PDA

View Full Version : S.Janaki - Lyrics



priya32
15th October 2010, 06:12 PM
S.Janaki is my favorite singer. Please use this thread to post only S.Janaki Amma's lyrics of your favorite songs.

பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

Please click on the link below for the list of links to the songs in this thread:

Janaki song lyrics in this thread (http://forumhub.mayyam.com/hub/lyrsort.php?t=14891)

tvsankar
15th October 2010, 06:13 PM
Kaatrukella veli song's lyrics pl...........

priya32
15th October 2010, 06:22 PM
பாடல்: காற்றுக்கென்ன வேலி
திரைப்படம்: அவர்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

காற்றுக்கென்ன வேலி...கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப்பேசி கிள்ளை ஆனேன்
கோவில்விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

tvsankar
15th October 2010, 06:24 PM
thank u priya...

pl u conitune your choices. disturb pannalai..

priya32
15th October 2010, 06:39 PM
பாடல்: கனவு ஒன்று தோன்றுதே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல

பூமகள் மேலாடை...நெளியுமோ
நகர்ந்திடுமோ...நழுவிடுமோ...ஓ
காமனே வாராதே...காமனே வாராதே
மனமே பகையா...மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல

பார்வைகள் பார்த்தானே...இருதயம்
இடம் பெயர்ந்து...கிறங்கிடுதே...ஏ
கேள்விகள் கேட்டானே...கேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ
சிறையை உடைக்க பறவை நினைக்க

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
லல லால லாலலா...ல லாலா லா லாலா
லல லால லாலலா...ல லாலா லா லாலா

saradhaa_sn
15th October 2010, 06:56 PM
பாடல்: வசந்த கால கோலங்கள்
படம் : தியாகம்
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர் : எஸ்.ஜானகி
நடித்தவர் : லட்சுமி

வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்...ம்...ம்...ம்...ம்...ம்..
அலையிலாடும் காகிதம்
அதிலும் இந்த காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்கும் இந்த உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்

தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்லவேளை திருவுள்ளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி.. நன்றி.. தேவா
உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோலங்கள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

tvsankar
15th October 2010, 07:02 PM
One old no of SJ

Sollamal theriya vendumae - lyric venumae.....

priya32
15th October 2010, 11:41 PM
பாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே
திரைப்படம்: விளையாட்டுப் பிள்ளை
இசை: மகாதேவன்
பாடியவர்: எஸ்.ஜானகி

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனமும் சென்றது
மறு முறை காணவே மனமும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது
சொல்லாமல் தெரிய வேண்டுமே

தேடிய செல்வம் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே

priya32
15th October 2010, 11:51 PM
பாடல்: ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
திரைப்படம்: வண்டிச்சக்கரம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி

மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி
மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்க சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்க சொல்லாதோ
அணைச்ச பக்கம் சிலிர்க்குதுன்னு
மயக்கம் கொள்ளாதோ...ஓ

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து

மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா
மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா
புது ரவிக்கை தந்தானா
அதை ரசிக்க வந்தானா
புது ரவிக்கை தந்தானா
அதை ரசிக்க வந்தானா
ரவிக்கை தந்த ரகசித்தை
உனக்கு சொன்னானா...ஆ

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து

priya32
16th October 2010, 12:01 AM
பாடல்: அடி அம்மாடி சின்னப் பொண்ணு
திரைப்படம்: கன்னிப் பருவத்திலே
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி

அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு

வாடாத மல்லியப்பூ நான் வச்சிருந்தேன் என் கொண்டையில
வண்டு ஒண்ணு வட்டமிட வந்திருச்சு என்ன சொல்ல
மேலாட தான் விலகி காத்து மேனியெல்லாம் கொஞ்சம் தொட்டுவிட
குளிரடிச்சு சிலுசிலுத்து குமரி என்னை வாட்டுதடி
ம்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா
தானன னன்னா தனன னன்னா...தானன னன்னா

அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
ஓஹோ...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி

நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு
தெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு
நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு
தெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு
என் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான்
என் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான்

அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி

ஆத்துல நான் குளிக்கையிலே அஞ்சாறு மீன் வந்து கடிக்குதடி
தேகமெல்லாம் கிளுகிளுத்து திண்டாடுறேன் குறுகுறுத்து
காதோடு சொல்லட்டுமா நான் கண்ணாலே கண்ட ரகசியத்த
யாருக்குமே சொல்லாதே நீ ஆச வெக்கம் அறியாதடி
ஹோய்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா
தானன னன்னா தனன னன்னா...தானன னன்னா

அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
ஹே...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி

app_engine
16th October 2010, 12:23 AM
பாடல் : பாடவா உன் பாடலை
படம் : நான் பாடும் பாடல்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : இளையராஜா

பல்லவி :
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ
பாடவா உன் பாடலை

சரணம் 1 :
வாடைப்பூங்காற்று என்னைத்தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
வாடைப்பூங்காற்று என்னைத்தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
நதியோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மூடும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ்ச்சங்கம்

சரணம் 2 :
உன்னைக்காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னைக்காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே

priya32
16th October 2010, 12:36 AM
பாடல்: கொத்தமல்லிப்பூவே
திரைப்படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

கொத்தமல்லிப்பூவே...ஏஏஏ ஏஏஏ ஏஏ
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு...அரே ரரே
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு

ஆத்தோரம் கொட்டிவச்ச மல்லி பூ வாசத்துல அள்ளி
ஆகாசம் தூவிவிட்ட வெள்ளி எம் மாமன் வச்ச புள்ளி
நெனைச்சேனே எளைச்சேனே நானு என் நெஞ்சுக்குள்ள தேனு
வட்டமிடும் பூங்காத்து வந்து வந்து மோதும்
தொட்டுத்தொட்டு சூடாக சொந்தக்கத பேசும்
சொந்தத்தில பந்தத்தில சந்தோஷம்
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு

சேத்தோட ஒட்டிக்கிட்ட நாத்து அத சேத்துக்கிட்ட காத்து
கூத்தாடும் எம்மனசு பாத்து அது தென்னை இளங்கீத்து
வெத போட்டேன் ஒனக்காக நேத்து நான் கண்ட சுகம் சேத்து
தொட்டுவிட்ட பின்னாலே தூக்கம் இல்ல மாமா
தொட்டுக்கிட்டு ஒன்னோட தூங்கவேணும் ஆமா
சொர்க்கத்தில பக்கத்தில நின்னேனே

கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு...அரே ரரே
கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே
வாசம் வீசு வந்து வந்து ஏதோ பேசு

priya32
16th October 2010, 01:24 AM
பாடல்: என் தேகம் அமுதம்
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்...ம்...ம்...ம்

முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனசின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா
காத்திருப்பதே பாரமில்லையா
துள்ளி எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி முத்தம் கொஞ்சு
விளக்கை அணைத்துவிடு

என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்...ஆ ஆ ஆ

வீணைகளின் மௌனம் ஒட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதற்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு
நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை

என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்...ம்ம்...ஆ ஆ

priya32
16th October 2010, 01:49 AM
பாடல்: செங்கமலம் சிரிக்குது
திரைப்படம்: தாவணிக்கனவுகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில்
சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும்

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில்
சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

முத்தம் இடும் மாலை...வேளை...மூடுவிழா நாடகமோ
நித்தம் இதழ் தேடும்...நேரம்...நாணம் எனும் நோய் வருமோ
பூமாலை சூடாது போய் தேடக் கூடாது
எல்லைதனைத் தாண்டாது பிள்ளை எனத் தாலாட்டு
மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாழ் போடு
காமன் கணை ஏவல் எனை காவல் மீறத் தூண்டுதே

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

மங்கை இவள் தேகம்...நோகும்...மோஹனமாய் தாளமிடு
கங்கை நதி பாயும்...நேரம்...காதிலொரு சேதி கொடு
நாள்தோறும் ராக்காலம் ஏதிங்கே பூபாளம்
இன்பம் கரை காணாது கண்கள் இமை மூடாது
உன்னைக்கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது
சேவல் அது கூவும்வரை நாணம் ஓய்வு காணுமே

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ கூ...குக்குக் கூ கூ...கூ கூ எனக் கூவும் குயில்
சின்னச் சின்ன சந்தத்தில் அந்திப்போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது

rajraj
16th October 2010, 02:07 AM
Please click on the link below for the list of links to the songs in this thread:

Janaki song lyrics in this thread (http://forumhub.mayyam.com/hub/lyrsort.php?t=14891)




S.Janaki is my favorite singer. Please use this thread to post only S.Janaki Amma's lyrics of your favorite songs.

பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

priya32
19th October 2010, 06:06 PM
பாடல்: அழகிய செந்நிற வானம்
திரைப்படம்: காஷ்மீர் காதலி
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ

கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
என்னென்னதான்...நாணமோ...பாவமோ...ஓஓ ஓ

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ

ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
அந்தாதி நான்...பாடவோ...கூடவோ...ஓஓ ஓ

அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓஓ ஓ

priya32
19th October 2010, 06:11 PM
பாடல்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
ஆஆ ஆஆ தடுத்தால் கூட தருவேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆஆ ஆஆ இருவர் நிலையும் சிலையே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழிகேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆஆ ஆஆ காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பலகோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

priya32
19th October 2010, 06:23 PM
பாடல்: தேவன் தந்த வீணை
திரைப்படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

மேகம் பாடும்...மேகம்...பாடும்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மோகமோ...ஓஓ ஓஓ ஓ
மோகமோ சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ
நாளும் நாளும் தேடுவேன்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

priya32
19th October 2010, 06:54 PM
பாடல்: தென்றல் வந்து என்னைத் தொடும்
திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்...சாயும்...போது

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்
சாறம்...ஊறும்...நேரம்

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

priya32
19th October 2010, 11:30 PM
பாடல்: ஒரு ராகம் பாடலோடு
திரைப்படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

மாலை நேரக்காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும் எனை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

priya32
19th October 2010, 11:47 PM
பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு
திரைப்படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே...ஆஆ...ஆஆ...ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவை அல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

priya32
20th October 2010, 12:01 AM
பாடல்: வானம் நிறம் மாறும்
திரைப்படம்: தாவணிக் கனவுகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்; எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை
நாள்தோறும் வேதங்கள் பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை

மன்மதக்கலை எங்கு விற்பனை
மங்கை இவள் தேகம் எங்கும் முத்திரை
அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித்தர வேண்டும் அன்புக்கட்டளை
சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை
நாள்தோறும் வேதங்கள் பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை

priya32
20th October 2010, 12:13 AM
பாடல்: மாலை சூடும் வேளை
திரைப்படம்: நான் மகான் அல்ல
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயோ
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயோ
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்
நீண்ட நேரம் தோன்றுமோ

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை
சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆடை கொண்டு மூடுமோ

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

priya32
20th October 2010, 12:23 AM
பாடல்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்
திரைப்படம்: கொம்பேரி மூக்கன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும்
தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்
சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே
மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே
அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா...ஹோய்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து
விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து
தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய்போட
நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற
கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா...ஹோய்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

priya32
20th October 2010, 01:19 AM
பாடல்: தாம் ததீம்த ஆடும் உள்ளம்
திரைப்படம்: பகலில் ஒரு இரவு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

கனவுகள் பலிக்கும் பலிக்கும் காலம் நேரம் வந்து சேர்ந்தது
கவிதைகள் அதிகம் அதிகம் காதல் தெய்வம் கொண்டு வந்தது
உடல் நிலையிலும் மன நிலையிலும் புது உணர்வுகள் தோன்றின
நதி திரண்டது மடை திறந்தது அலை எழுந்தன ஆடின
தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
ஆடல்...பாடல்...ஊடல்...ஆயிரம்

தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

இனியது உறவு உறவு இன்று வந்து தெய்வம் சொன்னது
இளமையின் வரவு வரவு அந்த நாணம் இன்று வந்தது
கனி கனிந்ததும் மடி விழுந்ததும் சுகம் வளர்ந்ததும் கொஞ்சமா
இது நடந்ததும் மனம் மலர்ந்தது இனி நடப்பது பஞ்சமா
தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
ஆடல்...பாடல்...ஊடல்...ஆயிரம்

தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

priya32
20th October 2010, 02:11 AM
பாடல்: பூமாலையே
திரைப்படம்: பகல் நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

பூமாலையே...தோள் சேர வா
பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
ஏங்கும் இரு...இளைய மனது...இளைய மனது
இணையும் பொழுது...இணையும் பொழுது
இளைய மனது...தீம்தன தீம்தன
இணையும் பொழுது...தீம்தன தீம்தன
பூஜை மணி ஓசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
வாசம் வரும்...பூமாலையே
ஏங்கும் இரு...தோள் சேர வா...வாசம் வரும் பூ

நான் உனை நினைக்காத நாள் இல்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
னன னா...நான் உனை நினைக்காத நாள் இல்லையே
என்னை உனக்கென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
ஏங்கும் இளம் காதல் மயில் நான்
தேன்துளி பூவாயில்...னன னா
பூவிழி மான் சாயல்...னன னா
தேன்துளி பூவாயில்...னன னா
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
வாசம் வரும்...பூமாலையே
ஏங்கும் இரு...தோள் சேர வா

லலல லலா...கோடையில் வாடாத கோவில்புறா
லல லா...காமனைக் காணாமல் காணும் கனா
லல லா...கோடையில் வாடாத கோவில்புறா
நாளும் தூங்காது ஏங்க
காமனைக் காணாமல் காணும் கனா
நாளும் மனம் போகும் எங்கோ
விழிகளும் மூடாது...லல லா
விடிந்திடக் கூடாது...லல லா
விழிகளும் மூடாது...லல லா
விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று ஸ்ருதி மீட்ட தாளம் ஜதி கூட்ட
கனவுகள் எதிர்வரும் அனுபவம்

பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
வாசம் வரும்...பூமாலையே
ஏங்கும் இரு...தோள் சேர வா...ஏங்கும் இரு
இளைய மனது...இளைய மனது
இணையும் பொழுது...இணையும் பொழுது
இளைய மனது...தீம்தன தீம்தன
இணையும் பொழுது...தீம்தன தீம்தன
பூஜை மணி ஓசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
வாசம் வரும்...பூமாலையே
ஏங்கும் இரு...தோள் சேர வா

priya32
21st October 2010, 01:23 AM
பாடல்: பூ என்பதா பொன் என்பதா
திரைப்படம்: உயிரே உனக்காக
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பூ என்பதா பொன் என்பதா
பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூ என்பதா பொன் என்பதா
பூமாலை நீயே ராதா

மேலாடையில் நூலாக வா
மேலாடையே நானாக வா
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
ஆனந்த மாறன் அம்பானது
நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
உறங்கும் போது...னன னனனா னானா னா

பூ என்பதா பொன் என்பதா
பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்

ஆசை மனம் மூடாதடி
வாய் பேசுமோ உன் பூங்கொடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசைகள் கோடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசைகள் கோடி
புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
தாங்காது கண்ணா பிருந்தாவனம்
தழுவும் போது...லல லலலா லாலா லா

பூ என்பதா பொன் என்பதா
பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூ என்பதா பொன் என்பதா
பூமாலை நீயே ராதா

priya32
21st October 2010, 02:03 AM
பாடல்: எங்கே உன்னைக் கண்டால்கூட
திரைப்படம்: சித்திரச் செவ்வானம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
ஆ ஆ...தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
தாளாதம்மா நாள் முழுதும்
அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்
எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்

கண்டதுதானே வெள்ளிப்பூவை கொஞ்சம் பொறுங்களேன்
கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே
கண்டதுதானே வெள்ளிப்பூவை கொஞ்சம் பொறுங்களேன்
கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே
தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி கொதிக்க வைத்ததேன்
இன்று நாளை என்றும் உங்கள் உரிமை அல்லவா

எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஆஹா ஹா ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்

நெற்றிக்குங்குமம்...
நெற்றிக்குங்குமம் கெட்டுப்போகுது சற்றே நில்லுங்கள்
கட்டுக்கூந்தலை தொட்டுத்தழுவி சங்கதி சொல்லுங்கள்
எட்டுப்பிறவிகள் எட்டும் போதிலும் நீயே மணவாட்டி
இளமை அற்புதம் இன்பம் அற்புதம் வாடி ராஜாத்தி
அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்

எங்கே...ஆஆ ஆஆ ஆஆஆ
எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஆ ஆ...ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
ஆ ஆ...தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
தாளாதம்மா நாள் முழுதும்
அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்

priya32
21st October 2010, 02:08 AM
பாடல்: பூங்காற்றே தீண்டாதே
திரைப்படம்: குங்குமச் சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சைத் தூண்டாதே
பூவிழி மாதிவள் நீ தொடும் போதிவள்
போராடும் எண்ணங்கள் தாங்காதே
என் பொன்மேனி கண்மூடி தூங்காதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சைத் தூண்டாதே

வெள்ளிரத மேகமே செல்லுகின்ற போதிலே
என் அருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இளம் பூங்கொடி காதலெனும் வியாதியில்
துன்பப்படும் சேதியை சொல்லிவந்து சேருவாய்
தேகத்தில் மோகத்தீ ஆறாமல்
தேய்ந்திடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
என் கண்ணன் கைசேர சொல்வாயோ
என் தூதை நீ சொல்ல செல்வாயோ
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சைத் தூண்டாதே

கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில் இன்பங்களடி
கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
மாதிவள் மான் இனம் பூவிதழ் தேன் இனம்
உண்ணாமல் ஏங்காதோ என் உள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும் உன் உள்ளம்

பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சைத் தூண்டாதே
பூவிழி மாதிவள் நீ தொடும் போதிவள்
போராடும் எண்ணங்கள் தாங்காதே
என் பொன்மேனி கண்மூடி தூங்காதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சைத் தூண்டாதே

priya32
21st October 2010, 06:32 PM
பாடல்: சொர்க்கமே என்றாலும்
திரைப்படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சி மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழி இல்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு
ஆட ஒரு ஓடை இல்லையே
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

மாடு கண்ணு மேய்க்க மேயுறதப் பார்க்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடுபுலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டைவண்டி ஓட்டி
கானம் பாட வழி இல்லையே
தோழிகளை அழைச்சி சொல்லிச் சொல்லி ரசிச்சி
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தைப்போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரப்போல ஊரும் இல்ல

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

priya32
21st October 2010, 11:05 PM
பாடல்: என் காதல் ஓடங்கள்
திரைப்படம்: அஞ்சாத நெஞ்சங்கள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ். ஜானகி

என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

தீயின் மீது வீழ்ந்த மீன் ஒன்று
தண்ணீரை மீண்டும் தேடும்
வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று
கிளை மீது என்று சேரும்
நீலவானில் ஜோடி மேகம்
போகும் போது சோக ராகம்
ஒரு கண்ணில் சலனம்
மறு கண்ணில் மௌனம்
சூரியன் ஏங்குது தாமரை தூங்குது

என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

பாவை நெஞ்சில் நூறு காயங்கள்
ஆறாமல் காதல் ஏது
கண்ணில் சோக ஆறு பாருங்கள்
கண்ணீரே எந்தன் தூது
கோதை வீடு சரிந்த போது
கோலம் போட வாசல் ஏது
கனவுகள் மீது உறங்கினள் மாது
நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள்

என் காதல் ஓடங்கள்
கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே
மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

priya32
22nd October 2010, 12:21 AM
பாடல்: என்னை அழைத்தது யாரடி
திரைப்படம்: ஒருவனுக்கு ஒருத்தி
இசை: வி.குமார்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே

வண்ணக்கிளியே என்னைக் காக்கும்
எண்ணம் ஏன் வந்ததோ
ஒரு விழி அழுதால் மறு விழி சிரிக்காது
உணர்வு ஒன்றல்லவோ
ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக
அன்பு மலர்கின்றதோ

என்னை அழைத்தது யாரது கண்ணா
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே

வெள்ளி நிலவைக் கையில் பிடிக்க
உள்ளம் நினைக்கின்றதே
பூமியில் வந்து சந்திர கிரணங்கள்
பூவை அணைக்கின்றதே
மாளிகை தனைத்தேடி வாசல் வரும் போது
வாசல் திறக்கின்றதே

என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே

priya32
22nd October 2010, 06:00 PM
பாடல்: பூத்த மல்லிகை
திரைப்படம்: நம்ம ஊரு நல்ல ஊரு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

ராகம் தனைத்தேடும் புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
ராகம் தனைத்தேடும் புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
சந்தோஷம்...ம்ம் கொண்டாடும்...ம்
சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்
நெஞ்சில் சுகம் கோடி தருமே

பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

கங்கை வரும் என்றே கடல் தேடுதே
தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே
கங்கை வரும் என்றே கடல் தேடுதே
தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே
பூங்காற்றும்...ம்ம் தேனாறும்...ம்
பூங்காற்றும் தேனாறும் பெண்பூவே
வாழ்வில் பிறை நாளில் வருமே

பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

tfmlover
25th October 2010, 10:24 AM
Song : Jal Jal Jallenum
Movie : Paasam
Music : Visvanathan Ramamurthy
Lyric : Kannadasan

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

காட்டினில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதைக் கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
ஜல் ஜல் ஜல் ...

அவன்தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடி விட்டேன்
முதன்முதல் திருடும் காரணத்தால்
முழுசாய் திருட மறந்துவிட்டேன்
ஜல் ஜல் ஜல் ...

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது !


ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...

tfmlover
25th October 2010, 08:41 PM
Song : Sandhanathil Nirameduthu
Music : Visvanathan Ramamurthy
Lyric : Kannadasan
SJ with GKV

சந்தனத்தில் நிறமெடுத்து
செண்பகத்தில் மணம் எடுத்து
குங்குமத்தில் பொதிந்த உடல்
இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல்
சந்தனத்தில் நிறமெடுத்து...

வண்ணமலர் இதழ் அணைத்து
வைத்திருக்கும் தேன் எடுத்து
உண்ண இன்னும் தயங்குவதேன்
நீர் உறக்கத்தில் மயங்குவதேன்
சந்தனத்தில் நிறமெடுத்து ..

மின்னலதில் இழை எடுத்து
கருமேகமதில் குழல் பதித்த***
என்னழகு கசிந்திருந்தால்
இனி யார் அழகில் கரும்பிருக்கும்
சந்தனத்தில் நிறமெடுத்து ..

கண் சிவக்கும் முகம் சிவக்கும்
கால் கட்டைவிரல் கோலமிடும்
பொன் சுமக்க உடல் தவிக்கும்
இந்தப் பெண் இருக்கும் இடம் இனிக்கும்

சந்தனத்தில் நிறமெடுத்து ..

priya32
26th October 2010, 06:16 PM
பாடல்: வண்ண வண்ண வண்ண
திரைப்படம்: பூட்டாத பூட்டுக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

லால்ல லால்ல லல லால்லா லலா லால்லா லலா
லல லல லாலா லல லல லாலா லால லால லாலா
வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே
வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே

சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
மஞ்சளின் திருநாள்...நிலவோ
அன்னநடை பின்ன சின்ன இடை வளைய
பெண்மையின் நாணம்...சிலையோ
ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
இது காலம் செய்த பிணைப்பு

ஹே...லல லல லா லா லா...லா லலா
லல லல லா லா லா...லா லலா
லா லல லல லால்லா லால்லா லால்லா லா
லா லல லல லால்லா லால்லா லால்லா லால்லா லா

மஞ்சளோடு மாலை சூடினர் மண நாள்
சேர்ந்தனர் மனதால்...உறவில்
கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
வளர்ந்தன வருடம்...கனவால்
பல நாள் உறவு பலன் வேண்டுமே
மழலை விரும்பும் மனம் பாரம்மா
என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
எதிர்காலம் தேடிச் சென்றாள்

வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே
வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
லால்லா லலா லால்லா லலா...லால்லா லலா லால்லா லலா

priya32
26th October 2010, 06:52 PM
பாடல்: கண்டேன் எங்கும்
திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே...அழைத்தேனே
வருவாய் அன்பே என்று இங்கே இன்று

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனிவாடை...விலகாதோ
நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளம் இல்லை கபடம் இல்லை
காவலுக்கு யாரும் இல்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்தம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு...இது தானே
எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

tfmlover
26th October 2010, 07:30 PM
Song : Kaatru Varum Kaalamondru
Movie : Naanum Manithanthaan
Music: G K Venkatesh
Lyric : Kannadasan or Panchu Arunachalam
SJ with PBS

காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
காதல் வரும் பருவம் ஒன்று
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று
காற்று வரும்..

வானில் வரும் நிலவும் ஒன்று
அதில் வளர்ந்து வரும் சுகமும் ஒன்று
கண்ணிரண்டின் காட்சி ஒன்று
கடவுளவன் ஆட்சி ஒன்று
காற்று வரும்...

ஆசையுடன் நெருங்கி வந்து
அணைத்திடவே துடித்ததொன்று
அன்றொரு நாள் அருகில் நின்று
அழகுடனே சிரித்ததொன்று
காற்று வரும்..
ஹா..ஹா..ஹா..

அன்புக்கரம் தந்து நம்மை
அணைத்திட ஓர் அண்ணா உண்டு
கருணைக்கரம் தந்து என்னை
காத்திட நீ கண்ணா உண்டு

காற்று வரும் காலம் ஒன்று..

tfmlover
26th October 2010, 08:06 PM
Song : Kaadhalin Ponveedhiyil
Movie :Pookkaari
Music: MSV
Lyric: Panju Arunachalam
SJ with TMS

காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..

tfmlover
27th October 2010, 03:13 AM
Song : Pagalil pEsum Nilavinaik kandEn
Movie:Sengamalatheevu
Music : K V Mahadevan
Lyric: Trichy ThyagaRajan or Egalaivan
SJ with TMS

பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்

மலையில் அருவி பாய்ந்தோடும்
ம*தியைக் க*ண்ட* க*ட*ல் பொங்கி எழும்
மங்கை உந்தன் முகமதி கண்டு
மனதில் இன்பம் பொங்கிடுதே
மனதில் இன்பம் பொங்கிடுதே
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

மாமலையாகி நீங்கள் இருக்க*
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
அன்புக் கடலாய் நீங்கள் இருக்க*
அமுதம் பொழியும் மதியாவேன்
அமுதம் பொழியும் மதியாவேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

துன்பம் தீர்ந்தது வாழ்வினிலே
இன்பம் வந்தது மனம் போலே
மணமாலை நாளை அணிந்திடுவோம்
ஹ்ம்..கனவு நனவாகி மகிழ்ந்திடுவோம்

...பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன் !

priya32
28th October 2010, 11:17 PM
பாடல்: காலைத் தென்றலில்
திரைப்படம்: மங்கை ஒரு கங்கை
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: எஸ்.ஜானகி

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
நீலப் பட்டிலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே...ஓஓ ஓஓ ஓஓஓஓ

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
நீலப் பட்டிலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே...ஓ ஓ ஓ

அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதைவிட பெரும் சுகம் நான் காண்பதேது
அதோ அந்த புது மலர் நானாகும் போது
அதைவிட பெரும் சுகம் நான் காண்பதேது
வெள்ளாடையில் தள்ளாடுதே முல்லைப்பூவின் தோழி
மனதில் வசந்தம் மலரில் சுகந்தம்
புது அலையாய் தவழ்ந்தேன் இளம் கவியாய் மலர்ந்தேன்
நானாக நானில்லையே...ஓ ஓ ஓ

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
நீலப் பட்டிலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே...ஓ ஓ ஓ

நிலா மகள் உலா வரும் வான்வீதி மேலே
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
நிலா மகள் உலா வரும் வான்வீதி மேலே
ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
கண்ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னைபூமி
இனிமை ஸ்வரங்கள் இயற்கை லயங்கள்
சுப ராகம் சுரக்கும் ஸ்ருதி தானே பிறக்கும்
காற்றாக நானில்லையே...ஓ ஓ ஓ

காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
நீலப் பட்டிலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே...ஓஓ ஓஓ ஓஓஓஓ

priya32
28th October 2010, 11:30 PM
பாடல்: வரலாமோ சுகம் பெறலாமோ
திரைப்படம்: ஆசை மனைவி
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி

வரலாமோ சுகம் பெறலாமோ
உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி
இதழ் தன்னோடு மனம் கொண்டாடும்
முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது
நான் வரலாமோ சுகம் பெறலாமோ

எதிர் பார்த்த காலம் ஒன்று
எதற்காக...இதற்காக
துயிலாத கண்ணில் இன்று
துயிலாத கண்ணில் இன்று
காதல்...துளிர்விடும் நேரம்
நான்...வரலாமோ சுகம் பெறலாமோ

இடைவேளை கொஞ்ச நேரம்
இனி ஏது...கிடையாது
இடையோடு தாங்கும் பாரம்
இடையோடு தாங்கும் பாரம்
கண்ணன்...இரு கரம் வாங்க
நான்...வரலாமோ சுகம் பெறலாமோ

பன்னீரில் நீந்திக் களித்து
களைப்பாற...கரை ஏற
பன்னீரில் நீந்திக் களித்து
களைப்பாற...கரை ஏற
வெந்நீரில் காலைக் குளித்து
வெந்நீரில் காலைக் குளித்து
காணும்...உறவுகள் வேண்டும்
நான்...வரலாமோ சுகம் பெறலாமோ
உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி

priya32
28th October 2010, 11:42 PM
பாடல்: வருவான் மோஹன ரூபன்
திரைப்படம்: பொன்னூஞ்சல்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள

வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

காதல் நிலவு பாதி இரவு
மயக்கத்தில் ஆடும் உலகம்
பிள்ளை போல் பாட்டு
வெள்ளித் தேர் ஓட்டு
முத்து வண்ணத் தென்றல்
என்னைத் தா...லா...ட்டுது

வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

வானம் திறந்து ஊர்வசி வந்தால்
வளைத்துக் கொள்வாயா அழகே
பெண்ணுக்கோர் கீதம்
கண்ணுக்கோர் பாடம்
கட்டிக் கொண்டு மெல்ல
மெல்ல சொ...ன்...னாலென்ன

வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள
வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

tfmlover
29th October 2010, 07:08 AM
Song : Paadath Therindhavar Paadungal
Movie : Pudhiya Vaazhkkai
Music : K V Mahadevan
Lyric : Kannadasan

பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்...

உற*வுகளாலே உலகங்கள்
உரிமைகளாலே இதயங்கள்
பரிவும் பாசமும் பந்தங்கள்
என் பாப்பா வழியே சொந்தங்கள்
பாடத் தெரிந்தவர் பாடுங்கள்...

தந்தையின் மனைவி தாயாவாள்
அவள் தாங்கிய மழலை சேயாவாள்
சிந்தனை செய்தேன் பொன்மகளே
நீ தெய்வம் தந்த என் மகளே

பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள் !

tfmlover
29th October 2010, 07:10 AM
Song : Kaalam EnnOdu VarumpOthu
Movie : Pudhiya Vaazhkkai
Music : K V Mahadevan
Lyric : Kannadasan

காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
காலம் என்னோடு வரும்போது ...

பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
தனிமை இல்லாமல் மறையும்
இனிமை என்றென்றும் மலரும்
அதுதான் உலகம்
தேடினேன் கை வந்தது
காலம் என்னோடு வரும்போது ...

விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் *வரவே
மனத்தில் எப்போதும் நிறைவே
வளரும் கொண்ட உறவே
அதுதான் உலகம்
தேடினேன் கை வந்தது

காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான் !


* debited or credited :confused2:

priya32
31st October 2010, 09:18 PM
பாடல்: அதிகாலை நேரமே
திரைப்படம்: மீண்டும் ஒரு காதல் கதை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
புது சங்கமம்...சுகம் எங்கிலும்
என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடு தான்...தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

priya32
31st October 2010, 09:22 PM
பாடல்: நினைத்தால் போதும் பாடுவேன்
திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

ஆ ஆ...நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

கேள்வி வரும் போது பதில் ஒன்று வேண்டும்
கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்
வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்
மனதை மனதாக நீ காண வேண்டும்

ஆ ஆ...நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

tfmlover
1st November 2010, 02:49 AM
wonderful priya.. your நினைத்தால் போதும் பாடுவேன்
'a must SJ MSV Kannadasan # ,an immortal classic
i remember listening /watching ? and it had an extra verse too that goes like

காலம் என்னாளும் முறையானதல்ல*
காதல் என்னாளும் தவறானதல்ல*
நாளை இந்நேரம் நீ மாறக்கூடும்
நடந்த நினைவோடு நான் வாழக்கூடும்

Regards

tfmlover
1st November 2010, 10:13 AM
Song : Podhigaimalai UchiyilE Purappadum Thendral
Movie : Thiruvilaiyaadal
Music: K V Mahadevan
Lyric: Kannadasan
SJ with PBS

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
இந்தப் பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை ...

கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை ...

வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்​யும் தளிர்மணித் தென்றல்
அது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ...

no SJ collection would be complete without this masterpiece

madhu
1st November 2010, 02:49 PM
முத்ல் பக்கத்தில் பாடல்களின் இண்டெக்ஸ் போட்டு விட்டால் எந்தப் பாட்டு இருக்கிறது அல்லது பதியலாம் என்று தெரிந்து கொள்ள முடியுமே !

பிரியா... கொஞ்சம் கவனிங்க !

priya32
1st November 2010, 06:51 PM
Madhu,

முதல் பக்கத்தில், முதல் போஸ்டுக்கு கீழே 'Index of songs' irukku paarunga! :)

http://forumhub.mayyam.com/hub/lyrsort.php?t=14891

priya32
1st November 2010, 11:30 PM
பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மஹராணி
திரைப்படம்: தீபம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எஸ்.ஜானகி

அந்தப்புரத்தில் ஒரு மஹராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மஹராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ணக் கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ணக் கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காளை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மஹராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

priya32
2nd November 2010, 06:58 AM
பாடல்: வைகை நீராட
திரைப்படம்: சின்னஞ்சிறு கிளியே
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகளாட
மடியில் எனை நீ தாலாட்ட
வைகை நீராட

உனக்கென நானும் எனக்கென நீயும்
படைத்தவன் வானம் பறந்துவிட்டானா
ஆஆஆ ஆஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ
விழிகளில் தோன்றி
விழிகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீரும்
மறையும் கண்ணே உன் முகம் பார்த்தால்
மறப்பேன் உலகை உன்னுடன் சேர்ந்தால்

வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகளாட
மடியில் எனை நீ தாலாட்ட
வைகை நீராட

மறுமுறை நானும் பிறந்திட வேண்டும்
மஞ்சள் குங்குமம் நீ தர வேண்டும்
ஆஆஆ ஆஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ
இனி வரும் ஜென்மம்...ம்ம்ம் ம்ம்ம்
இனி வரும் ஜென்மம் எந்நாளும் ஒன்றாக
இணையும் வரமே இறைவனைக் கேட்பேன்
இனிமை நினைவில் உன்னுடன் வாழ்வேன்

வைகை நீராட...ஆஆ ஆ
வானில் தேரோட...ஆஆ ஆ
மனதினில் நீயாட மாலைகளாட...ஆஆ ஆஆ
மடியில் எனை நீ தாலாட்ட...ஆரீரோ ஆராரோ
ஆரீரோ ஆராரோ...ஆரீரோ ஆராரோ

tfmlover
2nd November 2010, 09:56 AM
வைகை நீராட rare # priya :)
சின்னஞ்சிறு கிளியே movie lyrics by Gangai Amaran

Regards

madhu
2nd November 2010, 06:19 PM
பாடல் :வசந்தமும் நீயே
படம் : கண்ணீர்ப் பூக்கள்
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : சங்கர் - கணேஷ்

வசந்தமும் நீயே... மலர்களும் நீயே
இளமாலையில் விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

(வசந்தமும்)

மாலை நான் மலரானவள்
மார்பில் தேன் நதியானவள்
நாளும் நீ அதில் நீந்தவும்
தேடும் ஓர் கரை காணவும்
நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள் தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும்.. மருவுவதும்..
நூறாண்டு காலங்கள் நாம் காணலாம்

(வசந்தமும்)

ஆடை ஏன் கலைகின்றது
ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது
தேகம் ஏன் சுடுகின்றது
ஏன் இந்த மாயங்கள் யார் தந்தது
ஈரேழு ஜன்மங்கள் எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள் இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ..

(வசந்தமும்)

தீபங்கள் எரிகின்றன
தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது
ஆனந்தம் வருகின்றது
செவ்வானம் தேன் மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில் இசை எழுந்தது துயில் கலைந்தது
உயிர் கலந்தது தனை மறந்தது
காணாத பேரின்பம் நான் காண்கிறேன்

(வசந்தமும்)

tfmlover
2nd November 2010, 07:26 PM
arumai madhu , Pulamaipithan wrote 'வசந்தமும் நீயே

Regards

saradhaa_sn
2nd November 2010, 09:00 PM
பாடல்: நினைத்தால் போதும் பாடுவேன்
திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

ஆ ஆ...நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

கேள்வி வரும் போது பதில் ஒன்று வேண்டும்
கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்
வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்
மனதை மனதாக நீ காண வேண்டும்

ஆ ஆ...நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

(Lyrics section நடுவில் இப்படி ஒரு கட்டுரை எழுதியமைக்காக 'பிரியா, மது, மற்றும் tfmlover' மன்னியுங்கள். ஆனால் எழுதியே தீர வேண்டும்)

'நினைத்தால் போதும் பாடுவேன்' அருமையான தேர்வு.

உண்மைதான். சில படங்களில் ஒருசில பாடல்கள் ஓகோ என்று HIT ஆகும்போது, சில நல்ல மெலோடியஸ் பாடல்கள் பின்னால் தள்ளப்படுவது வாடிக்கை.

உதாரண்மாக 'எங்க வீட்டுப் பிள்ளையி'யில் "நான் ஆணையிட்டால்" பாடல் சூப்பர் HIT ஆக, அதைத்தொடர்ந்து 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடலும் 'குமரிப்பண்ணின் உள்ளத்திலே' பாடலும் மக்களால் பேசப்பட, அருமையான மெலோடியான 'மலருக்கு தென்றல் பகையானால்' பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அதுபோலவே, குடியிருந்த கோயில் படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்ட்" சூப்பர் HIT ஆக, தொடர்ந்து 'துள்ளுவதோ இளமை', பின்னர் 'நான்யார் நான்யார்', 'நீயேதான் எனக்கு மணவாட்டி' மற்றும் 'என்னைத்தெரியுமா' பாடல்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்க, அருமையான மெலோடியான "குங்குமப்பொட்டின் மங்கலம்" பாடல் நிழலில் தள்லப்ப்பட்டது.

நான் மேற்சொன்ன பாடல்களில் எந்த ஒன்றும் அடுத்ததற்கு சளைத்ததல்ல. அத்தனையுமே தேன் சொட்டும் பாடல்களே. ஆனால் ரேஸில் ஓடும்போது சில நல்ல பாடல்கள் பின் தங்கி விடுகின்றன (அல்லது தங்க வைக்கப்படுகின்றன).

அப்படி ஒரு நிலைமைதான் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் இடம் பெற்ற "நினைத்தால் போதும் பாடுவேன்" என்ற அற்புதப் பாடலுக்கும் நேர்ந்தது. ஏன் அப்படி?. கதாநாயகனும் கதாநாயகியும் இடம் பெறாத பாடல் என்பதாலா?.

தமிழ்த்திரையிசையிலேயே வித்தியாசமாகப் படமாக்கப்பட்ட "பூ முடிப்பாள் இந்தப்பூங்குழலி" பாடலுக்கும், அருமையான டூயட் பாடலான 'முத்துக்களோ கண்கள்' பாடலுக்கும் (இன்றும் இந்தப்பாடலைப்பாடாத மேடை ஆர்க்கெஸ்ட்ராக்களே கிடையாது), சோகத்தைபிழிந்து தரும் 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' பாடலுக்கும் நடுவே
'கண்னன் வரும் நேரமிது' பாடலும்
'நினைத்தால் போதும் பாடுவேன்' பாடலும்
சற்று ஒதுக்கி வைக்கப்பட்டன என்பது வேதனையான உண்மை.
ஆனால் தரத்தில் எந்தப்பாடலுக்கும் இவை குறைந்தவை அல்ல.

'மெல்லிசை மன்னரின்' இசையில் எஸ்.ஜானகி அவர்கள் பாடிய ஏராளமான அருமையான பாடல்களில் ஒன்று இது. (மெல்லிசை மன்னரின் இசையில் ஜானகி அவர்கள் பாடிய இசைக்கடலின் சில துளிகளை வேறொரு இடத்தில் பட்டியலிட்டிருக்கிறேன். காரணம், எந்த தொலைக் காட்சியில் யார் தோன்றி எஸ்.ஜானகியைப் பற்றிப் பேசினாலும் 'எஸ்.ஜானகி என்ற ஒரு பாடகி பிறந்ததே 1976க்குப்பின் தான் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட மாயை பரப்பப் பட்டு வருகிறது).

எடுத்த எடுப்பிலேயே பஞ்சமத்தில் துவங்கும் பாடல் இது.

நினைத்தால் போதும் பாடுவேன்
அனைத்தால் கையில் ஆடுவேன்
(அப்படியே ஸ்தாயி இறங்கி)
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்னை மாற்றுவேன்

தொடர்ந்து இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளுட் உடன் தபேலா. சட்டென்று இவை நின்று (சிவாஜி துப்பாக்கியுடன் ஓடிவரும் காட்சியை காட்டும்போது) வெறும் வயலின் மட்டும், பின்னர் காட்சி மாறி கீதாஞ்சலியின் நடனத்தைக் காட்டும்போது மீண்டும் ஃப்ளூட் மற்றும் தபேலா, மீண்டும் அதே பிட்டை வயலினில் வாசித்து நிறுத்த, சோலோவில் தபேலா, தொடர்ந்து ஜானகியின் நீண்டHUMMING சட்டென்று வயலின் அழுத்தலோடு பாடல் சரணத்துக்குள் நுழைய..... அப்பப்பா என்ன ஒரு இடையிசை....!!!!

பாலின் நிறம் போன்ற அழ்கான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும்போது எல்லோர்க்கும் சொல்ல

ஆகா... எஸ்.ஜானகியின் குரலில்தான் என்னென்ன மாடுலேஷன்கள். மெட்டமைத்தவர் யார். மெல்லிசை மன்னரல்லவா?

பாடலின் இறுதியில் வரும் நீண்ட வயலின் மற்றும் ஜானகியின் நீண்ட HUMMING படத்தில் இடம் பெற்றிருந்தபோதிலும், சிவாஜி கே.ஆர்.விஜயாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தொலைவில் ஒலிப்பதாக காட்டப் படுவதால், சற்று மாற்றுக் குறைந்து விடுகிறது.

ஸ்ரீதர் ஏன் இப்படி செய்தார் என்பதுதான் விளங்கவில்லை.

இப்பாடலில் கீதாஞ்சலியின் நடனம் கண்ணுக்கு அருமையான விருந்து. அதுவும் ஒரே ஷாட்டில் அவர் சுழன்று சுழன்று ஆடும்போது அருமையோ அருமை.

tfmlover
2nd November 2010, 09:07 PM
Song : Kaatchiyum Neethaan Kartpanaiyum Neethaan
Movie : Ennaippaar
Music : T G Lingappaa
Lyric : Thanjai N. Ramiah Dass
SJ with T R Mahalingam

ஆஆஆ..ஆஆஆ..ஆஆ..
காட்சியும் நீதான்
கற்பனையும் நீதான்
கண்வழியே புகுந்து
கருத்தினிலே விளையாடும்
காட்சியும் நீதான்...

நெஞ்சின் நினைவில் வந்து
நேசக் கதை பேசும்
கொஞ்சும் மொழியாலே
காதல்வலை வீசும்
காதல்வலை வீசும்
அழகின் பிம்பமே
அழியா இன்பமே
ஆசைக் கடலினிலே
அலையெனவே விளையாடும்
காட்சியும் நீதான்..

தென்றல் குழுமைதனை
பார்வையிலே காட்டும்
தேனின் இனிமைதனை
சொல்லினிலே கூட்டும்
தேனின் இனிமைதனை
சொல்லினிலே கூட்டும்
பெண்கள் திலகமே
எந்தன் உலகமே
இன்பம் நான் பெறவே
என் மனதில் விளையாடும்
காட்சியும் நீதான்..


முழங்கு இசையமுதால்
உள்ளமதை தீண்டும்
முல்லை மலர் சிரிப்பால்
புது உணர்வைத் தூண்டும்
முத்தமிழ் செல்வமே
மோகனவே வடிவமே
சித்திரம்போல் படிந்து
சிந்தனையில் விளையாடும்

காட்சியும் நீதான்
கற்பனையும் நீதான்
கண்வழியே புகுந்து
கருத்தினிலே விளையாடும்
காட்சியும் நீதான் !

tfmlover
2nd November 2010, 11:01 PM
Song : Pournami Nilavil
Movie : Kannippenn
Music : MSV
Lyric : Vaali
SJ with SPB

பௌர்ணமி நிலவில்
பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
கதைகதையாக படிப்போமா
கதைகதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ ம*துரையிலே
பிள்ளைத் த*மிழோ ம*ழ*லையிலே
நீ பேசும் த*மிழோ விழிக*ளிலே
நெஞ்ச*ம் முழுதும் க*விதை எழுது
கொஞ்சும் இசையை ப*ழ*கும் பொழுது
துள்ளும் இள*மைப் ப*ருவ*ம் ந*ம*து
தொட்டுத் த*ழுவும் சுக*மும் புதிது
கண்பார்வையே உன் புதுப் பாடலா?
பொன்வீணையே உன் பூமேனியோ

பிள்ளைப்பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னிபருவம் என்வடியில்
காலம்முழுதும் உன் மடியில்
பன்னீர் மழைதான் விழிமேல் பொழிய*
தண்ணிர் அலைபோல் குழல்போல் நெளிய*
தன்னம்தனிமை தணல்போல் கொதிக்க*
தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க*
பொன்னோவியம் என் மனமேடையில்
சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்

பௌர்ணமி நிலவில்
பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கதின் நிலையில்
கதைகதையாக படிப்போமா
கதைகதையாக படிப்போமா ?

priya32
3rd November 2010, 12:10 AM
saradhaaji,

Please feel free write details about the songs, so that people like me would benefit reading about the song besides only plain lyric! :)

TFMLover,

Thanks for the details! :)

priya32
3rd November 2010, 12:14 AM
பாடல்: வைகை கரையினில்
திரைப்படம்: நட்சத்திரம்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்

வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை

வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை

காவல் இல்லாமல் இருக்கின்றது
அது கவலை இல்லாமல் பறக்கின்றது
காவல் இல்லாமல் இருக்கின்றது
அது கவலை இல்லாமல் பறக்கின்றது
போதையிலே அது விழுந்ததில்லை
போதையிலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை

வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை

பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தென இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தென இருப்பதுண்டு
தன் கடமையைத்தான் அவள் நினைப்பதுண்டு

வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை

ஒரு வகை ஸ்வரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
ஒரு வகை ஸ்வரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
மங்கல விருந்தால் சுப ராகம்
மங்கல விருந்தால் சுப ராகம்
நல்ல மங்கையர் வாழ்வில் அனுராகம்

வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை

வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை

priya32
3rd November 2010, 12:53 AM
பாடல்: கிண்ணத்தில் தேன் வடித்து
திரைப்படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்

நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்

ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
மெத்தைமேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்

யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
விண்ணிடை வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலைவரை பேசிடும் காதல் கதை

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்

priya32
3rd November 2010, 01:27 AM
பாடல்: அழகிய கண்ணே
திரைப்படல்: உதிரிப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்திரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
அழகிய கண்ணே உறவுகள் நீயே

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலை மோதுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

priya32
3rd November 2010, 01:41 AM
பாடல்: ராசாவே ஒன்ன நம்பி
திரைப்படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊருசனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக
தரும மஹராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நெலான்னுதான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டித்தேரு
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல எம் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ள பேச்சு

ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

priya32
3rd November 2010, 07:05 AM
பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழகிய கண்ணே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கு போதும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு உன் எண்ணம் ஒன்றாகும்
இனி என்ன நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதேதோ என் நெஞ்சில் கூடட்டும்

இனி என்ன நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

priya32
3rd November 2010, 05:42 PM
பாடல்: தென் இலங்கை மங்கை
திரைப்படம்: மோஹனப் புன்னகை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.விஸ்வநாதன்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல்
என் மீது பாய்கின்றதோ
ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல்
தானென்று எண்ணி தரை வந்து சேரும்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம்
தாய் போல தாலாட்டுதோ
ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம்
பூம்பாவை நெஞ்சில் புதுக்கோலம் போடும்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

priya32
3rd November 2010, 06:06 PM
பாடல்: அந்த இந்திர லோகமே
திரைப்படம்: பொண்ணு புடிச்சிருக்கு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: எஸ்.ஜானகி

அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே

அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே

நாளை விடிகாலையில் நாதாஸ்வர ஓசையில்
மாலை இடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும் போதிலே
அடடா எனக்கேன் ஏதும் சொல்லத் தோணலே
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே

அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே

சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையா
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவா விழிச்சேன் அந்த ராசா காணலே
அதனால் எனக்கேன் இரு கண்ணும் மூடலே
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடைக் காத்துலே

அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே

madhu
3rd November 2010, 06:46 PM
பாடல் : காலைப்பொழுது விடிந்தது
படம் : ராஜராஜேஸ்வரி
குரல் : எஸ்.ஜானகி

காலைப்பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப்போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களைப்போலே
இது வசந்தகாலமோ என் இளமைக்கோலமோ

( காலைப்பொழுது )

இளைய தென்றல் மென்காற்று எனக்கு சொல்லும் நல்வாழ்த்து
அருவி கூட தாளம் போட்டு அசைந்து செல்லாதோ
முகத்தில் செந்தூரம் மனதில் சந்தோஷம்
சகல சௌபாக்கியம் நிலைக்கும் எந்நாளும்

( காலைப்பொழுது )

மதுரை அன்னை மீனாட்சி மனது வைக்கும் நாளாச்சி
அமிர்த யோகம் நாளை என்று எழுதி வச்சாச்சி
விழியில் மையோடு வளையல் கையோடு
ஒருவன் நெஞ்சோடு உறவு கொண்டாடு

( காலைப்பொழுது )

நினைத்ததெல்லாம் நன்றாகும் நிறைந்த இன்பம் உண்டாகும்
மனது போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ
இனிய சங்கீதம் இதயப் பண்பாடு
தினமும் நன்னாளே எதிரில் கண்டேனே

( காலைப்பொழுது )

madhu
3rd November 2010, 06:53 PM
பாடல் : இனிமேல் நாளும்
படம் : இரவுப்பூக்கள்
இசை : இளையராஜா
குரல் : எஸ்.ஜானகி

இனிமேல் நாளும் இளங்காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம். என் காதல் சொந்தம்
கை கூடும்...........

( இனிமேல் )

பெண்ணென்று வாழாமல் சிலையாய் வாழ்ந்தேன்
கண்காண முடியாமல் பிறையாய்த் தேய்ந்தேன்
நீ வந்த நேரம்.. நீங்காத பாரம்
சருகாய்க் காய்ந்து மெழுகாய்த் தேய்ந்து
போகும் என் பாவம் இந்நேரம்....

( இனிமேல் )

என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்
என் வாழ்வின் அலங்காரம் உந்தன் தாளம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
வளர்பிறையாக வளரும் காலம்
கீதம்.. சங்கீதம்.. சந்தோஷம்....

( இனிமேல் )

priya32
3rd November 2010, 06:56 PM
பாடல்: தூரத்தில் நான் கண்ட
திரைப்படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேங்குழல் நாதமும் கீதம்
ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதம் ம்ம்ம்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
அய்யன் உன் தஞ்சம் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா
மீரா...மீரா...மீரா...மீரா
வேளை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்
தான னான தான னான
கவலை யாவும் மாற வேண்டும்
தான னான தான னான
கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விதி வரும்
அதில் உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் ம்ம்ம்

madhu
3rd November 2010, 07:11 PM
பாடல் : சிரிக்கின்ற முகத்தை
படம் : முரடன் முத்து
இசை : டி.ஜி.லிங்கப்பா
பாடியவர் : எஸ்.ஜானகி

சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்
தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
குறுகுறு என்னும் பார்வையிலே
கொஞ்சும் நெஞ்சை சிறை செய்வேன்

சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்

தங்க நிலாவால் முகம் செய்வேன் - இரு
தாமரைப்பூவால் விழி செய்வேன்
செங்கரும்பாலே இதழ் செய்வேன்
செங்கரும்பாலே இதழ் செய்வேன் - சிட்டுச்
சிறகினை எடுத்தே இமை செய்வேன் - சிட்டுச்
சிறகினை எடுத்தே இமை செய்வேன்

சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்
தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்

கோபுரத்தில் அந்த மணியை வைத்தான் - ஒரு
குடிசையிலே என் செவியை வைத்தான்..
ஆஆஆ... ஆஆஆ..
கோபுரத்தில் அந்த மணியை வைத்தான் - ஒரு
குடிசையிலே என் செவியை வைத்தான்..
காதல் மணியின் ஓசையிலே
காதல் மணியின் ஓசையிலே
நான் கலந்து விட்டேன் அவன் ஆசையிலே
நான் கலந்து விட்டேன் அவன் ஆசையிலே

சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்
தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்

priya32
4th November 2010, 06:30 PM
பாடல்: பூங்கொடியே பூங்கொடியே
திரைப்படம்: ஸ்கூல் மாஸ்டர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பூங்கொடியே...பூங்கொடியே

பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைகட்டி மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனதில் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
போதாதோ...போதாதோ...போதாதோ
பொன்னைக் கொண்டு மாலைகட்டி
மாலையிட வருவாயோ...மாலையிட வருவாயோ

கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடி விட்டேன்
கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஒட்டி விடும்
கன்னங்களில் என்னென்னவோ மின்னல் விளையாடும்
தாங்கவோ...தழுவவோ..உண்ணவோ...உருகவோ
வருஷம் மாதம் போகப்போக வளரும் ஆசை
தீராது...தீராது...தீராது

பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைகட்டி மாலையிட வருவாயோ

பூமியிலே வானம் வந்து போதைகொண்டு சேர்ந்துவிடும்
சேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்தினால் பிள்ளைகள் போல் முல்லை விளையாடும்
எடுக்கவோ...தொடுக்கவோ...கொடுக்கவோ...முடிக்கவோ

பெண்ணின் மனதில் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
போதாதோ...போதாதோ...போதாதோ
பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைகட்டி
மாலையிட வருவாயோ...மாலையிட வருவாயோ

priya32
5th November 2010, 07:46 AM
பாடல்: சிங்கார வேலனே தேவா
திரைப்படம்: கொஞ்சும் சலங்கை
இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
பாடியவர்: எஸ்.ஜானகி

சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தே...வா
அருள் சீராடும் மார்போடு வா..வா
சிங்கார வேலனே தே...வா
சிங்கார வேலனே தே...வா

செந்தூரில் நின்றாடும் தேவா
திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அருள் சிங்கார வேலனே தேவா

செந்தமிழ் தேவனே சீலா
செந்தமிழ் தேவனே சீ...லா
விண்ணோர் சிறைமீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே...வா
ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா
நிஸ நித பம...கம கரி ஸநி...ஸநி ஸக மப
மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...மம பப நிநிஸ
ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா
கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா...ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஸநிஸ மக மப கம பநி ஸரி....ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா
பநிப நிஸ ரிஸா...மக பம
ஸரிநி...நிஸபா...ஸரிஸநி...ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
.................................................. ..........................
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா
சிங்கார வேலனே தேவா

madhu
6th November 2010, 05:27 PM
பிரியா..

ஸ்வரங்கள் முழுசா இல்லாத மாதிரி தோணுதே.. !

priya32
7th November 2010, 06:01 AM
Madhu,

The last set of Swaram in the song is blended with nadhaswaram, ippOdhaikku puLLi vachchi adhOda niRuththi irukkEN.

ennaikku Sawaram puriyudhO, annaikku ezhudhi edit paNNuREn!

Sreesharan
14th December 2010, 07:12 PM
[tscii:3803260a3c]படம் : வசந்தராகம்
இசை : M.S. விஸ்வநாதன்
பாடல்: கண்ணன் மனம் என்னவோ

கண்ணா… கண்ணா…. கண்ணா…
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில்
எனைக் கொண்டுச் சேர்ப்பான்
மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள்
ஒன்றாகக் கேட்பான்
கார்கூந்தல் தனை நிவுவான் அதில்
கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால்
முத்தெடுப்பான். வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என்
நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில் நடு ஜாமத்தில்
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடி பாயும்
மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே[/tscii:3803260a3c]

Sreesharan
16th December 2010, 12:15 PM
படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா
ஆண்டு: 1988
பாடல்: ஒரே முறை உன் தரிசனம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்

ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா

வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

priya32
28th December 2010, 04:22 AM
Welcome to SJ's Lyric thread Sreesharan! :)

Please check your PM!

priya32
28th December 2010, 04:22 AM
பாடல்: பூவே பனிப்பூவே
திரைப்படம்: நிலவு சுடுவதில்லை
இசை: இளையராஜா

பூவே பனிப்பூவே நானும் மலர்தானே
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப்பூவே நானும் மலர்தானே

என் மேனி ஏன் இளம் பனியினில் வேகுது
உன்னோடு பேசவே மொழியும் நாணுது
என் மேனி ஏன் இளம் பனியினில் வேகுது
உன்னோடு பேசவே மொழியும் நாணுது
பூக்கோலம் கண்ணில் கண்டு ஏங்குதே மனம்
பார்க்காத நாளில் நெஞ்சம் தூங்குமா இனி
கண்ணோடு சல்லாபம்...எந்நாளும் உல்லாசம்

பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப்பூவே நானும் மலர்தானே

காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன்
ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன்
காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன்
ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன்
உன் மாலை மார்பில் சூடும் நாளைத் தேடியே
பொன் மேக வானில் பாடும் வானம்பாடி நான்
நெஞ்செல்லாம் சங்கீதம்...நாளெல்லாம் சந்தோஷம்

பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப்பூவே நானும் மலர்தானே

priya32
28th December 2010, 04:46 AM
பாடல்: கனவுகளே ஊர்கோலம் எங்கே
திரைப்படம்: சாமந்திப்பூ
இசை: இளையராஜா

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று

தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
தேடும் பாதையில் சில நேரம் ஆனது
தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
தேடும் பாதையில் சில நேரம் ஆனது
திரும்பும் பொழுது அந்த தேவனின் நினைவு
சொல் தீயாகித்தான் வாட்டுதே
இவள் மோகத்தை மீட்டுதே

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே

எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே
ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே
தவிக்கும் வயதில் தணியாதது நினைவு
கண் மூடாமல்தான் தூங்குமோ
கண நேரம் யுகம் ஆகுமோ

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று

priya32
28th December 2010, 05:25 AM
பாடல்: என் ராகங்கள்
திரைப்படம்: முதல் இரவு
இசை: இளையராஜா

என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
ஆஆ ஆஆஆ...லால லல்ல லால லல்ல லல லலா
பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
கிள்ளைகளே...பேசுங்களே
கிள்ளைகளே பேசுங்களே என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாண ஊர்கோலம் கொண்டாட

என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
காதல் மகள்...ராதை தந்தாள்
காதல் மகள் ராதை தந்தாள் என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னூஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அத்தானிடம்...பேசுங்களேன்
அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்கு தாலாட்டு

என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

Sreesharan
28th December 2010, 03:56 PM
பாடல்: பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
படம்: அக்னி பார்வை
ஆண்டு: 1992
இசை: இளையராஜா

பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தேனே பண்பாடு ஒய்யா ஒய்யர ஒய்யா
அந்த ராமனைப் போலே இந்த பூமியின் மேலே

இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா

ஶ்ரீராமன் ஜானகி நீங்காத நாயகி நான் தான் அன்பே
பூர்வீக பந்தமும் தெய்வீக சொந்தமும் உன்னால் கண்டேன்
நேசம் எனும் காவியம் பேசும் உயிர் ஓவியம்
உனை நீங்குமா கண் தூங்குமா ஜீவன் நீயே

இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா ஒய்யா ஒய்யர ஒய்யா

தாயாகும் ஓர் வரம் நான் கேட்க நீ தரும் நாள் தான் கூட
பேர் சொல்ல ஓர் மகன் சீர் கொள்ள ஓர் மகள்
தோள் மேல் ஆட
வாங்கும் உயிர் மூச்சிலும் பேசும் தமிழ் பேச்சிலும்
இளம் பாவை தான் உன் பேரைத் தான் நாளும் பாடும்

இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தேனே பண்பாடு ஒய்யா ஒய்யர ஒய்யா
அந்த ராமனைப் போலே இந்த பூமியின் மேலே

இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா ஒய்யா ஒய்யர ஒய்யா

priya32
22nd February 2011, 06:31 AM
பாடல்: அதிகாலை சுகவேளை
திரைப்படம்: நட்பு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & கே.ஜே.யேசுதாஸ்

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

அன்பே வா வா அணைக்க வா
நீ நிலவுக்கு பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்கு திறப்புவிழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
இதழ் ஓரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப் போகக்கூடாதே

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

தென்றல் வந்து தீண்டினால்
இந்த தளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னை சேர்ந்த உன் உள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

priya32
22nd February 2011, 07:28 AM
பாடல்: மதுக்கடலோ
திரைப்படம்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை

மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை...நீயே சீதை

கண்ணாலே உனைப்பார்த்த நேரம்
இன்று என் வாழ்வில் ராஜ யோகம்
உன் வாசல் நான் தேடி வந்தேன்
நெஞ்சில் பொன்வீணை மீட்ட வந்தேன்
உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
உந்தன் பார்வை புது மோஹ ராகம்

மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை

கள்ளூறும் ரோஜாவை பாராய்
தொட்டு விளையாட ஓடி வாராய்
உன் கூந்தல் நிழலோரம் நானே
கொஞ்சம் இளைபாற வேண்டும் மானே
உந்தன் தோள்மீது கிளியாக வேண்டும்
உந்தன் தோள்மீது கிளியாக வேண்டும்
உந்தன் மார்பில் உறவாட வேண்டும்

மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை

priya32
18th July 2012, 05:47 AM
பாடல்: அந்தரங்கம் நான் அறிவேன்
திரைப்படம்: கங்கா கௌரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பி.பி.ஶ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகி

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
வந்த வழி நான் அறிவேன் மங்கை எனை நீ அறிவாய்
வந்த வழி நான் அறிவேன் மங்கை எனை நீ அறிவாய்
அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

தேடி வந்த சிலையைக்கண்டு மூடிக்கொண்ட கண்கள்
இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்
தேடி வந்த சிலையைக்கண்டு மூடிக்கொண்ட கண்கள்
இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்

மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
என் மன்னவா உண்மை சொல்லவா
பெண்மை அல்லவா என்னை வெல்லவா
அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி
உன்னைத்தான் நினைந்து தழுவிக்கொள்ளும் தேவன் இவன் ஆவி
தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி
உன்னைத்தான் நினைந்து தழுவிக்கொள்ளும் தேவன் இவன் ஆவி

அறிவேனே சாகசங்கள் இதுவரையில் போதும்
அறிவேனே சாகசங்கள் இதுவரையில் போதும்
அலைமோதும் காதலுடன் பூமகளைப் பாரும்
அலைமோதும் காதலுடன் பூமகளைப் பாரும்
என் மன்னவா உண்மை சொல்லவா
பெண்மை அல்லவா என்னை வெல்லவா

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

priya32
25th July 2012, 06:56 AM
பாடல்: பூமகள் மேனி துளிர்விடும் காலம்
திரைப்படம்: ஞாயிறும் திங்களும்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்
தடுமாறும் காலம் இதுவல்லவோ
கந்தன் என்னை ஆளும் காலம்
கனிவான காலம் இதுவல்லவோ

கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்
தடுமாறும் காலம் இதுவல்லவோ
கந்தன் என்னை ஆளும் காலம்
கனிவான காலம் இதுவல்லவோ

காவலில் நின்ற பாவை என் எண்ணம் மலர்ந்த காலம்
காவலன் வேலன் நாயகன் என்னை அறிந்த காலம்
கோவிலில் தெய்வம் குடிகொள்ள வந்த குளிர்ந்தகாலம்
குடைபோல நாணம் படைகொண்டு மூடும் வசந்தகாலம்

பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்
உறவாட வந்த நேரத்திலே
அண்ணல் வேலன் தன்னைத் தந்தான்
அறியாத பாவை இதயத்திலே

அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்
உறவாட வந்த நேரத்திலே
அண்ணல் வேலன் தன்னைத் தந்தான்
அறியாத பாவை இதயத்திலே

மாதர்கள் சேர்ந்து மங்கலம் பாடும் வசந்தகாலம்
மாதர்கள் சேர்ந்து மங்கலம் பாடும் வசந்தகாலம்
மார்கழி திங்கள் பேர்பெறும் காலம் வசந்தகாலம்
வாவென சொல்லி தழுவிடும் காலம் வசந்தகாலம்
வண்டாடும் தென்றல் பண்பாடும் காலம் வசந்தகாலம்

பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

priya32
25th July 2012, 07:39 AM
பாடல்: இங்கே இங்கே இங்கே
திரைப்படம்: மாடிவீட்டு ஏழை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர்

இங்கே...இங்கே...இங்கே
இன்ப உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
இனிமை இனிமை அது கொள்ளை இங்கே
இங்கே...இங்கே...இங்கே

சிம்ம குரல்கொண்ட கலைஞன் இங்கே
ராஜநடை போடும் மறவன் இங்கே
சிம்ம குரல்கொண்ட கலைஞன் இங்கே
ராஜநடை போடும் மறவன் இங்கே
நவரச பாவனை நடிகன் இங்கே
நல்ல மனிதர்களில் ஒருவன் இங்கே

இன்ப உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
இனிமை இனிமை அது கொள்ளை இங்கே
இங்கே...இங்கே...இங்கே

மஞ்சள் வண்ண மாங்கனி
மின்னல் இடை மோகினி
முத்து மணி பைங்கிளி
தத்தி வரும் பூங்கொடி
ஆடும் உன்னோடு தான்
ஆடும் உன்னோடு தான்

கன்னி என்னும் தாமரை
கன்னம் அதில் தேன்மழை
சின்னஞ்சிறு பூநகை
சிந்துகின்ற மேனகை
பாடும் பண்ணோடு தான்

உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம்
தன்னை மறந்தது தோகை கொஞ்சம்
நல்ல இளமையின் வேகம் இங்கே
உள்ள வீணையின் ராகம் அங்கே
இங்கே...இங்கே...இங்கே

மொட்டு விட்ட மல்லிகை
தொட்டு விடச் சொன்னது
கிட்ட வந்த தென்றலோ
எட்டி எட்டி சென்றது
ஏக்கம் என்னாவது
ஏக்கம் என்னாவது

அத்தை பெற்ற பிள்ளையோ
அள்ள அள்ள கண்மணி
மெத்தை இடச் சொல்வதோ
என்னை இந்த பொன்மணி
மோகம் பொல்லாதது

மங்கை பிறந்தது நீதான் கொஞ்ச
நாணம் பிறந்தது நான்தான் கெஞ்ச
கன்னி மலருக்கு நானா தென்றல்
மஞ்சள் நிலவுக்கு நானா மேகம்
இங்கே...இங்கே...இங்கே

இன்ப உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
இனிமை இனிமை அது கொள்ளை இங்கே

priya32
29th July 2012, 05:05 AM
பாடல்: பொன்வானம் பன்னீர் தூவுது
திரைப்படம்: இன்று நீ நாளை நான்
இசை: இளையராஜா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

priya32
29th July 2012, 05:35 AM
பாடல்: இது கனவுகள் விளைந்திடும் காலம்
திரைப்படம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி & எஸ்.ஜானகி

இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை
வந்து நிரந்தர வரம் தரும் நேரம்
நீதானா நீதானா இது நீதானா நீதானா

பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்
பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்
பூபாளமே இசை பாடுதோ பூமாலையே பூச்சூடுதோ
இனி என் தேகம் பன்னீரில் நீராடும்
உனைக்கண்டாலே நெஞ்சோரம் தேனூறும்

இது ரகசிய அனுபவம் ஆகும்
எந்தன் விழிகளில் மிதந்தது நாணம்
தொலை தூரத்தில் அந்தி நேரத்தில்
அந்த கடலோடு கலந்தது வானம்
நான்தானா நான்தானா இது நான்தானா நான்தானா

பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே
பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே
என் பாதையோ வேறானது உன் பார்வையால் வேறானது
ஒரு பெண் மாலை என் தோளில் ஆடாதோ
இனி உன் பாதம் என் கோயில் ஆகாதோ

தன னன னன தன னன னன
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
தொலைதூரத்தில் அந்தி நேரத்தில்
அந்த கடலோடு கலந்தது வானம்
நீதானா நீதானா இது நான்தானா நான்தானா
இது நீதானா நீதானா இது நான்தானா நான்தானா

priya32
1st August 2012, 06:58 AM
பாடல்: முகம் செந்தாமரை என்றானே
திரைப்படம்: வேடிக்கை மனிதர்கள்
இசை: ஷங்கர் கணேஷ்

முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு

முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு

மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மான் கூட்டம் என்னாட்டம் பேசுமோ
பெண்ணாட்டம் மயிலாடுமோ
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்

முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு

இனி ஒரு முறை அவன் வரும் வரை
மனம் தவிப்பதை உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
இனி ஒரு முறை அவன் வரும் வரை
மனம் தவிப்பதை உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
அவன் மீண்டும் வருவானா
மலர் மேனி தொடுவானா
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது

முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு

அவன் என்னைத் தாலாட்ட
நான் கொஞ்சிப் பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் என்னைத் தாலாட்ட
நான் கொஞ்சிப் பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் மார்பில் பொன்னூஞ்சல் ஆடுவேன்
ஆனந்த நீராடுவேன்
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றேன்றும் நிலையாகுமே
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றேன்றும் நிலையாகுமே

முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
அடியே நீயே சொல்லு
அடியே நீயே சொல்லு

priya32
4th August 2012, 07:21 AM
பாடல்: தேவலோகம் அழைத்தாலும்
திரைப்படம்: வசந்த அழைப்புகள்
இசை: டி.ராஜேந்தர்

தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
ராகங்கள் நாடிடும் தலைவா நான் உங்கள் கனவினில் நிலவா
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆ
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா

மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
மரகத தேராகி...மன்னனுக்கு கவியாகி
மொழியது மௌனம்...கலைமகள் சரணம்
மொழியது மௌனம் கலைமகள் சரணம்
உனக்கும் எனக்கும் உறவில் நெறுக்கம்
இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்
இது போல் தொடரும்
கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தை பார்த்து வெட்டிப்போகும்
கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தை பார்த்து வெட்டிப்போகும்
நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்

தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா தேவனைத் தேடிடவா

சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
சேலை தனில் இடை ஆடும்
சிந்தை தனில் உனை நாடும்
விழிமலர் மடல்கள்...வேதனையில் இதழ்கள்
விழிமலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
மழைபோல் குளிரும் மழைபோல் குளிரும்
மழைபோல் குளிரும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
வடிவைக்கண்டால் உயிரே பாவம்
உயிரே பாவம் உயிரே பாவம்

தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா

priya32
15th August 2012, 06:28 AM
பாடல்: கலீர் கலீர் என்றே
திரைப்படம்: தேவதை
இசை: ஷ்யாம்

கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே

கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே

மங்கல்ய பெண்ணாக
மணவாளன் முன்னாலே
வந்தாயோ பெண்ணே நீ
வண்டை நாடி பூ வரலாமா
தானாக இன்பங்கள் தேடி வராது
நாமாக தீண்டும்வரை நம்மை தொடாது
சுக லோகங்களை காண வேண்டுமா
சில தியாகங்களை செய்து பாரம்மா

கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே

மாசியிலே நெல் விதைத்து
பங்குனியில் போனவன்
மார்கழியில் வந்தானா
அறுவடைக்கு நாள் குறித்தானா
ஊரெல்லாம் உன் பேரை உச்சரிக்காதோ
வானாளும் தெய்வம் உன்னை வாழ்த்துரைக்காதோ
நீ மதரில் ஓர் தேவதையம்மா
உன் வாழ்க்கை எல்லாம் வேதமம்மா

கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே
கலீர் கலீர்...கலீர் கலீர்...கலீர் கலீர்

priya32
27th August 2012, 07:18 AM
பாடல்: இதய வாசல் திறந்த போது
திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
இசை: K.v.மகாதேவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
மலர் மீதிலே பனி சிந்துதே
மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
இன்று இதய வாசல் ஹா திறந்த போது ம்ம் உறவு வந்தது

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே

வானத்து வில்லாலே பாலம்
மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
வானத்து வில்லாலே பாலம்
மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்

நிலவென்னும் பெண்தோழி விண்மீனை பூவாக்கி
வழிமீது தெளிப்பாளோ அங்கே அங்கே

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது

விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே

விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே

எழிலான உன் கூந்தல் ஓரம்
நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
எழிலான உன் கூந்தல் ஓரம்
நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்

முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே
எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
மலர் மீதிலே பனி சிந்துதே
மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
இன்று இதய வாசல் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம்ம்

priya32
9th September 2012, 03:09 AM
பாடல்: ஆசைகளோ ஒரு கோடி
திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
இசை: ஷங்கர் கணேஷ்

ஆசைகளோ ஒரு கோடி ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி

மல்லிகைப்பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை
மல்லிகைப்பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை
நிலவென்னும் பொன்மேனி நெடுந்தூரம் இருந்தாலும்
ஒளியென்னும் கையாலே மலரைத்தழுவி மயங்கும் நிலையைக்கண்டு

ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி

கண்ணில் இருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக்கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய

கண்ணில் இருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக்கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய

கங்கை போல மங்கை எந்தன் அருகில் வருவாய்
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி

முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரை தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
அழகிய கனி உடல் நீ தொடும் புது மடல்
அழகிய கனி உடல் நீ தொடும் புது மடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
இணைவோம்...கனிவோம்...மகிழ்வோம்!

priya32
15th September 2012, 05:44 AM
பாடல்: பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
திரைப்படம்: நினைவே ஒரு சங்கீதம்
இசை: இளையராஜா

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்
அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட
ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
காற்றும் என்னை கூடி கூடி காதல் எனும் கனவுகள் கலந்திட

பகலிலே...பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

priya32
25th September 2012, 05:59 PM
பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழியாத கோலங்கள்
இசை: இளையராஜா

நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு...உன் எண்ணம்...ஒன்றாகும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதோ...என் நெஞ்சில்...கூடட்டும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

priya32
27th September 2022, 07:08 AM
பாடல்: நினைத்தால் இனிக்கும்
திரைப்படம்: கல்யாண ராமன்
இசை: இளையராஜா

https://youtu.be/6j8GSb8X6pg

நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

இன்ப ராகங்கள் என்னை மயக்குது
அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது
நானும் நீயும் ஜோடியானோம்
ஆனந்தம் தான் கோடி
போதை தீராது..
சிலிர்க்குது…
சிலிர்க்குது ரசிக்குது
பார்வையே என்ன பார்வையோ
அம்மம்மா…

நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

அந்த கோவிலின் மணிகள் ஒலிக்குது
அர்த்த ஜாமத்தில் பூஜை நடக்குது
சந்தனமேடை குங்கும வாடை
பொங்குது பாலாடை
தேனில் அபிஷேகம்..
மணக்குது...
மணக்குது மயக்குது
மோகமோ என்ன வேகமோ
அம்மம்மா...

நினைத்தால் இனிக்கும்..ம்

கொஞ்சும் கனவுகள் நெஞ்சில் நிறைந்தது
அந்த உறவுகள் கண்ணில் தெரியுது
வந்தது வசந்தம் பூவின் வாசம்
தென்றல் காற்றோடு
தென்னங்கீற்றோடு
குளிருது...
குளிருது நடுங்குது
மோகமோ என்ன யோகமோ
அம்மம்மா...

நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்..
அம்மம்மா இது சுகமோ சுகம்..
அம்மம்மா இது சுகமோ சுகம்..