PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5



Pages : 1 2 3 [4] 5 6

NOV
3rd September 2009, 07:29 PM
Kumudham magazine survey done in 1990 - when Sivaji was almost at the end of his career!

[html:8d5b54a228]
http://www.imagetub.com/is.php?i=599&img=Kumudam_survey_.jpg

[/html:8d5b54a228]

Murali Srinivas
3rd September 2009, 11:08 PM
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி ஓரங்க நாடகம் இடம் பெற்ற சூழலை விளக்கும் போது கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதை படித்து விட்டு,அந்த நிகழ்ச்சி பற்றிய வர்ணனையையும் புகைப்படங்களையும் பழைய சித்ராலயா வார இதழிலிருந்து எடுத்து ஸ்கேன் செய்து அனுப்பிய ராகவேந்தர் சார் அவர்களுக்கும் அதை பொருத்தமாக அந்த போஸ்டில் [Page 48] உள்படுத்திய ஜோவிற்கும் மனங்கனிந்த நன்றி.

1990-களிலும் கூட நடிகர் திலகமே சாதனை செல்வாக்கில் முன்னணியில் இருந்தார் என்பதை இந்த தலைமுறைக்கு மீண்டும் எடுத்துச் சொன்ன NOV-விற்கும் குமுதத்திற்கும் நன்றிகள் பல.

அன்புடன்

abkhlabhi
4th September 2009, 05:53 PM
thanks to Vettipayal.com

நடிப்புக் கடவுள்

கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.

பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என் பக்தன் ஈசானபட்டன் ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் எம்மை தேடி கொண்டிருக்கிறான். இன்னும் அவன் அந்த இடத்தை நெருங்கக்கூட இல்லை.

பார்வதி: அவர் கனவில் தோன்றிய தாங்களே சரியான இடத்தை சொல்லியிருந்தால் அவர் இந்நேரம் ஆலயமே கட்ட ஆரம்பித்திருப்பார்.

ஈசன்: உமா! கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் அருமை என்றுமே உணரப்படுவதில்லை. உனக்கு தெரியாதா என்ன? இன்றே அவருக்கு நாம் காட்சியளிப்போம். நீ கவலைப்படாதே.

பார்வதி: உங்கள் திருவிளையாடலால் நன்மை நடந்தால் சரி...

..........................

ஈசன்: தேவதத்தா! உன்னால் எனக்கு ஒரு காரியமாக வேண்டும். அதற்காகவே யாம் உன்னை இங்கே அழைத்தோம்!!!

தேவதத்தன்: கட்டளையிடுங்கள் ஸ்வாமி

ஈசன்: அதோ பார்...
என் பக்தன் ஈசானபட்டன் என்னை தேடி ஒரு வாரமாக அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். நீ அவன் முன் புலியாக தோன்றி அவனை அதோ அந்த காவிரி கரையை நோக்கி வர வைக்க வேண்டும். அங்கே அவன் தானாக எம்மை சந்திப்பான். அப்போது நீ மறைந்துவிட வேண்டும். புரிகிறதா?

தேவதத்தன்: நன்றாக புரிகிறது ஸ்வாமி.. இதோ புறப்படுகிறேன்.

புலியாக மாறிய தேவதத்தன், ஈசானபட்டரை துறத்த ஆரம்பித்தான். பசியால் உடல் இளைத்தாலும், ஈசன் கட்டளையிட்ட பணியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, உயிர் பிழைக்க வேகமாக ஓடினார் ஈசானப்பட்டர். திடீரென அவர் கால் ஒரு கல்லில் (சிவலிங்கம்) தடுக்கிவிட கீழே விழுந்தார் ஈசானப்பட்டர். புலியாக வந்த தேவதத்தன் தன்னை மறந்து ஈசானபட்டர் மேல் பாய்ந்தான். ஈசானபட்டர் மேல் புலி நகங்கள் பட உதிரம் எட்டி பார்த்தது. தன் பக்தனின் உடலிலிருந்து வந்த உதிரம் தரையில் வீழ்வதற்குள் லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட ஈசன் புலியின் மேல் தன்னுடைய சூலத்தை பாய்ச்சினார். தேவதத்தன் தன் சுய உருவை அடைந்து அங்கே நிகழ்ந்ததை உணர்ந்து அதிர்ச்சிக்குள்ளானான்.

ஈசன்: தேவதத்தா! என் பக்தனை கொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல். அவன் இரத்தம் சிந்த காரணமான நீ இந்த பூவுலகில் மனிதனாக பிறக்கக்கடவாய்!

தேவதத்தன்: ஸ்மாமி! என்னை மன்னித்தருளுங்கள். புலியாக உருவெடுத்தப்பின் நான் யாரென்பதையே மறந்துவிட்டேன். புலியின் குணங்கள் முழுதும் பெற்றதால் செய்வதறியாமல் தவறிழைத்துவிட்டேன். மன்னித்தருளுங்கள் ஸ்மாமி. இந்த ஏழைக்கு இரக்கம் காட்டுங்கள்.

ஈசன்: தேவதத்தா! நீ செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஈசனப்பட்டரின் காயங்கள் மறைந்தன. அவருக்கு அருள் புரிந்துவிட்டு ஈசன் மறைந்தார்.

..................................

பார்வதி: ஸ்மாமி! இது என்ன அநியாயம்? உங்களுக்கு உதவ வந்த தேவதத்தனுக்கு இப்படி ஒரு அநீதி இழைத்துவிட்டீர்களே!

ஈசன்: உமா! நான் யாருக்கும் என்றும் அநீதி இழைப்பதில்லை. தேவதத்தனின் புகழை பரப்பவே யாம் இதை செய்தோம். புலியாக மாறிய அவன் புலியாகவே ஆனான். நடிப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. பூமியில் பிறக்கும் அவன் மக்களை தன் நடிப்பால் மகிழ்விப்பான். நடிப்பு கலையை உலகுக்கு சொல்லி தருவான். என் திருவிளையாடலைக்கூட மக்களுக்கு நடித்து காட்டுவான். அவனே நடிப்புக் கடவுளாவான்... ஆமாம் அவனே நடிப்புக் கடவுள்.

abkhlabhi
5th September 2009, 10:45 AM
[tscii:1a91d9239a]சிவாஜி பற்றிய விகடன் கட்டுரையொன்று.....................

உலக அளவில் விருதுகள்!
சின்னராசு

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.


அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!

இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.

இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.


ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.

‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.

சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.


அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.

ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.

சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.


ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.


ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.

சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.

சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.

சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.

அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.

ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.

புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.

அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.

இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.

விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.

‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.

பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
[/tscii:1a91d9239a]

abkhlabhi
5th September 2009, 11:10 AM
நடிகர் சிவகுமார் ஓரு பேட்டியில் சிவாஜியை பற்றி கூறியது.

என்னுடைய காலகட்டத்துல ஒரு நடிகர். நான் பேர் சொல்ல விரும்பல. ஜுலியஸ் சீசர் வேடத்தில் நடித்தார். ஜுலியஸ் சீசர் உட்பட ரோமாபுரியில் யாரும் மீசை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்த நடிகர் மீசை வைத்துக் கொண்டே ஜுலியஸ் சீசராக நடித்தார். புத்தர் என்றால் அவருக்கு ஒரு வடிவம் வைத்திருக்கிறோம்.



அந்த வடிவத்தைப்போல நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசுநாதர் என்றார் ஒரு வடிவம் நம்கண் முன் தோன்றும். தாடி வைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அதை அகற்றிவிட்டு நடிக்கக் கூடாது.

ஆனால் அந்த நடிகர் மீசை வைத்துக் கொண்டே ஜுலியஸ் சீசராக நடித்தார். இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு நடிகர், நான் அந்த படத்தில் நடிக்கும்போது.............. திருமங்கை மன்னன் என்று ஒரு அரசர். அவர் தன்னிடம் உள்ள சொத்துக்கள் பணம் எல்லாவற்றையும் போட்டு விஷ்ணுவைக்கு கோயில் கட்டுகிறார். பணம் போதவில்லை. பக்கத்து அரசர்களிடம் போய் கேட்கிறார். யாரும் கொடுப்பாரில்லை. திருடியாவது வந்து கோயில் கட்டலாம் என்று இரவு நேரத்தில் கள்ளர் வேஷம் போட்டு பணம் திருடிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியில் திருமண கோஷ்டி ஒன்று வருகிறது. அந்த கொள்ளைக்கார மன்னன் அவர்களை பாதையில் மடக்கி நிறுத்துகிறான். அத்தனை பேரின் அணிமணிகள் கழற்றப்பட்டு கொள்ளையன் முன்பு குவிக்கப்படுகிறது. மணமகனின் காலில் மெட்டி என்று சொல்லப்படும் ஆழி ஒன்று மட்டும் கழற்றப்படாமல் இருப்பதை மன்னன் பார்த்துவிடுகிறான். மணமகனாக வந்ததோ, மகாவிஷ்ணு. காலில் ஆழி மின்னுகிறது கழற்ற மனம் வரவில்லையோ என்று மன்னன் கேட்கிறான்.

கொள்ளைக்கார ராஜா தன் கையினால் கழற்றப்பார்க்கிறார் முடியவில்லை. அப்போது காலில் தன் வாயை வைத்து பல்லினால் கடித்து கழற்றுவது போல அந்தக் காட்சி வரும். நான் ஒரு சாதாரண நடிகன். அவர் சிவாஜி கணேசன். உலகத்திலேயே மிகப்பெரிய நடிகர்.

திருவடிசூலம்இடம் எப்படி என்றால், மக்கள் காலைக்கடன்களை முடித்து அந்த இடமே அசிங்கமாக இருக்கும். சிவாஜிகணேசனுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் என்ன பண்ணியிருக்கலாம் என்றால்,........... எத்தனை பேர் புராணம் படித்திருப்பார்கள்? திருமங்கை வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? பத்து பேருக்கு தெரிந்திருக்கலாம். அவர்களும் திரைப்படக் கொட்டகைக்கு வரப்போவதில்லை.

காட்சியின் கடைசி கட்டம் படமாக்கப்படவிருந்தது. கேமரா ஓடிக் கொண்டிருந்தது. கொள்ளைக்காரன் வேடத்திலிருந்த சிவாஜி கணேசன் மடார் என்று மண்டியிட்டு அந்த புதுமுக நடிகரின் (எனது) காலை தூக்கி தன் முழங்கால் மீது வைத்து கைகளால் ஆழியைக் கழற்ற முயன்றார். முடியவில்லை. மின்னல் வேகத்தில் பாதத்தை மேலே தூக்கி கால் விரலை வாய்க்குள் விட்டு கடித்து ஆழியைக் கழற்றிவிட்டார்.

தொழிலுக்காக எந்த எல்லைக்கும் இறங்கி அற்புதமாக நடிக்கக்கூடிய மிகப்பெரிய நடிகர் அவர்.

abkhlabhi
5th September 2009, 11:29 AM
THANKS TO MY NT FANS WHO HELPED IN THIS REGARD :


புத்தகம் முழுக்க திரு. டி.எஸ் என். கேள்விகள் கேட்க அதற்கு நடிகர் திலகம் பதிலளித்திருக்கிறார்.


சிவாஜியின் பூர்வீகம்

டி.எஸ்.என்.: உங்கள் பூர்வீகம மற்றும் பெற்றோர் மூதாதையர் இவர்களைப் பற்றி கூறுங்களேன்.

சிவாஜி: எனது பூர்வீகம் வேட்டைத்திடல் என்ற தஞசாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு வளமான கிராமம். இங்கு தான் எனது தகப்பனாரின் குடும்பம் வசித்து வந்தது. நான் பெரும்பாலும் எனது தாயாரால் வளர்க்கப் பட்டதால் அவரது குடும்பத்தைப் பற்றி நன்கறிவேன். எனது தாயார் ராஜாமணி அம்மாள் எனது பாட்டனார் சின்னசாமி கலிங்கராயரின் பதினோராவது குழந்தை. பாட்டனார் இந்திய ரயில்வேயில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மதுரை திருச்சி ஆகிய ரயில்வே லயன்களுக்கு பொறுப்பாளரக இருந்தாரென நினைக்கிறேன்.

டி.எஸ்.என்.: நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள்? உங்கள் பிறந்த தேதியைக் கூறமுடியுமா?

சிவாஜி: நான் பிறந்த நாளை சரியாகத் தெரியாது. பிறந்த ஆங்கில தேதி அக்டோபர் 1 1928. அன்று எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் கைதானார் அது எனது நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது.

டி.எஸ்.என்.: உங்கள் பிறந்த தேதி பத்தாம் மாதமான அக்டோபரின் முதல் தேதி யாக இருப்பதாலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியாக இருப்பதாலும் நீங்கள் எல்லா துறைகளிலும் முதலவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சிவாஜி: எனக்கு திருமணம் ஆனது மே மாதம் முதல் தேதி என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். நான் வாழ்க்கையில் முதல் இடத்தில் இருக்கிறேனோ இல்லையோ எனது வாழ்க்கையின் மிக முக்கியான நிகழ்வுகள் முதல் தேதியில் நிகழ்ந்துள்ளன.

டி.எஸ்.என்.: உங்களது உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

சிவாஜி: எனக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உண்டு. அனைவருக்கும் மூத்தவர் திருஞான சம்பந்த மூர்த்தி இரண்டாமவர் கனக சபா நாதன் மற்றும் மூன்றாமவர் தங்கவேலு. எனக்கு கணேச மூர்த்தி என்று முதல் பெயர் இருந்தது. எனது தந்தையார் கைதானயுடன் எனது பாட்டனார் காலமானார். அதன் பின்னர் நாங்கள் திருச்சி பொன்மலைக்கு அருகிலிருந்த சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திலிருந்த எங்களது சொந்த வீட்டிற்கு வந்தோம்.



வளர்ந்த பருவம்

டி.எஸ்.என்.: திடீரென்று உங்கள் தந்தை கைதாகி பாட்டனாரும் காலமான பின் எப்படி உங்களது தாயார் ஒருவர் உதவியும் இன்றி குடும்பத்தை சமாளிக்க முடிந்தது?

சிவாஜி: அதைப் பற்றி கேட்காதீர்கள். நான் பட்ட கஷ்டங்களைப் போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது தந்தையார் கைதானவுடன் எனது தாயார் சில பசுக்களை விலைக்கு வாங்கி பாலை விற்று எங்களை வளர்த்தார். எனது தாயாரின் பெயர் ராஜாமணி அம்மாள். ஆனால் அனைவரும் அவரை பால்காரம்மா என்று தான் கூப்பிட்டார்கள்.

எனக்கு மூன்று அல்லது நான்கு வயதாகும் போது எங்களது வீட்டின் எதிர் புறம் இருந்த கிருத்தவ மிஷன் பள்ளியில் என்னை சேர்த்தனர். எனக்கு நாலரை வயது இருக்கும்போது எனது தந்தையார் விடுதலை செய்யப் பட்டார். அப்போது தான் எனது தாயார் எனக்கு அவரை அறிமகம் செய்து வைத்தார். நான் எப்படி அந்த நிகழ்ச்சியை வருணிப்பது? அது ஒரு மிக உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி.

நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒருவரின் கஷ்டங்களையும் வேதனைகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. தாம் நாட்டிற்காக என்ன செய்தோம் என்று கேட்காமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் எளிதாக கிடைத்ததா? தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை. கண்ணீர் விட்டல்லவா நாம் அதை வளர்த்தோம்? நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனை குடும்பங்கள் கஷ்டப் படடிருக்கின்றன. எங்கள் குடும்பம் ஒரு உதாரணமாக திகழ வில்லையா?


நடிகர் திலகத்தின் முதல் நாடக வேடம்-பெண் வேடம்

டி.எஸ்.என்.: வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நாடக குழுவினரிடம் தான் ஓர் அனாதை என்று சொல்ல எப்படி உங்களுக்கு தைரியம் வந்தது?

சிவாஜி: என்னைப் பொறுத்தவரை கட்டபொம்மன் நாடகத்தில் மெய் மறந்து விட்டேன். ஏழு வயது முதல் அந்த நாடகம் என் பனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம் தான் எனக்கு பெயரையும் புகழையும் ஈட்டி தந்தது. எப்படியாவது நாடக குழுவில் சேர்ந்து விட வேண்டும் என்று தீர்மானித்தால் தான் நான் அனாதை என்று பொய் சொன்னேன். பொய் சொன்னது தவறு தான். ஆனால் சரி எது தவறு எது என்று தீர்மானிக்கும் வயதா அது?. எனது கனவை எப்படியாவது நிறை வேற்ற வேண்டும் அதனால் தான் நான் அவ்வாறு செய்தேன்.

நாடக குழுவில் சேர்ந்து திண்டுக்கல் சென்ற எனக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது ஆர்வமோ அல்லது என்னுள் இருந்த சக்தியோ என்னை ஒரு நடிகனாக்கியது. எனது குருவின் பெயர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்க முடியாத பெயர்.

டி.எஸ்.என்.: நீங்கள் நாடக குழுவின் பெயர் யதார்த்தம் பொன்னுசாமி கம்பெனி என்றல்லவா சொன்னீர்கள்?

சிவாஜி: நாடக குழுவின் பெயர் யதார்த்தம் பொன்னுசாமி நாடக கம்பெனி. கம்பெனியில் இரண்டு பொன்னுசாமி பிள்ளை இருந்தனர். ஒருவர் முதலாளி பொன்னுசாமி மற்றவர் ஆசிரியர் பொன்னுசாமி. ஆகவே அவர்களை பெரிய பொன்னுசாமி சின்ன பொன்னுசாமி என்று அழைத்தனர். எனது குரு சின்ன பொன்னுசாமி. அவர் தான் என்னை நடிப்புலகில் அடியெடுத்து வைக்க உதவினார். எனக்கு முதலில கற்றுக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரம் எது தெரியுமா? ராமாயணத்தில் வரும் சீதையின் கதாபாத்திரம் தான அது. "யாரென இந்த புருஷன் அறிகிலேன்" என்ற பாட்டை நான் பாட வேண்டும் அதோடு நடனமாட வேண்டும் பேச வேண்டும் சிரிக்க வேண்டும் ஏனெனில் இது ஒரு முக்கியமான காட்சி. சீதை ராமரை முதன் முதலில் சந்திக்கும் காட்சி. நான் இந்த காட்சியில் திறம்பட நடித்து காட்சி முடிந்து மேடைக்கு பின்புறம் சென்று ஒப்பனையைக் களையும் போது எனது குரு அங்கு வந்து என்னை செல்லமாக முதுகில் தட்டி நான் நன்றாக நடித்ததைப் பாராட்டினார்.

நான் ஒரு சிறந்த நடிகனாகி எனது பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப் பட்டேன். எனது முதல் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுக்களால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. எனது நடிப்புத் தொழில் பல நல்ல கதாபாத்திரங்களினால் வெகுவாக முன்னேறியது. என்னை மாதிரி நாடக உலகில் ஏற்றம் கண்டது வேறு யாரும் கிடையாது என்று பெருமிதத்தோடு சொல்லுவேன்.

பெரும்பாலும் ஒருவர் பெண் வேடம் தரித்து நடிக்கத் துவங்கி விட்டால் அவருக்கு அதே மாதிரி வேடங்கள் தான் கிடைக்கும். நாளடைவில் அவரின் நடை உடை பாவனை பேச்சு எல்லாமே பெண்களைப் போல் ஆகிவிடும். என்னைப் பொறுத்த வரை இது நடக்கவில்லை ஏனென்றால் நான் பல விதமான கதா பாத்திரங்களை ஏற்று நடித்தேன். ராமாயணத்தில் மட்டுமே எனக்கு நான்கு வித கதாபாத்திரங்கள் கிடைத்தன. முதலில் சீதையாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றபின் பரதனாகவும் நடித்தேன். அந்த கதாபாத்திரத்திலும் எனது நடிப்பு நன்றாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன்.பின்னர் சம்பூர்ணராமாயணம் என்ற திரைப்படத்தில் பரதனாக நடித்தபோது அதைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி என்னைப் பாராட்டி "பரதனைக் கண்டேன்" என்றார். இதை விட புகழ்ச்சி ஒரு நடிகனுக்கு கிடைக்க முடியாது. இது எனது குருவின் ஆசீர்வாதம் என்று கருதுகிறேன்.

நான் சூர்ப்பனையாகவும் நடித்தேன். சூர்ப்பனகை என்றவுடன் வெறும் அரக்கி என்று நினைத்து விடாதீர்கள். ராமரையும் லட்சுமணரையும் மயக்க ஒரு அழகு மங்கையாக உருவெடுத்தாள் அவள். நான் அந்த அழகு மங்கையாக நடித்தேன். அந்த நாட்களில் எனது தலைமுடி நீளமாக முழங்கால் வரை இருக்கும. நான் குறைந்த ஆடைகளணிந்து தலைமுடியை தொங்க விட்டுக் கொண்டு ஒரு அழகு பதுமையாக காட்சி அளித்தேன். ஷாம்பு ஹேர் ஆயில் விளம்பரங்களில் வரும் அழகு தேவதைகளைப் போல் இருந்தேன். நான் மேடையில் தலைமுடியை அவிழ்த்து அழகை வெளிப்படுத்தியதம் பார்வையாளர்கள் பல நிமிடங்கள் கை தட்டுவார்கள்.

டி.எஸ்.என்.: பிறகு வேறு எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தீர்கள்?

சிவாஜி: நான் ராவணள் மகன் இந்தரஜித் ஆகவும் நடித்தேன். ஒரே நாடகத்தில் வேறுபட்ட காட்சிகளில் பரதன் இந்தரஜித் ஆக இரண்டு ஆண் கதாபாத்திரங்களிலும் சீதை சூர்ப்பனகையாக இரண்டு பெண் கதா பாத்திங்களிலும் நடித்தேன். இவ்வாறு வேறுபட்ட கதா பாத்திரங்களில் நடிக்க கற்றுக் கொடுத்த எனது குருவிற்கே எனது புகழ் அனைத்தும் சேரும். அவரது ஆதரவால் தான் எனது நடிப்புத் திறமை வளர்ந்து ஒரு நல்ல நாடக நடிகனாக பெயர் பெற்றேன்.

டி.எஸ்.என்.: நீங்கள் ஆண் பெண் வேடங்களில் மாறி மாறி நடிக்கும்போது உங்களது குரலை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்குமே இதற்காக விசேட பயிற்சி எதுவும் எடுத்துக் கொண்டீர்களா?

சிவாஜி: நான் இப்பொது உங்களுடன் பேசிக்கொண்டிருப்பது எனது சொந்த குரலில். ஆனால் ஒப்பனை தரித்து உடைகளை மாற்றிக் கொண்டவுடன் எனது குரல் அந்த கதா பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி மாறிவிடும். நாடகங்களில் குரலை மாற்றிக் கொள்வது இயற்கை. மகரக்கட்டு என்ற ஒரு 10 லிருந்து 15 வயது சிறுவனின் பருவத்தில் குரல் உடைகிறது. நான் நடிக்கத் துவங்கிய ஏழு வயதில் எனது குரலில் எந்த மாற்றங்களும் தெரியாததால் வேடத்திற்கு தகுந்த மாதிரி குரலை மாற்றிக் கொள்வது எளிதாக இருந்தது எனக்கு. நான் நிறைய குரல் வள பயிற்சியை மேற் பொண்டதால் தான் எனக்கு சிம்மக்குரலோன் என்ற பட்டம் கிடைத்தது.



குருகுலம்

டி.எஸ்.என்.: நாடகப் பள்ளிகள் ஒரு குருகுலம் மாதிரி நடந்தன என்று சொல்கிறார்களே உங்கள் நாடகப் பள்ளியைப் பற்றி கூறமுடியுமா?

சிவாஜி: எனது காலத்து நடிகர்கள் அனைவரும் தேர்ந்த நடிகர்கள். டி.ஆர. மகாலிங்கம் மதுரை பால கான சபா வின் மெம்பராக இருந்தார்.அந்த கால்த்தில் நாடகங்களில் நன்கு பாடக்கூடியவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தனர். ஒருவர் மராத்தி பாடகர் பால கந்தர்வ மற்றவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஜி.கிட்டப்பா. டி.ஆர. மகாலிங்கம் இவர்களுக்கு ஒரு படி கீழே தான் இருந்தார். நான் அவருடய சக நடிகனாக இருந்தேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். எம்ஆர் ராதா வும எங்கள் குழுவில் இருந்தார்.

நாடகப் பள்ளிகள் ஒரு தலை சிற்நத குரு குலம். புராணங்களில் நாம் ராமர் பாண்டவர்கள் ஆகியோர் குரு குலத்தில் கல்வி கற்றனர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். எனது குரு குலம் அவர்களது குரு குலத்திற்கு சற்றும் குறைந்தது இல்லை.

தினம் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்து கடவுளைத் துதிப்போம். அதன் பின் முதல் பகுதியில் பாடவும் நடனமாடவும் பயிற்சி பெற்றோம். அதன் பின்னர் அன்று இரவு நடக்க விருக்கும் நாடகத்திற்கான வசனங்களை ஒத்திகை பார்ப்பது ஆகும். என்னை ஒரு புத்தகப் புழு என்பார்கள். ஏனெனில் நான் எப்போதும் நாடக நம்பந்தமான் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன். எனக்கு நாட்டிய சாஸ்திரங்களில் கூறியுள்ளது போல் நடனமாடவும் பாடவும் தெரியும்.

இப்படி உரக்க பேசுவதிலும் நடனமாடுவதிலும் பாடுவதிலும் தீவிர பயிற்சி பெற்றோம் என்றாலும் அதற்கு தகுந்த உணவு எங்களுக்கு தரப்படவில்லை;. சாதம் சாம்பார் ரசம் மோர் இவைகளுடன் நல்ல சாப்பாடு எங்களுக்கு கிடையாது. ஏழை சிப்பாய்களைப் பொல் சாப்பிட்டாலும் ஒரு கம்பீரமான அரசனைப் போல் கர்ஜிக்க வேண்டும். எங்களது குரு குல வாழ்க்கையில் பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கு கடுதாசி போட வேண்டும் என்றோ கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. குரு குலத்தில் நான் கஷ்டப் பட்டேன். ஆனால் அனைத்தும் எதற்காக? விடை என்னுடய சாதனைகளில் இருக்கிறது. என்மேல் நீங்கள் வைத்துள்ள மரியாதைக்கும் இந்த எழுபது வயதிலும் என்னை பேட்டி கண்டு எனது நினைவுகளை பதிவு செய்கிறீர்களே அதில் விடை இருக்கிறது. இதைத் தான் நான் வாசகர்களுக்கு கூற விரும்புகிறேன்.

டி.எஸ்.என்.: நீங்கள் வீட்டை விட்டு வெளியெ வந்த பிறகு எப்போதாவது உங்களுடய குடும்பத்தினரை சந்திக்க சீங்கள் முயற்சித்ததுண்டா?

சிவாஜி: நான் நாடக கமபெனியில் இருந்த போது எனது மூத்த தமையனார் திருஞான சம்பந்த மூர்த்தி காலமானார். காக்கா ராதாகிருஷ்ணன் அவர்கள் எப்படியோ கெஞ்சி கூத்தாடி வீட்டிற்கு செல்ல அனுமதி பெற்று சென்று வந்தார். அவர் திரும்பி வந்தவுடன் தான் எனக்கு என் தமையனார் காலமான செய்தி கிடைத்தது. நாடகங்களை நடத்துபவர்களுக்கு நான் இன்றியமையாதவனாக இருந்தேன். நான் விடுப்பில் சென்றால் எனது இடத்தில் இன்னொரு பையனைத் தயார் செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் என்னை தாஜா பண்ணி விடுப்பில் செல்ல விடவில்லை.

டி.எஸ்.என்.: நீங்கள் வீட்டை விடும்போது உங்களுக்கு ஏழு வயது. உங்கள் பெற்றோர்களிடம் சொல்லிக்காமல் வந்து விட்டீர்கள். பின் எப்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது?

சிவாஜி: நான் வீட்டை விட்டு வந்த பின் என் பெற்றோர்கள் என்னைத் தேடியிருப்பார்கள். அந்த காலத்தில் தகவல் தொடர்பு வசதிகள் மிக்க் குறைவு. காக்கா ராதாகிருஷ்ணன் அவர் வீட்டிற்கு சென்ற சமயம் என் பெற்றோர்களிட்ம் நான் இந்த நாடக குழுவில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் " எங்கிருந்தாலும் அவன் நலமாக இருக்கட்டும்" என்றா&#2992

abkhlabhi
5th September 2009, 11:43 AM
கதாநாயகனாக நடிக்கும் ஆசையில்

டி.எஸ்.என்.: தீவிர பயிற்சி நள்ளிரவில் நடித்தது போதிய உணவின்மை வீட்டிற்கு செல்ல அனுமதி மறுப்பு இவைகளுக்கு இடையே தொடர்ந்து நாடகங்களில் நடிக்க உங்களால் எப்படி முடிந்தது?

சிவாஜி: தலை சிறந்த நாடக நடிகனாக வேண்டும் என்ற எனது இலட்சிய வெறியில் நான் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். பொதுவாக ஒரு நடிகனின் வள்ர்ச்சி மெதுவாக சிறிய வேடங்களில் துவங்கி பெரிய கதா பாத்திரங்களுக்கு முன்னேறும். ஆனால் எனக்கு துவக்கத்திலேயே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்பின் சிகரங்களை எட்ட வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. ராஜபார்ட் வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக எனது ஆசிரியிரிடம் அரசர்கள் வேடங்களில் நடிக்க வேண்டிய எனது திறமையை உணர்த்தினேன். இப்படித்தான் நான் ஒரு ராஜபார்ட் நடிகனாக உயர்ந்தேன். ராஜபார்ட் ரங்கதுரை என்ற திரைப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

டி.எஸ்.என்.: ராஜபார்ட் ரங்கதுரை படம் உங்கள் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று நினைக்கிறேன். சரியா?

சிவாஜி: ஆம. அந்தப் படம் ஒரு நாடக நடிகனின் நாடக வாழ்வில் வரும் கஷ்ட நஷ்டங்களை பிரதிபலிக்கிறது. ரசிகர்கள் ஒரு நடிகனின் சொந்த வாழ்க்கையைப் பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள். " இவனுக்கு தமிழ் மட்டுமே பேசத் தெரியும் வேறு மொழிகள் தெரியாது" " இவன் கூலிக்கார நந்தனார் வேடத்தில் நடிக்க மட்டுமே லாயக்கு" " இவனுக்கு அர்சுனர் வேடத்தில் மட்டும் தான் நடிக்கத் தெரியும்" " இவனுக்கு அழத்தான் தெரியும்" என்றெல்லாம் கூறினர்.

ஒரு நடிகன் ஹாம்லெட்டாக மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். முதலில் ரசிகர்கள் அழுகிய முட்டைகளையும் காய் கறிகளையும் அவன் மேல் விட்டெறிந்தால் அவனது மன நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு நான் " இருப்பதா அல்லது இறப்பதா? வாழ்வதா அல்லது உயிர் துறப்பதா?" என்ற என் உண்மை நிலையயை பிரதிபலிக்கும் வசனத்தைப் பேசியவுடன் ரசிகர்களிடமிருந்து பலத்த கை தட்டல் எழுந்தது. இந்த வசனம் ராஜபார்ட் ரங்கதுரை படத்திலும் நான் பேசியிருக்கிறேன். எந்த நடிகனுக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது?. நானும் அதை விரும்பினேன். கடவுள் அருளால் அதை அடைந்தேன்



அயர்ன ஸ்திரீ பார்ட்/அயர்ன் ராஜ பார்ட சிவாஜி

டி.எஸ்.என.: மேடையில் நன்றாக நடித்து அபளாஸ் வாங்கினீரகள். நாடகம் முடிந்தவுடன் அந்த அப்ளாஸ் தந்தவர்களை பாரக்கவும தலைமை தாங்கிய பிரபலஸதர்களின் பாராட்டக்களை கேட்கவும் முயன்றீரகளா?

சிவாஜி: எங்களுக்கு அந்த மாதிரி அனுபவங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது.எங்களை வீட்டிற்குள் திரை போடடு வைத்திருந்தார்கள். நாங்கள் வசித்த வீட்டை கம்பெனி வீடு என்று சொல்வார்கள். அது நாடகம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும். இரண்டு லைனாக அணி வகுத்து நின்று எங்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். இன்று ஒரு நடிகர் சினிமா ஹாலுக்குள் சென்றால் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள். அன்றும் அப்படித் தான் இருந்தது. நாங்கள் குழந்தைகள். அழகான குழந்தைகள். நாங்கள் வீதியில் சென்றால் எல்லோரும் எய்களைப் பார்த்து மகிழ்வார்கள். ஆனால் நாங்கள் வீட்டில் அடை பட்டு கிடந்தோம் குரு வின் முகத்தைப் பார்த்தவாறு. வெளியுலக மக்களைப் பார்ப்பது எங்களுக்க ஒரு டானிக் சாப்பிடுவது மாதிரி இருக்கும்.

டி.எஸ்.என.: எப்போதாவது நகரத்து பிரபலஸ்தர்கள் கம்பெனி முதலாளியையும் நடிகர்களுடய ட்ரூப்பையும் அழைத்து கௌரவித்திருக்கிறார்களா?

சிவாஜி: இது எப்போதாவது நடந்தது. நகரத்து முக்கியஸதர்கள் ட்ரூப்பில் இருந்த குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து தங்க வைப்பார்கள். அது எங்களுக்கு ஒரு விருந்து மாதிரி. சாதரணமாக வெறும் ரசம் சாதத்தையே சாப்பிட்டு வந்த எங்களுக்கு அங்கு வடை பாயசத்துடன் சாப்பாடு கிடைக்கும். அந்த நாட்களில் நாங்கள் காதி ஆடையே அணிந்தோம். எங்களுக்கு அவர்கள் காதி சட்டை காதி வேஷ்டி பரிசளிப்பார்கள். எங்களது சீனயர்களையும் மானேஜர்களையும் கௌரவிப்பார்கள். அது எங்களுக்கு எப்படி இருந்தது என்று விவரிக்க முடியாது.

டி.எஸ்என்: திண்டுக்கல் காம்பிற்கு பிறகு வேறு எங்கு சென்றீர்கள்?

சிவாஜி: நாங்கள் பழனிக்குச் சென்றோம். அங்கு நாங்கள் எங்களது முதல் நாடகமான கிருஷ்ண லீலாவை நடத்தினோம். அதில் நான் அரக்கி பூதணை பாத்திரத்தில் நடித்தேன். கோரமான அரக்கியாக இல்லை ஒரு நல்ல அழகான கிருஷணரை பராமரிக்கும் பெண்ணாக நடித்தேன். நான் பெரும்பாலும் பெண்கள் வேடத்திலேயே நடித்தேன். அந்த நாடகளில் புராண நாடகங்கள் மட்டுமில்லாமல் சமூக நாடகங்களான பதி பக்தி கதரின் வெற்றி பாம்பே மெயில் போன்றவற்றிலும் நான் பெண் வேடங்களில் நடித்தேன். சில நாடகங்களில் அண் பெண் இரண்ட வேடங்களிலும் நடித்திருக்கிறேன்.

டி.எஸ்.என்: அந்த நாடகளின் நாடக வழக்கில் அயர்ன் ஸ்திரீ பார்ட் அயர்ன் ரரி பார்ட் எனபார்களே அப்படி என்றால் என்ன என்று விளக்குவீர்களா?

சிவாஜி: அயர்ன் ஸ்திரீ பார்ட் என்றால் மிக முக்கியமான பெண் வேடம் என்றும் அயர்ன் ராஜ பார்ட் என்றால் மிக முக்கியமான அண் வேடம் என்றும் குறிக்கும். அயர்ன் ஸ்திரீ பார்ட்டில் நடிக்கும் நடிகர்களுக்கு விசேடமான மரியாதை உண்டு. எனக்கும்
அந்த மரியாதை கிடைத்தது



ஒரு நண்பனை இழந்தேன்

டி.எஸ்.என்.: பழனியிலிருந்து வந்த பிறகு பால கான சபாவின் வருவாய் அதிகரித்ததா? நாடக கம்பெனி வளர்ச்சியுற்றதா?

சிவாஜி: அப்படி ஒன்றும் உடனடியாக நிகழ்ந்து விடவில்லை. பழனியில் இரண்டாடுகள் இருந்த பிறகு நாங்கள் மதுரைக்கு சென்றோம். அங்கு தான் எங்களுக்கு ஒரு நாளில் மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. மதுரையில் நாங்கள் கிருஷ்ண லீலா நாடகத்தை போட்டோம். அதில் வழக்கம்போல எனக்கு பெண் வேடம் தேவகியாக கிடைத்தது.

அந்த நாடகத்தின் ஒரு காட்சியில் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் ரதத்தில் ஏற்றி சென்று கொண்டிருக்கும்போது ஒரு அசரீரி குரல் ' தேவகியின் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய் கம்சா' என்று சொல்லும். நாடக கலையின் நுணுக்கமான உத்திகளை அந்த சீனில் கையாண்டனர். ஒரு நட்சத்திரம் விண்ணிலிருந்து கீழிறங்க வேண்டும் அதே நேரத்தில் ஒரு குரல் ஒலிக்க வேண்டும். நட்சத்திரம் தோன்றியது. அனால் குரல் ஒலித்த பின்னரும் அது கீழிறங்க வில்லை. எங்கள் குழுவிலிருந்த எலக்ட்ரீஷியன் சுப்பையா என்பவர் கம்பத்தில் ஏறி அதை சரி பார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இறக்க அவரது சடலம் ஒரு வவ்வாலைப் போல கூறையிலிருந்து தொங்கியது.

உங்களால் நம்ப முடிகிறதா? நாங்கள் வசனங்களை பேசிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நல்ல நண்பனை இந்த மாதிரி கோர முறையில் இழந்தது என்னை வெகு வாக பாதித்து. என்னை விட எங்கள் குழுவில் இருந்த மலையாளிப் பையன் கிருஷ்ணன் இந்த பாதிப்பால் மூன்று நாட்கள் வரை ஒன்றும் சாப்பிடவில்லை. நண்பனை இழந்த ஏக்கத்தில் கிருஷணனும் இறந்தான். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பாரகள் என்று கேள்விப் பட்டிருந்தேன். இங்கு அது உண்மையில் நிகழ்ந்தது.

அந்த நாட்களில் நாடக குழவிலிருந்த பையன்களிடம் சாதி மத பேதமில்லாமல் இருந்தோம். எங்கள் குழுவில் முஸ்லிம் மதத்தவர், இந்துக்கள், கிருத்துவர்கள் அனைவரும் எவ்வித பேத மின்றி ஒன்றாக இருந்தோம். பிற் காலத்தில் நான் நடித்த பாரத விலாஸ் படத்தின் கரு இங்கிருந்து தான் வந்தது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட நடிகர்களுக்கிடையெ பேதங்கள் வந்தது சுதந்திரம் கிடைத்த பின்பு தான். தேசத்தை மொழி வாரி மாநிலங்களாக பிரித்தது ஒரு பெரிய தவறு என்று சொல்வேன். நான் பையனாக இருந்த போது இந்த பேதங்கள் இருந்ததில்லை. இது தான் குருகுலத்தின் மகிமை. நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரு தாய் மக்களாக வளர்ந்தோம்.

டி.எஸ்.என்.: மதுரையில் வேறு என்ன நாடகங்கள் போட்டீர்கள்? அங்கிருந்து எங்கு சென்றீர்கள்?

சிவாஜி: மதுரையில் நாங்கள் தசாவதாரம் நாடகத்தை தயாரித்து அரங்கேற்றினோம். அதில் பல கண் கட்டு வித்தைகள் புதிய நாடக உத்திகளைக் கொண்டு மக்கள் மனம் கவர்ந்தோம். மதுரையிலிருந்து நாங்கள் மேலூர் சென்றோம். மேலூரில் தான் தலைவர் கக்கன் வாழ்ந்து வந்தார். ஆனால் மேலூர் எங்களுக்கு மிக மோசமான இடமாக அமைந்தது.

ஒரு பொட்டல் வெளியை துப்புறவு பண்ணி கூடாரம் போட்டோம். ஆனால் மேலூரைப் போல பாம்பு தேள் நிறைந்த ஒரு இடத்தை காண முடியாது. நாங்கள் விக் அணியலாம் என்று அதை எடுத்தால் அதனுள் தேள் இருக்கும். எங்களது ஆடையை எடுத்தால் அதனுள் பல்லிகள் இருக்கும். சில சமயங்களில் விக் உள்ளுக்குள் சிவப்பு எறும்புகள் இருக்கும். ஆனால் அவை கண்ணுக்கு உடனே தென்படாது. நாங்கள் விக் அணிந்து வசனங்களை பேசிக் கொண்டிருக்கும் போது இந்த சிவப்பு எறும்புகள் எங்களை கடித்து துன்புறுத்தும். இருந்தும் இவைகளை வெளிக்காட்டாமல் நாங்கள் நாடகத்தை தொடர்ந்தோம்.




நடிகர் திலகமும் நடிக வேளும்

டி.எஸ்.என.: மேலூரிலிருந்து எங்கு சென்றீர்கள்?

சிவாஜி: நாங்கள் பரமக்குடிக்கு சென்றோம். பரமக்குடியில் மறக்க முடியாதது எங்களை விட்டு பிரிந்து சென்ற எம்.ஆர். ராதா எங்களுடன் மீண்டும் இணைந்தது. ராதா அவர்கள் எங்களுக்கு தந்தையைப் போன்றவர். அவர் எங்களிடம் அளவு கடந்த பாசமும் நேசமும் வைத்திருந்ததால் நாங்கள் அவருக்கு எல்லா பணி விடைகளும் செய்தோம். அவரும் எங்களை பேணி பாதுகாத்தார். நாங்கள் உறங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்வார். எங்களுடய குழியலறையை கூட சுத்தம் செய்வார். எங்களுக்கு தலை வாரி விடுவார்.அவர் இதயத்தில் அனைவருக்கும் அன்பு இருந்தது.

பின்னாட்களில் எனக்கு வசதி இருந்த போது அவரிடம் எனக்கிருந்த நன்றியின் பிரதிபலிப்பாக திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அவர் குடியிருக்க வசதி செய்து கொடுத்தேன்.

டி.எஸ்.என்.: அவருடன் நாடகங்களில் நடித்த உங்கள் அனுபவங்களைக் கூற முடியுமா?

சிவாஜி: நாங்கள் இணைந்து நடித்த நாடகங்களில் நான் பெண் வேடம் ஏற்று நடித்தேன். பதி பக்தி என்ற நாடகத்தில் எனக்கு பெண் வேடம் அவருக்கு வில்லன் பாத்திரம். அந்த நாட்களில் நாடகத்திற்கு ஏற்றவாறு முழமையாக நடிக்க வல்ல ஒரே நடிகர் ராதா அண்ணன் தான். ஒரு சீனில் நான் அவரது முடியைப் பிடித்து இழுத்து அடிப்பதாக இருந்தது. எனக்கு அவர் தந்தை மாதிரி ஆனதால் நான் தயங்கினேன். அவர் ஸ்டேஜில் கீழே விழுந்து புரண்டு வலியால் துடிப்பது போல் நடித்து தன்னை உண்மையில் அடிக்க சொல்லி எனக்கு கண் காட்டியதால் நான் துணிந்து அவரை அடித்தேன். நான் அவ்வாறு செய்யாதிருந்தால் நாடகம் முடிந்தவுடன் என்னை கடிந்து கொண்டிருப்பார் அவர்.

ராதா அண்ணன் ஒரு அறிவாளியும் பல்வித்தை மன்னரும் நாடக கலையில் அனைத்தும் அறிந்தவருமாவார். அவருக்கு எலக்ட்ரிகல் வேலைகள் அனைத்தும் தெரியும். அவர் ஒரு காமெடியனாக வில்லனாக ஹீரோவாக இப்படி எல்லா வித பாத்திரங்களிலும் நடிக்கும் தேர்ச்சி பெற்றவர். வேறு எந்த சிரிப்பு கலைஞரும் ராதா அண்ணனை மிஞ்ச முடியாது. அதே மாதிரி பாலையா அண்ணனும் வி.கே. ராமசாமி அண்ணனும் நல்ல தேர்ந்த சிரிப்பு கலைஞர்கள். இவர்களுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.



Quote :
ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பல விஷியங்கள் மறுக்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.. இல்லைஎன்றால் கத்துக்குட்டி நடிகர்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கும்பொழுது இவருக்கு கேட்காமல் போனதில் என்ன நியாயம்..

rangan_08
5th September 2009, 04:42 PM
மகிழ்ச்சி + ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது குமுதத்தின் செல்வாக்கு மீட்டர்.

Thanks NOV.

mr_karthik
5th September 2009, 06:21 PM
'selvAkku meter' (that is too in 1990 when Rajini & Kamal where in peak and NT is about to retire) tells the silent story of NT's 'selvAkku' among the public.

Thanks NOV... thanks Kumudham.

Thanks 'abkhlabhi' ......

for your wonderful collection of informations, especially NT's achievements in USA trip in 1962.

The pity is Egyptian :clap: , American :clap: and French :clap: Governments know well about NT MORE THAN INDIAN GOVT :hammer: .

saradhaa_sn
5th September 2009, 07:05 PM
குமுதம் எடுத்த 'செல்வாக்கு மீட்டர்' சூப்பர்.

இத்தனைக்கும் 1989, 90 -ம் ஆண்டுகளில் நடிகர்திலகம் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. 1988-ல் வெளியான 'புதிய வானம்' படத்துக்குப்பின் 1991-ல் 'ஞானப்பறவை' படத்தில்தான் நடித்தார்.

அவர் நடிக்காத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட அவர்தான் செல்வாக்கில் முதலிடத்தில் இருந்துள்ளார் என்பதையறியும்போது, ஆச்சரியம் மேலிடுகிறது.

அதனை படத்துடன் இங்கு வெளிப்படுத்திய 'NOV'அவர்களுக்கு நன்றி.

Murali Srinivas
7th September 2009, 11:35 PM
It was mentioned in this column some time ago that our friend and editor of Vasantha Maaligai magazine Pammal Swaminathan is in the process of constructing websites for each and every film of NT. Not only that he keeps updating the sites with new additions now and then.

Recently he had stumbled upon one of the rarest advertisements of Parasakthi. It would be a surprise to many, to know that wayback in 1952, some 73 prints were taken for Parasakthi, which was sort of a record during those times. More than that, out of 73 prints, 67 prints celebrated 50 days which is something amazing and an unbroken record for a long long time. [Even the record for most number of prints for a Black and White movie is held by NT. His Paasamalar had 153 prints] Swamy had got this paper ad from a fan who was keeping it like a treasure. Though literally in tatters, he had still managed to scan and upload in his site. Here is the link

http://parasakthi1.webs.com/apps/photos/photo?photoid=50914687

Even the names of the theatres in Kerala, Karnataka are visible along with the locations. And in Tamilnadu, it was Super Duper.

Regards

joe
8th September 2009, 06:28 AM
wow :notworthy:

Thalafanz
8th September 2009, 06:45 AM
http://parasakthi1.webs.com/apps/photos/photo?photoid=50914687

Thanks. :)

saradhaa_sn
8th September 2009, 01:52 PM
Amazing...... :clap: :clap: :clap:

Dear Murali...

Thanks for that wonderful link. It is a treasure not only for that fan, but for all NT fans... :ty:

Pammal Swaminathan... :2thumbsup:

RAGHAVENDRA
8th September 2009, 07:01 PM
Text of the Letter sent by email to The Week magazine:

Dear Sir,
This refers to the article, "Sivaji Ganesan vs MGR", of your esteemed magazine, The Week, (dated 06.09.09), which has appeared in the following link: http://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do?BV_ID=@@@&contentType=EDITORIAL&sectionName=TheWeek%20COVER%20STORY&programId=1073755753 &contentId=5905750

Mr. Asokamitran, has written about MGR Sivaji rivalry. Since I presume, they are his personal opinion, I dont wish to comment any think on that.
However, this has appeared in print in your magazine, which has wide reach all over and which I presume, would have an impact on the readers.
So, I not only differ, on a particular point, but also feel hurt, by the following words:
"Sivaji Ganesan mandrams resorted to unfair means to defame MGR and his films."

Can he explain what he means by unfair means? Or can he state what kind of means took place and can he narrate them in detail? Or can he substantiate his words? Since it is more than two generations, there is a possibility that the current generation can rely on these kind of words and decide accordingly on the reputation of the concerned.

All India Sivaji Ganesan Rasikar Mandrams were established to spread patriotism, national integration and ideologies of the great leaders were propagated through various activities. There was a group of office bearers appointed to administer the Fans Associations and this was established on All India basis for the first time for a Star from South India. Sivaji Rasikar Mandrams organised innumberable night schools and people were educated through these schools in those days. Independence Day, Republic Day, Gandhi Jayanthi were celebrated with full patriotic fervour. This space would not be sufficient, if I go on telling various social service activities conducted by the Sivaji Ganesan Rasikar Mandrams. And no mandram had time to spare for those so-called unfair means as Mr. Asokaitran says. Was Asokamitran a member of any Sivaji Fans Association or was he actively witness to any unfair means?

THE WEEK HAS FOR QUITE A LONG, ESTABLISHED A REPUTATION FOR ITSELF AND I AM DEFINITELY SURE, IT WOULD NOT ALLOW SUCH WAYWARD COMMENTS LIKE THESE. THAT TOO WHEN THE DOYEN SIVAJI GANESAN'S 81ST BIRTH DAY IS NEARBY (October 1).

I REQUEST THE WEEK TO KINDLY SEE THAT THIS STATEMENT IS WITHDRAWN SINCE LAKS AND LAKS OF SIVAJI FANS ACROSS THE GLOBE WOULD DEFINITELY FEEL
HURT.

V. Raghavendran
www.nadigarthilagam.com,
a website dedicated to the filmography of Sivaji Ganesan

Plum
8th September 2009, 07:08 PM
Raghavendra, I saw it, too. Didnt want to raise a controversy of that order here. However, it is really condemnable - this is a case of cooking a chargesheet against the victim of the crime!

joe
8th September 2009, 07:23 PM
Raghavendra Sir,
This is not a first time Mr.Asokamithran exposed his ignorance on NT .I have read another article in Tamil also.

These so-called Ilakiyavaathigal are very good in writing Fictions ,I agree ..For these if we take them seriously when they blabber anything in which they have half-backed knowledge ,it is our fault ,it seems ..May be they write everything like *fiction* only.

P_R
8th September 2009, 07:39 PM
One can't sweep like that Joe.

Asokamitran used to work in Gemini Studios. Has written some interesting essays in the past about films. சினிமாவில் அரைகள் is one of them. About 'slapping' in Indian films - how it is a rare occassion in everyday life but quite a regular feature in films. Funny in a consciously styleless manner.

His first novel கறைந்த நிழல்கள் is based on the lives of people who are working on the cusp of the production/creative side in films, their disappointments, their personal relationships etc. A very sensitive portrayal. Some of his short stories like புலிக்கலைஞன் - perhaps one of the greatest Tamil short stories ever - portrays the absurd realities of the industry and the people who live on the fringes of the film industry.

But of late he seems to have lost it. There are liberal hints of senility in whatever he writes nowadays. (he is his mid 80s I think) Every single article/story makes me feel 'why is he still writing'. For instance, his obituary for Sujatha - a man with whom he worked intimately for a long time- was extremely annoying.

I really wish people stop asking for his articles and publishing.

Thalafanz
9th September 2009, 06:52 AM
Raghavendra Sir,
This is not a first time Mr.Asokamithran exposed his ignorance on NT .I have read another article in Tamil also.

These so-called Ilakiyavaathigal are very good in writing Fictions ,I agree ..For these if we take them seriously when they blabber anything in which they have half-backed knowledge ,it is our fault ,it seems ..May be they write everything like *fiction* only.

But, these kind of writing(s) can very well manipulate the present generation's perception towards NT and the his Rasigar Mandrams. So, itha thatti kettE Aganum, IMO.

groucho070
9th September 2009, 07:10 AM
Am with Yoga here. Not only younger generation, but like Raghavendra-sar wrote, fans all over the world who don't really have clear picture of what happened. A lot of things has been cleared in this very thread in the past, and enlightened the previously brainwashed me. And that too with facts backed by evidence, not just hearsay. They better give a good explanation and clear that accusation. Judging by what PR wrote, I am sure he is not another internet Troll. :evil:

rangan_08
9th September 2009, 11:50 AM
நடிகர் சிவகுமார் ஓரு பேட்டியில் சிவாஜியை பற்றி கூறியது.


கொள்ளைக்கார ராஜா தன் கையினால் கழற்றப்பார்க்கிறார் முடியவில்லை. அப்போது காலில் தன் வாயை வைத்து பல்லினால் கடித்து கழற்றுவது போல அந்தக் காட்சி வரும். நான் ஒரு சாதாரண நடிகன். அவர் சிவாஜி கணேசன். உலகத்திலேயே மிகப்பெரிய நடிகர்.

திருவடிசூலம்இடம் எப்படி என்றால், மக்கள் காலைக்கடன்களை முடித்து அந்த இடமே அசிங்கமாக இருக்கும். சிவாஜிகணேசனுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் என்ன பண்ணியிருக்கலாம் என்றால்,........... எத்தனை பேர் புராணம் படித்திருப்பார்கள்? திருமங்கை வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? பத்து பேருக்கு தெரிந்திருக்கலாம். அவர்களும் திரைப்படக் கொட்டகைக்கு வரப்போவதில்லை.

காட்சியின் கடைசி கட்டம் படமாக்கப்படவிருந்தது. கேமரா ஓடிக் கொண்டிருந்தது. கொள்ளைக்காரன் வேடத்திலிருந்த சிவாஜி கணேசன் மடார் என்று மண்டியிட்டு அந்த புதுமுக நடிகரின் (எனது) காலை தூக்கி தன் முழங்கால் மீது வைத்து கைகளால் ஆழியைக் கழற்ற முயன்றார். முடியவில்லை. மின்னல் வேகத்தில் பாதத்தை மேலே தூக்கி கால் விரலை வாய்க்குள் விட்டு கடித்து ஆழியைக் கழற்றிவிட்டார்.

தொழிலுக்காக எந்த எல்லைக்கும் இறங்கி அற்புதமாக நடிக்கக்கூடிய மிகப்பெரிய நடிகர் அவர்.

:notworthy:

Murali sir, thanks for that wonderful link.

திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி & வாழ்த்துக்கள்.

crajkumar_be
9th September 2009, 01:44 PM
[tscii:8b1fc9381e]Got this in a mail.



Golden days of Cinema at Sathyam

The city’s most happening multi-plex gives you the opportunity to watch two thunderous hits from the distant past and two resounding hits from the not so distant past, on the big screen!

The movies to be screened include Ulagam Suttrum Valiban on the 12th of September, Thevar Magan on the 13th of September, Vasantha Maligai on the 19th of September and Annamalai on the 21st of September! A fab way to spend an evening during the weekend. Make your reservations NOW![/tscii:8b1fc9381e]

saradhaa_sn
9th September 2009, 01:54 PM
'தி வீக்' இதழில் அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதும் ஆதாரமற்ற விஷயங்களை நம்பக்கூடியவர்கள் குறைவு என்றாலும் கூட, 'நாம் என்ன எழுதினாலும் அதற்கு எதிர்ப்பு இருக்காது' என்ற எண்ணத்தை வேரறுக்க, குறைந்த பட்சம் 'தி வீக்' இதழ், திரு ராகவேந்திரன் அவர்களின் மறுப்பு அறிக்கையை வெளியிட வேண்டும்.

அந்த பதிப்பை, "வேறொரு" த்ரெட்டில் ஒருவர் பதித்திருந்ததை நேற்றுத்தான் பார்த்தேன். அதே த்ரெட்டில் மறுப்பு எழுதுவது தேவையற்ற சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் என்பதாலும், அதைத்தொடர்ந்து எழும் விவாதங்கள் மூலம் நடிகர்திலகத்தின் பெயரும் புகழும் மேலும் சீரழிக்கப்படும் என்பதாலும், முக்கியமாக அதை பதிப்பித்த ' உடைய சொந்தக்கருத்தாக இல்லாமல் வேறொரு இதழில் வெளியானதை அவர் சுட்டியிருந்ததாலும், கணடனத்துக்குரியவர் அசோகமித்ரன் தான் என்பதாலும் அதைப்புறக்கணிக்க வேண்டியதாயிற்று.

அதே சமயம், ராகவேந்தர் அவர்களின் கண்டனத்தை 'தி வீக்' இதழ் பிரசுரிப்பதன் மூலம், அசோகமித்ரன் போன்றவர்கள் சேற்றை அள்ளி வீசும் நிகழ்வுகளின் நம்பகத்தன்மை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கும்.

'தி வீக்' செய்யும் என்று எதிர்பார்க்கலாமா...?

(நடிகர்திலகத்துக்கும், அவர்தம் ரசிகர்மன்றத்துக்கும் களங்கம் ஏற்படுத்தப் படும்போதெல்லாம் பொங்கியெழுந்து சம்மதப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டி திருத்த முற்படும் நண்பர் ராகவேந்திரன் அவர்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்)

HARISH2619
9th September 2009, 03:27 PM
அந்த கட்டுரைக்கு கன்டனம் தெரிவித்து தாங்கள் அனுப்பிய கடிதத்துக்காக நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பாக நன்றிகள் பல கோடி.
அந்த கடிதத்தை பிரசுரிக்காத பட்சத்தில் இந்த விஷயத்தை சிவாஜி சமூகநல பேரவையை சேர்ந்தவர்களின் கவனத்திற்க்கு கொண்டுசென்று தி வீக் பத்திரிக்கை அலுவலகம் முன்பு ஒரு ஆர்பாட்டமாவது(அமைதியாக) செய்யவேன்டும் என்பது என்போன்ற என்னற்ற ரசிகர்களின் கோரிக்கை. :oops:

abkhlabhi
9th September 2009, 05:32 PM
[tscii:41e5a34182]The Stylist Forever

Kamalahaasan on Sivaji Ganesan


Sivaji saab is the genetic code embedded in every Tamil actor. Even if we try to be independent, the dna imprint remains. For 48 years, Tamils have been under the spell of Sivaji. He had a large heart—that was his medical problem too. We had almost given up on him in 1993 when the doctors gave him just two years. We took him to France, did everything we could. He survived his heart ailment for 15 years. But for his ill-health, he would have been active even in the last four years.

Sivaji was style personified—he would not take it off like a shirt. He slept in style; woke up in style; came to work in style. He was style. He was the trendsetter. And I'm proud to be his descendant.

My association with him dates back to my childhood. I was about four years old when we met in the studios. Once, he even said how I might have sat on his lap more than his children. He would always be in the studios then. I was the vidushak who would be made to recite Sivaji sir's dialogues on the sets.

Sivakumar, a fellow-actor, and I used to have sessions where we competed over narrating his dialogues. We would compete over who remembered more. That's the kind of effect he has. Even for the present generation, Sivaji is the man. Upcoming artists are told, "Become an actor like Sivaji." Even for my children, he is the ultimate.

As for criticism that Sivaji overacted or was loud, why don't these westernised critics look at Akira Kurosawa's films? We have a certain style that is rooted here. We have either actors or non-actors. The Japanese never compromised to suit European tastes and I respect them. So much so that Hollywood went on to adapt/remake Japanese films. This is part of an Asian aesthetic. Sivaji too has to be translated for a western audience.

For that matter, even the early Chaplin was "loud". And so were Hollywood stars of the early black-and-white era. We are more willing to learn and try hard to appreciate an Elvis Presley but not our own icons. If Elvis spawned a thousand clones in the West, so did Sivaji here. He is our Elvis. He is the King.

Now, an Indian funeral is itself so different—there's so much emotion, so many tears, such drama. A European funeral is such a contrast. There's great restraint. Even the sorrow is muted. Sivaji's acting is as much a part of our culture. But see how Sivaji in Thevar Magan turns a new leaf. Here, the actor steps out of his era. And Thevar Magan was my kind of salute to a doyen.

Personally, I can't be critical of Sivaji sir. I have been so close to him and such an admirer, I cannot be alive to his faults, if any. I lose my critical faculties. He's been a goading force, other than a guiding force. I am utterly biased about him and there's no scholar left in me. Sivaji has been such a challenge that it makes an actor ask himself, "What's the use of being born after him?" With Sivaji, you touch base.

The only thing Sivaji perhaps regretted was that he was not well-read like me. He lacked the vocabulary, he felt. That was his modesty. "I'm just a school dropout," he once said at a function. On the other hand, I have the dubious distinction of having uttered dialogues, even reciting poetry, in Telugu, Malayalam and other tongues. But I cannot read any of these languages. Whereas Sivaji was the master when it came to Tamil. Nobody could match up to him. Once, when I was a child actor, I could not pronounce arisi (Tamil for rice) correctly and he would intone it like me and make fun. He was the master of Tamil diction.

As a politician, Sivaji failed. He was too straightforward. He never asked for favours, and was not clever or even wise in politics. Sivaji behaved like a king even in politics. I differed with Sivaji's political beliefs, but that would not in any way lessen my regard for him. And whatever their political differences, Karunanidhi and Sivaji made for a great artistic duo. (Karunanidhi scripted Sivaji's debut film Parasakthi and many more.) If one was the mind, the other was the voice.

The irony is Sivaji gave me an opportunity to rehearse the death scene in real life. After Thevar Magan, where we did a death scene, I received news from Singapore that he had passed away during a function there. I was so shaken and went through such emotions, and I was only a happy fool the next morning to realise that the news was wrong. But this time it was for real.

[/tscii:41e5a34182]

abkhlabhi
9th September 2009, 05:41 PM
Strokes of a genius -Sivaji ganesan
(The Hindu- Hariharan)

The release of "Parasakti" in 1952 saw the birth of a star - Sivaji
Ganesan - in Indian cinema. His perfect delivery of dialogue and
identification with every role he played, established him as an actor
par excellence. K. HARIHARAN, film maker and scholar, writes on the
thespian's successes and failures.

WITHIN the post-independent history of Indian Cinema the role of Tamil
cinema has always been seen as a dysfunctional variant. For the powers
to be and the Indian elite, Tamil Nadu and Tamil cinema were
synonymous symbols of "kitsch" Madrasi culture. "Andu gundu nariyal
paani" was how, even I was referred to in Mumbai where I grew up! And
that's all my friends knew about Tamil Nadu. The only thing noteworthy
for them about this southern State was its "classical" Mylapore
culture - the world of Bharatanatyam and Carnatic classical music.

So to which culture did Sivaji Ganesan belong? The answer is obvious.
The world of "kitsch!" And why did this happen? I would like to
briefly elaborate here with the words of Edward Said, the renowned
critic of post-colonial culture and politics. "In the first place
culture is used to designate not merely something to which one belongs
but something that one possesses. In the second place there is a more
interesting dimension to this idea of culture as possessing
possession. And that is the power of culture by virtue of its elevated
or superior position to authorise, to dominate, to legitimate, demote,
interdict and validate."

So it was imperative that after 1947, counter-culture in Tamil Nadu
had to have a two-pronged attack for the people who actually
"belonged" to this "andu gundu" culture. They had to fight the Delhi
culture and the superiority complex of a local elite power, which
decided what would constitute "Indian culture". The local Tamilian
elite had to play mirror-reflection of "proper Indianness" and decide
what to authorise and legitimise as good Tamil culture too. So in 1952
when "Parasakti" was released it must have been obvious to every
"belonging" resident Tamilian that a great star had arrived. It was an
overwhelming success. Sivaji Ganesan captured the spirit of the
typical post- independence protest and disillusionment resting in
every Tamil youth. The film also dovetailed with the resurgence of a
strong pro-Tamil Dravidian movement and radical social reform
processes and in the process stigmatised the Tamil elite as corrupt
aliens.

There were many other stars in this game too. From MGR, SSR to
Karunanidhi and Kannadasan, the list was really long. But thanks to
his immense capacity to understand the melodramatic capacities of
cinema, Sivaji Ganesan could easily translate any potential story into
a series of powerful gestures. But the elite within and without,
however dismissed his performance as pure "hamming" or stereotypical
"overacting"! It was considered and it is still considered an
embarrassment to even talk about his films. High- class newspapers
would have pages on film festivals at Cannes and discuss films, which
would never see the screen. Yet, of the 300 films that Sivaji Ganesan
acted in, none of them were found deserving to win even one national
award for him as "best actor". But so were stars like Raj Kapoor or
Dev Anand, never considered worthy of any award. Fortunately they had
to counter just a single establishment. But together they were all
seen as "anti- social elements" fanning the taste for vulgarity,
encouraging disobedience and promoting indiscipline.

Why is there an antipathy by the elite and their media towards
anything which is genuinely "popular" by its own strength? Why do
serious discussions on cinema never ever figure Sivaji Ganesan as an
important element?

The problem is cultural. To accept Sivaji Ganesan is to befriend a
whole grammar of protest, profanity and reform. When I said that he
had the immense talent to convert any potential story into a series of
powerful gestures it is precisely in this area that he demonstrates
his versatility. Let's take the classic example of "Thillana
Mohanambal". (I am sure if I had called this film a classic two weeks
ago, several readers would have laughed but today they might accept it
out of hypocritical reverence to a dead soul. What a way to achieve
"classic" status!)

In this film, Sivaji had to combine in himself the traits of a
"classical musician" falling in love with a "classical" dancer but, in
an atmosphere of "low-brow" culture. Meaning, people who wear red
blouses and blue saris, "zamindars" who live in multi- colored houses,
and people who frequent cheap folk dancers. It is into this ambience
that Sivaji brings in his precise yet different strokes. In an
intuitive way he has observed the nuances and behavioural styles of
musicians. He brings in his enormous talent of perfect dialogue
intonations, flawless synchronisation of the musical instruments, and
a good timing for action/ reaction. And still he had to rise above the
character and display the sensuality of a Sivaji Ganesan. At this
level Sivaji is at his melodramatic best. He knows exactly when to
face the camera frontally, when to raise his voice and when to quiver
his lips. Only he knew well how to add the right amount of profanity
to an already complex script of love and sacrifice.

Several films breezed by in his repertoire. From comedies like "Bale
Pandya" to mythologicals like "Thiruvilaiyadal", from historicals like
"Veerapandiya Kattabomman" to family dramas like "Paava Mannipu", from
rural subjects like "Pazhni" to urban gangster dramas like "Thanga
Padhakam". But if I were to select his most comfortable position as an
actor, it was when he played the insider, the typical family man
caught in the crossfire of modernity and tradition. He was his best
playing the vulnerable hero who had to take decisions in Catch-22
situations. "Motor Sundaram Pillai", "Padithal Mattum Podhuma", and
"Aalaya Mani" are all films about a man torn between two loyalties.
Any one way was bound to hurt and only providence could reconcile the
differences. Besides being the perfect content for a man with such
enormous histrionic talent, I somehow feel that this must have been
close to his personal character too. The saga of the poor little lad
who came from humble belongings to live in a big mansion on Boag road
in T.Nagar. Seeing the house from outside, I have always imagined
Sivaji as the simple man who always humbly depended on others to make
all his decisions, a man who would religiously relish every morsel of
"home-cooked" food (veetu saapaadu)!

I am told that he never saw himself as different from his brothers,
his wife or his son. I have always been told that he was the most
obedient actor on the set and a perfect co-actor to all the other
characters in the film. Recordists in all dubbing theatres will always
talk fondly about his speed and precision in voice dubbing.

No wonder he could never play a do-good "outsider" like his colleague
MGR. The "insider" in Sivaji was just too strong to see others as
schemers and capable of stabbing in the back. I am sure that it was
the brief foray into politics that would have brought all those
sycophants, who are the bane of true artists, inside his house. People
who would call him the second best actor in the world and never ever
tell who was actually the best! People who would put giant rose
garlands on him and praise every small gesture that he made. Such
people have the ability to put a brake on anybody's creative urge and
catapult them into isolation and a false sense of megalomania.

In the summer of 1972, Sivaji Ganesan donning the robes of an emperor
witnessed the biggest assembly of extras dressed up as soldiers. It
was the shooting of the greatest magnum opus in Tamil cinema called
"Raja Raja Chozhan". Sivaji would have felt uncomfortable watching the
spectacle of cinema take over his own charisma. Sivaji who had gotten
used to the intimate confines of Bhim Singh family drama scripts in
the 1960s suddenly saw himself being dwarfed by the colossus of the
Brihadeeshwara temple at Thanjavur. Even the great Raja Raja could not
survive the powerful shadow of exhaustion and isolation in the 12th
Century. Sadly for this film, the first cinemascope production in
Tamil cinema, it was a resounding flop. The summer of 1972 would end
the great Sivaji Ganesan's heyday. From that year onwards four out of
every five films he made were virtual disasters. He had to accommodate
all kinds of fancy demands by distributors who insisted that he had to
dance, fight and romance around despite his bulk, his age and his
brief foray into politics. Slowly, for all practical purposes, the
Tamil cinema industry would be writing off this thespian as a
non-viable entity. Writing about Sivaji Ganesan just a day after his
death, I too would be joining the long list of ministers, bureaucrats,
fellow film colleagues in singing praises of glory like an obligatory
ritual. Imagine reading laudatory statements made by "important"
people who would not have even seen a single film of his all their
life. Having neglected him completely during his lonely days, may be
lonely years, I certainly feel it is the greatest act of hypocrisy to
mouth long passages of praise when someone is no more.

It is indeed my deep regret that I learnt to truly appreciate the
great performative capabilities of a giant like Sivaji Ganesan only in
the last decade. Like most members of the elite, I was acculturated
into believing that acting could be worth considering only if it
bordered on a kind of naturalism, which in fact has never been part of
the so-called "Indian culture." Then whose culture is it? The elite
and even premier film institutions like the Film and Television
Institute of India (FTII) at Pune and the Satyajit Ray Film and
Television Institute (SRFTI) at Kolkata will never question such
positions, which are prescribed by European critical standards. May be
the Directorate of Film Festivals and the National Film Development
Corporation (NFDC) will now hold retrospectives of his films at some
international venues while several non-popular film-makers will
continue to have their films toured all over the world, endlessly. Is
this the burden of being popular?



The writer is an alumni of FTII, Pune and has made "Thangaraj Enge" the first children's film in Tamil. His "Ezhavathu Manithan" won an
international award, for the best Tamil film (at Moscow). He has also set up the first and only Indian Film Studies Department abroad


Note :
Sad that the article came after the thespian left us

Murali Srinivas
10th September 2009, 12:13 AM
Like Saradha said, I too saw the post in one of the threads of Tamil Films section and for the same reason mentioned by Saradha, I ignored the same.

Even in the link given by Bala [abkhlabhi] the director Hariharan had goofed up big time saying that summer of 1972 saw the end of heyday of NT. Can anything be far from the truth?

Same manner Asokamithran talks of so many things which are nothing but historical blunders like saying that MGR acted in only one movie after entering politics.

So while dutifully protesting the bloofers printed by today's media, we need to move on highlighting the actual facts.

Regards

PS: Thanks to everybody who thanked me for providing the Parasakthi link but எல்லா புகழும் சுவாமிநாதனுக்கே.

Mohan, no comments about Raman Ethhanai Ramanadi? I thought you would recall your theatre experience of RER.

Rakesh, saw the Parasakthi link?

Thanks Bala [CR] for the info on Sathyam celebrating (G)old cinemas.

RAGHAVENDRA
10th September 2009, 06:07 AM
Dear friends,
Thank you all incl. Prabhu Ram, Thalafanz, Rakesh, saradhaa and Murali Srinivas for your valued opinions. I just came across the article in Week through google alert, otherwise, I too wouldnt have known this. Ignorance is the best way to show your dislike and I am the first one to follow this. But some things need attention and that too when comments from such a reputed writer Asoka Mithran, who has contributed significantly to Tamil literature gets much attention, then there is a chance that his writings are taken for granted. Whether we like or not, Asoka Mithran has considerable fan following in Tamil liteary circles and his contribution can not be written just like that. His comments would definitely make impact on the future generation and there is all possibility that the next gen may take him seriously. This thought compelled me to reply to the Week. And such way ward comments should not come from writers like Asokamithran. And that too when both are not alive. Whether it is MGR or Sivaji, he should not comment like this. Individual fans might have fought with each other in arguments but never did both the Mandrams as organizations tried to defame the other as Mr. Asokamithran claims. There was rivalry among the fans and not with the Mandrams or concerned artistes. While such is the case I felt it is my duty to give a reply to the magazine and hence I brought these points to the Week.
Hope the Week, which has considerable fans of NT in its staff, would take suitable steps to prevent such a kind of remarks in future.
Thank you all for the opportunity.
Raghavendran

groucho070
10th September 2009, 07:04 AM
Murali-sar got it :D. Thanks for forwarding to us.

http://parasakthi1.webs.com/apps/photos/photo?photoid=50914687
Got lost amidst abk's huge posts...Thanks Abks, nice forwards.

joe
10th September 2009, 02:35 PM
சினிமா விமர்சனம்: தங்கப் பதக்கம் -விகடன்

'தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்' என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்!

காட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப்பார்க்கிறோம். முடியவில்லை.


கடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு 'என் னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும்' என்று சொல் வதுபோல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயா வின் நிறைவை எப்படிச் சொல் வது? தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்!

ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்திய மாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா? கவுன்சிலர் களேபரம் கதைக் குத் தேவையில்லாத கூத்து!

மைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.

மகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத் தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக்கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்ப தாக இல்லை.

ஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.

இத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ளவிடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.

தங்கப்பதக்கம்... சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.

Thanks : Vikatan.com

Murali Srinivas
10th September 2009, 11:44 PM
மதுரையில் நடக்கப் போகும் சில திறப்பு விழாவிற்கு ரசிகர்கள் இப்போதே பானர்களை சாந்தி திரையரங்கில் வைக்க ஆரம்பித்துள்ளனர்.

[html:d3b616020b]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/BDayBnrShanthi120909.jpg[/html:d3b616020b]
அதில் பளிச்சென்று கண்ணில் பட்ட ஒரு வாசகம்

"திரையுலக சிவபெருமானுக்கு மதுரையில் அக்டோபர் 4 அன்று கும்பாபிஷேகம்."

பக்த கோடிகளை வருக வருக என வரவேற்கும்

நாயன்மார்கள் -- [பானர் வைத்த ரசிகர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன].

இது போல் மேலும் பல பானர்கள் தயாராவதாக தகவல்.

அன்புடன்

abkhlabhi
11th September 2009, 02:45 PM
Thanks to Keelai Naadaan

நாரதர் கதாபாத்திரத்தில் எத்தனையோ பேர் நடித்துள்ளார்கள். ஆனால் சரஸ்வதி சபதம் படத்தில் நாரதராக சிவாஜியின் நடிப்பு..!!!
நாரதர் கதாபாத்திரத்தை ரசிக்க வைத்ததே சிவாஜி என்றால் மிகையில்லையே.

நம்முடைய வாழ்க்கை குடும்ப அமைப்பை மையமாக கொண்டது. குடும்பங்களில் பாசம்தான் ஆணி வேர்.
அந்த பாச உணர்வை நமது மனங்களில் பதிய வைத்தன அவருடைய படங்கள்.

அண்ணன் தம்பி பாசத்தை சொல்லும் சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாக.
தங்கையின் பாசத்தை சொல்ல பாசமலரைவிட வேறு படமுன்டோ..!
அண்ணியிடம் பாசத்தை காட்டும் படித்தால் மட்டும் போதுமா, மங்கையர் திலகம்.
எங்கிருந்தா வந்தான் ... இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்பதற்கேற்ற கதாபாத்திரமாய் படிக்காத மேதையில் ரங்கனாக.
பிள்ளைகளிடம் பாசத்தால் தடுமாறும் வியட்நாம் வீடு...
பேரன் பேத்தி பாசத்தை சொல்லும் பந்தம், வா கண்ணா வா..
தாய்ப்பாசத்தை சொல்லும் காட்சியாய் அன்னையின் ஆணை பட பாடல்...
அப்பா-பெரியப்பா பாசத்தை சொல்லும் கெளரவம்........
காதல் பாசத்தை சொல்லும் அம்பிகாபதி. வசந்தமாளிகை.......
தன் எஜமானின் பிள்ளையை வளர்க்கும் வேலைக்காரனாக... பாபு

அந்த விதமான பாச உணர்வுகள் இப்போதைய படங்களில் இல்லை. இது சமூகத்துக்கு நல்லதல்ல.

சிவாஜியின் படங்களில் பல பாசத்தை சொல்லும் கலை பொக்கிஷங்கள் என சொல்லலாம்.
__________________

கீழை நாடான்

abkhlabhi
11th September 2009, 02:53 PM
thanks to NT Fans

இன்றைக்கு வீ.பா,கட்டபொம்மன்,வ.உ.சி போன்றவர்களை நினைத்துப் பார்க்கையில் அல்லது படித்துப் பார்க்கையில் சிவாஜியின் முகமே வந்து போவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.

வசனங்களைப் பேசுவதாகட்டும், முகபாவங்களை மாற்றுவதாகட்டும், அந்த நடை,ஒயில் இன்னும் சில உடல் பாவனைகளில் தனக்கென ஒரு பாணியை சிறப்பாக
வடிவமைத்துக் கொண்டவர் சிவாஜி.

தில்லானா மோகனாம்பாள் சிவாஜி-பத்மினி கலப்பில் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஈடு கொடுத்து நிற்கும் திரை காவியம்.

திருவிளையாடலில் ஒரு மீனவ காட்சியமைப்பில் நடந்து செல்லும் ஒயிலாரம் - தருமிக்கு ஆதரவாய் வந்து வாதிடும் காட்சிகளில் காட்டும் ஆக்ரோஷம்..

கற்றூண், வியட்நாம் வீடு, அவர் ராஜா வேடம் தரித்து நடித்த படங்கள் எதைச் சொல்ல எதை விட..

பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை பாடலில் சௌகார் ஜானகி ஆட சிவாஜி அதைப் பார்த்து ரசிக்கும் முகபாவங்கள் எத்தனை வித அழகை வெளிப்படுத்துவார்...

சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கோ என இன்றைய தலைமுறை கேலிச்சிரிப்புகளை உதிர்க்கும் விமர்சனத்துக்கு உட்பட்டாலும்...

இன்றைய இனி வரும் தலைமுறை நடிகர்களுக்கு சிவாஜி ஒரு பல்கலைக் கழகம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது எவருக்கும்..


அந்தக் காலத்தில் நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருக்கத்தான் செய்தது. கொட்டகையின் கடைசி வரிசை ரசிகர், நடிப்பவரின் முகபாவங்களைப் பார்க்கமுடியாது. அதனால் எல்லா உணர்வுகளையும் தன் குரலிலேயே ஏற்ற* இறக்கங்களுடன் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் அப்படியே பழகி அது திரைப்படத்திலும் தொடர்ந்தது.

சிவாஜி அவர்களின் பிற்காலப் படங்களில் அந்த ஓவர் ஆக்டிங் இல்லாமல் வந்த முதல் மரியாதை, தேவர் மகன், படையப்பா போன்ற படங்களில் அவரது எதார்த்த நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கும். அதிலும் தேவர் மகனில் கமலுடன் ஒரு காட்சியில் கேட்பாரே.."கிளப்பு கடை வெக்கப் போறியளோ...அப்படியே எனக்கும் இந்த மாவாட்டுற வேலையை குடுத்துடு அப்பு" என்று கையால் ஆட்டிக் காண்பித்துக்கொண்டே பேசுவாரே....அடடா அற்புதம்.

படையப்பாவில் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளியேறும் காட்சியில் அந்த இமயத்தின் நடிப்பு நம்மைக் கலங்க வைத்துவிடும்.

சிறுவயதில் அவரது நடிப்பைப் பற்றித் தெரியாததால் அவருடைய பெரும்பாலானப் படங்களை பார்த்ததில்லை. பிறகு ஒவ்வொரு படமாகத் தேடித்தேடி வாங்கிப் பார்த்தேன். இப்போது என்னிடம் அவருடைய படங்களின் ஒரு பெரிய கலெக்ஷனே இருக்கிறது.


அற்புதமான கலைஞன். தமிழ்திரைப்படம் உள்ள*வரை அவரது பெயர் நிலைத்திருக்கும்

abkhlabhi
11th September 2009, 03:01 PM
thanks to Gemini Magazine and Keelai Naadaan

நடிகர் திலகம் அவர்கள், தான் நடித்த படங்களைப்பற்றி சொன்னதை இங்கே தருகிறேன்.

அவருடைய கருத்து. இதில் சில விஷயங்கள் சுவாரஸ்யமாய் இருந்ததால் நண்பர்களுக்காக பதிக்கிறேன்


நான் நடித்து வெளிவந்த படங்களைப்பற்றி என்னிடமே அபிப்ராயம் கேட்டனர்:
இப்படி கேட்கலாமா ? - கூடாது: என்றாலும்
உள்ளத்தில் உதித்ததை உடனே சொன்னேன்!

கேமராவின் Fப்ளாஷ் மாதிரி...எண்ணத்தின் Fப்ளாஷ் ! இவை

1. பராசக்தி - பட உலகில் ஒரு மாற்றம். என் வாழ்க்கையிலும் தான்

2. பணம் - எனக்கு பணம் கொடுத்தது

3. பரதேசி (தெலுங்கு) - இப்படத்தின் மூலம் சகோதர மொழியான தெலுங்கிலும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் நடித்த முதல் தெலுங்கு படம்

4. பூங்கோதை - நான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட முதல் படம்

5. திரும்பி பார் - நடிப்பில் ஒரு நல்ல திருப்பம்

6. அன்பு - பத்மினி அவர்களும் நானும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தோம். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தை முதன்முறையாக தமிழ் திரையில் சித்தரிக்கப்பட்டது.

7. கண்கள் - தாகூரின் சிந்தனையில் நான்

8. பெம்புடு கொடுகு (தெலுங்கு) -
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த பெற்ற மனத்தின் கதைதான் இது. என்னை இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தால்தான் இக்கதை தெலுங்கில் தயாரிக்க அனுமதிப்பேன் என்று P.ஆ. பெருமாள் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் கூறினார். சாவித்திரியுடன் நான் நடித்த முதல் தெலுங்கு படம்

9. மனிதனும் மிருகமும் - கவிஞர் எஸ். டி. சுந்தரம் அவர்களின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நல்ல வாய்ப்பு

10. மனோகரா - நான் நடித்த முதல் மும்மொழி படம்

11. இல்லற ஜோதி - கவிஞரின் திரைக்கதையுள் வரும் அனார்கலி நாடகத்திற்கு கலைஞர் வசனம் எழுதிய படம்

12. அந்த நாள் - பாட்டு கூத்து இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ்படம், நடிப்பிலே பரிசு பெற்ற முதல் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

13. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - நான் நடித்த முதல் முழுநீள நகைச்சுவை சித்திரம்

14. மனோகரா - தெலுங்கு

15. மனோகரா - ஹிந்தி

16. துளி விஷம் - நான் துணிந்து வில்லனாக நடித்த முதல் படம். கே.ஆர்.ஆர் அவர்களும் நானும் சேர்ந்து நடித்த ஒரே படம்

17. கூண்டுக்கிளி - நானும் உயர்திரு எம்.ஜி.ஆர் அவர்களும் இணைந்து நடித்த படம்

18. தூக்கு தூக்கி - தலைமுறை தலைமுறையாக நடிக்கப்படும் தெருக்கூத்தையும் நல்லபடமாக எடுத்து வெற்றி காணமுடியும் என நிரூபித்த படம்.

19. எதிர்பாராதது - முதன்முதலில் ஆண்டிசெண்டிமெண்ட் படத்தை மக்கள் ஒப்புக்கொள்ள வழிகாட்டிய படம்

20. காவேரி - நான் தனியாக பரதநாட்டியம் ஆடிய படம்

21. முதல் தேதி -
வாழ்க்கையின் இன்பதுன்பங்களை தத்ரூபமாக பிரதிபலிக்கும் கதை அம்சம் கொண்ட இப்படம் இறுதியில் கதாநாயகன் கண்டதெல்லாம் கனவு என்று சித்தரிக்கப்பட்டதால் ரசிகர்கள் அக்கருத்தை ஜீரணிக்க முடியாமல் போய் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை

22. உலகம் பலவிதம் - இந்த கதையமைப்பே பலவிதம் தான்

23. மங்கையர் திலகம் - எனக்கு இணையாக பல படங்களில் நடித்து வந்த பத்மினி அவர்கள் எனக்கு அண்ணியாக நடித்த படம்

24. கள்வனின் காதலி - தலைசிறந்த நடிகையான திருமதி பானுமதியுடன் எப்படி இணைந்து நடிக்க போகிறேன் என்று பயந்து கொண்டே நடித்த படம்

25. கோடீஸ்வரன் - புராண படங்களையே அதிகமாக இயக்கிய டைரக்டர் சுந்தர்ராவ் நட்கர்னி துனிச்சலுடன் தயாரித்த சமூகப்படம்.

26. நான் பெற்ற செல்வம் - சகோதரர் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் இணைந்த முதற்படம்

27. நல்ல வீடு - இதுவும் நான் நடித்த படங்களில் ஒன்று

28. ராமாயணக்கதையை மூலமாகவைத்து தயாரித்த சமூக கதை இது

29. தெனாலிராமன் -
தெனாலிராமன் ஒரு ராஜ விதூஷகன் கோமாளி என்று நினைத்திருந்த மக்களின் மாற்றி அவன் ஒரு தலைசிறந்த ராஜதந்திரியும் கூட என்று விளங்க வைத்த படம்

30. பெண்ணின் பெருமை - ஜெமினி கணேசன் அவர்களுடன் முதன் முதலில் சேர்ந்து நடித்த படம்

31. ராஜாராணி - கலைஞரின் 16 பக்க காவிய வசனத்தை (சேரன் செங்குட்டுவன்) ஒரே ஷாட்டில் முழுமூச்சோடு பேசி நடித்த படம்

32. அமரதீபம் - "சிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பட வினியோக கம்பெனி ஆரம்பித்ததே இந்த படத்திலிருந்துதான்

33. வாழ்விலே ஒருநாள் - என்னை விட வயதான நடிகர் ஒருவருக்கு நான் தந்தையாக நடித்த படம்

34. ரங்கூன் ராதா - முதன்முதலில் அண்ணாவின் கற்பனை கதாபாத்திரத்தை தாங்கி நடிக்கும் வாய்ப்பை எனக்களித்த படம்

35. பராசக்தி - தெலுங்கு

36. மக்களைப் பெற்ற மகராசி - கொங்கு நாட்டு தமிழ் பேசிய செங்கோடன் மக்கள் மனதிலே தங்கி விட்டான்

37. வணங்காமுடி - இந்த படப்பிடிப்பின்போது 100 அடி உயரத்திலிருந்து வீழ்ந்திருப்பேன். ரசிகர்தம் நல்லாசியால் உயிர் பிழைத்தேன். சிறுகதையாகாமல் தொடர்கதையாகிவிட்டேன்

38. புதையல் - காதல் காட்சிகளிலே துணிந்து புதுமையை புகுத்திய படம்

39. மணமகன் தேவை - முழுக்க முழுக்க ஆங்கிலத்தை தழுவிப்படம் எடுத்தால் தமிழகம் அதை ஏற்றுக்கொள்ளாது என்று உணர்த்திய படம்

40. தங்க மலை ரகசியம் - நான் பெரும்பகுதி பேசாது நடித்த படம்

41. ராணிலலிதாங்கி - முதன்முதலாக சிவதாண்டவமாடிய படம்

42. அம்பிகாபதி -
எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் முன்பே நடித்திருக்கிறார். அது நன்றாக போனது. நான் நடித்து வெளியானபோது நன்றாக போகவில்லை. ஆனால் இப்போது நன்றாக போகிறது.

43. பாக்கியவதி - இந்த படத்தில்தான் திரு பிரசாத் அவர்கள் நான் எப்படி நடிக்க வேண்டும் என உணர்த்தி புது வழி காட்டினார்

44. பொம்மல பெள்ளி - தெலுங்கு

45. உத்தம புத்திரன் - இரட்டை வேடம் தாங்கிய முதல் படம். இப்போது என்னால் அப்படி நடிக்க முடியுமா?

46. பதிபக்தி - பீம்சிங் அவர்கள் என்னை இயக்கி வைத்த அவரது முதல் சொந்தப்படம்

47. சம்பூர்ண ராமாயணம் -
ராஜாஜி அவர்கள் "படத்தை பாராட்டுகிறேன் அதிலும் குறிப்பாக பரதனை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்" என்று நல்லாசி வழங்கியது நினைவிற்கு வருகிறது

48. பொம்மை கல்யாணம் - இரு மொழிகளிலும் நான் நடித்தேன்

49. அன்னையின் ஆணை - பழிவாங்கும் மனப்பான்மையை சித்தரித்து வெற்றி கண்ட படம்

50. சாரங்கதாரா - இதை தயாரித்திருக்கவே வேண்டாம்

HARISH2619
11th September 2009, 03:35 PM
DEAR MURALI SIR,
போஸ்டர் வாசகங்களை படிக்கும்போது புல்லரிக்கிறது.சென்னையிலேயே இப்படியென்றால்,போஸ்டர்களின் தலைநகர் என்று வர்ணிக்கப்படும் மதுரையில் கேட்கவா வேன்டும்.

dear bala sir(akhlabhi),
thanks for the articles you are providing which will be very useful for the younger generations to know about NT.

dear joe sir,

your new avatar..... :thumbsup:

rangan_08
11th September 2009, 07:18 PM
Murali sir, sorry I've missed that post about RER. I don't recollect much of this as I've seen it long back in Doordarshan. Needs a re-visit.

rangan_08
11th September 2009, 07:21 PM
Watch " Savale Samali ", NT's 150th film, tomorrow (Sep 12, Saturday) at 12.30 noon on Raj TV. One of my fav.

Great movie to enjoy NT's non-chalant yet powerful performance.

saradhaa_sn
12th September 2009, 02:44 PM
Murali sir, sorry I've missed that post about RER.
Mohan,

It is here....
http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12282&postdays=0&postorder=asc&start=705

Murali Srinivas
12th September 2009, 10:42 PM
பானர் விஷயத்தை நமது திரியில் பார்த்ததும் நேரில் சென்று புகைப்படம் எடுத்து அதை அனுப்பி வைத்த ராகவேந்தர் சார் அவர்களுக்கும் அதை வழக்கம் போல் இங்கே அப்லோட் செய்த ஜோவிற்கும் நன்றி.

அன்புடன்

groucho070
14th September 2009, 08:32 AM
Pava Mannippu @ Astro Vellithirai

Thoughts, since almost everyone here knows this brilliant film and it has been written about extensively here and elsewhere.


1. A film so revelant at any times because racial and religious tension has been prevailing ever since mankind started profiling themselves.

2. There has been "babies getting switched" plot line, usually just involving hero/heroine or/ her twins. But nothing has ever been as huge as this, involving three different kids ending up with different parents from different religious sects growing up as member of the respective religions they grew up into.

3. Superb clash of acting style. Cool NT (until the acid incident anyway), subdued SV Suppiah, hyperkinetic M.R. Radha, reactive T.S. Palaiyah, understated Gemini Ganesan, playful Savithiri, romantic & georgeous Devika, emotional Rajamma, and not to mention lifeless Nagaiyah.

4. Mention these names and fans (of old films anyway) know which film they belong to: Rahim, James & the notorious Alavandaan.

5. My favourite line. After confrontation with MRR, the dismissive NT tells the shocked Devika, "Naan enammo avar oru periyavar, panbullavar-nu nenechen. Taan athellam illanu nirubichuttu poyitaaru". How often we saw these kind of individuals who continuously urging us to not have any good feelings about them anymore no matter how kind and open minded we try to be?

6. It's MRR's show all the way. In fact, I believe he has the most screentime in the film. What a brilliant performer he was. Who can forget his "Vaayaa James-uu". The voice, as we learned from his son, Radha Ravi, was performance. The ups and downs, the growl and the whimpers, the timing are all pure performance. And how much he etched his performance in this film. Here this line tells us who he is. It's after he tells the sickly mother of Savithiri's to forget Gemini, as GG has been engaged to Devika:

MRR (after telling her off): Nee udamba parthukkoo...paavama irukku enakkum...poyee tharma-Aspitirikku paduttukoo... :lol: :twisted:

abkhlabhi
14th September 2009, 05:04 PM
http://movies.rediff.com/slide-show/2009/sep/14/slide-show-1-ram-kumar-on-lata-mangeshkar.htm

Inerview of Ram kumar in Rediff today (14/9/2009)

Beautiful photo (Black and White )of OUR Stylish NT with Lata during Thangapadakkam play

[html:206ceea6a7]
http://im.rediff.com/movies/2009/sep/14look2.jpg[/html:206ceea6a7]

abkhlabhi
14th September 2009, 05:06 PM
See our NT smile and cigar holding in left hand. Amazing.

Plum
14th September 2009, 06:07 PM
grouch, good write up on Paava Mannippu, one of my favourite NT movies.

Hindi-la 1970's la idhe concept(3 babies separated, growing in 3 separate religions) use paNNittu, Manmohan Desai 's extra-ordinary message of secularism-nuttu innikku varaikkum oru Indian cinema-la munnOdi-nu pesikittu thiriyarainga.

Murali Srinivas
14th September 2009, 11:10 PM
Rakesh, thanks for the small yet compact write up. You were able to capture the mood of the film.

Bala, good that you decided to be active here and see how you are able to bring those links here. That photo (or the pose?) was great.

அண்மை காலங்களில் நடிகர் திலகத்தின் புகழ் பல தளங்களிலும் சிறப்புற பேசப்படுவதை நாம் இந்த திரியில் பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். நடிகர் திலகத்தைப் பற்றிய புத்தங்கங்கள் அதிகளவில் இப்போது வெளி வருவது பற்றியும் பேசியிருக்கிறோம். அந்த வகையில் புதுமையான கோணத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாகிறது. நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் சம்பந்தியுமான முத்து மாணிக்கம் இதை எழுதியிருக்கிறார். இவரை வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம் என்று சொல்லுவார்கள். நடிகர் திலகம் ஒரு காலத்தில் வேட்டைக்கு செல்லும் போதெல்லாம் இவர் தான் கூட செல்வார். பிரபுராம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக விடிவெள்ளி படத்தையும் தயாரித்தார். இவர் அந்த வேட்டை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்திற்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார் - "வேட்டைக்கு வந்த சிங்கம்". வரும் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் இது வெளியிடப்படுகிறது.

அன்புடன்

joe
15th September 2009, 06:53 AM
. இவர் அந்த வேட்டை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்திற்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார் - "வேட்டைக்கு வந்த சிங்கம்". வரும் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் இது வெளியிடப்படுகிறது.

அன்புடன்
:D

Thalafanz
15th September 2009, 07:01 AM
. இவர் அந்த வேட்டை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்திற்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார் - "வேட்டைக்கு வந்த சிங்கம்". வரும் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் இது வெளியிடப்படுகிறது.

அன்புடன்
:D

ரசிகர்களுக்கு இதுவரை தெரிய வராத நடிகர் திலகத்தைப் பற்றிய சுய சரிதை/வாழ்க்கைச் சுவடுகள் இந்தப் புத்தகத்தில் இருக்கும் என நம்புகிறேன். :)

RAGHAVENDRA
15th September 2009, 09:09 AM
DEAR FRIENDS,
GET READY TO WELCOME PAMMAL SWAMINATHAN, TORCH BEARER OF NT FANS, EDITOR OF VASANTHA MALIGAI, STATISTICIAN OF NT, AND WHAT NOT ...
THREE CHEERS TO HIM .. DEAR PAMMALAR ... COME AND ENRICH US WITH YOUR WEALTH OF INFO

Raghavendran

groucho070
15th September 2009, 09:35 AM
புத்தகத்திற்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார் - "வேட்டைக்கு வந்த சிங்கம்". As we say here in Malaysia, "fuyooooh" :D Thanks for the news, sir.

abkhlabhi, thanks for the link. In sync with my Pava Mannippu scribblings.

Plum, which film is that, the Hindi version I mean?

joe
15th September 2009, 10:51 AM
திரு .பம்மல் சுவாமிநாதன் அவர்களை நடிகர் திலகத்தின் திரிக்கு பெருமையுடன் வரவேற்கிறோம். :bluejump:

pammalar
15th September 2009, 11:07 AM
Respected Hubbers,

I am a regular reader of this forum right from its inception. Now I am extremely happy that I am also writing here. I personally thank Raghavendran Sir & Murali Srinivas Sir for kindling & invoking my interests to write in this forum.

Warm Wishes,
Pammal R. Swaminathan

NOV
15th September 2009, 12:11 PM
Welcome Pammalar saar! :)

HARISH2619
15th September 2009, 03:10 PM
திரு பம்மலார் அவர்களே,
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களோடு ஐக்கியமாக வந்திருக்கும் தங்களை மகிழ்ச்சி ததும்ப,கண்கள் பனிக்க,உளமார வரவேற்கிறோம்.

joe
15th September 2009, 03:31 PM
பம்மல் சார்,
ஒவ்வொரு தடவை நீங்கள் இங்கே செய்தியை உள்ளிடும் போது 'New topic' -பதில் 'postreply' -ஐ தேர்ந்தெடுக்கவும் ..இல்லையென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புது திரியாக வெளிவரும்.

ஏற்கனவே உள்ள நடிகர் திலகம் திரியில் 'postreply' மூலமாக உங்கள் புதிய செய்திகளை உள்ளிடும் படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

pammalar
15th September 2009, 03:48 PM
எம்மை வரவேற்ற அனைவருக்கும் முதற்கண் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திரியின் தொடக்கம் முதல் இன்று வரை பற்பல அழகிய பதிவுகளை புதுப்பொலிவோடும், மிகுந்த நேர்த்தியோடும் வழங்கி வரும் இத்திரியைச் சார்ந்த அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
15th September 2009, 04:02 PM
Thanks to Mr. Joe & Mr. Thirumaran for guiding me rightly to click the POST REPLY button.

Regards,
Pammal R.Swaminathan.

saradhaa_sn
15th September 2009, 04:27 PM
பம்மலார் திரு. சுவாமிநாதன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்..

உங்களது கைவண்ணத்தில் இத்திரி மேலும் மெருகேறப்போகிறது என்பதும், உங்களது பங்களிப்பின்மூலம் நடிகர்திலகத்தைப்பற்றி எங்களுக்கு மேலும் பல அரிய விஷயங்கள் கிடைக்கப்போகிறது என்பதும் திண்ணம்.

ஆவலுடன் காத்திருக்கிறோம்...

pammalar
15th September 2009, 04:46 PM
நமது நடிகர் திலகம் அவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆறு கூறுகளாக (பிரிவுகளாக) மேலோட்டமாக பட்டியலிட்டு பிரிக்கலாம். அவையாவன :

# நாடக வாழ்க்கை

# திரைப்பட வாழ்க்கை

# அரசியல் வாழ்க்கை (கட்சி சார்ந்தது)

# பொது வாழ்க்கை (சமுதாயம் சார்ந்தது)

# குடும்ப வாழ்க்கை

# ஆன்மீக வாழ்க்கை

இத்தனை பிரிவுகளிலும், நிரைந்த தகவல்களை பற்பல புத்தகங்கள் எழுதுமளவுக்குப் பெற்றுத் திகழும் ஒரே பிரமுகர் நமது நடிகர் திலகம் ஒருவர் மட்டும் தான்.

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

saradhaa_sn
15th September 2009, 05:14 PM
Quote by Hamid
// Dear Pammalar...
Welcome to HUB.. Please share your experience with NT.. You are the editor of Vasantha Maaligai? great....My fav film of all times Would love to hear from you in the coming days.. //

டியர் Hamid,

பம்மலாரைப்பற்றி தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்...

அவர் 'வசந்தமாளிகை' இதழின் ஆசிரியராக இருந்தவர்.

உங்கள் போஸ்ட்டில், அவர் வசந்தமாளிகை திரைப்படத்தின் 'படத்தொகுப்பாளர்' என்பதாகத் தொனிக்கிறது.

hamid
15th September 2009, 05:27 PM
Dear Saradha,

Thanks for the information. Yes, I mistook him to be the editor of VM film.. :oops:

pammalar
15th September 2009, 08:47 PM
இன்று (15.9.2009) பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம்.

மேலும் அவரது நூற்றாண்டு இன்று நிறைவடைகின்றது.

இதையொட்டி கோலாகலமான விழாக்கள் கொண்டாடப்பட்டு

வருகின்றன. இந்த நேரத்தில் நமது நடிகர் திலகத்திற்கும், அவரை

முதன்முதலில் உலகப்பெருநடிகர் என்று புகழ்ந்துரைத்த

பேரறிஞருக்கும் இடையே இருந்த ஆத்மார்த்தமான நட்புணர்வை,

நேசமிகு நல்லுறவை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது

சாலப்பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

joe
15th September 2009, 09:38 PM
இந்த நேரத்தில் நமது நடிகர் திலகத்திற்கும், அவரை

முதன்முதலில் உலகப்பெருநடிகர் என்று புகழ்ந்துரைத்த

பேரறிஞருக்கும் இடையே இருந்த ஆத்மார்த்தமான நட்புணர்வை,

நேசமிகு நல்லுறவை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது

சாலப்பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

பகிர்ந்து கொள்ளுங்கள் ..மிக்க ஆவலாயிருக்கிறோம் :D

Murali Srinivas
15th September 2009, 11:21 PM
இத்தனை நாள் இந்த திரியின் வாசகராக மட்டுமே இருந்த சுவாமிநாதன் இன்று முதல் பங்களிப்பாளராகவும் மாறுவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

நடிகர் திலகத்தைப் பற்றிய புத்தங்கங்களின் வரிசையில் மேலும் ஒரு தகவல். பொம்மை மாத இதழ் முன்பு வெளியாகி கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் 1977-ல் தொடங்கி கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்களுக்கு நடிகர் திலகம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் தொகுப்பை ஒரு புத்தக வடிவில் டால்டன் பப்ளிகேஷன்ஸ் [சந்த மாமா, அம்புலி மாமா மற்றும் பொம்மை வெளியிட்டாளர்கள்] வெளியிடுகிறார்கள். இது தவிர பொம்மை இதழில் கதாநாயகனின் கதை என்று நடிகர் திலகம் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அதுவும் புத்தக வடிவம் பெறுகிறது. அனேகமாக அக்டோபர் மாதமே இந்த புத்தகங்கள் வெளியாகலாம்.

அன்புடன்

pammalar
16th September 2009, 02:06 AM
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. பராசக்தி தொடங்கி தமது மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்த உயர்ந்த மனிதன் வரை பல திரைப்படங்களை கண்டு களித்து நடிகர்திலகத்தின் நடிப்பை வெகுவாக ரசித்து மகிழ்ந்தவர். இத்துணையும் அவரது ஒய்வற்ற, அயராத அரசியல் பணிகளுக்கிடையே!

"பராசக்தி திரைப்படத்தை கணேசனைக் கதாநாயகனாகக் கொண்டு தான் தயாரிப்பேன்" என்று உறுதியோடு நின்ற நடிகர் திலகத்தின் இதயதெய்வம் திரு. பெருமாள் அவர்களுக்கு அன்று உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அண்ணா. மேலும், தமது உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நடிகர் திலகத்தின் 125வது திரைப்படமான உயர்ந்த மனிதன் திரைப்பட விழாவிற்கு 15.12.1968 அன்று தமிழக முதல்வராக வருகை புரிந்து நமது நடிகர்திலகத்தை பாசத்தோடு பாராட்டி மகிழ்ந்தவர் அண்ணா. இந்த விழா சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்கள் தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2009, 11:53 AM
லேட்டஸ்ட் (20.9.2009) ராணி வார இதழின் "அல்லி பதில்கள்" பகுதியில் வெளியாகியுள்ள ஒரு கேள்வி-பதில் :

சிவாஜி என்றதும் நம் நினைவுக்கு வருபவர் மராட்டிய மன்னரா? நம் நடிகர் திலகமா? (ஆ.கோ. தேவராசன், சிந்தலப்பட்டடை)

வீரம் என்றால் அந்த சிவாஜி! நவரசம் என்றால் இந்த சிவாஜி!

என்னே அருமையான பதில்! நவரசத்தினுள் வீரமும் அடக்கம் தானே!

இந்தக் கேள்வி-பதிலின் அருகாமையில் சிறிய அளவுகளில் சத்ரபதி சிவாஜி புகைப்படமும், நமது நடிகர் திலகத்தின் பக்த துக்காராம் சிவாஜி கெட்டப் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளன. சத்ரபதி படம் அசல் என்றால், சிவாஜி வேட புகைப்படத்தில் நம் நடிகர் திலகம் அசலை விஞ்சிய அசலாக காட்சியளிக்கிறார்.

விரைவில் வருகிறது சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் அஜீத் நடிக்கும் அசல் !!!

அன்புடன்,
பம்மலார்.

groucho070
16th September 2009, 11:57 AM
:D Good one, Pammalar-sar. Now, you have captured the attention of Ajith fans. :)

HARISH2619
16th September 2009, 02:48 PM
திரு பம்மல் சார்,
தங்களின் வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.தங்களின் எழுத்து நடையும் ஏறக்க்குறைய இந்த திரியின் நாயகன் திரு.முரளி சாரின் நடையைப்போலவே உள்ளது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை த்ந்துள்ளது.தொடர்ந்து கலக்குங்கள்.

மேலும் நீங்கள் வசந்தமாளிகை இதழை நடத்திய போது உங்களோடு இருந்தவர்களை(குறிப்பாக நாஞ்சில் இன்பா போன்றவர்களை)இந்த திரிக்கு கொண்டு வரவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

sankara1970
16th September 2009, 03:03 PM
Thanks to Keelai Naadaan



அந்த விதமான பாச உணர்வுகள் இப்போதைய படங்களில் இல்லை. இது சமூகத்துக்கு நல்லதல்ல.

சிவாஜியின் படங்களில் பல பாசத்தை சொல்லும் கலை பொக்கிஷங்கள் என சொல்லலாம்.
__________________

கீழை நாடான்

I fully agree with you-the absence of such Sivaji's films will ruin the current generation. It is a pity.

sankara1970
16th September 2009, 03:17 PM
http://movies.rediff.com/slide-show/2009/sep/14/slide-show-1-ram-kumar-on-lata-mangeshkar.htm

Inerview of Ram kumar in Rediff today (14/9/2009)

Beautiful photo (Black and White )of OUR Stylish NT with Lata during Thangapadakkam play



http://im.rediff.com/movies/2009/sep/14look2.jpg

I haven't seen this photo earlier. Thanks

saradhaa_sn
16th September 2009, 04:24 PM
சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...

ஒரு வாசகரின் கேள்வி: "சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"

திரு. ஜெய்சங்கர் பதில்: "தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".

hamid
16th September 2009, 04:45 PM
Nice reply from JaiShankar :clap:

saradhaa_sn
16th September 2009, 04:58 PM
அண்மை காலங்களில் நடிகர் திலகத்தின் புகழ் பல தளங்களிலும் சிறப்புற பேசப்படுவதை நாம் இந்த திரியில் பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். நடிகர் திலகத்தைப் பற்றிய புத்தங்கங்கள் அதிகளவில் இப்போது வெளி வருவது பற்றியும் பேசியிருக்கிறோம். அந்த வகையில் புதுமையான கோணத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாகிறது. நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் சம்பந்தியுமான முத்து மாணிக்கம் இதை எழுதியிருக்கிறார். இவரை வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம் என்று சொல்லுவார்கள். நடிகர் திலகம் ஒரு காலத்தில் வேட்டைக்கு செல்லும் போதெல்லாம் இவர் தான் கூட செல்வார். பிரபுராம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக விடிவெள்ளி படத்தையும் தயாரித்தார். இவர் அந்த வேட்டை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகத்திற்கு பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார் - "வேட்டைக்கு வந்த சிங்கம்". வரும் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் இது வெளியிடப்படுகிறது.
டியர் முரளி,

1980-களில் வேட்டைக்காரன்புதூர் திரு. முத்துமாணிக்கம், நடிகர்திலகத்துடன் சேர்ந்து வேட்டைக்குச்சென்ற தன் அனுபவங்களை ஒரு வார இதழில் (மணியனின் 'இதயம்பேசுகிறது' வார இதழ் என்பதாக நினைவு) 'வனத்தில் சில வசந்தங்கள்' என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்துள்ளார். அவற்றில் சில இதழ்களைப் முன்னொருமுறை படிக்க நேர்ந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும், நடிகர்திலகத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

இப்போது வெளிவரப்போகும் 'வேட்டைக்கு வந்த சிங்கம்' நூல் அனேகமாக அந்தக்கட்டுரைத்தொடரின் தொகுப்பாக இருக்கக்கூடும். முழு புத்தகத்தையும் படிக்கும்போது, படிப்பவர் அனைவருக்கும் மிகவும் 'த்ரில்லான' அனுபவம் கிடைக்கும் என்பது நிச்சயம்.

abkhlabhi
16th September 2009, 05:50 PM
நடிகர் திலகம் .....ஒரு அஞ்சலி ... BY MOHAN RAM


இன்று தான் அவர் நம்மை விட்டு பிரிந்த நாள் . 21st ஜூலை 2001.



ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது . ஒரு முறை அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன் ..பல விசயங்களை அலசிவிட்டு நடிப்புக்கு வந்தோம் .அவருக்கு அப்பொழுது உடல் நலம் சற்று குறைவு . இருந்தாலும் நடித்துக்கொண்டு இருந்தார் . நான் அவரிடம் ' எப்பொழுது ரிடயர் ஆவிர்கள் என்று கேட்டேன் ....ஏன் ? நான் நடிக்கறது உனக்கு புடிக்கலையா இல்ல உன் TV நடிப்பு க்கு நான் போட்டியா ? என்றார் ....சிருத்துக்கொண்டே ..



இல்ல அப்பா உங்க உடம்புக்கு ஏன் ஸ்ட்ரைன் தரீங்க என்டறேன் ....பதில் வரவில்லை ..மீண்டும் கேட்டேன் ...சற்று யோசித்து சொன்னார் ...என்னக்கி கணேசன் செட்டுக்கு லேட்ஆ வரானோ அன்னக்கி ரிடயர் ஆகிவிடுவாண்டா என்றார் ...அந்த அபார மனிதனின் தொழில் பக்தியை பற்றி யோசித்தேன் . காலத்தை மற்றவர் நேரத்தை அவர் மதித்ததை பற்றி யோசித்தேன் ...எனக்கு பேச்சு வரவில்லை ....சற்று நேரம் அவர் என்னை பார்த்தார் , யோசித்து விட்டு திரும்பினார் ..இரண்டு அடி எடுத்து ,திரும்பி என்னை பார்த்து சொன்னார் ....இல்லடா மோகன் அன்னக்கி கணேசன் செத்துடுவாண்டா .... செத்துடுவான் .....



ஒரு வேலை இன்று ஏழு ஆண்டுகளுக்கு முன் அவர் செட்டுக்கு லேட்ஆ போனாரோ ....... இல்லை, இல்லை ரொம்ப சீக்ரமாகவே போய்விட்டார் .....

(CRIED WHEN I READ THE ABOVE PARA - akhlabhi)


நடிப்புக்கு மற்றும் அல்ல ..தொழில் பக்திக்கும் இலக்கணம் வகுத்தவரை இன்றும் என்றும் மறவாதிருக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

Thansk Mohan Ram

pammalar
16th September 2009, 08:35 PM
நன்றி திரு. ஹரீஷ். தாங்கள் கூறியவற்றை காலப்போக்கில் கணேசரின் அருளோடு நிறைவேற்றுவோம்.

சகோதரி சாரதா அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் ! தாங்கள் வெளியிட்டுள்ள பொம்மை இதழின் தகவலும் 24 காரட் தங்கத்துக்கு நிகரானதே !!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
16th September 2009, 10:31 PM
Dear Pammal R. Srinivasan,
A dashing opener has emerged in you in our thread. Your positings evoke much interest in each one of us. Thank you for your interesting posts and expecting more and more info.

Dear Balakrishnan,
Your sincere effort in reproducing the write ups in various pages on NT have taken us to our good old days when we had the privilege of working for him. Each and every colleague of NT is uniform in his/her praise of NT - which eventually proves that he has only one face and it is the same face to show everywhere - which means he is one person does not change colors to rooms. And we are really proud to read them. Keep posting them more and more.

Raghavendran

Murali Srinivas
16th September 2009, 10:49 PM
[tscii:02c8730b4f]சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை.

இதை எழுதியிருப்பவர் சித்ரா லட்சுமணன்

உள்ளதைச் சொல்கிறேன்: ஆற்றல் மிக்க விழிகள்!

""சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார். "பாசமலர்' படத்தில் "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...' பாடல் வரிகள் துவங்குவதற்கு முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் இலேசாக நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.


"பாவமன்னிப்பு' படத்தில் எம்.வி.ராதம்மாதான் தன்னைப் பெற்ற அன்னை என்று அரியாத சிவாஜி, ஒரு காட்சியில் நன்றிப் பெருக்கால் "அம்மா, அம்மா, அம்மா' என்று பாசத்தை, நன்றியை கண்களில் தேக்கி அழுது கொண்டே சிரிப்பார். புத்தரின் சாந்தத்தையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். போதையுடன் தள்ளாடும் குடிகாரனையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். அப்படி ஒரு ஆற்றல் மிக்க விழிகள் அவை. அழகான சிறிய உதடுகள் அவருக்கு. சிரித்தால் கன்னங்களில் எலுமிச்சம் பழம் போல கன்னச் கதுப்புகள், சிரிப்புக்கு அழகூட்டும். இடது பக்கமுள்ள சிங்கப்பல், கவர்ச்சியைக் கூட்டும்.


தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை. தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50 சதவிகித மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார் சிவாஜி.


"கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார். அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.


"பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.


சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த தலைப்பாகை, தாடையிலிருந்து நீண்ட தாடி, சிக்கென்ற ராஜ உடை, நீண்ட வாள் இவற்றுடன் நீண்ட வசனத்தை, அங்க அசைவுகளுடன் பேசி, சிங்க நடையோடு அவர் நடித்ததை இன்னொருவர் முயன்று பார்க்கட்டும். சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர புலி போல் ஒரு நடை நடந்து வருவார் "மனோகரா' படத்தில்! மரமேறும் சாமுண்டி கிராமணியாய் "காவல் தெய்வத்தில்' கைத்தட்டல் பெறவே ஒரு நடை நடப்பார். "போனால் போகட்டும் போடா' பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார். "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' பாடலுக்கு ஒரு வித்தியாசமான "வாக்கிங் ஸ்டிக்' ஊன்றிய நடை. அப்பர் சுவாமிகளாக "திருவருட் செல்வரில்' முதிர்ந்த பெரியவர் நடை.


"வெற்றிவேல், வீரவேல், சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்' என்ற "கந்தன் கருணை' பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை. அவருடைய நினைவாற்றல், கிரஹிக்கும் சக்தி அபாரமானது. காட்சிக்கான வசனங்களை மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்? நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்ய மாட்டார், பட்டையைக் கழற்றி விடுவார்.


"உயர்ந்த மனிதன்' உச்சகட்ட காட்சியில் திருட்டுப் பழி சுமத்தப்பட்ட தன்னை பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய் தெரிக்கும் அளவிற்கு விளாசித் தள்ளி விட்டார். அவரைக் கட்டுப்படுத்த செüகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டனர். இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து கலங்காதவர் இருக்க முடியாது. ஜெமினியின் "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு காட்சியில் பத்மினியின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி அடுத்த படப்பிடிப்புத் தளத்தில் விழுந்து விட்டது. ஷாட் முடிந்ததும் பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார். போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருக்கியவாறு இருந்தவரைப் பார்த்து பதறிப்போய், ""என்னம்மா'' என்று கேட்க, ""ஒன்றுமில்லை வலி தாங்க முடியவில்லை, முழுசா அழுதிட்டு வந்திடறேன், ஐந்து நிமிடம் பொறுத்துக்கங்க'' என்றாராம் பத்மினி.


உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. "டென் கமாண்ட்மெண்ட்ஸ்', "பென்ஹர்', "லாரன்ஸ் ஆஃப் அரேபியா', "ஓமர் முக்தார்', "சாந்தி' போன்ற எந்தப் படத்து ஹீரோவும் மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படம் முடிந்த பின்னரே அடுத்த படம், வேடம் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் சிவாஜி காலையில் ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக "சொர்க்கம்' படத்தில் நடிப்பார். ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.


""அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த, அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிருஷ்டம். தமிழ் நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷடம்'' என்று "இது ராஜபாட்டை அல்ல' என்ற தனது நூலில் சிவாஜிக்கு புகழாராம் சூட்டியுள்ள சிவகுமார். சிவாஜியோடு இணைந்து நடித்த "ராஜராஜ சோழன்' 1973-ல் வெளியானது.


தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் சித்திரமான "ராஜ ராஜ சோழன்' படத்தில் நடித்த அனுபவத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் சிவாஜி.


""நான் ஒரு சோழன். தஞ்சாவூர்க்காரன். ஆகையால் நான் ராஜ ராஜ சோழனாக நடித்தது எனக்கு மிகப்பெருமை. ஏனென்றால் என்னுடைய தாத்தா பாட்டன் ரோலை நானே நடித்தேன். அந்தப் படத்தை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் திரு. உமாபதி எடுத்தார். அந்தப் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார். சரித்திர நாடகம், சரித்திரக் கதைகள் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் செலவு செய்து எடுக்க வேண்டும். பிரம்மாண்டமான யுத்தக் காட்சிகளெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்படியெல்லாம் காண்பித்தால்தான் "ராஜ ராஜ சோழன்' நன்றாக இருக்கும்.


ஒரு சின்ன பாளையரக்காரனான கட்டபொம்மனையே பெரிய சக்ரவர்த்திபோல் காண்பித்தோம் அல்லவா? அப்படியிருக்க சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனை எவ்வளவு சிறப்பாக காண்பிக்க வேண்டும்? அதையெல்லாம் அந்தப் படத்தில் சரியாகக் காண்பிக்கவில்லை. "ராஜ ராஜ சோழன்' படத்தை ஒரு குடும்ப நாடகம் போலதான் எடுத்திருந்தார்கள். நாடகம் போடும்போது அது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு இந்த பாணி ஒத்து வருமா? இந்தப் பக்கம் மகன், அந்தப் பக்கம் அக்கா, இன்னொரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மருமகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதால் படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை'' என்று "ராஜ ராஜ சோழன்' படம் குறித்து விமர்சித்துள்ளார் சிவாஜி.


இதுதான் அவரது தனி குணம். தான் நடித்து விட்டோம் என்பதற்காக தனது படங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற போக்கை சிவாஜி என்றுமே கடைப் பிடித்ததில்லை.


மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தனது படங்கள் பற்றி அவரே விமர்சித்து விடுவார். தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்திருந்ததால்தான் தனது திரையுலகப் பயணத்தில் எந்தத் தடுமாற்றமும் இன்றி அவரால் வெற்றி நடை போட முடிந்தது.

அன்புடன்

PS: இதை "சுட்டிக்" காட்டிய மணிசேகரன் சார் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.

[/tscii:02c8730b4f]

pammalar
17th September 2009, 01:39 AM
இந்த வார (23.9.2009) தேவி இதழில் "பெரியார்" புகழ் நடிகர் சத்யராஜ் :

"நடிகர் திலகம் சிவாஜி சாரின் லட்சியம் தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்பது தான். அவர் அந்த வேடம் ஏற்று நடித்திருந்தால் எனக்கு பெரியாராக நடிக்கின்ற வாய்ப்பே கிடைத்திருக்காது. என்னையும் அன்னை இல்லத்தின் ஒரு பிள்ளையாக அவர் நினைத்திருந்ததினால் எனக்காக பெரியார் வேடத்தை விட்டுக் கொடுத்து விட்டு போய் இருக்கிறார்."

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பக்தராக விளங்கும் திரு. சத்யராஜ் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவ்வப்போது மீடியாக்களில் பெருமையோடு கூறி வருவதற்கு அவருக்கு நமது நயமிகு நன்றி ! (என்ன இருந்தாலும் சத்யராஜ் அவர்கள் வசந்தமாளிகை திரைப்படத்தை முதல் வெளியீட்டில் 20 முறை பார்த்தவராயிற்றே)

திரு. சத்யராஜ் அவர்களுக்கு,

உங்களின் பெரியார் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தமைக்கு எங்களின் பாங்கான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !!

ஜல்லிக்கட்டும், புதியவானமும் உங்களுக்கு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கிய அனுபவத்தை கொடுத்திருக்கக் கூடும். ஆகவே பெரியாருக்கு விருது கிடைத்திருப்பதில் வியப்பில்லை. எல்லாம் கணேச பிரசாதம் ! அதாவது, சிவாஜி கணேச பிரசாதம் !!

செப்டம்பர் 17 - பகுத்தறிவுப் பகலவன் உதயமான நாள்!!!

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
17th September 2009, 01:16 PM
[tscii:0f0169517c]Another survey conducted by Loyola college in 2008 gave 1st position to MGR 21.3% and second position to Sivaji with 18.9%, way ahead of the present day Superstars Vijay and Rajini Kanth. (MGR's higher rating in this survey can be attributed to the fact that the referred survey had few questions related to politics. MT being the most popular politician and ex-chief minister of T N is more popular politically than NT) .
Eventhough 2 gerations have passed away after Sivaji & MGR (namely Rajini, Kamal era & Vijay, Ajith..era) Sivaji Ganesan & MGR continue to top the popularity rankings.

Few other surveys conducted in a scientific manner have thrown up similar results reaffirming Sivaji Ganesan’s supremacy.

[/tscii:0f0169517c]

abkhlabhi
17th September 2009, 01:21 PM
During a visit to the U.S. in June 1995, Sivaji Ganesan found himself in Columbus, Ohio. Mayor Greg Lashutka named him honorary citizen of Columbus at a special dinner.

So far I have not known this. let me clarify

abkhlabhi
17th September 2009, 02:05 PM
http://www.flickr.com/photos/roopaspeedy/3277674335/

saradhaa_sn
17th September 2009, 04:58 PM
[tscii]Another survey conducted by Loyola college in 2008 gave 1st position to MGR 21.3% and second position to Sivaji with 18.9%, way ahead of the present day Superstars Vijay and Rajini Kanth. (MGR's higher rating in this survey can be attributed to the fact that the referred survey had few questions related to politics. MT being the most popular politician and ex-chief minister of T N is more popular politically than NT) .
Eventhough 2 gerations have passed away after Sivaji & MGR (namely Rajini, Kamal era & Vijay, Ajith..era) Sivaji Ganesan & MGR continue to top the popularity rankings.
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அவர்கள் இருவரும் மறைந்து பல ஆண்டுகளுக்குப்பின் எடுக்கப்பட்ட சர்வே இது. அப்படியிருந்தும் மக்கள் திலகமும், நடிகர்திலகமும் இன்னும் முதலிரண்டு இடங்களில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மக்கள் மனதில் இன்னும் ஆட்சி செய்கின்றனர் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?.

இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்த போதிலும் அவர்கள் விட்டுச்சென்ற இடங்கள் யாராலும் இட்டு நிரப்பப்பட முடியாத வெற்றிடங்களாகத்தான் இருக்கும்.

saradhaa_sn
17th September 2009, 05:44 PM
சத்யராஜ் பற்றி பம்மலார் சொன்னதும், சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...

'இசையருவி' விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை தசாவதாரம் படத்துக்காக டாக்டர் கமல்ஜிக்கு வழங்க சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையேறிய சத்யராஜ் பேசியபோது:

"கமல் அவர்களுக்கு விருது வழங்க நான் வந்திருப்பது எவ்வளவு அபத்தமானது என்பது உங்களுக்கே தெரியும். ஒருவருக்கு விருது வழங்குவதென்றால் அவரை விட தகுதியில் திறமையில் உயர்ந்த ஒருவர்தான் வழங்க முடியும், வழங்கவேண்டும். அந்த வகையில் கமல் அவர்களுக்கு விருது வழங்க தகுதியான ஒரே கலைஞர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். நான் ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களில் நடித்ததன் மூலம் அந்நிறுவனத்தில் நானும் ஒரு தொழிலாளி. சிலசமயங்களில், பாலங்களைக்கட்டி திறந்து வைக்கும்போது பெரிய வி.ஐ.பிக்கள் திறப்பதற்கு பதிலாக, அந்த பாலத்தைக்கட்டிய கொத்தனாரைக் கொண்டும் திறப்பது வழக்கம். அந்த வகையில், கமல் நிறுவனத்தின் தொழிலாளிகளில் ஒருவராக அவருக்கு இந்த விருதை வழங்குகிறேன்".

பொருத்தமான நேரத்தில் நடிகர்திலகத்தைப் பொருத்தமாக நினைவுகூர்ந்த சத்யராஜ், நம் நன்றிக்குரியவர்.

saradhaa_sn
17th September 2009, 07:31 PM
பிரபல நாடக / திரைப்பட நடிகர் ஏ.ஆர்.எஸ். இந்தவாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்று தன் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்போது நடிகர் திலகத்தைப்பற்றி பல விஷயங்களைச்சொன்னார். அதில் ஒன்று.....

"ஒருமுறை ஒரு படப்பிடிப்பின் சாப்பாட்டு நேரம். சிவாஜியுடன் நானும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பரிமாறியவர் வெங்காயம் போட வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 'ஏன் வெங்காயம் சாப்பிட மாட்டீங்களா'ன்னு கேட்டேன். 'சாப்பிடுவேன், ஆனா இப்போ வேண்டாம். காரணம் அப்புறம் சொல்றேன்' என்றார்.

சாப்பாட்டுக்குப்பின் படமாக்கப்பட்ட காட்சியில், சவுகார் இறந்ததுபோய்க்கிடக்க அவரருகில் நடிகர்திலகம் அமர்ந்து குளோசப்பில் வசனம் பேசும் காட்சி. நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தவர் 'ஏன் வெங்காயம் வேண்டாம்னு சொன்னீங்க'ன்னு கேட்டீல்ல. இப்போ ஷூட் பண்ணின சீன் பார்த்தியா. சௌகார் மூச்சைப்பிடித்துக்கொண்டு படுத்திருக்க, அவங்க முகத்தருகே நான் வசனம் பேசும் காட்சி. நான் வெங்காயம் சாப்பிட்டு அந்த வாடையோடு பேசினால், அவங்களாலே மூச்சடக்கிக்கொண்டு படுத்திருக்க முடியுமா?' என்று கேட்டார். நான் ஆச்சரியப்பட்டேன்.

ஏதோ வருவதும் வசனம் பேசுவதும் போவதும்தான் நடிப்புன்னு நினைச்சிக்கிட்டிருந்த எனக்கு, அவர் சிரத்தையோடு அடுத்து வரப்போகும் காட்சி, அதில் தன்னுடன் நடிப்பவருக்கான சிரமம் என்று அவர் ஒவ்வொரு விஷயத்துலயும் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்ட நான், இவரிடம் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கோ என்று அதிசயித்தேன்".

pammalar
17th September 2009, 11:25 PM
சகோதரி சாரதா அவர்களின் சத்யராஜ் செய்தியும், ஏ.ஆர்.எஸ். அவர்கள் கூறியதாக வெளியிட்டுள்ள "பட்டாகத்தி பைரவன்" படப்பிடிப்பு செய்தியும் அருமையிலும் அருமை !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
17th September 2009, 11:45 PM
Dear friends,
Today I came across another touching story in NT's life. The identity of the person concerned is not necessary. But he is the third son of a renowned person and mentally retarded. This narration dates back to 70s. He used to get nervous weakness and would suffer from partial stroke often and become unrestive at times. His parents tried hard to bring him back to normalcy and kept him with them. And believe it or not, there were instances that he was his normal self - only when he watched the movies of NT - He was a maniac of NT - His family had close affinity with NT and the boy was very of fond of NT and at times would request him to do something for him. Once he asked NT to wear a particular tye of his choice and act in a scene. And NT the human being, obliged immediately. It is not clear if the boy is staying in Chennai now.
The tye in question appeared in ....
the song Devane Ennai Paarungal song ....

Raghavendran

pammalar
18th September 2009, 02:00 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல். நமது நடிகர் திலகத்தின் மனிதநேயத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்த நேசத்திற்குரிய நபர், தற்பொழுது பூரண நலம் பெற்று விளங்குவார் என்று நம்புகிறேன். அவருக்காக ப்ரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th September 2009, 02:58 AM
திராவிட இயக்கத்தவரும், சிறந்த நாடக நடிகருமான திரு. டி.வி. நாராயணசாமி (டி.வி.என்.) அறிஞர் அண்ணா அவர்களின் மிக நெருங்கிய நண்பர். அவருக்காக அண்ணா எழுதிய பகுத்தறிவுப் பிரசார நாடகம் தான் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்'. அதில் சிவாஜியாக டிவிஎன் நடிக்க வேண்டும் என அண்ணா விரும்பினார். ஆனால், டிவிஎன்னோ எம்.ஜி.ராம்சந்தர் என்கின்ற ஒருவரை (திரு. எம்.ஜி.ஆர். தான்) சிபாரிசு செய்தார். சில காரணங்களுக்காக, எம்.ஜி.ஆர். நடிக்க மறுக்கவே, கலக்கமுற்ற அண்ணாவைத் தேற்ற, நாடக உலகில் நல்ல பெயர் பெற்றிருந்த வி.சி. கணேசன் என்கின்ற நடிகரை டிவிஎன் முன்மொழிந்தார். கணேசனைக் கண்டு அண்ணாவுக்கு சந்தேகம் கலந்த தயக்கம். எனினும், டிவிஎன்னின் தூண்டுதலில்,ஒரு காலை வேளையிலே நாடகத்தின் முழு வசனத்தையும் கணேசனிடம் கொடுத்து, மாலை வருவதற்குள் மனப்பாடம் செய்ய சொல்லி விட்டு, இயக்கப் பணிகளை கவனிக்கச் சென்றார்.

அன்று மாலையும் வந்தது.(பின்னாளில் கணேசனுக்கு பாராட்டு மாலைகள் குவியப் போவதை குறிக்கவே!) அண்ணாவும் டிவிஎன்னும் வந்தனர். முழு வசனத்தையும் ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிப்பெருக்கோடு அவர்களிடம் நடித்துக் காட்டினார் கணேசன். டிவிஎன் உள்ளத்தில் மகிழ்ச்சி. அண்ணா கணேசனை ஆரத் தழுவிக் கொண்டு பாராட்டினார். அண்ணாவின் மனத்திரையில் வி.சி.கணேசன் சிவாஜி ஆனார்.

பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்கள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
18th September 2009, 06:10 AM
Dear Pammalar,
This DVN has acted with NT in the film Pudhaiyal in an aged role. He was a very close relative of S.S.Rajendran.

Raghavendran

joe
18th September 2009, 06:46 AM
அன்று மாலையும் வந்தது.(பின்னாளில் கணேசனுக்கு பாராட்டு மாலைகள் குவியப் போவதை குறிக்கவே!)

அன்புடன்,
பம்மலார்.

:thumbsup:

pammalar
18th September 2009, 10:59 AM
Thanks Mr. Joe.

Dear Raghavendran Sir,

Thanks for your Info. DVN acted with NT in PARASAKTHI itself as Pandaribai's elder brother. He was also bestowed with a sobriquet NADIGAMANI, conferred on him by his Dravidian team-mates.

Regards,
Pammalar.

abkhlabhi
18th September 2009, 03:04 PM
Incomparable Achievements of Twentieth Century (1901-2000).

Research conducted by Professors of 735 Universities around the world.

The research result was released by University of Madras in Chennai.

The Research was conducted with the People, Students, Teachers, Research Scholars, Tamil Organizations, Private Organization Center, Tamil Literates, Drama-Music Artists, Movie Industrialists and many other brainiest...!

Literate: Great Tamil Orator - Kalainger M Karunanidhi

Music: Instrumental: Isaignani Ilaiyaraja

Lyricist: Kavingner Kannadasan

Voice: T M Sounderarajan

Drama: Great Tamil Drama - Kalainger M Karunanidhi

Actor: Nadigar Thilagam Sivaji Ganesan

The above Details will be released by July 2006 by University of Madras.

Courtesy: Murasoli - 20-03-2006(DMK Party Official Organ)

abkhlabhi
18th September 2009, 03:30 PM
I read this in some site some time back.


David America,

*அழுகையில் படம் பார்ப்போரை அழவைக்கும் நடிக வேந்தர்*
*விழுமிய பொருளையெல்லாம் விழிகளில் காட்டும் மன்னன்*
*எழுகடல் புவியில் எட்டாவதாய் வந்து*
*எழும கலைக்கடலாய் நின்ற சிவாஜி!.*
**
என்று கவியரசர் கண்ணதாசனால் பாராட்டு பெற்ற நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன்
ஐயாவின் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்... அதில் உங்களைக் கவர்ந்த நடிகர்
திலகத்தின நடிப்பு இவை பற்றி இங்கெழுத அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!
**
அன்புடன்
டேவிட்


Reply by Sakthi sakthithasan,


அன்பின் டேவிட்,

நான் ஈழத்தில் இருந்த இனிமையான பொழுதுகளை எனது நினைவில் கொண்டு
வருகிறேன்.


" வசந்த மாளிகை @ எனது மனதை விட்டு அகலாத படம். ஈழத்தில் 235 நாட்கள்
தொடர்ந்து ஓடு வசூல் சாத்னையை ஏற்படுத்திய படம்.


முதலாவது நாள், ஜம்பதாவது நாள், நூறாவது நாள், நுற்றைம்பதாவது நாள்,
இருநூறாவது நாள், இருநூற்றி இருபத்திஜந்தாவது நாள் என ஜந்துமுறை
இப்படத்தை நானும் எனது உற்ற நண்பனும் பார்த்தோம்.


அவரது நடிப்பு, கொடுக்கப்பட்ட வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசும் பாவம்,
கண்ணதாசனின் கருத்து மிகு பாடல்கள், அவற்ரிற்கு அற்புதமாக KVM அளித்த
இசை. இவையனைத்தும் ஒன்றிணைந்து அந்தப்படத்தை மிகவும் தரம் வாய்ந்த படமாக
மாற்றியிருந்தது.


இங்கே எனக்குப் பிடித்த இரு காட்சிகளை விபரிக்கிறேன்


1) குடிகாரனாக இருந்த சிவாஜி கணேசனை, மாற்றி ஒரு நல்ல மனிதனாக
ஆக்குகிறார் வாணிஸ்ரீ, அதுவரையில் சிவாஜி கணேசன் இருந்த இடத்தைக்கூட
திரும்பிப் பார்க்காத வரது அண்ணணும், அண்ணியும் அவரின் மாற்றத்தைக்
கண்டதும், சொத்தை தமக்குள் வைத்துக் கொள்வதற்காக அண்னியின் தங்கையை
அவருக்கு மணம் பேசுகிறார்கள். ஆனால் சிவாஜி கணேசனோ தனது மனதை
வாணிஸ்ரீயிடம் பறிகொடுத்து விட்டார். அவரது அண்ணணாக பாலாஜி
நடித்திருந்தார். இதோ அந்தச் சம்பாஷணை.


பாலாஜி : எப்படிப்பட்ட பெண்ணை உனக்குப் பிடிக்கும் ?


சிவாஜி கணேஷன்: ஆடம்பரமில்லாத அழகு, அந்தஸ்தைப் பார்க்காத அன்பு


பாலாஜி : அப்படிப்பட்ட பெண் யாரையாவது நீ விரும்புகிறாயா ?


சிவாஜி: நான் விரும்பும் பெண் எனக்குத் தேவையில்லை, என்னை விரும்பும்
பெண்தான் எனக்குத் தேவை


இந்தக் காட்ச்சியில் சிவாஜி கணேஷன் தனது வசனங்களை பேசும் போது உதட்டால்
பேசவில்லை. உள்ளத்தால் பேசினார், அத்னால் தான் அவர் நடிகர் திலகம்.


2) இரண்டாவது காட்சி, தனது மனதில் இடம் பிடித்த பெண்னைக் காட்டுவதாகக்
கூரி வாணிஸ்ரீயை வசந்தமாளிகைக்கு அழைத்துச் செல்கிறார், அங்கே அந்த வசந்த
மாளிகையையும், அதற்குச் சொந்தக்காரியாகிய தன் மனங்கவர்ந்தவளையும் பற்றி
விபரிக்கும் போது


" இறைவன் மட்டும் எனக்கும் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால்,
அகாயத்திலே பறந்து சென்று அந்த நிலவை எடுத்து வந்து இந்த வசந்தமாளிகைக்கு
வண்ணவிளக்காக அலங்கரித்திருப்பேன், வானத்திலே மின்னும் நட்சத்திரங்களை
எடுத்து வந்து தோரணங்களாக தொங்க விட்டிருப்பேன், ஆனால் இறைவன் தான்
எனக்கு அந்த சக்தியை கொடுக்கவில்லையே ! என்ன செய்வேன்? என்ன செய்வேன் ? "


இந்த வசனத்தைப் பேசும் போது காதல் உணர்ச்சிகள் மாறி, மாறி அவர் முகத்தில்
வந்து அலைமோது, தமிழ் அப்படியே கணீரெனேஉ ஒலிக்கும். நடிகர் திலகத்திற்கு
நிகர் அவரேதான்.


அன்பின் டேவிட் அருமையான இழை ஆரம்பித்ததுக்கு என் நன்றிகள்


அன்புடன்
சக்தி

pammalar
18th September 2009, 07:31 PM
Thanks for your tremendous posts Mr. abkhlabhi.

Mr. Sakthidasan & his friend are blessed as they have seen NT's VM at Ceylon on its First, 50th, 100th, 150th, 200th & 225th day. Incomparable feat ! Hats off to both of you !!

Regards,
Pammalar.

pammalar
18th September 2009, 09:57 PM
1945-ன் இறுதி நாட்கள் (அல்லது 1946-ன் ஆரம்ப நாட்கள்). திராவிடர் கழகத்தின் ஏழாவது சுயமரியாதை மாநாட்டிற்காக சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடல் களை கட்டியிருந்தது. கழகக் கண்மணிகள் உற்சாகத் துள்ளலில் இருந்தனர். நான்கு நாட்கள் நடைபெற இருந்த மாநாட்டில், நான்காம் நாள் சிறப்பம்சமாக "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" மேடையேற இருந்தது. மாநாட்டிற்கு கழகக் காவலர் தந்தை பெரியார் தலைமை தாங்கினார். மூன்று நாட்கள் மாநாடு சிறப்புற நடைபெற்றது.

நான்காம் நாளின் சிகரமாக "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்". ஆர்ப்பரிக்கும் அடலேறுவாக மாவீரன் சத்ரபதி சிவாஜி வேடத்தில் வி.சி. கணேசன். அண்ணாவின் வசனங்களை இது போல் இனி எவரும் பேசி நடிக்க முடியாது என்கின்ற அளவுக்கு, உச்சத்திற்கு முழங்கினார். சிவாஜியின் வேடத்தில் வாழ்ந்து காட்டினார். எதற்கும் ஆடாத பெரியாரே ஆடிப் போனார்.

நாடகம் முடிந்ததும் பாராட்டி மகிழ வைக்கம் வீரர் மேடையேறினார். கணேசன், சிவாஜியாகவே நாடகத்தில் மாறியிருந்ததைக் கண்டு, "இன்று முதல் நீ வெறும் கணேசல்ல, சிவாஜி கணேசன்" என்று மனமாரப் பாராட்டினார், வாயார வாழ்த்தினார். அன்று முதல் விசிஜி சிவாஜி ஆனார்.

நாடகத்தில் மடாதிபதி காகபட்டராக அண்ணாவும் சிவாஜியுடன் கலக்கியிருந்தார்.

இந்த சம்பவங்களுக்குப் பின் அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமான அவரது செல்லப்பிள்ளையானார் சிவாஜி கணேசன்.

ஈரோட்டுச் சிங்கம் சிங்கத்தமிழனை "சிவாஜி" என்றார். பின்னர், அகிலமே அவரை உலக நடிகர் திலகமாகப் போற்றியது. இன்றும் போற்றுகின்றது.

பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்கள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

joe
18th September 2009, 10:02 PM
ஆகா ! பம்மலார் சேவை இந்த திரிக்கு தேவை :D

pammalar
19th September 2009, 02:45 AM
இந்த வார (23.9.2009) ஆனந்த விகடன் இதழில் "ஹாய் மதன்" பகுதியில் வந்துள்ள ஒரு கேள்வி-பதில் :

பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் தங்களைக் கவர்ந்த பாடல்? (ஆர்.கே. லிங்கேசன், மேல்கிருஷ்ணன்புதூர்)

கா..கா..கா.. பாட்டு. அதற்குப் பிறகு இன்று வரை எந்த ஹீரோவும் காக்காவைப் பார்த்து பாடவில்லை என்று நினைக்கிறேன்.

சற்றே வித்தியாசமான பதில் !!!

கா..கா..கா.. பாடலை இயற்றியவர் உடுமலை நாராயண கவி. இசையமைத்தவர் ஆர்.சுதர்சனம். பாடியவர் சி.எஸ்.ஜெயராமன். திரு. ஜெயராமன் அவர்கள் பராசக்திக்கு முன் பல படங்களில் பின்னணி பாடியிருக்கிறார். ஒரு சில படங்களில் தானே பாடியும் நடித்திருக்கிறார்.ஆனால் ஸ்டார் சிங்கர் ஆகவில்லை.

சிதம்பர ரகசியமாக இருந்த சிதம்பரம் ஜெயராமனின் குரல், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் பிரபலக் குரலானது பராசக்தி கணேசனின் பாட்டுச் சக்தியால் தான் என்றால் அது மிகையில்லை. இதிலிருந்து தெரிகிறதல்லவா ! நடிகர் திலகம் கைதேர்ந்த கைராசிக்காரர் என்று !!

அன்புடன்,
பம்மலார்.

groucho070
19th September 2009, 08:17 AM
Been following your posts, Pammalar sir. Great posts. :D

NOV
19th September 2009, 08:35 AM
Navarathri greetings to all Sivaji fans.

NT's 100th Film, Navarthri on Astro Vellithirai now. :D

saradhaa_sn
19th September 2009, 12:47 PM
அன்று நடந்த அரிய பல விஷயங்களை அள்ளி வழங்கும் 'பம்மலார்' அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்.

இன்னும் பல விஷயங்களை அறிந்து மகிழ்வுறக் காத்திருக்கிறோம்.

HARISH2619
19th September 2009, 01:33 PM
http://www.srikumar.com/movies/tamil/sivaji_ganesan.htm


Sivaji ganesan

1) Original Name : V.C.GANESAN (Villupuram C.Ganesan)
2) Popular Name : SIVAJI GANESAN -- the title "Sivaji" was given to Ganesan by the great Rationlist,Thanthai Periyar E.V.R.Ramasamy for his best performance in the role of Sathrapathy Sivaji in the stage play "Sivaji kanda Indu Saamraajyam" in the year 1946.

3) How Became An Actor: When he was 9 years old he ran away from his house. Nobody knew his whereabouts. After many days his mother and elder brother happened to trace him at a place near Trichirapalli where "Kampalaththaan Kooththu" a popular folk drama was taking place. Kattabomman's story was being enacted on stage in that Kooththu. Ganesan was very much interested in that particular drama. Even at that small age he had vowed that one day he would become an actor and do Kattabomman's role on stage.
Ganesan's mother brought him back to their house. She arranged through her elder son to get a placement for Ganesan in one of the popular drama troupes. Thus Ganesan first became a stage actor.

4) First film : His first film is "Paraasakthi". It was released in the year 1952.

5) Great Turning Point: "Parasakthi" was a great turning point not only in Sivaji Ganesan's acting Career but also for the entire Tamil Cinema Field. Before that there were mainly either Raja Rani Stories or religious and mythological stories with a number of songs which had great sway among Tamil Cinema audience. But "Paraasakthi" was a social film with revolutionery themes and lesser number of songs. More over the heart - catching, fiery dialogue by Kalaingar Karunanidhi made the film a super revolutionery one in terms of it's trend- setting nature and it's overall reformative impact on society.

6) Milestones : The Greatest Merit of Sivaji Ganesan is that no other actor either in Tamil Cinema or Indian Film Industry or in the whole
World has done such a great number of roles and acted in such a great varieties of roles depicting real life- like characters on screen and no other actor's acting carreer is so much saturated with such a great number of milestones in terms of unimaginable achievements as in that of sivaji Ganesan.

7)Meritorious Awards:
1) The Best Actor Award won in Afro- Asian Film Festival held in Gairo, Egypt in 1960.
2) Padmasri Title - 1966.
5) Padmabhushan Title - 1984
4) Chevalier Award of France 1995.
5) Dadha Saahib Paalkhe Award 1997.

8)Meritorious Qualities :
1) Modesty.
2) Punctuality.
3) Make-up Aptness and Physical Fitness that suit with 100% exactness any sort of role from Prince to Beggar and the Rugged Character to the Cultured Elite!
4) Infinite Veriety In Acting And Dialogue -Delivery - An Unreachable Feat by any other World Level Actor.


9)Unique Achievment: The No 1 ranked Actor the World has ever seen.

10) Ambition: Wants to act until the last breath of life and he would be even more happy, he once said, should his physical existence comes to an end while acting.

11) Total Number Of Films: Around 300

12) Mother Tongue: Tamil

13) Native Place: Villupuram, a small town in South Arcot district, in Tamilnadu, India.

14) Academic Education: III std, at the preliminary level of school education.

15) Father's Name: P.Chinniah Mandraayer. Though poor was very rich in his sprit of patriotism! Was imprisoned many number of times for his continued support and participation in the then Indian Freedom Stuggle under the leadership of Mahatma Gandhi. Jail become his second home.

16) Mother's Name: Rajamani Ammal. While her husband was in prison she had to undergo all sorts of hardships to feed her children and maintain the family.Lack of food made them at times to forgo food.

17) Marriage: Married Kamala, already a relative of him, who was a resident of Nagappattinam near Trichirappalli, Tamilnadu. This couple begot two male children later named Ramkumar and Prabhu, and two female ones Shanthi and Thenmozhi. Today all the four are married. Ramkumar looks after and manages Sivaji Films. Prabhu has become one of the busiest, leading heroes of Tamil Cinema.

18) Political Affiliations: From his first film onwards he was considered to be a staunch D.M.K. party sympathiser. After 1955 some dramatic changes took place. He was a neutralist for some years.
But at the end of 1961 he become a strong supporter of Congress Party. In that year he took part and delivered an address in the state Congress party Conference in which the then Prime Minister Pandid Jawaharlal Nehru and Kamarajar were the main participants. In 1982 Mrs.Indira Gandhi made him the Rajya sabha M.P. After 1687 came out of Congress and floated his own Political Party. 2 years latter became President of Tamilnadu faction of Janata Dal. After a few years he quit politics.

19) Honours Bestowed Upon Sivaji Ganesan: In 1962 Sivaji Ganesan toured America as its Special Guest. There, he was given one of the highest houours of being the Mayor of Niagara City for one day. After Prime Minister Nehru, Sivaji was the only Indian to get this honour.
In Hollywood he met world famous actors like Marlon Brando and some leading Cinema technicians.
Egyptian President Naasar, Singapore former Prime Minister, Ceylon President Chandrika, Indian former Prime Ministers Nehru, Indra Gandhi, V.P. Singh, former President Dr. Radhakirishnan, former Governer -General Rajaji, former Chief Ministers Kamarajar and Annadurai, Present Chief Minister Kalaignar Karunanidhi, Ex-Chief Ministers M.G.R., RamaRao and Jayalalitha were not only his associates but his very great admirers too!


What "Pillaiyaar Chuzhi" is for Letters (Yezhuththu), Sivaji Ganesan is for acting. Without touching him or starting with him the dictionary of acting won't get completed. Actor Raj Kapoor has earned for himself respect and recognition in world countries. Like that among our South Indian actors Sivaji Ganesan has done us proud by his world level popularity. Wherever Tamils live there the name of Sivaji Ganesan has become the household word for them.

It is an 100% established fact that Sivaji has accomplished the rare feat or achievement of committing his entire life for the sake of the art of acting!

Among the world famous actors, each of them has an individuating, unique style and method of his own in acting. But we can see in the one single actor Sivaji, all these different styles and talents are put together that he is able to portray in his acting any such particular style in the most perfect manner possible. If we try to scan his acting abilities with the help of a computer, we would be greatly startled and astonished. Even Steven Spielberg who created the Dino through computer would remain helpless had he been entrusted with the assignment of scanning Sivaji's acting abilities in a computer. To explain and criticise Sivaji's acting ability one is expected to be endowed with special talents.

May be the number of films acted by Sivaji are more than 300. But the number of character roles and kinds of 'abhinayas' portrayed in those films by Sivaji are really countless and innumerable! It would make anyone wonder whether his physical features were especially created for the express purpose of acting! He has got such an unbelievable and beautiful type of cinematic facial shape and get-up that one could film his facial features in all the 360 degree angles with equal beauty, charm and captivating enchantment. His eyes - if we look at them at close range,would seem as if prominently standing out and flashing forth brightness. His voice - would be roaring like lion! At the same time it (his voice) is also capable of bringing out the breezy softness of feminine nicety, whenever it is required.


From his boyhood to his youth he has put on different feminine get-ups and attires and has acted in the vastly different roles of national and world famous women characters! He has acted in the character role of Noor Jahaan as well as that of Mumtaj. The filmi characters of the popular film "Manohara" like the hero Manoharan, his mother Pathmavathi, father Purushoththaman, Vasantha Senai, her son 'asadan' Vasanthan---all these different character roles have been acted in perfect manner on different occasions by the single actor Sivaji in "Manohara" stage drama!

The quality of acting that Sivaji had shown in his performance in the feminine role of Padmavathi in "Manaohara" drama has not been matched even by such a great and fine actress like Kannamba who did that role in the film "Manohara", some critics say!. That's the unique feat of Sivaji. That feminine nicety that marked it's stamp in his acting in dramas didn't part ways with Sivaji later during his cinematic career too. Whenever he acted in such soft character roles in cinema, those past, stage experiences of having acted in feminine roles helped him a lot. In the film "Theiva Mahan", the second son Vijayan's style of walking, his mannerisms, abhinayas etc. are an example for this. Those characters of Puranas and epics as were depicted in books in the form of writing, that of photos and paintings were all shown before our very eyes when Sivaji acted in such roles in films which remains one of his great achievements. Apart from these he has accomplished yet another great feat by way of registering in the minds of the audiences with the never-dying memories of such unforgettable, popular character roles like the following : Gunasekaran in "Parasakthi", Muththaiyan in "Kalvanin Kaathali", Sengoden in "Makkalai Petra Maharaasi", Parthiban and Vikraman (double roles) in "Uththama Puththiran", Rengan in "Padikkaatha Methai" Kannaiyan in " "Bhagappirivinai", Raja Sekar in "Paasa Malar", Sikkal Shanmuga Sundaram in "Thillana Mohanambal", Shankar, Kannan, Vijayan (triple roles) in "Theiva Mahan", Bharath in "Sivantha Mann", Prestige Padmaba Iyer in "Vietnam Veedu", Mookkaiya Servai in "Pattikkaadaa Pattinamaa", Barrister Rajni Kaanth in "Gouravam" etc., etc.

When acting in extreme type of emotive scenes the eyes of Sivaji would seem reddish in colour. In colour films this would be seen in a crystal clear manner. That's not because of the application of any ointment. Whenever Sivaji acts emotionally or delivers dialogue ferociously or shows vigorous facial expressions, instantly his eyes would turn reddish automatically. When he comes back to normalcy his eyes would also turn to normal colour.

When we talk about 'eyes', the different character roles Sivaji has done in Purana films come to our memory. There is a saying that our Gods always keep their eyes open. Neither they would wink their eyes nor sleep, it is said so. In the film "Thiruvilaiyaadal" Sivaji who has acted as Siva Peruman has in none of the scenes winked his eyes! For us even to take note of that point while seeing the film becomes a strenuous job.

If we join our friends in the playful game of trying to keep our eyes wide open for a long time, without doing any winking, then tears would naturally fill in our eyes with some irritating sensation. But putting on heavy costumes and ornaments on the body, speaking long dialogues in the midst of eye-blinding bright lights during film-shooting and at the same time keeping the eyes wide open without closing them even for a fraction of a second is not an easy job indeed! But Sivaji has managed it very easily. Not only that. While he was dancing in the 'Ruthra Thaandavaa' scene in the film he didn't at all wink his eyes. Now one could understand how great a trouble and pain Sivaji might have taken for doing that role with that much perfection and grammar!

As said above, in cinema, Sivaji has accomplished so many number of great feats. One of them is that he has, more than any other actor, acted in countless number of close-up shots in multi-different scenes. He has given infinite variety of expressions during such close-up shots. To shoot such remarkable close-ups of Sivaji it is a pre-requsite that the cameraman also has special abilities and creative tastes!

To-day there has been so many novel, technical advancements that the modern negative film has got special qualities that bright lighting during shooting won't hurt either the artists' eyes or body, nowadays. 25 years back such advancements were not there. There was only one type of film then. That needed too much lighting for shooting. Without make-up one can not withstand the effects of such lighting.

If such was the condition inside the studio sets in those days, the situation at out-door shooting locations would be much more horrible. In the broad day-light and at the peak hours of the burning sun one had to face the most unbearable heat-waves! The reflectors used for shooting on such hot days made the worse things worst! It was under such grim and hard conditions that Sivaji had to do most of his films during his peak days in cinema!


The 'Pillaiyar Chuzhi' for Sivaji's acting was drawn by a 'theru kooththu' drama (folk drama) titled "Veera Pandia Kattabomman". Only on seeing that he developed a craze for acting and joined 'Boys Company', a popular drama troupe! Even after his entry into cinema and even while his popularity was going on growing day by day, he didn't forget 'Kattabomman'. Through his 'Sivaji Nadaka Mandram' he enacted that drama on stage for 100 times! Even many more times it could have been enacted had not his throat got hurt and started bleeding because of his ferocious dialogue delivery. While he was acting in the climax scene he delivered emotional dialogue against Banerman, he bleeded and fell unconscious! All were shocked. It was that film enacted by him taking that much serious risks that fetched him the "Best Actor Award" at the Afro-Asian Cinema Festival at Cairo, Egypt in the year 1960! He was the first Indian actor to get such a Foreign Award.
In "Neethi" film excepting a single song scene he was wearing pant and shirt in the same colour throughout the film. He didn't bother about his image and all. Like that in the matter of continuity in costumes also his memory power is remarkable! Having acted wearing a particular dress in a scene and during when the shooting resumes after a gap of a number of days, even when the costumer forgetds the continuity in costume matter Sivaji won't forget that and he would ask for the right dress to wear.

By the help of the mere photographs (stills) one could clearly find out and name the different films of Sivaji. He is that much careful to change his make-up and overall get-up from film to film! To-day many leading artists are reluctant to wear wigs. Even those with slight baldness near forehead, try to manage without wig by pulling up the hair from the back portion of their head towards the front-side! But Sivaji inspite of his having beautiful, curled, original hair in most of his films he has used wigs. He himself applies finishing touches to his moustache and eyebrows!

For the role of Appar in "Thiruvarutchelvar" he has spent three hours daily for his exclusive make-up. To wipe it out an hour. To act in that role he has considerably reduced the quantity of in-taking food in order to make his body a little more lean.

In "Theiva Mahan" Sivaji has acted in the dual roles of father and son with a face that looks as if charred by fire. Whenever removing that make-up after the day's shooting his face's original skin also got stripped out here and there. After the regrowth of skin again the same make-up and same pain-taking!

In the beginning Sivaji exhibited his exceptional ability in dialogue delivery while he was acting in films penned by such towering personalities like Kalaignar Mu. Karunanidhi, Sakthi T.K.Krishnasamy, A.P.Nagarajan and so on. Afterwards Sivaji acted in films which gave importance to facial expressions. Those were films with sound story value.

HARISH2619
19th September 2009, 01:40 PM
[tscii]


'Sivaji and I were considered lucky'
Gemini Ganesan

Gemini Ganesan and Sivaji Ganesan were contemporaries.

The grapevine is that they never were good friends.

Sivaji Ganesan might have received all the applause while the other Ganesan had not been that lucky as far as awards and titles were concerned.

But Gemini Ganesan was one of the first persons to reach Sivaji’s residence to pay respects to his colleague:

I think it was 1950. I was working as the casting director at Gemini Studios.

Sivaji came to the studio one day with a recommendation letter from the late director A S A Swamy. That was when I met him for the first time. I had remarked in my book that Sivaji had a very expressive face and that he could become a good actor. He did.

In 1952, I quit Gemini Studios and joined the Narayana Company. That was when I got to see Parasakthi, Sivaji’s first film. I thought he acted very well in the film.

Our first film together was Pennin Perumai by P Pullaih. It ran so well that many filmmakers wanted to cast Savitri (the heroine), Sivaji and myself together in films. They felt our combination would work wonders at the box office.

It was director Bhim Singh who made the maximum number of films with the three of us, like Pathi Bhakti, Paasa Malar, Parthal Pasi Theerum, etc. I think Sivaji and I must have acted together in at least nine dozen films. Quite remarkable, I feel.

After a gap of about 15 years, in 1975, we worked together again in Unakkaha Mann. It was produced by our good friend Balaji. After that we never acted together in a film again.

I feel he has lived a full life. Still, it is unfortunate that Tamil film world lost a legendary actor.

As told to Shobha Warrier

HARISH2619
19th September 2009, 01:45 PM
MUST READ FOR ALL DIE HARD FANS:

http://www.rediff.com/entertai/sivaji.htm

pammalar
19th September 2009, 02:26 PM
அண்ணாவின் அன்புப்பிடியில் சிக்கிய சிவாஜி, அவருடனேயே 1946-ம் ஆண்டில் சில மாதங்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். அப்போது அண்ணா 'திராவிட நாடு' பத்திரிகையை நடத்திக் கொண்டு இருந்தார். பத்திரிகைக்காக அண்ணா எழுதித் தரும் பக்கங்களை படித்து,அடுக்கி வைப்பதிலும், அச்சுப் பணிகளிலும் ஈடுபடுவார் சிவாஜி.

அறிஞரைப் பற்றி நடிகர் திலகத்தின் வாக்கு மூலத்தினை நோக்குங்கள் :
அன்பு என்கின்ற சொல்லுக்கு அண்ணா என்பது விளக்கம்.பாசப்பெருமழையில் நனைய வைப்பார். அவர் படிக்கும் நல்ல புத்தகங்களை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்.அவர் எழுதும் கட்டுரைகளை படிக்கும் முதல் வாய்ப்பும் எனக்குத்தான். அவரது பத்திரிகை வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். பொதுகூட்டங்களுக்கு அவர் செல்லும் போது உடன் என்னையும் அழைத்துச் செல்வார். மேடையில் என்னை பேசச் சொல்வார். எனக்கு கூச்சமாக இருக்கும்."

அப்போதெல்லாம் நமது நடிகர்திலகம் பொதுக்கூட்ட மேடைகளில் பேசும் போது, பேசிக் கொண்டே மேடையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பார். இதைக் கண்ட அண்ணா 'கணேசுக்கு இந்த மேடையை விட நாடக மேடையே சிறந்தது, ஏற்றது' எனக் கருதி ஒரு நல்ல, பிரபல நாடக மன்றத்தில் அவரை இணைக்க திட்டம் தீட்டினார். அதன்படி, அன்று மிகப் பிரபலமாக இருந்த - சக்தி டி.கே. கிருஷ்ணசாமி நடத்தி வந்த - சக்தி நாடக சபாவில், தன் திறமையோடு கூடிய அண்ணாவின் சிபாரிசோடு , 10.8.1946 அன்று சேர்ந்தார் சிவாஜி கணேசன்.

அறிஞரை விட்டுப் பிரிய திலகத்திற்கு மனமில்லை. அண்ணாவுக்கும் அப்படித்தான். மிகுந்த பாசப் போராட்டத்திற்குப் பிறகு சக்தி நாடக சபாவில் இணைந்தார் நமது சிவாஜி.

பேரறிஞர் - நடிகர் திலகம் தகவல்கள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th September 2009, 05:32 PM
NT's Vasantha Maaligai at Chennai Sathyam Cinemas, shown as a morning 8:30 special show today (19.9.2009), proved to be a good hit. It had a moderate crowd. If the show would have been a matinee or otherwise, the film would have become a grand hit. Anyway, Thanks to all those who had a Good VM morning at Sathyam today.

Regards,
Pammalar.

RAGHAVENDRA
19th September 2009, 08:13 PM
Dear Pammalar,
Your entry has given new blood to our thread. Thank you and keep us energetic by your posts.
Just came across a Dinamalar Page of 2006.



05-10-2006
01. Navarathri Golu celebrated in California ( Sivakumar Natarajan , News Reporter ,California
California celebrated Navarathri Golu with Indian Tradition and colorful golu and parties in every house, all most all nine days. Speciality in one home is the doll set of Thillana Mohanaanbaal scene, where Naatiya Peroli Padmini and Nadigar Thilagam Sivaji are kept as dolls in the competition of dance and Nagaswaram in Thiruvarur.

from the Pages of Dinamalar
http://www.dinamalar.com/Ulagatamilargal_English/2006oct26/America.asp

A Navarathri Golu in 2006 in California features Thillana Mohanambal replica. Shows how NT has made an impact on World Tamils!
Great
Raghavendran

pammalar
20th September 2009, 12:22 AM
Dear Mr. Harish,

Thanks for your info. and a double thanks for the two excellent links.

Dear Raghavendran Sir,

Thanks for the info. The link looks amazing.

Wah!!! What a way to celebrate Navarathiri.

I also wish to have a Thillaanaa doll set like that.

Regards,
Pammalar.

pammalar
20th September 2009, 01:32 AM
ஜோ அவர்களுக்கும், க்ரோசோ அவர்களுக்கும், சாரதா அவர்களுக்கும் எமது நன்றி !

இன்று முதல் 9 நாட்களும் நவராத்திரி நாட்கள்.எனவே, பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்களுடன், நவரசத் திலகத்தின் நவராத்திரி திரைப்படம் குறித்த தகவல்களையும் காண்போம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2009, 02:03 AM
நவராத்திரி நியூஸ் :

ஆனந்த விகடன் இதழுடன் இணைப்பாக வந்த ஐ லவ் யூ விகடன் 20.11.2005 இதழிலிருந்து :

சினிமாவில் என்றென்றும் தனக்குப் பிடித்த காதல் காட்சியாக நடிகை ராதிகா கூறுவதை கவனியுங்கள் :

"காதல் காட்சி...இதுக்கு ஈடா...சான்ஸே இல்லை! நவராத்திரி திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்...சிவாஜியும், சாவித்திரியும் வசனங்களே இல்லாமல் கண்களாலேயே பேசிக் கொள்கிற காட்சி !!"

உயர்ந்த ரசனை. ராதிகா நல்ல நடிகை மட்டுமல்ல, நல்ல ரசிகையும் கூட. நடிகவேளின் மகளல்லவா !!!

நியூஸ் கன்டிநியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2009, 12:12 PM
நவராத்திரி நியூஸ் :

நவரசங்களின் சிறப்புக்களை உள்ளடக்கிய நவராத்திரி நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியம். 1964 தீபாவளி வெளியீடாக 3.11.1964 அன்று வெளியானது.100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றியையும், ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றது.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன், விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் என்கின்ற தனது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கிய முதல் திரைப்படம் நவராத்திரி. இதன் அபார வெற்றி, ஏபிஎன் அவர்களை , இதே பேனரில் அடுத்தடுத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், தில்லானா மோகனான்பாள் போன்ற இந்திய சினிமாவின் தலைசிறந்த படங்களை , மாபெரும் வெற்றிப் படங்களை வழங்க உந்துசக்தியாய் விளங்கியது. அருட்செல்வரை நவராத்திரி தனிப்பெரும் தயாரிப்பாளராக உயர்த்தியது. விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் என்கின்ற ஏபிஎன் பேனருக்கு லக்ஷ்மி கடாட்சம் கிட்டியதெல்லாம் நமது கணேச கடாட்சத்தால் மட்டும் தான். (அதாவது நடிகர் திலகத்தின் திரைப்படங்களால் மட்டும் தான்).

நமது நடிகர் திலகத்தின் நல்ல ராசியை கவனியுங்கள் !!!

நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
20th September 2009, 07:35 PM
When we talk about 'eyes', the different character roles Sivaji has done in Purana films come to our memory. There is a saying that our Gods always keep their eyes open. Neither they would wink their eyes nor sleep, it is said so. In the film "Thiruvilaiyaadal" Sivaji who has acted as Siva Peruman has in none of the scenes winked his eyes! For us even to take note of that point while seeing the film becomes a strenuous job.

If we join our friends in the playful game of trying to keep our eyes wide open for a long time, without doing any winking, then tears would naturally fill in our eyes with some irritating sensation. But putting on heavy costumes and ornaments on the body, speaking long dialogues in the midst of eye-blinding bright lights during film-shooting and at the same time keeping the eyes wide open without closing them even for a fraction of a second is not an easy job indeed! But Sivaji has managed it very easily. Not only that. While he was dancing in the 'Ruthra Thaandavaa' scene in the film he didn't at all wink his eyes. Now one could understand how great a trouble and pain Sivaji might have taken for doing that role with that much perfection and grammar!
திருவிளையாடலில் நடிகர்திலகம் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு, படம் முழுதும் கண்களை இமைக்காமலே நடித்திருப்பார்.

ஆனால், நக்கீரன் - தருமி படலத்தில், நக்கீரனுக்கு சிவன் குளோசப்பில் நெற்றிக்கண்ணைக் காட்டும்போது 'ட்ரிக்-ஷாட்' காட்சியில், நெற்றிக்கண் இமைப்பதாகக் காட்டியிருப்பார் ஏ.பி.நாகராஜன்.

ஏ.பி.என். செய்தது சரிதானா அல்லது கவனக்குறைவா?.

('நெற்றிக்கண் இமைப்பதாக இயக்குனர் காட்டியது குற்றம் குற்றமே'?)

saradhaa_sn
20th September 2009, 07:45 PM
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் 'ரம்ஜான் ஈத் பெருநாள்' நல்வாழ்த்துக்கள்.

ஜாதி, மத வேற்றுமைகளைக் களைந்து, வலிமையான பாரதத்தை உருவாக்க இந்நன்னாளில் உறுதியெடுப்போம்.

joe
20th September 2009, 08:58 PM
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் 'ரம்ஜான் ஈத் பெருநாள்' நல்வாழ்த்துக்கள்.

எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி ,நல்லோர்கள் வாழ்வை எண்ணி 8-)

pammalar
21st September 2009, 02:02 AM
அனைவருக்கும் எமது இதயபூர்வமான ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st September 2009, 02:20 AM
நெற்றிக்கண் பற்றிக் கூறிய சகோதரி சாரதா அவர்களின் கவனத்திற்கு,

திருவிளையாடல் திரைக்காவியத்தில் , தொடக்கத்தில் வரும் ஞானப்பழப் படலத்தில், சிவாஜி பெருமான் (சிவ பெருமான்) இரு கண்களையும் இமைப்பதாகவே காட்டியிருப்பார்கள்.

ஆனால், கடவுளர்கள் கண்களை இமைப்பதில்லை என்பது உண்மை.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது முதுமொழி.

அருட்செல்வரின் இந்தத் தவறை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது.

அன்புடன்,
பம்ம்லார்.

pammalar
21st September 2009, 02:36 AM
நவராத்திரி நியூஸ் :

1995-ல் குமுதம் வார இதழில் "அரசு பதில்கள்" பகுதியில் வந்த ஒரு கேள்வி-பதில் :

வில்லாதி வில்லன் மூன்று சத்யராஜ், அபூர்வ சகோதரர்கள் கமல், மூன்று முகம் ரஜினி பற்றி..? (டி.ஆர். பாலசந்தர், திருநெல்வேலி டவுன்)

மூவரின் இந்த மூன்றும் ஒரு நவராத்திரிக்கு ஈடாகுமா ...!

இந்த ஒரு பதிலுக்காகவே குமுதம் இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்தலாம்.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
21st September 2009, 02:03 PM
EID - Mubarak to all Islamic Brethern.

Regards

Murali Srinivas
21st September 2009, 02:16 PM
1940-களிலும், 50- களிலும்,60- களிலும் நடிகர் திலகத்தின் நாடக வாழ்க்கையிலும், திரையுலக பயணத்திலும் பொது வாழ்க்கையிலும் நடைபெற்ற நிகழ்வுகளை தேதி வாரியாக இங்கே அலசும் பம்மல் சுவாமிநாதன் எழுபதுகளில் பிறந்தவர் என்றால் இங்கே பல பேருக்கு நம்புவதற்கே கடினமாக இருக்கும். நடிகர் திலகத்தை தமிழ்த் திரையுலகம் ஹீரோ என்று கொண்டாடிய வருடத்தில் பிறந்தவர் [அவர் நடித்துக் கொண்டிருந்த எல்லா வருடங்களிலும் அவர்தான் ஹீரோ என்பது வேறு விஷயம்].காவியமான வசந்த மாளிகை வெளியான இதே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர். நடிகர் திலகத்தின் சீனியர் ரசிகர்களுக்கே தெரியாத பல விஷயங்களை உள்ளடக்கியவர். அவரின் தொண்டு பல் சிறப்பு பெற்று விளங்க மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

HARISH2619
21st September 2009, 05:48 PM
DEAR MURALI SIR,
I was very eagerly expecting you to come with the theatre happenings of VM from sathyam complex.

one more amazing news is that of mr.swaminathan's age.

சத்தியமாக சொல்கிறேன்,அவருடைய வசந்த மாளிகை இதழை படித்தபோதும் சரி,இப்போது அவரது போஸ்டிங்சை படிக்கும் போதும் சரி,அவருக்கு சுமார் 60-65 வயதிருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்.
இந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடும் அவரை பல்லான்டு காலம் வாழ்ந்து நமது நடிகர்திலகத்தின் புகழை பரப்ப வேன்டும் என்று வாழ்த்துகிறேன்.
சாமிநாதன் அண்ணா,இந்த இளைய சகோதரனின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளவும்

abkhlabhi
21st September 2009, 06:06 PM
Dear Mr.Pammalar Swaminathan,

Mr.Murali have not mentioned your date of birth. Anyway, accept my best wishes . I take this opportunity on behalf of other NT fans and wish you and pray god and NT (who is in Heaven and our hearts) to give you long peaceful, happy and prosperous life - not only in your personal life but also to spread NT name and fame to the world.

Murali Srinivas
21st September 2009, 10:58 PM
Senthil,

VM was screened as a 8.30 am show in the morning of 19th and so I couldn't make it. Heard that between 250 to 300 people turned up for that show, which was great considering the odd timing.

Bala,

I may not have mentioned the exact date but the year & month are very much clear.

Regards

pammalar
22nd September 2009, 12:40 AM
திரு. முரளி சார் அவர்களுக்கும், திரு. செந்தில் சார் அவர்களுக்கும், திரு. பாலா சார் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றி ! தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையெல்லாம் பெற்றது என் பாக்கியம் !! நமது இதயதெய்வமாம் நடிகர் திலகமே வாழ்த்தி ஆசி வழங்கினாற் போன்று இருக்கிறது !!!

அன்புடன் கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd September 2009, 06:08 PM
நவராத்திரி நியூஸ் :

நவராத்திரியின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் எல்லாம் ஏபிஎன் தான். உண்மையில் அவர் ஒரு சகலகலா வல்லவர். கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைக்க, பின்னணிக் குரல்களாக ஒலித்தார்கள், பாடகர் திலகம் டி.எம். செளந்தரராஜன், இந்தியாவின் ஈடு இணையற்ற இசைக்குயில் பி.சுசீலா ம்ற்றும் எஸ்.சி.கிருஷ்ணன், ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எல்.ஆர். ஈஸ்வரி, எல்.ஆர்.அஞ்சலி. சத்தியவான் - சாவித்திரி நாடகப்பாடல் மட்டும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றியது.

நவரச பாத்திரங்களில் அநாயாசமாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து பிரமாதப்படுத்தியிருப்பார் நடிகையர் திலகம் சாவித்திரி. மற்றும் இவர்களுடன் வி.கே.ராமசாமி, கே. சாரங்கபாணி, நாகேஷ், ஈ.ஆர்.சகாதேவன், ருக்மணி, சி.கே. சரஸ்வதி, மனோரமா, முத்துலக்ஷ்மி, பேபி குட்டி பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நவராத்திரியில் நவரசத் திலகமாகிய நடிகர் திலகம் ஏற்று நடித்த (வாழ்ந்து காட்டிய) நவரச பாத்திரங்களாவன :

அற்புதம் - கோடீஸ்வரர்

பயம் - குடிகாரர்

கருணை - டாக்டர்

கோபம் - கொலைகாரர்

சாந்தம் - விவசாயி

அருவருப்பு - நோயாளி

சிங்காரம் - நாடக நடிகர்

வீரம் - போலீஸ் அதிகாரி

ஆனந்தம் - கல்லூரி மாணவர்

ஒன்பது பாத்திரங்களில் உலகையே உலுக்கியிருப்பார் நடிகர் திலகம். இதில் நாடக நடிகராக வரும் பாத்திரத்தில் மட்டும் அவருக்கு இரண்டு வேடங்கள் (கெட்டப்புகள்). ஒன்று, நாடகக் கலைஞர் பாத்திரத்திற்குரிய வேடம், மற்றொன்று, சத்தியவான் - சாவித்திரி நாடகத்தில் சத்தியவான் வேடம்.

ஆக மொத்தம், நமது நடிகர் திலகத்திற்கு நவராத்திரியில் ஒன்பது பாத்திரங்கள் ; ஆயினும் பத்து வேடங்கள்.

அன்றே தசாவதாரம் செய்தாகி விட்டது.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd September 2009, 10:08 PM
Dear Pammalar,
Just now my internet connection was restored after a few days of break due to some technical reasons which was why I could not greet you yesterday. Kindly accept my belated greetings.

As you said NT has made 11 avatars in NAVARATHIRI - 11th in you - you have entered with a bang in Navarathiri like NT did with Parasakthi, and in you we all see NT - you are NT's 11th avatar - And keeping in mind your age it is more apt.

Eager to see your postings every now and then - you can not quench our thirst for your flow of info.

Regards,

Raghavendran

Murali Srinivas
22nd September 2009, 11:48 PM
தங்கை - Part I

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

வெளியான நாள்: 19.05.1967

மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.

காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.

மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.

கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.

கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.

மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.

சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.

இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.

வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.

அன்புடன்

Murali Srinivas
22nd September 2009, 11:52 PM
தங்கை - Part II

தங்கை - இந்த படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் மிக சிறப்பான நடிப்பில் வெளியான படம் என்றோ மிக பெரிய வெற்றிப் படம் என்றோ அதிகம் விமர்சிக்கப்படாத படம் என்றோ சொல்ல முடியாது. ஆனாலும் இந்த படத்தை நாம் அலசலுக்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாறுதலை கொண்டு வந்த படம் என்ற முறையில் இதை எடுத்துக் கொள்வோம்.

அதுவரை [1967] கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் வரை நடிகர் திலகம் பலதரப்பட்ட வேடங்கள் செய்திருந்தாலும் action வேடங்கள் என்று சொல்லப்படும் சண்டைக்காட்சிகள் இடம் பெறும் படங்களை அவர் செய்யவில்லை. அது தேவை என்று அவர் நினைக்கவுமில்லை. எம்.ஜி.ஆர். படங்களில் அதுவே முக்கிய கவர்ச்சியாக இருந்த போதும் அது இங்கே இடம் பெறவில்லை. 1964- 65 காலக்கட்டத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் அறிமுகமான பிறகு அவர்களது படங்களிலும் சண்டைக் காட்சிகள் இடம் பெற துவங்கின. அது மட்டுமல்ல சின்ன சின்ன நடன அசைவுகளும் [குறிப்பாக ட்விஸ்ட் டான்ஸ்] பாடல் காட்சிகளில் இடம் பெற ஆரம்பித்தன. இள வயது நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மனதளவில் இந்த விஷயம் ஒரு சின்ன ஏக்கமாக வளர ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் தான் பாலாஜி நடிகரிலிருந்து தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஆனால் அவரது முதல் படமான அண்ணாவின் ஆசை தோல்வியை தழுவியது. உடனே அவர் சென்ற இடம் அன்னை இல்லம். நடிகர் திலகமும் உடனே ஒத்துக் கொண்டார். முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு திருலோகச்சந்தர் இயக்குனர் பொறுப்பை ஏற்றார். ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் தங்கை. கதையை கேட்டதும் நடிகர் திலகம் சிறிது தயங்கினார். வேறு கதை பார்க்கலாமா என்று கூட கேட்டிருக்கிறார். ஏ.சி.டி. ஒரு முறை சொன்னார் "சிவாஜி நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே நாட்டியம் ஆட பழகியவர். தூக்கு தூக்கி படத்தில், காவேரி படத்தில் எல்லாம் சிறப்பாகவே நடனம் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அவர் அதை முயற்சி செய்யவில்லை. அவ்வளவுதான். அது போல் சண்டைக் காட்சிகள் என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உங்களால் செய்ய முடியும் என்று சொன்னேன். அதன் பிறகுதான் ஒத்துக் கொண்டார்."

இப்படி சொல்லும் போது படத்தில் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் என்றோ நடனக் காட்சிகள் என்றோ நினைத்தால் ஏமாந்து போவோம். முதல் அரை மணி நேரத்தில் ஒரு சண்டைக் காட்சி. அதன் பிறகு கிளைமாக்ஸ்-ல் தான் சண்டை. அது போல ஒரு பாடல் காட்சியில் மட்டுமே ட்விஸ்ட் ஆடுவார். ஆனால் இந்த சின்ன மாற்றம் பிற்காலத்தில் அவர் action படங்களை தயக்கமில்லாமல் செய்ய உதவியது. பொதுமக்களும் தங்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அவர் பிற்காலத்தில் செய்த படங்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

அது மட்டுமல்ல பாலாஜி என்ற Top notch தயாரிப்பாளர் உருவாவதற்கும், நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை அடைவதற்கும், சிவாஜி ரசிகர்களின் மனத்துடிப்பை மிக சரியாக உணர்ந்தவர் என்ற பெயர் எடுப்பதற்கும் பாலாஜிக்கு இந்த தங்கை பெரிதும் உதவி புரிந்தாள். அது போல் சிவாஜியை வைத்து மிக அதிகமான படங்கள் [20] வரை இயக்குவதற்கும், நடிகர் திலகத்தோடு ஒரு நல்ல புரிதல் உண்டாவதற்கும் ஏ.சி.டி. அவர்களுக்கு இந்த தங்கை பயன்பட்டாள்.

பெற்றால்தான் பிள்ளையா பட விஷயத்தில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மீது கோபம் இருந்தும் கூட பாலாஜியும் ஏ.சி.டி.யும் ஆரூர்தாஸ் வேண்டும் என்று சொன்னபோது எந்த வித மறுப்பும் சொல்லாமல் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டதின் விளைவு ஆரூர்தாஸ் என்ற திறமையான வசனகர்த்தா தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கும் தங்கை திரைப்படம் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

விமர்சனத்திற்கு செல்வோம்.

Murali Srinivas
23rd September 2009, 12:02 AM
தங்கை - Part III

நடிகர் திலகம் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடங்களில் ஒன்று இந்த மதனகோபால் என்ற மதன். அவரது Light Hearted கேரக்டர்களில் ஒன்று இந்த படம். Style quotient என்று சொல்வார்களே அது தூக்கலாக வெளிப்பட்ட படம். தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக அவர் பல படங்களில் நடித்துள்ளார், ஆனாலும் இந்த படத்தில் எந்தளவிற்கு இருக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்திருப்பார். ஐந்து ரூபாய்க்கு மேல் விளையாட மாட்டேன் என்று எழுந்து போகும் இவரை ஒரு ரவுடி முகத்தில் குத்து விட கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஒரு சின்ன சிரிப்போடு வருவார்.[இந்த விஷயத்திலும் இன்றைய ஹீரோ-கள் புதுமை என்று பிற்காலத்தில் பண்ணியதை அன்றே செய்திருப்பார்]. பக்கத்தில் வந்து இரண்டு கைகளையும் ரவுடியின் முகத்திற்கு நேரே நீட்டி, கை தட்டி விட்டு ஒரு நாலு பஞ்ச் கொடுப்பார். ஓபனிங் ஷோ-வில் முதன் முதலாக அதை பார்த்த போது ரசிகர்கள் தியேட்டரில் செய்த ஆரவாரம், விசில் பற்றி பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அது போல் கிளப்பிற்கு முதன் முதலில் வரும் போது டான்ஸ் பார்த்து விட்டு, தன்னை மறந்து எழுந்து ஒரு சின்ன ஸ்டெப் போட்டு விட்டு எல்லோரும் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கப்பட்டு நெளிவது ரசிக்கும்படி செய்திருப்பார். காஞ்சனாவை சிகரெட்டால் சுடும் ராமதாசை எதிர்பாராத நேரத்தில் குத்துவது, ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை விரட்டுகிறேன் என்று கே.ஆர்.விஜயாவையும் டாக்டர் என்று தெரியாமல் மிரட்டுவது, அவருடன் காரில் போகும் போது தன் நிலை பற்றி காஷுவலாக பேசுவது, பிறந்த நாள் விழாவில் இன்ஸ்பெக்டர் சொந்தக்காரன் என்று விஜயா சொன்னவுடன் எனக்கும் அவங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று கமன்ட் அடிப்பது, பாட வேண்டும் என்று சொன்னவுடன் சின்ன ட்விஸ்ட் ஸ்டெப்ஸ் வைத்து ஆடும் அழகு, கிளப்-லும் போலீஸ் ஸ்டேஷன்-லும் பாலாஜியோடு பேசும் கிண்டல் கலந்த ஸ்டைல், பாலாஜி ஒரு கையால் மறு கையில் தட்டுவதை அவருக்கே செய்து காண்பிப்பது, காரில் வைத்து தன் மகளை காதலிக்க கூடாது என்று சொல்லும் மேஜரிடம் பதில் சொல்லாமல் சிரிப்பது, அவர்தான் தன் பாஸ் என்று தெரிந்துக் கொண்டேன் என்று அவரிடமே போய் சொல்வது, தங்கை தான் வாங்கி கொண்டு வந்த சாப்பாட்டை அவசரமாக பிடுங்கி சாப்பிடுவதை பார்த்து விட்டு வருத்தப்படுவது, தன்னால் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்று தெரிந்ததும் வந்து கையை பொசுக்கி கொள்வது, தன்னை சந்தேகப்படும் விஜயாவை அடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் முகம் மாறுவது - அவருக்கென்ன எந்த ரோலாக இருந்தாலும் எனக்கு ஒன்று தான் என்பதை உணர்த்தியிருப்பார்.

மற்ற கதாபாத்திரங்களை பொறுத்த வரை, இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி நீட்டாக செய்திருப்பார். வெளியில் தொழிலதிபர் உள்ளே சூதாட்ட கிளப்-ன் பாஸ் என்ற வழக்கமான ரோல் மேஜருக்கு. அவரும் வழக்கம் போல். நாயகி விஜயா. டாக்டர் ரோல்.ஆனால் அவரை விட கிளப் டான்சராக வரும் காஞ்சனாவிற்கு நல்ல ஸ்கோப். அவரும் அதை குறையில்லாமல் [அந்த காலக்கட்டத்தில் நாயகியின் பாத்திரப்படைப்பில் இயல்பாகவே அமையும் அபத்தங்களை தவிர்த்து பார்த்தால்] செய்திருப்பார். நாகேஷ் தான் ஏஜன்ட். ஆனால் நகைச்சுவை பஞ்சம். தங்கை வடிவாக வரும் பேபி கௌசல்யா முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு பிறகு முழுக்க பெட் Ridden.

ஆரூர்தாஸின் வசனங்கள் முதல் பதினைந்து நிமிடங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இயல்பாக எழுதியிருப்பார். எந்த திரைப்படமும் அது வெளியாகும் காலக்கட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ பிரதிபலிப்பது உண்டு. இதிலும் காரில் செல்லும் போது மேஜர் சிவாஜியை கேள்வி கேட்க அதை தடுக்க நினைக்கும் விஜயா ரேடியோவை வைக்க அதில் மளிகை சாமான்கள் விலை சொல்லுவார்கள். [அப்படி கூட ஒரு நிகழ்ச்சி வானொலியில் இருந்ததா என்ன?] அதில் துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ஒரு ரூபாய் எழுபத்திரண்டு பைசா என்று வரும். [இன்றைக்கு கிலோ ருபாய் எண்பதெட்டு என்று நினைக்கும் போது -ம்ம்].

திருலோகச்சந்தரை பொறுத்த வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட கதை, நடிகர் திலகம் மாதிரி ஒரு ஹீரோ. எனவே அவர் வேலை ஈசியாக முடிந்தது.

இனி பாடல்களுக்கு வருவோம். கண்ணதாசன் - எம்.எஸ்.வி. கூட்டணி.

1. தத்தி தத்தி தள்ளாட- எல்.ஆர். ஈஸ்வரி - கிளப் டான்ஸ் - காஞ்சனாவின் அறிமுக பாடல். நாகேஷின் சில நல்ல ஸ்டெப்ஸ்-ஐ பார்க்கலாம்.

2. கேட்டவரெல்லாம் பாடலாம் - படத்தில் அதிக பாப்புலர் ஆன பாடல். இந்த பாடலின் ட்யுன் போடும்போது தான் நான்கு ட்யுன்களில் எதை செலக்ட் செய்வது என தெரியாமல் இறுதியில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆபிசிற்கு வந்த போஸ்ட்மானை தேர்ந்தெடுக்க சொன்னதாக சொல்வார்கள். சாரதா இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார். நடிகர் திலகத்தின் ட்விஸ்ட் மற்றும் ஸ்டையிலான கைதட்டல் ஆகியவை இடம் பெறும். இதையே சிறிது நீட்டி ஊட்டி வரை உறவு படத்தில் ஹாப்பி இன்று முதல் ஹாப்பி பாட்டில் செய்வார். இந்த பாட்டின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஷாட்-களை பாஸ்ட் மெர்ஜிங் என்ற முறையில் சட்டென்று என்று மாறி மாறிக் காட்டுவார்கள். கவனித்து பார்த்தால் தெரியும். அது மட்டுமல்ல 1967-யிலேயே இதை முயற்சித்திருப்பது ஆச்சர்யம்.

3. தண்ணீரிலே தாமரை பூ - படத்தின் இன்னொரு அருமையான பாடல். நடிகர் திலகத்தின் குணசித்திர நடிப்பை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து. பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக கடைசி சரணத்தில்

எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு

என்ற வரிகளின் போது ரசிகர்கள் கைதட்ட பெண்கள் கண்ணீரை துடைத்துக் கொள்வார்கள். படத்தில் மீண்டும் ஒரு முறை பின்னணி இசை இல்லாமலும் இந்த பாடல் ஒலிக்கும்.

4. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - விஜயாவிற்கு ஒரே பாடல். கோபத்தில் இருக்கும் சிவாஜி மெது மெதுவாக இயல்பு நிலைக்கு வருவதை இதில் காணலாம்.

5. இனியது இனியது உலகம் - காரிலிருந்து இறக்கி விடப்படும் நடிகர் திலகம் ரோட்டில் பாடிக் கொண்டே வரும் காட்சி. இன்றைய OMR ரோடு என்று சொல்லுவார்கள். இதிலும் ஸ்டைல்தான் பிரதானம். பாடலின் முடிவில் அந்த வழியாக வரும் லாரியை கை காட்டி நிறுத்த முயற்சிக்க, காமிராவிற்கும் சிவாஜிக்கும் நடுவில் வரும் லாரி நிற்காமல் போக அடுத்த ஷாட்-ல் நடிகர் திலகம் தொங்கிக் கொண்டே போவது போல் வரும். தியேட்டரில் விசில் பறக்கும்.

6. நினைத்தேன் என்னை அழைத்தேன் உன்னை - கிளைமாக்ஸ் லீட் சீன், காஞ்சனா ஆடிப் படும் காட்சி. சரணத்தில் ஈஸ்வரி பிரமாதப்படுத்தியிருப்பார்.

இந்த படம் வெளி வருவதற்கு முன் வழக்கம் போல் கிண்டல் கேலி எல்லாம் இருந்தது. கணேசன் சண்டை காட்சியில் நடித்தால் யார் பார்ப்பது போன்ற கமன்ட்கள் அடிக்கப்பட்டன. இந்த படம் வெளியான போது இதற்கு போட்டியாக ஒரு படமும் வந்தது. எல்லா கிண்டல்களையும் புறந்தள்ளி மக்கள் தங்கையை வரவேற்றார்கள். சென்னையில் திரையிடப்பட்ட நான்கு அரங்குகளிலும் 50 நாட்களை கடந்தது படம். அவை

சித்ரா - 70 நாட்கள்

கிரவுன் - 70 நாட்கள்

உமா - 50 நாட்கள்

ஜெயராஜ் - 50 நாட்கள்.

மதுரையிலும் திருச்சியிலும் சேலத்திலும் 8 வாரங்களை கடந்த இந்த படம் கோவை - இருதயாவில் அதிகபட்சமாக 77 நாட்கள் ஓடியது. திருவருட்செல்வர் வெளியானதால் சென்னை- கிரவுன் போன்ற இடங்களில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது.

கொசுறு தகவல்- போட்டியாக வெளியான படத்தைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த முதல் படம், தமிழக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த ஜனவரி 12- ல் நடந்த சம்பவத்திற்கு பிறகு வெளியான முதல் படம், சொந்த சகோதரரே இயக்கிய படம். இவை அனைத்தும் இருந்தும் எந்த அரங்கிலும் 50 நாட்களை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. எப்போதும் போல் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் மட்டும்தான் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்தார்.

மொத்தத்தில் நடிகர் திலகத்தின் entertainer படங்களின் ஆரம்பம். ரசிக்கும்படியாகவே இருந்தது.

அன்புடன்

PS: 1.எங்கேயும் [மலேஷியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் கூட] இப்போது கிடைக்காத இந்த தங்கை திரைப்படத்தின் சிடியை ஒரு பிரதி எடுத்து எனக்கு கொடுத்ததற்கும்

2. சென்னை கோவை நகரங்களில் இந்த படம் ஓடிய சரியான நாட்களை உறுதிப்படுத்தியதற்கும் நண்பர் சுவாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

pammalar
23rd September 2009, 02:15 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது பணிவான, பசுமையான நன்றிகள் !!!

கலை தெய்வத்தின் பக்தன், தொண்டன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
23rd September 2009, 02:46 AM
தரணி போற்றும் நடிகரின் தங்கை திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டுமா ! டீவி வேண்டாம், விசிடி வேண்டாம், டிவிடி வேண்டாம் !! முரளி சார் எழுதிய திரைப்படக் கண்ணோட்டத்தை படித்தாலே போதும் !!! தங்கையை திரையரங்கில் பார்த்த திருப்தி ஏற்படும்.

முரளி சார் அவர்கள் "தன் கை" யால் படைத்துள்ள "தங்கை" திரைப்படப் பார்வை - மூன்று பாகங்களும் - வற்றாத ஜீவநதிகளாம் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்று பொங்கிப் பிரவாகிக்கின்ற்து.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd September 2009, 03:19 AM
நவராத்திரி நியூஸ்:

16-30 செப்டம்பர் 2006 தேதியிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் மாதமிருமுறை இதழில் வந்த ஒரு கேள்வி - பதில் :

'நவராத்திரி' யை மிஞ்சுமா 'தசாவதாரம்' ? (செல்வன், பிரியம்மாள்புரம்)

மிஞ்சித் தான் புகழ் பெற வேண்டும் என்ற நிலையில் கமலும் இல்லை. நடிகர் திலகத்தை யாரேனும் மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சமும் சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு நாளும் வர வாய்ப்பில்லை.

நடிப்புலக லிங்கோத்பவரை மிஞ்சவும் முடியுமோ ?!

நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

groucho070
23rd September 2009, 09:47 AM
Murali-sar, once again wonderful review and thoughts on Tanggai. I still have not seen the film.


Taneerile Tamarai Poo is beautiful song. Gosh, how I wish to see it on screen. So, does Iniyathu Iniyathu Ulagam. Thanks, Murali-sar. :D

pammalar
23rd September 2009, 11:48 AM
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ் நடிகர் திலகத்தின் நவராத்திரியிலும் (1964) நடித்திருக்கிறார், கமலின் தசாவதாரத்திலும் (2008) நடித்திருக்கிறார்.

அமரர் நாகேஷ் அவர்கள் காலத்தை வென்ற ஓர் அதிசய, அற்புதக் கலைஞன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th September 2009, 10:54 AM
பழம்பெரும் பிரபல திரைப்பட நடிகையும், பாடகியும், அண்ணல் நடிகர் திலகத்துடன் பல திரைப்படங்களில் நடித்தவருமான திருமதி. எஸ். வரலக்ஷ்மி அவர்கள் 22.9.2009 அன்று இரவு இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவுக்கு அண்ணல் நடிகர் திலகத்தின் நல்லிதயங்களின் சார்பில் ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்துகின்றோம். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

joe
24th September 2009, 11:04 AM
ஐம்பது ஆண்டுகள் ; ஐம்பது கேள்விகள்

http://thenaali.com/thenaali.aspx?A=1048

MUST READ

கேள்வி : உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது யார்?

கமல் : என்னுடைய அடிவானத்தில் எனக்கு தெரிந்த சூரியன் சிவாஜி கணேசன் .நான் பார்த்தது அவரைத்தான் .எனது பரிமாண வளர்ச்சிக்கு முதல்படி சிவாஜி தான்.

நம்மவரே :notworthy:

groucho070
24th September 2009, 11:15 AM
:D Terintha vishayamthane Joe. He never fails to acknowledge his debt to NT. He always insists that even the current generation of actors has ties to NT. Thanks for the link.

pammalar
24th September 2009, 12:29 PM
திரு. ஜோ அவர்கள் அளித்த லிங்க் படு ஜோர். அவருக்கு எமது நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th September 2009, 11:13 PM
Dear Joe Sir,
Kamal never fails to mention NT even at the slightest opportunity. He deserves more accolades. The best award to him came from NT himself when he admired Kamal and had full praise of him.

Coming to S. Varalakshmi. She has left a void in her place which can not be filled up. She has acted in about a dozen films with NT and sang in Kattabomman, Thaai, RAja Raja Sozhan, Thanga Surangam, among others. Particularly the song in Thanga Surangam is a soul stirring one and Mr. NeelD was kind enough to concede my request and posted the song in TFMPage POW in this hub. Thank you Neel. I request all the fans of NT to give the song a listening.
May her soul rest in peace.
Raghavendran

Murali Srinivas
24th September 2009, 11:14 PM
சுவாமி,

தங்கை திரைப்பட விமர்சனத்திற்காக என்னை [அளவுக்கதிகமாகவே] பாராட்டிய உங்களுக்கு நன்றி.

Raakesh,

Thanks. Do watch the movie. You will like it.

Regards

pammalar
25th September 2009, 02:52 AM
நவராத்திரி நியூஸ் :

நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான நவராத்திரி, 100 நாட்களுக்கு மேல் ஓடிய அபார வெற்றிப்படம். சிங்காரச் சென்னை மாநகரில் மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம் ஆகிய 4 திரையரங்குகளில் வெளியானது. நான்கு தியேட்டர்களிலும் 100 நாள் ஒடி அமோக வெற்றி பெற்றது.

மிட்லண்ட் - 101 நாட்கள்

மஹாராணி (846 இருக்கைகள்) - 101 நாட்கள்

உமா (762 இருக்கைகள்) - 101 நாட்கள்

ராம் (1140 இருக்கைகள்) - 101 நாட்கள்

சென்னை மாநகரில் 4 தியேட்டர்களில் வெளியாகி, நான்கிலும் 100 நாள் ஓடிய, மூன்றாவது நடிகர் திலகத்தின் படம், நவராத்திரி. முதல் இரண்டு திரைப்படங்கள் ஆலயமணி மற்றும் கை கொடுத்த தெய்வம்.

சிங்காரச் சென்னையில், 4 தியேட்டர்களில் வெளியான, 24வது நடிகர் திலகத்தின் படம், நவராத்திரி. நவராத்திரிக்கு முன் 4 தியேட்டர்களில் வெளியான நடிகர் திலகத்தின் 23 திரைப்படங்கள் - பணம், திரும்பிப் பார், மனிதனும் மிருகமும், துளி விஷம், கூண்டுக்கிளி, காவேரி, முதல் தேதி, நான் பெற்ற செல்வம், நல்ல வீடு, தெனாலிராமன், வாழ்விலே ஒரு நாள், வணங்காமுடி, சம்பூர்ண ராமாயணம், புனர்ஜென்மம், மருத நாட்டு வீரன், நிச்சய தாம்பூலம், ஆலயமணி, குலமகள் ராதை, குங்குமம், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், முரடன் முத்து.

மேலும், சென்னை தவிர, நடிகர் திலகத்தின் நவராத்திரி, மதுரை தேவி திரையரங்கிலும், திருச்சி சென்ட்ரல் திரையரங்கிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

மதுரை - தேவி (1549 இருக்கைகள்) - 108 நாட்கள்

திருச்சி - சென்ட்ரல் (1260 இருக்கைகள்) - 100 நாட்கள்

ஆக மொத்தம், நவராத்திரி, 3 சென்டர்களில் ( 6 தியேட்டர்களில்) 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.

மற்றைய பெரிய நகரங்களில், ஊர்களில் 8 முதல் 10 வாரங்களும், சிறிய ஊர்களில் 5 முதல் 7 வாரங்களும் ஓடிய பெரிய வெற்றிப்படம் நவராத்திரி.

அப்பொழுதெல்லாம் ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்சமாக 30 முதல் 35 பிரிண்டுகள் தான் போடுவார்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அந்தக் கணக்கின் அடிப்படையில் பார்க்கும் போது நவராத்திரி ஒரு மாபெரும் வெற்றிப்படம்.

நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

joe
25th September 2009, 06:47 AM
பம்மலார் அவர்களே,
பொதுவாக எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,கமல் ,ரஜினி அனைவரின் 100-வது படங்களும் வெற்றிப்படங்கள் அல்ல என சந்தடி சாக்கில் நவராத்திரி ஏதோ வசூலில் சுமார் தான் என ஒரு பொது பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது ..அதனை தகர்க்கும் விதமாக ஆதாரங்களை கொடுத்த உங்களுக்கு நன்றி. :D

pammalar
25th September 2009, 11:54 AM
நவராத்திரி நியூஸ் :

நவராத்திரியை பல தலைவர்கள், பிரமுகர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பார்த்துப் பாராட்டியதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நவராத்திரி வெளிவந்த சமயம், கர்மவீரர் காமராஜர் அவர்கள், சென்னை மிட்லண்ட் திரையரங்கில், நமது நடிகர் திலகத்துடன் இத்திரைப்படத்தைக் கண்டு களித்தார். படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தவர் அங்கே கூடியிருந்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு, " உள்ளே ஒன்பது விதமான சிவாஜிகள் வருகிறார்கள். அவர்களைப் பார்க்கவும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கே வெளியே வருகின்ற இந்த ஒரே சிவாஜியைப் பார்க்கவும் இவ்வளவு பெரிய கூட்டமா ?!" என்று மலைப்புடன் நடிகர் திலகத்தை வியந்து பாராட்டினார். படங்களையே அதிகம் பார்க்காத பெருந்தலைவரின் பாராட்டுக்களெல்லாம் பாரில் உள்ள பெரிய, பெரிய விருதுகளுக்குச் சமம்.

சினிமா பார்க்காதவர்களையெல்லாம் சினிமா பார்கக வைத்த சிங்கத்தமிழனுக்கு, அந்த சினிமா என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கின்றது.

நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
26th September 2009, 10:58 AM
டியர் பம்மலார்,

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எண்ணத்தாலும், செயலாலும் அண்ணனின் புகழ் பரப்புவதே குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் உங்கள் சேவை தொடர, நல்வாழ்த்துக்கள்.

(சகோதரர் ராகவேந்திரரின் அதே நிலைதான் எனக்கும். ஆம், ஐந்து நாட்களாக கணிணி இணைப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், சரியான தேதி குறிப்பிடப்படாததால், இம்மாதம் முழுதுமே உங்கள் பிறந்தநாள்தான். வாழ்க, வளர்க)

'நவராத்திரி'யின் பத்தாவது அவதாரத்தைக் கண்டுபிடித்த உங்களை பதினோராவது அவதாரம் என்று ராகவேந்திரர் அழைத்து சாலப்பொருத்தம்.

நவராத்திரி 100 நாட்களைக்கடந்த அரங்குகள் பட்டியல் அருமை. சகோதரி கிரிஜாவின் வெப்சைட்டில் இடம்பெற்றிருந்த 'தினத்தந்தி' சென்னை பதிப்பு விளம்பரத்தில், சென்னை அரங்குகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மதுரை, திருச்சி அரங்குகளையும் தெரிய வைத்ததற்கு நன்றி. இருக்கைகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அவை ஒவ்வொன்றும் சென்னையின் இரண்டு அரங்குகளுக்குச் சமம்.

நவராத்திரி பண்டிகையின்போது, நவராத்திரி காவியப்படம் பற்றிய தொடர் தகவல்கள் மகிழ்ச்சியூட்டுகின்றன. நன்றிகள் பல.

saradhaa_sn
26th September 2009, 11:35 AM
டியர் முரளி,

'தங்கை' படத்தை உங்கள் எழுத்தில் இன்னொருமுறை பார்த்தேன். அற்புதம், அட்டகாசம் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டோம். புதிதாக வேறு வார்த்தைகள் கண்டுபிடிக்கவேண்டும். நிச்சயதாம்பூலம்' படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் சண்டைக்காட்சி இடம்பெற்ற படமான தங்கை, நடிகர்திலகத்துக்கு ஒரு திருப்புமுனைதான். தங்கச்சுரங்கம், ராஜா, திருடன் போன்ற படங்கள் வர பிள்ளையார் சுழியிட்ட படம் என்றும் சொல்லலாம்.

மகளின் திருமணத்துக்காக பேங்க் பணத்தை வைத்து சூதாடி தோற்றுவிட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் செஞ்சிகிருஷ்ணனின் பாத்திரம் நம் நெஞ்சைப்பிசையும். கதாநாயகனாக நடிக்கும்போதும் கூட, இமேஜ் பார்க்காமல் வில்லத்தனமும் செய்த நாயகன் நடிகர்திலகம் மட்டுமே என நினைக்கிறேன். அவர் எந்தப்படத்திலும், தன்னை 'உலகையே காக்க வந்த உத்தமனாக' காண்பித்துக்கொண்டதில்லை.

தங்கையாக நடித்த ஜெயகௌசல்யா, பின்னாளில் நல்ல நடிகையாக வந்திருக்க வேண்டியவர். 'நீதி' வரையில் நன்றாக நடித்துக்கொண்டிருந்த அவரை (தோரகா படம் தயாரித்த) ராம்தயாள் குரூப், தங்களின் 'பிரபாத்' இந்திப்படத்துக்காக பம்பாய்க்கு அழைத்துச்சென்று 'வேறுவழியில்' இழுத்துச்சென்று சீரழித்து விட்டனர், பாவம்.

'கேட்டவரெல்லாம் பாடலாம்' பாடல் உருவான கதையை நான் முன்பு எழுதியதை நினைவில் வைத்து, விமர்சனத்தில் குறிப்பிட்டதற்கு நன்றி. (உங்களின் அபார நினைவாற்றல் உலகறிந்த ஒன்று).

'கலாட்டா கல்யாணம்' விமர்சனக்கட்டுரை முழுதும் டைப் பண்ணி, முடிக்கும் தறுவாயில் கரண்ட் கட் ஆக, அனைத்தும் அழிந்துவிட்டது. (என் கணவரின் டிப்ஸ்: 'நாலு, நாலு வரிகள் டைப் பண்ணியதும் SAVE பண்ணிக்கிட்டே வா'). விரைவில் மீண்டும் டைப் செய்து போஸ்ட பண்ணுகிறேன். (அதற்காக ஒதுக்கிய இடம் பல பக்கங்கள் பின்தங்கி விட்டதால், இனி புதிய பக்கத்தில்தான் போஸ்ட் பண்ணனும்).

படத்தின் பெயர்தான் 'தங்கை'யே தவிர, விடிவெள்ளி, பாசமலர், தங்கைக்காக, எதிரொலி, அண்ணன் ஒரு கோயில் இவற்றோடு ஒப்பிடுகையில் தங்கைப்பாசம் கொஞ்சம் குறைவுதான்.

saradhaa_sn
26th September 2009, 12:08 PM
பம்மலார் அவர்களே,
பொதுவாக எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,கமல் ,ரஜினி அனைவரின் 100-வது படங்களும் வெற்றிப்படங்கள் அல்ல என சந்தடி சாக்கில் நவராத்திரி ஏதோ வசூலில் சுமார் தான் என ஒரு பொது பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது ..அதனை தகர்க்கும் விதமாக ஆதாரங்களை கொடுத்த உங்களுக்கு நன்றி. :D
டியர் ஜோ,

வழக்கம்போல, நடிகர்திலகத்தின் சாதனைகளை இருட்டடிப்புச்செய்ய முயற்சித்து, அதில் அற்ப சந்தோஷமடையும் சிலரின் முயற்சியில் விளைந்த உண்மையற்ற தகவல் இது.

நடிகர்திலகத்துக்கு மட்டுமே 100-வது படம் பெரிய வெற்றியடைந்தது. மற்றவர்களுக்கு எத்தனையோ படங்கள் வெற்றியடைந்த போதிலும் 100 வது படம் சறுக்கியுள்ளது. உதாரணமாக...

நடிகர்திலகம்: நவராத்திரி (ஆறு இடங்களில் 100 நாள்)
மக்கள் திலகம்: ஒளிவிளக்கு (மதுரையில் மட்டும் 100 நாள்)
ஜெமினி : சீதா
கமல் : ராஜ பார்வை
ரஜினி: ராகவேந்திரர்
ஜெய்சங்கர் :இதயம் பார்க்கிறது
ரவிச்சந்திரன்: (100 படங்கள் பூர்த்தியாகவில்லை)
முத்துராமன்: புன்னகை
ஜெயலலிதா: திருமாங்கல்யம்
கே.ஆர்.விஜயா: நத்தையில் முத்து
சிவகுமார்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி (சென்னை ஸ்டாரில் மட்டும் சரியாக 100 நாள்)
பிரபு: ராஜகுமாரன்
சத்யராஜ்: வாத்தியார் வீட்டுப்பிள்ளை
விஜயகாந்த்: கேப்டன் பிரபாகரன் (வெற்றிப்படம்)

Murali Srinivas
27th September 2009, 12:15 AM
அன்புள்ள சாரதா,

நன்றி. நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் உண்மை. தங்கை, என் தம்பி மற்றும் திருடன் இவை மூன்றும் நடிகர் திலகத்தின் ரசிகனுக்கு மனதளவில் மிகுந்த சந்தோஷம் கொடுத்த படங்கள். நேரம் காலம் கூடி வரும் போது மற்ற படங்களைப் பற்றியும் பேசுவோம்

அன்புடன்

உங்கள் லிஸ்டில் ஒரு சின்ன திருத்தம். இளைய திலகத்தின் நூறாவது படமான ராஜகுமாரன், நாகர்கோவில் நகரத்தில் நூறு நாட்களை கடந்தது. [சக்ரவர்த்தி அரங்கம்]

pammalar
27th September 2009, 12:37 AM
நவராத்திரி புள்ளி விவரங்களைப் பாராட்டிய திரு. ஜோ அவர்களுக்கு எனது நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th September 2009, 01:45 AM
சகோதரி சாரதா அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது பசுமையான நன்றிகள் !

இத்திரியில் உள்ள அனைவரையும் போலவே, நானும், தங்களது கைவண்ணத்தில் வரவிருக்கும் கலாட்டா கல்யாண விமர்சனக் கட்டுரையைப் படிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் கலாட்டா கல்யாணத்தை, தங்களின் அபார எழுத்தாற்றல் என்கின்ற மேளதாளத்தோடு எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th September 2009, 03:05 AM
1946-ல் சக்தி நாடக சபாவில் இணைந்த சிவாஜி அவர்கள், அந்த நாடக சபாவிற்கே புதிய சக்தியை ஊட்டினார் என்றால் அது மிகையாகாது. அங்கு, பல நாடகங்களில், ராஜபார்ட்,ஸ்திரிபார்ட், கள்ளபார்ட் என பல தரப்பட்ட வேடங்களில், புகுந்து விளையாடினார். அந்த வேடங்களில் எதைச் சொல்வது ! எதை விடுவது ! எனினும், நூர்ஜஹான் நாடகத்தில், அவர் ஏற்று நடித்த நூர்ஜஹான் பெண் வேடத்தை, குறிப்பிட்டே தீர வேண்டும். அந்த ஸ்திரிபார்ட் வேடத்தை பார்த்து, பாராட்டி, மனதைப் பறி கொடுக்காத பிரபலங்களே இருக்க முடியாது. பெரும் கலா ரசிகரான அண்ணா அவர்களும், நூர்ஜஹானைப் பாராட்டாமல் இருப்பாரா ?

தனது இதயத்தில் கொலு வீற்றிருக்கும், சிவாஜி கணேசனின் நூர்ஜஹானைக் காண அண்ணா வருகை புரிந்தார். அப்போது நூர்ஜஹான் நாடகம் திண்டுக்கல்லில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முன் வரிசையில் அமர்ந்து, நாடகத்தை கண்டு களித்தார் அண்ணா. பின்னர் நாடகம் முடிந்ததும் மேடையேறியவர், " முன்பு கம்பீரமான மன்னர் வேடம் ஏற்று நடித்த கணேசன், தற்போது மென்மையும், பெண்மையும் கலந்து நிறைந்த இந்தப் பாத்திரத்தில் இவ்வளவு சிறப்பாக நடித்ததைக் கண்டு பிரமித்துப் போனேன். தொடர்க அவரது தொண்டு ! " என்று பலமாகப் பாராட்டி வாழ்த்தினார். அறிஞரின் பாராட்டைப் பெற்ற கணேசனின் முகத்தில் பூரிப்பு ! மனசுக்குள் மத்தாப்பு !!

அண்ணாவின் முதல் இதயக்கனி சிவாஜியே !!!

(ராஜபார்ட் - கதாநாயகன், ஸ்திரிபார்ட் - கதாநாயகி, கள்ளபார்ட் - வில்லன்)

பேரறிஞர் - நடிகர் திலகம் தகவல்கள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

Karikalen
27th September 2009, 05:13 AM
Nice thoughts about the legend

http://www.dinamalar.com/new/varamalar_detail.asp?News_id=893&dt=09-26-09

RAGHAVENDRA
27th September 2009, 07:20 AM
A lesson for Tamil Nadu Newspaper and electronic media:

Sunday Observer has listed important dates for the week beginning September 27 to October 3. For October 1, it has mentioned NT's Birth Day.
http://www.sundayobserver.lk/2009/09/27/jun01.asp

Will any Tamil magazine/ media come forward to do so?

Raghavendran

pammalar
28th September 2009, 01:29 AM
அனைவருக்கும் சரஸ்வதி , ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் !

பராசக்தி அருளாலும், சரஸ்வதி கடாக்ஷ்த்தாலும், நமது வித்யாபதியின் ஆசிகளாலும் எல்லாருக்கும் எல்லா வெற்றிகளும் கிடைக்கட்டும் !!

வாழ்க ! வளர்க ! வெல்க!

வித்யாபதி - சரஸ்வதி சபதம் திரைக்காவியத்தில் நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய, சரஸ்வதி தேவியின் அருள் பெற்ற, புலவர் பாத்திரம்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th September 2009, 02:06 AM
அருமையான "லிங்க்"கை அளித்த திரு. கரிகாலன் அவர்களுக்கு நன்றி !

நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி, அவரைப் பற்றிய சிறந்ததொரு கட்டுரையை, வெளியிட்டுள்ள தினமலர் வாரமலர், ஒரு வாசமிகு வாடாமலர்.

கட்டுரையில் சில திருத்தங்கள் :

1. 6வது பாராவின் தொடக்கம் "சிவாஜியின் 125வது படம்" என்று இருக்க வேண்டும்.

2. அண்ணா அவர்கள் நடிகர் திலகத்தைப் பாராட்டிப் பேசியது உயர்ந்த மனிதன் வெற்றி விழாவில் அல்ல. நடிகர் திலகம் , 125 திரைப்படங்களில் , கதாநாயகனாகவே வெற்றிகரமாக நடித்து முடித்ததைப் போற்றும் வகையில், அவருக்கு நடைபெற்ற பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் தான், அண்ணா அவர்கள் நடிகர் திலகத்தை அவ்வாறு பாராட்டிப் பேசினார்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th September 2009, 02:45 AM
டியர் ராகவேந்திரன் சார்,

லவ்லி லிங்க்! நன்றி !!

நமது சிவாஜி சமூகமே சண்டே அப்சர்வருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் மூலம், சண்டே அப்சர்வரும், நம்மைப் போன்றதொரு சிவாஜி அப்சர்வர் , என்று நிரூபித்துள்ளது மற்றும் தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொண்டும் உள்ளது.

"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்.

நடிகர் திலகம் போன்ற உலகப் பெரும் சாதனையாளர்களை, நிரந்தர இருட்டடிப்பு செய்வது தான், இந்தத் தமிழ் இனத்தின், அந்தத் தனியொரு குணமோ ?

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th September 2009, 11:56 AM
நவராத்திரி நியூஸ் :

ஆனந்த விகடன் 23.7.2008 இதழில், "ஹாய் மதன்" பகுதியில், வெளிவந்த ஒரு கேள்வி-பதில் :

நவராத்திரி சிவாஜி - தசாவதாரம் கமல் ஒப்பிடுங்களேன் ...? (கே.எம். ஃபாரூக், சென்னை - 92)

அவர் நடித்துக் காட்டினார். இவர் மாறிக் காட்டினார்.

சபாஷ் மதன் ! ஒன்பது பாத்திரங்களில் அவர், திறமையால் நடித்துக் காட்டினார். பத்து வேடங்களில் இவர், மேக்கப்பால் மாறிக் காட்டினார்.

சிவாஜி சிவாஜி தான் ! கமல் கமல் தான் !

இதிலிருந்து கமல் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருதக் கூடாது. இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் கமல் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. நமது நடிகர் திலகமே வியந்து போற்றிய உன்னதக் கலைஞரல்லவா கமல் ! அவரது திரையுலகப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !!!

நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
28th September 2009, 02:52 PM
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் பற்றிய கலந்தாய்வு நேற்றிரவு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகநாயகன், கலைஞானி, பத்மஸ்ரீ, டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சேரன், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் கலந்துகொண்டனர். ப்ரியதர்ஷினி தொகுத்தளித்தார்.

மற்றவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப்பற்றியும் தற்போதைய தமிழ்த்திரைப்படங்களில் வரவேண்டிய முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் குறித்தும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, நிறைகுடம் கமல் மட்டும் அவ்வப்போது நடிகர்திலகத்தைப்பற்றி நினைவுகூர்ந்து, அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி, தற்போதைய பிரச்சினைகளைப் பற்றி அலசும் ஒரு திரைப்படக் கலந்தாய்வில், நடிகர்திலகத்தை நினைவுகூர்வது என்பதும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப்பற்றி உய்ர்வாகக்குறிப்பிடுவதை தன் கொள்கைகளில் ஒன்றாக வைத்திருக்கும் கமல் அவர்களின் குருபக்தி நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இத்தனைக்கும், கமல் அவர்களிடம் நடிகர்திலகத்தின் தாக்கம் குறைவு. அவரிடம் எடுத்துக்கொள்ள வேண்டியதை எடுத்துக்கொண்டு, அதை தன் பாணியில் வெளிக்கொணர்வது என்பது கமலின் இயல்பு. ஆனால், நடிகர்திலகத்தை அப்பட்டமாக காப்பியடித்து நடித்து பேரும் புகழும் அடைந்தவர்கள் பலரே, அவரைப்பற்றி பேசுவது பாவம் என்பது போல் இருக்க, சமயம் வாய்க்கும்போதெல்லாம் நடிகர்திலகத்தைப் பற்றி உயர்த்திப்பேசி பெருமைப்படுத்தும் கமல் அவர்களின் பண்பு போற்றுதலுக்குரியது.

நடிகர்திலகத்தைப்பற்றி வழக்கம்போல வெளியிடும் ஆதங்கத்தையும் வெளியிட்டார். அவருடைய இறுதிக்காலத்தில் அவரது திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை என்பதைச் சொல்லும்போது "ஒரு சிங்கத்துக்கு வெறும் தயிசாதம் கொடுத்தே கொன்னுட்டோம்".

இன்னொரு விஷயம், நேற்றைய கலந்துரையாடலில் கமல் மட்டுமே நடிகர்திலகத்தைப் பற்றிப்பேசினார். மற்றவர்கள் அவரைப்பற்றி வாய்திறக்கவே இல்லை. அவர் பேசியதைக்கூட தொடரவில்லை.

தமிழ்த்திரைப்படத்தை உலகத்தரத்துக்கு உயர்த்துவதையே தன் உயிர்மூச்சாகக்கொண்டு வாழும், அதற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் டாக்டர் கமல் அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் இதய்ப்பூர்வமான வாழ்த்துக்கள்.

புதிய இசையமைப்பாளராக உருவாகியிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் வாழ்த்துக்கள்.

joe
28th September 2009, 04:16 PM
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் பற்றிய கலந்தாய்வு நேற்றிரவு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உலகநாயகன், கலைஞானி, பத்மஸ்ரீ, டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சேரன், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் கலந்துகொண்டனர். ப்ரியதர்ஷினி தொகுத்தளித்தார்.

மற்றவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப்பற்றியும் தற்போதைய தமிழ்த்திரைப்படங்களில் வரவேண்டிய முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் குறித்தும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, நிறைகுடம் கமல் மட்டும் அவ்வப்போது நடிகர்திலகத்தைப்பற்றி நினைவுகூர்ந்து, அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி, தற்போதைய பிரச்சினைகளைப் பற்றி அலசும் ஒரு திரைப்படக் கலந்தாய்வில், நடிகர்திலகத்தை நினைவுகூர்வது என்பதும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப்பற்றி உய்ர்வாகக்குறிப்பிடுவதை தன் கொள்கைகளில் ஒன்றாக வைத்திருக்கும் கமல் அவர்களின் குருபக்தி நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இத்தனைக்கும், கமல் அவர்களிடம் நடிகர்திலகத்தின் தாக்கம் குறைவு. அவரிடம் எடுத்துக்கொள்ள வேண்டியதை எடுத்துக்கொண்டு, அதை தன் பாணியில் வெளிக்கொணர்வது என்பது கமலின் இயல்பு. ஆனால், நடிகர்திலகத்தை அப்பட்டமாக காப்பியடித்து நடித்து பேரும் புகழும் அடைந்தவர்கள் பலரே, அவரைப்பற்றி பேசுவது பாவம் என்பது போல் இருக்க, சமயம் வாய்க்கும்போதெல்லாம் நடிகர்திலகத்தைப் பற்றி உயர்த்திப்பேசி பெருமைப்படுத்தும் கமல் அவர்களின் பண்பு போற்றுதலுக்குரியது.

நடிகர்திலகத்தைப்பற்றி வழக்கம்போல வெளியிடும் ஆதங்கத்தையும் வெளியிட்டார். அவருடைய இறுதிக்காலத்தில் அவரது திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை என்பதைச் சொல்லும்போது "ஒரு சிங்கத்துக்கு வெறும் தயிசாதம் கொடுத்தே கொன்னுட்டோம்".

இன்னொரு விஷயம், நேற்றைய கலந்துரையாடலில் கமல் மட்டுமே நடிகர்திலகத்தைப் பற்றிப்பேசினார். மற்றவர்கள் அவரைப்பற்றி வாய்திறக்கவே இல்லை. அவர் பேசியதைக்கூட தொடரவில்லை.

தமிழ்த்திரைப்படத்தை உலகத்தரத்துக்கு உயர்த்துவதையே தன் உயிர்மூச்சாகக்கொண்டு வாழும், அதற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் டாக்டர் கமல் அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் இதய்ப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அந்த நிகழ்ச்சியை பார்த்த பின் ,நான் இங்கே சொல்ல நினைத்ததை முழுவதுமாக சொல்லிவிட்டீர்கள் :D

இதனால் தான் நான் கமலஹாசனை எப்போதும் 'நம்மவர்' என்றழைக்கிறேன் :D

pammalar
28th September 2009, 10:31 PM
நவராத்திரி நியூஸ் :

நவராத்திரி திரைக்காவியம் குறித்து 'நச்'சென்று ஒரே வரியில் நடிகர் திலகம் கருத்து கூறியிருக்கிறார் :

" நடிப்பிற்கும் நடிகனுக்கும் போட்டி ".

ஆஹா ! என்னே அருமையான , நுட்பமான பதில் !!

நடிகர் திலகம் பதில் அளிப்பதிலும் திலகமே !!!

நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th September 2009, 01:16 AM
நவராத்திரி நியூஸ் :

நடிகர் திலகத்துடன் நவராத்திரி திரைக்காவியத்தில் நடித்த அனுபவங்களைக் கூறுகிறார் நடிகையர் திலகம் :

"நவராத்திரியில் சிவாஜி அண்ணாவுடன் நடிக்கும் போது , அது அவரது 100வது படம் என்று எனக்குத் தெரியாது. பின்னரே தெரிந்து கொண்டேன். அவருடன் நடிக்கும் போது , உடன் யார் நடித்தாலும் ,அவரது நடிப்பிற்கேற்ப , கட்டாயம் ரியாக்ட் பண்ணியாக வேண்டும். அவருடன் நடிப்பது மிகவும் எளிதானது. எப்படியென்றால், நாம் டல்லடித்து விடக் கூடாது என்கின்ற வீம்பும், பிடிவாதமும் அவரோடு நடிப்பவர்களுக்கு தாமாகவே வந்து விடும். நவராத்திரி திரைப்படத்தில், அவர் ஏற்கனவே நடித்த ஒரு வேடத்தை, அவர் முன்னிலையிலேயே, சரியாக நான் இமிடேட் பண்ணிக் காட்டியதை, முகம் சுளிக்காமல் மனமார ஏற்றுக் கொண்டு புகழ்ந்ததை என்னால் மறக்கவே முடியாது. தெருக்கூத்தையே நான் பார்த்ததில்லை. இத்திரைப்படத்தில் , சத்தியவான் - சாவித்திரி தெருக்கூத்தில் , நான் சாவித்திரியாக நடித்த அந்த வேடம், முழுக்க முழுக்க அவரிடமே பாடம் கற்றுக் கொண்டு நடித்தது. பின்னர், அதனைப் படத்தில் பார்த்த போது ரொம்ப நன்றாக அமைந்ததாகக் கருதினேன். மிகவும் சந்தோஷப்பட்டேன். "

ஆழமான , அழகான கருத்துக்கள் !

நவராத்திரியில் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து நடிக்க நடிகையர் திலகத்தால் மட்டுமே முடியும், முடிந்தது என்பது யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை !!

நவராத்திரி நியூஸ் கன்டினியூஸ் ...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th September 2009, 04:26 AM
அருள்மிகு மீனாக்ஷி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதியிலே, 4.10.2009 அன்று கலையுலக சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகத் திருவிழா.

ஆம் ! மதுரை மாநகரில் மா நிலம் போற்றும் உலக மகா நாயகருக்கு சிலை திறப்பு விழா.

இந்த நல்ல வேளையிலே, சங்கத்தமிழ் கண்ட மதுரையிலே, தங்கம் சினிமா திரையரங்கிலே, சிங்கத்தமிழன் நிகழ்த்திய சிகர சாதனைகளைக் காணீர் ! காணீர்!!

(இந்த சாதனைகளையெல்லாம் மற்றைய திரையுலக நடிகர்கள் கனவிலும் நினைத்துப் பார்கக முடியாதவை)

ஆசியப் பெருங் கண்டத்திலேயே, மிகப் பெரிய திரையரங்கம், மதுரை தங்கம் சினிமா திரையரங்கம். 2593 இருக்கைகளைக் கொண்டது. இத்தகைய உலகப் பெரும் திரையரங்கிலே, உலகின் தலைசிறந்த நடிகர், நமது நடிகர் திலகத்தின் ஈடு , இணையற்ற, காலனையும், காலத்தையும் வென்ற சாதனைகளைப் பாரீர் ! பாரீர் !!

தங்கம் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம், நமது நடிகர் திலகத்தின் முழு முதற் காவியமான பராசக்தி. 17.10.1952, தீபாவளியன்று வெளியான இக்காவியம், இங்கே 112 நாட்கள் ஓடியது. ஆக, தங்கம் திரையரங்கில் வெளியான முதல் படமும், ஓடிய முதல் நூறு நாள் படமும் சிங்கத்தமிழனின் படம் தான். இதிலிருந்து, இத்திரையரங்கில் வெளியான கடைசி நடிகர் திலகத்தின் படமான என்னைப் போல் ஒருவன் வரை, தங்கத்தில், நடிப்புலகத் தங்கம் செய்த சாதனைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்ற ஃபார்மெட்டில்)

1. பராசக்தி - 17.10.1952 - 112 நாட்கள்

2. திரும்பிப் பார் - 10.7.1953 - 56 நாட்கள்

3. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 13.4.1954 - 45 நாட்கள்

4. எதிர்பாராதது - 9.12.1954 - 71 நாட்கள்

5. முதல் தேதி - 12.3.1955 - 33 நாட்கள்

6. நல்ல வீடு - 14.1.1956 - 27 நாட்கள்

7. பெண்ணின் பெருமை - 17.2.1956 - 77 நாட்கள்

8. வணங்காமுடி - 12.4.1957 - 78 நாட்கள்

9. தங்கமலை ரகசியம் - 29.6.1957 - 55 நாட்கள்

10. பொம்மை கல்யாணம் - 3.5.1958 - 35 நாட்கள்

11. மரகதம் - 21.8.1959 - 67 நாட்கள்

12. படிக்காத மேதை - 25.6.1960 - 116 நாட்கள்

13. குங்குமம் - 2.8.1963 - 35 நாட்கள்

14. அன்னை இல்லம் - 15.11.1963 - 60 நாட்கள்

15. கர்ணன் - 14.1.1964 - 108 நாட்கள்

16. அன்புக்கரங்கள் - 19.2.1965 - 49 நாட்கள்

17. நிறைகுடம் - 8.8.1969 - 42 நாட்கள்

18. எங்க மாமா - 14.1.1970 - 51 நாட்கள்

19. எதிரொலி - 27.6.1970 - 28 நாட்கள்

20. பாதுகாப்பு - 27.11.1970 - 35 நாட்கள்

21. நீதி - 7.12.1973 - 56 நாட்கள்

22. இளைய தலைமுறை - 28.5.1977 - 49 நாட்கள்

23. என்னைப் போல் ஒருவன் - 18.3.1978 - 41 நாட்கள்

ஆக மொத்தம், தங்கம் திரையரங்கில், சிங்கத்தமிழன் அவர்களுக்கு,

100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள் : 3

50 நாட்களிலிருந்து 99 நாட்கள் வரை ஓடிய திரைக்காவியங்கள் : 9

4 வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை ஓடிய திரைக்காவியங்கள் : 11

4 வாரங்களுக்கு குறைவாக, எந்தவொரு சிங்கத்தமிழனின் படமும் தங்கத்தில் ஓடவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

(தங்கத்தில் 4 வாரங்கள் என்பது, மற்ற பெரிய திரையரங்குகளில், 8 வாரங்களுக்கு மேல் ஓடுவதற்குச் சமம்.)

உலகின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான தங்கத்தில், மூன்று 100 நாள் படங்களைக் கொடுத்த ஒரே ஆசிய நடிகர், உலக நடிகர் திலகம் ஒருவரே !

இதிலிருந்து தெரிகிறதல்லவா !! சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு ஒரே சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !!!

இத்தகவல்களை யாம் தொகுத்தளிக்க, உதவி புரிந்த, மதுரையின் பழம்பெரும் ரசிக நல்லிதயம், திரு. சிவநாத் பாபு அவர்களுக்கு எமது பல கோடி நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th September 2009, 05:54 AM
டியர் பம்மலார்,
இரண்டு சக்கரங்களும் சாலப் பொருந்தி ஒன்றுக்கொன்று கருத்தொருமித்துப் போகும் போது வண்டிக்கு அதை விட வேறென்ன வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைகள் என்ற வண்டியை முரளி சீனிவாஸ் என்ற சக்கரம் ஒரு புறமும் பம்மலார் என்ற சக்கரம் இன்னொரு புறமும் தாங்கிச் செல்லும் போது அதில் சவாரி செய்யும் பெருமையை நாங்கள் பெறுகிறோம், உவகை கொள்கிறோம், ஆனந்தம் அடைகிறோம்.... வண்டிக்காரன் பெருமை கொள்கிறார் ... நம்ம வண்டியை விட சிறந்த வண்டி இந்த உலகத்திலேயே கிடையாது ...

தங்களிருவரின் தொண்டு நடிகர் திலகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. மேலும் மேலும் நடிகர் திலகத்தின் சாதனைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொண்டு ....

ராகவேந்திரன்

joe
29th September 2009, 08:15 AM
Kamal Haasan garlands Sivaji Ganesan statue

Vijay TV's Ulaganayagan Kamal 50 - Oru Thodarum Sarithiram, commemorating World Star Kamal Haasan's 50th year in Tamil cinema, was held on a grand scale at the Nehru Stadium in Chennai on Monday. All the big names of the Tamil film industry assembled to honour Kamal on his unique distinction.

Kamal Haasan, along with a selected bunch of VIPs, reached the venue in the Vijay TV bus that was launched preceding the grand event. Kamal garlanded the statue of thespian actor Sivaji Ganesan on Marina Beach before reaching the venue.

நம்மவரே ! :notworthy:

groucho070
29th September 2009, 08:35 AM
Kamal Haasan, along with a selected bunch of VIPs, Kaduppa sollura mathiri irukku :lol:

நம்மவரே ! :notworthy: :notworthy:

saradhaa_sn
29th September 2009, 11:32 AM
டியர் பம்மலார்,
இரண்டு சக்கரங்களும் சாலப் பொருந்தி ஒன்றுக்கொன்று கருத்தொருமித்துப் போகும் போது வண்டிக்கு அதை விட வேறென்ன வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைகள் என்ற வண்டியை முரளி சீனிவாஸ் என்ற சக்கரம் ஒரு புறமும் பம்மலார் என்ற சக்கரம் இன்னொரு புறமும் தாங்கிச் செல்லும் போது அதில் சவாரி செய்யும் பெருமையை நாங்கள் பெறுகிறோம், உவகை கொள்கிறோம், ஆனந்தம் அடைகிறோம்.... வண்டிக்காரன் பெருமை கொள்கிறார் ... நம்ம வண்டியை விட சிறந்த வண்டி இந்த உலகத்திலேயே கிடையாது ...

தங்களிருவரின் தொண்டு நடிகர் திலகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. மேலும் மேலும் நடிகர் திலகத்தின் சாதனைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொண்டு ....

ராகவேந்திரன்
டியர் ராகவேந்தர், நீங்கள் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.

அதே சமயம், நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் பணியில் உங்களது பங்களிப்பும் ஒன்றும் சாதாரணமானதல்ல. நடிகர்திலகம் இணையதளம் ஒன்றே போதும் உங்களின் அபார உழைப்பைப் பறைசாற்றுவதற்கு.

டியர் பம்மலார்,

மதுரை தங்கத்தில் நடிகர்திலகத்தின் சாதனைகள் தங்கத்தகட்டில் பொறிக்கப்பட வேண்டியவை. மதுரை தங்கம் திரையரங்கம், இருக்கைகளின் எண்ணிக்கையில் சென்னையின் மூன்று அரங்குகளுக்குச்சமம். அந்த வகையில் தங்கத்தில் திரையிடப்பட்ட படங்களில் நல்லவீடு, எதிரொலி தவிர்த்து மற்ற அனைத்தும் 100 நாள் படங்களே. அதுமட்டுமல்ல பராசக்தி, படிக்காதமேதை, கர்ணன், எதிர்பாராதது, பெண்னின் பெருமை, வணங்காமுடி போன்றவை வெள்ளிவிழாப்படங்கள் என்று சொல்லலாம்.

தங்கத்தின் சாதனைகளைத் தந்ததுபோல மதுரையில் நடிகர்திலகத்தின் நாற்பெரும் கோட்டைகளாக விளங்கிய சிந்தாமணி, சென்ட்ரல், தேவி, நியூசினிமா (மற்றும் திருச்சி பிரபாத்)அரங்குகளில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடிய நாட்களின் பட்டியலையும் தருவீர்கள் என அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

pammalar
29th September 2009, 08:15 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது பாராட்டுக்களுக்கு மிகுந்த நன்றி ! தங்களைப் பற்றிய சகோதரி சாரதா அவர்களின் கூற்றை முழுமையாக ஆமோதிக்கிறேன். தங்களின் இணையதளத் தொண்டு, மற்ற எல்லாருடைய நடிகர் திலகத்தின் பணிகளை விட , தலையாயது, முதன்மையானது. நமது நடிகர் திலகத்தின் புகழைப் பறைசாற்றும் வகையில், தாங்கள் புரிந்து வரும் இத்திருத்தொண்டு , மென்மேலும் சிறந்து மேலோங்கவும், தாங்கள் இதில் மேலும் பற்பல வெற்றிகளையும், பாராட்டுக்களையும் குவிக்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

சகோதரி சாரதா அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுக்களுக்கு பற்பல நன்றிகள் ! மதுரை தங்கம் திரையரங்கைப் பொறுத்த வரை, தாங்கள் எழுதியவை முற்றிலும் உண்மை. தாங்கள் கூறிய ஏனைய விஷயங்களை, கணேசரின் அருளோடும், காலதேவனின் துணையோடும் விரைவில் நிறைவேற்றுவோம் !

டியர் ஜோ சார்,

தமது பாராட்டு விழாவிற்குச் செல்லும் சமயத்தில் கூட, நடிகர் திலகத்தின் திருவுருவச் சிலைக்கு, மாலையணிவித்து, மரியாதை செய்து விட்டு - அதன் பின்னர் விழாவிற்குச் - செல்லும் கமல் அவர்களின் செயலை, நடிகர் சமுதாயமும் , நடிகர் சங்கமும் பின்பற்ற வேண்டும். கமல் அவர்களின் அபார சிவாஜி பக்தி (குரு பக்தி) போற்றுதலுக்குரியது ! பாராட்டுதற்குரியது !!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th September 2009, 11:51 PM
அனைவருக்கும், வாழ்வியல் திலகம் வாழ்ந்து காட்டிய, வசந்த மாளிகை திரைக்காவியத்தின் ஆண்டு விழா நல்வாழ்த்துக்கள் !

இன்று (29.9.2009) காலத்தை வென்ற காதல் காவியமாம், வசந்த மாளிகை திரைக்காவியத்தின் 38வது ஆண்டு தொடக்க தினம் !! இந்நன்னாளில், இத்திரைக்காவியம் உருவாக்கிய , வரலாறு காணாத சாதனைகளை தரிசிப்போம் :

"வசந்த மாளிகை" நடிகர் திலகத்தின் 159வது திரைக்காவியம் , 26வது வண்ணப்படம் .

வெளியான தேதி : 29.9.1972

தயாரிப்பு : விஜயா - சுரேஷ் கம்பைன்ஸ்

தயாரிப்பாளர் : டி. ராமாநாயுடு

இயக்கம் : கே.எஸ். பிரகாஷ் ராவ்

பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்

இசை : திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்

வசந்த மாளிகை, 287 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய மகா மெகா ஹிட் காவியம். பராசக்திக்குப் பின் இந்தியாவிலும் , இலங்கையிலும் வெள்ளி விழா கொண்டாடிய தங்கத்தமிழ்மகனின் திரைக்காவியம்.

வெள்ளி விழா கண்ட திரையரங்குகள் :

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 176 நாட்கள்

2. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 200 நாட்கள்

3. கொழும்பு - கெப்பிடல் - 287 நாட்கள்

4. கொழும்பு - பிளாசா - 176 நட்கள்

5. யாழ்ப்பாணம் - வெலிங்டன் - 217 நாட்கள்

வெள்ளி விழா கொண்டாடிய ஊர்கள் / அரங்குகள் : 4 / 5

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள் :

6. சென்னை - கிரெளன் (1017 இருக்கைகள்) - 140 நாட்கள்

7. சென்னை - புவனேஸ்வரி (1025 இருக்கைகள்) - 140 நாட்கள்

8. திருச்சி - ராஜா (728 இருக்கைகள்) - 140 நாட்கள்

9. கோயமுத்தூர் - ராஜா (1423 இருக்கைகள்) - 107 நாட்கள்

10. சேலம் - ஜெயா - 107 நாட்கள்

10. வேலூர் - அப்ஸரா - 107 நாட்கள்

12. ஈரோடு - முத்துக்குமார் (1220 இருக்கைகள்) - 107 நாட்கள்

13. தஞ்சாவூர் - ஜூபிடர் - 119 நாட்கள்

14. கும்பகோணம் - ஜூபிடர் - 101 நாட்கள்

15. மாயவரம் - அழகப்பா (885 இருக்கைகள்) - 101 நாட்கள்

16. யாழ்ப்பாணம் - லிடோ - 100 நாட்கள்

100 நாட்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 10 / 11

ஆக மொத்தம், வசந்த மாளிகை , 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 12 / 16

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு , சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே , நிரந்தர சக்கரவர்த்தி !!!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
29th September 2009, 11:53 PM
நன்றி சுவாமி நன்றி. எங்கள் மதுரையின் புகழை, அங்கே நடிகர் திலகம் அன்றும் இன்றும் என்றும் ஆட்சி புரிவதை சான்றுகளோடு எடுத்துக் காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

தங்கம் திரையரங்கில் சாதனைகளில் குறிப்பிடப்பட வேண்டிய மேலும் ஒரு சில விஷயங்கள்.

1. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தங்கத்தைத் தவிர நியூசினிமாவிலும் திரையிடப்பட்டது. மதுரையில் முதன் முதலாக ஒரே படம் இரண்டு அரங்குகளில் வெளியான சாதனையை நிகழ்த்தியவர் நடிகர் திலகம்.

2. முதன் முதலாக தங்கத்தில் தொடர்ந்து 15 காட்சிகள் அரங்கு நிறைந்தது அன்னை இல்லம் படத்திற்குதான். முதன் முதலாக ஒரே வாரத்தில் அரை லட்சத்திற்கு மேல் வசூலித்த படமும் அன்னை இல்லம் தான்.

3. அந்த முதல் வார வசூல் சாதனையை முறியடித்த படம் எங்க மாமா. 7 நாட்களில் Rs 57,000/- வசூல் பெற்ற இந்த படம் 15 நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூலித்த சாதனையை செய்தது.

4. அந்த சாதனையையும் முறியடித்தவர் மறுபடியும் நடிகர் திலகம்தான். முதல் வாரத்தில் ருபாய் 80,000/- வசூல் செய்த படம் என்னைப் போல் ஒருவன்.இந்த படம் பத்தே நாட்களில் ஒரு லட்ச ரூபாய் வசூல் செய்தது.

இன்று வசந்த மாளிகை ஜெயந்தி தினம். 37 வசந்தங்களுக்கு பிறகும் நினைத்து நினைத்து மகிழ எத்தனை எத்தனை இனிமையான நினைவுகள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் கூட 37 வருடங்களுக்கு முன்பு இதே தேதியில் [முதல் நாள்] மதுரை நியூசினிமாவில் இரவுக் காட்சிக்கு கூடிய கூட்டம், அதுவும் கொட்டும் மழையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் கூடிய கூட்டம் இன்றும் கண் முன்பே நிற்கிறது.

அன்புடன்

Murali Srinivas
30th September 2009, 12:46 AM
நடிகர் திலகத்தின் 81வது பிறந்த தின விழா நிகழ்ச்சிகள்

நாள் - 01.10.2009, வியாழன்.

நேரம் - மாலை 6.30 மணி.

இடம் - கலைஞர் அரங்கம், அறிவாலயம்.

சிறப்பு விருந்தினர் - தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அவர்கள்.

டாக்டர் சிவாஜி விருது பெறுபவர்கள்

இந்திய இசைக் குயில் திருமதி பி.சுசீலா அவர்கள்

கவிஞர்,பாடகர், இசையமைப்பாளர் திரு. பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்

பல்துறை வித்தகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்

ஒப்பனைக் கலைஞர் திரு.எல்.முத்தப்பா அவர்கள்
[நடிகர் திலகத்திற்கு பராசக்தியில் ஒப்பனை செய்தவர்].

புத்தக வெளியீடு

நடிகர் திலகத்தின் நண்பரும் சம்பந்தியுமான வேட்டைகாரன்புதூர் முத்துமாணிக்கம் நடிகர் திலகத்தோடு வேட்டையாட சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் தொகுத்து எழுதப்பட்ட வேட்டைக்கு வந்த சிங்கம் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.

சிறப்பு தபால் உறை வெளியீடு

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் சிறப்பு தபால் உறையை வெளியிட்டு பேசுபவர்

திரு.த.மூர்த்தி, அஞ்சல் துறைத் தலைவர், தமிழ் நாடு.

நன்கொடை

சென்னை அண்ணா நகரில் இயங்கும் இந்திய ஆட்சிப் பணி பயிற்ச்சி மையமான போக்கஸ் அகாடமிக்கு [Focus Academy] சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் நன்கொடை வழங்கப்படுகிறது.

சிறப்புரை - டாக்டர் A.அறிவொளி அவர்கள்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் - திரு மோகன் ராம் அவர்கள்

அன்புடன்

joe
30th September 2009, 08:04 AM
NT birthday - Dinamalar spl article
http://www.dinamalar.com/new/varamalar_detail.asp?News_id=893&dt=09-26-09

(check the reader comments to see NT is immortal)

மக்கள் திலகத்தோடு ஆபூர்வ புகைப்படம்
[html:5a89204905]
http://img.dinamalar.com/data/more_pic_gallery/vmalarnews_78762453795.jpg[/html:5a89204905]

pammalar
30th September 2009, 10:53 AM
டியர் முரளி சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கு எனது அன்பான நன்றிகள் ! தங்கம் குறித்து தாங்கள் அளித்த தகவல்கள், சொக்கத்தங்கம் !! நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை , அனைவரையும் போல, நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் !!!

அன்புடன்,
பம்மலார்.

groucho070
30th September 2009, 01:10 PM
[tscii]
Dear NT fans, to commemorate NT's Birthday tomorrow, I have written something about NT and the suffering his characters went through on screen. It's a light hearted piece so take it easy.

Joe, thanks for giving green light. Joe is my TFI forum censorboard :lol:

---
Sivaji Ganesan & The Sadists.

[html:02ee31359c]
http://www.timescontent.com/tss/photos/preview/23607/Nadigar%20Thilagam%20Sivaji%20Ganesan.jpg
[/html:02ee31359c]

We all know what a great onscreen performer Sivaji Ganesan was. Having played many roles in films directed by directors so many, it is easy to assume that Sivaji or Nadigar Thilagam (loosely translated as Greatest Actor & abbreviated in online forums as NT) seriously requires many entries in the Guinness World Book of Records. As such, I want to put claim to the amount of sadistic physical & emotional torture his characters had to endure in that list…while at the same time put the directors responsible in the stand.

Let’s start with his first film itself, Parasakthi, directed by Krishnan Panju team. As soon as the rich, beaming youthful and very handsome NT finds himself in the home soil of Chennai, he was duped, robbed rendered penniless and later became mentally unsound. The final blow came when he had to attack the temple priest. If the conscientious torture of having committed a crime is not enough, he had to be brought to the court and in that famous moment, he had to recount the entire incident again to the bemused judge and crowd. NT was only 24 at that time.

I don’t think any Tamizh film other stars have had their characters endure such a predicament in the first role itself. Well, Rajini comes close. In Apoorva Raganggal, he appears towards the end in an extended guest role as a leukaemia patient who returns only to see his former wife frolicking with a dude much younger than hotter looking than him. Also, he dies standing.

In his first leading role afterwards, Mundru Mudhichu, he successfully becomes the killer, indirectly, of the same younger hotter looking dude to reclaim his girl only to find that she got married to his own dad. Poor bloke.

As a matter of fact, this was not the first time we got such a plot. The first victim of that nefarious plot of having your hot chick getting hitched by your daddy was none other than….yes, Nadigar Thilagam Sivaji Ganesan. Ethirparaathathu was an experimental flick written by maverick filmmaker, Sridhar. And he had to get NT’s girl married to his dad, played by Nagaiyah who always seemed like he would anytime keel over clutching his heart. Sridhar’s atonement would be to put NT in an action flick, Sivantha Man. Safe and sound this time, except when NT was shot at, almost maimed, had fisticuff with various henchmen and was almost ran over by helicopter. But that’s another story.

More here (http://grouchydays.blogspot.com/2009/09/sivaji-sadists.html)

P_R
30th September 2009, 01:53 PM
his dad, played by Nagaiyah who always seemed like he would anytime keel over clutching his heart.
:lol:

groucho070
30th September 2009, 01:54 PM
Joe, thanks again for setting the font and the pix. Nandri, nandri. :D Magnificent pix!!!

Edit. Actually it was NOV who modified the font and added the pix. Thanks NOV. Sorry for the mixup.

joe
30th September 2009, 02:32 PM
Joe, thanks again for setting the font and the pix. Nandri, nandri. :D Magnificent pix!!!

Naan paakkuRathukku munaleye NOV pannittar-nnu ninaikkuren ..So Your appreciation goes to NOV :)

joe
30th September 2009, 10:12 PM
நடிகர் திலகம் ஐயா ! உங்கள் பிறந்தநாளில் மட்டுமல்ல ,என்றுமே உம் மாறாத நினைவுகளோடு :notworthy:

Murali Srinivas
1st October 2009, 12:00 AM
வருஷம் போனால் என்ன; மெல்ல
வயசும் ஆனால் என்ன
ரசிகனின் பார்வையில் என்றும்;
நீ நிரந்தரமானவன் அன்றோ !

எத்தனை காலம் ஆனாலும்
எத்தனை பேர்கள் வந்தாலும்
நடிப்புலக சிம்மாசனம் என்றும்
நடிகர் திலகம் உன் ஒருவனுக்கே

மறக்க முடியாது உங்களை
மாற்ற முடியாது எங்களை

என்றென்றும் உங்கள் நினைவினில்

அன்புடன்

pammalar
1st October 2009, 12:05 AM
WISH YOU ALL A VERY VERY HAPPY SIVAJI JAYANTHI !!!

Ardent Devotee,
Pammalar.

NOV
1st October 2009, 06:07 AM
[html:6fdcb003fc]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NT2-1.jpg
[/html:6fdcb003fc]

நடிப்புலக சக்கரவர்த்தி 81-வது பிறந்த தினம்.

வாழ்க ஐயா நின் புகழ்!!

NOV
1st October 2009, 06:18 AM
Let me guess the appearances in the above still.

1. Kai kodukkum ddeivam
2. VPK
3. Parasakthi
4. ?
5. Yaaradi nee mohini (UP)
6. actual later day still?
7. Gouravam
8. Gouravam
9. Deiva Magan
10. TM
11. ?
12. ?
13. Andha Naal
14. ?
15. Thiruvarutselvar

groucho070
1st October 2009, 06:30 AM
NOV,

4. Manohara?
6. During Devar Magan
11. Pachai Vilakku or Anbu Karanggal.

Not sure about others you left blank. Need help from experts.

joe
1st October 2009, 06:31 AM
4.மனோகரா
10. தில்லானா மோகனாம்பாள்
11. பச்சை விளக்கு
12. உத்தம புத்திரன்

NOV
1st October 2009, 06:36 AM
Congrats Rakesh!
what are you doing here? and not at the registration office? :think:
Great date to mark your important day in life :D

groucho070
1st October 2009, 06:37 AM
Congrats Rakesh!
what are you doing here? and not at the registration office? :think:
Great date to mark your important day in life :DSorry, bro, actually tomorrow. :P

groucho070
1st October 2009, 06:39 AM
4.மனோகரா
10. தில்லானா மோகனாம்பாள்
11. பச்சை விளக்கு
12. உத்தம புத்திரன்Great Joe. 14?

NOV
1st October 2009, 06:44 AM
Congrats Rakesh!
what are you doing here? and not at the registration office? :think:
Great date to mark your important day in life :DSorry, bro, actually tomorrow. :P:oops: your PM said today :confused2:
naa vera Hubbers Events thread la pOttuttEn :D

joe
1st October 2009, 06:45 AM
14?
கல்யாணியின் கணவன்

groucho070
1st October 2009, 06:46 AM
:oops: your PM said today :confused2:
naa vera Hubbers Events thread la pOttuttEn :D :oops: Sorry birather, let's celebrate today as what it is, the birthday of one of the greatest film actors in the world!!!! :D

saradhaa_sn
1st October 2009, 11:14 AM
உலகெங்கிலுமுள்ள் நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் 'சிவாஜி ஜெயந்தி' நல்வாழ்த்துக்கள்.

எங்கள் உயிர் இருக்கும் வரை உன் நினைவிருக்கும்.

sankara1970
1st October 2009, 12:03 PM
கலைதாயின் முதல்மகன் புகழ் வாழ்க

RAGHAVENDRA
1st October 2009, 12:09 PM
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்ககான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும் நம் இணைய தளம் சார்பிலும் நடிகர் திலகத்திற்கு நமது பிறந்த நாள் வணக்கங்ககள்.

ராகவேந்திரன்

joe
1st October 2009, 12:53 PM
'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..! - பஞ்சு

பதினாறு ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக 'பராசக்தி' படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக 'உயர்ந்த மனிதன்' வெளிவருகிறது. 'பராசக்தி' பட மாக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடி யோவில்தான் 'உயர்ந்த மனித னும்' உருவாகி இருக்கிறது. பராசக்தியை டைரக்ட் செய்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் இந்தப் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்கள். திரு.பஞ்சு, சிவாஜி கணேசனைப் பற்றி இங்கே சொல்கிறார்:

''முதன்முதலாக நாங்கள் சிவாஜி கணேசனைப் பார்த்தது 1948-ம் வருஷத்தில். அதற்கு முன்பே 'சிவாஜி'யாக நடித்து விட்டபோதிலும், அப்போது அவர் வெறும் வி.சி. கணேசன் தான். என்.எஸ்.கே. நாடக சபா வில் மனோகரா நாடகத்தில் 'விஜயாள்' வேஷம் போடுவார். அந்த நாடகத்தில்தான் அவரைப் பார்த்தோம். அவரது நடிப்பில் அப்போதே ஓர் அலாதித் தன்மை பளிச்சிட்டது. பிற்கா லத்தில் அவர் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான அறிகுறிகள் அவரது நடிப்பில் இருந்தன. அப்போதே அவரைச் சினிமா உலகுக்குக் கொண்டுவர விரும்பினோம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை. 1950-ல்தான் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது - பராசக்தி படம் மூலமாக.

'பாவலர்' பாலசுந்தரம் எழுதி, நாடகமாக நடிக்கப்பட்டு வந்த பராசக்தியைத் திரைப் படமாக்க நினைத்தபோது, யாரைக் கதா நாயகனாகப் போடுவது என்ற பிரச்னை எழுந்தது. எங்களுக்கு கணேசனைப் போட வேண்டும் என்ற எண்ணம். தயாரிப்பாளர் களுக்கும் அப்படித்தான். ஆனால், ஒரு சிலர் வேறு நடிகர்களைப் பற்றிச் சொன்னார்கள். கே.ஆர்.ராமசாமியின் பெயரும் அடிபட்டது. கடைசியில் 'அண்ணா'விடம் போய், அவரு டைய யோசனையைக் கேட்டோம். 'உங்கள் எண்ணம்தான் சரி! கணேசனையே போடுங் கள். அவர் நன்றாக நடிப்பார். தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புதிய நடிகர் கிடைத்த மாதிரியும் இருக்கும்' என்றார் அண்ணா.

அப்போது கணேசன் பெரிய குளத்தில் 'சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். தினசரி நாடகம். 'டெஸ்ட்'டுக்கு ரயிலில் வந்து போவதென்றால் நாடகங்கள் பாதிக்கப்படும். எனவே, பெரிய குளத்திலிருந்து திருச்சி வரை காரிலும், அங்கிருந்து சென் னைக்கு விமானத்திலும் அழைத்து வந்து, மறுபடியும் விமானத்திலேயே அனுப்பி வைத்தோம். உயரப் பறந்து வந்து, சினிமா உலகுக்குள் நுழைந்து, உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட நடிகர் அவர்'' என்றார் பஞ்சு.

சிவாஜியின் நடிப்பு, கிருஷ் ணன்-பஞ்சுவின் டைரக்ஷன், கலைஞர் கருணாநிதியின் அரு மையான வசனங்கள் எல்லாம் சேர்ந்ததால், பராசக்தி படம் 'ஓஹோ'வென்று ஓடியது. சினிமாவில் வரும் பண்டரிபாய் வேஷம் நாடகத்தில் இல்லை. கருணாநிதியின் புதிய படைப்பு அது. நாடகத்தின் கதைப் போக்கில் இருந்த குறைகளைச் சரி செய்வதற்காக, மற்றவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்காக, கருணாநிதி அந்தப் பாத்திரத்தைச் சிருஷ் டித்தாராம்.

''இப்போது சிவாஜி நடிப்பில் அலாதியான மெருகு ஏற்பட் டிருக்கிறது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். பராசக்தியைப் போல் 'டயலாக்' படங்களுக்கு அப்பொழுதும் சரி, இப்பொழு தும் சரி, அப்படித்தான் நடிக்க வேண்டும். இப்போது 'டயலாக்' பாணிதான் மாறிவிட்டதே! ஆனால், இந்தப் பாணியில் கூட சிவாஜிக்குத்தான் வெற்றி. ஏனெனில் எந்தெந்த வசனத்தை எப்படியெப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உலகில் எந்த நடிகரை எடுத்துக்கொண்டாலும், சிவா ஜியைப் போல் யாரும் இவ்வ ளவு 'வெரைட்டி'கள் செய்த தில்லை. 'வெரைட்டி' மட்டு மல்ல, ஒரே வேஷத்தைப் பல கோணங்களில், பலவிதமாகச் செய்யக்கூடியவர் சிவாஜி. உயர்ந்த மனிதன் படத்தில் இளைஞராகவும், அப்பாவாக வும் வருகிறார் கணேசன். அப்பா வேஷம் அவருக்குப் புதிதல்ல. மோட்டார் சுந்தரம் பிள்ளை, எங்க ஊர் ராஜா ஆகிய படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருக்கிறார். ஆனால், இந்த மூன்று அப்பா வேஷங்களிலும் மூன்று வித மான 'அப்பா'க்களைக் காட்டி யிருக்கிறார். சிவாஜியைத் தவிர வேறு யாராலும் அதைச் செய் திருக்கமுடியாது.

உயர்ந்த மனிதனில் தீப் பிடித்து எரிகிற ஒரு வீட்டுக்குள் போக வேண்டும். தயங்காமல் போயே விட்டார். கை கால்களி லிருந்த ரோமங்கள் எல்லாம் அனலில் கருகிவிட்டன. 'இந்த இடத்தில் உங்கள் முகத்தில் கொஞ்சம் கரி இருக்கவேண் டும்' என்றால், 'அவ்வளவு தானே!' என்று, அணைந்தும் அணையாமலும் இருக்கும் ஒரு கொள்ளியிலிருந்து கரியை எடுத்துப் பூசிக் கொள்வார். வேஷத்தில் அவருக்கு அவ்வ ளவு ஈடுபாடு!'' என்றார் பஞ்சு.

நன்றி : விகடன்

RAGHAVENDRA
1st October 2009, 12:57 PM
Dear Joe Sir,
Your prompt repro of vikatan reminiscences really makes us feel great. Thank you Sir.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒழிகிறதோ இல்லையோ, எல்லை தாண்டிய சிவாஜி வாதத்தை யாராலும் அழிக்க் முடியாது. தமிழ் தாண்டி தெலுங்கு தேசத்தில் நடிகர் திலகத்தின் திரைப்ப்டங்களைப் பற்றிய விவரங்களைக் கீழே கண்டுள்ள இணைப்பில் காண்க.
http://www.justtollywood.com/profiles.php?pid=00004996

A tribute by a web blog:
http://www.musicquencher.com/blog/

Raghavendran

Bala (Karthik)
1st October 2009, 01:37 PM
:notworthy:

HARISH2619
1st October 2009, 03:28 PM
தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னனே நெஞ்சிருக்கும்வரை உன் நினைவிருக்கும்.

WISH YOU ALL A VERY HAPPY SIVAJI JAYANTHI

mr_karthik
1st October 2009, 06:04 PM
நடிப்புக்கு இலக்கணம் கண்ட நாயகனே, உங்களின் 81-வது பிறந்தநாளில், உங்கள் நினைவைப்போற்றுகிறோம்.

810-வது பிறந்தநாளிலும் உங்கள் நினைவு போற்றப்படும். உங்கள் படைப்புகள் அதைத்தாண்டியும் பாதுகாக்கப்படும்.

Nerd
1st October 2009, 07:53 PM
:clap: Naan Kadavul dialogue comes to mind.

Grouch bro's article in behindwoods (http://www.behindwoods.com/features/visitors-1/sivaji-ganesan-01-10-09.html). Congrats bro.

joe
1st October 2009, 08:14 PM
:clap: Naan Kadavul dialogue comes to mind.

Grouch bro's article in behindwoods (http://www.behindwoods.com/features/visitors-1/sivaji-ganesan-01-10-09.html). Congrats bro.

Bro ..Naan sollala :D :D

joe
1st October 2009, 08:16 PM
Bala,
Very Happy to see NT avatar from you :thumbsup:

joe
1st October 2009, 08:20 PM
But Behindwoods took the incomplete content from this thread instead of full post Groucho's Blog :oops:

joe
1st October 2009, 09:00 PM
http://www.asal4u.co.cc/2009/10/blog-post_8230.html

joe
1st October 2009, 09:23 PM
Groucho,
Your article @ indiaglitz
http://www.indiaglitz.com/channels/tamil/article/50444.html

Murali Srinivas
1st October 2009, 11:53 PM
The 81st birthday celebrations of NT was conducted in a grand manner. As mentioned earlier in the columns, Makeup man L.Muthhapa, P.Suseela, PBS and SPB were honoured. A special postal day cover on KV Mahadevan was released. The IAS and IPS training institution Focus Academy was given a grant by Sivaji- Prabhu charities.

[html:b9c97a7275]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/KVMahadevan2.jpg[/html:b9c97a7275]

The book "Vettaikku Vandha Singam" - reminiscences of the hunting expeditions that NT undertook as told by his friend Muthumanikam was released.

Detailed review of the function soon.

Regards

Murali Srinivas
1st October 2009, 11:57 PM
ஜோ,

11 -பச்சை விளக்கு அல்ல. கவனித்து பாருங்கள் - ஆலய மணி.

ராகேஷ்,

Congrats for both. Article tie up and Life tie up.

அன்புடன்

rangan_08
2nd October 2009, 01:35 PM
Coming Sunday, unveiling of NT's statue in Madurai :thumbsup:

Y'day, Mega TV gave a tremendous treat to all NT fans by playing NT songs continuously. Few songs which I happened to watch,

Neeyum Naanuma

Un Kannil Neer vazhindhal

Ullam rendum...(Sivagamiyin selvan)

Kaetadhum koduppavane

Ammama thambi endru nambi...

Nadaya idhu nadaya

Devane ennai parungal

Chinnanjiriya vannaparavai


A few thoughts came to my mind....

In Neeyum naanuma, from Gowravam - the famous chess board scene where NT would be the King & Prince - in the back ground, TMS would be singing for which NT will enact only thru his hand gestures, eyes & facial expressions, without opening his mouth. Was it because he is playing the role of a chess board coin ??? !!! (Many would have already noticed this, but I just wanted to share it). And, every time I watch Gowravam, I get a new thought - appadi nadichittu poitar andha padathula. :notworthy:


Next, Un kannil neer vazhindhal.....NT would be seated in a easy chair & Padmini will be sitting near his feet. In a low angle shot, NT would bend down & rest his chin on Padmini's head.

The famous bridge shot in Manhattan is hailed as an iconic shot and so is the shot where Dustin Hoffman is shown under the leg of Anne Bancroft in The Graduate. Adhu avanga padam, avanga kondaduranga and it's so happy to know that people really appreciate such great moments in Cinema.

Do we lack such film appreciation ?? Definitely not. The above mentioned shot from Vietnam Veedu is also an iconic shot IMO. And the sillhoutte scene from Andha Naal is great film noir. The list goes on & on.

Not just NT films, even the climax shot of Kalyana Parisu is iconic.

The very opening scene of Super Star in Apoorva Ragangal (where he opens the gate),

kathi, kadhari, kutti karanam poatu irudhiyil manam pirazhndu Viji Viji endru viralai madakki paridhabamaga parkum Seenu,

Vayil vetrilai paaku saaru vazhiya, parattaikku kai amukki vidum sappani...

All these are iconic shots IMO. Great writers in our hub should register such wonderful moments in famous websites. Popular magazines like Vikatan, Kumudham etc., should bring out special Cinema editions replete with such info's - probably, 2 pre 80 editions & 2 post 80 editions.

rangan_08
2nd October 2009, 01:41 PM
Coming Sunday, unveiling of NT's statue in Madurai :thumbsup:

Y'day, Mega TV gave a tremendous treat to all NT fans by playing NT songs continuously. Few songs which I happened to watch,

Neeyum Naanuma

Un Kannil Neer vazhindhal

Ullam rendum...(Sivagamiyin selvan)

Kaetadhum koduppavane

Ammama thambi endru nambi...

Nadaya idhu nadaya

Devane ennai parungal

Chinnanjiriya vannaparavai


A few thoughts came to my mind....

In Neeyum naanuma, from Gowravam - the famous chess board scene where NT would be the King & Prince - in the back ground, TMS would be singing for which NT will enact only thru his hand gestures, eyes & facial expressions, without opening his mouth. Was it because he is playing the role of a chess board coin ??? !!! (Many would have already noticed this, but I just wanted to share it). And, every time I watch Gowravam, I get a new thought - appadi nadichittu poitar andha padathula. :notworthy:


Next, Un kannil neer vazhindhal.....NT would be seated in a easy chair & Padmini will be sitting near his feet. In a low angle shot, NT would bend down & rest his chin on Padmini's head.

The famous bridge shot in Manhattan is hailed as an iconic shot and so is the shot where Dustin Hoffman is shown under the leg of Anne Bancroft in The Graduate. Adhu avanga padam, avanga kondaduranga and it's so happy to know that people really appreciate such great moments in Cinema.

Do we lack such film appreciation ?? Definitely not. The above mentioned shot from Vietnam Veedu is also an iconic shot IMO. And the sillhoutte scene from Andha Naal is great film noir. The list goes on & on.

Not just NT films, even the climax shot of Kalyana Parisu is iconic.

The very opening scene of Super Star in Apoorva Ragangal (where he opens the gate),

kathi, kadhari, kutti karanam poatu irudhiyil manam pirazhndu Viji Viji endru viralai madakki paridhabamaga parkum Seenu,

Vayil vetrilai paaku saaru vazhiya, parattaikku kai amukki vidum sappani...

All these are iconic shots IMO. Great writers in our hub should register such wonderful moments in famous websites. Popular magazines like Vikatan, Kumudham etc., should bring out special Cinema editions replete with such info's - probably, 2 pre 80 editions & 2 post 80 editions.

rangan_08
2nd October 2009, 01:59 PM
Last week saw " Sivagamiyin Selvan" for the first time, in TV. Irrespective of the box office results, I would say that it is one of the best re-makes ever made. The film had the same feel as that of the original and also succeeded in bringing out an authenticity.

Rajesh Khanna was a youth icon at that time and it was a big challenge for NT to step into that role (someone like Sivakumar could have also done that role). But then, for an actor like NT challenges are a way of life and he came out with flying colours as usual. For those who have not seen the original, they would definitely enjoy NT's performance.

Vanishree was amazing. Sharmila Tagore played the role effortlessly and VS was eqaully stunning & did a great job.

Now for the songs. Every one know that songs of Aradhana are evergreet hits. And, kudos to our Mellisai Mannar who created eqaully wonderful & soulful songs.

Meri sappunon ki rani - ullam rendum (it just got into my mind that i started continuously humming it)

chanda he tu meri sooraju hai too - en rajavin roja mugam....

great MSV ayya !!!

only Roopu there masthana was a dissapointment.


On the whole, it was a great re-make which seems to be very original.

joe
2nd October 2009, 02:26 PM
எஸ்பிபி, சுசிலா உட்பட 4 பேருக்கு சிவாஜி விருது

பின்னணி பாடகர்கள் எஸ்பி பால்சுப்ரமணியம், பி.சுசிலா, பிபி சீனிவாஸ் உட்பட நான்கு பேருக்கு இந்த ஆண்டுக்கான சிவாஜி விருது வழங்கப்பட்டது.

நடிகர்திலகத்தின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை ஆண்டுதோறும் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அன்று சிவாஜி-பிரபு அறக்கட்டளை தமிழக திரையுலக சேர்ந்த 4 பேருக்கு வழங்கி வருகிறது.

நேற்று நடந்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் பி.வாசு, எஸ்பி முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், ராஜேஷ், தியாகு, சின்னிஜெயந்த் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

சிவாஜி மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார். பிரபு நன்றி கூறினார்.

இந்த ஆண்டுக்கான விருதுகள் பின்னணி பாடகர் பிபி சீனிவாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம், பாடகி பி.சுசிலா மற்றும் சிவாஜின் மேக்கப் மேன் முத்தப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பரிசுகளை ராம்குமார், பிரபு வழங்கினர்.

மறைந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி வெளியிட்டார். அதை கே.வி.மகாதேவனின் மகன் கண்ணன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் சிவாஜி குறித்து அவரது நெருங்கிய தோழரும், சம்பந்தியுமான முத்தமாணிக்கம் எழுதிய 'வேட்டைக்கு வந்த சிங்கம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் பெற்றுக்கொண்டார்.

http://thatstamil.oneindia.in/movies/news/2009/10/02-spb-susheela-receives-sivaji-award-in-chennai.html

mr_karthik
2nd October 2009, 02:37 PM
Now for the songs. Every one know that songs of Aradhana are evergreet hits. And, kudos to our Mellisai Mannar who created eqaully wonderful & soulful songs.

Meri sappunon ki rani - ullam rendum (it just got into my mind that i started continuously humming it)

chanda he tu meri sooraju hai too - en rajavin roja mugam....

great MSV ayya !!!

only Roopu there masthana was a dissapointment.


On the whole, it was a great re-make which seems to be very original.
....and Mellisai Mannar did not touch even a single tune from Aradhana, he done it all in his own style.

I also like 'மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண்பார்க்க வந்தேனடி' which replaced 'kunku- nA-rahE'

'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே' was sung by Mellisai Mannar MSV, far better than S.D.Burman, who sung the Hindi version.

'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது' which comes in the place of roopu-tErA-masthAnA' also sung nicely by SPB, eventhough not attained as Hindi number. That complete song in Sivakamiyin Selvan was shot in a single take, without any cut... Amazing CVR.

saradhaa_sn
2nd October 2009, 07:33 PM
தூரதர்ஷன் 'பொதிகை' தொலைக்காட்சியில், நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றிரவு 9.30 முதல் 10 வரை சிறப்புநிகழ்ச்சி ஒளிபரப்பானது. பல திரையுலகப்பிரமுகர்கள் கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தங்கள் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டனர்.

கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் தான் பணியாற்றிய சிலபடங்களில் தனக்கு நடிகர்திலகத்துடன் ஏற்பட்ட அனுபவங்களைச்சொன்னார்.

இயக்குனர்திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தனது 'கைகொடுத்த தெய்வம்' படத்தின் ஒரு முக்கிய காட்சி பற்றி விவரித்தார். நடிகர்திலகத்துக்கும் கே.ஆர்.விஜயாவுக்குமிடையில் சிலர் அவதூறு பேசுவதையறிந்து, அவர் எஸ்.எஸ்.ஆர். வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் காட்சி. அதை தான் ஒரு வாரமாக யோசித்து, ஒரு இரவு முழுக்க உட்கார்ந்து எழுதி, நடிகர்திலகத்திடம் விவரிக்க, அவரோ 'நான் இந்தக்காட்சியில் எப்படி பெர்ஃபார்ம் பண்ணனும்னு யோசிக்க ஒரு இரவு அவகாசம் கொடு' என்று கேட்டாராம். அதேபோல, இரவுமுழுக்க அந்தக் காட்சியை ஸ்டெடி பண்ணியவர், மறுநாள் காலையில் வந்ததும் ஒரே மணி நேரத்தில் அக்காட்சியை பிரமாதமாக நடித்து 'ஓ.கே' பண்ணிட்டாராம். சொன்னதோடு அல்லாமல் கே.எஸ்.ஜி.அந்தக்காட்சியையும் ஒளிபரப்பினார். வாவ்.... என்ன ஒரு அற்புதமான பெர்ஃபாமென்ஸ். நடிகர்திலகம் மட்டுமல்ல, இலட்சிய நடிகரும், புன்னகை அரசியும்கூட அக்காட்சியில் பிரமாதப்படுத்தி விட்டனர்.

ஒளிப்பதிவு இயக்குனர் பி.என்.சுந்தரம் தன்பங்குக்கு, 'ஞான ஒளி' படத்தில் வரும் 'தேவனே என்னைப்பாருங்கள்' பாடலில் நடிகர்திலகத்தின் பங்களிப்பை சிலாகித்துப் பேசியதுடன் நடிகர்திலகத்துக்கும், மேஜருக்கும் இடையே நடக்கும் போட்டாபோட்டி விவாதத்துடன் துவங்கி அப்பாடலும் ஒளிபரப்பப்பட்டது. இதெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்குமா எனா?.

சகாப்த நடிகை மனோரமா, தான் 'ராஜா ராணி' படத்தில் கண்டு வியந்த சேரன் செங்குட்டுவன் நாடகக்காட்சியில் அறுபத்திரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் நடிகர்திலகம் பேசி நடித்ததைச் சொல்லி ஆச்சரியப்பட்டதுடன், அக்காட்சியை ஒளிபரப்பி பார்த்தவர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

பொதிகைக்கு நன்றி.

அதுபோல, ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இவ்வாரம் தனது அனுபவங்களை அசைபோடும், இயக்குனர் திரு. ஏ.சி.திருலோகச்சந்தர் நேற்றைய நிகழ்ச்சி முழுக்க நடிகர்திலகத்துடன் பணியாற்றிய அனுபவங்களை அழகாக எடுத்துச்சொன்னார். அதிலும் 'தெய்வமகன்' படத்தில் மூன்று பேரும் பங்குபெறும் அந்த 'ப்ளாங்க் செக்' காட்சி அருமையோ அருமை.

மெகா தொலைக்காட்சியின் 'அமுதகானம்' பகுதியில் நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதியைத்தொகுத்து வழங்கும் ஆதவன், நடிகர்திலகம் பற்றிய சிறப்புச்செய்திகளுடன், முழுவதும் நடிகர்திலகத்தின் பாடல்களையே ஒளிபரப்பி சிறப்பு சேர்த்தார். (என்னென்ன பாடல்கள் என்பதை நண்பர் மோகன் ஏற்கெனவே பட்டியலிட்டுவிட்டார்).

ஆண்டுக்கொருமுறை நினவுகூர்ந்தால் போதாது, தொலைக்காட்சிகள் அவரை அணுதினமும் நினைவுகூற வேண்டும் என்ற கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம்.

வாழ்க நடிகர்திலகத்தின் அழியாப்புகழ்...!!.

Murali Srinivas
2nd October 2009, 08:07 PM
மோகன்,

வியட்நாம் வீடு படத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் வரும் அந்த ஷாட்டைப் பற்றிய வர்ணனை அருமை. உங்கள் ஆதங்கம் உண்மையும் கூட.

சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நீங்கள் சொல்லியிருந்ததும் உண்மையே. எம்.எஸ்.வி அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். நிச்சயமாக அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற்ற படம்தான். இன்னும் சொல்லப் போனால் இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பெரிய வெற்றி பெற்று பல போட்டி படங்களின் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிட்ட படம். கோரா காகஸ் வெகு இனிமையான் பாடல். ஆனால் இனியவளே என்று பாடி வந்தேன் அதற்கு சற்றும் சளைத்ததல்ல.[புலமை பித்தனின் வார்த்தை ஜாலங்கள் ரசிக்கும்படியாக இருக்கும்].சுருக்கமாக சொன்னால் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம்.

அன்புடன்

Murali Srinivas
2nd October 2009, 08:36 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

நடிகர் திலகத்தின் 81-வது பிறந்த நாள் விழா சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் [நேற்று] அக்டோபர் 1 அன்று நடைபெற்றது. அந்த விழா துளிகளில் சில.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. மோகன்ராம் முதலில் வந்து இறை வணக்கம் என்று சொன்னவுடன் எழுந்து நின்ற அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக மேடையின் இருபுறம் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகள் வெளிச்சம் பெற நடிகர் திலகம் திரையில் தோன்றி பித்தா பிறை சூடி என்ற பாடல் பாட [திருவருட்செல்வர் படத்தில் இடம் பெற்ற] விழா இனிதே துவங்கியது. தனது முன்னுரையில் மோகன்ராம் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு உரைநடை செய்யுளை வாசித்தார். முதல் பாதியில் நடிகர் திலகத்தின் குண நலன்களை சொன்ன அந்த படைப்பு ["அரசியல் கட்சி தந்த காசு அல்ல, அந்த கட்சி தந்த அதிகார காசு அல்ல, அதிகாரம் மூலம் செய்த ஊழல் காசு அல்ல உன் உழைப்பினால் வந்த காசை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்தவன் நீ" என்ற வரிகளுக்கு அரங்கம் ஆர்ப்பரித்தது]. அதன் இரண்டாம் பாதி இதுவரை அறக்கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்டவர்களை அவரவர்களின் சிறப்புகளோடு [(உ.ம்) இறுதிவரை நிறம் மாறாமல் நிழல் போல் இருந்த வி.கே.ஆர்] பட்டியலிட்டது. இதை தயாராக்கியது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான திரு.கணேசன் [கட்டபொம்மன் விழாவிலும் இவர் கவிதை இடம் பெற்றது].

வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். இந்த பிறந்த நாள் விழாவைப் பற்றியும் இந்த அறக்கட்டளை மூலம் செய்யப்படும் நலத்திட்டங்களை பற்றியும் சொல்ல ஆரம்பித்தவர் அதன் ஆரம்பம் என்னவென்பதை சொன்னார். கலையுலக முன்னோடிகளுக்கு நினைவு தபால்தலை, தபால் உறை வெளியிடுதல் என்பது நடிகர் திலகம் இருக்கும் போதே தொடங்கிவிட்ட போதிலும் அவர் இறந்த பிறகு அதை பெரிய அளவில் செய்ய சொன்னதே மங்கேஷ்கர் சகோதரிகள்தான் என்றார். லதா அவர்களும் ஆஷா அவர்களும் அவர்கள் தந்தையார் ஹிருதயநாத் மங்கேஷ்கர் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள். அவர் மறைந்து போன போது அவர் நினைவாக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி கலையுலகை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வதை சொன்னதோடு மட்டுமல்லாமல் தங்களையும் அப்படி செய்ய சொன்னார்கள் என்பதை நினைவு கூர்ந்தார் ராம்குமார். அனைவரையும் அவர் வரவேற்று முடிக்க விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

முதலில் ஒப்பனைக் கலைஞர் முத்தப்பா அவர்கள் ஆதரிக்கப்பட்டார். பராசக்தி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தவர் இந்த முத்தப்பா. அன்று தொடங்கிய அந்த உறவு இன்றும் நீடிக்கிறது என்றார் மோகன்ராம். பராசக்தி படத்திலிருந்து நடிகர் திலகம் தன் தங்கையின் முன்னாள் நின்று நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடுவதிலிருந்து கிறுக்கண்ணா என்று ஸ்ரீரஞ்சனி சொல்லுவது வரை அந்த கிளிப்பிங் நீண்டது. பிறகு அந்த நாள் படத்தில் நடிகர் திலகத்திடம் other woman பூங்காவில் வைத்து பேசும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. முத்தப்பா அவர்களுக்கு விருதை, விழா தலைமை விருந்தினரும் தமிழக தலைமை வழக்கறிஞருமான திரு. பி.எஸ்.ராமன் எனப்படும் பரத்ராம் [நடிகர், நமது ஹப்பர் மோகன்ராம் அவர்களின் இளைய சகோதரர்] வழங்கினார்.

அடுத்தவர் என சொல்லிவிட்டு விளக்குகள் அணையை திரை ஒளிபெற்றது. அங்கே அத்தான் என்னத்தான் என்று சாவித்திரி வாயசைப்பில் சுசீலாவின் தேன் குரல் ஒலித்தது. பல்லவி முடிந்தவுடன் மோகன்ராம் ஒரு அரிய தகவலை சொன்னார். பாவ மன்னிப்பு வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது லதாவும் ஆஷாவும் அன்னை இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த பாடலை ஒலிக்க விட்ட நடிகர் திலகம் இது போல் உங்களால் பாட முடியுமா என்று சவால் விடுத்தாராம். இதை சொல்லி விட்டு அந்த பாடலை பற்றி ஆஷா அவர்களே புகழ்ந்து பேசி பாடிக் காண்பிக்கும் வீடியோ காட்சியும் திரையிடப்பட்டது. தொடர்ந்து சொல்ல சொல்ல இனிக்குதடா பாடல் திரையில் வந்தது. அதை தொடர்ந்து மலர்ந்தும் மலராத ஒளிப்பரப்பாக அரங்கமே கைதட்டல்களால் அதிர, இதை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தாதவர்கள் உண்டோ என்று மோகன்ராம் கேள்வி எழுப்ப பலத்த குரலில் சபை அதை ஆமோதிக்க நீண்ட கைத்தட்டல்களுக்கிடையே சுசீலா விருது பெற்றார்.

அடுத்து சிவாஜி மன்றத்தின் சார்பில் விருது பெற்றவர்களுக்கும் மோகன்ராம் அவர்களுக்கும், கிளிப்பிங்க்ஸ் தொகுத்து வழங்கிய இயக்குனர் பரத் [ஆனந்தக் கண்ணீர் படத்தின் வசனகர்த்தா மட்டுமல்ல நடிகர் திலகம் நடித்த ஒரே தொலைக்காட்சி தொடரான மீண்டும் கெளரவம் தொடரை இயக்கியவர். இப்போது ஜெயா டி.வியில் திரும்பி பார்க்கிறேன் தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார்] அவர்களுக்கும் கிரி ஷண்முகம் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன.

அடுத்து வந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள். இவர் நடிகர் திலகம் படங்களில் நிறைய பாடியிருக்கிறார் ஆனால் நடிகர் திலகத்திற்காக பாடியது இரண்டு பாடல்கள் மட்டுமே. நான் சொல்லும் ரகசியம் படத்திலிருந்து கண்டேனே உன்னைக் கண்ணாலே பாடலும் புனர் ஜென்மம் படத்திலிருந்து என்றும் துன்பமில்லை பாடலும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பி.பி.எஸ் விருது பெற்றார்.

அடுத்து பாடும் நிலா. இவரைப் பற்றி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என்று சொன்ன மோகன்ராம் சங்கராபரணம் படத்தில் வரும் பாடல்களை தன்னால் பாட முடியாது என்று எஸ்.பி.பி., கே.வி.மகாதேவனிடம் சொன்னதையும், மகாதேவன் அவரை வற்புறுத்தி பாட வைத்ததையும் அதன் மூலமாக கே.வி.எம். அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்ததையும் சொன்னார். தொடர்ந்து நடிகர் திலகத்திற்காக எஸ்.பி.பி பாடிய பாடல் காட்சிகள் என்று அறிவிக்க அரங்கமே நிமிர்ந்து உட்கார்ந்தது, என்ன பாடல் காட்சி வரும் என்று எதிர்ப்பார்ப்பில். ஒரு சின்ன இடைவெளி முடிய, திரை உயிர் பெற, நீல கால் சராயும் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்து நடிகர் திலகம் இளமை பொங்க நின்று "மலை தோட்ட பூவில்" என்று தொடங்க, காதடைக்கும் ஆரவாரத்தோடு அரங்கம் அதை ரசித்தது. தொடர்ந்து "இரண்டில் ஒன்று" வர ஆரவாரம் அதிகமானது.[அண்ணா அறிவாலயத்தில் அண்ணா தி.மு.க. தலைவியின் பாடல் காட்சி ஒளிப்பரப்பிய சாதனையை செய்யவும் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.] சந்திப்பு படத்திலிருந்து உன்னை தான் நம்பிட்டேன் பாடலும் சோலாப்பூர் ராஜா பாடல் காட்சியும் திரையிடப்பட்டன. பிறகு எஸ்,பி,பி. விருது பெற்றார்.

இதன் பிறகு வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் நடிகர் திலகத்துடன் வேட்டைக்கு சென்ற அனுபவங்களை பற்றி எழுதியுள்ள "வேட்டைக்கு வந்த சிங்கம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை திரு.பரத்ராம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதற்கு பின் முத்துமாணிக்கம் பேச அழைக்கப்பட மைக் முன் வந்தார் அவர். எளிய பேச்சு தமிழில் அமைந்திருந்த அவரது உரை சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைந்தது. 1954 முதல் தொடங்கிய நட்பைப் பற்றி சொல்லும்போது அது வெளிப்பட்டது. வெளிநாடு சென்ற நம்மூர் இளைஞன் சொந்த ஊரை நினைத்து ஏங்குவது போல தன் அருமை நண்பரை அனுதினமும் நினைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். Nostalgia என்று சொல்லிவிட்டு அந்த நட்பு தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்ற காரணத்தினாலேயே வேறு வேறு சமூகங்களை சேர்ந்த தங்களிருவரும் சம்பந்திகளானோம் என்றார். தனது தம்பி மகளை சிவாஜியின் தம்பி மகனுக்கு [கிரி ஷண்முகம்] கல்யாணம் செய்துக் கொடுத்திருப்பதை குறிப்பிட்ட அவர், எங்கள் நட்பை பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகம் போதாது ஆனாலும் அவரது வேட்டை அனுபவங்களை இது வரை யாரும் ஒரு புத்தக வடிவில் வெளிக் கொண்டு வரவில்லை என்ற காரணத்தால் இதை எழுதியதாக சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார்.

(தொடரும்)

அன்புடன்

pammalar
2nd October 2009, 08:52 PM
"பாட்டுடைத் தலைவன் என்று உங்களை வைத்தோம் !
பாடித் தொழுவதற்கே எங்களை வைத்தோம்!"

அனைவருக்கும், இதயதெய்வம் நடிகர் திலகத்தின் அவதாரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

"நம் தாத்தா காந்தி, மாமா நேரு தேடிய செல்வங்கள்,
பள்ளிச் சாலைத் தந்தவன் , ஏழைத்தலைவனை தினமும் எண்ணுங்கள் !"

அனைவருக்கும், தேசத்தந்தை, காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !

கல்விக்கண் திறந்தவர், ஏழைகளின் தோழர், எளிமையின் உறைவிடம், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு இதய அஞ்சலி செலுத்துவோம் !

காந்தீய கொள்கையில், கர்மவீரர் பாதையில், கலைக்குரிசிலின் வழியில் பீடு நடை போடுவோம் !!

நமது வளமான பாரதத்தை வல்லரசு ஆக்குவோம் !!!

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
2nd October 2009, 09:08 PM
படு ஜோரான பல லிங்க்குகளை அளித்த ஜோ அவர்களுக்கு பற்பல நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

Avadi to America
2nd October 2009, 11:36 PM
[tscii:cfcbc07bfb]http://www.envazhi.com/?p=12123


அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒரு படமாவது எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்பது இன்றைய பல நட்சத்திரங்களின், கலைஞர்களின் ஏக்கம்.



சமீபத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை எடுத்த அருண் வைத்தியநாதனுக்குக் கூட அப்படியொரு ஏக்கம் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் லேகா ரத்னகுமார் மிகவும் அதிர்ஷ்டசாலி.

இவர் எண்பதுகளிலேயே சிவாஜியைச் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

அடடா… கொடுத்து வைத்த மனிதர்தான் என்கிறீர்களா… சரி.. சிவாஜியை இவர் எப்படிச் சந்தித்தார்?

அந்த அனுபவத்தை அவரே சொல்கிறார்:

“தூர்தர்ஷனுக்காக இருட்டில் ஒரு வானம்பாடி என்று ஒரு தொடரை நான் எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பண்டரிபாய். பாராசக்தி படத்தில் சிவாஜியின் முதல் ஜோடியே இவர்தானே.. ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவ, எல்லோருமே இடிந்து போனோம். அப்போது நான் பண்டரிபாயிடம் சிவாஜி மீது நான் வைத்திருந்த மரியாதை பற்றியெல்லாம் சொல்லி, அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டேன்.

ஆனால் பின்னர்தான் சிவாஜி இறந்ததாக வந்தது ஒரு வதந்தி என்பது தெரிந்தது. இந்த விஷயத்தை சிவாஜியிடமே பண்டரிபாய் சொல்ல, “அந்த தம்பியை அழைச்சிட்டு வாயேன்” என்று கூறியிருக்கிறார் சிவாஜி. என்னிடம் இதை பண்டரிபாய் சொன்னபோது, ஆனந்தத்தில் அதிர்ந்து போனேன்.

அவரை பார்க்கணும் என்பது என் பல நாள் கனவு. அவரே வரச் சொல்லிவிட்டதால் பயங்கர முன்னேற்பாடுகளுடன் அன்னை இல்லத்துக்கு குடும்பத்தோடு போனேன். கூடவே பண்டரிபாய் அம்மா மற்றும் போட்டோகிராபரையும் கூட்டிப் போனேன்.

மாடியில் அவருக்காகக் காத்திருந்தபோது, என்னவெல்லாம் பேசலாம் என ஒரு ஒத்திகையே பார்த்துவிட்டேன் உள்ளுக்குள்.

அப்போதுதான் அவர் வந்தார். கண்களில் அப்படியொரு தீட்சண்யம். அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் மறந்தே போனேன்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஸ்டைலான ஆங்கில உச்சரிப்புக்குச் சொந்தக்காரரை இதுவரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு அசத்தலான ஸ்டைல் போங்க.

பண்டரிபாய் அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற போது, ஒரு ராஜாவுக்குரிய கம்பீரத்தோடு அவர் வாழ்த்திய விதம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

நாங்கள் எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பின்னர் அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்: ‘உங்க கூட போட்டோ எடுத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’

இதை என்னவென்று சொல்வது… ஒரு இளம் கலைஞரை சந்தோஷப்படுத்த அவர் கூறிய பெருந்தன்மையான வார்த்தைகளைப் பாருங்கள். உயர்ந்த மனிதர்களின் இயல்பும் உயர்ந்ததாகத்தானே இருக்கும்!

நாங்கள் அவர் இல்லத்தை விட்டுக் கிளம்பும்போது, “ஓய்வா இருக்கும்போதெல்லாம் அவசியமா வாங்க…” என்றவர், தனக்கே உரிய ஸ்டைலில் சற்று நிறுத்தி, நிமிர்ந்து பார்த்து, “ஐ மீன் நான் ஓய்வா இருக்கும் போதெல்லாம்!” என்று சிரிக்காமல் முடித்தார்.

பிறவிக் கலைஞன் அவர்… உண்மையிலேயே இமயத்தை தரிசித்த அனுபவம் எனக்கு!” என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார்.

பெருமையாகத்தான் இருந்தது!

[/tscii:cfcbc07bfb]

Murali Srinivas
2nd October 2009, 11:50 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்- Part II

ஆண்டு தோறும் ஒரு கல்வி கூடத்தை தேர்ந்தெடுத்து அவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணமாக பொருளாதர உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்த அறக்கட்டளை இந்த வருடம் அதற்காக தெரிவு செய்தது போக்கஸ் அகாடமி [Focus Academy] என்ற பயிற்சி நிறுவனத்தை. சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் இந்த நிறுவனம், இந்திய ஆட்சி பயிற்சி மற்றும் இந்திய காவல்துறை பயிற்சியில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்கிறது. அந்த நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடையை அறக்கட்டளையின் சார்பாக ராம்குமாரும் பிரபுவும் வழங்க அந்நிறுவனத்தின் நிதி நிர்வாக இயக்குனர் திரு.குருமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

அடுத்து வந்தது திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் நினைவு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி. கே.வி.எம். அவர்கள் பற்றி சொன்ன மோகன்ராம் அவரின் சிறப்பு திறனாக கே.வி.எம்மின் அனைத்து பாடல்களுமே கர்நாடக சங்கீத்தை அடிப்படையாக கொண்டவை என்பதைக் குறிப்பிட்டார். அவரின் இசையமைப்பில் நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சிகளின் ஒரு தொகுப்பு என்று அறிவித்தவுடன் அரங்கத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டமானது.

திரை இசை திலகம் இசையில் நடிப்பிசை திலகம் என்று டைட்டில் வர ஆத்தூர் கிச்சடி சம்பா என்று செங்கோடன் பாட ஆரம்பித்தவுடன் தாளத்தோடு தொடங்கிய கைதட்டல் அடுத்து காதல் களிப்பில் நடிகர் திலகம் என்ற தலைப்பில் டாக்டர் ராஜா இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்று பாடிய போது அதிகமாகி அதிலும் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் என்ற வரிகளின் போது நடிகர் திலகம் இரண்டு காலையும் சற்றே அகற்றி இரண்டு கைகளையும் மேலே தூக்கி தோள்களை குலுக்கிய போது பாடலின் சத்தத்தை விட இங்கே ஆரவாரம். அடுத்து வந்த ரங்கன் உள்ளதை சொல்வேன் என்று பாடிய போது மீண்டும் ஆரவாரம். அந்த பாடல் வரிகள் நடிகர் திலகத்தின் உண்மையான இயல்பை குறிப்பதாக அமைந்ததால் அதற்கும் அப்ளாஸ். எங்கள் நடையழகனின் ராஜ நடை என்று டைட்டில் வர பொற்றாமரை குளத்தின் பிரகாரத்தில் சிவபெருமான் அந்த கோப நடை நடக்க கூடவே தருமி ஓட்டமும் நடையுமாக வர அரங்கம் அதிர அடுத்து மீனவனாக கடற்கரையில் நடந்த போது டெசிபெல் லெவல் கூடிக்கொண்டே போனது.[நமக்கு ஒரு சின்ன ஆதங்கம் வெற்றிவேல் வீரவேல் நடையையும் எங்கள் தங்க ராஜா நடையையும் உத்தமன் நடையையும் சேர்த்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே என்று].

அடுத்து களிப்பின் மிகுதியில் நடிகர் திலகம் என்று டைட்டில் திரையில் வரவும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது போல கட்டழகனாதோர் கற்பனை ராஜ்ஜியம் என்று ஆரம்பித்தவுடன் சேரிலிருந்து எழுந்த மக்கள் கூட்டம் அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற போது உச்சக்கட்டமாக அலறிய சத்தம் மவுண்ட் ரோட்டில் எதிரொலித்திருக்கும். பொங்கி பாய்ந்த அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் விதமாக பக்தி பரவசமாக நடிகர் திலகம் என்ற தலைப்பில் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே காட்சி வந்தது. சிறிது அடங்கிய உணர்ச்சி வெள்ளம் அடுத்து பறவைகள் பலவிதம் என்று நடிகர் திலகம் கண்ணடிக்க மீண்டும் பொங்கியது. தொடர்ந்து கானகுயிலாய் எங்கள் கலைக்குரிசில் என்று டைட்டில் வர மனதினிலே வரும் காட்சிகள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி என்று ரசிகர்களை கிறங்க வைக்க, அடுத்து நவராத்திரியில் ஒரு தசாவதாரம் என்ற டைட்டில். கூத்து மேடை சிங்காரம் சத்யவானாக மாறி அதாகப்பட்டது என்று பேச, தொடர்ந்து தேசபக்தியில் செவாலியே என்று டைட்டில் வர, வீரம் உண்டு தோள்கள் உண்டு வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு என்று பாரதமாதாவின் முன் பணிந்து நடிகர் திலகம் "இரத்த திலகம்" இட்டுக் கொள்ள, "ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை" என்று வித்யாபதி கோவிலில் சரஸ்வதி சன்னதிக்கு முன் நின்று பாட, நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கலாராக நடிப்புலக சக்கரவர்த்தி தில்லானா வாசிப்பதோடு அந்த இசைப் பயணம் நிறைவுற்றது. உணர்ச்சி களிப்பில் இருந்த ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டுக் கொண்டேயிருந்தனர். வாழ்க கோஷங்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

கே.வி.எம்மின் அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் துறை தலைவர் திரு த.மூர்த்தி வெளியிட மாமாவின் மைந்தன் திரு கண்ணன் அதை பெற்றுக் கொண்டார். அடுத்து பேச வந்தார் திரு. மூர்த்தி. பொதுவாகவே இப்படி ஒரு உணர்ச்சி குவியலான நிகழ்ச்சிக்கு பிறகு யார் பேசினாலும் அதை ஆழ்ந்து கவனிக்கும் நிலையில் கூட்டம் இருக்காது. அதை புரிந்துக் கொண்ட அஞ்சல் துறை தலைவர் அஞ்சல் துறை எப்படி சமூகத்தின் பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற மனிதர்களுக்கு மரியாதை செய்கிறது என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார். கூடியிருந்த மக்களின் மனோநிலையை அவர் நன்றாக உணர்ந்திருந்தார் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அஞ்சல் தலைகள் யார் யாருக்கு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை சொல்லும் போது ராமச்சந்திரன் என்று கூறி [சட்டென்று யாரும் புரிந்துக் கொள்ள முடியாத வகையில்] அடுத்த பெயருக்கு சென்று விட்டார். அவரின் உரையில் வெளிப்பட்ட ஒரு செய்தி அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில், தமிழாசிரியர்கள் நடிகர் திலகத்தின் வசனங்களை படித்து பார்த்து தமிழ் உச்சரிப்பை சரி செய்ய சொல்லுவார்களாம்.

மேடையில் அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் காவி உடை அணிந்து அமர்ந்திருந்த அறிவொளி என்ற ஆன்மீகவாதி அடுத்து பேச வந்தார். நடிப்பின் இமயத்திற்கு நடக்கும் விழாவில் இந்த சாமியாருக்கு என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். எனக்கும் அதே சந்தேகம்தான் என்று பேச்சை தொடங்கியவர் ஒரு வேளை இமயத்தில் அமைந்திருக்கும் கைலாசத்தை வணங்குபவன் என்ற முறையில் என்னை அழைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு விளக்கமும் கொடுத்தார். ஆனால் சினிமா பற்றி பெரிதும் தெரிந்தவர் என்பது அவர் பேச்சில் வெளிப்பட்டது. 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழில் சைத்தியம் என்ற புத்தகம் இருந்ததாக குறிப்பிட அவர்,அதில் நடிப்புக் கலையின் நவரசங்களையும் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதாக சொன்னார். ஆனால் அந்த புத்தகத்தை சிவாஜி படித்திருக்க முடியாது என்றார். ஆனால் நீங்கள் புத்தகத்தை படித்து விட்டு சிவாஜி நடிப்பை பார்த்தால் இரண்டும் ஒன்றாகவே இருக்கும் என்றார். அன்னையின் ஆணை படத்தின் முக்கியமான காட்சியான சாவித்திரி சிவாஜியை அடித்து பனியனை கிழித்து விடும் காட்சியை விவரித்த அவர், நடிகர் திலகம் அமைதியாக காயங்களை கழுவிக் கொண்டு வந்து டர்க்கி டவலால் சாவித்திரியை விளாசும் காட்சியை ரசித்து சொன்னதை கூட்டம் ஆரவாரத்தோடு வரவேற்றது. கட்டபொம்மன் நாடக விழாவில் அண்ணா கலந்து கொண்டு மொட்டு விடும் போதே கணேசனை எனக்கு தெரியும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியதையும் நினைவு கூர்ந்தார். கலைஞரின் வசனங்கள் சற்று கடினமானவை என்பதை சொன்ன அறிவொளி ஆனால் அதை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் நடிகர் திலகம் என்றார். கலைஞரின் வசனங்களை பேசியதால் சிவாஜிக்கு சிறப்பா [கூட்டம் அமைதி காத்தது] இல்லை சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனங்கள் சிறப்பு பெற்றதா [பலத்த கைதட்டல் - நிறுத்தும்படி ராமும் பிரபுவும் சைகை செய்கிறார்கள்] என்று ஒரு பட்டி மன்றம் வைத்தால் அதற்கு கலைஞரே நடுவராக இருந்தால் கணேசன் பேசியதால்தான் என் வசனங்கள் சிறப்பு பெற்றன என்று தீர்ப்பு சொல்லியிருப்பார் என்று அறிவொளி அவர்கள் சொன்னபோது பயங்கர கைதட்டல். [அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் கணேசனால்தான் கருணாநிதியின் வசனங்கள் புகழ் பெற்றன என்று பதிவு செய்யும் சாதனையை நடிகர் திலகத்தை தவிர வேறு யாரால் செய்ய முடியும்?]. வாய்ப்பளித்த நடிகர் திலகத்தின் பிள்ளைகளை வாழ்த்தி விடைப் பெற்றார் திரு.அறிவொளி.

இறுதியாக பேச வந்தார் முக்கிய விருந்தினர் திரு.பரத்ராம். தமிழில்தான் பேசப் போகிறேன் என்று சொன்ன அவர் திரு அறிவொளிக்கு பிறகு தன்னை பேச அழைத்ததற்கு செல்லமாக கோபித்துக் கொண்டார். [சச்சின் செஞ்சுரி அடித்ததற்கு பின் அடுத்த பாட்ஸ்மான் விளையாடுவதை யாரவது பார்ப்பார்களா?] ராம்குமார் தன்னை தொலைபேசியில் அழைத்து நேரில் வருவதாக சொன்னவுடன் தான் வேறு ஏதோ விஷயம் என்று நினைத்ததாகவும், விழாவிற்கு தலைமை என்பதை கேட்டவுடன் அதுவும் லதா மங்கேஷ்கர் வர வேண்டிய இடத்தில் என்று கேட்டதும் வார்த்தை வராமல் நின்று போனதாகவும் சொன்னார். தன்னை எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று யோசித்ததாகவும் பின் தன் தந்தையார் திரு வி.பி.ராமன் அவர்களும் நடிகர் திலகமும் கொண்டிருந்த நாற்பதாண்டு கால நட்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னை அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன் என்றார். உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது கொடைக்கானலில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு மாத காலமும் மாலையில் ஷூட்டிங் முடிந்தவுடன் நடிகர் திலகம் தங்கள் வீட்டிற்கு வந்ததை பெருமையுடன் சொன்னார். அது போல தங்கள் தந்தை காலமான போது காலையில் தங்கள் வீட்டிற்கு வந்த நடிகர் திலகம் மாலை வரை இருந்ததையும், சகோதர்களான தங்கள் மூன்று பேரையும் அருகில் அழைத்து கொடைக்கானல் நினைவுகளை பங்கிடும் விதமாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாடியதையும் உணர்ச்சிபூர்வமாக நினைவு கூர்ந்தார். அன்னை இல்லத்தோடு இன்றும் அந்த நட்பு தொடர்வதாகவும் அது என்றென்றும் தொடரும் என்றார். இன்று விருது பெற்ற அனைவருக்கும் தான் ரசிகன் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு கிடைத்த ஒரு நல்ல மேடையாக இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு விடை பெற்றார்.

(தொடரும்)

அன்புடன்

joe
2nd October 2009, 11:57 PM
A_A :ty:

Murali Sir :notworthy:

Murali Srinivas
3rd October 2009, 01:12 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் - Part III

விருது பெற்றவர்களின் சார்பாக பி.பி.எஸ். வந்ததார். நடிகர் திலகத்தை வாழ்த்தி தான் எழுதிய கவிதையை படித்து காண்பித்த அவர் அதை பிரபுவிற்கு பரிசளித்தார். பிறகு காலங்களில் அவள் வசந்தம் பாடல் மெட்டில் நடிகர் திலகத்தை பற்றிய ஒரு பாடல் பாடினார். சரணத்தின் மூன்றாவது வரியில் பிரமிப்பூட்டுகிறாய் அந்த விண்ணுலகை என்ற வரிக்கு பலத்த கைதட்டல். பாடும் போது சற்று தடுமாறும் இந்த குரல் பேசும் போது இன்னும் அதே கம்பீரம்.

நன்றியுரையாற்ற வந்தார் இளைய திலகம் பிரபு. விருது பெற்ற ஒவ்வொருவரையும் தனி தனியே பாராட்டினார். முத்தப்பாவிற்கும் சிவாஜிக்கும் இடையே நிலவிய நட்பை சிலாகித்து சொன்னார். ஏ.வி.எம்மில் பணியாற்றிய முத்தப்பா எப்படி ஏ.வி.எம். செட்டியார் கேட்டுக் கொண்டதின் பேரில் நடிகர் திலகத்தோடு பேசி உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரபு அவரை சிவாஜி வெள்ளை என்றுதான் அழைப்பார் என்றார்.[ஆள் நல்ல கருப்பு நிறம்].

சுசீலாவின் குரல் என்றால் அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்ன அவர் மேடையில் முன்பே சொல்லப்பட்ட லதா ஆஷா சகோதரிகளிடம் சிவாஜி சவால் விட்டதை மறுபடியும் சொன்ன பிரபு படித்தால் மட்டும் போதுமா பாடல் கம்போசிங்கின் போது சிவாஜி அங்கு இருந்ததையும் தன்னிலவு தேனிறைக்க பாடலின் ஆரம்ப மெட்டு சிவாஜி சொன்னது என்றும் சொன்ன பிரபு அந்த பாடலை சுசீலாதான் பாட வேண்டும் என்று பீம்சிங்கிடம் உறுதிபட சொன்னதை கூறினார்.சுசீலாவைப் பார்த்து உங்களுக்கு விருதளிப்பதில் எங்களுக்கு பெருமை என்றார்.

பி.பி.எஸ். அப்பாவிற்கு ரொம்ப பிடித்தவர் என்று சொன்ன பிரபு, அப்பா எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு என்று பொன் என்பேன் சிறு பூவென்பேன் பாடலை குறிப்பிட்டார். கமலா அம்மாளை பார்த்து இந்த பாடலை பாடுவார் என்ற சுவையான செய்தியை சொன்ன பிரபு பி.பி.எஸ்ஸின் கல்யாணத்திற்கு தம்பதி சமேதராக சிவாஜி சென்று வாழ்த்தியதையும் சொன்னார். பி.பி.எஸ் அவர்களுடன் நடிகர் திலகம் கன்னடத்தில்தான் உரையாடுவார் என்ற உபரி தகவலையும் வெளியிட்டார்.

எஸ்.பி.பியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நேரம் போதாது என்று சொன்ன பிரபு ஆயிரம் நிலவே வா பாடலை கேட்டு விட்டு பாலுவை தன் படத்தில் பாட வைக்க வேண்டும் என்று சிவாஜி எம்.எஸ்.வியிடம் சொன்னதை சொன்னார். அன்னை இல்லத்தின் ஒரு பிள்ளையாகவே பாலுவை பார்ப்பதாகவும், திரையுலகில் எப்படி ஒரு நடிகர் திலகம், ஒரு மக்கள் திலகம், ஒரு கலைஞர், ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு கலை ஞானி மட்டும்தான் இருக்கிறார்களோ அது போல ஒரு பாலு தான் என்றார்.

முத்துமாணிக்கம் பற்றி சொன்ன பிரபு அவரை பெரியப்பா என்றுதான் அழைத்திருந்ததாகவும் பிறகு தன் தம்பி அவரது தம்பி மகளை திருமணம் செய்துக் கொண்டதால் மாமனார் அந்தஸ்திற்கு போய் விட்டதாகவும் சொன்னார். ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த போது அப்பா ரிலாக்ஸ் செய்வதற்கு செல்லும் இடம் வேட்டைக்காரன் புதூர் என்று பிரபு குறிப்பிட்டார்.

பரத்ராம் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரபு அவர் தந்தை ஒரு சிங்கம், இவர் குட்டி சிங்கம் என்றார். தங்கள் குடும்ப நலனில் ராமன் குடும்பத்தின் அக்கறையை சுட்டிக் காட்டிய பிரபு அவர்கள் குடும்பத்திற்கும் நன்மையே வரும் என்றார்.

இறுதியாக ரசிகர்களை நோக்கி திரும்பிய பிரபு சிவாஜி என்ற ஜீவ காற்றின் ஆக்ஸிஜன் என்று ரசிகர்களை குறிப்பிட்டார். நீங்கள் எங்களோடு இருக்கும் வரை எங்கள் தந்தை எங்களுடன் இருப்பது போன்றே உள்ள உணர்வு கிடைக்கிறது. நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருங்கள் என்று வேண்டிய பிரபு தான் சில நிகழ்ச்சிகளுக்கு ஷூட்டிங் காரணமாக செல்ல முடியவில்லை.அதனால் தன்னை தப்பாக நினைக்க வேண்டாம் என்று கூறினார். அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார்.

பிரபு பேச்சில் இரண்டு விஷயங்கள். கடந்த நாலைந்து வருடங்களாக பார்த்த பிரபுவின் பேச்சில் இப்போது நல்ல சரளம். தங்கு தடையில்லாமல், எழுதி வைத்து படிக்காமல் நேரிடையாக பேசுகிறார். இரண்டு - மனதிலிருந்து பேசுகிறார். ஆகவே ஆடியன்ஸை அவர் பேச்சு நேரிடையாக பாதிக்கிறது.

இறுதியாக நாட்டுப் பண். இதிலும் புதுமையாக கையில் தேசிய கொடியேந்திய திருப்பூர் குமரனாக நடிகர் திலகம் திரையில் தோன்ற நாட்டுப் பண் ஒலித்தது. ஒருவர் கூட கலைந்து செல்லாமல் அமைதி காக்க விழா இனிதே நிறைவுற்றது.

அன்புடன்

pammalar
3rd October 2009, 01:52 AM
டியர் முரளி சார்,

விழாவை உங்களுடன் மீண்டும் ஒரு முறை கண்டு களித்த திருப்தி !!!

அன்புடன்,
பம்மலார்.

Karikalen
3rd October 2009, 06:21 AM
Thanks for the update Murali Saar

Karikalen

NOV
3rd October 2009, 08:02 AM
Next, Un kannil neer vazhindhal.....NT would be seated in a easy chair & Padmini will be sitting near his feet. In a low angle shot, NT would bend down & rest his chin on Padmini's head. brought back the scene to memory and tears to the eyes. :cry:


[html:4e7aed6b42]
http://awardakodukkaranga.files.wordpress.com/2009/05/vietnam_veedu.jpg[/html:4e7aed6b42]

HARISH2619
3rd October 2009, 01:08 PM
திரு முரளி சார்,
விழாவை தாங்கள் விவரித்துள்ள அழகைப்பற்றி என்னத்த சொல்வேன்? எப்படி சொல்வேன்?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்,நான் எப்போதும் சொல்வதை போல,நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர்களாகிய நாங்கள் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் :notworthy:

saradhaa_sn
3rd October 2009, 01:11 PM
டியர் முரளி,

வழக்கம்போல விழா அரங்கின் மைய இருக்கையில் அமர்ந்திருந்து கண்டுகளித்த உணர்வை அளித்துவிட்டீர்கள். அழகான, தெளிவான, துல்லியமான, விளக்கமான விழாத்தொகுப்பு.

சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே காணும் பேறுபெற்ற இவ்விழாவை, உலக ரசிகர்கள் அனைவரின் கண்களுக்கும் கொண்டு சென்றுவிட்டீர்கள்.

(ஒவ்வொரு ஆண்டும் சிறப்புற நடக்கும் நடிகர்திலகம் பிறந்தநாள் விழா, மற்றும் நடிகர்திலகம் விருது வழங்கும் விழாவினை, எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்புவதில்லை என்பது பெரிய சோகம்).

joe
3rd October 2009, 01:50 PM
NT Birthday function photos
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/19625.html

rangan_08
3rd October 2009, 05:52 PM
Murali sir,

Thanks for that wonderful coverage. I really feel so happy to know that the function went off really well & most importantly, the overwhelming response it had from fans. I also happened to see posters from " Kalai Nila Sivaji Rasigar Mandram " in my surrounding. People are still active & going strong :thumbsup:

Thanks NOV, you have made my post complete. And as you said, it has bought tears in my eyes as well.

mr-karthik, you were right about the songs of SS.

suvai
3rd October 2009, 06:08 PM
Murali nga!!!
thank u for taking us to the function through your writing!!awesom!!

RC
3rd October 2009, 08:18 PM
Murali-ji: vizhaavai nEril paarththa uNarvai ungaL ezhuththil uNarndhEn!

indha nEraththula ippadi oru sOgam...
http://www.indiaglitz.com/channels/tamil/article/50489.html

Murali Srinivas
3rd October 2009, 11:50 PM
Thanks Joe.

சுவாமி, நன்றி. விழாவை உங்களுடனும் உங்கள் நண்பருடனும் சேர்ந்து கண்டு களித்தது மிகவும் சந்தோஷமான விஷயம்.

Thank you Karikalan.

மனங்கனிந்த நன்றி செந்தில். எல்லா புகழும் நடிகர் திலகதிற்கே.

நன்றி சாரதா. விழாவை நேரில் காண முடியாத பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இந்த நிகழ்ச்சிகளை எந்த தொலைக்காட்சியும் ஒளிப்பரப்புவதில்லை. அடுத்த முறையேனும் "அன்னை இல்லம்" இந்த குறையை போக்கும் என நம்புவோம்.

Thanks Mohan. Fans are still active and raring to go. Only thing is they need to be properly guided and channelised.

Suvai, thank you. I am pleasantly surprised to see you in NT thread. Welcome.

RC- NaNdRi. UnGaLaIyUm InDhA PaKkAm PaArThU EvvalavU NaaLaaYitru?

Regards

Murali Srinivas
4th October 2009, 12:08 AM
மதுரையில் நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நிரல்.

நாள் - 04.10.2009, ஞாயிறு மாலை

இடம் - ராஜா முத்தையா மன்றம் அருகில், கே.கே.நகர்.

மாலை நான்கு மணி முதல் நடிகர் திலகத்தின் படக்காட்சிகள் மற்றும் மதுரை மியுசியானோ குழுவினரின் இன்னிசை.

வரவேற்புரை - வி.என்.சிதம்பரம் - சிலை அமைப்பாளார் [கமலா தியேட்டர்]

விழா முன்னிலை - பரிதி இளம்வழுதி -செய்தி துறை அமைச்சர்.

விழா தலைமை - உலக நாயகன் கமல்ஹாசன்.

சிலை திறப்பு - மு.க.அழகிரி, மத்திய உர மற்றும் ரசாயன துறை அமைச்சர்.

வாழ்த்துரை வழங்குவோர்:

நெப்போலியன் - மத்திய இணை அமைச்சர்

தமிழரசி - ஆதி திராவிட நலத்துறை அமைச்சர்

ஆச்சி மனோரமா

வைகை புயல் வடிவேலு

இயக்குனர் பி.வாசு

நடிகர் விஜயகுமார்

நடிகர் தியாகு

நடிகர் இயக்குனர் சசிகுமார்

நடிகர் அருண் விஜய்

நன்றியுரை - இளைய திலகம் பிரபு

அன்புடன்

Avadi to America
4th October 2009, 12:21 AM
an emotional interview from manorama

http://123indianonline.com/offbeat/aachi-manorama-experience-with-sivaji-ganesan/#



An interesting one.

http://rakeshkumar7.tripod.com/id46.html

Murali Srinivas
4th October 2009, 12:25 AM
மதுரையில் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் [சனி,ஞாயிறு] நடைபெறும் இதனை வடிவமைத்தவர் "எங்கள் சிவாஜி" விஜயன் [இன்று அவர் இதயக்கனி விஜயனாக இருந்த போதிலும்]. நமது ராகவேந்தர் சார் அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். இரண்டு நாட்கள் முன்னதாகவே மதுரை சென்று விட்ட அவர்கள் இருவரும் இதை சிறப்புற அமைத்திருப்பதாக செய்தி. சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நேற்றே மதுரை சென்று விட்ட ராம்குமார் அவர்கள் இன்று காலை இதனை திறந்து வைத்திருக்கிறார். ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு அருகில் உள்ள யூத் ஹாஸ்டல் எனப்படும் இடத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

முன்னதாகவே சென்று விட்ட ராகவேந்தர் சாரும் இன்று இரவு புறப்பட்டு சென்ற பம்மல் சுவாமியும் நமக்கு நேரடி தகவல்களை அளிக்க இருக்கிறார்கள்.

அன்புடன்

groucho070
4th October 2009, 11:07 AM
Grouch bro's article in behindwoods (http://www.behindwoods.com/features/visitors-1/sivaji-ganesan-01-10-09.html). Congrats bro.

But Behindwoods took the incomplete content from this thread instead of full post Groucho's Blog :oops:

Nerd, thanks. I actually sent just first few para's to them trying to get them intersted. Only IG replied and I sent them the whole thing. Behindwood never even bothered to contact me and went ahead to publish that. But that will appeal to more low attention span crowd, I suppose.
:lol:

Groucho,
Your article @ indiaglitz
http://www.indiaglitz.com/channels/tamil/article/50444.htmlNice to see that it's hardly edited. Thanks for vetting in the first place, Joe. :D

Murali-sir, hope you enjoyed it.

saradhaa_sn
4th October 2009, 12:23 PM
Hi 'Avadi to America'

it is nice to see your active part in NT's thread in recent days.

pl.keep continue...

joe
4th October 2009, 02:38 PM
[tscii:16561d6980]Sarath to remake ‘Veerapandiya Kattabomman’ :cry3: [/tscii:16561d6980]

saradhaa_sn
4th October 2009, 02:42 PM
மதுரையில் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நேற்றே மதுரை சென்று விட்ட ராம்குமார் அவர்கள் இன்று காலை இதனை திறந்து வைத்திருக்கிறார்.
சமீபத்தில் 'உன்னைப்போல ஒருவன்' வெற்றிப்படத்தைக் கொடுத்துள்ள டாக்டர் கமல், முந்தாநாள் கலைஞர் தொலைக்காட்சியில், தொலைபேசிமூலம் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்களுக்கு குறைவான வாய்ப்பே கிடைத்தது. பெரும்பாலும் திரையுலக பிரமுகர்களே ஆக்ரமித்துக்கொண்டனர். சில வி.ஐ.பிக்கள் வேறு பெயரில் பேசி கலாய்த்தனர்.

அப்போது ஃபோனில் "ஐ ஆம் ராம்குமார், ஃப்ரம் மதுரை" என்ற குரல் கேட்டது. நடிகர்திலகத்தின் மூத்த புதல்வர், சகோதரர் ராம்குமார்தான் பேசினார். (சமீபத்தில் வசந்த் டி.வி.யின் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சி மூலம் அவர் குரல் நமக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது). கமலிடமிருந்து உடனடியாக ஒரு ஆக்ஷன் படத்தைப்பார்க்க விரும்புவதாகக் கூறினார். அன்னை இல்லத்தில் இருந்துகொண்டு, மதுரையில் இருந்து பேசுவதாக சும்மா கமலைக் கலாய்க்கிறார் என்று நினைத்தோம்.

இப்போ உண்மை புரிந்தது... , நிஜமாகவே அப்போது மதுரையில்தான் இருந்திருக்கிறார்.

joe
4th October 2009, 04:13 PM
இன்று இரவு 9 மணிக்கு சிங்கப்பூர் வசந்தம் சென்ரல் தொலைக்காட்சியில் 'வீர பாண்டிய கட்டபொம்மன்'.

Avadi to America
4th October 2009, 09:34 PM
http://www.indiaglitz.com/channels/tamil/article/50489.html

enna kodumai ithu........ :twisted: :twisted: :twisted: :twisted:

joe
4th October 2009, 09:39 PM
இந்நேரத்தில் மதுரையில் நம் நடிகர் திலகத்தின் சிலை 'நம்மவர்' கமல்ஹாசனால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் :D

விழா நிகழ்ச்சிகள் ஏதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா? :roll:

P_R
4th October 2009, 10:01 PM
[tscii:bbb5f2fe73]Sarath to remake ‘Veerapandiya Kattabomman’ :cry3: [/tscii:bbb5f2fe73]

:lol:
I recall Sarath singing paattum naan bhaavamum naanE in mahaprabhu
GM's singing reply: paattum naanE paavamum naanE thoongum ennai nee thunburuthaadhE

Plum
4th October 2009, 10:20 PM
[tscii:1f59094a69]Sarath to remake ‘Veerapandiya Kattabomman’ :cry3: [/tscii:1f59094a69]

:lol:
I recall Sarath singing paattum naan bhaavamum naanE in mahaprabhu
GM's singing reply: paattum naanE paavamum naanE thoongum ennai nee thunburuthaadhE
:lol:

Murali Srinivas
4th October 2009, 10:40 PM
தொலைபேசி மூலமாக ஒரு நண்பன் சொன்ன செய்தி. மதுரையில் சிலை திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. மிகப் பெரிய அளவில் கூட்டம் வந்திருக்கிறது. கமல் தலைமையில் அழகிரி திறந்து வைத்திருக்கிறார். நாலு மணிக்கு இசை நிகழ்ச்சியோடு ஆரம்பித்து ஆறு மணிக்கு விழா தொடங்கியிருக்கிறது. எட்டேகால் மணிக்கு நிறைவு பெற்றிருக்கிறது.

விழாவின் ஹைலைட்டே அழகிரியின் பேச்சுதானாம். தன் தந்தையைப் போலவே, பல காலக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூறி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். என் கல்யாணத்திற்கு நேரில் சென்று அழைத்து அழைப்பிதழ் கொடுத்தும் சித்தப்பா [அப்படிதான் பேசினாராம்] வரவில்லை. வர முடியாத சூழ்நிலை என்று சொல்லி விட்டார். ஆனாலும் எனக்கு அவர் மேல் பயங்கர கோபம். சில பல வருடங்கள் அந்த கோபத்திலே இருந்தேன் என்று சொன்னாராம்.

தன்னை மதுரை ரவுடி என்றே அழைப்பார் என்று சொன்ன அவர் [இப்படிதாங்க என் பெயரையே கெடுத்து வச்சிருக்காங்க] இருவர் உள்ளம் படத்தை இருநூறு முறை பார்த்ததாக சொன்னாராம். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகம் முதல் குறவஞ்சி படத்தை தன் தந்தை முதலில் எஸ்.எஸ்.ஆரை. வைத்து தயாரித்தது, இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் படம் நின்று போனது, பின் தன் தந்தை கேட்டுகொண்டதற்கிணங்க சிவாஜி நடித்து கொடுத்தது போன்றவற்றை சொன்னாராம்.

தன் தந்தையை மூனா.கானா. என்று அழைக்கக் கூடிய ஒரே நபர் சிவாஜி சித்தப்பாதான் என்று சொன்ன அழகிரி அதே போல் கோபாலபுரத்தில் தன் தந்தையின் அறைக்கு நேரிடையாக செல்லக் கூடிய இரண்டு பேரில் ஒருவர் சிவாஜி என்றாராம்.[இன்னொருவர் அண்ணா]

இறுதியாக ஒரு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்தாராம். நான் உயிரோடு இருக்கும் வரை இந்த சிலையை தினசரி கழுவி பராமரித்து மாலை அணிவிக்கும் வேலை நடப்பதற்கு நான் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன்.அதற்கு என்னை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தாராம்.

கமல் மொத்தமே இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் பேசினாராம்.[நான் மேடையிலே அமர அழைக்கப்படாவிட்டாலும் ஒரு ரசிகனாக மேடைக்கு கிழே இந்த கூட்டத்தில் ஒருவனாக வந்து கலந்துக் கொண்டிருப்பேன்] அழைப்பிதழில் இருந்த பெயர்களில் ஆச்சி மட்டுமே வரவில்லை என்று தெரிகிறது. நெப்போலியன் கொஞ்சம் விலாவரியாக பேசினார் என்று தெரிகிறது

அன்புடன்

Karikalen
5th October 2009, 05:26 AM
http://www.dinamalar.com/new/

Just a picture, no article on the paper yet. But a very nice one indeed.

Karikalen

NOV
5th October 2009, 05:43 AM
[html:8ed0a00071]
http://img.dinamalar.com/data/images_spl/fpnmix_4760378600.jpg[/html:8ed0a00071]

joe
5th October 2009, 06:48 AM
அழைப்பிதழில் இருந்த பெயர்களில் ஆச்சி மட்டுமே வரவில்லை என்று தெரிகிறது.

ஆச்சிக்கு காலில் அடிபட்டு வீட்டில் இருப்பதாக தகவல் ..அதனால் தான் கமல் விழாவுக்கும் அவர் வரவில்லை.

groucho070
5th October 2009, 07:20 AM
[tscii:ba36202a23]Sarath to remake ‘Veerapandiya Kattabomman’ :cry3: [/tscii:ba36202a23]Shouldn't he be busy remaking Adimai Penn or Madhurayai Meeta Sundara Pandiyan? :P

A2A,
thanks for the links and forwards. By the way, that tripod link is mine, I wrote it few years before joining the hub. Much opinion has changed as far as the intro and the first few para is concerned, I stand by the rest. :D

Okay, should start reading Murali-sar's NT birthday posts.

Avadi to America
5th October 2009, 07:36 AM
[tscii:5746ff3f9e]Sarath to remake ‘Veerapandiya Kattabomman’ :cry3: [/tscii:5746ff3f9e]Shouldn't he be busy remaking Adimai Penn or Madhurayai Meeta Sundara Pandiyan? :P

A2A,
thanks for the links and forwards. By the way, that tripod link is mine, I wrote it few years before joining the hub. Much opinion has changed as far as the intro and the first few para is concerned, I stand by the rest. :D

Okay, should start reading Murali-sar's NT birthday posts.

Groucho007,

it is high time to get copy rights for your articles...... :lol:


Saradha madam,

i will definitely post NT related articles if i come across.............

omega
5th October 2009, 07:53 AM
[tscii:5c84d2bbe3]Sarath to remake ‘Veerapandiya Kattabomman’ :cry3: [/tscii:5c84d2bbe3]Shouldn't he be busy remaking Adimai Penn or Madhurayai Meeta Sundara Pandiyan? :P

ஏற்கனவே "கட்டபொம்மன்"னு ஒரு படம் (ச்சட படம்) பண்ணினாரே, அத மாறி நினைச்சிட்டாரோ என்னமோ? :banghead:

groucho070
5th October 2009, 09:08 AM
Okay, finished reading. Murali-sar, all I can is just this :notworthy: and this :thumbsup: and this :clap:. Yeah, I don't have words to praise your efforts.

RAGHAVENDRA
5th October 2009, 09:57 AM
Dear friends,
Happy to meet you all here. I am really fortunate to have come to Madurai and take part in gala event. The function was a grand success and the exhibition was really a momentous one with so many fans (around 5 to 10 thousands visiting in one day on 4.10.09). I was interviewed by Kalaignar TV along with Vijayan and they have said they would telecast the whole coverage may be next Sunday. I thank Vijayan for giving me the opportunity to contribute in this event). I am just leaving for Madras and before that I was curious to visit the foum and read the postings. I am typing it at 10.00 a.m. 05.10.09 at Madurai. Rest I will post later.
Regards,
Raghavendran

joe
5th October 2009, 10:46 AM
சிவாஜியின் மூத்த மகன் நான்தான் - மு.க.அழகிரி

மதுரை: நடிகர் திலகத்தின் மூத்த மகன்தான் நான்தான். அவரது சிலைக்கு தினமும் மாலை போடும் உரிமையை எனக்குத் தாருங்கள், என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார் மத்திய அமைச்சர் மு.க அழகிரி.

மதுரையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 8.5 அடிய உயர முழு உருவ வெண்கல சிலையை மத்திய ரசாயண மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி நேற்று திறந்து வைத்தார்.

[html:24a4e5cf30]
http://www.dailythanthi.com/images/news/20091005/mdu.jpg[/html:24a4e5cf30]

விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலை வகித்தார். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார்.

அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். விழாவில் மு.க.அழகிரி பேசுகையில்,

சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதில் எனக்கு சந்தோஷம் இருந்தாலும், என்னுடைய சித்தப்பா (சிவாஜி) சிலையாக மாறிவிட்டாரே என்று வருத்தமாக உள்ளது. நடிகர் பிரபு பேசும் போது, கமல் தான் சிவாஜியின் மூத்த மகன் என்று கூறினார். அது தவறு. உண்மையில் நான்தான் மூத்த மகன். :lol:

என்னுடைய தந்தையும் (முதல்-அமைச்சர் கருணாநிதி), சித்தப்பாவும் தி.மு.க.வில் ஒன்றாக பாடுபட்டு வந்தார்கள். அந்த சமயத்தில் சிவாஜியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிலர் தீர்மானம் போட்டு அண்ணாவிடம் கூட கொடுத்தார்கள். அப்போது சிவாஜி, அண்ணாவிடம் சென்று நான் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி வெளியேறினார்.

தி.மு.க.வில் இருந்து சிவாஜி விலகினாலும், என் தந்தையும் அவரும் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

என் தந்தை முன் மற்றவர்கள் சிகரெட் பிடிப்பதற்கு பயப்படுவார்கள். ஆனால் அவர் முன் சிவாஜி சிகரெட் பிடிப்பார். இதை ஏன் கூறுகிறேன் என்றால், அந்தளவுக்கு அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். என் தந்தையை சிவாஜி, மு.க. என்று தான் அழைப்பார். அவரை என் தந்தை கணேசா என்று செல்லமாக அழைப்பார்.

சிவாஜிக்கு தந்த வாய்ப்பு

பராசக்தி படத்தில் முதலில் நடிக்க கே.ஆர்.ராமசாமி ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவரை அந்த படத்தில் இருந்து வெளியேற சொல்லி விட்டு, சிவாஜிக்கு எனது தந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். சிவாஜியும் அந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.

படத் தயாரிப்பாளரான ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு சரியில்லை அவரை நீக்கி விடுங்கள் என்று கூறினார். ஆனால் இதை கருணாநிதியும், இயக்குனரும் ஏற்காமல் தொடர்ந்து சிவாஜியை நடிக்க வைத்து அந்த படத்தை மாபெரும் வெற்றி பெற வைத்தனர்.

குறவஞ்சிக்காக கோணி உடை

குறவஞ்சி படத்தில் சிவாஜி ராஜாவாக நடித்தார். அதில் மாறுவேடம் போட்டு நகரில் நடக்கும் நிகழ்ச்சியை காண நாடோடி போல் வேஷம் போட வேண்டும். அதற்காக சிவாஜிக்கு ஒரு விலை உயர்ந்த ஆடை வழங்கப்பட்டது. உடனே சிவாஜி, அதை தூக்கிப் போட்டு விட்டு, ஒரு கோணியை உடையாக அணிந்து கொண்டு நடித்தார்.

அந்தளவுக்கு நடிப்பை நிஜமாக்குவார். அவருடைய வசந்த மாளிகை படத்தை பார்த்த போது, உண்மையில் அவர் குடித்து விட்டுத்தான் நடித்திருப்பார் என்று நினைத்தேன். அவருடைய படிக்காத மேதை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.

பிரபு மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஒரு வேண்டுகோள். மதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு என் சார்பாக தினமும் மாலை போடப்படுகிறது. அதே போல் சிவாஜி சிலைக்கும் என் சார்பாக தினமும் மாலை போட அனுமதி தர வேண்டும். என் உயிருள்ளவரை மாலை அணிவிப்பேன் 8-) ... என்றார் அழகிரி.

நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் வடிவேலு உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

http://thatstamil.oneindia.in/movies/music/2009/10/05-m-k-azhagiri-unveils-sivaji-statue-in-madurai.html

groucho070
5th October 2009, 10:53 AM
Nice. Thanks, Joe.

I wonder what Ram Kumar would feel personally when luminaries like Kamal, Rajini and now Azhagiri all claim to be NT's "sons" :lol: Anyway, it shows how much emotionally connected they all are to NT. :D

saradhaa_sn
5th October 2009, 12:45 PM
டியர் முரளி,

நடிகர்திலகத்தின் சிலைதிறப்புவிழா பற்றி டெலிபோனிலேயே இவ்வளவு விவரங்கள் திரட்டியுள்ளீர்கள். உங்கள் முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் நன்றிகள் பல.

ராகவேந்தர் சார்,

விரைவில் உங்களின் விளக்கமான நேரடி விழாத்தொகுப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

நடிகர்திலகம் பற்றிய பல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்யப்பட்ட போதிலும், இவ்விழா மத்திய அமைச்சர், அஞ்சாநெஞசன் திரு மு,க,அழகிரி பங்கேற்கும் விழா என்பதால், அட்லீஸ்ட் கலைஞர் தொலைக்காட்சியிலாவது காண்பிக்கப்படும் என்பது துவக்கத்திலிருந்தே என்னுடைய எதிர்பார்ப்பு.

மனோரமா கலந்துகொள்ளாதது நல்லது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், மனோரமாவைப்பொறுத்தவரையில் அவரது மேடைப்பேச்சு ரசிக்கத்தக்க ஒன்று அல்ல. ரொம்பவே தடுமாறுவார். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு உளறிக்கொட்டுவார். அவரது மேடைப்பேச்சைக் கேட்கும் யாரும், 'இவரா திரையில் இந்தக் கலக்கு கலக்குகிறார்?' என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு மேடைப்பேச்சில் உணர்ச்சி வசப்படுவார்.

joe
5th October 2009, 05:36 PM
சிவாஜி என்ற கேடயத்தை மனதில் தாங்கித்தான் நடிக்கிறேன் கமல்ஹாசன் பேச்சு

மதுரை,அக்.5-

"சிவாஜியின் கேடயத்தை மனதில் தாங்கித்தான் நடிக்கிறேன்'' என்று கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன்

மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

இந்த மேடைக்கு பேச வரும் முன், ஒத்திகை பார்க்காமல் தான் வந்தேன். அதே போல் தான் சினிமா உலகிற்கு வந்த போதும் ஒத்திகை இல்லாமல் வந்தேன். நான் சினிமா நடிகனாக தற்போது இல்லாமல் இருந்திருந்தால், எப்படியும் படிக்காமல் பரமக்குடியில் தான் இருந்திருப்பேன். தற்போது இங்கு நடக்கும் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் மற்றவர்களை போல் நானும் கீழே இருந்து அமர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருப்பேன்.

நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சிவாஜியை பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்ததாக கூறினார். அவரை போல் நானும், சிவாஜியை பார்த்தால், பம்மி போய் அடங்கி விடுவேன். இது அவருடைய குடும்பத்தாருக்கு கூட தெரியும். அவர் முன் பேசக் கூட பயப்படுவேன்.

அவர் நடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் தனது வாழ்க்கையில் முழுமையாக வாழ்ந்து இருக்கிறார். அவரிடம் இருந்து எளிமையாக எப்படி வாழ்வது? என்று கற்றுக்கொண்டேன்.

இந்த விழாவில் கலந்து கொண்டதற்காக எனக்கு ஒரு கேடயம் நினைவு பரிசாக கொடுத்திருக்கிறார்கள். உண்மையில், சிவாஜி என்ற கேடயத்தை மனதில் நினைத்துக்கொண்டு தான் நாங்கள் எல்லாம் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறோம். என்னுடைய அலுவலக அறையில் இரண்டு படங்கள் உள்ளது. ஒன்று மகாத்மா காந்தி. மற்றொன்று சிவாஜியின் படம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

நெப்போலியன்

மத்திய மந்திரி நெப்போலியன் பேசியதாவது:-

சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் அது முடியாமல் போய் விட்டது. ஆனால் அவருடைய கலை வாரிசு கமலுடன் சேர்ந்து விருமாண்டி, தசாவதாரம் படத்தில் நடித்து இருக்கிறேன். தசாவதாரம் படத்தில் நான் யானை மீது அமர்ந்து நடித்துக் கொண்டு இருந்தேன். அந்த யானை அங்கு, இங்கும் ஆடியது. இதனால் நான் கீழே விழும் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. இது குறித்து நான் யானை பாகனிடம் கேட்டேன். அதற்கு யானை பாகன், இந்த யானை கேரளாவை சேர்ந்தது, இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், யானையால் தாங்க முடியவில்லை. யானைக்கு மதம் பிடித்தாலும் பிடிக்கலாம் என்று கூறினார். இதனால் எனக்கு பயம் அதிகமாகியது. அதனால் யானைக்கு தினமும், வாழைத்தார்களை கொடுத்து, அதை நண்பனாக்கி கொண்டு படத்தில் நடித்தேன்.

இதே போல் சிவாஜி கணேசன் சரஸ்வதி சபதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு காட்சியில் யானை சிவாஜியின் மேல் கால் வைப்பது போல் உள்ளது. இந்த காட்சியில் சிவாஜி நடிப்பதற்கு முன், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அந்த யானையை கொண்டு ஒத்திகை பார்த்தார். அப்போது, அந்த சிவாஜிகணேசனுக்குப்பதில் போடப்பட்டிருந்த மேஜையை யானை மிதித்து விட்டது. அதனால் நீங்கள் இந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சிவாஜி மிகுந்த தைரியத்துடன் அந்த காட்சியில் நடித்தார்.

இவ்வாறு நெப்போலியன் பேசினார்.

வடிவேலு

நடிகர் வடிவேலு பேசும் போது கூறியதாவது:-

தேவர் மகன் படத்தில் சிவாஜி இறந்தது போலவும், அதைக்கண்டு நான் அழுவது போலவும் காட்சி இருந்தது. இந்த காட்சியின் போது நானும், சங்கிலி முருகனும் கத்தி அழுதோம். உடனே, சிவாஜி வேகமாக எழுந்து கமலை அழைத்தார். என்னப்பா, இவர்களை எங்கிருந்து பிடித்து வந்தாய், இவர்கள், என்னையே செத்தது போல் நடிக்க விடமாட்டார்கள் போல் இருக்கிறதே? என்றார். பின்னர் எங்களிடம் வாயில் துணியை வைத்துக் கொண்டு கத்தாமல் அழ வேண்டும் என்றார். அதே போல் நாங்கள் அந்த காட்சியில் நடித்தோம்.

சிவாஜி கணேசன் இறந்தவுடன் அவருடைய வீட்டுக்குச் சென்று நான் அழுது கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு, தேவர் மகன் பட சூட்டிங்கில் நடந்தது நினைவுக்கு வந்தது. சிவாஜி கணேசன் இந்த கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு எழுந்து வந்து ஏண்டா இப்படி அழுகிறாய்? என்று கேட்கக்கூடாதா? என்று நினைத்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் பேசும்போது. "இன்றைய நடிகர்கள் சிவாஜியின் சாயல் இல்லாமல் நடிக்க முடியாது. ஏன் நண்பர்கள் ரஜினிகாந்த், கமல் கூட சிவாஜியின் சாயலோடுதான் நடிக்க முடியும் என்றார்கள். சென்னை மெரினா கடற்கரையில் கலைமகன் சிவாஜியின் சிலையை, தமிழ்மகன் கருணாநிதி திறந்து வைத்தார். அதே போல் மதுரையில் சிவாஜியின் சிலையை தமிழ்மகனின் மூத்தமகன் திறந்து வைக்கிறார்'' என்றார்.

இந்த விழாவில் பின்னணி பாடகி பி.சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Avadi to America
5th October 2009, 10:16 PM
நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் வடிவேலு உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Eppa nepolean mathiya amaichar aanarru..... :shock: :shock: :shock: :shock: