PDA

View Full Version : INTERVIEWS With TV Artists



Pages : 1 [2]

R.Latha
20th January 2016, 01:26 PM
Aasramathil oyvedutha ramya,,,,,

chinnathirai thogupaalini, panbalai thogupaalini,Madel azhagi matrum periyathirai nadigai ipadi panmugangalai kondavar RAMYA................

migavum jallyanna type kondavar valzhkaiyil KONJAM SIKKAL Irukkiradhu.......

Nandri.Dinamalar.

R.Latha
20th January 2016, 01:28 PM
Aasramathil oyvedutha ramya,,,,,

chinnathirai thogupaalini, panbalai thogupaalini,Madel azhagi matrum periyathirai nadigai ipadi panmugangalai kondavar RAMYA................

migavum jallyanna type kondavar valzhkaiyil KONJAM SIKKAL Irukkiradhu.......

Nandri.Dinamalar.

R.Latha
20th January 2016, 01:34 PM
Aasramathil oyvedutha ramya,,,,,

chinnathirai thogupaalini, panbalai thogupaalini,Madel azhagi matrum periyathirai nadigai ipadi panmugangalai kondavar RAMYA................

migavum jallyanna type kondavar valzhkaiyil KONJAM SIKKAL Irukkiradhu.......

Nandri.Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42207/Chinna-thirai-Television-News/ramya-take-rest-in-ashram.htm

R.Latha
20th January 2016, 01:54 PM
Irandu padhavi vagikkum Sonia.....

chellame, mugurtham endru pala thodagalil nadithavar Nadigai sonia.....
adhe samayathil periya thiraiyilum KALAKKI KONDIRUPAVAR......

Adhea samayathil nadigar sangathil SEYARKUZHU URUPINAR padhavikkaga pottiyittu VENDRAR.,,,,,,
Adhan piragu sameebathil chinnathirai nadigar sanga thearghal nadipetra pothum THUNAITHALAIVAR padhavikku pottiyirttu VETRI PETRIRUKIRAAR.

Aaga ore nearathil irandu pathavigal VAGITHU varugiraar Sonia.


avarai patri ;;;;;;; niraiya therindhu kolla;;;;;;;;

Nandri; Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42226/Chinna-thirai-Television-News/Soniya-in-Two-posts.htm

R.Latha
20th January 2016, 02:08 PM
NEEYA NAANAA-vil AJITH-VIJAY KAARASAARA VIVAADHAM,,,,

VIJAY TV-yil NEEYA NAANAA MAKAL MATHIYIL migavum pirabalamaagiyirukiradhu.
ORE THURAIYAI SEARTHA MAATRUKARUTHUTHUKKAL KONDA IRANDU ANIGALAAGA AMAITHU, AVARGALIN KARUTHU , VIVAATHAM ENA KAARA SAARAMAANA meadaiyaakkiyirukkiraar GOPINATH...................


MEALUM THERINTHU KOLLA,,,,
Nandri. Dinamalar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42019/Chinna-thirai-Television-News/Vijay---Ajith-fans-to-clash-in-Neeya-Naana.htm

R.Latha
20th January 2016, 02:14 PM
MEENDUM CHINNATHIERAIKKU VARA IRUKKIRAAR PEPSI UMA,,,,,,

THOLAIKAATCHIYIL MUTHAL NATCHATHIRA THOGUPAALINIYAAGA THIGALNTHAVAR PEPSI UMA,,,,,,


MAKAL MATHIYIL MIGA PIRABALAMADAINTHAVAR. umavin pattupudavaikkaagave ANTHA NIGALCHIYAI PAARTHAVAR PALAR........MEALUM,,,,

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/41648/Chinna-thirai-Television-News/Pepsi-Uma-likes-to-return-Television.htm

Nandri.Dinamar.

R.Latha
21st January 2016, 12:05 PM
chinnathirai nadigar ESHWAR-kkum Nadigai JEYASHI-kkum Thirumanam.


20.1.16 indru puthan kilamai kaalai kovilil simple-aaga thirumanam nadai petradhu. but reception 30.1.16 andru grandaaga nadai peravirukkiradhu. pavamannippu thodaril searnthu naditha piragu KADHAL= ARRANGED MARRIAGE.

Matra thagavalgal ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Nandri;Dinamalar.

http://cinema.dinamalar.com/hindi-news/42312/cinema/Bollywood/TV-Actors---Eeshwar---Jayasree-wedding-today.htm

R.Latha
21st January 2016, 12:18 PM
villiyin kobathai dhyanam mulam kuraikkiraar REKHA KUMAR [DHEIVAMAGAL-GAYATHRI]

PAARIJADHAM thodar mulam arimugamaana rekha, kanada thiraipadam, malayala thodar, thamil thodar dheivamagal mulam thamilil muththirai pathithavar.

Nandri.Dinamalar.

http://cinema.dinamalar.com/hindi-news/42328/cinema/Bollywood/Rekhakumar-change-his-mind-via-Meditation.htm

R.Latha
22nd January 2016, 01:27 PM
Nadhaswaram pugazh SHRUTHIKA-vukku VIRAIVIL Thirumanamaam.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42375/Chinna-thirai-Television-News/Srithika-soon-to-be-tieknot.htm

Nandri.Dinamalar.

R.Latha
22nd January 2016, 01:35 PM
Madhavanidam mutham petra simply Kushbhu.

Zee thamil tholaikaatchiyil every saturday night 8pm simply Kushbhu cenima nadigaridam peati kandu varugirar Kushbhu.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42342/Chinna-thirai-Television-News/Kushboo-got-kiss-from-madhavan.htm

Nandri.Dinamalar.

R.Latha
27th January 2016, 12:16 PM
nadippukku goodbye solla irukkiraar lakshmi viswanath.......

thamilil Ezham uyir seriyalilum, malayalathil Nila Vizhakku seriyalilum nadithu varugiraar. MA padithu teacher aavathea avarin latchiyamaam. so indha 2 seriyalum viraivil mudiya pogiradhaam. podhuvaga ,,,,,,,,,,,,,,,,,,,,

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42467/Chinna-thirai-Television-News/Lakshmi-Vishwanath-to-quit-cinema.htm

Nandri. Dinamalar.

R.Latha
27th January 2016, 12:27 PM
Thamil TVkku varum Priyamani......

Bharathi raja mulam Kangalal kaithu sei padam mulam thamilukku vanthavar.adhan piragu balu mahendra mulam thanushudan athu oru kanakalam padathil nadithaar Priyamani.pinbu malaikottai, thotta pondra niraiya moviesil nadithu tholvi kandathaal THELUNGU,MALAIYALAM, KANNADAM movies-il niraiya nadithu kondirundhaar. thamilil munnukku varamudiyavillai. tharpothu vijay tv-yil king Of dance nigalchiyil naduvaraga varugiraar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42509/Chinna-thirai-Television-News/Priyamani-in-Television.htm

Nandri. Dinamalar.

R.Latha
27th January 2016, 12:39 PM
Nirvanamaga nadikka kuda thayaar solgiraar saaisakthi.

thanathu pathaavathu vayathil nadika thodangiyavar saisakthi. nadhasvaram,saravarnan meenakshi utpada 60 thodaril nadithavar.
kalaijar tv-yil 63 kalaijarin vasanathil Nayanmaargal thodaril sekilaragavum,ramanujarin Kurathaalvaar keraktarilum nadikiraar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42485/Chinna-thirai-Television-News/Even-I-will-act-as-nude-for-a-character-says-Sai-Sakthi.htm

Nandri.Dinamalar.

R.Latha
27th January 2016, 12:50 PM
Prammaandam nam paarambariyathai keduthu vidum nadigai Nalini peatti.

Krishnadhasi thodar mulam chinnathiraikku vandhar.ipodhu seriyalil busyaaga nadithu varugirar.

tharpothu nadithu varum seriyal patri solgiraar. china papa periya papa, thelungil ammana kodana thodarilum nadithu ,,,,,,,,,,,,,

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42424/Chinna-thirai-Television-News/Actress-Nalini-interview.htm

Nandri. Dinamalar.

R.Latha
27th January 2016, 12:54 PM
BEST COMEDIYANAAGA VENDUM NADHASWARAM PUGAZH MUNISHRAJA INTERVIEW.......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42400/Chinna-thirai-Television-News/I-wants-to-become-good-comedian-says-nadhaswaram-munish-raja.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
27th January 2016, 01:00 PM
VAKEEL AAGIRAAR AARTHI.

MakkaTholaikatchiyil china china aasaigal nigalchi mulam pugazh petravar Aarthi.intha nigalchiyai 5 varudamaaga thodarnthu nadithu sadhanai padaithulaar aarthi.......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42444/Chinna-thirai-Television-News/VJ-Aarthi-to-turn-as-lawyer.htm

Nandri.Dinamalar.

R.Latha
29th January 2016, 01:27 PM
madhumithavukku dhruthi kodutha rolegal

oru kal kannadi padathil santhanathukku jodiyaaga nadithavar.

http://cinema.dinamalar.com/hindi-news/42632/cinema/Bollywood/Serials-satisifed-Madhumita.htm

Nandri.Dinamalar.

R.Latha
29th January 2016, 01:34 PM
kanpaarvai illatha vedathil nadikka veandumchinnathirai nadigar jeyaraam peati.

Vani rani serial mulam prablamaanavar jeyaram. Adhaiyaduthu en iniya thozhi, kealadi kanmani ippadi niraiya serialil nadithu kondirukkum ivar,,,,,,,,

http://cinema.dinamalar.com/hindi-news/42599/cinema/Bollywood/TV-Serial-actor-Jayaram-likes-to-act-in-Blind.htm

Nandri . Dinamalar.

aanaa
2nd February 2016, 11:22 PM
நாடகத்துறைதான் என்னை தயார்படுத்தியது! -வின்சென்ட்ராய்


சக்தி, சித்தி, ஆலயம், அர்ச்சனைப்பூக்கள், பைரவி, அழகி, பொம்மலாட்டம் உள்பட பல மெகா சீரியல்களில் நடித்திருப்பவர் வின்சென்ட்ராய். நாடகத் துறையில் இருந்து வந்த இவர், நாடகம்தான் என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது என்கிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
உங்களது நாடகத்துறை அனுபவத்தைப்பற்றி சொல்லுங்கள்?
நான் சுமார் 300 நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதோடு இந்த மாதிரிதான் என்றில்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அன்றைய தினத்தில் நடிக்க வரவேண்டிய வில்லன் வரமுடியாமல் போனால் அவரது வேடத்தில் நான் நடிப்பேன். அதேபோல் காமெடியன் வரவில்லையென்றால் அந்த ரோலில் நடிப்பேன். இப்படி எந்த வேடம் கிடைத்தாலும் நான் நடித்தேன். அதனால் நாடகத்துறை என்னை நல்லதொரு நடிகனாக தயார்படுத்தியது. பின்னர் சினிமா-சின்னத்திரை என்று நடிக்க வந்தபோதும் இப்படித்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கிடைக்கிற எந்த வேடமாக இருந்தாலும் நடித்து வருகிறேன்.
இதுவரை என்னென்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்கள்?
சூர்யவம்சம் தொடரில் வில்லனாக நடித்தேன். ஆலயம், அர்ச்சனைப்பூக்கள் தொடர்களில் சாப்ட்டான வேடங்களில் நடித்தேன். என்றாலும் அதிகப்படியாக வில்லனாகத்தான் நடித்திருக்கிறேன். மேலும், 40 படங்களில் நடித்து விட்டேன். விஜயகாந்த் நடித்த சத்ரியன், ஏழைஜாதி, கேப்டன் பிரபாகரன் மற்றும் விஜய் நடித்த தமிழன் உள்ளிட்ட படங்களில் இன்ஸ்பெக்டர் மற்றும் அரசியல்வாதி, வக்கீல் வேடங்களில் நடித்தேன். பல சீரியல் மற்றும் சினிமாக்களில் அப்பா வேடங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது அழகி, பொம்மலாட்டம் சீரியல்களில் நடித்து வருவதோடு, 4 பேய் படங்களிலும் நடித்து வருகிறேன். இதையடுத்து ஒரு படம் இயக்கும் வேலைகளிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.
எந்தமாதிரியான கதையில் படம் இயக்குகிறீர்கள்?
1964-ல் அன்னை வேளாங்கண்ணி என்றொரு படம் வந்தது. அதன்பிறகு மாதாவைப்பற்றி எந்த படமும் வரவில்லை. அதனால் பூண்டி மாதா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறேன். இது எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கக்கூடிய கமர்சியல் படமாக இருக்கும். பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
35 வருடங்களாக நடிப்புத்துறையில் இருக்கும் நான் சினிமா, சீரியல்களில் பத்து வருடங்களாக உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். மேலும், மீட் பரின் தாய் என்ற பெயரில் முன்பு ஜெயா டிவிக்காக ஒரு சீரியல் இயக்கினேன். எல்லோருக்கும் கல்வி, எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட பல குறும் படங்களையும் இயக்கியிருக்கிறேன். அதோடு, பிலிப்பைன்ஸ் நாட்டு வானொலியில் நான் எழுதிய 1600 தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பாகியிருக்கிறது. ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு கருத்து சொல்லியிருந்தேன். அதை வீடியோ வடிவில் டெலிபிலிமும் பண்ணினேன்.
இப்படி இயக்கத்தில் எனக்கு பல அனுபவங்கள் உள்ளது.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160201072540000000.jpg
சீரியல் இயக்கும் ஐடியா உள்ளதா?
கண்டிப்பாக, இந்த பூண்டி மாதா படத்தை இயக்கியதும் மெகா சீரியல் இயக்கும் முயற்சியில் இறங்குவேன். அப்படி நான் இயக்கும் சீரியல் கண்டிப்பாக சமுதாயத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லக்கூடியதாக இருக்கும் என்கிறார் நடிகர் வின் சென்ட்ராய்.

aanaa
2nd February 2016, 11:30 PM
வில்லி வேடத்தில் நடிக்க வெறியாக இருக்கிறேன்!- சீரியல் நடிகை ஜீவிதா பேட்டி


பாசமலர் தொடரில் நான் நடித்து வரும் உமா கேரக்டர், சிந்து பைரவி படத்தில் சுகாசினி நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். நான் ரியல்லயும் அப்படித்தான், ரீல்லயும் அப்படித்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் சின்னத் திரை நடிகை ஜீவிதா.


தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு நேர்காணல்...


இதுவரை நடித்துள்ள தொடர்கள் பற்றி?
நான் சீரியலுக்கு வந்து 3 வருடங்கள் ஆகப்போகிறது. ஏவிஎம் தயாரித்த மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலில்தான் முதன்முதலாக அறிமுகமானேன். சதாசிவம் இயக்கியிருந்தார். அந்த வகையில், நான் ஏவிஎம்மின் அறிமுகம் என்பது எனக்கு பெருமையான விசயம். அதைத் தொடர்ந்து மீண்டும் ஏவிஎம்மின் வைராக்கியம் தொடரில் பட்டாகத்தி பத்மினி என்ற ரோலில் நடித்தேன். சீரியஸ், பைட், காமெடி எல்லாம் கலந்த வித்தியாசமான ரோல் அது. எனக்குள்ளே யும் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தும் ரோல். பாசிட்டிவான வேடம்தான். அதன்பிறகு ஆபீஸ், தேவதை, பைரவி, 63 நாயன்மார்கள், சித்திரம் பேசுதடி என தொடர்ந்து வந்த நான், இப்போது பாசமலர், கைராசி குடும்பம் ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.


பாசிட்டீவ்-நெகடீவ் எந்த மாதிரியான ரோல்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
பாசிட்டிவான வேடங்கள்தான் எனக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. என்னைப்பொறுத்தவரை ஒன்று நெகடீவாகிட வேண்டும், இல்லையேல் பாசிட்டீவாகிவிட வேண்டும். இப்படி முழுசாக மாறி நடிக்கும்போதுதான் அந்த கேரக்டர் பேசப்பட்டு பிரபலமாக முடியும். மேலும், எனக்கு பிடித்த ரோல் என்றால் நெகடீவ்தான். காரணம், நாலு பேர் நம்மை திட்டுகிறார்கள் என்றால்தான் அது ரீச். அழுது கொண்டிருந்தால் அது பெரிய ரீச் கிடையாது. அழுறதை விட அழ வைக்கிறவங்களைத்தான் அதிகமாக நோட்டீஸ் பண்ணுவார்கள். அதனால் எனக்கு வில்லி வேடங்கள் பண்ண வேண்டும் என்பது பெரிய வெறியாக உள்ளது.
அதேபோல் போலீஸ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது கைராசி குடும்பம் தொடரில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடிக்கிறேன். இந்த மாதிரி இன்னும் பெரிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும், எனது உயிர்மூச்சு உள்ளவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


டைரக்டர்களின் பார்வையில் எந்த மாதிரி நடிகையாக இருக்கிறீர்கள்?
என்னை முதலில் பார்க்கும் டைரக்டர்கள் இந்த ரோலுக்கு இந்த பெண் செட்டாவாளா என்று சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் அவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு நான் பூர்த்தி செய்து கொடுத்து விடுவேன். அதனால் என் நடிப்பை பார்த்த பிறகு இந்த ரோலுக்கு ஜீவிதாவை சரியாகத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறோம் என்று பின்பு நினைப்பார்கள்.


உங்கள் நடிப்பில் அதிக ரீச் கொடுத்த வேடம் எது?
எந்த வேடம் கொடுத்தாலும் அதில் நேயர்களின் பாராட்டு கிடைக்கும் வகையில் நான் நடித்து விடுவேன். அதில் எந்த குறையும் வைத்ததில்லை. அந்தவகையில, தற்போது பாசமலர் தொடரில் நான் நடித்து வரும் உமா கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களது நடிப்பைப்பார்த்து விட்டு நாங்களெல்லாம் அழுதோம் என்று என்னை வெளியிடங்களில் பார்க்கும் நேயர்கள் சொல்கிறார்கள். சிந்துபைரவி படத்தில் சுகாசினி மேடம் நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். நான் ரியல்லயும் அப்படித்தான், ரீல்லயும் அப்படித்தான் நடிக்கிறேன். அதனால்தான் இந்த ரோலில் எனது நடிப்பு ரொம்ப இயல்பாக வெளிப்பட்டு நேயர்களை கவர்ந்து வருகிறது.


ஹோம் ஒர்க் பண்ணி நடித்த வேடம் உள்ளதா?
எத்தனை வெயிட்டான வேடமாக இருந்தாலும், அதைப்பற்றி நான் முன்பே யோசிப்பதில்லை. ஸ்பாட்டுக்கு வந்தபோது டைரக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைக்கேட்டு அப்படியே நடிப்பேன். அப்போது என்ன நடிக்கிறேனோ அதுதான். மற்றபடி முன்பே ஐடியா பண்ணிக்கொண்டு வந்து நடிப்பதெல்லாம் என்னிடம் இல்லை.
மேலும், சிவரகசியம் என்ற தொடரில் ஒரு பைத்தியம் போன்ற வேடத்தில் நடித்தேன். பிரம்மை பிடித்தவள் போன்ற கண்களைகூட அசைக்காமல் நடித்தேன். மூச்சு விடுவதைகூட அளவோடு விடுவேன். அதில் நடிக்கத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். மற்றபடி, விளையாட்டு, நடிப்பு, டான்ஸ் என எதுவாக இருந்தாலும் சரி முதலில் நார்மலாக இருக்கும் நான், அதை பண்ணும்போது இதை நான்தான் பண்ண வேண்டும் என்று வெறியாகி விடுவேன். விளையாட போறேன் என்றால் கால், கையில் அடிபடும் என்றெல்லாம் நான் நினைக்க மாட்டேன். அதில் வின் பண்ணுவது மட்டும்தான் எனது நோக்கமாக இருக்கும்.
சின்னவயதில் இருந்தே நான் ரொம்ப பிடிவாதமானவள். தப்போ ரைட்டோ அதை நான் செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பேன். அதேமாதிரி என்னை நம்பி வாய்ப்பு கொடுக்கும் டைரக்டர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்கிற கடமையும் எனக்கு உண்டு. அதை உணர்ந்தே ஒவ்வொரு வேடங்களிலும் நடிக்கிறேன். அதேமாதிரி என்னோட ஹேர் ஸ்டைலக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுவேன். இப்படித்தான் ஒவ்வொரு கேரக்டர்களுக்கேற்பும் என்னை பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். ஏனோதானோவென்று செயல்படவே மாட்டேன்.


பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் ரோல்களில் நடித்துள்ளீர்களா?
வைராக்கியம் தொடரில் அந்த மாதிரி ரோலில்தான் நடித்தேன். பேமிலியை எப்படி நடத்த வேண்டும். கணவரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளை எப்படி அட்டாக் பண்ண வேண்டும் என்பது போன்ற வேடத்தில் நடித்தேன். மற்ற சீரியல்களில் எல்லாம் விட்டுக்கொடுத்து நடிக்கும் வேடத்தில் நடித்த நான், இந்த சீரியலில் மட்டும்தான் எதிர்த்து போராடும் வேடத்தில் நடித்தேன். மாமியார், கணவன்கிட்ட எந்தெந்த மாதிரி நடந்துக்கனும் என்பதை அந்த சீரியலில் வெளிப்படுத்தி நடித்தேன்.


வடஇந்திய சீரியல்களைப் போன்று நம்முடைய சீரியல்களில் பிரமாண்டம் இல்லையே?
அங்குள்ள சீரியல்களில் நடிப்பவர்கள் எந்த அளவுக்கு பிரமாண்டமான உடைகளை அணிந்து நடித்தாலும் அதற்கேற்ற தொகையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் அப்படியல்ல. பட்ஜெட்டுக்கள் அடக்கி விடுகிறார்கள். அதோடு அவர்களுக்கு நிறைய டயம் கொடுப்பார்கள். இங்கே அப்படியில்லை. இத்தனை நாளுக்குள் இத்தனை எபிசோடு எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆக, போதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இந்தி சீரியல்களில் நடிகர் நடிகைகள் நடிப்பது போன்று நம்ம ஊர் நடிகர் நடிகைகளாலும் பிரமாண்டமாக உடை, நகைகளை அணிந்து நடிக்க முடியும். மற்றபடி அவர்களை விட, அழகிலும், திறமையிலும் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.
மேலும், வடஇந்திய சீரியல்களில் நிறைய பில்டப் இருக்கும். காபி கேட்டால் கிளாசை எடுப்பதில் இருந்து ஒவ்வொரு விசயத்தையும் காட்டுவார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் காபி என்றால் காபியை எடுத்து கொடுப்பது போல் மட்டுமே காட்டுவார்கள். காரணம் பட்ஜெட்தான். இந்தி சீரியல்களை மாதிரி தமிழ் சீரியல்களுக்கும் பெரிய பட்ஜெட்டாக இருந்தால் நம்ம டைரக்டர்களாலும் அந்த அளவுக்கு பிரமாண்டமாக படமாக்க முடியும். அந்த வகையில், தமிழ் சீரியல் டைரக்டர்களும் பெரிய திறமைசாலிகள்தான்.


உங்களது ரோல் மாடல் யார்?
நதியா, ராதா எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகைகள். ஹோம்லியாக பண்ணி அனைவரையும் கவர் பண்ணுவார்கள். இதில் நதியா கிளாமர், செக்ஸியாக நடிக்காதவர். தனது அடக்கமான அழகு, நடிப்பாலேயே அனைவரையும் கவர்ந்தவர். அவரை மாதிரி ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த பாட்டுக்கு செக்ஸியாக வேண்டும் என்றால்கூட அவர் அதை உடம்பில் காட்டாமல் முகபாவணையில் காட்டியிருப்பார்.
எதிர்காலத்தில் சீரியல் இயக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதா?
சதாசிவம் சார் என்னை ஒரு நடிகையாக்கினார். இப்போதுவரை அதை தொடர்ந்து வருகிறேன். கடவுள் நமக்கு என்ன என்று எழுதி வைத்திருப்பார். அது நடக்கும். அதுதான் இப்போது வரை நடந்து வருகிறது. இனிமேலும் அப்படித்தான் நடக்கும். அதனால் எதிர்காலத்தில் நான் டைரக்சன் பண்ண வேண்டும் என்று அவர் எழுதி வைத்திருந்தால் அது நடக்கும். நடிகைதான் என்றால் இதே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பேன்.


சினிமா வாய்ப்புகள் வருகிறதா?
பாரதிராஜா அசோசியேட் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கும் என்று தணியும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் மயில்சாமி அந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறேன். முன்னதாக, ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். ஆக, சின்னத்திரை தொடர்களில் நடிக்க பிரச்சினை ஏற்படாத வகையில் படங்களுக்கு கால்சீட கொடுத்து நடிக்கிறேன்.


அவசியப்பட்டால் கிளாமராக நடிப்பீர்களா?
அந்த மாதிரி கதைகள் வரும்போதுதான் முடிவெடுப்பேன். இப்போது சொல்லிவிட்டு பின்னர் மறுத்தால் தவறாகி விடும். அது அப்போதைய மனநிலை சூழ்நிலைகளைப் பொறுத்தது. அப்படி நடிப்பது அந்த வேடத்துக்கு தேவை. அது சரியாக இருக்கும் என்கிறபட்சத்தில் யோசித்து முடிவெடுப்பேன். மேலும், இந்த மாதிரியான ரோல்களில்தான் நடிக்க வேண்டும் என்று நான் சில பாலிஸிகளை வைத்திருக்கிறேன். அக்கா ரோலாக இருந்தாலும் என் ரோல் தனியாக தெரியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார் ஜீவிதா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160131113800000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
2nd February 2016, 11:34 PM
சின்னத்திரையை விடமாட்டேன்! - ;திண்டுக்கல்' சரவணன் .


சின்னத்திரையில் டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் சரவணன். இப்போது நய்யாண்டி நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, புதுப்பட காமெடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார். தினமும் இரவு 9-10 மணிக்கு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அந்த காலத்து காமெடி, இந்த காலத்து காமெடி இரண்டையும் இன்னொரு தொகுப்பாளருடன் இணைந்து விமர்சனம் செய்கிறாராம் திண்டுக்கல் சரவணன்.
மேலும், ராதாமோகன் இயக்கிய ;உப்புக்கருவாடு; படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அவர், நேற்று திரைக்கு வந்துள்ள ;அரண்மனை-2, படத்திலும் சூரியுடன் இணைந்து காமெடியனாக நடித்திருக்கிறார். அதற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.
இதுபற்றி திண்டுக்கல் சரவணன் கூறுகையில், சின்னத்திரையில் பிரபலமானதை அடுத்து சினிமா வாய்ப்புகள் நிறைய வரத் தொடங்கியிருக்கிறது. அதனால் அதில் எனக்கு பிடித்த நல்ல வேடங்களாக பார்த்து நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த வகையில், உப்புக்கருவாடு படத்தில் ஒரு ஜோதிடராக நடித்தேன்.
இப்போது அரண்மனை-2ல் சூரியுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறேன். நான் நடித்த இந்த இரண்டு வேடங்களுமே படம் முழுக்க இருந்தது. அதனால் சினிமாவிலும் கவனிக்கப்படும் நடிகராகி விட்டேன்.
மேலும், நிறைய படங்களில் நடிக்கக் கேட்கிறார்கள். ஆனால் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே நான் ஓகே செய்கிறேன். அதோடு, என்னால் காமெடி மட்டுமின்றி குணசித்ர வேடங்களிலும் நடிக்க முடியும். அதை நிரூபிக்கத்தான் சரியான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, கரண், ஸ்ரீமன் போன்ற நடிகர்கள் நடித்தது போன்ற வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், இப்போது அவர்கள் நடித்தது மாதிரி வேடங்களில் நடிக்கத்தான் சரியான நடிகர்கள் இல்லை என்று கூறும் திண்டுக்கல் சரவணன், வில்லன் வேடம் கிடைத்தால்கூட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த நான் தயாராகவே இருக்கிறாராம்.


அதேசமயம், என்னதான் சினிமாவில் பிசியாகிவிட்டபோதும், சின்னத்திரையை விடமாட்டாராம். என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது சின்னத்திரைதான். அதனால் ஏதாவது ஒரு ஷோ மூலம் தொடர்ந்து சின்னத்திரையிலும் இடம் பிடித்திருப்பேன் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.



நன்றி: தினமலர்

R.Latha
5th February 2016, 12:56 PM
Herovaanaar thogupaalar Suresh.

Music channelin Natchathira thogupaalaraaga irukum Suresh,Cinemavil herovaagi vitaar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42841/Chinna-thirai-Television-News/VJ-Suresh-turn-as-Hero.htm

Nandri.Dinamalar.

R.Latha
5th February 2016, 01:00 PM
Vijayashanthi endhu Role Model. Akila Peati.

Thamarai, Ponnunjal,Dheavathai, en iniya thozhi serialil nadithu ,,,,,,,,,,,,,,,

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42854/Chinna-thirai-Television-News/Vijay-Shanthi-is-my-role-model-says-Akila.htm

Nandri.Dinamalar.

R.Latha
5th February 2016, 01:03 PM
Meendum Nigalchi nadathuhiraar Lakshmi Ramakrishnan.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42894/Chinna-thirai-Television-News/Lakshmi-Ramakrishnan-backs-to-TV-Program.htm

Nandri.Dinamalar.

R.Latha
5th February 2016, 01:06 PM
Pattuselai; Puthuyugam channelil pudhiya Thodar.


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42927/Chinna-thirai-Television-News/New-Serial-in-Puthuyugam.htm

Nandri.Dinamalar.


புதுயுகம் சேனலில் வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் பட்டுச்சேலை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. மாமியார் மருமகள் சண்டை, கணவனின் மனைவி சின்ன வீடு சண்டைகளிலிருந்து விலகி வித்தியாசமான காதல் கதையாக ஒளிபரப்பாகிறது பட்டுச்சேலை.
மிகப்பெரிய பட்டுச் சேலை கடை வைத்திருப்பவர் காஞ்சனா. தன் கடைக்கு போட்டியாக யார் கடை போட்டாலும் அவர்களை விரட்டி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார். அந்த அளவிற்கு கொடூரமானவர். அவரிடம் தவனைக்கு சேலை வாங்கி கிராமத்து மக்களுக்கு கடனுக்கு விற்பவர் தாமரை. வீரமான, நியாயமான பொண்ணு, மற்றவர்களுக்காக போராடுகிற பெண். காஞ்சனாவின் கடைக்கு அடிக்கடி வரும் தாமரைக்கும், காஞ்சனாவின் மகன் அஜய்க்கும் காதல் மலர்கிறது. எதிரில் கடை போட்டாலே ஆளை அழித்து விடும் காஞ்சனா, கோடீஸ்வரியான தன் மகனை சேலை விற்கும் பெண் காதலித்தார் விடுவாரா.?. காஞ்சனா, தாமரையின் மோதல்தான் கதை. இவர்களின் மோதலை மக்கள் எதுவரை ரசிக்கிறார்களோ அதுவரை சீரியல் தொடரும். இதுவரை அன்பான அம்மா கேரக்டரில் நடித்து வந்த மீனா குமாரி இதில் வில்லி காஞ்சனாவாக நடிக்கிறார்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160205113300000000.jpg

R.Latha
5th February 2016, 01:08 PM
Searialgalil aangalukkum mukkiyathuvam ulladhu Nadigar Iyappan.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/42885/Chinna-thirai-Television-News/Nowdays-Male-artist-also-getting-importance-in-TV-Serial-says-Actor-Iyyappan.htm

Nandri.Dinamalar.

R.Latha
5th February 2016, 03:20 PM
Naan Thaneer madhiri; Searial Nadigar Ramachandran.

http://cinema.dinamalar.com/hindi-news/42934/cinema/Bollywood/Tv-actor-Ramachandran-interview.htm

Nandri.Dinamalar.

aanaa
8th February 2016, 10:05 PM
இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா


இசைஞானி இளைராஜா தாரை தப்பட்டை படம் வரை ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை 999வது படமான ஷமிதாப் இந்திப் படத்தின் இயக்குனர் பால்கி மும்பையில் கொண்டாடினார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் பாலா, இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்து திட்டமிட்டார். அந்த நேரத்தில் சென்னையில் பேய் மழை, பெருவெள்ளம் வந்ததால் நடத்த முடியவில்லை. இப்போது இளையராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் டி.வி பிரமாண்டாக நடத்துகிறது. வருகிற 27ந் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் இது நடக்கிறது.
இதுகுறித்து விஜய் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இசையால் அனைவரையும் நெகிழச் செய்தவருக்கு இந்த விழா ஒரு சமர்ப்பணம். மக்கள் வியந்து ரசித்த இளையராஜாவின் இனிமையான பாடல்கள் அந்த பிரமாண்ட மேடையில் இளையராஜாவிற்கு காணிக்கையாக சமர்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் பங்கேற்று இசைஞானிக்கு கவுரம் சேர்க்க இருக்கிறது. கலையுலம் கண்டிராத பெருவிழாவாக இது இருக்கும். என்கிறது விஜய் டி.வி.



நன்றி: தினமலர்

aanaa
8th February 2016, 10:10 PM
கண்ணம்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! - நடிகை சோனியா
கண்ணம்மா சீரியலில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டைட்டீல் ரோல் என்பதால் அதன் பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன். இந்த தொடர் பெரிய அளவில் ரீச்சாகி வருவது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகை சோனியா.
மேலும் அவர் கூறும்போது, 1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நான், அதன்பிறகு 1987ல் நொம்பாரதி பூவு என்ற மலையாள படத்துக்காக கேரள அரசு விருது பெற்றேன். இப்படித்தான் எனது நடிப்பு பயணம் தொடங்கியது. அதையடுத்து தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.
பின்னர் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் இப்போதுவரை நடித்து வருகிறேன். அதோடு, சின்னத்திரையிலும் செல்லமே, மைநேம் இஸ் மங்கம்மா, மாதவி, முகூர்த்தம் உள்பட சில தொடர்களில் நடித்தேன். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறேன். குடும்பத்தலைவி வேடம். கணவன், குழந்தைகள் என வாழ்ந்து வரும் நான், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறேன் என்பதுதான் இந்த சீரியல்.
அதனால் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய போராட்டங்களைப் பார்த்து பெண்கள் கண்கலங்குகிறார்கள். அதனால் இதற்கு முன்பு நான் நடித்த சீரியல்களை விட இந்த கண்ணம்மா தொடர் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. டைட்டீல் ரோல் என்பதால் இப்போது எனது முழுக்கவன மும் இந்த சீரியலில்தான் உள்ளது என்கிறார் சோனியா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160208135119000000.jpg



நன்றி: தினமலர்

R.Latha
10th February 2016, 01:31 PM
Meendum Cenimavil Thogupalini Ramya.

Pepsi uma, Ilamai pudhumai Archanavukku piragu peasapadum ramya.......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43065/Chinna-thirai-Television-News/Ramya-again-in-Cinema.htm

Nandri . Dinamalar.

R.Latha
10th February 2016, 01:34 PM
Maanbumigu Needhiyarasargal. New 7 channalil pudhiya nigalchi.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43017/Chinna-thirai-Television-News/Maanpumiku-needhiarasargal-programme-in-news-7-channel.htm

Nandri.Dinamalar.

R.Latha
12th February 2016, 12:43 PM
Solvathellaam Unmai Nigalchiyai Thodaravillai; solgirar Lakshmi Ramakrishnan.

Thamil Tholaikatchiyil Solvathellaam Unmai Nigalchiyai valangi vandhaar Nadigai Lakshmi Ramakrishnan.


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43017/Chinna-thirai-Television-News/Maanpumiku-needhiarasargal-programme-in-news-7-channel.htm

Nandri ; Dinamalar.

R.Latha
12th February 2016, 01:15 PM
Cenima Padal Paadiya chinnathirai Natchathirangal.

chinnathirai Natchathirangal Cenimavil nadikathaan sendru kondirundhaargal.Ipodhu paaduvadharkum sella aarambithirukiraargal.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43135/Chinna-thirai-Television-News/TV-Actors-sing-songs-for-kakapo.htm

Nandri.Dinamalar.

R.Latha
16th February 2016, 12:54 PM
Raj Tvyil Pudhiya Thodar Indira

Varugira 15aam thedhi mudhal RajTvyil Indira endra Pudhiya Thodar oliparapaagiradhu.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43179/Chinna-thirai-Television-News/Indira---new-serial-in-Raj-tv.htm

Nandri.Dinamalar.

R.Latha
16th February 2016, 12:59 PM
Titeel vedangalil nadikka veandum;Nadigai Shamli.

Paasamalar thodaril paasakaara thangaiyaga nadithu varubavar Shamli.ivar shrikanth nadithulla om shanthi om padathilum nadithulaar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43177/Chinna-thirai-Television-News/Shamili-likes-to-act-in-Title-role.htm

Nandri.Dinamalar.

R.Latha
17th February 2016, 01:40 PM
cenimavil naayagiyana serial nayagi Jeevitha.

chinnathiraiyil office serial,vairakyam mulam nadithavar.......

http://cinema.dinamalar.com/hindi-news/43353/cinema/Bollywood/Serial-Actress-turn-as-heroine.htm

Nandro.dinamalar.

aanaa
20th February 2016, 09:00 PM
சீரியலுக்கு பிரேக் கொடுத்தது ஏன்? - லதாராவ்
திருமதி செல்வம், செல்வி, மகாபாரதம் உள்பட சுமார் 30 சீரியல்களில் நடித்தவர் லதா ராவ். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. அதேசமயம் சில படங்களில் நடித்து வருகிறார். அவரிடத்தில், மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா? இல்லை சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா? என்று கேட்டபோது...
சின்னத்திரைதான் என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடித்ததால் இப்போது எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டேன். சீரியல்களில் நடித்து வந்தபோதே, தில்லாலங்கடியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த காமெடி காட்சிகள் டிவியிலும் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் அந்த படம் சினிமாவில் என்னை பிரபலப்படுத்தி விட்டது. பின்னர் பல படங்களில் நடித்து வந்த நான், இப்போது கே.எஸ்.ரவிக்குமார் சுதீப்பை வைத்து இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதாநாயகி நித்யாமேனனின் அண்ணியாக நடித்திருக்கிறேன். அதோடு கடிகாரமுள் என்ற படத்திலும் நடித்துள்ளேன்.
அந்த வகையில், நான் சின்னத்திரையில் நடித்து இரண்டு வருடமாகி விட்டது. இப்படி சின்னத்திரைக்கு பிரேக் கொடுத்ததின் முக்கிய காரணம் நேரம் இல்லாததுதான். எனது முதல் மகன் 2-ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படிக்கிறார்கள். அதனால் அவர்களை கவனிக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது. மேலும், டிவி சீரியல்களில் நடித்தால் அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை அதிகபட்சம் 10 நாட்கள்தான் படப்பிடிப்பு இருக்கும். அதனால்தான் தற்போது சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறேன். அதேசமயம், இப்போதைக்கு நேரம் இன்மை காரணமாக டிவி சீரியல்களில் நடிக்காத நான் எதிர்காலத்தில் நேரம் அதிகமாக கிடைக்கும்போது மறுபடியும் சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் லதாராவ்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160220101524000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
20th February 2016, 09:04 PM
"திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகள் தேவை! -மதுமிலா


விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மற்றும் தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. அதோடு, பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம் என பல படங்களிலும் நடித்திருக்கும் அவர், எனது திறமைக்கு தீனி போடும் சரியான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சீரியலில் உங்களது என்ட்ரி?
ஆபீஸ் சீரியலில்தான் நான் அறிமுகமானேன். அதுவே பெரிய ஹிட்டாக அமைந்தது. எனது நடிப்புக்கு நல்லதொரு அங்கீகாரத்தையும் அந்த சீரியல் கொடுத்தது. தொடர்ந்து தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களிலும் நடித்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். பூஜை படத்தில் விஷாலின் தங்கையாகவும், ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவின் இரண்டு தோழிகளில் ஒருவராகவும் நடித்தேன். அதையடுத்து, விமல் நடித்துள்ள மாப்ள சிங்கம் படத்தில் செகண்ட் லீடாக நடித்திருக்கிறேன். இதுதவிர இன்னொரு படத்தில் மெயின் ஹீரோயினாக நடித்துள்ளேன். அந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்..


சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தது ஏன்
சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனபோதும் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டே சினிமாவுக்காக முயற்சி எடுத்தேன். சினிமாவில் தங்கை வேடத்தில் என்ட்ரி ஆனபோதும் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு படிப்படியாக வளர்ந்து வருகிறேன்.


அப்படியென்றால் அடுத்து டிவியில் நடிக்கும் ஐடியா இல்லையா?
அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னைப்பொறுத்தவரை என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, சினிமாவில் நடிப்பதே எனது நோக்கமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் முழுநேர சினிமா நடிகையாகி விடுவேன். ஒருவேளை அவர்கள் சரியான ஆதரவு கொடுக்காதபட்சத்தில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன். அதற்காக நான் பீல் பண்ண மாட்டேன்.


எந்தமாதிரியான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள்?



நன்றி: தினமலர்

aanaa
22nd February 2016, 08:54 PM
வம்சம் சீரியலில் என்ட்ரியான பிரியங்கா


கேப்டன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. இந்நிலையில், ராஜ் டிவியில் ஒளிபரப்பான என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி ஆகிய தொடர்களில் நடித்து வரும் அவர் தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் என்ட்ரியாகி நடித்து வருகிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், கேப்டன் தொலைக்காட்சியில் நான் தொகுப்பாளினியாக இருந்தபோது சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பொருத்தமான, பிடித்தமான கேரக்டர்களாக இருந்ததால் சீரியல் நடிகை யாக மாறினேன். அப்படி நான் முதன்முதலில் நடித்த என் இனிய தோழியே சீரியலில் நான் நடித்த கேரக்டரும், நடிப்பும் நன்றாக ரீச் ஆனது.
அதனால் அதைப்பார்த்து விட்டு சபீதா என்கிற சபாபதி சீரியல் வாய்ப்பு வந்தது. அதையடுத்து இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த தொடரில் ஹீரோயினி பூமிகாவின் சகோதரியாக நடிக்கிறேன். நான் நடிக் கும் ஜோதிகா என்கிற வேடம் பாசிட்டீவானது. நல்லது மட்டுமே செய்யக்கூடிய வேடத்தில் நடிக்கிறேன். இதனால் சமீபத்தில்தான் எனது கேரக்டர் என்ட்ரியானபோதும் நேயர்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அந்த அளவுக்கு டச்சிங்கான வேடம். அதோடு எனக்குப் பிடித்தமான ரம்யாகிருஷ்ணன் மேடத்தின் சீரியலில் நடிக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை ரொம்ப பெருமையாக கருதுகிறேன் என்கிறார் பிரியங்கா.
நன்றி: தினமலர்

aanaa
27th February 2016, 01:56 AM
வில்லனாக நடிக்க வந்த என்னை காமெடியனாக்கி விட்டனர்! - ஜெமினி மணி


சில படங்களில் நடித்திருக்கும் ஜெமினி மணி, ஆபீஸ் தொடரை அடுத்து இப்போது ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து வருகிறார். வில்லனாக நடிக்க வந்த என்னை காமெடியனாக்கி விட்டனர் என்று கூறும் அவர், வில்லன் வேடத்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


குள்ளநரிக்கூட்டம், சண்டியர், சுண்டாட்டம், பாயும், புலி, கிருமி ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி ஆனேன். அந்த சீரியலில் முதலில் எனது ரோல் சிறியதாகத்தான் இருந்தது. எனது நடிப்பைப்பார்த்த விஜய் டிவி ரமணன் சார், பின்னர் எனக்கான கேரக்டரை பெருசுபடுத்தினார். அதனால் வாரத்தில் ஐந்து நாட்கள் வந்தேன். அந்த வகையில் ஆபீஸ் சீரியலில் 350 எபிசோடுகளில் நடித்தேன். பொதுவாக எனக்கு காமெடியே வராது. ஆனால் ஆபீஸ் சீரியலில் என்னை காமெடியாக நடிக்க வைத்தனர். வில்லனுக்கு முயற்சி செய்த என்னை காமெடியனாக்கி விட்டனர். அதற்கு காரணம் விஜய் டிவி ரமணன், இயக்குனர் பிரம்மா ஆகியோர்தான். அதற்காக அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், ஆபீஸ் பண்ணிக்கொண்டிருக்கும்போதே ஆண்டாள் அழகர் சீரியல் வாய்ப்பு வந்தது. அந்த தொடரில் பூசாரி என்ற ரோலில் நடித்து வருகிறேன். ஹீரோவுடன் சீரியல் முழுக்க வருவேன். அவருக்கு ஒத்தாசையாக, பிரச்சினை என்றால் ஐடியா, அட்வைஸ் கொடுக்கும் நண்பனாக நடிக்கிறேன். நான் வெளியில் போனாலே பூசாரி போறார் என்று சொல்லும் அளவுக்கு நல்ல ரீச் கிடைத்தது. செம பாசிட்டீவான ரோல். மதுரை தமிழில் பேசித்தான் அனைவருமே நடிக்கிறோம். அந்த தொடரில் நாயகன் ஸ்டாலின் மதுரைக்காரர் என்பதால் அவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எனது சொந்த ஊர் தஞ்சாவூர். அதனால் பயிற்சி எடுத்துதான் மதுரை தமிழ் பேசி நடித்து வருகிறேன்.
அதோடு, தற்போதுவரை நான் எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான வேடங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அதாவது என்னைப் பொறுத்தவரை நெகடீவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆர்வமாக உள்ளது. காமெடி எனக்கு ஐடியாவே இல்லை. ஆனால் கிடைத்தது என்னவோ அதுதான். நான் எதிர்பார்க்கிற வில்லன் வேடம் கிடைத்தால் ரொம்ப மகிழ்ச்சியாக நடிப்பேன்
இணையதளங்களில் எனது நடிப்பு குறித்து கமெண்ட் கொடுக்கும் ரசிகர்கள், இயல்பாக, யதார்த்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். மற்றபடி இதுவரை யாருமே எனது நடிப்பு குறை சொன்னதில்லை என்று கூறும் ஜெமினி மணி, நான் ஜெமினி ஸ்டுடியோவில் ஒரு டிரைவராகத்தான் வேலை பார்த்தேன். அஜீத்தின் தீவிரமான ரசிகனாக இருந்தேன். அவரது பெயரை என் கையில் பச்சைக்குத்தியிருக்கிறேன். அஜீத் கிரீடம் படத்தில் நடித்து வந்தபோது அவரிடம் என்னை நேரில் அழைத்து சென்று, இவர் உங்களது தீவிரமான ரசிகன் என்று அஜீத்திடம் சொல்லி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் முதலாளி மனோ அக்கினேனி மேடம். அவர்தான் எல்.வி. பிரசாத்தின் பேத்தி. அவர்கள்தான் எனக்கு விலாசம். என்னை ஒரு டிரைவர் மாதிரி ஒருநாளும் நினைத்ததில்லை.
அப்படி அஜீத்திடம் அவர்கள் கொடுத்த அறிமுகம் காரணமாக, அன்றைய தினம் தனது வீட்டில் இருந்து வந்த பிரியாணியை எனக்கும் ஒரு பாக்ஸ் கொடுத்து சாப்பிட சொன்னார் அஜீத். அதையடுத்து கிரீடம் படம் முடிகிற வரைக்கும் அஜீத் சாரிடம் நான் டிரைவராக ஒர்க் பண்ணினேன். அப்போது நடிப்பெல்லாம் உனக்கு வேண்டாம். வேற வேலை பாரு. குடும்பத்தை நல்ல முறையில் கவனிச்சிக்கோ என்று அட்வைஸ் செய்தார். ஆனால் நான் அவர் பேச்சைக் கேட்காமல் நடிக்க வந்து விட்டேன்.
ஆக, இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடிகராக இருக்கும் நான், தற்போது காக்கா குருவி கல்யாணம் -என்ற பெயரில் இயக்கியுள்ள டெலிபிலிமை மனோ அக்கினேனி மேடத்துக்கும் போட்டுக்காட்டினேன். அதனால் அவர்களது நிறுவனத்துக்கே நான் படம் இயக்கினாலும் ஆச்சர்யப்படு வதற்கில்லை என்று கூறும் ஜெமினி மணி, துரோகி உள்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி யிருப்பதாகவும் சொல்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
27th February 2016, 02:03 AM
கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன்! - பாலாம்பிகா
பிரியமானவளே, நாதஸ்வரம், பாசமலர்கள், அக்னிபறவை என பல தொடர்களில் நடித்தவர் பாலாம்பிகா. தற்போது பொன்னூஞ்சல் என்ற தொடரில் சித்தி வேடத்தில் நடித்து வருகிறார். செண்டிமென்ட் அம்மாவாக பல தொடர்களில் நடித்து வந்த எனக்கு இந்த தொடரில் நடிக்கும் கொடுமைக்கார சித்தி வேடம் ஒரு புதிய அனுபவமாக உள்ளது என்கிறார் பாலாம்பிகா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சினிமாவில் நடித்து வந்த நான் திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் கொடுத்து விட்டு சின்னத்திரைக்கு வந்தபோது அம்மா வேடங்களாக கிடைத்தன. குறிப்பாக, பிரியமானவளே தொடரில் அவந்திகாவின் அம்மாவாக நடித்தேன். அது நல்ல ரீச் ஆனது. அதனால் அடுத்தடுத்து அம்மா வேடங்களே கிடைத்தபோதும், அந்தந்த கதைக்களங்களின் சூழலுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். அதனால் தொடர்ந்து அம்மா வேடம் என்றாலும் என்னால் மாறுபட்ட நடிப்பை கொடுக்க முடிந்தது.
அதேசமயம், திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் கேங் லீடர் வேடத்தில் நடித்தேன். முதலில் அந்த கேரக்டர் பற்றி டைரக்டர் சொன்னபோது, ஷாக் ஆகி விட்டேன். நான் போய் எப்படி கேங் லீடராக நடிப்பது. காமெடியாகி விடாதா? என்றேன். டைரக்டர்தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். ஆனால் அந்த வேடம் ஒர்க் அவுட்டானது. அதேபோல் இப்போது பொன்னூஞ்சல் தொடரில் வில்லியாக நடிக்கிறேன். அக்கா பிள்ளைகளின் சொத்தில் வாழ்ந்து கொண்டே அவர்களை கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது ஒரு மாறுபட்ட வேடம் என்பதால் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிப்பவர்களை கண்டால் நேயர்கள் திட்டுவார்கள். ஆனால் என்னை சந்திக்கும் பெண்கள், இந்த சீரியலில் உங்கள் நடிப்பு வித்தியாசமாக உள்ளது என்று பாராட்டுகிறார்கள். அதனால் இந்த தொடர் என்னை சின்னத்திரையில் பரபரப்பான நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாலாம்பிகா.
நன்றி: தினமலர்

aanaa
27th February 2016, 02:06 AM
மக்களை மகிழ்விக்க வேண்டும் - பிரேம் -
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய நிம்மதி உங்கள் சாய்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பிரேம்குமார். அதன் பிறகு ஆபாவணன் இயக்கிய கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம், சமுத்திரகனி இயக்கிய தொடர், ராதிகாவின் அண்ணாமலை, மனைவி தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு கண்ணம்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களுக்கு விடைகொடுத்து விட்டு முழுநேர சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
வில்லன், போலீஸ் ஆபீசர், ஹீரோவின் அண்ணன் என இதுவரை 26 படங்களில் நடித்து விட்டார். தனம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். என்றாலும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது சிங்கம் 3. எஸ் 3 படங்களில் நடித்து வருகிறார். நடித்து முடித்துள்ள தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது
"இப்போது சிங்கம்3 எஸ்3 படத்தில் நடிக்கவுள்ளேன் . படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க உள்ளது . “தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்” படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன் , ஒரு விதமான அமைதியான வில்லன் கதாபாத்திரம் அது , முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையமைப்பு இந்த படத்தில் இருக்கிறது. அதுபோல் பிரபுசாலமோன் இயக்கத்தில் உருவாகி வரும் ரயில் என்றழைக்கப்படும் படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறேன் . இன்னும் பல திரைப்படங்கள் பண்ண வேண்டும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று எனக்கு நிறைய ஆசை உண்டு ,சவாலான பல கதாபாத்திரம் செய்ய வேண்டும் எனக்கு ஆசை உள்ளது" என்கிறார் பிரேம் குமார்.
நன்றி: தினமலர்

R.Latha
1st March 2016, 01:47 PM
Herovaanaar Office Karthi.

http://www.mayyam.com/talk/showthread.php?5979-INTERVIEWS-With-TV-Artists/page30

Nandri.Dinamalar.

R.Latha
1st March 2016, 01:49 PM
Nalinikku kidaitha 3 virudhugal.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43729/Chinna-thirai-Television-News/Nalini-got-3-awards.htm

Nandri.Dinamalar.

R.Latha
1st March 2016, 01:50 PM
Nalinikku kidaitha 3 virudhugal.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43729/Chinna-thirai-Television-News/Nalini-got-3-awards.htm

Nandri.Dinamalar.

R.Latha
2nd March 2016, 01:15 PM
Radhigavidam Serial vayppu keata S.A.C

http://cinema.dinamalar.com/tv-serials/12/1/Chinna-thirai-Television-News.htm

Nandri.Dinamalar.

R.Latha
2nd March 2016, 01:18 PM
En kanavarukku pidaitha Throwbathi veadam.Nisha Venkatraman.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43756/Chinna-thirai-Television-News/My-husband-like-Throwpathi-role-says-Nisha-Ganesh-Venkatraman.htm

Nandri.Dinamalar.

R.Latha
2nd March 2016, 01:21 PM
Tele Secrets.

Marraige to love thodaril Pojana nadigaiyai

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43826/Chinna-thirai-Television-News/Television-Secrets.htm


Nandri.Dinamalar.

R.Latha
2nd March 2016, 01:22 PM
Radhigavin parattu urchagathai koduthadhu. solgiraar shilpha.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43843/Chinna-thirai-Television-News/Radhikas-congrats-give-me-Energy-says-Shilpa.htm


Nandri.Dinamalar.

R.Latha
4th March 2016, 12:57 PM
ji thamil channelil kannada serial.......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43858/Chinna-thirai-Television-News/Kannada-Serial-Magamayi.htm

Nandri.Dinamalar........

R.Latha
4th March 2016, 12:59 PM
chinnathirai nadigargalukku 27.5 sadhaveedha udhiya uyarvu........

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43892/Chinna-thirai-Television-News/27.5percent-salary-hiked-for-Chinnathirai-artist.htm

Nandri.Dinamalar.

R.Latha
4th March 2016, 01:01 PM
sareithara kadhaigalil nadipadhu pudhumaiyaana anubavam santhi ananth......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43893/Chinna-thirai-Television-News/Acting-in-Historical-Serial-is-New-Journal-says-ShantiAnand.htm

Nandri.Dinamalar.

R.Latha
4th March 2016, 01:02 PM
karunaanidhiyin vasanam pesi nadithadhai paakiyamaaga karudhugirean madhurai logu.....

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43900/Chinna-thirai-Television-News/I-am-honoured-to-speaking-Karunanidhis-dialouge-says-TV-Actor-Logu.htm

Nandri.Dinamalar.

R.Latha
4th March 2016, 01:04 PM
Serial annanai nija annanaaga karudhugirean nadigai shamili....

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43927/Chinna-thirai-Television-News/I-treating-Serial-brother-as-real-brother-says-Shamili.htm

Nandri.Dinamalar.

aanaa
7th March 2016, 04:45 AM
ஹீரோவாக நடிக்கவே மாட்டேன்: சுப்பு பஞ்சு உறுதி
பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு. தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து தப்பித்தார் சுப்பு பஞ்சு. “நான் ஹீரோவாக நடித்து நல்லா போய்கிட்டிருக்கிற கேரியரை கெடுத்துக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது: எங்களோட பி.ஏ.ஆர்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு வேலையில் அப்பாவுக்கு துணையாக நானும் இருந்தேன். 'குரு சிஷ்யன்' படத்தில்தான் முதல்முறையாக தயாரிப்பு பணியில் இறங்கினேன். நிறைய படங்களை தயாரித்து வந்தாலும் நடிப்பு, ஹீரோங்கற ஆசையெல்லாம் வந்ததில்லை..பிரதாப்போத்தன் மலையாளத்தில் 'டெய்சிக் படம் இயக்கியபோது ஒரு முக்கியமான ரோல் இருக்கு பண்றியான்னு கேட்டார். அப்பா சம்மதிச்சதால் அந்தப்படத்தில் நடிச்சேன். அதுதான் நடிப்பில் எனக்கு முதல் படம். அப்புறம் ;என் ஜீவன் பாடுதுக் படத்தில் ஒரு கேரக்டர் பண்ணினேன். அதுக்கு மேல நடிக்கணும்னு தோணலை.
நாங்க 'மாயக்கண்ணாடிக் படம் தயாரிச்சப்போ சமுத்திரகனி அவர் இயக்கி வந்த 'அரசி சீரியலில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க கேட்டார். வேண்டாம்னு மறுத்தும் ரெண்டு நாள் மட்டும் நடிச்சிட்டு போயிடுங்கன்னார். சரின்னு ஒத்துக்கிட்டு அதில் நல்லதம்பி கேரக்டரில் நடிச்சேன். என்னோட கேரக்டரை டெவலப் பண்ணி ராதிகாவுக்கே வில்லனா நிற்கிற அளவுக்கு கேரக்டர் ரீச்சாகிடுச்சு. அப்புறம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்க் படத்தில் ஆர்யா அண்ணனா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதிலும் நல்ல பெயர் கிடைக்க, 'கலகலப்புக் படத்தில் காமெடி வில்லன், 'நவீன சரஸ்வதி சபதத்தில் சிவன், ஆண்மைத்தவறேல்க் படத்தில் வில்லன், -;அரண்மனை 2க்வில் நெகட்டிவ் ரோல்னு வேண்டாம்னு ஒதுக்கின நடிப்பு இப்போ உடும்புப் பிடியாய் பிடிச்சுகிச்சு.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160305160121000000.jpg
இரண்டு படங்களில் ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தது. நல்லா போய்ட்டு இருப்பதை நாமே கெடுத்துக்குவானேன் என்று மறுத்திட்டேன். கதையை மட்டும் கேட்டுட்டு அவங்களை பத்திரமா அனுப்பி வச்சிட்டு நான் தப்பிச்சிட்டேன். தற்போது ஜீவாவுடன் 'ஜெமினிகணேசன்க், வெங்கட்பிரபு இயக்கும் 'சென்னை 28 பார்ட் டூ, ராஜேஷ் இயக்கும் 'கடவுள் இருக்கான் குமாருக் உள்ளிட்ட படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். என்கிறார் சுப்பு பஞ்சு.



நன்றி: தினமலர்

R.Latha
9th March 2016, 03:30 PM
Kerala naatilam nayagi

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44037/Chinna-thirai-Television-News/Gayathri-mayura---special-interview.htm

Nandri.Dinamalar.

R.Latha
9th March 2016, 03:31 PM
Ennai comedy police aakki vittadanar Telephone Raj.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44045/Chinna-thirai-Television-News/I-become-comedy-police-says-Telephone-raj.htm

Nandri.Dinamalar.

R.Latha
9th March 2016, 03:35 PM
Vibathu kaaranamaaga seithi vaasipaalar aanean Padma Ayyar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43998/Chinna-thirai-Television-News/News-reader-Padma-iyer-interview.htm

Nandri.Dinamalar.

R.Latha
9th March 2016, 03:37 PM
Vittadhai pidika pogirean Suresh Kumar.


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/43964/Chinna-thirai-Television-News/TV-Actor-Su

Nandri.Dinamalar.

aanaa
16th March 2016, 08:59 PM
சினிமா வில்லனான சீரியல் வில்லன் பெரோஸ்கான்!
சின்னத்திரையில் புதுக்கவிதை, அக்கா, மோகினி உள்பட பல சீரியல்களில் வில்லனாக நடித்தவர் பெரோஸ்கான். இதில் புதுக்கவிதை சீரியலில் அண்ணன் மனைவிக்கே ரூட் விடும் ஒரு அதிரடியான வில்லனாக நடித்து வருகிறார். அதோடு, சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் இடம் பிடிக்க வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி எடுத்து வந்த பெரோஸ்கான் தற்போது சினிமாவிலும் அதிரடி வில்லனாகி விட்டார்.
அதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் ரகுவரன் போன்ற ஒரு வில்லனாக வேண்டும் என்றுதான் கோவையில் இருந்து சென்னை வந்தேன். ஆனால் சினிமாவில் எதிர்பார்த்தபடி உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சீரியல்களில் நடித்து என்னை வளர்த்துக்கொண்டு வந்தேன். குறிப்பாக, நான் எதிர்பார்த்த நெகடீவ் வேடங்களே கிடைத்ததால் அதை உள்வாங்கி நடித்து எனது நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு வந்தேன்.
இந்நிலையில், 'மதியால் வெல்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல்களில் நான் நடித்த வில்லன் வேடத்தை விடவும் அதிரடியான வேடம் இது. ஒரு பயங்கரமான சமூக விரோதி வேடம். அதனால் எனக்கு சினிமாவில் இந்த படம் மூலம் ஒரு பெரிய என்ட்ரி கிடைத்துள்ளது. அதனால் இப்படம் திரைக்கு வரும்போது சின்னத்திரை உலகம் வில்லனாக என்னை ஏற்றுக்கொண்டது போல், சினிமா உலகமும் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்கிறார் பெரோஸ்கான்.



நன்றி: தினமலர்

R.Latha
23rd March 2016, 01:07 PM
Super singer thearvil murai keadu edhuvum nadakavillai. vijay tv vilakkam.arivippu.


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44598/Chinna-thirai-Television-News/Vijay-TV-denied-there-is-no-foregery-in-Super-Singer-5.htm

Nandri.Dinamalar.

R.Latha
23rd March 2016, 01:10 PM
Aanlainil serial panna pogirean/ Aanger dsk interview.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44596/Chinna-thirai-Television-News/Anchor-DSK-to-make-serial-on-online.htm

Nandri.Dinamalar.

R.Latha
23rd March 2016, 02:48 PM
Seialgalil pennadhikam kurainrthu varugiradhu nadigar Bharath.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44556/Chinna-thirai-Television-News/women-participating-in-serial-in-coming-down-says-TV-Actor-Bharath.htm

Nandri.Dinamalar.

R.Latha
23rd March 2016, 03:04 PM
90 vayadhu kilaviyaga kuda nadipean-Nagalakshmi interview.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44500/Chinna-thirai-Television-News/tv-serial-actress-nagalakshmi-interview.htm

Nandri.Dinamalar.

R.Latha
23rd March 2016, 03:05 PM
Counsling maiyam thodangugiraar Nadigai ramya.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44459/Chinna-thirai-Television-News/Ramya-to-start-counsling-class.htm

Nandri.Dinamalar.

aanaa
27th March 2016, 11:34 PM
வெயிட்டான வேடங்களை எதிர்பார்க்கும் நீயா-நானா கோபிநாத்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வருபவர் கோபிநாத். அதுதவிர, சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, விஜய் அவார்டுஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு, பூவெல்லம் உன்வாசம், வாமணன், தோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள திருநாள் படத்திலும் நடித்திருக்கிறார்.<p>இதற்கு முன்பு நடித்த படங்கள் சிறிய கேரக்டர்களிலேயே நடித்த அவர், திருநாள் படத்தில் புகழேந்தி என்றொரு ஐபிஎஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பல காட்சிகள் படத்தில் உள்ளதாம். அதோடு முந்தைய படங்களை விடவும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறாராம் கோபிநாத். அதனால் இனிமேல் இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளாராம் கோபிநாத்.



நன்றி: தினமலர்

aanaa
27th March 2016, 11:37 PM
நான் ஏன் ஜெயித்தேன்? நிம்மதி இழந்தேன்: ஆனந்த் அரவிந்தாக்ஷன் வேதனை
விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 5 சீசனில் டைட்டில் வென்றவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன். தற்போது இவரது வெற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொழில்முறை சினிமா பாடகரான இவர் எப்படி போட்டியில் கலந்து கொண்டார், வெற்றிபெற்றார்? என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனம் வருந்தி அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்வாகக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி சந்தோஷத்தை தரவில்லை. இந்த வெற்றி என்பதை நான் எளிதாக அடைந்துவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் பாடியிருக்கிறேன் தான். ஆனால் பின்னணி பாடகர் என்றால் ஒரு பாடல் பாடியவரையும் அப்படித்தான் சொல்கிறோம் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி சாரையும் அதே பெயரில் தான் அழைக்கிறோம். என்ன செய்வது? இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா?
நான் இதற்கு முன் பாடியிருக்கிறேன் என்பதை என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றிய முழு விபரங்கள் இப்போதும் உள்ளது. மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதையெல்லாம் என்றோ அழித்திருப்பேன். தவிர என்னுடன் பாடியவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் நான் பாடகன் என்று தெரியும். அவர்கள் ஒருவரும் இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதே இல்லை. தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதால் முன்பு பாடியிருக்கவே கூடாது என்று விதிமுறையில் இல்லை.
என்னுடைய இந்தப் பாதையும் பயணமும் அத்தனை எளிதாக நான் கடந்து வந்ததல்ல.. பத்து வருட போராட்டத்துக்குப் பின் ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளி என் பாதையில் தென்பட்ட போது அதை நான் பின் தொடர்ந்தேன். அது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த வெற்றியின் சந்தோஷத்தை உணர முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்பது போல் உள்ளது. இப்போது நிம்மதி இழந்து நிற்கிறேன். ஏன் நான் ஜெயித்தேன்? எதற்காக இந்த வெற்றி? என்று எழுதியிருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
27th March 2016, 11:45 PM
லீடு ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண் -


ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் லீடு ரோல்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை சந்திரா லட்சுமண். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி..
மலையாள சீரியல்களில் நடித்து வந்த நான் தேவயானி நடித்த கோலங்கள் தொடரில்தான் தமிழுக்கு வந்தேன். முதல் தொடரிலேயே நல்லதொரு வேடத்தில் நடித்ததால் அந்த தொடரே என்னை பிரபலப்படுத்தியது. அதையடுத்து வசந்தம், மகள், சொந்த பந்தம் தொடர்களில் நடித்த நான் இப்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறேன்.
இந்த பாசமலர் தொடரில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் பாசத்துக்காக நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்து நடிப்பதால் எனது கேரக்டருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான் சிலரைப்போன்று பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிப்பதில்லை. பாசிட்டீவ் வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
காரணம், எனது முகத்துக்கு செண்டிமென்ட் வேடங்கள்தான் செட்டாகும். அதனால்தான் நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக நான் நெகடீவ் வேடங்களை ஏற்பதில்லை. அதேபோல், சிறிய வேடங்களிலும் நடிப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் மட்டுமே நடிக்கிறேன். அதனால்தான் தெலுங்கில் நடித்து வந்த மமதலா கோவேடா தொடருக்குப்பிறகு இப்போது தமிழில் பாசமலர் தொடரில் மட்டுமே நடிக்கிறேன். சில சீரியல்களில் சிறிய கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று அழைத்தபோது மறுத்து விட்டேன்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160324135027000000.jpg


இதற்கு காரணம் ஒரு சீரியல் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் அதில் நான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இடையில் வந்து இடையில் போவது மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதேயில்லை என்று கூறும் சந்திரா லட்சுமண், ஏற்கனவே மனசெல்லாம், ஏப்ரல் மாதத்திலே, தில்லாலங்கடி ஆகிய படங்களிலும் நடித்திருப்பவர், நல்ல வெயிட்டான வேடங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பாராம். ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண்



நன்றி: தினமலர்

aanaa
27th March 2016, 11:48 PM
அரவிந்தாக்ஷ்ன் ஆரோகணம் படத்தில் பின்னணி பாடினார்! -லட்சுமிராமகிருஷ்ணன் -
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆன்ந்த் அரவிந்தாக்ஷ்ன் என்பவர் சூப்பர் சிங்கர் டைட்டில் மற்றும் 70 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்றார். ஆனால் அவருக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு, புதுமுக பாடகர் பாடகிகள் பங்கேற்றும் அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சினிமாவில் பின்னணி பாடிய அரவிந்தாக்ஷ்னை பாட வைத்து அவருக்கு பரிசு கொடுத்ததை ஏற்க முடியாது என தொடர்ந்து விஜய் டிவிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டிவியினால் கலாய்க்கப்பட்ட நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், விஜய் டிவியில் முதல் பரிசு பெற்றுள்ள அரவிந்தாக்ஷ்ன் நான் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த வகையில், அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர் ஆவார். அறிமுக பாடகர்களே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பின்னணி பாடகரை போட்டியாளராக்கியதை ஏற்க முடியாது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160324140206000000.jpg

அதோடு, புதியவர்களுடன் அனுபவசாலிகள் போட்டி போடும்போது புதியவர்கள்தானே பாதிக்கப்படுவார்கள். நம்பி அவர்களது ஷோக்களை பார்க்கிற மக்களை இப்படி ஏமாற்றலாமா? என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்பது தெரியாமல் நான்கூட அரவிந்தாக்ஷ்னுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன் என்கிறார்.





நன்றி: தினமலர்

R.Latha
29th March 2016, 11:35 AM
Samayal killadi Nalini.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/44779/Chinna-thirai-Television-News/Nalini-best-in-Cooking.htm

Nandri.Dinamalar.

aanaa
1st April 2016, 07:35 PM
விரைவில் வில்லியாகப் போகிறேன் - ஏஞ்ஜல்


கல்யாணம் முதல் காதல் வரை, அபூர்வ ராகங்கள் என சில தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஏஞ்ஜல். எந்த சீரியலாக இருந்தாலும் எனக்கு தரப்படும் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் இவர், விரைவில் வில்லியாக டிவி நேயர்கள் என்னை பார்க்கலாம் என்கிறார்கள்.
மேலும் அவர் கூறுகையில், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில்தான் நான் முதலில் நடிக்கத் தொடங்கினேன். நேயர்கள் கவனிக்கப்படும் வகையில் எனது கேரக்டர் அமைந்தது. அதையடுத்து அபூர்வ ராகங்களில் ஹீரோயினாக நடிக்கும் பவித்ராவின் நெருக்கமான தோழியாக நடிக்கிறேன். தோழி வேடம் என்றாலும் நல்ல கேரக்டர். தற்போது மேலும் இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறேன். அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். அதோடு, சீரியல்களில் நடிப்பது சம்பந்தமான எனக்கு தினமும் பல போன்கள் வருகிறது. ஆனால் நான் பண்ணும் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டுதான் நடிப்பேன்.
>நான் சந்திக்கும் டைரக்டர்கள் உனக்கு கண்கள்தான் ப்ளஸ் பாய்ண்ட் என்கிறார்கள். அதோடு, நீ வில்லி வேடங்களில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். அதனால் இப்போது உருட்டி மிரட்டி நடிக்கக் கூடிய வில்லி வேடங்களை எதிர்பார்க்கிறேன். சில இயக்குனர்களும் சீக்கிரமே வில்லி வேடத்தில் நடிக்க அழைப்பு விடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் இதுவரை செண்டிமென்ட் வேடங்களில் மட்டுமே என்னை பார்த்து வந்த டிவி நேயர்கள் விரைவில் வில்லியாகவும் எனது இன்னொரு அவதாரத்தைப் பார்க்கலாம் என்கிறார் ஏஞ்ஜல்.



நன்றி: தினமலர்

aanaa
5th April 2016, 07:22 PM
அம்மா வேடம் நாயகிக்கு இணையான வேடம்! - மீரா கிருஷ்ணன் தூர்தர்ஷன் மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் மீரா கிருஷ்ணன். கிட்டத்தட்ட 20 சீரியல்களில் அவர் நடித்துள்ளார். சினிமாவில் குணசித்ர நடிகையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆதிரா சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160404150612000000.jpg
இந்த ஆதிரா சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக நடிக்கிறேன். அதனால் அவர் தோன்றும் பெரும்பாலான காட்சிகளில் நானும் வருகிறேன். அந்த வகையில், சீரியல்களைப்பொறுத்தவரை அம்மா வேடம் என்றால் கதாநாயகிக்கு இணையான வேடம் என்பது போல் உள்ளது. அதனால் அம்மா வேடங்களை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
மேலும், சினிமாவிலும் இப்போது நான் அதிகமாக அம்மா வேடங்களில் தான் நடிக்கிறேன். ஆனால் சினிமாவில் ஓரிரு தினங்களிலேயே என் சம்பந்தபபட்ட காட்சிகளை படமாக்கி விடுகிறார்கள். அதனால் எனக்கு நிறைய நேரம் இருப்பதால சீரியல்களில் எனது கவனம் அதிகரித்திருக்கிறது. அதோடு, நான் சின்னத்திரையில் நீண்டகால நடிகை என்பதால், என்னை யாருமே டம்மியான அம்மா வேடங்களுக்கு அழைப்பதில்லை. எனக்கு அதிகப்படியான காட்சிகள் இருந்தால் மட்டுமே அழைக்கிறார்கள். அந்த வகையில், சீரியல், சினிமா இரண்டிலுமே மனதிருப்தியுடன் நடித்து வருகிறேன் என்கிறார் மீரா கிருஷ்ணன்


நன்றி: தினமலர்

aanaa
5th April 2016, 07:29 PM
சினிமாவுக்கு வருகிறார் "அது இது எது" திவாகர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அது இது எது"; நிகழ்ச்சியில் நடித்து வருபவர் திவாகர். பல பிரபலங்களின் கெட்டப்புகளில் தோன்றி நடித்து பாராட்டு பெற்று வரும் அவருக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் சினிமா வாய்ப்புகளை தான் வரவேற்பதாக கூறுகிறார் திவாகர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அது இது எது நிகழ்ச்சியில் எம்.ஆர்.ராதா, கவுண்டமணி, விணுசக்ரவர்த்தி, ரகுவரன் என பல பிரபலங்களின் கெட்டப்புகளில் தோன்றி நான் நடித்திருக்கிறேன். அதற்கு நேயர்கள் மத்தியில் ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதோடு, வெற்றிமாறன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் "அது இது எதுநிகழ்ச்சியை பார்த்து விட்டும் என்னை மட்டுமின்றி எங்களது டீமையே பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் நிகழ்ச்சியை கண்டுகளிப்பதாகவும் சொல்கிறார்கள். இதை எங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம்.
மேலும், ஒருமுறை நான் டைரக்டர் வெற்றிமாறனை சந்தித்தபோது, உங்களுக்கேற்ற வேடம் வரும்போது கண்டிப்பாக என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். வேறு சில டைரக்டர்களும் இதேபோல் வாக் குறுதி தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த நான், விரைவிலேயே சில படங்களில் கமிட்டாகி சின்னத்திரையைப் போலவே சினிமாவிலும் பிரபலமாகப்போகிறேன் என்று கூறும் திவாகர், சினிமாவில் காமெடி கலந்த குணசித்ர வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.



நன்றி: தினமலர்

aanaa
17th April 2016, 06:46 PM
சீரியல்கள் தான் என் நடிப்பு திறமையை வளர்த்தன! மதுமிலா


சின்னத்திரையில் ஆபீஸ், அக்னி பறவை, தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. இப்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மாறாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி மதுமிலா கூறுகையில், ஆபீஸ் சீரியலில்தான் நான் என்ட்ரி ஆனேன் என்றாலும், சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனபோதும் சினிமாவில் உடனடியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் எனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு வந்தேன். அந்த வகையில், ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொருவிதமான வேடங்களில் நடித்தது எனக்கு நல்லதொரு அனுபவமாக அமைந் தது. அதோடு, எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்கக்கூடிய தைரியத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில், பூஜை படத்தில் தங்கை வேடத்தில் சினிமாவில் என்ட்ரியான நான், ரோமியோ ஜூலியட்டில் தோழியாக நடித்து, அதையடுத்து மாப்ள சிங்கம் படத்தில் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்தேன். அதையடுத்து இப்போது இன்னொரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறேன். அந்த படத்திற்கு இன்னும் டைட்டீல் ரெடியாகவில்லை. மேலும், சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடித்து நல்லதொரு நடிகையாக நிலைக்க வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் மதுமிலா.



நன்றி: தினமலர்

aanaa
17th April 2016, 06:48 PM
சினிமாவில் பிசியாகும் ;அது இது எது; டைகர் தங்கதுரை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ;அது இது எது நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டைகர் தங்கதுரை. அந்த நிகழ்ச்சியில் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் அவர் இப்போது சினிமாவிலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், விஜய் டிவியின் &#39;அது இது எது&#39; நிகழ்ச்சிதான் எனக்கு அடையாளம். அதில் எனது நடிப்பை டிவி நேயர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரும் கண்டுகளித்து வருகிறார்கள். அதோடு சில டைரக்டர்கள் என்னை நடிப்பதற்கும் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சி என்னை சினிமாத்துறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நான், இப்போது நயன்தாரா நடிக்கும் டிக் டிக் டிக், அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் அண்ணனுக்கு ஜே, மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள அட்டி என பல படங்களில் நடிக்கிறேன். இதில் நயன்தாராவின் டிக் டிக் டிக் படத்தில் இன்னும் நான் நடிக்கவில்லை. அந்த படத்தில் நடிக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். காரணம், நான் நயன்தாராவின் தீவிரமான ரசிகன். அவர் நடித்த நானும் ரவுடிதான் உள்பட பல படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி அவரை படங்களில் ரசித்து வந்த நான் இப்போது அவருடனேயே இணைந்து நடிக்கப்போகிறேன் என்கிறபோது ரொம்ப சந்தோசமாக உள்ளது.
அதேபோல் அட்டகத்தி தினேசுடன் நடிக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். கதைப்படி தினேசின் நண்பனாக இருந்தும் ஒருகட்டத்தில் அவரையே கைது செய்கிற சூழலுக்கு நான் தள்ளப்படுவேன். ப்ரண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த கேரக்டர் என்னை அதிகமாக பாதித்துள்ளது. அதேபோல் அட்டி படத்தில் நான்கு லீடு ரோல்களில் நானும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறும் டைகர் தங்கதுரை. என்னதான் சினிமாவில் நான் பிசியானபோதும், அது இது எது நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருவேன். காரணம், அது எனக்கு கிடைத்த நல்லதொரு மேடை. அதோடு, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்களில் நடிப்பது திறமைக்கு தீனி போடுகிற ஒரு விசயமாகவும் உள்ளது என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
17th April 2016, 06:49 PM
முழுநேர சீரியல் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்! -கிருத்திகா
முந்தானை முடிச்சு, வம்சம் தொடர்களுக்குப்பிறகு இப்போது கேளடி கண்மணி தொடரில் நடித்து வருகிறார் கிருத்திகா. இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் அர்ணவின் அக்கா வேடத்தில் நடிக்கிறார். அதோடு தம்பிக்காக தட்டிக்கேட்கும் ஒரு துணிச்சலான வேடத்தில் நடித்திருக்கிறார்.<p>இதுபற்றி கிருத்திகா கூறுகையில்,
>சின்னத்திரைகளில் எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்து விட்டேன். குறிப்பாக, வம்சம் தொடரில் வில்லித்தனமான ரோலில் நடித்தேன். என் கேரக்டர் இப்போது வரவில்லை. மீண்டும் என்ட்ரி கொடுப்பார்கள் என்று கருதுகிறேன். இந்நிலையில் தற்போது நான் கேளடி கண்மணி சீரியலில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் செண்டிமென்டான வேடம். தம்பிக்கு போராடும் வேடம் என்பதால், நான் வில்லியாக நடித்த வேடங்களை விட இந்த வேடத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனக்கும் இது மனதளவில் திருப்தியை கொடுக்கிற வேடமாக அமைந்திருக்கிறது. என்றாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களாக நடிப்பதில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்கும் தொடர் களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன்.
>குறிப்பாக, சைக்கோவாக, மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். இந்த மாதிரி கேரக்டர்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டியதிருக்கும். அது ஒரு ஆர்ட்டிஸ்டாய் எனக்கு திருப்தியை கொடுக்கும். தொடர்ந்து என்னை ஒரே மாதிரியான வேடங்களில் பார்த்து வந்த நேயர்களுக் கும் புதிய அனுபவமாக அமையும். அதனால் என்னை சீரியல்களுக்கு புக் பண்ண வரும் டைரக்டர்களிடம் மாற்றுத்திறனாளி வேடங்கள் இருந்தால் கொடுங்கள் என்றும கேட்டு வருகிறேன். எனது நிறைவேறாத இந்த ஆசைகள் அடுத்தடுத்து நான் நடிக்கும் சீரியல்கள் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறும் கிருத்திகாவுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். முழுநேர சீரியல் நடிகையாக இருந்தாலே போதும் என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
21st April 2016, 06:25 PM
சின்னத்திரைதான் எனது அடையாளம்! -தொகுப்பாளர் அசார்
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அசார். அதோடு ஏராளமான குரல்களில் மிமிக்ரி பண்ணும் திறன் கொண்டவர். அதனால் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நேயர்கள் எந்த நடிகரை மாதிரி பேச சொல்கிறார்களே அதேகுரலில் பேசி அவர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இதுபற்றி அசார் கூறுகையில்,
மிமிக்ரி பேசும் திறன் எனக்கு இயற்கையிலேயே வந்தது. அதனால் அதை வைத்தே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பேசி வளர்ந்து விட்டேன். அதோடு நான் எப்போதுமே கலகலப்பாக இருப்பேன். அதனால் என்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேன். அதனாலேயே என்னை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அதோடு, சினிமா உலகைச் சேர்ந்தவர்களும் எனது மிமிக்ரி, காமெடி ஷோக்களை ரசிக்கிறார்கள். அதுவே இப்போது எனக்கு சினிமா கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.
ஏற்கனவே விக்ரமனின் நினைத்தது யாரோ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தேன். அதுகூட ஒரு பேஸ்புக் ஷோவில் நான் காமெடியாக பேசியதை பார்த்த டைரக்டர் விக்ரமன், என்னை அழைத்து அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அதையடுத்து இப்போது சாரல் என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இதையடுத்தும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறேன் என்று கூறும் அசார், என்னதான் சினிமாவில் தொடர்ந்து நடித்தபோதும், சின்னத்திரையை நான் விடுவதில்லை. காரணம், எனக்கு அடையாளமே சின்னத்திரைதான். அதன்மூலம்தான் எனக்கு ஏராளமான ரசிகர் -ரசிகைகள் கிடைத் துள்ளனர். அதனால் சினிமாவில் நடித்து வந்தாலும், சின்னத்திரையில் எனது நிகழ்ச்சிகளை குறித்த நேரத்திற்குள் முடித்துக்கொடுத்த பிறகுதான் சினிமாவில் நடிக்க தேதி கொடுக்கிறேன் என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
21st April 2016, 06:27 PM
கலைநிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டும் வம்சம் வில்லி ஜெயஸ்ரீ!


ரம்யாகிருஷ்ணன் தயாரித்து, நடித்து வரும் தொடர் வம்சம். அருள்ராய் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ரோஜா என்கிற வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. இதுதவிர வேறு எந்த தொடரிலும் அவர் நடிக்கவில்லை. காரணம், இந்த சீரியலுக்கு போக மீதமுள்ள நேரத்தை அவர் கலை நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்து வருகிறாராம்.
இதுபற்றி ஜெயஸ்ரீ கூறும்போது, என் அம்மா லட்சுமிராவ், பெரிய பரத நாட்டிய கலைஞர். தில்லானா மோகனாம்பாள் உள்பட சில படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றியவர். இப்போதும் அவர் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். மேலும், எனக்கும் சிறுவயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொடுத்து 5 வயதிலேயே எனக்கு அரங்கேற்றம் செய்து விட்டார். அதனால் எனக்கு நாட்டியத்தில் பெரிதாக சாதிக்க வேணடும் என்பதுதான் நீண்டகால ஆசையாக இருந்து வருகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160418100435000000.jpg

அதனால்தான், சின்னத்திரை சீரியலில் நடித்தபோதும், கலை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பரதநாட்டிய நடனங்களில் ஆடி வருகிறேன். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன் என்று கூறும் ஜெயஸ்ரீ, சீரியல், கலை நிகழ்ச்சிகள் போக மற்ற நேரங்களில் குழந்தைகளுக்கு பரதநாட்டியமும் கற்றுக்கொடுக்கிறாராம். இது அவருக்கு பெரிய ஆத்மதிருப்தியை கொடுக்கிறதாம்.



நன்றி: தினமலர்

aanaa
21st April 2016, 06:28 PM
சீரியல்கள் தான் என் நடிப்பு திறமையை வளர்த்தன! மதுமிலா


சின்னத்திரையில் ஆபீஸ், அக்னி பறவை, தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. இப்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மாறாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி மதுமிலா கூறுகையில், ஆபீஸ் சீரியலில்தான் நான் என்ட்ரி ஆனேன் என்றாலும், சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனபோதும் சினிமாவில் உடனடியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் எனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு வந்தேன். அந்த வகையில், ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொருவிதமான வேடங்களில் நடித்தது எனக்கு நல்லதொரு அனுபவமாக அமைந் தது. அதோடு, எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்கக்கூடிய தைரியத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில், பூஜை படத்தில் தங்கை வேடத்தில் சினிமாவில் என்ட்ரியான நான், ரோமியோ ஜூலியட்டில் தோழியாக நடித்து, அதையடுத்து மாப்ள சிங்கம் படத்தில் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்தேன். அதையடுத்து இப்போது இன்னொரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறேன். அந்த படத்திற்கு இன்னும் டைட்டீல் ரெடியாகவில்லை. மேலும், சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடித்து நல்லதொரு நடிகையாக நிலைக்க வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் மதுமிலா.



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:47 PM
சின்னத்திரையின் மலர் டீச்சர் நான்! -ஸ்ரிதிகா


சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு, மதுரை டூ தேனி, வேங்கை என சில படங்களில் நடித்து விட்டு நாதஸ்வரம் தொடரில் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரிதிகா. அதையடுத்து மாமியார் தேவை, உணர்வுகள் சங்கமம், வைதேகி என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது குலதெய்வம், என் இனிய தோழியே போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
தனது நடிப்பு குறித்து நேயர்கள் சொல்லும் கருத்து பற்றி ஸ்ரிதிகா கூறுகையில், சின்னத்திரையைப் பொறுத்தவரை பெரும்பாலும் நான் செண்டிமென்ட் வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதை நேயர்கள் பெரிய அளவில் ரசித்துள்ளனர். அதோடு, மனதை தொடும் வேடங்களில் நடிக்கவே கேட்டுக்கொள்கிறார்கள். முக்கியமாக, பேஸ்புக்கில் என்னை தொடர்பு கொள்ளும் பெண்கள், குடும்பப் பெண்களுக்கு அறிவுறுத்தக்கூடிய நல்ல கருத்து சொல்லும் கேரக்டர்களிலும் நடிக்க சொல்கிறார்கள்.
சீரியல்களைப் பொறுத்தவரை நேயர்களின் வரவேற்பு தான் முக்கியம் என்பதால், என்னிடமிருந்து எந்த மாதிரியான நடிப்பை நேயர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொண்டுதான் நான் கதாபாத்திரங்களை செலக்ட் செய்கிறேன் என்று கூறும் ஸ்ரிதிகா, நாதஸ்வரம் தொடரில் நான் நடித்த மலர் கேரக்டர் பெரிய அளவில் நேயர்கள் கவர்ந்த வேடம். அந்த வகையில் எனது பெயர் யாருக்குமே தெரியாது. இப்போதுவரை என்னை மலர் என்றுதான் சொல்கிறார்கள்.அந்த வகையில், பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி எப்படி மலர் டீச்சராக பேசப்பட்டு வருகிறாரோ, அதற்கு முன்பே நாதஸ்வரம் தொடரில் நான் மலர் கேரக்டர் மூலம் பேசப்பட்டேன். ஆக, நான்தான் சின்னத்திரையின் மலர் டீச்சர் என்கிறார் ஸ்ரிதிகா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160424110200000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:50 PM
பேயாக நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது! - பிரியங்கா


பாசிட்டீவ், நெகடீவ் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தபோதும் பேய் வேடத்தில் நடிப்பது எனக்கு நல்லதொரு அனுபவமாக உள்ளது. என்கிறார் சின்னத்திரை நாயகி பிரியங்கா.
அவர் மேலும் கூறுகையில், தற்போது வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் நான், அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். கதைப்படி இதில் நான் பேயாக நடிக்கிறேன். அதாவது நான் இறந்த பிறகும் எனது காதலரை தொடர்வேன். அந்த வகையில், மற்றவர்களின் கண்களுக்கு தெரியும்போது கறுப்பு கலர் புடவையில் தோன்றும் நான், எனது காதலர் கண்களுக்கு அவர் எனக்கு பரிசாக கொடுத்த சிவப்பு கலர் புடவையில் தெரிவேன்.
அதோடு, உயிரோடு இருக்கும்போது உயிருக்கு உயிராக அவரை காதலித்ததால் உயிர் பிரிந்த பிறகும் அவரை பிரிய முடியாமல் தவிக்கிற கேரக்டர் என்பதால் காதல் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறேன். கடந்த 3 மாதங்களாக இந்த கேரக்டரில் நான் நடித்து வருவதால், சில நாட்களில் நான் தூங்கும்போது கனவில்கூட அந்த பேய் கேரக்டரில் நடிப்பது போலவே உணர்கிறேன். அந்த அளவுக்கு அந்த ரோல் என்னை இம்ப்ரஸ் செய்துள்ளது என்று கூறும் பிரியங்கா, இதுதவிர பைரவி, வம்சம், என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி போன்ற தொடர்களிலும் பிசியாக நடித்து வருவதாக சொல்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:52 PM
சினிமாவிலும் அம்மாவாக நடிக்கும் சீரியல் ';அம்மா' குயிலி!


சுமார் 30 ஆண்டுகால நடிகை குயிலி, பூவிலங்கு படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே -என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார். அதையடுத்து தொடர்ச்சியாக கேரக்டர் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் பிரபல அம்மா நடிகையாகி விட்டார். தற்போது சரவணன் மீனாட்சி, காதல் முதல் கல்யாணம் வரை போன்ற தொடர்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி குயிலி கூறுகையில்,
;சின்னத்திரையில் இயல்பான அம்மாவாக நான் நடித்து வருகிறேன். எந்தவொரு காட்சியை கொடுத்தாலும் அதில் குடும்பத்தில் இருக்கும் அம்மாக்கள் எந்தமாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்துவார்கள் என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு நடிக்கிறேன். நான் அப்படி நடிப்பது குடும்பப் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அதனால் என்னை நேரில் பார்க்கும்போது உங்களை நடிகையாக நினைக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராகத்தான் நினைக்க முடிகிறது என்கிறார்கள். இது மனதுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
மேலும், என்னதான் சின்னத்திரை மூலம் தினம்தினம் நேயர்களை சந்தித்தபோதும், நான் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்ததால் இப்போதும் என்னைத்தேடி சினிமா வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் அதில் எனக்கு பிடித்தமான வேடங்களாக இருந்தால் மட்டுமே ஏற்று நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் டூ சென்னை என்ற படத்தில் அவரது அம்மாவாக நடிக்கிறேன். சீரியல் அளவுக்கு வெயிட்டான அம்மா வேடம் இல்லை என்றாலும், சினிமாவைப்பொறுத்தவரை அது பெரிய அம்மா ரோல்தான் என்கிறார் குயிலி.



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:54 PM
எனது தற்கொலை முயற்சிக்கு 2 காரணம் உள்ளது! சின்னத்திரை நடிகர் சாய் சக்தி பேட்டி
நாதஸ்வரம், வள்ளி, சொந்த பந்தம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி என பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. தற்போது அவரது கைவசம் எந்த சீரியல்களும் இல்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவர் தற்கொலை முயற்சியில் இறங்கியதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது. சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் சாய்சக்தியின் இந்த தற்கொலை முயற்சி வெளியானதை அடுத்து அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தினமலர் இணையதளத்துக்காக சாய் சக்தியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது,
நான் 12 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். இப்போது எனக்கு 23 வயது ஆகிறது. குடும்பத்தில் மூத்த பையன் என்பதால் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அம்மா, பாட்டி, தங்கை, மனைவி, மகள் என என் குடும்பமே என்னை நம்பிதான் உள்ளது. ஆனால் சபீதா என்கிற சபாபதி தொடருக்கு பிறகு இப்போது என் கைவசம் எந்த சீரியல்களுமே இல்லை. வேலை வெட்டி இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். சுத்தமாக வருமானமே இல்லை. பல கம்பெனிகளுக்கு போன் செய்து நடிக்க சான்ஸ் கேட்டு பார்த்து விட்டேன். யாரும் தரவில்லை. அதனால் நாளுக்கு நாள் எனக்கு மன உளச்சல் அதிகமானது.
இதற்கிடையே எனது மாமனார் வீட்டிலும் எனக்கு பிரச்சினை கொடுத்து விட்டனர். என் மனைவி முக்கால்வாசி மனநிலை பாதிக்கப்பட்டவள். என்றபோதும் நான் அவளை திருமணம் செய்தேன். எங்களது முதல் மகள் இறந்து விட்டாள். இப்போது 8 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், சில சமயங்களில் பணத்தேவைக்காக மனைவியின் நகையை அடமானம் வைப்பேன். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதானே. ஆனால் இதற்கு என் மாமனார் வீட்டில் பிரச்னைக்கு வருகிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து இருக்க வேண்டாம். தனிக்குடித்தனம் செல் என்கிறார்கள். என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை தனியே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி தனியே செல்ல முடியும். அதற்கு நான் மறுத்ததால் அடியாட்களை அனுப்பி கொலை செய்து விடுவேன். ஆசிட் ஊற்றி விடுவன் என்று மிரட்டுகிறார்கள். ஒரு பக்கம் வேலை இல்லாத மன உளச்சல், இன்னொரு பக்கம் மாமியார் வீட்டு டார்ச்சரினால் மன உளச்சல் என மனசு நொந்து விட்டேன். இப்படி அவர்கள் கொடுக்கிற பிரச்சினை காரணமாக ஒரு முறை வீட்டில் தூக்குப்போடச் சென்றேன். இன்னொரு முறை ஏரியில் குதித்து உயிரை விட முயற்சி எடுத்தேன். அப்போதெல்லாம் என் அம்மாதான் தடுத்து நிறுத்தி எனக்கு அறிவுரை கொடுத்தார்.
>இருப்பினும், நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வருமானம் இல்லாத பிரச்னை, மாமனார் வீட்டு பிரச்னை என இந்த இரண்டும் என்னை துரத்தியதினால்தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் எனது இந்த செய்தி வாட்ஸ் அப்புகளில் பரவியதை அடுத்து திரையுலகம், மீடியா நண்பர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு அட்வைஸ் கொடுத்ததோடு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர். சிலர் பண உதவி தர முன்வந்தனர். ஆனால் நான் வாங்கவில்லை. எனக்கு நடிப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கூறிவிட்டேன். அதே சமயம் பிஸ்னஸ் பண்ண கடன் உதவி கொடுத்தால் வாங்குவேன். அதை மாதந்தோறும் திருப்பி கொடுத்து விடுவேன் என்று கூறும் சாய் சக்தி, இப்போது ஆன்மீகம், பிரேயரில் மனதை திருப்பியிருப்பதாகவும், ஒரு மருத்துவரிடம் மன உளச்சலுக்கு சிகிச்சை பெறப்போவதாகவும் சொல்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:56 PM
சினிமா வாய்ப்பை தவிர்க்கும் ஏகவள்ளி
கேளடி கண்மணி தொடரில் சைலண்ட் வில்லியாகவும், அபூர்வ ராகங்கள் தொடரில் பாசிட்டிவான கேரக்டரிலும் கலக்கி வருகிறவர் ஏகவள்ளி. திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர். இப்போது சினிமா வாய்ப்பை தவிர்க்கிறார். இதுபற்றி ஏகவள்ளி கூறியிருப்பதாவது
எப்போதுமே சீரியல்தான் பெஸ்ட் ஒரு சீரியலில் கமிட் ஆகிவிட்டால் ஒரு வருடம் நடிக்கலாம். சினிமா அப்படியில்லை. பத்து நாளில் ஒரு படத்தில் நடித்துவிட்டு அடுத்த படத்திற்கு வாய்ப்பு தேடவேண்டும். அவுட்டோர் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். சீரியல் அப்படியில்லை. காலையில் கிளம்பி வந்தால் மாலை வீடு திரும்பி விடலாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடலாம். அதற்காக சினிமாவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எனது மன திருப்திக்காக சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகிறேன். பெயர் சொல்லும்படியான நல்ல கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனாலும் சீரியல் பாதிக்கும் என்பதால் பல சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன்.
கேளடி கண்மணி, அபூர்வ ராகங்கள் தொடர்மூலம் நல்ல நடிகை என்று யெர் எடுத்துள்ளேன். அபூர்வ ராகங்களில் எனது கேரக்டரில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் வர இருக்கிறது. தொடர்களின் காட்சிகளை மக்கள் தங்கள் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதால் ஒவ்வொரு குடும்பதிலும் நானும் ஒருத்தியாக இருக்கிறேன். அந்த வகையில் எனக்கு முழு திருப்பிதான். என்கிறார் ஏகவள்ளி.



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:58 PM
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா! -


சரவணன் மீனாட்சி சீசன்-2வில் மீனாட்சியாக நடித்து வருபவர் ரக்ஷிதா. இவரை மீனாட்சியாகத்தான் நேயர்களுக்கு தெரியும். ஆர்ப்பாட்டமில்லாத அசத்தலான நடிப்பின் மூலம் ஒரே சீரியலில் முன்னணி இடத்தை பிடித்து விட்ட இவருக்குள்ளும் தற்போது சினிமா ஆசை துளிர் விட்டிருக்கிறது. குறிப்பாக, அஜித்துடன் நடிக்க வேண்டும என்பதுதான் இவரது பெரிய ஆசையாம்.
இதுபற்றி ரக்ஷிதா கூறுகையில், சரவணன் மீனாட்சி சீரியல் கொடுத்த ரீச் காரணமாக, எனக்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால், நான் நடிக்கிற கேரக்டர் அழுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் தேடிவந்த பல படங்களை தவிர்த்து விட்டு, ராதாமோகனின் உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தில் நந்திதா நாயகி என்றபோதும், எனது கதாபாத்திரமும் வெயிட்டாகவே இருந்தது. ஆனபோதும் அந்த படம் வெற்றி பெறாததால் எனது நடிப்பு பேசப்படவில்லை.
இப்படி கூறும் ரக்ஷிதாவுக்கு, சின்னத்திரையை போலவே சினிமாவிலும் ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாம். குறிப்பாக, அஜித் அவரது பேவரிட் ஹீரோவாம். அதனால் அவர் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெருமையாக ஏற்று நடிப்பாராம். இந்த தகவலை தற்போது தன்னை சந்திக்கும் சினிமா நண்பர்களிடம் கூறி வரும் ரக்ஷிதா, அஜித்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தவும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.



நன்றி: தினமலர்

aanaa
2nd May 2016, 07:59 PM
சின்னத்திரை நடிகர்களின் தற்கொலையை தடுக்க புதிய முயற்சி!
சின்னத்திரை நடிகர்கள் போதுமான வருமானம் இல்லாமல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தற்கொலைகளில் ஈடுபட்டு வருவது நடிகர் - நடிகைகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த தற்கொலைகளுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று அனைவருமே குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சென்னையிலுள்ள சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் - நடிகைகளின் நலன் காக்கும் வகையில் சில செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, டப்பிங் சீரியல்களின் வரவினால், தமிழில் தயாரிக்கப்படும் சீரியல்களில் எண்ணிக்கை குறைகிறது. அதனால் நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் சீரியல்களில் நடிப்பதால் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது என்பது போன்ற விசயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களை பாதுகாப்பது எனவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
>இதுதவிர, 1500 உறுப்பினர்கள் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வேறு வேலைகளில் இருப்பவர்களாம். சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று முன்பு ஒருமுறை அறிவிப்பு வெளியானபோது, நடிகர்களாக அல்லாத பலரும் உறுப்பினராகி விட்டார்களாம். அதனால் இப்போது சீரியல்களில் நடிக்காத மற்ற உறுப்பினர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை நடைபெறுகிறதாம். மேலும், சின்னத்திரை நடி கர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இனிமேல் மாதந்தோறும் சின்னத்திரை நடிகர் சங்க மீட்டிங் நடைபெற உள்ளதாம்.



நன்றி: தினமலர்

R.Latha
6th May 2016, 12:10 PM
prabala inaiya thala Tv channel yup tv kaalathirku thagunthavaaru thannudaiya thozhil nutpathai virivu paduthum yup tv rasigargalin thevaiyai arinthu nigalchigalaiyum vazhangi varugiradhu.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/45940/Chinna-thirai-Television-News/YuppTV-announces-the-digital-premiere-of-Oopiri-and-Thozha.htm

Nandri .Dinamalar.

aanaa
11th May 2016, 06:28 PM
இன்னொரு துளசி கேரக்டர் தேடுகிறேன்! -ஸ்ருதிராஜ்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160508094935000000.jpg


தென்றல், ஆபீஸ் சீரியல்களுக்குப் பிறகு அபூர்வ ராகங்கள் தொடரில் நடித்து வருகிறார் ஸ்ருதிராஜ். இதையடுத்தும் குடும்பப் பொறுப்புள்ள அப்பாவித்தனமான தொடர்களில் நடிப்பதில் அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.
இதுகுறித்து ஸ்ருதிராஜ் கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை மற்றவர்கள் நம்மை கொடுமைப்படுத்துவது போன்ற வேடங்களில் நடித்தால் அது சீரியல் பார்க்கும் பெண்களின் மனதில் ஆழமாக பதிந்து விடும். அதனால் அந்த கேரக்டர் களில் எப்போது திரையில் வந்தாலும் உச் கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். கிராமப்புறங்களில் உள்ள பாட்டிகள் கண்கலங்கவும் செய்வார்கள். அந்த வகையில், தென்றல் சீரியலில் எனக்கு கிடைத்த துளசி கேரக்டர் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. அந்த மாதிரியான ஒரு வேடம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.
அதோடு, அந்த சீரியலில் நடித்த எனது பெயர் மட்டுமின்றி சீரியலின் பெயரான தென்றல் என்பதைகூட குறிப்பிடாமல், துளசி நாடகம் என்று பெண்கள் குறிப்பிட்டனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் பெயர் வாங்கியது அதன்பிறகு ஆபீஸ் சீரியலில் நடித்த ராஜூ கேரக்டரும் ஓரளவு பெயர் வாங்கித்தந்தது. இப்போது அபூர்வ ராகங்கள் சீரியலும் ரீச்தான். என்றாலும், இன்னொரு துளசி கேரக்டருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் ஸ்ருதிராஜ், அப்பாவி பெண் வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
11th May 2016, 06:31 PM
சினிமாவில் ஹீரோயின் ஆகிறார் மதுமிலா
ஆபீஸ் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் மதுமிலா. அதன் பிறகு தாயுமானவன், அக்னி பறவை உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவுக்குள் வந்தார். பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக அறிமுகமானார். ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். மாப்ள சிங்கம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அடுத்த கட்டம் ஹீரோயின் தானே.
மிதிலா விரைவில் ஹீரோயினாக நடிக்கிறார். இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புதுமுகம் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்குகிறார்கள். விரையில் அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும்.
“சினிமா நடிகையாக வேண்டும் என்பதே என் லட்சியம். அந்த லட்சியத்தை அடையும் வழியாக சின்னத்திரையை பயன்படுத்திக் கொண்டேன். சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வருகிறேன். விரைவில் எனது லட்சியம் கைகூடும்&#39;&#39; என்கிறார் மதுமிலா.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160509141041000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
11th May 2016, 06:33 PM
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160510090043000000.jpg

பென்சில் படத்தில் பாசமலர் ஷாமிலி!
பொன்னூஞ்சல், பாசமலர், பிரியசகி, ரோமாபுரி பாண்டியன், மகாபாரதம், 63 நாயன்மார்கள் என பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்திருப்பவர் ஷாமிலி. பாசமலர் தொடரில் அவர் நடித்துள்ள பாசக்கார தங்கை வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது.
>இதுபற்றி ஷாமிலி கூறுகையில், நான் எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். அந்த வகையில், பாசமலர் சீரியலில் பாசக்கார தங்கையாக நடித்து வருகிறேன். பல காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே அழுது நடிக்கிறேன். அது எனக்கு இயல்பாகவே வருகிறது. ஆக, இனிமேல் எந்தமாதிரியான செண்டிமென்ட் வேடங்கள் என்றாலும் எளிதாக என்னால் ஸ்கோர் பண்ண முடியும் என்கிற அளவுக்கு இந்த சீரியல் என்னை தயார்படுத்தி விட்டது.
மேலும், இப்படி சீரியல்களில் நான் பிசியாக நடித்து வந்தபோதும், ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பென்சில் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறேன். ஸ்ரீதிவ்யா கதாநாயகி என்றாலும் எனக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். அந்த கேரக்டர்தான் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த படம் திரைக்கு வந்தால் எனக்கு சினிமாவில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் வரும் என்று கூறும் ஷாலினி, நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக, எந்த கம்பெனிக்கும் ஏறி இறங்குவதில்லை. தேடி வந்தால் நடிக்கிறேன். காரணம், சீரியலில் நான் ரொம்ப பிஸி. சீரியல்கள் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நான் தினமும் போய் வருகிறேன். அதனால் என்னை தங்களது குடும்பத்தில் ஒருவர் போலவே நேயர்கள் நினைக்கிறார்கள். இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
18th May 2016, 06:22 PM
முதல் படத்திலேயே கிளிசரின் போடாமல் அழுதேன்! -நடிகர் ராஜ்கமல்
சின்னத்திரை தொகுப்பாளராக பிரபலமாகி சினிமாவுக்கு வந்திருப்பவர் ராஜ்கமல். தற்போது சண்டிக்குதிரை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அன்புமதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோடியாக கேரளத்து வரவு மானசா நடித்துள்ளார். கஞ்சா கருப்பு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். புதுக்கோட்டை மண்வாசனை கதையில் தயாராகியிருக்கும இந்த படம் தேர்தலுக்குப்பிறகு திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து ராஜ்கமல் கூறுகையில், இந்த சண்டிக்குதிரை படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். காதல், பாசம், ஆக்சன், காமெடி என நடிப்பின் நவரசங்களையும் வெளிப்படுத்தும் வகையில் எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. கிராமத்தில் சண்டித்தனம் செய்து கொண்டு திரியும் கதாபாத்திரம் என்றாலும், முழுக்க முழுக்க அப்படியல்ல. ரொமான்ஸ், செண்டிமென்ட், காமெடி காட்சிகளும் மனதை தொடும் வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், முதல் படத்திலேயே எனக்கு எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல கதைக்களம் கிடைத்திருக்கிறது.
மேலும், இந்த படத்தில் , இறந்தவரை கையில் ஏந்திக்கொண்டு அழும் காட்சியில், நான் கிளிசரினே போடாமல் அழுதேன். அந்த காட்சியும், வசனங்களும் என்னை தானாகவே அழ வைத்து விட்டன. அதனால் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் கண்கலங்க வைக்கும். அந்த வகையில், சேது, பருத்திவீரன் படங்கள் வரிசையில் இந்த சண்டிக்குதிரை படமும் ரசிகர்களின் மனதில் இடம்பெறும் என்கிறார் ராஜ்கமல்.



நன்றி: தினமலர்

aanaa
18th May 2016, 06:27 PM
நான் ரொம்ப பாசமான பெண்! -பாசமலர் ஜீவிதா
தேவதை, ஆபீஸ், வைராக்கியம், கைராசி குடும்பம் என பல தொடர்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது பாசமலர் தொடரில் உமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர், அடுத்தபடியாக ஒரு படத்தில் நாயகியாக நடிக்கவும் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்
இதுகுறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களைப்பொறுத்தவரை அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நான் நடிக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படியே நடித்து வருவதால் வெயிட்டான வேடங்களாக இருந்தால் மட்டுமே டைரக்டர்கள் என்னை புக் பண்ணுகிறார்கள்.
மேலும் தற்போது நடித்து வரும் பாசமலர் சீரியலின் உமா கேரக்டர் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களை கவர்ந்துள்ளது. அந்த அளவுக்கு ஒரு செண்டிமென்டாக ரோலில் நடிக்கிறேன். மேலும், நான் என்னை சார்ந்தவர்களிடம் ரொம்ப பாசமாக இருப்பேன். அதைத்தான் சீரியல்களில் வெளிப்படுத்துகிறேன். அப்படி எனது இயல்புத்தன்மையை சீரியல்களில் வெளிப்படுத்துவதால் நேயர்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
மேலும், சீரியல்களைத் தொடர்ந்து சினிமாவில் என்று தணியும் என்ற படத்தில் நடித்தேன். அதையடுத்து இன்னொரு படத்திலும் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறேன். சீரியல்களைப்போன்று சினிமாவிலும் என் திறமைக்கு வேலை கொடுக் கும் கேரக்டர்களைத்தான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, என்னைப்பொறுத்த வரை சினிமா- சீரியல் இரண்டையுமே ஒரேமாதிரிதான் பார்க்கிறேன். திரை மட்டுமே வித்தியாசம். மற்றபடி நான் ஒரேமாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் ஜீவிதா.



நன்றி: தினமலர்

aanaa
18th May 2016, 06:29 PM
நடனப்பள்ளி நடத்தும் காயத்ரி
சின்னத்திரையில் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறவர் காயத்ரி புவனேஷ். மற்றவர்கள் அறியாத இன்னொரு முகம் அவர் நல்ல நடன கலைஞர் என்பது. அதோடு லெட் டான்ஸ் என்ற நடன பள்ளியையும் நடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது
நடிப்பு என்பது பெண்களுக்கு சில காலம்தான். அது நிரந்தரமானதல்ல. நிரந்தர வருமானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துதான் இந்த நடன பள்ளியை உருவாக்கினேன். யோகா மற்றும் பிட்னஸ் செண்டரும் நடத்துகிறேன்.ஆரம்பத்தில் லைவ் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அதன்பிறகு கனாகாணும் காலங்கள் சீசன் 4ல் நடித்தேன். இப்போது டாக் ஷோக்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறேன். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறேன். என்கிறார் காயத்ரி



நன்றி: தினமலர்

aanaa
18th May 2016, 06:30 PM
டி.வி.,க்காக படம் இயக்குகிறார் சுரேஷ்கிருஷ்ணா
பாட்சா, அண்ணாமலை படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா, கடைசியாக பரத் நடிப்பில் ஆறுமுகம் படத்தை இயக்கினார். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கினார். அதன் பிறகு சில மினி தொடர்களை இயக்கினார்.
தற்போது டி.வி.சேனல்களுக்கென்றே தனி திரைப்படங்களை இயக்குகிறார். ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் என்பது படத்தின் தலைப்பு, ஜீ தமிழ் சேனலுக்காக இயக்கிய இந்தப் படத்தில் தேவயானி, டெல்லி கணேஷ், அர்ஜூன், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடிய திரைப்படத்தை 9 நாளில் எடுத்து முடித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது: திறமையான பல திரைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், புதிய இளைஞர்கள் திறமையோடும், புதிய சிந்தனையோடும் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இத்தகைய திரைப்படங்கள் உதவும். சரியாக திட்டமிட்டால் 30 லட்சம் ரூபாய் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும். என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.



நன்றி: தினமலர்

R.Latha
20th May 2016, 01:12 PM
chinnathiraikku varugurar Aravind swamy.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/46388/Chinna-thirai-Television-News/Arvindsamy-come-to-television.htm

Nandri.Dinamalar.

R.Latha
20th May 2016, 01:13 PM
Diyavukku Thirumanam. Criket cptanai manakiraar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/46342/Chinna-thirai-Television-News/VJ-Dhiya-to-Marry-Cricket-Captain.htm

Nandri.Dinamalar.

R.Latha
20th May 2016, 01:18 PM
Ji thamizh channelil puthiya nigalchi Mr and Mrs kilaadigsl.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/46318/Chinna-thirai-Television-News/Mr-and-Mrs---New-program-in-Zee-Tamil.htm

Nandri.Dinamalar.

R.Latha
20th May 2016, 01:21 PM
Dhiyavukku Thiurumanam Cricket captanai manakiraar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/46342/Chinna-thirai-Television-News/VJ-Dhiya-to-Marry-Cricket-Captain.htm

Nandri.Dinamalar.

aanaa
30th May 2016, 06:51 PM
கலெக்டராக விரும்பும் பிரியங்கா
இமயம் மற்றும் கேப்டன் டி.வியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இப்போது பிசியான சீரியல் நடிகை. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, பைரவி தொடர்களில் நடித்தார். இப்போது பிரியமானவளே, வம்சம் தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஆகிவிட்டாலும் அவ்வப்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுக்கிறார். நடிப்பு, தொகுப்பு இரண்டிலும் சாதனை படைக்க விரும்பினாலும் அவருக்கு இன்னொரு விருப்பம் இருக்கிறதாம். அது ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்பது. இதற்காக இப்போது தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார். “என்னதான் நடிகை, தொகுப்பாளினி என்றாலும் இதன் மூலம் மக்களை எண்டர்டெயின்மெண்ட்தான் பண்ண முடியும். மக்களுக்கு சேவை செய்யணும்னா கலெக்டர் ஆகணும். அதற்காக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்” என்கிறார் பிரியங்கா. இதையேதான் நடிகை ஆர்த்தி பத்து வருடமாக சொல்லி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினமலர்

aanaa
7th June 2016, 07:28 PM
செல்லமே, என் இனிய தோழியே, கண்மணியே, பாசமலர்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷில்பா. சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இவர், தேடிவரும் எல்லா தொடர்களையுமே ஏற்றுக்கொள்வதில்லையாம். கதாபாத்திரங்கள் தனக்கு பிடித்தால் மட்டுமே ஏற்று நடித்து வருகிறாராம்.
இதுபற்றி ஷில்பா கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை பாசிட்டிவ், நெகடீவ் என எல்லாவிதமான வேடங்களிலும் நடித்து விட்டேன். அதோடு எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதைகளில் முக்கிய வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் ரொம்ப பரிட்சயம். அதோடு நான் ஆரம்பத்தில் இருந்தே வெயிட்டான வேடங்களாக நடிப்பதால் என்னிடமிருந்து வித்தியாசமான நடிப்பை எதிர்பார்ப்பார்கள்.
அதனால்தான், நான் உப்புசப்பில்லாத கேரக்டர்களில் எக்காரணம் கொண்டு நடிப்பதில்லை. சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன். அதோடு, நேயர்களுக்கு பிடிக்கிறது என்பதை விட நான் ஏற்று நடிக்கும் வேடங்கள் முதலில் என்னை கவர வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நான் எந்த சீரியல்களிலும் நடிப்பதில்லை என்று கூறும் ஷில்பாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லையாம். இப்போதைக்கு சீரியல்களில் நடிப்பதற்கு அவருக்கு நேரம் போதுமானதாக உள்ளதாம்.



நன்றி: தினமலர்

aanaa
7th June 2016, 07:29 PM
சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரியான மெட்டிஒலி காயத்ரி!
சினிமாவில் பாசமலர், ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காயத்ரி. அப்படி அவர் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்-அஜீத் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு சினிமாவில் அவர்கள் இருவரும் வளர்ந்து வந்தபோதும், காயத்ரிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மெட்டிஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரவேசித்தார். அந்த சீரியலில் சேத்தனின் மனைவியாக அவர் நடித்த சரோஜா என்கிற வேடம் பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. குறிப்பாக, அந்த சீரியலின் க்ளைமாக்ஸ் காட்சியை லைவாக ஒளிபரப்பு செய்தபோது, சிங்கிள் டேக்கில் நடித்து பாராட்டு பெற்றார் காயத்ரி.
அதைத் தொடர்ந்து மேகலா, நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட சில தொடர்களில் நடித்த காயத்ரிக்கு மெட்லிஒலி அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. பின்னர் திரு மணம் செய்து கொண்டு செட்டிலான அவர், தற்போது ஒரு குழந்தைக்கும் அம்மாவாகி விட்டார். இந்த நிலையில், மறுபடியும் அவர் சின்னத்திரையில் என்ட்ரியாகியுள்ளார். அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் சில தினங்களுக்கு முன்பு பங்கேற்றார் காயத்ரி. அதில் பங்கேற்றவர்கள் அனைவருமே இளவட்டங்கள் என்றபோதும், திருமணமான காயத்ரியும் அவர்களுக்கு இணையாக காரில் உயரத்துக்கு சென்று சாகசம் செய்தார். அதோடு, குழந்தை பிறந்த பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்றும் தெரிவித்துக்கொண்டார் காயத்ரி.



நன்றி: தினமலர்

aanaa
7th June 2016, 07:33 PM
ஹோம்லி நடிகை என்று பெயர் வாங்க வேண்டும்: ஜீவிதா
ஏவிஎம் தயாரித்த மனதில் உறுதி வேண்டும் தொடர் மூலம் அறிமுகமானவர் ஜீவிதா. அதன் பிறகு வைராக்யம் ஆபீஸ் தேவதை பைரவி நாயன்மார்கள் சித்திரம் பேசுதடி தொடரில் நடித்தார்.
தற்போது பாசமலர் கைராசி குடும்பம் தொடரில் நடித்து வருகிறார். பாசமலர் உமா கேரக்டர் இப்போது மிகவும் பிரபலம்.
அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வரும் ஜீவிதாவுக்கு சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. சின்னத்திரையின் சுஹாசினி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. பைரவி, மனதில் உறுதி வேண்டும் தொடர்களில் சுஹாசினியை நினைவுபடுத்துகிற வகையில் தான் நடித்தார். “நதியா, ரேவதி, சுஹாசினி மாதிரி ஹோம்லியான நடிகையாகவே நீடிக்க வேண்டும், சினிமாவோ, சீரியலோ கடைசி வரை நடித்துக கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார் ஜீவிதா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160607135409297297.jpg



நன்றி: தினமலர்

aanaa
14th June 2016, 05:56 PM
சின்னத்திரைக்கு வந்தது ஏன்? அரவிந்த்சாமி விளக்கம்
அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு ;தனி ஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்தார். அடுத்து போகன் படத்தில் அதே ஜெயம்ரவியுடன் நடிக்கிறார். தனி ஒருவன்; தெலுங்கு ரீமேக்கில் வில்லனாக நடிக்கிறார். இந்தியில் டீயர் டாட் என்ற இந்திப் படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்து பரபரப்பு கிளப்பினார். இதற்கிடையில் விஜய் டி.வியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி; நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: நான் டி.வி ஷோக்கள் அதிகம் பார்ப்பதில்லை. அமிதாப்பச்சன் நடத்திய கோன்பனேக்கா குரோர்பதி தான் நான் கடைசியாக பார்த்த நிகழ்ச்சி. எனக்கு பிடித்த நிகழ்ச்சி. அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை கேட்டார்கள். எனக்கு பிடித்த விஷயங்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்ததால் ஒத்துக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிற பணம் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. வெறும் பணம் மட்டும் முக்கியமில்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது. பதில் தெரிவதை விட விளையாட தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை பெற அவர்களுக்கு நான் உதவுகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய மக்களை சந்திக்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கைய கேட்க முடிகிறது. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி என் கண்களை பல விதத்தில் திறந்திருக்கிறது. என்கிறார் அரவிந்தசாமி.



நன்றி: தினமலர்

aanaa
14th June 2016, 06:06 PM
சிறிய கேரக்டர்களை தவிர்க்கும் ரேஷ்மா


அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றி அதன் பிறகு மீடியா வாழ்க்கை பிடித்து சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல் நடிகை ஆனவர் ரேஷ்மா. &#39;வாணி ராணி&#39;, &#39;வம்சம்&#39;, &#39;சுந்தரகாண்டம்&#39; தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது &#39;என் இனிய தோழியே&#39; தொடரில் நடித்து வருகிறார். ரேஷ்மா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரசாத் பசுபலேட்டியின் மகளாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திறமையால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்.


தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில தொடர்களில் முக்கியமான சில கேரக்டர்களுக்கு ரேஷ்மாவை அணுகியபோது மறுத்துவிட்டாராம். “ஹீரோயினாகத்தான் நடிப்பேன். அப்போதுதான் என் முழு கவனமும் கேரக்டரில் இருக்கும், எல்லா எபிசோடிலும் நான் வருவேன். மக்கள் மனதிலும் பதிய முடியும்” என்ற அதற்கு காரணம் சொன்னாராம். இன்னொரு தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



நன்றி: தினமலர்

aanaa
14th June 2016, 06:08 PM
பவர்லிப்டிங் சேம்பியன் ஆனார் ரம்யா


சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. தற்போது ரேடியோவில் ஆர்ஜேவாகவும் பணியாற்றுகிறார். மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். சினிமாவிலும் நடிக்கிறார். இப்போது அவரது இன்னொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. அது அவர் ஒரு பவர்லிப்டிங் சேம்பியன்.


சென்னை பவர்லிப்டிங் அசோசியேஷன் நடத்திய பென்ஞ்பிரஸ் சேம்பியன் சிப் பவர்லிப்டிங் போட்டியில் ரம்யா கலந்து கொண்டார். இதில் அவரது எடைபிரிவில் போட்டியிட்டு முதலிடம் பிடித்து சேம்பியன் ஆனார்


“நான் இப்போது பவர்லிப்டிங் தங்க பதக்கத்தோடு இருக்கிறேன். எனது கடைசி கடைசி லிப்ட் எனது வாழ்வின் முக்கியமான தருணம்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் ரம்யா. அடுத்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். பவர்லிப்டிங் பயிற்சிக்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்குகிறாராம் ரம்யா.



நன்றி: தினமலர்

R.Latha
23rd June 2016, 01:05 PM
Aadhira Serial niraivu perugiradhu.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47646/Chinna-thirai-Television-News/aathira-serial-is-wrapping-of-with-the-250th-episode.htm

Nandri.Dinamalar.

R.Latha
24th June 2016, 11:46 AM
Singapuril settil aagiraar Dhiya Menon.....


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47658/Chinna-thirai-Television-News/Diya-to-settle-in-Singapore.htm


Nandri.Dinamalar.

R.Latha
24th June 2016, 11:49 AM
Meendum Varugiraar Sakthimaan.


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47793/Chinna-thirai-Television-News/Sakthiman-returns.htm

Nandri.Dinamalar.

R.Latha
24th June 2016, 11:51 AM
Ji Tamilil pudhumaiyana "Whats Up" Poatti......


http://cinema.dinamalar.com/tv-serials/12/1/Chinna-thirai-Television-News.htm


Nandri.Dinamalar.

R.Latha
24th June 2016, 11:54 AM
Rekka padathil nadikkum Paasamalar Serial Jeevitha.......


http://cinema.dinamalar.com/tv-serials/12/1/Chinna-thirai-Television-News.htm

Nandri.Dinamalar.

R.Latha
24th June 2016, 11:55 AM
Cenima Nadigaiyaana Thogupaalini Vaishali...........


http://www.mayyam.com/talk/showthread.php?5979-INTERVIEWS-With-TV-Artists/page36


Nandri.Dinamalar.

R.Latha
24th June 2016, 11:57 AM
Pudhiya hair coloringai Twitteril veliyitta Dhivyadharshini........

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47620/Chinna-thirai-Television-News/divya-dharshini-is-in-a-new-hair-color.htm


Nandri.Dinamalar.

aanaa
28th June 2016, 08:43 PM
சினிமா-சீரியலில் திரைதான் வித்தியாசம்! -பாலாசிங்


நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலாசிங். அதன்பிறகு இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, சாமி, விருமாண்டி, ஜிகர்தண்டா, பூலோகம் என பல படங்களில் நடித்த அவர், தற்போதும் சில படங்கள் மட்டுமின்றி ஆதிரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில், பாலாசிங் சீரியல் ஸ்பாட்டுகளுக்கு செல்லும்போது, சீரியல் நடிகர் - நடிகைகளிடம் ரொம்ப சகஜமாக பழகினாராம். ஓய்வு நேரங்களில் அவர்களிடம் செம காமெடி அரட்டையிலும் ஈடுபட்டாராம். பாலாசிங் சினிமா நடிகர், சீரியல் நடிகர்களிடம் சகஜமாக பழக மாட்டார் என்று நினைத்து விலகியே நின்ற நடிகர்கள், அவர் தங்களிடம் இயல்பாக பேசிப்பழகியதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்களாம்.


இதுபற்றி பாலாசிங் கூறுகையில், நான் சினிமா நடிகன் என்றாலும், சினிமா- சீரியல் இரண்டிற்குமிடையே பெரிய மாற்றம் தெரியவில்லை. திரைதான் வித்தியாசம். அதேபோல் நடிகர் நடிகைகளும் எனக்கு வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் ஒரேமாதிரியான கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன் என்று கூறும் பாலாசிங், இனிமேல் நான் சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
28th June 2016, 08:52 PM
சீரியல்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் துபாய் செல்கிறார் சாய்சக்தி!


சொந்த பந்தம், வள்ளி, நாதஸ்வரம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி உள்பட பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரியான வருமானம் இல்லாததால் விரக்தியடைந்த அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போவதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது. அதையடுத்து, அவரைக்கேட்டபோது, சீரியல்களை நம்பிதான் எனது குடும்பமே உள்ளது. ஆனல் எனக்கு சரியானபடி நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் கடன் தொல்லை அதிகமாகி விட்டது. நான் சான்ஸ் கேட்க சென்ற இடங்களில் யாருமே வாய்ப்பு தரவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளச்சல் காரணமாகத்தான நான் தற்கொலை முயற்சியில் இறங்க முடிவு செய்தேன் என்று சொன்னார் சாய் சக்தி.


இந்தநிலையில், தற்போது துபாய் செய்ய முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார் சாய் சக்தி. அதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் சீரியல்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வேலை வெட்டி இல்லாத இந்த ஊரில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. அதனால் துபாய் சென்று அங்குள்ள லோக்கல் சேனல் களில் நடிக்கப்போகிறேன். அங்குள்ள சில நண்பர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிழைப்பு தேடி துபாய் செல்லும் நான் எப்போது மீண்டும் சென்னை திரும்புவேன் என்று சொல்ல முடியாது. ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோகூட ஆகலாம். சீரியல்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சென்னை திரும்புவேன் என்கிறார் சாய்சக்தி.



நன்றி: தினமலர்

R.Latha
4th July 2016, 01:20 PM
Malaiyala Serial-galukku SENSOR Arasu Theeviram.

Malaiyaala serialgalil 30kkum mearpatta serialgal oliparappaagi varugiradhu......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47881/Chinna-thirai-Television-News/government-is-particular--in-censoring-the-malayalam-serials.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
4th July 2016, 01:25 PM
Thamizil Dub Aagiradhu Sudha Chandranin Hindi Serial.....

Sudha Chandran Naditha Naagin Hindi Serial colorsTvyil kadandha aandu oliparapaanaggi vetri karamaaga odiya serial......
http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47923/Chinna-thirai-Television-News/Sudha-Chandrans-Hindi-serial-dubbed-in-Tamil.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
4th July 2016, 01:27 PM
Serialgalil Nadikka vaayppu illaadhathaal Dubai selgiraar saai sakthi.....


http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47936/Chinna-thirai-Television-News/sai-sakthi-goes-dubai-because-of-noe-chance-in-serials.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
4th July 2016, 01:31 PM
Chinnathiraiyil kalakkum Sanni Liyon.......

Hollywood phornographicstar-aana sanniliyon MTv Nadathiya split villaaa Nigalchiyin mulamaaga india vandhaar.

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47964/Chinna-thirai-Television-News/Sunny-Leone-well-in-Television-also.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
4th July 2016, 01:37 PM
Karunanidhiyin adutha thodar THenpaandi singam.....


Kalaijnar tv-yil kalaijar kathai, thiraikadhai,vasanathil thodarthu serialgal oliparapaagi varugiradhu.....

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/47991/Chinna-thirai-Television-News/Karunanidhis-next-serial-Thenpandi-Singam.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
4th July 2016, 01:40 PM
Ji thamilil puthiya nigalchi junior Super Star.....

Siruvar sirumiyin Nadana thiramai,Paadum thiramaigalai velipadutha pala nigalchigal nadathappattu varugiradhu.....
http://cinema.dinamalar.com/tamil-tv-serials/48144/Chinna-thirai-Television-News/z-tamil-channel-with-another--reality-show-as-%22-junior-super-star%22.htm

NANDRI.DINAMALAR.

R.Latha
4th July 2016, 01:42 PM
Gramangalai nokki sellum nadana nigalchigal......

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/48172/Chinna-thirai-Television-News/Dance-programs-in-Village.htm

NANDRI.DINAMALAR.

aanaa
10th July 2016, 04:53 AM
இந்தி சீரியலில் நடிக்கும் கார்த்திகா!
1980-90களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய பல நடிகைகளில் ராதாவும் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த் என அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தவர். ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ராதா, தனது வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் சினிமாவில் இறக்குமதி செய்தார். அந்த வகையில், கார்த்திகா கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி பின்னர், அன்னக்கொடி, புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்தார். அதையடுத்து அவர் நடித்த வா டீல் என்ற படம் கிடப்பில் கிடக்கிறது.


அதேபோல், ராதாவின் இளைய மகளான துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு கே.வி.ஆனந்தின் யான் படத்திலும் நடித்தார். அதன்பிறகு அவருக்கும் படங்கள் இல்லை. இந்த நிலையில், புதிய படவாய்ப்புகளே இல்லாத கார்த்திகா, துளசி நாயர் இருவரும் மும்பைக்கே திரும்பிச்சென்று விட்டனர். இவர்களில் கார்த்திகாவுக்கு சினிமாவில் தொடர்ந்து கோலேச்ச வேண்டும் என்கிற ஆசை இருப்பதால் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தவருக்கு இப்போது இந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். முதலில் சீரியலில் நடித்தால் சினிமா நடிகை என்கிற இமேஜ் போய் விடுமே என்று தயங்கிய கார்த்திகாவிடம், இந்தி சினிமா நடிகைகள் சிலர் சினிமா, சீரியல் இரண்டிலும் நடிப்பதை சுட்டிக்காட்டி, நடிக்க சம்மதம் வாங்கி விட்டாராம் தாய்குலம் ராதா.





நன்றி: தினமலர்

aanaa
10th July 2016, 05:03 AM
ஒரே சீரியலில் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கிறேன்! -ஜெயராம் பெருமிதம்


வாணி-ராணி தொடரில் வில்லனாக நடித்தவர் ஜெயராம். அதையடுத்து கண்ணாமூச்சு, கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்த அவர், தற்போது தாமரை தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோ-வில்லன் என டபுள் ரோலில் நடிக்கும் அவருக்கு வில்லன், மனநோயாளி, நல்லவன் என மூன்றுவிதமான கோணங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்


இதுபற்றி ஜெயராம் கூறுகையில், சினிமா மோகத்தில்தான் நான் நடிக்க வந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்னத்திரைக்கு வந்தேன். வாணி ராணி தொடரில் அழுத்தமான வில்லன் வேடம் கிடைத்தது. அதன்பிறகு நடித்த தொடர்களிலும் நானே எதிர்பார்க்காத வித்தியாசமான வேடங்கள் கிடைத்த நிலையில், இப்போது நடித்து வரும் தாமரை தொடரில் டபுள் ரோல் கிடைத்தது.


இந்த தொடரில் நல்லவன்-கெட்டவன் என இரண்டுவிதமாக நடித்தபோதும் மனநோயாளியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இப்படி ஒரே சீரியலில் மூன்றுவிதமான டைமன்சனில் நடிக்கிறேன். இந்தமாதிரியான வாய்ப்பு கிடைப் பது அரிதான விசயம். அந்த வகையில் இந்த தாமரை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.


மேலும், சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் மனதளவில இருப்பதால் சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடிப்ப தற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் படங்களில் கமிட்டாகி விடுவேன் என்று நினைக்கிறேன். அதேசமயம், சினிமாவில் நடிகனாகி விட்டேன் என்பதற்காக சீரியல்களை தவிர்க்க மாட்டேன். இரண்டு மீடியாக்களிலும் நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிப்பேன். முக்கியமாக, நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். நினைவுகூர்ந்து பேசும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறும் ஜெயராம், ராஜ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு புதிய சீரியலிலும் தற்போது கமிட்டாகியிருக்கிறாராம்.




நன்றி: தினமலர்

aanaa
10th July 2016, 05:05 AM
மீண்டும் வந்தார் ஆர்த்தி


மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் மீடியா வாழ்க்கையை துவக்கியவர் ஆர்த்தி. சின்ன சின்ன ஆசை, சொல்விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கடந்த 10 வருடங்களாக முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய ஆர்த்தி இயக்குனர் பாலாவின் உதவியாளர் விவேக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்த்தி தற்போது ஒரு குழந்தைகக்கு தாயாகி இருக்கிறார். மகன் பெயர் தியோடன். தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ஆர்த்தி. &#39;வானவில்‚ தொலைக்காட்சியில் &#39;நல்வரவு‚, &#39;திரைப்படம் உருவான கதை‚ என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். “எங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக செல்கிறது. என் கணவர் எனக்கு அழகான வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறர். கடவுள் அழகான குழந்தையை கொடுத்திருக்கிறார். மீடியாவில் பரபரப்பா இயக்கி விட்டு வீட்டில் முடங்கி கிடக்க முடியவில்லை. அதனால் மீண்டும் வந்திருக்கிறேன்” என்கிறார் ஆர்த்தி.





நன்றி: தினமலர்

aanaa
20th July 2016, 09:10 PM
பாசமலர் சீரியல் தாமரையின் டைரக்சன் ஆசை!


தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் மலையாள சீரியல்களில் இருந்து தமிழுக்கு வந்தவர் சந்திரா லட்சுமண். அதையடுத்து பல சீரியல்களில் நடித்த அவர் தற்போது பாசமலர் சீரியலில் தாமரை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். வழக் கம்போல் இந்த தொடரிலும் அவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வரு கிறதாம்.


இதுபற்றி சந்திரா லட்சுமண் மேலும் கூறுகையில், இதுவரை நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களில் நடித்துள்ளேன். அப்படி நடித்த எல்லா சீரியல்களிலும் என்னை பாசிட்டீவான வேடங்களில்தான் நடிக்க வைத்துள்ளார்கள். நானும் அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப நடித்து வருகிறேன். முக்கியமாக நடிப்பு என்று அதை எடுத்துக்கொள்ளாமல் என் வாழ்க்கையில் நடப்பது போன்றே நினைத்துக்கொண்டு நடித்து வருகிறேன். அதனால்தான் ஒவ்வொரு சீரியல்களிலும் எனது நடிப்பு யதார்த்தமாக இருப்பதாக நேயர்கள் பாராட்டுகிறார்கள்.


மேலும், பாசிட்டீவ் வேடங்களாக நடித்தபோதும் வித்தியாசமான வில்லி வேடங்கள் வந்தாலும் அதற்கேற்ப எனது முகபாவணையை மாற்றியும் என்னால் பர்பாமென்ஸ் பண்ண முடியும். அதனால் டைரக்டர்கள் என்னை நம்பி இன்னும் மாறுபட்ட வேடங்கள் கொடுத்தாலும் நடிப்பேன் என்று கூறும் சந்திரா லட்சு மணுக்கு, டைரக்சன் பண்ண வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாம். அதற்காக முயற்சி எடுக்க மாட்டேன். ஆனால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக படமோ, சீரியலோ டைரக்ட் பண்ணுவேன். அப்படி நான் இயக்கும் கதைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் சந்திரா.
நன்றி: தினமலர்

aanaa
29th July 2016, 11:01 PM
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160723163425586283.jpg
இந்தி சீரியல் மோகத்தை விரட்டியடிக்க முடியும்! - காயத்ரி புவனேஷ்


இமயம், கேப்டன், வசந்த், ராஜ் உள்ளிட்ட சேனல்களிலும் ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் காயத்ரி புவனேஷ். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு, லெட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ -என்ற நடன பள்ளி தொடங்கி அதன் மூலம் பிட்னஸ், நடனம், யோகா போன்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறார் காயத்ரி புவனேஷ்.


தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது...


சினிமா சினிமா நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்?


புதிய படம், வரப்போகிற படம், டிரெய்லர், படக்காட்சிகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களே அதிகமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், சினிமா சம்பந்தமாக வெளியாகும் இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


ஏற்கனவே சீரியல்களில் நடித்த நீங்கள் இப்போது நடிக்காதது ஏன்?


கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி முதல் பாகத்திலும் 6 மாதம் நடித்த நான், பின்னர் குரங்கு கையில பூமாலை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தேன். இப்போது நான் எனது கேரியரை தொடங்கிய தொகுப்பாளினி இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது மட்டும்தான் பண்ண வேண்டும் என்பதில்லை, நடிப்பு, ஆங்கரிங், ரியாலிட்டி ஷோ என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்வேன். முக்கியமாக அப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எனக்கு ஸ்கோர் பண்ண வாய்ப்பு இருக்க வேண்டும். எனக்கு பிடித்திருந்தால் கிடைக்கிற வாய்ப்புகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்வேன்.


முக்கியமாக, ரியாலிட்டி ஷோக்களில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. காரணம், அதில் நமக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கிறது. சிவகார்த்திகேயன் போன்றவர்கள்கூட ரியாலிட்டி ஷோக்களில்தான் தங்களது திறமையை வெளிப்படுத்திதான் பிரபலமானார்கள். அதேபோல் பெப்ஸி உமாவும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி ஒரே நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த மாதிரி ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன்.


நீங்கள் நடத்தி வரும் நடனப்பள்ளி பற்றி சொல்லுங்கள்?


லெட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ -என்ற பெயரில் சென்னை அண்ணா நகரில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். இதில் மொத்தம் 140 பேர் நடன பயிற்சி பெறுகிறார்கள். சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருமே வருகிறார்கள். நடனம், பிட்னஸ், யோகா போன்ற கலைகள் இங்கே பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும், நடனத்தில் ஹிப்ஹாப் வகை நடன பயிற்சி கொடுத்து வருகிறேன். இந்த நடனம் உலகத்தரம் வாய்ந்தது. இது மேற்கத்திய நடனம் மட்டுமின்றி கிராமியம் மற்றும் பரதநாட்டியமும் சேர்ந்த புதுமையான கலவையாகும்.


அப்படியென்றால் நீங்கள், இந்த பள்ளி மூலமே ஜூனியர் சிங்கர் போன்று ஒரு நடன நிகழ்ச்சியை சேனலில் வழங்கலாமே?


இப்போதைக்கு நிறைய ஈவன்ட்ஸ் நடத்தி வருகிறேன். அதோடு சில சேனல் களுக்கு எனது பள்ளியில் நடக்கும் நடனம், யோகா நிகழ்ச்சிகளைத்தான் வந்து சூட் பண்ணி செல்கிறார்கள். அந்த அளவுக்கு எனது பள்ளி இப்போது பிரபல மாகி விட்டது. அதனால் எதிர்காலத்தில் இங்கு வரும் திறமையானவர்களை கொண்டு பெரிய அளவில் ஈவன்ட்ஸ் நடத்தும் ஐடியா இருக்கிறது. அதோடு போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன்.


சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் எந்தமாதிரி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?


சீரியல்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வேடங்களாக இருக்க வேண்டும். இப்படி செலக்டீவாகத்தான் நடிப்பேன்.


சமீபகாலமாக சீரியல்களில் பிரச்சினைகளை பயங்கரமாக காண்பித்து வருகிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


குழந்தைகளும் சீரியல்கள் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளாமல் சில சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சின்ன பிரச்சினைகளை எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி பெரிதாக காண்பிக்கிறார்கள். இந்த மாதிரி குடும்ப பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட அரைச்ச மாவையே தொடர்ந்து காட்டாமல், டெக்னாலஜி சம்பந்தமான கதைகளில் சீரியல் பண்ணலாம். குறிப்பாக, இந்தி சீரியல்களில் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் தொடர்ந்து ஒரேமாதிரியான பிரச்சினைகளில் சீரியல்களை பார்த்த நம்முடைய நேயர்களும் அந்த சீரியல்கள் பக்கம் திரும்புகிறார்கள்.


அவர்களை தடுத்த நிறுத்த வேண்டியது தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் முக்கிய கடமையாக உள்ளது. அதனால் புதுமையான முறையில் பர்பாமென்ஸை கொடுத்து நேயர்களை இழுக்க வேண்டும். குறிப்பாக, பெப்ஸி உமா, கட்டிய சேலை, நெற்றியில் வைத்த பொட்டை கூட நம்முடைய நேயர்கள் ரசித்தார்கள். அதனால் புதிதாக ஏதாவது செய்யும்போது அதன்பக்கம் திரும்பி விடுவார்கள். அதனால் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தங்களது எபோர்ட்டை போட வேண்டும். அப்படி தனிப்பட்ட முறையில் தனித்திறமைகள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும்போது நேயர்கள் நம் பக்கம் திரும்பி விடுவார்கள். அப்படி செய்தால் இந்தி சீரியல் மோகத்தை விரட்டியடித்து விட முடியும் என்கிறார் காயத்ரி புவனேஷ்.



நன்றி: தினமலர்

aanaa
29th July 2016, 11:04 PM
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160722140838824317.jpg
உழைத்தால் தான் சின்னத்திரையில் நிலைக்க முடியும்: ராதிகா


ராதிகா தயாரித்து நடிக்கும் வாணி ராணி 1000 எபிசோட்களை கடந்துள்ளது. தயாரித்து ஒளிபரப்பும் தாமரை தொடர் 500 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுடன் கொண்டாடினார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சின்னத்திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் நிறைய கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டதுல முக்கியமானது உழைப்பு. இங்கு உழைச்சிக்கிட்டே இருந்தா தான் ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியும். கொஞ்சம் அசந்தாகூட ஓரமா உட்கார வச்சிடுவாங்க. இத்தனை வருடம் நான் நிலைச்சு நிற்கிறேன்னா அதுக்கு உழைப்பைத் தவிர வேற காரணம் எதுவுமில்லை.


இப்போது சின்னத்திரை சீரியல்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. சங்கத்தின் மூலமா அதை தீர்க்க சம்பந்தப்பட்டவங்க முயற்சி எடுக்கணும். என் கணவர் நடிகர் சங்கத்துக்கு நிறைய உழைச்சார். கடைசியில அவருக்கு கிடைத்தது வேதனையும், மன உளைச்சலும் தான் அப்படி ஒரு நிலமை எனக்கு வேண்டாம் என்று தான் சங்கத்துலேருந்து ஒதுங்கிட்டேன். அதோட எனக்கு நிறைய வேலை இருக்கு. அதை பார்த்தால் போதும்னு இருக்கேன். இப்போது என் மகள் திருமணத்துல பிசியாக இருக்கேன் என்கிறார் ராதிகா.




நன்றி: தினமலர்

aanaa
18th August 2016, 12:54 AM
தனுஷின் பெரிய ரசிகை நான்!- தொகுப்பாளினி பிரியங்கா


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலகலப்பான தொகுப்பாளினியாக என்ட்ரியானவர் பிரியங்கா. அதைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நான் நடிகர் தனுஷின் பெரிய ரசிகை என்கிறார் அவர்.


தினமலர் இணையதளத்திற்காக பிரியங்கா அளித்த பேட்டி...
விஜய் டிவியில் நான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசித்து என்சாய் பண்ணி பங்கேற்று வருகிறேன். மேலும் நான் கலகலப்பான டைப் என்பதால் சக ஆங்கர்களை கேப் கிடைக்கும்போது கலாய்ப்பேன். அதேபோல் அவர்களும் என்னை கலாய்ப்பார்கள். அதனால் ஒர்க் பண்ற பீலே இல்லாமல் ஜாலியாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இப்போது கேப் கொடுக்கப்பட் டுள்ளது. அதனால் அடுத்தபடியாக கலக்கப்போவதுயாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருக்கிறேன்.


இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டீம் லீடராக இருக்கிறேன். ரொம்ப அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. அதை நானும் ஒரு ஆடியன்ஸ் கண்ணோட்டத்தில்தான் இருந்து ரசித்து வருகிறேன். அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள் என்றதுமே எனக்கு புதிய உற்சாகம் வந்து விடும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் எப்போது கலந்து கொள்வோம் என்று ஆர்வமாக காத்திருப்பேன். அச்சம் தவிர் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கலந்து கொண்டேன் பின்னர், கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் முதலில் ஆர்வமாகத்தான் சென்றேன். ஆனால் அங்கு சென்றபிறகுதான் அதில் உள்ள ரிஸ்க் தெரிந்தது. ஆனபோதும் பல எபிசோடுகளில் சிறப்பாக செயல்பட்டேன்.


மேலும், என்னை எனது பெற்றோர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது எப்படி உற்சாகப்படுத்தி வந்தார்களே, அதேபோல் கடந்த 6 மாதமாக எனது புகுந்து வீட்டிலும் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, எனது மாமியார் நான் படப்பிடிப்புக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்தால் என்னை தொந்தரவு செய்வதே இல்லை. ஓய்வெடுக்கட்டும் என்று விட்டு விடுவார். ஒரு மகளைப்போல என்னை கவனித்துக்கொள்கிறார். அந்த வகையில், எனக்கு புகுந்த வீட்டிலும் மாமியார் என்ற பெயரில் ஒரு அம்மா கிடைத்திருக்கிறார் என்பதில் பெரிய மகிழ்ச்சி. அதனால், விஜய் டிவியில் ஆங்கராக எனது பயணம் என்றென்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.


அவரிடத்தில், சமீபகாலமாக விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே? நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்? என்று கேட்டபோது,
சினிமாவைப்பொறுத்தவரை நான் நடிகர் தனுஷின் பெரிய ரசிகை. 3 படத்தில் இருந்து அவரது ரசிகையாகி விட்டேன். மேலும், அவரது நடிப்பில் 3 படம் மட்டுமின்றி, ஆடுகளம், பொல்லாதவன், வேலையில்லா பட்டதாரி என பல படங்கள் பிடிக்கும். கோலிவுட்டில் நடிகராகி, பாலிவுட், ஹாலிவுட் என்று இப்போது பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உணர்ந்து முழுமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான நடிகர் அவர். அவருடன் ஒரு தங்கை வேடத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தாலும் நடிப்பேன். கலைப்பயணத்தில் இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. அதனால் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதிர் காலத்தில் அமையும் என்று நம்புகிறேன் என்கிறார் பிரியங்கா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160814081906445755.jpg



நன்றி: தினமலர்

aanaa
24th August 2016, 06:37 AM
தொகுப்பாளினி ஆனது ஏன்? ரோஜா விளக்கம்


தமிழ், தெலுங்கு மொழியில் 100 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர் ரோஜா. மாநிற அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். தனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் அப்படியே சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார். லக்கா திக்கா, ஜீன்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது தெலுங்கு சேனலில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற பஞ்சாயத்து நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்தி தொகுப்பாளினி ஆனது ஏன் என்பது பற்றி ரோஜா கூறியதாவது:


தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தென்னிந்தி சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்து விட்டேன். ஒரு பெண் கடைசி வரை ஹீரோயினாக தொடர முடியாது. அடுத்த கட்டமாக அம்மா, அண்ணி, அக்கா கேரக்டர்கள்தான் கிடைக்கும். சினிமாவின் உச்சத்தை தொட்டுவிட்டு ஏன் மிச்சத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் சின்னத்திரை பக்கம் வந்தேன். சில படங்களில் வில்லியாக நடித்தேன். அது ஒரு மாற்றாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து வில்லியாக நடிக்க விருப்பம் இல்லை. அதனால்தான் டி.வி.பக்கம் வந்துவிட்டேன்.


சின்னத்திரை மூலமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் சென்று வருகிறேன். இது ஒரு புதுமையான அனுபவம். வெவ்வேறு மனிதர்களை சந்திக்கிறேன். வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டத்தையும், தோற்றவர்களின் வலியையும் நேரடியாக பார்க்கிறேன். இது வாழ்க்கைக்கு நிறைய கற்றுத் தருகிறது. என்கிறார் ரோஜா.



நன்றி: தினமலர்

aanaa
26th August 2016, 07:10 PM
திறமையால் உயரமான பன்மொழி நடிகர் கிங்காங்கு


வணக்கம் கிங்காங்கு அவர்களே! முதலில் உங்கள் அப்பா – அம்மா பெயர், எப்படிப் படித்தீர்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களைக் கூறுங்களேன்!
என்னுடைய சொந்தப் பெயர் சங்கர். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பக்கத்தில் உள்ள வரதராசபுரம் எனும் சிற்றூர். என் அப்பா பெயர் ஏழுமலை. அம்மா பெயர் காசியம்மாள். என் உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர், தங்கைகள் மூன்று பேர். அக்கா பெயர் மகாதேவி, தங்கை பெயர் தேன்மொழி. இன்னொரு தங்கையின் பெயர் சரளா. கடைசித் தங்கையின் பெயர் சித்திரா. நான் ஐந்தாவது வரைதான் படித்திருக்கிறேன். எங்கள் ஊரான வரதராசபுரத்திலிருந்து பள்ளிக்குப் போக வேண்டிய ஊர் தென்னாத்தூர். ஒன்றரைப் புதுக்கல் தொலைவு. நடந்தே போவேன். வழியெல்லாம் வயலாக இருக்கும். நாங்கள் ஐந்தாறு பிள்ளைகள் சேர்ந்து ஒன்றாகப் போவோம். அப்படித்தான் ஐந்தாவது வரை படித்தேன். அப்பொழுதுதான் என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர், “படித்து என்ன செய்யப் போகிறாய்? நீ படித்து என்ன ஆட்சியராகவா ஆகப் போகிறாய்? உன்னுடைய உயரத்துக்கு நீ திரைப்படத்தில் நடிக்கப் போனால் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். முயற்சி செய்!” என்று முதன் முதலில் கூறினார்.
?] முன்பெலலாம் நாடகம் மூலம்தான் திரைப்படத்திற்கு வந்துள்ளனர். நீங்கள் எப்படி..?
நானும் அப்படித்தான் வந்தேன். ஒருமுறை பக்கத்து ஊரில் ஒருவர் நாடகம் நடத்தினார். ஓரங்க நாடகம் மாதிரி நடத்துவார் அவர். “அந்த நாடகத்தில் நடிக்கிறாயா” என்று என்னை வந்து கேட்டார். நான், “எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. என் அம்மா அப்பாவை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினேன். அப்பா அம்மாவிடம் வந்து கேட்டார்கள். அவர்கள் மிரண்டு “இல்லை. எங்கள் பிள்ளையை நாங்கள் எங்கும் வெளியே அனுப்ப மாட்டோம். வேண்டா!” என்று சொன்னார்கள். அதற்கு அந்த நாடகம் நடத்தும் முதலாளி, “ஒன்றும் அஞ்ச வேண்டியதில்லை. நான் பாதுகாப்பாகக் அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் அழைத்துவந்து வீட்டில் விட்டு விடுவேன். நாடகத்தில் நடிப்பது நன்றாக இருக்கும்” என்று சொல்லி எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில்தான் நடித்துக் கொண்டிருந்தேன். நாடகங்களில் பொதுவாக நான் கோமாளிப் பாத்திரம் ஏற்று நடிப்பது வழக்கம்.
?] அப்படி எத்தனை நாடகங்கள் நடித்திருப்பீர்கள்?
நாடகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடித்தேன். ஐந்நூறு நாடகங்களுக்கு மேல் இருக்கும். அப்பொழுது மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு. நான் செய்த நகைச்சுவையையெல்லாம் பார்த்து மக்கள் நன்றாகப் பாராட்டினார்கள்; வாழ்த்தினார்கள். அப்பொழுதுதான் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் “நீ திரைப்படத்தில் நடிக்கச் சென்றால் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். முயற்சி செய்!” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சென்னைக்கு வந்து, திரைப்பட நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கி, நிறைய இயக்குநர்களைச் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு முதன் முதலில் வாய்ப்பளித்துத் திரையுலகுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் என் ஆசான் ‘கலைப்புலி’ திரு.சேகரன் அவர்கள். படம் ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’.
?] நீங்கள் வாய்ப்பு கேட்டவுடன் கொடுத்துவிட்டாரா?
நான் போய் முதலில் அவரிடம் வாய்ப்பு கேட்டபொழுது, “உனக்குத் தெரிந்தது என்ன?” என்று கேட்டார். நான் “நன்றாக ஆடுவேன்” என்று தெரிவித்தேன். அந்தப் படத்தின் பாடலை ஓட விட்டார். ஏதோ எனக்குத் தெரிந்ததை ஆடினேன். “மிகவும் நன்று” என்று பாராட்டினார். நான் நடிகர் சாக்கி சான் அவர்களைப் போல சண்டைக்கலை வித்தைகள் செய்வேன். அவரைப் போலவே தாவுவது குதிப்பது போன்றவற்றைச் செய்வேன். அவற்றையும் செய்து காட்டினேன். அனைத்தையும் பார்த்துப் பாராட்டியவர், மறுநாளே படப்பிடிப்புக்கு வந்து விடுமாறு கூறினார்.
?] உங்களால் மறக்கமுடியாத அந்த முதல் படிப்பிடிப்புக்காட்சிபற்றிக் கூறுங்களேன்!
மறுநாள் ஒரு பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. “என்ன சின்னம்?… பானைச் சின்னம்! செயிக்கிறது?… பானைச் சின்னம்!” இதுதான் அந்தப் பாடல் வரி. அந்தப் பாடலில் இந்த வரி வரும்பொழுது நான் பானைக்குள்ளிருந்து வெளியில் வருவேன், முட்டையிலிருந்து கோழி வருவது போல. அதுதான் என்னுடைய அறிமுகக் காட்சி. அதன் பின் இயக்குநர் கலைப்புலி சி.சேகரனுக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. அதனால், பாதிப் படம் எடுத்து முடிக்கப்பட்டிருந்த நிலையிலும் எனக்காக நான்கைந்து காட்சிகள் புதிதாகப் படம் பிடித்தார். 1988இல் பொங்கல் வெளியீடாக வந்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
?] தொடர்ந்து பட வாய்ப்பு அவரே கொடுத்தாரா?
அதன் பின் அதே கலைப்புலி சி.சேகரன் அவர்கள் ‘காதல் பூனைகள்’ என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் ஆட்டம், சண்டைக் காட்சி, நகைச்சுவை என்று பல காட்சிகள் அளித்து என் திறமையை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் இடையாட்டம்(தடையாட்டம்-Break Dance) அது, இது என்று பல ஆட்டங்கள் ஆடினேன்; சண்டை இட்டேன்; நகைச்சுவை செய்தேன். அது நன்றாக எடுபட்டது. அதன் பிறகு அவர் ‘சமீன் கோட்டை’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் நான் இரட்டைப் பாத்திரம் ஏற்று நடித்தேன். அஃது ஒரு பேய்ப் படம். அது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நன்றாக ஓடியது. இப்படிக் கலைப்புலி சேகரன் அவர்கள் எந்தப் படம் எடுத்தாலும் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுப்பார். அவருக்கு ‘அகரமுதல’ இதழ் மூலமாக நான் நன்றி சொல்கிறேன்!
அப்புறம் இந்தக் கிங்காங்கு என்கிற பெயர் எனக்கு எப்படி வந்தது என உங்களுக்குக் கேட்கத் தோன்றும். கலைப்புலி சேகரன் அவர்கள்தாம் இந்தப் பெயரை எனக்குச் சூட்டினார். நான் நடிக்க வந்தபொழுது சங்கர் என்ற பெயர் மிகவும் வழமையாக இருப்பதாகச் சொல்லி வேறு பெயர் சூட்டத் திட்டமிடப்பட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்ல, கலைப்புலி சேகரன் அவர்கள்தாம் கிங்காங்கு என்று இந்தப் பெயரைச் சூட்டினார். தவக்களை, நண்டு என்றெல்லாம் ஏற்கெனவே பெயர்கள் சூட்டி விட்டார்கள் என்பதால் தனித்துத் தெரிய வேண்டும், அதே நேரம் நாகரிகமான பெயராகவும் இருக்க வேண்டும் என்று சிந்தித்து எனக்கு இந்தப் பெயரை அவர் சூட்டினார். குறிப்பாக, கிங்காங்கு என்று அவர் ஏன் பெயர் சூட்டினார் என்றால், கிங்காங்கு என்று மற்போர் வீரர் ஒருவர் இருந்தார். மிகவும் பேருருவமாக (பிரம்மாண்டமாக) இருப்பார். முழுக் கோழியை அப்படியே சாப்பிடுவார். பத்துப் பதினைந்து பச்சை முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவார். பெரிய பயில்வான் அவர். அவர் பெயரை எனக்கு ஏன் வைத்தார்கள் என்றால், பெயருக்கும் ஆளுக்கும் தொடர்பே இல்லாமல் இப்படி முரண்பாடாகப் பெயர் வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்பதற்காகத்தான். ஆடுவதற்காக நிறைய மேடை நிகழ்ச்சிகளுக்கு நான் போவதுண்டு. அப்பொழுது ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் “இப்பொழுது கிங்காங்கு அவர்கள் உங்கள் முன்னிலையில் நடனமாடுவார்” என்று. நான் வந்து நிற்பேன். ஆட்கள் தேடுவார்கள். ‘என்ன?… கிங்காங்கு என்றார்கள். ஆளையே காணோமே’ என்று. அப்பொழுது என்னை நானே மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வேன். உடனே எல்லாரும் சிரித்துக் கைத்தட்டி மகிழ்வார்கள்.
?]எந்தப்படத்தின் மூலம் நீங்கள் வெகுவாகப் புகழ் பெற்றீர்கள்?
மக்களிடம் என்னை வெகுவாகக் கொண்டு சேர்த்த படம் இரசினிகாந்து அவர்களின் ‘அதிசயப் பிறவி’. அதுதான் மக்களிடம் கிங்காங்(கு) என்ற பெயரைக் கொண்டு சேர்த்தது. அந்தப் படத்தில் இரசினிகாந்து அவர்கள் கட்டிலில் படுத்திருப்பார். நான் இடையாட்டம் ஆடுவேன். இதுதான் காட்சி. அதைப் படம் பிடிக்கும் முன் இரசினிகாந்து அவர்கள் புதுமையாக ஒன்று சொன்னார். “ஒலிநாடாவை நான் ஓட விட்டுக் கொண்டே இருப்பேன். நீ ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். சட்டென நான் ஒலிநாடாவை நிறுத்துவேன். அப்பொழுது நீ அப்படியே பொம்மை போல அசையாமல் நிற்க வேண்டும். மீண்டும் நான் விட்ட இடத்திலிருந்து ஓட விடுவேன். நீயும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஆட வேண்டும்” என்றார். நானும் அதே போல் ஆடினேன். அதைப் பார்த்து விட்டு அருமையாக இருக்கிறது என்று அவர் பாராட்டினார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், அந்தப் படத்தில் அவர் ஆசான்; நான் அவருக்கு அடியவன்(சீடன்) என்றுதான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இரசினிகாந்து அவர்கள் அதையும் மாற்றினார். “நீ ஆசானாக நடி; நான் அடியவனாக நடிக்கிறேன்” என்றார். அதுவும் நன்கு எடுபட்டது. படத்தில் “குருவே! குருவே!” என்று அவர் என்னைக் கூப்பிடுவார். அவையெல்லாம் அவர் சொன்ன திட்டங்கள்தாம். அவர் எவ்வளவு பெரிய உச்ச நடிகர்! அவர் இப்படியெல்லாம் நடிக்க முன்வருவது உண்மையிலேயே பெரிய மனப்பாங்கு! நடிகர் இரசினிகாந்து அவர்களுக்கும் அவருடன் இப்படியெல்லாம் நடிக்க வாய்ப்பளித்ததற்காக அந்தக் கடவுளுக்கும் இந்த நேரத்தில் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] உங்கள் புகழுக்கு வெளிநாட்டு அன்பர்களும் காரணம் என்று கேள்விப்பட்டுள்ளோம். சரிதானே!
ஆம். உண்மைதான். நானே கூற நினைத்தேன். ‘அதிசயப் பிறவி’ படத்தில் வரும் அந்த இடையாட்டக் காட்சியை இலண்டன் அன்பர் ஒருவர் உம் குழல்(you tube) -இல் வெளியிட்டு விட்டார். இதுவரை ஒன்றேகால் கோடிப் பேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். இலண்டன், கனடா, அமெரிக்கா, ஆத்திரேலியா போன்ற இடங்களில் அது மிகவும் புகழ் பெற்றது. இளைய உச்சமீன் கிங்காங்கு (Little Super Star King Kong) என்று விசையைத் தட்டினால் உம் குழல் (you tube)-இல் அதைக் காணலாம். அதைப் பார்த்து விட்டு இலண்டனிலிருந்து பி.ஒ.நி.(பி.பி.சி.) தொலைக்காட்சியினர் என்னை அணுகி “உங்களைப் பற்றி ஆவணப் படம் ஒன்று எடுக்க விரும்புகிறோம். உங்களுக்கு ஒப்புதலா” என்று கேட்டார்கள். கண்டிப்பாகச் செய்யலாம் என்றேன். அதாவது, இலண்டனில் நகைச்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வரும் (உ)ருமேசு என்பவர் என்னை வந்து சந்தித்து, அந்த ‘அதிசயப் பிறவி’ பட இடையாட்டத்தை எப்படி ஆடினேன் என்று கேட்பது போலவும் அதற்கு நான் விடையளிப்பது போலவும், பின்னர், அவர் திரைப்படத்தில் கதைத்தலைவனாகத் (கதாநாயகன்) தான் நடிக்க இருப்பதாகத் தெரிவித்து எப்படி நடிக்க வேண்டும், எப்படிச் சண்டை இட வேண்டும், எப்படி ஆட வேண்டும் எனவெல்லாம் கேட்பது போலவும் அவற்றைப்பற்றியெல்லாம் நான் அவருக்குக் கற்பிப்பது போலவும் படமாக்கினார்கள். அது மிகவும் புகழ் பெற்றது. ‘இலண்டன் உருமேசு’ என உம் குழல்(you tube) -இல் தேடினால் அந்த ஆவணப் படத்தைப் பார்க்கலாம். அந்த ‘அதிசயப் பிறவி’ப் பட ஆட்டம் அந்த அளவுக்கு உலகெங்கும் சென்று சேர்ந்தது. அதற்குக் காரணமான அந்தப் பட இயக்குநர் எசு.பி.முத்துராமன் அவர்கள், இரசினி அவர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] பிற மொழிப்படங்களில் நடித்துள்ளீர்களா?
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிப் படங்களில் நடித்திருக்கிறேன். எல்லா நடிகர்களுடனும் நடித்தாகி விட்டது. இதுவரை ஐந்து உச்ச நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன். தமிழ் உச்ச நடிகர் இரசினிகாந்து, தெலுங்கு உச்ச நடிகர் சிரஞ்சீவி, கன்னட உச்ச நடிகர் சிவராசு குமார், இந்தி உச்ச நடிகர் சாருக்கான்… இன்னொரு உச்ச நடிகருடனும் நடித்திருக்கிறேன். அவர் யாரெனச் சொன்னால் நீங்கள் எல்லாருமே ஒரு மாதிரிப் புன்னகைப்பீர்கள். அவர் வேறு யாருமில்லை பவர் ஃச்டார் சீனிவாசன். அவருடனும் நடித்திருக்கிறேன். உண்மையிலேயே இந்த வாய்ப்புகளுக்காக நான் கடவுளுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்!
?] பிற மொழிப்படம் ஒன்றில் வரும் குறிப்பிடத்தக்கக் காட்சியைக் கூறுங்களேன்!
சாருக்கான் அவர்களின் ‘சென்னை எக்சுபிரசு’ படத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் வழி தெரியாமல் சாருக்கான் காட்டுக்குள் வந்து விடுவார். என்னிடம்தான் வழி கேட்பார். அவர் மொழி எனக்குப் புரியாது; நான் பேசுவது அவருக்குப் புரியாது. அவர் பேசியும் செய்கையிலும் நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது எனக் கேட்பார். நான் வெறுமே நாக்கைத் தக் தக் எனத் தட்டித் தட்டிப் பேசி அவருக்கு விடையளிப்பேன். அஃது அவருக்குப் புரியாது. கடைசியில், தலையிலடித்துக் கொண்டு போய் விடுவார். அந்தக் காட்சி உலகம் முழுவதும் நன்கு புகழ் பெற்றது. சாருக்கான் மிக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். நல்ல மனிதர்! அவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அந்தப் பட இயக்குநர் உரோகித்து செட்டி நகைச்சுவையை மிகவும் விரும்புபவர். எந்த வகையான நகைச்சுவை நடிப்பையும் விரும்பிப் பார்ப்பவர். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
?] நீங்கள் குள்ளமாக இருப்பதை நினைத்து என்றாவது வருந்தியதுண்டா?
கண்டிப்பாக வருந்தியிருக்கிறேன். பள்ளிக்குச் செல்லும்பொழுது எல்லாப் பிள்ளைகளும் என்னைக் கிண்டல் செய்வார்கள். நிறைய அழுதிருக்கிறேன். ஒரு காலக்கட்டத்திற்குப் பின், “நாம் எதற்காக அழ வேண்டும்? கடவுள் நம்மை அப்படிப் படைத்து விட்டான். ஆனால், அப்படிப் படைத்த கடவுளே நமக்கு ஏதாவது ஒரு திறமையையும் அளித்திருப்பான். நமக்கு என்ன வரும்? நடனம். அதை வைத்து நாம் முன்னேறுவோம்” என்று நினைத்து என் குறைபாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு என் திறமைகளை வெளியே கொண்டு வந்தேன். நான் இரசினிகாந்த் போல ஆடுவேன்; கமலகாசன் போல ஆடுவேன்; விசயகாந்து போல ஆடுவேன்; எம்ஞ்சியார், சிவாசி ஆகியோரைப் போலவும் ஆடுவேன். ஒரே பாட்டுக்கு வெவ்வேறு நடிகர்கள் ஆடினால் எப்படி இருக்கும் என்று முதன் முதலில் ஆடிக் காட்டி அப்படி ஒரு நாட்டியமுறையை அறிமுகப்படுத்தியதே நான்தான். இப்பொழுது அதைப் பலரும் செய்கிறார்கள். ஆனால், அந்தக் கருத்துருவாக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவன் நான்தான். அது மக்கள் மனதில் நன்றாகச் சென்று சேர்ந்தது.
?] நாட்டியக்குழு எதுவும் நடத்துகிறீர்களா?
இப்பொழுது நான் ‘சிறப்பான நாட்டியம்’(Best Dance) என்றொரு நடனக்குழுவை நடத்தி வருகிறேன். அதில் முப்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதன் மூலம் நடனம், பல்கலை நிகழ்ச்சிகள் (Variety Show) போன்றவை நடத்தப் பெறுகின்றன. அதில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்திக் காட்ட நடிகர்களும் வருவதுண்டு; மாற்றுத் திறனாளிகளும் அந்தக் குழுவில் உண்டு. ஒரு கால் இல்லாதவர் நடனம் ஆடுகிறார். இரண்டு கைகளும் இல்லாதவர் அயல்முரசு(Drums) இசைக்கிறார். பார்வையற்றவர் புல்லாங்குழல் இசைக்கிறார். இப்படித் திறமையான மாற்றுத் திறனாளிகள் பலர் என் குழுவில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
?} வெறும் ஆட்டம்மட்டும்தானா?
ஆட்டம்போல நகைச்சுவையிலும் முயன்றேன். நாம் உண்மையான வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதையே நகைச்சுவையாக்கி எனக்கு ஏற்றபடி எழுத்தாக்கம் செய்து பதினைந்து நிமிட நிகழ்ச்சியாக மேடையேற்றுவேன். உடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து அதைச் செய்வதுண்டு. அதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, நாம் இப்படிப் பிறந்து விட்டோமே என்று ஒருபொழுதும் எண்ணக் கூடாது! மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்லக்கூடியது அதுதான். நம்மிடம் என்ன இருக்கிறதோ, நம்மிடம் உள்ள திறமை எதுவோ அதை நாம் வெளிப்படுத்த வேண்டும்! கவலையே படக்கூடாது! கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைக் கண்டிப்பாகத் திறப்பார்!
?] நீங்கள் எத்தனை நாடகங்கள், திரைப்படங்களில் நடித்திருப்பீர்கள்?
தனிப்பட்ட முறையிலும் நான் இதுவரை ஐயாயிரம் ஆறாயிரம் மேடை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கிறேன். தமிழ்நாடு மட்டுமில்லை, இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பல வெளிநாடுகளுக்கும் போயிருக்கிறேன். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், தோகா, அபுதாபி, மசுகட்டு இப்படிப் பல வெளிநாடுகளுக்கு மேடை நிகழ்ச்சிகளுக்காகச் சென்றிருக்கிறேன். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறேன்! அதே போல் திரைப்படங்களிலும் இதுவரை 255 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.
இன்னொரு குறிப்பிடத்தக்க தகவல் என்னவெனில், 2009ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் கையால் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருதை நான் பெற்றிருக்கிறேன். மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வந்தால் அவர்களைப் பாராட்டி நடுவண் அரசு விருது வழங்குகிறது. அந்த விருது எனக்கு அளிக்கப்பட்டது. இந்த விருது எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் நடிகர் நெப்போலியன். அவர்தாம் அப்பொழுது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அவருக்கும், அந்த விருது எனக்குக் கிடைக்க உறுதுணையாயிருந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதா?
இல்லை. அஃது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். உங்களைப் போன்றவர்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும்.
நான் பிறந்தபொழுது என் பெற்றோர் “நம் மகன் இப்படிப் பிறந்து விட்டானே” என்று என்னை நினைத்து மிகவும் வருந்தினர். ஆனால், இப்பொழுது அவர்கள் அதை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்படி எந்த ஒரு கவலையும் ஏற்படாதவாறு நான் அவர்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறேன். மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் பெற்றோர் மிகவும் விரும்பினர். நான் தொடர்ந்து மறுத்து வந்தேன். “எனக்கு யாரம்மா பெண் கொடுப்பார்கள்? வேண்டா! விட்டு விடுங்கள்” என்றேன். ஆனால், அவர்கள் விடவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பெண் தேடி, அதன் பின் தொலைவான (தூரத்து) உறவில் அத்தை முறை உள்ள ஒருவரின் மகளைப் பார்த்து மணமுடிக்க ஏற்பாடு செய்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அவருடைய ஒப்புதலைக் கேட்டு அவரை மணம் புரிந்தேன். என் மனைவி பெயர் கலா. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இல்லத்தரசியாக உள்ளார். எங்களுக்கு மகள் இருவர், மகன் ஒருவர். மூத்த மகள் பெயர் கீர்த்தனா; இரண்டாவது மகள் பெயர் சக்திபிரியா; மூன்றாவதாகப் பிறந்த மகன் பெயர் துரைமுருகன். அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
?] உங்கள் மனைவி உங்களை மணக்க முடிவெடுத்தது பற்றிச் சொல்லுங்களேன்!
திருமணத்துக்கு முன்பே நான் அவரிடம் கேட்டேன்! “எந்த அடிப்படையில் என்னை மணந்து கொள்வதாக முடிவெடுத்தாய்? பெற்றோர் சொல்கிறார்கள், உடன் பிறந்தவர்கள் சொல்கிறார்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள் என இப்படி ஒரு முடிவுக்கு வந்தாயா?” என்று கேட்டதற்கு, “இல்லை. நீங்கள் நடிக்கும் படங்களைப் பார்த்தேன். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தேன்…
?] தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறீர்களா?
ஆம்! அப்பொழுது ‘என்னருமை(my dear) பூதம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அதை என் மனைவி அப்பொழுது நாள்தோறும் பார்ப்பாராம். அன்றாடம் என்னைப் பார்த்து என் மீது ஓர் அன்பு, நேசம். “அதனால்தான் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். ஆக, அப்படி விருப்பப்பட்டு அவர் என்னை மணந்து கொண்டார்.
?] உங்கள் பிள்ளைகளுடன் படிப்பவர்கள் உங்களைப் பார்க்கும்பொழுது என்ன சொல்கிறார்கள்? கிண்டல் செய்கிறார்களா அல்லது நடிகர் என மதிப்புக் கொடுக்கிறார்களா?
திரைப்பட நடிகர் என மதிப்பாகத்தான் பேசுகிறார்கள். என் மகள் படிக்கும் பள்ளிக்கு நான் போவதுண்டு. உடனே எல்லாரும் ஓவென மகிழ்ச்சிக் கூச்சலிடுவார்கள். பிறகு என் மகள் வந்து “நாங்கள் உன் அப்பாவைப் பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி!” என்று அவர்கள் சொன்னதாகத் தெரிவிப்பார்.
?] இப்படிக் கேட்கக்கூடாதுதான்; இருந்தாலும் திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகள் கொண்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதற்காக இதைக் கேட்கிறேன். உங்கள் பிள்ளைகள் எல்லாரும் இயல்பான உயரம் கொண்டிருக்கிறார்களா?
பிள்ளைகள் மட்டுமில்லை, என்னைத் தவிர என் வீட்டில் எல்லாரும் இயல்பான உயரம்தான்.
?] நாட்டியக் குழு நடத்துகிறீர்களே அதன் மூலம் தொண்டு, உதவி, நன்கொடை இப்படி ஏதேனும் செய்ததுண்டா?
ஓ! செய்திருக்கிறேன். ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றுக்காக இலவயமாக நிகழ்ச்சிகளெல்லாம் நான் நடத்திக் கொடுத்ததுண்டு. ஆதரவற்றோர் இல்லத்துக்காக, அறக்கட்டளைகளுக்காக நடத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு நான் பணம் வாங்குவதில்லை. அது நுழைவுச்சீட்டு வெளியிட்டு நடத்தப்படும் மேடை நிகழ்ச்சியோ, அவர்களுக்கென இருக்கும் அலுவலகத்துக்குள் நடத்தப்படும் ஆண்டு விழாவோ அரிமா சங்கம் போன்றோர் மூலமாக நடத்துவதோ. எப்படியாக இருந்தாலும் ஆதரவற்றோர் இல்லங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கான நிகழ்ச்சி என்றால் நான் இலவயமாக நடத்திக் கொடுத்து விடுவேன்.
?] திரையுலகில் உங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள்?
அவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்களே!
?] அவர்களுக்கென உதவி செய்யக் குழு மாதிரி ஏதேனும் உண்டா?
இருக்கிறது. வைத்திருக்கிறார்கள். எல்லாரும் நம் நண்பர்கள்தாம். ஆனால், எனக்கு அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை.
?] நீங்களே ஏன் அப்படி ஒரு சங்கத்தை மாற்றுத் திறனாளிக் கலைஞர்களுக்கெனத் தொடங்கக்கூடாது?
அது தனி மனிதர்கள் செய்யக்கூடியது இல்லை. எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து அரசிடம் முறையாக விண்ணப்பித்து அரசு ஏற்பிசைவுடன்(அங்கீகாரத்துடன்) நடத்த வேண்டும். கண்டிப்பாக அப்படி ஒரு சங்கம் அமைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு முன்பும் சிலர் இது பற்றிக் கூறியிருக்கிறார்கள். கண்டிப்பாக இதற்கென ஆட்களைத் திரட்டி ஆவன செய்ய வேண்டும்.
?] திரைப்படங்களில் குள்ளமாக இருப்பவர்களை, மாற்றுத் திறனாளிகளைக் கிண்டல் செய்வது போலக் காட்சிகள் நிறைய வருவதுண்டு. அப்படி ஏதேனும் காட்சிகள் வரும்பொழுது நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறீர்களா?
அது மாதிரி நிறையச் செய்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்த வரை, மக்களை மகிழ்விப்பதுதான் என் தொழில். நாம் சொல்வதைக் கேட்டு, நம் மூலமாகவும் நான்கு பேர் சிரிக்கிறார்கள் என்றால் அதுவே கடவுள் இட்ட பிச்சை. தனிப்பட்ட முறையில் யார் மனதையும் நாம் புண்படுத்தக் கூடாது. மற்றபடி, திரைப்படங்களில் அப்படிச் செய்கிறார்கள் என்றால் அது மக்கள் சிரிப்பதற்காக.
?] நடிப்பு தவிர திரைத்துறையில் இயக்கம், படத்தொகுப்பு என வேறு பணிகள் எதையாவது செய்ய வேண்டும் என்றோ திரைத்துறை சார்ந்து வேறு ஏதாவது விருப்பமோ உண்டா?
ஆம்! எனக்கு அப்படி இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று, படம் இயக்க வேண்டும். இரண்டாவது, ஒரு படத்திலாவது கதைத்தலைவனுக்கு எதிரியாக (வில்லனாக) நடிக்க வேண்டும். எப்படி என்று கேட்டால், பாதிப் படம் வரை எதிரி யார் என்பதே தெரியக்கூடாது. ‘ஊமை விழிகள்’ இரவிச்சந்திரன் போல. கடைசி இருபது நிமிடங்களில் பார்ப்பவர்களைக் கலக்கி விட வேண்டும்!
?] நீங்களே கதை சொல்கிறீர்களே! அப்படி ஒரு படத்தை நீங்களே எடுத்து விடுங்களேன்!
பார்ப்போம்! செய்யலாம்! அதற்கு ஒரு நேரம் வர வேண்டும்! (அகரமுதல இதழ் சார்பில் அதற்கு வாழ்த்து சொல்ல) எல்லாம் உங்கள் வாழ்த்துப்படி!


?] உங்களை வைத்து, உங்களைப் போல் குட்டையான உருவம் கொண்டவர்களையே முழுக்க முழுக்க வைத்துச் சிறுவர் படம் கூட எடுக்கலாமே! ஏற்கெனவே நடிகர் சித்திரகுப்தன் அவர்களை வைத்து மலையாளத்தில் அப்படி ஒரு படம் வந்தது இல்லையா?
ஆம்! ‘அற்புதத் தீவு’ என்று ஒரு படம். கேரளாவில் உண்ட பக்குரு என்பவர் இயக்குநர் வினயனை வைத்துத் துணிச்சலாக ஐந்நூறு, ஆயிரம் குள்ள மனிதர்களை ஒருங்கிணைத்து ஒரு படம் எடுத்தார். தமிழில் அப்படி யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. மேலும், எங்களைப் போன்றவர்கள் இதுவரை நகைச்சுவையாகத்தான் நடித்திருக்கிறோம். மற்றபடி, எங்களுக்கு என்னென்ன இடர்ப்பாடுகள் இருக்கின்றன? எங்களுக்குள் உள்ள உணர்வுகள் என்ன? வெளியில் போனால் நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? இவற்றையெல்லாம் படத்தில் சொல்ல வேண்டும். அப்படி ஒரு படம் எடுக்கப்பட வேண்டும்.
?] நடிப்பு தவிர உங்களுக்கென வேறென்ன தொழில் இருக்கிறது? திரையுலகில் சில சமயம் வாய்ப்புகள் நிறைய வரும்; சில சமயம் குறைவாக வரும். நிலையாக மாத வருமானம் தரும்படி வேறென்ன இருக்கிறது?
அப்படி எதுவும் இல்லை. வேறு எந்தத் தொழிலும் எனக்கு ஒத்து வராது. கடை ஒன்று வைத்து நடத்தி வந்தேன். ஆனால், அது சரிபட்டு வரவில்லை. கடையில் போய் உட்கார்ந்து கொண்டு பட வாய்ப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கையாள முடியவில்லை.
?] உங்கள் உடன் நடிக்கும் மாற்றுத் திறனாளிக் கலைஞர்கள் இன்ன பிற நடிக – நடிகைகள் ஆகியோர் உங்களிடம் நன்கு பழகுவார்களா?
எல்லாரும் நன்றாகப் பழகுவார்கள், பேசுவார்கள். எல்லா நடிக – நடிகையரும் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.
?] ஏனெனில், திறமைதானே ஒருவரின் உண்மையான உருவம்!
ஆம்! திரைப்பட நடிகர் கிங்காங்கு போகிறார் என்றதும் யாரோ ஒருவர் குள்ளமாகப் போய்க் கொண்டிருக்கிறாரே என்றுதான் நினைப்பார்கள். ஆனால், நடித்த திரைப்படங்களைப் பார்த்த பிறகு “அதோ அந்தத் திரைப்படத்தில் நடித்தவர் போகிறாரே!” என்று பார்த்து மகிழ்வார்கள். அப்பொழுது அந்தக் ‘குள்ளம்’ என்ற சொல் மறைந்து விடும். ‘நடிகர்’ என்பது மட்டும்தான் நிற்கும்.
தன் திறமையால் உயரம் எய்திய கிங்காங்கு பல்துறைக் கலைஞராக மிளிர்கிறார். தம் நேரத்தை அகரமுதல இதழுக்கு ஒதுக்கியதற்கு நன்றி. அவர் மேலும் உயர்வும் புகழும் பெற அகரமுதல இதழ் வாழ்த்துகிறது.

aanaa
31st August 2016, 07:32 AM
மணிமேகலைக்கு சிறந்த தொகுப்பாளினி விருது


மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை. பாட்டு கேட்பதற்காக போன் பண்ணுகிறார்களோ இல்லையோ இவருடன் பேசுவதற்காக போன் பண்ணி பாட்டு கேட்கிற இளவட்டங்கள் அதிகம். இவர் பெயரில் பேன் கிளப்பே இருக்கிறது. தற்போது மணிமேகலைக்கு வேர்ல்ட் இண்டக்ரேஷன் கவுன்சில் என்ற அமைப்பு சிறந்த தொகுப்பாளினி விருதை வழங்கி இருக்கிறது. இந்த அமைப்பு நடத்திய விழாவில் கவர்னர் ரோசய்யா இந்த விருதை மணிமேகலைக்கு வழங்கினார்.


இதுகுறித்து மணிமேகலை கூறியிருப்பதாவது:
பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழையும்போதே மீடியாவிற்குள்ளும் வந்து விட்டேன். முதல் பணியே தொகுப்பாளினி தான். இந்த வேலை எனக்கு பிடித்து விட்டதால் வேறு பணி பற்றி யோசிக்காமல் இதில் தொடர்கிறேன். படித்துக் கொண்டே தொகுப்பாளியாக இருக்க வீட்டிலும் சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். அந்த சுதந்திரம்தான் என்னை சிறந்த தொகுப்பாளினி விருது வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது. தொடர்ந்து மகிழ்ச்சியோடு எனது பணியை தொடர்கிறேன் என்கிறார் மணிமேகலை.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160826104007408581.jpg

நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:21 PM
சீரியல் இயக்குனராகிறார் சுபத்ரா


தேவதை, கைராசி குடும்பம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் சுபத்ரா. கைராசி குடும்பத்தில் அண்ணி கேரக்டரில் அசத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் தனது அடுத்த அவதாரத்தை எடுக்க இருக்கிறார். அது எழுத்தாளர் அவதாரம் மற்றும் இயக்குனர் அவதாரம்


"எனக்கு விருப்பமானது நடிப்பா, எழுத்தா என்ற கேட்டால் எழுத்து என்று தான் சொல்வேன். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. நிறைய கதை, கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகையாகிவிட்டேன். கடைசிவரை நடிகையாகவே இருக்க விருப்பம் இல்லை. இதனால் விரைவில் அடுத்த துறைக்கு செல்ல இருக்கிறேன். சீரியலுக்கென்று சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றை முழுமைப்படுத்தும் பணியில் தீவிரமாக இருக்கிறேன். என் கதையை நானே இயக்குவேன். எந்த சேனல், என்ன கதை என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்கிறார் சுபத்ரா. அழகான பொண்ணு சீரியல் இயக்கினா சீரியலும் அழகாத்தான் இருக்கும்.
நன்றி: தினமலர்

aanaa
7th October 2016, 05:10 AM
தல கூட நடிக்க ஆசை - மனம் திறக்கிறார் நடிகை ரக்ஷிதா


சின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். வானத்து மின்னலாய் வர்ண ஜாலம் காட்டிய ரக் ஷிதாவின் மனம் திறந்த வார்த்தைகள்.


* பிறந்தது..வளர்ந்தது..படித்தது..
பெங்களூருவில் பிறந்தேன். வீட்டிற்கு ஒரே பெண். பள்ளி படிப்பு, கல்லுாரி படிப்பு எல்லாம் சொந்த ஊரில் தான். மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளேன்.


* நடிப்பதற்கு வந்தது எப்படி?
படித்து முடித்தபின் பெங்களூருவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பத்து தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.


* தமிழ் சரளமாக பேசுவதன் ரகசியம்?
அடிப்படையில் எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சென்னையில் வந்த பின், பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த பின் தமிழ் மீது அதிக காதல் ஏற்பட்டது. அதனால், முறையாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசாலா குடும்பம், தற்போது மிகப்பெரிய வெற்றி தந்த சரவணன் மீனாட்சி தொடர் எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


* எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
தல(அஜித்) கூட நடிக்க ஆசை. இந்த நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். கமல் சார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.


* பிடித்த நடிகை
நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். எந்த விஷயத்திலும் அவர் தைரியமாக செயல்படுவார். அடுத்து நடிகை அனுஷ்காவை பிடிக்கும்.


* காதல் பற்றிய கருத்து...
பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதலுக்கு நம்பிக்கை அவசியம். அது இருந்தால் அந்தகாதல் நிச்சயம் வெற்றி பெறும்.


* நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது அவசியமா?
நிச்சயமாக கவர்ச்சி தேவையில்லை. அந்த காலத்து திரைப்படங்களில் கவர்ச்சி இல்லையே. அந்த படங்கள் வெற்றி பெறவில்லையா. 20 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்திருந்தால் சரோஜாதேவி இடத்தை பிடித்திருப்பேன்.


* எதிர்கால திட்டம்? பிடித்த நாடு
பொதுவாக ஊர் சுற்ற பிடிக்கும். மொரிஷியஸ் ரொம்ப பிடிக்கும். ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் ஒரு குளிர்ச்சியான கிராமத்தில் மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே தனியாக ஒரு பெரிய வீட்டை கட்டி, சுற்றிலும் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து வாழ ஆசை.


* தமிழ் ரசிகர்கள் எப்படி
என்னவென்று சொல்வேன். எனக்கு தமிழ்நாட்டு மருமகள் என்று பட்டம் கொடுத்தவர்கள். தமிழ் ரசிகர்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது.


* ரோல் மாடல்
ரம்யா கிருஷ்ணன் தான் எனது ரோல் மாடல். அவரைப்போல அம்மன் வேடத்தில் யாரும் நடிக்க முடியாது. அவரைப் போல் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும், என்பது நீண்ட நாள் ஆசை.


* அடுத்த சினிமா பிரவேசம் எப்போது
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு என்ற படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அவரது படத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து விட்டு இந்த கேரக்டரில் நீ தான் நடிக்க வேண்டும், என்றார். அவரே என்னிடம்கதையை சொன்னார். அவரது படத்தில் நடிக்க ஆசை. சினிமா வாய்ப்புகள் வருகிறது. தொடரில் பிசியாக இருப்பதால் முடியவில்லை. திறமையான, நடிப்பிற்கு சவாலான ஒரு கதை உள்ள படத்தில் நடிக்க விரும்புகிறேன்.
நன்றி: தினமலர்

aanaa
14th October 2016, 09:06 PM
மீண்டும் வருகிறார் காயத்ரி பிரியா


காயத்ரி பிரியாவை நினைவிருக்கிறதா? ஆடுகிறான் கண்ணன், தீர்க்க சுமங்கலி என தமிழ் தொடர்களில் கலக்கியவர். புகழின் உச்சியில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். கணவர் தனியார் வங்கி ஒன்றின் மலேசிய கிளையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.


தற்போது காயத்ரி பிரியாவின் கணவருக்கு சென்னை மாறுதல் கிடைத்து சென்னைக்கு வந்து விட்டது குடும்பம். இதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில் மலையாள தொடர் ஒன்றிலும், தமிழ் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.


"எல்லா பெண்களுக்கும் குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியம். அதனால் கடந்த 4 ஆண்டுகள் குடும்பத்துக்காக ஒதுக்கி விட்டேன். பரபரவென நடித்து விட்டு மலேசியாவில் வீட்டுக்குள்ளேயே இருந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் குழந்தைகள் வந்த பிறகு அது மறைந்து விட்டது. தற்போது சென்னைக்கு வந்து விட்டோம். மீண்டும் நடிக்க கணவரும் அனுமதி தந்து விட்டார். கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன்" என்கிறார் காயத்ரி பிரியா.
நன்றி: தினமலர்

aanaa
14th October 2016, 09:13 PM
டூப் ஜோதிகா வேடம் பெரிய ரீச் கொடுத்து விட்டது! -வம்சம் பிரியங்கா பேட்டி


பல தொடர்களில் பாசிட்டிவான வேடங்களில் நடித்தவர் பிரியங்கா. இவர் தற்போது ரம்யாகிருஷ்ணனின் வம்சம் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் ஜோதிகா என்ற வேடம் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு கோணங்களில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது சின்னத்திரையின் பரபரப்பு நடிகைகளில் பிரியங்காவும் ஒருவராகியிருக்கிறார்.


இதுபற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், வம்சம் தொடர் எனது சின்னத்திரை கேரியரில் மிக முக்கியமானதாகியிருக்கிறது. முதலில் ஜோதிகா என்ற கேரக்டரில் அழுதுகொண்டேயிருந்த நான், இப்போது நெகடீவ் ஜோதிகாவாகவும் உருவெடுத்துள்ளேன். இந்த பழிவாங்கும் கேரக்டர் ரொம்ப திரில்லிங்காக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் சின்னத்திரையில் எனக்கு நிறைய நேயர்கள் கிடைத்து விட்டனர்.


மேலும், சிலர் பாசிட்டீவ் வேடத்தை பெருமையாக சொல்ல, சிலர் நெகடீவ் வேடத்தைப்பற்றி குறிப்பிட்டு எப்படி இந்த அளவுக்கு மாறி நடிக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். ஆக என்னையும், எனது நடிப்பையும் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது நானும் சீன் பை சீன் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்போது வம்சம் தொடரில் ஆயிரமாவது எபிசோட் ஒளிபரப்பாகி வரும் நிலையில், எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, டூப் ஜோதிகா வேடம் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.


>இந்த தொடரில் முதலில் என்னை இரட்டை வேடத்துக்கு கமிட் செய்தபோது இவரால் இந்த வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கினார்களாம். ஆனால் இப்போது எனது நடிப்பைப்பார்த்து விட்டு ரம்யாகிருஷ்ணன் மேடம் உள்பட அனைவருமே திருப்தியாக உள்ளனர். அதனால் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இன்னும் நல்ல நடிப்பை வெளிப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு மேலும் சில சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. ஆனால், வம்சம் சீரியலேயே மாதம் 20 நாட்களில் போய் விடுவதால் வேறு சீரியல்களில் கமிட்டாக முடியவில்லை என்கிறார் பிரியங்கா.
நன்றி: தினமலர்

aanaa
14th October 2016, 09:16 PM
நான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...


சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் ஹோம்லி கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. தொலைக்காட்சியில் குல தெய்வம் சீரியலில் அலமுவாக நடிக்கிறார்
அவர் நம்மிடம்...


பிறந்து, வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். முதலில் நான் தொகுப்பாளினியாக இருந்தேன். மதுரை டூ தேனி படத்தில் நாயகியாகவும், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன்.


அதே சமயத்தில் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் தான் என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு இயக்குனர் திருமுருகனை தான் பாராட்ட வேண்டும்


சின்னத்திரையில் நடிப்போரிடம் குடும்ப உறுப்பினர் போல் பழகுகிறேன். இதனால் தானோ என்னமோ எனது நடிப்பு இயல்பாக உள்ளது. சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமாவை பொறுமையாக எடுப்பர். சீரியல் அந்த மாதிரி எடுக்க முடியாது; எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.


மொழி பெயர்ப்பு சீரியல் வந்தால் சின்னத்திரை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு சாப்ட் கேரக்டர் தான் பொருத்தம் என, எல்லோரும் கூறுகின்றனர். நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.


நான் எப்போதும் ஜாலி கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.


சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்றார்.
நன்றி: தினமலர்

aanaa
24th October 2016, 08:29 PM
விஜய் டிவியில் வைசாலி!


ஜெயா டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் வைசாலி. அதையடுத்து புதுயுகம் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையானார். பின்னர், கலையரசன் நாயகனாக நடித்து வெளியான ராஜா மந்திரி படத்தில் காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு வைசாலி தயாராக இருந்தபோதும் அவர் எதிர்பார்த்தது மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முதலில் காயத்ரி தொகுத்தளித்து வந்த நிலையில், தற்போது வைசாலி இடம்பெற்று வருகிறார். அடுத்தபடியாக சின்னத்திரையில் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என்று தொடர்ந்து பங்களிக்கப்போவதாக சொல்கிறார் வைசாலி.
நன்றி: தினமலர்

aanaa
1st November 2016, 09:40 PM
பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன்! -சீரியல் நாயகி அகிலா


பொன்னூஞ்சல், சந்திரலேகா, தாமரை, என் இனிய தோழியே, தேவதை, ராமானுஜம் என பல மெகா சீரியல்களில் நடித்தவர் அகிலா. இதுவரை வித்தியாசமான பாசிட்டீவ், நெகடீவ் கலந்த வேடங்களில் நடித்து வந்தவர் பெரும்பாலும் செகண்ட் லீடாகவே நடித்து வந்தார். முதன்முறையாக ஷ்யாமளா என்ற தொடரில் டைட்டீல் வேடத்தில் நடிக்கிறார் அகிலா.


இதுபற்றி தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கும் சீரியல்களில் எனது கதாபாத்திரம் அந்த கதைக்கு முக்கியத்தும் வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருக்கும். அப்படித் தான் இதுவரை நடித்து வந்துள்ளேன். ஆனால் எனக்கு செகண்ட் லீடு வேடங்க ளாகவே கிடைத்து வந்தன. அந்த வேடங்களில் நூறு சதவிகிதம் சிறப்பாக நடித்து வந்தேன். அப்படி எனது நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் இப்போது டிசம் பர் மாதம் முதல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஷ்யாமளா தொடரில் எனக்கு டைட்டீல் வேடம் கிடைத்துள்ளது.


இதனால் அந்த சீரியலில் அதிக உற்சாகத்துடன் நடித்து வருகிறேன். மேலும், மலேசிய லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பைரவபுரம் என்ற தொடரிலும் நடித்து வருகிறேன். திரில்லர் கதையில் அந்த தொடர் வெளியாகி வருகிறது என்று சொல்லும் அகிலா, இப்போது லீடு ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது சந்தோசமாக உள்ளது. அதேசமயம், அதிக பொறுப்பும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதை உணர்ந்து நடித்து வருகிறேன். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டு நேயர்களின் மனதில் அழுத்தமாக பதிந்து விட வேண்டும் என்று இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:11 PM
சீரியலுக்கு டைட்டில் சாங் பாடினார் கானா பாலா


ஜீ தமிழ் சேனலில் விரைவில் டார்லிங் டார்லிங் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான டைட்டில் பாடலை கானா பாலா பாடியுள்ளார். ஜில் ஜங் ஜக் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். "இக்கரைக்கு அக்கரை பச்சை... டார்லிங்... மைடியர் டார்லிங்..". என்ற டைட்டில் பாடலை பாடியுள்ளார் கானா பாலா.


அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான கானா பாலா. இதுவரை 100க்கும் மேற்பட்ட கானா பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார். எழுதியும் உள்ளார். சில பாடல் காட்சிகளில் நடித்தும் உள்ளார். தற்போது அவர் மார்க்கெட் கொஞ்சம் இறங்கு முகத்தில் உள்ளது. அதனால் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்.


"சினிமாவில் என்னோட இடம் எப்போதும் இருக்கு. சென்னையில நான் மட்டும் கானா பாடகன் இல்லை. என்னை மாதிரி பலர் இருக்காங்க அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டுமே... நானே பலபேருக்கு சிபாரிசு பண்ணியிருக்கேன். டி.வியில பாடுனது வித்தியாசமான அனுபவமா இருக்கு. தினமும் என்னோட பாட்டு எல்லோர் வீட்டிலேயும் கேட்குமே அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்" என்கிறார் கானா பாலா.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:16 PM
மீண்டும் நேயர்கள் வரவேற்பு கொடுப்பார்கள்!- மிர்ச்சி செந்தில்


விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். அந்த தொடரில் மீனாட்சியாக நடித்தவர் ஸ்ரீஜா. விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் பெரிய அளவில் பேசப்பட்ட அந்த தொடரில் நடித்து வந்தபோது காதலில் விழுந்த செந்தில்-ஸ்ரீஜா இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர். அதன்பிறகும் சரவணன் மீனாட்சி 3வது சீசன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தபோது இருந்த பரபரப்பு இப்போதைய சீசன்களில் இல்லை


இந்நிலையில், மீண்டும் சரவணன் மீனாட்சி முதல் சீசனில் நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜாவை ஜோடி சேர்த்து மாப்பிள்ளை என்ற தொடர் தற்போது தயாராகி வருகிறது. நாளை முதல் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த மாப்பிள்ளை தொடர், சமீபகாலமாக கணவன்-மனைவிகளுக்கிடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு கதையில் உருவாகிறது.


இதுபற்றி மிர்ச்சி செந்தில் கூறுகையில், மீண்டும் என் மனைவி ஸ்ரீஜாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சரவணன் மீனாட்சியில் நடித்தபோது எங்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அந்த ரொம்ப இனிமையான அனுபவ மாக இருந்தது. இப்போது அவர் எனது மனைவியாகிவிட்டார். நாங்கள் கணவன் மனைவியாகவே நடிக்கிறோம். அது மகிழ்ச்சியாக உள்ளது


ஆனால் நிஜவாழ்க்கையில் ஈகோ என்பது துளியும் இல்லாமல் விட்டக்கொடுத்து வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் ஈகோ உடைய வர்களாக நடிக்கிறார்களாம். அந்த வகையில், இந்த தொடர் எங்களுக்கு இன்னொரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். அதோடு, சரவணன் மீனாட்சி மூலம் எங்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்த டிவி நேயர்கள் இந்த மாப்பிள்ளை தொடருக்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161106093340491661.jpg

நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:30 PM
கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - பானுமதி


மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடைபெற்ற போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கைரேகையை பார்த்து 'இது ஒரு அபூர்வமான ஜாதகம்' என்று ஸ்டெடி செய்து அவரிடத்திலேயே கூறினேன்.


ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டாக, டைரக்டராக, தயாரிப்பாளாராக இருந்து பெரிய அரசியல் தலைவராக, மக்கள் மனதில் சிறந்த இடத்தைப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சாராக அவர் வந்திருப்பது - எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவது சாதாரணமானதல்லவே? இதற்காக கலைஞர்கள் சமுதாயமே பெருமைப்பட வேண்டும்.


என்றோ நான் அவர் கை ரேகையை பார்த்து கூறியதை அதன் பின்பும் பல ஆண்டுகளுக்குப் பின்பும், மறவாமல் நினைவில் வைத்திருந்து அதைப்பற்றிச் சொல்லுவார்.


இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த பின்பும், எந்த வகையிலும் அவர் மாறாமல் இருப்பதைக் காண்கிறேன்.


இருபது வருடங்களுக்கு முன்பிருந்து அவரை நான் பார்த்து வருகிறேன். நடிக்கும் போது தன் வரையில் நன்றாகச் செய்துவிட்டுப் போய் விடுவோம் என்று நினைக்கவே மாட்டார். தனது வேடத்தை மட்டுமல்ல அருகில் நடிப்பவர் கேரக்டரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புவார். பெரிய ஆர்ட்டிஸ்ட் சின்ன ஆர்ட்டிஸ்ட் என்று வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் சொல்லித் தருவார்.அகம்பாவம் என்பதே இல்லாமல் எப்போதும் அடக்கமாக இருப்பார். அதனால்தான் எல்லோரிடமும் அவரால் அன்புடனும் பண்புடனும் பழக முடிந்தது.


ரொம்ப மரியாதையாக கவுரமாக நடந்து கொள்ளக் கூடியவர். இன்னொருவர் கஷ்டம் காண சகிக்க மாட்டார். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தெரியாமல் அனைவருடனும் பற்றோடு இருப்பவர்.


இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் கூட, 'அம்மா, சவுக்கியமா?' என்று பரிவோடு கேட்பார். அப்போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். பல வெற்றிகளை சந்தித்து..பெரும் புகழ் பெற்று.பெரிய பதவிக்கு வந்த பிறகும் அப்படியே இருப்பது அவருக்குள்ள தனிச்சிறப்பு. இதுபோல எல்லோரும் இருக்க மாட்டார்கள்.


எம்.ஜி.ஆர் கவனமாக ஜாக்கிரதையாக இருப்பதால் பயமின்றி இருக்கிறார்

aanaa
7th November 2016, 11:33 PM
நாடக உலகில் சிரிப்பு நடிகராகத் தோன்றி, சினிமா உலகில் அப்பாவாகி, அப்புறம் தயாரிப்பாளராக மாறி இன்று கதாசிரியராகவும் இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் வி.கே.ராமசாமி.

இவருடைய வளர்ச்சியின் பரிமாணம் என்ன? அனுபவங்கள் எப்படிப்பட்டவை? அவருக்கே உரிய பணியில் அவரை பேச வைத்த பொழுது:எனக்கு 57 வயசு ஆகுதுங்க.ஏழு வயசிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்த்துட்டேன்.நாடகத்திலே 15 வருஷம்.சினிமாவிலே 35 வருஷம். ஆக 50 வருஷமா நடிச்சிகிட்டே இருக்கேன்.
நாடக கம்பெனியில் நான் சிரிப்பு நடிகனாத்தான் இருந்தேன். நாகேஷ் மாதிரி ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லாம் பண்ணுவேன். "தியாக உள்ளம்" நாடகத்திலே பேங்கர் சண்முகம் பிள்ளைங்கிற 60 வயசுக்காரர் வேடம் பண்ணினேன்.

அப்போ எனக்கு வயசு 15.ஏ .வி.எம் செட்டியாரு அந்த நாடகத்த பாத்தாரு.அதையே 'நாம் இருவர்' படமா எடுக்கச்சே எனக்கே அந்த வேஷத்தை கொடுத்துட்டாரு. அதுதான் என் முதல் படம். அதுக்கப்பறம் எக்கச்சக்கமான படங்களிலே அப்பாவாகவே நடிச்சுட்டேன்.

பாகவதர், சின்னப்பா, மஹாலிங்கம், எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன் இப்போ புதுசு புதுசா வறவங்க அத்தனை தலைமுறையிலயும் நடிச்சு, நடிச்சுட்டு இருக்குற ஒரே ஆசாமி நான் ஒருத்தன்தான்.

நான் வாழ்க்கையில செட்டில் ஆனது 1969 ல தான்.அதாவது என்னோட என் சம்சாரம் ரமணி இணைஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு உண்மையான வாழ்க்கை ஆரம்பமாச்சு.

அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான். அது என் சொந்தக் கதை. வாழ்க்கை வரலாறு மாதிரி 36 பக்கம் எழுதி வச்சிருந்தேன். விவகாரம் வந்து கோர்ட்டுக்கு போக வேண்டியதாயிடுச்சு. என் வாழ்க்கை வரலாறும் கோர்ட்டுக்கு போயிருக்கு.

எனக்கு டைரக்சன்ல என்ன அனுபவம்னு நீங்க கேக்கலாம். ஒரு அனுபவமும் இல்லை.இந்த 35 வருசமா பார்த்தது, பேசினது,நடிச்சது, படம் எடுத்து, கேள்விப்படறது எல்லாமே அனுபவம்தான்.

குடிப்பழக்கம் எல்லாம் முன்னே இருந்தது. இப்போ நிறுத்திட்டேன். அதுக்கும் ரமணிதான் காரணம். ரேஸுக்கு கூட போறத நிறுத்திட்டேன்.

சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் ரொம்ப நாள் சிநேகிதம்.அவரு கூட என்னை நீ பொழைக்க தெரியாதவன்டா என்பார். அவர் சொன்னதும் வாஸ்தவம்தான். இத்தனை வருஷம் இத்தனை படங்களில் நடிச்சும் கடன்காரனாயிருக்கேன்னா பாருங்களேன்.

சந்திப்பு: திரைஞானி (சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.82 இதழ்)

aanaa
7th November 2016, 11:35 PM
புதிய இளம் டைரக்டர் ஒருவர் , சாதாரணமான நட்சத்திரங்களை வைத்தே ஒரு படத்தை எடுத்து வெற்றிகரமாக ஓட வைத்திருப்பதே ஒரு சாதனைதான்.


'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன்தான் இந்த பெருமைக்குரியவர்.


"டைரக்சன்கிறத நான் ஒரு தொழிலா கத்துக்கிட்டதில்ல. எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்டாகப் பணியாற்றியதில்லை. கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் போன்ற படங்களுக்கு பாக்யராஜுடன் சேர்ந்து ஸ்க்ரிப்ட் ஒர்க் பண்ணி இருக்கேன். ஸ்க்ரிப்ட்ல நாம் என்ன பண்ணிணோம்க்கிறது நமக்குத் தெரியும். படம் வெளிவந்தவுடன் நாம் பார்க்கிறோம். நாம எழுதின ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் எப்படி எழுதியிருக்காருன்னு தெரியுது. இப்படித்தான் நான் டைரக்சன் கலைய கத்துக்கிட்டேன். பிறவியிலேயே கலை உணர்ச்சின்னு ஒண்ணு இருந்தா இதுவெல்லாம் சுலபம்தான்.


படபடவென்று பேச ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.


"நான் ஒரு கதாசிரியன். கதையை எழுதும்போதே ஒவ்வொரு காட்சியாக நம் மனசுக்குள்ளேயே ஒரு திரைப்படம் ஓடி முடிஞ்சிடும்.


என்னதான் நல்ல கதையா இருந்தாலும் ஒரு மோசமான டைரக்டரால் அது படமாக்கப்பட்டால் அது குட்டிச்சுவராத்தான் போகும்.


ஒரு படம் தோல்வி அடைஞ்சா தோல்விக்கு காரணத்தை யார் தலையிலும் போடலாம். கதை சரியில்லை என்றோ, டைரக்சன் சரியில்லை என்றோ அல்லது நடிகர்கள் சரியில்லை என்றோ குற்றம் சாட்டலாம்.


ஆனால் ஒரு வெற்றிப்படத்திற்கு இதுதான் காரணம் என்று வரையறுத்து பிரிக்க முடியாது. டைரக்சன், நடிப்பு, பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கணும்.


பயணங்கள் முடிவதில்லைக்கு கிடைத்த வெற்றியும் இப்படித்தான். என் டைரக்சனுக்கு மட்டும் அந்தப் பெருமை சேராது. எல்லா அம்சங்களும் சிறப்பா இருந்ததும் ஒரு காரணம்.


ஒவ்வொரு படத்திலிருந்து நிறைய கத்துக்கொண்டு அடுத்த படத்துக்கு போகிறேன். இதனால் ஒவ்வொரு படத்திலும் வெற்றி பெறுவேன்னு நம்பிக்கை இருக்கு.


படம் இப்படி ஒரு வெற்றியை அடையும் என்று எதிர் பார்த்தீர்களா?


எதிர்பாராத வெற்றிதான். ஆனாலும் படம் எடுக்கும்போது, 'நிச்சயமாக தோல்வியை மட்டும் சந்திக்காது' என்கிற நம்பிக்கை இருந்தது. குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.


- ஆர்.சி.சம்பத்


(சினிமா எக்ஸ்பிரஸ் - 01.07.82)

aanaa
18th November 2016, 12:57 AM
“ஸ்கூலிங் எல்லாமே அண்ணா ஆதர்ஷ் கேர்ள்ஸ் ஸ்கூல். எஸ்.ஆர்.எம் காலேஜ்ல விஸ்காம் முடிச்சேன்.”


.ஃப்ரெண்ட்ஸ்..


“என்னோட கலகல குணத்துக்காகவே ஃப்ரெண்ட்ஸ் எக்கசக்கம். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துறுதுறுனு ஓடிட்டும், லொடலொடனு பேசிட்டும் இருப்பேன். விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு எனக்கு அவ்ளோ…ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.”


சீரியல் என்ட்ரி…


“காலேஜ்ல ஒரு கல்ச்சுரல் புரோக்ராம்ல பார்த்துட்டுத்தான் கூப்பிட்டாங்க. அப்பாவோட பர்மிஷனோட அழகி சீரியல் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். அப்புறம், நிறைய மாடலிங்…சினிமா சான்ஸ் கூட வந்தது. அதுக்கப்புறம் ‘பிரியமானவள்’ல அன்பான, அடக்கமான மருமகள் இப்போ.”


நிஜத்தில் நிரஞ்சனி…


“சீரியல் கவிதாக்கும், நிஜ நிரஞ்சனிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னோட வீட்ல சீரியலைப் பார்த்துட்டு ‘நீயாம்மா இது?’ அப்படினு கலாய்ச்சு எடுத்துட்டாங்க. ஆனா, மருமகளா போகிற வீட்டில், அட்லீஸ்ட் கவிதா அளவுக்கு முடியாட்டியும், பாந்தமான மருமகளா இருக்க ட்ரை பண்ணுவேன்.”


சமையல்…


”ஹா..ஹா..ஹா…நல்ல கேள்விங்க. இப்போதான் சமையல் கத்துட்டு இருக்கேன். ஓரளவு தேறிட்டேனு நினைக்கறேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சமைச்சு எடுத்துட்டு போய் எல்லாரையும் சாப்பிட வச்சு, டிரையல் பார்த்து கொடுமை பண்ணிட்டிருக்கேன்.


நிரஞ்சனி – சிவரஞ்சனி; ஆஃப் ஸ்கீரின் ஃப்ரெண்ட்ஷிப்…


”பாவங்க அவ. ஆன் ஸ்கீரினில் மட்டும்தான் அவ என்னை கொடுமை படுத்துவா. வெளில அவளைத்தான் நான் கொடுமைப்படுத்தறேன். ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவ ஒரு நாள் ஃபோன் பண்ணாட்டி கூட, ‘ஏன் ஃபோன் கால் இல்லை?’ன்னு அவ வீட்டுக்கே போய் சண்டை போடுவேன். நிஜத்தில் கவிதா டெரர்…அவந்திகா அப்பாவி” சொல்லிவிட்டு கலகலவென கண்களை உருட்டி சிரிக்கிறார் நிரஞ்சனி.

aanaa
30th November 2016, 08:12 PM
சீரியல் நடிப்பை கைவிட்டார் ஷபானா


தேவதை, தாமரை தொடர்களில் நடித்தவர் ஷபானா. மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். இனி தொடர்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தொகுப்பாளினியாகவே தொடர இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் நடிப்பதற்கு நேரம் இல்லை. அதனால்தான் சீரியல்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பில் பல புதுமைகளை செய்யும் திட்டம் வைத்திருக்கிறேன். அதோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். அதிலும் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். இப்போது எனது உடைகளை நானே வடிவமைக்கிறேன். இனி மற்றவர்களுக்கும் செய்ய இருக்கிறேன். என்கிறார் ஷபானா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161130103853044255.jpg



நன்றி: தினமலர்

aanaa
30th November 2016, 08:17 PM
கே.பாலசந்தர் தொடரில் நடித்தது பெருமை!-சீரியல் நடிகர் சுதாகர் -


குஷ்பு லீடு ரோலில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலில்தான் முதன்முதலாக நான் நடித்தேன். பின்னர், கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடரில் ஒரு நிருபர் வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு பொம்மலாட்டம் தொடரில் நடித்தேன். நான் நடித்த வேடங்கள் சிறியது என்றாலும், பேசப்பட்ட வேடங்கள் என்கிறார் நடிகர் சுதாகர்.


அவர் மேலும் கூறும்போது, பல சீரியல்களில் நடித்தபோதும், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்து மறக்க முடியாது. அவரது அமுதா ஒரு ஆச்சர்யக்குறி தொடரில் நிருபராக நடித்த நான், ஒரு டைரக்டருக்கும், ஹீரோயினிக்கும் இருக்கும் காதலை பத்திரிகையில் எழுதி விடுவேன். அதனால் அந்த டைரக்டருக்கும், எனக்குமிடையே பிரச்சினை வரும். அதோடு, நேத்து வர சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சவன் இன்னைக்கு டைரக்டராகிட்டே என வசனம் பேசுவேன். அதனால் அந்த நேரத்தில் பல டைரக்டர்கள் என்னை தவிர்த்தனர். ஆனபோதும் நான் கவலைப்படவில்லை. கே.பாலசந்தர் சீரியலில் நடித்ததை பெருமையாக எடுத்துக்கொண்டேன். அதோடு சீரியல்களில் இன்னும் அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.


மேலும், தற்போது காதல் வழக்கு, மதுரை நரிக்குறவர் போன்ற படங்களிலும் நடிக்கிறேன். பெரிய திரையில் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டபோதும் சீரியலை நான் தவிர்க்கவில்லை. சினிமா-சின்னத்திரை இரண்டிலும் வெயிட்டான வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் சுதாகர்.





நன்றி: தினமலர்

aanaa
30th November 2016, 08:20 PM
சின்னத்திரைக்கு வந்தார் ஆதவ் கண்ணதாசன்


கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். கண்ணதாசன் மகள் அமிர்தா கவுரியின் மகன். இவர் பொன்மாலை பொழுது என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை அவர் குடும்பத்தின் சார்பில் தாய் அமிர்த கவுரியும், சகோதரி டாக்டர் கே.சத்யலட்சுமியும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.சி.துரை என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். காயத்ரி ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஆதவ் கண்ணதாசன் யாமிருக்க பயமே படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில் சின்னத்திரைக்கு வருகிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி நம்பர் ஒண் சீசன் 9 டீமில் இணைந்திருக்கிறார். முறைப்படி டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்றிருக்கும் ஆதவ் நிகழ்ச்சியில் நடிகைகள் மற்றும் போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டி.ராஜேந்தரும், சதாவும் நடுவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "எனது அபிமான நடிகர் டி.ராஜேந்தர் சாருடன் இணைந்து பணியாற்றுவது சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் நடனம் ஆடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் ஆதவ் கண்ணதாசன்.





நன்றி: தினமலர்

aanaa
30th November 2016, 08:23 PM
சென்னைக்கு குடிவருகிறார் கீதாஞ்சலி


நாதஸ்வரம் தொடரில் அறிமுகமானவர் கீதாஞ்சலி. அந்த தொடருக்கு இயக்குனர் திருமுருகன் நடத்திய ஆடிசனில் தேர்வு பெற்றார். நாதஸ்வரம் காரைக்குடியில் நடக்கும் கதை என்பதால் அக்மார்க்க காரைக்குடி பெண்ணான கீதாஞ்சலி தேர்வானார்.


அதில் சிறப்பான நடிப்பின் மூலம் பாராட்டுகளை அள்ளினார். நாதஸ்வரம் படப்பிடிப்பு முழுவதும் காரைக்குடியில் நடந்ததால் அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அவர் தற்போது நடித்து வரும் வாணி ராணி தொடர் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடந்து வருகிறது. தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து நடித்து வருகிறார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161123112744063891.jpg





மேலும் சில தொடர் வாய்ப்புகள், சினிமா வாய்ப்புகளும் வருவதால் தனது வீட்டையும், குடும்பத்தினரையும் சென்னைக்கு குடிமாற்றுகிறார் கீதாஞ்சலி. இதற்காக அவர் தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருக்கிறார். அதோடு தன் தங்கையையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.





நன்றி: தினமலர்

aanaa
30th November 2016, 08:25 PM
தொடர்ந்து என்னை கிண்டல் செய்வதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்


சமீபத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்திருந்தார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனாக ஊர்வசி நடித்திருந்தார். நிகழ்ச்சியை கிண்டல் செய்திருப்பதோடு அதில் இருக்கும் வணிக சமாச்சாரங்களையும் போட்டு உடைத்திருந்தார்கள்.


இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: தொடர்ந்து என்னையும், எனது நிகழ்ச்சியையும் பற்றி கிண்டல் செய்து வருகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. சொல்வதெல்லாம் உண்மை ஆயிரம் எபிசோட்களை தாண்டியிருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்கள் என்ன முட்டாள்களா? நிகழ்ச்சியை நடத்தும் நான் முட்டாளா?. சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்த ஒரு சம்பவத்தைதான் அம்மணி படமாக எடுத்தேன். தரமான படம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். சினிமாவில் என்னை கிண்டல் செய்கிறவர்கள். என்னைபோல தரமான படத்தை தர முயற்சிக்கலாம். இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
30th November 2016, 08:26 PM
நடிகர்கள், சக நடிகைகளை அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? ரேகா வேதனை


சின்னத்திரை தொகுப்பாளினி ரேகா பத்மநாபன். தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தொடரி படத்தில் தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரேகா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:


சின்னத்திரை நடிகைகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. சக நடிகர்கள், நடிக்கும்போது மட்டும்தான் நடிகைகளை அம்மா, அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? வேஷத்தை கலைத்து விட்டால் வேறு மாதிரி பார்க்கிறார்களோ என்று வருத்தமாக இருக்கிறது.


காதல் தோல்வி, வேலைவாய்ப்பில்லை, ஏமாற்றம் எதற்காகவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால். தனியாக சென்று படுத்துக் கொண்டு நீங்கள் இறந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுவதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடலை அறுத்து போஸ்மார்ட்டம் செய்வதை பாருங்கள். பின்னர் அதனை எரிப்பதை பாருங்கள். அந்த வேதனையை அனுபவியுங்கள். தற்கொலை எண்ணம் மறைந்து விடும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.





நன்றி: தினமலர்

aanaa
30th November 2016, 08:39 PM
மௌன ராகம் ரேவதி மாதிரி!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரீதிவ்யா, ஆந்திரதேசம் அனுப்பிவைத்த ஆப்பிள் ஆவார். அங்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, பாரதி என்ற படத்தில் நடித்தமைக்காக 2006 ஆம் ஆண்டு ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றவர்.
இன்றைய தேதியில் தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் கனவு நாயகி. அவர் என்ன நினைக்கிறார்... கேட்கலாமே...
சினிமாவில் உங்களுக்கான இடம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
அதை நான் டிசைன் பண்ணமுடியாது. அதனால், எனக்கான இடத்தையும் நான் முடிவு செய்யமாட்டேன். நல்ல கேரக்டர்களில் நடிக்கவேண்டும். வெற்றிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். ஹீரோ, டைரக்டர் ஆகியோருக்கு வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதே போலவே ஹீரோயினுக்கும் முக்கியம். கவர்ச்சியாக நடித்தெல்லாம் நிற்கமுடியாது. அதற்காக ஓரிரு படங்கள் ஓடலாம். நான் கவர்ச்சியாக நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ளமாட்டேன். சக நடிகைகளின் நடிப்புப்போட்டியில் குதிப்பேன். நடிப்பில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வேன்.
நான் ஆந்திர சினிமாவில் குழந்தையாக நடிக்க வந்து, ஆங்கே ஆறு படங்களில் நாயகியாக நடித்து முடித்துதான் தமிழுக்கு வந்தேன். அதனால் எதையும் நிதானமாக முடிவெடுத்து குறைந்த அளவில் படங்களில் நடித்தாலும், நல்ல படங்களாக நடிக்க வேண்டும் அவ்வளவுதான்.
நேரில் இவ்வளவு அமைதியாக பக்கத்தில் இருப்பவருக்கே கேட்காத மாதிரி பேசுகிறீர்கள். பெங்களூரு நாட்கள் படத்தில் துறுதுறுவென கலக்கியிருக்கிறீர்களே...
நான் கலகலப்பான ஆளுதான். இப்ப கொஞ்சம் அப்படி ஆயிட்டேன். மலையாள "பெங்களூரு டேஸ்' படத்தை நான் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அப்போது எனக்கொரு எண்ணம் வந்தது. என்னுடைய ஸ்டைலில் இதைப் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று.
ஏனென்றால் இயல்பிலேயே நான் அப்படியான பொண்ணுதான். ஆனால் படத்தில் நடிக்கும்போது ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா எல்லோரும் சேர்ந்து என்னை அழ வைத்துவிட்டார்கள். அப்படியொரு கலாட்டா. சாப்பிடும்போதுகூட சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது சொல்லி, சிரிப்பு காட்டுவார்கள். சாப்பாடு விக்கிக்கொள்ளும். ஆனால், மீண்டும் இதுபோன்ற ஒரு ஜாலியான டீம் அமையாது.
நீங்க பல இளைஞர்கள் கனவில் வந்து அவர்களின் தூக்கத்தைக் கலைக்கிறீர்கள். உங்கள் கனவில் எந்தெந்த நாயகர்கள் வந்து தொல்லைத் தருகிறார்கள்...
என் கனவில் எந்த ஹீரோவும் வந்துபோகலை. ஆனால் அஜித் சார், விஜய் சார், சூர்யா சார்கூடவெல்லாம் டூயட் பாடணும்னு ஆசை இருக்கிறது.
அஜித், விஜய் கூட நடிப்பதற்கு ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைக்கிறது... என்ன பண்ணுவீங்க?
ஏன் இப்படிக் கோத்துவிடுறீங்க. என் பதிலைக் கேளுங்க ஷாக் ஆயிடுவீங்க. இரவு பகல்னு பாராமல் எப்படியாவது நடிச்சிடுவேன். இரண்டு பேர் படமும் ரொம்ப முக்கியமாச்சே. விஜய் சாருக்கு சூப்பராக செட்டாயிடுவேன். அஜித் சாருக்குத்தான் செட்டாவேனான்னு தெரியலை. ஏற்கெனவே அஜித் சாருக்கு தங்கையாக நடிக்க கூப்பிட்டார்கள். நான் நடிக்க மறுத்துவிட்டேன். அஜித் சாருக்கு எப்படிங்க தங்கையா நடிக்கிறது?
குடும்பப் பாங்கான நடிகைகளே லிப்லாக் காட்சிகளில் நடிக்க துணிந்துவிட்ட காலம் இது. நீங்க அந்தமாதிரி முடிவுக்கு வருவீங்களா?
பொதுவாக முத்தக் காட்சி என்பது சினிமாவில் திணிக்கப்படுவதில்லை. கதையில் அக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பொருத்தே அமைகிறது. எனக்கு லிப்லாக் காட்சி குறித்து இதுவரையில் எந்த ஐடியாவும் இல்லை. அதுபோன்ற சூழலும் அமையவில்லை. ஒருவேளை கதைக்கு முக்கியம் என்று நான் நடிக்கும் படத்தின் இயக்குநர் விரும்பினால், அப்போது யோசிப்பேன். இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை.
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துக்குப் பிறகு "பென்சில்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானீர்கள். என்ன ஆச்சு பென்சிலுக்கு?
நானும் அந்தப் படத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு ஸ்கூல் ஸ்டூடண்டாக வெயிட் எல்லாம் குறைத்து நடித்தேன். அந்த படத்தின் டிசைன் பார்த்தவர்கள் எல்லாம் எப்படிம்மா சேலை கட்டினா பொம்பளையாக தெரியுற, யூனிஃபார்ம் போட்டா ஸ்டூடண்டா தெரியுற என்று பாராட்டினார்கள். இது என்னுடைய மிகப்பெரிய ப்ளஸ். அதோபோல பென்சில் படத்தின் கதையும் நல்ல சப்ஜெக்ட். இம்மாதம் வெளிவந்துவிடும்.
அடுத்தடுத்த புராஜெக்ட்?
"பெங்களூர் நாட்கள்' முடிச்சாச்சு. அடுத்து கார்த்தி சாரோட நடிக்கிற "கஷ்மோரா'. இன்னும் இரண்டு புராஜெக்ட் பேசிக்கிட்டிருக்கேன்.
"கஷ்மோரா' படத்தில் நயன்தாராவுக்குத்தான் முக்கியத்துவம் என்று பேசப்படுகிறதே..
என்னைப் பொறுத்த அளவில், எனக்கு முக்கியத்துவம் உள்ள, என் நடிப்பும் பேசப்படுகிற பாத்திரங்களைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். அந்தப் படத்தில் நான் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பது படம் வந்தால்தான் தெரியும். வரும்போது பாருங்கள்.
சினிமாவில் உங்கள் கனவு...
கண்டிப்பாக இருக்கிறது. மணிரத்னம் சார் படத்தில் நடிக்க வேண்டும். அது "மெüன ராகம்' ரேவதி கேரக்டர் மாதிரி அமையவேண்டும். அந்தக் கேரக்டரை நான் அவ்ளோ லவ் பண்றேன்.

aanaa
16th December 2016, 08:19 PM
சினிமாவில் தொடர்ந்து நடிக்க மகேஸ்வரி விருப்பம்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி மகேஸ்வரி. நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என்று கலக்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்தவர் இப்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார்.


"மீடியாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சி என்னை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. வெளியில் போனால் என்னை அதிர்ஷ்ட லட்சுமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. தொகுப்பாளினி வேலை என்பது கேமரா முன்னால் நின்று ஸ்கிரிப்டை படித்துவிட்டுப்போவது என்று எளிதாக நினைக்கிறார்கள். இப்போது அப்படியில்லை. தங்களிடம் உள்ள தனித் திறமையை வெளிப்படுத்தினால் தான் அந்த நிகழ்ச்சியில் நிலைத்து நிற்க முடியும். ஸ்கிரிப்ட்டையும் தொகுப்பாளினிகள் தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.


ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வெங்கட்பிரபு சந்தித்தார். சினிமாவில் நடிக்கிறீங்களா என்று கேட்டார். ஏதோ விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து ஓகே சார் என்றேன். அதை மனதில் வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தார். ரொம்ப ஜாலியான ஸ்கிரிப்ட், ஜாலியான படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். சினிமாவில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்&#39;&#39; என்கிறார் மகேஸ்வரி.
நன்றி: தினமலர்

aanaa
16th December 2016, 08:20 PM
அனல் பறக்கும் நடிகைகள் பஞ்சாயத்து!

ஜீ தமிழ் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமிராமகிருஷ்ணன், பிரச்சினையுடன் வரும் தம்பதிகளின் பிரச்சினை களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது இன்னும் சில சேனல்களிலும் அதேபோன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு மாஜி நடிகைகளை வைத்து நடத்தி வருகின்றனர்


இந்த நிலையில், நீதிமன்றம் இருக்கும்போது எதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை டி.வியில் நடத்த வேண்டும் என்று ஸ்ரீபிரியா, ராதிகா, ரஞ்சனி போன்ற மாஜி நடிகைகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஸ்ரீபிரியா, பணத்திற்காக சமூக சேவை செய்வது போன்று செயல்படுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணனை சாடியிருந்தார்.


அதையடுத்து, நான் மட்டுமல்ல எல்லோருமே பணத்திற்காகத்தான் வேலை செய்கிறோம். நான் பணத்திற்கு வேலை செய்தாலும் அதில் உண்மையான சமூக அக்கறை உள்ளது என்று ஸ்ரீபிரியாவுக்கு பதில் கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆக, பஞ்சாயத்து நிகழ்ச்சியினால் மாஜி நடிகைகளிடம் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தீர்க்கவே இன்னொரு பஞ்சாயத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது
நன்றி: தினமலர்

aanaa
16th December 2016, 08:22 PM
சினிமாவில் பிசியானார் தொகுப்பாளினி சுவாதிஷ்டா

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளி சுவாதிஷ்டா கிருஷ்ணன். பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை லிங்குசாமியை பேட்டி எடுக்கச் சென்றபோது "சினிமாவில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அப்போது மறுத்து விட்டு வந்துவிட்டார். ஒருமுறை மிஷ்கினை பேட்டி எடுத்தபோது "நான் சவரக்கத்தி என்ற படத்தை தயாரிக்கிறேன். அதில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அது இரண்டு குழந்தைக்கு தாய் கேரக்டர் என்பதால் மறுத்துவிட்டார். பின்னர் இன்னொரு கேரக்டர் இருக்கிறது என்று சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படியாக சுவாதிஷ்டாவை சினிமா நடிகை ஆக்கிவிட்டார்கள்.


முதல் படம் வெளிவருதற்கு முன்பே தற்போது மதம், கீ, அசோக் செல்வன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். "சின்ன வயசுல விளம்பர படங்கள்ல நடிச்சிக்கேன். மிஷ்கின் சார் கேட்டதும் மறுக்க முடியவில்லை நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா நடிக்கிறதுல குடும்பத்துக்கு அவ்வளவா பிடிக்கல குறிப்பா அப்பாவுக்கு. என்றாலும் நன்றாக நடித்து அவுங்க மனசை மாத்திடலாமுன்னு நம்பிக்கை இருக்கு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிப்பேன். கிளாமராக நடிக்க மாட்டேன்" என்கிறார் சுவாதிஷ்டா.நன்றி: தினமலர்

aanaa
16th December 2016, 08:24 PM
100 சேலையில் கலக்கும் ஐஸ்வர்யா ராகவ்

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். அவர் இப்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது தொடர்ந்து 100 நாட்களுக்கு கைத்தறி புடவைகள் அணிந்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதற்கு 100 டேய்ஸ் சாரீஸ் என்று தலைப்பும் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராகவின் இந்த சேலை அணிவகுப்பு லைக்குகளை குவித்து வருகிறது


."இப்போதெல்லாம் சேலை அணிவது குறைந்து வருகிறது. குடும்ப விழாக்களில் மட்டுமே சேலை அணிகிறார்கள். எல்லா நேரத்திலும் சேலை அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியில் இறங்கினேன். நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சி இது. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்ற சொல்ல மாட்டேன், சில பெண்கள் பேஸ்புக்கில் இதற்கென தனி பக்கத்தையே உருவாக்கி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நான் 100 நாள் 100 சேலை அணிகிறேன். இதற்கு 100 சேலை தேவையில்லை. ஒரே சேலையை இரண்டு விதமாக அணியலாம்" என்கிறார் ஐஸ்வர்யாராகவ்.

நன்றி: தினமலர்

aanaa
16th December 2016, 08:32 PM
விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்கிறேன்! -சின்னத்திரை ஸ்வேதா

சின்னத்திரை உலகில் பல சேனல்களில் டான்சராக, ஆங்கராக, நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஸ்வேதா. இரண்டு ஆண்டுகள் மேல்படிப்புக்காக பிரான்ஸ் சென்றிருந்த அவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இதையடுத்து இரண்டு மெகா சீரியல்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் உள்ளார்.


தினமலர் இணையதளத்திற்காக ஸ்வேதா அளித்த பேட்டி...


நான் இரண்டரை வயதில் இருந்தே நடனம் கற்று வந்தேன். கேரளா பெண்ணாக இருந்தபோதும் கோயமுத்தூரில்தான் பிறந்து வளர்ந்தேன். 12 வருடமாக பரதநாட்டியம் பயின்ற பின்னர் மேற்கத்திய நடனம் பயின்றேன். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். மீடியாக்களில் வரவேண்டும் என்ற ஆசைகூட எனக்கு அப்போது இருந்ததில்லை. நான் 6வது படித்தபோது தில்லானா தில்லானா -என்றொரு ஷோவில் டான்ஸ் பண்ணி முதல் பரிசு பெற்றேன். அதன்பிறகு தயா-2000 என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் மேடம் ஒரு ஷோ பண்ணினார்கள். அதில் ரஜினி விருது வாங்கினேன். பரதநாட்டியம், வெஸ்டர்ன், போக் என மூன்று நடனங்களையும் கலந்து நானே கம்போஸ் செய்த அந்த நிகழ்ச்சியில் நடனமாடினேன்.


பத்தாவது படித்தபோது சின்னத்திரையில் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடனமாடினேன். எனது குடும்பத்தினர் பெரிய சப்போட்டீவாக இருந்ததால், கோவையில் இருந்து சென்னை வந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் ஆடினேன். விபிள் மிஸ் சின்னத்திரையில் டைட்டீல் வின் பண்ணினேன். பின்னர் விஜய் டிவியில் விஜேவாக, ஜீ தமிழில் அஞ்சறை பெட்டி, ஜோடி நம்பர்-ஒன் பண்ணினேன். அப்போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, நான்கு மாதம் ஓய்வெடுத்தேன்


அதன்பிறகு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் திருமுருகன் இயக்கிய கார்த்திகை பெண்கள் சீரியலில் லீடு ரோலில் நடித்தேன். கல்கி படத்தில் ஸ்ருதி நடித்தது போன்று துறுதுறுவான வேடம். ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதன்பிறகு நான் வெளியில் எங்கு சென்றாலும் அந்த கேரக்டரின் வியூலா என்ற பெயரை சொல்லியே அழைத்தனர். விஷால் நடித்த சமர் படத்தில் அவரது தங்கையாக நடித்தேன். அதன்பிறகு, வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததால் 2 ஆண்டு பிரான்ஸ் சென்று படித்தேன்.


திரும்பி வந்தபோது பெங்களூரில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் என்னைப்பார்த்த பலரும் நான் நடித்த சீரியல்களை சொல்லி என்னை அடையாளம் கண்டதோடு தொடர்ந்து நடியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து ஜீ தமிழில் இருந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தனர். ரொம்ப சந்தோசமாயிடுச்சு. எங்கே விட்டேனோ அங்கேயிருந்தே மீண்டும் ஆரம்பித்தேன். இதுவரை 12 எபிசோடு முடித்து விட்டேன். ரஜினி ரவுண்டு, கமல் ரவுண்டு என ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவிதமாக ஆடினேன்.


இப்போது சீரியல் வாய்ப்பும் வருகிறது. கார்த்திகை பெண்கள் சீரியலில் போல்டான பெண்ணாக நடித்தேன். அதை பண்ணும்போது நிறையபேர் என்னை உதாரணமாக எடுத்தனர். நிஜ வாழ்க்கையிலும் நான் தைரியமான பெண். அந்த கேரக்டர் பண்ணும்போது இன்னும் வளர்த்துக்கொண்டேன். அதனால் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கதைகளில் நிறைய நடிக்க ஆசைப்படு கிறேன். எனக்கு யாருமே ரோல் மாடல் கிடையாது. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு நல்ல விசயங்களை கற்றுக்கொள்வேன். உதாரணத்திற்கு கல்கி ஸ்ருதி மேடத்தை சொல்லலாம். அவர்களிடமிருந்தும் பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.


சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். ஹீரோயின், சிஸ்டர் என எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். மேலும், இப்போது இரண்டு மெகா தொடரில் நடிக்க பேசி வருகிறேன். ஆக, மீடியாதான் என் வாழ்க்கை என்றாகி விட்டது. அதனால் திருமணத்திற்கு முன்புவரை மீடியாவில் இருப்பேன். அதன்பிறகு புகுந்த வீட்டினர் சம்மதித்தால் தொடர்ந்து மீடியாவில் இருப்பேன். இல்லையேல் வேறுவிதமாக அப்போதைய சூழ்நிலைப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன். என்வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நான் நினைத்து பார்த்திராத வகையில் நடந்துள்ளது. ஆனால் எல்லாமே நல்லதாகவே நடந்துள்ளது. அதனால் அது இப்போது நடப்பது போன்று திருமணத்திற்கு பிறகும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்வேதா.

நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:04 AM
நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனார் தீபக் -


சின்னத்திரை தொகுப்பாளர் தீபக், இப்போது சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். நடிகராக, தொகுப்பாளராக வெற்றிகரகமாக வலம் வந்து கொண்டிருந்தபோதே சினிமாவுக்குச் சென்றார். இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றும் தீபக்கிற்கு அடுத்த படம் வாய்ப்பு அத்தனை எளிதில் கிட்டவில்லை. இதனால் மீண்டும் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு திரும்பினார். தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.


இதற்கிடையில் என் ஆட்டோகிராப் என்ற நிகழ்ச்சியின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சின்னத்திரை தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர், சின்னத்திரை, பெரிய திரை நடிகர், சின்னத்திரை தயாரிப்பாளர் என பன்முகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் தீபக். விரைவில் அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்பும் வரவிருக்கிறது.


"என்னை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம்மை துரத்திக் கொண்டுவந்து சேரும். எங்கே தேங்கி நிற்கிறோமோ அங்குதான் தோல்வி வந்து நம்மை ஒட்டிக் கொள்ளும். நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கிற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறேன். பலன் இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் தீபக்.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:06 AM
வில்லனின் நடிப்பையும் ரசிக்கிறார்கள்! -சீரியல் வில்லன் கோபிஜி


பல தொடர்களில் பாசிட்டிவ் வேடங்களில் நடித்து வந்த கோபிஜி, ஆதிரா, நாதஸ்வரம், வள்ளி ஆகிய தொடர்களில் அதிரடி வில்லனாகி விட்டார். அதோடு, தான் நடிக்கும் ஒவ்வொரு வேடங்களும் தனக்கு மனநிறைவு கொடுத்து வருவதாக சொல்கிறார் அவர்.


தினமலர் இணையதளத்திற்காக கோபிஜி அளித்த பேட்டி..


ஒரு சீரியலில் நல்லவனாக நடித்தால் அதை வரவேற்பதும், கெட்டவனாக நடித்தால் அவரை திட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனபோதும், சமீபகாலமாக சீரியல் ரசிகர்களின் ரசனை மாறி வருகிறது. அதாவது, எந்த கேரக்டரில் நடித்தாலும் அவர்களின் பர்பாமென்ஸ் சிறப்பாக இருந்தால் அதை ரசிக்கிறார்கள். முக்கியமாக சீரியல் பார்க்கும்போது வில்லனை திட்டும் நேயர்கள், அவன் வித்தியாசமாக நடித்தால் அதை ரசிக்கவும் தவறுவதில்லை. அந்த பர்பாமென்ஸ் குறித்து பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.


மேலும், தென்றல் சீரியல் வரை நான் பாசிட்டீவான வேடங்களில்தான் நடித்து வந்தேன். ஆனால் நாதஸ்வரம் சீரியலில் இருந்து வில்லனாகி விட்டேன். அந்த தொடரில் எனது நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. அதைப்பார்த்து ஆதிரா தொடரில் வில்லன் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர் இன்னும் பெரிய அளவில் எனக்கு ரீச் கொடுத்தது. இப்போது வள்ளி என்ற தொடரிலும் வில்லனாக நடித் துக்கொண்டிருக்கிறேன். இப்படி அடுத்தடுத்து 3 தொடர்களில் வில்லனாக நடித்தபோதும், ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன்.


அந்த சீரியல் எந்த மாதிரியான கதைக்களத்தில் அமைந்துள்ளதோ, அதில் வரக்கூடிய வில்லன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை உள்வாங்கி அதற்கேற்ப நடித்து வருகிறேன். இப்படி சீரியலுக்கு சீரியல் நான் மாறுபட்ட நடிப்பை கொடுப்பதினால்தான் தொடர்ந்து எனக்கு வில்லன் வேடம் தருகிறார்கள். அதோடு, வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுக்க நானும் நிறைய மெனக்கெடுகிறேன். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடிப்பதில்லை. ஒவ்வொரு சீனையும் நன்றாக உணர்ந்து நடிக்கிறேன்.

எனது அதிரடியான வில்லன் நடிப்பை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்கலாமே? என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் சின்னத்திரையில் பிசியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனபோதும் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். டிவியில் பிரபலமான பலர் சினிமாவிலும் சாதித்து வருவதால், சரியான சந்தர்ப்பம் அமைந்தால் நானும் சாதிப்பேன் என்று கூறும் கோபிஜி, இப்போது நடித்து வரும் சீரியல்கள் எனக்கு மனநிறைவாக உள்ளது. என்னை நம்பி டைரக்டர்கள் நல்ல வேடம் தருகிறார்கள். அதை மனதில் கொண்டு ஒவ்வொரு சீரியலிலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்து வருகிறேன். எனது நடிப்பை நேயர்களும் ரசிக்கிறார்கள். நிறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். அதனால், நானும் கிடைக்கிற வாய்ப்புகளை நல்ல படியாக பயன்படுத்திக்கொண்டு வருவதாக நினைக்கிறேன் என்கிறார் கோபிஜி.

நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:12 AM
சினிமா-சின்னத்திரை இரண்டையும் தொடர வேண்டும்! -நடிகர் விஜய் ஆனந்த்


சின்னத்திரை தொகுப்பாளர் விஜய் ஆனந்த், தற்போது லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போராளி வேடத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சினிமாவில் நிபுணன், மெர்லின், ஆச்சர்யக்குறி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.




இதுபற்றி விஜய் ஆனந்த் கூறுகையில், தற்போது நான் நடித்து வரும் படங்களில் நிபுணன் படத்தில் டிடெக்டிவ் வேடத்தில் நடிக்கிறேன். அர்ஜூன் சாருடன் இணைந்து நடித்தது பெருமையான விசயம். படத்தில் நான் குறைவான காட்சிகளில் வந்தபோதும் அந்த கேரக்டர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதேபோல், மெர்லின் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் நான், ஆச்சர்யக்குறி படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இந்த படங்கள் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல இடத்தை பிடித்துத் தரும் என்று எதிர்பார்க்கிறேன்.


மேலும், என்னைப்பொறுத்தவரை படம் முழுக்க நான்தான் வர வேண்டும் என்று நினைக்கவில்லை. நான்கு காட்சிகளில் நடித்தாலும் நச்சென்று பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வேடங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் இதுதான் எனது நோக்கமாக உள்ளது. அதை மனதில் கொண்டுதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். அதோடு, தொகுப்பாளர் மட்டுமின்றி சீரியல்களிலும் நடிக்கும் நான், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி வந்தாச்சு தொடரிலும் ஒரு போராளி வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்தமான கேரக்டர்.


அந்த வகையில், சினிமா, சின்னத்திரை எதுவாக இருந்தாலும், நல்ல கேரக்டர்களாக இருந்தாலும் பாசிட்டிவ், நெகடீவ் என்று வித்தியாசம் பார்க்காமல் நடிப்பேன். சினிமாவில் பிசியாகி விட்டால் சின்னத்திரையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் என்னிடம் இல்லை. எப்போதும் இரண்டு மீடியாக்களிலும் நான் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது என்கிறார் விஜய் ஆனந்த்.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:20 AM
பெண்களுக்கான சவால்களை சீரியல்களில் காட்டுகிறார்கள்! -நடிகை சிவகாமி


ரோஜாக்கூட்டம், அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, மேகலா, பொன்னூஞ்சல், உறவுகள், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தவர் சிவகாமி. தற்போது கல்யாண பரிசு சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


>பெரும்பாலும் சீரியல்களில் பாசிட்டிவ் வேடங்களில் நடித்து வந்த நான், முதல் தடவையாக கல்யாண பரிசு சீரியலில் கல்யாணி என்ற நெகடீல் ரோலில் நடித்து வருகிறேன். பாசிட்டிவ் வேடங்களை விட நெகடீவ் வேடங்களே மக்கள் மத்தியில் எளிதில் ரீச்சாகிறது. அவர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறது. மேலும், வில்லியாக நடிப்பது சாதாரண மான விசயமும் அல்ல. கதையை நகர்த்தும் வேடம். அதனால் கதாபாத்திரமாக மாறி நடித்து வருகிறேன். சில சமயங்களில் எக்ஸ்ட்ராவாக டயலாக் சேர்த்துக்கொண்டாலும் டைரக்டர்கள் கட்டுப்பாடு விதிப்பதில்லை. இந்த சீரியலில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது.


ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்?


கல்யாணி கேரக்டரில் நான் வில்லியாக நடித்திருப்பதைப்பார்த்து விட்டு நேயர்கள் திட்டுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மாறாக சந்தோசப்படுகிறேன். காரணம் அதைத்தான் அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். யதார்த்தமான எனது வில்லி நடிப்பு அவர்களது மனதில் அந்த அளவுக்கு பதிந்துள்ளது. இந்த வில்லி வேடம் என் மனதுக்கு நிறைவாக உள்ளது. இந்த சீரியலில் பிசியாக இருப்பதால் புதிய சீரியல்களில் கமிட்டாகாமல் இருக்கிறேன்.


சினிமாவில் நடிக்கிறீர்களா?


பெண் சிங்கம் என்ற படத்தில்தான் முதன்முதலாக நடிகையானேன். அந்த படத்தில் விவேக்குடன் காமெடி ரோலில் நடித்தேன். அதன்பிறகு சீரியலுக்கு வந்து ரோஜாக்கூட்டம், அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, மேகலா, பொன்னூஞ்சல், உறவுகள் என சீரியல்களில் பிசியாகி விட்டேன். பின்னர் ஒரு 5 வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது மறுபடியும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.


சீரியல்களில் சொல்லப்படும் கருத்துக்கள் பற்றி?


எல்லா சீரியல்களுமே குடும்பப் பிரச்சினைகளைப்பற்றியதாகத்தான் உள்ளது. பிரச்சினைகளில் சிக்கிக்கொள்பவர்கள் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை சொல்லும் வகையில்தான் உள்ளன. ஒவ்வொரு பிரச்சினைகளுக்குமே ஒரு தீர்வு இருக்கும். சில சீரியல்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியதாகவும் உள்ளன.சமீபகாலமாக தமிழ் சேனல்களில் வெளியாகும் இந்தி சீரியல்களைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், மேலோட்டமான காதல் கதைகளும், ஆழ்ந்த வில்லத் தனத்தையும்தான் காட்டுகிறது. நடக்காத விசயத்தை நடக்கிற மாதிரியும்தான் இருக்கும். ஆனால் தமிழ் சீரியல்களைப்பொறுத்தமட்டில் நம்மைச்சுற்றி என்னென்ன விசயங்கள் நடக்கிறதோ அதைதான் யதார்த்தமாக சொல்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பொறுமை அப்படின்னா என்ன என்பதை தமிழ் சீரியல்களைப்பார்த்து கற்றுக் கொள்ளலாம்.


சீரியல்களில் வரம்பு மீறப்படுகிறதே?


எனக்கு தெரிந்து ரொமான்ஸ் என்பது லிமிட்டோடு இருப்பதாகத்தான் தெரிகிறது. அதோடு, பெண்களுக்கான சவால்களைத்தான் சீரியல்களில் அதிகமாக காட்டுகிறார்கள். அதோடு பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்கிற விழிப்புணர்வை பெண்களுக்கு கொடுக்கும் கதைகளும் நிறைய வருகின்றன. என்றாலும், முழுக்க முழுக்க அந்த மாதிரி கதைகள் வந்துள்ளதா என்று தெரியவில்லை. மேலும் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைக்கலாம்


.><b>உங்களது ரோல் மாடல்?


</b>>மனோரமா ஆச்சிதான் எனது ரோல் மாடல். அவங்க அளவுக்கு சாதிக்க முடியாது. ஆனால் அவர்கள் கால் தூசு அளவுக்காவது ஒரு பெயர் எடுக்கனும். அவர் செண்டிமென்ட், காமெடி, பின்னணி பாடுவது என அனைத்தும் கைதேர்ந்தவர். ஒவ்வொரு அசைவிலும் ஒரு நடிப்பு காட்டுவார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியாக நடிப்பார். மனோரமாவை மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் இனிமேல் பார்க்க முடியாது


சீரியல் நேயர்களின் ரசணை மாறி விட்டதாக கூறப்படுகிறதே?


செண்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என எல்லாம் கலந்த ஒரு கதம்பம்தான் சீரியல்கள். காமெடி என்பது மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். சீரியல்களில் வரும் காமெடியைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதனால் காமெடி காட்சிகளை சீரியல்களில் அதிகமாக இடம்பெறச்செய்யலாம் என்பது எனது கருத்து என்கிறார் சிவகாமி.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:30 AM
அதிரடி வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன்! - நடிகர் ரவிசங்கர்


சுமார் 150 சீரியல்களுக்கு மேல் நடித்திருப்பவர் நடிகர் ரவி சங்கர். சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமா, சின்னத்திரைகளில் அதிரடி வில்லன் வேடங்களில் நடித்து அடுத்த லெவலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


சீரியல் என்ட்ரி பற்றி?


எனது சொந்த ஊர் மேட்டூர். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால் முதலில் சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதன்முதலில் கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய உறவுகள் தொடரில் நடித்தேன். முதல் தொடரிலேயே கலைஞரின் வசனம் பேசி நடித்தது பெருமையாக இருந்தது. அந்த தொடரில் எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா, சாருஹாசன் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் நடித்தேன். அப்போதைக்கு அவர்களுடன் நடிப்பது பயமாக இருந்தபோதும் அதுவே எனக்கு பெரிய அனுபவமாகவும் அமைந்தது. நிறைய தைரியத்தையும் கொடுத்தது. தொடர்ந்து, மந்திரவாசல், கே.பாலசந்தரின் ஜன்னல், நிலவை பிடிப்போம் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் பல சீரியல்கள் என பல தொடர்களில் நடித்தேன். குறிப்பாக, முதல் தொடரிலேயே கலைஞர் கதை வசனத்தில் நடித்த நான் இப்போது மீண்டும் அவரது கதை வசனத்தில் ராமானுஜர் தொடரில் நடித்து வருகிறேன். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேண்டும்


.சினிமாவில் நடித்த படங்கள்?


மேலும், சினிமாவில் ஏற்கனவே அஜித் நடித்த வான்மதி, விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன், விக்ரமின் உல்லாசம் படங்களில் அவர்களுக்கு நண்பனாக நடித்தேன். சமீபத்தில்கூட சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் மற்றும் பசங்க-2, இறைவி, சதுரம்-2 என பல படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது மீசையை முறுக்கு, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் கேரக்டர் ரால்களில் நடித்து வருகிறேன்.


டார்க்கெட்?


சினிமாவில் நடிக்கத்தான் எல்லோருமே வருகிறார்கள். சீரியலுக்காக யாரும் வருவதில்லை. அப்படித்தான் நானும். சினிமாவில் கிடைக்காதபட்சத்தில் சீரியலில் நடிக்கிறேன். ஆனால் சீரியலில் நடித்து விட்டு சினிமாவுக்கு போவது பெஸ்ட். நல்ல நடிப்பு அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை நான் நிறையவே பெற்று விட்டேன். அதனால் எதிர்காலத்தில் சினிமாவில் அதிகமாக நடிக்கவே ஆசைப்படுகிறேன். மீண்டும் சீரியலுக்கு வந்திருக்கிறேன் என்றால் கலைஞரின் சீரியல் என்பதினால்தான். அவர் கதை வசனத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் யாருமே அதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படித்தான் நானும். அதனால்தான் ராமானுஜர் பண்ணி வருகிறேன்.


சினிமாவில் சீரியல் நடிகர்களுக்கு வரவேற்பு எப்படி?
கண்டிப்பாக நல்ல வரவேற்பு உள்ளது. சீரியல் நடிகர்கள் நன்றாக நடிப்பார்கள். காட்சிகளை சீக்கிரமே முடித்து விடுவார்கள் என்கிற எண்ணம் உள்ளது. ஆக சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் ரெஸ்பான்ஸ் இருக்கிறது. மேலும், சினிமாவில் நான் நினைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கவில்லை. ஹீரோ ஆசையில் தான் சினிமாவிற்குள் வந்தேன். இப்போது நரேன் மாதிரி ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்தாலும் போதும் என்று நினைக்கிறேன்.


பெண்ணாதிக்கமே சீரியல்களில் அதிகமாக உள்ளதே?
லேடிஸ்தான் பார்வையாளர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் வீட்டில் என்னென்ன செய்வார்களோ அதை மையமாக வைத்து கதைகள் உருவாகிறது. ரிட்டையர் ஆனவர்களுக்கு பொழுதுபோக்கே சீரியல்கள்தான். ஒருநாள் கரண்ட் இல்லையென்றால் மற்றவர்களுக்கு போன் போட்டு கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல்களில் அடிமையாக உள்ளனர். அதேசமயம், சில சீரியல்கள் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலும் வெளியாகியுள்ளன


.சீரியல்களில் லிமிட் தாண்டுவது பற்றி?


தமிழ் சீரியல்களில் யாரும் லிமிட் தாண்டி கதை பண்ணவில்லை. ஆனால், லிமிட் தாண்டுவது வடஇந்திய சீரியல்களில்தான் அதிகமாக உள்ளது. படத்துக்கு இணையாக லிமிட் தாண்டுகிறார்கள். அவர்கள் படம் மாதிரிதான் பண்ணுகிறார்கள். நம்முடைய நேயர்களும் வடஇந்திய ரிச்னஸை ரசிக்கிறார்கள். இப்போது குஷ்பு இந்தி சீரியலுக்கு இணையாக நந்தினி சீரியலை தயாரித்து வருகிறார். 4 மொழிகளில் பண்ணுகிறார்கள்.


வில்லனாக நடிப்பீர்களா?
150 சீரியல்களுக்கு மேல் நடித்து விட்டேன். பெரும்பாலும் பாசிட்டீவ் வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். மேலும், நெகடீவ் ரோல்களில் லிமிட் தாண்டி நடிக்கலாம். ஹீரோ என்றால் பவ்யமாக நடிக்க வேண்டும் ப்ரீனெஸ் கிடைக்காது. அதனால் தான் நெகடிவ் பண்ணினால் யார் என்றாலும் பிரபலமாகி விடுவார்கள். நான்கூட ஒய்.ஜி.மகேந்திரன் சார் சீரியலில் நெகட்டீவாக நடித்துள்ளேன். இப்போது நானும் அதிரடி வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன். அப்பாவி மாதிரி இருப்பவர்கள் அப்படி நடிக்கும்போது, இவரா அப்படி நடித்தார் என்பார்கள். நம்மை ஆடியன்ஸ் திட்ட வேண்டும். அதுதான் அந்த ரோலுக்கு கிடைத்த வெற்றி. இப்போது குணசித்ர நடிகர் முத்திரையில் இருக்கிறேன். விரை வில் வில்லன் நடிகர் என்கிற இமேஜிற்குள்ளும் வருவேன்.


ரகுவரன், பிரகாஷ்ராஜ் இருவரும் பிடித்தவர்கள். சினிமா-சீரியல்களில் வில்லனாக நடிக்க டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறேன். குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிர முயற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் ரவி சங்கர்.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:39 AM
மைனா நந்தினி இப்போது ருக்கு


சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் பின்னி எடுத்தவர் நந்தினி. மதுரை வட்டாரமொழி பேசி கலக்கி எல்லோரையும் கவர்ந்தார். இவரது நிஜயப்பெயரே மறந்து எல்லோரும் மைனா என்ற அழைக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அந்த கேரக்டர் ரீச் ஆனது.


தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடரில் ருக்கு என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதிலும் அதே மாதிரியான சுட்டித்தனமான கேரக்டர். கோவை பகுதி கொங்கு தமிழ் பேசி நடிக்கிறார். இவரது மதுரை வட்டார மொழிக்கு ரசிகர்கள் பெருகியதை போன்ற கொங்கு தமிழுக்கும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.


"மைனா கேரக்டருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உயரத்தில் வைத்தது. அதே ஆதரவை ருக்கு கேரக்டருக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சென்னை பாஷை பேசி நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது. அனேகமாக அது அடுத்த தொடரில் நடக்கும் என்று நினைக்கிறேன். சின்னத்திரை மூலம் ரசிகர்கள் என்னை அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு துறுதுறு பெண்ணாக பார்ப்பது மகிழ்ச்சியாக" இருக்கிறது என்கிறார் நந்தினி.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:40 AM
சம்பள பிரச்சினையால் தென்பாண்டி சிங்கம் சீரியலை தவிர்த்தேன்! -நடிகை ஜீவிதா


மனதில் உறுதி வேண்டும், ஆபீஸ், தேவதை, வைராக்கியம், பைரவி, சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், பாசமலர்கள் உள்பட பல மெகா சீரியல்களில் நடித்த வர் ஜீவிதா. தவிர சினிமாவில், என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்த ஜீவிதா, அதன்பிறகு விஜயசேதுபதி நடித்த றெக்க படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். தற்போது ஆண்தேவதை, வண்டி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இதுபற்றி ஜீவிதா கூறும்போது, சின்னத்திரையில்தான் நான் பிரபலம். குறிப்பாக சுகாசினி, ரேவதி போன்ற நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் நான் பேசப்படுகிறேன். அந்த அளவுக்கு எனக்கு கதாபாத்திரங்களும் கிடைத்தது. அதற்காக அந்த வாய்ப்புகளை கொடுத்த இயக்குனர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் தற்போது நான் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தென்பாண்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், சம்பள பிரச்சினையால் அந்த தொடரில் நடிக்கவில்லை.


மேலும், தற்போது சமுத்திரகனி நாயகனாக நடித்து வரும் ஆண்தேவதை படத்தில் இளவரசுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அடுத்து விதார்த் நடித்து வரும் வண்டி படத்திலும் நடிக்கிறேன். சினிமாவில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும், எனக்கு பிடித்தமான படங்களை மட்டுமே ஓகே செய்கிறேன். குறிப்பாக, கிளாமர் இல்லாத வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.


அதோடு, சின்னத்திரையைப்பொறுத்தவரை, எல்லாவிதமான கேரக்டர்களிலும நடித்து விட்டேன். நாயகி, வில்லி, ரவுடி, போலீஸ் என ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொருவிதமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தி என்னால் எந்தமாதிரியான கேரக்டர்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டேன். அதனால் இப்போது சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். சீரியல்களில் நடித்தது போன்று சினிமாவிலும் வில்லி, ரவுடி, போலீஸ் வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ஜீவிதா எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் அதுவாகவே மாறி விடுவார் என்கிற பெயரை எடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறும் ஜீவிதா, ஏதேனும் ஒரு மெகா சீரியலில் நடித்துக்கொண்டே சினிமாவில் அதிகமான படங்களில் தொடர்ந்து நடிக்கப்போகிறாராம்.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:42 AM
சிங்கப்பூர் சேனல் தொகுப்பாளினி ஆகிறார் தியா


பல முன்னணி சேனல்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தியா மேனன். தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ஆடிய காலும், பேசிய வாயும் சும்மா இருக்குமா விரைவில் அங்குள்ள சேனல்களில் தொகுப்பாளினியாகிறார்.


"திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் மக்கள் என்னை மறக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் நேற்றுதான் உங்களை டி.வியில் பார்த்தேன் என்கிறார்கள். அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.........


என் கணவர் சிங்கப்பூரில் பிசினஸ்மேன், அதோட இண்டோர் கிரிக்கெட் அணி கேப்டன். அவருக்கு துணையாக இருக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் சிங்கப்பூர் சென்று விட்டேன். இங்கு தொகுப்பாளினியாக தொடர ஆசை இருந்தாலும் என் கணவருக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறேன். அங்குள்ள சில சேனல்கள் என்னை அழைத்திருக்கிறது. கணவரும் அனுமதித்திருக்கிறார். விரைவில் சிங்கப்பூர் சேனல்களில் முகம் காட்டுவேன். சிறப்பு நிகழ்ச்சிக்காக இங்கு அழைத்தால் வருவேன். என்கிறார் தியா.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:44 AM
நல்ல மாமியாராக மீண்டும் தமிழுக்கு வந்தார் நளினி


பெரிய திரையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே துணிச்சலுடன் சின்னத்திரைக்கு வந்த நடிகை நளினி. தன் ஹீரோயின் இமேஜ் பற்றி கவலைப்படாமல் குண்டான உடம்பையே தனது புது இமேஜாக மாற்றி காமெடி நடிகையாகவும், வில்லியாகவும் நடித்தார்


கிருஷ்ணதாசி தொடர்தான் அவரது முதல் தொடர். அதன் பிறகு கோலங்கள் தொடரில் நடித்தார். சின்ன பாப்பா பெரிய பாப்பாதான் அவரை காமெடி நடிகையாக எல்லா வீடுகளுக்கும் கொண்டு சென்றது. அதன் பிறகு திரைப்படங்களிலும் காமெடியாக நடிக்க ஆரம்பித்தார்.


2000மாவது ஆண்டில் சின்னத்திரையில் அறிமுகமான நளினியின் அனுபவம் 16 ஆண்டுகள். ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கும் தமிழ் சேனல்களுக்கும் சரியாக இல்லை. இதனால் தெலுங்கு சீரியல் பக்கம் ஒதுங்கினார். அடிப்படையில் அவர் ஆந்திரா என்பதால் அம்மா நா கொடலா என்ற தெலுங்கு தொடரில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் பக்கம் பல அழைப்புகள் இருந்தும் வரவில்லை.


இடையில் தான் முன்பு நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்தவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் தொடரின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். காமெடி, வில்லத்தனத்தில் ஜொலித்த நளினிக்கு இதில் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கேரக்டர். அன்பான அம்மாவாகவும், மாமியாராகவும் நடிக்கிறார்.


"தமிழ் சேனல்களில் நடிக்க கூடாது என்ற எண்ணமில்லை. யார் மீதும் எந்த கோபமும் இல்லை. ஒரு மாறுதலுக்காக தெலுங்கில் நடித்தேன். அங்குள்ள ரசிகர்களுக்கு எனது கேரக்டர் பிடித்துவிடவே தொடரில் என் பங்கை அதிகரித்தார்கள். அதனால் தொடர்ந்து அங்கேயே நடிக்க வேண்டியதாயிற்று. டார்லிங் டார்லிங் தொடரில் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒரு கேரக்டர் அதனால் உடனே ஒப்புக்கொண்டேன் என்கிறார் நளினி
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:46 AM
பிரஞ்சு, ஜெர்மன் மொழியில் பட்டம் பெறுகிறார் ஜெனிபர்


ஜெனிபரை சீரியல் நடிகை என்பதை விட கில்லி படத்தில் விஜய்யின் தங்கை புவி என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் கேளடி கண்மணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பத்திரிக்கையாளர் த.செ,ஞானவேல் இயக்கும் கூட்டத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர கோணலா இருந்தாலும் என்னோடது என்ற காமெடி படத்திலும் நடிக்கிறார்


சின்னத்திரை, பெரிய திரை இரண்டுக்கும் இடையில் ஜெனிபர் இப்போது ஓசைப்படாமல் இன்னொன்றையும் செய்து வருகிறா£. அது பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியை முறையாக கற்று வருகிறார். நாலு லெவல் கொண்ட பாடத்தில் தலா இரண்டை முடித்து விட்டார். இன்னும் இரண்டையும் முடித்து விட்டால் இரண்டிலும் பட்டம் பெற்று விடுவார்.


ஜெர்மன், பிரஞ்சு சினிமாவில் நடிக்க போறீங்களா என்றால்... "ஹலோ ஒரு ரகசியம் சொல்றேன். சென்னையில ஏகப்பட்ட பேர் கல்லூரியில் பிரஞ்சு, ஜெர்மன் மொழி எடுத்துப் படிக்கிறாங்க. அவர்களுக்கு டியூசன் எடுக்க டீச்சர்கள் தட்டுப்பாடு இருக்கு. நல்ல வேலைவாய்ப்புள்ள படிப்பு இது. அது மட்டும் காரணமல்ல புதிய புதிய மொழிகளை கற்க வேண்டும் என்கிற எனது பேராசையே இதை படிக்க காரணம்" என்கிறார் ஜெனிபர்.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:13 PM
இந்தி சீரியல்கள் பீட்சா, பர்ஹர் மாதிரி! -நடிகர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ்




சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்த வர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ். தற்போது வாணி ராணி, கல்யாண பரிசு சீரியல்களில் நடித்து வருகிறார்.தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


வாணி ராணி சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வருகிறேன். இந்த வேடம் ராதிகா மேடத்துடன் மோதும் அதிரடியான கதாபாத்திரம். அதனால் நேயர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சாகி விட்டது. முதலில் வில்லத்தனமான இருந்த அந்த கேரக்டர் சமீபகாலமாக பாசிட்டீவாகி விட்டது. அதனால் முன்பு என்னை திட்டிய நேயர்கள்கூட இப்போது உங்களை மாதிரி ஒரு பெரியப்பா எங்களுக்கு இல்லையே என்கிற ஏக்கத்தை இந்த கேரக்டர் ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு செண்டிமென்டான கேரக்டராக மாறியிருக்கிறது. அதேபோல் கல்யாண பரிசு சீரியலில் பாசிட்டீவான முக்கியத்துவம் வாய்ந்த ரோலில்தான் நடித்து வருகிறேன்.


குறிப்பாக, ராதிகா மேடத்துடன் நடிக்கும்போது மனதளவில் ஒருவித பயம் இருந்து கொண்டேயிருக்கும். அது மரியாதை கலந்த பயம்தான். அவர் ஒரு சீனியர் நடிகை என்பதால் அவருடன் நடிக்கும்போது தவறு செய்து விடாமல் சரியாக நடித்து விட வேண்டும் என்பதினால் ஏற்படும் பயம்தான் அது. அதன்காரணமாக, மற்ற காட்சிகளில் நடிக்கும்போது கேமரா முன்பு சென்ற பிறகுதான் டயலாக் பேப்பரை பார்ப்பேன். ஆனால் ராதிகா மேடத்துடன் நடிக்கும் காட்சிகள் என்றால் முன்பே உதவி இயக்குனர்களை அழைத்து டயலாக் பேப்பரை வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு என்னை தயார்படுத்திக்கொள்வேன். அதோடு, மேடம் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே வாத்தியார் வகுப்பறைக்குள் வந்ததும் மாணவர்கள் கப்சிப்பென்றாகி விடுவது போல் நாங்கள் அமைதியாகி விடுவோம். அவர் நடித்து விட்டு சென்றதும் பயம் நீங்கி ஜாலியாகி விடுவோம்.


முன்பெல்லாம் சீரியல்களில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு பெண், ஆணையோ அல்லது பெண்ணையோ கத்தியால் குத்தி பழிவாங்குவது போல் எல்லாம் காட்சிகள் வைத்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. அது யதார்த்தமாக இருக்காது என்பதால், அந்த மாதிரியான காட்சிகளுக்கு ஆண்களையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தற்போது சீரியல்களில் நடிகர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.


மேலும், சமீபகாலமாக இந்தி சீரியல்கள் தமிழ்நாட்டுக்குள் வருவது அதிகரித்துள்ளது. என்னைக்கேட்டால் இந்தி சீரியல்கள் நிலைக்க முடியாது. அது நம் முடைய கலாச்சாரத்தை மீறிய கதைகளில் தயாராகின்றன. அந்தவகையில், நம் முடைய தமிழ் சீரியல்கள் நமது அம்மா சமைக்கும் அறுசுவை உணவுகள் என் றால், இந்தி சீரியல்கள் பீட்சா பர்ஹர் மாதிரியானவை. அவை புதிதாக இருப்பதால் ஒருநாள் அல்லது சில நாட்கள் வேண்டுமானால் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் வெறுத்து விடும். காரணம், இந்தி தொடர்களில் உடம்புக்கு சரியில்லாத கேரக்டர்கூட மேக்கப் போட்டுக்கொண்டு யதார்த்தத்தை மீறிதான் படமாக்கப்படும். ஆனால் நம்முடைய சீரியல்கள் அனைத்துமே யதார்த்தமானவை என்று கூறும் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ், தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி தயாரிக்கும் சீரியல்களில் நடிப்பதற்கும் பேசி வருவதாக சொல்கிறார்.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170122084642442404.jpg



நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:15 PM
குடும்பத்தலைவியாக நடிக்க வேண்டும்! சீரியல் நடிகை அபி


கல்யாணம் முதல் காதல் வரை, அழகி உள்பட பல சீரியல்களில் நடித்தவர் அபி. எதிர்காலத்தில் அழுத்தமான குடும்பத்தலைவி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் அவர். அதோடு, நான் நடிக்கும் சீரியல்கள் மட்டுமின்றி மற்ற சீரியல்களையும் பார்த்து ரசிப்பேன். அந்த வகையில், பிரியமானவளே உள்ளிட்ட சில சீரியல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் நடிக்கும் நடிகைகளின் நடிப்பையும் ரசிப்பேன். அப்படி பார்க்கும்போது எனது சீரியல்களில் எந்தமாதிரியான பர்பாமென்ஸ் கொடுத்தால் நேயர்கள் ரசிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


மேலும், இதுவரை சாப்ட்டான, வெகுளியான கேரக்டர்களில் நடித்தபோதும், அடுத்தபடியாக அழுத்தமான குடும்பப்பிரச்சினைகளை எதிர்த்து போராடும் பெண் வேடத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். வீட்டில் இருந்தபடியே சீரியல் பார்க்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும்படியான வேடங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று கூறும் அபிக்கு சீரியலைத் தொடர்ந்து சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். அதனால் சீரியல்களில் நடித்துக்கொண்டே சில படங்களிலும் தற்போது கமிட்டாகி நடித்து வருவதாக சொல்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:16 PM
சினிமாவில் ஆர்வம் காட்டும் ஆனந்தி




கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகை ஆனவர் ஆனந்தி. அதன் பறகு மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடினார். வாலு, மீகாமன் படங்களில் நடித்தார். இவரின் நடன திறமையை பார்த்து பாலா தாரை தப்பட்டையில் அறிமுகப்படுத்தினார். வரலட்சுமியோடு செம ஆட்டம் போட்டார் ஆனந்தி. சமீபத்தில் வெளி வந்த பறந்து செல்லவா படத்தில் காமெடியன் சதீஷ் ஜோடியாக நடித்தார். படத்தில் மது அருந்தும் காட்சியிலும், கிளாமர் காட்சியிலும் துணிச்சலுடன் நடித்தார். தற்போது சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


"ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றில்லை. நடிப்பதற்கு பேஸ் இருக்கிற கேரக்டராக இருக்கணும். வில்லியாக நடிக்க முடியும், ஆனால் காமெடி வராதுன்னு நினைக்கிறேன். சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் தொடர்ந்து நடிப்பேன்" என்கிறார் ஆனந்தி.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:20 PM
வில்லி ஆனார் கவிதா


பல வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கர்ணனின் மனைவியாக சிறிய கேரக்டரில் நடித்த கவிதா, அதன் பிறகு தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்து விட்டு தமிழுக்கு திரும்பியிருக்கிறார். நீலி தொடரின் வில்லி அவர்தான்.


மனைவியை இழந்த கணவன் தன் மகள் அபியோடு வசிக்கிறார். மகளுக்கு பிடித்தமான பொம்மை ஒன்றில் இறந்த அம்மாவின் ஆவி இருக்கிறது. அது குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறது. கணவன் மறுமணம் செய்து கொள்ள.. மனைவியா வந்தவள் குழந்தை அபியை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள். அவளிடமிருந்து குழந்தையை பொம்மைக்குள் இருக்கும் அம்மா ஆவி எப்படி காப்பாற்றுகிறது என்கிற கதை. இதில் கொடுமைக்கார சித்தி ரேகாவாக கவிதா நடிக்கிறார்


."நான் முதன் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். அதுவும் குழந்தையை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார சித்தியாக. நிச்சயம் எனது கேரக்டரை பெண்களுக்கு பிடிக்காது, திட்டி தீர்க்கப்போகிறார்கள். அதுதான் என் நடிப்பின் வெற்றி. தமிழ் சீரியலில்தான் அறிமுகமானேன். மீண்டும் தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது" என்கிறார் கவிதா.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:23 PM
நேயர்களை சிரிக்க வைப்பதே என் நோக்கம்! - அசார்


காமெடி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் அசார். தற்போது தல-தளபதி என்ற நிகழ்ச்சிக்கு அவரே கான்செப்ட் ரெடி பண்ணி நடித்து வருகிறார்.


இதுபற்றி அசார் கூறும்போது, நான் பங்குபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையுமே நேயர்கள் மகிழ்வுடன் ரசிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் நான் காமெடி நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் லைவ் நிகழ்ச்சி மட்டுமின்றி கான்செப்ட் நிகழ்ச்சியாக இருந்தாலும் முடிந்தவரை காமெடி செய்து வருகிறேன். தற்போது ஆதித்யா சேனலில் தல-தளபதி என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.


இந்த நிகழ்ச்சியின் பெயர் தல-தளபதி என்று இருந்தாலும் இது சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு கான்செப்ட்டை ரெடி பண்ணி அதில் நடித்து வருகிறேன். எடுத்துக்கொள்ளும் விசயத்திற்கேற்ப என்னுடன் மற்றவர்களும் நடிப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் நடிக்கிற விசயமோ அல்லது சரித்திர கால விசயங்களோ எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற கெட்டப்பில், அந்த காலத்தில் மக்கள் பேசியது போன்ற வார்த்தைகளை அந்த சாயலில் பேசி நடித்து வருகிறேன். இதற்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக, இந்த நிகழ்ச்சிக்கு தேவையான கான்செப் ட்டை நானே ரெடி பண்ணி நடிப்பது சந்தோசமாக உள்ளது என்கிறார் அசார்.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:24 PM
வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிக்கும்! -நடிகை பிரியா


விஜய் டிவியில் ஒளிபரப்பான என் பெயர் மீனாட்சி தொடரில் வில்லியாக நடித்தவர் பிரியா. தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை தொடரில் மிர்ச்சி செந்திலுடன் இணைந்து நடித்து வருகிறார்.


இதுபற்றி பிரியா கூறுகையில், மாப்பிள்ளை தொடரில் மிர்ச்சி செந்திலை ஒன்சைடாக லவ் பண்ணும் கேரக்டரில் நடிக்கிறேன். திருமணத்திற்கு முன்பு அவரை காதலிக்கும் நான், பின்னர் திருமணமான பிறகு அவருடன் நட்பாக பழகி வருகிறேன். ரொம்ப இயல்பான கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.


மேலும், என் பெயர் மீனாட்சி என்ற தொடரில் நெகடீவ் ரோலில் நடித்தேன். அதைப்பார்த்து நேயர்கள் திட்டினாலும், பெரிதாக ரீச் ஆனது. அதோடு எனக்கும் வில்லி வேடங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் என்னையுமறியாமல் அந்த மாதிரியான வேடங்களில் அதிக ஈடுபாட்டுடன் நடிப்பேன். சீரியல் வில்லிகளை திட்டித்தீர்க்கும் நேயர்கள் இப்போது திட்டுவது குறைந்து விட்டது. வில்லிகளின் நடிப்பையும் ரசிக்கிறார்கள். அந்த அளவுக்கு பெண்கள் மனப்பக்குவம் பெற்று விட்டனர்.


அதோடு, சினிமாவில் பசங்க-2 உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் சில படங்களில் நடிக்கிறேன். தேவதர்ஷினி போன்று ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அவர் அளவுக்கு எனக்கு காமெடி வராது என்றாலும், செண்டிமென்ட், எமோசனல், நெகடீவ் என மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து ஒரு நல்ல குணசித்ர நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், சீரியலில் நடித்துக் கொண்டே நல்ல சினிமா வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் பிரியா.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:26 PM
டைரக்டர் பாலாவின் 25 நிமிடத்துக்கு சொந்தக்காரி நான்! -நடிகை ஜீவிதா




பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இவருக்கு சமீபத்தில் டைரக்டர் பாலாவின் புதிய படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. பாலா படம் என்றதும் சொல்ல முடியாத சந்தோசத் துடன் ஓடோடிச்சென்று அவரை சந்தித்துள்ள ஜீவிதா, டைரக்டர் பாலாவின் 25 நிமிடத்துக்கு சொந்தக்காரி நான் என்று நினைக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.


அந்த சந்திப்பு குறித்து ஜீவிதா கூறும்போது, டைரக்டர் பாலா சார் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். அவரை சந்திக்க காலை 11 மணிக்கு வரச்சொல்லியிருந்தனர். ஆனால் நான் ஆர்வத்தில் 10.30க்கே சென்று விட்டேன். ஆனால் பாலா சார் நான் போய் இரண்டறை மணி நேரம் கழித்துதான் வந்தார். வந்தவர் என்னைப்பார்த்ததும், ஸாரிம்மா உங்களை காக்க வச்சிட்டேன் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரது வருகைக்காக எத்தனை மணி நேரமென்றாலும் காத்திருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு, பெறவாயில்ல சார் என்றேன்.


அதையடுத்து, என்னைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தவர், காபி சாப்பிட சொன்னார். இப்பத்தான் சார் சாப்பிட்டேன் என்றேன். எனக்காக இன்னொரு காபி சாப்பிடுங்க என்றார். பின்னர் சிகரெட் பிடிக்க முற்பட்டபோது, உங்களுக்கு சிகரெட் புகை ஒன்றும் அலர்ஜி இல்லியே என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்ன பிறகுதான் சிகரெட் பிடித்தார். பின்னர், நீங்கள் பார்ப்பதற்கு என் பேமிலி டாக்டர் மாதிரி இருக்கிறீர்கள் என்றவர், இப்போது நான் இயக்கும் படத்தில் ஒரு பிளஸ்-2 படிக்கும் பெண்ணுக்கு அம்மா வேடம் இருக்கிறது. அதை நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பீல் பண்ணுகிறேன் என்றார்.


அதைக்கேட்டு, இப்போதே நான் அவ்வளவு வயதான அம்மாவாக எப்படி சார் நடிப் பது என்றேன். அதற்கு பெறவாயில்லை அப்படின்னா வில்லனின் மனைவியாக நடிக்கிறீர்களா? என்று சொன்னவர், ஆனால் அதில் உங்களுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இருக்காது. உங்களது திறமையை வீணடிக்க விரும்பவில்லை. நன்றாக யோசித்து முடிவெடுங்கள். உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை என்றார். அப்போது நான், சார் இப்ப நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று சொல்லவில்லை. மாறாக, உங்கள் படம் என்பதால் அழுத்தமான அக்கா, அண்ணி வேடங்கள் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றேன்.


.அதற்கு, அந்த மாதிரி வேடம் இந்த படத்தில் இல்லை. நான் சொன்ன இந்த கேரக்டர்களில் ஏதேனும் ஒன்றில் நீங்க நடிப்பதாய் இருந்தால் உங்கள் கேரக்டரை இன்னும் பெரிதாக்குகிறேன். அப்படி நடிக்க விரும்பவில்லை என்றாலும் பெறவாயில்லை. அடுத்து நான் உங்களுக்காக ஒரு கதை ரெடி பண்ணுகிறேன். அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார்


அப்படி அவர் சொன்னது எனக்கு பெரிய சந்தோசமாகி விட்டது. எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். என்னிடம், உனக்கான வேடம் இதுதான். முடிந்தால் நடி, இல்லையேல் போய் விடு என்று சொல்லாமல் என் விருப்பத்தை தெரிந்து கொண்டு என்னை கட்டாயப்படுத்தாமல் பேசினார். அதோடு, அடுத்து உனக்காக ஒரு கதை ரெடி பண்ணுகிறேன் என்றார். இதையெல்லாம் நினைத்துப்பார்த்தால் நடப்பது நனவா இல்லை கனவா என்றே எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை யில் டைரக்டர் பாலாவை சந்தித்த அந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அவர் படத்தில் நடிக்கிறேனோ இல்லையோ அவரை சந்தித்த அந்த 25 நிமிடங்கள் என் வாழ்நாளில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜீவிதா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170110081408036107.jpg



நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:28 PM
திக்குவாய் கேரக்டர் சிம்பத்தி ஏற்படுத்தியுள்ளது - ராமச்சந்திரன்


சின்னத்திரைகளில் ஏராளமான சீரியல்களில் நடித்திருப்பவர் ராமச்சந்திரன். பெரும்பாலும் நெகட்டீவ் வேடங்களாக நடித்துள்ள அவர், தற்போது ராதிகாவின் வாணி ராணி தொடரில் பாசிட்டீவான திக்குவாய் கேரக்டரில் நடித்து வருகிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


வாணி ராணி தொடரில் ராதிகாவின் சம்மந்தி வேடத்தில் நடித்து வருகிறேன். வழக்கமாக நெகட்டீவ் ரோல்களிலேயே நடித்து வந்த நான் இதில் ஒரு பாசிட்டீவான அப்பா வேடத்தில் நடிக்கிறேன். இந்த கேரக்டரின் சிறப்பு தன்மை என்னவென்றால், திக்குவாய் கேரக்டர். முதலில் இந்த கேரக்டர் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஸ்பாட்டுக்கு சென்ற பிறகுதான் திக்குவாய் கேரக்டர் என்பதை சொன்னார்கள். எனக்கும் அது ரொம்ப புதுசாக இருந்தது. இப்போது அந்த கேரக்ட ருக்கு நேயர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளனர். இந்த கேரக்டர் சிம்பத்தி ஏற்படுத்தியுள்ளது. நெகட்டீவ் இமேஜை ஓரங்கட்டி அய்யோ பாவம் என்று நேயர்கள் சொல்லும் அளவுக்கு எனது இமேஜை மாற்றியுள்ளது. நெகட்டீவ் வேடங்களில் கெத்தாக நடிப்பது ஒரு டைப்பாக இருந்தபோதும், இயல்பாக வித்தியாசமான ஒரு கேரக்டர் அமைந்தது ரொம்ப சந்தோசமாக உள்ளது.


ராதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்து சொல்ல வேண்டுமென்றால், இந்த சீரியலில் அதிக காட்சிகள் ராதிகாவுடன் தான் நடித்து வருகிறேன். முதலில் ராதிகாவுடன் நடிக்கிறோமே என்பது யோசனையாகத்தான் இருந்தது. முக்கியமாக, ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அவங்க முதலாளி, பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட். மிகச்சிறந்த நடிகை. எந்த கேரக்டராக இருந்தாலும் சிறப்பாக செய்யக்கூடிய நடிகை. அந்த கேரக்டராகவே மாறி பண்ணக்கூடியவர். அந்த மாதிரி ஒரு திறமையுள்ள ஆர்ட்டிஸ்டுடன் நடிக்கும்போது ஜாக்கிரதையாகத்தான் நடிக்க வேண்டும். அந்த வகையில், சரியாக பண்ண வேண்டும் என்று கவனமாக நடித்து வருகிறேன்.


மேலும், இந்த வாணி ராணி தொடரில் ஆயிரமாவது எபிசோடில்தான் என்ட்ரி ஆனேன். தொடர்ந்து கேரக்டர் நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது மக்களிடம் நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது. ஆர்ட்டிஸ்டுகளுக்கு பிராண்ட் கிடையாது. திக்குவாய் பண்ணும்போது ஒரு காமெடியாகவும் பண்ணலாம். சீரியஸ் வேடங்களில் நடித்து விட்டு இப்போது ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்து ரசிகர்களை கவருவது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இதற்கு முன்பு இந்த மாதிரி மாற்றுத்திறனாளி வேடங்களில் நான் நடித்ததில்லை. ஆனால் இனிமேல் நிறைய மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இப்போது வெரைட்டியான வேடம் கிடைத்தாலும் லட்டு மாதிரி எடுத்துக்கொண்டு நடிப்பேன் என்கிறார் ராமச்சந்திரன்.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:29 AM
வாழ்நாள் முழுக்க நடித்துக்கொண்டிருக்க வேண்டும்!- நடிகை நேத்ராஸ்ரீ


ஜெயா டிவியில் ஒளிபரப்பான காலபைரவர் சீரியலில் அறிமுகமானவர் நடிகை நேத்ராஸ்ரீ. தொடர்ந்து தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி போன்ற சீரியல்களில் நடித்தவர், தற்போது வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுதவிர நேத்ரா, புயலாய் கிளம்பி வர்றோம் உள்பட சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக நேத்ராஸ்ரீ அளித்த பேட்டி...


மீடியாவில் உங்களது என்ட்ரி குறித்து சொல்லுங்கள்?


2011-ல் சென்னை கிண்டியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது தினமும் எண்ணூரில் இருந்து கிண்டிக்கு ரயிலில் செல்வேன். அப்போது எனது 6 வருட ரயில் நண்பரான மீஞ்சூரைச் சேர்ந்த டைரக்டர் ராஜீவ் பிரியன் மோகன்ராஜ் தான் இயக்கும் சீரியலில் என்னை நடிக்க அழைத்தார். எனக்கு நடிக்கத் தெரியாது என்று மறுத்தேன். ஆனால் அவர் உன்னிடம் நடிப்புத்திறமை உள்ளது. உன்னால் முடியும் என்று சொல்லி ஜெயா டிவிக்காக தான் இயக்கிய காலபைரவர் சீரியலில் நடிக்க வைத்தார். அந்த சீரியலில் சங்கவி நாயகியாக நடித்தார். அதில் எனது நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தடுத்து பல சீரியல்கள் கிடைத்தன. இப்போது சீரியல்களில் பிசியாக இருக்கிறேன்.


எந்த மாதிரியான கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்கள்?


காலபைரவர் சீரியலில் வில்லியாக நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. அதில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தன. பாசிட்டீவ், நெகடீவ் ரோல்களில் கலந்து நடித்தேன். தற்போது வாணி ராணியில் சப்-இன்ஸ்பெக்டராகவும், தாமரையில் இன்ஸ்பெக்டராகவும் நடித்து வருகிறேன். இதில் வாணி-ராணியில் பிரபல நடிகையான ராதிகா மேடத்துடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. அதை பெருமையாக கருதுகிறேன். மற்றபடி, எந்தமாதிரி வேடமாக இருந்தாலும் எனது திறமைக்கு தீனி போடும் வேடங்களாக இருக்க வேண் டும் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:39 AM
மீண்டும் நடிக்க வந்த மகிமா


பொம்மலாட்டம் தொடரில் வந்த சிவகாமி சித்தியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அந்த கேரக்டரில் நடித்தவர் மகிமா. அதன்பிறகு அழகி உள்ளிட்ட சில தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். பெரும்பாலான தொடர்களில் அண்ணி, அக்கா, அத்தை மாதிரியான குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார். திடீரென சின்னத்திரையிலிருந்து விலகி இருந்தார்.


குழந்தைகளுக்கு அம்மாவாகவும், கணவருக்கு நல்ல மனைவியாகவும் இருந்து குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டியது இருந்தால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்ல சினிமாவிலும் அம்மா கேரக்டரில் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.


"குடும்ப பொறுப்புகள் சிலவற்றை முடிக்க வேண்டியது இருந்ததால் சீரியல்களிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். இப்போது மகன் கல்லூரிக்கு போகிறான். அவனே "விரும்பம் இருந்தா நடிம்மா" என்ற ஊக்கப்படுத்தினான். அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். சின்னத்திரையில் மட்டுல்ல சினிமாவிலும் அம்மாவாக நடிக்க இருக்கிறேன். இதற்காக கதை கேட்டு வருகிறேன். விரைவில் சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் என்னை பார்க்கலாம் என்கிறார்" மகிமா
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:42 AM
திரிஷாவின் தீவிர ரசிகை நான்! -நடிகை ஸ்ருதி -


திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற தங்கை வேடத்தில் அறிமுகமானவர் ஸ்ருதி. அதையடுத்து தனுஷின் கொடி படத்தில் அனுபமாவின் தங்கையாக நடித்தவர், இப்போது வாணி ராணி தொடரில் ராதிகாவின் மருமகளாக நடித்து வருகிறார்.


தினமலர் இணையதளத்திற்காக ஸ்ருதி அளித்த பேட்டி...


நாதஸ்வரம் தொடரில் ஒரு சாப்ட்டான தங்கை வேடத்தில் நடித்தேன். அந்த வேடம் குடும்பப் பெண்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத் தது. ஐந்து வருடங்கள் அந்த சீரியலில் நடித்துவிட்டு ஒரு வருடம் பிரேக் கொடுத்தேன். பின்னர் கொடி படத்தில் அனுபமாவின் தங்கையாக நடித்தேன். அதையடுத்து இப்போது வாணி ராணியில் ராதிகா மேடத்தின் மருமகளாக நடிக்கிறேன். இதுவரை சாப்ட்டாக இருந்த எனது கேரக்டர் இப்போது நெகடீவாக மாறத்தொடங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் என்னிடமிருந்து மாறுபட்ட பர்பாமென்ஸை எதிர்பார்க்கலாம்.


மேலும், சீரியல்களில் அமைதியான அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித் துள்ள நான், நிஜத்தில் ஜாலி டைப். அனைவரிடமும் கலகலப்பாக பேசுவேன். அதோடு, எனது பெற்றோர் ஆசிரியராக பணியாற்றுகிறார்கள். அதனால் நான் நடிக்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்தபோது, எக்காரணம் கொண்டும் படிப்பை விடக்கூடாது. படித்துக்கொண்டேதான் நடிக்க வேண்டும் என்றனர். அதனால் அவர்களது விருப்பப்படியே படிப்புக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடித்து வருகிறேன். அதோடு, கோவையில் நான் படிக்கும் கல்லூரி கரஸ்பாண்டன்ட் நான் நடிப்பதற்கு அனுமதி கொடுத்து வருகிறார். நாதஸ்வரம் சீரியலில் நான் நடித்ததில் இருந்தே அவரும் எனது ரசிகையாகி விட்டார். எனது பெற்றோரைப்போலவே அவரும் என்னை உற்சாகப்படுத்துகிறார். எனது பெற்றோரும், கரஸ்பாண்டன்டும் எனது நடிப்பில் உள்ள நிறைகுறைகளையும் சுட்டிக்காட்டி எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ஐடியாவும் கொடுக்கிறார்கள். அது எனக்கு பெரிய உதவியாக உள்ளது. அந்த வகையில், கடந்த 7 வருடங்களாக படித்துக்கொண்டே நடித்து வருகிறேன்.


மேலும், சீரியல்களைப்பொறுத்தவரை நெகடீவ் ரோல்களில் நடித்தால் நேயர்கள் திட்டித்தீர்ப்பார்கள். ஆனால் அந்த மாதிரி வேடங்களில்தான் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருக்கும். அது ஆடியன்ஸ் மனதிலும் பதியும். அதனால் நான் அதிரடியான நெகடீவ் வேடங்களையும் வரவேற்கிறேன். சமீபகாலமாக சீரியல்களில் பழிவாங்கும் காட்சிகள் குறைந்து வருகிறது. இது நல்ல விசயம். அதேபோல் முழுக்க முழுக்க பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையும் இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. அது மட்டுமின்றி, தரமான கதைகளில் தயாராகி வரும் தமிழ் சீரியல்களில் தற்போது பிரமாண்டமும் அதிகரித்துள்ளது. சில சீரியல்களை சினிமா அளவுக்கு எடுக்கிறார்கள். அதைப்பார்க்கையில் சந்தோசமாக உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் சீரியல்களின் தரமும், பிரமாண்டமும் இன்னும் பன்மடங்கு உயரும் என்று தெரிகிறது. குறிப்பாக, இந்தி டப்பிங் சீரியல்கள் தமிழ்நாட்டில் நிலைக்க முடியாது. காரணம், அவற்றில் யதார்த்தம் இல்லை. தமிழ் சீரியல்களில்தான் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாக உள்ளன. அதனால்தான் சீரியல் பார்க்கும் பெண்மணிகள் சீரியல்களோடு ஒன்றி விடுகிறார்கள்.


.அதோடு, தனுஷின் கொடி படத்தில் நடித்த எனக்கு சினிமாவிலும் நல்ல ஹோம்லியான, மாடர்ன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. முக்கியமாக, திரிஷா சினிமாவில் நடிப்பது போன்று நடிப்பேன். நான் அவரது தீவிரமான ரசிகை. சினிமாவில் நான் நடிகையானால் அவரைத்தான் பின்பற்றுவேன். அவருடன் கொடி படத்தில் ஒரேயொரு சீனில்தான் நடித்தேன். என்றாலும், திரிஷா நடித்த படத்தில் நானும் நடித்தது பெருமையாக உள்ளது. திரிஷா மாதிரி சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும். கதைக்கு தேவையான அளவு ரசிக்கும் வகையில் கிளாமரை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையெல்லாம் உள்ளது. அதோடு, தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாட வேண்டும் என்றை ஆசையும் உள்ளது. காலம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஸ்ருதி.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170201084651122988.jpg



நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:43 AM
சீரியல் வாய்ப்பு குறைந்து விட்டதால் சினிமாவில் நடிக்கிறேன்! -நிலானி


சின்னத்திரையில் பல சீரியல்களில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நிலானி. தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்ல திறந்தது கதவு சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு, ஆண்தேவதை, சரவணன் இருக்க பயமேன், மன்னர் வகையறா ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.


தினமலர் இணையதளத்திற்காக நிலானி அளித்த பேட்டி...


தற்போது நான் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்ல திறந்தது கதவு சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். அதோடு, சமுத்திரகனியின் ஆண்தேவதை, விமல் நடிக்கும் மன்னர் வகையறா, உதயநிதியின் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கிறேன். அதனால் இனிமேல் சினிமா ரசிகர்களுக்கும் நான் நன்கு பரிட்சயமான நடிகையாகி விடுவேன். இந்த படங்களில் போலீஸ், வில்லனின் மனைவி, ஹீரோவின் முக்கியமான தோழி என கவனிக்கப்படும் கேரக்டர்களில் நடித்து வருகிறேன். ஏற்கனவே சீரியல்களில் நடித்து நல்ல அனுபவம் இருப்பதால் முடிந்தவரை கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறேன்.


மேலும், நான் இப்படி சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணம், சீரியல்களில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்து வந்த நான், இப்போது மெல்ல திறந்தது கதவு சீரியலில் மட்டுமே நடிக்கிறேன். சின்னத்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் சினிமாவிலும் நடித்து வருகிறேன். அதோடு, சீரியல்களில் நடித்தது போன்று சினிமாவிலும் குடும்பப் பாங்கான வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன். அதோடு மாடர்ன் கேரக்டர்களிலும் நடிப்பேன். ஆனால், கிளாமர் மற்றும் ஆபாச வசனங்கள் பேசி நடிக்க மாட்டேன். சீரியல்களில் நடித்து சம்பாதித்த நல்ல நடிகை என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சினிமாவிலும் தரமான கேரக்டர்களுக்கே முதலிடம் கொடுப்பேன் என்கிறார் நிலானி.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:45 AM
தமிழ்நாட்டு பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள்! -சமையல் மந்திரம் திவ்யா


சமையல் மந்திரம், ஐ அந்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் திவ்யா. அது தவிர, சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்


.தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


சமையல் மந்திரம், ஐ அந்தரங்கம் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதை விமர்சிக்கிறார்கள். 50 சதவிகிதத்தினர் ஏற்றுக்கொண்டபோதும், 50 சதவிகிதத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன். அதோடு, இதை நான் ஒரு விழிப்புணர்வாகத்தான் பார்க்கிறேன். இன்னும் நம்முடைய மக்களிடையே செக்ஸ் குறித்த சந்தேகங்கள் நிறையவே உள்ளது. அதனால் அந்த மாதிரி நபர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு சொல்வதை ஒரு சமூக சேவை போன்றுதான் நான் கருதுகிறேன். வெளிநாடுகளில் இதுபோன்ற விசயங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில இன்னும் செக்ஸை தவறான விசயமாகவேதான் பார்க்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.


மேலும், இந்த நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக உடைகளை எக்ஸ்போஸ் செய்வதாகவும் சொல்கிறார்கள். ஆனால் நான் அதிகமாக செய்யவில்லை. அந்த நிகழ்ச்சியில் அப்படித்தான் பங்கேற்க வேண்டும் என்பதால் அப்படி உடையணிகிறேன். என்னைப்பொறுத்தவரை அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இதில் சமையல் மந்திரம் நிகழ்ச்சி முடிந்து விட்டது. இப்போது ஐ அந்தரங்கம் நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்று வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்கு கிடைத்ததை நினைத்து மனதளவில் திருப்தியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.


இந்த நிகழ்ச்சி தவிர தற்போது திரிஷா நடிக்கும் மோகினி படத்தில் மயில்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். காமெடி கலந்த வேடம். அதேபோல், இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ள நான் இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் வள்ளி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நான் ரொம்ப போல்டான பெண். ஆனால் இந்த தொடரில் சாப்ட்டான டீக்கடை நடத்தும் பெண்ணாக நடிக்கிறேன். கிராமத்து வேடம் என்பதால் அந்த கேரக்டருக்காக என்னை முழுமையாக மாற்றி நடிக்கிறேன். அதனால் என்னை நேரில் பார்ப்பவர்களுக்கு அந்த சீரியலில் நடித்திருப்பது நான்தான் என்று சொன்னால் நம்பவே மாட்டார் கள். அந்த அளவுக்கு அந்த கெட்டப்பில் மாறிப்போயிருக்கிறேன்.


மேலும், இந்த பேட்டிவாயிலாக நான் இன்னொரு விசயத்தையும் பதிவு செய்தாக வேண்டும். அதாவது, சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, பீட்டா அமைப்பைச்சேர்ந்த ராதாராஜன் என்ற பெண்மணி இளைஞர்களின் அமைதிப்போராட்டத்தை ப்ரீ செக்ஸ் என்ற வார்த்தையை முன்வைத்து கொச் சைப்படுத்தியிருந்தார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். அவர்களைப்பார்த்து அப்படியொரு வார்த்தையை அவர் சொன்னதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. துடித்துப்போய் விட்டேன். அதனால் அதுகுறித்து அப்போதே ஒரு வீடியோ வெளியிட நினைத் தேன். அந்த அளவுக்கு அவரது வார்த்தை என்னை கடும் கோபத்துக்கு ஆளாக்கி விட்டது என்கிறார் சமையல் மந்திரம் திவ்யா.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:47 AM
ஹீரோ எனது டார்க்கெட் இல்லை - ‛அது இது எது ஜார்ஜ்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் ஜார்ஜ். குறிப்பாக, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற எபிசோடில் நடித்த பிறகு தனுஷின் மாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற அவர், தற்போது மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


தான் நடிகரானது பற்றி ஜார்ஜ் கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் மிகுதி. அதனால் பள்ளிகளில் நடக்கும் நாடகங்களில் நடித்து வந்தேன். எனது நடிப்புத்திறமையைப்பார்த்து எனது பெற்றோர் என்னை உற்சாகப்படுத்தினர். எனது அம்மா ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா போன்ற நடிகனாக வேண்டும் என்பார். எனது தந்தையோ மணிவண்ணன், ஜனகராஜ் போன்று நடிகராக வேண்டும் என்று சொல்வார். இப்படி பெற்றோரே என்னை உற்சாகப் படுத்தியதால் நடிப்பில் எனக்கான ஆர்வம் அதிகரித்தது.


அதனால் விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் கான்சப்ட் ரைட்டராக என்ட்ரி கொடுத்தேன். பின்னர் அது இது எது நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கினேன். பல நடிகர்களின் கெட்டப்பில் நடித்தபோதிலும் மணிவண்ணன் கெட்டப்பில் நடித்த போது எனக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அதையடுத்து, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்ற எபிசோடில் எனது நடிப்பைப்பார்த்த இயக்குனர் பாலாஜிமோகன், மாரி படத்தில் என்னை நடிக்க வைத்தார்.


அதன்பிறகு இப்போது விக்ரம் வேதா, நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்ல, ஜூலியும் 4 நண்பர்களும் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளேன். அதனால் இப்படங்கள் வெளியாகும்போது சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் கிடைக்கும். அதோடு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது எனது டார்க்கெட் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்கவே ஆசைப்படுகிறேன். மேலும், என்னதான் சினிமாவில் பிசியானாலும் சின்னத்திரையில் எப்போதும் போல் எனது பயணம் தொடரும் என்று கூறும் அது இது எது ஜார்ஜ், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அது எனக்கு ஆத்மதிருப்தியை கொடுக்கிறது என்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:51 AM
சின்னத்திரை தான் ரஜினி படவாய்ப்பை வாங்கித்தந்தது! -தாடி பாலாஜி பேட்டி


சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கலக்கப்போவது யாரு, நடுவுல கொஞ்சம் டிர்ஸ்டப் பண்ணுவோம், சிரிப்புடா என பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்த கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து காமெடி செய்தவர், தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்களிலும் நடிக்கிறார் தாடி பாலாஜி.


தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த தகவல்கள் இங்கே இடம்பெறுகிறது...


வடிவேலுவுடன் கத்திச்சண்டையில் நடித்தது பற்றி!


வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியிருக்கிறது. மேலும், வடிவேலு சாரின் ரீ-என்ட்ரியில் நடித்த முதல் படத்திலேயே அவர் எனக்கு வாய்ப்பு கொடுத் தது மகிழ்ச்சியாக இருந்தது. அதேசமயம், கத்திச்சண்டையில் அவருக்கான தீனி இல்லை என்பது எனது கருத்து. டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மருதமலை படத்தில் சூப்பர் காமெடி காட்சிகள். மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அர்ஜூனே தெரியமாட்டார். வடிவேலுதான் தெரிவார்.


ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை அந்த அளவுக்கு காமெடி பெரிதாக இல்லை. அதோடு, வடிவேலு நார்மலா வந்திருக்கலாம். இந்த மாதிரி கெட்டப்பில் வந்திருக்க வேண்டாம் என் நினைக்கிறேன். கத்திச்சண்டை ட்ரெய்லரில் ஐ வில் பேக் என்று அவர் சொன்னபோது தியேட்டரில் பெரிய கைதட்டல் கிடைத்தது. ஜனங்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவருக்கான காமெடி காட்சிகள் படத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. மேலும், வடிவேலுவுடன் அடுத்தபடியாக 23ஆம் புலிகேசி படத்தில் நடிக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் முழுமையாக பூர்த்தி செய்து விடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. காரணம், வடிவேலு ஒரு சிறந்த காமெடியன். டிவி மூலமாக மற்றவர்களை சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கிறார். அவர் சினிமாவில் இல்லாதபோதும் சிரிக்க வைத்தார்.


தனி காமெடியனாக எப்போது நடிப்பீர்கள்?</b>




சில இயக்குனர்கள் அந்த வாய்ப்பை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் விரைவில் நான் தனி காமெடியனாக நடிக்கும் படங்கள் வெளியாகும். மேலும், பெரிய திரையில் கிடைக்காத பெயரை விஜய் டிவி வாங்கிக்கொடுத்து வருகிறது. எந்த ஷோவாக இருந்தாலும் பாலாஜி இருப்பார் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு விஜய் டிவி என்னை ஆதரித்து வருகிறது. அதோடு, விஜய் டிவியில் அனைவரையும் பேமிலி மாதிரி என நினைப்பார்கள். எங்களது பிறந்தநாள், திருமண நாளைகூட இணைந்து கொண்டாடி மகிழ்வார்கள். தலைமையில் இருந்து செக்யூரிட்டி வரைக்கும் பேமிலி மாதிரிதான் பழகுவார்கள். அதுதான் விஜய் டிவி. என்ன பிரச்சினை, என்ன தேவை என்றெல்லாம் கேட்டு செய்வார்கள். சில சேனல்கள் என்னை கூப்பிட்டும் நான் போகவில்லை. அப்படி போய் விட்டால் நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். அதனால் விஜய் டிவியை விட்டு நான் போகவே மாட்டேன்.


ஒரே நிகழ்ச்சிக்கு ஐந்து நீதிபதிகள் தேவையா?


ஒவ்வொருத்தரும் ஒரு பாய்ண்ட் சொல்வார்கள். சிலர் மனசு நோகாம பொதுவாக சொல்வார்கள். இதைத்தான் நான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒரே ஆள் இருந்தால் பர்பாம் பண்ணுபவர்களுக்கும் அவர் சொல்வதுதான் முடிவு என்பதால் ஒருவித பயம் இருக்கும். ஆனால், 5 பேர் இருக்கும்போது அதில் ஓரிருவராவது தங்களது பர்பாமென்ஸ் நன்றாக இருப்பதாக சொல்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். அதற்காகத்தான் பலரை ஜட்ஜ்களாக உட்கார வைக்கிறார்கள்.


காமெடிகளில் ஓவராக கலாய்ப்பது பற்றி?


நாகேஷ் காலத்தில் பாடிலாங்குவேஜ் காமெடி இருந்தது. இப்போது டயமிங்காகி விட்டதே. சந்தானம் என் நண்பர்தான். சூரி உடம்புக்குள்ளேயும் வடிவேலு இருக்கிறார். கவுண்டமணி-செந்தில் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதேமாதிரி விஜய் டிவியில் நானும் ஈரோடு மகேசும் கெமிஸ்ட்ரியுடன் நிகழ்ச்சி பண்ணி வருகிறோம். எங்களுக்கிடையே ஈகோவே வந்ததில்லை. என்னடா லூசு மாதிரி பேசுறே என்பார். அப்போதுகூட நான் லூசுங்கிறதை மத்தவங்களுக்கு காட்டுறியா என்பேன். நான் சீனியர் என்னையா இப்படி சொல்றே என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். என்னை கலாய்ப்பதைகூட காமெடியாக்கி விடுவேன்.


கான்செப்ட் ரெடி பண்ணி நிகழ்ச்சி பண்ணும் ஐடியா உள்ளதா?


தற்போது ஒரு நிகழ்ச்சி நடத்தப்போகிறேன். அதற்கான கான்செப்ட் ரெடி பண்ணி ஓகே வாங்கி விட்டேன். செலிப்பிரிட்டி மற்றும் ஆடியன்ஸ்கிட்ட உடனுக்குடன் பேசும் நிகழ்ச்சி அது. சகல - ரகளை நிகழ்ச்சியில் சந்தானம், சின்னி ஜெயந்த் பண்ணியதை ஒரு புது பாணியில் கான்சப்ட் ரெடி பண்ணி பண்ணப்போகிறேன்.


டிவியினால் சினிமா வரவேற்பு குறைகிறதா?


அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ரஜினி நடித்த லிங்கா படவாய்ப்பே விஜய் டிவியைப் பார்த்துதான் வந்தது. கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட ரொம்ப நாளா சான்ஸ் கேட்டு வந்தேன். எதேச்சையாக டிவி பார்த்திருக்காரு. அப்பத்தான் லிங்கா படத்தில் நடிக்க கூப்பிட்டார். விஜய் டிவி மூலமா வந்த அந்த வாய்ப்பில் ரஜினிக்கு ப்ரண்டாவே நடித்துவிட்டேன்.


குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் பற்றி?


குடும்பப் பிரச்சினையைப்பற்றி சில ஷோக்கள் வருது. எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதை பண்றவங்க பேமிலியாவது நல்லா இருந்தா பெறவாயில்லை. அவங்களே பிரச்சினையில் இருக்காங்க. வர்றவங்களும் நான் அவர்கூட இருந்தேன். இப்ப இன்னொருத்தரோட இருக்கேன் என்கிறார்கள். இதைப்பார்க் கிறவர்கள் நம்ம குடும்பம் எவ்வளவோ பெறவாயில்லை என்கிறார்கள். பிரச்சினையை தூண்டுற மாதிரி உள்ளது.


நான் என்ன சொல்ல வர்றேன்னா. கேள்வி கேட்கிறவங்க, இதை மாதிரி அவங்க பக்கத்து வீட்டுல ஒரு பிரச்சினைன்னா போய் தீர்த்து வைப்பாங்களா. அப்பவும் சுத்தி சுத்தி கேமராவதான் பார்ப்பாங்க.


விஜய் டிவியில்கூடதான் அது இது எதுவில் கலாய்க்கிறீர்களே?


மனசு நோகாம கலாய்க்கலாம். ஆரம்பத்தில் அது இது எதுவில் கொஞ்சம் கலாய்த்தார்கள். இப்போது அப்படி யாரையும் கலாய்ப்பதில்லை. ரோபோ சங்கர் ரஜினி, விஜய்காந்த் மாதிரியெல்லாம் பண்ணினார். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் என்னைதான் கன்டசன்ட் கலாய்ப்பாங்க. அதைகூட நான் ஜாலியா காமெடியா எடுத்து பண்ணுவேன். விஜய் டிவியைப்பொறுத்தவரைக்கும் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதை கருத்தில்கொண்டுதான் தற்போது நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறோம் என்கிறார் தாடி பாலாஜி.



நன்றி: தினமலர்

aanaa
4th March 2017, 06:02 AM
சீரியல் இயக்குனர் ஆனார் ராஜ்கபூர்


பெரிய திரை இயக்குனர்கள் தற்போது சின்னத்திரை தொடர் இயக்க வருவதுதான் இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கிறார் ராஜ்குமார். தாலாட்டு கேட்குதம்மா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே. சமஸ்தானம், குஷ்தி உள்பட20 படங்களை இயக்கியவர். படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடரை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. தற்போது ராஜ்குமார் இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிப்பாளராக இருக்கிறார். தொடர் இயக்குவது பற்றி ராஜ்கபூர் கூறியதாவது:


​​நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன். பெரிய திரையை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சியே தற்போது நாங்கள் செய்துள்ள முயற்சி. இது ரசிகர்களுக்கு தொடர் நிகழ்ச்சி பார்த்த அனுபவமாக இல்லாமல் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும். இதில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள். இதை நாங்கள் சினிமாவாகவே எடுத்து அதை தொடராக உங்களுக்கு கொடுக்கின்றோம். ஒரு பாம்புக்கும் பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டை தான் தொடரின் கதையாகும். இதில் பாம்பாக ஒரு பெண்ணும் பேயாக இன்னொரு பெண்ணும் நடிக்கிறார்கள் . என்கிறார் இயக்குநர் ராஜ் கபூர்
நன்றி: தினமலர்

aanaa
4th March 2017, 06:07 AM
சினிமாவில் நடிக்க ஆசையில்லை! -சீரியல் நாயகி கிருத்திகா -


திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமானவர் கிருத்திகா. அதையடுத்து செல்லமே, என் இனிய தோழியே, கேளடி கண்மணி, பாசமலர் என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான டிவி நடிகைகளுக்கு அடுத்தபடியாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை இருந்து வரும் நிலையில், கிருத்திகாவோ தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை என்கிறார்.


அதுகுறித்து அவர் கூறுகையில், சீரியல்களில் நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறேன். ஒரு சீரியலில் பாசிட்டிவான வேடம் என்றால், இன்னொரு சீரியலில் நெகடீவ் கலந்த வேடம். மற்றொரு சீரியலில் இல்லத்தரசி வேடம் என நடிக்கிறேன். அப்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப முழுமையான நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் டிவி சீரியல் பார்க்கம் நேயர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது.


தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது. இதில் பிசியாக இருப்பதால் வேறு சீரியல்களில் நடிக்க நேரம் இல்லை என்று கூறும் கிருத்திகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் துளியும் இல்லையாம். காரணம், சீரியலிலேயே நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. அதோடு அலுவலகம் செல்வது போன்று காலையில் ஸ்பாட்டுக்கு சென்றால் மாலை வீடு திரும்பி விடலாம். அதனால் இதுவே எனக்கு போதுமானதாகவும், மனநிறைவாகவும் உள்ளது என்கிறார் கிருத்திகா.
நன்றி: தினமலர்

aanaa
11th April 2017, 09:28 PM
மேடை நிகழ்ச்சிகளுக்கு 3 நீதிபதிகள் தேவையா? -அர்ச்சனா பதில்


சின்னத்திரை சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் இசை, நடனம், காமெடி போன்ற மேடை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார். அப்போது அவர்களது திறமைக்கு மதிப்பெண் போடுவதற்கு 3 அல்லது 4 சீனியர் கலைஞர்கள் நீதிபதிகளாக இடம்பெற்று வருகிறார்கள். ஆனால் அதைப்பார்த்து, திறமைக்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஜட்ஜ் போதாதா? இத்தனை பேர் தேவையா? என்கிற கருத்துக்கள் நேயர்கள் மத்தியில் நிலவி வருகிறது.


இதுகுறித்து இளமை புதுமை அர்ச்சனாவிடம் கேட்டபோது, தற்போது நான் பங்குபெற்று வரும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ், குஷ்பு மற்றும் நான் என 3 பேர் ஜட்ஜ்களாக இருக்கிறோம். சிறுவர் - சிறுமிகள் நடிக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களின் திறமையை மதிப்பிட 3 பேர் தேவையா? என்று கேட்டால், கண்டிப்பாக தேவை என்றுதான் நான் சொல்வேன்.


ஏனென்றால், நாங்கள் மூன்று பேருமே வேற வேற பரிமாணங்களை சேர்ந்தவர்கள். பாக்யராஜ் சார் இயக்குனர், குஷ்பு மேடம் நடிகை, நான் தொகுப் பாளினி. இப்படி இருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கலைஞர்களின் திறமையை மதிப்பிடுவோம். அதாவது ஒருவர் டயலாக் டெலிவரியை ஆராய்ந்தால், இன்னொருவர் பாடிலாங்குவேஜை கவனிப்பார். மற்றொருவர் ஆடியன்ஸ் பார்வையில் இருந்து அதற்கு ஒரு மதிப்பெண் கொடுப்பார். இந்த மூன்று கோணங்களையும் ஒரேயொரு நீதிபதி கவனித்து ஜட்ஜ்மென்ட் கொடுக்க முடியாது. அதனால்தான், மேடை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் மூன்று சீனியர் கலைஞர்களை நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்கிறார் அர்ச்சனா.



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:57 PM
நெகடீவ் ரோல்தான் பிடித்திருக்கிறது! -வாணி ராணி ஸ்ருதி


வாணி ராணியில் ராதிகாவின் மருமகளாக பவித்ரா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி. ஆரம்பத்தில் பாசிட்டீவாக இருந்த இவரது கதாபாத்திரம் தற்போது நெகடீவாக மாறி வருகிறது. அதனால் நேயர்களின் நேரடி கவனத்துக்கு வந்துவிட்டார் ஸ்ருதி.


இந்த ரீச் பற்றி அவர் கூறும்போது, வாணி ராணியில் நான் நடித்து வரும் பவித்ரா என்ற வேடம் முதலில் பாசிட்டீவாக இருந்தது. ஆனால் இப்போது நெக டீவாகிக்கொண்டிருக்கிறது. அதனால் நேயர்கள் கவனிக்கப்படும் கேரக்டராகியிருக்கிறது. எனக்கு நடிப்பதற்கும் நிறைய ஸ்கோப் உள்ளது. மேலும், ராதிகா மேடம் காம்பினேசனிலேயே எனக்கான காட்சிகள் இருப்பதால் நேயர்களின் நேரடி கவனத்துக்கு வந்து விட்டேன். அதனால் வாணிராணியில் எனது கேரக்டர் கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு சீன்களில் வந்து விடுகிறேன். இதுவரை நெகடீவ் வேடங்கள் பற்றி தெரியாமல் இருந்த எனக்கு இப்போதுதான் அதன் அருமை புரிந்திருக்கிறது. ஒரு ஆர்ட்டிஸ்டாக நெகடீவ் வேடம்தான் எனக்கு பிடித்திருக்கிறது.


அதோடு, ராதிகா மேடத்துடன் நடிப்பதால் அவ்வப்போது எனக்கு நடிப்பு பற்றிய டிப்ஸ் கொடுக்கிறார். சில காட்சிகளில் நான் அதிகப்படியாக நடித்தால் இவ்வ ளவு வேண்டாம் என்று நான் எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று சொல்லித்தருகிறார். அது எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. அதனால் எனது நடிப்பில் எந்தவித குறையும்இல்லாமல் நடித்து வருகிறேன். மேலும், இப்போது எனது கேரக்டர் பெரிதாக ரீச்சாகி வருவதால், மேலும் சில சீரியல் வாய்ப்புகள் வருகிறது. ஆனால் தற்போது நான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பைனல் இயர் படித்து வருவதால் என்னால் அதிகப்படியான சீரியல்களில் நடிக்க முடியவில்லை. தற்போது எக்சாம் நடந்து வரும் நிலையில், எக்சாம் முடிந்ததும் கோவையில் இருந்து சென்னையில் குடியேறப்போகிறேன். அதன்பிறகு அதிகப்படியான சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் ஸ்ருதி.
நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 10:00 PM
ரம்யாகிருஷ்ணன், ஸ்ரேயாரெட்டிக்கு பிறகு நான்தான்! -சொல்கிறார் மைனா சூசன்


பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த்-அமலாபால் நடித்த படம் மைனா. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்த தம்பி ராமைய்யாவுக்கு தேசிய விருது கிடைத்து. மேலும், இந்த படத்தில் அதிரடியான வில்லியாக நடித்தவர் சூசன். அந்த படத்தில் அவரது வில்லி வேடம் பெரிய அளவில் ரீச் ஆனது. முக்கியமாக, வெளியிடங்களில் சூசனை பார்க்கும் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்தனர். அப்படியொரு கொடூரமான வில்லியாக நடித்தார் சூசன். அதை யடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது சின்ட்ரெல்லா என்ற படத்தில் மீண்டும் ஒரு அதிரடி வில்லியாக உருவெடுத்துள்ளார். முண்டாசுப்பட்டி ராம் குமார் இயக்கும் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சூசன்.


இதுபற்றி சூசன் கூறுகையில், மைனா படம் எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத் தது. பல பாசிட்டீவ் வேடங்களில் நடித்தபோது கிடைக்காத ரீச் ஒரேயொரு நெகடீவ் வேடத்தில் கிடைத்தது. அந்த வேடம்தான் என்மீது வெளிச்சம் பாய்ச்சியது. அதையடுத்து கவனிக்கப்படும் நடிகையான நான், பல படங்களில் நடித் தேன். ஆனால் இப்போது முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கும் சின்ட்ரெல்லா படத்தில் மைனாவை மிஞ்சும் ஒரு அதிரடியான வில்லியாக நடித்து வருகிறேன். அதனால் மைனா படத்தை விட இந்தபடம் திரைக்கு வரும்போது ரசிகர்களிடம் இன்னும் அதிகமான திட்டு வாங்கப்போகிறேன்.


மேலும், படையப்பா ரம்யா கிருஷ்ணன், திமிறு ஸ்ரேயா ரெட்டி ஆகியோர்தான் எனது ரோல் மாடல். நான் நிஜத்தில் சாப்ட்டான கேரக்டர்தான். ஆனால் கோபம் வந்தால் பயங்கரமாக மாறி விடுவேன். அதைத்தான் எனது வில்லி நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறேன். என்னைத்தேடி பல வேடங்கள் வந்தாலும் வில்லிக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். ரம்யா கிருஷ்ணன், ஸ்ரேயாரெட்டிக்குப்பிறகு மைனா சூசன்தான் என்று சொல்லப்படும் அளவுக்கு அதிரடியான நெகடீவ் வேடங்களை எதிர்பார்க்கிறேன். தற்போது சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கிறேன். என்றாலும் சினிமாவுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். தவிர தெலுங் கிலும் சில படங்களில் நடிக்கிறேன் என்று கூறும் சூசன், இந்த 2017ம் ஆண்டு என்னை அதிரடி வில்லி நடிகை பட்டியலில் சேர்த்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 10:01 PM
தமிழ் சீரியலுக்கு வரத் துடிக்கும் வரதா


சுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தவர் வரதா. சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது மலையாள சின்னத்திரையின் முன்னணி நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான அமலா என்ற தொடர் அவருக்கு சின்னத்திரையில் பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது பிரணயம் தொடரில் நடித்து வருகிறார்.


என்றாலும் வரதாவிற்கு தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இதற்கு முன் அவர் காதலிக்கலாமா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். இதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.


"சினிமா வாய்ப்பு நன்றாக கிடைத்தபோதே சின்னத்திரைக்கு வந்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசை எப்போதும் உண்டு. சில முயற்சிகள் சரியாக அமையவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்னத்திரையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் ஓகே" என்கிறார் வரதா.



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 10:03 PM
கன்னட சீரியல்களில் தமிழன் போய் நடிக்க முடியுமா?- நடிகர் அசோக் கேள்வி


சின்னத்திரைகளில் நூற்றுக்கணக்கான சீரியல்களில் நடித்தவர் அசோக். டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தினால் தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லை. இந்தநிலையில், தமிழில் உருவாகி வரும் சீரியல்களுக்கு சமீபகாலமாக வேற்று மொழி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்கள். இதனால் தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்கிறார் அவர்.


அதுகுறித்து தினமலர் இணையதளத்திற்கு நடிகர் அசோக் அளித்த பேட்டியில்,


தமிழ் சீரியல்களை நம்பி ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நடிக்க போதுமான வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில், மொழியே தெரியாத புது ஆர்ட்டிஸ்டுகளை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அது டப்பிங் சீரியல் மாதிரி உள்ளது. டப்பிங் சீரியல்களை ஒழிக்கனும்னு போராடிக்கிட்டிருக்கோம். இப்ப என்னடான்னா தமிழ் சீரியலே டப்பிங் சீரியல் மாதிரி மாறிக்கிட்டிருக்கு. இங்கே இருக்கிறவங்களுக்கே வேலை இல்லை. தமிழ் சீரியல்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடி கை களை கூட்டி வந்து நடிக்க வைக்கிறார்கள்.


சினிமா மாதிரி புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் அதை விரும்பவில்லை. என்கிட்டயே ஒரு மிடில் கிளாஸ் லேடி சொன்னார்கள். தெரிஞ்ச முகம் இருந்தால்தான் சீரியல் பார்க்க நல்லாயிருக்கும். இப்ப புதுசு புதுசாக நடிகர்கள் நடிக்கிறதனால டப்பிங் சீரியல் பார்த்த மாதிரிதான் இருக்கு என்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், சேனல்களில் அந்த மாதிரி கேட்கிறாங்க என்கிறார்கள். எது உண்மைன்னு தெரியல.


மேலும், தமிழே தெரியாதவர்கள் தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் பேசி நடிக்கிறார்கள். எங்களை மாதிரி பழைய ஆர்ட்டிஸ்டுங்களை மட்டுமே நடிக்க வையிங்கன்னு நாங்க சொல்ல வரல. நல்லா தமிழ் தெரிஞ்ச தமிழ் நடிகர் நடிகைங்களை நடிக்க வைக்கலாமே. கன்னட மொழி சீரியல்களில் தமிழன் போய் நடிக்க முடியுமா? அவங்க மாநிலத்தில் உள்ளவர்கள்தான் நடிக்க முடியும். இது ஏன் இங்க இருக்கிறவங்களுக்கு புரிய மாட்டேங்குது என்று தனது மன ஆதங்கத்தை சொல்கிறார் நடிகர் அசோக்.



நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 05:53 AM
பேஷன் டிசைனராகும் தொகுப்பாளினி மகேஸ்வரி


ஜீ தமிழ் சேனலில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி. இவருக்கு ஃபேஷன் டிசைனராகி சென்னையில் ஒரு ஸ்டோர் திறக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால ஆசையாம். அதனால் தற்போது ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் பயின்று வருகிறார். இதுகுறித்து தொகுப்பாளினி மகேஸ்வரி தினமலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...


சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை என செயல்பட்டு வரும் எனக்கு, எதிர்காலத்தில் பிஸ்னஸ் பண்ணலாம் என்ற ஐடியா உள்ளது. அதனால் இப்போது ஃபேஷன் டிசைனிங் பயின்று வருகிறேன். சென்னையில் ஒரு சின்ன ஸ்டோர் ஓப்பன் பண்ணும் ஐடியா உள்ளது. எனக்கு அதில் ஆர்வம் என்பதோடு, பீல்டில் இருப்பவர்களுக்கே டிசைன் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்போது நான் பங்கும் பெறும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான டிசைன்களை எனது அக்கா லேகா பண்ணி தருகிறார். அவர் ஏற்கனவே இந்த கோர்ஸ் முடித்து டிசைனிங் பண்ணி வருகிறார். அடுத்து நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து டிசைனிங் பண்ண திட்டமிட்டிருக்கிறோம். சின்னத்திரை மட்டுமின்றி சினிமாப் படங்களுக்கும் காஸ்டியூம் டிசைனிங் பண்ணிக்கொடுக்கும் ஐடியா உள்ளது.


மேலும், தற்போது நான் பங்குபெற்றுள்ள ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளர்களுக்கு நல்ல சுதந்திரம் கொடுக்கிறார்கள். குறிப்பாக, இப்போது நாங்கள் நடத்தும் ஷோக்களுக்கு ஸ்கிரிப்டெல்லாம் கிடையாது. வரும் விஐபிக்களைப் பொறுத்து நாங்களே பேசி விடுகிறோம். அது நல்ல இயல்பாகவும் இருக்கிறது. இயக்குனர்களும் இப்படித்தான் பண்ண வேண்டும் என்று சொல்லாமல், எங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கிறார்கள். அதனால்தான் எங்களால் நினைத்தபடி பேச முடிக்கிறது. முன்பெல்லாம் இயக்குனர்கள் சொல்வதைத்தான் செய்கிற மாதிரி இருந்தது. இப்போது அது மாறி வருகிறது.


அதோடு, சினிமாவிலும் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. தோழி, அக்கா, தங்கச்சி என நாலு சீனில் வந்தாலும் அந்த கேரக்டர் மனதில் நிற்கிற மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ப.பாண்டியில் திவ்யதர்ஷினி நடிச்ச மாதிரி கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் மகேஸ்வரி.
நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 05:55 AM
சீரியல்களில் ஹீரோவாக கலக்கும் தங்கவேலு பேரன்


பழம்பெரும் காமெடி நடிகர்கள் நாகேஷ், ஜசரி கணேஷ் ஆகியோரது பேரன்கள் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போது டனால் தங்கவேலுவின் பேரன் அஸ்வின் குமார் மட்டும் சினிமா பக்கம் கரை ஒதுங்காமல் சீரியல்களில் ஹீரோவாக நடிக்கிறார்.


ஆரம்பத்தில் அஸ்வினும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார் ஆனாலும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அஸ்வின் அம்மாவும், ராதிகாவும் நெருங்கிய தோழிகள். ஒரு நாள் அஸ்வின் அம்மா ராதிகாவிடம் மகன் சினிமா வாய்ப்பு தேடி அலைவதை பற்றிக் கூறியிருக்கிறார். முதலில் சின்னத்திரை சீரியலில் நடித்து பயிற்சி எடுக்கட்டும் அதன்பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று கூற ராதிகாவின் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தவர் நிரந்தரமாகவே சீரியலில் தங்கிவிட்டார்.


தற்போது லட்சுமி கல்யாணம் தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். டைட்டில் கேரக்டரான கல்யாண் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார். அடுத்து தாமரை சீரியலில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நீலிமா நடிக்கிறார். "சினிமா ஆசை இருந்தது உண்மைதான். இப்போது சீரியல்களில் மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் நடித்து வருகிறேன். தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுத் தருகிறது சின்னத்திரை" என்கிறார் அஸ்வின். தான் தங்குவேலுவின் பேரன் என்பதை யாரிடமும் சொல்லிக் கொள்ளாததும், காட்டிக் கொள்ளாததும் அஸ்வின் ஸ்பெஷல்.http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170502105340769897.jpg



நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 06:02 AM
மேலாளருடன் நடந்தது என்ன? சபீதா ராய் விளக்கம்


பிரபல சின்னத்திரை நடிகை சபீதா ராய். பல ஆண்டுகளாக டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது தாமரை, இளவரசி, வாணி ராணி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீதாராயும், ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளரும் ஒரு அப்பார்ட்மெண்டின் கார்பார்க்கிங்கில் வைத்து ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள். இந்த காட்சியும், இருவருக்கும் தவறான உறவு இருப்பது போன்றும் செய்தி ஒளிபரப்பானது. இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அன்று நடந்தது என்ன? என்பது குறித்து சபீதா ராய் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வாணி ராணி நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன். 2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. இப்போது தருகிறேன், பிறகு தருகிறேன் என்று இழுத்தடித்துக் கொண்டே சென்றார்.


சம்பவத்தன்று "மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறோம். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் "நீங்களே தானே வரச் சொன்னீர்கள்" என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.


நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்திருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். கோபம் தாங்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை பிடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.


இதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படம்பிடித்துள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது. அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள். நான் செய்தது தவறு தான், 2 நாட்களில் பணம் கொடுத்துவிடுகிறேன். ஏமாற்றியது தவறு தான். நீ எனது மகள் ஸ்தானத்தில் இருக்கிறாய் என்று சுகுமாரும் மன்னிப்புக் கேட்டார்.


அப்போது ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் "கீழ் வீட்டில் உள்ளவர், வீடியோவாக உங்களுடைய சண்டையை எடுத்துள்ளார். நீங்க சம்பந்தப்பட்டு இருப்பதால் போய் பேசிவிடுங்கள்" என்றார். நான் உடனே அவருடைய வீட்டுக்குச் என்று காலில் விழுந்து "அண்ணா.. அவர் பணம் தர வேண்டும் என்பதால்தான் வந்தேன். அது கைகலப்பாகி விட்டது. எனக்கு இன்னும் திருமணமாக வில்லை. வீடியோ வெளியே வந்தால் பிரச்சினையாகி விடும். தயவு செய்து அழித்துவிடுங்கள் " என்று கெஞ்சினேன். அதற்கு "எனக்கு அவன் மீது தான் ஆத்திரம். உங்கள் மீது எதுவுமில்லை தங்கச்சி" என்றார். "அண்ணா.. நான் சம்பந்தப்பட்ட விவகாரம் ப்ளீஸ்" என்று கேட்டேன். சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிட்டார்.


நானும் வீட்டுக்கு வருவதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. எனக்கு அம்மா மட்டும் தான். உடன்பிறந்தவர்கள் யாருமே கிடையாது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக அப்படியொரு செய்தியை வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். அந்த தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் "நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று பேசியதற்கு "இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்" என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் - பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் "மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே" என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.


யாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை. இப்பிரச்சினையால் என்னை சீரியலிலிருந்து நீக்கி விட்டார்கள்.


இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் மற்றும் கார்த்தியிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சபீதா தெரிவித்துள்ளார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170501103734410814.jpg



நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 06:07 AM
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கல்யாணி!


சினிமா-சின்னத்திரைகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கல்யாணி. ஒருகட்டத்தில் சீரியல் நாயகியாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களும், சூப்பர் மாம், பீச் கேர்ள் என அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் கல்யாணியை பிரபலப்படுத்தின. இந்நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்ட கல்யாணி, ஒரு வரு டத்திற்கு பிறகு மீண்டும் மீடியாவில் என்ட்ரி கொடுக்க சென்னை வந்திருக்கிறார்.


இதுகுறித்து கல்யாணி கூறுகையில், விஜய் டிவியில் வெளியான ஆண்டாள் அழகர் தொடரில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறேன். அதையடுத்து சிலர், சீரியல்களில் நடிக்க கதை சொன்னார்கள். ஆனால் அந்த சீரியல்களில் நடிக்க நான் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம், ரீ-என்ட்ரியில் நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தொடர்ந்து நல்ல கதைகளுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக சிறிய வேடமாக இல்லாமல் லீடு ரோல்களை எதிர்பார்க்கிறேன்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170429113926171217.jpg
அதேபோல், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருப்பதால், சில சேனல்களில் தொடர்பு கொண்டு வருகிறேன். அதனால் கூடிய சீக்கிரமே சீரியல் நடிகையாக, தொகுப்பாளினியாக மீண்டும் நான் பிசியாகி விடுவேன் என்கிறார் கல்யாணி.



நன்றி: தினதந்தி

aanaa
24th May 2017, 07:08 AM
குழந்தைகளுடன் உரையாடுவது பெரிய மகிழ்ச்சி : இமான் அண்ணாச்சி


சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இமான் அண்ணாச்சி. இந்த நிகழ்ச்சி குழந்தைகள் மத்தியில் பிரபலமாகி விட்டதால் சினிமாவில் பிசியானபோதும் சின்னத்திரையை விடாமல் தொடர்ந்து வருகிறார்.


இதுபற்றி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். பின்னர் சினிமாவில் பிசியாகி விட்டேன். என்றாலும் நான் வளர காரணமாக இருந்த சின்னத்திரையை விட மனசில்லை. அதனால்தான் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்களித்து வருகிறேன். அதோடு அந்த நிகழ்ச்சிதான் என்னை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்தது. சினிமா நடிகராக மட்டுமே இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு சிறுசுகள் மத்தியில் பிரபலமாகியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.


மேலும், இப்போது நான் நடத்தி வரும் குழந்தைகள் நிகழ்ச்சி 5 ஆண்டுகளாகி விட்டது. அதனால் அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் ஏதேனும் மாற்றம் வந்தாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோகூட நான் வேறு ஏதேனும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டே இருப்பேன். காரணம், மழலைகளுடன் உரையாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறார் இமான் அண்ணாச்சி.
நன்றி: தினதந்தி

aanaa
24th May 2017, 07:10 AM
வில்லி கேரக்டரிலும் வெளுத்துகட்டும் ஷமிதா..


பாண்டவர் பூமி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்தவர் ஷமிதா. சிவசக்தி அவரது முதல் சீரியல். கடந்த 8 வருடங்களாக சின்னத்தரை தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். உடன் நடித்த ஸ்ரீயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதுவரை பாசிடிவான கேரக்டர்களில் நடித்து வந்த ஷமிதா, தற்போது மவுனராகம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். அதிக மேக்அப் போட்டு கண்களை உருட்டி மிரட்டி பேசும் வழக்கமான வில்லியாக இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக காரியம் சாதிக்கும் வில்லியாக நடித்து வெளுத்துக்கட்டி வருகிறார்.


"நான் வில்லியாக நடிக்க வேண்டும் என்று என் கணவர் வற்புறுத்தி வந்தார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. இயக்குனர் தாய் செல்வம் இது வழக்கமான வில்லி கேரக்டர் இல்லை. கணவன் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி, அதற்கு பங்கம் வரும்போது வில்லியாக மாறுவார். அதுவும் கணவன் மீது கொண்ட அதீத அக்கறையால் தான். அதனால் ஓவர் ஆக்டிங், ஓவர் மேக்கப் எதுவும் தேவையில்லை. இயல்பாக நடித்தால் போதும் என்று சொல்லி நம்பிக்கை தந்தார். நானும் அப்படியே நடித்தேன். அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது" என்கிறார் ஷமிதா.
நன்றி: தினதந்தி

aanaa
24th May 2017, 07:12 AM
சினிமா இயக்கப்போகிறார் நிவேதிதா.


கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மியூசிக் சேனல்களின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருக்கிறார் நிவேதிதா. தற்போது செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் சினிமா ஒன்றை இயக்கும் முயற்ச்சியில் இருக்கிறார் நிவேதிதா.


சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் எனக்கு நடிப்பு வராது என்று மறுத்தவர், இப்போது சினிமா இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தமிழ், இந்தி, ஆங்கிலம், கொரியன் படங்களை பார்த்து வருகிறார். "சின்ன வயசிலிருந்தே எனக்கு கதை கேட்கவும், சொல்லவும் பிடிக்கும். சினிமாவிலும் இயக்குனராகி கதை சொல்ல ஆசை. நடிப்பு எனக்கு வராது என்று எனக்கே தெரியும். அதனால் தான் அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது சீரியசாகவே ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்" என்கிறார் நிவேதிதா.
நன்றி: தினதந்தி

aanaa
24th May 2017, 07:15 AM
சிஐடி ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை -சீரியல் நடிகை ஸ்ரீதேவி .


தற்போது சின்னத்திரைகளில் கல்யாண பரிசு , ராஜா ராணி, பூவே பூச்சூடவா ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும என்பதுதான் எனது ஆசை. அதனால் எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன் என்கிறார் அவர் மேலும் ஸ்ரீதேவி கூறுகையில், நான் 2008ல் சின்னத்திரையில் நடிக்க வந்தேன். முதலில் தெலுங்கில் இரண்டு சீரியல்களில் நடித்த பிறகு, செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் தமிழுக்கு வந்தேன். பின்னர், தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தேன். பாசிட்டிவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறேன். என்றாலும், நெகடீவ் வேடங்கள்தான் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.


இப்போதுகூட கல்யாண பரிசு, ராஜாராணி தொடர்களில் நெகடீவ் ரோல்களில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த மாதிரி தொடர்களில் எனது நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதால் நெகடீவ் கதாபாத்திரங்கள் மீது எனக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டது.


மேலும், படிப்பில் எனக்கு ஆர்வம் மிகுதி என்பதால் நடித்துக்கொண்டே படித்து வரும் நான், எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன். அதுதவிர, பெட் அனிமல் துறையிலும் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு நல்ல பொழுதுபோக்காகவும் உள்ளது என்று கூறும் ஸ்ரீதேவிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இல்லையாம். சீரியலில் நடிப்பது, படிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது என்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
24th May 2017, 07:17 AM
கதாசிரியர் ஆனார் அப்சரா .


மலையாள சின்னத்திரையிலிருந்து தமிழுக்கு வந்தவர் அப்சரா. பல சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வந்த அப்சரா தற்போது மரகதவீணை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அப்சராவின் புதிய அவதாரம் கதாசிரியர். தற்போது ஒளிபரப்பாகி வரும் விதி தொடரின் கதையை எழுதியவர் அப்சரா. இதுவரை பல சிறு கதைகள் எழுதியுள்ள அப்சரா நிறைய நாவல்களையும் எழுதி வருகிறார். அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலையே விதி சீரியலுக்கான கதையாக மாற்றியிருக்கிறார்.


கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். திருமணமான பிறகு பணம், வேலை, சேமிப்பு, எதிர்காலம் என்று சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஓடுகிறவர்களின் கதை. தற்போது இந்த கதையின் பிளாஷ்பேக் பகுதிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில எபிசோட்களுக்கு பிறகு முக்கிய கதைக்கு வருகிறது சீரியல்.


"மாமியார் கொடுமை, கர்ப்பிணி கொடுமை என்று வழக்கமான கதையாக இல்லாமல் இன்றைய குடும்ப சூழ்நிலைகளை சுட்டிக் காட்டி நாம் எந்த மாதிரியான இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை சுட்டுக்காட்டும் விதமாக விதியின் கதையை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு கதை எழுதுவீர்களா என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை 2 மணிநேரத்துக்குள் சொல்வதற்கு நிறைய பயிற்சி வேண்டும். இப்போதைக்கு அதற்கு நான் தயாராக இல்லை. மலையாளத்தில் எழுதும் கதையை தமிழில் சொல்லி எழுத வைக்கிறேன். விரைவில் தமிழ் எழுத கற்றுக் கொள்வேன்" என்கிறார் அப்சரா.
நன்றி: தினதந்தி

aanaa
24th May 2017, 07:20 AM
நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ் .


நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, மனைவி, பெண், திருமதி செல்வம் என பல மெகா சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். திருமதி செல்வம் தொடரில் நடித்து சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றவர். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி.


.* சமீபகாலமாக உங்களை சீரியல்களில் பார்க்க முடியவில்லையே?


நான் சீரியல்களில் அதிகமாக நடித்திருந்தபோதும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதனால் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருந்தேன். கடந்த ஆண்டு நவம்பரில் அந்த படம் தொடங்க இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற ஜூன், ஜூலையில் அந்த படம் தொடங்குகிறது..


* யாரடி நீ மோகினி சீரியல் நேயர்களிடம் எத்தகையை வரவேற்பு பெற்றுள்ளது?


நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்னை பார்த்த நேயர்கள், இத்தனை நாளும் நீங்கள் ஏன் சீரியல்களில் நடிக்கவில்லை. மறுபடியும் உங்களை ஸ்கிரீன்ல பார்த்தது சந்தோசமாக உள்ளது என்று சொல்லி நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள். அதோடு, யாரடி நீ மோகினி சீரியல் சினிமா பார்த்த திருப்தியை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் ஒரு பேமிலி டிராமா. எல்லோருக்குமே இதில் முக்கியத்துவம் உள்ளது. மோகினி என்றொரு திரில்லர் மேட்டரும் உள்ளது. குழந்தைகளுக்கு அதுதானே பிடிக்கும். ரொம்ப விகாரமாக காட்டாமல் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி மோகினி கேரக்டர் இடம்பெற்றுள்ளது


.* சீரியல் கதைகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?


நான் எதிர்பார்ப்பது பியூர் எண்டர்டெய்ன்மென்டுதான். அதுக்கு நடுவுல அப்பப்ப ஒரு சின்ன மெசேஜ் வேண்டுமானால் கொடுக்கலாம். மற்றபடி கருத்து சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பதில்லை.


* சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?


முன்பெல்லாம் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்றால் சீரியலோட நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. டிரண்ட் மாறியிருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் சினிமா டைரக்டர்கள் நல்ல வெயிட்டான வேடம் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்


.* பேமிலி டிராமா தவிர என்னென்ன வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண ஆசை?


நான் டோட்டலாக ஒரு டைரக்டர் நடிகன்தான். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர நினைப்பேன். அந்த கேரக்டர் குறித்து டைரக்டர் மைண்டில் என்ன உள்ளதோ அதை வெளிப்படுத்தவே முயற்சி செய்வேன். அப்படித்தான் ஆரம்ப காலம் முதல் இப்போதுவரை நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன்.


இப்போது நடித்து வரும் யாரடி நீ மோகினி சீரியல் பேமிலி டிராமா என்றாலும், இந்த சீரியலே சினிமா போன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதுவே ஒரு பெரிய வித்தியாசம்தான். முக்கியமாக, பாடல், சண்டை காட்சியெல்லாம் உள்ளது. சினிமா மாதிரி பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. சினிமா போன்று ஒரு சீரியலில் நடிப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. இது நேயர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் புதுமையான அனுபவமாக உள்ளது என்கிறார் சஞ்சீவ்.
நன்றி: தினதந்தி

aanaa
14th October 2017, 06:55 AM
தயாரிப்பாளர் ஆனார் நீலிமா


தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்த அவர் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.


நடிகையாக இருந்த நீலிமா இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார். தனது கணவர் இசைவாணனுடன் இணைந்து இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சிக்காக "நிறம் மாறாத பூக்கள்" என்ற தொடரை தயாரிக்கிறது. முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


"எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்" என்கிறார் நீலிமா

நன்றி: தினமலர்

aanaa
14th October 2017, 07:05 AM
தவறான உறவுகளை சித்தரிக்கும் சீரியல்களை குறைக்க வேண்டும்: ஜெயராம் மோகன்


சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை தவிர்த்து விடுவது சீரியல்களின் தரத்தை அதிகப்படுத்தும் என்கிறார் நடிகர் ஜெயராம் மோகன்.


அவர் மேலும் கூறுகையில், சீரியல் என்பது மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. சீரியல்களை பார்க்கும் நேயர்கள், அதில் வரும் பிரச்சினைகளை தங்களுக்கு ஏற்படுவது போலவே உணருகிறார்கள். இப்படி நேயர்களின் மனநிலை இருப்பதினால் தான் குடும்ப சூழலைக்கொண்ட சீரியல்கள் அதிகமாக வருகிறது .


குடும்ப பிரச்சினைகளில் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைத்து விட்டு, நல்ல ஆரோக்யமான விசயங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பொதுஅறிவு, விழிப்புணர்வு சம்பந்தமான விசயங்களை நிறையவே சேர்க்கலாம். காமெடி காட்சிகள் சீரியல்களில் இடம்பெறுவதே இல்லை. அதனால் ஒவ்வொரு சீரியல்களிலுமே காமெடியை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட நல்ல விசயங்களை சொல்லலாம்.


இப்படி சொல்லும் நடிகர் ஜெயராம் மோகன், இதுவரை நான் நடித்த பல சீரியல்களில் நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடித்திருக்கிறேன். அதில் வாணி ராணியில் நடித்த வில்லன் வேடம் என்னை பேச வைத்தது. அதைப்பார்த்து தாமரை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு விதமான வேடங்களில் நடித்தேன். இப்போது அழகு உள்பட இரண்டு சீரியல்களில் நடிக்கிறேன். இதில் எனது இமேஜ் மாறக்கூடிய அளவுக்கு நல்ல குணசித்ர வேடங்கள். அதனால் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது எனக்கான வரவேற்பு இன்னும் நேயர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.


சமீபகாலமாக சின்னத்திரைகளில் டப்பிங் சீரியல்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம். இப்படி சேனல்கள் மாறியிருப்பதால் தமிழ் சீரியல்களையே நம்பியிருக்கும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதனால் இந்த நிலை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெயராம் மோகன்.

நன்றி: தினமலர்

aanaa
14th October 2017, 07:07 AM
சீரியலுக்கு வருகிறார் ரேவதி


மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் ரேவதி. துளியும் கிளாமர் காண்பித்து நடிக்காமல் நல்லதொரு பர்பாமென்ஸ் நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் நாயகியாக நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.


சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் அவரது அம்மாவாக நடித்த ரேவதி, அம்மா கணக்கு, ப.பாண்டி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் யுத்தம் சரணம் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், ஏற்கனவே ஓரிரு சீரியல்களில் நடித்துள்ள ரேவதி, தற்போது அழகு என்றொரு கிராமத்து நெடுந்தொடரில் லீடு ரோலில் நடிக்கிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்பத்தலைவியாக அவர் நடித்து வரும் இந்த தொடரில் மையக் கேரக்டரில் நடிக்கும் ரேவதி, தனது குடும்பத்தில் நடக்கும் பெரிய பிரச்னைகளையெல்லாம் அனுபவத்தைக் கொண்டு எப்படி சிக்கல்களை சீராக்குகிறார் என்பதுதான் இந்த அழகு தொடரின் மையக் கதையாம். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நன்றி: தினமலர்

aanaa
5th November 2017, 04:53 AM
மீண்டும் வந்தார் பிரியதர்ஷினி .




ஒரு காலத்தில் சின்னத்திரை பெரியதிரை இரண்டிலும் பிசியாக இருந்தவர் பிரியதர்ஷின். காப்பி வித் டிடியின் சகோதரி. தாவணி கனவுகள், இதய கோவில், புலி வருது உள்பட பல படங்களில் நடித்தார்.


பொதிகையில் ஒளிபரப்பான விழுதுகள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் அக்னி பரீட்சை, கனவுகள் இலவசம், மை டியர் பூதம், விசாலம், ரேகா ஐபிஎஸ், கோலங்கள், எத்தனை மனிதர்கள், உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்தார். 20க்கும் மேற்பட்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தினார்.


8 வருடங்களுக்கு முன்பு பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலும் இருந்து விலகினார்.
தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் கங்காதேவியாக நடிக்கிறார் மீண்டும் நடிக்க விரும்பிய பிரியதர்ஷின் தமிழ் கடவுள் முருகன் ஆடிசனில் கலந்து கொண்டார். அதில் அவர் கங்காதேவியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சற்று வெயிட் போட்டிருந்த அவரை கொஞ்சம் உடல் எடையை குறைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஒப்புக்கொண்டு கணிசமான எடை குறைத்து கங்காதேவியாக நடித்து வருகிறார்.


"மீண்டும் நடிக்க வந்திருப்பது ஒது ஆத்ம திருப்திக்காகத்தான். முருகன் எனக்கு பிடித்த கடவுள். அதனால் இந்த தொடரில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை" என்கிறார் பிரியதர்ஷினி.
நன்றி: தினமலர்

R.Latha
4th January 2019, 05:51 PM
`காதல் கணவரை `டிக் டாக்'ல நடிக்க வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!" - `ராஜா ராணி' ஶ்ரீதேவி

``நான் மட்டும் பண்ணினா எப்படி? என் கணவர் முன்பு கொஞ்சம் தயங்கினார். அவரை நடிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுவேன்; மிரட்டவெல்லாம் செய்ய மாட்டேன்."
``காதல் கணவரை `டிக் டாக்'ல நடிக்க வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!
சின்னத்திரைப் புகழ் நடிகை ஶ்ரீதேவி, தன் காதல் கணவருடன் `டிக் டாக்'கிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் நடிப்பு, பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசினோம்...

``நடிப்புப் பயணம் எப்படிப் போயிட்டு இருக்கு?"

``இப்போ விஜய் டிவி `ராஜா ராணி' சீரியல்ல நடிக்கிறேன். இந்த சீரியல் உட்பட மூணு சீரியல்கள்லதான் நெகட்டிவ் ரோல். நெகட்டிவா நடிக்கிறதும் ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கு. ரெண்டு வருஷத்தைக் கடந்து சீரியல் ஒளிபரப்பாகுது. ஆனாலும் மக்கள் இன்னும் பாசிட்டிவ் ஶ்ரீதேவியாகவே என்னைப் பார்க்கிறாங்க. இந்த சீரியல் டீம் மொத்தமும் ஜாலியா சிரிச்சுப் பேசிட்டு இருப்போம். தினமும் வேலைக்குப் போகிறோம்ங்கிற உணர்வு இல்லாம சந்தோஷமா நடிக்கிறோம். தவிர, ஷூட்டிங் ஸ்பாட்ல ஃப்ரெண்ட்ஸ் பலரும் சேர்ந்து, `டிக் டாக்' வீடியோஸ் பண்ணுவோம். எங்களுக்குள் எக்கச்சக்க ஃபன் நடக்கும்."



``சின்னத்திரையில நீண்டகாலமா வேலை செய்ற அனுபவம் பற்றி..."

``ரொம்ப நல்லா இருக்கு. சின்னத்திரைக்கு வந்து பத்து வருஷம் முடிஞ்சுடுச்சு. இதனால, நிறைய அனுபவம் கிடைச்சுடுச்சு. ஆனாலும் போதும்ங்கிற எண்ணம் இன்னும் வரலை. ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு அனுபவம் கொடுக்கிறதால, உற்சாகமா நடிக்கிறேன். ஆனா, `எவ்வளவு அடிச்சாலும் தாங்குவா'னு சொல்ற மாதிரி, ரொம்பப் பாவப்பட்ட கேரக்டர் மற்றும் `அருந்ததி' மாதிரி பவர்ஃபுல் ரோல்ல நடிக்க ஆசை உண்டு."


``சினிமாவில் நடிக்க விருப்பமில்லையா?"

``காலேஜ்ல படிச்சுகிட்டு இருக்கும்போது, `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் தனுஷூக்கு தங்கச்சியா நடிச்சேன். பிறகு படிப்பு, சின்னத்திரை நடிப்புனு பிஸியாகிட்டேன். அதனால, சினிமாவில் வாய்ப்புகள் வந்தும் நடிக்க முடியாம போச்சு. இப்போ சினிமாவில் நடிக்கத் தயார்தான்."



``உங்க கணவரும் நீங்களும் வளர்ப்புப் பிராணிகளின் பிரியர்கள். அந்த அனுபவம் பற்றி..."

``வளர்ப்புப் பிராணிகளின் மேல நாங்க கொண்டிருந்த அன்புதான், எங்க காதல் திருமணத்துக்கும் அஸ்திவாரம். என் கணவர் அசோக் சிந்தாலா, பெட் போட்டோகிராபர். பெங்களூருவில் ஐடி நிறுவனத்துல வேலை செய்துகிட்டே, போட்டோகிராபியிலயும் கவனம் செலுத்துறார். நான் சென்னையில இருந்தபடியே வளர்ப்புப் பிராணிகளின் நலனுக்கான சில செயல்பாடுகளைச் செய்கிறேன். எங்களில் ஒருவருக்கு ஃப்ரீ டைம் கிடைக்கிறபோது, இன்னொருத்தரை மீட் பண்ண கிளம்பிடுவோம். நாங்க வளர்க்கிற நாய்கள்தான், எங்களோட ஒருமித்த அன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவரோட போட்டோகிராபி வேலைக்கு என்னாலான உதவியைச் செய்றேன். அவரும் என் நடிப்புக்கு ரொம்ப உதவுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தும் என்னோடு நேரம் செலவிடுவார். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு."



`` 'டிக் டாக்'ல தம்பதியா கலக்கறீங்க போல..."

(சிரிக்கிறார்) ``அப்படியெல்லாம் இல்லை! ஆக்டிங், டான்ஸ், எக்ஸ்பிரஷன்ஸ்னு நம்ம நடிப்பில் நிறைய வெரைட்டி காட்ட முடியும்னுதான், `டிக் டாக்'ல தொடர்ந்து வீடியோஸ் வெளியிடுறேன். நான் மட்டும் பண்ணினா எப்படி? என் கணவர் முன்பு கொஞ்சம் தயங்கினார். அவரை நடிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுவேன்; மிரட்டவெல்லாம் செய்ய மாட்டேன். இப்போ, வீடியோவில் நடிக்க என் கணவருக்கும் விருப்பம்தான். அதனாலதான் நாங்க இருவரும் சேர்ந்து நிறைய வீடியோஸ் ரிலீஸ் பண்றோம். அப்போ எங்களுக்குள் நிறைய காமெடி நடக்கும். இதனால எங்களை நிறைய பேர் பாராட்டுறாங்க" எனப் புன்னகைக்கிறார், ஶ்ரீதேவி.