PDA

View Full Version : Yugabharathy



R.Latha
18th November 2008, 01:05 PM
Noted lyricist Yugabharathy is getting married on 23 November. A popular lyricist, who started his journey as a lyric writer with 'Palanguzhiyin Vattam Parthen' in Anandham has penned down over a 100 songs.

The widely sung Manmadha Rasa from Thiruda Thirudi is the handwork of Yugabharathy. He has also written the melodious song 'Konja Neram Konja Neram' in Chandramukhi. His words are usually comprised of mainly Tamil words and has attained him fame as a good lyricist.

Some of his popular songs include Kadhal Pisase (Run), Thavani Pota (Sandai Kozhi), Ragasiya Kanavugal (Bheema), Uppukallu (Karuppasamy Kuthagaikarar).

Yugabharathy will marry smt. Anbuselvi at a grand wedding to be held at Thanjavur on 23 November in the presence of Tamil scholars. The marriage wou

R.Latha
20th November 2008, 01:36 PM
nobody read this news

MADDY
23rd November 2008, 06:30 PM
nobody read this news

Views:117 :)

selvakumar
23rd November 2008, 06:55 PM
:lol:

R.Latha
2nd March 2009, 02:28 PM
[tscii:e844ac4008]
காதல் திருமணம்!

இந்த மாதத்தில் நடிகை வினோதினி சென்னை தொழிலதிபர் வெங்கட் ஸ்ரீதர் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதே போல அன்சாரி ராஜா என்பவரை ‘கருத்தம்மா' ராஜ ஸ்ரீ திடீர் திருமணம் செய்து கொண்டார். சென்ற மாதத்தில் காவ்யா மாதவன் மற்றும் நடிகை சங்கீதா ஆகிய நடிகையரும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். அடுத்து ‘ஜெயம்' ரவியின் திருமணம் நடக்க இருக்கிறது. 2009 நல்ல தொடக்கம்தான்.

சோனியா இல்லை!

சோனியா கதாநாயகியா நடித்த ‘பத்து பத்து' படத்தைத் தயாரித்த நிறுவனமும் ‘கேள்விக் குறி' படத்தைத் தயாரித்த நிறுவனமும் ஒன்று சேர்ந்து ‘கடத்தல்' என்ற படத்தைத் தயாரிக்கிறது. ‘கேள்விக்குறி' படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த ஜெயலானி, இந்தப் படத்தையும் நடித்து இயக்குகிறார். ஆனால் இதில் சோனியா இல்லை. அவருக்கு பதில் இன்னொரு அழகு பதுமையை இறக்குமதி செய்கின்றனர்.

கெட்டப் சுந்தர்!

வெள்ளித்திரையில் இருந்து நடிகைகள் சின்னத்திரைக்கு செல்கின்றனர். அதே போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு பிரேம்குமார், அபிஷேக், சேத்தன் ஆகியோர் வந்து விட்டனர். இதில் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் நிறைய படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் நடித்து வருகிறார். படத்துக்குப் படம் அவருக்கு கெட்டப்புகளும் வித்தியாசமாக அமைகிறன. லேட்டஸ்டாக ‘தம்பிக்கு இந்த ஊரு' படத்தில் பிரபுவின் வலது கையாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஒரு கால் இருக்காது. அதற்கு பதில் கட்டை கால் வைத்து நடிக்கிற பாத்திரம். அதே போல் சுந்தர் .சி நடிக்கும் ‘வாடா' படத்தில் ரிஷிகேஷில் மாறு வேடத்தில் உலவும் பாத்திரம். அதாவது பின்லேடன் வேடம். படப்பிடிப்பின் போது சந்தேகத்தில் போலீஸ் வந்து விசாரித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இருட்டு குகையில் முரட்டு சிங்கம்!

வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்பு தேவன் அடுத்து பிரகாஷ் ராஜ் நடித்த ‘அறை எண் 305-ல் கடவுள்' படத்தை இயக்கினார். இப்போது லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கு பெயர் ‘இருட்டுக் குகையில் முரட்டு சிங்கம்'. இதுவும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தயாராகிறது.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090226225259&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4

[/tscii:e844ac4008]

R.Latha
2nd March 2009, 02:47 PM
வெகுளியாய் சிரிக்க வேண்டும்

திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதிக்கும், தஞ்சையைச் சேர்ந்த அன்புச்செல்விக்கும்
சென்ற 23-ஆம் தேதி திருமணம் நடந்தது.

யுகபாரதி தன் மனைவிக்கு எழுதிய ஒரு கவிதையை தங்களது திருமண அழைப்பிதழில் பிரசுரம் செய்திருந்தார்.

அதை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்!

உனக்கு
தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக் கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கிற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதை தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய் சிரிக்க வேண்டும்.

http://www.cinemaexpress.com/snippets/snippets2.asp