PDA

View Full Version : Malaysia Vasudevan passes away



RR
20th February 2011, 10:45 PM
From sify

---
Malaysia Vasudevan, the legendary singer passed away today (February 20) at a private hospital in Chennai.

The singer was born in Malaysia to Malayalee parents and moved to Chennai where found a career as a singer and actor.

Malaysia Vasudevan has sung nearly 8,000 songs in Tamil and over 4,000 songs in other South Indian languages to his credit.

He has also acted in nearly 85 films. He was a versatile singer who could render folk, classical and mass songs and had a great voice.

Prashanthini, fastest rising singer and the daughter of Malaysia Vasudevan in a recent interview said: "My father greatest quality as a singer was 'Kelvi Gjanam' or the power to understand and sing a song accordingly, which I feel I have picked up from him. Do you know my father has not only sung good melodies but also mass folk songs like Podhuvaga Enmanasu Thangam in Rajini sir's Murattu Kaalai and many others."

Malaysia Vasudevan has sung some of the biggest hit songs of Rajinikanth in the 1980's and 90's. Some of his notable songs for the Superstar are
Podhuvaga Enmanasu Thangam( Murattu Kaalai) Ennama Kannu Sowkiyama (Mr. Bharat) Singamondru Purapattadhe (Arunachalam), Yejaman Kaladi Manneduthu (Yejaman)and many others.
---

RIP

RR
20th February 2011, 10:52 PM
http://www.youtube.com/watch?v=dnIK4ijrJ3Q&playnext=1&list=PLE971C4E223D3A4EC


http://www.youtube.com/watch?v=oTXNl3RnIqk


http://www.youtube.com/watch?v=Dlg-1D1L81w


http://www.youtube.com/watch?v=b9-7_rW9H28

raagadevan
21st February 2011, 02:07 AM
"His unique voice, feel and energy made songs such as the haunting Poongatru Tirumbuma, vibrant Aagaya Gangai' or Oru thanga radhathil, stylish Ennama Kannu Sowkyama or the moving Thenkizhakku cheemaiyilae evergreen hits".

http://www.hindu.com/2011/02/21/stories/2011022155070400.htm

interz
21st February 2011, 02:21 AM
RIP, he sung many great songs.

a star less in the universe, so sad.

Querida
21st February 2011, 06:18 AM
:cry2: A great loss indeed...he did seem to be struggling during his appearance as a guest Super Singer Judge...RIP. :( Fan of many of his songs especially Aagaya Gangai and Vaan Megangalae.

suvai
21st February 2011, 07:43 AM
http://www.youtube.com/watch?v=OIFHRdHbTjE

one of my fav of his songs

:-(

suvai
21st February 2011, 07:58 AM
http://www.youtube.com/watch?v=o13d6DShgqw

here is another nice song sung by him

meenalochiny
21st February 2011, 11:46 AM
Its a great loss indeed

kugan98
21st February 2011, 02:37 PM
May his soul rest in peace.
My condolences to his family.

PARAMASHIVAN
21st February 2011, 04:52 PM
Oh no, One of Fav singers :(

May his soul rest in peace

I still can't sit still when I hear his 'Podhuvaha en manasu thangam ' :(

littlemaster1982
21st February 2011, 07:19 PM
A tribute (http://www.tamilpaper.net/?p=2706)

மலேசியாவில் இருந்து கலைவேட்கை கொண்டு ஓர் இளைஞன் சென்னையில் கால் பதிக்கின்றான். எந்தவிதமான செல்வாக்கும், கலைப்பின்னணியும் இல்லாத ஒரு புது இடத்தில்தான் அவன் பாடகனாகத் தன் சுற்றை ஆரம்பிக்க வேண்டிய சவால். அவனுக்குத் தேவை ஒரு நல்ல வாய்ப்பு. டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் அவனுக்குப் பாடவாய்ப்புக் கிடைக்கின்றது. அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் வெளிவராத பாட்டாக அமைந்து விடுகின்றது. ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருந்த அவனுக்கு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற 16 வயதினிலே படப்பாடல் அமைந்து விடுகின்றது. ஒரு வெள்ளந்தித்தனமான அந்தக் குரலே பட்டிதொட்டியெங்கும் அந்தக் கலைஞன் யாரென்று திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றது.

அந்தப் பாட்டில் ஆரம்பித்த சுற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அங்கீகரிக்கப்படுகின்றார். அவர் தான் மலேசியா வாசுதேவன்.

எண்பதுகளிலே ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் அடுத்த போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரங்களாக உயர்ந்து நிற்கின்றார்கள். கமல்ஹாசனின் நகலாக அச்சொட்டாகப் பொருந்திப்போய் விடுகின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். ஸ்டைலாக, நடிப்பிலங்கணங்களைக் கடந்த எதார்த்தமான ரஜினிகாந்தின் குணாம்சத்துக்குப் பொருந்திப் போக ஒரு குரல் தேவைப்படுகின்றது. அந்த வேளை மலேசியா வாசுதேவனின் குரல் தான் சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அணி செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றது.

உதாரணமாக தர்மயுத்தம் படத்தில் வரும் தங்கை செண்டிமெண்ட் பாடல் “ஒரு தங்க ரதத்தில் என் மஞ்சள் நிலவு”, அதே படத்தில் வரும் “ஆகாய கங்கை” என்ற காதல் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியியிருக்கும் பாணியைக் கவனித்தாலே போதும், ரஜினிகாந்த் என்ற எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இந்தக் குரல் எவ்வளவு தூரம் நெருங்கி ஒத்துழைத்திருக்கின்றது என்று.

ஒரு காலக்கட்டத்தில் டி.எம். செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது. எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலே மலேசியா வாசுதேவன் குரல் தான் அவருக்கான குரலாகப் பொருந்தியிருக்கின்றது. குறிப்பாக, முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். குறிப்பாக கைதியின் டயரி என்ற படத்தில் ஆரம்பித்து முதல் வசந்தம், ஊமை விழிகள் என்று மலேசியா வாசுதேவனுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்து அதிலும் தன் முத்திரையைக் காட்டியவர்.

சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம். சாமந்திப்பூ படத்தில் தானே இசையமைத்துப் பாடிய “ஆகாயம் பூமி” பாட்டைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.பி.சைலஜா பாடிய “மாலை நேரம்” பாடல் வந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்பிச் சலிக்காத பாடலாக இருந்தது.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க “நீ சிரித்தால் தீபாவளி” படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமா ரமணனோடு பாடிய “இந்த அழகு தீபம்” பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். “மாமனுக்கு மைலாப்பூரு தான்” (வேலைக்காரன்) பாட்டிலே வெளிப்படும் எள்ளல் குரல், “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப்பறவைகள்) பாட்டில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தித்தனமாக இன்னொரு குரல், “கோடை காலக் காற்றே” (பன்னீர் புஷ்பங்கள்) பாட்டில் வரும் மென்மையாக ஒலிக்கும் குரல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவரது குரலின் பரிமாணங்களை.

எண்பதுகளின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது மலேசியா வாசுதேவனுக்கான பக்கங்கள் தனியாக ஒதுக்கப்படவேண்டியவை. இது அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி செலுத்தப்படவேண்டிய தருணம்.

app_engine
23rd February 2011, 02:41 AM
மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார்.


சிதம்பரம் ஜெயராமன் என்பது தான் சரி.

ஆரம்ப காலத்தில் மலேசியா வாசுதேவன் சி.எஸ்.ஜே'யின் பாடல்களை மேடைகளில் அதே குரலில் பாடுவது வழக்கமாம்.

baroque
23rd February 2011, 09:37 AM
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
சுகம் சுகம் இந்த நேரம்
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது ..........vintage ilayaraja with Janu & Vasu.
80s sangeetham.
we always cherish you, Vasu.
vinatha.

Sureshs65
23rd February 2011, 04:37 PM
My humble tribute to Malaysia Vasudevan in my blog. Please read and comment:

http://bit.ly/fj0G71

Sunil_M88
23rd February 2011, 05:51 PM
Devathai from Gopura Vasalle sun by Malaysia Vasudevan and Mano.


http://www.youtube.com/watch?v=AMf-X25jecY


His body and soul might have passed on but he as a legend will continue to live for the days to come.

RR
23rd February 2011, 07:49 PM
...the biggest success of Malaysia Vasudevan was in converting every song into a lived experience of the listener. For those whom every song is a melody, Malaysia Vasudevan may not have been upto mark in some songs and they would prefer other singers to have sung those songs. But for those whom songs represent a part of their lives, they would never part with the voice of Malaysia Vasudevan. For in this voice, they discover themselves.
Suresh, interesting observation!

Sureshs65
23rd February 2011, 09:01 PM
Thanks RR. I am sure there will be some people who will agree with this :)

app_engine
23rd February 2011, 10:20 PM
Few repeat worthy MV songs (http://www.mayyam.com/talk/showthread.php?7817-Obituary&p=639210&viewfull=1#post639210)

Posted in the TF section's Obituary thread a couple of days back...

app_engine
24th February 2011, 11:24 PM
Some celebrity tributes (http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=379582&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=)



எஸ்.வி.ரமணன் கூறுகையில்...

மலேசியா வாசுதேவன் டி.எம்.செüந்தர்ராஜன், சிஎஸ் ஜெயராமன் ஆகியோரின் குரலை வார்த்தெடுத்தது போல பாடுவதில் வல்லவர். எங்களுடைய மேடைக் கச்சேரிகள் பலவற்றில் மலேசியா வாசுதேவன் பாடிய "புதையல்' படத்தின் "அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்...' "ரத்தக் கண்ணீர்' படத்தின் "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி' போன்ற பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்.

எங்களுடைய விளம்பர நிறுவனத்துக்காக 1970-களில் 500-க்கும் மேற்பட்ட ரேடியோ "ஜிங்கிள்ஸ்'களைப் பாடியுள்ளார். பல விளம்பரங்களில் வித்தியாசமாகப் பேசி அசத்துவார். எங்கள் நிறுவனத்தின் 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். அப்போதே இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்' குழுவில் பல மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார்

இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்தியதே மலேசியா வாசுதேவன்தான். எஸ்.பி.பி., கங்கை அமரன், இளையராஜா, பாரதிராஜா, நான் உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்களாக இருந்த காலகட்டம் அது.

மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றாலும் சினிமா வாய்ப்புக்காகவும் தீவிரமாகப் போராடினார். அவருடைய முயற்சியால் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்' என்ற படத்தில் "பாலு விக்கிற பத்தம்மா..." என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.

ஆனால் அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே' படத்தில் கமல்ஹாசனுக்காக அவர் பாடிய "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். பாரதிராஜாவின் "ஒரு கைதியின் டைரி' படத்தில் அவருடைய வில்லன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்க்க, அதன் பிறகு நடிகராகவும் பரிமளிக்கத் தொடங்கினார். சன் டி.வி.யில் ஒளிபரப்பான "சிலந்தி வலை' உள்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
...
...
கங்கை அமரனிடம் பேசியபோது...

நானும் வாசுவும் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய "பாவலர் பிரதர்ஸ்' குழுவின் முக்கியப் பாடகர். விளம்பரப்படுத்தாமல் பலருக்கும் பல உதவிகளைச் செய்தவர். இவ்வளவு ஏன்? என்னை முதன்முதலாக இசையமைப்பாளராக ஆக்கியதே அவர்தான்.

அவர் கதை, வசனம் எழுதி ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை' என்ற படத்தில்தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் நான் ரெக்கார்டிங் தியேட்டரில் முதன்முதலாக ரெடி, டேக் சொன்னது வாசுவால்தான்.

என் இசையமைப்பில் முதலாவதாக வெளிவந்த படம் "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை'. அதன் பிறகு என்னுடைய எல்லா படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். "எங்க ஊரு ராசாத்தி' படத்தில் என் இசையில் அவர் பாடிய "பொன்மானத் தேடி நானும்...' என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட். "இமைகள்' படத்தில் சிவாஜிகணேசனுக்காக "மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ' என்ற பாடலைப் பாட வைத்தேன். அதே போல எம்.ஜி.ஆருக்காக எடுப்பதாக இருந்த ஒரு படத்தில் வாலியின் வரிகளில் ஒரு பாடலைப் பாட வைத்தார் அண்ணன் இளையராஜா. எம்.ஜி.ஆருக்கு வாசுவின் குரல் மிகவும் பிடித்துவிட்டது. இவரை முன்பே என்னிடம் அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.
...
...
சங்கர் கணேஷிடம் பேசியபோது...

ஈகோ இல்லாத மனிதர். சிறிய கச்சேரிகளில் பங்கேற்றால் கூட தான் ஒரு பிரபல பாடகர் என்ற கர்வமே இல்லாதவர். நேரத்தை மதிப்பவர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். என்னுடைய இசையில் "ஆளானாலும் ஆளு இவ...', "நடைய மாத்து... மச்சான் என்னப் பார்த்து ஆடுறியே கூத்து...' என பல பாடல்களைப் பாடியிருந்தாலும் எனக்குப் பிடித்தது "கன்னிப் பருவத்திலே' படத்தில் அவர் பாடிய "பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்...' பாடல்தான்.

Nerd
26th February 2011, 01:31 AM
Tribute from Director Suka. Excellent read. Very insightful too.
http://solvanam.com/?p=13064