PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

RAGHAVENDRA
23rd March 2013, 08:54 AM
Our dear friend Gopal has mentioned my posting as Black Mark and there is no objection from any other friend. So I assume it is accepted by all and henceforth I shall mention my posts myself beginning with Black Mark Posts. If at all at some stage he has some courtesy and feels for the same, I shall stop that prefix.

JamesFague
23rd March 2013, 10:01 AM
Thanks Mr Vasu Sir for the Kumdudham Article and VM article in
Idyakkani.

JamesFague
23rd March 2013, 10:04 AM
Mr Raghavendra Sir,

It is not a question of accepting & rejecting and pls dont take into your
heart. Pls keep aside the remarks.

Regards

KCSHEKAR
23rd March 2013, 10:06 AM
Dear Vasudevan Sir,

Yours posts Kumudham & Idhayakani Articles are good

KCSHEKAR
23rd March 2013, 10:06 AM
Anandavikatan - Pokkisham

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/VikatanPokkisham_zpsaacd238b.jpg

RAGHAVENDRA
23rd March 2013, 10:08 AM
Mr Raghavendra Sir,

It is not a question of accepting & rejecting and pls dont take into your
heart. Pls keep aside the remarks.

Regards

Blackmark Post (thanks to Gopal for the honor bestowed on my post)

If your view is termed as Blackmark will you keep it aside? Won't you feel hurt?
My view was about the film and it can be accepted or rejected and it was felt as hurting and immediately I expressed my acceptance, whereas is it correct to term the post itself as a blackmark? Will you not feel hurt on such remarks?

abkhlabhi
23rd March 2013, 10:20 AM
திரு. ராகவேந்திர சார்,

அவருடைய பதிவுக்கு யாரும் object செய்யவில்லை என்றால், அவர் எழுதியது சரி என்றும், நீங்கள் எழுதுவது தவறு என்றும் அர்த்தம் இல்லை. நீங்கள் எழுதியதை குறை சொல்லவில்லை , அந்த நண்பரை தவிர. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களில் அவரும் ஒருவர்.


சுட்டும் விரலால் குற்றம் கூறுகையில், மற்ற முன்று விரல்கள் தன் மார்பினை காட்டுதடா ........... என்பதை நண்பர் மறந்துவிட்டார் போல.


அடுத்தவர் செய்யும் நல்ல செய்வைகளை பாரட்ட மணம் இல்லை என்றாலும், குறை சொல்ல வேண்டாமே நண்பரே.


Note :
R.r.c. எங்கள் t.v. Malai யில் மீனாக்ஷி திரை அரங்கில் 50 நாட்கள் ஓடிய படம். எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடியது என்றால் , அந்த படம் ஒரு வெற்றி படமே.

adiram
23rd March 2013, 11:08 AM
Our dear friend Gopal has mentioned my posting as Black Mark and there is no objection from any other friend. So I assume it is accepted by all and henceforth I shall mention my posts myself beginning with Black Mark Posts. If at all at some stage he has some courtesy and feels for the same, I shall stop that prefix.

Sir,

If anyone post their reply 'IN SUPPORT OF' Mr.S.Gopal's post, then only it can be taken as accepted.

It does not mean that, those who are all not condemn his post, are accepting it.

When you, Mr.Vasu, Mr.Pammalar, Mr.K.C.Sekhar are publishing many paper cuttings and news, only few hubbers are posting their appreciation and thanks. That means others not like them or enjoying them?. Everyone like them.

Regarding Rajaraja Cholan, as it was the first cinemasope movie in Tamil, everyone expected it as a Silver Jubilee movie, but ended with a normal hit (but I am sure it is not a failure one).

JamesFague
23rd March 2013, 11:20 AM
Mr Raghavendra Sir,

I completely agree with the views posted by Mr Bala & Mr Adhiram.
As they rightly mentioned it does not mean we support our friend view.

RAGHAVENDRA
23rd March 2013, 01:41 PM
Dear Balakrishnan, Adiram, Vasudevan and friends,
தங்களுடைய பதிவுகள் நிச்சயம் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. தங்களுக்கு எனது நன்றி. இப்போது தான் நமது திரி ஓரளவுக்கு சகஜமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. என் மனக் கஷ்டத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டேனே தவிர, இதை மேலும் வளர்க்க நான் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை.
தங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

vasudevan31355
23rd March 2013, 01:57 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் மனது புண்பட்டுள்ளது நன்றாகப் புரிகிறது. ராஜ ராஜ சோழன் பற்றிய தங்களுடைய பதிவில் எந்தவொரு குறையும் இருப்பதாக எனக்குப் படவில்லை. அனைவரும் இதே கருத்தைதான் கூறியுள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் பணிகளைத் தொடருங்கள்.

Subramaniam Ramajayam
23rd March 2013, 01:58 PM
Mr Raghavendra Sir,

I completely agree with the views posted by Mr Bala & Mr Adhiram.
As they rightly mentioned it does not mean we support our friend view.

mr raghavendran sir my humble request is that L DON'T TAKE THINGS SERIOUS OR TO THE HEART. nobody is supporting our friend's views. to be more specific some times his posts are sarcastic MAY BE IT IS HIS NATURE.
and if we start discussions it is not good for the HUB.
MYoinion raja raja cholan was a much expected movie We saw it prmiere show earlier night at anand theatre arranged by madras entertainers local sabha and I was also one of the fans very much disapointed. as you say the plot was not handled by Apn unfortunately.
my opinion it is not even average successful movie. no regrets about
our NT who did is job as usual remarkably. what is the use.

vasudevan31355
23rd March 2013, 02:00 PM
'பொம்மை' அரிய ஆவணம்.

பட பூஜைகளில் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b-4.jpg

இது எந்தப் படத்துக்கான துவக்க விழா என்று ஊகிக்க முடிகிறதா? கீழே உள்ள 'பொம்மை' செய்தியில் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a-3.jpg

vasudevan31355
23rd March 2013, 02:35 PM
ராஜ ராஜ சோழனின் அசை போட வைக்கும் அருமை நினைவலைகள்.

http://www.shotpix.com/images/39528360039299565367.pnghttp://www.shotpix.com/images/87744476065485155368.png
http://www.shotpix.com/images/44354225385208063143.pnghttp://www.shotpix.com/images/92641041831844529407.png

vasudevan31355
23rd March 2013, 02:40 PM
http://img.photobucket.com/albums/v671/ebinesar/RajaRajaCholan/vlcsnap-442007.png
http://img.photobucket.com/albums/v671/ebinesar/RajaRajaCholan/vlcsnap-443052.pnghttp://img.photobucket.com/albums/v671/ebinesar/RajaRajaCholan/vlcsnap-443512.pnghttp://img.photobucket.com/albums/v671/ebinesar/RajaRajaCholan/vlcsnap-442792.png
http://img.photobucket.com/albums/v671/ebinesar/RajaRajaCholan/vlcsnap-441953.png

adiram
23rd March 2013, 02:42 PM
Vasudevan sir,

Is it Pasumponn..?

JamesFague
23rd March 2013, 03:07 PM
Crystal Clear Picture of RRS. Thanks NV.

adiram
23rd March 2013, 04:11 PM
Tomorrow is the 40 years completion of

'BHARATHA VILAS' (24.03.1973 - 24.03.2013)

which taught patriotism in another different way.

Let us celebrate in every home by watching Bharatha Vilas in vcd / dvd tomorrow.

RAGHAVENDRA
23rd March 2013, 04:37 PM
டியர் வாசு சார்,
தங்களின் அன்பு வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றி.

ராஜ ராஜ சோழன் அட்டகாசமான, தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் ... அருமை..

புதுப்பட பூஜை ஸ்டில் என் வாரிசு - ஒவ்வொரு ரசிகனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஸ்டில்லாச்சே...

RAGHAVENDRA
23rd March 2013, 04:39 PM
நடிகர் திலகத்திற்கு கலைக்குரிசில் பட்டம் எப்போது யாரால் வழங்கப் பட்டது?



1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23, 24 ஆம் திகதிகளில் தினகரன் ஆதரவில் வரலாற்றில் இடம்பிடித்த மாபெரும் தமிழ் விழா ஒன்று கொழும்பில் நடைபெற்றது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அன்று கண்டு களித்தவர்கள் கொடுத்து வைத்தவர்களே. விழாவிற்கு தமிழகத்திலிருந்து பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பிரபல கதாசிரியர், நாவலாசிரியர் அகிலன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் வந்திருந்தனர். இவ்விழாவில் வைத்துத்தான் நடிகர் திலகத்திற்குக் “கலைக்குரிசில்” என்ற பட்டம் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன், வித்துவான் க. ந. வேலன் போன்ற பல தமிழ் அறிஞர்கள் பங்கு பற்றினார்கள். சிவங் கருணாலய பாண்டியனார் தலைமையில் கவியரங்கம், லயஞான குபேரபூபதி தவில்மேதை வி. தெட்சணா மூர்த்திப்பிள்ளை குழுவினர், யாழ்ப்பாணம் நாதஸ்வர மேதை அளவெட்டி என். கே. பத்மநாதன் குழுவினர் ஆகியோரது நாதஸ்வரக் கச்சேரிகள், பிரபல நடனதாரகை திருமதி திலகவதி கனகசபையின் நடனம், சைவ மங்கையர் கழக மாணவிகளது கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு கலைநிகழ்ச்சிகளாலும் தமிழ் விழா பெரும் விழாவாக இந்திர விழா போன்று களைகட்டியது.


from fb page http://www.facebook.com/mohanraj.kr/posts/392386490860013?comment_id=2120470&ref=notif&notif_t=like

நன்றி - முகநூல் நண்பர் திரு கிருஷ்ணன் நரசிம்மன்

RAGHAVENDRA
23rd March 2013, 04:45 PM
திலகப் புதிருக்கான விடை

சிலர் சிவந்த மண் படத்தை யோசித்திருப்பீர்கள். ஆனால் சரியான விடை அடுத்து நம் திரைப்பட்டியல் பகுதியில் இடம் பெற இருக்கும் வணங்காமுடி.

Gopal.s
23rd March 2013, 05:38 PM
திரு. ராகவேந்திர சார்,

அவருடைய பதிவுக்கு யாரும் object செய்யவில்லை என்றால், அவர் எழுதியது சரி என்றும், நீங்கள் எழுதுவது தவறு என்றும் அர்த்தம் இல்லை. நீங்கள் எழுதியதை குறை சொல்லவில்லை , அந்த நண்பரை தவிர. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களில் அவரும் ஒருவர்.


சுட்டும் விரலால் குற்றம் கூறுகையில், மற்ற முன்று விரல்கள் தன் மார்பினை காட்டுதடா ........... என்பதை நண்பர் மறந்துவிட்டார் போல.


அடுத்தவர் செய்யும் நல்ல செய்வைகளை பாரட்ட மணம் இல்லை என்றாலும், குறை சொல்ல வேண்டாமே நண்பரே.


Note :
R.r.c. எங்கள் t.v. Malai யில் மீனாக்ஷி திரை அரங்கில் 50 நாட்கள் ஓடிய படம். எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடியது என்றால் , அந்த படம் ஒரு வெற்றி படமே.
abhklabi சார்,
குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர். சுட்டும் விரலால் காட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள்- ராகவேந்தர் சாரை attack பண்ணுவது போன்ற இந்த பதிவை நான் ஆட்சேபிக்கிறேன். சொக்கலிங்கம் மீது, சோ மீது, என் மீது குற்றம் சொன்னவர் அவர்தான்.
தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.

vasudevan31355
23rd March 2013, 08:03 PM
ஆதிராம் சார்,

http://ecx.images-amazon.com/images/I/41-HFys03SL._SX500_.jpg

நாளை கலக்கலாம்.

RAGHAVENDRA
23rd March 2013, 08:57 PM
தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.

எனக்கு எதுவும் நேரவில்லை. யாரையும் நான் குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு பதிவிட்டதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்தந்த விவாதங்களில் அவரவர் கருத்தை சொல்வது போன்று தான் என்னுடைய கருத்தாக அமைந்திருக்குமே தவிர யாருடைய பதிவினையும் ஒரு முறை கூட நான் தங்களைப் போல black mark என்பது போல மனம் புண்படும் படி விமர்சித்ததில்லை. தாங்கள் தான் என்னை தனிப்பட்ட முறையில் பல முறை கிண்டல் செய்தும் தாக்கியும் என் வயதையும் உடல் நலத்தையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். என்னுடைய பதிவில் தனிப்பட்ட முறையில் நான் எழுதவும் மாட்டேன், நினைக்கவும் மாட்டேன். தாங்கள் black mark என்று எழுதியது எந்த அளவிற்கு மனதைப் பாதிக்கும் என்பதை உணர்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது தவறு என்று தாங்கள் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

நடிகர் திலகத்தின் மேன்மையைப் பற்றியும் அவரது புகழைப் பற்றியும் எழுத 100 பாகங்கள் கூட போதாது. எனவே வம்பிழுத்து பக்கங்களை நிரப்பி இந்தத் திரியை வளர்க்கிறார்கள் என்கிற வாதத்திற்கு இடம் தரவேண்டாம். அப்படி செய்து தான் இந்தத் திரியின் பக்கங்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும் என்பது நமக்கு தேவையில்லை.

தங்களைத் தவிர இங்கு வேறு யாரும் அறிவாளி இல்லை என்ற மனப்போக்கில் தான் தங்களுடைய பதிவுகள் ஒவ்வொரு முறையும் அமைகின்றன. எழுதும் போது மற்றவர்களின் மனது புண்படுமே என்று சிறிதும் சிந்திக்காமல் தாங்கள் எழுதுவீர்கள். நாங்கள் அமைதி காக்க வேண்டும் இதைத் தான் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இதைச் சொன்னால் கூக்குரலிடுவது என்று சித்தரிக்கிறீர்கள்.

என்ன சொல்ல... இதையெல்லாம் தாங்கும் மனப்பக்குவத்தை நடிகர் திலகம் தான் தர வேண்டும்.

RAGHAVENDRA
23rd March 2013, 10:45 PM
பாரத விலாஸ் - பொம்மையில் வெளி வந்த கட்டுரையின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/BVILASBOMMAIP12_zpsd0d8bb80.jpg

பக்கங்கள் தனித்தனியாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/bvilasbommaip1fw_zps261376c9.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/bvilasbommaip2_zps1b0072a6.jpg

RAGHAVENDRA
23rd March 2013, 10:47 PM
பாரத விலாஸ் 55வது நாள் விளம்பரத்தின் நிழற்படம்

http://www.nadigarthilagam.com/papercuttings2/bharathavilas55.jpg

பாரத விலாஸ் 100வது நாள் விளம்பரத்தின் நிழற்படம் - உபயம் கொரட்டூர் கிரிஜா

http://www.nadigarthilagamsivaji.com/Photos/FilmAdvertisements/100days/036.jpg

vasudevan31355
24th March 2013, 08:40 AM
ஒரு மினி ஆய்வு.

http://www.whatsonindia.com/WhatsOnTV/images/ProgrammeOfficialPoster/XLarge/Bharatha_Vilas.jpg

http://img259.imageshack.us/img259/9041/bharathavilas1973dvdrip.png

ஆதிராம் சார் அழகாகச் சொன்னது போல தேச ஒற்றுமையை வித்தியாசக் கோணத்தில் நகைச்சுவையோடு பறைசாற்றிய படம் இல்லை இல்லை பாடம்.

"சக்கை போடு போடு ராஜா"... தலைவரைப் பற்றி குறிப்பிட இதைவிட சிறந்த வரிகள் உண்டோ?.... சும்மா சக்கை போடு போட்டிருப்பார் இந்தப் படத்தில். காமெடி நடிப்பில் காந்தமாய் நம்மைக் கவருவார். அடிக்கடி உணர்ச்சிவசப்படும் சாதாரண இளைஞன் கோபாலின் அத்துணை பக்கங்களையும் அழகாய் மெருகேற்றி அற்புதமாய் பிரதிபலிக்க இந்த நடிப்பு ஆண்டவரை விட்டு விட்டு வேறு எவரை நினைத்துப் பார்க்க முடியும்?

http://padamhosting.com/out.php/i67839_screenshot00001.jpg

வியாபாரப் போட்டி பெண் விற்பனையாளர் விஜயாவிடம் இவர் பண்ணும் வீம்பு களேபரங்கள் குபீர் சிரிப்பு வெடிகள். வயிற்றுக்கு மேல் தூக்கி விடப்பட்ட தொள தொள பேண்ட்டும், Inn பண்ணின லூஸ் ஷர்ட்டுமாய் sales rep ஆக நீலுவிடம் அச்சு அசல் விற்பனைப் பிரதிநிதியாய் பிரமாதப் படுத்துவாரே. அது ஒண்ணு போதுமே ராஜா....

http://img542.imageshack.us/img542/3671/bharathavilas1974dvdrip.png

கல்யாண நாள் முதலிரவன்று படபடக்கும் இதயத்துடன் தன்னையொத்த மனசாட்சி உருவத்துடன் மல்லுக்கட்டி அல்லாடுவது நடிப்பின் வேறொரு பரிமாணங்களின் உச்சங்களைத் தொட்ட விஷயம். அதே போல பாடகர் திலகம் நடிகர் திலகத்திற்கான வசனங்களுக்கு அப்படியே உயிர் கொடுத்து அவர் பின்னணிக் குரலில் பல உச்சங்களை அநாயாசமாகத் தொட்டு விட்டு வருவார்.( டேய்! என்னை நீ ரேக்காதே!) போ..ரா..ட்டம் என்று விட்டு விட்டு வார்த்தைகளை அவர் அடுக்கும் அழகை அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டே இருக்கலாமே! ஆக ஒரே உறையில் இரண்டு கத்திகள் வெற்றிகரமாக சாத்தியம்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் வேலையை விட்டு விட்டு நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வேலை நிறுத்தக் கதையை சொல்லி அதுவும் இவர் 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' பாட்டு பாடுவது (வேலை போனதற்கு தூணில் சாய்ந்து கொண்டு ஒரு ஒய்யாரப் போஸ் கொடுப்பார் பாருங்கள்! அடா... அடா... அடா ) கலக்கல் காமெடி.

சிங் மேஜரை வீட்டைவிட்டுத் துரத்த வாசுவுடன் சேர்ந்து தெரியாத்தனமாய் பாத்ரூமில் மாட்டிக் கொண்டு திரு திருவென முழிக்கும் கட்டங்கள் கல கல...

வில்லன் ராஜபாண்டியன் விரித்த வலையில் (சி.ஐ.டி சகுந்தலா) விவரம் தெரியாது சிக்கி அதிலிருந்து மீள வழி தெரியாமல் இறுதியில் விலாஸின் விசுவாச நண்பர்கள் துணை கொண்டு அதை முறியடிப்பது ஆக்ஷன் கில்லி.

வாடகை இருந்த வீடு விலைக்கு விற்கப்படும் நிலையில் எதிர்பாராவிதமாக வாடகைக்கு இருந்த நண்பர்களே வீட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனமான சடுதி நேர்த்தி...

தமிழ்நாட்டு கோபால், பஞ்சாப் பல்தேவ் சிங், கேரளா முஸ்லீம் இப்ராகிம், ஆந்திர நரசிம்ம நாயுடு என்று கூட்டுக் குடும்பமாய் குட்டி இந்தியாவை பாரத விலாஸுக்குள் காண வைக்கும் நான்கு திசை நாயகர்கள்.

http://img26.imageshack.us/img26/8960/bharathavilas1980dvdrip.png

வீடு தங்கள் வசமானதும் எடுக்கும் அட்டகாசமான அந்தத் தேசத் திருவிழா பாடல் அன்று முதல் இன்றுவரை ஏன் என்றும் 'இந்திய நாடு என் வீடு' என்று தேசமெங்கும் இடைவிடாது ஒலிக்கக் காரணமாகி விட்டதே! பார்ப்பவர், கேட்பவர் அனைவரையும் 'வந்தே மாதரம் என உச்சரிக்கச் செய்த வல்லமை பெற்ற பாடல் இடம் கொண்ட படமன்றோ! வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும், குடியரசுதின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது எத்தனை முறை ஒ(ளி)லிபரப்பப்பட்டிருக்கும் என்று சொல்ல எவருக்கேனும் 'தில்' உண்டா!

இப்பாடல் நம் காதுகளில் ரீங்காரமிட்டு நுழையும் போது நம்மையறியாமல் நம் தேச இன உணர்வு நம் அங்கங்களினூடே ஊடுருவிப் பாய்வதை உணராதவர் எவரேனும் இருக்க முடியுமா?

'சுனோ சுனோ... பாய் சுனோ சுனோ' என்று ஆட்டமே தெரியாத மேஜரை ஜம்மென்று ஆட வைத்த துணிச்சல்...

அதே போல VKR யும் விட்டு வைக்காமல் கைலியின் இருபக்கங்களைப் பிடித்தவாறே 'படைச்சோன்...படைச்சோன்' என்று அவரையும் ஆட வைத்த பாங்கு...

ஜன கண மன நாட்டுப்பண்ணுக்கு இணையாக அனைவராலும் வரி விடாமல் மனனம் செய்யப்பட்ட இன்னொரு தேசிய கீதமன்றோ இந்த தேச பக்திப் பாடல்!

ஆந்திர ANR உடன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000786929.jpg

மலையாள 'மது'வுடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000801377.jpg

வடநாட்டு சஞ்சீவ் குமாருடன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000819328.jpg

வெறும் படம்தானே என்று எண்ணிவிட முடியுமா? மலையாளத்திலிருந்து மதுவையும், ஆந்திராவிலிருந்து ANR யும், வடக்கிலிருந்து சஞ்சீவ் குமாரையும் தருவித்து இன, மொழி, கலாச்சார ஒற்றுமையை கண்டவர் அனைவரையும் செயல்பட வைத்து களிப்புற செய்த காவிய விலாஸ் அல்லவா!

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல அடிக்கடி விலாஸ் நண்பர்களுக்கிடையே நடக்கும் சின்ன சின்ன சுவையான சச்சரவுகள், சண்டைகள் ரசிக்கும் படியாக...அதுவும் அருமையான தீர்வுகளுடன்.

நடுத்தர வயதில் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு பிடிப்பின்மை, விரக்தியை அப்படியே வெளிப்படுத்தி பின் மனையாளின் மதியூகத்திற்குக் கட்டுப்பட்டு கோபால் அடங்கும் அழகு.
(இந்த கோபாலாவது அடங்குகிறாரே!)

பின் புதிய தலைமுறையோடு நம் பழைய தலைமுறை....பிள்ளைகளுக்கு பொறுப்பான பெற்றோர்கள் ஸ்தானம்... படிக்க வைத்தல், பெரியவர்களுக்கே உரித்தான சந்தேகப் பார்வைகள், அதனால் நட்பிழப்பு, (ஒரு உயிரிழப்பும் கூட) கல்யாணப் பொறுப்பு, சீர் செனத்தி பேச்சு வார்த்தைகள், அதில் தோல்வி, அதனால் அடையும் அவமானங்கள், அவமானங்களைத் துடைத்தெறிந்து மானம் காக்கும் பாரத விலாஸின் நண்பர்களே இறுதியில் சொந்தபந்தங்களாகிவிடும் சொக்கத்தங்கக் காட்சிகள்...

பொதுவாக பிள்ளைகள் தவறு செய்து பெற்றோர் கண்டிப்பதைப் பார்த்திருப்ப்போம். இந்தப் படத்தில் பிள்ளைகள் தவறு செய்யவே மாட்டார்கள். பெற்றோர்கள்தான் அவசரப்பட்டு தவறிழைப்பார்கள். பிள்ளைகள் சொக்கத் தங்கங்களாகவே வடிவமைக்கப் பட்டிருப்பார்கள். இதுவும் பாராட்டுக்குரிய ஒரு புதுமையே!

http://i41.tinypic.com/24vp1dv.jpg

நட்சத்திரப் பட்டாளம்...ஒவ்வொருவரும் தத்தம் முத்திரையைப் பதித்திருக்கும் பாங்கு...தலைவர், விஜயா, மேஜர், தேவிகா, வாசு, ஆச்சி, VKR, சமீபத்தில் காலமான ராஜசுலோச்சனா, சகுந்தலா, ராமதாஸ், சிவாஜி நாடக மன்ற நடிகர் ராஜபாண்டியன், நீலு, சந்திரபாபு மற்றும் இளைய முகங்கள் ஜெயசித்ரா, சசிகுமார், ஜெயச்சந்திரன், ஜெயசுதா, சிவகுமார், குட்டிப் பாப்பா ஸ்ரீதேவி என்று மூச்சு வாங்கச் செய்யும் பெயர்ப்பட்டியல். ஆனால் அத்தனை பேரும் நிகழ்த்திக் காட்டியது 'அற்புதம்' என்ற அந்த ஒரு வார்த்தையை.

http://img15.imageshack.us/img15/5/bharathavilas1983dvdrip.png

இன்னொரு சாதனையைக் குறிப்பிட்டே தீர வேண்டும். M.R.R.வாசு. வீட்டை வாங்க பொருள் வசதியில்லாமல் விலகிக் கொள்ள முற்படும்போது நாதழுதழுக்க அவர் மற்றவர்களிடம் இருந்து அழுதபடியே வீடு வாங்கலிலிருந்து விலகிக் கொள்வதாக கூறுமிடம். மனிதர் தன் ஆழ்ந்த குணச்சித்திர நடிப்பால் பார்ப்பவர் கண்களில் அருவியைக் கொட்ட வைத்து விடுவார்! அப்படி ஓர் உன்னத நடிப்பைக் கொட்டியிருப்பார் அந்த மகா நடிகர்! (வாசுவா கொக்கா!... நான் என்னை சொல்லவில்லை)

M.விஸ்வநாதராயின் குளுமையான ஒளிப்பதிவு அருமையான ஒளிவிருந்து. பாரத விலாஸின் பிரம்மாண்டத்தை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தூண்டும் அசத்தல் தொழில் திறமை.

சீரான தெளிவான குழப்பாத திரைக்கதை, இயக்கம்.... ஒற்றுமையுணர்வை, தேசபக்தி உணர்வை அல்வாவில் கலந்து கொடுப்பது போல அவ்வளவு சுவையாக கொடுத்திருக்கும் நம் ACT. எவ்வளவு சிக்கலான முள்மேல் நடப்பது போன்ற கதையை வெகு இலகுவாகக் கையாளுவார்! அதனால்தான் தெய்வமகனின் மனம் கவர்ந்த இயக்குனர் ஆனாரோ! ஒரு காட்சி கூட சோடை போகாதே! அத்தனைக் காட்சிகளும் அடிமனதில் இன்றுவரை நங்கூரம் பாய்ச்சி நச்சென்று பதிந்து விட்டதே!

நாடு மறக்கவே முடியாத பலமொழிப் பாடல் கலவையை ஒரே குடுவையில் கொடுத்த விஸ்வநாதன் சார்...'இந்திய நாடு என் வீடு' என்று ஒருமித்தக் குரலில் அனைவரையும் கூவ வைத்த வாலி அவர்கள் இருவரும் இந்த உயிர்க்காவியத்தின் இரு நுரையீரல்கள் அல்லவா!

மின்மினிப் பூச்சிகளை ராட்சஷப் பாடகியின் குரலில் கேட்டு சொக்காத பேரும் உண்டோ! அது என்னவோ தெரியவில்லை.... ஈஸ்வரி, சி.ஐ.டி.சகுந்தலா, எம்.எஸ்.வி கூட்டணி சேர்ந்தாலே 'நானொரு காதல் சந்நியாசி' (தவப்புதல்வன்) அரிதிற்பெரும்பான்மை வெற்றிதான்.

மதுரை திருமாறனின் மண்மணக்கும் வசனங்கள். ("வியட்நாமில் இருக்கிற மக்கள் கஷ்டப் படுறாங்களேன்னு விருதுநகர்ல இருக்கிற ஜனங்க ஏன் வேதனைப்படணும்?) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத வசனம்.

இப்படி ஒரு தேச ஒற்றுமையை வலியுறுத்தும் படம் இனி வரும் காலங்களில் வருமா?!வரத்தான் முடியுமா?

படத்தின் வெற்றி... சொல்லித் தெரிய வேண்டுமா... பாடல் வரிகளைப் போல சக்கை போடு போட்ட படம். ஆதாரங்களை அள்ளி வழங்கியுள்ளார் ரசிக வேந்தர்.

படத்தின் வெற்றிக்கு இன்னொரு சிறு உதாரணம். இக்காவியத்தை எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அன்று என் மனைவி என்ன சொல்வார்கள் தெரியுமா?

"இன்றைக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து விடுங்கள்"

vasudevan31355
24th March 2013, 09:02 AM
இந்த பிரத்தியோக ஸ்டில் எனக்காக. என் மனம் கொள்ளை கொண்ட 'மொரட்டுப் பயல்' ஆண்டனியின் ஆண்டவர் கோகுல்நாத் அதே பாதிரியாராக இங்கு கோபாலுடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000764607.jpg

RAGHAVENDRA
24th March 2013, 10:20 AM
டியர் வாசு சார்
பாரத விலாஸுக்கே நம்மை அழைத்துச் சென்று விட்டீர்கள். அது என்னமோ தெரியவில்லை, வாசு என்றாலே சூப்பர் தான். தங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

இந்தப் படத்திற்கு வாசு என இரு சிறப்புகள் உண்டு.

மெல்லிசை மன்னரின் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய முதல் படம், பாடல் இந்திய நாடு என் வீடு.

அதே போல் மின்மினிப் பூச்சிகள் பாடலும் சூப்பர் [நீராட நேரம் நல்ல நேரம் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள்]

இந்தியர்களுக்கு ஜன கன மன அதி நாயக ஒரு தேசிய கீதம் என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு இரண்டு ... இந்திய நாடு என் வீடும் சேர்த்து.

பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் பிறந்த நாள் இன்று. அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து நம் தமிழுக்கு ஒரு அடையாளமாய் திகழ இறைவன் அருள வேண்டும்.

http://www.kalyanamalaimagazine.com/images/TM_Soundararajan.jpg

இந்நாளில் அவருக்காக நமது தேசிய கீதத்தைப் பார்ப்போமா ...

http://youtu.be/cngPzFh1cU8

vasudevan31355
24th March 2013, 10:25 AM
பாராட்டிற்கும் திருத்ததிற்கும் மிக்க நன்றி ராகவேந்திரன் சார்! திருத்தி விட்டேன்.

vasudevan31355
24th March 2013, 10:28 AM
டியர் ராகவேந்திரன் சார்,

மேலதிக தகவல்களை தந்து மகிழச் செய்ததற்கு நன்றிகள். பாரத விலாஸ் வெற்றிக்கொடி நாட்டியதை உணர்த்தும் அற்புதமான தங்கள் பதிவுகள் ஜோர். அதே போல பொம்மை இதழின் கவரேஜை அற்புதமாக பதிவிட்டு இந்நாளை சிறப்படையச் செய்ததற்கு என் அகமகிழ்ந்த நன்றிகள் சார்.

RAGHAVENDRA
24th March 2013, 10:35 AM
மதுரை திருமாறனின் மண்மணக்கும் வசனங்கள். ("வியட்நாமில் இருக்கிற மக்கள் கஷ்டப் படுறாங்களேன்னு விருதுநகர்ல இருக்கிற ஜனங்க ஏன் வேதனைப்படணும்?) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத வசனம்.


1973 மார்ச் 24ல் வெளியான நாளிலிருந்து இன்று வரை திரையரங்குகளில் இந்த வசனம் கை தட்டல் பெறாத நாளே இல்லை. அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முக பாவமும் பின்னணியும் நம்மை என்னவோ செய்து விடும். முடிந்தால் அந்தக் காட்சியின் ஸ்டில்லைப் பதிவிடுங்கள் வாசு சார்.

RAGHAVENDRA
24th March 2013, 10:38 AM
பாரத விலாஸ் படத்திற்கு இன்னொரு சிறப்பு வழக்கமாக பிராஸஸிங் சென்னை ஜெமினி லேப் அல்லது விஜயா லேப், சினி இந்தியா போன்ற லேப்களில் நடக்கும். முதல் முறையாக பிலிம் சென்டரில் இப்படம் பிராஸஸிங் செய்யப் பட்டதாக தனியாக பேசும் படம் பத்திரிகையில் ஒரு செய்திக் குறிப்பே வந்தது.

அது மட்டுமின்றி கிட்டத் தட்ட சென்னையில் வெளியான அதே காலகட்டத்தில் சிங்கப்பூரிலும் வெளியானது என கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த ஊர் நண்பர்கள் இதை உறுதிப் படுத்தினால் நலம்.

vasudevan31355
24th March 2013, 10:39 AM
இனி மெகா ஆல்பம்.

http://padamhosting.com/out.php/i67840_screenshot00002.jpg

http://padamhosting.com/out.php/i67841_screenshot00003.jpg

http://padamhosting.com/out.php/i67842_screenshot00004.jpg

http://padamhosting.com/out.php/i67843_screenshot00005.jpg

vasudevan31355
24th March 2013, 10:42 AM
http://img33.imageshack.us/img33/4215/bharathavilas1975dvdrip.png

http://img823.imageshack.us/img823/4704/bharathavilas1976dvdrip.png

http://img692.imageshack.us/img692/6148/bharathavilas1977dvdripj.png

http://img152.imageshack.us/img152/3853/bharathavilas1978dvdrip.png

vasudevan31355
24th March 2013, 10:43 AM
http://img10.imageshack.us/img10/8606/bharathavilas1981dvdrip.png

http://img248.imageshack.us/img248/1696/bharathavilas1982dvdrip.png

http://img715.imageshack.us/img715/6764/bharathavilas1984dvdrip.png

vasudevan31355
24th March 2013, 10:44 AM
http://img824.imageshack.us/img824/8621/bharathavilas1985dvdrip.png

http://img51.imageshack.us/img51/7646/bharathavilas1986dvdrip.png

RAGHAVENDRA
24th March 2013, 10:45 AM
கொஞ்ச நேரமே வந்தாலும் நம்மிடைய அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றவர் நமது அபிமான சசிகுமார் அவர்கள். பாரத விலாஸ் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவருடைய தோற்றம் தான். குறிப்பாக வி.கே.ஆர்., அவரை நையப் புடைத்து விட்டு வருந்தும் காட்சியில் இருவருமே காட்சியை தங்கள் வசமாக்கி விடுவர்.

தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த பாரத விலாஸ் திரைப்படம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

நடிகர் ஜெயச்சந்திரன் இப் படத்தின் மூலம் பிரபலமானார். ஆனால் தொடர்ந்து அவரால் பரிமளிக்க முடியவில்லை.

[தான் உயரமானவர் என்பதாலோ என்னவோ, திருலோக் படத்தில் அவ்வப்போது உயரமான நடிகர்கள் நடிக்க வாய்ப்புப் பெறுவதுண்டு. இப்படத்தில் ஜெயச்சந்திரன் என்றால், பத்ரகாளி படத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ராஜசேகர்]

vasudevan31355
24th March 2013, 10:48 AM
http://padamhosting.com/out.php/i47433_bv05.png

http://padamhosting.com/out.php/i47432_bv04.png

http://padamhosting.com/out.php/i47431_bv03.png

http://padamhosting.com/out.php/i47430_bv02.png

vasudevan31355
24th March 2013, 10:57 AM
கொஞ்ச நேரமே வந்தாலும் நம்மிடைய அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றவர் நமது அபிமான சசிகுமார் அவர்கள். பாரத விலாஸ் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவருடைய தோற்றம் தான். குறிப்பாக வி.கே.ஆர்., அவரை நையப் புடைத்து விட்டு வருந்தும் காட்சியில் இருவருமே காட்சியை தங்கள் வசமாக்கி விடுவர்.

தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த பாரத விலாஸ் திரைப்படம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.



டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் குறிப்பிட்டு இருந்த சசிகுமார், VKR இருவரும் தூள் பரத்தும் காட்சி. உடன் ராஜசுலோச்சனாவும் கூட.


https://www.youtube.com/watch?v=aerN6j-Q99o&feature=player_detailpage&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

vasudevan31355
24th March 2013, 11:06 AM
1973 மார்ச் 24ல் வெளியான நாளிலிருந்து இன்று வரை திரையரங்குகளில் இந்த வசனம் கை தட்டல் பெறாத நாளே இல்லை. அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முக பாவமும் பின்னணியும் நம்மை என்னவோ செய்து விடும். முடிந்தால் அந்தக் காட்சியின் ஸ்டில்லைப் பதிவிடுங்கள் வாசு சார்.


ராகவேந்திரன் சார்,

நீங்கள் கேட்டிருந்த அந்த அற்புத ஸ்டில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_001626379.jpg

vasudevan31355
24th March 2013, 11:08 AM
'பாரத விலாஸ்' பதிவுகளுக்கான காரணகர்த்தா ஆதிராம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

RAGHAVENDRA
24th March 2013, 11:14 AM
தன் விளக்க நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/BVILAS203HFSHOWS_zpsfa8746ba.jpg

இவ்விளம்பரம் வெளியான அன்று கத்தரித்து நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைத்து விட்டேன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இன்னும் பாதுகாத்து வருகிறேன்.

அதே போலத் தான் கீழே காணும் விளம்பரமும். பத்திரிகைகள் பாராட்டும் அவை இடம் பெற்ற விளம்பரமும்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/BVPRESSREVIEWS2_zpsab961325.jpg

RAGHAVENDRA
24th March 2013, 11:20 AM
டியர் வாசு சார்
சசிகுமார் காட்சிக்கும் வசன ஸ்டில்லுக்கும் உளமார்ந்த நன்றி.

vasudevan31355
24th March 2013, 11:23 AM
மெகா ஆல்பம் தொடர்கிறது....

http://i43.tinypic.com/4im2bk.jpghttp://i43.tinypic.com/1zd5ea1.jpg
http://i41.tinypic.com/2d1a92h.jpghttp://i43.tinypic.com/1o96bm.jpg

vasudevan31355
24th March 2013, 11:24 AM
http://i39.tinypic.com/2iqbvjk.jpghttp://i41.tinypic.com/2v0bdzl.jpg
http://i42.tinypic.com/sw8sg7.jpghttp://i43.tinypic.com/2j4er06.jpg

vasudevan31355
24th March 2013, 11:26 AM
மெகா ஆல்பம் தொடர்கிறது....

http://i44.tinypic.com/1jlxkg.jpghttp://i41.tinypic.com/21lnbkk.jpg
http://i42.tinypic.com/2m5neja.jpghttp://i40.tinypic.com/4jn9lz.jpg

vasudevan31355
24th March 2013, 11:29 AM
பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாத்து இன்று இங்கு பதித்து மகிழ்ச்சிக்கடலில் எங்களை உலாவ விட்டதற்கு நன்றி ரசிக வேந்தர் சார்.

adiram
24th March 2013, 12:54 PM
Dear Neyveli Vasudevan sir,

Excellent coverage of "BHARATHA VILAS' with woderful analysis and superb stills.

In your analysis you have covered each and every interesting points. As you told correctly, from beginning to end the movie goes very nicely without any boring scene. Every artist lend their share very very perfectly.

The whole Indian like this 'Bharatha Vila' much, especially Islamic friends. Do you know why..?.

Not for VKR done a roll as Muslim, not for adding some lines in the song about Muslims, BUT it was shown in the movie that, a Muslim youth (Hameed - Sasikumar) joined in the Indian Army and scrifice his life for the sake of the nation. Hats off to ACT. This is the real secularism.

Some months before veteran actress Rajasulochana (whom we lost recently) was giving interview for TV channel, in her background there were many victory shields behind her, one among them was Baharatha Vilas.

When the movie was released just one week before the release of Rajaraja Cholan, which was expected to spoil the success of Bharatha Vilas, but it stood strong because the stuff is there.

India has two National Anthms..

In Bengali 'Jana gana mana'
In Tamil 'Indhiya naadu en veedu'.

Thank you Vasudevan sir & Raghavendar sir for wonderful coverage of our evergreen Bharatha Vilas.

adiram
24th March 2013, 02:20 PM
//இன்னொரு சாதனையைக் குறிப்பிட்டே தீர வேண்டும். M.R.R.வாசு. வீட்டை வாங்க பொருள் வசதியில்லாமல் விலகிக் கொள்ள முற்படும்போது நாதழுதழுக்க அவர் மற்றவர்களிடம் இருந்து அழுதபடியே வீடு வாங்கலிலிருந்து விலகிக் கொள்வதாக கூறுமிடம். மனிதர் தன் ஆழ்ந்த குணச்சித்திர நடிப்பால் பார்ப்பவர் கண்களில் அருவியைக் கொட்ட வைத்து விடுவார்! அப்படி ஓர் உன்னத நடிப்பைக் கொட்டியிருப்பார் அந்த மகா நடிகர்!//

Whenever actor Vasu Vikram (s/o M.R.R.Vasu) talking about his dad, he will mention this scene without fail. Such a power packed action by Vasu.

When he and manorama coming with suitcase to vacate the house, for shortage of money for his share, VKR casually on his own style "enna Naidu pottiyoda varrar. oruvelai panaththai pooraa sillaraiyaa maaththi kondu vandhuttaaraa?" (that is VKR).

another vayiru valikkum comedy by Vasu is the 'mid-night kottaan' scene, starting from that till he was attacked by his wife manorama with flower jar (when NT and Vasu covered their head with towel) we cant control our laugh. (Manorama's english to major "my, her two husbands missing")

Raghavendar sir mentioned about ACT's introduction of tall actors in his movies, he is the one introduced another tall actor villian vasandhakumar in Adhey Kangal.

adiram
24th March 2013, 02:55 PM
'Baharatha Vilas' climax scene dialogue (re-presented in 'copy & paste' method from our former hubber Saradha mam's Bharatha Vilas analysis, in previous part)...

படத்தின் நடுவே வரும் 'இந்தியநாடு என் வீடு இந்தியன் என்பது என்பேரு... எல்லா மக்களும் என் உறவு எல்லோர் மொழியும் என் பேச்சு' என்ற பாடல் சும்மா சம்பிரதாயத்துக்காக பாடப்பட்ட பாடல் அல்ல, உண்மையிலேயே படம் மத, மொழி, மாநில நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமே என்பதை உறுதிப்படுத்தும் அந்த கிளைமாக்ஸ்....

மகளுடைய திருமணத்தின்போது, லட்ச ரூபாய் தட்டில் வைப்பதாக வாக்குறுதியளித்த கோபால் (நடிகர்திலகம்), தொழிலில் திடீரென ஏற்பட்ட சரிவினால் அதை நிறைவேற்ற முடியாமல் போக, சம்மந்தியும் சொந்தக்காரருமான ராஜவேலு, கோபம் கொண்டு திருமணத்தை நிறுத்தும் நிலைக்குப் போகும்போது உதவிக்கு வரும் நண்பர்கள், அவர்கள் பேசும் வசனங்கள்.....

நாயுடு (எம்.ஆர்.ஆர்.வாசு): "கோபால், இதோ நான் முதல்முதலா கதை எழுதிகிடைச்ச இருபதாயிரம் ரூபாய் செக், இதை உன் சம்மந்திகிட்டே கொடுத்திட்டா?. கடன்பட்டு கல்யாணம் பண்றோமேன்னு கவலைப்படாதே, எங்கப்பன் ஏழுமலையானே குபேரன்கிட்டே கடன் பட்டுத்தான் கல்யாணம் பண்ணினான். இந்த வாங்கிக்கோ".

சிங் (மேஜர்): "கோபால், இதோ ரெண்டு லட்சரூபாய் பெறுமானமுள்ள என்னோட கடையின் உரிமைப்பத்திரம். இதை உன் சம்மந்திகிட்டே கொடுத்திடு. இந்த வீட்டுல வளர்ந்த அந்தப்பிள்ளை கண்கலங்கி நின்னா எங்களுக்கு ஒரு பிடி சோறு இறங்குமா? இல்லை நாங்கதான் மனுஷங்களா?"

பாய் (வி.கே.ஆர்): "கோபால், இதோ என்பையன் பேருல நான் போட்டிருந்த இன்ஷூரன்ஸ் பாலிஸி. என்ன சம்மந்தி பார்க்கிறீங்க?. இந்த பாலிஸி செல்லும். ஏன்னா என்மகன் இப்போது உயிரோடு இல்லை. அதோடு, பேங்க்ல என் பெயரில இருக்கிற முப்பதாயிரம் ரூபாய்க்கும் இதுல 'செக்' போட்டு வச்சிருக்கேன். கோபால் மனுஷன்தான் பணத்தை படைச்சான், பணம் மனுஷனைப்படைக்கலை. ஜாம் ஜாம்னு உன்பொண்ணு கல்யாணத்தை நடத்து".

ராஜவேலு (சம்மந்தி): "அப்புறம் என்ன, அதான் நண்பர்கள் உதவிக்கு வந்துட்டாங்களே. நீரடிச்சு நீர் விலகுமா என்ன?. சொந்தக்காரங்களுக்குள்ளே........" பேசிக்கொண்டே அவற்றை வாங்கப்போகும்போது..

கோபால் (நடிகர்திலகம்): "ச்சீ கையை எடுய்யா. யாருய்யா சொந்தக்காரன்?. நீயா சொந்தக்காரன்?. இல்லை... இந்த தெலுங்கர், இந்த சீக்கியர், இந்த முஸ்லீம் இவங்கதான் என் சொந்தக்காரங்க. இனி ஜென்மத்துக்கும் உன் கூட சம்மந்தம் கிடையாது... போ வெளியே".

வசனகர்த்தா, இயக்குனர், கதாபாத்திரங்கள் அனைவரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அந்த இடம் அபாரம்.

vasudevan31355
24th March 2013, 03:22 PM
ஆதிராம் சார்.

தங்கள் உயர்ந்த பாராட்டிற்கு என் ஆழ்ந்த நன்றிகள். நீங்களும் மிக மிக அற்புதமாக பாரத விலாசின் பெருமைகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். மேஜரை விரட்ட நம்மவரும் வாசுவும் சேர்ந்து போடும் திட்டங்கள், கோட்டான்கள் போலக் கூவிக் கொள்வது என்று ஒரே நகைச்சுவைக் காட்சிகள் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. ராஜபாண்டியன் கூட நல்ல ஹயிட் தான் அதனால்தான் இந்தப் படத்துக்கு வில்லனாக திருலோகசந்தர் அவரைத் தேர்ந்தெடுத்தாரோ என்னவோ! இந்த ராஜபாண்டியன்தான் தங்கப்பதக்கம் நாடகத்தில் தலைவருக்கு மகனாக நடித்தவர். (படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோல்). டாக்டர் சிவாவிலும் தொழுநோயாளியாக சிவாவின் அப்பாவாக வருவார். ஆனால் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். பாரத விலாஸ் பதிவுகளுக்கு மேலும் மெருகேற்றம் அளிக்கும் வகையில் எனது குருநாதர் சாரதா மேடம் அவர்களின் கட்டுரையின் முக்கிய ஒரு பகுதியை அதுவும் அட்டகாசமான வசனப் பகுதியை இங்கு மீண்டும் அளித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒரு அருமையான தேச உணர்வை ஊட்டக்கூடிய நல்ல படத்திற்கு நம்மால் முடிந்த சேவையை இன்று செய்ய முடிந்ததே என்ற ஆத்ம திருப்தி பரிபூரணமாய் கிடைத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. தாங்களும், ராகவேந்திரன் சாரும் இதே மன நிலையில் இருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன். அருமையான தங்கள் நினைவலைகளுக்கு மீண்டும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

adiram
24th March 2013, 03:44 PM
From our Murali Srinivas sir's
'Sivajiyin Saadhanai Sigarangal' series...... about Bharatha Vilas...

முதன் முதலாக இந்திய அரசாங்கமே ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய சாதனை நடிகர் திலகத்தின் பாரத விலாஸ் மூலமாக அரங்கேறியது.

இந்த படம் வெளியான நாள் - 24.03.1973

'பாரத விலாஸ்' 100 நாட்களைக்கடந்து ஓடிய அரங்குகள்

சென்னை - சாந்தி, கிரௌன்
மதுரை - சென்ட்ரல்
திருச்சி - பிரபாத்
கோவை - சிவசக்தி
சேலம் – பேலஸ்

RAGHAVENDRA
24th March 2013, 04:22 PM
பாரத விலாஸ் 55வது நாள் மற்றும் 100 வது நாள் விளம்பரங்கள் சற்றே பெரிய அளவில் இங்கே மீண்டும் நம் பார்வைக்கு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/BV100_zpsec77f99f.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/bv55_zpsa987e570.jpg

vasudevan31355
24th March 2013, 05:42 PM
http://ring.cdandlp.com/princethorens/photo_grande/9924412.jpg

vasudevan31355
24th March 2013, 05:59 PM
மலேசியா வாசுதேவன் அவர்களின் பேட்டி. இந்து நாளிதழிலிருந்து.

"The highest praise for me came from Sivaji Ganesan"

http://www.hindu.com/2006/08/10/stories/2006081019190200.htm

abkhlabhi
25th March 2013, 11:03 AM
abhklabi சார்,
குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர். சுட்டும் விரலால் காட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள்- ராகவேந்தர் சாரை attack பண்ணுவது போன்ற இந்த பதிவை நான் ஆட்சேபிக்கிறேன். சொக்கலிங்கம் மீது, சோ மீது, என் மீது குற்றம் சொன்னவர் அவர்தான்.
தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.



நாகரிகம் கருதி நண்பரே என்றேன். நண்பர் நீங்கள் தான். ராகவேந்திர சார் அல்ல. அவரை attack பண்ணுவது போன்ற பதிவும் அல்ல .

அவரை attack செய்வது போல் எழுதி இருந்தால், என்னை பற்றியும் பதிவு செய்திருப்பார் .

நீங்கள் எழுதிருப்பது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடுவது போல் இருக்கிறது . நீங்களே அவரை attack செய்துவிட்டு , இப்போது , நான் தான் அவரை attack பண்ணி பதிவு செய்வதாக குறுவது முற்றிலும் தவறு. ஆட்டை கடித்து மாட்டை மாட்டை கடித்த கதையாக இருக்கிறது உங்களுடைய பதிவு .

மற்றவர் மனதை புண்படுத்தாமல் எழுதமுடியாத உங்களால் நண்பரே.

JamesFague
25th March 2013, 12:21 PM
Mr Vasudevan, Mr Raghavendra & Mr Adiram Sir

Excellent coverage of Bharatha Vilas. Remembered watched the movie
with my mother at Shanthi Theatre during my childhood. We were regular visitor to Shanthi
theatre for all the NT's movies .

JamesFague
25th March 2013, 12:25 PM
Watch Needhipathi Tomorrow at 7.30 pm in Murasu TV.
Super Hit movie.

RAGHAVENDRA
25th March 2013, 01:22 PM
பல்வேறு தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் விவரம்.

ஜீ தமிழ்
29.03.2013 – 2 மணி – இரு மலர்கள்

வசந்த் டிவி
26.03.2013 – வா கண்ணா வா
28.03.2013 – துணை
31.03.2013 – ஞான ஒளி

ராஜ் டிவி
30.03.2013 – இரவு 10.30 மணி – மனோகரா
31.03.2013 – இரவு 10.30 மணி – பந்த பாசம்

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
26.03.2013 – பகல் 1 மணி – திரிசூலம்
30.03.2013 – பகல் 1 மணி – அவன் ஒரு சரித்திரம்
27.03.2013 – பிற்பகல் 3.30 மணி – தங்கமலை ரகசியம்
31.03.2013 – இரவு 8 மணி – தாய்க்கு ஒரு தாலாட்டு

பாலிமர் டி.வி.
29.03.2013 பிற்பகல் 2 மணி – பக்த துக்காராம்

மெகா டி.வி.
28.03.2013 – நண்பகல் 12 மணி – சித்ரா பௌர்ணமி

மெகா 24
30.03.2013 – பிற்பகல் 3 மணி – ராஜ பக்தி
31.03.2013 – இரவு 7 மணி – தீபம்

ஜெயா டிவி
26.03.2013 – பிற்பகல் 1.30 மணி – சினிமா பைத்தியம்
27.03.2013 – பிற்பகல் 1.30 மணி – குலமகள் ராதை

ஜே மூவீஸ்
31.03.2013 – காலை 6 மணி – ராமன் எத்தனை ராமனடி


இந்த நிகழ்ச்சிகள் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப் பட்டுள்ளன. இவற்றை அந்தந்த நேரத்தில் தான் நம்மால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

adiram
25th March 2013, 03:03 PM
Another mention about 'Bharatha Vilas'.

Normally the 100th day functions of movies will be celebrated in star hotels (here I remember the 100th day of Pilot Premnath in a 3 star hotel, narrated by mr_karthik) or in the respected theatres where it has run, or in public halls (like 100th day of Jallikkattu in Valluvar kottam presided by MGR as CM).

But it was the first time the 100th day function of 'BHARATHA VILAS' was celeberated like a public meeting in a four street corner in Triplicane, Chennai. As Mr. Raghavendar sir is being a triplicane vaasi, I hope he will give a detailed report in Tamil with the happenings. It was held on 112th day of Bharatha Vilas on July 13, 1973, a day before the release of Engal Thanga Raja.

The function was arranged by the producer Cine Bharath and the distributors A.P.Films. (Later the 100th day of MGR's Idhayakkani also celeberated in same style of four road junction in 1975 in the same area, arranged by Sathya movies and the same distributor A.P.Films).

In Bharatha Vilas function nearly all the artists and technicians participated and received their shields especially Nadigar Thilagam, Major Sundarrajan, V.K.Ramasamy, M.R.R.Vasu, K.R.Vijaya, Devika, Rajasulochana, Manorama, Sasikumar, Jayachitra, Jayasudha, director ACT, MSV sir and other technical crews participated. It was a nice treat for fans and public.

Later, the function coverage was published in most of the cinema magazines like Bommai, Pesumpadam and NT supportive Madhi oli etc. (I strongly hope our friends Raghavendar sir or Vasudevan sir will publish them here, if they have those pages. Pammalar sir konjam karunai vaikka koodaathaa?).

Except Bharatha Vilas and Idhayakkani, I did not hear any other victory functions of movies held in street corners, like this.

JamesFague
25th March 2013, 03:18 PM
The following NT's Films can be converted in to Colour - Part II

1. Deiva Magan
2. Gnana Oli
3. Iru Malargal
4. Nirai Kudam
5. Thavaputhalvan
6. Thokku Thokki
7. Alaya Mani
8. Andavan Kattalai
9. Enga Oru Raja
10. Parthal Pasi Theerum.

Murali Srinivas
26th March 2013, 12:20 AM
மயிலையில் குடிக் கொண்டிருக்கும் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலிஸ்வரர் திருக்கோயிலில் இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் பங்குனி உற்சவ விழாவின் சிகரம் போன்ற நிகழ்ச்சி அறுபத்தி மூவர் உலா இன்று சிறப்பாக நடைபெற்றது. எல்லா வருடமும் போல இந்த வருடமும் நடிகர் திலகம் சமூக நல பேரவை சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. தகவலை பகிர்ந்து கொண்ட திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

கோவை மாநகர மக்களை மகிழ்விக்க ராயல் திரையரங்கில் ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா விரைவில் வெளியாகிறது என்று ஒரு செய்தி வந்திருக்கிறது

RAGHAVENDRA
26th March 2013, 06:32 AM
கோவை மாநகரத்தில் ராயல் கிங்கின் ராயல் விஜயம் ... ராயல் வரவேற்புத் தர காத்திருப்பார்கள் நம் சகோதரர்கள் என்பதில் ஐயமில்லை ...

RAGHAVENDRA
26th March 2013, 06:33 AM
1957ம் ஆண்டிற்கான பேசும் படம் பத்திரிகையின் சிறந்த நடிகர் விருதினை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது, மக்களைப் பெற்ற மகராசி திரைக்காவியம். 1958 ஏப்ரல் மாத பேசும் படம் ஆண்டு மலரில் வெளியிடப் பட்டுள்ள கௌரவ ஜாபிதாவில் இது குறிப்பிடப் பட்டுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/57bestactorPPfw_zpsa44d24ee.jpg

மேற்காணும் பட்டியலில் பார்த்தால் 1957ல் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் பேசும் படம் பத்திரிகையின் வெவ்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளன

மக்களைப் பெற்ற மகராசி - சிறந்த நடிகர் சிவாஜி கணேசன், சிறந்த வசன கர்த்தா - ஏ.பி. நாகராஜன்
பாக்கியவதி - சிறந்த நடிகை - பத்மினி
புதையல் - சிறந்த வில்லன் - பாலய்யா, சிறந்த வில்லி - எம்.என்.ராஜம் [புதையல் மற்றும் முதலாளி], சிறந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு
வணங்காமுடி - சிறந்த இசையமைப்பாளர் - ஜி.ராமநாதன், சிறந்த பாடகர் - டி.எம்.சௌந்தர்ராஜன்

Subramaniam Ramajayam
26th March 2013, 11:05 AM
Another mention about 'Bharatha Vilas'.

Normally the 100th day functions of movies will be celebrated in star hotels (here I remember the 100th day of Pilot Premnath in a 3 star hotel, narrated by mr_karthik) or in the respected theatres where it has run, or in public halls (like 100th day of Jallikkattu in Valluvar kottam presided by MGR as CM).

But it was the first time the 100th day function of 'BHARATHA VILAS' was celeberated like a public meeting in a four street corner in Triplicane, Chennai. As Mr. Raghavendar sir is being a triplicane vaasi, I hope he will give a detailed report in Tamil with the happenings. It was held on 112th day of Bharatha Vilas on July 13, 1973, a day before the release of Engal Thanga Raja.

The function was arranged by the producer Cine Bharath and the distributors A.P.Films. (Later the 100th day of MGR's Idhayakkani also celeberated in same style of four road junction in 1975 in the same area, arranged by Sathya movies and the same distributor A.P.Films).

In Bharatha Vilas function nearly all the artists and technicians participated and received their shields especially Nadigar Thilagam, Major Sundarrajan, V.K.Ramasamy, M.R.R.Vasu, K.R.Vijaya, Devika, Rajasulochana, Manorama, Sasikumar, Jayachitra, Jayasudha, director ACT, MSV sir and other technical crews participated. It was a nice treat for fans and public.

Later, the function coverage was published in most of the cinema magazines like Bommai, Pesumpadam and NT supportive Madhi oli etc. (I strongly hope our friends Raghavendar sir or Vasudevan sir will publish them here, if they have those pages. Pammalar sir konjam karunai vaikka koodaathaa?).

Except Bharatha Vilas and Idhayakkani, I did not hear any other victory functions of movies held in street corners, like this.

Tne above message regarding celebrations of bharathavilas and idayakani has not been arranged in street corners as far as i know.
only SIVANDAMANN celebraions arranged at NKT KALAMANDAPAM
WITH ENTRANCE TICKETS OF 25 EACH. ALL THE TECHNICIANS INC NT participated and the tickets were sold at blackmaket outside the hall.

adiram
26th March 2013, 11:44 AM
Mr. Subramaniam Ramajayam sir,

I am 100% sure that, 100th Day celeberation functions of 'BHARATHA VILAS (1973)" and "IDHAYAKKANI (1975)" were celebrated in the four street corners in Chennai Triplicane area. At that time the news were published in cinema magazines. (thatswhy I need our friends help to publish them, if they have). I need the informations from Raghavendar sir, as he is belongs to that area and attended those functions in yesteryears.

Also I think Sivandha Mann 100th day celebration was held in Teynampet Congress thidal, but not sure.

and as per your information, entrance ticket of Rs. 25 was too high in 1970, when the first class tickets in theatres were just Rs. 2.60 those days..

KCSHEKAR
26th March 2013, 11:51 AM
Dear Ragavendran Sir, Vasudevan Sir, Adiram Sir,

Coverages about Bharatha Vilas are very good

IliFiSRurdy
26th March 2013, 02:52 PM
கலைஞர் டிவி யில் திருவிளையாடல்..தருமி episode போய் கொண்டிருக்கிறது..
நான் பார்ப்பது n th முறை ,ஆனாலும் ஆர்வம் துளியேனும் குறையவில்லை.
இப்படி ஒரு மகா கலைஞனா !!!
ஒரு காதல் வயப்பட்ட நிலை என்பது இதுதானோ?

RAGHAVENDRA
26th March 2013, 05:51 PM
நடிகர் திலகத்திற்கென மற்றோர் வலைப்பூ

http://sevaliye-sivaji.blogspot.in/

RAGHAVENDRA
26th March 2013, 07:15 PM
மிமிக்ரி என்ற பெயரில் பல கலைஞர்கள் நடிகர் திலகத்தைப் போல் திரைப்பட வசனங்களைப் பேசி பெருமை தேடுவது நடைமுறையில் இருந்து வருவது தான். ஆனால் சிலர் இதனை ஒரு காரணமாகக் கொண்டு சகட்டு மேனிக்கு நடிகர் திலகத்தைக் கிண்டலும் கேலியும் பேசி வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு படத்தில் [கில்லாடி என அறிகிறோம் ] அப்பர் வேடம் தரித்து கொடுத்துள்ள போஸ் பல சிவாஜி ரசிகர்களைக் கொதிப்படைய செய்துள்ளதாகத் தெரிகிறது. இன்னும் அந்த போஸ்டரையோ அதன் நிழற்படத்தையோ இன்னும் பார்க்க வில்லை. என்றாலும் இது போல் விவேக் அவர்கள் முன்னரே நடிகர் திலகத்தை கிண்டல் செய்வது போல் வந்துள்ளதால் நம் ரசிகர்களின் கோபத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி போஸ்டரைப் பார்த்தவர்கள் உடனடியாக அவரையோ அல்லது அவருடைய உதவியாளரையோ தொடர்பு கொண்டு நமது கண்டனத்தை ஜனநாயக முறையில் நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
26th March 2013, 10:22 PM
இன்றைய விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடல் கேட்க நேர்ந்தது. பாடலின் பல்லவி... வாடா வாடா பையா ... இதனுள்ளே போக வேண்டாம். ஆனால் அது ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு தொகையறாவைப் பாடினார்கள் . அப்படியே திடுக்கிட்டு விட்டேன். மெல்லிசை மன்னர் இசையமைத்து ஒரு காலத்தில் பட்டி தொட்டி எங்கும் திரையரங்குகளில் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி இசைக்கப் பட்ட இறைவா உன் மாளிகையில் என்று தொடங்கும் தொகையறா ... அந்த மெட்டில் ஏதேதோ வார்த்தைகளை இட்டு நிரப்பி ஒரு வழி ஆக்கி விட்டிருந்தார்கள். அது எந்தப் படத்தில் இடம் பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் மனம் மிகவும் வேதனைப் பட்டது உண்மை. சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் உருகிப் போய் விடுவார்கள். அந்தக் கால கட்டத்தில் நமது சாந்தி திரையரங்கிலும் இப்பாடல் ஒளிபரபப் பட்டது. இப்படிப் பட்ட மிகச் சிறப்பான பாடலை இப்படி நையாண்டி கிண்டல் கேலி என சிதைப்பது ஒரு படைப்பாளியை அவமானப் படுத்துவது போலாகும்.

சிகரங்களைத் தொட்ட கலைஞர்கள் ஆண்ட தமிழ்த் திரையுலகில் இப்படித் தகரங்களை உலா வர விடுவது நியாயமா ... ரசிகர்கள் வரவேற்புத் தருவதால் இப்படி செய்கிறோம் என்கிற ஒப்புக்கு சப்பான விளக்கம் தருவார்கள்.

மக்களே நீங்கள் வரவேற்கிறீர்களா ... இந்த மாதிரி பாடல்களையும் நகைச்சுவை என்ற பெயரில் விவேக் போன்றவர்கள் சாதனைகளைப் புரிந்த நடிகர் திலகம் போன்ற உன்னதக் கலைஞர்களைக் கிண்டல் செய்வதையும் உண்மையிலேயே மக்கள் வரவேற்கிறார்களா ....

இதற்கெல்லாம் விடையளிக்க வேண்டியவர்கள் இக்கால சினிமாவின் ரசிகர்களே ...

Gopal.s
27th March 2013, 08:36 AM
நடிகர்திலகத்துடன் பல படங்களில் உடன் நடித்து, அவர் அன்பை பெற்றவரும், மற்றும் அவரின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும், நண்பரில் தலை சிறந்தவருமான பீம்சிங் அவர்களின் துணைவியாருமான சுகுமாரி அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

adiram
27th March 2013, 10:27 AM
Tomorrow is the 45th Birth Day of 'C.B.I.Office' Mr. Rajan.

"THANGA SURANGAM" (28.03.1969 - 28.03.2013)

The first BOND movie of our Nadigarthilagam. The third colour movie in social themes of NT.

Our hubbers / fans, who are all having the details of the movie in form of magazines, paper cuttings, paper advertisements and other particulars about box-office, number of days run etc.... kindly publish them here, to make glorious to the movie.

Smart and cute NT with slim body and original hairstyle.

Two beauty queens Bharathi and Vennira Aadai Nirmala.

The only movie mellisai mannar TKR done with superb songs.

Ramanna's return back to NT's side after 1961.

JamesFague
27th March 2013, 03:02 PM
Mr Vivek has been doing this type of acting quite a long time.
What to do he don't have talent to show case his skill. This
time we must teach a lesson to that idiot in whatever form
we have in our resources.

IliFiSRurdy
27th March 2013, 03:17 PM
ராஜ ராஜ சோழன்.
நண்பர் ரகுராம் அவர்களின் ஒரு அருமையான பதிவையும் அதைத்தொடர்ந்த நண்பர் ராகவேந்தர் அவர்களின் விளக்கமும், அதற்கு நண்பர் கோபால் அவர்களின் பதிலையும் படித்து மகிழ்ந்தேன்.
மிக பிரம்மாணடமான முறையில் தயாரிக்கப்பட்டு,மிகவும் எதிர்பார்ப்போடு வெளியிடப்பட்ட இந்த காவியம் தோல்வி அடையவில்லை; ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதற்கு காரணங்கள் எதுவாய் இருப்பினும் முக்கியமாக கருதப்படுவது.

அந்த காலகட்டத்தில் சரித்திர படங்களுக்கு குறைந்து வந்த மவுசு

தலைவரின் சற்றே மிகையான நடிப்பு.

அப்பொழுது எழுத்தாளர் சுஜாதா இந்த படத்தை பற்றிய விமசரினத்தில்
"ராஜ ராஜ சோழன்,சிவாஜி கணேசனாக நடித்துள்ளார்!" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உண்மை அதுவா?இல்லவே இல்லை.

அடக்கம் என்ற ஒரு சொல்லை நாம் தவறாக பொருள் கொண்டு அதை பயன் படுத்துவ து போல வேறு எந்த சொல்லையும் செய்திருக்க மாட்டோம்.பரமசிவன் முதல் பாபநாசம் சிவன் வரை அடக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இங்கு ஒரு எழுதப்படாத விதி.

மேலும் அடக்கத்தில் துவங்கி கம்பீரம்,பெருமிதம்,கர்வம் ,மமதை,திமிர்,ஆணவம்,அகம்பாவம், அகங்காரம் என்று அழிவு எனும் டெர்மினசை நோக்கி பயணிக்கும் ஒரு மானுடனின் வெவேறு மனோபாவத்தை அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சரியான வகையில் நடித்துக்காட்டிய ஒரே உலகமகா நடிகனுக்கு, நாம் கொடுத்த பட்டம் அவர் சில படங்களில் அடக்கமாக நடிக்க தவறி விட்டார்.

என்னய்யா அடக்கம்.பெரிய அடக்கம்!!

தஞ்சை பெரிய கோவிலைப்போய் ஒரு முறை பாருங்கள் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.பார்க்கும் நமக்கே அடக்கம் நீங்கி கர்வம் தலை எடுக்கும் அப்படி இருக்கையில் அதை திட்டமிட்டு கட்டிய அந்த பேரரசன் தலையில் கம்பளி கட்டிக்கொண்டு இருமிக்கொண்டா இருந்திருப்பார்!ஒரு சிம்மம் போல அல்லவா இருந்திருப்பார்.கண்களில் என்ன ஒரு கம்பீரம் பெருமிதம் இருந்திருக்கும் அதை ஒரு மகா கலைஞன் நடித்து நம் கண் முன்னே கொண்டு வந்தால் அது தவறா?
நம் குறை ரசனையை வைத்துக்கொண்டு அதை மிகை நடிப்பு என்றா சொல்வது?

சரி திருவிளையாடல் படம்.தலைவர் சிவன்..முதலில் தன மகன் முருகனுடன் பேசும் போ து என்ன ஒரு பெருமிதம்.கீழே பூமிக்கு வந்து தருமியுடன் பேசும்போது கொஞ்சமாவது அது (கர்வம்) தெரியுமா?

"நாடகத்தையே நடத்துபவன் அதில் நடிக்க முடியுமா அப்பா?" என்று ஒரு குழை வு குழைவாரே!
அது அடக்கத்தின் எல்லை அல்லவா!!

சிறிது நேரம் கழித்து அரசவையில் "கூறும்! கூறும் !!கூறிப்பாரும் !!"என்று உறுமுவாரே ..அதில் எக்காளமிடும் ஆணவம் நக்கீரனை சோதிக்க அல்லவா? சரி மமதை மிகுந்த ஹேமநாத பாகவதர் முன் வருகிறார்.அங்கு இந்த கர்வம் எங்கு போயிற்று?அதே சிவன்தானே?ஒரு மிக சாதாரணமான் ஆடு மாடு மேய்ப்பவனாக ஒரு பாடலை பாடி அந்த பாகவதரை ஓடச்செய்வார் அல்லவா?

இதன் பொருள்..

தருமி அறியாமையின் வடிவம்..அவனுக்கு அன்பும் ஆதரவும் போதும்
நக்கீரன் அறிவு மற்றும் பக்தியின் வடிவம் அதனால் அவரை சோதித்து ஆட்கொள்ள ஆணவத்தை ஒரு ஆயுதமாக எடுக்கும் நேர்த்தி.ஹேமநாதனோ திறமை இருப்பினும், அகங்காரம் மிக்கவன்; உன்னை அடக்க என் சுண்டு விரல் நுனி கூட
தேவையில்லை என்பது போல ஒரு அலட்சியத்தின் மூலம் அவன் அகந்தையை அழிக்கும் நேர்த்தி.
இவை எல்லாம் மிகை நடிப்பா?

அதே வெள்ளையர்கள் தான்

வீரபாண்டிய கட்டபொம்மனில் என்ன ஒரு வேகம் வீரம் இருக்கும்!"உனக்கு எதற்கடா கொடுக்க வேண்டும் வரி ?" என்று முழங்கும்போது அதிலிருப்பது தார்மீக ஆணவம் எனபது புரியுமல்லவா?அதே வெள்ளையனை கப்பலோட்டிய தமிழனில்
சாதுர்யமாக எதிர்கொள்ளும்போது கம்பீரம்,பெருமிதம் என்று இரு எல்லைகளோடு நிறுத்தி விடுவாரே அவருக்கா தெரியாது, எங்கே,எதை,எப்படி, நிறுத்தவேண்டும் என்பது?

அடுத்து பாசமலர் மற்றும் பார் மகளே பார்.

முன்னதில் உழைத்து பணக்காரன் ஆகி தன பால்ய சிநேகிதன் தனக்கு எதிராக செயல்படுவதைக்கண்டு குமுறி அவனிடம் தன ஆணவத்தை காண்பிப்பது ஒரு நிலை.

இரண்டாவதில் பிறவி செல்வந்தன்;பிறவி கர்வி..தன நண்பன் தன சொல் கேளாது வியாபரத்தில் பணம் இழந்தபின் அவனை ஒதுக்கும் ஒரு அகங்காரம்.இது ஒரு நிலை.

அடுத்து தில்லானா மோகனாம்பாள்.இதில் முழுக்க முழுக்க வித்வத் கர்வம்.ஒரு கலைஞனுக்கு அது இருந்தே ஆகவேண்டும்!
இல்லாமல் இருப்பது மிக கொடுமை..சற்றே விளக்குகிறேன்..

ஒரு நேர்முகத்தில் ஜெயகாந்தனிடம் கேட்கிறார்கள்..உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென.அவர் உடனே சொல்கிறார் "பாரதியார்! அவர்எழுத்துக்கள் தான் என்னை உருவாக்கின" என.அடுத்த கேள்வி "அப்படி அவர் எழுதாதிருந்திருந்தால்?
உடனே பதில் "அதனாலென்ன அனைத்தையும் நான் எழுதியிருப்பேன்!"
சொல்லுங்கள் இதில் என்ன ஒரு தன்னம்பிக்கை! வித்யா கர்வம் ஜொலிக்கிறது !!இது குற்றமா?

நேர்மாறாக ஒரு சானலில் "மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்... அனல் கொண்டு வெடிக்கும்" என்ற சுத்ததன்யாசி ராக தேவகானத்தில் இரண்டாவது "வெடிக்கும்" போது விழும் ஒரு அசாத்திய சங்கதியை கேட்டு
கிறுகிறுத்துப்போய் அப்படியே கிறங்கி கிடந்தால் பாடல் முடிந்து,இதற்கு இசையமைத்த சக்ரவர்த்தி அடக்க ஒடுக்கமாக ஒரு ஆணவமே உருவான குண்டனுக்கு பேட்டி அளிப்பது தொடர்கிறது..'பாடல் நன்றாக உள்ளதே' என எதோ புதிதாக கண்டுபிடித்ததை போல அவன் சொல்ல, இந்த அரசர் கூனி குறுகி "மிக நன்றி என்னை சிறு வயதில் என் அன்னை, நான் எதற்கும் லாயக்கில்லை என வீட்டை விட்டே துரத்தி விட்டாள் நானும் வெளியே வந்து மிகவும் கஷ்டப்பட்டேன் திரை
அரங்குகளில் இடைவேளை போது பக்கோடா எல்லாம் கூட விற்றிருக்கிறேன்" என்று தேவையே இல்லாமல்
தன் "பய data" வை எடுத்து விடுவார்.சொல்லுங்கள் நமக்கு ரத்தம் கொதிக்காது?இந்த அடக்கம் தேவையா?

ஆனால் இத்தனையிலும் நான் பெரும் பேராக கருதுவது... நல்ல வேளையாக தலைவர் ஒரு ஆண் மகனாக பிறந்தது தான் அவரே இத்தனை திறமையுடன் ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அடக்க பாணத்தை மேலும் வேகமாக அவர் மீது வீசி அவரை விஜயகுமாரியின் assistant ஆக ஆக்கியிருப்போம்.(அவர்தானே அடக்கத்தின் அரசி)
கணவனை எதிர்த்து பேசும் பாத்திரங்கள்,
திருமணமே வேண்டாம் என கன்னியாகவே ஒழுக்கத்துடன் வாழும்போது,
முதிர்கன்னிப்பருவத்தில் காதல்வயப்படும் பாத்திரங்கள்,
தாசி பாத்திரங்கள்,
புதுமைபெண் பாத்திரங்கள்,

அத்தனையும் அவர் நெருங்க முடியாமல் செய்திருப்போம்.
ஏனெனில் இவை அனைத்தும் கர்வம் மிக்க பாத்திரங்கள் அல்லவா?

இப்படிதான் இருக்கவேணும் பொம்பளை என்பது நம் தேசீய கீதம் அல்லவா?

Gopal.s
27th March 2013, 04:00 PM
Ganpat Sir,
குழப்பத்தின் மொத்த உருவான பதிவு. புகழ்கிறீர் களா ?திட்டுகிறீர்களா? வெற்றி வாய்ப்பை அடைந்திருக்க வேண்டிய படமா? அல்லது சுமார் வெற்றியே போதும் என்கிறீர்களா? நடிகர் திலகம் ஒருவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற தொனியில் அமைந்த இந்த பதிவை உண்மையான ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

vasudevan31355
27th March 2013, 06:34 PM
Today Malai malar.

http://epaper.maalaimalar.com/2732013/epaperimages/2732013/2732013-md-hr-8/15815578.jpg

IliFiSRurdy
27th March 2013, 06:35 PM
[QUOTE=Gopal,S.;1029599]Ganpat Sir,
குழப்பத்தின் மொத்த உருவான பதிவு. புகழ்கிறீர் களா ?திட்டுகிறீர்களா? வெற்றி வாய்ப்பை அடைந்திருக்க வேண்டிய படமா? அல்லது சுமார் வெற்றியே போதும் என்கிறீர்களா? நடிகர் திலகம் ஒருவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற தொனியில் அமைந்த இந்த பதிவை உண்மையான ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.[/QUOTE

தலைவர் ரசிகர் குடும்பத்தில் ஒருவனாக, ஒரு ஓரமாய் அடக்கமாய் நின்றிட்டு , அண்ணன் புகழ் பாடும் அனைவர்க்கும் அன்பு காட்டி மகிழ்ந்து கொண்டிருந்த எனக்கு, ஒரு மேடை அமைத்து கொடுத்திட்டு,"தம்பி நீ எழுதிடு,பதிவாக இட்டிடு,பல பேர் புகழ, தலைவர் புகழ் பாடிடு" என இங்கு இரு கை கோர்த்து அழைத்திட்டு, வந்திட்டு, இருக்கை வழங்கி கெளரவித்திட்ட, மய்ய நண்பர்கள் மனம் மகிழ, சில பதிவுகளை போட்டிடுவது என் தலையாய கடமை என்று பணி செய்யும் என்னை,

யாதொரு காரணமின்றி,விபீஷணனாக,கடிலனாக ,எட்டப்பனாக மனதில் உருவகம் செய்திட்டு மனம் போனபடி வசைபாடி மகிழும் என் அன்பு நண்பர் கோபாலிற்கு பதிலிட்டு, அவர் ஏதோ கோபத்தை என் மேல் காட்டிடுகிறாரோ என, எனக்கு இல்லாவிட்டாலும், என் நண்பர்கள் பலருக்கும் இங்கு,இந்நேரம் தோன்றிட்டிருக்கும், ஐயத்தை கோடிட்டு, காட்டிட்டு, அவரை வருந்திட செய்யும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை.

அதே சமயம் அவர் பலவகையான இஸ்கிகளை மேற்கோளிட்டு, தலைவர் நடிப்பை ஒப்பிட்டு பதிவிட்ட ஒரு பதிவை, ஒன்றும் புரியாவிட்டாலும் பாராட்டி மகிழ்ந்திட்ட என்னை, அவர் மறந்திட்டிருந்தாலும், மற்ற நண்பர்கள் மறந்திட்டிருக்க மாட்டார்கள். மேலும் அந்த பதிவின் விரிவாக்கத்தை விரைவில் பதிவிட்டிடுவேன் என்று அவர் பகர்ந்து பல நாட்கள் பறந்து விட்ட நிலையையும் இங்கு பதிவிட்டு ,அவர் மனதை புண்படுத்தமாட்டேன் என்றும் சொல்லி நல்லதொரு தீர்ப்பை நண்பர்கள் நவில்ந்திடுவார்கள்எனும் நம்பிக்கையுடன் நகர்ந்து நிற்கிறேன்.வணக்கம்

vasudevan31355
27th March 2013, 08:59 PM
பழம்பெரும் நடிகை திருமதி சுகுமாரி அவர்களின் மறைவுக்கு நம் கண்ணீர் அஞ்சலி.

'பட்டிக்காடா பட்டணமா' திரைக் காவியத்தில் VKR அவர்களுடன் சுகுமாரி.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PPattanama0002.jpg

eehaiupehazij
27th March 2013, 10:42 PM
Mr Vivek never had any originality since he started his acting career. He just imitated KA Thangavelu and MR Radha and of course Surulirajan in one film. Should we give importance to this lesser known 'comedian'? Ignore him. He is now totally out of market and he has to do something to retain his stand in films. No other go except to imitate NT!

eehaiupehazij
27th March 2013, 10:53 PM
Raaja Raaja Cholan could have been produced in a different way but within his limited financial commitments APN could do justice only to the storyline that had greater acting scope for NT to depict the emperor before our eyes as he did for Karnan or VPKB or VOC. What is overacting?! In real life no one can simultaneously beat 10 physically strong hooligans after getting a third punch that brings out blood from mouth, and smashing them that too by flying and revolving legs! Then that is also overacting. All song sequences in films are overacting. All dances are overacting. All gunshots are overacting. All cowboys and james bonds are overacting.....

eehaiupehazij
27th March 2013, 10:59 PM
Tomorrow is the 45th Birth Day of 'C.B.I.Office' Mr. Rajan.

"THANGA SURANGAM" (28.03.1969 - 28.03.2013)

The first BOND movie of our Nadigarthilagam. The third colour movie in social themes of NT.


.

No doubt Thanga Surangam featured a slim Bond like NT. But the movie was a loose adaptation of Silencers starring Dean Martin to make a parody of Sean Connery's James Bond! Mixing sentiments in such movies sometimes may not yield the expected result!

Gopal.s
28th March 2013, 07:21 AM
தங்க சுரங்கம்.

இளைத்த திராவிட மன்மதனின் இரண்டாவது சமூக வர்ண படம்(நான்கரை வருடங்கள் கழித்து புதிய பறவைக்கு பிறகு. தில்லானா ,புராண படங்கள் தவிர்த்து). jamesbond ஆக தயங்கிய NT ஐ convince பண்ணி, காலம் மாறுது என்று ராமண்ணா (குமரி பெண்,நான்,மூன்றெழுத்து போன்ற வெற்றிகளில் திளைத்த நேரம்)எடுத்த படம்.

நடிகர்திலகம் ,பாரதி ஜோடி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.(திருடன்,ராஜா போன்ற படங்களில் இந்த ஜோடி நடித்திருந்தால்!!!).நடிகர்திலகம் அழகுன்னா அவ்வளவு அழகு. உடைகள் தேர்வு கன கச்சிதம்.(சந்தன குடத்துக்குள்ளே பாட்டிற்கு ,நான் பிறந்த நாட்டின் உடைகளை தந்திருக்கலாம்). NT படு cute ஆக பண்ணியிருப்பார். hotel அறையில் பாரதியுடன் முதல் சந்திப்பு, கட்டழகு பாப்பா, பாரதி-நிர்மலாவை கலாய்ப்பது,ஷேக் மின்கி ட்விஸ்ட் வகையறா நடன அமர்க்களம்(புஷ் குல்லா,கண்ணாடி யுடன்),சண்டை காட்சிகள், சந்தன குடத்துக்குள்ளே(திரும்பி வரும் bucket ஐ style ஆக உதைத்து திருப்பும் அழகு!!), என்று அசத்தியிருப்பார்.

ஆனாலும் ராஜா மூன்று வருடங்கள் கழித்து வந்து பெற்ற மாபெரும் வெற்றியை எட்டாமல் சுமாரான வெற்றியை பெற்ற காரணங்கள்-(என் சிற்றறிவுக்கு எட்டிய வரை)

T .N .பாலுவை போடாமல் சக்தி கிருஷ்ணசாமியை வசனத்திற்கு போட்டது.(விஜயலலிதாவை விட்டு புஷ்பலதாவை பளிங்கினால் ஒரு மாளிகை பாட்டிற்கு ஆட வைத்தது போன்றது)

இசைக்கு வேதாவை போட்டிருக்கலாம். நான் பிறந்த நாட்டிற்கு, சக்தி தன்னாடு பாடல்களுக்கு பதிலாக நிர்மலாவுடன் ஒரு கனவு பாடல்,பாரதியுடன் ஒரு erotic duet வைத்திருக்கலாம்.(சிவாஜி நன்றாக விளையாடி இருக்க வேண்டும்)

விஜயஸ்ரீ, ஜெயகுமாரி முதலியவர்களுடன் ஒரு கவர்ச்சி நடனம்.(jamesbond feel வரும்படி)

O .A .K .தேவர் உறுத்தல்.(மணி பயல்) நம்பியார் , மனோகர் போதும். jamebond அப்பாவையே வில்லனாக்கி இருப்பது தேவையற்ற வேலை.(தண்ணி பாம்பை பிடிக்க மகுடி ஊதி கொண்டிருப்பது போன்ற feeling )

ஆரம்பத்தில் ,jamesbond feel வரும் படி காட்சிகளை அமைக்காதது பெரும் குறை. sentiment தேவையே இல்லாதது. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட நடிக-நடிகைகளை உபயோகித்திருக்கவே கூடாது.(பாரதி அப்பா OK ).

விறு விறுவென்று ராமண்ணா-பாலு பாணியில் திரைகதை அமைத்திருக்க வேண்டும் .

நல்ல வேளை "பெற்ற மனம் பதையுதே,பேதை மனம் அலையுதே" பாட்டை அவர்களாகவே மனமுவந்து cut பண்ணியதற்கு ,நம் ரசிகர்களின் முற்பிறவி புண்ணியம் துணை நின்றிருக்கிறது.

அவன்தான் மனிதன் கதாநாயகன் போல் உறவே இல்லாத அனாதையாய் இந்த jamesbond துறு துறு வென்று வந்திருந்தால் , இந்த படம் collection இல் உச்சம் தொட்டிருக்கும்.

Gopal.s
28th March 2013, 09:12 AM
Casino Royale
Quantum of Solace
Skyfall

மேற்கண்ட சமீபத்திய jamesbond படங்கள் பயங்கர sentiment touches உடன் தங்கச்சுரங்கம் பாணியில் வெளியாகி உலக அளவில் வெற்றியும் பெரும் அதிசயத்தை என்ன சொல்ல?

eehaiupehazij
28th March 2013, 10:06 AM
In a james bond film, as conceptualized by Sean Connery era, sentiments are odd elements that spoil the mood of watching a Bond movie, as many ardent fans of Connery/Bond all over the world feel. Except Casino Royale, the other two recent Bond movies released in India were utter flops. Casino Royale too in many frames lacked the feel of a Bond Movie particularly when Daniel Craig was showing over emotions in climax! Skyfall is the best example of how a james bond movie should not be made! the data on collections are different due to wide world market and DVD sales etc., which were not in the earlier days.OK. Gopal Sir, this is not a thread for Bond but I am also of your opinion that Thanga Surangam could not get the expected success due to many reasons, one of which is the mixing of sentiments that confused the audience whether NT was rightly guided to enact a Bond role or a realistic officer get caught in the web of sentiments. The bitter truth is that NT got shaken and stirred in enacting his role in this movie! The image of Bond warrants action sequences not acting sequences as in the climax of Thanga Surangam where NT receives bullets on selected joint points on his body and shows his expressions of pains against sentimental feelings for his father who bumps the bullets! Kindly watch the movie "The Silencers" starring Dean Martin to understand how this masala mix was prepared by Ramanna only to spoil the sauce!

adiram
28th March 2013, 10:32 AM
// தங்க சுரங்கம்.

இளைத்த திராவிட மன்மதனின் இரண்டாவது சமூக வர்ண படம்(நான்கரை வருடங்கள் கழித்து புதிய பறவைக்கு பிறகு. தில்லானா ,புராண படங்கள் தவிர்த்து) //.

Third colour social theme movie.... (because there is Ooty varai uravu is there in between)

adiram
28th March 2013, 10:55 AM
Mr. Gopal sir,

Your view is correct. Most of the fans think the same. (Ramanna should not mix the sentiments for a bond movie).

'Sakthi thannaadu' song should be avoided, but 'naan pirandha nattukendha naadu' is a nice one with wonderful picturisation. Last song for NT and Bharathi in ooty grden is an excellent one, but did not hit.

'vaira viyaabaari' get up scene of NT and Nagesh is a bore one, it took long time also that too with telugu dialogues. (same like Nagaiya episode in Raja).

Race course scene is nice with smart NT with blue half slack and sunglass.

O.A.K.Thevar is a bore villain. His pronounciation of 'Mr.Rajan' is sema kaduppu. There must be Nambiar, and he should not be the father of NT.

As you told, V.A.Nirmala should dream a duet song with NT. and one more real duet should be with Bharathi.

Major as usual, talking in English and suddenly translate to Tamil ('Kamatchi ammavai kaidhi seyya unga permission venum'... "Mr Rajan, are you a mad?. ungalukkenna paiththiyamaa?")

Gopal.s
28th March 2013, 10:55 AM
// தங்க சுரங்கம்.

இளைத்த திராவிட மன்மதனின் இரண்டாவது சமூக வர்ண படம்(நான்கரை வருடங்கள் கழித்து புதிய பறவைக்கு பிறகு. தில்லானா ,புராண படங்கள் தவிர்த்து) //.

Third colour social theme movie.... (because there is Ooty varai uravu is there in between)

sorry for the slip.Stand Corrected. Thanks.

Gopal.s
28th March 2013, 11:46 AM
ஆதி ராம் சார்,

நான் பிறந்த நாட்டுக்கு நல்ல பாட்டு. படத்தோட tone ,texture ,content க்கு பொருந்தவில்லை. தங்க சுரங்கத்தின் குறையே முதல் 30 நிமிடங்கள் jamesbond பட feel வரவே வராது. எல்லோரிடமும் தான் CBI என்று சொல்லி கை குலுக்கி கொண்டிருப்பதை தவிர.

நம் தமிழ் பட(இந்திய பட) cliche விலிருந்து NT சில விஷயங்களில் விடு படவில்லை. எங்காவது தகவல் ஒற்றறிய ,மாறு வேடத்தில் செல்லும் போது , அமெரிக்கையாக நடந்து கவன ஈர்ப்பை தவித்து எச்சரிக்கையாக இருப்பதற்கு பதில், அதிக பட்ச கோமாளி தனம் செய்து,(நகைச்சுவையும் இருந்து தொலையாது) எதிரிக்கும் சுலபமாக புரியும் கவன ஈர்ப்பை கோரி , பார்வையாளர்களை irritate செய்வார்கள்.(மரகதம்,குங்குமம்,ஆரம்பித்து வெற்றிக்கு ஒருவன் வரை NT படங்களிலும் இது உண்டு)

67 இலிருந்து 70 வரை, தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு ஒரு குழப்பம் தொடர்ந்தது. 61-65 வசதியான மேட்டு குடி அம்மா அப்பாக்களிடம் இருந்து NT fanbase C centre களுக்கு பரவி, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் பரவி விட்டதை அறியாமல்,குழப்பமாகவே படம் எடுத்து கொண்டிருந்தனர்.இல்லையானால்,ஒரு வசந்த மாளிகை,ஒரு ராஜா,ஒரு பட்டிக்காடா பட்டணமா,ஒரு சிவந்த மண் நமக்கு 67,68 லேயே கிடைத்திருக்க முடியும். பாலாஜிக்கு நன்றி.தங்கையின் மூலம் ஓரளவு அந்த பணியை செய்ததற்கு.

adiram
28th March 2013, 12:28 PM
Mr Vivek never had any originality since he started his acting career. He just imitated KA Thangavelu and MR Radha and of course Surulirajan in one film. Should we give importance to this lesser known 'comedian'? Ignore him. He is now totally out of market and he has to do something to retain his stand in films. No other go except to imitate NT!

indha latchanaththil ivarukku 'Padmashree' virudhu veru. Additionalaaga 'chinna kalaivaanar' .Andha virudhugalukke avamaanam.

He imitated NT in many films. I dont know the movi name, he comes in oldman get up and catch a 'illegal relation pair' and talking to her husband, "Ramanathan, neenga illaatha neraththula rendu perum fridge repair kaththukkuraanga" in the same pattern, how NT will speak.

IliFiSRurdy
28th March 2013, 01:53 PM
தங்க சுரங்கம்

நான் எஸ் எல் சி பரீட்சை எழுதிய ஆண்டு (நாங்கள் அந்த காலத்தில் SSLC ஐ SLC என்றுதான் சுருக்கமாக சொல்லுவோம்).இன்னும் ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு என்ற நிலையில் என் கசின்,ஒரு extra ticket premier show விற்கு இருக்கு வரையா? என்று காதை கடித்தான்.எனக்கும் ஆசைதான்.அப்பாவிடம் permission கேட்டேன்.அவர் சொன்னார்ர்..
"போகலாம் ஆனால் ஒரு கண்டிஷன்.!"
"என்னப்பா அது?" என்று பயந்து கேட்டேன்.
"SSLC தேர்வில் நீ STATE FIRST வரணும்!" என சொல்ல,
"ப்பூ இவ்வளவுதானா ! நீ என்னமோ இன்னொரு டிக்கெட் உனக்கும் வேண்டும் என கேட்கப்போகிறாயோ என பயந்துவிட்டேன் "
என்று அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டு படத்திற்கு சென்றேன்.
படம் படு ஜாலி
இரண்டு மாதங்கள் கழித்து முடிவுகள் வெளியான பின்,
"என்னடா! செய்த சபதம் என்ன ஆச்சு?" என அவர் வினவ ,நானும்
" அப்பா அன்று நான் தங்க சுரங்கம் பார்க்க போகவில்லை என்றால் first rank வாங்கியிருப்பேன் என நீ நினைக்கிறாயா?" என கேட்க,
அவரும் "ச்சீ சீ அந்த மாதிரி மூட நம்பிக்கையெல்லாம் எனக்கு கிடையாது.நீ பாஸ் செய்ததே பெரிசு " என்றார்.
"அப்போ ஏன் அன்று அப்படி?" என்று வினவ,
"ஒன்றும் சொல்லாமல் அனுப்பியிருந்தால் உன் அம்மாவிடம் மூணு மணி நேரம் அர்ச்சனை யார் வாங்குவது? அதனால்தான் " என்றார்.
தங்க சுரங்கம் என்னால் மறக்க முடியாத படமான் கதை இதுதான்.

Gopal.s
28th March 2013, 02:13 PM
வசந்த மாளிகை- 25 வது நாள் கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்.

adiram
28th March 2013, 02:14 PM
If a candidate want to write SSLC exam, he should complete 16 years age, was the Govt rule at that time.

So, if Mr. Ganpat was 16 in 1969, now his age is 60 (or more). ok?.

(naanga CBI officer Rajan sir fansaakkum).

IliFiSRurdy
28th March 2013, 02:16 PM
அந்த கால கல்யாணங்களில் ஒரு அன்னியோனியம் இருக்கும்.கல கலப்பிறகோ பஞ்சமே யில்லை
சண்டை இருந்தாலும் துவேஷம் இராமல் சுவாரசியமாக இருக்கும்

ஆனால் தற்காலத்தில் எல்லாம் எந்திர மயம்!!.
வருவது,மொய் எழுதுவது ,விருந்து சாப்பிட்டு விடை பெறுவது எல்லாம் ஒரு கடமை....

நண்பர்களே ! கர்ணனின் ஆதித்ய பூஜை அளவிற்கு ஜொலிக்கவேண்டாம்
குறைந்தபட்சம், சாருஹாசனின் சந்தியாவந்தனம் அளவிற்காவது ஜீவன் இருக்கட்டுமே.

கொஞ்சம் வெட்டியோ ஒட்டியோ தான் எழுதலாமே!!

IliFiSRurdy
28th March 2013, 02:32 PM
If a candidate want to write SSLC exam, he should complete 16 years age, was the Govt rule at that time.

So, if Mr. Ganpat was 16 in 1969, now his age is 60 (or more). ok?.

(naanga CBI officer Rajan sir fansaakkum).

அடடா!! குறிப்பிட மறந்துட்டேன்,ஆதி ராம் சார்.!
நான் எங்க அப்பா,என் தாத்தா எல்லாருமே தலைவர் ரசிகர்கள் தான்
எங்க குடும்பத்தையே மூன்று தலைமுறை ரசிகர் குடும்பம் என்றுதான் சொல்வார்கள்.
மேற்கண்ட நிகழ்வு என் அப்பாவிற்கும் என் தாத்தாவிற்கும் இடையில் நடந்ததாக என் தந்தை சொல்லி மகிழ்வது வழக்கம்.
அதை அவரே சொல்வது போல நான் எழுதியிருந்தேன், அம்புட்டுதான்!
(naanga sabash meena mohan sir fansaakkum).

JamesFague
28th March 2013, 06:04 PM
Good Friday Special Mr Antony in Murasu TV at 7.30 pm tomorrow.
Don't forget to watch.

Mr Vasu Sir your special tomorrow.Enjoy.

Gopal.s
28th March 2013, 06:41 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1

நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,
Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,
Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,
Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,
Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,
உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.

இந்த அளவு எனக்கு விரிவான பார்வை வர உதவிய அஜீத் ஹரி இதை கேட்டதும் துள்ளி குதித்து குழந்தை போல் குதூகலித்தது,எனக்கு முதல் inspiration .அடுத்து, இந்த குறிப்பை முன்னெடுத்து செல்ல பணித்த தகப்பன் சாமி பிரபு ராம்.என்னை தொடர்ந்து தூண்டி கொண்டிருக்கும் முன்னாள் நண்பர் ganpat .

marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.

உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.

அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.

இத்தனை பேரின் மதிப்பை யும் சுமந்து artists ' artist ஆக அமரத்துவம் பெற்ற அந்த நடிப்பு கடவுளை விஞ்ஞான தொழுகை நடத்தும் சிறு முயற்சியே இது.

---To be continued.

Gopal.s
28th March 2013, 07:21 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-2

பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.

நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.

முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.

இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.

அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.

சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope .

இந்த தொடர் முடிந்ததும்,நமது இலக்கியங்களில்(சிலப்பதிகாரம் போன்ற) நடிப்பு பற்றிய பார்வை,கோட்பாடு போன்றவற்றுடன் நடிகர் திலகத்தை முன் வைத்து இன்னொரு தொடர் வரையும் எண்ணமும் உள்ளது. பார்ப்போம்.

-----to be continued .

IliFiSRurdy
28th March 2013, 08:40 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1,2

நண்பர் கோபால் அவர்களுக்கு,

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பாசறையில் பயின்று வந்த நான்,நமக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி ,உங்கள் புதிய பதிவிற்கு என் கருத்தினை இயம்பிட விழைகிறேன்.

முதல் முறை படித்திடும் போது சற்றே கடினமாக காணப்படினும் இரண்டாவது மூன்றாவது முறை படித்திடுங்கால் இதன் முழு அர்த்தம் புலப்படுகிறது

நம் தமிழ் மண்ணிலே ஒரு தமிழனாக பிறப்பெடுத்து,தமிழனாக வாழ்ந்து தமிழின் சிறப்பை அவனி எங்கும் தன சீரிய நடிப்பால் கொண்டு சென்ற அந்த மாபெரும் கலைஞனின் புகழ் பாடும் உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

மற்ற நண்பர்களும் இதை படித்து மகிழ்வர் என நம்புகிறேன்.

அன்பன்,
Ganpat

RAGHAVENDRA
28th March 2013, 10:06 PM
டியர் கோபால் சார்,
இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் இதனுடைய நோக்கம் பார்வை விஸ்தாரமாக இருக்க வேண்டும், இந்த படத்தில் தான் இதைப் பார்ப்பேன் இந்த கால கட்டத்தில் தான் என்னுடைய ஆய்வை நான் உட்படுத்துவேன் என்கிற கண்ணோட்டம் இல்லாத பட்சத்தில் இந்த கட்டுரை முழுமையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். அந்தக் கலைஞனின் உழைப்பு இறுதிப் படம் வரையில் முழுமையாக இருந்தது. எனவே தங்களுடைய பார்வை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் என்று இல்லாமல் அவருடைய காலம் முழுதுமாக விஸ்தரிக்கப்படுமானால் அப்போது அதுவே அந்தக் கலைஞனுக்கு தாங்கள் செய்யும் நேர்மையான மரியாதையாக இருக்கும்.



நடிகர்திலகம் Stanislavski ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner ,Straberg பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில், உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.


இதைத் தான் நானும் சொல்லி வருகிறேன். He had full control on his performance and did not allow his performance to control him. வெளியில் இருந்த வாறே உள்ளே அந்தப் பாத்திரத்தை I mean the character, உள்ளே அலசி ஆராய்ந்து அதனைத் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்து அதே சமயம் தான் அதற்குள் போகாமல், பார்வையாளனை உள்ளே தள்ளி விடும் சாமர்த்தியம் ...

RAGHAVENDRA
28th March 2013, 10:18 PM
நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில் நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution ),நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,tribalised ஆக தெரியும் விரிந்த பழம் கலாச்சாரங்கள்,நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்,(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.


இந்த variables எல்லாமே புறந்தள்ளக் கூடியவை அல்ல. இவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டுப் பார்த்தால் நடிகர் திலகத்தின் நடிப்பை ஆராயும் கண்ணோட்டத்தில் BALANCE இருக்காது. ஏனென்றால் இந்தக் காரணிகளை எல்லாம் அலசி ஆராய்ந்து அவற்றில் தேவையானவற்றை மட்டும் எடுத்து அவற்றை நமக்குப் பரிமாறியிருக்கிறார். இவற்றை ஒதுக்கி விட்டு அவரை நீங்கள் பார்த்திருந்தீர்களானால், மேலே உதாரணம் காட்டப் பட்டுள்ள பல்வேறு உலகக் கலைஞர்களோடு பத்தோடு பதினொன்றாகத் தான் இருந்திருப்பார். அந்தப் பட்டியலோடு அவரை நிறுத்தி விட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும்.

SYMBOLISM இல்லாமல் இந்திய சினிமா இல்லை. நமது கலாச்சாரம் நமது பண்பாடு இவற்றை மீறி அந்நிய பாணியில் நாம் பயணிக்க முடியாது. அதனைத் தெரிந்து கொண்டு தான் அவர் நடிப்பினை வகுத்துக் கொண்டுள்ளார்.

சொல்லப் போனால் BEYOND AN ACTOR, HE WAS AN ASSUMPTION OF A RESPONSIBLE CITIZEN, HE VIEWED THE CHARACTER IN THE VIEW OF A CENSOR OFFICER, A NATIONAL LEADER, AND SOCIAL WORKER.

இந்த அடிப்ப்டையில் அவருடைய நடிப்பினைப் பற்றித் தாங்கள் கூறினீர்களானால் IT WILL BE JUSTIFIED.

அவருடைய இந்த எச்சரிக்கை உணர்வு கலந்த characterisation க்கு உதாரணம், புதிய பறவை படத்தில் வரும் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பாடலில் அவர் உதட்டை வழிக்கும் கட்டம். இது போல் மேலும் சில படங்களில் suggestive ஆக அவரே செய்திருப்பார். இயக்குநருக்கும் படத் தொகுப்பாளருக்கும் filler வைக்க வேண்டிய வேலை இல்லாமல் அவர்களுடைய பணியை எளிதாக்கி விடுவார்.

இன்னும் பல உண்டு. தங்களுடை தொடரில் தங்களுடைய கண்ணோட்டத்திற்கேற்ப கருத்துப் பரிமாற்றங்கள் தொடரும்.

IliFiSRurdy
29th March 2013, 08:11 AM
நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு,

உங்கள் இரு பதிவையும் படித்தேன்.சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.

கோபால் உள்ளிட்ட நம் அனைவருக்கும் உள்ள ஒரே கருத்து
தலைவர் ஒரு மகா கலைஞர் அவரை போன்ற ஒருவர் தோன்றுவது மிக அபூ ர்வம் எனபது.
அதில் யாருக்கும் எந்த வித ஐயமும் வேண்டாம்.

இன்று உலகமே சுருங்கி ஒரு நகரத்தின் அளவிற்கு வந்துவிட்ட தொழிற்நுட்ப புரட்சி காலத்தில் ,
நம் மண்ணில் பிறந்த ஒரு மகா கலைஞனின் புகழை உலகெங்கும் எடுத்து செல்ல வேண்டியதும் நம் கடமை ஆகிறது.

அப்பொழுது உலக அரங்கிலே நின்று எங்கள் சிவாஜியை மிஞ்ச வேறு யாரும் கிடையாது என முழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை.
காரணம் அதை சொல்லும் வகையில் சொல்லாதது தான்.ஒரு குழந்தை துறு துறுவென்று மூக்கும் முழியுமாக அழகாக் உள்ளது என்று ஒரு சாதாரண அரங்கில் சொல்லலாம்.ஆனால் கற்றோரும் கவிகளும் நிறைந்த அரங்கில் அதையே,

மாவடு கண்ணல்லவோ, மைனாவின் மொழியல்லவோ!
பூவின் மண மல்லவோ, பொன்போன்ற நிறம் அல்லவோ!!

என்றால்தானே எடுபடும்.

நண்பர் கோபால் என்ன எழுதப்போகிறார் என எனக்குத்தெரியாது.ஆனால அது தலைவர் புகழ் பாடும் எனபதில் எனக்கு ஐயமில்லை.

மேலும் நான் ஏற்கனவே சொன்னதைப்போல நீங்கள் திறனையும் (potential ), செயல்பாட்டையும் (execution ) ஒன்றாக சேர்த்து மனக்கிலேசப்படுகிறீ ர்கள்..
ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரி, நேற்று அங்காடி சென்று, ஐந்து கிலோ காய்கறி வாங்கி வந்தார் என்றால்,அவர் உலக அரங்கில் 70 கிலோ தூக்கி சாதனை படைத்தவர் அவரை எப்படி சிறுமை படுத்தலாம் என்பது போல.70 கிலோ அவரது திறன்.ஐந்து கிலோ அவர் execution
தலைவர் த்ன் potential முழுவதும் வெளிகாட்டியிருக்கும் திரைப்படங்களை மட்டும் நாம் உலகதிற்கு அறிமுகம் செய்வது போதுமானது
அதை அவர்கள் பாணியில் ஒப்பீ டு செய்வது இன்னும் சால சிறந்தது.

எனவே முடிவாக கோபால் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இது என் வேண்டுகோள் மட்டுமே

நண்பர் கோபாலிற்கும் ஒரு வேண்டுகோள்,விருந்தில் ஆவக்காய் ஊறுகாயும்,கோங்குரா துவையலும் மிக குறைவாகவே பரிமாறுங்கள்

முடிவாக நீங்கள் இருவரும் எதையும் கேளாது உங்கள் natural game தான் ஆடப்போகிறோம் என முடிவெடுத்தால்......

எனக்கு ஒரு பெவிலியன் terrace complimentary ticket ஆவது அனுப்பிவையுங்கள்.

வேறு வழி?

RAGHAVENDRA
29th March 2013, 08:48 AM
டியர் கண்பத் சார்,
தங்களுக்கும் கோபாலுக்கும் உள்ள understanding பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை. அவரைப் பற்றிய என்னுடைய understanding தவறாக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். அவர் மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்து ஒப்பிப்பது போல் இல்லாமல் அவராகவே எழத வேண்டும் என்பது தான் என் விருப்பம்.



மேலும் நான் ஏற்கனவே சொன்னதைப்போல நீங்கள் திறனையும் (potential ), செயல்பாட்டையும் (execution ) ஒன்றாக சேர்த்து மனக்கிலேசப்படுகிறீ ர்கள்..
ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரி, நேற்று அங்காடி சென்று, ஐந்து கிலோ காய்கறி வாங்கி வந்தார் என்றால்,அவர் உலக அரங்கில் 70 கிலோ தூக்கி சாதனை படைத்தவர் அவரை எப்படி சிறுமை படுத்தலாம் என்பது போல.70 கிலோ அவரது திறன்.ஐந்து கிலோ அவர் execution
தலைவர் த்ன் potential முழுவதும் வெளிகாட்டியிருக்கும் திரைப்படங்களை மட்டும் நாம் உலகதிற்கு அறிமுகம் செய்வது போதுமானது
அதை அவர்கள் பாணியில் ஒப்பீ டு செய்வது இன்னும் சால சிறந்தது.


This is not a question of potential or its execution. நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை அவர் 70 கிலோ என்பதற்காக ஒரு மாதிரியும் 5 கிலோ என்பதற்காக ஒரு மாதிரியும் execution செய்பவரில்லை. அனைத்திற்கும் ஒரே approach தான், அதில் sincerity and honesty இருக்கும். இங்கு முதலில் தெளிவாக வேண்டியது அவருடைய நடிப்பைப் பற்றி எழுதப் போகிறோமா அல்லது அவருடைய படங்களைப் பற்றியா என்பது. அவருடைய நடிப்பு என்பது உண்மையானால் அதில் படம் இரண்டாம் பட்சம் அல்லது அதற்கும் கீழே போய் விடும். இல்லை, குறிப்பிட்டு சில படங்களைத் தேர்ந்தெடுப்பதானால் அப்போது அங்கே நடிப்பினைப் பற்றிய ஆய்வு பின் தள்ளப் பட்டு படத்தின் அடிப்படையில் ஒரு biased approach வந்து விடும். இது தான் இது வரையில் திரு கோபாலின் பார்வையில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. PRE DETERMINED ANALYSIS AND APPROACH அடிப்படையில் அமையுமானால் இதில் Straightforwardness இருக்க வாய்ப்பில்லை. அவருடைய நடிப்பின் அடிப்படையில் தான் இந்த ஆய்வு இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது.

இந்த அடிப்படையில் திரு கோபால் தன் ஆய்வை அமைத்துக் கொண்டால் நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக விளங்கும். அவ்வாறு இல்லாமல், தன்னுடைய சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அவருடைய ஆய்வை அவர் வடிவமைத்துக் கொண்டால் அங்கே நிச்சயம் நடிகர் திலகம் பின்னுக்குத் தள்ளப் படுவார் என்பதே நடக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே எனக்கு இருக்கும் ஒரு ஐயப்பாடு இது தான்

கோபாலின் ஆய்விற்கு அடிப்படையாக இருக்கப் போவது நடிகர் திலகத்தின் படங்களா அல்லது அவருடைய நடிப்பா..

There is no question of neutrality here. இரண்டுமே என்கிற கேள்விக்கே இடமில்லை ... நான் ஏற்கெனவே பல முறை கூறியுள்ளது போல் குப்பைப் படமாக இருந்தாலும் கூட அவரது நடிப்பில் நுணுக்கமான பல விஷயங்கள் ஆராயப் பட வேண்டியவை உள்ளன. அவருடைய நடிப்பை மட்டுமே என்கிற அடிப்படையில் இருந்தால் தான் அங்கே நேர்மையான ஆய்விற்கு இடமிருக்கும்.

I am going to play my natural game only.

Gopal.s
29th March 2013, 12:22 PM
கண்பட்/ராகவேந்தர் சார்,
உங்கள் வழிகாட்டுதல்களுக்கு நன்றி. நான் பிறந்ததிலிருந்தே,யார் பேச்சையும் கேட்காததனால்தான், பெற்றோருக்கு நல்ல பிள்ளையாகவும், ஆசிரியருக்கு நல்ல மாணவனாகவும், நிறுவனங்களுக்கு நல்ல அதிகாரியாகவும் இருந்திருக்கிறேன். இப்போது, என்னுடைய தெய்வத்திற்கு நல்ல பக்தனாகவும் இதுவரை இருந்தது போல்,இனிமேலும் இருக்க விரும்புகிறேன். மண்டபம் எல்லாம் சீண்டும் வேலை. சக கீழ் மட்ட ஊழியர்களிடம் உபயோகிக்க வேண்டிய தந்திரம்.

Gopal.s
30th March 2013, 08:19 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-3

Stanilavski//Strasberg school.

முக்கியமாக எல்லோராலும் பேச படும் "Method Acting" என்ற புகழ் பெற்ற நடிப்பு பள்ளியாகும்.சுருங்க சொன்னால் "உன் பாத்திரமே நீயானால் எப்படி உணர்வாய் " என்ற முறையில் நடிப்பை செங்கல் செங்கலாய் வீடு கட்டுவது போல் அணுக வேண்டும்.ஆனால் அத்தைனையும் உன் சொந்த செங்கலாக இருக்க வேண்டும்.இரவல் கூடவே கூடாது.

ஒரு கதை கருவின் இயங்கு சக்தி என்னவென்று கண்டு அதனை "super Objective" என்று கொண்டு பிறகு அதனை உதிரி உதிரி ஆக Script வடிவத்தில் பிரித்து,அந்த பாத்திரத்தின் முக்கிய நோக்கமென்ன,அது எதனை நோக்கி பயணிக்கிறது அதற்கு தடைகளென்ன , உதவிகள் என்ன, அதை அணுக வேண்டிய முறையென்ன, அது செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அதன் பின்னணி என்ன, நடப்பு நிலை என்ன, எதிர் காலம் என்ன, என்று கண்டு அதனை "Super Objective" உடன் வரி வரியாக இணைவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.பிறகு, "Sense Memory" என்ற தங்கள் சொந்த நினைவு சார் உணர்வுகளின் மூலம் அந்த பாத்திரத்தின் தன்மைகள்,உணர்ச்சி வெளிப்பாட்டை super -impose செய்ய வேண்டும். இதில் "Realistic Approach" என்பது இன்றியமையாதது.உணர்வுகளை போலி செய்தல்(Faking of Emotion) அறவே தவிர்க்க பட வேண்டும்.பிறகு அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடக்க,பேச,நினைக்க,பாவிக்க,என்று முன்முடிவு செய்து,அதனை அவற்றின் mannerism சார்ந்த விஷயங்களை நிர்ணயித்து, கொண்டு வெளியிட பழக வேண்டும்.இவையெல்லாம்,"Sub Objective" and "Super Objective"மற்றும் சக பாத்திரங்களுடன் ஒருங்கிணைக்க பட வேண்டும்.இதன் மூலம் அந்த பாத்திரம் வாழ வேண்டிய முறை முன்-நிர்ணயம் செய்ய பட்டு விடும்.

இந்த முறை நடிகர்களில் குறிப்பிட வேண்டிய முக்கியமான பிரபலங்கள்-Marlon Brando,Gregory Peck.

நிறைகள்-இந்த முறையில் ஒரு வலுவான சமகால கதையை ,உண்மைக்கு அருகில் வரும் வலுவான கதாபாத்திர வார்ப்புகளால் மெருகேற்றலாம். Oscar விருது வென்ற நிறைய நடிகர்கள் இந்த வகை பள்ளியை பின் பற்றயவர்களே.ஒரு சிறந்த இயக்கனரின் வலுவான படைப்பு இவர்களின் பங்களிப்பில் மெருகேறும்.(உறுத்தல் இன்றி துருத்தி தெரியாமல்)
முக்கியமாக Limited period ,biographical ,contemporary commoner பாத்திரங்களுக்கு ,இதை விட சிறந்த முறை கிடையாது.

குறைகள்- முன் முடிவு செய்ய பட்டு நடிப்பு execute செய்ய படும் இந்த வகை நடிப்பில் ,சோர்வும்,staleness உம் தெரிய வாய்ப்புள்ளது.Energy level குறைவாக தேவை படும்,evenly paced (poised ?) பாத்திரங்களுக்கே இவ்வகை நடிப்பு உதவும்.இந்த வகை நடிப்பில் நடிகர் கூடு விட்டு கூடு மாறும் அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை.பல பாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், நடிகரின் உண்மையான உள்ளணர்வு,தேக்க உணர்ச்சிகள் சார்ந்தே இயங்குவதால், எந்த மாதிரி வித விதமான subject கொண்ட படங்களில் நடித்தாலும் ,அந்த பாத்திரங்களுக்கு அவரவர்கள் இயல்பு கொண்டே பொருத்தி கொள்ள முடியும்."Sense Memory"அடிப்படையில் பாத்திரத்தை அணுகும் போது வெவ் வேறு காலகட்டங்களுக்கு (ஆதி காலம்,இடைக்காலம்,வேறு பட்ட கலாசார சூழ்நிலைகள் )அந்த பாத்திரங்களின் period related behaviour &mind -set ஆகியவற்றில் ஒரு contemporary தன்மை வருவது தவிர்க்க முடியாதது. இவர்கள் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் வண்டி போன்றவர்களே.

நடிகர்திலகம் நடித்த இந்த வகை நடிப்பு மிகும் படங்கள்-அந்த நாள்,மக்களை பெற்ற மகராசி,தெய்வ பிறவி,பாக பிரிவினை,இரும்பு திரை,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்,பார்த்தால் பசி தீரும்,இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,ராஜபார்ட் ரங்கதுரை ,தீபம் ,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களாகும்.

-----to be continued .

Gopal.s
30th March 2013, 10:38 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-4

Meisner School.


இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.

இந்த வகை நடிப்பில் பயின்றவர்கள்-Dustin Hoffman,Steve Mcqueen,Alpacino,Tom Cruise,Diana Keaton,Sandra bullock போன்றவர்களாகும்.

நிறைகள்- Surprise yourself to surprise the audience என்ற வகையில் spontaneity கிடைக்கும். சில வலுவான தனி காட்சியமைப்புகள் இந்த வகை நடிப்பின் மூலம் ,நல்ல நடிகர்களால் ,மேலும் வலுப்படும் சாத்தியங்கள் அதிகம்.இந்த வகை நடிப்பில் சோர்வகன்ற புத்துணர்ச்சியுடன் energy level high ஆக இருக்கும்.

குறைகள்-பாத்திர வார்ப்பில் மிகை உணர்ச்சியால்,inconsistency வர வாய்ப்புண்டு.நிறைய re-takes தேவை படலாம்.நடிப்பவர்கள் அன்றைய மனநிலை காட்சிகளில் பிரதிபலித்து காட்சியின் tone கெடும் வாய்ப்பு அதிகம்.(when you cant get call sheet again from the actor/actors in indian situation )

நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).

-----to be continued .

Gopal.s
30th March 2013, 12:35 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5

Stella Adler School

இந்த பள்ளி எல்லாவற்றிலும் largeness வேண்டியது.உடல் மொழியில், உடலில்,குரலில், பாணியில் எல்லாவற்றிலுமே.மிகையான energy level கொண்டு ,larger than life (சராசரி வாழ்வினும் மிக மேம்பட்ட அல்லது அந்நிய பட்ட)பாத்திரங்களில்,மிகை உணர்வுகள்,தோரணைகள்,பாவங்கள்,உடல் மொழி கொண்டு,போலி செய்த புலன் சார்ந்த உணர்வுகளையும் கலந்து(faking the emotion ),மேடைக்கு மட்டுமே உண்மையாகவும்,அந்த சூழ்நிலை புரிந்து,அபரிமித கற்பனை அடிப்படையில் நடிப்பதே இந்த பள்ளியாகும்.

Acting is doing -You have to be larger in all aspect -Strong body ,voice கொண்டு,actors should never feel small ,they should give bigger meaning to the text with sense of epic என்று போதிக்கும் பள்ளியாகும்.

இவர் stanislavski யின் சிஷ்யராக இருந்தும் ,நேர் எதிர் நிலைப்பாடு கொண்ட நடிப்பு கலையை பயிற்றுவித்தார்.

இந்த முறை நடிப்பு பள்ளி பிரபல மாணவர்கள் -Robert De Niro ,Antonio Banderas ,Warren Beaty முதலியோர்.

நிறைகள்- சரித்திர,புராண, அமானுஷ்ய,மாயா-ஜால,futuristic ,Science fiction போன்ற larger than life பாத்திரங்களுக்கும்,shakespere ,கம்பன் போன்ற காவிய பாத்திரங்களுக்கும் ,பொதுவாக நம்மிடையே மிக வேறு பட்ட கதா பாத்திரங்களுக்கும் இதை விட சிறப்பான பயிற்சி முறை கிடையாது.

குறைகள்-இந்த வகை நடிப்பு சம கால நடப்பு பாத்திரங்களுக்கு பொருந்தாது.realism சார்ந்த படங்களுக்கு அறவே பொருந்தாது.இந்த வகை நடிப்பில் பார்வையாளர்கள் அந்நிய படும் சாத்திய கூறுகள் அதிகம்.பார்வையாளனுக்கும், காவியங்களில்,கவிதைகளில் பயிற்சி இருந்தால்தான் சுவைக்க முடியும்.

நடிகர்திலகத்தின் படங்கள்-
மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.

---to be continued.

Gopal.s
30th March 2013, 01:22 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-6

Oscar Wilde School

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

ஒரு நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

இந்த பள்ளியை சார்ந்த நடிகர்கள்-Laurence Olivier ,Spencer Tracy ,David garrick ,Richard Burbage ,Edmund Kean ,Olivier Martinez ஆகியோர்.

நிறைகள்-பலதர பட்ட கற்பனை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக இந்த பள்ளி கை கொடுக்கும்.ஒரு நடிகனின் கற்பனையை பிரதானமாக முன்னிறுத்தி,பல வேறு பட்ட மாறு பட்ட சராசரி வாழ்க்கையில் சந்திக்கவே இயலாத மனிதர்களை தன கற்பனையால் நடிகன் முன்னிறுத்த இந்த பள்ளி ஊக்குவிக்கிறது.

குறைகள்-சமூகத்தை கீழ்நிலை படுத்தி,கலையை மேல் நிறுவுவதன் மூலம்,கலைக்கு ஒரு அந்நிய தன்மை அளிக்க இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது.realism புறம் தள்ள படுவதால் சமகாலத்தில் ஒட்ட இயலாது.

நடிகர்திலகத்தின் படங்கள்- பலே பாண்டியா,ஆண்டவன் கட்டளை,நவராத்திரி,எங்க ஊர் ராஜா,காவல் தெய்வம்,தெய்வ மகன்(விஜய்),ராமன் எத்தனை ராமனடி,பாபு.

----To be continued.

Gopal.s
30th March 2013, 02:02 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-7

Michael Chekhov School.


இந்த வகையான நடிப்பு பள்ளியில் கற்பனை கலந்து,உளவியல் பார்வை கொண்ட அணுகுமுறையுடன் நடிக்க வேண்டும்.இந்த வகை நடிப்பில், imitate செய்யாமல் interpret செய்து நடிக்க வேண்டும்.அந்த பாத்திரத்துக்குள்ளும்,கதை கருக்குள்ளும்,ஒளிந்துள்ள மறை பொருளும் (Hidden meanings )பார்வையாளர்களுக்கு ஒரு வடிவமாக்கி ,அழகு நேர்த்தியுடனும், creativity யுடனும் கொடுக்க பட வேண்டும்.கதா பாத்திரங்களின் உண்மை நிலையறிந்து,அதன் தேவைகளையும்,விருப்பங்களையும் சரியான உடல் மொழி கொண்ட gesture மூலம்,கை-கால்கள் மூலமும் வெளிபடுத்த பட வேண்டும்.இந்த வகை நடிப்பில் முக்கியமானது subtle /sudden changes in tempo ,body position மற்றும் சூழ்நிலை சார்ந்த உணர்வு நிலையில் சந்தோஷம்,துக்கம்,அமைதி,பரபரப்பு,பயம்,anxiety ,புதிர் நிலை,எதிர் நிலை,தீர்மானமற்ற நிலை,சூன்ய நிலை எல்லாவற்றையும் கலப்பு வெளியீடாக,monotony தவிர்த்த permutation combination கொண்டு உளவியல் பார்வையில் வெளியிட வேண்டும்.

இந்த வகை நடிப்பு பள்ளியில் பயின்ற பிரபலங்கள்-Anthony Quinn ,Anthony Hopkins ,Johnny depp ,Jack Nicholson போன்ற பலர்.

நிறைகள்-மிக complicate ஆன உளவியல் பார்வை கொண்ட படங்கள்,psychologically disturbed பாத்திரங்கள்,குழப்பமான மன நிலை கொண்ட பாத்திரங்கள் ஆகியவற்றுக்கு மிக பொருந்தும் பாணி. மிக புத்திசாலியான நடிகர்களின் நடிப்புக்கு ஒரு gloss &Depth கொடுத்து அவர்களை வேறு தளத்திற்கே உயர்த்தும் வலிமை கொண்ட பள்ளி.

குறைகள்-Hang -over அதிக நாட்கள் நீடித்து, நடிகர்களின் மனநிலையை சீர்குலைக்கும் சாத்தியகூறுகள் கொண்டது. சராசரி வேடங்களில் இந்த சாயல் வந்தால் சிறிது மிகை கலந்து அன்னியமாக (Out of Context )தோன்றும்.

நடிகர்திலகத்தின் இந்த பள்ளியை ஒத்த நடிப்பு கொண்ட படங்கள்-உத்தம புத்திரன்(விக்ரமன்),ஆலய மணி,புதிய பறவை,தெய்வ மகன்(கண்ணன்),எங்கிருந்தோ வந்தாள்,ஞான ஒளி ,ரோஜாவின் ராஜா.

---To be Continued.

parthasarathy
30th March 2013, 03:21 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்களுடைய "நடிகர் திலகம் - இந்தியாவின் ஒரே உலக அதிசயம்" prima facie, மிக நன்றாக இருக்கிறது. சற்றே எளிமைப்படுத்தி எல்லோரையும் சென்று சேரும் வகையில், செம்மைப் படுத்த வேண்டும்.

ஒரே வரியில் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் உலகின் அனைத்து பள்ளிகளையும், கற்றுத் தேறாமலேயே செய்து விட்ட, நடிப்புக் கலையின் கர்த்தா.

கட்டுரை முழுவதும் முடிந்தவுடன், நீண்ட, ஆரோக்கியமான விவாதம் அரங்கேறும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Gopal.s
30th March 2013, 04:00 PM
பார்த்தசாரதி சார்,
இதற்கு மேலும் எளிமை படுத்த இயலவே இயலாது. இந்த கரு எனக்கு தோன்றியதே ஒரு வினோதம். எந்த புகழ் பெற்ற உலக நடிகரை பார்த்தாலும், அவர் நடிகர்திலகம் நடித்த பல பாணிகளில் ஒரே ஒரு பாணியைத்தான் தொடவே முடிகிறது என்று கண்டு, அவர் எல்லோருக்கும் மேம்பட்டவர் என்று சொல்லி வந்ததை விஞ்ஞான முறையில் நிரூபிக்கவே இந்த முதல் முயற்சி. எனக்கு தெரிந்த வரை இந்த மாதிரி concept யாருமே எடுத்து செய்யவில்லை. மற்ற நடிகர்களால் ஏதோ ஒரு பள்ளி concept படியே அவர்கள் பாத்திரத்தை அணுகி கொண்டிருந்தார்கள்.கொண்டிருக்கிறார்கள். நமது நடிகர்திலகம் மட்டுமே அனைத்து பள்ளிகனின் பாணியிலும் நடித்த ஒரே உலக நடிகர் என்று நிறுவியது எனக்கு மகா திருப்தி தந்த ஒரு பெருமித நிகழ்வு என் வாழ்வில்.
ஆனால் இனிமேல்,நடிகர்திலகம் வெவ்வேறு பள்ளிகளின் பாணியில் நடித்ததை
உதாரணங் களோடு நிறுவ முயலும்போது எளிமையாக்கி விடுவேன். அது இன்னும் ஓரிரு மாதங்கள் தொடரும். அதுவரை விவாதங்கள் நிற்க தேவையில்லை. சென்று கொண்டே இருக்கலாம்.

parthasarathy
30th March 2013, 04:56 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களும் நடிகர் திலகம் தான் உலகப் பெரு நடிகர் என்று சொல்கிறோம். இருப்பினும், உலகக் கோட்பாடுகளை வைத்து இதை ஆணித் தரமாக நிரூபிப்பதற்குத் தேவைப் படுகிற கட்டுரைகளைத் தான் அனைவரும் ஏற்கின்ற வகையில் எழுத முடியவில்லை. அந்த வகையில், இந்தக் கட்டுரை இதற்குத் துணை புரியும் என்று பரிபூர்ணமாக நம்புகிறேன்.

நான் ஏன் எளிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் என்றால், அது தான் எல்லோரையும் சென்று சேர வழி வகுக்கும். ஒரு Documentation Expert -ஐ வைத்து அதை செய்யலாம்.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Gopal.s
30th March 2013, 04:57 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-8

Spolin ,Suzuki ,Anne Bogart method

இப்போது மீதம் இருக்கும் ஒரே பள்ளி(மூன்று பள்ளிகள் இணைந்த ஒரே பள்ளி)

இதில் spolin பள்ளி என்பது improvisation technique கற்று கொடுக்கும் முறை.

Suzuki என்பது உடலை முக்கியமாக கீழுடலை நன்கு பயன்படுத்த உடற்பயிற்சி,
மனபயிற்சி,ஒத்திசைவு என்று சொல்லப்படும் பயிற்சி முறைகள் நிறைந்தது.

Anne Bogart view point method என்பது கட்டமைப்பு, வெளி, வடிவம்,ஒத்திசைவு(choreography ),
அசைவுகள்(gesture )கால அளவு(duration &timing ),Tempo என்ற வேக அளவு இவை சார்ந்த பயிற்சி முறைகள்.

இவற்றை பற்றி பேசவே தேவையில்லை. நமது பாய்ஸ் கம்பெனி முதல் கூத்து பட்டறை வரை இந்த முறை பயிற்சிகள்தான் மேற்கொள்ள படுகின்றன.ஒன்பது வயதிலேயே பாய்ஸ் கம்பெனி நடிகராகி, பலருடன் முறையாக பயின்று பலதர பட்ட பாத்திரங்களில் சிறு வயதிலேயே நடித்து கரை கண்டு முதல் படத்திலேயே நூறாவது படத்தின் புலமையை காட்டியவருக்கு, நாம் இந்த வகை பள்ளியை பற்றி மேலும் பேசாமலிருப்பதே அவருக்கு காட்டும் மரியாதையாதலால்,இந்த இந்த வகை பற்றி இனிமேல் எந்த பேச்சும் எழாது.

முற்குறிப்பிட்ட Stanislavski ,Meisner ,Chekhov ,Stella Adler ,Oscar wild பள்ளிகளில் அவரது திறமை பற்றி ,அடுத்தடுத்த பதிவுகளில், நான் குறிப்பிட்ட படங்களில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்து அவர் அந்த பாத்திரத்தில் இந்த பள்ளிகளில் குறிப்பிட்டது போல் இயல்பான அவரது முறையிலேயே ஊதி தள்ளி விட்டதை விஸ்தாரமாக எழுத போகிறேன்.அது கொஞ்ச நாள்(மாதம்)தொடருமாதலால் முடியும் வரை காத்திராமல், ஆரோக்யமான விவாதங்களை முன்னிறுத்தி தொடரலாமே.

---To be continued.

RAGHAVENDRA
30th March 2013, 06:50 PM
DEFINITIONS FOR THE METHODS MENTIONED BY GOPAL

Spolin ,Suzuki ,Anne Bogart method




1) The Spolin Technique

What is it? The acting technique developed by Viola Spolin uses improvisation and some 200 plus theater games and acting exercises to access the actor's creativeness. Through play, the actor can free his instrument and become more spontaneous, as well as work on specific issues like concentration, characterization and conflict.

What can you expect? A lot of improvisation work, from physical improvisation to singing and word games. Most of the games are done in groups so there is a strong sense of ensemble.

Sample Acting Exercise. Two actors face each other. One imitates the other's gestures but both try to conceal from the audience who is initiating the movement and who is following. This mirror exercise is a great way to work on concentration.

2) The Acting Training of Tadashi Suzuki

What is it? This acting technique often taught alongside the Viewpoints method is also very focused on the body, especially the lower body and the feet, the actor's "roots". This acting technique is grounded in ballet, Greek and Japanese theater, and martial arts.

What can you expect? A rigorous training that at times may feel more like a martial arts class then an acting class. The training focuses on developing the actor's center through a series of walking and stomping exercise. You will also work intensely on vocal exercises and concentration through stillness.

Below is a video on the Suzuki acting technique you may find interesting. It talks about how Suzuki acting training challenges the actor and helps him or her with body awareness and focus. It explains how it helps actors reach their souls through the body.



From: http://www.acting-school-stop.com/acting-training.html

RAGHAVENDRA
30th March 2013, 06:55 PM
Gopal Sir,
Why not reproduce the original English definition alongside your explanation in Tamil of the same?

RAGHAVENDRA
30th March 2013, 06:58 PM
Viola Spolin is the internationally recognized originator of Theater Games – the basis of improvisational theater. Along with her son, Paul Sills, Viola Spolin created the techniques utilized by the cast of Chicago’s Second City as well as every other improvisational comedy troupe ever since.

- from http://www.spolin.us/

http://www.spolin.us/wp-content/uploads/2012/09/viola-smile-300x200.jpg

RAGHAVENDRA
30th March 2013, 07:01 PM
Tadashi Suzuki


Tadashi Suzuki is the founder and director of the Suzuki Company of Toga (SCOT) based in Toga Village, located in the mountains of Toyama prefecture. He is the organizer of Japan’s first international theatre festival (Toga Festival), and the creator of the Suzuki Method of Actor Training. Suzuki also plays an important role with several other organizations: as General Artistic Director of Shizuoka Performing Arts Center (1995~2007), as a member of the International Theatre Olympics Committee, as founding member of the BeSeTo Festival (jointly organized by leading theatre professionals from Japan, China and Korea) and as Chairman of the Board of Directors for the Japan Performing Arts Foundation, a nation-wide network of theatre professionals in Japan.
 Suzuki’s works include “On the Dramatic Passions”, “The Trojan Women”, “Dionysus”, “King Lear”, “Cyrano de Bergerac”, “Madame de Sade” and many others. Besides productions with his own company, he has directed several international collaborations, such as “The Tale of Lear”, co-produced and presented by four leading regional theatres in the US; “King Lear”, presented with the Moscow Art Theatre; “Oedipus Rex”, co-produced by Cultural Olympiad and Düsseldorf Schauspiel Haus; and “Electra”, produced by Ansan Arts Center/Arco Arts Theatre in Korea and the Taganka Theatre in Russia.
 Suzuki has articulated his theories in a number of books. A collection of his writings in English, The Way of Acting is published by Theatre Communications Group (US). He has taught his system of actor training in schools and theatres throughout the world, including The Julliard School in New York and the Moscow Art Theatre. The Cambridge University Press published The Theatre of Suzuki Tadashi as part of their Directors in Perspective series, featuring leading theatre directors of the 20th Century. This series includes works on Meyerlhold, Brecht, Strehler, Peter Brook and Robert Wilson among others.
 Not just one of the world’s foremost theatre directors, Suzuki is also a seminal thinker and practitioner whose work has a powerful influence on theatre everywhere. Suzuki’s primary concerns include: the structure of a theatre group, the creation and use of theatrical space, and the overcoming of cultural and national barriers in the interest of creating work that is truly universal. Suzuki has established in Toga one of the largest international theatre centers in the world. Surrounded by the beautiful wilderness of Toga, the facility includes six theatres, rehearsal rooms, offices, lodgings and restaurants, etc.
 Suzuki’s activities, both as a director creating multilingual and multicultural productions, and as a festival producer bringing people from throughout the world together in the context of shared theatrical endeavor, reflect an aggressive approach to dealing with the fundamental issues of our times.

http://www.scot-suzukicompany.com/common/img/english/pic/SuzukiTadashi.jpg

from the page: http://www.scot-suzukicompany.com/en/profile.php

Gopal.s
30th March 2013, 07:03 PM
Gopal Sir,
Why not reproduce the original English definition alongside your explanation in Tamil of the same?
Thank you Ragavendar Sir. But I felt this school is a meaningless to mention for a Boys' Company seasoned artist. He received far superior Training during his childhood . Other schools are more important . I ponder more on relevance to NT in coming postings.

RAGHAVENDRA
30th March 2013, 07:08 PM
The Meisner Technique.

http://www.baronbrown.com/images/meisner.jpg



Sanford Meisner is one of the most important and influential acting teachers of the Twentieth Century. He defined acting as doing things truthfully under imaginary circumstances. By 1930, the most respected and influential theater company in American history formed called The Group Theater assembling such luminaries as Harold Clurman, Lee Strasberg, Stella Adler, Clifford Odets, Morris Carnovsky and Sanford Meisner. They were pioneers of what would become an “American acting technique” derived from the teachings of Russian actor and director Constantin Stanislavski. The "Stanislavski System" inspired audiences with performances of raw power, realism, and emotional truth.

While Strasberg focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

Sandy Meisner taught at the legendary Neighborhood Playhouse in New York City for more than 50 years. His students include Paul Newman, Robert Duvall, Warren Beatty, Diane Keaton, Joanne Woodward, Eli Wallach, Anne Jackson, and Steve McQueen. Joanne Baron studied under Sandy Meisner in his private class, having originally trained with renowned acting teacher, William Esper, the head teacher of Sanford Meisner's Neighborhood Playhouse in New York City for over 14 years. William Esper eventually formed the William Esper Studio in New York City where Ms. Baron trained with him to act and subsequently become an instructor. After several years teaching with Mr. Esper, she opened The Joanne Baron Studio in New York and sometime after, Ms. Baron created The Joanne Baron/D.W. Brown Studio in Santa Monica, California with her husband; writer, director, and actor, D.W. Brown.

Today, the Joanne Baron/D.W. Brown Studio continues this legacy and is teaching the same body of work that Meisner and Esper taught: a specific training program designed to create an emotionally alive actor of depth, imagination, and truth.


from the page: http://www.baronbrown.com/meisnermethod.shtml

RAGHAVENDRA
30th March 2013, 07:14 PM
Dear Gopal,
I accept what you say. But give it here so that people can know how vast training NT has got compared to this. For the purpose of comparison it will be necessary.

In my humble opinion, the following can be helpful :

1. Define the School.
2. Introduce the originator along with the image.
3. Give a brief write up on the application of the method (This you have already started)
4. For each school, take an example from each or any trained actor and present it here, if possible with visuals (wherever possible I shall try to provide the visuals).
5. Then interpret this method to our culture.
6. Prove it with NT.

Thus in each example, NT will stand high and tall among all others.

இந்த முறையில் தாங்கள் தங்களுடைய ஆய்வினை வகுத்துக் கொண்டால், அண்ணாந்து பார்த்தாலும் கழுத்து வலிக்கும் உயரத்தில் நடிகர் திலகம் இருப்பதை எல்லோராலும் உணரும் வகையில் விளக்குவது எளிதாக இருக்கும்.

In your 7th Part, include Professor Krishnan of Andavan Kattalai

Gopal.s
30th March 2013, 07:20 PM
Thanks Ragavendar Sir for your great support. But my purpose is not to dwell too much into Acting Techniques. I want to give salient features and go to relevance with NT. It is just an introduction to make viewers familiar and without knowledge,how we compared the actors of different schools with NT, and NT is the only one who mastered all the schools. This methodology and seed idea is more relevant than elaborating the techniques.The interested one can google search on their own interest.

Gopal.s
30th March 2013, 07:22 PM
Ragavendar Sir,
Prof.krishnan is more of Oscar Wilde category and not relevant to Chekhov technique.

RAGHAVENDRA
30th March 2013, 07:23 PM
A reproduction from the Lee Strasberg Theatre and Film Institute page : http://www.methodactingstrasberg.com/methodacting

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/a/a3/Lee_Strasberg_LAT_1978.jpg/237px-Lee_Strasberg_LAT_1978.jpg




What is Method Acting

If one listens to either its critics or supporters Method Acting is described as a form of acting where the actor mystically ‘becomes’ the character or tries to somehow literally live the character in life. Like all clichés, both explanations are false. When Lee Strasberg defined what is popularly known as Method Acting he used a simple declarative sentence: “Method acting is what all actors have always done whenever they acted well.”

Now to the casual observer, that may sound as though he were implying that only actors who studied and used Strasberg’s particular method of work were good actors; but such an interpretation is contrary to Strasberg’s intent. He meant that what is called “Method Acting” is nothing new, but rather as old as Western Civilization itself. In fact, the Greeks were the first to identify and practice this kind of acting (despite it being credited to Constantin Stanislavsky).

For centuries, cultures used different words and phrases to describe this kind of “good” acting: Romantic Acting, Emotional Acting, Divine Inspiration, The Muses, Feeling the Role. These terms merely described an organic process of creativity that talented actors used, often times unconsciously, to accomplish what audiences experienced as a moving performance; And this ‘moving’ was in fact the (re)experiencing of life by the actor within the fiction of the story as if it were true and happening now.Aristotle said that the secret to moving the passions in others is to be moved oneself, and that moving oneself is made possible by bringing to the fore “visions” of experiences from life that are no longer present. In essence, Aristotle was stating the core principle of The Method—the creative play of the affective memory in the actor’s imagination as the foundation for (re)experiencing on stage.

This idea was first called the ‘System’ by Konstantin Stanislavsky, and later, as further developed by Lee Strasberg (at the Group Theatre, the Actors Studio and then at the Institute), ‘The Method’. The Method trains actors to use their imagination, senses and emotions to conceive of characters with unique and original behavior, creating performances grounded in the human truth of the moment.

As the only school in the world that teaches Lee Strasberg’s work in its consummate form, The Lee Strasberg Theatre and Film Institute is the home for all actors seeking to delve into Method Acting and its tradition of training some of the worlds most brilliant and truthful actors.

RAGHAVENDRA
30th March 2013, 07:25 PM
Ragavendar Sir,
Prof.krishnan is more of Oscar Wilde category and not relevant to Chekhov technique.

May be the character, but the performance in that particular scene where he is in a toiling between two poles of emotions suits this Chekhov technique. In fact, in a particular character, NT's performance may fall under different methods. This is what I want to insist. His does not belong to any particular method or school. For each and every character, we may interpret different schools in different situations in a particular film. I am working on this angle to prove his versatility.

RAGHAVENDRA
30th March 2013, 07:33 PM
thanks ragavendar sir for your great support. But my purpose is not to dwell too much into acting techniques. I want to give salient features and go to relevance with nt. It is just an introduction to make viewers familiar and without knowledge,how we compared the actors of different schools with nt, and nt is the only one who mastered all the schools. This methodology and seed idea is more relevant than elaborating the techniques.the interested one can google search on their own interest.

அப்படியில்லை சார். நாம் செய்வதை முழுமையாக செய்ய வேண்டும். இந்த இடத்தில் spoon feeding becomes necessity. ஒவ்வொரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் பல்வேறு வகையான பள்ளிகளின் இலக்கணங்கள் அவருடைய நடிப்பில் பொதிந்துள்ளன. இந்தக் கோணத்தில் தான் நான் அவருடைய நடிப்பினைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலயில் அதனுடைய மனப் போக்கினுக்கேற்ப அவருடைய நடிப்பில் ஆழமான நுட்பமான விஷயங்களை நம்மால் அறிய முடியும். வேறு வகையில் சொன்னால் தாங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளிகளின் பாணிகளை ஒரே பாத்திரத்தில் அவர் பல்வேறு சமயங்களில் கதாபாத்திரத்தின் சூழ்நிலைக் கேற்ப தந்திருக்கிறார். தங்களுடைய தொடர் முடிந்த பிறகு அந்தக் கோணத்தில் நான் அதனை எழுத முயல்கிறேன். அதற்கு அவசியம் இருக்காது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் தங்களுடைய ஆய்வில் அந்தக் கோணமும் அடங்கி விடும் எந நம்புகிறேன்.

முடிந்த வரை எவ்வளவு விரிவாக நாம் கூற முடியுமோ அதற்கு முயல்வது தான் நாம் கூற வந்ததை சரியாக சொல்வதற்கு பயன் தரும் வழியாக இருக்கும். இதற்காக தயங்க வேண்டாம். தங்களுக்கு என்னுடைய சிற்றறிவின் மூலம் எந்த அளவிற்கு உதவ முடியுமோ அதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

Gopal.s
30th March 2013, 07:33 PM
Most Welcome Ragavendar Sir. The seasoned Fan like you can contribute a lot as I indicated only tip of the iceberg.

Gopal.s
30th March 2013, 07:55 PM
அப்படியில்லை சார். நாம் செய்வதை முழுமையாக செய்ய வேண்டும். இந்த இடத்தில் spoon feeding becomes necessity. ஒவ்வொரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் பல்வேறு வகையான பள்ளிகளின் இலக்கணங்கள் அவருடைய நடிப்பில் பொதிந்துள்ளன. இந்தக் கோணத்தில் தான் நான் அவருடைய நடிப்பினைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலயில் அதனுடைய மனப் போக்கினுக்கேற்ப அவருடைய நடிப்பில் ஆழமான நுட்பமான விஷயங்களை நம்மால் அறிய முடியும். வேறு வகையில் சொன்னால் தாங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளிகளின் பாணிகளை ஒரே பாத்திரத்தில் அவர் பல்வேறு சமயங்களில் கதாபாத்திரத்தின் சூழ்நிலைக் கேற்ப தந்திருக்கிறார். தங்களுடைய தொடர் முடிந்த பிறகு அந்தக் கோணத்தில் நான் அதனை எழுத முயல்கிறேன். அதற்கு அவசியம் இருக்காது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் தங்களுடைய ஆய்வில் அந்தக் கோணமும் அடங்கி விடும் எந நம்புகிறேன்.

முடிந்த வரை எவ்வளவு விரிவாக நாம் கூற முடியுமோ அதற்கு முயல்வது தான் நாம் கூற வந்ததை சரியாக சொல்வதற்கு பயன் தரும் வழியாக இருக்கும். இதற்காக தயங்க வேண்டாம். தங்களுக்கு என்னுடைய சிற்றறிவின் மூலம் எந்த அளவிற்கு உதவ முடியுமோ அதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.

அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.

பாகம்-2 இல் ஏற்கெனெவே இதை குறிப்பிட்டு விட்டேன். சில பள்ளிகள் mutually exclusive .ரொம்ப அவியலாக முடியாது.

RAGHAVENDRA
30th March 2013, 08:15 PM
இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.

அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.

பாகம்-2 இல் ஏற்கெனெவே இதை குறிப்பிட்டு விட்டேன். சில பள்ளிகள் mutually exclusive .ரொம்ப அவியலாக முடியாது.

தங்களைத் திருத்தும் அளவிற்கெல்லாம் என்னைச் சொல்லாதீர்கள். அந்த அளவிற்கு என்னை உயர்த்தவும் வேண்டாம். தங்களுடைய சேது பாலத்திற்கு நான் ஒரு அணில் அவ்வளவே.

RAGHAVENDRA
30th March 2013, 08:18 PM
Oscar Wilde School
இந்த பள்ளியை சார்ந்த நடிகர்கள்-Laurence Olivier ,Spencer Tracy ,David garrick ,Richard Burbage ,Edmund Kean ,Olivier Martinez ஆகியோர்.

Lawrence Olivier: http://www.smh.com.au/ffximage/2007/07/16/jt_olivier_narrowweb__300x365,0.jpg
Spencer Tracy: http://www.nndb.com/people/979/000024907/spencer-tracy-sized.jpg
David Garrick: http://www.hoasm.org/VIIJ/garrick.jpg
Richard Burbage : http://www.dansimmons.com/images/2011_March/Richard-Burbage1.gif
Edmund Kean: http://madamepickwickartblog.com/wp-content/uploads/2010/10/kean6.jpg

RAGHAVENDRA
30th March 2013, 08:27 PM
லாரன்ஸ் ஒலிவியர் போன்ற சிறந்த நடிகர்கள் கூட ஒரே படத்தில் ஒரே பாத்திரத்தில் வெவ்வேறு பள்ளி வகையிலான நடிப்பைத் தந்துள்ளனர். ஒலிவியரின் ஹென்றி 5 இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

நடைமுறையில் கற்பிக்கப் படும் பல்வேறு நடிப்புப் பயிற்சிகள் ஒரு புறம் இருக்க ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவிற்கென்று தனி நடிப்புப் பயிற்சி உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் படமாக்கும் பொழுது அதில் நடிக்கும் நடிகர்களில் பெரும்பாலானோர் அந்தப் பயிற்சியை மட்டுமே பின்பற்றுவர். ஆனால் சர் லாரன்ஸ் ஒலிவியர் அவர்கள் சுயமாக மற்ற பள்ளிகளின் இலக்கணங்களைப் புகுத்தி விடுவார்.

இந்த ஷேக்ஸ்பியர் நாடக் குழுவினர் ஒரு சரித்திர நாடகத்தில் பின்பற்றும் ஒரு நடைப் பயிற்சியை நடிகர் திலகம் ஒரு சமூகப் படத்தில் ஒரு இக்கட்டான சூழலில் பயன் படுத்தியிருப்பார்.

அது தான் தங்கப் பதக்கம் திரைப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரி ஒரு bad news என்று கூறி சௌத்ரியின் மனைவி இறந்த தகவலைச் சொல்லும் கட்டம். அதில் நடிகர் திலகம் நடக்கும் போது கால் தடுக்கும், சுதாரித்து நடப்பது. இதனை ஒரு முறை நான் சந்தித்த லண்டன் ஷேக்ஸ்பியர் நாடகக் குழு உறுப்பினர் - இந்தியாவிலிருந்து சென்று அங்கே பயிற்சி பெற்றவர் - கூறியதாகும். லண்டன் ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவில் ஒரு பயிற்றுனர் இந்த நடையை ஒரு மன்னரின் கதையில் ராணுவ வீரருக்கு [KINIGHT] நேருமாறு சொல்லியிருப்பார். இதனைப் பார்த்து விட்டு சென்னை வந்த அந்த உறுப்பினர் தங்கப் பதக்கம் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பிரமித்து நின்று விட்டாராம். அவரே என்னிடம் கூறிய தகவல் இது. எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த நாடகத்தில் எந்த சூழலில் இடம் பெற்ற ஒரு நடிப்புக் கலையை இவர் இங்கே எப்படி சரியான முறையில் சரியான சூழலில் கொண்டு வந்தார் என்பதை மிகவும் வியப்பாக உணர்ந்தாராம்.

RAGHAVENDRA
30th March 2013, 09:50 PM
Mikhail Aleksandrovich "Michael" Chekhov
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Michael_Chekhov_1910%D1%85.jpg/220px-Michael_Chekhov_1910%D1%85.jpg


Chekhov's description of his acting technique, On the Technique of Acting, was written in 1912. When reissued in 1991 it had additional material by Chekhov estate executor Mala Powers; an abridged version appeared under the title, To the Actor, which was published in 1953, with a preface by Yul Brynner, and reissued in 2002 with an additional foreword by Simon Callow and additional Russian material translated and commented on by Andrei Malaev-Babel. The English translation of his autobiography The Path of the Actor was edited by Andrei Kirillov and Bella Merlin, and was published by Routledge in 2005, marking the 50th anniversary of his death. Some of Chekhov's lectures are available on CD under the title On Theatre and the Art of Acting.

From : http://en.wikipedia.org/wiki/Michael_Chekhov

RAGHAVENDRA
30th March 2013, 09:52 PM
Stella Adler School
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/Stella_Adler_in_Shadow_of_The_Thin_Man_trailer.jpg/220px-Stella_Adler_in_Shadow_of_The_Thin_Man_trailer.jpg


Adler's technique, based on a balanced and pragmatic combination of imagination as well as memory, is hugely credited with introducing the subtle and insightful details and a deep physical embodiment of a character.[17] Elaine Stritch once said: "What an extraordinary combination was Stella Adler – a goddess full of magic and mystery, a child full of innocence and vulnerability."[17] In the book Acting: Onstage and Off, Robert Barton wrote: "[Adler] established the value of the actor putting himself in the place of the character rather than vice versa ... More than anyone else, Stella Adler brought into public awareness all the close careful attention to text and analysis Stanislavski endorsed."[17]
In 2004, The University of Texas at Austin's Harry Ransom Humanities Research Center acquired Adler's complete archive. It includes correspondence, manuscripts, typescripts, video and audiotapes, photographs and other materials. The archive traces her career from her start in the New York Yiddish Theater District to her encounters with Stanislavski and the Group Theatre to her lectures at the Stella Adler Studio of Acting.[18]
In 2006, she was honored with a posthumous star on the Hollywood Walk of Fame in front of the 'Stella Adler Theatre' at 6773 Hollywood Boulevard.[19]

From : http://en.wikipedia.org/wiki/Stella_Adler#Stella_Adler_Schools

RAGHAVENDRA
30th March 2013, 09:54 PM
Anne Bogart

http://www.columbia.edu/cu/pr/00/10/images/anneBogart.jpg



Viewpoints and Suzuki
After working together with Mary Overlie at NYU in 1979, Bogart developed a version of an improvisational, ensemble-building technique called Viewpoints, based on Overlie's Six View Points of dance. Coupled with Suzuki, the intense physical acting training developed by Tadashi Suzuki and his Company, SCOT, SITI Company’s training methods have become widespread tools of theatre instruction with classes of various levels taught in Universities and colleges across the United States and in seasonal intensives led by SITI Company members in New York City, Saratoga Springs, NY and in cities around the world.


from: http://en.wikipedia.org/wiki/Anne_Bogart

IliFiSRurdy
31st March 2013, 09:23 PM
அன்புள்ள கோபால்,

நான் பலமுறை விமானத்தில் பயணித்துள்ளேன்.இருக்கையில் அமர்வேன்.விமானம் ஓடு பாதையில் ஓடத்துவங்கும்.திடீரென பறக்கும்.வானில் மிதக்கும்.இவைகளை ஒரு யதார்த்த நிகழ்வாகவே பார்த்து வந்த எனக்கு, இத்தனை எடையுள்ள விமானம் ஆகர்ஷண சக்தியை எதிர்த்து பறப்பது எப்படி என்ற கேள்விக்கு பல நாள் விடை தெரியாமலேயே இருந்தது.

அதேபோல,

நடிகர் திலகம் நடித்த பல படங்களைப்பர்த்து மகிழந்திருந்தாலும்,அவர் நடிப்பை பல கோணகளில் ஒப்பிட்டு அதன் சிறப்பு என்ன என்பது என புரிந்து கொள்வது எனக்கு தெரியாமலேயே இருந்தது.ஆனால் thanks to you, எனக்கு இப்பொழுது அவைகளுக்கான பதில் ஓரளவு தெரிகிறது.

நீங்கள் மிகச்சிறப்பாக எழுதியுள்ள இந்த தொடர் ஒரு ரசிகனால் மட்டுமே செய்ய முடியும்.அதாவது நடிகர் திலகமே நினைத்தால் கூட நான் இம்முறையில் நடித்துள்ளேன் என்று விளக்கி சொல்ல அவரால் கூட முடியாது.ஏனெனில் அவர் பிறவி நடிகர்.

உங்களின் இந்த அரியபணிக்கு சிவாஜி ரசிகர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
இக்கட்டுரைகளை அடிநாதமாக கொண்டு மேற்கொண்டு அந்த மேதையின் நடிப்பை ஆராய நினைப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

உலக நடிகர்கள் அனைவரும் செய்யாத ஒரு சாதனை தலைவரின் 300 க்கும் மேற்பட்ட படங்களே.அவ்வாறு நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது இன்னொரு நல்ல நடிகனுக்கே தெரியும்.

மேலும் நீங்கள் எழுதியுள்ளது மிகவும் கடுமையான ஒரு subject ஆகும்.அதை ஓரளவுதான் எளிமைப்படுத்தவும் முடியும்.தோசை செய்வது எப்படி என ஒரு நண்பர் கேட்டால் 4 பங்கு அரிசி என ஆரம்பித்து சொல்லி விடலாம்.ஆனால் அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்ற கேள்விக்கு முதலில் தேவையான அளவிற்கு யுரேனிய அணுவை எடுத்துக்கொள்ளவும் எனஆரம்பிக்க முடியாது.அந்த வகையில், புரிவதற்கு சற்று கடினமாக இருந்தபோதிலும் புரியவைக்க நீங்கள் எடுத்துள்ள சீரிய முயற்சி போற்றத்தக்கது.

இந்த வகையில் நண்பர் ராகவேந்தருக்கும் ஒரு வேண்டுகோள்.நீங்கள் கோபால் எழுதியவற்றிக்கு rejoinder கொடுப்பதற்கு பதில் இந்த ஆறு வகை different school of acting ஐ இருவரும் பிரித்துக்கொண்டு தனித்தனியே எழுதினால்.நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் விளக்கங்களும் மிக நன்றாகவே உள்ளன.

மிக்க நன்றி.

ScottAlise
31st March 2013, 09:53 PM
DHARMAM ENGEY

1972 was a rollicking year for NT as all his movies barring Dharmam Engey hit the bull’s eye at box office. Dharman Engey was also good but till first half of the movie.
Dharmam engey was prestigious production as it was produced by Nt’s elder brother Periyanna and directed by NT’s favourite ACT. Infact the same ACT, Periyanna & NT together joined and gave us a cult classic in the form of DeivaMagan 3 years back in 1969. Therefore the expectations were huge as movie carried very good pre publicity my father was one among those who went for the movie the very first day .
TO begin with the movie starts with credits rolling with magnificent paintings of lead actors displayed coupled with some nice BGM of MSV.
The song about freedom is sung pretty well and NT is introduced as a flower vendor . NT happens to witness the murder of Govt. official being killed by Muthuraman while he tried to misbehave with NT’s sister .What follows is when people try to revolt against the ruler Nambiyar , NT happens to lead them in the process of which he is injured and lands in a gypsy team. JJ, a gypsy saves him and teaches him shooting. NT then plunges into action which results in victory for him and he thereby becomes the king
But there begins the problem his brother in Law Muthuraman feels dejected as NT does not give him importance & thereby joins with Diwan , previous ruler MN Nambiyar , how come NT overcomes all these form the climax .
The movie itself is produced on a large scale be it in terms of sets, costumes. NT costumes initially comprises of Dress made out of gunny bag & ¾ th pant which is a fashion now. The initial scene where he runs is too good the cameraman Thambu deserves an applause, it is hard to guess whether NT runs fast or camera runs fast or it is a camera trick. NT does not speak for first few minutes but the moment he utters his name in his trademark style (My father said the theatre was torn with huge applause) Sekar----------------turns around& says Raja Sekar,
His constant laughter when his mother enquires about the happenings also deserves mention
The movie gains pace with a fight with Azad Bailvan just like in Raja the fight scene is beautifully
Choreographed. NT eventually wins and his frequent appealing to villagers for want of water and shelter will surely bring tears in the eyes of audiences.
NT character acquires new dimension when JJ saves him. His dress too is transformed into full fledged plain colours of full hand shirts, pants and thick shoes indirectly indicating that he is preparing for a fight against the ruler of the country.
His costume further undergoes a change when he himself becomes the ruler , designer shirts, pants, rain shoes. NT acting of stretching his hands upwards pointing towards the screen in happiness after gaining independence is sheer brilliance.
NT expression in demarcating the kingdom , nominating kings under him & citing the reasons for that is also awesome, the twist comes when NT himself falls prey when a citizen pinpoints his mistake where NT unknowingly chides him out before realizing the truth deserves mention.
MN Nambiyar as usual spills vengeance as usual , his eyes conveys the required villan look.
Muthuraman as sidekick to NT & as a person who suffers from inferiority complex, insecurity portrayed his part well. Others were strictly ok.
Now many may wonder why the movie did not perform well. The reason which I guess is, the movie is over in the interval block itself once MN Nambiyar is outsed from the throne. The movie drags after that. It can be easily guessed that villan has to resurface towards the end to complete the movie Also the climax involving NT & his sister escaping from villan’s shooting though cinematic liberties can be excused is a bit too much to digest that too in a NT movie .
For me it is just like Sivantha Mann be it in terms of plot, richness , I found it both movies some resemblances though Sivanthaman is way ahead.
All said above this movie can be watched for its grandeur, NT sheer brilliance

ScottAlise
31st March 2013, 09:54 PM
Thiruvarutchelvar

Though 1967 began with a hit for NT in the form of Kandan Karunai , which released on Pongal, movies released after that in the year could not reach 100 days though the content was good but NT got back to his winning ways again with same APN combo in the form of Thiruvarutchelvar which set the momentum going followed by Irumalargal, Ooty varai Uravu which continuously celebrated 100 days
As like previous APN movies Thiruvarutchelvar is also a Tamil devotional movie based on 63 Nayanmars . The movie starts with a voice over of APN who describes about the movie and a slew of doors are opened we are introduced to a king, whose feet is first shown and then the camera pans on his face giving a tight close up. Man what an expression.
The camera then moves to a corner of the big hall where a Natraja idol is kept beneath that is Padmini starts performing bharatanatyam . After witnessing a wonderful bharatanatyam dance by a “Queen of the arts” played by Padmini (see above), the king becomes “mad” with desire to the point where he makes very inappropriate advances on her. The dancer shoots him down rather soundly and brilliantly, and the king, feeling remorse for being turned into “an animal” by his desire for her, asks his court poet to teach him more about how to renounce such sinful ways and serve God. But the king, still somewhat arrogant, also insists that the poet provide him answers to three questions regarding God: Where can one find God, in what direction is he facing, and what is he doing now? The poet is stunned, unable to think of convincing answers, but his pre-teen granddaughter manages to go in his place and teach the king a few lessons to show him facts that he had failed to understand.
After getting convincing answers from the poet’s grand daughter the king then reads periya puranam and then we are introduced to another Sivaji, who is the minister of a king in Chola Dynasty. Here, the transformation of NT from the king in previous episode to the minister in current episode is simply astounding. The king is bit fat but here the minister is somewhat lean. All these he is not clothed in upper part , could not find out the trick still.
Back to the story , we are now seeing Siru Kurippu Thondar, here NT is a poor Washerman , who first washes the clothes of Saints who adore Lord Siva and then procceds to do his regular work. Lord Siva decides to play a prank on him and appears before him and in the end blesses him with money, prosperity, popularity
Again NT does justification through his body language, his colour is some what tanned, fingers lengthy, his body is medium built.
The next story is about Sundarar , whose marriage is stopped by Lord himself claiming Sundarar to be his slave as his grandfather has put it in written that their generation is a slave to that old man. Here NT is too lean like a teenage boy
The next story is about Thiruganasamndar and Appar and how come Devotion without expectation create miracles in the lives of devotees is showcased through Muthuraman & Savitri
Nothing much to say abouth the get up of NT . In a single word its outstanding as a 80 year old person ( Thanks to Pammalar sir for producing an article about NT switchover)

NT switches over varied roles effortlessly. Kudos to thespian. His walk is also distinguished be it arrogant king, poor washerman, a prince who need not walk too much and finally 80 year old octogenarian. Padmini is limited to a dance but does her part quite well. Surprisingly Gemini plays the role of Lord Siva convincingly in all stories but finally Appar reaches heaven we find a different person playing the role Lord Siva. Others in star cast Muthuraman & Savitri form a new pair as a devotee of Appar .

The songs be it Nagar Mudimel irukum Nalapambey & Manavan Vanthanadi does not age and even now it is being heard all over Tamilnadu such is the power of Mama KVM.

Nagesh and Manorama comedy of calling he as she and she as he is just ok and is nowhere near Thiruvilayadal comedy
Leaving aside all the negative points the movie was well received the movie was re released few years back in Shanti theatre and deserves a re release again in a massive scale

RAGHAVENDRA
31st March 2013, 10:47 PM
இந்த வகையில் நண்பர் ராகவேந்தருக்கும் ஒரு வேண்டுகோள்.நீங்கள் கோபால் எழுதியவற்றிக்கு rejoinder கொடுப்பதற்கு பதில் இந்த ஆறு வகை different school of acting ஐ இருவரும் பிரித்துக்கொண்டு தனித்தனியே எழுதினால்.நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் விளக்கங்களும் மிக நன்றாகவே உள்ளன.
மிக்க நன்றி.

டியர் கண்பத்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி. THIS IS NOT A REJOINDER. ஆனால் அவருடைய ஆய்வுக்கு உதவக் கூடிய ஒரு footnote or quotation மாதிரி என எடுத்துக் கொள்ளலாம். முழுவதும் அவர் எழுதுவதே சரி. அப்போது தான் அவரால் நினைத்ததை சொல்ல முடியும். அப்படி சொல்லக் கூடிய விஷயங்களுக்கு அவ்வப்போது உதாரணங்கள், அல்லது மேற்கோள்கள், அல்லது துணைக் கருத்துக்கள், போன்றவற்றை முடிந்த அளவிற்கு தர முயல்கிறேன்.

ஏனென்றால் அவருடைய 7 பகுதிகளில் குறிப்பிடப் படாத மற்ற பள்ளிகளும் அவ்வப்போது அவர் அங்கங்கே குறிப்பிட்டு வரக் கூடும். நாம் இடையிடையே கருத்துக்களைத் திணித்தால் அதனுடைய flow பாதிக்கும். அது மட்டுமல்ல நான் எப்படி அவருடைய ஆய்வு இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேனோ அந்த அடிப்படையில் தான் துவக்கம் அமைந்துள்ளது.

என்னடைய எதிர்பார்ப்பு அல்லது விருப்பம் ... 300 படங்களிலும் இந்தப் பள்ளிகளின் தாக்கத்தை நாம் அலச வேண்டும். அதுவே அந்தக் கலைஞனுக்கு நாம் செய்யக் கூடிய சிறந்த அர்ப்பணிப்பு. அதை கோபால் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி அவர் குறிப்பிடாமல் விட்டாலோ அல்லது அவருடைய விளக்கத்திற்கொப்ப உள்ள காட்சிகள் உள்ள படம் அவர் பார்க்கவில்லை என்றாலோ அப்போது அதனை எடுத்துக் காட்டுவதை நான் செய்ய முயல்கிறேன்.

RAGHAVENDRA
31st March 2013, 11:28 PM
இந்த இடத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய இன்னொரு புத்தகத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். திரு நந்தி வர்மன் ஜீவன் என்பவர் நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலேயே 1997ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஒரு புத்தகம் சிவாஜியின் நடிப்பிலக்கணம் என்ற நூலாகும். இதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி அவர் நம்முடைய தொல்காப்பியத்திலிருந்தும் பல்வேறு தமிழிலக்கிய நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் கொண்டும் மற்றும் ஸ்டானிஸ்லாவ்கி பள்ளியிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் கொண்டும் நடிகர் திலகத்தின் நடிப்பை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயந்த்து மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். அது மிகவும் விரிவாக இருப்பதாக சொல்ல முடியா விட்டாலும் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புவோர்க்கு நல்ல துவக்க நூலாக அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தைப் பற்றிய விவரங்கள் வருமாறு

http://www.nadigarthilagam.com/images5/jeevanbookcover1.jpg

சிவாஜியின் நடிப்பிலக்கணம் - கவிஞர் நந்திவர்மன் ஜீவன். வெளியீடு நர்மதா பதிப்பகம், சென்னை - 17. முதற் பதிப்பு ஆண்டு 1997.

Sivajiyin Nadippilakkanam (in Tamiz) - The intricacies of Sivaji's Acting - An exposition in lucid Tamil. Author: Kavignar Nandhivarman Jeevan, M.A. B.L. Pub. 1997. Second Edn. 2006. Pub. T.S. Ramalingam, Narmatha Pathippagam, Chennai - 600 017. Email: narmadhamail@yahoo.co.in. Website: www.newbooklands.com

நடிகர் திலகத்தைப் பற்றி வெளிவந்துள்ள மற்ற நூல்களைப் பற்றிய விவரங்கள் அறிய

http://www.nadigarthilagam.com/booksonnt.htm

இவற்றிலிருந்து பயணிக்கத் தொடங்கி பல எட்டாத உயரங்களுக்கு நம்முடைய கோபாலின் ஆய்வு செல்ல வேண்டும், செல்லும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்தப் புத்தகங்களில் , குறிப்பாக சிவாஜியின் நடிப்பிலக்கணம் நூல் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அவசியம் படிக்க வேண்டிய, கையில் வைத்திருக்க வேண்டிய நூலாகும்.

இந்நூலில் நடிப்புப் பள்ளிகளைப் பற்றிய பல்வேறு நுணுக்கங்கள் எடுத்துக் கொள்ளப் படவில்லை. காரணம் எளிமையை வேண்டி தவிர்த்திருக்கலாம். அப்படி எடுத்துக் கொண்டு ஆராய வேண்டிய பல விஷயங்களுக்கு இனி வரும் கோபாலின் பதிவுகள் ஒரு முன் மாதிரியாகவும் இருக்கும் முழுமையான வழிகாட்டியாகவும் இருக்கும், சொல்லப் போனால் ஒரு destination ஆகவும் இருக்கும்.

P_R
1st April 2013, 11:41 AM
நன்று, கோபால். இப்பொ தான் முதல் பாகத்துல இருக்கேன்.
சதிலீலாவதி சக்திவேல் கவுண்டர் சொல்றமாதிரி: 'நீங்க போறபடி போங்க...நான் கடைசீல வந்து சேர்ந்துக்குறேன்' :-)

P_R
1st April 2013, 01:10 PM
Just reached the 3rd post.

Mr.Raghavendra, I think what Gopal means is the concept of 'comparative statics'. (hence he invoked that as something students of economics would know - and I plead guilty :-) )

The idea is not to dismiss the circumstances and other considerations of the particular Sivaji's performances. But simply hold them static and analyze the performances. The thrust here is to highlight how (in Gopal's opinion, which we shall wait to read and be convinced or nonplussed about) Sivaji exuded various styles of acting. And for this, the other circumstances are being kept in the backburner for the purpose of this series. That is all.

I feel your anxiety may be misplaced.

Much as you acknowledge the importance of the extraneous circumstances surrounding the film, you will not say they are 'essential' to appreciate a film - right? Sometimes I chance upon a scene in a movie when swapping channels on tv - I don't know the movie but I am able to appreciate the performance. I would not deny I'd be able to appreciate better if I knew more. No questions. But it is not as if it is necessary to appreciate anything at all.

That, if I am not wrong, that is what Gopal is saying. Taking say 'a scene performance' in some foreign film and comparing to a 'Sivaji performs' - necessitates us to shear off the contexts to be able to make a comparison. This is not to say the contexts are unimportant. Not at all.

P_R
1st April 2013, 01:15 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-3


Excellent post.
Exactly the kind of elucidation I was seeking last time. Thank You.


குறைகள்- முன் முடிவு செய்ய பட்டு நடிப்பு execute செய்ய படும் இந்த வகை நடிப்பில் ,சோர்வும்,staleness உம் தெரிய வாய்ப்புள்ளது.Energy level குறைவாக தேவை படும்,evenly paced (poised ?) பாத்திரங்களுக்கே இவ்வகை நடிப்பு உதவும்.இந்த வகை நடிப்பில் நடிகர் கூடு விட்டு கூடு மாறும் அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை.பல பாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், நடிகரின் உண்மையான உள்ளணர்வு,தேக்க உணர்ச்சிகள் சார்ந்தே இயங்குவதால், எந்த மாதிரி வித விதமான subject கொண்ட படங்களில் நடித்தாலும் ,அந்த பாத்திரங்களுக்கு அவரவர்கள் இயல்பு கொண்டே பொருத்தி கொள்ள முடியும்."Sense Memory"அடிப்படையில் பாத்திரத்தை அணுகும் போது வெவ் வேறு காலகட்டங்களுக்கு (ஆதி காலம்,இடைக்காலம்,வேறு பட்ட கலாசார சூழ்நிலைகள் )அந்த பாத்திரங்களின் period related behaviour &mind -set ஆகியவற்றில் ஒரு contemporary தன்மை வருவது தவிர்க்க முடியாதது. இவர்கள் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் வண்டி போன்றவர்களே.



I have some questions. But you may have answered them in later sections. Will read and then post..hopefully in a couple of days.

P_R
1st April 2013, 01:55 PM
venkiram, your post is quite unnecessarily harsh. Mr.Raghavendra's concern is that we don't ignore the other aspects of Sivaji the star. That is all.

JamesFague
1st April 2013, 02:10 PM
Mr Gopal Sir,

Exellent anaysis of Various NT's acting skills. This will help in
showcasing to the world about our NT.

Thanks a lot for your stupendous work.

Mr Raghavendra Sir,

Thanks a lot for your able support to Mr Gopal Analysis in
bringing various dimesions of NT's acting.

IliFiSRurdy
1st April 2013, 07:44 PM
Dear Raghavender ji,
Thank you for giving details abt the book.
சிவாஜியின் நடிப்பிலக்கணம் - கவிஞர் நந்திவர்மன் ஜீவன். வெளியீடு நர்மதா பதிப்பகம்,

RAGHAVENDRA
1st April 2013, 09:30 PM
NTFANS - Next Programme :

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/INVITESCAN010413FW_zpse7014be1.jpg

As a part of the programme, a conference is to be held as detailed in the invitation and an exhibition as a tribute to legends of Tamil cinema is also arranged.

venkkiram
1st April 2013, 09:34 PM
venkiram, your post is quite unnecessarily harsh. Mr.Raghavendra's concern is that we don't ignore the other aspects of Sivaji the star. That is all. I don't want to go into detail on what words of Mr.Raghavendra made me to write such. Anyway, I accept I could have politely said instead of harsh tone. I am deleting my post. Apologies Mr. Raghavendra's Sir.

RAGHAVENDRA
1st April 2013, 10:04 PM
Dear P_R / Venkiram
It was just a retaliation and nothing intentional. No necessity for any apology or such feel. Take it easy. I don't take any remarks on me personally to heart and that too only in a very rare occasion. I have deleted my post too. My retaliation comes only when there is some adverse or unwanted remarks on such a great legend like NT.

Thank you for the sentiments.

Dwightvak
1st April 2013, 10:33 PM
Vannakkam Everybody...Am not new to hub as i I have been reading this as a visitor like numerous over the net. But am new to providing comment feedback opinion etc. Hi to all

VANAKKAM PALAMURAI SONNAEN...SABAYINAR MUNNAE..
AAduvar aatamum paaduvar patumai anniyar kalithirukka..yaaradhu manilae yaradhu nadagam parkalam endru nan padaiedukka...ennada mudiyum unnal endru en edirigal kokkarikka...idhuvum mudiyum innamum mudiyum endru naan vaaledukka.....

RAGHAVENDRA
1st April 2013, 11:33 PM
Just reached the 3rd post.

Mr.Raghavendra, I think what Gopal means is the concept of 'comparative statics'. (hence he invoked that as something students of economics would know - and I plead guilty :-) )

The idea is not to dismiss the circumstances and other considerations of the particular Sivaji's performances. But simply hold them static and analyze the performances. The thrust here is to highlight how (in Gopal's opinion, which we shall wait to read and be convinced or nonplussed about) Sivaji exuded various styles of acting. And for this, the other circumstances are being kept in the backburner for the purpose of this series. That is all.

I feel your anxiety may be misplaced.

Much as you acknowledge the importance of the extraneous circumstances surrounding the film, you will not say they are 'essential' to appreciate a film - right? Sometimes I chance upon a scene in a movie when swapping channels on tv - I don't know the movie but I am able to appreciate the performance. I would not deny I'd be able to appreciate better if I knew more. No questions. But it is not as if it is necessary to appreciate anything at all.

That, if I am not wrong, that is what Gopal is saying. Taking say 'a scene performance' in some foreign film and comparing to a 'Sivaji performs' - necessitates us to shear off the contexts to be able to make a comparison. This is not to say the contexts are unimportant. Not at all.

Dear Prabhu,
True and I too have the same view point. The insistence I wanted to make was one thing. Except under rarest of rare cases where a single film is capable of fetching awards under different categories, it is very common that the awardees including that of Oscars, are selected for their performance and output, irrespective of the film - whether it is a class or is it not worthy or any such considerations. This yardstick applies to all the categories of a crew of a film and selection based on the output he/she gives.

When this is the case, let us not make a mistake by bluntly ignoring a film for any reason wherein NT would have given some intricate and nuantic performance, which might go unnoticed because of ignorance. I can in the course of discussions and where deemed fit, can bring you examples of such occasions, from the late films of NT.

இறந்தவர்கள் வீட்டில் தாங்கள் கவனித்திருக்கலாம். அந்த துக்கம் எல்லோரிடமும் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. அங்கே சம்பரதாயத்திற்காக வருந்துவர்களும் இருப்பர், தாங்க முடியாத துயரத்துடன் வருந்துவோரும் இருப்பர், அதே சமயம் மிகவும் அந்நியோன்யம் இல்லாமலும் அதே சமயம் சற்றே நெருங்கியவர்களாகவும் இருக்கக் கூடியவர்களும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதில் வேறுபாடுகள் காண முடிவதுண்டு.

இதை நடிகர் திலகம் எத்தனை படங்களில் எத்தனை விதங்களில் தந்திருக்கிறார் என்று தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதைப் பற்றியே ஒரு தனித் திரி துவங்கி நடிகர் திலகத்தின் அழுகைக் காட்சிகள் என எழுதலாம். பலர் நினைக்கக் கூடும் தாங்கள் உள்பட ... பின்னாளில் வந்த படங்களில் அவருடைய அழுகைக் காட்சியைப் பார்க்காமல் எழுந்து சென்று விடுவோரும் உண்டு. ஆனால் அதில் அவர் இணைத்துள்ள பல நுணுக்கமான விஷயங்களை சொல்லும் போது தங்கள் பார்வையே வித்தியாசமாக இருக்கும்.

இதைத் தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். கோபால் சாரின் கட்டுரையில் இந்தக் கட்டத்தைப் பற்றிய விவாதங்கள் வந்தால் அப்போது இந்த அழுகைக் காட்சிகளில் உள்ள நுணுக்கங்களை உதாரணங்களுடன் பார்க்கலாம்.

இந்த அழுகைக் காட்சி ஒரு சேம்பிளே.. ஒவ்வொரு உணர்வுக்கும் இது போல் ஏராளமாக விஷயங்கள் உண்டு.

RAGHAVENDRA
1st April 2013, 11:36 PM
வணக்கம் சௌரிராஜன் ஸ்ரீ அவர்களே,
வருக வருக...

வந்தவர்கள் வாழ்க... மற்றவர்கள் வருக ...

பல்லாக்கு மேடை உண்டு பன்னீரின் வாசம் உண்டு இல்லாத இன்பம் ஒன்று எல்லோர்க்கும் இங்கே உண்டு
இதுதான் உலகம் இதுதான் இதயம் .. நீயும் நானும் வாழும் சொர்க்கமிது...
....

JamesFague
2nd April 2013, 11:02 AM
Warm Welcome Mr Sowrirajan Sri for this wonderful thread of NT.

Gopal.s
2nd April 2013, 01:11 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-9

எழுதுபவன் நானாக இருப்பதால், சிறிதே என் கருத்துக்களை வலுவாக re -instate பண்ணி விட்டு ,பள்ளிகளை சார்ந்த அவரது நடிப்பின் சிறப்பை பிறகு தொடருவேன். இந்த அதிக பிரசங்கி தனத்தை புலவர்கள் தற்குறிப்பேற்றணி என்று வசதியாக இலக்கணம் பாடி வைத்து விட்டு போயுள்ளனர். நண்பர்கள் வேறு எனக்கு வசதியாக வீட்டையே காலிசெய்து விட்டனர்.
நான் சினிமாவையும் ,இலக்கியத்தையும் சுவாசமாக கொண்டு வாழ்வதால்,பொதுவாக எந்த எழுத்தாளர்களையோ,நடிகர்களையோ,இயக்குனர்களையோ முழுவதும் நம்பாதவன். ஒருவர் தவறி இடரும் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் பசித்த புலி.அதுவும் என் demi -gods இடறி விழும் சந்தர்ப்பங்களுக்காக மிக ஆவலாய் காத்திருப்பேன்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு தேர்ந்த நடிகர்களுக்கே பதில் தெரியாது.

1)உனக்கு உன் வாழ்க்கை எதிர்காலம் தெரியாததால் உலக மேடையில் இயல்பாக நடிக்கிறாய்.(கம்பெனி மீட்டிங் தவிர நீ பேசபோகும் அடுத்த வரியும் உனக்கு தெரியாது.)ஆனால் உன்னை பிரதி செய்து நடிக்க வேண்டிய நடிகனுக்கோ, கடந்த காலம் ,நிகழ் காலம்,எதிர் காலம் முற்றும் சுவடி(script ) ரூபத்தில் கிடைக்க பெற்றவன்.சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை. பேசிய வரிகளை விட பேச வேண்டிய வரிகளை நினைப்பவன்.
அதனால், பார்வையாளர்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு, தன்னை தானே ஏமாற்றி கொள்ள முயலும் இடங்கள் உண்டு.(self -deception )அந்த மேதை Stanilavski அதனால்தான் எதிர்காலத்தை நினைக்க விடாமல் கடந்த கால sense -memory இல் நடிகர்களை சிறைப்படுத்தி இருந்தானோ?

2)அடுத்த பிரச்சினை compression mode முறையில் வாழ்க்கை விவரிக்க படும் போது,ரசிகர்களுக்கு impact ஏற்படுத்த வேண்டும். ஆனால் அந்த இயல்பு வாழ்க்கைக்குரிய முக்கியத்துவமே அளிக்க பட வேண்டும்.

3)அடுத்த பிரச்சினை நடை,உடை,பாவனை ஓகே.பிரத்யேக குண இயல்புகள்,குண திரிபுகள் ஓகே. mannerisms ஓகே. Action -reaction ஓகே. ஆனால் பிரத்யேக eccentricities ,idiosyncrasies ,கட்டுபடுத்தவே முடியாத illogical odd behaviours ?consistency in inconsistencies ?

ரொம்ப போகவில்லை.

இப்போது முதல் பிரச்சினை. மனைவி மக்களுக்கு தெரியாமல், இன்னொரு வீடு set -up செய்து,வாழ்ந்து வருபவன்.ஆனால் ஒரு இக்கட்டான சமயம், இன்னொரு வீட்டின் பையன் வந்து விடுகிறான். அப்பா என்றும் சொல்கிறான்.(வர போகும் இரண்டு சம்பந்திகள் கூடியுள்ள சபை).இப்போதுதான் ,method acting படி அந்த படத்தில் நடிக்கும் மேதை நடிகனுக்கு, மூன்று சந்தர்ப்பங்கள்.அதிர்ச்சியை சில நொடிகள் காட்டி ,அந்த பையனிடம் போவது(அ ) அந்த பையனை தனியே அமைதியாக கூட்டி சென்று ,ரசிகர்களுக்கு மட்டும் அதிர்ச்சி முகத்தை காட்டுவது(அ )குழப்ப அதிர்ச்சியுடனே முழு காட்சியிலும் தோன்றுவது.

முதல் option சராசரி நடிகன் செய்ய வேண்டிய கடமை.இரண்டாவது option திலிப் குமார் போன்றவர்களுக்கு.மூன்றாவது option இந்திய பட மரபு.

ஆனால் NT தேர்ந்தெடுத்தது, நாலாவது option . முழு காட்சியுமே, ஒன்றுமே நடக்கவில்லையே என்ற ஒரு தேர்வு.படம்-மோட்டார் சுந்தரம் பிள்ளை. அந்த method நடிப்பில் அவர் தேர்வுக்கு காரணங்கள்- அந்த பையனுக்கு அந்நிய தன்மையோ குற்ற உணர்வோ,அதிர்ச்சியோ வர கூடாது. இருபது வருடங்களாக நடத்தி வரும் வாழ்கையாதலால்,என்றோ எதிர் பார்த்தது இன்று நடக்கிறது என்ற ஒரு எதிர்பார்த்த உணர்வு.(இதே புதிதாக set -up செய்தவன் என்றால் மாறியிருக்கும்)ஆனால் பையனை அனுப்பிய பிறகு இந்த நேரத்திலா என்ற அலுப்பு கலந்த ஆயாசம் காட்டுவார்.

method actor தன்னையோ, ரசிகர்களையோ ஏமாற்ற கூடாது என்ற முதல் விதி .

அடுத்த idiosyncrasy சம்பந்த பட்டது. மனோதத்துவம் சம்பத்த பட்டது. cancer வியாதி வந்து,அவதியுறுபவன்,சின்ன சிரங்கு ஆறி விட்ட சந்தோஷத்தில் மிதப்பது போன்றது.

என்னுடைய விற்பனை அதிகாரி, தன வரம்பிற்குட்பட்ட ஒரு வியாபாரத்தை ,சரியாக verify பண்ணாமல் ,ஒரு டுபாக்கூர் கம்பெனிக்கு விற்க, அந்த கம்பெனி திவால் ஆகி கொண்டிருந்தது. 50 லட்சம் மீட்க பட முடியாது. அதிகாரிக்கு wrong side of 40s . வேலை போய் விடும்.பொறுப்புக்கள் நிறைய. எல்லா கடன் காரர்களும் வண்டி எடுத்து கொண்டு போய் ,கிடைத்ததை சுருட்டி கொண்டிருந்தனர் என்னுடைய அதிகாரியும் போய் ஒரு 50000 பெறுமான பொருளை எடுத்து வந்து பெருமிதத்தோடு சொன்னது, அதில் பாதி மற்றவரின் பொருட்கள். எனக்கு,சிரிப்பதா,அழுவதா என்றே புரியவில்லை.

ஒரு கோபத்தில் தன்னை மறக்கும், simpleton என்று சொல்லத்தக்கவன், மகளை அனாதையாக விட்டு கொலைக்காக சிறை சென்று, பரோலில் தன்னை வளர்த்த பாதிரியார் சாவுக்கு வந்துள்ளவன். தன்னை அழைத்து வந்த போலீஸ் நண்பனுடன் நேசம் பாராட்டும் நண்பன். சோகம் துக்கம்,ஏமாற்றம் சுமப்பவன்.தப்பி ஓட முயலும், tense ஆன கட்டம்.துப்பாக்கி காட்டி மிரட்ட முயலும் நண்பனுடன், சூழலை மறந்து ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்துடன் சொல்வது-நான்தான் குண்டை எடுத்தூட்டேனே?(ஆடிக்கொண்டே)ஞான ஒளி

chekhov இருந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பான்.

----to be continued .

IliFiSRurdy
2nd April 2013, 03:29 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-9

----to be continued .

வண்டி outer signal ஐத் தாண்டி வேகம் எடுத்து விட்டது.
மிகவும் நன்றாக உள்ளது.தொடருங்கள்.

சற்று சிந்தித்ததில்,தலைவர் இந்த பள்ளிகளைப்பற்றி அதிக கவனம் செலுத்தாது,
ஒரு கதாபாத்திரம்
இப்படிதான் இருந்திருப்பார்
இப்படிதான் இருந்திருக்கவேண்டும்
இப்படியும் இருந்திருக்கலாம்
என்ற மூன்று முறையில்

இதிகாச,
சரித்திர,
சமூக
என்ற மூன்று பிரிவு கதாபாத்திரங்களை,

permutation combination போட்டு
பின்னி எடுத்திருப்பார் என்றும் தோன்றுகிறது.

KCSHEKAR
2nd April 2013, 06:17 PM
Welcome Mr.Sowrirajan sir

KCSHEKAR
2nd April 2013, 06:19 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-9
----to be continued .

Dear Gopal Sir,

Very nice article. Good going... keep it up.

RAGHAVENDRA
2nd April 2013, 10:33 PM
A super attempt from an youth ... from the pages of FB:

Sivaji Sir, old to colored 1st Attempt

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/534007_626280900722055_340842790_n.jpg

Thank you Dhanapal Ajith ...

Link for the FB page: http://www.facebook.com/photo.php?fbid=626280900722055&set=a.626280607388751.1073741835.100000204530780&type=1&ref=nf

RAGHAVENDRA
2nd April 2013, 11:10 PM
சற்று சிந்தித்ததில்,தலைவர் இந்த பள்ளிகளைப்பற்றி அதிக கவனம் செலுத்தாது,
ஒரு கதாபாத்திரம்
இப்படிதான் இருந்திருப்பார்
இப்படிதான் இருந்திருக்கவேண்டும்
இப்படியும் இருந்திருக்கலாம்
என்ற மூன்று முறையில்

இதிகாச,
சரித்திர,
சமூக
என்ற மூன்று பிரிவு கதாபாத்திரங்களை,

permutation combination போட்டு
பின்னி எடுத்திருப்பார் என்றும் தோன்றுகிறது.

இதையும் தாண்டி,

இப்படி இருந்தால் என்ன விளைவு அல்லது எதிர் விளைவு இருக்கும்
இப்படி இல்லாமல் இப்படியே இருந்தால் எப்படி இருக்கும்

என்பதையும் சேர்த்து அப்படி செய்து விட்டு

எப்படி என்று கேட்டு நம்மைக் கொல்லாமல் கொல்லுவார் ...

goldstar
3rd April 2013, 09:07 AM
Guys,

Currently watching this song, wow what a expression by NT scene by scene. We an analysis for more than 1000 pages just for this song.

https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o&playnext=1&list=PL399F7257FA426B0C&feature=results_main

goldstar
3rd April 2013, 09:08 AM
Another handsome NT song. What a style and presentation.

https://www.youtube.com/watch?v=Josn11_oBqE&list=PL399F7257FA426B0C

goldstar
3rd April 2013, 09:09 AM
தெய்வமே தெய்வமே நடிகர் திலகமே

https://www.youtube.com/watch?v=VPDJvlB8c3Y

goldstar
3rd April 2013, 09:12 AM
கேட்டதும் கொடுப்பவனே - நடிகர் திலகமே

https://www.youtube.com/watch?v=iRJa6IydKRM

goldstar
3rd April 2013, 09:13 AM
One of my most favorite song. NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT NT

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ

goldstar
3rd April 2013, 09:21 AM
Common Tamil cinema fans comments for this song



Ramesh Manivasagam 2 months ago

இதெல்லாம் இறைவன் திருலீலையா- இப்படி பாட ஒருவனையும் அதற்கு நடிக்க ஒருவனையும் இசைகூட்ட ஒருவனையும் எழுத ஒருவனையும் படைத்து எங்களுக்கு விருந்து அளித்த இறைவா உன்காலடி பற்றுகின்றேன் இன்னும் வரும் பிறவிகள் எல்லாம் இவர்கள் வாழும் காலத்தில் என்னை படைப்பாயாக.


padsv 4 months ago

Watch from 2:12 - 2:15 .. That is where the acting of Sivaji at his best.... no match never be matched for ever


padsv 4 months ago

Absolutely correct... To understand THE GREAT acting, one should have knowledge of what life is about... I bet I can watch and hear the words of All time great Kannadasan till my last breath....




vanisree39 7 months ago

Its really amazing,what a great actor Sivaji is.I really miss his acting.Very meaningful song that evokes sense of greatness when you share and care for others.Its usually never appreciated or reciprocated.U just have to do it for ur own satisfaction.
·

Gopal.s
3rd April 2013, 09:43 AM
சதீஷ்,
ரொம்ப நாளைக்கு பிறகு அற்புதமான பாடல்களோடு. வருக வருக.
சௌரி ராஜன் சார்,
சிவாஜி குடும்ப அங்கத்தினராக வந்தமைக்கு மகிழ்ச்சி. வரவேற்கிறோம்.
ராகுல் ராம்,
தர்மம் எங்கே,திருவருட்செல்வர் பதிவுகள் அருமை. leave முடிந்து திரும்பியதற்கு மகிழ்ச்சி.

KCSHEKAR
3rd April 2013, 11:07 AM
Dear Sathish sir,

Your songs selection are super..

KCSHEKAR
3rd April 2013, 11:11 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/VivekMaterNakkeeranApril03Pg1_zpse423d15c.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/VivekMaterNakkeeranApril03Pg2_zps23a7625c.jpg

JamesFague
3rd April 2013, 02:38 PM
Superb Song Selection Mr Gold Star.

Gopal.s
3rd April 2013, 05:05 PM
http://www.nilacharal.com/feature/jambavangal/jb3.html

RAGHAVENDRA
3rd April 2013, 07:42 PM
சதீஷ் சார்,
தெய்வ மகன் சிறப்பு விழாவே நடத்தி விட்டீர்களென்றால், ஆட்டுவித்தான் பாடல் ... அட்டகாசம்.... சூப்பர்...

RAGHAVENDRA
3rd April 2013, 07:43 PM
ராகுல்,
திருவருட்செல்வர் மற்றும் தர்மம் எங்கே படத்தைப் பற்றிய தங்கள் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுக்கள்.

Gopal.s
3rd April 2013, 07:57 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10

கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.(ஆனால் நிஜ வாழ்க்கையில் தங்கள் கூண்டுகளில் வாழ்ந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை பார்த்திருக்கவே மாட்டார்கள்.) அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் (நிஜ வாழ்க்கையில் கரப்பான் பூச்சியை அடிக்கவும் நடுங்குவார்கள்.) என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று கொண்டு எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.

எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.

இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!

நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.

1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?

2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களிடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்தி கொண்டாட தவறி விட்டோம்.

3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?

இந்த தொடரை நான் ஆரம்பித்ததே , பொத்தாம் பொதுவாக விமரிசப்பவனின் வாய்களுக்கு அரக்கு சீல் வைக்கத்தான்.

---To be continued.

Dwightvak
3rd April 2013, 09:18 PM
Dear Raghavendran sir, Chandrasekar sir and S.Vasudevan sir,

Thanks for the warm welcome .

Regards
SriSowrirajan

goldstar
4th April 2013, 04:34 AM
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

Look at people comments

Vivek Balaji 5 months ago

I am just 25 now, watching this song almost everyday. Whenever I feel depressed or when I feel I have achieved something in life, I just listen to this song. Makes me realize everything is the almighty's actions and we are just some roles assigned. No one is bigger and no one is smaller...this song is the best way to express it! Love you TMS sir and Sivaji sir


Vimalathevi Perumal 1 week ago

All the film awards of India has to offer and all theOSCARS(USA) will not do justice to the inherent acting talent of SHIVAJI GANESAN. He has played his role with perfection and in unison of TMS rendering -this is indeed a classic performance and is immemorial. the lyrics are mind blowing.

Vimalathevi Perumal

MALAYSIA.


Kalpana Natarajan 2 months ago

if the Lord indeed comes down to Earth in the future, he himself would be inspired to take Sivaji's form, and teach a sound lesson, to the snobs!!




Talaa91 3 months ago

My fav song ever... Nadigar tilagam really awesome..


Manoj Ullatil Puthanveetil 6 months ago

Nobody can bring a song to life like Sivaji can.. Respect..




anand sundararajan 6 months ago

@4:50: A truly great actor is measured by not just his acting, but also by his reactions.

Sivaji Ganesan one of the greatest actors I've seen (both down the ages across geographies). I am only in my twenties, goes to show that this man's acting transcends generations.

goldstar
4th April 2013, 04:39 AM
https://www.youtube.com/watch?v=3Fu0546rs1g

Savithri Raghu 2 years ago

What a song! Shivaji can any role! Salute to my favourite actor Shivaji

goldstar
4th April 2013, 05:14 AM
Another beautiful song from Anbai Thedi, smart NT and beautiful lyrics and mild melody music

https://www.youtube.com/watch?v=DAf4xFxVSsU

goldstar
4th April 2013, 05:17 AM
Another beautiful song from Anbai Thedi

https://www.youtube.com/watch?v=qsmT8a4oqoU

goldstar
4th April 2013, 05:19 AM
Uthaman Telugu song

https://www.youtube.com/watch?v=mr0hl7Uevk0

RAGHAVENDRA
4th April 2013, 08:29 AM
நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.


டியர் கோபால்
இனிய உளபோது இன்னாச் சொல் எதற்கு ...
control yourself

RAGHAVENDRA
4th April 2013, 08:38 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10


கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை, மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.


perfect narration



எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.

அந்த தயாரிப்பே அவர்கள் தான் போதிக்கிறார்கள் ... அல்லவா ...



இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!

When there is a University in Sivaji Ganesan, why hunt for Schools? தேவையில்லை சார் ... அனைத்துப் பள்ளி வகைகளும் ஒரே இடத்தில் ... multi brand departmental store போல நடிகர் திலகம் என்ற பல்கலைக் கழகத்திடம் நாம் கற்றுக் கொண்டாலே போதும் ...In other words, a real acting school should be instituted in the name of SIVAJI GANESAN SCHOOL OF ACTING ...



1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?

Super ...



2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களுடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்த கொண் டாட தவறி விட்டோம்.


Tamil Nadu = A haven for so called pseudo-intellectuals - அறிவு ஜீவிகள் என்ற பெயரில் நம் கலாச்சாரத்தை ஞாபகமாக மறக்கத் துடிக்கும் போலிகள் ... வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளுவதில் தவறில்லை... ஆனால் அதைப் பழக்கப் படுத்திக் கொள்கிறேன் அல்லது பின்பற்றுகிறேன் என்று கிளம்புவது தான் வருந்தத் தக்கது.



3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?


My previous reply in this post stands for this too.

goldstar
4th April 2013, 09:54 AM
Ever green NT song

https://www.youtube.com/watch?v=Wtz-1Ljn3uQ

goldstar
4th April 2013, 09:57 AM
Super style NT song

https://www.youtube.com/watch?v=n7Qzz_2u-bQ

goldstar
4th April 2013, 09:59 AM
Another super hit song from Ennai Pol Oruvan

https://www.youtube.com/watch?v=tRrgeh802Pk

goldstar
4th April 2013, 10:01 AM
Another super song. Watching this song again and again for at 0.33, watch and enjoy the NT style.

https://www.youtube.com/watch?v=jzd1Em-5Z9U

goldstar
4th April 2013, 10:05 AM
What a song and perfect face expression and walking, hand movement, eye movement.

https://www.youtube.com/watch?v=qKTaS7oDn3w

goldstar
4th April 2013, 10:19 AM
https://www.youtube.com/watch?v=GqAtpVEu5q4&NR=1&feature=fvwp

krrsamy 1 year ago

எத்தனை நடிகர்கள் வந்தாலும், புகழ் பெற்றாலும் உன்னை போல் ஒரு தெய்வ மகன் எந்த காலத்திலும் வர முடியாது.

எங்கள் சிங்க தமிழனே என்றும் உன் புகழ் இருக்கும்.


Sawgayaraj Karunakaran 3 months ago

Sivaji Ganesan natipin Emayam, Goddess Saravathi's eldest son sent to earth to show all the 64 (arts & nuances) in his performance. His always pride of our mother land.

Sawgayaraj.A




tharman paandu 8 months ago

யாழ்ப்பாணம் வெலிங்கடன் திரையிலும் லிடோ திரையிலும் வந்து பின்பு வெலிங்கடன் திரையில் 250 நாட்கள் ஓடியது இத்திரைப்படத்தை பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று இருந்தது குழந்தைகள் முதியோர் அனைவரும் பார்த்து இரசித்தபடம்.

mohamed jaya jaya 1 year ago

NADIPPIN SIHARAM NADIHAR THILAGAM. CANT GET ANY ONE HIS PLACE.

SIVAHAAMIN SELVAN, AVAN THAAN MANITHAN, NEETHI , GAWRAVAM... MANYS BEST  MOVIES. TEARS FUL EYES

JamesFague
4th April 2013, 10:21 AM
Gold Star rocking.Keep it up sir

goldstar
4th April 2013, 10:37 AM
https://www.youtube.com/watch?v=pHnCIpaxL1Y


murthyb58 5 months ago

ya, that's why sivaji gave a perfect expression of sorrow behind the back. Masterpiece direction and acting. Thanks for viewing my posting.


tharman paandu 5 months ago

உலகக்குரல் அரசி சுசீலா அம்மையார் என்ன ஒரு ரீங்காரம் அசத்தல் அற்புதம் - தேவிகாவின் நடிப்பும் ,நடிப்பு கடவுளின் முக பாவங்கள் ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை எப்படி இருந்த திரையுலகம் இன்று நரகமாகி விட்டது .


murthyb58 7 months ago

excellent song a very rare one. The lyrics is best. she is a cancer patient will not live long. In the words "Varushum thorum varuvom inge" see the expression of sivaji, smiles in front of her and cries about the words as her death is imminent. That's masterpiece acting and kudos for posting this wonderful song. thanks

shanthimai 9 months ago

what a lyrics & expression of Sivaji.

goldstar
4th April 2013, 10:41 AM
https://www.youtube.com/watch?v=_SSV_WfNG7I

tharman paandu 3 weeks ago

நடிப்பு நடிப்பு அதுக்கென்றே  இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் சின்னையாபிள்ளை கணேஷன் தயவு செய்து வேறெந்த நடிகர்களையும் அவருக்கு இணையாக பொருத்தி பேசாதீர்கள் அப்படி செய்தால் அது உங்கள் உயிருக்கு நீங்கள் செய்யும் பரிகாசம் . அதுபோலவே டி எம் எஸ் பாட்டு பாட்டு குரல் குரல் இனிமை இனிமை

கம்பீரம் கம்பீரம் என்பதற்காக இறைவனால் படைக்கப்பட்ட மனித அவதாரம் அவரைப்போல் இனி யாரும் இல்லை

goldstar
4th April 2013, 10:52 AM
https://www.youtube.com/watch?v=KTtv3IGHbbc

TheMap007 4 days ago

well said, sivaji the hero, had confidence and guts to do negative roles.


TheMap007 4 days ago

4.19 THAT'S WHY HE IS SIVAJI.


any2xml 1 month ago

Sivaji was always exploring the limits of acting - pushing the envelope. He dared to act in movies where the hero dies or is disgraced. அமரர் சிவாஜி என்றும் வாழ்க!


Mohan B 2 months ago

What a different style of smoking? Legend Shivaj Ganeshan only can do it whithout standing.The life of the Song is in the hand of Suseelaamma & Sir MSV.


suriya kumar 4 months ago

u can see shivaji acting a legand in the heaven now



Selvakumar Selvakumar 4 months ago

See Sivaji smoking! Wonderful!!

Gopal.s
4th April 2013, 02:56 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-11

இந்தியாவிலேயே, எல்லோராலும் கொண்டாட படும் நடிகர்திலகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் திலிப் குமார். method acting என்ற பெயரில் என்ன ரோல் கொடுத்தாலும் ஒரே மாதிரி நடித்தாலும், பிமல் ராய் போன்ற புத்திசாலி இயக்குனர்களின் தயவாலும், ஹிந்தி படங்களுக்கே உள்ள sophistication நிறைந்த அணுகுமுறை ,ஆரோக்யமான போட்டி முறை,அரசியல் கலக்காத சூழ்நிலை இவற்றால் பயனடைந்த சராசரி நல்ல நடிகர்.இவரை உதாரணமாய் எடுப்பது நடிகர்திலகத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் contemporary என்பதாலும், Film Fare award வாங்குவதில் guinness சாதனைக்கு சொந்தகாரர் என்பதால்தான்.. calibre என்பதை வைத்து பார்த்தால் , இவர் பெயரை எழுதுவதே நம் திரிக்கு இழிவாகும்.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் நம் நம் நடிகர்திலகம் நடித்த படங்களை, ஹிந்தியில் remake செய்த போது நடித்துள்ளார்.

1959-1960 களில் paigham என்று ஹிந்தியிலும்,இரும்புத்திரை என்று தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்க பட்ட படம். இரு மொழிகளிலும் வெற்றியடைந்த படம். சிவாஜியின் நடிப்பை தொட முடியாவிட்டாலும் ,சமகால சராசரி மனிதனை பிரதிபலித்த method acting முறையில் நடிக்க கூடிய சுலபமான பாத்திரம் என்பதால் திலிப் சமாளித்திருப்பார்.

அடுத்ததாக, 1963 இல் ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.

அடுத்ததாக, நடிகர்திலகம் உச்ச பட்ச நடிப்பு என எல்லோராலும் கொண்டாட படும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட, 1969 இல் வெளியான தெய்வ மகன். தந்தை பாத்திரத்தை method acting பாணியிலும்,மூத்த மகன் பாத்திரத்தை Chekhov மனோதத்துவ பாணியிலும்,இளைய மகன் பாத்திரத்தை முழுக்க தன் கற்பனையால் மெருகேற்றி oscar wilde விவரித்த கலைஞனின் சுதந்திர அழகுணர்ச்சி பாணியிலும்,பண்ணி சாதனை புரிந்திருப்பார். படம் மிக பெரும் வெற்றி பெற்றதுடன் இன்று வரையில் பேச படுகிறது. இதை பார்த்த திலிப் ,ஹிந்தியில் எடுக்கும் போது ,இதை நடிக்க நம்மால் முடியாது என்று (அவரே கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் விமான பயணத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம்) மூன்று பாத்திரங்களையும் சராசரி ,ஆழமில்லாத method acting பாணி கொண்டதாக அதே கதையமைப்பில்,Bairaag என்ற பெயரில் 1976 இல் குட்டிச்சுவராக்கி (முடவனுக்கு ஏன் கொம்புத்தேன் ஆசை?) தோல்வி அடைந்து,திரையுலகை விட்டே ஆறு வருடம் ஓடி விட்டார்.

இப்போது புரிந்ததா,அவருடைய அடுத்த இடத்தில் இருந்த இந்திய நடிகனின் லட்சணம்?

---TO be Continued .

vasudevan31355
4th April 2013, 05:13 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்

'மங்கையர் திலகம்' படத்தில் M.N.ராஜம் அவர்களின் அழகிய தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_2VOB_000599920.jpg

'பாவை விளக்கு' திரைப்படத்தில் ஸ்டைலான நடிகர் திலகத்துடன் ராஜம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/52db22de-8ad6-4efc-ab3e-1a385bee6c7e.jpg

'மங்கையர் திலகம்' படத்தில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_2VOB_001575879.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/MangayarThilagam000009.jpg

'பெண்ணின் பெருமை'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DVD-RIPPenninPerumai1956lollowmv_006149533.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PenninPerumai0011.jpg

'பாவை விளக்கு'

http://img254.imageshack.us/img254/6741/pavaai00054.jpg

http://img809.imageshack.us/img809/6268/pavaaivilakku48.jpg

'பாசமலர்'

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000007.jpg

நடிகர் திலகத்தின் ஜோடிகளில் ஒருவர். M.N.ராஜம் அவர்கள் சிறு வயது பிராயம் முதல் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை அவர்களில் பட்டறையில் இருந்து பட்டை தீட்டிக் கிளம்பிய இன்னொரு வைரம். டி.கே.எஸ் நாடக மன்றத்திலும் சிறந்த பயிற்சி பெற்றவர். ரத்தக் கண்ணீர் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்த ராட்சஷி. "வேம்ப் கேரக்டரா... கூப்பிடு ராஜத்தை"... என்று சொல்லுமளவிற்கு அந்தப் பாத்திரமாகவே மாறி அமர்க்களப் படுத்தியவர். NSK அவர்களின் படங்களில் முதலில் சிறு சிறு வேடங்களில் தமிழில் தலை காட்டி 'ரத்தக் கண்ணீர்' மூலம் உச்சப் புகழ் அடைந்த நடிகை. அப்படி ஒரு கேரக்டர் ஹிட்டடித்தால் சும்மா விடுமா தமிழ்ப் பட உலகம்? வேம்ப்(vamp),வில்லி, கொடுமைக்கார சித்தி, இரண்டாந்தாரம் என்ற ரோல்களுக்கு M.N.ராஜம் தான் என்று முத்திரை குத்தப்பட்டது. பின் அதையும் மீறி அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு M.N.ராஜம் அவர்களின் நிலை உயர்ந்தது. அதற்குக் காரணம் அவருடைய கடின உழைப்பு. வில்லி ரோலுக்கு மட்டுமல்ல ஹீரோயினாகவும் பரிமளிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய நடிகை. நகைச்சுவை ரோல்களையும் விட்டு வைக்கவில்லை அவர். எம்.என்.ராஜம் நடிப்பில் 'எமன்' ராஜம் என்று பாராட்டப்பட்டார்.

சரி! தலைவருடன் இவர் பங்கு என்ன என்று பார்த்து விடலாம். 'மங்கையர் திலகம்' படத்தில் தலைவருக்கு ஜோடி இவர்தான். அடங்காப்பிடாரி மனைவியாக அட்டகாசம் செய்து பின் அடங்கிப் போகும் பாத்திரம். "பெண்ணின் பெருமை" திரைப்படத்திலும் கிட்டத்தட்ட தலைவருக்கு ஜோடி போலவே வருவார். இதிலும் ஆளை மயக்கும் பாத்திரம்தான். 'ரங்கோன் ராதா'வில் கேட்கவே வேண்டாம். தலைவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வில்லியான ராஜமும், நாயகரும், வில்லருமான(!) தலைவரும் பானுமதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கதை அளந்து, பைத்தியக்கார பட்டம் சூட்டி வீட்டைவிட்டு துரத்த எத்தனிப்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட இயலாது. 'பாக்கியவதி'யிலும் இதே கதைதான். கொண்டவள் பத்மினி இருக்க பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நடிகர் திலகத்தை மயக்கும் மோகினியாய் மயக்கி வைக்கும் கதாபாத்திரத்தை அலட்சியமாக ஊதித் தள்ளியிருப்பார் ராஜம்.

'பதிபக்தி'யில் நேரடி ஜோடியாக பரிமளிப்பார். அதுவும் "கொக்கரக்கொக்கரக்கோ சேவலே" பாடலில் தலைவரும், ராஜமும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்கள். நல்ல ரோல். 'பாவை விளக்கு' திரைப்படத்தில் சௌகார் ஜானகி, குமாரி கமலா இவர்களுடன் ராஜமும் தலைவரின் இன்னோர் ஜோடி. காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடலான "காவியமா...நெஞ்சின் ஓவியமா" பாடலில் ஒரிஜினல் தாஜ்மஹாலில் தலைவரும், ராஜமும் ஷாஜஹானாகவும், மும்தாஜாகவும் அற்புத நடை நடந்து வாழ்ந்து காட்டியதை ஆயிரம் ஜென்மங்களுக்கும் மறக்க முடியாதே. அதே போல தற்போது மீண்டும் வெற்றிக்கொடி நாட்டத் தயாராகி வரும் 'பாசமலரி'லும் ராஜம் அவர்கள் தலைவருக்கு ஜோடியாக நடித்தது அவர் செய்த பெரும் பாக்கியம். அருமையான கேரக்டர். வித்தியாசமாக பரிதாபப்பட வைக்கும் கேரக்டரும் கூட. இப்படி நிறையப் படங்களில் தலைவருடன் ராஜம் அவர்கள் நடித்திருந்தாலும் ஒரு தேவிகா போல, ஒரு பத்மினி போல, ஒரு விஜயா போல, ஒரு வாணிஸ்ரீ போல (ஒரு உள்ளம் அப்படியே இந்நேரம் குளிர்ந்து போய் இருக்குமே!) ராஜம் அவர்கள் ஒரு சிறந்த பொருத்தமான ஜோடியாய் நடிகர் திலகத்திற்கு அமையாதது துரதிருஷ்டமே! அதற்கு காரணம் அவர் முன்னம் ஏற்ற ஒருமாதிரியான கேரக்டர்களே.

அதுமட்டுமல்லாமல் நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் ராஜம் அவர்கள் நடித்திருப்பார்கள். நானே ராஜா, (இதில் நடிகர் திலகத்தின் தங்கை ரோல்... அதாவது ராமாயணத்தின் சூர்ப்பனகை ரோல் மாதிரி) மக்களைப் பெற்ற மகராசி (இதிலும் தலைவருக்கு தங்கை ரோல்), புதையல், காத்தவராயன் காமெடி ரோல்), தெய்வப் பிறவி, விடிவெள்ளி என்று பல குறிப்பிடத் தக்க படங்கள்.

M.N.ராஜம் அவர்கள் பிரபல பின்னணிப் பாடகர் திரு A.L.ராகவன் அவர்களை மணந்து கொண்டார்.

திரைப்படத்துறையில் பல சாதனைகள் புரிந்த ராஜம் திரு எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசு செய்திப்பட நிறுவனங்களின் செய்திப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் சிறந்த பணியாற்றினார். பின்னாளில் பல படங்களில் தாயார் ரோல்களிலும், சிறந்த குணச்சித்திர ரோல்களிலும் தன் அனுபவத்தால் நன்கு பரிமளித்தார். திரு.பாலச்சந்தர் அவர்களின் அரங்கேற்றம் திரைப்படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது மிகவும் பேசப்பட்டது.

இனி பாடல் வீடியோக் காட்சிகள்.

"கொக்கரக்கொக்கரக்கோ சேவலே" (பதிபக்தி)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=u3Ur3mG0Z-E

"காவியமா...நெஞ்சின் ஓவியமா" (பாவை விளக்கு)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RuXW83PLumE

'பாட்டொன்று கேட்டேன்' (பாசமலர்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G2B97RTcB3E

கணவர் A.L.ராகவன் அவர்களுடன் M.N.ராஜம் அவர்கள்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00665/24frALR_G8L2ULQ45_1_665477e.jpg

vasudevan31355
4th April 2013, 06:01 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மெமோரியல் அவார்ட்ஸ் 1-10-2007 அன்று நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாள் அன்று பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. அந்த ஸ்டில்கள் கீழே.

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/sivaji_gaiety021007/sivaji021007_21.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/sivaji_gaiety021007/sivaji021007_22.jpg

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/sivaji_gaiety021007/sivaji021007_23.jpg


http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/sivaji_gaiety021007/sivaji021007_41.jpg

உடன் கௌரவிக்கப்பட்டு இருப்பவர்கள் பழம்பெரும் நடிகை எஸ்.வரலஷ்மி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் பி.எஸ்.நடராஜன்.

http://icdn.indiaglitz.com/tamil/gallery/Events/sivaji_gaiety021007/sivaji021007_34.jpg

Gopal.s
4th April 2013, 07:36 PM
ஒரே ஒரு உள்ளமல்ல குளிர்ந்தது!!! பல கோடி இளமை உள்ளங்கள். வருக தேவரே.

IliFiSRurdy
4th April 2013, 07:45 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1௦,11

நண்பர் கோபால் அவர்களே!
உங்கள ஆராய்ச்சி அருமையாக branch out ஆகி உள்ளது வாழ்த்துக்கள்.முதலில் பத்தாம் பகுதியை படித்து என்னடா இவர் திலீப் குமாரை இப்படி பந்தாடி உள்ளாரே என விசனப்பட்டேன்.ஆனால் பதினொன்றை படிக்கும் போதுதான் "பத்தோடு பதினொன்று ;அத்தோடு நீயும் ஒன்று!" என திலீப்ஜியை நீங்கள் எடை போட்டிருப்பது புரிந்தது.திலீப்ஜியை எடுத்துக்கொண்டதிற்கு காரணம், அவர், நடிப்பில், சிவாஜிக்கு அடுத்தபடி இரண்டாம் நிலையில் உள்ளார் என பரவலாக கருதப்படுவதே என்பதும் புரிந்தது.இரண்டிற்கே இந்த வேகம் என்றால் இனி மூன்றாம் எண்ணில் உள்ளவரை பற்றி நீங்கள் எழுதப்போவதை நினைத்தால் பயமாக உள்ளது.ஒரு விஸ்வரூபமே எடுத்து விடுவீர்கள்.

நடிகர் திலீப்ஜியின் புகழுக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர் ஹிந்தி பட நடிகர் என்பதும் ஆகும்.ஒரு மிதமான நடிப்பையே வட மாநிலத்தவர்கள் பெரிதும் விரும்புவர்.அதை திலீப் ஜி செவ்வனே செய்து வந்தார்.மேலும் தலைவரின் உழைப்பு உலகப்பிரசித்தம்.மனம்,வாக்கு காயம்(உடல்) என்ற மூன்றையும் அதிகபட்சம் உபயோகித்து ஒரு பாத்திரத்தை உருவாக்குவதில் அவர்க்கு நிகர் அவரே.ஒரு கைதேர்ந்த சிற்பி, சிலை ஒன்றை செதுக்குவதைப்போன்றது அவருடைய நடிப்பு.இதையெல்லாம் எல்லாரும் செய்யவும் முடியாது அதை எதிர்பார்ப்பதும் தவறு.உலக நடிகர்கள் எல்லாரிடமும் அவரின் சாயல் எங்கோ நிச்சயம் தென்படும் ஏனெனில் அவர் ஒரு வாக்கியமோ,உரையோ அல்ல .அவரே எழுத்து.இதை மிக அழகாக வெளிபடுத்திய உங்கள் பத்து பகுதிகளும் முத்துப்பகுதிகள்.

நன்றி.

eehaiupehazij
4th April 2013, 08:16 PM
Dear Gopal Sir. It is obvious that NT can not be compared with any other actor of this Universe, as his acting caliber is so high particularly in close-up scenes where he shows all expressions effortlessly with perfect lip movement in songs and flawless dialogue delivery in emotional scenes. However, actors like Dilip Kumar or Sanjeev Kumar or Nageswararao or Madhu or Sathyan have always understood their limitations and never liked to be compared with NT since they know where they stand. Dilip could not perform better in aadmi or irumbuthirai remake or thangapadakkam remake or deivamagan remake. But whatabout our NT’s Iru Duruvam where NT excelled Dilip but the movie did not turn well compared to Ganga Jamuna. Same way remake of Aradhana. Sanjeev kumar did not fare well in Navarathiri remake or compared to engirundho vandal in Kilona but he had made his niche in sholay and many other movies. Nageswararao in Devdas though not comparable for his performance in Prem Nagar with VM. They all have done characters within their cultural domain like NT in tamil. They were also humble in admitting the fact that their performance can never match that of NT, including Marlon Brando as we read. The other side of the coin is bitter that they all could enjoy honors while NT was ignored for political or other reasons even though his performance scaled high above even the Oscar winners.

RAGHAVENDRA
4th April 2013, 09:07 PM
வாசு சார்,
சூப்பர் .... இதை என்னென்று சொல்வது ... ரொம்ப நாளாயிற்றே ... வாசு சார் பதிவு வரவில்லையே... ஒரு வேளை இன்றைக்கு கதாநாயகிகள் தொடருடன் வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்... தற்போது வந்து பார்க்கும் போது அது நடந்துள்ளது.. இதைத் தான் டெலிபதி என்பதோ...

நடிகர் திலகத்தின் படங்களில் மட்டுமல்ல எம்.என்.ராஜம் அவர்களின் பங்களிப்பு, அவருடைய அத்தனை படங்களிலும் சிறப்புடன் இருக்கும். தாங்கள் கூறியது போல் பாவை விளக்கு மறக்க முடியாத படம், பாடல்... பல படங்களில் அவருடைய நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்தும் அளவிற்கு வலிமை வாய்ந்தது. ரத்தக் கண்ணீர் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

மறைந்த பின்னணிப் பாடகி ஜிக்கி அவர்களின் புகழை உலக அளவில் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து வைக்க உதவிய பிரசித்தி பெற்ற பாடல்களில் மங்கையர் திலகம் படத்தில் இடம் பெற்ற ஒரு முறை தான் வரும் பாடலும் ஒன்று. இலங்கை வானொலியில் இப்பாடல் ஒலிபரப்பப் படாத நாளே இல்லை எனலாம். அப்பேர்ப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் நமக்காக இங்கே ..

http://youtu.be/0n-7lDZuIRo

பாடல்காட்சிக்கு நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் நம் அன்பிற்குரிய TFMLover அவர்கள்.

RAGHAVENDRA
4th April 2013, 09:13 PM
இதே போல் ஜமுனா ராணி அவர்களையும் உலகப் புகழ் பெற வைத்த பாடல் ... அந்தக் காலத்தில் குரலாலேயே இளைஞர்களை வசீகரப் படுத்தியது இந்தப் பாடல் ... தெய்வப் பிறவி படத்தில் இந்தப் பாடலைக் கேட்டால் தாளம் போடாத கைகள் உண்டோ ... ஆடாத கால்கள் உண்டோ ...

http://youtu.be/lkDSwYJwj2I

vasudevan31355
4th April 2013, 09:16 PM
கோபால் சார்!

11 பாகத்திற்கும் தனித்தனியான 11 பாராட்டுக்களைப் பிடியுங்கள். தங்களின் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடர் அருமை என்ற ஒரே வார்த்தையில் நான் முடித்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று. சீரிய சிறந்த உயர்ந்ததொரு முயற்சி என்பது மட்டும் திண்ணம். வர வர தங்கள் நடையில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தண்ட, தான, பேத, சாம வரிசையில் தங்கள் நடை பயணிக்கிறது. (ஒரு சில ஊடல்களைத் தவிர)

திலீப் பற்றிய தங்கள் கண்ணோட்டாம் அப்படியே என் மனதிலிருந்து நீங்கள் காப்பியடித்தது. எந்த வகையிலும் திலீப் சிறந்த நடிகர் என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். இதில் நடிகர் திலகத்துடன் கம்பேர் வேறா?

Mughal-e-Azam இல் "Pyaar Kiya To Darna Kya" என்ற உயிரை உருக்கும் பாடலில் மதுபாலா தன் ஆக்ரோஷமான அதே சமயம் அமைதியான நாட்டிய அசைவுகளிலும், முக பாவங்களிலும் நம்மை மதி மயங்கச் செய்ய, ஆஜானுபாகுவான அக்பரோ (பிருதிவிராஜ்கபூர்) அருமையான அலட்டல்களை பார்வையிலே அனல் தெறிக்க வீசி அனாரையும், நம்மையும் அச்சுறுத்த எண்ண, செட்களின் பிரம்மாண்டம் வண்ணம் குழைக்கப்பட்டு, அரபு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரிஜினல் முத்துக்கள், வைரங்கள், மரகதங்கள், வைடூரியங்கள் கண்களைப் பறித்து மின்ன, நௌஷாத்தின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் இசையில் (முக்கியமாக தபலாவின் பங்கு) லதாவின் லட்டுக் குரலில் ஒலிக்கும் ஆறுமாத கால மிகக் கடினமான உழைப்பில் உருவான அந்த கந்தர்வ கானம் நம்மை அப்படியே கட்டிப் போட்டுத் தூக்கிக்கொண்டு போய் சொர்க்கத்திலே கிடாச, இந்தியாவின் அந்தப் பெரிய நடிகர் முகத்தில் சிறிது கூட சலனமின்றி அப்படியே ஏதோ பார்த்தபடி (ஆழமான பார்வையாம்!) method ஆக்டிங் என்ற ஓட்டைப் போர்வைக்குள் தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்து கொண்டு விசால மனது கொண்ட ஒருபக்க வஞ்சக விமர்சனக் கூட்டம் ஒன்றின் பெருத்த புகழுக்கு ஆளான கதையை எண்ணி எண்ணி பல நாட்கள் மனதுக்குள் சிரித்திருக்கிறேன். நடிகர் என்று ஒத்துக் கொள்வது முதல் வேலை, நல்ல நடிகன் என்று ஒத்துக் கொள்வது அடுத்தது. சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது மூன்றாவது. மிகச் சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது நான்காவது. இவன் ஒருவன்தான் சிறந்த நடிகன் உலக அளவில் என்பது முடிவானது. இதில் முதல் இடத்துக்கே ததிகிணதோமாம். இதில் முடிவான ஐந்தாவதற்குப் போட்டியா! அந்த முக லட்சணத்தை இப்போது கொஞ்சம் பார்க்கலாம். நடிப்பின் நுணுக்கங்கள் நன்கறிந்தவர்கள் திலீப்பின் அந்த இறுக்கமான மொக்கை முகபாவங்கள்(!) பற்றி விளக்கினால் நலம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TdOS-0sIW-Y

கோபால் சார்,

அசத்துங்கள். பதினொன்று நூற்றுப் பத்தாகட்டும். படித்து புரிந்து மகிழ ஒரு கூட்டமே காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள். ஆனால் நன்றியெல்லாம் கிடையாது. அதற்கு மேல் ஒன்று இருந்தால் அது நிச்சயம் உங்களுக்குத்தான்.

vasudevan31355
4th April 2013, 09:37 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்பிற்கும், அக்கறைக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தங்களின் அன்பான பாராட்டிற்கு என் ஆழ்ந்த நன்றிகள். கோபாலின் அருமையான தொடருக்கு பக்க பலமாக தாங்கள் அளித்து வரும் பதிவுகள் அத்தொடருக்கு மேலும் சுவையூட்டுகின்றன. எம்.என்.ராஜம் அவர்கள் பற்றிய பதிவுக்கு மேலும் பக்க பலமாக அருமையான இரண்டு பாடல்களைத் தந்து சுவை சேர்த்து விட்டீர்கள். நமக்குள்ளே டெலிபதியை உருவாக்கித் தருவது நம் அன்புத் தெய்வமல்லவா! முதலும் முடிவுமான அந்த இறைவனுக்கே நம் நன்றிகளை சமர்ப்பணம் செய்வோம். அற்புதமான தங்களின் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

vasudevan31355
4th April 2013, 09:44 PM
உலக நடிகர்கள் எல்லாரிடமும் அவரின் சாயல் எங்கோ நிச்சயம் தென்படும் ஏனெனில் அவர் ஒரு வாக்கியமோ,உரையோ அல்ல .அவரே எழுத்து.


அருமை கண்பத் சார். அந்த தெய்வத்தின் மெய்யில் நம் அனைவருடைய உயிரும் கலந்து அந்த எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அல்லவோ மெய்யான பொருளாக உள்ளது!

vasudevan31355
4th April 2013, 10:08 PM
Cinema express march 16th

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/v-1.jpg

RAGHAVENDRA
4th April 2013, 10:11 PM
டியர் வாசு சார்,
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி. கோபால் சார் வார்த்தைகளில் விவேகத்தை அதிகப் படுத்தினால் போதும் மற்றபடி குறை சொல்ல முடியாது.

மிதமான நடிப்பை விரும்புவார்கள் என்று எப்போதும் வட மாநில மக்களைப் பற்றி மேம்போக்காக ஒரு கருத்து நிலவுவது உண்டு. ஆனால் அதனை மறுதலிக்கும் வகையில் தான் அதே வட மாநிலத்தில் ஆர்ப்பாட்டமான ஆட்டமும் பாட்டமுமாக ஷம்மி கபூர், பின்னர் கோவிந்தா போன்ற கலைஞர்களும் புகழ் பெற்றுள்ளனர். சில காட்சிகளில் அங்க சேஷ்டைகள் இருந்தாலும் பல படங்களில் ஷம்மி கபூரின் நடிப்பு உள்ளத்தை உருக்கும் வகையில் இருக்கும். ராஜ் கபூரின் ஜீனாயஹா இன்று வரை ஹிந்தி திரையுலகில் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ளது. எனவே மிதமான நடிப்பு என்கிற போர்வையில் அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கே பல நடிகர்களிடத்தில் நிலவி வந்துள்ளது. தெற்கே பார்வையைத் திருப்ப முன்வராத வட நாட்டு கலைஞர்கள் இருக்கும் வரையில் தென் மாநிலங்கள் கலையில் சிறப்பும் அங்கீகாரமும் பெறுவது மிகவும் அபூர்வமாகத் தான் நடைபெற்றுகிறது.

இந்த வரிசையில் இடம் பெறும் பல வடநாட்டுக் கலைஞர்களில் திலீப் குமாரும் ஒருவர். தங்களுடைய வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிற மனோ பாவத்திற்கு ஒத்து வராத பாத்திரத்தை மறுப்பதற்கு ஒரு காரணமாகத் தான் அவர்கள் நடிகர் திலகத்தைப் புகழ்வது என்பது நிகழ்கிறது என்பதாகத் தான் நான் பொருள் கொள்கிறேன். என்னுடைய அனுமானம் தவறாக இருந்து அவர்களுடைய புகழில் நேர்மையிருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்.

RAGHAVENDRA
4th April 2013, 11:21 PM
டியர் வாசு சார்,
மறைந்த மூத்த பத்திரிகையாளர் லைட்ஸ் ஆன் வினோத் என்கிற செல்லப்பா அவர்கள் தமிழ்த் திரையுலக தகவல் களஞ்சியம் என்று கூறினால் மிகையாகாது. அவருடைய திருப்பு முனை திரைப்படங்கள் தொடர் பழைய படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்கியது. அந்த வரிசையில் வியட்நாம் வீடு திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இடம் பெற்ற பக்கத்தை இங்கு நம்முடன் பகிரந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
4th April 2013, 11:25 PM
The Fabulous Senorita ... ராபர்ட் கிளார்க் நடித்து 1952ல் வெளி வந்த ஆங்கிலப் படம்

http://www.chucksmemorylane.com/images2/lobbyCards/large/fabulous-senorita.JPG

சரி இதை இங்கே தருவதற்குக் காரணம் ?

இருக்கிறதே .. அடுத்து நமது திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள படத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்திய படம் .. இதனைத் தழுவித் தான் நமது பட்டியலில் அடுத்து இடம் பெற உள்ள படம் உருவாக்கப் பட்டது என சொல்வார்கள்..

goldstar
5th April 2013, 04:09 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்


Thank you Vasu sir for detailed information about Mrs. MN Rajam. Not sure whether you knew it or not, she is from Madurai and her mother tongue is Sourashtra like mine. :)

Her husband mother tongue is also Sourashtra and he is from Kumbokonam.

Cheers,
Sathish

Gopal.s
5th April 2013, 07:10 AM
The Fabulous Senorita ... ராபர்ட் கிளார்க் நடித்து 1952ல் வெளி வந்த ஆங்கிலப் படம்

http://www.chucksmemorylane.com/images2/lobbyCards/large/fabulous-senorita.JPG

சரி இதை இங்கே தருவதற்குக் காரணம் ?


இருக்கிறதே .. அடுத்து நமது திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள படத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்திய படம் .. இதனைத் தழுவித் தான் நமது பட்டியலில் அடுத்து இடம் பெற உள்ள படம் உருவாக்கப் பட்டது என சொல்வார்கள்..
ராகவேந்தர் சார்,

மணமகன் தேவை- நான் ரசித்த ஆரம்ப கால NT படங்களில் ஒன்று. NT western பாணி stylised நடிப்பை ஆரம்ப பயிற்சி எடுத்த படம். காலத்தை முந்தியது.(ahead of its time )

RAGHAVENDRA
5th April 2013, 08:21 AM
....(ahead of its time )

well said... NT Himself is well ahead of His time ...

parthasarathy
5th April 2013, 10:49 AM
அன்புள்ள திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களே,

தங்கள் மீள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும், நடிகர் திலகத்துடன் நடித்த நாயகியர் தொடருடன்!

எம்.என்.இராஜம் அவர்களைப் பற்றிய தொடரும், நிழற்படங்களும், செய்திகளும் சுவை.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள சௌரிராஜன் ஸ்ரீ அவர்களே,

தங்கள் வரவு நல்வரவாகுக!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,

திரு. கோபால் அவர்களின் "நடிகர் திலகம் - இந்தியாவின் ஒரே உலக அதிசயம்" தொடருக்கு மேலும் வலுவூட்டுவதாக உங்கள் பதிவுகள் அமைந்திருக்கிறது. உங்களிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
5th April 2013, 10:56 AM
அருமை கண்பத் சார். அந்த தெய்வத்தின் மெய்யில் நம் அனைவருடைய உயிரும் கலந்து அந்த எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அல்லவோ மெய்யான பொருளாக உள்ளது!

அன்புள்ள திரு. கண்பட் அவர்களே,

தங்களின் தீந்தமிழைச் சுவைத்து சில நாட்களாகிறது. தொடர்ந்து அமுதளியுங்கள்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

adiram
5th April 2013, 12:09 PM
Wecome back Mr. Neyveli Vasudevan sir, happy to see your posts again.

You come with the bang of M.N.Rajam, the evergreen Heroine cum Villi cum charector artist.

Following matter is picked from Saradha mam's old post about M.N.Rajam, (on copy & paste method)

திருமதி எம்.என்.ராஜம் வழங்கிய 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம்...

'பாவை விளக்கு படத்துக்காக நானும் சிவாஜியும் மற்றும் படப்பிடிப்புக்குழுவினரும் டெல்லி சென்றபோது தமிழ்த்திரையுலக்மே திரண்டு வந்து, ஏன்னவோ நாங்கள் இமயமலையில் ஏறப்போவது போல வழியனுப்பினர். அதற்குக்காரணம், அதுவரை தமிழ்ப்படங்கள் ஊட்டி, கொடைக்கானல் அல்லது மிஞ்சி மிஞ்சிப்போனால் மைசூர் பிருந்தாவனம் வரைதான் சென்று படப்பிடிப்பு நடத்தினர். எங்கள் குழுதான் முதன்முதலில் டெல்லி சென்று படம் பிடித்தது.

ஆக்ராவில் தாஜ்மகாலின் முன்பு 'காவியமா நெஞ்சின் ஓவியமா' பாடல் படமாக்கப்பட்டபோது, முதல்நாள் அவ்வளவு கூட்டம் இல்லை. மறூநாள் அதிகாலையில் அங்குள்ள மக்கள் பெருங்கூட்டமாக படப்பிடிப்பைக்காண வந்திருந்தனர். கூடவே போட்டோகிராபர்களையும் அழைத்து வந்திருந்தனர். அதற்கு முன் இந்திப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருந்தபோதிலும் அதில் நடித்தவர்கள் பேண்ட், சட்டை அல்லது பைஜாமா சுடிதார் இவற்றுடன்தான் நடித்திருப்பார்கள்.

ஆனால் சிவாஜியும் நானும் ஷாஜகான் மும்தாஜ் ஆக வேடமிட்டு அந்த அரச உடையில் தலையில் கிரீடம் சகிதம், அதுவும் தாஜ் மகாலுக்கு முன்னால் நிற்பதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் அனைவரும் எங்கள் முன் மண்டியிட்டு சலாம் செய்தனர். அதோடு தாங்கள் அழைத்து வந்திருந்த போட்டோகிராபர்களைக் கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக எங்கள் இருவருடனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டொ எடுக்கும் சம்பவம் முடியவே ஒருமணிநேரத்துக்கும் மேலே ஆனது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததையும் அவர்கள் நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

ஆக்ராவில் உள்ள வீடுகளில் நிஜமான ஷாஜகான் மும்தாஜ் படம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சிவாஜியும் நானும் ஷாஜகான் மும்தாஜ் ஆக வேடமணிந்த போட்டோ பெரும்பாலான வீடுகளில் இடம்பெற்றுள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

adiram
5th April 2013, 12:22 PM
Same like that, M.N.Rajam's portions in Saradha mam's 'Paasamalar' analysis...

வழக்கமாக வில்லன், வில்லிகளாக வரும் நம்பியாரும், எம்.என்.ராஜமும் இதில் நல்லவர்களாக வர (இவர்களின் இனிஷியலைவைத்து இவர்கள் இருவரும் நிஜமான அண்ணன் தங்கை என்று கரடி விட்டவர்களும் உண்டு).

கணவனை எதிர்த்து தேர்தலில் நிற்கவேண்டாம் என்று அண்ணனைக் கேட்க வந்திருக்கும் ராதா (சாவித்திரி)யிடம் வாதம் செய்யும் மாலதியை (ராஜம்) ராஜு அடக்கும்போது, "நீங்க சும்மா இருங்க, அவங்கவங்க கணவருக்காக அவங்கவங்க வாதாடும்போது என் கணவருக்காக வாதாடும் உரிமையை எனக்குக் கொடுங்க" என்று ராஜம் கேட்குமிடத்தில் எம்.என்.ராஜம் மீது நமக்கு கோபம் வரவில்லை. தங்கை, தங்கை என்று உயிரைவிடும் அதே நேரத்தில், தன்னை நாடி வந்த மனைவியின் சின்ன உரிமையைக்கூட அவளுக்குத்தரக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது.

Gopal.s
5th April 2013, 12:43 PM
சாரதா மேடம்,கார்த்திக் சார் போன்றவர்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். முரளியும் அபூர்வ பொருளாகி விட்டார். காவேரி கண்ணன் ayn rand இடம் தஞ்சமடைந்து விட்டார். JOE ,NOV ,GROUCH போன்றோர் காண்பதே இல்லை.
இந்த நேரத்தில் தங்கள் சாரதா மேடம் பதிவிலிருந்து quote செய்தது,அவர்களே திரும்பி வந்த உணர்வை கொடுத்தது. ரொம்ப நன்றி ஆதிராம் சார்.

Gopal.s
5th April 2013, 12:45 PM
Same like that, M.N.Rajam's portions in Saradha mam's 'Paasamalar' analysis...

வழக்கமாக வில்லன், வில்லிகளாக வரும் நம்பியாரும், எம்.என்.ராஜமும் இதில் நல்லவர்களாக வர (இவர்களின் இனிஷியலைவைத்து இவர்கள் இருவரும் நிஜமான அண்ணன் தங்கை என்று கரடி விட்டவர்களும் உண்டு).

கணவனை எதிர்த்து தேர்தலில் நிற்கவேண்டாம் என்று அண்ணனைக் கேட்க வந்திருக்கும் ராதா (சாவித்திரி)யிடம் வாதம் செய்யும் மாலதியை (ராஜம்) ராஜு அடக்கும்போது, "நீங்க சும்மா இருங்க, அவங்கவங்க கணவருக்காக அவங்கவங்க வாதாடும்போது என் கணவருக்காக வாதாடும் உரிமையை எனக்குக் கொடுங்க" என்று ராஜம் கேட்குமிடத்தில் எம்.என்.ராஜம் மீது நமக்கு கோபம் வரவில்லை. தங்கை, தங்கை என்று உயிரைவிடும் அதே நேரத்தில், தன்னை நாடி வந்த மனைவியின் சின்ன உரிமையைக்கூட அவளுக்குத்தரக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது.
whatever may be his later decision,havent you observed that sivaji goes aside and let his wife assert her rights verbally without interfering or taking sides?What a performance!!!

adiram
5th April 2013, 12:55 PM
சாரதா மேடம்,கார்த்திக் சார் போன்றவர்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். முரளியும் அபூர்வ பொருளாகி விட்டார். காவேரி கண்ணன் ayn rand இடம் தஞ்சமடைந்து விட்டார். JOE ,NOV ,GROUCH போன்றோர் காண்பதே இல்லை.
இந்த நேரத்தில் தங்கள் சாரதா மேடம் பதிவிலிருந்து quote செய்தது,அவர்களே திரும்பி வந்த உணர்வை கொடுத்தது. ரொம்ப நன்றி ஆதிராம் சார்.

Another important missing personality is our beloved "PAMMALAR".

IliFiSRurdy
5th April 2013, 01:42 PM
நண்பர் பார்த்தசாரதி அவர்களின் கனிந்த அன்பிற்கு என் முதற்கண் நன்றி.

இந்தமய்யத்தின் நக்கீரர் போல செயல்பட்டு அதை கட்டிக்காக்கும்.நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு நன்றி.

தாம் தூம் என, நண்பர் கோபால் அவர்கள், பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் பட்டையைக்கிளப்ப,

தீம் என நண்பர் வாசுதேவன் ஒரு புது பதிவுடன் உலா வருகிறார். நன்றி.

முரளி,பார்த்தசாரதி,கோபால்,வாசுதேவன் என சர்வம் கிருஷ்ண மயமாக இங்கு கணேசரை போற்றிக்கொண்டிருக்கும் இந்த அற்புத வேளையிலே,இவர்களை படித்த மயக்கம் பின்னூட்டம் இட கூட இடையூறாக உள்ளது.

இருப்பினும் என் பதிவை ரசித்து பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி கூறுதல் என் தலையாய கடமை.

நிற்க.

நண்பர் கோபால் "திலீப்ஜியிடம் காணப்படாத நடிப்பு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை ஆற்றி விட்டு அமர ,தொடரும் நண்பர் வாசுதேவன் அதை சாட்சியங்களுடன் நிரூபிக்கிறார்.அவர் போட்டுள்ள மொகல்-e-ஆசாம் காணொளி கதைப்பல சொல்கிறது.அதை விளக்க நான் விழைகிறேன்.

சக்ரவர்த்தி அக்பரின் அரசவை நர்த்தகி அனார்கலி.இவளிடம் அக்பர் மகனும் பட்டத்து இலவரசனுமான சலீமிற்கு நிறைய இது.அனார்கலி கேட்கும் போதெல்லாம் "நம் 'இது' புனிதமானது.நாம் அடுத்த ஜன்மத்திலாவது ஒன்று சேர்வோம் அன்பே!" என சலீம் தட்டிகழிக்க,"இந்த ஜன்மம் முடியவே இன்னும் அறுபது ஆண்டுகள் உள்ளபோது அடுத்த ஜன்மமாவது, ஒன்றாவது!" என கோபபப்படும் அனார்,"இது வேலைக்காகாது,நாமே நேரடியாக கோதாவில் இறங்க வேண்டியதுதான்!" என முடிவெடுத்து அரசவை நடனம் ஒன்றில், நேரடியாக சக்ரவர்த்தி அக்பரை பார்த்து "காதல் செய்தால் பயம் ஏன்?.நான் காதலிக்கத்தானே செய்தேன்! திருட்டு குற்றம் எதுவும் செய்யவில்லையே!.அப்படி இருக்கையில் இப்படி பட்ட வெறுப்பெதற்கு?" என பொருள்பட தைரியமாக பாட.அக்பர் கொதிக்கிறார்.இங்கே தான் வருது வில்லங்கம்.

திலீப்ஜிக்கு இந்த காட்சியை விவரித்த இயக்குனர் இதை ஒரு சரித்திரப்படம் என சொல்ல மறந்து விட்டரா என்று ஒரு ஐயம் வருகிறது.அப்படியே இருந்தாலும் திலீப்ஜி தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உடைகளைப்பார்த்தாவது இது சரித்திரப்படம் என ஊகித்திருக்கலாம்! அதுவும் இல்லை!.real life திலீப்ஜியின் பெண் சிநேகிதி,அவர் தந்தையிடம் வந்து தங்கள் காதலைப்பற்றி சொன்னால் எப்படி முகபாவனை காட்டுவாரோ அப்படி காட்டியுள்ளார்.இது நம் சிவகுமார் சில படங்களில் காட்டும் முக பாவங்களுக்கே ஆஸ்கர் வாங்கித்தர வல்லது.இதையும் நடிப்பில் ஒரு பாணி என நினைப்பவர்கள், ஓடாத கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரம் காட்டும் என சொல்பவர்களுக்கு சமமானவர்கள்.

நான் பள்ளியில் படித்தபோது,சிலப்பதிகாரம் நாடகம் போட்டார்கள் அதில் பாண்டிய மன்னனாக என் நண்பன் ராகவன் நடித்தான்.அவன் பயிற்சியின் போது அரியணையில் வந்து அமர்ந்த விதமே, அவனை அந்த பாத்திரத்திலிருந்து வெளியேற்ற காரணமாய் அமைந்தது. என் தமிழ் ஆசிரியர் அதை பார்த்து சொன்னது "தம்பி ராகவா!,நீ இப்படி உட்கார்ந்து உன் மேல் ஒரு வெள்ளை துணியை கழுத்து வரை போர்த்தினால், அரசவை hair cutting saloon ஆகி விடும்!"

பாவம் திலீப்ஜிதான் என்ன செய்வார்!!.
பயம்( என்ன இவள் இப்படி போட்டு உடைக்கிறாள்?),
நிம்மதி(எப்படியோ அப்பாவிடம் சொல்லியாச்சு),
ஆவல்(அவர் என்ன செய்வாரோ?)
எனும் மூன்று உணர்வுகளை ஒரே சமயத்தில் வெளிக்காட்ட
அவர் என்ன நம் தலைவரா என்ன?

இது தமிழில் வந்திருந்தாள் அக்பராக எஸ்.வி.ரங்கராவும்,சலீம் ஆக தலைவரும் இருந்திருக்கலாம்.90 களில் வந்திருந்தால்,அக்பர் நம் தலைவர்,சலீம்.. வேறு யார்? தேவர் மகன் தான்!!.

முடிவாக நண்பர் கோபாலிற்க்கு: முதல் ரேங்க் பெற்ற மாணவன் நூறு சதவிகிதம் என்றால் இரண்டாவது ரேங்க் 9௦ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது 40 ஆகவும் இருக்கலாம்.

நன்றி.

P_R
5th April 2013, 02:07 PM
Meisner School.

இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.


நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).



அடிக்கோடிடப்பட்ட பகுதியை நீங்கள் கீழே குடுத்த எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்க சிரமமாக இருக்கிறது.

வசனங்கள் தட்டையாக உள்வாங்கப்பட்டு, வெளிப்படுத்தும்போது அந்தக்கணத்தின் (முன்தீர்மானம் இன்றி) உணர்ச்சியுடன் வெளிப்படத்தவேண்டும் (என்று இவ்வகை கூறுகிறது) என்று புரிந்துகொண்டேன்.

குறிப்பாக உடன் நடிப்பவர்கள் காட்சியின் டைனமிக்ஸ் இவை சார்ந்து மேலெழும் performance என்பதை படிக்காத மேதை, ப.ம.போதுமா போன்றவற்றில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பரை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

(நான் பார்த்தவரை) காட்சிகளின் கதியும் (pace), உடன் நடிப்பவர்களுடன் உள்ள interactionஸும் சட்சட்டென்று மாறிக்கொண்டே வரும் (because of the episodic nature of that film). உதாரணம்: ஒரு காட்சி முன்புதான் சந்தித்த முத்துராமன் குடும்பத்துடன் ஒரு துயரத்தில் பங்கெடுக்கவேண்டிய அடுத்த காட்சி. இதற்கு முன்: முற்றிலும் வேறுபட்ட ஞானசம்பந்தர் காட்சி. உடன் யாருமே நடிக்காத : மலை ஏறும் காட்சி.

இவற்றில் உள்ள consistency அபாரமானது. அதில் ஒரு வித தீர்க்கமான முன்தீர்மானமும், சூழலுக்கு அப்பால் (மேலே உயர்ந்து!) இயங்கும் தன்மையும் எனக்குத் தெரிகின்றன.

என் புரிதல் முழுமையில்லை என்று நினைக்கிறேன்...

P_R
5th April 2013, 02:08 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5

Stella Adler School

நடிகர்திலகத்தின் படங்கள்-
மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.

---to be continued.

And the many many plays in the movies?
Like Chatrapathi Sivaji.

IliFiSRurdy
5th April 2013, 02:10 PM
Yes Gopal ji..that is a great scene where HE handles HIS sister and wife deftly.Oh! what a performance!!

Gopal.s
5th April 2013, 02:20 PM
And the many many plays in the movies?
Like Chatrapathi Sivaji.
Yes. Many plays within the Films, Chatrapathi comes under this category.

Gopal.s
5th April 2013, 02:33 PM
அடிக்கோடிடப்பட்ட பகுதியை நீங்கள் கீழே குடுத்த எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்க சிரமமாக இருக்கிறது.

வசனங்கள் தட்டையாக உள்வாங்கப்பட்டு, வெளிப்படுத்தும்போது அந்தக்கணத்தின் (முன்தீர்மானம் இன்றி) உணர்ச்சியுடன் வெளிப்படத்தவேண்டும் (என்று இவ்வகை கூறுகிறது) என்று புரிந்துகொண்டேன்.

குறிப்பாக உடன் நடிப்பவர்கள் காட்சியின் டைனமிக்ஸ் இவை சார்ந்து மேலெழும் performance என்பதை படிக்காத மேதை, ப.ம.போதுமா போன்றவற்றில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பரை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

(நான் பார்த்தவரை) காட்சிகளின் கதியும் (pace), உடன் நடிப்பவர்களுடன் உள்ள interactionஸும் சட்சட்டென்று மாறிக்கொண்டே வரும் (because of the episodic nature of that film). உதாரணம்: ஒரு காட்சி முன்புதான் சந்தித்த முத்துராமன் குடும்பத்துடன் ஒரு துயரத்தில் பங்கெடுக்கவேண்டிய அடுத்த காட்சி. இதற்கு முன்: முற்றிலும் வேறுபட்ட ஞானசம்பந்தர் காட்சி. உடன் யாருமே நடிக்காத : மலை ஏறும் காட்சி.

இவற்றில் உள்ள consistency அபாரமானது. அதில் ஒரு வித தீர்க்கமான முன்தீர்மானமும், சூழலுக்கு அப்பால் (மேலே உயர்ந்து!) இயங்கும் தன்மையும் எனக்குத் தெரிகின்றன.

என் புரிதல் முழுமையில்லை என்று நினைக்கிறேன்...

While Strasberg focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

ஒரு முறை ,தேவர் மகன் வந்த போதில், NT இடம், ஒரு நிருபர் நீங்கள் அப்பராக நடிக்க காஞ்சி பெரியவர் போல்,கெளரவம் படத்தில் நடிக்க TVS கிருஷ்ணா போல், இந்த பாத்திரத்திற்கு யார் என்று கேட்க வந்ததே கோபம் அவருக்கு. நான் தேவனாக நடிக்க யாரையடா பாக்கணும், எங்க அப்பன் தேவன்,எங்க தாத்தன் தேவன் என்று பொரிந்து விட்டார்.

Straberg பள்ளி, நினைவுகள் சார்ந்த Sense மெமரி முறை. அதனால் அவருடைய common man பாத்திரங்கள், தேவர் பாத்திரங்கள், கூத்து, கலை, அது சார்ந்த குழுக்கள், எல்லாம் இந்த வகை பள்ளியே.

ஆனால், சிறிது observe பண்ணிய காஞ்சி பெரியவர் போன்ற பாத்திரங்களில் நடிக்க sense memory முறை ரொம்ப கடினம். improvisation முறையில் திறமை கலந்துதான் உணர்ச்சி வெளியீடு முடியும். மற்ற படி method acting ,Meisner இரண்டுமே பொதுப்படையானது. நான் அவரின் அந்நிய தன்மை வீசும் sophisticated பாத்திரங்கள், நீங்கள் சொன்னது போல் சில காட்சிகள் உடன் நடிப்பவரிடம் இருந்து scene capturing /stealing என்பவைஎல்லாமே Meisner தான்.(கமல் வயசான நாயகரில் அப்பர் நடையை கவர்ந்திருப்பதை கவனித்தீர்களா?)

P_R
5th April 2013, 02:43 PM
Whoa!

There really IS an Oscar Wilde school??



An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
Was that a line by Oscar Wilde? Beautiful.
He is a really dangerous writer to read on the subject of 'sincerity and acting' :-)


ஒரு நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

இந்தத் தொடரிலேயே இதுவரை எனக்கு மிகப்பிடித்த பத்தி :-)

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதுக்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதாமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!



நிறைகள்-பலதர பட்ட கற்பனை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக இந்த பள்ளி கை கொடுக்கும்.ஒரு நடிகனின் கற்பனையை பிரதானமாக முன்னிறுத்தி,பல வேறு பட்ட மாறு பட்ட சராசரி வாழ்க்கையில் சந்திக்கவே இயலாத மனிதர்களை தன கற்பனையால் நடிகன் முன்னிறுத்த இந்த பள்ளி ஊக்குவிக்கிறது.
:yes: :yes:
நவராத்திரி மிகச்சரியான உதாரணம்.
It is unfortunate how so many people undervalue our own film tradition. A film such as Navarathri with the express purpose of showcasing Sivaji's talent, advertises the portrayal of its usp of portraying the navarangaL - is still sometimes received and evaluated with the excruciating demands of 'realism' (about that word in a moment). It is as if people do not except APN to know what he is doing - he knew precisely what he was doing. The plot is an excuse, it was a vehicle for 'depiction of emotions'.

And yet, for the public, he did encase it in a plot and storyline. But you can see how school-play-like it is till aRputharaj makes his entry - then on it is a different film. And it isn't just Sivaji - has there been another Tamil film, where the 'feel' changes every 15-20 mins. What an experiment it must have been to play with the public's tastes like that - mounted heavily on Sivaji's shoulder.

And it is in this that people tend to receive in a very narrow manner and ask 'why is aRputharaj like that' , 'why is the doctor like that' etc about the quirks. They totally miss the point - that this film IS PRECISELY ABOUT all of that.

Of course one can ask the counterquestion that one can ask anyone who is hung up on authenticity - 'have you met every doctor in the world, to know no-one speaks/behaves like that'. That usually shuts 'em up :lol2: But I won't suggest that approach (not in the least because I may myself ask such questions about some other Sivaji performances when we come to them!).

What I mean is - the question is itself wrong. Because the aspiration of such a film and actor is NOT realism - we should really really resist this lazy notion among our viewers that 'realism' (first of all very vaguely defined) is some universal virtue.

And Sivaji revels in creating the moments throughout- I had written sometime back about aRpudharaj.



குறைகள்-சமூகத்தை கீழ்நிலை படுத்தி,கலையை மேல் நிறுவுவதன் மூலம்,கலைக்கு ஒரு அந்நிய தன்மை அளிக்க இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது.realism புறம் தள்ள படுவதால் சமகாலத்தில் ஒட்ட இயலாது.

நடிகர்திலகத்தின் படங்கள்- பலே பாண்டியா,ஆண்டவன் கட்டளை,நவராத்திரி,எங்க ஊர் ராஜா,காவல் தெய்வம்,தெய்வ மகன்(விஜய்),ராமன் எத்தனை ராமனடி,பாபு.

----To be continued.

It took me a while to appreciate Bale Pandia. I was initially put off by the hero's performance - precisely because of the above reasons I mentioned. When you get that it is precisely about the performance itself - then it is quite funny.

M.R.Radha asking him to stay with him for a month
MRR:...அதுக்கப்புறன் நானே உனக்கு தற்கொலை பண்ணிக்க நல்ல இடம் பார்த்து தரேன்
சிவாஜி: இடம் நல்லா இருக்கணும்

The way he says that line is :lol:

Enjoying this series...Thanks again.

Gopal.s
5th April 2013, 02:51 PM
P _R ,

Oscar Wilde school மிக சிரம பட்டு பிடித்தேன். Jesus போல் அவர் கருத்துக்களை அங்கங்கே பிரசங்கம்தான் பண்ணியிருக்கிறார். Apostles போல சிஷ்யர்களும் ,சில அமெரிக்க ஆராய்ச்சி கட்டுரைகளும் உதவின.

P_R
5th April 2013, 02:58 PM
கதா பாத்திரங்களின் உண்மை நிலையறிந்து,அதன் தேவைகளையும்,விருப்பங்களையும் சரியான உடல் மொழி கொண்ட gesture மூலம்,கை-கால்கள் மூலமும் வெளிபடுத்த பட வேண்டும்.இந்த வகை நடிப்பில் முக்கியமானது subtle /sudden changes in tempo ,body position மற்றும் சூழ்நிலை சார்ந்த உணர்வு நிலையில்
சந்தோஷம்,துக்கம்,அமைதி,பரபரப்பு,பயம்,anxiety ,புதிர் நிலை,எதிர் நிலை,தீர்மானமற்ற நிலை,சூன்ய நிலை எல்லாவற்றையும் கலப்பு வெளியீடாக,monotony தவிர்த்த permutation combination கொண்டு உளவியல் பார்வையில் வெளியிட வேண்டும்.

நடிகர்திலகத்தின் இந்த பள்ளியை ஒத்த நடிப்பு கொண்ட படங்கள்-உத்தம புத்திரன்(விக்ரமன்),ஆலய மணி,புதிய பறவை,தெய்வ மகன்(கண்ணன்),எங்கிருந்தோ வந்தாள்,ஞான ஒளி ,ரோஜாவின் ராஜா.



Hmm...I have to watch some of these performances again in the light of this.
But before my opinion changes in any way, I feel compelled to record I strongly dislike his performance when he is mad in 'engirundhO vandhAL'
It feels more like a string of antics than even histrionics.

vasudevan31355
5th April 2013, 02:59 PM
Dear ராகுல்,

திருவருட்செல்வர் மற்றும் தர்மம் எங்கே படத்தைப் பற்றிய தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது, தங்கள் அயராத உழைப்பிற்கு என் மனமார்ந்த நன்றி! பாராட்டுக்கள்.

Gopal.s
5th April 2013, 03:06 PM
Hmm...I have to watch some of these performances again in the light of this.
But before my opinion changes in any way, I feel compelled to record I strongly dislike his performance when he is mad in 'engirundhO vandhAL'
It feels more like a string of antics than even histrionics.
I agree with you on Engiruntho vanthal. But one scene where he tries to chase the villain away is a good one.pakkaththu veetu naayee.(But resembles thillana kottagai scene). Since you opened the pandora box,i am forced to agree this one. You know whom I am afraid of!!!!
In any case ,I am going to elaborate on Uthamaputhran Vicki, Deiva magan Kannan, and Puthiya paravai Gopal inch by inch. my picks.

P_R
5th April 2013, 03:13 PM
When this is the case, let us not make a mistake by bluntly ignoring a film for any reason wherein NT would have given some intricate and nuantic performance, which might go unnoticed because of ignorance. I can in the course of discussions and where deemed fit, can bring you examples of such occasions, from the late films of NT.
Fair enough.



இதை நடிகர் திலகம் எத்தனை படங்களில் எத்தனை விதங்களில் தந்திருக்கிறார் என்று தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதைப் பற்றியே ஒரு தனித் திரி துவங்கி நடிகர் திலகத்தின் அழுகைக் காட்சிகள் என எழுதலாம். பலர் நினைக்கக் கூடும் தாங்கள் உள்பட ... பின்னாளில் வந்த படங்களில் அவருடைய அழுகைக் காட்சியைப் பார்க்காமல் எழுந்து சென்று விடுவோரும் உண்டு. ஆனால் அதில் அவர் இணைத்துள்ள பல நுணுக்கமான விஷயங்களை சொல்லும் போது தங்கள் பார்வையே வித்தியாசமாக இருக்கும்.


Without even trying hard I may end up infrequently making summary comments about some films/performances - and if it elicits the necessary counterarguments from you- the thread stands to gain from the elucidation :-)

vasudevan31355
5th April 2013, 03:29 PM
டியர் கண்பத் சார்,

தங்கள் உன்னத அன்பிற்கு நன்றி!

'Mughal-e-Azam' பற்றிய தங்களுடைய கருத்துக்களை பலமுறை படித்து மகிழ்ந்தேன். சுருக்கமான ஆனால் அம்சமான அலசல். ரசித்துப் படித்தேன். நடுநடுவே தாங்கள் அளிக்கும் சிறு சிறு உதாரணங்களுக்கு அல்லது சிறு கதைகளுக்கு மெய்யாலுமே நான் அடிமை. மாதம் ஒரு முறையாவது இந்தக் காவியத்தை தவறாமல் கண்டு களித்து மெய்மறந்து போய் விடுவதுண்டு. என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதொரு காவியம். அதுவும் ஷம்ஷத் பேகம் என்ற கிராதகிப் பாடகியின் குரலில் நான் கிறங்கிப் போய்க் கிடந்ததற்கு காரணமான காவியம். ஆனால் திலீப்ஜியின் காட்சிகளின் போது என் கைவிரல்கள் ரிமோட்டில் forward பட்டனில் 32x இல் இயங்கியபடியே இருக்கும்.

ஆனால் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இதே திலீப்ஜி 'கங்கா ஜமுனா' வில் (நம் 'இருதுருவம்'தான்) "Nain ler jaaihe kri to manwa ma kasak" பாடலில் பண்ணும் அட்டகாசத்தையும் மறக்க முடியாதுதான். என்ன ஒரு சுறுசுறுப்பான நடனம்! அதுவும் இந்த மம்முவிடமிருந்து. சும்மா நடன இயக்குனர் திலீப்ஜியின் முதுகெலும்பை முறித்திருப்பார். திலீப்ஜியா அது! திலீப்ஜியின் கேரியரில் மறக்க முடியாத நடனம். நிஜமாகவே ஆச்சர்யப்படுத்தும் சுறுசுறுப்புதான். இதற்காக மன்னித்து விடுவோம். பலமுறை நீங்களும் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். இப்போது எனக்காக ஒருமுறை பாருங்களேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oDH7m4Urr2k

vasudevan31355
5th April 2013, 03:32 PM
ராகவேந்திரன் சார், ஆதிராம் சார், பார்த்தசாரதி சார், 'கோல்ட்ஸ்டார்' சதீஷ் சார், கோபால் சார், கண்பத் சார் அனைவருடைய பாராட்டிற்கும் நன்றி!

Gopal.s
5th April 2013, 03:55 PM
வாசு,
தேரு பார்க்கவும் ஆசை.

vasudevan31355
5th April 2013, 04:07 PM
வரம் தந்தேன் கோபாலரே! திலீப் மாதிரி தலைவரை தனியே ஆடவிட்டு இருக்கலாம். பாட்டி பத்மினியால் தேரு வேறு மாதிரி ஆகி விட்டது. தலைவர் உழைப்பு! அது மலைப்பு!


http://www.youtube.com/watch?v=gmUxjbu_7bk&feature=player_detailpage

adiram
5th April 2013, 04:27 PM
// 'Mughal-e-Azam' பற்றிய தங்களுடைய கருத்துக்களை பலமுறை படித்து மகிழ்ந்தேன். சுருக்கமான ஆனால் அம்சமான அலசல். ரசித்துப் படித்தேன். நடுநடுவே தாங்கள் அளிக்கும் சிறு சிறு உதாரணங்களுக்கு அல்லது சிறு கதைகளுக்கு மெய்யாலுமே நான் அடிமை. மாதம் ஒரு முறையாவது இந்தக் காவியத்தை தவறாமல் கண்டு களித்து மெய்மறந்து போய் விடுவதுண்டு. என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதொரு காவியம். //

Sure, no doubt.

But when it was in black & white, not much interested. But after conversion to Technicolor the movie is awsome.

When it was telecasted in color in Zeenet channel, I fully recorded in a video cassette and then convert to a DVD by the help of a friend. What a fantastic songs by Naushadji. I am addict to that songs.

adiram
5th April 2013, 04:37 PM
Thanks Vasu sir, for giving 'Ganga Jamuna' song and 'Iru Dhuruvam' song together.

This song is the only thing coming to remember when we hear the name Iru Dhuruvam (another thing is camera work by Vincent in train chasing scene). Excellent 'kuththu song' between 'mama.. mama.. mama..' and 'ennadi raakkamma'.

super service sir.

IliFiSRurdy
5th April 2013, 05:03 PM
டியர் கண்பத் சார்,

தங்கள் உன்னத அன்பிற்கு நன்றி!






மிக்க நன்றி வாசு சார்.

ஆப்பிரிக்க கண்டம் சென்று அங்கு சூடான் நாட்டில் வாழும் மசாய் பழங்குடி இனத்தவர் குடியிருப்பிற்கு சென்று "உங்கள இனத்திலேயே உயரமானவர் யார்?" என்று கேட்டால் சுமார் ஆறரை அடி உயரமுள்ள ஒரு நபரை கொணர்வார்கள்.

சில நூறு மைல்கள் தாண்டிச்சென்று பிக்மி பழங்குடி இனத்தவர் குடியிருப்பிற்கு சென்று "உங்கள இனத்திலேயே உயரமானவர் யார்?" என்று கேட்டால் சுமார் ஐந்து அடி உயரமுள்ள ஒரு நபரை கொணர்வார்கள்.

இருவருமே சரிதான்..நாம் ஒப்பீடு செய்வதுதான் பிழை.

திலீப்ஜியின் இந்த நடனம் "ஜோடி #1" இல் முதன் முதலில் reject செய்யப்பட போட்டியாளரின் நடனத்தை விட சுமார்தான்.

இறைவன் விதிகளுக்கு இசைவாக பலரையும்,விதி விலக்காக பலரையும் படைப்பார்.அதுவும் சமகாலத்தவராக.பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏனெனில் விதியும் அவரே!விதிவிலக்கும் அவரே!!

தலைவரின் சமகால நடிகர்(களி)ன் திறமை(அவருக்கு சமமாக கருதப்பட்ட நடிகர்) நாம் அறியாததா என்ன?

IliFiSRurdy
5th April 2013, 05:08 PM
இங்கே வசிக்கும் நண்பர்கள் ராகவேந்தர்,வாசு,ஆகியோர் எதாவது அக்ஷய பாத்திரம் வைத்துள்ளனரா என்ன?
என்ன பாடல்/ காட்சி கேட்டாலும் வந்து விழுகிறதே?:confused2:

IliFiSRurdy
5th April 2013, 05:29 PM
Sure, no doubt.

But when it was in black & white, not much interested. But after conversion to Technicolor the movie is awsome.

When it was telecasted in color in Zeenet channel, I fully recorded in a video cassette and then convert to a DVD by the help of a friend. What a fantastic songs by Naushadji. I am addict to that songs.


நண்பர் ஆதிராம் அவர்களே..

மனிதனின் தலையின் இருபக்கமும் இறைவனால் பொருத்தப்பட்டுள்ள காது எனும் அவயம் சரியாக வேலை செய்யும் எவரும் Naushadji. யின் இசைக்கு addict ஆகத்தான் இருப்பர்.

மேலும் pyar kiya tho எனும் பாடல் ஒரு classic ரகத்தை சேர்ந்தது.தர்பாரி எனும் ஹிந்துஸ்தானி ராக சாயலில் வடிவமைக்கப்பட்டு கேட்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்.தலைவர் பாடல் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை நினைவுக்கு வருகிறதா?
மேலும் இதனால் inspire ஆன மெல்லிசை மன்னர்கள் வாழ்க்கைப்படகு எனும் படத்தில்,"உன்னைத்தான் நான் அறிவேன்.மன்னவனை யார் அறிவார்?" எனும் பாடலில் தங்கள் மேதமையை காண்பித்துள்ளனர்.

sakaLAKALAKAlaa Vallavar
5th April 2013, 05:56 PM
http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/7172_563011973729644_787322971_n.jpg

vasudevan31355
5th April 2013, 06:02 PM
சகலா சார்,

கண்களில் கங்கையைக் கொட்ட வைக்கிறீர்கள்.

IliFiSRurdy
5th April 2013, 06:44 PM
வெள்ளிக்கிழமை..மாலை வேளை..

இந்த போட்டோ எதுக்கு? ஒரு relevance உம் இல்லாமல்? :(

சரி எதோ என்னால் முடிந்த பரிகாரம்...



2310

Gopal.s
6th April 2013, 09:56 AM
Hmm...I have to watch some of these performances again in the light of this.
But before my opinion changes in any way, I feel compelled to record I strongly dislike his performance when he is mad in 'engirundhO vandhAL'
It feels more like a string of antics than even histrionics.

P _R ,

ஏதோ வேந்தர் ஞாயிற்று கிழமை கொண்டாட்டங்களில் busy ஆக இருப்பதால் கண்டு கொள்ள மாட்டார் என்ற அசட்டு தைரியத்தில், எங்கிருந்தோ வந்தாளில் உடன் பட்டு விட்டேன் . ராத்திரியெல்லாம் பயத்தில் தூக்கமே இல்லை.

Jokes apart , come to think of it ,எனக்கு அது ரொம்ப கவராத பாத்திரமாகவே இருந்தாலும்(Cliched ), இன்னொரு கோணத்தில் அலசினால்......

ஒரு socio -path (psychopath ), Border line IQ , Autism , mild schizophrenia பாத்திரங்களில் காட்டும் நுட்பமான histrionics , மன நிலை பிறழ்ந்தவன் பாத்திரத்தில் காட்ட முடியாது.அதற்கு ஒரே வழி antics driven performance மட்டுமே.

Mood swings &inconsistent disposition ,lack of cogency in thoughts &Actions ,Incoherent unpredictable behaviour,இவற்றை வெளியிட ஒரே வழி series of antics ஒன்றுதான்.அதைதான் நடிகர்திலகம் செய்து காட்டினார்.

Gopal.s
6th April 2013, 10:12 AM
சமீபத்தில், திரியில் என்னை மிக கவர்ந்த விஷயம் ஆரோக்யமான விவாதங்களுடன், அதிகரித்து வரும் sense of humour . நட்புணர்வை அதிகரிக்க செய்யும் கிரியா ஊக்கி.(Catalyst )

கண்பட் அவர்களின் , Mugale azam தொடர்பானது.(அரச உடையை பார்த்தாவது...., ராகவன் )

வாசுவின், தண்ட,பேத,தான, சாமம்.

ராகவேந்தர் சாரின், ஆயிரத்தில் ஒருவன் ராமதாஸ் பாணியில் வந்த ஒன்று.(நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் ..) .ஒன்றும் குறை காண முடியாது. ஆனால் விவேகம்தான்.... இதை என் குடும்பத்திடம் சொன்னதும் , சொன்னவர் யார்?உடனே மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும். எங்கள் மனதில் இவ்வளவு நாளாக புதைத்து அழுத்தி கொண்டிருந்த ஒரு ரகசியத்தை, இவ்வளுவு தைரியமாய் உரைத்த விவேகியை என்று.

தொடந்த நட்புடன் கூடிய நகைச்சுவை தொடர, இந்த அவிவேகியின் பிரார்த்தனை.

Gopal.s
6th April 2013, 10:31 AM
ராகவேந்தர் சாரின் பதிவு தொடர்பானது.

போன வாரம் வாழ்க்கை படத்தை மீண்டும் பார்த்தேன். (இதை மலையாளம்,ஹிந்தி ஆகியவை பார்த்துள்ளேன்.) வாழ்க்கையில், நம்பிக்கை சார்ந்து சுய மரியாதையோடு இயங்கும் ஒருவன், மனைவியுடன் ஆன உறவு முறை காதல் வய பட்டதாக இருப்பினும் ,ஒரு குற்ற உணர்வு இழையோடி கொண்டே இருக்கும்.(செல்வ நிலையில் இருந்த அவள் வாழ்க்கையை சிதைத்து விட்டதாக). இதையெல்லாம் விடுங்கள். கடைசியில் மனைவி தனக்கு உடன்பாடில்லாத ஒரு காரியத்தை செய்யும் போது ,அதை கைகேயி வரமாகவே உபயோகிக்கும் போது ,....

அந்த office scene ... நடிகர்திலகத்தின் உடல் மொழி, முக பாவம் வசன உச்சரிப்பு.... என் இதயத்தை யாரோ வெளியே எடுத்து பிழிந்து கொண்டிருப்பதை போல ஒரு அவலத்தை உணர்ந்தேன். அப்படியே சக்கையாய் பிழிய பட்டு ,குப்பையில் வீச பட்ட துறவு கலந்த ஒரு dryness , வெறுமை ..... (வாசு சார் முடிந்தால் காட்சி உதவி)

vasudevan31355
6th April 2013, 10:31 AM
கோபால் அண்ணன் குடும்பத்தின் சார்பாக நான் ராகவேந்திரன் சாருக்கு இந்த மிகப் பெரிய மாலையைப் போட்டு மகிழ்கிறேன்.

http://www.dollsofindia.com/images/products/garlands/red-and-golden-satin-ribbon-artificial-flower-garland-CA77_l.jpg

Gopal.s
6th April 2013, 10:37 AM
நடிகர்திலகத்தின் காட்சி finish பண்ணும் போது character -action -mood ஆகிய அனைத்தையும் ஒரு சிறு gesture மூலம் establish பண்ணும் அழகு.

கல்லெல்லாம் மாணிக்க பாட்டின் இறுதியில், ஒரு துணியை எடுத்து கையை துடைக்கும் நேர்த்தியில் ,ஓவியத்தை திருப்தியாக முடித்து விட்ட காதலனின் திருப்தி.....

தூங்காத கண்ணென்று பாட்டில், விக் கழட்டி, மேல் பட்டன் திறந்து, stress relieve செய்து, ஓய்வெடுப்பதை குறிப்பதுடன், காதலையும் கழட்டி விடும் symbolic gesture .

Gopal.s
6th April 2013, 10:46 AM
ஆஹா,

தீயாய் வேலை செய்கிறாயே தம்பி. என்ன ஒரு சுறு சுறுப்பு.சிறு வயதில் ஒரு கிராமத்து நண்பன் . அவன் வேலையே ,நம் அரை டிரௌசரை பின்னாலிருந்து உருவி விட்டு ஓடுவது. பாவம் ,நிறைய நண்பர்கள் அப்போதெல்லாம், தொள தொள அரை நிக்கரை ,அரணா கயிறு போட்டே இடுப்பில் அணிந்திருப்பார்கள்.(உடுக்கை இழந்தவன் கை போல,என்பதை உல்டா செய்த உயர்ந்த நண்பன்) .

தொடர்பில்லா விட்டாலும் ஏதோ பழைய நினைவு. H mmmm .

JamesFague
6th April 2013, 12:13 PM
Mr Vasu Sir,

Welcome back with a bang and also do not forget
the stunt scenes series of NT.We are eagerly
awaiting for the same.

vasudevan31355
6th April 2013, 12:28 PM
கோபால் சார்,

தங்களைப் போலவே நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நெஞ்சு பிழியும் காட்சியைப் பர்ர்த்து தன் வசமிழந்து நிற்கிறேன். நிம்மதியாகவே இருக்க விட மாட்டீர்களா?

சரி! நீங்கள் கேட்டதற்காக அந்த அற்புதமான காட்சி. தரவேற்ற கொஞ்சம் நேரம் ஆகி விட்டது. அதான் delay.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-X9pKWBJNl4


http://www.youtube.com/watch?v=SQDbDVuXMvI&feature=player_detailpage

vasudevan31355
6th April 2013, 12:54 PM
Thank u vasudevan sir. Definitely.

RAGHAVENDRA
6th April 2013, 03:08 PM
வாசு சார்
தங்களுடைய சிறந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள். இது வெறும் வார்த்தையல்ல... உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் உணர்வின் வெளிப்பாடு.

வாழ்க்கை – ஏற்கெனவே படத்தை பல முறை பார்த்திருந்தாலும், கோபால் இந்த காட்சியில் உள்ள நுணுக்கமான விஷயங்களை சொன்ன பிறகு இந்த காட்சியைப் பார்க்கும் போது நிச்சயம் பல புதிய விஷயங்களை அறிய முடிகிறது. அதனைத் தாங்கள் உடனே இங்கே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி.

RAGHAVENDRA
6th April 2013, 03:08 PM
டியர் கோபால் சார்,
தங்களுடைய பதிவுகளை நான் எப்போதுமே ரசித்து வந்திருக்கிறேன் ... சில சமயம் அவசரத்திலோ அல்லது உணர்வின் வேகத்திலோ வெளிப்படும் வார்த்தைகளின் தன்மைகளைத் தவிர. அதனை சரி செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
நகைச்சுவையினை விரும்பாதவர் யார் உளர் .. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.