PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : 1 [2] 3 4 5 6 7 8

Murali Srinivas
8th September 2010, 11:06 PM
முக்கனி போல்

முப்பால் போல்

முத்தமிழ் போல்

மூவேந்தர் போல்

தமிழ் திரையுலக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, என்றுமே மறைக்க முடியாத, காலத்தால் அழியாத காவியங்களாக 1961-ம் ஆண்டு திரையில் பூத்த மூன்று முத்துக்களில் மூன்றாம் முத்து இன்று [செப்டம்பர் 9] தன் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஆம், பாலும் பழமும் கைகளில் ஏந்தி வந்த Dr. ரவி அகவை ஐம்பதை தொடுகிறார். ரஹீம், ராஜசேகர், ரவி மூவருமே பொன் விழா மட்டுமல்ல நூற்றாண்டு விழாவும் காணுவார்கள் என்பது நிச்சயம்.

பாவ மன்னிப்பு - 16.03.1961

பாச மலர் - 27.05.1961

பாலும் பழமும் - 09.௦9.1961

இந்த இனிய நினைவை கொண்டாடுவதோடு மிக விரைவில் செக்கிழுத்த செம்மல் அவர்களின் திரையுலக பொன் விழா தொடங்குகிறது என்பதையும் நினைவில் கொள்வோம்.

அன்புடன்

SHIV
9th September 2010, 09:24 AM
Dear Mr.Murali/Ms.Sharadha/Mr.Pammalar

Thank you very much for appreciating my post on "Rathapasam".

Also delighted to note that our NT's three great movies in "P" series is celebrating its Golden jubilee this year.


Regards

Shivram

SHIV
9th September 2010, 09:30 AM
Dear Friends

In the name of Rahim, I wish all our Islamc friends a very Happy Ramzan.

In the name of our very own, beloved, Uyir V.C. Ganesar, I wish all our Hindu friends a
VERY HAPPY GANESH CHATURTHI".

May both Ganesars shower thier blessings on us for a healthy, wealthy and prosperous life and work with more vigour to spread the glory of NT.

Thanks

Shivram

NOV
9th September 2010, 10:23 AM
07.09.2010 முதல் சென்னை ஸ்டார் திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக 3 நாட்களுக்கு மட்டும் ஆண்டவன் கட்டளை திரையிடப் படுகிறது. மூன்று நாட்களும் வேலை நாட்களாக இருந்தாலும் எப்படியாவது அதிக அளவில் மக்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.

அன்புடன்
ராகவேந்திரன்

[html:68fe234208]
http://farm5.static.flickr.com/4129/4973319142_5787fd60a3_z.jpg

[/html:68fe234208]

groucho070
9th September 2010, 10:47 AM
I suppose on behalf of NT fans in the HUB, we would like to convery our condolences to late actor Murali's family.

Any idea on the films Murali has done with NT? Nothing comes to my mind right now.

Plum
9th September 2010, 10:51 AM
thEdi vandha rAsA, grouch
(not surprising you dont remember it - it is not worth remembering)

groucho070
9th September 2010, 11:05 AM
Okay, thanks Plum. But Joe alerted me that it's En Aasai Rasave - the Karakattam film by Danush's dad. Was there one in the 80s?

Plum
9th September 2010, 11:08 AM
oh yeah it is en aasa raasavE. thEdi vandha raasa is a ramarajan flick. :ashamed:

80's-la, I dont remember any. indha thread periyavanga dhAn badhil solla mudiyum!

groucho070
9th September 2010, 11:13 AM
:lol: Understood Plum. Too many rasas out there.

Anyway, the 80s film is Mannukkul Vairam,

Thanks to Joe, and Raghavendra-sar's www.nadigarthilagam.com, what a great resource that site is.

groucho070
9th September 2010, 11:25 AM
More info from Joe that knocked my socks off

the songs from that movie:

Ponggiyathee Kathal Vellam
Ithazhodu Ithazh seerum neeram
Jaathi Malligaiyee

Some of SPB's gems. And composed by Devendran. :shock: Total ignorance on my side.

Plum
9th September 2010, 11:34 AM
Oh that movie was produced by Bharathiraja I think and marked the directorial debut of his brother-in-law Manojkumar, who I suspect lent his name to Manoj Creations(or was it his son that BR named the movie company after?).

It was supposed to be a promising debut but Manojkumar went on to make several anonymous, ordinary movies. Latest I remember from him is Puratchikalaignar's Raajjiyam.

rajeshkrv
9th September 2010, 10:37 PM
one humble request.. this thread shifted it's focus on the statistics rather than discussing about NT's films..
why not continue the film discussion and where's saradha and others..

Murali Srinivas
10th September 2010, 12:02 AM
Rakesh, Plum,

One more film is there. Balajee's Kudumbam Oru Kovil that came after Mannukkul Vairam.

EID Wishes to all Islamic Brethern.

Regards

RAGHAVENDRA
10th September 2010, 12:31 AM
அனைவருக்கும் ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்கள்.

வசந்த மாளிகை தயாரிப்பாளர் ராமா நாயுடு அவர்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப் பட உள்ளது. அவருக்கு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
10th September 2010, 02:19 AM
நடிகர் முரளியின் மறைவுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
10th September 2010, 02:25 AM
நடிகர் திலகத்துடன் நடிகர் முரளி இணைந்த திரைப்படங்கள்:

1. மண்ணுக்குள் வைரம்(1986)

2. குடும்பம் ஒரு கோவில்(1987)

3. என் ஆச ராசாவே(1998)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2010, 02:31 AM
அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
10th September 2010, 02:37 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 121

கே: நீங்கள் சிவாஜி ரசிகர் தானே? (ஞ.அ.ராஜ், சென்னை - 28)

ப: சிவாஜியின் நடிப்பு ரசிகன்.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2010, 03:26 AM
சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்த/படைக்கின்ற முப்பெரும் காவியங்களான பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் ஆகிய மூன்று காவியங்களை அதன் பொன்விழா ஆண்டில் நினைவு கூர்ந்ததோடு மட்டுமல்லாமல், வேதங்கள் நான்கு என்பது போல் நான்காவது காவியமாக கப்பலோட்டிய தமிழனும் விரைவில் (7.11.2010) பொன்விழா தொடக்கத்தை காண இருப்பதையும் சுட்டிக்காட்டிய இத்திரியின் முதல்வர் முரளி சாருக்கு முத்தாய்ப்பான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2010, 04:31 AM
பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'

இன்று 9.9.2010, நடிப்பிலும், சாதனையிலும் தன்னிகரில்லா சிகரங்களைத் தொட்ட நடிப்புலக மகான், சாதனைகளின் சக்கரவர்த்தி நமது நடிகர் திலகத்தின் "பாலும் பழமும்" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டின் தொடக்கம்.

பதிபக்தி(1958)[100 நாள்], பாகப்பிரிவினை(1959)[31 வாரம்], படிக்காத மேதை(1960)[22 வாரம்], பாவமன்னிப்பு(1961)[25 வாரம்], பாசமலர்(1961)[25 வாரம்] ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]

தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத்தமிழனுக்கே!

'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.

இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.

"பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.

வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)

வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்

2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்

3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்

5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்

6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்

7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்

8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்

9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்

10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்

50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்

2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்

3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்

4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்

5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்

6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்

7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்

8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்

9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்

10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்

11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்

12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்

13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்

14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்

15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்

16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்

17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்

18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்

19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்

20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்

21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்

22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்

23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்

24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்

25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்

6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7

[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்

2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்

3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்

4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்

5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்

6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்

7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்

பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
10th September 2010, 01:08 PM
[b] தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத்தமிழனுக்கே!

'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.
டியர் பம்மலார்.....

சாதனைச்சித்திரம் 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் சாதனைச்சரித்திர தொகுப்பு அருமை. கடந்த காலங்களில் இவ்வாறு சரியான நேரத்தில் இதுபோன்ற விவரங்கள் சொல்லப்படாததால்தான், சில வலைப்பூ பிரகஸ்பதிகளும், செய்தித்தாள்களில் கட்டுரை வரைபவர்களும், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைப்பற்றி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதத்துணிந்தனர். சகோதரர் ராகவேந்தர் அவர்கள் எப்போதும் ஆதங்கப்படுவதுபோல, யாரோ 'ஒருசிலரின்' படங்கள் மட்டும் வசூலை கோணிப்பைகளில் கட்டியது போலப் பேசத்துணிந்தனர். நடிகர்திலகத்தின் பக்தர்கள் கூட்டம் உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளது.

நடிகர்திலகத்தை வைத்து 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என இரு பெரும் வெற்றிக் காவியங்களைத்தந்த ஜி.என்.வேலுமணி, பின்னர் ஏன் நடிகர்திலகத்தை விட்டுப்பிரிந்தார்?. அதற்கும் கூட, நடிகர்திலகத்தின் படங்களே அவரது படங்களுக்குப் போட்டியாக வந்ததே காரணம். பாலும் பழமும் வெற்றிகரமாக 125 நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அதே திரையரங்குகளில் ஏ.வி.எம். நிறுவனத்தாரின் 'பார்த்தால் பசிதீரும்' படம் வெளியிட முயற்சிகள் நடந்தன. ஆனால் வேலுமணி தனது படத்துக்கு இன்னும் கூட்டம் குறையாததால் அதை வெள்ளிவிழா வரை ஓட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேறியிருந்தால், அவரது அடுத்தடுத்த இரண்டு படங்கள் வெள்ளி விழா என்பதோடு, அதைவிட முக்கியமாக, நடிகர்திலகத்துக்கு ஒரே ஆண்டில் மூன்று வெள்ளிவிழாப்படங்கள் என்ற பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கும்.

ஆனால் ஏ.வி.எம். நிறுவனத்தாரின் நச்சரிப்பு காரணமாக, பாலும் பழமும் 127 நாட்களில் (குறிப்பாக சென்னை சாந்தியில்) திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு, பார்த்தால் பசிதீரும் படம் திரையிடப்பட்டது. அதனால் மனம் வெதும்பிய வேலுமணி, 'இனி இந்த ஆளை வச்சு படம் எடுக்க மாட்டேன்' என்று விலகிப்போனார். (பந்துலுவுக்கு முன்ன்ர் இவரது விலகல்). அதோடு பீம்சிங்கை விட்டு கே சங்கரிடம் தாவினார். அதே கையோடு ஜெமினியை வைத்து 'பாத காணிக்கை', மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து 'பணத்தோட்டம்', அசோகனை கதாநாயனாக வைத்து 'இது சத்தியம்', மீண்டும் எம்.ஜி.ஆரை வைத்து 'படகோட்டி', 'கலங்கரை விளக்கம்', 'சந்திரோதயம்', 'குடியிருந்த கோயில்'... இவற்றுக்கிடையே ஜெய்சங்கரை வைத்து பஞ்சவர்ணக்கிளி, செல்வமகள் படங்களை தயாரித்தவர், பிற்காலத்தில் கே.ஆர்.விஜயாவை முக்கிய பாத்திரமாக வைத்து 'நம்ம வீட்டு தெய்வம்', 'அன்னை அபிராமி' ஆகிய பக்திப்படங்களை தயாரித்ததோடு அவற்றை அவரே இயக்கினார். கடைசிக்காலத்தில் ரொம்பவே நொடித்துப்போய், பஸ்ஸில் பிரயாணம் செய்தார் என்று செய்திகள் வந்தன.

'பேசும்படம்' மாத இதழில் வந்த செய்தி:
பாலும் பழமும் திரையிடப்பட்ட அன்று மாலைக்காட்சிக்கு இயக்குனர் பீம்சிங், சென்னை சாந்தி தியேட்டருக்கு வந்திருந்தார். ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு படம் அருமையாக அமைந்துள்ளது என பாராட்டுத் தெரிவித்தனர். அதோடு, வெளிநாட்டிலிருந்து தனது நண்பன் தன் மனைவியை குணப்படுத்த பார்சலில் மருந்துகள் அனுப்பியிருப்பதாக நடிகர்திலகம் சொல்வார். ஆனால் அவர் பார்சலைப்பிரிப்பதை குளோசப்பில் காண்பிக்கும்போது, அதில் இந்திய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக்குறையை இயக்குனரிடம் ரசிகர்கள் சுட்டிக்காட்டியதும், சாந்தியில் ஓடிய பிரிண்டில் அந்த குளோசப் காட்சியை பீம்சிங் தன் கைப்படவே வெட்டிவிட்டார். (ஆதாரம் பேசும் படம் 1961 செப்டம்பர் இதழ்)


[b] பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்
பட்டுக்கோட்டை முருகையாவில் வேறு படம் புக் ஆகிவிட்ட காரணத்தால், பாலும் பழமும் தவிர்க்க முடியாமல் 41 நாட்களில், பக்கத்திலுள்ள அதிராம்பட்டினம் ராஜராஜேஸ்வரி என்ற டூரிங் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டு அங்கு 25 நாட்கள் ஓடியதாக, நமது பட்டுக்கோட்டை ரசிகர் சிவசங்கர் தெரிவிக்கிறார். (அவர் நமது திரியில் நேரடியாக பதிவுகளைத்தர ஆசைப்பட்டு ரெஜிஸ்ட்டர் செய்து மூன்று மாதங்களாகியும், ரெஜிஸ்ட்ரேஷன் கிடைக்கவில்லையாம். அதனால் Hotmail-லில் விவரங்களைத் தருகிறார்).

Murali Srinivas
10th September 2010, 01:19 PM
பாலும் பழமும் படத்தின் பிரமிப்பான பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை பட்டியலிட்ட சுவாமிக்கு நன்றி. சுவாமி சொல்லாமல் விட்ட சில விஷயங்கள்.

பாவ மன்னிப்பை தொடர்ந்து நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியில் ஏ.வி.எம் தயாரித்த படம் பார்த்தால் பசி தீரும். அந்த படம் 1962-ம் ஆண்டு ஜனவரி 14 பொங்கலன்று வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாலும் பழமும் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம்.இந்த நேரத்தில் ஏ.வி.எம். நிறுவனம் சென்டிமெண்டாக பாவ மன்னிப்பு வெளியான அதே திரையரங்குகளில் பா.பசி தீரும் படமும் வெளியாக வேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தார்கள். நன்றாக போய்க் கொண்டிருக்கும் படத்தை மாற்ற வேண்டாம் என்று பலரும் எடுத்துச் சொல்லியும் ஏ.வி.எம். கேட்கவில்லை. சென்னை மட்டுமல்ல மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களிலும் இதே நிலையை ஏ.வி.எம் எடுத்தது. பெரிய படத்தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் முன்னால் வேலுமணியால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில் 127 நாட்கள் என்ற நிலையில் பாலும் பழமும் மாற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் பாவ மன்னிப்பு சென்னை சாந்தியில் 100 நாட்களில் பெற்ற வசூலை விட பாலும் பழமும் அதே சாந்தியில் 100 நாட்களில் பெற்ற வசூல் அதிகம். சிவாஜி படமே சிவாஜி படத்திற்கு வில்லன் என்பதற்கு பாலும் பழமும் ஒரு மிகச் சிறந்த உதாரணம். பார்த்தால் பசி தீரும் வேறு அரங்குகளில் திரையிடப்பட்டிருந்தால் பாலும் பழமும் சாந்தியில் வெள்ளி விழா கண்டிருக்கும். ஒரே காலண்டர் வருடத்தில் [1961] மூன்று வெள்ளி விழா படங்கள் என்ற சாதனையும் நிகழ்ந்திருக்கும்.

இது போலவே சுவாமி கொடுத்த 50 நாள் லிஸ்டில் பார்த்தோம் என்றால் முக்கால்வாசி இடங்களில் 59 நாட்கள் என்ற கணக்கை பார்க்கலாம். அதற்கு காரணம் நவம்பர் 7-ல் வந்த தீபாவளி. தீபாவளி திரைப்படங்களுக்காக அரங்குகள் முன் கூட்டியே புக் செய்யப்படுவது வழக்கம். எனவேதான் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த பாலும் பழமும் பல ஊர்களிலும் தீபாவளியன்று மாற்றப்பட்டது.

இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும் எதிர்மறையான சூழலிலும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் மலைக்க வைப்பதாகவே இருக்கிறது.

அன்புடன்

Murali Srinivas
10th September 2010, 01:44 PM
நான் என்னுடைய பதிவை தயார் செய்துக் கொண்டிருக்கும் போது சாரதாவின் பதிவு வந்திருக்கிறது. நான் என்னுடைய பதிவை போஸ்ட் செய்த பிறகுதான் அதைப் பார்த்தேன். ஆகவே ஒரு சில விஷயங்கள் இரண்டு பேர் பதிவிலும் பொதுவாக அமைந்திருக்கின்றன.

வெள்ளி விழா ஓடியிருக்க வேண்டிய பாலும் பழமும் படத்தை தங்களின் படத்திற்காக மாற்றிய ஏ.வி.எம் நிறுவனத்தார், அவர்களின் பார்த்தால் பசிதீரும் படத்திற்கு வேலுமணி அனுபவித்த அதே வேதனையை அதே சாந்தியில் அனுபவித்தார்கள். ஆம், பா.பசி தீரும் படம் படித்தால் மட்டும் போதுமா படத்திற்காக சென்னையில் 75 நாட்களில் மாற்றப்பட்டது. மதுரை வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை இப்போதும் கொடுக்க மதுரை சென்ட்ரலில் பா.பசி தீரும் 110 நாட்கள் ஓடியது.

அன்புடன்

pammalar
10th September 2010, 01:51 PM
சகோதரி சாரதா, முரளி சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கும், கூடுதல் தகவல்களுக்கும் கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Srimannarayanan
10th September 2010, 01:55 PM
Pava Mannippu in Raj T.V now.

saradhaa_sn
10th September 2010, 02:27 PM
நான் என்னுடைய பதிவை தயார் செய்துக் கொண்டிருக்கும் போது சாரதாவின் பதிவு வந்திருக்கிறது. நான் என்னுடைய பதிவை போஸ்ட் செய்த பிறகுதான் அதைப் பார்த்தேன். ஆகவே ஒரு சில விஷயங்கள் இரண்டு பேர் பதிவிலும் பொதுவாக அமைந்திருக்கின்றன.

டியர் முரளி....

நடிகர்திலகத்தின் ரசிகர்களின் மனத்துடிப்பு ஒரே மாதிரி இருக்கும் என்பதற்கு நம் இருவரின் அடுத்தடுத்த பதிவுகளே சான்று. ஒரே நேரத்தில் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே கருத்தை சிந்தித்துக்கொண்டு இருந்திருக்கிறோம்.

வெள்ளி விழா ஓடியிருக்க வேண்டிய பாலும் பழமும் படத்தை தங்களின் படத்திற்காக மாற்றிய ஏ.வி.எம் நிறுவனத்தார், அவர்களின் பார்த்தால் பசிதீரும் படத்திற்கு வேலுமணி அனுபவித்த அதே வேதனையை அதே சாந்தியில் அனுபவித்தார்கள். ஆம், பா.பசி தீரும் படம் படித்தால் மட்டும் போதுமா படத்திற்காக சென்னையில் 75 நாட்களில் மாற்றப்பட்டது. மதுரை வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை இப்போதும் கொடுக்க மதுரை சென்ட்ரலில் பா.பசி தீரும் 110 நாட்கள் ஓடியது.
சென்னையில் 'பார்த்தால் பசிதீரும்' 'படம், படித்தால் மட்டும் போதுமா'வுக்காக மாற்றப்படவில்லை. பா.ப.தீரும் 75 நாட்களில் எடுக்கப்பட்டு, 'வளர்பிறை' படம் திரையிடப்பட்டது.

'படித்தால் மட்டும் போதுமா' சென்னை 'மிட்லண்ட்' அரங்கில் வெளியாகி 100 நாட்களைக்கடந்தது.

pammalar
10th September 2010, 02:30 PM
வெள்ளி விழா ஓடியிருக்க வேண்டிய பாலும் பழமும் படத்தை தங்களின் படத்திற்காக மாற்றிய ஏ.வி.எம் நிறுவனத்தார், அவர்களின் பார்த்தால் பசிதீரும் படத்திற்கு வேலுமணி அனுபவித்த அதே வேதனையை அதே சாந்தியில் அனுபவித்தார்கள். ஆம், பா.பசி தீரும் படம் படித்தால் மட்டும் போதுமா படத்திற்காக சென்னையில் 75 நாட்களில் மாற்றப்பட்டது.

அன்புடன்

டியர் முரளி சார்,

சென்னை சாந்தியில் 14.1.1962 பொங்கலன்று வெளியான "பார்த்தால் பசி தீரும்", 29.3.1962 வரை 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 30.3.1962 அன்று சாந்தியில் "வளர்பிறை" வெளியானது. "படித்தால் மட்டும் போதுமா" 14.4.1962 தமிழ்ப் புத்தாண்டு அன்று மிட்லண்டில் வெளியானது.

"பார்த்தால் பசி தீரும்" திரைக்காவியத்தைப் பொறுத்தவரை, சாந்தி மட்டுமல்லாது, ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளிலும் 75 நாட்கள் தான். இந்த இரு அரங்குகளிலும் "வளர்பிறை" வெளியானது. சென்னை மட்டுமல்லாது பல ஊர்களிலும், "பார்த்தால் பசி தீரும்" திரைக்காவியத்திற்கு வில்லன்களாக வந்தவை "வளர்பிறை"யும், "படித்தால் மட்டும் போதுமா"வும். கிட்டத்தட்ட 10 சென்டர்களில் 75 நாள், 90 நாள் என்கின்ற ரீதியில் "பார்த்தால் பசி தீரும்" எடுக்கப்பட்டது. இதில் மதுரை மட்டும் தப்பிப் பிழைத்தது. இவ்விதம் இல்லாமலிருந்தால், குறைந்தபட்சம் "பார்த்தால் பசி தீரும்" காவியத்தினுடைய 10 பிரிண்டுகள் 100 நாள் விழா கொண்டாடியிருக்கும்!

நடிகர் திலகத்தின் படங்களே நடிகர் திலகத்தின் படங்களுக்குப் போட்டி, என்ன செய்வது!

அன்புடன்,
பம்மலார்.

SHIV
10th September 2010, 02:35 PM
Dear Ms.Shardha/Mr.Murali Srinivas

Many thanks for your details on "Palum Pazhamum" and its related developments .It only shows how our NT was always a vasool Charkravarthy.

We are very fortunate to have people like you, Mr.Pammalar and Mr. Ragavendar who pour in such great infos happened 4 or 5 decades back.

Incidentally, is music director Ganesh (sankar-ganesh) the son-in-law of G.N. Velumani?


Regards

Shivram

Murali Srinivas
10th September 2010, 02:56 PM
தவறை திருத்தியதற்கு நன்றி சாரதா & சுவாமி.

கூடுதல் தகவல்களுக்கும் நன்றி சுவாமி.

Shiv,

Yes, you are right. (Shankar) Ganesh is married to Velumani's daughter.

Regards

SHIV
10th September 2010, 03:57 PM
Dear Messrs.Murali /Ragavendar/Ms.Shardha

I had heard in my student days that when "Ulagam Suttrum Valiban" was ready for release, due to political situation prevalent at that time, MGR found it very difficult to get theaters in chennai for release and NT offered to release the same in Shanti. Was it true??

Actually it is very difficult to believe as Cinema rivalry between NT & MGR was at its peak at that time.

Please throw more light on this.

Regards

Shivram

pammalar
10th September 2010, 04:03 PM
ஸ்டாரில் 'ஆண்டவன் கட்டளை' புகைப்படத்துக்கு ராகவேந்திரன் சாருக்கும், நௌ சாருக்கும் நன்றி!

டியர் ஷிவ்ராம்,

தங்களின் பாராட்டுக்கு நன்றி! தங்களது பதிவுகள் மட்டும் சளைத்ததா என்ன?! தகவல்களை அள்ளி அள்ளித் தருகின்றனவே!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
10th September 2010, 04:26 PM
Dear Messrs.Murali /Ragavendar/Ms.Shardha

I had heard in my student days that when "Ulagam Suttrum Valiban" was ready for release, due to political situation prevalent at that time, MGR found it very difficult to get theaters in chennai for release and NT offered to release the same in Shanti. Was it true??. Actually it is very difficult to believe as Cinema rivalry between NT & MGR was at its peak at that time.

Please throw more light on this.
Regards
Shivram
டியர் ஷிவராம்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி.

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். இது பற்றிய விரிவான செய்தி நமது திரியின் ஆறாவது பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

pammalar
10th September 2010, 05:19 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122

கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2010, 06:06 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 123

கே: சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (வ.மு.சுந்தரவதனம், மாயூரம்)

ப: அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1964)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th September 2010, 06:32 PM
"என்னுடைய இத்தனை வருட கலைப் பயணத்தில் எனக்கு மிகப் பெரிய முன்னோடியாக, என்னை பாதித்தவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஒளி கொடுக்கும் ஒரு சூரியன் மாதிரி அவர் இருந்தார்."

- 'சினிமா எக்ஸ்பிரஸ்' 16-31 ஆகஸ்ட் 2010 இதழில் கலைஞானி கமல்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
10th September 2010, 07:27 PM
டியர் முரளி சார், பம்மலார், சகோதரி சாரதா மற்றும் நண்பர்கள்,
பாலும் பழமும் சாதனை புரிந்த விவரமும் அது புரிய விடாமல் செய்யப் பட்ட விவரமும் விவரமாக விவரமறிந்தவர்களால் விவரமறிய வேண்டியவர்களுக்கு தெரிவித்திருக்கிறீர்கள். தங்களுக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

நடிகர் திலகத்தின் படங்களுக்கு அவர் படங்களே வில்லன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதற்கு மற்றொரு உதாரணம் தங்க சுரங்கம்.

இதில் ஒரு சோகம் என்னவென்றால் ஒரு படத்தைத் தூக்கிவிட்டு வெளி வரும் அடுத்த படம் அதைவிட அருமையான படமாய் அமைவது தான். வளர் பிறை மிகச் சிறந்த படம். காட்சிக்கு காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். குறிப்பாக சலசலக்குது காத்து பாடல். இதுவும் நன்கு ஓடியிருக்க வேண்டிய படமே. Method Acting, Subdued Acting என்று நடிப்பில் எத்தனை விதம் உண்டோ அத்தனையும் செய்து காட்டியிருப்பார்.

வாய்ப்புக்கு நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
10th September 2010, 08:31 PM
வசூல் சக்கரவர்த்தி - 5

'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]

1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68

2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76

இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
10th September 2010, 10:07 PM
[tscii:4a291277e3]The following is taken from a blog of one Mr.Ravichandran, who hails from Mannargudi. Thanks to Joe for pointing it out.
-------------------------------------------------------------------------------------
நான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.

நான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R, ரஜினி படங்கள்தான்.

1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதை” படத்திற்குச் சென்றோம்.

படம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி! முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை.

ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான்”. அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம்.

படம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான் வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்!

அப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.

- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா

- சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்” என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சி” என்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமா” என்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....

உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.

ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.

- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்

- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். ”அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம்” பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.

இப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............

முதல் மரியாதை – ஒரு அருமையான கிராமத்து காவியம்!
-------------------------------------------------------------------------------------
Link to the blog - http://vssravi.blogspot.com/2010/09/10.html.

Regards[/tscii:4a291277e3]

Murali Srinivas
10th September 2010, 10:18 PM
ராகவேந்தர் சார்,

நன்றி எதற்கு? இந்த பதிவுகள் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைகளுக்கு உண்மையை உணர்த்தவே!

இது நாள் வரை காண வாய்ப்பு கிடைக்காத வளர் பிறை படத்தைப் பற்றி ஆவலை தூண்டும் விதமாக எழுதியுள்ளீர்கள். பார்க்க வேண்டும்.

சுவாமி,

சென்னை மதுரை வசூல் விவரங்களை பாலும் பழமுமாக தந்ததற்கு நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
10th September 2010, 10:43 PM
முரளி சார் மற்றும் பம்மலார் சார்,
தங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும். மிக சிறப்பாக கருத்துக்களையும் சாதனை விவரங்களையும் சுட்டிக் காட்டி வருகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி கூற அனைத்து சிவாஜி ரசிகர்களுமே கடமைப் பட்டுள்ளோம். பாலும் பழமும் வசூல் விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன ( பொதுவாக வசூல் சாதனைகளைப் பற்றி நான் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டாவிட்டாலு்ம் கூட, நாள் கணக்கிலும் விழா கணக்கிலும் நிச்சயம் ஆவலுண்டு).

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
10th September 2010, 10:47 PM
அண்மையில் மெகா டி.வி.யில் நமது இதய வேந்தர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் ஒரு தகவலை சொன்னார் பலர் கேட்டிருக்கக் கூடும். சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற ஒரு நாளிலே பாடலைப் பற்றிய தகவல். அந்த் பாடலை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முதலில் பாடி பின்னர் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப் பட்ட செய்தியைப் பற்றியது. இது தொடர்பாக என் நினைவிலுள்ள சில செய்திகளை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த செய்தி அந்தக் காலகட்டத்திலேயே ஒரு சினிமா இதழில் வெளிவந்தது, பொம்மை, பேசும்படம் போன்ற பிரபல இதழல்ல. அந்த இதழின் பெயர் நினைவில்லை என்றாலும் செய்தி நினைவிலுள்ளது. மெல்லிசை மன்னரிடமும் ஸ்ரீதரிடமும் நடிகர் திலகம் அவர்கள் இது பற்றி விவாதித்ததாக அந்த பத்திரிகையில் படித்த நினைவு. தமிழ் வார்த்தைகள் சிலவற்றின் பிரயோகத்தில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததாகவும், மேலும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பயன் படுத்தப் பட்டு வந்ததில் வினியோகஸ்தர்களின் பங்கு பெருமளவு இருந்ததாகவும் செய்தி. பாலமுரளி கிருஷ்ணா அவர்களைப் பற்றி நடிகர் திலகம் மிகமிக உயர்ந்த அளவில் மதிப்பு வைத்திருந்தார்கள். ஆனால் அந்தப் பாடல் பல தரப்பினரின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் மீண்டும் பதிவு செய்யப் பட்டது. இதை சொல்ல காரணம் நடிகர் திலகம் மட்டுமே பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பாடல் வேண்டாம் என்று சொன்னது போல் ஒரு கருத்து நிலவிவிடக் கூடாதே என்கின்ற காரணத்தால் தான். அந்த தமிழில் இருந்த சில பிரயோகங்களைப் பற்றிய கருத்தையே கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அதன் பின்னரே இருவரும் சேர்ந்து மீண்டும் டி.எம்.எஸ். அவர்களைப் பாடவைத்ததாகவு்ம் அந்த பத்திரிகையில் செய்தி வெளிவந்திருந்தது.
அந்தப் பத்திரிகையின் பிரதியோ அல்லது பெயரோ நினைவில் இல்லை. இருந்திருந்தால் அதனை இப்போது இங்கே நாம் பதித்திருக்கலாம்.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
10th September 2010, 11:31 PM
கலைச்சூரியனைப் பற்றி ரவிச்சந்திரன் எழுதிய "முதல் மரியாதை" படப் பதிவு அருமையிலும் அருமை. பகிர்ந்து கொண்ட ஜோ சாருக்கும், முரளி சாருக்கும் பற்பல நன்றிகள்!

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்! "ஒரு நாளிலே உறவானதே" பாடல் பற்றிய சுவையான தகவல்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Jeev
11th September 2010, 04:44 AM
Navarthna Films "Ethiroli" (1970) was produced by G.Velumani and directed by K.Balachander.

KVM scored the music for this film.

saradhaa_sn
11th September 2010, 11:28 AM
பொதுவாக வசூல் சாதனைகளைப் பற்றி நான் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டாவிட்டாலு்ம் கூட, நாள் கணக்கிலும் விழா கணக்கிலும் நிச்சயம் ஆவலுண்டு.

அன்புடன்
ராகவேந்திரன்
டியர் ராகவேந்தர்,

உங்களின் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன்.

ஏனென்றால், அன்றைய மக்கள் தொகை, அன்றைய விலைவாசி, தியேட்டர்களில் அன்றைய டிக்கட் கட்டணம்... இவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து, அன்றைய மூன்று லட்சம் என்பது இன்றைக்கு எத்தனை லட்சம் (அல்லது கோடி) என்று புறிந்து கொளபவர்கள் மிகக்குறைவு.

உதாரணமாக சென்னை சாந்தி தியேட்டரில் 'பாலும் பழமும்' வந்தபோது டிக்கட் கட்டணம்:

பால்கனி : 2 ரூபாய் 50 பை,
முதல் வகுப்பு : 2 ரூபாய்
இரண்டாம் வகுப்பு : 1 ரூபாய் 66 பை
மூன்றாம் வகுப்பு : 1 ரூபாய் 25 பை.

ஆனால் இன்றைக்கு அதே சாந்தி தியேட்டரில் பாலக்னி டிக்கட் 80 ரூபாய் (32 மடங்கு).

இதே போலத்தான் எல்லா திரையரங்குகளிலும் டிக்கட் விலை எகிறிப்போய் இருக்கிறது. இந்நிலையில் அன்றைய வசூல் விவரங்களைக் காண்போர் "என்ன பெரிய வசூல்..? சிவாஜி படத்தின் 100 நாள் வசூலை எங்கள் அஜீத், விஜய் படங்கள் ஐந்து நாட்களில் முறியடிக்கின்றன" என்று பேசுவோரும் உண்டு, ஒரு சிலரைத்தவிர.

அன்றைக்கு காசுக்கு மதிப்பிருந்த காலம். மக்கள் பைசா, பைசாவாகப் பார்த்து செலவழித்த காலம். இவ்வளவு ஏன்?. ஒரு தியேட்டரில் 1 ரூ.25 காசு டிக்கட் ஃபுல் ஆகி விட்டால், அடுத்த டிக்கட்டான 1.75-க்குப்போக மனமின்றி (அல்லது வசதியின்றி), வீட்டுக்குப்போய்விட்டு அடுத்த காட்சிக்கு அதே 1.25 டிக்கட்டுக்கு மக்கள் வந்து நின்ற காலம். அத்தைகைய காலத்தில் படங்கள் புரிந்த சாதனைகள் நிச்சயம் மகத்தானவை.

அதே போல தயாரிப்பு செலவுகளும் மிகக்குறைவு. Rs.10 லட்சத்துக்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடியான காலம். இயக்குனர் விசு கூட 80-களில் தனது படங்களை 30 லட்சத்துக்குள் ஃபர்ஸ்ட் காப்பியை வெளிக்கொண்டு வந்ததாக சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றைக்கு 30 லட்சம் என்பது, படப்பிடிப்பின்போது அளிக்கப்படும் டீ, காஃபி செலவு.

எனவே 'அன்றும் - இன்றும்' என்று ஒப்பிட்டுப்பார்க்கும் மனநிலை மக்களுக்கு வராத வரையில் வசூல் கணக்கை வெளியிடத்தேவையில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஆனால் நீங்கள் சொன்னது போல, படங்கள் ஓடிய நாட்கள், கொண்டாடிய விழாக்கள், பெற்ற விருதுகள் என்பவையெல்லாம் மிகவும் தேவையான, அத்தியாவசியமான விவரங்களே.

saradhaa_sn
11th September 2010, 11:53 AM
இதில் ஒரு சோகம் என்னவென்றால் ஒரு படத்தைத் தூக்கிவிட்டு வெளி வரும் அடுத்த படம் அதைவிட அருமையான படமாய் அமைவது தான். வளர் பிறை மிகச் சிறந்த படம். காட்சிக்கு காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். குறிப்பாக சலசலக்குது காத்து பாடல். இதுவும் நன்கு ஓடியிருக்க வேண்டிய படமே. Method Acting, Subdued Acting என்று நடிப்பில் எத்தனை விதம் உண்டோ அத்தனையும் செய்து காட்டியிருப்பார்.
அன்புடன்
ராகவேந்திரன்
அதோடு டி.எம்.எஸ். அவர்கள் மிக அமைதியாகப்பாடிய அருமையான தத்துவப்பாடல்...

"பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".

'வளர்பிறை' போல பல படங்கள் மறு வெளியீடுகளில் எட்டிப்பார்க்கவில்லை. 'புனர் ஜென்மம்' கூட ரொம்ப நாட்களூக்குப்பின் இப்போதுதான் காணக்கிடைத்தது. அதுபோலவே 'எல்லாம் உனக்காக', 'செந்தாமரை' திரைப்படங்களும் மறு வெளியீடுகளிலோ, தொலைக்காட்சிகளிலோ வரவில்லை. 'நிச்சய தாம்பூலமும்' சமீப காலமாக ஒளிந்துகொண்டது.

RAGHAVENDRA
11th September 2010, 12:44 PM
அன்புச் சகோதரி சாரதா அவர்களுக்கு மிக்க நன்றி. ஒப்பீடு செய்து எல்லா புள்ளி விவரங்களையும் ஆராய்ந்து அதன் பின் செய்யப் படும் முடிவுகள் நிச்சயமாக நியாயமாக இருக்கும். அப்படி செய்யப் படும் பெரும்பாலான முடிவுகள் நடிகர் திலகத்தின் சாதனைகளை பறை சாற்றும். ஆனால் இன்று பெரும்பாலான பத்திரிகைகளும் மீடியாக்களும் முன்கூட்டியே இன்னார் தான் என்று தீர்மானித்து அதற்கேற்றார்போல் கருத்துக்களை வெளியிடுகின்றன. உதாரணத்திற்கு இம்மாதம் முழுதும் ராஜ் டி.வி.யில் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப் படுகின்றன. அதைப் பற்றிக் கூறாத ஒரு பிரபல காலைப் பத்திரிகை, வேறொரு நடிகர் படத்தை மட்டும் கட்டம் கட்டி பிரசுரிக்கின்றது. இப்படிப்பட்ட தீர்மானிக்கப் பட்ட மனநிலையில் இருப்பவர்களிடம் எந்த விதமான நியாயத்தையோ அல்லது தர்மத்தையோ எதிர்பார்க்க முடியும்.

பொதுவாக ஒரு நடிகரின் வெற்றி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எத்தனை படங்கள் கொடுத்திருக்கிறார், எத்தனை வசூலாகியுள்ளது, எத்தனை நாட்கள் எத்தனை ஊர்கள் ஓடியுள்ளது, திரையிட்ட அரங்குகளில் எத்தனை நூறு நாட்களை அல்லது வெள்ளி விழாக்களை எட்டியுள்ளன என்பன போன்ற அனைத்துப் புள்ளி விவரங்களையும் ஒரு சேர அலசி ஆய்ந்து இறுதியில் வரக்கூடிய வெற்றியின் சதவீதமே அவரின் சாதனையைப் பறை சாற்றும். நடிகர் திலகம் படங்கள் மற்றும் எம்.ஜி.ஆர். படங்கள் இருவரின் வெற்றியைக் கணக்கிட்டால் சதவீதக் கணக்கில் ஒரு புள்ளி, அல்லது இரண்டு புள்ளி, அல்லது 0.5 புள்ளி என்ற அளவில் தான் வெற்றி வித்தியாசம் வரும். ஒரு நேரத்தில் இவருக்கும் ஒரு நேரத்தில் அவருக்கும் என மாறி மாறி வித்தியாசம் இருக்கும், அந்த வித்தியாசம் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும்.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இன்று காணப் படவில்லை என்பதே கசப்பான உண்மை. ஏனோ நடிகர் திலகத்தின் படங்களின் வெற்றியைப் பற்றி எழுதுவதே பாவம் என்கிற அளவில் இன்று போக்கு காணப் படுகிறது.

இதற்கு ஒரு முக்கியமான காரணமாக அரசியலைப் பற்றித் தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்திருந்தாலோ அல்லது எந்தப் பதவியிலும் இல்லாதிருந்தாலோ அவருடைய படங்களின் வெற்றியைப் பற்றியும் இதே மனப்பான்மையும் போக்கும் தான் வெளிப் பட்டிருக்கும்.

மற்றொரு உதாரணமும் கூறலாம். இதே பத்திரிகைகளும் மீடியாக்களும் நாம் அரசியலில் இருந்தால் முக்கியமான பதவிகளில் இருந்தால் சிவாஜி தான் வசூல் சக்கரவர்த்தி என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள்

இது தான் நிதர்சனமான உண்மை.

அன்புடன்
ராகவேந்திரன்

mr_karthik
11th September 2010, 12:48 PM
Pammalar sir,

Amazing records about 'Paalum Pazamum' in the begining of its Golden Jubilee year. Wonderful details... :clap:

Hats off.

Murali sir / Saradha mam

worthful informations about the selfishness of AVM concern for pulling out Paalum Pazamum from its silver success :2thumbsup: . Your posts bring several facts and happenings in the past. This might be because of lack of proper orgonisers...?.

This is for AVM... :hammer:

Raghavendar sir & saradha

I accept your views about non-mentioning of old days collections, which is not suitable for current years.

pammalar
11th September 2010, 01:15 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 124

கே: சிவாஜி கணேசன் ஒரு படத்தை டைரக்ட் செய்தால் என்ன? (இரா.பெரிய நாயகம், வீரபாண்டி)

ப: அதற்கான திறமை அவருக்கு நிறைய உண்டு. ஆனால் நேரம் தான் கிடையாது.

(ஆதாரம் : பொம்மை, செப்டம்பர் 1982)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th September 2010, 01:28 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 125

கே: சிவாஜியின் 'உயர்ந்த மனிதன்' எப்படியிருக்கிறது? (என்.சங்கரன், சென்னை - 52)

ப: சிவாஜியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1969)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th September 2010, 01:33 PM
Welcome back Mr.Karthik. Thanks a lot for your whole-hearted appreciation.

Warm Wishes,
Pammalar.

J.Radhakrishnan
11th September 2010, 06:03 PM
அண்மையில் தவமாய் தவமிருந்து படம் பார்த்தேன். அதில் அப்பா வேடத்தில் வரும் ராஜ்கிரண் பாத்திர அமைப்பு நன்றாக இருந்தது.

இது போன்ற பாத்திரங்களில் நம் NT அவர்கள் வியட்நாம் வீடு, கெளரவம் படங்களில் நடித்திருந்தாலும் அது நகர வாழ்க்கையை ஒட்டி அமைத்திருந்தது, எனினும் எங்க ஊர் ராஜா படம் மனதுக்கு நிறைவளித்தது.

நம் தலைவர் ஒரு அட்சய பாத்திரம்.
ஆனால் அவரிடம் இது போன்ற யதார்த்தமான கதைகள் கூறாமல் அன்பே ஆருயிரே, லாரி டிரைவர் ராஜாகண்ணு போன்ற கதையை எடுத்து வீணடித்து விட்டனர்.

குறிப்பாக 1975-1976 ஆண்டு காலகட்டத்தில் இது போன்ற கதைகள் அமையவில்லை என்பது என் ஆதங்கம்.

goldstar
11th September 2010, 06:33 PM
Thanks Murali, Saradha sister, Raghavendra and Swamthinathan.

What a movie PP and what a collection. As Saradha pointed out there are few section in the media want to hide our god NT's success in box office. At any time our NT movie will beat any actor's box office.

When Murali said about PM, PasaMalar and PP, my first impression was that all these movies 25 weeks movies. But as always our NT movies are competition for NT movies.

Radhakrishnan, I can understand your worries. But for me any movies we can watch just for NT face. I won't mind to watch LDR for 100 times just for NT.

Cheers,
Sathish

mr_karthik
11th September 2010, 06:33 PM
Recently I have fortunated to watch 'SATHYAM' (1976) after a long time. Co-starred by Kamal, Jayachitra, Manjula. Fully njoyed the movie.

Another reason for my joy is, Devika paired with NT after long time, but proved she is his best pair. Good songs for Kamal by SPB (kalyAna kOyilin dheiveega kalasam, azagAm kodi siridhu). But I dont like TMs song 'pOttAnE oru pOdu' for NT. Better avoid such songs.

How this movie was received in first release, in Tamilnadu..?.

RAGHAVENDRA
11th September 2010, 07:10 PM
Dear Karthik,
Happy to read your post on Sathyam. My first surprise was how and where you saw that movie? Because it wasn't telecast in Tamil channels. Raj Video Vision released the VCD of that movie very long back and later on nowhere it is available. May be you might have had access to that old VCD. and it is really worth a watch.

Kamal in many scenes would look a little nervous or uncomfortable. NT had to give a lot of enthusiasm and encouragement for him to act at his will. Halfway SA Kannan made the screenplay to suit that uncomfort of Kamal and made the character that way, I heard.

As you said, KVM was a disappointment in this film. During late 70s I was very much disappointed by KVM in Tamil films. Reason, he used almost all his Telugu tunes in Tamil, whereas during the 60s the tunes of KVM for Tamil stood apart.

Accordingly Sathyam songs made you feel you were watching a Telugu movie. I thought the producers should have invited Mellisai Mannar for this film. Particularly the TMS song was utter disappointment.

Of course, other aspects of the film rose to the occasion. Devika was apt in this film with NT.

This film was also caught amidst the uncomfortable period for NT fans 1976. The only exception being Uthaman, all others suffered the political outcome during that period.

Anyhow, Sathyam was not a fast paced movie and even had it been released in other periods, it would not have made much of a difference.

Sathyam watchable for one and only NT and for a portion, the up and coming Kamal.

Raghavendran

goldstar
11th September 2010, 07:21 PM
Thanks Raghavendra for giving more details about Sathyam. But I beleive this movie is a 100 days movie. Murali sir and Saradha can give more details.

This movie VCD is available in Madurai still, I have seen VCD when was in Madurai in May 2010 and Raj TV used to show many times

I have watched this movie in Alankar theatre on a Sunday day and made lots of "Allapparai" in the theatre. Devika has acted with our god after long and she was very fatty and in my opinion she was not 100% mathched with NT in this movie.

As Karthik mentioned Kamal songs are very nice. NT song is not bad at all but not listened by viewers in the Radio.

Cheers,
Sathish

NOV
11th September 2010, 07:57 PM
Dear Satish.
Murali, Rakesh & I had discused this film in Sept 2007. :D
see this and the next page:
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=585

pammalar
11th September 2010, 08:44 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 126

கே: எட்டையபுரம் பாரதி விழாவின் முழுச் செலவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடையதா? (அப்துல், சென்னை)

ப: ஆமாம்.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1958)

குறிப்பு:
52 ஆண்டுகளுக்கு முன்னர் 1958-ல், செப்டம்பர் 11, 12 தேதிகளில் (11.9.1958 & 12.9.1958), மகாகவி பாரதியாரின் பிறந்த ஊரான எட்டையபுரத்தில், பாரதியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக. அவரது நினைவைப் போற்றும் வகையில், தேசிய கவிக்கு தனது சொந்த செலவில் மிக விமரிசையாக விழா எடுத்தார் தேசிய திலகம். பாரதிக்கு விழா எடுத்த முதல் நடிகர் சிவாஜி. தேசியம் அவரது இரத்தத்திலும், உயிர் மூச்சிலும் ஊறியிருக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்.

[இந்த பாரதி விழா பற்றிய விரிவான தொகுப்புக்கள் வெகு விரைவில்]

இன்று 11.9.2010 அமரகவி பாரதியின் 89வது ஆண்டு நினைவு தினம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th September 2010, 12:57 AM
Welcome back Satish! Thanks a lot!

Warm Wishes,
Pammalar.

pammalar
12th September 2010, 02:56 AM
How this movie (Sathyam) was received in first release, in Tamilnadu..?.

Mr. Karthik,

"Sathyam" - NT's 183rd Film & 47th Color Picture

First released on 6.5.1976 (Thursday) [100 Day Film]

Ran for 100 Victorious days at Theatre Winsor, Jaffna.

Run in Chennai:

Wellington - 56 days

Crown - 50 days

Roxy - 43 days

Noorjehan - 29 days

Some other centres' run:

Madurai - Alankar - 44 days

Salem - 43 days

Tiruchy - 36 days

Kovai - Central - 23 days

Tirunelveli - Central - 36 days

Nagercoil - Rajesh - 29 days

Dindugal - NVGB - 22 days

Overall, "Sathyam" cannot be termed as a Flop or a Failure nor a Hit. It just did AVERAGE BUSINESS in the Box-Office.

Note:

1976 was not a fruitful year for NT. Accepted. But even die-hard fans of NT have a blind perception that all the films in 1976 of NT except "Uthaman" bombed at the Box-Office. This is unfair, false & absurd. After a thorough Box-Office analysis of the films of NT released in 1976, I came to a strong conclusion about the Box-Office status of the NT films of 1976, which can be seen in the list given below:

[In the format of FILM - RELEASE DATE - BOXOFFICE STATUS]

1. Unakkaagha Naan - 12.2.1976 - ABOVE AVERAGE [Ran for more than 50 Days]

2. Grahappravesam - 10.4.1976 - BIG COMMERCIAL HIT [100 Days in Sri Lanka]

3. Sathyam - 6.5.1976 - AVERAGE [100 Days in Sri Lanka]

4. Uthaman - 25.6.1976 - ONE OF THE BIGGEST HITS OF 1976 [100 Days at Madurai-Newcinema & 29 Weeks in Sri Lanka]

5. Chitra Pournami - 22.10.1976 - FLOP [I am unable to find a 50-Day print tilldate]

6. Rojavin Raja - 25.12.1976 - ABOVE AVERAGE [Ran for 10 Weeks]

Points to ponder:

1. 'Rojavin Raja' fared well at the Box-Office than 'Unakkaagha Naan'. In fact, 'Rojavin Raja' was cornered by 'Avan Oru Chariththiram' [14.1.1977] on one side & by 'Deepam' [26.1.1977] on the other. Yet, it came out trumps.

2. 'Grahappravesam' completed 100 victorious days at Colombo, Chellamahal.

3. 'Uthaman' in Ceylon:

Colombo - Central - 203 Days

Jaffna - Rani - 179 Days

Mattunagar - Vijaya - 101 Days

NT is always a Smart, Tough Guy.

TOUGH GUYS DON'T DANCE!

Warm Wishes,
Pammalar.

RAGHAVENDRA
12th September 2010, 10:55 AM
This film was also caught amidst the uncomfortable period for NT fans 1976. The only exception being Uthaman, all others suffered the political outcome during that period.
Raghavendran

Dear Pammalar,
Wonderful. Your analysis and statistics of 1976 makes interesting reading. But what I meant was ... the political outcome had its impact on the running of the films in 1976 and though a few films fared above average the results would have been more success rate if not for the politics. That's what I meant. Because we practically witnessed this impact in the theatres during those days. Even the so called the previous gen die hard fans fell prey to the political propaganda and stopped coming to the theatres for NT movies. This was a fact and I had to convince many of my old friends requesting them to keep politics away. There was not any overwhelming crowd, or crowd enough to keep the theatre packed during the third week onwards for the other films except Uthaman. That was what I came to say. As you might have noticed even Madurai could not see the 50 days run of Sathyam. But that in noway is connected to the quality of the film.

Raghavendran

mr_karthik
12th September 2010, 11:59 AM
Pammalar Sir,

Many many thanks for your detailed 'Statistical Data' for the average run film 'SATHYAM' and overall analysis of the films released in 1976.

During first release I have watched it in Crown theatre at Mint area, in my small age (I am a die hard fan of Devika, next to our NT), and during the interval, 'coming soon Uththaman' slides were shown. I think even if sathyam did not caught by political crisis, it might not do much better, might be added 20 more days in all centres.

'Grahapravesam' being a family oriented subject, made an average run by the support of female audience. In Chennai it had released in good theatres ie Pilot, Agasthiya, Muralikrishna & Kamala.

Thanks to Srilankan fans for making 1976 a successful year for NT with one Silver Jubilee and two 100 days crossed films.

On going through, not only for NT, but generally 1976 is not a successful year for Tamil Cinema, except for Sivakumar (AnnakiLi, by the grace of IR).

MGR has released three films
Neethikku thalai vanangu
Uzaikkum karangaL
Oorukku uzaippavan
and out of them NTV only met 100 days in three centres.

Well expected, Kamal & KB allianced 'Manmadha Leelai' also ran for 70 days only.

In 1976, most of the die-hard NT fans were in old congress under leadership of P.Ramachandran, because of their affection with late Perundhalaivar Kamaraj. But when Old Congress leaders decided to join as Janatha Party, along with Bharathiya Jansangh (now BJP), an arch rival of congress, the woke up and returned to NT's camp from Deepam.

But in 1977 also two well expected movies 'ILaiya thalaimuRai', and 'Naam piRandha maN' not gone to a satisfactory level of the fans. (the first one was due to late release). We want to know about the running data of NPM also. Do you have any 50th day advertisement of 'naam piRandha maN'..?.

Sorry for disturbing you again. What to do?. 'thangam kidaikkiRa idaththaithAn manam thONda sollum..?'.

mr_karthik
12th September 2010, 12:37 PM
[tscii:ca91a0ad26]
Dear Karthik,
Happy to read your post on Sathyam. My first surprise was how and where you saw that movie? Because it wasn't telecast in Tamil channels. Raj Video Vision released the VCD of that movie very long back and later on nowhere it is available. May be you might have had access to that old VCD. and it is really worth a watch.
Raghavendhar Sir,

Thanks for your detailed explanations about ‘Sathyam’.

Here we have a neighbor Tamil family (their native is Lalgudi, Trichy Dist), whose brother is in Dubai. Every year when he is coming here for vacation, he will bring many quality DVDs for tamil films from Dubai, and I used to borrow from them to watch. Like that I saw this movie in their house and got it from them.
[/tscii:ca91a0ad26]

saradhaa_sn
12th September 2010, 04:46 PM
டியர் பம்மலார் / ராகவேந்தர் / கார்த்திக் / சதீஷ்...

'சத்யம்' படம் பற்றிய பதிவுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. பம்மலார் வழக்கம்போல புள்ளிவிவரப்பட்டியலை அள்ளித்தந்திருக்கிறார். மற்றவர்கள் அது தொடர்பான விஷயங்களையும், 1976 நடப்புகள் பற்றியும் தெளிவுற விளக்கியுள்ளனர். பாராட்டுக்கள். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், இதுபோன்ற சராசரிப் படங்களைப்பற்றிய விவாதங்களும் நடைபெறுவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிப்பதாகும். கார்த்திக் துவக்கி வைக்க மற்றவர்கள் அதை அருமையாக தொடர்ந்திருக்கிறார்கள். நன்றி.


52 ஆண்டுகளுக்கு முன்னர் 1958-ல், செப்டம்பர் 11, 12 தேதிகளில் (11.9.1958 & 12.9.1958), மகாகவி பாரதியாரின் பிறந்த ஊரான எட்டையபுரத்தில், பாரதியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக. அவரது நினைவைப் போற்றும் வகையில், தேசிய கவிக்கு தனது சொந்த செலவில் மிக விமரிசையாக விழா எடுத்தார் தேசிய திலகம். பாரதிக்கு விழா எடுத்த முதல் நடிகர் சிவாஜி. தேசியம் அவரது இரத்தத்திலும், உயிர் மூச்சிலும் ஊறியிருக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்.
கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற சிறுவர் நடனப்போட்டியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு குழுவினர், 'இந்திய நாடு என்வீடு' (பாரத விலாஸ்) பாடலுக்கு அபிநயம் செய்து ஆட, பாடல் முடிந்ததும் நடுவரான டான்ஸ் மாஸ்ட்டர் ரகுராம் கருத்துச்சொல்லும்போது, "இந்தப்பாடலில் நான் உதவி நடன இயக்குனராக இருந்தேன். நடிகர்திலகம் சிவாஜி சார் எப்போதுமே தேசப்பற்று மிக்கவர். அவர் படங்களில் எங்காவது ஒரு இடத்தில் தேசியத்தைப் புகுத்தியிருப்பார். அதுபோல இந்தப்பாடல் படமாக்கப்பட்டபோது நிஜமாகவே அவர் உணர்ச்சி வசப்பட்டதில், அவருக்கு பிளட்பிரஷர் அதிகமாகி விட்டது" என்றுகூறி பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

pammalar
12th September 2010, 06:40 PM
Dear Raghavendran Sir,

My sincere thanks for your appreciation. My special thanks for your informative post.

Dear Mr. Karthik,

Thank you very much for your praise & info.

Again a slight correction. "Grahappravesam" did not have an Average run. It had a decent run and was a big commercial hit and was also a 100 day film, thanks to Lankan fans. The run of "Grahappravesam" in Chennai:

Pilot - 62 days

Agastiya - 62 days

Muralikrishna - 48 days

Kamala - 48 days

"Grahappravesam" ran successfully at Madurai-Chinthamani for 62 days and completed 50 days in all the other main centres Salem, Trichy, Coimbatore & Tirunelveli. As told already, it is a 100 day film at Ceylon [Colombo-Chellamahal]. In all the other centres it had a 4 week to 6 weeks successful run. So, on any account, "Grahappravesam" is a BIG COMMERCIAL HIT.

As you mentioned, 1976 was not even a fruitful year for Tamil Cinema as well. Even, Makkal Thilagam's films fared a bit less when compared to 1970-1975. As you said, "Neethikku Thalai Vananghu" [18.3.1976] was a 100 day grosser. The 100 day centres of NTV:

Chennai - Devikala

Chennai - Maharani

Salem - Sangam

Colombo - Samantha (Ceylon)

NTV ran for 86 days at Madurai - Central. It ran for more than 50 days at Chennai - Uma & Krishnaveni, Trichy - Jupiter, Kovai - Raja, Tirunelveli - Central. It also crossed 50 days at Erode, Nagercoil and did a fine business in many other centres. No doubt, NTV is one of the big BO hits of 1976.

Regarding "Uzhaikkum Karangal" [23.5.1976], the film ran for 75 days at Chennai - Santham(4 Shows). Other theatres also it fared well, crossing 50 days at Srikrishna & Uma & Kamala ( 47 days). It ran for 75 days at Madurai - Cinepriya & Salem - Alankar. It also crossed 50 days at Trichy, Coimbatore, Tirunelveli, Nagercoil etc and did good business in a handful of centres. It was also a commercial hit in Ceylon. Going by the high Box-Office value & enviable mass appeal of Makkal Thilagam, UK can be considered as an Above Averge to a Hit range film.

"Oorukku Uzhaippavan" [12.11.1976] ran for 50 days at Chennai - Abhirami & Maharani. It also completed 50 days at Madurai, Coimbatore, Salem, Tirunelveli, Nagercoil etc. It also did a fine business in Lanka. Again, going by the BO value of MGR,OU can get an Average level BO status.

As you said, "Manmadha Leelai" with its "A" appeal ran well in A centres.

If 1955 was the year of Kaadhal Maanan Gemini Ganesan due to the two himalayan hits, Missiamma [14.1.1955] & Kanavane Kankanda Deivam [6.5.1955], 1976 will go to Sivakumar for his two Stupendous Silver Jubilee Hits, Annakkili [14.5.1976] & Bhadrakaali [10.12.1976]. In fact, Annakkili is the Box-Office Record film of 1976, Sincere thanks to our debutant Maestro. [அன்னக்கிளி : ஹிந்தி பாடல்களுக்கு கிலி]

Coming back to our one & only Nadigar Thilagam and his films, "Naam Pirandha Mann" [7.10.1977] fared at a Below Average pace at the Box-Office. At Chennai : Chitra - 34 days, Maharani - 34 days, Muralikrishna - 28 days. It ran for 49 days at Madurai - Cinepriya ( I am seeing Murali Sir making his collars up!) and also completing 7 weeks at Salem. In many centres, it was changed for our Deepavali Release [10.11.1977], "Annan Oru Koil". So, in many areas NPM ran only for 4 to 5 weeks. A very good film, but a pathetic bad run. [நமது தமிழ் மக்களின் தேச பக்தியை நாம் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்! என்ன செய்வது!]

With regard to "Ilaiya Thalai Murai" [12.5.1977], the BO Status is Average. It ran for 7 scintillating weeks at Asia's biggest theatre, Madurai - Thangam [2593 Seats, Again collars up for Murali Sir!]. In Chennai, Chitra - 36 days, Crown - 35 days, Bhuvaneswari - 35 days, Pazhaniappa - 28 days. Other main centres, Salem (6 weeks), Trichy (5 weeks), Coimbatore (5 weeks). In B & C Centres, it didn't do well. Again a rich film in quality displaying a poor show in running.

But, "Deepam" & "Annan Oru Koil" turned the tables, went on to become mega block-busters, hence proving once again to the tinsel world that Our NT is the real BOX-OFFICE KING. [Last but not the least, "Avan Oru Chariththiram" was also a tremendous commercial hit.]

Warm Wishes & Regards,
Pammalar.

saradhaa_sn
12th September 2010, 07:50 PM
Coming back to our one & only Nadigar Thilagam and his films, "Naam Pirandha Mann" [7.10.1977] fared at a Below Average pace at the Box-Office. At Chennai : Chitra - 34 days, Maharani - 34 days, Muralikrishna - 28 days. It ran for 49 days at Madurai - Cinepriya ( I am seeing Murali Sir making his collars up!) and also completing 7 weeks at Salem. In many centres, it was changed for our Deepavali Release [10.11.1977], "Annan Oru Koil". So, in many areas NPM ran only for 4 to 5 weeks. A very good film, but a pathetic bad run. [நமது தமிழ் மக்களின் தேச பக்தியை நாம் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்! என்ன செய்வது!]
டியர் பம்மலார்,

வேதனையான உண்மை. 1961-ல் ஒரு 'கப்பலோட்டிய தமிழன்', 1977-ல் ஒரு 'நாம் பிறந்த மண்'.

உண்மையில் செங்கல்பட்டுக்கு அருகே வாழ்ந்த ஒரு சுதந்திரப்போராட்ட வீரனான 'சந்தனத் தேவன்' வரலாறுதான் நாம் பிறந்த மண் படமாக தயாரானது. (நடிகர்திலகமும் காதல் மன்னனும் இணைந்து நடித்த கடைசிப்படம்). கமல். கே.ஆர்.விஜயா, படாபட் ஜெயலட்சுமி எல்லோரும் நன்றாகவே பங்களிப்பைத் தந்திருந்தனர். நேச்சுரலாக இருக்க வேண்டுமென்பதற்காக வில்லன் ரோல்களுக்கு நிஜ வெள்ளையர்களையே நடிக்க வைத்திருந்தனர். ஒரு வெள்ளையன் படாபட்டை சீரழிக்கும் காட்சியில் நம் ரத்தம் கொதிக்கும், உடல் பதறும். இயக்குனர் வின்சென்ட் படத்தை நன்றாகவே கையாண்டிருந்தார். இருந்தும் மக்களிடையே சென்றடையவில்லையென்பது வருத்தமளிக்கும் விஷயம். ஒரு சித்ரா பௌர்ணமி வெற்றியடையவில்லை என்று நாம் வருத்தப்பட வழியில்லை. ஆனால் நாம் பிறந்த மண் அப்படியல்ல. நம் தேசப்பற்றை உரசிப்பார்க்கும் படம். (என்னவோ தெரியாத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து தொலைத்து விட்டனர் என்று தோன்றுகிறது).

கிட்டதட்ட இப்படம் வெளியான அதே நேரத்தில் தெலுங்கில் கிருஷ்ணா நடித்த இன்னொரு சுதந்திர போராட்ட வீரரின் வரலாறான "அல்லூரி சீத்தாராம ராஜு" ஆந்திரமெங்கும் படு பயங்கர வெற்றி.

இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.

J.Radhakrishnan
12th September 2010, 09:28 PM
சத்யம் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படம் குறித்த கதை யாரேனும் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

Murali Srinivas
13th September 2010, 12:07 AM
நாம் பிறந்த மண் படமாக தயாரானது. இயக்குனர் வின்சென்ட் படத்தை நன்றாகவே கையாண்டிருந்தார்.

சாரதா,

நாம் பிறந்த மண் படத்தை வின்சென்ட் சரியாக கையாண்டிருந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அந்த படம் சரியாக போகாததற்கு காரணமே வின்சென்ட்தான் என்று படத்தின் இன்னொரு இயக்குனரும் திரைக்கதை வசனகர்த்தாவுமான வியட்நாம் வீடு சுந்தரம் சொல்லியிருந்தார். கௌரவத்திற்கு பிறகு ஹிந்து ரங்கராஜன் தயாரித்த இந்தப் படத்தை முதலில் இயக்கியது சுந்தரம் மட்டும்தான். ஆனால் ஒளிப்பதிவாளராக இருந்த வின்சென்ட் திரைக்கதையில் தலையிட்டார் என்றும் அவர் ரங்கராஜனிடம் ஏதேதோ சொல்லி தன்னையும் இயக்குனராக இணைத்துக் கொண்டார் என்றும் நடிகர் திலகத்திற்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் கூட ரங்கராஜன் அவரது நெருங்கிய நண்பர் என்பதாலும் பெரிய பட்ஜெட் படமான இது இந்த பிரச்சனைகளினால் நின்று விடக் கூடாதே என்ற அக்கறையினாலும் அவர் ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தார் என்றும் அப்போதே செய்திகள் வந்தன. ஆகவேதான் முதல் பகுதியில் நன்றாக அமைந்த படம் இரண்டாம் பகுதியில் தடுமாறியது. அது மட்டுமல்ல, படம் வெளியான நேரம் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு. அதுவும் படத்திற்கு ஒரு சோதனையாக அமைந்தது. ஆனால் படத்தின் கதை நிச்சயமாக ஒரு வெற்றிப் படத்திற்கான கதை என்பதை நன்கு உணர்ந்த அன்றைய ஒரு இளைஞர் 19 வருடம் கழித்து, தான் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறிய பின், அதை கால மாற்றத்திற்கேற்ப சிறிதே மாற்றி படமாக்கி ஒரு "இந்தியன்" வெற்றியை தந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சுவாமி,

நான் எப்போதும் மற்ற ஊர்களில் உள்ள ரசிகர்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இங்குள்ள மற்றவர்களை விட உங்களுக்கு மதுரை பற்றியும் மதுரை சிவாஜி ரசிகர்களைப் பற்றியும் நன்றாகவே தெரியும். அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் வேறு எந்த ஊர் மக்களும் கொடுத்ததில்லை. இங்கே நான்,tacinema மற்றும் சதீஷ் போன்றவர்கள் அதனால்தான் எப்போதும் அதை பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம்.

அன்புடன்

ராதா,

முன் பக்கத்தில் NOV அவர்கள் ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார். அதை சொடுக்கினால் முன்பு சத்யம் படத்தைப் பற்றிய விமர்சனமும் விவாதங்களையும் படிக்கலாம்.

pammalar
13th September 2010, 04:19 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 10
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே!
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே!
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே!
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே!"

செட்டிநாட்டு கவிஞருக்கு வார்த்தைகள் எங்கிருந்து தான் வந்து விழுமோ?! கலைமகளின் கவிதை வடிவமே கண்ணதாசன்! இரு வேறு இதயங்கள் இணையும் இணையற்ற இணைவை எத்துணை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கவியரசர். Unlike poles always attract. மெல்லிசை மன்னர்கள் பாடல் முழுமையும் வியாபிக்கிறார்கள். ட்யூனின் ஆரோகண அவரோகணங்களும் சரி, இணைப்பு இசையும் (Interludes) சரி, இசை நுணுக்கங்கள். அதனைப் பாமரனும் உணர்ந்து மெய் மறக்கிறான் பாருங்கள், அதில் தான் இருக்கிறது விஸ்ராமுக்கு விக்டரி. ஹேட்ஸ் ஆஃப் விஆர்!

சுசீலா பாடும் மைக்கைக் கவிழ்த்துப் பார்த்தால் தேன் சொட்டுமோ?! எத்துணை இனிமை! அதே சமயம் கணீரென்று குரல் ஒலிக்க வேண்டிய இடங்களில் எத்துணை இனிமை குறையாத கம்பீரம்! சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தென்னாட்டுக்குயில், தங்கத்தமிழை அக்ஷரபிசகு இல்லாமல் என்னமாய் உச்சரிக்கிறார். நடிகர் திலகத்திற்கு நடிப்பில் எப்படி எந்த தருணத்திலும் ஸ்லிப் வராதோ, அது போல், பாட்டில் TMSக்கும், சுசீலாவிற்கும், தமிழ் உச்சரிப்பில் எந்த இடத்திலும் ஸ்லிப் வராது. Legends are born, never made! [திரு.கேஆர்வி. ராஜேஷ், சுசீலா இசையரசி மாத்திரமல்ல, இசைவாணியும் தான்!]

பாடலைப் பாடிக் கொண்டே ஆடும் அபிநயசரஸ்வதி பாடல் முழுவதும் தனது பட்டப்பெயருக்கு கட்டியம் கூறுகிறார். ஆம்! அபிநயங்களை அள்ளி அள்ளி வீசுகிறார். மலைப்பிரதேச இயற்கைக் காட்சிகள் கண்களுக்கு குளுகுளு. [ஹவுஸ்ஃபுல் அரங்கில் ஏசியும் ஃபுல்லாக போடப்பட்டிருந்ததால் உடலும் குளுகுளு].

மனதை மயக்கும் மலைப்பிரதேச காட்சிகளையும், பாடலின் பலவான்களான கண்ணதாசன், விஸ்ராம், சுசீலா, சரோஜா ஆகியோரையும், ஒரு வார்த்தை கூட பாடாமலேயே, தனது நடிப்பாலும், நடையாலும், ஸ்டைலாலும், முகபாவங்களாலும், அங்க அசைவுகளாலும், தனது Screen Presence ஒன்றின் மூலம் மட்டுமே, தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார் பாருங்கள் ஒரு ஜாம்பவான், அவர் யார் என்று சொல்லவும் வேண்டுமோ! நடிப்பு பகாசுரன் சிவாஜி!

பாடலின் முதல் சரணத்தில், மஞ்சள்-வெள்ளை சல்வார் கம்மீஸ் நீலநிற துப்பட்டாவில் அபிநயம் அழகென்றால், கருநீல கோட்-சூட் ரெட் டையில் அண்ணல் அழகோ அழகு. "Made for each other Pair" என்றால் அது இந்த ஜோடியைத் தான் குறிக்குமோ!

பாடலின் பல்லவிக்கும், முதல் சரணத்திற்கும் சூடான பக்தர்களின் சூடாராதனை தொடர்கிறது. இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் interlude முழங்க, ஒரு மேட்டின் மீதேறி, தனது வலது கரத்தை நேராகவும், இடது கரத்தை சற்று மடக்கியும் விட்டு ஸ்டைலாக, ஒயிலாக Screen Full நிற்கிறார் அண்ணல், House Full அரங்கம் அதிருகிறது. இதற்காகவே காத்திருந்தது போல் பக்தர்கள் மெகாதீபாராதனை காட்டுகின்றனர்.

அடுத்து, சுசீலாவின் ஹம்மிங் ஹில்டாப்புக்குப் போக, அழைப்பை ஏற்று ஆண் வண்டு (அண்ணல்), பெண் மலரின் (அபிநயம்) மகரந்தத்தை சுவைத்து எழந்து லிப்பை சரி செய்ய விசிலும், அப்ளாசும் வீறு கொண்டு எழுகிறது. அண்ணலின் குளோசப்புக்கு தீபாராதனையும் தான்!

பாடல் இனிதே நிறைவடைய, "ஸ்டைல் மன்னன் சிவாஜி வாழ்க!", "ஸ்டைல் கிங்னா தலைவர் தான், வேற எவனும் கிடையாது" என்ற ஏகவசன கோஷங்கள் ஏகவேகத்தில் கேட்கின்றன. பாடல் முடிந்தும் பக்தர் கூட்டம் திரையருகில் தான்! அண்ணலின் அற்புதங்களை எத்தனை முறை பார்த்தாலும் பசி தீராதவர்கள், "பார்த்த ஞாபகம் இல்லையோ"விற்காக பரவசத்துடன் காத்திருக்கின்றனர்.

['சிட்டுக்குருவி' பாடல் போல், நாயகி மட்டும் ஸோலோவாகப் பாட, நாயகன் நடிகர் திலகம் பாடாமல், தன் நடிப்பால் மட்டுமே கலக்கும் பாடல்கள் தான் எத்தனை, எத்தனை. அதிலும் தான் எத்தனை விதம், எததனை ரகம். "புதிய பறவை"யிலேயே இன்னும் இரண்டு இருக்கிறதே, 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. ஆண்டவன் கட்டளையின் "அழகே வா, அருகே வா" என்ன, ஊட்டி வரை உறவின் "தேடினேன் வந்தது" என்ன, நவராத்திரியின் "சொல்லவா கதை சொல்லவா" என்ன, ஆலயமணியின் "மானாட்டம் தங்க மயிலாட்டம்" என்ன, பராசக்தியின் "புதுப்பெண்ணின் மனசைத் தொட்டு போறவறே" என்ன, உத்தமபுத்திரனின் "காத்திருப்பான் கமலக்கண்ணன்", "உன்னழகை கன்னியர்கள்" என்ன, கட்டபொம்மனின் "சிங்காரக் கண்ணே" என்ன, பாகப்பிரிவினையின் "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்" என்ன, படிக்காத மேதையின் "படித்ததினால் அறிவு பெற்றோர்" என்ன, என் தம்பியின் "தட்டட்டும் கை தழுவட்டும்" என்ன, உயர்ந்த மனிதனின் "நாளை இந்த வேளை" என்ன, ராமன் எத்தனை ராமனடியின் "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" என்ன, வசந்த மாளிகையின் "கலைமகள் கைப் பொருளே" என்ன, பாசமலரின் "பாட்டொன்று கேட்டேன்", "மயங்குகிறாள் ஒரு மாது" என்ன...................the list is endless.........எக்ஸ்பர்ட் சாரதா இது குறித்து அலசினால் நன்றாக இருக்கும்.]

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

groucho070
13th September 2010, 08:26 AM
Justice Gopinath (1978).

Wonder if Rajini would have pulled off Kannan if Gouvaram came late? Namakethukku vambu.

Anyway, nice little film. Harmless. Notable because of NT/Rajini as father and 'son'.

One scene made my wife and I laugh out loud.

It's late, Rajini is working, looking to take on a sensational case, mom, KR. Vijaya urges him to go to sleep, then NT comes along and encourages Rajini to take on the case, even offering to help in points. The dialogues (paraphrased, not exact)

NT: Sari, ippo nee poyee toonggu
Rajini: Amma enakkaaga kaatirukkaatha.
NT: Bloody fool :evil: Naan avalukkaaga kaatirukkanumdaaa :rotfl: (same time Rajini scoots off comically and KR. Vijaya giggles and pokes NT, looking mock-angry)

saradhaa_sn
13th September 2010, 10:46 AM
சுவாமி,

நான் எப்போதும் மற்ற ஊர்களில் உள்ள ரசிகர்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இங்குள்ள "மற்றவர்களை" விட உங்களுக்கு மதுரை பற்றியும் மதுரை சிவாஜி ரசிகர்களைப் பற்றியும் நன்றாகவே தெரியும். அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் வேறு எந்த ஊர் மக்களும் கொடுத்ததில்லை. இங்கே நான்,tacinema மற்றும் சதீஷ் போன்றவர்கள் அதனால்தான் எப்போதும் அதை பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம்.
டியர் முரளி,

அந்த "மற்றவர்கள்" வரிசையில் என்னையும் சேர்த்துவிட மாட்டீர்கள் என்பது எனக்குத்தெரியும். காரணம், 'நான் பிறந்த மண்' சென்னையாக இருந்தபோதிலும் மதுரை ரசிகர்கள் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவள். சென்னையில் இத்தனை திரையரங்குகள் இருந்தும், சென்னை கைவிட்ட எத்தனையோ படங்களை சாதனைப்படங்களாக ஆக்கிய பெருமை மதுரை மண்ணுக்கு உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராமன் எத்தனை ராமனடி, வாணி ராணி, என்மகன், உத்தமன் என்று எத்தனை படங்கள்..!!.

அதுமட்டுமல்ல. 'சிலர்' தங்களது 100 நாட்களுக்குக்கூட கலரை நம்பியிருந்த காலத்தில், 1961-ல் தான் என்றில்லை 1972-லும் எங்களால் கருப்பு-வெள்ளையில் 'வெள்ளி விழா' காண முடியும் என்று கூறி, 'பட்டிக்காடா'க இருந்தாலும், 'பட்டணமா'க இருந்தாலும் அண்ணனே வெற்றியாளர் என்று முழங்கிய பெருமை மதுரை மண்ணுக்கு, மதுரை மக்களூக்கு உண்டு. அதுமட்டுமல்ல, ஆசியாவிலேயே பெரிய அரங்கில் மூன்று 100 நாட்களைக்கடந்த படங்கள், ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழா என்று மூன்று முறை சாதித்த பெருமை என்று எத்தனை பொன்னேட்டு சாதனைகள். (எங்கள் சென்னையில் 1961-ல் மட்டுமே இது நிகந்தது).

(இருந்தபோதிலும் சில சின்ன திருஷ்டிப்பொட்டுக்களாக, 'தங்கப்பதக்கம்' வெள்ளிவிழாவை தவற விட்டதும் (திருச்சிக்கு நன்றி), வியட்நாம் வீடு 100 நாட்களைத் தொட இருந்த நேரத்தில், 'சச்சினுக்கு பந்து வீசிய ஷோயப் அக்தராக' நடிகர்திலகத்துக்கு வில்லனாக வந்த சேது பிலிம்ஸாரும்).

சாந்தி, கிரவுன், புவனேஸ்வரியில் தியாகம் ஓடிக்கொண்டிருந்தபோது, சாந்திக்கு முன்பாகவே கிரவுனில் தொடர்ந்து 210 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடைபோட, அதற்கேற்றாற்போல தியாகம் 100 நாட்களைக் கடந்ததும் அடுத்து வந்த 'ஜெனரல் சக்ரவர்த்தி' சாந்தி, மகாராணி, அபிராமியில் வெளியாக, 'சரி, அப்படீன்னா கிரவுனில் 'தியாகம்' வெள்ளிவிழாதான்' என்று ரசிகர்கள் மகிழ்ந்திருந்த வேளையில், அடுத்த ஒரு வாரத்தில் கிரவுனில் வேறு படம் திரையிடப்பட, ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'சிந்தி'ப்போனது.

ஆனால் அப்போதும் மதுரையில் தியாகத்தின் வெற்றியை 'சிந்தா(த)மணி'யாக அள்ளியெடுத்து வெள்ளிவிழாவாக்கிய பெருமையும் மதுரைக்கு உண்டு. மதுரை நடிகர்திலகத்தின் கோட்டை என்று நீங்கள் அடிக்கடி சொல்வது 101 சதவீத உண்மை. பம்மலார் சொன்னது போல நீங்கள் காலரை உயர்த்தி விட்டுக்கொள்ள முழுக்க முழுக்க உரிமை உண்டு.

இந்த சென்னைக்காரியின் சிறிய இதயத்தில் மதுரை ரசிகர்களுக்கு எப்போதுமே பெரிய இடம் உண்டு.

saradhaa_sn
13th September 2010, 11:42 AM
['சிட்டுக்குருவி' பாடல் போல், நாயகி மட்டும் ஸோலோவாகப் பாட, நாயகன் நடிகர் திலகம் பாடாமல், தன் நடிப்பால் மட்டுமே கலக்கும் பாடல்கள் தான் எத்தனை, எத்தனை. அதிலும் தான் எத்தனை விதம், எததனை ரகம். "புதிய பறவை"யிலேயே இன்னும் இரண்டு இருக்கிறதே, 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. ஆண்டவன் கட்டளையின் "அழகே வா, அருகே வா" என்ன, ஊட்டி வரை உறவின் "தேடினேன் வந்தது" என்ன, நவராத்திரியின் "சொல்லவா கதை சொல்லவா" என்ன, ஆலயமணியின் "மானாட்டம் தங்க மயிலாட்டம்" என்ன, பராசக்தியின் "புதுப்பெண்ணின் மனசைத் தொட்டு போறவறே" என்ன, உத்தமபுத்திரனின் "காத்திருப்பான் கமலக்கண்ணன்", "உன்னழகை கன்னியர்கள்" என்ன, கட்டபொம்மனின் "சிங்காரக் கண்ணே" என்ன, பாகப்பிரிவினையின் "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்" என்ன, படிக்காத மேதையின் "படித்ததினால் அறிவு பெற்றோர்" என்ன, என் தம்பியின் "தட்டட்டும் கை தழுவட்டும்" என்ன, உயர்ந்த மனிதனின் "நாளை இந்த வேளை" என்ன, ராமன் எத்தனை ராமனடியின் "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" என்ன, வசந்த மாளிகையின் "கலைமகள் கைப் பொருளே" என்ன, பாசமலரின் "பாட்டொன்று கேட்டேன்", "மயங்குகிறாள் ஒரு மாது" என்ன...................the list is endless.........எக்ஸ்பர்ட் சாரதா இது குறித்து அலசினால் நன்றாக இருக்கும்.]

டியர் பம்மலார்.
முதலில் 'எக்ஸ்பர்ட் சாரதா' என்ற வார்த்தைக்கு ஒரு Strong Objection.

அருமையான தொகுப்பு. தேடிப்பிடித்து அள்ளி வந்துள்ளீர்கள். தோண்ட தோண்ட வந்துகொண்டேயிருக்கிறது. சட்டெனெ நினைவுக்கு வந்தவை இதோ...

இதய வீணை தூங்கும்போது - இருவர் உள்ளம்
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவமன்னிப்பு
மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா
நலந்தானா நலந்தானா - தில்லானா
மாலை சூடும் மணநாள் - நிச்சய தாம்பூலம்
ஓகோகோ ஓடும் எண்ணங்களே - நீலவானம்
உங்கள் அழகென்ன அறிவென்ன - அன்புக்கரங்கள்
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து - சொர்க்கம்
ஓடுது பார் நல்ல படம் - நீதி
நாற்பது வயதில் நாய்க்குணம் - பாரதவிலாஸ்
நீராட நேரம் நல்ல நேரம் - வைர நெஞ்சம்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசிதீரும்
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது - அவன்தான் மனிதன்

saradhaa_sn
13th September 2010, 12:20 PM
சுசீலா பாடும் மைக்கைக் கவிழ்த்துப் பார்த்தால் தேன் சொட்டுமோ?! எத்துணை இனிமை! அதே சமயம் கணீரென்று குரல் ஒலிக்க வேண்டிய இடங்களில் எத்துணை இனிமை குறையாத கம்பீரம்! சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தென்னாட்டுக்குயில், தங்கத்தமிழை அக்ஷரபிசகு இல்லாமல் என்னமாய் உச்சரிக்கிறார். நடிகர் திலகத்திற்கு நடிப்பில் எப்படி எந்த தருணத்திலும் ஸ்லிப் வராதோ, அது போல், பாட்டில் TMSக்கும், சுசீலாவிற்கும், தமிழ் உச்சரிப்பில் எந்த இடத்திலும் ஸ்லிப் வராது. Legends are born, never made! [திரு.கேஆர்வி. ராஜேஷ், சுசீலா இசையரசி மாத்திரமல்ல, இசைவாணியும் தான்!]

உண்மைதான். ஆனாலும் ஒரு மனக்குறை... பாடும்போது தமிழை இவ்வளவு அழகாக, அட்சர சுத்தமாகப்பாடும் இசைக்குயில் சுசீலா, பேசும்போது இன்னமும் கூட தமிழில் பேச தடுமாறுவதுதான். (இவருக்குப்பின் பல ஆண்டுகள் கழித்து தமிழுக்கு வந்த எஸ்.பி.பி. என்ன அழகாக தமிழில் பேசுகிறார்).


மலைப்பிரதேச இயற்கைக் காட்சிகள் கண்களுக்கு குளுகுளு. [ஹவுஸ்ஃபுல் அரங்கில் ஏசியும் ஃபுல்லாக போடப்பட்டிருந்ததால் உடலும் குளுகுளு].

மனதை மயக்கும் மலைப்பிரதேச காட்சிகளையும்,

இந்த இடத்தில் மறக்காமல் குறிப்பிட வேண்டிய இன்னொருஜாம்பவான் (சண்முக சுந்தரத்தின் நாதஸ்வரத்துக்கு தில்லானா ஆடிய மோகனா, உச்சத்தில் ஆடிமுடிக்கும்போது, கேமராவை அழகாக மூன்றுமுறை சுழற்றி சட்டென நிறுத்தும்) எங்கள் அண்ணன் ஒளிப்பதிவு மேதை கே.எஸ்.பிரசாத்.

goldstar
13th September 2010, 04:51 PM
Nantri Murali and Saradha.

Our city Madurai is always NT fort.

I wonder how my Swami learnt to write about a movie in a beautiful way of expression and making us sitting inside the theatre. Hats of to that.

Murali, all the news given by you is totally new information and never heared about it to me. Thanks for that.

Cheers,
Sathish

RAGHAVENDRA
13th September 2010, 11:45 PM
ஏற்கெனவே பல தடவை பார்த்தது தான். இருந்தாலும் இன்று சிரிப்பொலி தொலைக்காட்சியில் நிச்சய தாமபூலம் படம் பார்த்த பொழுது இன்று புதிதாய்க் காணும் உணர்வு.

காட்சிக்குக் காட்சி முத்திரை பதித்தது மட்டுமல்ல.

தமிழ்ப்பட வரலாற்றில் தத்தவப் பாடலை கனவில் கொண்டு வந்த முதல் பாடலாகவும் எங்கே நிம்மதி பாடலுக்கு முன்னோடியாகவும் படைத்தானே பாடல் அமைந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது. அதற்கு முன்னர் நடிகர் திலகத்தின் சோகப் பாடல்கள் படத்தின் காட்சியைக் குறிப்பிடும் வகையில் அமைந்தன. ஆனால் படைத்தானே பாடல் புதுமையாக அமைந்தது மட்டுமல்லாமல் உலகத் தரத்தில் படமாக்கப் பட்டதாகவும் அமைந்தது குறிப்பிடத் தக்கது. இந்தப் பாடல் காட்சியில் வரும் வரிகள், டி.எம்.எஸ். அவர்களின் குரல், மெல்லிசை மன்னரின் இசை இவற்றிற் கெல்லாம் உயிரூட்டும் வகையில் அரங்க அமைப்பு, இயக்குனர் பி.எஸ். ரங்காவின் ஒளிப்பதிவு அத்தனை உழைப்பையும் தூக்கி நிறுத்தும் உலகத் தரம் வாய்ந்த நடிக மன்னனின் நடிப்பு ..

என்ன தான் எங்கே நிம்மதி பாடல் நம்மிடையே நிரந்தரமாகத் தங்கி விட்டாலும் அதன் முன்னோடியான இந்தப் பாடலை அடிக்க் முடியுமா....

ஒரு திராட்சைகுலையில் ருசி பார்த்து ஒதுக்கி விட்டு அடுத்த திராட்சைக் குலையில் பழத்தை எடுத்து ருசிப்பது ....

இத்தனை சிறிய மனிதன் தலையில் வரிகளின போது கால்களை நீட்டி தலையைக் குனிந்து சிந்திப்பது

ஆசை பாசம் காதலில் விழுந்தால் வரிகளின் போது மதுவும் மாதுவும் ஈர்ப்பதை ஓவியமாய் சித்தரிப்பது....

மீண்டும் படைத்தானே என்று பாடும் போது காமிரா ஒரு முழு வட்டமடிப்பது...

எந்த நடிகனுக்கு உலகில் கனவுக் காட்சியில் தத்துவப் பாடலில் நடிப்ப்தற்கு துணிவு வரும் ... நடிகர் திலகத்தைத் தவிர...

கனவுக் காட்சி என்றாலே கும்பலாக இளம் பெண்கள் மத்தியில் கதாநாயகி மட்டும் கதாநாயகனுடன் டூயட் பாடுது என்பது தானே தமிழ் சினிமாவின் இலக்கணம்...

இதை உடைத்தாரே நடிகர் திலகம்...

இதை ரசித்ததும் தமிழ் மக்கள் நெஞ்சம் தானே .. அதையும் நாம் பாராட்டுகிறோம்.

படைத்தானே பாடலின் வெற்றி தந்த தைரியம் அடுத்து அதைவிட சூப்பரான தத்துவ மற்றும் சோக பாடல் இடம் பெறும் கனவுக் காட்சிக்கு அடி கோலிற்று ....

நாம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று பெருமையோடு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள மற்றொரு வாய்ப்பைத்தந்தது நிச்சய தாம்பூலம்.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
13th September 2010, 11:58 PM
சாரதா,

நிச்சயமாக நீங்கள் "மற்றவர்கள்" லிஸ்ட்-ல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இங்கே யாரையும் அந்த அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. நான் சொன்னதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது சுவாமிக்கு புரியும். அது வேறொன்றுமில்லை. நண்பர் சுவாமி நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை [தமிழகமெங்கும் அவர் நடத்திய] தொகுக்கும் முயற்சியை தொடங்கிய போது பல ஊர்களிலும், அவருக்கு தெரிந்த பழைய ரசிகர்களை, குறிப்பாக அவர் நடத்திக் கொண்டிருந்த வசந்த மாளிகை இதழ் மூலமாக அறிமுகமானவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். பல இடங்களிலும் சில பல தகவல்கள் கிடைத்தன.சிலர் அந்நாளில் வைத்திருந்தோம், இப்போது எங்கே என்று தெரியவில்லை, தேடி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி விட்டார்களாம். ஆனால் சென்று கேட்டவுடன் பராசக்தி முதல் பூப் பறிக்க வருகிறோம் வரை தேதி வாரியாக, தியேட்டர் வாரியாக, ஓடிய நாட்கள் வாரியாக, பெற்ற வசூல்- அணா, நயா பைசா கணக்கு வரை அப்படியே எடுத்துக் கொடுத்தவர்கள் மதுரை ரசிகர்கள். குறிப்பாக சிவநாத் பாபு என்ற ரசிகரை குறிப்பிடுவார் சுவாமி. இன்னும் சொல்லப் போனால் சாந்தியில் கூட இந்த விவரங்களை சுவாமியால் முழுமையாக பெற முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதைதான் நான் குறிப்பிட்டேன். மற்றப்படி நீங்கள் மதுரையின் பெருமையை என்றுமே உயர்த்திக் காட்டியவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

இன்னும் சில சாதனைகளை நாங்கள் பெருமையாக நினைப்பதுண்டு. நேற்று நீங்கள் குறிப்பிட்டது போல் கட்டபொம்மனை மதுரை மக்கள் 181 நாட்களுக்கு ஆதரிக்காமல் இருந்திருந்தால் மேலும் ஒரு பழி வந்து சேர்ந்திருக்கும். அது போல் அதே 1959-ம் ஆண்டு பாகப் பிரிவினை படத்திற்கு கொடுத்த ஆதரவு. அந்த கருப்பு வெள்ளையின் 216 நாட்களை முறியடிக்க சிலர் ஒரு மாமாங்கத்திற்கு மேல் முயற்சி செய்து முடியாமல் போனது எல்லாம் நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.

திருஷ்டி பரிகாரம் தங்கப் பதக்கம் மட்டுமல்ல, எங்களுக்கு இப்போதும் வருத்தத்தை அளிக்கக் கூடியவை என்றால் 167 நாட்கள் ஓடிய திருவிளையாடல், 164 நாட்கள் ஓடிய பாச மலர், 165 நாட்கள் ஓடிய சம்பூர்ண ராமாயணம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். ஞான ஒளியும் வியட்நாம் வீடு போல வினியோகஸ்தரால் 90 நாட்களில் கழுத்து நெறிக்கப்பட்ட படம்தான். என்ன செய்வது? இதெல்லாம் நடந்திருந்தால் இன்னும் பெருமை கொண்டிருக்கலாம்.

சுவாமி,

வர்ணனைகளில் தெறிக்கும் சிருங்கார அழகு பிரமாதம்! மகரந்த வண்டாய் படிப்பவர்களை தேன் பருக செய்து விட்டீர்கள்.

நீங்களும் சாரதாவும் தொகுத்த தனி பாடல் லிஸ்ட் சூப்பர். இது போன்ற நாயகியர் பாடும் போது நடிகர் திலகம் ரியாக்க்ஷன் கொடுக்கும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் எதை சொல்வது! குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பாவ மன்னிப்பு, நீலவானம் மற்றும் ராமன் எத்தனை ராமனடி ஆகியவற்றை சொல்லலாம். பாவ மன்னிப்பில் பாடல் முடிந்தவுடன் பின்னணி இசை இல்லாமல் வெறும் பல்லவியை மட்டும் பாடும் காட்சி வரும். நடிகர் திலகத்தின் கைகளில் தன் முகத்தை கண்ணீரோடு புதைத்து தேவிகா தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் காட்சி! சென்ற வெள்ளியன்று ரம்ஜான்-ஐ முன்னிட்டு ராஜ் டி,வியில் படம் பார்த்த போதும் அந்தக் காட்சிக்காக காத்திருந்து பார்த்தேன். இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

ராகவேந்தர் சார்,

நான் ஒவ்வொரு முறையும் படைத்தானே பாடலை பார்க்கும் போது என்ன நினைப்பேனோ அதை வார்த்தைகளாகி தொடுத்திருக்கிறீர்கள். நன்றி!

Sathish,

Thanks. My pleasure.

அன்புடன்

pammalar
14th September 2010, 01:33 AM
Mr.Karthik,

Please give your valuable feedback on my reply post of 1976-77.

சகோதரி சாரதா,

தங்களின் தொடர் பாராட்டுக்களுக்கு எனது அன்பான நன்றிகள்!

டான்ஸ் மாஸ்டர் ரகுராம் வெளியிட்ட 'பாரத விலாஸ்' படத்தகவல் அரிய ஒன்று. அதனை அனைவரும் அறியும் வண்ணம் பதிவிட்டமைக்கு சிறப்பான நன்றிகள்!

"நாம் பிறந்த மண்" பற்றிய mini பதிவு many உண்மைகளை விளக்குகிறது. சந்தனத்தேவனுக்காக சிங்கத்தமிழன் பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

தாங்கள் வெளியிட்ட நடிகர் திலகத்தின் நாயகியர் பாடும் ஸோலோ பாடல்கள் பட்டியல் மிக அருமை. "Real" Expertஐ, "Expert" எனக் கூறுவது தவறல்லவே!

பிரசாத்தின் கேமரா "புதிய பறவை"க்கு மட்டுமா, அவர் பணியாற்றிய அத்தனை படங்களுக்குமே வரப்பிரசாதம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

டியர் முரளி சார்,

நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை மதுரை ரேஞ்ஜே தனி தான்!
[மனோகரா(1954) அதிகபட்சம் ஓடியதும் மதுரையில் தான், ஸ்ரீதேவியில் 156 நாட்கள்.]

தங்களது பாராட்டுக்கு நன்றி! சாதனைச் சக்கரவர்த்தியின் BO சாதனைகளை, அனைத்து அன்புள்ளங்களின் ஆதரவோடு, அடியேன் தொகுத்துக் கொண்டிருக்கும் பணியை, இந்த இனிய தருணத்தில் குறிப்பிட்டமைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!

டியர் சதீஷ்,

தங்களின் பரந்து விரிந்த பாராட்டுக்கு எனது பணிவான நன்றிகள்!

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் "படைத்தானே" பதிவு, பாடலை விவரிக்கும் பதிவா?! அல்லது அப்பாடலின் You Tube Videoவா?! "படைத்தானே"வை படைத்த கலைப்பிரம்மாவின் performanceஐ கண்முன் நிறுத்தி விட்டீர்கள்! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
14th September 2010, 02:28 AM
டியர் முரளி சார் பம்மல் சார் மற்றும் நண்பர்களுக்கு,
படைத்தானே பாடலைப் பார்த்ததும் முதல் வேலை இதைப் பற்றி ஹப்பில் பகிரந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தந்த வேகத்தில் என் மன ஓட்டத்தை எழுதி விட்டேன். தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளப் பூர்வமான நன்றிகள்.

நிச்சயமாக நடிகர் திலகத்தின் ரசிகர்களில் மதுரைக்கு தனியிடமும் முதலிடமும் உண்டு. அது பல முறை நிரூபிக்கப் பட்டு உள்ளது. முரளி சார் சொன்னது போல் ஓரிரு முறை தவிர, அதுவும் நம் படங்களே நமக்கு எதிராக வந்து வாய்த்தமையும் காரணமாக அமைந்த துண்டு.

சகோதரி சாரதா அவர்கள் குறிப்பிட்டுள்ள சுசீலா தனிக்குரலில் நடிகர் திலகம் தோன்றும் பல பாடல்கள் சிறப்பானவை. அதே போல் வளர் பிறை படத்தில் மௌனம் மௌனம் பாடலையும், சுமதி என் சுந்தரி படத்தில் கல்யாண சந்தையிலே, ஒரு ஆலயமாகும் பாடல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். தேனும் பாலும் படத்தில் ஒருவனுக்கு ஒருத்தியென்று பாடல், இன்னும் பல உள்ளன.

அதே போல் மற்றொன்று அசரீரி பாடல்கள். தெய்வப் பிறவி படத்தில் தன்னைத் தானே நம்பாதது பாடல், முதல் தேதி படத்தில் நடிகர் திலகம் வறுமையில் வேலையின்றி வாடும் போது ஒலிக்கும் தண்டபாணி தேசிகர் பாடல், அன்னையின் ஆணை படத்தில் அன்னையைப் போல் ஒரு தெய்வ்முண்டோ போன்ற பல பாடல்களில் அவருடைய நடிப்பு நம்மை நெகிழச் செய்து விடும்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
14th September 2010, 10:52 AM
சற்று முன் வந்த தகவல். சென்னை ஸ்டார் திரையரங்கில் முன்னறிவிப்பின்றி திடீரென மூன்று நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டு அந்த மூன்று நாட்களும் வெற்றி வாகை சூடி கிட்டத் தட்ட முப்பதாயிரம் ரூபாய் அளவிற்கு வசூல் செய்ததாக தகவல் வெளியான நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைக்காவியம் இன்று 14.09.2010 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப் படுவதாக தகவல் வந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
14th September 2010, 11:22 AM
டியர் ராகவேந்தர்,

'படைத்தானே' பாடல் காட்சியைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள். அருமையான விவரிப்பு. நிச்சயதாம்பூலம் ஒரு அருமையான படைப்பு. இப்படம் பற்றி கருத்துச்சொன்ன நடிகர்திலகம், "பாடலுக்காகவே இப்படத்தை மக்கள் பார்த்தனர்" என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருந்தார். 'பா' வரிசைப்படங்களுக்கு மத்தியில் சிக்கியும் வெற்றியடைந்த படம் இது. குறிப்பாக படைத்தானே பாடல் காட்சியில், நீங்கள் குறிப்பிட்டது போல அரங்க அமைப்பும், அதற்கு வலு சேர்க்கும் ஓவியங்களும், (குறிப்பாக உமர்கய்யாம் ஓவியமும், பாடலின் கடைசியில் நடிகர்திலகம் நுழையப்போகும் ஆந்தைக்குகை ஓவியமும்), அவற்றுக்கு சிறப்பு சேர்க்கும் தேவையான அளவேயான ஒளியமைப்பும், நடிகர்திலகத்தின் முரட்டு உடை அமைப்பும் எல்லாம் சேர்ந்து பாடலை எங்கோ கொண்டுபோய் விட்டன. (எது எதற்கோ பட்டிமன்றம் நடத்துகிறார்களே... 'டி.எம்.எஸ்.பாடலுக்கு நடிப்பதற்காக நடிகர்திலகம் பிறந்தாரா? அல்லது நடிகர்திலகத்துக்குப் பாடுவதற்காக டி.எம்.எஸ்.பிறந்தாரா?' என்று திரு.சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. நடத்த மாட்டார்கள். ஏனென்றால் நிச்சயம் தீர்ப்பு சொல்ல முடியாத கடினமான பட்டிமன்றமாக அது இருக்கும்).

இப்படத்தில் அனைத்துப்பாடல்களும் அருமை என்ற போதிலும் நிழலுக்குள் மறைந்த இன்னொரு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். டி.எம்.எஸ். மற்றும் ஈஸ்வரி பாடிய (ஈஸ்வரியா அல்லது ஜமுனாராணியா) 'இதுவேறுலகம் தனி உலகம்' என்ற பாடல். மெல்லிசை மன்னர்களின் 'பாங்கோஸ் ஸ்பெஷல்' இப்பாடல். பாடல் நடுவில் நடிகர்திலகம் "இருந்ததும் நடந்ததும் பொய்யடா நாம் இருக்கிற உலகம் மெய்யடா" என்று துவங்கும்போது கைதட்டலும் விஸிலும் பறக்கும்.

நீங்கள் குறிப்பிட்ட அசரீரிப்பாடல் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்தது, 'ப்ந்தபாசம்' படத்தில், மறைந்த திரு. மாயவநாதன் எழுதிய, படத்தின் உயிர்நாடிப்பாடலான 'நித்தம்நித்தம் மாறுகின்றதெத்தனையோ' என்ற பாடல் (குரல் உபயம் :சீர்காழியார்)

டியர் முரளி,

'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடலின் கடைசியில் நடிகர்திலகத்தின் கைகளில் தேவிகா முகத்தைப்புதைத்துக் கொண்டு அழும் காட்சி எனக்கும் ரொம்ப பிடிக்கும். அதற்கு நடிகர்திலகம் கொடுக்கும் ரியாக்ஷன் கிளாஸ் ரகம். அந்த வரிகளை மட்டும் சுசீலாவுடன் பாடுவது மெல்லிசை மன்னர். ஆனால் தனிப்பாடலாக ஒளிபரப்பும்போது சில தொலைக்காட்சிகளில் இந்த அருமையான காட்சியை கட் பண்ணி விடுவார்கள்.

saradhaa_sn
14th September 2010, 11:39 AM
பாடல் காட்சியில் நாயகி மட்டும் பாட, அதற்கு நடிகர்திலகம் முகபாவம் மட்டும் காட்டும் பாடல் வரிசையில்...

'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாடலை எப்படி மறந்தோம்?.

'சிவந்த மண்' பற்றி வாய்கிழியப்பேசும் சாரதாவும் இதை மறந்தாளே எப்படி?. அதுசரி, பாடலின்போது நடிகர்திலகம் இருந்தால் நினைவிருக்கும். ஆனால், கையில் சாட்டையுடன் யாரோ ஒரு முரட்டு அரேபியர் அல்லவா அங்கே நின்றிருந்தார்..!!.

அதேபோல, நாட்டியப்பேரொளி ஆட, மயிலாசனத்தில் அமர்ந்த நிலையிலேயே நடிகர்திலகம் முகபாவம் காட்டும் 'மன்னவன் வந்தானடி தோழி' (திருவருட்செல்வர்) பாடலும் அந்தப்பட்டியலில் இடம்பெற வேண்டியதே.

mr_karthik
14th September 2010, 01:41 PM
[tscii:2d517dec93]Pammalar sir

Sorry for not posting my reply in time. Your eloborated post showed a clear picture about the situation of the movies of NT (and others too) in 1976 & 77. Thanks a lot for your hard efforts for collecting them and presenting here.

First oaf all sorry for calling ‘Grahapravesam’ as an average run, but after watching the statistics given by you, I have understood that it is commercially hit movie, crossed 60 days in few and 50 days in many centres in Tamil Nadu.

Feel bad about the pathetic run of a good movie ‘Naam piRandha maN’ which was not touched even 50 days in any centres. Being a patriotic movie, the public should (must) give support for such wonderful creations, without expecting entertainment in all movies. It is quit natural, there will not be commercial aspects in movies like this. But I liked that movie NPM very much, as we are all from patriotic party and desciple of patriotic man NT. Same thing was happened in 1963 also for ‘Raththa Thilagam’. (Gemini’s nice action in NPM as a blind ex-freedom fighter, and touchable scene when he asking about NT’s sister, who was ruined by British man, as saradha said).

The related posts of Saradha mam and Murali sir also brought out many facts to the light. Atleast present TV channels should telecast such movies, sothat present generation can know that, these kind of films were created in past.

Thanks for your effortful statistical datas of NT movies and your wonderful nerration about Puthiya paravai at Shanti.

Murali sir & Saradha.

Nice to know about Madhurai achievements of NT movies in past, at the same time sad to know 4 more silver jubilees slipped out.

Raghavendar sir,

Your nerration about ‘PadaithAnE’ song from Nichaya ThAmboolam is simply superb, brought the scenes in front of us. During the release time also it was well recieved by fans and as you rightly said, this song was the inspiration for the ever grenn ‘engE nimmadhi’.

Pammalar sir & Saradha mam,

Your lists about the solo songs of the heroines, where NT will present there but not sing, but shows only facial expression, is a super collection. Particularly the final stylish walk for the song ‘yArukku mApiLLai yArO’ (PPT) and sad expression for the song ‘OhOhO Odum eNNangaLE’ without showing it to “our” Devika, who is singing in a joy mood with unaware of her decease.

Thank you all, once again.
[/tscii:2d517dec93]

SHIV
14th September 2010, 04:10 PM
Dear Friends

Watched the evergreen "Thillana Mohanambal" y'day with my family. This movie is a particular favourite of my daughter (10 years old) and she would have watched it about 15 times till now.

For the first time y'day she asked me "Appa Sivaji uncle engappa nadaswaram learn panninar, ivallo nalla vasikkirare?". I told her that NT is only acting as if playing a real nadaswaram and actually it is played by a vidwan well versed in this instrument. Believe me or not friends, my daughter refused to accept my reply in all seriousness and said that it is indeed NT and somother vidwan who has actually played the instrument.

She tried to counter me saying that may be the real vidwan would have played for the other actor and not for NT. Even my wife tried to convince her but in vain.

Then I patiently explained the greatness of NT and how he involves himself in each and every character he undertakes. I also showed her clippings of "Pattum Naane Bhavamum Naane" where NT plays various instruments and Mridanga Chakaravarthy.

Finally she understood and asked me a very simple question, "Appo Sivaji uncle thane eppovume no;1 actor, ethukku ivallo actorskku ellam every year prize kodukkuranga, in the mathiri perform pannina avar thane permananta award vangi iurkkanum?. Vera entha actorsum ippadi perform pannaliye"??!!!

I really had no explanation to offer and escaped with some vague replies. This apart, now my daughter has become a very big fan of our NT and she had asked me to provide a list of must watch movies of NT movies which i have started preparing.

The purpose of sending this mail is that how our NT's acting had penentrated and changed the outlook of cinema from the view point of small children like my daughter who understood what is real acting and performance.

Undoubtedly our NT's acting is for all ages, seasons, occasions, decades and centuries.

Regards

Shivram

I had no reply to this!! and told her that

SHIV
14th September 2010, 05:16 PM
Dear all,

sorry that some words have reappeared below my name in the previous postings. pl condone the error.

Shivram

goldstar
14th September 2010, 05:16 PM
Thanks Shiva for sharing such a nice information. I think this is enough for our god NT, no need of any award from Indian government.

When younger generation talks about NT and surprise about NT and appreciate NT work then thats enough.

Even after 100 years people will talk of NT and that time no one could remember about any awards only NT will be there in every one heart.

Cheers,
Sathish

mr_karthik
14th September 2010, 05:34 PM
Dear all,

sorry that some words have reappeared below my name in the previous postings. pl condone the error.

Shivram
Shiv

you can remove those lines, by cliking 'edit' button in the right-hand top corner of your post.

pammalar
15th September 2010, 01:35 AM
டியர் மிஸ்டர் கார்த்திக்,

தங்களது பாராட்டுக்கும், பதிவுக்கும் பாசமிகு நன்றிகள்! நாம் எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகள், ஸாரி எல்லாம் எதற்கு?!

டியர் ஷிவ்ராம்,

காலத்தை வென்ற கலையுலக முதல்வர், ஒவ்வொரு தலைமுறையையும் தன் வசப்படுத்திக் கொள்கிறார் என்பதற்கு தங்கள் செல்வமகளின் புகழுரைகளே சிறந்த சான்று. தங்களின் செல்லத்திருமகள் கல்வியிலும், வாழ்விலும் சிறந்தோங்க வளமான வாழ்த்துக்கள்! கலைக்குரிசிலின் திரைக்காவியங்களைப் போட்டுக் காண்பித்து, தங்களின் திருக்குமாரியை வருங்கால பாரதத்தின் சிறந்த பெண்மணியாக உருவாக்கும் தங்களின் நல்லெண்ணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

rajeshkrv
15th September 2010, 01:56 AM
sathyam has good performance by NT and Jayachitra

mr_karthik
15th September 2010, 11:01 AM
Shiva sir,

Many more blessings for your daughter and thanks for you for taking our NT's fame for the next generation.

RAGHAVENDRA
15th September 2010, 01:54 PM
Finally she understood and asked me a very simple question, "Appo Sivaji uncle thane eppovume no;1 actor, ethukku ivallo actorskku ellam every year prize kodukkuranga, in the mathiri perform pannina avar thane permananta award vangi iurkkanum?. Vera entha actorsum ippadi perform pannaliye"??!!!

I had no reply to this!! and told her that

Regards

Shivram



தலைமுறைகளைத் தாண்டி நடிகர் திலகத்தின் புகழ் செல்லும் என்பதற்கும் சென்ற தலைமுறையின் சில தவறுகளை அடுத்த தலைமுறை எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அவருக்கு செய்யக்கூடிய தலையாய பணி என்ன என்பதனை எடுத்துக் காட்டுவதற்கும்

இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது

பாராட்டுக்கள் ஷிவராம்

அன்புடன்
ராகவேந்திரன்

KCSHEKAR
15th September 2010, 03:36 PM
Thanks Mr.Pammalar for the statistical data about SATHYAM & Mr.Ragavendran for some more details about that film. There is no generation slab for NT. Yesterday night I received call from one of our NT fan from Thirukazhukundram. During our talks, he told that his daughter name is PONMAGAL - that name was in memory of Ponmagal Vandhal - Sorgam song, he told. His daughter is studying 5th standard - she also spoke with me and she told me that she is a fan of Sivaji.

So, NT has fans in all generation.

RAGHAVENDRA
15th September 2010, 07:38 PM
It's interesting news that a child is named after a NT starrer hit song... Simply great and shows the extent to which NT has spread beyond generations.

Thank you Sir for the information and compliments.

Raghavendran

pammalar
16th September 2010, 02:56 AM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கும், தகவலுக்கும் கனிவான நன்றிகள்!

நமது நடிகர் திலகம், எல்லாத் தலைமுறையினரின் அன்பு நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதற்கு தங்களின் தகவலும் சிறந்த எடுத்துக்காட்டு.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th September 2010, 03:09 AM
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள லக்ஷ்மி திரையரங்கில், வரும் 17.9.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
16th September 2010, 10:11 AM
Dear Pammlar,

What is the show timing. I will be reaching Chennai by shatabdi around 11 A.M. and return back on the same day night train. If time permits, i will try to see PP movie. Kindly let me know the route and bus from Chennai Central. If go by Auto how much charge.

Balakrishnan

abkhlabhi
16th September 2010, 10:14 AM
How far from Egmore or chetpet. I think chetpet is near to this theatre. Kindly provide information.

RAGHAVENDRA
16th September 2010, 11:23 AM
Dear Balkrishna,
Aminjikarai Lakshmi Theatre is located on the same E.V.R. High Road opp. Central Station. May be around 6 kms. from Central. You say you'd be reaching around 11.00 a.m. You can leisurely finish your lunch at Central itself. There is also the PICNIC hotel just 500 mtrs. from Central on the same road towards south which has lodging facility. The show timing must be around 2.30 p.m. for the matinee show app. and might come to end around 5.50 p.m. or 6.00 p.m. You could have ample time to reurn and catch the night train.

This suggestion is based on the assumption that you have no other commitments.

And if you want to travel from Egmore or Chetput to the theatre, you can catch Route 27B (plying from Anna Square to C.M.B.T.) which covers both Egmore and Chetput.

If you would like to come by auto from Egmore it might be around 4 kms. and if Chetput around 3 kms. Auto fare depends.

Raghavendran

abkhlabhi
16th September 2010, 11:41 AM
Thanks for the information Mr.Raghavendran. I am leaving by B'lore Mail only . I think I have enough time to see PP may be evening show.

Once again thanks

SHIV
16th September 2010, 04:53 PM
Dear Mr.Karthik/Mr.Satish/Mr.Pammalar/Mr.Ragavendra,

Thank you very much for your wishes and blessings for my daughter.

I consider my efforts as "Ramarkku (NT) oru siriya Anil seitha sevaiaipol".

Regards

Shivram

pammalar
17th September 2010, 12:01 AM
Dear Raghavendran Sir,

Thank you very much for providing the necessary information to Balakrishnan Sir.

Regards,
Pammalar.

KCSHEKAR
17th September 2010, 10:44 AM
Dear Mr.Shivram

It is our duty to do this as a NT fan. We should avoid our children to see latest films with violent, sex & vulgorism. If we trained them to see our NT film like Bharatha Vilas, Thiruvilayadal, Kappalottiya Thamizhan, Veerapandiya Kattabomman, Sivanthaman, Thangapathakkam, Paasamalar, Padikkatha Methai etc, etc, our children will grown up with Nationalism & good family sentiments.

This will help them for their future life also.

Thanks

saradhaa_sn
17th September 2010, 06:48 PM
one humble request.. this thread shifted it's focus on the statistics rather than discussing about NT's films..
why not continue the film discussion and where's saradha and others..
உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்ய இதோ "இமயம்".

(ஆனால் நிஜமாக உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்யுமா என்பது தெரியாது).

saradhaa_sn
17th September 2010, 06:51 PM
[tscii:0c4d82539c]"இமயம்" (1979)

'அந்தமான் காதலி' திரைப்படம் பல்வேறு இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, முக்தா பிலிம்ஸார் தயாரித்த வண்ணப்படம் 'இமயம்', நடிகர்திலகத்தின் 203-வது படமாக வெளியானது. 1979 ஜனவரியில் வெளியான நடிகர்திலகத்தின் 200-வது படம் திரிசூலம் அதுவரை இல்லாத சாதனையாக தமிழகமெங்கும் எட்டு அரங்குகளில் வெள்ளி விழாவைப்பூர்த்தி செய்ய, 176-வது நாளன்று இமயம் வெளியானது. இதனிடையே கவரிமான், நல்லதொரு குடும்பம் ஆகிய படங்கள் வெளிவந்தன. படத்தின் வெளிப்புறக்காட்சிகள் அனைத்தும் நேபாள நாட்டின் எழில்கொஞ்சும் இடங்களில் படமாக்கப் பட்டிருந்தன. முடிந்தவரையில் இன்டோர் காட்சிகளைக் குறைத்து, அவுட்டோரிலேயே படமாக்கப்பட்டிருததால், படம் முழுதும் கண்களுக்கு விருந்து படைத்தன. இமயமலைச்சாரல் நம் கண்களையும் இதயத்தையும் குளுமையாக்கின.

தொழிலதிபர் கங்காதரன் (நடிகர்திலகம்) எங்கும் எதிலும் சுதந்திரத்தை விரும்புபவர். தன் மனைவி காவேரி (ஸ்ரீவித்யா) வின் தங்கை சிந்து (மீரா)வை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். இதனிடையே கங்காதரனின் பார்ட்னர் வைகை அம்பலத்தின் (தேங்காய் சீனிவாசன்) தம்பி கிருஷ்ணாவை (ஜெய்கணேஷ்) சிந்து காதலிப்பதை அறிந்து, சுதந்திர எண்ணத்துடன் அதை கங்காதரன் அனுமதிக்கிறார், கிருஷ்ணாவின் உண்மை சொரூபம் அறியாமல். ஏற்கெனவே கங்காதரன் அலுவலகத்தில் வேலை செய்யும் நர்மதாவுடன்(ரீனா) கிருஷ்ணா வரம்பு மீறிப்பழகியதன் விளைவாக, நர்மதாவுக்கு யமுனா என்ற நான்கு வயதுப் பையன் இருக்கிறான். இது கிருஷ்ணாவுக்கும், நர்மதாவுக்கும் மட்டுமே தெரியும். காலப்போக்கில் நர்மதாவின் அண்ணன் ஹூக்ளிக்கும் (கே.கண்ணன்) இது தெரிய வருகிறது. அவன் நேரே சென்று கிருஷ்ணாவின் சட்டையைப்பிடித்து உலுக்குவதை விடுத்து, தங்கையிடம் சொல்லி விடுகதை போடச்சொல்லிக் கொண்டிருக்கிறான். (மெத்தப்படித்த பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், இதுபோன்ற கோமாளித்தனங்களில் கைதேர்ந்தவர்).

ஒருகட்டத்தில், கிருஷ்ணா தன்னை விட்டு விட்டு, சிந்துவை திருமணம் செய்துகொள்ளப்போவதை அறிந்ததும், தன்னை ஏற்ற்க்கொள்ளும்படி நர்மதா மன்றாட அவன் மறுத்து விலகியே போய்விடுகிறான். மனமுடைந்துபோன நர்மதா, தன்னை கிருஷ்ணா ஏமாற்றியதை ஒரு கடிதத்தில் எழுதி தன் மகனிடம் கொடுத்து கங்காதரனிடம் கொடுக்கும்படி சொல்லி விட்டு, அரளிவிதையைத் தின்று இறந்துபோகிறாள். கடிதத்தைப் படித்த கங்காதரன், கிருஷ்ணாவின் கடந்தகால பித்தலாட்டங்களை அறிந்து அதிர்ந்து போவதுடன், அவனிடமிருந்து தன் மைத்துனி சிந்துவைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். அவளோ காதல் வேகம் கண்ணை மறைக்க, மாமாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்கிறாள். அவருடைய கட்டுப்பாடுகள் அவளுக்கு வெறுப்பைத் தர, அவரை ஒரு எதிரியாக நினைக்கத்துவங்குகிறாள். மேஜராகும் நாளை எதிர்பார்த்திருந்து, வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணாவிடம் போய்விடுகிறாள். அக்கா காவேரி தடுக்க முயன்றும் அவள் நிற்கவில்லை. தாயை இழந்து, தந்தையாலும் ஏற்றுக்கொள்ளப்படாத சிறுவன் யமுனாவை தன் பொறுப்பில் வளர்க்கிறார் கங்காதரன்.

தன் தம்பி ஒரு தங்கக்கம்பி என்று நினைக்கும் வைகை அம்பலமும், கங்காதரனின் கூற்றை ஏற்கத்தயாராயில்லை. கிருஷ்ணா ஒரு அயோக்கியன் என்று நிரூபிக்க கங்காதரன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கிருஷ்ணாவின் சாதுரியத்தால் முறியடிக்கப்படுகின்றன. போலீஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான நர்மதாவின் அண்ணன் ஹூக்ளியால், தைரியமாக வெளியில் வந்து உண்மையை நிரூபிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சிந்து தன்னையே கிருஷ்ணாவிடம் தர முயற்சிக்கும் போது, தன் அண்ணனும், கங்காதரன், காவேரி ஆகியோரும் வருவதைப்பார்த்துவிட்டு, யோக்கியன்போல நடித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவிடுகிறான். கங்காதரனின் அனுமதியில்லாமலேயே கிருஷ்ணா, சிந்து திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தன் தங்கையின் சாவுக்கு காரணமாக இருந்த கிருஷ்ணா, இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதையறிந்து ஹூக்ளி, கிருஷ்ணாவைக்கொல்ல திட்டம் போடுகிறான்.

கிருஷ்ணாவின் சுயரூபத்திக்கிழிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் தவித்த கங்காதரனுக்கு, நர்மதாவுக்கும் தனக்கும் குழந்தை பிறந்தபோது ஆஸ்பத்திரியில், கிருஷ்ணா தன் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த யமுனாவின் பிறப்புச்சான்றிதழ் கிடைக்க, அதைவைத்து கங்காவை மிரட்டும் கங்காதரன், திருமணத்துக்கு முன்பாக தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஒத்துக்கொண்டு அனைவரிடமும் மன்னிப்புக்கேட்டு யமுனாவை தன் மகனாக ஏற்றுக்கொள்வதுடன், சிந்துவை விட்டு விலகிப்போய்விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அனைவரின் முன்னும் கிருஷ்ணாவின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் மிரட்ட, அவன் ஆடிப்போகிறான். தன் திருமணத் திட்டம் தோற்றுவிடுமோ என்ற விரக்தியோடு ஒரு பாம்பு புற்றருகே அவன் அமர்ந்திருக்க, அங்கு வரும் சிறுவன் யமுனா, கைதவறி தங்க டாலருடன் கூடிய தன்னுடைய செயினை பாம்பு புற்றுக்குள் போட்டுவிட அதை எடுத்துத்தருமாறு கிருஷ்ணாவை வேண்ட, அவனும் தயங்காமல் பாம்பு புற்றுக்குள் கைவிட்டு அதை எடுக்க, மறைந்திருந்து இவற்றை கவனிக்கும் கங்காதரனுக்கு கிருஷ்ணா மீது நம்பிக்கை (??) வருகிறது. இதனிடையே யின் கொலைத்திட்டம் அவருக்குத்தெரியவர, அவன் ஒளிந்திருக்கும் கோயிலுக்குபோய் அவனைத்தாக்கி விட்டு வரும் போது, அவன் கங்காவை பதிலுக்குத்தாக்கி வீழ்த்தி விட்டு, திருமண மண்டபத்துக்கு வந்து கிருஷ்ணாவை சுட முயற்சிக்க, அதற்குள் அங்கு வந்துவிடும் கங்காதரனின் முயற்சியால், குண்டு அவரது கையில் பாய்ந்துவிட, அடுத்த குறி பார்ப்பதற்குள் அங்கிருப்போரால் பிடிக்கப்பட, கங்காதரனின் பெருந்தன்மையறிந்து கிருஷ்ணா யமுனாவை தன் மகனாக ஏற்றுக்கொள்ள முடிவு சுபம்.

பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எழுதிய இந்தக்கதை, திரைப்படங்களுக்குரிய விறுவிறுப்புக்கள் குறைவாக கொஞ்சம் மந்தமான கதையாக அமைந்துவிட்டது. ஏதோ புதுமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கதாபாத்திரங்கள் அனைவருக்கும் நதிகளின் பெயரை வைத்தது மட்டுமே சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. திருமணத்துக்கு முன் தனக்கு குழந்தை பிறந்து, அதற்கு ஐந்து வயதாகும் வரை திருமணம் ஆகாமலேயே அவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள் என்பதும், அவள் அண்ணனும் அதை ஒரு தலைபோகும் விஷயமாக எடுத்துக்கொள்ளாததும், தன் தங்கையை அவன் மணந்துகொள்வானா மாட்டானா என்பதையறிந்துகொள்ள அவனுக்கு விடுகதை போடச்சொல்வதும் எல்லாம் ஜீரணிக்க முடியாத, சற்று கோமாளித்தனமான விஷயங்களே. பேராசிரியர் எப்படி இத்தனை ஆண்டுகள் சினிமாவில் வண்டி ஓட்டினார் என்பது ஆச்சரியம். (அவரது ‘ஆளப்பிறந்தவன்’ படத்தில் சீரியஸான கட்டங்களில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலைகள் எழுந்ததைப் பார்த்திருக்கிறேன்).

கதை சுமாராக இருந்தபோதிலும், படமாக்கப்பட்ட விதத்திலாவது மக்களைக்கவர்வோம் என்ற எண்ணம் இயக்குனருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் முடிந்தவரையில் வெளிப்புறங்களிலேயே படமாக்கி நம் கண்களைக்குளிர வைக்கிறார். நான்கு பாடல்களும் வெளிப்புறங்களிலேயே படமாக்கப்பட்டுள்ளன. வண்ணத்தில் குளித்த நேபாளத்தின் இயற்கை எழில் சிந்தும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். சிவந்த மண், அனபைத்தேடி, தியாகம் போன்ற நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த என்.பாலகிருஷ்ணன், கேமராவை அற்புதமாகக் கையாண்டிருந்தார்.
[/tscii:0c4d82539c]

saradhaa_sn
17th September 2010, 06:55 PM
[tscii:eaacb3ab6f]"இமயம்" (PART-2)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணதான் படைத்திருந்த நான்கு பாடல்களும் அருமையே. நடிகர்திலகமும் ஸ்ரீவித்யாவும் காதலர்களாக அல்ல, கணவன் மனைவியாக பங்குபெறும் கண்ணியமான டூயட் பாடல்
'கங்கை.... யமுனை... இங்குதான்... சங்கமம்
ராகம்.... தாளம்... மோகனம்.... மங்களம்...'
பாடலை கே.ஜே.யேசுதாஸும், வாணி ஜெயராமும் பாடியிருந்தனர். கேட்கும்போதே நம் காதுகளை மட்டுமல்ல, மனதையும் பரவசமூட்டும் பாடல். படம் வெளிவந்தபோது இலங்கை வானொலியில் கலக்கிய பாடலாம். அது மட்டுமல்ல, இப்படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து மெல்லிசை நிகழ்ச்சிக்காக ஜேசுதாஸ், சுஜாதா மற்றும் குழுவினர் இலங்கை சென்றிருந்தபோது, நிகழ்ச்சி நடந்த இடங்களிலெல்லாம் 'ஒன்ஸ்மோர்' கேட்கப்பட்ட பாடலாம் இது. (தான் ரொம்ப எதிர்பார்த்திருந்த ‘விழியே கதை எழுது, தெய்வம் தந்த வீடு, அந்தமானைப்பாருங்கள், மலரே குறிஞ்சி மலரே’ பாடல்களை யெல்லாம் அந்நிகழ்ச்சிகளில் இப்பாடல் முந்தியது என்று ஜேசுதாஸ் சொல்லியிருந்தார்). இவையனைத்துமே மெல்லிசை மன்னரின் குழந்தைகள்தான்.

நர்மதா (ரீனா) இறந்தபின் தன் பொறுப்பில் வளர்த்துவரும் சிறுவன் யமுனாவைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு, கங்காதரன் (நடிகர்திலகம்) பாடும்....
'கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தையென்று' பாடலை டி.எம்.எஸ். பாடியிருந்தார். வழக்கமாக இதுபோன்ற பாடலை, இண்டோரில்தான் படமாக்குவார்கள் ('எந்தன் பொன் வண்ணமே', 'மான்குட்டி இப்போது' போன்ற பல பாடல்கள்). ஆனால் வெளிப்புறக் காட்சிகளை முடிந்தவரை 'கவர்' பண்ணி விட வேண்டும் என்ர இயக்குனரின் சாதுரியத்தால், இப்பாடலும் கண்ணுக்கு விருந்தாக அமைந்து போனது. சலசலத்து ஓடும் ஆறுகள், அவற்றின் மீது அமைந்த அழகான பாலங்கள், பிரமாண்ட உயரத்துடன் கோயில் படிக்கட்டுக்கள் என நம் நெஞ்சை அள்ளும் இடங்களில் படமாக்கியிருப்பார்கள். (அந்தப்பாடலில் நடித்த சிறுவன்தான் இப்போது சின்னத்திரை சீரியல்களில் பிரபலமாக இருக்கும் சுரேஷ்வர் என்றும், நான் வாழவைப்பேன் படத்தில் நடித்த சிறுவன்தான் சின்னத்திரை மற்றும் பெரிய திரை புகழ் பப்புலு என்கிற ப்ரித்விராஜ் என்றும் சொல்கிறார்கள். படம் வந்து 31 ஆண்டுகளாகி விட்டதால் அவர்கள் தோற்றத்தை பார்க்கும்போது நம்பும்படியாகத்தான் இருக்கிறது).

நடிகர்திலகமும், ஜெய்கணேஷும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுப்பாடும் பாடல்...
'சக்தி என்னடா... உன் புத்தியென்னடா...'
இப்பாடலை டி.எம்.எஸ்., மற்றும் எஸ்.பி.பி. பாடியிருந்தனர். நேபாளத்தின் வித்தியாசமான கோயில் வெளிப்புறங்களிலும், பச்சைப்பசேல் மலைப்பிரதேசங்களிலும் படமாக்கம் செய்யப்பட்டிருந்தது.

ஜெய்கணேஷ் - மீரா ஜோடிக்கான டூயட் பாடல்...
'இமயம் கண்டேன்....
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன்... சுகங்கள்'
இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். பனிபோர்த்திய இமயமலைச் சிகரங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான டூயட் பாடல். இப்படம் வெளியானபோது இந்தப்பாடலும் ரொம்பவே பாப்புலர்.

தான் உச்சநடிகராக இருந்த காலத்திலேயே இதுபோல எத்தனை அருமையான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில், அடுத்த நாயகர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார்..!!.

இன்பம் பொங்கும் வெண்ணிலா - கட்டபொம்மன்
காற்று வெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்
காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு
யார் யார் யார் அவள் யாரோ – பாசமலர்
அன்று ஊமைப்பெண்ணல்லோ – பார்த்தால் பசி தீரும்
இதழ் மொட்டு விரிந்திட - பந்தபாசம்
பண்ணோடு பிறந்தது ராகம் - விடிவெள்ளி
வாராதிருப்பானோ - பச்சை விளக்கு
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா - பச்சை விளக்கு
வட்ட வட்ட பாறையிலே - பழனி
உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது - பழனி
கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை
இரவு முடிந்துவிடும் - அன்புக்கரங்கள்
காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம்பிள்ளை
செந்தூர் முருகன் கோயிலிலே – சாந்தி
மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் - பார் மகளே பார்
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் - ஊட்டி வரை உறவு
என் கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன்
எங்க வீட்டு தங்க தேரில் - அருணோதயம்
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் - குலமா குணமா
முள்ளில்லா ரோஜா - மூன்று தெய்வங்கள்
என்ன சொல்ல என்ன சொல்ல - பாபு
யாருக்கு இங்கு கல்யாண ஊர்வலமோ - வாணி ராணி
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே - வாணி ராணி
பூவிழி வாசலில் யாரடி வந்தது – தீபம்
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி -அந்தமான் காதலி
அழகி ஒருத்தி இளநி விக்கிறா - பைலட் பிரேம்நாத்
செவ்வானமே பொன்மேகமே - நல்லதொரு குடும்பம்
தேவதை ஒரு தேவதை - பட்டாக்கத்தி பைரவன்

அவசரத்தில் நினைவுக்கு வந்தவை இவை. இன்னும் இருக்கிறது. இதைக் குறிப்பிடக்காரணம், இவர் காலத்தில் இருந்த "மற்ற சில" நாயகர்கள், தங்கள் படத்தில் எத்தனை டூயட் பாடல் இருந்தாலும் அனைத்தையும் தானே பாடித் தீர்த்தார்களே தவிர மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை. (இதைச்சொல்லக்காரணம், பழம்பெரும் இயக்குனர் ப.நீ. தன்னுடைய கடைசிக்காலத்தில் ஒரு உண்மையைப்போட்டு உடைத்து விட்டுப்போனார். எழுபதுகளில், தான் இயக்கிய ஒரு குதிரைவண்டிக்காரர் பற்றிய வண்ணப்படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்த ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடல் கொடுத்து விட்டதற்காக, அதில் நடித்த பெரிய நடிகர் இவருடன் சண்டை போட்டாராம். 'விடுங்கண்ணே நீங்க எவ்வளவோ டூயட் பாடியிருக்கீங்க. அப்படியிருக்க ‘கண்ணுக்கு தெரியாத’ ஒரே ஒரு பாடலால் என்ன வந்துவிடப்போகிறது' என்று அவரை சமாதானம் செய்தார்களாம்).

முதன்முதலாக நடிகர்திலகத்துக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீவித்யா மனைவி வேடத்தில் மிகவும் பாந்தமாகப் பொருந்தினார். இவர்களுடன் ஜெய்கணேஷ், மீரா, ரீனா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஒய்.ஜி.மகேந்திரன், கே.கண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். முக்தா சீனிவாசன் படத்தை இயக்கியிருந்தார்.

சென்னையிலும், திருச்சியிலும் இப்படம் நடிகர்திலகத்தின் சாதனைக்கு பெரிய வில்லங்கமாக வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட முக்கால்வாசி அரங்கம் நிறைந்த நிலையில் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த சாதனைப்படம் 'திரிசூலம்' சர்வசாதாரணமாக 200 நாட்களைக்கடக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், 'இமயம்' படத்துக்காக சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மற்றும் திருச்சி பிரபாத் அரங்குகளில் 'திரிசூலம்' 175 நாட்களில் நிறுத்தப்பட்டு, இப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வு, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவரை யாரும் சாதிக்காத சாதனைகளை நிகழ்த்தலாம் என்றால் 'நம்மவர்களே' அதற்கு இடையூறாக இருப்பதை எண்ணி மனம் சோர்ந்தனர். (இத்தனைக்கும் திரிசூலம் தமிழில் அதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டும் எட்டு அரங்குகளில் வெள்ளிவிழாவைக் கொண்டாடிய படம்). என்னய்யா இது? சென்னையில் 'இமயத்துக்கு' வேறு தியேட்டர்களே கிடைக்காதா?. இதற்கு முன் இதே நிறுவனம் தயாரித்த அந்தமான் காதலி மிட்லண்ட், மகாராணி, ராக்ஸியில் 100 நாட்கள் ஓடவில்லையா?). இது போதாதென்று, மதுரையில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த, கண்டிப்பாக 100 நாட்களைக்கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த 'நல்லதொரு குடும்பம்' படத்தையும் 79 நாட்களில் கெடுத்து அதே அரங்கில் 'இமயம்' வெளியானது. இப்படியாக வெளியாகும்போதே ரசிகர்களின் சாபத்தோடு வெளியான இமயம் படம், மனதைக்கவரும் வண்ணம் கதையும் அமையாததால், மக்களின் ஆதரவையும் பெறத்தவற, அத்தோடு பின்னாடியே 'நான் வாழ வைப்பேன்' படம் துரத்திவர, இமயம் 60 நாட்களைமட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது.

நடிகர்திலகத்தின் 203 வது படமான 'இமயம்' படம் பற்றிய எனது கருத்துக்களைப்படித்த அனைவருக்கும் என் நன்றி.
[/tscii:eaacb3ab6f]

RAGHAVENDRA
17th September 2010, 08:19 PM
அன்புச் சகோதரி சாரதா அவர்களுக்கு,
இமயத்தின் இமயம் பற்றிய பதிவும் ஓர் ரசிக இமயம் அவர்களிடமிருந்து நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளது.

தங்களுடைய இமயம் பற்றிய கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சதம் உண்மை. சரியான திரைக்கதை அமைக்கப் படாததும் ஒரு காரணம். கருத்து நன்றாக இருந்தாலும் படைக்கப் பட்ட விதம் சரியில்லை. நடிகர் திலகம், மெல்லிசை மன்னர், பாலகிருஷ்ணன் மூவர் கூட்டணியே இப்படத்தை அமர வைக்கிறது. குறிப்பாக ஸ்ரீவித்யாவுடன் ஜோடி என்கிற ஒரு எதிர்பார்ப்பு. திரிசூலம் படத்தின் வெற்றியால் பாதிக்கப் பட்டு, அதே சமயம் அத்னுடைய சாதனையையும் பாதித்து வெளியான இமயம் தவிர்க்க முடியாத தோல்வியை சந்திதத்து என்பதும் உண்மை.

இருந்தாலும் ஜேசுதாஸின் குரலில் கங்கை யமுனை பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாய் அமைந்ததும், அப்பாடலில் நடிகர் திலகம் ஸ்ரீவித்யா கண்ணியமான தோற்றமும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டின என்பது மிகையில்லை.

மற்ற நடிகர்களுக்கும் டூயட் பங்கு பற்றிய தங்கள் கருத்தும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது. இத்தனைக்கும் கண்ணுக்குத் தெரியாத பாடல் வேறு ஒரு படத்திற்காகப் பதிவு செய்யப் பட்டதாகும், அதனைப் பயன்படுத்துவதற்கே இந்தப் போராட்டம் என்றால், இன்னும் தனியாக ட்யூன் போட்டு எழுதி இசையமைத்திருந்தால்....

தாங்கள் கூறியது போல் இமயம் படத்தில் நடித்த அந்தக் குழந்தை தற்போது ஒய்.ஜி.மகேந்திராவின் குழுவில் வியட்நாம் வீடு நாடகத்தில் நாகேஷ் பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே போல் பத்மினி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யாவின் கணவர் ரவீந்திரன் அவர்கள் , பாவ மன்னிப்பு படத்தில் அந்த நாள் முதல் பாடலில் சைக்கிள் கூடையில் அமர்ந்திருக்கும் குழந்தையாவார்.

அன்புடன்
ராகவேந்திரன்

PARAMASHIVAN
17th September 2010, 08:46 PM
//

kunguma pottin mangalam
nenjamirandin sangamam
nenjamirandin sangamam
indrena koodum ilamai ondrena paadum

//
Dear all

Is this from shivaji sir movie?

thanks

RAGHAVENDRA
17th September 2010, 08:53 PM
may be Kudumbam Oru Koyil ...?

PARAMASHIVAN
17th September 2010, 08:56 PM
may be Kudumbam Oru Koyil ...?

hmm I dont think so, :roll: can some 1 pls verify this ?

Murali Srinivas
17th September 2010, 10:48 PM
சாரதா,

வழக்கம் போல் கண் முன் காட்சிகள். இமயம் படத்தைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் வழக்கம் போல் அந்த காலத்திய நினைவுகளை இன்னும் 3,4 நாட்களுக்கு பிறகு [நடுவில் வெளியூர் செல்வதால்] பதிகிறேன்.

Raghu,

The song what you have mentioned is from Kudiyirundha Koyil starring MGR. The song is for MGR and JJ.

Regards

J.Radhakrishnan
17th September 2010, 10:50 PM
சகோதரி சாரதா அவர்களே ,

தங்களின் இமயம் திரைப்பட ஆய்வு படித்தேன், நன்றாக இருந்தது.

என்ன ஒரு குறை, நம் NT அவர்கள் தாங்கள் லிஸ்டில் கூறியபடி பல நல்ல பாடல்களை சக நடிகர்களுக்கு விட்டு கொடுத்து விட்டாரே, அதிலும் இதில் வரும் இமயம் கண்டேன் பாடலை நம் நடிகர் திலகம் அவர்கள் விட்டு கொடுத்தது ஏமாற்றமாக இருந்தது.

மேலும் இந்த படம் வந்த காலத்தில் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்புவார்கள் நான் அப்போது 6ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன், படம் பார்க்கும் வாய்ப்பு 8 மாதத்திற்கு பிறகு தான் கிடைத்தது அதுவரை இந்த பாடல் கேட்கும் போது அதில் NTஅவர்கள் நடிததாகவே எண்ணி இருந்தேன்.

RC
17th September 2010, 10:55 PM
Raghavendra Sir should have meant Kudiyirundha kOvil...

gopalu_kirtinan
17th September 2010, 11:52 PM
Dear Mr.Shivram

It is our duty to do this as a NT fan. We should avoid our children to see latest films with violent, sex & vulgorism. If we trained them to see our NT film like Bharatha Vilas, Thiruvilayadal, Kappalottiya Thamizhan, Veerapandiya Kattabomman, Sivanthaman, Thangapathakkam, Paasamalar, Padikkatha Methai etc, etc, our children will grown up with Nationalism & good family sentiments.

This will help them for their future life also.

Thanks

Dear Chandrashekar, I totally agree with you. :)

saradhaa_sn
18th September 2010, 10:38 AM
//

kunguma pottin mangalam
nenjamirandin sangamam
nenjamirandin sangamam
indrena koodum ilamai ondrena paadum

//
Dear all

Is this from shivaji sir movie?

thanks
பரமசிவம்...

நீங்கள் குறிப்பிட்டுள்ள 'குங்குமப்பொட்டின் மங்கலம்' பாடல் நடிகர்திலகத்தின் படத்தில் இடம்பெற்றதல்ல.

மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து 1968-ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த "குடியிருந்த கோயில்" படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா பாடியது. மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இப்பாடலை இஸ்லாமிய பெண் கவிஞரான 'ரோஷனாரா பேகம்' என்பவர் எழுதியிருந்தார். இவர் கவிஞர் வாலியின் நண்பரான, கோவையைச்சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள். திரைப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்த ஒரு பாடல் மட்டுமே எழுதினார்.

படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதா இப்பாடலுக்கு நடித்திருந்தனர். ஒரு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்டிருந்த இப்பாடலில் ஜெயலலிதா அழகாக சேலையிலும். எம்.ஜி.ஆர். வழக்கம்போல சிவப்பு கோட், சிவப்பு பேண்ட்டிலும் வருவார்கள். பாடலின் இறுதியில் ராஜஷ்ரீயும், ஜஸ்டினூம் கூடத் தோன்றுவார்கள். கே. சங்கர் படத்தை இயக்கியிருந்தார்.

பாடலை எழுதியவரோ 'இஸ்லாமிய' பெண் கவிஞர். அவர் எழுதிய பாடலோ 'குங்குமப்பொட்டின் மங்கலம்'. நம் நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?.

'குடியிருந்த கோயில்' படமும் சரி, இப்பாடலும் சரி, தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகியுள்ளன, இப்போதும் ஒளிபரப்பாகின்றன.

KCSHEKAR
18th September 2010, 11:13 AM
சாரதா மேடம் அளித்த இமயம் பதிவுகள் அருமை. திரு.ராகவேந்திரன் அளித்த தகவல்களும் நமக்கு புதிது.

SHIV
18th September 2010, 11:31 AM
Dear Ms.Sharada/Mr.Ragavendra

Many thanks for your wonderful posting on "Imayam". As usual there were a lot of new infos and details.

Looking forward to Mr.Murali Srinivas's post.

Regards

Shivram

saradhaa_sn
18th September 2010, 11:57 AM
நன்றி ராகவேந்தர் / முரளி / ஷிவராம் / சந்திரசேகர்...

முந்திய பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் 'இமயம்' பட விமர்சனத்தில் விடுபட்டுப்போன சில விவரங்கள். குறிப்பாக நடிகர்திலகத்தின் பங்களிப்பு....

'இமயத்தில்' நடிகர்திலகத்தின் பாத்திரம்:

இப்படமும் சரி, அவர் ஏற்றிருந்த கங்காதரன் ரோலும் சரி அவருடைய முழுத்திறமையையும் காண்பிக்க ஏதுவாக அமைந்தவை அல்ல. சொல்லப்போனால், அலட்டிக்கொள்ளாத, மிகவும் 'லைட்'டான பாத்திரம். சிலர் விரும்புவது போல 'யதார்த்த' நடிப்புடன் கூடிய படம். இப்படம் படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில், இவருடைய ரோல் பற்றி ரசிகர்கள் முக்தாவிடம் கேட்டபோது, 'இப்படத்தில் அவருக்கு 35 வயது இளைஞர் ரோல். அதனால் ஜோடியாக ஸ்ரீவித்யா நடிக்கிறாங்க' என்று சொன்னாராம்.

ஸ்ரீவித்யா முதல் முறையாக ஜோடியாக நடித்தபோதிலும், மனைவி ரோலுக்கு மிகவும் அழுத்தமாகப்பொருந்தினார். அப்படத்திலிருந்த நடிகர்திலகத்தின் உடல்வாகுக்கு இவர் உடல்வாகு நன்கு பொருந்தியது. 'கங்கை யமுனை' பாடலில், இவர் நடிகர்திலகத்தின் தோளில் சாய்ந்துகொண்டு போகும்போது ஒரு அந்நியோன்யம் (கெமிஸ்ட்ரி...???) தெரிந்தது. அதனால் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி ரொம்பவே பிடித்திருந்தது.

தன் மனைவியிடம் நெருக்கமாக நின்று பேசும் நேரங்களில் ஸ்ரீவித்யாவின் வயிற்றில் வலது கையால் இடையிடையே செல்ல்மாக குத்துவார். அதைவிட, இதேபோன்ற இன்னொரு சமயத்தில் கணவரிடம் பேசும்போது, சிணுங்கிக்கொண்டே நடிகர்திலகத்தின் வயிற்றில் ஸ்ரீவித்யா குத்தும்போது, இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்களிடையே ஆரவாரம்.

இதற்குமாறாக, வீட்டைவிட்டு வெளியேறும்போது மீரா, நடிகர்திலகத்தைப் பார்த்து, 'நீங்க இரக்கமில்லாத அரக்கன். கோட்டுப் போட்ட காட்டுமிராண்டி' என்று திட்டும்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆட்சேபக்குரல்.

நடிகர்திலகம் தன்னை கெட்டவன் என்று நிரூபிக்க எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் தான் எப்படி முறியடித்தேன் என்பதை தெனாவட்டாக விவரித்து, அந்த தோல்வி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பழத்தை பரிசளிப்பதாக ஜெய்கணேஷ் கிண்டலடிப்பதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், இறுதியாக தன் கோட் பையிலிருந்து சிறுவனின் 'பிறந்த சர்டிபிகேட்'டை எடுத்துக்காட்டி, "பார்த்தியா... யமுனா என் மகன்தான் என்று நீயே கையெழுத்துப்போட்டுக் கொடுத்த ஆஸ்பத்திரி ரெக்கார்ட். இதுக்கு பரிசா என்ன பழத்தைக்கொடுக்கப்போறே?" என்று கேட்க ஆடிப்போகும் ஜெய்கணேஷ் "சார். இதை யார்கிட்டேயும் காட்டிடாதீங்க" என்று கெஞ்ச.....

"நோ... என்னை ஒரு பைத்தியக்காரன்னு நினைச்சுக்கிட்டிருக்காளே ஒரு பைத்தியக்காரி, என்மனைவி, அவ கிட்டே காட்டப்போறேன். தன் தம்பி ஒரு தங்கக்கம்பின்னு நினைச்சுக்கிட்டிருக்கானே ஒரு மடையன், உன் அண்ணன், அவன் கிட்டே காட்டப்போறேன், உன்னை ஒரு யோக்கியன்னு நம்பிக்கிட்டிருக்காளே நான் வளர்த்த ஒரு குட்டிக்கழுதை, அவ கிட்டே காட்டப்போறேன். Look... நாளை நடக்கப்போகும் உன் மாப்பிள்ளை அழைப்புக்கு நான் வருவேன். அதுக்கு முன்னால் உன்னுடைய பாவ சங்கீதத்தை எல்லோருக்கும் முன்னால பாடி முடிச்சுடனும். இல்லே ராகம், தானம், பல்லவியோடு நான் பாடுவேன்.... பேட்டா, எனக்கா பழம் கொடுக்கிறே?. இப்போ நான் உனக்கு கொடுக்கிறேண்டா பழம்" என்று சொல்லி, ஒரு வாழைப்பழத்தை ஜெய்கணேஷ் வாயில் செருகிவிட்டு ஸ்டைலாக நடந்து போகும்போது, கைதட்டலில் அரங்கமே குலுங்கும்.

goldstar
18th September 2010, 01:21 PM
Thanks Saradha madam for your wonderful writingup about our god's "Imayam" movie. This is one of the NT movie I have not watched till now. But you have fullfilled my wish.

I have watched song "Gangai Yamunai" so many times in DVD. NT is simply superb and from this song NT has show the trend to younger actors how to act in duet songs. Simply superb NT face with Napelese cap.

As you guys will enjoy "Pudiya Paravai" in Chennai, I watch PP in Sydney at my home now. With watching PP in 40 inch LCD TVs, I enjoy NT frame by frame.
But still missing of watching PP in the Madurai theatres on Sunday. I have watched PP in re-release in Madurai Alankar theatre with so much "Allapparai" in theatres. Full of garlands to NT face in theatre and papers and flowers, movies song book and coins flown inside the theatres. Specially thalaivar's walk in the song "Aha melll mella nada" what a style and glamour. Just for this song I can watch PP for life.

Cheers,
Sathish

saradhaa_sn
18th September 2010, 01:57 PM
Thanks Saradha madam for your wonderful writingup about our god's "Imayam" movie. This is one of the NT movie I have not watched till now. But you have fullfilled my wish.

I have watched song "Gangai Yamunai" so many times in DVD. NT is simply superb and from this song NT has show the trend to younger actors how to act in duet songs. Simply superb NT face with Napelese cap.
Thanks Sathish for your appreciation.

If possible to watch 'Imayam' atleast (as Raghavendar said) for NT / MSV / NB (eventhough Muktha and Professor ASP stands apart).

Yes, as you said NT will be nice with Nepali cap (after 'ullam rendum' in Sivakamiyin Selvan) in the first part of the song, and with Indian National Flag in his left arm in second part.

Between NT & Shree Vidhya, not only Chemistry, but other things like Physics, Biology, Natural Science, Economics, History, Mathematics... all will work-out. Surprise, why directors not used her as NT's pair in further some movies, instead of KRV and Sujatha.

rangan_08
18th September 2010, 06:11 PM
Hi everybody,

Pudhiya Paravai released @ Amaindakarai Lakshmi theatre from this week. Wishing it a grand success.

rangan_08
18th September 2010, 06:12 PM
[tscii:bb1cff5d89]Roger Ebert on Bonnie & Clyde……

“ There is a moment in "Bonnie and Clyde'' when Bonnie, frightened and angry, runs away from Clyde through a field of wheat, and as he pursues her, a cloud sweeps across the field and shadows them. Seen in a high, wide-angle shot, it is one of those moments of serendipity given to few movies. Today the cloud could be generated by computers; on the day the scene was filmed in Texas, it was a perfectly timed accident of nature “.

It reminds us of a similar moment in one of our own gem of a song, “ Devaney ennai parungal……” from “ Gnana Oli “, isn’t it ?
[/i][/tscii:bb1cff5d89]

mr_karthik
18th September 2010, 07:12 PM
//kunguma pottin mangalam
nenjamirandin sangamam
nenjamirandin sangamam
indrena koodum ilamai ondrena paadum //

Dear all
Is this from shivaji sir movie?
thanks
neenga nijamAgavE theriyAmalthAn kEtkireengannu nAnga nambitOm.

mr_karthik
18th September 2010, 07:19 PM
Dear Mr.Shivram

It is our duty to do this as a NT fan. We should avoid our children to see latest films with violent, sex & vulgorism. If we trained them to see our NT film like Bharatha Vilas, Thiruvilayadal, Kappalottiya Thamizhan, Veerapandiya Kattabomman, Sivanthaman, Thangapathakkam, Paasamalar, Padikkatha Methai etc, etc, our children will grown up with Nationalism & good family sentiments.

This will help them for their future life also.

Thanks

Dear Chandrashekar, I totally agree with you. :)
me too...
but will it be possible in this latest 'trend & taste' of the young..?. (doubtful)

pammalar
18th September 2010, 07:35 PM
சகோதரி சாரதா,

தங்களின் "இமயம்" திரைப்படத் திறனாய்வுப் பதிவுகள் வழக்கம் போல் அருமை, அபாரம், அற்புதம். இமயமலைச் சாரலுக்கே எங்களை கொண்டு சென்று விட்டீர்கள். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

நமது நடிகர் திலகம் எவ்வளவு பெருந்தன்மை வாய்ந்தவர் என்பதற்கு, தாங்கள் தொகுத்து வழங்கியுள்ள, அவரது திரைப்படங்களில் வரும், 'சக நடிகர்'களின் டூயட் பாடல்கள் பட்டியலே உயர்ந்த சான்று. அந்த அருமையான தொகுப்பில் சேர்ப்பதற்கு இன்னும் சில:

கண்ணான கண்ணனுக்கு அவசரமா - ஆலயமணி

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இருவர் உள்ளம்

ஆதி மனிதன் காதலுக்குப்பின் - பலே பாண்டியா

இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் - பராசக்தி

கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம் - சத்யம்

ஆகாயம் மேலே பாதாளம் கீழே - நான் வாழவைப்பேன் (ஸோலோ)

இமய வெற்றியைப் பெற்ற "திரிசூல"த்திற்குப்பின் வந்த இந்த "இமயம்", சராசரிக்கு சற்றுக் குறைவான வெற்றியைப் பெற்றதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். ["இமயம்" இலங்கையில் 100 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது. இன்னும் அதற்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எப்படியிருப்பினும், வட இமயத்திற்கு எதிர்முனையில், அடிச்சுவட்டில் இருக்கும் தென் இலங்கை நமது "இமயத்"திற்கு முடிசூட்டி மகிழ்ந்துள்ளது.]

ஸ்ரீவித்யா, கடினமான குணச்சித்திரங்களை கச்சிதமாக செய்யக் கூடிய சிறந்த நடிகை. சிவாஜி - ஸ்ரீவித்யா காம்பினேஷனில் தொடர்ந்து படங்கள் வராமல் போனது தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம்.

கூடுதல் தகவல்களை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கும் நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th September 2010, 10:04 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 127

கே: சிவாஜியை நடிகர் என்று அழைப்பது சரியா, கலைஞர் என்று அழைப்பது சரியா? (இராம.மோகன், புதுவை)

ப: நடிகர் என்று தான் அழைக்க வேண்டும். கலையுலகில் நுழைந்து விட்ட எல்லோருமே கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டாலும், நடிகர் என்று அழைக்கப்பட, சிவாஜி போன்ற சிலர் தானே இருக்கிறார்கள்!

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
18th September 2010, 10:30 PM
உண்மை திரு பம்மலார் அவர்களே ,

இன்றும் நடிகர் என்றால் அது நம் NT அவர்களையே குறிக்கும், இன்றும் எனக்கு தெரிந்த பல நண்பர்கள் அவர்கள் COMPUTERஇல் PASSWORD ஆக நடிகர் என்று நம் NT அவர்களையே வைத்துள்ளார்கள்

pammalar
19th September 2010, 01:46 AM
திரு.ஜேயார்,

தங்களது பாராட்டுக்கும், தகவலுக்கும் எனது பற்பல நன்றிகள்!

அந்த இனிய நண்பர்களுக்கு எனது பணிவான, கனிவான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th September 2010, 04:16 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 128

கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)

அன்புடன்,
பம்மலார்.

NOV
19th September 2010, 08:52 AM
October 1 - Nadippu Dhinam

On Astro Vaanavil - Avan Thaan Nadigan, led by YG Mahendran.
On Astro Vellithirai 9pm - Thillaana Mohanambal

pammalar
20th September 2010, 02:31 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 11
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

இணைந்த இதயங்களுக்கு சொந்தக்காரர்களான லதா-கோபால் காரில் மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். காரை கோபால் ஓட்டி வர, அருகே லதா அமர்ந்திருக்கிறார். இரவு நேரம், போதாக்குறைக்கு மழை வேறு.

மீண்டும் 'மூடப்பட்ட' ரயில்வே கேட்; 'மூட்' அவுட்டாகின்ற கோபால்; ரயில் 'குப்குப்'; கோபால் 'பக்பக்'.

ரயிலின் சப்தம் அதிகமாக, கோபாலின் BP எகுறுகிறது. பயம், அதிர்ச்சி, இயலாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை, எதிர்முனையில் இருப்பவர்கள் கூட எதிர்வாதம் செய்யாமல் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்னமாய் முகத்திலும், அகத்திலும், புறத்திலும் பிரதிபலித்துக் காட்டுகிறார் அண்ணல். "எப்படி பம்மல் இதெல்லாம் இவ்வளவு சுலபமாக இவரால் செய்து காட்ட முடிகிறது!!!" என அருகிலிருந்த நமது நடிகர்திலகம்.காம் ஆச்சரியத்துடன் அளவளாவ, "தங்கள் நிலை தான் எனக்கும்" என அடியேன் பதிலுரைக்க, அரங்கமும் ஆச்சர்யத்தால் அதிருகிறது. சினிமாவுலகின் ஒரே ஆச்சரியக்குறி சிவாஜி தானே!

மீண்டும் கோபால், ரயிலைக் கண்டவுடன் துடிப்பதைக் கண்ட லதா, ரயிலுக்கும் அவரது வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது எனத் தெளிந்து கோபாலைக் குடைந்தெடுக்க, முதலில் மறுக்கும் கோபால், சில நொடிகளிலேயே மனம் மாறி, "சொல்றேன், சொல்றேன்" என்கிறாரே, அந்த இடத்தில் அந்த ஒரு நொடியில் எத்தனை உச்ச உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். ஒரு கம்ப்யூட்டரை அவரருகில் வைத்து உணர்ச்சிகளை கணிக்கச் சொன்னால், அது infinite என்று தான் காட்டும்.

இந்த சமயத்தில் நமது ராகவேந்திரன் சார் ஒரு அரிய தகவலை பகிர்ந்து கொண்டார். "கோபாலும், லதாவும் காரில் அமர்ந்து கொண்டு எமோஷனலாகப் பேசும் க்ளோசப் காட்சிகள் எல்லாம் indoorலேயே படமாக்கப்பட்டவை. இருப்பினும், outdoorக்கான எஃபெக்ட்களை எவ்வளவு கனக்கச்சிதமாக தங்களது நடிப்பில் இருவரும் கொடுத்திருக்கிறார்கள், பாருங்கள்" என்றார். நன்றி, ராகவேந்திரன் சார். இதற்காகவே இருவருக்கும் Special Salutes.

தனது கடந்த கால சிங்கப்பூர் வாழக்கையை கிளைமாக்ஸோடு தொடங்குகிறார் கோபால். அதாவது, தான் ஏற்கனவே திருமணமானவன் என்கின்ற உண்மையை முதலில் கூறுகிறார். சுதாரித்துக் கொள்ளும் லதா முழுவதையும் கேட்கத் தயார் ஆகிறார். தனது பெற்றோருக்கு தான் ஒரே மகன் என்பதால் செல்வத்திலும், செல்வாக்கிலும் புரண்டதாகவும், கவலை, கண்ணீர், கஷ்டம் ஆகியவை என்னவென்றே தெரியாமல், மகிழ்ச்சியில் மட்டுமே திளைத்து வளர்ந்ததாகவும் கூறுகிறார். அமைதியான, அழகிய வங்கக் கடலோரம் எழும்பிய சுனாமி போல், அவரது இன்ப வாழ்விலும் சுனாமி உருவாக, அடுத்தடுத்து அடுக்கடுக்கான துயரங்கள்.

முதல் துயரமாக அவரது அன்னையார் அமரராகிறார். சோகம் என்றால் என்னவென்றே அறியாத கோபாலுக்கு, தாயின் மறைவு தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரது தந்தையார் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவர் மனம் சாந்தி அடையவில்லை. பைத்தியம் பிடித்தவர் போல் சிங்கப்பூர் எங்கும் அலைகிறார். மதி மயங்கிய நிலையில், நிம்மதியை நாடி முதல் தடவையாக, ஒரு நைட்க்ளப்பிற்குள் காலை வைக்கிறார். [அதன் மூலம் காலனையும் அழைக்கிறார் போலும்!]

அண்ணலின் profile close-up pose. அவர் வெள்ளித்திரையில் சுருட்டை பற்ற வைக்க, அவரின் அடியார்கள் திரையரங்கில் சூடத்தைப் பற்ற வைக்கிறார்கள். அரங்க மேடையில் தானே சூடம் ஏற்றக் கூடாது. எனது நாக்கையே மேடையாக்கினால் யார் என்ன சொல்ல முடியும் என ஒரு அடியவர் தனது நாவிலே சூடத்தை ஏற்றி இதயதெய்வத்திற்கு ஆரத்தி எடுக்கிறார். பக்தர்கள் பலர் தங்களது அன்புக்கரங்களில், கற்பூரத்தை பற்ற வைத்து, ஒரு வித வரிசையில் அருகருகே நின்று கொண்டு, அழகுற ஆரத்தி எடுக்கின்றனர். காணக் கண் கோடி வேண்டும்!

இன்று பல கோடிகளைக் கரியாக்கி பிரம்மாண்டம் எனக் கூறிப் படமாக்குகிறார்களே, அதிலெல்லாம் எங்கே இருக்கிறது பிரம்மாண்டம்? [அவையெல்லாம் பிரம்மாண்டமா, தண்டத்திலும் தண்டம் என சகோதரி சாரதா கூறுவது காதில் விழுகிறது]. அண்ணல் profile closeupல் சுருட்டை பற்ற வைக்கும் ஸ்டைலிலிருக்கிறது நிஜமான பிரம்மாண்டம். அவர் சுருட்டிலிருந்து வரும் புகை மண்டலம் பிரம்மாண்டம். வாயிலிருந்து சுருட்டை எடுத்து அவர் புகை விடும் அழகில், அந்த ஸ்டைலில் இருக்கிறது உண்மையான பிரம்மாண்டம். மெல்லிசை மன்னர்களின் preludeல் இருக்கிறது அந்த பிரம்மாண்டம். படம் பிடிக்கும் பிரசாத்தின் கேமரா பிரம்மாண்டம். இந்த இணையற்ற கூட்டணியே பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டம். [மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஒரு பேட்டியில் கூறியது இத்தருணத்தில் நினைவில் நிழலாடுகிறது. 'சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் அவர்கள் தான் பிரம்மாண்டம். அவர்களது படங்களில் வேறு பிரம்மாண்டங்கள் இருந்தால், ஒன்று அவை எடுபடாது அல்லது அவை இரண்டாம் பட்சமாகி விடும்!' எனக் கூறியிருந்தார்.]

சுசீலாவின் ஹம்மிங் இனிமை குறையாத கம்பீரத்துடன் மிதந்து வர, கண்ணீர்ப் பாவையாகவே அதுவரை தமிழ் சினிமாவில் பேர் வாங்கிய சௌகார் ஜானகி, கவர்ச்சிப் பாவையாக கலக்க வந்திருப்பதை யூகித்த கவியரசர்,

"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"

எனப் பல்லவி பாடி அவருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார். இறுக்கமான மூடில் வரும் அண்ணலின் இதயத்தை இளகிய ஒன்றாக்க, tension நீங்கி அவர் casual நிலைக்குத் திரும்ப, "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்கின்ற ஆரம்ப வரியை ஒவ்வொரு முறையும் "பார்த ஞாபகம் இல்லையோ" என்றே அழுத்தம் கொடுக்காமல் சுசீலா பாடுகிறார். Simply Superb!

கண்ணீரும், கம்பலையும் தன்னிரு கண்கள் என இருந்த சௌகாரை கவர்ச்சிப் பதுமையாக ஆக்கிய பெருமை ஆக்டிங் தாதா சிவாஜியையும், டைரக்டர் தாதா மிராசியையுமே சாரும். Glamour doll ஆக வந்தாலும் அதுவும் தனக்கு tailor-made ரோல் தான் என இதிலும் மின்னுகிறார் சௌகார். On any basis, Sowcar is a wonderful performer. "புதிய பறவை" சித்ரா கேரக்டர், அவரது கேரியரிலேயே அவருக்கு கிடைத்த ஒரு மிக மிக வித்தியாசமான ரோல். இதனை அவரே பல முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். நடிகவேளுக்குக் கூட இந்த ரங்கன் ரோல், அவரது கலைப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத மைல்கல்.

கவர்ச்சியின் பிம்பமாக மைக்கைப் பிடித்துக் கொண்டு ஒரு புகழ்வாய்ந்த, தலைசிறந்த பாடகி எப்படிப் பாடுவாரோ, என்னென்ன பாவங்கள் கொடுப்பாரோ அது போலவே பாடல் முழுவதும் கறுப்பு நிற காஸ்ட்யூமில் வெளுத்து வாங்குகிறார் சௌகார். கோட்-சூட்-நெக்டை சகிதம், கம்பீரமாக இருக்கையில் அமர்ந்து சிங்கரையும், சாங்கையும் ரசித்துக் கொண்டே, சுருட்டை புகைப்பதும், புகை விடுவதுமாக விதவிதமான போஸ்களில், விதவிதமான ஸ்டைல்களில் கலக்குகிறார் கலையரசர். ஒரு இடத்தில், பாடலை ரசித்துக் கொண்டே தனது ஆள்காட்டிவிரலை லேசாக கடிக்கிறார் பாருங்கள், அதில் அவர் அப்படியே சூது, வாது தெரியாத கோபால் கேரக்டரின் அப்பாவித்தனத்தை படம் பிடித்துக் காட்டுகிறார். பாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் பாங்கு, நமது நடிகர் திலகத்தின் தனிப்பெரும் சிறப்பாயிற்றே!

ஆட்காட்டி விரலை அவர் கடிக்க, அதனால், அவரால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்கள் விசில், கிளாப்ஸ் என அதிர வைக்கின்றனர். இவற்றுக்கு இடையில் தீபாராதனை இல்லாமலா?! அதுவும் திவ்யமாக நடைபெறுகிறது.

இப்பாடலில் அண்ணல் மட்டுமா நடிக்கிறார். அவர் பிடிக்கும் சுருட்டு நடிக்கிறது. அவர் வாயிலிருந்து வரும் புகை நடிக்கிறது. அவரது ஒவ்வொரு அங்க அசைவும், அவரருகில் இருக்கும் அனைத்தும் நடிக்கிறது.

இரண்டாவது சரணத்தில்,

"உந்தன் மனதைக் கேளது சொல்லும்!
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!"

என்ற வரிகளின் போது, தன் இடது கையில் சுருட்டிருக்க, விரலால் உதட்டை வருடுகிறார் பாருங்கள், ஆஹா, ஆஹா!

அதே போல, மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் இணைப்பு இசையின் போது, தனது இடது கை நடுவிரலால், மேலுதட்டை வருடுவதும் ஸ்டைலின் உச்சம். இப்பாடலில், அண்ணலின் ஒவ்வொரு அசைவுக்கும், அரங்கில் ஜோதிமயம் தான்.

பாடல் நிறைவடைய, "உலகத்துலேயே நடிகன்னா என் தலைவன் ஒருத்தன் தான், வேற எவனும் கிடையாது", "எங்கள் தெய்வம் சிவாஜி", "எங்கள் உயிர் சிவாஜி" போன்ற கோஷங்களெல்லாம் பீறிட்டுக் கிளம்புகிறது. விசில் சத்தம் அடங்க நேரமாகிறது. நல்ல இசையை ரசித்த நடிகர் திலகம் திரையில் கரவொலி கொடுக்க, நல்ல performanceஐ ரசித்த நாம் அரங்கில் கரவொலி எழுப்புகிறோம்.

இசையை அவர் ரசித்தார். அவர் அசைவை நாம் ரசிக்கிறோம்!

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
20th September 2010, 03:31 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 129

கே: தங்கள் படங்களில் அதிகமான பஞ்ச் டயலாக்குகளை வைக்கத் தூண்டும் ஹீரோக்களின் குறிக்கோள், படத்தின் வெற்றியா? இல்லை தற்புகழ்ச்சியா? (வ.லெட்சுமணன், இராஜவல்லிபுரம்)

ப: 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஒரு காட்சியில், "எங்கிட்டயே சாந்தி தியேட்டர் எங்க இருக்குன்னு காட்றியா?" என்பார் நடிகர் திலகம். இத்தனை வருஷங்கள் போன பிறகும் அந்த பஞ்ச், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. சூட்சமம் இது தான். எப்போதாவது ஒரு முறை 'நச்'சென்று வைக்கப்பட்டால் அது பஞ்ச். படம் முழுக்க 'பஞ்ச்' தோரணமே தொங்கினால் அது 'நச்சு பிச்சு'.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2006)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th September 2010, 03:42 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 130

கே: வி.சி.கணேசனுக்கு அடுத்தபடியாக நடிக்கத் தெரிந்த நடிகர் யார்? (ஆர்.கே.கிருஷ்ணரங்கம், கருமாங்குளம்)

ப: பார்த்தீர்களா, பலரை எனக்கு விரோதிகளாக்கப் பார்க்கிறீர்களே!

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
20th September 2010, 10:41 AM
Please click the links below & read the article and give your views:

Thanks


http://sivajiperavai.com/View_Press.php?id=91

http://sivajiperavai.com/View_Press.php?id=92

SHIV
20th September 2010, 12:53 PM
Dear Mr.Chandrasekar

Thanks for publishing the article in JV. it also shows how much pain you have undertook by running from pillar to post to get things moving for our Thalaivar's Manimandapam.

One thing is very clear. We cannot expect anything from the present office bearers of Nadigar Sangam as they only promote thier self interest and they know which side of thier bread is buttered with. The sheer thinking of thier ungratefulness on this issue will only raise our BP. They dont even have the status to utter our NT's name.

Our only hope and prayer is that current CM will sooner than later sign the order for Manimandapam and give a befitting tribute to his friend.

all this apart, each one of NT's fans have already provided a manimandapam to him in thier hearts where he is the presiding deity. Entha Kombanalum Athai Mattra Mudiyathu.

Regards

Shivram

HARISH2619
20th September 2010, 01:31 PM
வேலைப்பளு காரனமாக சில நாட்களாக இந்த பக்கம் வர முடியவில்லை.வந்து பார்த்தால்....10,12 பக்கங்கள் ஜெட் வேகத்தில் பறந்துவிட்டது.

பம்மல் சார்,
தங்களின் பாலும் பழமும் புள்ளி விவரங்கள் கில்லி போல சீறிப்பாய்ந்து மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஏக்கமடைய வைத்துள்ளது,வாழ்த்துக்கள்.

சாரதா மேடம்,
இமயத்தின் "இமயம்" பட விமர்சனம் நடுநிலையோடு அருமையாக அமைந்துள்ளது,பாராட்டுக்கள்.சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த படத்தை மீன்டும் பார்த்த உனர்வு.

ராகவேந்தர் சார்,
தாங்கள் குறிப்பிட்டதை போல அந்த காட்சிக்கு ரசிகர்கள் செய்த ஆரவாரம் இன்றும் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.

முரளி சார்,ராகவேந்தர் சார்,பம்மல் சார்
லட்சுமி திரைஅரங்க கொன்டாட்டங்களின் படம் மற்றும் வர்ணனைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்

HARISH2619
20th September 2010, 01:34 PM
Dear Mr.Chandrasekar


all this apart, each one of NT's fans have already provided a manimandapam to him in thier hearts where he is the presiding deity. Entha Kombanalum Athai Mattra Mudiyathu.

Regards

Shivram

WELL SAID SHIV SIR :clap:

saradhaa_sn
20th September 2010, 02:34 PM
டியர் பம்மலார்,

நீங்கள் எழுதிவருவது சாந்தி நிகழ்வுகள் மட்டுமல்ல, அதைத்தாண்டி 'புதிய பறவை' காவியப்படம் பற்றிய தீர்க்கமான ஆய்வுக்கட்டுரை. இத்தனை எபிசோட்களுக்குப்பின்னும் இன்னும் இடைவேளையே வரவில்லையென்றால், உங்கள் ஆழ்ந்த ஆய்வு எத்தகையது என்று தெரிகிறது.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் என்று சொல்ல வேண்டிய எல்லைகளையெல்லாம் தாண்டிச்செல்கிறது உங்கள் ஆய்வு.

நீங்கள் சொன்னதுபோல சௌகாரின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல் மாத்திரமல்ல, ஒரு பெரிய திருப்புமுனையும் கூட.

நடிகர்திலகத்தைப்பற்றி கடந்த காலங்களில் யாரெல்லாம், எந்தப் பத்திரிகைகளிலெல்லாம் கேள்வி கேட்டு பதில் பெற்றுள்ளனர் என்பதைத் தேடி எடுத்து தொகுத்தளித்து வருவது, எவ்வளவு சிரமம் என்பதை உண்ர முடிகிறது. ஆயினும் அதை ஒரு கர்ம சிரத்தையாக செய்து வருகிறீர்கள்.

நடிகர் திலகத்தைப்பெற தமிழ்த்திரையுலகம் தவம் செய்திருக்கவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல உங்களைப்போன்றவர்களை ரசிகர்களாக அடைய நடிகர்திலகம் தவம் செய்திருக்க வேண்டும் என்பதும் உண்மை. உங்களை இங்கே பெற நாங்கள் தவம் செய்துள்ளோம் என்பது அதைவிட உண்மை.

உங்கள் தொண்டு, தொய்வின்றி தொடரட்டும்.

PARAMASHIVAN
20th September 2010, 02:41 PM
Raghu,

The song what you have mentioned is from Kudiyirundha Koyil starring MGR. The song is for MGR and JJ.

Regards

Murali sir

:shock: hmm I had shivaji sir in my mind when I heard the song!

:ty:

PARAMASHIVAN
20th September 2010, 02:46 PM
//

kunguma pottin mangalam
nenjamirandin sangamam
nenjamirandin sangamam
indrena koodum ilamai ondrena paadum

//
Dear all

Is this from shivaji sir movie?

thanks
பரமசிவம்...

நீங்கள் குறிப்பிட்டுள்ள 'குங்குமப்பொட்டின் மங்கலம்' பாடல் நடிகர்திலகத்தின் படத்தில் இடம்பெற்றதல்ல.

மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து 1968-ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த "குடியிருந்த கோயில்" படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா பாடியது. மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இப்பாடலை இஸ்லாமிய பெண் கவிஞரான 'ரோஷனாரா பேகம்' என்பவர் எழுதியிருந்தார். இவர் கவிஞர் வாலியின் நண்பரான, கோவையைச்சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள். திரைப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்த ஒரு பாடல் மட்டுமே எழுதினார்.

படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதா இப்பாடலுக்கு நடித்திருந்தனர். ஒரு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்டிருந்த இப்பாடலில் ஜெயலலிதா அழகாக சேலையிலும். எம்.ஜி.ஆர். வழக்கம்போல சிவப்பு கோட், சிவப்பு பேண்ட்டிலும் வருவார்கள். பாடலின் இறுதியில் ராஜஷ்ரீயும், ஜஸ்டினூம் கூடத் தோன்றுவார்கள். கே. சங்கர் படத்தை இயக்கியிருந்தார்.

பாடலை எழுதியவரோ 'இஸ்லாமிய' பெண் கவிஞர். அவர் எழுதிய பாடலோ 'குங்குமப்பொட்டின் மங்கலம்'. நம் நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?.

'குடியிருந்த கோயில்' படமும் சரி, இப்பாடலும் சரி, தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகியுள்ளன, இப்போதும் ஒளிபரப்பாகின்றன.

thanks Madam, oru kealviku ivalavu details soli irukeenga :)

:ty:

saradhaa_sn
20th September 2010, 02:51 PM
Please click the links below & read the article and give your views:

Thanks


http://sivajiperavai.com/View_Press.php?id=91

http://sivajiperavai.com/View_Press.php?id=92
டியர் சந்திரசேகர்,

நடிகர்திலகத்துக்கான 'மணிமண்டபம்' தொடர்பான உங்கள் முயற்சியும், அதற்காக பட்டுவரும் சிரமங்களும் மலைக்க வைக்கின்றன. ஆயிரமாயிரம் நன்றிகள். ஒரு பெரிய புதிர் என்னவெனில், நடிகர்திலகத்தின் புதல்வர்கள் ஏன் இதில் சிரத்தை எடுப்பதில்லை?. அல்லது எடுத்திருப்பார்களெனில் அதன் பலனாகக் கிடைத்த 'நெட் ரிசல்ட்' என்ன?. நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் இளைய திலகம் பிரபு, மனோரமா போன்றவர்கள் இருந்தும் ஏன் நடவடிக்கைகளை முடுக்கி விட முயற்சிக்கவில்லை?.

'தகவ்ல அறியும் சட்டத்'தின் மூலம் நீங்கள் முயற்சிப்பதை விட அவர்கள் முயற்சிக்கும்போது, அவர்களின் செல்வாக்கைக்கொண்டு ஒழுங்கான, உருப்படியான பதிலைப்பெற முடியுமல்லவா?.

நடிகர்திலகம் மறைந்த பின், அவரது மணிமண்டபத்துக்காக, முதலமைச்சர் மட்டுமல்ல, சக நட்சத்திரம், மற்றும் 'சம்மந்தி'யான ஜெயலலிதா இடம் ஒதுக்கியபோதே, பலரும் பத்திரிகைகளில் எழுதினர். அரசுக்கு சொந்தமான எவ்வளவோ நல்ல இடங்கள் இருக்கும்போது, வேண்டுமென்றே வில்லங்கமான இடத்தை அவர் (ஜெ) ஒதுக்கியதாக எழுதினர். போதாக்குறைக்கு அவர் எதிர்க்கட்சியான பின்னர், நடிகர்திலகத்தின் சிலை அமைக்க எதிர்ப்புக்களும், இடைஞ்சல்களும் ஏற்படுத்தினார். (கலைஞர் பெயர் வாங்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கில்). ஆனால், தஞ்சையில் சிலையமைக்க அவரது தோழியின் கணவரது முயற்சி குறிப்பிடத்தக்கது.

காலம் கடந்துபோய்க்கொண்டிருந்தால், 'மணிமண்டபம்' உருவாக்கும் திட்டம் கனவாக முடிந்துவிடக்கூடாது என்பதே நமது கவலை, அச்சம். இதுவிஷயத்தில் நடிகர் சங்கத்தின் மெத்தனப்போக்கை காணும்போது அவர்கள் உருப்படியாக எதும் செய்வார்கள் என்று தோன்றவில்லை.

KCSHEKAR
20th September 2010, 04:47 PM
Please click the link to see Government Order regarding NT's Manimandapam.

http://www.sivajiperavai.com/View_Press.php?id=99

KCSHEKAR
20th September 2010, 04:51 PM
பம்மலாரின் புதிய பறவை வர்ணனை திரைப்பட ஸ்கிரிப்ட் போலவே உள்ளது. மிகவும் அருமை.

KCSHEKAR
20th September 2010, 05:08 PM
நன்றி திரு.சிவராம், சாரதா மேடம், திரு.,ஹரிஷ்.

நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பாக நம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - நம்மைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது மட்டும் உறுதி.நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பாக நம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - நம்மைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது மட்டும் உறுதி.

RAGHAVENDRA
20th September 2010, 07:28 PM
சந்திரசேகர் அவர்களின் பேரவை இணைய தளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பாடல்கள் சிறப்பு.
மேலும் ஓங்கி வளர நமது நல்வாழ்த்துக்கள்.

சற்று முன் வந்த தகவல். வருகின்ற ஞாயிறு 26.09.2010 தேதியிட்ட தினமலர் வாரமலர் இதழில் மூன்று பக்க அளவிற்கு நடிகர் திலகத்தைப் பற்றிய ஓய்.ஜி.மகேந்திரன் அவர்களுடைய கட்டுரை வர இருக்கிறது.

அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்கவும். அனைத்து நண்பர்களுக்கும் தகவலைத் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
21st September 2010, 02:43 AM
சகோதரி சாரதா,

தங்களது பதிவைப் படித்ததும், என் கண்களில் ஆனந்த நீர்த்துளிகள்.

தங்களது உச்சமான பாராட்டுப் பதிவுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!

உற்சவமூர்த்தியாக உலக மகாநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கும் தங்கத்திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் எண்ணற்ற பக்தர்களில் அடியேனும் ஒருவன். தாங்கள் ஆறாண்டுகளுக்கும் மேலாக இத்திரியில் ஆற்றி வரும் அருந்தொண்டிற்கு ஈடு இணை இல்லை.

தங்களது திருத்தொண்டு மென்மேலும் சிறந்தோங்க, எல்லாம் வல்ல இறைவனின் இறையருளும், நமது இதயதெய்வத்தின் அருளாசிகளும் தங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st September 2010, 03:10 AM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி!

"சிவாஜி பேரவை" இணையதளம் சீரும், சிறப்பும் பெற வளமான வாழ்த்துக்கள்!!

தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் பெருமுயற்சிகளுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!!!

டியர் செந்தில் சார்,

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்!

தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் மூவருமே லட்சுமி அரங்கிற்கு செல்ல முடியவில்லை. இருப்பினும், கேள்விப்ப்ட்ட தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும்.

டியர் ராகவேந்திரன் சார்,

வெளிவரவிருக்கும் தகவலைப் பற்றி தாங்கள் வெளியிட்டிருக்கும் தகவலுக்கு தலையாய நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
21st September 2010, 12:29 PM
பாட்டும் நானே பாவமும் நானே - நடிகர்திலகம் போல

கேள்வியும் நானே பதிலும் நானே என்று இத்திரியில் கலக்கிவரும்

இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கு இதயம் கணிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

KCSHEKAR
21st September 2010, 01:58 PM
சிவாஜி பேரவை இணையதளத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த திரு.பம்மலார், திரு. ராகவேந்திரன் ஆகியோருக்கு நன்றி.

இணையதளம் இன்னும் முழுமையடையாததால் தகவலை இத்திரியில் தெரிவிக்கவில்லை. மன்னிக்கவும்.

இத்திரியில் பங்கேற்றுள்ள நண்பர்கள் www.sivajiperavai.com இணையதளத்திற்கு சென்று பார்த்து விமர்சனம் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு பணிவண்போடு கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில்

SHIV
21st September 2010, 02:26 PM
Dear Mr.Pammalar

Wishing you a Very Happy Birthday. May god and NT ( both are same for us) shower thier choicest blessings on you for a long, healthy & Wealthy life.

Best Regards

Shivram

SHIV
21st September 2010, 02:36 PM
Dear Pammalar

Just now this song hit me (from Theerpu)for your birthday;

"Kaatril anayatha Deepam enave Neengal Oli veesungal
Kaalam maravatha Kamarajar thiagam dinam pesungal
nenjodu naan konjum rojakkale Nehru Pugazh pesungal
Ellorum Kondadum "Nadigar Thilagam" ena Nattai uruvakkungal"

Regards

Shivram

NOV
21st September 2010, 02:53 PM
:D :2thumbsup: Happy Birthday Mr. Pammalar :2thumbsup: :D

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

saradhaa_sn
21st September 2010, 03:44 PM
நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் சீரிய பணியை செவ்வனே ஆற்றிவரும் அன்புச்சகோதரர் பம்மலார் சுவாமி அவர்களுக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நடிகர்திலகத்தின் புகழையும் சாதனைகளையும் பாடும் வானம்பாடியாக, அவரைப்பற்றிய அருமையான அரிய தகவல்களைத் தேடிச்சேகரித்து தரும் தேனீயாக பணியாற்றிவரும், 'வசந்த'ம் நிறைந்த பத்திரிகை'மாளிகை'யின் ஆசிரியர் பம்மலார் அவர்கள், இதுவரை சென்ற வயது போக, மேலும் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் பெருமையையும், புகழையும் நான்காம் தலைமுறைக்கும் எடுத்தோத வேண்டும் என உளமாற வாழ்த்துகிறேன்.

mr_karthik
21st September 2010, 04:00 PM
Happy Birthday to our 'Mobile Encyclopedia of Tamil Cinema' Dr. Pammalar sir. (Yes he got his Doctorate from Nadigar Thilagam University)

Wish you many more happy return of the day sir.

As everyone said, we are very lucky to have you here to spread our NT's name & fame.

mr_karthik
21st September 2010, 04:10 PM
Chandrasekhar sir,

I have gone through your 'Sivaji Peravai' website. Wonderful.

Thanks a lot for your valuable painstaking efforts for the 'Manimandapam' project for our beloved NT.

We wish your efforts should get activation, by the parties concerned.

RAGHAVENDRA
21st September 2010, 05:01 PM
பணிவுக்கு பணிவானவர்
நம்நெஞ்செல்லாம் நிறைந்தவர்
மனதில் நடிகர் திலகத்தை வரித்தவர்
எல்லார்க்கும் இனியவர்
அவர் தான் பம்மலார்

நடிகர் திலகத்தை விட மூத்தவர்
ஆம் நடிகர் திலகம் இனிமேல் தான் பிறக்கப் போகிறார்

பம்மலாருக்கு நமது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவேந்திரன்

J.Radhakrishnan
21st September 2010, 09:44 PM
Happy Birthday to Pammalar Sir

Thirumaran
21st September 2010, 10:10 PM
Many happy returns of the day Pammalar Sir :D

Murali Srinivas
21st September 2010, 11:35 PM
இன்றைய காலக்கட்டத்தில் பிறந்த நாள் என்றாலே பிறந்த தேதி என்றாகி விட்டது. பிறந்த நட்சத்திரம் என்று வருகிறதோ அதை பலரும் கொண்டாடுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் 19 வருடங்களுக்கு ஒரு முறை பிறந்த தேதியும் ஜென்ம நட்சத்திரமும் ஒரே நாளில் சேர்ந்து வரும். அப்படி இரண்டும் ஒன்றாக வரும் ஒரு பிறந்த நாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் சுவாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து இன்று செய்து வரும் அதே சேவையை தொடர்ந்து செய்வதற்கு அவருக்கு அனைத்து நலமும் வாய்க்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

அன்புடன்

gopalu_kirtinan
21st September 2010, 11:39 PM
Hi Swami anna,

happy birthday..many more happy returns of the day.

pammalar
22nd September 2010, 02:56 AM
வாழ்த்துக்களை வழங்கிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பல கோடி பணிவான நன்றிகள்!

தங்கள் அனைவரது மனப்பூர்வமான வாழ்த்துக்களையெல்லாம் பெற்றது என் வாழ்வின் பாக்கியம். இதை விட வேறென்ன பேறு வேண்டும் ஒரு பக்தனுக்கு.

கலையுலகின் குலதெய்வம், நடிப்புலகின் கண்கண்ட தெய்வம், நமது இதயதெய்வம் நடிகர் திலகமே வாழ்த்தி ஆசீர்வதித்ததைப் போல் உணருகின்றேன்!

ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ் பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd September 2010, 04:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 131

கே: சிவாஜி கணேசன் மூன்று வருடங்களுக்கு நடிக்க மறுத்தால் என்னவாகும்? (வெண்ணொளி, தாராபுரம்)

ப: அவரது பெருமையை இன்னும் அதிகமாக உணர ஆரம்பிப்போம்.

(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1981)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd September 2010, 04:20 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 132

கே: கிரிக்கெட் ஆட்டத்தில் ஆர்வமுள்ள நடிகர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர் என்று நான் கூறுகிறேன். என் நண்பர் மறுக்கிறார். இதில் யார் கூறுவது உண்மை? (மு.சிவாஜி சுந்தர், திண்டுக்கல்)

ப: அடுத்த முறை கிரிக்கெட் பந்தயம் சென்னையில் நடக்கும் போது வரச் சொல்லுங்கள் உங்கள் நண்பரை. ஸ்டேடியத்திலேயே சிவாஜியை அவர் சந்திக்கலாம்!

(ஆதாரம் : பொம்மை, ஆகஸ்ட் 1975)

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
22nd September 2010, 09:52 AM
நண்பர் பம்மலார் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
22nd September 2010, 11:08 AM
Dear friends,
82nd Birth Day of Nadigar Thilagam Sivaji Ganesan is to be celebrated on 01.10.2010. Sivaji Prabhu Charities Trust brings out a Special Cover on Makkal Kalaignar Jai Shankar to be released by Tmt. Shanthi Nair, Chief Post Master General, Tamil Nadu Circle. Dr. Sivaji Ganesan Memorial Awards to be presented to Thiru M. Peethambaram, Makeup Artiste-Producer, Thiru Pandian, Makeup Artiste-Actor, Tmt. C. Rajasulochana, Actor-Dancer, Thiru A.L. Raghavan, Musician-Actor, by Hon'ble Thiru G.K. Vasan, Union Minister for Shipping, Govt. of India. Thiru V.C. Guganathan, President, FEFSI, delivers special address.
Time: 5.45 p.m.
Venue: Kamaraj Hall, Anna Salai, Chennai - 6.

our website www.nadigarthilagam, pays its tribute to Jai Shankar in this youtube video:
http://www.youtube.com/watch?v=v26VqUE3qOU

Raghavendran

SHIV
22nd September 2010, 11:43 AM
Dear Mr.Ragavendran,

Thanks for the info of NT's Birthday celebrations.

By the way, NT's still with a volin in hand is superb.can you please let us know which movie is that.

Regards

Shivram

KCSHEKAR
22nd September 2010, 11:57 AM
Please click the link below for NT's birthday function news:


http://www.chennailivenews.com/Events/Events/20100919100907/Sivaji-Ganesans-83rd-birth-anniversary.aspx


Thanks

mr_karthik
22nd September 2010, 12:11 PM
Raghavendar sir & Chandrasekhar sir,

Thanks for the informations about NT's Birthday function, going to held on Oct.01.

As we are away from Chennai, we are missing lot of interesting events in life.

(இதுக்குத்தான் சொந்த ஊரிலயே ஒரு பொழப்பை தேடிக்கணும்)

SHIV
22nd September 2010, 12:49 PM
Dear Mr.Karthik

You are absolutely right. I also feel the same. Better we find a job in chennai itself at the earliest!!!

H'ever we do not miss them in whole as Mr.Pammalar/Mr.Murali srinivas/Mr.Ragavendar/Mr.Chandrasekar always keep us updated of NT's functions and events.

Regards

Shivram

HARISH2619
22nd September 2010, 01:08 PM
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் குயில் அண்னண் பம்மல் சார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.நடிகர்திலகத்தின் ரசிகர்களின் வாழ்த்தும்,இறைவனின் ஆசிர்வாதமும்,நமது இதயதெய்வத்தின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து அவர் வழங்கும் ஆசை மலர்களும் தங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கப்பெற்று தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்.

Mahesh_K
22nd September 2010, 04:54 PM
திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
முரளி சார்... நட்சத்திரப் படி வரும் பிறந்த நாள் குறித்த உங்கள் தகவல் எனக்குப் புதிது. தகவலுக்கு நன்றி.

pammalar
23rd September 2010, 03:43 AM
வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பல கோடி பணிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
23rd September 2010, 04:12 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 133

கே: "ராஜ ராஜ சோழன்" படத்தை சினிமாஸ்கோப்பில் தயாரிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (இரா.ஜெகந்நாதன், பெங்களூர் - 27)

ப: புது முயற்சி. வரவேற்கத்தக்க வளர்ச்சி. அகண்ட புகழ் கொண்ட ராஜ ராஜன் வரலாற்றை அகன்ற திரையில் பார்ப்பது அரிய வாய்ப்பு தானே!

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் மலர் 1972)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd September 2010, 04:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 134

கே: சென்ற ஆண்டு படங்களில் நடிகர் திலகம் நடித்த இரண்டு படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடியதில் உங்களுக்கு மகிழ்ச்சியா, வருத்தமா? (என்.எஸ்.வெங்குசாய், சென்னை - 13)

ப: இரண்டு படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியதில் மகிழ்ச்சியும், இரண்டு படங்கள் தானே வெள்ளிவிழாக் கொண்டாடின என்பதில் வருத்தமும் ஏற்பட்டன.

(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
23rd September 2010, 10:08 AM
Please click the links below to view NT's birthday function at Trichy on 3rd October 2010

http://www.sivajiperavai.com/View_Press.php?id=100

http://www.sivajiperavai.com/View_Press.php?id=101

http://www.sivajiperavai.com/View_Press.php?id=102

groucho070
23rd September 2010, 01:11 PM
Yikes, got the links all wrong. Here you go, PB

//Groucho, this might not be the right thread, but I have heard a lot of good things about the lesser known movie 'Gnana paravai'. Time kedaicha adhai pathi konjam post pannunga :D//Nice, mysterious flick written by Vietnam Veedu Sundaram, and combination with MSV aaaandd TMS.

NT is more a mystic here. Put your belief system out of the window and watch the film, there's something in there that's out of the world. And Manorama was paired with NT for the first time, by the way. :D

Puliyan_Biryani
23rd September 2010, 01:38 PM
Nice, mysterious flick written by Vietnam Veedu Sundaram, and combination with MSV aaaandd TMS.

NT is more a mystic here. Put your belief system out of the window and watch the film, there's something in there that's out of the world. And Manorama was paired with NT for the first time, by the way. :D
:ty: Groucho. Dad keeps saying that this was NT's best performance of post-90s (yes Thevar Magan included). I have been assigned the task of getting him the DVD :D.

pammalar
23rd September 2010, 08:19 PM
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், நாளை 24.9.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "சொர்க்கம்".

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th September 2010, 03:07 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 135

கே: "ராஜ ராஜ சோழ"னின் சிறப்புக்கள் யாவை? (எம்.சாம்பமூர்த்தி, ஆரணி)

ப: சினிமாஸ்கோப் வண்ணத் தயாரிப்பாக வளரும் முதல் தமிழ்ப்படம். ஆங்கில விளக்கத்துடன் வெளிநாடுகளிலும் திரையிடப் போகிறார்கள். அநேகமாக தமிழ்ப்படவுலகின் பெரும்பாலான நடிக, நடிகையர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை திரையிடும் கொட்டகைகளுக்கு சினிமாஸ்கோப் (அகன்ற) திரையும், பிரத்யேக லென்சும் தரவிருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லப் போகிறார்கள்.

(ஆதாரம் : பேசும் படம், மே 1972)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th September 2010, 03:17 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 136

கே: பத்மினி பிக்சர்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலைத் தந்த படம் எது? (சே.நரசிம்மன், புதுடெல்லி)

ப: வீரபாண்டிய கட்டபொம்மன்.

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1968)

அன்புடன்,
பம்மலார்.

SHIV
24th September 2010, 10:12 AM
Dear Friends,

I happened to read Kumudham Bhakhi Malar yesterday. This was August issue. It had about two pages containing interview of Mr.Ramkumar about NT's religious belief and about the kumbabishekam of Annai Illam's Vinayakar temple and thier family's belief towards this temple. He had also narrated how NT, during his bath at Ganges in Kashi, came to know the sanctity of the river thro the priest and how he instructed Mr.Ramkumar to immerse his ashes after his death.

Mr.Ramkumar had also narrated how the elephant Shanti (passed away recently) donated by NT to Thiruvanaikovil, was fond of NT. Whenever NT passes via Thiruvanaikovil to Trichy, he made it a point see the elephant and feed it. The Elephant on seeing NT will jump in joy and run towards him. Also it would not allow him to leave the place that easily by making some fondly gestures and protests.

No wonder Kanchi Maha periyavar had called NT and blessed him after coming to know that NT had donated elephants to lot of temples.

Regards

Shivram

kumareshanprabhu
24th September 2010, 05:21 PM
hi every body

pammalar
25th September 2010, 03:05 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 137

கே: சிவாஜியின் பிறந்த நாள் விழாவில் இலங்கை நடிகர் ஒருவரும், கலந்து கொண்டாராமே, யார் அவர்? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)

ப: அவர் பெயர் ஸ்ரீசங்கர். இலங்கைத் தமிழ்ப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அவர் "ராஜ ராஜ சோழன்" சினிமாஸ்கோப் படத்திலும் நடிக்கிறார். ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் விழாவில், அந்த மாமன்னனை வாழ்த்திப் பாடும் ஈழத்து புலவராகவே அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1972)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th September 2010, 03:17 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 138

கே: நடிகர் திலகத்துக்கு அடுக்கடுக்காகப் படங்கள் 'புக்' ஆகியிருப்பது எதைக் காட்டுகிறது? (ஏ.தர்மபூபதி, பொள்ளாச்சி)

ப: நடிப்பாற்றல் மிக்கவருக்குத் தான் நிரந்தரப் புகழ் உண்டு என்பதை.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1972)

அன்புடன்,
பம்மலார்.

NOV
25th September 2010, 09:34 PM
SIVAJI GANESAN VIZHA - 2010

Dear Friends,

Sivaji Ganesan's legacy of acting is still admired today. His fame came from his versatility and expressive prowess in Tamil cinema.

In conjunction with his forthcoming 83rd Birthday celebrations the Sivaji Ganesan Vizha - 2010 would be held in KL soon. The highlight of the evening would be the Sivaji Ganesan Award 2010 to be presented to a deserving local artiste. Many more entertaining items are on the cards.

As in the past, admission would be FREE.

Please look forward for further details soon.

Regards

Eashvara Lingam
Sivaji Ganesan Cultural Society, Malaysia
016-6880455

pammalar
26th September 2010, 02:18 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 139

கே: "ராஜ ராஜ சோழன்" ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகிறதா? (எஸ்.பாஸ்கரன், சென்னை - 5)

ப: ஆங்கில டைட்டிலுடன் திரையிடப்படும், வெளிநாடுகளில்.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1972)

அன்புடன்,
பம்மலார்.

RC
26th September 2010, 04:43 AM
[tscii:12fb626c34]பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத்
அக்.,1 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை யும் நினைவு கூர்கிறார்:
"நமஸ்காரம் சார்... என் பெயர் சிவாஜி கணேசன். 1952ம் வருடத்திலிருந்து நடிச்சிட்டிருக்கேன். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் களுடன் கூட நடித்திருக்கேன். இன்னிக்கு, ஒய்.ஜி.மகேந்திரன் என்ற பிசி நடிகருக்காக, மேக்-அப் எல்லாம் போட்டுண்டு, இரண்டு மணி நேரமா வெயிட் பண்றேன். ரொம்ப சந்தோஷம்...' என்றார் சிவாஜி.
டைரக்டர் யோகானந்த் இயக்கத்தில், பல்லாவரத்தில் கிராண்ட் ட்ரங்க் ரோடு அருகே, "சுமங்கலி' படத்தின் ஷூட்டிங். சிவாஜி இருக்கும் படப்பிடிப் பிற்கு எப்போது சென் றாலும், அவர் கால் தொட்டு வணங்கிவிட்டுத் தான் உள்ளே செல்வேன்; அன்றும் அப்படித்தான் செய்தேன். அவர் மேற்கண்ட வாசகங்களைச் சொன்னதும், அரண்டு போனேன்.

"அப்படிச் சொல்லாதீங்க சார்... கே.பாலாஜி சாரின், "சட்டம்' படத்திற்கு காலை ஏழு மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஷூட்டிங். ஒரு மணி நேரத்திலேயே விட்டுடறேன்னு சொன்னார். அங்கே முடிக்க பத்து மணி ஆயிடுத்து... சிவாஜி கூட பத்து மணிக்கு ஷூட்டிங்ன்னு சொன்னேன். அவர்கிட்டே நான் சொல்லிக்கறேன்னு பாலாஜி சொன்னாரு. ஒர்க் முடிந்ததும் ஓடி வர்றேன் சார்...' என்றேன்.

"சரி விடு... அவன் அப்படித் தான்!' என்றார் சிவாஜி. "சீக்கிரம் போய் டிரஸ் மாத்திக்கிட்டு வா...' என்றார். தயாரிப்பாளரும், நடிகருமான கே.பாலாஜி, சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம்.
சிவாஜிக்கு குழந்தை மனசு. வந்த வேகத்திலேயே, கோபம் போய் விட்டது. சுமங்கலி படத்தில் அவர் லாரி டிரைவர்; நான் அவருக்கு உதவியாளர். இருவரும் ஜாலியாக பாடிக் கொண்டு நடிக்க வேண்டிய பாடல் காட்சி. லேட்டாக ஆரம்பித்தாலும், அன்று மாலைக்குள்ளாக பாடல் முழுவதும் எடுத்தாகி விட்டது.
என்னைப் பொறுத்த வரை சிவாஜி சாதாரண மாக இருந்தால், "வாடா, பரதேசி, பைத்தியக் காரா...' என்று அன்பாக கூப்பிடுவார்; "சார்' என்று அழைத்தால், கோபம் அல்லது ஏதோ பிரச்னை என்று அர்த்தம்.

தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து, இன்னும் சிறப்பாக நடிக்க, "டிப்ஸ்' கொடுப்பதில், சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான். தாங்கள் நடித்த படங்களிலேயே தங்களுக்கு மிகவும் பிடித்த, புகழ் பெற்றுக் கொடுத்த நல்ல படம் எது என்று நடிகர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது, சிவாஜியுடன் நடித்த படங்களாகத்தான் இருக்கும். "முரடன் முத்து' படத்தில், சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. நடக்கவே கூட கஷ்டப்பட்டார். அன்று இரவு, "நவராத்திரி' படப்பிடிப்பு. கால் வலி அதிகம் இருந்தாலும், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என்பதால், கட்டாயம் படப்பிடிப்பிற்கு சென்றாக வேண்டும் என்ற நிலை. சிவாஜிக்கு அன்று குஷ்டரோகி வேடம். கால் மரத்துப் போகும் போது சிலர், "விந்தி, விந்தி' நடப்பர். அதை கவனித்திருந்த சிவாஜி, அதை மனதில் கொண்டு, "விந்தி, விந்தி' நடந்து, ஏ.பி.நாகராஜனிடமிருந்து பாராட்டு பெற்றார். கடந்த 1975ல், எனக்கும், சுதாவிற்கும் திருமணம் நடந்தது. முகூர்த்ததிற்கு முதல் ஆளாக வந்தவர்கள், சிவாஜியும், அவர் மனைவி கமலாவும் தான். ஆண்டாள் அலங்காரத்தில் சுதாவை, எங்கள் உறவினர் நடிகை வைஜெயந்தி மாலா அழைத்து வந்தார். சுதா வருவதைப் பார்த்து லேசாக கை தட்டிய சிவாஜி, "பியூட்டிபுல்... லவ்லி' என்றார். சில ஆங்கில வார்த்தைகளை சிவாஜி உச்சரிக்கும் போது, அதற்கு தனி சிறப்பு கிடைக்கும். "லவ்லி' என்று அழுத்தமாக அவர் பேசியது அலாதி வேல்யூ. அடுத்து தான் கிளைமாக்ஸ்... என்னை கிட்டே அழைத்து, "டேய்... இது உனக்கு டூ மச் இல்லே!' என கிண்டலடித்தார். அதே போல, 1998ல், என் மகள் மதுவந்திக்கும், நடிகை சாவித்ரியின் பேரன் அருணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. காஞ்சி ஓட்டலில் நடந்த அந்த விழாவிற்காக, தஞ்சாவூரிலிருந்து காரில் வந்தார் சிவாஜி. நேராக காஞ்சி ஓட்டலில் வந்து இறங்கினார். "நான் இங்கே வரவில்லை என்றால், இரண்டு பேர் என்னைத் திட்டுவாங்க. இவங்க அப்பன் (ஒய்.ஜி.பி.,) ஆவியாக வந்து திட்டுவான்; இந்த பரதேசி, நேரே வந்து திட்டுவான்...' என்றார் சிவாஜி. ஒரு பெரிய ரசிகன் தான், தலை சிறந்த கலைஞனாக வர முடியும் என்பது, சிவாஜி யிடமிருந்து நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். ஒருமுறை எங்கள் நாடகத்திற்கு வந்தபோது, பைஜாமா, ஜிப்பா அணிந்து ஸ்மார்ட்டாக இருந்த இந்தி இளைஞரை, தன்னுடன் அழைத்து வந்தார். அவர் தன்னுடைய விசிறி என்றும், இந்தி திரையுலகில் பெரிய ஆளாக வருவார் என்றும் சொன்னார். அவர் தான் பின், பெரிய ஹீரோவாகி, இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற, "பாரத்' விருது பெற்ற நடிகர் சஞ்சீவ்குமார்.

படிக்காத மேதை படத்தைப் பற்றி விமர்சனம் செய்த போது, "குமுதம்' இதழில், "இந்தப் படத்தில் சிவாஜியை நாங்கள் பார்க்கவில்லை; ரங்கன் என்ற வேலைக்காரரை மட்டும் தான் பார்த்தோம்!' என்று சிறப்பாக எழுதியிருந்தனர். "உன்னை நீ மறந்துவிடு; கேரக்டரோடு ஐக்கியப்படுத்திக்கோ...' என்பது சிவாஜியின் தாரக மந்திரம். "உத்தம புத்திரன்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தில், பார்த்திபன், விக்கிரமன் என்று இரட்டை வேடங்களில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார். நல்லவன் பார்த்திபனும், கெட்டவனான விக்கிரமனும் (இருவரும் இளவரசர்கள்) பத்மினியை சந்திப்பர். "பத்மினியுடன் பேசும் போது, பார்த்திபன், பார்த்திபன் தோற்றத்தில் விக்கிரமன் இரண்டிற்கும் எப்படி வித்தியாசம் காட்டினீர்கள்...' என அவரை கேட்டேன்."பார்த்திபன், பத்மினியுடன் பேசும் போது, அவன் கண்ணில் காதல் உணர்வு தெரியும்; பார்த்திபனாக வரும் விக்கிரமன் பேசும் போது, அவன் கண்ணில் காமம் தான் தெரியும்!' என்றார்; அது தான் சிவாஜி. "இரண்டு, மூன்று வேடங்கள் செய்யும் போது, கண்ணில், நடையில், குரலில், பாடி லாங்குவேஜில், பாவனைகளில் வித்தியாசங் களை காண்பிக்க வேண்டும். அப்போது தான், நன்றாக இருக்கும்...' என்று, எனக்கு விளக்கினார் சிவாஜி.

அவர் சொன்ன நுணுக்கங்களைப் பின்பற்றித் தான், "அந்த ஏழு நாட்கள்' நாடகத்தில், ஏழு பாத்திரங்களிலும், "வெங்கடாத்ரி' நாடகத்தில் மூன்று பாத்திரங்களிலும் வெற்றிகரமாக நடித்தேன். அவர் சொன்னதில் பத்து சதவீதம் செய்தாலே, ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறலாம். அவர் ஒரு பிறவி நடிகர்.
"பரீட்சைக்கு நேரமாச்சு' என்ற எங்கள் குழுவின் வெற்றி நாடகத்தை படமாக்க பேசிக் கொண்டிருந்த சமயம். வேறொரு படத்திற்கு ஷூட்டிங்கிற்காக, நாங்கள் இருவரும் பெங்களூருக்கு சென்றிருந்தோம். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பே லொகேஷனுக்கு வரச் சொன்னார். படப்பிடிப்பு நேரத்தில், அந்தப் படத்தைத் தவிர, வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது என்பது அவரின் கட்டுப்பாடு.
"பரீட்சைக்கு நேரமாச்சு' நாடக கதையை முழுமையாக அவருக்கு சொன்னேன்; உன்னிப் பாக கேட்டார். இந்த கதையை படமாக எடுக்கலாமா, இல்லையா என்று எதுவும் சொல்லவில்லை. படப்பிடிப்பு முடியும் போது, அவருடைய உதவியாளர், "நாளைக்கும் காலை 7.30 மணிக்கு உங்களை வரச் சொன்னார்...' என்று தகவல் கொடுத்தார்; நானும் சென்றேன்.
"நேத்து நீ சொன்ன கதையில், நரசிம்மாச்சாரி என்ற கேரக்டர் பற்றி நான் புரிந்து கொண்டதைச் சொல்றேன்... நீ சரியா இருக்கான்னு பாரு...' என்று விவரமாக சொல்ல ஆரம்பித்தார். முழுமையாக சொல்லி முடித்ததும், "இது தாண்டா என் ரோல்!' என முடித்தார். எனக்கு இன்ப அதிர்ச்சி. "நீங்க அந்த கேரக்டரை எங்கேயோ கொண்டு போயிட்டீங்க. நாங்க கூட இவ்வளவு நினைக்கலை...' என்றேன்.

அவர் அந்த கேரக்டரை செய்வது நிச்சயமாகி விட்டது. எனக்கு மகிழ்ச்சி. "ஏண்டா இன்னும் நிக்கறே?' என்றார். "இல்லை சார்...' இழுத்தேன். "வரது குட்டி கேரக்டரை நீ தான் பண்றே போ...' என்று உத்தரவாதம் அளித்தார். அந்த நாடகத்தின், படத்தின் மூலக்கதை என்னுடையது. திரைக்கதை, "வியட்நாம் வீடு' சுந்தரம்.
அந்தப் படத்தில் எனக்கு இரண்டு கேரக்டர்கள். ஒன்று மாணவன்; மற்றொன்று ரவுடி. படப்பிடிப்பில், ரவுடி எப்படி நடக்க வேண்டும் என்று சிவாஜி செய்து காட்டினார். "படிச்சவனுக்கும், படிக்காதவனுக்கும், நடையில் நிறைய வித்தியாசம் இருக்கு தெரியுமா...' என்று சொல்லிவிட்டு, பஞ்சக்கச்சம் வேஷ்டி கட்டியிருந்த நரசிம்மாச்சாரி, பேட்டை ரவுடியாக நடித்துக் காண்பித்தார். "பரீட்சைக்கு நேரமாச்சு' படம் ரிலீசான போது, அவருடைய சாந்தி தியேட்டரின் முதல் நாள் ÷ஷாவிற்கு இருவரும் சென்றிருந்தோம். அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி, ரவுடியின் நடையை, பாடி லாங்குவேஜ் செய்திருந்தேன். தியேட்டரில், கதவுக்கு அருகே போடப்பட்டி ருந்த நாற்காலியில் அமர்ந்த அவர், ரவுடி அறிமுக காட்சியில் என்ட்ரி ஆனதும், தியேட்டரில் நிறைய கைதட்டல். என்னைப் பார்த்து, "சொன்னேன் பார்த்தியா?' என்று பெருமிதமாக சொன்னார். அந்தப்படம் 97 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இயக்கம், தயாரிப்பு முக்தா ஸ்ரீநிவாசன்.

நடிப்பதை சிவாஜி சற்று குறைத்துக் கொண்ட போது, மாதம் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று அவரோடு இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பேன். பொதுவாக இரவு 7.30 மணிக்கு அவர் மாடிக்கு போய்விட்டால் யாரும் டிஸ்டர்ப் செய்ய மாட்டார்கள். "வேற யார் வந்தாலும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்; அந்தப் பைத்தியக்காரன் ஒய்.ஜி.மகேந்திரன் வந்தால், மேலே அனுப்பு. என்னைப் பார்க்காமல் அவன் போகக் கூடாது...' என்று சொல்வார். எனக்கு கிடைத்த பொன்னான சலுகை அது.
கடந்த 2001 ஜூலை 21ம் தேதி சிவாஜி மறைந்தார். 2002லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளில், என் இசைக் குழுவினரோடு, சிவாஜியின் பிரபல படப் பாடல்கள் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். அன்று மாலை நிகழ்ச்சி முழுவதற்கும் நான் ட்ரம்ஸ் வாசிப்பேன். சென்னை காமராஜ் அரங்கமே நிரம்பி வழியும். அவர் கூட நடித்த நடிகர், நடிகை களுக்கு, "சிவாஜி அவார்டு ஆப் எக்சலன்ஸ்' என்ற விருதை வழங்கி கவுரவிக்கிறோம். பிரபு, ராம்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று, விருதை வழங்குவர்.

தஞ்சாவூரிலிருந்து சிவாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என்று நூறு பேர் விழாவிற்காக, பிரத்யேகமாக வருவர். என் ஆசானுக்கு, கலையுலக தந்தைக்கு, நான் மனதார செய்யும் அஞ்சலி இது."உங்க அம்மா என்னை ஏமாத்திட்டாங்க... நீ எனக்குத் தான் பிறந்திருக்கணும்...' என்று உணர்ச்சி வசப்பட்டு, கமலா அம்மா சொல்லி யிருக்கிறார். சிவாஜியின் மகள்கள் சாந்தி, தேன்மொழி, மகன்கள் ராம்குமார், பிரபு, என்னை மூத்த சகோதரனாகத் தான் இன்றும் கருதுகின்றனர். அது நான் செய்த பாக்கியம்.
***
[/tscii:12fb626c34]

saradhaa_sn
26th September 2010, 11:13 AM
டியர் RC,

Y.Gee.மகேந்திரனின் உணர்ச்சிப்பூர்வமான நினைவலைகளின் தொகுப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி. அந்த மாபெரும் கலைஞனைப்பற்றி யார் எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்பதை மகேந்திரன் நிரூபித்திருக்கிறார்.

ஒய்.ஜி.தன் மகனாகப்பிறக்கவில்லையே என்று கமலம்மாள் வருத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது மகனாகப் பிறந்திருந்தால் இவ்வளவு விவரமாக நடிகர்திலகத்தைப்பற்றி புகழ்ந்து பேச முடியாது.

RAGHAVENDRA
26th September 2010, 10:11 PM
சற்றுமுன் கிடைத்த தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை புரசைவாக்கம் மினி மோட்சம் திரையரங்கில் 01.10.2010 வெள்ளி முதல்

புதிய பறவை

தினசரி 4 காட்சிகள்

இந்த வாய்ப்பை அனைவரும் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
26th September 2010, 10:51 PM
சாரதா,

தாமதத்திற்கு மன்னிக்கவும். இமயம் படத்தைப் பற்றிய உங்களின் விமர்சனம் மற்றும் பின் குறிப்புகள் அனைத்தும் எப்போதும் போல சுவை. வழக்கம் போல் படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமே நீங்கள் பாக்கி வைக்கவில்லை. எனவே சில பின்னணி தகவல்கள் [அதிலும் பெரும்பாலானவற்றை நீங்களே சொல்லி விட்டீர்கள்].

நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன்,அன்பை தேடி என்று வரிசையாக படம் எடுத்த முக்தா பிலிம்ஸ் பின் ஒரு இடைவெளி விட்டு எடுத்த படம் அந்தமான் காதலி. எப்போதும் செலவை குறைத்து சிக்கனமாக படம் எடுக்கும் முக்தா முதன் முறையாக அந்தமான் சென்று படம் எடுத்து வந்தார். படத்தின் வெற்றியைப் பார்த்தவுடன் உடனே அதே கூட்டணியில் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார்கள். இம்முறை நேபால் என்று முடிவானது. அதற்கேற்பவும் நடிகர் திலகத்திற்கு பொருந்தும் வண்ணம் இமயம் என்ற பெயர் முடிவானது.

அந்தக் காலகட்டத்தில் அதாவது 1978 மார்ச் மாதத்தில் மீண்டும் நடிகர் திலகம் தொடர் வெற்றிகளை அடைந்துக் கொண்டிருந்த நேரம். அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி, தியாகம், என்னைப் போல் ஒருவன் என்று வெற்றி மேல் வெற்றி. அந்த நேரத்தில் ஏராளமான புதுப் படங்களில் நடிகர் திலகம் book ஆனார். தினத்தந்தியில் தினம் ஒரு முழுப் பக்க விளம்பரம் வந்துக் கொண்டிருந்தது. கவரி மான், வசந்தத்தில் ஓர் நாள், நான் வாழ வைப்பேன், தர்மராஜா, குகநாதனின் படம் [நடிகர் திலகம் ஸ்டெப் கட் முடி வைத்து அலெக்ஸ் என்ற பெயரில் நடித்தார்] போன்ற படங்களும்,இது தவிர படபிடிப்பில் இருந்த புண்ணிய பூமி, ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ் கோபிநாத் மற்றும் திரிசூலம் [அப்போது பெயரிடப்படவில்லை] ஆகியவை படப்பிடிப்பில் இருந்தன.

அந்நேரம்தான் 1978 மே 5 அன்று தச்சோளி அம்பு படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின்போது நடிகர் திலகத்தின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை. மீண்டும் ஆகஸ்ட் 10 அன்றுதான் நடிகர் திலகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நான் வாழ வைப்பேன் படத்தில் தம்பிக்கு கிரிக்கெட் பாட் வாங்கி வரும் காட்சியில் நடித்தார். அதன் பிறகு உடனே நடித்துக் கொடுக்க வேண்டிய பைலட், ஜஸ்டிஸ் மற்றும் திரிசூலம் படங்களை முடித்துக் கொடுத்தார்.

இதற்கிடையில் பாலாஜி அடுத்தப் படத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். எப்போதுமே அக்டோபர் மாதம் படம் ஆரம்பித்து டிசம்பரில் முடித்து ஜனவரி 26 அன்று படத்தை வெளியிடும் பழக்கம் உடைய பாலாஜி இம்முறை நல்லதொரு குடும்பத்தை முடித்தும் கூட திரிசூலதிற்காகவும், கவரிமான் படத்திற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல்.

பாலாஜியைப் போலவே வி.சி.சண்முகத்திடம் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய முக்தா அடுத்து தன் இமயம் படத்திற்கு கால்ஷீட் வாங்கி விட்டார். படப்பிடிப்பை வேகமாக முடித்த முக்தா சீனிவாசனுக்கும் காத்திருக்க வேண்டிய சூழல். நடிகர் திலகத்திற்கு ஏற்பட்ட விபத்தால் மொத்த படங்களின் ரிலீஸ் தேதிகள் பிரச்சனைக்குள்ளாகின. திரிசூலம் படம் வெள்ளி விழா ஓடிய பிறகுதான் ரிலீஸ் தேதி கிடைக்கும் என்று உணர்ந்த முக்தா சரியாக 176 -வது நாளான ஜூலை 21 -ந் தேதியை ரிலீஸ் தேதியாக அறிவித்தார். இதற்கு முன்னரே கே.ஆர்.விஜயா நான் வாழ வைப்பேன் படத்திற்கு ஆகஸ்ட் 10 ரிலீஸ் தேதி வாங்கி விட்டார். [அவரையும் குறை சொல்ல முடியாது. காரணம் 1978 மார்ச் மாதம் விளம்பரம் வரும்போதே மே வெளியீடு என்று கொடுத்தவர்கள் அவர்கள். ஆனால் அது நீண்டு 1979 ஆகஸ்ட் ஆனது]. இது ரசிகர்களுக்கு கோபத்தையும் விநியோகஸ்தர்களுக்கு பிரச்சனையையும் உருவாக்கியது.

காரணம் நல்ல திரையரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல இது மதுரையில் பெரிதும் எதிரொலித்தது. இமயம் படத்திற்கு சரியான தியேட்டர் இல்லை. சிந்தாமணியில் திரிசூலம், சென்ட்ரலில் நல்லதொரு குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. தேவியில் நான் வாழ வைப்பேன் படம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த நிலை தியேட்டர்களான கல்பனாவில் கல்யாணராமனும், அலங்காரில் தர்ம யுத்தமும் ஓடிக் கொண்டிருந்தன. சினிப்ரியா மினிப்ரியாவில் ரோசாப்பூ ரவிக்கைகாரி மற்றும் அலாவுதினும் அற்புத விளக்கும். ஏனோ தெரியவில்லை இமயம் படத்தின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் நியூசினிமா தியேட்டரை அணுகிய மாதிரியே தெரியவில்லை. இத்தனைக்கும் ஜெய்சங்கரின் மார்கெட்டை குப்பறத் தள்ளிய மு.க.வின் ஆடு பாம்பே தான் ஓடிக் கொண்டிருந்தது. அதை மூன்றே வாரங்களில் தூக்கி விட்டு என்னடி மீனாட்சி என்ற படத்தை வெளியிட்டார்கள். இறுதியில் சேது பிலிம்ஸ் தாங்கள் ரிலீஸ் செய்து நன்றாக போய்க் கொண்டிருந்த நல்லதொரு குடும்பம் படத்தையே 79 நாட்களில் மாற்றிவிட்டு இமயம் படத்தை சென்ட்ரலில் ரிலீஸ் செய்தனர்.

ஸ்ரீவித்யா பற்றி சொன்னீர்கள். உண்மை. திறமை வாய்ந்த அவரை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மலையாள படவுலகம் அவரை இரு கை நீட்டி ஏற்றுக் கொண்டது. அந்தமான் காதலி படத்தில் சுஜாதா நாயகி. அந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும் போது தீபம் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. அந்தமான் காதலிக்கு பின் ஆரம்பிக்கப்பட்டு ஆனால் அந்தமான் காதலிக்கு முன்னேரே வெளியான அண்ணன் ஒரு கோயிலும் பெரிய வெற்றி. தொடர்ந்து வந்த அந்தமான் காதலியும் வெற்றி. இப்படி தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்தவர்களை தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்வது இயல்பு. ஆனால் அண்ணன் ஒரு கோயில் படப்பிடிப்பின் போதே சுஜாதா, தினகர் என்பவரை காதல் திருமணம் செய்து அமெரிக்கா போய் விட்டார். புன்னகை அரசியும் பிசியாக இருந்ததால் ஸ்ரீவித்யாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு என்பதால் [திருவருட் செல்வர் படத்தில் சிறுமியாக வருவார்] ஒப்புக் கொண்டு நடித்தார். ஜோடி நன்றாகவே இருந்தது. மீண்டும் நீதியின் நிழல் படத்தில் நடிகர் திலகத்திற்கு ஜோடியானார்.

இமயம் வந்த காலக் கட்டம் இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் ஒரு முக்கியமான நேரம். பொதுவாகவே அரசியல் திருப்பங்கள் நடக்கும் நேரத்தில் வெளியாகும் படங்கள் அச்சூழல் காரணமாக போதிய வெற்றியை பெறாமல் போவதை நாம் நடிகர் திலகம் படங்களின் மூலமாகவே பார்த்திருக்கிறோம். 1967 பொது தேர்தலின்போது வெளியான நெஞ்சிருக்கும் வரை, 1971 பொது தேர்தலின்போது வெளியான அருணோதயம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

1977 சட்டசபை தேர்தலுக்கு பிறகு அன்னை இந்திரா மீது மதுரையில் நடந்த கொலை வெறி தாக்குதலை விட்டு விட்டு பார்த்தால் பொதுவாக அரசியல் பெரிய பரபரப்பின்றி ஓடிக் கொண்டிருந்த நேரம்.

1978-ல் இந்திரா காங்கிரஸ் என்ற இயக்கத்தை உருவாக்கி ஆந்திராவில் சென்னா ரெட்டியின் தலைமையிலும் கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் தலைமையிலும் ஆட்சியை பிடித்ததையும் அதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு ஜனதாவின் வீரேந்திர பாட்டிலை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினரான இந்திரா அம்மையாரை அன்றைய ஜனதா ஆட்சி இம்பீச்மென்ட் [Impeachment] முறையில் உடனே பதவி நீக்கம் செய்தது. மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற பாதுகாப்பான தொகுதியை தேடிக் கொண்டிருந்தார் இந்திரா.[இவற்றையெல்லாம் நாம் ஏற்கனவே இதே திரியில் பேசியிருக்கிறோம்].

1977 நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் வெற்றிப் பெற்ற எஸ்.டி.சோமசுந்தரம் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றதால் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதை தவிர நாகை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான முருகையன் கொலை செய்யப்பட்டதால் இரண்டு தொகுதிகளுக்கும் 1979 ஜூன் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டது. தஞ்சையில் இந்திராவே போட்டியிடுவார் என்ற செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தன. அந்த நேரம் தி,மு.க சார்பில் இந்திராவை எதிர்த்து மு.க.வே போட்டியிடுவார் போன்ற செய்தி பரப்பட்டது. தேர்தலில் பெரிய அளவில் வன்முறை நடக்கலாம், ஆகையால் இந்திரா போட்டியிடுவதை தவிர்த்தல் நலம் என்று டெல்லி சென்ற எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் மொரார்ஜியின் நிர்பந்தம் காரணமாகவே இது நடந்தது என்று செய்திகள் வந்தன. இந்திரா போட்டியிடவில்லை. சிங்காரவடிவேலு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தி,மு,க.வின் அன்பில் தர்மலிங்கத்தை தோற்கடித்தார். ஆனால் பக்கத்து தொகுதியான நாகையில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட வ. கம்யூனிஸ்ட் வேட்பாளார் [அவர் பெயரும் முருகையன்தான்] அ.தி.மு.க. வேட்பாளரை [மகாலிங்கம்?] தோற்கடித்தார். ஒரே நேரத்தில் திராவிடக் கட்சிகள் தோற்று தேசியக் கட்சிகள் வெற்றி பெற்ற தேர்தல் அது. மட்டுமல்ல அ.தி.மு.க. தோன்றிய பிறகு நடந்த இடைத் தேர்தல்களில் அக்கட்சி சந்தித்த முதல் தோல்வியும் அதுதான் என்ற முறையில் கவனம் ஈர்த்த தேர்தலும் கூட.

தஞ்சையில் தான் போட்டியிட முடியாததை இந்திரா ஒரு கோவத்தோடு எதிர் கொண்டார். இந்த தேர்தலுக்கு பின்தான் சஞ்சய் காந்தியின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு இந்திரா பச்சை கொடி காட்ட பிரதமர் நாற்காலியில் ஒரு நாளேனும் அமர்வதை வாழ்கையின் லட்சியமாக கொண்டிருந்த சரண்சிங் மொரார்ஜி ஆட்சியை கவிழ்த்தார். ஆட்சி கவிழும் என்ற கட்டத்தில் அதுவரை மொரார்ஜி மந்திரிசபைக்கு ஆதரவளித்த எம்.ஜி.ஆர்., ஆட்சி கவிழ்ந்தவுடன் சரண்சிங் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து சத்தியவாணி முத்தையும் பாலா பழனூரையும் அமைச்சர்கள் ஆக்கினார்.

நண்பர் மகேஷ் ஒருமுறை குறிப்பிட்டது போல படத்தின் தரம் போலதான் ஓட்டமும் இருக்கும் என்றாலும் கூட, அந்த காலக் கட்டத்தில் நேர்ந்த அரசியல் திருப்பங்கள் அதிலும் குறிப்பாக சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ஆட்சிக் காலம் முடியும் முன்னரே ஆட்சி கவிழ்ந்ததனால் ஏற்பட்ட குழப்பமான சூழல், அதற்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட மைனாரிட்டி(!) சரண்சிங் அரசின் ஆயுள்காலம் பற்றிய பயம்,இப்படிப்பட்ட நேரத்தில் சினிமா அதிலும் சுமாரான சினிமா மக்கள் கவனம் ஈர்க்காமல் போனதில் அர்த்தம் இருக்கிறது.

இதை தவிர அன்று இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த விஷயம் வேறு ஒன்றும் இருந்தது. ஸ்கை லாப் என்ற விண்வெளி கலம் ஒன்று தன் பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருப்பதாக சொன்ன நாசா விஞ்ஞானிகள் அது பூமியில் எந்த பாகத்திலும் விழலாம் என்றும் அதை தடுக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அந்த முயற்சிகள் எந்தளவிற்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த விண்கலம் விழும்போது பெரிய அளவில் பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்படலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை தினசரி பேப்பர்களில் வந்துக் கொண்டிருந்தன. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் இது ஒரு மனதளவிலான பாதிப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் anti - climax என்று சொல்லுவார்களே, அது போல அந்த ஸ்கை லாப் இறுதியில் யாருக்கும் எந்த தொல்லையும் இல்லாமல் கடலில் விழுந்து உயிரை விட்டது.

நான் முதலில் சொன்னது போல படம் ஓடாததற்கு காரணங்களை சொல்லவில்லை. அன்றைய சூழல் எப்படி இருந்தது என்று சுட்டிக் காட்டவே இந்த நீண்ட பதிவு.

மற்றபடி இமயம் பற்றி நினைக்கும் போது இரண்டு நினைவுகள் வரும். ஒன்று ஆனந்த விகடன் விமர்சனத்தில் கங்கை யமுனை பாடலைப் பற்றி பற்றி எழுதும்போது அவர்கள் எழுதியிருந்தது "இந்த பாடலின் போது தன் அனுபவத்தையே வயதாக கொண்ட நடிகர்களுக்கு சவால் விட்டிருக்கிறார் சிவாஜி".

இரண்டாவது நினைவு இந்த படம் வெளியான நாள் - ஜூலை 21.

அன்புடன்

pammalar
27th September 2010, 02:59 AM
டியர் முரளி சார்,

1977,78,79 ஆம் ஆண்டுகளில் இருந்த தமிழ்த் திரை சூழல், தமிழக அரசியல் சூழல், இந்திய அரசியல் சூழல், உலக நிகழ்வுகள் என உங்களது பதிவில் ஒரு மினி வரலாற்றுக் களஞ்சியத்தையே கொடுத்து விட்டீர்கள்.

உங்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th September 2010, 03:18 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 140

கே: "ராஜ ராஜ சோழன்" படம் இரண்டு வாரங்களில் இருபத்தைந்து லட்ச ரூபாய் வசூல் தந்தது குறித்து தங்கள் கருத்து என்ன? (எஸ்.பாலகிருஷ்ணன், திருச்சி - 20)

ப: இப்படிப்பட்ட படங்கள் தயாரிக்க மற்றவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமானால் இந்தப் படம் வசூலில் வெற்றி பெறத்தானே வேண்டும்!

(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
27th September 2010, 12:03 PM
Please click the link below: (News)


http://www.sivajiperavai.com/View_Press.php?id=119

Thanks & regards

SHIV
27th September 2010, 12:11 PM
Dear Mr.Chandrasekar

This is a timely reminder to TN Govt by you during the 1000th year celebrations of the "Big Temple" bulit by Raja Raja Cholan.

May God grant success in your sincere and untiring efforts to get our Thalaivar's Manimandapam project moving.

Regards

Shivram

saradhaa_sn
27th September 2010, 12:54 PM
[tscii:af01c21e3a]டியர் முரளியண்ணா,

உங்களின் நீண்ட விவரமான கட்டுரை, இமயம் படம் வெளியான கடந்த காலத்துக்கே இட்டுச்சென்றது. கடந்தகால நினைவலைகளை அசைபோடுவது போன்றதொரு சந்தோஷமான விஷயம் வேறெதுமில்லை என்பது எனது பலமான கருத்து. அதற்கு பெரிய வலு சேர்க்கிறது உங்களின் வரலாற்றுத்தொகுப்பு. 'தச்சோளி அம்பு' பட விபத்தினால் பல்வேறு படங்களின் வெளியீடுகளில் குளறுபடி ஏற்பட்டது பற்றி, பாடல்கள் பலவிதம் திரியில், நீங்கள் பதித்த 'எந்தன் பொன் வண்ணமே' பாடல் ஆய்விலும் குறிப்பிட்டிருந்தீர்கள். (இப்போது அந்த திரியையே காணவில்லை. நல்லவேளை எனது கணினியில் அதை சேமித்து வைத்துள்ளேன்).

நடிகர்திலகம் - ஸ்ரீவித்யா வின் ஜோடிப்பொருத்தம் பற்றி, அடுத்த பக்கத்தில் இன்னொரு பதிவு இட்டிருந்தேன் படித்திருப்பீர்கள். அவர் நடிகர்திலகத்துடன் மேலும் பல படங்களில் சேர்ந்து நடிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஒருவேளை நீங்கள் சொன்னது போல, இப்படம் வெற்றியடைந்து, கே.ஆர்.விஜயா, சுஜாதா, ஸ்ரீபிரியா போல ராசியான ஜோடி என்ற பெயர் ஏற்பட்டிருந்தால் ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர்கள் கன்ஸிடர் பண்ணியிருப்பார்களோ. (இதுபோல ஏங்க வைத்த இன்னொருவர் விஜயநிர்மலா. காரணம் 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடலில் அவர் நடிகர்திலகத்துடன் காட்டிய கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ், பையாலஜி எல்லாம்).

தவிர நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து பல படங்களில் ஒரே நாயகியைப் பிடித்து தொங்கிக்கொண்டிராதவர். அந்த ஆண்டுகளில் வந்த படங்களின் ஜோடிகளைப்பார்த்தால் தெரியும்.
அந்தமான் காதலி - சுஜாதா
தியாகம் - லட்சுமி
என்னைப்போல ஒருவன் - சாரதா, உஷா நந்தினி
புண்ணிய பூமி - வாணிஸ்ரீ
ஜெனெரல் சக்ரவர்த்தி - கே.ஆர்.விஜயா
பைலட் பிரேம்நாத் - மாலினி பொன்சேகா
ஜஸ்டிஸ் கோபிநாத் - கே.ஆர்.விஜயா
திரிசூலம் - கே.ஆர்.விஜயா, ஸ்ரீபிரியா, ரீனா
கவரிமான் - பிரமீளா
நல்லதொரு குடும்பம் – வாணிஸ்ரீ
இமயம் - ஸ்ரீவித்யா

(இவர்களில் பிரமீளாவைப்பற்றி குறிப்ப்பிட வேண்டும். 'கவரிமான்' முதல்நாள் மாலைக்காட்சிக்கு மிட்லண்ட் தியேட்டர் வந்திருந்தார். (இயக்குனர் எஸ்.பி.எம். மற்றும் ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோரும் வந்திருந்தனர்). பட்டுப்புடவை சரசரக்க காரில் இருந்து இறங்கும்போதே அனைவருக்கும் வணக்கம் போட்டார். எல்லோருடனும் சகஜமாக சிரித்துப்பேசினார். இடைவேளை யின்போது பெண்களின் மத்தியில் வந்துநின்று பேசிக் கொண்டிருந்தவர், 'இப்படம் நன்றாக ஓடி தங்கப்பதக்கம் போல தனக்குப்பெயர் பெற்றுத்தரும் எனவும், தொடர்ந்து சிவாஜிசாருடன் ஜோடியாக நடிக்கும் பெரிய வாய்ப்புக் கிடைக்கும்' எனவும் ரொம்ப நம்பிக்கையுடன் பேசினார். பாவம், அவர் நம்பிக்கையும் ஆசையும் பொய்யாகிப்போனது).

அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலைப்பற்றிய தங்கள் விவரிப்பும் மிகவும் சுவையாக உள்ளது. நாகை இடைத்தேர்தல் தோல்வி எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியைத் தந்தது. முதன்முதலாக தோல்வி என்ற வார்த்தையைக் கேட்டார். ஆனால் தஞ்சையில் அன்பிலின் தோல்வி கலைஞரை பாதிக்கவில்லை. 1973-ல் திண்டுக்கல்லில் துவங்கி தொடர்ந்து தோல்விகளையே பார்த்து வந்த அவருக்கு இது பத்தோடு பதினொன்று. அவ்வளவுதான். எனவே வழக்கம்போல முந்தைய தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்குமான ஓட்டு சதவீத கணக்குகளைச் சொல்லிக்காட்டி தொண்டர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். நாகையில் அவரது அணியின் வெற்றி அவருக்கு தெம்பைத் தந்திருந்தது.

இதை மனதில் கொண்டே, 80 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து 40-க்கு 38 என்ற வெற்றிக்கணக்கில் எம்.ஜி.ஆருக்கு மேலும் பெரிய அதிர்ச்சி வைத்தியம் தந்தார். முகத்தைக்காட்டினால் போதும் ஓட்டுக்கள் குவியும் என்ற ஆரூடங்கள் தகர்த்தெறியப்பட்டன. அந்த அளவில் நின்றிருந்தால் அதிர்ச்சி நிலைத்திருக்கும். ஆனால் இந்திராவும், கலைஞரும் சேர்த்து தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுக்கும் முயற்சியாக, தேவையில்லாமல் தமிழக சட்டமன்றத்தைக் கலைக்கப்போக, அது வினையாக முடிந்தது. அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் கலைஞர் பெரிய அளவில் ஏமாந்தார். 'யார் முதல்வராவது?' என்ற காங்கிரஸாரின் குழப்பவாதமும் ஒரு காரணம். (அந்த சட்டமன்ற தேர்தலின்போதுதான், நடிகர்திலகத்தின் மீது மூன்று அங்குல விட்டமுள்ள இரும்பு நட் வீசப்பட்டு, நெற்றியில் காயம் அடைந்தார்).

மதுரை திரையரங்க நிகழ்வுகளைச் சொல்லியிருந்தீர்கள். சென்னையில் அத்தகைய (திரையங்கு கிடைக்காத) சூழ்நிலை இல்லை. சாந்தியில் திரிசூலம் ஓடிக்கொண்டிருக்க, மிட்லண்டில் கவரிமான் ஓடிமுடிந்து எடுக்கப்பட்டு 'ஆறிலிருந்து அறுபது வரை' படமும், அலங்காரில் கல்யாணராமனும் ஓடிக்கொண்டிருந்தன. 'நல்லதொருகுடும்பம்' சத்யம் அரங்கில் எடுக்கப்படும் நிலையில்தான் இருந்தது. 'நான் வாழ வைப்பேன்' படத்துக்காக சித்ரா ஒப்பந்தம் செய்ப்பட்டிருந்தது. பாரகனில் 'ஆடுபாம்பே' ஓடிக்கொண்டிருந்தது. இருப்பினும் வேண்டுமென்றே செய்வதுபோல சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த திரிசூலம் 175 நாட்களில் எடுக்கப்பட்டு 'இமயம்' திரையிடப்பட்டது ரசிகர்களை சோர்வடையச்செய்தது.
[/tscii:af01c21e3a]

KCSHEKAR
27th September 2010, 01:10 PM
சாரதா மேடம், முரளி சார்,

இமயம் திரைப்படப் பதிவுகளும், இமயம் NT அவர்கள் தொடர்புடைய அந்தக்கால அரசியல் நிகழ்வுகளும் காலப்பெட்டகங்கள்.

goldstar
27th September 2010, 02:15 PM
Thanks Murali and Saradha madam. All of totall new news about "Imayam". Particularly "Imayam" released at Madurai Central when "Nallothoru Kudumbam" running well instead of New Cinema theatre.

I wish at least a NT movie will be released in Shanthi theatre on NT's birth day. Hope Mr. Ramkumar and Prabhu will fullfil our request.

Cheers,
Sathish

RAGHAVENDRA
27th September 2010, 04:09 PM
முரளி சார் மற்றும் சகோதரி சாரதா அவர்களின் பதிவுகள் என்னை 1979க்கே அழைத்துச் சென்று விட்டன. சாரதா கூறியது போல் அன்று நானும் அங்கு எஸ்.பி.முத்துராமனுடன் பேசிக் கொண்டிருந்தேன். கவரிமான் படம் பிரமீளாவுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்திருந்தது. கவரிமான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு இன்னொரு காரணம் இளையராஜாவின் இசையில் பாடல்கள் மிகப் பெரிய ஹிட். இதில் சோகம் என்ன என்றால் கேசட்டிலும் இசைத்தட்டிலும் முதலிடம் பிடித்த பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை என்பது. அதில் ஒன்று நடிகர் திலகம் பாடுவதாக வர இருந்த ஆங்கிலப் பாடல்.

1978-79 ஆண்டு கால கட்டம் 1971-72ன் பிரதிபலிப்பு எனலாம். சற்று நெருக்கமான இடைவெளியில் படங்கள் வெளியானது சற்று வருத்தமே.

போதாக்குறைக்கு அரசியல் தன் பங்கை சேர்த்துக் கொண்டது. காங்கிரஸார் தி.மு.க.வுடன் போட்டியில் ஈடுபட்டது ஒரு புறம் என்றால், காங்கிரஸுக்குள்ளேயே நடிகர் திலகத்தை எதிர்த்து ஒரு கோஷ்டி அரசியல். அப்போது நடிகர் திலகத்தை காங்கிரஸுக்குள்ளேயே எதிர்த்த ஒரு தலைவர் பின்னாளில் அவருடனேயே சேர்ந்து பணியாற்றினார் என்பது தனிக்கதை.

இதில் இமயம் பாதிக்கப்பட்டதும் வருத்தத்திற்குரியது. படம் சுமார் என்றாலும் கூட. முரளி சார் சொன்னது போல் ஒரு நல்ல வாய்ப்பை, காங்கிரஸார் தவற விட்டனர் என்பதே உண்மை.

பி.கு.
டியர் முரளி சார்,
சுஜாதாவின் கணவர் பெயர் ஜெயகர். ஒரு படப்பிடிப்பின் போது அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரும் நடிகர் திலகத்தின் ரசிகரே.

HARISH2619
28th September 2010, 01:59 PM
திரு சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் மனிமன்டபம் தொடர்பாக தாங்கள் எடுத்து வரும் முயற்ச்சிகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன்.என் மனதில் தோன்றிய ஒரு எண்ணம்,பத்திரிக்கை அறிக்கை மூலமாக கோரிக்கை வைப்பதைவிட அக் 1ம் தேதியன்று சிவாஜி சமூக நல பேரவையின் சார்பில் ஒரு ஊர்வலமாக கோட்டைக்கு சென்று(முடிந்தால் திரு பிரபு அல்லது திரு ராம்குமார் அவர்களது தலைமையில்)முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்

RAGHAVENDRA
29th September 2010, 09:45 AM
திரு சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் மனிமன்டபம் தொடர்பாக தாங்கள் எடுத்து வரும் முயற்ச்சிகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன்.என் மனதில் தோன்றிய ஒரு எண்ணம்,பத்திரிக்கை அறிக்கை மூலமாக கோரிக்கை வைப்பதைவிட அக் 1ம் தேதியன்று சிவாஜி சமூக நல பேரவையின் சார்பில் ஒரு ஊர்வலமாக கோட்டைக்கு சென்று(முடிந்தால் திரு பிரபு அல்லது திரு ராம்குமார் அவர்களது தலைமையில்)முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்
:exactly:

RAGHAVENDRA
29th September 2010, 09:56 AM
நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சி
நாள் 01.10.2010
இடம் காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18
நேரம் மாலை 5.45 மணி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 82வது பிறந்த நாள் விழா
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நினைவு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
மற்றும்
கலைஞர்களை கௌரவித்தல்

அஞ்சல் உறை வெளியீடு
திருமதி சாந்தி நாயர்
தலைமை அஞ்சல் அதிகாரி, தமிழ்நாடு வட்டம்

டாக்டர் சிவாஜி நினைவுப் பரிசு பெறுவோர்

திரு M.பீதாம்பரம் - ஒப்பனைக் கலைஞர், தயாரிப்பாளர்
திரு V.பாண்டியன் - ஒப்பனைக் கலைஞர், நடிகர்
திருமதி C.ராஜசுலோச்சனா - நடிகை, நடனக் கலைஞர்
திரு A.L.ராகவன் - இசையமைப்பாளர், நடிகர்

சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு G.K.வாசன்

சிறப்புரை
திரு V.C. குகநாதன் - தலைவர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்

ராகவேந்திரன்

Murali Srinivas
29th September 2010, 11:12 PM
நடிகர் திலகத்தின் நினைவு நாளன்று போஸ்டரில் "சிவாஜி தன்னை உலகினிற்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று எழுதி அனைவரின் கவனத்தை ஈர்த்த திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் இம்முறை பிறந்த நாள் போஸ்டருக்கு மீண்டும் ஒரு அழகான வாக்கியத்தை எழுதியுள்ளார். "கலைத்தாயின் மானிட வடிவம் சிவாஜி"!

இது போல் மேலும் பல புதுமைகளை அவர் புரிய ஆண்டவன் அருள் புரியட்டும்.

அன்புடன்

Murali Srinivas
29th September 2010, 11:37 PM
செப்டம்பர் 29

என்றும் இனிமை மாறாத

என்றும் புதுமை குறையாத

எப்போது பார்த்தாலும்

எண்ணிலடங்கா சந்தோஷ வித்துக்களை

எல்லோர் மனத்திலும் விதைக்கும்

எங்கள், உங்கள், நம் அனைவரின்

வசந்த மாளிகைக்கு

இனிய 38-வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்புடன்

pammalar
30th September 2010, 05:41 AM
சிவாஜி 83

1. சிவாஜி என்கிற வி.சி.கணேசன் பிறந்த தேதி : 1.10.1928, திங்கட்கிழமை. இந்த தேதியில் விழுப்புரத்தில் மாலை 4:30 மணியளவில் ராஜாமணி அம்மாள் - சின்னையா மன்றாயர் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.

2. தன்னுடைய ஏழாவது அகவையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தில், தனது வீட்டுக்கு அருகாமையில் நடைபெற்ற "கம்பளத்தார் கூத்து" நாடகத்தில், ஒரு நாள் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடித்ததற்காக, சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் கடுங்கோபத்திற்கு ஆளாகி கன்னத்தில் அறையும் வாங்கினார்.

3. இவர் சேர்ந்த முதல் நாடகக் கம்பெனி, யதார்த்தம் பொன்னுசாமியின் 'மதுரை ஸ்ரீ பால கான சபா'. இவரது முதல் நாடக வேடம், 1935-ல், திண்டுக்கல்லில் "இராமாயண" நாடகத்தில் பாலஸ்திரீபார்ட்டாக, 'இளம்பருவ கன்னிமாட சீதை' வேடம்.

4. நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.

5. 1945-ன் இறுதியில், தந்தை பெரியாரின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகம் மேடையேற்றப்பட்டது. மாவீரன் சத்ரபதி சிவாஜியாகவே, கணேசன் உருமாறி, வீரமுழக்கம் செய்தார். நாடகம் முடிந்ததும் பெரியார், கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டி, "இன்று முதல் நீ வெறும் கணேசனல்ல, சிவாஜி கணேசன்" என்று பட்டம் சூட்டினார். இந்த நாடகத்தை, பார்வையாளர்களில் ஒருவராக, எம்.ஜி.ஆரும் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. 1946 முதல் சற்றேறக்குறைய 4 வருடங்களுக்கு, சக்தி கிருஷ்ணசாமியின் 'சக்தி நாடக சபா'வில், பல நாடகங்களில் பல தரப்பட்ட வேடங்களில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. அவற்றில் அவருக்கு தலையாய புகழ் கொடுத்த வேடம், 'நூர்ஜஹான்' நாடகத்தில், அவர் ஏற்று நடித்த அழகுக்கிளி 'நூர்ஜஹான்' வேடம். அந்த நாடகத்தையும், அதில் அவரது அந்த ஸ்திரீபார்ட் வேட நடிப்பையும் பார்த்து பாராட்டாத பிரபலங்களே இல்லை.

7. சிவாஜி, சக்தி நாடக சபாவில் இருந்த போது, ஏ.பி.நாகராஜனும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே நாடகத்தில், ஏபிஎன்
ராஜபார்ட்டாகவும், அவரது ஜோடி ஸ்திரீபார்ட்டாக சிவாஜியும் நடித்திருக்கிறார்கள்.

8. "பராசக்தி" படத்தில் நடிக்கும் போது சிவாஜிக்கு மாத சம்பளம் தான். சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் தயாரிக்கப்பட்ட அப்படத்தின் கதாநாயகனான சிவாஜிக்கு மாதந்தோறும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

9. "பராசக்தி" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, "பணம்", "பூஙகோதை" படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" வெளியான மறுதினமே "திரும்பிப் பார்" திரைப்படத்திலும், "மனோகரா"விலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.

11. 1953 பொங்கல் திருநாளிலிருந்த்து, தான் அமரராவதற்கு முன் வந்த 2001 பொங்கல் திருநாள் வரை, ஒவ்வொரு பொங்கலன்றும், வேலூருக்குச் சென்று, தன்னை வாழ வைத்த தெய்வம் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செய்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வழங்குவதை ஒரு வழக்கமாகக் (கடமையாகக்) கொண்டிருந்தார். பெருமாள் தம்பதியரை வணங்கி ஆசி பெறுவார். 1979-ல் பெருமாள் அமரரான பின்னரும் கூட, ஒவ்வொரு பொஙகலன்றும் வேலூருக்கு சென்று, அவரது மனைவியை வணங்கி ஆசி பெற்று புத்தாடைகளை அளித்து வந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் சென்று, பெருமாள் அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து புத்தாடைகளை வழங்கி வருகின்றனர்.

12. சென்னை மாநகரில், முதன்முதலில் 5 திரையரங்குகளில் [சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி, லட்சுமி] வெளியான படம் "மனோகரா(1954)". அதே போன்று சிங்காரச் சென்னையில், 6 திரையரங்குகளில் [அசோக், சன், ஸ்ரீமுருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன்] வெளியான முதல் படம் "நானே ராஜா(1956)".

13. 1955-ன் தொடக்கத்தில் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து அவர் அருளால் சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்ட சிவாஜி தீவிர பிள்ளையார், ஐயப்ப பக்தர். பல ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று பயபக்தியுடன் ஹரிஹரஸுதனை தரிசித்து வணங்கியிருக்கிறார். மாரியம்மனிடமும் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு.

14. 1957 முதல் 1961 வரை, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை இந்தியாவெங்கும், சற்றேறக்குறைய 112 முறை நடத்தி, அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, தனது சிவாஜி நாடக மன்ற உறுப்பினர் சம்பளம் போக, கிட்டத்தட்ட ரூ.32,00,000/-த்தை (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சங்களை), பல்வேறு ஆக்கப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக, தென்னகமெங்கும், பல பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் இந்நாடகம் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளால் தான் உருவானது.

15. "ராணி லலிதாங்கி" திரைப்படம் வெளிவந்த சமயம், படத்தைப் பார்த்து விட்ட கழகத் தோழர் ஒருவர், அதில் சிவாஜியின் நடிப்பையும், நாட்டியத்தையும் கழகத் தலைவர் அண்ணாவிடம் வானளாவப் புகழ, அன்று இரவுக்காட்சியே யாரும் அறியாவண்ணம், மாறுவேடம் பூண்டு, முண்டாசு எல்லாம் கட்டிக் கொண்டு படத்தை பார்த்து விட்டு வந்தார் அண்ணா.

16. "சம்பூர்ண ராமாயணம்" திரைப்படத்தை கண்டு களித்த மூதறிஞர் ராஜாஜி "சிவாஜியின் நடிப்பில் பரதனைக் கண்டேன்" என்று வியந்து பாராட்டினார். "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தை பார்த்து ரசித்த வ.உ.சி.யின் புதல்வர் சுப்ரமண்யம் "நடிகர் திலகத்தின் ரூபத்தில் எனது தந்தையாரை தரிசித்தேன்" என உருக்கத்துடன் புகழ்ந்துரைத்தார். இந்த இரு பாராட்டுக்களைத் தான், தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு கூறி, இன்புறுவார் சிவாஜி.

17. மத்திய அரசு கொண்டு வந்த, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு, 1959-ம் ஆண்டு, தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், பாரதப் பிரதமர் நேருவிடம் ரூ.1,00,000 /- தொகையை வாரி வழங்கிய முதல் இந்திய நடிகர் வள்ளல் சிவாஜி.

18. நடிகர் திலகத்தின் முதல் கறுப்பு-வெள்ளைப் படமும் (பராசக்தி) வெள்ளிவிழாக் கண்டுள்ளது. அவரது முதல் வண்ணப்படமும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளது. உலக சினிமா சரித்திரத்திலேயே - ஒரு கதாநாயக நடிகருக்கு - இது ஒரு அபூர்வமான சாதனை.

19. இந்தியத் திரையுலகக் கலைஞர்களில், அதிக அளவில் உலக விருதுகளை வென்ற மாபெரும் சாதனையாளர். 1960-ல் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என கௌரவிக்கப்பட்டு வெள்ளிப்பருந்து சிலையையும் பரிசாகப் பெற்றார். 1995-ல், பிரான்ஸ் நாடு இவருக்கு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருது வழங்கி கௌரவித்தது.

20. 1960-ல் தமிழகம் கடும்புயல், பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, முதல்வர் காமராஜர் அவர்களின் மேற்பார்வையில், சிவாஜி அவர்கள் தனி மனிதனாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

21. 1961-ல் தனது 'அன்னை இல்ல'த்தில், ஒரு பிள்ளையார் கோவிலை உருவாக்கினார் இந்த கலைப்பிள்ளையார். 2010-ல் பொன்விழா தொடக்கத்தைக் காணும் இப்பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்னர் அவரது அருந்தவப்புதல்வர்களால் மங்களகரமாக நடத்தப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்த வழியாக போவோர், வருவோர் எல்லாம் இந்த விநாயகரை வழிபட்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ளனர்.

22. சிங்காரச் சென்னையில், முதன்முதலாக, ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மொத்த வசூலை அளித்த திரைப்படம் "பாவமன்னிப்பு". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு ஏசி டீலக்ஸ் திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [திரையரங்கம் : சென்னை - சாந்தி]

23. 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் கலைத்தூதுவராக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளுக்கும் விஜயம் செய்து பற்பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றார். அமெரிக்க பயணத்தின் போது, நியூயார்க் மாநிலத்தில் உள்ள எழில் கொஞ்சும் நகரமான நயாகரா நகரின், ஒரு நாள் கௌரவ மேயராக, தங்கச்சாவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பிரதமர் நேருவிற்குப் பிறகு, இந்த கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி.

24. 1962-ல் சீனப் படையெடுப்பின் போது ரூ.40,000/-, 1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம், 1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.

25. 1964-ல் பம்பாயில் சத்ரபதி சிவாஜி சிலை, 1968-ல் சென்னையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை, 1972-ல் ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றை தன் சொந்த செலவில் நிறுவினார்.

26. 1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.

27. 1965-ன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்பினரானார். அதிலிருந்து 1988 ஜனவரி வரை, கிட்டத்தட்ட 23 வருடங்கள், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தனது உடல், பொருள், ஆவி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.

28. 1966-ல் பத்மஸ்ரீ, 1982-ல் ராஜ்யசபை எம்.பி., 1984-ல் பத்மபூஷன், 1997-ல் தாதா சாகேப் பால்கே விருது என தாய்த்திருநாடும் தன் தலைமகனை கௌரவித்திருக்கிறது.

29. 1971ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், 47 சென்ட் நிலம் வாங்கி, அதில் கட்டபொம்மன் சிலையை நிறுவினார். தமிழகமெங்கும் பல ஊர்களில், பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை, தன் சொந்த செலவில் நிறுவியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைத்தார். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் அமைய தாராளமாக நிதியுதவி செய்தார்.

30. சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் (அம்மாவின் அப்பா), அக்காலத்திலேயே, குழந்தைகளுக்கு தமிழ்ப்பற்றும், இறையுணர்வும் வரவேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் தனது சொந்த செலவில் விழுப்புரத்தில் தேவாரப் பாடசாலை நடத்தி வந்தார். அந்தத் தேவாரப் பள்ளியில் மாணவராகப் பயின்றவர் தான், பிற்காலத்தில் தமிழிசைக்கு அருந்தொண்டு புரிந்த தமிழிசை மாமேதை இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

31. விருந்தோம்பலில் சிறந்தது அன்னை இல்லம். அன்னை இல்லத்தில் சாப்பிடாதவர்களே இல்லை. சாதாரண ரசிகர்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை அனைவரும் கமலா அம்மாள் கையால் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அதே போன்று, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சிவாஜிக்கு வரும் மதிய உணவும் அங்குள்ள அனைவரும் (குறைந்த பட்சம் 10 பேராவது) சாப்பிடும் அளவுக்கு ருசியாக நிறைய செய்து அனுப்பி வைப்பார் கமலா அம்மாள்.

32. "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் 'யாரடி நீ மோகினி' பாடல் காட்சியில் நடிக்கும் போது 102 டிகிரி ஜுரத்துடன் நடித்தார். "பாலும் பழமும்" படத்தில் கண்பார்வை இழந்தவராக படுக்கையில் படுத்துக் கொண்டு அவர் நடித்த காட்சிகளின் போதும் அவருக்கு High Fever. அதே போன்று "கலாட்டா கல்யாணம்" திரைப்படத்தில் வரும் 'அப்பப்பா நான் அப்பனல்லடா' பாடல் காட்சி படமாக்கப்பட்ட போதும் காய்ச்சலுடன் நடித்தார். "இரு துருவம்" படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஷூட்டிங்கின் போதும் கூட கடும் காய்ச்சலுடன் நடித்துக் கொடுத்தார். தன்னால் படத்திற்கு,
படப்பிடிப்பிற்கு எந்தவிதத்திலும் பங்கம் வந்துவிடக் கூடாது என்கின்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்.

33. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் தான் படமாக்கத்தில் Zoom Lens
உபயோகப்படுத்தப்பட்டது. 'உன்னழகை கன்னியர்கள்' பாடலுக்கு இந்த யுக்தி கையாளப்பட்டது. "உனக்காக நான்" திரைப்படத்தில், நடிகர் திலகம் தனது கண்களுக்கு சிறப்பு லென்ஸ் அணிந்து கொண்டு நடித்தார்.

pammalar
30th September 2010, 06:14 AM
சிவாஜி 83

34. "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் அவர் வாழ்ந்து காட்டிய "அப்பர்" வேடத்திற்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration), காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

35. இயக்குநர் ஸ்ரீதருக்கு கை விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உண்டு. அவரது அந்த மேனரிஸத்தை, நடிகர் திலகம், தான் நடித்த "தெய்வமகன்" விஜய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவரது மிக நெருங்கிய நண்பர் தொழிலதிபர் டிவிஎஸ் கிருஷ்ணாவின் மேனரிஸங்களை "கௌரவ"த்தின் பாரிஸ்டர் ரோலில் பார்க்கலாம். இன்னொரு நெருங்கிய நண்பரான இண்டியா சிமெண்ட்ஸ் நாராயணசுவாமியின் மேனரிஸங்கள் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் [வியட்நாம் வீடு] பாத்திரத்தில் இருக்கும்.

36. உலகப் பெரும் சினிமா நிறுவனமான 20th Century Fox நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளக்க உரையுடன் வியாபார ரீதியாக வெளியிட உரிமை பெற்ற முதல் தமிழ்ப் படம் "தில்லானா மோகனாம்பாள்".

37. சிங்கப்பூர் நாடு கண்டுபிடிக்கப்பட்ட 150வது ஆண்டு விழாவில் திரையிடுவதற்காக, சிங்கப்பூர் அரசால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுககப்பட்டு, சிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில், சிறப்புக் காட்சியாக காட்டப்பட்ட திரைப்படம் "தங்கச்சுரங்கம்".

38. ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார், சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம், "நீங்கள் ஒரு ஹிந்திப் படத்திலாவது அவசியம் நடிக்க வேண்டும். உங்களது தமிழ்ப் படங்களைப் பார்த்தே உங்களுக்கு இந்தியாவெங்கும் எவ்வளவு ரசிகர்கள் தெரியுமா! உங்கள் ஹிந்திப் படம் வெளியாகும் நாளில் பம்பாயில் பூகம்பமே ஏற்படும்." என்றார். சில வருடங்கள் கழித்து, தர்த்தி திரைப்படத்தில், சிவாஜி நடித்தார். தர்த்தி வெளியான தினத்தன்று [6.2.1970], பம்பாயில் நிஜமாகவே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

39. முதல் வெளியீட்டில், வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" திரைப்படத்தினுடைய முடிவு, தமிழகத்தில் சுபமாகவும், கேரளத்தில் சோகமாகவும் காண்பிக்கப்பட்டு, இரு மாநிலங்களிலுமே பெரும் வெற்றி. "பராசக்தி"க்குப் பிறகு, தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இந்தியாவிலும், இலங்கையிலும் என இரு நாடுகளில் வெள்ளி விழா கொண்டாடிய படம் "வசந்த மாளிகை". [இந்தியா - 200 நாள், இலங்கை - 287 நாள்]

40. இந்திய அரசினால், நெகடிவ் உரிமை வாங்கப்பட்டு, இந்திய முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம், தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்".

41. "கௌரவம்" திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்காக, ராஜேஷ் கன்னாவிடம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் ராஜேஷ் கன்னாவின் வாக்குமூலம்: "கண்ணன் ரோலை வேண்டுமானால் நான் முயன்று பார்க்கலாம். ஆனால் அந்த பாரிஸ்டர் ரோலை நான் மட்டுமல்ல, பாலிவுட்டிலே கூட யாரும் நடிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஹாலிவுட்டிலே கூட சிவாஜி போல் நடிக்க அங்குள்ள எவராலும் முடியாது. இந்தப் படத்தை தயவு செய்து எந்த மொழியிலும் ரீமேக் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் விஷப்பரீட்சையாகி விடும்."

42. தமிழ் சினிமா சரித்திரத்தில், எண்ணிலடங்கா சாதனைகளின் கருவூலம் "திரிசூலம்". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில், பத்து திரையரங்குகளில் [தமிழகத்தில் 8 திரையரங்குகள், இலங்கையில் 2 திரையரங்குகள்] வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் "திரிசூலம்".

43. பாரதியாரின் கவிதைகள் என்றால் இவருக்கு உயிர். பாரதி பாடல்களில் 'பாரத சமுதாயம் வாழ்கவே', 'நெஞ்சு பொறுக்குதில்லையே' All time favourites. கண்ணதாசனின் 'மலர்ந்தும் மலராத', வாலியின் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' ஆகிய பாடல்களையும் அடிக்கடி முணுமுணுப்பார். வைரமுத்துவின் பாடல்களும் பிடிக்கும்.

44. பாரதிதாசனார் ஒரு சிவாஜி வெறியர். தனது குயில் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி பல தருணங்களில் வானளாவ புகழ்ந்து கவிதைகளும், செய்தி கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்.1962-ல் அவரது படைப்பான 'பாண்டியன் பரிசை', அதே பெயரில் நடிகர் திலகத்தை கதாநாயகனாகக் கொண்டு படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. படத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு, பற்பல காரணங்களினால், படப்பிடிப்பு நடைபெறாததால், படம் வளரவில்லை.

45. கர்மவீரர் காமராஜர், கலைக்குரிசிலின் சில திரைப்படங்களை, பிரத்யேக சிறப்புக் காட்சியாக கண்டு களித்து, நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார். அப்படி அவர் பார்த்து பாராட்டிய திரைப்படங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை, சினிமா பைத்தியம் [வீர வாஞ்சிநாதனாக சிவாஜி நடித்த காட்சிகள் மட்டும்].

46. சிவாஜி ஆங்கிலப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார். சென்னை காஸினோ திரையரங்கில் இரவுக்காட்சியாக ஆங்கிலப்படம் கண்டு களிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹிந்திப் படங்களில் அவரை மிகவும் கவர்ந்தவை, "ஜனக் ஜனக் பாயில் பாஜே" மற்றும் "ஷோலே". எம்.ஜி.ஆர் படங்களில் "ஆயிரத்தில் ஒருவன்", "நாடோடி மன்னன்", "அடிமைப் பெண்" ஆகிய படங்கள் ரொம்பப் பிடிக்கும்.

47. சில தமிழக விஐபிக்களுக்கு மிகவும் பிடித்த சிவாஜி படங்கள்:
எம்.ஜி.ஆருக்கு பிடித்த சிவாஜி படம் "ஆலயமணி"; கலைஞருக்கு பிடித்த தனது நண்பரின் படம் "தில்லானா மோகனாம்பாள்"; மூப்பனாருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் "முதல் மரியாதை"; மு.க.அழகிரியின் மனதைக் கவர்ந்த திரைப்படம் "இருவர் உள்ளம்"; பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு பிடித்த படம் "பாசமலர்".

48. பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம். சிவாஜியை எங்கு எப்பொழுது பார்த்தாலும் அவரது காலில் விழுந்து வணங்குவார் அமிதாப். இன்னொரு பாலிவுட் பிரபலமான அமீர்கான் நடிகர் திலகத்தின் "கர்ணன்" திரைக்காவியத்தைப் பார்த்து விட்டு அப்படியே ஆடி அசந்து மிரண்டு போய் விட்டாராம்.

49. தங்களது தந்தையார் நடித்த திரைப்படக் கதாபாத்திரங்களில், மூத்த மகன் தளபதி ராம்குமாருக்கு பிடித்த ரோல் 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்' [கௌரவம்]. இளைய மகன் இளைய திலகம் பிரபுவுக்கு பிடித்த வேடம் 'அப்பர்' [திருவருட்செல்வர்].

50. 1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!

pammalar
30th September 2010, 06:23 AM
சிவாஜி 83

51. நடிகர் திலகம், காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையை விரும்பிக் கேட்பார். 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று உலகப்பயணம் செய்த போது, காருக்குறிச்சியாரின் இசைத்தட்டுகளை மறக்காமல் எடுத்துச் சென்றார்.

52. ஹாலிவுட் படங்களின் இசையமைப்பு, BGM, Sound Effects இவையெல்லாம் நடிகர் திலகத்துக்கு நிரம்பப் பிடிக்கும். "மியூசிக்கிலேயே மிரட்டுறாங்க பாரு" என்று புகழ்ந்துரைப்பார். ஹிந்தியில், லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அதி திவீர ரசிகர். சிவாஜியின் மனைவி கமலா, ஆஷா போன்ஸ்லேவின் விசிறி. [லதா, ஆஷா இருவருமே சிவாஜி பக்தைகள்!]. தென்னகத்தில் சுசீலா, ஜானகி, ஈஸ்வரி, வாணி ஜெயராம் எல்லோர் குரலும் பிடிக்கும். கே.பி.சுந்தராம்பாளின் கணீர்க்குரல் இவர் மனம் கவர்ந்த ஒன்று. 'திருவிளையாடல்' திரைப்படத்தில் வரும் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடலின் பரம விசிறி. இப்பாடலை 'சர்பத் பாட்டு' என்று தான் செல்லமாக அழைப்பாராம்.

53. ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பைப் பற்றி புகழ்ந்து கூறுவார். "உங்கள் இசை எப்பொழுதுமே நன்றாகத் தானிருக்கும்" என்று அவரிடமே பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது இசையையும் சிலாகித்துக் கூறுவார். "என் படங்களை விட அண்ணன் (எம்.ஜி.ஆர்.) படங்களுக்குத் தான் நீ தூக்கலாக இசையமைத்துக் கொடுக்கிறாய்! உன்னை கவனித்துக் கொள்கிறேன்' என செல்லமாக, உரிமையுடன் எம்.எஸ்.வியிடம் கடிந்து கொள்வதும் உண்டு. இளையராஜா இசையமைத்த பாடல்களில் சிவாஜிக்கு மிகவும் பிடித்தவை "செந்தூரப்பூவே" [பதினாறு வயதினிலே] மற்றும் "மாஞ்சோலைக்கிளிதானோ" [கிழக்கே போகும் ரயில்].

54. "தூக்கு தூக்கி"யில் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு, அவர் தனக்குப் பாடுவதற்கு பச்சைக் கொடி காட்டினார் சிவாஜி. "பெரிய பாகவதர் போல பாடியிருக்கிறீர்கள். உங்களுடைய அருமையான, வளமான குரல் எனக்கு பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து நீங்களே எனக்கு பின்னணி பாடுங்கள்" எனக் கூறிப் பாராட்டினார். பின்னொரு சமயத்தில், "உங்கள் குரலும் என் குரலும் ஒன்று போலத் தான் இருக்கிறது. நான் நடிப்பில் கொடுக்கும் பாவத்தை நீங்கள் பாட்டில் கொடுக்கிறீர்கள். ஆகையால் பாடலின் போது வரும் வசனங்களை அந்தந்த பாவங்களைக் கொடுத்து நீங்களே பேசுங்கள்." என்றார். டி.எம்.எஸ் இதைப் பலரிடம் சொல்லி பெருமைப்படுவாராம்.

55. "பொட்டு வைத்த முகமோ" பாடலை முதன்முதலாக எஸ்.பி.பி. தனக்கு பின்னணி பாடிய போது, 'நீ உன் குரலிலேயே பாடு, நான் அட்ஜெஸ்ட் பண்ணி நடித்துக் கொள்கிறேன்' எனப் பெருந்தன்மையோடு கூறினார் சிவாஜி. எஸ்.பி.பி., ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலை வேளைகளில், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஆல்பங்களை கேட்டு பரவசப்படுவார். தனக்கு முதன்முதலில் பின்னணி பாடிய சிதம்பரம் ஜெயராமனின் குரல் ரொம்பப் பிடிக்கும்.

56. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் நேயர் விருப்ப திரைப்படப் பாடல்கள் நிகழ்ச்சியில், அன்று முதல் இன்று வரை, அதிக நேயர்கள் விரும்பிக் கேட்ட / கேட்கின்ற பாடலாக இருப்பது "பாசமலர்" திரைக்காவியத்தின் 'மலர்ந்தும் மலராத' பாடல்.

57. சிவாஜி அவர்கள், எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும். எஸ்,எஸ்.ஆரை 'ராஜூ' என்றும், ஜெமினியை 'மாப்ளே' என்றும், ஸ்ரீகாந்தை 'வெங்கடா' என்றும், பீம்சிங்கை 'பீம்பாய்' என்றும், பந்துலுவை 'பிஆர்பி(BRB)' என்றும், முக்தா சீனிவாசனை 'சீனு' என்றும், பத்மினியை 'பப்பி' என்றும், சாவித்திரியை 'தங்கச்சி / சிஸ்டர்' என்றும், சௌகார் ஜானகியை 'பார்ட்னர்' என்றும், சரோஜாதேவியை 'சரோ' என்றும், அஞ்சலிதேவியை 'பாஸ்(Boss)' என்றும், ஜெயலலிதாவை 'அம்மு' என்றும், வெண்ணிற ஆடை நிர்மலாவை 'ஸ்வீட் கேர்ள்(Sweet Girl)' என்றும் அன்பாகவும், செல்லமாகவும் அழைப்பார்.

58. கலைஞர் கருணாநிதி எழுதும் திரைப்பட வசனங்கள் மிகவும் சிறப்பானவை என மனதாரப் பாராட்டும் சிவாஜி, தனக்கு அவர் எழுதிய திரைப்பட வசனங்களில் தனக்கு மிகவும் பிடித்தது "திரும்பிப் பார்" படத்தின் வசனங்கள் என்றும் கூறியிருக்கிறார். கலைஞரை சிவாஜி "மூனாகனா" என்று தான் அழைப்பார். அவர் இவரை "கணேசு" என்பார்.

59. எந்த மேக்கப்மேன் சிவாஜிக்கு மேக்கப் போட்டு விட்டாலும், புருவத்தை மட்டும் தானே தான் எழுதிக் கொள்வார். "திருவருட்செல்வர்" அப்பர், "தெய்வமகன்" கண்ணன், சங்கர், "நவராத்திரி" குஷ்டரோகி இன்னும் இது போன்ற பல கதாபாத்திரங்களின் மேக்கப்பிற்காக, பல மணி நேரங்கள் உடலை வருத்திக் கொண்டதுண்டு.

60. படப்பிடிப்பின் போது, எந்தவொரு காஸ்ட்யூமை தான் அணிந்து கொண்டு நடித்தாலும், அந்த உடை கசங்காமல், அழுக்காகாமல் இருப்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்.

61. தன்னுடன் நடிக்கும் நடிக, நடிகையர் நன்றாக நடிக்கும் போது மனம் திறந்து பாராட்டுவார். பல சமயங்களில் கூட நடிப்பவர்களுக்கு, காட்சிக்கு ஏற்றாற் போல், நடிப்பு சொல்லிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி நடிக்கச் செய்வார். பானுமதி, சாவித்திரி, சௌகார் ஜானகி, மனோரமா ஆகியோருடன் நடிப்பது பற்றி இப்படிக் கூறுவார். "இவங்க கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா இருக்கணும். நாம கொஞ்சம் அசந்தா போதும், இவங்க performanceஸால நம்மளையே தூக்கி சாப்பிட்டுடுவாங்க."

62. ஷுட்டிங் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார். காலை ஆறு மணிக்கு மேல் அவர் உறங்கியதாக சரித்திரமே இல்லை. 1990களில் தாடி வைப்பதற்கு முன் வரை, தினமும் ஷேவ் செய்வார். சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் போதும், சூரக்கோட்டைக்கு விடுமுறையாகச் செல்லும் போதும் மட்டும் தான் ஷேவ் செய்யாத சிவாஜியைப் பார்க்க முடியும். தினமும் இரு வேளை குளிப்பார். எந்த சீசனாக இருந்தாலும் குளியல் பச்சைத் தண்ணீரில் தான்.

63. குளிர்ந்த மோர், காபி, அதிலும் பிளாக் காபி (Black Coffee) ஆகியவை இவர் விரும்பி அருந்துகின்ற பானங்கள். வேர்க்கடலை உருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார். காலைச் சிற்றுண்டியாக விரும்பிச் சாப்பிடும் பலகாராங்கள் - இட்லி, பொங்கல், உப்புமா (ஏதேனும் ஒன்று). மதிய உணவில் கண்டிப்பாக அசைவம் இருக்க வேண்டும். டின்னரில் சில சமயங்களில் அசைவம் இடம்பெறும். மூன்று வேளைகளிலுமே அளவோடு தான் சாப்பிடுவார்.

64. ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 - இவர் புகைக்கும் சிகரெட். தம்பி ஷண்முகத்தின் மறைவுக்குப் பிறகு, மனைவி கமலாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தன்னிடம் இருந்த புகை பிடிக்கும் பழக்கத்தை, ஒரே நாளில் கைவிட்டார். அதற்குப்பின், ஒரு நாள், ஒரு வேளை, ஒரு தடவை கூட சிகரெட் பிடித்ததில்லை. What a Will Power!

65. தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தித்தாள்களை வாசிப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளுக்கே முதலிடம் கொடுப்பார்.

66. சிவாஜி விமானப் பயணத்தின் போது மட்டும் அதிகம் பேச மாட்டார். பல சமயங்களில், விமானத்தில் ஏறி அமர்ந்த உடனேயே, கண்களை மூடிக் கொண்டு உறங்கி விடுவார்.

67. காரில் பயணம் செய்யும் போது சினிமா, அரசியல், பொதுவான விஷயங்கள் என நிறைய பேசுவார். மிக நீண்ட தூர கார் பயணத்தின் போது, நிறைய பாடல்கள் கேட்பார். அதில் "கப்பலோட்டிய தமிழன்" படப் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.

68. சிவாஜிக்கு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும். அந்தந்த மொழிக்காரர்களிடம் அவரவர்களது மொழியிலேயே பேசி அசத்துவார்.

69. சிவாஜி எந்த இடத்திற்கு சென்றாலும் சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிப்பார். வீட்டிலோ, வெளியிலோ எந்த இடத்திலும் அமர்வதற்கு முன் தான் உட்காரப் போகும் இருக்கை, தலை மேல் சுழலும் மின்விசிறி என ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் உட்காருவார்.

70. ரஷ்யா தவிர, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாட்டின் மக்கள் அணியும் விதவிதமான தொப்பிகளை சேகரித்து 'அன்னை இல்ல'த்தில் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருந்தார்.

pammalar
30th September 2010, 06:29 AM
சிவாஜி 83

71. எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு சென்றாலும் அந்தப் பகுதியினுடைய சிறப்பம்சங்கள், அங்குள்ள மக்கள், அவர்கள் செய்யும் தொழில், அந்தப் பிரதேசத்தினுடைய சிறப்பு உணவு வகைகள் என்கின்ற தகவல்களை அளித்து உடன் வருவோரை அசத்துவார். புவியியல் அறிவில் புலி இவர்.

72. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலுக்கும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும், சிவாஜி அவர்கள், யானையை காணிக்கையாகத் தந்துள்ளார். நாகை மாவட்டம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு, ஆலயமணியை தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார்.

73. 1982-ல், தமிழக அரசு கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு, இளைய திலகம் பிரபு, தன் சார்பில் ரூ.25,000/-மும், நடிகர் திலகத்தின் சார்பில் ரூ.1,00,000/-மும், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கினார்.

74. 1986-ல் பெல்ஜியம் பல்கலைக்கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அவரது கலைச்சேவைக்காக, 'டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.

75. தமிழ்த் திரையுலகில், எம்.கே.டி. பாகவதருக்குப் பின், கறுப்பு-வெள்ளையில், ஐந்து வெள்ளிவிழாப் படங்களை [பராசக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா] கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி. ஒரே காலண்டர் வருடத்தில்(1961), கறுப்பு-வெள்ளையில், இரு வெள்ளிவிழாப் படங்களை [பாவமன்னிப்பு, பாசமலர்] கொடுத்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, கறுப்பு-வெள்ளைப் படங்களில், முதல் வெளியீட்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த ஒரே படம் "பட்டிக்காடா பட்டணமா".

76. 2593 இருக்கைகளைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில், 'மூன்று' 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும், 'ஒன்பது' 50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும் கொடுத்துள்ள ஒரே உலக நடிகர் நடிகர் திலகம். [ஆக மொத்தம், மதுரை தங்கத்தில் 'பன்னிரண்டு' 50 நாட்களைக் கடந்த படங்கள்]

77. நமது இந்தியத் திருநாட்டின் மகத்தான தினங்களான சுதந்திர தினத்தன்று 7 சிவாஜி படங்களும், குடியரசு தினத்தன்று 13 சிவாஜி படங்களும் வெளியாகியுள்ளன.

78. 'பண்டிகை தின ஹீரோ' என்றாலும் அது சிவாஜி தான். பொங்கல் வெளியீடுகளாக 23 திரைப்படங்களும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடுகளாக 26 திரைப்படங்களும், தீபாவளி வெளியீடுகளாக 42 திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.

79. கிரிக்கெட், கால்பந்து இரண்டு விளையாட்டுக்களும் மிகவும் பிடித்தமானவை. கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் நேரில் சென்று கண்டு, களித்து, ரசித்து மகிழ்வார். Indoor விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது கேரம். டென்னிஸ் மேதை ராமநாதன் கிருஷ்ணனுக்கு, அவரது டென்னிஸ் ஆர்வத்தை கண்டு வியந்து, ஊக்கத் தொகை அளித்து உயர்த்தியுள்ளார்.

80. சென்னை தியாகராய நகரில் உள்ள நல்லியில் தான் தனது வீட்டிற்கு, வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பெரும்பாலான ஜவுளிகளை வாங்குவார். "நான் சம்பாதிப்பதில் ஒரு பெரிய பகுதியை உன் கடைக்குத் தான் கொடுக்கிறேன்" என நல்லி குப்புசாமியிடம் ஜோக்காகவும் கூறுவார்.

81. நடிகர் திலகம் தனது ரசிகர்களை "பிள்ளைகள்" என்று தான் கூறுவார். ரசிகர், ரசிகர் மன்ற கடிதங்களையெல்லாம் தம்பி ஷண்முகம் தான் கவனித்துக் கொள்வார். சில சுவாரஸ்யமான, வித்தியாசமான, முக்கியமான கடிதங்களை மட்டும் அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.

82. ஒரு நடிகருக்கு, இரு அரசுகள், சிலை அமைத்த பெருமை, நடிகர் திலகத்துக்கே. புதுவை அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி, 11.2.2006 அன்று புதுச்சேரியில், சிவாஜிக்கு சிலை அமைத்தார். தமிழக அரசு சார்பில், முதல்வர் கலைஞர், 21.7.2006 அன்று சென்னையில், தன் ஆருயிர் நண்பனுக்கு சிலை அமைத்தார்.

83. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் அவரது நினைவு மற்றும் பிறந்த தினங்களில், சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பில், நடைபெறும் சிவாஜி நிகழ்ச்சிகள், விழாக்களில், திரையுலக முன்னோடிகளுக்கும், திரையுலக சாதனையாளர்களுக்கும் சிவாஜி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமரத்துவம் அடைந்த முன்னோடிகள், சாதனையாளர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்படுகின்றன.

அன்புடன்,
பம்மலார்.

SHIV
30th September 2010, 10:22 AM
Dear Pammalar sir,

Excellent & wonderful post. All the 83 points are 83 gems of our NT.On the eve of his 83 rd birthday, my memory goes back to his birthday celebrations in Boag road evey year when he was physically with us.

We used to assemble on 30th September afternoon, do all the pandal and other decorations, have a good chat till late evening and also have darshan of NT if possible.

Who can forget the long serpentine queue right from early morning in Boag road on Oct 1st with NT's songs blaring around in all sweetness. It will be a festive atmosphere.After praying to his mother and father's potrait and spending some time with family members, Our deivam along with Kamala ammal will come out of his house at exactly 7am to the Pillaiyar temple to workship vinayagar. It will be total celebrations from fans on seeing NT with crackers bursting and slogans praising him renting the air. The Fans just surge ahead breaking the barricades of police to get the blessings of NT.

Then NT will get on to the stage and receive his pillaigal's wishes who would have converged to Chennai from all parts of TN, Blore and other places. In between lots of film personalities and Politicians will also visit NT to convey thier wises. Our NT will be on the dias almost till 1.00 pm and ensure that all the fans met him and do not back disappointed without seeing him.

All these memories just linger in my mind now and brings tears in my eyes that NT is not around with us now.. But I always console myself with the following lines;

"NT IS NIRANDARAMANAVAR AZHIVATHILLAI
ENTHA NILAYILUM AVARKKU MARANAMILLAI"

LONG LIVE NT.

Regards

Shiv

NOV
30th September 2010, 10:30 AM
பம்மலார் :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

thats 83 claps. :D

saradhaa_sn
30th September 2010, 11:01 AM
டியர் பம்மலார்,

உங்களது 'சிவாஜி - 83' க்கு எத்தனை நன்றிகள் சொல்வது?. 83 ஆயிரம்..?. 83 லட்சம்..?. 83 கோடி..?. ஊகும் போதாது. பிடியுங்கள் 83 ஆயிரம் கோடி நன்றிகள்.

என்ன ஒரு உழைப்பு, என்ன ஒரு சேகரிப்பு, என்ன ஒரு தொகுப்பு....வாவ்.

நடிகர்திலகத்தின் வரலாற்றையே 83 கேப்ஸ்யூல்களில் அடைத்து தந்து விட்டீர்கள்.

உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்காகவே நான் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகியே தீர வேண்டும்.

சாரதா ஒரு தீர்க்கதரிசியே. 'உங்களை ரசிகராக அடைய நடிகர்திலகம் தவம் செய்திருக்க வேண்டும்' என்று நான் ஏற்கெனவே சொன்னது எத்தனை உண்மை. :clap: :clap: :clap: :clap: :clap:

groucho070
30th September 2010, 11:40 AM
Follow-up of my last year's tribute (http://www.indiaglitz.com/channels/tamil/article/50444.html) to NT, a blog post. Click my signature or
here (http://grouchydays.blogspot.com/2010/09/what-sivaji-ganesan-can-teach-current.html)

J.Radhakrishnan
30th September 2010, 12:19 PM
டியர் பம்மலார் சார்,

சிவாஜி 83 பார்க்கும் போது என் கண்களில் ஆனந்த நீர் துளிகள், எவ்வளவு சிரமப்பட்டு தகவல்களை கொடுத்து இருக்குறீர்கள். அதிலும் அவரின் நன்கொடைகள் பற்றிய செய்தி பிரமிப்பூட்டியது

KCSHEKAR
30th September 2010, 01:41 PM
டியர் பம்மலார், நடிகர்திலகத்தின் 83 வது பிறந்த நாளில், 83 அம்சங்களை பதிவு செய்திருப்பது மிகவும் அருமை.

மணிமண்டபம் சம்பந்தமாக வாழ்த்து மற்றும் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி.

கண்டிப்பாக

காலம் ஒரு நாள் மாறும் - நம் கவலைகள் யாவும் தீரும்.

Mahesh_K
30th September 2010, 03:03 PM
பம்மல் சார்.. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்.. அற்புதம்

Rakesh..... gone thru your blog & enjoyed. .. ""with actors mistaking getup change for good acting"" ... apt observation..

RAGHAVENDRA
30th September 2010, 03:04 PM
இன்றைய தேதியில் பம்மலாரைப் பார்த்து நடிகர் திலகம் பாடக் கூடிய பாடல்

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி
அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆலயமணி நடிகர் திலகத்தின் 83வது படம் என்பது குறிப்பிடத் தக்கது
தான் 82 வயது முடிந்து 83ல் நுழையும் போது பம்மலார் என்ற ரசிகர் தன்னைப் பற்றி 83 குறிப்புகள் அளிப்பார் என்று நடிகர் திலகம் யூகித்து வைத்திருந்தாரோ

வெல்டன் பம்மலார்

groucho070
30th September 2010, 03:10 PM
Thanks for reading, Mahesh. Prabhu thread inactive, and I am guilty your honour :?

RC
30th September 2010, 07:33 PM
சிவாஜி - THE BOSS - விகடன் பொக்கிஷம்

சிவாஜி 'பராசக்தி'யில் நடித்துக்கொண்டிருந்த போதே 'மனோகரா' படத் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில், 'மனோகரா'வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. 'பராசக்தி'யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், 'பராசக்தி' 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் 'பராசக்தி' வெளியான அன்றே - முதல் நாள் - அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.

படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, 'யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்' என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு."

- கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)

"சிவாஜிகணேசன் ஒரு 'தெய்வ மலர்'. திரு 'கல்கி' அவர்கள் 'சிவகாமியின் சபத'த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, 'அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது' என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே... இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!



இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. 'தெய்வ மகன்' படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!"

- டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)

"சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.



படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்."

- நடிகை உஷாநந்தினி (22.7.73)

"சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.

மற்றவர்களின் 'மேனரிஸ'ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்!

ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.



"சிவாஜி சார்! நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் 'ஓவர் ஷேடோ' செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!" என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.

சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். "யூ ஆர் கரெக்ட்! ஆனால், அதென்னவோப்பா...காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் 'வின்' பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு 'சாலஞ்ச்' மாதிரி" என்றார்.

இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.

செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!"

- நிருபர் பாலா (16.11.80)

"இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் 'வி.சி.கணேசன்' என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது!"

- சத்யராஜ் (12.10.86)

"'நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்' என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே 'நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்' என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக் கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?"

- நாகேஷ் (12.10.86)

"'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"

- வடிவேலு (9.3.97)

"மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். 'புதிய பறவை'யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. 'நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்' என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, 'இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?' என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் 'எங்கே நிம்மதி'!".

கவிஞர் வைரமுத்து (4.2.90)

kid-glove
30th September 2010, 07:59 PM
Grouch :thumbsup:

Murali Srinivas
30th September 2010, 08:03 PM
நேற்று இரவு 12 மணி. வசந்த மாளிகையின் பிறந்த நாள் பற்றி பதிந்து விட்டு தூங்கலாம் என்று நினைக்கும் போது சுவாமியின் அழைப்பு. சாதாரணமாக நாங்கள் இருவரும் இரவில் [பெரும்பாலும்] உரையாடுவது வழக்கம் என்றாலும் இந்த நேரத்தில் கூப்பிட மாட்டார். நேற்று ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா என்று கேட்டு விட்டு இப்படி ஒரு பதிவு வர இருப்பதை சொன்னார். முதலில் ஒரு சில பாயிண்ட்-களை மட்டும் சொல்கிறேன் என்று சொன்னவர் கிட்டத்தட்ட 45 நிமிடம் எடுத்துக் கொண்டு அனைத்து பாய்ன்ட்களையும் சொல்லி முடித்து உரையாடலை முடித்தார். முதலில் தூக்க கலக்கத்தில் கேட்க ஆரம்பித்த நான் போக போக அவர் சொன்னவற்றில் மூழ்கி விட்டேன். அவரிடம் நான் சொன்னது ஒன்றுதான். நமது ஹப்பில் நமது திரிதான் Thread of the Hub என்று அழைக்கப்படுகிறது. அதற்கான காரணமே இது போன்ற தகவலார்ந்த பதிவுகள்தான். Hats Off to you Swami!

இந்த 83-ஐயும் 83-வது படமான ஆலய மணியையும் அழகாக இணைத்த ராகவேந்தர் சாருக்கும் வாழ்த்துகள்.

என் பங்குக்கு ஒன்றை சேர்த்துக் கொள்கிறேன். 83 -ஐ மாற்றிப் போட்டால் 38. நடிகர் திலகத்தின் 83 பற்றி 38 வயது சுவாமி எழுதுவதும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றோ?

நாளை முதல் ஒரு வாரத்திற்கு சென்னை நட்ராஜ் அரங்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகரின் படம் திரையிடப்படுகிறது. அவ்வகையில் ஞாயிறுக்கிழமை நடிகர் திலகத்தின் நாளாக அறிவிக்கப்பட்டு அன்று ஆண்டவன் கட்டளை திரையிடப்படுகிறது. ஞாயிறு மாலை களை கட்டி விடும்! அன்று இரண்டு படங்கள் மினி மோட்சத்தில் பதிய பறவை, நட்ராஜில் ஆண்டவன் கட்டளை.

அன்புடன்

Murali Srinivas
1st October 2010, 12:32 AM
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி

ஆயிரம் இருக்குது சுபதினம்

ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகர்களை பொறுத்தவரை

அக்டோபர் 1 என்றும் சுபதினம்.

தமிழ்நாட்டு கலை உலகின் திலகத்திற்கு பிறந்த நாள்.

கலைத்தாயின் தவப்புதல்வனே

கலையுலம் உள்ளவரை

உன் பெயர் வாழும்!

உன் புகழ் வாழும்!

அன்புடன்

PS: NOV, Rakesh,

I have been keeping you on tenterhooks for a long time regarding the NT movie that would be released in theatres in Malaysia!

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த இனிய செய்தி இதோ!

2011-ல் உலகளாவிய அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள அந்த படம் கர்ணன்.

pammalar
1st October 2010, 01:58 AM
டியர் ஷிவ்ராம் சார்,

பாராட்டுக்கு நன்றி! நடிகர் திலகத்தின் பிறந்தநாள் பற்றிய மலரும் நினைவுகள் அருமை.

டியர் நௌ சார்,

83 கரவொலிகளுக்கும் என் இனிய நன்றிகள்!

சகோதரி சாரதா,

தங்களின் இதயபூர்வமான, ஆத்மார்த்தமான, தீர்க்கமான பாராட்டுக்களுக்கு எனது 83 லட்சம் கோடி பணிவான நன்றிகள்!

டியர் ஜேயார் சார்,

தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி! தங்களது முயற்சிகள் வெற்றிக் கனிகளைத் தட்டிப் பறிக்கட்டும்!

டியர் மகேஷ் சார்,

அற்புதமான பாராட்டுக்கு அன்பான நன்றிகள்!

டியர் ராகவேந்திரன் சார்,

சிவாஜி 83 பதிவுகளை சிவாஜியின் 83வது படப்பாடல் மூலம் பாராட்டியமைக்கு பல கோடி நன்றிகள்!

83வது படத்தின் இன்னொரு பாடல் நடிகர் திலகத்திடமிருந்து உங்களுக்காக:

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா
டாட்காம் எல்லாம் நடிகர்திலகம்.காம் போலாகுமா"

டியர் முரளி சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st October 2010, 02:10 AM
Dear Rakesh,

Excellent write-up. The present generation should read this piece.

Dear RC,

Thanks a lot for Vikatan 'Sivaji' Pokkisham.

Warm Wishes,
Pammalar.

RAGHAVENDRA
1st October 2010, 02:14 AM
டியர் பம்மலார்,
தங்களின் பாராட்டுக்கள் என்னை நெகிழ வைக்கவும் அதே சமயம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற கடமையுணர்வைத் தூண்டவும் செய்தன. மிக்க நன்றி. இதோ நமக்காக நடிகர் திலகத்தின் வரிகள்

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் மடியில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே

இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

நம் உயிரின் உயிரான நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் நம் அனைவரின் வாழ்த்துக்களும் சேரட்டும்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
1st October 2010, 02:17 AM
டியர் ராகேஷ்,
தங்களின் பதிவுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுக்கள்.

டியர் முரளி, சாரதா, நவ், ஜேயார், கேசிசேகர் மற்றும் நண்பர்களுக்கு,
ஒவ்வொருவரும் மற்றவருக்கு சளைத்தவரல்ல என்ற அளவில் அனைவரும் தத்தம் பதிவுகளில் கலக்கி வருகிறீர்கள்.

இதையெல்லாம் பார்ப்பதற்கென்று நடிகர் திலகம் நம்மிடையே மீண்டும் வரவேண்டும்

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
1st October 2010, 03:10 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 141

கே: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் யார்? (எம்.ஆர்.பிரேமா-வசந்தா, சென்னை - 7)

ப: சிவாஜி கணேசன். 'உலகிலேயே சிறந்த நடிகர்' என்று "வசந்த மாளிகை" வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் போது ஏ.நாகேஸ்வரராவ் கூடக் கூறியிருக்கிறார்.

(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)

நேற்று 29.9.2010, காலத்தை வென்ற காதல் காவியம் "வசந்த மாளிகை"யின் 39வது ஜெயந்தி தினம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st October 2010, 03:44 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 142

கே: சிவாஜியும், ஜெய்சங்கரும் சேர்ந்து நடித்த "அன்பளிப்பு" தோல்விப் படமாயிற்று. ஆனால், எம்.ஜி.ஆரும், ஜெய்சங்கரும் சேர்ந்து நடித்தால் அப்படம் அமோக வெற்றி பெறும் என்கிறேன் நான். ஆசையை நிறைவேற்றுவார்களா? (ஜா.பன்னீர்செல்வன், சேத்துப்பட்டு)

ப: சிவாஜியும், ஜெய்சங்கரும் சேர்ந்து நடித்த "குலமா குணமா" படம் மகத்தான வெற்றி பெற்றதை தங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

நாளை 1.10.2010 வெள்ளியன்று, சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பில், சென்னையில் நடைபெறுகின்ற கலையுலக மகானின் 83வது ஜெயந்தி விழாவில், திரையுலக சாதனையாளர், நடிகர் திலகத்தின் ஆருயிர் நண்பர், மக்கள் கலைஞர் அமரர் ஜெய்சங்கர் அவர்களின் சிறப்பு தபால் உறை வெளியிடப்படுகிறது. நடிகர் திலகத்தின் பிறந்தநாளில், மக்கள் கலைஞரின் நினைவையும் போற்றும் வகையில் அவருக்கு சிறப்பு செய்யும் அஞ்சல் துறைக்கும், சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்டிற்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st October 2010, 04:21 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 143

கே: அக்டோபர் முதல் தேதி 70வது பிறந்த நாள் காணும் கலையுலக முதல்வர் சிவாஜி அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்களேன். (பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர்)

ப: அவர் முதல்வர். தமிழ்த் திரையுலக சரித்திரத்தின் முதல் வரி. நடிப்புலகத்தின் முகவரி. அவரை ஒரு முறை வாயார வாழ்த்தியவர் வார்த்தைகள், ஒரு நாள் வீதம் பலித்தாலே, அவர் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்வாரே!

(ஆதாரம் : நியூ பிலிமாலயா, அக்டோபர் 1997)

நாளை 1.10.2010, நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தின் 83வது ஜெயந்தி தினம்!!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st October 2010, 04:42 AM
சினிமா சாம்ராட் சிவாஜி அவர்களின் 83வது ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு, நாளை 1.10.2010 வெள்ளி முதல், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மினிமோட்சம் திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st October 2010, 04:48 AM
கலைச்சூரியனுக்கு 83வது உதயம்!!!

பரமபக்தன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
1st October 2010, 04:52 AM
WISH YOU ALL A VERY VERY HAPPY SIVAJI JAYANTHI !!!

goldstar
1st October 2010, 05:24 AM
Deivame,

Happy birth day.

goldstar
1st October 2010, 05:26 AM
Dear Swami,

What a details, hats off to you sir.

NOV
1st October 2010, 05:48 AM
2011-ல் உலகளாவிய அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள அந்த படம் கர்ணன்.oh my god! :shock:
I will definitely bring my friends to watch several times!


anbargal anaivarukkum iniya nadigar dhina nal vaazhththukkal!


[html:783883b94c]
http://2.bp.blogspot.com/_tHu5vip2qps/SL1zWFH-OII/AAAAAAAAAEA/k2Y2KdHpmMc/sivaji.jpg

[/html:783883b94c]

RAGHAVENDRA
1st October 2010, 07:00 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா 01.10.2010
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நினைவு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

டாக்டர் சிவாஜி நினைவுப் பரிசு பெறுவோர்
1. திரு எம். பீதாம்பரம்
2. திரு வீ. பாண்டியன்
3. திருமதி சி. ராஜசுலோச்சனா
4. திரு ஏ.எல்.ராகவன்

பரிசு பெறுவோருக்கு நமது வாழ்த்துக்கள்

நடிகர் திலகத்துடன் ஜெய்சங்கர் நடித்த படங்களில் சில

அன்பளிப்பு
குலமா குணமா
சினிமா பைத்தியம்
ஜஸ்டிஸ் கோபிநாத்
கீழ்வானம் சிவக்கும்
தீர்ப்பு
உருவங்கள் மாறலாம்
திருப்பம்
சரித்திர நாயகன்
வாழ்க்கை
இருமேதைகள்
பந்தம்
எழுதாத சட்டங்கள்
மருமகள்
நேர்மை
படிக்காதவன்
வீரபாண்டியன்

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
1st October 2010, 10:48 AM
எங்கள் ஆருயிர் அண்ணனே.....

நீ பிறந்தாய்... பெருமையுற்றது தமிழகம்
நீ நடந்தாய்.... பேறு பெற்றது ராஜ நடை
நீ மேடையேறினாய்... செழித்தது நாடகம்
நீ பேசினாய்.... தலை நிமிர்ந்தாள் தமிழன்னை
நீ நடித்தாய்... புதிய முகவரியைக் கண்டது நடிப்பு
நீ முழங்கினாய்... அடங்கிப்போனது கோடையிடி
நீ கர்ஜித்தாய்... ஓடிப்போனது சிங்கம்
நீ சிரித்தாய்... உன்னைச் சுற்றிலும் பூ பூத்தது
நீ அரவணைத்தாய்... பாசத்தில் சிக்கினர் ரசிகப்'பிள்ளை'கள்
ஏன் மறைந்தாய்... நாங்கள் புலம்புவதற்கா..??.

groucho070
1st October 2010, 01:53 PM
Grouch :thumbsup:Thanks Thilak, this is my manakumaral as far as current state of onscreen performance is concerned.

PS: NOV, Rakesh,

I have been keeping you on tenterhooks for a long time regarding the NT movie that would be released in theatres in Malaysia!

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த இனிய செய்தி இதோ!

2011-ல் உலகளாவிய அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள அந்த படம் கர்ணன். :bluejump: :redjump: NT's own birthday gift for us Malaysians. Receiving this news with Anantha kanneer murali-sar.
Dear Rakesh,

Excellent write-up. The present generation should read this piece.
Pammalar sir, I am too humbled by your contribution even to say thanks. My humble gratitude to what you have been doing in this thread.
டியர் ராகேஷ்,
தங்களின் பதிவுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுக்கள்.
Thank you sir, more write up to do that's my duty.
oh my god! :shock:
I will definitely bring my friends to watch several times!
Don't forget me, pop corn on you though we doubt we'd be eating it anyway. Lots of Kleenex too. Bringing my wife. Make that tons of Kleenex.

HARISH2619
1st October 2010, 01:57 PM
"நடிப்புத்தந்தை" நடிகர்திலகத்தின் 83வது ஜெயந்தி நல்வாழ்த்துக்கள.

ilayapuyalvinodh_kumar
1st October 2010, 09:38 PM
Today is Shivaji Sir's B'day :) A Legend whom i continue to admire forever. Though he is not with us today, he has left a long lasting and evergreen legacy behind, for all generations and all ages. I feel elated to wish him here...

Happy B'day Shivaji Sir :cheer:

Hope he reads my wishes from Heaven !!

J.Radhakrishnan
1st October 2010, 09:51 PM
கலைகடவுளின் அன்பு தெய்வத்தின் 83வது ஜெயந்தி நல்வாழ்த்துக்கள.
_________________

Bhoori
1st October 2010, 11:25 PM
I request permission from "Pammalar" to repost Sivaji-83 in my blog - http://awardakodukkaranga.wordpress.com/

Thanks,
RV

Murali Srinivas
1st October 2010, 11:30 PM
நடிகர் திலகத்தின் 82-வது பிறந்த நாள் விழா சிறப்புற நடைப்பெற்றது. விரிவான பதிவு விரைவில்.

அன்புடன்

Jawahar
2nd October 2010, 02:42 AM
வருகிற அக்-1-ம்-தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 82-வது பிறந்தநாள் வருகிறது. சிவாஜி சினிமாவைப் போலவே நிஜ
வாழ்க்கையிலும் சிங்கம் மாதிரி கம்பீரத்தோடு வாழ்ந்தவர். எல்லோரும் அவரை பார்க்கலாம் ரசிக்கலாம்.. ஆனால் அன்னியோன்யமாக அவர் பழகியது சிலரிடம் மட்டுமே. கடந்த 40-ஆண்டுகளுக்கு மேலாக செவாலியேயின் நெருங்கிய நண்பராக இருந்தவர் வி.என்.சிதம்பரம். "வாய்யா சீனா தானா..." என்று வாஞ்சையுடன் அழைத்து தன்னுடைய பெட்ரூம்வரை வரக்கூடிய உரிமையை சிதம்பரத்துக்கு வழங்கி இருந்தார் சிவாஜி. நடிகர் திலகம் மரணத்தை தழுவும் முன்பு மாலையில் அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சிவாஜியிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தார், சிதம்பரம். சிவாஜியின் கடைசி நாட்களை நம்மிடம் கண்ணீர்மல்க பகிர்கிறார்.

" ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிப் பெரியவர் தாம்பரம் தாண்டி நடந்து போயிருக்கார். அப்போது அங்கு ஒட்டப்பப்படிருந்த போஸ்டரை எதேச்சையா பார்த்ததும் பெரியவாளுக்கு பயங்கர கோபம். தன்னோட உதவியாளர்களை கூப்பிட்டு "எனக்கு விளம்பரம் பண்றது பிடிக்கதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே அப்புறம் எதுக்கு என்னோட படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கேள்..." என்று கடுமையாக திட்டியிருக்கார். அப்போது "அந்த போஸ்டர்ல இருக்கறது நீங்க இல்லை... சினிமா நடிகர் சிவாஜி 'திருவருட் செல்வர்' படத்துல சாட்சாத் உங்களை மாதிரியே மேக்கப் போட்டுண்டு நடிச்சார். அதைத்தான் நீங்க போஸ்டராக பார்த்து இருக்கேள்..." என்று சொல்ல... திகைத்துப்போன பெரியவாள், 'நேக்கு சிவாஜியை பார்க்கணும்போல் இருக்கறது அவரை மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ...' என்று தனது விருப்பத்தை தெரிவிச்சார். பெரியவாளை தரிசிக்க எத்தைனையோ பேர் காத்துண்டு கிடந்தப்போ சிவாஜியை பார்க்க ஆசைப்பட்டது எவ்ளோ பெரிய்ய புண்ணியம். பெரியவாள் கேட்டுக் கொண்டபடி காஞ்சீபுரம் போய் மடத்துல தங்கி பெரியவாகிட்டே ரொம்பநேரம் மனசுவிட்டு பேசிட்டு வந்தார், சிவாஜி.

சிங்கப்பூரில் இதயத்தில் பேஸ்மேக் கருவி வைத்தபிறகு பெரும்பாலும் விமானத்தில் செல்வதை தவிர்த்து விடுவார், சிவாஜி. அங்கே மெடல்டிடெக்டர் சோதனையின்போது பேஸ்மேக் கருவியால் உபாதை ஏற்படுமென்று செல்லமாட்டார். அவசியமாக போகின்ற சூழ்நிலை ஏற்பட்டால் மெடல்டிடெக் பாதை வழியே செல்லாமல் தன்னுடைய ஐடி கார்டை காண்பித்து தனிவழியில் சென்று பயணம் செய்வார்.



கடைசிக் காலத்தில் அடிக்கடி அப்போலோ ஆஸ்பத்திரிக்கு போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஒருதடவை சோதித்த டாக்டர் உடம்பு மோசமாக இருக்கிறது அதனால் கவனமாக இருக்கும்படி எச்சரித்தார். டாக்டர் சொன்னதுபற்றி அறையில் அமர்ந்து சிவாஜியோடு பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது ராம்குமாருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்விட்டு யூனிபார்மோடு சிவாஜி அறைக்குள் வந்தது. தாத்தா என்று செல்லமாக ஒடிவந்த குழந்தைகளின் மூக்கில் வழிந்த சளியை தன்தோளில் கிடந்த துண்டை எடுத்து பாசத்தோடு துடைத்து விட்டார். இரண்டு பேரில் ஒருவன் "தாத்தா நேத்திக்கு நீ நடிச்ச 'பாசமலர்' படம் பார்த்தேன். அந்தபடத்துல கடைசியில "நீ உன்னோட தங்கச்சிக்கிட்டே 'கைவீசம்மா கைவீசு... கடைக்கு போயிடலாம் கைவீசு... மிட்டாய் திங்கலாம் கைவீசு'ன்னு பாடிக்கிட்டே செத்துப்போயி சாமிக்கிட்டே சேர்ந்துடுவியியே. அப்புறமா எப்போ தாத்தா நம்ம வீட்டுக்கு வந்தே..." என்று அப்பாவித்தனமாய் கேட்டான். அவன் சொன்னதைக் கேட்டு கதறி அழுத சிவாஜி, " யோவ் சீனா தானா இந்த மழலைச் செல்வங்களை விட்டுட்டு போயிடுவேன் போலிருக்கேய்யா... இனிமே எந்த ஜென்மத்துலய்யா இந்த செல்லங்களை பார்க்க போறேன்... என்று வெடித்து தேம்பி தேம்பி அழுதார், சிவாஜி. அவரை சமாதானபடுத்த முடியாமல் தடுமாறினேன். உலகில் எத்தனையோ ரசிகர்களை சிவாஜி தன்னுடைய பிரமாதமான நடிப்பால் அழவைத்து இருக்கிறார். அப்படிப்பட்ட கம்பீரமான சிவாஜியையே ராம்குமாரின் மகன் அழவைத்த சம்பவம் மறக்க முடியாத துயரம்.

சிவாஜியோட காரை முன்னாடி முருகன் ட்ரைவ் செய்தார் அதன்பின்னர் கடைசிக் காலத்தில் சிவா கார் ஒட்டினார். வழக்கமாக வீட்டைவிட்டு புறப்படும்போது காரில்ஏறி விருட்டென்று கிளம்பி விடுவார். கடைசியாக அப்பல்லோ ஆஸ்பத்திரி போகும்போது காரில்ஏறி அமராமல் நீ...ண்டநேரம் பெருமூச்சோடு அன்னை இல்லத்தையே வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தாராம் அதன்பின்னர் கண்கள் கலங்கியபடி காரில் ஏறினார் என்று சிவா சொன்னபோது கண்னீரை அடக்க முடியவில்லை.

இறந்த பிறகும்கூட கண்ணாடி பெட்டிக்குள் கம்பீரமாய் கண்மூடி சிவாஜி கிடப்பதைப் பார்த்து, ஒரு பெரிய்ய மனிதர் சுவற்றில் சாய்ந்தபடி தலையில் அடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார். அவரைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். இறப்பதற்கு சிலநாட்கள் முன்பு அந்த பெரிய மனிதரை சிவாஜி என்னிடம் அறிமுகபடுத்தினார், "யோவ் சீனா தானா இவர் பேரூ கரந்தை சண்முகவடிவேலு. ஒரு காலத்துல நானும், மூனா கானாவும் (கலைஞர் கருணாநிதி) சாப்பாட்டுக்கு வழியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம் அப்போ பசியால தவிச்ச எங்களுக்கு சோறுபோட்ட புண்ணியவான் இவர்தான்." என்று தழுதழுத்தபடி கண்ணீர்மல்க சிவாஜி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

Jawahar
2nd October 2010, 02:48 AM
Anbualka pammalar,

Ungar thoguppu migavum arumai. Nam thalaivarai thamilgam petrathu namakku perumai. Ungalaip pol oru thondarai nam thalaivar petrathu, thalaivarukku perumai. Avarathu aasirvaathangal endrum ungalkku kattaayam irukkum.

Thodarattum ungal pani. ( Ungal pathivugal moolam) paravattum thalaivar pugazh.

Jawahar
2nd October 2010, 02:54 AM
Source : DINAMALAR

சென்னை : மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், 83வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிவாஜியின் 83 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சிவாஜி சமூக நலப்பேரவை மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார். கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு அவரது மகன் ராம்குமார் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Jawahar
2nd October 2010, 03:03 AM
[tscii:9bcc664a58]http://grouchydays.blogspot.com/2010/09/what-sivaji-ganesan-can-teach-current.html

Thursday, September 30, 2010
What Sivaji Ganesan can teach the current generation of actors.
(L to R) Standing:Jim Garner,Jack Lemmon, Charlton Heston. Sitting:George Chandler, Sivaji Ganesan, Walter Pidgeon.

Though not a fault of his, the late Tamizh film actor Sivaji Ganesan was born in India. Fate can play a cruel hand and in this instance, Sivaji, who has the distinction of being the greatest actor ever produced from that sub continent, fell into a fate that denied him the recognition as the greatest on screen actor in the world amongst the world population.

Half of us would agree with that recognition though, while the other half is too busy watching Miley Cyrus grow.

Forget about the world, even India never recognised his contribution whereby the National Award, often looked upon as the Oscar of India without the glamour and cleavages, did not honour him, giving him a best supporting actor award for walk in the park role he did with Kamal Haasan in Devar Magan during his twilight years.

There used to be saying among the Tamizh film fans, there is no role Sivaji has not done. Wrong. Sivaji himself has been on the record saying that he wished he had played rationalist Periyar in a biopic. The man was humble and realistic. To see that the role was taken by a hack recently shows the state the Tamizh film industry is in without the great Sivaji.

The thing is there is no way anyone can act as everyone. Even the great Sivaji knows his limitation. When asked about his talent, he just brushes it off, “I know a little bit of acting, that’s all”. Try listening to that when the younger generation of actors get overblown credit for merely shaving off his moustache in the next venture or gone completely more wooden than usual because it was ‘artistic’.

What made Sivaji a great actor was that he knows he has to do a role without the smugness that he was the best. He gave his best, he brought extra to the table and he pounded those wonderful array of roles into our cranium that those were the images that comes out of your mind when, say, someone mentions Veerapandiya Kattabomman, Karnan, Ranggan, Barrister Rajinikanth or Inspector Choudary.

That he had pushed himself needed no public relations. That he had strained to stretch himself needed no advertisements. Making difference to routinely written roles and gaining credit for it needed no propaganda machineries. Sivaji’s roles spoke louder than the modest actor who himself knows his own limitation and kept it out of the public’s eyes.

It is the humility, willingness to stretch without making loud announcement and moving along taking on challenging roles and at the same time challenging and inspiring his fellow actors and technicians (though this may not apply in the 80s) to bring forth a quality production in terms of great movies that makes him tower all the actors from that region. To borrow words from leadership guru, Stephen Covey, Sivaji, “found his voice and inspired others to find theirs”. Such was his unique power.

That, alas, is lacking in the current age with obsession for opening collection, with actors mistaking getup change for good acting, and heroines mistaking excessive makeup, less cloth and borrowed voice for great contribution. Humility, to have the power to overcome limitations and to inspire others is something that the current crop of actors can aspire for and need another lifetime of the same career to achieve. This is merely a single chapter from the humongous actors’ guide book called Sivaji Ganesan. No, make that a single page.

Written to celebrate Nadigar Thilagam Sivaji Ganesan’s 83rd Birthday
[/tscii:9bcc664a58]

RAGHAVENDRA
2nd October 2010, 06:10 AM
அக்டோபர் 1, 2010 மறக்க முடியாத நாள். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் முதல் முறையாக நடிகர் திலகத்தின் அயராத உழைப்புக்கும் தொண்டுக்கும் அடுத்த தலைமுறையின் அங்கீகாரம் கிடைத்த நாள்.

43 ஆண்டு கால திராவிட இயக்கங்களின் ஆளுமையைத் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் எதிர்கொண்டு நிற்க முடிந்ததென்றால் அதற்கு முழுமுதற்காரணம் நடிகர் திலகமே. இந்த உண்மையை பகிரங்கமாக மேடையில் பேசியவர் யாரென்று விவாதிக்குமுன்-

இந்த உண்மையை உரிய நேரத்தில் உணர்ந்திருந்தால், உரிய நேரத்தில் இதனையொட்டி இயக்கத்தை நடத்தியிருந்தால் இந்த திராவிட கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

இப்படி இந்த உண்மையை துணிவோடும் உள்ளன்போடும் நேர்மையோடும் பேசி கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் உள்ளங்களிலும் மற்றும் நாட்டின் மேல் அக்கறை கொண்ட தேசபக்தி கொண்ட நெஞ்சங்களிலும், காமராஜர் தொண்டர்களின் உள்ளங்களிலும் பச்சென்று இடம் பிடித்தவர்

ராம்குமார் மற்றும் பிரபு எடுக்கும் அனைத்து கலை மற்றும் சமூக நல பணிகளுக்கும் உறுதுணையோடு இருப்போம் என்று சூளுரைத்தவர் -

எந்த தலைவர் நடிகர் திலகத்திற்கு துரோகம் செய்தார் என்று ரசிகர்களால் வெறுக்கப் பட்டாரோ அந்த தலைவரி்ன் வாரிசே இந்த நாட்டின் மேல் தனக்குள்ள பற்றை நிரூபித்து தான் ஒரு உண்மையான தேசியவாதி என்று நிரூபித்த -

மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அவர்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1.10.2010 மாலை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 82வது பிறந்த நாள் விழா குறிப்பிடத் தக்கதாய் அமைந்ததென்றால் அந்தப் பெருமை ஜி.கே. வாசன் அவர்களையே சாரும்.

கிட்டத்தட்ட அரங்கு நிறைவு, நடிகர் திலகத்தின் பெயர் சொல்லும் போதெல்லாம் அரங்கே அதிரும் ஆரவாரம், என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற சிலரின் ஐயப்பாடுகளைப் பொய்யாக்கி, தூள்தூளாக்கி ,மேன்மக்கள் என்று நிரூபித்து அதே சமயம் தங்களுடைய எண்ணப் பாடுகளையும் பதிவு செய்து அமைதி காத் சிவாஜி ரசிகர்களே நேற்றைய விழாவின் உண்மையான நாயகர்கள் என்பதே என் எண்ணம்.

மற்றபடி விழாவைப் பற்றி, எழுத்துச் சக்கரவர்த்திகள் முரளி ஸ்ரீனிவாஸ் மற்றும் பம்மலார் ஆகியோரின் படைப்புகளுக்காக நானும் தங்களைப் போல் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

NOV
2nd October 2010, 07:46 AM
Don't forget me, pop corn on you though we doubt we'd be eating it anyway. Lots of Kleenex too. Bringing my wife. Make that tons of Kleenex.Definitely.

I will be taking my kids too. Altho they have already seen it many times on TV.

And one more time with my other youth friends. :devil:

About your article Rakesh, why the need to do comparison with current generation and then deride them? It sounds so TMS, bitterness and all. :roll:
My opinion is that there are millions of things to write about NT that will attract the younger crowd than to alienate them.

saradhaa_sn
2nd October 2010, 10:51 AM
டியர் ஜவகர்,

நடிகர்திலகத்தின் கடைசி நாட்கள் பற்றி நடிகர்திலகத்தின் நெருங்கிய நண்பர் திரு வி.என்.சிதம்பரம் மற்றும் ஓட்டுனர் சிவா ஆகியோரின் நினைவுகள் கண்ணீரை வரவழைத்தன. பதிப்பித்தமைக்கு நன்றிகள்.

(Dear Jawahar, Thanks a lot for reproducing the tearful experinces of Thiru V.N.Chidambaram, NT's dearest friend, and Driver Siva about his last days).

டியர் ராகேஷ்,

உங்களது பதிவு அருமை. தேவையான நேரத்தில் பதிக்கப்பட்ட அவசியமான பதிவு என்பதில் ஐயமில்லை.

சமயம் வாய்க்கும்போதெல்லாம், சத்தியமூர்த்தி பவனில் நடிகர்திலகத்தின் நினைவுகளை மறவாமல் போற்றிவரும் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் வசந்தகுமார் MLA, ஆகியோருக்கு நமது நன்றிகள்.

saradhaa_sn
2nd October 2010, 11:14 AM
இரண்டு தினங்களுக்கு முன் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து, சென்னை நகர மேயர் திரு. மா.சுப்பிரமணியம் 'பொதிகை' தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். மாநகராட்சியின் செய்லல்பாடுகள் பற்றி பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று படம் பிடித்திருந்தனர். நேர்காணலின் இறுதியில், கேள்வி கேட்டவர், "இப்போது தனிப்பட்ட ஒரு கேள்வி. உங்களது ஓய்வுநேரத்தை எப்படி கழிப்பீர்கள்?" என்று கேட்க, அதற்கு மேயரின் பதில்.... "ஓய்வு நேரத்தில் தியேட்டருக்கு நேரில் சென்று சினிமா பார்ப்பேன். சிறுவயதிலிருந்தே நான் தீவிர சிவாஜி ரசிகன். அவருடைய படங்கள் வெளியாகும்போது, முதல் நாளே போய் பார்த்துவிடுவது என் வழக்கம்".

(சில நாட்களுக்கு முன் ராணுவ தளபதி ஒருவர் 'நான் தீவிர சிவாஜி ரசிகன்' என்று சொல்லியிருந்தார். இப்போது மேயர்.

ஐயா நடிகர்திலகம் அவர்களே, எப்பேற்பட்டவர்கள் எல்லாம் உங்கள் ரசிகர்களாக உள்ளனர்...!!!!)

HARISH2619
2nd October 2010, 11:33 AM
திரு பம்மல் சார்,
நடிகர்திலகம் பற்றிய 83 துளிகளும் தேனில் ஊறிய பலாச்சுளைகளாக இனிக்கிறது,நன்றி.

கௌரவம் படத்தொடர்பாக மேலும் ஒரு செய்தி.
நடிகர்திலகம் நம்மை விட்டு மறைந்தபோது தினத்தந்தியில் வந்துகொண்டிருந்த ஒரு தொடரில் கௌரவம் படத்தின் ஒளிப்பதிவாளர்(திரு வின்சென்ட் ?)அளித்த பேட்டியிலிருந்து சில துளிகள்:

"கௌரவம் படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டு படத்தை பார்த்த நடிகர் திலீப்குமார் தமிழில் ஒளிப்பதிவு செய்தவரே இந்தியிலும் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார்.மேலும் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படியும் என்னை கேட்டுக்கொன்டார்.அதன்படி ஒரு நாள் நான் அவரை போய் சந்தித்தபோது படத்தில் வயதான சிவாஜி இள வயது சிவாஜியை விட சற்று உயரமாக தெரிகிறார் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டார்.அதற்கு நான் "இதில் கேமரா டெக்னிக் எதுவும் இல்லை,வயதான கேரக்டருக்கான மேக்கப்பை போடும்போதே சிவாஜி அவர்களுக்கு அந்த ரோலுக்குன்டான கம்பீரம்,அரோகன்ஸ்,பாடி லாங்குவேஜ் எல்லாமே வந்துவிடும்,தானாகவே நெஞ்சம் நிமிர்ந்து கொள்ளும்,அதனால்தான் அவர் உயரமாக தெரிகிறார்.ஆனால் கண்ணன் ரோலுக்கான மேக்கப்பை போடும்போது அதற்க்கு தேவையானபடி அந்த பணிவு,கூச்சம் எல்லாம் சேர்ந்து அவரை இயல்பாக காட்டியிருக்கும்" என்று சொன்னேன்.இதை கேட்டு பிரமித்து போன திலீப்குமார் அவர்கள் "அந்த உயர வித்தியாசத்துக்கு தாங்கள் கேமரா டெக்னிக்கைத்தான் பயன்படுத்தியிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் நடிப்பிலேயே அந்த் வித்தியாசத்தை கான்பிக்க சிவாஜி ஒருவரால்தான் முடியும் வேறு எவராலும் முடியாது,நான் எதற்க்கும் ஒரு முறை யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.ஆனால் சில நாட்களுக்கு பிறகு அந்த படத்தையே கைவிட்டுவிட்டார்".

HARISH2619
2nd October 2010, 11:36 AM
"எந்திரன்" தினத்தந்தி திரைவிமர்சனத்திலிருந்து:

"ரோபோ" ரஜினி உத்தமபுத்திரன் சிவாஜியை நினைவுபடுத்துகிறார்

Murali Srinivas
2nd October 2010, 02:12 PM
நடிகர் திலகத்தின் 82-வது பிறந்த நாள் விழா - Part I

நடிகர் திலகத்தின் 82-வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று மாலை [01.01.2010] நடைபெற்றது. வழக்கம் போல் மவுண்ட் ரோடு தேனாம்பேட்டை சிக்னலில் ஆரம்பித்து காமராஜர் அரங்கம் வரை வழியெங்கும் விருந்தினர்களை வரவேற்று போஸ்டர் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அரங்கத்தின் வாயிலிலும் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. 2000 பேருக்கு மேல் அமரக் கூடிய அரங்கம் கிட்டத்தட்ட நிறைந்திருந்தது என்று சொன்னால், அதுவும் ஒரு வேலை நாளில் மாலை 5.45 மணிக்கே ஆரம்பித்த விழாவிற்கு இந்தளவிற்கு கூட்டம் வருகிறது என்றால் அது நடிகர் திலகத்தின் ரசிகர் படை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை உணர்த்துவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க செய்தி ஏராளமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வருகை தந்திருந்தது.

மேடையில் அஞ்சல் துறை தலைவர் ராமனுஜம், ராம்குமார், ஜி.கே.வாசன், பிரபு மற்றும் குகநாதன் அமர்ந்திருந்தனர். சிவாஜி விருது பெறும் கலைஞர்கள் நான்கு பேரும் மேடையில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். பின்புலத்தில் நடிகர் திலகத்தின் 82 -வது பிறந்த நாள் விழா என்று எழுதப்பட்ட திரைசீலை,அதில் புதிய பறவை சிவாஜியின் முகம்.

சரியாக 5.45 மணிக்கு இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது. இம்முறை ரசிகர்கள் ஆவேச மிகுதியுடன் காணப்பட்டதாகவே தோன்றியது. சாதாரணமாக ராம்குமார் அல்லது பிரபுவின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு அமைதியாகி விடும் ரசிகர்களை இம்முறை சாந்தப்படுத்த சற்று கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.

இறை வணக்கத்திற்கு பிறகு தொகுத்து வழங்கிய நண்பர் ஹப்பர் மோகன்ராம் அவர்கள் சிவாஜி பிரபு அறக்கட்டளை ஆற்றி வரும் பணிகள் பற்றி சொல்லி விட்டு மறைந்த திரையுலக கலைஞர்களுக்கு நினைவு அஞ்சல் உறை வெளியிடும் முயற்சியைப் பற்றி குறிப்பிட்டார். பாகவதர் தொடங்கி கடந்த வருடம் வெளியிடப்பட்ட கே.வி.மகாதேவன் வரை பட்டியலிட்ட மோகன்ராம் இம்முறை மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நினைவு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது என்று சொல்லி விட்டு ராம்குமாரை வரவேற்புரையாற்ற அழைத்தார். அதற்கிடையில் சிவாஜி மன்றத்தின் சார்பில் விருந்தினர்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

முதலில் வாசனுக்கு நன்றி தெரிவித்து ஆரம்பித்தார் ராம்குமார். நிகழ்ச்சியைப் பற்றி சொன்னவுடன் சிவாஜி சாருக்காகவும் அவர் குடும்பத்தினருக்காகவும் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக சொன்னதாகவும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டதற்கும் நன்றி தெரிவித்தார் ராம்குமார். தொடர்ந்து அனைவரையும் வரவேற்று பேசிய ராம்குமார் விருது பெற்றவர்களை பற்றி சிலவற்றை குறிப்பிட்டார். ஜெய் அவர்களைப் பற்றி சொல்லும் போது பிரபு நடிக்க வந்த புதிதில் நடிகர் வி.கே.ராமசாமி மூலமாக ஜெய் சொல்லி விட்ட செய்தியைப் பற்றி சொன்னார். நடிகர் திலகத்தின் மகனாக அல்ல, அவரது தனி திறமையிலே பிரபு ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பதே ஜெய் சொல்லி அனுப்பிய செய்தி. முதன் முதலாக பிரபுவிற்கு கிடைத்த இந்த பாராட்டை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றார் ராமு. விருது பெற்றவர்களில் ஒருவரான மேக்கப்மான் பீதாம்பரத்தைப் பற்றி சொல்லும் போது நடிகர் திலகத்துடன் அவருக்கு இருந்த நட்பைப் பற்றி சொன்னார். விருது பெற்ற மற்றொரு ஒப்பனையாளர் பாண்டியன் நடிகர் திலகத்துடனும் பிரபுவுடனும் இணைந்து பணியாற்றியதையும் குறிப்பிட்டார். அடுத்து பாடகர் நடிகர் ஏ.எல். ராகவன் பற்றி சொல்லும் போது 1953 முதல் 1960 வரை சிவாஜி நாடக மன்றத்தில் அவர் பின்னணி பாடகராக இருந்ததை சுட்டிக் காட்டினார். ராஜசுலோச்சனா பற்றி சொல்லும் போது அற்புதமான டான்சர் மற்றும் நடிகை,எந்த வேடத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் என்று சொல்லி அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் வரவேற்று ராம்குமார் அமர, ஒப்பனையாளர் சங்கம் சார்பில் ராம்குமாருக்கும் பிரபுவிற்கும் மரியாதை செய்யப்பட்டது.

அடுத்து ஜெய்சங்கர் நினைவு அஞ்சல் உறை வெளியிடு. ஜெய் அவர்களைப் பற்றி ஒரு சிறிய குறிப்பை படித்த மோகன்ராம் ஜெய் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய படங்களிருந்து ஒரு கிளிப்பிங் என்று அறிவிக்க மேடையின் இரு புறத்திலும் வைக்கப்பட்டிருந்த திரையில் கீழ்வானம் சிவக்கும் படத்தில் ஜெய் முதலில் நடிகர் திலகத்தை சந்திக்கும் காட்சி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அன்பளிப்பு படத்தில் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு விவரம் சொல்லுடா தம்பி பாடலில் நடிகர் திலகம் ஜெய்சங்கரை அப்படியே அலேக்காக தூக்கும் காட்சி திரையிடப்பட்டது. திரை அணைய, சிறப்பு அஞ்சல் உரையை சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜன் வெளியிட வாசன் முதலில் பெற்றுக் கொண்டார். மேடைக்கு அழைக்கப்பட்ட ஜெய்சங்கரின் மகன்கள் விஜய்சங்கர் மற்றும் சஞ்சய்சங்கர் அடுத்து அந்த அஞ்சல் உரையைப் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து சிவாஜி விருது வழங்கும் விழா. முதலில் ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரன். அவரை பற்றிய சில செய்திகளை சொல்லிய மோகன்ராம் அவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். அவர்களுக்கும், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் பர்சனல் மேக்கப்மானாக பணியாற்றியதைக் குறிப்பிடும் போது அரங்கில் ஒரே சலசலப்பு, கூச்சல். இதை எதிர்பார்த்திருந்தவர் போல் மோகன்ராம் சமயோசிதமாக கலையுலகின் நிரந்த முதல்வர் நடிகர் திலகத்திற்கும் பணிப் புரிந்திருக்கிறார் என்று சொல்ல அந்த வார்த்தை பிரயோகத்தில் கூட்டம் சந்தோஷப்பட்டு அமர்க்களம் செய்தனர். தொடர்ந்து திரையில் வந்த காட்சி ரங்கனான நடிகர் திலகம் கண்ண பரமாத்மாவாக காட்சி அளிக்கும் எங்கிருந்தோ வந்தான் பாடல். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு கேட்கவும் வேண்டுமோ? தொடர்ந்து பீதாம்பரத்திற்கு சால்வை, நினைவு பரிசு மற்றும் பணமுடிப்பை வாசன் மற்றும் பிரபு வழங்கினார்கள்.

அடுத்ததாக விருது பெற்றவர் ஒப்பனையாளர் பாண்டியன். இவர் நடிகர் திலகத்துடன் பணி புரிந்திருந்தாலும் இளைய திலகத்துடன் பணியாற்றியதே அதிகம் என்பதால் பிரபுவின் பல்வேறு படங்களின் ஸ்டில்கள் காண்பிக்கப்பட்டு, பாண்டியனுக்கு விருது வழங்கப்பட்டது.

மூன்றாவது நபர் ஏ.எல்.ராகவன். இவர் நடிகர் திலகத்திற்கு நேரிடையாக பாடாவிட்டாலும் அவர் படங்களில் பாடியிருக்கிறார். அவ்வகையில் இருவர் உள்ளம் படத்தில் புத்திசிகாமணி பெற்ற பிள்ளை பாடல் காட்சி திரையிடப்பட்டது. ராகவன் விருதை பெற்றுக் கொண்டார்.

ராம்குமாரின் வார்த்தைகளிலே சொல்ல வேண்டுமென்றால் last but not the least ராஜசுலோச்சனா. அம்பிகாபதி, சாரங்கதாரா மற்றும் படித்தால் மட்டும் போதுமா போன்ற இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களைப் பற்றி குறிப்பிட்ட மோகன்ராம் அடுத்து கிளிப்பிங் என்று சொன்னவுடன் பெரும்பாலோர் எதிர்பார்த்தது போல நான் கவிஞனுமில்லை பாடல் காட்சி ஓட ஆரம்பித்தது. நேற்றைய நிகழ்ச்சியிலே இரண்டே இரண்டு இடங்களில்தான் உச்சக்கட்ட ஆரவாரம். அதில் ஒன்று இந்த பாடல் காட்சியின் போது நடந்தது. படுக்கையில் சாய்ந்து பாடும் நடிகர் திலகம் சட்டென்று காலை மாற்றிப் போட்டு சரணம் பாட ஆரம்பிப்பார். அப்போதும் சரணத்தின் இடையில் ஓஹோ ஹோ என்ற ஹம்மிங்கின் போதும் எழுந்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. காட்சி முடிய ராஜசுலோச்சனாவிற்கு விருது அளிக்கப்பட்டது.

விருதுகள் வழங்கிய பின் பேச அழைக்கப்பட்டவர் குகநாதன். வழக்கம் போல் பாசமலரையும் கட்டபொம்மனையும் வசந்த மாளிகையையும் பற்றி குறிப்பிட்டு அது போல இப்போது பார்த்தோமே பாடல் காட்சி, இது போல யாரும் இப்போது நடிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியவர் திடீரென்று 1967 பொது தேர்தலில் பெருந்தலைவர் தோற்றதைக் குறிப்பிட்டு தமிழ் மக்கள் செய்த மன்னிக்க முடியாத குற்றம் என்று சொல்லி விட்டு அது போல சிவாஜி அவர்களையும் மறந்து விட்டார்கள் என்று வருத்தப்பட்டார். பின்னால் திரும்பி இந்த வாரிசுகள் இத்தனை காலம் ஏன் பிரிந்திருந்தனர் என்று கேள்வி எழுப்பியவர் இவர்களின் தந்தையர்கள் திருமலைப் பிள்ளை ரோடில் பெருந்தலைவரின் வீட்டில் ஒன்றாக அரசியல் பணியாற்றியதைக் குறிப்பிட்ட குகநாதன் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். தான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்றாலும் கூட தமிழகத்தின் நலனுக்காக இவர்கள் இணைந்து பாடுபட வேண்டும் என்பது தன் விருப்பம் மட்டுமல்ல தமிழக மக்கள் பெரும்பாலோரின் விருப்பமும் அதுதான் என்பதையும் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார் குகநாதன்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
2nd October 2010, 02:15 PM
நடிகர் திலகத்தின் 82-வது பிறந்த நாள் விழா - Part II

அடுத்து வந்தவர் வாசன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வாசன் விழா தலைமை ஏற்பதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை. காரணம் அனைவருக்கும் தெரிந்ததே. வாசன் அவர்கள் பேச வந்தவுடன் எப்படி இருக்குமோ ரசிகர்களின் ரியாக்ஷன் என்ற ஒரு கவலை இருந்தது. ஆனால் ரசிகர்கள் அமைதி காத்தனர்.

இந்நிலையை உணர்ந்தோ என்னவோ வாசன் பேச ஆரம்பிக்கும்போது ஒரு மத்திய அமைச்சராக இல்லாமல் ஒரு குடும்ப நண்பனாக அதை விட நடிகர் திலகம் ரசிகர் மன்ற குடும்பத்தில் ஒருவனாக இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன் என்று சொல்ல ரசிகர்கள் மத்தியில் புழுக்கம் குறைந்து ஒரு இதமான சூழல் ஏற்பட்டது. விருது பெற்றவர்களையும் விருந்தினர்களையும் ஒருவர் விடாமல் பெயர் சொல்லி அவர்களை பாராட்டினார் வாசன்.

நடிகர் திலகத்தின் விழாவிற்கு தலைமை தாங்க போகிறோம் என்றவுடன் அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்தேன் என்றும் அதற்காக மூன்று நான்கு புத்தகங்களையும் வாங்கி படித்ததாக குறிப்பிட்ட வாசன் நடிகர் திலகம் பற்றி பேச அப்படி ஒரு ஹோம் வொர்க் தேவைப்படுகிறது என்றார். பள்ளி நாட்களிலே நடிகர் திலகத்தின்பாற் ஈர்ப்பு ஏற்பட்டதையும் அது கல்லூரி நாட்களில் ஒரு வெறியாகவே மாறியது என்று சொன்னார். இப்போதும் நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளையும் படங்களையும் தானும் தன் இயக்க நண்பர்களும் ரெகுலராக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலையும் சொன்னார். மேலும் அவரை பற்றி யோசிக்கும் போது நடிகர் திலகத்தின் படங்களை இனம் பிரித்து பார்க்க தோன்றியது என்றும் அப்படி பார்த்தால் பாசத்திற்கு ஒரு பாச மலர், வீரத்திற்கு ஒரு கட்டபொம்மன், காதலுக்கு ஒரு வசந்த மாளிகை, தேசிய ஒருமைபாட்டிற்கு பாரத விலாஸ், தேசிய உணர்வுக்கு கப்பலோட்டிய தமிழன், கலைக்கு ஒரு தில்லானா, வசனத்திற்கு ஒரு பராசக்தி, இறை உணர்விற்கு ஒரு திருவிளையாடல், நளினதிற்கு ஒரு உத்தம புத்திரன் என அடுக்கி கொண்டே போகலாம் என்று குறிப்பட்ட வாசன், இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவிலேயே இப்படி ஒரு வெரைட்டி நடிப்பை கொடுத்த வேறு ஒரு நடிகன் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே வரும் என்றார். அவர் படங்களைப் பற்றி பேசும்போது நான்கு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று சொன்ன வாசன், அவை அர்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு, காலந் தவறாமை, கூட நடிப்பவர்களுக்கு உதவும் குணம் என்று வரிசைப்படுத்தினார். இவை அனைத்துமே இன்றைய இளைய தலைமுறை கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்பதையும் அறிவுறுத்தினார்.

ஒரு குடும்ப தலைவர் என்ற முறையிலும் அவர் ஒரு முன்மாதிரி [ரோல் மாடல்] என்றார் வாசன். ராம்குமாரும் பிரபுவும் தனக்கு சகோதர்கள் என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். தன் தந்தைக்கும் நடிகர் திலகத்திற்கும் உளமார்ந்த நட்பு இருந்ததாக சொன்ன வாசன் தன்னுடைய இளம் வயதிலே இருவரும் பல முறை அரசியல் ஆலோசனைகள் செய்வதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். அன்றைய கல்லூரி மாணவனாக இருந்த தன்னை அருகில் அழைத்து, தன்னை தானே சுய அறிமுகம் செய்துக் கொண்டதை [என் பெயர் சிவாஜி கணேசன், சினிமா நடிகன்] சொன்ன வாசன் தன்னுடைய படங்களை பார்பதுண்டா என்று வினவியதையும் மகிழ்வோடு குறிப்பிட்டார்.

குகநாதன் தொட்டுக் காட்டிய விஷயத்திற்கு வந்த வாசன் நடிகர் திலகத்தின் புதல்வர்களுக்கு அவர்களது கலைப் பயணத்திலும் சமூக பணிகளிலும் தானும் தன் இயக்கமும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறினார். அதன் பிறகுதான் யாருமே எதிர்பாராத வகையில் அந்த விஷயத்தை தொட்டார். அவர் வார்த்தைகளிலே அதை சொல்வதென்றால்

"காங்கிரஸ் பேரியக்கதிற்காக நடிகர் திலகம் ஆற்றிய பணிகள் சாதாரணமானவை அல்ல. இந்த இயக்கத்தின் வேராகவும் நீராகவும் இருந்தவர் நடிகர் திலகம். காங்கிரஸ் பேரியக்கம் கடந்த 43 வருடங்களாக ஆட்சி பீடத்தில் இல்லை. ஆனாலும் இன்றைக்கும் மற்ற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, உயிரோட்டத்துடன் விளங்கும் ஒரு இயக்கமாக விளங்குகிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் நடிகர் திலகமும் அவரின் ரசிகர் படையும்தான் என்பதை நாங்கள் எந்நாளும் மறக்க மாட்டோம்! மறக்க மாட்டோம்! மறக்க மாட்டோம்!"

வாசனின் இந்த வரிகள் காமராஜர் அரங்கின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்தபோது இதை சற்றும் எதிர்பார்த்திராத ரசிகர் கூட்டம் உணர்ச்சி வசத்தால் அந்த விண்ணதிர இந்த மண்ணதிர சுற்று சூழலே அதிர்ந்து போகும் வண்ணம் செய்த ஆரவாரத்தையும் வாழ்த்து முழக்கங்களையும் வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. மேடையில் இருந்த ராம்குமாரும் பிரபுவுமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

கூட்டத்தின் ஆரவாரம் அடங்க சற்று அவகாசம் அளித்த வாசன் மீண்டும் ஒரு முறை நடிகர் திலகத்தின் புதல்வர்களுக்கு அவர்களின் கலைப் பயணத்திலும் சமூகப் பணியிலும் தானும் தன் இயக்கமும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்து தனக்கு நல்கிய இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெற்றார்.

நன்றி கூற வந்தார் இளைய திலகம். முதலில் வாசனுக்கு நன்றி சொல்லிய அவர், தன் வீட்டு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வாசனின் அலுவலகத்திற்கு சென்ற போது அவர் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் புகழ்ந்தார். இந்த விழாவிற்கு வந்திருந்து தலைமை தாங்கியதற்கு நன்றி சொல்லி விட்டு இதை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றும் எங்கள் கூட்டமே நன்றி மறக்காத கூட்டம் என்றும் குறிப்பிட்டார்.

ஜெய்சங்கர் பற்றி சொல்லும்போது அப்பா மேல் மிகுந்த அன்பும் தன் மேல் மிகுந்த அக்கறையும் கொண்டவர் ஜெய்சங்கர். இன்று அவர் நினைவு அஞ்சல் உறை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயம் என்றார். ஜெய் அவர்களின் புதல்வர்கள் இன்று வெற்றிகரமாக விளங்குவது மிகவும் சந்தோஷமான விஷயம் என்றார்.

பீதாம்பரம் அவர்களை அப்பா என்றே குறிப்பிட்ட பிரபு அவர் தாடி ஓட்டும் கலையில் எக்ஸ்பெர்ட் என்றும் நடிகர் திலகம் அது போன்ற காட்சிகள் வரும்போது பீதாம்பரம் அவர்களை அழைத்து வர சொல்லுவார் என்றும் சொன்ன பிரபு அப்படிப்பட்ட ஒருவருக்கு விருதளிப்பது தங்களுக்கு பெருமை என்று குறிப்பிட்டார். பாண்டியனைப் பற்றி குறிப்பிடும் போது தன் சித்தப்பா சண்முகம் தன்னிடம், நீ பாண்டியனை உனக்கு துணையாக வைத்துக் கொள் என்று சொன்னதை [காரணம் சிவாஜி நாடக மன்றத்தில் ஒரு மூத்த உறுப்பினர் பாண்டியன்] நினைவு கூர்ந்த பிரபு, பாண்டியன் லக்கி என்று சொல்லுவார்கள். உண்மைதான் நானும் அவரும் சுமார் 130 படங்கள் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம் என்றார்.

ஏ.எல்.ராகவனை பற்றி சொல்லும்போது அன்று ஊமை பெண்ணல்லோ என்று பாடிய பிரபு அவரும் அவரது துணைவியார் எம்.என்.ராஜமும் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றார்.

ராஜசுலோச்சனா பற்றி சொல்லும் போது அப்பாவும் இவரும் ஒரு போல குணம் உடையவர்கள். அதாவது இமேஜ் பார்க்காமல் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிப்பது. அப்பா ஹீரோவும் செய்வார். நெகடிவ் ரோலும் செய்வார். அது போல ராஜசுலோச்சனாவும் அப்பாவுடனும் நடிப்பார், பெரியப்பாவுடனும் நடிப்பார், ஜெமினி மாமாவுடனும் நடிப்பார் தங்கவேலுவுடனும் நடிப்பார். சிறந்த நாட்டிய கலைஞர். அப்பேற்பட்ட ஒரு கலைஞர் விருது பெறுவதில் எங்களுக்குதான் பெருமை என்றார்.

மதன மாளிகையில் என்று பாடி,மறக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய பிரபு, குகநாதனை மூத்த சகோதரர் என்று குறிப்பிட்டு நன்றி சொன்னார்.

இறுதியாக எப்போதும் போல் ரசிகர்களை பார்த்து நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அப்பாவை உயிரோடு இருக்கும்போது நேசித்தீர்கள். இப்போது அவரது ஆன்மாவை நேசிக்கிறீர்கள். எங்கள் குடும்பத்தின் மீது அன்பு காட்டுகிறீர்கள். உங்கள் அன்பு எங்களின் அடுத்த தலைமுறைக்கும்,துஷ்யந்த் விக்ரம் மட்டுமல்ல, என் பேரனுக்கும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பேச்சை முடித்தார். நாட்டு பண் இசைக்கப்பட விழா இனிதே நிறைவுற்றது.

விழா பற்றிய சில எண்ண துளிகள்.

வாசன் அவர்கள் இரவு 8 மணி விமானத்தில் டெல்லி செல்ல வேண்டும் என்பதற்காக விழா 5.45 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டு இரவு 7.10 க்கு முடிக்கப்பட்டது. இதன் காரணமாக நடிகர் திலகத்தின் படக்காட்சிகள் சுருக்கப்பட்டன. இதில் ரசிகர்களுக்கு வருத்தம்தான்.

நடிகர் திலகத்தைப் பற்றி ஹோம் வொர்க் செய்த வாசன் பிரபுவை பற்றி தெரிந்துக் கொள்ளவில்லை. பல முறை இளைய தளபதி என்றே குறிப்பிட்டார்.

நடிகர் திலகத்தின் பங்களிப்பை அவ்வளவு சிலாகித்து பேசும் வாசன் முதற் காரியமாக காமராஜர் அரங்கில் நடிகர் திலகத்தின் ஒரு புகைப்படம் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் யாரோ அங்கே புகைப்படமாக இருக்கும்போது நடிகர் திலகத்தின் புகைப்படம் அங்கே இல்லாதது பெருங்குறையே

அன்புடன்