PDA

View Full Version : 'Vizhi'yE, kavidhai ezhudhu!



app_engine
20th August 2010, 11:29 PM
விழி - அட, அட என்ன ஒரு அழகிய தமிழ்ச்சொல்!

கேட்ட உடனே கவிஞர்களை மடை திறக்க வைக்கும் சொல் அல்லவா:-)

இந்த இழையில், விழி என்ற சொல் தமிழ்த்திரைப்பாடலாசிரியர்களை எப்படியெல்லாம் பறக்க வைத்திருக்கிறது என ஆய்வு செய்யலாம்!

app_engine
20th August 2010, 11:49 PM
உரிமைக்குரலின் 'விழியே, கதை எழுது' பாடலைக்கொண்டு தொடங்கலாம் என நினைத்தபோது ஒரு சின்ன ஐயம் - கவிஞர் தானே எழுதியது என்று. (எம்ஜியாரோடு அவ்வப்போது சண்டை போட்டிருப்பதால் வாலி கிட்டத்தட்ட ஆஸ்தானக்கவியாய் இருந்த காலங்கள் உண்டல்லவா?)

கூகிளியபோது, நம் தளத்தின் ஒரு பழைய இழை சிக்கியது :

http://tfmpage.com/forum/archives/14219.1840.11.02.22.html

:lol:

'பூரி' என்னமாய்க்காமெடி பண்ணி இருக்கிறார்!

(BTW, அங்கே 'e' என எழுதி இருப்பது அடியேன்)

app_engine
21st August 2010, 12:25 AM
வேறு சில இழைகள் (எல்லாம் நம் இணையத்தளம் தான்) சொல்லுகிற செய்திகள் :

-எம்ஜியாருக்கே தெரியாமல் ஸ்ரீதர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கிய பாட்டு இது. வரிகளைக்கொண்டு இது கவிஞர் தான் என்று எம்ஜியார் கண்டுபிடித்து விட்டாராம்.

-வினைல் இசைத்தட்டில் கவிஞரின் பெயர் இல்லை - வாலியின் பெயரே உள்ளது, ஆனாலும் எழுதியது கவிஞர் தான் என்று மணிசேகரன் சொல்லுகிறார்.

-இந்தப்படத்தில் இன்னொரு பாட்டும் (ஆம்பிளைங்களா) கவிஞர் எழுதியதாக தூள் சரவணன் சொல்லுகிறார்.

இவர்கள் ரெண்டு பேரையும் விட நன்றாக திரை இசை வரலாறு தெரிந்தவர்களை வலையில் காண்பது அதிசயமே என்பதால், கவிஞர் தான் எழுதியது என்ற முடிவுக்கு வருவது எளிது :-)

app_engine
21st August 2010, 12:29 AM
விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே!
மஞ்சள் வானம், தென்றல் சாட்சி! உனக்காகவே நான் வாழ்கிறேன்!

விழிகள் எழுதும் கதை (காவியம்?) படித்திராதவர்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பைக்கண்டவர்கள் என்பதில் தர்க்கமில்லை:-)

pavalamani pragasam
21st August 2010, 10:00 AM
பாடலில் 'விழி' மட்டும் இருக்கணுமா, 'கண்', 'நயனம்' போன்றவையும் இருக்கலாமா? ரொம்ம்ம்ப காலத்துக்கு முன் ஒரு வார்த்தையை கொண்ட பாடல்கள் தொகுத்து மகிழ்ந்த திரி நினைவுக்கு வருகிறது!

Sureshs65
21st August 2010, 06:04 PM
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது (புவனா ஒரு கேள்விகுறி ) - என்ன ஒரு அருமையான பாடல் இது. இதில் ராஜா ஒரு வட இந்திய தாக்கத்தை வெகு இயல்பாக கொண்டு வந்திருப்பார். கவிஞர் யார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

http://www.youtube.com/watch?v=JjG_ea00_0I&feature=player_embedded

Sureshs65
21st August 2010, 06:17 PM
விழியில் விழுந்து (அலைகள் ஓய்வதில்லை) : மற்றுமொரு மறக்கமுடியாத ராஜா பாடல். வைரமுத்துவின் வைர வரிகள். சுத்த தன்யசி ராகத்தில் அமைந்த பாடல். இரண்டாம் தடவை பல்லவி ஒலிக்கும் பொழுது அதன் கூடவே வரும் கிடார் இசை "இது ராஜாவால் மட்டும் தான் முடியும்" என்று பறைசாற்றும்.

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0163'&lang=en

pavalamani pragasam
21st August 2010, 07:41 PM
un viziyum en vaaLum santhiththaal

pavalamani pragasam
21st August 2010, 07:42 PM
enna enna vaarththaikaLo
solli solli mudiththuvittEn
chinna vizi paarvaiyilE

NOV
21st August 2010, 07:45 PM
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம் ....
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட

NOV
21st August 2010, 07:47 PM
விழிகள் மேடையாம் (the eyes are the stage)
இமைகள் திரைகளாம் (the eyelids the curtains)
பார்வை நாடகம் (the sight the drama)
அரங்கில் ஏறுதாம் (it is staged)

NOV
21st August 2010, 07:49 PM
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

NOV
21st August 2010, 07:50 PM
சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழியில் சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

NOV
21st August 2010, 07:51 PM
and the mother of VIZHI songs....

சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்த்திரங்கலடி

சோலை மலர் ஒலியோ - உனது
சுந்தரபுன்னகை தான்

நீல கடலலையே - உனது
நெஞ்சின் அலைகளடி

கோலக் குயில் ஒஅசை - உனது
குரலின் இனிமையடி

வாழை குமரியடி - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் எதுக்கடி

ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோஅடி

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்

காதிருப்பெநோஅடி - இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று

NOV
21st August 2010, 07:55 PM
I watch the world through your eyes....

உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது

NOV
21st August 2010, 07:57 PM
To see your eyes....

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

NOV
21st August 2010, 07:58 PM
The eyes may be yours, but the dreams are mine...

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

NOV
21st August 2010, 07:59 PM
How could I forget this...

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊண் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

NOV
21st August 2010, 08:08 PM
எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு

NOV
21st August 2010, 08:11 PM
ths stories the eyes tell..
from the BEST movie of the year..


கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

NOV
21st August 2010, 08:13 PM
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

NOV
21st August 2010, 08:14 PM
உந்தன் விழி முனை கத்தி
என்னை கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தழும்புது பல்லே பல்லே
கன்னக்குழிகளில் உயிர் இன்று
வழுக்குது பல்லே பல்லே
குளிர் கூந்தலில் குண்டுமல்லி
பூவுக்கு பல்லே பல்லே

NOV
21st August 2010, 08:16 PM
A beautiful song by Deva...

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
உன் காலடி ஓசையை எதிர்ப்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

madhu
21st August 2010, 08:19 PM
இரு விழிகள் திறந்ததம்மா உலகைக் காணவே ( சின்ன முள் பெரிய முள்)
விழியோரத்துக் கனவும் இன்று கரைந்தோடிடுதே (ராஜபார்வை)
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட (பூஜைக்கு வந்த மலர்)
தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்)
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி (சிறைச்சாலை)
வானெங்கும் தங்கவிண்மீன்கள் விழி இமை மூட (மூன்றாம் பிறை)
விழியில் என் விழியில் ஒரு பூ பூத்ததோ (ராம் லக்ஷ்மண்)
பூவிழி வாசலில் யாரடி வந்தது (தீபம்)
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே ( காதலுக்கு மரியாதை)
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு (பாரதியார் பாடல்)

NOV
21st August 2010, 08:19 PM
MGR song...

கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்

pavalamani pragasam
21st August 2010, 08:24 PM
Wow!

NOV
21st August 2010, 08:26 PM
Back to the 50s...

கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே

NOV
21st August 2010, 09:15 PM
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

tvsankar
21st August 2010, 10:21 PM
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

Thanks for reminding... Beatiful no of MSV......

tvsankar
21st August 2010, 10:21 PM
Vizhiyae vilakondru yetru - PJ and SJ - dono the film name. IR music..

tvsankar
22nd August 2010, 03:02 AM
Vizhiyil un vizhiyil
oru poo poothadhu - SPB and PS

madhu
22nd August 2010, 07:23 PM
விழியலை மேலே செம்மீன் போலே ( மருத நாட்டு வீரன்)
விழியால் காதல் கடிதம் வ்ரைந்தாள் ஆசை அமுதம் (தேன் மழை)
ஒரு மானைத் தேடுது மான்விழி ( வேலி இல்லாத மாமரம்)
அத்தை மடி மெத்தையடி.. அல்லி விழிமூடம்மா ( கற்பகம்)

madhu
22nd August 2010, 07:28 PM
பேசாத மொழி ஒன்று உண்டு :shhh:
அதை பேச விழி நான்கு உண்டு :kikiki:
(பந்தாட்டம்)

madhu
22nd August 2010, 07:35 PM
சித்திரப் பூவிழி வாசலிலே வந்து (இதயத்தில் நீ)
அழகிய தமிழ்மகள் இவள்... இரு விழிகளில் எழுதிய மடல் ( ரிக்சாக்காரன்)
இரு விழிகள் திறந்ததம்மா உலகைக் காணவே (சின்ன முள் பெரிய முள்)
இரு விழியின் வழியே நீயா வந்து போனது (பொன்மனச்செல்வன் ?)
விழிகளில் கோடி அபிநயம் (கண் சிமிட்டும் நேரம்)
எனது விழி வழி மேலே.. கனவு பல விழி மேலே ( சொல்லத் துடிக்குது மனசு)

madhu
22nd August 2010, 07:41 PM
முகம் ஒரு நிலா.. விழி இரு நிலா.. அடடா மூன்று நிலா ( மனசுக்கேத்த மகராசா)
நீ இன்றி யாருமில்லை விழி காட்டு ( வருவான் வடிவேலன்)
விழிகளின் அருகினில் வானம் ( அழகிய தீயே)
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா ( கல்யாண மண்டபம்)
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை ( உனக்காக நான்)

madhu
22nd August 2010, 07:43 PM
பல்லவியில் "விழி" எனும் வார்த்தை வரும் பாடல்கள் மட்டுமே இதுவரை இங்கே பதியப் பட்டு உள்ளது.

இன்னும் அனுபல்லவி, சரணம் என்று பார்த்தால்.....

ஹூம்........... இசையும் க்விதையும் கடல்தான்...

pavalamani pragasam
22nd August 2010, 07:45 PM
:clap:

madhu
22nd August 2010, 07:48 PM
விழியோ உறங்கவில்லை.. ஒரு கனவோ வரவுமில்லை ( நீ வாழ வேண்டும்)
விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம் ( நூறாவது நாள்)
விழிகள் மீனோ மொழிகள் தேனோ (ராகங்கள் மாறுவதில்லை)
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் ஒரு நொடியில் (கிரீடம்)
கண்ணில் என்ன கார்காலம்...
விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததேன் கண்ணே..
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே
( உன் கண்ணில் நீர் வழிந்தால்)

app_engine
23rd August 2010, 01:13 AM
NOV, Madhu, Usha akkA

முழி (அதாவது விழி, எங்க பட்டிக்காட்டு மொழியில்) பிதுங்குது :-) என்னமாய்த்திரட்டி வைத்திருக்கிறீர்கள்!
:thumbsup:

From Mars
24th August 2010, 12:23 AM
vizhi theepam unai thEdum pudhu raagam manam paadum (kadaikaN paarvai)

mugam oru nila vizhi iru nilaa
adadaa moondru nila

From Mars
24th August 2010, 12:28 AM
vizhikaL meenO
mozhikaL thenO

(can't recollect the movie name, It's movie 'thendralO theeyO theeNdiyathu naaNo' pirabhu, ambika starrer)

Plum
24th August 2010, 01:26 PM
un vizhiyum en vALum sandhithAl...already covered?
(Mayilsamy response in a popular college commedy cassette in the 80's: en kaNNu pottaiAgi poodumdA, vALai eRakku :lol:)

pavalamani pragasam
24th August 2010, 01:50 PM
yes

NOV
24th August 2010, 01:56 PM
vizhikaL meenO
mozhikaL thenO

(can't recollect the movie name, It's movie 'thendralO theeyO theeNdiyathu naaNo' pirabhu, ambika starrer):shock:
namma OS Manokku vandha sOthanaiya paarunga :shock:

its from Raagangal Maaruvathillai

Plum, you think we would have left out that song?
(btw, its got another meaning)

Plum
24th August 2010, 01:59 PM
NOV, nAn sonnadhulaiyum another meaning eduthukkalAm ;-)

19thmay
24th August 2010, 02:09 PM
:roll:

NOV
24th August 2010, 02:13 PM
Vizhi moodi yosithal angeyum vandhaai.. [Ayan]check earlier pages... idhellaam solliyaachu

maybe app_engine needs to draw a complete list.. :P

Plum
24th August 2010, 02:41 PM
anbuLLa mAnvizhiyE?

priya32
24th August 2010, 06:07 PM
Did anyone cover this one, my favorite?

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ

priya32
24th August 2010, 06:10 PM
பல்லவி: பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும்
-----------------------------------
சரணம்: வேல் போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய
காயம் வரவில்லை மோகம் பிறக்குது
மாயம் தான் என்ன

priya32
24th August 2010, 06:12 PM
பல்லவி: பால்நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
--------------------------------------
சரணம்: நடந்தவரை விளையாட்டு தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னை தாலாட்டு
மயங்கிவிட வேண்டும் மணிவிழிகள் நான்கும்

priya32
24th August 2010, 06:14 PM
பல்லவி: இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
-----------------------------------------
சரணம்: மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

tvsankar
24th August 2010, 06:22 PM
NOV and madhu,

indha paatai solliteengala

"Iru vizhiyin vazhiyae neeya vandhu ponadhu"

tvsankar
24th August 2010, 06:23 PM
priya,
old songs - vizhi - unna vitta yarla solla mudiyum............. pl continue......

priya32
24th August 2010, 06:25 PM
[tscii:dc7906709c]டி.ராஜேந்தர் பாடல்களின் ‘விழி’ கவி நயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்!

பல்லவி: வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
-----------------------------
கரு வண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தினில் கமழ்வது தமிழ் இனமோ
செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்[/tscii:dc7906709c]

priya32
24th August 2010, 06:26 PM
Ushaji! :)

tvsankar
24th August 2010, 06:28 PM
priya

thank u ......... :)

priya32
24th August 2010, 06:31 PM
பல்லவி: ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
----------------------------------
சரணம்: தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப்பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ

priya32
24th August 2010, 06:38 PM
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
போதை தரும் நாத சுரம்
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்
------------------------------
பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே
------------------------------
பலவித சுகங்களின் தரிசனம்
விழியும் மனமும் உருக வருக

priya32
24th August 2010, 06:39 PM
அபிநய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசைக் கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் ஸ்ருதி மூட்டுகிறாள்

priya32
24th August 2010, 06:45 PM
பல்லவி: மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
------------
விழியே ஒரு வார்த்தை ஆனால்
மொழி என்பது வேண்டாமே

NOV
24th August 2010, 06:49 PM
Priya, we didnt cover any songs in charanams.
you go ahead girl. :P

priya32
24th August 2010, 06:52 PM
NOV: As usual, I want to be 'Special' :bow:

priya32
24th August 2010, 07:00 PM
பல்லவி: வசந்தம் பாடிவர வைகை ஓடிவர
இளமை கூடிவர இனிமை தேடிவர
-----------------------
சரணம் 1: ராகமும் கீதமும் சேர்ந்திட
அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட
மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
புரியாததோ...புதிதானதோ
------------------------
சரணம் 2: ஒரு முறையே பார்க்க
அதில் உளம் தன்னை இழக்க
விழிமடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க

app_engine
24th August 2010, 07:09 PM
priya32,
:clap:

தமிழன்பர்களுக்கு ஒரு கேள்வி - "விழி", மான் அல்லது மீன் தவிர வேறு ஏதாவது விலங்குகளுடன் உவமை / உருவக உறவில் கையாளப்பட்டிருக்கிறதா? (திரைப்பாடல்கள் மட்டுமல்ல வேறு செய்யுள்களிலாவது)...

ப்ளம் 'அன்புள்ள மான்விழியே' சொன்னார், இன்னொரு மான் விழி இங்கே:

பாடல் - அறச்ச சந்தனம் (சின்னத்தம்பி)

2ஆவது சரணத்தில் - "மான் விழி அவள் தேன் மொழி நல்ல மகிளம்பூவு அதரம்" :-)

priya32
24th August 2010, 07:12 PM
பல்லவி: இது கனவுகள் விளைந்திடும் காலம்
-----------------------
சரணம் 1: பாருங்கள் விழி ஓரங்கள்
அங்கு நாணங்கள் குளிக்கும்
------------------------
பல்லவி: இது ரகசிய அனுபவம் ஆகும்
எந்தன் விழிகளில் மிதந்தது நாணம்

NOV
24th August 2010, 07:13 PM
app. ywo of my fav vizhi's are not in any song... kayalvizhi and malarvizhi

ambu vizhi undu - அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

priya32
24th August 2010, 07:15 PM
app_engine: நன்றி! :)

tvsankar
24th August 2010, 07:16 PM
priya32,
:clap:

தமிழன்பர்களுக்கு ஒரு கேள்வி - "விழி", மான் அல்லது மீன் தவிர வேறு ஏதாவது விலங்குகளுடன் உவமை / உருவக உறவில் கையாளப்பட்டிருக்கிறதா? (திரைப்பாடல்கள் மட்டுமல்ல வேறு செய்யுள்களிலாவது)...

ப்ளம் 'அன்புள்ள மான்விழியே' சொன்னார், இன்னொரு மான் விழி இங்கே:

பாடல் - அறச்ச சந்தனம் (சின்னத்தம்பி)

2ஆவது சரணத்தில் - "மான் விழி அவள் தேன் மொழி நல்ல மகிளம்பூவு அதரம்" :-)

app - enna kelvi ipadi...

Maan - idhoda kannu dhan azhaga irukum. adhanala indha oru vilangin kannai than uvamaiya solli irukanga.

matha vilangin kann ellam azhagu kedaiyadhu.....

priya32
24th August 2010, 07:17 PM
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்

priya32
24th August 2010, 07:27 PM
பல்லவி: பகலென்றும் இரவென்றும்
பூமியிலே நடமாடும்
நீ பௌர்ணமி என் காதலி
---------------------
சரணம்: தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை
நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்
--------------------
சரணம்: வேல் போன்ற விழிகள்
என் நெஞ்சில் பாய
காயம் வரவில்லை மோகம் பிறக்குது
மாயம் தான் என்ன

app_engine
24th August 2010, 07:28 PM
app - enna kelvi ipadi...

Maan - idhoda kannu dhan azhaga irukum. adhanala indha oru vilangin kannai than uvamaiya solli irukanga.

matha vilangin kann ellam azhagu kedaiyadhu.....

:-)

அழகுக்காக இல்லாவிட்டாலும் வேறு விதத்திலாவது உவமைப்படுத்தலாமல்லவா? (கண் - வேறு சில விலங்குகளின் பெயர்களோடு பயன்படுத்துகிறோமல்லவா? பூனைக்கண், ஆந்தைக்கண், கழுகுக்கண் - இந்த மாதிரி)

மற்றபடி, மீன்விழி / கயல்விழி எல்லாம் வடிவத்துக்காகத்தானே அல்லாமல் மீனின் விழி அழகுக்காக இல்லை அல்லவா? அதாவது - மீன் / கயல் போன்ற வடிவில் உள்ள விழிகள்:-)

(மான் விழி கூட, அதன் 'மருட்சி'க்காக உவமைப்படுத்தப்படுவதாக +2 தமிழ் டீச்சர் சொன்னது நினைவுக்கு வருகிறது)

tvsankar
24th August 2010, 07:36 PM
app,
Unga alavuku naan aaraychi seiyavillai.

Ungaluku neaiyavae theriyaradhu. proceed........

tvsankar
24th August 2010, 07:37 PM
priya,
chinna suggestion

vizhi varum portion ai mudhalil sollivittu

aduthu - padanthin aramba varigalai solreengala..........

tvsankar
24th August 2010, 07:44 PM
Vizhi ilai enum podhu
vazhi koduthai
vizhi vandha pinnal yen
sirakodithai

vizhigalil thuligal vazhiyumo

vizhigal azhudha padi

Sangeetha jadhi mullai
kanavilali

app_engine
24th August 2010, 08:25 PM
app. ywo of my fav vizhi's are not in any song... kayalvizhi and malarvizhi


இதில் கிட்டத்தட்ட இருக்கிறது :

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே

:-)

priya32
24th August 2010, 08:34 PM
தமிழன்பர்களுக்கு ஒரு கேள்வி - "விழி", மான் அல்லது மீன் தவிர வேறு ஏதாவது விலங்குகளுடன் உவமை / உருவக உறவில் கையாளப்பட்டிருக்கிறதா? (திரைப்பாடல்கள் மட்டுமல்ல வேறு செய்யுள்களிலாவது)...


app_engine: aandhai muzhi, paambu kaNNu appadInnu varra paattu kEttu irukkEn...paattu ippO nyaabagaththukku varalai!

But...indha comparison-laam kEtkka pleasant-aa irukkaadhu...gEli paadalgaLukku mattumE poRundhum!

app_engine
24th August 2010, 08:40 PM
But...indha comparison-laam kEtkka pleasant-aa irukkaadhu...gEli paadalgaLukku mattumE poRundhum!

உண்மை தான், சும்மா ஒரு க்யூரியாசிட்டி :-)

priya32
24th August 2010, 08:42 PM
app. ywo of my fav vizhi's are not in any song... kayalvizhi and malarvizhi

How about this one?

1.ஜில்லென்று காற்று வந்ததோ
நில்லென்று கேட்டு கொண்டதோ
குடை போல் இமை விரிய
மலர் போல் விழி மலர
என்னோடு பேச சொன்னதோ

2. பல்லவி: சிரித்தாள் தங்கப்பதுமை
அடடா அடடா என்ன புதுமை
----
சரணம்: கயல்விழி இரண்டில் வயல் அமைத்து
அதில் காதல் என்றொரு விதை விதைத்து

app_engine
24th August 2010, 09:06 PM
"பூவிழி" அடிக்கடி பயன்படுத்தப்படும் அழகுணர்வுள்ள சொற்கட்டு :-)

========
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
==========

(செண்பகமே, செண்பகமே - சுனந்தா வெர்ஷன்)

priya32
24th August 2010, 09:08 PM
இமை தொட்ட மணிவிழி
இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை

app_engine
24th August 2010, 09:23 PM
விழி - பொருட்சொல் மட்டுமல்ல, வினைச்சொல்லும் தான் ("முழிச்சுக்கோ"ன்னு பொருள்) :-)

அவ்விதத்தில் வரும் இந்தப்பாடலில் :

======
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே
======

பாடல் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி (படம் பெயரும் "பாலும் பழமும்")

app_engine
24th August 2010, 09:37 PM
பல்லவியில் விழியுள்ள மற்றுமொரு பாடல்:

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே

(Whenever I think about this movie, I'm reminded of the Chicago Devon Ave video shop northie guy blurting out TF names - ejjmAn-ejjmAn-rajneekAnth :lol: )

app_engine
24th August 2010, 09:46 PM
திரையில் வந்த இனிய பாரதி கவிதை (கப்பலோட்டிய தமிழன்)

======
காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!
======

Plum
24th August 2010, 10:01 PM
Manidha manidha ini un vizhigaL sivandhal thread lock Agfum :)

app_engine
24th August 2010, 10:51 PM
Manidha manidha ini un vizhigaL sivandhal thread lock Agfum :)

அந்தக்காலகட்டத்தில் நிறைய "சிவந்த கண்" வகைப்படங்கள் (முக்கிய உபயம் - விஜயகாந்தர்) வந்தன. சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி முதலானவை.

கல்லூரியில் கொஞ்சம் தமிழ்த்தீவிரர்கள் இருந்தார்கள் - 'தேனருவி'ன்னு சைக்ளோஸ்டைல் பத்திரிகை எல்லாம் நடத்தினார்கள் - கல்லூரி நிதியில் தான் :-)

அவர்கள் நடத்திய ஒரு கவிதைப்போட்டிக்குத்தலைப்பு "இமைக்க மறந்த விழிகள்". தலைப்பு கொடுத்த கொஞ்ச நேரத்தில் கவிதை எழுத வேண்டும். அதில் சும்மா ஒரு ஜாலிக்காகக்கலந்து கொண்டேன். "விழி சிவப்பு" என்றெல்லாம் எழுதியது உங்கள் பதிப்பைப்பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது :-)

(முதல் பரிசு கெடச்சதுங்கோ)

Sanjeevi
24th August 2010, 10:59 PM
Iru Vizhiyin vazhiye neeya vanthu ponathu - Siva

app_engine
25th August 2010, 06:39 PM
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது (புவனா ஒரு கேள்விகுறி ) - கவிஞர் யார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.


பஞ்சு அருணாசலம் (கண்ணதாசனுக்கு சொந்தக்காரர் மற்றும் உதவியாளராக இருந்தவர், ராசாவுக்கு முதல் படம் இசையமைக்க வாய்ப்புக்கொடுத்தவர்) :-)

app_engine
25th August 2010, 06:43 PM
பாவை விழித்துளி விழுந்து, பூவின் பனித்துளி நனையும்

ஆராதனை படப்பாடலான 'இளம்பனித்துளி விழும் நேர'த்தின் சரணத்தில் வரும் கொஞ்சம் வித்தியாசமான வரி இது.

பொதுவாகக்காலை நேரம் புத்துணர்வோடும், துள்ளலோடும் - ஆக மொத்தம் மகிழ்வோடு தான் தொடர்பு படுத்தப்படும். இதிலோ நாயகி காலங்கார்த்தாலயே அழுது வடிக்கிறாள்...

app_engine
25th August 2010, 07:02 PM
விழியில் விழுந்து (அலைகள் ஓய்வதில்லை) : மற்றுமொரு மறக்கமுடியாத ராஜா பாடல். வைரமுத்துவின் வைர வரிகள்.

தமிழ்த்திரைப்பாடல்களில் அபூர்வமாகவே கட்டமைப்பு மாற்றம் இருக்கும் (முதல் இசை - பல்லவி / அனு பல்லவி - இடை இசை - சரணம் - பல்லவி - இடை இசை - சரணம் - பல்லவி -கடை இசை). அவ்விதத்தில் இது கொஞ்சம் தனித்துவம் வாய்ந்திருக்கும்.

இசை படிக்கும் சூழமைவுடன் காதல் - வேறுபட்ட பின்புலமுள்ள பதின்ம வயது நாயகன் - நாயகி. கவிஞருக்கும் இசை அமைப்பாளருக்கும் கரும்பு தின்னும் வாய்ப்பு, அதுவும் ஒரு புதுமை விரும்பி இயக்குநரோடு பணியாற்றும் போது கறபனை சிறகடிப்பது இயல்பே.

ராசாக்களும் வைரமுத்துவும் கூடும்போது கேட்கவா வேண்டும்?

தாளமில்லாமல் வரும் அழுகை வரிகளிலும் 'விழி' என்ற சொல் இருக்கிறது :

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

app_engine
25th August 2010, 07:40 PM
இன்னொரு "அழுவாச்சி" விழிப்பாடல் வரி :

உன்னைத்தானே, தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர்ப்பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழிநீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

(நல்லவனுக்கு நல்லவன் - திரையின் சூழமைவு அடிப்படையில் "ஆனந்தக்கண்ணீர்" என்று தான் கொள்ள வேண்டும்)

app_engine
26th August 2010, 09:49 PM
விழிப்பாடல்களுக்கான தேடல், ஒரு பழைய விருப்பத்தினிடம் கொண்டு சேர்த்தது :

இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே (http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00350&lang=en)

கொஞ்சமும் அலட்டாமல் தாஸேட்டன் ஊதித்தள்ளியிருக்கும், இனிய மிருதங்க ஒலி கூடிய, செமி-க்ளாசிக்கல் பாடல்.

எப்படியோ தெரியவில்லை, அதிகப்பாடல்கள் கிட்டாத பாடகி என்றாலும், பி.எஸ்.சசிரேகா, விழிப்பாடல்களில் அடிக்கடி தென்படுகிறார் :-) (விழியில் விழுந்து, விழியோரத்துக்கனவும் மற்றும் இளமனதினில்)

மஞ்சள் நிலா, கல்லூரிக்காலத்தில் வந்ததும் பார்த்ததுமான உருப்படாத ராசா படங்களில் ஒன்று :-( ஊர்வசியின் சகோதரி ரஞ்சனி நடித்தது என்பதும், 'வா மச்சீ மச்சீ' என்ற பாடல் நண்பர் வட்டங்களில் ராசாவைக்கேலி செய்ய பயன்படுத்தப்பட்டது என்பதும் நினைவிலுள்ள மற்ற தகவல்கள்.


சரணத்திலும் 'விழி' இருக்கு :

கருங்குழல் அலை கருவிழி வலை எனை கவர்கிறதே
அருந்தமிழ் கலை அழகிய சிலை ஒளி தருகிறதே
(vizhi once again compared to a "trap" here)

app_engine
26th August 2010, 10:05 PM
இயற்கை வர்ணனைகளில் வல்லவர் வைரமுத்து (என் கருத்தில் கவிஞரையும் இந்தப்பகுதியில் மிஞ்சியவர்).

கதிரவன் உதயத்தை விண்மீன்கள் விழி மூடுவதாக அவர் கற்பனை செய்யும் அழகு மூன்றாம்பிறை பாடலில் வருகிறது :

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

app_engine
27th August 2010, 11:03 PM
மது முன்னமேயே 'அழகிய தமிழ் மகள் இவள்' பல்லவியில் வரும் 'இரு விழிகளில் எழுதிய மடல்' என்பதைக்குறிப்பிட்டிருந்தார்.

அந்தப்பாட்டின் சரணத்தில் இப்படி வருகிறது :

"நீல விழிப் பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை"

"நீலவிழிப்பந்தல்" - பொருள் புரியவில்லை -ஜெய்கணேசு / பவளமணி பிரகாசம் மாதிரிப்பெரியவுங்க விளக்கம் சொன்னாத்தேவலை...

app_engine
27th August 2010, 11:40 PM
இன்னுமொரு பாடல் (நிறைய ஹாரிஸ் பாடலகளில் விழி வருகிறதே - தாமரை காரணமா?)

http://www.youtube.com/watch?v=2JiSrV4ZQSQ

முதற்கனவே, முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்?
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னைத்துரத்துது நிஜமா நிஜமா?

Film- majnu

thriinone
27th August 2010, 11:47 PM
விழி - பொருட்சொல் மட்டுமல்ல, வினைச்சொல்லும் தான் ("முழிச்சுக்கோ"ன்னு பொருள்) :-)



ஓடும் மேகங்களே
...........................................
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் அவள் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதுதிருக்கும் அந்த நிலவு



சுட்டும் விழிச் சுடரே
........................................
உன் விழியில் விழுந்தேன் - விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
மெல்லினம் மார்பில் கண்டேன் வல்லினம் விழியில் கண்டேன்- இடையினம் தேடி இல்லை என்றேன்

app_engine
28th August 2010, 07:42 AM
thriinone,
நல்ல கண்டுபிடிப்புகள்!

:-)

சரி, நீல விழி எப்படிப்பந்தல் மற்றும் மேடை ஆகிறது? (வாத்தியார் பாட்டு - அழகிய தமிழ்மகள் இவள்)

madhu
28th August 2010, 08:42 PM
சரி, நீல விழி எப்படிப்பந்தல் மற்றும் மேடை ஆகிறது? (வாத்தியார் பாட்டு - அழகிய தமிழ்மகள் இவள்)

may be usual-ஆக நீலத்தையும் கருப்பு நிறத்தையும் சமமாகவே பாவிக்கிறோம். கிருஷ்ணன் என்றால் வடமொழியில் கருப்பன் என்றுதான் அர்த்தம் ஆனால் நீல வண்ண கண்ணன் என்றுதானே சொல்கிறோம். அது போல "நீல நயனங்கள்" என்பது ஆழந்த கருப்பு விழியைக் குறிப்பதாகவும் வச்சுக்கலாம்.
(எல்லாம் சொந்த சரக்குதான்.. திட்டாதீங்க)

சரி. குழப்ப வருகிறேன்.

அந்த நீல விழியில் ஹீரோ ஆடும் ஆட்டம் தெரியுது. அதனால் அது அவன் இருக்கும் மேடை. பந்தல் என்பது திறந்த வெளியாக இல்லாமல் மூடப்பட்ட இடம். இமைகள் அடிக்கடி மூடி மூடி திறப்பதால் அது பந்தலாகவும் ஆகிறது.

குழப்பியது போதும் என்று நினைக்கிறேன்.

நான் ஜூட்.........

thriinone
28th August 2010, 08:51 PM
நம்மூர் மக்களுக்கு நீல நயனங்கள் மேல் அபரீமிதமான பிடிப்பு இருக்கலாம். அழகு என்றால் (blondie) என்று கூறாமல் கூறும் வழக்கம் இருப்பது போல், நீல நயனங்கள் அழகு.

அதே போல் விழிகள் காதலனை வா வென அழைப்பதால் பந்தல் போடுகிறது, அழைப்பு விடுக்கிறது. அழைத்து அங்கே உலாவருவது இவள். இவள் விழி நடனங்கள் அதை அரங்கேற்றுவதால் விழி மேடையாயிற்று.

இதே தொனியில்

"விழிகள் மேடையாம் - இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் - அரங்கில் ஏறுதாம்"

என்று கையாண்டிருக்கலாம். எல்லாம் நம் கற்பனையின் கை சரக்கு.

thriinone
28th August 2010, 08:52 PM
விழிகள் காதலனை களவாடிவிட்டதால் "கள்ள விழியாம்"

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

umaramesh
29th August 2010, 06:05 PM
Song:kannan endhan kadhalan kannil aadum mayavan

FILM: PETTRAL THAN PILLIYA

VIZIGAL KETTU VANGAI VARUM IDYAM ALLAVOO

What a way to express love.

ramesh

madhu
31st August 2010, 04:46 AM
hi ramesh

kannan endhan kadhalan is from oru thaai makkal

tvsankar
1st September 2010, 11:02 PM
Vizhi irandum Kadalanadhae
Enadhu manam padaganadhae

Poove Ilaiya Poovae
manam tharum vasanthamae - Kozhi koovudhu - MVD

tvsankar
1st September 2010, 11:24 PM
ini mai vizhi naatiyamo
enai vaatumo

Dheem dhina - SPB and SJ - Aagaya gangai

app_engine
2nd September 2010, 07:02 AM
நல்ல கண்டுபிடிப்புகள் உஷாக்கா :-)

இன்னுமொரு "சரண விழி"

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப்பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாகக்காண்போம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாகக்காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழி பேசு அழகே நீ இன்று

(உன்னிடம் மயங்குகிறேன், யேசுதாஸ் பாட்டு, வி குமாரின் இசையில் தேன் சிந்துதே வானம்)

app_engine
2nd September 2010, 07:09 AM
தாலாட்டுப்பாடல்களின் குறிக்கோளே உறங்க வைப்பது தானே - அதாவது "விழி மூட"ச்செய்வது.

சின்னத்தாயும் அதற்கு முயலுகிறாள் (தளபதியில் ஜானகி)

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

app_engine
2nd September 2010, 07:21 AM
விசய் இப்போ காவல்காரன் எடுக்கறார்னு பேசிக்கறாங்க...ஆனா ஒரிசினல் காவல்காரன் தனி தானுங்க:-)

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ...பாடலின் சரணங்களில் "விழி" பூச்சரமாகிறது...பொய்கையாகிறது...

செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
செவ்விதல் தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
சிந்து நடை போடும் பாற்குடம்
சின்ன விழி பார்வை பூச்சரம்

பொன்னெழில் தாமரை பூவினால்
மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினான்
முத்துத்தமிழ் பாடும் பூங்குயில்
முத்தம் ஒன்று வேண்டும் ஆண்குயில்
அந்தப்பாடலில் அன்பு ஊடலில் மங்கை நாணினாள்

app_engine
2nd September 2010, 07:32 AM
'கம்பன் ஏமாந்தானி'ல் வரும் 'அம்பு விழி'யை NOV குறிப்பிட்டார்.

அம்பு கூடத்தோற்கும் விழி ஒரு தெம்மாங்குப்பாட்டில் இருக்கு தெரியுமா?

உதயகீதத்தின் "மானே தேனே"
http://www.youtube.com/watch?v=xGAiyth_Kn4

அன்னம் கூடத்தோற்கும் நடையாடுதடி
ஏ.. அம்பு கூடத்தோற்கும் விழி பாடுதடி

baroque
2nd September 2010, 12:23 PM
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்....
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்.....
பனி விழும்........ஸ்ரீ.இளையராஜா.....ஸ்ரீ.வைரமுத்த ு.
http://www.youtube.com/watch?v=6ePdvw99KXE

app_engine
4th September 2010, 01:43 AM
அரவிந்தன் - யுவனின் முதல் படம் என்று நினைக்கிறேன்.

அதில் ஒரு "விழி மூடும்" பாட்டு இருக்கிறது :

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கைசேரும் நேரம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

app_engine
4th September 2010, 01:46 AM
நேற்று பார்த்த விழி
கேட்ட மொழி யாவும்
காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென*
மாற்றி மாற்றி அலை மோதும்


இப்படி ஒரு பாடலின் சரணத்தில் இனிமையான வரிகள்.

பாடல் - "மாறியது நெஞ்சம் - மாற்றியவர் யாரோ"

சுசீசாவின் இனிய குரல், மாமா இசையில் பணமா பாசமா

baroque
4th September 2010, 05:28 AM
ஈர இரவில் நூறு கனவு..
பேதை விழியில் போதை நினைவு... :swinghead:
பன்னீரில் ஹே...இளம் தேகம் நீராடும்...
பனிப்பூக்கள் ஹே... உனைக்கண்டு தேனூறும்...
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்...
முக வேர்வை துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்...
http://www.youtube.com/watch?v=wXpq7zoUnLY
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் பிறையும் பௌர்ணமியாகும்....:swinghead:
நீதானே எந்தன் பொன் வசந்தம்......
இளையராஜா , வைரமுத்து , பாலா ...ultimate romantics Indian cinema ever produced ! :musicsmile:

vinatha.

app_engine
10th September 2010, 10:58 PM
விழி மலையாளத்தில் நம் நாட்டுப்புற மொழி போல 'மிழி' ஆகி விடுகிறது.

சமீபத்தில் நான் கேட்டு ரசித்தது விஜய் யேசுதாஸ் அழகாகப்பாடும் 'மான் மிழிப்பெண்ணே' :-)

('கத துடருன்னு' படத்தில் 'மழமேகம்' என்ற பாடலில் முதல் சரணத்துக்குப்பின் வரும் பல்லவியில் அவர் பாடும் விதம் இனிமையோ இனிமை)

tvsankar
11th September 2010, 11:23 AM
app,
Tamil il - vizhi list complete acha.

malayalathuku poyacha...

One more mizhi

Mizhiyil meetin

Plum
13th September 2010, 12:00 PM
app has jumped to Malayalam! :)

sari en pangu
azhagE nin mizhi - amaram

app_engine
13th September 2010, 07:35 PM
உஷா சேச்சி, ப்ளம்,

மலையாளத்துக்குத்தாவவில்லை - அன்று கேட்ட பாடல், அதனால் எழுதினேன் - அவ்வளவே :-)

மற்றொரு விழிச்சரணம் - சுப்ரமணியபுரத்தில் வரும் "சிறுபொன்மணி அசையும்" என்ற கல்லுக்குள் ஈரம் பாட்டு: :

===============
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்

வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
===============

ஒரிஜினலை விட இந்தப்படத்தில் தான் அந்த விழி வழித்தூது அழகாக இருக்கும்:-)

app_engine
13th September 2010, 07:42 PM
வி குமார் இசையில் ஒரு விழிச்சரணம் :

===============

நான்கு விழி அல்லவோ
பேசும் மொழி அல்லவோ

===============

பாடல் - என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

படம் - தூண்டில் மீன்

ஜெயச்சந்திரனும் ஸ்வர்ணாவும் பாடியிருப்பார்கள்...

app_engine
13th September 2010, 07:48 PM
எழுபதுகளில் வானொலியில் அடிக்கடி ஒலித்த, வரப்ரசாதம் படத்தின் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்' என்ற யேசுதாஸ் வாணி ஜெயராம் பாடல்.

இசை - கோவர்த்தனம், இனிமையாக செய்திருப்பார்

இதன் சரணத்தில் அழகான உருவகப்படுத்தல் இருக்கிறது :

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை


எப்படியெல்லாம் கற்பனையப்பா!

app_engine
13th September 2010, 07:53 PM
கொஞ்சம் வைர வரிகள், ஆஸ்கர் நாயகன் இசையில் :

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே


பாடல் - தொடத்தொட மலர்ந்ததென்ன
படம் - இந்திரா

Shakthiprabha
13th September 2010, 08:17 PM
பால நாகம்மா-திரைப்படம்
ஸ்ரீதேவி-சரத்பாபு

கூந்தலிலே மேஹம் வந்து
குடி புகுந்தாளோ கவி எழுத
குறு நகை...அமைத்தது...இலக்கிய மெடை
கரு விழி ... வரைந்தது..மன்மத ஜாடை

app_engine
13th September 2010, 08:31 PM
NOV அவர்கள் சொன்னது போல, எக்ஸெல்'லில் தொகுக்கத்தொடங்கி இருக்கிறேன் - பெரிய வேலையாக இருக்குமென்று தோன்றுகிறது - நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அதாவது, கொட்டாவி வரவழைக்கும் கான்ஃப்ரன்ஸ் கால்கள்) இந்த வேலை செய்தால் ஓரிரு வாரங்களுக்குள் தயாராகிவிடும் :-)

app_engine
13th September 2010, 08:33 PM
இதுவரைக்கும் எப்படி இதை விட்டோம்?

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ?
(தோகை இளமயில், பயணங்கள் முடிவதில்லை, இளையராசா, வைரமுத்து, எஸ்பிபி)

tvsankar
13th September 2010, 11:02 PM
kokki podum vizhi
kothi pogum idhazh

konja neram konja neram - Chandramuki

app_engine
14th September 2010, 12:49 AM
பாடல்களை மட்டும் தொகுத்தாயிற்று - விவரங்கள் பூர்த்தி செய்தால் "விரி தாள்" தயார் :-)

கொசுறுத்தகவல் - இதுவரை 99 தமிழ்ப்பாடல்கள்...வேகமாக யாராவது வந்து 100-ஆவது பாடலைப்பதியுங்கள் :-)

Nerd
14th September 2010, 01:03 AM
கொசுறுத்தகவல் - இதுவரை 99 தமிழ்ப்பாடல்கள்...வேகமாக
யாராவது வந்து 100-ஆவது பாடலைப்பதியுங்கள் :-)
I shall (Hope its not posted before)

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் உடைந்து நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

படம் - சதுரங்கம்
இசை - வித்யாசாகர்
லிங்க் - http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBVID00038&lang=en (Please listen. Awesome song)

tvsankar
14th September 2010, 01:07 AM
Vizhi moodi - Ayan - solliyacha ?

mallu mizhi

mizhi thammil

http://www.youtube.com/watch?v=R30k8R8K7UQ

tvsankar
14th September 2010, 01:37 AM
Iru vizhiynilae
avan azhagugalai

Oru vizhi Erimalai
Oru vizhi Panimalai

Kanden kanden - Madhurey

http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBVID00023&lang=en

VS songs elalm kaetu parkanam. Neraiya vizhi kedaikum pola iruku.....

app_engine
14th September 2010, 08:53 AM
Nerd,
:thumbsup:

UshakkA,
ayan was told in the beginning itself.

madhurey is a new addition ofcourse:-)

Plum
14th September 2010, 06:29 PM
கொசுறுத்தகவல் - இதுவரை 99 தமிழ்ப்பாடல்கள்...வேகமாக
யாராவது வந்து 100-ஆவது பாடலைப்பதியுங்கள் :-)
I shall (Hope its not posted before)

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் உடைந்து நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

படம் - சதுரங்கம்
இசை - வித்யாசாகர்
லிங்க் - http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBVID00038&lang=en (Please listen. Awesome song)

Oh brilliant song Nerd. Unfortunately, never saw the light of the day. karu pazhanisamy released 2-3 other mokkais but this movie is still unreleased.

Nerd
14th September 2010, 09:14 PM
Yes Plumji. Karu.Pal has got great ears for music. Another song from his film.

பாடல்: இருவிழியோ சிறகடிக்கும்
படம்: பிரிவோம் சிந்திப்போம்
இசை: வித்யாசாகர்
லிங்க்: http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBVID00032&lang=en

Another one:
பாடல்: விழியே விழியே பேசும் விழியே
படம்: ஈரம்
இசை: தமன்
லிங்க்: http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBTHS0001&lang=en

tvsankar
15th September 2010, 01:46 AM
one more mizhi

Azhagolam mizhigalil

http://www.youtube.com/watch?v=F-UrX5W2Zug

tvsankar
22nd September 2010, 01:37 AM
Vizhi than mayangum
perazhagai kaatshi thandhadhae

Oru poovanathula


indha vizhi solliyacha

vil vil vil
un vizhi ambil
enai thakkadhae


Nil Nil Nil
Bhadhil soll soll
enai vaatadhae

app_engine
22nd September 2010, 06:44 PM
Good catch UshakkA on poo vanaththula :-)

எனது அடுத்த டிஸ்கவரி ராத்திரி தாலாட்டுப்பாடும்போது வந்தது :

அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு, அல்லி விழி மூடம்மா :-)

சுசீலாவின் இனிய குரலில் :-)

முன்னமே வேறு ஒரு இழையில் சொல்லி இருப்பது போல, இந்தக்குரல் எனக்கு HMV :-)

umaramesh
22nd September 2010, 08:46 PM
VIZHIYOO URANGVILLI
KANAVOO KALAYAVILLI

Jayachandran-Vani scintillating duet

ramesh

thriinone
22nd September 2010, 08:47 PM
இந்தப் பாடலை பதித்தார்களா எனத் தெரியவில்லை

"மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு"

என்ன சத்தம் இந்த நேரம்.

umaramesh
22nd September 2010, 08:49 PM
I am not sure whether this song was mentioned.

Ever Green

VIZHIYAEE VIZHIYAEE UNAKENNA VELLAI
VIRTHUKKU VARAVAA

ramesh

app_engine
22nd September 2010, 09:02 PM
என்ன சத்தம் இது வரை சொல்லவில்லை - விழியே விழியே உனக்கென்ன வேலை முதல் பக்கத்திலேயே வந்து விட்டதென்று நினைவு.

ஏற்கனவே வந்திருக்கும் பாடல்களையெல்லாம் விரிதாளில் சேகரித்திருக்கிறேன். பாடகர் / படம் / கவிஞர் / இசையமைப்பாளர் போன்ற விவரங்கள் சேர்த்து (ஏதாவது ஓர் இடத்தில்) இட நினைத்திருக்கிறேன். தற்சமயம் கொஞ்சம் நேரக்குறைவு :-(

tvsankar
23rd September 2010, 04:26 PM
Maan vizhi maadhu
neeyo manmadhan thoodhu

Solai poovil
malai thendral
padum neram

pavalamani pragasam
23rd September 2010, 08:34 PM
From thookku thookki: kaNvizi pukunthu
From Manohara:pozuthu pularnthathE

umaramesh
23rd September 2010, 08:50 PM
KALLA VIZHI MOGATHILEY THULI VANTHA VEGATHILEY

Song: THENDRALIL AADUM KONTHALI KANDEN MAZHI KONDA MEGAM

Film: MADURI MEETA SUNDARA PANDIAN

MSV/Vani/KJY

ramesh

tvsankar
26th September 2010, 03:20 PM
malarkanaigal Vizhi vazhiyae
Maru mayakam mozhi vazhiyae

Asai nenjin kanavugal
valarpirai - MVD and PS

Mugathil mugam parkalam

Shakthiprabha
26th September 2010, 04:48 PM
ஒரு காதல் கடிதம் "விழி" போடும்
உனைக் காணும் சமயம் வரக்கூடும்.
...
வளையோசை கலகலகலவென

tvsankar
28th September 2010, 12:08 AM
Azhagiya Vizhigalil
ezhudhiya kavidhaigal
unakenna puriyalaiya

thullum vizhi
senthamarai

song

Kannan aruage
pada vendum
kdhal kili naan
ada vendum

VJ song. Nice no......


http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00266&lang=en

Shakthiprabha
28th September 2010, 10:17 AM
azhagiya "vizhigaLil" arupathu kalaigaLum ezhuthiya thirumagaLE

tvsankar
1st October 2010, 11:05 PM
indha sevvizhi
potadho ambu


sammatham thandhuten nambu - Kadhal Devathai

Shakthiprabha
5th October 2010, 10:25 PM
aagaya gangai
poonthen malar soodi
pon maanvizhith thEdi

tvsankar
5th October 2010, 11:09 PM
Nee Vizhi
naan imai

Nee kaatru
naan maram - Nilavaee vaa

http://www.youtube.com/watch?v=JrTPNt8P2I4&feature=related

app_engine
12th October 2010, 08:08 PM
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே

(மதுரை வீரன், ஜி ராமனாதன், டி எம் எஸ், ஜிக்கி, கவிஞர்)

ஜெய்யின் 1000 இழைக்காக நடந்த ஆய்வுகளில் கிட்டிய நாடகம் ஆடும் விழி :-)

tvsankar
19th October 2010, 12:14 AM
Neraiya vizhi padal kaeten.. solla neram ilamal,
ipodhu marandhu poi vittadhu..

(edho exam la marks koraiyara madhiri oru kurai.hahaha)

ipodhu kaeta 2 songs

1. vizhi siraiyil pidithai vilagudhal pol nadithai

sonnalum kaetpadhillai kanni manadhu - ARR

2. sutri vara seiyum vizhiyum

Mannil indha kadhal andri

Shakthiprabha
19th October 2010, 12:25 AM
kalamE avaL vizhigaL sonnapadi aadume
(avaL oru menakai)

tvsankar
19th October 2010, 12:39 AM
vizhi - idhu oru habit a pochu...

nimmadhiya paatai kaeka mudiyama.... very bad...

tvsankar
19th October 2010, 12:39 AM
irandu vizhiyil
kaditham
nee ezhudhi pottadhu

aala asathum malliyae malliyae

Shakthiprabha
19th October 2010, 12:43 AM
/ :D /

un vizhi odaiyil naan kalanthen
pon kani vizhum ena thavam kidanthen
..
naan thEdum sevvanthi poovithu

app_engine
19th October 2010, 12:43 AM
vizhi - idhu oru habit a pochu...

nimmadhiya paatai kaeka mudiyama.... very bad...

:lol:

ஹப் படுத்தும் பாடு :-)

என்னைத்திட்டாதீங்க :-)

disk.box
19th October 2010, 01:20 AM
கூந்தலிலே நெய் தடவி
குளிர்விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல் மனம் ஒரு தேனருவி

{ கல்யாண ஊர்வலம் - கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி - இசை: எம்.ஜி.ராதாகிருஷ்ணன் }

disk.box
19th October 2010, 02:04 AM
ஏண்டி முத்தம்மா!
----
கண்களில் மை கரைந்து போகலாமா?
கருவிழி செம்பவளம் ஆகலாமா?

{ ஆறு புஷ்பங்கள் - சந்திரபோஸ் - எம்.எஸ்.விஸ்வநாதன் }

======
ஹே ஓராயிரம்
------
இளஞ்சோடியின் விழி ஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே

{மீண்டும் கோகிலா - "சுப்பு செல்லம்" - இளையராஜா )

புலர்காலைப் பொழுதில் புதைந்திருக்கும் பரவசத்தை இசையிலும் குரலிலும் உணரவைத்த(வைக்கும்) 'குகுகுகுக்க்கூ'
=======

ஹேய் பாடல் ஒன்று
-----
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும் காவியம்

{ ப்ரியா - கே.ஜே.ஜேசுதாஸ் & ஜானகி - இளையராஜா - பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் (என்று நினைக்கிறேன்) }

இன்ரிக்கோ ஒலி நாடாவில் வியக்கத்தக்க தரத்தில் முதன்முதலில் கேட்டபோதிருந்த பேரின்பம் இன்றும் தொடர்கிறது :)

===========
இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னைத் தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே!
மலரே!!!

{அலாவுதீனும் அற்புத விளக்கும் - "சுப்பு செல்லம்" - எம்.எஸ்.விஸ்வநாதன் }
==========
கண்ணன் மனம் என்னவோ
----
மோஹத்தில்
விழி ஓரத்தில்
கண்ணன் பார்த்தாலும்
என் நெஞ்சின் பசியாறிப்போகும்
....
....
அந்தி இருட்டில்
என் விழிக்குள்
நின்றிருப்பான்
கண்மணிக்குள்

( வஸந்த ராகம் - எஸ்.ஜானகி மற்றும் குழுவினர் - எம்.எஸ்.விஸ்வநாதன் }

========
கவிதைகள் விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே

{ உயிரே உனக்காக - 'சுப்பு செல்லம்' & எஸ்.ஜானகி - லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால் - வைரமுத்து }

=======

tvsankar
20th October 2010, 06:37 PM
un vizhiyalae un vizhiyalae
en vazhi marum

En kadhal solla varthai ilai - Piaya..

already solliyacha.. apo sorry for the repeat one...........

tvsankar
20th October 2010, 11:03 PM
oru hiku kavidhai

VIZHIGALIL nee pada pada


Azhagiya theeyae - Minnalae

solliyacha?

disk.box
21st October 2010, 12:40 AM
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

(தென்றலே என்னைத் தொடு - கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன் - இளையராஜா }
=======
கண்விழி என்பது கட்டளை இட்டது

{வளையல் சத்தம் - கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி - எம்.எஸ்.விஸ்வநாதன் - முத்துலிங்கம் }
=======
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு

மொழியே தேவாரமோ?
விழிமேல் பாமாலையோ?

{பகவதிபுரம் ரயில்வேகேட் - தீபன் சக்கரவர்த்தி & எஸ்.பி.ஷைலஜா - இளையராஜா }

இதைப்போன்றதொரு அற்புத முதலிசையை வேறெந்தப் பாடலிலும் கேட்ட நினைவில்லை. :thumbsup:
=======
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்

தேன்விழிகளும் ஏன் சிவந்தது?
பூ உதடுகள் ஏன் வெடித்தது?

{ரஸிகன் ஒரு ரஸிகை - வாணி ஜெயராம் - ரவீந்திரன் )

=======
கடலோடு நதிக்கென்ன கோபம்?
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்?

(அர்த்தங்கள் ஆயிரம் - "சுப்பு செல்லம்" - ஷங்கர் கணேஷ்)
=======

disk.box
21st October 2010, 02:10 AM
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா
நெஞ்சம் எங்கும் வெண்பன்னீரை சிந்தும் நிலா
இள மாலை நேரம் வந்தாய்
விழியோரம் ஏதோ சொன்னாய்

(கூட்டுப் புழுக்கள் - எம்.எஸ்.விஸ்வநாதன், "சுப்பு செல்லம்" - எம்.எஸ்.விஸ்வநாதன் }
=======
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்

( நீயா - "சுப்பு செல்லம்" & பி.சுசீலா - ஷங்கர் கணேஷ் )
=======
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

(தலைவன் - "சுப்பு செல்லம்" & பி.சுசீலா - எஸ்.எம்.சுப்பையா நாயுடு }
=======
நில்லடி என்றது உள்மனது

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத்தானா?

(காலமெல்லாம் காத்திருப்பேன் - "சுப்பு செல்லம்" & கே.எஸ்.சித்ரா - தேவா }
=======
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

( நானும் ஒரு தொழிலாளி - "சுப்பு செல்லம்" & எஸ்.ஜானகி - இளையராஜா }
=======
ஓ பட்டர்ஃப்ளை

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே

( மீரா - "சுப்பு செல்லம்" & ஆஷா போன்ஸ்லே - இளையராஜா }
=======

tvsankar
11th December 2010, 08:30 PM
Vizhi padum ragam dhan

OOr nenjin ragam

idhu anbin vedham

VAIGAI NADHI OORAM

http://www.youtube.com/watch?v=K5jmSxLvkO4&feature=related