PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22



Pages : 1 2 3 [4] 5

sivaa
31st December 2020, 09:24 AM
பெயருக்கு கொடுக்காமல் தேவை அறிந்து கொடை கொடுத்த
நிஜவள்ளல் கர்ண பிரபு வள்ளல் சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே.


(நன்றி மதி ஒளி 1969)

சிவாஜி கணேசன் ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை!

ஆந்திர வெள்ள சேதத்திற்கு உதவி!

ஆந்திராவில் வெள்ள சேதத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரூபாய் 10,000 ஆயிரம் நன்கொடை அளித்திருக்கிறார்.

ஆந்திராவில் பேய் மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டதால்
ஆயிரம் பேர் வரை செத்தும்,கோடிக் கணக்கான ரூபாய்
மதிப்புள்ள பயிர்கள் நாசமானதும் தெரிந்ததே!

இந்த வெள்ள சேதத்திற்கு ஆந்திர முதல் மந்திரி
நிவாரண நிதி திரட்டுகிறார்.
அதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரூ 10,000 நன்கொடை அளித்திருக்கிறார்.

இந்த கொடைக்கான செக் ஆந்திர முதல் மந்திரி
பிரம்மானந்த ரெட்டியின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

(இமேஜில் உள்ளவை)

நன்றி மதி ஒளி 1969.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/134644060_466285757703758_2456300010906708558_n.pn g?_nc_cat=102&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=rTuSR5MHIDYAX-9vbyl&_nc_oc=AQnDVj_mX_0oxqDuRdcch2wXiFiUAse1GsZ0SUCXyaQ glO_JyCS50v-h5oHC-DE89Ko&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=cf28a7f7c635a31aae136bc9f2e9d07d&oe=60121728

sivaa
1st January 2021, 09:56 AM
மய்யம் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புது வருடவாழ்த்துக்கள்.
2021ஆம் ஆண்டு அனைவருக்கும் இனியதாக அமைந்திட வாழ்த்துக்கள்.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135048569_3661379767275312_8971895873027989398_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=x0mRGrMbnfsAX_zQYvY&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=697130b04e2b60312b11d6f923c8a728&oe=60128212

sivaa
1st January 2021, 09:57 AM
2021 புத்தாண்டு முன்னிட்டு நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியங்கள்!!

சரஸ்வதி சபதம்- 2pm பாலிமர் சேனலில்,

சிவந்த மண் - 4 pm சன் லைப் சேனலில்,

உயர்ந்த மனிதன் - 7 pm ஜீ திரை சேனலில்,

கௌரவம் - 10 pm ஜெயா மூவி சேனலில்,

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133506325_3674753022641561_6300572810318142582_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=foSJTfO2DjQAX9NnseC&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=37b88bb03c546d151336e56c46422128&oe=60161A44

Thanks Sekar Parasuram

sivaa
1st January 2021, 10:01 AM
அன்பளிப்பு 1/01/1969 .இன்று 51 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133792083_2817323125149164_7107250755713281837_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=m82wTeGJFtoAX-XrQ5s&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=cb6c78a56238a77753a8541e33ff187c&oe=60125545


Thanks Vcg Thiruppathi

sivaa
1st January 2021, 11:04 PM
இன்று மதுரை சக்தி திரையரங்குக்கு வருகை தந்த பிரஸ்டிஜ் பத்மனாப ஐயர்--- சாவித்திரி மாமிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது..

அனைவரும் வாருங்கள் ஐயனை தரிசனம் செய்யுங்கள்...

புத்தாண்டில் மக்களைனைவரும் நல்வாழ்வுக்கு ஆசி பெறுங்கள்.....
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/133224494_1361261920888549_5243270091948614874_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=Nvg1sxvHYgUAX-ocG7r&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=c822377546a01f48a1426045764580c8&oe=6015110A

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134731868_1361261960888545_3804734133060544463_n.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=Z_eh9KoaM80AX9l7Fof&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=526918e00d8af59e43d14501561ce393&oe=60133C2D
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133515480_1361262114221863_3540650591763077716_n.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=-kPmYbvc_lUAX-ppPxk&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=fd35516574601298b36ac63ebad69ea4&oe=6013B939

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/134644902_1361262274221847_4413264747363060365_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=swUxW3QjJQoAX9WNAnR&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=ce9d25486b33eb5e5c41eeed18432dc4&oe=60148B5A

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133802078_1361262617555146_1522519042907510623_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=lsUUB3l3aNoAX9KuB87&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=bd47a24acd41be97cd292f2ab0ecb22e&oe=601630AB

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133607645_1361262837555124_8329801572271229386_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=skdXpCkOF-EAX_gR4ks&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=525ee53c4c9241f710b7ddf83a025403&oe=6015B1E3



Thanks Lakshmanan Lakshmanan

sivaa
2nd January 2021, 09:01 AM
திருச்சி LA சினிமா AlC திரை அரங்கத்தில் வியட்நாம் விடுதிரையிட அனுமதி வழங்கியLA சினிமா பங்குதாரர் உயர்திரு பிரான்சிஸ் அவர் களுக்கும MAசிட்பண்ட்ஸ் அருணாசலம் அவர்களுக்கும்இந்த படத்தை டிஜிட்டல் தயாரித்த சென்னை சுப்பு. மற்றும் மதுரை திருச்சி விநியோகஸ்தர் மதுரை பாண்டி அவர்களுக்கும் தில்லைநகர் பாஸ்கர் புத்தூர் ராமச்சந்திரன் ஜெயபிரகாஷ் பிம நகர் RC பிரபு R C ராஜா R C ராமன் பிம ந கா நாரயாண சாமி ஆண்டர்ர் வீதி வெங்கட்ராமன் சுதர்சன் பிலிம்ஸ் கல்யாணம் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134964646_1092422227864393_8825751738390060595_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=HxsXq-w0OGoAX9n-XnX&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=d821ba8de4f10dc59e268d81c485d8f8&oe=6016BD1C

Thanks Sivaji Annadurai Sivaji Annadurai

sivaa
2nd January 2021, 09:21 AM
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/133737877_10214291011828931_4899217478781396750_o. jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=cLfrVG5leAoAX-34EQj&_nc_ht=scontent-ort2-2.xx&oh=fc260703917cee535622c904a4c38582&oe=60153988

sivaa
3rd January 2021, 06:20 AM
1978 களில் பைலட் பிரேம்நாத் இலங்கையில் படப்பிடிப்பு
நடைபெற்ற வேளைகளில் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்பு ,
படக்கலைஞர்கள் பற்றிய செய்திகள்,
மற்றும் இலங்கை ரசிகர்களின் மகிழ்ச்சி நிகழ்வுகள் போன்றவற்ரை
தமிழ் பத்திரிகைகளில் வெளிவரவிடாமல்
சிவாஜி கணேசனை கனவிலும் நினைவிலும்
எதிரியாக பார்க்கும் கும்பல் தமிழ் நாட்டில், பத்திரிகைகளை
விலைக்கு வாங்கி தடுத்துவிட்டன. அப்படி பார்க்கமுடியாமல்போன
பைலட் பிரேம்நாத் படக்குழுவினர் சம்மந்தமான
இலங்கை பத்திரிகைகளில் வெளிவந்த
ஒரு சில செய்திகள் நம் தமிழ் நாட்டு நண்பர்கள் பார்வைக்காக.
.................................................. ...................................
நன்றி மித்திரன் .

பைலட் பிரேம்நாத் கலைக்குழுவினரைப்பற்றி ஒரு விமர்சனக் கண்ணோட்டம்!
திரைக்குப்பின் நடந்த சம்பவக் கோர்வை!

பைலட் பிரேம்நாத் கிசு.. கிசு...


சிவாஜிக்கு சபாஷ்!

பைலட் பிரேம்நாத் படக் குழுவிலேயே ரசிகர்களால்
மிகவும் கவரப்பட்டவர்கள் சிவாஜி கணேசன், மனோரமா,
ஜெய்கணேஷ், சத்தியப்பிரியா, பிரேமானந்த்!

பார்க்க வந்த பார்வையாளர்கள் அனைவருடனும்
மகிழ்வோடு சிரித்துப் பழகியவர்கள் இவர்கள்தான்.

சிவாஜியை காண பல கெடுபிடிகள் இருந்தாலும்,
அவரை நேரில் கண்டவர்களுக்கு அவர் தந்த வரவேற்பு மறக்கவேமுடியாது.
மிகவும் அடக்கத்துடன் ,மகிழ்வுடன் உள்ளம் திறந்து உரையாடினார்.

இரவில் கதவைத்தட்டிய ரசிகர்களிடம் தன் சினத்தை காட்டாது ஜெய்கணேஷ் உரையாடினார்.
என்னோடு படம் பிடித்துக்கொள்ள வேண்டுமா? வாங்க...வாங்க... என்று சொல்லி
சளைக்காமல் போஸ் தந்தவர் ஜெய்கணேஷ்.! நகைச்சுவையாகப்பேசி
அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பிரேமானந்தை சுற்றி இளம் ரசிகைகள் கூட்டம்! கமலஹாசனுக்கு
இத்தனை கூட்டம் இருக்குமோ என்னவோ
பிரேமானந்துக்கு இருந்தது!

நான் நீ என்று அவருக்கு ஏராளமான பரிசுகளை
ரசிகர்கள் அளித்தார்கள்.

மனோரமா ஒவ்வொருவரையும் குசலம் விசாரித்தார்.
மிகவும் சிம்பிளாக பழகினார். சத்தியப்பிரியா பத்திரிகையாளர்களுடன்
மட்டுமன்றி தன்னை காணவந்தவர்களிடம் எல்லாம்
கல கலப்பாக பழகினார்.

ஶ்ரீதேவி முன்னேறி வரும் இளம் நடிகை!
இவரை காணப் போனவர்கள் எல்லோருக்குமே ஏமாற்றம்தான்.
யாருடனும் முகம் கொடுத்துப் பழகவில்லை.

மூன்று முடிச்சு படத்தை பார்த்துவிட்டு ,
இவரைக்காணப்போனவர்களுக்கு பெரும் ஏமாற்றம்.
ரூமை விட்டு தலை காட்டவே மறுக்கிறார்.
பத்திரிகையாளர்களிம் பேச நடுங்குகிறார்.
ஆட்டோகிராப் போடுவது இவருக்கு ஒரு அலர்ஜி!

பல படங்களில் நடித்துவரும் ஶ்ரீதேவி இப்படி இருக்கலாமா?
ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்தால் மட்டும் போதுமா?
அவரிடம் இருந்து பழகக்கற்கவேண்டாமா?

(இமேஜில் உள்ளவை)

நன்றி மித்திரன்

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135377328_388643955564058_1750633701756832488_n.pn g?_nc_cat=106&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=o3sues0yUlMAX-JlZ5H&_nc_ht=scontent-ort2-2.xx&oh=8c0b589c959cb2eea1bb72b00c5753d0&oe=6014D15C

sivaa
3rd January 2021, 08:20 PM
வியட்நாம் வீடு திரைப்படம் பிளக்ஸ் பேனர்கள் வேலூர், காட்பாடி ஸ்ரீவிஷ்னு திரையரங்க வாசலில் காட்பாடி சிவாஜி மன்றத்தினரால் வைக்கப்பட்டது.

காட்பாடி ஸ்ரீவிஷ்னு திரையங்க வாசலில் 01.01. 2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பிரிஷ்டீஜ் பத்தமநாபரையும் வரவேற்ற தருணம்.

வேலூர் மாவட்ட சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு ரசிகர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டார்கள்.

.விழா ஏற்பாடு செய்தவர்கள்.
திரு.V.சிவாஜிரவி. மாவட்ட தலைவர்.
வேலூர் சிவாஜி மன்றம்.

திரு.D.சிவாஜிரவி. நகரத்தலைவர். காட்பாடி சிவாஜி மன்றம்

விழாவில் சென்னை. திரு.M.L.கான், நேஷ்னல் பிச்சர்ஸ், திரு.R.கார்த்திகேயன்,
வேலூர் சிவாஜி மன்ற மாவட்ட செயலாளர் திரு.லோகநாதன், பிரபு மன்ற மாவட்ட தலைவர்.திரு.அன்பழகன், திரு.வீரமணி, திரு.குமார், ஆம்பூர். திரு. சிவாஜிபழனி. குடியாத்தம் திரு.சங்கர், திருபாலு, ராணிப்பேட்டை திரு.ஆனந்தன் BHEL,
பனப்பாக்கம் திரு.எல்லப்பன், திரு.ராமன். ஆற்காடு திரு.பாபு, வேலூர்.திரு.C.சிவாஜி செல்வம், திரு.சிவாஜிஜெகதீசன், திரு.ஏழுமலை திரு.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ச.அமரன்.வேலூர்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/135472176_1059257324540995_7028838981913381991_n.p ng?_nc_cat=101&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=31inLTLIZLMAX-eWVom&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=9f7a2ec72d4fa1aa93a9958a631c5477&oe=6018E41E

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/136104803_401049377847275_3611856027006501283_n.pn g?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=gyHWfmX2CdIAX-Bg15J&_nc_ht=scontent-ort2-2.xx&oh=d2529f79262806ff2377547fa87685fd&oe=6017DEDD


https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135479412_447742946249368_6842639409067149536_n.pn g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=iuU2K9s-S54AX9pvyw1&_nc_ht=scontent-ort2-2.xx&oh=08d490b39ccd7888129e8c610de5d958&oe=60166DC7

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/135317696_509356303381738_1754096055962458331_n.pn g?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=i2jNJVbzofAAX8-0-1N&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6317fe8817ce1c36e5f2136d0ce41067&oe=60168064

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135485783_2594510130849047_8742246087282225605_n.p ng?_nc_cat=110&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=Hvwb_cdmltwAX8d_u_4&_nc_ht=scontent-ort2-2.xx&oh=64b5db2cf89b7ec653cd257b87cf6151&oe=6016B9BF


Thanks Amaran Amaran

sivaa
4th January 2021, 01:37 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/134959176_416198606196056_3299863230225961819_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=itk1SIlyzrUAX-vLPRh&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b7e800cb982e742d8f8e50deed7b188a&oe=60175F03

Russelldwp
5th January 2021, 08:19 PM
தலை நிமிர்ந்து சொல்வோம் சிங்கத்தமிழன் சிவாஜி ரசிகன் என்று --ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பான எங்கள் எதிரி நடிகரின் நடிப்பில் கலர் படமான அன்பே வா திருச்சி எல்.ஏ சினிமாவில் முதல் காட்சியிலேயே 7 நபர் வந்ததால் அசிங்கப்பட்டு அந்த காட்சியோடு தூக்கி எறியப்பட்ட அவலம் --கட்சி போஸ்ட்டர்ல் தான் ஸ்டாம்ப் ஸைசுக்கு தள்ளப்பட்ட இவர் படத்துக்கு எனோ ரூபாய் 110 கொடுக்க ஒரு ரசிகருக்கு கூட திராணி இல்லை --எங்கள் தெய்வத்தின் வியட்நாம் வீடு கருப்பு வெள்ளை படம் தான் முழுக்க முழுக்க குடும்ப படம் போஸ்டர் நகரில் எங்கும் இல்லை --ஆனாலும் வெள்ளி அன்று மாலை காட்சி ஹவுஸ் புல் --ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் --ஞாயிறு மாலை காட்சியில் திரையரங்கு நிர்வாகத்தினர் பகிர்ந்து கொண்டது mgr படங்கள் முருகன் பேலஸ் கெயிட்டி முதலிய மூன்றாம் தர அரங்குகளில் தான் அவர் ரசிகர்களே சென்று பார்க்கிறார்கள் மற்றபடி ஏசி அரங்குகளில் இவர் படங்களை பார்ப்பதை மக்களும் அவர் ரசிகர்களும் விரும்பவில்லை என்றார் குறிப்பு --சென்ற வருடம் வெளியான வசந்த மாளிகை சோனா திரையில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ் புல் தற்போது வியட்நாம் வீடு வெள்ளி மாலை மற்றும் ஞாயிறு மாலை ஹவுஸ் புல் எந்த நிலையிலும் எங்கள் சிவாஜி அவர்களோடு திரை பயணம் செய்த போதும் இறந்த பின்பு சரி எங்களிடம் தோல்வி ஒன்றே எதிரி நடிகருக்கு மக்கள் கொடுக்கிறார்கள்

sivaa
5th January 2021, 10:30 PM
Dindigul Ganesh sunday evening Vietnam veedu movie
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/134993391_2850748481874629_5645548987561198581_n.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=l-DDAGC6QK0AX_dusCK&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=de2ac5a933aad32095008eb8c8696032&oe=601A9ECD

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/135584979_2850748615207949_6922119738288045477_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=O-ZdOZ2QELMAX_zCQvD&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=8a0a0bc055c9626da504b62d3eaa0518&oe=601BED86

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135005324_2850748681874609_7178077249497781379_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=D5nWNfcVJeoAX-pnTCH&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=664b908a581df9cd47adcf5e87746b64&oe=601990EC



Thanks Venkatesh Waran

sivaa
5th January 2021, 10:31 PM
பொன்னியின் செல்வன் தொடரில் குந்தவை,நந்தினி மோதலை கல்கி அழகாய் விவரித்திருந்தார் இரண்டாம் பாகத்தில்...
தஞ்சை அரண்மனையில் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலை இப்படி விவரித்திருந்தார் கல்கி...
இருவரும்மே அந்த போராட்டங்களில் கடும் வேதனையை அனுபவித்தார்கள்..
இரு பெண் புலிகள் போல் ஒருவரை ஒருவர் காய படுத்தி கொண்டார்கள்.
ஆனால் அதிலும் ஒரு உற்சாக வெறி அடைந்தார்கள் என்று....

அது போல தான் இரு திலகங்களின் ரசிகர்களும் மல்லு கட்டி கொள்கிறார்கள்.
வேதனை அடைக்கிறார்கள்.இருந்தும் ஒரு உற்சாக வெறியும் அவர்கள் பெறுகிறார்கள்...

மீண்டும் ஒரு பூதத்தை கிளப்பி விட்டிருந்தார்கள் சில தினங்களுக்கு முன்னர்...
கொடுத்து சிவந்த கரங்கள் கர்ணனுக்கா?
வேட்டைக்காரனுக்கா? என்று...
இந்த விவாதத்தில் நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்க பட்டது என்பதே மெய்..

நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு நாடகம் போடுவார் நாகேஷ்.
மாணவர் தலைவர்,நாரதர்,சாவித்திரி என்று மூன்று வேடங்கள் அவருக்கு..
ராமனை போல் ஒருவர் உண்டா உங்களிடம் என்பார் நாரத நாகேஷ்...
ராமன் எத்தனை ராமன் உண்டோ அத்தனை ராமனும் உண்டு என்பார் மாணவர் நாகேஷ்.

அடுத்து நாரதர் ராமனுக்கு பிறகு இன்னொரு இதிகாச பாத்திரமான கர்ணனை குறிப்பிடாமல் பறம்புமலை வள்ளல் பாரி போல் உண்டா? என்பார்.
மாணவர் உடனே பராங்கிமலை வள்ளல் உண்டு இங்கு உண்டு என்பார்...
நான் கூட நம்பி கைத்தட்டி மகிழ்ந்திருக்கிறேன் அந்த காட்சிக்கு...
இப்படியாக வள்ளல் என்றால் mgr தான் என்று ஒரு பிம்பம் வலுவாக கட்டமைக்க பட்டு வந்தது அன்று தொட்டு....
நடிகர் திலகம் இந்த வள்ளல் பட்டம் என்கிற மணிமுடிக்கு உரிமை கொண்டாட முனைந்ததே இல்லை,அதற்கான தகுதி தனக்கு இருந்தும்.. தனக்கு மட்டுமே இருந்தும்...

நான் இப்படி சொல்கிறேன்,பாருங்களேன் சரியா என்று?
ஒரு உயர்ந்த மனிதர் நிலம் வாங்கி கோயில் எழுப்பி, பிரகாரம், கோபுரம்,கலசம் அமைத்து நித்திய பூஜைகள் நடத்த நிவந்தமும் விட்டு....தன்னுடைய பெயரை மறைத்து கொள்கிறார்...

இன்னொரு விளம்பர பிரியர் அதே கோயிலில் மார்க்கழி மாதத்தில் பொங்கல்,சுண்டல் பிரசாத உபயம் செய்கிறார்.....உபயம் இன்னார் என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு...
கோயிலில் இருண்ட பகுதிகளில் tube light அமைக்கிறார்.அத்தனையிலும் அடியேன் தாசன் என்று தான் பெயரை பொறித்து வைக்கிறார்..

மக்களே!வள்ளல் என்று யாரை சொல்வீர்?
பொங்கல் சுண்டலை விழுங்கி விட்டு பிரசாத விநியோகஸ்தரை தானே வள்ளல் என்று வாழ்த்த தோன்றும்!

போகட்டும் விடுங்கள்!
நடிகர் திலகத்தின் வள்ளல் தன்மைக்கு சில சம்பவங்களை சொல்கிறேன்.....
பார்த்து பாராட்டுங்கள்.பகிருங்கள்...

1952 ஆம் ஆண்டு,ஜூனியர் விம்பிள்டனில் கலந்து கொள்ள திரு.R.கிருஷ்ணன் லண்டன் செல்ல வேண்டும்.அவரது தந்தை ராமநாதன் டென்னிஸ் விளையாடும் தன் நண்பர்கள் சிலரிடம் உதவி கேட்கிறார்.
அங்கே திரு.T.K.சண்முகம் டென்னிஸ் விளையாடுவதை வேடிக்கை பார்க்க வந்திருந்த கணேசன் என்கிற புது நடிகர்,பராசக்தி படத்தில் மாத சம்பளத்தில் நடிப்பவர் அவர்,தன்னுடைய ஒரு மாத சம்பளமான,250 ரூபாயையை கொடுக்கிறார்.R.ராமநாதன் திகைத்து மகிழ்ந்து அந்த கணேசனை தழுவி கொள்கிறார்...

1961 ஆம் ஆண்டு...அந்த கணேசன் இப்போது சிவாஜி கணேசன் என்று புகழ் பெற்று விட்டார்.
மராத்தியத்தில் koyna dam உடைந்து பெரும் சேதம்.
அணை உடனே சீரமைக்க பட வேண்டும்.
முதல்வர் Y.B.சவாண் தேசத்திற்கே வேண்டுகோள் வைக்கிறார் உருக்கமுடன்..
தெற்கே தமிழ் நாட்டில் அந்த சிவாஜி கணேசன் 11,00,000 ரூபாயை உடனே நிதியாக கொடுக்கிறார்.
1961 ஆம் ஆண்டில்..

அன்று 1951 ஆம் ஆண்டில் R.கிருஷ்ணனுக்கு கொடுத்தது போல ஒரு மாத ஊதியம் அல்ல இந்த 11,00,000 ரூபாய்.
ஏறத்தாழ பன்னிரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த தொகை ஊதியமாக கிடைக்கும்.அப்படி பன்னிரண்டு படங்களில் நடிக்க வேறு நடிகருக்கோ எனில் மூன்று,நான்கு ஆண்டுகள் ஆகும்.
நம் நடிகர் திலகத்திற்கே கூட 18 மாதங்களாவது ஆகும்..
ஒரு நொடியில் அறிவித்து கொடுத்தார் சிவாஜி அவர்கள்..அந்த 11,00,000ரூபாயை..
பம்பாயில் சிவாஜி பார்க்,இன்னும் சில இடங்களில் அமைந்துள்ள சத்திரபதி சிவாஜியின் சிலைகளுக்கு பெரும் நிதி கொடுத்திருக்கிறார் நம் சிவாஜி கணேசன்.
மராட்டியத்தின் மீது ஏன் பாசம்? தன் உடன்பிறவா சகோதரி லதா மங்கேஷ்கர் அந்த மாநிலத்து மகள் என்பதால் பாசம் என்கிறார் சிவாஜி கணேசன்..

இங்கே இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின் போது அமைக்க பட்ட சிலைகளில் வள்ளுவர் சிலைக்கு
பொறுப்பேற்று நிதி கொடுத்தவர் அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவன் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே!
என்று திரையில் பாடி நடித்த நம் திலகமே.

பள்ளியில் தமிழ் பாடத்தில் ஒருபாடல்.
பெரும்பாணாற்று படையில் இருந்து...
வள்ளல் ஒருவரிடம் யானை ஒன்றை பரிசாக பெற்று வந்த பானன் ஒருவன் தான் பெற்று வந்த பரிசு எதுவென குறிப்பால் சொல்ல பானனின் மனைவி அதை யூகிக்கும் பாடல் ஒன்று..

படித்திருப்பீர்கள் நண்பர்கள் யாவரும்...
யானையை குறிக்கும் ஒவ்வொரு சொல்லாக பானன் சொல்ல,அந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளை பானனின் மனைவி தவறாக புரிந்து கொண்டு சொல்ல...
மாதங்கம் என்பான்.அவள் மிகுந்த பொன் என்பாள்.
இறுதியாக கைமா என்பான் சும்மா கலங்கினாளே என்று முடியும் பாடல்..

வேடிக்கையான பாடல் அது.
ஆனால் வேடிக்கையாகவே பல யானைகளை கொடையாக கொடுத்தவர் நடிகர் திலகம்...
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஒன்று..
திருவானைக்கா அகிலாண்டஸ்வரிக்கு ஒன்று..
இன்னும் சில கோயில்களுக்கு கூட ... மட்டும் அல்ல,அமெரிக்காவில் இந்தியானா பொலிஸ் என்னும் நகரத்து சிறு பிள்ளைகள் மகிழ அங்குள்ள காட்சி சாலை ஒன்றிற்கு ஒரு யானை.....
கணேசன் என்ற தன்னுடைய பெயரால் கொடுத்தாரா,தங்க மலை ரகசியம் படத்தில் யானைகள் வளர்த்த taarzan ஆக நடித்ததால் கொடுத்தாரா?

நடித்த படங்கள் ஏழு தருகிறேன்.வைத்து சிவாஜி வாரம் நடத்தி கொள்ளுங்கள்.
வசூல் ஆனதில் தியேட்டர் வாடகை,கேளிக்கை வரி போக மீதத்தை யுத்த நிதியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்ன வள்ளல் இல்லை நடிகர் திலகம்.
School Master படத்தில் கவுரவ வேடத்தில் நடித்ததற்காக பந்துலு அவர்கள் கொடுத்த 100பவுன் எடையுள்ள தங்க பேனா,மனைவியின் ஏராள ஆபரணங்கள் ஆகியவற்றை யுத்த நிதியாக பிரதமர் சாஸ்திரி அவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தவர் நடிகர் திலகம்.

பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய இரு வல்லரசுகளை சூயஸ் கால்வாய் விவகாரத்தில் கண்களில் விரல் விட்டு ஆட்டிய எகிப்து அதிபர் நாசருக்கு 3.5 லட்சம் ரூபாயில் நினைவு பரிசு அமைத்து கொடுத்தவர் அவர்...
அரசு செய்ய வேண்டிய கடமை அது.
காங்கிரஸ் அரசு செய்ய தவறியது.
கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தை வாங்கி நினைவு சின்னம் அமைத்து அரசிடம் கொடுத்தவர் நம் வீரபாண்டிய கட்ட பொம்மன்.

1967 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனை நடத்த கூட 10,000 ரூபாய் இல்லாமல் நடிகர் திலகத்திடம் வந்து நின்றார் காமராஜர்.
கண்ணீருடன் வந்தவர் களிப்புடன் திரும்பினார்.
காரணம் நடிகர் திலகம் கொடுத்த தொகை மூன்று லட்சம்...

முதலிலேயே நான் சொன்னபடி கோயில் அமைத்து கோபுரம் எழுப்பி கலசம் அமைத்து கூடமுழுக்கு நடத்தியவர் அமைதியாக இருக்க....
மார்க்கழிபஜனையில் சுண்டல் கொடுத்தவர் கொடை வள்ளல் என்றால்....

யாரை எள்ளி நகையாடுவது!

அன்புடன் V.Vino Mohan...


Thanks Vino Mohan

sivaa
6th January 2021, 03:19 AM
சிவாஜி அவர்களின் வியட்நாம் வீடு
மறுவெளியீடு கொண்டாட்டங்கள்.




https://external.fybz2-2.fna.fbcdn.net/safe_image.php?d=AQG52_Rp3gx7b09P&w=500&h=261&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fw3I3W952d2M%2 Fmaxresdefault.jpg&cfs=1&ext=jpg&_nc_cb=1&_nc_hash=AQF5gHgmXd1OgSIt


https://youtu.be/w3I3W952d2M

sivaa
6th January 2021, 04:25 AM
திருப்பூரில் வியட்நாம் வீடு கொண்டாட்டம்!!
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135505870_707675509731233_5271216598449967276_o.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=geKpxY_qNnMAX_6RSRZ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7b0a9b0e1cdee9cf84c3a1592bfffcbe&oe=601B5A24

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134790296_707675573064560_6446487851572068001_o.jp g?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=V_NMt2NQoSoAX8Z9P50&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ce88e0dbd223638255ec6c68da7acd98&oe=601B0E8F

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/133790609_707675843064533_7062923108955816080_o.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=UKDXYSTm9kUAX_3j-pl&_nc_ht=scontent-ort2-1.xx&oh=fa1902646c4ba4dd51c8a649929d7271&oe=60195AC8




Thanks Sivaji Palanikumar

sivaa
6th January 2021, 04:45 AM
திருப்பூரில் வியட்நாம் வீடு கொண்டாட்டம்!!
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135505870_707675509731233_5271216598449967276_o.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=geKpxY_qNnMAX_6RSRZ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7b0a9b0e1cdee9cf84c3a1592bfffcbe&oe=601B5A24

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134790296_707675573064560_6446487851572068001_o.jp g?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=V_NMt2NQoSoAX8Z9P50&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ce88e0dbd223638255ec6c68da7acd98&oe=601B0E8F

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/133790609_707675843064533_7062923108955816080_o.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=UKDXYSTm9kUAX_3j-pl&_nc_ht=scontent-ort2-1.xx&oh=fa1902646c4ba4dd51c8a649929d7271&oe=60195AC8




Thanks Sivaji Palanikumar

sivaa
6th January 2021, 04:49 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/136652510_229420218654523_3433642948808505369_n.jp g?_nc_cat=106&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=cmLU8P8s5SUAX_C6GJS&_nc_ht=scontent-ort2-1.xx&oh=88e6d248ae8a264d99c95122c8d98426&oe=601B473F

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/136339618_750188935907955_3869034148667494936_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=xxw8b8_EVWMAX8hBaMF&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=957f212a5a8ea7428a07cb3ff3401204&oe=601BDB19
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/136147531_397811504616159_3962132730963191944_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=TtDItyrkmloAX8QZ2Mm&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=a0fe09a48e842286d0fd36acd768aa2e&oe=601AF434



Thanks Venkatesh Waran

sivaa
6th January 2021, 04:50 AM
எதற்காக அழுகிறார்கள்?
இதில் என்ன இருக்கு அழ
என என் சிறு வயதில் இந்த படத்தை சகோதரியுடன் பார்த்தபோது கேள்வி வருவதுண்டு.
அதிலும் குறிப்பாக பெண்கள் இருப்பிடத்தில் அமர்ந்து படங்களை பார்ப்பதால்
பல இடங்களில் இருந்து அழுகை சத்தம் வரும்.
பின்னாளில் விபரம் தெரிந்த வயதில் இந்த படத்தை பார்க்கும் போது,
அழுகைக்காக காரணம் தெரிந்தது.
பலமுறை பாத்தாலும் கண்ணீர் வராமல் இருக்காது.https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td9/1.5/16/1f64f.png.
நல்ல கதை வேண்டுமா சிவாஜி படம் பாக்கலாம் என சொல்லும் அளவுக்கு பல்வேறு வகையான கதைகள் இவர் படங்களில் கிடைக்கும்.

திரையில் இவரை தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட காரணத்தாலேயே இந்த கண்ணீர் வருவதுண்டு.

மறுநாள் அக்கம்பக்கத்து வீட்டாரிடமும்
இதை சொல்லி தன் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்வார்கள் பெண்கள்.

தன் ஒவ்வொரு படத்தையும் பெண்களுக்கு
உண்டான அற்புதமான கதைக்கரு கண்டிப்பாக சிவாஜி கணேசன் படத்தில் இருக்கும்.
பல குடும்பங்கள் இவரை இன்றும் கொண்டாட காரணம் இதுவே என்பது என் கருத்து.

நல்ல படங்கள் சிலது சொல்லுங்க
என என் பாட்டியிடம் கேட்டால்,
அதில் முதலில் வருவது இந்த படம் தான்.
பாலும் பழமும்,
படிக்காத மேதை,
பாகப்பிரிவினை,
பார் மகளே பார்,
என பட்டியல் நீளும்.
எதை கொண்டு இவர் பெண்களை தன் பக்கம் திருப்பினார்?
என்று இன்றும் வியப்பது உண்டு.
இன்று டூரிங் டாக்கீஸ் இல்லாததால்
இந்த மாதிரி கதைகளை கொண்ட படங்களை மிகவும் தவறவிடுகிறோம்.
நன்றி

Thanks Siva Sri Kumar

sivaa
9th January 2021, 11:26 AM
நடிகர் திலகம் சிவாஜியின் 100 நாட்களுக்கும் மேலாக ஒடிய அதிகப்படியான திரைப்பட வெற்றிகளை மறைத்து விட்டு எண்ணிக்கையில் குறைந்த அளவிலான வெற்றிகளை பெற்ற பிற நடிகர்களை செய்திகளில் முன்னிறுத்தி வருகிறார்களே ஏன் எனக் கேட்டுவிட்டார் நண்பர் ஒருவர்,

அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட நண்பருக்கு அரசியல் நிகழ்வுகள் கொண்டே விளக்கம் கொடுத்தேன்,

கடந்த 2019 ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தின் 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது தானே,

பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும்
அதிமுக கூட்டணி 1 இடத்திலும் வெற்றி பெற்றதல்லவா,

சட்டசபை இடைத்தேர்தலைப் பார்த்தால்
திமுக 13 இடங்களிலும்
அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன,

எப்படி பார்த்தாலுமே திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது

ஆனால் செய்தி ஊடகங்களைப் பொறுத்த அளவில் அதிமுக பெற்ற வெற்றியை திரும்ப திரும்ப சொல்லி பெரிய வெற்றியை போலக் காட்டினர்

அப்படித்தான் ஊடகங்கள் பலம் நிறைந்தவை,
பொய்யை மெய்யாக்க முடியும்,
மெய்யை பொய்யாக்க முடியும்,

Thanks Sekar Parasuram

sivaa
9th January 2021, 11:32 AM
14/01/2021 பொங்கல் முதல்
மதுரை சென்ட்ரல் மற்றும்
தூத்தக்குடி சத்யா

நடிகர் திலகத்தின்
சிவகாமியின் செல்வன்

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/137234200_242916440560591_6623463666450523181_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=Eqf0YnCyvBgAX_PSVt_&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b784b0b051868d572a9f43adf7dfc621&oe=601E027A

sivaa
10th January 2021, 11:31 AM
தங்கப்பதுமை 10/01/1959 . இன்று 62 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/136423352_2824332407781569_7393063327584065200_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=POoO_z__XwQAX--vMzC&_nc_oc=AQm7xex8W9OXEwGHPvkTmdtcMrjSqd4TwqzGX21oqPx DblHYwbIqevooFmf7dBbCP58&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=45556cd11fac2facffbf795649ba6e68&oe=6021D94A

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/136401666_2824313787783431_4796060789805259006_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=potBqOCs9dAAX_6eSHs&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=3248da2a2e3dc17e138a2759f81fa844&oe=60220EF0



Thanks Vcg Thiruppathi

sivaa
11th January 2021, 06:09 AM
சாதனை 10/01/1986. 34 ஆண்டுகள் நிறைவு.


https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/135778184_2824313351116808_4892131173528256034_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=JxDOqB5h3FgAX_5guhG&_nc_ht=scontent-ort2-2.xx&oh=1e4c31452f914a85cf7e060504ee448a&oe=60205FD2

Thanks Vcg Thiruppathi

Russellxor
12th January 2021, 12:34 AM
எங்கே தேடி அலைவது நல்ல விஷயங்களை பார்க்க! அது தானே மனதை செம்மைபடுத்துகிறது.மனிதன் வாழ்வு தடம் புரளாமல் இருக்க.அங்கே தான் கலைகள் கை கொடுக்கின்றன! கலை என்றவுடன் சுலபமாக்குகிறது சினிமா! சினிமா என்றவுடன் நூறு சதவீதத்திற்கும் மேலே நடிகர்திலகம் சிம்மாசனமாய் வந்து அமர்ந்து விடுகிறார்.
கை நீட்டியவுடன் காசு போடு.அது இயலாதவர்க்கு செய்யும் உதவி.தமிழ் மண்ணில் கால் வைத்த குணசேகரனாய் முதல் படத்திலேயே செய்தார்.அந்த உதவும் குணம் சிவாஜி ரசிகனின் மனதில் படிந்து விட்டது.அதுவே இன்று வரை அன்னை இல்லத்தின் வாசலில் வருடக் கணக்கில் அன்னதானமாய் செய்ய வைத்து விட்டது.அந்த நல்ல விஷயம்தான் கலைஞன் விதைக்க வேண்டும்.சிவாஜியின் மாபெரும் ஆளுமை செய்தது அதுதான்.
தமிழ் மக்கள் பாசக்கார மக்களாம்.குடும்ப உறவுகளை கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..ராஜசேகரனாய் தங்கை மேல் பாசம் காட்டி நடித்தாலும் நடித்தார்.எத்தனையோ அண்ணன்கள் தங்கைகள் மேல் பாசம் பொழிந்து தள்ளி விட்டார்கள்.அது சினிமாவையே ஆட்டிப் படைத்து விட்டதுதானே! நிறைய குடும்பத்தில் இவை நடந்ததுதான்.அவையெல்லாம் மவுனமாக, மறைமுகமாக நடந்த புரட்சிதான் அது.சொந்த பாசத்தில் என்ன புரட்சி என்ற கேள்வி வேண்டாம்.அது இருப்பதை அதிகமாக்கிய ,உண்மையை சொன்ன ஒரு தூண்டுகோல் தான் பாசமலர் ராஜசேகரன்.
மூச்சுக்காற்றை தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று போனாலும் உழும் நிலத்தை விடக் கூடாது. உழவனின் தெய்வம் அது.அதைச் சொல்லவும் ஒரு பழனி வந்தார்.இன்று நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் எல்லாம் என்ன? தனி மனிதராய் கசங்கிய பழனியை பார்த்தால் தெரியும், ஒரு வேளை அரசுக்கு?
ஆயிரம் போராட்டங்களை ஒரு நல்ல சினிமா சொல்லி விடும்.ஆழ உள்ளிருந்து பார்த்த மனிதன் கையில் அதிகாரம் இருந்தால் ஒரு வேளை நல்ல பலன் கொடுக்கும்.ரசனையே இல்லாதவன் நாற்காலியில் இருந்தால் நல்ல பலனுக்கு எங்கே போக? ஆனாலும் விவசாயிகளின் ஆயிரம் கஷ்டங்களை அந்த ஒரு நல்ல படம் சொன்னது .
உளௌ நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள்...ஆனாலும்,எல்லை புரட்சியா, அண்டை நாட்டு யுத்தமா? மக்களெல்லாம் கொடி தூக்கி தேசபக்தியை நிலை நிறுத்துவார்கள்.
தமிழனின் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரமாய் திருப்பூர் குமரனும், பகத்சிங்கும், வஉசியும் குடி கொண்டிருப்பார்கள்.இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் எப்படி வந்தன? அவர் நடித்ததை பார்த்ததும் ஒரு காரணம் தானே! தமிழன் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி இருக்கிறது! அங்கேயெல்லாம் நடிகர்திலகம் மவுனமாயும், நிழலாயும் வாழ்ந்து வழி காட்டிக் கொண்டிருப்பார்!
நல்ல விஷயங்களை தேட சிவாஜி டிகௌஷனரி போதும்.ஆனால் அதை அகத்திலிருந்து உண்மையாக பாருங்கள்!https://uploads.tapatalk-cdn.com/20210111/342df2200e3a9733097f9e78e8c3e6f8.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 12:38 AM
சிவாஜி முரசு
யூடியூப் சேனல்
பாருங்கள்! https://uploads.tapatalk-cdn.com/20210111/783ec53bfd74141f09b8acf5d18a1f7e.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 12:45 AM
ஒரு நீண்ட இடைவெளி......https://uploads.tapatalk-cdn.com/20210111/c9714ea8703e457cc58eee1f82ca08ea.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 12:48 AM
https://youtu.be/gVtCBACPoLw

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 01:01 AM
https://youtu.be/HaAy8QsdqG4

sivaa
14th January 2021, 05:20 AM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!

பல காலமாக இந்தியாவில் சுலபமாக பார்வையிட முடியாமல் முடக்கிவைக்கப்பட்டிருந்த
ஹப் (hub) இணையம் , ஹப் நிர்வாகத்தினரின் பெருமுயற்சியால் இந்தியா உட்பட அனைத்து
நாடுகளிலும் வாழும் உறவுகளால் பார்வையிடவும், பங்குகொள்ளவும் ஏற்றவிதமாக
திருத்தி அமைக்கப் பட்டிருப்பது என்பது அனைத்து உறவுகளுக்கும் மகிழ்ச்சியான செய்தி.

சிவாஜி ரசிக உறவுகளே இதுகாலவரையும் பதிவிடமுடியாமல் முடங்கி இருந்த உங்களனைவருக்கும்
கதவு திறக்கப்பட்டுவிட்டது ,எனவே இவ் இணையத்தில் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் நீங்கள் ,
அனைவரும் முன்னர்போல் உங்கள் கை வண்ணத்தை காட்டும் படிஅன்புடன் வேண்டுகின்றேன்.
நன்றி.

இங்கு முன்னர் உறுப்பினராக இருந்து பதிவுகள் இட்டு மகிழ்ந்த நமது சிவாஜி ரசிக உறவுகள்.



இந்த இணையத்தில் பதிவிட்டுவந்த

சிவாஜி ரசிக நண்பர்கள்
joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
Krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos
P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08

sivaa
14th January 2021, 05:22 AM
எங்கே தேடி அலைவது நல்ல விஷயங்களை பார்க்க! அது தானே மனதை செம்மைபடுத்துகிறது.மனிதன் வாழ்வு தடம் புரளாமல் இருக்க.அங்கே தான் கலைகள் கை கொடுக்கின்றன! கலை என்றவுடன் சுலபமாக்குகிறது சினிமா! சினிமா என்றவுடன் நூறு சதவீதத்திற்கும் மேலே நடிகர்திலகம் சிம்மாசனமாய் வந்து அமர்ந்து விடுகிறார்.
கை நீட்டியவுடன் காசு போடு.அது இயலாதவர்க்கு செய்யும் உதவி.தமிழ் மண்ணில் கால் வைத்த குணசேகரனாய் முதல் படத்திலேயே செய்தார்.அந்த உதவும் குணம் சிவாஜி ரசிகனின் மனதில் படிந்து விட்டது.அதுவே இன்று வரை அன்னை இல்லத்தின் வாசலில் வருடக் கணக்கில் அன்னதானமாய் செய்ய வைத்து விட்டது.அந்த நல்ல விஷயம்தான் கலைஞன் விதைக்க வேண்டும்.சிவாஜியின் மாபெரும் ஆளுமை செய்தது அதுதான்.
தமிழ் மக்கள் பாசக்கார மக்களாம்.குடும்ப உறவுகளை கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..ராஜசேகரனாய் தங்கை மேல் பாசம் காட்டி நடித்தாலும் நடித்தார்.எத்தனையோ அண்ணன்கள் தங்கைகள் மேல் பாசம் பொழிந்து தள்ளி விட்டார்கள்.அது சினிமாவையே ஆட்டிப் படைத்து விட்டதுதானே! நிறைய குடும்பத்தில் இவை நடந்ததுதான்.அவையெல்லாம் மவுனமாக, மறைமுகமாக நடந்த புரட்சிதான் அது.சொந்த பாசத்தில் என்ன புரட்சி என்ற கேள்வி வேண்டாம்.அது இருப்பதை அதிகமாக்கிய ,உண்மையை சொன்ன ஒரு தூண்டுகோல் தான் பாசமலர் ராஜசேகரன்.
மூச்சுக்காற்றை தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று போனாலும் உழும் நிலத்தை விடக் கூடாது. உழவனின் தெய்வம் அது.அதைச் சொல்லவும் ஒரு பழனி வந்தார்.இன்று நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் எல்லாம் என்ன? தனி மனிதராய் கசங்கிய பழனியை பார்த்தால் தெரியும், ஒரு வேளை அரசுக்கு?
ஆயிரம் போராட்டங்களை ஒரு நல்ல சினிமா சொல்லி விடும்.ஆழ உள்ளிருந்து பார்த்த மனிதன் கையில் அதிகாரம் இருந்தால் ஒரு வேளை நல்ல பலன் கொடுக்கும்.ரசனையே இல்லாதவன் நாற்காலியில் இருந்தால் நல்ல பலனுக்கு எங்கே போக? ஆனாலும் விவசாயிகளின் ஆயிரம் கஷ்டங்களை அந்த ஒரு நல்ல படம் சொன்னது .
உளௌ நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள்...ஆனாலும்,எல்லை புரட்சியா, அண்டை நாட்டு யுத்தமா? மக்களெல்லாம் கொடி தூக்கி தேசபக்தியை நிலை நிறுத்துவார்கள்.
தமிழனின் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரமாய் திருப்பூர் குமரனும், பகத்சிங்கும், வஉசியும் குடி கொண்டிருப்பார்கள்.இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் எப்படி வந்தன? அவர் நடித்ததை பார்த்ததும் ஒரு காரணம் தானே! தமிழன் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி இருக்கிறது! அங்கேயெல்லாம் நடிகர்திலகம் மவுனமாயும், நிழலாயும் வாழ்ந்து வழி காட்டிக் கொண்டிருப்பார்!
நல்ல விஷயங்களை தேட சிவாஜி டிகௌஷனரி போதும்.ஆனால் அதை அகத்திலிருந்து உண்மையாக பாருங்கள்!https://uploads.tapatalk-cdn.com/20210111/342df2200e3a9733097f9e78e8c3e6f8.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

வணக்கம் செந்தில்
உங்கள் மீள்வரவுக்கு நன்றி . தொடர்ந்து வாருங்கள்.

Russellxor
14th January 2021, 03:35 PM
https://youtu.be/UAp4i5-UU-U

அவன் தான் மனிதன் டிஜிட்டல் ரிலீஸ் விரைவில்..
இங்கே அதன் கிரிஸ்டல் கிளியர் டிரெயிலர்...

sivaa
15th January 2021, 07:21 AM
மதுரைக்கு ஒரு யோகம் உண்டு....

சிவாஜி படம் திரையிட்டாலோ அல்லது
சிவாஜி நிகழ்ச்சி என்றாலோ...
மழை நிச்சயம் வந்து விடும்...

ஒருவாரமாக மதுரையை
மிரட்டிக் கொண்டிருக்கும் மழை...

சிவாஜி சிலை முன்பு சிவாஜி பொங்கல்....

காலை முதல் எந்நேரமும் கனத்த மழை பெய்யும் நிலையில் வானமூட்டம்...

இருந்தாலும்... ரசிகர்கள் காலை முதலே வரத்துவங்கிவிட்டனர்.

ரசிகர்களின் வருகையை கண்டு மழையும் மிரண்டு விட்டது போலும்...

நிகழ்ச்சி முடியும் வரையில் மழையை காணோம்...

காசு கொடுத்து வா என்று சொன்னாலும்,
பொங்கலன்று யாரும் வரமாட்டார்கள்... ஆனால்,

தலைவரின் சிலை முன்பு பொங்கல் விழா கொண்டாட, அன்பு இதயங்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர்.

ரசிகர்களின் வருகையால் சிவாஜி பொங்கல் விழா இனிதே நடைபெற்று முடிந்தது.

விழாவில் கலந்து கொண்ட,
அகிலஇந்திய சிவாஜி மன்றம், நகர் சிவாஜி மன்றம், சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
மதுரை சிவாஜி ஃபைன் ஆரட்ஸ்,
ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ்,மதுரை,
மாவட்ட பிரபு மன்ற நிர்வாகிகள் மற்றும்

இந்த அருமையான விழாவினை ஏற்பாடு செய்த,
அன்பு அண்ணன் முருகவிலாஸ் நாகராஜன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/137608108_3615668435184401_2963662211736858443_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=wiUpyhr2pFkAX-FN2JM&_nc_ht=scontent-ort2-2.xx&oh=be9879182c6ed07e3aaa59fddaae5a31&oe=6024F3EA

Thanks Sundar Rajan

sivaa
15th January 2021, 07:25 AM
பொங்கல் திருநாளில் மதுரை சென்ட்ரலில் இன்று மகத்தான வசூல் சாதனை படைத்து விட்டார் நம் நடிகர் திலகம்.கொரானா கால கட்டத்தில் மூன்றுகாட்சிகளுக்கும் சேர்த்து 525 ரசிகர்கள் கண்டு களித்துள்ளார்கள்.புதுப்படங்களுக்கு இல்லாத வரவேற்பை பெற்றுள்ளார் நம் திலகம்.மழை காரணமாக தூத்துக்குடியில் இன்று வெளியாகவில்லை.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/138771668_2884726698483295_9126495838223520113_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=u6rnPo4A81wAX_0yiC0&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7ad478924fe4aeb75b65df220e4b2a4f&oe=60269C7F

Thanks Vasudevan Srirangarajan

sivaa
15th January 2021, 07:28 AM
பல்வேறு வருடங்களில் பொங்கலுக்கு வெளிவந்த நடிகர் திலகம் படங்கள்

விசிறிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/137587392_1294855020915431_1200129524382744795_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=lvevnuF2OWYAX-eCXi1&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=9a3191031e2116256e935d18be85fde9&oe=6026834A




Thanks Raja Lakshmi

sivaa
16th January 2021, 03:52 AM
Thanks to ntfans

நேற்றைய சாதனையை முறியடித்த அசோக்கும் ஆனந்தும். நேற்றைய தினம் 525 டிக்கெட்டுகள் என்றால் இன்று மதுரை சென்ட்ரலில் 555 டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. மழை, கோவிட், புதிய படங்கள், டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் தாண்டி சாதித்திருக்கிறார் சாதனைக்கென்றே பிறந்த நடிகர் திலகம்!

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/138697688_2885715221717776_6124771181260283396_n.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=hCvIxD7RjhUAX-qKcVi&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7aa794ef0f0a0ccb20215abe6ac927ae&oe=60295A7E

Thanks Vasudevan Srirangarajan

sivaa
18th January 2021, 01:05 AM
மதுரை சென்ட்ரலில்...
சிவகாமியின் செல்வன்...

ரசிகர்கள் சிறப்பு காட்சியில்,
அலைகடலென திரண்ட,

நடிகர்திலகத்தின்
அன்பு இதயங்கள்....

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/138824219_3623944117690166_7713128433693029825_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=GiTuI8U_JhUAX8-bBPD&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=e83c377b646019710ba7c0ae7beb4296&oe=602BB40A
Thanks Sundar Rajan

sivaa
18th January 2021, 01:17 AM
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.

அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!

இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.

இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.

ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.

‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.

சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.

ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.

சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.

ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.

ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.

சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.

சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.

சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.

அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.

ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.

புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.

அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.

இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.

விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.

‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.

பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.


சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.

அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!

இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.

இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.

ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.

‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.

சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.

ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.

சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.

ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.

ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.

சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.

சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.

சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.

அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.

ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.

புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.

அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.

இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.

விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.

‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.

பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.

Thanks Ganapathi Iyar

Russellxor
22nd January 2021, 07:58 PM
[emoji93][emoji93][emoji93][emoji93]https://uploads.tapatalk-cdn.com/20210122/30bac50b3ffcea47008754766e0d3f1d.jpg

Russellxor
22nd January 2021, 07:58 PM
[emoji260][emoji260][emoji260]https://uploads.tapatalk-cdn.com/20210122/77d7f2d6e382459ae6eb8c38bcbb9931.jpg

sivaa
23rd January 2021, 06:19 AM
அனைவருக்கும் வணக்கம் !

கடந்த சில நாட்களாக நேரமின்மையால் பல விடயங்களை பதிவிடமுடியவில்லை.
கணணியிலும் சிறிய தடங்கல். சில பதிவுகளை கட் அன்ட் பேஸ்ருடன் சுருக்கிக்கொண்டேன்.
இனி (நேரத்தை பொறுத்து) பதிவுகள் தொடரும்.

sivaa
23rd January 2021, 06:20 AM
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்காக 1957 ஆம் ஆண்டின் போது ரூ ஒரு லட்சம்( இன்றைய நாளில் 100 கோடி) ரூபாய்க்கான காசோலையை வெள்ளிப் பேழையில் வைத்து நன்கொடையாக வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி,
அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டே பிரதமரின் காச நோய் ஒழிப்பு திட்டத்திற்காக சென்னையில் நெஞ்சக காச நோய் மருத்துவமனை அமைய ஒரு லட்சம் ரூபாயை ( மீண்டும் 100 கோடி ரூபாய்) அளித்தார்,

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் 1965 ஆம் ஆண்டின் போது யுத்த காலத்தில் தனது முதல் தவனை நிதியாக ரூ 40 ஆயிரமும்( இன்றைய மதிப்பில் ரூ 40 கோடி) கமலா அம்மையாரின் தங்க ஆபரணங்கள் என 400 சவரன் நகைகளையும் வழங்கி இருந்தார், மேலும் தனக்கு பரிசாக கிடைத்து இருந்த 100 சவரன் எடை கொண்ட தங்கப் பேனாவையும் சேர்த்து மொத்தம் 500 சவரன் தங்க நகைகளையும்( ரூ 20 கோடி மதிப்புள்ள) நன்கொடையாக நாட்டிற்கு கொடுத்தார் நடிகர் திலகம் சிவாஜி,

இது போல மூன்றாவது பிரதமர், நான்காவது பிரதமர், ஐந்தாவது பிரதமர் என தனது வாழ்நாளில் கண்ட கடைசி பிரதமரான வாஜ்பாய் அவர்கள் வரை கொடுத்த கார்கில் யுத்த நிதி என நீண்ட பட்டியல் இருக்கிறது,


சாமான்ய தமிழனால் இது போன்ற வரலாற்று தேச நலன் உதவிகளை இது வரையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை,

அதே போல படித்து பட்டம் பெற்ற தமிழக வரலாற்று சுவடுகளைப் பற்றி விவாதித்து வரும் ஊடகவியலாளர்கள் பத்திரிக்கை ஆசிரியர்கள் ஆகியோருக்கும் நினைவில் வருவதில்லை,

அசல் தமிழனின் பெருமையை பேசுவதில் அவ்வளவு தயக்கம்,

Thanks Sekar Parasuram

sivaa
26th January 2021, 08:33 AM
இந்திய உறவுகள் அனைவருக்கும் ,
72 வது குடியரசு தின வாழ்த்துகள்.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/142164852_856068208515720_2300939026850943613_o.jp g?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=QZa2xNcJV9gAX9TB6_F&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=c9a82ee7d01fa572883a92425edf76e9&oe=60339F5F

sivaa
26th January 2021, 08:38 AM
குடியரசு தினத்தில் வெளியான கொடைவள்ளலின் திரைகாவியங்கள்.

குடும்பம் ஒரு கோயில் 26/01/1987

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/141739850_2836083093273167_4501769666640177423_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=zd2RuzmoKLoAX8hlneN&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=1578d25b5047382dc961119dc2cfd11d&oe=6036D339
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:40 AM
ரிஷிமூலம் 26/01/1980

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/142004928_2836056013275875_2933407139268365006_o.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=h6_K372JcNkAX8dYbf1&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=89d7463bcd25d7b539b2f2f989442e25&oe=60353951
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:41 AM
மருமகள் 26/01/1986

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/142111406_2836078293273647_7442150136792792868_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=wtoved4EgT8AX_rzAqg&_nc_ht=scontent-ort2-2.xx&oh=eaf0bb0335c019ba21d9aae59abcb5c9&oe=6035F884
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:42 AM
ராஜா 26/01/1972

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/141019285_2836095346605275_2327493033841626426_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=K-pZqrMOIsYAX-oXPjb&_nc_ht=scontent-ort2-2.xx&oh=069acc508727fe3508bf283facc0a00a&oe=6035A824
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:44 AM
நீதிபதி 26/01/1983

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/142170281_2836067556608054_4319806884322861789_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=OmRDHbKDu4EAX8TbdxE&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=102118d9175b8116f5c2b8bb004fc6d6&oe=6034EB05

Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:45 AM
மோட்டார் சுந்தரம்பிள்ளை 26/01/1966

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/142361571_2836089466605863_5527999023320808855_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=CVzjFWJFBvUAX-qS0CF&_nc_ht=scontent-ort2-2.xx&oh=55ed830b7e37c26a140ffe4abc57f939&oe=6035D7A7


Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:46 AM
பந்தம் 26/01/1985

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/140780044_2836073149940828_5619256862241389242_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Ym-WYW8FJysAX-ckrjb&_nc_ht=scontent-ort2-2.xx&oh=b41b318d758a705ad80203d03b42553b&oe=60354A43

Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:48 AM
ஹிட்ர் உமாநாத் 26/01/1982

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/141982188_2836062263275250_6596721821915619848_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=bYEnL2JA7acAX_4vZR8&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=01bf7a5edd0bd273b2fecb4c71e0116c&oe=60346D50
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:50 AM
சிவகாமியின் செல்வன் 26/01/1974

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/142686782_2836101423271334_542081886520555304_o.jp g?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=a6XExLunD8EAX-9ZKzw&_nc_ht=scontent-ort2-2.xx&oh=2038174705af2814ab305b53ebd01585&oe=6035F77B



Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:54 AM
அந்தமான் காதலி 26/01/1978

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/141542861_2836051286609681_7577743581831397303_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=1wSsGSWEWn4AX_My7nS&_nc_ht=scontent-ort2-2.xx&oh=8e568a6a6a038c50b7f8890b218a3526&oe=6037109E


Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:59 AM
தீபம் 26/01/1977

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/140651313_2836113076603502_7710629591561706156_o.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=NmgUWY2JDgcAX8STmxx&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=a1d8240b81975f2981101eda9df62316&oe=6034E90E


Thanks Vcg Thiruppathi

sivaa
27th January 2021, 06:00 AM
26.1.21 குடியரசுதினத்தை முன்னிட்டு,

முதன்முறையாக
மதுரையில் உள்ள சிவாஜி சிலை பீடத்தில்
தேசிய கொடி ஏற்றப்பட்டது.

காலையில இருந்தே நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் குவிய தொடங்கினர்....

காலை 10.30 மணிக்கு, மதுரையில் சிலை வைத்த,
ஐயா வி.என்.சிதம்பரம் அவர்களின் அருந்தவப்புதல்வன் வி.என்.சித.வள்ளியப்பன் அவர்கள்
தேசியக் கொடியை ஏற்றினார்.

மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சாா்பாக,
ரசிகர் ஒருவருக்கு நான்கு சக்கர வண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றம்,
நகர் சிவாஜி மன்றம்,
புறநகர் சிவாஜி மன்றம்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
சிவாஜி சமூகநல பேரவை,
சிவாஜி ஃபைன் ஆரட்ஸ்,
ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ்,
மாவட்ட பிரபு மன்ற நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

சமீபத்தில் சிலை முன்பு,
சிவாஜி பொங்கல் கொண்டாடப்பட்டது.

தற்போது, சிவாஜியின் குடியரசு தின விழா...

என தொடர்ந்து மதுரையை கலக்கி வரும்

சிவாஜியின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/141380738_3649193925165185_1049663511711182950_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=80KDvlguHuYAX_LwIyU&_nc_ht=scontent-ort2-2.xx&oh=471f7102e4dc8635b750e8887f39b3bd&oe=6035A074

Thanks Sundar Rajan

sivaa
27th January 2021, 08:47 AM
27/01/1979 ல் வெளிவந்த வசூல் காவியம் திரிசூலம்

27/01/2021 ல் 42 ஆண்டுகள் நிறைவு.

இதற்குமுன்னர் வந்த அனைத்து தமிழ் படங்களின் வசூல்சாதனைகயும் தவிடுபொடியாக்கி
முதல் வெளியீட்டில் பல கோடிகளை வசூலாகப்பெற்று சினிமா உலகை உலுக்கி
தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வெற்றிக்காவியம் திரிசூலம்.

http://uploads.tapatalk-cdn.com/20160906/e44107516eb9f2e2552337329228c7c8.jpg


திரிசூலம்

சென்னை..............................சாந்தி... ..... ............175 ..நாட்கள்....16.13.648-90
சென்னை..............................கிரவுண்.. ..... ..........175...நாட்கள்..... 8.59.663-45
சென்னை..............................புவனேஸ்வரி.... ..... .175....நாட்கள்.......8.47.818-20

சென்னை நகர் 3தியேட்டர்கள் மொத்த வசூல்...................................33.21 .130-55

கோவை.................................கீதாலயா. ..... .........175...நாட்கள்.......12.38.284-90
மதுரை....................................சிந் தாமணி ..........200..நாட்கள்.........10.28.819-55
திரிச்சி..................................... பிரபா த்..................175...நாட்கள்......8.39.7 85-80
சேலம்.....................................ஒரி யண்டல ்........195...நாட்கள்..........7.12.329-14
வேலூர்....................................அப் சரா.. ................175...நாட்கள்.......6.39.949-25
திருப்புர்................................... டைமன் ட்..............142ஈநாட்கள்.........4.62.612-55
ஈரோடு..ராயல்..103+ஸ்டார்..13..+ஶ்ரீகிருஸ்ணா 8..124..நாட்கள்......4.59.649-68
தஞ்சை...................................அருள் ..... ............153..நாட்கள்.............4.09.768-65
குடந்தை................................தேவி.. ..... ............139..நாட்கள்..............3.99.123-25
பொள்ளாச்சி..........................துரைஸ்... ..... ........125..நாட்கள்............3.88.184-75
பாண்டி....................................ஜெய ராம். ...........151...நாட்கள்...........3.56.366-55
நெல்லை..............சென்ட்ரல்..105+பாபுலர்..1 0-...115..நாட்கள்...........3.53.710-00
நாகர்கோவில்................ராஜேஸ்..77+..யுவரா ஜ்..2 8-.105..நாட்கள்.....3.05.270-85
திருவண்ணாமலை...........பாலசுப்பிரமணி......... 143.. நாட்கள்..........3.03.952-95
மாயுரம்................................பியர்ல ஸ்... ...............125..நாட்கள்.........2.58.112-10
காஞ்சி..................................லட்சு மி... ...................77..நாட்கள்..........2.46.734-45
தாம்பரம்..............................ஶ்ரீவித ்தியா .................69..நாட்கள்.........2.40.000-00
திருவாரூர்.........................தையலம்மை.. ..... ..........80..நாட்கள்.........2.12.303-65
ஊட்டி..................................ஶ்ரீகண ேஷ்.. ..................60..நாட்கள்.........1.90.092-15
தூத்துகுடி...........................காரனேசன் ..... ................50...நாட்கள்.......1.84.642-50

விழும்புரம் .......................சாந்தி..................... .........64..நாட்கள்.........1.79.248-30

அரக்கோணம்...................கற்பகம்.......... ..... ............60...நாட்கள்.........1.70.000-00

சிதம்பரம்...........................வடுகநாதன் ..... ..............64...நாட்கள்.........1.67.164-74

பழநி...................................வள்ளுவ ர்... .................50...நாட்கள்............1.67.153-70

மூன்று தியேட்டர்களில் ஷிப்டிங்கில் ஓடியது உட்பட மொத்தம்

11 தியேட்டர்களில் வெள்ளிவிழா.

http://uploads.tapatalk-cdn.com/20160906/2d3db8f0e69fd967cac73ba8c249a2ae.jpg

sivaa
27th January 2021, 08:53 AM
YouTube ல் புகழ்பெற்ற கதாநாயகர்களின் Top 25 movies என வீடியோ தொகுப்பை வெளியிட்ட்டு வருகிறார்கள்,
அதில் நடிகர் திலகத்தின் Top 25 movies என தேர்வு செய்வதில் அவர்களுக்கு எந்த சிரமும் இல்லை போல, ஏனெனில் நடிகர் திலகத்தின் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள் என ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்து விடுகிறார்கள், அதையும் தாண்டி ஒன்றிரண்டு திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் அவையும் சாதனைக் காவியங்களாவே அமைந்து இருக்கிறது, உதாரணத்திற்கு நவராத்திரி, தெய்வமகன்,தில்லானா மோகனாம்பாள், கர்ணன்,புதிய பறவை போல,

அதே தருணத்தில் பிற நடிகர்களின் top 25 movies என தேடிப்பிடிப்பதில் அவர்களுக்கு உண்டாகியிருக்கும் சிரமங்களை சொல்ல வேண்டுமானால் தேர்வு செய்த திரைப்படங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்,
ஓடாத டப்பாப் படங்களை சூப்பர் ஹிட் , பாக்ஸ் ஆபிஸ், சிலவர் ஜூப்ளி என சொல்லி சமாளிக்கிறார்கள்,

அவற்றை வேண்டுமானால் விருப்பமானவர்கள் பார்த்து சிரித்து மகிழலாம்
அவ்வளவு காமெடி நிறைந்து இருக்கிறது,


Thanks Sekar Parasuram

sivaa
31st January 2021, 06:22 AM
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ்
'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28168389_434141093688858_760383631421453509_n.jpg? oh=b5c5e372ef72ba3181b67cf3b93bf022&oe=5B14E5C3
vaannila v
courtesy net

sivaa
31st January 2021, 06:25 AM
நடிகர்திலகத்தின் ஹை-லைட்
30000 உணவுப் பொட்டலங்கள் சிவாஜிகணேசன் அளித்தார்.
இதுவரை ரூ.40000 உதவி
1000 பவுண்டு பால் பவுடரும் வழங்கினார்...
இது 1960 நவம்பர் 13, கழக ஆதரவுப் பத்திரிகையான தனிஅரசு வில் வெளியான செய்தி.
சென்னை, நவ. 13-
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இன்று 30000 உணவுப் பொட்டலங்களை மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார். பல பகுதிகளில் பாதிக்ககப்பட்ட மக்ககளுக்கு கார்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ரூபாய் 40,000
தமிழ் நாட்டில் பெய்த பெருமழையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரைப் போக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இதுவரை 40000 ரூபாய் வரை பணமாகவும், அரிசியாகவும், உணவாகவும் வழங்கியிருக்கிறார்.
பால் பவுடர்
தமது வெள்ள நிவாரணக் குழு மூலம் தனது சொந்த மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பணியின் நான்காவது நாளாக 30,000 க்கும் மேலான உணவுப் பொட்டலங்களும் , 1000 பவுண்டு பால் பவுடரும் விநியோகிக்கப் பட்டது.
கவுன்சிலர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்படி உதவி அந்தந்த கவுன்சிலர்கள் மூலமும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலமும் சரியான நேரத்திற்கு முன்னால் ஒவ்வோர் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை சரியான முறையில் விநியோகிக்கப் படுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
( தனிஅரசு, நவம்பர் 1960)
நடிகர்திலகத்தின் ஹை-லைட்ஸ் :6
தென்னிந்திய திரைப்பட டெக்னீஷியன்ஸ் சங்க கட்டிட நிதிக்காக சிவாஜி நாடக மன்றத்தாரின் ' வியட்நாம் வீடு ' நாடகம் மியூசிக் அகாடமி ஹாலில் அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை மாலை நடை பெற்றது. இந்த நாடகத்தில் ரூ. 30,000 வசூலாயிற்று.
வசூலான தொகை நடிகர்திலகத்தின் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது.
இலவசமாக நாடகத்தை நடத்தித் தந்த நடிகர் திலகத்துக்கு சங்கச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
(சினிமா ஸ்டார், நவம்பர் 1969)
-வசந்தமாளிகை மாத இதழிலிருந்து தகவல் திரட்டப்பட்டது.
அள்ளிக் கொடுத்தவரும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வாங்கிக் கொண்டோரும் கடைசிவரை வாய்த் திறக்கவில்லை.
என்றாலும்,
எல்லாப் புகழும் அய்யன் ஒருவருக்கே.

Vaannila Vijayakumaran‎

courtesy net

sivaa
31st January 2021, 10:17 AM
ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31/01/1958 . இன்று 63 வருடங்கள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/142333629_2839711766243633_455193234345688998_o.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=HbbrUcyqnNwAX_LPjE5&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=2f3fb225f5f4ce67befe2e1c9a47f41c&oe=603CBBDA

Thanks Vcg Thiruppathi

sivaa
31st January 2021, 09:31 PM
1952 ம் வருடம் அக்டோபர் 17ந் தேதிதீபாவளி திருநாளில் வெளியானது பராசக்தி படம்
வெளியானது . அதுவரை யாரிடமும் இல்லாத காந்த சக்தி சிவாஜியின் கண்களுக்கு இருந்ததை கண்டு மொத்தமாக அவர்பால் ஈர்க்கப்பட்டனர் .அவர் வசனம் பேசிய முறை உடல் மொழி பிரமிக்க வைத்தது .உச்ச கட்ட காட்சியில் வசனத்தை ஒரு ஜல்லிக்கட்டு காளை யை போல சிவாஜி திமிறிக்கொண்டு பேசியதை பார்த்த போது ,ஒவ்வொரு ரசிகனும் தன்னுடுய உடம்பில் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தனர் .பராசக்தி பார்த்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் ப...ோட்டு அமர்ந்தார் .படம் வெளியான அன்று ரசிகர்கள் எப்படி படத்தை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க சிவாஜி பெருமாள் முதலியார் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் பாரகன் தியேட்டருக்கு சென்றார்கள் .அவர்கள் உற்கார்ந்த வரிசைக்கு முன் உற்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் படத்தையும் சிவாஜியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான் .தனக்கு பின்னால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து அமர்ந்து இருப்பது சிவாஜிதான் என்று தெரிந்து கொண்டான் .நீதி மன்ற காட்சி முடிந்ததும் அந்த சிறுவன் ஓடி வந்து பலம் கொண்ட மட்டும் சிவாஜியின் கையை பிடித்து குலுக்கினான் .அந்த சிறுவன்தான் நல்லி குப்புசாமி செட்டியார் .சிவாஜி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாட துவங்கினார்கள் .பராசக்தி திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களில் எல்லாம் திருவிலாகோலம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக குவியதொடங்கினார்கள் .பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட கிராமபோன் நிறுவனம் பராசக்தி படத்தின் வசனத்தை பதிவு செய்து வெளியிட்டது .விற்பனையிலும் அந்த ரேக்காட்கள் சாதனை புரிந்தது . வெள்ளிவிழா கண்டு வெற்றிக் கொடி நாட்டியது பராசக்தி படம்.

courtesy net

sivaa
31st January 2021, 09:34 PM
பராசக்தி - சிவாஜி ஜாலம்
சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார்.
அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி.
... இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை.
இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார்.
அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது.
ஏன், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
இதுதான் முதல் படத்திலேயே ஐயன் செய்த ஜாலம்!
-RV

courtesy net

sivaa
31st January 2021, 09:38 PM
உத்தமபுத்திரன் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பதி பக்தி படத்தில் நடித்தார் . அம்மையப்பன் படம் தோல்வி கண்டதால் ராசி இல்லாத இயக்குனர் என்ற பெயர் பீம்சிங்குக்கு வந்தது .அந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு சொந்தமாக படம் எடுக்கும்படி கலைவாணர் யோசனை சொன்னதன் பேரில் சோலைமலை வேலுமணி எம் எஸ் விஸ்வநாதன்ராமமூர்த்தி சேர்ந்து புத்தா பிக்சர்ஸ் தொடங்கி பராசக்தி முதல் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்பதால் சிவாஜி நடிக்கவேண்டும் என்று கேட்டவுடன் நீங்கள் தைரியமாக ஆரம்பியுங்கள் நான் உங்களு...க்கு பக்க பலமாக இருக்கிறேன் என்று உறுதி கூறினார் .புத்தா நிறுவனம் தரமானவெற்றி படங்களை தயாரித்தது என்றால் அதற்க்கு ஆரம்ப காலத்தில்அதற்கு உரம் இட்ட சிவாஜிதான் காரணம் என்று பீம்சிங் கூறியிருக்கிறார் . சிவாஜி உருவாக்கிய தயாரிப்பாளர் எண்ணிக்கை மிக நீளமானது ,பந்துலு ஶ்ரீதர் பீம்சிங் பாலாஜி சந்தானம் குகநாதன் மோகன் ஆர்ட்ஸ் மோகன் ,ராம அரங்கண்ணல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது .மிக சாமான்யர் பலரை தயாரிப்பாளர் ஆக்கிய பெருமை சிவாஜிக்கு உண்டு .குடும்ப சிக்கல்கள் நிறைந்த கதையை 1958ம் ஆண்டு மார்ச் மாதம்14 ந்தேதி பதி பக்தி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ராசியான இயக்குனர் ஆனார் .அந்த வருடம் துவக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத நிலையில் இந்த படமாவது ஒடி தமிழ் திரையுலகை காப்பாற்றியது என்று வாகினி அதிபர் நாகி ரெட்டி கூறினாராம் .

courtesy net

sivaa
31st January 2021, 09:41 PM
உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!

Thanks Vaannilaa

courtesy net

sivaa
4th February 2021, 07:15 AM
உங்களுக்குத் தெரியுமா ...?
1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
உண்மைதான்.
சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
2. 14:01:1956 நல்லவீடு
கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
மகாராணி
3. 25:01:1956 நானேராஜா
அசோக்/ சன் / கபாலி / முருகன் /
பிரைட்டன் / நூர்ஜகான்
4. 03:02:1956 தெனாலி ராமன்
நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
5. 17:02:1956 பெண்ணின் பெருமை
காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
6. 25:02:1956 ராஜா ராணி
வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?

Thanks Vaannilaa

courtesy net

sivaa
6th February 2021, 07:20 AM
ஊருக்கு ஒரு பிள்ளை 5/02/1982 --- 39 ஆண்டுகள் நிறைவு.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/146725864_2843174035897406_6454174357367842958_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=IH422Jw_OIkAX8SmoRn&_nc_ht=scontent-ort2-2.xx&oh=155993bf5bed34ffecdb75a4598ddbac&oe=6043AFBF
Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:23 AM
தங்கைக்காக 6/02/1971----இன்று 50 ஆண்டுகள் நிறைவு

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/145156174_2843881482493328_4724822536804279842_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=ccizia5gfggAX9ylH75&_nc_ht=scontent-ort2-2.xx&oh=85485992293fefe96a4100e45d5c6a07&oe=60437CF9

Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:26 AM
வா கண்ணா வா 6/02/1982---இன்று 39 ஆண்டுகள் நிறைவு.


https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/144928273_2843881445826665_7984096367611848152_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=8PgVaSP11CgAX8-TgS4&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=79c7ee185107845110aa79556d94c8ce&oe=60454DF3

Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:33 AM
தர்த்தி (ஹிந்தி) 6/02/1970 ----இன்று 51 ஆண்டுகள் நிறைவு.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/146771544_2843881515826658_8248372566062158538_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=1dNh5tkLzHMAX_XD9VK&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7f635fdc122bafcf354e32cefac3518d&oe=6042BF6F


Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:36 AM
இன்று ( 06-02-21)
ஜெயா டிவி நெட்வொர்க்கில் குதூகலமான திரைப்படங்கள் ஒளி பரப்பாகிறது,

ஜெயா டிவியில் பிற்பகல் 2:30 க்கு புதிய பறவை அதற்கு முன்பாக காலை 11:30 க்கு பரம்பரை

ஜெயா மூவியில் பிற்பகல் 1:00 மணிக்கு முதல் மரியாதை தொடர்ந்து 4 மணிக்கு அரிமா நம்பி,

மேலும் தீர்ப்பு பகல் 12 மனிக்கும் இரவு 7 மனிக்கும் முரசு டிவியில்

ராஜ் டிஜிட்டலில் இரவு 10:30 க்கு லாரி டிரைவர் ராஜாகண்ணு,

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/144779208_3767228166727379_8221587029845844340_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=FHutOl5ByaIAX9yNkTT&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7f564348a1344605354f533148dd2565&oe=6041DC6F



Thanks Sekar Parasuram

sivaa
6th February 2021, 07:38 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

கோவையில் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம் தொடர்ந்து வெளியாகி வெற்றிநடை போட்டது.

சில காலமாக நடிகர்திலகத்தின் திரைப்படம் கோவையில் வெளியாகவில்லை.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருகிறது...

கோவை டிலைட் தியேட்டரில்,
பிப்ரவரி 6 முதல்,

நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், அட்டகாசமான திரைப்படமான

என்னைப் போல் ஒருவன்...

கொரோனாவிற்கு பின்,
கோவையில் வெளிவரும் நடிகர்திலகத்தின்
முதல் படம் என்னை போல் ஒருவன்.

மதுரை சிவாஜி கோட்டை என்பதை, மதுரை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், நிரூபித்து வருகிறார்கள்.

அதே போல், கோவையும் சிவாஜி கோட்டை தான் என்பதை, கோவை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் நிரூபிப்பார்கள்.....

மதுரையை போல், கோவையிலும்,
வருடத்திற்கு 5 அல்லது 6 நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்...

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று,
என்னை போல் ஒருவன் திரைப்படத்தை திரையிடும், முரளி பிலிம்ஸ், முரளி அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை அன்பு இதயங்களின் அலப்பறை ஆரம்பமாகட்டும்...

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/147181237_3674667529284491_7426311316093310644_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=RJVXTXtEJTsAX946H7c&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=f6ccf2c1d61d310ad710d1477b3c7861&oe=6044A300

Thanks Sundar Rajan

sivaa
6th February 2021, 08:04 AM
தமிழ்த்திரை உலகம் மட்டுமல்ல, இந்தியத் திரை உலகமே கொண்டாடும் அதி அற்புதமான நடிகர்.
சர்வதேசத் திரை உலகில் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்ட அனைவருமே வியந்து பார்த்த, உன்னதமான ஒரே நடிகர்.

நடிகர் என்பதைத் தாண்டி, மிக உயர்ந்த மனிதர். சிறந்த தேச பக்தர், தெய்வ பக்தர்.

கேமராவுக்கு முன்பு தவிர, வேறெந்த இடத்திலும் வேசம் போடத் தெரியாதவர்..

தனி மனித வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்ததோடல்லாமல், தனக்கென வாழாத தகைமையாளர்.

தன் படங்களின் மூலம், அருமையான வாழ்வியல் தத்துவங்களை மட்டுமல்ல, அன்பு, பாசம், நேர்மை, கடமை, ஒழுக்கம், வீரம், தெய்வ பக்தி, தேச பக்தி, காதல், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் போன்ற எண்ணற்ற சிறந்த கருத்துக்களைப் பரப்பியவர்...

அன்றும் இன்றும்.. ஏன், என்றும் பல கோடி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அவருடைய புகழையும், சிறப்புக்களையும் இன்னும் உயர உயரக் கொண்டு செல்லும் உயரிய நோக்கத்துடன்... குறிப்பாக, இளைய தலைமுறையினர் அவருடைய சிறப்புகளை இன்னும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் துவங்கப்பட்ட You Tube சேனல்தான்,

'என்றென்றும் சிவாஜி'.

நடிகர்திலகத்தின் அருமைப் பிள்ளைகள் அனைவரும் இந்தச் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து, ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உங்கள் ஆதரவு, இந்தச் சேனல் மேன்மேலும் வளர்வதற்கு மட்டுமல்ல, நடிகர் திலகத்தின் புகழை மேன்மேலும் பரப்பும் எங்கள் முயற்சிக்கு இன்னும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

சேனலுக்கான கீழ்க்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுமாறு வேண்டுகிறோம்.

https://youtube.com/channel/UCjXJshADoeVEdCcgcHTBHVw (https://youtube.com/channel/UCjXJshADoeVEdCcgcHTBHVw?fbclid=IwAR2FDtAYTjrFUit7 DU0HIxrs6u-Sv9_tWpbHl2bU8ePpZOczeM19YUICyv8)
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/144704807_2890693277881302_1468155878932072104_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=eTalL3MZG-IAX-c3OsA&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=8d68dfbea342ea3804e88bc808818f94&oe=6042C721

Thanks Nagarajan Velliangiri

sivaa
6th February 2021, 11:19 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே....

எங்கும் நடிகர்திலகத்திற்கு வெற்றியே...

6.2.21 முதல் கோவை டிலைட் தியேட்டரில், நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், என்னை போல் ஒருவன் திரைப்படம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

முதல் நாளே
மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது..

இம்மாபெரும் வெற்றியை தந்த
கோவை வாழ், நடிகர்திலகத்தின்
அன்பு இதயங்களுக்கும்,

கோவை மக்களுக்கும் மாபெரும் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பு இதயங்களே,
நாளை மாலை ரசிகர்கள் சிறப்பு காட்சி நடைபெற உள்ளது...

கோவை மற்றும் கோவை சுற்றியுள்ள
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள்,,,
அனைவரும் தவறாமல் நடிகர்திலகத்தை
தரிசிக்க வருகை தாருங்கள்..

அன்றும் இன்றும் என்றும்,
கலையுலகில் சிவாஜியை மிஞ்ச எவருமில்லை என்பதை எதிரிகள் உணரட்டும்...

நாளை அரங்கு நிறைந்தது என்ற செய்தி...... தமிழகத்தையே அதிர செய்யட்டும்.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/146014297_3677174552367122_5090216532522804023_n.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=zK4KHcDUI6EAX_YvcMU&_nc_ht=scontent-ort2-2.xx&oh=70719fa64f5fa3e7e47404b0e773969f&oe=60464B2F

Thanks Sundar Rajan

sivaa
7th February 2021, 09:43 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்,
45 வது வெற்றிச்சித்திரம்.

உத்தம புத்திரன் வெளியான நாள் இன்று.
உத்தம புத்திரன் 7 பெப்ரவரி 1958.

உத்தம புத்திரன்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/146419679_760090344884103_7401518807878323590_n.jp g?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=0OX5mBdMT_IAX9ce-fv&_nc_ht=scontent-ort2-2.xx&oh=4f56dbfb415bc1144ae5bff9748ac235&oe=6043B5B9https://i.ytimg.com/vi/lXmYgQdeZSU/maxresdefault.jpg

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/147420810_341069887050621_4554519220339675021_n.jp g?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=-vbrRXr2ddIAX_jsRbE&_nc_ht=scontent-ort2-2.xx&oh=43d659e54df9d16b6857bcc7e063e0fe&oe=6043B0D5

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/146961796_1144086386004630_7358866701865402364_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=WV81tBYHbrkAX9Uf0EU&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6e65bae2b2d9664dc6167609a2a5f256&oe=6043FBD4

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/147175494_469044680796674_278011749678654198_n.png ?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=UYCMfEP2-EcAX-sEOm6&_nc_ht=scontent-ort2-2.xx&oh=81c2840f19ec31fea19f582ff3f01b16&oe=6043BE3C


உத்தம பத்திரன் 7/02/58
பதிபக்தி 14/03/58
சம்பூர்ண ராமாயணம் 14/04/58
பொம்மை கல்யாணம் 3/05/58

3 மாதத்திற்குள் 4 படங்கள் திரையிட்டு வெற்றிக்கொடி நாட்டியவர்
அகில உலக தமிழ்த்திரைப்பட வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்கள்.
நெஞ்சில் துணிவில்லாமல் 1 படத்தை மட்டும் திரையிட்டுவிட்டு பதுங்கிக்கொள்ளவில்லை.

sivaa
7th February 2021, 09:53 AM
சாதனையில் மன்னவன் அண்ணன் சிவாஜி கணேசன்.
முதன் முதலாக-தொடர்ந்து 3 படங்கள் வெளிவந்து 3 படங்களும் 100 நாட்கள் ஓடியது.

ஆண்டு 1958.

உத்தம புத்திரன் 7/02/1958
பதிபக்தி 14/03/1958
சம்பூர்ண ராமாயணம் 14/04 /1958


https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135199590_403525127598068_7008815624281791427_n.pn g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=fpzUoHzC1KAAX_99FSo&_nc_ht=scontent-ort2-2.xx&oh=e728d4bdd94d7f45bbbd184468ef38f0&oe=60439060
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/145415655_2853946831547110_3168931097077241897_n.p ng?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=90V8ZxI59S4AX-2vwc_&_nc_ht=scontent-ort2-2.xx&oh=3c5e5790c916afcfb0542d1d5da9cac9&oe=60461EB5

sivaa
7th February 2021, 08:51 PM
பூங்கோதை 7/02/1953----இன்று 68 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/145944654_2844883319059811_6301528316204354059_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=RItT3WbNOsAAX92R6BM&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=f81e4a0a282d0ab10f9ba3dc8fdb6320&oe=60457B3C

Thanks Vcg Thiruppathi

sivaa
7th February 2021, 09:19 PM
வீரபாண்டிய கட்டபொம்மன்

மதுரையில் முதன்முதலாக 2 லட்சத்துக்குமேல் வசூல் தந்த படம் இதுதான் (வீரபாண்டிய கட்டபொம்மன்)

மதுரை -நியூ சினிமா 181 நாட்கள் வசூல் 2,77,365.71
..................................வரி நீக்கிய வசூல் 2,08,113.44
.........................விநியோகிஸ்த்தர் பங்கு 1,13,583.55

முதன் முதலாக கேரளா-திருவனந்தபுரத்தில் 100 நாட்கள் ஓடிய படம் வீ கட்டபொம்மன்.

தமிழகத்தில் பல வெளியீடுகளுக்குப் பிறகு 17.09.1984 அன்று திரையிடப்பட்டபொழுது
சென்னையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா, மதுரையில் 49 நாட்கள்.

சிவாஜி மறைந்த பின் 4/03/2002 ல் திரையிடப்பட்டபோது
மதுரரு சிந்தாமணியில் 2 வாரங்களும் தொடர்ந்து மதுரை சுற்றிலும்
143 நாட்கள் ஓடியது.

இதே ஆண்டில் (1959) பாகப் பிரிவினை மதுரை சிந்தாமணியில்
216 நாட்கள் ஓடி முதன் முதலாக ஒரே ஆண்டில் 2 வெள்ளி விழா படங்கள்
என்ற சரித்தரத்தை உருவாக்கியது.

முதன் முதலாக இந்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.



முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்துக்குமேல் வசூல் செய்து தந்த படம் இதுதான்.
மதுரை சிந்தாமணி 216 நாட்கள் வசூல்-3,36,180.54

(இமேஜில் உள்ளவை)

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/146383242_119724343370733_2323778434432724505_n.pn g?_nc_cat=101&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=QLvutWNNlsAAX9BbN1X&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=3510939560d37c0a289dd03053c70721&oe=60446450

sivaa
9th February 2021, 11:51 PM
நிச்சய தாம்பூலம் 9/02/1962 ----59 ஆண்டுகள் நிறைவு

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/146281251_2217255775073119_881573909866523077_n.jp g?_nc_cat=111&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=hSr7SO6e04YAX_aeWKa&_nc_ht=scontent-ort2-2.xx&oh=e99a12e0990c31fa6e8baa12ad798ada&oe=6047E3D8

sivaa
9th February 2021, 11:53 PM
சித்தூர் ராணி பத்மினி 9/02/1963 ----58 ஆண்டுகள் நிறைவு

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/147382500_2846203838927759_9092492801166294973_o.j pg?_nc_cat=108&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=Ie4xDdF9Jr4AX88iM3A&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e5a7b3355c73e209dd43612732546853&oe=6049B804

Thanks Vcg Thiruppathi

sivaa
15th February 2021, 07:54 AM
வணக்கம் உறவுகளே!
கடந்த சில நாட்களாக இங்கு வந்து பதிவுகள் இட முடியவில்லை.
பல காரணங்கள், தொடர்ந்தும் அதே நிலைதான்.

நேரம் கிடைக்கும்பொழுது முடிந்தவரை அவ்வப்போது வந்து
விடயங்களை பதிவிட முயற்சிக்கின்றேன்.

நன்றி.

sivaa
15th February 2021, 08:27 AM
இது சத்திய யுகம்!. இனி உண்மைகள் மட்டுமே இங்கு கோலேச்சும்.

நடிகர் திலகம் அவர்கள் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமல் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.

காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அது தற்போதும் சிவாஜி கணேசன் காலனி என்று அழைக்கப்படுகிறது.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/150060539_968916936975479_7026880011212045956_n.jp g?_nc_cat=101&ccb=3&_nc_sid=b9115d&_nc_ohc=H7WI_xh7oMIAX9BxmZg&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=805a2a274ce638ec8d24e2c08a9ba7b0&oe=604F3E87

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/150885969_1651738408370681_4988488315663754772_n.p ng?_nc_cat=100&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=J9SlsdVe6akAX9XRIF5&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=a9cd46278270468b680160c0229b83d1&oe=605107E6

Thanks RSundaram RSundaram

sivaa
15th February 2021, 08:36 AM
நடிகர்திலகம்......
ஆரம்ப கல்வி கற்ற பள்ளிக்கூடம்.
யதுகுல சங்கம். நடுநிலைப்பள்ளி.
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/144803043_721994992040460_1369590687610546525_n.jp g?_nc_cat=104&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=pKf49iDb70UAX-J2Dto&_nc_ht=scontent-ort2-2.xx&oh=0b97d9c8d450c91efb7ec8bdd9f83f9f&oe=604DD194
Thanks Sivaji Palanikumar

sivaa
18th February 2021, 09:59 PM
கொடை வள்ளல் !

ஞான ஒளி படப்பிடிப்பில் சிறிது ஓய்வு நேரம் .தனது நண்பர்களிடம் உற்சாகமாக தெரிவித்தார் இதை.

"வரும் 23ம் தேதி எனக்கு முக்கியமான நாள். அன்று நான் நடித்த ராஜா படம் விமான படை வீரர்களின் துனைவியரின் ஷேம நிதிக்காக தேவி பாரடைசில் திரையிடப்படுகிறது.

முதலில் பாலாஜி இச்செய்தியை என்னிடம் தெரிவித்த போது மிகவும் பெருமைப்பட்டேன். " 23 ம் தேதியன்று என்னை மேடைக்கு வரும்படி அழைத்தனர்.எனக்கு வெளியூரில் அன்று படப்பிடிப்பு இருந்தது.அதற்கு மறுநாள் "ராமன் எத்தனை ராமனடி படத்திற்காக பரிசு வாங்க பம்பாய் செல்ல வேண்டும். ஆனால் எப்படியாவது நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானித்தேன். அதற்காக வெளியூர் படப்பிடிப்பு தேதியை தள்ளி வைத்து சென்னைக்கு வந்து மேடையில் தோன்றுவது என்று முடிவு செய்தேன்.

விமான படையில் கணவனை இழந்து கணணீரும் கம்பலையுமாக தவிக்கும் பெண்களுக்கும் , அவர்களது குழந்தைகளுக்கும் உதவி செய்வது என் கடமை. ஒவ்வொருவருடைய கடமையும் அது தான் நாட்டுக்காக அந்த வீரர்கள் ஆற்றியுள்ள பணி மலை போன்று உயர்ந்தது.அவர்களின் குடும்ப இன்னல்களை நாம் முழுமையாக துடைக்க முடியாது. ஆனால் நமது நன்றிக்கு சிறு அடையாளமாக இந்த நிதி வசூல் அமையட்டும்.

இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு கூறினார் சிவாஜி கணேசன்.

நன்றி ! பத்திரிக்கை பதிப்பில் இருந்து

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/150795259_749338586015015_2591449039057821659_o.jp g?_nc_cat=100&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=zQfVnm4lspAAX8mye7f&_nc_oc=AQmVvtkj2HNywRbSZsQTrjoks8iiQWEYBqiskgdRhOw s4SS2DxXa7Ph4Q1xRbmGJffs&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=c9eb28612400099b780551c4965ee05f&oe=6053D191
Thanks Gansesh Pandian

sivaa
24th February 2021, 06:56 AM
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4

'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்.
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து

இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/152256676_1186127325156894_7550655600523787205_o.j pg?_nc_cat=101&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=mKGDdjqYzl8AX8DsDy8&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ac6c24eb6cd688501bae8f7d612688b6&oe=6059EB37

Thanks Vaannilaa Vijayakumaran

sivaa
24th February 2021, 07:01 AM
தமிழகத்திலேயே ....
இல்லை இல்லை
உலகத்திலேயே ......
முதல் சிவாஜி சிலை இதுதான்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருபுவனம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சிலை

அண்ணன் சிவாஜி இறந்து 30 நாள் அன்று நிறுவபட்டது இந்த சிலையை வைத்தவர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல...

அன்றாடும் கூலி வேலை நெசவு தொழில் பட்டுப்புடவை நெசவு செய்யும் சாமனியவர்கள் நிறைந்த நல்ல மனசு நிறைந்த எளியவர்கள் செளராஷ்டிரா இனத்தை சேர்ந்த
தேச பக்தி தெய்வ பக்தி நிறைந்தவர்கள்

இவர்களது ஆர்வமிகுதி அண்ணன் சிவாஜி மீது கொண்ட பக்தி அண்ணன் சிவாஜி அவர்கள் இறந்து 30 ம் நாளிளேயே சிலை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்

அதே போல் அவர்கள் சிலை வைத்துள்ள இடம் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் வைத்துள்ளனர்

இது சிமென்டால் ஆன சிலை இதை விரைவில் வெங்கல சிலையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் இதே போல் தான் தஞ்சையிலும் இதே செளராஷ்டிரா இன சகோதரர்கள் உலகத்திலேயே மார்பளவு சிமெண்டால் ஆன அண்ணன் சிவாஜிக்கு சிலை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது

என்றும் பிரியருடன்
சதா. வெங்கட்ராமன்
தஞ்சாவூர்


தமிழகத்திலேயே ....
இல்லை இல்லை
உலகத்திலேயே ......
முதல் சிவாஜி சிலை இதுதான்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருபுவனம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சிலை

அண்ணன் சிவாஜி இறந்து 30 நாள் அன்று நிறுவபட்டது இந்த சிலையை வைத்தவர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல...

அன்றாடும் கூலி வேலை நெசவு தொழில் பட்டுப்புடவை நெசவு செய்யும் சாமனியவர்கள் நிறைந்த நல்ல மனசு நிறைந்த எளியவர்கள் செளராஷ்டிரா இனத்தை சேர்ந்த
தேச பக்தி தெய்வ பக்தி நிறைந்தவர்கள்

இவர்களது ஆர்வமிகுதி அண்ணன் சிவாஜி மீது கொண்ட பக்தி அண்ணன் சிவாஜி அவர்கள் இறந்து 30 ம் நாளிளேயே சிலை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்

அதே போல் அவர்கள் சிலை வைத்துள்ள இடம் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் வைத்துள்ளனர்

இது சிமென்டால் ஆன சிலை இதை விரைவில் வெங்கல சிலையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் இதே போல் தான் தஞ்சையிலும் இதே செளராஷ்டிரா இன சகோதரர்கள் உலகத்திலேயே மார்பளவு சிமெண்டால் ஆன அண்ணன் சிவாஜிக்கு சிலை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது

என்றும் பிரியருடன்
சதா. வெங்கட்ராமன்
தஞ்சாவூர்

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/152041971_1850614698428121_8776226034474678200_o.j pg?_nc_cat=108&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=AStVDk4RMBwAX8r2Xhx&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c19d73719e51f3089390d38e6a7d0db4&oe=605A7D79

Thanks Senthilvel Sivaraj Sivaji Group

sivaa
26th February 2021, 05:13 AM
வட சென்னை என்பது சென்னை மாநகரம் உருவான காலந்தொட்டு மக்கள் தொகை மிகுந்த, பழைமை வாய்ந்த கோயில்கள், வரலாற்றுப் புராதானச் சின்னங்கள், கட்டடங்கள் நிறைந்த, குறுகலான ஆனால் நீண்ட சாலை வசதிகளைக் கொண்ட பகுதியாகும்.
இங்கு பிராட்வே, கிரௌன்,கிருஷ்ணா, பிரபாத், பாரத், பத்மநாபா, மகாராணி, அகஸ்தியா, தங்கம், பிரைட்டன், முருகன்,பாண்டியன் மினர்வா,தமிழ்நாடு என்று ஏராளமான திரையரங்குகள் அமைந்திருந்தன. தற்போது இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெறும் 5 மட்டுமே.
தமிழகத்தில் சினிமா தோன்றிய காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள்
இப்பகுதியை மையமாக வைத்தே திரையிடப்பட்டன.
தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' முதன்முதலாக வெளியானதும் இதேப்பகுதியில்தான்.
எல்லா நடிகரின் திரைப்படங்களும், இப்பகுதியில் திரையிடப்பட்டு வெற்றிவிழா கண்டிருக்கின்றன. ஆனால் எல்லா காலங்களிலும் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி!
அய்யன் நடிகர் திலகத்தைத் தவிர.
ஆம்.
நடிகர்திலகம் நடித்து 53 திரைப்படங்கள் இப்பகுதியில், பராசக்தி தொடங்கி படையப்பா வரை நூறு நாள் முதல் வெள்ளிவிழா வரை ஓடி அசத்தியிருக்கின்றன.
அதிலும், கிரௌன் திரையரங்கில் மட்டும் 3 படங்கள் வெள்ளி விழாவும், 30 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
காலங்கள் தோறும் ஆக்சன் பட நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் எந்தவொரு நாயகர்களுக்காவது, வட சென்னையில் இந்த எண்ணிக்கையில் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.
விவவரம் தெரிந்தோர் பதிவிடலாம்.
அய்யனின் வெற்றிப்படப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ...

1. பிராட்வே தியேட்டர்
பெண்ணின் பெருமை 105 நாள்
தெய்வப்பிறவி 107
படித்தால் மட்டும் போதுமா 104

2. கிருஷ்ணா தியேட்டர்
பாவ மன்னிப்பு 127
பாலும் பழமும் 127
ஆலயமணி 105
வாழ்க்கை 117

3. பிரபாத் தியேட்டர்
கை கொடுத்த தெய்வம் 100
கர்ணன் 100

4. மகாராணி தியேட்டர்
பச்சை விளக்கு 105
நவராத்திரி 101
அந்தமான் காதலி 100
மருமகள் 117

5. பாரத் தியேட்டர்
பராசக்தி 100
படையப்பா 126

6. அகஸ்தியா தியேட்டர்
சிவந்தமண் 117
நீதிபதி 125
படிக்காதவன் 123
தேவர் மகன் 103

7. எம்.எம். தியேட்டர்
ஒன்ஸ் மோர் 133

8. கிரவுன் தியேட்டர்
அமரதீபம் 125
வணங்காமுடி 100
வீரபாண்டிய கட்டபொம்மன் 111
பாகப்பிரிவினை 104
படிக்காத மேதை 116
விடிவெள்ளி 104
பாசமலர் 133
திருவிளையாடல் 179
சரஸ்வதி சபதம் 133
கலாட்டா கல்யாணம் 106
தில்லானா மோகானாம்பாள் 111
தெய்வமகன் 100
வியட்நாம் வீடு 103
எங்கிருந்தோ வந்தாள் 100
சவாலே சமாளி 107
பாபு 102
பட்டிக்காடா பட்டணமா 111
வசந்தமாளிகை 140
பாரதவிலாஸ் 100
எங்கள் தங்க ராஜா 102
கௌரவம் 102
தங்கப்பதக்கம் 176
அவன்தான் மனிதன் 113
மன்னவன் வந்தானடி 100
தீபம் 106
அண்ணன் ஒரு கோயில் 114
தியாகம் 111
திரிசூலம் 175
ரிஷிமூலம் 104
வா கண்ணா வா 100
தீர்ப்பு 105
சந்திப்பு 100
வெள்ளை ரோஜா 104
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்



Thanks Thoppumani Thoppiah--(One and only sivaji)

sivaa
3rd March 2021, 09:16 PM
மனோகரா வெளியான நாள் 3/03/1954 .---இன்று 67 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/156461352_3930415313689984_1329966506361209318_o.j pg?_nc_cat=111&ccb=3&_nc_sid=b9115d&_nc_ohc=Cf5r1R2SxrcAX-oYuOW&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e4d1697aa580cca9d8c9779ac6cee72a&oe=6065B28A

sivaa
3rd March 2021, 09:19 PM
மதுரை சென்ரலில் 19/03/1921 முதல்

நடிகர் திலகத்தின் முன்று தெய்வங்கள்.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/155486110_3839892382794290_5021653991851769130_n.j pg?_nc_cat=102&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=IReLULiV0-gAX9C2CkQ&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b37684350517aec6d315bbe015295ebd&oe=60647616

நன்றி சேகர் பரசுராம்

sivaa
3rd March 2021, 09:22 PM
நவராத்திரி- 1964.

அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

இதில் ஒரு விஷயம்.

எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.

4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை கை குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனந்தனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது

By Gopal
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/150579273_4004185432954668_4798452245789137526_n.j pg?_nc_cat=110&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=AcAHiHQjJJIAX_0BKAr&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=d1e89a4e61f06ec8d2a6fb37f4da36e4&oe=60667B5D


நன்றி கோபலகிருஷ்ணன் சுந்தரராமன்

sivaa
3rd March 2021, 09:39 PM
கெத்து இல்லை

சிவாஜிக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலையெல்லாம் கிடையாது.
இப்போதுள்ள ஹீரோக்களைபோல ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும்,
சாகஷங்கள் செய்து ஒரு ஆல் டைம் ஹீரோவாக உலா வரவேண்டும் ,
கெத்து காட்டவேண்டும், இப்படியெல்லாம் யோசித்ததே கிடையாது.
அப்படி கேரக்டடர்கள்தான் வேண்டுமென்று அடம் பிடித்ததும் கிடையாது.
நல்வனோ ,கெட்டவனோ, கூனோ ,குருடோ, நொண்டியோ, முடமோ,
பொலிநோ , திருடனோ எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று ,
நிறைவாக நடித்துத் தந்த அசாத்திய கலைஞன்.




https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/156214077_888517272060562_6310332979163186789_o.jp g?_nc_cat=101&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=z2wLMLRrnmcAX8uRnVX&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=a757536856978939e934adc3107cc9e0&oe=60637710

Thanks Kb Murugan

sivaa
3rd March 2021, 09:48 PM
கொடை வள்ளல் " சிவாஜி கணேசன் "

​*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கியுள்ளார்

*கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.

* பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம் இன்றைய மதிப்பில்
பல லட்சங்கள்

*மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்

*கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.

*தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.இன்றைய மதிப்பில் பல கோடிகள்

*1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.

*சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.

*சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.

*தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.இன்றைய மதிப்பில் கோடிகள்

*தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய 17 லட்சம் இன்றைய மதிப்பில் பல கோடி வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.

*சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.

*1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்தவர்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்

*1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தைபோர் நிதியாக கொடுத்தார்
இன்றைய மதிப்பு பல லட்சங்கள்

* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.

*1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை
பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின்சிறப்பைஉலகிற்கு
உணர்த்தினார்.இன்றைய மதிப்பில்
சில கோடிகள்

*பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை யுத்த நிதியாக அளித்தார்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்

* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம் இன்றைய மதிப்பில் கோடி நன்கொடையாக அளித்தார்.

*பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.

*கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.

*வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.

*நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.

*சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.

*1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.

* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை இன்றைய மதிப்பில் கோடிகள்

*1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

*1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். இன்றைய மதிப்பில் பல லட்சம்

*1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

*1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம்
ரூ 5 லட்சம் வழங்கினார்.இன்றைய மதிப்பு பல கோடி


*1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார். இன்றைய மதிப்பில் பல லட்சம்

*1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார் இன்றைய மதிப்பு பல லட்சம்

*திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நடிகர் சிவாஜி, ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் நடித்தார். அப்போது கிடைத்த வருவாய் ரூ.1 லட்சத்தை, திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கட்டிடம் கட்ட நன்கொடையாக வழங்கினார்.



https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/154762078_717258542296350_8366508589635893817_n.jp g?_nc_cat=107&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=UaRrWaSN8_sAX9S2zZe&_nc_ht=scontent-ort2-1.xx&oh=d5b940beb3abab6089c564d8fcbbc0f6&oe=60654389நன்றி வள்ளியம்மை

sivaa
3rd March 2021, 09:51 PM
எல்லாம் இருக்கணும்.எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.இப்படி செய்த படமே ராஜா! ராஜாவின் ஆட்சியில் குறை இருக்கலாமோ?
ராஜான்னா ராஜாதான்..
முன்னோடிகள் எல்லாம் பிழியோ பிழியென்று சாரெடுத்து விட்டார்கள்
ராஜாவை.நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது ?யாருடைய பார்வையிலும் ராஜா அழகோ அழகு.
ஒரு புதிய பட டிரெயிலரில் தண்ணீரில் இருந்து வில்லை எடுக்கும் காட்சி வரும்.வில்லை எடுக்கும் போது தண்ணீரும் கனமாக மொந்தமாக வில்லுடன் சேர்ந்து வரும்.ஸ்லோமோஷனில் க்ராபிக்ஸ் டெக்னிகல் உத்திகளில் ஷாட் அமைக்கப்பட்டு பார்ப்பவரை ஈர்க்கும்.ராஜாவை பாருங்கள்...ஒரு பொருளை எடுப்பதாகட்டும், கையாள்வதாக ஆகட்டும், கைகளை விரிப்பதில் ,கால்களை வைத்திருப்பதில் வார்னிஷ் முடிந்த வேலைபோல் பளீர்! பளீர்!
நடிகர்திலகத்துக்கு உவமை என்று எதைக் கூற முடியும்? ராஜாவில் நடிகர்திலகத்தின் பிரசன்டேசனை விக்கிரமாதித்தன் வேதாளம் போல் விடுகதை கதைப் புதிர்களாக ஒரு புத்தகம் போடலாம்.
சிகரெட் பற்றவைக்கும் காட்சி. சிறையில்.லைட்டர் நீட்டுவார் மனோகர் ..ஆரம்ப அறிமுகமாக காட்சி இது.எவ்வளவு சாதாரணமான காட்சி தான் இது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? ஆனால், ஸ்கிரீனில் காண்பிக்கும் போது அதிரி புதிரி அமர்க்களம் தான்! ரசிகர்களின் கூட்டமிருக்கும் போது, இந்த காட்சியை பெரும்பாலும் சரியாகவே பார்க்க முடியாது.அந்தளவுக்கு சிகரெட் லைட்டருக்கே விசில் பறக்கும், கை தட்டலில் அதிரும்.அலட்டிக் கொள்ளாத நடிப்பு பாணி இதில் முழுதும் ..பளஸ் அட்ரா விசில் ஸ்டைல்..ஸ்டைல்..ஸ்டைல்..
நின்றால் ஒரு ஸ்டைல்
நடந்தால் ஒருஸ்டைல்
பார்த்தால் ஒரு ஸ்டைல் ...
என்று ஏகத்துக்கும் சர்வ சாதாரணமாய் அள்ளி வீசியிருப்பார்.
போலீஸ்காரனை விரோதம் பண்ணிக்காதே, நண்பனாகவும் பழகாதே, பொதுவா இரு! ஆர் எஸ் மனோகரிடம் சொல்வார்..முதல் டயலாக் இது, படத்தில் நடிகர்திலகத்துக்கு..
அது என்ன அப்படியொரு வாய்ஸ்..ரொம்ப ரொம்ப கவர்ச்சி, காந்தம் அதில்...ரீவைண்ட் பண்ணி பண்ணி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருக்கும்.ஆராய்ச்சி செய்தால் ஆயுள்தான் முடியும். அந்தக் குரல் ஒரு ஹிப்னாடிசக் குரல் .

நீ வரவேண்டும் என காத்திருந்தேன்....
வந்தார். வென்றார்.காத்திருக்க வைக்கவில்லை.பாலாஜி படமாச்சே.டாண் என்று ரிலீஸ் ஆகி விட்டது.இதற்கு முன் வந்த பாபுவில் நடித்தவரா? பாபுவில் ,கலர் கலராய் ரசிக்க முடியவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு ராஜா ஒட்டு மொத்த திருப்தி செய்து விட்டது.ராஜாவின் டை பறப்பது போல ரசிகர்களுக்கும் உற்சாகம் பறந்தது.
பாயிண்ட் டூ பாயிண்ட் நான் ஸ்டாப் ரன்னிங் வேக காட்சிகள் தான் படத்தில்.அந்த வேகம் ஆரம்ப காட்சிகளில் இருந்தேதான்.ராஜாவின் என்ட்ரியே 16.30 நிமிடங்கள் கடந்துதான்.
மனோகரின் தகவல்,ஜெ,வை பார்ப்பது ,தன்னை எடை போடும்படி நடித்தல் ,அடுத்து பாலாஜி கும்பல், அதில் இணைதல், பாலாஜி விசாரணை, சேரில் கட்டி வைத்து அடித்தல் ...பாலாஜிக்கு நம்பிக்கை வரும்படியான செட்டப்புகள்,தொடர்ந்து பாலாஜியின் சந்தேகம் தீரல்......
இதற்கு பின் இப்படியொரு காட்சி அமைப்பு தான் வருமென்று யார் தான் நினைத்திருப்பார்கள்? புலியை கட்டிவைத்து அடித்து பட்டினி போட்டு சில நேரம் கழித்து அப்புலியை விடுவிக்கலாம் என்று பக்கத்தில் போனால், ஆனால் அது அடிபட்ட புலியாயிற்றே? என்ன நடக்குமோ, அது நடக்கும் .நான்கு முனை தாக்குதல், கை வீச்சு ,ஜூடோ கட் ,உதை என்று அதிரடியோ அதிரடி தான்..உத்திகளில் ,அசைவுகளில்
ஸ்பீடில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு அது.ரொம்பவே பெர்பெக்டாக ,அதிரடியில் மாஸ் காட்டியிருப்பார் நடிகர்திலகம்.
இந்த உருவல்தானே 2013 விஸ்வரூபம்...
ரந்தாவிடம் பந்தாவாக பைட் செய்யும் காட்சிகள் வரும் போதுதான் ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பார்க்கிறோம் என்று ஞாபகம் வரும்.சண்டைக்காட்சி என்பதாலும் அந்த பாணி படம் என்று சொல்லப்பட்டதாலும் தான் அது.அதுவரை ராஜாவின் ஸ்டைல்களால் அரண்ட மனம் வேறு எதையும் நினைக்க தோணவேயில்லை.ஜேம்பாண்டாவது ஒண்ணாவது! ராஜாவுக்கு முன்னே!

எல்லா படங்களையும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் செய்வதில்தான் நடிகர்திலகம் விரும்பினார்.அதனால் தான் ராஜாவை போல் அடுத்தது செய்யவில்லை.இதே மற்ற நடிகர்கள் செய்திருந்தால் ராஜா போலவே பத்து படங்கள் வந்திருக்கும்.ஒரு ராஜா! ஒரு அரியாசனம்!!.இது நடிகர்திலகத்தின் கொள்கை ..
கோயில் நகை கொள்ளை பிளான்,அதில் கோகுலத்தில் கண்ணன் இல்லையோ பாடல், நாகையாவின் தவிப்பு, என செல்லும் திரைக்கதையின் முடிவில் தங்கப்பதக்கம் இளமை சௌத்ரீயாக வத்து நிற்பார் ராஜா! புல் போலீஸ் யூனிபார்மோடு.இத்தனை நேரம் ஸ்டைல் காட்டிய ராஜாவா அது! செம அதிர்ச்சி பாலாஜி கூட்டத்திற்கு மட்டுமல்ல.ரசிகர்களாகிய நமக்கும் தான்.ஆனால் அது நமக்கு இன்ப அதிர்ச்சி!
பின் ரங்காராவை சந்திப்பது,
நம்பிக்கை பெறுவது என முக்கிய கட்டங்களாய் காட்சிகள் ஒவ்வொன்றும் ஆவலை தூண்டிக் கொண்டேயிருக்கும்.திரைக்கதை ஸ்பீடில் க்ளைமாக்ஸ் வந்து நிற்பதே
தெரியாது.நீண்ட க்ளைமாக்ஸ் கொண்ட தமிழ் சினிமாக்களில் ஒன்று .எத்தனை ரசனையானது என்பதில் டாப் என சொல்லலாம்.அதிக ஆக்ஷன் இல்லாமல் பேசி பேசியே பல்ஸை எகிற வைப்பார்கள் அத்துணை நடிகர்களும்.தேர்ந்த நடிகர்கள் ...
ஆர் எஸ் மனோகரின் அலறல்
ரங்காராவின் மிரட்டல்
பண்டரிபாயின் கதறல்
என்று தியேட்டரே அதிறும்.
ராஜாவின் சிரிப்பை என்னவென்று சொல்வது? சொல்லாதவர்கள் தான் யார்? இது போன்ற காட்சிகளில் நடிகர்திலகத்தை தவிர யாரும் நினைவுக்கு வர மாட்டார்கள்.மற்ற காட்சிகள் மட்டும் என்ன? மஞ்சள் கலர் உடைகளை ஆண்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். உடுத்தவும் மாட்டார்கள்.ஆனால், நடிகர்திலகத்துக்கு மட்டும் எப்படி அப்படி அந்த உடை பிரமாதப்படுத்துகிறதோ?
பண்டரிபாயை அடிக்கையில் ,நடிகர்திலகம் நடிப்பால் மொத்த க்ளைமாக்ஸையும்
தன் பக்கம் இழுத்து விடுவார்.
ராஜா தீபாவளி படமல்ல.
ஆனால் ரசிகர்களுக்கு அன்றுதான் தீபாவளி!
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png
செந்தில்வேல் சிவராஜ்

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/153646215_1855249501297974_7019291365466032265_o.j pg?_nc_cat=107&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=fD5QDFzw64YAX8ff_XJ&_nc_ht=scontent-ort2-1.xx&oh=dd75d18a61efe4135468368183e675be&oe=60635EF4

நன்றி செந்தில்வேல் சிவராஜ் --சிவாஜி குறூப்

sivaa
3rd March 2021, 09:55 PM
நடிகர் திலகம் நடித்து மார்ச் மாதம் வெளியான திரைப்படங்களின் பட்டியல்.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/153742942_1189964591439834_668650538890519086_o.jp g?_nc_cat=109&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=_mrbyMUpmNcAX945S2T&_nc_oc=AQmpWVc-sGwkxeG74kOiAB814O5IOPhpA2f36ZZcQ6BKPbAX1KjMSAcV0X jQ0bKyOco&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=b2e8ee22aba550c4c1d64acd41dacc56&oe=60659403

Thanks Vaan nilaa

sivaa
4th March 2021, 08:17 AM
குறவஞ்சி 4/03/1960---இன்று 61 ஆண்டுகள் நிறைவு.

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/155118974_2390687967743104_4096200101187933908_n.j pg?_nc_cat=107&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=qhkN9EEqGrAAX-YvBXI&_nc_ht=scontent-ort2-1.xx&oh=2c37140bb3ab1022f4a95cfecaf16f51&oe=60671D51

Thanks Petchimuthu Sudalaimuthu

sivaa
4th March 2021, 08:22 AM
தியாகம் 4/03/1978 --இன்று 43 ஆண்டுகள் நிறைவு .
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/157109205_273705210788471_2064773928128625377_n.jp g?_nc_cat=107&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=8KQHsy-HNPAAX8dbH7Z&_nc_ht=scontent-ort2-1.xx&oh=bb7558a488ec564faa5f2cea5522df09&oe=6067886Ahttps://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/156775319_810795329786767_1912733087992358119_n.jp g?_nc_cat=102&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=CfHZfWEQhw0AX_pdKLV&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=68f25572c39d6afa33d7d2d924e2ea00&oe=606577FE

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/156704908_4088744117803048_6519755012368020914_n.j pg?_nc_cat=104&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=ihG6YHN5goAAX_MLTDh&_nc_ht=scontent-ort2-1.xx&oh=b7972947726ae3550ecccdb43ee6a8fd&oe=606565AE

sivaa
6th March 2021, 12:20 AM
மனித வளம் பெற நடிகர் திலகம் வழங்கியது.
உன்னை மிஞ்சும் நடிகன் உலகில் தோன்றவில்லை.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/156210388_1689850277864054_3946485332621410849_o.j pg?_nc_cat=102&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=zgJauNy31fcAX8715N8&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=f1582ac5791e2facd70f8ca60937d6a3&oe=606646BD


Thanks Vijaya Rai Kumar

sivaa
7th March 2021, 10:32 PM
ஒரு நாட்டின் அதிபர் இந்திய விஜயம் மேற்கொண்டு பிரதமரை பார்த்த பிறகு,
உங்கள் நாட்டு நடிகர் சிவாஜி அவர்களை பார்க்கவேண்டும் என்று கூறி,
சிறப்பு protocal (நெறிமுறை) அடிப்படையில் சென்னையில் வந்து அவரை கண்டது,
உலகளலில் திரு சிவாஜி அவர்களை மட்டுமே.
கண்டவர் எகிப்து அதிபர் திரு நாசர் அவர்கள்.

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/156738691_866849077222299_1271473679582169215_n.jp g?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=8Pd_a4S4kLUAX9MsE9D&_nc_ht=scontent-ort2-1.xx&oh=a2c157ea5dbb18990c5353db786132bb&oe=606AD3A6

Thanks K V Senthil Nathan

sivaa
8th March 2021, 08:14 PM
நடிகர்.திரு.M.N. நம்பியார் அவர்கள்.

உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.

யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமையைத் தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/158774705_760038804944993_6045217548706895674_o.jp g?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=jMvVFXGuzSIAX-P_DrC&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=1d6a4e80ebc31391ab7f0262c374ca0e&oe=606D6A93


Thanks Ganesh Pandian (Nadigar thilagam sivaji visirigal)

sivaa
12th March 2021, 04:56 AM
இன்று முதல்(மார்ச் 12 )
சேலம் கீதாலயா,
நெல்லிக்குப்பம் விஜயா&
நடுவீரப்பட்டு ராஜா. நடிகர் திலகத்தின் "கர்ணன்"குதூகல ஆரம்பம்.

Thanks Divyafilms Chokkalingam

sivaa
25th March 2021, 08:04 AM
வணக்கம் மய்யம் இணைய உறவுகளே!

கடந்த 10 நாட்களுக்குமேலாக இணையத்தில் உள்நுழைந்து பதிவுகள் இடமுடியாமல் இருந்தது.
அட்மின் RR அவர்களுடன் தொடர்பு கொண்டதில் அவர் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது.
RR அவர்களுக்கு மிகவும் நன்றி.

பலருக்கும் உள்நுழைவதில் பிரச்சினை இருப்பது தெரிகிறது எனவே உறுப்பினராக இருந்தும்
உள் நுழைவதில் தடங்கல் உள்ளவர்கள் கீழ்க்காணும்
ஈ மெயிலில் RR அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உங்கள் தடங்கல்களை
நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
நன்றி.

rrprivate-hubadmin@yahoo.com

sivaa
25th March 2021, 08:26 AM
அட்மின் அவர்களுக்கு வணக்கம்!

எனது hub i d யில் பல தவறுகள் காணப்படுகின்றது.

நான் புதிய உறுப்பினர் என காட்டுகிறது.

இருப்பிடம் தவறாக காட்டுகிறது;

பழைய பதிவுகள் 0 என காட்டுகிறது.

தயவு செய்து இவற்றை கவனித்து நிவர்த்தி செய்யுங்கள் நன்றி.

sivaa
27th March 2021, 04:31 AM
குலமா குணமா? வெளியான நாள் 26/03/1971

50 ஆண்டுகள் நிறைவு5770

sivaa
27th March 2021, 04:54 AM
·
இன்று முதல்(19-3-2021) திருச்சி தஞ்சை மாவட்ட 21திரை அரங்குகளில் நடிகர் திலகத்தின்" கர்ணன் ".குதூகல ஆரம்பம்.
1. திருச்சி- ரம்பா La cinima.
2,திருச்சி- சோ னா மீனா,
3.தஞ்சை -ஜுபிட்டர்,
4. மாயவரம்-கோமதி,
5. பெரம்பலூர் -கிருஷ்ணா
6. புதுக்கோட்டை -வெஸ்ட்,
7. காரைக்கால் -La-cinima,
8.கரூர் -கவிதாலாய,
9.திருவாரூர் -சோழா,
10. மன்னர்குடி-சாமி,
11. சீர்காழி -OSM,
12.பட்டுக்கோட்டை -ராஜாமணி,
13. ஆலங்குடி V.C. cinemas,
14.முசிறி -ஸ்ரீராம்,
15. T T பூண்டி -AM delux,
16. ஜெயகொண்டான் -ஜநகர்,
17. துறையூர் -லட்சுமி,
18. மணப்பாறை -உதயம்,
19. குளித்தலை -சாண்முகா,
20. அருவம்பூர் -அருணா,
21. செந்துறை -ராமசாமி.

Thanks Divyafilms Chokkalingam

sivaa
2nd April 2021, 05:12 AM
தூத்துக்குடி சத்யாவில்

2/04/2021 முதல்

ராஜபார்ட் ரங்கதுரை5771

sivaa
2nd April 2021, 05:16 AM
நடிகர் திலகம் நடித்து ஏப்ரல் மாதத்தில் வெளியான படங்கள்:-
11.இல்லறஜோதி-09/04/54
12 அந்த நாள்-13/4/54
13.கல்யாணம் பண்ணியும்
பிரம்மசாரி-13/4/54
22. உலகம் பலவிதம்-14/4/55.
37..வணங்காமுடி-12/4/57
47.சம்பூர்ண ராமாயணம்-14/4/58
61.தெய்வப்பிறவி-13/4/60
68.புனர்ஜென்மம்-21/4/61
78.படித்தால் மட்டும் போதுமா-14/4/62
87 நான் வணங்கும் தெய்வம்-12/4/63.
95.பச்சை விளக்கு-03/04/64
103.சாந்தி-22/4/65
112.பேசும் தெய்வம்-14/4/67
119.ஹரிசந்திரா-11/4/68
120.கலாட்டா கல்யாணம்-12/4/68.
138. வியட்நாம் வீடு-11/4/70
148.பிராப்தம்-14/4/71.
149.சுமதிஎன் சுந்தரி-14/4/71
170.வாணி ராணி-12/4/74
175. அவன்தான் மனிதன்-11/4/75
182.கிரகபிரவேசம்-10/4/76
201.கவரிமான்-6/04/79
208.தர்மராஜா-26/4/80
214.அமரகாவியம்-24/4/81
223.சங்கிலி-14/4/82.
234.இமைகள்-14/4/83
242.வாழ்க்கை-14/4/84
252. நீதியின் நிழல்-13/4/85
260. விடுதலை-11/4/86.
267. வீரபாண்டியன்-14/4/87
282.பசும்பொன்-14/4/95
287. படையப்பா-10/4/89
கெளரவ வேடத்தில் நடித்த படங்கள்;-
4. ஸ்கூல் மாஸ்டர் (இந்தி)-14/4/59
8. ஸ்கூல் மாஸ்டர் ( ம)-3/4/64.
16. நட்சத்திரம்-12/4/80.

(whatsapp ல் வந்தவை)

sivaa
2nd April 2021, 06:02 AM
தேர்தல் நேரத்தில் தினமலரில் நடிகர் திலகத்தை பற்றி ஒரு நல்ல செய்தி...
(ஆச்சரியமாக உள்ளது..தினமலரா இப்படி என்று) உண்மைகள் நீண்ட நாட்களுக்கு உறங்காது.......🙏🙏🙏
தஞ்சை சதா. வெங்கட்ராமன் அவர்கள் பதிவிலிருந்து......நன்றி🙏🙏🙏

5772

sivaa
12th April 2021, 07:22 AM
46வது ஆண்டுகள் நிறைவு,

அவன்தான் மனிதன்.

11/04/1975 to 11/04/2021

5773

sivaa
12th April 2021, 07:34 AM
53 வது ஆண்டு நிறைவு ஹரிச்சந்திரா. 11/04/1968.

51 வது ஆண்டு நிறைவு வியட்நாம் வீடு.11/04/1970.

46 வது ஆண்டு நிறைவு அவன்தான் மனிதன்.11/04/1975.

35 வது ஆண்டு நிறைவு விடுதலை.11/04/1986.


5774

(புகைப்படம் உதவி நன்றி முரளி சிறினிவாசன்)

sivaa
12th April 2021, 07:43 AM
இன்று 11/04/2021 நடிகர் திலகத்தின் படங்கள். ¶
==================================
1.) நடிகர் திலகம் + ஸ்ரீப்ரியா நடித்த
" வசந்தத்தில் ஒரு நாள் " மதியம் 01.05 p.m. மணிக்கு பாலிமர் டிவி. யிலும்...
2.) நடிகர் திலகம் + சாவித்திரி நடித்த
" பாச மலர் " இரவு 10.00 p.m. மணிக்கு ஜெயா டிவி யிலும்...
3.) நடிகர்திலகம் + கே.ஆர். விஜயா நடித்த " கிருஷ்ணன் வந்தான் " இரவு 10.30 p.m. மணிக்கும் ராஜ் டிவி. யிலும்...
4.) நடிகர் திலகம் + ஜெய லலிதா நடித்த
" பட்டிக்காடா பட்டணமா " மதியம் 02.30 p.m. மெகா 24 மணிக்கும்...
கண்டு களிக்கலாம். ¶

sivaa
12th April 2021, 07:46 AM
எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் சிவாஜிக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. அதை அவரே சொல்கிறார்:
'1942ம் வருஷம். ஒரு நாள் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழுவில 'மகாபாரதம்' நாடகம். நான் சகாதேவனா நடிக்கிறேன். நாடகம் பார்க்க நடிகவேள் எம்.ஆர். ராதா வந்திருந்தார். அவரோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்திருந்தார். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடக சபாவில பெண் வேடங்களிலே அந்தப் பையன் நடிப்பதாகச் சொன்னார்கள். பெண் வேடமிடும் அந்த பையனை இரவு மட்டும் எங்களோடு இருக்கச் சொல்லிவிட்டு எம்.ஆர். ராதா போய்விட்டார். மறுநாள் காலை வரை அவர் எங்களோடு தங்கினார். தன் பெயர் கணேசன் என்றார். அவர்தான் அழியாப் புகழ் பெற்ற நடிப்புலக இமயம் சிவாஜி கணேசன்.
நாங்கள் சந்தித்த அந்த ஜூன் இரவின் முதல் நிமிடத்திலிருந்து அவர் மறைந்ததாகத் தகவல் வந்த அந்த கடைசி நிமிடம் வரை சிவாஜி எனக்கு மிகவும் நெருக்கமான சகோதரராகவே விளங்கினார். 'பராசக்தி' படத்தில் வாய்ப்பு வந்த போதும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
பிறகு கதாநாயகன் வேடத்திற்கு தனக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார். பிறகு 'பராசக்தி'யில் சிவாஜிக்கு அண்ணன் வேடத்தில் நடிக்க எனக்கும் அழைப்பு வந்தது. நானும் சென்னைக்கு வந்தேன். 'பராசக்தி' படப்பிடிப்பு நடந்தது. சிவாஜி படத்தில் குணசேகரன் ஆனார். நான் ஞானசேகரன் ஆனேன். 'பராசக்தி' ரிலீசானது. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 'பராசக்தி'யை தொடர்ந்து சிவாஜியோடு மிக அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் எனக்கு கிடைத்தன.
தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன். 'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன்.
சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான். அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார். இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள்.
நன்றி ! சுதாங்கன் செல்லூலாய்டு சோழன் தொடரிலிருந்து ...

sivaa
14th April 2021, 11:14 PM
மய்யம் இணையம் உறவுகள் அனைவருக்கும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.5775

sivaa
14th April 2021, 11:21 PM
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 67 ஆண்டுகள் நிறைவு. 13/04/1954.

அந்தநாள் 67 ஆண்டுகள் நிறைவு. 13/04/1954.

தெய்வப்பிறவி 61 ஆண்டுகள் நிறைவு. 13/04/1960.

நீதியின் நிழல் 36 ஆண்டுகள் நிறைவு. 13/04/1985.

5776

sivaa
14th April 2021, 11:45 PM
உலகம் பலவிதம்.=14/4/55. 66 ஆண்டுகள் நிறைவு.

சம்பூர்ணராமாயணம்=14/4/58. 63 ஆண்டுகள் நிறைவு.

படித்தால் மட்டும்போதுமா=14/4/62. 59 ஆண்டுகள் நிறைவு.

பேசும்தெய்வம்=14/4/68. 53 ஆண்டுகள் நிறைவு.

பிராப்தம்=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.

சுமதி என் சுந்தரி=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.

சங்கிலி=14/4/82. 39 ஆண்டுகள் நிறைவு.

வாழ்க்கை=14/4/84. 37 ஆண்டுகள் நிறைவு.

வீரபாண்டியன்=14/4/87. 34 ஆண்டுகள் நிறைவு.

பசும்பொன்=14/4/95. 26 ஆண்டுகள் நிறைவு.

கெளரவதோற்றம்:-

4. ஸ்கூல் மாஸ்டர்( இந்தி)=14/4/59. 62 ஆண்டுகள் நிறைவு.

sivaa
19th April 2021, 02:11 PM
1)எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
2)‘புரோட்டோகால்’ எனப்படும் அரசு மரபுகளை மீறி, பிரதமராக இருந்த வி.பி.சிங், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய இருவரும் சென்னை வந்தபோது சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு வருகை தந்து கவுரவம் செய்தனர்.
3)நாடுகடந்த அரசு என்ற முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திபெத்தின் தலைவர் தலாய்லாமா சென்னை வந்தார். அப்போது அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜியின் ‘உத்தம புத்திரன்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்தினார்.
நன்றி ! இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து ...



5777

Thanks Ganesh Pandian

sivaa
20th April 2021, 06:59 AM
எனது ஊர் செய்யார் தாலுகா திருமனி ம்துரா வெங்கிடேசன் பட்டி அது திருவண்ணாமலை மாவட்டத்தில்.உள்ளது.
சிறிய வயதில் நான் வசிக்கும்.போது சினிமா பார்க்க் வேண்டுமென்றால். எங்கள் பக்கத்து ஊர் முனுக்ப்பட்டு வழியாக வாழப்ப்ந்தல் என்ற ஊரில் கீத்து கொட்டகையில்தான் படம்.பார்க்க முடியும்
பெரும் பாலும் நடிகர் திலகத்தின் படம் எம் ஜி ஆரின்.படம் அதிகமாக திரையிடுவார்கள்
7 கிலோ மீட்டர் நடந்து சென்று படம் பார்ப்பார்ப்போம்
என்னுடைய தாய் மாமன் திரும்னியை சேர்ந்தவர் அவர் அடிக்கடி படத்துக்கு செல்வார் எப்போதாவது ஒரு முறை என் அம்மா அதாவது அவர் தங்கையை பார்க்க வருவார் ஏதோ.அண்ணன் என்ற முறையில்
-அவர் எம் ஜி ஆர் ரசிகர் ஜாலியான சிவாஜி படங்களை பார்பார்
ஒரு முறை பாச மலர் படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவர் நண்பர்களுடன்
பல நாட்கள் அடிககடி அந்த படத்தையே பார்த்தாராம். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருபவர் அடிக்கடி வருவார் பாசமலர் படம்பார்த்தேன் குடும்பம்ன்னா என்ன.பாசம் என்ன இவ்வளவு நாள் குடுபத்த உணராமல் இருந்திட்டேன்னுன்னு தோன்றுகின்ற மாதிரி இருக்கிறது என்று வருத்தபப்டும்படி என் அம்மாவிடம் சொன்னாராம்
அதற்க்கு பின் தங்கச்சியும் தன்னுடைய மகளுக்கு சமம் என்று சிவாஜியின் படத்தை பார்த்து பாசம் குடுமப உறவுகளுக்கு முக்கியம் கொடுத்தத நான் வாழ்வது அவர்தான் காரணம் என்று -அடிக்கடி என் அம்மாவிடம் சொன்னதாக என் அம்மா என்னிடம் சொல்வார்
என்னுடைய தாய் மாமன் மாதிரி பாசமலர் போன்ற படங்களை பார்த்து எத்தனைஅன்னன்கள் தங்கைகள் மீது பாசம் கொண்டவர் இருந்திருந்தார்கள்
இன்று இருக்கின்ற இனிமேலும் இருக்க. சிவாஜியின் படங்கள் பாடமாக எப்போதும் இருக்கும்
கீதம் சங்கீதம்
இசைக்குழு
வெங்கிடேசன் பட்டி
P s முனியாண்டி
அனுபவம் இல்லாதவர்கள் கூட நடிகர் திலகத்தின் படத்தை பார்த்தால் அனுபவசாலியாகிவிடுவார்கள்

Thanks Muniyandi Saminathan

sivaa
20th April 2021, 07:09 AM
நடிகத் திலகம் எப்பொழுதும் கம்பீரம்் நேர்மை தன் நம்பிக்கை கடைபிடித்தார்
உலகை ்.எங்கும் தன் நடிப்பால். கவர்ந்தா காலக்கட்டத்தில் தன்னுடன் நடிக்கும நடிகருக்கு கொடுத்து இருக்கும் பாத்திரம் படம். வெளியே வந்தவுடன் தன்னைவிட அந்த நடிகர் அதிகமாக புகழப்படுவார் என்று தெரிந்தும் அந்த கதாபாத்திரத்தை தனக்கு கேட்காமல். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கொடுங்கள் என்று சொல்வாரம்
மனிதரில் மாணிக்கம் படத்தில் ஏ வி எம் ராஜனை கதாநாயகன் அந்த படத்தில் கொளரவ வேடம் நடிக்ர் திலகம்
பச்சை விளக்கு படத்தில சிவாஜிக்கு மைத்துனனாக நடிப்பார் எஸ் எஸ் ராஜேந்திரன்
குத்து விளக்கே்றிய கூடமெங்கும்.பூ மனக்கும் என்ற டி எம் எஸ் சுசிலா பாடிய.பாடலை எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு கொடுக்க சம்மதித்தார் நடிகர் திலகம்
வேறு எந்த நடிகராக இருந்தால் அந்த பாட்டு தனக்கு வரும்படி காட்சி அனமயுங்கள் அந்த டியூன் எனக்கு வருமபடி செய்யுங்கள் இல்லையென்ரால் அந்த பாடலஅந்த படத்தில் ் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கல்
மூன்று தெய்வங்கள் படத்தில் சிவகுமார் கதானாயகன் போன்று கதையை கொண்டு செல்வார்கள் சிவகுமார் காதலுக்கு உதவி செய்வது போல் நடிகர் திலகத்துக்கு கதைப்படி வரும் இதில் அவருக்கு ஜோடி இல்லை
கே ஆர் விஜயா சிவாஜிக்கு காதலியாக ந்டிக்க வேண்டியவர் முத்துராமனுக்கு காதலியாக ந்டிக்க சம்மதித்தார்
இன்னும்.ஏராளமாக அடிக்கிக்கொண்டே போகலாம் பல படங்களில் ஜோடி இல்லாமல் மேக்கப் இல்லாமல் நடித்தார்
பாடலே இல்லாதே படமும்.வில்லனாக ந்டித்த படமும் உண்டு
திரை உலகத்தில் ஈடு இணையற்ற ஜோடி என்று அந்த காலத்தில் சிவாஜி பதமினி வலம் வந்தார்கள் குரு ந்தட்சனை படத்தில் மான்சீக குருவாக பதமினியை ஏற்று கொண்டு பள்ளி ஆசிரியராக இருக்கும் பதமினி காலில் நம் சிவாஜி .வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கு வது போல் இருக்கும். கதைப்படி அதனால் நம் தலைவருடைய இமேஜ் கெடும் பலர் அறிவுரை கூறினார்கள் ஆனால் கதைப்படி அப்படி செய்யவேண்டும் என்றால் நடித்துதான் ஆக வேண்டும் என்று தன் நடிபபு தொழில் மீது நம்பிக்கை வைத்தார்
கடைசிக்காலக்கட்டத்தில் நான் வாழ்வைப்பேன் படத்தில ரஜினிக்கு அசத்தலான கதாபாத்திரத்தை கொடுக்க செய்தார் தேவர் மகன் கமல் கதா பாத்திரத்தை பேசும் படி செய்தார்
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பற்றி சொல்ல தேவையில்லை மற்றவர்களுக்கு உதவு மட்டுமல்லாமல் பிறரை புகழ் அடையவும் செய்தார் அவருக்கு தன் நம்பிக்கை அதிகம்
தன் நம்பிக்கைக்கு இவர் உதாரனம் வாழ்க எங்கள் நடிகர் திலகத்தின் புகழ்

Thanks Muniyandi Saminathan

sivaa
24th April 2021, 08:43 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 48
சென்ற ஒரு வாரமாக எனது டெஸ்க்டாப் கணினி சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதன் காரணமாகவே சென்ற வார பதிவை போஸ்ட் பண்ண முடியவில்லை இப்போதுதான் சரியானது.
ஒரு வார இடைவேளைக்கு Sorry இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த 15-வது நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது. அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்டா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார்.
இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை.
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து, 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல் ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள். விழா முதலில் தமுக்கம் மைதானத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து திரையரங்கிற்கு படத்தில் வருவது போல் மாட்டு வண்டி ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் குறிப்பிட்ட அக்டோபர் 22 பொதுக்கூட்டத்திற்கு பின் நடந்த வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஊர்வலத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னார். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் வசந்த மாளிகை படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும். அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றார். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
(தொடரும்)
அன்புடன்
5779
நன்றி முரளி சிறினிவாசன் ( நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் )

sivaa
24th April 2021, 08:56 AM
அமரகாவியம் 24/04/1981. 40 ஆண்டுகள் நிறைவு.

5780

Thanks Vcg Thiruppathi

sivaa
24th April 2021, 07:01 PM
சில வருடங்களுக்கு முன் சென்னை ஸ்ரீ நிவாசா திரையரங்கில் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது, அனைத்து வார இறுதி நாட்களிலும் அரங்கு நிறைந்து விடும்,
அப்படி ஒரு ஞாயிறு அன்று மாலைக் காட்சிக்கு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் பெருமளவு குவிந்து டிக்கெட் கவுண்டரில் நீண்ட கியூவில் நின்றுக் கொண்டிருந்தோம்
அப்போது இரண்டு நபர்கள் குடித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை போதையில் இருப்பது போல கலாட்டா செய்தனர் அவர்கள் கியூவில் நின்றவர்கள் மேலே விழுவதும் படம் நல்லாயில்ல டிக்கெட் வாங்காதீங்க என உளருவதுமாக இருந்தார்கள், வழக்கம் போல நடிகர் திலகம் ரசிகர்கள் அந்த மர்ம நபர்களைக் கண்டு கொள்ளாமல் நான் உட்பட டிக்கெட் கவுண்டரில் முன்னேறிக் கொண்டிருந்தோம், வெறுப்பான மர்ம நபர்கள் டிக்கெட் கவுண்டரில் உரக்க சத்தமிட்டு ரகளை செய்தனர், தியேட்டர் ஊழியர்கள் அவர்களிடம் "நீங்கள் யார் உங்களை யார் அனுப்பி சிவாஜி படம் போட்டா கலாட்டா செய்ய சொல்லி வருகிறார்கள் என்ற விபரமெல்லாம் தெரியும் அமைதியா கெளம்புங்க'" எனச் சொல்லியவாறு ஹவுஸ்புல் அறிவிப்பை தொங்கவிட்டு மர்மநபர்கள் முகத்தில் கரியைப் பூசி தியேட்டர் வளாகத்தில் இருந்து வெளியேற்றி கேட்டை இழுத்துப் பூட்டினார்கள்,
நடிகர் திலகம் திரைப்படங்கள் திரையிடும் போதெல்லாம். இது போன்ற சம்பவங்கள் பல திரையரங்குகளில் நடந்ததுண்டு,

5781

5782

Thanks Sekar

sivaa
25th April 2021, 09:10 AM
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி அழைத்து வரும் காட்சிதான் இது.
பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார். அடிக்கல் நாட்டும்போது நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், பத்து வருடங்கள் கழித்து நடந்த திறப்பு விழாவின்போது முதல்வராகி விழாவில் கலந்துகொண்டார்.
திறப்பு விழா அன்று ‘சாம்ராட் அசோகன்’ என்ற சிவாஜியின் நாடகம் நடந்தது. போர்க்களத்தில் அசோகரின் மனசாட்சி பேசுவது போன்ற காட்சியில் வேறு எந்த கேரக்டர்களும் இல்லாமல் சிவாஜி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் நடித்தார்.
அசரீரி குரலுக்காக மனோரமா வாய்ஸ் கொடுத்தார். மேடைக்கு கீழே அமர்ந்தபடி நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜியின் பாவனைகளில் நெகிழ்ந்து போய், ‘அற்புதமான நடிப்பு’ எனப் பாராட்டினார்.
5783

Thanks Gaesh Pandian

sivaa
26th April 2021, 05:51 AM
கீழ் அடியில் அகழ்வாராய்ச்சியில் தமிழனின் கலாச்சாரத்தோடு எப்படி வாழ்ந்தான் என்னன்ன வாழ்க்கை நடத்துவதற்கு என்ன பழமை வாழ்ந்த பொருள்கள் பயன் படுத்தினான் என்று தெரிகிறது
அதுபோல்
நடிகர் திலகத்தின் படங்கள் பாது காக்க வேண்டிய படங்கள் தமிழ் மொழி உச்சரிப்பது மனிதனுடைய வாழ்க்கை முறை மன்னர்காலத்து கலாச்சார முறை புராண காலத்து கலாச்சாரத்தின் முறை வாழ்க்கைக்கு தேவையான அத்துனையும் வரும் காலம் அறிய உதவும்
திருக்குறள் படித்து வாழ்க்கையின் நெரி முறைகளை தெரிந்து கொள்ளலாம்
ஆனால்
நடிகர் திலகத்தின் படம் பார்த்து வாழ்க்கை முறைகளை அறிந்த மனதில் பதிய வைக்கலாம் , வரும் தலைமுறையும்
உலகம் அறிந்த மெரினா பீச்சில இருந்த் நடிகர் திலகத்தின் சிலை மனிமண்டபத்தில் வைத்தால் நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சி பெட்டிகளிலும் திரையருங்கலிலும் திரையிட மாட்டார்கள் என்ற அர்த்தமாகாது
மக்கள் மனத்திரையில் நடிகர் திலகம் எப்பொதும் அவர் திரைப்படங்கள் ஒடிகொண்டுதான் இருக்கிறது
ஏனென்றால். தமிழ் கலாச்சாரதோடு உலகம் போற்றிய ஒரே நடிகன்.நடிகர் திலகம்
சிவாஜி ரசிகன்
P s முனியாண்டி
வெங்கிடேசன் பட்டி கிராமம்

Thanks Muniyandi Saminathan

sivaa
26th April 2021, 06:04 AM
நடிகர்கள் பல பேர் சமுதாயத்திலிருந்து கற்றுகொண்டு நடிப்பார்கள்
ஆனால்
நடிகர் திலகம் மட்டும்தான் அவருடை நடிப்பால் சமுதாயம் கற்று கொண்டது.
ஒவ்வொரு பதவியில் இருப்பவ்ரும் இவர் ஏற்ற..கதாபாத்திரங்கள் போல் வாழ நினைத்தார்கள் உதாரனமாக
தங்க பதக்க்ம் சொளத்திரியை போல் எத்தனையோ பேர் வாழ்க்கையில் காவல் துறையை சேர்ந்தவர்கள் பின் பற்றினார்கள்
இது போன்ற ஒவ்வொரு துரையிலும் அடிக்கிக்கொண்ட சொல்லலாம்
இவர் நடித்த ஒவ்வொரு படமும கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு நூறு படத்திற்கு சமமாகும்
சமூதாய கருத்துக்களை வாழ்க்கையின் கலாச்சர்த்தையும் தமிழகத்தின் அடையாளமாக இருந்த நம்முடைய நடிகர் திலகத்தை பெயரை கெடுக்க எத்தனையோ சதிகள் சூழ்ச்சிகள்.
அத்தனையும் முறியடித்து கொண்டுதான் இருக்கிறது
அவரின் நடிப்பினாலும் பொது வாழ்க்கையிலும் சமூதாயத்திலும் நல்ல மனிதன் என்பதாலும்
நல்லவர்கள் ஒன்று நினைப்பதுதான் நடப்ப்தில்லை தமிழகத்தில் அன்றே சொன்னார் நடிகர் திலகம்
சிவாஜி ரசிகன்
வெங்கிடேசன் பட்டி
P s முனியாண்டி

Thanks Muniyandi Saminathan

sivaa
29th April 2021, 07:35 AM
சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...
ஒரு வாசகரின் கேள்வி:
"சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"
திரு. ஜெய்சங்கர் பதில்:
"தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".
என்ன ஒரு அருமையான பதில்...

Thanks Ganeisan Maniam

sivaa
29th April 2021, 07:38 AM
1980 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூரில் பிரச்சார மேடையில் அதிமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் திலகம் சிவாஜியிடம் நலம் விசாரிக்கும் அகல இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு சின்ன அண்ணாமலை அவர்கள்

5784

Thanks Sekar Parasuram

senthilvel
29th April 2021, 09:38 AM
Picture
https://uploads.tapatalk-cdn.com/20210429/41536e7ae4b6b1ef5dfcde15f8b41d02.jpg

senthilvel
29th April 2021, 09:41 AM
Recordhttps://uploads.tapatalk-cdn.com/20210429/8e67f716ce438280a3111eeca883585f.jpg

sivaa
1st May 2021, 10:21 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 49
அக்டோபர் விடைபெற்று நவம்பர் மாதம் துவங்கியது. அனால் நவம்பர் 1 அன்றே ஒரு வருத்தம் ஏற்பட்டது. வசந்த மாளிகை செப்டம்பர் 29 வெளியாகி அக்டோபர் 31 வரை 33 நாட்களில் மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 113 காட்சிகளும் தொடர் அரங்கு நிறைந்திருக்க நவம்பர் 1 புதன் மாட்னி 114வது காட்சி. அன்றைய தினம் 3 காட்சிகளும் அரங்கு நிறைந்து விட்டால் 116 ஆகி விடும். மீண்டும் ஒரு சாதனை படைக்கப்படும் என நினைத்திருக்கிறோம். மாட்னி ஷோ நேரத்திற்கு தியேட்டர் பக்கம் போகிறோம் (ஸ்கூல் லீவு). கூட்டம் வரிசை எல்லாம் இருக்கிறது. ஆனால் அரங்கு நிறையும் அளவிற்கு இல்லை. மழை வேறு. அதுவும் எப்படி என்றால் ஒரேடியாக பெய்து விட்டாலும் பரவாயில்லை. இது நச நசவென்று பெய்து கொண்டிருக்கிறது. 3 மணி வரை காத்திருந்தோம். ரசிகர் மன்ற ஆட்களெல்லாம் வந்து தியேட்டருக்குள் போய் பேசுகின்றனர். ஆனால் மழை விடாமல் தொடரவே தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. ஆனால் ஈவினிங் மற்றும் நைட் ஷோ புல். மறுநாள் மாட்னியும் புல்லானது என்று பார்த்தபோது ஆஹா புதன் மாட்னி மட்டும் ஹவுஸ் புல் ஆகியிருந்தால் ஞாயிறு வரை அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்திருக்கும். (உண்மையிலே அரங்கு நிறைந்தது) அப்படி நடந்திருந்தால் 130 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து பட்டிக்காடா பட்டணமாவின் 129 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் ரிகார்டை முறியடித்திருக்கும். இதை வெகு நாட்கள் நாங்கள் பேசி ஆதங்கப்பட்டிருக்கிறோம்.
1965 தீபாவளிக்கு பிறகு அந்த 1972 தீபாவளிக்குதான் நடிகர் திலகம் படம் வராமல் போனது. ஆகவே பெரும்பாலான ரசிகர்கள் தீபாவளியை வசந்த மாளிகையில்தான் கொண்டாடினார்கள். பட்டிக்காடா பட்டணமாவும் தீபாவளியோடு 182 நாட்களை நிறைவு செய்து சென்ட்ரலிலிருந்து எடுக்கப்பட்டு மற்றொரு அரங்கிற்கு ஷிபிட் செய்யப்பட்டுவிட்டது. சிந்தாமணியில் 70 நாட்களை நிறைவு செய்திருந்த தவப்புதல்வன் மற்றொரு அரங்கிற்கு மாற்றப்பட்டது. நீதி டிசம்பர் மாதம் வந்து விடும் என பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீதி என்றவுடன் invariably நம் நினைவுக்கு வருவது 1972-ம் வருடத்தின் ஆரம்பமும் பாலாஜி,முடிவும் பாலாஜி. 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ராஜா வெளியாகி அந்த வருடத்தின் Box Office ராஜா நடிகர் திலகம் எனபதற்கு கட்டியம் கூறியது என்றால் நீதி 72ம் ஆண்டிற்கு நிறைவாக நிறைவு செய்ய வந்தது.
ராஜா வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய யூகங்களும், சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் சித்ராலயா வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலாஜி தான் இந்திபடங்களை அல்லது பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வது பற்றி விமர்சித்த பலரும் இப்போது தன் படங்கள் அடையும் வெற்றியை பார்த்து மலைத்து போய் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்தப் படமும் இந்தி படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்றும் அதில் மேலும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் என்ன படம் என்று தெரியாமலே இருந்தது.
1972-ம் ஆண்டு மே 4-ந் தேதி அன்று ராஜா திரைபடத்தின் 100 வது நாள். அன்றைய தினம் வெளியான தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் கீழே இடது கை ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரம். வலது கை ஓரத்தில் நீதி விளம்பரம். ராஜாவின் அதே யூனிட் என்பது விளம்பரத்தை பார்த்தாலே தெரிந்தது. மறுபடியும் எந்த இந்திப்படத்தின் தமிழாக்கம் என்று அந்நேரம் தெரியவில்லை. விளம்பரம் வந்த மறுநாள் தந்தி வெள்ளிகிழமை சினிமா செய்திகளில் பாலாஜி நீதி என்ற படத்தை தயாரிக்கிறார். சிவாஜி ஜெயலலிதா ஆகியோர் நடிக்கிறார்கள். சி.வி.ஆர்.இயக்குகிறார் என்று வந்திருந்தது. இதை ஏற்கனவே இந்த தொடரில் நாம் பேசியிருக்கிறோம்.
நாட்கள் செல்ல செல்ல துஷ்மன் என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் நீதி எனபதும் ஒரிஜினலில் ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் ஜோடி எனபதும் தெரிய வந்தது. படம் சென்னையில் ரிலீஸ் ஆகி விட்டது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் படம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பற்றிய ஐடியா இல்லாமலே இருந்தது. ராஜா போன்ற மாடர்ன் ட்ரண்டுக்கு ஏற்றவாறு இருக்குமா இல்லை வேறு மாதிரியா என்பது பற்றி யோசனை. இதனிடையே அன்றைய நாட்களில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் தொடர்ந்து வரும். அது போன்ற ஒரு செய்தியாக மாப்பிளையை பாத்துகடி மைனா குட்டி பாடலும் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடலும் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
நடிகர் திலகம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் அவ்வளவு பிஸியாக இருந்த காலம். படங்களின் தொடர் வெற்றியில் ஏற்கனவே உயரத்தில் இருக்கும் அவரின் மார்கெட் உச்சாணி கொம்பில் ஏறி விட்டது. அவர் 22 மணி நேரம் மூன்று ஷிப்ட்களில் நடித்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 1 அவரின் பிறந்த நாள் அன்று மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் அவர் நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார். அங்கேயே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.
அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!
இந்த நேரத்தில் தீபாவளி வருகிறது. அந்த வருடம் நவம்பர் 4 சனிக்கிழமை அன்று தீபாவளி. சென்ட்ரலில் ராமண்ணாவின் சக்தி லீலை தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படம் அன்று வெளிவராது என்று தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் செய்தி வந்தது. படத்தின் வேலைகள் முடியவில்லை என்பதால் வரவில்லை என்று ஒரு செய்தியும் அன்றைய தீபாவளி தினமே மற்றொரு பக்தி படமான தெய்வம் வெளியானதால் போட்டி வேண்டாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வந்தது. இந்த முடிவிற்கு பின்னால் அன்றைய நாட்களில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருந்த மூவி மேக்கர்ஸ் கவுன்சில் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. சக்தி லீலை தீபாவளியன்று வெளியாகவில்லை என்றதும் பட்டிக்காடா பட்டணமாவே தொடர்ந்து ஓடப் போகிறது என்ற செய்தியும் பரபரப்பாக ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டது. ஆனால் சக்தி லீலை நவம்பர் 10-ந் தேதி வெளி வரும் என்ற உறுதியான அறிவிப்பு வந்ததால் 6 நாட்களுக்கு துஷ்மன் படம் சென்ட்ரலில் வெளியிடப்பட்டது.
நடிகர் திலகம் படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதால் மாலைக் காட்சி துஷ்மன் படம் காண சென்றோம். படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் கதையம்சதைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. படம் பார்த்த போது முழு கதையும் புரிந்தது. ஆனால் ஒரு ஏமாற்றம். ராஜா போன்ற ஸ்டைலிஷ் படமாக இது வராது என்பது தெரிந்தது. ரசிகர்களும் பொது மக்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய ஒரு நெருடல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்னுடன் வந்திருந்த என்னுடைய கஸின் வேறொரு விஷயத்தை குறிப்பிட்டார்."உனக்கு நினைவு இருக்கிறதா? சென்ற தீபாவளி [1971 தீபாவளி] அன்றுதான் ராஜாவின் ஒரிஜினலான ஜானி மேரா நாம் பார்த்தோம். ராஜா சூப்பர் ஹிட். அது போல் இந்த தீபாவளி துஷ்மன் பார்க்கிறோம். நிச்சயம் நீதி சூப்பர் ஹிட்" என்றார். பாலாஜியும் சிவிஆரும் படத்தை பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி அரசியல் குழப்பங்கள் தொடர்ந்தன. தினந்தோறும் ஊர்வலங்கள் போராட்டங்கள் என்ற பதட்ட சூழல் அதில் அப்பாவி மாணவர்கள் சிக்கி கொள்வது, வன்முறை சம்பவங்கள் அரேங்கேறுவது என்று இருந்ததால் கல்வி நிறுவனங்கள் தொடர் விடுமுறை அறிவித்து விட்டன. தனி கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் இந்திய (வலது) கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களோடு டெல்லி சென்று அன்றைய ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார் பட்டியலை பிரதமரிடம் கொடுக்க சென்றார். ஆனால் இது போன்ற புகார்களெல்லாம் குடியரசு தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவே அவர்கள் அன்றைய ஜனாதிபதி வி வி கிரி அவர்களை சந்தித்து புகார் அளித்தனர். பின் பிரதமரையும் சந்தித்து அதன் ஒரு நகலை வழங்கியதாக செய்தி வந்தது. அது தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட அவர் அதை தமிழக முதல்வருக்கு அனுப்பினார். அதை படித்துவிட்டுதான் அன்றைய முதல்வர் மு.க., "பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்" என்று கமென்ட் அடித்தார். இவை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் (நவம்பர் 15/16) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார். இது சற்றே தணிந்திருந்த பதட்டத்தை மேலும் அதிகரித்தது.
பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் சேலத்தில் நவம்பர் 5 ஞாயிறன்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமான கூட்டம் நடிகர் திலகத்தை காண கூடவே சேலம் நகரே திணறியது என செய்திகள் வெளிவந்தன. சென்னையில் வெள்ளிவிழா கொண்டாட்டம் அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 அன்று சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். தலைமை தாங்கிய பெருந்தலைவருக்கு ஏர் கலப்பை ஒன்றை நடிகர் திலகம் நினைவு பரிசாக வழங்கினார். அந்த விழாவில்தான் பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒரு அழைப்பு விடுக்கிறார்.
1969ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் பிளவுப்பட்டபின் தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி புனரமைக்கப்படுகிறது. 1969 டிசம்பரில் பதவியேற்ற அந்த குழுவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் கக்கன்ஜி பொறுப்பேற்கிறார். அந்த கமிட்டியின் ஆயுள் மூன்று வருடங்கள். கட்சியின் அமைப்பு சட்டப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரிய கமிட்டி புனரமைக்கப்பட வேண்டும். ஆகவே 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட போகும் காரிய கமிட்டியில் நடிகர் திலகமும் இடம் பெற வேண்டும் என பெருந்தலைவர் விரும்புகிறார். அதை அவரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகர் திலகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆகவே இதை பொது மேடையில் சொன்னால்தான் நடிகர் திலகத்தை ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என நினைத்த பெருந்தலைவர் அந்த வெள்ளிவிழா கூட்டத்தில் பேசும்போது சிவாஜி ஏற்கனவே நமது கட்சிக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இப்போது கட்சியில் ஒரு பொறுப்பு கொடுக்கலாம் என இருக்கிறேன் என்று சொல்கிறார். கூட்டம் அதை ஆரவாரத்துடன் வரவேற்கிறது. ஆனால் நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தும்போது அதை பணிவாக மறுக்கிறார். தான் சார்ந்த தொழிலில் இப்போது முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் தன்னை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதுவும் தவிர நடிகர் சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் அங்கும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன என்றும் ஆகவே இந்த நேரத்தில் கட்சியில் ஒரு பொறுப்பை ஏற்க நேர்ந்தால் அதற்கு நியாயம் செய்ய முடியாது என்றும் சொல்கிறார். தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நன்றி சொன்ன நடிகர் திலகம், எனது பிள்ளைகள் உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு செயல் படுவார்கள். கட்சியின் தற்கொலை படையாக களத்தில் நிற்பார்கள் எனவும் கூறிவிட்டு போராட்டக்களத்தில் நானே வரவேண்டும் என்ற சூழலில் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று சொல்லி முடித்தார். [பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என விஷயம் தெரியாமல் சொல்லி வருபவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். இது 1975 வரை உள்ள நிலை. அதன் பிறகு அந்த கட்சி நடிகர் திலகத்திற்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்]. அந்த 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட்ட கமிட்டி பதவியேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பா.ரா. பொறுப்பேற்றார்.
அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது. நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியானது போல் மூன்று அரங்குகளில்தான் [பாரடைஸ் பிரபாத்,சரவணா] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்
இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது.. நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.
திருச்சியில் இருக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஹாஸ்டல்களில் ஒன்றாக விளங்கியது கிளைவ் ஹாஸ்டல். திருச்சி மலைக்கோட்டை கோவில் மெயின் கார்டு கேட் இவைக்கு இடைப்பட்ட இடத்தில அமைந்த தெப்பக்குளத்திற்கு அருகில் இயங்கி வந்த விடுதி. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்மீது தான் தாக்குதல் நடைபெற்றது. ஏன் அந்தத் நிகழ்வு அங்கே நடந்தது என்பது பற்றி எழுதுவது நமது தரத்திற்கு குறைவு என்பதனால் நான் அதை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அன்றைய நாளில் ஆளும் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் [அமைச்சரைவையில் ஒரு அங்கம்] சில தனிப்பட்ட காரணங்களுக்காக கோபம் கொண்டு காவல்துறையை மாணவர்கள் மீது ஏவி விட்டார். நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம் அந்த வருடம் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் மாணவர்கள் 146 கல்லூரிகளில் வெற்றி பெற்றார்கள் என்று. அந்த கோபமும் சேர்ந்து கொள்ள 1972 டிசம்பர் 1, 2 [வெள்ளி சனி] இரவுகளில் ஹாஸ்டலில் போலீசார் புகுந்து வெறியாட்டம் ஆடினார்கள். ஏராளமான மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டு ரத்தம் வழிய வழிய ஓட ஓட விரட்டப்பட்டனர். அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மிக தீரமாக ஹாஸ்டலுக்கு உள்ளே சென்று மாணவர்களை காப்பாற்றினார். நேதாஜி உள்ளே இருக்கிறார் என்று தெரிந்து போலீசார் அவரை எப்படியும் கைது செய்து விட வேண்டும் என்று முயற்சிக்க ஆளும் கட்சியினரும் இதை பயன்படுத்திக் கொண்டு நேதாஜியை தாக்க முயற்சி எடுக்க மாணவர்கள் அரண் போல் நின்று நேதாஜியை நெருங்க விடாமல் செய்தனர். அதற்குள் இந்த கொலை வெறி தாக்குதல் ஊரெங்கும் பரவி விடவே நிலைமையை சமாளிக்க அன்றைய அரசு ஒரு மாவட்ட நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
டிசம்பர் 2 சனிக்கிழமை அன்று தமிழக சட்டசபை கூடுகிறது என அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டபிறகு நடைபெறும் முதல் கூட்ட தொடர் என்பதால் பரபரப்பு நிலவியது. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அதிமுக அறிவிக்கிறது. இந்த நேரத்தில் மற்றொரு திருப்பம் நிகழ்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவில் 13 எம்எல்ஏக்கள் சேர்ந்திருந்தனர். எம்ஜிஆருடன் சேர்ந்து வெளியேறிய முதல் எம்எல்ஏ கேஏகே என்ற கே ஏ கிருஷ்ணசாமி. அவரின் அண்ணன் கே ஏ மதியழகன் அப்போது பேரவை தலைவராக இருக்கிறார். 1970ல் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகிய மதியழகன் 71 தேர்தலுக்கு பிறகு சபாநாயகராக ஆக்கப்பட்டார். அமைச்சர் பதவி கிடைக்காததன் காரணமாகவே சற்று வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த மதியழகன் அதிமுகவிற்கு போகப் போகிறார் என்று செய்திகள் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவை தலைவர் எடுக்கும் தீர்மானம்தான் இறுதி என்பதால் அதிமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என மதியழகன் அறிவிக்கவே ஆளும் கட்சியில் ஒரு கிலி படர்ந்தது. 170 எம்எல்ஏக்கள் இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது என பேரவை தலைவர் அறிவித்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த கருணாநிதி அன்றைய துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக்க முடிவு எடுத்தார். சபை கூடியதும் பேரவை தலைவர் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட, மதியழகனோ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்க, ஒரே நேரத்தில் மதியழகனும் சீனிவாசனும் சபையை நடத்த, மதியழகனால் பேச அழைக்கப்பட்ட எம்ஜிஆர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கான நேரம் முடிந்து விட்டது என்று சீனிவாசன் கூறி அவரை உட்கார சொல்ல, அவர் தொடர்ந்து பேச அவருக்கு கொடுக்கப்பட்ட மைக் அணைக்கப்பட்டு அவர் பேசுவது யாருக்கும் கேட்காமல் போக, ஆளும் கட்சி வரிசையிலிருந்து பல்வேறு பொருட்கள் வீசப்பட்டு ஒரே களேபரமாக, சட்டசபை செத்துவிட்டது என கூறி எம்ஜிஆர் வெளியேறினார். 1967 முதல் 1971 ஜனவரி வரையும் பின் 1971 மார்ச் முதல் 1972 டிசம்பர் வரைக்கும் எனக்கு தெரிந்து எம்ஜிஆர் பதவி பிரமாணத்தை தவிர வேறு ஏதும் சபையில் பேசியதாக தெரியவில்லை. அவர் முதன் முதலாக பேச வந்த அந்த டிசம்பர் 2லும் இது போல் நடக்க அந்த சட்டசபை கலைக்கப்பட்ட 1976 ஜனவரி 31 வரை அவர் பேசவேயில்லை. ஆனால் அந்த சட்டசபை இயங்கிய காலம் முழுக்க அவர் சட்டசபை லாபிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு உறுப்பினர் அனுகூலங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்த கிளைவ் ஹாஸ்டல் மற்றும் சட்டசபை நிகழ்வு தமிழகத்தில் மீண்டும் பதட்ட நிலையை உருவாக்க டிசம்பர் 4 திங்களன்று மீண்டும் துவங்குவதாக இருந்த கலவி நிலையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்த சூழலில்தான் நீதி டிசம்பர் 7 அன்று வெளியாகிறது. அந்த லாரி டிரைவர் ராஜாவை பார்த்த மகிழ்ந்த கொண்டாடிய நினைவுகள் அடுத்த வாரம்
(தொடரும்)
அன்புடன்


Thanks Murali Srinivasan

sivaa
1st May 2021, 10:28 AM
கல்தூண் 1/05/1981 .இன்று 40 ஆண்டுகள் நிறைவு.

5785

sivaa
1st May 2021, 06:07 PM
மே தின வாழ்த்துகள்
இந்த மூன்று பேரும் சகோதரர்கள்
இவர்கள் மூன்று பெரும் சிவாஜி ரசிகர்கள்
இந்த காலத்தில் அன்னன் தம்பிகள் வெவ்வேறு கட்சி வெவ்வேறு நடிகரின் ரசிகர்கள் ஆக இருப்பார்கள் ஆனால் இவர்கள் மூன்று பேரும் சிவாஜி ரசிகர்கள் ஆக இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்
இதில் என்ன விசேஷம் என்றால் மூன்று போருக்கும் முன்னால் சிவாஜி என்கின்ற பெயர் சேர்த்து அழைக்கப்படுவது
சிவாஜி என்றாலே நாட்டுப்பற்றுக்கு உதாரனம் மட்டுமல்ல குடும்ப ஒற்றுமைக்கும்
என்பது
இந்த மூன்று சகோதரர்கள் அதற்கு உதாரணம்
வாழ்க சிவாஜிகள்.(சங்கர் ,சீனிவாசன் ,பாலு )
சிவாஜிக்காக வாழ்நாளை அற்பனிப்பவர்களை வாழ்த்த வேண்டியது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையாகும்



5786

Thanks Muniyandi Saminathan

sivaa
5th May 2021, 08:21 AM
நன்றி விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள்.
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி 300 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள் - எழுத்தாளர் சுரா.

Thanks Subbiah

sivaa
6th May 2021, 07:59 AM
பட்டிக்காடா பட்டணமா? வெளியான நாள் 6/05/1972 . இன்று 49 ஆண்டுகள் நிறைவு.

வெள்ளிவிழா கண்ட வெற்றிச்சித்திரம்.

இதுவரை வெளிவந்த கறுப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களில்,
ஒரு கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் சாதனை ஏற்படுத்தி இன்றுவரை முறியடிக்கப்படாத,
சாதனை படமாக திகழ்கிறது பட்டிக்காடா பட்டணமா?.

5787

sivaa
6th May 2021, 08:01 AM
சத்யம் வெளியான நாள் 6/05/1976 . இன்று 45 ஆண்டுகள் நிறைவு.

5788

sivaa
7th May 2021, 08:50 PM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 50
அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் மூடப்பட, நான் படித்த பள்ளி மட்டும் டிசம்பர் 4 திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பித்து விட்டன. பள்ளி விடுமுறையாக இருக்கும், ஆகவே நீதி ஓபனிங் ஷோ போகலாம் என்று நினைத்திருந்த வேளையில் அது நடக்காமல் போனது. அதே நேரத்தில் என் கஸின் படித்த கல்லூரியும் மூடப்பட்டிருக்க அவர் எந்த சிக்கலுமில்லாமல் (அதுவும் தங்கம் என்பதனால் டிக்கெட் பற்றிகவலைப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை) ஓபனிங் ஷோ சென்று விட்டார். ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 7 வியாழன் அன்று படம் ரிலீஸானது எப்போதும் தனது படம் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் அதற்குண்டான அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடிக்கும் பாலாஜி இந்த நீதி படத்தின் அனைத்து வேலைகளை முடித்து நவம்பர் 30 அன்று சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டுக்காட்டி தணிக்கை சான்றிதழ் பெற்று விட்டார். 1972ல் முதன் முறையாக வியாழக்கிழமை படம் வெளியானது மட்டுமல்லாமல் முதல் நாள் காலைக்காட்சி இல்லாமல் மாட்னி ஓபனிங் ஷோவாக ஆரம்பித்தது.
மாட்னிதான் ஓபனிங் ஷோ என்பதால் அவர் படம் முடிந்து வருவதற்குள் நான் ஸ்கூலிலிருந்து வந்து விட்டேன். கஸின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க அவர் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தார். என் ஆவல் அவருக்கு தெரியும் என்றாலும் அனைவருக்கும் முன்பாக வைத்து படம் பார்த்துவிட்டு வந்ததை சொல்ல முடியாது என்பதால் என்னை தனியே அழைத்து போய் படம் நன்றாக இருக்கிறது. நாம் ஹிந்தி துஷ்மன் பார்த்துவிட்டு எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு படம் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் திலகம் இறங்கி அடித்திருக்கிறார் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வியாழன் படம் ரிலீஸ். வெள்ளி சனி இரண்டு நாட்களும் ஸ்கூல் இருந்ததால் சனிக்கிழமை ஈவினிங் ஷோதான் போக முடிந்தது. தங்கம் தியேட்டரில் நல்ல கூட்டம். இந்த முறை பால்கனி டிக்கெட் வாங்கி படம் பார்க்க உள்ளே நுழைகிறோம்.
வழக்கம் போல் சுஜாதா சினி ஆர்ட்ஸின் லோகோ அந்த பரபரப்பான பின்னணி இசையுடன் பல வண்ணங்களில் பளிச்சிட தியேட்டரில் ஆரவாரம். அன்றைய நாட்களின் வழக்கப்படி இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்டு முதலில் வருகிறது. படத்தின் கதையை பற்றிய ஒரு முன்னோட்ட வரிகள் மேஜர் குரலில் ஒலிக்க அடுத்த காட்சி ஹைவேஸில் வரும் லாரியை காண்பித்து உள்ளே காமிராவை காண்பிக்க நடிகர் திலகம் கருநீல ஷர்ட் அணிந்து லாரி ஓட்டிக் கொண்டிருக்க செம கைதட்டல்கள். சுஜாதா சினி ஆர்ட்ஸ் அளிக்கும் நீதி என்று காண்பித்து விட்டு அடுத்த கார்டு திரைக்கதை வசனம் ஏ எல் நாராயணன் என்று வர தியேட்டரில் ஒரு சின்ன சலசலப்பு. எந்த நடிகர் நடிகை பெயரையும் போடவில்லை என்பதை கஸின் என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால் எனக்கு அது ஏமாற்றமாக தெரியவில்லை. சௌகாருக்கும் ஜெயலலிதாவுக்கும் பல வருடங்களாக இருந்த ஒரு கோல்ட் வார் காரணமாகத்தான் யார் பெயரும் போடாமல் டைட்டில்ஸ் காட்டப்பட்டது ஏற்கனவே திருடன் படத்தில் பெயர் போடுவதில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் (சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர் கோபித்துக் கொண்டு இனிமேல் உன் படங்களுக்கு பைனான்ஸ் பண்ண முடியாது என்று சொன்னதை இந்த தொடரில் நாம் பார்த்திருக்கிறோம்) பாலாஜிக்கு நினைவிருந்ததால் இப்படி ஒரு முடிவு எடுத்து வி சி சண்முகத்திடம் அனுமதி வாங்கி செய்தார் என்று ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள் (படம் வெளியான பிறகு தெரிய வந்த விஷயம்). டைட்டில் போடும்போதே நடிகர் திலகம் பாட்டிலில் இருப்பதை போட்டுக் கொண்டே வருவார். அவரை வேண்டாம் வேண்டாம் என்று கிளீனர் ஐ எஸ் ஆர்,கெஞ்சுவதும் (வாத்யாரே வண்டி புல் லோடிலே இருக்கு., வண்டி மட்டும் இல்லைடா. உன் வாத்தியாரும் புல் லோடுதான்) நடிகர் திலகம் கொடுக்கும் பதிலும் படத்தை ஆரம்பத்திலேயே விறுவிறுப்பாக்கிறது. வண்டியை நிறுத்தி விட்டு இது உளுந்தூர்பேட்டைதானே என்று நடிகர் திலகம் கேட்க ஆம் என்ற பதில் வந்ததவுடன் நான் அந்த ராணியை பார்த்து விட்டு வந்திறேன் என்று நடிகர் திலகம் இறங்கி செல்ல அங்கே ஒரு வீடு. பலர் படுக்கை திண்டில் சாய்ந்திருக்க ஏ சகுந்தலா ஆட தயாராக நிற்க நடிகர் திலகம் என்ட்ரி. அந்த கருநீல பான்ட் அதே கலரில் புல் ஸ்லீவ் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் அந்த தூணில் சாய்ந்து நிற்க கைதட்டல் அள்ளுகிறது.
நடிகர் திலகம் எல்லோரையும் போக சொல்லு என்று சொன்னவுடன் அனைவரும் சென்று விட கே கண்ணன் மட்டும் போகாமல் முரண்டு பிடிக்க நடிகர் திலகம் கிண்டல் மரியாதையாக போங்க சார் என்று சொல்ல கண்ணன் நடிகர் திலகத்தை தாக்க அத்தேரி கழுத, என்கிட்டே அடிவாங்கிறதுக்குன்னே இவன் பிறந்திருக்கான் என்று கண்ணனை அடி பின்ன சண்டைக்காட்சியை சிவிஆர் நன்றாக எடுத்திருப்பார். அடி வாங்கி தபலா வாசிப்பவரின் மேல் கண்ணன் விழ ஸ்வரம் சொல்லி அடிப்பது, ஆர்மேனிய பெட்டிக்கருகில் ஆலாபனை போல் பாடி அடிப்பது என்று நடிகர் திலகம் அமர்க்களம் செய்வார். படம் ஆரம்பித்தவுடனே சண்டை அதுவும் கண்ணனை வெளுக்கிறார் என்றதும் தியேட்டரில் அதிலும் குறிப்பாக கீழே செம கைதட்டல் விசில். அந்த 1972ல் மட்டும் ராஜா தவப்புதல்வன் அப்புறம் நீதி என்று மூன்று படங்களில் கண்ணன் சண்டைக்காட்சியில் அடி வாங்குவதை ரசிகர்கள் ஓஹோவென்று ரசிக்கிறார்கள். சண்டை முடிந்தவுடன் மாப்பிளையை பார்த்துக்கடி மைனாக்குட்டி பாடல். சண்டை ஒரு ட்ரீட் என்றால் இந்த பாடலும் ஆடலும் வேறு வகை விருந்து. அதை ஒரு கிளப் டான்ஸ் பாடலாக மட்டுமல்லாமல் ஒரு கஸல் பாணியில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்க தனது பங்கிற்கு டிஎம்எஸ் ஆலாபனையில் அசத்த நடிகர் திலகம் திரையில் அனைவரையும் தூக்கி சாப்பிடுவார். பாட்டு முடியும்போது செம கிளாப்ஸ். காலையில் தூக்கம் விழிக்கும் நடிகர் திலகத்தை எழ விடாமல் சகுந்தலா தடுக்க அத்தேரி கழுத காலங்கார்த்தாலே என்ன லவ்வு என்று நடிகர் திலகம் எழுந்து போக மூன்றாவது காட்சியிலேயே கதைக்குள் வந்து விடுவார்கள்.
வண்டி கொஞ்சம் ஆட ரொம்ப பனியா இருக்கு, ரோடே சரியாக தெரியலை, கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்திட்டு அப்புறம் போகலாம் என்று நடிகர் திலகத்திடம், ஐ எஸ் ஆர் கெஞ்ச, அத்தேரி கழுத பேசாம வாடா என்று நடிகர் திலகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோட்டின் ஓரத்திலிருந்து மாடுகளை ஒட்டி வரும் ஒரு மனிதன் தெரிய ஐயோ என்று பிரேக் அடிப்பதற்குள் மோதி விட கீழே இறங்கி பார்த்தால் முதலில் ஒரு மாடும் சக்கரத்திற்கு அடியில் ஒரு மனிதனும் சிக்கிக்கொண்டு இறந்திருப்பார்கள். மனிதனை வெளியிலே இழுத்து பரிசோதிக்கும்போது அவன் குடும்பத்தினர் வந்து விட நடிகர் திலகம் கைது செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கு நடக்க மேஜர் நீதிபதியாக இருப்பார். குடிச்சிருந்தேன், ஆனா நிதானத்தை இழக்கலே பனி அதிகமாக இருந்ததாலே ரோடு சரியா தெரியலே என்று வாதிடுவார் நடிகர் திலகம். இல்லை இவரின் அஜாக்கிரதையினாலும் அலட்சியத்தினாலும் இந்த விபத்து நடந்தது என்று அரசாங்க வக்கீல் வாதிட, நான் வேணுமின்னே செய்யல. எனக்கும் அவருக்கும் என்ன பகை? நான் வேணுமினே செஞ்சிருந்தா அங்கே ஏன் நிக்க போறேன்? வண்டி எடுத்து போயிருக்க மாட்டேன்? அத்தேரி கழுத நான் போற ஸ்பீடுக்கு எந்த பய என்னை பிடிக்க முடியும் என்று சத்தம் போட்டு பேச மேஜர் கண்டித்தவுடன் அதே வசனத்தை லோ வாய்ஸில் சொல்லுவார். தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். வழக்கை ஒத்தி வைத்துவிட்டு மேஜர் போக அடுத்த காட்சியில் சௌகார் கால் இல்லாமல் கட்டை வைத்து நடக்கும் அவரின் மாமனார் எஸ் வி சுப்பையாவை கூட்டிக் கொண்டு மேஜர் வீட்டிற்கு வர இங்கே நீங்க வரக்கூடாது. ஏதாவது சொல்லனுமுன்னா கோர்ட்டில சொல்லுங்க என்பார். சௌகார் தங்கள் நிலைமையை விளக்குவார். கால் இல்லாத மாமனார், கண் தெரியாத மாமியார், கல்யாணத்திற்கு நிற்கும் நாத்தனார் பள்ளியில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகள் இவர்களை எப்படி காப்பாற்றுவது? கொலைக்கு காரணமாக இருந்தவனை தண்டித்து விட்டால் என் கணவர் திரும்பி வருவாரா? உங்கள் தீர்ப்பு எங்கள் வாழ்விற்கு வழி செய்யுமா என்று கேட்டு விட்டு போக மேஜர் மனதில் சிந்தனைகள்.
அடுத்து constituional bench போல அதாவது முக்கியமான ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு 5 அங்க அமர்வாக நீதிபதிகள் இருக்க அவர்களுக்கு முன்னால் மேஜர் காலத்திற்கேற்ப தீர்ப்பில் சில மாற்றங்களை கொடு வர அனுமதி வேண்டி நிற்க அந்த அமர்வு அதற்கு அனுமதி கொடுக்க இங்கே கீழமை நீதிமன்றத்தில் நடிகர் திலகத்திற்கு இரண்டு ஆண்டு தணடனை விதித்து அந்த இரண்டு ஆண்டுகளும் இறந்து போன குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என மேஜர் தீர்ப்பு சொல்ல நடிகர் திலகம் வேண்டாம் வேண்டாம் என்பார். ஆனால் அந்த தீர்ப்பின்படி அந்த கிராமத்திற்கு அவர் கொண்டு வரப்பட ஊர்க்காரர்கள் அவரை தடுக்க முயற்சிக்க கான்ஸ்டபிள் சந்திரபாபு அனைவரையும் விரட்டி அவரை இறந்து போனவரின் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே அவருக்கு கடுமையான எதிர்ப்பு. சுப்பையா கட்டையால் தலையிலே அடித்து விடுவார். அந்த வீட்டின் கடைக்குட்டி பெண் மட்டும் வந்து ரத்தம் வழிய உட்கார்ந்திருக்கும் நடிகர் திலகத்திடம் பேச சௌகார் பெண்ணை மிரட்டி கூட்டி செல்வார். அவன் கொலைகாரன் என்று அந்த பெண்ணிடம் சொல்லப்பட கொலைகார மாமாவா என்று அந்த குட்டி பெண் அப்பாவியாக கேட்கும். கடைசி வரை அந்த பெண்ணிற்கும் அவள் அண்ணனுக்கும் நடிகர் திலகம் கொலைகார மாமாவாகவே இருப்பார். வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் குடுமபத்தில் பெண் குழந்தை கஞ்சி சாப்பிடாமல் சோறு வேணும் என்று அழும். கிளீனர் ஐ எஸ் ஆர், ராத்திரி வந்து தப்பித்து போய்விடலாம் என கூட்டிக் கொண்டு போக ஊர் எல்லையில் காவல் நிற்கும் சந்திரபாபு தடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் கூட்டி செல்வார்.
பாலாஜி சத்தம் போட தண்ணி குடிக்கிறியான்னு கூட ஒருத்தனும் கேட்க மாட்டேங்கிறான். பசியால நான் துடிக்கிறேன் என்று நடிகர் திலகம் சொல்ல பாலாஜி ஒரு டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு கொடுக்க அவசர அவசரமாக ஒரு கவளம் சோறு எடுத்து சாப்பிட போகும்போது குழந்தை பசியால் அழுதது ஞாபகம் வர கையை உதறி விட்டு எழுந்து போய் விடுவார். இதற்கிடையில் ஊரில் பண்ணையார் மனோகர். பணக்காரர். சில பல தொழில்களை செய்து கொண்டிருப்பவர் கிராமத்து மக்களுக்கு கடனை கொடுத்து அவர்களின் நிலத்தை அபகரிக்கும் டிபிக்கல் தமிழ் சினிமா வில்லன். அவரது கணக்கு பிள்ளையாக எம் ஆர் ஆர் வாசு. சௌகாருக்கும் ஜெயகௌசல்யாவிற்கும் வேலை கொடுக்கிறேன் வர சொல் என்று சொல்ல சௌகார் மட்டுமே வேலைக்கு செல்வார்.அங்கே மனோரமா அறிமுகம். ட்ராக்டர் பொன்னம்மா என்ற பாத்திரத்தை (சற்றே பிசகினாலும் விரசமாகி விடக்கூடிய ஆபத்து) ஆச்சி நன்றாகவே செய்திருப்பார்.(உண்மையை சொல்ல போனால் படத்தில் நாயகி ஜெயா வரும் நேரத்தை விட மனோரமாவுக்கு ஸ்கிரீன் டைம் அதிகம்) மனோரமாவின் டிராக்டரை நடிகர் திலகம் ரிப்பேரை சரி செய்து தர அவருக்கு கூலியாக மனோரமா 30 ரூபாய் கொடுப்பார். குழந்தைகளுக்கு ஜாங்கிரியும் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பும் நடிகர் திலகம் வாங்கி கொண்டு வர ஆசையோடு சாப்பிடும் குழந்தையின் கையிலிருந்து பறித்து கீழே வீசும் சௌகார், ஜெயகௌசல்யாவிடம் அரிசி பருப்பையும் தூக்கி எறிய சொல்ல அவர் அப்படியே செய்வார். நடிகர் திலகம் ஏதும் பேசாமல் விலகி நடக்க கீழே விழுந்த ஜாங்கிரியை குழந்தை பொறுக்கி எடுத்து சாப்பிட முயற்சிக்க சௌகார் அந்த பெண்ணை அடித்து எங்கியாவது போய் செத்து தொலை என ஆத்திரத்தில் கத்த அந்த குழந்தை அழுது கொண்டே ஆற்று பக்கம் போவதை பார்த்து நடிகர் திலகம் நிறுத்தி அந்த பொண்ணை கூட்டிக் கொண்டு போய் சாப்பிட வாங்கி கொடுப்பார். அவளின் அண்ணனையும் வரவழைத்து சாப்பிட கொடுக்க முதலில் மறுக்கும் அந்த சிறுவனிடம் தனது மனதில் இருப்பதை நடிகர் திலகம் ஆற்றாமையோடு வெளிப்படுத்த (நான் படிக்காதவன்ப்பா, எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலே. லாரியில் பாரத்தை ஏத்தினா அது தாங்கும். ஆனா பாவத்தை மனசில் ஏத்தின்னா என்னாலே தாங்க முடியாதுப்பா - ஏ எல் நாராயணன்) அந்த பையனும் சாப்பிடுவான்.
இப்படி இருக்க ஒரு நாள் காலையில் தனது இரு குழந்தைகளை காணவில்லை என்று சௌகார் பதற அனைவரும் சென்று பார்த்தால் வயலில் ஏரில் ஒரு மாட்டை பூட்டி மற்றொரு பக்கம் தான் நின்று நடிகர் திலகம் அந்த குழந்தைகளின் உதவியோடு நிலத்தை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பார். அது சரியாக வராது. சுப்பையா நடிகர் திலகத்தை கண்டபடி திட்டுவார். குடிகார பயலே என்று இரண்டு முறை சொல்ல நடிகர் திலகம் வெகுவாக கோபப்படுவார். (உன் காசிலேயே குடிச்சேன்? நான் சம்பாதிக்கிறேன் குடிப்பேன். ஆடுவேன் பாடுவேன். அந்த கோபத்தை அருமையாக வெளிப்படுத்துவார்). கிராமத்தில் ஒரு சாராய கடைக்கு முன்னால் நடிகர் திலகம் நின்று கொண்டிருக்க ஒரு பெண் தனது கணவனிடம் குடிக்காதே என்று கெஞ்ச நாளையிலிருந்து குடிக்க மாட்டேன். இன்னிக்கு மட்டும் என்று பதில் சொல்ல நடிகர் திலகம் ஒரு பஞ்ச் அடிப்பார். தெருவுக்கு நாலு சாராய கடையை திறந்து வச்சிட்டு குடிக்காதே குடிக்காதேன்னா எவன் குடிக்காமா இருப்பான்? செம கைதட்டல் வாங்கிய வசனம் அது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல். கவியரசர் தனது அனுபவம், தத்துவ விசாரம் இவற்றின் துணையோடு அவரது கைவண்ணம் அனைத்தையும் காட்டியிருப்பார்.
முதல் வாழ்வு வாழ ஒரு வீடு
மறு வாழ்வு வாழ மறு வீடு
இடைக்கால பாதை மணல் மேடு
எது வந்தபோதும் அவனோடு
கடைசி வரி வரும்போது நடிகர் திலகம் கையை மேலே தூக்கி காண்பிக்க கிளாப்ஸ். இந்த பாடலிலும் எம் எஸ் வி மற்றும் டி எம் எஸ் அருமையாக பங்களித்திருப்பார்கள். சரணம் முடிந்து மீண்டும் அனுபல்லவியான போதை வந்தபோது புத்தி இல்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே என்ற வரிகளை டி எம் எஸ் அவ்வளவு உருக்கமாக பாடியிருப்பார். இரண்டாவது சரணத்தில் ஏழைகளின் வாழ்வு இப்படியே இருக்கிறதே நீயும் அதில் விளையாடுகிறாயே என்ற தார்மீக கோபத்தை கவியரசர் காண்பித்திருப்பார்.
பாடல் முடிந்து அவர் கோவிலில் இருக்கும் தெய்வத்தின் சிலை முன் நின்று பேசுவது படத்தின் ஹைலைட்டான காட்சிகளில் ஒன்று. உன்னை ஏன் ஆத்தங்கரையிலும் குளத்தங்கரையிலும் வச்சிருக்காங்க தெரியுமா என்ற அந்த கிண்டல், உலகத்திலே இந்த மாதிரியெல்லாம் நடக்குதுங்கிற விரக்தி, என் லைசென்ஸை பறிச்சே , என் லாரியை பறிச்சே உன்னால நான் குடிக்கறதை மட்டும் தடுக்க முடியாது. ஏன் தெரியுமா? உனக்கு இருக்கிறதை விட இதுக்கு இங்கே கடை ஜாஸ்தி என்ற அரசியல் நக்கல் பிரமாதப்படுத்தியிருப்பார். அந்த நேரத்தில்தான் கீழே ஜெயகௌசல்யாவும் அவரை காதலிக்கும் ஒரு இளைஞனும் பேசுவதை கேட்பார். வரதட்சணை கொடுக்க முடியாததை பற்றி பேச்சு வரும். வயல் விளைஞ்சு அறுவடை நடந்து நெல்லு வித்துதான் பணம் தரேன் என்று எங்க அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் இப்போ அவரே போன பிறகு எங்கே வயல் விளைஞ்சு அறுவடை செய்து பணத்தை கொடுக்கிறது என்று ஜெயகௌஸல்யா வருத்தத்துடன் சொல்லிவிட்டு போக பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு நடிகர் திலகம் கடைசியிலே என் பாட்டிலையும் பறிச்சுட்டியே என்பார்.
அடுத்து டிராக்டரை வைத்து நடிகர் திலகம் நிலத்தை உழுது கொண்டிருக்க மனோரமா இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் ஊர் ஜனங்களை கூட்டி ஓடி வருவார். என்னை கேட்காம எப்படி என் டிராக்டரை எடுக்க போச்சு என்று கேட்க பாலாஜியும் ராஜா, நீ செஞ்சது தப்பு என்று சொல்ல மனோரமா ட்ராக்டர் பயன்பாட்டிற்கு கூலி கேட்க பணம் இல்லையே என்று நடிகர் திலகம் சொல்ல நான் தருகிறேன் என்று பாலாஜி பணம் கொடுப்பார். உன் உழைப்பிற்கு அரசாங்கம் கொடுக்கும் பணம்தான் இது என்று சொல்லிவிட்டு செல்வார். ஏற்கனவே நிலத்தின் மூலையில் இருக்கும் புளிய மரம் பற்றியும் அதில் பேய் இருப்பதாகவும் மனோரமா பேச்சு வாக்கில் சொல்லியிருக்க மீண்டும் அதை பற்றி பேச்சு வந்ததும் நடிகர் திலகம் விவரம் கேட்க அந்த புளிய மரத்தில் ஒரு மோகினி பேய் குடியிருப்பதாகவும் ராத்திரி நேரத்தில் நடமாடும் என மனோரமா சொல்ல சரி நான் பார்க்கிறேன் என்பார். நிலத்தை உழுத பின்னர் சுப்பையா நடிகர் திலகத்தின் மனதை புரிந்து கொண்டிருப்பார் தனது மனைவி காந்திமதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம்ம நிலம். அவன் இப்போ உழுறான். நாம ஆள் வச்சு வேலை வாங்கினா கூலி கொடுக்கிறதில்லையா அது மாதிரிதான் இதுவும். நாமா வளர்கிற நாய்க்கு சோறு வைகோறோமில்லே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நடிகர் திலகம் வர பேச்சை நிறுத்தி விடுவார். ஏன் நிறுத்திடீங்க என்று காந்திமதி கேட்க நாய் வந்திருக்குமா என்று நடிகர் திலகம் பதில் சொல்லுவார். அரங்கில் குறிப்பாக பெண்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அவருக்கு கொடுக்கும் சாப்பாடை அவர்கள் வீடு நாய் கவ்வி எடுத்து கவிழ்த்து விடும். விரக்தியோடு சிரிக்கும் நடிகர் திலகம் சுப்பையாவிடம் சென்று புளிய மரத்தை வெட்ட போறேன் என்று சொல்ல அவரும் தடுப்பார். அதை புறக்கணித்து இரவு நேரத்தில் நடிகர் திலகம் அங்கு வர ஜல் ஜல் என்ற சதங்கை சத்தமும் வெள்ளை உடை அணிந்த கால்களும் நடந்து வருவதை பார்த்து நடிகர் திலகம் பதுங்கி பக்கத்தில் வரும்போது பாய்ந்து பிடித்தால் ஜெயலலிதா. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர்தான் நாயகி வருகை. தனது குடிகார தாத்தாவிற்கு பயந்துதான் பணத்தை இங்கே மரத்தின் பொந்தில் வைப்பதாகவும் அதை யாரும் எடுத்து கொண்டு போய்விட கூடாது என்பதற்காகவே மோகினி பேய் என்று கதை கட்டியதையும் ஜெயா ஒப்புக் கொள்ள பணத்தை எடுத்து கொண்டு ஓடி விடுமாறு நடிகர் திலகம் சொல்ல அதே போல் அவர் செய்ய நடிகர் திலகம் மரத்தை வெட்டுவார். [இந்த காட்சியில் நடிகர் திலகம் ஜெயா interaction ரசகரமாக இருக்கும். உன் பேர் என்ன என்று ஜெயா கேட்க வேதாளம் என்று நடிகர் திலகம் பதில் சொல்வதும் தெருவில் வித்தை காட்டும் ஆட்கள் பேசுவது போல் வா இந்த பக்கம், வந்தேன் என்பதெல்லாம் ரசிக்கும்படியாக சிவிஆர் எடுத்திருப்பார்]
மறுநாள் காலையில் ஊர் பொது மக்கள் வந்து பார்க்கும்போது மரம் வெட்டுப்பட்டு கிடைக்க அதன் அடியில் நடிகர் திலகம் படுத்து தூங்கி கொண்டிரு[ப்பார். அதை பார்த்துவிட்டு ஊர் மக்கள் தவறாக புரிந்து கொள்ள சௌகாரின் சின்ன பெண் மட்டும் தைரியமாக அவர் பக்கத்தில் சென்று கூப்பிட நடிகர் திலகம் கண் விழித்து பார்ப்பதை பார்த்தவுடன் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். வீட்டிற்கு குழந்தையை தோளில் தூக்கி செல்ல சௌகார் பார்த்துவிட்டு குழந்தையை சத்தம் போட அது அழுது கொண்டே போகும். தண்ணி எடுத்து குடிக்கும் நடிகர் திலகத்திடம் ஏன்ப்பா தண்ணி குடிக்கிறே? சாப்பிடலியா என்று கேட்கும் சுப்பையாவிடம் நெஞ்சு எரியுது அதான் என்று சொல்லிவிட்டு பேசுவார் நடிகர் திலகம். உங்க குடுமபத்தை காப்பாத்தத்தான் அரசாங்கம் என்னை அனுப்பிச்சிருக்கு உங்க மருமக வேலைக்கு போறது நியாயமா என்று கேட்கும்போது காந்திமதி இவன் யாருங்க நம்ம குடும்பத்திலே தலையிட என்று பேச அம்மா உங்களுக்கு கண்ணுதான் இவ்ல்லைன்னு வருத்தப்பட்டேன். ஆனா இதயமும் இல்லைன்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன் என்று போவார். தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.
சலூனில் ஷேவ் செய்து கொண்டிருக்கும்போது மோகினி பேய் பற்றி முடி திருத்துபவர் கேட்க நடிகர் திலகம் அவரை மிரட்டுவதற்காக அள்ளி விட பயத்தில் அவர் நடிகர் திலகத்தின் ஒரு பக்க மீசையை வழித்துவிட வேறு வழியில்லாமல் மீசை முழுவதையும் எடுத்துவிட்டு வெளியே வர, சௌகாரின் சின்ன பெண் அவரை அடையாளம் தெரியாமல் எங்க கொலைகார மாமா எங்கே என்று கேட்க, நாந்தாம்மா என்று சொல்ல தியேட்டரில் சிரிப்பு. பயாஸ்கோப் பார்க்க காசு கேட்கிறாங்க என்று சொல்ல உன்கிட்டே யார் கேட்டாங்க, வா என்னோட என்று நடிகர் திலகம் அழைத்து போக அங்கே பயாஸ்கோப்பில் ஜெயா பாட்டு பாடி கொண்டே ஆடுவார். ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்ன பொண்ணு என்ற பிரபலமான பாடல். நடுவில் நடிகர் திலகம் வந்து சேர அவரின் மீசை இல்லாத முகத்தை பார்த்து ஜெயா கிண்டல் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் திலகம் பஞ்ச் அடிக்க (அடக்கம் இல்லாத பொண்ணுக்கு பேரென்ன? பிசாசு) மீண்டும் பாடல் தொடரும்.
வங்காளத்தில் முன்னே போகும் சேனை பாருங்க
இந்திரா காந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
வங்க தேசப்போரில் நமது படைகள் செல்வதையும் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் இந்திரா பேசுவதையும் ஸ்டில் போட்டோக்களாக திரையில் தோன்ற இதற்கு அமைதியாக இருந்த அரங்கம் அடுத்த வரியான
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க (பெருந்தலைவர் பேசுவதையும் நடிகர் திலகத்தின் கோவை மாநாட்டு பிறந்தநாள் கூட்டத்தையும் காட்டுவார்கள்) அப்படியே ஆர்ப்பரித்தது என்றால் அதற்கு அடுத்த வரியில் கர்ம வீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க என்ற வரியின்போது கோவை மாநாட்டு மேடையில் பெருந்தலைவர் அமர்ந்திருக்க அவரை திரும்பி பார்த்து நடிகர் திலகம் மைக்கில் பேசும் ஸ்டில் காட்டப்பட்டபோது அந்த ஆர்ப்பரிப்பு அலையாக மாறியது. அந்த இரண்டு வரிகளும் மீண்டும் ஒலிக்க ஜெயா இரண்டாவது வரியில் சிவாஜி பாருங்க என்று வரும்போது நடிகர் திலகத்தின் பக்கத்தில் வந்து அவரை கையால் விலாவில் இடிக்க மீண்டும் ஆரவாரம். அடுத்த சரணத்தில் எம் எல் ஏ பற்றியம் அவர்கள் அடிக்கடி கட்சி மாறுவது பற்றியும் கிண்டல் வரிகள் வர நடிகர் திலகம் கண்ணடிப்பார். அதற்கும் அலப்பறை. மொத்தத்தில் அந்த பாடல் செம மாஸ் என்று இப்போது அடிபடும் வழக்கு மொழிக்கு அன்றே உதாரணமாக இருந்தது.
மனோரமாவிடம் ஜெயா வந்து நடிகர் திலகம் பற்றி கேட்பது ( அந்த ஆளுடைய உண்மையான பேர் என்ன?) மனோரமா ஜெயா பற்றி தெரிந்து கொண்டதை சொல்வது, என்கிட்டே எல்லா விஷயமும் சொல்லிடும் என்பது, அதை கேட்டு முதலில் ஜெயா அதிர்ச்சி அடைவது, தொடர்ந்து நடிகர் திலகம் மனோரமாவை காதலிக்கவில்லை என்பது தெரிந்ததும் சந்தோஷப்படுவது என போகும் அந்த காட்சியின் தொடர்ச்சியாக ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் ஜெயாவிடம் நடிகர் திலகம் என்னை பற்றி அடிக்கடி விசாரிக்கிறியாமே என்ன விஷயம் என்று சீண்டுவது. குளித்து முடித்து தாவணி அணிந்து வரும் ஜெயாவிடம் புது மாடல் பென்ஸ் லாரி மாதிரி இருக்கியே என்பது, என்னை பார்த்துட்டு வீட்டிற்கு போனியே தூக்கம் வந்துச்சா என்று கேட்பது, இவை படத்தின் சில ரிலாக்ஸான நிமிடங்கள்.
ஜெயகௌசல்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் பேசி வைத்திருந்த இடத்திலிருந்து ஆட்கள் வர கல்யாணத்திற்கு தரேன்னு சொன்ன பணம் எங்கே என்று கேட்க 15 நாட்கள் டைம் கேட்பார் சௌகார். மனோகரிடம் வாசு கூட்டி போக சௌகார் தங்கள் நிலத்தை அடமானமாக தருவதாக ஒப்பு கொள்வார். இதை பற்றி மனோரமாவிடம் பேசும் நடிகர் திலகத்திடம், மனோகர் இது போன்ற நிலங்களை அடமானம் வாங்கும்போது பாத்திரத்தில் அடமானம் என்ற வார்த்தைக்கு பதிலாக கிரயம் என்று எழுதி கைநாட்டு வாங்கி விடுவார் என்றும், படிக்க தெரியாத பெரும்பாலானோர் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலே கைநாட்டு வைத்து மாட்டிக் கொள்வார்கள் என்று சொல்ல மறுநாள் சௌகார் வீட்டிற்கு வரும் மனோகரும் வாசுவும் சுப்பையாவிடம் கைநாட்டு வாங்கும் நேரத்தில் நடிகர் திலகம் அதை தடுத்து கிழித்து போட்டுவிட சௌகாரும் சுப்பையாவும் கோபப்படுவார்கள். வாசு அந்த நேரம் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் பற்றி தப்பாக பேச நடிகர் திலகம் வாசுவை அடி வெளுப்பார். ஜெயகௌசல்யாவின் கல்யாணத்திற்கு நான் பொறுப்பு என்பார். தியேட்டரில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
மணமகன் வீட்டிற்கு நடிகர் திலகம் போக அங்கே மனோகரும் வாசுவும் இருப்பதை பார்த்து மறைந்து நின்று கவனிக்க அந்த பையனுக்கு மனோகர் வீட்டில் சம்பந்தம் பேசி முடிவு செய்வது தெரிய வரும். அவர்கள் போன பிறகு மணமகன் அப்பாவோடு வாக்குவாதம் செய்வார் நடிகர் திலகம் ஆனால் அவர் ஒப்பு கொள்ள மாட்டார். வேதனையோடு திரும்பும் நேரம் மணமகன் நடிகர் திலகத்திடம் கமலாவிடம் என்ன மன்னிக்க சொல்லுங்க என்று கேட்க பளார் என்று ஒரு அறை விடுவார் நடிகர் திலகம். போன காரியம் என்ன ஆச்சு என்று கேட்கும் ஜெயாவிடம் நடிகர் திலகம் நடந்ததை சொல்ல ஜெயாவும் மனோரமாவும் கல்யாண வீட்டிற்கு செல்வார்கள். பயாஸ்கோப் காட்டுவது போல் பாடல் (ஓடுது பார் நல்ல படம் பாடலே மீண்டும் வேறு வரிகளில்) அதில் மணமகனையும் அவர் தந்தையையும் செமையாக கிண்டல் செய்து பாட மணமகனின் தந்தை கோபப்பட்டு இவர்களை வெளியே போக சொல்லி விடுவார். அன்றைய இரவே மணமகன் இவர்கள் வீடு தேடி வர ஜெயகௌசல்யாவையும் மணமகனையும் இரவோடு இரவாக கோவிலுக்கு கூட்டி சென்று கல்யாணத்தை நடத்துவார் நடிகர் திலகம்.
விஷயம் தெரிந்து மணமகன் தந்தை ஆட்களோடு வந்து விட கோவில் கதவை அடைத்து யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி நடிகர் திலகம் தடுக்க அவர்கள் நடிகர் திலகத்தை சரமாரியாக தாக்க அவர் அத்தனையும் தாங்கி கொண்டு நிற்பார். அங்கே வரும் பாலாஜி அனைவரையும் தடுத்து நிறுத்த கல்யாணம் முடிந்து தம்பதியர் இருவரும் கதவை திறந்து வெளியே வந்து மணமகன் என்னை யாரும் கடத்தவில்லை, என் சுய விருப்பத்தின் பேரில்தான் நான் கமலாவை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல இருவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வருவார் நடிகர் திலகம். ஆட்கள் தாக்கியதில் தலையில் ரத்தம் வர அதற்கு கட்டு போட்டிருப்பார் நடிகர் திலகம். முதன் முறையாக காந்திமதி நடிகர் திலகத்திடம் அன்பாக பேசி மன்னிப்பு கேட்பார். அப்போதும் சௌகாரின் மனம் இளகாது.
இடையில் மனோரமா ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்க நடிகர் திலகம் வருவார். அவரை பார்த்து மனோரமா பெருமூச்சு விட்டு விட்டு போக ஏன் இவ இப்படி இருக்கா என்று நடிகர் திலகம் கேட்க இது புரியலையா என்பார் ஜெயா. உனக்கு தெரியுமா என்று கேட்க எங்க ஊர் கொட்டகையில நான் பாத்திருக்கேனே இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் நாம் இருவர் நமக்கு இருவர் என்று ஜெயா சொல்ல அது குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம். நீ இங்கிலீஸ் படம் பார்த்திருக்கியா என்று அருகில் அமரும் நடிகர் திலகம் அது கிளப் படம். அதாவது கிளப்புற படம். அதில் நாயகனும் நாயகியும் என்று பேசியவாறே ஜெயாவை அணைத்து முன்னேறி செல்ல முயற்சிக்க சில சிறுவர்கள் கூடி நின்று சிரிக்க அவர்களை விரட்டுவார் நடிகர் திலகம். மீண்டும் பக்கத்தில் வந்து இங்கிலீஸ் படம் மறுபடியும் பார்க்கலாமா என்று கேட்பதும் ஜெயா ம்ம்ம் என்று சொல்வதும் இளமை குறும்பு. ஒரு டூயட் வரும் என்று எதிர்பார்க்க அது கடைசி வரை வராது. இதை தொடர்ந்து ஜெயாவின் வீடு, அவரின் தாத்தா ஆகியோர் காட்டப்பட்டு அவர் குடிக்கு அடிமையாக இருப்பதும் வரும்.
இதற்கிடையில் ஊரிலிருக்கும் நிலங்களையெல்லாம் மனோகர் தந்திரமாக பறிப்பது பற்றி மனோரமா ஊர் ஆட்களை கூட்டி வந்து நடிகர் திலகத்திடம் முறையிட கலெக்டரை போய் பார்க்கலாம் என்று அனைவரும் கிளம்ப அங்கே கலெக்ட்ராக மேஜர் (நீதிபதி எப்படி மாவட்ட ஆட்சி தலைவராக முடியும் என்ற கேள்வி எழும்) அவரிடம் முறையிட ஆவண செய்வதாக மேஜர் உறுதியளிப்பார். இந்த காட்சியில் difficulty என்ற வார்த்தையையும் என் friend என்று நடிகர் திலகம் சொல்வதும் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். தாத்தாவின் குடிப்பழக்கத்தை பற்றி ஜெயா வருத்தப்பட்டு பேச நடிகர் திலகம் ஆறுதல் சொல்லுவார். நானும் குடிச்சிட்டிருந்தேன். இப்போ முழுசா நிறுத்திட்டேன் என்று பேசிக்கொண்டிருக்க திருமணத்திற்கு பிறகு ஜெயகௌசல்யாவும் அவரது கணவரும் ஊருக்கு குதிரை வண்டியில் வர நடிகர் திலகத்தை பார்த்து வண்டியை நிறுத்தி பேசுவார்கள். நடிகர் திலகத்திற்கு ஒரு புதிய சட்டையை ஜெயகௌஸல்யா கொடுக்க அவர் மறுப்பார். அவர் அணிந்திருக்கும் சட்டை தோள்பட்டை அருகே கிழிந்திருப்பதை காட்டி புது சட்டையை கொடுக்க அங்கே வைத்தே சட்டையை மாற்றிக்கொண்டு (வெள்ளை கலர் ஜிப்பா) அவர்களையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வர அனைவரும் சந்தோஷப்படுவார்கள். கொஞ்சம் இரும்மா இதோ வந்துடறேன் என்று நடிகர் திலகம் நேராக பாலாஜியிடம் போவார். கல்யாணத்திற்கு அப்புறம் முதல் தடவையா வந்திருக்காங்க. கல்யாணத்திற்கே நானும் ஒண்ணும் பண்ணலை, என் சம்பளத்திலிருந்து கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா என்று கேட்க பாலாஜி 100 ரூபாய் எடுத்து கொடுப்பார். என் சம்பளத்தை விட அதிகமா கொடுக்கிறீங்களே என கேட்கும் நடிகர் திலகத்திடம் பரவாயில்லை. அறுவடை முடிஞ்சவுடன் பணத்தை கொடு என்பார் பாலாஜி. அது என் நிலம் இல்லையே அய்யா என சொல்ல நீ உழைச்சிருக்கேல, அதுக்கு கூலி கிடைக்கணுமில்லே என்று பாலாஜி வழி சொல்ல உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கி வார்த்தை வராமல் சல்யூட் அடிப்பார் நடிகர் திலகம். பயங்கரமான கைதட்டல் விழுந்தது அந்த காட்சிக்கு. புடவையும் மணமகனுக்கு வேட்டியும் வாங்கி கொண்டு கொடுப்பார்.
மறுநாள் அறுவடைக்கு தயாராகி விட்டார்கள் என்று வாசு சொல்ல அறுவடை நடந்தால்தானே என்று மனோகர் சிரிக்க அடுத்த காட்சி எங்களது பூமி காக்க வந்த சாமி பாடல் .வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி, சிவப்பு துப்பட்டாவில் தூள் கிளம்புவார் நடிகர் திலகம். முதன் முதலாக கோவை சௌந்தரராஜன் நடிகர் திலகத்திற்க்காக பின்னணி பாடிய பாடல். நடிகர் திலகத்தை வாழ்த்தி பாடும் வரிகளுக்கெல்லாம் தியேட்டரில் செம அலப்பறை. பாடல் முடிவில் வயலுக்கு தீ வைத்து விட்டதாக ஒருவர் வந்து சொல்ல அனைவரும் அங்கு ஓட பயிர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாக யாராலும் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார்கள். நடிகர் திலகம் பாலாஜியிடம் சென்று மனோகரை கைது செய்ய சொல்ல எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி கைது செய்வது என அவர் கேட்க நடிகர் திலகம் கோபப்படுவார். அவ்வளவு உழைப்பும் வீணாகி விட்டதே என்று கலங்குவார்.மறுபடியும் எப்போ நிலத்தை உழுது பயிரிட்டு செய்ய முடியும் என்று திகைப்பாக பேசுவார். வருத்தத்தில் இருக்கும் அவரை ஜெயா வீட்டிற்கு சாப்பிட கூப்பிட அங்கே அவரை ஜெயாவின் தாத்தா அவமானப்படுத்திவிடுவார். கோபித்து கொண்டு நடிகர் திலகம் வெளியேற ஜெயா தாத்தாவை கண்டபடி திட்டி விடுவார். வயல் தீயினால் எரிந்து போனது நடிகர் திலகத்தினால்தான் இனிமேலும் அவர் அந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்று சௌகார் சத்தம் போட வேண்டாம் நானே போகிறேன் என்று நடிகர் திலகம் வெளியேறுவார். அந்நேரம் நடிகர் திலகத்திடம் வந்து மன்னிப்பு கேட்கும் ஜெயாவின் தாத்தா அவரை வீட்டிற்கு வரும்படி கெஞ்சுவார். சரி வரேன் என்பார்.
மனோகர் வாசுவை ஜெயாவின் தாத்தாவிடம் அனுப்பி தனது வீட்டில் நடனம் ஆட சொல்ல தாத்தா சத்தம் போட்டு வாசுவை அடிக்க மனோகரின் ஆட்கள் தாத்தாவை கொன்று விடுவார்கள். அந்நேரம் ஜெயா வர அவரையும் மயக்கப்படுத்தி தூக்கி செல்வதை சௌகார் பார்த்து விடுவார். சிறிது நேரம் சென்று அங்கே வரும் நடிகர் திலகம் தாத்தா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகி நேரே போலீஸ் ஸ்டேஷன் சென்று சொல்ல, பாலாஜி அவரையே சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைப்பர். ஜெயா கோடௌனில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளும் சௌகார் அங்கே செல்ல மனோகரின் ஆட்கள் தடுப்பார்கள். மனோகர்தான் அனுப்பினார் என்று சௌகார் சொல்லி உள்ளே சென்று தனது உடைகளை ஜெயாவிற்கு தந்து அவர் உடைகளை தான் அணிந்து தப்பிக்க வைப்பார். வெளியில் ஓடி வரும் ஜெயாவை வழியில் பார்க்கும் மனோகர் சௌகார் என நினைத்து தனது ஆட்களை அவரை பிடிக்க அனுப்பி விட்டு கோடௌனில் வந்து பார்க்கும்போது சௌகார் அங்கு இருக்க அவரை பலவந்தப்படுத்தும் முயற்சியில் இறங்குவார். மனோகரின் ஆட்களிடமிருந்து தப்பித்து வரும் ஜெயாவும் போலிஸிடமிருந்து மறைந்து ஓடி வரும் நடிகர் திலகமும் வழியில் பார்த்து கொள்ள விஷயம் புரிந்து நடிகர் திலகம் கோடௌனிற்கு வர பூட்டியிருக்கும் கதவை லாரியை வைத்து மோதி உடைத்து உள்ளே நுழைந்து சண்டையிடுவார். அதுவும் இறைச்சி பதனிடும் கோடௌனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் பார்களின் மீது ஏறி உருண்டு வழுக்கி அருமையாக படமாக்கியிருப்பார்கள். தியேட்டரில் ரசிகர்களுக்கு செம விருந்து. மனோகரை கொல்ல நடிகர் திலகம் முயற்சிக்க தம்பி வேண்டாம் என்று சௌகார் சொல்ல என்னை ஏற்றுக் கொண்டீர்களா என்று நடிகர் திலகம் நெகிழ அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை தாக்க வரும் மனோகரை துப்பாக்கியினால் சுட்டு பாலாஜி கைது செய்வார்.
கிளைமாக்ஸ் முடிந்து விட்டது என நினைத்திருக்கையில் ஒரு tail end வரும். சௌகார் வீட்டில் முதன் முறையாக நடிகர் திலகத்திற்கு சாப்பிட கொடுக்க அந்நேரம் அங்கே வரும் பாலாஜி உன்னுடைய நன்னடத்தையினாலே உன்னை தண்டனை காலம் முடியறத்துக்குள்ளே ரிலீஸ் பண்ணிட்டாங்க என்று கூறி அவரின் லைசென்ஸை திருப்பி கொடுப்பார். இனிமே இங்கே இருக்க வேண்டாம், உன்னை கொண்டு போய் டவுனிலே விட்ருறேன் என்பார். அனைவரும் போக வேண்டாம் என்று சொல்ல நடிகர் திலகம் நேரே மேஜர் வீட்டிற்கு சென்று இது என் வீடு, என் குடும்பம். நான் எங்கேயும் வர மாட்டேன், இங்கேதான் இருக்க போறேன் என்று சொல்ல மேஜர் புன்னைகையிலே சம்மதம் சொல்ல ஊர் திரும்பும் நடிகர் திலகத்திற்கு ஊர்க்காரர்கள் வரவேற்பு கொடுப்பது, சௌகாரின் குழந்தைகள் இருவரும் கொலைகார மாமாவை அன்போடு அணைப்பது, சுப்பையா காந்திமதி சௌகார் மனோரமா நடிகர் திலகத்தை வரவேற்பது, ஜெயாவும் நடிகர் திலகமும் அத்தேரி கழுத என மாறி மாறி சொல்லி அணைத்து கொள்வது இப்படி நான்கு விதமான காட்சிகளும் ஒரே பிரேமில் வர வணக்கம்.
படத்தின் ரிப்போர்ட், வரவேற்பு, வெற்றி சாதனைகள் அது அடுத்த வாரம்.
(தொடரும்)
அன்புடன்

5789

Thanks Murali Srinivasan

sivaa
9th May 2021, 06:02 PM
ஒரு குரலின் அரை நூற்றாண்டு வரலாறு...
அவர் குரலில் எப்போதும் கம்பீரம் மிளிரும்.ஒவ்வொரு கால கட்டமாக
அந்தக் குரலில் என்னவெல்லாம் மாற்றங்கள் உருவாகின.
நாடக வேஷங்களும் அதற்கேற்ற குரல்களையும் சிறு வயதில் இருந்தே தீவிரமாக செய்து வரும் நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஆரம்பத்தில் தடுமாற்றங்கள் வரலாம்.அதையெல்லாம் கவனமாக விலக்கி பெற்ற வெற்றிகள் தான் என்ன என்ன? பெரும் அதிசயமாகவே மாற்றிக் காட்டியவரின் நிகழ்வுகளில் இருந்து .....
பராசக்தியில் இளமையும் இல்லாத முதிர்வும் இல்லாத குரல்.அடுத்து வந்த
மனோகரா, அந்தநாள், தூக்குதூக்கியில் கொஞ்சம் இளமை கூடியது போல் குரல்கள்.உத்த புத்திரன் வரை இது தொடர்ந்தன.பதிபக்தியில் உடல்வாகில் சிறிது மாற்றம்.சிறிது பூசியது போன்று உடலமைப்பு.குரலிலும் சிறிது மாற்றம்.
இந்த வகையிலே நான் சொல்லும் ரகசியம் வரை அமைந்திருந்தன.ஆனால் அடுத்தபடத்திற்குள் என்ன மாயம் செய்தாரோ?
வீரபாண்டிய கட்ட பொம்மனில் இருந்து சிம்மக்குரல் புறப்பட்டு விட்டது.ஆச்சர்யம் போல் பதிபக்தியில் அவருடைய உடலமைப்பும் கட்டபொம்மனில் அவருடைய உடலமைப்பும் வித்தியாசம் காட்டியது.
அடுத்து பாகப்பிரிவினையில் அதற்கு முன் இல்லாத உடலமைப்பு.இப் படத்தில் குரல்
இதற்கு முன்பு வந்த படங்களில் இருந்து வேறு விதமாய் இருந்தது.
இதற்கு அடுத்ததாக வந்த இரும்புத்திரையில் இருந்து மருத நாட்டு வீரன் வரை இப்பாணி கையாளப் பட்டது.ஆனாலும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு தன் குரலில்
பேசி வந்தார்.பாலும் பழத்தில் அதையே மென்மையாக பேசி ஆச்சர்யம் காட்டினார்.
அடுத்து வந்த கப்பலோட்டிய தமிழனில்
இன்னும் வசீகரம்.எப்படி இப்படியெல்லாம் என்ற வியப்புகளே நம்மை ஆட்கொள்கிறது.
பார்த்தால் பசி தீரும் படத்திலே ராணுவ காட்சிகள் பகுதியில் ஒரு வகையாகவும், பின் பகுதியில் வேறு வகையாகவும் பேசியிருப்பார்.
உடல்வாகு கூட பாகப்பிரிவினையில் இருந்து எல்லாம் உனக்காக வரை சிறிய சிறிய மாற்றங்களுடன் காட்சியளிப்பார்.
பாலும் பழத்தில் இவைகளில் இருந்து சற்று மாறுபட்டு தோற்றம் தருவார்.தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கையிலே இவைகள் எல்லாம் எப்படி சாத்தியமாயின என்று வியப்பு தான் வருகிறது.நிச்சய தாம்பூலத்தில் பொதுவான குரலிலும், படித்தால் மட்டும் போதுமாவில் முரட்டுக் குரலிலும் நடித்திருப்பார்.நிச்சய தாம்பூலத்தில் இருந்து அன்னை இல்லம் வரை சிறிய மாற்றங்களுடன் பாத்திரத்திரத்திற்கேற்றவாறு பேசியிருப்பார்.
அடுத்து கர்ணன்..
உடல் வாகில் முந்தைய படங்களில் இருந்து வித்தியாசம் இல்லையெனினும் குரலில் தான் இடி இடித்தது போல் இருந்தது.இதற்கு முரணாக அடுத்ததான
பச்சை விளக்கில் குரல் சாந்தமாய் காட்டியது.
ஆண்டவன் கட்டளையிலும் இரு வித குரல்களில் பேசியிருப்பார்.முற்பகுதியில் ஒன்றுமாய் பிற்பகுதியில் வேறுமாயும் இருக்கும்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் இருந்தே குரலில் மிகுந்த கர்ஜனை சேர்ந்து கொண்டாலும் இடைப்பட்ட படங்களில் எல்லாம் அது தெரியாமல் பாத்திரங்களின் தன்மைக் கேற்றவாறு தன் குரலை மாற்றி மாற்றி பேசி குரலிலும் தனித்த நடிப்பை
காட்டியவர்.
புதிய பறவை..
அந்த சிம்மக்குரலில் இருந்தா இப்படியொரு வெளிப்பாடு என்னும் ஆச்சர்யம் இதில்.மென்மையான காதல் சொல்லும்படம் என்பதால் அதற்கேற்ற குரலில் வித்தியாசமாய் பேசியிருப்பார்.சில காட்சிகள் தவிர்த்து சிம்மக்குரல் சிறு பூவாக மாறிய படம்.
நவராத்திரி ..
ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ஒருவரின் ஒன்பது குரல் .
பின் தனித்துவமானதாய் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த திருவிளையாடல்.இதில் சிவனாக பிரமிக்க வைத்தாலும், விறகு வெட்டியின்
பொருத்தமான பேச்சை தமிழறிந்தோர் வியக்காதோர் இருக்க முடியுமா ?
இவைகளிலிருந்து விலகி மோட்டார் சுந்தரம் பிள்ளையின் சிறப்பான மாடுலேசனை மறக்க முடியுமா?
சரஸ்வதி சபதத்தில் நாரதருக்கும், கவிஞருக்கும் இரு வேறு குரல்கள்.பின் வீரபாகுவின் கர்ஜனனையான குரலில் கந்தன் கருணையும். பின் நான்கு படங்களில் பொதுவான பாணியில்.நெஞ்சிருக்கும்வரை பேசும்தெய்வம் தங்கை பாலாடை .
திருவருட் செல்வரில் அப்பரின் குரலோசை
எதிலும் காட்டாதது.
சிறிது தள்ளி தில்லானா மோகனாம்பாளில் வித்வானின் மோகனக்குரலில் பரவசப் படுத்தியிருப்பார்.எல்லாப் படங்களையும் எடுத்துச் சொல்ல இடம் போதாது என்பதினால் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
எங்க ஊர் ரராஜாவில் ஆண்மைகுரல்,
உயர்ந்த மனிதனில் மிடுக்கான குரல்,
தெய்வமனில் மூவர்ண குரல்,
சிவந்தமண்ணில் வீரக்குரல்,
விளையாட்டுப் பிள்ளையின் வசீகர குரல்,
வியட்நாம் வீட்டில் பிராமணர் பாஷையில்,
சவாலே சமாளியில் முழக்க குரல்,
அந்தோனியின் அட்டகாச குரல்,
மூக்கையாத் தேவரின் பாரம்பர்ய மொழிக்குரல்,
வசந்த மாளிகையில் காதல்மொழிக் குரல்,
ராஜராஜ சோழனின் சரித்திரக் குரல்,
ராஜபார்ட்டின் நவரசக் குரல்,
சௌத்ரீயின் கடமைக் குரல்
என்று ஒவ்வொரு குரலிலும் ஒரு ரசம்.
ரசங்கள் ஒன்பது என்றாலும் இவர் குரல்களை எத்தனை ரசமாகக் கொள்வது?
வரிசை கட்டி வந்த பட வரிசையில்,
அந்தமான் காதலியில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது எனலாம்.அந்தக் குரலில்
ஆண்மை முதிர்வும், கம்பீரம் இன்னும் சற்று கூடியும், அனுபவ அறிவுகள் கூடியும்
இருந்தன..
பின் வந்த சில படங்களில்,
இளமைத் தோற்ற வேடங்களுக்கு
அதை பின்பற்றாமல் இளமை துடிப்புடன் பேசி ஆச்சர்யப்படுத்தாமல் இல்லை.
அண்ணண் ஒரு கோவில்,
என்னைப் போல் ஒருவன்,
தியாகம் படங்களை சொல்லலாம்.
பராசக்தி ஓர் ஆச்சர்யம்.ஏனெனில் அதற்கு பின் வந்த சில படங்களில் ஒரு நளினமும்,
வீரியமும் கலந்த குரல்களில் அவர் படங்கள் இருக்கும்.நாடகங்களில் ஸ்த்ரீபார்ட் உட்பட பல வேடங்களில் நடித்ததால் உண்டான மாற்றம் என்று சொல்லப்படுவதுண்டு.
படங்களில் நடிக்கத் தொடங்கிய பின், நாடகங்களில் பெண் வேடங்களை அதிகம் செய்யாமலும் அவர் நடித்து வந்த நிலையில், காலங்கள் ஆக ஆக குரலில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதானிருந்தன.இந்தக் குரல் மாற்றங்கள் பேராண்மையாய் சிம்மக் குரலாக மெருகேறிக் கொண்டே இருந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர்திலகத்தால் இப்போது பேச முடியுமா என்று சிலர் கேட்டதுண்டு.ஆனால் பின்னாட்களில் அவர் வாய் திறந்தாலே அது பெரும் கர்ஜனையாய் தானிருக்கும்.
அதில் அனுபவங்களும் சேர்ந்தே இருக்கிறது.அவர் குரல் ஒவ்வொரு படத்திற்கும் கம்பீரத்தை சேர்த்துக் கொண்டே தான் இருந்தது.
50 வருடங்களை கடந்த நிலையில் அவரின் திரிசூலம் மெகா ஜாலம்.
ஒரு பாத்திரத்தின் தன்மையில் இருந்து ஒரு வார்த்தை கூட வேறு பாத்திரத்திற்கு பேசப்படாத வித்தியாசம் அது.
வரிசைபட்டியலில் சிறிது கடந்தால் ,
பின்,
கல்தூணில் கவுண்டர் பாஷையிலும்,
ஹிட்லர் உமாநாத்தில் வேறு விதமாகவும் பேசிய குரல்கள்.நடிகர்திலகம் இந்த வயதுகளில் செய்த வித்தியாசமான தொடர் அணுகுமுறையை செய்தவர்களும் இல்லை. செய்வதற்கும் யாருமில்லை.இருந்தாலும் செய்வார்கள் என்பதற்குமில்லை.நாமும் அவரோடு எவரையும் இணைத்து பேச வேண்டிய அவசியமும் இல்லை.
நிறைய வித்தியாசமாயும், ஆச்சர்யப்படுத்தும் படி அவர் செய்த ரோல் என்பதை விட இப்படத்தின் குரலைச் சொல்லலாம்.
அது,
"முத்துக்கிருஷ்ணா "
கருடா சௌக்கியமா?
பின் வரிசை படங்களில் ,
தீர்ப்பில் தோரணைக்குரல்,
துணையில் நையாண்டி குரல்,
பரீட்சைக்கு நேரமாச்சுவில் நைச்சிய குரல்,
வெள்ளை ரோஜாவில் பாதிரியின் பாசக்குரல்,
வாழ்க்கையில் சாதித்த குரல்,
சிம்ம சொப்பனத்தில் சிம்மக்குரல்,
படிக்காத பண்ணையாரின் அன்புக்குரல்,
முதல் மரியாதையில் கிராமத்து குரல்,
என்று நடிகர்திலகத்தின் குரல்
காந்தமாய் நம் மனதை இழுக்கவே செய்தன.
இக் காலகட்டத்தில் ஏற்பபட்ட உடல் நலக் குறைவு அவர் உடலை சற்று தெம்பிழுக்கச் செய்ததே ஒழிய குரலை சோர்வடைய வைக்கவில்லை.
இறுதியாக ஒன்று ..
"ஆனா விதை போட்டது நாந்தேன்
இதெல்லாம் என்ன பெருமையா "
சாதாரண வசனம்தான்.
எந்தக் குரல் பேசியது என்பதில் அதன் புகழ்.
மீண்டும் இறுதியாக ,
என் ஆச ராசாவேவில் தெருக்கூத்து கலைஞர்களின் பெருமையை பேசும் குரலிலும் கம்பீரம் அமைதியாக வீற்றிருக்கும்.
நன்றி
செந்தில்வேல் சிவராஜ்..

5790


Thanks Senthilvel Sivaraj

sivaa
12th May 2021, 01:58 PM
அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக சிவாஜி இருந்ததற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.
பத்திரிகைக்காக நேர்காணல் செய்ய நடிகர் பிரபுவை அவர் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கச் சென்றேன். இடைவேளை நேரத்தில் எனக்கு பேட்டி கொடுத்தார். அங்கு ஒரேயொரு நாற்காலி மட்டும்தான் இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டு பிரபு எனக்கு பேட்டி கொடுக்க, நான் அவர் பேசுவதை நின்று கொண்டே பதிவு செய்துகொண்டிருந்தேன். சற்றுநேரம் முன்புவரை பிரபு நடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பஞ்சத்திற்காகவோ, வறுமைக்காகவோ நடிகர் பிரபு நடிக்க வரவில்லை. ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி அவர் சிவாஜி கணேசனின் மகன். அந்த வாரம் பத்திரிகையில் அந்த பேட்டி வெளியானது. அதை படித்துவிட்டு பிரபு ஃபோன் செய்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அந்த பேட்டியில் 'அறையில் இருந்த ஒரே சேரில் அமர்ந்து கொண்டு பிரபு பேட்டி கொடுத்தார்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அவர் எனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக நான் அதை எழுதவில்லை. சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் அவ்வளவு சிரமப்பட்டு நடிப்பதை குறிப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு எழுதினேன். சிவாஜி கணேசன் அந்தப்பேட்டியை படித்துவிட்டு பத்திரிகைக்காரனை உட்கார சொல்லாமல் நீ என்ன பண்ணிக்கிட்டிருந்த எனத் தன்னைத் திட்டியதாகக் கூறி, மீண்டும் மன்னிப்பு கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான்கூட அப்படி யோசிக்கவில்லை. ஆனால், அந்த மகாகலைஞன் அதை எந்த கோணத்தில் யோசித்திருக்கிறார் பாருங்கள். கிண்டலுக்காக சிவாஜி கணேசன் மீது நிறைய விஷயங்கள் இட்டுக்கட்டி சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னுடைய அனுபவத்தில் அவர் மகாநடிகர் மட்டுமல்ல; மிகச்சிறந்த மனிதரும்கூட -
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன்.


Thanks Subbiah

sivaa
16th May 2021, 08:45 AM
ஒரு திரைப்படத்தில், இரண்டு அல்லது மூன்று விநாடிகளுக்கும் குறைவான நேரமே வரக்கூடிய ஒரு விசயத்தைப் பற்றித்தான் இப்போது இங்கு நான் சொல்லப் போகிறேன்.
ஆனால், அதற்கு முன்னர் நீளமான விளக்கம் ஒன்றைப் பார்த்து விட்டு, அதன் பின்னர் அந்த விசயத்துக்குப் போகலாம். ஏனென்றால், விளக்கம் புரிந்தால்தான் நான் சொல்லப் போகும் விசயத்தை உணர்ந்து ரசிக்க முடியும்.
ஒரு திரைப்படம் படமாக்கப்படும் போது, கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தொடர்ந்து கதை நகரும் வரிசைப்படி காட்சிகளைப் படமாக்க மாட்டார்கள்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகையர்களின் கால்சீட் கிடைப்பதைப் பொறுத்தும், படத்தின் ஷெட்யூல்கள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்தும், எந்த வரிசையிலும் இல்லாமல், காட்சிகள் சௌகரியத்துக்கேற்பப் படமாக்கப்படும்.
படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் எடிட்டிங் டேபிளில் வைத்து, ஏற்கெனவே குறிக்கப்பட்ட திரைக்கதைப்படி காட்சிகள் தொகுத்து இணைக்கப்படும். இதுதான் திரைப்பட எடிட்டரின் வேலை. துண்டு துண்டாக எடுக்கப்பட்ட காட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு முழுத் திரைப்படமாக உருவாக்கும் காரியகர்த்தா படத்தின் எடிட்டர்தான்.
ஒவ்வொரு ஷாட் படமாக்கும்போதும் ஆரம்பத்தில் கிளாப் என்னும் கட்டையை அடிப்பதும் இதற்குத்தான். அந்த கிளாப் கட்டையில், படத்தின் பெயர், படமாக்கப்பட்ட தேதி, காட்சி எண், ஷாட் எண், மற்றும் அது எத்தனையாவது டேக் என்பது போன்ற விவரங்கள் சாக்பீஸில் எழுதப்பட்டிருக்கும். பின்னர் எடிட்டிங் செய்வதற்கு இந்த கிளாப் ஷாட்தான் மிகவும் உதவியாக இருக்கும். எத்தனையாவது ஷாட் ஓக்கே ஆனது என்ற விவரங்களும் குறிப்புகளாகத் தரப்படும்.
சாதாரணமாக, ஒரு திரைப்படத்தில் சராசரியாக 60 - 65 காட்சிகள் ( சீன்கள்) இருப்பது வழக்கம். ஒரு காட்சி ( சீன் ) படமாக்கப்படும் போதும், அதை தொடர்ச்சியாக எடுத்து விடமாட்டார்கள். அதையும் பல ஷாட்டுகளாகப் பிரித்து ஷாட் பை ஷாட்தான் படம் பிடிப்பார்கள்.
உதாரணத்துக்கு, 'ஊட்டி வரை உறவு' படத்தில் வரும் ' பூ மாலையில் ஓர் மல்லிகை' பாடலில் 33 ஷாட்டுகள் இருக்கும். ( ஒவ்வொரு ஷாட்டும் எத்தனை முறை எடுத்தார்கள் என்று தெரியாது. இயக்குநருக்கு அந்த ஷாட்டில் திருப்தி ஏற்படும் வரை, திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டே இருப்பார்.)
அந்த ஷாட்களை கூட ஒரே நாளில் படம் எடுத்திருப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. காரணம், ஒவ்வொரு ஷாட்டுக்கும் காமிரா கோணங்கள் மாறக்கூடும். அதற்கேற்ப ஒளி அமைப்புகள் , காமிரா டிராலி போன்றவற்றை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். எனவே ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்கும் இடையில் கொஞ்ச நேரம் இடைவெளி கூட இருக்கும்.
ஒரே காட்சியில் வரும் ஷாட்களை ஒரு நாளில் எடுத்து முடிக்க முடியாமல் போனால், சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாட்களில் கூட எடுப்பார்கள். அதில் ஏதும் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் 'கன்டின்யுடி' என்ற விசயத்தை முக்கியமாகப் பார்த்துக் கொள்வார்கள்.
அதாவது முந்தைய ஷாட்டில் நடித்த நடிக நடிகையர் அணிந்திருந்தது என்ன கலர் டிரஸ், செருப்பு, வாட்ச், தலையில் அணிந்த விக், நடிகை என்றால் பொட்டு, பூ, வளையல், தலை அலங்காரம், கைப் பை போன்ற விசயங்கள், காட்சி பகலா இரவா, இன்டோரா, அவுட்டோரா, படப்பிடிப்பு தளத்தில் என்னென்ன பர்னிச்சர்கள் இருந்தன... என்பது போன்ற சகல விசயங்களையும் குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த ஷாட் எடுக்கும் போது, முன்னர் எடுத்த ஷாட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் இப்போதும் அதே முறைப்படி இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்துக் கொள்வார்கள்.
(கன்டின்யுடியில் சொதப்பி, படம் பார்க்கும் போது ரசிகர்கள் அதைக் கண்டு பிடித்து சிரித்த கதைகள் நிறைய உண்டு.. கன்டின்யுடி பார்ப்பது பெரும்பாலும் எதாவது ஒரு துணை இயக்குநரின் பொறுப்பு.. சில சமயங்களில் அவர்கள் அஜாக்கிரதையாகச் சொதப்பி விடுவது சகஜம்.)
-----------------------------------------
சரி. இந்த டெக்னிகல் விசயங்களைக் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ( இந்த விசயங்கள் ஏற்கெனவே நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும்.. அவர்கள் கடந்து போகவும்)
இப்போது ஒரு படத்தில் வரும் ஒரு முழு சீனையும், வசனங்களுடன் பார்ப்போம்.
---------------------------------------------
கொலைக் குற்றவாளியான, மைனர் எனப்படும் r.s. மனோகரை, போலிஸ் சூப்ரெண்டென்டென்ட் s.p சௌத்ரியான நடிகர் திலகம், அவரது அடியாட்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று ய, கைது செய்து வருவதுதான் முழுக்காட்சி.
------------------------------------------------
படம் : தங்கப்பதக்கம்.
நடிகர்கள் : நடிகர் திலகம், r.s. மனோகர் மற்றும் அவரது அடியாட்கள்.
----------------------------------------------
காட்சி ஆரம்பத்தில், காமிராவுக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருக்கும் மனோகர், "அந்தப் பயலோட பொணத்தைப் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துங்கள்" என்பார்.
அவரது அடியாள் ஒருவர், "எஜமான், s.p சௌத்ரி வாரண்டோட வரப்போறதா ஊருக்குள்ளே பேசிக்கிறாங்க.." என்று சொல்ல, காமிரா பக்கம் திரும்பும் மனோகர், "ஹஹ்ஹஹ்ஹா... அப்படியா? அவன் வந்தான்னா, உடனே தீர்த்துடக் கூடாது...அவனைப் பிடிச்சுக் கட்டி, தெருத்தெருவா நாயைப் போல இழுத்துட்டு வந்து, பங்களா வாசல்ல தள்ளுங்க.. அவனோட தலையைத் துண்டு போடற வேலையை நானே கவனிச்சுக்கறேன்." என்பார்..
அடுத்த விநாடி, காக்கிப்பேண்டும், ஷூவும் அணிந்த இரண்டு கால்கள் மட்டும் இரண்டு முரடர்களை உதைத்து வீட்டுக்குள் தள்ள, மனோகரின் முன்பு வந்து அந்த இருவரும் விழுவர்.
மனோகர், "யார்ராது ?" என்று திகைப்புடன் கேட்க, அவர்கள் காமிராவை நோக்கிக் கைகளைக் காட்ட, அங்கே sp சௌத்ரி, இரண்டு இடுப்பிலும் கை வைத்தபடி கம்பீரமாக நிற்பார்..
" குட் மார்னிங்... என்ன மைனர்வாள் ! என் தலையைக் கேட்டீங்க.. நானே வந்திருக்கேன்...எடுத்துக்கறது" என்பார்..
இனி அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடலை மட்டும் பார்ப்போம்.
மைனர் : "நான் யாருன்னு தெரியாம என்னோட விளையாடப் பாக்கறே"
சௌத்ரி : "உங்க மாதிரி பெரிய மனுஷாள் கூட விளையாடறதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."
மைனர் : " நான் நினைச்சா உன்னைக் குடும்பத்தோட வெட்டிப் புதைச்சுடுவேன்.."
சௌத்ரி : "யாரு... என் குடும்பத்தையா ? ரொம்பக் கஷ்டம். இந்தியாவிலயே பேர் போன குடும்பம் என் குடும்பந்தான். என் கூட வா. என் குடும்பத்தாரை எல்லாம் உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்சி வெக்கறேன்."
மைனர் : "டேய் முத்து..ஊரையே திரட்டிக் கொண்டு வந்து நிறுத்து.. நான் யாருங்கறதை இவர் தெரிஞ்சுக்கட்டும்.."
சௌத்ரி : " சே... சே... நான் உன்னை இழுத்துட்டுப் போற அசிங்கமான காட்சியை ஊரே ஒன்னு சேர்ந்து வேடிக்கை பார்க்கனுமா என்ன ?"
மைனர் : " என்னை நீ கூட்டிட்டுப்போகப் போறியா ? ஹஹ்ஹஹ்ஹா... என்ன தைரியம்டா உனக்கு ?"
சௌத்ரி : "என்னடா செய்யறது ?"
மைனர் : "ஏய்.."
சௌத்ரி : " ஏய்... ஜாக்ரதை..நான் வரும்போது துப்பாக்கி கொண்டு வரலை. வெலங்கு கொண்டு வரலை. ஏன் தெரியுமா ? உன் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை. இப்ப உன் அங்கவஸ்திரத்தையே எடுத்து, உன் கையைப் பின்னாடி கட்டிக் கூட்டிட்டுப் போனா, நீ வேணான்னா சொல்லப் போற ? உன்னை மரியாதையாக் கூட்டிட்டுப் போய் ஜீப்ல ஏத்தாம, நாய் மாதிரித் தெருத் தெருவா இழுத்துட்டுப் போனா... நீ வருத்தப்படவா போற ? என்ன முழிக்கற ? என் கூட வந்துட்டன்னா, ஜாலியா ஜீப்ல போயிடலாம்... இல்லை என் கூட மோதிப் பார்க்கனும்னு நினைச்சேன்னா... அதுக்கும் நான் தயார். எப்படி வசதி ?"
மைனர் : "ஹெ ஹெ ஹெ... இங்க பாருங்க சார்..."
சௌத்ரி : "என்னாங்க சார்..?"
மைனர் : "உங்களுக்கு எத்தனை லட்சம் வேணும்னாலும் அள்ளி அள்ளித் தர்றேன்...ஆயுசு பூரா நீங்க நிம்மதியா இருக்கலாம்.."
சௌத்ரி : "எத்தனை லட்சம் கொடுப்பீங்க ?"
மைனர் : "அஞ்சு லட்சம் தர்றேன்.."
சௌத்ரி : " அஞ்சு லட்சம் ? யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்களே ?"
மைனர் : " சத்தியமா சொல்ல மாட்டேன். இப்ப உங்களுக்கு என்ன வேணும் ?"
சௌத்ரி : "இந்த அங்கவஸ்திரம் வேணும்.."
மைனர் : " அங்கவஸ்திரமா ?"
சௌத்ரி : " உங்க ஞாபகமா வெச்சுக்கத்தான் "
இப்படிச் சொல்லியபடியே நொடிப்பொழுதில் அங்கவஸ்திரத்தால் மைனரின் கைகளைப் பின்புறம் மடக்கிக் கட்டுகிறார் சௌத்ரி...
மைனர் : " டேய் முத்து, மாணிக்கம், வேலாயுதம்... எல்லாரும் வாங்கடா.."
சௌத்ரி : "உங்கப்பன், சுப்பன், தாத்தா எல்லாரையும் கூப்பிடு... போடா " என்று சொல்லி மைனரைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து ஜீப்பில் ஏற்றி, கொண்டு செல்வார்.
ஜீப்புக்குப் பின்னால் இரு அடியாட்கள் ஓடி வர, ஜீப்பை வழி மறித்து 14 அடியாட்கள் கையில் கம்புகளுடன் நிற்பர்.
அடியாட்களில் ஒருவன் : "மரியாதையா மைனரை விடப் போறியா இல்லையா ?"
சௌத்ரி : "என்னடா பூச்சாண்டி காட்றீங்க ? மரியாதையா வழி விடப் போறீங்களா இல்லையா ?"
அப்போது, எல்லோரும் அவரைத் தடி கொண்டு தாக்க முயல, கையில் வைத்திருக்கும் கெட்டியான பிரம்பால் அவர்களை எதிர்த்து அடித்து நொறுக்குவார். சுழன்று சுழன்று ஆக்ரோசமாகச் சண்டையிடுவார்..
மைனரை இரண்டு போலிஸ்காரர்கள் அவர் தப்பி விடாமலிருக்க, இறுகப் பிடித்தபடி ஜீப் அருகில் நிற்பார்கள்.
அடியாட்கள் அனைவரும் சௌத்ரியின் பிரம்படிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், அடிபட்டுக் கீழே விழுவர்.
சௌத்ரி, மூச்சு வாங்கியபடி, மைனர் நிற்கும் இடத்துக்கு வந்து, "என்ன மைனர்...இப்போ ஸ்டேசன் போவமா ?" என்றபடி மைனரின் வயிற்றில் லேசாகப் பிரம்பால் குத்துவார்..
"அள்ளிட்டுப் போ...கொண்டுட்டுப் போ எல்லாரையும்.." என்று மற்ற போலிஸ்காரர்களிடம் சொல்லியபடி சௌத்ரி ஜீப்பில் ஏறுவார்..
இத்துடன் இந்தக் காட்சி முடிகிறது.
-------------------------------------
இந்த மொத்தக் காட்சியின் நேரமும் நாலு நிமிடம் பத்து செகன்டுகள்தான்.
ஆனால், இதில் மொத்தம் எத்தனை ஷாட்டுகள் தெரியுமா ?
சொன்னால் அசந்து விடுவீர்கள்.
53 ஷாட்டுகள்.
மனோகருடன் சாதுரியமாகப் பேசி அவரை அங்கவஸ்திரத்தில் கட்டி வெளியே இழுத்து வரும் வரை, வீட்டுக்குள் சிறியதும் பெரியதுமாக 20 ஷாட்டுகள்.
வெளியே வந்த பிறகு, சண்டைக் காட்சி உட்பட, 32 ஷாட்டுகள். (எப்போதும் சண்டைக் காட்சிகளில் அதிக ஷாட்டுகள் இருக்கும்.)
இறுதியில் மனோகரிடம், " என்ன மைனர் .. இப்ப ஸ்டேசனுக்குப் போவமா?" என்று கேட்டு விட்டு ஜீப்பில் ஏறுவது இறுதி ஷாட்.
ஆக மொத்தம் 53 ஷாட்டுகள்.
---------------------------------
சரி.. இத்தனை ஷாட்களை எத்தனை நாட்கள் எடுத்திருப்பார்கள் ?
ஒவ்வொரு ஷாட்டுக்கும் காமிரா கோணங்கள் மாற்ற, எடுக்கப் போகும் ஷாட், குளோசப்பா, மிட் ஷாட்டா, லாங் ஷாட்டா என்பதைப் பொறுத்து ஒளியமைப்பை மாற்ற, டிராலி அமைப்பு மாற்ற, நடிகர்களுக்கு டச்சப் செய்ய... என்று ஏகப்பட்ட நேரம் பிடிக்கும். எனவே இந்த முழுக் காட்சியையும் எடுத்து முடிக்க நிச்சயம் நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும். அதிலும் 16 பேர்களுடன் மோதும் ஒரு பெரிய சண்டைக் காட்சி என்பதால், அதற்கே குறைந்தது இரண்டு நாட்கள் ஆகியிருக்கும்.
நிச்சயமாக சண்டைக் காட்சிகள் தனியாகவும், மற்ற காட்சிகள் தனியாகவும் தான் படம் பிடித்திருப்பார்கள்.
---------------------------------
இப்போது, ஆரம்பத்தில் நான் சொன்ன இரண்டு அல்லது மூன்று செகன்டுக்கு வருகிறேன்.
சண்டைக் காட்சி எல்லாம் முடிந்து, மைனர் இருக்கும் இடத்துக்கு நடந்து வந்து, "என்ன மைனர்.. இப்ப ஸ்டேசனுக்குப் போவமா ?" என்ற வசனம் பேசும்போது, லேசாக மூச்சு வாங்கியபடி பேசுவார் சௌத்ரி...
நிச்சயம் சண்டைக் காட்சியுடன் சேர்த்து ஒரே ஷாட்டில் இதை எடுக்கவில்லை... காரணம் சண்டைக் காட்சியின் காமிரா கோணம் வேறு... இறுதி ஷாட்டின் காமிரா கோணம் வேறு... எனவே தனியாகத்தான் இந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது உறுதி..
இதில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அந்த இரண்டு மூன்று செகன்டுகள் என்ன என்பதைச் சொல்கிறேன்.
இறுதி ஷாட்டில்.. "என்ன மைனர்... இப்ப ஸ்டேசனுக்குப் போவமா ?" என்பது மட்டும்தான் வசனம்.. நடிகர் திலகத்தைத் தவிர வேறு யார் சௌத்ரியாக நடித்திருந்தாலும் அந்த வசனத்தை மட்டுமே பேசி நடித்திருப்பார்கள். ஷாட்டுக்கு அதுதான் தேவை...
ஆனால் நடிகர் திலகம் அந்த வசனத்தைப் பேசும்போது லேசாக மூச்சு வாங்கியபடியேதான் பேசுவார்.
ஏன் ? எதற்காக மூச்சு வாங்குகிறார்..??
ஷாட்கள் வெவ்வேறு நாட்களிலோ, வெவ்வேறு நேரத்திலோ எடுக்கப்பட்டிருந்தாலும், கதைப்படி, சண்டை முடிந்த உடனே அவர் மனோகரிடம் வந்து பேச வேண்டும்.. 16 பேரிடம் நீண்ட கம்புச் சண்டை போட்ட ஒருவருக்கு மூச்சு வாங்காதா ? Sp சௌத்ரியாகவே இருந்தாலும், அவரும் மனிதர்தானே... அவருக்கு மட்டும் மூச்சு வாங்காதா என்ன ?
எனவே, இந்த ஷாட் எடுக்கும்போது, தான் நடித்த முந்தைய ஷாட்டின் நடிப்பின் கன்டின்யுட்டியை மிக நன்றாக நினைவு வைத்துக் கொண்டு லேசாக மூச்சு வாங்கியபடி வசனம் பேசியிருக்கிறார். நடிப்பில் எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி மிக மிக நுண்ணிய விசயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு நடித்திருப்பார் ??
( திரிசூலம் படத்தில் விஜயாவுடனான நீண்ட தொலைபேசி உரையாடலின் போது, திடீரென்று 'எக்ஸ்டென்சன் பிளீஸ்..' என்று கத்துவாரே... நினைவிருக்கிறதா ?)
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் நடிப்புப் பல்கலைக் கழகம் என்று நடிகர் திலகம் ஏன் மதிக்கப்படுகிறார் என்பது இப்போது புரிகிறது இல்லையா ??
---------------------------------
நன்றி.
நாகராஜன் வெள்ளியங்கிரி.
மீள்பதிவு

sivaa
16th May 2021, 09:06 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 51
படம் முடிந்து வெளியே வந்தபோது துஷ்மன் பார்த்துவிட்டு எப்படியிருக்குமோ என்று கவலைப்பட்டது தேவையில்லாதது என புரிந்தது. இதை ஏற்கனவே என் கஸின் சொல்லியிருந்தார் என்றாலும் நாமே நேரில் பார்க்கும்போதுதான் சில விஷயங்களை முழுமையாக ஒப்பு கொள்வோம். அப்படிதான் நீதியின் வெற்றியும் அமைந்தது.
படம் அனைத்து ஊர்களிலும் அந்த பதட்ட சூழலிலும் பிரமாதமாக ஓடுகிறது என்ற செய்தி ரசிகர்கள் மூலமாக அறிய முடிந்தது. 2 வது வார விளம்பரம் 4வது வார விளம்பரம் எல்லாம் முழுப்பக்க விளம்பரங்களாக பாலாஜி கொடுத்தார் என்று சொல்லும்போதே வெற்றியின் வீச்சு புரிந்தது. குறிப்பாக 4 வாரங்களில் வசூலில் ராஜாவையும் மிஞ்சி விட்டது நீதி என தலைப்பிட்டு அனைத்து ஊர்களின் வசூல் விவரங்களை கொடுத்திருந்தது மிக சிறப்பாக அமைந்தது. மதுரை தங்கத்தில் நான்கு வாரத்தில் ரூபாய் 1,72,000/- வசூல் செய்தது. படம் நன்றாக ஓடுவதற்கு மற்றொரு காரணமும் இயல்பாக அமைந்தது.
பொதுவாக நமது படங்கள் சந்திக்கக்கூடிய சவால்கள்/சிக்கல்கள் எதுவென்று கேட்டால் நமது படங்களே போதிய இடைவெளி இல்லாமல் வெளியாவதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரிலேயே அதை பல முறை விவாதித்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியமாக நீதிக்கு நல்ல இடைவெளி கிடைத்தது. ஆனால் அது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. சில பல வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். தர்மம் எங்கே வெளியான நேரத்தில் அதற்கு ஒரு 8 அல்லது 9 வாரம் இடைவெளி கொடுத்தே தவப்புதல்வன் வெளியாகும் அதற்கு 50 நாள் இடைவெளி கொடுத்து தீபாவளிக்கு வசந்த மாளிகையும் 1973 ஜனவரி 26 நீதி வெளியாகும் என்பதுதான் ஒரிஜினல் பிளான். ஆனால் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றி வாய்ப்பை இழந்தபோது இந்த மேல் சொன்ன மூன்று படங்களும் prepone ஆகி விட்டது. அதன் காரணமாகவே செப் 29 மாளிகை வெளியானதும் அன்று முதல் 1973 மார்ச் 23 வரை கிட்டத்தட்ட 6 மாத கால இடைவெளியில் நீதி மட்டுமே வெளியானது. ஆனால் அன்றைய நாட்களில் இது போல் இடைவெளி இல்லாமல் படங்களை வெளியாவதை பற்றி இன்று நாம் குறையாக சொல்கிறோமே அது அன்று கிடையாது. இன்னும் சொல்ல போனால் அடுத்த படம் எப்போது என்ற கேள்வியே அனைவர் பேச்சிலும் இருக்கும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தங்கப்பதக்கம் வெளியான மறுநாள் (1974 ஜூன் 2) மதுரை சென்ட்ரல் சினிமா வாசலில் ஈவினிங் ஷோ போவதற்கு நானும் என் கஸினும் நின்று கொண்டிருக்கிறோம். அனைவரும் படத்தை பற்றியும் அதன் வெற்றியை பற்றியும் எப்படி அந்த வருடத்தில் சாதனை படைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பையெல்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்க அங்கே அப்போது வந்த கஸினின் நண்பர்கள் சிலர் அடுத்த படம் எது எப்போ ரிலீஸ் என்று கேட்டதும் பாலாஜி படம்தான் ஆகஸ்ட் 15 என்று கஸின் சொன்னதும் மனதில் பசுமையாய்.
நாம் 1972க்கு திரும்பி வருவோம். நீதியும் மாளிகையும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய படங்களின் அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த டிசம்பரில்தான் குகநாதனின் அன்னை பூமி விளம்பரம் வெளிவருகிறது. இரட்டை வேடம் வண்ண படம் என்றதுமே ரசிகர்களுக்கு ஏக குஷி. அதே டிசம்பரில்தான் ஜெயந்தி பிலிம்ஸ் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்க போகிறார்கள் என்ற செய்தி வந்து பூஜையும் போடப்பட்டது. ஜெயந்தி பிலிம்ஸ் அதற்கு முன்பு எடுத்த இரண்டு படங்கள் பற்றி நான் சொல்லாமலே வாசகர்களுக்கு தெரியும். ஆகவே அவர்கள் முகாம் மாறி வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது. ஆராதனாவின் ரீமேக் என்று தெரிந்தபோது சற்றே கவலை வந்தாலும் அன்றைய காலகட்டத்தில் அது பெரிதாக பாதிக்கவில்லை. படத்திற்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் சூட்டப்பட்டதும் ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். அந்த பெயர் வைக்கலாம் என்று யோசனை சொன்னது ஏ.எல்.நாராயணன் என்பதும் அதை அவர் சொன்னதும் நடிகர் திலகம் அவரை கட்டி தழுவி மிகவும் பாராட்டினார் என்று பிற்காலத்தில் சிவிஆர் சொல்லி தெரிந்து கொண்டது.
இதற்கிடையில் மற்றொரு நிகழ்வு. தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மிக பெரிய சக்தியாக விளங்கியவரும் முதன் முதலாக அன்றைய ஓருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937ல் பதவியேற்று பணியாற்றியவரும், சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமாக கவர்னர் ஜெனரல் ஆக சேவை செய்தவரும் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த முதல் பொது தேர்தலிலுக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் முதல்வர் பொறுப்பு ஏற்றவரும் பின்னர் சுதந்திரா கட்சியை நிறுவியவருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற ராஜாஜி, மூதறிஞர் என்று அழைக்கப்பட்டவர். தனிப்பட்ட கோபதாபங்களுக்காக 1967ல் காங்கிரஸை தோற்கடிக்க திமுகவுடன் கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சியை பிடிக்க உதவி செய்திருந்தார் என்றாலும் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்ததும் அதை பொதுவெளியில் ஒப்புக் கொண்டு மீண்டும் பெருந்தலைவரோடு இணைந்து 1971ல் பணியாற்ற தொடங்கினார் என்பதையும் நாம் இந்த தொடரில் முன்பே பேசியிருக்கிறோம். 1971 ஆகஸ்ட் 30 அன்று திமுக அரசு மது விலக்கை ரத்து செய்தது, தேர்தல் தோல்வி தந்த வேதனையை விட பன்மடங்கு வேதனை அவருக்கு அளித்தது. தானே நேரில் சென்று கேட்டுக் கொண்டும் அன்றைய முதல்வர் கருணாநிதி அதற்கு செவி சாய்க்காதது அவரை மனதளவில் பாதித்தது. அதன் பிறகு அவரின் பொது நிகழ்ச்சிகள் குறைந்து விட்டன. அதற்கு முன்பு அவர் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் மற்றும் வியாசர் விருந்து இவற்றிலிருந்து பல கதைகளை கோவில்களில் உபன்யாசம் செய்வார். அதுவும் நின்று போனது. கல்கியிலிலும் சுவராஜ்யா பத்திரிக்கைகளில் மட்டும் எழுதி வந்தார். டிசம்பர் 10 அவருக்கு பிறந்த நாள். அன்று அவருக்கு அனைவரும் வாழ்த்து சொன்னார்கள். சினிமாவே பார்க்காத ராஜாஜி சம்பூர்ண ராமாயணம் பார்த்து விட்டு அனைவரையும் விட்டு விட்டு பரதனை கண்டேன் என்றார். அப்படி அவரால் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் இந்த காலகட்டத்தில் அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். பிறந்த நாள் முடிந்து சில நாட்களுக்கு பிறகு அவருக்கு பல்லாண்டுகளாக இருந்த தீவிர ஆஸ்த்மா கடுமையாக, அதை தவிர யூரினரி ட்ராக்ட் இன்பெக்க்ஷன் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட சென்னை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட ராஜாஜி சிகிச்சை பலனிக்காமல் அவரின் 94வது வயதில் 1972 டிசம்பர் மாதம் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று காலமானார்.
இந்த நேரத்தில் தமிழகத்தின் அரசியல் தட்பவெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக நார்மலானது. ஜனவரி பிறந்தவுடன் அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித்தன. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக அடைந்து கிடந்ததனால் வகுப்புகளும் பாடங்களும் விரைவாக நடத்தப்பட்டது. ஆனால் நாடு அமைதியாக இருந்தால் அரசியல்வாதிகளுக்கு பொறுக்காது. ஏதாவது போராட்டம் என்று செய்து கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியும். ஜனவரி மாதம் (ஜனவரி 5 என்று நினைக்கிறேன்) மதுரையில் ஒரு விழாவிற்கு பிரதமர் வருகை புரிகிறார். அவர் வருவதால் முதல்வரும் மதுரை வருகிறார். இந்த நேரத்தில் எம்ஜிஆர் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். திமுக அமைச்சரவை மீதான ஊழல் புகார்களில் மேலும் சிலவற்றை பழைய புகாரோடு சேர்த்து இணைத்திருப்பதாகவும் அதை பிரதமரிடம் கொடுக்க இருப்பதாகவும் அதற்காக அதே நாளில் மதுரை வர போவதாகவும் அந்த அறிவிப்பில் இருந்தது. டெல்லியில் நடந்தது போல் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் இதில் சேர்ந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது மதுரை வாழ் பொது மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. காரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அனுப்பி விட்டதாக செய்திகள் வந்திருந்தன, இப்போது இப்படி அனைவரும் ஒரே நேரத்தில் மதுரை வந்து அங்கே மீண்டும் இது போன்ற புகார் பட்டியல் கொடுக்கப்பட்டால் அதன் மூலம் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்ற கவலை.
மதுரை வருவதாக அறிவித்த எம்ஜிஆர் அதற்காக தேர்ந்தெடுத்த பயண முறை ரயில் பயணம். பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை வருகிறேன் என்று அறிவிப்பு. இது மக்களின் கவனத்தையும் நாட்டின் பிரதமர் குடியரசு தலைவர் கவனத்தையும் ஈர்ப்பதற்காக போட்ட திட்டம். அதன்படி பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்படுகிறார். வண்டி சென்னை நகரை தாண்டும் முன் அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டு கம்பார்ட்மென்ட் வாசலில் அவர் வர வேண்டும் பேச வேண்டும் இல்லாவிட்டால் வண்டியை போக விட மாட்டோம்.என்று ஒரு கூட்டம் நிற்கிறது. அது நடந்து கொஞ்ச தூரம் வண்டி சென்றதும் மீண்டும் சங்கிலி இழுப்பு. வண்டி நிற்க இதே கோரிக்கை. ஓரிரண்டு இடங்கள் என்றால் புரிந்து கொள்ளலாம். இது இயல்பாக நடந்தது என்று. ஆனால் தொடர்ச்சியாக பல இடங்களில் இதே போல் நிகழ்ந்து அனைத்து இடங்களிலும் ஒரே போல் கோரிக்கை அதே டயலாக் வந்தவுடன் உண்மை புரிந்து போனது. இதன் காரணமாக மறுநாள் காலையில் மதுரைக்கு வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்று மாலைதான் வந்து சேர்ந்தது. எத்தனை பேர் அவசர வேலைகளுக்காக அந்த ரயிலில் வந்தார்களோ, பாவம்! மக்கள் ஆதரவு அநத அளவிற்கு இருக்கிறது என காண்பிப்பதற்காக செய்யப்பட்ட இந்த நிகழ்வு பூமராங் ஆனது. மாலையில் இவரை சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார் பிரதமர் இந்திரா. ஆனால் ரயில் விளையாட்டால் அந்த நேரத்திற்கு இவரால் பிரதமரை பார்க்க முடியவில்லை என்பதனால் இவர் தாமதமாக சென்று இப்போது பார்க்கலாமா என்று கேட்க அது மறுக்கப்பட்டு மறுநாளும் பிரதமர் மதுரையிலே இருந்தபோதும் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்ட இந்திரா கோபம் அடைந்தார். அது மட்டுமல்ல ஏற்கனவே ஒரு முறை புகார்களை பெற்று கொண்டாகி விட்டது. மீண்டும் மீண்டும் அரசியல் காரணங்களுக்காக பிரதமரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதனாலும் அந்த சந்திப்பு மறுக்கப்பட்டது. இதை போன்ற நிகழ்வு (ரயிலை நிறுத்துவது)1988 பிப்ரவரியில் ஜானகி அம்மையார் மதுரை வந்தபோதும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.
இதற்கிடையில் மற்றொரு அரசியல் நிகழ்வு முக்கியத்துவம் பெற தொடங்கியது. இரண்டு வாரங்களுக்கு முன் 1972 அக்டோபர் மாதம் 22ந் தேதி மதுரை திலகர் திடலில் திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது என்றும் அதில் அன்றைய மதுரை மேயர் முத்து பேசிய பேச்சினால் கலவர சூழல் உருவாகி வன்முறைகள் நடந்தேறின என்பதையும் சொல்லியிருந்தேன். அன்றைய கூட்டத்தில் மற்றொரு பேச்சாளர் அன்றைய திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த என்.ராஜாங்கம். அவரும் மிக ஆவேசமாக பேசியிருந்தார். கூட்டத்தில் பேசிவிட்டு ஊருக்கு கிளம்பி சென்ற அவர் கடுமையான மாரடைப்பால் உயிர் இழந்தார். அதன் காரணமாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதனால் திண்டுக்கல் இடை தேர்தல் பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற பத்திரிக்கை செய்திகள் வர அரசியல் களம் சூடு பிடிக்கிறது.
அரசியல் இப்படி இருக்க நாம் நடிகர் திலகத்தின் திரையுலக பயணத்தில் தொடர்வோம்.1973 பிறந்தவுடன் அந்த வருடம் வெளியாக போகும் நடிகர் திலகத்தின் படங்கள் என்னவென்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.. ஜனவரி 26 அன்று வெளியாகிறது என்று 1972 ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டு படங்களின் விளம்பரங்கள் வந்தது. 1972 ஜூலை மாதம் 1973 குடியரசு தின வெளியீடு என்று ராஜபார்ட் ரங்கதுரை விளம்பரம் வந்தது. ஆனால் அந்த படம் அதற்குள் படப்பிடிப்பு முடியவில்லை. நாளாகும் என்று செய்தி வந்து விட்டது. டிசம்பரில் பாரத விலாஸ் ஜனவரி 26 வெளியீடு என்று ஒரு விளம்பரம் வந்தது. ராஜபார்ட் பாதி அளவிற்கே முடிந்ததிருந்தது என்றால் பாரத விலாஸ் ஒரு 80% மட்டுமே முடிந்திருந்த நேரம். வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னாலும் ஜனவரி 26க்கு முன் படம் முழுமையடையவில்லை. பிப்ரவரியில்தான் முடிந்தது. பிப்ரவரி கடைசியில் சென்சார் செய்யப்பட,, தான் அதற்கு முன் தயாரித்த பாபு சாந்தியில் வெளியான சென்டிமென்ட் வைத்து ACT, சாந்தி கிரௌன் புவனேஸ்வரி வேண்டுமென்று கேட்க முதல்முறையாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை கெடுக்காமல் மாளிகை பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.வெள்ளிவிழா போகும். அதன் பிறகுதான் தியேட்டர் கிடைக்கும் என்று சொல்லப்படவே, பாரத விலாஸ் படத்தை மார்ச் மாதம் 24ந் தேதிக்கு தள்ளி போட்டார் ACT
படம் தள்ளி போடப்பட்டதால் எதிர்பாராமல் கிடைத்த இந்த இடைவெளியை பற்றி சந்தோஷப்பட்டோம் என்றால் அதுவே நமக்கு வினையாக மாறியது. ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்கள். அதிலும் மிக பிரம்மாணட படம் ஒன்று என்ற சிக்கலில் தள்ளியது. அதை பின்னர் பார்ப்போம்.
நடிகர் திலகத்தை பொறுத்தவரை இடைவிடாத படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சகோதரர் Kn சுப்பு, ராசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வந்திருந்தது. ACT இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைப்பெற இருக்கிறது என்றும் அதற்காக நடிகர் திலகம் மற்றும் லதா ஆகியோர் சிங்கப்பூர் செல்கிறார்கள் என்றும் செய்தி பத்திரிக்கையில் வந்தது. [வாசகர்கள் நான் பெயரை தவறாக எழுதி விட்டேனோ என்று நினைக்க வேண்டாம். நான் குறிப்பிடும் படம் அவன்தான் மனிதன் என்பது இந்நேரம் புரிந்திருக்கும். அந்த நேரத்தில் பெயர் வைக்கப்படவில்லை. அதில் முதலில் ஒப்பந்தமானவர் லதா. ஆனால் கால்ஷீட்(?) சிக்கல்களால் அவர் விலக அந்த வேடத்தில் மஞ்சுளா ஒப்பந்தம் செய்யப்பட்டார்]. அதே போல் சிவகாமியின் செல்வன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நடிகர் திலகம் வாணிஸ்ரீ, போன்றவர்கள் டார்ஜிலிங் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு போவதாகவும் செய்தி வந்தது.
இதற்கிடையில் நாட்டின் குடியரசு தின விழா ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்படும் என அறிவிப்பு வருகிறது. சென்னை மாநகரை பொறுத்தவரை ஒரு ஊர்வலம் நடத்தப்படும் என்றும் திருவல்லிக்கேணி தேரடியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு கண்ணப்பர் திடலை அடையும் என்றும் அங்கே பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அந்த ஊர்வலத்திற்கு நடிகர் திலகம் தலைமை தாங்குவார் என்றும் அறிவிப்பு வர ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அதற்கு முன்னர் சிகர மன்றத்தின் சார்பாக இல்லாமல் கட்சி சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் நடிகர் திலகம் கலந்து கொண்டிருந்தாலும் இதுபோன்ற ஒரு கட்சி ஊர்வலம் அதற்கு தலைமை தாங்குவது என்பது எனக்கு தெரிந்தவரை நடந்ததில்லை. ஆகவே ரசிகர்கள் பெருவாரியாக அந்த ஊர்வலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டார்கள்.
இந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் புது படங்களை பற்றிய அறிவிப்புகள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள் நடிகர் திலகமே பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஒருவரை அறிமுகப்படுத்துகிறார். இவர்தான் வி பி ராஜேந்திர பிரசாத். தெலுங்கு படவுலகில் முன்னணி தயாரிப்பாளர். இவர்கள் தெலுங்கில் தயாரித்த சில படங்களை நாம் ஏற்கனவே தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம். இப்போது அவர்களே நேரிடையாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்க முன்வந்திருக்கிறார். அவருக்கு நமது தமிழ் பட ரசிகர்கள் வரவேற்பு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ராஜேந்திர பிரசாத் பேசும்போது மிக பிரம்மாண்டமாக கலர் படம் எடுக்க போவதாகவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய விருந்து காத்திருக்கிறது என்று சொன்னார். உடனே படப்பிடிப்பும் ஆரம்பித்து சில ஸ்டில்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்தன. நான் சொல்லாமலே என்ன படம் என்று வாசகர்களுக்கு புரிந்திருக்கும். அது போல மிக பெரிய தனவந்தர் என்றும் தெலுங்கு படவுலகோடு (?) தொடர்புள்ளவர் என சொல்லப்பட்ட என் வி ராமசாமி அவரது என் வி ஆர் பிக்சர்ஸ் சார்பாக நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கிறார் என்ற செய்தி அதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருந்தன. படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட செய்தியும் பத்திரிக்கைகளில் வந்திருந்தன என்றாலும் அந்த ரோஜாவின் ராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு 1973 மார்சில்தான் துவங்கியது. சின்னப்பா தேவர் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
அந்த நேரம் தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டு பல மணி நேரம் நீண்டு நிற்கக்கூடிய மின்வெட்டுகள் அமுல்படுத்தப்பட்டன. திரையரங்குகளுக்கு இரண்டு காட்சிகளுக்குத்தான் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டசபையில் இது கடுமையான விவாதங்களுக்கு வழி வகுக்க அனந்தநாயகி அரசாங்கத்தை கடுமையாக சாடினார். ஆனால் இது போல் பதில் சொல்ல முடியாத கேள்விகள் வரும்போது வேறு ஒரு விஷயத்தை முன்னெடுப்பது இல்லாவிட்டால் இங்கே மட்டுமா? கேரளாவில், ஆந்திராவில் இல்லையா என்று அடுத்த மாநிலங்களை கைகாட்டுவது என்பதுதான் கழகங்களின் பாணி. அப்போதும் அப்படிதான் பதில் சொன்னார்கள். இந்த மின்வெட்டு அதன் காரணமாக மாட்னி காட்சிகளுக்கு மின்சாரம் வழங்காமை இதன் காரணமாக மாளிகையும் சரி, நீதியும் சரி சற்றே பாதிக்கப்பட்டன. வசந்த மாளிகை தந்த வசூல் மழையில் பல் திரையரங்குகளும் ஜெனரேட்டர் புதிதாக வாங்கின. சென்னை சாந்தியிலும் மதுரை நியூசினிமாவிலும் வசந்த மாளிகை வெள்ளி விழா நோக்கி வீறு நடை போட்டது. நீதியை பொறுத்தவரை மதுரை தங்கத்தில் 57 நாட்கள் ஓடியது. சென்ட்ரலில் வெளியாகி இருந்தால் நிச்சயம் 100 நாட்களை கடந்திருக்கும். 1973 பிப்ரவரி 1 வரை நீதி ஓடியது. அடுத்த நாள் முதல் ஒரு இந்தி படம் திரையிடப்பட்டது. அன்று தொடங்கி 1974 ஆகஸ்ட் 14 வரை வாரம் ஒரு படம் என்ற கணக்கில் இந்திப்படங்கள் மட்டுமே தங்கத்தில் திரையிடப்பட்டன.
கோவையில் 71 நாட்கள் ஓடிய நீதி சென்னை தேவி பாரடைஸ் மற்றும் சேலம் சங்கம் அரங்குகளில் தொடர்ந்து ஓடியது. மார்ச் 16 வெள்ளியன்று 100வது நாள் என்றிருக்க மார்ச் 15 வரை ஓடி 16 அன்று மாற்றப்பட்டது. 99வது நாள் என்ற முழுப்பக்க விளமபரம் வந்தது. ஏன் 99 நாளோடு எடுக்கப்பட்டது என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் போனஸ் பிரச்னை என்று வழக்கம் போல் அள்ளி விட்டனர். சிலர் யாரோ ஒருவர் பாலாஜியிடம் பந்தயம் கட்டியதாகவும் அந்த பந்தய பணத்தை வெல்லவே இது போல் செய்யப்பட்டது என்றும் சொன்னார்கள். ஆனால் இவை இரண்டுமே உண்மையில்லை என்பதுதான் எதார்த்தம். தமிழகத்தில் இரண்டு அரங்குகளில் மட்டுமே 100 நாட்கள் ஓட போகிறது. அந்த இரண்டு அரங்குகளில் பணியாற்றுபவர்களுக்கு பெரிதாக என்ன போனஸ் தொகை வந்து விடப்போகிறது? அது மட்டுமல்ல அதை பாலாஜி கொடுக்க போவதுமில்லை. அதை அரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர் பார்த்து கொள்ள போகிறார்கள். எனவே அந்த பிரச்னையில்லை. இந்த விஷயம் பற்றி சில காலம் முன்பு பாலாஜியின் மகன் திரு. சுரேஷ் பாலாஜியிடம் நான் கேட்டேன். அவர் அப்போது சிறுவன் என்றும் (11 வயது) அதனால் அதை பற்றிய விவரங்கள் தெரியாது என்று சொன்னவர் நிச்சயமாக போனஸ் பிரச்னை காரணமாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தினார். காரணம் தனது படங்களில் நடிக்கும் ஹீரோவில் ஆரம்பித்து தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை பேசிய சம்பளத்தை பைசா குறைவில்லாமல் கொடுத்தவர் தனது தந்தை என்றும் அதன் காரணமாகவே அவரால் பல வருடங்கள் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வர முடிந்தது என்பதையும் சொன்னார். இந்த சம்பள விஷயத்தை சிவிஆர் போன்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை சரியாக தெரியவில்லை. நீதியின் 99வது நாள் மார்ச் 15 வியாழன் என்றால் அதற்கு அடுத்த வியாழன் மார்ச் 22 வசந்த மாளிகை 175 நாட்களை மதுரை நியூசினிமாவில் நிறைவு செய்தது.
பாரத விலாஸ் படப்பிடிப்பு பிப்ரவரி வரை நீண்டதை சொன்னேன். அதன் patch works நடந்து கொண்டிருக்கும்போதே ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராஜ ராஜ சோழன் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக செய்திகள் வந்தன. மார்ச் 3 வெளியீடு என்று ஒரு முழு பக்க விளம்பரமே உமாபதி கொடுத்தார் என்றாலும் படம் அதற்குள் முடியவில்லை. நாதனை கண்டேனடி பாடல் காட்சியும் அதை தொடர்ந்து முத்துராமன் சிறை வைக்கப்படும் காட்சிகளெல்லாம் அந்த பிப்ரவரி மாதத்தில்தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் 14 வெளியாகிறது என்ற செய்தியும் ரசிகர்கள் மத்தியில் அடிபட்டுக் கொண்டிருந்தது. மார்ச் முதல் வாரத்தில் படத்தின் ரிரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் நடைபெறுவதாக செய்தி வர சிறிது நாட்களுக்குள்ளாக சென்சார் செய்யப்பட்டதாவும் செய்தி. 1972 அக்டோபர் நவம்பர் மாதங்களிலேயே சிந்தாமணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்து விட்டது. சிந்தாமணி என்ற விஷயம் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தில்லானாவிற்கு பின் ஒரு பெரிய படமாக வர போகிறது என்ற நம்பிக்கை.
பாரத விலாஸ் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 24 ரிலீஸ் என்று விளம்பரம் வர மதுரையில் தேவி சித்ரம் என்ற பட விநியோக நிறுவனம் MR (மதுரை ராமநாதபுரம்) ஏரியாவிற்கு வாங்கியிருக்கிறார்கள் என்றும் மதுரை சென்ட்ரலில் ரிலீஸ் என்றும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் திடீரென்று ராஜ ராஜ சோழன் மார் 31 ரிலீஸ் என்று தியேட்டர்கள் பட்டியலோடு விளம்பரம் வர ரசிகர்கள் திகைத்து போனார்கள். ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரீட்சை என்று கோபமும் வருத்தமுமாக பேசிக் கொள்வதை கேட்க முடிந்தது. 1971 இறுதியில் வந்த பாபுவில் ஆரம்பித்து அதன் பின் வெளியான அனைத்து படங்களும் (தர்மம் எங்கே தவிர்த்து) 100 நாட்களை கொண்டாடியிருக்க அந்த வெற்றி ஊர்வலம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது.
ராஜ ராஜ சோழன் ஒரு வார இடைவெளியில் வந்தால் பாரத விலாஸ் என்னாகும் என்ற கேள்வியும் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் ராஜ ராஜ சோழனும் பாரத விலாஸ் படத்தால் பாதிக்கப்படுமே என்ற கவலையும் ரசிகர்களை வாட்ட, மார்ச் மாதத்தின் நாட்கள் நகர நகர அந்த ரிலீஸ் நாட்களும் பக்கத்தில் வர வர ----
(தொடரும்)
அன்புடன்

5791

நன்றி முரளி சிறிநிவாசன்

sivaa
22nd May 2021, 09:03 PM
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 52
இப்படி ரசிகர்கள் எதிர்பார்ப்பு, கோபம், கவலை போன்ற கலவையான உணர்வுகளில் சிக்கி தவிக்க மார்ச் 24 ந் தேதி பாரத விலாஸ் வெளியானது. முன்பே சொல்யிருந்தபடி மதுரை சென்ட்ரலில் ரிலீஸ். படம் வெளியான சனிக்கிழமையன்றுதான் எனக்கு தேர்வு முடிகிறது. ஆகவே வழக்கம் போல் கஸின் மட்டுமே காலை ஓப்பனிங் ஷோ பார்த்தார். விநியோகஸ்தர் தேவி சித்ரம் என்ற கம்பெனி என்று சொல்லியிருந்தேன். அதன் உரிமையாளர் என் கஸினின் நெருங்கிய நண்பருக்கு தாய் மாமா. ஆகவே எந்த சிக்கலுமில்லாமல் டிக்கெட் வாங்கி விட்டார். என்னை மாலை காட்சிக்கு கூட்டி போவதாக சொல்லியிருந்தார். ஆனால் படம் வெளியாவதற்கு முதலிரண்டு நாட்களில் விநியோகஸ்தர் ஆபிசில் டிக்கெட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டதில் ஈவினிங் ஷோ கிடைக்கவில்லை. நைட் ஷோ தருகிறேன் என்று சொல்லி தந்தாக கஸின் வந்து சொல்ல வீட்டில் முதலில் முடியாது என்று சொன்னாலும் கடைசியில் சரி என்று சொல்லிவிட (நாங்கள் சொல்ல வைத்துவிட) முதன் முறையாக முதல் நாள் நைட் ஷோ கஸினுடன் போகிறேன். (எப்போதுமே அவர் ஓப்பனிங் ஷோ போவது வீட்டிற்கு தெரியாது. என்னை கூட்டி போகும் காட்சிதான் முதன் முறையாக அவரும் பார்க்கிறார் என்றே வீட்டில் சொல்லப்படும்).
நம்முடைய வழக்கப்படி ரிப்போர்ட் எப்படி என்று கேட்க அதான் கொஞ்ச நேரத்திலே பார்க்க போறியே என்று சொல்லி விட்டார். எனக்கு இந்த பதில் கேட்டவுடன் ஒரு சந்தேகம். அதை கேட்டும் விட்டேன். படம் நல்லாத்தான் இருக்கு என்றார். பொதுவாக சென்ட்ரல் சினிமாவில் படம் வெளியாகிறது என்றாலே எங்களிடம் டிக்கெட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தியேட்டர் வாசலுக்கு போய் தியேட்டருக்கு எதிரே நிற்க கூடிய ரசிகர்களின் ஜோதியில் கலந்து மகிழ்ந்து பின்னரே உள்ளே செல்வது வழக்கம். ஆனால் அன்று நடக்கவில்லை. என்னவென்றால் விநியோகஸ்தரின் கம்பெனி லெட்டர் பாடில் (Letter Pad) எந்த படம், தேதி, எந்த வகுப்பு டிக்கெட், எத்தனை டிக்கெட், என்பவன எழுதியிருக்கும். சில நேரங்களில் விநியோகஸ்தர்.ஆபிஸிலே பணம் வாங்கியிருப்பார்கள். அதை கொண்டு போய் தியேட்டர் ஆபிஸ் ரூமில் காண்பித்து டிக்கெட்டுகளை வாங்கி கொள்ள வேண்டும். கவுன்டர் திறப்பதற்குள் போய்விட்டால் முதலிலேயே டிக்கெட்டுக்களை வாங்கி விடலாம். டிக்கெட்டுக்கள் கவுன்டருக்கு போய்விட்டால் காத்திருக்க வேண்டும். இந்த காரணத்திற்காக தியேட்டர் பின்பக்கம் வழியாக (பொதுவாக பெண்கள் போகும் பாதை) போக வேண்டும். அதனால் இந்த முறை ஜோதியில் கலப்பதை தவிர்த்து பின்புற வாசல் வழியாக உள்ளே சென்றோம்.
படத்திற்கு சரியான கூட்டம், ஓப்பனிங் ஷோவை விட கூட்டம் அதிகம் என்று கஸின் சொன்னார். டிக்கெட் வாங்கி உள்ளே வந்தவர்கள் சிலர் பிளாக்கில் வாங்கி வந்ததாக சொன்னார்கள். உள்ளே போய் இடம் பிடித்து அமர படம் ஆரம்பித்தது. சினி பாரத் லோகோ, மூவி மேக்கேர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட்களுக்கு பிறகு டைட்டில் ஓடி முடிந்தது. பொதுவாக ACT படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதுவது வழக்கம். ஆனால் இந்த படத்திற்கு மதுரை திருமாறன் வசனம். டைட்டில் முடிய ஒரு ஆபிஸ். அங்கே நீலு மானேஜர். அவரை தேடி வரும் அவரது மனைவி. அவர்களின் திருமண நாள் என சொல்லப்படுகிறது. நீலுவின் பிஏ வந்து கோபால் என்பவர் உங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் என்று சொல்ல நீலுவின் மனைவியும் சிபாரிசு செய்ய கதவின் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் கண் பின் கண்கள் பிறகு முழுமையாக நடிகர் திலகம். கழுத்தில் டை கையில் பை என்று உள்ளே வருபவர் கால் தடுமாறி பொருட்களை கொட்டி நீலுவின் மனைவியின் அனுதாபத்தை பெறுவார். நீ நல்ல சேல்ஸ் மான் இல்லை. இப்படியா வியாபாரம் பண்றதுன்னு பேசி நீலு ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி செக் கொடுக்கும் நேரம் விஜயா என்ட்ரி. இவர் உங்களை ஏமாற்றி விட்டார். என்னிடம் பந்தயம் வைத்து உங்களிடம் பொருட்களை விற்று விட்டார் என விஜயா சொல்ல பரவாயில்லை என நீலு வழிவார்.
எம் ஆர் ஆர் வாசு மனோரமா ஜோடி அறிமுகம். வாசு தெலுங்கு. மனோரமா கன்னடம். ஓரு பெரிய வீட்டில் குடியிருப்பார்கள். நண்பர் ஒருவருக்காக போட்ட ஜாமீன் கையெழுத்தால் பட்டாணிக்காரனால் 300 ருபாய் மாலைக்குள் கொடுக்க வேண்டும் என மிரட்டப்பட அந்த நேரம் வீடு வேண்டும் என தேடி வரும் நடிகர் திலகத்திடமும் அவருக்கு பின்னர் வரும் விஜயாவிடமும் தலா 150 ரூபாய் பெற்றுக்கொண்டு தனி தனி ரூம்களை கொடுத்து விடுவார். இரவு இரண்டு பேரும் மாலையில் சேர்ந்து வர உண்மை வெளிப்பட, வாசு இருவரிடமும் உண்மையை சொல்லுவார். வீட்டு ஓனர் ஒரு வெளிநாட்டவர் என்றும் தற்போது டெல்லியில் இருப்பதாகவும் நமக்குள் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம் என கூற இருவரும் சரி என்பார்கள். விஜயா தனது கம்பனியின் பொருட்களை டெலிவரி கொடுக்க செல்லும்போது ஏற்கனவே பொருட்கள் வந்து விட்டதும் என்றும் அதற்குண்டான பணத்தை உங்க வீட்டுக்காரர் வாங்கி கொண்டு போய்விட்டார் என்று கடைக்காரர் சொல்ல யார் என்று விஜயா கேட்க நடிகர் திலகம் என்பது புரிய வரும். நடிகர் திலகத்தை தேடி அவரது ஆபிசுக்கு விஜயா வர லிப்ட்டில் வைத்தே இருவருக்கும் வாக்குவாதம் நடந்து நாம் ஏன் கல்யாணம் செய்து கொள்ள கூடாது என்று திடீரென்று நடிகர் திலகம் கேட்க விஜயாவும் ஒப்புக் கொள்ள அடுத்த காட்சி சப் ரெஜிஸ்திரார் அலுவலகம். இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெறும்.
இருவரும் வீட்டிற்கு வர நடிகர் திலகத்தின் ஏக்கமான பார்வையையும், பேச்சையும் புறக்கணித்து விஜயா அறைக்குள் சென்று கதவை மூடி கொள்ள அசரீரியாக ஒரு குரல் கேட்க நடிகர் திலகத்தின் மனசாட்சி. உருவத்தை காண்பிக்காமல் குரல் மட்டுமே கேட்கும் உத்தியை பயன்படுத்தியிருப்பார்கள். நடிகர் திலகத்தை பயங்கரமாக கிண்டலடித்து மனசாட்சி பேச ரோஷம் கொண்டு கதவை திறந்து உள்ளே போக விஜயாவால் திருப்பி அனுப்பபடுவார். வெளியே வந்தவுடன்தான் சக்கை போடு போடு ராஜா பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரமும் அந்த கதாபாத்திரத்தின் மனசாட்சியும் பாடுவது ஆனால் திரையில் ஒரு உருவம் மட்டுமே தெரியும் என்ற சற்றே சிக்கலான கான்செப்டை வெகு லாவகமாக கையாண்டு இயக்குனருக்கும் பெயர் வாங்கி கொடுப்பார் நடிகர் திலகம். 1971 இறுதியில் பாபுவில் ஆரம்பித்து தொடர் வெற்றி மேல் வெற்றி குவித்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்தை குறிக்கும் விதமாகவும் சக்கை போடு போடு ராஜா. உன் காட்டிலே மழை பெய்யுது என்ற வாலியின் சமயோசிதமான வரிகளுக்கு தியேட்டரில் ஏக கைதட்டல்கள். நான் சில வரிகளுக்கு முன்பு சொன்ன மாதிரி இந்த பாடல் காட்சி மொத்தம் ஒரு கத்தி முனை காட்சி. சற்று பிசகினாலும் கதாபாத்திரம் வேறு ஒரு மாதிரியாக நினைக்கப்பட்டு கேலிக்குள்ளாகி விடும்.அதை எல்லாம் மிக அழகாக தாண்டி ஜெயித்திருப்பார் நடிகர் திலகம். பாடல் முடிந்தவுடன் விஜயா வந்து மஞ்சள் கயிற்றில் கோர்த்த மாங்கல்யத்தை கொடுத்து தனக்கு அணிவிக்க சொல்வார். கழுத்தில் இந்த கயிறு ஏற வேண்டும். அதற்காகதான் உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன் என சொல்ல இருவரும் இணைவார்கள்
நடிகர் திலகத்தின் ஆபிசில் (அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்) பொருட்களை வாங்கி விற்கும் ஏஜென்ட் டைப்பிஸ்ட் கோபு அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் பொருட்கள் எடை குறைந்திருக்கின்றன, சீல் உடைக்கப்பட்டிருக்கின்றன ஆகவே வேறு பொருட்கள் அல்லது நஷ்ட ஈடு கேட்க நடிகர் திலகம் அவரோடு சண்டைக்கு போவார். இவரின் குணமே இப்படித்தான் என்று அந்த பெண்ணிடம் சொல்ல கோபு முதலாளியிடம் புகார் செய்ய நடிகர் திலகத்திற்கு வேலை போய்விடும். அங்கே விஜயாவின் ஆபிசில் மானேஜராக மாறுதல் பெற்று மீண்டும் வரும் செந்தாமரை விஜயாவிற்கு சில பொருட்களை வாங்கி வந்திருப்பதாக எடுத்து கொடுக்க விஜயா கோபமுற்று அதை மறுத்து தனக்கு திருமணமானதை சொல்ல அதற்கும் மசியாமல் செந்தாமரை பேச விஜயா வேலையை விட்டு விடுவார்.
இருவரும் வீட்டிற்கு வர என ஆபிசில ஒண்ணு நடந்துச்சுன்னு இருவரும் மாறி மாறி சொல்ல முதலில் விஜயா சொல்கிறேன் என்று ஆரம்பித்து பக்கத்தில் உட்காரட்டுமா என கேட்டு (இப்போ எதுக்கு என்று நடிகர் திலகம் முனகுவது டாப்) மானேஜர் பேசினதை பற்றி சொல்ல நடிகர் திலகத்தின் முகம் போகும் போக்கு (எனக்கு கண் நிறைஞ்ச கணவர் என்று விஜயா சொல்ல கண் நிறைஞ்ச கணவர் என்று நடிகர் திலகம் திருப்பி சொல்ல கை நிறைய சமபாதிக்கிறார் என்று விஜயா, முகத்தை அப்பாவியாக வைத்து கை நிறைய சம்பாதிச்சார் என்று நடிகர் திலகம் சொல்லும் விதம் சூப்பர்). இருவருக்குமே வேலை போய்விட்டது என்று தெரிந்ததும் இனி என்ன செய்வது என்று திகைத்து நிற்க அங்கே வரும் வாசுவும் மனோரமாவும் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் தங்க வளையல்களை கொடுத்து புதிதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்க பயன்படுத்திக் கொள்ள சொல்ல நடிகர் திலகமும் விஜயாவும் வார்த்தை வராமல் தவிப்பார்கள்.
அடுத்த காட்சி வரும்போது நடிகர் திலகம் அவருடைய தனி அலுவலகத்தில் இருக்க வியாபாரம் நன்றாக நடக்கிறது என்ற விஷயத்தை வசனங்கள் இல்லாமல் அந்த காட்சியின் தன்மை விளக்கி விடும். அவரது பிஏ வாக ஏ.சகுந்தலா அறிமுகம். சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது போல் காட்சி அமையும். அவரின் நடவடிக்கையில் நடிகர் திலகத்தை கவர முயற்சிக்கும் எண்ணம் பிரதிபலிக்கும். வீட்டிற்கு அல்வா, மல்லிப்பூ இத்யாதிகளுடன் வந்து நடிகர் திலகம் விஜயாவிடம் வழிவது வெளியே போகலாம் என்பது போன்ற வசனங்கள் வரும்போது விஜயா கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் இருவருக்கும் ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார் என்பதும் காட்சியாக விரியும். சில வருடங்கள் கடந்து விட்டன என்பதை உணர்த்தி விடுவார்கள்.
வாசு ஒரு நாள் கடிதத்தை வைத்து சத்தம் போட என்னவென்று கேட்கும் நடிகர் திலகத்திடம் அந்த வீட்டின் மாடியில் இருக்கும் இரண்டு போர்ஷனில் ஒன்றில் ஒரு பஞ்சாபியையும் மற்றொன்றில் ஒரு மலையாளியையும் குடி அமர்த்தியிருப்பதாக டெல்லியிலிருந்து வீட்டு ஓனர் எழுதியிருப்பதாகவும் அப்படி அவர்கள் குடி வந்துவிட்டால் நம்முடைய சுதந்திரம் போய்விடும் என வாசு சொல்ல என்ன செய்யலாம் என்று நடிகர் திலகம் கேட்க அந்த நேரத்தில் அந்த பஞ்சாபி மேஜரும் அவர் மனைவியாக தேவிகாவும் அவர்களின் ஒரே மகளுடன் அங்கே என்ட்ரி. மேஜரை பார்த்தவுடன் வாசு அவரிடம் வீட்டை பற்றி பல கோளாறுகள் சொன்னாலும் மேஜர் கண்டு கொள்ள மாட்டார். மேஜரை வாசு தமிழில் திட்ட மேஜர் ஒன்றும் புரியாமல் போவது போல காட்சியமைப்பு. ராத்திரி பின்பக்க வழியாக சுவரேறி அவர்கள் வீட்டிற்குள் சென்று ஆவிகள் நடமாட்டம் இருப்பது போல் தோற்றத்தை உருவாக்கி அவர்களை காலி செய்ய வைக்க வேண்டும் என்று பிளான் போடுவார்கள்.அதன்படி கிளம்புவார்கள்.
மறுநாள் காலை நடிகர் திலகத்தையும் வாசுவையும் காணவில்லை என்று விஜயாவும் மனோரமாவும் மேஜரை தேடி வந்து உதவி செய்யும்படி கேட்க தேவிகா பாத்ரூமில் திருடன் என்று ஓடி வர கதவை திறந்து பார்த்தால் இருவரும் அங்கே இருக்க இரவில் ஏணி வைத்து ஏறியபோது ஏணி உடைந்து பாத்ரூமில் விழுந்த கதையை கூறுவார்கள். அசடு வழிந்து மேஜரிடம் மன்னிப்பு கேட்க அவர் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று திருக்குறளை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக தனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று மேஜர் உண்மையை சொல்ல அனைவரும் நண்பர்களாவார்கள். அடுத்து மலையாளி இஸ்லாமியராக விகேஆர் ராஜசுலோச்சனா ஒரே மகனோடு வருவார்கள். முதலில் ராஜசுலோச்சனாவோடு அவ்வளவு ஒட்டாமல் இருக்கும் பெண்கள் மூவரும் அவர் பண்டிகைக்கு தின்பண்டங்கள் செய்து கொண்டு கொடுக்க முதலில் மறுத்து பின் அவரின் கதை கேட்டு நட்பாவர்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருந்ததையும் அந்த பெண் இப்போது இல்லை என்பதையும் ராஜசுலோச்சனா சொல்வார். வாசு மனோரமாவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பதும் தெரிய வரும்.
ஆபிசில் சகுந்தலா நடிகர் திலகத்திடம் தான் ஒரு கிளப்பில் பாட இருப்பதாகவும் அதற்கு அவசியம் வர வேண்டும் என்று நடிகர் திலகத்தை வற்புறுத்த அவர் தயக்கத்துடன் ஒப்புக் கொள்வார். அங்கே செல்ல சகுந்தலா ஆடி பாடும் பாடல் காட்சி. மின்மினி பூச்சிகள் கண்களில் தென்படும் என்ற ஈஸ்வரியின் பாடல். அது முடிந்தவுடன் சகுந்தலாவை காரில் வீட்டில் கொண்டு விடும் நடிகர் திலகத்தை வீட்டிற்குள் வந்துவிட்டு போகுமாறு சகுந்தலா நிர்பந்திக்க உள்ளே நுழைவார். அவருக்கு காபி எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கொண்டு வருபவர் வேண்டுமென்றே அவர் மீது காபியை கொட்டி அவரது உடைகளை கழட்ட வைத்து அவர் பக்கத்தில் சென்று தற்செயலாக நடபபது போல் அவர் மீது தடுக்கி விழுந்து அவரை படுக்கையில் வீழ்த்தி ஒரு ஏடாகூடமான நிலையில் இருப்பது போல் செட்டப் செய்ய அங்கே வரும் அவரது அண்ணன் அதை கேமிராவில் படம் பிடித்து ஒடிவிட அவன் மோசமானவன் என்று சகுந்தலா போலி கண்ணீர் வடிக்க அப்போது முதல் அந்த வில்லனின் டார்ச்சர் ஆரம்பம். பல முறை பணம் கேட்டு வாங்கி போகும் அவன் கடைசியாக வீட்டிற்கே வந்து நெகட்டிவை கொடுத்து விடுகிறேன் 50,000 கொடுத்து விடு என்பான்.
பணம் இல்லாமல் வீட்டில் பீரோவில் வைத்திருக்கும் நகைகளை நடிகர் திலகம் எடுக்க முயற்சிக்க விஜயா வந்து விடுவார். ஆபிசில் ஒரு சின்ன பிரச்னை. அதற்காக பணம் தேவைப்படுகிறது என்று நடிகர் திலகம் சொல்ல எடுத்துக்குங்க என்று சொல்லும் விஜயா ஆனா என்கிட்டே உண்மையை சொல்லுங்க. நம்ம கம்பெனி நல்ல லாபத்தில் போகுது. ஏன்னா நான்தான் accounts பார்க்கிறேன். அதை பாக்க சொன்னதே நீங்கதான். இப்போ எங்கிட்ட சில விஷயங்களை மறைக்கிறீங்க. உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்க நடிகர் திலகம் சற்று கோபமாக பதில் சொல்ல விஜயா விடாப்பிடியாக அவரை தடுக்க கோபத்தில் நடிகர் திலகம் உதறி விட்டு போக விஜயா கட்டிலின் முனையில் தலை இடிக்க மயங்கி விழுவார். நடிகர் திலகம் அவனை சந்திக்க அவன் சொன்ன விருகம்பாக்கம் சவுக்கு தோப்புக்கு போக அவன் வீட்டிற்கே வந்து நடிகர் திலகத்தை மிரட்டுவதை தற்செயலாக கவனித்து விடும் வாசு, மேஜர், விகேஆர் மூவரும் நடிகர் திலகத்தை பின்தொடர்ந்து செல்ல அங்கே அந்த வில்லன் நடிகர் திலகத்தின் கம்பெனியை தனது பெயருக்கு மாற்றி எழுதி தந்தால்தான் நெகட்டிவை தருவேன் என்று மிரட்ட அவனிடமிருந்து'அதை பிடுங்க நடிகர் திலகம் முயற்சிக்க அவனது ஆட்களை அவன் அழைக்க அங்கே ஒரு சண்டை காட்சி. அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு மூவரும் வந்து விட அவர்களும் சண்டையில் கலந்து கொள்ள போலீஸ் விசில் போல் வாசு அடிக்க அவர்கள் தப்பித்து ஓட அவர்களிடமிருந்து பறித்த நெகட்டிவ்களை மேஜர் தீ வைத்து கொளுத்த வீட்டிற்கு வந்தால் விஜயாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிருப்பதாக ராஜசுலோச்சனா சொல்ல அங்கே விரைவார்கள்.
அங்கே மனைவியை என் அடித்தீர்கள் என்று டாக்டர் கேட்க நான் அடிக்கவில்லை என்பார் நடிகர் திலகம். நிறை மாத கர்ப்பிணி அவர். அவருக்கு இடுப்பு வலி வருவதற்காக இன்ஜெக்க்ஷன் போட்டிருப்பதாக டாக்டர் சொல்ல உள்ளே சென்று பார்க்கும் நடிகர் திலகம் விஜயாவிடம் தனது வருத்தத்தை சொல்ல அவர் ஆறுதல் சொல்லும் நேரத்தில் அவருக்கு இடுப்பு வலி எடுக்க அவருக்கு பெண் குழந்தை பிறப்பதுடன் இடைவேளை. வெளியே வந்தால் ரசிகர்கள் கூடி பேசுகிறார்கள். செகண்ட் ஹாப் நன்றாக இருக்கும் என என் கசின் சொல்கிறார். ரசிகர்களை விட பொதுவான ஆடியன்ஸுக்கு படம் பிடித்திருக்கிறது என எனக்கு தோன்றியது.
இடைவேளை முடிந்து படம் தொடங்க இன்னும் சில வருடங்கள் உருண்டோடியிருக்க இப்போது நடிகர் திலகம் சற்றே வித்தியாசமான கெட்டப்பில் இருப்பார். தீபாவளி பண்டிகை. குழந்தைகள் வெடி வெடிக்க (ஸ்ரீதேவி சின்ன வயது மகளாக) அவர்களை நடிகர் திலகம் சத்தம் போட விஜயா சமாதானம் செய்து பாடுவார். நாற்பது வயதில் நாய் குணம் பாடல். இதிலும் பாடலின் இடையிடையே நடிகர் திலகம் பேசுவது அதற்கு விஜயா பாடல் வரிகளிலேயே பதில் சொல்வது என போகும். வாலியின் வார்த்தை விளையாட்டை இதிலும் காணலாம்.(நாற்பது வந்தா வெள்ளெழுத்து.அது யாருக்கும் உள்ள தலையெழுத்து). பாடல் முடிய அனைவரும் சந்தோஷமாக ஆடி பாடுவார்கள். அடுத்தது டெல்லியில் இருக்கும் முதலாளில் கில்பர்ட் எழுதியதாக வாசு ஒரு லெட்டரோடு ஓடி வருவார். அதில் அவர் வேலை முடிந்து தாய் நாட்டிற்கே திரும்பி போவதால் வீட்டை விற்க போகிறேன் என்று எழுதியிருக்க அனைவரும் அதை பற்றி விவாதிக்க, அவர் வீட்டை விற்கிறதா இருந்தா நானே வாங்கிறேன் என்பார் நடிகர் திலகம். இந்த முடிவு பெண்கள் மத்தியில் ஒரு விவாதத்தை கிளப்பும். நாமே இதை வாங்கினால் என்ன என்று தேவிகா மேஜரிடமும் ராஜசுலோச்சனா விகேஆரிடம் கேட்பது ஒரு புறம் என்றால் அந்தளவிற்கு பண வசதி இல்லாத வாசு மனோரமா இதை பற்றி வேறு விதமாக சிந்திப்பார்கள்.
மனோரமாவின் மகனை விஜயா கண்டிக்க போக அது பெரிய தகறாருக்கு வழிவகுக்கும். நான்கு பேரும் நான்கு திசையாக நிற்க தங்கள் கணவன்மார்களை இதிலே அவர்கள் உள்ளே இழுக்க அவர்கள் நால்வரும் சண்டையிடுவது போல் சத்தம்போட்டு சுத்தி சுத்தி வர பெண்கள் பயந்து சண்டை வேண்டாம் என்று சொல்ல உங்களை திருத்தவே நாங்கள் இப்படி செய்தோம் என்று ஆண்கள் கூற அப்போது நடிகர் திலகம் ஒரு யோசனை கூறுவார். நாம் ஏன் அனைவரும் சேர்ந்து இந்த வீட்டை வாங்க கூடாது என்று கேட்க அனைவரும் அந்த யோசனையை ஒப்புக் கொள்வார்கள். ஆகஸ்ட் 15 அன்று கில்பர்டை வர சொல்ல அவரும் அந்த நாளில் வந்து சேருவார். வீட்டிற்கு பாரத விலாஸ் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும். முதலில் ANR வர அவரை வரவேற்கும் வாசு நடிகர் திலகத்திடம் அறிமுகப்படுத்துவார்.(நாகேஸ்வர ராவ் தேவதாஸ் பார்த்திருக்கேல), அடுத்து மது வர விகேஆர் அவரை செம்மீன் மது என அறிமுகம் செய்ய அடுத்து சஞ்சீவ் குமார். 1970 நேஷனல் அவார்ட் வின்னர் என்று மேஜர் சொல்வார். அனைவரும் பாத்திரத்தில் கையெழுத்து போட போக வாசுவும் மனோரமாவும் இருக்க மாட்டார்கள். தன்னால் பணம் புரட்ட முடியவில்லை ஆகவே வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும் வாசுவை நடிகர் திலகம் சத்தம் போடுவார். அன்னிக்கு நான் பிசினஸ் ஆரம்பிக்க நீதானே பணம் கொடுத்தே.அதை திருப்பி கூட கேட்கலே. இப்போ உனக்கு பதிலாக நான் பணம் தரேன், உன்னால் முடிஞ்சப்போ திருப்பி கொடு என்று சொல்ல அனைவரும் கையெழுத்து போட்டு முடிக்க ஆரம்பமாகும் பாடல்.
தன்னுடைய எத்தனையோ படங்களில் தேசபக்தியை முன்னிறுத்தும் விதமாக நடிகர் திலகம் பாடல்களை இடம் பெற செய்திருக்கிறார். அவற்றில் இந்த இந்திய நாடு என் வீடு பாடலுக்கு தனி சிறப்புண்டு. உணர்வுபூர்ணமான வரிகள், அதை உயர்த்தி பிடிக்கும் இசை, ஹை பிட்சில் அதை பாடிய பாடகர்கள் அந்த உணர்வுகள் கொஞ்சமும் சோர்ந்து போய்விடாமல் திரையில் காட்சிப்படுத்திய நடிகர்கள், அதை முழுமையாக்கி தந்த ஒளிப்பதிவாளர் விஸ்வநாத ராய், இயக்குனர் ACT அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும் என்றாலும் சில வரிகள் (ஆந்திர அஸ்ஸாம் மராட்டி ராஜஸ்தான் பாஞ்சாலமும் சேர்ந்து அமைந்த தேசம் எங்கள் அன்னை பூமி பாரதம், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி பகத் சிங் பிறந்த பொன்னாடு, எங்கு பிறந்தும் எங்கும் வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள், பாரத விலாஸில் ஒன்றாய் வாழ்ந்து பேசி பழகும் கிளைகள், சத்தியம் எங்கள் வேதம் சமத்துவம் எங்கள் கீதம், வருவதை பகிர்ந்து உண்போம், வந்தே மாதரம் என்போம்) இந்த வரிகளின்போது அன்றைக்கு ஆங்கிலத்தில் goosebumps என்பார்கள், நாம் புல்லரிக்கிறது என்று சொல்வோமே அது போன்ற ஒரு சூழல் படம் பார்க்கும் அனைவரும் உணர படத்தோடு ஒன்றி பாடல் முடிந்ததும் இங்கே வந்தே மாதரம் தியேட்டரில் ஒலித்தது. (நடிகர் திலகத்தின் படத்தில் முதன் முறையாக மலேஷிய வாசுதேவன் பாடின பாடல் இது). பாடல் முடியும்போது நடிகர் திலகத்திற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு துடிக்க முதலில் கவனிக்காமல் பிறகு அவர் மயங்கி சரிய அவரை எடுத்து டாக்ட்டரை வரவழைப்பார்கள். டாக்டராக சந்திரபாபு. கவலைப்பட ஒன்றுமில்லை. இன்னும் 50 வருஷம் நல்ல வாழ்வீங்க என பாபு சொல்ல விகேஆர் ஏன்யா 50, நூறா சொல்லு என்று பாபுவை சொல்ல வைக்க தியேட்டரில் ஒரே சவுண்ட்.
மீண்டும் சில வருடங்கள் பறந்தோட இப்போது நடிகர் திலகமும் விஜயாவும் நரை முடியோடு காட்சியளிக்க நடிகர் திலகம் தான் இப்போது பெரிய ஸ்டேட்டஸை அடைந்திருப்பதாகவும் அதற்கேற்றாற் போல் வீட்டையும் ரீ மாடல் செய்து காட்டியது தனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்ல விஜயா ஸ்டேட்டஸ் பணம் எல்லாம் நமக்கு முக்கியமல்ல என்பார். அந்நேரம் அவர்களின் மூத்த மகன் சிவகுமார் வர ஏன் தங்கச்சியை கூட்டி வரலே என்று கேட்க அவ ஹமீதோட வருவா என்று சிவகுமார் உள்ளே போய்விடுவார். அங்கே நடிகர் திலகத்தின் மகளாக ஜெயசித்ரா, விகேஆரின் மகன் ஹமீதாக சசிகுமார். கல்லூரியில் ஜெயசித்ராவையும் சசிகுமாரையும் தப்பாக பேச சசிகுமார் அவர்களை புரட்டி எடுப்பார். ஜெயசித்ரா விகேஆர் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பார். அவரை பெரியப்பா என்றுதான் கூப்பிடுவார். மேஜரின் மகளாக ஜெயசுதா, சிவகுமாரை காதலிக்க, வாசு மனோரமாவின் மகனாக ஜெயச்சந்திரன். ஜெயசித்ராவிற்காக ஒரு புடவை வாங்கி கொண்டு வரும் விகேஆர் அதை அவர்கள் வீட்டிலே உடுத்துக் கொண்டு ஜெயசித்ரா வர விகேஆரும் ராஜசுலோச்சனாவும் பார்த்து கண் கலங்க ஜெயசித்ரா அப்படியே வீட்டிற்கு போவார்.
கல்லூரியில் அடி வாங்கிய மாணவன் ஒருவன் இருவரையும் பற்றி தப்பாக மொட்டை கடுதாசி எழுதி நடிகர் திலகத்திற்கு அனுப்பி விட அதை படித்து விட்டு நடிகர் திலகம் உண்மை என்று நம்பி ஆத்திரப்படுவார். விஜயா எடுத்து சொல்லியும் கேட்க மாட்டார். ஜெயசித்ரா அந்நேரம் புது புடவையுடன் வர வரையும் சத்தம் போட்டு இனிமேல் விகேஆர் வீட்டிற்கு போக கூடாது, சசிகுமாரோடு பழக கூடாது என்பார். ஜெயசித்ரா தங்கள் வீட்டில் மறந்து வைத்து விட்டு போன புத்தகத்தை கொடுக்க போன விகேஆர் நடிகர் திலகம் பேசுவதை கேட்டுவிட்டு புத்தகத்தை வைத்துவிட்டு வந்த சுவடு தெரியாமல் வீட்டிற்கு சென்று அந்த கோபத்தை வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கும் சசிகுமாரின் மீது காண்பிப்பார். பெல்டால் அவரை விளாசி வீட்டை விட்டு போக சொல்ல என்ன காரணம் என்று தெரியாமலே சசிகுமார் வீட்டை விட்டு வெளியேறுவார். அவரை காணோம் என்று சில நாட்கள் தேடுவார்கள் பிறகு அவர் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக கடிதம் எழுதுவார். அந்த நேரத்தில் இந்திய எல்லையில் போர் மூண்டதாக செய்தி வரும். ஜெயசுதா நானும் ஆணாக பிறந்திருந்தால் போர் முனைக்கு போயிருப்பேன் என்று சொல்ல மேஜர், நீ உண்மையான பஞ்சாபி என்று பாராட்டுவார். இந்நிலையில் நடிகர் திலகத்தின் சொந்தத்தில் ஒருவர் அவரது மகனுக்கு ஜெயசித்ராவை பெண் கேட்டு வர ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பொருட்டாக இந்த சொந்தங்கள் மதிக்கவில்லை என்றும் அதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் தான் பெண் கொடுக்க சம்மதிப்பதாகவும் கல்யாண நிச்சயதார்த்தன்று ருபாய் ஒரு லட்சம் ரொக்கமாக தருவதாக நடிகர் திலகம் வாக்கு கொடுப்பார்.
இதன் பிறகு சசிகுமாரிடமிருந்து ஜெயசித்ராவிற்கு கடிதம் வர அதை கோபத்துடன் பிரித்து படிக்கும் நடிகர் திலகம் அதில் எழுதியிருப்பதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைவார். காரணம் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு சகோதரிகளுக்கு காட்டும் கயிறை வாங்கி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் உடன் பிறந்த தங்கையாகவே பாவித்து கடிதம் எழுதியிருக்க மனம் உருகும் நடிகர் திலகம் அதை எடுத்து கொண்டு விகேஆரிடம் மன்னிப்பு கேட்க போக அங்கே விகேஆர் ஒரு தந்தியை கையில் வைத்துக்கொண்டு ஸ்தம்பித்து நிற்பார். சசிகுமார் எழுதிய கடிதத்தை படித்து காட்டி நடிகர் திலகம் மன்னிப்பு கேட்க அதுவரை பேசாமல் இருக்கும் விகேஆர் தந்தியை நீட்ட அதை படித்து பார்க்கும் நடிகர் திலகம் அதிர்ச்சி அடைவார். ஹமீது அல்லாஹ்வின் பாதங்களை அடைந்தான் என்று விகேஆர் சொல்லிவிட்டு தொழுகை செய்ய நடிகர் திலகம் கலங்குவார். "வியட்நாமல இருக்கிற மக்கள் கஷ்டப்பட்டாங்கன்னா விருநகரிலே இருக்கிற மக்கள் ஏன் வருத்தப்படணும், எங்கியோ இருக்கிற பங்களாதேஷுக்காக இங்கே பிறந்த ஆறுமுகம் ஏன் சாகணும் தரையிலே இருக்கிற காலிலே அடிப்பட்டா தலையிலே இருக்கிற கண்ணிலே ஏன் கண்ணீர் வரணும்" இந்த வசனத்திற்கு தியேட்டரில் எப்போதும் கைதட்டல் விழும். அன்றும் அப்படிதான். .
இதன் பிறகு நடிகர் திலகம் மேஜர், வாசு அமர்ந்திருக்க அங்கே வரும் நடிகர் திலகத்தின் மானேஜர் புதிதாக ஆரம்பித்த பிசினஸ் லாஸ் என்றும் 50 லட்சம் நஷ்டம் என்றும் சொல்ல நடிகர் திலகம் இடிந்து போவார்.கல்யாணத்தை எப்படி நடத்த போகிறேன் என்று கலங்குவார். சொந்தக்காரங்கதானே, கொஞ்சம் தவணை கேட்டா ஒத்துக்க மாட்டங்களான்னு விஜயா கேட்க ஒத்துப்பாங்க ஒத்துப்பாங்க என்று சொல்லும் நடிகர் திலகம் ஒத்துக்குவாங்கல்லே என்று திருப்பி விஜயாவை கேட்கும் உடல் மொழி நன்றாக இருக்கும். ஆனால் கல்யாணத்தன்று இவர் நிலைமையை விளக்கி சொன்னதும் மணமகன் தந்தை ஒப்புக் கொள்ள மறுத்து பணம் கொடுத்தால்தான் கல்யாணம். இல்லாவிட்டால் உன் பெண்ணிற்கு வேறு இடம் பார்த்துக்கொள் என்று சொல்ல நடிகர் திலகம் தத்தளிப்பார். அந்த நேரம் வாசு ருபாய் பத்தாயிரத்தையும், மேஜர் தனது கம்பனியின் இடத்திற்கான பாத்திரத்தையும், விகேஆர் தனது மகன் சசிகுமாரின் பெயரில் எடுத்த இன்சூரன்ஸ் பாலிசியையும் கொண்டு வந்து நடிகர் திலகத்தின் கையில் கொடுத்து கல்யாணத்தை நடத்த சொல்ல பணம் வந்துவிட்டது என்றதும் மாப்பிள்ளையின் தந்தை கல்யாணத்தை நடத்துகிறேன் என்று சொல்ல நடிகர் திலகம் உன் சம்மந்தமே எனக்கு வேண்டாம் என்று கோபப்படுவார். உன் பொண்ணுக்கு பையனே கிடைக்காது என்று அவர் மிரட்ட உடனே வாசுவிடம் என் மகளை உன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க முதலில் யோசிக்கும் வாசு, மேஜரிடம் உன் பொண்ணை நீ கோபால் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா இருந்தா நானும் தரேன் என்று சொல்ல மேஜர் ஒப்புக்கொள்ள இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில். நடிகர் திலகம் தனியா சென்று ஒரு நாற்காலியில் அமர பக்கத்து நாற்காலியில் வெகு நாட்களுக்கு பிறகு மனசாட்சி இளமையான நடிகர் திலகமாக. உனக்கு மட்டும் வயசாகாதா என்று நடிகர் திலகம் கேட்க ஆகாது என்று மனசாட்சி சொல்ல இவர் வெறும் நாற்காலியை பார்த்து பேசுவதை பார்த்துவிட்டு விஜயா சத்தம் போட கல்யாணத்திற்கு வந்திருக்கும் டாக்டர் சந்திரபாபு பெரிய ஊசியை எடுத்துக் கொண்டு வர நடிகர் திலகம் அவரிடம் சிக்காமல் இருக்க துள்ளி குதிக்க, வணக்கம்.
நடிகர் திலகம் நடிக்க வந்த 1952க்கு பிறகு ஒரு காலண்டர் வருடத்தில் முதல் படம் அவ்வளவு லேட்டாக வெளியானது அந்த 1973ல் தான். அதற்கு முன்பு அதிகபட்ச தாமதம் என்றால் 1961ல் மார்ச் 16 வெளியான பாவ மன்னிப்பு. ஒரு மாமாங்கத்திற்கு (12 வருடங்கள்) பிறகு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் படம் வெளியாகாமல் மார்ச் 23 வரை ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்தது அதுதான் முதன்முறை. ஆகவே நீண்ட காத்திருப்பிற்கு பிறகு வெளியான படம் பாரத விலாஸ். நான் முன்பே சொன்னது போல் பொது மக்கள் மத்தியில் படத்திற்கு.நல்ல ரிப்போர்ட். படம் முதல் வாரத்தில் அனைத்து ஊர்களிலும் நன்றாக போகிறது என செய்திகள் வந்தாலும் ராஜ ராஜ சோழன் வெளியான பிறகு எப்படி இருக்கும் என்ற கவலை இருந்தது. ஆனால் அந்த கவலை தேவையற்றது என்பதை வெகு விரைவிலேயே புரிந்து கொண்டோம். ராஜ ராஜ சோழனின் வெளியீடு பாரத விலாஸ் படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சென்னையில் மூன்று அரங்குகளிலும் சேர்த்து 200 காட்சிகளுக்கு மேலாக தொடர் அரங்கு நிறைந்தது. மதுரையில் தொடர் ஹவுஸ் புல் இல்லாவிட்டாலும் பெரும்பாலான காட்சிகளும் அரங்கு நிறைந்தது. தவப்புதல்வன் படத்தில் ஆரம்பித்து மீண்டும் தொடர்ச்சியாக நான்காவது படமும் 100 நாட்கள் ஓடியது. பாபுவில் ஆரம்பித்து பாரத விலாஸ் வரை 9 படங்களில் 8 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி அதில் இரண்டு வெள்ளிவிழாவும் தாண்டியது என்ற சாதனையை நடிகர் திலகம் நிகழ்த்தினார்.
தமிழகத்தின் முதல் சினிமாஸ்கோப் பிரம்மாண்டம். அதன் வெளியீட்டு விசேஷங்கள், அந்த மன்னர் மன்னனை எதிர்கொண்டு வரவேற்றது, இவை அடுத்த வாரம்
(தொடரும்)
அன்புடன்

5792
நன்றி முரளி சிறிநிவாசன்

sivaa
1st June 2021, 02:07 PM
திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.
அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்கு தீனி போட
முடியவில்லை வேறு கோவிலுக்கு
யானையை கொடுத்து விடுங்கள்
என்று கூறினார்களாம்.
அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினாராம் ஒரு வாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தை காண சென்ற போது அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்தது என்னவென்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும் அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் வீடு ஒன்று அமைத்துத் தருவதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார் நடிகர் திலகம் ...
இன்று வரை நடந்துக் கொண்டு இருக்கிறது அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார் ..
இளைய திலகம் பிரபு அவர்கள்
கோவிலுக்கு சமீபத்தில் சென்ற போது யானைப் பாகன் சொன்னார் ..
கஜ தானம் (யானை தானம்) செய்வது
நாடு செழிப்புடன் எந்தவித பஞ்சம்
இல்லாமல் மக்கள் வாழ செய்யும்
தானம் ஆகும் ...
இது போல் கோவில்களுக்கு
ஆறு யானை வாங்கிக் கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது ..
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணன் போல் வாழ்ந்துள்ளார் .

Thanks Venkateswaran Rajagopal

sivaa
1st June 2021, 02:10 PM
எல்லா அவதாரத்திற்கும் ஒரு இனையை யூகிக்க முடிகிறது,
உதாரணத்திற்கு
பராசக்தி குணசேகரன்- மனோகரா மனோகரன்,
அன்னையின் ஆணை சாம்ராட் அசோகன்- ராஜா ராணி சேரன் செங்குட்டுவன்,
ஆலயமணி தியாகராஜன் - அவன் தான் மனிதன் ராம் குமார்,
பாகப்பிரிவினை கண்ணையா- பழனி பழனி,
பாசமலர் ராஜ சேகரன் - பச்சை விளக்கு சாரதி,
இன்னமும் பல
ஆனால் தங்கப் பதக்கம் எஸ்.பி.சௌத்ரிக்கு இனையாக தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்
இன்று 01/06/1974 தங்கப் பதக்கம் திரைக்கு வந்த நாள்,
தங்கப் பதக்கம் படத்தின் விளம்பரம் தான் தினத் தந்தி உட்பட செய்தி பேப்பர்களில் முழுப் பக்க விளம்பரத்தை தாங்கி வந்தது,
தங்கப் பதக்கம் படம் தான் முதன் முதலாக தமிழ்ப் பட உலகில் இருந்து பிற மாநிலங்களிலும் ஒரே நாளில் திரையிடப்பட்டது..
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தங்கப்பதக்கம் அதற்கு முன் இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தது,
குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் குவித்த இந்திய திரைப்பட வரிசையில் முன்னணியில் இன்று வரை நீடித்து வருகிறது,


Thanks Sekar Parasuram

sivaa
3rd June 2021, 07:09 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 53
இந்த தொடர் சென்ற வருடம் மே மாதம் தொடங்கப்பட்டு ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இதை ஆரம்பிக்கும்போது இது இப்படி ஒரு நீண்ட தொடராக அமையும் என எதிர்பார்க்கவில்லை. நடிகர் திலகத்தின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், நடிகர் திலகத்தை விரும்புபவர்கள், தமிழ் சினிமா அபிமானிகள், பொது மக்கள் என அனைவரின் ஆதரவால் 52 வாரங்களை கடந்து வந்திருக்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் பதிவிட அனுமதித்த நடிகர் திலகம் பெயரால் இயங்கும் குழுக்களின் நிர்வாகிகளுக்கும் குறிப்பாக ஆரம்பத்தில் என்னை தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் வலியுறுத்திய Nadigar Thilagam Fans குழுவின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களுக்கும் என்'மனங்கனிந்த நன்றிகள்!
நமது பயணத்தை தொடர்வோம். ஒரு வார இடைவெளியில் வெளியான படம் ராஜ ராஜ சோழன் எனபது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். படத்தை தயாரித்தது ஆனந்த் தியேட்டர்ஸ் அதிபர் திரு ஜி.உமாபதி அவர்கள். உமாபதி திரைப்பட துறையோடு தொடர்பு கொண்டவர். அன்றைய நாட்களில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெருந்தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சென்னை மவுண்ட் ரோட்டில் இடம் வாங்கி ஒரு திரை அரங்கத்தை கட்டினார். தமிழகத்திலே முதன் முறையாக குளிர்சாதன வசதியூட்டப்பட்ட அரங்கமாக (ஏர் கண்டிஷன்) தமிழகத்திலேயே அதிக இருக்கைகள் கொண்ட அரங்கமாக சாந்தி திரையரங்கம் அமைந்தது. 1961 ஜனவரியில் திறக்கப்பட்ட அரங்கத்தில் அதே 1961 வருடம் மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட பாவ மன்னிப்பு சாந்தியில் வெளியான முதல் நடிகர் திலகம் படமானது. சென்னையில் நடிகர் திலகத்திற்கு முதல் வெள்ளிவிழா படமாகவும் தமிழகத்தில் ஏசி தியேட்டரில் வெள்ளிவிழா ஓடிய முதல் படமாகவும் சென்னை மாநகரில் 10 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் படமாகவும் பாவ மன்னிப்பு அமையவே சாந்தி திரையரங்கிற்கும் நடிகர் திலகத்திற்கும் ஒரு இணைபிரியாத சொந்தம் ஏற்பட்டு திரு வி சி சண்முகம் சாந்தி அரங்கின் பங்குதாரர்களில் ஒருவராக இணைந்தார். ஓரிரண்டு வருடத்திற்கு பிறகு உமாபதி மவுண்ட் ரோட்டிலேயே வேறொரு பெரிய இடத்தை வாங்கி அங்கே தமிழகத்தின் முதல் 70 mm திரை கொண்ட அரங்கு ஒன்றை நிர்மித்து ஆனந்த் என்ற பெயரிட்டு 1964ல் திறப்பு விழா நடத்தினார். சாந்தி அரங்கில் தனக்கு உரிமையாக இருந்த பங்குகளை நடிகர் திலகத்திடமே விற்றார் உமாபதி.
தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க வேண்டும் என்றும் அது அதுவரை இல்லாத புது முயற்சியாக தமிழ் திரைப்பட வரலாற்றில் காலாகாலத்திற்கும் தனது பெயர் சொல்லும் படமாக அமைய வேண்டும் என எண்ணினார். அவரது ஆனந்த் திரையரங்கில் பெரும்பாலும் வெளியாகும் ஆங்கில படங்கள் அகன்ற திரையில் வெளியாவதை பார்த்து அது போல தயாரிக்க வேண்டும் என எண்ணினார். நடிகர் திலகத்தின் நெருங்கிய குடும்ப நண்பரான உமாபதி நடிகர் திலகத்தை வைத்து அந்த படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரை அணுக அவரும் சரி என்றார். அகன்ற திரை என்றால் அது சரித்திர படமாக இருந்தால்தான் எடுபடும் என முடிவு செய்து அதை இயக்குவதற்கு ஏபிஎன்தான் பொருத்தமானவர் என்றும் தீர்மானித்தனர். சரித்திர கதை என்றாலே தமிழ் மக்களுக்கு கல்கியும் சாண்டில்யனும்தான் சட்டென்று நினைவுக்கு வருவார்கள். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புதினம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கல்கியின் முக்கியமான நாவல்களான பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்ற இரண்டின் திரைப்படமாக்கும் உரிமையை எம்ஜியார் பிக்சர்ஸ் வாங்கி வைத்திருந்தது. நடுநடுவே அவை திரைப்படமாக்கப்படுகிறது என்ற செய்தி வரும். ஆனால் அவை எப்போதும் அறிவிப்புகளோடு நின்று விடுவதுதான் வழக்கம். தமிழ் மண்ணின் சரித்திரம் தமிழ் மன்னன் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது ராஜ ராஜ சோழன்தான். பொன்னியின் செல்வன் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது இல்லை எனும்போது வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஏபிஎன் ஒரு யோசனை சொல்கிறார். நாடக உலகில் இருந்து வந்த ஏபிஎன், அண்ணாச்சி என்றும் அவ்வை சண்முகம் என்றும் அழைக்கப்பட்ட டி கே சண்முகம் நடத்தி வந்த டிகேஎஸ் பிரதர்ஸ் நாடக குழுவில் காதல் பத்திரிக்கையின் ஆசிரியர் எழுத்தாளர் அரு.ராமநாதன் எழுதிய ராஜ ராஜ சோழன் நாவலை அடிப்படையாக வைத்து நாடகம் நடத்தப்பட்டதை சொல்லி அதன் உரிமையை வாங்கி படமாக்கலாம் என்று சொல்ல அந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் தொழில்நுட்ப முறையில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுவரை தமிழில் சினிமாஸ்கோப் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல ஒரு சோதனை முயற்சியாக கூட செயல்படுத்தப்படவில்லை என்பதும் கவனத்திற்கு வருகிறது. இது 1971 இறுதி பகுதி. ஏபிஎன் அப்போது அகத்தியர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். படம் முடியும் தறுவாயிலிருக்கிறது. ஏபிஎன் ஒரு சோதனை முயற்சியாக அகத்தியர் படத்தின் கிளைமாக்ஸ் ரீல் படமாக்கும்போது இரண்டு கேமராக்களில் படமாக்குகிறார். ஒரு கேமராவில் சினிமாஸ்கோப் முறையிலும் மற்றொன்றில் 35 mm முறையிலும். பிலிம் ரோலை கழுவி பார்க்கும்போது சினிமாஸ்கோப் முறையில் எடுத்தது கிளியர் ஆகவும் அவுட் ஆப் போகஸ் ஆகாமலும் சரியான முறையில் அமைந்திருக்கவே ராஜ ராஜ சோழன் படத்தை சினிமாஸ்கோப்பில் எடுப்பது உறுதி செய்யப்பட்டு 1972 பிப்ரவரி 2 ந் தேதி பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டது. ஒரு வருடம் நீண்ட படப்பிடிப்பு நிறைவடைந்து 1973 மார்ச் 15 அன்று தணிக்கை செய்யப்பட்டு மார்ச் 31 அன்று ரிலீஸ் என அறிவிக்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் முதல் நாள் ஊர்வலங்கள் தமிழகமெங்கும் ஜெகஜோதியாக நடந்தது. பல ஊர்களிலும் யானை மீது படப்பெட்டியை வைத்து ஊர்வலம் நடந்தது. திருச்சி போன்ற ஊர்களில் ஹெலிகாப்டர் மூலமாக நோட்டீஸ்கள் வீசப்பட்டன. அதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது என பல ஊர் ரசிகர்களும் சொல்வதுண்டு. முன்பே சொன்னது போல் மதுரை சிந்தாமணி அரங்கில் மார்ச் 31 வெளியானது.
படத்தின் விநியோக உரிமையை பொறுத்தவரை இந்த படத்தை வாங்குவதற்கு தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலும் இருந்த வெளியீட்டாளர்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், சிங்கப்பூர் இலங்கை உட்பட வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் போட்டி போட்டனர். ஆனால் உமாபதி எவருக்கும் விநியோக உரிமை கொடுக்காமல் தானே நேரிடையாக தமிழகமெங்கும் தனது ஆனந்த் மூவிஸ் மூலமாகவே வெளியிடப் போவதாக சொல்லிவிட்டார். பந்துலு கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதர் சிவந்த மண் படத்திற்கும் செய்த அதே முறையை கையாண்டார் உமாபதி. ஒவ்வொரு ஏரியாவிலும் அவருக்கு அறிமுகமான விநியோகஸ்தர்களை வைத்து அந்த ஏரியா திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய சொன்னவர் முதன் முறையாக சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் மற்றும் ஆனந்த் மூவிஸ் விநியோக அலுவலகங்களில் ரிசர்வேஷன் முறை மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்தார். அந்த வகையில் மதுரையில் ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டது. டிக்கெட்டுகளை முன்கூட்டி பெற கூட்டம் அலைமோதியது. என் நினைவு சரியென்றால் ரசிகர் மன்றத்திற்கு டோக்கன்கள் கொடுக்கப்படவில்லை. ஆகவே விநியோகஸ்தர் அலுவலகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கஸின் ஓப்பனிங் ஷோ டிக்கெட்க்கள் எங்கள் இருவருக்கும் வாங்க எவ்வளவோ முயற்சி எடுத்தார். ஆனால் இந்த முறை எங்களுக்கு கிடைக்கவில்லை. கிடைப்பது மிக கடினம் என்பது எங்களுக்கு நன்கு புரிந்தது. ஓப்பனிங் ஷோ மட்டுமல்ல ஓப்பனிங் டேயின் எந்த ஷோவிற்கும் கிடைக்கவில்லை. மறுநாள் இரண்டாம் நாள் காட்சிகளுக்கும் கிடைக்கவில்லை. ஏமாற்றமே! என்ன செய்வது? ஒரு வழியாக திங்கட்கிழமை மாட்னி ஷோவிற்கு ரிசர்வேஷன் கிடைத்தது. நல்ல அடர்த்தியான வழு வழு தாளில் அச்சடிக்கப்பட்ட ஸ்லிப் இப்போதும் நினைவில்.
நமக்கு எப்போதும் படம் பற்றிய ரிப்போர்ட் எப்படி இருக்குமோ என்றுதான் கவலை. கஸினிடம் கேட்டால் யாரையும் பார்க்கவில்லை என்கிறார். ஆனால் ஓப்பனிங் ஷோ நடக்கும் அந்த சில மணி நேரங்கள் அவர் வீட்டில் இல்லை. தியேட்டர் பக்கம் போயிருந்தேன், ஆனால் படத்திற்கு போகவில்லை என்கிறார். எங்கள் வீட்டருகே ஈவினிங் ஷோ போவதற்காக தயாரான ஒரு கூட்டம் ஒரு டிக்கெட் இருக்கிறது என்று சொல்ல என் கஸின் போக முயற்சிக்க அதற்குள் அதற்கு வேறு ஒருவர் வந்துவிட்டார். நாங்கள் திங்கள் மாட்னி போகிறோம். அதற்கு முன்பு அரசல் புரசலாக ரிப்போர்ட் பற்றி கேள்விபட்டோம். எப்படியிருந்தாலும் பார்க்க போகிறோம் என்று சிந்தாமணி டாக்கீஸ் போய்விட்டோம். மிக பிரம்மாண்டமான கூட்டம். நாங்கள் தியேட்டரின் எதிர் பிளாட்பார்மில் நிற்கிறோம். போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்த பாடுபடுகிறது. ஆனால் இந்த முறை ரிசர்வேஷன் ஸ்லிப் வைத்திருந்தவர்களை தியேட்டரின் மெயின் கேட் வழியாக அனுமதிக்க நாங்கள் உள்ளே நுழைந்து ஸ்லிப் மாற்றி பால்கனி டிக்கெட் பெற்றுக் கொண்டு சீட்டில் அமர்கிறோம். வெகு விரைவாக அரங்கம் நிறைய படம் தொடங்குகிறது.
ஏபிஎன் படத்தில் தொடக்கம் எப்படியிருக்குமோ அதே போல் ஆனால் இந்த முறை விஜயலட்சுமி பிக்சர்ஸுக்கு பதிலாக ஆனந்த் மூவிஸ்.லோகோ, பின்னணியில் ஏபிஎன் குரல் என ஆரம்பித்து படத்தின் டைட்டில் ஓடுகிறது. நடிகர் திலகத்தின் பெயர் ஒரு முறை நடிகராகவும் மற்றொரு முறை பின்னணி பாடகராகவும் காட்டப்படுகிறது. டைட்டில் முடிந்து கஜேந்திர கணேச தரிசனம். அது ஆடி அசைந்து செல்ல தஞ்சை பெரிய கோவில் நந்திகேஸ்வரர் சிலையை வடிவமைக்கும் பணியில் தலைமை சிற்பியாக கே.டி சந்தானம் அவருக்கு உதவியாளனாக மாஸ்டர் சேகர். அன்று ஐப்பசி சதய திருநாள் என்பதும் சோழ சக்ரவர்த்தியின் பிறந்தநாள் என்பதும் அதனால் கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறுவதும் கரகாட்டம், மயிலாட்டம் போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்த கொண்டாட்டங்கள் அந்த சிறுவனின் மனதை சலனப்படுத்த அதை போய் பார்க்க வேண்டும் என்று அவன் உந்தப்படுவது பார்வையாளனுக்கு புரிகிறது. சிற்பி சந்தானம் சொல்வார்.நமது மன்னருக்கு இணை அவர்தான். ஒருவரை ஒரு பணிக்கு அமர்த்தும்போதே அவர் தேவை என்ன என்பதையும் புரிந்து கொண்டு செய்வார். எனக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு என்பதனால் வெற்றிலை மடித்து கொடுக்கவும் பின்னர் வெற்றிலை உமிழ் நீரை பிடிக்க ஒரு படிகம் ஏந்தவும் உன்னை ஏற்பாடு செய்திருக்கிறார் என்று சொல்ல சேகர் ஆம் என்பார். ஒரு கட்டத்தில் சேகர் சிற்பிக்கு தெரியாமல் கொண்டாட்டங்களை பார்க்க ஓடிவிட சுற்றிலும் நடப்பதை கவனிக்காமல் வேலை பார்க்கும் சிற்பி, பொன்னா வெற்றிலை மடித்து கொடு என்று சொல்ல மடித்த வெற்றிலையை மணிக்கட்டருகே கவசம் அணிந்த ஒரு கை நீட்ட அதை வாங்கி மென்றுவிட்டு படிகத்தில் உமிழ் நீர் உமிழ அப்போதுதான் அந்த கைகளை கவனித்து பதறி எழ அங்கே எச்சில் படிகம் ஏந்திய மும்முடிச்சோழ சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனாக அழகு கம்பீரம் வீரம் மிக்க ஆண்மை என்ற அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களோடும் நடிகர் திலகம் நின்று சற்றே தலையை இடது பக்கம் அசைத்து நான்தான் என்று உடல்மொழியிலேயே சொல்ல என்ன கைதட்டல்! சிற்பி தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்ட நடிகர் திலகம் அவரை சமாதானப்படுத்துவார். என்னை போன்ற மன்னர்களுக்கெல்லாம் இந்த புகழ் பெருமை எல்லாம் சில காலம்தான். நாளை என் மகன் ராஜேந்திரன் என்னை விட சிறப்பாக ஆட்சி செய்து விட்டால் என்னை மறந்து விட்டு அவனை புகழுவார்கள். ஆனால் உங்கள் நிலை அப்படியல்ல. வெறும் கற்களை உயிருள்ள சிற்பங்களாக மாற்றி எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவை மக்களால் பாராட்டப்படும். சுருக்கமாக சொன்னால் இப்படி காலத்தையும் கடந்து காலத்தையும் கடந்து நிற்பது உங்கள் கலை. ஒரு காலத்திற்குள்ளே அடங்கி விடுவது எம் போன்ற மன்னரின் நிலை என்பார். காலத்தையும் கடந்து நிற்கும் அந்த வசனம் காலங்களை கடந்து நிற்கும் நடிகர் திலகத்திற்கே பொருத்தம்.
அதே காட்சியில் சோழனின் மனைவி புவனமாதேவியாக விஜயகுமாரி வருவார். அங்கே வேலை செய்யும் பெண்ணின் குழந்தை அழ அதை சமாதானப்படுத்துவார். சோழனின் தலைமை அமைச்சராக சஹஸ்ரநாமம் வர இன்று கருவூர் தேவர் அவர்களை சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தீர்கள் என்று நடிகர் திலகத்திடம் நினைவூட்ட அரண்மனைக்கு விரையும் நடிகர் திலகம். அங்கே கருவூர் தேவராக டி ஆர் மகாலிங்கம். அவர் தமிழரசி என்ற பெண் புலவரை அறிமுகப்படுத்த உங்கள வரலாற்றை நாடகமாக எழுத விழைகிறேன் என்று அவர் சொல்ல நாயகனாக எனக்கு தகுதி இருக்கிறதா என்று நடிகர் திலகம் கேட்பார். நவரச திலகமாயிற்றே தாங்கள். உங்களை விட்டால் நாயகனாவதற்கு யாருக்கு தகுதி இருக்கிறது என்று புலவர் பதில் சொல்ல அரங்கம் அதிர்கிறது. உங்கள் பாடலை கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று நடிகர் திலகம் சொல்ல மகாலிங்கம் ஆலாபனை செய்ய ஆரம்பிக்க நடிகர் திலகமே தென்றலோடு உடன் பிறந்தாள் என்ற வசனமும் பாடல் வரிகளுமாக ஆரம்பிக்க மகாலிங்கம் அதை பாடலாக பாடுவார். நடிகர் திலகத்தின் நடை உடல்மொழி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும் காட்சி இது. அந்தப்புரம் செல்லும் நடிகர் திலகத்தை விஜயகுமாரி வரவேற்க அங்கே மூன்று பெட்டிகள் இருப்பதை பார்த்துவிட்டு என்ன என்று கேட்க உங்கள் மகள் குந்தவையின் பரிசு என பதில் வரும். உள்ளே இருக்கும் பொருட்களுக்கு பொருள் கூற சொல்ல முதல் பெட்டியில் கருங்கல் வைரக்கல் மலர் இருக்க என்ன இது என்ன இது என்று நடிகர் திலகம் கேட்க குந்தைவையாக லட்சுமி அறிமுகம். நாட்டின் நலனுக்காக தீர்மானங்கள் எடுக்கும்போது கருங்கல்லை போன்ற இதயம், எதிரிகளிடம் வைரக்கல்லை போன்ற உறுதி, குடும்பத்தினரிடம் மலர் போன்ற மென்மை என்று லட்சுமி சொல்லுவார். அடுத்த பெட்டியில் நாற்று முடியும் வைர முடியும் இருக்க அதற்கு சரியான விளக்கமும் மூன்றாவது பெட்டியில் இருக்கும் வெண்சாமரம், அதில் இருக்கும் கவரிமான் முடி இவற்றை வைத்து நடிகர் திலகம் விளக்க லட்சுமி என்னப்பா என்று சொல்ல உனக்கு அப்பனம்மா நான் என்பார். அப்போது அங்கே பெரிய குந்தவை நாச்சியாராக எஸ் வரலட்சுமி வர அவரிடம் நடிகர் திலகம் ஆசி கோர, அந்த தெய்வத்தின் வடிவமப்பா நீ என்று வரலட்சுமி சொல்ல மீண்டும் அலப்பறை. அமைச்சரின் தங்கை வீரமா தேவியாக குமாரி பத்மினி அறிமுகம். அண்ணன் ராஜேந்திரன் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று லட்சுமி சொல்ல வேங்கி நாட்டின் விடுதலைக்கு உதவ சென்றிருக்கிறான் என்று நடிகர் திலகம் சொல்ல காட்சி மாறுகிறது.
அங்கே ராஜேந்திரனாக சிவகுமார் விமலாதித்தனாக முத்துராமன் இவர்களுடன் வேங்கி மன்னன் சக்தி வர்மன். இரட்டைப்பாடி மன்னன் சத்யாசிரியனை தோற்கடித்து வெற்றி பெற்றதை சொல்லும்போது அவன் தப்பித்து விட்டதாக செய்தி வரும். உள்ளே அரண்மனையில் சத்யாசிரியனாக மனோகர் அவர் மனைவியாக புஷ்பலதா, அவரின் அந்தரங்க ஆலோசகர் பாலதேவராக நம்பியார் அறிமுகம். தன்னை கட்டிப்போட்டு விட்டு தப்பித்து கொள்ளும்படியும் தான் சோழர்களோடு சேர்வது போல் நடித்து அவன் கூட இருந்தே குழி பறிக்கிறேன் என்று நம்பியார் சொல்ல மனோகர் அப்படியே செய்வார். அரண்மனைக்கு உள்ளே வரும் சிவகுமார் முத்துராமன் இவரை பார்க்க இவர் யார் என்பதை சக்திவர்மன் கூறுவார். அவரை கைது செய்து சிறைக்கைதியாக அடைக்கும்படி முத்துராமன் கூற நம்பியார் நான் மாறி விட்டேன்.உங்கள் பக்கம் வந்துவிட்டேன். என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூற அவர்கள் மறுக்க என்னை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று சொல்ல அவர் கட்டுக்கள் அவிழ்க்கப்பட அங்கே அணிவகுத்து நிற்கும் வீரர்கள் வரிசையை பக்கத்தில் சென்று பார்த்து சோழ சக்ரவர்த்திகளே என்று சொல்ல அங்கே வீரனாக மாறு வேடத்தில் வந்திருக்கும் நடிகர் திலகம் வேடத்தை கலைத்து நம்பியாரை மெச்சி தன்னுடன் அழைத்து செல்வார். சக்திவர்மனுக்கு முடிசூட்டி வேங்கி நாடு சுதந்திர நாடாக திகழும் என்ற உறுதி அளித்து நடிகர் திலகம் தஞ்சை செல்ல தொடர்ந்து சிவகுமார் முத்துராமனை அழைத்துக் கொண்டு தஞ்சை வருவார். அங்கே லட்சுமி முத்துராமன் இடையே உருவாகும் காதல், சிவகுமார் குமாரி பத்மினி இடையே ஏற்கனவே இருக்கும் காதல் ஆகியவை பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட இரு ஜோடிகளும் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சி மாதென்னை படைத்தான் உனக்காக. அனைத்து தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம் பெறும் பாடல், மைசூர் பிருந்தாவனத்தில். முத்துராமன் அண்ணனுக்கு உதவியாக தான் இருக்க வேண்டும் என்று மீண்டும் வேங்கி நாட்டிற்கே போய்விடுகிறார்.
நம்பியாரை தனது அரசியல் ஆலோசகராக நியமித்து அவரை ஒரு தனி மாளிகையில் தங்க வைப்பார் நடிகர் திலகம். அங்கே இரு புலவர்கள் என்று இருவரை அறிமுகம் செய்ய அதில் ஒருவர் சுருளிராஜன். அங்கே நம்பியாரை சந்திக்க வேண்டும் என்று மனோரமா வர, நம்பியாரை பார்த்தவுடன் நான் உங்கள் இரட்டைப்பாடி நாட்டை சேர்ந்தவள். இப்படி சோற்றுக்காக சோழனின் காலில் விழுந்து விட்டீர்களே என்று குற்றம் சாட்ட முதலில் தன் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்தாமல் பேசும் நம்பியார் சோழனை ஒழிப்பதே என் லட்சியம் என்று சொல்லியவாறு மனோரமா கத்தியால் கையை கிழித்துக் கொண்டு ரத்தத்தில் சத்தியம் செய்யவே ஏற்றுக்கொண்டு சற்று பொறு நாம் சதிவலை பின்னிதான் சோழனை சாய்க்க முடியும் என்பார். அங்கே மனோகர் குடியும் கும்மாளமாக இருக்க புஷ்பலதா அவரை திருத்த முயற்சிப்பதாக வரும். ஆனால் மனோகர் அந்த பேச்சை அலட்சியம் செய்வார். அந்த இடத்தில ஏ.சகுந்தலாவின் ஒரு டான்ஸ் பாடல் வரும் (இது சில சமயங்களில் இடைவேளைக்கு பின்னரும் காட்டப்பட்டதுண்டு. இந்த பாடல் சில நேரம் வெட்டப்பட்டதுமுண்டு).
அடுத்து தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் மேற்பார்வையிடும் நடிகர் திலகம். அங்கே வரும் எஸ்.வரலட்சுமி தன்னுடன் வந்த சீர்காழியை நம்பியாண்டார் நம்பி என அறிமுகப்படுத்தி நான் ஏற்கனவே இவரை பற்றி சொல்லியிருக்கிறேனே, சிவத்தொண்டர். தேவாரம் பாடுவதில் வல்லவர் என்று சொல்ல நடிகர் திலகம் ஒரு பதிகம் பாட சொல்ல சீர்காழி பாடுவார். மூவர் பாடிய தேவாரம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்க அதை திருமுறைகளாக தொகுத்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்று முயற்சிக்கிறேன் ஆனால் என்று இழுக்க என்ன தடை என்று நடிகர் திலகம் கேட்க அந்த ஓலை சுவடிகள் அனைத்தும் சிதமபுரம் நடராஜர் ஆலயத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டிருக்கின்றன. தேவாரம் பாடிய மூவரும் நேரில் வந்தால்தான் திறவுகோல் கொடுக்கப்படும் என்று சீர்காழியார் சொல்ல அவ்வளவுதானே ஏற்பாடு செய்து விடலாம் என்று நடிகர் திலகம் சொல்ல ராஜ ராஜா என்ன விளையாடுகிறாய் என்று வரலட்சுமி கேட்க மூவருடனும் ஆலயத்திற்கு வருவதாக செய்தி அனுப்பி விடுங்கள் என்று அமைச்சருக்கு சொல்வார் நடிகர் திலகம்.
சிதம்பரம் ஆலயம். அங்கே வரும் நடிகர் திலகத்தையும் வரலட்சுமி மற்றும் சீர்காழியரை வரவேற்கும் தலைமை குருக்கள் அவரிடம் நீங்கள் அனுப்பிய செய்தியை கேட்டோம் ஆனால் எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.என கூற நடிகர் திலகம் அவர்களை அழைத்து வாருங்கள் என்று சொல்ல, பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்ட மூன்று சிவிகைகள் அங்கே இறக்கப்பட்ட திரை சீலையை நீக்கி நாவுக்கரசர், ஞானசம்பந்தர் சுந்தரர் என்று கூறி அவர்களின் சிலையை காண்பிப்பார், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று குருக்கள் கேட்க இவர்கள் சிலை என்றால் அங்கே அம்பலத்தில் நடனமாடும் என் அப்பன் நடராஜனும் சிலைதான். அவன் கடவுள் என்றால் இவர்களும் கடவுள்தான் என்று பதிலளிக்க திறவுகோல் கொடுக்கப்படும். திறந்து உள்ளே சென்று செல்லரித்து கிடக்கும் மணல் மேட்டை ஒதுக்கி சுவடிகளை அள்ளி எடுத்து சீர்காழியிடம் கொடுத்து இதை திருமுறையாக வரிசைப்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கிறேன் என்பார். அங்கே நடராஜர் சன்னதியில் வரலட்சுமி ஏடு தந்தானடி தில்லையிலே என்று பாட இறுதியில் சீர்காழியும் சேர்ந்து கொள்வார்.(தான் தனி பாடலாக இசையமைத்த ஆடுகின்றானடி தில்லையிலே பாடலின் அதே மெட்டில் குன்னக்குடி இசையமைத்திருப்பார்). நம்பியாரின் மாளிகையில் உள்ள ரகசிய சுரங்க பாதை வழியாக மனோகர் நம்பியாரை வந்து சந்திக்க நீங்கள் அடிக்கடி கடிதத்தில் குறிப்பிடும் பெண் இவள்தானா என்று கேட்டு மனோரமாவை அறிமுகப்படுத்தி கொள்வார். சோழனுக்கு விமலாதித்தனை விரோதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் இனி நேரில் வர வேண்டாம் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஒரு ஒற்றனை அனுப்பி வைக்க சொல்ல மனோகரின் கூட வந்திருக்கும் ஒற்றன் மட்டுமே இனி வருவான் என்று சொல்லி இருவரும் கிளம்பி செல்வார்கள்.
தஞ்சைக்கு வரும் விமலாதித்தன் சக்ரவர்த்தியை சந்திக்க, உன் அண்ணன் இறந்தவுடன் என்னை கூட அழைக்காமல் நீயே முடிசூட்டிக் கொண்டாயே என்று நடிகர் திலகம் கேட்க நாடே சோகத்தில் ஆழ்ந்த நேரத்தில் நான் விமரிசையாக முடிசூட்டு விழா கொண்டாட விரும்பவில்லை. அதனால் தங்களை அழைக்க முடியவில்லை என்பார். எனது நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று முத்துராமன் சொல்ல சோழ நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் மக்களே தேர்ந்தெடுக்கும் நபர்களே ஊர் தலைவர்களாக பதவி வகிக்கிறார்கள் ஆகவே குடவோலை முறைப்படி மக்களாட்சியை அறிமுகம் செய்ததே நான்தான் என்பார் நடிகர் திலகம். சரி போகட்டும் உங்கள் நாடு எங்கள் சோழநாட்டின் தலைவாசலாக இருப்பதால் அங்கே எங்கள் தரைப்படையை நிறுத்த வேண்டும் என்பார். முத்துராமன் மறுப்பார். எங்கள் நாட்டிற்கு திரை செலுத்த வேண்டும் என்று கூற முத்துராமன் மறுக்க அப்படியென்றால் சோழ நாட்டு படைகள் வேங்கியின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தும் என்று சொல்ல முத்துராமன் எங்கள் நாட்டில் கடைசி மனிதன் இருக்கும்வரை நடக்காது என்று நடிகர் திலகத்திடமும் நம்பியாரிடமும் கோபப்பட்டு வெளியேற அந்நேரம் லட்சுமி வர இளவரசியுடனாவது சாந்தமாக உரையாடுங்கள் என்று சஹஸ்ரநாமம் சொல்ல பெண்ணை காட்டி என் மண்ணை பறிக்க பார்க்கிறீர்களா என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியேறுவார். வழியில் எதிர்ப்படும் சிவகுமாரிடம் அந்த பாலதேவரிடம் எச்சரிக்கையாக இருக்க சொல் உன் தந்தையிடம் என்று கூறி போக நடிகர் திலகத்திடம் வந்து என்ன நடந்தது என்று கேட்க அவர் கோபத்துடன் கையை அசைத்து உள்ளே போக சொல்லுவார்.
தஞ்சை கோவில் பணிகள் நிறைவுற்று அதற்கு குடமுழுக்கு நடத்தப்பட முடிவு செய்யப்படும். தமிழகத்திலேயே மிக உயர்ந்த கோபுரமாக விளங்கும் என்று நடிகர் திலகம் சொல்லுவார். தஞ்சை பெருவுடையார் கோவில் என அழைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்படும். அந்த விழாவில் என் மகள் குந்தவை நாச்சியாரின் நடன அரங்கேற்றமும் நடைபெறும் என நடிகர் திலகம் அறிவிப்பார். விழாவிற்கு அனைத்து மன்னர்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி சொல்ல விமலாதித்தனுக்குமா என்று நம்பியார் கேட்க வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்லிவிடுவார். என் நண்பனுக்கு அழைப்பு இல்லாததனால் நான் கரூர் பாசறைக்கு போகிறேன் என்று அமைச்சரிடம் சொல்லி விட்டு சிவகுமார் போய்விடுவார்.
குடமுழுக்கு காட்சி. பெரிதாக சாரம் கட்டி கோபுர உச்சிக்கு செல்ல வழி ஏற்படுத்தியிருக்க அதில் கலச நீரை கையில் எடுத்துக் கொண்டு நடிகர் திலகம் ஏறிப்போகும் காட்சியை மிக நன்றாக படமாக்கியிருப்பார்கள். மேலே சென்று கலசத்தின் புனித நீரை கோபுர கலசங்களின் மேல் அபிஷேகம் செய்ய மக்கள் அனைவரும் ஆர்பரிப்பர். அதை தொடர்ந்து உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடிகர் திலகம் செய்ய வரலட்சுமி, மகாலிங்கம் மற்றும் சீர்காழியார் மூவரும் சேர்ந்து பாடும் தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே பாடல் காட்சி. அது முடிந்து அங்கே இருக்கும் பெரிய மாடத்தில் வந்து நின்று நடிகர் திலகம் மக்களை பார்த்து உரையாற்றும் காட்சி வருகிறது. மாடத்திலிருந்து கீழே இறங்கி வர அங்கே முத்துராமன் நிற்பதை பார்த்துவிட்டு நீயா? அழைப்பில்லாமல் எப்படி வந்தாய் என்று கேட்க மன்னனாக வரவில்லை. கலைஞனாக வந்திருக்கிறேன்.என்பார். போட்டி பொறாமை இவற்றையெல்லாம் தாண்டி எவன் கலையை ரசிக்கிறானோ அவனே நல்ல கலைஞன் என்பார் நடிகர் திலகம். தங்களுடன் அமர்ந்து நாட்டியத்தை ரசிக்க சொல்ல மறுத்துவிட்டு ஒரு மூலையில் நின்று நாட்டியத்தை பார்ப்பார். லட்சுமி ஆட துவங்கி பின் பாடலுடன் தொடர்வார். நாதனை கண்டேனடி, சுசீலாம்மாவின் பாடல் (படத்திலேயே குன்னக்குடி போட்ட உருப்படியான பாட்டு இது ஒன்றுதான் என்று ரசிகர்கள் சொல்வதுண்டு). பாடலுக்கு நடுவில் லட்சுமி கவன பிசகாக தடுமாறி விட முத்துராமன் அதை சுட்டிக்காட்டி வாதம் செய்வார். லட்சுமியும் எதிர் வாதம் செய்ய என் நாட்டியத்திற்கு உங்களால் வாசிக்க முடியுமா என லட்சுமி கேட்க என் வாசிப்பிற்கு உங்களால் ஆட முடியுமா என்று முத்துராமன் பதில் சவால் விடுவார்.(நம்பியார் முத்துராமனை கண்டிக்க நடிகர் திலகம் அவரை தடுப்பார்.இது கலைஞர்கள் பிரச்னை. இதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. நிறைய கைதட்டல்கள் வாங்கின வசனம்). முத்துராமன் மிருதங்கத்தை வாசிக்க லட்சுமி ஆட ஒரு கட்டத்தில் நடிகர் திலகம் எழுந்து முத்துராமனை நிறுத்த சொல்லிவிடுவார். என் மகளை நீ கொடுமைப்படுத்துகிறாய். இதை நான் அனுமதிக்க முடியாது என்று கூற முத்துராமன் வெளியேற இடைவேளை.
இடைவேளை நேரத்தில் படம் பற்றிய ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. மீண்டும் தொடங்க அரண்மனையில் லட்சுமி தனது அத்தையான வரலட்சுமியிடமும் தாய் விஜயகுமாரியிடமும் கோபமும் வருத்தமுமாக புலம்புவார். நடிகர் திலகம் அங்கே வர அவருடனும் இது தொடரும். சிறிது நேரத்தில் சிவகுமார் திரும்பி வர குடமுழுக்கு விழாவிற்கு இல்லாமல் ஏன் கரூர் பாசறைக்கு போனாய் என்று நடிகர் திலகம் வினவ அது முடிந்த விஷயம் என்பார் சிவகுமார். வேங்கி நாட்டின் மீது படையெடுத்து சென்று நாட்டை கைப்பற்றி வர நடிகர் திலகம் சொல்ல சிவகுமார் மறுக்க இது சக்ரவர்த்தியின் கட்டளை என்பார் நடிகர் திலகம்.மன்னிக்க வேண்டும் என் நண்பன் மீது போர் தொடுத்து வெற்றி பெறுவதுதான் வீரம் என்றால் அது எனக்கு தேவையில்லை என்று உடைவாளை எடுத்து நடிகர் திலகம் கையில் கொடுத்துவிட்டு போய் விடுவார். வீரமா தேவியின் மீது கொண்டுள்ள காதலினால்தான் இளவரசர் கோழையாகி விட்டார் என்று நம்பியார் சொல்ல நடிகர் திலகம் குமாரி பத்மினியிடம் வந்து குற்றம் சாட்டி பேச அவர் நான் காதலித்தது ஒரு கோழையை அல்ல. என்னால் உங்கள் குலத்திற்கு இழுக்கு வராது என்று சொல்லும்போதே சிவகுமார் ஓடோடி வந்து என வீரத்தை சந்தேகித்தால் நான் பொறுக்க மாட்டேன். நண்பன் என்பதற்காக சற்று தயங்கினேன். போர்க்களம் புகுந்து வெற்றியுடன் திரும்புவேன் என்று சொல்லி போக ஒரு விஷம புன்னைகையோடு உன் காதலுனும் கோழையல்ல, என் மகனும் கோழையல்ல என்பார் நடிகர் திலகம். அப்லாஸ் அள்ளிய வசனம்.
இதற்கிடையில் மனோரமா சுருளிராஜன் மற்ற இரு காவலர்கள் இடம் பெறும் சில நகைச்சுவை(?) காட்சிகள் வந்து போகின்றன. அங்கே வேங்கி நாட்டின் மீது படையெடுத்து செல்லும் சோழ படையும் அதை எதிர்கொண்டு நிற்கும் வேங்கி நாட்டு படையும் போர்முனையில் எதிரெதிரே நிற்க போர் ஆரம்பிக்கும் நேரம் அங்கே ஒரு சிவனடியார் வருவார். சண்டை வேண்டாம் என சொல்வார். இல்லை சண்டை செய்தே தீருவோம் என சிவகுமார் முத்துராமன் இருவரும் சொல்ல ஏதோ ஒரு நாடு வெற்றி பெறுவதற்காக இத்தனை பேர் உயிரிழக்க வேண்டுமா? சண்டைதான் முடிவென்றால் நீங்கள் இருவர் மட்டுமே போரிட்டு வெற்றி தோல்வியை முடிவு செய்யலாமே என்று யோசனை சொல்ல இருவரும் ஏற்றுக் கொள்வார்கள். சிவனடியாரை இருந்து பார்க்க சொல்வார்கள். ஆனால் நான் ஜீவ இம்சைக்கு எதிரானவன் என கூறி சிவனடியார் அங்கிருந்து விலகி வந்து சற்று தூரத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தினுள்ளில் சென்று மீண்டும் வெளியே வரும்போது உடையெல்லாம் மாற்றி சோழ சக்ரவர்த்தியாக நடிகர் திலகம் வந்து குதிரை ஏறி போவார். அங்கே சிவகுமார் முத்துராமன் சண்டையில் சிவகுமார் வெற்றி பெற முத்துராமனை தன்னுடன் அழைப்பார். வரமாட்டேன் என சொல்லும் முத்துராமனை தகுந்த மரியாதையுடன் நடத்துவதாக கூறி சிவகுமார் அழைத்து செல்வார்.
போர்க்கைதியான முத்துராமனை புலிக்கூண்டில் அடைத்து கோட்டை வாசலில் நிறுத்திவிட நம்பியார் சொல்ல அதை நடிகர் திலகம் ஏற்றுக் கொள்வார். சிவகுமார் எதிர்க்க, வேங்கி நாட்டை வெற்றி கொண்டதோடு உன் வேலை முடிந்துவிட்டது என அவரை அடக்கி விடுவார் நடிகர் திலகம். கோட்டை வாசலில் புலிக்கூண்டில் வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் அங்கே கூடி இருக்கும் பொது மக்களிடம் பேசி சோழ நாட்டிற்கு வேங்கி நாட்டு என்றுமே நட்பு நாடு. இதை கெடுப்பது பால தேவர்தான் என்று சொல்ல அந்த நேரம் நம்பியார் அங்கே வர பொதுமக்கள் அனைவரும் நம்பியாருக்கு எதிராக குரல் கொடுக்க அவர் அங்கிருந்து ஓடி பின்னர் முத்துராமனை பாதாள சிறையில் அடைக்க சொல்லி நடிகர் திலகத்திடம் கூற அதன்படியே அடைக்கப்படுவார். அவரை அங்கிருந்து விடுவிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று லட்சுமி சிவகுமாரிடம் யோசனை கேட்க சிறையிலிருந்து தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு ஒரு சுரங்க பாதை இருக்கிறது. அதன் வழியாக நீ விமாலாதித்தனை அழைத்துக் கொண்டு சென்று பெருவுடையார் சன்னதியில் மாலை மாற்றி கொள்ளுங்கள் என்பார். ஆனால் அந்த சுரங்க பாதை எங்கே இருக்கிறது என்பது தெரியாது என்பார். அத்தைக்கு தெரியும் என்பார்
லட்சுமி வரலட்சுமியிடம் சுரங்க பாதைகள் பற்றி கேட்க அரண்மனையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பல்வேறு சுரங்க பாதைகள் இருக்கின்றன என்றும் சிறைச்சாலையிலிருந்து பெரிய கோவிலுக்கு கூட வழி இருக்கிறது என்று சொல்ல லட்சுமி நம்ப மாட்டேன் என்று சொல்ல அவர் காதோடு ரகசியமாக கூறுவார் வரலட்சுமி. அந்நேரம் அங்கே நடிகர் திலகம் ஆஜராகி என்ன அத்தையும் மருமகளும் ரகசியம் பேசுகிறீர்கள் என்று கேட்க வரலட்சுமி சமாளிப்பார். கோவில் பிரசாதம் என்று நடிகர் திலகம் கொடுக்க உன் மகளுக்கு கொடு என்பார் வரலட்சுமி. மலர் மாலையை கையில் எடுத்துக் கொண்டு திருநீறு வைத்து விடுங்கள் என்று லட்சுமி நடிகர் திலகத்திடம் கேட்டு வைத்து கொள்வார். அத்தை நீங்கள் திலகம் வைத்து விடுங்கள் என்று கேட்டு வைத்துக் கொள்வார். எண்ணம் போல் அனைத்தும் இனிதாக நடக்கட்டும் என்று நடிகர் திலகம் ஆசி கூற அடுத்த காட்சியில் லட்சுமி முத்துராமனை சிறையிலிருந்து சுரங்க பாதை வழியாக அழைத்து வருவார். பாதையின் முடிவில் ஒரு கதவு வழியாக சன்னதியில் பிரவேசித்து திரும்ப அங்கே அந்த பெருவுடையார் முன்பு நடிகர் திலகம் மிக கம்பீரமாக நிற்க அலப்பறை. அங்கே அவரை பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி கைகால் வெலவெலக்க லட்சுமி நிற்க அதிர்ச்சியில் எதுவும் செய்ய முடியாமல் முத்துராமன் நிற்க அந்த ஒரு நிமிடத்தில் முகத்தில் கோபம் ஆத்திரம், தனது மகள் சொல் கேட்காமல் இப்படி செய்து விட்டாளே என்ற உணர்வு இவை அனைத்தும் அநத முகத்தில் செந்நிறத்தை பூச முத்துராமனை பார்த்து கையை மட்டும் உயர்த்தி வந்த வழியை காண்பிக்க முத்துராமன் திரும்ப செல்ல இதற்குள் கையில் பிடித்திருக்கும் மாலையில் இருக்கும் இதழ்களெல்லாம் உதிர்ந்து விழுந்து விட வெறும் நாரை பிடித்து நிற்கும் லட்சுமியும் நடிகர் திலகத்தின் முகத்தை பார்க்க முடியாமல் அழுகையோடு ஓடி போக வசனமே இல்லாத அந்த 2 நிமிட காட்சி தியேட்டரில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
அடுத்த காட்சியில் அந்தப்புரத்தில் லட்சுமி அத்தையோடும் தாயாரோடும் தமையனோடும் அழுதவாறு நிற்க அங்கே நம்பியாருடன் வருவார் நடிகர் திலகம். லட்சுமி பலவகையாக புலம்ப நடிகர் திலகம் நான் உன் தந்தை மட்டுமல்ல இந்த நாட்டிற்கே மன்னன். அதை மனதில் வைத்து பேச வேண்டும் என்று சொல்ல இளவரசி போலவே பேசுகிறேன் என்று கூறி பெண்கள் மட்டுமே இருக்கும் இந்த அந்தப்புரத்திற்கு நீங்களே அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்றிருக்க இந்த பாலதேவர் எங்கள் அனுமதியில்லாமல் எப்படி நுழைந்தார் என்று கேட்க பாலதேவரே என்று நடிகர் திலகம் சொல்ல நம்பியார் வெளியேறுவார். வரலட்சுமியிடம் நமது எதிரி சத்யாசிரியன் ஓலை அனுப்பியிருக்கிறான். விமலாதித்தனை விடுதலை செய்து குந்தவைக்கு மணம் முடித்தால் வேற்று நாட்டு அரசர்களுடன் சேர்ந்து படையெடுத்து வந்து நமது சோழ சாமராஜ்ஜியத்தை அழித்து விடுவானாம். மாறாக விமலாதித்தனை கொன்று சத்யாசிரியனின் மகனுக்கு குந்தவையை மணம் முடித்து கொடுத்தால் நமது படைகளுக்கு உதவியாக வந்து விந்தியத்திற்கு அப்பாலும் நமது புலிக்கொடி பறக்க உதவி செய்வானாம். நீ என்ன பதில் சொல்லப்போகிறாய் ராஜராஜா என்று வரலட்சுமி கேட்க, நான் சொல்கிறேன் அத்தை. சிறையிலே நிராயுதபாணியாக இருக்கும் விமாலாதித்தரை கொல்வார். பின் பகைவனின் மகனுக்கு தனது மகளை மணமுடிப்பார். அவளும் போகிற வழியிலேயே உயிர் துறப்பாள். விமலாதித்தன் குந்தவை என்ற இரண்டு பிணங்களின் மீதும் ஏறி சென்று விந்திய மலைக்கு அப்பாலும் தனது புலிக்கொடியை பறக்க விடுவார்.ராஜ ராஜ சோழர்.என்று லட்சுமி அழுகையோடு முடிக்க இளவரசி என்பதை மறந்து பேசுகிறாள் என சொல்ல ஆம். மறந்து விட்டேன். இதோ வருகிறேன் என்று கூறி உள்ளே செல்ல, இவள் என்ன சொல்ல போகிறாள் என்று சிவகுமார் கேட்க எண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் சிக்கலை கூட என்னால் கணிக்க முடிகிறது. ஆனால் உன் தங்கையின் வாயிலிருந்து அடுத்து என்ன வார்த்தை வரும் என்பதை என்னால் யூகிக்க முடிவதில்லை என்பார் நடிகர் திலகம். இளவரசிக்கான அனைத்து அணிகலன்களையும் களைந்து விட்டு அரண்மையை விட்டு போகப்போவதாக லட்சுமி சொல்ல எங்கே என்று நடிகர் திலகம் கேட்க அடுத்து வரக்கூடிய கேள்விகளும் பதில்களும் ராஜேந்திரன் என்ற சிவகுமாரை முன்னிறுத்தி வெளிவருவது ரசிக்கும்படியாக இருக்கும். (என்ன செய்ய போகிறாள் என்று கேளடா, இந்த பரந்த சோழ சாம்ராஜ்ஜியத்தில் எங்கோ ஒரு மூலையில் சென்று பிழைத்துக் கொள்வேன் என்று கூறண்ணா) உன்னையும் துன்பப்படுத்திக் கொண்டு மற்றவர்களையும் துன்பத்துக்குள்ளாகிறாய் என்று சிவகுமார் சொல்ல ராஜேந்திரா இவள் என் மகளே அல்ல என்று நடிகர் திலகம் சொல்ல அத்தை என் தாய் தங்கை மனம் புண்படும்படி பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சிவகுமார் கோபப்பட மீண்டும் சொல்கிறேன் இவள் உடம்பில் ஓடுவது என் ரத்தமே அல்ல. என் மகளாக இருந்திருந்தால் இங்கேயே இருந்து போராடியிருப்பாள். இப்படி கோழையை போல் ஓடி போக மாட்டாள் என்று நடிகர் திலகம் சொல்ல லட்சுமி நான் இளவரசிதான் . இங்கேயே இருந்து போராட போகிறேன் என்று அணிகலன்களை எடுத்து அணிய பொங்கி வரும் சிரிப்பை அடக்கி விஷம புன்னைகையோடு சந்தேகமில்லை இவள் என் மகள்தான் என்று நடிகர் திலகம் சொல்ல செம கைதட்டல்கள். ராஜராஜா உன் மகளுக்கு என்னதான் முடிவு சொல்ல போகிறாய் என்று வரலட்சுமி கேட்க காதலர்களை சேர்த்து வைத்து மணம் முடிப்பதா இல்லை இத்தனை வருடம் கட்டிக்காத்த சோழ சாம்ராஜ்ஜியத்தை எதிரிகளிடம் இழப்பதா? எதற்கும் முடிவு செய்யும் அக்கையாரே இதற்கும் ஒரு முடிவை சொல்லுங்கள் என்று சொல்லி நடிகர் திலகம் நடந்து நீங்க, படத்திலேயே மிக அதிகமாக ரசிக்கப்பட்ட காட்சி இதுதான் என்று அப்போதும் இப்போதும் சொல்ல முடிகிறது.
வெளியே நடிகர் திலகத்தை சந்திக்கும் நாடக ஆசிரியர் சில நாட்களில் உங்களது பிறந்த நாள் வருகிறது. அப்போது உங்கள் வரலாற்றை எழுத ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். சற்று பொறுங்கள். இனிமேல்தான் என் வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள் இடம் பெறப்போகின்றன. அதையும் சேர்த்து எழுதலாம் என்று சொல்லி அனுப்பி வைப்பார். அருகில் இருக்கும் சஹஸ்ரநாமத்திடம் என் பிறந்த நாளை முன்னிட்டு புலவர்களுக்கு அவர்கள் விரும்பிய பரிசுகள் கொடுக்கப்படும் என அறிவித்து விடுங்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்து விடுங்கள் என்பார். இதை சற்று தூரத்தில் நின்று கேட்கும் லட்சுமியின் காதில் வரலட்சுமி ரகசியமாக சொல்ல அதை மற்றொரு தூணின் மறைவிலிருந்து பார்க்கும் நம்பியார் சே இந்த சோழநாட்டு பெண்கள் கூட திறமையானவர்கள். முக்கியமான விஷயத்தை காதோடு சொல்லிவிட்டார்களே என்பார். பாதாள சிறைக்கு நம்பியார் செல்ல அங்கே முத்துராமன் காதில் லட்சுமி ஏதோ கூறுவதை பார்த்துவிட்டு இவர் சத்தம் போட பதிலுக்கு முத்துராமனும் லட்சுமியும் இவரை சத்தம் போட்டு அனுப்பி விடுவார்கள். அங்கே மனோகரின் மாளிகையில் மனோகரிடம் சகுந்தலா பௌர்ணமி நெருங்குகிறதே ஒற்றனை அனுப்ப வேண்டாமா என்று கேட்க ஒற்றன் வருவான். அவனிடம் நம்பியாருக்கு ஓலை கொடுத்து அனுப்புவார் மனோகர்.
பௌர்ணமியன்று ஒற்றன் வருவதற்கு முன்பு காவலர்களை அனுப்பி விடுவார் மனோரமா. சுவரேறி குதித்து வரும் ஒற்றன் அங்கே நந்தவனத்தில் விஸ்வரூபமாக தன் முன் நிற்கும் ராஜராஜ சோழரை கண்டதும் காலில் விழுந்து கதறுவான்.என்னை மன்னித்து விடுங்கள் என்பான். உங்கள் கட்சியில் சேர்ந்து விடுகிறேன் என்பான்.என்னடா இது ஒரு முறைதான் மிரட்டினேன். அதற்குள் கட்சி மாறுகிறேன் என்று சொல்லிவிட்டானே என்று நடிகர் திலகம் சொல்ல ஒரே கைதட்டல். அன்று ஸ்தாபன காங்கிரஸிலிருந்து ஒரு சிலர் இந்திரா காங்கிரஸுக்கு போனதை குறிப்பிடுவதாக அமைந்திருந்தது. மனோகர் கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கி படித்து பார்த்துவிட்டு காவலாளிகளை அழைத்து அவனை தனியறையில் அடைத்து வைக்க சொல்லிவிட்டு மீண்டும் வர சொல்வார். அவர்கள் மீண்டும் அங்கு வர அந்த ஒற்றனின் உடை அணிந்து நடிகர் திலகம் வர அடையாளம் தெரியாமல் அவரை பிடிக்க பின் நடிகர் திலகம் என்று தெரிந்ததும் பதறி விடுவார்கள். உள்ளே ஒற்றன் வரவில்லையே என்று தவிக்கும் நம்பியார் இறுதியில் ஒற்றனாக நடிகர் திலகம் வர அவரிடம் வருகின்ற பௌர்ணமி அன்று படையெடுத்து வரும்படி ஓலை கொடுத்து அனுப்புவார். மறுநாள் ஐப்பசி சதயம் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் என்பதால் இரவு விருந்துக்கு அவரை அழைத்திருப்பார் நம்பியார். அவர் அருந்த போகும் பாலில் கொடிய விஷத்தை கலந்து வைக்கும்படி மனோரமாவிடம் சொல்வார் நம்பியார். அவர் வரும் நேரம்தான். கதவை திறக்க சொல்ல கதவு திறக்கும்போது நடிகர் திலகம் அங்கு நிற்க இருவரும் அதிர்ச்சி அடைவார்கள். வெகு நேரமாகி விட்டதா என்று நம்பியார் கேட்க நான் வந்து நிற்க கதவு திறக்க எல்லாம் சரியாக அமைந்தது என்று நடிகர் திலகம் சொல்லும் விதம் மிகவும் ரசிக்கப்பட்டது. ஆசனத்தில் அமர்ந்தவுடன் பால் கொண்டு தரப்பட அதை குடிக்க ஆரம்பிக்கும் முன் நடிகர் திலகம் பேச முற்பட பால் அருந்தி விட்டு சொல்லலாமே என்று நம்பியாரும் அதற்கு சொல்லி விட்டு அருந்துகிறேனே என்ற நடிகர் திலகத்தின் பதிலும் ரசிக்கும்படி இருக்கும். நான் சில முடிவுகள் எடுத்திருக்கிறேன். என் மகள் குந்தவையை சத்யாசிரியன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து சத்யாசிரியனிடம் நட்பு பாராட்டலாம் என்றிருக்கிறேன். எனக்கு அரசியல் வெறுத்துவிட்டது. ஆகவே ஆட்சி பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்து விட்டு இறைவனின் ஆலயங்களுக்கு ஒரு யாத்திரை மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று அடுக்க நம்பியாரின் முகம் மாற இப்போது சொல்லுங்கள் ராஜ தந்திரியாரே இதையெல்லாம் செய்ய நான் உயிரோடு இருக்கவா அல்லது இந்த விஷம் அருந்திய பாலை குடித்து விட்டு இறந்து போகவா என்று கேட்க அரங்கில் ஒரே அமர்க்களம். விஷம் கலந்த பாலா சக்ரவர்த்திகள் என்ன சொல்லுகிறீர்கள் என்று வாய் குழறி நம்பியார் பேச, பாவம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது. பூங்கோதைதான் இதை செய்தாள் என்று நடிகர் திலகம் சொல்ல பூங்கோதை என்று நம்பியார் சத்தம் போட அவள் ஓடி விட்டாள். அவளை விட்டு விடுங்கள். உங்களை தனியே விட்டு போனால் அதையே நினைத்து கொண்டிருப்பீர்கள், ஆகவே இன்றைய இரவை என்னுடன் கழியுங்கள் என்று கையை பிடித்து இழுத்து செல்வார் நடிகர் திலகம்.
மறுநாள் அரசவை..புலவர்கள் கவி பாடி பரிசுகள் பெற்று செல்ல முத்துராமன் வருவார். நீ எப்படி சிறையிலிருந்து வந்தாய் என்று நடிகர் திலகம் கேட்க உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சொன்னீர்களே என்று சஹஸ்ரநாமம் சொல்ல உங்களை பாட வந்திருக்கிறேன் என்று முத்துராமன் சொல்ல பாடு என்பார் நடிகர் திலகம்.வசன பாணியில் அமைந்த அந்த பாடலை முத்துராமன் பாட (பாடல் சுமார் என்றாலும் சொந்த குரலில் முத்துராமன் நன்றாகவே செய்திருப்பார்). பாடல் முடிந்து என்ன வேண்டும் என்று கேட்க உங்கள் மகளை மணம் முடித்து தர வேண்டும் என முத்துராமன் சொல்ல அது முடியாது என்பார் முதலில். எது கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னீர்களே என்று எதிர் கேள்வி வர அதற்காக அரசகுமாரியை பரிசு பொருளாகக்க கூடாதே என்று நடிகர் திலகம் சொல்ல சக்ரவர்த்திகளும் தருகிறேன் என்ற வார்த்தை மாற கூடாதே என்பார் முத்துராமன்.முல்லைக்கு தேர் தந்தான் பாரி என்று ஆரம்பித்து பல்வேறு மன்னர்கள் கொடுத்த பரிசுகளை முத்துராமன் பட்டியலிட அவரை இடைமறித்து பகைவனுக்கு பெண்ணை தந்தான் ராஜராஜன் என்று லட்சுமியை அழைத்து முத்துராமன் கையில் ஒப்படைப்பார் நடிகர் திலகம். சக்ரவர்த்திகளே என்ன இப்படி செய்து விட்டீர்கள்? திடீரென்று சத்தியாசிரியன் படையெடுத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று நம்பியார் கேட்க அடுத்த பௌர்ணமியன்றுதானே படையெடுத்து வருவதாக ஒற்றன் மூலமாக நீங்கள் ஓலை கொடுத்து அனுப்பியிருக்கும்போது எப்படி திடீரென்று வருவான் என்று நடிகர் திலகம் கிண்டலாக கேட்க ஒரே கைதட்டல். என்ன சொல்கிறீர்கள்? ஒற்றனா? என்று கேட்க இதுவரை வந்தது உங்கள் ஒற்றன்தான்.அனால் நேற்று ஒற்றனாக வந்தது மட்டும் நான் என்று கூற ஒற்றன் சபைக்கு அழைக்கப்பட்டு உண்மை வெளிப்பட நம்பியார் எழுதிய ஓலையை காட்டி இது உங்கள் கையெழுத்துதானே என்று நடிகர் திலகம் கேட்க அடுத்து பூங்கோதை என்று அழைக்க மனோரமா வர இவள் உங்கள் நாட்டு பெண்ணல்ல. எங்கள் சோழ நாட்டை சேர்ந்தவள். உங்கள் நாட்டில் ஆண்கள் மட்டும்தான் ஒற்றர்கள். எங்கள் நாட்டில் பெண்கள் கூட ஒற்றர்களாக இருப்பார்கள் என்று சொல்லி நம்பியாரின் கைத்தடியை மட்டும் பிடுங்கி கொண்டு அவரை போக விட்டுவிடுவார். என்னை ஏன் இப்படி சோதித்தீர்கள் என்று முத்துராமன் கேட்க எங்கள் சோழ நாட்டின் தலைவாசலாக விளங்கக்கூடிய வேங்கி நாட்டு மன்னன் நீ..மாற்றான் மிரட்டினாலோ அடிமைப்படுத்த நினைத்தாலோ நீ எப்படி நடந்து கொள்வாய் என்று பார்க்கவே உன்னை சோதித்தேன் என்பார். அங்கே வரும் பெண் புலவரிடம் இனி உங்கள் நாடக ஆக்கத்தை தொடங்கலாம். என்பார். ராஜ ராஜேஸ்வரம் என்ற பெயரில் இது அரங்கேறும் என்று புலவர் சொல்ல இதை நாடெங்கும் நடத்துங்கள். அதில் சோழ மன்னன் தனது களை வேங்கி மன்னனுக்கு மணம் செய்து கொடுத்ததன் மூலம் கலப்பு திருமணத்தையும் ஆதரித்தான் என்று ஒரு வரி எழுதி விடுங்கள் என்பார்.
பின் முத்துராமன் லட்சுமி, சிவகுமார் குமாரி பத்மினி திருமணம் நடக்க முத்துராமனும் லட்சுமியும் வேங்கி நாட்டிற்கு கிளம்ப அந்நேரம் வெள்ளை வஸ்திரம் அணிந்து அதே நிறத்தில் ஒரு தலைப்பாகையும் அணிந்து அவ்வளவு அழகாக இருப்பார் நடிகர் திலகம். உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று சீர்காழியின் பின்னணி குரலில் பாட்டு ஒலிக்க ராஜராஜா நீயா கண் கலங்குகிறாய் என்று வரலட்சுமி கேட்க நாடாளும் மன்னனாக இருந்தாலும் நானும் ஒரு தகப்பன்தானே என்று நடிகர் திலகம் சொல்வது அவ்வளவு சிறப்பு. தேரில் கோட்டை வாசலை விட்டு வெளியேறும் மகளையும் மருமகனையும் ராஜராஜனாக நடிகர் திலகம் உப்பரிகையில் நின்று இடது கையை உயர்த்தி கம்பீரமாக வாழ்த்தி வழியனுப்ப வணக்கம்.
படம் தொடர்பான அனைத்து இதர விஷயங்களையம் பற்றி அடுத்த வாரம். பேசுவோம். அது வரை ----
(தொடரும்)
அன்புடன்


நன்றி முரளி சிறிநிவாசன்

sivaa
12th June 2021, 05:48 PM
Thanks to ntfans
முகநூலில் ஒரு அன்பர் கேள்வி கேட்டிருந்தார் சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று?
அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்னசெய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று.
1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம்.
இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களை தெய்வம் மன்னிக்காது.

Thanks Vasudevan Sundararaman

sivaa
12th June 2021, 05:53 PM
பராசக்திக்கு தடை போடும் முயற்சி தோல்வி… பராசக்தி”க்கு தடை விதிக்க, பலமுனைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. படத்தைப் பார்த்த தலைமை தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்! “பராசக்தி” படத்துக்கு கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் வலுத்தது. பராசக்தியின் திரைக்கதையை மு.கருணாநிதி எழுதியுள்ளார், அவர் பின்னர் தமிழகத்தின் முதல்வர் ஆனார். படத்துக்கு ஆர்.சுதர்சனம் இசையமைத்துள்ளார். பராசக்தி தீபாவளி தினத்தன்று அக்டோபர் 17, 1952 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த படம் பிராமணர்கள், இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை எதிர்மறையாக விமர்சித்ததால் சர்ச்சைகளை எதிர்கொண்டது. அப்போதைய ஆளும் மாநில அரசு உட்பட உயரடுக்கு சமூகம் இப்படத்தை தடை செய்யக் கோரியது.
படத்தில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பத்திரிகை வாயிலாக உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார், கருணாநிதி. “பராசக்தி”க்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக சிலர் நடத்திக் கொண்டிருந்தனர்.
தடை விதிக்கக்கோரி, தலைமை தணிக்கை அதிகாரிக்கு தந்திகள் குவிந்தன. அப்போது தணிக்கை குழுவின் தலைமை அதிகாரியாக `ஸ்டாலின்’ சீனிவாசன் இருந்தார். இவர், “மணிக்கொடி” என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி, புதுமைப்பித்தன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், புகழ்பெறக் காரணமாக இருந்தவர். அவர் ஸ்டாலினைப் போன்ற மீசை வைத்திருந்ததால் `ஸ்டாலின்’ சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அவர் “பராசக்தி” படத்தைப் பார்த்தார். சாதாரணமாகப் பார்க்கவில்லை. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அந்த மாதிரி பார்த்தார். கடைசியாக அவர் வழங்கிய தீர்ப்பு: “பராசக்தியில் ஆக்ரோஷமான காட்சி எதுவும் இல்லை. எனவே, படத்துக்கு தடை விதிக்கவோ, காட்சிகளை வெட்டவோ வேண்டிய அவசியம் இல்லை”.
இப்படி அறிவித்த தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்! “பராசக்தி” பற்றி பத்திரிகைகளில் நடந்த விவாதமும், அதற்கு தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பும், “பராசக்தி”க்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. எனவே, தியேட்டர்களில் முன்னிலும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. தினமும் “ஹவுஸ்புல்” தான். . “பராசக்தி”யின் வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகியது. வசனம் முழுவதும் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டது.
“காலத்தை கணிக்க, கி.மு., கி.பி. என்று கூறுவது போல, தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுத வேண்டுமானால் பராசக்திக்கு முன், பராசக்திக்குப்பின் என்று பிரிக்கலாம்” என்று சில விமர்சகர்கள் எழுதினர். “பராசக்தி” படத்தில் நடிக்க, சிவாஜி கணேசனுக்கு மாதம் ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டது.
இதை சிவாஜியே குறிப்பிட்டிருப்பதுடன், “பராசக்தியில் இலவசமாக நடிப்பதற்குக் கூட தயாராக இருந்தேன்” என்றும் கூறியுள்ளார். “பராசக்தி” படத்துக்குப்பின் சிவாஜியின் ஊதியம் பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க அவர் வீட்டு முன் பட அதிபர்கள் குவிந்தனர்.

Thanks Sukumar Shan

sivaa
12th June 2021, 06:04 PM
சிவாஜி ஏன் உசத்தி?....பத்மினி
நடிகை பத்மினி பிறந்தநாள் சிறப்புப் பதிவு
(நன்றி: நவீனன்/yarl பக்கம் பத்மினி பற்றிய தொடரில் இருந்து தொகுத்த பதிவு)
சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.
காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.
சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.
*
கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
முதல் பட விநியோகம், அமரதீபம்…
முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன்.
ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.
*
தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி.
சில விசேஷத் தகவல்கள் -
கலைஞர் மு.கருணாநிதிக்கும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்த படம் தில்லானா மோகனாம்பாள். அதிலும், ‘நலந்தானா…’ பாடலுக்கு பாலசந்தர் பரம ரசிகர்!
சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் படம் தில்லானா மோகனாம்பாள்! இன்றளவும் (சமீபத்தில் 2015 ஏப்ரல் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு) ப்ரைம் டைமில், சன் டிவி போன்ற தனியார் சேனல்கள், தில்லானா மோகனாம்பாளைத் ஒளிபரப்புகின்றன. ஒவ்வொரு பிரேக்கும் 10 நிமிஷம் இருந்தாலும், ஜனங்கள் 1968-ன் உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரே படம்!
மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாகக் கொட்டிய கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காகவும் பத்மினி ஆடவேண்டி வந்தது. திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சி, திரையில் ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரக்கூடியது.
இன்றளவும் சின்னத்திரையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட உச்சக்கட்டப் போட்டிகளில், கல்யாணி ராகத்தில் அமைந்த அப்பாடலை பாலகர்கள் பிரமாதமாகப் பாடி, லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற முடிகிறது.
‘மன்னவன் வந்தானடி…’ பாடல் பற்றி பத்மினி மனம் திறந்தவை.
‘இந்தப் பாட்டில் நீங்கள் ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடுகிறீர்கள் என்று ஏ.பி.என். சொன்னதும் உற்சாகமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிந்தது. வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?
சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.
இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.
யார் ஹீரோ என்றபோதிலும், ஏராளமான படங்களில் டைட்டில் ரோல் பத்மினிக்கே சொந்தம். பெண்மைக்கு உயர்வளிக்கும் உயர்ந்த நோக்கமோ அல்லது வணிக உத்தியில் பத்மினிக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தோ இரண்டில் ஏதோ ஒன்று.
நடிப்பில் மணமகள் தொடங்கி, தொடர்ந்து மருமகள் (ஹீரோ என்.டி.ஆர்.), காவேரி, மங்கையர்திலகம், மல்லிகா (நாயகன் ஜெமினி), அமரதீபம், பாக்யவதி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம், சித்தி, தில்லானா மோகனாம்பாள், பெண் தெய்வம் என தாய்க்கு ஒரு தாலாட்டு வரை பத்மினியின் நடிப்பில் வெளிவந்தவை, அவரது அற்புத நடிப்புக்காகவே ஓடியவை.
‘பத்மினிக்குக் கிடைத்த வெற்றியில், பெரும்பாலும் கணேசன் குளிர் காய்ந்தார். சிவாஜிக்காகவேண்டி படங்கள் விழா கொண்டாடவில்லை’ என நடிகர் திலகத்துக்கு வேண்டாதவர்கள் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதும் உண்டு.
அமெரிக்காவுக்குப் போனாலும், ஆண்டுதோறும் மார்கழி மஹோத்சவத்துக்கு சென்னையில் இருப்பதை, கடைசி வரை தன் வழக்கமாக பத்மினி கடைப்பிடித்தார். அவ்வாறு, 1976-ல் சென்னை வந்த பத்மினி, ‘சிவாஜி வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த ஆண்டில் கடைசி சிவாஜி படம் ரோஜாவின் ராஜா. அதில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அதையொட்டி எழுந்த கேள்விக்கான பதில், சிக்கலை ஏற்படுத்தியது.
‘கணேஷுக்குக் குழந்தை மாதிரி சுபாவம். கோபம் வந்தாலும் உடனே தணிந்து போகும்’ என்கிற பத்மினியின் வாசகத்தை, சிவாஜி நிரூபித்துவிட்டார். பத்மினி தன்னைக் குறித்து சொன்னதை அவர் பொருள்படுத்தவே இல்லை. எப்போதும்போல் தோழமை தொடர்ந்தது. அதன் விளைவு, 1977-ல் கே.பாலாஜியின் ‘தீபம்’ படத்தில் பத்மினி கௌரவ வேடத்தில் ப்ளாஷ்பேக்கில், ஒரு காட்சியில் தாயாராக நடித்திருப்பார். அதில் பத்மினி தோன்றும் புகைப்படம். தொலைந்துபோன தம்பி விஜயகுமார்தான், நாயகி சுஜாதாவுடைய காதலன் என சிவாஜிக்கு உணர்த்தும்.
பத்மினி பற்றி, கணேசனும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு இணையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?’
நிச்சயமாக பப்பிதான். பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்... வாட் நாட்…?
எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. ஷீ ஈஸ் ஆன் ஆல்ரவுண்டர். சின்ன வயதிலிருந்தே நானும் பப்பியும் பழகி வருகிறோம். வீ ஆர் ஆல் இன்டெலக்சுவல் ஃப்ரண்ட்ஸ். எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு’.

Thanks Raja Lakshmi -N T sivaji visirikal

sivaa
12th June 2021, 06:11 PM
#நடிகர்திலகத்தின்சாதனைத்துளிகள் *..6
1962 ல் அமெரிக்க அதிபர் John.F. kennedy அழைப்பினை ஏற்று, கலாச்சார தூதுவராக சிவாஜி கணேசன் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அமெரிக்கா செல்லும் வழியில் , பாரிஸ் நகரத்தில் இந்திய அசோசியேசன் சார்பாக சிவாஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
1962ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘ Hollywood’ ல் வரவேற்பை பெற்றார் சிவாஜி கணேசன். அங்கு ‘ Actor’s guild’ எனும் ஆங்கீகாரத்தை பெற்றார்.
1962ல் ஹாலிவுட் நடிகர் சார்லஸ் ஹஸ்டன் , சிவாஜி கணேசனுக்கு ” டைமண்ட் லஞ்ச்” எனும் உயர்தர விருந்தளித்தார். அந்த விருந்தில் ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மன், ஜார்ஜ் சேண்ட்லர்,வால்டர் பிட்ஜியன் முதலிய ஹாலிவுட் நடிகர்கள் பங்கேற்று சிவாஜி கணேசனை பெருமை படுத்தினர்
அதன்பிறகு ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ” மார்லின் பிராண்டோ ” சிவாஜி கணேசனுக்கு விருந்தளித்து சிறப்பித்தார். சிவாஜி என்னைப்போல நடிக்கலாம் ஆனால் நான் சிவாஜி போல நடிக்கமுடியாது என வியந்து பாராட்டினார் ஹலிவுட்டின் சூப்பர்ஸ்டார் மர்லின் பிராண்டோ.
அமெரிக்காவின் நயாகரா நகரை சென்றடைந்த சிவாஜி கணேசன் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். நயாகரா நகரத்தின் தங்க சாவி அவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நேருவுக்கு பிறகு இந்த மரியாதையை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி கணேசன் மட்டுமே.

5793
Thanks Raja Lakshmi -N T sivaji visirikal

sivaa
12th June 2021, 06:23 PM
அப்படியா ! 1980ல் மறைக்கப்பட்ட சிவாஜி ஆளுமை. 1962 லேயே எழுதினார் வரலாற்றாசிரியர் ERIC BARNOUV.

நடிகர்திலகத்தின் திரை உலக ஆளுமையை 1962 லேயே தமது INDIAN FILM புத்தகத்தில் 4 பக்கங்களுக்கு எழுதியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த வரலாற்றாசிரியர் திரு.ERIC BARNOUV. இந்த புத்தகத்தில் 4 பக்கங்கள் இடம்பெற்ற ஒரே நடிகர் நடிகர்திலகம். இதே புத்தகம் 1980 second edition இல் 3 பக்கங்களை மறைத்து வெறும் 1 பக்கம் மட்டும் வைத்துள்ளனர். தமிழக பதிப்பாளர்கள்.


https://youtu.be/1lsHziAQaUE

Thanks Nadigar Thilagam T V

sivaa
12th June 2021, 11:50 PM
நடிகர் சங்க வளர்ச்சியில் சிவாஜியின் பங்கு


https://youtu.be/3zUTAABwxzU

Thanks Sivaji Murasu

sivaa
20th June 2021, 08:50 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 56
அடுத்து Dr.ராஜா மற்றும் பட்டாக்கத்தி பைரவன் என்றதுமே அனைவருக்கும் ஒரு குதூகலம் ஏற்படுவதை உணர முடிகிறது. ஆம், ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த எங்கள் தங்க ராஜாதான் அடுத்து திரைக்கு வந்த நடிகர் திலகத்தின் படம். பொன்னூஞ்சல் வெளியாகி 29 நாட்களுக்கு பிறகு 1973 ஜூலை 14 சனிக்கிழமையன்று வெளியானது. மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ்.
எங்கள் தங்க ராஜா படத்தின் படப்பிடிப்பு விவரங்கள், அது எடுக்கப்பட்டது பற்றி, படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி தயாரிப்பாளர் இயக்குனர் வி பி ராஜேந்திர பிரசாத் பத்திரிக்கைகளில் கொடுத்த விவரங்களை பற்றி இந்த தொடரில் இரண்டு மூன்று முறை குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். தெலுங்கு படவுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ். வெகு காலமாக தெலுங்கில் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிறுவனம். பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான என் தம்பி படத்தின் ஒரிஜினல் தெலுங்கை தயாரித்த நிறுவனமும் இவர்கள்தான். இவர்கள் தெலுங்கில் சோபன்பாபு நடித்த மானவடு தானவடு படத்தைதான் தமிழில் எங்கள் தங்க ராஜாவாக எடுத்தார்கள்.வசந்த மாளிகைக்கு பிறகு ஏராளமான தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தமிழில் படம் எடுக்க ஆர்வமாக முன்வந்தனர். அவர்களில் முந்திக் கொண்டவர் ராஜேந்திர பிரசாத், மிக குறுகிய காலத்திலேயே படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வந்து விட்டார். மஞ்சுளா நடிகர் திலகத்திற்கு ஜோடியாக முதலில் ஒப்பந்தமான படம் மன்னவன் வந்தானடி என்றாலும் அதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம்தான் அவருக்கு நடிகர் திலகத்துடன் அறிமுக படமாக அமைந்தது. அது போல் பின்னாட்களில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்த எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் (டைட்டிலில் அஸோஸியேட் டைரக் ஷன் எஸ்.சி சேகர் என்று வரும்).
MR எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு RmS பிலிம்ஸ் என்ற நிறுவனம் விநியோக உரிமையை பெற்றிருந்தது. திண்டுக்கல் ரோட்டில் நியூசினிமா தியேட்டருக்கு அருகாமையில் அமைந்திருந்த, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த சுதாகரன் டைலர்ஸ் என்ற கடைக்கு மாடியில் அமைந்திருந்தது RmS அலுவலகம். ஜூலை 14 ரிலீஸ் என்று விளம்பரம் வந்தவுடனே அங்கே களை கட்ட ஆரம்பித்து விட்டது. அவர்களும் மிக சிறப்பாக செயல்பட்டார்கள். சாதாரணமாக MR ஏரியாவிற்கு அதிகபட்சமாக 5 பிரிண்ட்கள்தான் வெளியாகும் . இது எப்படி என்றால் விநியோகஸ்தர் ஒரு ஏரியாவிற்கு விலை பேசி வாங்கும்போதே எத்தனை பெட்டி அதாவது எத்தனை பிரிண்ட் என்பதும் ஒப்பந்ததிலேயே வந்து விடும். 5 பிரிண்ட் தருவதாக ஒப்பந்தம் என்றால் தயாரிப்பாளர் அந்த ஏரியாவிற்கு 5 பிரதிகள் எடுத்து கொடுத்து விடுவார். அதற்கு மேல் வேண்டும் என விநியோகஸ்தர் விரும்பினால் அதற்குண்டான அதாவது ஒன்றோ இரண்டோ பிரதிகள் கூடுதலாக தேவைப்பட்டால் அதற்குரிய பணத்தை விநியோகஸ்தர் தர வேண்டும். எங்கள் தங்க ராஜாவை பொறுத்தவரை RmS பிலிம்ஸ் மதுரை நகருக்கு ஒன்று, அதை தவிர 8 பிரதிகள் ஆக மொத்தம் ஒன்பது பிரதிகள் ரிலீஸ் செய்தனர். அதுவரை அந்தளவிற்கான எண்ணிக்கையில் பிரிண்ட்கள் போடப்பட்டதில்லை. மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர், ராம்நாட், கம்பம், ராஜபாளையம், (இவை 6ம் உறுதி) மீதி இரண்டு தேனி, காரைக்குடி என்று நினைவு.(இது என் நினைவிலிருந்து எழுதுகிறேன். இதில் ஓரிரண்டு மாறியிருக்கலாம். பதிலாக சிவகாசி, பரமக்குடி போன்ற ஊர்களாகவும் இருந்திருக்கலாம். தவறு இருந்தால் அந்தந்த ஊர் ரசிகர்கள் சொல்லலாம்).ஆகிய ஊர்களில் வெளியானது. இதை பல ரசிகர்கள் பிரமிப்புடன் பேசியது இப்போதும் நினைவிலிருக்கிறது.
பல படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த முறை டிக்கெட் வாங்குவதற்கு முயற்சிகள் தொடங்கின. ஆம், நீதி தங்கம், பாரத விலாஸ் விநியோகஸ்தர் தெரிந்தவர், ராஜராஜ சோழன் விநியோகஸ்தர் ரிசர்வேஷன், பொன்னூஞ்சல் தேவைப்படவில்லை. ஆனால் இதற்கு அது போல் எளிய வழி அமையவில்லையே..நான்கு படங்களுக்கு பிறகு மீண்டும் மன்ற டோக்கன்தான் ஒரே வழி என புரிந்தது. அது எப்போது கொடுப்பார்கள் என விசாரித்துக் கொண்டே இருந்தோம். அதற்கு முன்பு வேறு ஒரு விஷயம் முடிவு செய்ய வேண்டியிருந்தது. படம் சனிக்கிழமை வெளியாகிறது. ஸ்கூல் இருக்குமா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் அடித்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை, அன்றைய தினம் அதாவது ஜூலை 14ந் தேதி ஸ்கூல் லீவு என்று உறுதிப்படுத்திக் கொண்டேன் (அது செகண்ட் சாட்டர்டே. ஆனால் எல்லா மாதங்களிலும் எங்களுக்கு அப்படி லீவு கிடைத்ததில்லை). படம் ரிலீசிற்கு முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தது. காலையில் போய் கேட்டால் மாலையில்தான் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது மன்றத்தின் தலைமை பொறுப்பை பார்த்துக் கொண்டிருந்தவர் எம்.ஆர் ராம்ராஜு என்பவர். என் கஸினுக்கு நன்கு தெரிந்தவர். வசந்த மாளிகை தொடர் ஹவுஸ்புல் காட்சிகளுக்கு பிரச்னை வரும் நேரத்திலெல்லாம் அவருடன் என் கஸினும் கூடவே இருந்து உதவி செய்ததால் நல்ல பழக்கம். ஈவினிங் வாங்க என்று சொல்லிவிட்டார்கள். ரசிகர்கள் கூடும் இடமும் அப்போது மாறி விட்டது. மீனாட்சி கோவில் பக்கத்தில் இருந்த மீனாட்சி பார்க்கிற்கு பதிலாக மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரே உள்ளே பார்க்கிற்கு வர சொல்லி விட்டார்கள்.
நாங்கள் அங்கே போனபோது ஒரு 7 மணி சுமார் இருக்கும். பெரிய கூட்டம் நிற்கிறது. ஒவ்வொருவரும் அந்த ஷோ இந்த ஷோ என்று டிக்கெட் கேட்க ஒரு குழப்பமான சூழல். என் கஸினை பார்த்து உங்களுக்கு எது வேணும் என்று கேட்க கஸின் மார்னிங் ஓபனிங் ஷோ என்று சொல்ல ஓபனிங் ஷோ இல்லை. முடிஞ்சிருச்சு என்று அவர் சொல்ல எனக்கு அப்படியே ஏமாற்றம் பிளஸ் வருத்தம். உன் பிரெண்டதானே உனக்கே இல்லை என்று சொல்றாப்பல என்று என் கஸினிடம் நான் கோபப்பட இருடா, கேட்போம் என்கிறார் என் கஸின் அவர் நண்பர்களும் அங்கே இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு 5,6 பேர் வந்தனர். வந்தவுடன் நாங்க ஏற்கனவே கேட்டிருந்தோம். இப்போ ஆபிஸிலே வந்து கேட்கிறாங்க. உடனே எங்களுக்கு டோக்கன் வேணும் என்று சத்தமாக பேச ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த நண்பரிடம் கஸின் விவரம் கேட்க, வந்தவர்கள் மதுரை அர்பன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் என்பதும் அவர்களுக்கு டிக்கெட்டுக்கள் கணிசமான எண்ணிக்கையில் கொடுப்பதாக சொல்லப்பட்டிருந்தது என்றும் அது கிடைக்கவில்லை என்பதால் இப்போது வந்து கேட்கிறார்கள் என்பதையும் சொன்னார். அவர்கள் பார்க்க கேட்டார்களா அல்லது விற்க கேட்டார்களா என்பது தெரியவில்லை. விவாதம் லேசில் முடிவதாக தெரியவில்லை. நாமே இங்கே ஓபனிங் ஷோ டிக்கெட் இல்லை என்று கடுப்பாக நிற்கிறோம். இந்த பஞ்சாயத்து வேறயா என்று கோபம் வருகிறது. அவர்களுக்கு கடைசி வரை டோக்கன் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கத்திக் கொண்டே போகிறார்கள். ராம்ராஜுவை தனியாக அழைத்து போய் கசின் கண்டிப்பா ஓபனிங் ஷோ வேணும் என்று கேட்க, உங்களுக்கு தரேன்.என்ன பிரச்னைன்னா ஓபனிங் ஷோ டோக்கன் இங்கே கொஞ்சம் பேருக்குதான் கொடுத்தோம்.அப்புறம் யாருக்கும் கொடுக்கலை. இப்போ உங்களுக்கு கொடுத்தா எல்லாரும் சுத்திக்குவாங்க. அதனால நீங்க நாளைக்கு வாங்க. இரண்டு டிக்கெட்தானே.என்று சொல்ல அப்பாடா என்று கிளம்பினோம்.. அப்போதுதான் ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். நாங்கள் சைக்கிளில் டபுள்ஸ் போயிருக்கிறோம்.(இரவு நேரம் என்பதால் பிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை). அதில் டைனமோ லைட் கிடையாது. வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சதுர வடிவிலான சட்டகத்தில் உள்ளே ஒரு குமிழ் திரி இருக்கும்.அதில் எண்ணெய் விட்டு தீப்பெட்டியால் திரியை ஏற்றி அதை சைக்கிளின் முன்பக்கத்தில் வைத்து ஒட்டி போவார்கள். வண்டியை நிறுத்தி பூட்டும்போது அதை கையில் எடுத்து போவது வழக்கம். நான் அதை கையில் வைத்திருந்தேன். ஓப்பனிங் ஷோ டிக்கெட் இல்லை என்று சொன்னது, அந்த கட்சிக்காரர்கள் வந்து சத்தம் போட்டது இவை ஏற்படுத்திய டென்ஷனில் அதை சரியாக பிடிக்காமல் சரித்து பிடித்திருக்கிறேன்.இரண்டு கைகளிலும் எண்ணெய் வழிந்து சட்டையிலும் தெறித்திருக்கிறது. வீட்டுக்கு வந்து சோப்பு, சீகைக்காய் அரப்பு பொடி போட்டு தேய்த்தும் ஸ்மெல் போகவேயில்லை. சாப்பிட முடியவில்லை. என்ன ஆச்சு என்று வீட்டில் கேட்க ஒண்ணுமில்லையே என்று அவசர அவசரமாக விழுங்கி விட்டு எழுந்தேன். எங்கள் தங்க ராஜா கொடுத்த மறக்க முடியாத நினைவு அது.
மறுநாள் கஸின் டோக்கன் வாங்கி வந்து விட்டார். ஆனால் அடுத்த நான்கு நாட்கள் எப்போது முடியும்? எப்போ சனிக்கிழமை வரும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்படி நினைக்க ஒரு காரணம் இருந்தது. பொன்னூஞ்சல் படத்திற்கு பாடல்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது என்றால் எங்கள் தங்க ராஜாவிற்கு படம் வெளியாகும்வரை பாடல்களின் இசைத்தட்டு வெளியாகவேயில்லை. பாடல்கள் எப்படியிருக்குமோ என்று யோசனை. நடிகர் திலகத்திற்கு இரட்டை வேடம் என்றே அதுவரை வந்த செய்திகள் எல்லாம் சொன்னதினால் முதன்முறையாக கலர் படத்தில் இரு சிவாஜியும் சந்திக்கும் காட்சி இடம்பெற போகிறது என்ற ஆர்வம் வேறு (சரஸ்வதி சபதத்தில் இரட்டை வேடம் என்றாலும் இருவரும் சந்திக்கும் காட்சி கிடையாது).அதுவும் தவிர பட்டிக்காடா பட்டணமாவிற்கு பிறகு நான் ஓபனிங் ஷோ பார்க்க போகிறேன். அந்த பரவசம் வேறு. சனிக்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து ரெடியாகி எட்டரை மணிக்கு மேல் கிளம்பி விட்டோம். (டிபன் இல்லைனா பரவாயில்லை. பழைய சாதம் கூட போதும் என்று நல்ல பிள்ளைகளாக நாங்கள் சொல்ல) சினிமா போறதுன்னா இரண்டு பேரும் எவ்வளவு சீக்கிரம் கிளம்பறாங்க என்ற குற்றச்சாட்டெல்லாம் காதில் விழாத மாதிரி கிளம்புகிறோம் தியேட்டர் அருகாமையில்தான் என்பதனால் உடனே ஐந்து நிமிடத்தில் போய்விட்டோம். தியேட்டரில் அசாத்திய கூட்டம். வழக்கம் போல் நியூசினிமாவில் மன்ற டோக்கன் என்றால் பெண்கள் உள்ளே போகும் சைடு கேட் வழியாகத்தான் போக வேண்டும் என்று அங்கே நிற்க வைக்கப்பட, வழக்கம் போல் வரிசை சீராக நகராமல் அடிக்கடி நிலைகுலைவது எல்லாம் நடைபெறுகிறது. ஆனால் மாளிகைக்கு நடந்தது போல் பெரிய தள்ளு முள்ளு இல்லை. அதற்கு முதல் நாள் நவசக்தி பேப்பரில் ரோஜாவின் ராஜா படத்துக்காக ஒரு காட்சி படமாக்கப்பட்டதை எழுதியிருந்தார்கள். நடிகர் திலகம் காதல் தோல்வியால் மனமுடைந்து பித்து பிடித்தாற்போல் இருக்கும்போது அவரின் தாய் ருக்மணி இறந்து போவார். தாயின் இறப்பை பார்த்துவிட்டு தாயோடு பேசுவது அதை நடிகர் திலகம் வித்தியாசமாக செய்திருப்பார். அது படமாக்கப்படும்போது நடிகர் திலகம் அழவில்லை. ஆனால் செட்டில் இருந்த பலரும் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பே அழாமலே அழ வைத்த சிவாஜி. என் கஸினிடம் அதை சொல்லியிருந்தேன். அவர் உள்ளே போவதற்காக வரிசையில் நிற்கும்போது அவர் நண்பர் ஓருவரிடம் சொல்ல சொல்ல அவரிடம் சொன்னேன். அவர் மற்றொரு நபருக்கு அந்த மற்றொருவர் வேறொரு நபருக்கு இதை சொல்லும்படி சொல்ல இந்த காட்சியை உள்ளே போவதற்குள் ஒரு 7,8 நபர்களுக்கு சொல்லியிருப்பேன். உள்ளே நுழைந்து டிக்கெட் மாற்றி அரங்கிற்கு உள்ளே போய் அமர்கிறோம். சனிக்கிழமை என்பதால் 10.30 மணிக்கு மேல் பெல் அடிக்கப்பட்டது. திரைசீலைகள் இழுத்து விடப்பட அரங்கத்தில் இருள் சூழ்ந்து திரையில் ஒளி வெள்ளம் பாய, சென்சார் சான்றிதழ் 14 ரீல்கள் என்று காட்டுகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அளிக்கும் என்று டைட்டிலில் வந்தது. டைட்டில் முடிந்து முதல் காட்சி சௌகார். வயதான உடலுக்கு முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய், இரண்டு தம்பிகள், ஒருவன் முரடன் தனது சகோதரியை யாரேனும் தவறாக பேசிவிட்டால் அவர்களை அடித்துவிடும் அளவிற்கு முரடன். அதற்கு நேர் எதிர் குணம் கொண்ட தம்பி. குடும்ப நண்பர் காதராக மேஜர் என்று பாத்திரங்கள் அறிமுகம். கட்டிட வேலைக்கு போகும் சௌகார் அங்கே முதலாளி மனோகர், மேஸ்திரி ராமதாஸ். சௌகாரை அடைய திட்டம் போடும் மனோகர் அவரிடம் ஆசை காண்பிக்க சௌகார் அவரை எடுத்தெறிந்து பேசிவிட்டு போக மனோகரும் ராமதாஸும் கோபப்படுவார்கள். முதலில் தங்களது கையாளான காந்திமதியை அனுப்பி பேச வைக்க அவரது சுயரூபம் புரிந்து சௌகார் திட்ட, மூத்த தம்பி கவணில் கல் வைத்து அடித்து விரட்டுவான். இரவு நேரத்தில் மனோகர் ராமதாஸ் காந்திமதி வீட்டுக்குள் புகுந்து சௌகாரையும் மூத்த தம்பியையும் தூக்கி செல்ல அவர்களது தாய் அதை பார்த்து உயிரை விட அதன் பிறகு அங்கே வரும் மேஜர் அதை பார்த்துவிட்டு நடந்ததை கடைசி தம்பி ராஜா மூலமாக தெரிந்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுப்பார். பழி உணர்ச்சி ராஜாவிடம் இருப்பதை பார்த்து அதை கூடாது என்பார். அங்கே சௌகார் மனோகருக்கு இரையான பிறகு ஒரு இரவு விடுதியில் தங்க வைக்கப்பட்டு தப்பித்து போக நினைத்தால் தாங்கள் தூக்கி வந்திருக்கும் சௌகாரின் மூத்த தம்பியை கொலை செய்து விடுவோம் என மனோகர் மிரட்டி இருக்க வைப்பார்.
அடுத்த காட்சி சமையற்கட்டில் மேஜர், கல்லில் சப்பாத்தி சுட, க்ளோஸ் அப் போகும் கேமரா சப்பாத்தியின் அளவு சின்னதாக இருந்தது பெரியதாக மாறுவதை காண்பித்து மீண்டும் மேஜரிடம் வர அவர் வயதான தோற்றத்தில் காட்சியளிக்க அவரிடமிருந்து திரும்ப அங்கே முருகன் படத்திற்கு முன் ஒயிட் அண்ட் ஒயிட் பான்ட் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் கண்மூடி கைகூப்பி நிற்கும் காட்சி தெரிய, அரங்கம் மொத்தம் கைத்தட்டல்களால் அதிர்கிறது. பேப்பர்மாரி பொழிகிறது. ராஜா என்று அழைத்து மேஜர் பார்த்து பத்திரமா போ என்று வழியனுப்ப மருத்துவ மாணவரான நடிகர் திலகம் சைக்கிள் எடுத்து வர, அந்த குப்பத்தில் இருக்கும் டீக்கடை நாயர் (நீ பெரிய டாக்டராக வரணும்ன்னு நான் அய்யப்பனை வேண்டுன்னு) ,ஆப்பம் விற்கும் ஆயா (ராஜா, முதல் ஆளா நீ போனி பண்ணிட்டேல்லே இனி வியாபாரத்திற்கு என்ன பஞ்சம்) சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் அந்தோணி (ISR குடிமகனே பாட, எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்கோ என்பார் நடிகர் திலகம்), இந்த சின்ன சின்ன பிட்ஸ் தியேட்டரில் பெரிய அலப்பறையை உருவாக்குகிறது. சைக்கிள் ஒட்டி செல்லும் நடிகர் திலகம், பின்னால் தோழிகளுடன் காரில் வரும் மஞ்சுளா காரை சைக்கிள் மீது இடிக்க கீழே விழும் நடிகர் திலகத்துடன் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்ய நடிகர் திலகம் அவர்களை சட்டை செய்ய மாட்டார். கீழே விழுந்த சைக்கிளை சரி செய்து கல்லூரிக்கு போக ஒரு டாக்டருக்கு நேரம் தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொண்டிருக்கும் பிரின்சிபால் நடிகர் திலகம் தாமதமாக வருவதை சுட்டிக்காட்ட அனைவரும் சிரிக்க நாகேஷ் என்ட்ரி ஆகி அதை சமாளிப்பார்.
நடிகர் திலகத்தை ஒரு தலையாய் விரும்பும் மஞ்சுளா தோழிகள் உதவியுடன் அவர் தன் மேல் இடித்து விட்டதாக கூறி ரகளையில் ஈடுபடுவார். அதன் பின் எப்போதும் தனியாக அமர்ந்து சாப்பிடும் நடிகர் திலகத்தை கிண்டல் செய்து அவரின் டிபன் பாக்ஸை பிடுங்கி கிண்டல் செய்ய சாமியிலும் சாமியிது ஊமைச்சாமி பாடல் காட்சியாக விரிகிறது. இந்த படத்தின்ஆறு பாடல்களில் ஐந்து பாடல்கள் சுசீலாம்மா பாடியிருப்பார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக இந்த பாடலும் முத்தங்கள் நூறு பாடலும் சாதாரணமாக ஈஸ்வரியிடம் போயிருக்க வேண்டியது. ஆனால் மாமா துணிந்து சுசீலாம்மாவையே பாட வைத்திருப்பார். அவரும் பிரமாதப்படுத்தியிருப்பார். சரணத்தில் சம்போ சங்கர மகாதேவா சாம்ப சதாசிவ குருதேவா என்ற வரிகளை அலட்சியம், திமிர் தொனிக்க அவர் பாடியிருக்கும் விதத்திற்கு பாராட்டு. பாடல் முடிய, டிபன் பாக்ஸ் கீழே விழுந்து இருக்கும் ஒரு சப்பாத்தியும் மண்ணில் விழுந்துவிட எதுவும் பேசாமல் நடிகர் திலகம் டிபன் பாக்ஸை மட்டும் எடுத்து போக அதற்கு முன் டிபன் பாக்ஸை மாறி மாறி இழுக்கும் நேரத்தில் மஞ்சுளா நடிகர் திலகத்தின் மேல் சாய்வதை பார்த்துவிடும் பிரின்சிபால் வீரராகவன் என்ன என்று சக மாணவிகளை கேட்க அவர்கள் நடிகர் திலகத்தின் மீது பழி போட அடுத்த காட்சியில் வகுப்பில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்தை பிரின்சிபால் அழைப்பதாக செய்தி வரும்.
ராஜவை பிரின்சிபால் எதுக்கு கூப்பிடறார் என்று பக்கத்திலிருக்கும் மாணவன் கேட்க பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதாவது சந்தேகம் வந்திருக்கும். அதான் ராஜாவை கூப்பிட்டு கேட்கிறார் என்ற நாகேஷின் பஞ்சிற்கு செம கைதட்டல். அங்கே பிரின்சிபால் உன்மேலே புகார் வந்திருக்கு. நானே நேரில் பார்த்துட்டேன் இந்த வயசிலேதான் மனசை கட்டுப்பாடா வச்சிருக்கணும். உன் நடத்தையில் ஏற்பட்ட தவறினால இதுவரைக்கும் உனக்கு கிடைச்சிட்டிருந்த ஸ்காலர்ஷிப் இனிமே உனக்கு கிடைக்காது. நீதான் பணம் கட்டி பரீட்சை எழுதணும் என்று நடிகர் திலகத்தை பேச விடாமல் அனுப்பி விடுவார். வீட்டிற்கு வரும் மஞ்சுளா என்னாலேதானே உங்களுக்கு இந்த நிலைமை.நானே உங்களுக்காக பணம் கட்டறேன் என்று சொல்ல நடிகர் திலகம் மறுப்பார். உன்னை மாதிரி பணக்காரங்களுக்கு எங்களை மாதிரி ஏழைகளை சீண்டுவது அவர்களை அவமானப்படுத்துவதுதான் சந்தோஷம் என்பார். என்னை ஒரு நாள் புரிஞ்சுக்குவீங்க என்று மஞ்சுளா போக மேஜர் வர அவரிடம் பணம் கிடைத்ததா என்று கேட்க இல்லை என்பார். தாதா, குல்லாவுக்காக பொறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக்கூடாதுன்னு நடிகர் திலகம் சொல்ல நீ கிரீடத்திற்காகவே பொறந்தவன் ராஜா என்று மேஜர் சொல்ல தியேட்டர் அதிர்கிறது.
அங்கே மனோகர் வீட்டில் ராமதாசும் வேறொரு நபரும் பணத்தையும் டைமண்ட்ஸ் பெட்டி என கொடுப்பார்கள். அங்கே மோகன்லால் சேட் என்ற பெயரில் மாலி வருவார். அவரிடம் ஓட்டல் கட்ட என்று ஏற்கனவே பணம் வாங்கியிருக்கும் மனோகர் வேலையை முடிக்க மேலும் பணம் வாங்க அங்கே குப்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த சிறு சிறு தொகையை கொண்டு நடிகர் திலகத்திடம் கொடுத்து பீஸ் கட்ட சொல்வார்கள். அடுத்த காட்சியில் நடிகர் திலகம் நடந்து வந்து கொண்டிருக்க காரில் வரும் மஞ்சுளா காரை நிறுத்தி நடிகர் திலகத்தை ஏற சொல்ல அவர் மறுக்க காரை அனுப்பி விட்டு நான் உங்களோடு நடந்து வருகிறேன் என்பார் மஞ்சுளா. நடிகர் திலகம் வேண்டாம் என்பார். என் பாதை கடினமானது.அதில் உன்னால் தொடர்ந்து வர முடியாது என்பார்.நீங்க என்னை விரும்பறீங்க என்று மஞ்சுளா சொல்ல உண்மையை சொல்லட்டுமா எனக்கு உன்னை பிடிக்கலை என்பார் நடிகர் திலகம். உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க என்று மஞ்சுளா சொல்ல என் மனசாட்சியை தொட்டு சொல்றேன். உன்னை எனக்கு பிடிக்கலை என்று சொல்லிவிட்டு சிலையாய் உறைந்து போகும் மஞ்சுளாவை விட்டு விலகி நடக்க ஆரம்பிப்பார். தியேட்டர் மொத்தம் எழுந்து விட்டது. பின்னணி இசை சட்டென்று வேகம் எடுத்து பின்னர் குறையும். ஒரு கோடு கிழித்தாற்போல் கேமரா பின்னாடியே வர அந்த நேர்கோட்டில் சற்றும் மாறாமல் நேராக நடிகர் திலகம் நடக்க அந்த காட்சியும் அதற்கு ஓபனிங் ஷோவில் கிடைத்த ஆர்ப்பாட்டமான அலப்பரையும் மறக்கவே முடியாது.
தேர்வு எழுதும் நடிகர் திலகம், பின்னாடி பெஞ்சில் இருந்து நாகேஷ் எட்டி எட்டி பார்த்து எழுத முயற்சிப்பார். அவரை பார்த்து பின்னால் இருப்பவர் எழுத பார்க்க என்னை பார்த்து காப்பி அடிக்காதே. நானே ஸ்ரீராமஜெயம்ன்னு எழுதியிருக்கேன் என்று நாகேஷ் சொல்ல, பின்னால் இருப்பவர் ஒழுங்கா பாரு ஸ்ரீ ராமானுஜம்ன்னு எழுதியிருக்கே என்று சொல்ல செம சிரிப்பு அரங்கத்தில். தேர்வு முடிவு வரும் போது நடிகர் திலகம் முதல் மாணவனாக வருவார். நாகேஷ் பாராட்ட அந்நேரம் மஞ்சுளா வருவார். மீண்டும் தனது காதலை சொல்ல நடிகர் திலகம் மீண்டும் மறுப்பார். என் வாழ்க்கையிலே முக்கியமான கட்டம் இனிமேதான் வரப்போகுது. அதிலே நான் இறந்து போகலாம். ஜெயிச்சாலும் தூக்கு மேடைக்கு போகலாம் என்று பேச எனக்கு ஒன்னும் புரியலையே எனும் மஞ்சுளாவிடம் என்னை மறந்துடுன்னு சொல்றேன் என்பார். நடிகர் திலகத்திற்கு மாலை போட்டு குப்பத்திற்கு ரிக் ஷாவில் அழைத்து வரப்பட குப்பத்து ஜனங்கள் அவரை எங்கள் தங்க ராஜா வாழ்க என்று கொண்டாடுவார்கள். நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க மருத்துவதுறையை சேர்ந்தவர் நடிகர் திலகத்திடம் சொல்ல குப்பத்தில் அனைவரும் அவரை அமெரிக்கா செல்ல வற்புறுத்த நடிகர் திலகம் நான் அமெரிக்கா போக போவதில்லை. இங்கேயே இருந்து உங்களுக்குகெல்லாம் மருத்துவம் பார்க்க போகிறேன்.என்பார். அவர் இருக்கும் குப்பத்தில் காமராஜ் நகர் என்று பெயர் பலகை திறந்து(அந்த பெயரை பார்த்தவுடன் ஒரே அலப்பறை) சீதா மருத்துவமனை என்பதையும் திறப்பார்.
மருத்துவமனையில் டீக்கடை நாயரை செக் பண்ணிவிட்டு இனிமேல் பீடி குடிக்கக்கூடாது என்று சொல்லியவாறே சீட்டில் வந்து அமர பின்னால் பெருந்தலைவரின் பெரிய புகைப்படம். தியேட்டர் மீண்டும் அதிர்கிறது. ஆப்பக்கார அம்மா வர அவருடன் நடிகர் திலகம் பேச ஹாய் ராஜா என்று நாகேஷ் வர, யாருடா நீ எங்க ராஜாவை மரியாதை இல்லாம பேசறவன் என்று அந்த அம்மா எகிற என் நண்பன்தான் என்று நடிகர் திலகம் சமாதானம் செய்வார். ஏம்பா உங்க பேட்டையில் உன்னை பத்தி பேசினா பெண்ட் எடுத்துடுவாங்க போலிருக்கு என்று நாகேஷ் கேட்க, பேசித்தான் பாரேன் என்பார் நடிகர் திலகம். பேட்டையை வளைச்சுட்டே போலிருக்கு என்று நாகேஷ் சொல்ல முதலில பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இழுக்க புரியுது புரியுதுன்னு நாகேஷ் சொல்ல இங்கே புரிந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். நீ இங்கே கம்பௌண்டராக இரு என்று நடிகர் திலகம் சொல்லுவார். நடிகர் திலகம் இல்லாத நேரத்தில் மஞ்சுளா அவரை தேடி ஆஸ்பத்திரி வர அங்கே அவசர கேஸாக அடிபட்டு வரும் ஒரு பையனுக்கு சிகிச்சை அளிப்பார். நடிகர் திலகம் வந்துவிட அவரிடம் மஞ்சுளா பேச மீண்டும் நடிகர் திலகம் மஞ்சுளாவை ஏற்றுக் கொள்ள மறுப்பார். இரும்பு பெட்டிக்கும் இதயத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பார். உங்க ஆஸ்பத்திரிக்கு நான் டெய்லி வரத்தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு போக ஏம்பா வசந்தி வரட்டுமே ஏன் தடுக்கிறே என்று நாகேஷ் கேட்க அவ ஒரு அன்பு தொல்லை என்று நடிகர் திலகம் சொல்ல அந்த நேரத்தில் ரிக் ஷா அந்தோணி மயக்கம் போட்டு கிடக்கிறார் என்று செய்தி வர நடிகர் திலகம் ஓடுவார். அவர் மேஜையில் வைத்திருக்கும் உண்டியலை நாகேஷ் எடுத்து குலுக்கி பார்க்க பணம் காசு இருப்பது தெரிய வர உண்டியலை தட்டி உடைக்க போக பெருந்தலைவரின் போட்டோ கண்ணில் பட உண்டியலை அப்படியே வைத்துவிட்டு நாகேஷ் கன்னத்தில் போட்டுக் கொள்ள தியேட்டரில் கைதட்டல் காதை கிழிக்கிறது.
ரிக் ஷா அந்தோணியிடம் இனி குடிக்கக்கூடாது. உங்க சாமி மேலே சத்தியம் பண்ணு என்று நடிகர் திலகம் சொல்ல என் சாமி நீதான் வாத்தியாரே. இனிமே உன்மேலே சத்தியமா குடிக்க மாட்டேன் என்று சொல்ல தியேட்டரில் அலையலையாய் கைதட்டல். அடுத்த காட்சியில் மழைக்கு ஒதுங்கி நிற்கும் நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு காரில் வரும் மஞ்சுளா இங்கே ஏன் நிக்கறீங்க உள்ளே வாங்க, இது எங்க வீடுதான் என்பார். முதலில் மறுக்கும் நடிகர் திலகம் மஞ்சுளா வற்புறுத்தவே உள்ளே போவார். நீங்க ஏதாவது சாப்பிட்டுத்தான் போகணும் என்று நடிகர் திலகத்தை உட்கார வைத்துவிட்டு மஞ்சுளா போக சுற்றும் முற்றும் பார்வையை ஓட விடும் நடிகர் திலகம் கண்ணில் சுவற்றில் மாட்டியிருக்கும் அந்த போட்டோ சிக்கும். அதுவரை சிரிப்பு தவழ்ந்த முகம் மெல்ல மாறி கண்கள் அப்படியே சிவந்து போக பொங்கி வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உதட்டில் பல்லை கடித்து அடக்கி நிறுத்த கையில் கோப்பையுடன் வரும் மஞ்சுளா அதிர்ந்து என்னாச்சு என்று கேட்க இந்த போட்டோவிலே இருக்கிறது யாரு என்று நடிகர் திலகம் பதில் கேள்வி எழுப்ப அவர்தான் எங்க அப்பா என்று மஞ்சுளா சொல்ல உங்கப்பாவா என்று கேட்கும்போதே மனோகர் படிகளில் இறங்கி வர அவரை பார்த்ததும் நடிகர் திலகத்தின் முகத்தில் மின்னி மறையும் அந்த உணர்வுகள். கைதட்டல்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ? மனோகரிடம் மஞ்சுளா நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்த ஓ! அந்த குப்பைமேட்டு டாக்டர் இவர்தானா என்று கேட்க உங்கப்பா ரொம்ப நல்லவர்ன்னு சொன்னியே என்று நடிகர் திலகம் வெளியேற மனோகருக்கும் மஞ்சுளாவிற்கும் வாக்குவாதம் தொடர இனி அங்கே போகக்கூடாது என்பார் மனோகர்
வீட்டிற்கு சென்று மேஜரிடம் உணர்ச்சி பிழம்பாய் நடிகர் திலகம் கொந்தளிப்பார். பழி வாங்கும் வெறி அவருக்குள் புகுந்து ஆட்டி வைப்பதை பார்த்து மேஜர் அந்த எண்ணமே உனக்கு வேண்டாம் ராஜா என்பார். நீ உயிரை காக்கற தொழில் செய்யறே. இந்த பழி வாங்கும் எண்ணத்தை விட்டுடு என சொல்ல மனசு வேண்டாம்ன்னு சொல்லுது. ஆனா என் மனசாட்சி என்னை குத்துது. ஆண்டவனே எனக்கு பொறுமையை கொடு. நிம்மதியை கொடு என்று பெருந்தலைவரின் போட்டோவிற்கு கீழே சாய்ந்து நின்று நடிகர் திலகம் பேச மீண்டும் இங்கே ஆரவாரம். மஞ்சுளா வீட்டில் படுத்திருக்க போன் வரும். அந்த பக்கம் நடிகர் திலகம் என்பது மஞ்சுளா பேசுவதிலிருந்தே புரியும். மாலை சந்திக்கலாம் என்றதும் மஞ்சுளா மகிழ்ச்சியாக எழுந்து அறையை சுற்றி ஆட பின்னணியில் மாமா ஒரு சித்தார் வாசிப்பை இழைத்திருப்பார். சட்டென்று வெஸ்டர்ன் இசைக்கு மாற அந்த சுவர் நீள வார்டரோபில் (Wardrobe) அத்தனை புடைவைகளிலிருந்து ஒரு ரெட் கலர் ஸாரியை எடுத்து காமெராவிற்கு முன்னால் வீச அடுத்த காட்சி கலையான ஆசை வந்த காரணத்தை சொல்லவா? பாடல்க திரையில் ஒளிர்கிறது. இருவரும் கையில் ஒரு நீளம் கூடிய கைக்குட்டையை வைத்து ஸ்டெப்ஸ் போட தனக்கே உரித்தான நடை கை அசைவு போன்றவற்றில் நடிகர் திலகம் தூள் கிளப்ப இந்த பாடலிலும் ஸ்வர பிரஸ்தானங்களிலும் சுசீலா ஸ்கோர் செய்திருப்பார். பாடல் முடியும்போது கையில் தூக்கி வைத்திருக்கும் மஞ்சுளாவை பொத்தென்று போட்டுவிட்டு போக அவர் பழிவாங்கவே காதலிப்பதாக நடிக்கிறார் என்று நமக்கு புரியும். ஆனால் மஞ்சுளாவுக்கு புரியாது. வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் விசாரிப்பார். அது முடிந்து வீட்டுக்குள் நுழையும் மஞ்சுளாவிடம் மனோகர் கோபப்படுவார். மறுநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கிடையில் கையில் காயம் பட்டுக் கொள்ளும் மஞ்சுளாவுக்கு மருந்து போடுவார் நடிகர் திலகம். அப்போதும் கல்யாணம் பற்றி மஞ்சுளா பேச இது சரியாக வராது என்பார் நடிகர் திலகம். மஞ்சுளா அந்த பக்கம் போக அய்யோ என்ற அலறலுடன் நாகேஷ் துள்ளி குதிக்க என்ன என்று கேட்கும் நடிகர் திலகத்திடம் நவசக்தி பேப்பர் கொடுப்பார். அதில் பட்டாக்கத்தி பைரவன் விடுதலை என்ற செய்தி இருக்க என்னவென்று நடிகர் திலகம் கேட்க எங்கப்பாதான் அவனை ஜெயிலுக்கு அனுப்பியது. அவன் வெளியே வந்து என்னை பழி வாங்க போகிறான் என்று நாகேஷ் சொல்ல போடா பைத்தியம் என்று நடிகர் திலகம் போக, போனால் போகட்டும் போடா என்று பாடும் நாகேஷ் அதை நிறுத்தி பைரவா என்று கத்த
மஞ்சள் கலர் பான்ட், அதே கலர் ஓவர்கோட், உள்ளே ரவுண்டு நெக் ப்ளூ கலர் T ஷர்ட் அணிந்து ஒரு மோட்டார் பைக்கை நடிகர் திலகம் ஒட்டி வர (முன்பொரு முறை சொன்ன அதே உவமை) வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் ஆர்ப்பரிக்க பல்வேறு திசைகளிலுமிருந்து கத்தை கத்தையாய் காகித துண்டுகள் வீசப்பட, திரையில் என்ன நடக்கிறது என்பதையே யாரும் சரியாக முழுமையாக பார்த்தார்களா என்பது கேள்விக்குறியே. போதாக்குறைக்கு உணர்ச்சி மிகுதியால் சிலர் அரங்கத்தின் நடுவே இருக்கும் தட்டிகளை ஓங்கி தட்ட சிலர் அமர்ந்திருந்த பெஞ்சையே தூக்கி போட முயற்சிக்க அது போல ஒரு அலப்பறையை அதற்கு முன்போ அல்லது பின்போ பார்த்ததில்லை என்றே சொல்லுவேன். அனைவரும் ஒரு வழியாக அமர்ந்தபோது பைரவன் நாகேஷையம் கூட்டி மனோகர் ஹோட்டலுக்கு போவது வந்துவிட்டது. அங்கே ராமதாஸ் முறைத்து தகராறு செய்ய முதல் சண்டைக்காட்சி. நல்ல வேகத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி, ஏற்கனவே கொதி நிலையில் இருக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து அலறுகிறார்கள். சண்டை முடிந்து மனோகர் வர வீட்டிற்குள்ளே ஓடும் காரில் ஏற்றி உள்ளே கூட்டி போய் ஒரு பெட் ரூமில் விட, எனக்காக வேலை செய்கிறாயா என்று மனோகர் கேட்க நான் கேட்பதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் திலகம் டிமாண்ட் செய்வார். சரி என்று சொல்லி மனோகர் ஏ. சகுந்தலாவையும் கூட்டத்தையும் அழைக்க எங்கே ஆடு என்று நடிகர் திலகம் சொல்ல மும்மும்மா முத்தங்கள் நூறு பாடல். முன்பே சொன்னது போல் ஈஸ்வரி பாட வேண்டியது. ஆனால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சுசீலா பின்னயிருப்பார். ஆனால் சகுந்தலா பல்லவி பாடி முடித்ததும் சுற்றிலும் பெண்கள் கைகளில் ரிப்பன் போன்ற நீள துணிகளை பிடித்து நிற்க இரு கால் அகற்றி இரு கை பக்கவாட்டில் நீட்டி சற்றே உடமபை வளைத்து சாய்ந்து நின்று முமும்ம்மா முத்தங்கள் நூறு என்று நடிகர் திலகம் ஆரம்பிக்க இங்கே மீண்டும் அணை உடைந்தது. யாராலும் யாரையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒவ்வொரு வரியும் ஐவரி என்று சொல்லுவது போல் ஒவ்வொரு வரிக்கும் அலப்பறை. ஆடை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரிகளுக்கும் சரி அதற்கு அவர் போடும் ஸ்டெப் ஆகட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. நலலவரை அணைப்பேன் மதிப்பேன், வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் என்று கை மடக்குவதாகட்டும் காதே கிழிந்து விடும் போல சவுண்ட். அந்த ஸ்பீடான நடை ஓட்டம் கடைசியில் அப்படியே ஒரு ஜம்ப் பண்ணி கட்டிலில் தாவும்போது அரங்கத்தில் யாரும் நிதானமாகவே இல்லை. அதோடு இடைவேளை.
இடைவேளையில் வெளியே போன யாருக்கும் தரையில் கால் பாவவில்லை அப்படியே மிதப்பது போல் உணர்வு. இன்றைக்கு மாஸ் என்று சொல்லப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் படத்தில் கொண்டு வந்திருப்பார்கள். மெயின் கேட்டில் ஏறி வெளியே நிற்பவர்களிடம் உற்சாகத்தை பகிர அங்கே சரம் வெடிக்கிறது. கஸினின் நண்பர் ஒரு சில விஷயங்களை விட்டுட்டு பார்த்தா "அந்த பக்கம்" படம் மாதிரி மாதிரி இல்லே என்று கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது. மீண்டும் படம் தொடங்க சகுந்தலா என்னிடம் ஒரு விலையுயர்ந்த வைரம் இருக்கு. அதை வித்து கொடுத்தா பாதி உனக்கு என்று சொல்ல அதை நடிகர் திலகம் அவரிடமிருந்து கவர,மனோகர் வந்து ஒரு வைரம் காணாமல் போய்விட்டது என்று சொல்ல அவர் முகத்திலேயே துப்புவார் நடிகர் திலகம். இதுதானே அது? என்னை டெஸ்ட் பண்ண பார்க்கிறியா என்று எகிற,மனோகர் சமாதானம் செய்வார். சரி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கனகா வீடு என்று நடிகர் திலகம் சொல்ல மனோகர் அதிர்ச்சியாவார். முதலில் அப்படி கிடையாது என்பவர் நடிகர் திலகம் அவருடைய விஷயங்களை எல்லாம் பிட்டு பிட்டு வைக்க உனக்குதான் எல்லாமே தெரிந்த்திருக்கே என்பார் மனோகர். ஆமா ஊழல் எங்கே நடக்குது? உண்மை எங்கே இருக்குது எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்ல இடைவேளைக்கு பிறகு புது எனர்ஜியுடன் மீண்டும் இங்கே கைதட்டுகிறார்கள். அடுத்து நடிகர் திலகம் அந்த வீட்டிற்கு போக அங்கே பல பெண்கள் காந்திமதி மேற்பார்வையில் தவறான வழியில் ஈடுபடுத்தப்படுவதை புரிந்து கொள்வார். அங்கே இருக்கும் சௌகார் இவரை பார்த்து சத்தம் போட அவரை இழுத்து ஒரு தனியறையில் தள்ளுவார். முதலில் இவரின் நோக்கத்தை தவறாக புரிந்து கொள்ளும் சௌகார் கோபப்பட நடிகர் திலகத்தின் கேள்விகள் அந்த எண்ணத்தை மாற்ற தனது தம்பியின் உயிருக்கு பயந்து இருப்பதாக சொல்லுவார். அந்த நேரம் ஆரம்பமாகும் கற்பாம் மானமாம் பாடல். பைரவன் பாத்திரத்தின் மனசாட்சி உடலிருந்து பிரிந்து சென்று பாடுவதாக காட்சிப்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் நிலவும் பல கசப்பான உண்மைகளை கவியரசர் தார்மீக கோபத்தில் சாட, வார்த்தைகள் அமிலத்தில் தோய்த்து எடுத்தது போல் வந்து விழும். இதற்கு நடுவில் நாகேஷ் ரமாபிரபா சம்மந்தப்பட்ட இரண்டு காட்சிகள் வந்து போகும்.
இந்த நேரத்தில் சேட் மாலி மனோகரை பார்க்க வருவார். என் பணத்தை வாங்கிட்டு ஹோட்டலில் பார்ட்னர்ஷிப் தரேன் சொல்லி அதுவும் தரலே பணத்தையும் தரலே வட்டியையும் தரலே என்று புலம்ப ஹோட்டல் நஷ்டத்தில் ஓடுது என்று மனோகர் சொல்ல ஏன்யா பொய் சொல்றே? எனக்கு எதுவும் வேண்டாம். என் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துடு என்று கேட்க கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே என்று மனோகர் திமிராக பதில் சொல்ல நீ பணம் வாங்கின எல்லா ஆதாரமும் என்கிட்டே இருக்கு. உன்கிட்டேயிருந்து என் பணத்தை வாங்கல நான் ராம்லால் கா பேட்டா மோகன்லால் இல்லே இன்றி சொல்லி போக ராம்லால் கா பேட்டா மோகன்லால் இல்லை என்று உறுமுவார் மனோகர். அடுத்து மனோகர் வீட்டிற்கு நடிகர் திலகம் பைரவனாக வருவார். அறையில் மஞ்சுளா உடை மாற்றி கொண்டிருக்க உள்ளே சென்று வம்பு பண்ணுவார் நடிகர் திலகம். அவர் பயந்து அலற ஓடி வரும் மனோகர் இவரை தடுத்து என் பொண்ணு என்று சொல்ல உனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதா சொல்லவேயில்லயே என்று மேலும் மஞ்சுளாவை சீண்ட யாருப்பா இது என்று கேட்கும் மஞ்சுளாவிடம் என் பார்ட்னர் என்று சொல்லி அவரை வெளியே அனுப்ப மனோகரின் வயிற்றில் ஒரு குத்து குத்தி அப்படியே படுக்கையில் ஸ்டைலிஷாக விழுவார் இதெல்லாம் ஒரு ஜாலி. உனக்கு என்னய்யா தெரியும் என்று மனோகரை அமைதிப்படுத்த மோகன்லால் சேட் கதையை முடிக்க சொல்வார். இதோ அவன் அட்ரஸ் என்று கொடுக்க அந்த கார்டை கிழித்து அவனுக்கு இனி அட்ரஸ் இல்லை என்பார் நடிகர் திலகம்.
இரவில் சேட் வீட்டிற்கு போக அங்கே வேலையாட்களுடன் ஒரு சண்டை. அனைவரையும் அடித்து போட்டுவிட்டு சேட் ரூமிற்கு போக அங்கே திண்டில் அமர்ந்திருக்கும் சேட் இவரை பார்த்து பயப்பட அவரை அடித்து துவைப்பது போல் கேமரா அங்கும் இங்கும் உருள அடுத்த காட்சியில் மோகன்லால் சேட் கொலை என்று பத்திரிக்கை செய்தி, அங்கே மனோகர் நடிகர் திலகத்திடம் பிணத்தை என்ன பண்ணே என்று கேட்க நடிகர் திலகம் சொல்ல மாட்டார். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க மீண்டும் கனகா வீடு என்று சொல்ல மனோகர் முதலில் மறுத்து பின் சரி என்பார். அந்த வீட்டில் ஊருக்கு போக விரும்பும் பெண்களுக்கு பணம் கொடுத்து அனுப்புவார். எங்களுக்கு போக இடமில்லை எங்கே போக முடியும் என்று சிலர் சொல்ல சரி இங்கேயே இருங்கள். உங்களுக்கு வழி செய்கிறேன் என்பார். சௌகாரிடம் கேட்க எங்கே போவது என்று தெரியவில்லை என்பார். அப்போது பைரவன் கூடவே இருக்கும் நாகேஷ் ஆஸ்பத்திரியை பற்றி சொல்லி அங்கே இருக்கும் என் நண்பனுக்கு லெட்டர் தருகிறேன் என்பார். அதை வாங்கி கொண்டு போகும் சௌகார் நடிகர் திலகத்தின் மருத்துவமனைக்கு வந்து நாகேஷை பார்க்க அவர் அங்கே வரும் Dr. ராஜா என்ற நடிகர் திலகத்திடம் இவருக்கு ஒரு வேலை கொடுக்க சொல்ல சௌகாரை பார்த்ததும் நடிகர் திலகம் கண்களில் பாசத்தை தேக்க அவருக்கும் அதே போன்ற உணர்வுகள் ஏற்படுவதை இயக்குனர் அழகாய் காண்பிப்பார். சரி என்று சொல்லி நடிகர் திலகம் போக அங்கே வரும் மேஜர் சௌகாரை அடையாளம் கண்டுகொள்ள அவரும் இவரை தெரிந்து கொள்ள தனது அம்மா மற்றும் தம்பிகள் பற்றி கேட்க அம்மா அன்றைய இரவே இறந்து விட்டதையும் மூத்த தம்பி இவரை பின்தொடர்ந்து போனதையும் அதன் பிறகு அவனை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்பார். ஆனால் உன் கடைசி தம்பி ராஜா இங்கேதான் இருக்கான். நீ இப்போ பாரதியே Dr ராஜா அது வேறு யாருமில்ல உன் தம்பிதான் என்று சொல்ல பூரித்து போவார் சௌகார்.என் தம்பி டாக்டரா என்றது கேட்க ஆமாம்மா, இந்த காமராஜ் நகருக்கே அவன் தவப்புதல்வன்ம்மா என்று மேஜர் சொல்லும்போது இங்கே செம அலப்பறை. நான்தான் அவன் அக்கா என்று அவனுக்கு நீங்க சொல்லக்கூடாதுன்னு சௌகார் சொல்ல சரி என்பார் மேஜர்.
ஆஸ்பத்திரியில் சௌகாரை சிஸ்டர் என்று நடிகர் திலகம் கூப்பிட வேண்டாம் என்று மறுப்பார். இந்த மருத்துவ தொழிலில் சேவை செய்பவர்களை அழைக்கும் சொல் என்று நடிகர் திலகம் கூற அப்போதும் வேண்டாம் என்பார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று சௌகாரும் எனக்கு ஒரு அக்கா இருக்காங்க என்று நடிகர் திலகமும் பரஸ்பரம் சொல்லிக்கொள்ள அப்படியென்றால் உங்களை அக்கான்னு கூப்பிடட்டுமா என்று நடிகர் திலகம் கேட்க அதற்கும் ஒப்புக் கொள்ள மாட்டார் சௌகார். அங்கே மீட்கப்பட்ட பெண்களுக்கு ராட்டையில் நூல் நூற்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கும். ராமதாஸ் போன்றவர்கள் சமையலுக்கு மாவரைக்க காந்திமதி சமையல் வேலையை புலம்பியபடியே செய்ய நாகேஷ் அவர்களை கடுப்பேத்துவார். ராமதாஸ் முகத்தில் மாவை பூசி அசிங்கப்படுத்த காந்திமதி ராமதாஸை கேவலமாக பேச அப்போது வரும் பைரவனிடம் ராமதாஸ் மோத மறுபடியும் ஒரு சண்டைக்காட்சி. கோபம் வெறியாக மாறி நடிகர் திலகம் ராமதாஸை புரட்டி எடுத்து காலால் ஆத்திரம் தீரும்வரை மிதிப்பார். அடுத்த காட்சியில் ராமதாஸை தூக்கிக் கொண்டு நடிகர் திலகத்தின் ஆஸ்பத்திரிக்கு வர Dr ராஜாவிற்கு ராமதாஸை பார்த்தவுடன் சின்ன வயது நினைவுகள் வர மஞ்சுளா வீட்டில் நடந்தது போல கண்கள் சிவந்து உணர்ச்சி பெருக்கில் உதட்டை கடித்து அடக்க முயற்சிக்க ரத்தம் வழிய என்னால இந்த ஆளுக்கு டிரீட்மென்ட் கொடுக்க முடியாது என்று மறுப்பார் மேஜர் அட்வைஸ் செய்ய முடியாது என்பார். அவன் யார் தெரியுமா என்று கேட்பார். உன் முகத்தை பார்த்தே அவன் யாரு என்பதை புரிஞ்சுக்கிட்டேன் என்பார் மேஜர். மேஜர் வற்புறுத்த அப்போதும் நடிகர் திலகம் மறுக்க சௌகார் வருவார். அவனுக்கு சிகிச்சையளிங்கள் என்பார். ஆவான் யார் தெரியுமா? எங்கக்காவை என் கண் முன்னே கொடுமைப்படுத்தினவன் என்று சொல்ல நான் உங்க அக்காவா இருந்திருந்தா அவனுக்கு டிரீட்மென்ட் கொடுன்னுதான் சொல்லியிருப்பேன் என்று சொல்ல அடுத்த நிமிஷம் நடிகர் திலகம் நர்ஸ் என்றழைக்க சிகிச்சை தொடங்கும்.
வீட்டிலிருந்து மஞ்சுளா வெளியே கிளம்ப எங்கே போறே என்று மனோகர் கேட்க எப்பவும் போற இடத்திற்குத்தான் என்பார் மஞ்சுளா.அந்த குப்பத்திற்கு நீ போக கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என் பேச்சை மீறி போனேன்னா உனக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை. என் சொத்தில உனக்கு ஒரு நயா பைசா கூட கிடைக்காது என மிரட்ட மஞ்சுளா நேரே ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவார். அப்போதும் நடிகர் திலகம் ஏற்றுக் கொள்ள தயங்குவார். நீ செய்தது சரியில்லை என்பார். மஞ்சுளா அவருடன் வாதம் செய்ய உள்ளிருந்து வரும் சௌகார் மஞ்சுளாவிற்கு பரிந்து பேசுவார். எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை தேடி வந்திருக்கும் இந்த பொண்ணை ஏத்துக்குங்க என சொல்லி மஞ்சுளா நெற்றியில் குங்குமம் வைக்க மலைப்பிரதேசத்தில் ஒரு பிங்க் கலர் ஸாரீ உடுத்து மஞ்சுளாவும் ஒயிட் பான்ட் பிரவுன் கலர் ஹாப் ஷர்ட் அணிந்து நடிகர் திலகமும் ஓடிவர இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்று பாட ஆரம்பிக்க இங்கே மீண்டும் எழுந்து விட்டார்கள். பல்லவி சுசீலாம்மா பாடி முடித்து டிஎம்எஸ் ஆரம்பித்து உலகம் நமக்கினி ஆனந்த கோலம் என முடித்து இடது காலை சற்றே அகட்டி இரண்டு கைகளையும் விரித்து இருவர் என்பதே இல்லை என நடிகர் திலகம் வாயசைக்க முன்னாடி பின்னாடி இருந்தவர்கள் எல்லாம் எழுந்து கைதட்டுகிறார்கள். முதல் சரணம் முடிந்தவுடன் இருவரும் கைகோர்த்து கால் மாற்றி ஆடும் ஒரு ஸ்டெப் வரும். மறுபடியும் அலப்பறை .இரண்டாவது சரணத்தில் கவியரசர் புறநானூற்று(?) பாடலை அடிப்படையாக வைத்து ஆடை இதுவென்ன நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் என்று வரிகளில் இலக்கியம் பேச சரணத்தின் முடிவில் லோ ஆங்கிள் ஷாட்டில் கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் என்ற வரிக்கு நிமிர்ந்து நின்று வலது கை ஆட்காட்டி விரலை மட்டும் சுட்டுவார். இங்கே அதகளம். பாடல் முடிந்தவுடன் மனோகர் பைரவனிடம் Dr ராஜா கதையை முடிக்க சொல்ல முதலில் அவனையா என்று கேட்கும் பைரவன் பிறகு சரி என்பார். நான் கேட்கறதை கொடுக்கணும் என கண்டிஷன் போடுவார்.
பைரவன் Dr ராஜா வீட்டிற்கு சென்று மோகன்லால் சேட்-ஐ என்ன செய்தாரோ அதே போல் டாக்டரையும் செய்ய சத்தம் கேட்டு மேஜர், சௌகார், மஞ்சுளா ஓடி வந்து பார்க்க படுக்கையில் ரத்தக்கறை மட்டும் இருக்க டாக்டர் இருக்க மாட்டார்.அவரை கொன்று விட்டார்கள் என அனைவரும் நம்புவார்கள். நடிகர் திலகத்திற்கு ஒரு மார்பளவு சிலை அமைத்து கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பாடல் காட்சி. (இது ரசிகர்கள் ஒரு சிலருக்கு அன்றைய காலத்தில் உறுத்தலாக இருந்தது. பெருந்தலைவர் மறைந்தபோது இந்த பாடல் பல இடங்களிலும் ஒலிபரப்பப்பட்டது). பாடல் முடிந்து மனோகர் ஆஸ்பத்திரிக்கு வந்து மஞ்சுளாவை வருமாறு அழைக்க அவர் மறுப்பார். இவர்கள் பேசுவதை மறைந்திருந்து பார்க்கும் சௌகார் மனோகர் போனபிறகு மஞ்சுளாவிடம் வந்து யார் என்று கேட்டு தெரிந்துகொண்டு இவர்தான் நம்ம ராஜாவின் கொலைக்கு காரணம் என்று சொல்ல நாகேஷும் மேஜரிடம் போலீசில் சொல்ல வேண்டும் என்பார். பைரவனை சந்திக்கும் மனோகரிடம் எனக்கு உன் பொண்ணு வேணும் என்று சொல்ல மனோகர் ஆத்திரப்படுவார். போன் பண்ணுன்னு சொல்லிவிட்டு விசிலடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் இசைக்குழுவினர் செய்வது போல் குறுக்கும் நெடுக்குமாக செய்துவிட்டு போக கைதட்டல் பறக்கிறது. ஹோட்டலுக்கு செல்லும் நடிகர் திலகத்தை அடியாட்கள் தாக்க அனைவரையும் அடித்து போட்டுவிட்டு மனோகர் வீட்டிற்கே வந்துவிடுவார். அங்கே மஞ்சுளாவிடம் உங்க அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம் என்பார் (வில்லை வளைச்சது உங்க அப்பா. அம்பா மாறினது என் தப்பா) வாதம் முற்றி மனோகரை கொல்ல முயற்சிக்க போலீஸ் வந்துவிடும். சௌகார் நாகேஷ் அனைவரும் வந்துவிட நடிகர் திலகம்தான் இரண்டு கொலைகளையும் செய்தார் என ம்னோகர் சொல்ல மோகன்லால் சேட் என நடிகர் திலகம் சத்தம் போட மாலி காரிலிருந்து எழுந்து வருவார்.Dr ராஜா என சத்தமாக சொல்லி மீசையையும் தலை விக்கையும் கழட்ட Dr.ராஜாதான் பைரவனாக மாறி அனைத்தும் செய்தார் என்று தெரியவரும். அவரின் மூத்த சகோதரன் இறந்துவிட்டது .தெரியவரும். குப்பத்து பிள்ளையார் கோவிலில் வைத்து நடிகர் திலகம் மஞ்சுளா திருமணம் நடைபெற இரவுக்கும் பகலுக்கும் பின்னணியில் ஒலிக்க வணக்கம்.
படத்தின் ரிப்போர்ட், வரவேற்பு, வெற்றி செய்திகள் --- அடுத்த வாரம்
(தொடரும்)
அன்புடன்

Thanks Murali Srinivasan

sivaa
22nd June 2021, 06:00 AM
இதுவரை எதிலும் வராத ORIGINAL ஆதாரங்கள். மிரண்ட அமெரிக்க பத்திரிகைகள், சிவாஜியை, CLARK GABLE என்றன


1962 இல் அமெரிக்க ஜனாதிபதி திரு கென்னடி அவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்கா இந்திய கலாச்சார தூதுவராக மூன்று மாத விஜயம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா முழுவதும் சிவாஜியை போற்றி புகழ்ந்தனர். பத்திரிகைகள் பலரும் சிவாஜி அவர்களை உலக மாபெரும் நடிகர்களுடன் ஒப்பிட்டு பாராட்டினர். உலக புகழின் உச்சம் பெற்ற "The King of Hollywood " என்ற புனைபெயர் கொண்ட "CLARK GABLE" அவர்களின் இந்திய வடிவம் சிவாஜி கணேசன் என்று போற்றினர். அந்த பத்திரிகை ஆதாரங்களுடன் இந்த வீடியோ பதிவு. காண தவறாதீர்கள்.

Thanks Nadigar thilgam T V.


https://youtu.be/2fLKxmqjNlA

sivaa
22nd June 2021, 06:03 AM
PART-2 திரையுலகில் வெல்லமுடியாத உயரத்தில் இருந்த சிவாஜி - அமெரிக்கா புகழாரம் மனம்திறக்கும் சிவாஜி.


Thanks Nadigar thilgam T V.

https://youtu.be/zbhLUOi-NIc

sivaa
22nd June 2021, 06:11 AM
#சிவாஜி மட்டுமே பிரம்மாண்ட வெற்றிகள் அதிகம் கொடுத்தவர் #Boxoffice king அவரே ! இதோ ஆதாரங்கள் !.

youtube இல் சமீப காலமாக ஒரு சிலரால் தவறாகவும் , ஒரு சிலரால் பொய்யும், புரட்டும், புளுகும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பதிவுகளுக்கான ஆவண, ஆதாரங்களுடன் விளக்கமளித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வீடியோ.
தமிழ் திரை உலகில் தாம் நடிக்க துவங்கிய 1952 ஆம் ஆண்டு பராசக்தி காலம்தொட்டு இன்றுவரை அதிக அளவில் பிரம்மாண்ட வெற்றி வசூல் கொடுத்த பிரம்மாண்ட நாயகர் சிவாஜி என்பதே நிரூபணம்.


Thanks Nadigar thilgam T V.


https://youtu.be/e9mPT4BGIQQ

sivaa
23rd June 2021, 01:57 PM
#HERO83 #சென்னை
1964, 1972 ஆண்டுகளைப் போன்றே 1983 ஆம் ஆண்டிலும் நடிகவேந்தன் திரைத் துறையில் படைத்தச் சாதனைகள் அளப்பற்கரியது. அவற்றை எழுதினாலும் ஏடுகள் போதாது. இவரின் வெற்றிகள் அனைத்தும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே படைக்கப்பட்ட ஒன்றாகும். தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்களையோ, அரங்க உரிமையாளர்களை மிரட்டியோ, பணிய வைத்தோ உருவாக்கப்பட்ட சாதனைகளல்ல இவருடையது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை வெளியிட்டு, சமயத்தில் ரசிகர்களே பார்க்கத் திணறிப் போகும் அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்புத் திறனால் வெவ்வேறு கதை அம்சங்கள் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து, அவற்றைத் தொடர் வெற்றிகளாக்கி தனது ஐம்பத்தைந்தாம் வயதிலும் அவர் செய்த சாதனைகள் வியப்புக்குரியது.
இந்த 1983 லும் அப்படித்தான். அவர் நடித்து தமிழில் வெளியான படங்கள் ஆறு. அவற்றில் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும், இரண்டு படங்கள் நூறு நாளும் ஓடி வெற்றி பெற்றன. 1959, 1961,1972, 1978, 1983 ஆகிய ஆண்டுகளுக்குப்பின் ஒரே ஆண்டில் இரு படங்கள் வெள்ளிவிழா என்று ஆறாம் முறையாக ஓர் அற்புதச் சாதனையை அவர் படைத்திருந்தார். தெலுங்கில் ஒரு படமும், தமிழில் இரு படங்களென மூன்று படங்களில் இரட்டை வேடமேற்று நடித்திருந்தார். அதில், இரு படங்களில் இரு கதாபாத்திரங்களுக்கும் ஜோடிகள் இருந்தன. ( சந்திப்பு / பெஜவாடா பெப்புலி) ஆனால், வெள்ளை ரோஜா படத்தில் இரு வேடங்களுக்கும் ஜோடி இல்லை.
நான்கு படங்களில் அவரது மகன் பிரபு நடித்திருந்தார். மிருதங்க சக்கரவர்த்தி, சந்திப்பு, நீதிபதி ஆகிய படங்களில் கதையிலும் தந்தை மகனாக இருவரும் நடித்திருந்தனர்.
1983ல் சில புள்ளி விபரங்கள் / சென்னை நகர சாதனைகள்
1. மூலக்கடை வெங்கடேஸ்வரா அரங்கில் 50 நாட்களைக் கடந்த படம் நீதிபதி.
2. திருவொற்றியூர் வெங்டேஸ்வராவில் நூறுநாள் ஓடிய முதல் படம் வெள்ளைரோஜா.
3. 1983 ல் ஆறு படங்களில் திலகம் நடித்து நான்கு படங்கள் 100 நாள் ஓடின.
வேறு எவருக்கும் அந்த ஆண்டு ஓடவில்லை. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி)
4. சென்னை சாந்தியில் நீதிபதி, சந்திப்பு, மி. சக்கரவர்த்தி என்று மூன்று படங்கள் 100 நாள் ஓடின. இந்த மூன்றும் தனியரங்கில் 8 லட்ச ரூபாய்க்கும்மேல் வசூலித்தன. வெள்ளை ரோஜா சபையரில் மட்டுமே 8 லட்ச ரூபாய் வசூலித்தது. இதுபோல் தனி அரங்கொன்றில் 8 லட்சரூபாய் வசூலித்ததில் மற்றவர்க்கு இரண்டு படங்ளுக்கு மேல் கிடையாது.
5. 1983 ல் திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் நூறுநாளைக் கடந்த சிவாஜியின் படங்கள் 3. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா )மற்றவர்க்கு இரண்டுகூட இல்லை.
6. 1983ல் வெளியான படங்களில் 100 காட்சிகளுக்கும் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்ததும் திலகத்துக்குத்தான். நீதிபதி, சாந்தி, அகஸ்தியா, அன்னை அபிராமி அரங்குகளிலும், சந்திப்பு - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியிலும், வெள்ளைரோஜா - தேவி, புவனேஸ்வரி, கிரௌனிலும், மிருதங்க சக்கரவர்த்தி சாந்தியிலும் தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் மேல் தொடர் HOUSEFULL ஆகின.
7. 1983 -ல் சென்னையில் 100 நாட்களில் 30 லட்சம் வசூலித்த ஒரே படம் வெள்ளை ரோஜா மட்டுமே.
8. சாந்தியில் 3 படங்களும், கிரௌனில் இரு படங்களும், புவனேஸ்வரியில் இரு படங்களும், அகஸ்தியா, அன்னை அபிராமி, தேவி, உதயம், அபிராமி ஆகியவற்றில் தலா ஒரு படமும் திலகம் நடித்து 100 நாட்களைக் கடந்தன.
9. தீபாவளி வெளியீட்டில் சென்னையில் 6 திரைகளில் 75 நாட்களும், 5 திரைகளில் 100+ நாட்களும் ஓடிய ஒரே படம் வெள்ளை ரோஜா.
10. சென்னையில் மட்டும் சிவாஜி நடித்து வெளியான ஆறு படங்கள் மூலம் வசூலான மொத்தத்தொகை ஒரு கோடிக்கும்மேல்.
11. 1983ல் நடிகர்திலகம் நடித்து நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா மூன்றும் தமிழகமெங்கும் ஒரு கோடி ரூபாய்க்கும்மேல் வசூலித்தது. ஆனால், மற்றவர்க்கு?
12. சென்னை உதயம் அரங்கினில் நூறுநாள் ஓடிய முதல் தமிழ்ப்படம் வெள்ளை ரோஜா. சபையர் திரையரங்கில் 75 நாட்களைக் கடந்த முதல் தமிழ்ப் படமும் அதுவே. அத்திரையரங்கு நிர்மாணித்த காலந்தொட்டு பெண்கள் கூட்டம் அதிகம் அலைமோதியது வெள்ளைரோஜா படத்துக்குத்தான் என்று அப்போதைய தினமணிக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது.
( மதுரை, கோவை, சேலம், திருச்சி சாதனைகள் நாளை....)
நன்றி : மதுரை ரசிகர்களின் சிறப்புமலர்
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்

Thanks nilaa

sivaa
25th June 2021, 02:10 PM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 57
எங்கள் தங்க ராஜா என்று சொன்னதுமே ஆர்வம் கொண்டது மட்டுமல்லாமல் அதை பற்றிய அனுபவ பதிவிற்கு மிக பெரிய வரவேற்பு அளித்த அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி. இனி பட்டாக்கத்தி பைரவன் என்ற Dr. ராஜாவிறகு கிடைத்த வரவேற்பு பற்றி பேசுவோம்.
ஓபனிங் ஷோ முடிந்து நாங்கள் வெளியே வரும்போது கூட வரும் ரசிகர்கள் ஆவேசப்பூர்வமாக மாறியிருந்தனர். வாசலில் ஒரு 1000 வாலா சரம், தீ கொளுத்தப்பட ஏற்கனவே அது சின்ன தெரு, படம் முடிந்து வெளியே வரும் ஒரு ஆயிரம் பேர், அடுத்த காட்சிக்காக வரிசையிலும் அல்லாதும் ஆங்காங்கே நிற்கும் ஆயிரக்கணக்கானோர் இதற்கு நடுவே வெடித்து சிதறும் பட்டாசு என்று ஏரியாவே ரணகளமானது இதை தவிர ரசிகர்களின் வாழ்த்து முழக்கங்கள் அதிர வைக்கிறது. சில அதீத ரசிகர்களின் உணர்ச்சி முழக்கங்கள் வேறு. தியேட்டரை சுற்றி இருக்கும் பல ஏரியாக்களிருந்து படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டம் அவரவர்கள் ஏரியாவிற்கு அப்படியே ஊர்வலமாகவே சவுண்ட் கொடுத்துக் கொண்டே போகிறார்கள். படத்திற்கு மிக பெரிய பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்ததால் மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். பிளாக் டிக்கெட் பயங்கரமான விலைக்கு விற்பனையாகிறது.
மறுநாள் ஞாயிறு அதை விட கூட்டம். அன்றைய ஈவினிங் ஷோ கூட்டமெல்லாம் வர்ணிக்கவே முடியாத லெவல். முதல் நாள் ராத்திரியை விட பிளாக் இன்னும் அதிக விலைக்கு விற்கிறது. எங்களுக்கு ஒரே சந்தோஷம். 1973ல் மதுரையில் முதல் படமாக (நமது) தொடர் ஹவுஸ்புல் 100 காட்சிகளை தாண்டி விடும் என்பது தெளிவாக தெரிந்ததில் எனக்கு தனி சந்தோஷம். படம் திரையிடப்பட்ட மதுரையின் சுற்று வட்டார ஊர்களிலும் பிரமாதமாக போகிறது என்பது விநியோகஸ்தர் ஆபிசில் இருந்து தெரிய வந்தது. நகரில் மட்டுமல்ல அனைத்து ஊர்களிலும் நன்றாக போகிறது என்பது விநியோகஸ்தருக்கு மிக பெரிய சந்தோஷம் என்று அவர்கள் அலுவலகத்தில் சொல்கிறார்கள். காரணம் அதுவரை இல்லாத அளவிற்கு 9 பிரின்ட்கள் போடப்பட்டு இருக்கிறதே, ரிசல்ட் எப்படியிருக்குமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர இருந்திருக்க வேண்டும். அந்த முயற்சி சக்ஸஸ் என்றதும் வரும் மகிழ்ச்சி.
இரண்டாவது வாரம் தயாரிப்பாளர் விளம்பரம் வருகிறது. அது தவிர அன்றைய நாட்களில் மதுரை நகரில் ஓடும் அனைத்து படங்களுக்கும் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தினசரி விளம்பரம் தினத்தந்தியில் வரும். நகர் மட்டுமின்றி M R ஏரியாவில் எங்கெல்லாம் ஓடுகிறதோ அதன் விவரங்களும் அதில் இடம் பெறும். படம் வெளியான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் தந்தியை பார்க்கிறோம். ஆச்சரியத்தில் அசந்து போகிறோம். காரணம் விநியோகஸ்தர் விளம்பரத்தில் 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்ற வரி விளம்பரத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இலவச பாஸ் பற்றி தெரியுமா என்பது பற்றி தெரியவில்லை. அன்றைய நாட்களில் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் 10 வாரத்திற்கு பிறகோ இல்லை சுமாராக போன படம் என்றால் 50 நாட்களுக்குள்ளாகவே தெரிந்தவர்களுக்கு பாஸ் (Pass) கொடுப்பது வழக்கம். இலவச அனுமதி. இதை லோக்கல் பாஷையில் ஓசி பாஸ் என்று சொல்லுவார்கள். இப்படி கொடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு தமாஷா வரி (entertainment tax) கிடையாது. 1980கள் வரை இருந்த இந்த நடைமுறை பிற்காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து பின் வழக்கொழிந்து போனது. எங்கள் தங்க ராஜா படத்திற்கு இது போல விளம்பரத்தில் கொடுப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. மாற்று முகாமின் படத்திற்கு 100 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று வந்தவுடன் ரசிகர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
படம் சர்வசாதாரணமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்துக் கொண்டிருந்தது. எந்த காட்சிக்கு தியேட்டர் பக்கம் போனாலும் கூட்டம் இருந்தது. எப்போதும் பெரிய வரிசை இருந்தது. வீடு அருகாமையில் என்பதால் அடிக்கடி தியேட்டர் பக்கம் போய் பார்ப்பேன். படம் வெளியான மூன்று வாரத்தில் நானே மூன்று முறை பார்த்து விட்டேன். அப்போதும் காட்சிகள் அலப்பறையாகவே ரசிக்கப்பட்டது. எக்ஸ்ட்ரா ஷோ எதுவும் போடப்படாததால் நான்கு வாரங்கள் 28 நாட்களுக்கு 92 காட்சிகள் (23 * 4) தொடர் ஹவுஸ்புல் ஆனது. பொதுவாக சனிக்கிழமை காலைக்காட்சிகள் பிரச்சனையாக இருக்கும் என நான் இந்த தொடரில் பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் எங்கள் தங்க ராஜாவை பொறுத்தவரை அபப்டி பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி அரங்கு நிறைந்தது. 29வது நாள் 5 வது சனிக்கிழமை மார்னிங் ஷோ பற்றி ஒரு பயம் இருந்தது. ஆனால் அதுவும் சிக்கலின்றி புல் ஆகியவுடன் அதுவே ஒரு கொண்டாட்டமானது. 30வது நாள் ஞாயிற்றுக்கிழமை நைட் ஷோ 100வது ஷோ. அன்று ஈவினிங் மற்றும் நைட் இரண்டு காட்சிகளுக்கும் சரியான கூட்டம். ஈவினிங் ஷோ ஹவுஸ்புல் போர்டு மாட்டியவுடனேயே தியேட்டர் வாசலில் ஒரு பெரிய அலப்பறை நடந்தது. 5000 வாலாக்கள் அந்த பகுதியை தீபாவளியாக்கியது. நைட் 100வது ஷோவிற்கு என் கஸின் போயிருந்தார். உள்ளே ஒரே கொண்டாட்டம் என்றும் பைரவன் என்ட்ரி மற்றும் பாடல்களுக்கு ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது என்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்ளே வந்து ஒரு சிலரை வெளியே கூட்டி சென்றதாகவும் அதனால் சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டது என்றும் பல்வேறு செய்திகளை மறுநாள் கஸின் மூலமாக அறிய நேர்ந்தது.
வழக்கம் போல் நியூசினிமா தியேட்டருக்கு எதிரே இருந்த விளக்கு கமபத்தில் ஒரு தட்டி கட்டப்பட்டு அதில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த விவரம் எழுதப்பட்டு வைக்கப்பட்டது. சாதாரணமாக அதன் பிறகு ஒவ்வொரு காட்சி அரங்கு நிறையும்போதும் அந்த காட்சிகளின் எண்ணிக்கை மாற்றப்படும். அதாவது 101வது காட்சி ஹவுஸ்புல் ஆகும்போது 100 என்ற எண்ணில் 101 என்று ஓட்டப்படும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் எந்த சிக்கலுமின்றி 6 காட்சிகளும் அரங்கு நிறைந்தன. அப்படியாக 32 நாட்களில் நடைபெற்ற 106 காட்சிகளும் ஹவுஸ்புல். 33வது நாள் புதன்கிழமை ஆகஸ்ட் 15, சுதந்திர தினம். ஆகவே லீவு. அன்று சிறப்பு காட்சியாக மார்னிங் ஷோ போடப்பட்டது. அன்று காலை என் கஸின் மெம்பராக இருந்த கிரிக்கெட் டீம் ஒரு மாட்ச் விளையாடுகிறது. அதில் அவரும் விளையாடுகிறார். அரசரடி மைதானத்தில் மாட்ச். காலை 8 மணி முதல். நானும் அவருடன் அரசரடி மைதானத்துக்கு போய்விட்டேன். எட்டு மணிக்கு ஆரம்பிக்காமல் தாமதமாக ஆரம்பித்த மாட்ச் முடியும்போது 12.30 மணியை தாண்டி விட்டது. அதன் பிறகு நாங்கள் பஸ் பிடித்து சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கி வீட்டிற்கு வருகிறோம். நாங்கள் டவுன்ஹால் ரோடு வழியாக போகலாம் என்று வரும்போது சென்ட்ரல் சினிமா கடந்து வரும் நேரத்தில் அன்று அங்கே சூரிய காந்தி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. என் கஸினின் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்க திரும்பி பார்த்தால் அவர் நண்பர்கள் நமது ரசிகர்கள் சிலர் நிற்கின்றனர். அவர்கள் சென்ட்ரலில் மாட்னி பார்ப்பதற்காக நிற்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கும்போது கஸின் சரி மார்னிங் எப்படி போச்சு என்று கேட்க, விட்டு போச்சு என்று அவர்கள் பதில் சொல்ல எங்களுக்கு நம்ப முடியாத ஷாக். என்னய்யா சொல்றே என்று கஸின் மீண்டும் கேட்க ஹைகிளாஸ் டிக்கெட் கொஞ்சம் விட்டு போச்சு என்று சொல்கிறார்கள். மன்றக்காரங்க யாரும் வரலையா? அங்கே இருந்தவங்க ஏதாவது செஞ்சிருக்கலாமே என்று கேள்வி கேள்வி மேல் கேட்க நாங்களே அங்கே இல்லை. கேள்விப்பட்ட விஷயத்தை சொல்றோம் என்றார்கள். இவர்கள் உண்மையை சொல்கிறார்களா இல்லை விளையாடுகிறார்களா என்று சந்தேகம் வர, நாங்க சொல்றது உண்மைதான் என்கிறார்கள். நாங்கள் இருவரும் அப்செட் ஆகி நேரே வீட்டிற்கு கூட போகாமல் நியூசினிமா போகிறோம். அங்கே தெரிந்த ஆட்கள் இல்லை. தொடர் ஹவுஸ்புல் தட்டியில் 106 என்றே இருக்கிறது. சரி அவர்கள் சொன்னது உண்மைதான் என்று புரிய பெரிய வருத்தம். எப்படி வசந்த மாளிகைக்கு நடந்ததோ அது போல் இதற்கும் நடக்கிறது. அந்த மார்னிங் ஷோ புல் ஆகியிருந்தால் அந்த வார முடிவில் 116 காட்சிகள் தொடர்ந்து புல் ஆகியிருக்கும். சொல்லி வைத்தது மாதிரி அந்த மார்னிங் ஷோ தவிர்த்து புதன் வியாழன் வெள்ளி அனைத்து காட்சிகளும் (9 காட்சிகள்) அரங்கு நிறைந்தது. வழக்கம் போல் வருத்தப்படத்தான் முடிந்தது.
அதன் பிறகு படம் ஸ்டெடியாக போனது. Down South என்று அழைக்கப்படும் மதுரைக்கு தென்பகுதிகளில் குறிப்பாக நெல்லை குமாரி மாவட்டங்களில் படம் பிரமாதமாக போனது. 51வது நாள் முழுப்பக்க விளம்பரம் வந்தது. அதன்பிறகும் படம் நன்றாகவே போனது. அந்த வருட தீபாவளி அக்டோபர் 25 வியாழன் அன்று வந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது அக்டோபர் 21 ஞாயிறு அன்று 100வது நாள் கொண்டாடியது எங்கள் தங்க ராஜா. சென்னையில் மூன்று, மதுரை திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் மற்றும் கோவையில் 100 நாட்கள் ஓடியது. தமிழ் மற்றும் இங்கிலீஷ் தினசரிகளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ராஜேந்திர பிரசாத் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். மதுரையில் நியூசினிமாவில் 103 நாட்களில் ரூபாய் 3,33,586.25 வசூல் செய்தது. படத்தை வெளியிட்ட RmS நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய் ஷேர் மதுரை நியூசினிமாவில் மட்டுமே கிடைத்தது.
இலங்கையிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது எங்கள் தங்க ராஜா. வசந்த மாளிகைக்கு பிறகு பிரும்மாண்டமான வெற்றி என்றால் எங்கள் தங்க ராஜாதான். 1975ல் இலங்கையில் திரையிடப்பட்டது யாழ்ப்பாணம் நகரில் மிகப் பெரிய திரையரங்கான ராஜாவில் 126 நாட்கள் ஓடி ஒரு புதிய சாதனை புரிந்தது. படம் மறுநாள் காலை 10.30 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது என்றால் முதல்நாள் இரவே கூட்டம் கூட ஆரம்பித்து நள்ளிரவில் அது கட்டுக்குக்கடங்காமல் போனதினால் நடு இரவு 1.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் நாள் மட்டும் 7 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கின்றன. ஹவுஸ்புல் காட்சிகளிலும் அங்கே ஒரு புதிய சாதனை ஏற்படுத்தியது எங்கள் தங்க ராஜா. 55 நாட்களில் இலங்கை கரன்ஸியில் ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்து அதிலும் ஒரு புதிய சாதனை புரிந்தது. இலங்கை தலைநகரான கொழும்பிலும் வெற்றிக்கொடி நாட்டியது.கொழும்பு சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய எங்கள் தங்க ராஜா அதே கொழும்பில் மற்றொரு அரங்கான பிளாசாவில் 75 நாட்கள் ஓடியது. இலங்கையின் மற்ற சிறிய நகரங்களான மட்டு நகர், கண்டி திருமலை ஆகிய ஊர்களிலும் 6 வாரங்கள் ஓடியது. 1975ல் முதல் வெளியீட்டில் இப்படி என்றால் 1978 அக்டோபரில் இரண்டாவது வெளியீட்டின்போதும் யாழ் லிடோ திரையரங்கில் வெளியிடப்பட்டு 42 நாட்கள் ஓடியது. இப்படி திரையிட்ட அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற படம் எங்கள் தங்க ராஜா.
நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த புதிய படங்கள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்படும் படங்களும் அவற்றை பற்றிய செய்திகளும் வழக்கம் போல் வந்துக் கொண்டிருந்தது. ரோஜாவின் ராஜா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. கெளரவம் படத்தின் ஷூட்டிங் துரித கதியில் நடப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை படங்களின் படப்பிடிப்பு செய்திகளும் அவ்வப்போது வந்தன. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படங்களான சிவகாமியின் செல்வன், என்னை போல் ஒருவன், தாய், அவன்தான் மனிதன் படங்களின் படப்பிடிப்பு பற்றியும் படமாக்கப்பட்ட காட்சிகள் பற்றியும் பத்திரிக்கைகளில் படித்தோம். வாணி ராணி படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது. தங்கப்பதக்கம் படத்தில் நடிகர் திலகத்தின் வீடு செட் போடப்பட்டு படப்பிடிப்புக்கு தயாராகிறது என்றும் படித்தோம்.
நீதி படத்திற்கு பின் தனது அடுத்த படத்திற்கு கதை தேடி அலைந்து கொண்டிருந்தார் பாலாஜி. இந்தி ரீமேக் என்று முடிவு செய்துவிட்டதால் பாம்பேக்கு ஓரிரு முறை சென்றும் திருப்தியான படம் கிடைக்கவில்லை. அதன் பிறகு பே இமான் என்ற படத்தின் உரிமையை வாங்கியிருப்பதாக செய்தி வந்தது. 1972ல் வெளியான இந்த படம் பிலிம்பேர் (Filmfare) பத்திரிக்கையின் பல விருதுகளை வென்ற செய்திதான் பாலாஜியின் கவனத்தை இந்த படத்தின் மீது திரும்ப செய்திருக்க வேண்டும். மனோஜ் குமார் மற்றும் பிரான் நடித்த அந்த படத்தின் தமிழ் பதிப்பில் அவர்கள் இருவரின் வேடத்தையும் நடிகர் திலகமே ஏற்க போகிறார் என்ற செய்தியும் வந்தது. சிவிஆர் இயக்க படத்தின் பூஜை போடப்பட்டது. சிவாஜி நாடக மன்றத்தில் தொடக்க காலம் முதல் பணியாற்றி வந்தவர் எஸ்.ஏ கண்ணன். நடிகர் திலகத்தின் ஏராளமான படங்களில் சிறிதும் பெரிதுமான பல வேடங்கள் செய்திருக்கிறார். சிவாஜி நாடக மன்றத்தின் ஆஸ்தான இயக்குனர். அன்னை இல்லத்தின் ஒரு அங்கம் என்றே அந்த காலத்தில் திகழ்ந்தவர். அவருக்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்து சண்முககனி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு வண்ணப்படம் அறிவிக்கப்பட்டது. நடிகர் திலகம், தேவிகா, மஞ்சுளா, ஜெயசித்ரா மற்றும் சசிகுமார் நடிப்பதாக செய்தி வந்தது. தீ விபத்தின் காரணமாக சசிகுமார் இறந்துவிட அந்த வேடத்தில் கமல் நடித்தார். சத்தியம் என்று அதற்கு பின்னர் பெயர் சூட்டப்பட்டது.
அகில இந்திய சிகர மன்றத்தின் தலைவராக இருந்த சின்ன அண்ணாமலை விஜயவேல் பிலிம்ஸ் என்ற சொந்த நிறுவனத்தை துவங்கி நடிகர் திலகம் இரு வேடங்களில் நடிக்கும் ஒரு கலர் படம் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வந்தது. முதலில் இதோ எந்தன் தெய்வம் என்று பெயரிடப்பட்டது.அதே நேரத்தில் ACT இயக்கத்தில் முத்துராமன் விஜயா நடிக்கும் ஒரு படத்திற்கும் இதே பெயர் வைக்கப்பட்டதாக செய்தி வரவே சின்ன அண்ணாமலை பெயரை மாற்றினார். தங்கத்திலலே வைரம் என்ற பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதுவும் மாறி மனிதனும் தெய்வமாகலாம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் செய்திகள். ஜேயார் மூவிஸ் மன்னவன் வந்தானடி, அமுதம் பிக்சர்ஸ் அன்பே ஆருயிரே படங்களின் படப்பிடிப்பும் தொடர்கிறது.
பிலிம்பேர் (Filmfare) பத்திரிக்கையை பற்றி சொல்லும்போது அதன் தொடர்பான மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தி திரையுலகை பற்றிய செய்திகளை தாங்கி வரும் பிலிம்பேர் இதழின் நிர்வாகத்தினர் வருடந்தோறும் அதற்கு முந்தைய வருடத்தில் வெளியான இந்தி படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க கூப்பன் ஒன்றை பத்திரிக்கையில் பிரசுரித்து அதை பூர்த்தி செய்து அனுப்பும் வாசகர்களில் பெரும்பான்மையோர் விருப்பப்படி விருதுகளை வழங்குவார்கள். தென்னிந்திய படங்களுக்கும் விருதுகள் உண்டு என்றாலும் இந்தி போன்று அனைத்து துறை விருதுகளும் கிடையாது. சிறந்த படம் மற்றும் இயக்குனர் போன்ற ஓரிரண்டு துறைகளுக்கு மட்டுமே இருந்தது. அந்த 1972ல்தான் முதன் முறையாக சிறந்த நடிகர் நடிகை போன்ற விருதுகளும் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த முதல் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் ஞான ஒளி படத்திற்காக பெற்றார். சிறந்த நடிகை விருது பட்டிக்காடா பட்டணமா படத்திற்காக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. 1972ன் படங்களுக்கான விழா என்பதால் 1973ல்தான் நடைபெற்றது. (தொடர்ச்சியாக இரண்டாம் முறையாகவும் 1973 வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதையும் நடிகர் திலகம்தான் பெற்றார் என்பது சிறப்பு தகவல்). அது போல பல ஆண்டுகளாக இது போன்ற விருதுகளை கொடுத்துக் கொண்டிருந்த சென்னை சினிமா ரசிகர் சங்கமும் ஞான ஒளி படத்திற்காக நடிகர் திலகத்தை சிறந்த நடிகராக தேர்வு செய்தது. அதே போன்ற பாரம்பரியம் மிக்க பேசும் படம் இதழும் நடிகர் திலகத்தையே தேர்வு செய்தது.
தமிழக அரசியல் மற்றும் இந்திய அரசியலை பொறுத்தவரை மிகப் பெரிய நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றாலும் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. நாட்டிலே விலைவாசி உயர்வு என்பதே முக்கிய விஷயமாக (அன்றைய காலகட்டங்களில் விலைவாசி என்பது மிகவும் சென்சிட்டிவான ஒன்று). அதன் பேரில் பல போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அகில இந்திய அளவிலும் இது எதிரொலித்ததால் அந்த சமயத்தில் நடைபெற வேண்டிய இடை தேர்தல்கள் அனைத்துமே தள்ளி போடப்பட்டது. அவற்றில் கோவை, பாண்டிச்சேரி மக்களவை மற்றும் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களும் அடங்கும். தமிழக அரசை எதிர்த்து நமபிக்கையில்லா தீர்மானங்கள் போன்றவை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நிகழ்வுகள் என்று பார்த்தால் டாக்டர் ஹண்டேயின் கட்சி தாவல். சுதந்திரா கட்சியில் தமிழகத்தில் ராஜாஜி அவர்களுக்கு பிறகு அடுத்த தலைவராக பார்க்கப்பட்ட ஹண்டே, ராஜாஜியின் மறைவிற்கு பிறகு என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்தது. சுதந்திரா கட்சியில் தொடர போகிறேன் என்று அவர் சொன்னாலும் பெருந்தலைவரின் தலைமையேற்று அவர் ஸ்தாபன காங்கிரஸில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் அவர் ஸ்தாபன காங்கிரஸிற்காக பிரச்சாரமும் மேற்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அவர் ஜூலை மாதத்தில் அதிமுகவில் சேர்ந்தது ஆச்சரியமாகவே இருந்தது. ஏன் என்றால் அவர் சேரும்போது என் நினைவு சரியென்றால் எம்ஜிஆர் ரஷ்யா போயிருந்தார். ஆகவே அது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றே கூறலாம். மற்றொரு நிகழ்வு அன்றைய நாட்களில் அடிக்கடி நடைபெற்ற அரசியல் வன்முறை தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் தொழிற்சங்க தலைவருமான வி பி சிந்தன் உள்ளானார். பொதுக்கூட்டத்திற்கு போவதற்காக டாக்ஸியில் போனவர் டாக்ஸி பிரேக்டௌன் ஆனதால் அரசு போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்ய, பஸ் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரையும் இறக்கி விட்டு அந்த கும்பல் வி பி சிந்தனை குறிவைத்து தாக்கியது. அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். வழக்கம் போல் ஆட்சியாளர்கள் உடனே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விட்டோம் விசாரணை நடக்கிறது என்று பூசி மெழுகினர்.
திண்டுக்கல் இடைத்தேர்தல் யாருக்கு பாடம் கற்று கொடுத்ததோ இல்லையோ இந்திரா காங்கிரஸின் கண்களை திறந்து விட்டது. தமிழகத்தில் தங்களது சரக்கு போனியாகாது என்பதும் பெருந்தலைவர் தலைமையில் இயங்கும் காங்கிரஸ்ஸை மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. குறிப்பாக இந்திரா அவர்களின் கவனத்திற்கும் இது போனதினால் அவரே தமிழகத்தில் தங்களது நிலையை மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்தார். தமிழகத்தில் இரண்டாக செயல்படும் காங்கிரஸ் ஒரே கட்சியாக மாற வேண்டும். அதற்கு முன் இருவரும் ஒரு அணியில் நின்று அரசியல் களமாட வேண்டும் என்பது இந்திராவிற்கு புரிந்தது. இதில் சிக்கல் எங்கேயென்றால் இந்திராவை பொறுத்தவரை அவருக்கு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மட்டுமே இந்த நிலைப்பாட்டை எடுக்க விரும்பினார். மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவருக்கு எந்த கவலையுமில்லை. காரணம் அங்கே அவரது கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. 1971 தேர்தலுக்கு பிறகு பல மாநிலங்களிளிலும் ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றிய முக்கிய தலைவர்களுக்கு வலை வீசி தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டார்கள். ஏன் தமிழகத்திலேயே இந்த முயற்சி நடைபெற்று சட்டமன்ற உறுப்பினர்களான அனந்தநாயகி, ஏ ஆர் மாரிமுத்து போன்றவர்களையும், ஈவிகே சம்பத் போன்றவர்களையும் இந்திரா காங்கிரஸில் சேர்த்துக் கொண்டனர் (அன்றைக்கு கட்சி தாவல் தடை சட்டம் இல்லை).
இணைந்து செயல்படும் இந்த முயற்சிக்கு கட்சியில் இருக்கும் பழம் பெருச்சாளிகள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதை புரிந்த இந்திரா, மோகன் குமாரமங்கலத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தாக கேள்வி. ஆனால் விமான விபத்தில் அவர் மறைந்து விடவே தமிழகத்தில் அந்த கட்சியில் பெருந்தலைவரோடு பேசுவதற்கு யாருமில்லை என்ற நிலை, எப்போதும் பெருந்தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்திருந்த சி சுப்பிரமணியம் அந்த முறை ஆச்சரியமாக இந்திராவின் முயற்சியை ஆதரித்தார் என்று செய்தி வந்தது. ஆனால் அவரின் முன்கால நடவடிக்கைகள் காரணமாக அவர் பேசினால் சரியாக வராது என்பதால் இந்திரா தனது அமைச்சர்கள் உமாசங்கர் தீக்ஷித், கே ஆர் கணேஷ் போன்றவர்களை அனுப்பினார். அவர்கள் சென்னை வந்து பெருந்தலைவரை சந்தித்து பேசினார்கள். அவர்களை தொடர்ந்து ஒரிஸா முன்னாள் முதல்வர் நந்தினி சத்பதியும் சென்னை வந்து பெருந்தலைவரை சந்தித்தார். அதற்கு பின்னர் இந்திராவின் நேரடி தூதராக மரகதம் சந்திரசேகர் சென்னை வந்து மிக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். இவையெல்லாம் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15ற்கு முன்னும் பின்னும் நடக்கிறது. அந்த வருடம் பெருந்தலைவரின் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயக்கம் பிளவுபட்ட பின் பெருந்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத இந்திராவும் மற்ற இந்திரா காங்கிரஸ் தலைவர்களும் அந்த வருடம் அவருக்கு வாழ்த்து சொன்ன காட்சியும் அரங்கேறியது. இவையெல்லாம் நடந்த பிறகு இந்திராவின் அழைப்பின் பேரில் பெருந்தலைவர் டெல்லி சென்று இந்திராவை நேரில் சந்தித்து உரையாடினார்.
பெருந்தலைவரை பொறுத்தவரை இந்திராவிடம் தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்தார். என்னவென்றால் இணைப்பு என்று ஒன்று நடக்க வேண்டுமென்றால் அது அகில இந்திய அளவிலே நடைபெற வேண்டும். தமிழகத்தில் மட்டும் இணைப்பு என்றால் அது சாத்தியப்படாது இணைந்து செயல்படுவதில் எதிர்ப்பில்லை ஆனால் எந்த காரணம் கொண்டும் அதிமுகவோடு கூட்டணி வைக்க கூடாது. இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற விஷயத்தில் தான் மிக தெளிவாக இருப்பதையும் ஆகவே ஒன்றை எதிர்க்க மற்றொன்றுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று தமிழக இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி எடுத்து வருவது அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இணைந்து செயல்படும்போது தன்னையும் ஸ்தாபன காங்கிரஸ்ஸையும் அதில் சிக்க வைத்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர் திலகத்திடம் ஒரு முறை இந்த இணைப்பு/இணைந்து செயல்படுவது பற்றி ரசிகர்கள் கேட்டபோது பெருந்தலைவர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம் என்று சொன்னது சிவாஜி ரசிகனில் செய்தியாக வந்தது.
அரசியல் களம் இப்படியாக இருக்க நடிகர் திலகத்தின் அடுத்த வெளியீடாக தீபாவளியன்று கெளரவம் வெளியாவதாக அறிவிப்பு வந்துவிட்டது. கெளரவம் வியட்நாம் மூவிஸ் தயாரிப்பு. நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய குடும்ப நண்பர் இந்து பத்திரிக்கை குழுமத்தை சேர்ந்த எஸ்.ரங்கராஜன். ரங்கப்பா என்றே நடிகர் திலகம் அழைப்பார். நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது அவரின் நெடுநாள் விருப்பம். நடிகர் திலகத்தின் மனதில் எப்போதும் நாடகங்களின் மீதும் நாடக குழுக்கள் மீதும் தீராத ஆசை உண்டு. சென்னையில் அனேகமாக அனைத்து நாடக குழுக்களின் நாடகங்களை அவர் சென்று பார்ப்பதுண்டு. சில குழுக்கள் புதிய நாடகங்களை அரங்கேற்றும் போது நடிகர் திலகத்தை தவறாது அழைப்பார்கள் நடிகர் திலகம் ரெகுலராக சென்று பார்க்கும் நாடக குழு திரு. ஒய் ஜி பார்த்தசாரதி நடத்தி வந்த UAA எனப்படும் United Amateur Artists. 60 வருடங்களுக்கும் மேலாக இன்றும் நடைபெறும் குழு அது. அவர்களின் Oh! What a girl என்ற நாடகத்தை அறிவாளி என்ற பெயரில் படமாக்கி நடித்தார். அந்த குழுவின் பெற்றால்தான் பிள்ளையா நாடகம் நடிகர் திலகம் நடிக்க பார் மகளே பார் ஆனது. சிவாஜி நாடக மன்றத்திற்கு வியட்நாம் வீடு எழுதிய சுந்தரம் UAA குழுவிற்காக எழுதிய நாடகம் கண்ணன் வந்தான்.
நாடகத்தை பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்தார் நடிகர் திலகம். கதையில் வரும் பாரிஸ்டர் ரோலை மேடையில் செய்தவர் ஒய்ஜிபி மகன் கண்ணன் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் திரு ARS. நாடகம் பார்த்த நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்து போனது. மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் வெகு நாட்களாக தன்னை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ரங்கராஜனையும் நாடகம் பார்க்க சொல்கிறார். அவருக்கும் பிடிக்கவே அந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை வாங்குகிறார். அது வரை கதை வசனகர்த்தாவாக மட்டுமே இருந்த வியட்நாம் வீடு சுந்தரத்தை இயக்குனர் ஸ்தானத்திற்கு உயர்த்துகிறார் நடிகர் திலகம். தன்னால் முடியுமா என்று சுந்தரம் யோசிக்க உதவி இயக்குனராகவும் பின் இயக்குனராகவும் அதன் பிறகு குணசித்திர நடிகராகவும் விளங்கிய ரா.சங்கரனை உதவிக்கு வைத்து கொள்ள சொல்கிறார் நடிகர் திலகம். ரா.சங்கரனை அழைத்து நடிகர் திலகமே பேச அவர் ஒப்பு கொள்கிறார்.
அந்த நாடகத்தை படமாக்க போகிறோம் என்றதும் நடிகர் திலகம் ஹோம் ஒர்க் செய்கிறார். முதலில் கதை. கதை பெரும்பாலும் கோர்ட் நடவடிக்கைளை மையப்படுத்துகிறது. ஆகவே அவற்றை எந்த தவறுமின்றி காட்சிப்படுத்த வேண்டும். திரு ஒய்ஜிபி அவர்களிடம் இதை பற்றி பேச, இந்த ஸ்கிரிப்ட் ரெடியானவுடன் பிரபல வக்கீல் திரு வி பி ராமன் அவர்களிடம் சென்று படித்து காண்பித்து அவர் சொன்ன சில கரக் ஷன்ஸ் ஏற்றுக் கொண்டு அதன்படி மாற்றி எழுதி முழுமைப்படுத்தினோம் என்று ஒய்ஜிபி அவர்கள் சொல்ல விபி ராமன் போன்ற ஒரு சட்ட நிபுணரின் மேற்பார்வையில் (Legally vetted) எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்றதும் நடிகர் திலகம் திருப்தி அடைந்தார். அதன் பிறகு காஸ்டிங் (casting). பாரிஸ்டர் ரோல் ஓகே. கண்ணன் ரோலை யார் செய்வது? பல பேர்களும் பரிசீலிக்கப்பட்ட து என்றாலும் ஒன்றும் சரி வரவில்லை. காரணம் கதைப்படி பாரிஸ்டர் ரோல் டாமினேட் செய்யும் காட்சியமைப்புகள். கண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். வேறு ஒரு ஹீரோ கண்ணன் ரோல் செய்தால் அவர்கள் அதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது போன்ற சந்தேகங்கள் எழவே, நீண்ட யோசனைக்கு பின் இரண்டு வேடங்களையும் தானே செய்வது என்ற முடிவுக்கு வந்தார் நடிகர் திலகம். இந்த படத்தில்தான் முதன் முறையாக நடிகர் திலகத்தின் பக்தர் ஒய் ஜி மகேந்திரா அவருடன் இணைந்து நடித்தார். உனக்கு சீன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஷூட்டிங் நடக்கும் அனைத்து நாட்களிலும் நீ வர வேண்டும் என்று நடிகர் திலகம் மகேந்திராவிடம் சொல்லியிருக்கிறார். காரணம் நாடகத்தில் அவரும் நடித்திருந்தார். ஆகவே ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே அதை தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக..
1971 நவம்பர் 12 அன்று படப்பிடிப்பு துவங்கியது. இயக்குனர் ஸ்ரீதர் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி எதுவென்றால் கிளைமாக்ஸ். கதவை திறந்து முழுக்கை சட்டை பட்டனை கழட்டி டைம் பார்ப்பாரே அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது. யோசித்து பார்த்தால் எந்தளவிற்கு அவர் பாத்திரத்தை உள்வாங்கியிருந்தால் அந்த கிளைமாக்ஸ் காட்சியை அவரால் அவ்வளவு சிறப்பாக காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது என்று நினைத்தால் உண்மையிலே பிரமிப்புதான். படம் வளர்ந்து வளர்ந்து 1973 தீபாவளி ரிலீசிற்கு ரெடியாக நிற்கிறது. படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டது, ஒரே ஒரு பாடல் காட்சியை தவிர. பாலூட்டி வளர்த்த கிளி பாடல் காட்சி மட்டும் எடுக்கப்பட வேண்டும். சிக்கல் என்னவென்றால் டிஎம்எஸ் இசை பயணமாக தென்னாபிரிக்கா நாட்டிற்கு சென்றிருக்கிறார் அவர் வருவதற்கு 15 நாட்கள் ஆகும் என்ற நிலை. அவர் வந்து பாடல் பதிவு செய்யப்பட்டு, பின் படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் அது முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. காரணம் இடையில் இருக்கும் நாட்கள் குறைவு. சுந்தரம் மற்றும் எம்எஸ்வி ஆகியோரை அழைத்து அந்த பாடலை ட்ராக் பாடி படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்ற யோசனையை சண்முகம் சொல்கிறார் (ட்ராக் என்றால் பாட வேண்டிய பாடகருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து பாட வைப்பது. பின்னர் யார் பாட வேண்டுமோ அவர்கள் வந்து பாடியவுடன் அதை ஒரிஜினல் பாடலாக மாற்றி விடுவார்கள்). வேறு யாரும் அந்நேரம் கிடைக்கவில்லை என்பதால் மெல்லிசை மன்னர் எம்எஸ்வியே அந்த ட்ராக் பாடி பதிவு செய்து படப்பிடிப்பை நடத்தினார்கள். அதுவே நன்றாக இருக்கிறது என்று நடிகர் திலகமே சொன்னார் என்று கேள்வி. ஆனால் எம்எஸ்வி அது சரியாக வராது என்று முடிவு செய்து டிஎம்எஸ் சென்னை வந்தவுடன் அவரை வைத்து மீண்டும் பாடலை பதிவு செய்து படத்தில் சேர்த்தார்கள். படமாக்கப்பட்ட பின் பாடியதால் அந்த பாடல் காட்சி டிஎம்எஸ்க்கு போட்டு காட்டப்பட்டது. எதற்கு என்றால் லிப் சிங்க் எனப்படும் வாயசைப்பு மாட்ச் ஆக வேண்டும் என்பதற்காக,
இப்படிப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய கெளரவம் 1973 அக்டோபர் 25 வியாழன் தீபாவளியன்று வெளியாகிறது. மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். முதன் முறையாக ஒரு கலர் படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் பாரிஸ்டராகவும் கண்ணனாகவும் திரையில் விஸ்வரூபம் எடுத்த அந்த கோலாகலம், அந்த செல்லுலாய்டு காவியத்தை அன்றே காண நாங்கள் எடுத்த முயற்சிகள் அதை பற்றி அடுத்த வாரம்
(தொடரும்)
அன்புடன் .

5794

5795


Thanks Murali Srinivasan

sivaa
26th June 2021, 04:14 AM
அடப்பாவிகளா ! இதுவும் ஒரு பொழப்பு? தலைப்பில் மட்டுமே Sentiment பதிவில் சிவாஜி பற்றி பொய் புளுகும்

YouTube இல் நடிகர் திலகம் பற்றி செண்டிமெண்ட் தலைப்பு மட்டும் எழுதி உள்ளே பதிவில் சிவாஜி அவர்கள் திரைப்படங்களை ஓடவில்லை.தயாரிப்பாளருக்கு நஷ்டம் இப்படி பல ஆதாரமில்லாத பொய்யான தகவலை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதில் இப்போது nethajiTV என்ற ஒரு சேனல் சேர்ந்துள்ளது. இதில் வருபவர் நடிகர் திலகம் பற்றி பொய் புளுகு இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுள்ளார். அதற்க்கு பதில் பதிவு ஆதாரங்களுடன் அவர் கூறுவது அத்தனையும் பொய் புளுகு என்பதை தெரிவிக்கும் பதில் வீடியோ இது !

https://youtu.be/Pdh-sMwYIcA


Thanks Nadigarthilagam T V

sivaa
30th June 2021, 01:32 AM
அடேங்கப்பா இன்று(30-06-21)
டிவிச் சேனல்களில் இத்தனை நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களா?
அதுவும் வெள்ளி விழா காவியங்கள்
நூறு நாட்கள் கொண்டாடிய காவியங்கள்,
1)பசும்பொன்- காலை 10 மணிக்கு K டிவியில்,
2)தவப்புதல்வன்- காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
3)முதல் மரியாதை-பிற்பகல் 1 மணிக்கு ஜெயா மூவியில்,
4)ராமன் எத்தனை ராமனடி- பிற்பகல் 1:30 க்கு வசந்த் டிவியில்,
5)அமர தீபம்- மாலை 3:30 க்கு முரசு டிவியில்,
6)பாவமன்னிப்பு- மாலை 3:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,
7)படிக்காதவன் - இரவு 7 மணிக்கு K டிவியில்,
8)நான் வாழ வைப்பேன்- இரவு 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,
9)பாகப்பிரிவினை- இரவு 11 மணிக்கு மெகா டிவியில்,


Thanks sigaththamilan sivaji sivaji

sivaa
1st July 2021, 02:09 PM
நடிகர்திலகத்தின் திருவிளையாடல் திரைக்காவியத்தின் சிறப்புகளில் சில,
*ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆன்மீக, மற்றும் புராண படங்களை காண மீண்டும் அடித்தளமிட்டது,
*அனைத்து கோவில்களிலும் நடிகர்திலகத்தின் குரல் ஒலித்தது,
* 224 முறை திருவிளையாடல் படத்தின் ஒலிச்சித்திரம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது,
*மூன்று திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழாவும், 17 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்தது,
*1965 ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் அன்றைய சென்னை நகரின் மொத்த வசூல் ரூபாய் 13,82,002 தான் அதுவரை திரைப்பட துறையின் அதிக வசூல் சாதனையாகும்,
அப்போதைய டிக்கெட் விலை ரூ 1, ரூ 1.50, ரூ 75 பைசா என்ற அளவில் மட்டுமே இருந்தது, இன்றைய நிலவர டிக்கெட் கட்டணத்தை ஒப்பிடுகையில் திருவிளையாடல் சென்னை நகரில் மட்டுமே பல நூறு கோடியை தாண்டுகிறது,
இன்று 700ம் அதற்கு மேலும் திரையிடப்பட்ட திரையரங்குகளில் மொத்த வசூல் ரூ100 கோடியை எட்டியது என்று பெருமை பேசுவதை காண முடிகிறது,
*1965 ஆம் ஆண்டு சென்னையின் மொத்த மக்கள் தொகை 17.3 லட்சம் பேரில் 11,02,567 பேர்கள் முதல் வெளியீட்டிலேயே கண்டு களித்தனர்,
* தகவல் உதவி :- ஆசிரியர் கா. வந்தியத்தேவன் அவர்களின் " வரலாற்றுச் சுவடுகள் " என்ற நூலிலிருந்து

Thanks Sekar Parasuram

sivaa
1st July 2021, 02:11 PM
நடிகர்திலகம் பெற்ற பத்திரிகை விருதுகள்-
சினிமா எக்ஸ்பிரஸ்
---------------------------------
1981- கீழ்வானம் சிவக்கும்-சிறந்த நடிகர்.
1983- மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா- சிறந்த நடிகர்.
1985- முதல் மரியாதை-சிறந்த படம்.சிறந்த நடிகர்.
1992- தேவர் மகன்- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
பிலிம்பேர்
------------------
1965- திருவிளையாடல்- சிறந்த படம்.
1968- லட்சுமி கல்யாணம்-சிறந்த படம்.
1971- பாபு-சிறந்த படம்.
1972- பட்டிக்காடா பட்டணமா- சிறந்த படம்.
1973- பாரதவிலாஸ்- சிறந்த படம்.கௌரவம் - சிறந்த நடிகர்.
1985- முதல் மரியாதை- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
பிலிமாலயா
----------------------
1954- அந்த நாள்- சிறந்த நடிகர். தூக்குத்தூக்கி - சிறந்த படம்.
1955- மங்கையர் திலகம்- சிறந்த படம்.
1956.ரங்கோன் ராதா- சிறந்த நடிகர்.சிறந்த நடிகை பானுமதி.
1957.மக்களைப்பெற்ற மகராசி- சிறந்த நடிகர்.
1958.உத்தமபுத்திரன் - சிறந்த படம்.
அன்னையின் ஆணை- சிறந்த நடிகர்.
பதிபக்தி - சிறந்த நடிகை சாவித்திரி.
1959- வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை - சிறந்த படங்கள். சிறந்த நடிகர்.
1960- படிக்காத மேதை- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
தெய்வப்பிறவி - சிறந்த நடிகை பத்மினி.
சிறந்த துணை நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
1961- பாவ மன்னிப்பு,பாசமலர், பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்- சிறந்த படங்கள். சிறந்த நடிகர்.
பாசமலர் - சிறந்த நடிகை சாவித்திரி.
1964.பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்- சிறந்த படங்கள்.
புதிய பறவை,நவராத்திரி - சிறந்த நடிகர்.
1965- திருவிளையாடல் - சிறந்த படம்.சிறந்த நடிகர்.
1966.சரஸ்வதி சபதம், செல்வம்- சிறந்த படங்கள்.
1967- திருவருட்செல்வர், இரு மலர்கள் - சிறந்த படங்கள். சிறந்த நடிகர். சிறந்த நடிகை- கே.ஆர்.விஜயா.
1968.தில்லானா மோகனாம்பாள் - சிறந்த படம்.சிறந்த நடிகை- பத்மினி.
உயர்ந்த மனிதன்-சிறந்த நடிகர். துணை நடிகர்- அசோகன்.
1969- தெய்வமகன்- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
1970.வியட்நாம் வீடு- சிறந்த படம்.சிறந்த நடிகர்.எங்கிருந்தோ வந்தாள்- சிறந்த நடிகை ஜெயலலிதா.
1971.பாபு- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
1972.நீதி,ஞானஒளி, தவப்புதல்வன், வசந்தமாளிகை - சிறந்த படங்கள்.
ஞானஒளி - சிறந்த நடிகர்.
வசந்தமாளிகை - சிறந்த நடிகை வாணிஸ்ரீ.
1973.பாரதவிலாஸ், ராஜ ராஜ சோழன், கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை - சிறந்த படங்கள். கௌரவம் - சிறந்த நடிகர்.
1974.தங்கப்பதக்கம் - சிறந்த படம்.சிறந்த நடிகர். சிறந்த நடிகை கே.ஆர்.விஜயா..துணை நடிகர் ஸ்ரீகாந்த்.
1975.அவன்தான் மனிதன்- சிறந்த நடிகர்.
1977.தீபம்- சிறந்த நடிப்புக்கான சேவை விருது.
1992. தேவர் மகன்- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
அம்பிகா அவார்ட் - 1992.தேவர் மகன்.- சிறந்த நடிகர்.
நந்தம்பாக்கம் லயன்ஸ் கிளப்- தங்கப்பதக்கம் - சிறந்த நடிகர்.
பாம்பே லயன்ஸ் கிளப்- விஸ்வநாத நாயக்குடு - சிறந்த நடிகர். மற்றும் திரையுலக சாதனையாளர் விருது.
தொடரும்.


Thanks John John

sivaa
1st July 2021, 02:21 PM
நடிகர் திலகம்' 'சிவாஜி' பற்றி குருசாமி 'நம்பியார்'. !!!
******************************************
'எம்.என். நம்பியார்' பல படங்களில் வில்லன்.! ஆனால் வாழ்க்கையில் ராமன்.! ஏகபத்தினி விரதன்.! தூய்மையான நடத்தைக்கு எடுத்துக் காட்டு!. !!!
இவர் 'சிவாஜி கணேசன்' பற்றி என்ன சொல்கிறார்
“நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்.! வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தாம் நினைப்பதை வெளிப் படுத்தக் கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்.! ஓர் அசைவால், பார்வை யால் எவ்வளவோ நமக்கு உணர்த்தக் கூடியவர்!. !!!
அவருடன் நான் நடித்த வேடங்களை இங்கு நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.!
‘பாகப்பிரிவினை’யில் தம்பியாக,! ‘பாதுகாப்பு' வில் அண்ணனாக,! ‘பாசமல’ரிலும் ‘மக்களைப் பெற்ற மகராசி’யிலும் மைத்துனனாக,! ‘உத்தம புத்திர’னில் மாமாவாக,! சில படங்களில் தோழனா க.! பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக,! அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும்
"அருமையான நல்ல நாட்கள்". !!!
முப்பத்தி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தாற் போல், படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு சிவாஜியை, போல் வருவதை இன்றைய நடிகர்கள் பின் பற்றினால் தயாரிப்பாளர் களுக்கு பல லட்சங்கள் வீணாகாது!” இப்படி பொம்மை சினிமா இதழுக்கு 1986ம் வருடம் நம்பியார் பேட்டியளித் தார். !!!
( படித்ததில் ரசித்தது... இது ஒரு மீள் பதிவு. !!! )

Thanks Jeyavelu Kandaswamy

sivaa
3rd July 2021, 07:51 AM
1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தின்மூலம் தமிழ்திரைப்பட துறைக்குள்,
புயலாக புகுந்தவர் கொடைவள்ளல் சிவாஜி கணேசன் அவர்கள்.

சிவாஜி கணேசனின் வருகைக்குப்பின் தமிழ் திரையுலகம் மறுமலர்ச்சி கண்டது.
தமிழ் திரைப்டத்துறையின் 75 வீதவணிகம் சிவாஜி கணேசனை
சுற்றியே வலம்வந்ததென்றே சொல்லலாம்.

பல தயாரிப்பளர்கள் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படம் தயாரிப்பதற்கு
தவம் கிடந்தார்கள்.
இந்த நிலையில் பக்ஷிராஜா ஸ்ரூடியோ அதிபர் மலைக்கள்ளன் திரைப்படத்தில்
சிவாஜி அவர்களை புக் செய்வதற்கு பலமுறை நம் திலகத்தை அணுகினார்.
ஆனால் சிவாஜி அவர்கள் வேறு பல படங்களில் மிகவும் பிஸியாக இருந்ததால்,
பக்ஷிராஜா ஸ்ரூடியோ அதிபரின் கோரிக்கையை ஏற்கமுடியவில்லை.
மீண்டும் மீண்டும் அவர் சிவாஜி அவர்களை அணுகியதால்
அண்ணனை (எம் ஜீ ஆர்) வைத்து படத்தை எடுங்கள் என்று கூறி அனுப்பியதால்,
மலைக்கள்ளன் படத்தில் எம் ஜீஆரால் நடிக்கமுடிந்தது.

இத நடந்துமுடிந்த விடயம். ஆனால் அண்மையில் இது விடயம்
பிரஸ்த்தாபிக்கப்பட்டபொழுது எம் ஜீ ஆர் ரசிகநண்பர்கள்
அப்படியெல்லாம் நடக்கவில்லை ஆதாரம் உண்டா என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.
எம் ஜீ ஆர் ரசிகநண்பர்களுக்காக இந்த ஆதாரம்.

5796

sivaa
4th July 2021, 05:13 AM
1. 1962-ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பலே பாண்டியா’. இந்தப் படத்தில் தனது காட்சிகளை 11 நாட்களில் நடித்து முடித்துக் கொடுத்தார் சிவாஜி. இதற்காக தினமும் அவர் 20 மணிநேரம் தொடர்ந்து உழைத்தார் !
2. மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி கணேசனுக்கு மே 1 என்பது கூடுதல் சிறப்புமிக்கதாகும்.
ஆம் 1952-ம் ஆண்டு மே 1-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9 மணியளவில் சிவாஜிக்கும் கமலாம்மாளுக்கும் சுவாமிமலையில் திருமணம் நடைபெற்றது. சிவாஜியின் அக்காள் மகள்தான் கமலம்மாள். அதாவது - சிவாஜியின் பெரியம்மா மாணிக்கத்தம்மாவின் பேத்தி.
3. சிவாஜி பிறந்த சமூகத்துக்கும் 333 பட்டப் பெயர்கள் உண்டு. இதில் சிவாஜியின் குடும்பத்து பட்டப்பெயர் ‘மன்றாயர்’ என்றழைக்கப்பட்டது!
4. சிவாஜியின் முதல் படம் : பராசக்தி (1952)
100-வது படம் : நவராத்திரி
125வது படம் : உயர்ந்தமனிதன்
150-வது படம் : சவாலே சமாளி
200-வது படம் :திரிசூலம்
250-வது படம் : நாம் இருவர்
கடைசிப் படம் (288-வது படம்) : பூப்பறிக்க வருகிறோம் (1999)
5. சிவாஜி கணேசனை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர்களில் முதன்மையானவர் ஏ.சி.திருலோகச்சந்தர். இவர் சிவாஜியை வைத்து 20 படங்கள் இயக்கியுள்ளார். அவருக்கு அடுத்து டி.யோகானந்த் - 19 படங்கள். ஏ.பீம்சிங் - 18 படங்கள், சி.வி.ராஜேந்திரன் - 16 படங்கள், பி.ஆர்.பந்துலு- 13 படங்கள்ம, பி.மாதவன் - 13 படங்கள், ஏ.பி.நாகராஜன் -12 படங்கள் சிவாஜியை வைத்து இயக்கியுள்ளார்!
6. பெருந்தலைவர் காமராஜர் கடைசியாக பார்த்த திரைப்படம், சிவாஜி கணேசன் வாஞ்சி நாதனாக சிறப்பு வேடத்தில் நடித்த ‘சினிமா பைத்தியம்’ படம்தான். அதேபோல் காமராஜர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி - சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழாதான்!
7. ‘வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஜெயலலிதாதான். அவரது தாயார் சந்தியாவின் திடீர் மரணம் காரணமாக ஜெயலலிதா இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகுதான் சிவாஜிக்கு ஜோடியாக வாணிஸ்ரீ நடிக்க ஒப்பந்தமானார்!
8. ‘மலைக்கள்ளன்’ படத்தில் முதலில் சிவாஜிதான் நடிப்பதாக இருந்தது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவலை திரைப்படமாக எடுக்க, கோவை பட்சி ராஜா பிக்சர்ஸ் அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு தயாரிக்க முடிவு செய்து, அதில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க முயற்சித்தார்.
அந்த சமயத்தில் சிவாஜியின் கையில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்ததால்... அவரால் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகுதான் அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பை வாங்கித் தந்தவரே சிவாஜிதான்!
9. தமிழகத்தில் மிக உயரமான கட்-அவுட் முதன்முதலாக சிவாஜி படத்துக்குத்தான் வைக்கப்பட்டது தெரியும்தானே. சென்னையில் சித்ரா தியேட்டர் வாசலில் ‘வணங்காமுடி’ திரைப்படத்துக்குத்தான் முதன்முதலில் 80 அடியில் கட்-அவுட் வைக்கப்பட்டது. அதற்கு முன்பு எந்த ஒரு நடிகருக்கும் தமிழகத்தில் கட்-அவுட் வைக்கவே இல்லை!
நன்றி !
தொகுப்பு : மானா பாஸ்கரன்.
இந்து தமிழ் திசை

Thanks Ganesh Pandian

sivaa
4th July 2021, 05:34 AM
சவாலே சமாளி ( 03.07.1971)
இன்று ஐம்பதாண்டுகள் நிறைவு...
நடிகர் திலகத்தின் 150-வது வெற்றிக் காவியமான சவாலே சமாளி வண்ணத்திரை ஓவியம் இன்று ஐம்பதாண்டுகளை நிறைவு செய்கிறது. 1971 ஜூலை 3 அன்று வெளியான இப்படத்தில் ஜெயலலிதா, நம்பியார், விஜயகுமாரி, முத்துராமன், நாகேஷ், டி.கே.பகவதி, வி.எஸ் ராகவன், எஸ்.வரலட்சுமி, காந்திமதி ஆகியோர் நடித்திருந்தனர். படம் ஆண்டான் அடிமை, ஏழை பணக்காரன், மேல் வர்க்கம் கீழ் வர்க்கம் என கம்யூனிஸம் பேசியது என்றாலும் அதற்குள் ஒரு கணவன் மனைவி வாழ்க்கையையும் உட்படுத்தி விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் மல்வியம் ராஜகோபால். மனைவி என்றால் பெற்றோர் பேசி முடித்த மனைவியோ, காதலில் கரம் பிடித்த மனைவியோ அல்ல. தேர்தல் பந்தயத்தில் வென்ற மனைவி. அதுவே ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம். தன் கழுத்தில் தாலி ஏறணுமா அல்லது தாயின் கழுத்திலுள்ள தாலி இறங்கனுமா என்ற நிலை வரும் போது படித்த நாகரீக நங்கையாயினும் தாயின் தாலியைக் காப்பாற்ற, பிடிக்காத வாழ்க்கையை தியாக உள்ளத்தோடு ஏற்கிறாள். அவள் ஆசைக் கனவுகள் நொறுங்குகின்றன. பிடிக்காத கணவனை, பின்னர் முடிவில் எப்படி தானே விரும்பி ஏற்கிறாள் என்பதே சுவாரஸ்யமான கதைப் பின்னல். தொய்வில்லாத அழகான கதைக்கு மல்லியமே வசனம் தீட்டி இயக்கியிருந்தார். கவியரசரின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பாக இசை கூட்டியிருந்தார். பி.சுசீலா பாடிய சிட்டுக்குருவிக் கென்ன கட்டுப்பாடு பாடல் அவருக்கு இரண்டாம் முறையாக தேசிய விருதைப் பெற்றுத் தந்தது (முதல் விருதும் நடிகர் திலகம் படம் மூலம்தான்). நடிகர் திலகத்தின் 150வது படத்தையொட்டி, திருச்சியில் பிரம்மாண்ட ஊர்வலமும், இரண்டு நாட்கள் ரசிகர் மன்ற மாநாடும் நடைபெற்றது. திருச்சி நகரமே மக்கள் திரளால் குலுங்கியது. படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

5797

5798

Thanks Mohamed Thameem

sivaa
4th July 2021, 05:44 AM
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.(july 3 rd 1971)
By Gopal
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
By Gopal


Thanks Gobalakrishnan Sundararaman

sivaa
4th July 2021, 05:47 AM
நடிகர் திலகத்தின் திரிசூலம் 200 வது படம்
எதிரிகளின் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல 200 நாளைக் கொண்டாடியதோடு தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனையை நிகழ்த்தியது,
இதற்கு முன் தங்கப் பதக்கம் செய்த சாதனைகளை எதிர் கூட்டம் மறைத்து மறுத்ததுப் போல திரிசூலத்தின் வெற்றிக்கு முன்னால் நிறகவே முடியவில்லை
வசூல் புயலில் சிக்கி காணாமல் மறைந்தார்கள்,
மதுரையில் நடைபெற்ற திரிசூலம் வெற்றி விழா மேடையில் நடிகர் திலகத்திற்கு வெள்ளியினால் ஆன திரிசூலத்தை பரிசாக வழங்கும் ரசிகர்கள்( கொடுத்து வைத்த ரசிகர்கள்)

5799

Thanks Sigaththamilan Sivaji Sivaji

sivaa
4th July 2021, 05:50 PM
கிரிக்கெட் விளையாட்டில் எத்தனை எத்தனை records maintain செய்கிறார்கள் தெரியுமோ?
கிறுக்குத்தனம் அது என்று எண்ணியிருந்தேன்..
நாளாவட்டத்தில் அந்த கிறுக்கு எனக்கும் ஒட்டி கொண்டது...
எங்கள் வீட்டில் வாரத்தில் எத்தனை நாள் வெறும் தயிர் சாதம்,எந்த வாரத்தில் இது அதிகம் என்றெல்லாம் நானுமொரு ரெகார்ட் சார்ட் மெயின்டைன் செய்ய ஆரம்பித்தேன்..
விளைவு?
சில நாட்களுக்கு முன் மருத்துவர் தினம் கொண்டாட பட்டது..
அன்று எத்தனை படங்களில் எத்தனை முறை எத்தனை வித மருத்துவராக N.T.நடித்திருந்தார் என்று கணக்கெ டுத்தேன்.....
ஷேக்ஸ் பியரின் எத்தனை பாத்திரங்களை N.T.ஏற்று சிறப்பித்து இருக்கிறார் என்று இன்னொரு கணக்கெடுத்தேன்...
இன்று N.T.எத்தனை படங்களில் மரணம் அடைவதாக நடித்திருக்கிறார் என்று கணக்கிட்டேன்,இன்று அந்த நினைவு எனக்கு மிகுந்திருந்தது என்பதால்...
அத்துடன் நில்லாது பதிவும் செய்ய துணிந்தேன்...
பொருத்தருள்வீர் புண்ணியரே!
பிழை இருந்தால்..
என் செயல் தவறானால்...
சில முக்கியமான உலக தொடர்களில் top ten catches என்று காட்டுவார்கள்..
அப்படி ஒரு பட்டியல் N.T.அவர்களின் மரண காட்சிகளில் போட முடியும் என்றாலும் மனம் துணிய வில்லை..
ஆனால் நம்பர் ஒன் காட்சி எது?
என்று ஒரு கேள்வி எழுமானால்,
நண்பர்களே! விடை ஒன்றே தான்..
சூரியன் கிழக்கில் தான் உதிப்பான் என்பது போல மாற்றம் இல்லாதது....
அந்த கை வீசம்மா கை வீசு....மரணம்.....
பாசமலர்கள் படத்தில்...
வழக்கமாக ஒரு நட்சத்திர நடிகர் கதைப்படி படத்தில் இறந்து பட்டால் அந்த படம் அதோகதி தான்..
விதி விலக்கே இருக்காது.
ஆனால் பாசமலர்கள் படத்திற்கு லட்ச கணக்கில் மக்கள் (பால் பேதமின்றி இருப்பாலரும் )திரள் திரளாக வந்து கண்ணீர் மல்கினார்கள்...
அந்த பாத்திரங்கள் மரணித்தன என்றே மனம் கலங்கினார்கள்..
கண்ணீர் பெருக்கினார்கள்..
அபிமான நட்சத்திரங்களின் மறைவாக,மரணமாக காண வில்லை..
அந்த படத்திற்கு முன்னரே கூட கதைப்படி மரணம் அடையும் பாத்திரமாக கணக்கற்ற முறை தோன்றியிருந்தார் N.T..
கள்வனின் காதலியில் முத்தயன் மரணம்...
காத்தவராயனில் காதலர் இருவர் மரணம்...
அம்பிகாபாதியிலும் அவ்விதமே.....
உத்தம புத்திரனில் இருவரில் ஒருவர் மரணம்..
பலே பாண்டியாவில் மூவரில் மருது என்கிற பேட்டை வாத்தியார் மரணம்..
நவராத்திரி படத்தில் ஒன்பது பாத்திரங்களில் அந்த கொலையாளி பாத்திரம் மரணம்..
இப்படி பல பல மரணங்கள்...
அடுத்து என்னை பாதித்தது கர்ணனின் மரணம்...
எத்தனை சதிகள்,சாபங்கள்,விதியின் விளையாட்டுகள் அந்த ஒரு மரணத்தில்...
இந்திரன் கவச குண்டலங்களை யாசித்து பெற்ற சதி...
குந்தி கர்ணனிடம் தாய் என்கிற உரிமையில்,அர்ச்சுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை ஏவ கூடாது என்று வரம் பெற்ற சதி...
சல்லியன் இனி சாரத்தியம் செய்ய மாட்டேன் என்று யுத்த பூமியில் கைவிட்டு சென்ற சதி...
படு களத்தில் நீ கற்ற அஸ்த்திர வித்தைகள் மறந்து போகட்டும் என்கிற பரசுராமரின் சாபம்....
யுத்த பூமியில் உன் தேர்கால் புதைய கடவது என்கிற புத்திரணை இழந்த ஒரு வேதியனின் சாபம்..
இத்தனைக்கும் மேலாக தர்ம தேவதை,கர்ணனின் மீது பார்த்திபன் தொடுக்கும் பாணங்கள் எல்லாவற்றையும் மலர் மாலைக்களா க்கி காத்து நிற்கும் தருணத்தில் பரந்தாமனே வேதியன் உருவில் வந்து உன் தர்மத்தின் பலனை எல்லாம் தாரை வார்த்து கொடு என்று இரந்து பெற்று கர்ணனை வீழ்த்திய விபரீதம்...
கர்ணனின் மரணம் கொடியதே..
நடித்து காட்டினாரே நம்முடையா N.T.
ஹும்! விலகி போங்கள்...துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை என்ற பாஞ்சை சிங்கத்தின் மரணம்......
சரித்திரம் பேசிய மரணம் அல்லவா அது..
பெருமிதமும் துயரமும் தீரமும் ஒரு சேர காண்பவர் நெஞ்சங்களில் பொங்கிய விந்தையை விளைவித்தவர் N.T.தானே..
பிரெஸ்டீஜ் பத்ம நாபன்...
பாரிஸ்டர் ரஜினிகாந்த்...
அக்ராஹாரங்கள் மெய் சிலிர்த்து பேசின...இரு கதாப்பாத்திரங்கள் பற்றி..
நாமும் உறைந்து போய் நின்றோம் என்பதுதானே உண்மை..இரு படங்களின் முடிவிலும்...
வ.உ.சிதம்பரனார்,கொடி காத்த குமரன்,பகத் சிங்.....
மூன்று தீரர்களின் தியாக மரணங்களால் தேசியம் தமிழ்நாட்டில் இன்றும் நம்மிடையே இருக்கிறதே சில துளியேனும்..காரணம் அந்த சிங்க தமிழன் அல்லவா!
தெய்வ மகன்!
அம்மா,உடம்பெல்லாம் வலிக்குதும்மா..
கட்டி பிடித்து கொள்ளம்மா என்று கதறிய கண்ணனின் மரணம்...
விளக்கனைத்து விட்டு போ,ரஹீம் என்ற தீபம் அணைந்த காட்சி...
கர்மவீரரின்மூச்சு நிற்பதற்கு முன் பேசிய இறுதி பேச்சல்லாவா அது..
தீபம் படத்தில் அந்த காட்சியை அத்தனை ஏடுகளும் குறிப்பிட்டு எழுதின..
மகா கவி காளிதசனின் மரணம்...
வாழ்வில் விரக்தியுட்றேன்,விதி முடிவு தேவதையே!
விரைந்து நீ வா....
இறுதியாக அடுத்த தலைமுறை நடிகர்கள் இருவருடன் நடித்த தேவர்மகன்...
படையப்பா....
இரண்டிலுமே கூட மரணம் தான் N.T.அவர்களுக்கு..
சட்டென்று நிகழ்ந்து விடும் மரணம்..
இரு படங்களிலுமே....
மிக பெரும் சிறப்புகள் செய்ய பட வேண்டும் அவருக்கு...
மாநில,ஒன்றிய அரசுகள் இரண்டிற்குமே இருக்கிறது அந்த பொறுப்பு...
என்றும் N.T.அவர்களின் நினைவில்..
V.Vino Mohan....


Thanks Vino Mohan

sivaa
5th July 2021, 01:32 AM
ஜூலை மாதத்தில் நாம் இருக்கிறோம், நடிகர்திலகத்தின் நினைவு மாதம்,
நினைவு சிறப்பு பதிவு.
ஒரு காலத்தில் அயல்நாட்டினர்
தமிழகத்தை 'சிவாஜி கணேசன் தேசம்' என்றுதான் குறிப்பிடுவார்களாம் , அந்த அளவிற்கு நடிகர்திலகத்தின் நடிப்பானது கடல் கடந்த புகழினை எட்டியிருந்தது,
என்பது வருட தமிழ் சினிமாவில்
ஐம்பது வருடங்களுக்கு மேலும் நடிகர்திலகத்தின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
பராசக்தி- - குணசேகரன்,
பாகப்பிரிவினை- - கன்னையா,
வீரபாண்டிய கட்டபொம்மன்,
கப்பலோட்டிய தமிழன்-- வ.உ.சி,
சேரன் செங்குட்டுவன்,
சாக்ரடீஸ்,
ஒத்தெல்லோ,
அசோக சக்கரவர்த்தி,
வீர சிவாஜி,
வாஞ்சி நாதன்,
திருப்பூர் குமரன்,
பாசமலர் ராஜ சேகர்,
அப்பர்,
சிக்கல் சண்முக சுந்தரம்,
பாரிஸ்டர் ரஜினிகாந்த்,
டி.எஸ்.பி.சௌத்ரி,
பிரிஸ்டீஜ் பத்மனாபன்,
பாவமன்னிப்பு ரஹீம்,
ஞானஒளி ஆன்டனி,
இத்தனை நீண்ட நடிப்புப் பட்டியல் கொண்ட உலகத்து நடிகர் ஒருவரும் இல்லை,
காலம் அந்தக் கலைப்பெட்டகத்தை கைப்பற்றிக் கொண்டது, கண்ணாடி பெட்டகத்துக்குள் கண் மூடிக்கிடந்த நடிகர்திலகத்தைப் பார்த்து கவிஞர் வைரமுத்து சொன்னது,
ஒரு மனிதன் இறந்து போகும் போது நான்கு பேர் இறந்து போகின்றனர்,
ஒரு கணவன் இறந்து போகிறான்,
ஒரு தகப்பன் இறந்து போகிறான்,
ஒரு மாமன் இறந்து போகிறான்,
ஒரு மைத்துனன் இறந்து போகிறான்,
ஆனால் மாபெரும் நடிகர்திலகத்தை இழந்து பார்க்கும் போது
சாக்ரடீஸ் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
சேரன் செங்குட்டுவன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
கட்டபொம்மன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
ராஜ ராஜ சோழன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்.
ஒரு எழுபது வருட மனித வாழ்க்கையில் மூவாயிரம் வருடம் வாழ்ந்த ஒரே நடிகன்" நடிகர் திலகம்"
மட்டுமே.
ஒரு முகத்தில் ஓராயிரம் பாவங்கள் காட்டிய ஒப்பற்ற கலைஞர்,
ராமனின் பாதம் பட்ட கல் அகலிசை ஆனது போல் நடிகர்திலகம் பேசிய வசனங்களால் தமிழ் மேலும் இனிமையானது.
நாளைக்கும் சேர்த்து உணவைத் தேடுகிற எறும்பு போல,
பாலைவனப் பயணத்தில் தன்னீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம் போல இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கானப் புகழை சேர்த்து சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்
நன்றி :- பிலிம் காட்டியவர்கள் என்ற நூலிலிருந்து

Thanks Sekar Parasuram

sivaa
5th July 2021, 01:34 AM
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து

Thanks Sekar Parasuram

abkhlabhi
8th July 2021, 05:47 PM
அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரில் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம்

balakrishnan

sivaa
11th July 2021, 07:56 PM
அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரில் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம்

balakrishnan

வாழ்த்துக்கும், தங்கள் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்து வாருங்கள், உங்களால் முடிந்த விடயங்களை பதிவிடுங்கள்.

sivaa
11th July 2021, 08:00 PM
சிவாஜி பற்றி ஹிந்தி நடிகர் திலீப்குமார் என்ன சொன்னார்?
நன்றி தாய்.comJune 4, 2021
சிவாஜி பற்றி ஹிந்தி நடிகர் திலீப்குமார் என்ன சொன்னார்?
1993-ல் ‘தேவர் மகன்’ படத்தின் வெள்ளிவிழா சென்னையில்.
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள் இயக்குநர் ஷியாம் பெனகலும், இந்தியில் நடிகரான திலீப் குமாரும். தனது மனைவி சைரா பானுவுடன் வந்திருந்தார் திலீப்.
சிறப்பு விருதுகள் வழங்குவதற்கு முன்பு தேவர் மகன் படத்திலிருந்து சில காட்சிகளைத் திரையிட்டார்கள்.
சிவாஜிக்கு விருது வழங்குவதற்கு முன்பு உத்தமபுத்திரன் படத்திலிருந்து பிரபலமான “யாரடி நீ மோகினி” பாடலைத் திரையிட்டார்கள்.
பாடலில் சிவாஜி காட்டிய ஸ்டைல் பலரையும் ரசிக்க வைத்தது.
சிவாஜியின் நடிப்பில் வியந்துபோன திலீப் குமார் சிவாஜி காதில் கிசுகிசுத்துப் பேசினார்.
பிறகு மேடையில் பேசும்போது சொன்னார் திலீப்குமார்.
“நானும், சிவாஜியும் 50 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது அவரது தாடியைப் பார்க்கும்போது அழகான ஞானியைப் போல காட்சி தருகிறார்” என்றதும் கூட்டத்தில் ஏக கைதட்டல்.
சிவாஜியின் முகத்தில் சின்னதாக ஒரு மெல்லிய புன்னகை.

Thanks Raja Lakshmi (Nadigarthilakam sivaji visirigal)

sivaa
11th July 2021, 08:06 PM
TMS க்கு சினிமாவில் முதல் ஜனரஞ்சக சந்தர்ப்பம் கொடுத்து தூக்கி விட்டதும் அவருக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்ததும் சிவாஜி கணேசன் தான்!
TMS அவர்களே அதை இந்த காணொளியில் சொல்வதை கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=2g7Sp2Qe2i8
கேள்விகேட்பவர் எவ்வளவுதான் சாதுரியமாக கேள்வி கேப்டதாக நினைத்து கேட்டாலும் TMS அவர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லமல் பதில் சொல்கிறார் பாருங்கள்! Eg சிவாஜிக்கு உயிர் கொடுத்தது நீங்கள்தானே? என்று கேட்கிறார் பேட்டி காண்பவர். TMS அழுத்தம் திருத்தமாக கேட்டவரின் முகத்தில் அடித்தமாதிரி சொல்கிறார் "சிவாஜி நடித்ததினால்தான் எனக்கு புகழ் வந்தது" என்று! அதுமட்டுமல்ல வெகு தெளிவாக சொல்கிறார் அதாவது MGR க்கு பாடியதால் எனக்கு புகழ் வந்தது, ஆனால் சிவாஜிக்கு பாடிய பாடல்கள் எல்லாம் அவரதாக போய்விட்டது! ஏனென்றல் சிவாஜியின் தத்ரூப நடிப்பு, வாயசைப்புகளால், குரல் ஒற்றுமை எல்லாம் அது அவர் பாடுவதாகவே மக்கள் நினைத்தார்கள்! அடுத்து சிவாஜியே தன்னை தூக்கு தூக்கியில் படவைத்தது பற்றி சொல்கிறார். எல்லோரும் சிதம்பரம் ஜெயராமனை சிவாஜிக்கு பாட சிபாரிசு செய்தவேளையில், சிவாஜி மட்டும் "தூக்கு தூக்கி" படத்தில் முதல் மூன்று பாடல்களை OK செய்திருக்காவிட்டால் நான் வேறு வேலைக்கு (ஆடிட்டர்) போய் இருப்பேன்! சிவாஜி பாடலை கேட்ட பிறகு இசை அமைப்பாளர் , படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் எல்லோரும் சிவாஜி என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து நிற்கையில், சிவாஜி என்னை அருகில் அழைத்து ரொம்ப நன்றாக இருக்கிறது, நீங்களே எல்லா பாடல்களையும் எனக்கு இந்த படத்தில் பாடுகிறீர்கள் என்று கணேசன் என் சினிமா வாழ்வில் விளக்கேற்றி பிள்ளயார் சுழி போட்டு கொடுத்தார்! so எனக்கு வாழ்வு கொடுத்தது சிவாஜிதான் என்று சொல்கிறார்! மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதல்லவா அதனால் சிவாஜி எனக்கு இளையவராக இருந்தாலும் அவருக்கு நான் மரியாதையை கொடுத்துதான் பேசுவேன் ஏன் என்றால், அகிலஉலகத்துல ஒரு சிறந்த நடிகரா சிவாஜி இருக்கார்னா அது நம் தமிழ் நாடு செய்த தவப்பயன், அவருக்கு நான் பாடியது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது அது என் பாக்கியம் என்று பூரித்து பேட்டியளிக்கிறார்! அதுமட்டுமல்ல மேலும் சொல்கிறார், நான் 10 ரூபா வாடகை வீட்டில் இருந்தேன் பழைய சைக்கிளில் தான் ஸ்டுடியோக்களுக்கு போய் கொண்டிருந்தேன் - ஆனால் தூக்கு தூக்கியில் சிவாஜி என்னை பாட approve செய்து அவருக்கு நான் பாடிய பிறகு, 10 கார் களுக்கு மேல் நான் வசித்த இடம் தேடி வந்தது என் குடிசைக்கு! இந்த பெருமை எல்லாம் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எல்லாத்துக்கும் மேல் என்னை பாடவைத்து என்படல்களை தன் பாடலாக மாற்றி தன் நடிப்பால் பாவத்தால் உயிர் கொடுத்து மக்களிடம் புகழ்பெற செய்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு தான் சேரும் என்று மனதார நன்றி சொல்கிறார்! ஞானஒளி பாடல் பாடியதை சிவாஜி பாராட்டியதை வெகுவாக புகழ்ந்து பெருமையாக சொல்கிறார் - அதேபோல் தனது கனவு பாடலானா உயர்ந்தமனிதன் பாடல் - அந்தநாள் ஞாபகம் .. அதில் சிவாஜியின் நடிப்பு, மற்றும் குங்குமம் படத்தில் சீர்காழி குரல் தனக்கு ஒத்துவரவில்லை என்று TMS ஐ பாடவையுங்கள் என்று சிவாஜி சிபாரிசு செய்ததையும் இங்கு நினைவு கூறுகிறார்! சந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் சிவாஜி TMS க்கு உதவி இருக்கிறார் என்பது பெருமைப்படவேண்டிய விஷயம் - அது சிவாஜியின் பெருந்தன்மையை காட்டுகிறது

Thanks Kugan Kuganathan (Nadigarthilakam sivaji visirigal)

sivaa
12th July 2021, 12:19 AM
உத்தமபுத்திரன் படம் பற்றி சத்யா மூவிஸ் திரு ஆர்.எம் வீரப்பன் திரு எம்ஜிஆரிடம் பொய் கூறியது ஏன்?


https://youtu.be/RA03cnzKUFQ


Thanks NadigarThilagamTV

sivaa
14th July 2021, 07:53 AM
ஒன்ஸ் மோர் பார்த்தப்போ சிவாஜி தான் தெரிஞ்சார்...’ - உருகும் 90’ஸ் கிட் #MyVikatan
விகடன் வாசகர் மனோ வின் அருமையான கட்டுரை.
கருப்பு வெள்ளை காலக்கட்டம் முதல் கலர் சினிமா வரை நடித்த அனைத்து படங்களிலும், காட்சிகளிலும், ப்ரேம்களிலும் தன்னை, தனது தனித்துவமான உடல்மொழிகளால், வசன உச்சரிப்புகளால் நிலைநிறுத்திக்கொண்ட ஒரு மாபெரும் கலைஞனை பற்றி இங்கு பகிர விரும்புகிறேன். சாதாரணமாக திரையில் பார்த்த ஒரு கலைஞரை, அவரின் ரசிகனான என் தமையனின் நேத்திரங்களின் வழியாக கண்ட தரிசனம் இது. அவரின் நடிப்பு நிச்சயம் ஒரு சரித்திரம் தான்.
90’s கிட்ஸ் தலைமுறையில் பிறந்த என்னை முதலில் கவர்ந்தது விஜயும் அஜித்தும் தான். ரஹ்மான் தன் இசையால் நம் உணர்வுதாளங்களை தட்டி எழுப்பிய காலமது. திடீரென்று வெளிச்சம் வீசிச் செல்லும் மின்னலைப்போல்தான் எனக்கு சிவாஜி என்னும் உன்னதக்கலைஞனின் நடிப்பு அறிமுகமாகியது. முதன்முதலாக 'ஒன்ஸ் மோர்' படம் பார்த்தப் பொழுது, தனது 'சாந்தா'வுக்காக ஏங்கும் அந்தக் காட்சிதான் என்னை அவரை நோக்கி ஈர்த்த முதல் நிகழ்வு. படம் முடிந்த பின்பு 'இருவர் உள்ளம்' படம் போட மாட்டார்களா என்று காவிய புதன் விளம்பரங்களை விடாமல் பார்த்திருக்கிறேன். ஏனோ அந்த ‘சாந்தாவும்’, ‘நினைவெங்கே போகிறது? ' பாடலும் நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.
அதன்பின், ஒரு சில ஆண்டு இடைவெளியில் மறுபடியும் சிவாஜி என்றொரு கலைஞனின் மற்றொரு பரிணாமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடை விடுமுறையென அனைவரும் தாத்தா பாட்டி வீட்டில் முகாமிட்டிருந்தோம். என்ன முரண்டு செய்தாலும், மதியம் கண்டிப்பாக வீட்டினுள் அடைத்துவிடுவர் தாத்தா . அப்படிப்பட்ட வேளையில் மறுபடியும் ஒரு படம், 'பாரத விலாஸ்'. கடைசி வரை மனசாட்சியுடன் பேசிப் பேசியே மனிதர் நம்மையும் அப்படி புலம்பவைத்து விடுவார். அதுவென்னவோ, இன்று வரை புதியபறவை 'கோபாலை' விட, பாரத விலாஸ் 'கோபால்' தான் என்னுடைய பேவரைட்.
மற்றோர் நாள் , ஏதோ ஒரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பப்பட்டு, நம்மை அப்படியே கட்டிப்போட்ட படம், "திருவிளையாடல்". அதிலும் கலர் கலர் லைட் செட்டிங்ஸ் வைத்து, "சங்கதனை கீறு கீறு எனக்கீறும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்ல தக்கவன்?" டயலாக் கேட்டப்போது ,"எப்படி இத மனப்பாடம் பண்ணிருப்பார்?" என்று மட்டுமே சிந்தனை ஓடியது. நக்கீரர் விடவில்லையே, " சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம், சங்கை அறிந்துந்து வாழ்வோம், அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை." வசனமும், அதற்கு சிவாஜி மேல் பரவுகின்ற வெளிச்சமும், அவர் புருவத்தூக்கலும் அல்ட்ராலெஜெண்ட் லெவல்.
அது நடுத்தரக்குடும்பங்களில் CD பிளேயர் வந்த காலம். எதாவது ஒரு படத்துக்கு CD கிடைச்சா, அது தேயும் மட்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்படிதான் அறிமுகம் ஆனார்கள் ராஜராஜசோழனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்.
தேவாரத்தை மீட்டெடுத்த பெருமானேன்னு எல்லாரும் ராஜராஜனை சொல்வதே எனக்கு அப்போதுதான் தெரியும். கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுல தஞ்சை பெரிய கோவிலை வச்சிக்கிட்டு, ராஜராஜன் அரசாண்ட பூமியிலேயே வாழ்ந்துட்டு ராஜராஜன் பத்தி தெரியாத எங்கள் தலைமுறைக்கு அவர்தான் ராஜராஜச்சோழன். `தஞ்சை பெரியக்கோவில் வாழ்க வாழ்கவே` பாட்டுக்கேட்டாலே மனசில் வரும் ராஜராஜன் சிவாஜி தான்.
எத்தனை பேருக்கு அந்த அரச கம்பீரம் வரும்? அக்கன் குந்தவையிடம் பணிவு, மனைவியிடம் காதல், பெருந்தச்சனிடம் சீடன், மகளுக்கு தகப்பன், ராஜதந்திரங்கள் நிறைந்த மாமன்னன் என எல்லா உடல்மொழியிலும் அவர் காட்டிய அபாரத்திறமை இருக்கிறதே! சொல்லில் மாளாது.
திருவருட்செல்வரில் "மன்னவன் வந்தானடி" பாடல். நளினம், கம்பீரம், ஆசை அனைத்தையும் நடையிலே காட்ட முடியுமா என்ன? ஆனால் இன்றும் அவை காண்போரின் மனதில் நீங்காது. கந்தன் கருணையில் சிறு பாத்திரம் தான்.
வீரபாகுத்தேவர். ஆனால் வசனமும் காட்சி நிகழ்வுகளும் படம் முடிந்த பின்னர் கூட நம்மை தொடரும்.
" நீ சூரன், நான் வீரன்" என சூரனிடம் கொக்கரிப்பதாகட்டும், வெற்றிவேல் வீரவேல் என்று படை நடத்துவதாகட்டும், இறுதியில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில், " தாயே இப்பொழுது நீங்கள்" என்று இயல்பாக சிக்கி திண்டாடுவதாகத்தும், அவரை தவிர்க்கவே முடியாத இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார்.
சிவாஜி ஒரு வசந்தகாலக் கலைஞன். அதனால் தான் அவரின் வசந்த மாளிகை எப்பொழுது பார்த்தாலும் நம்மை கனக்க வைக்கின்றது. ஒரு அதீத சுயமரியாதை உள்ள பெண்ணிற்கும், அன்பினை தேடித்தேடி அலையும் பணக்கார ஆணிற்குமான காதல் எல்லா வரையறைகளையும் தாண்டிய நெகிழ்வல்லவா? சிறுப்பிராயம் முதல், அன்பிற்காக ஏங்கி, தன்னை ஒரு easy go மனிதனாக காட்டிக்கொண்ட மனிதனை எப்போது கற்பனை செய்தாலும், வசந்த மளிகை 'ஆனந்த்'தான் நம் நினைவிற்கு வருவார்.
அன்பிற்கும், அதிகாரத்திற்குமான இடைவெளியை இட்டு நிரப்பமுடியாமல் தவிக்கும் அத்துணை நேரங்களிலும், `எங்க சின்னவர் கெட்டுபோய்ட்டாரே தவிர கெட்டவர் இல்லைம்மா` என்ற குரல் நம்மை அறியாமல் மனதிற்குள் ஒலிக்கும். `மயக்கமென்ன` பாடலில் காதலின் ஆழத்தை அந்த கண்ணாடி அறையின் சுவர் வழியே கடத்தும் அழகிற்கு கொஞ்சமும் குறையாமல், `யாருக்காக` பாடலில் கசிந்துருகும் வலியினை விரவ யாரால் இயலும்? தனக்கு தானே சரிநிகர் சமானமான வெகுஜனக்கலைஞர் அவர்.
திரிசூலத்தில் `சுமதி` என்ற விளிப்போடு பாடும் `மலர் கொடுத்தேன்` கண்டு கண்ணீர்விடாத கண்களே இருந்திருக்க முடியாது.
`படிக்காத மேதை` ரங்கனாக நம்மை உருக வைக்கும் அதே வேளையில் `பார் மகளே பார்` சிவலிங்கமாக கௌரவம் காட்டி தள்ளி நிற்கவும் வைப்பார்.
தந்தைக்கு பயந்துச்சாகும் ` உயர்ந்த மனிதன்` ராஜுவும் அவர்தான். தந்தையையே அரட்டி வைக்கும் `ஊட்டி வரை உறவு` ரவியும் அவரேதான்.
அவரே `வீரபாண்டிய கட்டபொம்மனாய்` சிம்மகர்ஜனையும் செய்வார், `புதிய பறவை` கோபாலாய் கொலையும் செய்வார்.
`அன்புள்ள அப்பாவின்` ராஜசேகரன் மகளின் திருமணத்தில் பாடிய `மரகதவல்லிக்கு மணக்கோலம்` ஒலிக்காத திருமண வீடுகளே கிடையாது. காலங்கள் மாறினாலும் `எந்தன் வீடு கன்று இன்று எட்டி எட்டி போகிறது` வரியில் கண்ணீர் விடாத தகப்பன்களே கிடையாது. இன்றும் தேவர் மகனின் `இதெல்லாம் என்ன பெருமையா? கடமை` template Meme creator -களின் நிலைவாசல். அதிலும் அந்த படத்தின் அப்பா-பையன் உரையாடலும், அதன் கனமும், அந்த நிமிடம் நம் கண்ணில் நிறையும் நீரும், மனவோட்டத்தில் உறைந்துப்போன நொடிகள்தான்.
எல்லா வார்த்தைகளுக்கும் அகராதியில் பொருள் இருப்பதைப்போலவே , எல்லா கதாபாத்திரங்களும், அதன் மேதமைகளோடு சரிவர அளக்கப்பட்டு, சிவாஜியினால் நிறுவப்பட்டிருக்கும். எந்த கதாபாத்திரம் எடுத்தாலும், அதனில் தன்னை தொலைத்து, கதாபாத்திரத்தை மிளிரச்செய்யும் தன்மை அவரையே சேரும். அவர் ஒரு சரித்திரம், அவரின் நடிப்பு பெரும் பாடம்.
-மனோ

Thanks Vasudevan Sriranmgarajan (Nadigarthilagam Fans)

sivaa
21st July 2021, 08:32 AM
கர்ணவள்ளல் திரு சிவாஜி கணேசன்
20 வதுநினைவு தினம் யூலை 21.
இடது கைக்கு தெரியாமல் கொடைகொடுத்த வள்ளல் சிவாஜி கணேசன் ,1953 ஆம் ஆண்டு திரை உலகில் நுழைந்த மறுவருடமே இலங்கைக்கு சென்று யாழ் மூளை வைத்தியசாலை கட்டிட நிதிக்காக உதவியவர். முதன் முதலாக எந்த ஒரு கட்சியிலும் சேராத தனிநபர் ஒருவர் இலங்கை தமிழ் மக்களுக்கெனஉதவியவர் என எடுத்துக்கொண்டால் அது சிவாஜி கணேசன் அவர்களாகத்தான் இருப்பார். தமிக பாடசாலைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு 1959 ல் 1 லட்சம் கொடுத்தவர் (இன்றைய மதிப்பு பல கோடிகள்) சிவாஜி கணேசன். மதிய உணவுத் திட்டத்திற்கு சிவாஜி கணேசனின் பெயரை சூட்டுவதற்கு அன்றைய முதல்வர் காமராஜர் விரும்பிய பொழுது தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டவர் பெருமைக்குரி வள்ளல் சிவாஜி அவர்கள்.இவை சிறு துளி மட்டுமே, பாடசாலை மதிய உணவுத்திட்டத்திற்கு மேலும் மேலும் கொடுத்தார்.பேரிடர் காலங்களில் கணக்கின்றி கொடுத்தார். அப்படிப்பட்ட வள்ளலின் இருபதாவது நினைவு தினம் யூலை 21 ல் அவரின் நினைவுகளை போற்றுவோம்.58005801580258035804

RAGHAVENDRA
21st July 2021, 05:12 PM
காலம் பல கடந்தாலும் தலைவர் பணி செய்து கிடப்போம். உன்னை அனுதினமும் நினைக்கும் எங்களுக்கு நினைவு நாள் என்று தனியாக இல்லை. மறந்தால் தானே நினைப்பதற்கு

RAGHAVENDRA
21st July 2021, 05:12 PM
நீண்ட நாள் கழித்து இவ்விணைப்பு நண்பர் வாசு மூலம் கிடைத்து நுழைய முடிந்திருக்கிறது. மிக்க நன்றி வாசு சார்

sivaa
22nd July 2021, 07:25 AM
நீண்ட நாள் கழித்து இவ்விணைப்பு நண்பர் வாசு மூலம் கிடைத்து நுழைய முடிந்திருக்கிறது. மிக்க நன்றி வாசு சார்


வணக்கம் ராகவேந்திரா சார்!

வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்.

உங்கள் பங்களிப்பு தொடரட்டும்...

sivaa
22nd July 2021, 07:58 AM
நன்றி :
பத்திரிக்கையாளர், சினிமா தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்று பன்முகத்தன்மை உடைய திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் காணொளியிலிருந்து....
--------------------------------------------
சிவாஜிக்கும் அவரோட ரசிகர்களுக்கும் இருக்கற பந்தம் இருக்கே, அது அலாதியான ஒரு பந்தம்.
சிவாஜி தன்னுடைய ரசிகர்களை என்றைக்குமே ரசிகர்களாகப் பார்த்ததே இல்லை.
தன்னுடைய குடும்பத்திலே ஒரு அங்கத்தினராகத்தான் தன்னுடைய ஒவ்வொரு ரசிகனையும் சிவாஜி பார்ப்பது வழக்கம். அதே மாதிரித்தான் சிவாஜி ரசிகர்களும்.
சிவாஜி ரசிகர்களுக்கு, சிவாஜி ஒரு நடிகர் மட்டும் அல்ல..சிவாஜி ஒரு கடவுள்.
இன்னைக்குக் காலைல, சிவாஜியோட சகோதரியின் மகனான குமாருடன் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போ, ரசிகர்களுக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவைப் பற்றி, ஒரு மறக்க முடியாத சம்பவத்தைச் சொன்னார் குமார்.
'முதல் மரியாதை' படத்தை நீங்க பார்த்திருப்பீங்க.. அந்தப் படத்தின் உச்ச பட்சக் காட்சியில, சிவாஜி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருப்பார்.
எந்த நேரம் இறந்திடுவாரோ என்ற பரிதவிப்புடன், வெளியில் நிறையப் பேர் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்ப, ராதா ஒரு படகுல அந்த ஊருக்கு வந்து இறங்குவார். படகுல இருந்த எறங்கி, ராதா அந்த மண்ணுல காலடி எடுத்து வைப்பார்.. அப்போ சிவாஜியோட கை இருக்கே.. அப்படியே துடிக்க ஆரம்பிக்கும்..
அந்தக் காட்சியைப் பார்த்த பல ரசிகர்கள், அப்போது வியப்பில ஆழ்ந்து போனார்கள் என்றாலும், இன்னொரு பக்கம் அந்தக் காட்சியைப் பற்றி ஒரு சாரார் விமர்சனமும் செய்தார்கள், "இது கொஞ்சம் ஓவரான கற்பனையாக இல்லையா" என்று ..
ஆனால், சிவாஜியோட வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நெஜமாவே நடந்திருக்கு என்று கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தக் காட்சியை முதல் மரியாதை படத்தில படமாக்கும் போது, பாரதிராஜாவுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், எப்படியோ தன்னுடைய கற்பனையில் அப்படி ஒரு அற்புதமான காட்சியை வைத்தார்.
இப்போ, குமார் சொன்ன சம்பவத்துக்கு வருவோம்.
ஒரு நாள் சிவாஜி குமாரைக் கூப்பிட்டு, "நாளைக்குக் காலைல கொஞ்சம் வேலூர் போகனும், தயாரா இரு" என்று சொன்னார்.
"சரிப்பா.." என்று சொல்லியிருக்கிறார் குமார்.
மறுநாள் காலைல ஆறு மணிக்கு ரெடியாகிப் புறப்பட்டுட்டார் சிவாஜி.. எங்கே ? வேலூருக்கு.
போகும் போதுதான் தான் எதற்காக வேலூர் போறோம்ங்கறதைக் குமார் கிட்டச் சொல்லியிருக்கிறார் சிவாஜி.
அப்போது வேலூர்ல ரசிகர் மன்றத் தலைவரா இருந்தது, 'பாலாஜி'ங்கற ஒரு இளைஞன். கல்யாணமாகி, ஏழெட்டு வருசம் இருக்கும். அந்த இளைஞன் கொஞ்ச காலமா உடல் நிலை சரியில்லாம இருந்தான். அவனைப் பார்க்கறதுக்காகத்தான் சிவாஜி வேலூர் போறார்.
தன்னுடைய ரசிகர் மன்றத்துப் பையன் ஒருத்தன், அவனுக்கு உடம்புக்கு சரியில்லைங்கற காரணத்துனால அவனைப் பார்க்கறதுக்கு, இந்த மாபெரும் நடிகர் அதிகாலைல ஆறு மணிக்குப் புறப்பட்டு வேலூர் போறார். ஆறு மணிக்குப் புறப்படனும்னா, சிவாஜி காலைல எத்தனை மணிக்கு எழுந்திருக்கனும் ? அதிகாலைல எந்திருச்சுக் குளிச்சுத் தயாராகி வேலூர் கிளம்பறார்.
போற வழியில் சிவாஜி ரசிகர் மன்றத்துப் பிள்ளைகள் சிலர் சிவாஜி கிட்டச் சொல்றாங்க.." பேச்சு மூச்சே இல்லைங்க அந்தப் பையனுக்கு... சாப்பிட்டே ரெண்டு மாசம் ஆச்சு.." ன்னு.
வேலூர்ல சந்து பொந்தெல்லாம் சுத்திப் போயி, அந்தக் கார் பையனுடைய வீட்டு வாசல்ல நிக்குது.
சிவாஜி அந்தப் பையனைப் பார்க்க வரப் போறார்ங்கற விசயம் அந்த ஊர்ல உள்ள சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்களுக்கும் அந்த ஊர்ல இருந்தவங்களுக்கும் தெரியும்கறதால, அந்தப் பையன் வீட்டு வாசல்ல ஒரு பெரிய கூட்டம்.
சிவாஜி காரை விட்டு இறங்கி.. சின்ன வீடு... குறுகலான அந்த வீட்ல.. குனிஞ்சு காலடி எடுத்து வைக்கும் போது, சிவாஜி சாதாரணமா கனைப்பார் இல்ல, அது மாதிரி, ஙெஹே ன்னு கனைச்சிட்டு, "பாலாஜி" அப்படீன்றார்..
அந்தப் பையன் உள்ளே படுத்திருக்கானே, அவனோட கை லேசா ஆட ஆரம்பிச்சது...இதைப் பார்த்த அவனோட உறவினர்கள் எல்லாம் ஆச்சர்யத்தில உறைஞ்சு போயிட்டாங்க..
உள்ளே போன சிவாஜி அந்தப் பையன் பக்கத்துல உட்கார்ந்து, "டே பாலாஜி.. அண்ணன் வந்திருக்கன்டா...பாலாஜி.. அண்ணன் வந்திருக்கேன்"ன்னு சொன்ன உடனே, அந்தக் கை தானாவே ஆடத் தொடங்கிடுச்சு.
அதுக்கப்புறம் ஒரு அஞ்சு நிமிசம் அங்கே இருந்துட்டு, " உடம்பைப் பார்த்துக்க... புரியுதா ? அண்ணன் திரும்பியும் இங்கே வரும்போது, நீ எழுந்து நின்னு அண்ணன் கிட்டப் பேசனும்.."ன்னு அந்தப் பையனைப் பாத்துச் சொல்லிட்டு அந்த ஊர்ல இருந்து கிளம்பிட்டார்.
இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, திருத்தணியில, சிவாஜி மன்றத் தலைவரான பூமிநாதன், ஒரு கேஸ் நிறுவனத்தைத் தொடங்க, அதன் திறப்பு விழாவுக்கு சிவாஜியை அழைக்கிறார். சிவாஜி அந்த விழாவுக்குப் போனார்.
அப்போ , அந்த ஊருக்குப் பக்கத்துல, நகரியில, சிவாஜி ரசிகர் மன்றத்தினர், "ஒரு கோயில் திருவிழா.. இங்கே திருத்தணி வரைக்கும் வர்றீங்க.. நகரி வரைக்கும் வந்துட்டுப் போங்க" ன்னு சிவாஜி கிட்ட சொல்றாங்க.
அதனால், நகரிக்கு, அந்தக் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் சிவாஜி போகிறார்.
சிவாஜி போற இடத்துல, எந்தப் பையனைப் பார்க்கறதுக்காக சிவாஜி வேலூர் போனாரோ, எந்தப் பையன் மூச்சுப் பேச்சு இல்லாமப் படுத்துட்டு இருந்தானோ, அவன், சிவாஜியைப் பார்க்கறதுக்கு அந்த நகரியில துள்ளித் துள்ளிக் குதிக்கறான்.
அவனைத் தூரத்தில இருந்து பாத்துடறார் சிவாஜி.
"பாலாஜி... உனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதானே உடம்புக்கு சரியில்லாம இருந்தது ? ஏன் நீ இங்கே வந்தே ? நீ இங்கெல்லாம் சுத்தக் கூடாது.. வீட்டுக்குப் போ " அப்படின்னு சொல்லி, அந்தப் பையனைப் பாசத்துடன் கண்டிக்கிறார்.
இந்தச் சம்பவத்தைக் குமார் சொன்னபோது, அப்படியே திகைச்சுப் போயிட்டேன் நான்.
என்ன ஒரு பந்தம் பாருங்க ?
அந்த முதல் மரியாதை சம்பவம், இப்ப நூத்துக்கு நூறு சரின்னுதானே ஆகுது ?
சிவாஜிக்கும், ரசிகர்களுக்கும் உள்ள இன்னொரு தொடர்பையும் குமார் என்கிட்டச் சொன்னார்.
சிவாஜி மாதிரி, அவரோட ரசிகர் மன்றத்துல இருக்கற பசங்க இருக்காங்களே, அவங்களோட திருமணத்துல கலந்துகிட்ட நடிகர் வேறு யாருமே இருக்க மாட்டாங்க.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் திருமணங்களுக்குச் சிவாஜி சென்றிருக்கிறார்.
இன்னிக்கும் சிவாஜி ரசிகர்களோட மனங்கள்ல சிவாஜி குடியிருக்கார்னா, அதுக்கு முக்கியமான காரணம் அதுதான்.
"அந்தப் பையன் சின்னப் பையனா இருக்கும்போது கல்யாணம் பண்ணியிருப்பான்.. அந்தக் கல்யாணத்துக்கு சிவாஜி வந்து போனார்ங்கற நினைவு, இன்னைய வரைக்கும் அந்தப் பையன் மனசுல இருக்கத்தானே இருக்கும் ? அப்படி இருக்கும் போது, அவனால எப்படி சிவாஜியை மறக்க முடியும்?"ங்கறார் குமார்.
சிவாஜியின் நினைவைப் போற்றுகின்ற இந்த நாளில், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
கோடானு கோடி சிவாஜி ரசிகர்கள் இருக்காங்களே, அதில நானும் ஒருத்தன்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்.
-------------------------------------------------
காணொளியை எழுத்து வடிவமாக உருவாக்கியது....
நாகராஜன் வெள்ளியங்கிரி.

நன்றி

நாகராஜன் வெள்ளியங்கிரி

sivaa
24th July 2021, 02:48 AM
தமிழகத்தில் முதலமைச்சர் பதவிகள் வகித்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடும் ஆதரவாளர்கள் இருப்பதில் ஒரு உள் அர்த்தம் இருக்கலாம்
ஏனெனில் அவர்கள் பதவி வகித்த காலங்களில் அரசு சலுகைகள் என லட்சக்கணக்கானவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள், நேரடியாக அரசு பணிகளில் அமர்த்தப்பட்டார்கள் அவர்கள் அந்தந்த தலைவர்களை கொண்டாடுவதில் என்ன பெரிய ஆச்சர்யம் அதிசயம் இருக்கிறது?
ஆனால் நடிகர் திலகத்தின் வரலாற்றைப் பாருங்கள் அது போன்ற பெரியதொரு பதவிகளில் அமர்ந்து அதிகார துஷ்பிரயோகம் ஏதும் செய்து விடாமலே தனக்கு இரும்புக் கோட்டை போன்ற ஆதரவாளர்களை பெற்றவராக இருக்கிறார்,
மறைந்து 20 ஆண்டுகள் கடந்தும் கூட புகழ் போற்றும் தொண்டர்கள், பக்தர்கள்,ரசிகர்கள் என எத்தனை எத்தனை!
இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நடிகர் திலகம் சிவாஜியின் புகழ் மட்டும் நிலைத்து நிற்கும் என்பதே உண்மை,


5805

Thanks Sekar Parasuram

sivaa
31st July 2021, 08:52 AM
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு"
தமிழகத்தை 1954 ஆம் ஆண்டின் போது கடுமையான புயல் தாக்கியது, தாக்குதலில் டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிகள் செய்திட வேண்டும் என தீர்மானித்த திமுக தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைய முன்னணி கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி வசூலித்து தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார், அவ்வாறு அதிக நிதி வசூலித்து தரும் பிரபலத்திற்கு பாராட்டு விழா மேடையில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்றும் சேர்த்தே அறிவிப்பை வெளியிட்டார், அப்போதைய திமுகவின் மக்கள் கூட்டம் சேரும் பிரபலங்கள் என்று எடுத்துக் கொண்டால் பராசக்தி புகழ் நடிகர் திலகம் சிவாஜி, பராசக்தி கதை வசனகர்த்தா கலைஞர் கருணாநிதி என்று மட்டுமே இருந்தது,
இந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் நாடகமாகட்டும் தெரு முனை பிரச்சாரமாகட்டும் மக்கள் சங்கமித்து விடுவார்கள், மிகவும் பரப்பரப்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி சில நாட்கள் படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டு பராசக்தியின் வசனங்களை முக்கிய நகரங்கள் தோறும் தெருமுனை பிரச்சாரத்தில் நேரடியாகவே பேசினார் நடிகர் திலகம் சிவாஜி,
நிதி ஏராளமான குவிந்தது, மற்ற பிரபலமான திமுக முன்னோடிகளைக் காட்டிலும் நடிகர் திலகம் சிவாஜிக்கு பத்து மடங்கு அளவிற்கு கூடுதலாக நிதி குவிந்தது, குவிந்த நிதியை அறிஞர் அண்ணா அவர்களிடம் சேர்த்துவிட்டு சேலத்தில் இருந்த ஸ்டுயோவிற்கு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள செனவிட்டார் நடிகர் திலகம் சிவாஜி,
பாராட்டு விழா அழைப்பு வரும் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் என்று தனது இல்லத்தில் சொல்லி இருந்தார்,
ஆனால் பாராட்டு அழைப்பு வரவில்லை, மாறாக பாராட்டு விழா நடைபெற்றது அதில் அதிக வசூல் குவித்தவர் என்று எம்ஜிஆர்க்கு மோதிரம் அளிக்கப்பட்டது என்ற அதிர்ச்சியான தகவல் மட்டுமே வந்தது, உண்மை என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் நிதி வசூல் செயலில் ஈடுபடவே இல்லை, அவரை முறைப்படி திமுகவில் இணைத்து விடவே நடிகர் திலகம் சிவாஜிக்கு தொழில் முறை போட்டியாளர்கள், வளர்ச்சியை பிடிக்காதவர்கள் என்று ஒன்று சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களிடம் உண்மைக்கு மாறாக தகவல்களை அளித்து எம்ஜிஆர் அவர்களை திமுகவில் இணைந்து மோதிரத்தையும் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டார்கள்,
இத்தனையும் அரிந்து கொண்ட நடிகர் திலகம் சிவாஜி சென்னை திரும்பி அறிஞர் அண்ணா அவர்களை சந்திக்க முடிவெடுத்தார், ஆனாலும் இயக்குநர் பீம்சிங் அவர்கள் " எந்த உண்மையையும் அறிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே உங்களை புறக்கணித்து இருக்கிறார்கள் நாம் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என யோசனையை சொல்லவே முடிவை மாற்றிக் கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி,
மிகவும் மனக் குழப்பத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜியை இயக்குநர் பீம்சிங் அவர்கள் திருப்பதி சென்று வரலாம் என அழைத்துச் சென்றார்,
சிருப்பதி சென்று திரும்பும் போது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடிகர் திலகம் சிவாஜியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள் எதிர்ப்பாளர்கள்,
எந்த நடிகர்களுக்காகவும் அவர்களை புகழ்ந்து எழுதவோ வரியை சேர்க்காத படுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் தனது பாடல் வரிகளில் இதையெல்லாம் தான் பாடல் வரி


Thanks Sekar Parasuram

sivaa
2nd August 2021, 09:36 PM
டிஜிட்டலிலும் வசந்த மாளிகை சாதனை!!
சென்ற 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 அன்று வசந்த மாளிகை டிஜிட்டலில் ரிலீஸானது, தமிழகம் முழுவதுமாக ஏறக்குறைய 85 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,
Opening collection Record என்ற புதிய படங்களுக்கு இனையான சாதனையை நிகழ்த்தி எக்காலத்திலும் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே வசூல் சாதனை நிகழ்த்தக் கூடியவை என நிரூபணம் செய்தது,
இந்த சாதனையை ஜீரணிக்க முடியாத ஒரு கும்பல் ஒரு பல்லவியை முகநூல் குழுக்களில் பாடிப் பார்த்தது, அதாவது புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் வசந்த மாளிகை வசூலை குவித்தது என்று,
அனைவருக்கும் புரிய வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது,
வசந்த மாளிகை ரிலீஸான நாளிலிருந்தும் அந்த வாரத்தில் ஓடிக்கொண்டிருந்த தமிழ் திரைப்படங்களையும் கணக்கில் கொண்டால் அதாவது வசந்த மாளிகை 6 வது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாள் வரை 23 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தது,
ஜூன் 21 அன்றும் ரிலீஸானவையும் முன்னரே �� ஓடிக்கொண்டிருந்தவையும்,
1) தும்பா 2) பக்கிரி 3) மோசடி
4) சுட்டுப் பிடிக்க உத்தரவு 5) கேம் ஓவர் 6) நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இரண்டாவது வாரம் ஜூன் 27/2019,
7) சிந்துபாத் �� ஜூவி 9) தர்ம பிரபு 10) ஹவுஸ் ஓனர்
மூன்றாவது வாரம் ஜூலை 05/07/19 ,
11) ராட்சஸி 12) களவாளி 2 13) காதல் முன்னேற்ற கழகம்
நான்காவது வாரம் 12 ஜூலை/19
14) போதை ஏறி புத்தி மாறி 15) வெண்ணிலா கபடி குழு 16) கூர்கா 17) கொரில்லா 18) ஆடை
ஐந்தாவது வாரம் ஜூலை 19/2019,
19) கடாரம் கொண்டான்
ஆறாவது வாரம் 26 ஜூலை 2019,
20) A1 21) சென்னை பழனி மார்ஸ் 22) டியர் காமரேட் 23) கொளஞ்சி .
மொத்தத்தில் இன்று வரை 23 புதிய படங்கள் வந்து போனபடி இருக்கிறது
வசந்த மாளிகை இன்று 42 வது நாளில் இருக்கிறது, வேறு எந்தப் புதிய படமும் 15 நாட்கள் கூட ஓடவில்லை,
வசந்த மாளிகை மேலும் 52 நாட்கள் வரை ஓடி விழாக் கண்டது, எட்டு வாரங்கள் வரை ஏறக்குறைய 30 புதிய திரைப்படஙள் வசந்த மாளிகை ஓடிக்கொண்டிருக்கும் போதே அடுத்த திரைக்கு வந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் மதுரை கல்லனை திரையரங்கிலும் வெற்றிகரமாக 50 வது நாளைக் கொண்டாடியது, தொடர்ந்து சிப்டிங் முறையில் 100 வது நாட்களையும் அமர்க்களமாக கொண்டாடியது,
வசந்த மாளிகை சாதனையை இதற்கு மேலாக எடுத்துச் சொல்லத் தேவையில்லை,

5806

Thanks Sekar Parasuram

sivaa
13th August 2021, 04:46 AM
நான்கு மாத காலமாக, நம்ம நாட்டிலும் எப்போது மூடிய திரையரங்குகள், திறப்பார்கள், என ஏங்கி கொண்டிருந்த நமக்கு,புதுவை மாநிலத்தில் திரையங்குகள் திறக்க அனுமதி அளித்தநிலையில், முதன்முதலில் நமது நடிகர் திலகத்தின் "கர்ணன் " காவியத்தை பாண்டி சண்முகா A/c dts complex ல் ஆகஸ்ட் 13 முதல் குதூகல ஆரம்பம். நம்ம தமிழ் நாட்டிலும் விரைவில்.......


5807

Thanks Divyafilms Chokkalingam

sivaa
15th August 2021, 09:21 AM
நடிப்பின் இமயம் நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து தமிழ்த் திரைக்கு வழங்கிய மாபெரும் வெற்றிக் காவியம் முதல்மரியாதை! இசைஞானி இளையராஜா,கவியரசு வைரமுத்து இருவரும் இணைந்து வழங்கிய இனிய பாடல்களும், உள்ளத்தை நெகிழ வைக்கும் காட்சி அமைப்புகளும் நிறைந்த இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் போற்றிக் கொண்டாடும் படங்களில் ஒன்று. இத்திரைப்படத்தைப் பற்றிய வெற்றிச் செய்திகளில் பத்துத் தகவல்களை இங்கு காணொளியாக்கி அன்பர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. பார்த்து மகிழ்வீர்களாக!

https://youtu.be/1ygo35CyROg


Thanks nilaas thiraikkoodam

sivaa
15th August 2021, 09:26 AM
தமிழ்த்திரையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்தவர்களுள் நடிகர்திலகம் முதன்மையானவர். அவரின் திரைப்படங்களும், அவரும் திரையுலகில் முதன்முதலாக படைத்த சாதனைகள் சிலவற்றின் தொகுப்பே இந்தக் காணொளி
#நடிகர்திலகம்சிவாஜிகணேசன் #தமிழ்சினிமா #சாதனைகள்

https://youtu.be/0LhMA8dYq0k

Thanks nilaas thiraikkoodam

sivaa
15th August 2021, 09:33 AM
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து பெரும் வெற்றிபெற்ற வெள்ளிவிழாப் படங்களைப் பற்றி ஆதாரங்களுடன் கூடிய புள்ளிவிபரத் தொகுப்பு

https://youtu.be/DEFip0v9sBs


Thanks nilaas thiraikkoodam

sivaa
15th August 2021, 09:53 AM
அனைவருக்கும் இந்திய சுதந்திர
தின நல்வாழ்த்துக்கள்.

5808

sivaa
16th August 2021, 02:51 AM
வீடு தேடி வந்த செல்வாக்கு- #நடிகர்திலகத்திற்கு மட்டுமே


https://youtu.be/bJE22-8RNg0

Thanks Sivaji Murasu

sivaa
24th August 2021, 07:56 AM
மதுரையை மயக்கிய சிவாஜி படங்கள்.

தமிழ்த்திரையுலகில் நடிப்புலகில் கோலேச்சிய நடிகர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். 250க்கும் மேலான தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்து சாகாவரம் பெற்ற பல நல்லத் திரைப்படங்களையும், பெரும் வெற்றிப் படங்களையும் தமிழ்த்திரைக்குத் தந்தவர். அவர் நடித்து அறுபது திரைப்படங்கள் இந்நாட்டின் தொன்மை நகரமான மதுரை மாநகரில் நூறுநாட்களுக்கும் மேலாக ஓடியிருக்கின்றன. அவ்வெற்றிப் படங்களின் பட்டியலும், ஓடிய நாட்களும், வசூல் விபரங்களும் அடங்கிய காணொளி இது.


https://youtu.be/nEMcqax3dU4





Thanks nilaas thiraikkoodam

sivaa
25th August 2021, 09:17 PM
சென்னையில் 11 திரையரங்குகளில் நூறுநாள் ஓடிய சிவாஜியின் படங்கள்.

தமிழ்த் திரையுலகின் மாபெரும் சாதனைக் கலைஞர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். அவர் அளப்பறிய தன் நடிப்பாற்றலால் சாகாவரம் பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றைத் தமிழுலகுக்கு தந்திருக்கிறார். அவரது நடிப்பில் 1964 ஆம் ஆண்டில் வெளியான ஏழு படங்களில் ஐந்து திரைப்படங்கள் சென்னையில் வெவ்வேறான பதினோரு திரைகளில் நூறுநாள் ஓடியிருக்கின்றன. அதை விளக்கிச் சொல்வதே இக்காணொளி.

https://youtu.be/SiDRIypXMhs

Thanks nilaas thiraikkoodam

sivaa
28th August 2021, 01:34 AM
சிவாஜி சாம்ராஜ்ஜியத்தின் சொர்க்கபுரி!

தமிழ் சினிமாவின் கலைமேதை சிவாஜிகணேசன் நடித்து சென்னையில் ஏராளமான திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. அன்றைய காலகட்டத்தில் அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்னும் மூன்று அரங்குகளில் வெளியிடப்படும். அங்கு வெளியாகும் படங்கள் நல்ல வெற்றியையும், வசூலையும் குவித்துள்ளன. அந்த மூன்று அரங்குகளிலும் வெளியான படங்களின் வெற்றியைப் பட்டியலிடுவதே இக்காணொளி.

https://youtu.be/PnrhtMnY-8I

Thanks nilaas thiraikkoodam

sivaa
4th September 2021, 06:28 AM
இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப் பிரமாண்டமான வெற்றியை பெற்ற படங்களை வரிசைபடுத்தினால் அதில் முதல் இடம் நடிகர்திலகத்தின் " வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்திற்கு தான்,
அதன் வெற்றி நடிகர்திலகத்தின் நடிப்பானது அப்போதைய இந்திய முன்னணி நடிகர்களை யோசிக்க வைத்தது, வெறும் 30 வயதுடைய ஒரு நடிகரால் இப்படியெல்லாம்கூட நடிக்க முடியுமா? என திகைத்து நின்றனர்,
வீரபாண்டிய கட்டபொம்மனில் கட்டபொம்மனாகவே நடிகர்திலகம் வாழ்ந்ததனால் அடுத்த பல தலைமுறை யினருக்கு கட்டபொம்மனின் உயிர்த்தியாகம் சென்றடைய நேரிட்டது,
நடிகர்திலகத்தின் நடிப்பானது உலகம் முழுவதும் போற்றப் பட இத்திரைப்படம் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டது,
தமிழ்த்திரைப்படத்துரையின் சிறந்த மகத்துவத்தை நடிகர்திலகத்தின் நடிப்பால் உலகறியச் செய்ய முடிந்தது,
அன்றைய கால கட்டத்தில் தமிழ்த் திரையுலகில் திமுக வின் அசுர வளர்ச்சியோடு இணைந்து கொண்டு புரட்சி நடிகர் என வளம் வந்த எம்ஜிஆர் அவர்களின் தூக்கத்தை கெடுத்தது நடிகர்திலகத்தின் இந்த அசுர வெற்றி,
உண்மையில் எம்ஜிஆர் க்கு நடிகர்திலகத்தின் வெற்றி மலைப்பை ஏற்படுத்தி இருந்தது, நடிகர்திலகம் பராசக்தியில் நடிக்க வந்த போது எம்ஜிஆர் முன்னணி நடிகராக உருவாகி இருந்தார், ஆனால் நடிகர்திலகம் தனது தொடர் வெற்றிகளினால் விஸ்வரூபம் எடுத்திருந்தார்,
எம்ஜிஆர் க்கு படுத்தால் தூக்கம் வரவில்லை, கனவிலும் கூட நடிகர்திலகம் வந்துக்கொண்டிருந்தார்.
ஏதேனும் செய்தாக வேண்டும் அதுவும் உடனே,
எம்ஜிஆர் கன்னதாசனை வரவழைத்துப் பேசினார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றியை முறியடிக்க கூடிய அளவிலான ஒரு புதிய படத்தினை உருவாக்க திட்டம்,
விளம்பரம் தயாரானது
வேகமாக தயாராகிரது
புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடிக்கும் "ஊமையன் கோட்டை"
கன்னதாசன் தயாரிப்பு
இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்போடு நின்றது
நடிகர்திலகத்தின் நடிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டதனால் எம்ஜிஆர் சரித்திர பட திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்,
மேலும் உச்சத்தில் இருந்த நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் எப்படியாவது வீரபாண்டிய கட்டபொம்மனின் வெற்றியை சீர்குலைக்கும் எண்ணத்தோடு கட்டபொம்மன் ஒரு தெலுங்கர் எனக் கூறி எதிர்மறை பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு எஸ்.எஸ் ஆரை வைத்து " சிவ கங்கைச் சீமை" என்ற படத்தை தயாரித்து போட்டிக்கு விட்டார்கள், ஆனால் நடிகர்திலகத்தின் சிம்மக் குரலுக்கு முன்னால் பொசுங்கி போனதுதான் மிச்சம்
ஆம் இன்றுவரை வீர பாண்டிய கட்டபொம்மன் பெற்ற வெற்றியை எந்த படமும் நெருங்கவில்லை ( வெற்றி என்பது வசூல் ஓடிய நாட்கள் மட்டுமே கிடையாது, அது பல தலைமுறையினரை பேச வைப்பதாக இருக்க வேண்டும்)


Thanks Sekar Parasuram

sivaa
10th September 2021, 12:43 AM
60 YEARS OF பாலும் பழமும்

நடிகர்திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளியான சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று பாலும் பழமும். அத்திரைப்படம் வெளியாகி இன்று அறுபது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அத்திரைப்பபடம் பற்றிய சில சிறப்புத் தகவல்களை உள்ளடக்கியதே இந்தக் காணொளி.

https://youtu.be/r7f5GmK810c

sivaa
10th September 2021, 12:46 AM
60 YEARS OF பாலும் பழமும்

நடிகர்திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளியான சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று பாலும் பழமும். அத்திரைப்படம் வெளியாகி இன்று அறுபது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அத்திரைப்பபடம் பற்றிய சில சிறப்புத் தகவல்களை உள்ளடக்கியதே இந்தக் காணொளி.



https://youtu.be/r7f5gmk810c

sivaa
12th September 2021, 07:35 PM
அதிரை புகாரி
புதையல் படத்தின் வெற்றி அதில் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதி கலைஞர் கருணாநிதிக்கும் வழங்க அதை முதலீடு செய்து தான் கலைஞர் கருணாநிதி கோபாலபுரம் வீட்டையே வாங்கினாராம்.
நெஞ்சுக்கு நீதி படித்து விட்டு பின் அவசர கருத்தை சொல்ல வாருங்கள்,
இன்னமும் விளக்கமா சொல்கிறேன்
குளித்தலை தேர்தல்.பிரச்சாரத்தில் இருந்த கலைஞர் கருணாநிதியிடம் நேரடியாக சென்று பணத்தை கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள்,
ஆனால் கலைஞர் கருணாநிதியோ நான் முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுகிறேன், பிரச்சாரத்தில் இருப்பதால் நீங்களே அதை ஏதாகிலும்.முதலீடு செய்யுங்கள் என் சொல்லிவிட புதையல் படத் தயாரிப்பாளர்கள் கோபாலபுரம் இடத்தை சொந்தமாக்கிக் கொடுத்தார்களாம்,
கோபாலபுரம் வீடு கிடைக்க புதையல் வெற்றி அடித்தளம் இட்டது,
இந்த புதையல் படத் தயாரிப்பாளான கமால் பிரதர்ஸ்களுக்கு. கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவி வகித்த போது பல விதங்களில் உதவி செய்து முன்னேற்றம் அடையச் செய்தார் என்பது தனிக்கதை,
இது போல நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகள் மூலம் ஏராளமான முக்கியஸ்தர்கள் சொத்து சுகம் சேர்த்துக் கொண்டார்கள்,
அவர்களது பட்டியல் மிக நீண்டதாகும்,

Thanks Sekar Parasuram

sivaa
12th September 2021, 07:36 PM
இலங்கையில் தொடர்ச்சியாக நூறுநாள் ஓடிய சிவாஜியின் ஐந்து படங்கள்!

இலங்கையில் தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். அங்கு அவர் நடித்து தொடர்ச்சியாக வெளிவந்த ஐந்து படங்களில் இருபடங்கள் இருநூறு நாட்களும் மூன்று படங்கள் நூறுநாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடின. அவை எந்தெந்த படங்கள்? எங்கே? எப்போது வெளிவந்தன? என்பதை ஆதாரபூர்வமாகக் கூறும் காணொளி இது.


https://youtu.be/A1tKfDrNCEQ


Thanks Nilaas Thiraikoodam

sivaa
12th September 2021, 07:52 PM
Thanks to ntfans
❣️ஒரு இதழில் நம்பியார் அவர்களின் பேட்டி:
எங்க ஊர் ராஜா படப்பிடிப்பின் போது, முதலில் நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது நம்பியார் இடைவேளையில் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி நம்பியாரை பார்த்து பணிவுடன் வணக்கம் சொன்னார். பின் மேக்கப் ரூமுக்கு சென்று விட்ட சிவாஜி,ஒரு மணி நேரம் கழித்து திரும்பினார்.
அச்சமயம் நம்பியாரை ஒரு மிதப்புடன் கர்வத்துடன் பார்த்துக்கொண்டே சென்றார். அதை பார்த்த நம்பியாரின் நண்பர்கள் என்ன வரும்போது சிவாஜி பவ்யமாக வந்தார். இப்போது நம்மை ஒரு வித தோரணையுடன் பார்த்து செல்கிறாரே என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
அதற்கு நம்பியார் வரும்போது அவர் கணேசனாக வந்தார். இப்போது மேக்கப் போட்டவுடன் கதையில் உள்ள ஜமீன்தாராக மாறி செல்கிறார். அதனாலதான் நம்மை அவர் ஒரு ஜமீன்தார் பார்ப்பது போல் பார்த்தார்.
அதனாலதான் அவரை நடிகர் திலகம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பின்ன நம்மளையா சொல்வாங்க? என்று நம்பியார் தன் நண்பர்களிடம் கூறினாராம்.
*நன்றி!✍����*


Thanks Vasudevan Srirangarajan (Tamil images)

sivaa
16th September 2021, 06:47 AM
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை பல நூற்றாண்டுகளாக கொண்டாட அடித்தளம் அமைத்த நடிகர் திலகம் சிவாஜி
இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி எதிர்வரும் பல தலைமுறையினரும் கூட கட்டபொம்மன் வரலாறு தெரிந்து கொள்ள நடிகர்திலகமே காரணம், காரணமாக இருக்கவும் போகிறார், அத்தகைய இமாலய வெற்றியை தனது நடிப்பின் மூலம் நிலை பெற செய்தார்,
இக்காலத்தில் உள்ள முன்னணி ஹீரோக்கள் யாராவது தங்களது சொந்த பணம் 100 கோடி ரூபாயை பொதுச் சேவைக்கென செலவிட முன் வருவார்களா?
இருபது படங்களின் சம்பளத்தை விட்டுத்தரத்தான் மனம் சம்மதிக்குமா?
ஆனால் " நடிகர்திலகம்" விட்டுக்கொடுத்திருக்கிரார், 100 கோடி ரூபாய் அளவிற்கு தனது சொந்த பணத்தை ஒரு பொதுச் சேவைக்காக மட்டுமே செலவிட்ட நிகழ்வும் உண்டு,
இது போல ஏராளமான பொது நலச் சேவைகள் அவ்வப்போது தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்,
தனது சிறப்பு மிக்க நடிப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிர்த்தியாகத்தை உணர்த்திய நடிகர்திலகம் அது சினிமா என்பதோடு நின்று விடக்கூடாது என்பதற்காக கட்டபொம்மன் நினைவிடம் அமைக்க உத்தேசித்தார், அதன்படி 1969 ல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான நெல்லை மாவட்டம் கயத்தாரிலேயே 47 செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கி அங்கு கட்டபொம்மன் சிலை, நினைவு மண்டபம், ஸ்தூபி, கல்வெட்டுகள் என வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைத்த யோசனைகள் கொண்டு உருவாக்கினார், 1969 ல் திட்டத்திற்கு தேவையான மதிப்பு என ரூ22 லட்சம் மதிப்பிடப்பட்டு இறுதியாக முடிக்கப்படும் தருவாயில் ரூபாய் 32 லட்சமாக நின்றது,
இது அப்போதைய தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இன்றைய மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். இவ்வளவு சிறப்பாக
முடிக்கப்பட்ட நினைவு மண்டபத்தை 10-07-1970 ல் திறந்து வைக்க அப்போதைய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை விழாக்குழு தலைவராக்கி நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறக்கப்பட மிகப்பெரிய விழாவாக நடத்தினார் நடிகர்திலகம்,
இத்தனைக்கும் அப்போது தமிழக அரசு திமுக அரசாகும், முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்து வந்தார்,
அந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திறந்த ஜீப் மீது நின்றபடி " சிவாஜி ரசிகர்கள் மன்றம் " நீண்ட தூரம் நின்று அளித்த மரியாதையை பெருமையோடு ஏற்றுக் கொணடார்.

Thanks Sekar Parasuram

sivaa
19th September 2021, 12:19 AM
தமிழ் சினிமாவின் பொற்காலம்...
1000 கோடி என்ன? 5000கோடி என்ன ?எத்தனையோ கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில் பேசப்படுவான்.
அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை
ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்
முதலில் வரும்.
உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும்.
ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட நவராத்திரி நடிப்புக்கு ஈடு செய்ய எவராலும் முடியாது.
அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை ஆராய்ச்சி செய்தால் ,
அது கூட " ERROR " என்று தான் காட்டும்.
இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை
சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது
சொல்ல வேண்டியது வரும்.
எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின் "பா "
வரிசை படங்கள் சொல்லிய பண்பு பண்பாடு பாசம் பந்தம் பரிவு பக்தி பாவம் பரோபகாரம் படிப்பினை பகுத்தறிவை எளிமையாக ,அழகாக எடுத்துச் சொல்ல எந்த டிஜிட்டலும் உத்திகளும் உதவாது.
மனிதக்குரலில் இடிமுழக்கம் என்று திரைக்கலையை ஆய்வு செய்தால் சிவாஜியின் படங்களே வரிசை கட்டி வரும்.
சிங்கமது பேசும் சக்தி பெற்று வீர கர்ஜனை செய்யும் போது அது கர்ணனின் குரலை கேட்டால் சப்தநாடியும் ஒடுங்கும்.
நூற்றாண்டு நிகழ்வுகளின் வளர்ச்சி நம்மை நிலாவுக்கு புலம் பெயர வைத்தாலும் "அந்தநாள் ஞாபகம் "
என்பதை தமிழன் நினைக்கும் போது உயர்ந்த மனிதனின் பாடலலைத்தான் நெஞ்சம் நினைக்கும்.
இன்னும் ஆயிரம் வருடங்கள் கழிந்து ,
ராஜ ராஜ சோழனின் 2000 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் போதும் நடிகர்திலகத்தின் திருமுகம் தான் நினைவுக்கு வரும்.
இந்தியாவின் 500 வது சுதந்திர தினவிழாவானாலும், 1000 வது சுதந்திர தின விழாவானாலும் தொலைக்காட்சிகள் தேசபக்தி பாடலாக "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை தான் ஒளிபரப்பும்.
காலங்கள் கரைக்கும் காட்டு இரைச்சல் இசைகளினூடே, பட்டிக்காட்டு ராகங்களில் "கேட்டுக்கோடி உருமிமேளம் "பாடலுக்கு என்றும் தனி மதிப்பிருக்கும் .
வெஸ்டர்ன் காதலும்,வெட்கம் மறந்த காதலும் சமுகத்தின் கலாச்சாரமாய் மாறும் , இன்னும் சில காலங்களில்.
அப்போதும் வசந்த மாளிகையை பார்ப்பவன் வியப்பான்.
ரசிகனை உருவாக்கும் சக்தி எப்போதும்
வசந்தமாளிகைக்கு உண்டு.
அடுத்த நூற்றாண்டில் மட்டுமல்ல ,அனைத்து தலை முறையிலும் தலை சிறந்த கலைஞன் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜிக்கு இருக்கும்.
60 வயது காதலை 20 வயதும் ரசிக்கும் படமாக ஒரே ஒரு படம்தான் எக்காலத்திலும் நினைக்கப்படும்.அது முதல் மரியாதை.
உலகின் பாதியை வியப்படைய வைத்த ஒரு பிராந்திய மொழி கலைஞன் என்ற கேள்வி வருமானால் அது சிவாஜி என்ற ஓரே ஒரு பெயரோடு முற்றுப் பெற்று விடும்.
இறக்கை கட்டிக் கொண்டு மனிதன் பறக்கும் விஞ்ஞான வளர்ச்சி தோன்றினாலும் ,திருவிழாக்களிலும் , கோவில் விழாக்களிலும் , திருவிளையாடல் ஒலிச்சித்திரம் தான்
ஒலிக்கும்.
BIG BANG எனப்படும் பெருவெடிப்பை தமிழ்சினிமாவில் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் 1952 ஆம் வருடத்தைதான் சொல்ல வேண்டும்.
சினிமாவே பார்க்காதவர்களையும் பார்க்க வைத்ததில் அதிக ஆற்றல் படைத்த கலைஞர்களின்புள்ளி விபரங்களை எடுத்தோமானால் அதில் நடிகர்திலகமே முதலில் இருப்பார்.
ட்ரெண்ட் செட்டிங் எனப்படும் இப்பொழுது வெளியாகும் ஒரு திரைப்பாடல் உதாரணமாக 100 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தாலும், இன்று பார்த்த நடிகர்திலகத்தின் திரைப்பாடல் 2099 வருடத்திலும் பார்க்கப்படும்.உண்மையான ட்ரெண்ட் செட்டிங் என்று இதை தான்கூற வேண்டும்.
ஒரு சரித்திரம் இதோடு முடிந்து விட்டது என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டியது வரும்.எந்த வகையிலே என்றால் தமிழனின் சிறந்த கலாச்சார படமாக இதை விட இனி எதுவும் எடுக்க முடியாது என்பதில்தான்.
காவல் துறைக்கு பெருமை சேர்த்த படங்களாக பலவற்றை சொல்வதுண்டு.ஆனால் ,காவல்துறையே
தங்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக தங்கப்பதக்கத்தை தான் சொல்லும்.
மேலும் ,காவல்துறை தன் கொள்கை விளக்க படமாக சொல்ல விரும்பினால் தங்கப்பதக்கத்தை சொல்வதில் தான் பெருமை கொள்ளும்.
காவல்துறை அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாடமெடுக்க விரும்பினால், S.P.சௌத்ரீயை முன்னுதாரணமாக காட்டி
பாடமெடுத்தால் காவல்துறையின் பாடச்சுமை குறையும்.
பாடல்களே இல்லாத படங்கள் புதிது புதிதாய் எந்த நாளும் வரலாம்.பாடல்களே படங்களாக வந்த காலத்தில் வந்த "அந்த நாளை"ப் போல் புதுமையாகுமா? .
ஆயிரக்கணக்கான கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு நூறு வருடங்கள் கடந்த பின்னும், இணையங்களில் தமிழ் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் பற்றிய 'சர்வே ' எடுக்கப்படுமானால் அதிகமாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களே இருக்கும்.
தேசபக்தி சார்ந்த ஆவண திரைப்படங்களாக இந்தியநாடு பத்திரப்படுத்த விரும்பினால் நடிகர்திலகத்தின் பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் தான் அதற்கு கை கொடுக்கும்.
மேக்கப் கலை வளர்ச்சியை வைத்து ஒரு டாக்குமென்டரி தயாரிக்கும் போது, கடந்தகாலங்களில் மேக்கப் எப்படி செய்யப்பட்டது என்று ஆராயப்பட்டால்
40, 50 வருடங்களுக்கு முன்பு வந்த குழந்தைகள் கண்ட குடியரசு, நான் வணங்கும் தெய்வம், திருவருட்செல்வர் படங்களை பார்த்தால் ,இன்றைய வளர்ச்சி
கொடுத்த பிரமிப்பை விட அது அதிகமாகவே இருக்கும்.
டிஜிட்டல் தொழில் நுட்ப உத்திகளும், வளர்ச்சிகளும் அதிமாகிக் கொண்டே இருக்கலாம்.
எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருந்தாலும்,
நடிப்பை தேட மட்டும் நடிகர்திலகமே பயன் தருவார்.
நன்றி..
செந்தில்வேல் சிவராஜ்.

5809

Thanks Senthilvel Sivaraj (Sivaji Group)

sivaa
20th September 2021, 02:24 PM
அக்டோபர் 1
நடிகர்திலகம்,
மக்கள் தலைவர்,
சிவாஜி அவர்களின்...
பிறந்தநாளை முன்னிட்டு...
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
ஸ்டைல் மன்னனின்
ராஜா...

5810

Thanks Sundar Rajan

sivaa
21st September 2021, 07:52 AM
மத்திய சென்னையை மிரளச் செய்த சிவாஜியின் திரைப்படங்கள் #nilaasthiraikkoodam

தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற நடிப்பாற்றல் மிக்க கலைஞர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். நடிப்பில் மட்டுமல்லாது வெற்றித் திரைப்படங்கள் வழங்கியதிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது படங்கள் சென்னையில் பெற்ற வெற்றியைப்பற்றி முன்பு வெளியிட்டிருந்த வட சென்னை சாதனைகளைப் பற்றிய காணொளியைத் தொடர்ந்து நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மத்திய சென்னையில் ஓடிய விபரங்கள் அடங்கிய தொகுப்புதான் இக்காணொளி.
குறிப்பு : பதிவில் இடம்பெற்றுள்ள போஸ்டர்களில் தவறுதலாக நிகழ்ந்துள்ள ஒருசில எழுத்து/எண் பிழைகளை அன்பர்கள் பொறுத்தருள்க. நன்றி.



https://youtu.be/zjqet8np0R0

மேலே உள்ள குறியிட்டை கிளிக் பண்ணி வீடியோவை பார்க்கலாம்


Thanks nilaasthiraikkoodam

sivaa
1st October 2021, 05:12 AM
இன்றும் சாதனை படைத்த சிவாஜி...
அன்பு இதயங்களே,
இன்றைய Google நுழைவு பக்கத்தில்,
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு....
அம்மனின் படங்களை வைத்துள்ளது...
உலக தலைவர்கள் பிறந்தநாளில் அவர்களின் படங்களை வைக்கும் Google,
இந்த ஆண்டு நடிகர்திலகத்தின் படத்தை வைத்துள்ளது.
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்களின் வரிசையில் நடிகர்திலகத்தின் படத்தை வைத்திருப்பது....
இன்றும், என்றும் மக்கள் மனதில் நடிகர்திலகம் இருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
Google க்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
5811

Thanks Sundar rajan

sivaa
1st October 2021, 06:49 AM
சிறப்புக் கட்டுரை:
.................................................. ...........................................
இட்டு நிரப்ப முடியாத ‘#சிவாஜித்தனம்’
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ம.தொல்காப்பியன்
எனது குழந்தை வயதில் சம்பூர்ண ராமாயணம் என்ற புராணப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரபல தென்னிந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்த படம் அது. எங்கள் ஊர் ‘சீத்தாலக்ஸ்மி’ டூரிங் டாக்கீசில் மூன்றரை மணி நேரம் ஓடும். ஒரு வாரம் முழுதும் அந்தப் படத்தைக் காணக் குடும்பம் குடும்பமாக ஊரே திரண்டு செல்வோம்.
படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள் எல்லோரும் தூங்கி வழிவார்கள். சிலர் படுத்து உறங்குவதையும் காணலாம். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அப்படியே தலை கீழாய் மாறிவிடும்.
விழித்துக்கொண்டிருப்பவர் அந்தக் காட்சி வருவதை முன்னிட்டு மற்றவர்களை உஷார்படுத்துவார். வேறு சிலரோ திடீரென விழித்துக்கொண்டு பரபரப்படைவார்கள். இந்தக் களேபரங்களுக்கு இடையிலும் தூங்கிப் போனவர்கள் மறுநாள் காலையில், தான் எழுப்பப் படவில்லை என்பதற்காக மற்றவர்களோடு சண்டையில் இறங்குவார்கள்.
விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாகத் தோன்றும் அந்தச் சில காட்சிகளுக்காகத்தான் இத்தனை அலப்பறைகள்.
“அண்ணா! அண்ணா! என் அண்ணன் எங்கே? என் அண்ணன் ராமன் எங்கே? அண்ணா...”
என்று பதறியபடி பரதனாக சிவாஜி தோன்றும் அந்த காட்சியின்போது விழித்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை கூட்டமும் இத்தனை சலசலப்புகளுக்கு உள்ளாகியது.
சிவாஜி திரையில் தோன்றியதும் அதுவரை தூங்கி வழிந்த, சோர்ந்து கிடந்த பார்வையாளர்கள் திடீர் விழிப்படைவதைக் கண்டு நான் திகைப்பது வழக்கம். பரதனின் முக்கியக் காட்சிகள் கடந்ததும் கூட்டம் மெல்ல மெல்லக் கொட்டகையை விட்டு வெளியேறும். என்ன நடந்தது?
சம்பூர்ண ராமாயணத்தில் பங்கு பெற்றிருந்த என்.டி. ராமாராவ் உட்பட அத்தனை நடிகர்களையும் வென்று வீழ்த்திக் காட்டியிருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை!.
வெற்றி வாகை;
எனது அனுபவம் அத்தோடு முடிந்து விடவில்லை
பாத்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசனை வென்றார். பச்சை விளக்கு போன்ற படங்களில் எஸ்.எஸ்.ஆரை வீழ்த்தினார். சபாஷ் மீனாவில் சந்திரபாபுவை வென்றார். பல்வேறு படங்களில் முத்துராமன், ஏவிஎம் ராஜன், நம்பியார், நாகேஷ், போன்ற அன்றைய காலத்து ஜாம்பவான்கள் அனைவரையும் வெற்றி கண்டார் சிவாஜி கணேசன்.
‘வியட்னாம் வீடு’வில் பத்மினியை வென்று காட்டினார். பாச மலர் படத்தில் சாவித்திரியைத் தோற்கடித்தார். மனோகராவில் கண்ணாம்பாவை ஜெயித்தார். சரஸ்வதி சபதம் படத்தில் கே.ஆர். விஜயாவைத் தோற்கடித்தார். பல்வேறு படங்களில் மனோரமாவை வென்று வீசி இருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் விட மேலான வெற்றியாக நான் காண்பது, அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் பின் தள்ளியதைத்தான்!
ஆம்! சிவாஜி கணேசனால் நடிக மேதை என்று மிக உயர்வாக வர்ணிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ராதா. மற்றவர் டிஎஸ் பாலையா. அத்தகைய ராதாவை பலே பாண்டியா உட்பட, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவரை விஞ்சிச் சென்று சாதனை படைத்தவர் சிவாஜி கணேசன்.
மகா நடிகர்கள் என்று கருதப்பட்ட டி.எஸ்.பாலையா, சகஸ்ரநாமம், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.ரங்காராவ், பி.நாகைய்யா போன்ற பெரும் நடிகர்களை எல்லாம் பின்வாங்க வைத்தவர் சிவாஜி கணேசன்!
பழம்பெரும் நடிகர்களை மட்டும் அல்லாமல் பின்னால் தான் சந்திக்க நேர்ந்த நவீன நடிகர்களை எல்லாம் கூட தனது நடிப்பால் ஊதித் தள்ளினார் நடிகர் திலகம்.
வென்றார், வீழ்த்தினார், தோற்கடித்தார், பின்வாங்கச் செய்தார், ஊதித் தள்ளினார் போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கான விளக்கத்தை நீங்கள் கோரலாம். உங்களுக்கு சிறு அவகாசம் அளிக்க விரும்புகிறேன். ஒரு பாடல் காட்சியைப் பார்த்துவிட்டுப் பிறகு தொடரலாம்.
ஊதித் தள்ளினார்;
‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ என்ற பாடல் காட்சியைப் பார்க்க உங்களை அழைக்கிறேன். படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் அது.
‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’, ‘நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை’ போன்ற உலகத் தரமான மேலும் இரண்டு பாடல்கள் இருந்த போதும் இந்தப் பாடலை குறிப்பாக நான் சொல்வதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது.
இந்தப் பாடலில் சிவாஜியோடு பாலாஜியும் சேர்ந்து நடித்திருப்பார். பாடலின் மெட்டு சற்று மெதுவான தொனியில் ஒலிக்கும். பாலாஜிக்குப் பாடிய பி.பி. ஸ்ரீநிவாஸோ மென் தொனிக் கொண்டவர். பண்ணை ஆட்களுடன் சேர்ந்து கொண்டாட்ட மோஸ்தரில் பாடப்பட்ட அந்த பாடல் சற்றும் பொருத்தமில்லாமல் வேகம் குறைந்திருக்கும். ஆனால் நடிகர் திலகம் அந்தத் தொய்வுகள் ஏதும் தெரியாமல் அப்படியே மாற்றிக் காண்பிப்பார்.
தனக்கே உரிய பாணியில் அங்கு இல்லாத ஆனால் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்ச்சி வேகத்தைத் தனது உடம்பிலும் உள்ளத்திலும் கொண்டு வந்து அந்த சூழலையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுத்துவிடுவார்.
ஒரு நடிகனால் எத்தகைய மோசமான நடிப்புச் சூழலையும் தூக்கி நிறுத்திக் காட்ட முடியும் என்பதற்கு அந்தப் பாடல் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.
மெட்டு மெதுத்தன்மை வாய்ந்தது என்றால் நடிகர் பாலாஜி அதை விடவும் மெதுவானவர். இந்த இரண்டு வேகத்தடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு அந்தக் காட்சியையே குதூகலப்படுத்தியிருப்பார் சிவாஜி. ஒரு நடிகன் ஒரு பாடல் காட்சியை எப்படி ஆளுமைப்படுத்த முடியும் என்பதற்கு ஓர் இலக்கணச் சான்றாகத் திகழ்கிறது இந்த பாடல் காட்சி.
‘ஊதித் தள்ளினார்’ என்ற எனது சொற்களுக்கான காட்சி வடிவத்தை இப்போது கண்டீர்கள். இது ஒரு சிறு பொறி. அவ்வளவுதான்.
இந்தப் பாடல் காட்சியில் ஒரு புதிரையும் நீங்கள் கண்டீர்கள். ஆம்! அது புதிர்தான். வேறு நடிகர்களுக்கெல்லாம் புரியாத புதிர் அது. அந்தப் பாடலில் வந்த பாத்திரத்துக்கு ஒரு ஸ்டைலை உருவாக்கி இருப்பார் சிவாஜி கணேசன். பாடலில் மட்டுமல்லாது படம் முழுக்க அந்த ஸ்டைல் ஊடாடி நின்று அசத்தியிருக்கும்.
உற்பத்தியாகும் ஸ்டைல்;
தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய புதிய ஸ்டைலை உருவாக்கி அளிப்பது சிவாஜியின் நடிப்புச் சூத்திரத்தின் பிரதான அம்சம். சித்தரிக்கப்பட்ட பாத்திரத்தின் சுபாவத்துக்கு மேலும் மெருகூட்டுவதாக அந்த ஸ்டைல் அமைந்து சிறப்பூட்டும்.
சிவாஜி தனது உடம்பில் ஸ்டலை உற்பத்தி செய்கிறார். ஏதேனும் தனித்த ஸ்டைல் இல்லை என்றால் ஒரு நடிகன் ரசிகனுக்குத் தேவைப்பட மாட்டான். சிவாஜியின் உடல் மொழி வேறாக இருந்தபோதும் அவர் தனக்கே உரிய கற்பனையின் துணை கொண்டு கேரக்டரின் சுபாவங்களுக்கேற்ற புதிய ஸ்டைலைத் தனது உடலில் உருவாக்கிக் காட்டி ரசிகனைப் பரவசப்படுத்திவிடுகிறார்.
இல்லாத ஒன்றை உருவாக்குவதுதானே திறமையினும் திறமை. தனது உடம்பில் இல்லாத ஸ்டைலைத் தேவை அறிந்து உருவாக்கித் தரும் திறமையினால்தான் சிவாஜி கணேசன் அனைவரையும் விஞ்சிச் செல்கிறார். எவராலும் வெல்ல முடியாத நிலையை அடைந்துவிடுகிறார்.
மிகை நடிப்பா?
சிவாஜியின் நடிப்பைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மிகை நடிப்பு என்ற வாளால் விமர்சக உலகம் அவரைக் கீற ஓடி வருவதை நான் காண்கிறேன். நான் அவர்களோடு ஒத்துப்போகிறேன் என்பதை எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்கிறேன்.
அதே நேரத்தில்,
குற்றம் சாட்டுவதோடு நின்றுவிட்ட, அதற்கான காரணங்களைத் தேடிக் காண விழையாத, அவர்களின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறேன்..
சிவாஜியின் மிகை நடிப்புக்கு இரண்டு முதன்மையான காரணங்களை நான் பார்க்கிறேன்.
ஒன்று,
அந்தக் காலத்துப் பார்வையாளர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலைச் சார்ந்தது.
இரண்டாவது,
சிவாஜியை இயக்கிய அவரது இயக்குநர்களின் திறன் சார்ந்தது.
முதலாவது காரணத்தை நான் இங்கு விரிவாகப் பேசப்போவது இல்லை. அது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்றே. காலத்தை வெல்வதற்கு மனிதன் இன்னும் கற்கவில்லை என்ற உண்மையில் அதை மூழ்கடித்துவிடலாம்.
என்னைப் பொருத்தவரை இரண்டாவது காரணம் மிகவும் முக்கியமானது.
சிவாஜியின் இயக்குனர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாகவே இருந்தனர். அவர்கள் சிவாஜியை ஓர் ஒப்பற்ற அதிசயமாகப் பார்த்து வியந்து நின்றவர்கள். அவர்கள் விரிந்து பரந்த சினிமா பார்வை கொண்டவர்கள் அல்ல. உலக சினிமா குறித்தோ மேதமை மிக்க உலக நடிகர்களின் கேமிரா செயல்பாடுகள் குறித்தோ எந்த வித ஞானமும் இல்லாதவர்கள். சிவாஜியின் இத்தகைய இயக்குனர்கள் சிவாஜியைக் குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்தும் வல்லமை அற்றவர்களாக இருந்தனர். சிவாஜியிடமிருந்து திரண்டு வரும் நடிப்பைத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் திறனற்று நின்றார்கள்
சித்தரிக்கப்பட்ட கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பதற்காகப் புதிய ஸ்டைல்களை உருவாக்கி அளிக்கும் சிவாஜியின் ஆதார ஆற்றலின் வேகத்தைத் தேவை அறிந்து கட்டுப்படுத்தும் திராணி அற்றவர்களாக, அசந்து போய் நின்றிருந்த அவர்களை நான் காட்சிதோறும் காட்சிதோறும், ஷாட்தோறும் ஷாட்தோறும் அவதானித்து வந்திருக்கிறேன்.
சிவாஜியிடம் ஆங்காங்கே தெரியும் மிகை நடிப்புக்கு அவர் மட்டுமே காரணம் அல்ல.
இதே விமர்சகர்கள் ‘முதல் மரியாதை’யைப் பார்த்துக் கை கட்டி வாய் பொத்தி நிற்பதை எண்ணிப் பாருங்கள். எங்கே போயிற்று அவர்களது மிகை நடிப்பு எனும் குற்றச்சாட்டு!
சிவாஜி தனது ஆயுள் முழுதுமான சினிமா வரலாற்றில் நூறு சதவிகித சினிமா மொழியில் உருவான எத்தனை படங்களில் தோன்றி இருக்கிறார் என நினைக்கிறீர்கள்?
அவருக்கு அத்தகைய வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்தன. ஆயினும் அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் அவர் தரமான சினிமா மொழியைக் கையாண்டிருப்பதைக் காணலாம். சினிமா மொழியும் நாடகத்தனங்களும் மாறி மாறி இடம் பெற்றிருக்கும்.
அவரது இயக்குனர்கள் சினிமா மொழியைக் கையாண்டவர்கள் இல்லை. அவர் மட்டுமே தனி ஒருவராக முயன்றிருக்கிறார்.
கேரக்டரின் உணர்ச்சி வேகத்துக்கு ஏற்றாற்போல நடை எப்படி அமைய வேண்டும், பார்வை எப்படி இருக்க வேண்டும் குரல் எந்த தொனியில் ஒலிக்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானித்துக்கொள்கிறார். அந்த கேரக்டரின் பிறவிக் குணங்களோடு தனது உடல் மொழியை இயங்கவிடுகிறார். இது சிவாஜியின் நடிப்புச் சூத்திரம்.
சிவாஜியின் கற்பனைத் திறன் அலாதியானது. இணையற்றது. கேரக்டரின் சுபாவத்தைப் பெருக்குவது குறித்த அவரது கற்பனைத் திறன்தான் சிவாஜியின் ஜீவ ரசம். சிவாஜியைப் பிழிந்து எடுத்தால் அவரிடம் மீதமிருக்கும் ‘சிவாஜித்தனம்’ என்பது அவரது கற்பனையாகத்தான் இருக்கும்.
தன் இயக்குநர்கள் அளித்த நாடக வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சிறந்த சினிமாவுக்கான முதல் தர நடிப்பை வெளியிட்டிருக்கிறார் சிவாஜி.
ஒரு முழுமையான சினிமாவில் நடிப்பதற்கு அவர் 1986வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வருடத்தில்தான் பாரதிராஜா தனது முதல் மரியாதையைக் கொடுத்தார். பாரதிராஜாவின் வழக்கமான குறுக்கீடுகள் இதிலும் இருந்தபோதும் சிவாஜியின் ஒப்பிட முடியாத பங்களிப்பால் 'முதல் மரியாதை' சினிமா, தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க பொக்கிஷமாக ஜொலிக்கிறது.
(‘சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஓர் சமர்’என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரையாசிரியர் ம. தொல்காப்பியன், இயக்குநர், எழுத்தாளர்.)
இன்று,
அக். 1, 2021 சனிக்கிழமை,
அய்யனின் பிறந்த நாள்
ம.தொல்காப்பியன்

Thanks ma Tholkappiyan (Sivaji Group)

sivaa
2nd October 2021, 03:24 PM
நடிகர் திலகம் #சிவாஜி கணேசன் #பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு #கூகுள் தேடு பொறியில் #டூடுலை உருவாக்கிய #பெங்களூரைச் சேர்ந்த ஓவிய கலைஞர் #திரு_நூபூர்_ராஜேஷ்_சோக்ஸியால் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்��

5812

Thanks sankar (nadigathilakam fans)

sivaa
2nd October 2021, 03:28 PM
சிவாஜி ஜெயந்தி 10/01/2021 இன்று வள்ளலின் 93 வது ஜெனன தினம். தனக்கு பெயரோ புகழோ கிடைக்கவேண்டுமென்றோ , அல்லது மக்கள் தன்னை வாழ்த்தவேண்டுமென்றோ, புகழவேண்டுமென்றோ என எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் ,தன் நாட்டின் மீது மிகவும் பற்றுடனும், நாட்டு மக்களின் தேவை அறிந்தும் , சுயநலம் இல்லாமல் இக்கட்டான நேரங்களில் வாரி வாரி அள்ளிக்கொடுத்த கொடை வள்ளல் செவாலியே சிவாஜி கணேசனின் 93 வது ஜெனன தினத்தில் நினைவில் கொள்வோம்.

5813

sivaa
2nd October 2021, 03:33 PM
நடிகர் திலகத்தின் 93 வது பிறந்த தினத்தையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு
கௌரவப்படுத்தியது.

5815

5816

5814

sivaa
3rd October 2021, 11:43 PM
தொய்வுடன் தொங்கி கொண்டிருந்த தமிழ்த் திரையுலகமானது, சிவாஜியின் வருகைக்கு பிறகே கர்ஜித்து எழுந்து மிரட்டலுடன் ஓடத் தொடங்கியது... சிவாஜிக்கு முன்பு - சிவாஜிக்கு பின்பு - என திரையுலக கோட்டை கிழித்தும், பிரித்தும், வகுத்தும் காட்டியவர்..!!
நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - ஏன் உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன்., ஆனால், இதையெல்லாம் திரையுலகம் இன்று மறந்து போன கொடுமை நடந்துள்ளது.
பக்கத்தில் இருப்பதாலேயே சில அற்புதங்கள் நம் அறிவுக்கு எட்டாமல் போய்விடும்.. பக்கத்தில் இருப்பதாலேயே சில பரவசங்கள் நம் பார்வைக்கு வராமலேயே போய்விடும்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அப்படித்தான்..
இந்தியாவிற்குள்ளேயே போதுமான வெளிச்சமின்றி அஸ்தமனம் ஆகிவிட்டார். இதுவே ஹாலிவுட்டில் மட்டும் சிவாஜி பிறந்திருந்தால், இந்த உலகமே அவரை ஆராதித்திருக்கும்... தமிழன் என்று பிறந்துவிட்டதுதான் அவர் செய்த ஒரே தவறு.. திறமையாக நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு, நிஜ வாழ்வில் நடிக்க தெரியாததுதான் அடுத்த தவறாக போய்விட்டது.
நடிப்பாற்றலின் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருதை வழங்காமல் இந்திய அரசு புறக்கணித்தது. ஆனால் பிரான்ஸ் நாடு செவாலியே விருது தந்தது.. அமெரிக்கா தன் மாநகரத்தின் கௌரவ மேயர் ஆக்கியது.. சிங்கப்பூர் நாடு தனது பாராளுமன்றத்தில் அவரது நடிப்பைப் புகழ்ந்து தீர்மானமே போட்டது... ஆசியா ஆப்ரிக்கா இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் இவரே என்று எகிப்து அவரை கொண்டாடியது. ஆனால் இந்தியா சிவாஜியை ஏறெடுத்தும் பார்க்காமலேயே போய்விட்டது.
சிவாஜி இறந்ததில் இருந்தே இந்த வருத்தம் இருந்தாலும், இன்றைய தினம் நம் தமிழகத்திலேயே ஒரு புறக்கணிப்பு நடந்துள்ளது.. அதுவும் திரையுலக புறக்கணிப்பு நடந்திருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.. நேற்று நடிகர் திலகத்தின் 94-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் உட்பட பல முக்கிய தலைவர்கள் அவரது மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தினர்..
ஆனால் தமிழக திரையுலகைச் சேர்ந்தவர்கள், இன்றைய இளைய நடிகர்கள், இயக்குநர்கள் யாருமே செல்லவில்லை.. வைரமுத்து மட்டும் சென்று மரியாதை செலுத்தி உள்ளார்.. இது வருந்தத்தக்கது என்பதுடன், கண்டனத்துக்குரியதும் என்றும் கருத்துக்கள் வெடித்து கிளம்பி உள்ளன..
குறிப்பாக, நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், இதை ஒரு அறிக்கையாகவே பதிவு செய்துள்ளார்..
அந்த அறிக்கையில், "தமிழ் சினிமாவின் முகவரியாக, தமிழ்க் கலையின் அடையாளமாகத் திகழ்ந்து மறைந்த நடிகர்திலகத்திற்கு மரியாதை செலுத்தக்கூட நேரமில்லாமல் தமிழக திரையுலகினர் இருக்கிறார்களா? கொரோனாவைக் காரணமாகக் கூறினாலும்கூட, தனிப்பட்ட முறையிலாவது தங்கள் வீட்டில் புகைப்படம் வைத்து மரியாதை செய்திருக்கலாம்.
கூகுள் தனது முகப்பில் நடிகர்திலகம் புகைப்படத்தை வைத்து கெளரவப்படுத்திய நிலையில், தங்கள் வீட்டு நாய் குட்டிபோட்டதைக்கூட ட்விட்டரில் பதிவிட்டு பெருமை கொள்ளும் பலகலைஞர்கள், நடிகர்திலகம் பிறந்தநாளுக்காக ஒரு வாழ்த்துப் பதிவைக்கூட போடாமல் அமைதிகாத்தது ஏனோ? மொத்தத்தில் நன்றி மறந்துவிட்டதா தமிழ்த்திரையுலகம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேசமயம், சிவாஜிக்கு, முதல்முறையான அவமானம் நேற்றுதான் நடந்தது என்று சொல்ல முடியாது.. ஏற்கனவே இதுபோல 2, 3 முறை இதே தமிழகத்தில் நடந்துள்ளது.. அன்று, அவரது சிலையை மெரினாவில் இருந்து அகற்றியதே பெருத்த அவமானம்தான்.. இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு மட்டும் நேர்ந்த அவமானமில்லை.. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம்.
போக்குவரத்து இடையூறு என்று சிலையை அகற்ற அரசு சொன்ன காரணத்தில் துளியும் உண்மையில்லை என்பது அப்போது எல்லாருக்குமே தெரியும்.. காரணம், 2006-ல் இதே போல ஒரு காரணத்தை சொல்லி, சிலைதிறப்புக்குத் தடைபோட முயன்றபோது நீதிமன்றமே அந்த காரணத்தை நிராகரித்திருந்தது.. 2013-ல் அதிமுக ஆட்சி காலத்தில் இதே வழக்கு வந்தது.. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிலையை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது நினைவிருக்கலாம்.
திரையுகிலேயே ஆகப்பெரும் சகாப்த நடிகர்களை புறக்கணிக்கும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய இளம் நடிகர்களுக்கு சிவாஜி என்ற டிக்*ஷனரியின் அர்த்தம் புரியாமல் இருக்கலாம்.. ஆனால், மூத்த கலைஞர்களுக்கும், சீனியர்களுக்கும் பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியும் இல்லாமல் இருப்பது வேதனைதான்..
எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், மனித உயிருக்கான மதிப்பு இவ்வளவுதான் என்பதை இன்றைய திரையுலகம் நிரூபித்துவிட்டது.. ஆனால் ஒன்று, சின்ன - பெரிய என்ற பாகுபாடின்றி, தலைசிறந்த கலைஞர்களுக்கு மரியாதை செய்யாத எந்த தேசமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை... தன் போக்கை திரையுலகம் இனியாவது மாற்றி கொள்ள வேண்டி உள்ளது..!

5817

Thanks Sibbiah (f. book)

sivaa
16th October 2021, 11:28 PM
69 YEARS OF 'பராசக்தி'


தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் அறிமுகமான படம் பராசக்தி. இது 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் அடைந்த மாபெரும் வெற்றியால் சிவாஜி கணேசன் தமிழ் உலகம் போற்றும் மாபெரும் நடிகர் ஆனார். தான் ஏற்று நடித்த எண்ணற்ற கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்கள் நெஞ்சிலும், மக்கள் மனதிலும் வேரூன்றி அவர்கள் புகழ்ந்து போற்றும் 'நடிகர் திலகம்' ஆனார். அவர் திரையுலகில் அறிமுகமான 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் அறுபத்து ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் தொகுக்கப்பட்டதுதான் இந்தச் சிறிய காணொளி !

https//youtu.be/9tzD8DchjsQ

Thanks Nilaas Thiraikkoodam

sivaa
22nd October 2021, 02:04 PM
நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய "பாரத்விருது" மக்கள் திலகத்துக்கு சென்றது எப்படி .?

வசந்தம் (பல்சுவைக் குழு)
sheik Ali · 31tp8n1idh ·
��அன்றைய திரை நினைவுகள்-6 ��
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய "பாரத்விருது" மக்கள் திலகத்துக்கு சென்றது எப்படி .?
பிலிம் நியூஸ் ஆனந்தன் சொன்ன உண்மைச் செய்தி. !!
����������������������������������
தமிழ்மகன் கூறுகிறார்…..
தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.
கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
“ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.
“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.
மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
இது சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?

நன்றி Rajendran Rajendran (Sivaji Rasikar Mandram)

sivaa
5th November 2021, 02:09 AM
நடிகர் திலகத்தின் 100 வது காவியமான "நவராத்திரி " வெளியான நாள் இன்று,
கடந்த காலங்களில் எல்லாம் வருடத்திற்கு 200 படங்களுக்கும் மேலாக வெளியான போதிலும் கூட தீபாவளி திருநாள் முன்னிட்டு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும் நிலை இருந்து வருகிறது,
கடந்த தீபாவளிக்கு பிகில், கைதி ஆகியன மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி என இரண்டு திரைப்படங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கிறது,
கொஞ்சம் பின்னோக்கி நவராத்திரி வெளியான 1964 ஆம் ஆண்டின் தீபாவளி திருநாள் சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என அலசும் போது அந்த ஆண்டின் தீபாவளிக்கு மட்டுமே நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கிறது,
அந்த ஆண்டில் வெளியான மொத்த தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 34 மட்டுமே,
அந்த 34 படங்களில் நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமே 7 படங்கள் அவை
1) கர்ணன்
2) பச்சை விளக்கு
3) ஆண்டவன் கட்டளை
4) கை கொடுத்த தெய்வம்
5) புதிய பறவை
6) முரடன் முத்து
7) நவராத்திரி
அதாவது மொத்த படங்களில் 5 ல் ஒரு பங்கு நடிகர் திலகம் திரைப்படங்கள் ஆகும்,
1964 ல் வெளியான 34 படங்களில் 100 நாள்களுக்கும் மேலாக ஓடி வெற்றி கண்டவை மொத்தம் 12 படங்கள் ஆகும்
நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் -5
1) கர்ணன்
2) பச்சை விளக்கு
3) கை கொடுத்த தெய்வம்
4) புதிய பறவை
5) நவராத்திரி
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் -3
1) பணக்கார குடும்பம்
2) வேட்டைக்காரன்
3) படகோட்டி
இதர படங்கள் காதலிக்க நேரமில்லை, கருப்புப் பணம், பூம்புகார், சர்வர் சுந்தரம் ஆகியன வெற்றிப் படங்கள்,
03-11-1964 அன்று தீபாவளி முன்னிட்டு நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் நவராத்திரி, முரடன் முத்து ஆகியன ரிலீஸாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு தீபாவளி எனக் கொண்டாடச் செய்தது, இது போல நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒரே நாளில் இரண்டு படங்கள் என 18 முறை ரிலீஸாகி சாதனை நிகழ்த்தி இருக்கிறது அதிலும் தீபாவளி நாளில் மட்டுமே 8 முறை இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகி அசத்தி இருக்கிறது, அதில் 80% படங்கள் வெற்றிப் படங்கள் ஆகும்,
குறிப்பாக 1967 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரு மலர்கள், ஊட்டி வரை உறவு
1970 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி அனைத்தும் 100 நாட்களைக் கொண்டாடி சாதனை செய்து இருக்கிறது,
நவராத்திரி சென்னையின் நான்கு தியேட்டர்களிலும் முரடன் முத்து நான்கு தியேட்டர்களிலும் என 8 தியேட்டர்களில் வெளியான போது ஏற்கனவே புதிய பறவை பாரகன் தியேட்டரில் 100 நாட்களை நெருங்கி ஓடிய படி இருந்தது, இதுவும் இல்லாமல் நடிகர் திலகத்தின் வெவ்வேறான பழைய படங்கள் 3 தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்ததால் அன்றைய நாளில் சென்னையில் அமைந்திருந்த 25 க்கும் குறைவாக இருந்த முக்கிய திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே 12 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது, "இங்கு கவனிக்க வேண்டியது நடிகர் திலகத்தின் சொந்த திரையரங்கான சாந்தி தியேட்டரில் நடிகர் திலகம் படம் ஓடவில்லை"
சிலர் சாந்தி தியேட்டரில் மட்டுமே சிவாஜி படங்கள் ஓடியன என எதிர்மறை கருத்தை சமூக வலைத்தளத்தில் சொல்லி வருவதை பார்க்க முடிகிறது,
நவராத்திரி சென்னையில் திரையிடப்பட்ட நான்கு திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கொண்டாடியது
தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு ஹீரோவின் 100 வது படம் சென்னையில் ரிலீஸான 4 திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கொண்டாடியது என்றால் அது நடிகர் திலகத்தின் நவராத்திரி மட்டுமே,
முரடன் முத்துவும் 50 நாட்களைக் கடந்து குறிப்பிட்ட வெற்றியை பெற்றது,
எம்ஜிஆர் இன் படகோட்டி சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ப்ளாஸா தியேட்டரில் மட்டுமே 100 நாளைக் கொண்டாடியது,
1964 ஆம் ஆண்டின் தீபாவளி சிவாஜி ரசிகர்களுக்கு இனிப்பான தீபாவளியாக அமைந்தது.


Thanks Sekar Parasuram

sivaa
6th November 2021, 09:09 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 71
என் மகன் முதல் நாள் பார்த்தது, அதன் ஓட்டம், அது பெற்ற வெற்றி, மதுரை நியூ சினிமாவில் 100 நாள் ஓடியது அனைத்தும் பேசினோம். பயணத்தை தொடர்வோம்.
முதல் நாள் இரவு படம் பார்த்துவிட்டு மறுநாள் காலை விடிந்து பத்திரிக்கை பார்த்தால் அதிர்ச்சி மற்றும் சோகம் தாக்குகிறது. ஆம், முதல் நாள் மாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தேசிய நடிகர் சசிகுமாரும், அவரது மனைவியும் சிக்கி ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது.
மந்தவெளி ராமகிருஷ்ணா மட் ரோட்டில் ஒரு இடைதெருவாக அமைத்திருக்கக்கூடிய ராணி அண்ணாதுரை தெருவில்தான் அவர் வீடு இருந்தது. ஆகஸ்ட் 21ந் தேதி மாலை 5 மணி அளவில் சசிகுமார் வெளியே போவதற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார், அன்றைய தினம் மாலையில் ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டம். அதில் பேசுவதற்கு ஒப்புக் கொண்டிருந்த சசிகுமார் கூட்டத்திற்கு போவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுப்பட்டிருக்க, அவருக்கு காபி போடுவதற்கு ஸ்டவ் அடுப்பை மூட்டியிருக்கிறார் அவரது மனைவி திருமதி சசிகலா. பம்பிங் ஸ்டவ் அதாவது பிஸ்டன் போல் இருக்கக்கூடிய அமைப்பு. அதில் காற்று அடிப்பது போல பம்ப் செய்ய வேண்டும். அப்படி செய்தபோது பட்டென்று பற்றிக்கொண்ட நெருப்பு அருகில் நின்றிருந்த அவர் புடவையில் பற்றிக் கொண்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான் வகை துணியாலான புடவை என்பதால் தீ மளமளவென்று பரவியதாக சொல்கிறார்கள். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சசிகுமார் தீயை அணைக்க முற்பட அவர் அணிந்திருந்த உடைகளிலும் தீ பற்றி பரவியதாக சொல்கிறார்கள். தீயை அணைப்பதற்க்காக இருவரும் தரையில் உருள அப்படியும் தீ அணைய நேரம் எடுத்திருக்கிறது. சசிகுமாரின் சகலை அந்நேரம் வீட்டிற்கு வந்தவர் இருவரையும் காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 70 முதல் 80% தீக்காயம் என்பதால் டாக்டர்கள் அப்போதே அபாயக்கட்டம் என்று சொல்லி விட்டார்கள். இந்த செய்தியை படித்தவுடன் மனசுக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது.
அன்று மாலை தினசரிகளில் வந்த செய்தியை பார்க்கும்போது நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் என்பது புரிந்தது. 80% தீக்காயம் என்பதால் வாழை இலையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் டாக்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தி வந்திருந்தன. அனைத்து திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தார்கள் என்று செய்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் உடனே பெருந்தலைவரை பார்க்க வேண்டும் என்று சசிகுமார் சொல்ல அதை கேள்விப்பட்டவுடன் பெருந்தலைவரும் பா.ராமச்சந்திரன் அவர்களும் உடனே வந்து விட்டனர். தலைவரை பார்த்தவுடன் அந்த நிலையிலும் எழ முற்பட்டிருக்கிறார் சசிகுமார். நீங்கள் வரும்போது எழுந்து நிற்க முடியவில்லை. மன்னித்து விடுங்கள் என்றாராம். பெருந்தலைவருக்கு துக்கம் தாள முடியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க அங்கே நின்றால் சசிகுமார் மேலும் உணர்ச்சிவசப்படுவார் என்று அறைக்கு வெளியே வந்து விட்டாராம். நடிகர் சங்க செயலாளர் மேஜர், ஸ்ரீகாந்த், ஏவிஎம் ராஜன் போன்றோர் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டுள்ளனர்.
நடிகர் திலகம் அந்த நேரம் சென்னையில் இல்லை. ஆகஸ்ட் 15 முதல் அரசாங்கம் கொண்டு வந்த புதிய வரி விதிப்பை எதிர்த்து திரையுலகம் போராட்டத்தில் இறங்கியதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன என்பதை பார்த்தோம். 18ந் ஞாயிறு வரை அரசாங்கத்துடன் பேசிச்சு வார்த்தை நடக்கவில்லை. 19ந் தேதி அன்று நடிகர் சங்க தலைவர் நடிகர் திலகம், பிலிம் சேம்பர் தலைவர் ,திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விவாதிக்க புதிய சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வந்தது. அதன்படி மறுநாள் ஆகஸ்ட் 20 அன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்த செய்திகளெல்லாம் இந்த தொடரில் முன்பே பார்த்தோம். இதெல்லாம் முடிந்து படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டதால் சில நாட்கள் ஓய்வு எடுத்து வரலாம் என்று நினைத்து நடிகர் திலகம் கமலா அம்மாளுடன் சூரக்கோட்டை சென்று விட்டார். விபத்து நடந்த அன்றே அவருக்கு தகவல் சொல்லப்பட அவர் உடனே தனது செயலாளர் குருமூர்த்தியையும் தயாரிப்பு நிர்வாகி மோகன்தாஸையும் அனுப்பி வைக்க அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர சொல்லியிருந்தார். மறுநாள் காலை வி சி சண்முகம் அவர்களும் நேரில் சென்று பார்த்திருக்கிறார்.
தீவிபத்து சசிகுமார் உடலை மட்டுமல்ல அவரது மனதையும் பாதித்த விட்டது. இனிமேல் தன்னால் சினிமாவில் நடிக்க முடியுமா என்று மேஜரிடம் மற்றும் ஏவிஎம் ராஜனிடம் கேட்டிருக்கிறார். நிச்சயமாக முடியும் என்று அவர்கள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் திலகத்தின் டாக்டர் ஒருவரின் நண்பரான பிளாஸ்டிக் சர்ஜன் வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் சென்னை வந்து ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார். விபத்திற்கு முதல்நாள்தான் தமிழகத்தின் மற்ற ஊர்களை காண்பதற்காக கிளம்பி போயிருக்கிறார். அவரை எங்கேயிருந்தாலும் தேடி கண்டு பிடிக்க நடிகர் திலகம் சொல்ல அந்த டாக்டரும் முயற்சித்திருக்கிறார். இன்றைய நாட்கள் போல் தொடர்பு கொள்ளும் வசதிகள் அன்றைய நாட்களில் வெகு குறைவு என்பதால் அவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்ற செய்தியும் வந்தது. அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என்றபோது பலரும் முன் வந்து ரத்தம் கொடுத்திருக்கிறார்கள். மாலையில் கோவில் பிரசாதங்களை கொண்டு கொடுத்த ஏவிஎம் ராஜனிடம் அய்யப்ப கானங்கள் பாடும்படி சசிகுமார் கேட்டிருக்கிறார். வருடந்தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை போகும் வழக்கம் உடையவர் சசிகுமார். ராஜன் பாட சற்று ஆசுவாசம் அடைந்தாராம். சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்ல அனைவரும் சந்தோஷப்பட இந்த தகவல் நடிகர் திலகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை மோசமானது. அதை அவரே உணர்ந்தார் என தோன்றுகிறது. காரணம் சாமி பாடல்களை பாடிக் கொண்டிருந்த குடும்பத்தினரிடம் தேசிய கீதம் பாட சொல்லியிருக்கிறார். அவர்களும் பாட கூடவே தானும் சேர்ந்து பாடியிருக்கிறார். பாடி முடிக்கையில் ஜெய்ஹிந் என்ற முழக்கத்தோடு அந்த கடமை தவறாத தாய் நாட்டு பற்றுடைய அந்த ராணுவ வீரனின் உயிர் பிரிந்திருக்கிறது. கணவர் இறந்த சில மணி நேரங்களிலேயே அந்த தகவல் தெரியாமலேயே அவரது மனைவி திருமதி சசிகலாவின் உயிரும் பிரிந்தது. செய்தி கேட்டு திரையுலகமே மொத்தம் திரண்டு வந்தது. அஞ்சலி செலுத்தியது. இருவரின் உடல்களும் நடிகர் சங்க வளாகத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது.
காலையில் செய்தி கேள்விப்பட்டு 9 மணி சுமார் சூரக்கோட்டையிலிருந்து புறப்பட்ட நடிகர் திலகம் 1 மணிக்கு சென்னை வந்து சேர்ந்து விட்டார். நடிகர் சங்க வளாகத்திற்கு சென்றவர் நிலை குலைந்து கண்ணீர் விட்டு அழுதார். தான் சசிகுமார் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்ததை சொல்லி சொல்லி அழுதிருக்கிறார். சசிகுமாரும் அவரை குருவாகவே எண்ணி வாழ்ந்தவர். அவர் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தவர். மறைவதற்கு ஒரு மாதம் முன்பு சசிகுமார் நடித்த ஒரு நாடகத்திற்கு தலைமை தாங்கிய நடிகர் திலகம் அவரை மனந்திறந்து பாராட்டியதை தனது வாழ்நாள் பரிசாக கருதினார் சசிகுமார். அந்த சம்பவத்தை சொல்லி சொல்லி மகிழ்ந்ததாக அவரது தனிப்பட்ட ஒப்பனையாளர் சொல்லியிருந்தார். நடிகர் சங்கத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது சசிகுமார் உடலை தோளில் தாங்கி வண்டியில் ஏற்றினார் நடிகர் திலகம். அனைத்து நடிகை நடிகையரும் (ஒருவரை தவிர) கலந்து கொண்டனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வந்தது.
சசிகுமார் தம்பதியினரின் முழு மருத்துவ செலவுகளையும் இறுதி சடங்கிற்கிற்கான அனைத்து செலவுகளையும் நடிகர் திலகமே ஏற்றுக் கொண்டார். நடிகர் சங்கம் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை சசிகுமாரின் மகள் நந்தினி மற்றும் மகன் விஜயசாரதி ஆகியோர் பெயரில் வங்கியில் வைப்பு தொகையாக (FD) போடப்பட்டு அவர்கள் மைனர் என்பதால் கார்டியன் பொறுப்பை நடிகர் திலகமும் மேஜரும் ஏற்றுக் கொண்டனர். சசிகுமாரின் மனைவியின் நகைகளும் அந்த வங்கியில் வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டிற்கு சசிகுமாரின் பெற்றோரும் அவர் மனைவியின் தாயாரும் ஒப்புக் கொண்டார்கள். ஒரு வாரத்திற்கு பின் அகில இந்திய சிகர மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரு இரங்கற்கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தியது. பலரும் தங்களது குடும்பம் பிள்ளைகள் அவர்கள் நலன் என்றே நினைக்கும் காலத்தில் நாட்டையும் மண்ணையும் தான் ஏற்றுக் கொண்ட தலைவனையும் இறுதி மூச்சில் கூட எண்ணி வாழ்ந்த ஒரு கடமை வீரனை தேச தொண்டனை இழந்து வாடுகிறோம் என்று நடிகர் திலகம் பேசினார். அவர் அதோடு நிறுத்தவில்லை. ஒரு மாதத்திற்குள்ளாகவே செப்டம்பர் மாதத்தில் செங்கல்பட்டு மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற கூட்டமைப்பின் ஒரு நாள் மாநாட்டை நடத்தி கூட்ட அரங்கிற்கு சசிகுமார் பெயரையும் வைத்தார். அதில் பேசும்போது சசிகுமாரை தனது கலையுலக வாரிசாகவே நினைத்திருந்ததாக நடிகர் திலகம் பேசினார்.
ஒரு நல்ல நடிகனை, அதை விட ஒரு நல்ல மனிதனை, ஒரு தேசியவாதியை பெருந்தலைவரின் தொண்டனை நடிகர் திலகத்தின் அன்பு தம்பியை இழந்தது காங்கிரஸ் இயக்கத்திற்கும் சிவாஜி ரசிகர் மன்றத்திற்கும் பேரிழப்பானது. ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் காமராஜ் தொண்டனுக்கும் ஏற்பட்ட வேதனையை அதே போன்ற ரசிகன் மானசீக தொண்டன் என்ற முறையில் தான் இங்கே இதை தொடரில் பகிர்ந்து கொண்டேன்.
நடிகர் திலகம் நாம் இப்போது பயணப்பட்டு வரும் காலகட்டத்தில் அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். சென்னையிலும் சரி வெளியூர் காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழம் பெரும் காங்கிரஸ் தியாகி கோமதி சங்கர தீட்சிதர் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு நிதி உதவி வழங்கினார். அப்படியே நெல்லை மற்றும் தூத்துக்குடி நகரங்களில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இத்தனைக்கும் சென்னை சினிமா ரசிகர் சங்கம் 1973ல் சிறந்த படங்களுக்கான பரிசளிப்பு விழாவை நடத்தியது பம்பாயிலிருந்து நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ராஜ்கபூர் தலைமை தாங்கி பரிசளித்தார். கெளரவம் படத்திற்காக சிறந்த நடிகர் பரிசை பெற்றிருந்தார். இயக்க கூட்டங்களுக்காக சுற்றுப்பயணம் போய்விட்டதால் அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதே போல் அதே காலகட்டத்தில் நடிகர் ஜெய்சங்கர் 100 படங்களை நடித்து முடித்ததற்காக ஒரு விழா நடைபெற்றபோது அப்போதும் வெளியூரில் இருந்ததால் நடிகர் திலகம் தனது மகன் பிரபுவை விழாவில் கலந்து கொள்ள சொல்லி அனுப்பினார். நடிகர் திலகம் சார்பாக பிரபு ஜெய்சங்கருக்கு மரியாதை செய்தார். தென் தமிழகம் மட்டுமல்லாமல் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களிலும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இதை தவிர கோவை நகராட்சியின் சார்பாக ஒரு கலையரங்கம் (ஆடிட்டோரியம்) கட்டப்பட்டு அதையும் நடிகர் திலகம்தான் திறந்து வைத்தார்.
அன்றைய நாட்களில் நடிகர் திலகம் அவர்களுக்கும் அதிமுக பொது செயலாளர் அவர்களுக்கும் அறிக்கை மற்றும் மேடை பேச்சில் நிறைய விவாதங்கள் நடந்தது. திரையுலக போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர இறுதியாக கருணாநிதியை வீட்டில் சந்தித்து பேசியது பற்றி (தனியாக சந்திக்கவில்லை. அனைத்து சங்க பிரதிநிதிகளோடுதான் சந்தித்தார்) அதிமுக பொது செயலாளர் விமர்சனம் செய்தது இந்த விவாதங்களுக்கு ஆரம்ப புள்ளியானது. அதுவும் தவிர பெருந்தலைவரை சுயநலவாதி என்று அதிமுக பொது செயலாளர் குறிப்பிட அது நடிகர் திலகத்தையும் ரசிகர்களையும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களையும் மிகுந்த கோபமுற்ற செய்தது. அனைத்து கூட்டங்களிலும் தமிழகம் மீண்டும் தன் பெருமையை திரும்ப பெற இரண்டு கழகங்களையும் புறக்கணித்து மீண்டும் பெருந்தலைவர் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார். நான் இந்த தொடரில் முன்பே குறிப்பிட்டது போல் பல தேர்தல் தோல்விகள் தந்த பாடத்தினால் திமுக அரசு மதுக்கடைகளை 1974 செப்டம்பர் 1 முதல் மூடியது. மதுவிலக்கை ரத்து செய்வதை ஆரம்பம் முதல் எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் இதை தார்மீக வெற்றியாக கொண்டாடியது.
செப்டம்பர் முடிந்து அக்டோபர் ஆரம்பிக்க நமது பாட்டுடை தலைவனின் பிறந்த நாள் அக்டோபர் 1 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் அன்றைய தெற்கு போக் ரோடை ஸ்தம்பிக்க வைத்தது. மாலைகளும் சால்வைகளும் துண்டுகளும் மலை போல் குவிந்து விட்டதாக பத்திரிக்கை செய்தி கூறியது. திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நடிகர் திலகத்திற்கு வாழ்த்து சொல்ல குவிந்து விட்டனர். நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல பெருந்தலைவர் அன்னை இல்லம் வந்தார். 1975ல் அவர் மறைவதற்கு முதல் நாள் நடந்த நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் மட்டுமே அவர் கலந்து கொண்டார் என்று சிலர் சொல்வது தவறான தகவல். நாம் இப்போது கடந்து வந்து கொண்டிருக்கும் 1974லிலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளன்று நேரில் அன்னை இல்லம் வந்தவர் கூடவே பா.ரா அவர்களையும் அழைத்து வந்தார். இன்னும் சொல்ல போனால் அன்னை இல்லத்தில் ஒரே சோபாவில் பெருந்தலைவரும் நடிகர் திலகமும் அமர்ந்திருக்கும் புகைப்படம் 1974ல் எடுக்கப்பட்டதுதான்.
நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவை எங்கே கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தபோது இந்த முறை சேலம் நகரில் நடத்துவது என முடிவானது. இது அகில இந்திய சிகர மன்றத்தின் நான்காவது மாநில மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. (1970ல் தொடங்கி இடையில் 1973ல் மட்டும் விட்டு போனது) முதலில் அக்டோபர் 12,13 என்று முடிவு செய்யப்பட்டு வழக்கம் போல் முதல் நாள் அரசியல் மாநாடு அடுத்த நாள் கலையுலக திருவிழா என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் பெருந்தலைவர் தொடங்கி ஸ்தாபன காங்கிரஸின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அதற்கு முந்தைய ஞாயிறு அக்டோபர் 6 அன்று பாண்டிச்சேரியில் பெருந்தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட அதற்கும் நடிகர் திலகம் தலைமையேற்றார். அது கிட்டத்தட்ட புதுவை மாநில மாநாடு போல நடந்தது. மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடிகர் திலகம் தொடங்கி வைத்து ஊர்வலத்தை ராஜா தியேட்டர் அருகே ஒரு மேடையி இருந்து பார்வையிட்டார். மிக பிரம்மாண்டமான அந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் பரபரப்பான செய்தியாயிற்று. அந்த கூட்டத்தில் பேசும்போது நடிகர் திலகம் சென்ற முறை செய்த தவறை செய்து விடாதீர்கள். அந்த கட்சியினரால் ஒரு மாதம் கூட ஆட்சி நடத்த முடியாமல் கவிழ்ந்து போனது. ஆகவே இணைந்து தேர்தல் களம் காணப்போகும் காங்கிரஸ் அணிகளை வெற்றி பெற செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார்.
சேலம் மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களினால் 12,13 தேதிக்களுக்கு பதிலாக 19,20 தேதிகளை மாற்றப்பட்டது. அப்போதும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அங்கே அமைக்கப்பட்ட பந்தலுக்கு சசிகுமார் பேர்தான் சூட்டப்பட்டது. இன்றைய நாட்களில் நாம் நடிகர் திலகத்தின் முடிவுற்ற வயதை குறிப்பிட்டு சொல்கிறோம். உதாரணமாக கடந்து போன அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 93வது பிறந்த நாள் என அறிவிக்கப்பட்டது (1928 - 2021). ஆனால் அன்றைய நாட்களில் அக்டோபர் 1 அன்று துவங்கும் பிறந்த நாளே எண்ணிக்கையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 1974 அக்டோபரில் நடிகர் திலகத்தின் 47வது பிறந்த தின விழா என்றே அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டது. அதன்படி 47 புறாக்கள் பறக்க விடப்பட்டு 47 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கோடி ஏற்றப்பட்டது. 47 தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதில் முதலாவதாக சிறப்பு செய்யப்பட்டது சசிகுமார் அவர்களின் தந்தையார். சேலத்திலும் மிக பெரிய ஊர்வலம். தாரை தப்பட்டை மேளம் முழங்க ஏராளமான வாகனங்களில் மற்றும் நடந்தும் அணி அணியாக ரசிகர்கள் வந்து கொண்டேயிருந்தனர் என பத்திரிக்கை செய்திகள் கூறின. சேலம் மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு நடிகர் திலகம் அங்கேயிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டார். அவருடன் பிரபல இந்தி நடிகர் சஞ்சீவ் குமார் அவர்களும் கூட நின்று ஊர்வலத்தை பார்வையிட்டார். கூட்டத்தையும் அவர்களின் ஆவேசத்தையும் அவர்கள் நடிகர் திலகத்தின்பால் கொண்ட அன்பையும் கண்டு சஞ்சீவ் குமார் பிரமித்து விட்டார். மாநாட்டு மேடையில் பேசும்போது அவரே இதை குறிப்பிட்டார். நடிகர் திலகத்துடன் ,தமிழக ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் பா.ரா அவர்களும் ஊர்வலத்தை பார்வையிட்டார்.
மாலையில் அரசியல் மாநாட்டு மேடை. முதலில் 12ந் தேதி விழா என்றபோது பெருந்தலைவர் ஒப்புக் கொண்டு தேதி கொடுத்திருந்தார். பின்னர் அது சட்டென்று மாற்றப்பட்டு 19ந் தேதி மாநாடு என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே வேறு ஒரு நிகழ்வுக்கு தேதி கொடுத்திருந்த காரணத்தினால் அவரால் வர இயலவில்லை. இதை போனில் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் மாநாட்டு அமைப்பாளர் அகில இந்திய சிகர மன்ற தலைவர் சின்ன அண்ணாமலைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி தனது வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறார். பெருந்தலைவர் நடிகர் திலகத்தை எந்தளவு நேசித்தார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அவர் மட்டும்தான் வரவில்லையே தவிர, பா.ரா, குமரி அனந்தன், நெல்லை ஜெபமணி, மணி வர்மா, ரமணிபாய், குடந்தை ராமலிங்கம், தண்டாயுதபாணி, நேதாஜி, அப்பன்ராஜ் போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பா.ரா. பேசும்போது சிவாஜி மன்றமும் காங்கிரஸும் வேறு வேறு அல்ல. அதே போல் சிவாஜி வாழ்க என்றாலும் காமராஜ் வாழ்க என்றாலும் இரண்டும் ஒன்றே என்றார். மிக பெரிய போராட்டத்திற்கு இந்த தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். எதிர்க்கட்சியினர் காங்கிரஸை காமராஜர் சிவாஜி மன்றமாக ஆக்கி விட்டார் என்று பழி சொன்னதை ரமணிபாய் போன்றவர்கள் கடுமையாக விமரிசித்து நடிகர் திலகத்தின் தொண்டை அவரது ரசிகர்களின் பங்களிப்பை பாராட்டி பேசினார். இறுதியில் நடிகர் திலகம் நிறைவுரை நிகழ்த்தும்போது தானும் தனது பிள்ளைகளும் தமிழகத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வந்து பெருந்தலைவர் தலைமையிலே ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்தார். பா.ராவிடம் நீங்கள் இடும் கட்டளையை எங்களது மன்றத்தினர் சிரமேற்கொண்டு செயல்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார். நடிகர் திலகத்தை ஏனைய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் மதிக்கவில்லை என்பது எனக்கு தெரிந்தவரை உண்மையில்லை என்றே கூறுவேன்.
மறுநாள் காலை கலை நிகழ்ச்சிகள். குன்னக்குடி அவர்களின் வயலின் கச்சேரி. காலையிலே கட்டுக்கடங்காத கூட்டம். காவல் துறையினராலும் தொண்டர் படையினாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. செல்லும் இடமெல்லாம் நடிகர் திலகத்திற்கு திருவிழா போல் கூட்டம் கூடுவதை கண்டு ஆத்திரத்தில் பொருமிக் கொண்டிருந்தவர்கள் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே நுழைந்து கல் வீசி தாக்கி ஒரு குழப்பத்தை உருவாக்க அதில் நிறைய ரசிகர்களும் தொண்டர்களும் காயம் அடைந்து அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல். தொடர் சுற்றுப்பயணத்தினாலும்[/B]இடைவிடாத படப்பிடிப்பினாலும் முதல் நாள் நடந்த ஊரவலத்தை பல மணி நின்று பார்வையிட்டது, அதன் பிறகு சேலம் நகரில் பல இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தது என்று ஓய்வில்லாமல் சுழன்ற நடிகர் திலகத்திற்கு இரவில் காய்ச்சல். ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தவர் விஷயம் கேள்விப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி பேசினார். மருத்துவமனைக்கும் சென்று காயம் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மாலை வழக்கம் போல் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவாக நடந்தது. அதில் முத்துராமன், மேஜர், ஸ்ரீகாந்த், மனோகர், விகேஆர், சுருளிராஜன், விஜயகுமார், மனோரமா, விஜயகுமாரி, பாலமுருகன், பி மாதவன், ஏஸிடி, இயக்குனர் மகேந்திரன் முதலியோர் கலந்து கொண்டு நடிகர் திலகத்தை வாழ்த்தி பேசினார்கள்.
மிக சிறப்பாக அந்த நான்காவது மாநாடு நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிவதற்கு முன்பாகவே சின்ன அண்ணாமலையையும் மற்ற சிகர மன்ற நிர்வாகிகளையும் எங்கள் மதுரை ரசிகர்கள் முற்றுகை இட்டுவிட்டனர். சென்னை, திருச்சி, கோவை, சேலம் என்று எல்லா ஊர்களிலும் சிகர மன்றத்தின் சார்பாக விழா நடத்தி விட்டீர்கள். ஆனால் அனைத்து ஊர்களையும் விட நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கோட்டையான மதுரையில் இதுவரை ஒரு விழா கூட நடத்தவில்லை. உடனே அதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று வற்புறுத்த அடுத்த வருடம் பிறந்த நாள் விழா மதுரையில் நடத்தப்படும் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை காத்திருக்க முடியாது என்று ரசிகர்கள் விடாப்பிடியாக வற்புறுத்த வி சி சண்முகம் அவர்களிடமும் பேசிவிட்டு சரி, நடிகர் திலகத்தின் 175வது படமாக அவன்தான் மனிதன் வெளியாக இருக்கிறது. அந்த 175வது பட விழா மதுரையில் நடத்துவோம் என உறுதி கூறினார்கள் 173வது படமாக அன்பை தேடி தீபாவளிக்கு வெளியாகிறது. ஆகவே 175 விரைவில் வந்து விடும் என்றும் சொல்கிறார்கள். மதுரை ரசிகர்களோ 175வது பட விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும். அடுத்த அக்டோபர் 1 பிறந்த நாள் விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும் என்று நிர்பந்திக்க இந்த இரண்டு அறிவிப்புகளும் மேடையில் வைத்து மேஜரால் அறிவிக்கப்பட்டது. (ஆனால் அதில் ஒன்றை கூட நடத்த காலம் அனுமதிக்கவில்லை என்பது மதுரை ரசிகர்களின் தீராத வருத்தங்களில் ஒன்றாக ஆகிப்போனது. அதனால்தான் சிறிது கால இடைவெளிக்கு பிறகு அகில இந்திய சிகர மன்றம் 200வது பட விழாவை நடத்த முடிவெடுத்தவுடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மதுரை முடிவு செய்யப்பட்டது). மாநாட்டு நிகழ்வுகள் வழக்கம் போல் படமாக்கப்பட்டன. அந்த விழா சுருள், தான் தயாரித்து பொங்கலுக்கு வெளி வர இருக்கும் மனிதனும் தெய்வமாகலாம் படத்துடன் காண்பிக்கப்படும் என்று சின்ன அண்ணாமலை அறிவித்தார். (ஆனால் அது காட்டப்பட்டதா என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நான் பார்த்ததில்லை).
தொடரின் இந்த பதிவில் படங்களை தாண்டிய பல்வேறு நிகழ்வுகளை பார்த்தோம். அதில் மேலும் ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1974 ஆகஸ்ட் மாதம் இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. 1969ல் எவ்வளவுக்கு எவ்வளவு பரபரப்பாக நடைபெற்றதோ அதற்கு நேர்மாறாக இந்த முறை அமைதியாக நடைபெற்று மத்திய அமைச்சராக இருந்த பக்ருதீன் அலி அஹமத் ஜனாதிபதியாக தேர்வானார். கர்நாடகத்தின் முன்னாள் முதல் முதல்வர் ஜாட்டி துணை ஜனாபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு காங்கிரஸ் இணைப்பு தமிழகத்தில் நடைபெறுமா என்ற விவாதம் தொடர்ந்தது. ஆனால் தமிழகம் வந்தபோதெல்லாம் இந்திரா அம்மையார் பெருந்தலைவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.
அந்த 1974 ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் முதல் வாரங்களில் அதுவரை பார்க்க வாய்ப்பில்லாதிருந்த மனோகரா படத்தை பார்த்தேன். மதுரை ஸ்ரீதேவியில் மீண்டும் திரையிடப்பட்ட படத்தை ஒரு ஞாயிறு மாலை காட்சியில் செம அலப்பறையோடு நானும் என் கஸினும் பார்த்தோம். படம் ஆரம்பம் தொட்டு முடிவு வரை ரசிகர்கள் ஆரவாரத்தோடு பார்த்தது இப்போதும் நினைவில். அதே ஸ்ரீதேவியில் தொடர்ந்து சுமதி என் சுந்தரி திரையிடப்பட அதற்கும் போயிருந்தோம். ஆனால் அதற்கு ஞாயிறு ஈவினிங் போக முடியவில்லை. வேறொரு நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். என் மகன் படத்தில் நடிகர் திலகத்தின் உடைகள் மற்றும் அதன் கலர் பற்றி சரியாக அமையவில்லை என்று சொல்லியிருந்தேன். என் மகன் படம் வெளியான இரண்டு மூன்று வாரங்களிலேயே சுமதி என் சுந்தரி படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்தது அந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடைகளை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது கூட என் மகன் பட உடைகளை ரசிக்க முடியாதபடி செய்துவிட்டது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட புதிய படங்கள் என்று பார்த்தால் அருணபிரசாத் மூவிஸின் பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு ஆரம்பமானது (பாட்டும் பாரதமும்). அது தவிர ஏஎல்எஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கிக் கொண்டிருந்த சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சி நாதன் வேடத்தில் சிறப்பு தோற்றமாக நடிகர் திலகம் தோன்றுகிறார் என்ற செய்தியும் வந்தது.
அடுத்த படமாக தீபாவளிக்கு அன்பை தேடி வெளியாகிறது என்ற செய்தி வந்து விட்டது. சிறிது நாட்களில் முக்தா பிலிம்ஸ் சார்பில் விளம்பரமும் வந்துவிட்டது. முக்தா பிலிம்ஸின் முதல் கலர் படம். பாமிலி சப்ஜெக்ட் என்று செய்திகள். கலைஞானம் கதை. முக்தா பிலிம்சில் ஆஸ்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான தூயவன் வசனம் என்று தெரியும். படத்தில் ஒரு காட்சியில் நடிகர் திலகம் கௌதம புத்தர் வேடம் போட்டிருக்கிறார் என்ற செய்தியும் அந்த ஸ்டில்லும் வெளிவந்து ஆவலை தூண்டியிருந்தது. பாடல்கள் தாமதமாகவே வெளியானது. அந்த வருடம் நவம்பர் 13 புதனன்று தீபாவளி மதுரை சிந்தாமணியில் படம் ரிலீஸ். மன்ற டோக்கன்தான் வாங்க வேண்டும் என்று இருக்கையில் வேறொரு சிக்கல் வந்தது. என் கஸின் அந்நேரம் டிகிரி முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார் என சொல்லியிருந்தேன் அல்லவா, அவர் சில நேர்முக தேர்வுகளுக்காக சென்னை சென்றிருந்தார். முதல் வாரமே வந்துவிடுவேன் என்று சொல்லி சென்றவர் வர முடியவில்லை. எப்போது வருகிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நான் தனியே போய் மன்ற டோக்கன் வாங்குவது என்பது நடக்காது. ஆஹா! இதன் காரணமாக படத்தின் ஓபனிங் ஷோவை மிஸ் பண்ண போகிறோமோ என்று கவலை.
ஸ்கூலில் சக வகுப்பு மாணவன் ஒருவனிடம் இதை பற்றி பேசிக் கொண்டிருக்க சிந்தாமணிதானே, நான் வாங்கி தருகிறேன் என்றான். எப்படிடா என்று கேட்டால் அவன் தந்தை அங்கம் வகிக்கும் யூனியன் கிளப் (தமுக்கம் மைதானத்திற்கும் காந்தி மியூசியத்திற்கும் நடுவில் அமைந்திருக்கும்) அங்கே சிந்தாமணி டாக்கீஸ் ஓனர் வருவார். அப்பாவின் நண்பர், எனக்கும் நல்லா தெரியும். நான் கேட்கிறேன் என்று சொன்னான். (அவன் அங்கே டேபிள் டென்னிஸ் விளையாட போவான்). அது நடக்குமா என்பதை விட எப்படியாவது டிக்கெட் கிடைத்து படம் பார்த்தால் போதும் என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். சரி வாங்கு என்று சொல்லி விட்டேன். அவன் அவரை கிளப்பில் பார்த்ததாகவும் சரி என்று சொல்லி விட்டதாகவும், ஒரு பேப்பரில் எழுதி தந்து விடுகிறேன்.அதை கொண்டு போய் தியேட்டரில் கொடுத்தால் டிக்கெட் கொடுத்து விடுவார்கள் என சொன்னதாகவும் சொன்னான். படம் புதன் ரிலீஸ். சனிக்கிழமை மேற்கண்ட தகவலை சொல்கிறான். திங்கள் ஸ்கூலில் முதலில் அவனை பார்த்தவுடன் கேட்டது இது பற்றித்தான். நேற்று அவர் வரவில்லை என்கிறான். இன்று எப்படியும் வாங்கி விடுவேன் என்று சொல்ல மறுநாள் செவ்வாய் காலையிலும் அதே பதில் வருகிறது. இல்லை. இன்னிக்கு எப்படியும் வாங்கி விடுகிறேன் என்று சொல்ல அவர் வரவில்லை என்றால் என்று நான் கேட்க, வரலைன்னா அவர் வீட்டிற்கே போன் பண்ணி பேசி விடுகிறேன் என்றான். வேறு வழியில்லை. மறுநாள் காலையில் தீபாவளி. நான் உன் வீட்டிற்கு வந்துறேன். அங்கிருந்து சேர்ந்து போயிரலாம் என்கிறான். முதல் நாள் தீபாவளியன்று 5 ஷோ. ஓபனிங் ஷோ காலையிலே 9 மணிக்கு. நான் ஒரு எட்டு மணிக்கு வந்துறேன் அப்படின்னு சொல்கிறான். எங்க ரெண்டு பேருக்குமே டிக்கெட் கன்பர்ம் ஆகவில்லை. அதுக்குள்ளே டிக்கெட் இருக்கு நீ வரியா நீ வரியான்னு இன்னும் மூணு பேரை வேற சேர்த்துட்டோம். மொத்தம் அஞ்சு பேர். அஞ்சு பேரும் தீபாவளி காலையில் 8 மணிக்கு எங்க வீட்டிற்கு வந்து அங்கேயிருந்து சிந்தாமணி போவதாக பிளான் .
ஐந்து பேர்களும் வந்தார்களா? அதை விட முக்கியமா நண்பனால் சிந்தாமணி டாக்கீஸ் அதிபரை பார்த்து லெட்டர் வாங்க முடிந்ததா? ஓபனிங் ஷோ அனுபவம் எப்படி இருந்தது? அடுத்த வாரம் பேசுவோம்.
(தொடரும்)
அன்புடன்


Thanks Murali Srinivasan ( நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள். ( One and Only Sivaji)

sivaa
16th November 2021, 08:59 AM
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு "
இந்தக் குறளுக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் இருக்கும் நெருக்கம் என்னவாக இருக்கும்?
முதலில் குறளுக்கான தெளிவுரையைத் தெரிந்து கொள்வோம்,
1) திரு.மு.வரதராசனார் அவர்களது உரை:-
"எப்பொருள் எத்தன்மைதாய்த் தோன்றினாலும் ( அத்தோற்றத்தை மட்டும் கண்டு மங்காமல்)
அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு "
2) கலைஞர் கருணாநிதி உரை:-
" வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அது பற்றிய தெளிவான உண்மையை அறிவதே மெய்யுணர்வு "
3) திரு.சாலமன் பாப்பையா உரை:-
" எந்தப் பொருளானாலும் அது எப்படிக் காட்சி தந்தாலும் அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல் உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளை காண்பதே மெய்யுணர்தல் "
இப்போது சொல்லவந்த செய்திக்கு வருவோம்,
1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக அவரது தலைமையில் திமுக ஆட்சி நடந்த போது சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான சீரிய பணிகள் நடைப் பெறத் தொடங்கியது,
விழா சிறப்பாக நடைபெற பெருமளவு நிதியும் தேவைப்பட்டது,
நிதி வேண்டி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்,
அறிஞர் அண்ணா அவர்களது வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் எதிரணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும் கூட உடனடியாக ரூபாய் ஐந்து லட்சத்தை அளித்ததோடு
( ஐந்து லட்சம் என்பது இன்று 50 கோடி ரூபாயாகும் இதில் மாற்றுக் கருத்து கொள்பவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் எனில் அந்தத் தொகை அன்றைய நடிகர் திலகத்தின் ஏறக்குறைய இரு படத்தின் சம்பளமாகும் இன்று முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோரின் ஒரு படத்திற்கான சம்பளம் 20-25 கோடியாகும்)
மாநாட்டின் முக்கிய பணிகளையும் ஏற்றுக் கொள்வதாக கேட்டுக் கொண்டார்,
வழக்கம் போல நடிகர் திலகம் சிவாஜிக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது என எதிரணியினர் அறிஞர் அண்ணா அவர்களிடம் வாதிட்டு புளம்பினர், ஆனால் நடிகர் திலகம் அளித்த பெருந்தொகை எதிரணியினரின் புளம்பலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது,
மாநாட்டில் பெருமைப் படுத்தும் விதமாக தமிழறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டு தமிழுக்கான சிறப்பு செய்தனர்,
தமிழறிஞர்கள், தமிழக அமைச்சரவை என ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு தான் உலகப்புகழ்பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் தமிழறிஞர்களின் திரு உருவச்சிலைகள் அமைக்கபடுவதென, அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவிற்கான முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடிகர் திலகம் திருவள்ளுவர் திரு உருவச்சிலையை தனது சொந்த செலவிலேயே அமைத்து கொடுக்க முடிவு செய்தார், அறிஞர் அண்ணா அவர்களது யோசனைப்படி திருவள்ளுவருக்கான சிலை உருவத்தை நடிகர் திலகமே மாடலாக நின்று திருவள்ளுவர் சிலை அமைய காரணமாகவும் அமைந்தார்
(நடிகர் திலகத்தின் சிலையை மெரினாவிலிருந்து அகற்றி விட்டார்கள் என நினைத்தாலுமே திருவள்ளுவராக அதே மெரினாவில் அதே கம்பீரத்துடனேயே இருக்கிறார்)
தத்ரூபமாகவும் கம்பீர தோற்றத்துடன் எழில் வடிவிலான திருவள்ளுவர் சிலை அமைந்ததைக் கண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் மகிழ்ந்தார், நடிகர் திலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என வாதிட்டவர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் மேற்கோள் காட்டிய உதாரணம் தான் மேலேக் குறிப்பிட்ட திருக்குறள்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு,
சிலை அமைந்திருக்கும் பீடத்தின் கல்வெட்டில் குறள் பொறிக்கப்பட்டுள்ளது,
நடிகர் திலகம் எதிரணியில் இருந்தாலுமே தமிழுக்கென்று வரும்போது அவர்தான் முன்னாடி நின்றார்
இதே ஆண்டில் தான் நடிகர் திலகம் நடிப்பில் வெற்றி வாகை சூடிய 125 வது திரைப்படமான "உயர்ந்த மனிதன்" வெற்றி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என நடிகர் திலகத்தை குறிப்பிட்டு வாழ்த்தினார்,


Thanks Sekar Parasuram

sivaa
16th November 2021, 09:01 AM
ஆலய மணி- 23/11/1962
By Gopal
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.
இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.
மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.
பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.
இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.
கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.

By Gopal

Thanks Gopal

sivaa
28th November 2021, 08:24 PM
மாற்றுக் கூடார நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதை சுட்டிக் காட்டி சிறந்த திரைப்படங்களைக் கூட சிறுமை படுத்தும் பதிவுகளைப் பார்க்கும் போது உண்மையில் அப்படி இருக்கிறதா? என அலசும் போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது நடிகர் திலகம் நூற்றுக்கும் மேற்பட்ட தனது திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவில்லை என்பது
அதன் பட்டியல் தான் பின் வருவது,
1) பணம் 2) பூங்கோதை 3) கண்கள் 4) மனோகரா 5) துளிவிஷம் 6)தூக்கு தூக்கி 7) காவேரி �� முதல் தேதி 9) நான் பெற்ற செல்வம் 10)நல்ல வீடு
11) நானே ராஜா 12) தெனாலிராமன் 13) ரங்கோன் ராதா 14) மக்களை பெற்ற மகராசி 15) வணங்காமுடி 16) தங்க மலை ரகசியம் 17) ராணி லலிதாங்கி 18) அம்பிகாபதி 19) உத்தம புத்திரன் ( மது அருந்துதல் மட்டும்) 20) சம்பூர்ண ராமாயணம்
21) சாரங்கதாரா 22) காத்தவராயன் 23) தங்கப்பதுமை 24) நான் சொல்லும் ரகசியம் 25) வீரபாண்டிய கட்டபொம்மன் 26) மரகதம் 27) பாகப்பிரிவினை. 28) இரும்புத்திரை 29) குறவஞ்சி 30) ராஜபக்தி
31) படிக்காத மேதை 32) பாவை விளக்கு 33) பெற்ற மனம் 34) பாவமன்னிப்பு 35) ஸ்ரீ வள்ளி 36) கப்பலோட்டிய தமிழன் 37) வளர்பிறை 38)வடிவுக்கு வளைகாப்பு 39) செந்தாமரை 40) சித்தூர் ராணி பத்மினி
41) கர்ணன் 42) பச்சை விளக்கு 43) ஆண்டவன் கட்டளை 44) முரடன் முத்து 45) பழனி. 46) அன்புக்கரங்கள் 47) திருவிளையாடல் 48) மகா கவி காளிதாஸ் 49) சரஸ்வதி சபதம் 50) கந்தன் கருணை
51) திருவருட்ச் செல்வர் 52) திருமால் பெருமை 53) ஹரிச்சந்திரா 54) தில்லானா மோகனாம்பாள் 55) காவல் தெய்வம் 56) குருதட்சனை 57) வியட்நாம் வீடு 58) எங்கிருந்தோ வந்தாள். 59) இரு துருவம் 60) குலமா குணமா
61) ப்ராப்தம் 62) சவாளே சமாளி. 63) மூன்று தெய்வங்கள் 64) பாபு 65) ராஜ ராஜ சோழன் 66) பொன்னூஞ்சல் 67) ராஜபார்ட் ரங்கதுரை 68) மனிதனும் தெய்வமாகலாம் 69) கிரஹப்பிரவேசம் 70) சத்யம்
71) சித்ரா பௌர்ணமி 72) அவன் ஒரு சரித்திரம் 73) நாம் பிறந்த மண் 74) புண்ணிய பூமி 75) தச்சோளி அம்பு 76) திரிசூலம் 77) சத்திய சுந்தரம் 78) கல்தூன். 79) ஊருக்கு ஒரு பிள்ளை 80) வா கண்ணா வா
81) துணை. 82) பரீட்சைக்கு நேரமாச்சு. 83) ஊரும் உறவும். 84) இமைகள் 85) மிருதங்க சக்கரவர்த்தி 86) தராசு 87) எழுதாத சட்டங்கள் 88) நாம் இருவர் 89) படிக்காத பண்ணையார் 90) முதல் மரியாதை
91) ராஜரிஷி 92) மருமகள் 93) ஆனந்தக் கண்ணீர் 94) லட்சுமி வந்தாச்சு 95) மண்ணுக்குள் வைரம். 96) குடும்பம் ஒரு கோயில். 97)முத்துக்கள் மூன்று 98) வீரபாண்டியன். 99) விஸ்வநாத நாய்க்கடு 100) அன்புள்ள அப்பா
101) கிருஷ்ணன் வந்தான். 102) என் தமிழ் என் மக்கள் 103) ஞானப்பறவை 104) சின்ன மருமகள். 105) முதல் குரல் 106) தேவர் மகன் 107) பாரம்பரியயம். 108) பசும்பொன் 109) ஒரு யாத்ரா மொழி. 110) ஒன்ஸ்மோர்.
111) என் ஆசை ராசாவே 112) மன்னவரு சின்னவரு 113) படையப்பா 114) பூப்பறிக்க வருகிறோம்
கௌரவ வேடங்களில்
115) மர்ம வீரன். 116) தாயைப் போல பிள்ளை 117) குழந்தைகள் கண்ட குடியரசு 118) தாயே உனக்காக. 119) உருவங்கள் மாறலாம். 120) பிள்ளலு தெச்சின சொல்லனி ராஜ்யம் - தெலுங்கு
121) ராமதாசு. 122) பக்த துக்காராம் 123) சாணக்யா சந்திர குப்தா 124) ஸ்கூல் மாஸ்டர் - கன்னடா 125) மங்கள ராஜ்யா 126) ஸ்கூல் மாஸ்டர் - இந்தி 127) ஸ்கூல் மாஸ்டர் - மலையாளம்
நடிகர் திலகம் நடிப்பில்
பிற மொழி படங்கள் உட்பட கௌரவ வேடங்களையும் சேர்த்து மொத்தம் 127 படங்களில் புகைப் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை,( இந்த பட்டியலில் 5% முன் பின் முரன் இருக்கலாம் இருப்பின் நண்பர்கள் சுட்டிக் காட்டவும்)
மேலும் இந்த 127 படங்களில் ஏறக்குறைய 80 படங்கள் வரை 100 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றியைக் கொண்டாடி இருக்கிறது,
இந்திய திரை உலகில் வேறு எந்த நடிகரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிக்காமல் 80 நூறு நாள் வெற்றிப் படங்களை கொடுக்கவில்லை என்பது சாதனையின் உச்சம் என்றே சொல்லலாம்,
நன்றி :- சேகர் பரசுராம்,
(இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது பதிவிட்டது, மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்)

Thanks Sekar Parasuram

sivaa
6th December 2021, 02:34 AM
அவன்தான் மனிதன் டிஜிட்டலில் மறுவெளியீடு.

3/12/2021 முதல் மதுரை ,கோவை, ஈரோடு , திருப்பூர்
மற்றும் பல ஊர்களில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் 17/12/2021 முதல் திரையிடப்படவுள்ளது.

5818

5819

sivaa
6th December 2021, 02:46 AM
அவன்தான் மனிதனும் அவரது ரசிகர்களும் மதுரையில்.....

5820 5823

5821 5824

5822

sivaa
6th December 2021, 02:48 AM
அவன்தான் மனிதனும் அவரது ரசிகர்களும் மதுரையில்.....

5825

5826

5827

sivaa
8th December 2021, 03:19 AM
மதுரையை அதிர வைத்த சிவாஜி ரசிகர்கள் ( அவன்தான் மனிதன் டிஜிட்டல் வெளியீடு )

அவன்தான் மனிதன் டிஜிட்டல் வெளியீட்டை கோலகலமாக கொண்டாடிய சிவாஜி ரசிகர்கள்


https://youtu.be/BJBnkGc0BAU


Thanks சிவாஜி ரசிகன் Sivaji Rasigan

sivaa
19th December 2021, 10:17 AM
That's our sivaji sir

ஒரு முப்பது ஆண்டுகளாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வியில் இருந்து....
அரசியல் பண்டிதர்கள்,நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களில் பலர்..
அரசியல் தலைவர்களில் சிலர்......
இப்படி பல தரப்பட்டவர்கள்...
அவர்களின் பிதற்றல் இதுதான்...
ஆனான பட்ட சிவாஜிகணேசனே அரசியலில் தோற்று போனார்........
இந்த மதியூகிகள் அனைவருமே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை இரண்டே ஆண்டுகளில் சுருக்கி முடித்து கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் தங்கள் முகாரியை ஆலாபனை செய்கிறார்கள்.
ஆனான பட்ட சிவாஜியே அரசியலில் தோற்று போனார்.......
அறியாமையால்..
உள்நோக்கத்தோடு..
சொந்த லாபம் கருதி..
அந்த முகாரியை ஆனந்தமாக அரங்கேற்றி வருகிறார்கள்....
நடிகர் திலகம் தேர்தல் அரசியலுக்கு 1957 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டார்....
தீவிர பிரச்சாரத்தை 1962 ஆம் ஆண்டு பொது தேர்தலில் செய்தார்.
அவரது வார்த்தையிலே சொல்வதென்றால் அந்த ஒரு தேர்தலிலே சில லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்புகளை ஒத்தி வைத்ததால் வருவாய் இழப்பு வேறு....
தீவிர பிரச்சாரத்தால் தொண்டை வலி யேற்பட்டு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்க பட்டிருக்கிறார்.
சில நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்.
இது 1962 ஆம் ஆண்டு பொது தேர்தல் அனுபவம் மட்டும்.....
அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் திமுக ஐம்பது இடங்களை வென்றது.
அதில் ஒருவர் லட்சிய நடிகர் SSR....
தேர்தலில் 50 mla க்கள் கிடைத்ததால் இரு MLC சீட்கள் கிடைத்தன திமுகவிற்கு..
ஒருவர் mgr,மற்றவர் அன்பழகன்...
ஆக அந்த தேர்தலிலேயே நடிகர்கள் இருவரை சட்ட மன்ற இரு அவைகளுக்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்தார் அண்ணா...
ஆனால் கர்மவீரருக்கும் காங்கிரசுக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை.
1967,1971 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் mgr பரங்கிமலையில் திமுக வேட்பாளராக நின்றார்...வென்றார்....
நடிகர் திலகமோ பிரதிபலன் கருதாது உழைத்தார்...
கை பணத்தை செலவிட்டார்...
வருவாய் இழப்புக்கு ஆளானார்...
தனக்கோ தன் ரசிகர் மன்றத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு கேட்டாரில்லை...
1963 ஆம் ஆண்டில் பக்தவத்சலத்தை முதல்வராக்கி அழகு பார்த்தார் பெருந்தலைவர்...
C.சுப்ரமண்யத்தையும் தமிழக அமைச்சர்,மத்திய அமைச்சர் என்று பதவிகள் வழங்கினார்....
இன்றைய இளைஞர்களே,அந்த பக்தவத்சலம் 1967ஆம் ஆண்டு கட்சி தோற்ற மூன்றே ஆண்டுகளில் கர்மவீரரை கை கழுவி விட்டு கலைஞரிடம் தொகுதி உடன்பாடு பேச வந்து விட்டார் C.சுப்ரமண்யத்துடன்.
அதே 1967 ஆம் ஆண்டிலேயே தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நடத்த கூட காசில்லாமல் நடிகர் திலகத்தை நாடி வந்து கண்ணீர் விட்டார் கர்மவீரர்..
நடிகர் திலகம் வார்த்தைகள் தான் இது...
என்னுடைய பசப்பு மொழியல்ல..
சில மணிநேரத்திலேயே மூன்று லட்சம் ரூபாயை திரட்டி காமராஜரிடம் கொடுத்தார்,தனக்கென கட்சியிடம்,பெருந்தலைவரிடம் எதுவும் கேட்டு பெறாத நடிகர் திலகம்....
அரசியல் பண்டிதர்களே! ஊடக நெறியாளார்களே!
அந்த 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு மாநிலம் முழுக்க சுற்றி அலைந்து கலைஞர் தேர்தல் நிதியாக திரட்டி அண்ணாவிடம் விருகம்பாக்கம் மாநாட்டில் கொடுத்த தொகை 11 லட்சம் ரூபாய்.
அண்ணா பூரிப்போடு சைதை தொகுதி வேட்பாளராக அதே மாநாட்டில் கலைஞரை வேட்பாளராக அறிவித்தார் இப்படி...
Mr.பதினொரு லட்சம் என்று......
சில மாதங்களில் நடிகர் திலகம் சில மணி நேரத்தில் கட்சி நடத்த நிதி கேட்டு கண்ணீரோடு வந்த கர்மவீரருக்கு ஏறத்தாழ கலைஞர் மாநில முழுதும் சென்று திரட்டிய தொகையில் நான்கில் ஒரு பங்கை,மூன்று லட்சத்தை தனிநபராக,பெருந்தலைவரின் விசுவாசியாக அவரிடம் வழங்கினார்...
எந்த நடிகருக்கு வரும் இந்த தயாள சிந்தை...
தலைவன் மீது விசுவாசம் ...பயன் கருதா அன்பு..
1987 ஆம் ஆண்டு mgr இறக்கும் வரை பொதுத்தேர்தல்கள்,அவ்வப்போது வந்த இடைத்தேர்தல்கள் வரை பிரதி பலன் கருதாமல் உழைத்தார் இயக்கத்திற்காக..
கொண்ட கொள்கைக்காக..
ஏற்று கொண்ட தலைமைக்காக....
எத்தனை எத்தனை வெற்றிகள் அந்த தேர்தல்களில்......
நடிகர்திலகத்திற்கு அந்த வெற்றிகளில் பங்குண்டு என்று MGR அவர்களே அங்கீகரித்தார்...
தேர்தல்களில் வெற்றி கணக்கு போட,சந்தர்ப்ப அரசியல் செய்ய தவறினார் நடிகர் திலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நம்பியவர்களை கை விட்டார்...
தலைமைக்கு துரோகம் செய்தார்..
துரோக சிந்தனையால் தனி கட்சி துவங்கினார் என்றெல்லாம் நடிகர் திலகத்தை பற்றி விரல் நீட்ட முடியுமா?
பச்சை வயல் மனது அவருக்கு....
களைகள் அந்த மனதில் விளைந்ததில்லை....
பதர்கள் தோன்றியதில்லை அந்த நிலத்தில் விளைந்த நெல் மணிகளில்...
அவர் இந்த மண்ணின் அசல் வித்து.....
ஒரு 33 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் அவருக்கு பங்கிருந்தது...
அந்த அரசியல் வாழ்வில் பெரும் வெற்றிகளும் சில தோல்விகளும் இருந்தன....
துரோகமும் சந்தர்ப்ப வாதமும் அறவே இருந்ததில்லை...
அடிநாளில் இருந்தே தமிழுக்கும் தமிழருக்கும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்தார் விளம்பரம் இல்லாமல்...
நடிகர் திலகத்தின் மீது நீங்கா அன்புடன்..
மாறா மதிப்புடன்...
பிரமிப்புடன்...
Vino Mohan.V.


Thanks Vino Mohan.V.

sivaa
21st December 2021, 02:14 AM
இரு திலகங்களின்...
வெள்ளை ரோஜா வில்...

மதுரை சென்ட்ரல் திரையரங்கில்...

19.12.21
மாலை காட்சியில்..

மக்கள் தலைவரின்
மகத்தான இதயங்களோடு..
5828

Thanks Sundar Rajan

sivaa
21st December 2021, 02:39 AM
தமிழ் திரையுலகில் 150க்கூம் மேற்பட்ட வண்ணப்படங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்! அவர் நடித்து முடித்த 151 வண்ணப் படங்களில் 63 படங்கள் 100 முதல் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள்? எத்தனை நாட்கள் அதிகபட்சமாக ஓடின? என்பதைப் பற்றிய தொகுப்பு தான் இந்தக் காணொளி.


https://youtu.be/y8k-PXy0zlI


Thanks Nilaas Thiraikkoodam

sivaa
29th December 2021, 08:58 AM
பட்டினி கிடந்து நடித்த சிவாஜி... கண் கலங்கிய இயக்குநர்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சில புகைப்படங்களுடன் நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்திகள் காணப்படுகிறது.
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பான நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொழில் பக்தியில் அவருக்கு நிகர் அவர்தான். ஆரம்பக்காலம் தொடங்கி இறுதிக்காலம்வரை தான் செய்த தொழிலை 100 சதவிகித அர்ப்பணிப்புடன் செய்தவர். இதைப் பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பத்திரிகைகளிலும்கூட படித்திருக்கிறேன். ஆனால், இதை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.
ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னர் கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 'படிக்காத பண்ணையார்' என்ற திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. 'பணமா பாசமா', 'சித்தி' உள்ளிட்ட பல குடும்பப்படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் 'படிக்காத பண்ணையார்' படப்பிடிப்பு தளத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. சிவாஜி, அனுராதா சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை அன்று படமாக்கிக் கொண்டிருந்தனர். சிவாஜி கணேசனின் எதிரிகள், கவர்ச்சி நடனம் ஆடும் அனுராதா மூலம் ஊரில் கௌரவத்தோடு வாழும் பண்ணையாரான சிவாஜி கணேசனை வீழ்த்தி, அவருடைய பெயரைக் கெடுக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்கான காட்சிகள் அனைத்தையும் ஒரு பாடலாக எடுக்க கே.எஸ்.கோபால கிருஷ்ணன் முடிவெடுத்திருந்தார். பாதி காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் மதியவுணவு இடைவேளைக்குச் சென்றிருந்தனர். நான் அந்த நேரத்தில்தான் அங்குச் சென்றேன்.
அனைவரும் அங்கே சேர் போட்டு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்குச் சிவாஜி கணேசன் இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கு எங்குமே அவர் இல்லை. நான் அப்படியே ஸ்டூடியோவிற்குள் சென்றேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழே இருந்த ஷோபாவில் சிவாஜி கணேசன் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த அறையில் வேறு யாருமே கிடையாது. நான் அந்த அறைக்குள் நுழைந்த சத்தம் கேட்டவுடன் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தார். சிவாஜி கணேசனின் பார்வையைப் படங்களில் கூர்ந்து பார்த்தாலே ஒருவித பயம் வரும். நேரில் பார்த்தவுடன் பயத்தில் அந்த அறையிலிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன். என்ன சார் எல்லாரும் வெளியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... சிவாஜி கணேசன் மட்டும் உள்ளே தனியா உட்கார்ந்தது இருக்கார் என்று வெளியே இருந்த கோபாலகிருஷ்ணனிடம் சென்று கேட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு வாங்க... எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு உள்ளே சென்று அவர் அமர்ந்திருப்பதாகக் கோபால கிருஷ்ணன் கூறினார். என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன். பண்ணையார் கதாபாத்திரத்திற்காக அடர்த்தியான மீசையை அவருக்குப் பசை போட்டு ஒட்டியிருக்கிறோம். அதை எடுத்தால் அவருக்கு எரிச்சலாக இருக்கிறதாம். சாப்பிடுவதற்காக எடுத்தால் பிறகு மறுபடியும் ஒட்ட வேண்டிவரும். அதனால் எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் இரவு வீட்டில் சென்று சாப்பிட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.
எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு பட்டினியோடு இருந்து நடிக்கிறார். என்ன மனுஷன்யா இவர் என்று கோபாலகிருஷ்ணன் கூறும்போதே கண்கள் கலங்கிவிட்டன. சிவாஜி கணேசன் அர்ப்பணிப்பு பற்றி அதுவரை செவிவழிச் செய்தியாகவும் பத்திரிகைளிலும் படித்த எனக்கு, முதன்முறையாக அந்த அர்ப்பணிப்பைக் கண்கூடாகப் பார்த்தது சிவாஜி கணேசன் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. காலத்தைக் கடந்தும் திரையுலகில் சிவாஜி கணேசனின் பெயர் சாகாவரம் பெற்று நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் சிவாஜி கணேசனின் இந்த அர்ப்பணிப்புதான்.

thanks Nakkeeran

sivaa
31st December 2021, 10:19 PM
இந்திரா காந்தி உயிரை காப்பாற்ற துப்பாக்கியை உயரே பிடித்த சிவாஜி. "சுட்டு பொசுக்கிடுவேன் 1977 October.

https://youtu.be/wJApponXx6Y

Thanks Nadigar thilagak T V

sivaa
8th January 2022, 05:28 AM
அனைவருக்கும் வணக்கம். சென்ற வரம் பெய்த பெரு மழையின் காரணமாக சட்டென்று ஏற்பட்ட ஒரு நாள் நீண்ட மின்சார தடை அதன் காரணமாக டைப் செய்து வைத்திருந்ததை இழந்து மீண்டும் டைப் செய்ய வேண்டிய நிலைமை. அதனால் சென்ற வாரம் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது. மன்னிக்கவும். இப்போது ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 78
அவன்தான் மனிதன் படம் பற்றியும் அதன் வெற்றி சாதனைகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நடிகர் திலகத்தின் காலை அரசியல் உலக பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.
அவன்தான் மனிதன் நடிகர் திலகத்தின் 175வது படமாக வெளியானதும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 175வது பட விழாவை மதுரையில் கொண்டாடுவது என்ற முடிவிற்கேற்ப மே 17,18 தேதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க அப்போது நிலவிய கடுமையான வானிலை, மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு விழா ஜூலை 5,6 தேதிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு வந்தது.
நடிகர் திலகம் வழக்கம் போல் படப்பிடிப்பு மற்றும் இயக்க பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து கொண்டேயிருந்தார். சென்னை ராயபுரத்தில் 1975 ஏப்ரலில் பெருந்தலைவர் சிலையை திறந்து வைத்தது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான். அந்த சிலை அமைய நிதி உதவி செய்ததுடன் பா.ரா. அவர்கள் தலைமையில் அந்த சிலையையும் திறந்து வைத்தார்.
ஒரு இடைவெளிக்கு பிறகு சித்ரா பௌர்ணமி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அந்த படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு முதல் கட்டத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. மீண்டும் தொடங்கியபோது அதை மாட்ச் செய்யும் விதமாக ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது.
அதே போன்றே ரோஜாவின் ராஜா படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் ஆரம்பமானது. திருவனந்தபுரம் நகருக்கு அருகே கோவளம் கடற்கரை மற்றும் கொல்லம் அருகே வர்கல போன்ற இடங்களில் ஓட்றா ஓட்றா பாடலும் மற்றும் நடிகர் திலகம் மனோகர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதன் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்ற நடிகர் திலகத்தை வரவேற்க மிக பெரிய கூட்டம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடியிருக்க அந்த கூட்டத்தின் நடுவே நடிகர் திலகத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு போலீசார் மிகுந்த பாடுபட்டனர் என்று பத்திரிக்கை செய்தி. எவ்வளவு பெரிய கூட்டம் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் நடிகர் திலகத்துடனே பயணம் செய்த அவரது காஸ்ட்யூமர் ராமகிருஷ்ணன் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்து கால் விரலில் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு கூட்டம்.
Dr சிவா படத்துக்காக நடிகர் திலகம் மெர்காரா தலைக்காவேரி ஆகிய இடங்களுக்கு சென்றார், மலரே குறிஞ்சி மலரே பாடலும் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாடலும் படமாக்கப்பட்டது என்ற செய்தியும் பத்திரிக்கை மற்றும் சிவாஜி ரசிகன் போன்ற இதழ்களிலும் வந்தது. மன்னவன் வந்தானடி படம் முடியும் தறுவாயிலிருக்கிறது என்றும் அன்பே ஆருயிரே படமும் அது போலத்தான் என்ற செய்திகளும் வந்தன. தேவன் கோவில் மணியோசை படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு மற்றும் ஏபிஎன் இயக்கிய கிருஷ்ண லீலா படத்தின் படப்பிடிப்பு பற்றியும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த நேரத்தில் கிருஷ்ணா லீலா படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றாலும் அவர் நடிக்கிறார் என்றே குறிப்பிடப்பட்டது.
இந்திய விண்வெளித்துறையின் மிக முக்கிய மைல்கல்லான ஆர்யபட்டா விண்வெளி கலம் 1975 ஏப்ரல் 19 அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விண்வெளி கலம் ஆர்யபட்டா. இப்போது நாம் நம்முடைய ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து நேரிடையாக அனுப்புகிறோம் .ஆனால் அன்றைய நாட்களில் அந்தளவிற்கு முன்னேற்றம் அடையாதிருந்த காரணத்தினால் ஆர்யபட்டா ரஷ்யாவிலிருந்து அனுப்பபட்டது. அன்றைய இந்திரா காந்தி அரசுக்கு மக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும்படியாக இது ஒன்றுதான் அமைந்தது.
காரணம் அன்று நாடு முழுவதும் அரசுக்கு எதிரே ஏற்பட்ட அதிருப்தி அலை. ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பிஹாரில் ஏற்பட்ட கிளர்ச்சி, குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மொரார்ஜியின் உண்ணாவிரதம் இவை நாடு முழுக்க எதிரொலிக்க அரசுக்கு நெருக்கடி. மொரார்ஜியின் உண்ணாவிரதம் காரணம் மத்திய அரசு குஜராத்தில் தேர்தலை அறிவித்தது. மற்றொரு முக்கிய திருப்பம் அதுவரை மன்னர் ஆட்சியில் இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைவது என்ற முடிவை எடுத்து இந்தியாவின் அன்றைய 22வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை மிக மோசமான சூழல். கடுமையான மின்வெட்டு. தொழிற்ச்சாலைகளுக்கு 100% மின்வெட்டு, கடுமையான குடிநீர் பற்றாக்குறை, சென்னை நகரிலே ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை என்ற நிலைமை. பஸ் ஊழியர் போராட்டம் கடுமையான வறட்சி என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் வழக்கம் போல் ஆளும் கட்சி லாவணி பாடிக் கொண்டிருந்தது. எப்போதும் கருணாநிதியும் சரி மற்ற திமுக தலைவர்களும் சரி (ஏன் இரண்டு கழகங்களுமே), பதில் சொல்ல முடியாத கேள்வியோ அல்லது சூழலோ வரும்போது சம்பந்தமில்லாமல் வேறு ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள். மிக பெரிய ஊழல் நடக்கிறது என்று சொல்லும்போது உங்கள் ஆட்சியில் துப்பாக்கி சூடு நடந்ததே அதுவும் ஊழலில் சேர்ந்ததுதான் என்று கருணாநிதி பதில் சொன்னார். துப்பாக்கி சூடு எப்படி ஊழல் ஆகும் என்று அதை பற்றி பேசும்போது முதலில் சொன்ன விஷயம் மக்களின் கவனத்திலிருந்து போய்விடும். இந்த வித்தையை நன்றாக செய்வார்கள். இன்னமொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பதில் சொல்ல முடியாத கேள்வி வரும்போது கேள்வி கேட்டவரை பார்த்து 1963 ஜூன் மாதம் 7ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நீங்கள் இதே பிரச்சனைக்கு என்ன சொன்னீர்கள் தெரியுமா என்று சும்மாவது சொல்வார். உடனே கூட இருப்பவர்கள் அனைவரும் பாருய்யா வருஷம் மாதம் தேதி கிழமை எல்லாம் கரெக்டாக சொல்றார் பாரு. சூப்பர். அட்றா அட்றா என்று கைதட்ட விஷயம் திசை திருப்பும் முயற்சி சக்ஸஸ். உண்மையிலே அப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது. ஆனால் யார் அதையெல்லாம் சரி பார்க்க போகிறார்கள்?
இந்த நேரத்தில் அதாவது மே முதல் வாரத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் தமிழகத்திற்கு விஜயம் செய்தார். ஜெபியின் இயக்கத்தை அதிமுக எதிர்த்துக் கொண்டிருந்தது. அதற்காகவும் இந்திரா காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற காரணத்திற்காகவும் திமுக அவருக்கு வரவேற்பு கொடுக்கும் என்று அறிவிக்க சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திமுகவினர் கூட ஜெபிக்கு கருப்பு கொடி காட்டுகிறோம் என்று இந்திரா காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்து அவர்களும் ரயில் நிலையத்தில் கருப்பு கொடி காட்ட அவர்கள் தாக்கப்பட்டனர். அங்கே ஒரு களேபரம் ஏற்பட்டு கலவர சூழல் உருவானது. ஜெபி திமுகவை ஆதரிக்கிறார் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் பிளான்.மிக சரியாக காய் நகர்த்தி நடத்தி காட்டினார்கள். ஆனால் ஜெபி என்ற மனிதர் அவருக்கு தமிழகத்திலே இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் இழந்தார். சென்னை கடற்கரையில் அவர் பேசிய கூட்டத்திற்கு மிக குறைவான ஆட்களே வந்திருந்தனர். அவரை அந்த நேரம் சந்தித்து பேட்டி கண்டது துக்ளக் அந்த பேட்டியில் ஜெபி குழப்போ குழப்பமாக பதில் சொல்லியிருந்தார்.
கருப்பு கொடி காட்டியபோது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கருணாநிதிகு எதிராக கருப்பு கொடி காட்டப் போவதாக எம்ஜிஆர் அறிவித்தார். அனைவருக்கும் ஆச்சரியம். காரணம். கருப்பு கொடி காட்டி அடிவாங்கியது இந்திரா காங்கிரஸ்காரர்கள். அதற்கு ஏன் அதிமுக கருப்பு கொடி காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாக செங்கல்பட்டில் கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்ட போன அதிமுகவினருக்கும் திமுகவினருக்கு பயங்கர மோதல் ஏற்பட்டு ரணகளம் ஆனது.அன்றைய அதிமுக எம்எலஏ எஸ் எம் துரைராஜ் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. உடனே கருணாநிதியின் அடுத்த சுற்றுப்பயணத்தின்போது பந்த் என்று அதிமுக அறிவிக்க பதிலுக்கு எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன்பு மறியல் என்று திமுக அறிவிக்க ஒரே பதட்ட நிலை. பெருந்தலைவர் இந்த நேரத்தில் அழகாக சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கி விட்டார்கள். 1971ல் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம் மக்கள் கேட்கவில்லை. இப்போது ஒன்றுக்கு இரண்டாக ஒருவருக்கு ஒருவர் வன்முறை போராட்டம் நடத்தி மக்களின் அமைதியை அதுவும் இது போன்ற கடுமையான வறட்சி நேரத்தில் தொழில்கள் ஸ்தம்பித்து போயிருக்கும் நேரத்தில் செய்வதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது என்று கேட்டார்.
அவன்தான் மனிதன் 175வது படவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜூலை 5,6 தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி அன்று காலை மதுரை ரயில் நிலையத்திலிருந்து நேராக நடிகர் திலகம் விளக்குத்தூண் சென்று அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெருந்தலைவர் சிலையை திறந்து வைப்பார் என்றும் அந்த நிகழ்விற்கு பா.ரா அவர்கள் தலைமை வகிப்பார் என்றும் தகவல்கள் அறிவிக்கப்பட்டன. மிக பெரிய ஊர்வலம் காலையில் மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து புறப்பட்டு அனைத்து மாசி வீதிகளையும் சுற்றி தமுக்கம் மைதானத்தை அடையும் என்றும் அதன் அருகே மிக பெரிய மேடை அமைத்து அந்த மேடையில் நின்று நடிகர் திலகம் ஊர்வலத்தை பார்வையிடுவார் என்றும் தமிழ் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பிற மொழி திரைப்படத்துறையினரும் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பாக இந்தி திரைப்பட நடிகர் சத்ருகன்சின்ஹா நடிகர் திலகத்தோடு மேடையில் நின்று ஊர்வலத்தை பார்வையிடுவார் என்று சின்ன அண்ணாமலை அறிவித்தார். மதுரை நகரில் 175 அலங்கார வளைவுகள் அமைக்கப்படும் என்றும் ஊர்வலத்தில் 175 திரைப்படங்களிலிருந்து காட்சிகள் பானர்கள் வடிவில் ஊர்திகளில் எடுத்து செல்லப்படும் என்றும் தகவல்கள் சொல்லப்பட எங்களுக்கெல்லாம் மிக பெரிய எதிர்பார்ப்பு.
பெருந்தலைவரை பொறுத்தவரை பிப்ரவரி முதல் வாரம் காங்கிரஸ் செயற்குழுவில் இரண்டு கழகங்களுடனும் அவர்களுடன் சேர்கின்ற எந்த கட்சிகளோடும் ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று தீர்மானம் போட்டுவிட்டு இடைவிடாத தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதுவும் அந்த வருடம் கோடைகாலத்தில் மிக கொடுமையான வெய்யில் நேரத்தில்கூட மக்களை சந்தித்துக் கொண்டேயிருந்தார். இரண்டு கழகங்களையும் அவற்றுக்கு துணை போக கூடிய கட்சிகளையும் மக்கள் முன் தோலுரித்து காட்டினார். வாழ்நாள் முழுக்க மக்கள் நலம் பற்றி சிந்தித்தவர் செயல்பட்டவர் அந்த நேரத்திலும் தன்னை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக கவலைப்பட்டார். அப்போது கூட அவரை கொச்சைப்படுத்தும்விதமாக காமராஜருக்கு 72 வயதாகிவிட்டது. இப்போதும் முதல்வர் பதவி ஆசை விடவில்லை என்று ஏகடியம் பேசினார் கருணாநிதி.(அதே கருணாநிதி 92 வயதிலும் முதல்வர் பதவி ஆசை விடாமல் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக 2016ல் நின்றதையும் நமக்கு காலம் காட்டிக் கொடுத்தது). அவரின் தன்னலமற்ற பொதுத்தொண்டை மக்களின் நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட அந்த பயணத்தை முழுமையாக "வாடிய பயிருக்கு வான்முகில் காமராஜ்" என்று தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை வடிவில் வெளியிட்டது கல்கி வார இதழ்.
இப்படியாக ஒரு கடினமான காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய அரசியலையே புரட்டி போட்ட ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்தியாவின் பிரதமர் விசாரணைக்கு வர வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வாசகர்களுக்கு புரிந்திருக்கும். ஆம், இந்திரா காந்தி அவர்கள் 1971 பொது தேர்தலில் ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அவரை எதிர்த்து போட்டியிட்டிருந்த ராஜ்நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். பிரதமர் பதவியை பயன்படுத்தி அரசு ஊழியர்களையும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராக இருந்த யஷ்பால்கபூர் போன்றவர்களை தனது தேர்தல் வேலைகளுக்கு பயன்படுத்தினார் என்பதுதான் முக்கிய குற்றசாட்டு. அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அழைத்தார் இந்திரா. இரண்டு முறை ஆஜரானார் இந்திரா. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
1975 ஜூன் 12 வியாழக்கிழமை அந்த சரித்திர பிரசித்தி பெற்ற தீர்ப்பு வந்தது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்க அந்த நிமிடம் இந்திய அரசியல் தலைகீழாக புரட்டப்பட்டது. முதன்முறையாக ஒரு பிரதமரின் தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பு வருகிறது. அதுவும் தவிர 6 வருடங்களுக்கு தேர்தலில் நிற்க தடை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆளும் கட்சியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மிக பெரிய ஒரு களத்தை உருவாக்கி கொடுத்தது. ஏற்கனவே ஜெபி, மொரார்ஜி போன்றவர்கள் முன்னெடுத்த இந்திரா எதிர்ப்பு அலை நாடெங்கும் வீச துவங்கியது. இந்திராவிற்கு அப்பீல் செய்யும் உரிமை வழங்கிய அலகாபாத் நீதிமன்ற தற்காலிகமாக தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும் இந்திரா பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலு பெற்றுக் கொண்டேயிருந்தது. அதே நாளில்தான் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளிவந்து ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் ஜனதா முன்னணி ஆட்சி அமைத்தது. ஸ்தாபன காங்கிரஸை சேர்ந்த பாபுபாய் படேல் முதல்வராக பதவியேற்றார்.
இந்திரா பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முற்பட்டபோது இந்திரா அந்த முடிவை எடுத்தார். ஏற்கனவே 1971ல் பாகிஸ்தான் போரின்போது அறிவிக்கப்பட்ட அவசர நிலை அமலில் இருக்க இப்போது உள்நாட்டில் மிகுந்த குழப்பம் நிலவுவதால் அவசர நிலைமை இந்தியாவெங்கும் உடனே அமலுக்கு வருகிறது என்று 1975 ஜூன் 25 அன்று அறிவிப்பு வந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பத்திரிக்கைகளுக்கு சென்சார் ஏற்படுத்தப்பட்டது. எந்த செய்தியாக இருந்தாலும் சென்சார் அதிகாரிகள் ஓகே சொன்னாலதான் பிரசுரமாகும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே சொன்னது போல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெருந்தலைவர் ஆந்த பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார். அந்த இடைவிடாத பயணம், கடுமையான வெயில் அதோடு நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், அவசர நிலை பிரகடனம், எதிர்க்கட்சியினர் கைது அனைத்தும் சேர்ந்து அவரை மனதளவிலும் உடலவிலும் பாதிக்க கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நேரத்திலும் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்த சொன்னார். அவரால் வரமுடியாது என்பதால் கூட்டம் திருமலைப்பிள்ளை ரோட்டிலுள்ள அவரது வீட்டிலேயே நடந்தது. அவசர நிலை பிரகடனத்தை கண்டித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போன்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து கண்டன தீர்மானம் போட்ட ஒரே அரசியல் கட்சி ஸ்தாபன காங்கிரஸ் மட்டுமே. திமுகவின் தீர்மானத்தில் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றுதான் இருந்தது. அதன் பிறகு பெருந்தலைவரின் உடல்நிலை மீண்டும் நார்மலாகவில்லை.உடல் பலவீனம் களைப்பு அவரை விட்டு நீங்கவில்லை என்றே டாக்டர்களின் அறிக்கை கூறியது.
மிசா சட்டத்தை பயன்படுத்தி பலரும் கைது செய்யப்படுகின்றனர் (ஜேப்பியார், முரசொலி அடியார்) என்ற செய்திகள் வந்தன. பல அரசு அலுவலகங்களிலும் பல்வேறு நடைமுறைகள் குறிப்பாக நேரத்திற்கு வருவது, அனைவரும் அலுவலக நேரம் முடியும்வரை இருப்பது என்ற நடைமுறைகளும், நியாய விலை கடைகள் ஹோட்டல்கள் போன்றவற்றில் மிக சரியான எடை, உணவு பண்டங்களுக்கு விலைப்பட்டியல் என்ற மாற்றங்களும் நிகழ ஆரம்பித்தன. ரயில்கள் நேரத்திற்கு வந்தன. வேலை நிறுத்தம் தடை செய்யப்பட்டது. பொதுவாக ஒரு ஒழுங்கு முறை உருவாவதாக தோன்றினாலும் எதிர்க்கட்சியினர் அரசை விமர்சிப்பவர்கள் என அனைவருக்கும் வாய்ப்பூட்டு என்பது நெருடலாகவே உணரப்பட்டது.
1975 ஜூலை 11 வெள்ளி இரவு 8 மணி சுமாருக்கு இந்தியாவில் அன்றைக்கு மிக பரபரப்பாக பேசப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு எல் ஐ ஸி 14 மாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. மிக பெரிய விபத்தாக மாறிய அந்த தீ மறுநாள் ஜூலை 12 சனி மாலை 7 மணிக்குத்தான் அதாவது 24 மணி நேரத்திற்கு பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. ஒரு நாள் முழுக்க சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து வகை கடைகளும் கட்டிடங்களும் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அவசர நிலை அறிவிப்பிற்கு எதிராக சதி வேலையா என்ற கோணத்தில் எல்லாம் (சி பி ஐ விசாரணை) நடத்தப்பட்டது.
இந்த காலகட்டத்தில்தான் செயற்கை மழை பொழிய வைக்கிறோம் என்ற விஞ்ஞான நாடகமும் நடைபெற்றது. வளர்ந்த நாடுகளிலேயே இதனால் பயன் இல்லை என்று கண்டுபிடித்து கைவிட்ட ஒரு சோதனையை இங்கே தமிழகத்திலே அரங்கேற்றினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். விமானத்தில் பறந்து சென்று மேகக்கூட்டங்களின் மீது சில்வர் அயோடைடு என்ற வேதிப்பொருளை தூவினால் கருமேகங்கள் உருவாகி ஒன்று கூடி மழை பொழிவு உண்டாகும் என்பதுதான் அந்த சோதனை முயற்சி. ஆனால் பெரிய பலன்கள் எதுவும் நடக்கவில்லை. பிற்காலத்தில் இந்த செயற்கை மழை சோதனை முயற்சி சர்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்டது. அரிசி பேர ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளன ப.உ ச. மீது தமிழக அரசே ஒரு விசாரணை கமிஷன் போட்டது. அந்த கமிஷனின் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட எதிர் கட்சியினர் தாங்கள் கேட்கும் எந்த குறிப்போ பைலோ அல்லது குறுக்கு விசாரணையோ செய்து தர அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததால் விசாரணை கமிஷன் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்தன.
நடிகர் திலகம் எப்போதும்போல் படு பிசி. அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகளை படிக்கும்போது நான் பலமுறை ஆச்சர்யத்துடன்
யோசித்திருக்கிறேன். தினத்தந்தியில் சென்னையில் ஏபிஎன் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் என்று இருக்கும். மறுநாள் நவசக்தியில் திருமணம் நடந்த அதே நாளில் பல்லடம் ஊரில் ஸ்தாபன காங்கிரஸ் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேச்சை போட்டிருப்பார்கள். அடுத்த இரண்டு நாளில் சென்னையில் ரோஜாவின் ராஜா படப்பிடிப்பு மனநல மருத்துவமனை போன்று அமைக்கப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது என்ற செய்தியும், மன்னவன் வந்தானடி படத்துக்காக பாட்ச் ஒர்க் (விட்டுப்போன ஓரிரண்டு காட்சிகள்) முடித்து கொடுத்ததாக செய்தியும் வரும். அடுத்த இரண்டு நாளில் பெங்களூரில் இளைய தலைமுறை படத்தின் ஒரு அறை கொடுத்தால் தெரியும் பாடல் படமாக்கப்பட்டது என்ற நியூஸ் வரும். இதே நேரத்தில்தான் தன்னை வைத்து தொழில் முறையில் எதுவும் செய்யாவிட்டாலும் நட்பு முறையில் சாண்டோ சின்னப்பா தேவருக்கு மணிவிழாவை அந்த 1975 ஜூன் 29 அன்று தலைமையேற்று நடத்தினார் நடிகர் திலகம். அது முடிந்து மீண்டும் பாட்டும் பரதமும் செட்டில் சிவகாமி ஆட வந்தாள் படப்பிடிப்பு. உண்மையிலேயே கடுமையான உழைப்பு.
அவசர நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரையில் நடத்த இருந்த 175வது படவிழா ரத்து செய்யப்படுகிறது என்பதை நடிகர் திலகமே ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்தார். மிகுந்த வேதனையோடு எழுதப்பட்டிருந்த அந்த வரிகள் பலரையும் வருத்தப்பட வைத்தன. அதே போன்று தஞ்சை நகரிலே நடத்துவதாக இருந்த பெருந்தலைவரின் 73வது பிறந்த நாள் விழாவும் ரத்து செய்யப்பட்டது. அவரது பிறந்த நாள் ஜூலை 15 அன்று வீட்டில் எளிமையாக நடந்தது. பல ஊர்களிலுமிருந்தும் தொண்டர்கள் வந்தாலும் அன்றைய சூழல் மற்றும் அவரின் உடல்நிலை காரணமாக உற்சாகம் இல்லை, நடிகர் திலகம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்தார்(என நினைவு). இந்திரா காந்தி வாழ்த்து தந்தி அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில்தான் நடிகர் திலகத்தின் அடுத்த படமான மன்னவன் வந்தானடி திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. எங்க மாமா மற்றும் ஞான ஒளி எடுத்த ஜேயார் மூவிஸ் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த மூன்றாவது படம். இதன் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தில்தான் மஞ்சுளா முதன் முறையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இது வெளியாவதற்கு முன் எங்கள் தங்க ராஜா என் மகன் போன்றவை வெளியாகி விட்டன. நடிகர் திலகம் பி.மாதவன் பாலமுருகன் கூட்டணி என்பதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமல்லாமல் படம் வெளிவருவதற்கு முன்னரே வெளியான இசைத்தட்டின் வழியாகவும் ஆல் இந்தியா ரேடியோ மூலமாகவும் காதல் ராஜ்ஜியம் எனது பாடல் மிகுந்த வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
மதுரையில் முதன் முறையாக ப்ரியா காம்ப்ளக்ஸில் வெளியாகிறது. மட்டுமல்ல அந்த வளாகத்தில் இருந்த சினிப்ரியா மினிப்ரியா இரு திரையரங்குகளிலும் ரிலீஸ் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ப்ரியா காம்ப்ளக்ஸ் மதுரையின் பிரெஸ்டிஜ் தியேட்டராக உருக் கொண்ட நேரம். மாதவன் படம் என்பதால் வழக்கம் போல் சனிக்கிழமை ரிலீஸ். இதற்குள்ளாக நடந்த மற்றொரு நிகழ்வு, என் கஸினுக்கு சென்னையில் வேலை கிடைத்து அவர் அங்கே சென்று விட்டார். ஆகையால் சிகர மன்றத்துடனான என்னுடைய தொடர்பு (தற்காலிகமாக) விட்டுப்போனது.
எப்போது பார்த்தேன்? எப்படி பார்த்தேன்? படம் எப்படி இருந்தது? தொடர்ந்து அடுத்த வாரம் பேசுவோம்.
(தொடரும்)
அன்புடன்

Thanks Murali Srinivasan ( Nadigarthilagam Sivaji Visirikal)

sivaa
8th January 2022, 09:48 AM
கூண்டுக்கிளி
➰➰➰➰➰➰
சிவாஜிகணேசன் என்பவர் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை அல்ல.சுயமுடன் சிந்திக்கும் சுதந்திரபறவை, புதியபறவை
ஞானப்பறவை.
கூண்டுக்குள் அடைத்து கதவை திறந்தவுடன் வெளிவந்து சீட்டை பொறுக்கி எடுத்து ஜாதகம் எனச்சொல்லி... அதை வளப்பவருக்கு சாதகமாக்கி ஒரு நெற்மணிக்காக பொய் சொல்லும் கூண்டுக்கிளியல்ல.

கூண்டுக்கிளி என்ற படம் நடிகர்திலகமும் மக்கள்திலகமும் இணைந்து நடித்த ஒரேபடம்.
முன்னணியில் இருக்கும் இருபெரும் நடிகர்கள் நடித்த படம். இந்தியாவிலுள்ள அனைத்து
முன்னணி நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்க தயங்குவதில்லை. இங்குமட்டுந்தான்... ஒருவரை மிஞ்சி ஒருவர் பெயர் வாங்கிவிடுவார்களோ என்ற நடுக்கம் இன்றுவரை எல்லா கதாநாயகர்களுக்குமே இருந்துவருகிறது. ஆனால் அதில் சிவாஜி ஓர் விதிவிலக்கு.
அவர் தொழில் மேல் கொண்ட மரியாதை... திறமையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதனால் கதாநாயகர் பாத்திரத்தில் மட்டுமல்ல எந்த வேடத்தையும் ஏற்க தயங்குவதில்லை. கௌரவ வேடமென்றாலும் நடிப்பார் ? எதிர்மறை (வில்லன்) பாத்திரத்தில் (Negative role) நடித்தும் பெயர் வாங்குவார்.

இப்படித்தான் கதாநாயகன் பாத்திரத்தை எம்ஜிஆர் ஏற்க...
எதிர்மறை பாத்திரத்தை சிவாஜி ஏற்றார். அவருக்கு எந்த அளவு நெஞ்சில் உரம் இருந்திருக்கும் ?

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ"

இப்படியாப்பட்ட படம் ஏன் உருவாக்கவேண்டும்? வேறுகதை கிடைக்கவில்லையா ? ஏன் இல்லை? இந்தப்படத்தை பாருங்கள் புரியும்... சிவாஜி கீழே படுத்திருக்க எம்ஜிஆர் அவரை கீழே தள்ளி அழுத்துவதாக உள்ளது. ஆம் சிவாஜியை அழுத்துவதற்காவே எடுக்கப்பட்ட படம். இதற்கு சி.பி.ஐ விசாரனை தேவையில்லை.

ஓர் மறைக்கப்பட்ட வரலாற்றை
துருவி பார்ப்போமா ?

அண்ணாவால் எழுதப்பட்ட
"சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்"
என்ற நாடகத்தின் மூலம் பெரியாரால் "சிவாஜி" என்ற பட்டம் பெற்று சிவாஜிகணேசன் என
அழைக்கப்பட்டார்.

கலைஞர் எழுதிய பராசக்தி படம் 300 நாட்களை தொடக்கூடிய அளவிற்கு ஓடி பெறும் வெற்றியை பெற்றுத்தந்து பெரும் நடிகரானார்.
அவரின் வளர்ச்சியை தடைபோட எந்த சக்தியாலும், பராசக்தியின் அருளை தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஏற்கனவே சிவாஜி திமுகவில் அண்ணாவிற்கு அடுத்த நிலையில் பெயர் பெற்றவராய்
விளங்கிவந்தார். இதை அண்ணாவிற்கு அடுத்த நிலையில் தான் வரவேண்டுமென நினைத்த படித்த மேதைகளின் கூட்டம் சும்மா விடுமா ? அன்றைக்குத்தான் சதிவலை பின்னப்பட்டது. சிவாஜிக்கு மாற்று சக்தியை கொண்டுவர நினைத்தது.

சிவாஜியின் வரலாறை அறிந்த நாம்
எம்ஜிஆரின் வரலாறையும் கொஞ்சம் பார்ப்போம்.

இலங்கையில் கண்டியில் பிறந்த கேரளத்துகாரர் எம்ஜியார்... சிவாஜி போலவே அவரும் அவர் அண்ணன் எம்.ஜி.சாரங்கபாணியும் வறுமையின் காரணமாக நாடகத்தில் நடித்தார்கள். *1936ல் எம்.ஜி.ராமசந்தர் 'சதிலீலாவதி'எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்கள். சிவாஜி போல் முதல்படத்திலேயே கதாநாயகனாக ஆக வாய்ப்பு கிடைக்காமல் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து படிபடியாக முன்னேறினார். 11ஆண்டுகள் கழித்து *கலைஞரின்* கதை வசனத்தில் *1947ல் 'ராஜகுமாரி' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார்கள்.

1952ல் கலைஞரின் வசனத்தில் பராசக்தியில் சிவாஜி அறிமுகமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவரின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் எம்ஜிஆரை கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டது. எம்ஜிஆர் ஓர் பட்டைபோட்டு கொட்டை கட்டிய எம்ஜிஆர் காமராஜர் மேல் பற்றுள்ள காங்கிரஸ்காரர். ஆனால் பெரிதாக
காங்கிரஸில் அவர் ஈடுபடவில்லை.

1953ல் அண்ணாவின் முன்னணியில் எம்ஜிஆர் திமுகவில் சேர்க்கப்பட்டார். எம்ஜிஆரும் திமுகவால் வளர நினைத்தார்.

1954ல் கூண்டுக்கிளி படம் வந்தது. ஆனால் இரண்டு ரசிகர்களிடமும் மக்களிடமும் வரவேற்பு பெறாமலே இந்தபடம் ஓடமுடியாமல் போனது.

சிவாஜியை வில்லனாக சித்தரித்து
எம்ஜிஆர் சிவாஜியின் நெஞ்சை
பிடித்து அழுத்துவதாக நஞ்சு தூவப்பட்டது.

வெள்ள நிவாரண நதி வசூல் செய்துகொடுக்க அண்ணா அவர்கள் கட்சிகாரர்களை கேட்டதினால் அதிக பணத்தை வசூல் செய்து கலைஞரிடம் கொடுத்து அண்ணாவிடம் கொடுக்கசொல்லி சென்னை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் சிவாஜி. ஆனால் எம்ஜிஆர் அண்ணாவிடம் நிதி கொடுக்க வைத்து முன்னணிபடுத்தப்பட்டார். அதன் பாராட்டுவிழாவிற்கு அழைப்பார்கள் தன்னை அண்ணா பாராட்டுவாரென சிவாஜி நினைத்திருந்தார்.ஆனால் அதிக வசுல் செய்து கொடுத்தும் சிவாஜியை அழைக்கப்படாமல் ஏமாற்றப்பட்டார். சிவாஜி மிக மிக வேதனை அடைந்தார். இனி ஒரு உறையில் இரண்டு கத்தி தேவையில்லை எம்ஜிஆரே இருக்கட்டும்... என்று நினைத்து மனம் நொந்த நிலையில் அவர் திருப்பதி சென்றார். பகுத்தறிவு பாசறையில் ஊறியவர்களல்வா
கடவுள் மறுப்பு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லவா? கோயில் குளமெல்லாம் போகக்கூடாதல்லவா?
திருப்பதி சென்று வந்த கணேசா...
உனக்கு திமுக ஒரு கேடா ? கணேசா கோயிந்தா... கோயிந்தா... என்றார்கள்.

1955வரை திமுகவில் இருந்தார் சிவாஜி. அதன்பிறகு ஒதுங்கியிருந்தார். ஆனாலும் அவர் வளர்சியை ஏதும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

அன்றைக்கு ஓடாத கூண்டுக்கிளி மறுவெளியீட்டில் நன்றாக ஓடியது. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் பிரட்சனைகள் அடிக்கடி வந்தது.
பிற்காலத்தில் அதுவே தொடர்ந்தது.

5ஆண்டுகளுக்கு பின்னர்....
அந்த 'கூண்டுக்கிளி' தானே கதவை திறந்து சுயமாக சிந்தித்து சுதந்திரபறவையாக, புதியவையாக ஞானபறவையாக
1961ஆம் ஆண்டு காமராஜர் அவர்களின் தோளில் அமர்ந்து காங்கிரஸில் இணைந்தது. காமராஜர் இருக்கும்வரை அந்தப்பறவையை யாரும் துன்புறுத்தவில்லை.

வாழ்க கூண்டுக்கிளி சிவாஜி !
வாழ்க புதியபறவை சிவாஜி ! !
வாழ்க ஞானபறவை சிவாஜி ! ! !

அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராஜன்/:

Thanks ப.நடராஜன் (Nadigarthilagam Sivaji Visirikal)

sivaa
11th January 2022, 05:21 AM
சென்சாருக்காக, கலைவாணர் செய்த தந்திரம் |Sivaji Life History | Writer M.G.S.Inba | Part-19

https://youtu.be/1qzA6jHQoxs

Thanks Thirai Chirpi

sivaa
19th January 2022, 02:00 AM
சிவாஜி நடித்தப் படங்கள் அழுகாச்சிப் படங்களா? |பட்டையைக் கிளப்பிய நகைச்சுவைப் படங்களின் பட்டியல்


நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் அனைத்தும் அழுகையான, சோகமயமான படங்கள் என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. ஆனால், அவர் பக்தி, சரித்திரம், திரில்லர், கமர்சியல், குடும்பக்கதை, காதல், வீரம், வரலாற்று மாந்தர்களின் வாழ்க்கை கதை, நகைச்சுவை என்று எல்லா வகையான படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் நடித்த ஏராளமான நகைச்சுவை படங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அவை வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. அவற்றைப் பட்டியலிட்டு, சுட்டிக் காட்டுவது தான் இந்தக் காணொளி!

https://youtu.be/cqra5YXDGJ0

Thanks Nilaas Thiraikkoodam

sivaa
26th January 2022, 08:14 AM
சிவாஜியால் கிடைத்த எம் ஜீ ஆரின் மாபெரும் வெற்றி.


சிவாஜி, சினிமாவின் மையப்புள்ளியானார் |Sivaji Life History | Writer M.G.S.Inba | Part-23


https://youtu.be/0BmFzISe7Vc

Thanks Thirai Chirpi

sivaa
28th January 2022, 02:55 PM
Sivaji Ganesan: A legend and an Incredible Actor : Unbelievable !

Dad's Den You Tube Channel Hosted by Ken Lee .He is doing reviews and reactions to movies, music, food, tech and more. Dad’s Den Media’s goal is to make the viewers smile for a few brief minutes of your day.

https://youtu.be/J6baCP3ft24

Thanks ENDRENDRUM SIVAJI

sivaa
30th January 2022, 09:38 AM
தமிழ்நாடு காமராஜர் சிவாஜி கணேசன் பொது நலமக்கள் இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் காலை வணக்கம் .நடிகர் திலகத்தின் 175வது திரைக்காவியம் அவன்தான் மனிதன் திரைப்படம் சென்னை மற்றும் தமிழகமெங்கும் திரையிடப்படுகிறது ..மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் ..தலைவர் PN.நஞ்சப்பன் ...செயலாளர் சன்G.ராமலிங்கம் கணேசன் .பொதுச்செயலாளர் பாசமலர்R பாண்டியன் அவர்கள்.

5829

Thanks Dr Sivaji Ganesan Fanbook

sivaa
30th January 2022, 10:21 AM
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் திரைப்படச் சாதனைகள் - 1

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படச் சாதனைகளைப் பற்றிய தொகுப்பு - 1. இலங்கையில் அவர் நடித்து வெளியாகி, 200 நாட்களைக் கடந்து ஓடிய திரைப்படங்களைப் பற்றிய புள்ளிவிபரங்கள் அடங்கிய காணொளி.

https://youtu.be/cTMNrC1KHa8


Thanks Nilaas Thiraikkoodam

sivaa
5th February 2022, 09:54 AM
பட்டிக்காடா பட்டணமா !

லண்டனில் இருந்து படித்துவிட்டு சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார் ஜெயலலிதா (கல்பனா). அவரை வரவேற்க, அப்பா வி.கே.ராமசாமியும் அம்மா சுகுமாரியும் விமானநிலையத்துக்கு வந்து அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர்களின் சொந்தக்காரப் பையன் குடியுடனும் இடுப்பில் கைவைத்து அணைத்தபடி ஒரு பெண்ணுடனும் வருகிறான்.
இதையடுத்து, மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற சோழவந்தானில் இருந்து, கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி, தாய்மாமா வி.கே.ஆருக்கு கடிதம் போடுகிறார் மூக்கையா சேர்வை (சிவாஜி). ‘அந்த குடுமிமாமாவை பாத்து ரொம்ப வருஷமாச்சு. கிராமத்தையும் சுத்திப் பாக்கலாம்’ என்று கல்பனா விரும்புகிறாள். எல்லோரும் சோழவந்தானுக்கு வருகிறார்கள். ஊரில் சிவாஜிக்கும் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அவரின் வீரத்தையும் அவருக்கு பயந்து நடுங்குகிறார்கள் என்பதையும் கண்டு ரசிக்கிறார் ஜெயலலிதா. வியக்கிறார்.
‘நான் மட்டும் லண்டன்ல படிச்சிருந்தேன்னா, உங்க பொண்ணுக்கு இந்நேரம் தாலி கட்டிருப்பேன்’ என்று விளையாட்டாகச் சொல்கிறார் சிவாஜி. மதுரைக்கு வந்தவர்கள், தன் சொந்தத்தில் இருக்கிற அந்த குடிகாரப் பையனை, பெண்ணுடன் வந்தவனை தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார் சுகுமாரி. இதைக் கண்டிக்கிறார் வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் தெரிவிக்கிறார். அந்தக் கல்யாணத்தின் போது வந்து, ஜெயலலிதாவை தூக்கிக்கொண்டு சோழவந்தானுக்கு வருகிறார். ‘நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’ என்கிறார். ஆனால் ஊர்மக்களும் உறவுக்காரர்களும் ‘மணமேடைலேருந்து அவளைத் தூக்கிட்டு வந்தே. இனி அவளை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க’ என்கிறார்கள். ‘நீயே கட்டிக்கோ’ என்கிறார்கள்;
இதற்கு ஜெயலலிதாவிடம் சம்மதம் கேட்க, அவரும் சரியென்கிறார். திருமணம் நடக்கிறது. அவள் நாகரீகமாக இருக்க, சோபா, ஏ.ஸி, பாத்ரூமெல்லாம் கேட்க, அவற்றையெல்லாம் செய்துகொடுக்கிறார் சிவாஜி. மாடர்ன் டிரஸ்ஸில் இருப்பவருக்கு புடவைக் கட்டிவிடுகிறார்.
அவருக்கு பிறந்தநாள் வருகிறது. ஊரில் இருந்து நண்பர்களையெல்லாம் வரவழைக்கிறார். கேக் ரெடியாக இருக்கிறது. ஒரு பஞ்சாயத்துக்குச் சென்றிருக்கிறார் சிவாஜி. காத்திருக்கிறார்கள். பிறகு கேக் வெட்டுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் குடித்துவிட்டு ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் பதைபதைத்துப் பார்க்க, சிவாஜி வந்து கடும் கோபமாகிறார். சாட்டையால் எல்லோரையும் விளாசித் தள்ளுகிறார். விரட்டுகிறார். மனைவி ஜெயலலிதாவுக்கு சாட்டையால் வெளுத்தெடுக்கிறார். விடிந்ததும் ஜெயலலிதாவைக் காணவில்லை. மதுரைக்குச் சென்று அழைக்கிறார். விடமாட்டேன் என்கிறார் சுகுமாரி. வீட்டுக்கு வந்த சிலநாளில், வக்கீல் நோட்டீஸ் வருகிறது. திரும்பவும் சென்று கெஞ்சுகிறார். ‘ஊர்ல எனக்குன்னு மிகப்பெரிய மரியாதை இருக்கு. இதுவரைக்கும் கோர்ட் படியை நான் மிதிச்சதே இல்ல. இனி அடிக்கமாட்டேன். உன் இஷ்டத்துக்கு நடந்துக்கோ’ என்று கெஞ்சுகிறார். இதற்கு அம்மாக்காரி சுகுமாரியும் சம்மதிக்கவில்லை. மனைவி ஜெயலலிதாவும் மனமிரங்கவில்லை.
அடுத்தகட்டமாக, மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கே, ‘கணவர் எங்கே’ என்று கேட்க, ‘அவர் லண்டனில் இருக்கிறார்’ என்கிறார்கள். ‘பெயர் முகேஷ்’ என்கிறார்கள். இதையெல்லாம் கண்டு கொதிக்கிற வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் சொல்கிறார். அங்கே, சென்னையில் குடுமியும் கடுக்கனுமாய் மூக்குத்தியுடன் இருந்த சிவாஜி, ஹிப்பி கிராப்பும் பேண்ட்டுமாக ஸடைலாக வருகிறார். அன்றிரவு வீட்டுக்குள் புகுந்து, மனைவியின் சம்மதமில்லாமல், முரண்டு பிடிக்க, மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார். இதில் அவர் கர்ப்பமாகிறார்.
ஒரு பார்ட்டியில், ஜெயலலிதா தலைசுற்றி மயக்கமாக, அங்கே உள்ள பெண் மருத்துவர் சோதித்துப் பார்த்து கருவுற்றிருக்கிறார் எனும் விஷயத்தைச் சொல்ல,அங்கே வரும் சிவாஜி, ‘லண்டனில் மாப்பிள்ளை. இங்கே மனைவி கர்ப்பம். எப்படி?’ என்று கேள்வி எழுப்புகிறார். ‘அதானே’ என்கிறார்கள் அனைவரும்.
ஆனால், சிவாஜியின் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.மனமொடிந்து ஊர் திரும்புகிறார். இங்கே, சென்னையில், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறக்கிறது. பிறந்த கையுடன் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டு போட்டுவிடுகிறார். குழந்தை எங்கே என்று ஜெயலலிதா கேட்க, அம்மாக்காரி விஷயத்தைச்சொல்ல, கோபமாகி, அழுகையுடன் ஆஸ்ரமத்துக்கு ஓடுகிறார். அங்கே குழந்தையைக் கேட்கிறார். தத்து கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். எங்கே, யார், விலாசம் என்ன என்று கேட்க, ‘மூக்கையா சேர்வை, சோழவந்தான்’ என்கிறார்.
இந்தசமயத்தில், சிவாஜி சென்னைக்கு வருகிறார். சொந்தக்காரப் பெண் ‘ராக்கம்மாவுக்கு கல்யாணம்’ என்கிறார். பத்திரிகை கொடுக்கிறார். அதில் மணமகன் மூக்கையன் என்றிருக்க, அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்தநிலையில், தன் குழந்தையைக் கொடுங்கள் என்று கேட்க, சோழவந்தான் வருகிறார் ஜெயலலிதா. அப்போது திருமணம். ஊரும் உறவும் திரண்டிருக்க, ‘முதல் மனைவி நானிருக்கும்போது இவர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்கிறாரே நியாயமா?’ என்று முறையிடுகிறார். அப்போதுதான் மணமகனின் பெயரும் மூக்கையன், அவர் வேறொருவர் என்பது தெரியவருகிறது. சிவாஜியும் ஜெயலலிதாவும் ஒன்றுசேருகிறார்கள். மாமியார் சுகுமாரியும் மனம் மாறி மன்னிப்புக் கேட்கிறார். அந்தக் காலத்தில், மிகச்சிறந்த கதாசிரியர் என்று பெயர் பெற்றவர் பாலமுருகன். இவரின் கதை வசனம் என்றாலே படம் சூப்பர் என்பது முடிவாகிவிடும். அந்த அளவுக்கு நேர்த்தியாகக் கதை சொல்லுவதிலும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் வசனம் எழுதுவதிலும் கில்லாடி என்று பேரெடுத்தவர். ‘பட்டிக்காடா பட்டணமா’வுக்கு கதை, வசனம் பாலமுருகன் தான்!
அதேபோல், அந்தக்காலத்தில் சிவாஜி, பி.மாதவன், பாலமுருகன் கூட்டணி என்றாலே அது சக்ஸஸ்தான் என்பார்கள். சிவாஜியை ரசித்து ரசித்து படமாக்குவார் இயக்குநர் பி.மாதவன். சிவாஜி, ஜெயலலிதா, வி.கே.ராமசாமி, சுகுமாரி, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.என்.லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி முதலானோர் நடித்திருந்தார்கள். கணவனுக்கு அடங்காமல் இருக்கிற ஜெயலலிதா, கணவனை அடக்கியாளும் சுகுமாரி, கணவனைத் தேடி சென்னையில் அலையும் மனோரமா என்று அழகாகக் கேரக்டர் பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு முறை வி.கே.ஆர். பொங்குவதும் பிறகு தோற்றுப்போவதும் பார்க்கிற வீட்டுப் பணியாள் சாமிக்கண்ணு திக்குவாய். ‘என் பொண்டாட்டி மட்டும் இப்படிச் செஞ்சிருந்தா அவளைக் கொன்னுபோட்டிருப்பேன்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவதும் கடைசியில் வி.கே.ஆர்., சுகுமாரியை சாட்டையால் விளாசியதும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும் இன்னொரு டச்.
ஊரில் மைனராக அடாவடி பண்ணும் எம்.ஆர்.ஆர்.வாசுவை மனோரமாவுக்கு கட்டிவைப்பதும் இதனால் அவர் சோழவந்தானிலிருந்து சென்னைக்கு ஓடிவிடுவதும் அவரைத் தேடிப் பிடிக்க மனோரமா வருவதும் காமெடிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
படித்த திமிர், பணக்காரத் திமிர், நவநாகரீக நங்கை, எதிலும் அலட்சியம் என்பதெல்லாம் ஜெயலலிதாவின் கேரக்டர்கள். ஒவ்வொரு தருணத்திலும் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘குடுமி அங்கிள் குடுமி அங்கிள்’ என்று சிவாஜியைக் கொஞ்சுவதாகட்டும், திட்டியதையும் அடித்ததையும் பொறுக்கமாட்டாமல் இங்கிலீஷில் புலம்புவதாகட்டும், குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பதற்கு தவிக்கிற தவிப்பாகட்டும்... ஜெயலலிதாவின் திரை வாழ்வில் முக்கியமான படம் இது.
குடுமியும் முழங்காலுக்கு சற்றே கீழே வரை கட்டிக்கொண்டிருக்கிற வேஷ்டியாகட்டும், சில்க் ஜிப்பாவாகட்டும், காதில் கடுக்கனும் மூக்கில் மூக்குத்தியும் கொண்டு சோழவந்தான் மூக்கையா சேர்வையாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி. அப்பத்தாவுக்கும் ஊர்மக்களுக்கும் தாய்மாமாவுக்கும் கொடுக்கிற மரியாதையும் பண்பும் மதுரைக்காரராகவே அவர் நடை உடை பாவனையெல்லாம் காட்டியிருப்பது அசத்தல். ஜெயலலிதாவைப் போலவே சிவாஜியின் இன்னொரு முறைப் பெண் (புதுமுகம் சுபா) ராக்கம்மாவுடன் விளையாடுவதும் விகல்பமில்லாமல் பழகுவதும் நெகிழவைக்கும்.
மனைவிக்கு விட்டுக்கொடுப்பதும் கலப்பையைக் கொல்லையில் போட்டதால் மனைவியிடம் கோபம் கொள்வதும் பிரிந்து சென்றதும் வருந்திக் கெஞ்சுவதும் குடுமியும் கடுக்கனும் எடுத்துவிட்டு, நவநாகரீக வாலிபனாக கிடாருடன் பாடுவதும் ‘உன் மனைவி கூட வாழமுடியலை. நீ பஞ்சாயத்து பண்றியா?’ என்று ஊர்மக்கள் அவமதிப்பதைக் கேட்டு புழுங்கிப் போவதும் என சிவாஜிக்கு ப்ளேட் ப்ளேட்டாக கொடுத்ததையெல்லாம் மனிதர், அல்வா சாப்பிடுகிற மாதிரி அசத்தியெடுத்திருப்பார். டைட்டிலில் கட்டியம் கூறுவது போல் ஒரு பாடல். அதில் கொஞ்சம்கொஞ்சமாக சிவாஜியைக் காட்டும் ரசனை. டைட்டில் முடிந்ததும் ‘அம்பிகையே ஈஸ்வரியே’, அடுத்து ‘என்னடி ராக்கம்மா’, ‘கேட்டுக்கோடி உருமிமேளம்’, ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’ என்று எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. தன் இசையால் மாபெரும் ஹிட்டாக்கினார்.
மதுரை பாஷையில் சிவாஜி பிரமாதப்படுத்தியிருப்பார். மனோரமாவுக்கு சொல்லவா வேண்டும். சோழவந்தானில் முக்கால்வாசி படப்பிடிப்பு. நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்த ஊர் இதுதான். இங்கே படப்பிடிப்பு நடத்த பல உதவிகள் செய்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஆகவே, டைட்டிலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கும்.
1972ம் ஆண்டு, மே மாதம் 6ம் தேதி வெளியாகி, பல ஊர்களில் நூறுநாட்களைக் கடந்து ஓடியது ‘பட்டிக்காடா பட்டணமா’. அந்த சோழவந்தான் கிராமத்தை அழகாகப் படம்பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம். படத்தின் சண்டைக்காட்சிகளும் மலைக்கவைக்கும்.
சென்னையில், சிவாஜியை காரிலேற்றிக்கொண்டு, ஒவ்வொரு இடமாகக் காட்டி அடிப்பார்கள். ‘இதான் எல்.ஐ.சி’ என்று ஒரு அடி. ‘இதான் சாந்தி தியேட்டர்’ என்று ஒரு அடி. பிறகு சிவாஜி அடிக்கும் போது, ‘சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?’ என்று வெளுப்பார். அட்டகாசமான கிராமத்துப் படமாக, அழகான குடும்பப்படமாக, பிரமிக்க வைக்கும் சிவாஜி படமாக, வியக்கவைக்கும் பி.மாதவன் படமாக வந்து பட்டையைக் கிளப்பியது ‘பட்டிக்காடா பட்டணமா’.
படம் வெளியாகி 48 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் ‘பட்டிக்காடா பட்டணமா’வையும் சோழவந்தானையும் ‘மூக்கையா சேர்வை’யையும் முக்கியமாக ‘என்னடி ராக்கம்மா’வையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்!
நன்றி ! இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து ...

Thanks Ganesh Pandian ·
நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL

sivaa
6th February 2022, 10:24 PM
திண்டுக்கல் ஆர்த்தி கிராண்ட் சினி பிளக்*ஸ் 2k திரைஅரங்கில்
4/02/2022 முதல் காட்சியளிக்கிறது
அவன்தான் மனிதன்.

5830

sivaa
6th February 2022, 10:30 PM
திண்டுக்கல்லில் அவன்தான் மனிதன் கொண்டாட்டம்.

5831

5832

5833

5834

sivaa
14th February 2022, 01:57 AM
கலியுக கர்ணன் வள்ளல் சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று.

#போராட்டம்_தொடருகிறது
தமிழக அரசு தூங்குகிறது
சிவாஜி கணேசன் 1965-ல்
பறையர்களுக்கு வாங்கி கொடுத்த
நிலத்தினை மீட்டுக்கொடு
________________________________
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கீழஊரணி பகுதியில் 200-க்கு மேற்பட்ட பறையர் குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பதற்கு மனையில்லாமல் துயரத்தோடு வாழ்ந்த இந்த மக்களின் நிலையை நினைத்து வருந்திய நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் 1965-ம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்து தேன்கூடு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி நாடகத்தின் வாயிலாக கிடைத்த வருவாயை வைத்து AVM.பழனியப்ப செட்டியார் என்பவர் மூலமாக இரண்டரை ஏக்கர் நிலத்தினை வாங்கி பறையர் மக்களின் பிரதிநிதிகள் பெயரில் பட்டா செய்து கொடுத்தார்கள்.
சிவாஜி கணேசன் காலனி என்னும் பெயரில் மக்களால் இந்த இடமானது அழைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்த பகுதியில் வாழ்ந்துவரும் பறையர்களை அச்சுறுத்தி ஆதிக்க சாதியை சேர்ந்த பண முதலைகள் சிலர் சிவாஜி கணேசன் காலனியை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வட்டாச்சியர் யுவராஜ் என்பவரை பயன்படுத்தி தங்கள் பெயர்களில் சட்டவிரோதமாக திருட்டு பட்டா மாற்றம் செய்துள்ளார்கள். எனவே பல ஆண்டுகளாக பறையர்குடி மக்கள் தங்களுக்கு சொந்தமான சிவாஜி காலனியை மீட்டுதரும்படி போராடி வருகின்றார்கள்.
பறையர் மக்களின் அறவழியிலான போராட்டத்தை ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ ஒரு பொருட்டாகவே கருதாமல் இம்மக்களை ஏமாற்றி வருகின்ற காரணத்தால், நடக்கவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் புறக்கணித்து வீடுதோறும் கருப்பு கொடிகளை ஏற்றி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எனவே தமிழக அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து பறையர்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தினை மீட்டுதர வேண்டும்.
___ சடையன்பெயரன் ஊ.ம.த

5835

நன்றி Vijaya Rai Kumar-( Nadigarthilagam Fans)

sivaa
14th February 2022, 02:10 AM
வள்ளல்.

"பெருவெள்ளம்"
1960ஆம் ஆண்டு சென்னையைச் சூழ்ந்த போது, மக்கள் பசி தீர்க்கும் பணியில் திரைப்படத் துறையில் இருந்து முதலில் ஈடுபட்டவர் சிவாஜிகணேசன் என்கிறது வரலாற்று தகவல்கள்.
மக்கள் ஒருவர் கூட பசி பட்டினியோடு இருக்கக்கூடாது என்று தன் வீட்டில் தன் மேற்பார்வையில் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் பணியைச் செய்துள்ளார் சிவாஜிகணேசன்.
அரசியல்வாதிகள், விளம்பரப் பிரியர்கள் ஒரு நேரம் உணவுப் பொட்டலங்களை கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்வதைபோல் இல்லாமல்,
மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பும் வரை, சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது .

5836

Thanks Ganesh Pandian (Nadigar thilagam Sivaji Visirigal)

sivaa
14th February 2022, 02:33 AM
காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார்
அதற்கான ஆதாரம்.

நன்றி திரு ஆர்.சுந்தரம்
நடிகர் திலகம் அவர்கள் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமல் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.
காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அது தற்போதும் சிவாஜி கணேசன் காலணி என்று அழைக்கப்படுகிறது.

5837

5838

Thanks Vijaya Rai Kumar(NadiGar Thilagak Fans)

sivaa
14th February 2022, 02:45 AM
சிவந்த மண் கட்அவுட் சென்னை குளோப் தியேட்டர்.
எதிர்காலம் திரைப்படத்தின் Title .

5839
நன்றி புகைப்படம் உதவி திரு ராகவேந்திரா சார்.

sivaa
14th February 2022, 02:47 AM
மதுரை சென்ட்ரல் திரையில் பெப்ரவரி 18 முதல்

அவன்தான் மனிதன்.

5840

sivaa
19th February 2022, 11:45 PM
திருந்தவே மாட்டோம் என்று வாத்தி ரசிகர்கள் அடம்பிடிப்பது ஒன்றும்புதிய விடயமல்ல.
ஆதாரம் கிடைத்தாலும், பார்த்தாலும் கண்ணைமூடிக்கொள்வது வாத்தியாரின் வாரிசுகளின் பச்சை குத்திய கொள்கை.
பச்சை குத்த வைத்து கண்ணை மூடிக்கொண்டு கண்டதையும் எழுதுங்கள் என சொல்லிவிட்டு
வாத்தியார் மறைந்து விட்டார். பாவம் வாத்தியின் கைகூலிகள் அல்லாத பொய்யாக எழுதிக்கொண்டு திரிகிறார்கள்.

சினிம உலகில் நடிகர் திலகத்தின் வெற்றியை பொறுக்கமுடியாமல் எம் ஜீ ஆர் எப்படி நித்திரை இல்லாமல்
புழுங்கித்தவித்தாரோ, அதேபோல வாத்தியின் கைகூலிகள் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
நித்திரையின்றியும் ,அரைகுறை நித்திரையில் அலறித்துடித்து எழுந்தும் பரிதாபமாக இல்லாத பொய்களையெல்லாம்
எழுதி தங்களை தாங்களே ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள்.

சிற்றரசர் குழு எழுதுகிறது நெல்லையிலும் மதுரையிலும் வாத்தியின் படங்கள்தான் சாதனையாம்.அதுவும் தவறான தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அப்போ ஏனைய ஊர்களில் எல்லாம் மற்றைய நடிகர்களின் படங்கள்தான் சாதனை என்பதை சிற்றரசர் குழு ஏற்றுக் கொள்கிறதா?


சிற்றரசர் குழுவில் எழுதியது
மக்கள் திலகத்தின் படங்களில் சண்டை காட்சிகளின் துவக்கத்தில் வில்லனோ, வில்லனின் அடியாட்களோ ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக ஒன்று அல்லது இரண்டு குத்துகள் விடுவதை வாங்கிக் கொள்வார். அதன் பின்பு ஒரு அடி கூட வாங்காமல் திருப்பி கொடுப்பார். இதை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள்.

படங்களில் இயக்குனர் எப்படியும் காட்சியமைப்பை வைக்கலாம் . அதைகூட புரிந்து கொள்ளமுடியாதவர்கள்தான்
வாத்தியின் ரசிகர்கள் அதை வேறு பெருமையாக எழுதுகிறார்கள்


அதுபோல ஒன்றிரண்டு சம்பவம் அவரது படங்களின் வசூல் விஷயத்திலும் நடந்தேறி இருக்கிறது. இந்த சம்பவம் நெல்லையிலும், மதுரையிலும் அரங்கேறி இருக்கிறது. நெல்லையில் எப்போதுமே மக்கள் திலகத்தின் படங்கள்தான் வசூலில் முன்னணியில் இருக்கும். ஆனால் 1968 ல் வெளியான "பணமா பாசமா" எதிர்பாராதவிதமாக அந்த ஆண்டு அதிக வசூலை எட்டிப்பிடித்தது. சுமார் ரூ1,60,000 தாண்டி வசூல் செய்தது.

ஆக எங்க வீட்டுப் பிள்ளை வசூலை பணமா பாசமா முறியடித்துவிட்டது என்பதை தங்களை அறியாமலே
ஒப்புக் கொண்டுவிட்டது சிற்றரசர் குழு. ஆனால் வாதப்பிரதிவாதம் செய்யும்பொழுது மட்டும்
இல்லை எங்க வீட்டுப் பிள்ளை பட வசூலை பணமா பாசமா நெருங்கவே இல்லை என பல்டி அடித்து கூப்பாடு போடுவார்கள்.


அதுபோல மதுரையில்
1969 மற்றும் 1970 ல் வெளியான "அடிமைப்பெண்" மற்றும் "மாட்டுக்காரவேலன்" ரூ430000 கடந்து இரட்டை வெற்றி பெற்று "பணமாபாசமா" சாதனையை முறியடித்தது. மீண்டும் 1972 ல் பெண்கள் சென்டிமென்ட் மூலம் அதிக வசூல் பெற்ற படம் "பட்டிக்காடா பட்டணமா". முதன் முதலாக ரூ 560000 வசூல் பெற்று சாதனை செய்தது. அதுவும் கதாநாயகனுக்கு கிடைத்த வெற்றியல்ல. கதைக்கு கிடைத்த வெற்றிதான் அது.
அதன்பின்பு வந்த "வசந்த மாளிகை" 200 நாட்கள் ஓட்டியும் அந்த வசூலை எட்ட முடியவில்லை. 1973 ல் வந்த "உலகம் சுற்றும் வாலிபன்" ஒரு சாதாரண திரையரங்கில் வெளியாகி ரூ685000 வசூலாக பெற்று "ப.பட்டணமா" சாதனையை தவிடுபொடி ஆக்கியது. அதன்பின்பு வந்த "உரிமைக்குரல்" ரூ 7 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றுக்கு இரண்டு சாதனையுடன் முற்றுப்புள்ளி வைத்தார் மக்கள் திலகம். அதன் பின்பு வந்த "தங்கப்பதக்கம்" ரூ 5 லட்சத்தோடு நின்று விட்டது. மக்கள் திலகம் திரையில் இருக்கும் வரை யாரும் வெல்ல முடியாத சாதனையை படைத்து விட்டார்.

உண்மையை உள்ளதை வாத்தியின் கைகூலிகள் மறுப்பது மறைப்பதுபோல் நாங்கள் மறுப்பதும் கிடையாது மறைப்பதும் கிடையாது. பணமா பாசமா மதுரை வசூலை அடிமைப் பெண்ணோ மாட்டுக்கார வேலனோ முறியடிக்கவில்லை .

பணமா பாசமா......... மதுரை தங்கம்..........140 நாள் வசூல் 4,75,250.09
அடிமைப் பெண்.........மதுரை சிந்தாமணி...175 நாள் வசூல் 4,34,643.75
மாட்டுக்கார வேலன்...மதுரை சிந்தாமணி....177 நாள் வசூல் 4,33,744.54

எம் ஜீ ஆர் என்ற கதாநாயகனுக்காக படங்கள் ஓடுவதென்றால் வாத்தியின் எல்லா படமும்
வெள்ளிவிழா ஓடியதா ? மற்றைய நடிகர்களின் எல்லா படங்களையும் விட வாத்தியின்
எல்லா படங்களுமா வசூலில் முன் நிற்கின்றது?


மக்கள் திலகம் திரையில் இருக்கும் வரை யாரும் வெல்ல முடியாத சாதனையை படைத்து விட்டார்.(இது சிற்றரசர் குழு சொல்கிறது)

வாத்தி கதாநாயகனாக நடித்த கடைசிப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளிவந்தது 1978 அம் ஆண்டு.எம் ஜீ ஆர் நடித்து பாதியில் நின்றுபோன அண்ணா நீ என் தெய்வம் என்ற படம் சிறிது மாற்றத்துடன் எம் ஜீ ஆர் துணை பாத்திரமாகவும் பாக்கியராஜ் கதாநாயகனாகவும் நடித்து அவசரப்பொலிஸ் 100 என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஆக மொத்தத்தில் 1990 ஆம் ஆண்டு வரை திரைஉலகில் எம் ஜீ ஆர் நடித்த படங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஆனால் சீடர்கள் என்ன சொல்கிறார்கள் வாத்தியார் திரை உலகில் இருந்த வரை மதுரையில் யாரும் வெல்லவில்லையாம் .
பூனை கண்ணைமூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமாம்.கற்பனையில் மட்டுமல்ல பொய்யிலேயும் வாழுகிறார்கள் வாத்தி சீடர்கள்.

திரிசூலம்......................மதுரை சிந்தாமணி..........................200 நாள் வசூல் 10,28,819.55
பதினாறு வயதினிலே....மதுரை மினப்பிரியா /சினிப்பிரியா..266 நாள் வசூல்....9,12,767.20

தங்களுக்கு ஏற்ற விதமாக எழுதி தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது
வாத்தி ரசிகர்களின் கலை. முன்னர் பத்திரிகைகள் மற்றும் வாய்வழி மட்டுமே தகவல் பரிமாற்றமாக இருந்தன .
ஆனால் தற்பொழுது அப்படியல்ல எல்லோரது விரல் நுனியிலும் தகவல் அறியும் சாதனம் உண்டு.
எல்லோரும் எந்தவிடயமானாலும் தகவலை பெற்றுக்கொள்ளும் சூழலிலும் வாத்தி சீடர்கள் மாறப் போவதில்லை.
பொய்யையே பரப்பிக்கொண்டிருப்பார்கள்.

sivaa
22nd February 2022, 01:14 AM
எட்டாவது வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்@Sivaji samrajiyam YouTube channel


https://youtu.be/B7dusLM9hcY


Thanks Sivaji samrajiyam YouTube channel

sivaa
25th February 2022, 03:17 PM
சிவாஜி கணேசன் காலனி
நண்பர்களுக்கு வணக்கம்,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களால் விளம்பரம் இல்லாமல் தரப்பட்ட நன்கொடைகளில் இதுவும் ஒன்று. நம் ரசிகர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்திருக்கமாட்டோம். இந்தத் தகவலும் பிரச்சினைக்குரியதாக ஆனதால் அனைவரும் அறியும்படி ஆனது.
இந்த நலச் சங்கத்தின் பொறுப்பிலிருந்தவர்களே, நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதுதான் பிரச்சினையின் மூலக் காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது நடைபெற்றுவரும் பிரச்சினை குறித்து இந்தச் சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டு பேசினேன். அதுமட்டுமில்லாமல், எனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர் மூலமாகவும் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளப்பட்டது.
இப்போதிருக்கும் நிலையில், நடிகர்திலகம் அவர்களால் வாங்கித் தரப்பட்ட இந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி வழக்கில் உள்ளது. அந்த வழக்கிலும் தங்களுக்கு சாதகமான முடிவே வரும் என்று நலச் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்து மீதமுள்ள மற்றொரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுதான் தற்போது பிரச்சினையாக உள்ளது.
விரைவில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, நிலம் மீட்டுத் தரப்படும் என்ற உறுதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. அதற்கு மேலும் தாமதமோ, அல்லது பிரச்சினையோ தொடருமானால், மாநிலம் தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க நான் தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறேன்.
நம்பிக்கையுடன், நல்ல செய்திக்காக காத்திருப்போம்.
அன்புடன்,
கே.சந்திரசேகரன்
தலைவர், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை

5841

5842

Thanks Sivaji Peravai

sivaa
26th February 2022, 11:18 PM
திருப்பூர் மனீஸ் திரை அரங்கில்
வெற்றிகரமான 2 வது வாரமாக

ராஜா

5843

Thanks Vengateswaran (Facebook)

sivaa
27th February 2022, 02:17 AM
படத்தில் துடித்தது போல், நேரில் துடித்த சிவாஜி


https://youtu.be/SGNKCzw1Sm4


Thanks Thirai Chirpi

sivaa
27th February 2022, 11:11 PM
சிவாஜி கொடையாக கொடுத்த நிலம் எங்கே?

https://youtu.be/2gyBhh9VXoQ

5844


Thanks சிவாஜி முரசு ".
யூடியூப் லிங்க்:

sivaa
1st March 2022, 09:32 AM
1962 இல், 40,000 மக்கள் குவிந்தனர். அதிரவைத்த சிவாஜியும், அதிர்ந்துபோன சிங்கப்பூரும்.


https://youtu.be/PaMLz6zpMWA

5845

5846

Thanks Nadigar Thilagam Sivaji TV

sivaa
6th March 2022, 09:03 PM
நடிகர்திலகத்தின் உடல்,முக, தொடு மொழிகள்-. கவிஞனை மீறும் நடிப்பு அதிசயம்.
கோபால் எழுதியவை

***தவப்புதல்வன் படத்தில் தன் அறையில் திருட வந்த வாசுவுடன் போராடும் காட்சி. பூட்ஸ் சத்தத்தை வைத்து அவர் ஒரு பக்கமாக முகம் திருப்பி. காதால் ஒலி வாங்கி போராடும் காட்சி
***தவப்புதல்வனில் தற்செயலாக அறையில் அரைகுறை உடையில் சகுந்தலாவை பார்த்து அடையும் கூச்சம் , அருவருப்பு டன் வாலிபலுக்கே உரிய ஆவலும் ஒரு பத்து சதம் எட்டிப் பார்க்கும் தவிப்பு.
**பந்த பாசத்தில் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ பாட்டில் , தான் மணந்து கொண்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் அன்னையிடம் அவர் பணம் பெறும் போது ஒரு பக்கம் தந்தையின் சுமை குறைவதை எண்ணி ஆசுவாசம் , இந்த மாதிரி பணம் பெறும் விதத்தை எண்ணி சுய வெறுப்பு கலந்த இயலாமை , தன் வாழ்வை துறந்து இன்னொரு உயிரை அரவணைக்க வேண்டிய சுமை. அனைத்தும் 15 நொடிக்குள். ஒரு கதாசிரியனின் வர்ணிப்பில் விவரித்தால் ஒரே கணத்தில் நிகழும் கலப்பு மனநிலைகள்.
***நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!
உயர்ந்த மனிதன் படத்தில் குடித்து விட்டு விருந்தினர் முன் உளரி சொல்ல கூடாதவைகளை சொல்ல முயலும் அசோகனை பார்த்து பதறி சங்கடம் கலந்து அவமானமடையும் மனைவியை கைவிரல்களால் அவள் விரலை முதல் முறை அழுத்தும் போது பதட்டப் படாதே என்ற ஆறுதல் , இரண்டாவது அழுத்தலில் நான் சமாளிக்கிறேன் என்ற நம்பிக்கை.
-புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்".
"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,
----படிக்காத மேதை"தன்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லும் பெரியவரோடு அப்பாவித்தனமாய் வாக்குவாதம் செய்யும் காட்சி."உன்னால தனியாப் போய்
வாழ முடியாது..?"-என்று கோபமாய் பெரியவர்கேட்க..."முடியாது...முடியாது"என்கிற வார்த்தையை ஒரு பதிலாகசொல்லிக் கொண்டு வருபவர்,அப்படியே அந்த "முடியாது"என்கிற வார்த்தையை, தனதுஇயலாமையைக் குறிப்பிடும்
வார்த்தையாக மாற்றும்
லாவகம்.
----பாகப் பிரிவினை."தாழையாம் பூ முடிச்சு" பாடல்."தன்னன்னா"வுக்குப் பிறகுவரும் துவக்க இசைக்கு, ஊனம்மறந்து துள்ளும் சந்தோஷத்
துள்ளல்.
---வியட்நாம் வீட்டில் ஒய்வு பெற்ற பிறகு ஆபிஸ் வந்து ,அலுவலக பணியாளர்களுடன் பேசி கொண்டு மேசையை தொட்டு விட ,தூசி படிந்ததை தன் கை விரல் களின் மூலம் உணர்த்தும் காட்சி.
---நிச்சயதார்த்தத்தில் முதல் முறை குடிக்க்கும் புகைக்கும் அறிமுகம் ஆகும் போது உடல் மொழியில் காட்டும் uneasiness மற்றும் கொட்டாவி
----பாரத விலாஸ் படத்தில் சகுந்தலா நடனமாடும் போது,பக்கத்து மேசையில் புகைக்கும் போது காட்டும் முகசுளிப்பு மற்றும் கைகளினால் புகையை ஒட்டும் அருவருப்புணர்வு.
---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.
---வீரபாண்டிய கட்டபொம்மன்".போருக்குக் கிளம்புகையில்
மனைவியிடம் விடைபெறும்
போது, பல பக்க வசனங்கள்
விளக்க வேண்டிய வீரத்தை,
"சர்ர்ர்...ட்ட்" என்று தனது
குறுவாளை உறைக்குள்
செலுத்துவதில் காட்டி விடுவது.
---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
---இரவில் கிசு கிசு( whisper)குரலில் தன். நண்பனுடன். நான். காதலித்த பெண்ணை. இன்னொரு நண்பன் விரும்புவதை உணர்ந்து பேசும் சுய பச்சாதாப*. ஆறுதல், நடைமுறை. உணர்ந்த. சமாதானம்.நெஞ்சிருக்கும். வரை நினைவிருக்கும்.
---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
"என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?
---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.
தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)
"***என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.
---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......
----படித்தால் மட்டும் போதுமா?"மனைவியால் வெறுக்கப்பட்ட
வேதனையுடன் தான் மட்டும்
வீடு திரும்புவார்.
மகனுடன்,மருமகளைக் காணாத வியப்போடு தாய்
"மீனா வரலையாப்பா?" என்று
கேட்பாள்.விரக்தியில், ஏதோ சிந்தனையில்.. தாய் கேட்டதை
கவனிக்காதவர்.. "ம்ம்? "எனும்
ஒலியையே பதில் கேள்வியாக்குவாரே?
---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....
---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......
---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.
---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.(இவன் எங்கே இங்கே. அழையாமல்)
---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.
---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.
---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .
---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.
---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.
---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?அந்த நாள் பசுமையாக.
***தன்னை ஏமாற்றி. விட்டதாக. சொல்லும் பெண்ணிடம். தன். பொறுப்பற்ற* உதாசீனம். காட்டி , கேலியாக* உதவும். அரையிருட்டு. சில்லௌட். காட்சியில். சைட். ஆங்கிளிளில். அவர். முகபாவத்தை உணரலாம். அந்தநாள். அதிசயமே.
***பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.
--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?
--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,
---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,
---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.
---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.
---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.
-தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;
---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.
--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.
---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!
---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..
---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்
---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..
---பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.
---கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.
---தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.
---எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .
---சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .
---தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.
---உத்தமபுத்திரன்.யாரடி நீ மோகினி" பாடல்.ஆடிக்கொண்டே நகரும் அழகி பேரின்பமே காண்போம் வா
மன்னவா" எனப் பாடிச்
செல்ல...அந்தப் பெண்ணைப் பிடிக்கமுனையும் போது, மதுவின்
போதை கொஞ்சம்,கொஞ்சமாக
ஏறுவதைக் காட்டும் அந்த
மெல்லிய தள்ளாடல்.
---உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.
---அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.
---அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.
---சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
----சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
----அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
----துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
---பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
-பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;
---பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
---யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
----வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.
---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.
----ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்
----ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
---ராமன் எத்தனை ராமனடி".கே.ஆர்.விஜயாவிடம், "உங்களுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. இந்த கையை வெட்டிக்கணுமா?"
என்று தனது வலது கையைக்
காட்டுகிறவர், வேகமாய்ச்
சுதாரித்துக் கொண்டு இடது
கையைக் காட்டுவார்.வலது கை இல்லையென்றால்
சாப்பிட முடியாதே?
----ஆலயமணி."கல்லெல்லாம்" பாடல்.பாடிக் கொண்டே ஓவியம்
வரைந்து முடித்த பிற்பாடு,
ஓவியர்களுக்கே உரித்தான
பாணியில்.. சற்றே பின் தள்ளி
ஓவியத்தை மேற்பார்வையிடல்.(simultaneously cleaning the hand)
கோபால் எழுதியவை.


Thamks Gopalakrishnan Sundararaman (Nadigarthilagam fans )

sivaa
6th March 2022, 09:14 PM
Nadigarthilagam celebrated Pongal Festival in his farm every year in a grand manner.When MGR was shot in January 1967 just few weeks before General Elections,NT was very much distressed over the incident.He cancelled Pongal celebration What great human being he was! This news was revealed from a question and answer published in the March issue of 'Pesun Padam',a popular film monthly.

5847

Thanks N.Swami durai velu (Nadigar Thilakam sivaji visirigal)

sivaa
6th March 2022, 09:47 PM
5848

5849

ஓலைக்குடிசை, கை ரிக்*ஷா, கருப்பு வெள்ளை .
நான்கே முக்கிய கதாபாத்திரங்கள் .
கிழிந்த உடைகள், தாடி, மீசை ,இவற்றோடு நடிகர் திலகத்தின்
பாபு போட்ட போட்டில் வண்ணங்கள் வெளுத்துப் போயின.
பிரமாண்டங்கள் சரிந்தன, பாபுவோ சர்வசாதாரணமாக
வசூலை வாரிக்குவித்தது.(வாசுதேவன்)

இந்த நடிகளுக்குத்தான் எத்தனை தன்நம்பிக்கை,
"ஓடையில் நின்னு" மலையாளப் படத்தழுவல்.
"பாபு"படத்தின் வெற்றியை negative ஆக பார்த்தவர்கள்
"பாபு" படத்தின் இமாலய வெற்றி கண்டு வியந்தனர்.!

இயக்குனர் திருலோகசந்தர் தன் நண்பர் சிவாஜிமேல்
அசாத்திய நம்பிக்கை வைத்தார்,
அதை நிஜமாக்கி தமிழ்பட உலகை திணறவைத்தவர் எளிமையான ஆனால் வலிமையான "பாபு".
(This filmbecome a blockbuster at the box office and running over 100 days in many theatres ),!

(இமேஜில் உள்ளவை)


Thanks Thilak Ganesan (Face book)

sivaa
6th March 2022, 09:55 PM
ப்ளாஷ்பேக்.


ரசிகர்களும்,தயாரிப்பாளர்களும்,திரையுலகம் பெரிய மாறுதலை நோக்கி பயணிக்க தொடங்கியது 1952 ம் ஆண்டு ...எல்லோருக்கும்
தெரிந்த விஷயங்களையே மறுபடியும் சொல்வதில்
எனக்கு உடன்பாடில்லை...ஒரு முன் கதையை பார்ப்போம் .....
திண்டுக்கல்லில் கே.என்.ரத்தினம் என்பவர் நடத்தி வந்த "என் தங்கை நாடகத்துக்கு தலைமை தாங்க
சென்றிருந்தார் ஏ.எஸ்.ஏ.சாமி ...நாடகத்தை எழுதியவர் டி.எஸ்.நடராஜன் ...நாடகத்தில் நடித்த ஒரு நடிகரின்..உணர்ச்சிகரமான நடிப்பு ஏ.எஸ்.ஏ.சாமியை மிகவும் கவர்ந்தது ...
திண்டுக்கல்லில்லிருந்து திரும்பியதும் தான் பார்த்தநாடகத்தை பற்றியும் தன்னை கவர்ந்த நடிகரை பற்றியும் ஜீபிடர் சோமுவிடம் சொன்னார்.
என் தங்கையை ஜீபிடருக்காக படமாக்க போவதாகவும் அதை ஏ.எஸ்.ஏ.சாமியே இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ..
ஆனால் ஜீபிடருக்காக மூன்று படங்களை இயக்கி கொண்டிருந்த சோமு தனக்கு நேரமில்லை என்றும்
வேறு இயக்குநரை வைத்து இயக்கலாம் ஆலோசனை சொன்னதுடன் ..அந்த இயக்குனரை
என் தங்கை நாடகத்தை பார்த்து வரச்சொன்னார்.
அவருக்கு நாடகம் பிடிக்கவில்லை திட்டம் கிடப்பில்
போடப்பட்டது .
சில மாதங்களுக்கு பின் பி.ஏ.பெருமாள் தான்
பராசக்தி நாடகத்தை படமாக இருப்பதாகவும் அதற்கு..திரைக்கதை வசனம் எழுதி தரும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டார். அவரும் "பராசக்தியும்
என் தங்கையும் தங்கை பாசத்தை டிப்படையாக கொண்டவைதான் அதிலும் என் தங்கையில் பல சிறப்பான சம்பவங்கள் இருப்பதாகவும் அதனால்
இரண்டு கதைகளையும் இனைத்து புதிய புதிய திரைக்கதை யை அமைக்கலாம் "என்றார் சாமி.
நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார் பெருமாள் ..
திருச்சியில் என் தங்கை நாடகத்தை பார்த்தார்கள்
மறுநாள் "காதல்"பத்திரிகை ஆசிரியர் அரு.ராமனாதன் வீட்டில் என் தங்கை நாடகாசிரியர்
டி.எஸ்.நடராஜனை சந்ததித்து பேசினார்கள்.
அவர் ஒத்து வரவில்லை ...இதோடு இதை நிறுத்தி
கொள்ளலாம் ..
"பராசக்தி கதையை ஏ.வி.எம்.கூட்டணியுடன் பெருமாள்..தயாரிக்க போகிறார் என்று கேள்வி பட்ட அசோகா பிக்சர்ஸ்...என் தங்கை கதையை
வாங்கி அதே பெயரில் தயாரித்து பராசக்திக்கு முன் வெளியிட்டார்கள் படச்சுருளையே சோகத்தில்
முக்கியெடுத்து விட்டார்கள் ..சரி அதைவிடுவோம்
பின்னர் கலைஞர் கதைவசனம் எழுதியதும்
மெய்யப்ப செட்டியாரின் தடுமாற்றமும் பி.ஏ.பெருமாளின் பிடிவாதமும் அனைவரும் அறிந்த விஷயம்தானே ..இங்கே ஒரு ட்விஸ்ட்
என் தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தவர்
#நடிகர்திலகம்சிவாஜிகணேசன்..
மீண்டும் பராசக்திக்கு வருவோம் ..
படம் பத்தாயிரம் அடிக்கு மேல் எடுக்கப்பட்டது
எடிட் செய்துபார்த்தார்கள் ...சிவாஜியின் நடிப்பு படத்தின் பிற் பகுதியில் சிறப்பாக இருந்ததை
மெய்யப்ப செட்டியார் உணர்ந்தார் ..ஆரம்பத்தில் எடுத்த 7ஆயிரம் அடியை நீக்கி விட்டு மறுபடியும் இரவு பகலாக படமாக்கினார்கள் ..
1952 அக்டோபர் 17ந்தேதி பராசக்தி வெளியானது
அது வரையில் இப்படி கம்பீரமான குரலை கேட்டறியாத தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள் ..படம் வெளியாகும் முன்பே
"பணம்""பூங்கோதை "மனிதனும் மிருகமும் "ஆகிய படங்களில் ஒப்பந்தமானார் ...இப்போது ஒரு சிறப்பு செய்தி பராசக்தி வெளியான அதேநாளில்
சௌகார் ஜானகி நடித்த..முதல் படமான "வளையாபதி "யும் வெளியானது.....

5850

Thanks Ganesh Moorthy (வசந்தம் (பல்சுவைக் குழு)

sivaa
20th March 2022, 12:36 AM
பொய், பித்தலாட்டம், திருகுதாளம், உருட்டல், பிரட்டல், மிரட்டல் ,போன்ற அனைத்து சித்துவேலைகளையும் தாங்களே செய்துகொண்டு அதனை நாங்கள் செய்வதுபோல் எங்கள்மேல் பழிபோடும் வாத்தியின் கைகூலிகளது பித்தலாட்டம் ஆதாரத்துடன் அம்பலம் .

திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் 100 நாட்கள் ஓடிய படம் மதுரைவீரன் என்று, இன்றுவரை கப்சாவிட்டுகொண்டு திரிகிறார்கள் வாத்தியின் கைகூலிகள்.ஒவ்வொரு வாத்தியின் கைசும் நேரத்துக்கு ஒரு கதை ,32 அரங்கில் 100 நாட்கள் என்று ஒரு கைகூலி சொல்லுவார், மற்றைய கைகூலி எழுதுவார் 34 அரங்கில் 100 நாட்கள் என்று, இன்னுமொரு கைகூலி 36 அரங்கில் என்பார். பொய் சொல்வதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

வாத்தியின் ரசிகர்களை உண்மையை உணரவிடாமல் மூளைச்சலவை செய்யும் உரிமைக்குரல் என்ற பத்திரிகையில் மதுரைவீரன் 100 நாட்கள் ஓடிய தியேட்டர் விபரங்களுடன் வெளியிடப்பட்ட பதிவு இது. இதில் காஞ்சிபுரம் முருகன் தியேட்ரிலும், கடலூர் நியூ சினிமாவிலும் ,திருவாரூர் பேபி தியேட்டரிலும் 29/06/1956 முதல் அமரதீபம் திரையிடப்படடுவிட்டது.மேற்படி 3 தியேட்டர்களிலும் அமரதீபம் திரையிட்டு ஓடிக்கொண்டிருப்பதற்கான பத்திரிகை ஆதாரம் இது.13/04 1956 ல் மதுரைவீரன் திரையிடப்பட்டது.29/06/1956ல் அமரதீபம் திரையிடப்பட்டது.எனவே மேற்கண்ட 3 தியேட்டர்களிலும் ஏப்ரல் மாதத்தில் 18 நாட்கள், மே மாதத்தில் 31 நாட்கள், யூன் மாதத்தில் 28 நாட்கள் மொத்தம் 77 நாட்கள்தான் வருகின்றது. ஆனால் வாத்தியின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு .காஞ்சியில் 156 நாட்கள் வந்திருக்கிறது. கடலூரில் 111 நாட்கள் வந்திருக்கிறது .திருவாரூர் பேபியில் 105 நாட்கள் வந்திருக்கிறது.எங்கும் பொய் எதிலும் பொய். பொய்! பொய்!! பொய் !!! இது எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் வெளிப்பாடு ,ஆதாரம் கிடைக்காததால் இன்னும் எத்தனை பொய்கள் ஒளிந்து கிடக்கின்றனவோ.?



அடுத்ததாக மதுரைவீரன் திரையிடப்பட்ட அதே நாளில் சதாராம் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்தத்திரைப்படம் விழும்புரம் சீதாராம் தியேட்டரில் திரையிடப்பட்டது .அதற்கான பத்திரிகை விளம்பர ஆதாரம் இங்கே இருக்கிறது.ஆனால் ரத்தத்தின் கைகூலிகளுக்கு மதுரைவீரன் அதே தியேட்டரில் 108 நாட்கள் ஓடியதாம் .இனி என்ன செய்வார்கள் தொப்பியை பிரட்டுவார்கள் எப்படி? இப்படி, முதல் வெளியீட்டில் அல்ல இரண்டாம் வெளியீட்டில் என்று தொப்பியை பிரட்டுவார்கள் அப்பாடா ஒருவழியாக மக்களை ஏமாற்றியாச்சு என்று அவர்களே தங்களுக்கு சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். எத்தனையோ பொய்களுக்கு மேல் பொய்களைச்சொல்லி வருடக்கணக்காக மக்களை ஏமாற்றி கொண்டு திரியும் வாத்தியின் கைகூலிகளுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.


5851

5852


5853

sivaa
22nd March 2022, 01:46 AM
நடிகர் திலகம்
ஒரு முறை திருச்சி சிவா ஒரு கூட்டத்துக்கு வந்திருந்த போது நிரம்பி வழிந்த சபையைப் பார்த்து சொன்னது
உலகத்திலேயே இறந்து 20 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசியல் ஆதாயமோ , பலன் கருதியோ இல்லாமல் சிவாஜி ஒருவருக்கே பெயரை சொன்னாலே இவ்வளவு கூட்டம் சேரும் என்றார்.
2012 கர்ணனுக்குப் பிறகு நவீன தொழில் நுட்பத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படங்களே அதற்கு சாட்சி.
ஒரு ரசிகர் திருவனந்த புறத்திலிருந்து தினமும் வாட்ஸ் அப் செய்வார் . 2019 இலிருந்து தொடரும் தினநிகழ்வு. எந்தெந்த சானலில் சிவாஜியின் எந்தெந்த படங்கள் எந்த நேரம் என்று*
உதாரணம்
Good morning. Today main NT AIYA movies:-
SIVANTHA MANN at 11am in Sun Life tv.
VAZHKAI at 1.30pm in Mega tv.
THANGA PATHAKKAM at 4pm in Jaya movies.
OOTTY VARAI URAVU at 10.30pm in Vendhar tv.
____________________________
Tomorrow (4-3-22) main NT AIYA movies:-
"RATHA THILAGAM" at 11am in Murasu tv.
"THANGAMALAI RAGASIYAM" at 3.30pm in Raj Digital plus.
MOONDRU DEIVANGAL at 7.30pm in Vasanth tv.
"RAJA RAJA CHOZHAN" at 9pm in Raj tv.
Parameswaran
Trivandrum.
நான் வந்த செய்தியை தொகுத்தலில் 2020*, 2021 வருடங்களில் மட்டும் சுமார் 3200 முறை அவருடைய 138 படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டுள்ளன.
அதே போல் 50 ஆவது படம் நூறாவது படம் என்று மொத்த எண்ணிக்கையை நடிகர்களுக்கு குறிப்பிடும் நாட்களில் சுமார் 30 வருட திரை வாழ்வில் நடிகர் திலகத்தின் பிரத்யேக சாதனையாக அவரின் 25 ஆவது 100 நாள் படம் , 50 ஆவது , 75 ஆவது , 100 ஆவது 100 நாட்கள் ஓடிய படங்கள் என்று தொகுக்கலாம்
நடிகர் திலகம் 100 நாள் படங்கள் மொத்தம் 112 films.
முதல் படம் பராசக்தி 100 நாட்கள் தாண்டி வெள்ளி விழா கண்டது 1952.
25 வது 100 நாட்கள் படம் பாலும் பழமும் 1961
50 ஆவது 100 நூறு நாட்கள் படம் சிவந்த மண் 1969
75 ஆவது 100 நாட்கள் படம் அண்ணன் ஒரு கோவில் 1977
100 வது 100 நாட்கள் படம்* முதல் மரியாதை 1985. வெள்ளி விழா கண்டது.
அதேபோல் அவரது landmark படங்கள் அனைத்தும் பெரு வெற்றிப் படங்கள்.
சிவாஜியின் முதல் படம் பராசக்தி 100 நாட்கள்.தாண்டி வெள்ளி விழா
அவரது 75 ஆவது படம் பார்த்தால் பசி தீரும் 100 நாட்கள்.
100 ஆவது படம் நவராத்திரி 100 நாட்கள்.
125 ஆவது படம் உயர்ந்த மனிதன் 100 நாட்கள்.
150 ஆவது படம் சவாலே சமாளி 100 நாட்கள்.
175 ஆவது படம் அவன்தான் மனிதன் 100 நாட்கள்.
200 ஆவது படம் திரிசூலம் வெள்ளி விழா
225 ஆவது படம் தீர்ப்பு வெள்ளி விழா


Thanks Gopalakrishnan Sundararaman (Nadigar Thilakam sivaji visirikal)

sivaa
24th March 2022, 01:20 AM
"கொடை வள்ளல் " கலை உலக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வழங்கிய நன்கொடைகள் 🙏
------------------------------------------ சிலவற்றை நிகழ்ச்சிகளை தந்து உள்ளேன் எனக்கு கிடைத்த தகவலின் படி (இது போக இன்னும் எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு பல கோடி ரூபாய்யை நன்கொடையாக வழங்கி உள்ளார்
📽 செய்தி தகவல் தொகுப்பு 🎞🎬✍
🙏 கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர்✍
தேசிய திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்------
சிவாஜி கணேசன் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.
அவற்றை காண்போம்.
* தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.
* பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
* கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
* பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.
* மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)
* கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
* தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)
* சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
* சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
* 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
* மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
* 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.
* சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.
* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
* 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.
* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.
* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
* கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
* திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
* தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.
* தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)
* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)
* தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
* கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.
* சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.
*வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)
* சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
* 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.
* 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
* 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)
* 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)
* 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
* 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
( இன்றைய மதிப்பு 75 லட்சம்)
* 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)
* 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)
* 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)
* 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)
* 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)
* 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.
* 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)
*1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)
* 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
* 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)
*1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)
* 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)
* பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.
* 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)
* 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
* 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)
* 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)
* 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)
* 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)
தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!
சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு செய்த தொண்டுகள் ஏராளம்.
சிவாஜி கணேசனுக்கு ஏன் அரசாங்க செலவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என வினவியவர்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது அவசியம். அவர் தமிழுக்கும் இந்திய தேசத்திற்கும் செய்த தொண்டுகளுக்கு எத்தனை மணிமண்டபங்கள் கட்டினாலலாலும் ஈடாகது ....
தகவல்கள் தொகுப்பு✍ கவிஞர் தின குரல்🙏
ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர்🤝🙏


5854

Thanks Vijaya Rai Kumar (Nabigar Thilagam Fans)

sivaa
31st March 2022, 07:42 AM
ஆடு பகை
குட்டி உறவு
என்பார்களே
அது போல அண்ணன் சிவாஜியிடம் போலித்தனமான அன்பும் நட்பையும் கொண்ட அன்றைய MGR ஆட்சி
சிவாஜி மன்றத்தினர் மீது பகையுனர்வோடு நடந்து கொண்டது
அன்றைய ஆட்சியாளர்களுக்கு
சிவாஜி மன்றம் தான்
சிம்ம சொப்பனமாக இருந்தது
அதன் செயல்பாடுகள் அப்படி
நாடாளமன்ற உறுப்பினர் பதவி ஏற்று சென்னை திரும்பிய அண்ணன் சிவாஜியை வரவேற்க அனைத்து ஊர்களில் இருந்தும் மன்றத்து மறவர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடினர் கட்டுக்கடங்காத கூட்டம்
MGRன் காவல் துறை கூட்டத்தை கலைப்பதற்காக மன்ற பொதச் செயலாளர் மாவீரன் V.இராஜசேகரன் அவர்களை குறிவைத்து தாக்கியது மன்றத்து மறவர்கள் மாவீரன் V. இராஜசேகரன் அவர்களை சூழ்ந்து நின்று பாதுகாத்தனர் மீண்டும் காவல்துறை தடியடி நடத்தியது அப்படியும் அவர்களால் கூட்டத்தை கலைக்க முடியவில்லை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு
MGRன் காவல் துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது அதற்கும் நம் மன்றத்து மறவர்கள் சளைக்காமல் கூடி நின்றனர் பின் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் பலர் குண்டடிபட்டு காயம் அடைந்தனர்
மன்றத்து மறவர்கள் வந்த வாகனங்கள் காவல் துறையினராலேயே கடுமையாக தாக்கப்பட்டு சேதம் அடைய செய்தனர்
அண்ணன் சிவாஜி அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவுடன் போர் களம் போல் காட்சியளித்ததை பார்த்து நிலைமையை உணர்ந்தார் தொண்டர்கள் படைசூழ வரவேற்று ஊர்வலமாக அழைத்து வரப்பற்றார்
இடையிடையே நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இந்த காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கடுமையாக சாடினார்
தடியடி குண்டடிபட்டு காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதன் பின் தான் தன் இல்லம் சென்றார்
இருந்தும் கெடுத்தான்
செத்தும் கெடுத்தான்
என உறவாடி கெடுத்ததை
இது போல் பல உதாரணங்களுடன்
சொல்லிக் கொண்டே போகலாம்........
MGR ஆட்சியின்
குறைகளையும்
ஊழல்களையும் உடனுக்குடன் அரசியல் அமைப்புகளை விட
சுட்டி காட்டுவது அப்போது சிவாஜி மன்றத்தின் செயல்பாடாக இருந்தது இதனால் சிவாஜி மன்ற செயல்பாடுகளை அடக்கு முறையால் அடக்க MGR முயற்சி மேற்கொண்டார்
சிவாஜி மன்றத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதன்
இறக்கைகளை வெட்ட வேண்டும் என்று கூறினார் அதன் படி தான்
மன்றத்து மறவர்களும் மாவீரன்
V. இராஜசேகரன் அவர்களும் தாக்கப்பட்தோடு அல்லாமல்
பல வழக்குகளும் போட்டனர் சிவாஜி மன்றத்தினர் மீது
அப்போது அரசியலில் ஒரு அங்கமாக
சிவாஜி மன்றத்தின் கெளரவம்
கம்பீரம் தலை நிமிர்ந்து இருந்தது

5855

5856

5857

5858


Thanks Satha Venkatraman