PDA

View Full Version : veNbA vadikkalAm vA



Pages : 1 [2]

bis_mala
26th January 2011, 10:54 PM
பாடிய தூக்கில் பயின்ற பொருள்கண்டு
தேடிய நோக்கும் நிறைகண்டு --- ஓடிய
தெண்ணீரில் பொன்கண்டு தேர்ந்தாரை ஒப்பர்காண்்
எண்ணீரோ இன்னார் திறம்.

for your critical appreciation....

P_R
27th January 2011, 09:14 AM
எதுகை இல்லாமல் எழுதலாகாது என்று எந்த விதியும் இல்லையே!

Oh !!

வெண்பா இலக்கணப்படி எதுகை வரவேண்டும் என்றும் எவ்வாறு வருகிறது என்பதைப் பொருத்து இன்னிசை/நேரிசை வகைகள் அறியப்படும் என்று நினைத்தேன்.

எதுகையும், மோனையைப் போல, நயம் கருதி சேர்த்துக்கொள்ளப்படுவது மட்டும் தானா?


மிகச் சிறந்த கவிதை என்பது பொருளை வைத்தே முடிவு செய்யப்படும்.

......கவிதை என்பது எதுகை மோனைகளை மட்டும் வரிகளில் அமைத்துக் காட்டும் பயிற்சி அன்று. அதனினும் மேலான உயர்ந்த கருத்துக்களின் பெட்டகம் அதுவாம்.

கவித்துவம் வாய்ந்த ஒன்றைத் தெளிவாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு எதுகை முதலியவை தடையாய் இருப்பின், அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டுத் தொடரலாம் என்பது நல்லிசைப் புலவர்களுக்குத் தெரியுமே!



அதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டியே என் கேள்வி.

திறம்பட செய்யப்பட்ட மீறலும் அழகே.

கம்பராமாயணத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு வரி



விதியினை நகுவன அயல்விழி - பிடியின்
கதியினை நகுவன தளர்நடை - கமலப்
பொதியினை நகுவன புணர்முலை - கலைவாள்
மதியினை நகுவன வனிதையர் வதனம்


Structure:உம். பெண்யானையின் அழகிய நடையை நகுவதாக இருக்குமாம் அப்பெண்களின் அழகு நடை. அதாவது சுமாரான, நகைப்புக்குறிய உவமைகள் தான் கிட்டும் என்ற structure.

எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார். ஆனால் இந்த பாவின் structure படி வேல்விழிகளுக்கும் உவமை சொல்லவேண்டும். ஆனால் அது கூட இயலவில்லையாம். உவமை சொல்ல வேண்டும் என்ற விதியைக் கூட நகைக்கின்றனவாம் அவ்விழிகள்.

Afflatus cannot be contained (http://dagalti.blogspot.com/2010/04/poets-cornered.html).

bis_mala
27th January 2011, 11:37 AM
எதுகை இல்லாமல் எழுதலாகாது என்று எந்த விதியும் இல்லையே!


Oh !! வெண்பா இலக்கணப்படி எதுகை வரவேண்டும் என்றும் எவ்வாறு வருகிறது என்பதைப் பொருத்து இன்னிசை/நேரிசை வகைகள் அறியப்படும் என்று நினைத்தேன். எதுகையும், மோனையைப் போல, நயம் கருதி சேர்த்துக்கொள்ளப்படுவது மட்டும் தானா?

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல். இலக்கியமே
முன்பிறந்தது; இலக்கணம் பின் ஆய்ந்து நெறிமுறைகளைக் கண்டறிந்து வகைப்படுத்தி, பெயர்களிடப்பட்டு உரைக்கப்பட்டது. இலக்கணமில்லாத காலத்தில், ஒருவன் தானே நெறிமுறைகளைக் கண்டுகொண்டு பாட வேண்டியிருந்தது.
இப்படி இருந்தால் இது இன்னிசை, இப்படியானாலதிது நேரிசை
என்று அடையாளத்திற்கு இடப்பட்ட நிலை பின் வந்த
ஆசிரியர்களால் "இப்படி வரவேண்டும்" "அப்படி வரவேண்டும்"
என்று கட்டாய விதிபோல போதிக்கப்பட்டது.பலர் போற்றிய (கடைப்பிடித்த) ஒரு நெறி, போதிப்பவரால் வலியுறுத்தப்பட்டு "விதி"யாக அல்லது "விதி"போல மறுதரவு
செய்யப்பெறும்.

இன்னிசை நேரிசை என்று குறியீடுகள் இருப்பதால், எதுகை ( etc) கட்டாயம் ஆகிவிடாது.

எதுகை மோனை இன்ன பிற இல்லாத கவி தொடுப்பது,
"செந்தொடை" என்று இலக்கணியர் ஒருபுறம் வைத்துக்கொள்ள
வேண்டியதாயிற்று. காரணம் செந்தொடை கொள் புலவ
மலைகளுக்கு இவ் இலக்கணியர் காலத்திலிருந்த செல்வாக்கு தவிர வேறென்ன?

திருவள்ளுவனார் காலத்திலேயே செந்தொடை முறை சற்று
அருகிவிட்டது. மறைந்துவிடவில்லை. செம்மையான தொடை
அதுதான். அதனாலேயே அதற்கப்பெயர்.

அக அழகு குறையும்போது, புற அழகில் ஈடுபடுகிறோம் என்பர்
மேலை நாட்டறிஞர். எதுகை மோனை முதலியவை புற அழகு.

எதுகை மோனைகளின் தாக்கம், சங்க இலக்கியத்தில் சற்று
கீழ்மட்ட நிலையில்தானிருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இப்படிக்கூறுவதனால், எல்லோரும் எதுகை மோனை இல்லாமல் கவிபாடவேண்டும் என்ற கருத்தை நான் முன்வைக்கவில்லை.

என்னைப்பொறுத்தவரை எதுகை மோனைகள் பெய்தே
எழுதுவேன். ஆனால், கருத்துக்கு முதலிடம் கொடுத்து, ஒரோவழி செந்தொடையையும் கையாளுவேன்.




மிகச் சிறந்த கவிதை என்பது பொருளை வைத்தே முடிவு செய்யப்படும்.

......கவிதை என்பது எதுகை மோனைகளை மட்டும் வரிகளில் அமைத்துக் காட்டும் பயிற்சி அன்று. அதனினும் மேலான உயர்ந்த கருத்துக்களின் பெட்டகம் அதுவாம்.

கவித்துவம் வாய்ந்த ஒன்றைத் தெளிவாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு எதுகை முதலியவை தடையாய் இருப்பின், அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டுத் தொடரலாம் என்பது நல்லிசைப் புலவர்களுக்குத் தெரியுமே!




அதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டியே என் கேள்வி.

திறம்பட செய்யப்பட்ட மீறலும் அழகே.

கம்பராமாயணத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு வரி

[quote]
விதியினை நகுவன அயல்விழி - பிடியின்
கதியினை நகுவன தளர்நடை - கமலப்
பொதியினை நகுவன புணர்முலை - கலைவாள்
மதியினை நகுவன வனிதையர் வதனம்


Structure:உம். பெண்யானையின் அழகிய நடையை நகுவதாக இருக்குமாம் அப்பெண்களின் அழகு நடை. அதாவது சுமாரான, நகைப்புக்குறிய உவமைகள் தான் கிட்டும் என்ற structure.

எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார். ஆனால் இந்த பாவின் structure படி வேல்விழிகளுக்கும் உவமை சொல்லவேண்டும். ஆனால் அது கூட இயலவில்லையாம். உவமை சொல்ல வேண்டும் என்ற விதியைக் கூட நகைக்கின்றனவாம் அவ்விழிகள்.

Afflatus cannot be contained (http://dagalti.blogspot.com/2010/04/poets-cornered.html).

Thanks. well expounded.

P_R
27th January 2011, 01:46 PM
விளக்கத்துக்கு நன்றி.
சட்டகங்கள் சிறைகளாகக்கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. சட்டகத்தைக் கற்றுக்கொண்டு சரளத்தைப் பெருக்கிக்கொள்ள விருப்பம்.

உங்கள் வெண்பாவுக்கு வருவோம்.

தளை தட்டவில்லை.
எதுகையும் சரி.
ஈற்றடியைத் தவிற மோனையும் வந்திருக்கிறது.

பொருள்...


தூக்கில்? இங்கு தான் நிற்கிறேன். இதற்கு பொருள் என்ன. இந்த பயன்பாட்டை நான் வாசித்ததில்லை.

பாடிய தூக்கில் - 'இலக்கண வரையறைகளை சற்றே மீறிய பாட்டில்' என்று புரிந்துகொண்டேன். சரியா?

அப்பிடியென்றால் மிக அழகாக வந்திருக்கிறது.

jaiganes
27th January 2011, 08:35 PM
விளக்கத்துக்கு நன்றி.
சட்டகங்கள் சிறைகளாகக்கூடாது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. சட்டகத்தைக் கற்றுக்கொண்டு சரளத்தைப் பெருக்கிக்கொள்ள விருப்பம்.

உங்கள் வெண்பாவுக்கு வருவோம்.

தளை தட்டவில்லை.
எதுகையும் சரி.
ஈற்றடியைத் தவிற மோனையும் வந்திருக்கிறது.

பொருள்...


தூக்கில்? இங்கு தான் நிற்கிறேன். இதற்கு பொருள் என்ன. இந்த பயன்பாட்டை நான் வாசித்ததில்லை.

பாடிய தூக்கில் - 'இலக்கண வரையறைகளை சற்றே மீறிய பாட்டில்' என்று புரிந்துகொண்டேன். சரியா?

அப்பிடியென்றால் மிக அழகாக வந்திருக்கிறது.
தூக்குக்கவி என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அதைத்தான் சொல்கிறீர்களா?

bis_mala
28th January 2011, 10:44 AM
தூக்கு என்ற சொற்குப் பல பொருள் உள. "பா" என்ற பொருளிலும் வரும். எ-டு: வஞ்சிப்பா - வஞ்சித்தூக்கு. தூக்கு என்ற சொல், அடிப்படையில் ஒன்றைத்தூக்குதலைக் குறிக்கும்.
அரசர் முதலிய உயர்மக்களைத் தூக்கிப் பாடிய வழக்கத்தினால்
இப்பொருள் எழுந்ததோ ? நன்மணம் பரப்பி மயக்குறுத்தும்
மணப்பொருள் போன்றது என்ற ஒப்பீட்டுப் பொருண்மையினால்
பாக்களையும் குறித்ததோ ? என்பது ஆய்வுக்குரியது. பலவகைத் தூக்குகள் உளவென்ப புலவர்.(பாவாணர் சொல்லாய்வுகளில் விடை காணக்கிடைக்கலாம்.) அது நிற்க.

உங்கள் இருவர் விடைகளும் பொருந்துவனவாகவே
தோன்றுகின்றன. j avl கூறியது பொதுப்பொருள்; ......P_R avl உரைத்தது சிறப்புப்பொருள். வாழ்த்துக்கள்.

bis_mala
28th January 2011, 11:08 AM
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

இக் குறளில் எதுகைகளைக் கண்டுபிடியுங்கள்.
கண்டு இன்புறுவோம்.

bis_mala
30th August 2011, 09:11 PM
வெறுத்தோ ஒதுக்குவது வெண்பாவை? இன்னல்
பொறுத்துப் பயிலல் கடன்!

chinnakkannan
1st September 2011, 12:24 AM
vவணக்கம் பிஐஎஸ் மாலா..

என் வீட்டில் கடந்த இரு நாட்களாக ஒரு எலி விசா இல்லாமல் வந்து படுத்துகிறது.. கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..

குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
உருவத்தில் சிறிதாய் ஒடுங்கி இருந்தே
பழியாய்ப் பதுங்கியே படசணம் தானுண்டே
எளிதாய்ப் படுத்தும் எலி

chinnakkannan
1st September 2011, 12:57 AM
கண்மயங்கும் வாயோ கணம்மடியும் வண்ணம்யில்
அன்ன்நடை தான்குலையும் வஞ்சியர்க்கே வெண் திரையில்
நன்றாக நடக்குமிந்த நாடகத்தை எப்பொழுதும்
கண்ட்துண்டு கேட்ட்தில்லை காண்..

(ரொம்ப முன்னாலே – ஐந்து வருடம்முன் எழுதிப் பார்த்த்து...திரைப்பட்த்தில் எப்பொழுதும் நாயகி நாயகன்ஸ்பரிசத்தில் கண் மயங்குவாள் கால் அரைவட்ட்ம் போடும் உதடு கொஞ்சம் மடிந்து ஸ் ஸ் என சப்தம் வரும்...
நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்ன... உயர் காலணிகளை எப்படிக்கழட்டுவாள்..எப்படி அரைவட்டம் போட முடியும்..!)

bis_mala
1st September 2011, 01:33 PM
vவணக்கம் பிஐஎஸ் மாலா..

என் வீட்டில் கடந்த இரு நாட்களாக ஒரு எலி விசா இல்லாமல் வந்து படுத்துகிறது.. கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..

குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
உருவத்தில்x சிறிதாய் ஒடுங்கி இருந்தே
பழியாய்ப் பதுங்கியே படசணம் தானுண்டேx
எளிதாய்ப் படுத்தும் எலி

x change

குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
உருவத்தில் சின்ன(து) ஒடுங்கி -- இருந்தே
பழியாய்ப் பதுங்கியே பட்சணம் தானுண்(டு)
எளிதாய்ப் படுத்தும் எலி

என்று சிறிது மாற்ற, வெண்பா சரியாகிவிடும்.

Good attempt.
Show your immigration authority card to the எலி.

bis_mala
1st September 2011, 01:39 PM
3rd and 4th lines, can also be rendered with this slight change:


பழியாய்ப் பதுங்கியே பட்சணம்தா னுண்டே
எளிதாய்ப் படுத்தும் எலி

bis_mala
1st September 2011, 07:19 PM
கண்மயங்கும் வாயோ கணம்மடியும் வண்ணம்யில்
அன்ன்நடை தான்குலையும் வஞ்சியர்க்கே வெண் திரையில்
நன்றாக நடக்குமிந்த நாடகத்தை எப்பொழுதும்
கண்ட்துண்டு கேட்ட்தில்லை காண்..

(ரொம்ப முன்னாலே – ஐந்து வருடம்முன் எழுதிப் பார்த்த்து...திரைப்பட்த்தில் எப்பொழுதும் நாயகி நாயகன்ஸ்பரிசத்தில் கண் மயங்குவாள் கால் அரைவட்ட்ம் போடும் உதடு கொஞ்சம் மடிந்து ஸ் ஸ் என சப்தம் வரும்...
நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்ன... உயர் காலணிகளை எப்படிக்கழட்டுவாள்..எப்படி அரைவட்டம் போட முடியும்..!)

கண்மயங்கும் வாயோ கணம்மடியும் வண்ணமயில்
அன்னநடை தான்குலையும் வஞ்சியர்க்கே-- வெண் திரையில்
நன்றாய் நடக்குமிந்த நாடகத்தை எப்பொழுதும்
கண்டதுண்டு கேட்டதில்லை காண்..

ஒரு சிறு மாற்றமே தேவைப்பட்டது.

chinnakkannan
2nd September 2011, 01:47 AM
முதலில் நன்றாய் என்று தான் எழுதியிருந்தேன்.. நினைவிலிருந்து எழுதுகையில் தளை சரிபார்க்க வில்லை..ம..
*
சின்ன எலி என்று பார்த்தால் பாருங்கள் இதுவும் தளையில் கடித்து விட்ட்து..
ம்ம் நேற்று வரவில்லை.. அது சிறுகதை எலியா தொடர்கதை எலியா தெரியவில்லை..
திருத்தங்களுக்கு நன்றி..
*
பாரில் என்னென்ன நடக்கும்- நடக்கின்றன என்று யோசித்தால்..

கண்கள் நிறமோ கருஞ்சிவப்பாய் ஆகிவிட
உண்மையை வாயதுவும் தானாய் உளறிவிட
தேர்போல ஆடியே தள்ளாடும் கால்பலவும்
பாரில் நடக்குது பார்

ஹி.ஹி.. ஆங்கில பார் ஆகவும் வைத்துக் கொள்ளலாம் தமிழ் பார் ஆகவும் வைத்துக் கொள்ளலாம்..
மரபில் நடந்து சிலகாலம் ஆனதால் கற்பனைக் குதிரை சற்றே நொண்டியடிக்கிற்து..மன்னிக்க..கூடியவிரைவில் ஓடும் என நினைக்கிறேன்

chinnakkannan
2nd September 2011, 02:08 AM
முன்பெல்லாம் பெரிய அட்டைகளில் நாயகன் , நாயகி அல்லது காட்சியை வண்ணத்தில் வரைந்து பட வெளியிடும் திரையரங்குகளில் வைப்பார்கள்..அவை வரைவதற்கென்றே சில் ஓவியர்கள் இருப்பார்கள்..அருகில் பார்த்தால் கலங்கி இருக்கும்..உயரத்தில் வைத்திருந்து பார்க்கையில் வெகு அழகாக இருக்கும்..இப்போதோ டிஜிட்டல் என நிறைய மாற்றங்கள் வந்து விட்டன...அந்த ஓவியர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை..

வானுயர நின்றிருக்கும் வண்ணப் படங்களுந்தான்
பூணும் விழிகளுக்குள் பாந்தமாய்த் தங்கும்
மலையென வந்துவிட்ட மாற்றத்தால் இன்றோ
கலைந்தே கரைந்த கலை

bis_mala
2nd September 2011, 11:06 AM
வானுயர நின்றிருக்கும் வண்ணப் படங்களுந்தாம்
பூணும் விழிகளுக்குள் பாந்தமாய்த் தங்கும்
மலையென வந்துவிட்ட மாற்றத்தால் இன்றோ
கலைந்தே கரைந்த கலை

மலையென வந்துவிட்ட மாற்றத்தால்: மலைபோலும் பெரிய மாற்றமென்றும், மலைத்து நிற்றலை ஏற்படுத்தும் மாற்றமென்றும் இருபொருள் தந்து, சிறப்புச் சேர்க்கும் வரி.

கலைந்தே கரைந்த கலை - முற்றுமோனை மட்டுமன்று. ஒரு சொற்சித்திரமாய் யாத்துள்ளீர்கள்.கலை கரைந்ததோடின்றிக் கலைந்தும் விட்டது....

படங்களைப் பூணும் விழிகள். வெறுமனே "பார்க்கும்" என்னாது, பூணும் என்றதில் கவித்துவம் காணலாம்.

எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துகள்.

bis_mala
2nd September 2011, 11:24 AM
கண்கள் நிறமோ கருஞ்சிவப்பாய் ஆகிவிட
உண்மையை வாயதுவும் தானாய் உளறிவிட
தேர்போல ஆடியே தள்ளாடும் கால்பலவும்
பாரில் நடக்குது பார்


மேடுகள் பள்ளங்கள் மீதூர்ந்த தேரும்தள்
ளாடுதல் தாங்கும் நிலம்.
The pun of bar/pAr, well-done. Keep it up.

chinnakkannan
2nd September 2011, 12:57 PM
மிக்க நன்றி சிவ மாலா..
உங்கள் குற்ளும் அழகு..
*
இந்தக் கால அடுக்கு மாடிக் குடியிருப்பில் கதவுகளுக்கு என்ன செய்கிறார்கள்..மிகச் சாதாரணமாக நீள் செவ்வக மரம்..பின் அதில் சில செவ்வகங்கள்.. நடுவில் ஒரு கண்.. (யாரவதுவந்தால் பார்ப்பதற்கு) பின் இரண்டு மூன்று தாழ்ப்பாள்கள்..
அவ்வளவு தான்.. நான் அவ்வ்ப்போது பூட்டிவிட்டுப் போவேன்..நீ உடையாமல் சமர்த்தாய் நின்று கொண்டிரு.. அவ்வளவு தான்
அந்தக் காலத்தில் இப்படியா இருந்த்து...ராஜாக்களின்காலத்தில் அரண்மனைக் கதவுகளில் சிற்பம் மணி என அழகாய்ச் செதுக்கியிருப்பார்கள் கலை நயம் த்தும்பும்..மற்றும் செட்டி நாட்டு வீடுகளிலும் கதவுகள் தேக்கு மரத்தில் இழைக்கப் பட்டு வேலைப்பாடுகளுடன் இருக்கும்..ம்ம்ம்..


காப்பது மட்டும் கதவென்று கண்வைத்துத்
தா(ழ்)ப்பாள்கள் சேர்த்துத் தருமிந்த நாளில்
விலையதிகம் என்றே வியக்காமல் செய்தே
நிலைத்தங்கே நிற்கும் நிலை

செப்பலோசை வரமாட்டேங்குதுல்ல... !

bis_mala
2nd September 2011, 04:46 PM
மிக்க நன்றி சிவ மாலா..
உங்கள் குற்ளும் அழகு..
*
இந்தக் கால ......................ம்ம்ம்..


காப்பது மட்டும் கதவென்று கண்வைத்துத்
தா(ழ்)ப்பாள்கள் சேர்த்துத் தருமிந்த நாளில்
விலையதிகம் என்றே வியக்காமல் செய்தே
நிலைத்தங்கே நிற்கும் நிலை



Well done,well done.
lst line: y x y y : மோனைகள்: மேற்கதுவாய்.

மற்ற ஈரடிகளிலும் பொழிப்பு மோனைகள்.

இறுதி: முற்றுமோனையாய் முடிந்தது.

Let me give an alternative version:

காப்பது மட்டும் கதவென்று கண்வைத்துத்
தா(ழ்)ப்பாள்கள் பூட்டித் தருவியப்பில் இந்நாள்
கலை நயம் காட்டா விலைநயமொன் றீட்டி
நிலைநயம் நேர்ந்த நிலை.

கலை நயம் இல்லை என்பதே உங்கள் முன்மைக் கருத்தாகத் தோன்றுகிறது.

அதையும் உள் விரித்துக் கூறுவோம்.

வியப்பில் = வியப்பு + இல்.

PS. previous posts with edits lost as connections were disrupted quite frequently.
Hope this one appears. Will edit after posting to overcome disruptions.

chinnakkannan
2nd September 2011, 09:29 PM
நன்றி சிவமாலா..
*
காலையில் போனவனைக் காணவில்லை..எப்ப்ப் பார்த்தாலும் விளையாட்டு தான்.. எங்கே போனான் என்றும் தெரியவில்லை..காத்துக்காத்துக் கண்கள் பூத்த்து தான் மிச்சம்..எப்பொழுதும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் அவனைக்காணவில்லை..வாசலில் நின்று அங்கிருக்கும் கோபியரிடம் கேட்டுப் பார்க்கிறாள் யசோதை... (கண்ணா.. நீ எழுத்ற வெண்பாக்குப் இ.பொ.வியும் தேவையா.. ஹேய் மனச்சாட்சி கம்முனு இரு..)

வருவான் அவ்னென்றே வாசலிலே நின்றால்
குற்குறுப்பாய் அங்கிங்கே கொஞ்சமும் ஓடாமல்
எண்ணத்தில் உள்வந்து எள்ளித்தான் செல்கின்ற
கண்ணனைக் கண்டாயோ சொல்..

bis_mala
6th September 2011, 09:45 PM
எலிக்குமே கோபியரோ எங்கே?உம் நெஞ்சம்
களிக்கவே காரணமே உண்டு.


களிப்புடன் தந்தீர் கவிதை! விழிப்புடன்
அப்பணி மேல்தொடர் வீர்.

வெண்பா எழுதி விரைவில் இலக்கியமே
அன்பாய் அமைப்பீர் எலிக்கு.

நான் முன் எழுதியிட்ட இதுபோன்ற மூன்று பாடல்கள் மீண்டும் வந்தபோது காணப்படவில்ல.
ஆகவே கூடியவரைக்கும் மீட்டுருவாக்கி எழுதியுள்ளேன்.

chinnakkannan
6th September 2011, 10:45 PM
மீண்டுவந்து அழகிய வெண்பாக்கள் அளித்தமைக்கு நன்றி.. நான் தான் தவறாக எழுதியிருக்கிறேனோ என சற்றுப் பயந்திருந்தேன்..
*
அதையேன் கேட்கிறீர்கள்..அவ்வப்போது வருகிற்து..சரியான ரஜினி ரசிகர் போல இருக்கிறது.. எப்படி வருகிறது எப்போது வருகிறது எனத் தெரியவில்லை..ஆனால் வருகிறது.. விளக்குகளை இரவு முழுவதும் எரியவிட்டால் வருவதில்லை.. கொஞ்சம் அணைத்தால் எப்படியோ வந்து (பாவம் பசி போலும்) மூடியிருக்கும் சமையலறைக்கதவைச் சுரண்டிப் பார்த்துப் போகிறது.. என் மனைவி ‘ஆமை வடை பண்ண்ட்டா..உங்களுக்கும் எலிக்கும் சேர்த்து!’ என்றாள்.. வேண்டாம் என்றுவிட்டேன்..
சில அட்டைகளில் கோந்துபோல ஏதோ தடவி வைத்தாள் நேற்று இரவு ..ம்ம் வரவில்லை.. ஆனால் இரவில் அவ்வப்போது எழுந்து அது வருவது போல் , நடப்பது போல சத்தம் கேட்பதாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்..

வந்தே மிரட்டிய வ்ல்ல எலியுந்தான்
பந்தமென எண்ணியே போகாமல் தான்படுத்த
வேட்டையிட வைத்த மருந்தும் மறைந்துபோய்
கேட்கிறது காலின் ஒலி

chinnakkannan
6th September 2011, 11:45 PM
சிற்பக்கலைஞர் கணபதி ஸ்தபதி காலமானாராம் இன்று..பொய் சொல்கிறார்கள்.. அவர்தான் வள்ளுவர் கோட்ட்த்திலும் திருவள்ளுவர் சிலையிலும் நிலைத்து நிற்பவராயிற்றே...

உளிகள் உணர்விழந்து உள்ளம் கலங்கி
விழிகளிலே கட்டும் குளத்தை – ஒளிமங்கி
கற்களும் மென்மேலும் கல்லாகி எங்கெங்கும்
சிற்பியைச் சிந்தித் திடும்..

chinnakkannan
7th September 2011, 09:49 PM
சுற்றும் சுழன்றிடும் சுண்டிணா லேதுள்ளும்
மற்றும் மதிமயக்கும் வண்ணமுள்ள பம்பரமும்
கண்பட்டுத் தோற்று அடிவாங்க நெஞ்சமோ
புண்ணாகிப் போனதே பார்..

ஓட்டலாம் சைக்கிளென ஓர்பையன் கூறிவிட
நாட்டமாய்க் கால்களை நன்றாக வைத்தெதிரே
பாயப் பயப்பட்டுக் கீழ்விழ மாறவில்லை
காயத்தில் வந்த வடு

(பல வருடங்களுக்கு முன்னால் எழுதிப் பார்த்த பாட்டு...)

bis_mala
8th September 2011, 07:23 AM
சுற்றும் சுழன்றிடும் சுண்டிணா லேதுள்ளும்
மற்றும் மதிமயக்கும் வண்ணமுள்ள பம்பரமும்
கண்பட்டுத் தோற்று அடிவாங்க நெஞ்சமோ
புண்ணாகிப் போனதே பார்..

ஓட்டலாம் சைக்கிளென ஓர்பையன் கூறிவிட
நாட்டமாய்க் கால்களை நன்றாக வைத்தெதிரே
பாயப் பயப்பட்டுக் கீழ்விழ மாறவில்லை
காயத்தில் வந்த வடு

(பல வருடங்களுக்கு முன்னால் எழுதிப் பார்த்த பாட்டு...)

வருடம் பலமுன் வருடிவழி வெண்பா
நெருடேதும் இன்றி நிகழ -- மருள்தீரத்
தந்தவர்க்கு நன்றி தருகவே பல்சுவையால்
இந்தநாள் முன்போல் இனி.

bis_mala
8th September 2011, 07:34 AM
சிற&#................................................. .etc 2980;ித் திடும்..

செயற்கரிய நற்சிலைகள் செய்தார் அவர்க்குச்
செயற்குரிய நன்றி செயல்.

கலைவடிவம் காட்டி நலமே நயந்தார்,
நிலைபெறுக அன்னார் புகழ்.

உற்றார் உறவினர் உற்றார் துயரவரால்
உற்றிலரோ வற்றாப் புகழ்.

இரங்கும் மனமே இறப்பறிந்து நோவற்க
பிறங்கும் உலகில் புகழ்.

Note: If a veNpa does not measure up in poetics to the required standard, it may still be classified under other kinds of poem and accepted as such.

chinnakkannan
8th September 2011, 11:18 PM
ஒரு நடிகைக்கு அகங்காரம் வந்துவிடுகிற்து.. தான் நடிக்கும் திரைப்படங்கள் ஓடுவதெல்லாம் தன்னால் தான் என்பது.. தான் இருந்தால் குழம்பத்தான் வேண்டும். தானில்லாவிட்டால் தான் ரசம். நிறையப் பேருக்குத் தெரிவதில்லை இது..சில வருடங்கழித்து என்னாவாள் என்பதை யோசிக்கவே இல்லை அவள் (ஏதோ ஒருதொலைக்காட்சி நடன நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் நடுவராகச் சென்று இயற்பியல் வேதியியல் என உளறலாம்)..ம்ம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த்தில்..;

என்னாட்டம் யாரிங்கே இப்புவியில் என்றங்கே
பெண்ணாட்டம் போடுகின்றாள் பேதையும் தானறியாள்
முன்னோட்டம் தந்தே முதுமை வராதென்ற
கண்ணோட்டம் இல்லாத கண்

chinnakkannan
8th September 2011, 11:50 PM
அம்மாவுக்கோ வெளியில்கொஞ்சம் வேலை.. சின்னப் பையனையும் தூக்கிச் செல்ல முடியாது..எனில் சொல்கிறாள்.. ஹேய்.. சமத்தா வீட்டுக்கணக்கைப் பொடு..உனக்குப் பிடிச்ச குட்டி இட்லி சின்ன வெங்காய சாம்பார் வெச்சிருக்கேன்.. எடுத்து நன்னா சாப்பிட்டுட்டுத் தூங்கு..தொலைக்காட்சியில் படம் பார்க்காதே. நான் வர்ற்ச்சே உனக்குப் பிடித்த குலோப்ஜாமூன் வாங்கிண்டு வர்றேன்.. சரிதானா செல்லம்..
செல்லம் என்ன செய்யும்.. கணக்குப் போட்டுப் பார்த்த்து.. தொலைக்காட்சியை போட்டுப் பார்த்த்து..மனம் செல்லவில்லை.. பசிக்கிற மாதிரி இருக்கு.. ஆனா அம்மா இல்லை...போர்.. சாப்பிட்த் தோணவில்லை..மணி என்ன. சின்னமுள் ஒன்பது பெரிய முள் ஆறு.. ஒன்பதரையா. அட இன்னும் அம்மாவைக் காணோமே..எனக்குத் தூக்கம் வருதே பசிக்கிறதே என எண்ணும் போது தானாகவே அதன் கண்கள் கலங்குகின்றன..

சமர்த்தாய் இருந்துவிடு சாப்பிட்டுத் தூங்கு
கமகமக்கும் தின்பண்டம் கொண்டுதான் நான்வருவேன்
என்றே சொலிச்சென்ற அன்னையும் வாராமல்
கண்கள் கலங்கிடுமே காண்..

chinnakkannan
9th September 2011, 12:28 AM
அம்மா வந்து பார்த்தால் வீடு வீடாக இல்லை.. உருளைக்கிழங்கு சிப்ஸ்பாக்கெட் அங்கெங்கே இறைந்திருக்கிறது.. புத்தகங்கள் மூடி வைக்கப் படவில்லை.. தொலைக்காட்சிப் பெட்டி இறைந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது... சமையலறைய்ல் இட்லி வைத்த பாத்திரம் மூடிய படியே இருக்கிறது.. தொ.கா. பெட்டிக்கெதிரே இருந்த இருக்கையில் கண்மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறான் கடங்காரன். இவனை என்ன சொல்லித் திருத்த.

நறுக்கென்று கிள்ளுகிறாள். பையன் மலங்க மலங்க முழிக்கிறான்..படவா சாப்பிடச் சொன்னேனில்லை.. நீதான் வரலை.. ஒன்பதரை ஆச்சா தூங்கிட்டேன்....அடேய் நான் வந்த்து ஒன்பது முப்பத்தொன்றுக்கு சரி எழுந்து சாப்பிடு..போம்மா தூக்கம் வ்ருது.. டேய்..அப்பாகிட்ட சொல்லிடுவேன். அவர் பத்தரைக்கு வந்துடுவார்.. போம்மா தூக்கம் வருது.. ஆ..அடிக்காதே சாப்பிடறேன்..
வைத்திருந்த குட்டி இட்லிகள் வயிற்றுக்குள் சென்றவுடன் சாரிம்மா.இனி இப்படி செய்ய மாட்டேன் தூங்கட்டா.. அம்மாவிற்குச் சிரிப்பு வருகிறது. என் சமர்த்துக் குட்டி எனக் கொஞ்ச அவனுக்குத் தூக்கம் வருகிற்து. தூக்க்க் கலக்கத்தில் சிந்தனையும் வருகிறது..



கோபமாய்க் கேட்ட்தற்கு கிஞ்சித்தும் கூறாமல்
பாபமாய்ப் பார்த்தே பசியடங்கும் பையனும்தான்
கொஞ்சுபவள் சற்றுமுன்னே கொந்தளித்த தேனென்று
எண்ணித் துயில்கொண்டா னே..

chinnakkannan
9th September 2011, 01:13 AM
கணவன் பத்தரைக்கு வந்தவன் கொஞம் முகம் மாறி இருந்தான்.. என்னப்பா பாஸ் திட்டினாரா..இல்ல...செக்ரட்டரி உன்கூட சினிமாக்கு வரமாட்டேன்னுட்டாளா..இல்ல.. ஏதாவது வெளியில் சாப்பிட்டாயா.. அடிப்பாவி எப்படிக் கண்டுபிடித்தாய்... ரெண்டு வெங்காய வடை..நண்பன் கொடுத்தான்..நெஞ்சுல்லாம் என்னவோ பண்ணுது..ஹேய் சும்மா இரு..தடவாதே. வேற என்னவோ தோணுது..பையன் தூங்கிட்டானா.. அது சரி..உடம்பு ச்ரியில்லாத போதே இப்படி..இந்தாங்க..இதக் குடிங்க சரியாய்டும்..
என்ன இது..இப்படி நுரைச்சு மப்பும் மந்தாரமுமா இருக்குது..உன்னப் போல..யோவ்.. இது ஈனோ..குடிஎல்லாம் சரியாய்டும்.. ஹி.ஹி..இதுவா சரிபண்ணுமா...கொஞ்சமிரு வெண்பால்ல சொல்லப் பார்க்கறேன்..

ஈனோ எனும்மருந்தை எள்ளாமல் உண்ணுவதும்
வீணோ எனவே நினைக்காதே – ஏனோதான்
நெஞ்செரிச்சல் போக்குவதை நோகாமல் செய்யுமிதை
விஞ்சுதற்கு இல்லையே இங்கு...

bis_mala
10th September 2011, 02:51 AM
துணுக்குக் கதைத்திறன் தோய்த்துவெண் பாவில்
இணக்கி இன்புறுத்து முறையும் --- இனிக்கிறதே
பாணி தனிச்சுவையில் பளிச்சிடவே மேற்சென்றீர்
ஏணிப் படிகளிலே நீர்.

இன்னும் எழுதி இவணுலவு நேயரைப்
பின்னும் மனமகிழச் செய்வீரே -- பன்னும்
கவிதை சிறக்க; கருத்தாழம் காணும்
நவைதீர் பயணம் செல.

pavalamani pragasam
10th September 2011, 06:56 AM
:exactly::-D

chinnakkannan
11th September 2011, 02:26 PM
நன்றி மாலா.. அழகிய வெண்பாக்களுக்கு.. கொஞ்சம் பயமாகத் தானிருக்கிறது..சுவையாய் எழுத முயற்சி செய்கிறேன்..
நன்றி பவள மணிக்காவிற்கும்..
*
பலவருடங்களுக்கு முன் முதன் முதலாக என் மனைவியார் திருமணம் முடித்த ஒருமாத்த்தில் அப்போது துபாயில் இருந்த என்னிடம் சேர்வதற்காக வந்தார். அப்போது அவர் அருகில் ஒரு பெண்..கிராமத்துப் பெண்..கையில் குழந்தை- ஒன்றரை இரண்டு வயதிருக்கும்.. கணவ்ன் திருமணம் முடித்துச் சென்றவன் தான். கிட்ட்த்தட்ட மூன்று வருடம் வராமல் இப்போது விசா எடுத்து மனைவியையும் குழந்தையையும் கூப்பிட்டிருக்கிறானாம்..
விமான நிலையத்திலிருந்து வெளிவர என் மனைவியிடம் உதவி கேட்க என் மனைவியும் ஆன உதவியை (விசா வாங்குவது, பெட்டிகள் எடுப்பது என) செய்தார். பின் பெட்டிகள் எடுப்பதற்காக நின்றிருந்த போது வெளியில் கண்ணாடிக் கதவின் பின் என்னைக் கண்டு கொண்டார் என் மனைவி.. கூட இருந்த பெண்ணோ கண்ணாடிக் கதவின் பின்னிருந்தவர்களில் கணவனை அடையாளம் காண முற்பட்டு இவரா..இல்லையில்லை அவரா எனக் குழம்பியது என் மனைவிக்கு மிகவும் உறுத்தலாய் இருந்த்தாம்..அந்தப் பெண்ணுக்கோ விழிகளில் குளம் கட்டியதாம்.. ஆசை முகம் மறக்கடித்தது அயல் நாட்டில் பொருளீட்டும் ஆசை தானே..(வெளியில் வந்து அந்தப் பெண்ணைக் கணவனிடம் சேர்த்த்து வேறு விஷயம்)

இவர்தானா இல்லை அவர்தானா என்றே
உவப்பின்றிப் பார்த்தபடி உள்ளம் அலைபாய
தேவைக்குத் தான்சென்ற தேவனைக் காணாமல்
பூவிழியில் பூத்த குளம்.

chinnakkannan
11th September 2011, 03:28 PM
எப்பொழுதுமே இன்றில் தான் நாமிருந்தாலும் சில சமயம் அன்றைப் பற்றியும் நினைக்கவேண்டுமன்றோ..! முன்பு எழுதி இங்கேயே இட்டிருந்த சில பாக்கள் இங்கே..(பாருங்கள்..வெண்பா எனச் சொல்ல்வில்லை..)
*
கவி காளமேகம் பாடல்கள் முன்பு படித்திருந்த போது அதையொட்டி ஒரே ஒரு ஈற்றடி மட்டும் (கின்னரி வாசிக்கும் கிளி) வைத்துக்கொண்டு எழுதிப் பார்த்த்து..

அவன்:

கண்ணிற் கழகும்யில் காட்சிக் கினியவெழில்
ப்ண்ணிற் குகந்தயிசைப் பாவையே நீயுந்தான்
பின்னிரவில் என் தோளில் பக்குவமாய்ச் சாய்ந்துகொண்டு
கின்னரி வாசிக்கும் கிளி..

அவள்:

கிளியென்பீர் கிட்டே வியந்துவந்தால் சற்றே
விளித்திருந்தேன் உன்மூக்கின் விந்தையெனச் சொல்வீர்
மணத்தைப் பரப்புகின்ற மாலையைப் பிய்க்கும்
குணத்தினைக் காட்டும் குரங்கு

அவன்:

குரங்கென்று கூறாதே கூர்விழியே உன்னால்
உறங்காத நல்லிரவு எத்தனையோ ஆனால்
இடிமுழக்கம் செய்த இதழ்கொண்டு எனது
பிடிக்குள் இறுகும் பிடி..

அவள்:

பிடித்த பிடிவிட்டுப் படியுங்கள் பாடம்
விடிந்தபின் தந்தையார் வேறுவழி சொன்னால்
உளியால் மனம்சிதையும் உண்மை வயிற்றில்
புளியைக் கரைக்கும் புலி

அவன்:

புலிபதுங்கும் பாயத்தான் பூவழகி உந்தன்
விழிநீர் துடைத்து விடைகொடு நானும்
விரைந்தவர் சம்மதம் வேண்டுவேன் பின்னால்
சிரித்திவன் சிங்கமெனச் சொல்..

*
முன்னைப்போல் இப்பொழுதும் பாவெழுத வரவில்லை..என்னசெய்ய வயதாகிவிட்ட்து.(எட்டு முடிந்து ஒன்பது ஆகின்றது!).கற்பனையும் தள்ளாடுகிறது...வரும்..வரும்..
அன்புடன்
சி.க.

pavalamani pragasam
11th September 2011, 08:53 PM
8? 9?:roll:

chinnakkannan
12th September 2011, 12:18 AM
சின்ன்க் கண்ணன் என்பதால் சொன்னேன்.. இப்படி முழிக்காதீர்கள்..

pavalamani pragasam
12th September 2011, 08:17 AM
குறும்புக்கண்ணன்!

bis_mala
12th September 2011, 06:01 PM
குறும்புக்கண்ணன்!

எட்டகவை வெண்பா புனைகலை எட்டித்தேன்
சொட்டுவபோல் பாக்கள் சொரிந்திடலாம்!-- எட்டுடன்
ஒட்டினால் ஒன்றினைக் கொட்டிக் கவிமழையால்
முட்டும் சுனாமி முனை.

Keep it up thiru ChinnakaNNan!

chinnakkannan
13th September 2011, 12:34 AM
அன்பின் சிவமாலா..
என்னைத் திரு.வென்றெல்லாம் கூற வேண்டாம்..
வலைவாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால் பெயரின் முன்
சின்னதைச் சேர்த்துக் கொண்டேன்..(ப.பிக்கா தொண்டையைக் கமறப் போகிறார்..விளம்பரம்..விளம்பரம் என்று)
நீங்கள் தமிழில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் அடியேன்சாதாரண சின்ன பிக் பாக்கெட் (கொஞ்சம்புதுசா உவமை சொல்லிப் பார்த்தேன்!)..வர்றேன்..வெண்பாக்களுடன்மீண்டும் (அலுவலகத்தில் கொஞ்சம் வேலை மீட்டிங்க் என(மனச்சாட்சி: கண்ணா புருடா விடாதே..சோம்பல் என்று நேரடியாகவே சொல்லு) வருகிறேன்..
அன்புட்ன்
சி.க

chinnakkannan
13th September 2011, 01:00 AM
வெண்பாக் கதை..
ஆதெள் கீர்த்தனாரம்பத்திலே

நம்ம கதாநாயகன் சுந்தரமூர்த்தி ரொம்பக் குழப்பத்தில இருந்தானாம்..அவனோட தலவிதி பிற்ந்த்தில்ருந்தே போராடணும்னு யாரோ எழுதி வெச்ச மாதிரி ஆயிடுத்தாம்

அவன் பொறந்த்து எப்போன்னா நம்ம் இந்நாளைய முதலமைச்சர் இருக்காரோன்னோ அவர் அந்தாளில் சின்னப்பொண்ணா திரைப்பட்த்தில டூயட் பாடிக்கிட்டிருந்தப்பதான் மதுரை மெஷினாஷ்பத்திரில்ல பொறந்தான்.

அவ்னோட அப்பாக்குஏக் குஷி.. பிற்காலத்தில பையன் நிறைய பேர் வாங்கணும்னு அவனுக்கு ஊர்ல உள்ள எல்லாப் பெயரையும் சேர்த்து சுருக்கமா நடராஜ சுந்தர மூர்த்தின்னு வெச்சுட்டார்...

புகழெல்ல்லாம் த்ன்குழவி தான்பெறவே தந்தை
சிகரமாய்ச் சிந்தித்தே சொன்னது ஏதென்றால்
தேரை இழுக்கின்ற தென்னாட்டு மக்களவர்
பேரைச் சும்ந்த பெயர்

நம்ம பையன், பேர் நீளமா இருக்கேன்னு அப்போதே ஆட்சேபித்து கையக் கால் உதறி அழுது பார்த்தான்.. முதுகுல நெல் குத்தறதால குழந்தை அழறதுன்னு அவன் வாயில சீனியை வச்சுட்டா அவ்ன் பாட்டி..

(தொடரும்)

chinnakkannan
13th September 2011, 01:22 AM
நம்ம கதாநாயகன் சுந்தரா நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் (ஐல்வ்யூ இல்லிங்க்காணும்..) வளர்ந்தான். அவனை மதுரைல மங்கையர்க்கரசிப்பள்ளில்ல சேர்த்தாஙக.. காம்ப்ளான் ஹார்லிக்ஸ் எல்லாம் குடிக்காம வெறுமனே காப்பி குடிச்சே வள்ர்ந்துட்டான் ஓய்..

ஓலமிட்டு நில்லென்று ஊர்கூடிச் சொன்னாலும்
காலமது காத்திருக்கு மா

இப்போ சுந்தரா ப்ள்ஸ்டூ ல ஃப்ர்ஸ்ட் இயர் படிக்கறாங்கானும்..
(தொடரும்)

chinnakkannan
13th September 2011, 02:28 AM
ஒரு அந்தக்கால வசனம் உண்டு. பொண்ணு வள்ர்த்தியோ பீர்க்கங்கா வளர்த்தியோ என்பார்கள்.. அதாவது பீர்க்கங்காய் முதலில் சிறிதாய் இருக்கும்..போகப் போக படபடவென வள்ர்ந்து விடும்..இது பையனுக்கும் பொருந்துமல்லவா..(வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே என்பார்கள் இந்தக்காலப் பாவலர்கள்!)

நம்ம கதா நாயகன் சுந்தராவும் நன்னா வள்ர்ந்துட்டான் ஓய்..ஒரு ஆறு இரண்டு இஞ்ச் இருக்கும் ஒசரம்.. நம்ம் பையனோட அப்பா வேணு கோபாலன் ஒரு நாள் பையன் ஸ்கூல் போறப்ப பார்த்தார்..ப்ள்ஸ் டூங்கறான்...இன்னும் டிராயர்ல ஸ்கூல் போறான்.. அவனோட அண்ணன் வரதுவைக் கூப்பிட்டார்..”வரதா.. இந்தப் பயல் காலப் பாத்தியோ ஒரே முடி.. இவனுக்கு ந்ல்லதா ஒரு பேண்ட் வாங்கிக் கொடுன்னார்...

வரத ராசன் ராணிமங்கம்மாள் சத்திரத்துக்குப் பக்கத்தில இருந்த ஸ்டேட் பாங்க் காசாளர்... கொஞ்சம் கஞ்சூஸ் மார்வாடி.. நம்ம பையனைக் கூட்டிட்டுப் போய் தானப்ப முதலி தெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட்ல அவனோட செய்ண்ட்மேரீஸ் ஸ்கூல் (ப்ள்ஸ்டூக்கு அங்க சேர்ந்தாச்சு) யூனிஃபார்ம் மெரூன் கலர் காட்டன் துணிய எடுத்து அங்கேயே இருந்த அப்துல் டைலர்ட்ட கொடுத்துட்டார்..

தம்பி வளர்ச்சியிலே தன்னைவிடக் கூட்வென
விம்மியே அண்ணனும்தான் வாகாக அப்துலிடம்
திக்கான துணிவகைகள தேர்ந்தெடுத்து சொன்னார்தான்
சிக்கெனத் தைப்பீர் உடை..

chinnakkannan
13th September 2011, 02:33 AM
இப்படியே தொடரும் போட்டா மர்ம்ம்(சஸ்பென்ஸ்) ஏதுமில்லையே ஓய்..

நம்ம சுந்தராவோட வீட்டில இருந்து ப்ள்ளி செல்லும் பேருந்து நிறுத்தம் பார்த்தீங்க்ன்னா ரொம்ப கிட்டக்கத்தான்..ஒண்ணுலருந்து இருபது சொல்றதுக்குள்ள வந்துரும்..(இந்தக்காலத்தில ஒரு தொலைக்காட்சித்தொடரோட விளம்பர இடைவேளைக்குள்ளன்னு வெச்சுக்குங்க்ளேன்)

அங்கருந்து தான் சுந்தரா தூய மரியன்னைப் பள்ளிக்கு 12 (மஹால் கோச்சடை –அந்தக்காலத்தில) பேருந்து ஏறி பள்ளிக்குப் போவான்.. அந்த் நேரத்திலபார்த்தா பேருந்து நிறுத்த்த்தில கூட்டம் நிறைய இருக்கும்.. முண்டியடிச்சுத்தான் ஏறணும்..அல்லது தொங்கணும்..யாரும் வரிசைல்ல நிக்க மாட்டாங்க..

தறிகெட்டுப் பேருந்தில் தானேறும் மக்கள்
வரிசையில் நிற்காத வர்...

(தொடரும்)

chinnakkannan
13th September 2011, 02:45 AM
அப்படி ஒரு நல்ல குருபார்வை உச்சத்தில இருந்த ந்ன்னாளில நம்ம பையன் சுந்தரா பேருந்தில ஏறினான்..அங்க (இயல்புத் தமிழில்) பஸ் ந்டுல்ல ஒரு அப்ஸரஸ்..இப்பத்தான் வானத்திலருந்து விழுந்த மாதிரி..இப்பத்தான் பொறந்து குளிப்பாட்டப்பட்ட் குழந்தை எப்படி சுத்தமா இருக்குமோ அந்தமாதிரி, இப்பத்தான் எதிர்க்கட்சித் தலைவரா ஆன அரசியல்வாதி எப்படி ஆட்சியப் பிடிக்கலாம்னு யோசனை பண்ற போது எப்படி அவருக்கு குழ்ப்பம் வருமோ அப்படிக் குழம்பவைப்ப்வது போல (மனச்சாட்சி: கண்ணா அரசியல்லாம் எதுக்கு), அழகா பாவடை சட்டை தாவணியோட கொஞ்சூண்டு மேக்கப்போட அழகாஆஆஆ நின்னுண்டுருந்தா..
.
மயில்வண்ணத் தாவணியும் மஞசளென மேல்துணியும்
துயில்வரும் ராத்திரியில் தோய்ந்திருக்கும் வண்ணமதைக்
கொண்டிருந்த கூந்தலிலே கூட்டுகிறேன் அழகென்றே
நின்றிருந்த ரோஜாவும் ந்ன்று.
.
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்

(தொடரும்)

chinnakkannan
13th September 2011, 03:17 AM
அன்பின் சிவமாலா
உங்க்ள் பாராட்டு வெண்பாதான் என்னை இங்ஙனம் (மனச்சாட்சி..என்ன மொழிப்பா இது) எழுத வைத்தது..நன் றி/ இங்கு ம்ணி ஒன்று நாற்பத்தைந்து (அதிகாலை) பக்கத்து இழையில் சதிக்குன்னு சதி செஞ்சிருக்காங்க..ஒண்ணும் ஓட மாட்டேங்குது..முடிச்சுட்டு அப்புறம் வர்றேன்.. காலேல்ல ஏழு முப்பதுக்கு அலுவலகம் போகணும்..ஹாஆஆவ்..
அன்புட்ன்
சி.க.

chinnakkannan
13th September 2011, 03:55 AM
தட்தட்த்தே தந்திட்ட தங்கமான பாவால்
படபடக்கும் என்னுள்ளம் பாந்தமாய்ச் செய்ய
கட்கட வென்றுதான் கற்பனையும் வந்தே
சுடச்சுட்ப் பாய்கின்ற தே..

pavalamani pragasam
13th September 2011, 07:57 AM
:rotfl::rotfl::rotfl:

chinnakkannan
14th September 2011, 12:26 AM
ப்ளஸ் டூன்னா எப்படிப் பட்ட ப்ருவம்..அறிவதில் தெரிவதை அறியும் பருவம்..இருந்தாலும் படிப்புக்குத்தான் கொஞ்சம் அதிகம் முன்னுரிமை இருக்கும்..
நம்ம பையன் அந்தப் பொண்ண தினசரி பஸ்ஸில பார்ப்பான்..பாக்கறதோட் சரி.. அதுவும் கொஞ்சம் ஓரவிழிப் பார்வை எல்லாம் வீசும்.. பஸ்மேட் ஆச்சே.. தோழிகள் பேசிக்கறதுலருந்து அந்தப் பொண்ணோட பேர் மலர்னும்
அவ ஆரப்பாளையம் தாண்டி தேம்பாவணி சைட்ல இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டான்..பக்கத்தில செய்ண்ட் ஜோசப் தான் அவளோட ஸ்கூல்..அண்ட் பத்தாவது படிக்கிறாள்..
மறுபடியும் ரெக்க கட்டி ரெண்டு வருஷம் பறக்க சுந்தரா ப்ளஸ்டூ எக்ஸாம்லாம் சமர்த்தா முடிச்ச்ப்ப மலர் ப்ள்ஸ் ஒன்ல இருந்தா.. கொஞ்சம் ஹாய், எப்படி இருக்கன்னுல்லாம் பேசிக்குவாங்க..ஒரு நாள் அவளோட வீடைப் பார்க்கணும்னு தொடர்ந்து போய் அவளோட ஸ்டாப்பிலேயே எறங்கினா பொசுக்குன்னு அவ மறஞ்சு போயிட்டா...எந்த சந்துல புகுந்து போய்ட்டான்னு தெரியல. பின் சுத்திசுத்திப் பார்த்தப்ப ஒரு வீட்டில அவளைப் பார்த்தான்..இந்தக்காலத்தில சொல்றா மாதிர் அவனோட கண்ல பல்பு எரிஞ்சுது!

இந்த்த் தெருதானா இல்லை இதுதானா.
பந்தம் கொளநினைக்கும் பாவையின் வீடிதுவா
என்றெல்லாம் சுற்றிய்வள் இல்லத்தைப் பர்ர்த்தவுடன்
கண்ணுக்குள் வந்த கதிர்
(தொடரும்)

bis_mala
14th September 2011, 04:37 PM
திரைக்காதல் ஒப்பதோர் தேம்பாயும் தன்மை
உரைத்திட்ட உங்கள்பா ஒண்மை -- அரைத்திட்ட
சந்தனம்போல் வீசும் சலிக்கா எழுத்து நடை
வந்திணைவோர் வாய்போற்று வார்.

chinnakkannan
16th September 2011, 12:47 PM
அழகான அந்த்த் தெருல்ல அவ வீடு இன்னும் அழகா இருந்த்து.. அந்தப்பக்கம் போன சைக்கிள் காரனும் அழகா இருந்தான்.. காய்கறி விக்கிற் கிழவி கண்ணிலும் மின்னல் இருந்த்து.. பைக்கில சுந்தராவ க்ராஸ்பண்ணினவா, கொஞ்சம் ஹார்ன் அடிச்சுண்டே வந்த லாரி, தெருக்கூட்டின மாநகராட்சி ஊழியர்கள் எல்லாமே அழகா இருந்த்து சுந்தராக்கு..

இன்னும் மயக்கமே வந்த்து அவனுக்கு.. ஏன்னாக்க வீட்டு வாசல்ல மலர் மஞ்சள் கலர் தாவ்ணி சிகப்பு ரவிக்கைக்கு மாறி இருந்தா.. தலையில அவளோட சிரிப்பைப் போலவே மல்லிப்பூ..போதாக்குறைக்கு பொன்னியம்மா வந்தாளாம்னு சொலவடை மாதிரி இவனப்பாத்து என்ன இந்தப் பக்க்ம் உள்ள வாங்கன்னா.. சுந்தராக்கு மயக்கமே வந்த்து..

எங்கும் அழகாட்சி ஈடில்லா கண்காட்சி
பங்கயமாய்த் தான்சிரித்தே பார்த்தபடி செல்பவரும்
சேவகரும் ந்ன்றாய்ச் சிறப்பாய் இருந்தவது
தேவதையைக் கொண்ட தெரு

bis_mala
18th September 2011, 08:59 PM
எல்லாம் அழகென் றெடுத்தகதை செல்லுகமேல்!
உள்ளாரே கேட்கப் பலர்!

chinnakkannan
18th September 2011, 09:23 PM
வந்து விட்டேன்..
*

அதுல பாருங்கோ.. இந்தக் காதல் இருக்கே சம்யத்தில மகாதைரியத்தக் கொடுத்து கோழைய வீரனாக்கிடும்.. அதேசமயத்தில மனசுக்கு இஷ்ட்மானவ மொதல்ல ஏதாவது சொன்னான்னா கொஞ்சம் தடுமாறவைக்கும்..

அப்படித் தான் சுந்தராக்கும் இருந்த்து.. மலரோ ஏன் இப்படி மலங்க மலங்க கர்ப்பமான ஆடு மாதிரி முழிக்கறேள்..உள்ள வாங்க அப்படின்னு சொன்னவ் வீட்டுக்குள்ள பாத்து பாட்டீஈஈன்னு கூப்பிட்டா..உள்ள இருந்து அவ பாட்டியும் வந்தா..

கண்ணில் அழகான கண்ணாடி; நெற்றியிலோ
வண்ணம் சிவப்பான வாகான பொட்டுடனும்
கூந்தல் நரைத்தே குரலும் இளகாமல்
காந்தமாய் கூப்பிட்டாள் காண்..

சரின்னு உள்ள போனான்.. கொஞ்ச நேரம் அப்பா அண்ணா எல்லாம் என்ன வேலை பாக்கறான்னு கேட்டா பாட்டி.. மல்ர்க்கிட்ட முன்னால அவன் ஜாஸ்தில்லாம் பேசினது கிடையாது.. சரி கூப்பிட்டுட்டா.. பேசலாம்னு பார்த்தாக்க பாட்டி ஃபெவிகால் ஒட்டின மாதிரி பேசிண்டே இருக்கா.. கொஞ்ச நிமிஷம் கழிச்சு உள்ளே போன பாட்டி வெளிய வந்து என்ன கொடுத்தான்னா..

பத்திரிகை வாங்கிப் படிக்கையில் தான்தெரியும்
அத்துடன் சேர்ந்திருக்கும் அழகான புத்தகம்போல்
பொங்கிச் சிரித்தவள் பாட்டியும் தந்தாளே
தங்கநிறத் தின்பண்டம் தான்..

பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுட்டு அப்புறமா பாட்டி உள்ள போயிருக்கறப்ப தைரியமா மலர்கிட்ட “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்’னான்.. மல்ரோட அழகான கண்ணு இன்னும் கொஞ்சம் பெரிசா மலர்ந்துச்சு.....

(தொடரும்)

chinnakkannan
18th September 2011, 10:15 PM
மலருக்கு கைகால் பதட்டமாயிருச்சு.. என்னடா இது வம்பாப் போச்சு..

பஸ்ல பார்த்த சினேகிதன்.. ஏதோ வீட்டுப் பக்கம் வந்தான்.. (கொஞ்சம் உள்ளுக்குள்ள புடிக்கத்தான் செய்யுது) வான்னு கூப்பிட்டுப் பேசினா.. பாட்டி இல்லாத சமயத்தில ஏதோ சொல்லணும்கறான்.. அச்ச்ச்சோ ஐலவ்யூ சொல்வானோ..பாவி.. அதெல்லாம் சினிமால தானே பாத்துருக்கோம்..அப்பா வேற வர நேரம்.. இந்தப் பாட்டி எங்க போய்த் தொலஞ்சா..இப்பத் தானா பாத்ரூம் வரணும்.. இவன் என்ன சொல்லப் போறான்..

காதலைச் சொல்வானோ கற்பனையாய்த் தான்பட்ட
வேதனையைச் சொல்லியே விம்மலுடன் நிற்பானோ
இன்னும் பலவாறாய் ஏதோதோ எண்ணியே
பின்னும் குழம்பினாள் பார்..

ஒரே ஒரு நொடிக்குள்ள ஓராயிரம் சிந்தனை மலர்பொண்ணுக்கு.. கற்பனை தண்ணிப் பஞ்ச காலத்தில வர்ற தண்ணீர் லாரி தாறுமாறாப் போறமாதிரி வந்துச்சாம்..

”என்ன சொல்லப் போறேள்’ன்னா.. கொஞ்சம் காத்துப் போன பலூன் மாதிரி முகமும் சுருங்கி, சரியா சிக்னல் கிடைக்காத ரேடியோ மாதிரி குரலும் கொஞ்சம் கரகரக்குது..

நம்ம சுந்தராவோ கொஞ்ச்ம சிரிச்சான்..அதுல கவலப்படாதேங்கற அர்த்தமும் இருந்த்து..

மலர்.. நான் இப்ப ப்ளஸ்டூ எழுதிட்டேன்.. ரிசல்ட் வந்தா காலேஜ்..இந்த ஊர் தான்.. இருந்தாலும் பஸ்ல பார்க்க முடியாது.. அப்ப்ப்ப வந்து உன்னப் பாக்கலாமா..என்னை மறந்துட மாட்டியேன்னு சிரிச்சுட்டே கை நீட்டினான்..
அவளும் ரிலாக்ஸாகி கை கொடுக்கறா...

மயக்கங் கொண்டே மலர்விழியோ கொஞ்சம்
தயக்கமாய் வார்த்தை தொடுத்தங்கே கேட்டுவிட
பட்டெனச் சொல்லிவிட்டான் பாவையிடம் நெஞ்சத்தில்
விட்டு விலகா திரு..

(தொடரும்)

chinnakkannan
18th September 2011, 10:22 PM
இப்படி எல்லாம் எழுதலாமான்னு தெரியாது..ஏதோ விளையாட்டுத்தனமா எழுத ஆரம்பிச்சது கொஞசம் தத்தித்தத்தி தொட்ருது..(கொஞசம் வேலைப் பளு..அதனால் உடனே எழுத முடியலை..) ஸினாப்ஸிஸ் கூட ஒரு நாள் ஒக்காந்து எழுதி வெச்சுருக்கேன்..(மனசாட்சி: கண்ணா..!) கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகிறேன்.. குத்தங்குறையிருந்தா ஷமிககணும்..

chinnakkannan
19th September 2011, 12:21 AM
கொஞ்சம் பழைய பாக்கள்..ஹி.,ஹி..


ஓவியப் பாவையென ஓராள்தான் உண்டதுவும்
தேவிகா என்று தெளிவு..

தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..

bis_mala
20th September 2011, 03:47 AM
மழுக்கட்டில் தந்த மயக்கிதுவோ நும்கண்
விழக்கட் டழகியர்தம் வேடு.


(மஸ்கட்டில் உள்ள கட்டழகியர் முக்காடிட்டு மறைத்துக் கொள்வதால், அந்தக் குழப்பத்தில், வேறு சிலரைப் பாராட்டுகிறீர்களோ? )


vEdu = veil.

chinnakkannan
26th September 2011, 01:18 PM
அன்பின் மாலா..
வீட்டுக் கணினிக்கு வியாதி வந்து வைத்தியரிடம் காட்ட் வேண்டும்.. எனில் அலுவலிடத்திலிருந்து கிடைத்த நேரத்தில் இடுகை செய்கிறேன்..

முக்காடு போட்டே முகம்மறைக்கும் மங்கையரால்
துக்கமாய் நெஞ்சமும் தூங்கி வழிந்தாலும்
பக்குவமாய் காட்டுமெழில் பாவையரின் முன்னாலே
சிக்கிடும் பாக்களோ சீர்.

விரைவில் மீண்டும் வருகிறேன்..
அன்புடன்
சி.க

bis_mala
28th September 2011, 10:01 PM
அன்பின் மாலா..
வீட்டுக் கணினிக்கு வியாதி வந்து வைத்தியரிடம் காட்ட் வேண்டும்.. எனில் அலுவலிடத்திலிருந்து ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,
சிக்கிடும் பாக்களோ சீர்.

விரைவில் மீண்டும் வருகிறேன்..
அன்புடன்
சி.க


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

bis_mala
2nd August 2012, 09:39 PM
மாதமோர் வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.

அலகிட்டுப் பிழை[ பொறுக்குக. That means - pl pick out the faults.

chinnakkannan
2nd August 2012, 09:55 PM
பிழை இல்லாதது போல் தான் தெரிகிறது..

இலைமறை காயாக ஏதோ உண்டோ
பிழையெனக்குத் தோன்றவில்லை பார்..

bis_mala
3rd August 2012, 01:21 AM
பிழை இல்லாதது போல் தான் தெரிகிறது..

இலைமறை காயாக ஏதோ உண்டோ
பிழையெனக்குத் தோன்றவில்லை பார்..


வெற்றுத் தலையொடு நீச்சல் அடித்தேனா!
கற்றார் பொறுத்தல் கடன்.

bis_mala
4th September 2012, 06:14 PM
கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.

bis_mala
10th September 2012, 06:40 PM
கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.

to scan

bis_mala
12th October 2012, 05:23 PM
அரசினர் தந்தாலே ஆகாதோ பட்டம்!
உறுகுணம் உள்ளார்பின் யார்?

http://leftwrite.wordpress.com/2009/02/09/why-padma-awards/

Quite an interesting argument raised in that website...

bis_mala
17th October 2012, 06:24 PM
தலைமைப் பொறுப்பில் தலைவலிதான் மிச்சம்
நிலைமை குளிராய் நெருப்பாய்க் ---குலைந்துவரும்
எத்தொடர்பும் இலலா எதற்கும் சுமைதாங்கி
கத்துகிற பேர்க்கும் இலக்கு.

bis_mala
22nd October 2012, 06:48 PM
மேற்கண்ட பாடலில் மிஞ்சு தனிச்சொல்லில்
பார்க்கும் "குலைந்துவரும்" என்பதனைச்-- சேர்க்காமல்,
பாடு "குலைவுறவே" என்று ; பயின்றிடவே
கூடும் சுவைதேன் குழைந்து.

bis_mala
14th November 2012, 09:49 AM
வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.

குசும்பு = குறும்பு.

"__________________________________________________ ___________
Don't try to figure out what other people want to hear from you; figure out what you have to say. It's the one and only thing you have to offer.
BARBARA KINGSOLVER "

bis_mala
19th November 2012, 04:23 PM
தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"

பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.

இருபொருள்:

தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.

venkkiram
17th January 2013, 09:34 AM
வெண்பா எழுதுவது எப்படி என்ற நூல்களில் சிறந்தவற்றை பகிரவும். வாசித்து, வெண்பா பழக ஆசை. நடந்து வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் . நன்றி

P_R
17th January 2013, 09:51 AM
வெண்பா எழுதுவது எப்படி என்ற நூல்களில் சிறந்தவற்றை பகிரவும். வாசித்து, வெண்பா பழக ஆசை. நடந்து வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் . நன்றி

https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html

venkkiram
17th January 2013, 10:05 AM
நன்றி p_r.

chinnakkannan
17th January 2013, 12:20 PM
இன்று தான் கண்டேன் சிவமாலா இந்த வெண்பாவினை.. நன்றி..மீண்டுவருவேன்..


தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"

பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.

இருபொருள்:

தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.

chinnakkannan
17th January 2013, 12:22 PM
அன்பின் வெங்கி ராம்..இந்தத் திரியிலேயே old archivesல் கிடைக்கும் வெண்பாவின் பாடங்கள்..

bis_mala
29th January 2013, 06:24 PM
வாங்கிய நூலில் வரைந்த வழிமுறைகள்
நீங்கள் படித்தவை நெஞ்சுவிட்டு --- நீங்காமல்
நன்கினிச் செய்வீரே வெண்பாநம் நண்பர்க்குத்
தெங்கினிமை உள்ளில் திணித்து.

You may scan and analyse.

chinnakkannan
30th January 2013, 05:16 PM
வந்தது தான்வந்தீர் வாரம் பலசென்று
பொங்கலது போனாலும் இங்குதான் - தங்கமாய்
எண்ணச் சிறகை எளிதாய்ப் பறக்கவிட்டு
வண்ணக் கவிதையுடன் வா(ரும்)

bis_mala
4th February 2013, 04:11 PM
C.K avarkaLE, why not try to give "room" to the "rum" in the veNba itself....it is worth the effort! Nice.

chinnakkannan
4th February 2013, 05:33 PM
வண்ணக் கவிதையுடன் வந்தால்தான் சொல்லிடுவேன்
எண்ண முரைக்கும் எழில்..

chinnakkannan
4th February 2013, 11:06 PM
முக நூலில் செளந்தர்ய லஹரிக்கு உரை எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.. அதற்காக இன்று எழுதின வெண்பாக்கள்(?!) ..

“வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
நிறைத்தே அருளும் நிலவு
*
ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
ஒளியும் நிலவின் ஒளி
*
மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
*
பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
மதியை மயக்கும் மதி
*
வானில் இருந்தவள்தான் வந்துவிட்டாள் என்றெண்ணி
தேனில் பழத்தினைத் தோய்த்தே சுவைத்தாற்போல்
மேயும் நிலவின் பிரதிபிம்பம் தான்வாங்கிக்
காயும் நிலவால் கடல் “

நீங்க வந்தாத் தான்கொஞ்சம் எழுத முயற்சிக்கத் தோன்றுகிறது!!

bis_mala
9th February 2013, 04:26 AM
அன்பின் சின்னக்கண்ணனவர்களே

நான் உங்கள் கவி கண்டு வரைந்த சில வெண்பாக்கள், எனது விரலகைவு (thumb drive) திறக்கமுடியாமல் மாட்டிக்கொண்டுவிட்டன. இதைக்கடைக்கு அனுப்பியுள்ளேன். இதில் பல கவிதைகள் உள்ளன.
என் செய்வேன்!

sad

It says drive F inaccessible, Incorrect function.

chinnakkannan
9th February 2013, 01:41 PM
பரவாயில்லை சிவமாலா நான் தான் sad எனச் சொல்ல வேண்டும்.. மறுபடியும் எழுத முடிந்தால் எழுதுங்கள்..

chinnakkannan
9th February 2013, 04:59 PM
சோகத்தின் சோர்வில் சுருண்டாலும் இங்கெமக்கு
யோகத்தைத் தந்தீரே ஆம்..

பழகு தமிழினில் பக்குவமாய்ப் பாக்கள்
அழகாய்ப் புனைந்தீரே ஆம்..

காதலிக்கு அருளும் மதி:வானும் நிலவும்;மதியின் இருமை ஒழுக்கம்:

முப்பாவில் முக்கனியை முற்றுமாய்ச் சாறெடுத்து
தப்பாமல் தேன்தோய்த்தே தந்தவரே - இப்புவியில்
இன்னும் பலவாறாய் இன்பத் தமிழ்க்கவியை
என்றுமே இங்கெனக்குத் தா(ரும்)

chinnakkannan
9th February 2013, 05:35 PM
ஆமாம் சிவமாலா நீங்கள் இட்ட வெண்பாக்கள் எங்கு போயின..?

chinnakkannan
9th February 2013, 06:12 PM
படக்கென இங்கே பாய்ந்துவந்த பாக்கள்
தடக்கென மாயமாய்ப் போனாலும் நன்றாக
மஞ்சு மலைமுகட்டை மார்பில் தழுவதற்போல்
நெஞ்சுள்ளே நிற்கும் அவை..

bis_mala
12th February 2013, 09:13 PM
தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.

திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.

திரு சி.க அவர்களே! அந்த வெண்பாக்கள் எதிர்பாராதவகையில் அழிந்துவிட்டன. இப்போது ஆர்வமெல்லாம் சற்று தேக்க நிலையை அடைந்துள்ளது.

இவற்றை அலகிட்டுப் பிழைகளைக் கூறுங்கள்.

Your memory so good. You probably had a cursory look at it.... You are able to recall the substance so well.

chinnakkannan
12th February 2013, 10:04 PM
ஓ..உங்கள் பாட்டுக்கள் போய்விட்டனவா..வருத்தமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல அதை மேற்கோள் காட்டி மற்ற பாட்டுக்கள் எழுதியிருக்க வேண்டும் ..அது என்ன சி.க அ..என்றெல்லாம் அழைக்கிறீர்கள்.. நான் சி.க என்னைபெ.க ஆக்காதீர்கள்!

அலகிடுவ்தற்கு நான் என்ன கிளியா..

முதல் பாட்டில் இரண்டாம் வரியில் மோனைக்குறைவா.. விட்டச்சம் புரியவில்லை

இரண்டாவதில் சொற்குற்றம் இல்லை பொருட் குற்றம் தான்.. இருந்தால் நானே மீண்டும் போட்டிருக்க மாட்டேனா.. நான் எப்படி ஈங்களிக்க முடியும்..?!

bis_mala
13th February 2013, 05:14 PM
ஓ..உங்கள் பாட்டுக்கள் போய்விட்டனவா..வருத்தமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல அதை மேற்கோள் காட்டி மற்ற பாட்டுக்கள் எழுதியிருக்க வேண்டும் ..அது என்ன சி.க அ..என்றெல்லாம் அழைக்கிறீர்கள்.. நான் சி.க என்னைபெ.க ஆக்காதீர்கள்!

அலகிடுவ்தற்கு நான் என்ன கிளியா..

முதல் பாட்டில் இரண்டாம் வரியில் மோனைக்குறைவா.. விட்டச்சம் புரியவில்லை

இரண்டாவதில் சொற்குற்றம் இல்லை பொருட் குற்றம் தான்.. இருந்தால் நானே மீண்டும் போட்டிருக்க மாட்டேனா.. நான் எப்படி ஈங்களிக்க முடியும்..?!



:)

..................

bis_mala
13th February 2013, 06:01 PM
"தோளின் சுமைஇறக்கும் தோரணையில்"

என்று பாடினால் பொருத்தமாய் இருக்குமா பாருங்கள்! மோனை வந்துவிடுமா.....

bis_mala
13th February 2013, 06:29 PM
இன்னொன்று. தோளில் என்பதில் தோ என்பது நெடில். "மாபோல" (ஆ போல, அது போல) என்பதில் ஆவும் நெடில் மீள என்பதில் மீ என்பதும் நெடில். இதில் நெடில் வண்ணம் பயில்கின்றதன்றோ? ஆகவே வண்ணம் மேற்கொண்டு மோனை தவிர்க்கக்கூடாதா?

chinnakkannan
13th February 2013, 08:23 PM
ஓ தாராளமாக..ச் செய்யலாம்.. சில சமயங்களில் நான் அங்ஙனம் செய்வதுண்டு...

பாலகன் போலே பணிவை முகம்காட்டி
வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
காதலிப் பூனையைக் கண்டு

bis_mala
13th February 2013, 10:21 PM
ஓ தாராளமாக..ச் செய்யலாம்.. சில சமயங்களில் நான் அங்ஙனம் செய்வதுண்டு...

பாலகன் போலே பணிவை முகம்காட்டி
வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
காதலிப் பூனையைக் கண்டு

காதலி எப்படிப் பூனை?

காதலன் புன்னகை பாதகப் புன்னகையா?அந்தப்புன்னகையின் போது காதலன் வாலாட்டுகிறானா? அதனால்தானா வாலன்டைன் என்று வந்தது?

chinnakkannan
13th February 2013, 11:27 PM
வழக்கமாய் க்ராஸ் பண்ணும் போதெல்லாம் அந்த கறுப்புப் பூனை கொஞ்சம் ஒதுங்கி கண்கள் பளபள்க்க முறைக்கும்..இன்று நான் அருகில் வந்தபின்பும் கூட ஏதோ நினைவில் இருந்தது. அப்புற்ம் என்ன நடந்தது..(இதை எழுதாமல் விட்டு விட்டேன்)

பாலகன் போலே பணிவை முகம்காட்டி
வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
காதலிப் பூனையைக் கண்டு

(


காதலி எப்படிப் பூனை?

காதலன் புன்னகை பாதகப் புன்னகையா?அந்தப்புன்னகையின் போது காதலன் வாலாட்டுகிறானா? அதனால்தானா வாலன்டைன் என்று வந்தது?