் விபரங்கள் தந்த உங்கள் பெயருடனேயே. அதற்க்கு முன்புறத் அட்டைப்படம், நூல் பற்றிய விவரங்கள் அச்சிடபட்ட பகுதிகள் போட்டோ எடுத்து அனுப்புங்கள். ஆசிரியர் பெயர், விலை, பதிப்பக விலாசம், தொலைபேசி எண் எல்லாம் உள்அடங்கியதாக இருந்தால் மிகவும் நலம். இப்போது நான் வெளியிட்டது போலவே.

முடிந்தளவு இதை SHARE செய்யுங்கள். அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களிடமும் சென்று சேர வசதியாகும்.

நன்றி ஒரு எம்.ஜி.ஆர். பக்தனாக.........

orodizli
4th May 2020, 09:31 PM
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம்.
12/04/2020 அன்றைய தொடர்ச்சி ....
இன்று
04/05/2020

நண்பர்களா? நயவஞ்சகர்களா?

'திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதம்
அந்தப்படக் கதையின் சிறப்பை நான் அறிந்திருந்ததே முக்கியக்
காரணமாகும்.
ஒருவனுக்கு நண்பர்கள் என்று இருப்பார்களானால், அவர்கள்
அவனுடைய நல் வாழ்வுக்காக வேண்டி, கடிந்துரைக்க அவசியம்
ஏற்பட்ட போதிலும் பின் வாங்காமல், அதனால் அவனுக்குத்
தாங்கள் விரோதியாகும் நிலை ஏற்படுவதையும் பொருட்படுத்
தாமல் அவனுக்குப் புத்திமதி கூறித் திருத்த முயன்றால்தான்
‘நண்பர்கள்' என்ற பெயருக்குப் பொருத்தமுடையவராவார்கள்.
ஒரு பழமொழி உண்டு.
எடுத்துச் சொல்லு,
இடித்துச் சொல்லு!
இரண்டும் பயன் தரவில்லை என்றால் அவனைத்தன்
உள்ளத்திலிருந்து ('நண்பன்' என்ற தகுதியை விட்டு) 'எடுத்து
எறி' என்பதே அது.
நண்பன் செய்வது தவறுதான் என்று தெரிந்த பிறகும் அதைக்
கண்டிக்காமல் பாராட்டிக்கொண்டே இருந்தார்களானால்
நாளடைவில் அந்த நண்பன் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கே
வந்து விடுவான்.
தான் நினைப்பதுதான் சரி,
தான் சொல்வதுதான் சரி!
தான் செய்வதுதான் சரி,
அதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;
இல்லையென்றால் அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள்;
அலட்சியப்படுத்துகிறார்கள்; தனக்குக் கேடு செய்கிறார்கள்
என்றே முடிவெடுத்து விடுவான். இந்த மாதிரி ஓர் எண்ணத்தை
அவனிடம் உருவாக்குகிற அவர்கள் எப்படி நண்பர்களாவார்கள்?
நயவஞ்சகர்கள்! நம்பிக்கைத் துரோகிகள்! இதைத் தவிர வேறு
என்ன பெயரைச்சொல்லி அவர்களை அழைப்பது?
ஏனென்றால், தனிப்பட்ட ஒருவனை மட்டுமா அவர்கள்
கெடுக்கிறார்கள்! அந்தத் தனி மனிதன் புகழும் செல்வாக்கும்
உடையவன் என்று வைத்துக்கொள்வோம். எல்லா வசதிகளையும்
பெற்ற அவனுடைய செயல் பல கிளைகளாக விரிந்து,

எங்கெல்லாமோ பரவி, ஒரு வலிய சமூகத்தையே கூடத் தீண்
நாசப்படுத்திவிடக்கூடுமே!
இதே போலத்தான் சினிமா நாடகக் கலைஞர்கள் தவறான
ஒன்றை நியாயமென்று கருதி, தாம் எண்ணுவதுதான் சரி என்று
முடிவு கொண்டுவிட்டால், அவர்களுடைய கலைத் திறமையின்
வாயிலாக மக்கள் உள்ளத்தில் பதிய வைக்கும் அந்தக் கருத்துகள்
ஒரு சமூகத்தையே தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சக்கி
படைத்தவைகளாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்
கொள்வது என்னைப் போன்றவர்களின் மிகப் பெரிய
பொறுப்பல்லவா!
அதுவும், ஓர் அரசியல் கொள்கையை உளமார ஏற்றுச் செயல்
பட்டுக்கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களின் கண்
காணிப்போ, கட்டுப்படுத்தும் பெரியவர்களின் எச்சரிக்கையோ
இல்லாதிருந்தால் அவன் நிலை என்னாவது!
ஆனால், அன்று எனது கருத்து நியாயமானது என்றுதான்,
என்னிடம் எந்தப் பயனையும் எதிர்பாராத, என் வாழ்வில்
அக்கறை கொண்ட நண்பர்களும் கருதினார்கள். எனவே,
அவர்களும் அதை ஆதரித்தார்கள் எனினும், எனக்கு அந்த
அனுபவம் ஏன் ஏற்பட்டது?

சூழ்நிலை மாறிற்று!

திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் என் விருப்பத்திற்கிணங்க, நான்
கூறிய நிபந்தனையோடு, திருமதி சரோஜாதேவி அவர்களை
அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
துவக்கத்தில் நான் 'கால்ஷீட்' கொடுத்த போதெல்லாம்
அவரும் வந்து நடித்தார்.
இடையில் எனக்குக் கால்முறிவு ஏற்பட்டது. அதனால்
என்னென்னவெல்லாம் ஏற்பட்டன என்பதைப் பிறகு
சொல்கிறேன்.
'திருடாதே' படம் என் நிலைமை காரணமாக எடுத்து முடிக்கப்
படாமல் இருந்தது. எனக்குக் கால் குணமான பிறகு, இந்தப்
படத்தை முடிக்கும் முயற்சி தொடங்கியபோது, ஏற்கெனவே
அந்தப் படத்தில் புதுமுகமாக வந்து நடித்துக்கொண்டிருந்த திருமதி

சரோஜாதேவி அவர்கள். அறிமுகமான, பிரபல நடிகை
யாகியிருந்தார்.
நான் தயாரித்த, 'நாடோடி மன்னன்' படம் வெளிவந்து
அதனாலும் அவருக்குப் புகழ் ஏற்பட்டிருந்தது. வேறு பல
நடிகர்களுடன் நடிக்கக்கூடிய வாய்ப்பையும் புகழையும் அவர்
பெற்றிருந்தார்.
அதனால் 'திருடாதே' படத்திற்கு நான் கொடுக்கிற கால்
ஷீட்டை அனுசரித்து அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
அவர் எப்போது 'கால்ஷீட் கொடுத்தாரோ, அதை அனுசரித்து
நான் 'கால்ஷீட்' கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.
"நீங்கள் ஏன் அவருடைய 'கால்ஷீட் டை அனுசரித்துக்
கொடுக்க வேண்டும்?" என்று ஒரு கேள்வி கேட்கப்படலாம்!
இந்தக் கேள்விக்கு நான் இரண்டொரு வாக்கியங்களில் பதில்
சொல்லி விடமுடியாது.
என்னுடைய அப்போதைய நிலைமையை அப்படியே படம்
பிடித்துக்காட்டினால் தான் சரியான விளக்கமாக அது அமைய
முடியும்.

கால் முறிவுக்குப் பின்....

நான் கால்முறிவு குணமாகி வெளிவந்தேன். அதை அடுத்து
முதன் முதலாக நான் நடித்து வெளிவந்த ஒரு சமூகப் படம்
குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை! அது மட்டுமல்ல.
"எம்.ஜி. ராமச்சந்திரன் சமூகப்படத்தில் நடித்தால் ஓடாது"
என்று கூடச் சிலர் துணிந்து சொல்லத் தொடங்கினர்.
"இனிமேல் எம்.ஜி. ராமச்சந்திரன் ராஜ உடை போட்டுக்
கொண்டு கத்தியைச் சுழற்றலாமே தவிர, அந்த மாதிரிப்
படங்களுக்குத்தான் வரவேற்பு இருக்குமே தவிர, சமூகக் கதைப்
படங்களில் நடிப்பதற்கு அவர் பொருத்தமானவரில்லை
மக்களுக்கும் பிடிக்கவில்லை" என்ற முடிவுக்கும் சிலர் வந்திருந்
தார்கள். இந்த முடிவுக்கு வரவேற்புத் தருவதுபோல, புதுப்
படங்களில் நான் ஒப்பந்தமாகக் கூடிய நிலையும் ஏற்படவில்லை.

நாடகத்தில் மீண்டும் நடிப்பது என்பதும் சுலபமில்லை
ஏனென்றால் என் கால் முறிவுக்கு முன் என்னை வைத்து
படமெடுத்துக்கொண்டிருந்த பலருடைய படங்கள்
அப்படியப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அரை குறையாக
இருந்தன. அவரவர்கள் பத்துலட்சம், பன்னிரண்டு லட்சம் என்று
பணத்தைப் படத்தில் முடக்கியிருந்தார்கள்.
இந்த சினிமாப் படம் இருக்கிறதே, அது ஒரு விந்தையான
அதே நேரத்தில் ஒரு பயங்கரமான தன்மையை உடையது.
முடிவடையாமலும், முடிவடைந்து வெளிவராமலும் தேங்கி
விடுமானால் எவ்வளவு லட்சத்தை விழுங்கி அது
உருவாகியிருந்தாலும், அது வெறும் 'ஸெலுலாய்ட்' என்றுதான்
கருதப்படுமே தவிர, அதற்கு யாதொரு மதிப்பும் ஏற்படாது.
முடிக்கப்பட்டு, வெளிவரும் படத்திற்குத்தான் மதிப்பு.
ஆகவே, அரை குறையாக நின்றுவிட்ட என் படங்களுக்கு
மதிப்பேற்பட வேண்டுமானால், அவை உடனே முடிக்கப்பட
வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.
அவ்வாறு அவை முடிக்கப்பட வேண்டுமானால், அந்தப்
படங்கள் வெளிவந்தால் நிச்சயம் வெற்றி அடையும் என்ற
நம்பிக்கை, படத்தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, அந்தப்
படங்களுக்குரிய பட விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட வேண்டும்!
அப்படி அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஏற்பட வேண்டு
மென்றால், நான் நடிக்கும் ஏதாவது ஒரு படம் உடனே
வெளிவந்து, அது நன்றாக ஓடி, வெற்றியையும் பெற்றுத் தீர
வேண்டும். அப்போதுதான் மீண்டும் என் படங்களுக்குப்
புத்துயிரும் புதுவாழ்வும் உண்டாக முடியும் என்ற கட்டாய
நிலைமை ஏற்பட்டிருந்தது.

எதிர்ப்புக் கணைகள்

இதற்கிடையில், பரணி ஸ்டூடியோவில், பிரபலமான ஒரு
சிறந்த நடிகருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது
பேசிய பலருள் சிலர், என்னைப் பற்றிச் சில வருந்தத்தக்க
கூற்றுக்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமாகத்
திரு. கண்ணதாசன் அவர்களால் பேசப்பட்ட பேச்சின் பெரும்
பகுதி என்னைத் தாக்குவதாகவே அமைந்திருந்தது.

திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..........

orodizli
4th May 2020, 09:53 PM
ஒரு முறை எம்.ஜி.ஆர்.மதுராந்தகம் ஏரி அருகே ஷூட்டிங் சென்று கொண்டிருந்தார்.

கருக்கலைல் முதல் ஷாட்.

கார் செங்கற்பட்டு அருகே போய் கொண்டிருந்த போது ஓரத்தில் ஒரு அம்பாசிடர் நின்று கொண்டிருந்தது.

உடனே தன் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிப் பார்த்தார்.

உள்ளே எம்.எஸ்.சுப்புலட்சுமி.

''என்னம்மா இந்த நேரத்தில்?"
''மதியம் மதுரையில் சொந்தக்காரர் வீட்டில் க்ரகப்ப்ரவேசம், மாலை நெல்லையில் கச்சேரி, இரண்டு டயர் பஞ்சர் ''என்றதும், முதலில் தன் வண்டியில் அவர்களை ஏற்றி விட்டு 'நீங்கள் போங்கள்,நான் பார்த்து கொள்கிறேன்,உங்கள் வண்டி தயாராகி நேரே வீட்டுக்கே வந்து சேரும்''
என்றார்.

அவரை அனுப்பி விட்டு காத்திருந்தார்.

ஒரு சைக்கிள் காரன் வந்தான்.

அவனை நிறுத்தி எங்கே போறே?"

''மதுராந்தாகம் ஐயா என் பேரு மர்மயோகி நீங்கதான்யா வெச்சீங்க"என்றான்.

ட்ரைவரை அழைத்து எம்.எஸ்.அம்மா காரை எப்படியாவது ரிப்பேர் செய்து கல்கி கார்டனின் விடச்சொல்லிவிட்டு மரம்யோகியின் சைகிளில்
ஏறிக் கோண்டார்.

மர்மயோகியை பின்னால் உட்கார வைத்து மதுராந்தகம் மண்டபத்திற்கு சென்றார்.

மண்டபத்தில் மகிழ்ச்சி.

மர்மயோகி சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம் தான்.

''சைக்கிள் விலை கேட்ட ''எம்.ஜி.ஆர்.பத்து சைக்கிள் வாங்கி தந்து ஊரில் குறைந்த வாடகைக்கு விடச்சொன்னார்.

அந்த நேரத்தில் மர்மயோகிக்கு பையன் பிற்ந்திருந்தான்.

'புதுமைப்பித்தன்' வளர்ந்ததும் அவனை டாக்டர் ஆக்கிய எம்.ஜி.ஆர்.மதுராந்தக்கத்தில் அவனுக்கு க்ளினிக் வைத்துக் கொடுத்து மதுராந்தகம் மற்றும் இடங்கள் சுற்று வட்டார மக்களுக்கு இலவச சிகிச்சை ஏற்பாடு செய்தார்.

அப்படிப்பட்டவர் எம்.ஜி.ஆர்...

கச்சேரி முடிந்து சென்னை திரும்பிய எம்.எஸ்.மர்மயோகி குடும்பத்திற்கு டி.ஐ.சைக்கிள் ஏஜென்சிஸ் எடுத்து தந்தார்....

நல்லவர்கள், நல்ல மனம் படைத்தவர்கள் அப்படித்தான்.....

எழுத்தாளர்
சுப்ரஜா ஸ்ரீதரன்...
அவர்களின் வலை தளம் பக்கத்தில் இருந்து..........

orodizli
4th May 2020, 10:02 PM
கொடை வள்ளல் எம்ஜிஆர் புகழ் வாழ்க

ஜி.என்.வேலுமணியின் சரவணா ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்த படம் குடியிருந்த கோயில். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ஜெயலலிதா, ராஜஸ்ரீ ஆகியோர் புரட்சித் தலைவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 15 - 03 - 1968 அன்று படம் வெளியாகி 146 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.

எனக்கு 90களில் விவரம் தெரிந்த காலகட்டத்தில் இந்த படத்தை தியேட்டரில் காணும்பொழுது புரட்சித் தலைவரின் பெயர் போடும் போதும், புரட்சித்தலைவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கும் ஆரவாரம் அடங்குவதற்கு நீண்ட நேரமாகும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க...........

orodizli
4th May 2020, 10:16 PM
மக்கள் திலகம் ஆட்சியில் இருந்தபொழுது மேலும் பல சாதனைகள் பதிவில் விடுபட்டுள்ளது..... அவைகள்...
1 சைக்கிளில் இரண்டு பேர் செல்வதை அனுமதித்தது.
2. ஆட்டோவில் மூன்று பேர்கள் செல்ல அனுமதித்தது.
3 கிராமங்களுக்கு முதல்முறையாக பேரூந்து வசதி ஏற்படுத்தியது
4 சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு 1982 ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
5. அதே போல் சென்னை நகரத்திற்கு உள் வட்ட சாலை, வெளிவட்ட சாலைகளுக்கு திட்டம் அனுமதி அளித்தது.
6 பேரூந்தில் பெண்களுக்கு சரிபாதி இருக்கைகள் ஒதுக்கி ஆணையிட்டது.
7 மதுரையில் தமிழ் சங்கம் அமைத்தது
8 தமிழ்நாட்டில் பல கோயில்களில் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாமல் இருந்த நிலையை போக்கி வருமானமில்லாத எல்லா கோயில்களிலும் ஒரு வேளை பூஜைக்கு வித்திட்டார்.
7 கல்விதுறையில் பல பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தினார் கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், ஆகியோர் பெயர்களில் அமைத்தார்.
8 பொறியியல் படிப்பு நகர்புற மாணவர்களுக்கு மட்டும் என்பதை மாற்றி கிராமப்புற மாணவர்களையும் பொறியியல் பட்டதாரி ஆக சுய நிதி கல்லூரிகள் மூலம் வித்திட்டார்.
9 குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிராம நகரங்களில் பல குடிநீர் திட்டங்களை அமல் படுத்தினார்
10 சென்னை நகர் குடிநீர் பணிக்கு தனியாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தார்.
11 அதே போல் கோவைக்கு சிறுவாணி குடிநீர் திட்டத்தையும், மதுரைக்கு வைகை அணை குடிநீர் திட்டத்தையும் அமல்படுத்தினார்.
112. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் சம்பந்தி உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்............

fidowag
5th May 2020, 09:15 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நிருத்திய*சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பான*விவரங்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
29/04/20-* ஜெயா மூவிஸ் -காலை 7 மணி* - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * * * *சன் லைப்* *- காலை 11 மணி* * - அரச கட்டளை*

* * * * * * * * புதுயுகம்* * -இரவு 7 மணி* *- நீதிக்கு பின் பாசம்*

30/04/20 - சன் லைப்- காலை 11 மணி - திருடாதே*

* * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி* - ஆனந்த ஜோதி*

01/05/20* முரசு டிவி* - காலை 11மணி /இரவு 7 மணி* -நல்ல நேரம்*

* * * * * * * * புதுயுகம்* *-இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

03/05/20 -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - குலேபகாவலி*

* * * * * * * ராஜ் டிவி* *- காலை 10.30மணி -உலகம் சுற்றும் வாலிபன்*

* * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி -திருடாதே*

04/05/20* -சன் லைப்* - காலை 11 மணி - நாளை நமதே*

05/05/20 -ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி -ரகசிய போலீஸ் 115

* * * * * * * *புதுயுகம்* - இரவு 7 மணி* - நீதிக்கு தலை வணங்கு*

06/05/20 -சன் லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்** * * * * * * * **

orodizli
5th May 2020, 10:58 PM
நாளை 6-05-2020 புரட்சி நடிகர் செல்வாக்கு உயரும் கதாப்பாத்திரம் அபு "பாக்தாத் திருடன்" 60 ஆண்டுகள் நிறைவு செய்து, 61ம் வருடம் தொடக்கம்... இந்த காவியத்தில் ஒரு காட்சி... நடிகை mn. ராஜம் தலைவரை பார்த்து சொல்லும் வசனம்... " பொது மக்களின் பேராதரவு தான் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு இருக்கிறதே"... இத்தகைய காட்சி திரையில் வரும்போது அரங்கமே அல்லோகலப்படும்...ஆம்... நிழலில் இருந்ததை நிஜமாக்கியவர் மக்கள் திலகம் மட்டுமே அல்லவா?!.........சுஹாராம்...

orodizli
5th May 2020, 11:05 PM
மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட ஏராளமான நூல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன... அவற்றின் பதிப்பாசிரியர்கள், நூல்களின் தன்மை, விலை பட்டியல்... இதர விபரங்களை அறிந்த தோழர்கள் தெரிய படுத்தலாம்... சுஹாராம்......

fidowag
5th May 2020, 11:12 PM
பொதிகை*டிவியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் புகழ் மாலை*
--------------------------------------------------------------------------------------------------------------------
பொதிகை டிவியில்(05/05/20) இன்று ஒளிபரப்பான மலரும் நினைவுகள் (பயாஸ் கோப்)நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாலட்சுமி பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களை பேட்டி கண்டார் .*


நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து ,இரு வேடங்களில் நடித்து ,இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . நடிகை எம்.என்.ராஜம் கூறியதாவது :


நாடோடி மன்னன் திரைப்படம் பல சிறப்புகளை கொண்டது .* பெரும் பொருட்செலவில் எம்.ஜி.ஆர். அவர்கள் சொந்தமாக எம்.ஜி.ஆர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தை ஏற்படுத்தி தயாரித்தார் . படத்தில் மூன்று கதாநாயகிகள் , நான், பானுமதியம்மா, பி.சரோஜாதேவி (புதுமுகம் -அறிமுகம் ). எம்.ஜி.ஆர். நாடோடியாகவும், மன்னனாகவும் நடித்திருந்தார். படத்தில் மிகவும் அழகாக இருப்பார் .படத்திற்கு தயாரிப்பு செலவு அதிகம் ஆகி கொண்டே இருந்ததால் , பலபேர் விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் , இல்லையென்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர். சொல்லுவார் .


வில்லன் பி.எஸ். வீரப்பா,எம்.என்.நம்பியார்* பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி, சந்திரபாபு, ஜி.சகுந்தலா,அங்கமுத்து, முத்துலட்சுமி ,திருப்பதிசாமி, ராம்சிங் ,ஜெமினி சந்திரா மற்றும் பலர் நடித்தனர் . இடைவேளைக்கு பிறகு பகுதி கலரில் எம்.ஜி.ஆர். எடுத்தார் .*


கதை வசனம் கவிஞர் கண்ணதாசன், படத்தில் எம்.ஜி.ஆர். மன்னன் ஆன பிறகு*நாட்டு மக்களுக்கு செய்யும் திட்டங்களை ,கொள்கைகளை அறிவிப்பார் .*1958ல் படம் வெளியானது . எம்.ஜி.ஆர். முதல்வராகியதும் அவரை பேட்டி எடுத்தார்கள் அப்போது அவர் என் திட்டங்கள் சிலவற்றை நாடோடி மன்னன் படத்திலே அறிவித்துவிட்டேன்* மீதியை பொறுத்திருந்து பாருங்கள் என்றார் .உண்மையிலேயே அவர் ஒரு தீர்க்கதரிசி .* இந்த படம் எடுக்கும்போது அவர் நினைத்திருக்க மாட்டார் தான் ஒருநாள் முதல்வராகி இந்த திட்டங்களை செயல்படுத்துவேன் என்று . படத்தில் அந்த காலத்திலேயே பஞ்ச் வசனங்கள் நிறைய இடம் பெற்றிருக்கும் .* எம்.ஜி.ஆர். சொல்லுவார். அமைச்சரே, நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் . நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள்.* அரண்மனையில் நுழைந்ததும் என் உலகம் மாறியிருக்கிறது என். உள்ளம் மாறவில்லை.* கொஞ்ச நாட்களே பதவியில் இருந்தாலும் மக்களின் குறை தீர்ப்பவனே மன்னன் .* என் இஷ்டத்திற்கு இணங்குவதாக இருந்தால் நான் மன்னனாக இருப்பேன் .. என்னை நம்பாமல் கெட்டவர் பலர். என்னை நம்பி கெட்டவர் இன்றுவரை இல்லை .* இன்னும் எவ்வளவோ வசனங்கள். அருமையாக இருக்கும். ரவீந்தர் உதவி வசனகர்த்தா .*


ஒரு கட்டத்தில் , நான் அவரை மன்னனாக கருதி உறவாடுவேன். எனக்கு தெரியாது அவர் நாடோடி என்று . அவர் உன்னை மணந்தவன் நானில்லை. மாலையிட்டவன் நானில்லை. நான் உன் கணவனே இல்லை. என்று கூறியதும் நான் தற்கொலை செய்ய முயலும்போது , காப்பாற்றி தனது நிலையை விளக்குவார் .இறுதியில் உண்மையிலேயே என்னை நம்புகிறாயா சகோதரி என்பார் .நான் சொல்லுவேன். நான் மட்டுமில்லை அண்ணா. இந்த நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது என்பேன் .* அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தார் . இந்த காட்சிக்கும், வசனத்திற்கும் சுமார் 5 நிமிடங்கள்*கைத்தட்டல்களும், விசில் சத்தமும் ஓயாது ..* இப்படி பல காட்சிகள்* *கைத்தட்டல்களால் அரங்குகளே அதிர்ந்தன .* வெள்ளிவிழா ஓடிய படம் .**

மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழாவில் 110 சவரன் தங்க *வாள்*எம்.ஜி.ஆருக்கு பரிசளிக்கப்பட்டது . எம்.ஜி.ஆர். சிறந்த இயக்குனராக தேர்வு*செய்யப்பட்டார் .**


1977ல் எம்.ஜி.ஆர். முதலைவரான பின்பு, ஒரு நாள் , நானும் என். கணவருடன் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு ராமாவரம் தோட்டம் சென்றிருந்தோம் . அன்று அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம் எல்.ஏ.க்கள் , தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் , வி.ஐ.பி.க்கள் , பல்வேறு கட்சி தலைவர்கள்*பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ,கட்சி தொண்டர்கள் பலரும் திரண்டு இருந்தனர் . சிறிது நேரத்திற்கு பிறகு , கூட்டத்தின் நடுவே சென்று கையை உயர்த்தி, அண்ணே என்று குரல் கொடுத்தேன். பலபேர் அவரை* , ஐயா, சார் என்று தான் அழைத்திருந்தார்கள். என் குரல் கேட்டதும். சட்டென்று திரும்பி பார்த்து , மேடைக்கு வர சொன்னார்.* நான் சென்றதும் , நாடோடி மன்னன் படத்தில் நான் நடித்த காட்சியை குறிப்பிட்டு அந்த வசனத்தின்படியும், காட்சியின்படியும், இன்று நான் முதல்வராகிவிட்டேன். உன் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது என்று என்னை பெருமை படுத்தி பேசினார் அனைவரும் பலத்த கைதட்டல்கள் மூலம் பாராட்டினார் கள்*. எனக்கு அந்த சில நிமிடங்கள் அந்த கூட்டத்தின் இடையே எல்லையில்லாத சந்தோசம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் . பிறகு அவருக்கு நான் நன்றி , மற்றும்*முதல்வரானதற்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றேன்**

fidowag
8th May 2020, 10:34 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக* மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பான*விவரங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------------
06/05/20 - சன்* லைப்* -காலை* 11 மணி* -வேட்டைக்காரன்*

* * * * * * * * *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30மணி -குடியிருந்த கோயில்*

* * * * * * * எம்.எம்.டிவி* -இரவு 10 மணி* - படகோட்டி*

07/05/20- ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி -விக்கிரமாதித்தன்*

* * * * * * * *ராஜ்* டிவி* -பிற்பகல் 1.30 மணி* -தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * * *எம்.எம்.டிவி* - இரவு* 7 மணி -காவல் காரன்*

* * * * * * * *வசந்த் டிவி* -இரவு 7.30 மணி -நல்ல நேரம்*

* * * * * * * *பாலிமர் - இரவு 11 மணி* - தனிப்பிறவி*

08/05/20 - வசந்த் டிவி -காலை 9.30 மணி -ராமன் தேடிய சீதை*

* * * * * * * *சன் லைப் - காலை* 11 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * * *ராஜ் டிவி* -பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *ஷாலினி டிவி - இரவு 8 மணி -மாட்டுக்கார வேலன்*

* * * * * * * *பாலிமர் டிவி* -இரவு 11 மணி* - திருடாதே .**

fidowag
9th May 2020, 11:58 AM
ஜெயா மூவிஸ்*சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்*(தினசரி இரவு 10* மணிக்கு*)
-------------------------------------------------------------------------------------------------
09/05/20 -* *சங்கே முழங்கு*

10/05/20 - ராஜராஜன்*

11/05/20- தாயின் மடியில்*

12/05/20 - விக்கிரமாதித்தன்*

13/05/20-வேட்டைக்காரன்*

14/05/20 - கொடுத்து வைத்தவள்*

15/05/20- தாய்க்கு பின் தாரம்*

oygateedat
11th May 2020, 10:26 PM
உ.சு.வா பட வரலாறு
47 ஆண்டுகளுக்குமுன்பு இதே மே 11-ந்தேதி...

ஒரு படம் 200 கோடி 400 கோடின்றாங்க. அதுல சில மாஸ் ஹீரோங்க வேற சீனுக்கு சீனுக்கு பன்ச் டயலாக் பேசறாங்க. அந்த கால ஹீரோவுக்கு முகத்துக்கு மேக்அப் போடுவாங்க. இப்போவெல்லாம் நோ மேக்கப், முகத்தையே கிராபிக்ஸ்ல செமையா மாத்தி அறிவாளி ரசிகர்கள் காதுல பூ சுத்தல. பூமாலையே சுத்தறாங்க.

ஒரு படம் ஓடறத்துக்காக திடீர் திடீர்னு அரசியல் பேச ஆரம்பச்சிடறாங்க. ஏதாவது டயலாக்கால கவர்மெண்ட்டு பாதிச்சு ரியாக்சன் காட்டினா, உடனே கால்ல பொத்துன்னு விழுந்துடறாங்க. ஒரு சிங்கிள் ஜெயில் ஷாப்பிங் டயலாக்க காப்பாத்தக்கூட தைரியமில்லா படத்தல இருந்தே தூக்கிட சொல்லிட்டு துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிப்போயிட்டாருன்னு பேசிக்கிற அளவுக்கு நிலைமை..

இதுல காமடி என்னன்னா இவங்களையெல்லாம், அரசியல், அவரைக்காய் பொறியல்னு எம்ஜிஆர்கூட கம்பேர் பண்ணி பக்கம் பக்கமா ரைட்டப் குடுக்கறதுதான்.. மீடியாவுங்களும் சேர்த்துதான்..

ஒரேயொரு படம், உலகம் சுற்றும் வாலிபன்.. அதன் ரிலீஸ் வரலாறு தெரிஞ்சா இவங்கள்லாம் இப்படி எழுதுவாங்களான்னு தெரியலை..

20 வருஷம் கட்சிக்காக உழைச்சி கட்சியால் தானும் வளர்ந்து பெரிய ஆளானவரு எம்ஜிஆர். எம்எல்சி, எம்எல்ஏ கட்சி பொருளாளர்ன்னு அரசியல் வாதியாகவும் முன்னேறியவரு..

திமுக 1972ல் வெளியேற்றியது, எம்ஜிஆர் என்ற நடிகரை அல்ல. அதைவிட முக்கிய பலம் வாய்ந்த எம்ஜிஆர் என்ற பழுத்த அரசியல்வாதியை.. கட்சியில் மூன்றாவது இடத்தில் உள்ள பொருளாளரை..

ஒரு கம்பெனியில் சாதாரண ஊழியராக சேர்ந்து பல ஆண்டுகள் பாடுபட்டு ‘ஜெனரல் மேனேஜரான ஒருத்தர், திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டு அலுவலகத்தை விட்டு நடுத்தெருவில் நின்றால் எப்படியோ, அப்படி.த்தான் எம்ஜிஆர் நின்றார், 1972 அக்டோபரில்.

நேற்றுவரை ஒட்டிஉறவாடிய திமுகவின் மூத்த தலைவர்களும் அவர்களின் வசம் உள்ள தமிழக அரசு நிர்வாகமும் அடியோடு பகையாளிகளாக மாறிவிட்ட பயங்கரம்.

உண்மையிலேயே மிரண்டுதான் போனார், ஆனானப்பட்ட எம்ஜிஆரே.

திமுகவையும் ஆட்சியையும் எதிர்த்து போராடி சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அந்தக்கணத்தில் அவருக்கு இல்லை. சினிமாவும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு. அனுபவசாலியான அவருக்கு நன்றாகவே தெரியும். அதன்பின் நடந்ததை பல்வேறு நேரடி அனுபவஸ்தர்கள் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறோம். வியந்தும் இருக்கிறோம். அவற்றின் சாராம்சத்தை இங்கே சொல்கிறோம்

திமுகவில் இருந்து நீக்கப்படடதால் மனக்கலக்கத்தில் இருந்த எம்ஜிஆருக்கு மெல்ல மெல்ல தைரியம் கொடுத்தது, எரிமலையாக வெடித்துப்பொங்கிய அவருடைய ரசிகர்கள்தான். படிப்படியாக தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்கே ஸ்தம்பிக்கும் நிலைமை.

தனிக்கட்சி தொடங்க எம்ஜிஆர் தயங்கிநின்றபோது ராமாவரம் தோட்டத்திற்கு அலை அலையாக படையெடுத்துச்சென்றனர் அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள். அவர்களுக்கு அன்பான மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள் ஏராளம். தனிக்கட்சி தொடங்காவிட்டால் திமுகவினர் தங்களை அந்தந்த ஊர்களில் படாதபாடு படுத்துவர்கள் என்றெல்லாம் எம்ஜிஆரிட சொல்லி வாய்விட்டு கதறினார்கள் ஆதரவாளர்களும் ரசிகர்களும்..

தன்னை விட தன்னை நம்பியிருப்பவர்களை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தை அப்போதுதான் உணர்ந்தார் எம்ஜிஆர. உடனே ஒருமுடிவுக்கு வந்து துணிச்சலுடன் களமிறங்கியதில் அடுத்த சில தினங்களில் உதயமானதுதான் அதிமுக.

அதன்பிறகு எம்ஜிஆரின் தைரியத்தையும் உழைப்பையும் போராட்டக்குணத்தையும் பார்த்து உலகமே வியந்தது தனிக்கதை

இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில தினங்களில் அவரின் இதயவீணை படம் ரிலீசானது. எந்த சர்ச்சையும் இல்லாமல் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என கலர்புல்லாய் பாடிக்கொண்டே, 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றிகண்டது.

ஆனால் அவர் சொந்தமாக தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த பிரமாண்டமான படைப்பான
உலகம் சுற்றும் வாலிபன் ஏனோ ஆட்சியாளர்கள் கண்ணில் உறுத்த ஆரம்பித்தது..எங்கே யார் வெறியை ஏற்றிக்கொண்டு திரியை பத்தவைத்தார்களோ தெரியவில்லை.

உசுவா படம் வெளியாவது ஆளுங்கட்சிக்கு கௌரவம் மற்றும் மானப்பிரச்சினையாகியது.அந்த படம் வெளியானால் புடவை கட்டிக்கொள்கிறேன் என பகிரங்கமாய் சூளுரைத்தார் ஒரு திமுக தலைவர். அந்த அளவுக்கு படம் கடும் எதிர்ப்பான சூழலை சந்தித்தது..

போஸ்டர்கள் அடித்து ஒட்ட முடியாத அளவுக்கு இன்னொரு கில்லாடித்தனத்தையும் ஆட்சியாளர்கள் செய்தார்கள். எம்ஜிஆர் அதற்கும் அசரவில்லை. சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர் விளம்பரங்களை அடித்து இறக்குமதி செய்தி ஓட்டச்செய்தார். ஸ்டிக்கர் தமிழ்நாட்டில் முதன் முதலாய் சினிமா உலகம் வழியாக இப்படித்தான் புகுந்தது.

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட, உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசுக்கு தியேட்டர்கள் கொடுக்க உரிமையாளர்கள் தமிழகத்தில் பலரும் முன்வரவில்லை.

ஆனால் எம்ஜிஆர் அத்தனை எதிர்ப்புகளையும் தன்னுடைய சொந்த முயற்சியால்தான் சமாளித்தார். தொடைநடுங்கிப்போய் ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்ய முயற்சி கூட எடுக்கவில்லை.
படப்பெட்டிகளை பிடுங்கிக்கொண்டு ஓட காத்திருந்தவர்களை சமாளிக்க ஒவ்வொரு தியேட்டருக்கும் ஐந்தாறு ரூட்டுகளில் உ.சு.வா ''ரீல் பெட்டிகள்'' அனுப்பட்டது..அதில் எது ஒரிஜினல் என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் எதிரிகள் குழம்பிப்போனது தனிக்கதை..பலர் படப்பெட்டி என செங்கற்கள், கருங்கற்களை பெட்டிகளை கைப்பற்றி பல்பு வாங்கினார்கள்

1973 மே மாதம் 11-ந்தேதி போஸ்டர்களே ஒட்டப்படாமல் உலகம்சுற்றும் வாலிபன் ரிலீசாகி தமிழகத்தை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் அலறவைத்தது. தியேட்டர்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டாலும் தன் சொத்துக்களை விற்றாவது ஈடுசெய்கிறேன் என்று எம்ஜிஆர் எடுத்த அந்த வாழ்வா, சாவா முடிவுக்கு கிடைத்த பலன் அது.

படத்தின் டைட்டில் சாங்கான, ‘’நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’’ ரசிகர்களை முறுக்கேற்றியது.. பாடலில் வரும்,,,

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
என்று வரிகள் ஒலித்தபோது. தியேட்டர்களில் எழுந்த ஆவேசம் ஆட்சியாளர்களை வீழ்த்தும் பலத்திற்கு மேலும் வலு சேர்த்தது..

மூன்று வாரங்களுக்கு போஸ்டரே ஒட்டப்படாத நிலையிலும் தமிழ்நாட்டில் அதுவரை சினிமா உலகில் இருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது உ.சு.வா பல ஊர்களில் 100 நாட்களை சர்வசாதாரணமாக கடந்தது. மாநகரங்களில் வெள்ளி விழா. சென்னையில் முன்பதிவிலேயே புதிய சாதனைகளை படைத்தது.

உலகம் சுற்றும் வாலிபனுக்கு காட்டிய அந்த நிஜமான வீரம்தான் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக எம்ஜிஆர் அனல்பறக்க அரசியல் நடத்த கைகொடுத்தது. எல்லா இடைத்தேர்தலிலும் அவர் வெற்றிவாகை சூட பாதை அமைந்து தந்தது. கிளைமாக்சாக, தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தி முதலமைச்சராக்கவும் வைத்தது. அதுவும் மூன்று முறை.. முதலமைச்சராக காலமாகும் வரத்தையும் கொடுத்தது.

தியேட்டரில் விழும் கைத்தட்டலையெல்லாம் தனக்கு விழப்போகும் ஓட்டுக்கள் என நினைத்தபடி, அரசியலுக்கே வராமல் முதலமைச்சர் கனவில் மிதக்கும் கோடம்பாக்கத்து கோமாளிகளுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஏற்பட்ட எதிப்பபுபோல் இன்று ஏற்பட்டால்

Ezhumalai Venkatesan

முகநூலில் (கவிபாலா) இருந்து

fidowag
12th May 2020, 10:27 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் மதிவாணர்*எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
09/05/20* *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி* -அலிபாபாவும் 40 திருடர்களும்*

* * * * * * *வசந்த் டிவி* - இரவு 7.30 மணி* - நீதிக்கு தலை வணங்கு*

* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி* - வேட்டைக்காரன்*

10/05/20 - மெகா டிவி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*

* * * * * * *வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி -வேட்டைக்காரன்*

* * * * * * *பாலிமர் டிவி* -இரவு* 11 மணி* - விவசாயி*

11/05/20 - சன் லைப்* -காலை* 11 மணி -இதயக்கனி*

* * * * * * * *வானவில் டிவி - பிற்பகல் 2 மணி* - என் கடமை*

* * * * * * * *மூன் டிவி* *- இரவு* 7.30 மணி* - ஆனந்த ஜோதி*

12/05/20 - வசந்த் டிவி - காலை 9.30 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * * வேந்தர் டிவி* - காலை 10 மணி* - விவசாயி*

* * * * * * * முரசு டிவி* - காலை* 11 மணி* -தாயின் மடியில்*

* * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * *முரசு டிவி* -இரவு 7 மணி - தாயின் மடியில்*

fidowag
13th May 2020, 07:50 PM
இன்று (13/05/20) மாலை ராஜ் டிவியில்*கவியரசு கண்ணதாசன் நினைவலைகள்* என்ற தொடர் நிகழ்ச்சியில் வெளியான*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் கவிஞர் கண்ணதாசன் மதுரை வீரன், மகாதேவி, நாடோடி மன்னன்,ராஜா தேசிங்கு* போன்ற படங்களுக்கு மிக சிறப்பாக வசனம் எழுதியிருந்தார் .* *அதன் பின்னர் கவியரசு கண்ணதாசன் சினிமாவில் பாடல்கள் அதிகம் எழுதும் சூழ்நிலை உருவானது . குறிப்பாக எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு அவரது இமேஜை உயர்த்தும் பொருட்டு பல தரமான பாடல்கள் எழுதி அவருக்கு புகழ் சேர்த்தார் .**

எம்.ஜி.ஆருக்கும் , கண்ணதாசனுக்கும் சில காலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு*பிரிவினை ஏற்பட்டது . எம்.ஜி.ஆர். 1972ல் தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டார்*இருப்பினும் கவியரசு கண்ணதாசன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தன்*வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார் .* தி.மு.க. எடுத்த முடிவு தவறு என்றும் சுட்டிக் காட்டினார் .**

1963ல் பெரிய இடத்து பெண் படத்திற்கு பாடல் பதிவின்போது , மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் ஒரு நாள்* *ரிக்கார்டிங் அரங்கிற்கு வரவில்லை. காரணம் அந்த காலத்தில் இவர்கள் பல படங்களுக்கு இசை அமைத்து கொண்டிருந்ததனால் மிகவும் பிசியாக இருந்த சமயம் .* முந்தைய நாள் இரவு வெகு நேரம் பாடல் பதிவில் இருந்துவிட்டு நள்ளிரவுக்கு பின் வீடு திரும்பியவர்கள் மறுநாள் காலை பாடல் பதிவிற்கு நேரத்திற்கு வர இயலவில்லை .* எனவே, வெகு நேரம் காத்திருந்த கவியரசு கண்ணதாசன் விஷயம் கேட்டறிந்து , அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா* என்று எம்.ஜி.ஆருக்கு எழுதும் சோக பாடலுக்கு வரிகள் எழுத ஆரம்பித்தார் .* பின்னர் தாமதமாக வந்த விஸ்வநாதன் ராரமூர்த்தி இரட்டையர்கள் பாடல் வரிகளை ரசித்தனர் . எம்.ஜி.ஆர். , இயக்குனர் ராமண்ணா ஆகியோரின் சம்மதத்தோடு அன்று பாடல் பதிவு முடிவுற்றது . பெரிய இடத்து பெண் படத்தின் பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் எழுதி இருந்தார்*1963;ல் வெளிவந்த பெரிய இடத்து பெண் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு அந்த ஆண்டின் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது .

1974ல் வெளியான உரிமைக்குரல் படத்திற்கு , ஒரு கனவு காட்சிக்காக பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.*இறுதியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசனை அணுகி, சூழ்நிலைக்கு தக்கபடி* டூயட் பாடல் எழுதி தரும்படி சொன்னார் .அப்போது எம்.ஜி.ஆருக்கும் , கவிஞருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த சமயம் .* முதலில் மறுத்த கவிஞர் , பின்னர் பாடல் எழுதி தருகிறேன் . ஒப்புதல் வாங்கி கொள்வது உங்கள் விருப்பம். என்று சொல்லி அருமையாக எழுதி இருந்தார். அந்த பாடலை மெல்லிசை மன்னர் , இயக்குனர் ஸ்ரீதரிடம் காண்பித்து*அதை கம்போஸ் செய்து* எம்.ஜி.ஆரின் சம்மதத்தை பெற சற்று தயக்கத்துடன் இருவரும் சென்றனர் . பாடல் வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர். கவிஞர் கண்ணதாசன் ஒருவரால்தான் இந்த பாடல் எழுதி இருக்க முடியும் . உண்மையை சொல்லுங்கள் என்று* கேட்டார் .* அவரது இசை ஞானத்தையும் , திரைப்பட பாடல் நுணுக்கத்தையும், கவிஞர்களிடையே எத்தகைய அனுபவத்தை அவர் பெற்றிருந்தார் என்று வியந்தவர்கள் உண்மையை கூறி விட்டார்கள்.* கவிஞர் கண்ணாதாசனுடன் எம்.ஜி.ஆர். பேசி கொள்ளாத சமயம் என்றிருந்தாலும், கவிஞரின் திறமையை பாராட்டி ,பாடலை இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர். அந்த பாடல்தா ன் விழியே கதை* எழுது. கண்ணீரில் எழுதாதே. மஞ்சள் வானம் . தென்றல் சாட்சி.,உனக்காகவே நான் வாழ்கிறேன் .* இந்த பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் அந்த காலத்தில் பிரபலமாகி , படம் வெள்ளிவிழாவை தாண்டி ஓடி, வசூலில் அந்த ஆண்டில் சாதனை புரிந்தது .


எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு , கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு*ஏற்பட்டு பிரிந்திருந்தாலும், அவரது புலமை, திறமைகளை பாராட்டி அவரை அரசவை கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் .**


நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசனின் பாடல்களாக நாடோடி படத்தில் அன்றொரு*நாள் இதே*நிலவில்*, உரிமைக்குரல் படத்தில்*விழியே கதை எழுது*பெரிய இடத்து பெண் படத்தில்*அவனுக்கென்ன தூங்கிவிட்டான்*பாடல்கள்*ஒளிபரப்பப்பட்டன .

fidowag
14th May 2020, 08:43 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவி. தகவல்கள்*தொகுப்பாளர் திரு.துரை பாரதி*
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று (10/05/20) வின் டிவியில் பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் என்ற நிகழ்ச்சியை திரு.துரை பாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார் .

இன்று அன்னையர் தினம் . உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள் . நேயர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் .உலக சினிமா சரித்திரத்தில் தன் பெற்ற தாய்க்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தவிர* வேறு எந்த நடிகராவது எம்.ஜி.ஆர். அளவிற்கு* தாயின் சிறப்புகளை வெளிப்படுத்தி நடித்திருப்பாரா என்பது மிக பெரிய கேள்விக்குறி .ஏனென்றால் எம்.ஜி.ஆர். தன் தாயை தான் தெய்வமாக வணங்கி வந்தார் .* வீட்டை விட்டு புறப்படும்போது வெளியே உள்ள தாயின் சிறிய சமாதியில் சில நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டு செல்வது வழக்கம் .* தாயின் பெருமைகளை , சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வகையில், தனது திரைப்படங்களில் தாய்க்கு பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன் , தெய்வத்தாய் , தாயின் மடியில் , தாய்க்கு தலை மகன் ,குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்கிற தலைப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து பெரும் புகழ் பெற்றார் .ஒவ்வொரு கால கட்டத்திலும் , சில முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு, தன் தாயின் படத்தின் முன்னால் நின்று தியானம் செய்து தான்* முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் .* பொதுவாக* இந்துக்கள் அனைவரும் ராமர் துணை, பெருமாள் துணை, முருகன் துணை என்று தான்*செயல்களை ஆரம்பிப்பார்கள் எம்.ஜி.ஆர். எப்போதும் தாயே துணை என்று எழுதித்தான் ஆரம்பிப்பார் . *


சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு வீட்டை எம்.ஜி.ஆர். வாங்கி தாய் வீடு என பெயரிட்டார் . 1962 வரை அந்த வீட்டில் தங்கி*இருந்தார் என்று சொல்லப்படுகிறது* இந்த வீட்டில்*தன் தாயாரை*கொண்டு வந்து ஒரு நாளாவது*அமர்த்தி அழகு பார்க்கும்* முன்பு அவரது தாயார் இறந்துவிட்டார் என்பது சோக செய்தி ..அதன்பின் ராமாவரம் தோட்டத்திற்கு குடிபுகுந்தார் .தாய் வீட்டில் அவரது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குடும்பம் வசித்து வந்தது .* எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி பெயரில் அவ்வை சண்முகம் சாலையில் வாங்கிய வீடுதான் அண்ணா தி.மு.க. வின் தலைமை நிலையமாக திகழ்கிறது . எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக்கு ஜானகி அம்மையார் தானமாக அளித்துவிட்டார் .**


1972ல் எம்.ஜி.ஆர். தி. மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவுடன் தமிழகமே கொந்தளிக்கிறது .* *தொண்டர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு படையெடுத்து எம்.ஜி.ஆரை கட்சியை துவக்குவதற்கு*நிர்பந்தப்படுத்துகிறார்கள். சிலர் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சியை துவக்குவதாக அறிவிக்கிறார்கள் . சிலர் தாமரை சின்னத்தில் கொடி ஏற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். பொறுமை காத்து , அனைவரையும் கலந்து ஆலோசிக்கிறார் . பின்னர் தன் தாயின் படத்தின் முன்னால் வணங்கி , தன்னுடன் கலந்து ஆலோசித்த தலைவர்களின் யோசனைப்படியும், தொண்டர்கள் பேராதரவையும் மனதில் வைத்து ,கட்சியை தொடங்குவதற்கு அக்டோபர்** *17 , என்ற நாளை குறித்து அறிவித்தார் .


எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும் முன்பு , ஒரிசாவில் இருந்து பிஜு பட்நாயக்*சமரச பேச்சு வார்த்தைக்கு எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் அழைத்து பேசினார் .* மாநில விருந்தினர் விடுதியில்தான் பேச்சு வார்த்தை நடந்தது .கட்சிகள் இணைவதற்கு இருவரும் இறுதியில் சம்மதம் தெரிவித்தனர் .அப்போதைய தலைவர்கள் திரு.ராசாராம், மாதவன்*போன்றவர்கள் உடனிருந்தனர் .கட்சி தலைவராக கருணாநிதியும், முதல்வராக எம்.ஜி.ஆரும் செயல்படுவதாக உடன்பாடு ஏற்பட்டது .* இருவர் தரப்பிலும் சில நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது .செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று சில காரணங்கள் கூறபட்டது .பத்திரிகையாளர்கள் சந்திப்பும் ஏற்பாடானது . ஆனால் என்ன காரணமோ*இறுதி சுற்றில்*உடன்பாடு எட்டப்படவில்லை ஏனென்றால் இறுதி நாளன்று*அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த போது எம்.ஜி.ஆர். சந்திப்பிற்கு வரவில்லை .* பின்னர் அன்றைய டி.ஜி.பி.மோகன்தாஸ் மூலம் , எம்.ஜி.ஆர். இரு கட்சிகளும் இணைவதற்கு என் தாயின்*சம்மதம் கிடைக்கவில்லை. ஆகவே இணைவதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்ததாக செய்திகள் வெளியாகின .* சில*நாட்கள்*கழித்து , தலைவர்களின் ஆலோசனைப்படியும், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்கவும் தனி கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.* இதில் இருந்து தன் தாயை எந்தளவு** மதித்து, அவரை*தெய்வமாக* கருதி,அவருடைய முடிவுகளை செயல்படுத்தி வந்தார்*எம்.ஜி.ஆர்.*என்பதற்கு இது ஒரு**சான்று*. என்று டி.ஜி.பி. மோகன்தாஸ் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார் .


எனக்கு ஒரு திருக்குறள்*நினைவுக்கு வருகிறது . அதன்படி, எம்.ஜி.ஆர். தன்*வாழ்நாளில்*குடிப்பதையோ, அல்லது குடிகாரர்களை சந்திப்பதையோ*அடியோடு வெறுத்தார் .எம்.ஜி.ஆர். நாடங்களில் நடித்து வந்த*போது மாணவ*பருவத்தை கடந்தபோது, அவர் குரலில்*சில மாற்றங்கள் தென்பட்டன .அப்போது நாடகங்களில் நடிக்கும்போது பாடவும் தெரிந்திருக்க வேண்டும் .ஆகவே தன் தாயாரிடம் குரல் உடைந்து விட்டால்*பாடவே*முடியாதா, நான் வாழவே முடியாதா* என்றெல்லாம் கேட்டுள்ளார் .அப்போது அவரது*மாமா ஒருவரின் ஆலோசனைப்படி, கள்* வாங்கி குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு ஒரு நாள் அண்ணன் சக்கரபாணியின்*மனைவி கர்ப்பிணியாக வீட்டில் இருந்தபோது மது பாட்டில் ஒன்றை எம்.ஜி.ஆர். கண்டார் . அது பற்றி தன் தாயாரிடம் கேட்ட போது* பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்கு இதை*கொஞ்சம்*பயன்படுத்துவார்கள் என்று எவ்வளவோ சமாதானம்*சொல்லியும்*அந்த மதுவை*அங்கிருந்து விலக்கினால் தான் , நான் வீட்டுக்குள் வருவேன்*என்று பிடிவாதம் பிடித்தாராம் .*



எம்.ஜி.ஆரின் தாயார் பற்றி சிவாஜி கணேசன் கூறியபோது , நானும்*, அண்ணன் எம்.ஜி.ஆரும் பலமுறை*அவர் வீட்டில்*அவரின் தாயார் பரிமாற உணவு உண்டிருக்கிறோம் . வால் டாக்ஸ் சாலை அருகில் அப்போது அண்ணன் எம்.ஜி.ஆரின் குடும்பம் தங்கியிருந்தது . சில சமயம்*நாடக*கம்பெனியில் இருந்து எம்.ஜி.ஆர். அண்ணன் முன்னதாகவே*வீடு திரும்பி இருந்தாலும், அவர் தன் தாயாரிடம் பசிக்குது, உணவு பரிமாறுங்கள் என்று கூறினாலும், கொஞ்சம் பொறு, தம்பி கணேசன் வரட்டும். என்று கூறி இருவருக்கும் சேர்ந்தாற்போல்* உணவு பரிமாறுவது வழக்கம் .* எம்.ஜி.ஆரும் தன்* தாயார் சொல்லைக் கேட்டு பொறுத்திருப்பார் .எம்.ஜி.ஆரும் தம்பி கணேசன் வீட்டிற்கு சென்று*திருமதி கமலா*அவர்கள் பரிமாற இருவரும் சேர்ந்து*பலமுறை* உணவு உண்டிருக்கிறார்கள்* இது பற்றிய புகைப்படங்களும் அதிக அளவில் வெளியாகி உள்ளன . அப்போது பல சம்பவங்கள் குறித்து இருவரும் வாதித்திருக்கிறார்கள் .அது பற்றியும்*புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .எம்.ஜி.ஆர். அவர்கள் தம்பி கணேசனின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் .திருமதி ராஜாமணி அம்மையார் மறைந்த பிறகு , அவரின் சிலையை*திறந்து வைத்தது*எம்.ஜி.ஆர்.தான் .


சந்தான பாரதி*என்பவரின் தந்தையார் ராஜாமணி*பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் பாசமலர் மற்றும் சில படங்களை தயாரித்திருந்தார் . பாசமலர்*வெற்றிகரமாக ஓடிய படம். அதற்கு பின் வெளியான ஒரு படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல்*நஷ்டம் அடைந்ததால்*எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார் . எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, அவரை உபசரித்து என்ன விஷயம் வெகு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது , நீங்கள் எங்கள் பேனருக்கு*ஒரு படம் நடித்து தரவேண்டும்*என்ற போது, தம்பி சிவாஜி கணேசன் மீதும், அவரின் தாயார் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு .எங்கள் இருவருடனான நட்பு பலகாலம்*நீடிக்க வேண்டும்,மேலும் ,எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே,,அதனால் என்ன நடித்து விடலாம். ஆனால் உங்கள் கம்பெனி பெயர் மாற்ற வேண்டி இருக்குமே என்றாராம். பதிலுக்கு*அவர் பேனர் பெயர் மாற்ற முடியாது என்றார் .எவ்வளவு மரியாதை, மதிப்பு இருந்தால் நீங்கள் தம்பி கணேசனின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் பெயரில் கம்பெனி ஆரம்பித்து படம் தயாரித்து இருப்பீர்கள் . ஒரு படம் லாபம் ஈட்டியது . ஒரு படம் நஷ்டம் என்றதும்தம்பி கணேசனை விட்டுவிட்டு* என்னிடம் வருகிறீர்கள் .**அவரது அனுமதி இல்லாமல் அவரது தாயார் பேனரில்*நான் படம் நடிப்பது இயலாத காரியம்*ஒரு* வேளை நான் நடிப்பதாக முடிவு எடுத்தாலும்,அவர் எவ்வளவு கஷ்டப்படுவார் என்று எனக்குதான் தெரியும் . அவர் உள்ளம் என்ன பாடுபடும்*என்னால் முடியாது*.அந்த தவறை நான் செய்ய மாட்டேன் . .* மீண்டும் சந்தானபாரதியின் தந்தையார் வற்புறுத்திய*போது நீங்கள் என்னை கட்டாயப்படுத்துவதாக இருந்தால், என் தம்பி சிவாஜி கணேசனிடம் ஒரு சிபாரிசு* அல்லது பரிந்துரை கடிதம் வாங்கி வாருங்கள். அதாவது தகுந்த காரணம் குறிப்பிட்டு, என்னால் நடிக்க இயலவில்லை . அதனால்*அண்ணன் நடித்து கொடுப்பதற்கு எனக்கு*ஆட்*சேபனை* இல்லை என்று எழுதி கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அவர்கள் எம்.ஜி.ஆரை* தொந்தரவு செய்யவில்லை . இதில் இருந்து எம்.ஜி.ஆர். தம்பி கணேசனிடமும், அவரின் தாயார் ராஜாமணி அம்மையார் மீதும் எவ்வளவு மரியாதை, மதிப்பு வைத்திருந்தார் என்பதை*நாம் அறிந்து கொள்ளலாம் .*


நிகழ்ச்சியில் கீழ்கண்ட படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன :
1. தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
2.இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் -நீதிக்கு தலை வணங்கு*
3.வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் -தேடி வந்த மாப்பிள்ளை*
4.தாயின் மடியில் தலை வைத்திருந்தால் -தாயின் மடியில்*
5.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
6.நான் யார் ? நான் யார் ?நீ யார் ?- குடியிருந்த கோயில்*
7.அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண்*