PDA

View Full Version : Asthamanam Thedi



sivank
17th December 2008, 01:34 AM
அஸ்தமனம் தேடி

சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கமலத்துக்கு தலை விண் விண் என வலித்தது. சூடாக ஒரு லோட்டா காபி குடிப்போம் என்றால், நாக்கில் ஜலம் பட குறைந்த பட்சம் நாலு மணி நேரமாவது ஆகும். கிழவியை இன்னும் ஆஸ்பத்திரியில் இருந்தே கொண்டுவரவில்லை, செய்தி சொல்ல பேர பிள்ளைகள் சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும் போய் இருக்கிறார்கள். வீடு எங்கும் வித விதமான அழுகை ஒலி. ஒரு வித பயத்தோடு அழுது கொண்டிருக்கும் புது நாட்டுபெண்ணை பார்த்தால் பாவமாக இருக்கிறது, கல்யாணம் முடிந்த நாலாவது நாள் இப்படி ஒரு துக்க சம்பவம். பத்து வருஷமாக இழுத்து கொண்டிருந்த கிழவி இப்போது தானா மண்டையை போட வேண்டும், ஏதோ இவளாவது என்னை மாதிரி அதிர்ஷ்டகட்டையாக இல்லாமல் இருந்தால் சரி.

" பெண்டுகளா, யாரும் அழப்படாது. பாட்டி நம்மள விட்டு போக மாட்டா, இங்கேயே தான் இருப்பா. கல்யாண சாவுக்காரா அவ்ளோ சீக்கிரம் போய்ட மாட்டா. எலே, வாத்யாருக்கு சொல்லியாச்சா, அந்த மாயாண்டி பயல வரச்சொல்லு. எங்க போனான் இந்த தடிப்பய வரது?" பெரியவரின் வெண்கல குரல் திடீரென தாக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்த கமலம் கண்களால் அந்த "தடிப்பய வரது" வை தேடினாள்.

கை நிறைய பச்சை மூங்கில்களோடு வந்த வரது பெரியவரின் குரல் கேட்டு உள்ளே போனான். பின் கட்டில் இருந்த கமலத்திற்க்கு பெரியவர் இரைவதும் அவள் கணவன் வரது கம்மிய குரலில் ஏதோ சொல்வதும் கேட்டது. வரது கிழவிக்கு ஏதோ வகையில் சொந்தம். சிறு வயதில் தாய் தந்தையரை விபத்தில் இழந்ததில் இருந்தே அங்கு தான் வளர்ந்து வந்தான். என்ன பார்தானோ வந்ததில் இருந்தே மந்தமாகவே வளர்ந்து விட்டான். படிப்பிலும் நாட்டம் இல்லை, மற்ற பிள்ளைகளை போல விளயாட்டிலும் நாட்டம் இல்லாமல் எப்போதும் மோட்டுவளையை பார்த்துக்கொண்டே இருந்தான். திருவிடைமருதூர் மகாலிங்கத்தின் மீது அப்படி என்ன ஆசையோ, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அங்கு ஓடி போய் விடுவான். நாள் கணக்கில் கோவிலிலேயே யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருந்த காரணம் அந்த மஹாலிங்கதுக்கும் சோழன் வருகைக்காக காத்திருக்கும் அந்த பிரம்மஹத்திக்கும் தான் தெரியும். கிழவி யார் யாரயோ கெஞ்சி வாங்கி கொடுத்த வேலையெல்லாம் ஒரு சில வாரங்களே நிலைத்தன. கல்யாணம் செய்தால் பொறுப்பு வரும் என்று யாரோ ஒரு புண்யவான் சொன்னதை கேட்டு கமலத்தை அவனுக்கு தாரை வார்த்து அவள் வாழ்க்கையையும் மண்ணாக்கினாள். கமலம் ஆனால் வெகு கெட்டிக்காரி, இப்படிப்பட்ட கணவனே குழந்தையாக இருக்கும் போது வேறு குழந்தைகள் வேண்டாம் என முடிவெடுத்து வைராக்கியதுடன் இருந்தாள். கிழவி நடமாடி கொண்டிருந்தபோதே மற்றவர்களால் அழையா விருந்தாளியாக கருதப்பட்ட கமலம் அத்தனை வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தாள். குழந்தைகளுக்கு கமலம் பெரியம்மா கையால் கதை கேட்டு கொண்டு சாப்பிட்டால் ஒரு அலாதி சுகம். நாளாக நாளாக சொந்தகாரர்களும் தெரிந்தவர்களும் ஒரு விசேஷம் என்றால் கமலம் வரது தம்பதிகளை வரவேற்க்க ஆரம்பித்தனர். அழைப்பின் உண்மை காரணத்தை உணர்ந்த கமலமும் மாங்கு மாங்கென உழைத்தாள். இப்படி இருந்த வேளையில் தான் ஆதரவாக இருந்த கிழவியும் மண்டையை போட்டாள்.

காரியமெல்லாம் முடிந்து கிழவியும் கைப்பிடி சாம்பலாய் போன பின் வீடு முழுவதையும் அலம்பி சாப்பாட்டு கடையையும் முடித்தபிறகு பின்கட்டில் அம்பாரமாய் இருந்த பாத்திரங்களை தேய்க்க வந்த கமலம் அங்கு கண்ணில் நீர் பளபளக்க உட்கார்ந்திருந்த வரதுவை பார்த்து திடுக்கிட்டு போனாள். என்ன நடந்தாலும் சலனமே காட்டாமல் இருக்கும் வரது இப்படி இருப்பது மனதை என்னவோ செய்தது.

"என்னன்னா, ஆச்சு? என்னமோ போல இருக்கேளே, சாப்டேளா?"

"இல்லடி, யாரும் சாப்பிட கூப்பிடல, கேக்கவும் என்னமோ மாதிரி இருந்தது. பெரியவரும் எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறார். ஒன்னுமே புரியலடி, பாட்டி போனதுலேந்து எல்லாமே மாறி போச்சுடி"

"அசடாட்டம் பேசாதேங்கோ, நான் போய் கொஞ்சமா ரசம்சாதம் கரச்சுண்டு வரேன், சாப்டுட்டு போய் தூங்குங்கோ, நான் கை வேலை முடிச்சிண்டு வரேன். நாளைக்கு எல்லாம் சரியா போயிடும்."

"நான் படுக்க போறேண்டி, என்னமோ சாப்டவே பிடிக்கல, நீ மெதுவா வா," என்று கூறி தடுமாறி உள்ளே போன வரதுவை பார்த்தவாறே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள் கமலம்.

தூங்கி கொண்டிருந்த வரது யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து கண் விழித்து பார்த்தால் மலர்ந்த முகத்தோடு எதிரே கமலம் இருந்தாள். "பாட்டியோட காரியம் முடியட்டும், நாம ரெண்டு பேரும் திருவிடைமருதூருக்கே போயிடுவோம். எல்லாருக்கும் படியளக்கற மகாலிங்கம் நமக்கும் ஒரு வழி காட்டாமயா போயிடுவார். மிச்சம் மீதி இருக்கற வாழ்நாள அங்கேயே கழிச்சுடுவோம். என்ன சொல்றேள்?"

வரதுவின் கண்களில் தெரிந்த ஒளியும் அவன் கமலத்தின் கையை அழுத்திய வேகமும் அவளுக்கு மிகவும் புதியதாக இருந்தது

pavalamani pragasam
17th December 2008, 07:39 AM
சோக ரசம் இழையோடும் யதார்த்தம்! ஏதேனும் உண்மை சம்பவமோ?

Shakthiprabha.
17th December 2008, 11:11 AM
சிலருக்கு வாழ்வே அஸ்தமனத்தில் ஆரம்பிக்குமாம்.

வரது ரொம்ப கொடுத்துவைத்தவன்(ர்)

sivank
17th December 2008, 08:59 PM
சோக ரசம் இழையோடும் யதார்த்தம்! ஏதேனும் உண்மை சம்பவமோ?

ஆமாம், பி பி என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் உண்மை கதை தான் இது :(

Madhu Sree
17th December 2008, 08:59 PM
:clap: very very practical... My grandma use to say, 'oruthanoda vaazhkaila mudhal paadhi kashtappataa maru paadhi avanukku santhoshamaa amaiyumnu' as per ur story, varadhu's second part of his life wud be colourful...

thangaludaiya ezhuthu nadaikku - :clap:



" பெண்டுகளா, யாரும் அழப்படாது. பாட்டி நம்மள விட்டு போக மாட்டா, இங்கேயே தான் இருப்பா. கல்யாண சாவுக்காரா அவ்ளோ சீக்கிரம் போய்ட மாட்டா. எலே, வாத்யாருக்கு சொல்லியாச்சா, அந்த மாயாண்டி பயல வரச்சொல்லு. எங்க போனான் இந்த தடிப்பய வரது?" பெரியவரின் வெண்கல குரல் திடீரென தாக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்த கமலம் கண்களால் அந்த "தடிப்பய வரது" வை தேடினாள்.

ingayum maayaandiyaa... :D :yessir:

Madhu Sree
17th December 2008, 09:00 PM
சோக ரசம் இழையோடும் யதார்த்தம்! ஏதேனும் உண்மை சம்பவமோ?

ஆமாம், பி பி என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் உண்மை கதை தான் இது :(

oops :(

P_R
19th December 2008, 12:37 AM
சீரான எழுத்து.

பாட்டி போனபின் எல்லாம் மாறிவிட்டதா, வரது'வுக்கு பிற விஷயங்கள் கொஞ்சம் தீர்க்கமாக அஸ்தமனத்துக்குப் பிறகு தெரிகிறதா என்ற இடம் அழகாக வந்திருக்கிறது.

கமலம் முழுமை பெற்ற அளவு வரதுவும் பிறரும் வளர கொஞ்சம் சம்பவங்கள் சேர்த்து விரிவாக்கியிருக்கலாம். உதாரணமாக, கிழவியை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அந்த உறவின் முக்கியத்துவத்தை, ஒரு பிடிமானமாக அவள் இருந்ததை சொல்லியிருந்தால், அவள் மரணம் தந்த விலகல்/விடுதலை இன்னும் ஆழமாக பதிந்திருக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்.



சோழன் வருகைக்காக காத்திருக்கும் அந்த பிரம்மஹத்திக்கும் தான் தெரியும் ??

complicateur
19th December 2008, 01:43 AM
சிவன்,
இந்த தலைப்புக்கு மிக சாம்மியமான ஒரு தலைப்போடு நான் வருடங்கள் முன்பு ஒரு கதை எழுதி இருந்தேன். (அதற்கு சற்றே சங்கீத வாடை - பெயர் ஷட்ஜமம் தேடி) :)

உங்கள் கதையில் இழையோடும் சோகம் தடையில்லாமல் உணர முடிகிறது. ஆங்கிலத்தில் resignation என்று சொல்வார்களே, அது தான் சில சமயம் ஏற்பதற்கு மிக அரிது.

திருவிடைமருதூரின் ஸ்தல புராணத்திற்கும் வரதுவின் கதாபாத்திரத்திற்கும் ஏதோ "சம்பந்தம்" இருப்பது போல் தோன்றியது. சோழனின் (இல்லை இந்திரனா ?)ப்ரக்மகாத்தி தோஷம் அங்கே களையப் பட்டது என்பதை மட்டுமே இணையதளத்தில் தேடி அறிந்தேன். குறிப்பாக கதையோடு வேறு தொடர்பு உள்ளதா?

sivank
30th December 2008, 11:08 PM
Thanks sp, ms, prabhu, complicateur

sivank
30th December 2008, 11:15 PM
[tscii:e988478a9b]Prabhu, there is a story about the thiruvidaimarudhoor temple. Once there was a chola king who did some thing for which the `Brahmahathi`dhosham was behind him. According to the story where ever he went the dhosham was behind him. Atlast he came to this temple, and the brahmahathi which followed him couldnīt enter this temple. Knowing this the chola king escaped through another exit. Without knowing about the other exit the brahmahathi till today waits for the chola king.


complicateur, you are right about the connection which varadhu had. It could be so that varadhu felt all his problems and deficiencies would stop at the gate of the temple. So presumably he felt at ease there[/tscii:e988478a9b]

sivank
6th July 2009, 03:46 AM
இளமையில் கல்

காலேஜ் ரோடு முனைக்குள் நுழையும் போதே பள்ளிக்கூட மணி அடித்தது மூச்சிறைக்க ஓடி வந்த செல்விக்கு கேட்டது. இன்றைக்கும் லேட்டாக வருவதற்க்கு கை முட்டியிலேயே அடிப்பார் வகுப்பாசிரியர் நடராஜன். பெயரில் இருந்த செல்வம் அவளது வீட்டில் இல்லாததால், தாய் அஞ்சலைக்கு உதவியாக சில வீடுகளில் வேலை செய்து விட்டு கிளம்புவதற்க்குள் அநேக நாட்கள் நேரமாகி விடுகிறது. இன்று நேரத்துக்கு போயிருக்க வேண்டியவளை தரை சரியாக துடைக்கவில்லை என்று மறுபடியும் துடைக்க வைத்தது அவளது ஆசிரியர் நடராஜனின் மனைவி தான்.

இறை வணக்கம் முடிந்து ஆசிரியர் அறையிலிருந்து மெதுவாக தன் கிளாஸுக்கு கிளம்பிய நடராஜனை பார்த்த சக ஆசிரியர் சிகாமணி," இந்த பசங்கள கண்டாலே ஒரே ரோதனையா இருக்குப்பா, ஒரு கிளாஸ்ல 70 பசங்கள வச்சுகிட்டு நான் படற பாடு எனக்கில்ல தெரியும். இங்க வந்தா பசங்க ரோதனை, வீட்டுக்கு போனா அங்கேயும் ரோதனை, பேசாம லாங் லீவு போட்டுட்டு கொஞ்ச நாள் சொந்த ஊர பாக்க போலாம்னு இருக்கம்பா."

சிகாமணியை கொஞ்சம் கடுப்புடன் பார்த்த நடராஜன்," உனக்கென்னப்பா, நீ நெனச்சா ராஜா மாதிரி மாமியார் வீட்டுக்கோ, இல்ல சொந்த ஊருக்கோ போயிடுவ. என்னால அப்படி எங்கயும் நகர முடியாது. நானும் ஏதோ ஆசை அவசரத்துல எல்லாரும் கட்டறாங்களேன்னு ஹவுஸிங் லோன் வாங்கி இந்த சனியன் புடிச்ச வீட்டை கட்ட ஆரம்பிச்சேன், வேலை பாட்டுக்கு போய்கிட்டு இருக்கு, இன்னும் ரூஃப் கூட முடியல. மேஸ்திரிய கேட்டா, இப்போ அப்போனு சொல்றார தவிர சரியா ஒரு பதிலும் கொடுக்காம இழுத்து அடிக்கிறாரு," என்ற நடராஜனின் கண்களில் பம்மி பதுங்கி செல்லும் செல்வியின் உருவம் தெரிந்தது.

வெய்யிலில் முட்டி போட்டு இருந்த செல்விக்கு கண்கள் இருட்டியது. காலையில் வழக்கமாக குடிக்கும் நீராகாரமும் இன்று குடிக்கவில்லை. அம்மா வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கப்படும் பழைய சாப்பாட்டை பார்த்தாலே குமட்டி கொண்டு வரும். நாய்க்கு போடுவதற்க்கு பதில் அவர்களுக்கு கொடுப்பதாக அவளுக்கு தோன்றும். இம்மாதிரி வீட்டு வேலை செய்ய வர மாட்டேன் என்று அடம் பிடித்த செல்விக்கு கிடைத்தது அப்பனின் அடியும், தாயின் அழுகையும் தான். செல்வியின் தகப்பன் மாயகிருஷ்ணன் சுப்பையா மேஸ்திரியிடம் வாட்சுமேனாக வேலை செய்து வருகிறான். மேஸ்திரி ஒரே சமயத்தில் நாலு வீடுகளை ஒரே தெருவில் கட்ட ஒத்து கொண்டதால் அந்த தெருவிலேயே ஒரு குடிசை போட்டு தங்கி விட்டான் மாயன். செல்விக்கு படிப்பதில் மிகுந்த ஆசை. அவளுடைய பழைய பள்ளிகூடத்தில் ஆசையோடு படித்து வந்தவளை இந்த பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்து விட்டது விதி.

மணி அடித்து நடராஜன் வெளியேறிய பின்னர் வகுப்புக்குள் நுழைந்த செல்வியின் பின்னாலே உள்ளே வந்தது தமிழாசிரியர் கைலாசம். அவர் அவளை பார்த்த பார்வையில் கனிவு இருந்தது. கையில் கட்டாக மாத தேர்வின் விடைதாள்களை வைத்து இருந்தவர் அவளை அப்படி பார்த்தது ஆனந்திக்கு எரிச்சலை மூட்டியது. நடராஜனின் மகளாக இருந்தாலும் படிப்பில் நாட்டம் இல்லாத ஆனந்திக்கு தெரு விளக்கில் படிக்கும் செல்வியின் கல்வி ஏக்கம் கோபத்தை கிளறியது. தாயிடம் சரியாக போட்டு கொடுக்க, சரோஜாவும் அவளை சரியாக வேலை வாங்கினாள். வேதனை தாளாமல் அழும் செல்வியை அவ்வப்போது சர். முத்துசாமி அய்யரை பற்றியும், ஆப்பிரகாம் லிங்கனின் வாழ்வை சொல்லி தேற்றுபவர் கைலாசம்.

டப்பா கட்டு கட்டியிருந்த வேட்டியை நடராஜனை கண்டதும் கீழே இறக்கிய சுப்பையா மேஸ்திரி," எல்லாத்தையும் தயார் பண்ணிடேங்க. அலமாரிக்கி தேவையான கோழி வலை, சென்ட்ரிங் போட பலவா, மரம், ரூஃபிங்குக்கு தேவயான லின்டலு எல்லாம் ரெடின்ங்க. ஆனா, சொன்டி கல்லு உடைக்க மட்டும் சித்தாள் இல்லிங்கோ நம்ளாண்ட. அது மட்டும் அமைஞ்சது நம்ம வூட்டு வேலைய அம்சமா முடிச்சடலாமுங்கோ."

"ஆமாம், நீயும் இப்படியே சொல்லு, நானும் அப்படியே கேட்டுகிட்டு இருக்கேன். பக்கத்து வீட்டு வெங்கடேசன் வேலையெல்லாம் ஜரூரா நடக்குது. என் வீட்டு வேலைக்கு மட்டும் ஆள் கிடைக்க மாட்டேங்குது இல்ல."

"அப்படி இல்லீங்க மொதலாளி, நெசம்மாலுமே இப்ப ஆள் கிடைக்கறது கஷ்டமா இருக்குது. முன்ன எல்லாம் நெதமும் காலைல அந்த வாராவதி பக்கத்துல நின்னுகிட்டு இருப்பாங்க, இப்ப.." என்ற மேஸ்திரியின் கண்ணில் பட்டது மாயகிருஷ்ணன்.


ஒரு புடவையை படுதா போல் போட்டுக்கொண்டு அதன் நிழலில் கல் உடைத்து கொண்டிருந்த செல்விக்கு திடீரென நேற்று கைலாசம் சொல்லி கொடுத்த ஔவையாரின் இளமையிற் கல் பாடம் நினைவிற்க்கு வந்து அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

madhu
6th July 2009, 06:36 AM
பிட்டு பிட்டா அப்பப்போ கட் செஞ்சு சினிமா காட்டற மாதிரி கதையா ? :thumbsup:

அந்தக் கல்லைத் தூக்கி நடராஜன், மாயகிருஷ்ணன் தலையிலெ போட்டாதான் என்ன ? :think:

pavalamani pragasam
6th July 2009, 08:22 AM
ஔவை சொன்ன கல் இதுவா? இடுக்கண் வருங்கால் நகும் செல்வியின் தலையெழுத்து சரியில்லை! :cry2:

sivank
6th July 2009, 01:50 PM
பிட்டு பிட்டா அப்பப்போ கட் செஞ்சு சினிமா காட்டற மாதிரி கதையா ? :thumbsup:

அந்தக் கல்லைத் தூக்கி நடராஜன், மாயகிருஷ்ணன் தலையிலெ போட்டாதான் என்ன ? :think:

thaaralamaa podalaame madhu :D

sivank
6th July 2009, 01:52 PM
ஔவை சொன்ன கல் இதுவா? இடுக்கண் வருங்கால் நகும் செல்வியின் தலையெழுத்து சரியில்லை! :cry2:

auvai sonna kal, selvikku indha roobaththil vandhu irukku :(

suvai
6th September 2009, 04:42 AM
Paavam selvi..:-(...avolo "kalluku" naduviley aval padithathai neenaithu siripathu...avalin manam innum kallaai pogamal irupathai....... evolo azhgaai kuripitu irukeenga......awesome nga sivan!!! :clap:

sivank
6th September 2009, 09:53 PM
Nice observation suvai. Thanks