PDA

View Full Version : Kalasam



gta129
13th July 2008, 09:20 PM
Kalasam is a new serial staring Ramya Krishnan.
It Starts Monday, July 14 at 8:30 PM.
It looks like a good serial so don't forget to watch it.

The following link has a trailer for the serial
http://www.blog.isaitamil.net/?p=4668




Kalasam - Title song (http://raretfm.mayyam.com/stream/tvserial/Kalasam.rm)

R.Latha
14th July 2008, 09:47 AM
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `கலசம்'

திருமணத்துக்குப் பின் நடிக்க மறுத்து வந்த ரம்யாகிருஷ்ணன், கலசம் தொடரின் கதையையும் அதன் கேரக்டரையும் கேட்டதும் சின்னத்திரை தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக, ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்க் குணம் கொண்டவராக இதில் ரம்யாகிருஷ்ணன் தோன்றுகிறார். ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பின் தொடரும் பிரச்சினை, யதார்த்த சம்பவங்கள் என கலசம் தொடர் களை கட்டி வருகிறது. ரம்யாகிருஷ்ணனுடன் தேவன், சுதா சந்திரன், விஜய்கிருஷ்ணராஜ், `மெட்டி ஒலி' வனஜா, ஸ்ரீதர், மனோகர் நடிக்கிறார்கள்.

தொடரின் கதையை எழுதுவதுடன் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார், குட்டி பத்மினி. திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஜெகன் மோகன். ஒளிப்பதிவு: பிரேம். இசை: டி.இமான். இயக்கம்: எம்.ஆர். செந்தில்குமார் ப்ளான். வி.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ஆர்.டி.வி. ஸ்டார் லைப் நிறுவனமும் இத்தொடரை உருவாக்குகிறது. குட்டி பத்மினியின் மகள் கீர்த்தனாவும், ரம்யாகிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணனும் இணைந்து தொடரை தயாரிக்கிறார்கள்.

rathakovn
15th July 2008, 04:08 PM
Ya ... i just watch the 1st episode. Ramya Krishnan in Cinna Thirai. I just admire what she is ?

the episode i watch at w w w.tamiltv4u.com

saradhaa_sn
17th July 2008, 12:11 PM
'கலசம்' முதல்நாள் முதல் காட்சி, நீண்ட டைட்டிலுக்குப்பின் தொடங்கியது. வேலைவிஷயாமக ஐதராபாத் போகும் ரம்யாகிருஷணனிடம், ஒருவர், தன் குழந்தை சாகக்கிடப்பதாக சொல்லி கெஞ்சி கெஞ்சி ஒரு மருந்து பாக்கெட்டைக்கொடுத்து அனுப்புகிறார். பாக்கெட்டை கொடுத்த அடுத்த வினாடியே, வேறுபக்கம் சென்று தன் முகபாவம் மாற தன் கூட்டாளிக்கு போன் செய்யும்போதே தெரிந்து விடுகிறது, அது என்னவென்று. சொல்லி வைத்தாற்போல ஐதராபாத் ஏர்போர்ட்டில் போலீஸார் பின் தொடர்ந்து சென்று ரம்யாவை மடக்குகின்றனர். ரம்யாவிடம் இருந்த போதைப்பொருள் சிக்குகிறது. (போலீஸுக்கு எப்படித்தான் தெரிந்ததோ.. 'குட்டி'க்கே வெளிச்சம்). அதோடு முதல் நாள் முடிய....

சரி சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று மறுநாள் பார்க்க உட்கார்ந்தால், கதை தொபுக்கடீர்னு பழைய குட்டையில் விழுகிறது. ஆம் ஜெயிலில் (வழக்கம்போல) கைதிகளை மிரட்டி அடித்து துவைக்கும் அரக்கியாக ஒரு பழம்பெருச்சாளி பெண் கைதி. (வழக்கம்போல) அவளை எதிர்க்க துணிவற்ற ஜெயில் போலீஸ். வீட்டில் (வழக்கம்போல) பொறுப்பில்லாத ஊதாரித்தனமான அப்பா, (வழக்கம்போல) அவரது கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் அம்மா, (வழக்கம்போல) ஒரு உதவாக்கறை தம்பி......

ஒரு பெண் குடுமபத்துக்காக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள் என்பதைக் காட்ட வேண்டுமானால், அந்தக் குடும்பத்திலும் அந்தக்கதையிலும் வரும் ஆண்கள் அனைவரையும் உருப்படாத உத்வாக்கறைகளாக காண்பிக்க வேண்டும் என்பது, தொலைக்காட்சி சீரியல்களின் எழுதப்படாத... ஸாரி... எழுதப்பட்ட விதி.

'குட்டி' புதிதாக எதையும் கிழித்த மாதிரி தெரியவில்லை. வழக்கமாக, புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பார்கள். இது பழைய மொந்தையிலேயே பழைய கள்ளு (லேபிளை மட்டும் புதிதாக ஒட்டியிருக்கின்றனர்).

இதற்கு முன் வேறு நடிகைகள் வேறு சீரியல்களில் பேசிய பெண்ணுரிமை வசனங்களை இப்போது இதில் ரம்யா பேசப்போகிறார். அவ்வளவே.

gta129
19th July 2008, 02:50 AM
So far the story seems solid, but during the theme song, they show young and older Ramya Krishnan. I hope it's not like Arasi, where Radhika plays the mother and daughter.

gta129
20th July 2008, 04:02 AM
On Yesterday's Episode, Ramya Krishnan's character finds her self in a wear-house. There she finds child labor. Children are forced to package illegal drugs. One of the man in the wear house tries to rape one of the young girl and Ramya Krishnan's character steps in to protect her. She hits him and kills him.

aanaa
23rd July 2008, 07:53 PM
Neelambari fame actress Ramya Krishnan is stepping in television serials for the first time. She will be seen in Kalasam, a mega serial on Sun TV, which promises to be different from all the tearful family dramas that are being currently aired on TV.

Kalasam for a change will deal with the difficulties that lead protagonist Ramya Krishnan will face in her work place. After the end of Porandha Veeda Pukunda Veeda, this new serial has taken the prime slot of 8.30 to 9.30 pm.

In this serial, Ramya Krishnan is doing double roles. One of them is Neelambari, a character she played in the Rajini-starrer Padayappa and the other is Rajini, an ordinary middle-class woman competing with business tycoon Sudha Chandran and fighting male chauvinism.

The serial is written by Kutty Padmini and produced by daughter Keerthana jointly with Ramya Krishnan's Sister Vinaya Krishnan. MR Senthil Kumar is directing the serial.

However television is not a new medium for Ramya Krishnan, who was earlier seen in Thangavettai, a popular game show on Sun TV produced by Radhika Sarath Kumar's Raadan TV.

aanaa
23rd July 2008, 07:54 PM
On Yesterday's Episode,
..
.
then what happened ???/

saradhaa_sn
24th July 2008, 03:10 PM
உண்மையில் ரம்யா ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி. போதைப்பொருள் கடத்தலைக் கண்டுபிடிக்கப்போகிறார். கடத்தல்காரன், மற்றவர்களை விட்டுவிட்டு, கரெக்டாக இவரிடம் வந்து போதைப்பொருளை மருந்து என்று பொய்சொல்லி கொடுக்கிறானாம். (கஸ்டம்ஸ் அதிகாரியைக்கூட தெரிந்துவைத்துக்கொள்ளாத, அப்பாவி கடத்தல்காரன், பாவம்). இவரது டிபார்ட்மென்டிலேயே இவருக்கு எதிர்ப்பு ஆட்கள் இருக்கின்றனர்.

காலேஜ் தகாராறில், சுதாசந்திரனின் மகளை கைநீட்டி அடித்ததாக ரம்யாவின் தம்பியை போலீஸ் கைது செய்து லாக்கப்பில் வைத்து 'கவனிக்கிறது'. சுதா சந்திரன் 'பெரீஈஈஈய புள்ளி'யாம். அதனால் காவல்துறை, சட்டத்துறை எல்லாம் நடுங்குகிறது. (விஷயம் சப்பை மேட்டர். காலேஜில் நடுவழியில் பைக்கை நிறுத்தியது தவறு. அதை எடுக்க அவகாசம் கொடுத்து சுதாவின் மகள் காரில் காத்திருந்தும், 'கல்லூரி மாணவிகளுக்கே உள்ள' திமிரில் அசட்டை செய்ய பணக்காரி பைக்கை இடித்து தள்ளி விட்டாள். இப்போது 'திமிரின்' அண்னன் லாக்கப்பில்.....)

gta129
26th July 2008, 04:04 AM
Thanks for the update.

gta129
30th July 2008, 04:50 AM
On yesterday's Shandrmathi, her brother and her uncle talk about Neelambari. Who they appeared to have murdered. For some reason Shandrmathi's afraid of Neelambari.

Later Rajini was talking to her co-worker about her meeting with Shandrmathi and it appears her co-worker might be in love with Rajini.

Also Rajini's brother comes home from jail.

saradhaa_sn
30th July 2008, 06:02 PM
இருந்தும் நீலாம்பரி மேலுள்ள பயம் விலகாத சந்திரமதி அவளை வீடுதேடி அவளைப்பார்க்க வருகிறாள். பணப்பேயான ரஞ்சனியின் அப்பாவிடம் வீட்டைப்பற்றிய விஷயங்களைக் கறக்கிறாள். அவளுக்கு கொஞ்சம் தெளிவு பிறக்கிறது. இருந்தாலும் ரஞ்சனி, நீலாம்பரியைப்போலவே இருப்பது அவளுக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

குட்டி பத்மினியின் மாமியார் காரணமில்லாமல் மருமகளை வெறுத்து, அவளது மகளை (பேத்தியை) மருமகளுக்கு எதிராகத் திருப்புவதற்காக, அவளது தவறான போக்குகளுக்கு சப்போர்ட் பண்ணுகிறாள். அதை நேரில் கண்டிக்க முடியாத குட்டி பத்மினி, தன் தோழியான ரஞ்சனியின் உதவியை நாடுகிறாள்.

ridz
31st July 2008, 11:41 AM
this show is just alrite.... ... the same old thing... except for ramya theres noting so great... the song is also very average, they should have done something else with an actres like ramya krishnan. ramya looks gorgeous

gta129
7th August 2008, 06:41 AM
On yesterday's episode actress Anju was introduced. I haven't seen her in many serials since Chitthi. I remember her role in Mandhra Vasal. It's nice to have her back on serials.

aanaa
7th August 2008, 07:32 AM
:exactly:
gta

gta129
12th August 2008, 08:39 AM
Rajini had a marriage proposal, but her father managed to ruin it by asking the groom side to pay the dowry. A little later Rajini's father tells Rajini's mother, that he wants Rajini to marry a rich enough person to take care of him ad the whole family. This character is very interesting and very contrary to the normal father figure we seen on serials.

Shandrmathi is still at the hospital and is visited by her friend played by Anju. Shandrmathi tells her friend that cause of her stress is Neelambari, to which her friend laughs. She tell's Shandrmathi, Neelambari was killed 25 years ago.

Later Shandrmathi returns from the hospital and is visited by Rajini. As Shandrmathi's mother walks in and is shocked to see Rajini.

gta129
15th August 2008, 09:34 PM
I no longer have Sun TV, so I will be renting serials on DVD. Therefore I will only be able to update it every weekend. If anyone has the time, please update it.
Thank You.

Dhesh
18th August 2008, 05:36 PM
Does anyone know where I can download the kalasam and sivasakthi title songs from?? Can you try and send these songs to me if you have them to my email address

kalki_07_@hotmail.co.uk

Thanks

aanaa
18th August 2008, 11:18 PM
both songs are available here
http://raretfm.mayyam.com/tvserial/

did you get any error message?

gta!! did you try ? do you have any problem

I have to fix it - so please give the error message(s)

aanaa
20th August 2008, 05:08 AM
Dhesh

Have you downloaded the song ?
any issue ?

sirajstc
10th September 2008, 12:25 PM
plz any one 1 have mp 3 this pz

aanaa
1st October 2008, 11:59 PM
plz any one 1 have mp 3 this pz

song available at http://raretfm.mayyam.com/tvserial/

aanaa
2nd October 2008, 12:00 AM
what happened so far

anyone watching this ...

ridz
16th October 2008, 02:26 PM
what happened so far

anyone watching this ...


Not too great... used to watch it

aanaa
19th October 2008, 04:43 AM
கலசம் தொடரில் மவுலி



டைரக்டர் மவுலி சின்னத்திரையில் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் சமீபத்தில் நடிகையும் `கலசம்' தொடர் தயாரிப்பாளருமான குட்டிபத்மினி மவுலியை சந்தித்து கலசம் கதையை சொன்னதோடு, தொடரில் அவருக்கான கேரக்டர் பற்றியும் தெரிவித்தார். தனது கேரக்டர் பிடித்துப்போன மவுலி, உடனடியாக அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனே தேதிகள் கொடுத்து விட்டார். மவுலி நடிக்கும் காட்சிகள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாகின்றன.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, கலசம் தொடர்.

R.Latha
22nd October 2008, 01:31 PM
கலசம் தொடரில் மவுலி



டைரக்டர் மவுலி சின்னத்திரையில் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் சமீபத்தில் நடிகையும் `கலசம்' தொடர் தயாரிப்பாளருமான குட்டிபத்மினி மவுலியை சந்தித்து கலசம் கதையை சொன்னதோடு, தொடரில் அவருக்கான கேரக்டர் பற்றியும் தெரிவித்தார். தனது கேரக்டர் பிடித்துப்போன மவுலி, உடனடியாக அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனே தேதிகள் கொடுத்து விட்டார். மவுலி நடிக்கும் காட்சிகள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாகின்றன.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, கலசம் தொடர்.

aanaa
22nd October 2008, 07:04 PM
:ty:

gta129
12th November 2008, 06:04 AM
Has anyone been watching this serial? I couldn't watch it after the fist month, due to my schedule. Does anyone have any updates?

R.Latha
12th November 2008, 01:09 PM
ரம்யாகிருஷ்ணன் ப்ளாஷ் பேக் ஓடிக்கொண்டு இருக்கிறது. நீலாம்பரி கேரக்டர். நீலா ஒரு பணக்கார பெண். அந்த வில்லி ஒரு ஏழை. அவள் நீலாவின் உயிர் தோழி. நீலாவை பார்த்து பொறாமை படுகிறாள்.ஒரு கம்பெனியில் சாதாரண வேலை பார்க்கிறாள்.தான் ஒரு பணக்காரி போலவும் நீலா ஒரு ஏழை போலவும் கனவு காண்கிறாள். நீலாவைபார்த்தாலே பொறாமையாக இருக்கிறாள் அவள் அம்மா அதே மெட்டி ஒலியில் பேசுவது போலவே கடுகடுப்பான அம்மாவை போலவே பேசுகிறது {சிறுவயது முதற்கொண்டு தோழி} மவுலி நீலாவுக்கு அங்கிள். நீலா foreign-ல் படித்து இந்தியா வருகிறார். அங்கிள் மேல் உயிர்.அவரும் அப்படியே. எப்படி பணக்காரி ஆவது என
யோசித்து கொண்டு எப்படியும் அவளை விட பணக்காரி ஆகிவிட வேண்டுமென்று காத்துகொண்டிருக்கிறார்.

gta129
13th November 2008, 10:24 PM
Thank you R.Latha

R.Latha
17th November 2008, 12:48 PM
சந்திரமதி {வில்லி பெயர்) அப்பா இறந்துவிட அவர்களுக்கு நீலா அடைக்கலம் கொடுக்கிறார். அதை மாமா எதிர்க்கிறார். ஆனால் அவள் மாமாவை சமாதானம் செய்து விடுகிறார். ஆனால் சந்திராவின் அம்மாவோ நல்லவளாக நடித்து நாடகம் போடுகிறார். நீலாவையே அழித்து அந்த சாம்ராஜியத்தை தான் அடைய வேண்டும் என்று தன் தம்பியிடம் சொல்கிறார் தானும் அப்படியே செய்ய வாக்குறுதியும் கொடுத்து விட்டார்.

saradhaa_sn
28th November 2008, 07:09 PM
சந்திரமதி சபதம் போட்டதுபோலவே செய்துவிட்டாள்......

நீலாம்பரி (ரம்யா) தன் கணவனுடன் தேனிலவு சென்றிருக்கும் சமயம், நீலாவின் தந்தையைக்கொன்ற சந்திரமதி (சுதா) , நீலா திரும்பி வந்ததும் அவள் கணவனையும் கொன்று பழியை நீலாவின் மேல் சுமத்த நீலா ஆயுள்தண்டனைக்கைதியாக சிறை செல்கிறாள். சிறையிலேயே மரணமடைகிறாள்.

இந்த ஃப்ளாஷ் பேக் சரித்திரத்தை நீலாவின் குடும்ப வக்கீலும் அவர்கள் குடும்பத்தில் அக்கறை கொண்டவருமான சத்தியமூர்த்தி (மௌலி) ரஞ்சனி (மகள் ரம்யா) இடம் சொல்ல, சந்திர மதியின் நயவஞ்சக நாடகமும், அவள் அனுபவிக்கும் சொத்துசுகங்கள் அனைத்தும் தன் அம்மாவுடையது என்பதும் தெரிய ரஞ்சனி கொதிக்கிறாள். இந்நிலையில் தன் வளர்த்த தாயும் அவளது பிள்ளைகளும் தன்மீது காட்டும் பாசத்தில் நெகிழ்ந்துபோகிறாள்.

(சந்திரமதிக்கு எதிராக ரகசியமாக காய் நகர்த்துவாளா, அல்லது 'டமார்' என்று விஷயத்தைப்போட்டு உடைப்பாளா தெரியவில்லை).

mr_karthik
1st December 2008, 04:34 PM
mam, oru serialaiyum viduvadhaaga illaiyaa...?.

aanaa
2nd December 2008, 04:18 AM
mam, oru serialaiyum viduvadhaaga illaiyaa...?.

your postive contribution is also welcome

saradhaa_sn
3rd January 2009, 03:28 PM
"ரஞ்சனி, நீதான் நீலாம்பரியின் மகள் என்பது அந்த சந்திரமதிக்கு கொஞ்சம்கூட தெரியக்கூடாது. தெரிந்தால், உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்துக்கும் ஆபது" என்று வக்கீல் சத்தியமூர்த்தி (மௌலி) கண்டிப்பாக சொல்லியிருந்தும், ரஞ்சனி ஒவ்வொரு முறையும் சந்திரமதியிடம், 'நீங்க இனிமே தப்ப முடியாது', 'நீங்க பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என்றெல்லாம் பொடி வைத்துப்பேசுவதும், அதைக்கேட்டு சந்திரமதி அதிர்ந்து அவளைப்பார்ப்பதும், உடனே எதையாவது சொல்லி சமாளிப்பதும்.......

கொஞ்சம் அதிகப்படியாகவும், ரொம்பவே அதிகப்பிரசங்கித்தனமாகவும் தெரிகிறது. தொடர் பார்ப்பவர்களுக்கு இவள் யார் என்பதும், எதற்காக சந்திரமதியிடம் வேலை செய்கிறாள் என்பதும் தெரியாதா என்ன?.

தண்ணீரிலேயே தடம் கண்டுபிடிக்கும் சந்திரமதியிடம் இது வலிய வந்து மாட்டிக்கொள்ளும் செயலாகத்தோணவில்லையா?.

'ரெடிமேட் விதவை' உமா (ஐஸ்வர்யா) இப்போ சுடிதார் அணிந்துகொண்டு வேலைக்குப்போறாங்க போலிருக்கு. நிஜமான ரோஷக்காரியானால், ரஞ்சனியின் தம்பி மூலம் கிடைத்த வேலையை வேண்டாமென்றல்லவா உதறியிருக்க வேண்டும்?.

aanaa
3rd January 2009, 09:43 PM
'ரெடிமேட் விதவை' உமா (ஐஸ்வர்யா) இப்போ சுடிதார் அணிந்துகொண்டு வேலைக்குப்போறாங்க போலிருக்கு. நிஜமான ரோஷக்காரியானால், ரஞ்சனியின் தம்பி மூலம் கிடைத்த வேலையை வேண்டாமென்றல்லவா உதறியிருக்க வேண்டும்?.

அது வேறு மாதிரிப் போகிறதுபோலிருக்கே :roll:

saradhaa_sn
5th January 2009, 06:15 PM
'ரெடிமேட் விதவை' உமா (ஐஸ்வர்யா) இப்போ சுடிதார் அணிந்துகொண்டு வேலைக்குப்போறாங்க போலிருக்கு. நிஜமான ரோஷக்காரியானால், ரஞ்சனியின் தம்பி மூலம் கிடைத்த வேலையை வேண்டாமென்றல்லவா உதறியிருக்க வேண்டும்?.

அது வேறு மாதிரிப் போகிறதுபோலிருக்கே :roll:
ஆனா, நீங்க சொல்றதைப்பார்த்தால் உமா மேடத்துக்கு ரஞ்சனி நாத்தனாராகப்போகிறாரா..?. ஒரு வேளை ரஞ்சனியின் வீட்டுக்குள்ளேயே போய் உட்கார்ந்துகொண்டு ரஞ்சனிக்கு தொல்லை கொடுக்கும் நோக்கமா?. அல்லது ரஞ்சனியிடமிருந்து அவள் தம்பியைப் பிரிக்கும் திட்டமா..?.

அப்படீன்னா, அந்த 'போதைமருந்துக்கடத்தல்காரன்' மீது கொண்ட தீர்க்கமான, பக்தி நிறைந்த. ஆ....ழமான காதல் என்னாயிற்று?. வெள்ளைச்சேலையை மாற்றியதோடு முடிஞ்சு போச்சா?.

என்னதான் பண்ணப்போறாங்கன்னு பார்ப்போம்.

R.Latha
7th January 2009, 03:20 PM
[tscii:d4b74823ff](என்னதான் பண்ணப்போறாங்கன்(':hu h:')னு பார்ப்போம்.)

Thank you saratha, uma ranjani thambiyai marraige seiyanum. Appuram sandhiramathi daughter anger aagi avanai pazhi theerkka adiyaalai set pannanum. kolangal polave ithukkum niraiya mudichigalai kutti bathmini kutti kuttiya yosichi aayiaram episodukku vandhaalum varuvar lets see. [/tscii:d4b74823ff]

R.Latha
16th March 2009, 12:43 PM
[tscii:6052785f05]மீண்டும் நீலாம்பரி!



சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலசம்' மெகா தொடர் நேயர்களின் ஆதரவோடு 150 எபிஸோடுகளைக் கடந்துள்ளது.

ரம்யாகிருஷ்ணன், சாக்ஷி' சிவா, சஞ்ஜீவ், ரஞ்சனி, குயிலி, முரளிகுமார், யுவஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தத் தொடரை அப்துல்லா இயக்கியுள்ளார்.

சிறு வயதில் உயிர்த் தோழியால் வஞ்சிக்கப்பட்டவள் எப்படி தோழியை பழி வாங்குகிறாள் என்பதுதான் கலசம்' தொடரின் கதை.

இத்தொடரில் ஏற்கெனவே ரஞ்சனி என்ற கேரக்டரில் நடித்து வந்த ரம்யாகிருஷ்ணன், தற்போது கதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நீலாம்பரி என்ற மற்றுமொரு புதிய கேரக்டரிலும் வருகிறார். இதுவரை உணர்ச்சிப் போராட்டமாக சென்றுகொண்டிருந்த கதை, வரும் நாள்களில் இருந்து பழி தீர்க்கும் போராட்டமாக விறுவிறுப்பாகத் தொடர்கிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

திரைக்கதை, வசனம் -ஜெகன்மோகன். ஒளிப்பதிவு -செல்லபாண்டியன். கிரியேட்டிவ் ஹெட் -ரம்யாகிருஷ்ணன்.


[/tscii:6052785f05]

aanaa
27th June 2009, 06:24 PM
Episode end on Last Friday - June 26
Just one yaer old
Its good to like to have a year or 2 of serials ...