PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

Gopal.s
4th May 2013, 07:46 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20


விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

----To be continued .

Dwightvak
4th May 2013, 09:00 PM
நடிகர்திலகம் ശിവാജി ഗനെസാൻ நடித்த தச்சோளி அம்பு இடுகை நன்று.

பாராட்டிற்கு மிக்க நன்றி கோபால் சார்.!

Dwightvak
4th May 2013, 09:40 PM
நடிகர் திலகம் மீது அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்த நடிகர் திலகம் 83ர்ட் பிறந்த நாள் விழா காட்சியினை சமர்பிக்கிறேன்...

இதில் திரு.ஏவிஎம் சரவணன் அவர்களும் SRM பல்கலை கழக நிறுவனர் திரு.பாரிவேந்தர் aka PACHAIMUTHU அவர்களும், பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள், நடிகர் திலகத்தை பற்றிய தங்கள் எண்ண அலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இது வெறும் உதட்டில் இருந்து வரும் வார்த்தைகள் அல்ல. உள்ளத்தில் இருந்து வருபவை.

சாதுர்யம், ஆதிக்ய வெறிகொண்டு அடக்கியாளும் திறன், தலைகனம், திமிர், மற்றும் இதுபோல பல பயமுறுத்தும் குணங்களால் நம் நடிகர் திலகம் இவர்களை பேச வைக்கவில்லை.

அன்பு, தன்னடக்கம், பாசம், பண்பு, மற்றவர்களை மதிக்கும் பாங்கு, தொழில் மீது கொண்ட அசாத்ய நம்பிக்கை, பக்தி, மற்றும் பல நல்ல குணங்களால் இவர்களது அன்பை சம்பாதித்தார்.!

நடிகனாக மட்டுமே அவர் இருந்திருந்தால் இன்று நானோ நீங்களோ இதை எழுதிக்கொண்டு இருக்கவும் மாட்டோம், படித்துகொண்டு இருக்கவும் மாட்டோம்...

திரைப்படங்களையே பார்த்துகொண்டிருக்கும் கண்களுக்கும், திரை சம்பந்தமான விஷயங்களையே இவ்வளவு நாள் கேட்டுகொண்டிருந்த காதுகளுக்கும், சிறிது மாறுதலுக்காக இங்கே இடுகை செய்கிறேன் !



http://www.youtube.com/watch?v=ZvJIX3nOmHw

Dwightvak
4th May 2013, 09:42 PM
மனித சமுதாயத்துக்கும், மாணவ சமுதாயத்திற்கும், நடிகர் திலகத்தின் வாழ்கை ஒரு சாராம்சமாக பாடப்புத்தகத்தில் வரவேண்டும் என்று கூறும் திரு.பச்சைமுத்து அவர்கள்.....கேளுங்கள் ! சத்தியமான வார்த்தைகள் தொடர்கிறது .......

http://www.youtube.com/watch?feature=endscreen&v=B-e2S5Fo5xw&NR=1

Dwightvak
4th May 2013, 10:11 PM
நடிகர் திலகம் அவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள அத்துணை உயிர்களுக்கும் ஓர் அரிய கண்ணொளி -

பேராசிரியர் திரு. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நம் நடிகர் திலகத்தை பற்றிய ஆராய்ச்சியில் சிவாஜி - ஒரு பண்பாட்டியர் குறிப்பு என்ற இந்த கண்ணொளியை சமர்பித்திரிகிறார்.

நடிகர் திலகம் திரைத்துறையில் இல்லையெனில் வறண்ட ஒரு திரைஉலகமாக தான் வறட்சியுடன் இருந்திருக்கும் என்கிறார் !

கற்றவர்கள், கல்லாதவர்கள், உள்ளவர்கள், இல்லாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் மற்றும் இது போன்ற அனைவருக்கும் நம் நடிகர் திலகம் ஒரு ஆச்சர்யமும், அதிசயமும், விந்தையும், விநோதமும், சந்தோஷமும், ஆர்வமும் ஒருங்கே பெற்ற ஓர் ஆராய்ச்சி வடிவமாகும் !

http://www.youtube.com/watch?v=M3w9ii5GlxA

RAGHAVENDRA
4th May 2013, 10:17 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmCrew/CINEMATOGRAPHERRAMAMURTHI_zpsbb08075d.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/OldTamilFilmCrew/CINEMATOGRAPHERRAMAMURTHI_zpsbb08075d.jpg.html)

மேலே உள்ள படத்தில் காணப் படுபவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ், இயக்குநர் ப. நீலகண்டன் இவர்களிடம் ஆஸ்தான அளவிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள். தமிழ்த் திரையுலகில் ஈடு இணையற்ற ஒளிப்பதிவு மேதை எனப் போற்றப் படுபவர். வசதிக்குறைவான அந்தக் கால கட்டத்திலேயே ACTION SEQUENCES எடுப்பதில் நிகரற்று விளங்கியவர். நடிகர் திலகத்தின் படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கது கர்ணன். நேற்று - 03.05.2013 தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய பேட்டி மறு ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்தப் பேட்டியில் இவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் புதியதாகும்.

கர்ணன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி கிட்டத்தட்ட 960 அடிகளுக்கு எடுக்க திட்டமிடப் பட்டதாம். ஒரு யூனிட் பிலிம் 1000 அடிகளாம். அது ஒரு வட்ட டிராலி ஷாட். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதைப் பயன்படுத்துவதிலும் பல நிர்ப்பந்தங்கள். பிலிம் பற்றாக்குறை வேறு. டப்பிங் இல்லாத காரணத்தால் வசனத்தையும் ஒரே டேக்கில் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். குரலும் தெளிவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இப்படி பல்வேறு நிர்ப்பந்தங்களையும் சந்தித்து அந்த காட்சியை படம் பிடித்து முடிக்க நடிகர் திலகம் எடுத்துக் கொண்டது ...

JUST ONE TAKE AND ONE SHOT ...

என்ன மனிதரய்யா இவர் தெய்வப் பிறவி என்றால் இவரன்றோ அதற்கு பொருத்தமானவர்.. தயாரிப்பாளர் தொழில் நுட்பக் கலைஞர்கள் சக கலைஞர்கள் என்று ஒரு லைட்பாயின் கஷ்டத்தைக் கூட உணர்ந்து யாருக்கும் சிரமம் வைக்காமல் தன் தொழிலை தெய்வமாய் மதித்து பணியாற்றிய இவருக்கு ஈடுண்டோ.

இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம் ...

நடிகர் திலகம் உருக்கமாக நடிக்கும் போது ஒளிப்பதிவு செய்வது மிகவும் சிரமம் என்றார். உணர்ச்சி வசப்படாமல் பணியாற்றுவது கடினம் என்றும், ஒளிப்பதிவு செய்யும் போது தம்முடைய கண்களில் கசியும் கண்ணீர் அந்த காமிரா லென்ஸையே மறைத்து விடுமாம்.

...

சரி அந்தக் காட்சி எது ...

கர்ணன் தன் தாயை சந்திக்கும் மிகப் பிரபலமான காட்சியே.

Dwightvak
4th May 2013, 10:44 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmCrew/CINEMATOGRAPHERRAMAMURTHI_zpsbb08075d.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/OldTamilFilmCrew/CINEMATOGRAPHERRAMAMURTHI_zpsbb08075d.jpg.html)

மேலே உள்ள படத்தில் காணப் படுபவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ், இயக்குநர் ப. நீலகண்டன் இவர்களிடம் ஆஸ்தான அளவிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள். தமிழ்த் திரையுலகில் ஈடு இணையற்ற ஒளிப்பதிவு மேதை எனப் போற்றப் படுபவர். வசதிக்குறைவான அந்தக் கால கட்டத்திலேயே ACTION SEQUENCES எடுப்பதில் நிகரற்று விளங்கியவர். நடிகர் திலகத்தின் படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கது கர்ணன். நேற்று - 03.05.2013 தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய பேட்டி மறு ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்தப் பேட்டியில் இவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் புதியதாகும்.

கர்ணன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி கிட்டத்தட்ட 960 அடிகளுக்கு எடுக்க திட்டமிடப் பட்டதாம். ஒரு யூனிட் பிலிம் 1000 அடிகளாம். அது ஒரு வட்ட டிராலி ஷாட். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதைப் பயன்படுத்துவதிலும் பல நிர்ப்பந்தங்கள். பிலிம் பற்றாக்குறை வேறு. டப்பிங் இல்லாத காரணத்தால் வசனத்தையும் ஒரே டேக்கில் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். குரலும் தெளிவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இப்படி பல்வேறு நிர்ப்பந்தங்களையும் சந்தித்து அந்த காட்சியை படம் பிடித்து முடிக்க நடிகர் திலகம் எடுத்துக் கொண்டது ...

JUST ONE TAKE AND ONE SHOT ...

என்ன மனிதரய்யா இவர் தெய்வப் பிறவி என்றால் இவரன்றோ அதற்கு பொருத்தமானவர்.. தயாரிப்பாளர் தொழில் நுட்பக் கலைஞர்கள் சக கலைஞர்கள் என்று ஒரு லைட்பாயின் கஷ்டத்தைக் கூட உணர்ந்து யாருக்கும் சிரமம் வைக்காமல் தன் தொழிலை தெய்வமாய் மதித்து பணியாற்றிய இவருக்கு ஈடுண்டோ.

இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம் ...

நடிகர் திலகம் உருக்கமாக நடிக்கும் போது ஒளிப்பதிவு செய்வது மிகவும் சிரமம் என்றார். உணர்ச்சி வசப்படாமல் பணியாற்றுவது கடினம் என்றும், ஒளிப்பதிவு செய்யும் போது தம்முடைய கண்களில் கசியும் கண்ணீர் அந்த காமிரா லென்ஸையே மறைத்து விடுமாம்.

...


கர்ணன் தன் தாயை சந்திக்கும் மிகப் பிரபலமான காட்சியே.

நீங்கள் சொன்னவுடன் என் கண்களில் அப்படியே அந்த காட்சி வந்து நின்றுவிட்டது...நடிகர்திலகம் அந்த கேமரா சுழலதொடங்கியதிலிருந்து முடியும் வரை...மிக நேர்த்தியாக அந்த "rotation ஐ, மிகவும் லாவகமாக கையாண்டிருப்பார். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இந்தளவு நேர்த்தி, லாவகம் நிறைந்திருகுமா என்பது சந்தேகமே. ஒரு இடத்தில் அவர் தன் மார்பிலே போர்த்தியிருக்கும் தன் தாயின் பட்டுசேலை வழுக்கி விழுவதுபோல சரியும் ...நடிகர் திலகம் ஒரு 10 டிகிரி காமேரவிர்க்கு தக்க திரும்பும்போதே அதை வசனம் பேசிகொண்டே மிகவும் யதார்த்தமாக அந்த பட்டு சேலையை அதன் ஒரிஜினல் position உக்கு அட்ஜஸ்ட் செய்துவிடுவார் பாருங்கள்....அடேயப்பா ! ஒரு நடிகன் நீண்ட வசனம் பேசுகிறார் அதுவும் ஒரே டேக் இல் எடுக்க எல்லவரும் தயாரானநிலையில் அந்த சேலை சரிந்து விழபோகிறது என்று தெரிந்து அதை காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல், அதே நேரம் பார்பவர்களுக்கு அது அப்பட்டமாக தெரியாமல்இருக்க அதை லாவகமாக சரிசெய்து அதுவும் வசனம் பேசும்போதே எதெல்லாம் செய்கிறார் என்றால்.....அவர் சித்தர் அன்றி வேறு யார் ? நிச்சயம் அவர் திரை உலகின் முழு முதற் கடவுள் கணேச மூர்த்தி தான் ! ஐயமில்லை !

Dwightvak
4th May 2013, 11:01 PM
இதுவன்றோ சாதனை - வசந்த மாளிகை திருநெல்வேலியில் வெள்ளி மற்றும் சனிகிழமை (அதாவது இன்று) ஆறு காட்சிகள் முடிய ருபாய் 87,635 வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
புதிய திரைப்படங்கள் அரங்கு நிறைவு காண தவறி, வசந்தமாளிகை இன்று மாலை காட்சி அரங்கு நிறைவு மற்றும் இரவு காட்சி கிட்டத்தட்ட அரங்கு நிறைவு ஏற்பட்டிருப்பதாக ஊராட்சி ஒன்றிய செயலாளரும் என் இனிய நண்பருமான திரு.குருமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

நாளை மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை இளைஞர் அணி சார்பாக வழங்கபோவதாக அறிவித்துள்ளார்..!

"தொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுற்றுதடா ....ஹா...ஹா....அதில் நான் சகரவர்தியடா ஹே...ஹே....! " - நிரூபித்துவிட்டீர்களே மறுபடியம் ஒருமுறை நடிகர் திலகமே !

Gopal.s
5th May 2013, 04:35 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-21


விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

------To be continued .(தற்போதைய உத்தம புத்திரன் பதிவுகள் 318-3175, 321-3204, 326- 3251, 326-3259)

Gopal.s
5th May 2013, 07:21 AM
இந்த மாதிரி தொடர் எழுத்துக்களை எப்படி index பண்ணி தொகுத்து படிப்பவர்கள் வேலையை சுலபமாக்குவது?திரியிலிருந்து voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.
படிப்பவர்கள் வசதிக்காக-----(இந்தியாவின் ஒரே உலக அதிசயம்- பாகம் 1 இலிருந்து பாகம் 17 வரை.)
பக்கம் - பதிவு எண்
235 2348
235 2349
236 2356
236 2357
236 2358
236 2359
236 2360
237 2364
241 2403
243 2422
245 2441
266 2658
269 2681
271 2704
271 2708
285 2848

Dwightvak
5th May 2013, 02:16 PM
விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !

Gopal.s
5th May 2013, 02:18 PM
விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !
ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பரே.

Dwightvak
5th May 2013, 02:30 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20


விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

----To be continued .

உங்களுடைய நடை நடிகர் திலகத்தின் பல அழகான நடைகளை போல அருமையாக உள்ளது திரு.கோபால் அவர்களே.
அவர் கால்களாலும் நடந்தார் நீங்கள் சொற்களால் மட்டும் நடக்கிறீர்கள்.

உங்கள் அழகு நடைக்கு இந்த அழகு பாடல் பரிசு கோபால் சார் !

http://www.youtube.com/watch?v=q21g7kBJLnA

RAGHAVENDRA
5th May 2013, 03:17 PM
voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.


நண்பர்கள் என்றுமே உதவி என்றால் ஓடி வருவார்கள். அதில் எந்த வித தயக்கமோ சந்தேகமோ இல்லை. அதற்காக இப்படியா..

டியர் கோபால்,
I didn't expect such an arrogant attitude in you. I am very deeply hurt. Your excuse or sorry can not compensate. You are not mending your ways and continue to enjoy hurting other people.
I don't know how Murali Sir takes it. But I can't take it lightly.
இது சுயமரியாதையை பாதிக்கும் விதமான கருத்து. தங்களிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை.
பல முறை கூறியும் தாங்கள் தங்களுடைய பாணியை - மற்றவர்களை கேவலமாக எழுதுவது, மனம் புண்படும் படி எழுதுவது போன்றவற்றை விடுவதாக தெரியவில்லை.
ஆணவமும் மமதையும் ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்பதை காலம் தான் உணர்த்தும்.

தங்களுக்காக அனைத்துப் பதிவுகளின் இணைப்புகளையும் நான் ஒன்று விடாமல் இங்கே பதியும் வகையில் ஒழுங்கு படுத்தி வைத்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் - அதாவது 25 பதிவுகள் வந்தவுடன் மொத்தமாக அந்த இணைப்புகளை கொடுக்கலாம், என்று தாங்கள் கேட்கும் முன்னரே அதற்கான தொகுப்பினை செய்துள்ளேன்.

தங்களுடைய இந்த மாதிரியான தாக்குதல்களும் கிண்டல்களும் எகத்தாளமும் ...

சே....

Dwightvak
5th May 2013, 03:35 PM
நண்பர்கள் என்றுமே உதவி என்றால் ஓடி வருவார்கள். அதில் எந்த வித தயக்கமோ சந்தேகமோ இல்லை. அதற்காக இப்படியா..

டியர் கோபால்,
I didn't expect such an arrogant attitude in you. I am very deeply hurt. Your excuse or sorry can not compensate. You are not mending your ways and continue to enjoy hurting other people.
I don't know how Murali Sir takes it. But I can't take it lightly.
இது சுயமரியாதையை பாதிக்கும் விதமான கருத்து. தங்களிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை.
பல முறை கூறியும் தாங்கள் தங்களுடைய பாணியை - மற்றவர்களை கேவலமாக எழுதுவது, மனம் புண்படும் படி எழுதுவது போன்றவற்றை விடுவதாக தெரியவில்லை.
ஆணவமும் மமதையும் ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்பதை காலம் தான் உணர்த்தும்.

தங்களுக்காக அனைத்துப் பதிவுகளின் இணைப்புகளையும் நான் ஒன்று விடாமல் இங்கே பதியும் வகையில் ஒழுங்கு படுத்தி வைத்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் - அதாவது 25 பதிவுகள் வந்தவுடன் மொத்தமாக அந்த இணைப்புகளை கொடுக்கலாம், என்று தாங்கள் கேட்கும் முன்னரே அதற்கான தொகுப்பினை செய்துள்ளேன்.

தங்களுடைய இந்த மாதிரியான தாக்குதல்களும் கிண்டல்களும் எகத்தாளமும் ...

சே....

திரு ராகவேந்திரன் சார்

நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் திரு.கோபால் சார் பதிவை.

நிச்சயம் அப்படி எழுதியது தவறுதான். மாற்றுக்கருத்து இல்லை. அவர் நய்யாண்டி செய்வதற்கு எழுதினாரா அல்லது தமாஷுக்கு எழுதினாரா அல்லது சீண்டுவதற்கு எழுதினாரா என்று தெரியவில்லை. எதற்கு எழுதினாலும் இந்த இரண்டு வார்த்தைகள் தவிர்த்திருக்கவேண்டிய வார்த்தைகளாகும்.

இனி வரும் காலங்களிலாவது திரு.கோபால் அவர்கள் அஹிம்ச வழியை பின்பற்றுவார் என்று நம்புவோம் !

கட்டபொம்மன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது " நல்லவர்கள் நினைப்பதொன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டிலே !

Gopal.s
5th May 2013, 03:50 PM
திரியில் ரொம்ப நாள் வராததால் திரியிலிருந்து voluntary retirement என்று கிண்டலடித்ததில் arrogance எங்கே வந்தது என்று விளக்குவீர்களா? முரளிக்கு வக்கீலாக உங்களை நியமித்தாரா? அவர் வந்து பேசட்டும்.சாதாரண நகைச்சுவைக்கும் திமிர்தனத்துக்குமுள்ள வித்யாசம் எல்லோருக்கும் புரியும் சார். சாக்கு எங்கே என்று ஏன் அலைகிறீர்கள்?(டும் டும் டும் பட விவேக் ,மாதவனுக்கு against ஆக இப்படித்தான் மணிவண்ணனிடம் build up கொடுப்பார்.)
தொகுத்ததற்கு மிக்க நன்றி. நண்பர்களை சந்தேகிப்பதையும்,அரசியலையும் விட்டு விடுங்கள் சார். நமக்கு அது ஒத்தே வராது.
இப்படிக்கு தங்களால் மறக்க பட்ட
senior hubber

Gopal.s
5th May 2013, 06:07 PM
திரு ராகவேந்திரன் சார்

நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் திரு.கோபால் சார் பதிவை.

தமாஷுக்கு எழுதினாரா - yes.

இனி வரும் காலங்களிலாவது திரு.கோபால் அவர்கள் அஹிம்ச வழியை பின்பற்றுவார் என்று நம்புவோம் !

" நல்லவர்கள் நினைப்பதொன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டிலே !-True.
அய்யய்யோ, தலைவரே,நான் pure vegetarian . ஹிம்சை வழி ஸ்பெல்லிங் கூட உங்கள் அஹிம்சையிலிருந்து அ வை நீக்கிய பிறகே கிடைத்தது!!!! ஏன் நண்பர்கள் மேல் புரிதலும் ,ஜாலியான ,relaxed ஆன atmosphere உருவாகவே இல்லை?

Dwightvak
5th May 2013, 06:50 PM
அய்யய்யோ, தலைவரே,நான் pure vegetarian . ஹிம்சை வழி ஸ்பெல்லிங் கூட உங்கள் அஹிம்சையிலிருந்து அ வை நீக்கிய பிறகே கிடைத்தது!!!! ஏன் நண்பர்கள் மேல் புரிதலும் ,ஜாலியான ,relaxed ஆன atmosphere உருவாகவே இல்லை?

நிச்சயமாக...நீங்கள் கேட்டு அது இல்லாமலா ? இதோ உங்களுக்காக !

ஸ்டைல் சக்ரவர்த்தியின் மௌனம் கலைகிறது ....மயக்கம் தெளிகிறது !

http://www.youtube.com/watch?v=n7Qzz_2u-bQ

JamesFague
5th May 2013, 06:51 PM
Mr Gopal,

Excellent analysis of Mr Vikraman.

Mr SRS,

awaiting your anlaysis on Mr Parthibhan

JamesFague
5th May 2013, 06:54 PM
Mr Raghavendra Sir & Mr Vasudevan Sir,

After a long struggle today only with great difficulty I am entering our
God's Thread. So much has happened for the past 15 days with great
contributios from all the fans.

Regards

Gopal.s
5th May 2013, 07:30 PM
என்னை போல் ஒருவன்- சில நினைவுகள்.(நன்றி சௌரி ராஜன் சார்.)

நான் சென்னை வந்த புதிதில், அனைத்து புது படங்களையும் ஜெமினி colour lab இல் ரிலீஸ் முன்பே பார்த்து விடுவேன். அப்படி நான் நான் பார்த்த படங்களில் ஒன்று என்னை போல் ஒருவன். 1975 இல் Re -Recording செய்யாமல் ஒரு முறையும், செய்த பிறகு இரு முறைகளும் எல்லா projection இலும் பார்த்தேன்.

ராமண்ணா ,இந்த படம் வளரும் போது ,நிறைய சிறு படங்கள் எடுத்து , இந்த படம் லேபில் இருந்து clear பண்ண முடியாத சங்கடத்தில் மாட்டியிருந்தார். (ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் போது இதே தவறை செய்தார்.அவளுக்கென்று ஓர் மனம்,அலைகள், ஒ மஞ்சு என்று). பிறகு இந்த படம் 1978 இல் வந்து நன்றாகவே ஓடியது.(லேப் ரிலீஸ் செய்த ஞாபகம். சென்னையிலும்,வெளியூர் களிலும் வேறு வேறு தினங்களில்) இது வந்திருக்க வேண்டிய 1973/1974 இல் வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு block buster ஆகியிருக்கும்.

சிவாஜி-ராமண்ணா இணைவில் வந்த மிக சிறந்த படம் இதுதான். படு விறுவிறுப்பான neat &clean திரைகதை. சக்தி கிருஷ்ணசாமி வசனங்கள் படு crisp .ராமண்ணா மிக நன்றாக இயக்கி இருப்பார். ஹிட் பாடல்கள். சாரதா,உஷாநந்தினி,ஆலம் (படு cute pair .வேலாலே,மௌனம் இரண்டுமே என் favourite .)மற்றவர் காணாத ஒரு கட் ஆன பாடலை நான் லேப் projection இல் பார்த்தேன். அது கிளைமாக்ஸ் காட்சியில் உஷா நந்தினியுடன் இழு இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் என்கிற ஹிப்பி டான்ஸ்.

சிவாஜியின் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். அம்மாவிற்கு மருந்து,சிகிச்சை பற்றி துச்சமாக பேசி shock குடுப்பார்.(இமேஜ் ஆவது மண்ணாவது, பாத்திரம்தான் எங்கள் தலைவருக்கு).சாரதாவுடன் ஒரு duet வைத்திருக்கலாம்.நல்ல ஜோடி.
ஆள் மாறாட்ட காட்சிகளில் அத கள காமெடி. மாறு வேடங்கள் ரொம்ப (christian father ,electrician ) sensible ஆக கையாள பட்டிருக்கும்.சிவாஜி படு casual ஆக இரண்டு ரோல்களை பண்ணியிருப்பார். பொழுது போக்கு படத்திற்கு உரிய relaxed நடிப்பு. பிரமாதமாய் வந்திருக்கும். ரொம்ப நாள் தயாரிப்பினால் உருவத்தில் கொஞ்ச continuity மிஸ் ஆகும் சில காட்சிகளில் மட்டும். ஆனால் நடிப்பில் consistency காட்டி NT குறை தெரியாமல் கவனித்து கொள்வார். அனாவசிய காமெடி track கிடையாது.படம் படு சுறுசுறுப்பு. ரெண்டு பார்ட் கிளைமாக்ஸ் -ரெண்டுமே விறு விறுப்பு .

என்னுடைய favourite entertainer .

RAGHAVENDRA
5th May 2013, 09:30 PM
மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக மலர்ந்து வரும் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரின் முந்தைய பாகங்களுக்கான இணைப்புகள். இவையனைத்தும் அந்தந்த பதிவுகளுக்கான இணைப்புகள்.

பாகம் – 1 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1029893&viewfull=1#post1029893)
பாகம் – 2 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1029902&viewfull=1#post1029902)
பாகம் – 3 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030270&viewfull=1#post1030270)
பாகம் – 4 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030290&viewfull=1#post1030290)
பாகம் – 5 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030310&viewfull=1#post1030310)
பாகம் – 6 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030314&viewfull=1#post1030314)
பாகம் – 7 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030316&viewfull=1#post1030316)
பாகம் – 8 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1030337&viewfull=1#post1030337)
பாகம் – 9 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031031&viewfull=1#post1031031)
பாகம் – 10 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031493&viewfull=1#post1031493)
பாகம் – 11 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1031675&viewfull=1#post1031675)
பாகம் – 12 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034239&viewfull=1#post1034239)
பாகம் – 13 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034380&viewfull=1#post1034380)
பாகம் – 14 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034387&viewfull=1#post1034387)
பாகம் – 15 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034622&viewfull=1#post1034622)
பாகம் – 16 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1034704&viewfull=1#post1034704)
பாகம் – 17 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1036133&viewfull=1#post1036133)
பாகம் – 18 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039330&viewfull=1#post1039330)
பாகம் – 19 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039438&viewfull=1#post1039438)
பாகம் - 20 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039889&viewfull=1#post1039889)
பாகம் - 21 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039963&viewfull=1#post1039963)

கோபால் சாரின் பட்டியலில் விட்டுப் போன 14, 18, 19, 20, 21ம் பதிவுகளும் இணைக்கப் பட்டுள்ளன. இனி வரும் பதிவுகள் ஒவ்வொரு பத்து பதிவுகள் முடிந்த பின்னும் இணைக்கப் படும்.

RAGHAVENDRA
5th May 2013, 09:33 PM
டியர் சித்தூர் வாசுதேவன் சார்
நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகை. இனி தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம்.

Murali Srinivas
6th May 2013, 01:02 AM
கோபால் அவர்களே,

எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தை அதன் வீரியம் கெடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரத்தில் வழக்கம் போல் உங்கள் விளையாட்டுத்தனம் குறுக்கே வந்து எழுதும் நோக்கத்தை சிதைப்பதை நீங்கள் உணரவில்லையா?

நான் திரியிலிருந்தும் சரி வேறு இடங்களிருந்தும் சரி விருப்ப ஒய்வு எதுவும் பெறவில்லை. இதை உங்களிடம் அலைபேசியிலும் சொன்னேன். நீங்கள் ஒரு தவத்தில் ஈடுபட்டிருக்கீறீர்கள். அதாவது ஹாலிவுட் மற்றும் பல மேலை நாட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எவ்வாறு தங்கள் நடிப்பை வரையறுத்துக் கொள்கிறார்கள் அந்த பாணிகள் ஒவ்வொன்றையும் எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒன்று சேர்த்து இவை அனைத்தையும் நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதை அழகாக தொகுத்து வருகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் பல விஷயங்களும் எனக்கு புதிய செய்திகள் நீங்கள் எழுதுவதைப் பற்றி ஓரளவிற்கு அறிந்தவர் ராகவேந்தர் சார் அவர்கள்.அதனால் அவர் சில inputs கொடுக்கிறார். நண்பர் சாரதியும் நானும் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒன்று குறிப்பிட்டார் அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகர் திலகம் எப்படி நடித்தார் என்பதை எங்களால் எழுத முடியும். ஆனால் அவை எந்த school of acting கீழ் வருகிறது என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு point out பண்ண தெரியாது. அதனால்தான் உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு இடையூறாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் பதிவுகள் இடவில்லை.

நீங்கள் சில நேரத்தில் விளையாட்டாக சில விஷயங்களை கையாள்வதுண்டு. அது சிலரை காயப்படுத்தி விடுகிறது என்பதை தாங்கள் உணர மறுக்கிறீர்கள். இன்று எழுதியதும் அப்படிதான். நான் மீண்டும் பதிவுகள் இட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினீர்கள் என்றால் என் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கலாமே! தேவையில்லாமல் ராகவேந்தர் சார் பெயரை எழுத வேண்டிய அவசியமில்லையே!

எனக்காக ஒன்றை குறிப்பிடுகிறீர்கள் என்றால் என்னை பற்றி மட்டும் சொல்லவும். என்னை சீண்டுவதற்காக இந்த திரியில் வேறு யாரும் எழுதி புகழ் பெறுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூட சொன்னீர்கள். அதை கூட நான் ஆமாம் என்று சிரித்துக் கொண்டேதானே பதிலளித்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்!

இனிமேலாவது இந்த மாதிரி விஷயங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் எழுதுங்கள் எனபதே என் விருப்பம்! நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி இணையதளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கப் போவது உறுதி! அதிலிருந்து கவனம் சிதறி விடாமல் இலக்கை அடைய முன்னேறுங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!

அன்புடன்

Murali Srinivas
6th May 2013, 01:06 AM
கோபால்,

இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பாடல் தொகுப்புகள் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருந்தது! அவற்றில் விக்ரமனும் விஜய்யும் இடம் பெற்றார்கள்.

காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல்! அங்கே பார்த்திபன் அமுதாவிற்காக காத்துக் கொண்டிருக்க இங்கே மகாராணியின் முன் மாட்டிக் கொண்ட அமுதா தன தோழி (ராகினி) கிருஷ்ணர் வேடம் புனைய ராதையாக ஆடும் காட்சி! அந்த காட்சியில் விக்ரமனின் உடல் மொழி! காதல் கனிவு பாசம் போன்ற எந்த பாசாங்கும் இல்லாமல் ஆதி மனிதனின் உடல் சார்ந்த வேட்கையை ஆசனத்தில் அமரும் முறையிலே உணர்த்தி விடும் உடல் மொழி! நான் உங்களிடம் குறிப்பிட்ட ஷாட் அதாவது நம்பியாரின் காதோடு [அவர் தன தாய் மாமன் என்ற உறவு முறையெல்லாம் மறந்து] ஒரு காமம் சார்ந்த என்று நமக்கு தோன்றும் விதம் அடிக்கும் கமண்ட், பத்மினி அலட்சியமாக சுழன்றாட இரண்டு கைகளையும் நாற்காலியின் கைபிடிகளை சற்று அழுத்தமாக பிடித்து காட்டும் gesture, நான்கே நிமிட பாடலில் விக்ரமன் என்ற அந்த கேரக்டர்-ஐ அவர் establish செய்யும் அழகு!

இந்த nuances என்று சொல்லப்படுகிற நடிப்பின் நுண்ணியல்புகளை நீங்கள் எழுதும் விதம் பிரமாதமாக அமைந்திருக்கிறது. அதிலும் இன்றைய பதிவு! தொடருங்கள்.

இரணடாவது காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் பாடல் காட்சி! அதில் spoiled child விஜய் தன மனம் கவர் பெண்ணோடு ஆடி பாடும் காட்சி. பாடலின் இறுதியில் இங்கும் அந்த கதாபாத்திரத்திற்கு சற்றே காமம் தலை தூக்க அவர் நகத்தை கடித்துக் கொண்டே [la Sridhar?] நாயகியை பார்ப்பது, வேறு புறம் பார்ப்பது என்று மாறி மாறி செய்து விட்டு நாயகியை தூக்கி கொண்டு செல்லும் அந்த காட்சி! எத்துனை வித்தியாசம்!

செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு செல்வந்தர் வீட்டு பிள்ளையின் அத்துணை மானரிசங்களையும் வெளிப்படுத்தும் பாங்கு! அந்த convent educated language! வில்லன் ஆட்களால் கட்டி வைக்கப்படும்போது கூட thirstyயாக இருக்குடா! ஐஸ் வாட்டர் கொடுங்கடா என கேட்கும் அந்த பாத்திர தன்மை! அவரால் மட்டுமே முடிந்த ஒன்றல்லவா!

அது போல கண்ணன் பாத்திரத்தை எப்படி ஒரு மிருகமாகவே வார்தெடுத்திருக்கிறார் என்பதை நேர்த்தியாக எழுதியிருந்தீர்கள்! குறிப்பாக தன்னுடன் அன்பாக பேசும் நிம்மியின் கனிவை காதல் என்று தவறாக நினைத்து டாக்டரிடம் காதல் பற்றி சந்தேகம் கேட்க டாக்டர் சொல்லும் ஒதெல்லோ டெஸ்டிமோனா காதல் கதையை கேட்டு விட்டு உணர்ச்சி மிகுதியால் டாக்டரின் கையை நொறுக்குவது போல் அழுந்தப் பிடிப்பது போன்ற உடல் மொழியிலே அந்த பாத்திரத்தை எப்படி பார்வையாளனின் மனதில் பதிய வைக்கிறார்!

சங்கர் எப்படி தன் பணத்தினாலும் வெற்றிகரமான தொழிலதிபர் என்ற அந்தஸ்தினாலும் தன் மேல் எல்லையற்ற அன்பு செலுத்தும் மனைவியினாலும் தன் குறையை அதாவது தன் முக விகாரம் அவன் வாழ்க்கையை பாதிக்காத வகையில் அமைத்துக் கொள்கிறான் என்ற புதிய கோணத்தை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

சங்கர் டாக்டர் ராஜூவை சந்திக்க வரும் காட்சியைப் பற்றியும் சிலாகித்து சொல்லியிருக்கிறீர்கள்! காமிராவிற்கு பதிலாக அவர் கண்களே டாக்டர் படியிறங்கி வருகிறார் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் எனபதை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! ஆனால் இதை அவர் 9 வருடங்களுக்கு முன்பே செய்து விட்டார். 1960-ல் வந்த விடிவெள்ளி படத்தில் கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை பாடல் காட்சியில் இறுதி சரணத்திற்கு முன்னால் வைக்கோல் போர் அமைக்கப்பட்டிருக்கும் பரண் மீது ஏணிப்படி வழியாக சரோஜாதேவி ஏறி செல்கிறார் எனபதை நடிகர் திலகத்தின் கண்கள் வழியாகவே ஸ்ரீதரும் வின்சென்டும் பார்வையாளன் உணரும் வண்ணம் காட்டியிருப்பார்கள்.

இன்னும் இப்படி பலவற்றையும் எழுதலாம்! நேரம் கிடைக்கும்போது அதை செய்வோம்!

அன்புடன்

Murali Srinivas
6th May 2013, 01:09 AM
வாசு அவர்களே,

உத்தம புத்திரன் விளம்பரம் அருமை! நான் ஒரே நாளில் வெளிவந்த இரண்டு விளம்பரங்களையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை. அதை பதிவிட்டதற்கு நன்றிகள் பல!

என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த விளம்பரம் 1956-ல் வெளிவந்தது என்று படித்திருக்கிறேன். அமர தீபம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்த பின் வீனஸ் பிக்சர்ஸ் தங்கள் அடுத்தப் படத்தையும் அதே combination-ல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து படத்திற்கான கதையை தேடியபோது முன்னாட்களில் PU சின்னப்பா அவர்கள் நடிப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான உத்தம புத்திரன் படத்தை மீண்டும் எடுத்தால் என்ன என்று யோசித்து அதை செயல்படுத்தும் நேரத்தில்தான் அதே கதையை எம்.ஜி.ஆர் அவர்களும் எடுக்க இருக்கிறார் என்ற செய்தி வந்து விளம்பரமும் வெளிவந்தது என்று சொல்வார்கள். பின் அவர் அந்த படத்தை drop செய்துவிட்டு நாடோடி மன்னன் எடுத்தார்.

இதுதான் நடந்த உண்மையே தவிர ஸ்ரீதர் முதலில் அவரை வைத்து எடுக்க இருந்தார் என்பதெல்லாம் தவறான தகவல்கள். காரணம் ஸ்ரீதர் அன்று வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரரே தவிர இந்தப் படத்தை பொறுத்தவரை வசனம் மட்டுமே அவர் பொறுப்பில் இருந்தது.இயக்குனர் பிரகாஷ் ராவ் அவர்கள்.

நண்பர் srs எழுப்பிய ஒரு சந்தேகத்திற்கும் ஒரு பதில். நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது 1957-ல். அது முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது 1957 தீபாவளிக்கு வெளிவந்த அம்பிகாபதி படத்தில்தான்.இந்த விளம்பரமோ 1956-ல் வெளிவந்தது. ஆகவேதான் நடிகர் திலகம் என்ற அடைமொழி சேர்க்கப்படவில்லை.

வாசு அவர்களே!

உங்கள் தாம்பத்தியம் பதிவை பற்றியும் குறிப்பிட வேண்டும்! மிக சிறப்பாக அதை கையாண்டிருந்தீர்கள். கருடா சௌக்கியமா, காவல் தெய்வம், துணை போன்ற தங்கள் முத்திரை பதித்த பதிவுகளில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.படத்தை பற்றிய positive எண்ணங்கள் உருவாக்குவதில் மீண்டும் தங்களுக்கு வெற்றி. தொடருங்கள்!

அன்புடன்

Gopal.s
6th May 2013, 05:02 AM
மிக்க நன்றி முரளி. மிக்க நன்றி ராகவேந்தர் சார். நாராயண, நாராயண, நன்மையிலேயே முடிந்தது.

Gopal.s
6th May 2013, 05:18 AM
வாசு அவர்களே,

நண்பர் srs எழுப்பிய ஒரு சந்தேகத்திற்கும் ஒரு பதில். நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது 1957-ல். அது முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது 1957 தீபாவளிக்கு வெளிவந்த அம்பிகாபதி படத்தில்தான்.இந்த விளம்பரமோ 1956-ல் வெளிவந்தது. ஆகவேதான் நடிகர் திலகம் என்ற அடைமொழி சேர்க்கப்படவில்லை.

அன்புடன்
"சிவாஜி" என்பதுதான் அவருக்கு கிடைத்ததிலேயே உன்னத பட்டம். அது அவர் முதல் படத்திலிருந்தே பயன் படுத்த பட்டு வருகிறது. அது ஒரு உன்னத நடிப்பின் brand name ஆகவே 1952 முதல் பயன் படுத்த பட்டு வருகிறது. இன்றும் கூட ஏதாவது உணர்ச்சியை வெளியிட முயல்வோரை பார்த்து, இவர் பெரிய சிவாஜி என்று சொல்லும் வகை உள்ளது. இது என் நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை அப்படியே.

Gopal.s
6th May 2013, 05:27 AM
கோபால் அவர்களே,

எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தை அதன் வீரியம் கெடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரத்தில் வழக்கம் போல் உங்கள் விளையாட்டுத்தனம் குறுக்கே வந்து எழுதும் நோக்கத்தை சிதைப்பதை நீங்கள் உணரவில்லையா?



இனிமேலாவது இந்த மாதிரி விஷயங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் எழுதுங்கள் எனபதே என் விருப்பம்! நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி இணையதளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கப் போவது உறுதி! அதிலிருந்து கவனம் சிதறி விடாமல் இலக்கை அடைய முன்னேறுங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!

அன்புடன்
அதாவது, பெயரை குறிப்பிடாமல் insult செய்யும் முறையே மிக சிறந்தது என்று குறிப்பிடுகிரீர்கள். அந்த அளவு தேர்ச்சி பெற நான் இன்னும் வளர வேண்டும்.

goldstar
6th May 2013, 06:08 AM
இதுவன்றோ சாதனை - வசந்த மாளிகை திருநெல்வேலியில் வெள்ளி மற்றும் சனிகிழமை (அதாவது இன்று) ஆறு காட்சிகள் முடிய ருபாய் 87,635 வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
புதிய திரைப்படங்கள் அரங்கு நிறைவு காண தவறி, வசந்தமாளிகை இன்று மாலை காட்சி அரங்கு நிறைவு மற்றும் இரவு காட்சி கிட்டத்தட்ட அரங்கு நிறைவு ஏற்பட்டிருப்பதாக ஊராட்சி ஒன்றிய செயலாளரும் என் இனிய நண்பருமான திரு.குருமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

நாளை மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை இளைஞர் அணி சார்பாக வழங்கபோவதாக அறிவித்துள்ளார்..!

"தொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுற்றுதடா ....ஹா...ஹா....அதில் நான் சகரவர்தியடா ஹே...ஹே....! " - நிரூபித்துவிட்டீர்களே மறுபடியம் ஒருமுறை நடிகர் திலகமே !

ஆறு காட்சிகளில் பல படக்களின் ஒரு வார வசூலை வசந்த மாளிகை முறியடித்து திருநெல்வேலியில், இதே வசந்த மாளிகை மதுரை சரஸ்வதி திரை அரங்கில் ஒரே நாளில் பல பழைய படக்களின் ஒரு வார வசூலை முறியடித்து, அப்போதும் இப்போதும் இனி எப்போதும் வசூல் சக்கரவர்த்தி நிலை நாட்டும் நடிகர் திலகமே உன்னை வணக்குகிறோம்

Gopal.s
6th May 2013, 08:44 AM
அட ,இப்போதுதான் கவனித்தேன். dolphin show க்களில், பிரமாதமாக perform பண்ணி விட்டு வரும் dolphin க்கு encourage செய்ய (conditional response ) ஒரு மீன் கொடுப்பார் trainer . அதை போல் சில நண்பர்கள் நான் நன்றாக perform செய்தால் சிவாஜி-வாணிஸ்ரீ சம்பந்த பட்ட ஒரு பாடல் காட்சி கொடுத்து மேலும் நன்றாக perform செய்ய தூண்டுகிறார்கள்.

goldstar
6th May 2013, 09:47 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQAVC2iiLOJI3dPvTD3tvz_Q91kD9svA y2iKzfje3_NIg4n5cNn

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQn-AaIrmZU-E4QMwNLNcz9pnfI6D0DAJMykj0msCtLcAQTOfC9

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJJ68EE2WamhYIbJNvFul77v1W53J5c 5LoNHmh4pANIjQRoaKA

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSP90N47uRQpcKCDs3jO2X0FBRVAopuh p2U1T_rIjM0pq9tZwvQ_Q

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcR05Q7NwK4-TJGmWfeHsMrEKfV7SBD2stdlMXG5PEoq8KZnexhKxQ

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRhFE9VfFnLog4_JaaC6v11ojdgQBcdO 5nezbjPnEKPVAIz21JJ

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSv2MGRvedYRVvt4Eflzy-YwiSB9yJULTdV2AkFuauF0zyYva0Oew

Gopal.s
6th May 2013, 10:50 AM
சத்தியமாய் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த தற்செயல் ராகவேந்தர் சார். முரளியை சீண்டியும், தங்களுடன் நிஜமாகவே உதவி கோரியும் போட பட்ட பதிவுதான் அது. நான் தங்களை முதல் இரண்டு வரிகளுடன் தொடர்பு படுத்தி போடவில்லை. இம்முறை ,நிஜமாகவே நான் அப்பாவிதான்.
உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி சார்.

JamesFague
6th May 2013, 12:40 PM
Welcome Mr Murali sir after a long time.

Ennai Pol Oruvan - watched at Devi Paradise during my brother's wedding with
brother's friends. First time watched the movie in Devi Paradise. Nice experience
watching this entertainer at Devi Paradise.

Dwightvak
6th May 2013, 02:36 PM
அட ,இப்போதுதான் கவனித்தேன். dolphin show க்களில், பிரமாதமாக perform பண்ணி விட்டு வரும் dolphin க்கு encourage செய்ய (conditional response ) ஒரு மீன் கொடுப்பார் trainer . அதை போல் சில நண்பர்கள் நான் நன்றாக perform செய்தால் சிவாஜி-வாணிஸ்ரீ சம்பந்த பட்ட ஒரு பாடல் காட்சி கொடுத்து மேலும் நன்றாக perform செய்ய தூண்டுகிறார்கள்.

"சில " அல்ல "ஒரு" திரு கோபால் அவர்களே !

வாழ்கையில் அனைவருக்குமே ஒரு ஊக்கம் தேவை. ஊக்கம் என்பது உந்துதலுக்கு பெரிய சக்தியாக விளங்கும். ஊக்கம் இல்லையென்றால் தூக்கம் தானே வரும் ?

தங்களுடைய கட்டுரைகளை படித்து உண்மையிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களை தருகிறேன். நீங்கள் எழுதுவதே இவ்வளவு அருமையாக இருக்கிறதென்றால், அதனுடன் சேர்த்து காட்சிகளையும் இடுகை செய்தால் ? அப்பப்பா ! நினைத்தவுடன் புளகாங்கிதம் அடையசெய்கிறது !

இதோ பிடியுங்கள் இன்னொரு ஊக்க சக்தி !

http://www.youtube.com/watch?v=LUPOjuYD_hQ

Gopal.s
6th May 2013, 02:49 PM
ஆஹா ! அண்ணே!என் உதடே வலிக்குமளவு வலுவான பதிவு!!!

KCSHEKAR
6th May 2013, 02:55 PM
திரு. கோபால் அவர்களே,

(அத்தனை பாகங்களையும் இணைப்பாக அளித்து உதவிய ராகவேந்திரன் சாருக்கு முதலில் நன்றிகள்.)

தங்களுடைய இந்தியாவின் ஒரே உலக அதிசயம் - ஆய்வுக் கட்டுரையின் சிலவற்றை படிக்க இயலாமல் போய்விட்டது. தற்போது மொத்தமாகப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. இதனை ஒரு புத்தக வடிவில் தந்தால் ஒவ்வொரு ரசிகனுக்கும் உபயோகமாக இருக்கும்.

தொடருங்கள் உங்கள் ஆய்வுக் கட்டுரையை - ஆவலுடன் காதிருக்கிறோம் - ரசிப்பதற்கு.

Dwightvak
6th May 2013, 03:26 PM
கடினமான காலகட்டமும் நடிகர் திலகம் திரைப்படங்களும்

முதல் திரைபடதிலயே இதை சந்தித்ததாலோ என்னவோ, ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகளை தன் திரைப்படம் வெளிவரும்போது நம்முடைய நடிகர் திலகம் சந்தித்திருக்கிறார்.

50 துகளில் பராசக்தி என்றால் 60 துகளில் திருவிளையாடல் திரைப்படத்தை சொல்லலாம்.70 களில் பெருந்தலைவரின் மறைவிற்கு பிறகு திராவிட கட்சிகளின் வன்முறை ஆதிக்யத்தால் மாறியஅரசியல் சூழல் இப்படி பல சவால்களையும் துரோகங்களையும் நம் நடிகர் திலகம் துணிவுடன் சந்தித்து அவற்றை வென்றுகாட்டியும் உள்ளார்.

1965 பொறுத்தவரை " திருவிளையாடல் " வருடம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றி நடிகர் திலகத்தின் திருவிளையாடல் பெற்றது ! இந்திய திரைஉலகில் தமிழ் திரை உலகின் "Mythological Subject " மற்ற திரை உலகினரை மீண்டும் ஒருமறை திரும்பிபார்க்க வைத்த திரைப்படம் திருவிளையாடல்.

மிகவும் சுலபமாக கிடைத்த வெற்றி அல்ல அது. நடிகர் திலகதிற்கு பல சவால்கள் திரைத்துறையில் அரசியல்வாதிகளால் தமிழ்திரைஉலகில் கலகங்களை விளைவித்த நேரம்.

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் திருவிளையாடல் இந்த வெற்றியை பெற்றது என்பதை உற்று நோக்கினால் அதன் வெற்றியின் பிரம்மாண்டம் புரியும்.

1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சியையும் அதை சேர்ந்தவர்களையும் வெறுக்கும்படி திராவிட கட்சிகளால் மக்கள் தூண்டி விடப்பட்டிருந்தனர்.

கடவுள் மறுப்பு கொள்கை திராவிட கட்சிகளால் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட நேரம். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும்

பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று செப்டம்பர் மாதம் நடந்தது

1965 - செப்டெம்பரில் இந்திய - பாகிஸ்தான் போர் மூண்டது. குஜராத்தின் கட்ச் பகுதி வழியாகவும், பஞ்சாபின் வாகா எல்லை வழியாகவும் பாகிஸ்தான் படைகள் அத்து மீறி உள்ளே நுழைந்து நம்மை தாக்கியது. இந்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது.

பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு நேரங்களில் Black out என்று சொல்லப்படும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறை எல்லா நகரங்களிலும் தமிழகம் உட்பட அமுல்படுத்தப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் எச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்கள் இந்த முறை இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதும் (முன் இரவுகளிலும், இரவுகளிலும் மக்கள் வெளியே வர தயக்கம் கொண்டிருந்த காலத்தில்) திருவிளையாடல் பெற்ற வெற்றி ஒரு வரலாற்று சாதனையாகும்

ஈசனாக தோன்றிய நடிகர் திலகத்தின் திருவிளையாடல் திரைப்படம் நிகழ்த்திய சாதனைகளில் சில துளிகள் அனைவரின் பார்வைக்கும் ! - COURTESY : Mr.Pammalar & Mr.Murali Srinivas

1. முதன் முதலாக 1 கோடிக்கு மேல் வசூல் செய்த புராண படம் - திருவிளையாடல்.

2. முதன் முதலாக தமிழகத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த புராண படம் - திருவிளையாடல்.

3. முதன் முதலாக சென்னையில் 3 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் புராண படம் - திருவிளையாடல்

4. மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் 100 நாட்களில் தினம் ஒரு முறை வீதம் 100 முறை பார்த்த ஒரு வயதான பாட்டியம்மாளுக்கு 100-வது நாளன்று பரிசு வழங்கப்பட்டது, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த செய்தியாகும்.

மதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 167

மொத்த வசூல் - Rs 3,54,457.53 p

அத்திரையரங்கத்தின் முந்தைய சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது.

10. அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போன்று சென்னையில் திருவிளையாடல் நிகழ்த்திய சாதனை.

சென்னை அரங்குகள் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி

மொத்தம் ஓடிய நாட்கள் - 537

மொத்த வசூல் - Rs 13,82,002.91 p

பார்த்த மக்கள் - 11,02,567

சென்னையின் முந்தைய ரிக்கார்ட்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

Gopal.s
6th May 2013, 03:45 PM
மிக சரியான பதிவு. 1965 இல் நடந்தது தெய்வத்தின் திருவிளையாடலே.

IliFiSRurdy
6th May 2013, 03:52 PM
நடிகர் திலகம் உலகின் தலை சிறந்த நடிகர்களில் தலைசிறந்தவர் என்ற ஒற்றை வாக்கியத்தை தமிழனாய் பிறந்த எவரும் சொல்லிவிடலாம்.ஆனால் அது எவ்வாறு என, ஒரு இருபதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் மூலம் ஆயிரம் வாக்கியங்களில் ஆணித்தரமாக நிரூபிக்க நண்பர் கோபால் ஒருவரால்தான் முடியும்.அதேபோல அவைகளை இவ்வளவு அழகாக index செய்ய நண்பர் ராகவேந்தர் ஒருவரால்தான் முடியும்.இருவருக்கும் என் நன்றி.


மேலும் பல பள்ளிகளைப்பற்றி எழுதி நம்மை மிரளவைத்த கோபால் இப்பொழுது உத்தம புத்திரனாக மாறி சற்றே இரங்கி அனைவருக்கும் படிக்க இலகுவாக எழுதியுள்ளது வரவேற்கத்தக்கது.

சுமார் 55 ஆண்டுகள் கடந்த ஒரு திரைப்படம்.இரட்டை வேடம் என்பது ஒரு technical excellence ஆக மட்டுமே கருதப்பட்டு வந்த ஒரு. கால கட்டம்.இரட்டை வேடம் என்றால் ஒரு வேடதாரி,மற்றவரிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்த நுனி விரலால் மூக்கை திருப்பி சொடுக்கினால் போதும் என மக்கள் நம்பியிருந்த காலம்.
அப்பொழுது சிலம்பாட வருகிறார் தலைவர்.இரண்டு பாத்திரங்களுக்கும் இருக்கும் மனோரீதியான வேறுபாட்டை உடல் மொழியால் விளக்குகிறார்.தமிழ் ரசிகர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.Technical excellence என்பது மாறி,artistic excellence என ஆகிறது.

நண்பர் கோபால் இவ்வளவு விளக்கிய பின் மீண்டும் அதை விவரிப்பது தேவையில்லாதது.
இருப்பினும் ஒன்று. ஹெலன் நாட்டியத்திற்கு விக்கிரமன் கைத்தட்டும் விதமே அதுவரை இந்திய திரைப்பட உலகம் கண்டிராதது.

உல்லாசம்+சுயநலம்+பயம்+அலட்சியம் இவைகளை வெவேறு அளவில் கலந்து நம்மை மெய்மறக்க செய்வார்.
பிற்பாடு பார்த்திபன், விக்கிரமனாக வரும்போது கூட,நடையுடை பாவனைகளில் சில தவறுகள் மூலம் தான் பார்த்திபன் என்பதையும் நுணுக்கமாக காட்டியிருப்பார்.

இன்று இருக்கும் தொழிற்நுட்ப அசுர வளர்ச்சியில் வானில் பறப்பது சாதாரணமாகி விட்டாலும் அந்த ரைட் சகோதரர்கள் முதலில் வானில் பறந்த நிகழ்விற்கு ஒப்பாகும் உத்தம புத்திரன் அளித்த இரட்டை வேடம்.

கால்,அரை,ஒன்று,இரண்டு,மூன்று,ஒன்பது ஆகிய அனைத்து வேடங்களுக்கும் அரசர் தலைவர்.

RAGHAVENDRA
6th May 2013, 04:44 PM
சூப்பர் சௌத்ரி ... சாரி சௌரி ...

திருவிளையாடல் பெற்ற வெற்றிக்குப் பின்னால் இருந்த சூழ்நிலையை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.

அந்த கால கட்டம் உண்மையிலேயே மிகவும் திராவிட மயமாக இருந்த கால கட்டமாகும். என்றைக்கு தேர்தல் வைத்தாலும் அவர்கள் வெற்றி உறுதி என்று முன் கூட்டியே மக்கள் நிர்ணயிக்கும் அளவிற்கு காங்கிரஸ் மக்கள் வெறுப்பை சம்பாதித்திருந்த நேரம். போதாக் குறைக்கு போர் வேறு. தேச பக்தி என்பதையும் மீறி மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேர்ந்த கஷ்டங்களே கண்முன் நின்று வாக்களிக்கும் தேர்வை நிர்ணயம் செய்த நேரம். இப்படி பல்முனைத் தாக்குதல்களில் காங்கிரஸ் தட்டுத் தடுமாறி தமிழகத்தில் தன் பெயரை இழந்து வந்தது. இந்த எதிர்ப்பலையில் பெருந்தலைவரும் தப்பவில்லை என்பது அந்த தேர்தலில் நிரூபணமாயிற்று.

இத்தனையும் தாண்டி அந்தத் தேர்தலில் - தமிழகத்தின் தலைவிதியை மாற்றிய 1967 தேர்தலில் - தமிழகத்தைப் பொறுத்த மட்டில் காங்கிரஸ் மானத்தோடு தப்பித்ததற்கு ஒரே காரணம் -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

ஒரே சமயத்தில் இறை பக்தியையும் தேச பக்தியையும் மக்களிடம் கொண்டு சென்று அதற்கு தன் படங்களைத் துணைக் கொண்டு தமிழக மக்களிடம் விழிப்புணர்வூட்டியவர் நடிகர் திலகம். ஒரு பக்கம் திருவிளையாடல் இறை பக்தியை ஊட்டியது என்றால் மறுபக்கம் ரத்த திலகம் மற்றும் தாயே உனக்காக படங்கள் தேச பக்தியை ஊட்டும் பணியை மேற்கொண்டன.

1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து திராவிட இயக்கம் வேரூன்ற வழி வகை செய்ததற்குக் காரணம் - எதிர்ப்பு அலையே அன்றி வேறல்ல. அரிசி பற்றாக்குறை, வாரத்திற்கு ஒரு முறை அரிசியை சாப்பிடாமல் கோதுமை சாப்பிடுங்கள் என செய்யப் பட்ட பிரச்சாரம், மற்றொரு பக்கம் இருக்கும் அரிசியை பலமடங்கு விலையை உயர்த்தி விற்றவர்களின் ராஜ்ஜியம் என்பன போன்ற காரணங்களால் அன்று கவிழ்ந்த தேசிய இயக்கம், இன்று வரை தமிழகத்தில் எழவில்லை.

இருந்தாலும் அந்த எதிர்ப்புகளை மிகவும் ஆழமாக ஊடுருவாமல் பார்த்துக் கொண்டு காங்கிரஸின் மானம் காத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்படிப் பட்ட சூழ்நிலையில் தான் திருவிளையாடல் படத்தின் வெற்றி பார்க்க பட வேண்டும்.

சிறந்த முறையில் திருவிளையாடல் படத்தின் வெற்றியைப் பற்றி எழுதிய சௌரி சார் மீண்டும் என் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
6th May 2013, 04:53 PM
சத்தியமாய் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த தற்செயல் ராகவேந்தர் சார். முரளியை சீண்டியும், தங்களுடன் நிஜமாகவே உதவி கோரியும் போட பட்ட பதிவுதான் அது. நான் தங்களை முதல் இரண்டு வரிகளுடன் தொடர்பு படுத்தி போடவில்லை. இம்முறை ,நிஜமாகவே நான் அப்பாவிதான்.
உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி சார்.

நன்றியெல்லாம் எதற்கு சார். எல்லோருக்கும் பயன் பட வேண்டும், அது எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பது தான் நோக்கம்.

தாங்கள் இனி எம்முறையும் அப்பாவியாகவே இருங்கள். நடுவில் ட போட வைத்து விட வேண்டாம் என்பது தான் என் ஆசை.

Jokes apart, let's be serious in our business. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் பல காதங்கள் உள்ளன. இன்னும் 100 பாகங்கள் நமக்கு ஒதுக்கினாலும் போதாத அளவிற்கு நடிகர் திலகத்தைப் பற்றி நமக்கு விஷயங்கள் உள்ளன. இனி முழுமையாக தாங்கள் தங்கள் ஆய்வினைத் தொடர்ந்து எழுதுங்கள். அனைவரும் வந்து இணைந்து கொள்வார்கள். தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நம்மிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விஷய தாகத்தையும் உண்டாக்கும். எனவே தங்கள் பணியைத் தொடருங்கள். தங்களுடைய நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ளவும் நடிகர் திலகமே வழி வகுப்பார். அவருடைய படங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும்.

அனைவரைப் போல் தங்கள் ஆய்வுக் கட்டுரையை மேலும் மேலும் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
6th May 2013, 04:54 PM
தங்கள் பாராட்டிற்கு நன்றி, சந்திரசேகர் சார்.

RAGHAVENDRA
6th May 2013, 04:58 PM
கண்பத் சார்,
யாரடி நீ மோகினி பாட்டில் கைதட்டும் ஸ்டைல் புதுமையானது. தாங்கள் கூறியுள்ளது போல் தவறு செய்ய வேண்டும் என்று தெரிந்த செய்ய வேண்டிய சூழ்நிலையை தானாகவே அந்தப் பாத்திரத்தில் புகுத்தி விக்ரமன் பார்த்திபனாக வரும் போதும், பார்த்திபன் விக்ரமனாக வரும் போதும் நிரூபித்திருப்பார் நடிகர் திலகம். சரியாக செய்து பழக்கப் பட்டவர்களுக்கு தவறு செய்ய வராது. இந்த எச்சரிக்கை உணர்வைக் கடைப் பிடித்து மிக ஜாக்கிரதையாக ஆள் மாறாட்ட காட்சிகளில் தவறு செய்து மக்களுக்கு உணர்த்தும் சாமர்த்தியம் நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

eehaiupehazij
6th May 2013, 08:49 PM
The uniqueness of this milestone movie of NT Uththamapuththiran is that NT has not only proved his prowess in differentiating the two contradicting roles without much changes in the get up but also keeping the viewers to get enthralled by making them to believe that Parthiban acts as Vikraman and Vikraman acts as Parthiban! The minute differences and purposeful mistakes..... no other actor of this world has ever revealed. In Prisoner of Zenda, the original of Nadodi Mannan (inspired by both versions by Ronald Coleman and Stewart Granger in their own styles, they too differentiate but sometime we get confused). Showing a simple difference of Nose rubbing or putting a small beard won't create the impact. The labour and pain putforth by NT has only made this movie an immortal saga and evergreen celluloid magic till today. PU Chinnappa's version lacks lustre though that movie was a forerunner.

eehaiupehazij
6th May 2013, 08:55 PM
The song sequence 'un azhagai kanniyargal....' needs a special mention. NT as the drunkard prince, following Padmini with lot of leg jerks and facial expressions depicting a drunkard ... a totally different atmosphere till the end of the song!

Murali Srinivas
6th May 2013, 11:21 PM
கோபால்,

நான் முன்னரே சொன்ன மாதிரி நீங்கள் என் பதிவுகளை வைத்துக் கொண்டு எத்துனை வார்த்தை ஜால விளையாட்டுகளை விளையாடினாலும் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. நான் ரசிக்கவே செய்வேன். வீண் விவாதங்கள் இல்லாமல் தொடர் தொடர்ந்தால் நன்று.

நன்றி சித்தூர் வாசுதேவன் அவர்களே!

எனது சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொடரில் திருவிளையாடல் வெளியான காலக்கட்டத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள் பதிவு செய்தது மட்டுமல்ல அதற்காக எனக்கு நன்றியையும் தெரிவித்த srs அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றி.

அன்புடன்

Gopal.s
7th May 2013, 06:56 AM
தங்களுடைய நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ளவும் நடிகர் திலகமே வழி வகுப்பார். அவருடைய படங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும்.


மாமா,
அப்படியும் சில படங்கள் உண்டுதானே?
யோசிக்க வேண்டிய விஷயம்.
ம்ஹும்...அடியோடு மறந்து விட வேண்டிய விஷயம்.

RAGHAVENDRA
7th May 2013, 06:59 AM
டியர் சௌரிராஜன்
இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.

இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பயனற்ற பதிவுகள் என்று ஆவணங்களையும் நிழற்படங்களையும் கிண்டலடித்தவர்களும் உண்டு. அவற்றின் மகிமை தெரியாமல் மேம்போக்காக கேலி செய்தது மட்டுமின்றி இங்கு அவை இடம் பெறக் கூடாதென்பதற்கும் முயற்சிகள் நடந்தன. இதற்காக தனித்திரி துவங்கப் பட்டு பம்மலார் தன் பணியினை ஆற்றி வந்தார். அவர் வருகையில்லாமல் இப்போது அத்திரி முடக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் தங்களிடம் கூறுவதற்குக் காரணம், எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டு இந்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தங்களுக்கு உணர்த்தவே.

திருவிளையாடல் பதிவினைப் பொறுத்த வரை தங்களுக்கு நான் பாராட்டுத் தெரிவித்ததற்குக் காரணம் ... [பொதுவாக அனைத்து நண்பர்களின் பதிவுகளுக்குமே நான் பாராட்டுக் கூறாமல் இருக்க மாட்டேன் ...] தாங்கள் அதனைக் கூற முன் வந்த விதமே.

நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன் [QUOTE] என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.

அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.

Gopal.s
7th May 2013, 07:00 AM
ஹ்ஹ... எங்கே பார்த்திபன்? என் பராக்கிரமம் கண்டு ஒளிந்து கொண்டு விட்டான். அவன் அரசாட்சி பெற கூட என்னை மாதிரி வேடமிட்டு வந்தால்தான் முடியும்.
வெளியில் வா......
-----விக்ரமன்.

Gopal.s
7th May 2013, 07:08 AM
டியர் சௌரிராஜன்
இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.

இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன் [QUOTE] என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.

அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.
ராகவேந்தர் சார்,
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. முரளி, பம்மலார்,வாசு ,நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தங்க நாற்கர சாலை போட்டு கொடுத்ததால்தான் ,இன்று நாங்கள் Benz கார் இல் உலா வருகிறோம். உங்களின் பணி போற்ற தக்கது. உங்கள் இணைய தளம் ,உங்கள் கொடியை என்றுமே தூக்கி பிடிக்கும்.

goldstar
7th May 2013, 07:08 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5PJHh7CuXC6yT2t0ak5DW9Hh0wjjP1 VC0f7pMNFlVjPpWR-HaUg

http://img242.imageshack.us/img242/4556/snapshot20090303142020.jpg

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSNIdCw10nbFvv3x8lkvs4ry7ofgblC5 RQE_z35k-GjvV83DuMR

http://ecx.images-amazon.com/images/I/41cuqewz2xL._AA300_.jpg

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/nadigar-thilagam/nadigar-thilagam-04.jpg

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSe2nmJ3c2pjoZCbyzIFTDMsB2Jv6PP0 hOch2FMUh0UVEjfp69Z

http://www.behindwoods.com/hindi-tamil-galleries/veerapandiya-kattabomman/veerapandiya-kattabomman-17.jpg

http://i45.tinypic.com/cj60o.jpg

http://4.bp.blogspot.com/-24uNdxTI2z4/UNN-sjtQY6I/AAAAAAAAIDQ/xuhuYzf6SCs/s640/22.jpg

Gopal.s
7th May 2013, 07:18 AM
கோபால்,

நான் முன்னரே சொன்ன மாதிரி நீங்கள் என் பதிவுகளை வைத்துக் கொண்டு எத்துனை வார்த்தை ஜால விளையாட்டுகளை விளையாடினாலும் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. நான் ரசிக்கவே செய்வேன். வீண் விவாதங்கள் இல்லாமல் தொடர் தொடர்ந்தால் நன்று.

அன்புடன்
முரளி சார்,
நான் நடிகர் திலகத்தை தொழுபவன். அதனால்தானோ என்னவோ, அவரின் இயல்பான , வார்த்தையில் தேனாக பேசாமல், செயலில் தேனாக இனிப்பவனாக தொடருகிறேன்.(not sweet by words but sweet by deeds ). எனக்கு அகந்தை,மமதை என்றெல்லாம் துளியும் இல்லை. நகைச்சுவை பிடிக்கும்.செல்லமாக, நான் நட்பு வட்டம் என்று நினைப்பவற்றை சீண்ட பிடிக்கும்.
ஙொ ப்புரானே அம்புடுதேன்.

RAGHAVENDRA
7th May 2013, 07:25 AM
Dear Sathish Sir,
அருமையான நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறீர்கள். நடிகர் திலகத்தின் ஒவ்வொரு புகைப்படத்திலும் கோபால் சார் ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவார். நம்முடையை திரியினைப் பொறுத்த வரை விஷயங்கள் தகவல்கள் கருத்துக்கட்டுரைகள் ஏராளமாக இன்னம் இடம் பெற உள்ளன. இதில் குறிப்பிடத் தக்க ஒரு அம்சம் என்னென்றால், பல இணைய தளங்களில் தற்காலத்தில் இடம் பெறும் நடிகர் திலகத்தின் நிழற்படங்களில் பெரும்பாலானவை நம்முடைய மய்யத்தில் நம் நண்பர்கள் பதிவு செய்வதே ஆகும். எனவே தாங்கள் பகிர்ந்து கொள்பவற்றில் கூட அவ்வாறு முன்பே இங்கு இடம் பெற்றவை இருக்கலாம். எனவே இங்கு இது வரை இடம் பெறாத அபூர்வ படங்களைத் தேடிப் பிடித்து நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

AS FAR AS POSSIBLE LET US AVOID REPETITION UNLESS REQUIRED FOR PURPOSE OF QUOTES.

நம்முடைய அபூர்வ நிழற்படங்கள் வரிசையில் இடம் பெறுபவை இது வரை இணையத்தில் வராமல் நம்முடைய திரியின் மூலம் உலகிற்கு அறிமுகம் ஆகின்றன. அந்த வரிசையில் மற்றொன்று.

சித்ராலயா சார்பில் துளசி என்றொரு படத்திற்கு ஸ்ரீதர் பூஜை போட்டார். அப்படத்தை நடிகர் திலகம் துவக்கி வைத்தார். அப்போது எடுக்கப் பட்ட நிழற்படம். பொம்மை மாத இதழிலிருந்து. இது வரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது நமக்காக, நம் பார்வைக்காக.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/THULASILAUNCHNTfw_zps14ec8f7a.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/THULASILAUNCHNTfw_zps14ec8f7a.jpg.html)

RAGHAVENDRA
7th May 2013, 07:29 AM
ராகவேந்தர் சார்,
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. முரளி, பம்மலார்,வாசு ,நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தங்க நாற்கர சாலை போட்டு கொடுத்ததால்தான் ,இன்று நாங்கள் Benz கார் இல் உலா வருகிறோம். உங்களின் பணி போற்ற தக்கது. உங்கள் இணைய தளம் ,உங்கள் கொடியை என்றுமே தூக்கி பிடிக்கும்.


மிக்க நன்றி கோபால் சார். நம்முடைய.... நடிகர் திலகம் இணைய தளம்... நடிகர் திலகத்தின் கொடியைத் தான் தூக்கிப் பிடிக்கும். தங்களைப் போன்ற அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே. இந்தப் பெருமையெல்லாம் ... தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்.

Gopal.s
7th May 2013, 08:13 AM
பார்த்தசாரதி சார்,
தங்கள் ஆலோசனையின் படி, page 321 பதிவு 3204 இல். குரலையும் சேர்த்து விட்டேன். திருப்தி தானே?

Gopal.s
7th May 2013, 08:30 AM
ரசிகர்கள் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. நான் மிக மிக ரசித்தது நடிகர்திலகம் ஹோட்டல் இல் பாரதியை சந்திக்கும் இடம்.(தங்க சுரங்கம்) காத்திருக்கிறேன் என்று குறிக்க கதவை செல்லமாக ஒரு தட்டு.அவருடைய கையசைவுகள், stylish சேட்டைகள் ரொம்ப ஜாலி ஆக இருக்கும். glouse ஊதும் அழகு ஒன்றே போதும். casual jolly நடிப்பிலும் எங்கள் நடிகர்திலகம் கொடிதான் .

IliFiSRurdy
7th May 2013, 08:34 AM
மிக்க நன்றி கோபால் சார். நம்முடைய.... நடிகர் திலகம் இணைய தளம்... நடிகர் திலகத்தின் கொடியைத் தான் தூக்கிப் பிடிக்கும். தங்களைப் போன்ற அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே. இந்தப் பெருமையெல்லாம் ... தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்.

ராகவேந்தர் சார்!
திருத்தம்.
தங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும் என்பதை
நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களைத் தான் சேரும்
என மாற்றிவிடுங்கள்.:-d

மற்றபடி உங்கள் பாராட்டுதல்களுக்கு (#3294) மிக்க நன்றி

adiram
7th May 2013, 10:19 AM
டியர் சௌரிராஜன்
நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன் [QUOTE] என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.


Mr. Raghavendar sir,

exactly you told what I want to tell. When I started reading Thiruvilaiyaadal achievements, on the first line itself I fount out it is the one which our Murali sir wrote in 'Sivajiyin saadhanai sigarangal' thread. Every line of our Murali sir's posts are 'manappaadam' for our fans.

KCSHEKAR
7th May 2013, 11:00 AM
Dear Sowrirajan Sir,

Your Post about Thiruvilaiyadal is very nice.

Thanks

Georgevob
7th May 2013, 02:08 PM
ஹ்ஹ... எங்கே பார்த்திபன்? என் பராக்கிரமம் கண்டு ஒளிந்து கொண்டு விட்டான். அவன் அரசாட்சி பெற கூட என்னை மாதிரி வேடமிட்டு வந்தால்தான் முடியும்.
வெளியில் வா......
-----விக்ரமன்.

Sir,

எந்த படம் என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்கும்படியான ஒரு காமெடி காட்சி. திரு.கௌண்டமணி அவர்களிடம் திரு செந்தில் வழக்கம் போல பித்தலாட்டம் செய்வார்..அதை திரு.கௌண்டமணி அவர்கள் சவுக்கால் அடித்து உண்மையை திரு.செந்தில் வாயால் வரவழைப்பார்..பின்பு தான் முக்கியமான காட்சி...அவர் கூறுவார்..."மவனே ஸவுகெடுத்தாதான் பாதி பேருக்கு நாட்ல புத்தியே வருது என்பார். காட்சி நகைச்சுவைக்காக எடுத்தது என்றாலும் அந்த பஞ்ச் வாஸ்தவமான பேச்சு -

என்னமோ தெரியவில்லை அந்த காட்சி டக் என்று நினைவுக்கு வந்தது..!

Georgevob
7th May 2013, 02:16 PM
எனது சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொடரில் திருவிளையாடல் வெளியான காலக்கட்டத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள் பதிவு செய்தது மட்டுமல்ல அதற்காக எனக்கு நன்றியையும் தெரிவித்த srs அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றி.

அன்புடன்

சார்,
" உங்களுடைய " என்று எழுதும்போதே அது நீங்கள் எழுதியது தானே !
அதனால் தானே கட்டுரைக்கு உங்களுக்கும் ...புள்ளி விவரத்திற்கு திரு பம்மலர் அவர்களுக்கும் உரியது என்பதை உணர்த்தும் விதமாக "courtesy " என்று போட்டேன் !

ஒரு சில விடுபட்ட வார்த்தைகளை நீங்கள் எழுதிய அந்த கட்டுரையில் புகுத்தியும் உள்ளேன்...உதாரணம் : திராவிட கட்சிகள் etc

நாங்கள் தான் சார் உங்களுக்கு நன்றி கூறவேண்டும் !

Georgevob
7th May 2013, 02:38 PM
[QUOTE=RAGHAVENDRA;1040468]டியர் சௌரிராஜன்
நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன்

Mr. Raghavendar sir,

exactly you told what I want to tell. When I started reading Thiruvilaiyaadal achievements, on the first line itself I fount out it is the one which our Murali sir wrote in 'Sivajiyin saadhanai sigarangal' thread. Every line of our Murali sir's posts are 'manappaadam' for our fans.

நண்பர் ஆதிராம் அவர்களே ,
முதலில் ,
நீங்கள் திரு.ராகவேந்திர சாரிடம் கூறியது முற்றிலும் உண்மை என்பது உலகறியும்.

ஆகையால் தான் நீங்கள் கூறியது போல நம் ரசிகர்கள் அனைவருக்கும் "மனப்பாடமாக" தெரியுமே என்பதால் அந்த பேஜ் மற்றும் இத்தியாதி...இதிதியாதி சமாசாரங்களை மீண்டும் இடவில்லை. சுருக்கமாக "Courtesy - Mr பம்மலர் & Mr முரளி ஸ்ரீநிவாஸ் என்று எழுதி இருந்தேன். உங்கள் கண்களுக்கு Courtesy ஏ தெரியவில்லை போல இருக்கிறது ! அடுத்த முறை போடும்போது சற்று பெரிய வடிவத்தில் உங்களுக்காக இடுகை செய்கிறேன்.

இரண்டாவது,
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக நீங்கள் திரிபக்கம் வரவே இல்லையே ? அலுவல் அதிகமா? நீங்களும் இல்லை, Khalnayakum இல்லை, VanKv யும் இல்லை. திரியின் விறுவிறுப்பு குறைந்தது போன்ற ஒரு தோற்றம் ! அது ஒருவேளை மாயையாக கூட இருக்கலாம். !

மாயாபஜார் திரைப்படத்தின் வசனம் நினைவிற்கு வருகிறது..கடோல்கஜன் சகுனியிடம் உரைப்பார், ஒன்று இரண்டாக தெரிந்தால் நீங்களும் ஜெயிததுபோல்தான் நானும் ஜெயிததுபோல்தான் என்று !

மூன்றாவது,

நீங்கள் இடுவதை பார்க்கும்பொழுது நடிகர் திலகத்தை பற்றிய நிறைய விஷயங்களை எழுதிஇருகிறீர்கள் போல தெரிகிறது எனக்கு அவைகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறது !

நீங்கள் நடிகர் திலகத்தை பற்றி இடுகை செய்துள்ள விஷயங்களின் பக்கங்களை இங்கு தயவு செய்து இடுகிறீர்கள?

அந்த போஸ்ட் நம்பர், பேஜ் நம்பர், திரி எண் இடுங்களேன் ...ப்ளீஸ் !!

Gopal.s
7th May 2013, 02:56 PM
Sir,

எந்த படம் என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்கும்படியான ஒரு காமெடி காட்சி. திரு.கௌண்டமணி அவர்களிடம் திரு செந்தில் வழக்கம் போல பித்தலாட்டம் செய்வார்..அதை திரு.கௌண்டமணி அவர்கள் சவுக்கால் அடித்து உண்மையை திரு.செந்தில் வாயால் வரவழைப்பார்..பின்பு தான் முக்கியமான காட்சி...அவர் கூறுவார்..."மவனே ஸவுகெடுத்தாதான் பாதி பேருக்கு நாட்ல புத்தியே வருது என்பார். காட்சி நகைச்சுவைக்காக எடுத்தது என்றாலும் அந்த பஞ்ச் வாஸ்தவமான பேச்சு -

என்னமோ தெரியவில்லை அந்த காட்சி டக் என்று நினைவுக்கு வந்தது..!
நிஜமாகவேதானே வருகிறான் பார்த்திபன்? நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதவில்லையென்றால், வாசு துடித்து கொண்டிருக்கிறார்.

Georgevob
7th May 2013, 03:02 PM
டியர் சௌரிராஜன்
இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.

இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பயனற்ற பதிவுகள் என்று ஆவணங்களையும் நிழற்படங்களையும் கிண்டலடித்தவர்களும் உண்டு. அவற்றின் மகிமை தெரியாமல் மேம்போக்காக கேலி செய்தது மட்டுமின்றி இங்கு அவை இடம் பெறக் கூடாதென்பதற்கும் முயற்சிகள் நடந்தன. இதற்காக தனித்திரி துவங்கப் பட்டு பம்மலார் தன் பணியினை ஆற்றி வந்தார். அவர் வருகையில்லாமல் இப்போது அத்திரி முடக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் தங்களிடம் கூறுவதற்குக் காரணம், எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டு இந்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தங்களுக்கு உணர்த்தவே.

திருவிளையாடல் பதிவினைப் பொறுத்த வரை தங்களுக்கு நான் பாராட்டுத் தெரிவித்ததற்குக் காரணம் ... [பொதுவாக அனைத்து நண்பர்களின் பதிவுகளுக்குமே நான் பாராட்டுக் கூறாமல் இருக்க மாட்டேன் ...] தாங்கள் அதனைக் கூற முன் வந்த விதமே.

நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன் [QUOTE] என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.

அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.

அன்புள்ளம் கொண்ட திரு.ராகவேந்திர சார்,

உங்கள் கண்களுக்கு கூட நான் போட்ட Courtesy தென்படவில்லை போல் உள்ளதே. ! என்னுடைய நேரத்தை நான் என்னவென்று சொல்ல !

உங்களுடைய, திரு.கோபலுடைய, திரு.முரளி அவர்களுடைய மற்றும் இரண்டு மூன்று நாள் திரிபக்கமே வராமல் இருந்து திடீரென்று இந்த ஒரு விசயத்தை பற்றி எழுத வந்த திரு.ஆதிராம் இப்படி அனைவரும் நான் என்னமோ முரளி சார் எழுதியதை காபியடித்து எனது இடுகை போல இட்டுவிடனோ என்று இம்மியளவும் சந்தேகம் வேண்டாம்.

நான் எழுதுவதை போல அந்த விஷயத்தை எழுத நினைத்திருந்தால் நொடியில் முடித்திருபேன் . அனால் அது என் வழி அல்ல !

நான் Courtesyil : கட்டுரைக்கு திரு.முரளி அவர்களையும் புள்ளிவிவரதிர்க்கு திரு.பம்மலர் அவர்களையும் மனதில்வைத்து எழுதினேன். காரணம்...திரு. முரளி அவர்கள் கட்டுரையில் மற்றும் மதுரை மற்றும் அதன் சுற்றுபுரத்தின் புள்ளிவிவரங்களை தருவதில் தலைசிறந்து விளங்குபவர் & திரு.பம்மலர் அவர்கள் புள்ளிவிவரத்தில் மட்டும் அல்லாது ஆதார ஆவணங்களிலும் தலைசிறந்து விளங்குபவர். இந்த இரெண்டும் ஒன்று சேர்ந்தால்தான் அனைவருக்கும் சிறப்பு.

கட்டுரையில் அவரும்...புள்ளிவிவரத்தில் இவரும் தலைசிறந்தவர்கள் என்பது நம் திரியில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல மையத்தில் இருக்கும் முக்கால் வாசி திரியில் உள்ளவர்களுக்கும் தெரிந்த உண்மை.

உங்கள் அனைவரின் சந்தேகங்களும் நான் காபி அடித்து பேர் வாங்க நினைகிரேனோ என்பதாகும் பட்சத்தில் நீங்கள் என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள சந்கோஜபட்டிருந்தால், என்னுடைய இந்த பதில் அந்த சந்தேகத்தை தீர்க்கும் என்று நம்புகிறேன்.

நமது திரையுலக சித்தர் திரைப்பட பாடலின் வரியுடன் முடிக்கிறேன் -

இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?

Gopal.s
7th May 2013, 03:02 PM
அட பாவி ,இப்போதான் கவனிக்கிறேன். sree எப்போ sri ஆச்சு?170 எப்போ 4 ஆச்சு? சவுக்கு எங்கே?

Gopal.s
7th May 2013, 03:08 PM
sri (sree ?) சார்,
அந்த சந்தேகம் யாருக்கும் இல்லை.நீங்கள் தெளிவாகவே போட்டிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினை ஏதும் இல்லை. முரளியும் clarify பண்ணி விட்டார்.

RAGHAVENDRA
7th May 2013, 03:10 PM
இங்கு இருக்கும் சிவாஜி ரசிகர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புலமை உள்ளது. இதனை நான் முன்னமேயே கூறியுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு எழுத்து என்பது கைவந்த கலை. மிகக் குறுகிய காலத்தில் தமிழில் பதிவுகளை இட பழகி விட்டதே தங்கள் திறமையைக் காட்டுகிறது. அப்படி இருக்கும் போது தங்கள் கருத்துக்களைப் பதியும் தங்களின் புலமை தெரியாமலா இருக்கும். அதில் எள்ளளவு ஐயமும் இல்லை.

இது தங்களுக்காக என்பதை விட பொதுவாக எழுதியதாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதனைத் தாங்கள் தனியே quote பண்ணியிருந்தால் தெரிந்திருக்கும்.

Anyway, I am very happy that you have taken this in right perspective and thank you very much.

இது ஒரு புறம் இருக்கட்டும்... கோபால் கூறியது போல் Sree வேறு Sri வேறா ... சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ... ப்ளீஸ்...

Georgevob
7th May 2013, 03:13 PM
அட பாவி ,இப்போதான் கவனிக்கிறேன். sree எப்போ sri ஆச்சு?170 எப்போ 4 ஆச்சு? சவுக்கு எங்கே?

Yeah....I deleted by mistake my Facebook account trying to do something there ! So, I created a new account and logged in to continue the discussion here more than facebook. சவுக்கு செஞ்சுகிட்டு இருக்கேன். வரும்..உங்களுக்கு சாதாரண சவுக்கு போதாதே அதுதான் ஸ்பெஷல் தயாரிப்பு நடந்து கிட்டு இருக்கு...

I was just kidding...I will write it shortly...!

Georgevob
7th May 2013, 03:17 PM
sri (sree ?) சார்,
அந்த சந்தேகம் யாருக்கும் இல்லை.நீங்கள் தெளிவாகவே போட்டிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினை ஏதும் இல்லை. முரளியும் clarify பண்ணி விட்டார்.

So nice to read that Murali sir also clarified..! So..all are in touch on minute by minute basis, i suppose ? Good !

Georgevob
7th May 2013, 03:23 PM
நிஜமாகவேதானே வருகிறான் பார்த்திபன்? நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதவில்லையென்றால், வாசு துடித்து கொண்டிருக்கிறார்.

வாசு சார் எழுதுவதென்றால் எனக்கு அதுதான் முக்கியம்...படிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் பாந்தமாகவும் அழகாகவும் அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். எனக்கு அவ்வளவு திறமை பத்தாது அவரை போல எழுதுவதற்கு ! அவர் ரத்தம், நாடி, நரம்பு, சதை எல்லாவற்றில்லும் நடிகர் திலகத்தின் உயிர்தான் கலந்திருக்கும்...

பார்த்திபனின் பிராக்ரமத்தை பற்றி அவர் எழுதி நாம் படிக்க கரும்பு தின்ன கூலியா ?

Georgevob
7th May 2013, 03:27 PM
இது ஒரு புறம் இருக்கட்டும்... கோபால் கூறியது போல் Sree வேறு Sri வேறா ... சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ... ப்ளீஸ்...

நான் அவனில்லை திரைபடத்தின் கான்செப்ட் எனக்கு அறவே பிடிக்காத ஒரு கான்செப்ட் சார்.

Gopal.s
7th May 2013, 03:27 PM
வாசு ரூட் கிளியர். வா வெளியே.

vasudevan31355
7th May 2013, 04:42 PM
கோபால்,

இந்தா வாங்கிக்கோ மொத குத்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

Georgevob
7th May 2013, 04:42 PM
வாசு ரூட் கிளியர். வா வெளியே.

கோபால் சார்

ரூட் பிளாக் ஆகி இருந்தது. ஆனால் அது வாசுதேவன் சார் அவர்களுக்கு அல்ல ! வேறு சிலருக்கு !

வாசுதேவன் சார் ரூட் எப்போது block ஆகி இருந்தது இப்போது clear ஆவதற்கு ?

வாசுதேவன் சார் ரூட் எப்போதுமே clear ரூட் தான் !

SRS

வாசுதேவன் சார் உங்களுடைய ஜுகல்பந்திக்கு இதோ என்னுடைய அன்பு பரிசு...!

http://www.youtube.com/watch?v=FnvSiVhqrZs

Georgevob
7th May 2013, 04:48 PM
கோபால்,

இந்தா வாங்கிக்கோ மொத குத்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

ஹ்ம்...நான் நினைத்தால் உன்னை செண்டாடிவிடுவேன் ஹா...!
இந்த வசனத்தையும் சேர்த்து போடுங்கள் வாசுதேவன் சார் !

http://www.youtube.com/watch?v=E0tbhP9lZsg

Georgevob
7th May 2013, 04:58 PM
கோபால்,

இந்தா வாங்கிக்கோ மொத குத்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

வந்துவிட்டாயா என் செல்வமே ! மன்னர் பரம்பரையில் வந்த மரகதமே !

மணிமகுடம் உள்ளதைரியத்தில் மாசு கற்பிக்க முயலும் மன்னர்களை மண்ணோடு மண்ணாக்க வந்த பராக்கிரம திலகமே !

உத்தமன் நீயிருக்க மற்றவன் ஏன் என்று என்னற்றவரை எண்ண வைக்கும் எண்ணிக்கையின் ஒப்பற்ற ஒரே ஒருவனே...!

சொத்து ...சொத்து என்று அடித்துகொள்பவனுக்கு ஓங்கி ஒரு குத்து விட வந்த இந்த நாட்டின் சத்தே ! எந்தன் முத்தே !

விழட்டும் உன் குத்து ! அதனால் உடலில் முழுவதும் போடட்டும் பத்து !

vasudevan31355
7th May 2013, 05:06 PM
சவுரி சார்

யூஸ் பண்ணிக்கோங்க. அருமையான சவுக்கு. (சிரித்து சிரித்து இனி சிரிக்க என் உடம்பில் இல்லை 'சத்து).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/R.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/R.jpg.html)

Gopal.s
7th May 2013, 05:08 PM
நான் வரலேப்பா இந்த ஆட்டத்துக்கு.நம்மளது ஓட்ட வாய். ஏதாவது சொல்ல போக கொளந்தைங்க அளுதிரும். குட்டியா மாஸ்க் மாட்டி விட்டுருங்க. சாவிய கடல்ல போடுங்க.(அப்பத்தான் பப்பிம்மா ஆடி மயக்கி (ஹிந்தியில்தான்) ஒண்ணும் சாதிக்க முடியாது.)
கொடுமை சக்ரவர்த்தி.

vasudevan31355
7th May 2013, 05:11 PM
நான் வரலேப்பா இந்த ஆட்டத்துக்கு.நம்மளது ஓட்ட வாய். ஏதாவது சொல்ல போக கொளந்தைங்க அளுதிரும். குட்டியா மாஸ்க் மாட்டி விட்டுருங்க. சாவிய கடல்ல போடுங்க.
கொடுமை சக்ரவர்த்தி.

http://i89.photobucket.com/albums/k204/zub_01/lick.jpg

Gopal.s
7th May 2013, 05:12 PM
ஏதாவது எளுதப்பா . அட்ட கிளாஸ் மாதிரி பொம்மை பொம்மையா வந்துட்டிருக்கு.

vasudevan31355
7th May 2013, 05:15 PM
ஏதாவது எளுதப்பா . அட்ட கிளாஸ் மாதிரி பொம்மை பொம்மையா வந்துட்டிருக்கு.

நீயும் பொம்மை... நானும் பொம்மை... நெனச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை!

Georgevob
7th May 2013, 05:21 PM
http://i89.photobucket.com/albums/k204/zub_01/lick.jpg

கலைஞர் கூறுவது போல கூறவேண்டும் என்றால் (நிறுத்தி நிறுத்தி அவர் பேசுவது போல படிக்கவும்).....

" இது.....ஓட்டையா ? அல்லது...... இவரது வாயில் இதற்க்கு முன்பு ஏதாவது போட்டயா? .....இல்லை,.... இது செஞ்சி கோட்டையா?

இது வாயா?.....அல்லது suez கால்வாயா .....இல்லை....கிராமபுரத்தில் உள்ள வாய்காலா? அல்லது வடிகாலா ?

Georgevob
7th May 2013, 05:36 PM
கொடுமை சக்ரவர்த்தி என்று கூறியதில் மகிழ்ச்சியே காரணம் .....

சக்ரவர்த்தி என்றும் சக்ரவர்த்திதான் !

சிலருக்கு மிருதங்கம் கொடுமையாக இருக்கலாம்...

ஏனென்றால்...அது மிருதுவான தங்கம் ! அதனால் தான் அதை மிருதங்கம் மிருதங்கம் என்று பெயரிட்டார்கள்...
உரக்க, திறமையுடன் அடிபவருக்கு அந்த மிருதங்கம் தருவது விலை மதிக்க முடியாத தங்கம்...!

அந்த தங்கம் விலை மற்றும் தரம் ஏற ..ஏற ....ஒரு சிலருக்கு தெரிவது அதன் கொடுமை தான் ! நிச்சயம் கற்றறிந்த சான்றோர்கள் அறிவார்கள் இதை கொடுமை என்று உரைபதர்க்கு காரணம் அவர்கள் மடமை தான் !

ஆனால் பலருக்கோ மிருதுவானதங்கத்தால் நிச்சயம் வளமை..இளமை மற்றும் செழுமைதான் !

Gopal.s
7th May 2013, 05:42 PM
அய்யய்யோ, திருப்பி திருப்பி வம்புலே மாட்டி உடராங்கப்பா. மனுஷனை திருந்தி வாழ உடுங்கப்பா. நான் கொடுமை சக்ரவர்த்தி என்றது mask மாட்ட சொன்ன எங்கள் விக்கியை.

Georgevob
7th May 2013, 05:50 PM
அய்யய்யோ, திருப்பி திருப்பி வம்புலே மாட்டி உடராங்கப்பா. மனுஷனை திருந்தி வாழ உடுங்கப்பா. நான் கொடுமை சக்ரவர்த்தி என்றது mask மாட்ட சொன்ன எங்கள் விக்கியை.

"மாட்டிவிடுவதர்க்கு" நீங்கள் சட்டையும் அல்ல.."வம்பு" என்பது சட்டையை மாட்ட உதவும் Hangerum அல்ல !

நீங்கள் விக்கியை சொன்னாலும் சரி...விக்கி..விக்கி சொன்னாலும் சரி....அல்லது விக்கியின் கீயை சொன்னாலும் சரி ..மொத்தத்தில் உங்கள் வாயிலிருந்து நீங்கள் கக்கி !

...நீங்கள் கூறியது உங்கள் எண்ணம் ! அது மட்டும் திண்ணம் ! அதை மறைக்க பூச வேண்டாம் பல வண்ணம் !

Gopal.s
7th May 2013, 05:55 PM
வீணர்களுக்கு கொடுக்கணும் ஒரு கிண்ணம்.
அதிலே ஊத்தணும் கொஞ்சம்........

Georgevob
7th May 2013, 05:56 PM
Dear Gopal sir,

Everything is on the lighter side ! Do not take it personally please !

Regards
SRS

Georgevob
7th May 2013, 05:58 PM
வீணர்களுக்கு கொடுக்கணும் ஒரு கிண்ணம்.
அதிலே ஊத்தணும் கொஞ்சம்........

கொஞ்சம்...கொஞ்சம்....கொஞ்சம்.....யோசியுங்கள் ! என்ன அடுத்த வார்த்தை என்று....! lol

Gopal.s
7th May 2013, 06:01 PM
எல்லாம் ஒரு ஜாலிக்குதாம்பா.

kalnayak
7th May 2013, 06:02 PM
இங்கே இன்னா பாஸ் நடந்துனுகீது? பார்த்திபனை கூப்பிட்டால் இப்படியா?

Georgevob
7th May 2013, 06:09 PM
இங்கே நான் அவன் இல்ல ....நான் அவன் இல்ல நு ஒரு பய சுத்திகினு இருக்கான்பா..

அவனதான் புடிக்க வலவீசரோம்பா ! பல விதமா வீசறோம் !

பேட்டா மாட்னான்....டங்குவாரு பிஞ்சுபுடும்..! அட கண்டுபுடிச்சவனுக்கு சொநேன்பா...மாட்னவனுக்கு சொல்லல !

Georgevob
7th May 2013, 06:15 PM
எல்லாம் ஒரு ஜாலிக்குதாம்பா.

Sir,
I have sent a mail to you...check your inbox please .. :-)

ScottAlise
7th May 2013, 06:35 PM
Kalthoon

The movie released in 1981. It was the year which was ruled by the now Super Star Rajini & Kamal but nonetheless it could stop our very own NT from giving a 100 days movie . Remember it was a stage drama previously before being made into a movie also during beginning of 80’s there was a mania for north Indian movies among Tamil audience . Inspite of all these odds against him NT delivered a hit.
To some NT patrons who have not watched it , the story is about Paramasiva Gounder who lives happily whith his wife KR Vijaya( Parvathi) and two sons ( Ganapathi& Palanisamy) and ever relaiable servant (Nagesh) . NT’s brother in Law is Major who incidentally is also , a director of the movie.
NT is head of the village and most respected in the village. His second son ( Thilak) now known as Kalthoon Thilakji goes to Coimbatore to study medicine. Though good at studies , he is a spoiled brat . He rapes a girl , when questioned by his father he ill treats him and challenges to defeat him in front of village.

Considering the year 1981 the movie was little outdated. Barring the performances of NT & Kalthoon the actors were just adequate. But inspite of all the odds NT does justice to the role to the core again. Irrespective of good and bad movies NT performance can never be termed bad.
NT performance sorry his ability to get into the skin of character is once again evidenced in the movie . He is literally Paramasivan Gounder.
Many scenes stand a testimony to NT ‘s acting
When NT & his wife is about to go to his son’s college he wears a silk shirt & Dothi which is too small as NT is fat compared to his original shirt size which tears & NT reaction to it is just too comical . KR Vijaya even makes fun of his size(நீங்களும் நானும் பராசக்தி படத்துக்கு போகும் பொது எங்க அப்பா வங்கி கொடுத்தது அப்போ நீங்க ஒல்லியா இருந்திங்க ) to which he shoots back என் உடம்பு வேணா மாறி இருக்கலாம் அனா என் மனசு அப்புடியே இருக்கு and describes KRV’s change in hip size is a testimony of real husband & wife casual remarks.
Thilak’s performance was too good that he was referred as Kalthoon Thilkajji thereafter but the casting was really bad, Nagesh as NT’s adopted son was something hard to digest atleast for me.Also Manorama as small girl wearing Chuditar and comedy track was also too pale
Nothing more to say as it is definitely one man show of NT which ensured the movie was a success. He carried the burden of making a movie successful one and succeeded in it quite comfortably

Georgevob
7th May 2013, 06:37 PM
கல்நாயக் சார்..

உங்களை வரவேற்கும் விதமாக இந்த பாடல் ! Warm Welcome !

http://www.youtube.com/watch?v=oLHGq8cDohcc

goldstar
8th May 2013, 06:11 AM
கோபால்,

இந்தா வாங்கிக்கோ மொத குத்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-22.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-22.jpg.html)

அருமை, என்ன ஒரு ஸ்டைல். நடிகர் திலகமே நீ ஒருவர் தான் ஸ்டைலுக்கு ஸ்டைல் , வசூல் சக்ரவர்த்தி, உலகின் மாமெரும் நடிகர் என பல விதமான முகம் கொண்ட உலகின் ஒரே நடிகர்.

நிறைகுடம் ததும்பாது என்ற வார்த்தை கேற்ப திரைபடத்தில், வாழ்வில் வாழ்த்து காட்டிய மகானே.

மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என நிறைவான, முழுமையான வாழ்கை வாழ்த எங்கள் தலைவரே உன்னை வணக்குகிறோம்.

நன்றி வாசு அவர்களே தலைவரின் அருமையான, வீரமான படர்திற்கு.

vasudevan31355
8th May 2013, 08:26 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-35.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-35.jpg.html)

ScottAlise
8th May 2013, 09:30 AM
VAA KANNA VAA

The movie was telecasted last night in Murasu Tv which tells us the real love of a old man(NT) with a small kid .

NT and Sujatha are elderly playful couple leading a happy life . In comes Jaiganesh and Vaduvukuarasi , a newly wedded couple( Love marriage). They enter as tenants .
NT ‘s servant is Nagesh and VKR is his friend. The first few scenes where NT & Sujatha play with each other is a real treat to watch especially when Jaiganesh comes to enquire about the house , NT remarks about himself( Self depreciation) is a real treat for his acting.
In due course of time both NT & Jaiganesh get along with each other very well when Major( NT’s rich father) comes to meet him. In an interesting scene where Major thinks NT as lunatic & NT thinks Major as lunatic , the two veterans subsequent reaction definitely rises the humour quotient.
Now back to the story , Vaduvukuarasi gets preganant, the elderly couple celebrate it in their own way and conduct a function but during delivery time , they shut the door and do not offer help which irks Jai Ganesh it is at that point Nagesh steps in and reveals the sad flash back about the couple.
NT & his wife had a girl child who was happily married but during pregnancy dies, in a desperate attempt to come out of the grief both NT & Sujatha turn playful.
The scene where NT’s daughter dies, NT gets exhausted and utters
அழுதுகொண்டே அவர் வெட்டி ஜரிகை ஐ கழித்து இறந்துபோன அவர் பெண் ஓட காலில் கட்டி அவர் மனைவி சுஜாதா மற்றும் நாகேஷ் இடம்
பொண்ணுக்கு கால்கட்டு போடணும் சொன்னயே இப்போ போட்டேன் அம்மா. நாகேஷ் இடம் திரும்பி பொண்ண தோள்மேல தூக்கி வளர்தேன் இப்போ தான் சொன்னயே இப்போ அதே தோள்மேல தூக்கிட்டு போ டா பா.

It is really a touching scene. The movie then takes a murky turn where Jai & NT compromise when NT & Sujatha secretly watches new born baby to which NT replies நாங்க உன்னோட குழந்தையை பர்கல காத்து வாங்க வந்தோம்
NT becomes over affection with that boy Krishnan and celebrates him every day. He even jumps into well thinking the boy got drowned while playing with him , settles the debt of Jai.
But as fate would have it Jai decides to get back to his father which forces his wife to move away from him which ultimately upsets NT emotionally.
But Major , a good hearted man just checked his daughter in law’s character and accepts her as his daughter in law publicly meanwhile NT becomes a lunatic imagining Kannan , VKR sets out to find Kannan and comes to Chennai , NT at one night thinking Kannan jumps into the same well seeing NT’s body she too dies in shock only to be watched by that boy. The climax scene nearly for 5 minutes has no dialogues only close up expressions of NT. The way he hops and moves in search of the boy inspite of landing in thorns and finally jumping in well is really tear jerker
That’s Vaa kanna vaa
As usual NT evokes class in the role given to him. He is really a wonder as said by Gopal sir. I saw this movie only when it was discussed in the thread forgot that hubber name, due thanks to him. It was a hundred days movie , after few years he gave SAngili, Sandhipu many more commercial hit movies . Those who ridicule him that he does not play his age can kindly watch this movie & for those who mentioned SAngili, Sandhipu it is just a variety just like Kamal switching from action to comical roles as Vasu sir’s experience in cuddaore theate for Sandhipu is a testimony.( Sir why don’t you write more like that)
The make up was good for NT , but seeing Sujatha in that old get up was just irritating particularly after seeing her in same old roles like Andaman Khadali, Sandhipu etc where she eludes class but performance wise no doubts in her skills
It is Sivaji Productions movie which is incidentally a remake of a telugu movie raa kanna raa

It is available in Modern Cinema and DVD costs Rs 30/-

Gopal.s
8th May 2013, 10:01 AM
ராகுல்.
உன்னுடைய சீரிய பணிக்கு வாழ்த்துக்கள். உன் வயதுடைய ஒருவன், எங்கள் நடிகர்திலகத்தின் அரிய படங்களை பார்த்து, எங்களோடு பகிர்ந்து கொள்வது எங்களுக்கெல்லாம் சந்தோஷம் தரும் இனிய நிகழ்வு. உன்னுடைய sincerity க்கு என் நன்றிகள்.

RAGHAVENDRA
8th May 2013, 10:36 AM
டியர் சதீஷ் சார்
தங்களுக்காக...

அபூர்வ நிழற்படங்கள்...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/goldminelaunchPP_zps89d6e4b7.jpg

ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் தங்க சுரங்கம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் திலகத்தின் இளைய சகோதரர் திரு வி.சி.சண்முகம், திரு ஈ.வி.ராஜன், ஒளிப்பதிவாளர் திரு அமிர்தம், ஜாவர் சீதாராமன், எஸ்.வரலக்ஷ்மி, நடிகர் திலகம். இந்த விழாவின் போது படத்திற்கு பெயர் வைக்கப் பட்டிருக்கவில்லை.

Gopal.s
8th May 2013, 10:43 AM
அருமையான நிழற்படம். இந்த மாதிரி அபூர்வ படங்கள், நம்மை கை பிடித்து nostalgic effect உடன், சிறு வயதுக்கு அழைத்து செல்லும் வலிமை உடைய அற்புதம் நிகழ்த்தும். நன்றி ராகவேந்தர் சார்.

RAGHAVENDRA
8th May 2013, 10:47 AM
டியர் ராகுல் ராம்
கல் தூண் திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துப் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது. படத்தின் அஸ்திவாரமே நடிகர் திலகம் தான். அதனைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கியவை மெல்லிசை மன்னரின் இசையும் பாடல்களும். சிங்கார சிட்டுத் தான் பாடல் அந்த கால கட்டத்தில் ஒலிக்காத இடமே இல்லை என்கிற அளவிற்கு பிரபலமானது. இந்த இரண்டு பேர் இருந்தால் போதும் என்று இயக்குநர் நினைத்து விட்டார் போலும். ஓவர் ஆக்டிங் இந்தப் படத்தில் உண்டு - ஆனால் யாரிடம் - திலக்கிடம்... அவருடைய நடிப்பு மிகை நடிப்பிற்கு சரியான உதாரணம் என்று அந்தக் காலத்தில் தியேட்டரில் மக்கள் பேசுவதை நான் பல முறை கேட்டிருக்கிறேன்.

சரியான பதிவு. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

கல்தூண் திரைக்காவியத்தினை நினைவூட்டிய தங்களுக்காகவும் நம் மற்ற நண்பர்களுக்காகவும்

http://youtu.be/HtI2WuwCvyI

நீலமலைக் காத்தாட வரிகளின் போது தன் தோள்களைச் சிலுப்பிக் கொண்டு அவர் வருவதும் அதற்கு சற்று முன் மீசையை முறுக்கிக் கொள்வதும் ... ஒரு புறம் என்றால் பாடல் வரிகள் அதற்கு மேல் பட்டி மன்றம் ரேஞ்சுக்கு கருத்துப் பரிமாற்றங்களைத் தருகின்றன. பாருங்கள் கேளுங்கள்..


இந்தப் பாட்டின் துவக்கத்தில் வரும் ஒரு இசை, யாதோன் கி பாராத் படத்தில் இடம் பெற்ற சுராலியா பாடலில் வரும் ஒரு பிட் இசையை நினைவு படுத்தும்.

vasudevan31355
8th May 2013, 10:55 AM
Excellent ராகவேந்திரன் சார்,

தங்கள் புண்ணியத்தால் பார்க்க முடியாத அருமையான, அரிதான நடிகர் திலகத்தின் நிழற்படங்களைக் காண முடிகிறது. இப்போதெல்லாம் தெருத் தெருவாய் அலைந்தாலும் பேருக்குக்கூட ஒரு ஆவணமும் கிடைக்க மாட்டேன் என்கிறது. அந்தக் காலத்தில் தாங்களும் பம்மலாரும் சேமித்து வைத்து இங்கு அளிப்பது நாங்கள் அனைவரும் செய்த பாக்கியமே! விலை மதிக்க முடியாத சொத்துக்கள் இவை. இவற்றை பேணிப் பாதுகாத்து தாங்கள் இங்கு எங்களுக்கெல்லாம் அளித்து வருவது போற்றுதலுக்குரியது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பழைய புத்தகக்காரர்களிடம் கேட்டால் "அதெல்லாம் இப்ப எங்கே சார் கிடைக்கிறது?" என்கிறார்கள். ஆனந்த விகடனில் பழைய விமர்சங்களை கலெக்ட் செய்யக் கேட்டால் ஒரு page ஜெராக்ஸ் எடுக்க ரூபாய் எக்கச்சக்கமாக கேட்கிறார்கள் என்று தகவல். தவிர மிகவும் கண்டிஷன்கள் வேறு. எங்களுக்கு என்னவோ இது சாதாரண ஆவணமாகத் தெரியலாம். இதன் பின்னால் பம்மலாரும், தாங்களும் உழைத்திருக்கும் உழைப்பு நிஜமாகவே பிரம்மிப்பு.

தங்கள் இருவரின் இந்த சீரிய பணிக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை.

நன்றி! நன்றி! நன்றி!

vasudevan31355
8th May 2013, 11:02 AM
ராகுல்,

வாரே (கண்ணா) வா! கல்தூண் போல நின்று அருமையான பதிவுகளை அளிப்பதற்கு நன்றி! நேற்று முரசில் பார்த்து ரசித்தேன். தலைவர் உரி அடிக்குமிடம் அட்டகாசம். கடலூரில் ஒரு மாதம் ஓடிய படம். தம்பி தம்பிதான்.

Gopal.s
8th May 2013, 11:06 AM
நாங்கள் எல்லோரும் பண்ணிய பெருந்தவறு, அந்த ஆவண ங்களின் எதிர்கால வலிமையை உணராது, ஒரு personal stamp collection போல் செய்து, அதை காக்க தவறி விட்டோம். நான் 1968 முதல் 1980 வரை கிட்டத்தட்ட 22 various daily / weekly /monthly news paper /magazines இவற்றில் வந்தவற்றை சேமித்து பறி கொடுத்தவன். இந்த மாதிரி hub /thread என்று பார்க்கும் போது பறி கொடுத்த சோகம் மேலும் அதிகமாகிறது. அந்த சோகத்தை குறைக்கும் தூதர்களாக பம்மலார் ,ராகவேந்தர், வாசு போன்றோர்களை அனுப்பியுதவியதற்கு ,கடவுளுக்கு நன்றி.

Gopal.s
8th May 2013, 11:11 AM
ராகவேந்தர் சார்,
அது என்ன ஓர வஞ்சனை? சதீஷ் சாருக்காக மட்டும்? அப்போது நாங்கள் பார்க்க கூடாதா? எங்களுக்காக இல்லையா?

RAGHAVENDRA
8th May 2013, 11:15 AM
படத்தை centre align பண்ண முடியவில்லை. அதனால் default ஆக விட்டு விட்டேன். சென்டர் பண்ணியிருந்தா நடு வஞ்சனை ஆகியிருக்குமோ

vasudevan31355
8th May 2013, 11:35 AM
சென்னைக்கு சமீபத்தில் சென்ற போது பழைய ஆவணங்கள் ஏதாவது கிடைக்குமா என்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினேன். முடிந்தவரை மூர் மார்க்கெட், மற்றும் பழைய புத்தகங்கள் கிடைக்கும் பகுதிகளுக்குச் சென்று தேடினேன். ம்ஹூம்... மருந்துக்குக் கூட ஒரு புத்தகம் கூட கிடைக்கவில்லை. பொம்மை, பிலிமாலயா, பேசும்படம் இவற்றுள் ஒரு புத்தகம் கூட இல்லை. கேட்டால் சில கடைக்காரர்கள் சிரித்தே விட்டார்கள். ஒருவர் ஒரே ஒரு பேசும் படம் வைத்திருந்தார். அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கேட்டதில் மனமே வராமல் ஒருமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு பெரிய விலைக்குக் கொடுத்தார். பம்மலார், ராகவேந்திரன் சாரெல்லாம் எப்படி அலைந்து திரிந்து கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று முழுமையாக உணர முடிந்தது. கடலூரில் ஒரு முதியவர் சில ஆவணங்களை வைத்திருந்தார். அவரிடம் கேட்டதற்கு அவர் கேட்ட விலை என்ன தெரியுமா? வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக் கொடுத்து அதற்கு வாடகையும் நாம் கட்ட வேண்டும். நான் அதற்குக் கூட சம்மதம் தெரிவித்தும் பின்னால் அதையும் அவர் மறுத்து விட்டார். ஆறுமாதமாக அலைந்தும் அவர் அவருடைய பெருமையைப் பற்றி பேசியதுதான் மிச்சம். தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தாகி விட்டது. தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் பயன்படச் செய்யாமல் அந்தக் கிழவர் விலை மதிப்பில்லா ஆவணங்களை செல்லரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். (கடலூரில் சுனாமி தாக்கிய போது அந்தப் பெரியவரின் வீடும் பாதிக்கப்பட்டது. வீட்டில் உள்ள அனைவரும் வெளியே ஓடி விட்டார்களாம்... அவரையும் ஓடிவரச் சொன்ன போது அவர் "நான் செத்தால் இந்த ஆவங்களுடன் செத்துப் போகிறேன்" என்று ஆவண மூட்டைகளை கட்டிபிடித்தபடி கிடந்தாராம். அப்படிப்பட்டவர் எப்படி நமக்குத் தருவார் சொல்லுங்கள்?) நூலகங்களில் விசாரித்தால் அதெல்லாம் இல்லை என்று ஈசியாகக் கைவிரித்து விடுகிறார்கள். பொம்மை, பேசும்படம், பிலிமாலயா ஆபீஸ்களே இல்லை.

கோபால் சொன்னது போல் அப்போதெல்லாம் அவ்வளவு ஆவணங்கள் வைத்திருந்தேன். பலதடவைகள் வீடு மாற்றி, எலி கடித்து, மிச்சம் மீதிகள் செல்லரித்து ஏதோ கொஞ்ச நஞ்சம்தான் மிஞ்சியது. அவைதான் இப்போது பயன்படுகின்றன. நம் ரசிகர்கள் சிலர் நிறைய ஆவணங்கள் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க தீவிரமாக மறுத்து விடுகின்றனர். எதை வேண்டுமானாலும் கேள்... ஆவணங்கள் மட்டும் கேட்காதே... என்று சொல்வதுதான் அவர்கள் பல்லவி.

பழைய அந்த பொற்காலம் திரும்பி வந்தாலென்ன!

vasudevan31355
8th May 2013, 11:36 AM
படத்தை centre align பண்ண முடியவில்லை. அதனால் default ஆக விட்டு விட்டேன். சென்டர் பண்ணியிருந்தா நடு வஞ்சனை ஆகியிருக்குமோ

haaa..haaa... punch :-D

vasudevan31355
8th May 2013, 11:38 AM
ராகவேந்தர் சார்,
அது என்ன ஓர வஞ்சனை? சதீஷ் சாருக்காக மட்டும்? அப்போது நாங்கள் பார்க்க கூடாதா? எங்களுக்காக இல்லையா?

வம்பு வளர்க்காதே
வாயைக் கிளறாதே
ஆத்திரமூட்டாதே
அடக்க நினைக்காதே

அடுத்த வரியை நீ சொல்லி தப்பிக்க நினைக்காதே.

Gopal.s
8th May 2013, 11:56 AM
ஏண்டா முடியாது?கட்டி பிடிப்பேண்டா.

Gopal.s
8th May 2013, 02:37 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22


தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.

அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

கொஞ்சம் மனோதத்துவ அடிப்படை கொண்ட பாத்திரமாதலால் medical jargon உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. இதை தயவு செய்து பரிச்சித்து கொண்டு என்னை(இரு கோபாலையும்)தொடர வேண்டுகிறேன்.

-----To be continued .

IliFiSRurdy
8th May 2013, 03:25 PM
[QUOTE=Gopal,S.;1040919]இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22


மிக சரியான அணுகுமுறை கோபால் அவர்களே!

இந்த படத்தின் உயிரோட்டமே இதன் மனோதத்துவ ரீதியான கதையே.

என்னவோ கதாநாயகன் சிங்கப்பூரில் "ஜாலியாக" இருந்துவிட்டு,மனைவியை கொன்று விட்டு,இந்தியாவிற்கு தப்பி ஓடி வந்து விடுவது போன்ற சாதாரண linear story அல்ல இது.

சுவாரசியமாக உள்ளது;தொடருங்கள்..

பி.கு: இந்த படத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு.உலக சினிமாக்களிலேயே அதிக அளவு கதாபாத்திரங்கள் CID/police வேடதாரிகளாக இருந்தது,இந்தப்படத்தில் தான்.
படம் முடிந்த பின் நமக்கே "நாம் CID ஆக மாறிவிட்டது" போன்ற ஒரு பிரமை ஏற்படும்.

kalnayak
8th May 2013, 03:27 PM
கல்நாயக் சார்..

உங்களை வரவேற்கும் விதமாக இந்த பாடல் ! Warm Welcome !

http://www.youtube.com/watch?v=oLHGq8cDohcc

வரவேற்புக்கு நன்றி சௌரிராஜன் சார்,
என்னால் பாடல் திரைக்காட்சியை பார்க்க முடியவில்லை. அவ்வப்போது வந்துபோகிறேன், ஆனால் என்னால் அவ்வளவாக எழுதமுடிவதில்லை வேலை பளுவின் காரணமாக. திரியில் பலரும் இவ்வளவு உற்சாகமாக பங்கெடுத்து கொள்வதை பார்க்கும்போது பொறாமையாகத்தான் இருக்கிறது.

IliFiSRurdy
8th May 2013, 03:51 PM
[QUOTE=Gopal,S.;1040919]இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22
பி.கு: இந்த படத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு.உலக சினிமாக்களிலேயே அதிக அளவு கதாபாத்திரங்கள் CID/police வேடதாரிகளாக இருந்தது,இந்தப்படத்தில் தான்.
படம் முடிந்த பின் நமக்கே "நாம் CID ஆக மாறிவிட்டது" போன்ற ஒரு பிரமை ஏற்படும்.


[QUOTE=Gopal,S.;1040919]இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22
பி.கு: இந்த படத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு.உலக சினிமாக்களிலேயே அதிக அளவு கதாபாத்திரங்கள் CID/police வேடதாரிகளாக இருந்தது,இந்தப்படத்தில் தான்.
படம் முடிந்த பின் நமக்கே "நாம் CID ஆக மாறிவிட்டது" போன்ற ஒரு பிரமை ஏற்படும்.

மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்று விட்டுபோய் விட்டது..அது..

மேற்கண்ட பதிவை படித்து விட்டு
,"நீங்கள் சொல்வது தவறு! புதிய பறவையில் மொத்தம் ஐந்து CID/Police பாத்திரங்கள் தான்.ஆனால் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த "Who killed Mary Jones?" என்ற ஹாலிவுட்திரைப்படத்தில் மொத்தம் ஏழு துப்பறியும் நிபுணர்கள் வருவார்கள்" என்று தயவு செய்து எந்த நண்பரும் பதிலளிக்க வேண்டாம்..
எனக்கு தாங்காது..நான் அழுதுடுவேன்!
பி.கு:ஆனால் இந்தப்பதிவிற்கு,"அது எப்படி எழுதாமல் இருக்க முடியும்? தவறு இருந்தால் சுட்டிக்காட்டித்தானே ஆக வேண்டும்!"ரீதியான பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

RAGHAVENDRA
8th May 2013, 04:19 PM
டியர் வாசு சார்,
பல அரிய பொக்கிஷங்களைத் தாங்களும் மிகவும் பத்திரமாக பாதுகாத்து நமக்கெல்லாம் தருகிறீர்கள் என்பதற்கு உத்தம புத்திரன் விளம்பரத்தை விட வேறு என்ன சான்று இருக்க முடியும். மிக மிக சிலரிடம் மட்டுமே இருக்கக் கூடிய அதனைப் பாதுகாத்து நமக்கெல்லாம் காணக் கொடுத்த தங்கள் பங்கு லேசுப் பட்டதல்ல. ஒவ்வொரு படத்திற்கும் தாங்கள் தருகின்ற உழைப்பு, நேரம், திறமை, அனைத்தும் ஈடு செய்ய முடியாதவை. நான் ஏற்கெனவே சொன்னது போல் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் அவருடைய படங்கள், விளம்பரங்கள், பத்திரிகைகள் போன்று ஏதாவது வகையில் தங்களுடைய சேகரிப்பில் வைத்திருந்திருப்பர். இதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தற்போது அதனை கோபாலும் தன் பதிவில் கூறியிருக்கிறார். பல்வேறு தவிர்க்க முடியாத காரணத்தால் அனைவராலும் இவற்றை பத்திரப் படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும். இது தான் யதார்த்தம். இப்படி நம் அனைவரின் ஆவணங்களும் ஒன்று சேரும் போது எத்தனை பெரிய சாதனைகளையெல்லாம் நடிகர் திலகம் விளம்பரமின்றி, அரசியல் பின்புலமின்றி, மீடியாக்களின் ஒரு தலைப் பட்சமான அணுகுமுறைகளை சந்தித்து, நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்பது இன்னும் அழுத்தமாக நிரூபிக்கப் படும் என்பதனை உறுதிப் படுத்துகின்றன. என்றாலும் இருக்கும் ஆவணங்களை வைத்தே நம்மால் அவருடைய சாதனைகளை எடுத்தியம்ப முடிகிறது என்பதற்கு இந்த மய்யம் ஒரு வாய்ப்பினை நமக்களித்திருக்கிறது. அதற்கு நம்முடைய நன்றி என்றென்றும்.

இது போன்ற ஆவணங்கள் நம்மை அந்தக் காலத்திற்கே இட்டுச் செல்கின்றன என்ற கோபாலின் வார்த்தைகள் பொன்னெழுத்தில் பொறிக்கப் பட வேண்டியவை, யதார்த்தமானவை.

தொடரட்டும் தங்கள் பணி. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
8th May 2013, 04:30 PM
புதிய பறவை - சில டிட்பிட்ஸ்

1. சென்னைக்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஒரு ஆப்பிரிக்க இசைக் குழுவினரைப் பயன் படுத்திக் கொண்டு உருவாக்கப் பட்டது பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல். படத்திலும் அந்தக் குழு அந்தப் பாடல் காட்சியில் இடம் பெற்றது.
2. நடிகர் திலகத்தின் டக்ஸெடோ ஆடை லண்டனிலிருந்து வரவழைக்கப் பட்டது. மற்றும் பல்வேறு உடைகள் சிங்கப்பூர் லண்டன் நகரங்களிலிருந்து வரவழைக்கப் பட்டன.
3. Chase a Crooked Shadow என்ற பிரபலமான ஆங்கிலப் படத்தைத் தழுவி ஷெஷங்கா என்ற பெயரில் வங்காள மொழித் திரைப்படம் வெளிவந்தது. அந்த வங்காள மொழியின் கதையே புதிய பறவைத் திரைப்படத்தின் மூலக்கதையாக அமைந்ததாக கூறுவர்.
4. அந்தக் காலத்தில் பாரகன் திரையரங்கினை முற்றிலும் புனரமைத்து புதிய ஒலி ஒளியமைப்புடன் படம் திரையிடப் பட்டது. ஆனால் படங்களின் காட்சிகள் பாதிக்கப் படாமல் நடைபெற்றது குறிப்பிடத் தக்க அம்சம். திரையரங்கு புனரமைப்பின் பணிகளை நடிகர் திலகம் நேரில் பார்வையிட்டார். ஒரு முறை அவர் பகல் வேளையில் வந்த போது ஆண்டவன் கட்டளை காட்சி துவங்கும் நேரம் வந்து விட்டது. சிறிது நேரம் ஆண்டவன் கட்டளை படத்தைப் பார்த்து விட்டுச் சென்றார். நாங்கள் சின்னஞ்சிறுவர்கள். அப்போது எதிரில் இருந்த பாலர் அரங்கில் (பின்னாளில் கலைவாணர் அரங்கம்) குழந்தைகள் படம் பார்த்து முடிந்து வெளியே வந்தபோது அப்போது தான் நடிகர் திலகம் காரில் ஏறிச் சென்றார். குழந்தையாக அப்போது நடிகர் திலகத்தைப் பார்த்த போது ஏற்பட்ட குதூகலம் ... ஆஹா... சொல்லி முடியாது. படம் முடிந்து சிறிது நேரம் கழித்து அவர் வந்தாலும் கூட அடுத்த காட்சிக்காக கேட்டில் காத்து நின்றவர்கள் செய்த ஆரவாரம் ... அதையெல்லாம் நேரில் பார்த்து தான் அனுபவிக்க வேண்டும்.

மறக்க முடியுமா அந்த நாட்களை ... வெல்ல முடியுமா எங்கள் தலைவரை ...

eehaiupehazij
8th May 2013, 08:30 PM
Uthama Puthiran (1958 film)
From Wikipedia, the free encyclopedia
For the 1940 film, see Uthama Puthiran (1940_film). For the 2010 film, see Uthamaputhiran (2010 film).
Uthama Puthiran


Directed by T. Prakash Rao

Written by C. V. Sridhar

Starring Sivaji Ganesan
Padmini
M. N. Nambiar
M. K. Radha
P. Kannamba
K. A. Thangavelu
Ragini

Music by G. Ramanathan

Distributed by Venus Pictures
Release date(s) 7 February 1958[1]

Country India

Language Tamil

Uthama Puthiran (English: Ideal Son) is a 1958 Indian Tamil historical fiction film directed byTatineni Prakash Rao. The film stars Sivaji Ganesan, Padmini and M. N. Nambiar in the lead roles, while K. A. Thangavelu, Ragini and P. Kannamba play supporting roles. It is the first film to feature Sivaji Ganesan in two distinct roles.[2][3] The film was also released in Telugu as Veera Prathap and in Hindi as Sitamgar.[4]
Uthama Puthiran is the story of a queen who gives birth to twins. But as fate would have it, one of the twins is forcefully abandoned and grows up elsewhere. He grows up as a kind and honest man, while the other twin grows up as a greedy and arrogant man. When fate brings both the twins together and they start fighting without recognizing each other, it is only their mother who can bring peace. The film was released on 7 February 1958, and became a huge success.
Contents

Plot [edit]
It is a joyous time for everyone in a land known as Malarpuri, when the queen (P. Kannamba) becomes pregnant. Joyful for everyone except her brother Naganathan (M. N. Nambiar), the army commander who has his eye on the throne. So he pays one of the maids to deliver the newborn to him. He then proceeds to hand it over to his henchman Somu, ordering it to be killed. But the queen gives birth to twins and the king (M. K. Radha), ever suspicious of Naganathan, passes an order that forces Naganathan to take care of this baby. But he decides to raise it as his hand puppet. Meanwhile, Somu desists from killing the baby and instead, raises it in another town. So the twins grow up separately - Parthiban, a good, honest and brave man and Vikraman (both played by Sivaji Ganesan), a drunkard and womaniser who is dependent on his uncle for everything.
Parthiban falls in love with Amuthavalli alias "Amutha" (Padmini), the daughter of the minister at the palace and on one of his nocturnal visits, runs into his brother and his mother. The queen finds out that Parthiban was her other son who she did not raise, and she accepts him as her son. She pleads Vikraman also to accept Parthiban as his brother, but Vikraman, his mind poisoned by his uncle, fights Parthiban and defeats him, later clamping an iron mask on his face and locks him up in the dungeons. But through some strategies Parthiban escapes, he reaches Vikraman and forces him into the same prison, thus the same iron mask is put on Vikraman's face this time. Parthiban then puts on Vikraman's clothes and acts as the king, while the guards at the dungeons are unaware that it is Vikraman (dressed as the pauper that Parthiban earlier was) who is trapped.
Vikraman keeps pleading the guards to release him and tries to make them understand the truth but the guards continue to laugh, thinking that "Parthiban" has gone insane. His last proof of identity, Vikraman writes a message on a nearby plate and after signing it, tosses it out of the window. A guard reads the message and after seeing Vikraman's sign, finds out that he is in prison. The guard releases Vikraman who challenges Parthiban to a final fight. With Parthiban seeming to emerge victorious, Vikraman escapes on a horse and while running through the mountains, he however loses control of the horse and falls off the cliff. With Vikraman finally gone, Parthiban is crowned the new king of Malarpuri.
Cast [edit]
In those days, it was technically very difficult to film movies which call for double roles. Though computer technology was non-existent those days, filming was very well executed. There was nothing much to my dance performance in Utthama Puthiran. I had already mentioned I was a good dancer, having been trained in the art of traditional Indian dance. The dance performance for Utthama Puthiran was different. The credit goes to the dance master, Heera Lal, who conceived the dance and choreographed it with fast steps and claps.
—Sivaji Ganesan in his autobiography[2]
Development [edit]
When Venus Pictures came out with an advertisement of their film Uthama Puthiran in a 1958 newspaper with Sivaji Ganesan in the leading role, the same day actor MGR announced a same-titled film in the same paper. Not wanting to make an issue out of it, Venus pictures continued shooting the film, as the script was ready and released it on the date announced. Eventually, MGR changed the title of his film to Nadodi Mannan, and released it much later.[5]
Filming [edit]
The film was scripted by Sridhar. Cinematography was handled by Aloysius Vincent.Bollywood dancer Helen was roped in to perform a dance sequence in the song Yaaradi Nee Mohini, which was Tamil cinema's first "rock ‘n’ roll dance".[6]
Influences [edit]
Uthama Puthiran is a remake of the same-titled 1940 film that featured P. U. Chinnappa in two distinct roles, notably the first Tamil film to feature an actor in two roles.[7] It is also said to be adapted from the French novel The Man in the Iron Mask, written by Alexandre Dumas in 1850.[8] The story of identical twins was used often in Tamil cinema, and Dumas himself used it to write his famous The Corsican Brotherswhich was also adapted into Tamil. The Gemini Studios version Apoorva Sagotharargal with M. K. Radha playing the twins was a box office hit.M. G. Ramachandran played the twins in a rehash of the film titled Neerum Neruppum, which did not do as well.[3] Uthama Puthiran (1958) also was the inspiration behind Imsai Arasan 23m Pulikesi, a 2007 historical comedy film starring comedian Vadivelu as the twins.[9]
Soundtrack [edit]
The soundtrack of the film has been composed by G. Ramanathan.[10]
Track Song Singer(s) Duration Lyrics
1 Anbe Amuthey T. M. Soundararajan, P. Suseela
03:20
2 Yaaradi Ni Mogini T. M. Soundararajan, A. P. Komala, K. Jamuna Rani, Jikki
07:06
3 Kaththiruppaan Kamalakannan P. Leela
04:48 T.K. Sundaravathiyar
4 Mullai Malar Mele T. M. Soundararajan, P. Suseela
05:06 A. Maruthakasi
5 Unnazhagai P. Suseela
04:42 K.S. Gopalakrishnan
Critical reception [edit]
Film critic Balaji Balasubramaniam said, "Inspite of being a historical, Uthama Puthiran does not have that many songs and so, the songs appear at reasonable intervals. Most of them are also very good with Mullaimalar Mele... taking the top spot. Anbe Amudhe... and Unnazhagai Kanniyargal... are the other good songs. As far as song sequences go, the exuberant Yaaradi Nee Mohini... has little competition."[11]
Release [edit]
Reception [edit]
Uthama Puthiran has received critical acclaim. The Hindu called it "ever-popular", and labelled Sivaji Ganesan as a "Consummate villain and a suave hero".[12] Film critic Malathi Rangarajan said, "That one scene where the arrogant twin callously goes up and down on the swing as his mother rebukes and pleads with him to mend his ways, is enough to ensure the everlasting shelf-life of the decades-old offering from the stable of Sivaji Ganesan. Catch it the next time it is telecast. It's worth it."[13] Indiaglitz said, "It has good performances, melodious music, and an engaging screenplay and is hugely entertaining."[8] Balaji Balasubramaniam rated it 3.5/5 and said, "There is not a single wrong step in Sivaji's performance. Inspite of no visual differences, the distinction between the two characters is beautifully brought out with just body language and style of talking. Vikraman is easily the more interesting of the two and offers more scope for acting."[11] Film historian Randor Guy praised the film for its "excellent screenplay, fine dialogue, music, Sivaji Ganesan’s superb performance and Prakash Rao’s impressive direction."[6]
Box office [edit]
Uthama Puthiran was very successful during its theatrical run. With Sivaji Ganesan's dual role performance being praised, he went on to do several hit dual role films in his later career.[14] The film ran for over 100 days in theatres.[4]
References [edit]
1. ^ "Uthama Puthiran | burrp!TV Guide". Tv.burrp.com. 1958-02-07. Retrieved 2012-06-24.
2. ^ a b Sivaji Ganesan (2002). Autobiography of an Actor, p. 118, Sivaji Prabhu Charities Trust, Chennai
3. ^ a b Randor Guy (2011-03-17). "Arts / Cinema : A trailblazer". The Hindu. Retrieved 2012-04-09.
4. ^ a b "Chevalier Dr. Sivaji V. C. Ganesan". Geocities.ws. Retrieved 2012-04-09.
5. ^ "'Uthama Puthiran' a flash back | Sulekha Creative". Creative.sulekha.com. Retrieved 2013-02-14.
6. ^ a b Randor Guy (5 January 2013). "Blast from the Past: Uthama Puthran 1958". The Hindu. Retrieved 14 February 2013.
7. ^ Randor Guy (May 2, 2008). "Blast from the Past: Utthama Puthiran (1940)". The Hindu. Retrieved 24 June 2012.
8. ^ a b "Uthama Puthiran - Making history with historicals - Tamil Movie News". IndiaGlitz. 2006-09-19. Retrieved 2012-05-02.
9. ^ "Friday Review Chennai / Film Review : Messages in a light vein - Imsai Arasan 23rd Pulikesi". The Hindu. 2006-07-14. Retrieved 2012-04-20.
10. ^ "Uthama Puthiran Songs - Uthama Puthiran Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. Retrieved 2012-04-09.
11. ^ a b Balaji Balasubramaniam. "Uthama Puthiran". Bbthots.com. Retrieved 2012-08-17.
12. ^ "Consummate villain and a suave hero". The Hindu. Retrieved May 26, 2012.
13. ^ Malathi Rangarajan (2012-01-14). "Arts / Cinema : Two to tango". The Hindu. Retrieved 2012-05-27.
14. ^ "THE DOUBLE ACTION BONANZA IN KOLLYWOOD". Behindwoods.com. Retrieved 2012-04-09.
External links [edit]
• Uthama Puthiran at the Internet Movie Database

eehaiupehazij
8th May 2013, 08:49 PM
Puthiya Paravai
From Wikipedia, the free encyclopedia
Pudhiya Paravai

Promotional poster
Directed by Dada Mirasi
Starring Sivaji Ganesan
B. Saroja Devi
Sowcar Janaki
M. R. Radha
V. K. Ramasamy
Nagesh
Manorama

Music by • M. S. Viswanathan
• T. K. Ramamurthy

Cinematography K.S. Prasad Rao
Editing by N. M. Shankar
Studio Sivaji Films

Release date(s) 12 September 1964
Running time 150 minutes[1]

Country India
Language Tamil

Puthiya Paravai (English: New Bird), also spelt as Pudhiya Paravai,[2] is a 1964 Indian Tamilromantic thriller film directed by Dada Mirasi, under the banner of Sivaji Films. It stars Sivaji Ganesan, B. Saroja Devi and Sowcar Janaki in the lead roles, while M. R. Radha, V. K. Ramasamy, Nagesh and Manorama play supporting roles. The story is about a rich businessman who falls for a young woman he meets on a cruise ship, when going to his home country after living abroad. She and her father stay with him. As they get closer, the man reveals that he was already married before, but his wife died and this continuously troubles him. The woman consoles him, and they decide to get married. But on their engagement day, an unexpected incident changes their lives forever. How the man overcomes this forms the rest of the story.
Puthiya Paravai, which is notably the maiden production of Sivaji Films, is a remake of theBengali film Sheshankaa, which itself was inspired by the 1958 British film Chase a Crooked Shadow. The costumes featured in the film were tailored and brought from Singapore andEngland, unlike other Tamil films of the time. The film's original soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamurthy, with several of the tracks becoming chartbusters, like the numbers Paartha Gnaabagam Illaiyo and Engey Nimmadhi, which at the time, had the highest number of instruments used for a recording. The film's cinematography was handled by K. S. Prasad.
The film was also dubbed in Telugu as Singapoor CID.[3] Puthiya Paravai was released on 12 September 1964 in several theatres across Chennai excluding the theatre Shanthi, which was Ganesan's family-owned theatre. Upon release, the film opened to critical acclaim and became a commercial success, with the lead actor's performances being widely lauded, most notably Sowcar Janaki's portrayal of a modern women, in contrast to the "homely" roles she portrayed in her previous films. The film is due to be digitally restored and re-released in 2014.

[edit]Plot
Gopal (Sivaji Ganesan) is a rich businessman who is returning from Singapore to his hometown in a cruise ship. He meets Latha (Saroja Devi), another traveler who has been accompanied by her father (V. K. Ramasamy). Repeated meetings develop a good friendship in course of time and Gopal invites them to his mansion home at Ooty and leaves for his place. Gopal again meets Latha and her father who have come on a tour to Ooty, and he takes them to his home. Gopal and Latha develop a liking for each other and he proposes to her to which she happily accepts. One day, Latha finds a nervousness in Gopal while he hears any train sound. Gopal explains the reason behind this is his first wife.
Gopal who had lost his mother had been wandering aimlessly at Singapore. In a night club, he met a singer named Chitra (Sowcar Janaki). He got attracted to her and they both decided to marry, in the presence of Chitra's brother Raju (S. V. Ramdoss). On the first night of the marriage, Gopal found that his wife was not cultured and she visits night clubs, parties and consumes drinks. Gopal was depressed by her attitude, but tolerated for respect of his family. Eventually, his father (Dada Mirasi) died of a heart attack after seeing Chitra's drunken attitude. Gopal tried to control Chitra, but she always felt irritated by his acts. At one point, she tried to walk out of his life to which Gopal pleaded her to change her mind. But Chitra did not obey and went away. The next day he heard Chitra died in railway track and this disturbs him a lot. Latha consoles him and tells him to forget the past.
Gopal and Latha soon decide to get married. Latha's father accepts for the marriage and engagement is arranged. On the day of their engagement, the ceremony is suddenly stopped by a woman claiming that she is Chitra, the wife of Gopal, accompanied by her uncle Rangan (M. R. Radha). Gopal is taken aback by the incident and also the resemblance of the woman's identity to that of his wife's face. Latha leaves the hall with tears. Gopal insists that the lady is not Chitra as she has died a long time back, which no-one believes due to his lack of conclusive evidence. "Chitra" explains that she is alive and wants to live with him as a good wife, though Gopal does not believe her. He promises Latha that the lady is not Chitra, and vows to prove it true. Both Latha and "Chitra" have an internal cold war for right of Gopal's life and love. Gopal is tortured when no-one except his policeman friend Kumar (O. A. K. Thevar) believes whatever he says about her and additionally by "Chitra" when she sings the same song which she sang during their first meet.
Later, Raju (who knew about Chitra's death) arrives at Gopal's home and believes Gopal's story about the Chitra look-alike who was bothering him. However upon seeing her, believes his sister Chitra is alive. After Gopal fails twice to prove the fake Chitra's identity, he ultimately reveals the truth to everyone — Before Chitra was ready to leave Gopal forever, the latter slapped her, causing her to mysteriously die. Gopal then found out the reason from his family doctor, that Chitra was a heart patient with a weak heart. Gopal, wanting to hide the truth and make people believe Chitra committed suicide, took her corpse and left it on a railway track, causing the running train to crush it, also admits that he would not have slapped her if he knew she was a heart patient. Thus, everyone accepts Gopal's story, and he orders Kumar to arrest the Chitra look-alike. However, Rangan, Latha and her father reveal themselves as undercover police officers inquiring into the mysterious death of Chitra. Having found Gopal guilty of killing Chitra, they finally arrest him.
[edit]Cast
Any role that is unusual, unconventional has a special appeal for me, a character like the one I played in "Puthiya Paravai". Maybe it has something to do with my own psyche. I love complex characters.
- Sowcar Janaki, in an interview with Film World[4]
[edit]Production
[edit]Development
The 1958 British thriller film Chase A Crooked Shadow, directed by filmmaker Michael Anderson was a "success around the world, including India". It later inspired the Bengali film Sheshankaa, which starred Uttam Kumar, Sharmila Tagore and Sabitha Chowdhary. Sheshankaa's screenplay by Rajkumar Mitra was acquired by Sivaji Films to be made in Tamil as its first "in-house" production — Puthiya Paravai, with Dada Mirasi as the director and screenplay writer.[5]
[edit]Casting
While Sivaji Ganesan was cast as the male lead, both the female leads — B. Saroja Devi and Sowcar Janaki made an impact by being cast in roles very different from what they had generally done till then.[6] According to Ganesan's eldest son Ramkumar Ganesan, "Sivaji always thought of Sowcar Janaki as classy and sophisticated. That is why he cast her in the role of a modern woman in the film Pudhiya Paravai. Before that Sowcar had only acted in homely roles".[7] Director Dada Mirasi, who did a guest role as the hero's father in the film,[5] was initially not convinced about Janaki acting in the film. But after seeing her performance in the song Paartha Gnabagam Illaiyo, Mirasi conceded that "she had won".[8] Actors Nagesh and M. R. Radha were also selected to play important roles.[9]
[edit]Filming
Pudhiya Paravai was filmed in Eastman Color.[2] The costumes were tailored and brought from Singapore and England. The song recorded during the first day was Chittukuruvi Muththam Koduthu. An African music band which was visiting Chennai then was used for the songPaartha Gnabagam Illaiyo, picturized on Sowcar Janaki. K. S. Prasad handled the film's cinematography,[2] and Aroordhas wrote the film's dialogues.[10] The heavily orchestrated Engey Nimmadhi number, at that time, had the highest number of instruments used for recording. It was revealed that "Apparently, Kannadasan could not get the right words nor was there a tune ready and Sivaji came to the composing and did a pantomime of what he would like to do and thus was born the line and the song".[11] The tuxedo worn by Sivaji Ganesan in the film was ordered from London, and was "something unheard of those days".[6]
[edit]Soundtrack
Puthiya Paravai
Soundtrack album by
Viswanathan-Ramamoorthy

Released 1964
Genre
Film soundtrack

Length 27:91
Language Tamil

Label
Saregama

The film's soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamoorthy, while the lyrics were written by Kannadasan.[12] The soundtrack was released under the label ofSaregama.[13] Before the recording of the track Engae Nimmadhi, the duo had "offered about 100 tunes".[2] All the songs were successful, and contributed to the film's success.[5] Elements of the song Paartha Gnaabagam Illaiyo were later used in the song Yae Dushyanta, composed byBharadwaj for the 2010 film Asal.[14][15]
Tracklist
No. Title Singer(s) Length
1. "Engey Nimmathi" T. M. Soundararajan
6:21
2. "Chittu Kuruvi" P. Susheela
5:08
3. "Aha Mella" T. M. Soundararajan 4:12
4. "Unnai Ondru Ketpen" P. Susheela 3:02
5. "Paartha Gnaabagam Illaiyo" P. Susheela 3:38
6. "Paartha Gnaabagam Illaiyo (Sad)" P. Susheela 4:00
7. "Unnai Ondru Ketpen (Sad)" P. Susheela 2:10
[edit]Reception
The soundtrack received positive response from contemporary critics. Randor Guy of The Hindu stated, "The movie has excellent music (Viswanathan-Ramamurthy; lyrics by Kannadasan) and many songs became hits — Paartha Gnaabakam Illayo…!, Unnai ondru ketpen (P. Sushila) and Engey nimmathee (T. M. Soundararajan)."[5] Malathi Rangarajan of The Hindu said, "Who can forget the everlasting flavour of MSV’s expertise that emanated through each and every number, beginning with ‘Unnai Ondru Kaetpaen’!"[2] Film critic Baradwaj Rangan called it a "stylish musical bonanza".[16]
[edit]Release
Pudhiya Paravai was released on 12 September 1964, and was slated to be released in theatre Shanthi,[11] which was Sivaji Ganesan's family-held theatre.[6] However, because the Raj Kapoor-starrer Sangam was already running there successfully, the film was instead released in theatre Paragon, which had to be excessively refurbished before screening the film.[11]
[edit]Critical reception
A different kind of film for its time, Puthiya Paravai received positive reviews. Malathi Rangarajan of The Hindu said, "Pudhiya Paravai is a thriller in the whodunit genre. Dada Mirasi’s astute adaptation saw to it that the suspense was maintained till the very end, and the denouement neatly tied up the strands of suspense."[2] Film historian Randor Guy stated, "Sivaji Ganesan as the hero forced into a corner is excellent. Saroja Deviexudes glamour, while Sowcar Janaki as the boozing wife acquits her role with considerable conviction", while concluding that the film would be "Remembered for the taut onscreen narration, the excellent performances by Sivaji Ganesan, Sowcar Janaki and M. R. Radha, and Saroja Devi’s glamour".[5] Film chronicler "Film News" Anandan praised the film for being "the first film which had a classy, rich look right through."[6]Ramakrishnan T. of The Hindu called Saroja Devi's character a "brilliant role".[17] IndiaGlitz said, "In the colourful 'Puthiya Paravai' Sivaji's every movement with Saroja Devi talks love."[18]
[edit]Re-release
Pudhiya Paravai was re-released on July 23, 2010[11] to commemorate Sivaji Ganesan's 9th death anniversary. The negatives of the film were "cleaned up at a lab" prior to release, and the film was released at Shanthi theatre, where it could not originally be released in 1964. Despite being a re-release, the film earned public acclaim and took a very big opening, running to "full houses" for three days.[6] As of 2013, production house Sai Ganesh Films have announced that the film's digitally restored version will be released in 2014, 50 years since the original release in 1964.[20]
[edit]References
1. ^ "Puthiya Paravai". Amazon.com. 1 January 2007. Retrieved 17 March 2013.
2. ^ a b c d e f Malathi Rangarajan (5 August 2010). "The bird flies high". The Hindu. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
3. ^ a b "A Saga Called Sivaji". Geocities.ws. Archived from the original on 30 March 2013. Retrieved 23 May 2012.
4. ^ T.M. Ramachandran (1972). Film World. p. 45.
5. ^ a b c d e Randor Guy (26 June 2009). "Puthiya Paravai 1964".The Hindu. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
6. ^ a b c d e "Blast from the past as Sivaji movie runs housefull".The Times of India. 27 July 2010. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
7. ^ "Fans go back in time to pay tribute to Sivaji". The Times of India. 23 January 2012. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
8. ^ Malathi Rangarajan (29 December 2006). "A dauntless spirit showcased". The Hindu. Archived from the original on 30 March 2013. Retrieved 24 April 2012.
9. ^ "Sivaji still draws houseful audience". Behindwoods. 27 July 2010. Archived from the original on 30 March 2013. Retrieved 27 August 2012.
10. ^ "filmography p10". Nadigarthilagam.com. Retrieved 23 February 2013.
11. ^ a b c d e f Mohan Raman (September 2010). "Partha Gnyabagam Illayo". Madras Musings. Archived from the original on 30 March 2013. Retrieved 23 May 2012.
12. ^ "Puthiya Paravai songs". Raaga.com. Retrieved February 13, 2012.
13. ^ "Saregama Album Details : Pudhiya Paravai". Saregama. Retrieved March 24, 2013.
14. ^ Malathy Sundaram. "Asal Music Review". Behindwoods. Archived from the original on 2 April 2013. Retrieved 15 July 2012.
15. ^ Pavithra Srinivasan (8 January 2010). "Aasal's music is for Ajith fans". Rediff. Archived from the original on 30 March 2013. Retrieved 6 March 2013.
16. ^ Baradwaj Rangan. "Two people, one industry". India-seminar.com. Retrieved 6 March 2013.
17. ^ Ramakrishnan T. (6 August 2012). "The day of the heroine?". The Hindu. Retrieved 6 March 2013.
18. ^ "Romancing the Romance - I". IndiaGlitz. 9 February 2010. Retrieved 20 March 2013.
19. ^ Velayutham, Selvaraj (2008). Tamil Cinema: The Cultural Politics of India's other Film Industry. Psychology Press. p. 115.ISBN 9780203930373. Retrieved 24 August 2012.
20. ^ Udhav Naig (2 March 2013). "Second coming". The Hindu. Retrieved 3 March 2013.


ScottAlise
8th May 2013, 10:38 PM
ராகுல்,

வாரே (கண்ணா) வா! கல்தூண் போல நின்று அருமையான பதிவுகளை அளிப்பதற்கு நன்றி! நேற்று முரசில் பார்த்து ரசித்தேன். தலைவர் உரி அடிக்குமிடம் அட்டகாசம். கடலூரில் ஒரு மாதம் ஓடிய படம். தம்பி தம்பிதான்.

Vasu sir,

Thanks for referring me as Thambi really thanks from bottom of my heart and ur painstaking efforts to bring us rare cuttings deserve a huge applause

My external hard drive is getting full due to the cuttings provided by veteran hubbers.

ScottAlise
8th May 2013, 10:40 PM
ராகுல்.
உன்னுடைய சீரிய பணிக்கு வாழ்த்துக்கள். உன் வயதுடைய ஒருவன், எங்கள் நடிகர்திலகத்தின் அரிய படங்களை பார்த்து, எங்களோடு பகிர்ந்து கொள்வது எங்களுக்கெல்லாம் சந்தோஷம் தரும் இனிய நிகழ்வு. உன்னுடைய sincerity க்கு என் நன்றிகள்.

Thank you sir. Your series is very interesting to read

ScottAlise
8th May 2013, 10:45 PM
Dear Ragavendran Sir,

If I write about any movie you end up giving your views , tid bits about that movie which makes it a crown if the movie is a jewel thank you very much

ScottAlise
8th May 2013, 11:21 PM
Thyagam


NT was back to his form of delivering hits after a brief lull in the year 1977 with Deepam , a new combination . The next time they colloboarted once again , they means- NT- Balaji- Ilayaraja- Vijayan. As always in Balaji movie, this too was a remake , I guess from Malayalam. Mr. Balaji never cared for nativity I guess as the whole movie was shot extensively in back waters of Kerala . Even Balaji mentions that Kerala is looking good.


Now coming back to the story it is all about Raja (NT) who is not liked by anyone in the village. He lives with his friends Nagesh Krishnamoorthy, Balaiah. He is liked by only few people the list includes Major, Nagesh, Manorama, Jayalakshmi.

Raja earns his living by fishing and drinks arrack most of the time . He is deeply hurt as his lover Radha (Lakshmi) constantly illtreats him. VKR – MRR Vasu are rich people in that village (though they cheated NT to reach the stage ), constantly irks NT and quarrel with him.


Enters Balaji , an honest officer , VKR misguides him. The first meeting of Balaji & NT is a real treat the way NT asks can I have a smoke and smells the cigarette, keeps one near his ear and smokes another one and looking at the face of Balaji remarks in his casual way இனமா கிடைக்குதுன்னு எல்லாத்தையும் எடுத்துக்க மாட்டேன்.


The movie has a Brahmin priest Who, none other than Thengai Srinivasan who is jalra for priest and his wife Manorama who is supporter of NT is also a good pair. Though thengai overacts occasionally the scene where he transforms from being a hot headed priest to normal human being is beautifully etched, Iam an ardent fan of Thengai sir.

Manorama , as usual is terrific especially in holi episode where she dances equally with NT deserves an huge applause , Iam sure there must have been no dance master to choreograph the episode it must have been the so called chemistry between the actors , there was no clumsiness in the dance movements. The same NT who enthralled us with a awesome performace in Thillana MOhanambal bby handling நாதஸ்வரம் so effectively here does not does it correctly reason there he was an artist here he is a drunkard who gets hold of it accidentally. As said in Thirisoolam “ On stage I live my character, off stage I keep my character”. Yes he breathes his character all the way.The scene ends with NT friends ragging Thengai and the way Thengai’s face is covered by Holi powder will definitely evoke laughter in viewers face .


Nagesh plays a guest role of NT’s muslim friend he played muslim role in same banner’s earlier collaboration Deepam strange co incidence. The scene where NT rides a cyle is too cinematic in this natural movie but song comprising of all three religions is too good


Now back to story
Balaji whips NT based on complaint by VKR, Major reveals NT is a good hearted man, Balaji decides to help NT , he calls him to his police station and asks about his past life. NT reveals his grandfather was duped by VKR and he was falsely framed of cheating case and his image was further damage by the death of female servant for which he was accused for raping her, angered by which Lakshmi stops the marriage proposal
Balaji helps him to get a contract as NT is an engineer . NT ‘s job is to construct a dam to prevent flood which is not liked by VKR who looks for a chance to spoil it . Does NT gets back his lost life, does he unite with his lover Lakshmi forms the climax.


Mukkamala plays NT’s grandfather after a long time. Lakshmi fits the bill perfectly but could have been given more screen space considering her acting talents. Her sarees are mostly fancy sarees considering the trend started in Raja , again NT- Balaji combination, whereas NT costumes mostly comprised of plain shits, checked shirts whereas in flash backs it is designed shirts, pyjama , embroidery shirts
Fights were also awesome as MGR was most popular for action movies and next comes Jai Shankar movies.
NT fight with Jestin in the market is well choreographed courtesy Madhavan, NT showed his other side as well in the fight, I guess most part of the fight were performed by himself as many close up and mid shots were taken. Mr. vasu has uploaded it in his series highlighting NT’s fights.
The next சிலம்பு fight was also superb, even Manorama fought nicely.
For a movie shot in back waters of kerala, cinematography must be good here the colour texture, photography was excellent courtesy Balakrishnan
Balakrishnan had vast experience as he was cinematographer for Urimaikural( remember dream song vizhiye), Idayakkani( Neenga Nala irukonum Nadu munnare) here too his job was awesome.
Songs were also good


One the whole wholesome entertainment .

Gopal.s
9th May 2013, 07:17 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.

-----To be continued .

Gopal.s
9th May 2013, 07:27 AM
நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். முரளி சார் சொன்னது போல் நான் ஒரு தவத்தில் ஈடு பட்டுள்ளேன். நான் எழுதி கொண்டிருக்கும் இந்த கோபால் சம்பத்த பட்ட பதிவு முடியும் வரையாவது ராகவேந்தர் சார் போல supporting பதிவுகள் மட்டும் போட்டு . புரிதலை உணர்த்தவும்.சும்மா சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதோதோ செய்து கொண்டிருந்தால் , எழுதுபவனுக்கு வெறுப்பு ஏற்பட்டு ,நஷ்டம் எழுதுபவனுக்கல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். நான் இதை எழுதி முடித்து ஒரு வாரம் கழித்து மற்றதை ஆரம்பிப்பேன் . அப்போது நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதலாம். உங்கள் feedback முக்கியம்.(வெத்து பாராட்டுகளை என்றுமே நான் எதிர்பார்ப்பதில்லை).
சிவாஜி செந்தில் சார், விக்கிபீடியா இணைப்பு கொடுத்தாலே போதும். cut paste பண்ண அவசியமில்லை.

RAGHAVENDRA
9th May 2013, 07:30 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.


Perfect summing up of the character.



இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

Clear picture presented of the character. super.



இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ...



இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action .


can be interpreted as ...action for reaction



பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி,

எம்.ஆர்.ராதா டம்ளரை உடைத்தவுடன் காட்டும் நடிப்பு...


வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,

confession scene at the climax



சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

கை ரேகை கிடைத்த செய்தியைக் கேட்டவுடன் ....



இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.

-----To be continued .

காத்திருக்கிறோம்...

RAGHAVENDRA
9th May 2013, 07:37 AM
டியர் கோபால் சார்,
தங்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயமும் ஆதங்கமும் புரிகிறது. ஆனால் அவ்வப்போது மற்ற பதிவுகளையும் நாம் தவிர்க்க முடியாது. தாங்கள் எப்படி தங்களுடைய கட்டுரையனை முழுக்க முழுக்க இடையூறின்றி எழுத விழைகிறீர்களோ அதே போல் எங்களுக்கும் தொடர்ந்து இதனைப் படிக்க விருப்பம். அதே சமயம் மற்ற பதிவுகளும் அவ்வப்போது வருவதை தவிர்க்க இயலாது.

என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த ஆய்வேட்டினைத் தனித்திரியாக பதித்தால் முழு ஈடுபாட்டுடன் இடைவெளி இல்லாமல் எழுதவும் படிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மட்டுமன்றி கவனமும் சிதறாமல் இருக்கும்.

மற்ற நண்பர்களும் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணுகிறேன். அப்படி ஏற்றுக் கொண்டால் மாடரேட்டர்களின் துணையோடு இந்த ஆய்வேட்டின் தொடர்புடைய அத்தனை பதிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே திரியில் பார்க்கலாம்.

அப்படி அதற்கு கஷ்டமாக இருந்தால் கூட, திரியினை ஆரம்பித்து விட்டு, துவக்கத்தில் முந்தைய பதிவுகளுக்கான இணைப்பினை அப்படியே தந்து விடலாம். ஏனென்றால் அதனுடைய response பதிவுகளும் தொடர்ந்தே வருவதால். இனி வரும் புதிய தொடர்களை புதிய திரியில் எழுதிக் கொள்ளலாம்.

Of course the decision is yours.

vasudevan31355
9th May 2013, 08:05 AM
அந்த கோபால் சம்பந்தப்பட்ட பதிவுகளை முழுமையாகத் தரும் வரையில் இந்த கோபாலை நாங்கள் தொந்தரவு செய்வதில்லை. தவத்தை மெச்சினோம். பக்தனே! பரம மனசாந்தி பெறுவாயாக! பக்தன் கடவுளை சோதிக்காமல் இருந்தால் சரிதான். (சீண்டிப்பார்ப்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமல்லவே!):-D Just for relax.

eehaiupehazij
9th May 2013, 09:24 AM
[QUOTE=Gopal,S.;1041119
சிவாஜி செந்தில் சார், விக்கிபீடியா இணைப்பு கொடுத்தாலே போதும். cut paste பண்ண அவசியமில்லை.[/QUOTE]


dear Gopal Sir. I am an ardent fan of you for the way you present your material in a systematic and sequential way that can be understood with a deep impact on NT's image even by the generations to come. Kindly take my interludes only in support of you. Heeding your request I patiently wait till you complete your episodes.

eehaiupehazij
9th May 2013, 09:25 AM
[QUOTE=Gopal,S.;1041119
சிவாஜி செந்தில் சார், விக்கிபீடியா இணைப்பு கொடுத்தாலே போதும். cut paste பண்ண அவசியமில்லை.[/QUOTE]


dear Gopal Sir. I am an ardent fan of you for the way you present your material in a systematic and sequential way that can be understood with a deep impact on NT's image even by the generations to come. Kindly take my interludes only in support of you. Heeding your request I patiently wait till you complete your episodes.

Gopal.s
9th May 2013, 09:38 AM
டியர் கோபால் சார்,

மற்ற நண்பர்களும் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணுகிறேன். அப்படி ஏற்றுக் கொண்டால் மாடரேட்டர்களின் துணையோடு இந்த ஆய்வேட்டின் தொடர்புடைய அத்தனை பதிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே திரியில் பார்க்கலாம்.

அப்படி அதற்கு கஷ்டமாக இருந்தால் கூட, திரியினை ஆரம்பித்து விட்டு, துவக்கத்தில் முந்தைய பதிவுகளுக்கான இணைப்பினை அப்படியே தந்து விடலாம். ஏனென்றால் அதனுடைய response பதிவுகளும் தொடர்ந்தே வருவதால். இனி வரும் புதிய தொடர்களை புதிய திரியில் எழுதிக் கொள்ளலாம்.

Of course the decision is yours.
அந்த மாதிரி பண்ணினால் 200 வருஷம் கழித்து 20 ஹிட்ஸ் கிடைத்திருக்கும். இந்த மாதிரி தனி திரி போடுவதும் waste . நான் மற்றவர்களை blame பண்ணவில்லை. நான் ஒரு full character analysis ஒரு நாளில் முடித்து விட முயல்கிறேன். அதுவரை supporting ,feedback பதிவுகள் போடலாம்.(என் கருத்துக்களை எதிர்க்கலாம், இன்னும் better ஆக்க முயலலாம்.) இது நான் அந்த மேதைக்கு பண்ணும் ஆத்ம சுத்தியான சத்ய பூஜை. அடுத்த analysis ஒரு வாரம் விட்டே பண்ணுவேன். நண்பர்கள் வழக்கம் போல தொடரலாம்.

Gopal.s
9th May 2013, 09:42 AM
dear Gopal Sir. I am an ardent fan of you for the way you present your material in a systematic and sequential way that can be understood with a deep impact on NT's image even by the generations to come. Kindly take my interludes only in support of you. Heeding your request I patiently wait till you complete your episodes.
சார்,
உங்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

goldstar
9th May 2013, 09:54 AM
Perfect summing up of the character.


Clear picture presented of the character. super.


வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ...


ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது....

goldstar
9th May 2013, 09:56 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

-----To be continued .

NT has shown every thing in this movie. I particularly like a scene when NT talks to Saroja Devi and just look at NT face, so much smile, happiness shown within few seconds.

RAGHAVENDRA
9th May 2013, 10:35 AM
அந்த மாதிரி பண்ணினால் 200 வருஷம் கழித்து 20 ஹிட்ஸ் கிடைத்திருக்கும்..


நிச்சயமாக இதில் நான் உடன்படவில்லை. பாகம் 10க்கு சமமாகவோ அல்லது அதனையும் மிஞ்சியோ பார்வையாளர்களைப் பெறும். இதில் சந்தேகமில்லை. மற்ற கருத்துக்களைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை.

ScottAlise
9th May 2013, 10:57 AM
Gopal Sir,

I will also definitely try to supplement regarding Pudhiya paravai

I will wait and will not write about other films till you say it further

IliFiSRurdy
9th May 2013, 12:36 PM
பாகம்:23

நண்பர் கோபால் அவர்களே ,

தலைவரைப்பற்றி பலர் எழுதி படித்திருக்கிறேன்.
பலர் வரைந்தும் பார்த்திருக்கிறேன்.நீங்களோ அவரை செதுக்குகிறீர்கள்.
அதுவும் பாகம்23 தலைவர் போலவே உள்ளது.
(இதற்கு மேல் இதை புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை)

ஒரே ஒரு குறை என்றால் இது பாகம்22 ஐ சுமாராக ஆக்கி விடுகிறது.:smile2:
விரைவில் இதை சுமாராக ஆக்க பாகம் 24 ஐ பதிப்பிடுங்கள்.

ஒரு சிறு திருத்தம்:
சபையில் வைஜயந்தி மாலாவோ,அனுஷ்காவோ,வரும்போது "என் கூட எந்த பெண்ணும் வர வேண்டாம்!" என்று அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.(உண்மையில் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் தன்னுடன் ஒரு பெண்கள் கூட்டமே வருவதை வரவேற்க வேண்டும்)
அதே போல மற்ற பெண்கள் புத்திசாலிகளாக இருந்தால், மேற்கண்ட இருவரும் இருக்கும் போது, சபைக்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.

IliFiSRurdy
9th May 2013, 12:50 PM
ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது....

மற்ற நடிகர்களா? யார் அவர்கள்?:smokesmile:

vasudevan31355
9th May 2013, 01:03 PM
Rajaannaa Rajaathaan.

http://dd508hmafkqws.cloudfront.net/sites/default/files/mediaimages/gallery/2013/Feb/scan0027_0.jpg

iyzecota
9th May 2013, 03:00 PM
ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது....
நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.

Gopal.s
9th May 2013, 03:10 PM
நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.
ரவிச்சந்திரன் ,
நான் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்து திரை படங்களை தொடர்ந்து பார்வையிட்டு வரும் திரைப்பட ரசிகன். நாங்கள் நடிப்பு என்று ஒற்றை அம்சத்தை கொண்டு, இப்போது ஒரு ஆய்வு தொடரை தொடர்ந்து உரையாடல் நடை பெற்று வருகிறது. பன்முகம் கொண்ட புத்திசாலி கலைஞர்கள் இக்காலத்தில் உண்டு. தங்கள் வருகைக்கு நன்றி.

RAGHAVENDRA
9th May 2013, 03:24 PM
வருக ரவிச்சந்திரன் அவர்களே...

தங்கள் முதல் பதிவே தமிழ் சினிமா மீது தங்களுக்குள்ள பிடிமானத்தையும் நம்பிக்கையும் உணர்த்துவதாயுள்ளது. அது மேலும் வலுப்பெற வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்.

... நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் சமகாலம் என்பதெல்லாம் இல்லை... அவருடைய நடிப்பினைப் பற்றி இங்கு இடம் பெறும் கருத்துக்கள் அவருடைய திறமையைப் பாராட்டுவதோடு நின்று விடவில்லை. சினிமா வரலாற்றிலேயே ... உலகத்தின் பல்வேறு மொழிகளிலையும் சேர்த்து .. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை ஆணித்தரமாக எழுதியும் வருகிறோம். திரு கோபாலின் கட்டுரையை முழுவதுாக .. அனைத்துப் பாகங்களையும் படித்து முடித்து பின்னர் தாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்... சொல்லப் போனால் அந்த முடிவு, எங்களோடு தங்களையும் சேர்த்து விடும் என்பதே உண்மை.



மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.


நீங்கள் சொல்கிற மற்றும் இன்னும் பலர் சொல்ல நினைக்கிற அத்தனை தகுதிகளுக்கும் அதற்கும் மேலே கூட நடிகர் திலகம் தான் முன்னோடி. தங்கள் மனதில் தாங்கள் எந்த நடிகரை வரித்திருந்தாலும் அவர்கள் அனைவருக்குமே அனைத்து துறைகளிலுமே நடிகர் திலகம் முன்னோடி. தன்னுடைய தொழில் நுட்ப அறிவினைப் பற்றி வெளியில் தெரியும் அளவிற்கு அவர் பறை சாற்றிக் கொள்ளாதது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறதே தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதாக பொருள் அல்ல. ஒரு திரைப்படத்தினை உருவாக்க தேவைப்படும் அனைத்துத் துறை நுட்பங்களையும் அறிந்தவர் நடிகர் திலகம். தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து ஒரு இயக்குநரின் நடிகராய் விளங்கியதால் தான் இன்று வரை அவருடைய சிறப்பு நிலைத்து நிற்கிறது.

1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் பிறந்திருந்தாலும் நிச்சயம் குழந்தையாகத் தான் இருந்திருக்க முடியும். அந்தக் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார பூர்வமான அழைப்பில் அமெரிக்கா சென்று நயாகரா நகர மேயராக கௌரவிக்கப் பட்டதையெல்லாம் தாங்கள் அறிந்திருக்கலாம். இதை விட அவருடைய சிறப்பிற்கு வேறேது வேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள்.

இவற்றையெல்லாம் இம் மய்ய இணைய தளத்தில் நடிகர் திலகத்தப் பற்றி அனைத்துத் திரிகளையும் படித்துப் பார்த்த பின் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்.

IliFiSRurdy
9th May 2013, 04:13 PM
வருக ரவிச்சந்திரன் அவர்களே...
1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். .

ராகவேந்தர் சார்..

sherlock holmes தோற்றார்,போங்கள்!

எந்த தடயத்தை வைத்து நீங்கள் இதை முடிவு செய்தீர்கள் எனத்தெரியவில்லை.
ஆனால் ரவிச்சந்திரன் என்ற பெயரை கூகுள் செய்தபோது,1945 இல் கூட இந்த பெயர்
வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

திருவாளர்கள் பம்மலாரும்,ஸ்ரீநிவாசும்,சாரதாவும்,நீங்களும்,வாசுவு ம் கட்டிக்கா த்த/க்கும் இந்த தமிழ்சபையில் ஒரு தவறும் வந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.

மற்றபடி சகோ.ரவிசந்திரனுக்கு என் அன்பான வரவேற்பு.

Georgevob
9th May 2013, 04:48 PM
நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.


அன்புள்ள நண்பர் ரவிச்சந்திரன் அவர்களே


திறமையாளர்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள் நிச்சயம் உண்டு..இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை..

ஆனால் அந்த பன்முகங்களின் முன்னோடி ? அது நடிகர் திலகம் ஒருவரே என்று கூறினால் மிகையாகாது. திரு.ராகவேந்தர் அவர்கள் கூறியது போல.!
உதாரணம்...Technic என்ற ஒரு விஷயத்தை எடுத்துகொள்வோம் - அதில் பல வகைப்படும்..

1)அதில் ஒன்று மேக்கப் -
குழந்தைகள் கண்ட குடியரசு, தங்கமலை ரகசியத்தில் வயோதிகவேடம், திருவருட்செல்வர் அப்பர், இப்படி பல வேடங்களில் அவருடைய மேக்கப் திறனை சொல்லலாம்...

2)அடுத்தது..குதிரைசவாரி - நடிகர் திலகத்தை விஞ்சிய குதிரை சவாரி இதுவரை யாரும் திரைபடத்தில் 90% க்கும் அதிகமாக டூப் போடாமல் செய்த்ததில்லை, உதாரணம் - உத்தமபுத்திரன், நாம்பிறந்த மண், மருதநாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா...மற்றும் பல படங்கள்...Back projection முறையில் Stoolai மட்டுமே நம்பி அவர் குதிரைசவாரி காட்சிகளை செய்ததில்லை

3)பின்பு- மியூசிக் Sense - புதிய பறவை திரைப்படம் எங்கே நிம்மதி பாடல்...ஒரு உதாரணம் போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

4) Homework for Historical & Mythology - ராஜ ராஜ சோழன், ஜூலியஸ் சீசர், VOC , கட்டபொம்மன் மற்றும் பல படங்கள்....இதுவும் ஒரு பன்முகம் காட்டும் திறன் தான்..

5) Direction : அதற்க்கு அவர் போனதில்லை காரணம்...He was always a producer friendly actor and therefore, he did not yet he did complete a film where Director K.Vijayan left in the middle and it was Nadigar Thilagam - who completed it, Film Name : Raththapaasam and this film was shot in Eurpeon Countries and not in any local or Asian Country.

6) பன்மொழி ஆற்றல் கொண்ட Versatality - இதை ஆரம்பித்தவரே தமிழ் திரைஉலகில் நடிகர் திலகம் தான் - உதாரணம் - பல, தெலுங்கு, மலையாள, கன்னட மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் - சாணக்ய சந்திரகுப்தா, பக்த துக்காரம், நாகம்ம நாயக்கடு, Schoolmaster , தசொளி அம்பு, யாத்ராமொழி, தர்தி மற்றும் பல படங்கள்...

ஆகவே தாங்கள் தங்களுக்கு நடிகர் திலகத்தை ஒரு நடிகராக மட்டுமே தெரியும் என்ற பட்சத்தில், மற்ற திறமை அவருக்கு இல்லை என்று எண்ணிவிட கூடாது...

இதில் மிக பெரிய இமாலய சாதனை என்ன தெரியுமா?
நீங்கள் மேற்கூறிய அனைத்தும் நடிகர் திலகம் ஒரு வருடத்தில் 8 to 9 திரைப்படங்களில் நடிக்கும்போது அவரிடம் உள்ள திறன்கள், திறமைகள். அனால்

இன்று..ஒரு பன்முக திறமை உள்ளதாக பறைசாற்றிகொள்ளும் நடிகர்கள் வித்தியாசமாக ஒரு படம் செய்வதற்கு குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் செலவு செய்கிறார்கள். இது தான் உண்மை..!


இனி தமிழ்நாட்டில் நடிகர் திலகத்தை போல விளம்பரபடுத்திகொள்லாத ஒரு திறமையாளன் பிறப்பதே கடினம். அப்படி பிறந்தாலும் இவர் அளவிற்கு திறமை உள்ளத என்று பார்த்தல் இல்லை என்பதே உலகறிந்த உண்மையாகும். !

மேற்கூறியவை ஒரு பக்கம் இருக்கட்டும் - உங்களிடம் சில விஷயங்கள் -

வழக்கமாக திரிக்கு புதிதாக வருபவர்கள் தங்களை இன்னார் என்று அறிமுக படுத்திகொள்ள்வார்கள். நீங்கள் ஏன் அதை செய்யவில்லை? எழுத்தின் சுவாரஸ்யத்தில் அதை மறந்துவிடீர்கள் என்று நினைகிறேன் !

உங்கள் முதல் பதிவே இந்த திரிக்கு பரிச்சயமான எங்கள் திரியின் நண்பர் ஒருவரின் நடை போல உள்ளது ! நிச்சயமாக நீங்கள் அவர் இல்லை என்று நினைகிறேன். காரணம் ஒரே நபர் பல பெயரில் வந்து ஏற்படுத்திய குழப்பங்கள் தான். எங்களுக்கு சிறிது துப்பறியும் ஆர்வம் அதிகம் என்பதால் இந்த கேள்வி.

அதுவும் அல்லாமல், திரிக்கு முதல் முதலாக வருபவர்கள், நடிகர் திலகத்தின் புகழை பற்றியோ அல்லது ஒரு தகவலை பற்றியோ பதிவிடிருகலாம்.

Gopal.s
9th May 2013, 05:15 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-24


மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.

-----To be continued .

Georgevob
9th May 2013, 05:51 PM
நம்முடைய திரி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி - NDTV நிறுவனம் நூறு வருட இந்திய சினிமாவில் 20 நடிகர்களை தேர்ந்தெடுத்து உள்ளது Indian cinema@100: 20 actors who made a difference என்ற தலைப்பில்.

இதில் யார் முதலாமவர் யார் இரண்டாமவர் என்றமுறயில்லாமல், மொத்தம் 20 நடிகர்களை தேர்வு செய்துள்ளது.
அதில் நடிகர் திலகம் அவர்களை பற்றியும் இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களில் "வெளிநாட்டில் சிறந்த நடிகர் பட்டம் " பெற்ற முதல் இந்திய நடிகர், நடிகர் திலகம் என்றும் நடிகர் திலகத்தை பல தென்னிந்திய (அனைத்திந்திய என்று கூறியிருக்க வேண்டும்..ஹ்ம்ம் இங்கும் அரசியல் நம்முடைய நடிகர் திலகதிருக்கு எதிராக ) நடிகர்கள் இவரது பாதிப்பு தங்களுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டிருபதாகவும் நடிகர் திலகத்தின் மற்ற திரை உலக புகழையும் மிக அழகாக உரைத்திருக்கிறார்கள். NDTV க்கு நமது நன்றி..!

அதன் இணைப்பை இந்த தளத்தில் காணலாம்

http://www.ndtv.com/photos/entertainment/indian-cinema-100-20-actors-who-made-a-difference-15052/slide/17

IliFiSRurdy
9th May 2013, 06:29 PM
nd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..
இதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.

Dilip Kumar
Rajesh Khanna
Amitabh Bachchan
Rajinikanth
Pran Sikand

N T Rama Rao
Uttam Kumar
M G Ramachandran
Mohanlal
Naseeruddin Shah

Raj Kapoor:
Kamal Haasan
Balraj Sahni:
Utpal Dutt
Chiranjeevi:

Rajkumar
Sivaji Ganesan
Mammootty
Shah Rukh Khan
Aamir Khan:

இப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.

மேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.Why not 25 or 50?

இந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.

சுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க!"என்று சொலவதற்கு ஒப்பாகும்.

RAGHAVENDRA
9th May 2013, 08:21 PM
nd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..
இதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.

Dilip kumar
rajesh khanna
amitabh bachchan
rajinikanth
pran sikand

n t rama rao
uttam kumar
m g ramachandran
mohanlal
naseeruddin shah

raj kapoor:
Kamal haasan
balraj sahni:
Utpal dutt
chiranjeevi:

Rajkumar
sivaji ganesan
mammootty
shah rukh khan
aamir khan:

இப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.

மேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.why not 25 or 50?

இந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.

சுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க!"என்று சொலவதற்கு ஒப்பாகும்.

exactly.

ScottAlise
9th May 2013, 10:00 PM
Welcome Ravichandran sir , ur starting atricle is awesome

ScottAlise
9th May 2013, 10:01 PM
Ponunjal

One among the under rated movies of NT released in the year 1973 after Raja Raja Chozan. The movie is set in backdrop of village is essentially a family feud . It primarily discusses about Devar ‘s caste life style and their characterstics , could have very well inspired Kamal sir while deciding the cast and story line of Devar Magan.
To begin with the movie revolves around 3 characters primarily
Muthu( NT), Ponnan( MN Nambiyar), Valli ( Usha Nandhini) . Both Muthu and Valli love each other whereas MN also loves her . Muthu’s father( TK Bagavathy) and Valli’s father( Subbaiah) are in laws(Mama-Machan) who decides to conduct the marriage. In between MN nambiyar tries to rope in Muthuraman( Manickam) as village chief but fails but as fate would have its call the engagement is cancelled due to verbal duel of both the fathers. TK Bagavathy realizes his folly and decides to make amends . NT returns back the jewels as pudhayal which further irks Subbaiah . In fist of anger he marries her to Muthuraman, What happens thereafter is the climax?
Story dialogue by Sakthi Krishnasamy and directed by CVR.
There is not much acting scope for NT and he does it effortlessy. To expect NT act in every movie is like demanding Sachin scoring a ton in every match, here NT is at his usual best natural role but the highlight is Sivan- Kali Dance and Kannagi kovalan Drama the highlight of which Cho garlanding MN Nambiyar who does not act and revealing that he likes MN Nambiyar acting . The subsequent dialogues making fun of an actor who gets reward and praise for his acting ( though he does not act may be direct attack on----?)
Muthuraman is as usual plays second foil to NT once again and proves his mettle in climax.
But I guess ample screen time has been given to CHO who makes good use of it be it political satire dialogues, swimming scene, loving Manorama, pleading with his father that he is not a ghost he brings the roof down sad that the has been under utilized always.
Songs are too good especially Agaya Pandalile stands out
On the whole good movie , wonder why it did not celebrate its desired result. But I guess it must have been a profiatable venture for producers as they worked again with NT in Grahapravesam.

RAGHAVENDRA
9th May 2013, 10:26 PM
நம்மை யாராவது அழைக்கும் போது நம்முடைய கைப்பேசியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப இசையை குறித்துக் கொள்வோம். அதனை மாற்றி நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கச் செய்தால் ...

கேட்கும் போதே இனிக்கிறதல்லவா

இதோ ஒருமையுடன் நின் திருவடி என்ற பதிகத்தை நடிகர் திலகத்தின் குரலில் கேளுங்கள். தரவிறக்கம் செய்து தங்கள் கைப்பேசியில் பதிந்து கொள்ளுங்கள்.

நடிகர் திலகத்தின் குரலில் ஒருமையுடன் (https://soundcloud.com/veeyaar/sivaji-ganesan-prayer-from)

goldstar
10th May 2013, 06:13 AM
நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.

Welcome Ravichandran sir.

I don't need to add more. Please look at centuries of the photos.

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP1_zps79787ee7.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP9_zps40a17bd4.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP7_zps1c9a9d63.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP8_zpsfcfe2efe.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP4_zps6509f92c.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP2_zpsceee62ea.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP6_zps16a85f96.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP5_zps7976ad12.png
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP3_zps5bd18edc.png

RAGHAVENDRA
10th May 2013, 06:31 AM
Dear Sathish,
SUPERB LINE UP OF PUDHIYA PARAVAI IMAGES. EXCELLENT. THANK YOU.

RAGHAVENDRA
10th May 2013, 06:32 AM
http://www.hdwallpapersarena.com/wp-content/uploads/2012/09/shahrukh-khan-photo.jpg

SHAH RUKH KHAN - CHOSEN FOR THE SIVAJI GANESAN AWARD FOR EXCELLENCE BY VIJAY TV. CONGRATULATIONS SRK

Gopal.s
10th May 2013, 06:52 AM
இந்தியாவில் எந்த லிஸ்ட் போட்டாலும், அனைத்து மாநிலங்களையும் அணைத்து ,அரசியலையும் இணைத்து ,கிளி ஜோசிய பாணியில் சீட்டெடுத்து...... எனக்கு குமட்டும். நடிகர்திலகத்தோடு ,உலகில் வேறு எவனையும் ஒப்பீடு செய்யவே முடியாது. இன்னொரு கடவுளோ,தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை.

கண்பட் சாரின் பதிவுகள் எனக்கு கிரியா ஊக்கி.

ராகவேந்தர் சார்- நீங்கள் காட்டும் உற்சாகம், ஒவ்வொரு வரியையும் படித்து புரிந்து கொண்டு பதிவுகள் இடும் விதம்.--- நீங்களும் நானும் இனி விளையாட்டு சண்டை கூட போட கூடாது.

சதீஷ் -- புதிய பறவை stills ,எனது காலை நேரத்தை பூரா நீயே எடுத்து கொண்டு விட்டாய்.

சௌரி ராஜன்- எங்கள் வீர தளபதியே ,தொடர்ந்து கோட்டை கொத்தளங்களை பிடித்து கொடி நாட்டு.

ரவிச்சந்திரன்- நல் வருகை. தொடர்ந்து பங்களியுங்கள்.

முரளி,பார்த்தசாரதி- எங்கே, கௌரவ நடிகர்களாவே தொடர்கிறீர்கள்?

வாசு சார்- நீங்கள் இன்னொரு டூரிங் கொட்டாய் , துணை பதிவு இட வேண்டும்.சௌரி சொன்னது போல் , அதில் உள்ளது உள்ளம். உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல.

ஷாருக் கான் - வாழ்த்துக்கள். இதன் அருமையை புரிந்து கொண்டு தொடரு.

IliFiSRurdy
10th May 2013, 07:34 AM
Welcome Ravichandran sir.

I don't need to add more. Please look at centuries of the photos.

]

Dear Satish Sir,
Thanks for changing an ordinary Friday to a Fantastic one.
Do other friends see anything in that smoke?
I see some 19 faces!
Perhaps illusion
This one video can make all the tobacco companies stocks to zoom in the market

Thank you very much

IliFiSRurdy
10th May 2013, 07:44 AM
கண்பட் சாரின் பதிவுகள் எனக்கு கிரியா ஊக்கி.

ராகவேந்தர் சார்- நீங்கள் காட்டும் உற்சாகம், ஒவ்வொரு வரியையும் படித்து புரிந்து கொண்டு பதிவுகள் இடும் விதம்.--- நீங்களும் நானும் இனி விளையாட்டு சண்டை கூட போட கூடாது.



Thank you Dear Gopal,

I agree fully with your views on Shri.Ragavender also.

His rejoinders to your writeups are very passionate.

Looking forward to 25

Gopal.s
10th May 2013, 08:09 AM
அவர் புகையே பத்தொன்பது வேடங்களில் நடித்து ,அவர் பண்ண போகும் (நவராத்திரி) சாதனையை முன் கூட்டியே முறியடித்து விட்டது.

Georgevob
10th May 2013, 08:24 AM
nd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..
இதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.

Dilip Kumar
Rajesh Khanna
Amitabh Bachchan
Rajinikanth
Pran Sikand

N T Rama Rao
Uttam Kumar
M G Ramachandran
Mohanlal
Naseeruddin Shah

Raj Kapoor:
Kamal Haasan
Balraj Sahni:
Utpal Dutt
Chiranjeevi:

Rajkumar
Sivaji Ganesan
Mammootty
Shah Rukh Khan
Aamir Khan:

இப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.

மேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.Why not 25 or 50?

இந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.

சுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க!"என்று சொலவதற்கு ஒப்பாகும்.

Hi,
I think they have not listed based on 1st, 2nd, 3rd ....They have mentioned 20 Actors who made the difference in 100 years of Cinema. and they cannot bring it in the following manner isnt it

123456789101112....20...it is not 1 to 20 it is 20

Gopal.s
10th May 2013, 09:59 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-25

அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.

-----To be continued .

IliFiSRurdy
10th May 2013, 09:59 AM
Hi,
I think they have not listed based on 1st, 2nd, 3rd ....They have mentioned 20 Actors who made the difference in 100 years of Cinema. and they cannot bring it in the following manner isnt it

123456789101112....20...it is not 1 to 20 it is 20

Yes I know that..

This is a insipid list and hence a great insult to Thalaivar.

Being an ardent fan yourself,I don't know how you are unable to see it!

parthasarathy
10th May 2013, 10:16 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-25

அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

-----To be continued .

அற்புதம் திரு. கோபால்.

தொடர்ந்தாற்போல் வரும் சுவாரஸ்யமும் திருப்பங்களும் நிறைந்த காட்சிகள்... அப்படியே எதிர்பாராத திருப்பத்துடன் முடியும் உச்சக்கட்டம்!

படத்திற்குத் தேவைப்படும் துள்ளல்/உற்சாகப் பாடல்கள் அனைத்தும் முதல் பாதியிலேயே முடிந்து விடும். இடைவேளைக்குப் பின்னர் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பேதாஸ் வடிவம் (நடிகர் திலகத்தின் ஒப்புயர்வற்ற நடிப்பில் - அதிர்ச்சி, நம்ப முடியாத தன்மை, கோபம், இயலாமை அனைத்தும் கொட்டும் கொப்பளிக்கும் கண்கள்!) மற்றும் "எங்கே நிம்மதி" பாடல்கள் மட்டும் - படத்தின் டெம்போவை அசாத்திய வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ள!

பின் பாதி முழுவதும், நடிகர் திலகத்தை மையமாக வைத்து சுழலும். வாவ்!

ஒரு த்ரில்லர் படத்தை சண்டைக் காட்சிகள் இல்லாமல் சுவாரஸ்யத்துடன் தந்த ஒப்பற்ற படம்!

தொடருங்கள் திரு. கோபால்...

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
10th May 2013, 10:22 AM
Yes I know that..

This is a insipid list and hence a great insult to Thalaivar.

Being an ardent fan yourself,I don't know how you are unable to see it!

I don't know whether others saw it! When I saw it last week (in fact I shared it with Mr. Gopal over phone) in 100 great films in Tamil, "Deiva Magan" was covered and the photograph was of M.N. Nambiar's!

They included only 2-3 films (Deiva Magan, Nayagan, etc.)... Great people, Great Country calling itself as Linguistic Pride country... still lopsided one...

R. Parthasarathy

vasudevan31355
10th May 2013, 01:51 PM
வருக ரவிச்சந்திரன் சார்.

"NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு."

என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளீர்கள் என்று புரியவில்லை.

ஆனால்....

மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?

தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை

அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.

பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.

நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.

இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.

உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .

ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.

ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.

ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.

ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.

ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்

இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....

'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!

இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!

அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!

கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.

உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!

உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!

கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.

"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"

(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)

ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான

நெய்வேலி வாசுதேவன்.

Georgevob
10th May 2013, 01:57 PM
Yes I know that..

This is a insipid list and hence a great insult to Thalaivar.

Being an ardent fan yourself,I don't know how you are unable to see it!

I don't see any insult there !

NDTV is an organization and they focus on 100 years of Indian Cinema and not Southern Cinema or more specifically Tamil Cinema. Had they mentioned Tamil Cinema, then there can be only two names one is our man and second is other man.

Out of the whole lot of actors, they have chosen 20 across India and hence the title "Actors who made the difference". While am not here to see why 20, why not 25 or 30, they have provided 20 actors in 100 years..., in which our Thalaivar is also one ( we cannot bring in an argument in their context of their topic actors who made the difference that our man is the only one even though, that is the truth talentwise, contributionwise etc., when you compare.)

It is definitely not a Insult. Let's look at things in a different perspective too !

Regards
SRS

Georgevob
10th May 2013, 02:13 PM
வருக ரவிச்சந்திரன் சார்.

"nt க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு."

என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளீர்கள் என்று புரியவில்லை.

ஆனால்....

மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?

தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை

அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.

பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.

நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.

இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.

உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .

ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.

ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.

ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.

ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.

ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்

இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....

'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!

இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!

அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!

கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.

உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!

உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!

கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.

"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"

(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)

ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான

நெய்வேலி வாசுதேவன்.

வாசுதேவன் சார்

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை...

திரு.ரவிச்சந்திரன் எதை /யாரை மனதில் வைத்து கேள்வி எழுப்பினார் என்று தெரியவில்லை...இருந்தாலும் அவரை சொல்லி குற்றமில்லை. காரணம், அவர் நினைத்துகொண்டுஇருப்பது அவராக புரிந்துகொண்டு அறிந்ததல்ல. பலர் தொன்று தொட்டு பரப்பி வரும் செய்திகளின் தாக்கம் என்றே நான் கருதுகிறேன். இப்பொழுது நாம் உரைத்துவிடோம் இனி அவர் நாம் உரைத்த கண்ணோட்டத்தில் நடிகர் திலகத்தை பற்றி நினைப்பாராயின் உண்மையை புரிந்து...ஒருநாள் அவரே இத்திரியில்...ஆம்...நானும் ஒத்துகொள்கிறேன்...நடிகர் திலகத்தின் காலத்திலயே எந்த நடிகரும் தொடர்ச்சியாக இவ்வளவு சாதனைகளை செய்யவில்லை....ஆகையால் தாழ்புனற்சியால் அவர்களை சேர்ந்தவர்கள் இது போன்ற தவறான வதந்திகளையும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பரப்பியதர்க்கான வாயிபுக்கள் தான் அதிகம் என்று ஒத்துகொள்வார். காலம் கனியும்...ஒரு கர்ணன் சென்ற வருடம் வெளிவந்து தென் இந்திய திரை உலகையே கலங்கடிக்க வில்லையா...? மற்ற நடிகர்களை மிமிக்ரி செய்யும் மிமிக்ரி கலைஞர்களால் தான் நம் நடிகர் திலகத்தின் அருமை பெருமை மிகவும் தரக்குறைவாக சித்தரிக்கப்பட்டது என்று இக்கால இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் உறைகின்றனர்..நாங்கள் அவற்றையெல்லாம் இனி நம்பபோவதில்லை என்பது வரை கூறிவிட்டனர்...பிறகென்ன ! இவரையும் அந்த குழந்தைகளில் ஒருவராக கருதுவோம்..

Srs

Gopal.s
10th May 2013, 02:29 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-26


லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......

அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.

சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.

இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....

climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.

stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.

confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

----To be continued

JamesFague
10th May 2013, 02:31 PM
Mr Vasudevan Sir,

Simply Superb Sir. Your article on NT makes us flying on the earth.
What to do we have to write umpteen articles on NT to showcase
his various talents to others.

As Mr Gopal rightly said on NT. NO can in this earth can reach the milestone
of our NT.

Thanks.

Georgevob
10th May 2013, 02:39 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP1_zps79787ee7.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/PP4_zps6509f92c.png


NADIGAR THILAGAM - THE ONLY TRUE GLOBAL ACTOR WHO MADE EVEN THE CIGAR & SMOKE TO PERFORM ON SCREEN AMIDST FEW ACTORS WHO BY HABIT, CHOOSE TO EDIT GOOD ACTORS PERFORMANCE IN THEIR FILMS !!!

kalnayak
10th May 2013, 03:08 PM
ரவிச்சந்திரன் சார்,
திரியில் நெருப்பை பத்த வச்சிட்டு இப்படி ஓடி போயிட்டீங்களே!!! இம்புட்டு பேரு என்னமா விளக்கம் கொடுத்திருக்காங்க. வாசுதேவன் சார் எவ்வளவு அற்புதமாக நடிகர் திலகத்தின் பெருமையை சொல்லியிருக்காரு. உங்களோட கருத்துக்கு நீங்களும் முன்னால வந்து விளக்கம் தரணும்-னு அன்போட கேட்டுக்கறேன்.

Georgevob
10th May 2013, 03:16 PM
https://www.youtube.com/watch?v=qR-jtTqd88s

Georgevob
10th May 2013, 03:23 PM
confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)

இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?

----To be continued[/QUOTE]


இல்லை கோபால்...இல்லை......!

நிச்சயமாக இல்லை கோபால் ! நிச்சயமாக இல்லை ! எவ்வளவு வருடங்களானாலும் சரி ! நீங்கள் எழுதுவதை நான் படிக்கிறேன் கோபால்...படிக்கிறேன்....!

உடனே கோபால் : (தாடையை தடவி) சௌரியே நீ படிக்க...! ஜவுரியே நீ கழட்டி வைக்க ! .....மன்னிக்கவேண்டும் என்னை ஒருநிமிடம் கதாபாதிரத்தினுள் இழுத்துசென்றுவிட்டது..!

அருமையான அலசல் !

RAGHAVENDRA
10th May 2013, 04:23 PM
டியர் கோபால் சார்,
மிகச் சிறந்த character analysis of Pudhiya Paravai, viz. Gopal. Despair, Depression, Frustration, Agony,Anxiety, Joy, Anticipation, Expection, இப்படி antonym, synonym உள்ள அனைத்து உணர்ச்சிகளுக்கான வார்த்தைகளுக்கும் இப்படத்தில் உருவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம். அதனை அருமையாக சித்தரித்துள்ளது தங்கள் எழுத்தின் சிறப்பு. பாராட்டுக்கள்.

தொடரும் பதிவுகளில் தாங்கள் character analysis செய்யும் போது, எந்த school of acting refer செய்கிறீர்களோ, அதனுடைய சம்பந்தப் பட்ட தியரியினை இங்கு ஒரு மேற்கோள் காட்டி அதற்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்து அதன் பின்னர் அதனையெல்லாம் மிஞ்சி நடிகர் திலகம் எப்படி சாதித்துள்ளார் என்பதனைக் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லா பதிவுகளுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதில்லை. எங்கெங்கு முடியுமோ அல்லது தேவையோ அங்கே குறிப்பிடலாம்.

RAGHAVENDRA
10th May 2013, 04:30 PM
Filmography திரியில் அடுத்து இடம் பெறப் போகும் படத்தைப் பற்றி ஆலோகிக்கிறார்களோ நடிகர் திலகமும் பீம்சிங்கும்?

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/BIMSINGSIVAJIPB_zps50ce1699.jpg

IliFiSRurdy
10th May 2013, 04:39 PM
i don't see any insult there !
It is definitely not a insult. Let's look at things in a different perspective too !
Regards
srs


நான் ஏற்கனவே சொன்ன தில்லானா மோகனாம்பாள் படக்காட்சியில் தொக்கியுள்ள அவமரியாதை புரிந்தால் இதுவும் புரியும்.ஆனால், "நாகேஷ் சொன்னதில் தப்பு என்ன உள்ளது?..எல்லாரும் அவரவர் வாத்தியங்களை எடுத்துக்கொண்டு வாங்க" என்று தானே சொன்னார் எனத் தோன்றினால்?

இன்னொரு உதாரணம்..
திருவிளையாடல் படத்தில்,

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே

என்ற செய்யுளை தருமி சொல்வதற்கும்,
சிவபிரான் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம்,
இந்த உதவாக்கரை nd tv பட்டியலும் உள்ளது.

எந்த விஷயத்தை பட்டியலிட்டாலும் அதில் ஒரு ஒழுங்குமுறை வேண்டும்.
குறைந்த பட்சம் அகர வரிசையிலாவது இருக்க வேண்டும்.இது கூட தெரியாதவர்கள்
பட்டியலிடக்கூடாது.


சரி விடுங்கள்..சென்னை தி.நகர்,செவாலியர் சிவாஜி கணேசன் சாலை கதவிலக்கம் 14,15,16. மற்றும் 18,19 20 களில் எவரும் வசிப்பதையே கதவிலக்கம் 17 இல் வசிப்பவருக்கு ஒரு வகையில் அவமரியாதை என கருதியவன் நான்.என்னிடம் போய் இந்த nd tv பட்டியலில் குறை இல்லை என்றால்??

நன்றி.வணக்கம்.

IliFiSRurdy
10th May 2013, 05:02 PM
ரவிச்சந்திரன் சார்,
திரியில் நெருப்பை பத்த வச்சிட்டு இப்படி ஓடி போயிட்டீங்களே!!! இம்புட்டு பேரு என்னமா விளக்கம் கொடுத்திருக்காங்க.

ஒரு எட்டு வயது சிறுவன் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறான்..
அருகில் அவன தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கிறார்.
திடீரென்று அவன், "sex என்றால் என்னப்பா?" என வினவ,
திடுக்கிடும் அவன் தந்தை,சுதாரித்துக்கொண்டு சில நிமிடங்கள் தீவிர யோசனைக்குப்பிறகு,
இனப்பெருக்கம், அதன் அவசியம், வெவேறு ஜீவராசிகள் எவ்வாறு இதை மேற்கொள்கின்றன,மனித இனம் இதை எப்படி நோக்குகிறது,இதை ரகசியமாக வைப்பதின் காரணம் என்ன,போன்ற விஷயங்களை ஒரு முப்பது நிமிடம் விரிவுரையாக செய்து முடிக்கிறார..
பிரமித்து போய் கேட்டுக்கொண்டிருந்த மகன் சொல்கிறான்,,
"அம்மாடி!! இத்தனை விஷயத்தையும் இத்தனூண்டு இடத்தில எப்படி எழுதுவது?"
அவன் காண்பிப்பது ஒரு விண்ணப்ப தாள்.அதில்
1) Name என்ற வரியை அடுத்து
2) sex என ஒரு வரி விடப்பட்டுள்ளது.

vasudevan31355
10th May 2013, 06:34 PM
N.T.in Raja

http://ttsnapshot.com/out.php/i19398_vlcsnap-2012-08-07-07h06m56s10.png

http://ttsnapshot.com/out.php/i19400_vlcsnap-2012-08-07-07h07m59s110.png

http://ttsnapshot.com/out.php/i19405_vlcsnap-2012-08-04-21h16m08s225.png

http://ttsnapshot.com/out.php/i5983_raja-4.png

http://ttsnapshot.com/out.php/i5984_raja-5.png

http://ttsnapshot.com/out.php/i5988_raja-9.png

http://ttsnapshot.com/out.php/i5982_raja-3.png

Gopal.s
10th May 2013, 07:21 PM
டியர் கோபால் சார்,
மிகச் சிறந்த character analysis of Pudhiya Paravai, viz. Gopal. Despair, Depression, Frustration, Agony,Anxiety, Joy, Anticipation, Expection, இப்படி antonym, synonym உள்ள அனைத்து உணர்ச்சிகளுக்கான வார்த்தைகளுக்கும் இப்படத்தில் உருவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம். அதனை அருமையாக சித்தரித்துள்ளது தங்கள் எழுத்தின் சிறப்பு. பாராட்டுக்கள்.

தொடரும் பதிவுகளில் தாங்கள் character analysis செய்யும் போது, எந்த school of acting refer செய்கிறீர்களோ, அதனுடைய சம்பந்தப் பட்ட தியரியினை இங்கு ஒரு மேற்கோள் காட்டி அதற்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்து அதன் பின்னர் அதனையெல்லாம் மிஞ்சி நடிகர் திலகம் எப்படி சாதித்துள்ளார் என்பதனைக் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லா பதிவுகளுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதில்லை. எங்கெங்கு முடியுமோ அல்லது தேவையோ அங்கே குறிப்பிடலாம்.
உத்தம புத்திரன், புதிய பறவை இரண்டுமே chekhov school . இதனை உத்தம புத்திரன் மேற்கோளுடன் (பாகம்-,17,18,19) யில் அலசி பிழிந்து விட்டதால், கூறியது கூறல் வேண்டாமென புதிய பறவையில் திருப்பி சொல்ல அவசியம் நேரவில்லை.
முழுதும் படித்து கருத்து கூறும் நேர்த்திக்கு நன்றி.

eehaiupehazij
10th May 2013, 07:46 PM
From the start to end Pudhiya Paravai is the only movie of NT in which the viewers are also absorbed into the screen and have a feel of sharing all sorts of emotions with NT. Time and again NT proves that he is the only actor who can don the close-up scenes effortlessly. Engey Nimmadhi song sequence proves his prowess of perceiving the camera angles and presenting himself to the audience all the turmoils he undergoes in that movie character with a guilty feeling always reflecting on his face. the phrase "kaatchikku Kaatchi kai thattal" fits only to this movie frame by frame. This is the only NT movie I have enjoyed more than a hundred times and everytime I feel stunned by his performance and screen presence!

Gopal.s
10th May 2013, 07:51 PM
நூறு சதவீதம் உண்மை சிவாஜி செந்தில் சார்.

vasudevan31355
10th May 2013, 08:30 PM
இரவின் மடியில் குளிர் போக்க கொள்ளிக்கட்டைகள் எரிந்துகொண்டிருக்க, முக்கால்பாக முகம் வெளிச்சத்திலும் கால் பாக முகம் இருட்டிலும் தெரிய 'புதியபறவை' பழைய பாடலை அமைதியாகப் பாட, ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த வேளையில் மனம் முழுக்க அந்த சமயம் லேசாகி கண்களை எப்போதாவது சிமிட்டி (கண்களை அடிக்கடி சிமிட்டினால் புதிய பறவையின் அழகை முழுதும் பருக முடியாமல் போய்விடுமோ!) மிக நிதானமாக புகையை இழுக்கும் பாங்கு, வந்த பறவை வல்லூறு என்று தெரியாமல் தன்னை முழுவதுமாகவே கொடுத்துவிடும் ஏமாளித்தனம்... உள்மனதில் புதைந்து கிடக்கும் மர்மங்களையும் தாண்டிய தாளாத காதல்... பறவையின் சம்மதம் நிச்சயம் என்ற திருப்தி... உடல் அசதி, உள்ள அசதி, கண நேர மனநிம்மதியில் பறவையின் பாடலில் மயங்கி, கிறங்கி அப்படியே ஆழ்நிலை உறக்கம். அதே நாற்காலியில் அமர்ந்து பின்னாளில் தானே தன் வாயால் வாக்குமூலம் கொடுக்கப் போவதை அறியமாட்டாத அப்பாவியாய்.

அந்த பாவப்பட்டவனோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் உறங்கலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YA50A8TqeRM

RAGHAVENDRA
10th May 2013, 09:20 PM
அழகு பொம்மையாய் Fashion Showவில் Catwalk செய்வதைத் தவிர வேறொன்றும்ம செய்யத் தெரியாத Modelஐப் போல் பயன்படுத்தப் பட்டு வந்த சரோஜா தேவி என்ற மிகச் சிறந்த நடிகையின் திறமையை கல்யாணப் பரிசு படத்தில் ஸ்ரீதர் உலகறியச் செய்தார் என்றால் பாகப் பிரிவினை படம் அவருக்குள் இருந்த அந்த நடிப்புப் புலமையை மெருகேற்றியது என்றால் மிகையில்லை. அதற்குப் பிறகு நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். இதில் சிகரம் வைத்தாற் போல அமைந்தது புதிய பறவை. சௌகார் ஜானகியின் நடிப்பில் புதிய பரிணாமத்தையும் இப்படம் வெளிக்கொணர்ந்தது. ஒவ்வொருவரும் தத்தம் பங்கினை மிகச் சிறப்பாக அளித்ததன் பலனே இந்த சிறப்பிற்குக் காரணம்.

ஒவ்வொரு ரசிகரின் டாப் 10 நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயம் புதிய பறவைக்கு இடம் உண்டு.

Murali Srinivas
11th May 2013, 12:44 AM
கோபால்,

புதிய பறவை - ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள். ஒரு படத்தின் நாயக வேடம் இதற்கு முன் இந்தளவிற்கு விலாவாரியாக அலசி ஆராயப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.

இந்த திரியின் முதல் இரண்டு பாகங்களில் நானும் அன்றைய ஹப்பர்கள் பலரும் புதிய பறவை பற்றி நிறையப் பேசிக் கொண்டிருப்போம். அந்த பாத்திரத்தை மனோதத்துவ முறையில் அலசி ஆராய்ந்து நீங்கள் எழுதியது நன்றாக அமைந்திருக்கிறது.

கோபால் பாத்திரத்தை நீங்கள் introvert என்று சொன்னீர்கள். உண்மை. ஆனால் அதையும் மீறி ஒரு innocence தெரியும். அதாவது சற்றே பரிவாக யாராவது பேசி விட்டாலே அவர்களை மலை போல் நம்பி விடுவது. ஆட்களை தவறாக எடை போடுவது. யாரையெல்லாம் நம்புவாரோ அவர்கள் அனைவருமே அவருக்கு எதிராக திரும்புவார்கள். சிறிது யோசித்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு சதி வலை எப்படி பின்னப்படுகிறது என்பதே பிரமிப்பாக இருக்கும். அதாவது கதையின் போக்கில் இயல்பாக நடப்பது போன்றே தோற்றமளிக்கும் காட்சிகள் எப்படி மற்றவர்களால் மனப்பூர்வமாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வரும் போது பார்வையாளனுக்கு ஒரு அதிர்ச்சி கலந்த பிரமிப்பு.

கோபாலோடு நெருங்கி பழகி அவனிடமிருந்து அவனின் அந்தரங்க செய்திகளை அறிந்து அதே வைத்தே அவனை வீழ்த்தும் இந்த சதுரங்க ஆட்டத்தில் அதை புரிந்து கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் அவர் திகைத்து தடுமாறி இதிலிருந்து மீண்டு வர வழியே இல்லையா என்று மனதுக்குள்ளே புழுங்கி அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் தவிப்பதை எவ்வளவு அழகாய் வெளிப்படுத்துவார். நீங்கள் குறிப்பிட்ட பால் பேணி, பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை போலி சௌகார் பாடுவது, எடுத்த கைரேகையை தொலைத்து விட்டு OAK தேவர் வந்து சஞ்சீவி கொண்டு கொடுத்தான் என்றவுடன் ரேகை ரேகை என்று எக்காளமிடுவது, சௌகாரின் முதுகில் உள்ள மச்சத்தை வைத்து ஜெயித்து விடலாம் என்று குதூகலத்தில் துள்ளி குதித்து பின் அதிலும் தோல்வி கண்டவுடன் அதுவும் நீங்கள் சுட்டிக் காட்டியது போல் ராமதாஸ் தங்கச்சி, சித்தப்பா என்று அழைக்க "ராஜு, you fool" என தன் இயலாமையையும் கோவத்தையும் ஒரு சேர காட்டுவது என்று ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தையே கட்டி ஆண்டிருப்பார்.

நான் எப்போதும் பிரமிக்கும் காட்சி ஒன்று. அந்த காட்சி பற்றி நான் பழைய பாகங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். Flashback காட்சியில் வீட்டை விட்டு வெளியேறும் சௌகாரை துரத்தி சென்று அவரை தடுத்து அவரை convince செய்ய முயற்சி செய்து, முடியாமல் அவரின் பிடிவாதத்தையும் திமிரான வார்த்தைகளையும் பொறுக்க முடியாமல் ஒரு அறை அடித்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வந்தவுடன் ரயில்வே கிராஸ்-ல் வண்டியை நிறுத்த, அப்போது வரும் அந்த காட்சி.

அந்த காட்சியில் அவரை தவிர யாரும் கிடையாது. வசனம் மட்டுமே ஒலிக்கும் montage shot. Voice over என்ற முறையில் பின்னணியில் வசனங்கள் ஒலிக்க காரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்தின் முகம் மட்டுமே பார்வையாளனுக்கு தெரியும். ஒலிக்கும் வசனத்திற்கேற்ப அவர் முகம் வெளிப்படுத்தும் பல்வகை உணர்வுகள் அற்புதமாக இருக்கும். இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று பலமுறை வியந்து போயிருக்கிறேன்.

காரணம் அன்றைய நாட்களில் டப்பிங் கிடையாது. Live sound தான். படப்பிடிப்பு நடக்கும் போது எப்படி எடுத்திருப்பார்கள்? உதவி இயக்குனர் யாராவது prompt பண்ணியிருக்கலாம்! அப்படி இருந்தால் கூட அந்த track -ஐ மாற்றி விட்டு இவர் பேசுவதை எப்படி சேர்த்திருப்பார்கள்? இல்லையென்றால் இவரே பேசி பதிவு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பாடல்களை நாக்ரா மூலம் ஒலிக்க செய்து படமாக்குவது போல் இதையும் செய்திருப்பார்களா? டப்பிங்கே இருந்தது என்று சொன்னால் கூட முகபாவத்திற்கு தகுந்தார் போல் பேசுவது அவ்வளவு எளிதல்ல. அதில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு உணர்வை வெளிப்படுத்துவார். குறிப்பாக இறுதியில் "அப்படி ஏதேனும் நடந்து விட்டால்" என்ற வரியையே இரண்டு வித பாவத்தில் சொல்லுவார். அப்படி இருக்கும் போது அது டப்பிங் என்றாலும் சரி, live sound என்றாலும் சரி ஒரு பிரமிக்கத்தக்க performance.

இன்னும் இந்தப் படத்தை பற்றி அவர்தம் நடிப்பை பற்றி பல்வேறு பக்கங்கள் எழுதலாம். என் எண்ணமெல்லாம் அடுத்த வருடம் இந்த திரை காவியத்தின் பொன் விழா கொண்டாடப்படும் போது இந்த படத்தை நவீன மெருக்கேற்றல் முறையில் வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பவர்கள் அதை செவ்வனே செய்து படத்தின் பிரம்மாணடமான வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான்.

நன்றி கோபால்! மேலும் தொடருங்கள்!


அன்புடன்

Gopal.s
11th May 2013, 06:43 AM
ராகவேந்தர் சார்,
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. சரோஜாதேவி பாக பிரிவினை,
பாலும் பழமும்,இருவர் உள்ளம்,புதிய பறவை, தேனும் பாலும் படங்களில் அற்புதமாக பயன் படுத்த பட்டு அவர் நடிப்பு திறன் பூவோடு சேர்ந்த நார் போல மிளிர்ந்தது.

முரளி,
கோபால் என்றாலே அப்பாவி. அப்பாவி என்றாலே கோபால். சுற்றியிருப்பவர்களால் வஞ்சிக்க பட்டு அவதியுறுவது இயற்கையே. கோபாலு க்காக இந்தளவு நீங்கள் தவிப்பது உங்கள் உயர் நட்பின் அடையாளம். வருக. வருக.

சௌரி சார்,
மிக ரசித்தேன். ஏ தே து உங்கள் எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை போலுள்ளதே?

Gopal.s
11th May 2013, 06:45 AM
வாசு சார்,

காட்சிக்கேற்ற வர்ணனை.வர்ணனைக்கேற்ற காட்சி.மிக மிக ரசித்தேன்.

RAGHAVENDRA
11th May 2013, 06:48 AM
கோபால் என்றாலே அப்பாவி. அப்பாவி என்றாலே கோபால்.


http://www.desktopocean.com/file/100/600x338/16:9/innocent-cat_611561552.jpg

ஆஹா... இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா...

கலக்குங்க... கோபால் சார் ...

Gopal.s
11th May 2013, 06:54 AM
Welcome Ravichandran Sir,

Your first post is a best one.
சந்திரா,
எனக்கு 16 வயதினிலே படத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. மயிலு க்கு வைத்தியம் பார்க்க வரும் நாட்டு வைத்தியர் சப்பாணி யிடம் நிறைய instruction கொடுத்து என்ன புரிஞ்சுதா ,புரிஞ்சுதா என்று நிறைய முறை கேட்டு விட்டு தலையை ஆட்டும் சப்பாணி யிடம், என்ன எழவு புரிஞ்சுதோ ,எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டு என்பார். நான் மிக ரசித்த காட்சி.
உங்கள் பதிவுகளையும் ரசிக்கிறேன்.

vasudevan31355
11th May 2013, 07:33 AM
ஆஹா... இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா...



http://cdn3.dogonews.com/pictures/6141/content/catarticle-0-0C063505000005DC-930_468x338.jpg?1290404693

துளி விடாமல் குடிக்கும்.

eehaiupehazij
11th May 2013, 08:19 AM
Hats off to Gopal Sir for his neat and riveting documentations to fortify the name and fame of our legend NT in a narrative Tamil, that must be emulated by persons like me. Because of contributors of calibre like you only NT will live ever in the minds and hearts of generations who will always be grateful to you Sir. My only lifetime dream is such documentations from you, Pammalar Sir, Vasudevan Sir, Raghavendra Sir, Murali Sir...... with a mission initiative from Chandrasekaran Sir shall culminate in a lifetime posthumous award from Oscar be conferred on our NT, the neglected gem by oversight but a diamond forever in our vision! Awaiting many more from you sir.

Subramaniam Ramajayam
11th May 2013, 09:15 AM
Super sivaji senthil sir. I am also one of the ardent fan of NT dreaming for the NEGLECTED GEM BY OERSIGHT BUT A DIAMOND FOREVER IN OUR VISION. DEfinitely one day or another it will take place and VAIMAYE VELLUM.

ScottAlise
11th May 2013, 09:23 AM
THE ORGIN OF PUDHIYA PARAVAI
Hi,
I am writing about write ups of various NT movies for quite some time but when I look back I guess people may get monotonous reading the same pattern again and again but I cannot write like Gopal sir, Sowrirajan sir and many others they have definitely raised the bar for writing in NT thread so a small contribution from my side as I said to supplement Gopal sir’s indepth analysis of Pudhiya Paravai how Aroor Das chose to write for this movie and NT’s reaction on hearing the same , NT’s homework for character etc .
I hope it would be intresting for people who did not know it and thrilling and amazed at NT conviction in character, spotting talent as much as I was thrilled for the same when I came across it.
Credits:
It is taken from many books especially a book written by Aroor Dass Vikatan Publications
So hereafter I won’t bore you and lets proceed----------------

ScottAlise
11th May 2013, 09:24 AM
சிவாஜிக்கு நான் எழுதிய படங்களில் மறக்க முடியாத படங்களில் முக்கியனமான ஒரு படம் புதிய பறவை.
அப்போது நான் காக்கும் கரங்கள் , தாலி பாக்கியம் , தாழம்பூ, வேட்டைக்காரன் படங்களுக்கு எழுதி கொண்டு இருந்தேன் .
நான் புதிய பறவைக்கு எழுத முடியாது என்று முதலில் மறுத்தேன் . இந்த செய்தி சிவாஜின் செவிக்கு சென்றது . உடனே படத்தின் Production Executive இடம் சிவாஜி இப்படி கூறினார்
சாரை நான் உடனே பார்க்கணும் , சார் என்கிட்டே வர்ற இல்ல நான் வரட்டுமா ? எப்படியே ஆரூரன் கிட்ட போய் சொல்லு

உடனே நான் அவர் வீட்டுக்கு சென்றேன்


NT’s satire and argument:

என்னை பார்த்ததும் அவர் வாதியரை கண்ட மாணவர் போல எழுந்து நின்று வணங்கி வாங்க சார் , வணக்கம் ஒக்காருங்க ( இது எல்லாம் நாடக நடிகர்களின் குசும்பு )

கமலா அம்மாவிடம் சாருக்கு வணக்கம் சொல்லிக்க

NT : புதிய பறவைக்கு எழுத முடியாதுன்னு சொல்லிடிங்கலமே ?
ஆர்: நேரம் இல்லை என்று தான் சொன்னேன் .

NT: ஏன்டா உனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுத மாட்டேன் சொலுவ . இது சிவாஜி பிளம்ஸ் first கலர் பிலிம் , Prestige பிலிம்.நீ பிஸியா இருக்கே என்று தெரிஞ்சுதான் உன்னை சண்முகம் விட்டுவேச்சன் இல்லநா உனக்கு அட்வான்ஸ் குடுத்து கமிட் பண்ணி இருப்பான்

AR :மன்னிக்கணும் வார்த்தை மாறுது முடியலேன் தான் சொன்னேன் , முடியலே முடியாது ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு
நட்:என் கிட்டயேய் வசனம் பேசி காட்றியா ?
அற: உங்களை விட்டா வேற யார் இருக்கா .
NT : இந்த படம் பொறுத்த வரைக்கும் எனக்கும் உனக்கும் தான் பேச்சு. நீ சலுகை காட்ட வேணாம் காசை வங்கித்து போ.
AR : நான் காசை எதிர்ப்பது வரல
NT :நீ எழுத மறுப்பேன் என்று நான் எதிர்பாகல .

கமலா அம்மா அவங்க கையால் 5000/- ருபாய் கொடுத்தார். அப்போ எல்லாம் பெரிய இயக்குனர்களுக்கு தான் 5001/- தருவார்கள். எனக்கு இது ரொம்ப அதிகம் . என் எழுத்துக்கள் மீது இருந்தா மதிப்புகாக கொடுத்தது.
NT: இது அட்வான்ஸ் தான் எப்போ எவ்வளவு வேணும் என்றாலும் வங்கிக்கோ . அம்மாகிட்ட கேளு . ஒரு போன் பண்ணு கொடுத்து அனுப்புவாங்க . புல் ஸ்கிரிப்ட் கொடுத்துடு அப்பறம் எல்லாத்தையும் படிச்சிகாட்டு. நீயும் எங்க டீமில் ஒருவன் அதனால் ஷூட்டிங் spot வந்து வசனத்தை சொல்லி கொடு , டைரக்டர் மிராசி தமிழ் தெரியாது ஆனா நல்ல எடுப்பான்
ராயபேட்டை சமுக முதலி தெருலே நான் இருந்த வீடு காலியா இருக்கு . மொட்டை மடியிலே ஒரு சின்ன கீது கொட்டை இருக்கு . நல்ல காத்து வரும் .நம்ம பையன் ராஜு , டிரைவர் முனுசாமி உன்னோட இருப்பாங்க. உன்னக்கு விருப்பமானதை சாப்டுங்க .
எழு இரவு போராடி வசனத்தை எழுதி முடித்தேன். இரண்டு கோப்பைகளை கொடுத்தேன் .ஒன்று இடைவேளை வரை மற்றொன்று இடைவேளைக்கு பிறகு.

ScottAlise
11th May 2013, 09:25 AM
NT ‘s Style of hearing the story:

ஒரு நாள் காலை அவர் வீட்டுக்கு சென்றேன் காலை டிபன் முடித்து காபி குடித்தோம் . காலை ஒன்பது மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். நட் சிகரெட்டே பற்றவைத்துக்கொண்டார் .

காட்சி ஒன்று: பகல் - கப்பால் ---------
காட்சி இரண்டு ------ கோபால் லதா அறிமுகம்

இடையில் எந்த தொலைபேசி அழைப்புகள் , நண்பர்கள் வருகை இல்லாதபடி ஏற்பாடு செய்தார் இதனால் என் மோடு கேடவில்லை தெளிவாக இருந்தேன் . NT கவனமாக கேட்டு கொண்டு இருந்தார்.
கமலா அம்மா எங்களை சாப்பாட்டுக்கு அழைத்தார் .
NT : உன்னக்கு பிரியமான வரால் மீன் வறுவல் இருக்கு . சாப்புடு . ஒரு சின்ன தூக்கம் போட்டு நாலு மணிக்கு செகண்ட் ஹல்ப் படிக்கலாம்.
அம்மா கையால் நல்ல சாப்பாடு உண்டோம். அப்பறோம் வற காபி குடித்தார்
இடைவேளைக்கு அப்புறம் வரும் காட்சிகளால் கதாபத்திரங்கள் கணம் பெற்றது. உச்ச காட்சியில் கோபால் கதாபத்திரம் எல்லோரும் சேர்த்து செய்த சூழ்ச்சியில் உண்மையை கக்கிவிடுகிறார்.

அப்பறம் சிவாஜியின் நடிப்பு கோபால் சார் தான் அலசிவிட்டரே

ஆனா கைது செய்யப்பட்ட சிவாஜி சரோஜாதேவிய் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வர் அத்துடன் படம் முடிந்தது .

ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துடன் lights ஆப் செய்யப்பட்டு pack up செய்யப்பட்டது.
நட் சென்றுகொண்டுஇருந்தார். நான் அவரை அழைத்து கிளைமாக்ஸ்யில் உங்க கதாபத்திரம் இரண்டு வார்த்தை பேசினால் நல்லா இருக்கும் .

பெண்மையே நீ வாழ்க உள்ளமே உன்னக்கு என் நன்றி அப்போ நீங்க அந்த காதலை ஒப்புக்கொண்டதா அர்த்தம் ஆகும்

NT:அட பாவி இப்போ சொல்றியே .
AR: இப்போ தான் தோனிச்சு.
உடனே எல்லோரையும் கூபிட்டு இந்த காட்சி படமகபட்டது
எல்லாம் சரி கதை படித்து விட்டு NT என்ன சொன்னார்.
அவர் மௌனம் 1000 அர்த்தங்கள் கற்பித்தன. உணர்ச்சியில் அவர் கண்கள் சிவந்து கண்ணீர் தேங்கி இருந்தன.

உன் கிட்ட என்ன எதிர்பதேன்னோ அதுக்கு மேல நல்லா எழுதிட்டே காங்க்ரத்ஸ். தேங்க்ஸ்

vasudevan31355
11th May 2013, 10:34 AM
வரலாற்று சுவடுகள்.

தினத்தந்தி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-36.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-36.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-35.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-35.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

ScottAlise
11th May 2013, 12:19 PM
Vasu sir,

Kalakall ponga ,Uthamaputhiran cuttings rocking wish to see it in colour in theatre

ScottAlise
11th May 2013, 12:20 PM
Gopal Sir,

A big hug to you, Pudhiya PAravi gopal's charcter might not be analysed by Arror Dass like the way you wrote , your style of writing takes NT perspective to another level

Can I continue my write ups. it will be like 5 ஸ்டார் ஹோட்டல் பக்கத்தில் ஒரு கையேந்தி பவன் மாதிரி

vasudevan31355
11th May 2013, 12:23 PM
The unforgettable Gopal.

http://ttsnapshot.com/out.php/i19158_vlcsnap-2012-08-05-15h48m25s235.pnghttp://ttsnapshot.com/out.php/i19155_vlcsnap-2012-08-05-15h46m50s63.png
http://ttsnapshot.com/out.php/i19153_vlcsnap-2012-08-05-15h46m28s103.pnghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PuthiyaParavaiD50000003.jpg

KCSHEKAR
11th May 2013, 12:41 PM
டியர் கோபால் சார்,
தங்களின் புதிய பறவை அலசல் அருமை.



கோபால் என்றாலே அப்பாவி. அப்பாவி என்றாலே கோபால். சுற்றியிருப்பவர்களால் வஞ்சிக்க பட்டு அவதியுறுவது இயற்கையே.

நம்பிவிட்டேன்!!!

KCSHEKAR
11th May 2013, 12:43 PM
டியர் வாசுதேவன் சார்,

உத்தமபுத்திரன் - புதிய பறவை பதிவுகள் அருமை. நன்றி.

KCSHEKAR
11th May 2013, 12:47 PM
அழகு பொம்மையாய் Fashion Showவில் Catwalk செய்வதைத் தவிர வேறொன்றும்ம செய்யத் தெரியாத Modelஐப் போல் பயன்படுத்தப் பட்டு வந்த சரோஜா தேவி என்ற மிகச் சிறந்த நடிகையின் திறமையை கல்யாணப் பரிசு படத்தில் ஸ்ரீதர் உலகறியச் செய்தார் என்றால் பாகப் பிரிவினை படம் அவருக்குள் இருந்த அந்த நடிப்புப் புலமையை மெருகேற்றியது என்றால் மிகையில்லை. அதற்குப் பிறகு நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். இதில் சிகரம் வைத்தாற் போல அமைந்தது புதிய பறவை. சௌகார் ஜானகியின் நடிப்பில் புதிய பரிணாமத்தையும் இப்படம் வெளிக்கொணர்ந்தது. ஒவ்வொருவரும் தத்தம் பங்கினை மிகச் சிறப்பாக அளித்ததன் பலனே இந்த சிறப்பிற்குக் காரணம்.

ஒவ்வொரு ரசிகரின் டாப் 10 நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயம் புதிய பறவைக்கு இடம் உண்டு.

டியர் ராகவேந்திரன் சார்,

சரோஜாதேவி குறித்து தாங்கள் தெரிவித்த கருத்து 100% உண்மை.

eehaiupehazij
11th May 2013, 01:10 PM
Thank You Ramajeyam sir. Though Pudhiya Paravai remains the peak of all peaks in the acting career of NT, still it is Parasakthi in which NT was just like a fresh flower with fragrance. If one observes the song 'Nenju Porukkuthillaye...' it would be amazing to get mesmerized with his perfect lip synchronization to CSJ's song glorifying the scene with his facial expressions.. that are quite unbelievable for a new entrant! Take any other actor across the globe who have reached their stardom.... Humphry Boghart, Lawrence Olivier, Richard Burton, Charlton Heston, Sean Connery or Clint Eastwood....Bruce Lee or Jackie Chan.. MKT Bhagavathar or Chinnappa or Raj Kapoor or Rajesh Khanna or Amithab or MGR... or Rajini or Kamal...all had to strive hard to reach their peaks over 6 years to even 10 years! But our NT? The one and only Superb Star of this Globe who became the real never before and never again phenomenon with his first movie itself and no looking back till he left us! This fact had never been considered even within the Indian Cinema circle and NT was shadowed. Even the Oscar winning stars, could not sustain their popularity over years and they had only a short lived lime light. NT was bestowed with awards like Palke award... but delayed recognitions! NT's fan actors like Sanjeev Kumar (compare his Naya Din Nayi Raath with our Navarathiri) could get Bharat awards in sequence but his mentor NT could not!? Is this not an irony? The politically driven award committees of our country have done a disgrace not only to NT but also to the meaning of acting in their short sighted decisions. The thunderous victory of digital Karnan gave a fitting reply to these intellectuals(after nearly 50 years) yet they do not have the sense to glorify our NT's fame internationally. It is time our Nation got pride by conferring a Bharath Ratna on our beloved NT, though, better late than never!

JamesFague
11th May 2013, 02:20 PM
Mr Sivaji Senthil Sir,

100% true. It is high time on the part of our Govt to honour NT with Bharat Ratna.
No actor in this earth before and after can beat the record of our NT by becoming
Super(b) Star in his first movie itself.

vasudevan31355
11th May 2013, 02:23 PM
டியர் முரளி சார்.

'தாம்பத்யம்' பற்றிய தங்களின் பாராட்டுப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

கோபாலைத் தொடர்ந்து தாங்கள் 'கோபாலை' ஆராய்ந்ததை படித்துச் சுவைத்(தேன்). தங்களுக்கே உரிய நடையில் அழகாக எழுதியிருந்தீர்கள். இதோ தாங்கள் பிரமித்த
அந்த montage shot தங்களுக்காகவே. பிரமித்தது தாங்கள் மட்டுமல்ல. தங்கள் கட்டுரையைப் படித்து விட்டு, அந்த காட்சியைக் கண்டு நானும் பிரமித்துப் போய்தான் நிற்கிறேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CJ0pm7hOJHI

Georgevob
11th May 2013, 02:26 PM
Thank You Ramajeyam sir. But our NT? The one and only Superb Star of this Globe who became the real never before and never again phenomenon with his first movie itself and no looking back till he left us!

Dear Senthil,

There is one thing that you forgot to mention. Parasakthi was not started and completed in 3 months time. It was started and stopped for close to 8 months due to Mr.AVM Chettiar refusing to accept the casting of Nadigar Thilagam. Only after PA Perumal agreed and committed to bear all the losses if the film encountered loss after its release in writing, Mr.AVM Chettiar that too with half hearted said OK to go ahead with the shoot..! it was in production for more than 2 years. ! It is not overnight stardom out of luck. Nadigar Thilagam had the talent of expressing what was written on paper to touch the heart of people.

Mr.Karuna did write fiery dialogues even before 1952 parasakthi...but it was his Needhi Mandram Vichitram Niraindha......when uttered through the mouth of Nadigar Thilagam, made Mr.M.K more popular as dialogue writer....Mr.M.K's popularity as dialogue writer reached peak in Manohara .

Post his voluntary coming out from DMK due to their treachery and back stabbing, Nadigar Thilagam was never left peacefully by these vultures...So is the case of Mr.MGR..When he quit DMK, the torture given by Mr.MK and Co, was humoungous. But Mr.MGR was too smart for their tactics as he knew the pulse of people and he laid his foundation very strong by using the same DMK tactics and the rest is history !

JamesFague
11th May 2013, 04:05 PM
Mr Vasu Sir,

Thanks for uploading the superb scene of PP.

Georgevob
11th May 2013, 05:22 PM
டியர் முரளி சார்.

'தாம்பத்யம்' பற்றிய தங்களின் பாராட்டுப் பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

கோபாலைத் தொடர்ந்து தாங்கள் 'கோபாலை' ஆராய்ந்ததை படித்துச் சுவைத்(தேன்). தங்களுக்கே உரிய நடையில் அழகாக எழுதியிருந்தீர்கள். இதோ தாங்கள் பிரமித்த
அந்த montage shot தங்களுக்காகவே. பிரமித்தது தாங்கள் மட்டுமல்ல. தங்கள் கட்டுரையைப் படித்து விட்டு, அந்த காட்சியைக் கண்டு நானும் பிரமித்துப் போய்தான் நிற்கிறேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CJ0pm7hOJHI

WOW......The slow transformation at which the degree of expression changes in his face.....Superb !

Adhirchi...Adhangam...Bayam...Slowly eaten away by Crude thinking....Cunningness....Greediness to escape...What a transformation in the reactions !

JamesFague
11th May 2013, 05:25 PM
That is the greatness of our NT

Georgevob
11th May 2013, 08:46 PM
தற்பொழுது தமிழ் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் "தியாகம்"

http://www.youtube.com/watch?v=R9cdca4vsc4

vasudevan31355
11th May 2013, 09:10 PM
தற்பொழுது தமிழ் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் "தியாகம்"



சவுரி சார்

அணு அணுவாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். தலைவர்... என்ன ஒரு அட்டகாசம்!

Georgevob
11th May 2013, 09:24 PM
சவுரி சார்

அணு அணுவாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். தலைவர்... என்ன ஒரு அட்டகாசம்!

தலைவர் Cigerette Paaniyil.....

oooooofffffffffffffff....Not bad !!

eehaiupehazij
11th May 2013, 10:56 PM
dear Sowrirajan Sir. Dialogue delivery has always been the sole property of our NT. His stage performances and the training had always helped him memorize lengthy dialogues effortlessly. But when it comes to the delivery before a camera, ..... imagine .... the meticulous way of his expressions in tandem with his modulations in dialogue delivery like a cannon ball discharge! The Parasakthi boy remains the bench mark for any other actor and the role model to reach super duper stardom for generations of actors to come. From Parasakthi to his last film we have seen lot of transformations in NT with time. While other actors remain with almost the same stature of course with signs of aging, NT's stature was also at variance with movies in an unbelievable manner when he became slim and thinner in movies like Enga Maamaa, Thanga Surangam, GAlatta Kalyanam, Sumathi En sundari..... We can imagine polishing of diamonds with tools but one can never imagine that a diamond will polish itself to remain forever like NT. No other actor in this universe has undergone such turmoils and shown dedication to the roles he took up or assigned with. Still he remained unassumed throughout the course of his career depicting his level of maturity of having seen successes and failures alike!

Murali Srinivas
11th May 2013, 11:44 PM
புதிய பறவையின் montage shot-ஐ பதிந்ததற்கு மிக்க நன்றி வாசு சார்

இந்த திரைப்படம் திரையரங்குகளில்தான் வெகு நாட்களாக வரவில்லை, நல்ல பிரதி டிவிடி வடிவத்திலாவது வராதா என்று ஏங்கி கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் dupe negative என்ற format-லிருந்து பிரதி எடுக்கப்பட்டு இந்த மாதம் 19 அல்லது 26-ந தேதி அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் அற்புத காவியம் - இருவர் உள்ளம்.

அன்புடன்

srs, என் சார்பில் பேசியதற்கு நன்றி.

Gopal.s
12th May 2013, 04:55 AM
புதிய பறவையின் montage shot-ஐ பதிந்ததற்கு மிக்க நன்றி வாசு சார்


முரளி, வாசு,
தாங்களிருவரும் குறிப்பிட்டுள்ளது போல் அந்த புதிய பறவை காட்சி montage அல்ல. montage என்பது நிறைய குட்டி குட்டி shot களை dissolve /fade முறையில் edit செய்து தொகுப்பது.Sergi Isenstein என்ற ரஷ்ய மேதையால் Battle ship Potemkin என்ற ஒரு cult classic மௌன படத்தில் 1925 இல் அறிமுக படுத்த பட்டது.

RAGHAVENDRA
12th May 2013, 06:42 AM
முரளி, வாசு,
தாங்களிருவரும் குறிப்பிட்டுள்ளது போல் அந்த புதிய பறவை காட்சி montage அல்ல. Montage என்பது நிறைய குட்டி குட்டி shot களை dissolve /fade முறையில் edit செய்து தொகுப்பது.sergi isenstein என்ற ரஷ்ய மேதையால் battle ship potemkin என்ற ஒரு cult classic மௌன படத்தில் 1925 இல் அறிமுக படுத்த பட்டது.

உதாரணம் ... தற்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் sunfeast விளம்பரத்தை ஓரளவு சொல்லலாம். Fade in / fade out or dissolve in / dissolve out முறையில் காட்சிகளைத் தொகுப்பது. Gradual ஆக காட்சி தோன்றுவதும் gradual ஆக காட்சி மறைவதும் ஆனால் காட்சிகளின் நீளம் மிகவும் குறைவானதாக அமைக்கப் படுவதும் பயன்படுத்தப் படும் யுக்தி. இது பெரும்பாலும் ஆங்கிலப் படங்களின் முன்னாட்டங்களில் காணலாம்.

மான்டேஜ் யுக்தி என்பது பல்வேறு இயக்குநர்களால், ஒளிப்பதிவாளர்களால், தொகுப்பாளர்களால், பல்வேறு விதங்களில் பொருள் காணப் படுகிறது. குறிப்பிட்டு இதைத் தான் மான்டேஜ் என நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் கூட ... பெருவாரியாக மான்டேஜ் எனப்படும் யுக்தி ...கோபால் சார் சொன்னது போன்ற காட்சித் தொகுப்பே மான்டேஜ் எனப் படும். சில சமயம் படத்தில் நேரடியாக காட்சிகளை சொல்ல முடியாவிட்டாலோ அல்லது காட்சிகளை எடுக்கத் தவறி விட்டிருந்தாலோ கடைசி முயற்சியாக இந்த முறை பயன் படுத்தப் படும். அல்லது கதைக்களத்திலேயே இதனுடைய தேவை உணர்த்தப் படும்

உதாரணத்திற்கு ஒரு காட்சி

http://youtu.be/IqdLfK1sZDo

குறிப்பு.. மேலே உள்ள காட்சியில் FADE or DISSOLVE EFFECT அதிகம் பயன் படுத்தப் பட வில்லை. ஆனால் காட்சிகள் மிகவும் குறைந்த நீள அளவிற்கே பயன் படுத்தப் பட்டுள்ளன

vasudevan31355
12th May 2013, 07:17 AM
விளக்கத்திற்கு நன்றி கோபால் சார், ராகவேந்திரன் சார்.

Gopal.s
12th May 2013, 07:19 AM
இருக்கும் இடத்தை விட்டு.......
montage shots -மிக சிறந்த உதாரணங்கள் முதல் மரியாதை,தேவர் மகன் படங்களில் கிடைக்குமே தலைவா?

RAGHAVENDRA
12th May 2013, 07:32 AM
உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. ஒரு மேற்கோளாகத் தான் இந்தக் காட்சி தரப்பட்டுள்ளது. இந்த மான்டேஜ் ஷாட்கள் 50களிலும் ஏன் அதற்கு முன்னரும் கூட பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான நிமாய் கோஷ் அவர்களிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது அவர் கூறிய தகவல் இது. அவரைப் பொறுத்த வரையில் மான்டேஜ் ஷாட்கள் மிகவும் அவசியமாயிருந்தால் மட்டுமே பயன் படுத்துவாராம். முடிந்த வரையில் அதனைத் தவிர்ப்பாராம். அதே போல் பீம்சிங் படத்திலும் இந்த மான்டேஜ் ஷாட்கள் அதிகம் இடம் பெறாது. கதைக்குத் தேவையிருந்தால் மட்டுமே அந்த யுக்தி பயன் படுத்தப் படும் என்றார் நிமாய் கோஷ். அவர் பணியாற்றிய ஒரு படத்தில் இந்த மான்டேஜ் டெக்னிக்கை இடம் பெறச் செய்ய இயக்குநர் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அது இல்லாமலேயே அவர் கேட்ட ரிஸல்டைத் தந்தாராம் கோஷ் அவர்கள். . அதற்கு அவர் கூறிய காரணம், மான்டேஜ் ஷாட்களினால் கண் பார்வை பாதிக்கப் படும் வாய்ப்புள்ளது. அதனை நான் விரும்ப மாட்டேன். கருப்பு வெள்ளை படங்களில் அதிகம் தெரியாது. ஆனால் வண்ணப் படங்கள் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

இவையெல்லாம் அவரே என்னிடம் கூறியதாகும்.

vasudevan31355
12th May 2013, 07:40 AM
இன்று அன்னையர் தினம்.

http://sangam.org/wp-content/uploads/2013/03/MGR-with-Sivaji-Ganesan-and-his-mother-Rajamani.jpg

RAGHAVENDRA
12th May 2013, 07:42 AM
பொதுவாக கட் ஷாட்டுகளின் தொகுப்புகளைக் கூட மான்டேஜ் என சொல்வதுண்டு. மிகவும் அபூர்வமாக அல்லது முதன் முறையாக நீ பாதி நான் பாதி படத்தில் நிவேதா பாடல் 150 கட் ஷாட்டுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஒரு காதல் பாடல் இத்தனை கட்ஷாட்டுகளைக் கொண்டு அமைக்கப்பட்டது இதுவே முதன் முறை. இதன் பின்னர் பெரும்பாலான டூயட் பாடல்கள் இந்த முறையில் தான் தொகுக்கப் பட்டு வருகின்றன. இவையும் ஒரு வகையில் மான்டேஜ் வகையில் சேர்ந்தது எனலாம்.

http://youtu.be/OkptBYMCxeI

RAGHAVENDRA
12th May 2013, 07:43 AM
ராஜாமணி என்னும் அன்னை முகத்தில் நாளும் திகழும் குங்குமம் ... இந்த வரிகளை ஞாபகப் படுத்தி அன்னையர் தினத்தை துவக்கியுள்ளீர்கள் வாசு சார். மிக்க நன்றி.

Gopal.s
12th May 2013, 08:23 AM
கீழ்கண்ட விதங்களில் montage உபயோகிப்பது மிக சிறந்தது. (உபயோகிக்க கூடாத இடங்கள்,நம் தமிழ் பட உதாரணங்கள் ஏராளம் காட்டலாம்.)
1)Cause &Effect - மிக குறுகிய கால இடைவெளியில் establish பண்ணலாம்.
2)simultananious occurance - montage split image நல்ல முறை.
3)குறுகிய கால அளவில், மிக நீண்ட வாழ்க்கை நிகழ்வை தொகுப்பது.
4)இரண்டு contrasting விஷயங்களை காட்டி impact உண்டாக்குவது.
5)surrealistic மற்றும் hallucination காட்சிகளுக்கு.
அது ஒரு கதை சொல்லும் Technic .

Duet க்கு மட்டும் உபயோகித்து......

IliFiSRurdy
12th May 2013, 08:57 AM
இன்று அன்னையர் தினம்.

பெற்றால் இப்படியல்லவோ பிள்ளைகளை பெறவேண்டும்.!!!

அன்னைகள் அனைவரையும் வணங்கி போற்றுகிறேன்!

அருமையான புகைப்படம் அளித்தமைக்கு நண்பர்.வாசுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

Subramaniam Ramajayam
12th May 2013, 09:04 AM
பெற்றால் இப்படியல்லவோ பிள்ளைகளை பெறவேண்டும்.!!!

அன்னைகள் அனைவரையும் வணங்கி போற்றுகிறேன்!

அருமையான புகைப்படம் அளித்தமைக்கு நண்பர்.வாசுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

vc thangavelu--- vc ganesan---vc vc shunmugam..

IliFiSRurdy
12th May 2013, 09:29 AM
தற்பொழுது தமிழ் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் "தியாகம்"

பேஷ் பேஷ் அருமையான பதிவு.நல்லதொரு பாடல் காட்சி..

பலவருடங்களுக்கு முன் நடிகை லட்சுமி அவர்கள் இந்த காட்சியைப்பற்றி
ஒரு பேட்டியில் கீழ்கண்ட தகவல்களை பகிர்ந்துகொண்டதாக ஒரு ஞாபகம்.

" இந்த காட்சியைப்பார்த்தால் எனக்கு இரு விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.இதை நான் யாருக்கும் இதுவரை சொன்னதில்லை.அந்த உயரமான பாறை மேல் நானும் நடிகர் திலகமும் நின்று கொண்டு ஷாட்டிற்கு தயாரான போது அவர் என்னிடம் சொன்னார்,"லட்சுமி,(ஆம் அவர் என்னை அப்படிதான் அழைப்பார்).ஜாக்கிரதை!ரொம்ப ஓரமாக போய் விடாதே!"என் நெஞ்சு அப்படியே நெகிழ்ந்துவிட்டது.

இன்னொன்று... காலை 7 மணிக்கே குழுவினர் அனைவரும் அந்த காட்சியை படம் பிடிக்கத் தயாராகி விட்டோம்.ஆனால் போதிய சூரிய ஒளி இல்லை.நாங்கள் கவலையுடன் இருக்க சிவாஜி சார் மட்டும் எதோ சிந்தனையில் மெளனமாக அமர்ந்திருந்தார்.சுமார் இருபது நிமிடங்களில் சூரியன் பிரகாசிக்க எங்கள் படப்பிடிப்பு துவங்கியது.இந்த நிகழ்வையும் என்னால் மறக்கவே முடியாது."

IliFiSRurdy
12th May 2013, 09:31 AM
vc thangavelu--- vc ganesan---vc vc shunmugam..

நன்றி நண்பரே!!
:):goodidea::)

Gopal.s
12th May 2013, 10:04 AM
பேஷ் பேஷ் அருமையான பதிவு.நல்லதொரு பாடல் காட்சி..

பலவருடங்களுக்கு முன் நடிகை லட்சுமி அவர்கள் இந்த காட்சியைப்பற்றி
ஒரு பேட்டியில் கீழ்கண்ட தகவல்களை பகிர்ந்துகொண்டதாக ஒரு ஞாபகம்.

" இந்த காட்சியைப்பார்த்தால் எனக்கு இரு விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.இதை நான் யாருக்கும் இதுவரை சொன்னதில்லை.அந்த உயரமான பாறை மேல் நானும் நடிகர் திலகமும் நின்று கொண்டு ஷாட்டிற்கு தயாரான போது அவர் என்னிடம் சொன்னார்,"லட்சுமி,(ஆம் அவர் என்னை அப்படிதான் அழைப்பார்).ஜாக்கிரதை!ரொம்ப ஓரமாக போய் விடாதே!"என் நெஞ்சு அப்படியே நெகிழ்ந்துவிட்டது.

இன்னொன்று... காலை 7 மணிக்கே குழுவினர் அனைவரும் அந்த காட்சியை படம் பிடிக்கத் தயாராகி விட்டோம்.ஆனால் போதிய சூரிய ஒளி இல்லை.நாங்கள் கவலையுடன் இருக்க சிவாஜி சார் மட்டும் எதோ சிந்தனையில் மெளனமாக அமர்ந்திருந்தார்.சுமார் இருபது நிமிடங்களில் சூரியன் பிரகாசிக்க எங்கள் படப்பிடிப்பு துவங்கியது.இந்த நிகழ்வையும் என்னால் மறக்கவே முடியாது."
வாலியில், விவேக்கிடம் (ஊனமுற்றவராக நடிப்பார்) ஒருவர் பத்து காசு கொடுத்து விட்டு, அவர் சொன்ன accident deatail கேட்பார். அந்த மாதிரி உரிமையோடு கேட்கிறேன் எந்த பேட்டி,எந்த வருடம் வந்த எந்த பத்திரிகை என்பதை தெரிவிப்பீர்களா?

IliFiSRurdy
12th May 2013, 11:35 AM
வாலியில், விவேக்கிடம் (ஊனமுற்றவராக நடிப்பார்) ஒருவர் பத்து காசு கொடுத்து விட்டு, அவர் சொன்ன accident deatail கேட்பார். அந்த மாதிரி உரிமையோடு கேட்கிறேன் எந்த பேட்டி,எந்த வருடம் வந்த எந்த பத்திரிகை என்பதை தெரிவிப்பீர்களா?
நண்பரே,
வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்ட மணி சொல்லும் பாணியிலேயே உமக்கு பதிலளிக்கிறேன்..
"கோபால் எனும் பெயர் உள்ளவர், எங்கோ வியட்நாமில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விகளுக்கெல்லாம், நான் பதிலளிக்க முடியாது."

RAGHAVENDRA
12th May 2013, 12:11 PM
http://youtu.be/juXYcHRt934

தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் இடம் பெற்றிருக்கும் பதி பக்தி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் பாடல். இன்றைய தேதியில் இப்படம் திரையிட்டால் இந்தப் பாடலுக்காகவே மீண்டும் 100 நாட்கள் ஓடும் இப்படம். குறிப்பாக Time Code 2.52 ல் கவனியுங்கள். இரு கைகளையும் மிக ஸ்டைலாக சுழற்றும் நடிகர் திலகத்திடம் இருந்து தான் ஸ்டைலே அர்த்தம் கொள்கிறது என்பது புலனாகும். ஒரு நொடியில் அவர் சுழற்றும் லாவகம் ...

தியேட்டராக இருந்தால் கற்பூரம் தான்... ஆரவாரம் தான் ... ஆர்ப்பாட்டம் தான் ....

தலைவா நீ மட்டும் இன்னும் ஒரு பத்து மசாலா படங்களைப் பண்ணியிருந்தா ....

எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பது அந்த கடவுளுக்கே தெரியாது...

Gopal.s
12th May 2013, 12:25 PM
http://youtu.be/juXYcHRt934



தியேட்டராக இருந்தால் கற்பூரம் தான்... ஆரவாரம் தான் ... ஆர்ப்பாட்டம் தான் ....

தலைவா நீ மட்டும் இன்னும் ஒரு பத்து மசாலா படங்களைப் பண்ணியிருந்தா ....


72 இல் மூன்று மசாலா படங்கள் பண்ணித்தான் என்னவாகியிருக்கும் என்று
காட்டி விட்டாரே ?

vasudevan31355
12th May 2013, 01:45 PM
"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்" 'பதி பக்தி' பாடலின் காட்சிகளின் பின் புறத்தில் தலைவரின் 'அம்பிகாபதி' மற்றும் 'மக்களைப் பெற்ற மகராசி' படங்களின் போஸ்டர்களை காணுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000373152.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000373152.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000471152.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000471152.jpg.html)

Georgevob
12th May 2013, 03:02 PM
http://youtu.be/juXYcHRt934

தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் இடம் பெற்றிருக்கும் பதி பக்தி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் பாடல். இன்றைய தேதியில் இப்படம் திரையிட்டால் இந்தப் பாடலுக்காகவே மீண்டும் 100 நாட்கள் ஓடும் இப்படம். குறிப்பாக Time Code 2.52 ல் கவனியுங்கள். இரு கைகளையும் மிக ஸ்டைலாக சுழற்றும் நடிகர் திலகத்திடம் இருந்து தான் ஸ்டைலே அர்த்தம் கொள்கிறது என்பது புலனாகும். ஒரு நொடியில் அவர் சுழற்றும் லாவகம் ...

தியேட்டராக இருந்தால் கற்பூரம் தான்... ஆரவாரம் தான் ... ஆர்ப்பாட்டம் தான் ....

தலைவா நீ மட்டும் இன்னும் ஒரு பத்து மசாலா படங்களைப் பண்ணியிருந்தா ....

எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பது அந்த கடவுளுக்கே தெரியாது...

திரு.ராகவேந்தர் சார்,
உண்மையிலயே நல்ல கருத்தாழம் மிக்க பாடல்..! குறிப்பாக....கடவுள் இருபது..இல்லை என்ற உபயோகமற்ற பேச்சை விட்டு இன்றைக்கு கஞ்சிக்கு என்ன வழி என்பதை சிந்தியுங்கள் என்று அருமையான கருத்தை பாடலாசிரியர் எழுதியுள்ளார். !

அந்தளவிற்கு தமிழக மக்களிடம் ஒரு உள்ளதை உண்மையாக சிந்தித்து செயல் படும் மூளை இருந்திருந்தால்...தமிழகத்தை சின்னாபின்ன படித்தி வைத்துள்ள திராவிட கட்சிகள் என்றோ மூட்டையை கட்டிக்கொண்டு குப்பை போருக்க போயிருப்பார்கள்.

தமிழகத்தின் சீர்குலைவிற்கு காரணம் இந்த திராவிட கட்சிகள் தான் !

Georgevob
12th May 2013, 03:49 PM
மக்கள் திலகம் திரி நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்கள் போட்ட செய்தி.. திரு.சௌந்தரராஜன் அவர்கள் எல்லா நலமும் பெற்று விரைவில் வீடு திரும்ப நம்முடைய பிரார்த்தனைகள் !


திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

Everyone please pray for TMS. - நன்றி திரு சைலேஷ் பாபு அவர்களே
http://www.youtube.com/watch?v=nx40d_SkBEg

Georgevob
12th May 2013, 04:01 PM
நம்மை பெற்ற அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல் - நடிகர் திலகத்தின் உன்னதமான நடிப்பில் மற்றும் இன்று உயிருக்கு போரடிகொண்டிருக்கும் தெய்வ பாடகர் திரு.சௌந்தரராஜன் குரலில் !

http://www.youtube.com/watch?v=b1PuDk_WyS0

RAGHAVENDRA
12th May 2013, 04:03 PM
இறைவனின் அருளுடன் டி.எம்.எஸ். அவர்கள் நலமுடன் வீடு திரும்ப வேண்டுகிறேன்.

Gopal.s
12th May 2013, 05:50 PM
வீட்டுக்கு ஒரு எஸ்.பீ.பீ,தெருவுக்கு ஒரு கிஷோர் ,ஊருக்கு ஒரு rafi , மாவட்டத்துக்கொரு பீ.பீ.எஸ் வந்துள்ளார்கள். ஆனால் இன்னொரு டி.எம்.எஸ். தோன்றவே இல்லை. அந்த கம்பீரம்,அந்த பாவம், அந்த உச்சரிப்பு , base மற்றும் mid octave இல் இவர் பாடும் போது தேவ கானமே. இவர் இசை நின்றால் அடங்கும் உலகே. அன்னார் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பிரம்மா ஒரு கோடி வருட தவத்தில் நடிகர்திலகத்தை படைத்து, அவருக்காக டி.எம்.எஸ் ஐ படைத்து அவருடனே அனுப்பி, அவரை வைத்தே break கிடைக்கவும் செய்தான்.(தூக்கு தூக்கி)

Georgevob
12th May 2013, 08:32 PM
இன்று SUNLIFE தொலைகாட்சியில் திரை உலகின் சித்தர் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படிக்காத மேதை திரைப்படம் ஒளிபரப்பில் இப்போது !

http://www.youtube.com/watch?v=-2ZgZKVkOkg

மசாலா திரைப்படங்களில் பொதுவாக மக்கள் பெரிதும் விரும்புவது சண்டைகாட்சிகளை மற்றும் காதிர்கினிய பாடல்களை. ஒரு நிமிடம் நாம் அந்த வெற்றிகரமாக ஓடியிருக்கும் மசாலா படங்களிலிருந்து அந்த சண்டைகாட்சிகலையோ அல்லது பாடல்களையோ நீக்கி விட்டு அந்த மசாலா படத்தில் அந்த படத்தின் நாயகனே நடித்திரிந்தாலும் அதன் நிலை என்ன என்று சிந்தித்துபார்தொமே ஆனால் அனைவரும் படம் பப்படம் ஆகிவிடும் என்று ஒத்துகொள்வார்கள். .

காரணம் சண்டைகாட்சிகளை மற்றும் பாடல்காட்சிகளை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் எல்லா மசாலா படங்களுக்கும் கணிசமான அளவில் வரும். ஏனென்றால் அவர்களுக்கு Entertainment மட்டுமே குறிகோளாக கொண்டு வருவதுதான் !

ஆனால் நம் நடிகர் திலகம் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த பெரும்பான்மையான படங்களில், நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லை என்று வைத்துகொள்ம் பட்சத்தில் அந்த திரைப்படம் ஓடி வெற்றி பெற்று இருக்குமா என்று நினைத்துபார்த்தல் சந்தேகம் இல்லாமல் ஒடீருகாது என்பது திண்ணம். That's Precisely why Nadigar Thilagam was / is the biggest differentiator and was mostly, THE ONLY CHOICE OF DIRECTOR/ PRODUCER / DISTRIBUTOR in those films even though there were Good performers during his days.

இப்படிப்பட்ட ஒருவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எப்போதும் இருந்தன, இருந்துவருகின்றன, இருந்துவரும் ! அவை என்னவென்றால்

அவர் படம் அழுவாச்சி படம், மிகையான நடிப்பு, இயற்க்கை நடிப்பு இல்லை, நடனம் ஆட தெரியாது, சண்டை போட வராது, கட்டுடல் இல்லை, ஜனரஞ்சகம் இல்லை மற்றும் என்னவெல்லாம் சொல்லமுடியுமோ அவை எல்லாம் கர்ணனின் வில்லிலிருந்து புறப்பட்ட நாகஸ்திரம் போல அவரை நோக்கி பாய்ந்தன, பாய்ந்துகொண்டிருகிறது, பாயும் ! .

இப்படி என்னதான் நடிகர் திலகத்தை பற்றி நிறைய தாழ்புனற்சியுடன் தமிழ் திரை உலகில் ஒருபிரிவினர் பிரிவினையை உண்டாக்கினாலும் கூறினாலும்...

இவை எல்லாம் ஒரு வாதத்துக்கு ஒத்துகொள்கிறோம் என்று வைத்தால் கூட...

இப்படி ஒன்றும் இல்லாமலயே மாபெரும் வெற்றி பல பெற்று,

நடிக்க வந்த ஏழே ஆண்டில், ஆசியா-ஆப்ரிக்க கண்டதிலயே சிறந்த நடிகர் என்று இந்தியாவின் முதல் வெளிநாட்டில் சிறந்த நடிகர் பட்டம் பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமையை தமிழகத்திற்கு சேர்த்த நடிகர் திலகம் எங்கே !

மற்றும் 1962 அமெரிக்க நாட்டில் ஒரு நகரத்தின் ஒரு நாள் மேயர் பதவி பெற்று இன்று வரை இரண்டு இந்தியர்கள் மட்டுமே அந்த பெருமையை அதுவும் திரை துறையில் ஒருவர் மட்டும் அது நம் நடிகர் திலகம் மட்டும் இன்னொருவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும்.

அது மட்டுமா....அமெரிக்க ஜனாதிபதி John F Kennedy இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக நம் நடிகர் திலகத்தின் புகழை கேட்டு இந்திய அரசாங்கத்திற்கு நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்குமாறு அழைபிதழ் அனுப்பியதோடு இல்லாமல் அந்த காலத்தில் அவர் அங்கு செலவு செய்ய ஒரு நாளைக்கு 500 அமெரிக்க டாலரும் அல்லவே கொடுத்து கௌரவித்தார் !

அப்போதும் இங்கு தாழ்புணர்ச்சி கொண்ட திராவிட கட்சி கனவான்கள் மற்றும் சில எட்டப்பன்கள் நடிகர் திலகம் அங்கு கான்பிபதர்காக கொண்டு சென்ற 4 தொகுப்புகளை கொண்ட Video cassettil இங்கு விமான நிலையத்திலயே எங்கே இவர் புகழ் அங்கு அபரிதமாக பரவிவிடுமோ என்ற தாழ்புனர்சியில் திருடவும் அல்லவே செய்தார்கள் ? நல்லவேளை, இரண்டு தொகுப்புகள் தன்னுடைய கைப்பையில் இருந்ததால் அவை மட்டும் தப்பித்தன...இல்லை என்றால் அதையும் அல்லவே இந்த திராவிட பெருச்சாளிகள் திருடி இருப்பார்கள் !

இந்திய திரையுலகிலிருந்து OSCAR என்ற உயரிய விருதிற்கு செல்வாக்கும் சொல்வாக்கும் மிகுந்த வடகிந்திய திரை உலக ஜாம்பவான்கள் கனவு மட்டுமே கண்டபொழுது சர்வ சாதாரணமாக அதை உன் நடிப்பு என்ற ஒரு சிறு ஆயுதம் கொண்டு தகர்த்து பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம் உன்னுடைய தெய்வமகன் அல்லவா !

இப்படி பல தாழ்புணர்ச்சி திமிங்கலங்களின் மத்தியில் பலமுறை சிகண்டியை போல அந்த திமிங்கலங்கள் குள்ளனரிகலாகவும் பல விதங்களிலும் பல நேரத்திலும் நடிகர் திலகத்தை முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும் உய்ரித்தேழும் Phoenix பறவையாக அல்லவ நம் நடிகர் திலகம் உயிர்த்தெழுந்தார் !

திரை உலகின் சித்தரே ! நீ செய்த ஒரே தவறு இந்த திராவிட கொள்ளை கூடமாம் தமிழ்நாட்டில் பிறந்ததுதானோ ?

kalnayak
13th May 2013, 12:00 AM
காப்பி அடிச்சுட்டாங்கய்யா, காப்பி அடிச்சுட்டாங்க. ஒரு இந்தி-தமிழ் டப்பிங் படத்துக்கு நடிகர் திலகத்தின் அம்பிகாபதி பட தலைப்பை காப்பி அடிச்சுட்டாங்க. தலைப்பே காப்பி ...

http://tamil.oneindia.in/movies/news/2013/05/raanjhnaa-come-tamil-as-ambikapathy-175103.html

RAGHAVENDRA
13th May 2013, 01:03 AM
எல்லாம் ராசி காரணம்... தனுஷ் படத்திற்கு நடிகர் திலகத்தின் படப் பெயரை வைத்தால் வெற்றி மேல் வெற்றி பெறுகிறது. யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் இப்படி அவர் படங்களையோ அல்லது பாடல் வரிகளையோ படப் பெயராய் வைத்தால் நன்றாக ஓடுகிறது என்ற ஒரு சென்டிமென்ட் காரணமாக இருக்கும்.

RAGHAVENDRA
13th May 2013, 01:04 AM
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
13.05.13 – 19.05.2013
வசந்த் டி.வி. – 19.05.2013 – 2.00 மணி – சபாஷ் மீனா
ராஜ் டி.வி. 19.05.2013 – இரவு 10.30 மணி – ரத்த திலகம்
ராஜ் டிஜிட்டல்
15.05.2013 – காலை 10 மணி – எழுதாத சட்டங்கள்
13.05.2013 – பகல் 1 மணி – படித்தால் மட்டும் போதுமா
18.05.2013 – இரவு 8 மணி – தாம்பத்யம்
முரசு
15.05.2013 – இரவு 7.30 மணி – நல்லதொரு குடும்பம்
18.05.2013 – இரவு 7.30 மணி – ரத்த திலகம்
மெகா டி.வி.
13.05.2013 – பகல் 12.00 மணி – எங்கிருந்தோ வந்தாள்
17.05.2013 – பகல் 12.00 மணி – கந்தன் கருணை
ஜெயா டி.வி.
13.05.2013 – காலை 10 மணி – விடுதலை
17.05.2013 – காலை 10 மணி – ஆண்டவன் கட்டளை
ஜே மூவீஸ்
16.05.2013 – அதிகாலை 1.00 மணி – மன்னவரு சின்னவரு
15.05.2013 – காலை 6 மணி – வம்ச விளக்கு
13.05.2013 – பிற்பகல் 1.00 மணி – தங்க சுரங்கம்
14.05.2013 – பிற்பகல் 1.00 மணி – தேனும் பாலும்
15.05.2013 – பிற்பகல் 1.00 மணி – குலமகள் ராதை
16.05.2013 – பிற்பகல் 1.00 மணி – தியாகம்
17.05.2013 – பிற்பகல் 1.00 மணி – கௌரவம்
18.05.2013 – பிற்பகல் 1.00 மணி – திருப்பம்
13,.05.2013 – இரவு 9 மணி – தங்க பதக்கம்
18.05.2013 – இரவு 9 மணி – விடுதலை

vasudevan31355
13th May 2013, 09:29 AM
மிக அரிய புகைப்படம்.

நடிகர் திலகம் சர்வ துறைகளிலும் தலை சிறந்த மேதை என்பதற்கு இன்னொரு உதாரணம். நம் தலைவர் 'சித்ரவீணா' வை எவ்வளவு அழகாக வாசிக்கிறார் பாருங்கள்! இது சினிமாவுக்காகவோ, வேறு விளம்பரத்திற்காகவோ எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. இசையின் மேல் நம் தலைவருக்கு உள்ள ஆர்வம்தான் இது.

ஒருமுறை நடிகர் திலகம் பெங்களூரு சென்றிருந்தபோது புகழ் பெற்ற வீணை கலைஞர் திரு N.நரசிம்மன் அவர்களை தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து வீணை வாசிப்பின் நுணுக்கங்களைக் கேட்டு அறிந்து கொண்டாராம். அதுமட்டுமல்லாமல் ஒரு கைதேர்ந்த வீணை வித்வான் போல அவ்வளவு அழகாக வீணை மீட்டிக் காண்பித்தாராம்.

'பாலும் பழமும் கைகளை ஏந்தி' பாடலையும் அருமையாக இசைத்துக் காண்பித்தாராம். பின் ஒருநாள் வித்வானுடன் முழுக்கத் தங்கியிருந்து வீணை வாசிப்பை நன்கு practice செய்து கொண்டாராம்.

சகல கலைகளிலும் கைதேர்ந்த செம்மல், அடக்கமே உருவாய் இருந்த பெருமையை என்னவென்று சொல்வது!

ஆதாரம்: 'தி ஹிந்து' நாளிதழ் December 15, 2012.

தலைவருக்கு இடது புறம் இருப்பவர் 'சித்ரவீணா' திரு N.நரசிம்மன் அவர்கள். வலது புறம் இருப்பவர் திரு N.நரசிம்மன் அவர்களின் சகோதரர் திரு.ராமரத்தினம் அவர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/veenai.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/veenai.jpg.html)

goldstar
13th May 2013, 09:50 AM
மிக அரிய புகைப்படம்.

சகல கலைகளிலும் கைதேர்ந்த செம்மல், அடக்கமே உருவாய் இருந்த பெருமையை என்னவென்று சொல்வது!

ஆதாரம்: 'தி ஹிந்து' நாளிதழ் December 15, 2012.


தனது திறமை, கலையை மற்றவர்களை போல் விளம்பரம் செய்யாத நிறைகுடம் நடிகர் திலகம் வாழ்க பல்லாண்டு.

Gopal.s
13th May 2013, 09:59 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-27

இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.

இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.

நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.

இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?

நிகழ்ந்ததா?

வரும் பாகங்களில் அலசுவோம்.

----To be continued .

RAGHAVENDRA
13th May 2013, 10:02 AM
சகல கலா வல்லவர் நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்படத்தை இங்கு பகிரந்து கொண்ட வாசு சார் தங்களுக்கு மிக்க நன்றி.

இந்த வாத்தியம் பல ஆண்டுகளாக கோட்டு வாத்தியம் என்று அழைக்கப் பட்டு வந்தது. கோட்டு வாத்திய விற்பன்னரான, வானொலி நிலையத்தில் பணியாற்றிய, திரு நரசிம்மன் அவர்கள் தான் இதன் பெயரை சித்ர வீணா என மாற்றினார். அது மட்டுமல்லாமல் தன் புதல்வர்களையும் இந்தக் கலையில் விற்பன்னராக்கினார். இவருடைய மூத்த புத்ல்வர் தான் பிரபல சித்ர வீணா கலைஞர் திரு ரவிகிரண் அவர்கள். இவருடைய மற்றொரு புதல்வர் பிரபல கர்நாடக இசைப் பாடகரும் சித்ர வீணா கலைஞருமான திரு சசிகிரண் அவர்கள்.

நடிகர் திலகம் கர்நாடக சங்கீதத்தில் முறைப் படி பயிலாவிட்டாலும் கேள்வி ஞானத்தின் மூலம் அதனுடைய நுணுக்ககங்களை நன்கு அறிந்தவர். அது மட்டுமின்றி கீர்த்தனைகளை சுருதி பிசகாமல் பாடத் தெரிந்தவர். ஆனால் தன்னுடைய ஞானத்தை விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். நரசிம்மன் அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அன்பும் அவருடைய திறமையின் மேல் அதீத பற்றும் கொண்டவர். சங்கீத நுணுக்கங்களை அந்த வாத்தியத்தில் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி அவரிடம் நடிகர் திலகம் விளக்கம் கேட்கும் போது எடுத்த நிழற்படம் இது.

vasudevan31355
13th May 2013, 10:19 AM
அரிய புகைப்படம்.

http://i.imgur.com/TdzVS.jpg

vasudevan31355
13th May 2013, 10:22 AM
kalakkunga Gopal.

http://ecx.images-amazon.com/images/I/51YZG-WgohL._SX500_.jpg

vasudevan31355
13th May 2013, 10:23 AM
அரிய புகைப்படம்.

http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/47417_10152228313500543_1533791684_n.jpg

vasudevan31355
13th May 2013, 10:24 AM
http://www.123telugu.com/content/wp-content/uploads/2012/06/Indira-Gandhi-with-Sivaji-G.jpg

Gopal.s
13th May 2013, 10:25 AM
கொல்றீங்க வாசு சார். பம்மலார் , ராகவேந்தர் ,வாசு நிச்சயம் தலைவருக்கு வரபோகும் நினைவு மண்டபத்தை முழுவதுமாக ஆக்ரமித்தாலும் ஆச்சரியம் இல்லை.

Georgevob
13th May 2013, 12:00 PM
தனது திறமை, கலையை மற்றவர்களை போல் விளம்பரம் செய்யாத நிறைகுடம் நடிகர் திலகம் வாழ்க பல்லாண்டு.

http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k

vasudevan31355
13th May 2013, 12:38 PM
சகல கலா வல்லவர் நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்படத்தை இங்கு பகிரந்து கொண்ட வாசு சார் தங்களுக்கு மிக்க நன்றி.

இந்த வாத்தியம் பல ஆண்டுகளாக கோட்டு வாத்தியம் என்று அழைக்கப் பட்டு வந்தது. கோட்டு வாத்திய விற்பன்னரான, வானொலி நிலையத்தில் பணியாற்றிய, திரு நரசிம்மன் அவர்கள் தான் இதன் பெயரை சித்ர வீணா என மாற்றினார். அது மட்டுமல்லாமல் தன் புதல்வர்களையும் இந்தக் கலையில் விற்பன்னராக்கினார். இவருடைய மூத்த புத்ல்வர் தான் பிரபல சித்ர வீணா கலைஞர் திரு ரவிகிரண் அவர்கள். இவருடைய மற்றொரு புதல்வர் பிரபல கர்நாடக இசைப் பாடகரும் சித்ர வீணா கலைஞருமான திரு சசிகிரண் அவர்கள்.

நடிகர் திலகம் கர்நாடக சங்கீதத்தில் முறைப் படி பயிலாவிட்டாலும் கேள்வி ஞானத்தின் மூலம் அதனுடைய நுணுக்ககங்களை நன்கு அறிந்தவர். அது மட்டுமின்றி கீர்த்தனைகளை சுருதி பிசகாமல் பாடத் தெரிந்தவர். ஆனால் தன்னுடைய ஞானத்தை விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். நரசிம்மன் அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அன்பும் அவருடைய திறமையின் மேல் அதீத பற்றும் கொண்டவர். சங்கீத நுணுக்கங்களை அந்த வாத்தியத்தில் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி அவரிடம் நடிகர் திலகம் விளக்கம் கேட்கும் போது எடுத்த நிழற்படம் இது.


விளக்கத்திற்கு நன்றி ராகவேந்திரன் சார்.