PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

pammalar
1st January 2012, 03:45 AM
Demi-God's December Delicacies

விடிவெள்ளி

[31.12.1960 - 31.12.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : நடிகர் திலகம் பற்றி டைரக்டர் ஸ்ரீதர்

நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) : ஆகஸ்ட் 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5460-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5461-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st January 2012, 05:23 AM
WISH YOU ALL A HAPPY HEALTHY & A WEALTHY NEW YEAR !

அனைவருக்கும் உளங்கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/RajaBommai-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st January 2012, 06:01 AM
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS

1 : அன்பளிப்பு(1969)

10 : தங்கப்பதுமை(1959), சாதனை(1986)

11 : பராசக்தி(தெலுங்கு)(1957), பொம்மல பெள்ளி(தெலுங்கு)(1958), மனிதனும் தெய்வமாகலாம்(1975), ஞான பறவை(1991)

13 : காவேரி(1955)

14 : பரதேசி(தெலுங்கு)(1953), நான் பெற்ற செல்வம்(1956), நல்ல வீடு(1956), இரும்புத்திரை(1960), பார்த்தால் பசி தீரும்(1962), கர்ணன்(1964), பழநி(1965), கந்தன் கருணை(1967), எங்க மாமா(1970), இரு துருவம்(1971), அவன் ஒரு சரித்திரம்(1977), மோகனப்புன்னகை(1981), உருவங்கள் மாறலாம்(1983), பெஜவாடா பொப்புலி(தெலுங்கு)(1983), திருப்பம்(1984), ராஜ மரியாதை(1987)

15 : மன்னவரு சின்னவரு(1999)

25 : நானே ராஜா(1956)

26 : மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966), ராஜா(1972), சிவகாமியின் செல்வன்(1974), தீபம்(1977), அந்தமான் காதலி(1978), ரிஷிமூலம்(1980), ஹிட்லர் உமாநாத்(1982), நீதிபதி(1983), பந்தம்(1985), மருமகள்(1986), குடும்பம் ஒரு கோவில்(1987)

27 : திரிசூலம்(1979)

31 : பூங்கோதை(1953), ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)(1958), சினிமா பைத்தியம்(1975)

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
1st January 2012, 08:10 AM
WISH YOU ALL A HAPPY NEW YEAR-2012 !

அனைவருக்கும் உளங்கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு-2012 நல்வாழ்த்துக்கள் !

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ThillanaMohanambal.jpg

RAGHAVENDRA
1st January 2012, 03:39 PM
புத்தாண்டை மங்கலமாக சிக்கல் சண்முக சுந்தரத்தின் நாதசுர இசையுடன் தொடங்கியுள்ள சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்களும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.

நமது NTFAnS Nadigar Thilagam Film Appreciation Society - வடிவம் பெற்று மிக மிக விரைவில் அரங்கேற உள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நமது முரளி சாரின் அமைதியான அதே சமயம் சீரிய முயற்சியால் இது செயல் வடிவம் பெற்று விட்டது. சிறப்பானதொரு நிகழ்ச்சியுடன் சொஸைட்டி துவங்க உள்ளது. நிகழ்ச்சி விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் எதிர்பாருங்கள்.

தங்கள் ஆதரவை நாடும்
ராகவேந்திரன்

KCSHEKAR
1st January 2012, 07:15 PM
டியர் பம்மலார், 2011-ஐ விடிவெள்ளியுடன் இறுதி செய்து, 2012-ஐ 31 படங்களின் பட்டியலை குலோப் ஜாமூனாக அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

KCSHEKAR
1st January 2012, 07:24 PM
டியர் ராகவேந்திரன் சார், தங்கள் பாராட்டுக்கு நன்றி. 2012-ஐ NTFAnS Nadigar Thilagam Film Appreciation Society - பற்றிய இனிப்பான செய்தியுடன் துவக்கியுள்ள தங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

pammalar
2nd January 2012, 04:52 AM
டியர் பம்மலார், 2011-ஐ விடிவெள்ளியுடன் இறுதி செய்து, 2012-ஐ 31 படங்களின் பட்டியலை குலோப் ஜாமூனாக அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் இனிப்பான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றி !

புத்தாண்டுப் பதிவை சிக்கல் சண்முகசுந்தரம் அவர்களோடு மங்களகரமாக துவக்கியிருக்கும் தங்களுக்கும், சிவாஜி பேரவைக்கும் இந்தப்புத்தாண்டும், இனிவரும் புத்தாண்டுகளும் இனிதே அமைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் !

[ஜனவரியில் வெளியான கலைக்குரிசிலின் காவியங்கள் மொத்தம் 41].

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd January 2012, 04:56 AM
டியர் ராகவேந்திரன் சார்,

புத்தாண்டுப் புதுநாளன்று NTFAnS குறித்த தித்திப்பான தகவலுக்கு இனிய நன்றிகள் ! சொஸைடி, இறையருளோடும், இதயதெய்வத்தின் அருளோடும், சுபிட்சமாக வளர வளமான வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd January 2012, 05:32 AM
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS

அன்பளிப்பு

[1.1.1969 - 1.1.2012] : 44வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

காவிய விளம்பரம் : பொம்மை : ஜனவரி 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5468-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5466-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5471-1.jpg


இரண்டாவது வார விளம்பரம் : தினத்தந்தி : 8.1.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5467-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
2nd January 2012, 11:24 AM
அன்புள்ள நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
2nd January 2012, 11:55 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தாங்கள் பதிவிட்டு வரும் ஒவ்வொரு ஆவணப் பதிவும் மிகச் சிறப்பாக அமைகின்றன. தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அயர வைக்கிறது. ஒவ்வொரு பதிவினைப் பார்க்கும் போதும் / படிக்கும் போதும், நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.

தங்களின் இந்தத் தொண்டு இந்தப் புத்தாண்டில் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. வாசுதேவன் மற்றும் திரு. கார்த்திக் அவர்களே,

திரு. பம்மலார் அவர்களது பதிவைப் போல, தங்களுடைய பதிவுகளும் தொடர்ந்து இந்தத் திரிக்கு வளம் சேர்க்கின்றது. ஒவ்வொரு நாளும், இந்தத் திரிக்குள் நுழையும் போது, திரு. பம்மலார் மட்டுமல்லாது, உங்கள் மூவருடைய பதிவுகளும் தொடர்ந்து இடம் பெற்று இந்தத் திரிக்கு கூடுதல் வளம் சேர்க்கிறது.

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்.



அன்புள்ள திரு. முரளி அவர்களே,

இப்போதெல்லாம் தங்களது பதிவு மிகவும் அரிதாகி விட்டாலும், ஒவ்வொரு முறை உங்களது பதிவு இடம் பெறும் போதும், அந்தப் பதிவு இந்தத் திரிக்கு எப்போதும் கூடுதல் சுவையையும் சுவாரஸ்யத்தையும் அளித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் எழுத்துக்கு ரசிகனான நானும் மற்றவர்களைப் போல உங்களிடமிருந்து தொடர் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.


சாரதா மேடம் அவர்களும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சில பதிவுகளைத் தந்து உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.



மேற்கூறிய அன்பர்கள் அல்லாது, இந்தத் திரிக்கு மேலும் மேலும் சுவையை நல்கிடும் அனைத்து நண்பர்களே,

திரு. ராமஜெயம் கூறியது போல், கடந்த ஆண்டு (2011) நடிகர் திலகத்தின் திரிக்கு மிகவும் சிறப்பான ஆண்டு. பல புதிய உறுப்பினர்கள் இந்தத் திரியில் நுழைந்தது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு தான் பல பக்கங்களையும் பூர்த்தி செய்த ஆண்டு.

இந்தத் திரி மேலும் மேலும் வளம் பெறப்போவது உறுதி.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
2nd January 2012, 02:20 PM
அன்புள்ள பம்மலார் சார்,

ஆங்கிலப்புத்தாண்டு அன்பளிப்பாக தாங்கள் அளித்துள்ள 'அன்பளிப்பு' ஆவணப்பொக்கிஷங்கள் அருமையாக உள்ளன. நேற்று நீங்கள் அளித்திருந்த, இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைப்பக்கங்களும் கன ஜோர். ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஆவணங்களை பல்வேறு பத்திரிகைகளில் இருந்து நீங்கள் சேகரித்து, தொகுத்து, அழகுற அளித்து வரும் பாங்கு பாராட்டுக்குரியது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இங்கு பதிவிடுவோர் மட்டுமல்லாது வெளியிலிருந்து பல்வேறு ரசிகப்பெருமக்களும் தங்களின் சளைக்காத சேவையைப்பாராட்டி நன்றி தெரிவிக்கின்றனர். சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுதும் மடல்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்து, 'எங்களுடைய இத்தனை வயதிலும் இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை. எப்பவோ வெளியான சாதனைகளையெல்லாம் இவர் தேடித்த்ருகிறார். இந்தப்பிள்ளை நல்லாயிருக்கட்டும்' என்று எழுதுகின்றனர். படிக்கும்போது எனக்குப்பெருமையாக இருக்கிறது.

தங்கள் தொண்டு ரசிகர்களின் இதயங்களில் முத்திரையைப் பதித்து விட்டது.

mr_karthik
2nd January 2012, 02:56 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தங்களின் பாராட்டுக்கு நன்றி. முரளிசாரை அடிக்கடி வரச்சொல்லும் நீங்களும் அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்களின் மகத்தான பாடல் ஆய்வுகள் அனைத்தும் என்ன சாமானியமானவையா?. 'சக்கை போடு' போட்ட பிறகு தங்களின் ஆய்வுப்பதிவைக்காண முடியவில்லை. பணிச்சுமையாக இருக்கலாம். பரவாயில்லை. போதிய நேரம் எடுத்துக்கொண்டு அடுத்த அதிரடியுடன் வந்து கலக்குங்கள்.

நீங்களும் திரு ராமஜெயம் அவர்களும் சொன்னதுபோல, 2011-ம் ஆண்டு விசேஷமான ஆண்டு மட்டுமல்ல. அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து, நடிகர்திலகத்தின் சாதனைச்செப்பேடுகளான ஆவணமழை கொட்டத்துவங்கிய ஆண்டு.

2012 இதை விட சூப்பராக இருக்கும் என்று நம்புவோம்.

mr_karthik
2nd January 2012, 02:59 PM
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)

இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.

நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.

சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).

ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).

ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.

கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.

குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.

பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.

mr_karthik
2nd January 2012, 03:12 PM
பொங்கல் நாளுக்கு இன்னும் பத்துநாட்களுக்கு மேல் இருக்கையில் இப்போது ஏன் 'மோகனப்புன்னகை' பதிவை இட்டாய் என்று நினைக்கலாம். பொங்கலுக்கு வேறு சில படங்களும் வர இருப்பதால் மோகனப்புன்னகை முந்திக்கொண்டு விட்டது.

parthasarathy
2nd January 2012, 04:07 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தங்களின் பாராட்டுக்கு நன்றி. முரளிசாரை அடிக்கடி வரச்சொல்லும் நீங்களும் அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்களின் மகத்தான பாடல் ஆய்வுகள் அனைத்தும் என்ன சாமானியமானவையா?. 'சக்கை போடு' போட்ட பிறகு தங்களின் ஆய்வுப்பதிவைக்காண முடியவில்லை. பணிச்சுமையாக இருக்கலாம். பரவாயில்லை. போதிய நேரம் எடுத்துக்கொண்டு அடுத்த அதிரடியுடன் வந்து கலக்குங்கள்.

நீங்களும் திரு ராமஜெயம் அவர்களும் சொன்னதுபோல, 2011-ம் ஆண்டு விசேஷமான ஆண்டு மட்டுமல்ல. அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து, நடிகர்திலகத்தின் சாதனைச்செப்பேடுகளான ஆவணமழை கொட்டத்துவங்கிய ஆண்டு.

2012 இதை விட சூப்பராக இருக்கும் என்று நம்புவோம்.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களின் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து விட்டதால், தொடர்ந்து எழுத முடியவில்லை.

தங்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் அருமையாக, சரளமாக இருந்தது.

இந்தப் படம் துவங்கப்பட்ட அன்று, நடிகர் திலகமும் ஸ்ரீதரும் கை கோர்த்துக்கொண்டு நிற்கும் போட்டோவுடன் தினத்தந்தி நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் இன்னமும் கண்ணில் நிழலாடுகிறது. எப்பேர்பட்ட எதிர்பார்ப்பைத் தூண்டி விட்ட படம். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் திரைக்கதை சொதப்பலும், பொருந்தாத, அந்தக் காலத்தில் அந்த அளவுக்கு பிரபலம் ஆகாத கதாநாயகிகளும் தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
2nd January 2012, 06:09 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

2. "கா... கா...கா"; படம்:- பராசக்தி (1952); இயக்கம்:- கிருஷ்ணன்-பஞ்சு

எனக்குத் தெரிந்து இது தான் தமிழ்த் திரைப்படங்களில் ரொம்பவும் காஷுவலாக நாயகன் பாடுவதாக (கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டு) முதல் முறையாக எடுக்கப் பட்ட பாடல் (என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல், முதல் படத்திலிருந்தே!).

மிகவும் எளிமையாக எடுக்கப் பட்ட பாடல் - இத்தனைக்கும் ஆழமான பொருள் பொதிந்த கருத்துக்கள் இடம் பெற்ற பாடல். சமூகத்தின் மேல் நாயகனுக்கு இருக்கும் கோபம் வன்மையாகவும் சற்றே கேலியாகவும் வெளிப்பட்ட பாடல். பிற்காலத்தில், எத்தனையோ விதமான நடிப்பு இந்தக் கலைஞனிடத்தில் வெளிப்படப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல். ஆம், முதல் படத்திலேயே, முழுப் பாடலையும், படு காஷுவலாக கிணற்றின் மேல் உட்கார்ந்து கொண்டே தனது சரளமான உடல் மொழியைக் காட்டி, நடித்த பாடல்.

இந்தப் பாடலில் இரண்டு முக்கிய அம்சங்கள் - அவரது உடை மற்றும் ஒப்பனை - அதாவது, நாடோடி போல் திரிந்து கொண்டிருப்பவன் எப்படி இருப்பானோ, அப்படியே இருப்பார். இந்தப் பாடல் துவங்குவதற்கு முன், அவர் பண்டரிபாயிடமிருந்து, ஏதோ ஒரு பொட்டலத்தைப் பிடுங்கிக் (திருடி) கொண்டு ஓடி, தவறுதலாக, அறியாமல், மற்றவரிடமிருந்து தப்பித்து, அவசரமாக, அவரது வீட்டுக்கே சென்று வீட்டின் பின்புறம் வழியாகச் சென்று, ஹாயாக, ஒரு கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டு அங்கிருக்கும் காக்கைகளைப் பார்த்து அவைகள் கரையத் துவங்கியவுடன், அந்த உணவை அவைகளுக்கும் போட்டு விட்டு, பாடத் துவங்குவார்.

முதல் சரணம். "சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ..." அந்த முகத்தை கவனித்தால், அந்த வரிகளுக்கேற்ற முக பாவம் - இரக்க உணர்வு, "தாழ்ப்பாளைப் போடுறாங்க..." என்று பாடி, "அந்தச் சண்டாளர் ஏங்கவே, தன்னலமும் நீங்கவே", எனும் போது கோபம், பின், "தாரணி மீதிலே பாடுங்க" என்று முடித்து, "ராகம் கா... கா...கா..." எனும் போது முகத்தில் மறுபடியும் மலர்ச்சியையும் உற்சாகத்தையும் காட்டியிருப்பார்.

இரண்டாவது சரணம். "எச்சிலை தன்னிலே..." என்று சி.எஸ்.ஜெயராமன் ஒரு நீண்ட ஆலாபனை செய்யும்போது, அதற்கேற்றாற்போல், வாயசைத்த விதம். (முதல் படம்?!!!) இந்தச் சரணத்திலும், அதே லாகவம், உடல் மொழி, வாயசைப்பு.

இந்தப் படம் வருவதற்கு முன்பு வரை, அநேகமாக எல்லாத் தமிழ்ப் படங்களிலும், படத்தில் வரும் நடிகர்களே பாடி நடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், பெரிய பாடகர்களாயிருந்ததால், அந்தப் பாடல் இடம் பெறும் சூழலையும், அந்தப் பாடலில் வரும் வரிகளின் அர்த்தத்தையும் பற்றிப் பெரிதாக நினைக்காமல், பாடும் முறை பற்றியே நினைத்துக் கொண்டு ஒரு பாடகரைப் போல் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பர். அந்த முறையை மாற்றி, சினிமாவில் பாடல் என்பது வேறு; அதில் நடிப்பவர்களது பொறுப்பு என்ன என்பதை முழுதும் உணர்ந்து, பின் வரும் சந்ததியினர், எப்படி, சினிமா பாடல்களை அணுக வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம், அதாவது, முதல் படத்தின் மூலமே (அதுவும் நாடகத்திலிருந்து வந்தவர்!) அடி கோலினார்.

இந்தப் பாடலையும் உற்று நோக்கினால், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம், எதையும் வித்தியாசமாக சிந்தித்து புதுமையாக அதே சமயம் முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு தென்படுவதைக் காணலாம். மேம்போக்காக, உயிரோட்டமில்லாமல், அவரால் முதல் படத்திலிருந்தே செய்ய முடியவில்லை.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
2nd January 2012, 07:19 PM
டியர் பார்த்தசாரதி சார்,
முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகனின் முத்தான சமுதாய சிந்தனையைத் தூண்டும் பாடலை மிகச் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் அலசியுள்ளீர்கள்.


சினிமாவில் பாடல் என்பது வேறு; அதில் நடிப்பவர்களது பொறுப்பு என்ன என்பதை முழுதும் உணர்ந்து, பின் வரும் சந்ததியினர், எப்படி, சினிமா பாடல்களை அணுக வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம், அதாவது, முதல் படத்தின் மூலமே (அதுவும் நாடகத்திலிருந்து வந்தவர்!) அடி கோலினார்.


பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள்.

பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
2nd January 2012, 07:41 PM
டியர் கார்த்திக்,
சித்ரா தியேட்டர் என்றைக்குமே நம் தியேட்டராகவே இருந்தது. சாந்தி தியேட்டருக்கு முன் அது தான் நம் ரசிகர்களை வளர்த்தது என்றால் மிகையில்லை. பாசமலர் உள்பட பல முக்கியமான படங்களை வெளியிட்ட தியேட்டர். அங்கே மோகன புன்னகை வெளியான அன்று பழைய நினைவுகளுடனும் படத்தின் ரிசல்ட்டுடனும் உரையாடிக்கொண்டிருந்த நாட்கள் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன என்றால், நீங்கள் அதையும் தாண்டி அடியேன் வைத்திருந்த சின்ன பேனருக்கே போய் விட்டீர்கள். எனக்கு ஞாபகம் உள்ள வரையில் உத்தமன் படத்திலிருந்து சின்னச் சின்ன சார்ட்டுகளை வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முதல் நாள் தியேட்டரே கதி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது. இதற்கெல்லாம் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த வேகம், அந்த ஆர்வம், அந்த வெறி, நடிகர் திலகத்தின் ஆகர்ஷண சக்தி நம் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. படிப்படியாக முன்னேறினேன்.. எதில் வாழ்க்கையிலா.. இல்லை.. சார்ட்டின் டிசைனை மெருகேற்றுவதில்... அதற்காக பிளாசா தியேட்டர் வாசிலில் இருந்த முதியவர் தான் ஆபத் பாந்தவர்.. வரும் ஸ்டில்களையெல்லாம் வாங்கி விடுவோம்.. அநைத்தும் சார்ட்டில் ஏறி விடும் (இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன். அவற்றையெல்லாம் இன்னொரு காப்பி எடுத்திருக்கலாமே என்று ). [அடியேன் ஆரம்பித்து சில வருடங்களில் கிரிஜா அவர்களும் துவங்கி விட்டார். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. அவருடைய உழைப்பைப் பாராட்டத் தனித்திரியே துவங்க வேண்டும்]. அப்படிப்பட்ட ஒரு சார்ட்டைத் தான் மோகனப் புன்னகைக்காக வடிவமைத்து அதைப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது. தங்களுக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

மோகனப் புன்னகைக்கு வருவோம். நானும் பைலட்டில் தான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே சிறப்புக் காட்சியில் பார்த்து விட்டோம். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு படம் முடிந்ததும் உடனே கிளம்ப முடியாமல் உணர்ச்சி மயமாய் அமர்ந்திருந்தோம்.

இப்போது பேசப் படும் Shuttle Acting, Method Acting, போன்றவற்றையெல்லாம் தன் முதல் படத்திலேயே ஊதித்தள்ளி விட்ட நடிகர் திலகம், மீண்டும் இப்படத்தில் அதற்கான பொருளை உணர்த்தினார். குறிப்பாக தலைவன் தலைவி பாடல் simply class.

சற்றே வித்தியாசமான கதையமைப்பு, புதிய ஜோடி, சிறந்த இசை, நல்ல ஒளிப்பதிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தன.

இவற்றையெல்லாம் மீறி படம் ஓடவில்லை என்றால்..

ஒரே காரணம்...

துர்ப்பிரச்சாரம்...

நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது உடலமைப்பைப் பற்றியும் கிளப்பப் பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் பரவலாகப் பரப்பப்பட்டதாலும் அவரது படங்களைப் பற்றி கிண்டலும் கேலியும் மிகப் பரவலாக செயற்கையாக உருவாக்கப் பட்டதாலும் பல நல்ல படங்கள் சரியான முறையில் சென்றடைய விடாமல் தடுக்கப் பட்டதாலும் தான் 80 களில் அவரது படங்கள் பாதிக்கப் பட்டன. அப்படிப் பட்ட படங்களில் ஒன்று தான் மோகன புன்னகை. குறை சொல்லுமில்லாத சிறந்த படம். 80களில் மிகச் சோதனையான காலங்களில் அவருடனேயே இருந்த பல கோடி ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் அந்த ஏளனங்களுக்கும் ஏகடியங்களுக்கும் பதில் கொடுத்து நின்ற ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் பல முறை இப்படிப்பட்ட நல்ல படங்கள் தோல்வியடைந்த போது மனம் வேதனை யடைந்திருக்கிறேன். அதே போல் தான் கார்த்திக்கும் உணர்ந்திருப்பார் என்பதை அவருடைய பதிவுகளில் அனைவரும் உணர முடியும்.

நம்மையெல்லாம் அந்த அளவிற்கு உணர்ச்சி மயமாக்கிய மோகனப் புன்னகை பாடலைப் பார்த்து நினைவுகளை அசை போடுவோமே..


http://youtu.be/gxXcH13sGIc


http://youtu.be/eVV3H_odMRU

abkhlabhi
3rd January 2012, 04:21 PM
மேடையில் நடனமாடும் நடிகர் திலகம்
(நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் பாடலுக்கு என்று நினைகிறேன் )

http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=sivajiunseen.jpg

abkhlabhi
3rd January 2012, 05:17 PM
NT WITH NTR AND GANTASALA

http://www.nbkfans.com/photogallery/ntr2spl/ntr2spl14.jpg

pammalar
4th January 2012, 07:45 AM
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

நன்றி கலந்த வணக்கம் !

டிசம்பர் 2011-ன் இறுதி நாட்களில் ஏற்பட்ட திடீர் இயற்கைச் சீற்றங்களினால் புதுச்சேரியும், தமிழகமும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயிருப்பது அனைவரும் அறிந்ததே. புதுவையிலும், தமிழகத்தில் குறிப்பாக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விழுப்புரம், தஞ்சை, குடந்தை போன்ற பகுதிகளிலும் இச்சீற்றங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கிப்போயிருப்பது ஊடகங்களின் மூலம் தெள்ளத்தெளிவாகின்றன. 'தானே' சூறாவளிப்புயல் உண்டாக்கிய சீரழிவால், பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கும், முக்கிய தேவைகளுககுமே அல்லல்படும் அமைதியற்ற சூழலில், பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையிலிருந்து விடுபட்டு, தமிழகமும், புதுச்சேரியும் வெகுவிரைவில் இயல்புநிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனிடமும், இறைவனுக்கு நிகரான நமது இதயதெய்வத்திடமும் பிரார்த்தனை செய்வோம். இந்தப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இத்துன்பநிலை நீங்கி இன்பநிலை காண்பதற்கும், அனைத்து அல்லல்களிலிருந்தும் வெளிவருவதற்கும், அவர்களுக்கு எல்லாவித சக்திகளையும் இறைவனும், இதயதெய்வமும் அளித்து அருள் பாலிக்கட்டும் !

நமது திரியின் சுப்ரீம் ஸ்டார் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் வசிக்கும் ஊரான நெய்வேலியும், இந்த இயற்கைச் சீரழிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அவர் வசிக்கும் இடத்தின் பகுதிகளில் உள்ள மின்சார இணைப்புக்களிலெல்லாம் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதால் கடந்த ஒருவார காலமாகவே அவர் மின்சாரம் இல்லாமல் இருந்து வருகிறார். இதுதவிர, நெய்வேலியில், தொலைத்தொடர்பு இணைப்புகளும் முழுவதுமாக சேதமடைந்திருக்கின்றன. இவைதவிர, மற்ற முக்கிய அன்றாட அடிப்படைத்தேவைகள், இறையருளாலும், இதயதெய்வத்தின் கிருபையாலும் அவருக்கு பாதகமில்லாமல் சாதகமாக இருக்கின்றன என்பது இந்த நிலையிலும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி. நானும், அவரும் தினந்தோறும் சிலமணித்துளிகளாவது கைபேசியில் உரையாடாமல் உறங்கியதில்லை. அதேபோல, கடந்த சில தினங்களாகவும் அவருடன் பேசியபோது, நான் மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களை அவர் என்னிடம் தெரிவித்தார். நேற்றிரவு பேசும்போது, மின்சாரம் இணைப்புகளெல்லாம் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறினார். எனினும், தொலைபேசி இணைப்புகளெல்லாம் சீராகி, internet broadband சேவைகள் வருவதற்கு குறைந்தபட்சம் ஒருவாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்றும் கூறினார். கடந்த ஒரு வாரகாலமாக நமது திரிக்கு வரமுடியவில்லையே, பதிவுகளை அளிக்க முடியவில்லையே என்று அவரது இந்த நிலையிலும் மிகுந்த மனவருத்தம் கொண்டார். நான் அவரைத் தேற்றியதோடு, கடந்த ஒரு வாரமாக நமது திரியில் வந்த பதிவுகளையும் வாசித்துக் காண்பித்தேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தங்களது சங்கடங்கள் இன்னும் சில தினங்களில் சரியாக பிரார்த்திக்கிறேன் என்று கூறியதோடு, தாங்கள் பதிவிட இயலாத இச்சூழ்நிலை குறித்து நமது திரியிலும் ஒரு பதிவை இடுகை செய்துவிடுகிறேன் என்றும் இயம்பினேன். அவர் உணர்ச்சிவயப்பட்டார். நமது திரியின் அன்பர்களும், நமது அன்புள்ளங்கள் அவைவரும் தங்களுக்காக அவசியம் பிரார்த்தனை செய்வார்கள் என்றும் கூறினேன். அவர் பரமதிருப்தி அடைந்தார். 'Happiness is the state of mind' என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது வாசுதேவன் சாரும் அவரது குடும்பத்தினரும். இந்த இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும்போல் மகிழ்ச்சியாகவே இருந்து வருகின்றனர். இப்பண்பு, அவர்கள் எப்பேர்ப்பட்ட உயர்ந்த நெறியாளர்கள்-பண்பாளர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய நல்ல உள்ளங்களுக்கு எல்லா நன்மைகளும் சேரவும், வெகுவிரைவில் அவர்களுக்கு சகஜநிலை திரும்பவும் இறைவனிடமும், இதயதெய்வத்திடமும் வேண்டிக் கொள்வோம். குகநாதனின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய சமீபத்திய 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் வெளிவந்த "ராஜபார்ட் ரங்கதுரை" காவியக்கட்டுரையை தனது சமீபத்திய பதிவாக அளித்தபின், இயற்கை இடையூறுகளால் சில தினங்கள் பதிவுகளை இட இயலாமல் இருக்கும் வாசுதேவன் அவர்கள், இன்னும் ஓரிரு வாரங்களில், தமிழர் திருநாளையொட்டி, பதிவுகளை அள்ளி வழங்க வந்து எப்பொழுதும்போல், நமது திரியின் ராஜபார்ட்டாக ராஜநடை போடுவார் என்பது திண்ணம் !

[வாசுதேவன் அவர்கள் இல்லாமல் நமது திரி வெறிச்சோடிக்கிடக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுவும் எனக்கு ரொம்பரொம்பவே].

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
4th January 2012, 08:29 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தாங்கள் வழங்கிய சிறப்பான பாராட்டுதல்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகள் !

2011-ம் ஆண்டு நமது திரிக்கு ஒரு பொன்னான ஆண்டு என்று கூறினால் அது மிகையன்று. திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தாங்களும், திரியின் சுப்ரீம் ஸ்டாரான வாசுதேவன் அவர்களும் நமது திரிக்குள் வந்து அசத்தத் தொடங்கிய ஆண்டாயிற்றே ! இங்குள்ள அனைவரும் தெரிவித்ததுபோல நம் அனைவரது பங்களிப்பாலும், 2012லிருந்து நமது திரி மேலும் மேலும் பொலிவடையப்போகிறது என்பது திண்ணம் !

சக்கை போடு போட்டுத் துவங்கிய தாங்கள் அடுத்ததாக அண்டபகிரண்டத்தைக் காக்கும் கலையுலகப் "பராசக்தி"யின் 'கா..கா..கா' பாடலோடு கம்பீரமாக வந்துள்ளீர்கள். காலஞ்சென்ற எனது தாயார், இந்தப்பாடல் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், அவர்கள் அப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியேவிட்டுவிட்டு, இப்பாடலை முழுவதும் பார்த்து ரசித்துவிட்டு, அதன் பின்தான் அந்த விட்ட வேலையைத் தொடர்வார்கள். அவர், ஒவ்வொரு முறையும், இப்பாடலை கண்டு களிக்கும் போதெல்லாம் சொல்லும் வாசகம், 'முதல் படத்திலேயே என்னமாய் நடிச்சிருக்கார் பாரு..அவர மாதிரி இனியொருத்தர் பொறந்து வரணும்' என்பார். இவையெல்லாம் எனது நினைவுத்திரையில் நீங்காமல் இடம்பெற்றிருப்பதால், தங்களுடைய 'கா..கா..கா' பாடல் பதிவைப் படித்தவுடன், அப்படியே எழுத வந்துவிட்டது.

உடுமலை நாராயண கவிராயரின் உண்மையை உரக்க உரைக்கும் உன்னத வரிகள், சுதர்சனம் அவர்களின் சுகமான சங்கீதம், இசைச் சித்தரின் இங்கிதம்கலந்த குரல்ஜாலம் எல்லாம் "பராசக்தி" கணேசரின் performanceஸோடு இணைந்து பரிமளிக்கும் போது, அந்தப்பாடல் எவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சிறந்த முன்னுதாரணம். மாருதிராவின் கேமராவும் இப்பாடலில் திலகத்தைப் படம்பிடிப்பதில் மலைப்பை ஏற்படுத்தியிருக்கும். சிதம்பர ரகசியமாக இருந்த சிதம்பரம் ஜெயராமனின் பாட்டுக்குரல் பட்டி-தொட்டியெங்கும் ஒலிக்கும் பிரபலக்குரலானதும் "பராசக்தி" கணேசரின் performance பலத்தால்தான் !

அருமையான ஆய்வுப்பதிவை அழகுற அளித்த தங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !

தங்களுக்காகவும் மற்றும் இங்குள்ள அனைவருக்காகவும் 'கா..கா..கா' பாடலின் வீடியோ:


http://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th January 2012, 09:01 AM
அன்புள்ள பம்மலார் சார்,

ஆங்கிலப்புத்தாண்டு அன்பளிப்பாக தாங்கள் அளித்துள்ள 'அன்பளிப்பு' ஆவணப்பொக்கிஷங்கள் அருமையாக உள்ளன. நேற்று நீங்கள் அளித்திருந்த, இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைப்பக்கங்களும் கன ஜோர். ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஆவணங்களை பல்வேறு பத்திரிகைகளில் இருந்து நீங்கள் சேகரித்து, தொகுத்து, அழகுற அளித்து வரும் பாங்கு பாராட்டுக்குரியது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இங்கு பதிவிடுவோர் மட்டுமல்லாது வெளியிலிருந்து பல்வேறு ரசிகப்பெருமக்களும் தங்களின் சளைக்காத சேவையைப்பாராட்டி நன்றி தெரிவிக்கின்றனர். சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுதும் மடல்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்து, 'எங்களுடைய இத்தனை வயதிலும் இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை. எப்பவோ வெளியான சாதனைகளையெல்லாம் இவர் தேடித்த்ருகிறார். இந்தப்பிள்ளை நல்லாயிருக்கட்டும்' என்று எழுதுகின்றனர். படிக்கும்போது எனக்குப்பெருமையாக இருக்கிறது.

தங்கள் தொண்டு ரசிகர்களின் இதயங்களில் முத்திரையைப் பதித்து விட்டது.

டியர் mr_karthik,

தங்களது தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அன்றாடம் அள்ளி வழங்கிவரும் பாசமான பாராட்டுதல்களுக்கு முதற்கண் எனது பொன்னான நன்றிகள் !

இயன்ற அளவு, இந்த எளியேன் இங்கே ஆற்றிவரும் சிறுதொண்டு, நமது நல்லிதயங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தாங்கள் தெரிவித்திருப்பது என் வாழ்வின் பாக்கியம். இதற்காக தங்களுக்கும், நமது அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன். அனைவரது பாராட்டுக்களும், வாழ்த்தொலிகளும், ஆசிமலர்களும் இந்த சிறியேனுக்குக் கிடைக்கும்போது அதைவிட வேறு என்ன பேறு வேண்டும் ஒரு பக்தனுக்கு. அடியேனது ஒவ்வொரு பங்களிப்புக்கும் இவையெல்லாம் மாபெரும் ஊக்கசக்தியாக விளங்கும் என்பது சத்தியவாக்கு !

அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RAGHAVENDRA
4th January 2012, 09:07 AM
டியர் பம்மலார்,
தாங்கள் கூறியது போல் வாசுதேவன் சாருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரே நமக்கே ஒரு ஆறுதலாக இருந்தது என்றால் அவர்கள் அங்கு கண்ட இன்னல்கள் அல்லது இடையூறுகள் மிகவும் கஷ்டமானவை. ஒரு வாரத்திற்கும் மேலாக மின் இணைப்பின்மையும் தொலைத் தொடர்பின்மையும், நிச்சயம் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமைதான். அவர்கள் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.

தங்களுடைய ஆவணங்கள் தங்களின் உயரத்தை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு எங்களை நாளுக்கு நாள் கழுத்தை உயர்த்தச் செய்கின்றன. நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு கழுத்தை நிமிர்த்திப் பார்க்க வேண்டியது ஒன்றும் சுமையல்லவே..

பாராட்டுக்கள்..

அன்புடன்

pammalar
4th January 2012, 09:51 AM
டியர் mr_karthik,

"மோகனப்புன்னகை" நினைவலைகள் அனுபவப்பதிவு படுஅமர்க்களம் !

இப்பதிவின் தொடக்கமே சுவை. நடிகர் திலகமும் புதுமை இயக்குனரும் மீண்டும் இணைந்தததை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

"பாவை விளக்கு" காவியத்திலும் நான்கு ஹீரோயின்கள் [சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், குமாரி கமலா, பண்டரிபாய்].

தாங்களும் மன்றங்களில் இணைந்து செயல்பட்டதை ஏற்கனவே தங்களின் பதிவுகளில் பசுமையாகப் பதிவு செய்துள்ளீர்கள் ! "மோகனப்புன்னகை"க்காகவும் தங்கள் மன்றம் சார்பில் அண்ணலின் கட்-அவுட்டுக்கு ராட்சதமலர்மாலையெல்லாம் அணிவித்திருப்பது போற்றுதலுக்குரிய செயல். ஏனைய மன்றங்கள் சளைக்காமல் செய்தவற்றையும் உள்ளன்போடு குறிப்பிட்டிருக்கிறீர்கள் ! நடிகர் திலகத்தின் புகழை எப்படியெல்லாம் வளர்த்து, பாடி, பரப்பி, கட்டிக்காத்திருக்கிறீர்கள். Simply great !

அனைவரது பங்களிப்புகளையும் உயர்வாகப் பாராட்டும் பெருங்குணம் அப்போதிருந்தே தங்களுக்கு இருப்பது தெரிகிறது. நமது ராகவேந்திரன் சார் 'சித்ரா'வில் அமைத்த பதாகையை குறிப்ப்ட்டுப் பாராட்டியதைத்தான் சொல்கிறன். ராகவேந்திரன் சார் குறிப்பிட்டதுபோல், இந்த விஷயத்தில் சகோதரி கிரிஜாவும் உச்சமாகப் பாராட்டப்படவேண்டியவர். சிகர ரசிகை சகோதரி கிரிஜாவும், நமது ரசிக முதல்வர் ராகவேந்திரன் சாரும், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், நமது இதயதெய்வத்திற்கு தொண்டு புரிவதை மட்டுமே, அவரது புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றுபவர்கள், வாழ்பவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தங்களது இனிய நினைவுப்பதிவு வழக்கம் போல் வெகு அருமை ! ஆரவாரங்களைப் பற்றிய அட்சரப்பிசகாத வருணனைகள் என்ன, திரைக்காவியத்தைப் பற்றிய ஒரு மினி அலசல் என்ன, காவியம் குறித்த மக்களின் பல்ஸ் என்ன என ஒவ்வொன்றையும் எப்பொழுதும்போல் புட்டுபுட்டு வைத்துவிட்டீர்கள் !

பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
4th January 2012, 10:27 AM
Dear Vasudevan,

Every day he helps you and your family
Every hour he loves you and your family
Every minute he blesses you and your family
Becasue,

Every second I pray God to take care of you and your family and OTHERS THOSE WHO AFFECTED

Pray God for speedy recovery from natural disaster

pammalar
4th January 2012, 10:32 AM
பொங்கல் நாளுக்கு இன்னும் பத்துநாட்களுக்கு மேல் இருக்கையில் இப்போது ஏன் 'மோகனப்புன்னகை' பதிவை இட்டாய் என்று நினைக்கலாம். பொங்கலுக்கு வேறு சில படங்களும் வர இருப்பதால் மோகனப்புன்னகை முந்திக்கொண்டு விட்டது.

டியர் mr_karthik,

தகவல் பெட்டகங்களாக பொங்கிப்பிரவாகிக்கும் தங்களின் பதிவுகள் வரும் ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு பொங்கல் திருநாள்தான். அடுத்தடுத்த அனுபவப்பதிவுகளையும் படித்து சுவைக்க ஆவல் மேலிட காத்திருக்கின்றோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th January 2012, 11:06 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் !

mr_karthik அவர்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் பதிவுக்கு பாராட்டு தெரிவித்து பதிலளிக்கும் பதிவாக தாங்கள் அளித்திருந்த பதிவும் பிரமாதம் என்பதோடு மட்டுமல்லாமல் பல உண்மைகளை உலகுக்கு விளக்கின.

"மோகனப்புன்னகை" பாடல் காணொளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !

['பிளாசா' தியேட்டர் முதியவரிடம் எனக்கும் நல்ல பரிச்சயமுண்டு. சற்றேறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்னர், அவரிடம் இருந்த "வணங்காமுடி","குறவஞ்சி" காவியங்களின் சில அபூர்வ புகைப்படங்களை(மொத்தம் ஒரு ஏழெட்டு புகைப்படங்கள் இருக்கும்), ஒரு நல்ல விலைக்கு எனக்களித்தார். வாங்கிவந்து பத்திரமாக வைத்திருக்கிறேன். "வணங்காமுடி", "குறவஞ்சி" ரிலீஸ் மேளா சமயத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன். இதற்கு முன்னர் கூட, பல சமயங்களில், அண்ணலின் சில அரிய புகைப்படங்களை அவர் எனக்கு அளித்திருக்கிறார்].

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
4th January 2012, 11:19 AM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

நமது அன்புச்சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களின் தற்போதைய சுழல் பற்றிய தங்களின் பதிவு உள்ளத்தைத்தொட்டது. கடந்த சில தினங்களாக தொலைக்காட்சிகளில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் துய்ரம் நிறைந்த வாழ்க்கையை ஒளிபரப்ப, அதைப்பார்க்கும் அனைவரது உள்ளமும் அம்மக்களின் துயரம் விரைவில் நீங்க பிரார்த்திப்பதுடன், மத்திய மாநில அரசுகள் தங்கள் முழு கவனத்தையும், முழு அரசு எந்திரத்தையும் அங்கு ஈடுபடுத்தி அப்பகுதியை சீரமைத்து அவர்களின் பழைய வாழ்க்கையை மீட்டுத்தர போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்து வேற்றுமைகளை புறந்தள்ளி அம்மக்களின் வாழ்வு சீரடைய உதவ வேண்டும். முப்பதாண்டுகளாக வளர்க்கப்பட்ட முந்திரி தோப்புக்கள் மூன்று மணிநேர இயற்கைக் கோரத் தாண்டவத்தில் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட காட்சிகள் மனதை வருத்தமுறச்செய்கின்றன.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் வாழும் சூழ்நிலையிலும், நமது திரியில் பங்கேற்க முடியவில்லையே, பதிவுகள் இட இயலவில்லையே என்று வருத்தப்படும் வாசுதேவன் அவர்களின் தூய எண்ணத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் எல்லா இடையூறுகளும் நீங்கி, புதிய பொலிவுடன் அவர் நம் திரியில் வலம் வரும் நாளை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

mr_karthik
4th January 2012, 11:22 AM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தங்களின் மேலான மறுமொழிக்கு நன்றி. மோகனப்புன்னகை படத்தின் சிந்தனையை மேலும் வளர்த்திருக்கிறீர்கள். தங்களின் அரியசேவைகளை மறந்தால்தான் அதிசயம். நினைவில் வைத்துக்கொள்வது அதிசயம் இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட பிளாசா தியேட்டர் நுழைவாயிலில் அரிய புகைப்படங்களை விற்பனை செய்து வந்த அந்த முதியவரைப்பற்றிக் குறிப்பிட்டபோது என் நினைவுகள் பின்னோக்கிச்சென்றன. நானும் அவரிடம் பல்வேறு அரிய நிழற்படங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றில் ஒன்று கௌரவம் படத்தில் 'அதிசய உலகம்' பாடல் ஷூட்டிங் முடிந்ததும் நடிகர்திலகத்துடன் இணைந்து படமெடுத்துக்கொள்ள விரும்பிய நடிகை ஜெய்குமாரி, அதே டான்ஸ் உடையில் நடிகர்திலகத்தின் பக்கத்தில் நிற்க, அவர் கருப்பு ஃபுல்சூட் அணிந்த பாரிஸ்டராக ஜெய்குமாரியின் தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டு நிற்கின்ற படம். கலரில் எடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பல அரிய புகைப்படங்கள் மற்றும் பத்திரிகைச்செய்திகள் அடங்கிய பெட்டி, நான் இல்லாதபோது வீடுமாற்றியதில் தொலைந்து போனது. மிகவும் சிரமப்பட்டு சேகரித்த பல ஆவணங்கள் மிஸ்ஸிங்.

ஆனால் இப்போது நமது பம்மலார் அவர்களின் பேருதவியால், மிகப்பெரிய ஆவணக்களஞ்சியத்தை உருவாக்கி பாதுகாக்கத்துவங்கி விட்டேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நமது பம்மலார் அவர்கள் இதுவரை நடிகர்திலகத்தின் 95 படங்களுக்கு ஆவணப்புதையல்களை அள்ளித்தந்திருக்கிறார். இந்த கருணை மனம் யாருக்கு வரும்?.

pammalar
4th January 2012, 11:30 AM
டியர் பாலா சார்,

கிடைத்தற்கரிய நிழற்படங்களை வழங்கியமைக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th January 2012, 11:44 AM
டியர் mr_karthik,

தங்களின் பதில் பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ! நிலைமை விரைவில் சீரடைய பிரார்த்திப்போம் !

மிஸ்டர் கார்த்திக் எனும் கார்மேகம், மாரியெனப் பாராட்டுக்களைப் பொழியும்போது, நான் பதிலுக்கு தெரிவிக்கும் நன்றிகள் எம்மாத்திரம் !

இருப்பினும், தங்களுக்கு எனது கோடானுகோடி நன்றிகள் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
4th January 2012, 12:38 PM
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களின் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து விட்டதால், தொடர்ந்து எழுத முடியவில்லை.

தங்களின் "மோகனப்புன்னகை" நினைவலைகள் அருமையாக, சரளமாக இருந்தது.

இந்தப் படம் துவங்கப்பட்ட அன்று, நடிகர் திலகமும் ஸ்ரீதரும் கை கோர்த்துக்கொண்டு நிற்கும் போட்டோவுடன் தினத்தந்தி நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் இன்னமும் கண்ணில் நிழலாடுகிறது. எப்பேர்பட்ட எதிர்பார்ப்பைத் தூண்டி விட்ட படம். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் திரைக்கதை சொதப்பலும், பொருந்தாத, அந்தக் காலத்தில் அந்த அளவுக்கு பிரபலம் ஆகாத கதாநாயகிகளும் தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

டியர் பார்த்தசாரதி சார்,

தங்கள் கண்களில் நிழலாடும் "மோகன புன்னகை" காவிய விளம்பரம், தங்கள் மற்றும் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக, எமது அடுத்த பதிவில்...!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th January 2012, 12:41 PM
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS

மோகன புன்னகை

[14.1.1981 - 14.1.2012] : 32வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

காவிய விளம்பரம் : தினத்தந்தி : 29.10.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MohanaPunnagai-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th January 2012, 02:20 AM
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி !

இன்று [4.1.2012] இரவு ஒன்பது மணியளவில், நெய்வேலியில் நமது வாசுதேவன் சார் வசிக்கும் பகுதியிலும் மற்றும் இதர பகுதிகளிலும் மின்சார இணைப்பு வந்துவிட்டது. ஒரு வாரகாலமாக இருந்த இருள் விலகி ஒளி பிறந்திருக்கிறது. வழக்கம்போல், வாசுதேவன் சாருடன் கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோதே மின்சாரம் வந்துவிட்டதை அவர் தெரிவித்தார். தொலைபேசி இணைப்பும், இணையதள இணைப்பும் கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்றும் அவர் கூறினார்.

நமது திரியில் நமது நல்லிதயங்கள் திரு.ராகவேந்திரன் சார், திரு.பாலா சார், mr_karthik ஆகியோர் இடுகை செய்த பதிவுகளை அவருக்கு படித்துக் காட்டினேன். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது. அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இணைய இணைப்பு வந்தவுடன் திரியில் பங்களிப்பை நல்குவதாகக் கூறினார்.

[நமது திரியைப் பார்த்துவிட்டு, நமது ஜேயார் சார் (J.Radha Krishnan Sir), இன்று (4.1.2012) காலை கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதையும் வாசுதேவன் அவர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்].

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
5th January 2012, 02:34 AM
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்

தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம்

பச்சைமா மலைபோல் மேனி


http://www.youtube.com/watch?v=MFQvEfKgaLk

பக்தியுடன்,
பம்மலார்.

mr_karthik
5th January 2012, 10:24 AM
'அவன் ஒரு சரித்திரம்' - இனிய நினைவுகள்
36-வது ஆண்டு உதயம் (14.01.1977 - 14.01.2012)

1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி,நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.

அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......

ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.

சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.

கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.

ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.

டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.

அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).

mr_karthik
5th January 2012, 10:34 AM
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.

தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.

வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.

வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).

நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.

ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.

mr_karthik
5th January 2012, 10:35 AM
உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத்துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.

டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.

அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......

வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். அதற்குப்பின் ‘அவரது’ நான்கு படங்கள் வெளிவந்தன. அனைத்தும் மகாராணியிலேயே. 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது. பக்கத்தில் கிரௌன் திரையரங்கில் 'தீபம்' வெளியாகி பட்டையைக்கிளப்பியபோதும், அது இப்படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.

நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்.......

RAGHAVENDRA
5th January 2012, 11:01 AM
Thank you Sir

mr_karthik
5th January 2012, 03:21 PM
அன்புள்ள பம்மலார் சார்,

ஒருபக்கம் பகுத்தறிவுவாதிகளின் பராசக்தி படத்திலிருந்து 'கா.... கா... கா....' பாடலையும், இன்னொரு பக்கம் ஆன்மீகம் சொட்டும் 'பச்சைமா மலபோல் மேனி' பாடலையும் வீடியோ வடிவில் தந்து, இரண்டு எல்லைகளையும் தொட்டவர் நம் நடிகர்திலகம் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். இரண்டு அருமையான பாடல்களையும் காட்சி வடிவில் காணச்செய்தமைக்கு மிக்க நன்றி.

அன்புள்ள பார்த்தசாரதி சார்,

தங்களின் 'கா கா கா' பாடலின் திறனாய்வுக்கட்டுரை மிக அருமை. வழக்கம்போல பாடலின் எல்லா அம்சங்களையும் தனித்தனியே அலசியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரிக்கும் ஏற்ப அவருடைய முகபாவம் மாறுவதை சுட்டிக்காட்டியிருந்த விதம் அருமை. பாடலின் லொக்கேஷனைக்கூட (தண்ணீர்த்தொட்டி) நீங்கள் விட்டுவைக்கவில்லை. காலத்தால் அழியாத ஒரு பாடலைப்பற்றி காலத்துக்கும் நினைத்திருக்கிறாற்போன்ற ஒரு ஆய்வைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
5th January 2012, 03:31 PM
அன்பு கார்த்திக் சார்,
தங்களுடைய கிருஷ்ணா தியேட்டர் நினைவுகள் அபாரம். இன்று நடந்தது போல் எழுதியுள்ளீர்கள். நம்மையும் அன்றைய தேதிக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். ரசிகர்களின் கனவுப் படமாகிய இதைக் கெடுப்பதற்கென்றே ஒரு பிரகஸ்பதி முளைத்து வந்து, தன் பட விளம்பரத்தில் மாற்று முகாமினரையும் இழுத்து விட்டு ரசிகர்களிடையே தன் படம் தான் சென்றடைய வேண்டும் என்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி இப்படம் வெற்றி பெற்றது மறக்க முடியாத உண்மை. வழக்கம் போல் சிலர் இதையும் தோல்வி என்று எழுதி தம்முடைய மேம்போக்கான விமர்சனங்களை மக்கள் மீது திணிக்க முற்பட்டதும் மறக்க முடிய வில்லை. அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டார்கள், இனிமேல் கொண்டாட்டம் தான் என்றெல்லாம் கூறப் பட்ட நாட்கள் அது.

மறக்க முடியுமா..

parthasarathy
5th January 2012, 05:48 PM
டியர் பார்த்தசாரதி சார்,
முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகனின் முத்தான சமுதாய சிந்தனையைத் தூண்டும் பாடலை மிகச் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் அலசியுள்ளீர்கள்.


பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள்.

பாராட்டுக்கள்.

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மேலான நன்றிகள்.

மோகனப் புன்னகை குறித்த தங்களது ஆதங்கம் உங்களது இதயத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது அப்பட்டமாகத் தெரிகிறது. இது தானே ஒவ்வொரு ரசிகனின் ஆதங்கமும். இது போல் பல படங்கள் - அந்த நாள், நீலவானம், நெஞ்சிருக்கும் வரை, தங்கைக்காக, துணை - என்று அது ஒரு பெரிய பட்டியல்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
5th January 2012, 05:53 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தாங்கள் வழங்கிய சிறப்பான பாராட்டுதல்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகள் !

2011-ம் ஆண்டு நமது திரிக்கு ஒரு பொன்னான ஆண்டு என்று கூறினால் அது மிகையன்று. திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தாங்களும், திரியின் சுப்ரீம் ஸ்டாரான வாசுதேவன் அவர்களும் நமது திரிக்குள் வந்து அசத்தத் தொடங்கிய ஆண்டாயிற்றே ! இங்குள்ள அனைவரும் தெரிவித்ததுபோல நம் அனைவரது பங்களிப்பாலும், 2012லிருந்து நமது திரி மேலும் மேலும் பொலிவடையப்போகிறது என்பது திண்ணம் !

சக்கை போடு போட்டுத் துவங்கிய தாங்கள் அடுத்ததாக அண்டபகிரண்டத்தைக் காக்கும் கலையுலகப் "பராசக்தி"யின் 'கா..கா..கா' பாடலோடு கம்பீரமாக வந்துள்ளீர்கள். காலஞ்சென்ற எனது தாயார், இந்தப்பாடல் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், அவர்கள் அப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியேவிட்டுவிட்டு, இப்பாடலை முழுவதும் பார்த்து ரசித்துவிட்டு, அதன் பின்தான் அந்த விட்ட வேலையைத் தொடர்வார்கள். அவர், ஒவ்வொரு முறையும், இப்பாடலை கண்டு களிக்கும் போதெல்லாம் சொல்லும் வாசகம், 'முதல் படத்திலேயே என்னமாய் நடிச்சிருக்கார் பாரு..அவர மாதிரி இனியொருத்தர் பொறந்து வரணும்' என்பார். இவையெல்லாம் எனது நினைவுத்திரையில் நீங்காமல் இடம்பெற்றிருப்பதால், தங்களுடைய 'கா..கா..கா' பாடல் பதிவைப் படித்தவுடன், அப்படியே எழுத வந்துவிட்டது.

உடுமலை நாராயண கவிராயரின் உண்மையை உரக்க உரைக்கும் உன்னத வரிகள், சுதர்சனம் அவர்களின் சுகமான சங்கீதம், இசைச் சித்தரின் இங்கிதம்கலந்த குரல்ஜாலம் எல்லாம் "பராசக்தி" கணேசரின் performanceஸோடு இணைந்து பரிமளிக்கும் போது, அந்தப்பாடல் எவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சிறந்த முன்னுதாரணம். மாருதிராவின் கேமராவும் இப்பாடலில் திலகத்தைப் படம்பிடிப்பதில் மலைப்பை ஏற்படுத்தியிருக்கும். சிதம்பர ரகசியமாக இருந்த சிதம்பரம் ஜெயராமனின் பாட்டுக்குரல் பட்டி-தொட்டியெங்கும் ஒலிக்கும் பிரபலக்குரலானதும் "பராசக்தி" கணேசரின் performance பலத்தால்தான் !

அருமையான ஆய்வுப்பதிவை அழகுற அளித்த தங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !

தங்களுக்காகவும் மற்றும் இங்குள்ள அனைவருக்காகவும் 'கா..கா..கா' பாடலின் வீடியோ:


http://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மேலான நன்றிகள். கூடவே, காலஞ்சென்ற தங்களது தாயாரைப் பற்றியும் மற்ற சில விவரங்களையும், அந்தப் பாடலின் வீடியோ லிங்கையும் அளித்து உற்சாகப்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றிகள்.

புதுச்சேரி, கடலூர், நெய்வேலி பகுதிகளில் இயற்கையின் கோரத் தாண்டவம் மற்றும், நமது நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள் புயலின் காரணமாக சந்தித்து வரும் இன்னல்கள் பற்றியும் உருக்கமாக எழுதியுள்ளீர்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், நேற்று நான் அந்த புயல் பாதித்த பகுதிகளில், நான் வேலை செய்து வரும் நிறுவனம் சார்பாக சென்றிருந்தேன் - புயல் நிவாரண வேலை சம்பந்தமாக. அப்போது தான் நிஜமாக நேரில் அந்த பேரிடர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது "தானே" புயல். திருவண்டார் கோவில் மற்றும் திருபுவனை பகுதிகளில் மாலை ஆறரை மணியளவில் எங்கும் இருள் சூழ்ந்து, மக்கள் தவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள் நினைவுக்கு வர, அவருடன் போனிலாவது உரையாட முடியுமா என்று யோசித்தேன். (என்ன செய்வது அவருடைய நம்பர் இல்லையே, நம்பர் இல்லையே). இப்போது அவரது வீட்டில், மின்சாரம் வந்து விட்டது என்றெண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் அனைவரும் புயல் பாதித்த பகுதிகளில் விரைந்து நிவாரணம் கிடைத்து, மக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
5th January 2012, 05:58 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,

தங்களின் 'கா கா கா' பாடலின் திறனாய்வுக்கட்டுரை மிக அருமை. வழக்கம்போல பாடலின் எல்லா அம்சங்களையும் தனித்தனியே அலசியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரிக்கும் ஏற்ப அவருடைய முகபாவம் மாறுவதை சுட்டிக்காட்டியிருந்த விதம் அருமை. பாடலின் லொக்கேஷனைக்கூட (தண்ணீர்த்தொட்டி) நீங்கள் விட்டுவைக்கவில்லை. காலத்தால் அழியாத ஒரு பாடலைப்பற்றி காலத்துக்கும் நினைத்திருக்கிறாற்போன்ற ஒரு ஆய்வைத் தந்தமைக்கு மிக்க நன்றி.[/quote]

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

"அவன் ஒரு சரித்திரம்" பட நினைவுகள் வழக்கம் போல், மிகவும் உணர்வு பூர்வமாகவும் சரளமாகவும் இருந்தது. குறிப்பாக, படம் எப்போது வரும் எப்போது வரும் என்கிற ஆவலை, ராஜா படத்தில் வரும் வசனக் காட்சியை வைத்து எழுதியது, அருமை - அதற்குக் கூட, நடிகர் திலகத்தின் பட வசனத்தை நினைவு கூறும் அளவுக்கு அவர் தங்களின் வாழ்வோடு ஒன்றி விட்டார். (ஏன் நம் எல்லோருடைய வாழ்விலும் தான்!).

ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

sankara1970
5th January 2012, 06:31 PM
Mr Karthick
Avan oru sarithram narration arumai-
neenga ellam annan padam release andru partha punniyavangal

sankara1970
5th January 2012, 06:41 PM
Wish the situation in Kadalore, Neyveli improves and my prayers for the same.

J.Radhakrishnan
5th January 2012, 07:31 PM
டியர் கார்த்திக் சார்,

அவன் ஒரு சரித்திரம் நினைவலைகள் பிரமாதம், இதை படிக்கும் போது நாங்களும் அந்த காலகட்டத்துக்கே சென்றது போல் இருந்தது, நல்ல சரளமான நடை, அடுத்து தங்களின் தீபம் பட பதிவிற்காக காத்திருக்கின்றோம்.

மிக்க நன்றி!!!

Murali Srinivas
5th January 2012, 11:34 PM
கார்த்திக்,

மிக பிரமாதமான வர்ணனை! தொடருங்கள்.

சாரதி,

கா கா கா பாடல் ஆய்வு மூலமாக அனைவரையும் வா வா என்று அழைத்து விருந்தளித்து விட்டீர்கள்.

விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்

அன்புடன்

mr_karthik
6th January 2012, 10:19 AM
அன்புள்ள ராகவேந்தர் சார், பார்த்தசாரதி சார், சங்கரன் சார், ராதாகிருஷ்ணன் சார், முரளி சார்...

'அவன் ஒரு சரித்திரம்' திரைக்காவியம் பற்றிய வெளியீட்டு நினைவுகளுக்கான உங்கள் அனைவரின் பாராட்டுக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

உங்கள் ஊக்கம், அடுத்த பட வெளியீட்டுநிகழ்வை உடனடியாக எழுதும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

KCSHEKAR
6th January 2012, 11:00 AM
டியர் கார்த்திக் சார்,

அவன் ஒரு சரித்திரம் நினைவலைகள் மிகவும் அருமை. திரு.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டதைப் போல இதை படிக்கும் போது நாங்களும் அந்த காலகட்டத்துக்கே சென்றது போல் இருந்தது,

மிக்க நன்றி!

KCSHEKAR
6th January 2012, 11:02 AM
பார்த்தசாரதி சார், கா கா பாடல் ஆய்வு பிரமாதம். நன்றி.

KCSHEKAR
6th January 2012, 11:23 AM
டியர் பம்மலார், தங்களின் மோகனப்புன்னகை விளம்பரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல், தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம் அருமை. திரைப்பட வெளியீடுகள் தேதியில் மட்டுமல்ல, எந்த சமுதாய, சமூக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களானாலும் அதனை நினைவுகூறும் வகையில் சிறப்பான ஆவணங்களைப் பதிவிடும் தங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரியதாகும். மிக்க நன்றி.

Subramaniam Ramajayam
6th January 2012, 11:04 PM
Superb kartick sir your krishnatheatre ninaivalagal which has took me to pavamannipu alayamani udiyaaravai days as you said rightly. I have missed these days since I was out of the fray that time due to family constraints restricted to watching the movies alone mostly by first week itself.
I was also hoping for the comeback situation, when we switched over to crown in 65.
Further iam fully endosing your views about broadwayonly theatre in north madraswhich was notat all cooperative to us for successful movies like pm oduma iruvarullam etc. lukilly crown back to or fold. please keepwriting. by jan end I will be back to madras from usa. l ill also coordinate for a groupmeeting of all of our friends.

vasudevan31355
7th January 2012, 08:47 AM
அனைவருக்கும் எனது இனிய 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-34.jpg http://i115.photobucket.com/albums/n291/geriannsplace/mz_040109_10035252018-34.gif

http://i534.photobucket.com/albums/ee341/NiceNSexy2008/StripFireworks.gif


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th January 2012, 09:09 AM
இதய தெய்வத்தின் ஆசிகளினால் 2012 புத்தாண்டு இனிதே சிறக்கட்டும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-32.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th January 2012, 09:17 AM
'ராஜா'வின் 'ராஜகுமாரனு'க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-25.jpg

http://timesofindia.indiatimes.com/photo/4022242.cms

http://4.bp.blogspot.com/-Cyv441eUZtA/TWeHiFlp6gI/AAAAAAAADW0/Frcg1eGqNDA/s640/Prabhu.jpg

http://www.dailomo.net/wp-content/gallery/doctorates-for-actor-prabhu-and-gangai-amaran-stills/doctorates-for-actor-prabhu-and-gangai-amaran-stills-14.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th January 2012, 09:28 AM
1-1-1983- இல் வெளிவந்த 'ஜெமினி சினிமா' இதழில் 'நடிக்க வைக்கிறார் சிவாஜி' என்ற தலைப்பில் இடம் பெற்ற 'இளையதிலகம்' பிரபு அவர்களின் பேட்டி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-18.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
7th January 2012, 10:18 AM
அன்புள்ள வாசுதேவன் சார்,

சிறிது இடைவெளிக்குப்பின் தங்களது பதிவுகளைக்கான மகிழ்ச்சியாக இருக்கிறது. இடையில் நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தில் தங்கள் பகுதிகளும் பாதிப்படைந்ததை அறிந்து வருத்தம் அடைந்தோம். அதிலிருந்து சிறிது மீண்டதும், உடனடியாக தங்கள் பதிவுகளைத் துவக்கியிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இனிமேல் எவ்வித இடையூறும் இன்றி தங்கள் பணிகளனைத்தும் தொடர வாழ்த்துக்கள்.

vasudevan31355
7th January 2012, 10:28 AM
'தானே' புயலின் தாண்டவத்தால் நிலைகுலைந்து போன எங்களுக்கு நமது திரியின் மூலமாக அன்பையும் ஆதரவையும் அளித்து ஆறுதல் படுத்திய அனைத்து நல் இதயங்களுக்கும் கடலூர் மாவட்ட மக்கள் சார்பாக என் இதயம் நெகிழ்ந்த ஆனந்தக் கண்ணீருடன் கூடிய கோடானுகோடி

http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s1600/Nandri.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th January 2012, 11:31 AM
அன்பு பம்மலார் சார்,

என் அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும்.

புயலினால் பாதிப்படைந்ததினால் எங்களுக்கு ஏற்பட்ட கண்ணீரை விட தங்கள் அன்பினால் எங்களுக்கு ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்தான் அதிகம். தங்கள் அன்பையும், பாசத்தையும் கண்டு மலைத்துப் போய் நிற்கிறோம். புயலைப் பற்றிய பதிவை இடுகை செய்து எங்கள் பகுதி மக்களின் அவஸ்தைகளையும். சொல்லொணாத் துன்பங்களையும் அப்பதிவில் குறிப்பிட்டு எங்களுக்காகத் தாங்களும், நம் அருமை நண்பர்கள் திரு ராகவேந்திரன் சார், அன்பு முரளி சார், கார்த்திக் சார், சந்திரசேகரன் சார், பார்த்தசாரதி சார், பாலா சார், சதீஷ் சார், ராதாகிருஷ்ணன் சார், சங்கரா சார், மற்றும் வியட்நாம் நண்பர் கோபால் அனைவரும் இறைவனிடமும், அந்த இறைவனையே நமக்குக் கண்முன் காட்டிய நம் இறைவனாரிடமும் பிரார்த்தனை செய்ததின் பலனாகவும், நம் இதய தெய்வத்தின் அருளினாலும் நாங்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். இதெற்கெல்லாம் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. என் அடிமனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் நன்றி உணர்வுகளை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆயிரமாயிரம் நன்றிகளை தங்களுக்கு காணிக்கையாய் சமர்ப்பிக்கிறேன்.

இனி தங்களின் ஈடு இணையில்லா பதிவுகள் பற்றி.

இளையதிலகத்தின் பிறந்தநாள் பதிவில் நடிகர் திலகம் தன் அருந்தவப்புதல்வரோடு படு இளமையாக காட்சி தருவது கண்களுக்கு விருந்து.

தங்களுடைய 'அன்பளிப்பு' பங்களிப்பு எங்களுக்கு ஆனந்தக் கொந்தளிப்பு. அற்புதமான ஆவணங்கள்.

'விடிவெள்ளி' வரலாற்று ஆவணமான நடிகர் திலகம் பற்றி டைரக்டர் ஸ்ரீதர் நடிகன் குரலில் கூறியுள்ள கருத்துக்கள் பற்றிய தங்களின் பதிவு தாங்கள் ஆவண வித்தகர் என்பதையும், 'ஆவணங்களின் விடிவெள்ளி' என்பதையும் தெளிவாக எடுத்தியம்புகிறது. அபூர்வமான புதையலுக்கு அட்டகாசமான எனது பாராட்டுக்கள்.

விடிவெள்ளி, மற்றும் பாசமலர் துவக்க விழா பதிவுகள் 'நச்'.

என் மனம்கவர்ந்த 'ராஜா' பொம்மை இதழின் அருமையான அட்டைப்படம் பார்க்க பார்க்க கொள்ளை அழகு. நான் எனது வீட்டில் நீண்ட நாட்கள் அந்தப் பொக்கிஷப் படத்தை சுவற்றில் ஒட்டி வைத்திருந்தேன். ஒரு வெள்ளைப் பேப்பரில் பென்சிலால் அந்தப் படத்தை வரைய அடிக்கடி முயன்று தோல்வி அடைந்ததுதான் மிச்சம். என் உள்ளத்தை கொள்ளை கொண்ட அந்தப் படத்தை தங்கள் பதிவு மூலம் பார்த்ததும் 'தானே' புயல் சோகம் தானே ஓடிவிட்டது. அதற்கும் விட்டு வைக்காமல் நல்ல மருந்து கொடுத்து விட்டீர்கள், அதனால் தங்களுக்கு 'மருத்துவர் பம்மலார்' என்ற பட்டமும் கூட சாலப் பொருந்துகிறது.

GODFATHER's JANUARY GULAAB JAAMOONS 41- ம் தங்கள் லிஸ்டில் தேனாய் இனிக்கின்றன.

தங்களது அயராத உழைப்புக்கும், சலிப்படையா பணிக்கும் ஊக்கமுடன் பணிபுரியும் உற்சாகத்திற்கும் என்னுடைய சல்யூட்.

ஒப்பற்ற திரித் தொண்டு புரியும் தங்களின் பின்னால் ஒரு சிறுத்தொண்டனாக தங்களைத் தொடர்வது நான் பெற்ற பெரும் பேறு.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th January 2012, 11:58 AM
அன்பு ராகவேந்திரன் சார்,

'தானே' புயல் பாதிப்புக்கள் பற்றி நமது திரியின் வாயிலாகவும், என்னிடம் தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்து தாங்கள் ரசிக முதல்வர் மட்டுமல்ல பண்பிலும் முதல்வர் என நிரூபித்து விட்டீர்கள். தங்கள் பிரார்த்தனைக்கு என்னுடைய மனம் குளிர்ந்த நன்றிகள்.

'விடிவெள்ளி' பாட்டுப் புத்தகப் பதிவு பட்டை உரிக்கிறது.

அன்பளிப்பின் அபூர்வ பாடல்கள் பதிவு எங்களுக்கெல்லாம் சிறந்த அன்பளிப்பு. ('அன்பளிப்பு' படத்தில் "மாதுளம்... பழத்திற்கு பெயர் மாதுளம்"....எனும் அருமையான பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலா அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடல் படத்தில் கட். அதைப் பற்றிய மேலதிக விவரங்களை தயவு செய்து தர முடியுமா?)

மோகனப் புன்னகையின் 'தென் இலங்கை மங்கை இசை அருவியாய் காதுகளில் ரீங்காரமிடுகிறாள். அப்படத்தைப் பற்றிய தங்களது ஆய்வுப் பதிவு நன்று.

அனைத்துப் பதிவுகளுக்கும், தங்கள் ஆழ்ந்த அன்பிற்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் சார்.


அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
7th January 2012, 12:02 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

இயற்கை சீற்றம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, தாங்கள் மறுபடியும் தங்கள் புயல் வேகப் பதிவுகளை பதிவிடத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது.

தொடர்ந்து பதிவிடுங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
7th January 2012, 12:11 PM
முத்தான முரளி சார்,

தங்களது சிகரமான பாராட்டுக்கு தலைவணங்குகிறேன். தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் வரம் கிடைக்க நாங்கள் தான் தவம் செய்திருக்க வேண்டும். செய்யவும் வேண்டும். தங்களது அன்பிற்கு தலையாய நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன் சமர்ப்பணம் செய்கிறேன்.


அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
7th January 2012, 12:15 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

3. "சுந்தரி சௌந்தரி"; படம்:- தூக்குத் தூக்கி (1954); இயக்கம்:- r.m. கிருஷ்ணஸ்வாமி

இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொள்ளும் பாடல்கள் அனைத்தும் - ஒன்று தமிழ் சினிமாவில், முதல் முறையாகக் கையாளப்பட்டவை; இல்லை, மரபை உடைத்தவை. இப்படியும் ஒரு விஷயத்தைக் கையாளலாம்; சொல்லலாம்; அதன் மூலம் சொல்ல வந்த விஷயத்தை, ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்கிற கலை தாகத்தை உள்ளடக்கிய பாடல்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகன் சுந்தராங்கதன் (நடிகர் திலகம்) , ஒரு நாட்டின் மூன்று இளவரசர்களில் ஒருவன்; ஒரு விசித்திரமான ஆய்வுக்காக நெடிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது சந்தர்ப்ப வசத்தால், மனைவியாலேயே, சிரச்சேத தண்டனையை அடைந்து, தப்பி விடுகிறான். மற்றவர் கண்ணில் இருந்து தப்புவதற்காக, ஒரு விதமான கோமாளி (சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல) வேடம் தாங்கி, வேறொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டிலுள்ள ஒரு கோவிலில், அந்த நாட்டைச் சேர்ந்த இளவரசி மற்றும் அவரது தோழி (மந்திரி மகள்) (பத்மினி-ராகினி) நுழையும் போது கூடவே நுழைந்து விடுவார்.

இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதன்மையானது, நடிகர் திலகத்தின் ஒப்பனை மற்றும் நகைச்சுவை உணர்வு கலந்த நடிப்பு. இதற்கு சற்று முன்னர் தான், நடிகர் திலகம் அந்தக் கோமாளி வேடத்துடன் அறிமுகமாவார். அதுவும், "பெண்களை நம்பாதே" பாடலோடு. ஆக, அப்போது தான் ஒரு பாடல் முடிந்திருக்கும்; பாடல் முடிந்த கையோடு மற்றொரு பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் அற்புதமான, டைமிங் கலந்த நகைச்சுவை நடிப்பினாலும், பத்மினி-ராகினி நடிப்பாலும், பாடலின் இனிமையாலும், சலிப்பே ஏற்படாது. அரங்கமே சிரிப்பலையில் மூழ்கும்.

பாடல் துவங்கிய சில நேரத்தில், காவலாளி (என்னத்தே கன்னையா - வரும் ஆனா வராது என்பவர்) துரத்தத் துரத்த கோவிலினுள் நுழைபவர், "சூலி எனும் உமையே குமரியே" என்று பத்மினியும் ராகினியும் பாடியவுடன், "குமரியே சூலி எனும் உமையே" என்று தொடர்ந்து பாட ஆரம்பிப்பார்.

முதல் சரணத்தில், "அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே" என்று அவர்கள் சொன்னவுடன், தானும் அதையே திரும்பச் சொன்னவுடன், சகோதரிகள் இவரை நீயே பாடு என்று சைகை செய்தவுடன், இவரும் "நீயே பாடு" என்று அதையும் திரும்பச் செய்வார். இந்த இடத்தில், ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது இன்னமும் என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சரணம் முடியும்போது, "மாயே" என்று அவர்கள் நீண்டதொரு ஆலாபனை செய்தவுடன், இவரும் அதை அப்படியே திரும்பச் சொல்லும் விதம் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.

இரண்டாவது சரணத்தில், "தீரமும் வீரமும் சீரும் செல்வமும்" என்று சகோதரிகள் பாடியதும், இவர் தீரமும் வீரமும் என்று சொல்லும்போது ஒவ்வொரு முறையும், வாயைக் கோணிக் கொள்வது மறுபடியும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். பத்மினியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துத் தொடருவார்.

பாடல் அப்படியே தொடர்ந்து முடிந்து, சகோதரிகள் இருவரும் கோவிலை விட்டு வெளியில் சென்றவுடன் தான், நடிகர் திலகம் அதை கவனிப்பார். உடனே, பின்னாலேயே தொடர்வார்.

இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் அத்தனை சேட்டைகளையும் தாங்கியிருந்தாலும், அந்தப் பாடலில் தொனிக்கும் ஒரு விதமான தெய்வீகத் தன்மை பார்க்கும் போதும், அழியாமல் இருக்கும். அதுதான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு. அதாவது, நடிகர் திலகத்தின் தனித்தன்மையான நடிப்பால் அமைந்த தனிச்சிறப்பு. தன்னுடைய பங்களிப்பு, ஒரு காட்சியையோ, பாடலையோ, படத்தையோ, மேலும் நிமிரச் செய்யுமே தவிர, அதன் தரத்தை எள்ளளவும் குறைக்காது.

இதே படத்தில், மேலும், பல பாடல்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், அபாய அறிவிப்பு, ஏறாத மலைதனிலே (இது தான் அத்தனை பாடல்களிலும் மிகவும் புகழ் பெற்ற பாடல்). இருப்பினும், இந்தப் பாடலை நான் தேர்ந்தேடுத்ததற்க்குக் காரணம், பாடல் மரபை மீறி எடுக்கப் பட்ட பாடல் - அதாவது நடிப்பின் மூலம் - இருப்பினும், பாடலின் தெய்வீகத் தன்மை குறையாமல் இருந்தது.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
7th January 2012, 12:20 PM
அன்பு சதீஷ் சார்,

உங்களுடய மிக மிக உயர்ந்த பாராட்டிற்கு என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றிகளை காணிக்கையாக வைக்கிறேன். தங்கள் அன்பு உள்ளம் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக உறைந்து போய் நிற்கிறேன். இந்த அன்பை நமக்குள் உருவாக்கிய அந்த உத்தமத் தலைவனின் பாதம் தொட்டு தங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
7th January 2012, 12:37 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

4. பனி படர்ந்த மலையின் மேலே; படம்:- இரத்தத்திலகம் (1963); இயக்கம்:- தாதா மிராசி

மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு எடுக்கப் பட்ட பாடல்கள். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 40 வருடங்கள், தமிழ் சினிமாவின் முக்கிய கதாசிரியர்களும் இயக்குனர்களும், ஏன் தயாரிப்பாளர்களும், நடிகர் திலகத்தின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவற்றை செயலாக்கினார்கள். அவர்கள் நினைத்ததை அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் இவரால் வடிக்க முடிந்தது; அதை வைத்து அவர்களால் காசு பண்ணவும் முடிந்தது.

இரத்தத் திலகத்தில் இடம் பெறும் இந்தப் பாடலின் சூழலே அருமையாகவும், அமைதியாகவும், அலாதியாகவும் இருக்கும். போர்க்களத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒரு போர்த் தளபதியின் (கேப்டன் - நடிகர் திலகம்) கூடாரத்தின் வெளியே, அவனுடைய குழுவினர் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்த கூடாரத்தினுள்ளிருந்து வெளியே வரும் அந்த கேப்டன் பாடுவதாய் - அதாவது தன் தாய்த் திருநாட்டையும், பாரதத் தாயையும் நினைத்துப் பாடுவதாய் வரும் பாடல்.

பாடல் துவங்கும் போது, கூடாரத்திலிருந்து பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தவாறே நடிகர் திலகம் ஸ்டைலாக அதே சமயம் ஒரு வித அமைதியான மன நிலையோடு வெளிப்படும் விதமே, அந்தப் பாடல் எத்தகையது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி விடும். இதை எழுதும்போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்?

பாடல் நெடுகிலும், அவரது க்ளோசப்பில் அதற்கேற்ற முக பாவங்களுடன் பாடுவதாயும், பின்னணியில் அவர் பாரதத் தாயைப் பார்த்து சொல்வதாயும் வரும்.

இந்தப் பாடல் மிகவும் வித்தியாசமான டியூனில் வரும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது மகத்தான இசையமைப்பில். கவியரசரின் பாடல் வரிகளில் கல் நெஞ்சையும் கரைத்து விடும். நீண்ட பாடல்.

முதல் சரணம் - "குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்" என்று துவங்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தினின்று வெளிப்படும் கனிவு ... "கண்ணீரின் சின்னம் பார்த்தேன்" என்று முடியும் போது இலேசான சோகத்துடன் முடியும்.

இப்போது முதல் தொகையறா "கலங்கினேன்...துடித்தேன்..." அவரது நாடி நரம்புகள் வெறும் முகத்தால் மட்டுமே துடிக்கும் ... நாமும் தான். சோகம் மேலிட "கானகமும் கலங்குதம்மா" என்று கூறி "காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன்" எனும் போது காட்டும் துடிப்பு; "ஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன்" எனும் போது காட்டும் உணர்வு... அப்படியே மெல்லக் கனிந்து "சொல்லம்மா சொல் என்றேன் தூய மகள் தலை நிமிர்ந்தாள்" எனும்போது அமைதி கலந்த உற்சாகம்.

இரண்டாவது சரணம் - "அமைதி தேடி உருகி நின்றேன்....... இமயம் முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்" எனும் போது வெளிப்படுத்தும் நம்பிக்கை... அபாரம்.

இப்போது இரண்டாவது தொகையறா. இதுதான் பாடலின் முக்கிய அம்சம். அப்போது, சீன தேசத்திலிருந்து நட்புறவோடு இந்தியா வந்து, நயவஞ்சகமாக, இந்தியாவுடன் போர் புரிந்த சீனத் தலைவரைப் பற்றிப் பாடுவதாக வரும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உள்ளக் குமுறலையும் சத்தம் போட்டு இயம்பும். "உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று......" அவரது அகன்ற, பெரிய ஒளி வீசும் கண்களை கவனியுங்கள்..."பசியாற ஓடி வந்த பத்து பேர் மத்தியிலே பகையாற ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்!" எனும் போது வெளிப்படுத்தும் சோகம் கலந்த குமுறல்! "யாரை அடித்தேன்? யார் குடியை நான் கெடுத்தேன்?" என்று வெடித்து கடைசியில், அமைதியாக, "அன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன்" என்று நிறுத்தி, "பின்னர் மனதில் பெறும் துணிவு மோதி வர" என்று நிமிர்ந்து எழுந்து "வீரம் உண்டு தோள்கள் உண்டு..." என்று உற்சாகமடைந்து நம்பிக்கையுடன் "தர்மம் மிக்க தலைவன் உண்டு" என்று முடிப்பார்.

இப்பொழுது கடைசி தொகையறா. "அன்பு நிறைந்த மகன் அருள் நிறைந்த கருணை மகன் பண்பு நிறைந்த மகன் பழ நாட்டின் மூத்த மகன்" - என்ன ஒரு கனிவு அந்த முகத்தில் என்ன ஒரு நம்பிக்கை அந்தக் கண்களில் - பண்டித நேருவைக் குறித்து தான் சொல்வார் - "இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைப்பேன்" என்று கூறி "அன்னை சிரித்தாள் அடடா... ஒ! அச்சிரிப்பில் முன்னைத் தமிழ் மணமே முளைத்தெழுந்து நின்றதம்மா" என்று கூறி "என்னை மறைந்தேன் இரவுலகில் சேர்ந்து விட்டேன்" என்று மெதுவாகக் கூறி "கண்ணை மெல்ல மறைத்து ......" என்று ஒருவாறு இனிமையாக டி.எம்.எஸ். இழுத்து அற்புதமாகப் பாடியதர்க்கேற்றாற்போல் இவரும் அற்புதமாக முடித்து மறுபடியும் பல்லவியைப் பாடி முடிக்கும் போது, அவர் மட்டுமல்ல, பார்க்கும் ஒவ்வொரும் தங்களை மறந்து நடிகர் திலகத்துடன் ஒன்றி விடுவார்கள்.

தேசப் பற்று, தேசியம் என்று வரும் போது, நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு வேறு ஒரு கலைஞரும் இந்த உலகத்தில் அந்த விஸ்தீரணத்தை தொட்டதில்லை. இந்தப் பாடலும் அந்த வகையில் அற்புதமான ஒரு பாடல். அதற்கு உயிர் கொடுத்த அந்த யுகக் கலைஞனை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியுமா?

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
7th January 2012, 12:46 PM
அன்பு பார்த்தசாரதி சார்,

தங்களின் அபரிமிதமான அன்பிற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரிய வில்லை. தங்கள் சகோதர உள்ளத்திற்கு என் சிரம் தாழ்ந்த பாச நன்றிகள்.

தூக்குத் தூக்கியின் "சுந்தரி சௌந்தரி நிரந்தரியே"... பாடலை வெகு சிறப்பாக ஆய்வு செய்து எங்கோ அந்தப் பாடலை உயரத்திற்கு தூக்கிச் சென்று விட்டீர்கள். பாடல் ஆய்விற்கு ஒரு பார்த்தசாரதி என்ற நிலைத்த பெயரை இந்தப் பாடல் ஆய்வின் மூலம் நிரந்தரமாகப் பெற்றுவிட்டீர்கள். என் மனமுவந்த பாராட்டுக்கள். அது மட்டுமல்ல. இப்பாடலை நான் தங்கள் அருமையான பதிவிற்காக வீடியோ வடிவில் இங்கு இடுகை செய்ய ஒரு வாய்ப்பு அமைந்ததற்கு தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளதோடு அதற்காக மிகப் பெருமிதமும், பூரிப்பும் கொள்கிறேன்.

(இப்பாடலில் 1.54 நிமிடத்திலிருந்து 1.57 வரையிலான அந்த மூன்று நொடிகளில் "சூலி எனும் உமையே... குமரியே" என்று பத்மினியும், ராகினியும் பாடும் நேரத்தில் நடிகர் திலகம் படு வேகமாக ஒரு கிறுக்கு நடை நடந்து வருவதைப் பாருங்கள். இந்த ஒரு நடைக்காகவே நம் வாழ்வையே அந்த நடிக மகானுக்கு அர்ப்பணித்து விடலாம்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VlULJclM6IQ


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th January 2012, 01:14 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்களின் அன்பான கருணை நெஞ்சத்திற்கு கடலளவு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'தானே' புயல் சீற்ற பாதிப்பிலிருந்து தங்களைப் போன்ற அன்புள்ளம் கொண்ட தூயவர்களின் அன்பினாலும், பிரார்த்தனையாலும் மீண்டு வந்து விட்டோம்.

தங்களின் மோகனப் புன்னகை மற்றும் அவன் ஒரு சரித்திரப் பதிவுகள் நிஜமாகவே சரித்திரப் பதிவுகள் தான். படிக்க படிக்க தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லால் துப்பறியும் நாவல் படிப்பது போன்ற விறுவிறுப்பு.

நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்ற முறையில் அவரின் பட வெளியீடுகளின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவுகளாக நீங்கள் தரும் போது அது ஒவ்வொரு ரசிகருடைய மனநிலையை அப்படியே பிரதிபலித்து விடுவதனால் உங்கள் பதிவுகளை உலகப் பொதுமறையாம் திருக்குறள் போல பொதுப் பதிவாகவே தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம். அதை எழுத்து வடிவில் பதிப்பிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல. ரீலீஸ் தினத்தன்று தங்களுக்கு எப்படிப்பபட்ட மனநிலையோ அதுவேதான் எங்கள் எல்லோருக்கும்.

அதனால் தங்கள் ரீலீஸ் தினப்பதிவுகள் காந்தம் போல் எங்களைக் கவருகின்றன. ஒட்டுமொத்த திரியின் சார்பாக தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
7th January 2012, 01:55 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,

'தூக்குத்தூக்கி' மற்றும் 'இரத்தத்திலகம்' பாடல் ஆய்வுக்கட்டுரைகள் மிக நன்றாக இருந்தன. அதில் 'பனிபடர்ந்த மலையின் மேலே' பாடல் ஆய்வு சற்று தூக்கலாக இருந்தது. வித்தியாசமாக அமைந்த மிகச்சிறந்த பாடல். எப்போதுமே இவர் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடுவார் எனினும், தேசியம் என்று வரும்போது தன்னையே மறந்துவிடுவார் என்பதற்கு இப்பாடலும் ஒரு சாட்சி.

படமாக்கத்தில் நெருடிய ஒரு விஷயம். இப்பாடலை நிஜமான ஒரு மலைப்பகுதியிலேயே படமாக்கியிருந்தால் (இமயமலைக்குத்தான் செல்ல வேண்டுமென்றில்லை, தமிழ்நாட்டிலேயே ஒரு மலைக்காட்டுப்பகுதியில் படமாக்கியிருந்தால்) இன்னும் கூடுதல் எஃபெக்ட் கிடைத்திருக்கும். திரையில் வரையப்பட்டிருக்கும் மலைகள் 'இது செட், இதுசெட்' என்று நமக்கு நினைவூட்டி கவனத்தை சிதறடிக்கும். அந்தக்காலத்தில் சாலை, தெரு, கடைகள், காடு, கடற்கரை என்று எல்லாவற்றுக்கும் செட் போட்டு செயற்கைத்தனத்தை அள்ளித்தெளித்திருந்தனர்.

தாங்கள் ஒவ்வொரு வரிக்கும் நடிகர்திலகத்தின் முகபாவத்தை ஆய்வு செய்திருந்த விதம் ரொம்பவே பிரமாதம். நீங்கள் சொன்னதுபோல பாடல் முழுவதிலும் ஒரு அமைதி அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும். மிக நல்ல ஆய்வு, பாராட்டுக்கள்.

mr_karthik
7th January 2012, 03:11 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்கள் இதயத்திலிருந்து வெளிவந்த நிறைவான பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள். முந்தைய படங்களைவிட 'அவன் ஒரு சரித்திரம்' படவெளியீடு பற்றி சற்று விவரமாகவே எழுத வேண்டுமென்று ஆவலாக இருந்ததால், எல்லா சம்பவங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதினேன். அதனால்தான் அபிராமியிலிருந்து அசோக்குக்கு மாற்றப்பட்டது, கிரிக்கெட்டைப் புறக்கணித்தது என்று எல்லாவற்றையும் சேர்த்தேன். பதிவு நண்பர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

தங்கள் புத்தாண்டின் முதல் பதிவே, நடிகர்திலகத்தின் பொலிவான தோற்றத்துடன் பொம்மை இதழ் அட்டைப்படத்துடன் அமைந்து சிறப்பு சேர்க்கிறது. இளையதிலகம் பிரபுக்கு வாழ்த்துச்சொல்லும் முகமாக அவரது பல்வேறு சிறப்பு நிழற்படங்களையும், 'ஜெமினி சினிமா' வில் வந்த பேட்டிக்கட்டுரையையும் தந்து அசத்தி விட்டீர்கள். சந்தோஷமான பாராட்டுக்கள்.

அன்புள்ள சந்திரசேகர் சார் மற்றும் ராமஜெயம் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு என் நன்றி.

KCSHEKAR
7th January 2012, 03:26 PM
புயல் பாதிப்பிலிருந்து மீண்டு, புயலென பதிவுகளை அள்ளி வழங்கத் தொடங்கியிருக்கும் வாசுதேவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

KCSHEKAR
7th January 2012, 03:28 PM
டியர் பார்த்தசாரதி சார்,

'தூக்குத்தூக்கி' மற்றும் 'இரத்தத்திலகம்' பாடல் ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் அருமையாவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. நன்றி.

vasudevan31355
7th January 2012, 11:05 PM
டியர் சந்திரசேகரன் சார்,

புயலினால் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த போது சிவாஜி சமூக நலப் பேரவை என்ற அமைப்பின் பெயருக்கேற்ப எங்கள் நலத்தில் அக்கறை கொண்டு, கைபேசியின் வழியே என்னை தொடர்பு கொண்டு, நிலைமைகளை தாங்கள் விசாரித்துத் தெரிந்து கொண்டு ஆறுதல் கூறியது தங்களின் அன்பின் அடையாளத்தையும், எங்கள் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் காண்பிக்கிறது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களுக்கு. தங்கள் தலைமையில் பேரவை அமைப்பு பல சாதனைகளை நிகழ்த்தப் போவது திண்ணம். தங்கள் பரந்த உள்ளத்திற்கு என்னுடய மனப்பூர்வமான நன்றிகள்.

பதிவுகளுக்கான பாராட்டிற்கும் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
7th January 2012, 11:23 PM
Back with a Bang என்ற சொற்றொடருக்கேற்ப அட்டகாசமான புத்தாண்டு வாழ்த்துக்களோடு இங்கே பதிவிட்டிருக்கும் அன்பு வாசுதேவன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து தங்கள் அசத்தல்களுக்கென காத்திருக்கிறோம்.

நேற்று 06.01.2012 முதல் சென்னை மண்ணடி பிராட்வே திரையரங்கில் பிரஸ்டீஸ் ப்ரொடக்ஷன்ஸ் கௌரவம் தினசரி 3 காட்சிகளாக நடைபெறுகிறது.

அன்புடன்

vasudevan31355
8th January 2012, 07:31 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

நம் அன்பு பம்மலார் அவர்கள் புயல் பாதிப்புகளைப் பற்றி நமது திரியில் பதிவிட்டதும் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு கைபேசியின் வழியே நலம் விசாரித்ததற்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் கருணையினால் எந்தப் புயலும் தென்றலாய் மாறிவிடும். தங்கள் அன்பிற்கு என் மனமுவந்த நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th January 2012, 07:36 AM
டியர் பாலா சார்,

தங்களின் அன்பும், எங்கள் மீது கொண்ட தங்கள் கொண்டிருக்கும் அக்கறையும் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. எங்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்த தங்களின் அன்பிற்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறோம். நம் அன்புக்கடவுளின் அருளாசியும் தங்களைப் போன்றோரின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் எங்களுக்குத் துணை நிற்கையில் எங்களுக்கு மலை போல வந்த துன்பங்கள் யாவும் பனி போல விலகி விடுமே! உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றிகளைத் தங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் சமர்ப்பிக்கிறேன்.

மிக மிக அரிய நிழற்படங்களைத் தந்து குதூகலிக்கச் செய்து விட்டீர்கள். அதுவும் கண்டசாலாவுடன் தலைவர் இருக்கும் ஸ்டில் அதியற்புதம். நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th January 2012, 09:23 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் பாசப் பாராட்டிற்கு என் தலையாய நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th January 2012, 09:55 AM
டியர் பார்த்தசாரதி சார்,

பலாச்சுளையை ரசித்து சுவைத்துக் கொண்டிருக்கும் போதே தேன் மாங்கனியை உடனே கையில் தந்து சுவைக்கச் சொல்லிவிட்டீர்கள்.

எனக்கு மிக மிக பிடித்த "பனிபடர்ந்த மலையின் மேலே" பாடலை ஆய்வுக்கு எடுத்து பசுமையாக நெஞ்சில் படரச் செய்து விட்டீர்கள். நடிகர் திலகத்தின் அற்புத பல்வேறுபட்ட முக பாவங்களை அழகுற வர்ணித்துள்ளீர்கள். அதுமட்டுமல்லாது பாடல் வரிகள் அனைத்தையும் முத்து முத்தாய் ஆய்வு செய்துள்ளீர்கள். தேசபக்தி கிலோ என்ன விலை என்று சொல்பவர்கள் உங்கள் பதிவோடு இந்தப் பாடலை பார்த்தார்களேயானால் கண்டிப்பாக மாறிவிடுவார்கள். இருபாடல்களுக்குமான ஆய்வுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(ஒரு சிறு வேண்டுகோள். என் மனதைக் கொள்ள கொண்ட 'லக்ஷ்மி கல்யாணம்' திரைப்படத்தில் வரும், படு ஸ்லிம்மாக நடிகர் திலகம் மனித மிருகங்களைப் பற்றி நொந்து பாடும் "யாரடா மனிதன் அங்கே... கூட்டி வா அவனை இங்கே" பாடலை தங்கள் கைவண்ணத்தில் ஆய்வு செய்து அதைப் படித்து இன்புற எனக்கு ஆவல். நேரம் கிடைக்கும் போது ஆய்வு செய்து அமர்க்களப்படுத்தி விடுவீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ...)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th January 2012, 09:57 AM
டியர் ராமஜயம் சார்,

தங்கள் அன்பான பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th January 2012, 10:33 AM
அன்பு நண்பர்களுக்கு,

'அன்பளிப்பு' படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய "மாதுளம்... பழத்திற்கு பெயர் மாதுளம்" என்ற அற்புதப் பாடல் ஏனோ படத்தில் இடம்பெறாமல் போய் விட்டாலும் அதை இப்போது கேட்டு ரசிப்போம். படத்தில் ஜெய்சங்கர் அவர்களுக்கும், 'அலேக்' நிர்மலாவுக்கும் வரும் டூயேட்டாக இப்பாடல் இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இதோ அந்தப் பாடல் ஒலி வடிவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ApzfSUxl-Hw


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th January 2012, 11:06 AM
'அன்பளிப்பு' படத்திற்கான 'உதயம் கோல்ட் வோர்ட்பிரஸ்' இணையதளத்தில் வந்த விமர்சன ஆய்வுக் கட்டுரை இங்கே நம் பார்வைக்கு.

http://4.bp.blogspot.com/_wD6WQdkWTzM/TQMv2zsIk1I/AAAAAAAAAe4/FB1iOUEI8R8/s1600/Anbalippu.jpg

http://4.bp.blogspot.com/_oNGgBJm-TXc/TTcYyTnVVqI/AAAAAAAABLc/1Qr73eIqngY/s1600/anbalippu.JPG

http://udhayamgold.files.wordpress.com/2011/05/anbalippu.jpg

Anballipu
23 May

Master director A.C.Thirulogachander, who delighted cinema audiences with hit films like ANBE VAA, ATHEY KANGALL and BABU was the first director to bring together on screen Nadigar Thilagam Sivaji Ganesan and Makkall Kalainyar Jaishanker. Titled ANBALIPPU, this film also stars B.Saroja Devi, M.N.Nambiar, Nagesh, Pandaribhai, V.K.Ramasamy and Senthaamarai.

Sivaji Ganesan plays the rural youngster Velu – well liked and greatly respected, despite being a poor, lowly labourer. He, however, owns his own piece of land and he works hard to earn a living off this land. His childhood friend was Raja – played by Makkall Kalainyar Jaishanker. Contrary to what Velu initially expects, everyone leads him to believe that Raja, having been educated overseas, will no longer see Velu as his friend. When Raja does return to the village, he proves everyone wrong and it seems that the Golden period has commenced for Velu.

Raja, however, has devised a complex plan to transform his little village first to a major town and then a city by building a mill and then following this with other related industries. This is where things begin to go wrong for the friends. Velu is a passionate farmer who regards the soil as his mother and father. One can imagine his reaction then when Raja tells him that he requires Raja’s land to build the mill. Velu finds it difficult to accept that good arable land should be wasted on industry at a time when India should have been looking to increase food production. Raja takes this refusal personally and the two friends now find themselves adversaries.

Events take a turn for the worse when the new arrival in the village, Vasudevan – played by M.N.Nambiar – decides to frame Velu for a crime he did not commit. Circumstances then threaten to destroy what was left of the friendship forever – or can matters still be rectified? If so, how? To find out, watch A.C.Thirulogachander’s classic movie, ANBALIPPU.

ANBALIPPU has some unforgettable acting performances. Sivaji Ganesan is simply fabulous in a kind of performance he seems to reserve for A.C.Thirulogachander. Jaishanker is in one of his best performances in a role that seems to bask in the golden light of Nadigar Thilagam. B.Saroja Devi is in a memorable role. Naagesh and V.K.Ramasamy provide the comedy track albeit at the expense of the main story. M.N.Nambiar plays his role with the usual venom while Pandaribhai and Senthaamarai are the best of the others.

Music in ANBALIPPU has been scored by Mellisai Mannar M.S.Visvanathan who has done a commendable job with the film’s background score. Visvanathan’s performance with the soundtrack is less impressive. None of the songs are very memorable. All the songs have been penned by Kaviyarasu Kannadassan. Dance choreographer A.K.Chopra does a good job with the film’s dances. Art director A.Balu does nothing out of the ordinary.

Stunt directors A.Vengetesan and Saminathan are very impressive especially in the fight sequence in the fire. Cinematographer Thambu handles his portfolio adequately.

Produced by J.Gandhiraj, ANBALIPPU has story and direction by A.C.Thirulogachander and scripting by Aaroor Dhaas. Dhaas handles the dramatic scenes exceptionally well and much of the film’s dramatic highpoints can be attributed to Dhaas’s scriptwriting skills. The movie is a fabulous classic with a credible story and believable acting.

ANBALIPPU scores 8 points out of 10.


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
8th January 2012, 12:01 PM
டியர் வாசுதேவன் சார்
அன்புடன் தாங்கள் அளித்துள்ள அன்பளிப்பு விமர்சனம் சூப்பர். அந்த வலைத்தளத்திற்கும் நமது நன்றிகள்.

பல்வேறு இணைய தளங்களைப் பார்வையிட்டதில் ஓரளவிற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நமது நடிகர் திலகத்தின் படங்கள் இடம் பெறக் கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இங்கே தொகுத்துத் தரப் படுகின்றன. இந்த சேனல்கள் இந்த நிகழ்ச்சிகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். இருந்தாலும் முடிந்த வரை தகவல்கள் சரியாக இருக்கும் என நம்புவோம்.

நாள் - நேரம் - படம் - தொலைக்காட்சி - என்ற வரிசையில்

09.01.2012 - காலை 10.00 - ஆனந்தக் கண்ணீர் - ஜெயா மூவீஸ்
09.01.2012 - மாலை 4.00 - எழுதாத சட்டங்கள் - ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
10.01.2012 - பகல் 1.00 மணி - லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
10.01.2012 - பகல் 1.30 அல்லது 2.00 [நேரத்தை சரிபார்த்துக் கொள்ளவும்] - அன்புள்ள அப்பா - கலைஞர் டி வி
11.01.2012 - காலை 10.00 மணி - நல்லதொரு குடும்பம் - ஜீ தமிழ்
12.01.2012 - காலை 10.00 மணி - சாந்தி - ஜீ தமிழ்
13.01.2012 - காலை 10.00 மணி - முதல் மரியாதை - ஜெயா மூவீஸ்
13.01.2012 - இரவு 8.00 மணி - கல்யாணியின் கணவன் - சிரிப்பொலி

இந்தத் தகவல்கள் கீழ்க்காணும் இணையதளத்தில் பல்வேறு சேனல்களின் நிகழ்ச்சிப் பட்டியலிலிருந்து தொகுக்கப் பட்டவை
http://www.whatsonindia.com/WhatsOnTV/Channel/Tamil/AMN-TV-TV-Schedule.aspx


அன்புடன்

selvakumar
8th January 2012, 01:49 PM
I always look out for posts from Saradha & Karthik :thumbsup: in this thread. Their description of the background, fan's reaction, the then political climate etc for a movie is a good read. Expecting more posts from them.

P.S: I do ignore any comments passed on 'other actor', 'avar'.

RAGHAVENDRA
8th January 2012, 02:25 PM
The 'other actor', 'avar' etc. are part of the history / happenings of the past and can't be ignored. Those were the hurts and sentiments experienced by the NT Fans during their lifetime and ignoring them can't reflect the history.

RAGHAVENDRA
8th January 2012, 02:30 PM
கடந்த காலங்களில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சந்தித்துள்ள அளவற்ற ஏகடியங்கள், ஏளனங்கள் எதிர்ப்புகள், வெறும் கற்பனைக் கதைகளல்ல. அவை ஒவ்வொரு ரசிகரும் தம் வாழ்வில் சந்தித்த, அனுபவித்த நிகழ்வுகளின் அடிப்படையானவை. அனைத்து வகையான பின் புலங்களின் எதிர்ப்பையும் சந்தித்து வந்தவர் நடிகர் திலகம், அதே போல் அவர்களது ரசிகர்களும். இவற்றையெல்லாம் சௌகரியமாக மறந்து விடக்கூடிய கதைகளல்ல, ரத்தத்தில் ஊறி விட்ட தழும்புகள், இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு எந்த சிவாஜி ரசிகராலும் பதிவுகளை எழுத முடியாது. எங்கேனும் ஓர் இடத்தில் அந்த வலி பிரதிபலிக்காமல் இருக்காது. அனுபவித்தவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். சுயம்புவாக, எந்த ஒரு அதிகார அமைப்பின் பின் புலமும் இல்லாமல், தன்னுடைய திறமையினாலும் மிக வலிமையான ரசிகர்களின் பலத்தாலும் எழுந்தது தான் நடிகர் திலகம் எனும் கோட்டை. இந்தக் கோட்டை காலங்களுக்கும் பருவங்களுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் அப்பாற்பட்டது. இதன் வலிமை யாராலும் இது வரை உணரப் படாதது.

selvakumar
8th January 2012, 02:49 PM
Sir, I don't want to deviate the main focus of this thread. I would like to clarify that I have *no problem* with those posts. I am not demanding for the posts to be removed or cut down. It will kill the essence of the posts from a fans' PoV. I do enjoy reading their posts from a fans' perspective. I said I just *ignore* them. I was not born in that era and when I was born MGR was the chief minister & he died even before I could recognize faces.

I enjoyed 'Avan oru sarithiram' post from Karthik.

mr_karthik
8th January 2012, 02:53 PM
நடிகர்திலகம் பெரும்பாலும் படங்களில் 'கூலிங் கிளாஸ்' அணிந்து நடிக்க மாட்டார். மிக மிக அபூர்வமாகவே அவரது படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறும். அவ்வாறு சன் கிளாஸ் அணிந்த காட்சிகள் என்றால் நினைவுக்கு வருபவை.

'செல்வம்' படத்தில் விமான நிலையக்காட்சி.

'புதிய பறவை'யில் ஊட்டிக்கு வந்ததும்

'தங்கச்சுரங்கம்' படத்தில் ரேஸ்கோர்ஸ் காட்சி

'சிவந்த மண்' படத்தில் ஒருராஜாராணியிடம் பாடல் (பனிமலைக்காட்சியில்)

'வைர நெஞ்ச'த்தில் கிளைமாக்ஸுக்கு சற்று முன்.

'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ரயிலிலிருந்து இறங்கி நம்பியார் வீடுவரை.

'சுமதி என் சுந்தரி'யில் அறிமுகக் காட்சி

'வசந்த மாளிகை'யில் நீச்சல் குளத்திலிருந்து வாணிஸ்ரீயை சந்திக்க வரும்போது.

'தீபம்' படத்தில் 'ராஜா யுவராஜா' பாடலில் பலவித சன் கிளாஸ்கள்

'ரோஜாவின் ராஜா' படத்தில் கிட்டத்தட்ட படம் முழுவதும்

'நான் வாழவைப்பேன்' படத்தில் திருத்தேரில் வரும் சிலையோ பாடலில் ஒன்றும், வாசுவை மிரட்ட வரும்போது வேறு ஒன்றும்.

'வாழ்க்கை' படத்தில் காலம் மாறலாம் பாடலின்போது.

வேறு பல படங்களிலும் இடம்பெற்றிருக்கலாம். விடுபட்டவற்றைச்சேர்க்கலாமே.

(ஊட்டிவரை உறவு, எங்கமாமா, ராஜா போன்ற பல படங்களில் சன் கிளாஸ் அணிய வாய்ப்பிருந்தும் ஏனோ தவிர்த்திருப்பார்)

mr_karthik
8th January 2012, 02:58 PM
Dear Selvakumar,

Thanks for your valuable response, and I am happy to know that you have enjoyed my posts.

As our Raghavendhar sir said, those points are un-avoidable and without them the past stories will not be shaped.

Again thanks for understanding the facts.

mr_karthik
8th January 2012, 03:09 PM
I always look out for posts from Saradha & Karthik :thumbsup: in this thread. Their description of the background, fan's reaction, the then political climate etc for a movie is a good read. Expecting more posts from them.


அன்புள்ள செல்வா சார்,

இந்த விஷயத்தில் எங்களைத்தூக்கி சாப்பிடக்கூடிய கில்லாடி கிருஷ்ணமூர்த்தி இங்கே இருக்கிறார். அவர்தான் நம் அருமை நண்பர் திரு. முரளி சீனிவாஸ் அவர்கள்.

வருட வாரியாக, தேதி வாரியாக, ஏன் நேரம் வாரியாக கடந்த கால சரித்திரங்களை விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

ajithfederer
8th January 2012, 08:22 PM
http://www.youtube.com/watch?v=LtOecVgG53k

Was watching this film in an obscure channel called Mega TV. I've liked this film and especially this song from my young age. Some pretty impressive acting by both NT Sir and Satyaraj. I mean the film is still old school revenge with brain(NT) and brawn(S raj) as Groucho would say but still very stylish for its times. And with Villains in Nambiar :), Malaysia Vasudevan, Captain raj and another guy a very enjoyable mid 80's flick.

Murali Srinivas
8th January 2012, 11:48 PM
வருக வருக வாசுதேவன் அவர்களே!

எந்த புயலாலும் தடுக்கப்பட முடியாத உங்கள் பயணம் தொடரட்டும். அவை நமது திரிக்கு வலிமை சேர்க்கட்டும்.

அன்புடன்

RAGHAVENDRA
9th January 2012, 06:24 AM
அவன் ஒரு சரித்திரம் விளம்பர நிழற் படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOSprereleasead01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOSreserveAd01fw-1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOSreleasead02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOS50thdayAdfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOS10thweekAdfw.jpg

vasudevan31355
9th January 2012, 07:17 AM
அவன் ஒரு சரித்திரம்(14-1-1977)

http://im.in.com/connect/images/profile/b_profile1/Avan_Oru_Sarithiram_300.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-33.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-26.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-35.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-20.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-20.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-27.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-36.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
9th January 2012, 11:47 AM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

அவன் ஒரு சரித்திரம் பட விளம்பர ஆவணங்கள் அனைத்தும் சூப்பர். பாதுகாத்து, பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

அன்புள்ள வாசுதேவன் சார்,

அவன் ஒரு சரித்திரம் பட ஸ்டில்கள் நன்றாக அருமையாக உள்ளன. பதிப்பித்ததற்கு மிக்க நன்றி..

pammalar
9th January 2012, 06:22 PM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் !

"அவன் ஒரு சரித்திரம்" குறித்த தங்களின் இனிய நினைவுகளை உள்ளடக்கிய மூன்று பதிவுகளும் முக்கனிகளுக்கும் மேலாக இனித்தது என்றால் அது மிகையன்று. "அவன் ஒரு சரித்திரம்" மூலம் பதிவுகளில் ஒரு சரித்திரம் படைத்துவிட்டீர்கள் ! அடேயப்பா, எத்தனை அரிய வரலாற்றுத் தகவல்கள் !

'அபிராமி' அரங்கில் வெளியான முதல் கலைக்குரிசிலின் காவியம், "ஜெனரல் சக்கரவர்த்தி". "அவன் ஒரு சரித்திரம்" திரைக்காவியத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல்போனது வருத்தமளிக்கிறது. தங்களின் வருணனை அருமை, சாம்பிளுக்கு ஒன்று: கியூ வளைந்து நெளிந்து 'அனுமார் வால்' போல் நீண்டிருந்தது. தங்கள் பதிவுகள் வாயிலாக எங்கள் அனைவரையும் நிஜமாகவே, "அவன் ஒரு சரித்திரம்" திரைக்காவியத்தை அப்படியே அதன் ஆரவாரங்களோடு, அக்காவியம் வெளியான தினத்தை மீண்டும் மீண்டெடுத்துவந்து காணவைத்த பெரும்பெருமை தங்களுக்கே !

மொத்தத்தில், தங்களின் கைவண்ணத்தில் நமது ஹப்பில் பளிச்சிட்டுள்ள ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில், இம்மூன்றும் தங்களது சிகரப்பதிவுகள் என்பது எனது அன்பான அபிப்ராயம் !

[தாங்கள் அளிக்கும் தகவல்கள்-புள்ளிவிவரங்கள் எனது தொடர்தேடல்களுக்கும் சிறந்த தீனிக்கு வழிவகைசெய்கின்றன].

பிரமிப்புடன்,
பம்மலார்.

pammalar
9th January 2012, 06:35 PM
டியர் பம்மலார், தங்களின் மோகனப்புன்னகை விளம்பரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல், தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம் அருமை. திரைப்பட வெளியீடுகள் தேதியில் மட்டுமல்ல, எந்த சமுதாய, சமூக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களானாலும் அதனை நினைவுகூறும் வகையில் சிறப்பான ஆவணங்களைப் பதிவிடும் தங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரியதாகும். மிக்க நன்றி.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் கனிவான பாராட்டுக்கு எனது இனிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th January 2012, 07:10 PM
டியர் வாசுதேவன் சார்,

"மன்னவன் வந்தானடி...இத்திரியின் மன்னவன் வந்தானடி"

என அகமகிழ்ந்து தங்களை 'வருக ! வருக !' என மிகுந்த அன்புடன் வரவேற்கிறேன்.

இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அள்ளி அளித்திருக்கும் ஒவ்வொரு பாராட்டுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள் !

ஆகஸ்ட் 2011 முதல் நமது திரியின் வரலாற்று அறிக்கை என்னவென்றால்,

நெய்வேலியில் இருந்து 'வாசு' என்கின்ற பெரும்புயல் இத்திரியைத் தாக்கியது !

அதன் பயனாக இங்கே என்னென்ன வினோதங்கள்... ஒன்றா, இரண்டா, எடுத்துச் சொல்ல !

டிசம்பர் இறுதியில் 'வாசு' புயலோடு போர் புரிய 'தானே' வர, முதலில் சற்றே ஜகா வாங்கிய 'வாசு', பின்னர் 'தானே'வைத் தவிடுபொடியாக்கிவிட்டு மீண்டும் திரிக்குள் அதகள தாக்குதல்களை அளிக்க வீறுகொண்டு வந்துவிட்டது. 'வாசு' புயலின் தாக்குதல்கள் அனைத்துமே இன்பத்தாக்குதல்கள் ஆயிற்றே ! அது வாரிவழங்கும் இன்பங்கள் இங்கே கொஞ்சமா நஞ்சமா ! அந்த இன்பத்தாக்குதல்களால் நாங்கள் கட்டுண்டு கிடக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை !

தொடரட்டும் 'வாசு'வின் திருப்பணியாகிய திரிப்பணி !

பாசத்துடன்,
பம்மலார் என்கிற 'ஜீ பூம் பா' [உபயம் : mr_karthik]

RAGHAVENDRA
9th January 2012, 07:13 PM
10.01.2012 அன்று 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜூபிடரின் தங்க பதுமை திரைக்காவியத்திலிருந்து சிறந்த பாடல்களில் ஒன்று

முகத்தில் முகம் பார்க்கலாம்


http://www.dailymotion.com/video/xj3dvt_mugathil-mugam-paarkalaam_auto#rel-page-2

RAGHAVENDRA
9th January 2012, 07:23 PM
ஆஹா... பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்... அந்தப் புன்னகையைக் காணுங்கள்...


http://youtu.be/Ll-yDdgCHm0

இந்தப் புன்னகைக்காகவே இந்தப் படம் மறு வெளியீட்டில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக நடை போட்டதோ...

pammalar
9th January 2012, 07:44 PM
டியர் வாசுதேவன் சார்,

Professor Krishnan நிழற்படத்தோடு வந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துப்பதிவென்ன,

கலையுலக மகானின் தெய்வீகத் திருமுகத்தை தாங்கிவந்த 'பொம்மை' இதழின் அட்டைப்படம் என்ன,

இளைய திலகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து நல்கும்விதமாக இடுகை செய்யப்பட்ட அருமையான நிழற்படங்களென்ன,

அவரது அம்சமான 'ஜெமினி சினிமா' பேட்டியென்ன,

தங்களின் அன்பான "அன்பளிப்பு"தான் என்ன,

"அவன் ஒரு சரித்திரம்" ஆல்பம் என்ன,

என்னத்த சொல்ல, என்னத்த செய்ய,

ஒரே அசத்தல்தான் போங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th January 2012, 08:40 PM
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS

தங்கப்பதுமை

[10.1.1959 - 10.1.2012] : 54வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்றல் [பொங்கல் மலர்] : 1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5472-1.jpg

குறிப்பு:
"தங்கப்பதுமை", சிங்காரச் சென்னையில் 'பாரகன்', 'கிரௌன்', சயானி' முதலிய மூன்று அரங்குகளில் வெளியாகி ஒவ்வொன்றிலும் 56 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. மதுரை 'ஸ்ரீலக்ஷ்மி' திரையரங்கில் 94 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது [1960களின் மத்தியில் 'ஸ்ரீலக்ஷ்மி', 'அலங்கார்' எனப் பெயர் மாறியது]. மேலும் கணிசமான அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், சேலம் 'ஓரியண்டல்' அரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டு, 100 நாள் பெருவெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th January 2012, 09:13 PM
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS

தங்கப்பதுமை

[10.1.1959 - 10.1.2012] : 54வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 18.1.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/TPAVReview1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/TPAVReview2-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
10th January 2012, 07:55 AM
தங்கத்தமிழனின் 'தங்கப்பதுமை' 54-வது வருட ஆரம்ப தின சிறப்பு மேளா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-28.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-21.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-35.jpg

அழகுப்பெட்டகமாய் அருமைத்தலைவர்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-37.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 08:05 AM
சிங்கத்தமிழனின் 'தங்கப்பதுமை' மிக அரிய நிழற்படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-40.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-37.jpg

தங்கப்பதுமை போஸ்டர் கட்டிங் (வண்ணத்தில்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-39.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 08:52 AM
'தங்கப்பதுமை' சிறப்பு நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-29.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 09:00 AM
'தங்கப்பதுமை' தெலுங்கு டப்பிங் (Kanayakaparameshari) மிக மிக அரிய நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-36.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 09:17 AM
'தங்கப்பதுமை' பாடல்கள் ஒலி-ஒளிக் காட்சிகளுடன்

"ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F2cIi1Q1CPg

"எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WkKlhCfCkQw

"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (மகிழ்ச்சி)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NygaBtPuWqM

"வருகிறாள் உன்னைத்தேடி" (ஒலி வடிவில் மட்டும்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cSxJtIL9iNg


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
10th January 2012, 10:37 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் அடுத்தடுத்த பதிவுகளாக வந்துள்ள 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே' மற்றும் 'பனி படர்ந்த மலையின் மேலே' பாடல் ஆய்வுகள் மிகமிகப் பிரமாதம்.

"தூக்கு தூக்கி(1954)" பாடலுக்கு இசை நமது திரை இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன். நமது நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் மிளிர்ந்த அசல் பக்திப்பாடலாகவே அன்றும், இன்றும் இப்பாடல் பார்க்கப்படுகிறது. பின்னணிப் பாட்டுக்குரலாக டி.எம்.எஸ், பார் போற்றுகின்ற அளவு பரிமளிப்பத்ற்கு, அவருக்கு ஒரு Baseஐ அமைத்துக் கொடுத்த காவியம். "தூக்கு தூக்கி". சௌந்தரராஜனை, வெள்ளித்திரை இசையின் வெண்குலக்குரலோனாக, Soundக்கே ராஜனாக ஒரு 'தூக்கு தூக்கி' விட்டது "தூக்கு தூக்கி". பத்மினி-ராகினிக்கு லீலா-கோமளா பின்னணி பாட, அவர்கள் பாடும்பாங்கிலேயே நடிகர் திலகத்துக்கு பாடகர் திலகம் பாட்டுக்குரல் கொடுக்க, ஆஹா...ஆஹா...அமைந்தால் ஒரு பாடல் இப்படி அமைய வேண்டும். கவிஞர் மருதகாசியின் பக்திமணம் கமழும் வரிகளுக்கு மயிலிறகு மெட்டை வார்த்தெடுத்திருப்பார் ராகதேவன் ராமநாதன். மறைந்த எனது அன்னையாரின் திருப்பெயர் 'சுந்தரி' என்பதால், அவ்வப்பொழுது அவரிடம் என்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்ள, இந்தப் பாடலை அவர்முன் சென்று அடியேன் பாடுவது வழக்கம். காரியமும் கைகூடிவிடும். அவர் மறைவுக்குபின்னும் அவரது புகைப்படத்தருகே நின்று அவ்வப்பொழுது இப்பாடலை இன்றும் அவர்முன்னே பாடிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுதும் காரியம் சித்தியாகிவிடுகிறது. அன்னை இல்லத்து நாயகரின் அன்புள்ளங்களாகிய நமக்கு, தாய்மேல் கொண்டுள்ள பக்தி என்பது, அவரைப்போலவே, உதிரத்துடன் கலந்த உணர்வு ஊற்றாயிற்றே ! 'சுந்தரி சௌந்தரி' பாடல் ஆய்வுக்காகவே தங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். புயலெனப் புகுந்து இப்பாடலின் வீடியோவை வழங்கிய வீடியோ வித்தகர் வாசு அவர்களுக்கு நமது நன்றி !

திரை இசைத் திலகத்தின் தீர்க்கமான இசையில் வெளிவந்த "இரத்தத்திலகம்(1963)" காவியப்பாடலான 'பனிபடர்ந்த மலையின்மேலே' பாடலில் நமது நடிகர் திலகத்தின் performance, காண்பவரது ஐம்புலன்களையும் ஆக்கிரமித்துவிடும். பின்னணியில் பாடகர் திலகமும் நம்மை ஒரு குலுக்குகுலுக்கிவிடுவார். திராவிட வனவாசம் முடிந்து வந்த கவியரசர், தன் மனவாசத்தில் தேசியத்தை நிலைநிறுத்திக் கொண்டபின் எழுதிய அர்த்தபுஷ்டியுடன் கூடிய வைரவரிகள், நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த நடிப்பில் மிளிரும்போது, தேசபக்தி என்பது நமக்கு வெள்ளித்திரைமூலமாகவே ஊட்டப்ப்ட்டுவிடுகிறது. அதனை நமக்கு ஊட்டிய தேசிய திலகத்தின் புகழ் என்றென்றும் வாழ்க !

நமது நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் உருவான பாடல்கள், தங்களின் மிகச் சிறந்த வித்தியாசமான எழுத்துநடையில் பதிவுகளாக உருப்பெறும்போது அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாக வடிவம் பெற்றுவிடுகின்றன.

தொடர்ந்து புளகாங்கிதத்துடன் தொடரட்டும் தங்களின் திலகப் பாட்டுப்பயணம்...!

[தங்களது கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கும் "மோகனப்புன்னகை" விளம்பரத்தை கண்டு களித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் !]

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
10th January 2012, 12:13 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு நன்றி.

'தங்கப்பதுமை' பட விளம்பர ஆவணமும், படம் ஓடிய விவரங்களும், அப்படத்துக்கு ஆனந்த விகடன் விளம்பரமும் பதிப்பித்து களைகட்டச்செய்து விட்டீர்கள். மிக்க நன்றி.

பொங்கல் தினம் நெருங்கும் வேளையில், இப்போதே தங்களின் பொங்கல் துவங்கிவிட்டது அறிந்து மகிழ்ச்சி.

அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்கப்பதுமை பட நிழற்படங்களும், பாடல்களின் வீடியோ காட்சிகளும் மிக அருமை. சிரத்தை எடுத்து பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

vasudevan31355
10th January 2012, 06:46 PM
பாசமலர் பம்மலார் சார்,

தங்கள் அன்பும், பாசமும், உச்சப்பாராட்டுகளும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்த அளவுக்குப் பாராட்டிவிட நிச்சயம் நான் ஒன்றும் செய்து விட வில்லை. தங்களுடைய உயரிய பண்பான அன்புப் பாராட்டுதல்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் கோடி. பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் மனம் மகிழ்ந்த நன்றிகள்.

'தங்கப்பதுமை' தென்றல் முதல் வெளியீட்டு விளம்பரம் அபாரப் பதிவு. (இந்த மாதிரி அரிய இதழ்களை சேகரிக்க எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது).

ஆனந்தவிகடனின் 'தங்கப்பதுமை' விமர்சனம் அரிய பதிவு. வெகு நாட்களுக்குப் பிறகு பலபேரை இப்போது படித்து சுவைக்கச் செய்தததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள். அது தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

தங்கப் பதுமை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட வெற்றிகளை அழகான குறிப்புகளாய் அளித்து அசத்தியதற்கு அருமை நன்றிகள்.

அன்பு பார்த்தசாரதி சாருக்கு தாங்கள் எழுதியுள்ள பதிவில் தங்கள் தாயாரைப் பற்றிக் குறிப்பிட்டு கூறியிருந்தது கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த சுந்தரித்தாய் எங்களுக்கும் அன்புத் தாய்தானே! அவர்கள் இப்படி ஒரு முத்தைப் பெற்றெடுத்து எங்களுக்குக் கொடுத்ததற்காக காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் அல்லவா! அவர் ஈன்றெடுத்த அந்த நன்முத்து மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கிக் கொண்டு, நடிகர் திலகத்தின் புகழ் வெளிச்சத்தை உலகுக்கெல்லாம் பரவச் செய்து கொண்டிருப்பதையே தன் தலையாய கடமையாய் நினைத்து, அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறதே ! அப்படிப்பட்ட அந்த முத்தான முத்தை உலகுக்களித்த அந்த தியாகத் தாய்க்கு என்றும் எங்கள் அன்பு அஞ்சலியை செலுத்திக் கொண்டே இருப்போம். த(எ)ங்கள் தாயின் நினைவாக இதோ ஓர் அற்புதப் பாடல் நம் தெய்வமகனின் வாயிலாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ufj9Lr0D6pA

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 07:01 PM
டியர் ராகவேந்திரன் சார்,

முகத்தில் முகம் பார்க்கலாம். ஆம். நம் தலைவரின் முகத்தில் நம் முகத்தைக் காணலாம். அந்த அளவுக்கு வெண்பளிங்கு போன்ற முகம் அது. பார் போற்றும் பாடலைத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.

இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே! ஏனென்றால் தங்கப்பதுமையின் 54-ஆவது பிறந்தநாள் தொடக்கமல்லவா! எல்லோர் மனதிலும் புது வெள்ளத்தை இந்தப்பாடலின் மூலம் பொங்க வைத்த தங்களுக்கு தங்கப் பாராட்டுக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 07:04 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்கப்பதுமை பதிவுகளுக்காக தங்க மனம் கொண்ட தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 07:37 PM
சமீபத்தில் பேரழிவை உண்டாக்கிய 'தானே' புயலின் தாண்டவத்தால் உருக்குலைந்து போன நெய்வேலி நகரம். சில சாம்பிள்ஸ்.

சாய்ந்து கிடக்கும் சவுக்குத் தோப்பு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0242.jpg

அடியோடு சாய்ந்து கிடக்கும் யூகிலிப்டஸ் மரங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0245.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0248.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0250.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0251.jpg

விழுந்து கிடக்கும் மின்கம்பம் (சிமெண்ட் போஸ்ட்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0252.jpg

எங்கள் வீட்டில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மாமரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0253.jpg

வீடுகளில் ஒடிந்து விழுந்து கிடக்கும் மரக்கிளைகள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0256.jpg

மொட்டைத் தென்னை மரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0257.jpg

தென்னை மட்டைகள் பிய்ந்து மரங்களின் கிளைகளில் தொற்றிக் கொண்டுள்ள காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0260.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th January 2012, 08:02 PM
நெய்வேலியில் பேயாட்டம் ஆடிய தானே புயல் வீடியோஸ்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wXPzRJ3nMTk


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rbgHSG8qvoI


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=w-L5SSyYNHQ


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_-2tlHRRKjA


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cNxgoNJTdu4


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SFzjk8cwB7E

துயரத்துடன் ,
வாசுதேவன்.

J.Radhakrishnan
10th January 2012, 09:46 PM
டியர் வாசுதேவன் சார்,

தானே புயலின் கோர தாண்டவத்தை தாங்கள் புகைப்படமாகவும் விடியோவாகவும் வெளியிட்டதை பார்க்கும் போது நெஞ்சம் கனத்தது, அப்பகுதி மக்கள் விரைவில் மீண்டு வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

pammalar
10th January 2012, 10:50 PM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் பதிவிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும், நெய்வேலியில் 'தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பை கண்முன்னே நிறுத்தி கண்களில் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்துவிட்டது. தங்கள்பகுதிவாழ் குடிமக்கள் எல்லாத் துயரங்களிலிருந்தும் சீக்கிரமே மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனையும், நமது இதயதெய்வத்தையும் மனமார வேண்டுகிறேன். எல்லோருக்காகவும் அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.

கனத்த இதயத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
10th January 2012, 11:32 PM
பாசமலர் பம்மலார் சார்,

தங்கள் அன்பும், பாசமும், உச்சப்பாராட்டுகளும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்த அளவுக்குப் பாராட்டிவிட நிச்சயம் நான் ஒன்றும் செய்து விட வில்லை. தங்களுடைய உயரிய பண்பான அன்புப் பாராட்டுதல்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் கோடி. பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் மனம் மகிழ்ந்த நன்றிகள்.

'தங்கப்பதுமை' தென்றல் முதல் வெளியீட்டு விளம்பரம் அபாரப் பதிவு. (இந்த மாதிரி அரிய இதழ்களை சேகரிக்க எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது).

ஆனந்தவிகடனின் 'தங்கப்பதுமை' விமர்சனம் அரிய பதிவு. வெகு நாட்களுக்குப் பிறகு பலபேரை இப்போது படித்து சுவைக்கச் செய்தததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள். அது தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

தங்கப் பதுமை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட வெற்றிகளை அழகான குறிப்புகளாய் அளித்து அசத்தியதற்கு அருமை நன்றிகள்.

அன்பு பார்த்தசாரதி சாருக்கு தாங்கள் எழுதியுள்ள பதிவில் தங்கள் தாயாரைப் பற்றிக் குறிப்பிட்டு கூறியிருந்தது கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த சுந்தரித்தாய் எங்களுக்கும் அன்புத் தாய்தானே! அவர்கள் இப்படி ஒரு முத்தைப் பெற்றெடுத்து எங்களுக்குக் கொடுத்ததற்காக காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் அல்லவா! அவர் ஈன்றெடுத்த அந்த நன்முத்து மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கிக் கொண்டு, நடிகர் திலகத்தின் புகழ் வெளிச்சத்தை உலகுக்கெல்லாம் பரவச் செய்து கொண்டிருப்பதையே தன் தலையாய கடமையாய் நினைத்து, அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறதே ! அப்படிப்பட்ட அந்த முத்தான முத்தை உலகுக்களித்த அந்த தியாகத் தாய்க்கு என்றும் எங்கள் அன்பு அஞ்சலியை செலுத்திக் கொண்டே இருப்போம். த(எ)ங்கள் தாயின் நினைவாக இதோ ஓர் அற்புதப் பாடல் நம் தெய்வமகனின் வாயிலாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ufj9Lr0D6pA

அன்புடன்,
வாசுதேவன்.

டியர் வாசுதேவன் சார்,

தங்கள் பதிவின் மூலமும், பாடலின் வீடியோ மூலமும் என்னை உணர்ச்சிப்பிழம்பாக்கிவிட்டீர்கள். இதற்கு மேல் எழுதுவதற்கு எனக்கு வார்த்தைகள் வரவில்லை. தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !

உணர்ச்சிப்பெருக்கில்,
சுவாமிநாதன்.

Murali Srinivas
11th January 2012, 12:06 AM
வாசு சார்,

இன்று நீங்கள் இடுகை செய்துள்ள பதிவுகள் அனைவர் மனங்களையும் சற்று நேரமேனும் கலங்க செய்யும். புயலின் கோர தாண்டவம் பற்றிய படங்களும் வீடியோ பதிவுகளும் புயல் உண்மையில் எப்படி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது என்பதை நிதர்சனமாக காட்டுகிறது. விரைவில் அங்கே இயல்பு நிலை திரும்ப வேண்டுகிறேன்.

அன்புடன்

அதே போல் அன்னையை போல் ஒரு தெய்வமில்லை பாடலை வீடியோ வடிவில் வெளியிட்டு சுவாமியின் மனதிற்குள் ஒரு உணர்ச்சி பிரவாகத்தையே உருவாக்கி விட்டீர்கள்.

Murali Srinivas
11th January 2012, 12:07 AM
சாரதி,

உங்கள் பாடல் ஆய்வு கட்டுரைகளைப் பற்றி அனைவரும் பாராட்டி விட்டனர் என்று சொல்லும் போதே அதன் சிறப்பு என்னவென்று புரியும். ஆனால் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் சில பல மாதங்களுக்கு முன் இந்த திரியில் எழுத ஆரம்பித்த நேரத்தில் இருந்ததை விட உங்கள் எழுத்தில் நடையில் மெருகேறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த இரண்டு பாடல் ஆய்வுகளிலும் அது சிறப்பாக வெளிப்படுவதை காண முடிகிறது. பனி படர்ந்த மலையின் மேலே பாடலைப் பற்றிய உங்கள் விவரிப்பு அழகாய் அமைந்திருக்கிறது. நான் பல முறை இங்கே குறிப்பிட்டதுள்ளது போல தேசியத்தை தேசிய தலைவர்களை தமிழின் கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம் என்ற கருத்துக்கு உரம் சேர்க்கும் வலு இந்த பாடலுக்கு உண்டு.

அடுத்த பாடலின் விவரிப்பை [அது என்ன பாடல் என்பதை நீங்கள் எனக்கு சொல்லி விட்டீர்கள் என்ற போதினும்] ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்/பார்க்கிறோம்.

அன்புடன்

vasudevan31355
11th January 2012, 12:59 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

தங்கள் அன்பிற்கும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உங்கள் உயரிய பிரார்த்தனைக்கும் என்னுடைய ஆழ்ந்த நன்றிகள். தங்களும்,தங்கள் குடும்பமும் நீடூழி வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
வாசுதேவன்

vasudevan31355
11th January 2012, 01:06 AM
அன்பு முரளி சார்,

உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களின் ஆசிகளினால் பெரும்பாலும் இயல்புநிலை திரும்பி விட்டது. தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் என் சார்பாகவும், நெய்வேலி மக்கள் சார்பாகவும் நன்றி கூறக் கடமைப்பட்டவனாகிறேன். நன்றிகள் சார்.

அன்புடன்
வாசுதேவன்

RAGHAVENDRA
11th January 2012, 06:37 AM
தானே சுழன்றடித்து, தானே மக்களைத் துயரில் ஆழ்த்தி, தானே கழன்று கொண்ட தானே புயலின் பாதிப்பில் இருந்து மற்றவர்களை எதிர்பார்க்காமல், தானே மீள முயன்று கொண்டிருக்கும் மக்களுக்கு, குறிப்பாக, கடலூர் புதுவை மக்களுக்கு நமது அனைத்து நண்பர்கள் சார்பிலும் நமது ஆறுதலையும் அன்பையும் அவர்கள் எல்லா வளமும் மீண்டும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்வோம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் நம் அனைவரது சார்பிலும் உளமார்ந்த பிரார்த்தனைகள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
11th January 2012, 06:41 AM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Leaders/002.jpg

இன்று மறைந்த பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மறைந்த நாள். மறைமுக சதியால் இன்னுயிர் ஈந்த நாள். ஒழுக்க சீலராக நேர்மையின் திருவுருவாக வாழ்ந்த உத்தமரின் நினைவு நாள். அவருக்கு நமது நினைவாஞ்சலி

vasudevan31355
11th January 2012, 08:16 AM
மனிதப் புனிதர் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நினைவு நாள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-41.jpg

http://3.bp.blogspot.com/_pCG_c3Rq788/TG2ULmDpXHI/AAAAAAAAIhQ/35g5849tFyI/s1600/Lal+Bahadur+Shastri+1964+(1).jpg

அன்புடன்
வாசுதேவன்

vasudevan31355
11th January 2012, 09:13 AM
'சாதனை' (10-1-1986)

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/12752_17_Saadhanai.jpg

http://cdndb.600024.com/images/profile/movie/1986/saathanai.jpg

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT1jDnFiBHNI5BQSLbruMhYaJ_s4XOc_ 58aT3pX_D4-lzvP43Ekqg8JHH_A

'சாதனை' பாடல்கள் வீடியோ

ஒ...வானம்பாடி...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6ySit-EywGk

இங்கே நான் கண்டேன் கதை நாயகி...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FWrAdYuB--U

அன்பே... அன்பே...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=R5y1amCi5CU

அன்புடன்
வாசுதேவன்

parthasarathy
11th January 2012, 09:59 AM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

"தானே" புயல் ஏற்படுத்திய பாதிப்புகளைப் புகைப்படங்களாகவும் மேலும், அந்த அசுர கணங்களை வீடியோ வடிவிலும் தந்து, இயற்கையின் சீற்றம் என்ன என்பதையும், அது ஏற்படுத்திய விளைவுகளையும் புரிய வைத்துள்ளீர்கள். கடந்த வாரம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பாக புதுவை மற்றும் கடலூர் சென்று புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நிவாரணங்களை வழங்கும் பேறினை எங்கள் நிறுவனம் மூலம் பெற்றேன். புகைப்படம் மூலம் தாங்கள் அனுப்பிய கோரத் தாண்டவத்தை நேரிலும் பார்த்து சொல்லொணா துயரடைந்தோம்.

குறிப்பாக, மாலை ஆறு மணிக்கு மேல், பல இடங்கள் இருளில் மூழ்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க மனது பிசைந்து கொண்டே இருந்தது.

மக்களும் அத்தனை இடங்களும் மீண்டும் சகஜ நிலைக்கு விரைவில் திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். பெரும்பாலான இடங்கள் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தியைத் தாங்கள் தந்தது மகிழ்ச்சி தருகிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
11th January 2012, 10:21 AM
'சாதனை' ஸ்டில்ஸ்

http://www.dhool.com/gifs/9493.jpg

http://www.dhool.com/gifs/9495.jpg

http://www.dhool.com/gifs/9496.jpg

'சாதனை' கூட்டணி

சாதனைத் திலகம், ஏ.எஸ்.பிரகாசம், இளையராஜா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-30.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-31.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
11th January 2012, 10:38 AM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'தானே' புயல் தங்கள் பகுதிகளில் ஏற்படுத்திய பாதிப்புக்களின் நிழற்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் நெஞ்சத்தை கலங்கடித்தன. எவ்வளவு கோரத்தாண்டவம். இதிலிருந்து மக்க்ள் மீண்டு வந்து இயல்பு நிலைக்குத்திரும்ப பிரார்த்திக்கிறோம். சற்று நேர கோரப்புயலால் பல ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்த கொடுமை இனியொருமுறை நிகழாவண்ணம் அனைவரையும் இறைவன் காப்பாற்றட்டும். பலநூறூ ஏக்கர் நிலங்களில் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட முந்திரி மரங்கள், இன்றைக்கு மீண்டும் பயிரிடப்பட்டாலும் பலன் தர குறைந்தது பத்தாண்டுகள் ஆகும் என்ற உண்மைநிலையறியும்போது, அதனால் பாதிப்படைந்த மக்களின் வாழ்வாதாரம் திடுக்கிட வைக்கிறது. அரசுகள் தாயாக இருந்து அவர்களைக் கரைசேர்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தங்கள் பதிவுகளுக்கு நன்றி..

vasudevan31355
11th January 2012, 10:47 AM
சாதனை' ஆடியோ சி.டி.முகப்பு

http://122.165.48.129/webimages/AGI%20-%20565.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
11th January 2012, 11:27 AM
'சாதனை' இளைய திலகம் சிறப்பு புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-42.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
11th January 2012, 01:41 PM
டியர் வாசுதேவன் சார்,
சாதனைத் திலகத்தின் சாதனைக் காவியத்தின் விவரங்களை அட்டகாசமாக அளித்துள்ளீர்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
11th January 2012, 01:43 PM
நமது NTFAnS அமைப்பின் துவக்கத்திற்கான ஏற்பாடுகள் முடிவடையும் கட்டத்தினை நெருங்கி விட்டன.

விவரங்கள் அடுத்த பதிவில்

KCSHEKAR
11th January 2012, 05:30 PM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் பதிவிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும், நெய்வேலியில் 'தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பை கண்முன்னே நிறுத்தி கண்களில் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்துவிட்டது. தங்கள்பகுதிவாழ் குடிமக்கள் எல்லாத் துயரங்களிலிருந்தும் சீக்கிரமே மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனையும், நமது இதயதெய்வத்தையும் மனமார வேண்டுகிறேன். எல்லோருக்காகவும் அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.



அன்புடன்,

parthasarathy
11th January 2012, 05:46 PM
அன்புள்ள திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கார்த்திக், திரு. வாசுதேவன் மற்றும் திரு. சந்திர சேகர் அவர்களுக்கு,

நான் பதிவிட்ட கா... கா... கா, சுந்தரி சௌந்தரி மற்றும் பனி படர்ந்த மலையின் மேலே பாடல் ஆய்வுக்கட்டுரைகளைப் பாராட்டிய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு. முரளி அவர்கள் என்னுடைய அண்மைப் பதிவுகள் மேலும் மெருகேறி இருப்பதாகக் கூறியிருந்தார். மிக்க நன்றிகள். என்னுடைய முந்தைய பதிவுகளில் பாடல்களில் தென்பட்ட அனைத்து அம்சங்களையும் அலசியிருந்தேன். அதனால், நடிகர் திலகத்தின் நடிப்பை முழுமையாகத் தொட முடியவில்லை. ஆனால், இந்தக் கட்டுரைகளும் இனி வரும் கட்டுரைகளும், அவரது அற்புத நடிப்பை மட்டுமே பெரிய அளவில் அலசும். அதனால், அவை சுவையாகத் தான் இருக்கும். தவிர்க்க முடியாது. மகிழ்ச்சியுடன் தொடருவேன்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

Murali Srinivas
11th January 2012, 10:06 PM
NOV had written about Enga Mama in another thread. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பிறந்த நாள் காணப் போகும் "கோடிஸ்வரனைப்" பற்றி அவர் எழுதியதை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இதோ

Enga Mama

A perfect movie for the novice to be introduced to the fine acting of Sivaji Ganesan.
Color movie, light story without much drama, no sob-sob, NT comes in several get-ups , many amusing moments (the nightclub scene where he coaches Jayalalitha on the etiquette for fine dining and to top it all, lovely songs and a very beautiful VA Nirmala. NT looks dashing in several scenes and you have style, dancing, singing and merry-making.

The icing on the cake is the super combo of a song by Kannadhasan with music by MSV, sung by TMS and acted by Sivaji Ganesan. piravi payan adainthaachu...

Regards

vasudevan31355
11th January 2012, 11:19 PM
அன்பு பம்மலார் சார்,

கனத்த இதயத்துடன் புயல் பாதிப்புகளைப் பற்றி கேட்டு, கண்டு தாங்கள் எங்கள் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்தது என்றும் எங்கள் மனதில் பசுமையாகக் குடிகொண்டிருக்கும். அதுமட்டுமல்லாது புயல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று இரவு வரை தினமும் கைபேசியின் வழியாக புயல் பாதிப்புகள் பற்றிய நிலையை சொந்த சகோதரரை விடவும் மேலான அக்கறையுடன் கேட்டறிந்து, மனதுக்கு இதமான வார்த்தைகளால் ஆறுதல் அளித்து, எங்கள் மனச்சுமையை குறைத்து உற்ற உறுதுணையாய் நீங்கள் இருந்ததை எண்ணும்போது மனம் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறது. உங்கள் அனைவரது பிரார்த்தனைகளாலும், அளவு கடந்த அன்பினாலும் எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்திருக்கின்றன. அதற்காக தங்களுக்கும், நமது திரியின் அன்பு சகோதர, சகோதரிகளுக்கும் என் நெஞ்சத்தின் ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th January 2012, 12:07 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் உயர்ந்த அன்பிற்கு நன்றி.

டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு தன் இதயம் மகிழ்ந்த நன்றிகள். NTFAnS அமைப்பின் துவக்கத்திற்கான ஏற்பாடுகள் முடிவடையும் கட்டத்தினை நெருங்கி விட்டதை நினைக்கும்போதே ஆஹ்ஹா...மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. இதற்காக இரவு பகல் பாராது பணி புரிந்த தங்களுக்கும், அன்பு முரளி சாருக்கும் மற்றும் திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள், திரு.மோகன்ராம் அவர்கள், 'கவிதாலயா' கிருஷ்ணன் அவர்கள் மற்றும் இந்த அமைப்பு உருவாக முயற்சிகள் மேற்கொண்ட அனைவருக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இது பற்றிய ஏனைய விவரங்களுக்காக தங்கள் அடுத்த பதிவைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th January 2012, 12:07 AM
அன்பு கார்த்திக் சார்,

'தானே' புயலின் பாதிப்புகளை அருமையாகக் கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறியது போல முந்திரிக்கு பெயர் போன பண்ருட்டியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் முந்திரித்தோப்பு என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு அழிவுகள். வாழை மரங்கள், குறிப்பாக பலா மரங்கள், ஏராளமான பஞ்சு மரங்கள், மாமரங்கள் அனைத்தும் காலி. இயற்கையின் கோரத் தாண்டவத்தால் கடலூர் மாவட்டமே பொலிவிழந்து விட்டது. ஏற்கனவே சராசரிக்கும் கீழே இருந்த மாவட்டம் இப்போது அதல பாதாளத்தில் தள்ளப் பட்டுவிட்டது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு தொழிலாளிகள், உயர் அதிகாரிகள், மற்றும் தன்னார்வ அமைப்புகள், சேவா சங்கங்கள், பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்று கூடி மீட்புப் பணிகளை செய்யும் போது உலகில் இன்னும் மனிதாபிமானம் அழிந்து விடவில்லை எனும் உணர்வு தோன்றுகிறது. வெளியிலிருந்து வந்து பணிகளை கவனிக்கும் தொழிலாளிகளுக்காக திருமண மண்டபங்களில் இரவு பகலாக உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளியூர்களிலிருந்து மீட்புப் பணி புரிய வந்திருக்கும் தொழிலாளிகள் மண்டபங்களிலோ, அல்லது சொந்தக்காரர்களின் வீடுகளிலோ, நண்பர்களின் இல்லங்களிலோ தங்கி சேவை செய்கின்றனர். இரவில் கூட பணிகள் இடைவிடாது நடக்கின்றன. முக்கியமாக மின்சார சீரமைப்புப் பணிதான் உயிரை எடுக்கிறது. அனைத்து மின் கம்பங்களும் சாய்ந்து விட்டதனால் தேனி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து மின்கம்பங்கள் (சிமெண்ட் போஸ்ட்) வந்து இறங்கியபடியே இருக்கின்றன. மின்துறை அதிகாரிகள் கொளுத்தும் வெயிலில் ஒப்பந்த மற்றும் மின்வாரிய தொழிலாளிகளை வைத்து மின்கம்பங்களை மாற்றி மின் இணைப்பு கொடுப்பதைக் காணும் போது இதயம் கனக்கிறது. எங்கெல்லாம் சிறு ஓட்டல்கள் இருக்கிறதோ அங்கே கிடைக்கும் உணவுப் பொட்டலங்களை அனைவரும் பாகுபாடின்றி பகிர்ந்து உண்ணுகின்றனர். மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. மிகவும் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்காக சிறப்பாக அரசாங்கம் ஏதாவது செய்தால் தேவலை. அரசாங்கத்தின் உதவி போதவில்லை என்று அனைவரும் புலம்புகின்றனர். மத்திய அரசு புயல் பாதிப்பு நிவாரணங்களுக்காக ஒதுக்கிய நிதி மிக மிக சொற்பம். நாங்களெல்லாம் தெருவாரியாக ஒவ்வொரு வீட்டிற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு ஒரு தொகையை வசூல் செய்து நாங்களே ஒரளிவிற்கு எல்லாவற்றையும் சீரமைத்துக் கொண்டோம். மரம் அறுக்கும் சீனா மிஷினுக்கு ஏக கிராக்கி. கிட்டத்தட்ட ஒரு மிஷினின் விலை ஆறாயிரம் ரூபாய். மரங்களையும், வீடுகளில் விழுந்து கிடக்கும் மரக் கிளைகளையும் அறுத்துக் கொடுப்பதற்காக தொழிலாளிகள் சைக்கிளில் சுற்றியபடியே மிஷினுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். ஒரு கிளையை அறுத்துக் கொடுக்க ரூபாய் ஐந்நூறு வாங்குகின்றனர். இதற்கு நடுவில் மரங்களை அறுத்து திருடும் கூட்டமும் இதில் உண்டு. இதற்காக பல இடங்களில் சோதனைச் சாவடி போடப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணி மந்த வேகத்தில் கூட நடைபெற வில்லை. எல்லோரும் களைத்து காணப்படுகின்றனர். யாரையும் குற்றம் கூற முடியவில்லை 'தானே'வைத் தவிர.

தங்கள் அன்புப் பிரார்த்தனைக்கும், எங்களுக்கு இயல்புநிலை திரும்ப வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th January 2012, 12:20 AM
அன்பு பார்த்தசாரதி சார்,

தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பாக புதுவை மற்றும் கடலூருக்கு வந்து நிவாரணப் பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டமைக்கு எங்கள் கடலூர் மாவட்ட மக்களின் சார்பில் தங்களுக்கு என் கோடானுகோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கான தங்கள் பிரார்த்தனைகள் நிச்சயம் வீண் போகாது. நமது உத்தமத்தலைவரின் ஆசிகளினால் எல்லாம் விரைவில் சுபமாகும். தங்களுடன் கூட வந்து எங்கள் பகுதிக்கு பேருதவி புரிந்த தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவியுங்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
12th January 2012, 08:18 AM
அன்பு நெஞ்சங்களுக்கு,
உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நம்முடைய அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி விவரங்களைத் தங்களுக்கு அளிப்பதில் பேருவகை அடைகிறோம்.

நாள் - 22.01.2012 ஞாயிற்றுக் கிழமை, நேரம் - மாலை 4.15 மணி
இடம் - Y.G.P. அரங்கம், பாரத் கலாச்சார் வளாகம், 17, திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், சென்னை 17
நிகழ்ச்சி
NTFANS - Nadigar Thilagam Film Appreciation Society துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் வெளியீட்டு 50வது ஆண்டு நிறைவு விழா

சிறப்பு விருந்தினர்கள்

திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி
திரு ஏவி.எம்.சரவணன்
திரு நல்லி குப்புசாமி

பார்த்தால் பசி தீரும் திரைக்காவியத்தில் பங்கு பெற்று அன்று பாராட்டப் பெறும் கலைஞர்கள்

திரு ஏவி.எம்.சரவணன் - தயாரிப்பாளர்
திரு ஆரூர்தாஸ் - வசனகர்த்தா
திருமதி சௌகார் ஜானகி - நடிகை
திரு எம்.எஸ்.விஸ்வநாதன் - இசையமைப்பாளர்
திரு டி.கே.ராமமூர்த்தி - இசையமைப்பாளர்
திருமதி பி.சுசீலா - பின்னணிப் பாடகி
திரு ஏ.எல்.ராகவன் - பின்னணிப் பாடகர்

திரு கமல்ஹாசன் அவர்களை அணுகியிருக்கிறோம். அவருடைய தேதி நிகழ்ச்சிகளைப் பொறுத்து அவருடைய வருகை இருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து பார்த்தால் பசி தீரும் திரைக் காவியம் திரையிடப் படும்.

அமைப்பில் சேர விரும்புவோர் சற்று முன்னதாக வந்தால் அதற்கான நடைமுறைகளை முடித்துக் கொள்ளலாம்.

அமைப்பின் முக்கிய நிர்வாகிகள்-
திரு ஒய்.ஜி.மகேந்திரா - தலைவர்
திரு மோகன் ராமன், திரு ஆடிட்டர் ஸ்ரீதர், திருமதி மதுவந்தி அருண் - துணைத் தலைவர்கள்
திரு முரளி ஸ்ரீநிவாஸ் - பொருளாளர்
திரு ராகவேந்திரன் - செயலாளர்

விண்ணப்ப படிவத்தினை நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் தரவிறக்கிக் கொண்டு அன்று நேரில் சமர்ப்பிக்கலாம்.

தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

RR
12th January 2012, 09:41 AM
திரு ராகவேந்திரன்,

வாழ்த்துக்கள் ! இந்த திரியைப் பற்றியும் இங்கு நடக்கும் கலந்துரையாடல்களைப் பற்றியும் விழாவில் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

vasudevan31355
12th January 2012, 01:35 PM
நடிப்புச் சக்கரவர்த்தியின் இரு நேரடித் தெலுங்கு திரைக்காவியங்கள்.

'பராசக்தி' (தெலுங்கு) (11-01-1957) மிக மிக அரிய புகைப்படம்.

பராசக்தி மைந்தனின் தெலுங்கு 'பராசக்தி' 11-01-1957 -ல் வெளிவந்தது.

நடிக மன்னனின் முதல் காவியமான 'பராசக்தி' (17.10.1952) வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் கழித்து தெலுங்கு 'பராசக்தி' வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் தலைவரின் முகம் மிக அழகாக மெருகேறி வைரம் போல ஜொலிப்பதைப் பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-38.jpg

'பராசக்தி' தமிழ்க் காவியத்தில் அதே சீன். தெலுங்கு பராசக்தியில் நடிகர் திலகத்தின் உடை சற்று மாறியிருப்பதையும், பின்புறக் காட்சி அமைப்புகள் மாறியிருப்பதையும், S.S.R.க்கு பதிலாக வேறு ஒரு தெலுங்கு நடிகரும் இருப்பதைப் பார்க்கலாம். தெலுங்கில் S.V.சகஸ்ரநாமம் கண்ணாடி அணிந்துள்ளார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-43.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th January 2012, 02:54 PM
'பொம்மல பெள்ளி'(தெலுங்கு)(11-01-1958)கிடைத்தற்கரிய நிழற்படம்

http://4.bp.blogspot.com/-XS1vXjCrpg0/TZY3Js1vWDI/AAAAAAAACVc/6hLOLZ6TDL4/s1600/Bommala+Pelli-1958.jpg.jpg

'பொம்மல பெள்ளி'(బొమ్మల పెళ్ళి)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-22.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
12th January 2012, 04:54 PM
டியர் வாசுதேவன் சார்,
பராசக்தி தெலுங்கு, பொம்மன பெள்ளி தெலுங்கு நிழற்படங்கள் என அசத்தி விட்டீர்கள். சூப்பர்.
அன்புடன்

RAGHAVENDRA
12th January 2012, 05:06 PM
அன்பு நண்பர்களே,
நமது சொஸைட்டி துவக்க விழாவினைப் பற்றிய ஒரு காணொளியினை அன்பு நண்பர் திரு நிகில் முருகன் அவர்கள் தன்னுடைய காணொளி சேனலில் அளித்துள்ளார். திரு மகேந்திரா அவர்கள் இந்த விழாவினைப் பற்றிய விரிவான செய்தியினை அளித்துள்ளார். அதனை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வுறுகிறேன். திரு நிகில், திரு மகேந்திரா மற்றும் திருமதி சுதா மகேந்திரா அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.


http://youtu.be/Q73BGnefWQM

vasudevan31355
12th January 2012, 07:02 PM
டியர் ராகவேந்திரன் சார்,

திரு நிகில் முருகன் அவர்கள் தன்னுடைய காணொளி சேனலில் அளித்துள்ள திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் பேட்டியில் ntfans அமைப்பு உருவானவிதத்தையும், அதன் தொடக்க விழா பிரம்மாண்டமாக அமையப்போவது பற்றியும், விழாவில் கலந்து கொள்ளும் v.i.p க்கள் பற்றியும், நடிகர்திலகத்தின் பெருமைகளைப் பற்றியும் திருஒய்.ஜி.அவர்கள் தெள்ளத் தெளிவாக சிறு குழந்தைகள் கூட புரிந்து கொள்ளுமளவிற்கு பேட்டி கொடுத்திருந்தது அருமை. அமைப்பு உருவாகக் காரணகர்த்தாக்களாய் இருந்த தங்களையும், நம் அன்பு முரளி சாரையும் திரு ஒய்.ஜி. மகேந்திரா அவர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தது அவருடைய பெருந்தன்மைக்கு ஒரு சான்று. அமைப்பைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அழகுற அவர் குறிப்பிட்டிருந்தது அழகு.

நீண்ட நாட்களாய் தங்களை சந்திக்காமல் இருந்த எனக்கு இந்தக் காணொளி மூலம் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. அதற்காக நிகில் முருகன் அவர்களுக்கும், அவருடைய வலைதளத்திற்கும் நன்றி.

நமது அமைப்பின் ஆரம்பம் பிரம்மாண்டமாகத் தொடங்க இருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அரும்பாடு பட்ட அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். நமது இதய தெய்வம் அடிக்கடி ஆசி கூறுவாரே..."ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி"..என்று. அது நமது ntfans அமைப்பிற்கு மிகவும் சாலப் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ?

'பராசக்தி' தெலுங்கு மற்றும் 'பொம்மல பெள்ளி' தெலுங்கு காவியங்களின் பதிவுகளுக்கான பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
12th January 2012, 10:40 PM
டியர் ராகவேந்தர் சார்,

Y G மகேந்திரன் அவர்களின் பேட்டியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, ntfans பற்றியும் , அதன் தொடக்க விழா பற்றியும், விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றியும், நடிகர்திலகத்தின் மீது அவருக்கு உள்ள பற்று பற்றியும் மிக அழகாக வெளியிட்டுள்ளார், அவர் பேட்டியில் மிக நகைச்சுவையாக "கலைவெறி எல்லாம் போய் கொலைவெறி நிறைய இருக்குற நாடு" என்று கூறும்போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் இன்னொரு பக்கம் தமிழனின் ரசனை தரம் இப்படி திசைமாறி போனதை எண்ணி வருத்தபடாமல் இருக்க முடியவில்லை.

sankara1970
12th January 2012, 10:42 PM
Best wishes for NT films appreciation society

J.Radhakrishnan
12th January 2012, 10:47 PM
டியர் வாசுதேவன் சார்,

பராசக்தி மற்றும் பொம்மல பெள்ளி கிடைத்தற்கரிய நிழற்படம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி, 'பராசக்தி' (தெலுங்கு) படம் ஒரு டப்பிங் படம் என்றே நினைத்திருந்தேன், தங்கள் பதிவை காணும்வரை.

மிக்க நன்றி!

rajeshkrv
13th January 2012, 03:12 AM
அன்பு நெஞ்சங்களுக்கு,
உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நம்முடைய அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி விவரங்களைத் தங்களுக்கு அளிப்பதில் பேருவகை அடைகிறோம்.

நாள் - 22.01.2012 ஞாயிற்றுக் கிழமை, நேரம் - மாலை 4.15 மணி
இடம் - Y.G.P. அரங்கம், பாரத் கலாச்சார் வளாகம், 17, திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், சென்னை 17
நிகழ்ச்சி
NTFANS - Nadigar Thilagam Film Appreciation Society துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் வெளியீட்டு 50வது ஆண்டு நிறைவு விழா

சிறப்பு விருந்தினர்கள்

திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி
திரு ஏவி.எம்.சரவணன்
திரு நல்லி குப்புசாமி

பார்த்தால் பசி தீரும் திரைக்காவியத்தில் பங்கு பெற்று அன்று பாராட்டப் பெறும் கலைஞர்கள்

திரு ஏவி.எம்.சரவணன் - தயாரிப்பாளர்
திரு ஆரூர்தாஸ் - வசனகர்த்தா
திருமதி சௌகார் ஜானகி - நடிகை
திரு எம்.எஸ்.விஸ்வநாதன் - இசையமைப்பாளர்
திரு டி.கே.ராமமூர்த்தி - இசையமைப்பாளர்
திருமதி பி.சுசீலா - பின்னணிப் பாடகி
திரு ஏ.எல்.ராகவன் - பின்னணிப் பாடகர்

திரு கமல்ஹாசன் அவர்களை அணுகியிருக்கிறோம். அவருடைய தேதி நிகழ்ச்சிகளைப் பொறுத்து அவருடைய வருகை இருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து பார்த்தால் பசி தீரும் திரைக் காவியம் திரையிடப் படும்.

அமைப்பில் சேர விரும்புவோர் சற்று முன்னதாக வந்தால் அதற்கான நடைமுறைகளை முடித்துக் கொள்ளலாம்.

அமைப்பின் முக்கிய நிர்வாகிகள்-
திரு ஒய்.ஜி.மகேந்திரா - தலைவர்
திரு மோகன் ராமன், திரு ஆடிட்டர் ஸ்ரீதர், திருமதி மதுவந்தி அருண் - துணைத் தலைவர்கள்
திரு முரளி ஸ்ரீநிவாஸ் - பொருளாளர்
திரு ராகவேந்திரன் - செயலாளர்

விண்ணப்ப படிவத்தினை நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் தரவிறக்கிக் கொண்டு அன்று நேரில் சமர்ப்பிக்கலாம்.

தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

Raghavendran sir, Why is Sarojadevi missed out ?

RAGHAVENDRA
13th January 2012, 05:39 AM
Raghavendran sir, Why is Sarojadevi missed out ?
She has some other unavoidable commitment on that day.

joe
13th January 2012, 07:30 AM
Ntfans துவக்க விழா நிகழ்வு சிறக்க இதயபூர்வமான வாழ்த்துகள்

groucho070
13th January 2012, 07:34 AM
All the best for the NT Films Appreciation Society. If only I was there :sad:

RAGHAVENDRA
13th January 2012, 08:16 AM
டியர் ராஜேஷ், ஆர் ஆர், ஜே ஆர், வாசுதேவன், ஜோ, ராகேஷ் மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய வாழ்த்துக்களுடனும், அன்புடனும், ஆசியுடனும் நமது அமைப்பு ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை. தங்கள் அனைவருக்கும் நமது அனைவர் சார்பிலும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
திரு மகேந்திரா அவர்கள் கூறியது போல் இது ஒரு துவக்கம் தான். நாம் அனைவரும் நாம் வசிக்கும் இடத்திலேயே இது போன்று அமைப்புகளை உருவாக்கி நடிகர் திலகத்தின் புகழ் பாடலாம். அதற்கு இது ஓர் அடித்தளமாய் அமையட்டும்.

இதற்கான முயற்சிகளை முழுவேகத்தில் எடுத்த முரளிசாருக்குத் தான் நமது நன்றிகள் சென்றடைய வேண்டும். அவருக்கு நமது சிறப்பு நன்றி.

அன்புடன்

KCSHEKAR
13th January 2012, 11:57 AM
Congrats Mr.Ragavender, Mr.Murali & Team for this effort for NTFANS - Nadigar Thilagam Film Appreciation Society.

Thanks again

abkhlabhi
13th January 2012, 12:05 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


All the best for Ntfans


a Video presentation dedicated by Vellore Sivaji Prabhu Fans
http://www.hindi.tv/video/TNAP2hrDaD4/nadigar-thilagam.html

parthasarathy
13th January 2012, 02:52 PM
நடிப்புச் சக்கரவர்த்தியின் இரு நேரடித் தெலுங்கு திரைக்காவியங்கள்.

'பராசக்தி' (தெலுங்கு) (11-01-1957) மிக மிக அரிய புகைப்படம்.

பராசக்தி மைந்தனின் தெலுங்கு 'பராசக்தி' 11-01-1957 -ல் வெளிவந்தது.

நடிக மன்னனின் முதல் காவியமான 'பராசக்தி' (17.10.1952) வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் கழித்து தெலுங்கு 'பராசக்தி' வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் தலைவரின் முகம் மிக அழகாக மெருகேறி வைரம் போல ஜொலிப்பதைப் பாருங்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தாங்கள் பதிவிட்ட "பராசக்தி" தெலுங்கு பட ஸ்டில் பிரமாதம்.

தெலுங்கில் s.s.r வேடத்தில் நடித்தவர் நாகபூஷணம் என்கிற நடிகர். தெலுங்கில், இவர் முதலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் "இரத்தக்கண்ணீர்" நாடகத்தை பட்டி தொட்டி எங்கும் நடித்து பெரிய பெயரும் புகழும் வாங்கினார். பின்னர், தெலுங்குப் படங்களில் காமெடி கலந்த வில்லன் வேடங்களில் (நடிக வேளைப் போலவே) நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
13th January 2012, 08:22 PM
http://lh3.ggpht.com/_p5qnsQgFfIw/TGpaoPOUxqI/AAAAAAAACDE/KAP3tmFaF9I/mgc_745.jpg

சிறந்த நடிகர்களுள் ஒருவரான திரு எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் நூற்றாண்டு நிறைந்து 101வது ஆண்டு இன்று 13.01.2012 அனுசரிக்கப் படுகிறது. எம்.ஜி.ஆரின் சகோதரராக மட்டுமன்றி, சிறந்த திறமை வாய்ந்த நடிகராக, பல பாத்திரங்களில் சோபித்து தனக்கெனத் தனித் தன்மையை வகுத்து தனியிடம் பிடித்த திரு எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் நூற்றாண்டு தமிழ்த்திரையுலகில் உள்ளவர்கள் சிறப்பாகக் கொண்டாடி இருக்க வேண்டும். இருந்தாலும் தன் பாட்டனாரின் நூற்றாண்டை மறக்காமல் கொண்டாடி வரும் திரு எம்.சி.பிரதீப் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள். திரு எம்.ஜி.சக்கரபாணி அவர்களுக்கு சிறப்பான முறையில் ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளார். நம் பார்வைக்காக இதோ அந்த யூட்யூப் வீடியோ..


http://youtu.be/jTM5bEGwLtM

vasudevan31355
13th January 2012, 08:27 PM
நன்றி திரு பார்த்தசாரதி அவர்களே!


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th January 2012, 08:58 PM
Nadigar Thilagam Film Appreciation Society வளமுடன் வளர்ந்தோங்க வளமான வாழ்த்துக்கள்.

Nadigar Thilagam Film Appreciation Society யின் முதல் திரையீட்டுக் காவியமே முத்தான காவியம். தேர்ந்தெடுத்த அன்பு ராகவேந்திரன் சாருக்கும், முத்தான முரளி சாருக்கும் நன்றி. (இதில் என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. நான் எனது வாழ்க்கையில் முதன் முதலாக பார்த்த திரைக்காவியம் 'பார்த்தால் பசிதீரும்'. அதுவே Nadigar Thilagam Film Appreciation Society யின் முதல் படமாகத் திரையிடப்பட இருக்கும்போது சந்தோஷத்திற்கு கேக்கணுமா..) Nadigar Thilagam Film Appreciation Society க்கு இந்த எளியேனின் சிறு அன்புப் பரிசு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-32.jpg

'பார்த்தால் பசிதீரும்' படப்பிடிப்பில் நம் இதய தெய்வம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-39.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

rangan_08
13th January 2012, 09:14 PM
All the very Best for NTFANS.

A long time dream come true.

My heartfelt appreciation & thanks to Murali sir, who kept me updated about the upcoming events, Raghavendra sir, Pammalar, Mr. YGP, Mr. Mohanram, Auditor Sridhar sir and many other great souls who had put in their heart & soul into this meaningful service. There can never be a greater tribute to our beloved NT, than this.

My only worry is that I am not able to participate in all these events, actively. However, I will definitely try to make it on the BIG DAY.

Once again, CONGRATULATIONS !!!

vasudevan31355
13th January 2012, 09:18 PM
காவியத் தலைவரின் 'காவேரி' (13-01-1955)

'காவேரி' திரைக் காவியத்தின் மிக அரிய ஒரிஜினல் போஸ்டர்.

காவிரி மைந்தனின் கலக்கல் போஸ்டர்( ஆர்ட் பிரிண்ட்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ka.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
14th January 2012, 04:59 AM
காவியத் தலைவரின் 'காவேரி' (13-01-1955)

'காவேரி' திரைக் காவியத்தின் மிக அரிய ஒரிஜினல் போஸ்டர்.

காவிரி மைந்தனின் கலக்கல் போஸ்டர்( ஆர்ட் பிரிண்ட்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ka.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

GOOD WISHES FOR THE SUCCESSFUL LAUNCHING OF NT film app. society
LET US MAKE IT A MEMORABLE OCCASSION BY OUR ACTIVE PARTIICIPATION THAT DAY.
THANKS FOR THE TEAM WHO MADE THIS POSSIBLE'

rajeshkrv
14th January 2012, 05:42 AM
best wishes for the Nadigar Thilagam Film Appreciation Society

KCSHEKAR
14th January 2012, 06:16 AM
[QUOTE=RAGHAVENDRA;799063]அன்பு நண்பர்களே,
நமது சொஸைட்டி துவக்க விழாவினைப் பற்றிய ஒரு காணொளியினை அன்பு நண்பர் திரு நிகில் முருகன் அவர்கள் தன்னுடைய காணொளி சேனலில் அளித்துள்ளார். திரு மகேந்திரா அவர்கள் இந்த விழாவினைப் பற்றிய விரிவான செய்தியினை அளித்துள்ளார். அதனை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வுறுகிறேன். திரு நிகில், திரு மகேந்திரா மற்றும் திருமதி சுதா மகேந்திரா அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.

/QUOTE]

Very Nice Interview by Thiru.YGM. Thanks again to all for this effort.

KCSHEKAR
14th January 2012, 06:27 AM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...............


http://www.youtube.com/watch?v=RmZ8zsDSRc0

vasudevan31355
14th January 2012, 07:48 AM
பொங்கல் பொங்கட்டும்... மகிழ்ச்சி நிறையட்டும்... மன்னவர் புகழ் பாரெங்கும் மேலும் பரவட்டும்...

அனைவருக்கும் இனிதான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000290795.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000262801.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000372977.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000366805.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000319157.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
14th January 2012, 04:45 PM
டியர் வாசுதேவன் சார்,
நமது சொஸைட்டிக்கு அர்ப்பணிப்பாக தாங்கள் வழங்கிய ஷூட்டிங் ஸ்டில் சூப்பர் மட்டுமல்ல, பொருத்தமானதாகவும் உள்ளது. மிக்க நன்றி. தங்களையெல்லாம் ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்.

தங்கள் அனைவரின் பார்வைக்காக இதோ அழைப்பிதழின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/printedinvitep01fw.jpg

RAGHAVENDRA
14th January 2012, 04:52 PM
டியர் வாசுதேவன் சார்,
நமது சொஸைட்டிக்கு தாங்கள் அர்ப்பணித்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் சூப்பர் மட்டுமல்ல பொருத்தமும் கூட. தங்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

இதோ அழைப்பிதழின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/printedinvitep02fw.jpg

Arvind Srinivasan
14th January 2012, 05:57 PM
great....its always been my wish to see a nadigar thilagam film on screen....inspite of many films of his getting re-released i never had the time or opportunity to actually watch them.....i will definitely come for this.....is the admission free raghavendra sir?

RAGHAVENDRA
14th January 2012, 06:06 PM
Dear Arvind,
Happy to meet you here and wish you happy festive season. You are most welcome to the inaugural function. For subsequent programmes invitation will be mailed to members only. Details are given above.
Looking forward to meeting you in person,

pammalar
14th January 2012, 06:56 PM
இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5486-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th January 2012, 07:34 PM
தமிழர் திருநாள் உழவர் பெருநாள் சிறப்புப் பாடல்

"ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்"


http://www.youtube.com/watch?v=sFjPAhNmCTQ

நடிப்பு : நடிகர் திலகம், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிகர் முத்துராமன், நடிகர் ஸ்ரீராம், பேரழகி தேவிகா

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

சங்கீதம் : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பின்னணி : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன், பாடகர் சிகரம் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், மெலடி கிங் பி.பி.ஸ்ரீனிவாஸ்

காவியம் : பழநி(1965)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th January 2012, 03:10 AM
On This Auspicious Mahara Sankaranthi Day

My Sincere & Special Wishes To Our

Nadigar Thilagam Film Appreciation Society [NTFAnS].

sankara1970
15th January 2012, 11:08 AM
Rasiga ithayangalukku Iniya Pongal Nalvazthukkal

goldstar
15th January 2012, 05:17 PM
Thanks and congratulation Mr. Ragavendran, Murali and special thanks to YGM for always remembering our god.

As a fan from outside India, it will always make us happy by watching videos of that function and make sure will watch "Partha Pasi Therum" in my home on Sunday (22/01).

Cheers,
Sathish

anm
15th January 2012, 10:01 PM
அனைத்து nt ரசிக நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!!!!

Anm

anm
15th January 2012, 10:20 PM
திரு. ராகவேந்திர சார்,

உங்களின் ntfans அமைப்பிற்கு, உங்களின் இந்த விடாமுயற்சிக்கு, இதை உருவாக்கியதற்கு எங்களின் தலை வணங்கி வாழ்த்துகிறோம்!!!!!

Anm

KCSHEKAR
17th January 2012, 11:27 AM
நடிகர்திலகத்தின் ரத்தபாசம் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி:
SELF EXPLANATORY SCENE - HOW TRUE !!

http://www.facebook.com/photo.php?v=2190137572710

KCSHEKAR
18th January 2012, 11:32 AM
விருதுநகர் மாவட்டம் மணல்மேட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு வைக்கப்பட்ட பேனர்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/PongalVizhaManalmedu.jpg

Karikalen
19th January 2012, 04:10 AM
Best wishes to NTFAns

You guys are doing a great job.

Best wishes once again

RAGHAVENDRA
19th January 2012, 05:59 AM
Our sincere thanks to all the friends who have greeted us on our venture of NTFAnS.
Thank you all, once again,
Murali and Raghavendran.

RAGHAVENDRA
19th January 2012, 06:00 AM
Dear Chandrasekar,
Hope Manalmedu Thaipongal celebrations went off well. Pls update on this.
Raghavendran.

KCSHEKAR
19th January 2012, 12:08 PM
நன்றி திரு.ராகவேந்திரன் அவர்களே!

மணல்மேட்டில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.

திரு.வாசுதேவன் அவர்களும் சவாலே சமாளி திரைப்படத்தின் பொங்கல் காட்சிகளை நமக்குத் தந்திருந்தார்.

சிவாஜி சமூகநலப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராமஜெயம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது - நாம்தான் பட்டிக்காடா பட்டணமாவிலேயே கிராமத்துப் பொங்கல் விழாவைப் பார்த்துவிட்டோமே என்று கூறினார். எந்த விழாவை, எந்த மதப் பண்டிகையைத்தான் நம் தலைவர் விட்டுவைத்தார் என்று நாங்கள் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாலும், வியப்பான உண்மை அதுதான்.

RAGHAVENDRA
20th January 2012, 06:49 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/HINDUWRITEUP200112FW.jpg

RAGHAVENDRA
21st January 2012, 06:13 AM
நாளைய -22.01.2012- நிகழ்ச்சிக்காக மன்றங்கள் தயாரித்துள்ள பேனர்களின் நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/idhayarajafw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/kalainilafw.jpg

நமது நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள சின்ன பேனர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/ppt50bnrntwebsitefw.jpg

Subramaniam Ramajayam
21st January 2012, 10:06 AM
Excellent posters warm welcome to nadigarthilagam rasigargal for the nt film app society and film pp therum. Ettanai murai nt parthalam nam pasi theeradu enna seivadu. Nam kouppinai avvaluthan. Valga nadigarthilagam valarga avartham rasigar crowds.

KCSHEKAR
21st January 2012, 11:51 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் குறித்து நெல்லையிலிருந்து வந்த கடிதச் செய்தி.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/KattapommanBDayNellaiNews.jpg

Murali Srinivas
23rd January 2012, 12:12 AM
நமது NT FAnS அமைப்பின் துவக்க விழா சீரோடும் சிறப்போடும் இன்று நடைபெற்றது. மாலை 4.15 மணிக்கு இறை வணக்கத்தோடு துவங்கியது. காலத்தால் அழியாத கர்ணனின் ஆயிரம் கரங்கள் நீட்டி என்ற சூரிய நமஸ்கார பாடலுடன் தொடங்கியது. மேடையில் திருமதி ஒய்.ஜி.பி அவர்கள், நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள், மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி அவர்கள், திருமதி சௌகார் அவர்கள், திரு ராம்குமார் அவர்கள், திரு ஏ.எல். ராகவன் அவர்கள், திரு ஆரூர்தாஸ் அவர்கள், திருமதி Dr.கமலா செல்வராஜ் அவர்கள் ஆகியோர் அமர்ந்திருக்க அமைப்பின் துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. ஒய்.ஜி. மகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் சொசைட்டியின் சார்பாக நினைவு பரிசுகளும் பொன்னாடையும் அளிக்கப்பட்டன. சொசைட்டி நிர்வாக குழுவை சேர்ந்த திரு மோகன்ராம், திரு ஆடிட்டர் ஸ்ரீதர், திரு கவிதாலயா கிருஷ்ணன், இயக்குனர் பரத், ரஷ்யன் கல்சுரல் அகாடமி தங்கப்பன் போன்றவர்கள் இதனை செய்தனர்.

திருமதி ஒய்.ஜி.பி அவர்கள், பிறகு நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் சுருக்கமாக பேசினர். பிறகு ராம்குமார் அவர்கள் இந்தப் படம் உருவானதின் பின்னணியை பற்றி விவரித்தார். சிவாஜி பிலிம்ஸ்-ல் இருந்த முன்னாள் ராணுவ வீரர் திரு பி.என்.பிள்ளை அவர்களை பற்றி சொல்லிவிட்டு அவரின் முயற்சி காரணமாகவே இந்த ராணுவ பின்னணி உள்ள கதை உருவானதையும் குறிப்பிட்டார். பிறகு சௌகார் அவர்கள் பேசினார். நடிகர் திலகத்தைப் பற்றியும் அவருடன் நடித்ததையும் நினைவு கூர்ந்த அவர் மேடையில் இருந்தவர்களுக்கு அவர் சார்பாக மரியாதை செய்தார். ஜெமினி அவர்கள் சார்பாக கேடயத்தைப் பெற்றுக் கொண்ட அவரின் புதல்வியார் திருமதி Dr.கமலா செல்வராஜ் அவர்கள் இந்தப் படம் வெளி வந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்தார். நடிகையர் திலகம் சார்பாக அவரது பேரனின் மனைவியும் திரு ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களின் மகளுமான திருமதி மதுவந்தி அருண் பெற்றுக் கொண்டார். மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி அவர்கள் அன்றைய நாளில் எம்.எஸ்.வி.அவர்களோடு இணைந்து பணியாற்றியதை சொல்லி மகிழ்ந்தார். அன்று ஊமை பெண்ணல்லோ பாடலின் ஒரு சரணத்தை அதே குரலில் சுருதி பேதம் இல்லாமல் ஏ.எல். ராகவன் பாடி பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளி சென்றார்.

இறுதியாக சிறப்புரையாக இந்தப் படத்தின் வசனகர்த்தா திரு ஆரூர்தாஸ் அவர்கள் உரையாற்றினார். எப்படி பாச மலர் தன்னுடைய முதல் படமாக அமைந்தது என்பது முதல் பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களுக்கு வசனம் எழுதியதை குறிப்பிட்டு அது எப்படி தொடர்ந்து பார் மகளே பார், அன்னை இல்லம் புதிய பறவை தெய்வ மகன் போன்ற படங்கள் வரை சென்றது என்பதை நினைவு கூர்ந்த அவர் அன்புள்ள அப்பா வரை நடிகர் திலகத்தின் 28 படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார்.

ஒய்.ஜி.மகேந்திரன் நன்றி கூற விழா மாலை 6 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு பார்த்தால் பசி தீரும் திரையிடப்பட்டு இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.

அன்புடன்

இந்த அமைப்பை பற்றி இங்கே எழுதும் போதெல்லாம் என்னை முன்னிலைப்படுத்தினார் ராகவேந்தர் சார் அவர்கள். ஆனால் இந்த அமைப்பிற்காக ஓடி ஓடி உழைத்தவர் அவர் தான். இன்று மேடையில் அவர் கௌரவிக்கப்பட்ட போது விழாவிற்கு வந்திருந்த நமது ஹப்பர்கள் அனைவருக்கும் அது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

உடல் நலம் இல்லாததால் திரு ஏ.வி.எம். சரவணன் அவர்களும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களும் வர இயலவில்லை. திருமதி சுசீலா அவர்களும் தவிர்க்க இயலாத காரணத்தினால் வர முடியவில்லை. கமல் அவர்கள் வேறு ஒரு வேலையில் இருந்ததால் வர இயலாத குறையை அங்கே வந்து நேரில் சொன்ன அவரது P .R .O திரு நிகில் முருகன், விழா துவங்குவதற்கு முன் வந்திருந்து விழா முடியும் வரை இருந்தார். சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திருமதி எம்.என்.ராஜம், இயல் இசை நாடக மன்ற பொது செயலாளர் சச்சு, நடிகர் ஏ.ஆர்.எஸ்., நடிகர் மதன் பாப், ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் போன்றவர்களும், சிவாஜி குடும்பத்தினரும் மற்றும் பாரத் கலாச்சார் உறுப்பினர்களும் மற்றும் நடிகர் திலகத்தின் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

RAGHAVENDRA
23rd January 2012, 08:01 AM
டியர் முரளி சார்,
நேற்றைய விழாவைப் பற்றி மிக அழகாக தங்களுக்கே உரித்தான நடையில் அருமையாக விவரித்துள்ளீர்கள். உண்மையில் இந்த அமைப்பு உருப்பெற்றதற்கு முழுமுதற் காரணம் தாங்கள் தான் என்பதே உண்மை. என்னைப் பாராட்டுவது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தங்களுக்கும் விழாவிற்கு வருகை தந்திருந்த நமது ஹப்பர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் பிரமுகர்களுக்கும் மற்றும் இதற்காக ஒத்துழைப்பும் உதவியும் புரிந்த திரு மகேந்திரா மற்றும் பாரத் கலாச்சார் ஊழியர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. அதே போல் நமது முழு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்த நமது அமைப்பு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் மீடியா கவரேஜிற்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமன்றி, தொடர்ந்து நமது எதிர்கால நிகழ்ச்சிகளுக்கும் உதவ முன் வந்திருக்கும் திரு நகில் முருகன் அவர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியில் சிற்றுண்டி வழங்கிய இதய ராஜா சிவாஜி பித்தர்கள் குழு விற்கும் நமது உளமார்ந்த நன்றி. நேரமின்மையால் நேற்றைய நிகழ்ச்சியில் விரிவான நன்றியுரை சொல்ல முடியாமல் போய் விட்டது. எனவே இங்கே கூறிக் கொள்கிறோம்.

அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
23rd January 2012, 08:06 AM
97ல் 4ம் வகுப்பு படித்த ஒரு இளைஞன், அநேகமாக 90-ல் பிறந்திருப்பார். இன்று அவருக்கு அதிக பட்சம் 21 வயது இருக்கும். அவர் சிவாஜி ரசிகராயிருப்பது நடிகர் திலகத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது அல்லவா. நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய எண்ணங்களைப் படியுங்கள்.

http://www.nanparkal.com/2012/01/blog-post_20.html

RAGHAVENDRA
23rd January 2012, 08:08 AM
பல சிவாஜி ரசிகர்கள் ஒருங்கிணைப்பிற்கு உதவியாக இருந்த காரணங்களில் நமது ஹப்பிற்கும் பங்கு உண்டு. எனவே நமது ஹப்பிற்கும் முக்கியமாக நமது நன்றிகள்.

Subramaniam Ramajayam
23rd January 2012, 08:10 AM
டியர் முரளி சார்,
நேற்றைய விழாவைப் பற்றி மிக அழகாக தங்களுக்கே உரித்தான நடையில் அருமையாக விவரித்துள்ளீர்கள். உண்மையில் இந்த அமைப்பு உருப்பெற்றதற்கு முழுமுதற் காரணம் தாங்கள் தான் என்பதே உண்மை. என்னைப் பாராட்டுவது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தங்களுக்கும் விழாவிற்கு வருகை தந்திருந்த நமது ஹப்பர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் பிரமுகர்களுக்கும் மற்றும் இதற்காக ஒத்துழைப்பும் உதவியும் புரிந்த திரு மகேந்திரா மற்றும் பாரத் கலாச்சார் ஊழியர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. அதே போல் நமது முழு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்த நமது அமைப்பு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் மீடியா கவரேஜிற்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமன்றி, தொடர்ந்து நமது எதிர்கால நிகழ்ச்சிகளுக்கும் உதவ முன் வந்திருக்கும் திரு நகில் முருகன் அவர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியில் சிற்றுண்டி வழங்கிய இதய ராஜா சிவாஜி பித்தர்கள் குழு விற்கும் நமது உளமார்ந்த நன்றி. நேரமின்மையால் நேற்றைய நிகழ்ச்சியில் விரிவான நன்றியுரை சொல்ல முடியாமல் போய் விட்டது. எனவே இங்கே கூறிக் கொள்கிறோம்.

அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

அன்புடன்
Thanks murali for a short but brief notes about the function. we the hubbers are really thankful for tha pains undertaken by raghavendran murali and the team and shri YGM SIR AND HIS FAMILY FOR THE ABLE SUPPORT FOR THE SUCCESS OF THE FUNCTION.
Let us make everything in a bg way and earn a place in gunnies records. thanks for all hubbers.

RAGHAVENDRA
23rd January 2012, 09:43 AM
இன்றைய டைம்ஸ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின் இணையப் பக்கம்

http://timesofindia.indiatimes.com/city/chennai/Fans-go-back-in-time-to-pay-tribute-to-Sivaji/articleshow/11596183.cms

sankara1970
23rd January 2012, 10:46 AM
My father attended the inaugural function yesterday-thanks to Murali sir

He felt happy and he said he spoke few words to Mr Aroor Das.

He was reminded of his young days he enjoyed in Madurai-he had attended 100th day functions, stage shows of

our beloved NT.

Great work by Mr Ragavendra, Mr Murali and all associated with this new effort.

vasudevan31355
23rd January 2012, 11:12 AM
நமது NT FAnS அமைப்பின் துவக்க விழா சீரோடும் சிறப்போடும் 22-01-2012 அன்று மாலை நடைபெற்றது. விழா சிறப்புற நடைபெற இரவு பகல் பாராது உழைத்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நமது திரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஒய்.ஜி.எம் சார், அன்பு ராகவேந்திரன் சார், முத்தான முரளி சார் ஆகியோருக்கு எங்களுடைய சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விழாவின் சில காட்சிகள் நிழற்படங்களாக.

பாரத் கலாச்சார் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0258.jpg

'கலைநிலா' சிவாஜி மன்றம் சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0261.jpg

இதயராஜா சிவாஜி பித்தர்கள் குழு சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0263.jpg

www.Nadigarthilagam.com சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0264.jpg

விழாத் துவக்கம்.(Y.G.P.Auditorium)திருமதி ஒய்.ஜி.பி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி அமைப்பைத் தொடங்கி வைக்கிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0267.jpg

ஒய்.ஜி.எம் சார் அவர்களுக்கு கௌரவம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0279.jpg

திரு ஏ.எல். ராகவன் அவர்களின் 'அன்று ஊமைப் பெண்ணல்லோ' பாட்டு.(அருகில் 'தளபதி' ராம்குமார்,'சௌகார்'ஜானகி அவர்கள்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0281.jpg

விழாவிற்கு வந்திருந்த அன்பு நெஞ்சங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0286.jpg

திரு.துஷ்யந்த் அவர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0287.jpg

திருமதி Dr.கமலா செல்வராஜ் அவர்கள் உரையாற்றுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0288.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

RR
23rd January 2012, 11:43 AM
So nice to hear about the grand show. Congrats Ragavendran, Murali & all fans behind it!

Thanks vasudevan for the nice photos.

vasudevan31355
23rd January 2012, 11:47 AM
விழாவிற்கு வருகை புரிந்த முக்கிய விருந்தினர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0294.jpg

மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி அவர்கள் உரையாற்றுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0298.jpg

விழாவிற்கு வந்திருந்த அன்புள்ளங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0301.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0302.jpg

திரு. ஆரூர்தாஸ் அவர்களின் பேச்சு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0305.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd January 2012, 12:29 PM
http://www.animated-gifs.eu/website-thanks/0101.gif

வியட்நாம் திரு கோபால் அவர்களுக்கு நன்றி!

http://123tamilforum.com/imgcache2/2011/04/8e864fc3-1.png

குறிப்பு:

வியட்நாமிலிருந்து தற்சமயம் தாயகம் திரும்பியுள்ள நமது நடிகர் திலகத்தின் அதிதீவிர ரசிகரும், நமது திரியை நாள்தோறும் விடாமல் கவனித்து, தனது கருத்துக்களை கைபேசியின் வாயிலாகத் தெரிவித்து, நடிகர் திலகம் ஒருவரையே தன் மனதில் நிறுத்தி வாழும் அன்பு நண்பரான திரு.கோபால் அவர்கள் தனது பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் நேற்றைய NT FAnS அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய விஷயம். அன்பு நண்பர் கோபால் அவர்களுக்கு நமது திரியின் சார்பாக அன்பு நன்றிகளையும், இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிது நேரமே பேசினாலும் நமது திரியின் அங்கத்தினர்களுடன் அவர் நடிகர் திலகத்தைப் பற்றி 'கல கல' வெனப் பேசி அனைவர் நெஞ்சங்களிலும் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார் என்பது நிஜம். அவருடைய நடிகர் திலக பக்திக்கு நமது திரியின் சார்பாக ஒரு ராயல் சல்யூட். அவரும் அவர்தம் குடும்பத்தினரும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல நடிகர் திலகத்தைப் பிரார்த்திக்கிறேன்.


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
23rd January 2012, 03:59 PM
Yesterday's function coverage in facebook

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s720x720/395858_173777679394669_123095731129531_245052_1834 417418_n.jpg

Standing: From Left to Right:
(Office bearers of the Society)
Thiru P. Thangappan, Thiru Kavithalaya Krishnan, Thiru Ka. Bharath, Thiru T. Murali Srinivas, Thiru V. Raghavendran, Tmt. Madhuvanthy Arun, Thiru Mohan V. Raman, Thiru Auditor Sridhar, Thiru Madhukar

Sitting
(Dignitaries)
Thiru Ramkumar Ganesan, Thiru T.K. Ramamurthy, Thiru Arurdoss, Thiru Nalli Kuppuswamy, Tmt. Y.G.P.

THIRU Y.GEE.MAHENDRA, PRESIDENT, was on the podium, introducing us.

For More images (http://www.facebook.com/photo.php?fbid=173777679394669&set=a.173777106061393.31289.123095731129531&type=3)

P_R
23rd January 2012, 04:35 PM
Thiru P. Thangappan, Thiru Kavithalaya Krishnan, Thiru Ka. Bharath, Thiru T. Murali Srinivas, Thiru V. Raghavendran, Tmt. Madhuvanthy Arun, Thiru Mohan V. Raman, Thiru Auditor Sridhar, Thiru Madhukar
Congratulations. :thumbsup: Look forward to hearing more about your future activities.

Plum
23rd January 2012, 06:02 PM
MS and Raghavendran - congrats, a deserved recognition of your NT service. :thumbsup:

joe
23rd January 2012, 06:12 PM
முரளி சார் மற்றும் ராகவேந்திரர் ஐயா இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்.

NOV
23rd January 2012, 06:23 PM
http://ieslaroda-bilingue.wikispaces.com/file/view/congrats9.gif/228979092/congrats9.gif

rangan_08
23rd January 2012, 08:19 PM
Good to see that the inaugural function went off well.

CONGRATULATIONS.

RAGHAVENDRA
23rd January 2012, 08:36 PM
Dear P_R , Plum , joe, NOV , rangan_08,
Thank you all for the kind words and encouragement. It's because of well wishers that you that these could be achieved. It's a team effort and more particularly, the initiative of Murali Sir was the key factor.
Thank you all once again
Raghavendran

RAGHAVENDRA
23rd January 2012, 08:37 PM
A few links covering the event:


http://timesofindia.indiatimes.com/city/chennai/Fans-go-back-in-time-to-pay-tribute-to-Sivaji/articleshow/11596183.cms
http://www.facebook.com/thamizhthirai
http://moviegalleri.net/2012/01/parthal-pasi-theerum-golden-jubilee-celebration-stills.html?pid=154352
http://www.mysixer.com/?p=15828
http://moviegalleri.net/2012/01/parthal-pasi-theerum-golden-jubilee-celebration-stills.html
http://www.indiaglitz.com/channels/tamil/events/32024.html
http://www.google.co.in/url?url=http://www.indiaglitz.com/channels/tamil/article/77036.html&rct=j&sa=X&ei=8T0dT4DyDIntrAeQrq3DDQ&ved=0CD0QpwIwAA&q=sivaji+ganesan&usg=AFQjCNHZC_DKo0gpplduyee5TPVBrp0usA

RAGHAVENDRA
23rd January 2012, 08:44 PM
வாசுதேவன் சார்,
கலக்கிட்டீங்க...

RAGHAVENDRA
23rd January 2012, 10:51 PM
நிகழ்ச்சியினைப் பற்றிய ஒரு காணொளி. வழங்கியது கலாட்டா.காம் இணைய தளம். நன்றி யூட்யூப் இணைய தளம்


http://youtu.be/9Tlr5r9hi4E

Part II


http://youtu.be/gBhsgHXzq3s

RAGHAVENDRA
23rd January 2012, 11:45 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/sowcarreminiscenses.jpg

vasudevan31355
24th January 2012, 09:33 AM
Paradesi (14-1-1953)

Cast: 'Nadigar thilagam' Sivaji Ganeshan (Anand),Akkineni Nageswara Rao (Chandram), Anjali Devi (Lakshmi), SV Ranga Rao (Rangadu), Pandaribai (Susheela), Vasantha (Tara), , Relangi
Lyrics: Malladi Venkata Krishna Sharma
Music: P. Adi Narayana Rao
Cinematography: Kamal Ghosh
Producers: Anjali Devi and P. Adi Narayana Rao
Director: LV Prasad
Banner: Anjali Pictures
Release Date: 14 January
Trivia: This was made in Telugu and Tamil simultaneously.

Popular Songs:
1. Jeevitame haayi
2. Nenenduku raavaali evari kosamo
3. Pilichindi kaluva puvvu

http://www.song.cineradham.com/songsadmin/movies/paradesi(1953).jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/pa.jpg

http://2.bp.blogspot.com/-3-ZhpiAkcmw/TvL6MKMoC0I/AAAAAAAAFZc/9ve-ZT9TzbY/s1600/paradesi.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-56.jpg

குறிப்பு: 'பரதேசி' தெலுங்குப் படத்தைத் தழுவி பின்னாளில் திரு.'முக்தா' ஸ்ரீனிவாசன் அவர்கள் 'அந்தமான் காதலி' காவியத்தை கொடுத்தார். தெலுங்கில் திரு நாகேஸ்வரராவ் அவர்கள் செய்த பாத்திரத்தை தமிழில் அந்தமான் காதலியில் பிய்த்து உதறியிருந்தார் நடிகர் திலகம். பரதேசி திரைப் படத்தில் நாகேஸ்வரராவ் அவர்கள் மகனாக நடிகர் திலகம் ஏற்றிருந்த வேடத்தை தமிழில் அந்தமான் காதலியில் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் அவர்கள் செய்திருந்தார்.


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th January 2012, 10:07 AM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு என் உயரிய நன்றி.

நமது NT FAnS அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சிப் பதிவுகளையும், நிகழ்ச்சி பற்றிய இணையதள இணைப்புகளையும் அளித்தமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
24th January 2012, 06:42 PM
Article in Today's (24.01.2012) Indian Express, Chennai

http://expressbuzz.com/cities/chennai/Film-appreciation-society-for-Sivaji-Ganesan/356283.html

RC
24th January 2012, 07:41 PM
http://cinema.dinamalar.com/tamil-news/6305/cinema/Kollywood/Parthal-Pasi-Theerum-golden-jublie-celebration.htm

நடிகர் திலகத்தின் பார்த்தால் பசி தீரும் படத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120124161824000000.jpg
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பார்த்தால் பசி தீரும் படத்தின் பொன் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. 1962-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில், பீங் சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் "பார்த்தால் பசி தீரும்". இந்த படத்தின் 50வது ஆண்டு விழாவை நடிகர் திலகம் பிலிம் சொசைட்டி மற்றும் பாரத் கலாசார் இணைந்து நடத்தியது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, சச்சு, எம்.என்.ராஜம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், வசன கர்த்தா ஆரூர் தாஸ், இசையமைப்பாளர் ராமமூர்த்தி, பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்த்தால் பசி தீரும் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளரும், சிவாஜின் மகனுமான ராம்குமார் பேசும்போது, "பா..." வரிசை படங்கள் அப்பாவுக்கு மிகப்பெரிய ஹிட்டுகள் கொடுத்துள்ளது. நொண்டி காலுடன் டூயட் பாடிய ஒரே ஹீரோ அநேகமாக அப்பாவாகத்தான் இருப்பார். இங்கே இருக்கும் சவுகார் அம்மா பத்தி சொல்லனும், 80 வயசிலையும் என்ன இளமையா நகை எல்லாம் போட்டு ஸ்டைலாக இருக்காங்க. எனக்கு இது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.

சவுகார் ஜானகி பேசும்போது, சிவாஜி சார் காலத்தில் நானும் சினிமாவில் இருந்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இதற்காக கலைத்தாயை வணங்குகிறேன் என்றார்.

ஆருர்தாஸ் பேசும்போது, 1961-ல் பாசமலர் ரிலீஸ், 1962-ல் பார்த்தால் பசி தீரும் ரிலீஸ், 1963-ல் புதிய பறவை ரிலீஸ். இப்படி சிவாஜியின் படங்களுக்கு நான் வசனம் எழுதி, என்னை பிஸியாக இருக்க வைத்த காலம் அது. அப்படியே என்னை ஏ.வி.எம்., நிறுவனத்திற்கு அழைத்து சென்றது இந்த படங்கள் தான். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் சிவாஜி என்றார்.

தொடர்ந்து அந்தபடத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் செய்திருந்தார்.

RAGHAVENDRA
24th January 2012, 10:15 PM
Another coverage online

http://1tamilworld.com/index.php/using-joomla/extensions/components/content-component/article-category-list/274-saluting-sivaji-and-his-films

Thirumaran
24th January 2012, 11:13 PM
Randomly switching over between channels and got to see video clippings of NT fans association function in Sun TV's "Cinema Seithigal".. :clap: Could see Raghavendra Sir and Murali Sir in the clippings :D Great going NT fans :thumbsup:

RAGHAVENDRA
24th January 2012, 11:36 PM
Dear Thirumaran,
Thank you for intimation of coverage in Sun TV Cinema News.
I am thrilled to quote the tag line of our nadigar thilagam website (http://www.nadigarthilagam.com)

With your company in our heart and soul, we shall reach great heights

vasudevan31355
25th January 2012, 09:23 AM
நமது NT FAnS அமைப்பின் துவக்க விழா பற்றிய நிகழ்ச்சிகளை சன் டிவி 24-1-2012 அன்று 'சினிமா செய்திகள்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. அந்த தொகுப்பு மட்டும் நமது பார்வைக்கு.(video)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ziq9xkXxqXM


கீழேயுள்ள நிழற்படங்களில் நம் அன்பு ஹப்பர்கள் திரு.ராகவேந்திரன் சார் மற்றும் முரளி சார் அவர்கள் நிற்பதைக் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/CinemaSeithigal-24-01-2012-SunTVShowTamiltwistcom-TamilsWorldflv_000269520.jpg?t=1327463260

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/CinemaSeithigal-24-01-2012-SunTVShowTamiltwistcom-TamilsWorldflv_000201360.jpg?t=1327463363

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/CinemaSeithigal-24-01-2012-SunTVShowTamiltwistcom-TamilsWorldflv_000217760.jpg?t=1327463429


அன்புடன்,
வாசுதேவன்.

kumareshanprabhu
25th January 2012, 10:11 AM
Dear Raghavendra and Murali Sir


congarts

vasudevan31355
25th January 2012, 06:34 PM
'சிவகாமியின் செல்வன்' (26-1-1974) 39-ஆவது ஆண்டுத் துவக்கம்.

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/2927_17_Sivakamiyin%20Selvan1.JPG

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-62.jpg

'சிவகாமியின் செல்வன்' அரிய விளம்பரங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-24.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-47.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-66.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-21.jpg

'குமுதம்' இதழ் விமர்சனம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-24.jpg

குறிப்பு: சிவகாமியின் செல்வன் அரிய விளம்பரங்களைத் தந்து உதவிய அருமை நண்பர் 'வியட்நாம்'கோபால் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
25th January 2012, 09:23 PM
Sincere thanks to Vasudevan Sir, Kumaresh Prabhu Sir and all friends who have wished and greeted us.

My personal thanks to Shri Nikhil Murugan who had made it possible for an exhaustive coverage in the media of the event.

Thank you Murugan.

RAGHAVENDRA
25th January 2012, 09:24 PM
Vasudevan Sir, Ungalukkum Vietnam Gopalukkum Many Many Thanks for the ads of SS.

NOV
26th January 2012, 07:50 AM
Dear Murali or anyone else, can you give me some details on the film Valarpirai?
I know its a 1962 release starring NT and SD and features the best philosophy on God.
Storyline? any other details?

vasudevan31355
26th January 2012, 07:54 AM
'சிவகாமியின் செல்வன்' நிழற்படங்கள்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0001.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0002.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0003.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0004.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0006.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0005.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0008.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0007.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0010.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0011.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th January 2012, 08:04 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-60.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-45.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0009.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th January 2012, 08:24 AM
'சிவகாமியின் செல்வன்' வீடியோ பாடல்கள்

http://icdn1.indiaglitz.com/tamil/gallery/Movies/sivagamiyinselvan/main.jpg

http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/THJLwvqgAaI/AAAAAAAACCI/MMT9ENB9Puw/s1600/Sivakamiyin+Selvan_Iniyavale_tamilhitsongs.blogspo t.com.VOB_thumbs_%5B2010.08.23_15.50.22%5D.jpg

"உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XbpbNEkfe-k

இனியவளே! என்று பாடி வந்தேன்"...

http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/THJLwvqgAaI/AAAAAAAACCI/MMT9ENB9Puw/s1600/Sivakamiyin+Selvan_Iniyavale_tamilhitsongs.blogspo t.com.VOB_thumbs_%5B2010.08.23_15.50.22%5D.jpg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MUeGwllKFsU

"எதற்கும் ஒரு காலம் உண்டு... பொறுத்திரு மகளே!"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pECeEaM_2tA

இதர வீடியோ பாடல்களுக்கான லிங்க்ஸ்

"மேள தாளம் கேட்கும் காலம்"...


http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12114

"எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது"...

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q21g7kBJLnA

"ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு"...

http://1.bp.blogspot.com/_2I2hYF2DQtI/THJHVnU-4vI/AAAAAAAACCA/OuJVWBM9ktw/s1600/Sivagamiyin+Selvan_Aadikku+Pinne_tamilhitsongs.blo gspot.com.VOB_thumbs_%5B2010.08.23_15.32.01%5D.jpg


http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12116

"என் ராஜாவின் ரோஜா முகம்"...


http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12111

அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
26th January 2012, 08:56 AM
Sincere thanks to MR. NIKIL MURUGAN for the wonderful coverage of the function on behalf of NADIGARTHILAGAM fans and hibbers. great job done very nicely and neatly.
DEAR VASUDEVAN SIR
sivakamiyin selvan posters good. after ANBALIPPU RELEASE JAN 1 swictched over to jan 26 releases. inbetween pongal releases missing. why. kindly see.
THIS SAMEDAY JAN 26 1966 padmashri AWRDED to NADIGARTHILAGAM on that day M S PILLAI ALSO RELESED. We made entire MINT AREA STANSILL THAT DAY BY GRAND CELEBRATIONS BEFORE CROWN THEATRE. WHAT A PLEASNT DAYS.
.

vasudevan31355
26th January 2012, 10:33 AM
ராசியான ஜோடியின் அசத்தல் ஸ்டில்ஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0018 20568.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0018 70743.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 08756.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 39120.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 66230.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 18491.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 29252.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 32004.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 34507.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 42473.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th January 2012, 10:39 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0025 95300.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0015 82455.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0027 34523.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 67398.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0021 45059.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0026 58947.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivagamiyinSelvan1974TamilDvDRipDivXMP3MeNavi_0020 03000.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
26th January 2012, 12:59 PM
டியர் வாசுதேவன் சார்,

சிவகாமியின் செல்வன் stills & வீடியோ மற்றும் குமுதம் விமர்சனம் என 39-ஆவது ஆண்டு விழாவை சிறப்பித்து விட்டீர்கள். நன்றி!

Karikalen
26th January 2012, 07:35 PM
Amazing pictures. Thank you. My favourite pair in my teens.

RAGHAVENDRA
26th January 2012, 08:24 PM
A class actor Sowcar Janaki - NT


Having witnessed first hand the euphoria that goes along with every re-release of a Sivaji Ganesan film, I’ve been dumbstruck by the innumerable diehard loyalists of the actor. More than a decade has gone by since his death, but Ganesan’s fan base is intact -- in fact, despite stray criticisms of his portrayals, the fascination only seems to be growing!

quoted from The HIndu...
GOLDEN WORDS.... THANK YOU THE HINDU...

The Hindu's coverage stands apart on the Launch function of NTFAnS -

Click the image to read the Hindu coverage (to appear in Tomorrow's - 27.01.2012 - edition)

http://www.thehindu.com/multimedia/dynamic/00904/27FR-film_society1__904222f.jpg (http://www.thehindu.com/arts/cinema/article2834204.ece)

Thank you The Hindu and Thank you Malathi Madam.

Our special thanks for the meta tags esp.

Raghavendran

RAGHAVENDRA
26th January 2012, 09:48 PM
NTFAnS அமைப்பின் துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் படப் பொன் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து நிகில் முருகன் அவர்கள் வழங்கியுள்ள காணொளி


http://youtu.be/xWFdfB3iI2k

நன்றி யூட்யூப்

vasudevan31355
27th January 2012, 12:53 PM
"ராஜா"ன்னா ராஜாதான்.(26-01-1972) 41-ஆவது ஆண்டுத் துவக்கம்.

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/1924_17_raja.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-63.jpg

http://img519.imageshack.us/img519/9959/snapshot20090303141905.jpg

http://img27.imageshack.us/img27/3473/snapshot20090303122042.jpg

http://img242.imageshack.us/img242/4556/snapshot20090303142020.jpg

http://img353.imageshack.us/img353/2440/snapshot20090303144702.jpg

http://img161.imageshack.us/img161/7909/snapshot20090303145547.jpg

http://img12.imageshack.us/img12/9770/snapshot20090303150850.jpg

http://img89.imageshack.us/img89/1876/snapshot20090303144635.jpg

http://img164.imageshack.us/img164/8809/snapshot20090303145352.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th January 2012, 01:43 PM
http://img267.imageshack.us/img267/9913/snapshot20091031100432.th.jpg http://img97.imageshack.us/img97/4728/snapshot20091031100456.th.jpg

http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Raja-Old?l=11&img=Mp3-Pic_Edit.jpg

http://img62.imageshack.us/img62/1039/snapshot20091031085315.jpg

http://img402.imageshack.us/img402/587/snapshot20091031084613.jpg

"நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்"('ஸ்டைல் ராஜா"வின் அசத்தல் ஸ்டைலில்)(video)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sHWZbgTR1n8

"இரண்டில் ஒன்று... நீ என்னிடம் சொல்லு" சூப்பர் ஹிட் பாடல்.(video)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ddujh97dfqw

"கல்யாணப் பொண்ணு கடைப் பக்கம் போனா" link


http://dai.ly/goawR9

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th January 2012, 02:15 PM
"ராஜா"அசத்தல் பொம்மை இதழ் சிறப்பு ஸ்டில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-64.jpg
அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th January 2012, 03:03 PM
திரையுலக 'ராஜா'வின் சிறப்பு புகைப்படங்கள்

ஸ்டைலுக்கென்றே பிறந்த 'ஸ்டைல் சக்கரவர்த்தி'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-65.jpg

அசத்தல் போஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-46.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th January 2012, 05:11 PM
மோட்டார் சுந்தரம் பிள்ளை (26-01-1966) (The Perfect Gentleman)

http://ecx.images-amazon.com/images/I/51OFJ29hgBL._SL160_.jpg

http://www.hindu.com/thehindu/fr/2003/02/14/images/2003021401030301.jpg

http://www.hindu.com/cp/2009/07/10/images/2009071050401601.jpg

http://www.inbaminge.com/t/m/Motor%20Sundaram%20Pillai/folder.jpg

"காத்திருந்த கண்களே! கதையளந்த நெஞ்சமே!"( super hit video song)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rY7Eh0Y_gQo

"மனமே முருகனின் மயில் வாகனம்"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=epFbbeOOJ2M

"துள்ளி துள்ளி விளையாட"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0qH0LQUgU6U

"குபு குபு குபு குபு நான் என்ஜின்"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WCCF6Ua2bxY

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
27th January 2012, 08:18 PM
திரு.வாசுதேவன் சார், சிவகாமியின் செல்வன், ராஜா மற்றும் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்று படங்களின் அணிவகுப்பை தகவல்கள், பாடல் காட்சி இணைப்புகள் மற்றும் புகைப்படங்களுடன் அருமையாகத் தந்த உங்களுக்கு நன்றி.

KCSHEKAR
27th January 2012, 08:40 PM
NTFAnS அமைப்பின் துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் படப் பொன் விழா நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. நிகழ்ச்சியைக் காண வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

அமைப்பின் தளகர்த்தர்கள் திரு.ராகவேந்திரன், திரு.முரளி சீனிவாஸ் மற்றும் அமைப்பை வழிநடத்தும் திரு.Y.G.M ஆகியோருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

அமைப்பு மென்மேலும் வளர்ந்து நடிகர்திலகத்தின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

vasudevan31355
28th January 2012, 06:12 PM
"மோட்டார் சுந்தரம் பிள்ளை" திரைக்காவியத்தில் நடிகர் திலகம் மிக அழகாக மிதிவண்டி ஓட்டும் காட்சி வீடியோவாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7vbC184KrfA

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th January 2012, 06:20 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/MP2_Nov29_144915_0avi_002148815.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/MP2_Nov29_144915_0avi_001849516.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/MP2_Nov29_144915_0avi_001844636.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/MP2_Nov29_144915_0avi_002301426.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/MP2_Nov29_144915_0avi_002293209.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th January 2012, 09:30 PM
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பார்ந்த பாராட்டிற்கு நன்றி!

டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.

டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டிற்கு நன்றி!

டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,
தங்கள் அன்பான பாராட்டிற்கு நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th January 2012, 10:32 PM
"அந்தமான் காதலி "(26-01-1978)35-ஆவது ஆண்டுத் துவக்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-36.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-25.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-48.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-67.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-25.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-69.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-50.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-37.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-68.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-49.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
28th January 2012, 11:01 PM
டியர் வாசுதேவன் சார்,
ஜனவரி 26ஐ இதை விட சிறப்பாக நாம் கொண்டாடியிருக்க முடியாது. ராஜா, சிவகாமியின் செல்வன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, அந்தமான் காதலி என்று அசத்தியுள்ளீர்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்.

நாம் இன்னும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக..
மிக நீ............................ண்............. ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது....
எல்லாம் யாருக்காக...
யாருக்காக .... இது யாருக்காக......
எல்லாம் உனக்காக....

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/eudvdcover.jpg

vasudevan31355
28th January 2012, 11:15 PM
சிறப்பு நிழற்படங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-26.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-70.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-51.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
28th January 2012, 11:29 PM
ரங்காராவுடன் வாதிடும் காட்சி மட்டும் சற்று பாதிக்கப் பட்டுள்ளதே தவிர படம் நல்ல பிரதி என்றே சொல்லலாம். கடமையை செய்வோம் பாடலை எவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்த்தேன்.... ஆஹா.... சாலையில் துண்டை விரித்து வசூல் செய்து கொண்டே ஏழைகளுக்கு உதவுவது மிகச் சிறப்பானது, உண்மையான உதவும் தன்மையை பிரதி பலிக்கிறது... ஏழைகளிடம் வசூல் செய்து அவர்களுக்கே தரும் மிகச் சிறந்த சித்தாந்தம் நடிகர் திலகத்தின் படத்திற்கே யுரிய தனிச் சிறப்பு. கடைத் தேங்காயை உடைத்து வழிப் பிள்ளையாருக்குத் தருவது போல் அல்லாமல் கொடையின் சிறந்த இலக்கணத்தைப் பறை சாற்றும் காட்சி. அதே போல் நீங்கள் நேர்மையின் சின்னம் என்று தோழர்கள் நடிகர் திலகத்தைக் கூறும் போது,, இது திரையரங்கமாக இல்லாமல் போயிற்றே என்கிற உணர்வு வராமல் இருக்காது...SHUTTLE ACTING என்பதற்கு மற்றொரு உதாரணம் இப்படம். குறிப்பாக சாவித்திரி க்ளைமாக்ஸில் வாதிடும் போது முகத்தில் அவர் காட்டும் பாச உணர்வு ஆனாலும் சரி, அவர் ஆடி ஓடும் காட்சியைத் திரையில் பார்ப்பதும் அவருடைய தற்போதைய நிலையை கவனிப்பதும், அவருடைய முகத்தில் பார்ப்பதும், முகத்தில் அவருடைய நிலையைக் கண்டு பரிதாபப் படுவதும்,,,, இத்தனை உணர்வுகளையும் மிகவும் subdued ஆகச் செய்வதும்....
படத்தைப் பாருங்கள்...