PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 2 3 4 5 [6] 7 8

RAGHAVENDRA
26th August 2011, 06:05 AM
அன்பு மிக்க சந்திர சேகர் அவர்களுக்கு,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

pammalar
26th August 2011, 06:11 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

சாதனைச் செப்பேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4432a-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 4.12.1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4425a-1.jpg


வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
26th August 2011, 06:12 AM
டியர் வாசுதேவன் சார்,
சசிகுமாரைப் பற்றிய நினைவுகளுக்கு உடனடியாக தாங்கள் பாரத விலாஸ் காட்சியினைப் பதிவிட்டுத் தங்களுடைய நினைவுகளையும் அன்பையும் பகிரந்து கொண்டமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
அதே போல் ராஜாமணி அமமையார் நினைவுப் பதிவில் கிரகப் பிரவேசம் காட்சியை இட்டு நினைவாஞ்சலியினை உரிய முறையில் செலுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன், இந்த மொழி ...... ஆண்டிற்கும் பொருந்தும். ஆம், காலத்தால் அழியாத பொன்மொழிகளை சம்பவங்களின் மூலம் சிறப்பான முறையில் எடுத்துரைத்து, ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கியமாகி விட்ட காரணத்தால் மிகப் பெரும் வெற்றி பெற்ற தூக்குத் தூக்கியின் சிறப்பம்சங்களை அலசியுள்ளீர்கள். தாங்கள் கூறியது போல் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் அவர்கள் இன்றளவும் அந்தப் பெயரால் தான் நினைவு கூறப் படுகிறார். அது மட்டுமல், அந்தக் காலத்தில் திரையுலகில் மற்றொரு வெங்கட்ராமன் இருந்தார், பெயர்க் குழப்பம் தீரவும் இப்பாத்திரம் துணை நின்றது.
மறு வெளியீ்ட்டில் 1970களின் துவக்கத்தில் இப்படம் பிளாசாவில் திரையிடப் பட்டது. திரையிட்டவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல, அவருடைய நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த ஊழியர்களும் ஆவர். பிளாசாவில் 42 காட்சிகளும் அரங்கு நிறைந்து புதிய படங்களை விட அதிக வசூல் தந்து அவர்கள் வாழ்வில் புதிய வசந்தம் மலரச் செய்தது.
நினைவுகளைப் பகிரந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:13 AM
டியர் ராதாகிருஷ்ணன்,
தங்களுடைய அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:14 AM
டியர் முரளி சார்,
சசிகுமார் பற்றிய நினைவலைகள் அனைவரையும் போல் தங்களுக்குள்ளும் தாக்கம் ஏற்படுத்தி நினைவுகளைக் கிளறி விட்டன என்பதில் வியப்பேதுமில்லை. காரணம், நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே திசையில் அல்லவா பயணிக்கின்றன.

அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:14 AM
டியர் குமரசேன்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:16 AM
அன்புச் சகோதரி சாரதா,
திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் மிகவும் சரி. நிச்சயம் அவர் நினைவு நாள் பிறந்த நாள் உரிய முறையில் நினைவு கூறுவோம்.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:16 AM
டியர் மகேஷ்,
தங்களைப் போன்ற இளைய தலைமுறை ரசிகர்கள் தரும் ஊக்கமே இத்திரிக்கு மிகப் பெரிய பலம்.
நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:18 AM
Dear Ramajayam Sir,
Please keep writing. Please share your valuable thoughts on NT's movies, theatre experiences so that the new generation can know the command NT held in the masses.
Regards
Raghavendran

RAGHAVENDRA
26th August 2011, 06:19 AM
டியர் ஹரீஷ்
பெங்களூர் டைம்ஸ் பத்திரிகையில் ராஜ்குமாரின் புதல்வரின் நினைவலைகளை இங்கே பகிரந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:20 AM
டியர் பார்த்தசாரதி சார்,
1954ம் ஆண்டு மட்டுமல்ல தன்னுடைய திரையுலக வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகளைக் குவித்தவர் நடிகர் திலகம். அதற்கு நாம் அவ்வப்போது காணும் விளம்பரங்களே சான்று.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:23 AM
டியர் சதீஷ்,
தாங்கள் தாயகம் வந்துள்ளது பெரு மகிழ்வூட்டுகிறது. தங்களை சந்திக்க ஆவலாயுள்ளோம். மதுரையில் தியாகம் வெளியீட்டு செய்தி இனிக்கின்றது. விரைவில் சென்னையில் எதிர்பார்ப்போம்.
சொர்க்கம் நல்ல பிரதியுடன் விரைவில் தமிழகமெங்கும் வலம் வர உள்ளது. அதை வெளியிடுவோர்க்கு நமது வாழ்த்துக்கள்.

தங்களுக்கு ஹம்ஸத்வனி பதில் கடிதம் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பாராட்டும் அதில் பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்தமைக்கு மற்றொரு பாராட்டும் உரித்தாகட்டும். நம் அனைவர் சார்பாக தெரிவிக்க தங்களிடம் வேண்டுகிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:23 AM
டியர் பாலகிருஷ்ணன்
தாங்கள் அளித்துள்ள இணைப்புகளுக்கு மிக்க நன்றி.
அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:28 AM
அனைவருக்கும் என்னால் ஓரளவு முடிந்த வரையில் நன்றி, பாராட்டுப் பதிவிட முடிகிறது.

ஆனால் பம்மலாருக்கு...

எப்படிப் பாராட்டுவது, என்ன சொல்லிப் பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது, வார்த்தைகள் வர மறுக்கின்றன, மொழி தடுமாறுகிறது,
சசிகுமார் நினைவாக இட்ட படங்களைச் சொல்வதா,
அன்னை ராஜாமணி நினைவினை நெஞ்சம் நெகிழும் வகையில் பகிரந்து கொண்டதைச் சொல்வதா,
மருத நாட்டு வீரன் படங்களைச் சொல்வதா,
தூக்குத் தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், மருத நாட்டு வீரன், தாயே உனக்காக, தவப் புதல்வன் விளம்பர நிழற் படங்களைப் பாராட்டுவதா,

வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் என்ற மெல்லிசை மன்னரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

இருந்தாலும் சம்பிரதாயத்திற்காகவாவது, ஏதாவது சொல்ல வேண்டுமே...

இந்த மூன்றெழுத்துக்கள் தான் அவசரத்திற்குத் துணை புரிகின்றன.

நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
26th August 2011, 06:32 AM
பொம்மை மாத இதழில் செப்டம்பர் 1966 இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/ThayeBommaiAd.jpg

RAGHAVENDRA
26th August 2011, 06:35 AM
தாயே உனக்காக திரைக்காவியத்தின் மற்றொரு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/Thayenewspaperad.jpg

RAGHAVENDRA
26th August 2011, 06:35 AM
தவப்புதல்வன் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thavathuklakad.jpg

RAGHAVENDRA
26th August 2011, 06:37 AM
மருத நாட்டு வீரன் படப்பிடிப்பிற்காக பனாலா என்ற இடத்திற்கு சென்ற போது அங்கு நடிகர் திலகம் பங்கேற்ற நிகழ்ச்சியின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/mnvpanalasnap.jpg

RAGHAVENDRA
26th August 2011, 06:52 AM
பார்க்கப் பார்க்கத் திக்ட்டாக தெள்ளமுது, ஸ்டைல் சக்கரவர்த்தியின் சூப்பர் தோற்றம், நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து சாவகாசமாக உண்டு உறங்கும் சௌந்தர ராஜனின் குரல், தேனினும் இனிதான வெங்கட்ராமன் அவர்களின் மெட்டமைப்பு, கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க வைக்கும் பாடல், மருத நாட்டு வீரன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...

இதுவரை பார்த்திராதவர்கள் இப்பாடலை மறுபடியும் முதலிலிருந்து பார்ப்பார்கள் என்பது திண்ணம். இதோ நம் பார்வைக்கு


http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE

அன்புடன்

vasudevan31355
26th August 2011, 07:03 AM
[இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.]

அன்பு சந்திரசேகர் சார்,

தங்களுக்கு என் இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசீர்வதங்களுடன் நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்

உங்கள் அன்பு,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
26th August 2011, 07:05 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம் : கிறிஸ்துமஸ் தாத்தா [Santa Claus]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4429a-1.jpg


அரிய ஆவணம் : பேசும் படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4436a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4437a-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 08:16 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

காவிய விமர்சனங்கள்

மின்னல் கொடி: 10.9.1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4428a-1.jpg


ஆனந்த விகடன் : 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4434a-1.jpg

[இந்த காலகட்ட விகடன் விமர்சனங்கள் குறித்து நமது முரளி சார் மேலதிக விவரங்கள் வழங்கினால் நன்றாக இருக்கும்]

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 08:33 AM
டியர் ராகவேந்திரன் சார்,

ரசிகவேந்தராகிய தாங்கள், தங்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாரி வழங்கும் வளமான பாராட்டுக்களையெல்லாம் அடியேன் பெறுவது அடியேனது வாழ்வின் பேறு. தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

தாங்கள் பதிவேற்றிய நிழற்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் !

'பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா' - "மருதநாட்டு வீரன்" பாடல் ஒலி-ஒளிப் பேழை சிறந்த செலக்ஷன் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 08:43 AM
தூக்கு தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், தாயே உனக்காக, தவப்புதல்வன் ஆகிய பஞ்சரத்னங்கள் வெளியான ஆகஸ்ட் 26 அன்று பிறந்தநாள் காணும் ரசிக ரத்னம், அருமை நண்பர், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயபூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

Happy Birthday Sir ! Many More Happy Returns !

திரு.சந்திரசேகரன் அவர்களது திருத்தொண்டு வளர்பிறை சந்திரன் போல் தொய்வின்றி சிறக்கட்டும் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 09:02 AM
டியர் வாசுதேவன் சார்,

'உனக்காக நான்' என்று ஒவ்வொரு நொடியும் அண்ணலையே எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள், பதிவிட்ட "தாயே உனக்காக" நிழற்படங்கள் அருமை !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
26th August 2011, 10:28 AM
'தாயே உனக்காக' திரைப் படத்தில் நடிகர் திலகம் அவர்கள் இடம் பெற்ற மிக அரிய பாடல் காட்சி.

http://s2.postimage.org/yx41gvcas/thayae_unakkaaga_vob_001634850.jpg

நடிகர் திலகத்தின் அற்புத கௌரவத் தோற்றத்தில் அழியா 'கெளரவம்' பெற்ற திரை ஓவியம் 'தாயே உனக்காக'. நாட்டுக்கு சேவை செய்து உயிரை தியாகம் செய்யும் அற்புதமான ராணுவ கேப்டன் கதாபாத்திரம் நடிகர் திலகத்திற்கு. 'Ballad of a soldier' ("ஒரு போர் வீரனின் பாட்டு") என்னும் ரஷ்ய கதையின் தழுவல் தான் 'தாயே உனக்காக'. சோவெக்ஸ்போர்ட் என்ற ரஷ்ய பிலிம் கம்பனி கதை உரிமை அளித்தது.

திரு.சிவக்குமார் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். (சிவக்குமாரின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் திரு. விஜயகுமார் அவர்கள் நடித்திருப்பார்.) திரு கே.வி .மகாதேவன் இசையமைப்பில், திரு பி.புல்லையா அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்திருந்தார்.

பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்...
கருநீல மலை மேலே தாய் இருந்தாள்..
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்...

போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படம்.

ராணுவ அதிகாரியாக மிடுக்குடன் நம் பத்மஸ்ரீ அவர்கள். போரில் காயமுற்று மருத்துவமனையில் ராணுவ வீரரான சிவக்குமாரிடம் தன் மனைவியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், பிளாஷ்பேக்கில் வரும் அந்த மிக அரிய டூயட் பாடலில் பத்மினி அவர்களுடன் மலையாள மற்றும் கன்னட உடை அணிந்து அந்தந்த கலாச்சாரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் காண்பிக்கும் போதும், போருக்குப் போகுமுன் பத்மினியிடம் உணர்ச்சி மயமான வசன மழை பொழிந்து விட்டு விடை பெறும் போதும் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் நம்மை ஆட்டிப் படைத்து விடுகிறார் நடிக வள்ளல்.

'பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்' என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற பின்னணிக் குரலோசையில் தேச பக்தியை நினைவூட்டும் விதமாக, தென்னிந்திய கலாச்சார உடைகளில் நடிகர் திலகம் புகுந்து விளையாடுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

அந்த மிக மிக அரிய பாடலைப் பார்த்து மகிழலாமா...


http://www.youtube.com/watch?v=v7j3wNe-PEs&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

abkhlabhi
26th August 2011, 10:38 AM
Many Many Happy Returns of the Day Mr.Chandrasekar.

Interview given by Dr.Rajkumar Second son Raghavendra Rajkumar
http://www.bangaloremirror.com/article/10/20110823201108230010502873ee4079b/Naanu-Neevu-Annavru-on-Mirchi-Talkies.html
He was the greatest actor of his times and even now. But who did he admire?
He greatly admired Sivaji Ganesan. He used to travel in local buses and watch Sivaji’s movies in theatres. And Sivaji admired appaji as an actor.

abkhlabhi
26th August 2011, 11:10 AM
எழுதியது நெல்லை கண்ணன்

தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை


பல்கலைக் கழகமாய் வந்து நின்றான்

நடிப்புக் கல்லூரிகள் பின்னரே தோன்றின

அவனுக்கு விருது வழங்காததால் குடியரசுத் தலைவர் மாளிகை

ஒரு சிங்க நடையைத் தரிசிக்கும் வாய்ப்பை இழந்தது

தேசத்திற்கே விருதாய் வந்தவனுக்கு தேசம் எப்படி விருதளிக்க முடியும்

அவன் போட்ட பிச்சையிலே தான் பலர் இன்று கோடீஸ்வரர்


சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராசக்தி தனில் மலர்ந்தான் தமிழர்களின்
படங்களுக்காய் இறைவனவன் தந்த பூவாய்
தராதரத்தில் அவனை மிஞ்ச இன்னுமொரு
தனி நடிகன் வருவதற்கு வாய்ப்பேயில்லை
அறாத ஒரு பெரும் புகழைக் கொண்ட வேந்தன்
அண்ணன் அவன் சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராபரமே அவன் நடிப்பின் சிறப்பைக் காண
பக்கத்தில் அவன் அழைத்துக் கொண்ட தின்று

abkhlabhi
26th August 2011, 11:21 AM
1964ல் வந்த சிவாஜி படங்கள்.

கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி

ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.

மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.


நடிகர் திலகம் சிவாஜி போல இவ்வளவு முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர்..உலகளவிலேயே யாரும் இல்லை.அவற்றைப் பார்க்கலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் - கட்டபொம்மன்
பாரதியார் - கை கொடுத்த தெய்வம்
வ.வு.சி.- கப்பலோட்டிய தமிழன்
கர்ணன்- கர்ணன்
பரதன்- சம்பூர்ண ராமாயணம்
சாம்ராட் அசோகன்- அன்னையின் ஆணை
ஹேம்லட்-ராஜ பார்ட் ரங்கதுரை
திருப்பூர் குமரன்-ராஜ பார்ட் ரங்கதுரை
பகத் சிங்- ராஜபார்ட் ரங்க துரை
ஐந்தாம் ஜார்ஜ்- கௌரவம்
ஹரிச்சந்திரன்-ஹரிசந்திரன்
அக்பர்-உத்தமன்
வீர சிவாஜி- ராமன் எத்தனை ராமனடி
ஒதெல்லோ- ரத்தத்திலகம்
சாக்ரடீஸ்-ராஜா ராணி
தெனாலிராமன்-தெனாலிராமன்
அப்பர்-திருவருட்செல்வர்
நாரதர்-சரஸ்வதி சபதம்
சிவன்-திருவிளையாடல்
முருகன்- ஸ்ரீவள்ளி
விஷ்ணு-மூன்று தெய்வங்கள்
காளிதாஸ்-மகா கவி காளிதாஸ்
சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்

ஏதெனும் விட்டுப்போயிருந்தால்...................excus e

RAGHAVENDRA
26th August 2011, 11:56 AM
25.08.1977 அன்று வெளியாகி 25.08.2011 அன்று 35வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் உன்னதத் தெலுங்குத் திரைக்காவியமான சாணக்ய சந்த்ரகுப்தா வின் ஜெயந்தி

http://4.bp.blogspot.com/_hkhUD0LDPho/THjq5cug5nI/AAAAAAAACZw/OLPeNwfPKUA/s1600/chanakya-chandragupta.jpg

நடிக நடிகையர் - அக்கினேனி நாகேஸ்வரராவ் சாணக்யராக, நந்தமூரி தாரக ராமராவ் சந்த்ரகுப்தராக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அலெக்ஸாண்டராக, ஜெயப்ரதா, எஸ்.வரலட்சுமி, மற்றும் பலர்

பாடலாசிரியர் - நாராயண ரெட்டி
இசை - பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பின்னணி - பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
தயாரிப்பு - திரிவிக்கிரம ராவ்
இயக்கம் - என்.டி.ராமராவ்
நிறுவனம் - ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ்
வெளியீட்டு நாள் - 25.08.1977

நீண்ட இடைவேளைக்குப் பின், அதாவது கிட்டத் தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமராவ் அவர்களும் நாகேஸ்வர ராவ் அவர்களும் இணைந்து நடித்த படம். அதற்கு முன் அவர்கள் இணைந்து நடித்து வெளிவந்த படம் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம். சாணக்கியர் பாத்திரத்தை ராமராவ் அவர்கள் நடிக்க விரும்பி பின்னர் அதை நாகேஸ்வர ராவ் அவர்களுக்கு விட்டுத் தந்ததாக அந்தக் கால கட்டத்தில் செய்தியுண்டு. அது மட்டுமல்லாமல் என்.டி.ஆரின் தயாரிப்பில் நாகேஸ்வரராவ் நடித்த முதல் படம் கூட.

இப்படத்தின் மற்றொரு நிழற் படம்

http://i.tollywood.info/chanakya-chandragupta.jpg

HARISH2619
26th August 2011, 01:13 PM
அன்னை ராஜாமணி அம்மையார்
Oops... what a mistake,sorry pammal sir.Thanks for the correction.

KCSHEKAR
26th August 2011, 01:18 PM
பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும், தொலைபேசியிலும் அளித்த என் இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. பாலகிருஷ்ணன், திரு.பிரபு குமரேஷ், மற்றும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கான ரசிக இதயங்களின் நட்பை எனக்களித்த விண்ணிலிருந்து எனை வாழ்த்தும் கலை தெய்வம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இந்த நேரத்தில் என்னுடைய சில உணர்வுகளை இத்திரியில் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

சிறு வயது முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த எனக்கு, வேலையில் சேர சென்னை வந்தபோது நடிகர்திலகத்தை நேரில் சந்திப்பேன் என்றுகூட நினைத்தது கிடையாது. ஆனால் கடவுள் சித்தம் - அவரிடமே வேலைக்கு சேரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய கட்சி அலுவலகப் பொறுப்பாளாராக பணியாற்றும்போதும், அவர் அரசியலைவிட்டு விலகிய பிறகு சிறிது காலம் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியபோதும், அந்த மகானுடன் பழகியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்.

பொக்கிஷப் பதிவுகளை அள்ளி வழங்கும் ரசிக மாமணிகள் உள்ள இத்திரியில் - என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வரும் மூன்றை இணைப்பாக இங்கு அளித்துள்ளேன்.

1 ) 1985 ஆம் ஆண்டு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அட்டையை திரு. தளபதி சண்முகம் அவர்களிடம் இருந்து பெற்றது.

http://4.bp.blogspot.com/-s-hX7Rq-Eg0/TldFY2cf2JI/AAAAAAAAAJA/KzrrtvFn5j4/s1600/SivajiManramMember1983-84.jpg

2 ) நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://2.bp.blogspot.com/-KAq83ScybyI/TldGbtEq8hI/AAAAAAAAAJI/hCdLYMHlsz8/s1600/VistingCardofNT.jpg

3 ) 25 - 08 - 1988 அன்று நாளை எனக்கு பிறந்த நாள் என்று சொன்னபோது, தன்னுடைய புகைப்படத்தில் கையெழுத்திட்டு, வாழ்த்து தெரிவித்து, எனக்கு அளித்த புகைப்படம் இது.
http://2.bp.blogspot.com/-kXLn4eObpDo/TldAKtkefOI/AAAAAAAAAI4/se824NqfNQI/s1600/NTPhotoAutograph1988.ஜபக்

நட்பு கலந்த நன்றியுடன்,

HARISH2619
26th August 2011, 01:26 PM
Dear chandrashekaran sir,
wish you a very happy birthday.May god give you 100 years and help you to spread the name and fame of our NT all over the world

HARISH2619
26th August 2011, 01:28 PM
Dear sathish,
A warm welcome to the homeland.Hope you will watch sunday evening show with much alapparai.Eagerly waiting for the sunday gala photos.

parthasarathy
26th August 2011, 03:23 PM
அன்புள்ள திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களது பதிவையும், அதனூடே பதிந்த இனிய நினைவுகளையும் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.

வாழ்த்துக்களுடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
26th August 2011, 03:25 PM
Dear Mr. Sathish,

Welcoming you back to the home land. Early awaiting to get more info.

Wishing you a memorable trip,

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
26th August 2011, 05:27 PM
Dear chandrashekaran sir,
wish you a very happy birthday.May god give you 100 years and help you to spread the name and fame of our NT all over the world

Thanks Mr.Harish for your wishes.

KCSHEKAR
26th August 2011, 05:36 PM
அன்புள்ள திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களது பதிவையும், அதனூடே பதிந்த இனிய நினைவுகளையும் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.

வாழ்த்துக்களுடன்,

இரா. பார்த்தசாரதி

நன்றி - திரு. பார்த்தசாரதி அவர்களே

KCSHEKAR
26th August 2011, 06:16 PM
திரு.வாசுதேவன் சார், சாந்தி திரையரங்க நிழற் படங்களை என்னால் பார்க்க இயலவில்லை. இதற்கு முன் பதிந்த பல நிழற்படங்களும் எனக்கு display ஆகவில்லை.
.
X symbol மட்டும்தான் display ஆகிறது.

vasudevan31355
26th August 2011, 07:06 PM
தவப் புதல்வனின் சாந்திதிரையரங்கின் நிழற்படங்கள் .

தவப்புதல்வன் திரைப் படத்தில் K.R.விஜயா அவர்கள் சாந்தி திரை அரங்கில் நடிகர் திலகத்தின் 'பாபு' திரைப் படத்தை காண வருவதாக ஒரு காட்சி. அப்போது நம் சாந்தி திரை அரங்கின் அற்புத வடிவம். தியட்டேரின் மேல் முகப்பில் நம் நாட்டு தேசியக் கோடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பாருங்கள்.


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002062074.jpg


பாபு படத்தில் நடிகர் திலகமும், விஜயஸ்ரீ அவர்களும் தோன்றும் பேனர் மற்றும் படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தைப் பாருங்கள்.


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002066044.jpg


சாந்தி தியேட்டரின் உள்ளே நம் அன்பு தெய்வத்தின் 'பாபு' பட ஸ்டில்களை காணுங்கள். வயதான கெட்-அப்பில் நடிகர் திலகம் இருக்கும் ஸ்டில்லும், கைவண்டியை அழகாக பிடித்திருக்கும் ஸ்டில்லும் அப்படியே அள்ளுகின்றன.
( ஸ்டில் போர்டை கண்டதும் நம் அன்பு பம்மலார் தான் நினைவுக்கு வருகிறார்).


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002078693.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1_VOB_002076491.jpg


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
26th August 2011, 07:12 PM
தவப்புதல்வன் நிழற் படங்கள்


ஸ்டைல் பாடகர் நிர்மல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_000895749.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_002758075.jpg


தான்சேன் புலவரின் கம்பீரத் தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_002009318.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_04_1VOB_001899331.jpg


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
26th August 2011, 10:22 PM
dear raghavendran
Thank you very much for inviting my paricipation in the hub most of our friends pammalar murali vasudevan are contributing more inf apart from yours and hub going very good nowadays. however I will also soon take active participation.
recent editions are wonderful. my birthday greetings to sovaji peravai secretary; mr chandrasekaran.
hope SIVAJI's manimandapam plans will take a shape into reality in th coming days. LET US WORK HARD TO ACHIEVE THIS OBJECT IT SHOULD BE OUR GOAL.
WITH GREETINGS
RAMAJAYAM

Message posted by our beloved Ramajayam Sir in another thread, and brought here.

Thank you Sir,

Raghavendran

RAGHAVENDRA
26th August 2011, 10:25 PM
Dear Vasudevan,
Your images of Thavapudhalvan are fantastic. Particularly the national flag flying on the mast of Shanti Theatre. I presume it might have been the Republic Day of 1972, and 101st Day of Babu (18.10.1971 date of release), the day of release of RAJA. Because those days national flag were hoisted only on Republic Day and Independence Day.

Thank you for the superb stills

Raghavendran

pammalar
26th August 2011, 11:05 PM
டியர் வாசுதேவன் சார்,

"தாயே உனக்காக" திரைக்காவியம் குறித்த கண்ணோட்டம், கிடைத்தற்கரிய பாடலின் வீடியோ மற்றும் நிழற்படம் அனைத்தும் மிக அருமை !

"பாபு" திரைக்காவியத்தை 'சாந்தி'யில் பார்க்க வந்தார் கே.ஆர்.விஜயா. 'பைலட்'டில் வெளியான "தவப்புதல்வன்" திரைக்காவியத்தை 'சாந்தி'யில் மறுவெளியீடு செய்து அனைவரையும் பார்க்கவைத்துவிட்டீர்கள் நீங்கள் !

"தவப்புதல்வன்" ஆல்பம் பிரமாதம் !

பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 11:14 PM
டியர் பாலா சார்,

தாங்கள் அளித்துள்ள சுட்டிக்கும், பதிவுகளுக்கும் முத்தாய்ப்பான நனறிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 11:24 PM
டியர் ராகவேந்திரன் சார்,

"சாணக்கிய சந்திரகுப்தா" Stills மற்றும் Facts எல்லாம் கிடைத்தற்கரியவை. நன்றி கலந்த பாராட்டுக்கள் !

Dear Ramajayam Sir,

My sincere thanks for your whole-hearted praise !

Eagerly looking forward to your posts !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2011, 11:40 PM
டியர் சந்திரசேகரன் சார்,

Once again a Very Very Happy Birthday to You ! Many Many More Happy Returns !

பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கே நாங்கள் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்க, பதிலுக்கு தாங்கள் நன்றி தெரிவித்ததோடு தங்களிடம் மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த ஈடு-இணையற்ற பொக்கிஷங்களை இங்கே எங்களுக்கு தங்களது பிறந்தநாள் அன்பளிப்புகளாக அளித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்களே !

தங்களுக்கு நமது திரியின் சார்பில் பொன்னான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2011, 03:14 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

அரிய நிழற்படங்கள்

பேசும் படம் : ஏப்ரல் மலர் 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4439a-1.jpg


ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : பிலிமாலயா : 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4443a-1.jpg

அடுத்த பதிவில் நிறைகிறார்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2011, 03:49 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

தவப்புதல்வன்

[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி

அரிய நிழற்படங்கள் : பேசும் படம் : மே 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4441a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4450a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th August 2011, 04:21 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

சாணக்கிய சந்தரகுப்தா(தெலுங்கு)

[மாமன்னன் அலெக்ஸாண்டராக கௌரவத் தோற்றம்]

[25.8.1977 - 25.8.2011] : 35வது ஆண்டின் தொடக்கம்

காவிய விளம்பரம் [மொழி மாற்றம்/Dubbing]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4451a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
27th August 2011, 08:05 AM
டியர் ராகவேந்திரன் சார்,

என் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் சாணக்ய சந்திரகுப்தா பற்றிய நிழற் படங்கள் மற்றும் பட விவரப் பதிவுகள் அனைத்தும் அருமை. நன்றி.

அன்பு பம்மலார் சார்,

எங்கள் உளம் கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். தவப் புதல்வனைப் பற்றிய ஆவணப் பதிவுகள், கிடைத்தற்கரிய நிழற் படங்கள், குறிப்பாக கண்ணதாசன்,c.v.r, பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் சர்வ சாதரணமாய் அமர்ந்துள்ள பிலிமாலயாவின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் கண்களிலேயே தங்கி நகர மறுக்கிறது, சூப்பர்.

டியர் சந்திரசேகரன் சார்,

அற்புதமான முக்கனிகளை எங்களுக்கு உங்கள் பிறந்த நாள் பரிசாக அளித்து விட்டீர்கள். தீஞ்சுவையாக இனித்தன. நடிகர் திலகத்தை நேரிலே சந்தித்த சந்தோஷத்தை அளித்தது அவர் தங்களுக்கு கையொப்பமிட்டு அளித்த அந்த அருமையான புகைப்படம். விசிட்டிங் கார்டும் அருமை. கிடைத்தற்கரிய பொக்கிஷம். (என்ன ஒரு ரசனை அவருக்கு!) நன்றி சார்!.

அன்பு பாலா சார்,


தாங்கள் அளித்துள்ள சுட்டியும், பதிவுகளும் மறக்க இயலாதவை. நன்றி!

மற்றும் அனைத்து நல் உள்ளங்களின் அருமைப் பதிவுகளுக்கும் என்னுடைய இதய பூர்வமான நன்றிகள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
27th August 2011, 08:38 AM
மருத நாட்டு வீரனின் மாறு பட்ட வேடங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/nadigar_thilagam_various_poses_from_marutha_naat.j pg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

kumareshanprabhu
27th August 2011, 10:33 AM
thank u pammalar sir

all the best to shekar

Raghavendra sir

can you please add Engamama ellorum nala vala song in you tube sir

pammalar sir thank u again

KCSHEKAR
27th August 2011, 10:46 AM
முத்தான முதல் வாழ்த்தை அளித்த திரு.ராகவேந்திரன் அவர்களுக்கும், வாழ்த்தை வழங்கி பாராட்டிய நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும், திரு. பம்மலார் அவர்களுக்கும் நன்றி.

தொடரும் தவப்புதல்வன் பதிவுகள் மற்றும் சந்திரகுப்த சாணக்கியா தகவல்களுக்கு பாராட்டுக்கள்.

vasudevan31355
27th August 2011, 10:50 AM
உலகின் முதலிசை தமிழிசையே
உலகின் முதல்தர நடிகர் நம் தவப்புதல்வனே

நடிகர் திலகமும், அவரது இனிய நண்பரும் மலையாளத் திரைப்பட நடிகருமான திரு.திக்குரிசி சுகுமாரன் நாயர் அவர்களும் இணைந்து நடித்த அற்புதமான பாடல் காட்சி. காலத்தால் அழியாத கானம். அதற்கு உதட்டசைவுகளாலும், அங்க அசைவுகளாலும் உயிர் கொடுக்கும் நடிகர் திலகம். இதோ அந்த அற்புதமான பாடல் காட்சி....


http://www.youtube.com/watch?v=PGl6vdkTGQk&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

mr_karthik
27th August 2011, 11:51 AM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். (நேற்று இணையத்துக்கு வரவில்லை. அதனால்தான் தாமதம்). தாங்கள் அளித்த பொக்கிஷங்கள் மூன்றும் அரியவை. அவற்றை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கியமைக்கு நன்றிகள். எங்கெங்கோ பிறந்தவர்களை இங்கே ஒன்றாக்கிய நடிகர்திலகம் என்னும் அன்புக்கயிறு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த தங்களையும் எங்களோடு இணைத்து விட்டது. இனி நம் வாழ்நாள் முழுதும் நமக்குள் பிரிவில்லை.

சிவாஜி சமூக நலப்பேரவை மூலம் தாங்கள் ஆற்றிவரும் பணிகள் அளவிடற்கரியது. பாராட்டுக்குரியது. நடிகர்திலகத்தோடு நெருங்கிப்பழகும் பேறு பெற்ற நீங்கள் எங்களில் ஒரு பாக்கியசாலி.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணிக்காகவே தாங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.

mr_karthik
27th August 2011, 12:15 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'தவப்புதல்வன்' மேளா மிக மிக அருமை. கிடைத்தற்கரிய அரிய பொக்கிஷங்களை, பல்வேறு பத்திரிகைகளில் திரட்டிவற்றை அள்ளிக்குவித்து விட்டீர்கள். விளம்பரங்கள், ஸ்டில்கள், செய்தித்துணுக்குகள், விமர்சனங்கள் அனைத்தும் மிகப்பிரமாதம். அதிலும் அனைத்து கலைஞர்களுடனும் பாலாஜி, சி.வி.ஆர். ஆகிய வெளியாரும் இடம்பெற்றிருக்கும் அந்த புகைப்படம் கண்கொள்ளாக் காட்சி.

ஆனந்த விகடன் விமர்சனம் மனதை வருத்தப்படுத்தியது. படத்தில் எவ்வளவோ சிறப்புக்கள் இருந்தும் அவற்றைக் குறிப்பிடாமல், குறைகளை மட்டும் லென்ஸ் வைத்துத் தேடியெடுத்து சொல்லியிருக்கின்றனர். அவர்களின் முகத்தில் கரி பூசுவது போல படம் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடை போட்டது.

இரண்டு விமர்சனங்களிலும், அசத்தலான நான்கு பாடல்களை அமைத்துத் தந்த மெல்லிசை மாமன்னரைப்பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்களில் ஆங்கிலப்பாடல்கள் இடம்பெறுவது அபூர்வம். அதிலும் வங்கத்திலிருந்து அஜீத்சிங் என்பவரைக்கொண்டு வந்து பாடச்செய்து படமாக்கப்பட்டது.

பிற்காலத்தில் வெறும் தாரை தப்பட்டை அடித்தவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடிய பத்திரிகைகள், நல்ல இசையத்தந்த மெல்லிசை மன்னரைக் கண்டுகொள்ளவில்லை. நடிகர்திலகத்தைப் போலவே மீடியாக்களால் வஞ்சிக்கப்பட்ட இன்னொரு சாதனையாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

எழுபதுகளின் மத்தியிலிருந்து சுமார் 25 ஆண்டு காலம் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தார். இப்போதுதான் சில டிவி சேனல்கள் அவரை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

தவப்புதல்வன் வெளியீட்டு நாள், மற்றும் 100வது நாள் விளம்பரங்கள் அருமை. தினத்தந்தியில் 50-வது நாள் விளம்பரம், தமிழ்நாட்டிலுள்ள 14 தியேட்டர் பெயர்களுடன் வெளிவந்திருந்தது நினைவில் உள்ளது.

தங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள். தந்தவைக்கும் நன்றி... தர இருப்பவைக்கும் நன்றி...

KCSHEKAR
27th August 2011, 12:33 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

எங்கெங்கோ பிறந்தவர்களை இங்கே ஒன்றாக்கிய நடிகர்திலகம் என்னும் அன்புக்கயிறு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த தங்களையும் எங்களோடு இணைத்து விட்டது. இனி நம் வாழ்நாள் முழுதும் நமக்குள் பிரிவில்லை.


திரு. கார்த்திக் அவர்களே - இதயத்தைத் தொட்ட தங்களின் இனிய வாழ்த்திற்கு பல நூறு நன்றிகள்

J.Radhakrishnan
27th August 2011, 01:38 PM
டியர் சந்திரசேகர் சார்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வேலை பளு காரணமாக இரு தினங்களாக இங்கு வர முடியவில்லை, தாங்கள் அளித்துள்ள அறிய பொக்கிஷங்களுக்கு நன்றி!

J.Radhakrishnan
27th August 2011, 01:50 PM
டியர் பம்மலார் சார், வாசுதேவன் சார்,

தாங்கள் அளித்துள்ள தவப்புதல்வன் நிழற்படங்கள் பிரமாதம், குறிப்பாக கண்ணதாசன், பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் உள்ள ஸ்டில் அறிய ஒன்று.

வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

KCSHEKAR
27th August 2011, 02:03 PM
நன்றி திரு.ராதா அவர்களே

HARISH2619
27th August 2011, 02:05 PM
Just browsing thro' the older pages of NT thread.In the part-1 one mr.nilavupriyan's post read like this:
one of my favourites is navarathiri.
nowadays all the actors are so much emphasising on changing the body.but shivaji is amazing in that movie.
1)the drunken and killer shivaji are fat
2)the maapillai is lean
3)the farmer character is round
4)the police offiecr look to be tight muscled
5)the doctor shivaji looks perfectly as an aged one
excellent......................................... .....

many of the hubbers who were there in that thread like nerd,shakthiprabha,s.balaji,stranger,m_23_bayarea are missing now.What a superb posts by all of them.I kindly request them all to come here again and share their valuable posts on NT.

vasudevan31355
28th August 2011, 02:10 AM
திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thayae_unakkaaga_vob_001634850.jpg

அன்பு நெஞ்சங்களே!

மனதில் மகிழ்ச்சியும், களிப்பும், உவகையும், சந்தோஷமும் (எல்லாம் ஒன்று தானே என்கிறீர்களா?) பூரணமாய் நிறைகிறது. எதனால்?... ஆம்.திலகத்தின் புகழை திக்கெட்டும் பரப்பும் நம் திரி 'தூள்' கிளப்பிக் கொண்டிருப்பதனால். ஏழாவது பாகம். பக்கங்களோ முன்னூறைத் தாண்டி. பீடுநடை போட்டு பிரமாதப் படுத்திக் கொண்டிருக்கிறது நம் திரி.

பணிக்கு பேருந்தில் சென்றால் கூட அருகில் அமர்ந்துள்ள நண்பர் இறங்குமிடம் வந்து விட்டது என்று நினைவு படுத்தும் அளவிற்கு திரியை பற்றிய சிந்தனையே எப்போதும் எனக்கு. இரவில் உறக்கத்திலும் கூட திரியின் கனவுதான். திலகத்தைப் பற்றிய நினைவுதான்.

ஜெட் வேகம், ராக்கெட் வேகம் என்பார்களே அவர்கள் நம் திரியின் வேகத்தையும், வளர்ச்சியையும் கண்டால் என்ன சொல்வார்களோ?.

அற்புதமான ஆய்வுகள். அனுபவசாலிகளின் அலசல்கள். ஆதார பூர்வமான தகவல்கள். ஆச்சர்யமான உண்மைகள். அற்புதம்..அபாரம்...

ராப்போதும் இமை சோராமல் திரியின் பழுத்த அனுபவசாலியாய் பற்பல ஆய்வுகளையும் ,ஆவணங்களையும்,சுட்டிகளையும், நிழற் படங்களையும் நமக்களித்து விந்தைகள் பல புரியும் வித்தகர் ரசிக வேந்தர் திரு.ராகவேந்திரன் சார்.....

ஆவணச் செம்மல், ஆதாரக் குவியல்களை அள்ளித் தரும் நம் அன்பு பம்மலார் சார்...

காவிய நாயகனின் அருமைகளையும், பெருமைகளையும் காலம் தவறாமல் கவின்மிகு கட்டுரைகளில் வழங்கும் அன்பு கார்த்திக் சார் ...

பார் போற்றும் பாசமலரின் புகழை பாங்காய் எடுத்துரைக்கும் பார்த்தசாரதி சார்...

சரளமான நடையில் சரித்திரம் படைக்கும் அன்பு சகோதரி சாரதா ....

முத்து முத்தாய் வார்த்தைகளைக் கோர்த்து முடிசூடா மன்னனின் புகழை முத்தாய்ப்பாய் வழங்கும் முரளி சார் ...

சரித்திர நாயகனின் சாகசங்களை சத்தாய் நமக்கு சமர்ப்பணம் செய்யும் சதீஷ் சார்...

பாசமும் நேசமும் கலந்து பராசக்தியின் மைந்தன் புகழ் பாடும் பாலா சார்,

குவலயத்தோர் போற்றும் எங்கள் குலவிளக்கைக் கொண்டாடும் குமரேசன் சார்...

சந்தடி இல்லாமல் சாகச வித்தைகள் புரியும் சந்திர சேகரன் சார் ...

திரியில் பங்கு கொண்டு திகட்டாத தேனமுது படைக்கும் இன்னும் பல பாச நெஞ்சங்கள்... பண்பட்ட உள்ளங்கள்.

'திரி'த்தேரின் வடம் பிடிக்கும் 'வரலாற்று நாயகனின்' வஞ்சமிலா நல்இதயங்கள்

உள்ள வரை...

நமது திரி...

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி... வற்றாத நீரூற்று..தங்கச் சுரங்கம்...வைரப் பெட்டகம்..சாதனைக்கோர் சான்று. உண்மைக்கோர் உரை கல்.

நமது திரி சரித்திரப் புகழ் பெறப் போவது திண்ணம். அது ஒன்றே நமது எண்ணம்.

எனவே தான் சொல்கிறேன்.

திருஷ்டி சுற்றிப் போடுங்கள் நமது திரிக்கு...

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
28th August 2011, 02:49 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது பாராட்டுக்களுக்கு எனது அன்பான நன்றிகள் !

வீரத்திலகத்தின் "மருதநாட்டு வீரன்" - 'மாறுபட்ட வேடங்கள்' ஆல்பம் அட்டகாசம் !

ஈரேழு பதினான்கு லோகங்களிலும் முதல்தர நடிகரான நம் தவப்புதல்வனின் உயிர்ப்பான கம்பீர நடிப்புக்கு கட்டியம் கூறும் பல சிறந்த பாடல்களில், முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும் 'உலகின் முதலிசை தமிழிசையே' பாடலின் வீடியோவை பதிவிட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் ஸ்பெஷல் நன்றிகள் !

Dear kumareshanprabhu Sir, Thanks !

டியர் சந்திரசேகரன் சார், நன்றி !

டியர் ஜேயார் சார், மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 03:44 AM
டியர் mr_karthik,

பாராட்டுக்கு நன்றி !

"தவப்புதல்வன்" விகடன் விமர்சனம் குறித்த தங்களது வருத்தம் நியாயமானது. 1970களுக்குமுன் விகடன் திரைப்பட விமர்சனங்கள் பெருமளவுக்கு neutralஆக இருந்தன. எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே அந்த நடுநிலையிலிருந்து தடம் புரண்டு பெருமளவுக்கு ஒருதலைப்பட்சமான படவிமர்சனங்கள் வரத்தொடங்கி விட்டன. இதை என்னைவிட தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். 1970களின் தொடக்கத்தில் வெளிவந்த விகடன் விமர்சனங்களின் பின்னணி பற்றி முன்னணி எழுத்தாளர் நமது முரளி சார் ஒரு சிறப்புப் பதிவு அளிப்பார். அதில் பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

"தவப்புதல்வன்" விமர்சனத்துக்கு, மக்கள் விகடனுக்கு கரி பூசினர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், உண்மை. "வசந்த மாளிகை" விமர்சனத்துக்கு சர்வதேச அளவில் சரியான சாட்டையடியே கொடுத்தார்கள் என்பது தங்களுக்கு நினைவிருக்கும். இந்தியாவில் 200 நாட்களும், இலங்கையில் பொன்விழாவும் [நேரடியாக 41 வாரங்கள் / ஷிஃப்டிங்கில் 50 வாரங்களுக்கும் மேல்] கொண்டாடிய "வசந்த மாளிகை", எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட விண்ணை முட்டும் வெற்றியையல்லவா பெற்றது.

மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி. பற்றிய தங்களது ஆதங்கமும் நியாயமான ஒன்றே. இசையமைப்பாளர்கள் என்றால் இரண்டாம்பட்சமாக நினைக்கும் எண்ணம் 1930களிலிருந்தே இருந்திருக்கிறது. தமிழ்த்திரை இசைக்கு முதல் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த திரை இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அவர்கள், 30களிலும், 40களின் தொடக்கத்திலும் இசையமைத்த படங்களில் சிலவற்றில், சங்கீத டைரக்டர்(இசையமைப்பாளர்) என்ற முறையில், அவரது பெயரை Title Cardல் காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். இதை அவரே குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறாராம்.

"தவப்புதல்வன்" 50வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் பதிவிடுகிறன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 04:09 AM
டியர் வாசுதேவன் சார்,

நமது திரிக்கு தாங்கள் திருஷ்டி சுற்றி போடச் சொன்னது மிகச் சரியே !

தங்களது பதிவு பிரமாதம் !

நமது திரியில் நடிகர் திலகத்தின் காவியங்கள் குறித்த பற்பல கண்ணோட்டங்கள், திறனாய்வுகள் இதுவரை பதிவிடப்பட்டிருக்கின்றன. தற்பொழுது தாங்கள் நமது திரி என்னும் காவியக்களஞ்சியத்தை-கலைப்பெட்டகத்தை-தகவல்சுரங்கத்தை-ஆவணக்காப்பகத்தை குறித்து திறனாய்வு-கண்ணோட்டம் அளித்து 'அசத்தோ அசத்து' என்று அசத்திவிட்டீர்கள் !

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 04:40 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

கிருஷ்ணன் வந்தான்

[28.8.1987 - 28.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4456a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 05:33 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

ஜல்லிக்கட்டு

[28.8.1987 - 28.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்

பொக்கிஷப் புதையல்

காவியக்காட்சிகள் : பொம்மை : 16-31 ஆகஸ்ட் 1987
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4459a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4460a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4457a-1.jpg


100வது நாள் விழா : பொம்மை : ஜனவரி 1988
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4453a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 05:51 AM
வருகிறார்.....

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4461a-1.jpg

vasudevan31355
28th August 2011, 07:26 AM
அன்பு பம்மலார் சார்,

நன்றி சார்! கண்ணைக் கவரும் அந்த ஜல்லிக் கட்டு (பொம்மை இதழ்) காட்சி உண்மையிலயே தாங்கள் கூறியிருப்பது போல ஒரு காவியக் காட்சி தான். நமது அண்ணல், நடிப்பு வள்ளல் நிற்கும் ஸ்டைலைப் பாருங்கள். முதுமை ஒரு தடை அல்ல நம் முதல் தர நடிகருக்கு. அன்றும், இன்றும் ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் அவர் ஒருவரே. இந்த போஸுக்காகவே ஆயிரம் முறை தங்களைப் பாராட்டலாம்.

"முதல்வரின் இந்த வாழ்த்து இளைய தலைமுறையினர் உற்சாகத்துடன் தொடர்ந்து வழி நடத்த உதவும்" என்ற ஜல்லிக் கட்டு 1௦௦-ஆவது நாள் விழாவில் நம் அருமைத் திலகம் அவர்கள் பேசியிருப்பது இளம் தலைமுறையினர் மீது அவர் கொண்ட அன்பையும், பாசத்தையும், அவர்கள் வளர்ச்சியின் மேல் அவருக்கிருந்த அக்கறையையும் பிரதிபலிக்கிறது. ஜல்லிக்கட்டு 100-ஆவது நாள் விழாப் பதிவுகள் மனதை விட்டு நீங்காப் பதிவுகள். ஜோராக இருந்தது,

எங்கள் ஆசை ராசாவைக் காணக் காத்திருக்கிறோம்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
28th August 2011, 08:35 AM
பம்மலார் என்றால் பட்டையைக் கிளப்புதல் என்று பொருளோ... கலக்கல் சார்...

அன்புடன்

vasudevan31355
28th August 2011, 08:51 AM
டியர் கார்த்திக் சார்,

திறமைசாலிகளை ஏதோ கடமைக்குப் பாராட்டி விட்டு, உப்புசப்புக்குக் கூட லாயக்கற்றவர்களை ஒப்புயர்வில்லாதவர்கள் என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை தமிழனுக்கு ஈடு இணையாக எவரையும் காட்டி விட முடியாது.

நீங்கள் வெளிபடுத்தியிருப்பது உங்கள் தனிப் பட்ட ஒருவரின் ஆதங்கம் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மனசாட்சியுள்ள அத்தனை நெஞ்சங்களின் உள்ளக் குமுறல் அது.

நடிகர் திலகம் ஆகட்டும்.. எம்.எஸ். வி ஆகட்டும்..டி.எம்.எஸ் ஆகட்டும் இருட்டடிப்புப் பட்டியல் இமயமலைத் தொடர்ச்சியா...........ய் நீண்டு கொண்டே போகும். தமிழ் நாட்டின் தலை விதி அது.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, சொற்ப படங்களே ஆனாலும் அதி அற்புதமாய் பாடல்களுக்கு இசையமைத்து செவிக்கு விருந்து படைத்த இசையமைப்பாளர் ஷியாம்..(ஆனந்த தாகம்.. உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே ..)

'செம்மீன்' மலையாளக் காவியத்தின் அற்புத இசைக்குக் காரணமாய் விளங்கிய சலீல் சௌத்ரி. (உள்ளமெல்லாம் தள்ளாடுதே...)

'நீர்க்குமிழி'யிலிருந்து நடிகர் திலகத்தின் 'நிறைகுடம்' போன்ற படங்களின் பாடல்களுக்கு அபூர்வ மெட்டுக்கள் தந்து காதுகளை ரீங்காரமிடச் செய்த காலம் சென்ற இசை அமைப்பாளர் V.குமார். (விளக்கே நீ கொண்ட ஒளி நானே..)

'காற்றுகென்ன வேலி' படத்தின் அற்புதமான மெல்லிசைப் பாடல்களுக்கு தேனான இசை வடிவம் தந்து அத்தோடு காணாமல்போன சிவாஜி ராஜா. (ரேகா.ரேகா.. )

மற்றும் v.s.நரசிம்மன் (ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த..)

இன்னும் எவ்வளவோ திறமைசாலிகள்.

வந்த வேகத்தில் காணாமல் போனவர்களும் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிப் போராடி அலுத்து, களைத்துப் போனவர்களும் ஏராளம்..ஏராளம்...

ஆனால் திறமையற்றவர்களை முதல் இடத்தில் வைத்து மகிழ்வதில் சில ஏன் பல மீடியாக்கள் காட்டுவது தாராளம்..தாராளம்..

(நடிகர் திலகத்தின் அற்புதமான மாபெரும் வெற்றி பெற்ற வெள்ளி விழாக் கண்ட 'தியாகம்' படத்திற்கும் இதே நிலைமை தான். விகடன் மோசமான விமர்சனம் எழுதியது. தியாகம் 100-ஆவது நாள் பத்திரிகை விளம்பரத்திலோ அல்லது வெள்ளி விழா விளம்பரத்திலோ என்று நினைக்கிறேன்.. 'தவறாக விமர்சனம் செய்த விகடர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்தீர்கள்' என்று தயாரிப்பாளர் சார்பில் பதிலடி கொடுத்திருந்ததாக நினைவு.)

நன்றி சார்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
28th August 2011, 01:02 PM
ஜல்லிக்கட்டு வெள்ளிவிழா துவக்க ஆண்டு.

'ஸ்டைல் கிங்'- அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஏரியில் ஒரு ஓடம் ...ஓடம்...


http://www.youtube.com/watch?v=WaPmBJBlRjU&feature=player_detailpage


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

sankara1970
28th August 2011, 01:26 PM
மறைந்த சசி குமார் அவர்கள் பற்றியா பதிவு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது

sankara1970
28th August 2011, 01:30 PM
தூக்கு தூக்கி என்ற பேரே அருமை-t.m.s நம்மவருக்கு படிய முதல் படம்-நல்ல பாடல்கள்-

vasudevan31355
28th August 2011, 01:41 PM
26-8-2011 அன்று தினகரன் 'வெள்ளிமலர்' இணைப்பில் திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் எழுதும் 'old is gold' தொடரில் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பற்றிய அவரது கட்டுரை.


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/scan0007.jpg



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/scan0008.jpg

திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கும் மற்றும் தினகரன் தின இதழுக்கும் நன்றி!



அன்புடன்,


நெய்வேலி வாசுதேவன்.

sankara1970
28th August 2011, 01:45 PM
நேற்று இரு மலர்கள் பாடல் கட்சிகள் பார்த்தேன்-மாதவி பொன் மயிலாள், மன்னிக்க வேண்டுகிறேன் ,மகாராஜா ஒரு மகாராணி ரொம்ப அருமை.
NT ரொம்ப ரொமாண்டிக்கா இருப்பார். பத்மினி உடன் நல்ல chemistry.

sankara1970
28th August 2011, 01:59 PM
i think u have to change internet settings-

sankara1970
28th August 2011, 02:07 PM
பிறந்த நாள் வாழ்த்துகள் -நீங்க கொடுத்து வைத்தவர்-நடிகர் திலகத்தின் அருகில் இருந்து பணியாற்றியதால்

RAGHAVENDRA
28th August 2011, 02:47 PM
கிருஷ்ணன் வந்தான் படக்காட்சி...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/KrishnanVandhancollagefw.jpg

vasudevan31355
28th August 2011, 05:41 PM
'கிருஷ்ணன் வந்தான்' பத்மஸ்ரீ அவர்களின் நிழற் படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000889816.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_003381271.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2_VOB_000521767.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2_VOB_003997218.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
28th August 2011, 07:24 PM
டியர் குமரேசன் சார்,

உங்கள் விருப்பத்திற்காகவும், நம் எல்லோருக்காகவும் இதோ நீங்கள் கேட்ட அருமையான பாடல். (ரசிக வேந்தர் திரு ராகவேந்திரன் அவர்கள் சார்பாக).

எங்க மாமா திரைப் படத்தில் இருந்து நம் இதயம் தொட்ட 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்' பாடல் ஒலி-ஒளி வடிவில். ரசிக்க ஆரம்பிக்கலாமா..


http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12334

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

Murali Srinivas
28th August 2011, 08:39 PM
Dear All,

After Saradha and Raghavendran Sir it was the turn of my computer to go out of service. It is yet to be fixed. Posting this from friend's place. Would resume the posting once it is ready.

சுவாமி சொன்னது போல் நாங்கள் பலமுறை விகடனின் நிலைப்பாடு பற்றி பேசியிருக்கிறோம். அவர்கள் அப்படி எழுதியதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப் பற்றி விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன். அதே போல் குமுதம் பற்றி [நடிகர் திலகத்திற்கு பெருமளவில் அந்த நாளில் ஆதரவாக இருந்த இதழ்] நண்பர் சாரதி எழுதுவார்.



விரைவில் சந்திப்போம்!

அன்புடன்

Murali Srinivas
28th August 2011, 08:41 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர் சார். இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்.

[தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். காரணம் மேலே குறிப்பிட்டிருப்பதுதான்].

அன்புடன்

pammalar
28th August 2011, 09:10 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

சிறந்த இசையமைப்பாளர்களைப் பற்றி தாங்கள் அளித்த mini sketch உண்மையிலேயே superb !

ஏரியில் ஒரு ஓடம்...ஓடம்....ஆஹா ! ஆஹா ! What a song !! What a performance !!! ஸ்டைல் சக்கரவர்த்தி என்றென்றும் நமது சிங்கத்தமிழன்தான். பாடலை வீடியோவாக வழங்கிய தங்களுக்கு "வீடியோ விற்பன்னர்" என்றே பட்டமளிக்கிறேன் !

"தில்லானா மோகனாம்பாள்" குறித்து திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கருத்தோவியத்தில், 'தினகரன்' வெள்ளிமலரில் வெளியான கட்டுரை மிக அருமை !

"கிருஷ்ணன் வந்தான்" ஆல்பம் அற்புதம் !

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"கிருஷ்ணன் வந்தான்" காவியக்காட்சிகள் அசத்தல் !

டியர் முரளி சார், நெஞ்சார்ந்த நன்றி !

டியர் sankara1970, மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 10:10 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் ஆச ராசாவே...

[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி

வரலாற்று ஆவணம்

தினமணி [வெள்ளிமணி] : 30.1.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4462aa-1.jpg

நடிகர் திலகத்துக்கு ஜோடியாக நடிகை ராதிகா நடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 10:57 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் ஆச ராசாவே...

[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி

வரலாற்று ஆவணங்கள்

விகடன் பேப்பர் : 20.2.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4464a-1.jpg


நடிகர் திலகம் பற்றி நடிகை சுவலட்சுமி : தினமணி : 11.9.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4466a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th August 2011, 11:45 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் ஆச ராசாவே...

[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

பாடல் கேசட் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4467a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th August 2011, 12:03 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் ஆச ராசாவே...

[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4468a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th August 2011, 01:51 AM
Dear Pammalar,
Your coverage of Krishnan Vandhan and En Aasa Raasaave, prove your meticulous and sincere involvement in preserving documentary sources of NT's achievements and filmography. Please keep it up and accept my sincere appreciations.

A small collage of En Aasa Raasaave images, dedicated to you:

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ENASAIRASAVECOLLAGEfw.jpg

Raghavendran

RAGHAVENDRA
29th August 2011, 02:02 AM
டியர் முரளி சார்
தங்களுடைய கணினி எங்களுக்காக சீக்கிரம் சரியாகி விடும். தங்கள் பதிவுகளை வழி மேல் விழி வைத்து எதிர் நோக்கி நிற்கின்றோம், மய்யம் எனும் ஜன்னலின் வழியாக...

அன்புடன்

RAGHAVENDRA
29th August 2011, 02:03 AM
டியர் வாசுதேவன் சார்,
ஜல்லிக்கட்டு திரைக்காவியத்தின் பாடல் காட்சியை பதிவிட்டு அசத்தியுள்ளீ்ர்கள். இனிமேல் நம்மை நாமே பாராட்டுவது போல் தான் அனைவரும் தத்தம் பங்கினைச் செவ்வனே செய்து வருகின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் அந்த மஹானின் அருளாசி ஏராளமாய் உண்டு.

குமரேசன் சார் கேட்ட எங்க மாமா பாடலுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

அன்புடன்

RAGHAVENDRA
29th August 2011, 02:07 AM
அனைவருக்கும் ஓர் இனிய செய்தி காத்திருக்கிறது. சேவா ஸ்டேஜ் எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்கள் நாடமாக நடித்து நடிகர் திலகம் பண்டரிபாய் சந்திரபாபு மற்றும் பலர் நடித்து எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள் இசையமைத்த கண்கள் திரைக்காவியம் ஒளித்தகடாக வர உள்ளதாகவும் தற்சமயம் அப்படத்தை ஒரு நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் விரைவில் அதனை வெளியிடும் வாய்ப்பு உள்ளதாகவம் செய்தி வந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இதை விட ஆனந்தம் இருக்குமோ. சந்திரபாபுவின் குரலில் ஒரு பாடல், எஸ்.வி.வெங்கட்ராமன் குரலில் ஒரு பாடல் என அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும் இனிய காவியம்.

விரைவில் வரட்டும் என எதிர்பார்ப்போம்

அன்புடன்

RAGHAVENDRA
29th August 2011, 02:13 AM
அடியேனுடைய பின்னணி வாக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் திரைச்சங்கத்திற்கான துவக்கக் கட்ட வேலைகள் விரைவில் துவங்க உள்ளன. இதனையொட்டிய அடுத்த கட்ட நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் விரைவில் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும். உறுப்பினர்களாக விழைவோர் தயாராய் இருக்கும்படியும் இங்கு தங்கள் பெயரை மொழியலாம் எனவும் கூறிக்கொள்ள விழைகிறேன். அனைத்து துவக்கக் கட்டப் பணிகளும் நிறைவடைய சற்று முன்னர் உறுப்பினர்களுக்கான விவரங்கள் முடிவு செய்யப் பட்ட பின்னர், யாரிடம் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என்பதையும் இங்கே எதிர் பார்க்கவும்.

அன்புடன்

pammalar
29th August 2011, 03:49 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் ஆச ராசாவே...

[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி

வரலாற்று ஆவணங்கள்

அரிய நிழற்படம் : தினத்தந்தி : 23.1.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4469a-1.jpg


Shooting Spot News : The Hindu [Friday Review] : 24.4.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4472a-1.jpg


காவிய விமர்சனம் : குமுதம் : 10.9.1998
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4473a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4475a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th August 2011, 04:19 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

என் ஆச ராசாவே...

[28.8.1998 - 28.8.2011] : 14வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

பெங்களூர் 'லாவண்யா' திரையரங்கில் "என் ஆச ராசாவே..." திரைக்காவிய வெளியீட்டின்போது நடிகர் திலகத்தின் மிகப் பெரிய பதாகைக்கு பெங்களூர் ரசிகர்கள் அணிவித்த ராட்சத மலர்மாலைகள்
[புகைப்படம் உதவி : நமது ஹப்பர் திரு.குமரேசன்பிரபு]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/enasairasa1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th August 2011, 04:24 AM
டியர் வாசுதேவன் சார்,

"என் ஆச ராசாவே..." ஸ்டில் அசத்தல் !

நன்றி கலந்த பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th August 2011, 04:27 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

Your Collage is a Classic ! My sincere & humble thanks to you !

"கண்கள்" தகவல் காதுகளில் தேன் பாய்ச்சுகிறது !

'நடிகர் திலகம் திரைச்சங்கம்' திட்டம் மாபெரும் வெற்றியடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

முதல் ஆளாக அடியேன் இச்சங்கத்தில் சேர பணிவுடன் விண்ணப்பிக்கின்றேன் ! அன்புகூர்ந்து ஏற்றுக் கொள்ளவும் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
29th August 2011, 08:26 AM
தேவராட்டக் கலைஞராக 'என் ஆச ராசாவில்' அசத்தும் 'நம் ஆச ராசா'

'கட்டுனன் கட்டுனன் கோட்ட ஒண்ணு ' பாடலுக்கு தேவராட்டக் கலைஞராக நடிகர் திலகம் ஆடும் கரகாட்டமும், முக பாவங்களும் நம்மை அசர வைக்கின்றன. அந்த உணர்ச்சி மயமான பாடல் காட்சியை ஒலி - ஒளி வடிவில் கண்டு பெருமிதம் கொள்வோம் அந்த மகா புண்ணிய புருஷரை இறைவன் நமக்கு அளித்ததற்காக.

இப்பாடலின் ஆரம்பக் காட்சி நம் கண்களில் ரத்தக் கண்ணீரையே வரவழைத்து விடுகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் அந்த உணர்ச்சிக்கடலின் உன்னத நடன அசைவுகள் உடலுக்குள் புகுந்து உயிரை உருக்குகின்றன.

தள்ளாத வயதிலேயும் அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வமும், பிடிப்பும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

நடிப்பின் இறைவா! இறவாப் புகழ் பெற்ற உண்மைக் கலைஞனே! நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தோமே.. நாங்கள் செய்த புண்ணியம் தான் என்ன!..

இதோ! நம் 'தேவரின்' தேவராட்டம் ...


http://www.youtube.com/watch?v=yUE8PlGvuJs&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
29th August 2011, 10:52 AM
வாழ்த்துக்கு நன்றி திரு.முரளி அவர்களே. உங்களுடைய வழக்கமான விறு விறு பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். திரியைப் பற்றி கவிதை நடையில் அசத்திய வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. பம்மலாரின் தொடரும் ஆகஸ்ட் அற்புதங்கள் (சாகசங்கள்) அருமை. நடிகர்திலகத்தின் திரைச்சங்கம் பற்றிய தகவல்களுக்கும் அதில் பம்மலாருக்கு அடுத்து நானும் இணைந்து செயலாற்றவும் ஆவலுடன் இருக்கிறேன் திரு.ராகவேந்திரன் அவர்களே.

KCSHEKAR
29th August 2011, 10:54 AM
பிறந்த நாள் வாழ்த்துகள் -நீங்க கொடுத்து வைத்தவர்-நடிகர் திலகத்தின் அருகில் இருந்து பணியாற்றியதால்

மிக்க நன்றி திரு.சங்கர்.

vasudevan31355
29th August 2011, 12:38 PM
தங்கள் அன்புக்கு பணிவான என் நன்றிகள் திரு.சந்திரசேகரன் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
29th August 2011, 12:59 PM
அன்புள்ள பம்மலார் சார்,

ஜல்லிக்கட்டு, கிருஷ்ணன் வந்தான், என் ஆச ராசாவே ஆகிய முத்தான மூன்று படங்களின் ஆவணத்தொகுப்புப் பதிவுகளுக்கு மிக்க நன்றி. 'ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு (பொம்மை இதழ்) மிக அருமை. என் ஆச ராசாவே படத்துக்கு குமுதம் பத்திரிகை எழுதிய விமர்சனம் நெஞ்சைத்தொட்டது.

'ஜல்லிக்கட்டு' 100வது நாள் விழா மேடையில் நடிகர்திலகம், மக்கள் திலகம், வில்லன் திலகம் மூவருக்கிடையேயான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான தள்ளுமுள்ளு பற்றி ஏற்கெனவே முரளி சார் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். பொம்மை இதழ் கவரேஜில் அந்த நிகழ்ச்சி மிஸ்ஸிங்.

'என் ஆச ராசாவே' படத்தில் நடிகர்திலகத்துடன் நடித்த அனுபவம் பற்றி 'வங்கத்தாரகை' சுவலட்சுமி குறிப்பிட்டிருப்பது சூப்பர். வழக்கறிஞர் அல்லவா, அதான் மிகச்சரியாக எடைபோட்டுள்ளார். 'படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சிவாஜி சார்தான்' என்று சொல்லியிருப்பது சரியான பஞ்ச். அப்படத்துக்கு பெங்களூர் ரசிகப்பெருமக்கள் சூட்டிய ராட்சத மாலைகள் மலைக்க வைக்கின்றன.

அன்புள்ள வாசுதேவன் சார்,

தில்லானா மோகனாம்பாள் படத்தைப்பற்றி பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கட்டுரையைப் பதிவிட்டமைக்கு நன்றி. 'ஜல்லிக்கட்டு' பாடல் காட்சிக்கும், 'கிருஷ்ணன் வந்தான்' பட நிழற்பட வரிசைக்கும் ஸ்பெஷல் நன்றிகள். இப்பாடலை விட, 'ஏ ராஜா... ஒன்றானோம் இங்கே' என்ற பாடல் காட்சியில் இன்னும் ஸ்டைலாகப் பண்ணியிருப்பார். குறிப்பாக அந்த கருப்பு புல்சூட்டில் சத்ய்ராஜுடன் நடந்து வரும்போது காட்டும் ஸ்டைல், ஒரிஜினல் ஸ்டைல் கிங் இவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்.

அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,

உங்கள் கம்ப்யூட்டர் சரியானதும், மீண்டும் அற்புத, அரிய தகவல் மூட்டைகளுடன் வந்து அசத்துவீர்கள் என்று காத்திருக்கிறோம்.

kumareshanprabhu
29th August 2011, 01:09 PM
superb vasudevan sir

KCSHEKAR
29th August 2011, 01:21 PM
நம் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: NT அவர்களின் கிரஹப்ரவேசம் திரைப்படத்தில் வரும் கிரஹப்ரவேசக் காட்சி புகைப்படம் நமது ரசிகர் ஒருவரின் புதிய இல்லத் திறப்புவிழா அழைப்பிதழிற்கு தேவைப்படுகிறது. திரு.ராகவேந்திரன் அவர்கள் எனக்கு ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தார். ஆனால் அது வீடியோவிலிரிந்து எடுக்கப்பட்டதால் Quality சரியாக இல்லை. நமது ஹப்பர்கள் யாரிடமும் இருந்தால் பதிவு செய்தால் அவருக்கு கொடுத்து உதவ வசதியாக இருக்கும்.

நன்றி

vasudevan31355
29th August 2011, 02:26 PM
'மங்கையர் திலகத்தில்' நடிகர் திலகம் .



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVD-RIPAndhaNaal1954700MBXVIDsubsTamilcreationcomavi_0 05466817.jpg



அன்புடன்,


நெய்வேலி வாசுதேவன் .

vasudevan31355
29th August 2011, 02:52 PM
அன்பு நன்றிகள் திரு.கார்த்திக் சார். விரைவில் உங்களுக்குப் பிடித்த 'ஏ...ராஜா...ஒன்றானோம் இன்று'...பாடல் ஒலி - ஒளிக் காட்சியைத் தர முயற்சி செய்கிறேன். நன்றி சார்.

vasudevan31355
29th August 2011, 03:40 PM
'ஜல்லிக்கட்டு' படத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான ஸ்டைலில் பரிமளிக்கும் 'ஏ...ராஜா..ஒன்றானோம் இன்று' பாடலை திரு.கார்த்திக் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்..


http://www.youtube.com/watch?v=YIbYCQlIs_k&feature=player_detailpage



அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
29th August 2011, 09:37 PM
வீடியோ விற்பன்னர் வாசுதேவன் சார்,

நடிப்பைப் படைத்த இறைவனின் "என் ஆச ராசாவே..." பாடலான 'கட்டுனன் கட்டுனன் கோட்ட ஒண்ணு' பாடலுக்கு பற்பல நன்றிகள் ! இப்பாடலுக்கு முன்னோட்டமாக அமைந்த தங்களின் வர்ணனை பிரமாதம் !

What a divine dance & acting performance !

நமது இதயதெய்வத்தின் புகழ் என்றென்றும் ஓங்குக !

நமது 'வாசு'வின் வசீகரிக்கும் வதனத்தை நேர்த்தியான நிழற்படங்களாக வழங்கிய எங்கள் வாசு சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !

'ஏ.. ராஜா.. ஒன்றானோம் இன்று' பாடலுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

டியர் mr_karthik,

தங்களது பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார், நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th August 2011, 02:39 AM
இங்கு மட்டுமா ! அயல்நாடான இலங்கையிலும்
'சாதனைகளின் சக்கரவர்த்தி சிங்கத்தமிழனே'
என்பதனை அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக
நிரூபிக்கும் அற்புதமான கட்டுரை

வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1987
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4476a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4477a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4478a-1.jpg

இக்கட்டுரையை வடித்த திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும் !

திரு.யாழ் சுதாகர், தற்பொழுது பண்பலை வானொலி அலைவரிசைகளில் [FM Radio Channels] நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி வருகிறார் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
30th August 2011, 06:59 AM
பாசமுள்ள பம்மல் சார்,

எல்லாப் புகழும் அவருக்கே. தங்கள் அன்பிற்கு நன்றி! திரு.யாழ் சுதாகர் அவர்களின் 'சிவாஜி படங்களும், இலங்கை ரசிகர்களும்' (பொம்மைஇதழ்.. அக்டோபர் 1987) கட்டுரையைப் பதிவிட்டு எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டீர்கள். அதி அற்புதமான, போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய ஆவணக் கட்டுரையை அளித்ததற்கு ஆழ்ந்த நன்றிகள்! கடல்களைத் தாண்டி சாதனைகள் புரிவதிலும் சக்கரவர்த்தி அல்லவா நம் அன்புத் தெய்வம்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
30th August 2011, 10:34 AM
சிவாஜி படங்களும் இலங்கை ரசிகர்களும் - பொம்மை கட்டுரை அருமை - பம்மலார் அவர்களின் பதிவுக்கு பணிவான நன்றி.

KCSHEKAR
30th August 2011, 10:37 AM
இன்று பிறந்தநாள் காணும் நண்பர் பெங்களூர் குமரேஷ் அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
30th August 2011, 11:11 AM
Many many happy returns of the Day Kumaresh
Raghavendran

mr_karthik
30th August 2011, 11:53 AM
அன்புள்ள பம்மலார் சார்,

'சிங்கத்தமிழனும் இலங்கை ரசிகர்களும்' என்ற அற்புதக் கட்டுரையை இங்கே பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. சாதனைப்பதிவேடுகள் இங்கு நமது திரியில் வலம் வரத்துவங்கியபின்னர், இத்திரிக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் இங்கு வருகை தரும்போது, 'இன்று பம்மலாரும் மற்றோரும் எதாவது ஒரு அரிய ஆவணத்தை இங்கு பதிப்பித்திருப்பார்கள்' என்ற எதிர்பார்ப்போடு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாவண்ணம் நீங்களும் ஏதாவதொரு கிடைத்தற்கரிய பொக்கிஷப்பதிவை அளித்து வருகிறீர்கள்.

இலங்கையில் 'ராஜா' படத்துக்கு அமைக்கப்பட்ட சுழலும் கட்-அவுட் பற்றியும், வசந்த மாளிகை காவியம் யாழ் நகரில் ஒரே பிரிண்ட்டில் இரண்டு அரங்குகளில் காண்பிக்கப்பட்ட வரலாற்றையும் நமது நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள், 'நடிகர்திலகத்தின் சாதனைச்சிகரங்கள்' தொடரில் குறிப்பிட்டிருந்தார். அதில், 'தகவல் உதவி யாழ் சுதாகர்' எனவும் சொல்லியிருந்தார். அத்தகவல்களை இந்த கட்டுரையின் மூலம் அவர் சேகரித்திருக்கக்கூடும்.

நண்பர் யாழ் சுதாகர் அவர்களைப்பொறுத்தவரை ஒருபக்கச்சார்பின்றி நடுநிலையோடு எதையும் எழுதக்கூடிய பண்பாளர். இதே போல் அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். தமிழை தேனில் குழைத்துத் தரும் அவர் குரலை பலமுறை பண்பலையில் கேட்டிருப்பதுடன், நேயர்கள் பங்குபெற்றுப்பேசும் ஏதோவொரு நிகழ்ச்சியில் ஒரே ஒருமுறை அவரோடு தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். நல்ல மனிதர்.

அவரது அற்புதமான கட்டுரையை எல்லோர் பார்வைக்கும் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி.

kumareshanprabhu
30th August 2011, 12:03 PM
thank you Shekar

thank you for ur wishes Raghavendra sir

vasudevan31355
30th August 2011, 02:07 PM
'கருடா சௌக்கியமா' இரண்டாம் பாகம் ஆய்வுக் கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1avi_000881648-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6avi_000076676.jpg

அன்பு நண்பர்களே!

'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இரண்டாம் பாகத்தை தொடர்கிறேன்.

இனி இரண்டாம் பாகம்.

நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.

படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.

சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.

உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க ... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.

தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.

"ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது...என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...

என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).

நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!

தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார். அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.

டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.

ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்

"திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
என்பார்.
அதற்கு N.T.
"நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..
ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..
ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..
தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",

என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.

அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.

தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...

N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...
வாதிக்கு நஷ்டம்...
பிரதிவாதிக்குக் கஷ்டம்...
வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...
ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...
என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப் படும்.

கட்டுரை தொடர்கிறது...

vasudevan31355
30th August 2011, 02:08 PM
தொடர்ச்சியாக...

தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.

"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...

காந்தி நாலணா..
நேருஜி நாலணா...
காமராஜி நாலணா..ன்னான்
அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...

என்று கலாய்க்கும் போது,

கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).

அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,

"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை. "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...

மற்றொரு சூப்பரான காட்சி...

நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"..என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?". என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.

மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.

பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,

கபாலி 'உயர்ந்த மனிதன்'

கபாலி 'கை கொடுத்த தெய்வம்'

கபாலி 'தெய்வப் பிறவி'

என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).

சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,

'உயர்ந்த மனிதன்' சிவாஜி

'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி

'தெய்வப் பிறவி' சிவாஜி

என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.

(நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
30th August 2011, 02:13 PM
அன்புள்ள சாரதா மேடம்,

தங்கள் ஆய்வுக் கட்டுரைகளின் மேல் எனக்கிருந்த ஆர்வமும் உந்துதலும்தான் என்னை இந்த 'கருடா சௌக்கியமா' முதல் ஆய்வுக் கட்டுரை எழுத வித்திட்டது. இதிலுள்ள நிறை குறைகளை தாங்கள் சுட்டிக் காட்டினால் அது அடுத்த கட்டுரைகளை நான் மேம்படுத்திக் கொண்டு எழுத ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இந்தக் கட்டுரை எழுத மூல காரணகர்த்தாவே நீங்கள் தான். அதற்காக தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
30th August 2011, 03:22 PM
இன்று பிறந்தநாள் காணும் நண்பர் பெங்களூர் குமரேஷ் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . வாழ்க பல்லாண்டு!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
30th August 2011, 03:42 PM
கருடா சௌக்யமா ஆய்வுக் கட்டுரை அருமை. பாராட்டுக்கள் திரு. வாசுதேவன் அவர்களே.

RAGHAVENDRA
30th August 2011, 03:51 PM
டியர் வாசுதேவன் சார்,
கருடா சௌக்கியமா பற்றிய தங்கள் பதிவு.... அட்டகாசம்....

அன்புடன்
ராகவேந்திரன்

mr_karthik
30th August 2011, 04:46 PM
வாசுதேவன் சார்,

கலக்குறீங்க..... 'கருடா சௌக்கியமா?' ஆய்வுக்கட்டுரை படுசூப்பர். ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல இப்படத்தின் வசனங்களை வியட்நாம் வீடு சுந்தரம் ரொம்ப அனுபவித்து எழுதியிருப்பார். ஒவ்வொரு வசனத்திலும் சரவெடி இருக்கும்.

முத்துகிருஷ்ணன் சொல்லும் வசனத்தைப்போலவே, பல படங்களில் பல வசனகர்த்தாக்கள் நடிகர்திலகத்தைப்புகழ்ந்து எழுதியிருப்பார்கள்.....

ஒன்ஸ்மோர் படத்தில் விஜய்: 'எவ்வளவு சூப்பரா நடக்கிறார் அவர்'

எஸ்.எஸ்.சந்திரன்: 'உனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே தெரியும் அவர் நடை சூப்பர்னு'.

படையப்பாவில் ரஜினியிடம் நடிகர்திலகம்: 'இனிமேல் எல்லாரும் உன் பின்னாடிதான்'

ரஜினி: 'இல்லீங்கய்யா, நாங்க எல்லோரும் எப்போதுமே உங்க பின்னாடிதான்'

'கருடா சௌக்கியமா' போன்ற படங்களை, குறைந்த பட்சம் ரசிகர்களை நான்கு மாதம் காயப்போட்டு வெளியிட்டிருக்க வேண்டும். வயிறு முட்ட தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் பிரியாணியை பறிமாறினார்கள். வேறென்ன செய்வது?. வழக்கமான புலம்பல்தான்.

உங்கள் ஆய்வுக்கட்டுரையைப் படித்து விட்டு மீண்டும் 'கருடா சௌக்கியமா' பார்த்தால் நிச்சயம் புதிய கோணங்களில் ரசிக்க முடியும்.

ஜமாய்ங்க........

Plum
30th August 2011, 04:54 PM
mrkarthik - AnA maththa starsoda nadicha padam mAdhiri illAma(wherein those stars say punch dialogue praising NT), Once More-la, NT saying punch dialogue praising the hero irukkum. appA director vElaiya kAtti iruppAr.

vasudevan31355
30th August 2011, 05:39 PM
டியர் சந்திர சேகரன் சார்,

உங்கள் அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.

அன்பு முரளி சார்,

தங்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள். தங்கள் பாராட்டுதல்களும்,வாழ்த்துக்களும் நிஜமாகவே என்னைக் கண் கலங்கச் செய்து விட்டன. மறுபடியும் என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றிகளை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கே வரிகளில் நடிகர் திலகம் புகழ் பாடும் வசனங்களை மிக அழகாக தொகுத்து வழங்கி விட்டீர்கள். நாற்பது பக்கங்களுக்கான பொருள் அதில் தென்படுகிறது. அருமை சார்.. நடிகர் திலகம் பற்றிய புகழ் பாடும் வசனங்களை பின்னொரு நாளில் கண்டிப்பாக அலசி விடலாம். நன்றி சார்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

saradhaa_sn
30th August 2011, 06:16 PM
அன்புள்ள சாரதா மேடம்,

தங்கள் ஆய்வுக் கட்டுரைகளின் மேல் எனக்கிருந்த ஆர்வமும் உந்துதலும்தான் என்னை இந்த 'கருடா சௌக்கியமா' முதல் ஆய்வுக் கட்டுரை எழுத வித்திட்டது. இதிலுள்ள நிறை குறைகளை தாங்கள் சுட்டிக் காட்டினால் அது அடுத்த கட்டுரைகளை நான் மேம்படுத்திக் கொண்டு எழுத ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இந்தக் கட்டுரை எழுத மூல காரணகர்த்தாவே நீங்கள் தான். அதற்காக தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

டியர் வாசுதேவன்,

என்னது..? உங்கள் ஆய்வுக்கட்டுரையில் குறை சொல்வதாவது?. ஒவ்வொரு காட்சிவாரியாக வசனங்களையும், அதில் உங்கள் பொருத்தமான கமெண்ட்களையும் அங்கங்கே செருகி எவ்வளவு அருமையாக கட்டுரையை வடித்து வருகிறீர்கள். பூதக்கண்ணாடியல்ல, மைக்ராஸ்கோப் வைத்துத்தேடினால்கூட உங்கள் ஆய்வில் குறை கண்டுபிடிக்க முடியாது. நிறைகள் மட்டுமே நிரம்பி வழிகின்றன.

ஒவ்வொரு வசனத்தையும் பொருத்தமான விளக்கங்களுடன் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் எப்படியுள்ளது என்றால், இதற்கு முன் இப்படத்தைப் பார்த்திராதவர்கள் உடனடியாக பார்க்கும்படியாகவும், ஏற்கெனவே பார்த்திருந்தவர்களை மீண்டும் பார்க்கத்தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. நண்பர் கார்த்திக் சொன்னதுபோல அந்த சமயத்தில் புற்றீசல்கள் போல நடிகர்திலகத்தின் படங்கள் படையெடுத்ததால் நியாயமாகப் பெறவேண்டிய வெற்றியை இப்படம் பெறவில்லையென்பது வருத்தப்பட வைக்கும் ஒரு விஷயம்.

ஒவ்வொரு பதிவு முடியும்போதும் அடுத்த பதிவு எப்போது என்று ஏங்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக எழுதுகிறீர்கள். என்னைப்பார்த்து எழுதத்துவங்கியதாக சொன்னீர்கள். அதை ஒப்புக்கொள்வதாயினும், நான் ஆரம்பப்பள்ளி ஆசிரியை போல. என்னுடைய மாணவர் இன்று பி.எச்.டி. தேறி விட்டதைப்பார்க்க மிகவும் ஆனந்தமாக உள்ளது.

உங்கள் அனைவரது பங்களிப்பாலும் நமது திரி இன்னும் பல சிகரங்களை எட்டப்போவது உறுதி. உங்களது பாசம் நிறைந்த எழுத்துக்களூக்கு எனது பணிவான நன்றிகள்.

vasudevan31355
30th August 2011, 08:59 PM
அனைவருக்கும் இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள்!


http://www.goodlightscraps.com/content/ramadan-2011/ramadan-kareem-6.gif


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/nt.jpg


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
31st August 2011, 08:50 AM
மரியாதைக்குரிய 'குரு' சாரதா மேடம் அவர்களே!


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/WindowsLiveWriter_1000PostsManyThanks_36B6_thousan d_3.jpg


நன்றிகள் பல கோடி. என்னை தங்கள் மாணவனாக ஏற்றுக் கொண்டதால் மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கிப் பிரவாகம் எடுக்கின்றன. 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு உண்மை என்பதை "நான் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை தான்" என்ற வரிகளின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். நிறைகுடங்கள் எப்போதும் தளும்புவதே இல்லை. ஒரு தாயின் கருணையையும்,அன்பையும் அரவணைப்பையும்,பாசத்தையும் பெற்றுவிட்ட பூரிப்பில்...

தங்கள் மாணவன் ,

நெய்வேலி வாசுதேவன்.

Subramaniam Ramajayam
31st August 2011, 09:54 AM
Well said mr vasudevan about saradamadam. Nadigar thilagam thiri has m ore knowlegable fans of NT even today after 10years of great actors demise technically for the world definitely not for us because he has become part of our life and soul.
season's greetings to all our friends.

KCSHEKAR
31st August 2011, 11:04 AM
ரஹீமை வைத்து ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னது மிகவும் பொருத்தம் - வியட்நாம் வீடு நாடக நிழற்படம் அருமை - நன்றி திரு.வாசுதேவன் அவர்களே.

vasudevan31355
31st August 2011, 11:12 AM
அரிய நிழற்படம்

'வியட்நாம் வீடு' நாடகத்தில் 'பிரெஸ்டீஜ்' பத்மநாபன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/12fr_sivagami3_jpg_285287a.jpg

நடிகர்திலகத்துடன் 'சாவித்திரியாக' நடிகை S.R.சிவகாமி.
நன்றி 'ஹிந்து' நாளிதழ்!


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

HARISH2619
31st August 2011, 12:50 PM
DEAR KUMARESAN SIR,
Many more happy returns of the day,May God and NT bless you.

Dear vasudevan sir,
superb write up on garuda sowkyama.Eagerly waiting for your analysis of other NT"s underrated films.

parthasarathy
31st August 2011, 01:04 PM
Dear Mr. Kumaresan,

Wish you many many happy returns of the day.

Regards,

R. Parthasarathy

parthasarathy
31st August 2011, 01:24 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

நமது திரியின் அற்புதப் பயணத்தை அழகு தமிழில் வர்ணித்து, அதில் பதிவு செய்து கொண்டிருக்கும் என்னையும் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி. தங்களைப் போன்றவர்களின் வருகையால், இந்தத் திரிக்கு மேலும் சுவாரஸ்யமும் பெருமையும் சேர்ந்திருக்கிறது.

தங்களது "கருடா சௌக்கியமா" படத்தின் ஆய்வுக் கட்டுரையின் இரண்டாவது பாகம் அருமை. நடிகர் திலகத்தின் நடிப்பை பிரமாதமாக அலசியிருக்கிறீர்கள். தங்களிடமிருந்து மேலும் பல ஆய்வுக்கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி


அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

பொம்மை இதழில் வெளி வந்த யாழ் சுதாகரின் கட்டுரையை அந்தக் கட்டுரை வெளி வந்த அன்றே படித்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அதைப் படித்து மெய் சிலிர்த்தேன். உண்மையில், அந்தக் கட்டுரையின் சில இடங்களைப் படிக்கும் போது, தொண்டை வழித்து, கண்களில் கண்ணீர் பெருகி விழித் திரையை மறைத்திட, மேலும், படிக்க முடியாமல் திணறினேன். எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ இந்தக் கட்டுரைகளை. Hats off to யு, Sir.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
31st August 2011, 01:26 PM
குமுதம் விமர்சனங்களைப் பற்றி நான் எழுதுவேன் என்று திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். அனைத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வது பெரிய சர்ச்சையைக் கிளப்பி விடும் என்பதால், சில விஷயங்களைப் பற்றி மட்டும் கூற விழைகிறேன்.

குமுதம் பத்திரிகையின் விமர்சனங்கள் எப்போதும் நடு நிலையாகத்தான் இருக்கும். இதற்கு முக்கியமான காரணம், அந்தப் பத்திரிகையின் ஆசிரியரும், இணை மற்றும் துணை ஆசிரியர்கள் எப்போதும், சொந்த செலவில் மக்களோடு மக்களாக அமர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் படத்தைப் பார்ப்பது தான். பத்திரிகையாளர்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்படும் முன்னோட்டங்களுக்கு அவர்கள் ஒரு போதும் செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு எந்த வித நிர்ப்பந்தமும் ஏற்படுவதில்லை. நானே, அந்தப் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்த போது, இணை மற்றும் துணை ஆசிரியர்களுக்கு புதுப்படங்களின் டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். குமுதம் எப்போதும், நடிகர் திலகத்தின் படங்களை மிகச்சரியாக விமர்சனம் செய்யத் தவறியதே இல்லை. அவருடைய "ஸ்ரீ வள்ளி" படத்தை, வெறும் "முருகா. முருகா... முருகா..." என்று மட்டுமே எழுதியது.

ஒரு தலைப் பட்சமான விமர்சனங்கள் விகடனுக்கு மட்டுமல்ல; மற்ற இதழ்களுக்கும் கூடப் பொருந்தும். 1982-இல் வெளிவந்த ரஜினியின் மூன்று முகத்துக்கு அன்று குங்குமம் எழுதிய விமர்சனத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. அந்தப் படத்தில், அலெக்ஸ் பாண்டியன் என்ற காவல் துறை அதிகாரியாக ரஜினி மிக நன்றாக நடித்திருந்தார் எனினும், குங்குமம் அந்தப் படத்துக்கு எழுதிய விமர்சனத்தில், கடைசியில், "சிவாஜி அன்று நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் அசத்தினார்; இன்று ரஜினி மூன்று வேடங்களில் மூன்று முகத்தில் அசத்தியிருக்கிறார். இந்த மூன்றும் அந்த ஒன்பதுக்குச் சமம்!". அடுக்குமா இந்த ஒப்பீடு? யாரை யாருடன், எந்த நடிப்பை எந்த நடிப்புடன்?? எந்தப் படத்தை எந்தப் படத்துடன்???

யாரையோ சந்தோஷப்படுத்துவதற்காக, நடுநிலையைத் தவற விடுபவர்கள் என்றுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
31st August 2011, 06:04 PM
அன்புச் சகோதரி சாரதா அவர்களின் பதிவு அவருடைய பெருந்தன்மையினைப் பறை சாற்றுகிறதென்றால் வாசுதேவனின் அடக்கம் அதற்குக் கட்டியம் கூறுகிறது. அனைவருமே தத்தம் அடக்கத்தையும் எளிமையினையும் பேணி நடிகர் திலகத்திற்குப் பெருமை சேர்க்கிறார்கள் என்றால் அதை விட அந்த உத்தமனுக்கு சிறந்த தொண்டு இருக்க முடியுமோ.

அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்.

டியர் குமரேசன்
உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
31st August 2011, 06:19 PM
நடிகர் திலகத்தின் இரு உன்னதத் திரைக்காவியங்கள் விரைவில் நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட உள்ளன. இது பற்றிய ஓர் அறிவிப்பு மற்றோர் நெடுந்தகட்டினில் வெளிவந்துள்ளது. அதன் வடிவினை இங்கே நாம் காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NRUPVdvdAdfw.jpg

அன்புடன்

pammalar
1st September 2011, 12:12 AM
A Very Very Happy Birthday Mr.kumareshanprabhu !

Many Many More Happy Returns !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
1st September 2011, 02:11 AM
எல்லோருக்கும் புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PM100-1.jpg

எல்லோரும் கொண்டாடுவோம் !
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் !

pammalar
1st September 2011, 02:28 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

கலைக்குரிசிலின் "கருடா சௌக்கியமா" திறனாய்வுக் கட்டுரையின் இரண்டாம் பாகம் மற்றும் அதன் தொடர்ச்சி பட்டையைக் கிளப்புகிறது. கூடவே நிழற்படங்களையும் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள் !

தங்களது எழுத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரித்தான நடையும் அதே சமயம் NT Devotee என்கின்ற உணர்ச்சிப்பிரவாகமும் இணைந்து காணப்படுகிறது. இது மிக அரிதான ஒரு இணைவு. இரண்டும் கலந்த அபூர்வக் கலவை தங்களின் எழுத்தோவியம் !

தங்கள் பதிவுகளின் மூலம் இக்காவியத்தை Frame-by-frame பார்த்து ரசிக்கிறோம் ! Free-of-cost !! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !!!

[திருக்குரான் வாசகங்கள் மற்றும் "இமைகள்" அக்பர்பாஷா அவர்களின் நிழற்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்த விதம் உண்மையிலேயே அற்புதம் ! "வியட்நாம் வீடு" நாடக நிழற்படம் மிகமிக அரிய ஒன்று !]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st September 2011, 02:41 AM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

டியர் mr_karthik,

தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கும், திரு.யாழ் சுதாகர் குறித்த நற்கருத்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

டியர் பார்த்தசாரதி சார்,

தங்களது உணர்வுபூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

டியர் ராகவேந்திரன் சார்,

"உலகம் பல விதம்", "நானே ராஜா" நெடுந்தகடுகளாக வருகிறதா ! ஆஹா !! ஆஹா !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st September 2011, 03:16 AM
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/thiruvilaiyadaljpeg0ky.jpg

pammalar
1st September 2011, 04:37 AM
விண்ணுலக முதல்வரான கணேச பெருமானைப் போற்றும் நன்னாளில்
கலையுலக முதல்வரான சிவாஜி கணேசப் பெருமானின் புகழ்பாடும் கட்டுரை

வரலாற்று ஆவணம் : தினமணி : 3.10.1997
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4479a-1.jpg

குறிப்பு:

1. 1964லேயே 5 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடின. [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி]

2. ஒரே நாளில் இரு படங்கள் முதன்முதலில் வெளியானது 13.4.1954 அன்று. [அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி]

3. எம்கேடி பாகவதருக்குப்பின் ஒரே ஆண்டில் ஒரு கதாநாயக நடிகர் நடித்து இரு படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியது 1959-ல். [வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை][பாகவதருக்கு 1937-ல் இரு பொன்விழாப் படங்கள் : சிந்தாமணி, அம்பிகாபதி][ஒரே ஆண்டில் இரு வெள்ளிவிழாக்கள் என்ற சாதனையை 1959-க்குப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என மொத்தம் 6 முறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நமது நடிகர் திலகம் !]

4. இந்தக் கட்டுரை ஒரு Overviewதான். இந்தத் தலைப்பில் விளக்கமாக ஒரு தனிப்புத்தகமே எழுதலாம் !

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
1st September 2011, 07:54 AM
திரு.சந்திர சேகரன் சார்,
தங்கள் அன்புக்கு நன்றி!

டியர் ஹரிஷ் சார்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.

திரு.சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,
தங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

திரு.பார்த்தசாரதி சார்,

தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களை போன்ற அனுபவசாலிகளின் வாழ்த்துதல்கள் அடியேனின் பாக்கியம்!
தங்களின் குமுதம் விமர்சனங்கள் பற்றிய அட்டகாசமான விமர்சனத்தை எப்படி விமர்சனம் செய்வது என்று எனக்குத் தெரிய வில்லை. சூப்பர் சார்!
மூன்று முகம் பற்றி சாவியில் வெளிவந்த அந்த வஞ்சப் புகழ்ச்சி விமர்சனத்தை நானும் படித்திருக்கிறேன்.அது பற்றிய என் நெஞ்சில் உள்ள குமுறல்களை அப்படியே ஜெர்மன் கண்ணாடி போல் பிரதிபலித்து விட்டீர்கள்.
'நான் நினைத்தேன் நீ சொல்லி விட்டாய், ' என்று பேச்சு வாக்கில் அடிக்கடி சொல்வோம். அது அப்படியே தங்கள் குமுறல்களின் மூலம் நடந்து விட்டது.

எல்லாப் படங்களுக்கும் ஏடா கூடமாக விமர்சனம் எழுதும் 'கல்கண்டு' பத்திரிகை கூட 'எங்கள் தங்க ராஜா' வை அருமையாக விமர்சனம் செய்திருந்தது. அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் நடிப்பைப் பாராட்டும்,
'நடிகர்திலகத்தின் நடிப்பு பட்டை தீட்டப்பட்ட வைரம் போல அற்புதமாய் ஜொலிக்கிறது'
என்ற வரிகள் என்றும் மறக்க முடியாதவை.

நடிகர் திலகமே 'ஸ்ரீவள்ளி' படத்தைப் பற்றிய தன் சொந்தக் கருத்தாக குமுதம் விமர்சனம் போலவே "முருகா..முருகா.. முருகா...என்று தான் கூறியிருப்பார்.

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி! 'உலகம் பலவிதம்' மற்றும் 'நானே ராஜா' நெடுந்தகடுகள் விரைவில் வெளிவரப் போகின்றன என்ற செய்தியை தந்து,இரு படங்களின் டீவீடீ வடிவங்களையும் தந்து வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள்... விரைவில்,
'மண்டமாருதம்' தவழப் போவதையும், 'சந்திரன் வானிலே' திகழப் போவதையும் 'ஆசைக் கனவு' நனவாகப் போவதையும் நினைத்தால் இப்போதே உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விட்டது.
மகிழ்ச்சியடையச் செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள் சார்!

அன்பு பம்மலார் சார்,

மாசு மருவில்லாத அந்த ரஹீமின் முகம். ஆஹா!..கள்ளம் கபடமில்லாத மழலை முகம். இப்படி ஒரு வசீகர வதன முகத்தை இனி இந்த உலகத்தில் யாரிடம் காண முடியும்?...அதி அதி அதி அற்புதமான நிழற்படம் அளித்து அதலகதளப் படுத்தி விட்டீர்கள். நன்றி.
முதல் சாதனைகளின் முடிசூடா மன்னன் ஆவணக்கட்டுரையை அளித்து முத்தமிழ் வித்தகரின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்
பதித்துள்ளீர்கள். நூறாவது நாள் மற்றும் வெள்ளி விழா சாதனைகள் விவரங்களும் அருமை.
இவை எல்லாவற்றுக்கும், தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கும் சேர்த்து என் மகிழ்வான நன்றிகள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
1st September 2011, 08:32 AM
அனைவருக்கும் இனிய 'விநாயக சதுர்த்தி' நல்வாழ்த்துக்கள்.

http://www.punjabigraphics.com/images/101/ganesh-chaturthi-comment-028.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
1st September 2011, 08:36 AM
திரு குமரேசன் பிரபு சார்,

தங்களுக்கு என் நெஞ்சு நிறைந்த, மனப்பூர்வமான, இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் பல்லாண்டு.

vasudevan31355
1st September 2011, 09:55 AM
'விநாயக சதுர்த்தி' ஸ்பெஷல்

ஆனை முகனே! ஆதி முதலானவனே!...
பானை வயிற்றோனே! பக்தர்களைக் காப்பவனே!...
மோனைப் பொருளே! மூத்தவனே! கணேசா! கணேசா!...
ஏனென்று கேளுமைய்யா! இந்த ஏழை முகம் பாருமைய்யா ...

கணேசனின் புகழ் பாடும் நம் 'கணேசரின்' புகழை நாம் பாட வேண்டாமா?...விநாயகர் சதுர்த்தியான இன்று...
இதோ..இந்தப் பாடலின் மூலம் நாம் அவருக்கு புகழாரம் சூட்டலாம்..



http://www.youtube.com/watch?v=GatmR7y_PYw&feature=player_detailpage


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
1st September 2011, 10:36 AM
அன்பு பம்மலார் சார்,

தாங்கள் இன்று நடு இரவிலும்,அதிகாலையிலும், செய்த post-களின் நேரத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்....

12:12 AM
02:11 AM
02:28 AM
02:41 AM
03:16 AM
04:37 AM

உடம்பு என்னத்துக்கு ஆவது ?........
உடல் நிலையையும், தூக்கத்தையும் முடிந்த வரை கவனித்துக் கொள்ளவும். இது என் அன்பான வேண்டுகோள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

saradhaa_sn
1st September 2011, 11:55 AM
டியர் பம்மலார்,

கள்ளம் கபடமில்லாத அப்துல் ரகீமின் அழகு முகமும், பின்னணியில் அமைந்த மெக்கா, மதீனா படங்களும் அருமை. நிச்சயம் இப்படம் இஸ்லாமியர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இடம்பெறும் வண்ணம் அழகுற அமைந்துள்ளது.

'பாவ மன்னிப்பு' அப்துல் ரகீம்
'இமைகள்' அக்பர் பாஷா
'எழுதாத சட்டங்கள்' நஸீர் வாப்பா

என அனைத்து இஸ்லாமிய ரோல்களிலும் தூள் கிளப்பியவர் நடிகர்திலகம்.

தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள், மதத்தால் வேறுபட்டிருந்தாலும், பேச்சில் எல்லா தமிழர்களையும் போல சரளமாகவே பேசுவார்கள். வேலூர் மாவட்டம் போன்ற இடங்களிலுள்ளவர்கள் சற்று உருது கலந்து பேசக்கூடியவர்கள். மற்ற எல்லா மாவட்டங்களிலும் சாதாரண த்மிழே பேசுவார்கள். அதையே பின்பற்றி, நடிகர்திலகமும் தான் ஏற்று நடித்த எல்லா முஸ்லீம் ரோல்களிலும் சாதாரண தமிழே பேசியிருப்பார். அதுபோல உடைகளும் தமிழ்நாட்டிலுள்ள மற்ற முஸ்லீம்களைப்போலவே அணிந்திருப்பார்.('சிலர்' தாங்கள் தாங்கள் முஸ்லீம் ரோல் ஏற்கும்போது, நடைமுறைக்கு ஒவ்வாத உடை அணிவதோடு, 'நம்பள்', 'நிம்பள்' என்றெல்லாம் பேசி, பார்ப்போரை படுத்துவார்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு முஸ்லீமும் நம்பள், நிம்பள் என்று பேசுவது கிடையாது).

'எழுதாத சட்டங்கள்' படத்தில் தன் குடிசைக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும் நடிகர்திலகம், எரியும் குடிசைக்குள் ஓடிப்போய், வேறு எதையும் எடுக்காமல், மறைந்த தன் மனைவியின் புகைப்படத்தை ஒரு கையிலும், குர் ஆன் வேத புத்தகத்தை இன்னொரு கையிலும் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவரும் காட்சி ஒவ்வொரு இஸ்லாமியரின் உள்ளத்தையும் தொட்டது.

பல்வேறு கோயில் திருப்பணிகளுக்கு காணிக்கை செலுத்துவதைப்போலவே, சென்னை மவுண்ட் ரோடு தர்காவுக்கும், நாகூர் தர்காவுக்கும் வருடாவருடம் காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் நடிகர்திலகம். அத்துடன் தன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் சிலர் புனித ஹஜ் யாத்திரை செல்ல பண உதவியும் செய்துள்ளார் அவர். (ஒருமுறை 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியின்போது அண்ணனின் மூத்த புதல்வர் திரு ராம்குமார் வெளியிட்ட தகவல்).

saradhaa_sn
1st September 2011, 12:26 PM
டியர் வாசுதேவன்,

தங்கள் தன்னடக்கமான பதிவு என் நெஞ்சைத்தொட்டது. எல்லாம் நடிகர்திலகத்திடமிருந்து வந்ததுதான். அபார திறமைகளைப்பெற்றிருந்தும், அது தன் செயல்களில் பிரதிபலித்துவிடாமல் அடக்கமாக வாழ்ந்தவரல்லவா.

வியட்நாம் வீடு நாடக ஸ்டில் அரிய பொக்கிஷம். 'சாவித்திரி'யாக எஸ்.ஆர்.சிவகாமியும் நடித்திருக்கிறாரா?. நாடகத்தில் 'சாவித்திரி' ரோலில் நடித்தவர் ஜி.சகுந்தலா மட்டுமே என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி.

டியர் பம்மலார்,

தினமணியில் வெளியான, நடிகர்திலகத்தின் சாதனைகளின் தொகுப்புக்கட்டுரையை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. பல விஷயங்கள் விடுபட்டிருந்தாலும், இந்த அளவுக்காவது சிறப்பாகத் தொகுத்தார்களே என்ற வகையில் மகிழ்ச்சி.

பத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது இரண்டையும் குறிப்பிட்டவர்கள் இரண்டுக்கும் நடுவே 'பத்மபூஷண்' விருது பெற்றதை விட்டுவிட்டனர்.

அதேபோல ஒரே நாளில் இரண்டுபடங்கள் வெளியாகி, இரண்டுமே 100 நாட்களைக்கடந்த சாதனையையும் பலமுறை நிகழ்த்திக்காட்டியவர் (உ-ம்: 1967, 1970). அதுவும் அக்கட்டுரையில் இடம்பெறவில்லை.

'அந்தநாள்' படம், திரைப்படக்கல்லூரியில் (நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு பிரிவுகளில்) பாடமாக வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடவில்லை.

இருப்பினும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரையை வெளியிட்டமைக்கு 'தினமணி'க்கு நன்றி.

விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரின் 'ஃபேமிலி போட்டோ' மிக அருமை. பாவம், மனைவியில்லாதவர். அவருக்கு அப்பா, அம்மா, தம்பி ஆகியோர்தானே குடும்பம்.

RAGHAVENDRA
1st September 2011, 01:29 PM
அன்பு பம்மலார் சார்,

தாங்கள் இன்று நடு இரவிலும்,அதிகாலையிலும், செய்த post-களின் நேரத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்....

12:12 AM
02:11 AM
02:28 AM
02:41 AM
03:16 AM
04:37 AM

உடம்பு என்னத்துக்கு ஆவது ?........
உடல் நிலையையும், தூக்கத்தையும் முடிந்த வரை கவனித்துக் கொள்ளவும். இது என் அன்பான வேண்டுகோள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

பம்மலார்...
பார்த்தீர்களா... இது தான் பாசமென்பது...தங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து உரியவரி(ளி)டம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஆதங்கம் நம் அனைவரின் சார்பாகவும் வாசுதேவன் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. இதனை அனைவரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக் கொள்ளவும்.

[ ஒரு சில தொழில் நுட்பக் காரணங்களை அல்லது அலைக்கற்றை வேகம் போன்ற காரணங்களை நீங்கள் நியாயமான காரணங்களாக உணரலாம், இருந்தாலும் தங்களுடைய உறவிற்கென்று இறைவன் வகுத்துத் தந்த இரவை இந்த உறவுகளுக்கு செலவழித்து விடாமல் உணர்வையும் ஊனையும் மிச்சம் வைத்துக் கொள்ளவும்]

அனபுடன்

saradhaa_sn
1st September 2011, 03:59 PM
அன்பு பம்மலார் சார்,

தாங்கள் இன்று நடு இரவிலும்,அதிகாலையிலும், செய்த post-களின் நேரத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்....

12:12 AM
02:11 AM
02:28 AM
02:41 AM
03:16 AM
04:37 AM

உடம்பு என்னத்துக்கு ஆவது ?........
உடல் நிலையையும், தூக்கத்தையும் முடிந்த வரை கவனித்துக் கொள்ளவும். இது என் அன்பான வேண்டுகோள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

வழிமொழிகிறேன்......

டியர் பம்மலார்,

இது ஒரு வாசுதேவனின் கோரிக்கை மட்டுமல்ல. அனைத்து நடிகர்திலகத்தின் ரசிகர்கள் மற்றும் தங்கள் நலனில் அக்கறை கொண்டோரின் வேண்டுகோள்.

உறக்கத்தை தியாகம் செய்து இங்கே பதிவுகள் இடுமளவுக்கு நமது திரி இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. இது நம்முடைய பேரன் பேத்திகள் காலத்துக்கும் தொடரப்போவது.

ஆகவே உழைக்கும் நேரத்தில் உழையுங்கள். ஓய்வெடுக்கும் நேரம் ஓய்வெடுங்கள். காரணம், உங்கள் உடல் நலனில் உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ இல்லையோ, எங்களுக்கு இருக்கிறது.

பதிவு நேரங்களை தீர்க்கமாகக் கண்கானித்த வாசுதேவருக்கு ஆச்சரியம் கலந்த நன்றிகள்.

vasudevan31355
1st September 2011, 06:34 PM
'Originally Posted by saradhaa_sn'

அபார திறமைகளைப்பெற்றிருந்தும், அது தன் செயல்களில் பிரதிபலித்துவிடாமல் அடக்கமாக வாழ்ந்தவரல்லவா.

மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

நடிகர் திலகத்தின் அடக்கமுடமையைப் பற்றி ஒரே ஒரு வைர வரியில் மிகச் சிறப்பாகக் கூறி சிலாகிக்க வைத்து விட்டீர்கள். ரத்தினச்சுருக்கத்திலும் ரத்தினச் சுருக்கமாக இப்படி விளக்க உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?... நிஜமாகவே வைர வரிகள்... நன்றி!

அன்பு மாணவன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
1st September 2011, 09:01 PM
originally by 'hindu'

paralleling cinema was her career in theatre. She essayed prominent roles in national theatres' (r.s. Manohar), ‘chanakya sabatham,' and ‘ilankeswaran,' sivaji ganesan's stage sojourns including ‘vietnam veedu,' and ragini recreations' (k. Balachander) theatre endeavours, such as ‘edhir neechal' and ‘navagraham.' sivakami became a part of uaa in 1968. “she opted out only because she wanted to retire -- not to join another troupe. She was with us from my father's days,” says mahendra.

மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

தங்களைப் போல எனக்கும் கூட நடிகை எஸ்.ஆர்.சிவகாமி அவர்கள் நடிகர்திலகத்துடன் 'வியட்நாம் வீடு' நாடகத்தில் நடித்திருந்தார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த நிழற்படத்தில் நடிகர்திலகத்துடன் நிற்பது நடிகை எஸ்.ஆர்.சிவகாமி தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. எதற்கு சந்தேகம் என்று இணையத்தில் தேடிப் பார்த்ததில் நடிகை எஸ்.ஆர்.சிவகாமி பற்றிய கட்டுரை ஒன்றை ஹிந்து பிரசுரித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது.. அக்கட்டுரையில் தெளிவாக, நடிகை எஸ்.ஆர்.சிவகாமி அவர்கள் தற்காலிக நடிகையாக 'வியட்நாம் வீடு' நாடகத்தில் நடித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒருவேளை நடிகை ஜி.சகுந்தலா அவர்கள் நடிக்க முடியாமல் போன நாட்களில், எஸ்.ஆர்.சிவகாமி அவர்களுக்கு அந்த அற்புதமான 'சாவித்திரி' சான்ஸ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. 'ஹிந்து' வின் அந்தக் குறிப்பிட்ட வரிகளை மேலே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
2nd September 2011, 06:14 AM
எஸ்.ஆர்.சிவகாமி அவர்கள் மிகச் சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட. சில ஆண்டுகட்கு முன் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் வியட்நாம் வீடு நாடகத்தை அரங்கேற்றும் முன்னர் பூஜை நடத்தினார். அந்த பூஜைக்கு சிவகாமி அவர்களும் வந்திருந்து பங்கேற்றார். அப்போது அவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்த போது நடிகர் திலகத்துடன் இணையாக நடித்தது தன் வாழ்வில் பெற்ற பாக்கியம் என்று கூறினார். ஜி.சகுந்தலா அவர்களுக்கு எதிர்பாராத காரணத்தால் வர முடியாமல் போகும் நேரங்களில் உடனே சிவகாமி அவர்கள் அப்பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்நாடகத்தின் வசனங்கள் தன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டன என்றும் கூறினார். இப்பூஜையைப் பற்றிய செய்தி நம் இணைய தளத்தில் முன்னர் வெளிவந்துள்ளது. வியட்நாம் வீடு நாடகம் திரு மகேந்திரா அவர்களால் மீண்டும் மேடையேற்றப் படுவதற்காக பூஜை போடப் பட்டபோது எடுக்கப் பட்ட சில நிழற்படங்களை இங்கு நாம் காணலாம்.

திரு சுந்தரம் அவர்கள் திருமதி ஒய்ஜிபி அவர்களிடம் ஆசி பெறும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/vveedupuja3.jpg

திரு மகேந்திரா அவர்கள் ஆசி பெறும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/vveedupuja1.jpg

திருமதி நித்யா ரவீந்தர் அவர்கள் ஆசி பெறும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/vveedupuja2.jpg

திருமதி சிவகாமி அவர்கள் திரு மகேந்திரா, திரு சுந்தரம் மற்றும் திருமதி ஒய்ஜிபி அவர்களுடன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/vveedupuja4.jpg

அன்புடன்



அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
2nd September 2011, 06:22 AM
நன்றி ராகவேந்திரன் சார் எஸ்.ஆர்.சிவகாமி பற்றிய கருத்துக்களுக்கும்,அருமையான,அபூர்வமான நிழற் படங்களுக்கும்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
2nd September 2011, 08:48 AM
நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தரான நம் அருமை திரு.Y.G.மகேந்திரன் அவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 'வியட்நாம் வீடு' நாடகத்தில் இருந்து சில காட்சிகள் நிழற்பட உருவில் இங்கு...நம் இதய தெய்வத்தின் புகழ் பாடுவதையே தன் மூச்சாகக் கொண்ட திரு.Y.G.மகேந்திரன் அவர்கள் தற்போது அரங்கேற்றியுள்ள தங்களுடைய புது நாடகமான 'நாடகம்' வெற்றி பெற நம் அனைவர் சார்பாகவும் அவரை நாம் வாழ்த்துவோம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_24.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_23.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_16.jpg

vasudevan31355
2nd September 2011, 09:05 AM
நிழற் படங்கள் தொடர்கிறது..

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_03.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_02.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Y_Gee_Sivaji_Ganesan_27.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
2nd September 2011, 11:17 AM
அன்பு பம்மலார் சார்,

தாங்கள் இன்று நடு இரவிலும்,அதிகாலையிலும், செய்த post-களின் நேரத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்....

12:12 AM
02:11 AM
02:28 AM
02:41 AM
03:16 AM
04:37 AM

உடம்பு என்னத்துக்கு ஆவது ?........
உடல் நிலையையும், தூக்கத்தையும் முடிந்த வரை கவனித்துக் கொள்ளவும். இது என் அன்பான வேண்டுகோள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

எங்கள் உணர்வைப் பிரதிபலித்த வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. பம்மலார் அவர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும் என்பது எங்களின் அன்பு வேண்டுகோள்.

KCSHEKAR
2nd September 2011, 12:56 PM
சாரதா மேடம், திரைப்படங்களில் இடம்பெறும் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கு குறித்து தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியே. பிராமணர், நாடார், தேவர் என்று எந்த கலாச்சார, இன, மத, பகுதி மற்றும் தொழில் - பேச்சு வழக்கு என்றாலும் அதனை அவர்களுடைய வழக்கு மொழியை கொச்சைப் படுத்தாமலும், கிண்டல் செய்வதுமாதிரி இல்லாமலும், அந்த மொழி பேசக்கூடிய, அந்தந்த பகுதி மக்கள் பெருமைப்படக்கூடிய விதத்தில், பிரமாதமாக பிரதிபலிப்பதில் நடிகர்திலகத்திற்கு நிகர் அவரே. அதற்கு உதாரணம்தான் ரஹீம், prestige பத்மநாபன் போன்றவை.

KCSHEKAR
2nd September 2011, 06:19 PM
தங்கள் தகவல் சரியே. நன்றி வாசுதேவன் சார்.

pammalar
2nd September 2011, 10:49 PM
டியர் வாசுதேவன் சார், ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், சகோதரி சாரதா மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்,

தங்கள் அனைவரது அன்புக்கட்டளைக்கு ஆனந்தக்கண்ணீருடன் கூடிய எனது பணிவான நன்றிகள் ! சரிசெய்து கொள்கிறேன் !

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
2nd September 2011, 10:59 PM
டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

விநாயக சதுர்த்தி பாடலாக "பாகப்பிரிவினை" காவியத்தின் பாடலைப் பதிவிட்டது கலக்கல் !

நமது ஒய்ஜிஎம் நடித்த "வியட்நாம் வீடு" நாடக நிழற்படங்கள் அத்தனையும் மிக அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd September 2011, 11:17 PM
சகோதரி சாரதா,

தங்களின் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

'இஸ்லாமியர் ரோல்களில் இதயவேந்தர்' என தங்கள் பதிவில் ஒரு மினி திறனாய்வையே தந்துவிட்டீர்கள் ! Many Thanks !

டியர் ராகவேந்திரன் சார்,

நமது ஒய்ஜிஎம் நடித்த "வியட்நாம் வீடு" நாடகத்தின் (கிடைத்தற்கரிய) பூஜை நிழற்படங்களை இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd September 2011, 12:24 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

சரஸ்வதி சபதம்

[3.9.1966 - 3.9.2011] : 46வது உதயதினம்

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.9.1966
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4480a.jpg


100வது நாள் விளம்பரம் : தினமணி : 11.12.1966
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/SS100.jpg

குறிப்பு:
100 நாள் அரங்குகள் மொத்தம் ஏழு, அவையாவன:

1. சென்னை - சாந்தி - 133 நாட்கள்

2. சென்னை - கிரௌன் - 133 நாட்கள்

3. சென்னை - புவனேஸ்வரி - 133 நாட்கள்

4. மதுரை - ஸ்ரீதேவி - 104 நாட்கள்

5. கோவை - ராஜா - 104 நாட்கள்

6. சேலம் - சாந்தி - 100 நாட்கள்

7. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
3rd September 2011, 12:37 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

சரஸ்வதி சபதம்

[3.9.1966 - 3.9.2011] : 46வது உதயதினம்

அரிய பொக்கிஷம்

கலைமகளின் அருள்வடிவமான 'வித்யாபதி'யின் தெய்வீகத் தோற்றம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Vidyapathy1-1.gif

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
3rd September 2011, 08:56 AM
'சரஸ்வதி சபதம்' 46வது வருட ஆரம்பநாள் அமர்க்களங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SarasvathiSabathamDVDRipXviDwwwdesibbrgcom.jpg


நற்றமிழுக்கோர் 'வித்யாபதி'
நடிப்புக் கலைக்கோர் 'வி.சி.கணேசன்'

ராணி மகாராணி...
ராஜ்ஜியத்தின் ராணி...
வேக வேகமாக வந்த நாகரீக ராணி.....


http://www.youtube.com/watch?v=WiukQ-1H2b0&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

KCSHEKAR
3rd September 2011, 10:37 AM
சரஸ்வதி கடாட்சத்தோடு ஆரம்பித்திருக்கும் நடிகர்திலகத்தின் செப்டம்பர் சாதனைப் பொன்னேடுகள் மேலும் களைகட்ட வாழ்த்துக்கள் நன்றி பம்மலார் & வாசுதேவன் சார்

kumareshanprabhu
3rd September 2011, 10:54 AM
DEAR Pammalar Sir Vasudevan Sir

thank you for your Wishes

adiram
3rd September 2011, 12:34 PM
No doubt Y.Gee.Mahendran is a die-hard fan of Shivaji.

But, because of that, his drama scenes occupying this much place in Shivaji forum is too much.

I think it will be better to open a seperate forum for YGM, instead of disturbing Shivaji's.

adiram
3rd September 2011, 12:40 PM
When going through all the 100th day ads posted here in the previous several pages, except very few (like Sivandha mann, Andhaman Kadhali, Dhavaputhalvan) nearly 90% of the movies ran 100 days in Shanti, Crown, Bhuvaneswari at Madras.

any specific reasons for that?.

adiram
3rd September 2011, 12:49 PM
Thiru Pammalar mentioned in his post, Saraswathi Sabatham ran 100 days in 7 theatres in the state.

But in the ad he published, has only 3 theatres, that too Shanti, Crown, Bhuvaneswari and other cities not mentioned.

May be that ad was given my Madras distributor only?.

sankara1970
3rd September 2011, 01:31 PM
மனதோடு மனோ ஜெயா டிவி நேற்று , பாடகர் ஜெயச்சந்திரன் சொன்னது- சிவாஜி ஒருமுறை என்னை கூப்பிட்டு அனுப்பினர்- போயி பார்த்தேன்-
நான் பாடிய மலையாள பக்தி பாடலை அப்படியே சிவாஜி பாடி காண்பித்து என்னை பாராட்டினர்-அது மறக்க முடியாதது

Subramaniam Ramajayam
3rd September 2011, 02:18 PM
One of pur junior member has made a sacastic statement saying most of the movies say 90 PERCENTran more than 10days only in shanthi crown bhuvaneswari ONLY. i STRONGLY refute this statement. if you take the records only 10percent of movies screened in the above theatres ran more than 100days and most of the movies were lifted before 1oo days and why movies with very big collections like thillana mohanambal were not allowed to silver jubliee.
all these things has happened in the past as We are not in the habit of expecting any false publicity and never in the habit of putting housefull boards by destroying left out tickets which was a a comman thing in those days in other big banners for information. that is my experience
closely observed since sixties and more so in seventies.

sankara1970
3rd September 2011, 02:19 PM
திரு வாசுதேவன் பெரிய க்ரூபில் ஐக்கியம் ஆஹி விட்டார்- ஒவ்வொரு சீன் மட்டும் இல்லாம, வரியையும் சொல்லகூடிய திறமை ஒரு சிலருக்கு தன உண்டு-அந்த வஹையில் இவருடய நடை நன்றாக இருக்கிறது

parthasarathy
3rd September 2011, 04:27 PM
One of pur junior member has made a sacastic statement saying most of the movies say 90 PERCENTran more than 10days only in shanthi crown bhuvaneswari ONLY. i STRONGLY refute this statement. if you take the records only 10percent of movies screened in the above theatres ran more than 100days and most of the movies were lifted before 1oo days and why movies with very big collections like thillana mohanambal were not allowed to silver jubliee.
all these things has happened in the past as We are not in the habit of expecting any false publicity and never in the habit of putting housefull boards by destroying left out tickets which was a a comman thing in those days in other big banners for information. that is my experience
closely observed since sixties and more so in seventies.

Dear Shri. Ramajayam,

Excellent and spontaneous retaliation. The 100 days info. on NT films given by Mr. Pammalar in the last two weeks have only been very few and would be 5% of his vastly successful movies. Its coincidental that some of them were screened in Shanthi, Crown and Bhuvaneswari. Even Thavappudhalvan, which was posted recently by Mr. Pammalar celebrated 100 day run not in Shanthi but in Pilot.

Mr. Murali gave a detailed analysis on "Singath Thamizhan Sivajiyin Saadhanaich ChigarangaL" which gave detailed info. including collections. Mr. Pammalar and others have been taken monumental efforts in posting the celebrations of NT's various movies around the world (recently Mr. Pammalar has posted an article by Mr. Yaazh Sudhakar about the unparalled success of many NT movies in Sri Lanka, including Vasantha Maaligai and Pilot Premnath. Mr. Adiram can read that article also, if he wants to).

Such misunderstandings and wrong judgements have been part and parcel of NT's glorious career and it continues even today. Time only should correct this.

Regards,

R. Parthasarathy

parthasarathy
3rd September 2011, 04:34 PM
Dear Mr. Pammalar,

There have been some problems in my system also due to which, I could not give my postings recently.

As requested by Mr. Vasudevan, Mr. Pammalar, Mr. Chandrasekar and Saradha Madam, I also request you to take care of yourself (which has been the consistent mantra of our Idol too for his fans). While we expect lot of postings from you in future continuously, which is one of the main reasons to keep this glorious thread very interesting, we also request you again to do such postings without affecting your personal priorities.

Regards,

R. Parthasarathy

mr_karthik
3rd September 2011, 05:00 PM
மிஸ்டர் ஆதிராம்,

நிஜமாகவே உங்களுக்கு என்ன வேண்டும்?.

நீங்கள் கேட்பது உண்மையிலேயே விளக்கமா?
அல்லது
குட்டையை குழப்பும் முயற்சியா?.
உண்மையிலேயே விளக்கம் வேண்டுமென்றால், இத்திரியின் முந்தைய பாகங்களைப் படியுங்கள். உங்களுக்கு வேண்டிய விளக்கங்கள் கிடைக்கும்.

mr_karthik
3rd September 2011, 05:08 PM
பம்மலார் சார்,

'சரஸ்வதி சபதம்' சாதனைச்செப்பேடுகளுக்கு நன்றி.

இம்மாத களேபரங்கள்....

செப் 02 என் தமிழ் என் மக்கள்
செப் 03 சரஸ்வதி சபதம்
செப் 03 தியாகி
செப் 07 பாலும் பழமும்
செப் 07 நாம் பிறந்த மண்
செப் 12 புதிய பறவை
செப் 14 இரு மேதைகள்
செப் 14 தாவணிக் கனவுகள்
செப் 20 ராஜ ரிஷி
செப் 24 மிருதங்க சக்கரவர்த்தி
செப் 27 அன்பே ஆருயிரே
செப் 29 வசந்த மாளிகை

vasudevan31355
3rd September 2011, 05:32 PM
டியர் சந்திரசேகரன் சார்,
அன்பு நன்றிகள் சார்....

அன்பு பம்மலார் சார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள். 'செல்லுலாய்ட் திலகத்தின்(என்ன ஒரு அழகான பட்டம் நடிகர் திலகத்திற்கு!.)செப்டம்பர் சித்திரங்கள்'ஆரம்பமே ஜெட் வேகமாய் இருக்கிறதே! 'சரஸ்வதி சபதம்' முதல் வெளியீட்டு விளம்பரம் (முரசொலி), 100வது நாள் தினமணி விளம்பரம், 100 நாள் ஓடி வெற்றி கண்ட தியேட்டர்கள், 'வித்யாபதி'யின் தெய்வீகத் தோற்றம் என்று திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள்.

சரஸ்வதி 'சபதம்' எடுத்தது போல இந்த செப்டம்பரில் கலக்க வேண்டும் என்று சபதமெடுத்து விட்டீர்களா?... அருமை! அற்புதம்! அட்டகாசம்! ..உங்களால் எங்களுக்கு அளவிடற்கரிய ஆனந்தம். நன்றி!...நன்றி!...நன்றி!...

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
3rd September 2011, 05:53 PM
மதிப்பிற்குரிய அன்பு sankara1970 சார்,

தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இனிய அழகு மழலைத் தமிழை கேட்டால் எவ்வளவு இன்பம் உள்ளத்தில் ஊடுருவி உயிரணுக்களை இன்புறச் செய்யுமோ , அதைப் போல உங்கள் post-இன் மழலைத்தமிழ் படிக்க படிக்க அவ்வளவு இன்பமாய் இனித்தது. தமிழுக்குத் தான் எவ்வளவு இனிமை! எவ்வளவு சுவை!.... மறுபடியும் உள்ளம் நெகிழ்ந்த மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
3rd September 2011, 06:26 PM
அன்பு கார்த்திக் சார்,

இம்மாத களேபரங்கள் list 'அல்வா' போல இனிக்கிறது. நன்றி சார்!..அந்த லிஸ்ட்டில் செப்டம்பர் 5 (1969) ஆம் தேதியில் ஜனனம் எடுத்த நமது அனைவரின் உயிரான...


http://i36.tinypic.com/dzgy80.jpg

வேறு இருக்கிறாரே!

உங்கள்,

அன்பு வாசுதேவன்.

Subramaniam Ramajayam
3rd September 2011, 08:20 PM
dear mr parthasarathy.
Thanks for your compliments. we can show more good example to our friend mr adiram. deivamagan was going very strong in our shanthi and group of theatres and sivantha mann was ready for release. producers wanted shanthi theatre for their prestigious movieand appealed sivaji fans also to plead for their cause. we have strongly objected this move. luckilly our chinnavar shri shunmugam strongly also denied their request. otherwise a movie recomended for oscar would have been lifted in 12weeks to give way for sivanthamann. these things can happen only in our NT's case. when deivamagan comes to mind all these happenigs flash in our minds.
ramajayam

vasudevan31355
4th September 2011, 10:42 AM
எங்கள் 'தெய்வ மகனே' வருக! வருக!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/lunapic_13151074225787_1.jpg



அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
4th September 2011, 11:03 PM
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். (5-9-2011). ஆசிரியர் தினம்.

இரண்டாவது குடியரசுத் தலைவரும், முதல் பிரதமரும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/url.jpg

'கப்போலோட்டிய தமிழர்' பிறந்த நாள். (5-9-2011).

'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி.

http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.saivaneri.org/images/great-pillais/Ship-Owner-V.O.Chidambaram-Pillai.jpg&sa=X&ei=ZrtjTvCMAofUrQfuvpmWCg&ved=0CAcQ8wc&usg=AFQjCNG8ZFaF4lJil8SIO9w8EKy9cL7uzw


'கப்பலோட்டிய தமிழனாக' வாழ்ந்து காட்டிய கலைக்குரிசில் .

http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.bollymarket.com/images/kdvd_kappalottiyathamizhan.jpg&sa=X&ei=a7NjTv_GOsfqrAftztX_CQ&ved=0CAcQ8wc&usg=AFQjCNE72N8-EXh1WQ_ftRqg1K3b50Epzg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
5th September 2011, 12:06 AM
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன் சார்,
சரஸ்வதி சபதம் எடுத்து ஈன்ற தெய்வ மகனைப் பற்றிய தங்கள் நினைவூட்டல்கள் சிம்ப்ளி சூப்பர் என்றால், இன்று ராதா கிருஷ்ணன் மற்றும் வ.உ.சி. பற்றிய நினைவூட்டல் மேலும் க்ளாஸ்...

ராகவேந்திரன்

RAGHAVENDRA
5th September 2011, 12:06 AM
செப்டம்பர் 3 அன்று வெளியான தியாகி திரைக்காவியத்தின் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thyagireleaseadfw.jpg

RAGHAVENDRA
5th September 2011, 12:08 AM
செப்டம்பர் 2 தேதியில் வெளியான என் தமிழ் என் மக்கள் திரைக்காவியத்தின் இசைத்தட்டு முகப்பு

http://img97.imageshack.us/img97/2813/enthamizhenmakkal.jpg

இதனை மற்றொரு இணைய தளத்தில் தரவேற்றிய நண்பருக்கு நன்றி.

RAGHAVENDRA
5th September 2011, 12:22 AM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Honours/padmashree.jpg

அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பத்மஸ்ரீ விருது பெறும் காட்சி

நிழற்படம் நன்றி. சகோதரி கிரிஜா அவர்களின் www.nadiigarthilagamsivaji.com

RAGHAVENDRA
5th September 2011, 12:26 AM
http://i35.tinypic.com/11m5ls7.jpg

தெய்வமகன் திரைக்காவியத்திலிருந்து மற்றொரு நிழற்படம்

pammalar
5th September 2011, 04:17 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது ஆனந்தமயமான பாராட்டுதல்களுக்கு எனது அன்பான நன்றிகள் !

"சரஸ்வதி சபதம்" 46வது வருட ஆரம்பநாள் அமர்க்களங்கள் என்கின்ற தலைப்பில் தாங்கள் அளித்துள்ள Stills மற்றும் Song அனைத்தும் Superb !

"தெய்வமகன்" நிழற்படங்கள், கப்பலோட்டிய தமிழன் நிழற்படங்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன்-பண்டித நேரு இருவரும் இணைந்து காணப்படும் நிழற்படம் எல்லாமே அற்புதப் பொக்கிஷங்கள் !

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார், நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2011, 04:23 AM
Dear Mr. Pammalar,

There have been some problems in my system also due to which, I could not give my postings recently.

As requested by Mr. Vasudevan, Mr. Pammalar, Mr. Chandrasekar and Saradha Madam, I also request you to take care of yourself (which has been the consistent mantra of our Idol too for his fans). While we expect lot of postings from you in future continuously, which is one of the main reasons to keep this glorious thread very interesting, we also request you again to do such postings without affecting your personal priorities.

Regards,

R. Parthasarathy

Dear Parthasarathy Sir,

My sincere thanks for your kind words.

Regards,
Pammalar.

pammalar
5th September 2011, 04:38 AM
பம்மலார் சார்,

'சரஸ்வதி சபதம்' சாதனைச்செப்பேடுகளுக்கு நன்றி.

இம்மாத களேபரங்கள்....

செப் 02 என் தமிழ் என் மக்கள்
செப் 03 சரஸ்வதி சபதம்
செப் 03 தியாகி
செப் 07 பாலும் பழமும்
செப் 07 நாம் பிறந்த மண்
செப் 12 புதிய பறவை
செப் 14 இரு மேதைகள்
செப் 14 தாவணிக் கனவுகள்
செப் 20 ராஜ ரிஷி
செப் 24 மிருதங்க சக்கரவர்த்தி
செப் 27 அன்பே ஆருயிரே
செப் 29 வசந்த மாளிகை

டியர் mr_karthik,

பாராட்டுக்கும், பட்டியலுக்கும் நன்றி !

தாங்கள் வழங்கிய பட்டியலை சிற்சில திருத்தங்களுடன் முழுமையான பட்டியலாகத் தந்துள்ளேன்:

செப் 02 : என் தமிழ் என் மக்கள்(1988)

செப் 03 : சரஸ்வதி சபதம்(1966), தியாகி(1982)

செப் 05 : தெய்வமகன்(1969)

செப் 09 : பாலும் பழமும்(1961) [பொன்விழா நிறைவு]

செப் 12 : புதிய பறவை(1964)

செப் 14 : செந்தாமரை(1962) [பொன்விழா தொடக்கம்], இரத்தத்திலகம்(1963), இரு மேதைகள்(1984), தாவணிக் கனவுகள்(1984)

செப் 17 : பூப்பறிக்க வருகிறோம்(1999)

செப் 20 : கல்யாணியின் கணவன்(1963), ராஜ ரிஷி(1985)

செப் 21 : வாழ்விலே ஒருநாள்(1956), ராணி லலிதாங்கி(1957)

செப் 24 : மிருதங்க சக்கரவர்த்தி(1983)

செப் 27 : அன்பே ஆருயிரே(1975)

செப் 29 : வசந்த மாளிகை(1972)

["நாம் பிறந்த மண்", 7.10.1977 அன்று வெளியான காவியம்.]

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
5th September 2011, 04:47 AM
'தெய்வ மகன்' 43வது ஜெயந்தி

கலையுலகின் தலைமகன் ...
திரையுலகின் தவப் புதல்வன்...
உள்ளத்தால் உயர்ந்த மனிதன்...
உண்மையான உத்தம புத்திரன்....
ராஜாமணியின் அன்பு மகன்...
என்றும் எங்களின் தெய்வ மகன்...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/131513167827946.gif

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/131514166198836.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5.jpg

தொடர்கிறது....

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
5th September 2011, 04:53 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பசுமையான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

"தியாகி" இன்று முதல் விளம்பரம், "என் தமிழ் என் மக்கள்" இசைத்தட்டு முகப்பு, 1966-ல் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து நமது நடிகர் திலகம் 'பத்மஸ்ரீ' விருது பெறும் கண்கொள்ளாக் காட்சி, "தெய்வமகன்" நிழற்படம் எல்லாம் typical ராகவேந்தர் கலக்கல் !

நன்றி கலந்த பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
5th September 2011, 04:57 AM
'தெய்வமகன்' நிழற்படங்கள் தொடர்கிறது....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4.jpg

தொடர்கிறது....

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
5th September 2011, 05:01 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

என் தமிழ் என் மக்கள்

[2.9.1988 - 2.9.2011] : 24வது உதயதினம்

அரிய பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பொம்மை : அக்டோபர் 1988
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4481a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
5th September 2011, 05:03 AM
தெய்வமகன் நிழற்படங்கள் தொடர்கிறது...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/131513360311401.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/13151323.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/131513.jpg

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
5th September 2011, 05:06 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தியாகி

[3.9.1982 - 3.9.2011] : 30வது ஜெயந்தி

அரிய பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 2.9.1982
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4482a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2011, 05:17 AM
இன்று 5.9.2011 கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல்
வ.உ.சிதம்பரனார் அவர்களின் 140வது அவதாரத் திருநாள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/KTColor1-1.jpg
"கப்பலோட்டிய தமிழன்(1961)" திரைக்காவியத்தில் வ.உ.சி.யாக வாழ்வியல் திலகம்

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
5th September 2011, 05:20 AM
'சங்கராக' சங்கடங்கள் சுமந்தாய்..
'கண்ணனாக' கஷ்டங்கள் அனுபவித்தாய்...
'விஜய்யாக' விளையாட்டுக்கள் புரிந்தாய்...
'தெய்வ மகனாக' எங்களுள் நிறைந்தாய்...

தெய்வமே!..தெய்வமே!..நன்றி சொல்வோம் தெய்வமே!...


http://www.youtube.com/watch?v=cCIfRzQtgqA&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
5th September 2011, 05:29 AM
இந்தியத் திருநாட்டின் இரண்டாவது ஜனாதிபதியுடன் கலையுலக ஜனாதிபதி

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/RS-1.jpg

இன்று 5.9.2011 முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் 124வது பிறந்ததினம் மற்றும் ஆசிரியர் தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
5th September 2011, 05:50 AM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தெய்வமகன்

[5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kannan1-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
5th September 2011, 10:15 AM
செப்டம்பர் களேபரம் என்றவுடன் பட்டியலை அளித்த திரு.கார்த்திக் அவர்களுக்கு நன்றி.

என் தமிழ் என் மக்கள் –

இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டபோது, நான் நடிகர்திலகம் அவர்களுடைய அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். திரைப்பட ஷூட்டிங்கிற்கும் சில நேரம் சென்றிருக்கிறேன். ஒருநாள் மந்திரி MLA வேடத்தில் நடிகர்திலகத்துடன் பலர் நடித்துக்கொண்டிருந்தார்கள். நான் அப்போது அங்கு சென்றேன். நடிகர்திலகத்தை பார்க்கச் சென்ற சிலர் மந்திரி, MLA வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள். நான் வேட்டியில் சென்றிருந்தால் என்னையும் அவருடன் ஒரு சீனில் நிற்கவைத்திருப்பார்கள். என் துரதிர்ஷ்டம் நான் இயல்பாக பேன்ட் அணிந்து சென்றிருந்தேன். இல்லையென்றால் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு சந்திப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தமாதிரி பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கும்.

நடிகர்திலகம் அவர்கள் டயலாக் பேசுவதை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். கவிஞர் வாலி அவர்களின் பல பக்க வசனங்களை அவரது அருகில் உட்கார்ந்து உதவியாளர் படிக்க, செட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தூங்கிக்கொண்டு இருப்பார் நடிகர்திலகம். ஆம், பார்ப்பவர்களுக்கு அவர் தூங்கிக்கொண்டு இருப்பது மாதிரிதான் தெரியும். டைரக்டர் சந்தான பாரதி டேக் என்று சொன்னவுடம் கம்பீரமாக எழுந்து, தான் காதால் கேட்ட பல பக்க வசனங்களை ஒரே டேக் -ல் பேசிவிட்டு வந்து அமர்வார். அந்த காலத்தில் (1988) அவருக்கு வயது 60 . நான் நினைத்துப் பார்த்தேன், 60 வயதில் சிங்க நடை போடும் இவர் வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை காலத்தில் எப்படி நடித்திருப்பார், வசனம் பேசியிருப்பார் என்று - நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை தமிழக முன்னேற்ற முன்னணியின் ஒரு பிரச்சாரப் படமாகவே அமைந்திருந்தாலும், கங்கை அமரன் அவர்களின் இசையில் ரசிகர்களை ஆட்டம் போடவைத்த "ஆரம்பித்து வச்சவரு அண்ணன்தான்" போன்ற பாடல்களுடன் விறுவிறுப்பில் குறைவில்லாமலேயே இருந்தது. கதைக்கருவும் நன்றாகவே இருந்தது.

274 -ஆவது படமாக அமைந்த இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர்திலகம் புதிய வானத்தில் நடித்தார். அதன்பின் 1989 தேர்தல் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது உடல்நலம் குன்றியது ஆகிய காரணங்களால் 2 வருடங்கள் நடிக்கவில்லை. பின்னர் மீண்டு(ம்) வந்து ஒன்ஸ் மோர், தேவர் மகன், படையப்பா என்று combination ல் ஹிட் படங்கள் கொடுத்தார்.

ஆனாலும் எனக்கு ஒரு குறை. நடிகர்திலகத்தை, அவருடைய திறமையை, இறுதிக் காலத்தில் பயன்படுத்தக்கூடிய இயக்குனர்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்பதுதான். இன்று அமிதாப்பைப் பாருங்கள், இன்றளவும் அவருடைய வயது, தோற்றத்திற்கேற்ப படங்கள் வெளிவருகின்றன. இல்லையெனில் முதல் மரியாதை, தேவர் மகன் மாதிரி நடிகர்திலகத்தின் பலவிதமான வயதான தோற்றங்களை நாம் கண்டு களித்திருப்போம்.

இப்படி நடக்கும் என்று தெரிந்து தானோ என்னவோ - 35 - 40 வயதிலேயே அப்பர், மோட்டார் சுந்தரம் பிள்ளை, prestige பத்மநாபன் போன்ற வயதான தோற்றங்களை அப்போதே நடித்துவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.


நடிகர்திலகம் அவர்களுடனான அந்த இனிய, பசுமையான நாட்களை நினைவுபடுத்தும் விதத்தில் "என் தமிழ் என் மக்கள்" திரைப்படப் இசைத்தட்டு முகப்பு பதிவை இங்கு அளித்த திரு.ராகவேந்திரன், முதல் வெளியீட்டு விளம்பரத்தை பதிவு செய்த திரு. பம்மலார் அவர்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள்.

parthasarathy
5th September 2011, 10:17 AM
dear mr parthasarathy.
Thanks for your compliments. we can show more good example to our friend mr adiram. deivamagan was going very strong in our shanthi and group of theatres and sivantha mann was ready for release. producers wanted shanthi theatre for their prestigious movieand appealed sivaji fans also to plead for their cause. we have strongly objected this move. luckilly our chinnavar shri shunmugam strongly also denied their request. otherwise a movie recomended for oscar would have been lifted in 12weeks to give way for sivanthamann. these things can happen only in our NT's case. when deivamagan comes to mind all these happenigs flash in our minds.
ramajayam

Dear Sir,

Thank you for the details on "Deiva Magan" and "Sivantha Mann". There are many more such examples, which most of the people are not aware and go simply by misplaced propaganda.

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
5th September 2011, 10:21 AM
டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் மற்றும் தெய்வ மகன் புகைப்படப் பதிவுகள் அருமை. நன்றி திரு. ராகவேந்திரன், திரு.பம்மலார், திரு.வாசுதேவன்

vasudevan31355
5th September 2011, 12:33 PM
நன்றிகள் திரு.ராகவேந்திரன் சார்!.

'தியாகி' வெளியீட்டு விளம்பரம் அபூர்வமான ஒன்று.
'என் தமிழ் என் மக்கள்' திரைக்காவியத்தின் இசைத்தட்டு முகப்பு படு பாந்தம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பத்மஸ்ரீ விருது பெறும் காட்சி நம்மைப் பெருமைப் பட வைத்த ஒன்று.
தூண்களின் மறைவில் கண்ணன் மற்றும் விஜய். சூப்பர் ஸ்டில்.
அனைத்தும் ஆனந்தப் பட வைக்கின்றன.எல்லாவற்றுக்கும் அன்பான நன்றிகள் சார்!...

அன்பு பம்மலார் சார்,

தங்களின் சந்தோஷமான பாராட்டுதல்களுக்கு என் அன்பான நன்றிகள் !
என் தமிழ் என் மக்கள் 'பொம்மை' இதழ் முதல் வெளியீட்டு விளம்பரம் சத்திய நாயகனுக்கு சத்தியமாய் தாங்கள் செய்த அஞ்சலி.
'தியாகி' முதல் வெளியீட்டு விளம்பரம் (தினத்தந்தி) எளிதில் காணக் கிடைக்காத ஒன்று.
கப்பலோட்டிய தமிழனின் கலர் ஸ்டில் கலக்கல். 'கப்பலோட்டிய தமிழன்' காவியத்தை கலர்ப் படமாகப் பார்த்த மாதிரி ஒரு உணர்வை அந்த ஸ்டில் ஏற்படுத்துவது உண்மை. அதற்காக பிடியுங்கள் ஒரு 'சபாஷ்'
இரு ஜனாதிபதிகளும் ஜமாய்க்கும் அரிய நிழற்படம் நிஜமாகவே நித்ய தரிசனம்.
அந்தக் கண்ணனின் சிதார் ஸ்டில் மனத்தைக் கரைய வைக்கிறது. கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுக்கலாம் நம் கோமகனுக்கு.. அந்த ஸ்டில் ஒன்றிற்காகவே..
எல்லாமே excellent. நன்றிகள் நவில நா எழ வில்லை.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
5th September 2011, 01:07 PM
டியர் சந்திர சேகரன் சார்,

பொன் தகடுகளில் பதிக்க வேண்டிய போஸ்ட் தங்களின் அற்புதமான 'என்தமிழ் என் மக்கள்' பற்றிய போஸ்ட்.
அந்த அன்பு தெய்வத்தின் அருகில் இருந்து தொண்டுகள் செய்த தங்களின் மனநிலையை உணர முடிகிறது. பசுமை நினைவுகளை பக்காவாக பகிர்ந்தளித்து விட்டீர்கள். கண்ணீர் மல்க நன்றி சொல்கிறேன் சார்...

நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரியே. நானும் நடிகர் திலகத்தின் சில ஷூட்டிங்குகள் பார்த்திருக்கிறேன். 'நேர்மை' பட ஷூட்டிங் போது நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டிருந்தார். அருகில் உதவியாளர் ஒருவர் வசனங்களைப் படித்துக் காட்ட, நம்மவரோ தூங்கிக் கொண்டிருக்கிறாரே என்று நான் நினைக்க அவர் முகத்தில் எந்த ஒரு expression-ம் இல்லை. ஆனால் டைரக்டர் 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி 'ஷாட் ரெடி' சொன்னதும் பொங்கி வரும் வெள்ளப் பிரவாகமாய், சிலிர்த்தெழுந்த சிம்மமாய், சீறி பாயும் காளை போல நம் சிம்மக் குரலோன் நடிப்புப் புயலை வீச ஆரம்பித்ததும் அப்படியே ஆடிப் போய் விட்டேன் நான். மனிதர் தூங்கவில்லை வசனங்களை அவ்வளவு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார் என்று அப்போது தான் புரிந்தது. இவ்வளவுக்கும் இரண்டு உதவியாட்கள் அவரின் கை கால்களை வேறு பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். ஷாட் ரெடி என்ற குரல் கேட்டு விட்டால் அவருக்கு எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வருமோ?..போங்கள்.

அதனால்தான் அவரை அசைக்கப் பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.அசந்தும் போனார்கள். நினைவுகளைக் கிளறியமைக்கு ஸ்பெஷல் நன்றிகள் சார்..

ஒரு அன்பு வேண்டுகோள் சார்.. அவருடனான தங்களின் அனுபவங்களை நிறைய எழுதுங்கள்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
5th September 2011, 01:20 PM
டியர் ராகவேந்திரன் சார்,
மறைத்து விட்டீர்களே! பார்த்தீர்களா?.. சந்திரசேகரன் சார் தெரிய வைத்து விட்டார். 'சந்திப்பு' படத்தில் எந்த சீனில் வருகிறீர்கள்? அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ராகவேந்திரன் சார் ரசிகர் மன்றம் தொடங்க நாங்களெல்லாம் ரெடி. என்ன பம்மலார் சார்! நீங்களும் ரெடி தானே?..

ரசிக்கக் காத்திருக்கும்,

ரசிகவேந்தரின் அன்பு வாசுதேவன்.

KCSHEKAR
5th September 2011, 02:18 PM
தங்கள் பாராட்டுக்கும், வேண்டுகோளுக்கும் நன்றி வாசுதேவன் சார். கண்டிப்பாக அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன்

mr_karthik
5th September 2011, 04:12 PM
வாசுதேவன் சார்,

'சந்திப்பு' படத்தில் தான் ஒரு காட்சியில் தோன்றியது பற்றி ஏற்கெனவே ராகவேந்தர் சார் நமது திரியில் விவரமாகச் சொல்லியிருந்தார். அதை எல்லோரும் படித்துள்ளோம். நீங்கள் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன்.

சந்திர சேகர் சார்,

தங்களின் த.மு.முன்னணி கால நினைவலைகள் சுவையாக உள்ளன. வாசு சொன்னதுபோல இன்னும் விலாவரியாகச் சொன்னால் மகிழ்வோம் நாங்கள். த.மு.மு. அலுவலகத்தில் என்ன பொறுப்பில் தாங்கள் இருந்தீர்கள்?. அப்போது கட்சிப்பணிகள் எல்லாம் எப்படி நடந்தன?. மேஜரும் சௌகாரும் கூட கட்சியில் இருந்தார்களே, அவர்களின் செயல்பாடுகள் எப்படியிருந்தன? போன்றவற்றை அறிய அதிக ஆவலாக உள்ளோம். த.மு.மு.கட்சி ஜனதாதளத்துடன் 'மெர்ஜ்' ஆனதா, அல்லது கலைக்கப்பட்டதா என்பதையும் தெரிவிக்கவும். (அப்போது நான் "நிறைய" சம்பாதிக்க வேண்டும் என்ற நப்பாசையில் குவைத் நாட்டில் இருந்ததால், நாட்டு நடப்புகள்பற்றிய விவரங்களில் சிறிது தொய்வு விழுந்து விட்டது).

KCSHEKAR
5th September 2011, 04:58 PM
நன்றி திரு. கார்த்திக் அவர்களே.

நான் முதலில் தட்டச்சராக வேலைக்கு சேர்ந்து பின்னர் த.மு.மு. அலுவலகத்திலும் பின்னர் ஜனதாதள அலுவலகத்திலும், தலைமை அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றினேன். த.மு.மு கட்சி ஜனதாதள கட்சியுடன் இணைக்கப்பட்டு, நடிகர்திலகம் அவர்கள் தமிழக ஜனதாதள தலைவராக நியமிக்கப்பட்டார்.

நான் அப்போது திருவல்லிக்கேணியில் வசித்து வந்தேன். அப்போது அங்கு வசித்து வந்த திரு.ராகவேந்திரன் அவர்கள் சென்னை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் அலுவலகம் முடிந்து வந்தபின் வெகுநேரம் - இரவு 11 - 12 வரை பேசிக்கொண்டிருப்போம். இன்றும் அந்த நினைவுகள் மிகவும் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

அவ்வப்போது, நேரம் கிடைக்கும்போது தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறேன். நன்றி.

vasudevan31355
5th September 2011, 05:19 PM
நன்றி கார்த்திக் சார்.. நீங்கள் குறிப்பிட்டது போல சில பாகங்கள் இன்னும் திரியில் படிக்கவில்லை.கண்டிப்பாக படித்து தகவலைத் தெரிந்து கொள்கிறேன். சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் சார்..

வாசுதேவன்.

pammalar
5th September 2011, 05:39 PM
அன்புள்ள வாசுதேவரே,

'அன்புள்ள நண்பரே' அசத்தல் என்றால் "தெய்வமகன்" மெகா ஆல்பம் மகாஜோர் !

பாராட்டுக்கு நன்றி !

ரசிகவேந்தருக்காக சிறந்த விஷயமாக என்ன செய்யச் சொன்னாலும் எப்பொழுதுமே நான் ரெடிதான் !

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"என் தமிழ் என் மக்கள்" சிறப்புப் பதிவு சிறந்த தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு.

வாசுதேவன் சார் மற்றும் mr_karthik ஆகியோரின் கூற்றை வழிமொழிகிறேன், தங்களது நிறைவான அனுபவங்களை நிறைய இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2011, 05:49 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தெய்வமகன்

[5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sankar1-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2011, 06:13 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தெய்வமகன்

[5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Vijay1-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
5th September 2011, 06:41 PM
திரு. வாசுதேவன் மற்றும் திரு. பம்மலாரின் தெய்வமகன் புகைப்பட / பொக்கிஷப் புதையல்கள் அருமை. தொடரட்டும் உங்கள் திருத்தொண்டு.

Plum
5th September 2011, 06:47 PM
ஆனாலும் எனக்கு ஒரு குறை. நடிகர்திலகத்தை, அவருடைய திறமையை, இறுதிக் காலத்தில் பயன்படுத்தக்கூடிய இயக்குனர்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்பதுதான். இன்று அமிதாப்பைப் பாருங்கள், இன்றளவும் அவருடைய வயது, தோற்றத்திற்கேற்ப படங்கள் வெளிவருகின்றன. இல்லையெனில் முதல் மரியாதை, தேவர் மகன் மாதிரி நடிகர்திலகத்தின் பலவிதமான வயதான தோற்றங்களை நாம் கண்டு களித்திருப்போம்.


pachanOda ellAm compare paNNAdhInga pls. avaru jatti veLambarathula kooda nadippAr 5 latcham kuduthA.

But unga kumuRal enakku puriyudhu. Me also pala varushamA kumuRingyA. appOnnu illai - 70sla kUda (although many of you fans had full paisa vasool from his movie sin 70s) innum betterA payan paduththi irukkalAm.

Actually, 60s la kooda betterA use paNNi irukkalAm. But net-net, 60s was a satisfying decade for me from NT.

If you ask me, the utilisation of NT was
50s - 40%
60s - 50%
70s - 20%
80s - 10%
appuRam only AngAngE so no need to comment. So
90s - 0%, save for Thevar Magan.


yArainga kuRai solRadhu?

pammalar
5th September 2011, 06:59 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தெய்வமகன்

[5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 5.9.1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3803-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.12.1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3802-1.jpg

[சற்றேறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்னர் நமது ஹப்பர் mr_karthik கேட்டுக்கொண்டதற்கிணங்க "தெய்வமகன்" விளம்பரப் பொக்கிஷங்கள் இங்கே எம்மால் இடுகை செய்யப்பட்டன. இன்று ரிலீஸ் மேளாவை முன்னிட்டு மீண்டும் இந்த சாதனைப் பொக்கிஷங்கள் இங்கே பதிவிடப்பட்டிருக்கின்றன.]

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2011, 07:35 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தெய்வமகன்

[5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

இக்காவியத்தின் மற்றொரு விளம்பரம் : பொம்மை : செப்டம்பர் 1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4491a-1.jpg

வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2011, 09:12 PM
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

தெய்வமகன்

[5.9.1969 - 5.9.2011] : 43வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : பொம்மை : செப்டம்பர் 1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4493a-1.jpg


தனித்தனிப் பக்கங்களாக...
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4497a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4494a-1.jpg

நிறைகிறார் !

அன்புடன்,
பம்மலார்.

joe
5th September 2011, 09:39 PM
Ultimate collection from Deiva Magan :clap:

Subramaniam Ramajayam
5th September 2011, 09:51 PM
recent albums are very worth for watching and filing. DEIVAMAGAN a milestone in the carrier of our NADIGAR THILAGAM. THE MOVIE CAN BE KEPT AS INTRODUCTION TO ACTING IN THE FILM INSTITUTE FOR YOUNGER GENERATIONS.

pammalar
5th September 2011, 10:22 PM
Ultimate collection from Deiva Magan :clap:

Thank You very much, Mr.Joe.

pammalar
5th September 2011, 10:23 PM
recent albums are very worth for watching and filing. Deivamagan a milestone in the carrier of our nadigar thilagam. The movie can be kept as introduction to acting in the film institute for younger generations.

"n" percent true sir !

RAGHAVENDRA
5th September 2011, 10:39 PM
இரு நாட்களாக வேறு சில அலுவல்கள் காரணமாக இத்திரியில் முழுமையாக பங்கேற்க இயலவில்லை. பம்மலாரும் வாசுதேவன் சாரும் சேர்ந்து இத்திரியினை மிக உயரத்தில் கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.

டியர் வாசுதேவன் சார்,
சந்திப்பு திரைக்காவியத்தின் படப்படிப்பு இரவில் அருணாச்சலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. நாங்கள் சென்ற போது உன்னைத் தான் கும்பி்ட்டேன் பாடல் படமாக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் நடிகர் திலகத்தின் படப்பிடிப்பைக் காணும் பேறு பெற்றோம். நாங்கள் தூரத்தில் நின்று கொண்டிருந்தோம். இருந்தாலும் யூனிட் நண்பர்கள் எங்களையும் சேர்த்துப் படமாக்கினார்கள். ஆனால் எங்களை அடையாளம் காண முடியாது, காரணம் விளக்கின் ஒளி எங்கள் மீது விழவில்லை.

டியர் பம்மலார்,
ஆஸ்கார் நாயகனின் தெய்வ மகன் ஸ்டில்ஸ் சூப்பர்... கலக்கல்...

தெய்வ மகன் சூட்டோடு இருக்கும் போது கெடுக்க விரும்பவில்லை. இருந்தாலும் இந்த நேரத்தில் சரஸ்வதி சபதம் பொம்மை இதழ் விளம்பரத்தின் நிழற்படத்தை இங்கு பகிரந்து கொள்வதில் பெரும் மகிழ்வுறுகிறேன்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ssabathamAdfw.jpg

அன்புடன்

vasudevan31355
5th September 2011, 11:00 PM
அன்பு பம்மலார் சார்,
கலக்கிட்டீங்க போங்க..... தெய்வ மகனில் இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? திகட்ட திகட்ட தேனமுது படைத்து விட்டீர்கள். அதுவும் பொம்மை நிழற் படங்கள் தனித் தனிப் பக்கங்களாக தேனாக இனிக்கின்றன. எங்கள் அன்பு பம்மலார் இருக்க எமக்கேது கவலை?

அன்பு
வாசுதேவன்.

vasudevan31355
5th September 2011, 11:08 PM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என் உண்மையான நன்றிகள். சந்திப்பு படத்தில் தாங்கள் தெரியாவிடினும் ஒரு சிறு பங்களிப்பாகவாவது இருக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்தது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. சரஸ்வதி சபதம் பொம்மை இதழ் விளம்பரம் படு colourful. வெகு ஜோர். நன்றிகள் சார்!..

உங்களின்
வாசுதேவன்.

pammalar
6th September 2011, 12:13 AM
டியர் ராகவேந்திரன் சார்,

கலக்கல் பாராட்டுக்கு கனிவான நன்றி !

வண்ணமயமான "சரஸ்வதி சபதம்" பொம்மை இதழ் விளம்பரம் நெஞ்சை அள்ளுகிறது ! பாராட்டுக்களும், நன்றியும் !

டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்!

டியர் சந்திரசேகரன் சார்,

மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th September 2011, 04:08 AM
When going through all the 100th day ads posted here in the previous several pages, except very few (like Sivandha mann, Andhaman Kadhali, Dhavaputhalvan) nearly 90% of the movies ran 100 days in Shanti, Crown, Bhuvaneswari at Madras.

any specific reasons for that?.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4499a-1.jpg

சென்ற வருடம்(2010) இந்த நோட்டீஸ் வெளிவந்த போதே நமது திரியில் எம்மால் இடுகை செய்யப்பட்டது. தற்பொழுது மேற்குறிப்பிட்ட பதிவுக்கு தக்க பதிலாக மீண்டும் இங்கே இந்த அரிய ஆவணம் இடுகை செய்யப்பட்டுள்ளது.

pammalar
6th September 2011, 04:32 AM
சிங்கத்தமிழனின் சிகர பேட்டி

நமது நடிகர் திலகம் தனது 73 வருட வாழ்க்கைப் பயணத்தில் தனது அனுபவங்களை எவ்வளவோ பத்திரிகைகளில் எத்தனையோ விதமான பேட்டிகளில் அளித்திருக்கிறார்; கட்டுரைகளாக வடித்திருக்கிறார்; கட்டுரைத் தொடர்களாகவும் எழுதியிருக்கிறார். அவர் அளித்த பேட்டிகளிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது, 1997-ம் ஆண்டு 'தினமணி' நாளிதழின் தீபாவளி மலருக்காக அவர் வழங்கிய நேர்காணல். அவரது வாழ்வில் அவர் அளித்த சிகர பேட்டி என்றும் அதனைக் கூறலாம். 13 பக்கங்கள் கொண்ட மெகா பேட்டியாக் அது அமைந்தது. அந்த சிகர பேட்டியை அதன் ஒரிஜினல் வடிவிலேயே நமது திரியில் பதிவிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்.

இனி நடிகர் திலகத்தின் 13 பக்க பேட்டியைப் படிக்கத் தயாராகுங்கள்:

வரலாற்று ஆவணம் : தினமணி தீபாவளி மலர் : அக்டோபர் 1997

முதல் இரண்டு பக்கங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4500a-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4501a-1.jpg


நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4502a-1.jpg


ஐந்தாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4503a-2.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th September 2011, 05:09 AM
சிங்கத்தமிழனின் சிகர பேட்டி [தொடர்ச்சி...]

வரலாற்று ஆவணம் : தினமணி தீபாவளி மலர் : அக்டோபர் 1997

ஆறாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4504a-1.jpg


ஏழாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4505a-1.jpg


எட்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4506a-1.jpg


ஒன்பதாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4507a-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
6th September 2011, 05:19 AM
நடிப்புலகச் சக்கரவர்த்தியின் அரிய நிழற் படங்கள். .
பம்மலார் அவர்கள் இடுகை செய்த நடிகர் திலகத்தின் அற்புதமான பேட்டிக்கு இதோ ஒரு சிறு பங்களிப்பு..

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivajiGanesan7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivajiGanesan8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivajiGanesan9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivajiGanesan11.jpg

அன்புடன்,

வாசுதேவன்.

pammalar
6th September 2011, 05:23 AM
சிங்கத்தமிழனின் சிகர பேட்டி [தொடர்ச்சி...]

வரலாற்று ஆவணம் : தினமணி தீபாவளி மலர் : அக்டோபர் 1997

பத்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4508a-1.jpg


பதினொன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4509a-1.jpg


பன்னிரெண்டாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4510a-1.jpg


பதிமூன்றாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4512a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
6th September 2011, 06:39 AM
dear pammalar sir
Very fitting reply to mr adiram and others who are not aware of our SUCCESS MOVIIES AND DETAILS. YOU have given it well distributed likenorth south central with full details. IDU PODUMA INNAMUM VENDUMA. As you said earlier some people are in this catageory whom would not be prepared to accept the facts any time.
GREAT JOB DONE really hatsoff for people like you and raghavendran vasudevan and everyone who makes this thiri more lively.

RAGHAVENDRA
6th September 2011, 07:05 AM
When going through all the 100th day ads posted here in the previous several pages, except very few (like Sivandha mann, Andhaman Kadhali, Dhavaputhalvan) nearly 90% of the movies ran 100 days in Shanti, Crown, Bhuvaneswari at Madras.

any specific reasons for that?.

சிவாஜி படங்களை வேறு தியேட்டரில் திரையிட்டதால் ரசிகர்கள் ஆத்திரம், தியேட்டர்களை அடித்து நொறுக்கி விட்டார்கள். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டரை தவிர வேறு எங்கும் சிவாஜி படங்களை பார்க்கக் கூடாது என்று அவர்களுக்கு வேண்டுதல். எனவே தமிழ் நாட்டில் மூலை முடுக்கில் உள்ள சிவாஜி ரசிகர்கள் அனைத்தும் 3 கி.மீ. 4 கி.மீ. அளவில் அருகில் உள்ள தியேட்டரில் சிவாஜி படங்களைத் திரையிடக் கூடாது என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பிடித்து வெளி வர விடாமல் செய்து விட்டு 600, 700 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை நகருக்கு தங்கள் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் ஆயிரக் கணக்கில் செலவழித்து பயணம் செய்து சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டரில் சிவாஜி படத்தைப் பார்த்தனர். அது மட்டுமல்லாமல் சிவாஜி படத்தை 100 நாட்கள் ஓட்டினால் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக வேண்டுதல் செய்ததால், வேறு வழியின்றி சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி திரையரங்கில் சிவாஜி படத்தை ஓட்டினர். அது மட்டுமின்றி வேறு எங்கும் சிவாஜி படத்தை பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பதால், சிவாஜி ரசிகர்களின் தொல்லை பொறுக்காமல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் தியேட்டர்களை சிவாஜிக்கு இலவசமாக பட்டா போட்டுக் கொடுத்து விட்டார்கள். . இது தான் காரணம் "

இது போன்ற அர்த்தமற்ற பதில்களை எதிர்பார்க்கும் உள்நோக்கமான கேள்விகளையும் இது போன்ற உள்நோக்கமான எண்ணம் கொண்டவர்களையும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். பதில் சொல்லி இந்த மாதிரி அர்த்தமற்ற கேள்விகளுக்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவிடாமல் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறிய சொல்லும் பணியை நாம் தொடர்வோம்.

அன்புடன்

KCSHEKAR
6th September 2011, 09:34 AM
தெய்வமகன் பொக்கிஷப் புதையல்கள் உண்மையிலேயே கலக்கல். அதோடு தினமணி தீபாவளி மலர் சிறப்பு பேட்டியும் சேர்ந்து அறுசுவை விருந்து படைத்த பம்மலாருக்கு நன்றிகள் பல. ராகவேந்திரன் அவர்களின் சரஸ்வதி சபதம் விளம்பரப் பதிவு அருமை. ஒவ்வொரு பதிவிற்கும் கூடுதல் பலம் சேர்க்கும் வாசுதேவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

abkhlabhi
6th September 2011, 10:48 AM
சிவாஜியை நடிகர் திலகமாக்கிய கட்டபொம்மன்

http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=7352&cat=541

kumareshanprabhu
6th September 2011, 12:05 PM
happy new to our NT fans in Bangalore

Vasantha Malagai is going to be released in Bangalore at natraj and lavanya theatere by september last week please come and join us in grand celeberations

regards
kumareshan prabhu

mr_karthik
6th September 2011, 01:21 PM
அன்புள்ள பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் முழுமையான நேர்காணலை அதன் ஒரிஜினல் வடிவத்திலேயே தந்து அசத்தி விட்டீர்கள். அத்தனை பக்கங்களையும் இங்கே பதிப்பது எவ்வளவு சிரமமும் சிரத்தையும் கொண்ட விஷயம் என்பது நமக்குப்புரிகிறது.

'தெய்வ மகன்' விலம்பரப்பதிவுகளை மீண்டும் பதித்தமைக்கு நன்றி. (இதேபோல நவம்பர் 9 அன்றும் ஒரு மறு பதிவீடு இருக்கிறது). நூறு முகபாவ்ங்களையும் இரண்டே பக்கங்களில் உள்ளடக்கிய 'முகம் மூன்று பாவங்கள் நூறு' பதிவு மிக அருமை. அக்காலத்தில் பேசும் படம், பொம்மை போன்ற இதழ்கள் எவ்வளவு நடுநிலையோடு உண்மையான திறமையாளருக்கு தர வேண்டிய உ(ய)ரிய இடத்தைத் தந்து மகிழ்ந்தன என்பது நாம் கண்கூடாகக்கண்ட உண்மைகள். அதனால்தான் சில 'விகடர்களின்' விஷ(ம)த்தனமான பிரச்சாரங்களும், 'இதயமே இல்லாமல் பேசிய' சிலரின் பொய்ச்செய்திகளும் மக்கள் மத்தியில் எடுபடாமல் போயின.

ராகவேந்தர் சார்,

சிலரது பதிவுகளைக்கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டு, நீங்களே அப்பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பதிலளித்துள்ளீர்களே. இடையிடையே நம்மைக்கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க சில வில்லன்கள் வரத்தான் செய்வார்கள். விடுங்கள்.

mr_karthik
6th September 2011, 01:28 PM
happy new to our NT fans in Bangalore

Vasantha Malagai is going to be released in Bangalore at natraj and lavanya theatere by september last week please come and join us in grand celeberations

regards
kumareshan prabhu

குமரேசன் சார்,

இம்மாதத்தில் அதே இறுதி வாரத்தில் நமது திரியிலும் 'வசந்த மாளிகை' கொண்டாட்டங்கள் களைகட்ட இருக்கின்றன. அதை நினைத்தாலே மனம் குதூகலிக்கிறது. காரணம், 'வசந்த மாளிகை' நாயகனின் சாதனைப்பதிவுகளைத் தந்து கொண்டாட இருப்பவர் 'வசந்த மாளிகை' ஆசிரியர் பம்மலார்.

kumareshanprabhu
6th September 2011, 05:49 PM
dear pammalar Raghavendra vasudevan sir

what a beautiful collections of Deviamagan hats of to you all

regards
kumareshanprabhu

rsubras
6th September 2011, 06:05 PM
pachanOda ellAm compare paNNAdhInga pls. avaru jatti veLambarathula kooda nadippAr 5 latcham kuduthA.

But unga kumuRal enakku puriyudhu. Me also pala varushamA kumuRingyA. appOnnu illai - 70sla kUda (although many of you fans had full paisa vasool from his movie sin 70s) innum betterA payan paduththi irukkalAm.

Actually, 60s la kooda betterA use paNNi irukkalAm. But net-net, 60s was a satisfying decade for me from NT.

If you ask me, the utilisation of NT was
50s - 40%
60s - 50%
70s - 20%
80s - 10%
appuRam only AngAngE so no need to comment. So
90s - 0%, save for Thevar Magan.


yArainga kuRai solRadhu?

very right, there were many not so good movies (at least movies that i didnt like :)) in 70's even though there were some gems amidst that.......... 80's was fine........ may be his health condition did not allow him the luxury of choosing plum roles....... but ennathan irunthaalum padaiyappa la kalakki iruppar......antha look, kambeeram and finally thaan pirantha veedai nokki odarathu........ he is just chanceless......... Rightly Rajini (or KSR) got this punch dialog for NT, (ennikum naanga [actors] ellarum ungalukku pinnadi thaan]

vasudevan31355
6th September 2011, 06:39 PM
அன்பு பம்மலார் சார்,

1997-ம் ஆண்டு 'தினமணி' நாளிதழின் தீபாவளி மலருக்காக நம் அண்ணல் அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒரு நேர்த்தியான காணல். நடிப்புலக மாமேதையை நம் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரடியாக அனுப்பி வைத்து விட்டீர்கள். அவருடன் நாங்கள் அனைவரும் மனம் விட்டுப் பேசியதாக உணருகிறோம். ஆஹா!... என்ன ஒரு அருமையான பேட்டி!

"உரிய காலத்தில் விருது கிடைக்க வில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனதின் ஓரத்தில் 'விண், விண்' என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன் தானே", என்ற அவருடைய ஆதங்கம் அர்த்தமானது. அறிவிலிகள் அறியாதது.

மதிப்பிற்குரிய சாரதா மேடம் சொன்னது போல அடக்கத்தின் உறைவிடமாக அவரது பேட்டி அமைந்துள்ளது. பல்வேறு வினாக்களுக்கு அவர் பதில் அளித்திருக்கும் விதம் அவரது புத்திக் கூர்மையையும்,அடுத்தவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் பாங்கும், சரியான முறையில் தாய் மண்ணில் தான் அங்கீகரிக்கப் படவில்லை என்ற ஏக்கமும், அரசியல் பந்தாட்டங்களில் தானும், தன் திறமைகளும் பந்தாடப் பட்ட பரிதாபமும் ஒரு சேர எதிரொலிக்கிறது.

விரக்தியின் உச்சங்களில் அவர் விருப்பு வெறுப்பின்றி அளித்திருக்கும் இந்த நேர்க்காணல் வெறும் கானல் நீரல்ல. காட்டு மழை. இந்தப் பேட்டியை படித்ததிலிருந்து மனதுக்குள் சொல்லொணா சோகம் வந்து தொற்றிக் கொண்டு விட்டது. இதயத்துக்குள் பார சுமை ஏதோ வந்து அழுத்துகிறது. இனம் புரியாத கலவரம் களி நடனம் புரிகிறது. அந்த மகா கலைஞனின் மனக்குமுறல்கள் மனதைப் பிசைந்து பிழிந்தெடுக்கிறது. தங்கத்தைத் தட்டில் வைத்துக் கொண்டு தகரங்களை தூக்கிக் கொண்டாடும் இந்த தரித்திர பூமியை தெய்வங்கள் தான் காப்பாற்ற வேண்டும். வேறு நான் என்ன சொல்ல...
இந்த அற்புதப் பேட்டியை பல சிரமங்களுக்கிடையில் பதிவிட்ட பாசமிகு பம்மலார் அவர்களே ! என்றென்றைக்கும் நாங்கள் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம். கண்கள் கலங்கிய நன்றிகள்.

அன்பு
வாசுதேவன்.

pammalar
6th September 2011, 07:00 PM
Dear Ramajayam Sir,

My sincere & special thanks for your whole-hearted appreciation.

தங்களைப் போன்ற பழுத்த ரசிகர்களின் பாராட்டுக்களையெல்லாம் அடியேன் பெறுவது என் வாழ்வின் பாக்கியம் !

Regards,
Pammalar.

RAGHAVENDRA
6th September 2011, 07:34 PM
டியர் பம்மலார்,
சிங்கத் தமிழனின் சிகரப் பேட்டியினை அளித்து சிம்மாசனம் போட்டு ரசிகர்கள் உள்ளத்தில் நிரந்தரமாக அமர்ந்து விட்டீர்கள். பாராட்டுக்கள். வாசுதேவன் உங்களைப் பின் தொடர்ந்து கொண்டே வந்து அவருடைய பங்கிற்கு இடம் கேட்கிறார். அதனால் என்ன, நம் இதயம் விசாலமானது. அதில் எண்ணற்ற பம்மலார்களும் வாசுதேவன்களும் வந்து தொடர்ந்து தங்கி விருந்தளிக்கவேண்டும் என்பதே நம் அனைவரின் ஆவலும்.
பாராட்டுக்கள் பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்களே.

டியர் கார்த்திக்,
ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்பது போல் ஒன்றே சொன்னீர்கள் நன்றே சொன்னீர்கள்.
நன்றி.

தங்கள் அனைவரின் பார்வைக்காக, சரஸ்வதி சபதம் திரைக்காவியத்தின் விமர்சனம், குமுதம் 29.09.1966 இதழிலிருந்து..

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/SSabadhamreview.jpg

அன்புடன்

adiram
6th September 2011, 08:02 PM
Hi friends,

I am very surprise to see why Shivaji fans get this much anger on me, for asking just a clarification.

I just asked, 'when going through the ads published here most of the 100th day ads having Shanti, Crown, Bhuvaneswari.......any specific reason for that'..... thats all.

What is there to get angry?.

Thiru Pammalar sir,

You published a printed statement of the theatres where Shivaji movies run 100 days in Madras. That list itself clearly shows what I told..

As per your list..
in North Madras, out of 52 movies ran 100 days, 33 movies ran in Crown itself and other theatres have just 1 or 2. Is it true or not...?.

In Central Madras, out of 54 movies run 100 days 25 were run in Bhuvaneswari, and other theatres have just 2 or 3.

same like that in South Madras, out of 85 movies run 100 days, 41 of them ran in Shanthi and other theatres having 3 or 4. the Chitra theatres comes second with just 7 movies.

This list was given by you, not prepared by me.

vasudevan31355
6th September 2011, 08:03 PM
தங்கள் ஆசிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அன்பு ராகவேந்திரன் சார்.
சரஸ்வதி சபதம் படம் பற்றிய குமுதம் விமர்சனம் அளித்தமைக்கு நன்றிகள்.

அன்புடன்
வாசுதேவன்.

vasudevan31355
6th September 2011, 08:24 PM
'கலைமகளின் தலைமகன்' அவர்களின் அற்புத நிழலோவியம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivajiGanesan4.jpg

அளிப்பதில் பெருமை கொள்ளும்
அன்பு,
வாசுதேவன்.

pammalar
6th September 2011, 08:47 PM
Dear kumareshanprabhu Sir,

Thanks for your praise !

What an ecstatic news for Fans & Public all over Karnataka State and also for everyone across the globe !

The epic of love is back with a bang ! Its celeb time in Bangalore !

Lavanya & Natraj will sport a festive look during this month end. Giant garlands for NT Cut-outs will be the special attraction.

We expect photos & videos of the gala from your side.

Our sincere & best wishes to you all [you, mr_karthik, Mr.Senthil, Mr.Bala & all others] for the great & grand occasion.

The Maha-Mega Vasantha Maaligai : an epic for every era !

Warm Wishes & Regards,
Pammalar.