PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

RAGHAVENDRA
18th February 2013, 09:47 AM
புயல் போல் உடனே விடையளித்து விட்டீர்கள் வாசு சார்... இனிமேல் நீங்களும் கேளுங்கள் ... மற்ற நண்பர்களும் பங்கு கொண்டு கேள்விகள் கேட்கட்டும், விடையளிக்கட்டுமே ...

தங்களுடைய நடிகர் திலகத்தைப் பற்றிய ஞானம் வியப்பூட்டுகிறது.. தொடருங்கள்..

நவ்ரங் முதலில் கருப்பு வெள்ளைத் திரைப்படமாகத் தான் வெளிவந்தது. அதனைத் தற்போது வண்ணமயமாக்கியுள்ளனர். இதே போன்று நம்முடைய தெய்வ மகனை வண்ணத்தில் எடுத்தால் ... நினைக்கும் போதே ... அட்டகாசமாக இருக்குமே ...

நவ்ரங் பாடலின் கருப்பு வெள்ளை வீடியோ இணையத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த காட்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி வாசு சார்.

vasudevan31355
18th February 2013, 09:57 AM
படம்: பெற்ற மனம்.

பாடல்: சிந்தனை செய்யடா சிரித்து பாரடா

இப்பாடலில் இடையிடையே வரும் நடிகர் திலகத்தின் கணீர்' என்ற சிம்மக் குரலைக் கேளுங்கள். அடடா! என்ன ஒரு மாடுலேஷன். எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்கள். வாழத் தெரியாத ஒருவனின் ஏக்கப் புலம்பல்கள். அதிலும் குறிப்பாக

என்ன வேலை செய்வேன்
என்ன தெரியும் எனக்கு?...
சிந்திக்கும் வழக்கம் என் மூளைக்கும் இல்லை...
செயலாற்றும் திறன் என் கரங்களுக்கும் இல்லையே!...
கெட்டது உடம்பு என்று படுத்தது உண்டே தவிர வந்தது களைப்பு என்று சாய்ந்ததில்லை...
எப்படி வாழ்வேன்? எப்படி வாழ்வேன்?...

என்ற வசனங்களை அவர் பாவங்களுடன் உச்சரிக்கையில் உடலெல்லாம் புல்லரித்துப் போகிறதே! ராகவேதிரன் சார் காலையில் மிக உசுப்பேற்றி விட்டார். காலையிலிருந்து இதே பாடலைக் கேட்கிறேன்.. கேட்கிறேன்.. கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

vasudevan31355
18th February 2013, 10:17 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். அருமையான பாடலில் என்னை மூழ்கடிக்கச் செய்து விட்டீர்கள். உயிரே போனாலும் மறக்க முடியாத பாடல்.

தங்கள் விருப்பப் பாடலான 'பட்டிக்காடா பட்டணமா' காவியத்தில் ஒலிக்கும் அம்பிகையே பாடல் தரணியின் விருப்பம் ஆகும். அற்புதம் சார். என்ன பாடல் சார் அது! என் வரையில் நடிகர் திலகத்தின் படங்களிலேயே அவர் அறிமுகமாகும் காட்சி படுஅமர்க்களமாய் அமைந்தது இதில்தான். (இரண்டாவது தெய்வ மகன்) திரையரங்கு சும்மா ரெண்டுபட்டுப் போகும். அதுவும் லைன் ஒர்க் ஆர்ட்டில் நெகடிவ் உருவங்களில் நடிகர் திலகம் அறிமுகப் படுத்தப்படும்போது எழும் அமர்க்களம் இருகிறதே! சொல்லி மாள முடியுமா! பொற்கால கலைஞன் இல்லை இல்லை கடவுள் ஆயிற்றே!

'என்னைப் போல் ஒருவன்' ஈரோடு விஜயா திரையரங்கில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!

கோவை டிலைட் திரையரங்கில் நேற்று நடைபெற்ற 'ஹரிசந்திரா' கொண்டாட்டங்கள் பற்றிய நிழற்பட பதிவுகள் அளித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள்.

நண்பர் சிவராஜ் அவர்களுக்கு உளமார்ந்த என் நன்றிகளைத் தெரிவியுங்கள் சார்.

Rare Images வரிசையில் குங்குமப் பொட்டும் சொந்த முடியுமாய் அழகு தெய்வமாய் காட்சியளிக்கும் நான் வணங்கும் தெய்வத்தின் நிழற்படத்தை அளித்ததற்கு தங்களுக்கு கோடி கோடி நன்றிகள்.

vasudevan31355
18th February 2013, 10:21 AM
கண்ணன் சார்,

'முத்துமணிச் சிரிப்பிருக்க' பாடல் முத்தாய்ப்பு. அரிதான அற்புதமான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களுடைய அன்பு பாராட்டுதல்களுக்கும் என் நன்றிகள்.

JamesFague
18th February 2013, 10:25 AM
No Black & White movie can break the record of Pattikada Pattanama

vasudevan31355
18th February 2013, 10:25 AM
No Black & White movie can break the record of Pattikada Pattanama

100000000000000000% true

RAGHAVENDRA
18th February 2013, 10:29 AM
முத்து மணிச் சிரிப்பிருக்க
பாடல் இடம் பெற்ற படம் - ஊருக்கு ஒரு பிள்ளை
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
வரிகள் - முத்துலிங்கம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

அபிஷேக அலங்கார பாவை வரிகளின் போது பாலாவின் குரல்களில் சங்கதிகள் அட்டகாசமாக இருக்கும்.. எங்கே சங்கதிகள் வைக்க வேண்டும், எங்கே ஆலாபனை வைக்க வேண்டும் எங்கே இசைக் கருவிகள் ஒலி தூக்க வேண்டும் இவையெல்லாம் இலக்கணமாக வகுத்துள்ளார் மெல்லிசை மன்னர்.

இந்த பாடலுக்காக அவருக்கு ஒரு

http://www.freezone.photoimpact-international.com/images/smileys/smiley-hatsoff-maggie.gif

இனி பாடலின் வரிகள் நமக்காக




முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..
அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..

தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..

இளங்காற்று தாலாட்டும் நேரம் புது இன்பம் கண்டு மஞ்சம் இளைப்பாரும்..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

RAGHAVENDRA
18th February 2013, 10:53 AM
அபூர்வ நிழற்படம்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் 100வது நாள் விழாவில் கங்கை அமரனுக்கு நடிகர் திலகம் கேடயம் வழங்கும் காட்சி

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-black-and-white-tamilcinema/images/tamil-cinema-black-and-white-tamilcinema06.jpg

JamesFague
18th February 2013, 11:15 AM
Yesterday went to Vellore to purchase the DVD of Madi Veetu Ehzai and
when I asked for the DVD one more person who stand behind asked for
the same DVD. He has purchased three DVD's all of them are NT's Thiruppam,
Kavriman & the above movie.

It shows that as Mr Murali mentioned not only in chennai all the over the world
NT's movies are hot cake.

RAGHAVENDRA
18th February 2013, 11:20 AM
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை சித்தூர் வாசுதேவன் அவர்களே. திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டும், ரூ. 249 என்று விலை வைத்தும் மேலும் மேலும் பிரதிகள் எடுக்கப் பட்டு கர்ணன் நெடுந்தகடு அதிக அளவில் விற்பனையாவதே சான்று. கர்ணன் மட்டுமல்ல விலை அதிகம் வைத்தால் கூட நடிகர் திலகத்தின் படங்கள் நெடுந்தகடு விற்பனையில் பரவலாக உலகெங்குமே சாதனை புரிந்து வருகின்றன.

vasudevan31355
18th February 2013, 11:27 AM
தலைவரின் 'வணங்காமுடி' காவியம் தெலுங்கில்

'THALAVANCHANI VEERUDU' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் "ஓங்காரமாய் விளங்கும் நாதம்" பாடல் தெலுங்கில் திரு கண்டசாலா அவர்களால் பாடப்பட்டது.

திரு கண்டசாலா அவர்களின் குரலும் தலைவருக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது பாருங்கள்!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bO2x9f1XRPk

parthasarathy
18th February 2013, 01:13 PM
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

தங்களது "தங்கச் சுரங்கம்" படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றிய அலசலை இப்போது தான் பார்த்தேன். தங்களுக்கேயுரிய எளிமையான, ஆனால் சுவாரஸ்யமான நடையில் எழுதி இருந்தீர்கள்.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

kaveri kannan
18th February 2013, 01:27 PM
பெற்ற மனம் பாடலையும் நடிகர்திலகத்தின் உணர்ச்சிமயமான குரலையும் கேட்டேன்.

புதிர் அளித்த திரு ராகவேந்திரா அவர்களுக்கும், விடை அளித்த அன்பு வாசு அவர்களுக்கும் நன்றி..

வணங்காமுடி தெலுங்குப்பதிவுக்கு சிறப்பு நன்றி....

eehaiupehazij
18th February 2013, 08:15 PM
Dear Sankar sir,

Sivandha Mann is an adventurous movie (puratchikaaran story) and it will not come in BOND series.

Sivandha Mann and Dharmam Enge will come in one catagory.


In Sivandha Mann Two Connery/Bond movie scenes were adopted.The helicopter chase where like Connery our NT has taken risk of using no stunt doubles (energetic NT moves like Connery's Bond swiftly when the copter comes over his head) was from the 1963 Bond Movie 'From Russis With Love'. Another scene was the flight fight with Thengai Seenivasan, was adopted from the 1963 Bond Movie 'Goldfinger' again Connery with the villain in the climax. Even NT makes a walk in the climax of Deiva Magan in a James Bond tuxedo with guns in hand, replicating the gun barrel sequence of Connery Bond films. NT in his Pudiya Paravai had also admirably followed Sean Connery's style of drinking in the Bond Introduction scene of Dr.No. In many movies the Bond dress fitted our NT as glove in hand, particularly Thangasurangam and Raja. In this world almost all actors have tried Bond mannerisms but only few were so close to Connery's screen presence as Bond. NT with his acting prowess has polished the desi version of Bond infused with sentiments that are non-Bond pattern. Since Makkal Kalaignar Jai Shankar used to play light roles only without much sentiments he was at that time titles as the Thennagaththu James Bond! But NT tried to give a polish to Bond as a real life spy than a larger than life hero. In Thangasurangam and Raja NT's dresses were very impressive for his lean and fitting body at that time like a Bond.

kaveri kannan
18th February 2013, 11:10 PM
தலைவரின் 'வணங்காமுடி' காவியம் தெலுங்கில்

'THALAVANCHANI VEERUDU' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் "ஓங்காரமாய் விளங்கும் நாதம்" பாடல் தெலுங்கில் திரு கண்டசாலா அவர்களால் பாடப்பட்டது.

திரு கண்டசாலா அவர்களின் குரலும் தலைவருக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது பாருங்கள்!



அன்பு வாசு அவர்களுக்கு

அதுதான் வரம் வாங்கி வந்த கலைஞர்களின் தவப்பயன்..

டி. எம். எஸ் அவர்கள் எப்படி பலருக்குப் பொருத்தமாய்ப் பாடவல்லவரோ
அதேபோல் தலைவர் பலர் குரலுக்கு மெத்தப்பொருத்தமாய் உடல்மொழி காட்டிச் சிறப்பிக்க வல்லவர்..

அவரால் எந்தப் பாடலும் இன்னும் உயரத்துக்குப்போகும்...

அவரால் இராமானாகவும் இராவணனாகவும் பரதனாகவும் ஏன் தசரதனாகவும் தமது 20 வயது முதல் 70 வயது வரை நடிக்க முடிந்திருக்கும் என்றால்
அவர் திறன் அறிவலசலுக்கு அப்பாற்பட்டதுதானே...

பலரும் இதில் ஏதாவது ஒன்றை ஒரு காலகட்டத்தில் சிறப்பாகச் செய்யலாம். ஆனால் ஏககாலத்தில் செய்ய வல்லவர் நம் ஏகலைவர் மட்டுமே!
பி பி எஸ், சந்திரபாபு, ஏ,எம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.எஸ், பாலா, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், எஸ் டி சுந்தரம் -
இன்னும் இங்கே சுட்டியில் டி ஏ மோத்தியின் குரலுக்கும் அழகுயிர் உருவம் தந்து உயர்த்தும் உன்னதக் கலைஞர் அல்லவா நம் தலைவர்..

http://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

RAGHAVENDRA
19th February 2013, 06:55 AM
http://www.jazznotesband.com/clip%20art/drums15.gif

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி. நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான கருடா சௌக்கியமா படத்தை பார்த்திராத பல நண்பர்களுக்காக இதோ இணையத்திலேயே இனிய வாய்ப்பு. முழுப்படமும் கீழே யூட்யூப் இணைய தளத்தின் உபயத்தால் காணக் கிடைக்கிறது. இதற்காக யூட்யூப் மற்றும் தரவேற்றிய நிறுவனத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.

இன்று வரை இப்படத்தின் நெடுந்தகடு தமிழகத்தில் வெளியாகவில்லை என எண்ணுகிறேன்.


http://youtu.be/kKA_-j-UaG8

vasudevan31355
19th February 2013, 07:08 AM
நன்றி பார்த்தசாரதி சார். தங்களின் அடுத்த அசத்தலான பாடல் ஆய்வு எப்போது?

vasudevan31355
19th February 2013, 07:14 AM
மிக்க நன்றி கண்ணன் சார். காணா இன்பப் பாடலை கனிவோடு தந்த தங்களுக்கு நன்றிகள் பல. ரசனையில் மேம்பட்ட தங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். டி ஏ மோத்தி அவர்களின் குரல் வித்தியாசமானது. அத்தகைய வித்தியாசமான குரலை தன் திறமையால் மேலும் மெருகேற்றி அழகுபடுத்தி தலைவர் அளித்திருப்பார். மழையில் நனைந்து கொண்டே மாலினியுடன் இளமைத் துள்ளல் போட்டு (இந்தப் பாடல் முழுதும் கலகல' என்று சிரித்தபடியே பின்னுவார்) நெஞ்சை அப்படியே அள்ளிக் கொண்டு போவார். நன்றிகள் சார்.

vasudevan31355
19th February 2013, 07:21 AM
ராகவேந்திரன் சார்!

என்னை ஒரு வழி பண்ணுவது என்று முடிவு கட்டி விட்டீர்கள் போலிருக்கிறது. நேற்று சிந்தனை செய்ய சொல்லி தேனினும் இனிய பாடலை சிம்மக் குரலுடன் கேட்டு இன்புறச் செய்து, இன்று கருடா சௌக்கியமா என்ற என் உள்ளம் கொள்ளை கொண்ட தீன தயாளுவை நாள் முழுதும் காணச் செய்து விட்டீர்கள். இன்று வேலைகள் ஆனாற் போலதான். இன்று முழுதும் தீன தயாளு என்னை ஆட்கொள்வார். முழு சுட்டிக்கும் நன்றி!

RAGHAVENDRA
19th February 2013, 07:35 AM
டியர் வாசுதேவன் சார்,
நம்மையெல்லாம் ஒரு வழி பண்ணி விட்டு அவர் பாட்டுக்கு போய் விட்டார். நாம் யாரிடம் காட்டுவது... அதான் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை வழி வந்து விட்டேன். அடுத்த பதிவைப் பார்த்தால் என்ன ஆவீர்களோ...

RAGHAVENDRA
19th February 2013, 07:48 AM
My Choice என் விருப்பம்


பாடல் - செந்தூர நெற்றிப் பொட்டின் திலகம்
படம் - சித்ரா பௌர்ணமி
வரிகள் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.koodal.com/cinema/gallery/events/2011/492/divya-meedu-kadhal-movie-audio-launch-stills_3_120312123.jpg
குரல்கள் - டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா


இந்த தலைமுடி ஸ்டைலிலேயே படம் முழுதும் நடிகர் திலகம் வந்திருந்தால் ... சித்ரா பௌர்ணமி இன்னொரு நூறு நாள் படமாகியிருக்குமே என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்தப் பாடலின் ட்யூனாகட்டும், வரிகளாகட்டும், குரல்களாகட்டும் வாத்தியக் கருவிகளாகட்டும் ... அத்தனையும் சேர்ந்து மிக உயர்தரத்தில் உருவாகி விட்டன. அப்படிப் பட்ட மேன்மையான பாடலை திரை வடிவில் தரும் போது எவ்வளவு சிரமமும் சிரத்தையும் எடுக்க வேண்டும், திரையில் தோன்றும் கலைஞர்கள் அதற்கு எப்படி ஜீவன் கொடுக்க வேண்டும் ... என்பதற்கு இப்பாடலை உதாரணம் சொல்லலாம்.

அது என்னவோ தெரியவில்லை நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் போது அந்த நடிகையரின் தனித் திறமை மிளிர்வதை நம்மால் காண முடிகிறது. இப்பாடலில் ஜெயலலிதா அவர்களை விட்டு வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை. பாடலின் துவக்கத்தில் கோட் அணிந்து முடிந்த வுடன் திரும்பி அவரை நடிகர் திலகம் பார்ப்பார் அதில் துவங்கி பாடல் முடியும் வரை ஸ்டைல் ராஜ்ஜியம் தான் ... குறிப்பாக அந்த வெள்ளை உடை அணிந்து கீழே இறங்கி வந்து நிற்கும் இடம் ...

Style defined ... Simply Superb ....

அதுவும் ஒவ்வொரு உடையும் அவருக்கு அவ்வளவு அழகாகப் பொருந்துவதைப் பார்க்கும் போது ...

கொடுத்து வைத்தவர் நடிகர் திலகம் ... இப்படி ஒரு உடையலங்கார நிபுணர் அவருக்குக் கிடைத்ததற்கு ..

கொடுத்து வைத்தவர் அந்த உடையலங்கார நிபுணர் - இப்படி ஒரு பொன்னான வாய்ப்பினை வாழ்நாள் முழுதும் பெற்றதற்கு ..

கொடுத்து வைத்தவர் அந்த ஒளிப்பதிவாளர் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ... இந்தக் காட்சியை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றதற்கு ..

எல்லாவற்றிற்கும் மேலாக..

கொடுத்து வைத்தவர்கள் சிவாஜி ரசிகர்கள் .,...

விளக்கம் வேண்டுமோ...


http://youtu.be/8Fzm8HVzge0

JamesFague
19th February 2013, 10:21 AM
My favourite song is from the movie Nallathoru Kudumbam and the song is Sindhu Nadhi Karaioram.
The song is a melodious one and NT looks smart and handsome in this song. I do not have the
facility to upload the song and I can only share.

vasudevan31355
19th February 2013, 11:05 AM
வாசுதேவன் சார்

இதோ உங்கள் உள்ளம் கவர்ந்த பாட்டு


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LUPOjuYD_hQ

adiram
19th February 2013, 11:46 AM
Two days back saw En Magan in a t.v.channel.

Good movie with excellent secnes for both sentiments and action. Fight scenes are very very fine.

First stunt to save rojaramani from rowdies.
secnd one with Balaji in hotel room that also to save rojaramani.
third one both NTs fighting with gang allakkais, after 'chon pappadi' song.
fouth one silambu stunt in savukku thoppu
and the final climax stunt with Balaji and group
all are very enjoyable.

But the wig style of 'adopted son NT' is horrible and not able to digest. when Balaji and Manohar are coming with nice wig (may be Manohar's is original with attached kirudha) why they choose such a worst wig for NT for that role. It spoils his look much, giving a dull face particularly in 'ponnukkenna azhagu' song.

In 'Chon pappadi' song costumes of both NTs are artificial, gives a feeling of watching a hindi film, that much north Indian look and his actions for the song also much over.

V.S.Raghavan's style of talking is very very ackward. He is not talking but just shouting.

It would be more better, if young NT was shown in simple dress at old NT's funeral. Stylish yellow dress is mismatch for that scene.

The colony of Ramaiah thevar (old NT) and the Krishnan temple in the centre also gives north indian feel.

All those minus points are because of Director C.V.Rajendran.

Songs by MSV like ponnukkenna azhagu, sollathe sollathe, chon pappadi are just average, except top rated 'neengal athanai perum' in two times.

Apart from minus, En Magan is a good entertainer with action packed.

JamesFague
19th February 2013, 11:53 AM
Mr Vasudevan Sir,

Thank you very much. You can also upload the song from Imayam Gangai Yamunai and
the wonderful walk of our NT simply superb. Kanna Kan Kodi Vendum.

abkhlabhi
19th February 2013, 12:11 PM
எங்கேயோ படித்தது

"எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் குணமாகி நலமுடன் திரும்பினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை வரவைழைத்து மரியாதை செய்தார்.
அந்த நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு தமிழ் திரைப்படம் ஒன்றை திரையிட்டு காட்ட விரும்பினார்.
அவர் தேர்வு செய்த திரைப்படம் என்ன தெரியுமா?

‘தில்லானா மோகனாம்பாள்’

ஆச்சரியப்பட்ட அனைவருக்கும்... அவர் சொன்ன விளக்கம்...

“ எனது படங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தராது.
அவைகள் அனைத்துமே
ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம்.
‘தம்பியின் தில்லானா மோகனாம்பாள்’...அவர்கள் ஹாலிவுட்டில் பார்த்திராத அனுபவத்தை தரும்.
அது மட்டுமல்ல...தம்பியைப்போல் நடிப்பதற்க்கு ஹாலிவுட்டில் எவனும் இல்லை என்பதையும் காட்ட விரும்புகிறேன்.” என்றார்.

vasudevan31355
19th February 2013, 12:27 PM
டியர் ஆதிராம் சார்,

"என் மகன்" படத்தின் நிறைகுறைகளை அழகாகவும், அற்புதமாகவும் உள்ளது உள்ளபடி கூறியிருக்கிறீர்கள். நடிகர் திலகத்திற்கு இந்தப் படத்தில் விக் ஒரு பெரும் குறை தான். ஆனால் இறுதியில் வரும் சவுக்குத் தோப்பு சண்டைக்காட்சியில் சிலம்பம் சண்டையில் கைதேர்ந்த சிலம்பாட்டக்காரரைப் போல சித்து வேலைகள் செய்திருப்பார். என்ன ஒரு குறை! இன்னும் சற்று நேரம் அந்த சிலம்பக் காட்சியை நீட்டித்திருக்கலாம். நம் தலைவர் எதை வேண்டுமானாலும் சிறப்பாகச் செய்வார். கைகளில் படு லாவகமாக அவர் சிலம்பம் சுழற்றுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சுருக்கமான ஆனால் சுகமான ஆய்வைத் தந்ததற்கு என் பாராட்டுக்கள். நன்றி!

உங்களுக்காக இதோ "என் மகன்"

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000003.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000004.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000005.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000009.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000008.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/EnMagan000000006.jpg
http://ttsnapshot.com/out.php/i16988_vlcsnap-81882.pnghttp://padamhosting.com/out.php/i51379_vlcsnap780938.png

abkhlabhi
19th February 2013, 12:31 PM
புலியை விழ்த்திய சிங்கம்

http://twitpic.com/aa0yga

JamesFague
19th February 2013, 12:32 PM
En Maganukkirku antha oru song Pothum. "Neengal Athanai Perum ".
The song cannot be heard in the theatre because of the meaning in
it and the style of our NT.

abkhlabhi
19th February 2013, 12:35 PM
http://eluthu.com/kavithai/70237.html

vasudevan31355
19th February 2013, 12:37 PM
பாலா சார்,

சற்று இடைவெளிக்குப் பின் வரும் தங்கள் மீள்வருகைக்கு நன்றி! நடிகர் திலகத்தின்பால் எம்ஜியார் அவர்கள் கொண்டிருந்த அன்பை அழகாக வெளிப்படுத்தும் பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! எல்லா ஹப்பர்களும் திரிக்கு வர ஆரம்பித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. விடாமல் அனைவரும் தொடர வேண்டும் என்பதே நம் எல்லோருடைய ஆசையும், விருப்பமும். விடாமல் தங்கள் பதிவுகளைத் தாருங்கள். நன்றி!

vasudevan31355
19th February 2013, 12:39 PM
புலியை விழ்த்திய சிங்கம்

http://d3j5vwomefv46c.cloudfront.net/photos/large/621502570.jpg?key=450419&Expires=1361258648&Key-Pair-Id=APKAIYVGSUJFNRFZBBTA&Signature=NVK0~M~FymI9DUb~dtcpiqBsVkmK71OSI77pErq-Yx8xGdvdsJN3LlEASY~J4dC69ZPnJoSDxigOh0DNfFyOZwcjWL i3A23iwJ0wGqf4t8lB1DZDy1MFTMYAZzTpee5fpIO0E1fFEnZ2 qZTA9QAkXleqQiX8UhpCEK01znpfOhc_

Excellent Bala sir. Thanks for the uploader.

vasudevan31355
19th February 2013, 12:43 PM
அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன். அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்...


http://www.youtube.com/watch?v=QoJ__lFYLGY&feature=player_detailpage

vasudevan31355
19th February 2013, 12:50 PM
Ramaiyah devar

http://ttsnapshot.com/out.php/i16981_vlcsnap-90477.png

sankara1970
19th February 2013, 01:10 PM
http://www.jazznotesband.com/clip%20art/drums15.gif

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி. நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான கருடா சௌக்கியமா படத்தை பார்த்திராத பல நண்பர்களுக்காக இதோ இணையத்திலேயே இனிய வாய்ப்பு. முழுப்படமும் கீழே யூட்யூப் இணைய தளத்தின் உபயத்தால் காணக் கிடைக்கிறது. இதற்காக யூட்யூப் மற்றும் தரவேற்றிய நிறுவனத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.

இன்று வரை இப்படத்தின் நெடுந்தகடு தமிழகத்தில் வெளியாகவில்லை என எண்ணுகிறேன்.


http://youtu.be/kKA_-j-UaG8

enna thairyam antha nadigarukku, nam kadavul mun kal mel kal pottu utkarnthirukar-(mohanamana nadigara?)

sankara1970
19th February 2013, 01:16 PM
In Sivandha Mann Two Connery/Bond movie scenes were adopted.The helicopter chase where like Connery our NT has taken risk of using no stunt doubles (energetic NT moves like Connery's Bond swiftly when the copter comes over his head) was from the 1963 Bond Movie 'From Russis With Love'. Another scene was the flight fight with Thengai Seenivasan, was adopted from the 1963 Bond Movie 'Goldfinger' again Connery with the villain in the climax. Even NT makes a walk in the climax of Deiva Magan in a James Bond tuxedo with guns in hand, replicating the gun barrel sequence of Connery Bond films. NT in his Pudiya Paravai had also admirably followed Sean Connery's style of drinking in the Bond Introduction scene of Dr.No. In many movies the Bond dress fitted our NT as glove in hand, particularly Thangasurangam and Raja. In this world almost all actors have tried Bond mannerisms but only few were so close to Connery's screen presence as Bond. NT with his acting prowess has polished the desi version of Bond infused with sentiments that are non-Bond pattern. Since Makkal Kalaignar Jai Shankar used to play light roles only without much sentiments he was at that time titles as the Thennagaththu James Bond! But NT tried to give a polish to Bond as a real life spy than a larger than life hero. In Thangasurangam and Raja NT's dresses were very impressive for his lean and fitting body at that time like a Bond.

thanks Sivajisenthi for nice write up-again as Murali Sir had sometime mentioned in old posts, similar english type dress was seen in Annan Oru Koil when he hides-runs from police, (similar to DeivaMagan climax) very attractive and suitable for Nadigar Thilagam.

abkhlabhi
19th February 2013, 01:25 PM
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

abkhlabhi
19th February 2013, 01:25 PM
”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”

இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.

கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!

abkhlabhi
19th February 2013, 01:27 PM
வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

abkhlabhi
19th February 2013, 01:32 PM
நீ சரித்திரமல்ல...
பல சரித்திரங்களுக்கு
உயிர் கொடுத்த சகாப்தம் ....

RAGHAVENDRA
19th February 2013, 02:25 PM
டியர் ஆதிராம் சார்,
என் மகன் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு ஒவ்வொரு அட்சரமும் அப்படியே ஒவ்வொரு ரசிகரின் மனதையும் பிரதிபலிக்கிறது. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
19th February 2013, 02:27 PM
டியர் வாசு சார்,
என் மகன் ஒரு மினி டிரைலரையே காட்டி விட்டீர்கள். பாராட்டுக்கள் சார். ஸ்டில் ஒவ்வொன்றும் பிரமாதம்.

RAGHAVENDRA
19th February 2013, 02:29 PM
டியர் பாலா சார்
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் புதிய தகவல்களைத் தருகி்றன. பாராட்டுக்கள். தங்களுக்காக இதோ பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் நடிகர் திலகம் தூள் கிளப்பும் புனர் ஜென்மப் பாடல் ...


http://www.youtube.com/watch?v=PtMhC0h_da0

adiram
19th February 2013, 02:44 PM
Mr. Neyveli Vasudevan sir,

Thanks for your response for my En Magan post. Even I have pointed out somany minus points in that movie, you have accepted them.

Thanks for your nice photos and song video of en magan. I like the diologue in many places, especially in two scenes...

Raja to Ramaiah thevar, "ayya, ennaip poruththavarai indha naattula yaarudaiya kai suththamaa irukko avangathaan unmaiyaana thalaivar" (back to Raja there is thalaivar Kamaraj photo)

another scene, when VSR shake hands with NT (Raja) in Major's function, Balaji to VSR "Daddy, paththiram. kai kulukkompothe rendu viralai eduththiduvaan"
Raja's reply to Balaji "viral enna piramaadham, nee kai koduththuppaaru, un kaiyaiye eduththuduren".

vasudevan31355
19th February 2013, 03:03 PM
Mr. Neyveli Vasudevan sir,

I like the diologue in many places, especially in two scenes...

Raja to Ramaiah thevar, "ayya, ennaip poruththavarai indha naattula yaarudaiya kai suththamaa irukko avangathaan unmaiyaana thalaivar" (back to Raja there is thalaivar Kamaraj photo)

another scene, when VSR shake hands with NT (Raja) in Major's function, Balaji to VSR "Daddy, paththiram. kai kulukkompothe rendu viralai eduththiduvaan"
Raja's reply to Balaji "viral enna piramaadham, nee kai koduththuppaaru, un kaiyaiye eduththuduren".

superb.

KCSHEKAR
19th February 2013, 05:24 PM
Dear Adiram sir,

Your post about En Magan is nice

KCSHEKAR
19th February 2013, 05:27 PM
Dear Bala sir,

Your post about En Magan & links given by you are good

KCSHEKAR
19th February 2013, 05:30 PM
டியர் வாசு சார்,

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன். அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்... - அருமையான, அர்த்தமுள்ள பாடல் இணைப்பிற்கு நன்றி.

KCSHEKAR
19th February 2013, 05:32 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் நடிகர் திலகம் தூள் கிளப்பும் புனர் ஜென்மப் பாடல் - அருமை.

adiram
19th February 2013, 06:16 PM
Mr. Raghavendra sir posted a photo of the black stone laid in Shanti theatre by a fans association, with film names and details which NT acted in his film career.

They mentioned 'H' for the films which ran more than 100 days, and 'S' for the movies which met silver. thats ok.

when going through the list in the stone, I found some mistakes, some of them are...

Ooty varai uravu had left blank without mentioning 'H'. (It ran 100 days in four cities and Mr. Pammalar already published the 100 days ad in part-9)

Pattikkada Pattanama had mentioned as 'H' which successfully ran Silver Jubilee (that ad also pulished here by Mr.Pammalar)

whether the mistakes already already noted or not, I dont know.

Subramaniam Ramajayam
19th February 2013, 09:38 PM
Thanks bala sir for reminding one of the finest songs of sixties Punar jenmam sung PBS. the reasons for the failure of the movie still remains a big question. NT PADMINI SRIDHAR VINCENT combinationwhat else you want no reasons for the failure. good picure totally.

RAGHAVENDRA
19th February 2013, 10:46 PM
any guess ? pls try

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/whatsthis_zpsfe43ba4c.jpg

parthasarathy
20th February 2013, 09:43 AM
any guess ? pls try

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/whatsthis_zpsfe43ba4c.jpg

Dear Mr. Raghavendiran,

It's from "Naan Petra Selvam". There will be a drama in the film where the confrontation between Lord Siva and Poet and Nakkirar will take place and both the roles were enacted by NT. The movie was written by APN and also co-produced by him. Later, he fine tuned it and re-shot again in "Thiruvilaiyaadal". You and most of the Fans will be aware. For new generation, this will be a news.

Regards,

R. Parthasarathy

ScottAlise
20th February 2013, 10:03 AM
I bought Gurudatchanai in Moser Bear 3 in 1 last year but watched only Dr. Siva and Irumalargal . But inspired by other veterans like Ragavenderan, Vasudevan , Pammalar and others, I intended to watch lesser known movies of NT

Gurudatchanai is not exactly well-known among NT’s films. This, despite It releasing just after Thillana Mohanambal with same tteam like AP Nagarajan as director, Padmini , , Balaiyah, Sarangabani (the old actor, TR Ramachandran, Manorama, Balaji, Thangavelu ,Senthamarai, Major Sudararajan, Ramaprabha, MN Nambiyar etc.
KV Mahadevan as composer and co-stars like Jayalalitha, (Padmini and JJ in one film), and character actors like

In my opinion, this is a very beautiful film. NT plays a Muradan illiterate, whose attributes are recognised and appreciated by very few. His rough approach is frown upon by what is made up of mostly ungrateful villagers.Manorama, Thangavelu, Sarangabani are NT friends from different religion living in harmony- Unity in Diversity, friends of NT

NT saves JJ in a fight and as usual JJ starts loving NT which irks many especially Ramaprabha, TR Ramachandran who are NT relatives & detractors. JJ is chased out by her dad. Senthamarai. NT finds her in his own house one day, and is not able to send her off. Though under his roof, he behaves like a gentleman.


Then, one day, a teacher comes to the village ( Padmini), along with her father (Major). NT helps them and falls in the good books of Major & Padmini.
Ramaprabha is also a school teacher, though teacher by profession both Padmini & Ramaprabha are contrasting personalities

NT later sees the value of education and after a series of incident manages to convince Padmini to teach him to read and write. Of course, the villagers helmed by Ramaprabha, TR Ramachandran, MN Nambiyar cooks stories about NT & Padmini having a affair whereas it is only a Student teacher relationship.

Balaji is the fiancée for Padmini, Sahasranamam is education officer who is also a future father in law for Padmini.

What next must be watched in silver screen




NT's performance is flawless. His yearning for education looks and feels real.He dons only single costume of a baniyan , Veshti and a belt . He resembles a typical villager. The scenes where he helps Padmini are so real. He even falls at her feet when she offers to teach him ( No other hero would do it). Character , Devotion to work in a single word is the answer. Padmini is beautiful and perfect as a virtuous teacher. Jayalalitha is cute and unlike what you expect, plays rather and understanding lover, though her role is extended appearance. The rest of the cast including Thangavelu as Bai showing bioscope is my favorite .
It was nice of AP Nagarajan to make a deviation from his usual Mythological film

Don’t know the reason of this great movie not getting required success

ScottAlise
20th February 2013, 10:26 AM
Murali Sir,

Your trip down memory lane about Thyagam was superb. If Iam not wrong you have already posted about NT role in politics in previous thread, also about Annan oru Kovil

Your articles are nice keep it up sir

parthasarathy
20th February 2013, 10:28 AM
I bought Gurudatchanai in Moser Bear 3 in 1 last year but watched only Dr. Siva and Irumalargal . But inspired by other veterans like Ragavenderan, Vasudevan , Pammalar and others, I intended to watch lesser known movies of NT

Gurudatchanai is not exactly well-known among NT’s films. This, despite It releasing just after Thillana Mohanambal with same tteam like AP Nagarajan as director, Padmini , , Balaiyah, Sarangabani (the old actor, TR Ramachandran, Manorama, Balaji, Thangavelu ,Senthamarai, Major Sudararajan, Ramaprabha, MN Nambiyar etc.
KV Mahadevan as composer and co-stars like Jayalalitha, (Padmini and JJ in one film), and character actors like

Don’t know the reason of this great movie not getting required success

Dear Mr. Ragulram,

Nice posting about "Gurudhatshanai". Though almost entire Team of Thillana Moganambal is repeated here, the music is not by KVM but; by Pugazhenthi, who was long time Associate of KVM. This goes to show how NT gave opportunities to aspiring Artistes.

In my opinion, the main reasons for the debacle of this movie is screenplay and too many movies in one year. In fact six of NT Movies were released in 1969 in the first 8 months, competing with one another.

Regards,

R. Parthasarathy

vasudevan31355
20th February 2013, 10:41 AM
Ragul,

you taken the rare movie 'guruthatchanai' and your analysis about the film is well. I appreciate you. pl.continue.

parthasarathy
20th February 2013, 10:42 AM
சாரதி,

எல்லோரும் கொண்டாடுவோம் மற்றும் எங்கே நிம்மதி பாடல்களை பற்றிய பதிவைப் படித்தேன். சுருக்கமாக் சொல்ல வேண்டும் என்றால் பிரமாதம். அதைப் பற்றிய கூடுதல் அலசல் செய்ய வேண்டும்.

அன்புடன்

Dear Mr. Murali,

Thanks for your appreciation. I wrote the analysis of "Engae Nimmadhi" before I saw yours in "Padalgal Palavidham" - written almost 7 years back. The flow and the passion with which you wrote the article is remarkable. The various events leading to this song were written with lot of statistics in your characteristic touches and way of writing.

Even though I cannot match you in terms of flow and statistics, I attempted and is trying to attempt this series differently, from my angle. I concentrate only on NT's acting and touches/nuances.

Your write-up on "Thyagam release events" as usual, had its passion of "Murali" stamped! Great. It's not only about the passion but also the enthusiasm and ownership when it comes to sharing of NT and his films that makes it more interesting.

Thanks once again.

Regards,

R. Parthasarathy

vasudevan31355
20th February 2013, 11:03 AM
நவராத்திரியின் நவரசங்கள்.

ஆவண நிழற்படங்கள்

அற்புதம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/h.jpg

பயம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a-1.jpg

கருணை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/c-2.jpg

கோபம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/g.jpg

சாந்தம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e.jpg

அருவெறுப்பு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b-1.jpg

சிங்காரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/i.jpg

வீரம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/f-3.jpg

ஆனந்தம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d-2.jpg

vasudevan31355
20th February 2013, 11:07 AM
'நவராத்திரி' ஆனந்தவிகடன் விமர்சனம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/n1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/n2.jpg

groucho070
20th February 2013, 11:22 AM
Gurudatchanai is not exactly well-known among NT’s films. This, despite It releasing just after Thillana Mohanambal with same tteam like AP Nagarajan as director, Padmini , , Balaiyah, Sarangabani (the old actor, TR Ramachandran, Manorama, Balaji, Thangavelu ,Senthamarai, Major Sudararajan, Ramaprabha, MN Nambiyar etc.
KV Mahadevan as composer and co-stars like Jayalalitha, (Padmini and JJ in one film), and character actors like

Thank you for bringing up this film. I had always wanted to write a detailed review of this very underrated movie. Never got the time. Seriously, an overlooked film, especially on the value of education (Shades of Saraswathy Sabatham, Mr. APN?). NT is flawless as was the rest of the cast. While we venture to venerate the likes of Karnan and Thiruvilayadal, which are the staples of NT defenders, we should also remind those who don't know about these small films where not only NT's generosity shined brilliantly, but had great story and simple approach on the message about peaceful mankind existence (the friendship you highlighted). Thank you, sir.

sankara1970
20th February 2013, 11:43 AM
superb.

puch dialogue!

RAGHAVENDRA
20th February 2013, 11:46 AM
டியர் சாரதி,
தாங்கள் கூறியது சரியே. நடிகர் திலகத்தின் திரைப்பட்டியல் திரியில் அடுத்த பதிவுகளில் இடம் பெறப் போகும் நான் பெற்ற செல்வத்தைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமாகவே இப்படம் இங்கு இடம் பெற்றது. தங்கள் பாராட்டுகளுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்

vasudevan31355
20th February 2013, 11:49 AM
'சதாரம்' திருடன் நாடகம்(சிறப்புப் பதிவு)

படம்: 'கள்வனின் காதலி'

'கள்வனின் காதலி' காவியத்தில் வரும் 'சதாரம்' என்ற அற்புதமான தெற்கத்திக் கள்ளன் கூத்து நாடகம். கள்வனாக நம் உள்ளம் கவர்ந்த கள்வர் நடிகர் திலகமும், ஆண் வேடம் தரித்து வரும் இளவரசியாக டி ஆர். ராமச்சந்திரனும் செய்யும் அட்டகாசம். அதுவும் நம்மவர் போடும் குத்தாட்டம் இருக்கிறதே! கைகளும், கால்களும் சும்மா பிச்சு உதறுகின்றன. ஒரு மனிதர் இப்படியெல்லாம் ஆட முடியுமா! இப்படியெல்லாம் நடிக்க முடியுமா! மூக்கின் மேல் விரலை வைத்துத்தான் ஆக வேண்டும். பார்ப்பவர்கள் வாயடைத்துத்தான் போக வேண்டும். அசல் கூ(கு)த்தாட்டக்காரன் கெட்டான் போங்கள்... ஆட்டமென்றால் ஆட்டம்... அப்படி ஒரு ஆட்டம். ஆர்மோனியம் வாசிக்கும் ஆள் அருகில் சென்று நின்று செய்யும் அட்டகாசம் அதகளம். ஒரு நிமிடம் கூட சும்மா நிற்காமல் கடினமான, வேகமான ஸ்டெப்களோடு கூடிய பிரமிக்க வைக்கும் பாவங்களுடன் நடிகர் திலகம் சக்கை போடு போடும் நாடகம். நாடகப் பயிற்சி அப்படி ஒரு திறமையை அவருக்குள் வளர்த்து வைத்திருக்கிறது. M.S.முத்துகிருஷ்ணன் அவர்களின் ஆடல் பாடல் பயிற்சி அருமையிலும் அருமை.

அனைவரும் கண்டு மகிழ

முதன் முறையாக 'சதாரம்' திருடன் நாடகம் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=STeAHQyK1Kw

RAGHAVENDRA
20th February 2013, 11:49 AM
டியர் ராகுல் ராம்,
தாங்கள் கூறியது போல் என்னுடைய அபிமான படங்களில் ஒன்று குருதட்சணை. தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் படங்களே போட்டி போட்டதில் பாதிப்புக்குள்ளான படம் மட்டுமல்ல, கதாபாத்திரம் என்றாலும் நடிகர் திலகம் பத்மினியின் காலில் விழுவதாக இடம் பெற்ற காட்சி அப்போதைய ரசிகர்கள் நெஞ்சில் ஒரு மனவருத்தம் ஏற்படுத்தியதும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி மக்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவும், அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களோடு அல்லது நடிகர்களோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டு மக்கள் கண்ணோட்டம் அமைந்ததினாலும் இது ஒரு காரணியாக அமைந்தது. நடிகர் திலகம் இமேஜ் என்கிற வட்டத்துக்குள் சிக்காதவர். என்றாலும் ரசிகர்கள் சற்று ஜீரணிக்க மனமில்லாமல் புறக்கணித்ததும் ஒரு காரணம். பின்னாளில் இப்படம் நல்ல வசூலை எப்போதும் தந்து வருகிறது.

RAGHAVENDRA
20th February 2013, 11:51 AM
வாசு சார்
நவராத்திரி சுபராத்திரி நடிகர் திலகத்திற்காக தாங்கள் உழைப்பதோ பல ராத்திரி...
பாராட்டுக்கள் சார் அபூர்வ பொக்கிஷத்திற்காக...

RAGHAVENDRA
20th February 2013, 11:53 AM
டியர் ராகேஷ்,
இன்னும் பல அபூர்வ படங்கள் மிகச் சிறப்பானவை உள்ளன. அவற்றின் பட்டியலை தருகிறேன். இவையெல்லாம் நடிகர் திலகம் என்கிற மாமனிதரின் பன்முகத் திறமைக்கு சான்றாக விளங்குபவை. அனைத்துப் படங்களிலுமே அவருடைய நடிப்பு குறை சொல்ல முடியாது. அவற்றில் மிக சிரமப் பட்டு தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது ஒரு நல்ல காரியமே.
தொடரும் பதிவுகளில் அவற்றைக் காணலாம்.

groucho070
20th February 2013, 11:57 AM
Raghavendra-sir, bring them on! Enough with the films that the non-NT fans know, we need to spread awareness on these lovely little films that NT carried on his shoulder, or films that relied on his damned shoulder.

RAGHAVENDRA
20th February 2013, 12:33 PM
Thank you Rakesh. As Murali Sir often insisted, many films of NT which deserved very high reception but could not succeed, were mostly due to consistent releases without needed breaks. In fact the fan following NT had and has, is unparallelled till now. His fan base remains intact spreading across decades. This would have made all his films super duper hits which is evident from the roaring success of Karnan.

The success of Karnan has established a few facts - NT's prowess is beyond the period and is capable of attracting all generations, if his films were brought out to suit the new format of screening of films, it will have more reception than it originally got.

Coming to the point, let me bring the list in a chronological order starting from his debut. Of course this will include only a very rare but those which NT carries on his shoulders. Wherever possible I shall try to give a brief synopsis.

Of course, our Murali Sirs analyses / intro of films would be the guiding force for the readers

This series is christened as MUST WATCH.

I REQUEST FELLOW SENIOR FANS TO INCLUDE THEIR CHOICE HERE FOR RECOMMENDING TO THE NEXT GENERATION.

RAGHAVENDRA
20th February 2013, 12:44 PM
NADIGAR THILAGAM'S FILMS FOR NEW GENERATIONS - MUST WATCH

1. THIRUMBI PAAR

FILMOGRAPHY LINK FOR THIS FILM: http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1006622&viewfull=1#post1006622

THIRUMBI PAAR is a must watch film not only for a Sivaji Fan, but for any connoisseur of a good cinema. Without getting into any image base, Sivaji Ganesan donned a role of a womaniser. His frequent visits to girls or bringing any to his home, irks his sister and she perusades consistently to bring morality in him. How she encounters his brother's attitude forms the base.

There is no mannerism, no artificial ha ha ha ... no dishum dishum fights, but the anti-hero wrecks the wrath of the audience, where the success of Nadigar Thilagam lies. His body language, his looks, his attitude, every thing speak volumes and serve as a lesson to handle any character with full control.

A NOT TO BE MISSED FILM FOR A FILM BUFF.

adiram
20th February 2013, 01:33 PM
Same like other hubbers, I also prefer the discussions of many underrated movies of Shivaji.

I thank Mr.Raghulram for started discussions about Gurudhatchanai. Recently we discussed about Thangasurangam which was released in the same year and period 1969.

In the same period, another wonderful underrated movie is worthful for detailed discussions.

That is none other than "ANJAL PETTI 520" the different storyline which never picturised before and after.

RAGHAVENDRA
20th February 2013, 10:12 PM
RARE IMAGES அபூர்வ நிழற்படங்கள்

சென்னை சாந்தி திரையரங்கில் லௌஞ்சில் அந்தக் காலத்தில் தமிழ் நடிக நடிகையர் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும், பலருக்கு நினைவிருக்கும். தற்போதைய தலைமுறையினருக்கு அதைப் பற்றித் தெரிந்திருக்காது. அப்படி அதைப் பற்றி தெரியாதவர்க்கும் மற்றவர்க்கு ஒரு நினைவூட்டலாகவும் இதோ ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/AAShantiLounge0175_zps33fcdc1f.jpg

vasudevan31355
21st February 2013, 07:17 AM
Shanthi theater (old image)

http://www.thehindu.com/multimedia/dynamic/00358/18mpshanthi2_jpg_1_358968f.jpg

vasudevan31355
21st February 2013, 07:44 AM
'அஞ்சல் பெட்டி 520'-திரைப்படத்தில் நடிகர் திலகமும், சரோஜாதேவியும் இணைந்து பேசிக்கொண்டிருக்கும் பின்னணியில் நமது சாந்தி தியேட்டரில் 'தங்கச்சுரங்கம்' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருப்பதையும், தலைவரின் அட்டகாசமான கட் அவுட் மற்றும் பேனர்களையும், பேனர்களுக்கு மாலைகள் அணிவித்திருப்பதையும் காணுங்கள். இப்படி பழைய நினைவுகளில் மூழ்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது!
http://s1087.beta.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_6VOB_000773815.jpg.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_6VOB_000794976.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_6VOB_000772896.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_6VOB_000794736.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_6VOB_000826895.jpg

vasudevan31355
21st February 2013, 08:52 AM
தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒரு வேண்டுகோள்.

நேற்று மதியம் 1.30-க்கு ராஜ் தொலைக்காட்சியில் மிக அபூர்வமாக நடிகர் திலகத்தின் 'தாய்' திரைப்படம் போட்டார்கள். சரி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு விளம்பரம். விளம்பரங்கள் பத்து நிமிடத்திற்கும் மேல் ஒளிபரப்பப்படுகின்றன. அதே நேரத்திற்கு படமும் கட். ஒரு படத்திற்கு முழுவதுமாக குறைந்த பட்சம் ஐந்து விளம்பர இடைவெளி வந்தால் மொத்தத்திற்கு ஐம்பது நிமிடம் படக் காட்சிகள் கட். எலி குதறி வைப்பது போல படத்தை சின்னபின்னாப் படுத்தி ஏதோ நாங்களும் படம் போட்டோம் என்ற கணக்கில் படத்தை ஒளி பரப்புகிறார்கள். காட்சி தொடர்புகள் கொஞ்சமும் இல்லை. அருமையான பாடல்கள் கட். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்கு படத்தைப் போட வேண்டும்?... அதற்கு போடாமலேயே இருந்து விடலாமே! இன்னும் ஒரு கூத்து... நேற்று தாய் படத்தை ராஜ் தொலைக்காட்சிக்காரர்கள் முடிவைப் போடாமலேயே முடித்து வேறு விட்டார்கள். கடைசி கிளைமாக்ஸ் காட்சியே போடாமல் படம் எப்ப முடிந்தது என்ற குழப்பத்தை வேறு கிளப்பி விட்டு விட்டார்கள். ஏண்டா பார்த்தோம் என்று ஆகி விட்டது. தலைவரின் ஒரு கண்ணசைவை விட்டு விட்டால் கூட மனம் துடிக்கும். இவர்கள் படம் போடும் லட்சணத்தில் தலைவர் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகமே வந்து விடுகிறது.

தயவு செய்து முடிந்தால் படத்தை முழுமையாக ஒளி பரப்புங்கள். இல்லையேல் மாமியார் மருமகளின் கரு கலைப்பது... மருமகள் விஷம் வைப்பது... இவள் அவள் கணவனுடன் ஓடிப்போவது... அவள் இவளை வஞ்சம் தீர்ப்பது, பாயாசத்தில் பாய்சன் வைப்பது... கள்ள உறவுகள் என்ற உங்கள் குடும்பப்பாங்கான அருமையான சீரியல்களையே ஒளி பரப்பி அனைவரயும் குஷிப்படுத்துங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்.

RAGHAVENDRA
21st February 2013, 09:04 AM
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் கூறியுள்ளது 100க்கு 100 சதம் சரி. இந்த சேனல்கள் பேசாமல் நடிகர் திலகத்தின் படங்களைப் போடாமல் இருந்தாலே போதும். இந்த மாதிரி கடித்து குதறி படத்தை சிதைப்பதற்கு அதுவே மேல். காமராஜரைப் பற்றிக் கூறும் படத்திற்கே இந்த கதி என்றால் ...

தேசியவாதிகள் என கூறிக் கொள்வோர் சிந்திக்கட்டும்...

RAGHAVENDRA
21st February 2013, 09:05 AM
வாசு சார்,
தங்க சுரங்கம் படத்தின் பேனர் இடம் பெற்ற அஞ்சல் பெட்டி 520 காட்சி பலருக்கு தியேட்டர்களில் அந்தக் காலத்திலேயே ரசிகர்கள் எந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படங்களுக்கு அளப்பரை செய்துள்ளார்கள் என்பதை எடுத்துக் கூறுவது போல் உள்ளது.

adiram
21st February 2013, 11:54 AM
Mr.Raghavendar & Mr. Vasudevan,

everyone know about the 'oravanjanai' of Raj tv always for Shivaji movies.

once they announced 'varum sanikkizhamai kaalai 10 manikku kamalahaasan, revathi, gowthami, sivaji ganesan nadiththa devar magan'. what an insult for NT..!.

Mr.Vasudevan sir,

Anjalpetti 520 stills are superb and clear. It is so happy to see the old shanti theatre and thanga surangam banners. The cut out is from sandhana kudathukkulle song, Shivaji and Bhrathi hanging in the bucket. NT with fur cap and rewalver in right hand is the famous pose for TS.

thanks for a neat presentation.

joe
21st February 2013, 12:50 PM
எல்லாம் இருக்கட்டும் ..திருவிளையாடல் படம் அவசர அவசரமாக வெளியிடப்பட்டு முறையான வசூலைப் பெறாமல் போனதே ..பின்னர் அந்த பிரச்சனைகள் முடிந்ததா ? எப்போது கர்ணன் போல வெளியீடு காணப்போகிறது ?

ஒரு இணையப் பிரகச்பதி இவ்வாறு சொல்லியிருந்தார்

கர்ணன பார்த்து திருவிளையாடல் ரிலீஸ் பண்ணாங்க.. செம ஊத்தல். இனிமேல அந்த ட்ரெண்ட வேலைக்காவாதுன்னு தோணுது

இது போன்றவர்களுக்கு பதில் சொல்லவே கேட்கிறேன். யாருக்காவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் . நன்றி

adiram
21st February 2013, 01:09 PM
Mr. Joe,

Very soon Vasandha Maaligai will give a fitting reply for that 'prahaspathy' and like minded people.

Before Karnan release also they were balabbering like this, then karnan poured a bottle of gum in their mouth.

because of the Thiruvilaiyaadal release kularupadi by distributor, they got some oats for their mouth.

they will shut after March 8.

shilpa
21st February 2013, 01:18 PM
Nadigar thilagam sivaji ganesan acting is waste.not worth watching.all his digital re-releases are utter flop.

abkhlabhi
21st February 2013, 01:54 PM
Nadigar thilagam sivaji ganesan acting is waste.not worth watching.all his digital re-releases are utter flop.


வேஸ்ட் என்றால் , ஏன் பார்க்கவேண்டும் ? உங்களை யாரும் கையை காளை கட்டி போட்டு பார்க்க சொல்லவில்லையே ? பாராட்ட மனம் இல்லையென்றாலும் , இழிவாக எழுதவேண்டாமே. குட்டையை குழப்ப வேண்டாம்.

இவர்களுக்கு எல்லாம் பதில் எழுதி நம்மை நாமே கேவலபடுத்தி கொள்ளவேண்டாம்

joe
21st February 2013, 02:07 PM
Nadigar thilagam sivaji ganesan acting is waste.not worth watching.all his digital re-releases are utter flop.

இதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்து கூட இருந்து அழியாமல் பார்த்துக்கணும்.

groucho070
21st February 2013, 03:10 PM
Joe :lol2: you sarcastic brother you!!!!:lol:

vasudevan31355
21st February 2013, 04:20 PM
அஞ்சல் பெட்டி 520

http://i4.ytimg.com/vi/3jHCj62cMWg/mqdefault.jpg

http://www.hindu.com/thehindu/fr/2002/07/19/images/2002071900990602.jpg

ஸ்ஸ்....யப்பா... வெயில் ஆரம்பிச்சுடுச்சா... தாங்க முடியல்ல... கொஞ்சம் தண்ணி குடு....

என்னடா ஒரே டயர்டா வர்ற?

இல்லப்பா...ஆபீஸ்ல ஒரே வேலை. இந்த ஜெனரல் மானேஜேர் ரொம்பத்தான் வேலை வாங்குறாரு...

பொழப்பாச்சேப்பா... பொறுத்துத்தான் ஆகணும்...

அது சரி! உனக்கென்னப்பா ... ஜாலி கேஸ். சினிமா, டிராமான்னு உம்பொழுது ஓடுது... வாத்தியார் வேலை... ஸ்கூல் விட்டா உனக்கு வேற வேலைவெட்டி இல்ல... என்னை மாதிரியா? பிரமோஷனும் கெடைக்க மாட்டேங்குது....ம்...நானும் மாஞ்சி மாஞ்சிதான் வேலை செய்யுறேன்...எப்பதான் கெடைக்குமோ?...

என்னடா!... அஞ்சல் பெட்டி 520 படத்தில சிவாஜி அலுத்துக்குற மாதிரி அலுத்துக்குற?

அதானே பார்த்தேன்... என்னடா இன்னும் எலி எட்டு முழ வேட்டி கட்டலேயேன்னு? சிவாஜியைப் பத்தி பேசலைன்னா உனக்கு தூக்கம் வராதே!

என்னடா பண்றது?...ரத்தத்தில ஊறிப் போச்சே! டெய்லி அவரு படம் பாக்கலேன்னா எனக்குத் தூக்கம் வராதே!

சரி! சரி! என்னவோ அஞ்சல் பெட்டி 520... அது இதுன்னு சொன்னியே...சிவாஜி நடிச்ச படம்தானே அது? லேசா ஞாபகம் இருக்கு...

ஆமாம்... ஆமாம்... நேத்து மறுபடியும் ஒருதடவ DVD யில போட்டுப் பார்த்தேன்...சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப் போச்சு...

அப்படியா... வழக்கமா சிவாஜியோட படம் சோகமாத்தானே இருக்கும்?... நீ என்னவோ புதுசா சொல்ற!...

ரொம்பப் பேரு அப்படிதான் நெனச்சுகிட்டு இருக்கீங்க... அப்படியெல்லாம் இல்ல... நல்ல காமெடிப் படங்கள்லயும் அவர் நடிச்சிருக்கார்.

எனக்குத் தெரிஞ்சு ஒன்னு ரெண்டு படம் அப்படி இருந்திருக்கு... ம்... கலாட்டா கல்யாணம் மட்டும் பார்த்திருக்கேன். செம காமெடி... வேற என்னென்ன சிவாஜி படம் காமெடியா இருக்கும்?

மடையா... பலே பாண்டியாவை மறந்துட்டியே?

அட... ஆமாமில்ல...சூப்பராசே அது...அப்புறம்?

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ராஜா ராணி, கோட்டீஸ்வரன், சபாஷ் மீனா, மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, அன்பே ஆருயிரே, எமனுக்கு எமன்...இப்படி நிறைய இருக்கு.... அதுல ஒண்ணுதான் அஞ்சல் பெட்டி 520..

சரி! டிவிடி கொடு... நைட்டு வீட்டுல பார்த்துட்டு நாளைக்கு கொடுத்திடறேன்.

ஃப்ரீயாக் கொடுத்தா ஃபெனாயிலக் கூட குடிச்சிடுவியே! ஓசி கிராக்கி...

கிண்டலடிக்காதே! உங்க ஆளு படம்ப்பா...பார்த்தா உனக்குத்தானே பெருமை!

இப்படியே பேசிக் கவுத்துடு... இப்படி ஓசியிலே வாங்கிப் பார்த்தா DVD எப்படி சேல்ஸ் ஆகும்?... இன்னைக்குத் தரேன்... இனிமேலாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு....

(அடுத்த நாள் மாலை)

வாடா... வாடா...என்ன ஆச்சர்யமா இருக்கு!...எப்பவும் மூஞ்ச தொங்கப் போட்டுகிட்டு வருவே! இன்னைக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு!...

பின்ன என்னப்பா... நீ பாட்டுக்கு அஞ்சல் பெட்டி 520 DVD யைக் கொடுத்து பாக்கச் சொல்லிட்டே...

(இடைமறித்து)

எலேய்... நீ DVD ஐ வாங்கிட்டுப் போயிட்டு நான் கொடுத்தேன்னு சொல்லுற....

சரி... சரி.. விடு... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. நைட்டு போட்டுப் பார்த்தேனா...வயிறு புண்ணாப் போச்சுப்பா...சிரிப்பை இன்னும் அடக்க முடியல்ல..
ஆபீஸ்ல வேலை செய்யும் போது கூட உங்க ஆளு, நாகேஷ், தேங்காய் அடிக்கிற கூத்தை நெனச்சு நெனச்சு ...யப்பா... முடியல்ல...வயிறு நோகுது...

இப்ப என்ன சொல்ற... எங்க ஆளு காமெடியைப் பத்தி?

கேக்கணுமா! அவரு ஒரு மகா மெகா நடிகருப்பா... நீயெல்லாம் அவரு மேல ஏன் பைத்தியமா இருக்கேன்னு இப்பத்தான் புரியுது... மனுஷன் காமெடியில கலக்குறார்...

என்னைக்குமே எங்க ஆளுக்கு எங்க அத்தனை பேரு காலரையும் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்துதான் பழக்கம்... சரி படத்து கதை பிடிச்சிருக்கா?....

வித்தியாசமான கதைதாம்பா.. மேஜரோட கம்பெனியில பொறுப்பான பதவியிலே வேலை செய்யிறாரு உங்க ஆளு... போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்யிற சரோஜாதேவியோட லவ் வேற...மேஜர் ஆபீசுல வேலை செய்யிற ஜெனெரல் மேனஜர் திடீர்னு இறந்து போயிட்றதுனாலே அந்த GM போஸ்ட்ட மேஜர் தனக்குத் தான் தருவாருன்னு அபார நம்பிக்கை வச்சிருக்கார் சிவாஜி... மேஜரும் அந்தப் பதவி சிவாஜிக்குன்னுதான் தீர்மானம் பண்ணி வைக்கிறாரு... ஹீரோயினோட அப்பா தங்கவேலு ஒரு பணப் பைத்தியம்... தன் மகள் சிவாஜியைக் காதலிப்பதை முதல்ல ஒத்துக்குற அவர் சிவாஜியை விட அதிக சம்பளம் வாங்குற தன்னுடைய மருமகனான வில்லன் நம்பியாருக்கு சரோஜாதேவியை கல்யாணம் பண்ணிக் கொடுக்க மனசு மாறிடறாரு .... ஏன்னா சிவாஜியை விட நம்பியார் அதிக சம்பளம் வாங்குறாருன்னு. சிவாஜிக்கோ பிரமோஷன் கெடைச்சா நம்பியாரை விட கூட சம்பளம் கெடைக்கும்.. சிவாஜி ஆவலா காத்திருக்க அவரு எதிர்பார்த்த GM பதவி திடீர்னு அவருக்கு கெடைக்காம போயிடுது... ஏன் கிடைக்கலேன்னு
காரணமும் தெரியல்ல அவருக்கு...

ஆனா நடந்த விஷயமே வேற... தனக்கு வர வேண்டிய ஒரு கடன் பாக்கிக்காக மேஜர் GM பதவியை தன் கம்பெனியில வேலை செய்யிற ராமாதாசுக்கு தர்றதா ஒரு பொய்யச் சொல்லி, நைஸா டிரிக் பண்ணி, ராமதாஸ் அப்பாவிடம் தனக்கு வர வேண்டிய கடனை வசூல் செஞ்சிக்கிட்டு அப்புறமா GM பதவி ராமதாசுக்கு இல்ல... சிவாஜிக்குதான்னு சொல்லி கையை விரிச்சுடராரு

இது தெரியாத சிவாஜிக்கு மேஜர் மேல செம கோபம் வந்துடுது. மேஜர் இப்படி தன்னை பழிவாங்கிட்டாரேன்னு பயங்கரமா ஃபீல் பண்றாரு சிவாஜி... அவரு கோவத்துக்கு தூபம் போட்டு அவரை மேலும் உசுப்பேத்தி விட்டுடுறாங்க அவரு சிநேகிதங்க நாகேஷும், தேங்காய் சீனிவாசனும். திடுதிப்புன்னு கோபத்துல மேஜரை நல்லா கன்னா பின்னான்னு வசவு பாடி ஒரு லெட்டரை எழுதி அதை மேஜருக்கு போஸ்ட் வேறு பண்ணித் தொலைச்சிடறாங்க.... லெட்டரப் போஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா மேஜர் சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு...

எலேய்! என்கிட்டியே கதை உடுறியா?

அட இருப்பா... இன்ட்ரெஸ்டா கதை சொல்லிக்கிட்டு இருக்கேன் குறுக்க நீ வேற?.... இம்...எங்க விட்டேன்?... சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு மேஜரு . எப்படி இருக்கும் சிவாஜிக்கு! சும்மா பேயறஞ்சா மாதிரி ஆயிடுறாரு.. அப்பத்தான் அந்த ஐடியாவை சிவாஜிக்கு கொடுக்கிறாரு நாகேஷ்.. எப்படியாவது அந்த லெட்டரை மேஜர் கையில் கிடைக்காம செஞ்சுட்டா!? ...

அப்புறமென்ன... ஜிவ்வுன்னு சும்மா ராக்கெட் மாதிரி போகுது கதை... அந்த லெட்டரை எப்படியாவது கைப்பற்றனமுன்னு சிவாஜி குரூப் பல முயற்சிகள் செய்யுது.... ஆனா எல்லாத்துலேயும் தோல்விதான் கிடைக்குது... ஆனா நம்ம வயிற்றை புண்ணாக்குறதுல இந்த டீம் முழு வெற்றி அடையுது...

கடைசியில லெட்டர் மேஜர் கையிலேயும் கிடச்சுடுது....என்ன ஆகப் போகுதோ என்று நெஞ்சு திகில் படம் பார்ப்பதைப் போல டக்கு டக்குன்னு அடிச்சிக்க...
கடைசியில பார்த்தா.. அந்த லெட்டர்ல மேஜரை திட்டி எதுவுமே இல்ல... என்னடா இதுன்னு சிவாஜி முழிக்க லெட்டரை எழுதின தேங்காய் சிவாஜி, நாகேஷுக்குத் தெரியாமல் அந்த லெட்டரை மேஜரைத் திட்டாமல் நல்லவிதமாகவே மரியாதையுடன் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இறுதியில் எல்லாம் சுபமங்களமாக முடிய ஹீரோயினைக் கரம் பிடிக்கிறார் உங்க ஹீரோ...

சரிடா!... சரிடா!... நீ படம் பார்த்துட்டேன்னு ஒத்துக்கிறேன். கதையில ஒரு சிலதை விட்டுட்டியே!

ஒ.... வில்லன் நம்பியார் கதையை விட்டதை சொல்றியா... அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதம் இல்ல .. விறுவிறுப்பு மசாலாவுக்காக நம்பியார் போலி பால் பவுடர் டின் தயாரிக்கும் வில்லனா வந்து, காதலிலும், தொழிலிலும் சிவாஜிக்குப் போட்டியா வந்து, தொல்லைகள் கொடுத்து வில்லத்தனங்கள் செய்து இறுதியில் சிவாஜியிடம் "டிஷ்யூம்... டிஷ்யூம்" வாங்கி கைதாகிறார். அவ்வளவே.

பரவாயில்லடா.. நீ கூட சுருக்கமா கதை சொல்லக் கத்துகிட்டியே!

பின்னே... நீ கூட நெட்டுல உங்க ஹப்போ திரியோ என்னவோ காட்டுவியே... அதுல வாசுதேவன்னு ஒருத்தர் சிவாஜியைப் பத்தி எழுதுவாருன்னு சொல்லுவியே அவுரு மாதிரி விலாவாரியா சொல்ல எனக்குத் தெரியாதுப்பா... ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்...

எலேய்! என்ன நக்கலா?... சரி எங்க ஆளு நடிப்பு எப்படி?

பைத்தியம்... கரும்பு இனிக்குமான்னு கேக்குற....கிளப்புறாருய்யா காமெடியில உங்க ஆளு... சும்மா மன்மதன் கணக்கா அழகுன்னா அழகு... சொந்த ஹேர் ஸ்டைலா அது?

ஆமாம்...எப்படி இருக்காரு பாத்தியா? நான் மட்டும் பொண்ணப் பொறந்திருந்தா அவரத்தான் கட்டி இருப்பேன். அழகன்டா...

சும்மா காலேஜ் படிக்கிற பையனாட்டம் சிக்குன்னு இருக்கிறார் உங்க ஆளு.... சரோஜாதேவியை ஏமாற்ற பொய் மூக்கை போட்டுக் கொண்டு கலாய்க்குறதிலேயும் சரி...மேஜர் மேல வைத்திருக்கிற மரியாதையிலேயும் சரி... GM போஸ்ட் கிடைக்கிலேன்னு சட்டுன்னு சாதா சராசரி மனுஷாளைப் போல கோபப்படுறதிலேயும் சரி... போஸ்ட் பண்ண லெட்டரை எடுக்க முடியாமல் தோல்வியடையும் போதும் சரி... மேஜர் நல்லவர் என்று தெரிந்து தான் செய்த தவறை நினைத்து வருந்தும் போதும் சரி...வில்லன் வலையில் சிக்கி இறுதியில் கோர்ட்டில் கலக்கும் போதும் சரி...கோர்ட் சீனுன்னாலே உங்க ஆளுதாம்ப்பா...ரொம்ப இயல்பா நகைச்சுவையா செஞ்சிருக்கார். ஆனா எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது அவரோட அழகும், இளமையும்...அது ஒன்னே போதும்...

உனக்கு சரோஜாதேவின்னா ரொம்பப் பிடிக்குமே.... இதில எப்படி?

நடிப்பு OK. ஆனா தோற்றத்தில கொஞ்சம் முற்றிப் போய் தெரியிறாங்க...உங்க ஆளுக்கு அக்கா மாதிரி இருக்காங்க... இருந்தாலும் பரவாயில்லை... சமாளிச்சுடறாங்க...

மத்தவங்களைப் பத்தி சொல்லேன்..

நாகேஷ், மனோரமா, தேங்காய், வி.கே.ஆர், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி, தங்கவேலு என்று ஒரே நகைச்சுவைப் பட்டாளம்... வெடிச் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை... அதுவும் நாகேஷ் டிரெயினில் லெட்டர் பார்சலை எடுக்க முடியாமல் விட்டுவிட்டு நிற்கும் சைக்கிளில் தன்னை மறந்து நான் மதுரைக்குப் போறேன் என்று பெடல் பண்ணுவது பக்கா சிரிப்பு. நம்பியார் வழக்கம் போல முறுக்குகிறார். மேஜர் அருமை. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன்... காலில்லாத போலீஸா ஒருத்தரு நம்ம ஊர்ல நைட்டுல சுத்துற கூர்க்கா கணக்கா வந்து துப்பறியிறாரே! அவரு யாருப்பா...

அவரா... அவரு பேரு முத்தையா... இந்தப் படத்தில்தான் அறிமுகம். இந்தப் படத்துல நடிச்சி பாப்புலர் ஆனதாலே அவருக்கு 'அஞ்சல் பெட்டி' முத்தையான்னே பேரு நெலைச்சிடுச்சி...

இதெல்லாம் விவரமா தெரிஞ்சி வச்சிருப்பியே! டைரக்டர் கூட புதுசோ?

ஆமாம்... டி என்.பாலு அப்படின்னு ஒருத்தர். டி.ஆர். ராமண்ணா தெரியுமில்லே... அவருகிட்ட அசிஸ்டென்டா இருந்தவரு...

உங்காளுக்கு ரொம்பத் துணிச்சல்தாம்பா... ஒரு புது இயக்குனர் படத்துல தைரியமா துணிஞ்சி நடிச்சிருக்காரே. அதுவும் காமெடி ரோல்ல..

ஏன் சிவாஜியே சொல்லியிருக்காரே ஒரு புது இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் கிடைச்சாருன்னு... உனக்கு ஒன்னு தெரியுமா... எங்காளுக்கு காமெடி படங்களில் நடிக்கிறது ரொம்பப் பிடிக்குமாம். அதனால்தான் கலாட்டா கல்யாணம் சுமதி என் சுந்தரி படங்களையும் தன் மகன் ராம்குமார் பெயரிலே எடுத்திருக்கார். மியூசிக் நல்லாயிருக்கில்லே?

யாரு நம்ம எம்.எஸ்.வி தானே?

நாசமாப் போச்சு... பழைய சிவாஜி படம்னா கண்ண மூடிக்கிட்டு எம்.எஸ்.வி ன்னு உளற வேண்டியது....R. கோவர்த்தனன் அப்படின்னு ஒருத்தர்தான் இப்படத்துக்கு இசையமைப்பாளர். எனக்கு டி .எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ரெண்டு பேரும் பாடிய 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' பாட்டு ரொம்பப் பிடிக்கும். உனக்கு...

எனக்கு சுசீலா அழகாகப் பாடியிருக்கும் "திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்" பிடிச்சிருக்கு...அப்புறம் இன்னொரு மேட்டர்.

தம்பி! நீ எங்க வரேன்னு புரியுது... நீ வழியறதைப் பார்த்தாலே புரியுதே...ஆதி மனிதன் பாட்டைப் பத்திதானே சொல்ல வர?

ஹி.ஹி...ஆமாம்... இந்த விஜயலலிதா டான்ஸ் கொஞ்சம் ஓவர்தாம்பா. இருந்தாலும் ரெண்டு தடவை பார்த்துட்டேன்பா..சும்மா ஈஸ்வரி பாடிக் கலக்குது சாமியோவ்.

நீ திருந்தவே மாட்டே! மேல போ...

ஒளிப்பதிவு சில இடங்கள்லே பளிச். சில இடங்கள்லே சொதப்புது... சில இடங்கள்லே குரலும் காட்சியும் மேச் ஆகல்லே... நம்பியார் காட்சிகள் இழுவையாத் தெரியுது. எது எப்படியோ...உங்காளுக்கு இது வித்தியாசமான படமா எனக்குப் படுது.

பணம், நான் சொல்லும் ரகசியம் படங்களில பேயாய் பணத்துக்கு தங்கவேலு அலைவாரே அதே ரோலை இதில் செஞ்சிருக்கார் பல வருஷங்களுக்கு அப்புறம்... முழுக்க முழுக்க காமெடி படம்கிறதனாலே சில தப்பையெல்லாம் மன்னிச்சுடலாம். மொத்தத்தில படம் எப்படின்னு சொல்லு...

உன்கிட்ட படம் சுமார்னு சொல்லக் கூட பயமாய் இருக்கே! உங்காளு படம்கிறதனாலே எதனாச்சும் சொன்னா என் பட்டையை உரிச்சுடுவியே!

என்ன செய்றது? சிவாஜின்னா உயிரு எனக்கு. அப்படியே பழகிப் போச்சு! சரி! சரியான விமர்சனத்தை சொல்லுடா....

எனக்குப் பிடிச்சிருக்குப்பா... மனம் விட்டு சிரிக்கலாம்...ரசிக்கலாம். ஆஹாவுமில்லை...ஓஹோவுமில்லை..மோசமுமில்லை.. காமெடிதான் பிரதானம்... நாள் முச்சூடும் உழைக்கிற எனக்கு பார்க்க ஜாலியா இருக்குப்பா... வேற என்ன படம் வச்சிருக்க? ஹ...வர்ர்ட்டா..

ம்...ஓசியில படம் பார்த்தா ஜாலியாத் தான் இருக்கும். DVD யைக் கொடு. நெட்டுல எங்க ஆளுங்க எல்லாரும் பார்க்கணும்...மொவனே போயிட்டு வா...அடுத்த படத்தையாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு.


http://www.youtube.com/watch?v=3jHCj62cMWg&feature=player_detailpage

adiram
21st February 2013, 05:01 PM
Mr. Vasudevan sir, Superb.

'Anjal petti 520' paththi discuss pannalaamnu naan sonnathume, all of a sudden you have posted a wonderful writing about the movie.

A entirely different type of analysis, with comedy punches. It reminds me the vikatan reviews of old movies in conversation method. But that would be very short. Yours is very detailed by touching all sides of the movie.

Thanks a lot for the video, by which somany non viwers will enjoy the hillarious comedy of NT and others.

what an excellent writing skill you have.

abkhlabhi
21st February 2013, 05:14 PM
Dear Mr.Vasu,

Superb writing. I have not seen this movie till date though I heard and read often. I think this is 2nd half. (downloaded immediately in my mobile - GK, UVU, SES already stored in my mobile) Ist half missing. Can you try to upload ?

thanks a lot.

RAGHAVENDRA
21st February 2013, 05:25 PM
வாசு சார், சூப்பர்.
முள்ளை முள்ளாலே எடுக்கணும்னு சொல்றதைப் போல, காமெடியை காமெடியை வெச்சே ரிவீட் அடிச்சிட்டீங்க.

தூள் கிளப்புங்க சார்...

eehaiupehazij
21st February 2013, 08:34 PM
we, the NT fans neither get shaken nor get stirred by such filthy comments on NT'S ACTING. time and again NT has been proving what he is upto even after he has left us. Karnan is the solid example, Ms,Shilpa. Kindly change your perception. NT remains immortal with us with his films being immortal while all other actors proved to be mortal with their films too succumbing to mortality. Can any one of their films can match the history created by Karnan in its rerun? We NT fans respect all other actors and their fans and we do not make such comedy comments. Till the world stops its rotation, NT's fame is unbeatable and his movies are going to create records again and again while your icon's movies will just find a place in its 'dubba' forever and none is going to come out!

ScottAlise
21st February 2013, 10:08 PM
Vasu sir Anjal petti 520 analysis is 2 good just like watching a movie superb

ScottAlise
21st February 2013, 10:09 PM
THANGASURANGAM

I have watched Thangasurangam many times in past 5 years but I decided to watch it again . It was a time when the world was mesmerized by Bond flicks helmed by Sean Cornery. Here in Tamil Cinema it was more popularized by South Indian James Bond Mr. Jai Shankar.
NT was slowly getting into action mode with a slew of movies like Sivantha Mann, Thirudan, En Thambi etc. Also Vaathiyar MGR was doing a James bond Flick with Mr. BR Panthalu “Ragasiya Police 115”
NT also came with Thangasurangam but a striking resemblance is both Ragasiya Police 115 & Thangasurangam the story was by Mr. G. Balasubramaniam BA
There ends the comparison
Thangasurangam has a stellar star cast comprising of Bharathi, veniraadai Nirmala, Nagesh, Javer Sitharaman, G. Varalakshmi, RS Manohar, OAK Devar, Major and others
Music by TR Ramanna’s favourite: TK Ramamurthy
Camera: G. Amirtham
Fights: Thiruvarur MS Dass
Screenplay & Dialouges: Sakthi Krishnasamy
Lyrics: Kannadasan
Direction by : TR Ramanna


My father and mother are NT fans . Recently my Chitti came to my home I usually have a habit of watching atleast one movie daily today I watched Thangasurangam again. To my astonishment My mother, chitti were sitting behind me and watching the movie with full concentration. I saw the picture of Thangasurangam in Anjal petti 520 which prompted me to watch and write my views about the movie

People who have not watched this movie don’t read it as the movie has lot of surprises

The movie begins with Burma war and people migrating to India. Varalakshmi hand overs her Kid(NT) to Javer Sitharaman as the Ship becomes overloaded.
After few years the story opens in airport with NT being introduced in aeroplane walking swiftly( Walk by NT is always majestic) to CBI director’s(Major) room where he briefs NT about fake gold issue which threatens to ruin Indian Economy. NT goes to his village till he receives further details about the case and meets his mother with help of Church father( Javer) . NT wears beautiful yellow, brownish T shirt, red dress tied like towel behind and White hat
He comes across Nirmala and her brother Nagesh. NT’s mother decides to conduct marriage between Nirmala& NT . Nirmala also saves NT from a mishap.
The case is officially given to NT and he starts his enquiry. He zeros in a doctor and interrogates him but in vain( NT acting in this scene is a jewel especially when he goes out of Doctor’s room and warns him in case he does not cooperate with him is simply superb)
The scene shifts to a lab where Mr Pai requests scientist to continue the experiment of making Gold which is not accepted by Scientist ( I don’t know his name) . NT meets Barathi in race course where the Doctor is killed. NT enquires Bharathi in hotel room ( The fight scene is one among the best. The same was uploaded by Vasu sir in previous thread). NT even lights a cigarette in Rajini’s style( Ironically its must be said Rajini does it in NT style no doubt Rajini sir refers NT as Style Chakravarthy). NT wears gloves in brown with Jerkin material, his hairstyle, his holding of a long stick to be described in a single word means Style style style.
Cut

NT produces Bharathi before Major and takes her for interrogation in midst of action chase in Rammana style beautiful action block ( walkie talkie is also used remember the period of the movie made in late 1960’s). NT T shirt is typical white (tight one just like Reebok) and green pant. Only continuity miss is before fight his hirt would be out whereas after fight his shirt will be tucked in.
NT keeps Bharathi under his custody with the help of Nirmala and goes out only to find that Nirmala being tied in room and a message is left “ Come to Anbu Illam for further details”
Here Comes NT and is welcomed by Pai and he comes to know Nagesh & Nirmala are not siblings but Pai’s people. Pai advises NT to back out from this case which is refused and he harms NT ( Thermo heater)
(NT wears a oval shaped black glass which is fashion among today’s youth)
In a turn of events Nagesh helps NT they both saves Bharathi( scientist’s daughter), Scientist, Again high adrenaline fight sequence.
Bharathi and NT starts loving each other . Well song was beautifully picturised
NT comes to know about Pai’s movements and attempts to trap him but it is foiled as NT mother informs Pai , who is NT father. NT outburst in the scenes in which he suspects his mother and comes to know the truth and the scene in which he argues with major deserve an applause
The scientist is kidnapped , NT further gets cracks the case and comes to know huge amount of gold is to be smuggled and attempts to foil it and arrests Pai’s left hand( Manohar)
NT manages to go in Thangasurangam and as he wears a tracking chip Police comes near Thangasurangam, when Villans escape they plant a dynamite to kill NT and Bharathi
What happens next is NT spoils their journey by arresting them in ship , Pai escapes only to be caught by NT after a sentimental episode( Pai shooting NT )
NT costumes are just superb ,Also Bharathi looks like Angel in the movie with different costumes. Nagesh is apt especially in scenes where he is cross questioned by NT , reference to Kattabomman, his CID works playing with digs etc. Nirmala for a chage plays a villan girl, OAK devar is as usual good
Rammana continues his trend of naming villans with North Indian names Sukadia in Moondru Ezhutu, LAL in Naan, here its Pai
NT is a feast some may like some dishes in feast, some may like other items but everyone will relish the feast. You cannot ignore the feast

Here its subtle , methodical acting

Those who have not watched it can surely watch it . Available in Modern Cinema DVD costs around
Rs 30/-

Avadi to America
21st February 2013, 11:09 PM
Vasu sir Anjal petti 520 analysis is 2 good just like watching a movie superb

intha padathai DDla oru murai pottanga...bayangara ethirparpula okkanthu irrunthom.... padam nalla comedya irunththu.... suddena current poiuchu....romba neram kathutu irunthoom.... current thitumbi vanthappa padam mudinchiduchu....romba kashatam poiduchu.... aduthaa naal schoola discuss panna mudiyathu....innai veraikum intha padatha muzhusa pakka mudiyala....

P.S. I paid 25 paisa to see the movie in some one's house who only had TV in our street at the time....

Murali Srinivas
22nd February 2013, 01:10 AM
எல்லாம் இருக்கட்டும் ..திருவிளையாடல் படம் அவசர அவசரமாக வெளியிடப்பட்டு முறையான வசூலைப் பெறாமல் போனதே ..பின்னர் அந்த பிரச்சனைகள் முடிந்ததா ? எப்போது கர்ணன் போல வெளியீடு காணப்போகிறது ?

ஒரு இணையப் பிரகச்பதி இவ்வாறு சொல்லியிருந்தார்


இது போன்றவர்களுக்கு பதில் சொல்லவே கேட்கிறேன். யாருக்காவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் . நன்றி

ஜோ,

இதோ நீங்கள் கேட்ட பதில்.

மெருகேற்றப்பட்ட கர்ணன் படம் வெளியாவதற்கு முன் அதை பற்றிய செய்திகள் ஊடங்களில் வெளியிடப்பட்டன. படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது.பின் முறையாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கும் 72 அரங்குகளில் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது.

திருவிளையாடலைப் பொறுத்தவரை நடந்ததே வேறு. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.பி.நாகராஜன் அவர்களின் மகனான திரு ஏ.பி.என்.பரமசிவம், இந்தப் படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி கர்ணனப் போலவே சினிமா ஸ்கோப்பில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டபோது படத்தை 35 mmல் வெளியிட உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்கள் குழு இந்த டிஜிட்டல் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி நீதிமன்றத்தை அணுக, நீதிமன்றம் அவர்கள் கேட்டவாறு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

படத்தை வெளியிட இடைக்கால தடை இல்லை என்றவுடன் திரு பரமசிவம் இந்தப் படத்தை உடனே ஒரு தியேட்டரில் வெளியிட்டு அதன் மூலம் எதிர்தரப்பினரை வெற்றி கொள்ளவும் இந்தப் படத்தை வெளியிடும் ஆசை கொண்டவர்களை தைரியத்துடன் அந்தப் பணியை செய்யவும் சென்னையில் ஒரே ஒரு அரங்கில் [உட்லாண்ட்ஸ்]வெளியிட்டார். இரண்டாவது வாரம் பேபி ஆல்பர்ட் அரங்கிலும் வெளியிட்டார். ஆனால் காலம் காலமாக படங்களை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களை எதிர்த்து பரமசிவம் அவர்களுக்கு அரங்குகள் அளிக்க பல தியேட்டர் முதலாளிகளும் முன்வரவில்லை. ஆகவே திருவிளையாடல் படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் முயற்சி தற்காலிகமாக ஒரு பின்னடைவை சந்தித்தது.

மதுரை, நெல்லை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் கூட வெளியாகவில்லை. கர்ணன் தமிழகமெங்கும் 350 அரங்குகளுக்கு மேல் ஓடியது என்றல் திருவிளையாடல் 15 அரங்குகளில் கூட வெளியாகவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழலில் வெளியானாலும் கூட திருவிளையாடல் உட்லாண்ட்ஸ் அரங்கில் 5 வாரங்களும் ஆல்பர்ட் அரங்கில் 4 வாரங்களும் ஓடியது. பொது மக்கள் பலருக்கும் இந்தப் படம் வெளியானது கூட தெரியாது எனும் போது இது வியக்கத்தக்கதே!

திருவிளையாடல் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கோரும் அனுமதியை அண்மையில் வெற்றிகரமாக பெற்ற திரு பரமசிவம் படத்தை தமிழகமெங்கும் வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டிருக்கிறார் என்றே நமக்கு வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன் விநியோகஸ்தர்களுடனான முரண்களும் களையப்படும் என்று சொல்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக சென்னை என்று அல்லாமல் மதுரை என்று அல்லாமல் எந்த ஊராக இருப்பினும் நடிகர் திலகத்தின் எந்தப் படமாக இருப்பினும் அவை அனைத்தும் திரையிட்டவர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுத்து வருகிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். பலமுறை அதை இங்கே பதிவும் செய்திருக்கிறோம். அப்படியிருக்க கலைக் காவியமான திருவிளையாடல் மட்டும் சோடை போய் விடுமா என்ன?

திருவிளையாடல் திரைப்படமும் தமிழகத்தில் மீண்டும் சாதனை புரியும்!

அன்புடன்

வாசு, அஞ்சல் பெட்டி 520-ஐ பற்றிய பதிவு சுருக்கமாக சொன்னால் பிரமாதம். இது போன்ற வசீகர நடை கொண்ட பதிவுகளை உங்களிடமிருந்து கூடுதல் எதிர்ப்பார்க்கிறோம்.

Subramaniam Ramajayam
22nd February 2013, 06:55 AM
thanks MURALI for THIRVILAIYADAL updates. the day is not far your words will become true. now all of us are VASANTHA MALIGAI moods which I am sure will create another jubliation. GREETINGS.

joe
22nd February 2013, 06:58 AM
நன்றி முரளி சார்!

eehaiupehazij
22nd February 2013, 07:22 AM
thanks MURALI for THIRVILAIYADAL updates. the day is not far your words will become true. now all of us are VASANTHA MALIGAI moods which I am sure will create another jubliation. GREETINGS.

NT fans are now in Vasantha Maaligai expectations. Let us not beat around the bush. If vasantha maaligai can also be meticulously planned for its release in the footsteps of Karnan, no doubt VM will also set records even surpassing Karnan. The movie was and has been an all time favourite among masses. with a little bit of clever editing on raw comedy scenes, if it is released as a polished version to suit the present day tastes, VM will follow Karnan. Thiruvilayadal, the magnum opus of NT, will have its due of successful rerun if the producers and distributors think in tandem.

vasudevan31355
22nd February 2013, 07:56 AM
Today ad in thinathanthi

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/856ba62e-adef-4de1-9357-e1ca6aab0020.jpg

vasudevan31355
22nd February 2013, 10:04 AM
மிக்க நன்றி ஆதிராம் சார். தங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள் மேலும் நல்ல பதிவுகள் அளிக்க ஊக்கம் அளிக்கக் கூடியதாய் உள்ளது. முதலில் நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அஞ்சல் பெட்டி 520 போன்ற அதிகம் விவாதிக்கப் படாத படங்களை இங்கு அறிவித்து ஆய்வு எழுத வித்திட்டதே நீங்கள்தான். அதற்காக என் உளமார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் அம்மாதிரி வித்தியாசங்களை வெளிக்கொணருவதில் மிகுந்த விருப்பம். இன்னொன்று தெரியுமா? தங்கள் ரசனையும் என் ரசனையும் 100% ஒத்துப் போகிறது. பலருக்கு அவ்வளவாகப் பிடிக்காத சில படங்கள் தங்களுக்கும் பிடிப்பது போல எனக்கும் மிகப் பிடிக்கும். உதாரணம் வைர நெஞ்சம். நன்றிகள் சார்.

vasudevan31355
22nd February 2013, 10:07 AM
ராகுல்,

தேங்க்ஸ். உங்களுடைய தங்கச்சுரங்கம் ஆய்வு நன்றாக உள்ளது. இந்த சிறு வயதில் இந்த மாதிரி கோல்டன் பிரியட் படங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

vasudevan31355
22nd February 2013, 10:08 AM
ராகவேந்திரன் சார்,

தங்கள் உயரிய பாராட்டிற்கு நன்றி!

RAGHAVENDRA
22nd February 2013, 10:12 AM
Dear Raghul
Your write up on viewing experience of TS is interesting. You mentioned your parents were NT Fans, Had they saw the movie in its first release? Did they share any experience about it? What was their reaction now when they saw it with you?

vasudevan31355
22nd February 2013, 10:15 AM
முரளி சார்,

மிக்க நன்றி! 'திருவிளையாடல்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் விரைவில் தீரும் என நம்புவோம். தெரியாத சில விஷயங்களை தங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது. நன்றி!

JamesFague
22nd February 2013, 10:30 AM
Everyone in VM fever. It will be a trendsetter in BO Collections.

vasudevan31355
22nd February 2013, 10:48 AM
நன்றி பாலா சார்.

parthasarathy
22nd February 2013, 10:54 AM
Dear (Mr. Neyveli) Vasudevan,

Your write-up about "Anjal Petti 520" was really interesting and different. Please continue to post in your typical style and continue to make us enjoy.

Regards,

R. Parthasarathy

parthasarathy
22nd February 2013, 10:55 AM
Dear Mr. Bala,

Your various postings after a long gap are refreshing. Please make it frequent.

Regards,

R. Parthasarathy

parthasarathy
22nd February 2013, 10:57 AM
Dear Mr. Ragulram,

Interesting write-up on "Thangachurangam". Please keep posting more and more.

The thread is picking up and we need to keep this momentum.

Regards,

R. Parthasarathy

parthasarathy
22nd February 2013, 10:58 AM
Dear Mr. Murali,

Thanks very much for info. on "Thiruvilaiyaadal". It should be able to surpass Karnan in all respects in terms of performance in this re-run subject to right marketing like they did for Karnan.

Meanwhile, let us meet to celebrate "Vasantha Maaligai".

Regards,

R. Parthasarathy

vasudevan31355
22nd February 2013, 11:19 AM
திரியை உச்சத்திற்கு கொண்டு செல்ல வைத்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி!

vasudevan31355
22nd February 2013, 11:23 AM
நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1000 பார்வையாளர்களின் பார்வையில் திரி மறுபடி வேகமாகவும், விறுவிறுப்பாகவும் தங்கள் அனைவருடைய ஆதரவினாலும், ஒத்துழைப்பினாலும் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

kaveri kannan
22nd February 2013, 11:45 AM
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கலகலப்பாக பல இதயங்கள் இத்திரியில்...

சிவாஜி புகழ் நிலையானது!


அன்பு வாசு உங்கள் அஞ்சல்பெட்டி வித்தியாச விமர்சனமும், திரு ராகுல்ராம் - உங்கள் தங்கசுரங்கம் பார்வையும் அருமை!

முரளி ஶ்ரீனிவாஸ் அவர்கள், ஜோ அவர்கள் மற்றும் பல நண்பர்கள் பங்களிப்பால் திரி ஒளிர்கிறது.. மிளிர்கிறது.

வாசு அவர்கள், ராகவேந்திரா அவர்களின் மனம் எவ்வளவு துள்ளும் என உணர முடிகிறது!

எல்லாப்புகழும் நம் நடிகர் திலகத்துக்கே!

JamesFague
22nd February 2013, 11:49 AM
When a Pig with shit comes towards us, we should give way for
it. If we throw stone that shit will come to us. Like this we should
not give reply for the silly comments on our Acting God.

vasudevan31355
22nd February 2013, 01:07 PM
Dear Mr.Vasu,

Superb writing. I have not seen this movie till date though I heard and read often. I think this is 2nd half. (downloaded immediately in my mobile - GK, UVU, SES already stored in my mobile) Ist half missing. Can you try to upload ?

thanks a lot.

பாலா சார்,

அஞ்சல் பெட்டி 520 DVD உரிமை ராஜ் தொலைகாட்சி நிறுவனத்திடம் உள்ளது. அவர்கள் அளித்திருக்கும் DVD யிலும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இல்லை. டக்கென தான் படம் துவங்குகிறது. சரோஜாதேவி தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்பது, படத்தில் வரும் அருமையான கார் சேஸிங்கைக் கண்டு பின் மயங்கி விழுவது, நடிகர் திலகம், நாகேஷ் இருவரும் சரோஜாதேவயை கிளினிக்கில் சேர்ப்பது போன்ற காட்சிகள் மிஸ்ஸிங். சரி ராஜ் தொலைக்காட்சியில் படம் போடும் போது ரெகார்ட் செய்து கொள்ளலாம் என்று ஒருநாள் அஞ்சல் பெட்டி 520 போடும்போது உட்கார்ந்தால் சேனல் ஒலிபரப்பிலும் DVD யில் எப்படி படம் ஆரம்பிக்குமோ அப்படியேதான் ஆரம்பித்தது. source அவ்வளவுதான். இணையத்தில் தரவேற்றம் செய்திருப்பதும் அதே ராஜ் தொலைக்காட்சியின் dvd யைத்தான். அதனால் ஏமாற்றமே...பார்ப்போம்... கிடைக்காமலா போய் விடும்?

JamesFague
22nd February 2013, 01:54 PM
It is a horrible print and it is comes with the combination
of Arunodhayam. The print of Arunodhayam is far better
than AP 520.

parthasarathy
22nd February 2013, 01:57 PM
பாலா சார்,

அஞ்சல் பெட்டி 520 DVD உரிமை ராஜ் தொலைகாட்சி நிறுவனத்திடம் உள்ளது. அவர்கள் அளித்திருக்கும் DVD யிலும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இல்லை. டக்கென தான் படம் துவங்குகிறது. சரோஜாதேவி தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்பது, படத்தில் வரும் அருமையான கார் சேஸிங்கைக் கண்டு பின் மயங்கி விழுவது, நடிகர் திலகம், நாகேஷ் இருவரும் சரோஜாதேவயை கிளினிக்கில் சேர்ப்பது போன்ற காட்சிகள் மிஸ்ஸிங். சரி ராஜ் தொலைக்காட்சியில் படம் போடும் போது ரெகார்ட் செய்து கொள்ளலாம் என்று ஒருநாள் அஞ்சல் பெட்டி 520 போடும்போது உட்கார்ந்தால் சேனல் ஒலிபரப்பிலும் DVD யில் எப்படி படம் ஆரம்பிக்குமோ அப்படியேதான் ஆரம்பித்தது. source அவ்வளவுதான். இணையத்தில் தரவேற்றம் செய்திருப்பதும் அதே ராஜ் தொலைக்காட்சியின் dvd யைத்தான். அதனால் ஏமாற்றமே...பார்ப்போம்... கிடைக்காமலா போய் விடும்?

Dear Mr. Vasudevan,

The opening chasing scene is from "Cold Sweat", a Charles Bronson starrer, was a terrific one.

Regards,

R. Parthasarathy

JamesFague
22nd February 2013, 02:01 PM
Today lot of NT's movies are screened in many
TV channels.

On Sunday at 7.30 in Murasu TV the Super Duper Hit of
NT Uthama Puthiran. Dont Miss it.

Gopal.s
22nd February 2013, 04:05 PM
முதல் மரியாதை- 1985-பகுதி-1

திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,
சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை. நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமுத்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாக்கி நெய்த அழகிய அதிசயம்.

நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.

ஏனெனில், நடிகர்திலகம் Stalinovsky ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objective படி கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த்தி,காத்து,அழ ித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner ,Straberg பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில், உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.

(தொடரும்)

முதல் மரியாதை-1985-பகுதி-2

மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.

மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணு வும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொ ன் னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தா ம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.

ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo copy ஐ போன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.

பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது
பொ ன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயி ர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.

(தொடரும்)

Gopal.s
22nd February 2013, 04:08 PM
முதல் மரியாதை-1985-பகுதி-3

பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப் புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புகளை,சிதைவுகள ை இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.

Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உள வழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.

மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுணர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுயநலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியிடம் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறான்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)

படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன் சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து, வசமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது மனைவி கெட்டு போன வரலாற்றை சொல்லி அவளை உதைக்கும் அளவு செல்வது, பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவியியிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustrationஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறான் .(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்புக்கிழுத்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவனுடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவன் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.

தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance ஐ வழங்கும், இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே? குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலை சாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை, அதனால் ஏற்படும் குற்ற உணர்வை, தியாகத்தால் மெழுகுகிறாள் .

பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் ,மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை , எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் வரும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா ?

இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.

(தொடரும்)

Gopal.s
22nd February 2013, 04:11 PM
முதல் மரியாதை-1985-பகுதி-4

கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதா பாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன?அவர் வீட்டு-நாட்டு பிரச்சினைகளால்,உடலும் மனமும் சோர்ந்து கிடந்த போது ,இந்த பாத்திரம் வைத்ததில்,அவரால் பல மடங்கு இயல்பாக சோபிக்க முடிந்தது. அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூடு கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன்துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பரி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,

நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சாத்திய படாது)

(தொடரும்)

முதல் மரியாதை-1985- பகுதி-5.

வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.

பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜனரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோகமுள் கதை போல)

பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

(முற்றும்).

parthasarathy
22nd February 2013, 06:01 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

நடிகர் திலகத்தின் நடிப்பை, பங்களிப்பை வார்த்தைகளில் எழுதுவது சவால் என்பது போல், தங்களுடைய "முதல் மரியாதை" ஆய்வையும் வார்த்தைகளில் கொண்டு வருவது சவால் தான். அவரது பங்களிப்பை எழுதுவதற்கே இத்தனை விஷயங்களை அலச வேண்டியதிருக்கிறதே! அதனால் தான் அவரை கலைமகளின் அம்சம் என்கிறார்களோ!!

நீண்ட நாட்களுக்கப்புறம் அதிரடியாய் நுழைந்திருக்கிறீர்கள்.

அற்புதம்.

இன்னமும் இருக்கிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
22nd February 2013, 09:43 PM
அவர் வீட்டு-நாட்டு பிரச்சினைகளால்,உடலும் மனமும் சோர்ந்து கிடந்த போது ,இந்த பாத்திரம் வைத்ததில்,அவரால் பல மடங்கு இயல்பாக சோபிக்க முடிந்தது.


இந்த வரிகளைத் தவிர முதல் மரியாதை திரைப்படத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் தாங்கள் கூறிய மற்றவற்றை நான் பாராட்டுகிறேன்.

RAGHAVENDRA
23rd February 2013, 07:22 AM
முதல் மரியாதை படத்தில் நண்பர் கோபால் அவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பிடித்த பல காட்சிகளில் ஒன்று.


http://youtu.be/b_1g1UCpUiA

அவர் கூறியது போல் காட்சிகள் மட்டுமல்ல மொத்தப் படமுமே தமிழ் சினிமாவின் வரலாற்றில் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டியதாகும். நடிப்பு மட்டுமின்றி, ஒளிப்பதிவு, எடிட்டிங், என்று அனைத்துத் துறைகளிலுமே தனிச் சிறப்பு வாய்ந்த சில திரைப்படங்களில் முதல் மரியாதை நிச்சயம் இடம் பிடித்துள்ளது.

மிக அருமையான திரைப்படத்தைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதியுள்ள கோபால் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கோபால் சாருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்காத மனிதர்களே இல்லை. நடிகர் திலகம் இதற்கு விதிவிலக்கல்ல. அதனையெல்லாம் சந்தித்ததனால் தான் ஒரு சராசரி மனிதனின் அடிப்படையில் ஒரு தலைவனுக்குரிய கொள்கையை வகுத்துக் கொண்டவர் அவர். அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதற்காக அவருடைய சொந்த வாழ்க்கையப் பற்றியெல்லாம் நாம் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். இருக்கும் போது பலரும் பல விதமாக அந்த மனிதரை காயப் படுத்தி விட்டார்கள். இனிமேலும் நாமும் அதனை நினைவு படுத்திக் கொள்ள வேண்டாமே.

ஒரு சகோதரரைப் போல அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

ScottAlise
23rd February 2013, 07:44 AM
Dear Raghul
Your write up on viewing experience of TS is interesting. You mentioned your parents were NT Fans, Had they saw the movie in its first release? Did they share any experience about it? What was their reaction now when they saw it with you?

Unfortunately My mother saw it only with me few years back . My father saw it in Chitlapakkam varadaraja 3 movies in 1 ticket

How did the movie perform in BO

RAGHAVENDRA
23rd February 2013, 08:09 AM
Dear Raghul
THANGA SURANGAM was a super hit movie as far as collection was concerned. Frequent release of movies affected its long run as it has to be lifted to give way for NT's films themselves. We were very eager to see its Silver Jubilee which did not materialise. Had it been allowed to continue in its original theatres, it would have been a SJ in at least 3 to 4 centres. It is an all time favourite of NT Fans and had the repeated audience even in its rereleases.

In fact you can find it yourself in future, if and when it gets released even for one week in any theatre.

RAGHAVENDRA
23rd February 2013, 08:56 AM
நடிகர் திலகம் திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்து இடம் பெறப் போகும் படம் விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் தெனாலி ராமன். ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மட்டுமின்றி நல்ல திரைப்படங்களை விரும்புவோரும், பழைய சரித்திரக் கதைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கிருஷ்ண தேவராயரின் அரண்மனை தர்பாரில் தன்னுடைய திறமையால் நுழைந்து அவருடைய நெஞ்சில் தனி இடம் பிடித்து அவருடைய இக்கட்டான நேரங்களில் சரியான ஆலோசனைகளைத் தந்து புகழ் பெற்ற தெனாலி ராமன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. தெனாலி ராமனாக நடிகர் திலகமும் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமராவ் அவர்களும், மற்றும் ஜமுனா, சந்தியா, பானுமதி, நாகையா, நம்பியார் மற்றும் பலரின் திறனான பங்களிப்பில் மறக்க முடியாத படம் தெனாலி ராமன். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பில் இப்படம் தனி இடம் பிடிக்கிறது. குறிப்பாக முகலாய மன்னர்களின் தூதாக வந்து ராயரை வசியம் செய்ய முயலும் பானுமதியை விரட்ட பெண் வேடம் போட்டு நடிகர் திலகம் அந்தப் புரத்தில் நுழையும் காட்சி குறிப்பிடத் தக்கது. இதைப் பலர் பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்த பதிவில் இக்காட்சியினை காண இருக்கிறீர்கள்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. நடிப்பிற்காக மட்டுமின்றி மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்காகவும் இப்படம் குறிப்பிடத் தக்கது.

RAGHAVENDRA
23rd February 2013, 09:15 AM
My Favourite Scene நான் ரசித்த காட்சி

முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் தெனாலி ராமன் திரைப்படத்தில் இடம் பெற்ற இக்காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானதாகும். முகலாய மன்னர்கள் கிருஷ்ண தேவ ராயரைத் தந்திரமாக வசியம் செய்து தங்களுடைய கீழ்ப்படிதலில் விஜய நகர சாம்ராஜ்யத்தைக் கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணா [பானுமதி]வை அனுப்புகின்றனர். இத்திட்டத்தைத் தெரிந்து கொண்ட, விஜய நகர சாம்ராஜ்யத்தின் பால் அக்கறை கொண்ட தெனாலி ராமன், மூத்த மந்திரி [நாகையா]யுடன் கலந்தாலோசித்து இதை முறியடிக்கும் நோக்கில் கிருஷ்ணாவின் தாயார் வேடமிட்டு அந்தப்புரத்துள் நுழைகிறார்.

இந்தக் காட்சியில் வயதான பெண்மணி வேடம் தரிக்கும் நடிகர் திலகம், பார்ப்பவர்களுக்கு அது வேடம் என்று தெரியும் என்பதையும் மனதில் நிறுத்தி அதே சமயம் அரண்மனைக் காவலாளிகள் சந்தேகப் படா வண்ணம் தன் குரலில் அந்த பெண்மையைக் கொண்டு வந்து தன் வயோதிகத்தையும் வெளிக்காட்டும் வண்ணம் குரல் சற்று உடைந்தாற்போல பேசி இக்காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். இவ்வளவு நுணுக்கமான விஷயங்களை இக்காட்சியில் கையாள அவருக்கு யார் கற்றுத் தந்தார்கள்.. எந்தப் பள்ளியில் போய் நடிப்பைப் படித்தார். உலகத்தில் திரைப் படங்களைப் பற்றியும் நடிப்பைப் பற்றியும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் வல்லுநர்கள் இருக்கலாம், அதன் அடிப்படையில் அவர்கள் அதனைத் தங்கள் திறமையைக் காட்டலாம்.

ஆனால் இவருக்கு யார் கற்றுத் தந்தார்கள் ... எங்கோ தமிழ்நாட்டின் மத்தியில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதர் இன்றைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா உலகப் புகழ் பெற்ற நடிகராய் இருக்கிறார் என்றால் ...

அது அன்னை ராஜாமணியின் தவப் பயன் அன்றோ..

இதோ தெனாலி ராமன் காட்சியைக் காணுங்கள் ...


http://youtu.be/KCfLZo1WGFc

JamesFague
23rd February 2013, 11:36 AM
There is an article published in recent issue of
Kumudham about the NT's visit to Kairo inconnection
with the VPKB function. If anyone have facility they can
upload for the benefit of our fans.

adiram
23rd February 2013, 02:42 PM
Recently watched Thirumal Perumai after a long gap in cristal clear print, without rainfall or cut are fadded color. (watching movie in verygood print ads additional joy to watch)

What a fantastic movie with excelled action of Shivajiand lovely songs by kannadasan & k.v.mahadevan.

pachai maa malaipol meni
malargalile pala niram kanden
kaakkai siraginile nandhalaalaa
karai yeri meen vilaiyaadum kavirinaadu
thirumal perumaikku nigaredhu
gopier konjum ramana
hara hara gokula ramana
margazhi thingal madhi niraindha

I was watching it without removing my eyes from the scenes. It was already discussed here about the dedication of NT when he put his mouth in Sivakumar's leg finger to remove the golden ring.

the compossing of tune for 'margazhi thingal madhi niraindha nannaalaam' by kvm is excellent. Tears in my eyes when watching it when k.r.vijaya singing it in front of every house and collecting her 'thozhis' one by one.

because of continuous mythological films by a.p.n. made this movie by not reaching a good box office. (I think it had met a 10 weeks run) but worth for not less than 20 weeks run.

adiram
23rd February 2013, 04:27 PM
Just now I know the news.

A new movie is under production by name GOWRAVAM.

old movies oru title kooda vittu vaikka maattanunga pola.

ippave dvd shopla endha padam peyar solli kettaalum 'pudhusaa, pazahasaa?' appadeennu ketkiraanga.

oowijaez
24th February 2013, 03:21 PM
முதல் மரியாதை-1985-பகுதி-4

கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதா பாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன?அவர் வீட்டு-நாட்டு பிரச்சினைகளால்,உடலும் மனமும் சோர்ந்து கிடந்த போது ,இந்த பாத்திரம் வைத்ததில்,அவரால் பல மடங்கு இயல்பாக சோபிக்க முடிந்தது. அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூடு கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன்துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பரி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,

நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சாத்திய படாது)

(தொடரும்)

முதல் மரியாதை-1985- பகுதி-5.

வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.

பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜனரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோகமுள் கதை போல)

பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

(முற்றும்).
பாலை வனமாய் வற்றிப் போய்க் கிடந்த திரியில் (கோ)பாலை வார்த்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள் திரு கோபால் அவர்களே. சிவாஜி என்னும் தங்கத்தை வெட்டியெடுத்து பாரதிராஜாவினால் அழகாக செதுக்கப்பட்ட முதல் மரியாதைக்கு முதலாவதாக மரியாதை செய்ததற்கு நன்றி. இது போன்ற நல்ல பதிவுகளை எப்போதாவது தான் பார்க்க முடிகிறது.

JamesFague
25th February 2013, 11:55 AM
Watch Santhippu today in Murasu TV at 7.30 PM.
Immediately remember the posting of Mr Vasu about his
Santhippu at Cuddalore. Unforgettable posting on
Santhippu.

JamesFague
25th February 2013, 12:30 PM
One of my favourite song from Mohana Punnagai. Kalyanamam Katcheriyam. This song
so popular even before the movie got released. Watched the movie on first day at
Chrompet Vetri during college days. I request Mr Vasu Sir to upload the song for
the benefit of our fans.

Gopal.s
25th February 2013, 12:39 PM
நமது ரசிகர்களுக்கு, இந்த ஆஸ்கார் தேனாக இனிக்க வேண்டும்.
1)நமது நடிகர்திலகத்தின் வசந்த மாளிகை சுவரொட்டி இடம் பெற்ற life of Pi ,நிறைய oscar களை அள்ளி வந்துள்ளது. ஆங் லீ க்கு பாராட்டுகள்.
2)நமது நடிகர்திலகத்தை அச்சு எடுத்தது போல் நடிக்கும் டேனியல் டே லெவிஸ் க்கு மூன்றாம் முறையாய் சிறந்த நடிகர் பரிசு. இந்த ஏகலைவனை, அந்த துரோணர் சொர்கத்தில் இருந்து வாழ்த்துவார்.

பிறந்த நாள் காணும் தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். மணிமண்டபத்தை கவனியுங்கள் அம்மா.

ScottAlise
25th February 2013, 04:11 PM
AMBIGAPATHY

The movie starts with voice over about ancient Tamil Nadu, rivers, tamil culture and dance forms and comical fight between KA Thangavelu and Sivaji

Ambigapathy, the son of the great Poet Kamban , the poet laurete of the Chola king Kulothungan
possessing extraordinary talents .Any person with extaordinary talent and capabilities tend to be proud and arrogant so is Ambigapathy . Nadigar Thilagam exhibits a youthful exuberance and with a stamp of arrogance and pride looks of a young poet who was willing to take on the challenges of the world through his tongue and flair for poetry.
OTTAKOOTHAR(MN Nambiyar) is also a senior poet who is jealous and running short in fame compared with Kamban was always trying ways and means to defame Kambar in any manner possible.
M.K.Radha of Chandralekha fame plays the role of Kambar with perfection.

Nambiar was his ever usual self , very aggressive , cunning and like a fox waiting for opportunity and strikes with an old man make up.


Ambigapthy’s extempore style of expressing things , his bold mannered approach and above all loving an emperor’s daughter is not taken in best spirits by his peers and also by the king.
Amaravathy role is played by Bhanumathi seems to be elder to NT but still the pair was good.

Despite advise by his Father MK.Radha ( Kambar ) , Ambigapathy could not give up his love and the same was the feeling of Amaravathy also despite being warned by the king severely.

So when Ottakoothar sees the love affair between Amgipathy and Amaravathy , Ottakoothar also sees this opportunity to take revenge at Kambar He poisons the King’s mind in a such a way that the king hates both Kambar and Amgibathy.

The King as advised by Ottakoothar orders that if Amgibapathy manages to sing 100 songs without any touch on kamarasam, the King promised that both can marry.


Before the D-day, Kambar pleads his son to give up his love life and be a good son
But Ambigapthy , highly self confident does not heed to his words and takes up the challenge to prove his capabilities

the stage is set for a perfect setting now for a climax andfor treat for ears

Now the whole group of poets headed by Nambiar watch the proceedings

As Ambigapathy starts with a song on Lord Vinayaka(First God), a flower is dropped by Amaravathy who watches the event from a balcony from a hideout but not visible to Ambigapathy.

Ottakoothar insists that this being a Kadavul Vaazthu padal, this should not be considered as part of the 100 and hence the king and others discard this. However,neither poor AMARAVATHY nor AMBIGAPATHY were aware of this.

Ambigapathy proves now that he is a worthy son of his illustrious father Kambar by singing all songs without Kamarasam.

As he starts the 99th song ( which both the lovers think that this the 100th song ), he falters one of the evergreen hits of the great composer G.Ramanathan and one of the very best of Nadigar Thilagam’s portrayals come out.

SINDHANAI SEI MANAME

A minute observation of Nadigar thilagam will reveal that he actually casually plays the character with consummate ease – the portrayal of a young and proud Poet , unmindful of the harsh realities of life



Many actors have given lip movements and body reactions to carnatic songs but see the way in which Nadigar thilagam presents this song . OUTSTANDING !
Whenever the song is in low pitch, NT gives a soft look and when it goes in high tone, NT’s throat movements, the hands , the eyes are sync together and gives a typical impression which an established singer will give normally !
Well such is the power of NT’s observation which he presents with precision.

When he sings Sindhanai sei maname ( the starting part ) , he face shows SATVEEGAM . As the song touches the words, ANDAGAN VARUMBODHU AVANIYIL YAAR THUNAI, the whole body of NT reacts instantly.

Another feature of NT in this song is he shows DEVOTION up the point he completes the 100 numbers. As soon as the count down is over, a cheerful Banumathy comes out of the balcony where she was watching , hidden thinking that NT had successfully completed his challenge.

But as soon as NT Sees Banumathy, His Facial Expression Changes Dramatically And From Now He Becomes A Typical Lover !

Amazing change in the facial expressions ( muga bhavam ) and words incessantly come out now on lust etc like – SATE SARINDHA KUZAL ASAIYA and from now his mood changes instantly and he starts singing with lust and describes the personality of Amaravathy unmindful of the consequences.

As Nambiar’s count is less by one, the decision goes against NT and he gets death sentence.


The movie ends in tragic note.
This movie also featured Kalaivanar NSK who incidentally passed away mid way . So NT gives a short but nice description to a NSK statue praising him aptly.


This movie is a JEWEL ON HIS CROWN for the great G.Ramanathan who virtually sprayed the movie with some classical songs
The movie is Directed by P. Neelakantan , who directed many MGR movies, I guess this was only movie in which he directed NT. Songs were written by VS Ragavan also is he the same person who acts even now.
Also the titles mentions about colour print . Is it only a part of movies or for songs.( I too read about it but don’t remember it). Why such a movie is not widely appreciated or telecasted is a deep mystery.
What about the BO status?
The movie is available in Moser Bear 3 in 1. Print is also crystal clear

IliFiSRurdy
25th February 2013, 06:30 PM
நண்பர் கோபால்,

வணக்கம்..நாம் சந்தித்து உரையாடி நாட்கள் பல ஆகின்றன (கடைசியாக நல்லி கடையில் சந்திதததுதான்.) நலமா?

நிற்க..உங்கள் முதல் மரியாதையை,பாதி பழுதாகியுள்ள என் கணினியில் படித்து பரவசமாகி,பதில் எழுத விழைகிறேன்.உங்களை நான் புகழ்வது, என்னையே நான் புகழ்வதற்கு நேர் என நான் கருதுவதால், விஷயத்திற்கு வருகிறேன்.

உங்களுடைய விரிந்து பரந்த அறிவாற்றல் உங்களை..Stalinovsky,Meisner ,Straberg,Stella Adler,Chekhov,Oscar wilde,Spolin &Suzuki போன்றவர்களை துணைக்கு அழைக்க முடிகிறது.நானோ தற்குறி.கலாட்டா கலயாணம் ,வி கே ராமசாமி .."இவர், டாக்டர் குரு எம் பி பி எஸ்,,F ஆர் சி எஸ்".. என்று சொல்லக் கேட்டவுடன்,"அதனால் என்ன, பரவாயில்லை" என சொல்வதுபோல சொல்லி இவர்களை கடக்கிறேன்.

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஏற்படும் இரண்டாவது மிகப்பெரிய சோகம் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை,அவர்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் (குண நலன்களில்,ரசனையில்,உருவ அமைப்பில்)அமைதல்.

நல்ல வேளையாக உடல் ரீதியாக இந்த சோகம் எந்த ஒரு பிரச்சினையும் கொடுப்பதில்லை.
நினைத்துப் பாருங்கள்..மனம் இணைந்தால்தான் குரோமோசோம் இணையும் என்று இயற்கை வைத்திருந்தால் இன்று இந்தியாவின் ஜனத்தொகை வாடிகன் நகர ஜனத்தொகையை விட குறைவாக அல்லவா இருந்திருக்கும்!

சரி! அப்போ முதல் பெரிய சோகம்?? இப்படி ஒரு கல்யாணம் ஆகி, பத்து இருபது வருடங்கள் ஓடி,இரண்டொரு குட்டிகளும் போட்ட பிறகு, தனக்கு சரியான ஜோடி இவர்தான் என்று நினைக்க வைக்கும் ஒருவரை சந்திக்க நேர்வது!

இதில் பெண்கள் அதிருஷ்டசாலிகள்.இந்த பிரச்சினையை வெகு எளிதாக கடந்து விடுவார்கள்..பல தலைமுறைகளாக அவர்கள் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தைப்பற்றி ,அதில் அவர்கள் நிலை பற்றி போதிக்கப்பட்டு வந்துள்ளனர்.எனவே அவர்கள் சரியான ஆணை சந்திக்க நேர்ந்தாலும் மனக்கிலேசம் அடையாமல் அலட்சியப்படுத்தி தங்கள் வாழ்க்கையை தொடர்வர்..இதை english viglish கதாநாயகி ஸ்ரீதேவி மிக அற்புதமாக காண்பித்திருப்பார். "X அது Y" என்ற விசுவின் படத்தில் மனோரமா தன்னை வருடக்கணக்கில் டீஸ் செய்யும் கணவனை ஒரு க்ஷண நேரத்தில் எதிர்த்து (என்னையும் ஒருத்தன் சைட் அடிச்சான்!) அதை விட பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்வாள்..

ஆனால் படுவது எல்லாம் ஆண்களே.அதுவும் அவர்கள் நேர்மையாளர்களாக ,தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்து விட்டால்?? கேட்கவே வேண்டாம்! அதுவே சிவகுமாருக்கு அமைவது போல அமைந்தால் சிரமம் இல்லை..("இதோ பார்..உன் அழகிற்கு கால தூசிக்கு வருவாளா அவள்.எதோ நமக்கு குழந்தை இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் ஒரு சிறிய தவறு செய்துவிட்டேன்." என்று சுலக்ஷ்ணாவிடம் சொல்லி விட்டு, சமாளித்து விடலாம்) ஆனால் நமக்கு வருவது ஒரு ராதாவோ,சிநேகாவோ, சிம்ரனோ என்றால்? போதா குறைக்கு நம்ம சைடு சமாளிக்க வேண்டியது வடிவுக்கரசியாகவோ, ,ராதிகா வாகவோ இருந்தால்???

இங்கதான்யா தலைவர் பிச்சு பிச்சு எடுப்பார்..

ஒரு இடத்தில் வரம்பு தாண்டுவாரா? ஒரு இடத்தில் வழிவாரா? (அப்படி வழியும் ஒரே இடத்திலும் அது எப்பேர்பட்ட கம்பீர வழிசல்!).காக்கையுடன் இருக்கும் போது குயில் என்று ஒன்று இருப்பதே தோன்றாமல்,அதே போல குயிலுடன் இருக்கும் போது காக்கை என்று ஒன்று இருப்பதே தெரியாமல் என்ன ஒரு brilliant performance! Mind you , சற்று தடம் புரண்டால் கபடம் வரும் அபாய சந்திப்பு அது..என்ன ஒரு லாகவத்துடன் கையாள்வார்!.The large canvas ஐ ஏக்கத்தால் பெயின்ட் செய்து கொண்டு அதில் காதல்,நேர்மை,கோபம்,தலைமை,எனும் ஆளுமைகளை என்ன அழகாக மிக்ஸ் செய்வார்!
ஒவ்வொரு brush stroke உம ஒரு delight அல்லவா? 50 + களில் காதல் வசப்படும் ஒரு இன்பமான துன்பத்தை என்ன ஒரு subtle ஆக காண்பிப்பார்..
================================================== ================
ஒரு சிறிய விளம்பர இடைவேளை கொடுக்கலாமா?

மீண்டும் கணினி இசைந்தால்..

தொடர்வேன்.

பி.கு: ஷில்பா போன்ற அல்பாக்களுக்கெல்லாம் நீர் பதிலளிக்கத்தான் வேண்டுமா?

oowijaez
25th February 2013, 07:56 PM
கண் பத்து அவர்களே! மிகவும் அனுபவித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பேசாமல் நீங்கள் முதல் மரியாதை part 2 -இல்லை, 'இரண்டாவது மரியாதை' எடுக்கலாம். நிச்சயமாக நடிகர் திலகம் வழிந்தாலும் கம்பீரமாகத்தான் இருக்கும். இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த சிவாஜி படங்களில் இது நிச்சயமாக இருக்கும்.

P_R
25th February 2013, 08:29 PM
கோபால், நல்ல இடுகைத் தொடர் :clap:
விரிவாக பதிலெழுத முடியாதமைக்கு அலுவல் ஒரு காரணம். மற்றொரு காரணம் நீங்கள் முதல் பகுதியில் குறிப்பிட்ட பெயர்களை கூகுள் செய்து கொண்டிருக்கிறேன் :-)

முதலில் குறை. I'll get it out of the way and then நிறைந்துள்ள நிறைகள்.
இது முதல்மரியாதை திரைப்படத்தில் எழுத்துவன்மையை நிறுவும் இடுகைத் தொடராகக் கொள்கிறேன். அதில் உள்ள அடிநாதங்கள் சரிவர பொதுவில் அலசப்படவில்லை என்ற குறையை தீர்க்கும் விதமாக அமைந்தது உங்கள் இடுகை. அந்த வகையில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஆனால் நீங்கள் முதல் பகுதியின் கடைசி பத்தியில் குறிப்பிட்ட பலதரப்பட்ட 'பாணிகள்' எவ்வாறு சிவாஜி வெளிப்படுத்தினார் என்று கொஞ்சம் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருக்கலாம். நடிப்பு/நாடகவியல் நுணுக்கங்களில் பழக்கம் (பயிற்சியும்?) உள்ள நீங்கள் அதை எடுத்துச்சொன்னால் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மலைச்சாமியின் க்ரூரமும், latent frustratioனும் அதிகம் பேசப்படாதவை. ஆணீய மதிப்பீடுகள், சமூக அங்கீகாரம் தரும் வீங்கிய பெருமை எல்லாம் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். வெளியில் மதிப்பு, வீட்டில் அவமரியாதை (உள்ள அழுகுறேன், வெளிய சிரிக்கிறேன் - self-pity) என்பது மேல்தளம் தான். ஆட்டுக்காரன் ஊர்நாட்டாமை ஆனதென்ன, சகலோரிடமும் geniality பாராட்டுவதென்ன, வீட்டில் காட்டும் சிறுமை தான் என்ன - என்பது அடுத்த அடுக்கு.

தன் சுயபச்சாதாபத்தை நம் மீது ஏற்றிவிடும் deceptive - to use your well chosen word - எழுத்து, நடிப்பு.

கொஞ்சம் balance தவறினாலும் விரசமாகிவிடக் கூடிய பாத்திரம். அந்தத் துடுக்குத்தனம் ஒரு வித sense of previlegeலிருந்து தான் வருகிறது. அந்த நிலைக்கு எது காரணம்? மலைச்சாமி செய்து கொண்ட 'தியாக' திருமணம். இதில் irony - அவன் தன்னைத் தியாகியாக உணர்கிறான். பிறரை அவன் 'சமமாக' நடத்தி உறவாடுவது ஒரு பிரபுவின் வள்ளல்தன்மை தொனிக்கும் சமத்துவக் கொடைதானே!

'பஞ்சம்பிழைக்க வந்த குயிலுக்கு ஜாதி, சமூக அந்தஸ்து பற்றி என்ன தெரியும்?' என்று தானே அவன் சொல்கிறான். பண்ணையார்தனத்தை இப்படி ஆகர்ஷித்துக்கொண்ட ஆட்டுக்காரன் தியாகியாம், 'உழப்பெருமை போதிக்கும் சமத்துவக்காரனாம்'! - என்று தன்னை நினைத்துக்கொள்கிறான்.

மிக சிறப்பான பாத்திரம், எழுத்து. சமீபத்தில் பார்க்கவில்லை. உங்கள் இடுகை பார்க்கத் தூண்டுகிறது.

RAGHAVENDRA
25th February 2013, 10:40 PM
Rare Images அபூர்வ நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/IOTOW_zps6eb4e955.jpg

RAGHAVENDRA
25th February 2013, 11:41 PM
Many actors have given lip movements and body reactions to carnatic songs but see the way in which Nadigar thilagam presents this song . OUTSTANDING !
Whenever the song is in low pitch, NT gives a soft look and when it goes in high tone, NT’s throat movements, the hands , the eyes are sync together and gives a typical impression which an established singer will give normally !
Well such is the power of NT’s observation which he presents with precision.

When he sings Sindhanai sei maname ( the starting part ) , he face shows SATVEEGAM . As the song touches the words, ANDAGAN VARUMBODHU AVANIYIL YAAR THUNAI, the whole body of NT reacts instantly.

Another feature of NT in this song is he shows DEVOTION up the point he completes the 100 numbers. As soon as the count down is over, a cheerful Banumathy comes out of the balcony where she was watching , hidden thinking that NT had successfully completed his challenge.

But as soon as NT Sees Banumathy, His Facial Expression Changes Dramatically And From Now He Becomes A Typical Lover !

Amazing change in the facial expressions ( muga bhavam ) and words incessantly come out now on lust etc like – SATE SARINDHA KUZAL ASAIYA and from now his mood changes instantly and he starts singing with lust and describes the personality of Amaravathy unmindful of the consequences.

As Nambiar’s count is less by one, the decision goes against NT and he gets death sentence.


டியர் ராகுல் சார்
அம்பிகாபதி ... உண்மையிலேயே இது ஒரு காவியம் தான். அதுவும் இப்பாடலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள சிறப்புகளைப் படித்த பின்னர் இப்பாடலைப் பார்க்கும் போது நிச்சயம் புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் மேன்மையை உணர முடிகிறது. ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் சௌந்தர்ராஜன் குரலில் எப்பொழுதும் நடிகர் திலகத்தை,
சிந்தனை செய் மனமே
என சொல்லத் தூண்டுகிறதன்றோ...

பாடலைப் பார்ப்போமா


http://youtu.be/n6Pt-dKwvwQ

RAGHAVENDRA
26th February 2013, 12:08 AM
இன்று ஒரு பரத நாட்டிய விற்பன்னர் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்ததோடு மட்டுமின்றி அக்கலையில் மிக உயர்ந்த நிலையில் உள்ள கல்வித் தகுதியும் பெற்றவர். அதே நிலையில் மேலும் ஓர் ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாகக் கூறிய அவரிடம் அந்தத் தலைப்பைப் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய பதிலில் நான் வியப்பில் திகைத்தது நிஜம். காரணம் அவர் பரத நாட்டியத் துறையில் அடுத்த நிலை ஆய்வுக்கான பொருள் நடிகர் திலகமும் நாட்டியமும் என்பதாகும்.

அதற்கான துவக்கப் பணிகளை இன்னும் சில கால கட்டத்தில் தொடங்க உள்ளதாகக் கூறிய அவரிடம் காரணம் கேட்டேன்.

சிவாஜி சார் உண்மையிலேயே ஒரு அவதார புருஷன். பரத நாட்டியத்தில் பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு பரிணாமங்கள் வந்துள்ளன. அதில் நாம் நடிப்பைப் பற்றி விவாதிக்கும் நிலைகளை அந்த நாட்டிய விற்பன்னர் விளக்கினார். மிதமான, சற்றே உரத்த, மிக உரத்த என்ற வெவ்வேறு நிலைகளை பரத நாட்டியம் கடந்த நூற்றாண்டில் சந்தித்து வந்துள்ளது. அபிநயங்கள், முத்திரைகள் என்று பரதநாட்டியத்தில் உள்ள வெளிப்பாடுகள் அத்தனையுமே இந்த நிலைப்பாடுகளை சந்தித்துள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பொழுது நாம் கண்டு கொண்ட உண்மை என்ன என்றால், அதாவது எந்தெந்த கால கட்டத்தில், எந்நெந்த விதமான வெளிப்பாடுகள் எந்தெந்த விதமான நிலைப்பாடுகளைக் கண்டுள்ளன என்பதை கண்டறிய வேண்டுமென்றால், அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குபவை சிவாஜியின் படங்களும் அவற்றில் அவருடைய முக பாவங்களும் என்பதே.

இதற்கு நான் கேட்டேன். அவருடைய நடிப்பை மிகை நடிப்பு என விமர்சிக்கிறார்களே என்று. அதற்கு அவர் கூறிய பதில் என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது.

இதைத் தான் பரத நாட்டியத்தில் உள்ள மிகை பாவ வெளிப்பாடு என்று கூறுகிறோம். பரத நாட்டியத்தில் மிதமான முகபாவ வெளிப்பாடு முத்திரைகள் நிலவிய கால கட்டம் 1950-1965 ஆண்டுகளாம். இந்த கால கட்டத்தில் பரத நாட்டியக் கலைஞர்களிடம் நிலவிய முக பாவமே மித வெளிப்பாடு என்பதாகும். அதனை பிரதிபலிக்கும் விதமாகவே சிவாஜி சாரின் நடிப்பு உள்ளது என்று கூறிய அவர் அதற்கு உதாரணமாய் சில படங்களின் காட்சிகளையும் கூறினார். அதில் குறிப்பிடத் தக்கது ஆண்டவன் கட்டளை படத்தில் அழகே வா பாடலில் அவருடைய முகபாவம். இது சிருங்கார ரசம். பின்னர் 1965 தொடங்கி கிட்டத் தட்ட 1980 வரை என வைத்துக் கொள்வோம் - இந்தக் கால கட்டத்தில் பரத நாட்டியம் சற்றே பரிணாம மாற்றம் கண்டு பாவங்களும் முத்திரைகளும் சற்றே உரக்க வெளிப்பட்டனவாம். இந்த கால கட்டத்திலும் அவர் எல்லா பாத்திரங்களுக்கும் அந்த மாதிரி கொண்டு வராமல் எந்த பாத்திரத்திற்கு சற்றே உரத்த பாவம் தேவை என அறிந்து அதற்கு அந்த அளவிற்கு தந்துள்ளார் எனக் குறிப்பிட்டார். இதற்கும் அவர் கூறிய உதாரணங்கள் வியப்பைத் தருபவை. ஒரு தொலைபேசி காட்சியை வைத்தே அந்த வேறுபாட்டை விளக்கினார். ஒரு அதிகாரியாக அவன் ஒரு சரித்திரத்தில் அவர் தொலைபேசியை கையாண்ட விதம், ஒரு பரபரப்பு மிக்க இளைஞனாக அஞ்சல் பெட்டி 520 படத்தில் அவர் கையாண்ட விதம், ஒரு தொழிலதிபராக அவன் தான் மனிதன் படத்தில் அதே தொலைபேசியைக் கையாண்ட விதம், ஒரு ஆவேசமிக்க வழக்கறிஞராக கௌரவம் படத்தில் அவர் தொலைபேசியை கையாண்ட விதம் என்று அவர் சொல்ல சொல்ல இப்போதே அந்த ஆய்வேட்டை கொண்டு வந்து விட மாட்டாரா என ஆவலைத் தூண்டியது.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் சொன்னது நம் அத்தனை பேர் நெஞ்சிலும் பால் வார்த்தது.

மிகை நடிப்பு என்பதெல்லாம் கலையைப் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் வாதம். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உள்ளே சென்று ஆராய்ந்து எது தேவை என்று அறிந்து செய்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை இழக்க வில்லை. அதாவது அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்திற்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து தேவையானவற்றைத் தருகிறார். இவர் நிச்சயம் சரஸ்வதி தேவியின் அம்சம் என்றார்.

இன்று முழுக்க மனம் இதையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

இதைப் படிக்கும் உங்களுக்கும் அப்படித் தானே...

ScottAlise
26th February 2013, 10:08 AM
Thillaana Mohanambal


Sivaji was at his prime during that time, yet he was confident enough to act in films that were heroine oriented like Vani Rani and TM. Even the title of the film is named after the heroine. Sivaji does not sing even one song in Thillaana Mohanambal! This might have prompted Thalaivar Rajini to do the same in case of Chandramukhi incidentally produced by Sivaji Films.

It was written by Kotthamangalam Subbu , in name as Kalaimani published in Viktan as 2 parts which was widely read by people in all walks of life. The readers even visualized NT as Sikkalar, Mohana as Padmini.

A great movie from APN, with KVM´s music. People who have read the original story would find lot of differences from the story and the Film. Still the film was a smashing success due to the acting abilities of NT, Manoramaa, Nagesh, Baalaiyaa, Padmini and others.

We all might know the story. Two artists a dancer and a Nadaswaram Vidwaan are competing against each other since they are so sure about their abilities. Even though they fall in love from their first meeting they need time and opportunity to express their love and how they succeed to get united after lot of problems is the story

TM is the first film for Padmini after giving birth to her first child. She worked in this film 6 months after her delivery. NT promptly called Padmini and informed about the proposal which she readily agreed. Infact NT would remind that she is not a women but Mohana constantly to make her get under the skin of character.

As for Padmini, in that song when the line navarasamum mugaththil navarasamum, one cannot but be amazed at her depiction of the 9 attributes within such a short time, each one metamorphising to another!

NT as Sikkalaar, no need to say something new. He lived in this role. Even though he just acted as a Nadaswara Vidwan his facial and body language shows how hard he must have trained to imitate the real Vidwan. The shy love he feels for mohana from the beginning. The short tempered attitude his dedication for his music are lessons for actors who wants to act. The scenes with Manorama in Nagapattinam are really worth mentioning. The mixture of feelings which were shown by NT is again great. Real brother sister attitude even in real life.

During their first Kutchery when people begin to leave to see the cracker display, NT will get angry and stop playing the Nagaswaram. Now AVM Rajan will say, "Azhagana inda kalaya kodutha Aandavan konjam kobathayum serthu koduthuttan", to which NT will reply, "Aamampa, kasukke adimai ayidatheda pavi, konjam un kalaikkum mariyadi kodu". This dialogue reflects his real life dedication to the art.




Talking about Thillaana Mohanambal, one cannot forget the great acting by Balaiah! His sense of comedy timing was so excellent when she smells Jil Jil Ramamani, thalams on a girl mistakenly especially when he hangs his head in shame when caught.
nalam thaanaa song was another gem. kannadhasan genius was amply showcased in this situational song.!

The nadhaswaram has found a permanent place in most traditional functions. It was wonderfully played by Ponnusamy and Sethuraman brothers.


NT as Sikkal Shanmugasundaram brings a typical Tanjore Nadaswara Vidwaan before our eyes, supported by AVM Rajan as Thangarathinam The whole team of SS ( Sikkal Shanm.) Balaiyaa as Kaliyuga nandhi Muthurakku, Saarangapaani as Kodai idi Sakthivel brought two Thavil vidwaans before our eyes.

I enjoyed the movie very much. From the beginning there was something in this film which I found very interesting.



Manorama as Karuppaayi aka Jill Jill Ramaamani aka Rosaaraani was the real heroine of the film. Her way of talking in Madurai slang is really unforgettable. Even though her role was shorter than others she really stole the show. Especially in scenes where she plays Nadaswaram is a real treat, pain for stomach due to laughter

Nagesh as Vaithy. Nagesh is another pillar of strength of this film. To play a role like this needs a huge self confidence only Nagesh can do.

Sample of Nagesh’s acting prowness

மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:

"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்த்க்கிட்டு புறப்படுங்கோ"

"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"

"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கனும்"

"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"

"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"

"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".

"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"

Madhanpur Maharani (who is that lady ? ) will say in one of the scenes, " I don't like that man..he is a Jackal " . That's a perfect word to describe his character.



The team of Mohana conisting of Thangavelu as Nattuvanaar, T.R.Ramachandran as Varadan (Mirudhangam) did their job also very good. Esp. C.K. Saraswathy with her sidekick Vetthalai potti were very good, as a cunning mother

We all know its a classic in its own way and commercially also it was a smashing hit and had number of re-releases. All this record without a single duet in the film

At at a time where almost all the movies will have a duet song for their lead pair and this one film comes without a duet song and becomes a great hit!!

Though the screenplay had a scope for a song (during Train scene) and even NT could have demanded one - but still NT didnt do it.




On the whole, TM is a thorough family entertainer with excellent performances & lovely
music . Not to be missed by NT fans and a true lover of good cinema. Its one of the master piece and top 10 movies of NT and Tamil Cinema, liked by MGR and frequently watched by Kalaingar Karunanithi

A crown in jewel for NT & APN Combo

Sad that all other actors except AVM Rajan& Manorama have expired

Hoping for its re release again

KCSHEKAR
26th February 2013, 11:04 AM
Dear Mr.Gopal / Mr.Ganpat

Your posts about Mudhal Mariyaathai - Very nice one.

JamesFague
26th February 2013, 12:40 PM
Mr Raghavendra Sir,

Nice info on NT's multifaceted talent.

adiram
26th February 2013, 01:01 PM
Mr. Raghulram,

Your writing about Thillana Mohanambal is good, but it seems as a reproduction of somebody's writing in the same thread in a previous part.

This essay is very familier as word by word it has already read, especially the tamil font.

The previous one might be posted by any other hubber, or might be same you have posted before.

IliFiSRurdy
26th February 2013, 05:16 PM
முதற்கண் நண்பர்கள் வனஜா மற்றும் சந்திரசேகருக்கு என் இதயபூர்வமான நன்றி.

எங்கோ வியத்னாமில் இருந்து கொண்டு என்னை எழுதத்தூண்டும் விதத்தில் பதிவிடும் நண்பர் கோபாலிற்கு, அடுத்த நன்றி.

கணேசனை நினைத்துகொண்டால் யாரால் தான் எழுத முடியாது என என்னை உணரச்செய்த, அம்மகா கலைஞனுக்கு நமஸ்காரம்.

================================================== ====================================

கணவனை சித்திரவதை செய்வதில் மனைவிமார்கள் பல முறைகளை கையாள்வார்கள்..
பொதுவாக இதற்கான காரணம் என்னவோ, அவனிடம் இருக்கும் ஒரு குறை அல்லது இயலாமை ஆக இருக்கும்.

திருமணம் ஆகாத இளைஞர்கள் பார்க்கவே கூடாத திரைப்படம் ஒன்று உள்ளது என்றால் அது "Who is afraid of the Virginia wolf " எனும் 1968 இல் வந்த ஹாலிவுட் திரைப்படம் ஆகும்.அதில் மனைவியிடம்(எலிசபத் டெய்லர்) கணவன் (ரிச்சர்ட் பட்டன்) படும் அவஸ்தையை பார்த்தால் ,எவனுக்கும்,ஜன்மத்திற்கும் திருமண ஆசையே போய் விடும்.

இதற்கு அருகாமையில் வரும் படம் நம் "படித்தால் மட்டும் போதுமா".படிக்காதவர் எனும் ஒரு குற்றதிற்காக ராஜ சுலோச்சனா ,தலைவரை படுத்தும் காட்சிகள்.(ஆனால் என்ன இருந்தாலும் நம் இந்திய/தமிழர் பண்பாடு என்று ஒன்று இருக்க்கிறதல்லவா!.மனைவி எப்படி கணவனை அவமதிக்கலாம்? அதை நிரூபிக்கும் வகையில்,பின்னால் தலைவர் சுருதி ஏற்றிக்கொண்டு, அவளை சாட்டையால் பின்னி எடுத்து விடுவது வேறு விஷயம்) அதே போல கணவன்(நாசர்) அப்பாவி என்பதற்காக ராதிகா நாசரை படுத்தும் பாடு (ஜீன்ஸ்)இன்னொரு உதாரணம்.

அதற்கு மாறாக சாத்வீக சித்திரவதை எனும் பிரிவும் உண்டு.இதைப்பொதுவாக நம் விஜயகுமாரி போன்ற கதா நாயகிகள் செய்வது வழக்கம்..நடு இரவில் திடு திப்பென்று படுக்கை அறையிலிருந்து கிணற்றடிக்கு ஓடி வாளி வாளியாக இழுத்து ஸ்நானம் செய்தால், எந்த மானமுள்ள கணவன்தான் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க மாட்டான்?(சாரதா),

ஆனால் முதல் மரியாதையில் (அப்பாடா! ஒரு வழியா விஷயத்திற்கு வந்தான்டா) பாரதிராஜா எடுத்துக்கொள்வது முற்றிலும் வேறு பிரச்சினை.உளவியலில் தன செய்த குற்றத்தை தானே மறக்க இன்னொரு அப்பாவி ஜீவனை வதைப்பது ஒரு வகை நோயாக கருதப்படும்.இதை project செய்வதில்
" பாரதி ராஜா" மன்னன்.

தான் என்னதான் சிறுவயதில் ஒருவனை நம்பி ஏமாந்தவளாக இருந்தாலும் ,தன்னை திருமணமும் செய்து கொண்டு ,வாழ் நாள் முழுதும் விளக்கெண்ணை குடித்தால் போல கணவன் வாழ்வதை எதிர்கொள்ளும் ஒரு தைரியசாலியான மனைவி வடிவுக்கரசி.அவள் ராஜசுலோச்சனா போல கணவனை முழு உதாசீனம் செய்யாமல்,எங்கே, எப்பொழுது, அடித்தால் வலிக்குமோ அதை செவ்வனே செய்து வருபவள்.இது, ஒரு உண்மையை எப்பொழுதும் மறக்காமல் இருக்கும் தன் கணவனுக்கு, அவள் கொடுக்கும் தண்டனை.இதன் இன்னொரு உளவியல் வடிவம் "கிழக்கு சீமையிலே" நெப்போலியன் தன் மச்சான் விஜயகுமாரின் மேல் பாராட்டும் விரோதம்.இது ஒரு உண்மையை(தன சகோதரி தற்கொலைக்கு தான் தான் காரணம் ) தான் மறந்து விடுவதற்காக, இன்னொருவனுக்கு கொடுக்கும் தண்டனை. அதே போல பெற்ற மகளை பணயமாக வைத்து தோற்ற குற்றத்தை தன காளையின் மீது ஏற்றி, அதை குரூரமாக குத்திக்கொல்லும் ஒரு தந்தையும் இவ்வகையை சேர்ந்தவனே(மண் வாசனை)

அதற்கு மாறாக ராதாவிற்கு தலைவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு,அவருடைய ஆண்மை நிறைந்த கம்பீரம் மற்றும்,ஆணவமற்ற நட்புணர்ச்சி பால் ஏற்படுவது.அவர் மனைவி ஒரு கொடுமைக்காரி என அறியும்போது அது அன்பா காதலா எனும் நிலை அறியா உணர்வாக பரிமளித்து,அந்த கேள்விக்கான பதிலை,அவள், அவர் மனைவியின் "விளக்குமாறு" மூலம் தெரிந்து கொள்கிறாள்! இதே சங்கட நிலையை அனுபவிக்கும் தலைவருக்கும், ஊர்பஞ்சாயத்து விடை காண உதவுகிறது..(ஆமா நான் அவள வச்சுண்டுதான் இருக்கேன்)

சரி பாயசம் ரெடி. முந்திரி,திராக்ஷை,குங்குமப்பூ போடவேண்டியதுதான்.

வருகிறார் வைரமுத்து..

ஏ குருவி
சிட்டுக்குருவி

ஒஞ் சோடி எங்க
அத கூட்டிக்கிட்டு

எங்க விட்டத்துல
வந்து கூடு கட்டு

பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்போ பொண்டாட்டி இல்ல
வந்து என்கூட பாடு

என்று அவர் பாட,

ஏ குருவி
சிட்டுக்குருவி

ஏ குருவி
ஐயா உள்ளத்துல
நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள
கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிக்காரி
வந்து என்னான்னு பாப்பா
இங்கு உன் கூட்ட பாத்தா
கொடக்கூலி கேப்பா

என்று அவள் இழுக்க,

கண்டேன் ஸீதையை என்பது போல அவர்
செல்ல கோபத்துடன்..

ஏ எவடி
அடியே எவடி
ஏ எவடி அது…

எனும் மூன்று சரணங்கள் மூன்று ரீலுக்கான திரைக்கதையை சொல்லி விடும்.

சரி அவருக்குத்தான் என்ன குறை?

சொல்கிறார் வைரமுத்து:

பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை

இந்த வேதனை யாருக்குதான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

எதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி

சுக ராகம் சோகம் தானே..

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா



உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

இச பாட்டு படிச்சேன் நானே…

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

அடி நீதானா அந்த குயில்
யார் வீட்டு சொந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான் தானே அந்த குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா


அடுத்த ஆறு ரீல் over..

சரி பாயசம் தூள் ..சேர்பனவை எல்லாம் சேர்த்தாகி விட்டது..இனி அதை பரிமாற நல்ல பாத்திரம் வேண்டுமே..

இளையராஜா எனும் மேதை தங்க கிண்ணம் கொண்டு வருகிறார்..

அதகளம் செய்கிறார்..

தூளியில் இருந்த என் ஒரு வயது மகன் தன்நேயர் விருப்பமாக தன தாயிடம் மழலையில் சொன்ன பாடல்.."ஆஜா"

உடனே அவள் பாடுவாள் .."ராஜாவே வருத்தமா !"

என்னதான் அதன் quality, சூப்பர் சிங்கரின் முதல் ரவுண்டில் மஹதியை ஒரே வரிக்குப்பிறகு சிகப்பு விளக்கு சுவிச்சை போடவைக்கும் அளவுதான் என்றாலும்,அவன் ஆனந்தமாக உறங்க ஆரம்பிப்பான்.

சோகத்தை பொழியும் வரிகள்,அதை உச்சிக்கு கொண்டு செல்லும் இசை,அதை தன முகபாவத்தில் காண்பிக்கும் மகா கலைஞன்,நம்மை மெய்மறக்க செய்து இதுவா சோகம்? இதுவல்லவோ சுகம் என எண்ண வைக்கும்.

முத்தாய்ப்பாக அந்த climax ?

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்,பத்து கி.மீ. தொலைவில் ராதா வந்து இறங்க, இங்கே படுத்து கிடக்கும் நம் தலைவரின் கை நரம்புகளை அசைத்த. அந்த காட்சி,,

இன்று சுமார் 3000 கி.மீ தூரத்திலிருந்து என் நண்பர் இந்த காட்சியை தனது விரல்களால் மீண்டும் விவரிக்க,இங்கு சென்னையில் என் விரல்களை தன்னிச்சையாக கீ போர்டின் மேல் அசைக்கவும் வைத்தது எனில்,

அதன் வீரியத்தை, அற்புதத்தை என்னவென்று சொல்வது?

Ganpat இன் "முதல் மரியாதை" இங்கு முடியும்..

பாரதிராஜாவினுடய "முதல் மரியாதை" க்கோ முடிவே இல்லை.

தமிழ் உள்ள வரை அந்தக் காவியம் இருக்கும்..

JamesFague
26th February 2013, 05:26 PM
Mr Ganpat,

Nice posting on MM.

IliFiSRurdy
26th February 2013, 06:15 PM
[QUOTE=RAGHAVENDRA;1021515]

இதற்கு நான் கேட்டேன். அவருடைய நடிப்பை மிகை நடிப்பு என விமர்சிக்கிறார்களே என்று. அதற்கு அவர் கூறிய பதில் என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது.....


இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் சொன்னது நம் அத்தனை பேர் நெஞ்சிலும் பால் வார்த்தது.

மிகை நடிப்பு என்பதெல்லாம் கலையைப் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் வாதம். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உள்ளே சென்று ஆராய்ந்து எது தேவை என்று அறிந்து செய்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை இழக்க வில்லை. அதாவது அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்திற்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து தேவையானவற்றைத் தருகிறார். இவர் நிச்சயம் சரஸ்வதி தேவியின் அம்சம் என்றார்.

இன்று முழுக்க மனம் இதையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

இதைப் படிக்கும் உங்களுக்கும் அப்படித் தானே...[/QUOTE

நண்பர் ராகவேந்திரா சொலவது முற்றிலும் உண்மை..

இது தொடர்பாக நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு அற்புத நிகழ்வை மீண்டும் நினைவு கூர்வது என் இனிய கடமை ஆகிறது.

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி..

அன்றைய காட்சியான "தன் மனைவியின் உடல் முன் குமுறி அழுது துடித்து விட்டு",செட்டில் உள்ள அனைவரையும் அழ வைத்து,அவர்கள் பாராட்டையும் பெற்று கொண்டு,தன அறையில் கம்பீரமாக நுழைகிறார் அவர்..

உள்ளே நடிகர் சோவும் எதோ விஷயமாக பேச வருகிறார்.சம்பாஷனை தொடர்கிறது..

"என்னடா? ஷாட்டை பார்த்தாயா?"

"ஓ.பார்த்தேன் சார் நல்ல இருந்தது!"

"என்னடா இழுக்கறே?ஒனக்கு அவ்வளவா ரசிக்கல இல்ல?"

பொய் சொல்லி பழக்கம் இல்லாத சோ வும் சொல்கிறார்,

"உண்மை சார்.நீங்க என்னமோ ரொம்ப அழுது புரண்டால் போல எனக்கு தோணிச்சு.இத சொன்னதுக்கு மன்னிச்சுடுங்க!"

அவர் எழுகிறார். ஒரு மேஜையை காட்டி "இங்கு அவள் உடல் இருக்குன்னு வச்சுக்கோ.இப்படி நடிச்சிருக்கனும்னு சொல்றே இல்லையா?"

உடனே சோ வியப்படைய, ஒரு தளர்வான நடை நடந்து,அந்த ஷாட்டை முற்றிலும் வேறு விதத்தில் நடித்து முடிக்கிறார்.

"சார் சார் அற்புதம் சார் பிச்சுட்டீங்க! என்ன ஒரு reaction!! என்ன ஒரு expression! இத தான் சார் நீங்க செஞ்சிருக்கணும்"

"போடா முட்டாள்..இந்த மாதிரி நடிச்சா நீ மட்டும் தான் ரசிப்பே! நான் நடிச்சது எல்லாரும் ரசிக்க,"

sankara1970
26th February 2013, 06:25 PM
முதற்கண் நண்பர்கள் வனஜா மற்றும் சந்திரசேகருக்கு என் இதயபூர்வமான நன்றி.

எங்கோ வியத்னாமில் இருந்து கொண்டு என்னை எழுதத்தூண்டும் விதத்தில் பதிவிடும் நண்பர் கோபாலிற்கு, அடுத்த நன்றி.

கணேசனை நினைத்துகொண்டால் யாரால் தான் எழுத முடியாது என என்னை உணரச்செய்த, அம்மகா கலைஞனுக்கு நமஸ்காரம்.

================================================== ====================================


பாரதிராஜாவினுடய "முதல் மரியாதை" க்கோ முடிவே இல்லை.

தமிழ் உள்ள வரை அந்தக் காவியம் இருக்கும்..

திரு ganpat

முதல் மரியாதையை ஒரு குறிஞ்சி மலர்
தங்களது விவரணம் அருமை

அந்த மஹா கலைஞனுக்கு ரொம்ப நாள் கழித்து, பாரதி ராஜா, இளைய ராஜா, வைர முத்து
சேர்ந்து செய்த கெளரவம்

இதை எழுதும்போது , 75 நாட்களையும் தாண்டி, வெற்றிகரமாக நெல்லை சிவசக்தி யில், ஓடியபோது, முதல் மரியாதையை, செகண்ட் ஷோ. பார்த்த நியாபகம் வருகிறது.

நன்றி

IliFiSRurdy
26th February 2013, 06:27 PM
Mr Ganpat,

Nice posting on MM.

Thanks Mr.Vasudevan..

IliFiSRurdy
26th February 2013, 06:32 PM
நமது ரசிகர்களுக்கு, இந்த ஆஸ்கார் தேனாக இனிக்க வேண்டும்.
1)நமது நடிகர்திலகத்தின் வசந்த மாளிகை சுவரொட்டி இடம் பெற்ற life of Pi ,நிறைய oscar களை அள்ளி வந்துள்ளது. ஆங் லீ க்கு பாராட்டுகள்.
2)நமது நடிகர்திலகத்தை அச்சு எடுத்தது போல் நடிக்கும் டேனியல் டே லெவிஸ் க்கு மூன்றாம் முறையாய் சிறந்த நடிகர் பரிசு. இந்த ஏகலைவனை, அந்த துரோணர் சொர்கத்தில் இருந்து வாழ்த்துவார்.

பிறந்த நாள் காணும் தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். மணிமண்டபத்தை கவனியுங்கள் அம்மா.

நீங்கள் என்னதான் சொன்னாலும்,ஆஸ்கருக்கு சிவாஜி கடைசி வரை கிடைக்காததில் எனக்கு ஆழ்ந்த வருத்தம்தான்,கோபால். என்ன செய்வது,ஆஸ்கர் கொடுத்து வைத்து அவ்வளவுதான்!

sankara1970
26th February 2013, 06:40 PM
இன்று ஒரு பரத நாட்டிய விற்பன்னர் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்ததோடு மட்டுமின்றி அக்கலையில் மிக உயர்ந்த நிலையில் உள்ள கல்வித் தகுதியும் பெற்றவர். அதே நிலையில் மேலும் ஓர் ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாகக் கூறிய அவரிடம் அந்தத் தலைப்பைப் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய பதிலில் நான் வியப்பில் திகைத்தது நிஜம். காரணம் அவர் பரத நாட்டியத் துறையில் அடுத்த நிலை ஆய்வுக்கான பொருள் நடிகர் திலகமும் நாட்டியமும் என்பதாகும்.


இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் சொன்னது நம் அத்தனை பேர் நெஞ்சிலும் பால் வார்த்தது.

மிகை நடிப்பு என்பதெல்லாம் கலையைப் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் வாதம். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உள்ளே சென்று ஆராய்ந்து எது தேவை என்று அறிந்து செய்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை இழக்க வில்லை. அதாவது அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்திற்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து தேவையானவற்றைத் தருகிறார். இவர் நிச்சயம் சரஸ்வதி தேவியின் அம்சம் என்றார்.

இன்று முழுக்க மனம் இதையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

இதைப் படிக்கும் உங்களுக்கும் அப்படித் தானே...

டியர்
ராகவேந்திர

இந்த தகவலை படிக்கும் போது,

ஒரு பெண் நாட்டிய கலைஞர் நம் சிவாஜியின் பரம விசிறி என்று படித்த நினைவு -either Chithra Visweswaran or Padma Subramanian

Subramaniam Ramajayam
26th February 2013, 07:04 PM
நீங்கள் என்னதான் சொன்னாலும்,ஆஸ்கருக்கு சிவாஜி கடைசி வரை கிடைக்காததில் எனக்கு ஆழ்ந்த வருத்தம்தான்,கோபால். என்ன செய்வது,ஆஸ்கர் கொடுத்து வைத்து அவ்வளவுதான்!

Well said NADIGARTHILAGAM ku miss aana OSCAR avarudaya poster
idam petra VM kidaithathu only a small satisfactin. whenever I have visited OSCAR THEATRE in LOSANGLES I used to cry myself in home. I have made the remarks of NT in the visitors book there.
our fate likE THAT.

Gopal.s
26th February 2013, 07:06 PM
கண்பட் சார்,
உங்களுடைய ஒரு பதிவிற்காக, inspire செய்ய ஆயிரம் பதிவு வேண்டுமானாலும் இட ready . அமர்க்களமான பதிவுகள்.

பிரபு,
எனக்கு மிக ஆசை. அதில் ஒவ்வொரு பகுதியாக எடுத்து விளக்க வேண்டும் என்று. Will I not sail over the head of these people ? ஏனென்றால், அதை பற்றி ஒருவர் கூட ஒரு கேள்வி கூட எழுப்பவில்லையே? உங்களையும், கண்பட் சாரையும் தவிர?

ராகவேந்தர் சார்,
பாராட்டுக்கு நன்றி. உங்கள் நாட்டிய சாத்திர பதிவு அருமை. தொடருங்கள்.

நன்றி வனஜா .அப்பாடா ,திரும்பி வந்ததற்கு நன்றி. என் குற்றவுணர்வு குறைகிறது.

பார்த்தசாரதி சார்,
நான் எதிர் பார்த்த படி பதிவுக்கு முதல் பாராட்டு உங்களுடையதாகவே இருந்தது மகிழ்ச்சி.(எதிர்பார்த்த படி,முரளியிடம் இருந்து ஒன்றும் வரவில்லை. )

சந்திர சேகர்,சங்கரா(பாராட்டு எனக்கா ,கன்பட்டிர்கா.இருந்தாலும் இரண்டுமே எனக்கு மகிழ்ச்சிதான்),வாசு (நகல்) (என் பதிவுக்கு பிறகு சந்திப்பு,மோகன புன்னகை போன்ற அற்புதமான பூக்களால் கோலமிட்டதற்கு) முதலியோருக்கு நன்றி.

ராகுல் , தொடர்ந்து வரும் உன் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்.

வாசு(அசல்),
முனுசாமி-மாணிக்கம் பாணி அஞ்சல் பெட்டி பதிவை மிக ரசித்தேன்.நீங்கள் வந்தால் களை கட்டுகிறது.கொஞ்சம் sportive ஆக தொடருங்கள்.

RAGHAVENDRA
26th February 2013, 07:24 PM
பரத நாட்டிய விற்பன்னர் பதிவைப் பாராட்டிய சித்தூர் வாசுதேவன், கண்பத், சங்கரா கோபால் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
26th February 2013, 07:24 PM
ராகுல்
தில்லானா மோகனாம்பாள் பற்றிய தங்கள் நினைவலைகளுக்குப் பாராட்டுக்கள்.

eehaiupehazij
26th February 2013, 10:28 PM
Well said NADIGARTHILAGAM ku miss aana OSCAR avarudaya poster
idam petra VM kidaithathu only a small satisfactin. whenever I have visited OSCAR THEATRE in LOSANGLES I used to cry myself in home. I have made the remarks of NT in the visitors book there.
our fate likE THAT.

there is a category of life time achievement award in Oscar. Our NT's significant awards like Kairo best actor award, his stunning performances in films like Deiva Magan, Pudhiya Paravai, Bhim Singh's Pa series, VPKB, and Karnan above all may be properly compiled and sent to Oscar Committee, there is every chance that NT will get that award too easily as no other global actors who have received that award are not matching the histrionics and varietal talents of our NT. Mr.KC Sekhar may initiate some action towards this, I hope

eehaiupehazij
26th February 2013, 10:48 PM
Ardent NT followers like YG Mahendra can do this task of compiling the filmography, NTs movie runs and rerun histories, box office collections, variety of roles he took up, comparisons with his contemporaries like Marlon Brando, Charlton Heston, ....etc., If it clicks then the Oscar screening committee, of course without any sort of politics, will get into the task of processing an NT will certainly win over the coveted award. But how to start with? It will be possible by Sivaji Peravai and joining hands of all Indian Stars to represent to Oscar as done for Satyajit Ray.

Subramaniam Ramajayam
27th February 2013, 06:49 AM
Ardent NT followers like YG Mahendra can do this task of compiling the filmography, NTs movie runs and rerun histories, box office collections, variety of roles he took up, comparisons with his contemporaries like Marlon Brando, Charlton Heston, ....etc., If it clicks then the Oscar screening committee, of course without any sort of politics, will get into the task of processing an NT will certainly win over the coveted award. But how to start with? It will be possible by Sivaji Peravai and joining hands of all Indian Stars to represent to Oscar as done for Satyajit Ray.

Marvaleous sir your writings. will the concerned people will take suitable action so that GLORY LOST\DENIED WILL COMEBACK IN A viswarumam manner. peple like RAGHAVENDRAN KCSEKAR to bring it to the notice of our beloved brother ramkumar sir.

Gopal.s
27th February 2013, 06:53 AM
Ardent NT followers like YG Mahendra can do this task of compiling the filmography, NTs movie runs and rerun histories, box office collections, variety of roles he took up, comparisons with his contemporaries like Marlon Brando, Charlton Heston, ....etc., If it clicks then the Oscar screening committee, of course without any sort of politics, will get into the task of processing an NT will certainly win over the coveted award. But how to start with? It will be possible by Sivaji Peravai and joining hands of all Indian Stars to represent to Oscar as done for Satyajit Ray.
This is my long term wish. NT's past accomplishments like cairo award, Chevalier, civilian awards along with his land mark Films from 1952 to 1973 +Mudhal Mariyadhai+Devar magan should be taken at appropriate forum along with a good compilation on his Acting prowess with Specific notes on our deviant sensibilities and Film appreciation(Unique to south barring Kerala) and our cultural ethos.
I am willing to be a part of this delegation.

eehaiupehazij
27th February 2013, 07:12 AM
thanks for the response ramajayam sir and gopal sir. The uniqueness of NT has been the close-up shots in which the multi-dimensional facial expressions have been brought out by no other actor of this Universe including all those who had got the coveted Oscar so far for acting. The last minutes of Karnan in his death bed, NT's fantastic movements in Enge Nimmadhi song of Pudhiya Paravai, his courage to enact a suffering father to 9 children in Motor S'Pillai with his future heroines as his daughters, bringing to life VPKB, VOC and Lord Shiva, his synchronization with Instruments handling in movies like Thillana and Mirudhanga Chak, and above all his 100 percent lip movement to songs like Neeye Unakku endrum nigaranavan, Pattum Nane, ... thookuthooki songs, ... and what not!The parody is that all the Oscar winning actors so far had only a short lived fame and name but as born in TN our NT could not get this award but continues to live in millions of hearts and minds of his fans all over the world even after he left us! The lining up of his record movies for rerun is the finest example of his immortality. All movie fans, forgetting their differences shall unite for getting the deserving recognition for the one and only Acting Thesaurus of this Universe!

Gopal.s
27th February 2013, 07:15 AM
அதற்கு மாறாக சாத்வீக சித்திரவதை எனும் பிரிவும் உண்டு.இதைப்பொதுவாக நம் விஜயகுமாரி போன்ற கதா நாயகிகள் செய்வது வழக்கம்..நடு இரவில் திடு திப்பென்று படுக்கை அறையிலிருந்து கிணற்றடிக்கு ஓடி வாளி வாளியாக இழுத்து ஸ்நானம் செய்தால், எந்த மானமுள்ள கணவன்தான் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க மாட்டான்?(சாரதா),

Ganpat Sir,
Had Vijayakumari known that her mid-night bath will induce her husband to choose the worse specimen than him like Ashokan, she wouldn't dare to bathe even during day time for years!!!????

Gopal.s
27th February 2013, 07:26 AM
thanks for the response ramajayam sir and gopal sir. The uniqueness of nt has been the close-up shots in which the multi-dimensional facial expressions have been brought out by no other actor of this universe including all those who had got the coveted oscar so far for acting. The last minutes of karnan in his death bed, nt's fantastic movements in enge nimmadhi song of pudhiya paravai, his courage to enact a suffering father to 9 children in motor s'pillai with his future heroines as his daughters, bringing to life vpkb, voc and lord shiva, his synchronization with instruments handling in movies like thillana and mirudhanga chak, and above all his 100 percent lip movement to songs like neeye unakku endrum nigaranavan, pattum nane, ... Thookuthooki songs, ... And what not!the parody is that all the oscar winning actors so far had only a short lived fame and name but as born in tn our nt could not get this award but continues to live in millions of hearts and minds of his fans all over the world even after he left us! The lining up of his record movies for rerun is the finest example of his immortality. All movie fans, forgetting their differences shall unite for getting the deserving recognition for the one and only acting thesaurus of this universe!
சிவாஜி செந்தில் சார்,
இங்கேதான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உலகத்தை ஒட்டிய ரசனையில் நம் தேர்ந்தெடுப்பு இருக்க வேண்டும்.அவர் வாத்திய கருவி நடிப்புக்கு, தில்லானா, திருவிளையாடல் போன்றவை சிறந்தது.
அதை y .g .m , கமல், p _r ,என் போன்றவர்களிடம் விட்டு விடுங்கள். நாங்கள் பார்த்து கொள்வோம்.

ScottAlise
27th February 2013, 07:42 AM
Mr. Raghulram,

Your writing about Thillana Mohanambal is good, but it seems as a reproduction of somebody's writing in the same thread in a previous part.

This essay is very familier as word by word it has already read, especially the tamil font.

The previous one might be posted by any other hubber, or might be same you have posted before. yes tamil fonts were posted b4 but remaining were by me might be coincidence kindly excuse .I like this movie 4 my 500 th post i chose it. I will be careful in avoiding resemblences

RAGHAVENDRA
27th February 2013, 08:04 AM
a sample of images from the next film in Filmography, RAJA RANI

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/RRNTSample_zps80718799.jpg

RAGHAVENDRA
27th February 2013, 08:07 AM
தன்னுடைய பதிவுகளில் ஆட்சேபத்திற்குரியதாக கருதப் படுபவற்றைத் தான் நீக்கியுள்ளதாக திரு கோபால் கூறியுள்ளதால், அவருடைய பதிவை முன்னிறுத்தி பதில் பதிவிட்ட என்னுடைய பதிவையும் நான் நீக்குகிறேன்.

RAGHAVENDRA
27th February 2013, 08:29 AM
அப்படிப்பட்ட ஆஸ்காரே வேண்டாம் சார். ரசிகர்களின் ஆதரவை விட வேறு எந்த விருதும் அவரை கௌரவிக்கப் படப் போவதில்லை. முழு பாரா சொன்னால் என்ன ஒரு வரியில் சொன்னால் என்ன...வெறுமனே தேவர் மகன், முதல் மரியாதை இரண்டு படத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற படங்களையெல்லாம் எரித்து விடலாமே ... எதற்கு 50 வருட படங்களையும் அவர்களிடம் சொல்லி நேரத்தை வீணடிப்பானேன். தங்களுடைய கருத்துக்கு மறு கருத்து சொன்னால் ஆள் சேர்ப்பதா ... மனசாட்சி உள்ள எந்த சிவாஜி ரசிகரும் தங்கள் கருத்தை ஏற்க மாட்டார்கள். மிருதங்க சக்கரவர்த்தியை தாங்கள் இந்த அளவிற்கு தரக் குறைவாக விமர்சிக்கலாம் . எடுத்துச்சொன்னால் ஆள் சேர்ப்பா... யார் திரிக்கிறார்கள் என்பதை இதுவே சொல்லி விடும்.

தங்களுடைய கருத்துக்களுக்கு பதில் சொல்லக் கூடாது என்று தான் நான் அமைதி காக்கிறேன். திரும்பத் திரும்ப தாங்கள் இதைப் போலவே நடிகர் திலகத்தின் உழைப்பை அவமானப் படுத்தி வருகிறீர்கள்...

இதற்கு மேலும் தங்களுடைய கிண்டலும் கேலியும் தொடர்ந்தால் என்னுடைய id தடை செய்யப் பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து நான் கோபமாக பதில் எழுத வேண்டியிருக்கும்.

மற்ற ரசிகர்கள் தங்களைக் கண்டிக்கா விட்டால் அவர்கள் தங்களுடைய கட்சி என்று நான் சொல்லலாமா... தாங்கள் ஆள் பிடிக்கிறீர்கள் என்று சொல்லலாமா...

IliFiSRurdy
27th February 2013, 08:34 AM
Ganpat Sir,
Had Vijayakumari known that her mid-night bath will induce her husband to choose the worse specimen than him like Ashokan, she wouldn't dare to bathe even during day time for years!!!????

கோபால் அவர்களே,
உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன் நடிப்பு மோசம் எனும் உங்கள் கருத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்!
அன்புடன்,

Gopal.s
27th February 2013, 08:39 AM
deleted.

Gopal.s
27th February 2013, 08:44 AM
கோபால் அவர்களே,
உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன் நடிப்பு மோசம் எனும் உங்கள் கருத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்!
அன்புடன்,
அடப்பாவி,
நான் எங்கே அப்படி சொன்னேன்??? எத்தனை பேரு கிளம்பியிருக்காங்களோ??அவ்வ்வ் !!!!

Subramaniam Ramajayam
27th February 2013, 08:45 AM
இதுதான் தவறானது. முழு passage யும் quote செய்யாமல் ,வசதியாய் cut பேஸ்ட் செய்யாதீர்கள்.இது என் வேண்டுகோள். நான் சொன்னது தவறாக இருந்தால், நீங்கள் மறுத்து எழுதி, கண்டியுங்கள். ஆள் சேர்க்கும், political வேலை வேண்டாம். பிடிக்காதவர்கள்,அவர்களே முன் வந்து கண்டிக்கட்டுமே. நான் ஆஸ்கார் committee யில் இருந்து, மிருதங்க சக்ரவர்த்தி எனக்கு திரையிட பட்டு, ஆஸ்கார் வாழ்நாள் விருதுக்கு ஒருவர் பரிந்துரைக்க பட்டால், வயிற்றை பிடித்து கொண்டு, விழுந்து விழுந்து சிரித்து விட்டு, வயிற்று வலி மாத்திரைக்காக எழுந்து போய் விட்டு,திரும்பியே வர மாட்டேன்.

Power of ACTING TALENT OF NT in a variety of roles he has done has been WIDELY ADMIRED\ACCEPTED not only by Tamil speaking people and also non tamil people is a ACCEPTED TRUTH. Even his worst enemy also accepts this. why not SUCH A PERSON WHO HAD SHOWN VARAITIES in acting \life syles\walking styles in films
given some kind of oscars atleast now.

Gopal.s
27th February 2013, 08:55 AM
Power of ACTING TALENT OF NT in a variety of roles he has done has been WIDELY ADMIRED\ACCEPTED not only by Tamil speaking people and also non tamil people is a ACCEPTED TRUTH. Even his worst enemy also accepts this. why not SUCH A PERSON WHO HAD SHOWN VARAITIES in acting \life syles\walking styles in films
given some kind of oscars atleast now.
Oh !! God !!! நான் சொல்ல வருவது அதேதானே?ஆஸ்கார் பெற தகுதியுள்ள ஒரே உலக மேதை அவர் மட்டுமே. இப்போது discussion ,அதை எப்படி உலகுக்கு எடுத்துரைப்பது என்பதுதான். என்னிடம் விட்டால், சத்தியமாக வாழ்நாள் ஆஸ்கார் கிடைக்க செய்வேன். ஏனென்றால்,அவரை விட சிறந்த நடிகர்,உலக அளவிலேயே கிடையாது. நம் படங்களையும் மீறி,அதனை சாதிக்க வேண்டும்.

IliFiSRurdy
27th February 2013, 09:57 AM
நண்பர் கோபால் அவர்களுக்கு,

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.

என்ற கவிச்சக்ரவர்த்தி கம்பர் கூற்று நீங்கள் அறியாதது அல்ல.

சிவாஜி படங்கள் சம்பந்தமாக நான் இன்னொரு தளத்தில்,Ms. சாரதாவுடன் விவாதித்திருக்கிறேன்.
24 carat சிவாஜி ரசிகர்கள் என கருதப்படுபவர்கள் அவர் நடித்த அத்தனை படங்களும் சொக்கத்தங்கம் என நினைப்பவர்கள், சொல்பவர்கள்.அவைகளுக்கு 100.90,70,50 என மதிப்பெண் போடுபவர்கள் ஒரு மாற்று கம்மிதான் என்பது பொதுவான கருத்து.எனக்கும் சாரதா விற்கும் நிகழ்ந்த அந்த விவாதத்தை இன்னொரு 'நபருக்கு" விவரித்தபோது அவரும் சாரதாவின் கருத்தையே ஆதரித்தார்.Mind you,நான் அறிந்த மிக புத்திசாலியான,கூர்மையான, modern thoughts உள்ள நபர்களில் அவரும் ஒருவர்.அவர் சொன்ன ஒரு கருத்து(சாரதா சொல்லாதது) என்னை சிந்திக்க வைத்தது."நீங்கள் சொல்வதைப்போல சிவாஜியும் சில தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்திருப்பாரேயானால்,அவரை ஒரு ரங்கராவ்,நிலையில்தான் மக்கள் வைத்திருப்பார்கள்" என்பதே அது.

மேலும் நீங்கள் புகழும் போது எங்களுக்கெல்லாம் புரியாத மாதிரி புகழ்கிறீர்கள்.. (Stalinovsky,Meisner ,Straberg,Stella Adler,Chekhov,Oscar wilde,Spolin &Suzuki et al,et al).நாங்களும் "அதனால் என்ன பரவாயில்லை" என கடந்து விடுகிறோம்.ஆனால் விமரிசிக்கும்போது மட்டும் கோமாளி, குப்பை,அசிங்கம் என்று எங்களுக்கு பழக்கமான வார்த்தைகளைப்போடுகிறீர்கள்.."The Black Knight" பட வில்லன் போல என சொல்லி விட்டு போகலாமே!!

கடைசியாக ஒரு வேண்டுகோள்..

தடித்த வார்த்தைகளை களை பயன் படுத்துவதை தவிருங்கள்..
அது தேவை பட்டால் கூட..

ஆனானாப்பட்ட ஒளவையே,"எமனேறும் வாகனமே,ஏழேகால் லட்சணமே" என்றுதானே ஓட்டக்கூத்தரை இகழ்ந்துள்ளார்.."எருமையே,அவலட்சணமே" என்று இல்லையே!

என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்தபோது "நீங்க கர்ணன் மாதிரி சார்" என்று நான் விளம்ப,அவரோ "என்ன சார் இப்படி சொல்றீங்க?எங்க அப்பா அம்மா என்னை ஒண்ணும் கைவிடவில்லை!"என கோபப்பட்டார்.

நான் அவரை புரிந்து கொண்டு, அடுத்த முறை அவர் அதே போல உதவி செய்த போது, அவரிடம் "idiosyncratic,cuddlesome,perspicacious" என்றெல்லாம் சொல்ல, அவரும,சங்கோஜத்துடன்,"என்ன சார் இது நான் செய்த சிறு உதவிக்கு இவ்வளவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கொண்டு!" என இன்னும் நெருங்கிய நண்பரானார்.

International Sales இல் கொடி கட்டிப்பறக்கும் உங்களுக்கு நான் இதையெல்லாம் சொல்வதற்கு என் அறியாமை மட்டும் காரணமல்ல.நம் நட்பும் கூடத்தான்..

Have a great day!

eehaiupehazij
27th February 2013, 10:03 AM
I just quoted few movie clippings only as a tip of the iceberg. A movie may fail but NT's acting never failed... is the true statement. I have seen the full movies of some Oscar winners too. I dont know what hatred Mr. Gopal sir has on Mrudhang Chak movie. I mentioned not the entire movie but portions depicting NTs prowess in handling the instrument only. NT himself had admitted that playing mrudhang incurred him lot of homework to do it to perfection. OK. A group of eminent NT followers may take care of selecting the cream of his acting portions so that the Oscar committee should have the feeling of having ignored such a thespian of acting during his life time. If NT is conferred with an Oscar for his lifetime achievements my soul will rest in peace when I attain my mortality as the proud fan of NT.

IliFiSRurdy
27th February 2013, 10:17 AM
Ms.வனஜா,

Mmmmm, who that might be?:confused2:

//நான் அறிந்த மிக புத்திசாலியான,கூர்மையான, modern thoughts உள்ள நபர்களில் அவரும் ஒருவர்.//

இதிலிருந்தே தெரியவில்லையா அது நீங்கள் இல்லை என!!

IliFiSRurdy
27th February 2013, 10:27 AM
"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈ "

மிக மிக மிக நன்றி,வனஜா மேடம்..

//நான் முதல் மரியாதையை முதலில் பார்த்தபோது அந்த பாஷை புரியாதது மட்டுமல்லாமல் நல்ல கணவனை துன்புறுத்தும் பொல்லாத மனைவி என்று தான் சிறுமித்தனமாக எண்ணியிருந்தேன்//

இதுதான் எங்கள் இனத்திற்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய handicap ஏ..

ஆண்கள் பொல்லாதவர்கள் என்று உங்கள் பாலாருக்கு ஐந்து வயதிலேயே தெரிந்து விடுகிறது..
ஆனால் பெண்களும் லேசுபட்டவர்கள் இல்லை என்று எங்கள் பாலாருக்கு ஐம்பது வயதில் தான் தெரிகிறது.

Nature is highly biased towards your gender..

IliFiSRurdy
27th February 2013, 10:50 AM
சிவாஜி எனும் பேரழகனான தந்தை தன இரு மகன்களுடன் ஆஸ்கர் பார்ட்டிக்கு கிளம்புகிறார..

"ஏண்டா இந்த டிரஸ் எப்படி இருக்கு?" என அவர் கேட்க,

மூத்த மகன்,

"அப்பா உன் அழகிற்கும் கம்பீரத்திற்கும், எது அணிந்தாலும் பொருத்தமே!இதையெல்லாம் போய்கேட்டுக்கொண்டு?..ம்ம்ம்..சீக்கிரம் கிளம்புங்க!"என சொல்கிறான்.

அவர் கம்பீரமாக இளைய மகனை நோக்க, அவனோ,

"என்ன அப்பா இது?எவ்வளவு பெரிய பார்ட்டி அது?உங்கள யாரு இந்த நீல கலர் சூட்டையும் க்ரீம் கலர் ஷர்ட்டும் போட்டுக்கொள்ள சொன்னார்கள்? அந்த ash கலர் 3 piece சூட் உங்களுக்கு எப்படி இருக்கும்!அதோட அந்த கோடு போட்ட வெளிர் நீல full arm shirt,dark blue tie,போடுங்க.ஆமாம் நீங்க என்ன வினு சக்கரவர்த்தியா ? எதுக்கு அஞ்சு விரலிலும் மோதிரம்? சும்மா சிம்ப்ளா ஒன்னு போதும்.pointed shoe ச போடுங்க சும்மா பத்து வயசு குறஞ்சா மாதிரி இருக்கும்.போங்கப்பா... நான் சொன்னா மாதிரி எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வாங்க!" என்று சொல்கிறான்.

அண்ணன் தம்பிகளிடையே விவாதம் ஆரம்பிக்க,கண்களில் அன்பும் பாசமும் பொங்க, தந்தை அவர்களை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

IliFiSRurdy
27th February 2013, 11:24 AM
:roll:சிவாஜி அப்பா இந்த சின்ன மகள் சொல்வதையும் கேட்பாரா?

என்ன சந்தேகம்..நிச்சயமாக..daughters are always the pets of fathers..

adiram
27th February 2013, 12:15 PM
Suppose oruvar vandhu, "enakku mudhal mariyaadhai pidikkavillai, but Mirudhanga chakravarthydhaan pidiththirukkirathu" endru sonnaal, "appadeennaa nee unmaiyaana (or) sariyaana Shivaji fan illai" endru certify pannum thagudhi namakku irukkiradhaa?.

second one, mudhal mariyaadhai vandha varushamum kooda national award puzhakkaththil irundhathuthaane?. adhe padaththukkaaga vairamuththuvai kandukolla therindha jurigalukku shivaji kannil padaadhathu yen?.

Joannnem
27th February 2013, 12:48 PM
http://youtu.be/-oD7J1WRwVU

Gopal.s
27th February 2013, 01:17 PM
Suppose oruvar vandhu, "enakku mudhal mariyaadhai pidikkavillai, but Mirudhanga chakravarthydhaan pidiththirukkirathu" endru sonnaal, "appadeennaa nee unmaiyaana (or) sariyaana Shivaji fan illai" endru certify pannum thagudhi namakku irukkiradhaa?.

second one, mudhal mariyaadhai vandha varushamum kooda national award puzhakkaththil irundhathuthaane?. adhe padaththukkaaga vairamuththuvai kandukolla therindha jurigalukku shivaji kannil padaadhathu yen?.
தலைவா,
உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது பற்றி நாங்கள் பேசவில்லை. ஆஸ்கார் committee க்கு,எது பிடிக்கும்,எது பிடிக்காது, எதை explain பண்ணி ஒப்பு கொள்ள செய்வது என்பதுதான் கேள்வி.
நான் என்ன எழுதினாலும் எதிர்ப்புதானா? நான் சொல்வதில் உள்ள நியாயத்தை ,நேர்மையை புரிந்து கொள்ளவே மாட்டீர்களா?

adiram
27th February 2013, 01:19 PM
Welcome Sumithaa,

Happy to see, as soon as you got the registration to enter, your very first post is in Nadigar Thilagam thread. It shows you are an ardant NT fan.

Nice to watch the video you have posted. We hope this thread will proud to have you here.

Gopal.s
27th February 2013, 01:19 PM
அவற்றில் 'எத்தனை அழகு'& 'plum biting' scenes உம் இருக்காதென்று நினைக்கிறேன்! அப்படித்தானே?! :lol2:
அடுத்த பட்டாசு கொளுத்துகிறீர்களா? அந்த லிஸ்டை என்னிடமிருந்து வாங்க துடிப்பது புரிகிறது.

parthasarathy
27th February 2013, 01:30 PM
அன்புள்ள கண்பட் அவர்களே,

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் தாங்கள் வந்தாலும், அதிரடியாய் நுழைந்திருக்கிறீர்கள்.

ரசிக்கத்தகுந்த பதிவுகள். தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
27th February 2013, 01:31 PM
அன்புள்ள வனஜா மேடம் அவர்களே,

தாங்களும் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் அதிரடியாய் நுழைந்திருக்கிறீர்கள்.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

adiram
27th February 2013, 01:38 PM
Gopal sir,

irundhaalum, mridhanga chakravarthiyaip paarththu vayiru valikka sirippu varuvadhaaga solvathu konjam alla, romba over.

avar andha padaththil pala madangu uzhaiththu nadiththikkiraar. climax competitionil sondha maganai edhirththe avar mirudhanggam vaasikkumbodhu padum kashttam, dedication ellaam kannil neerai varavazaikkum. andha alavu dedicationaaga vaasiththiruppaar.

'adi vannakiliye ennai thannandhaniye' song innoru 'un kannil neer vazindhaal' alavukku manadhail paadhippai undaakkum.

adhu sari nammudaiya rasanaikku oscarkaaran enna alavu kol vaikkirathu?.

sari, that socalled 'ungal mudhal mariyaadhai'yai mattum oscar kaaran accept pannikkuvaan endru enna nichayam?. idhellaam pogaadha oorukku vazhi thedum vishayam.

adiram
27th February 2013, 01:54 PM
adhukkaagaththaan indha thread (part-10) ai, Devar Magan, Mudhal Mariyaadhai kaarargalukku vittu vittu, sandhippu, rishimoolam, amarakaaviyam patri vivaadhikka thani veedu sendraal, andha veettil ippodhu lock thongugirathu.

poottai thirandhu vittaal sivaji nadiththa 'mosamaana (??)' padangalai thookkikkondu ange poyiduvom.

anjaam class thaandaatha engalukku andha thread, Phd kaarargalukku indha thread endru vasathiyaaga poyidum.

Gopal.s
27th February 2013, 01:57 PM
adhukkaagaththaan indha thread (part-10) ai, Devar Magan, Mudhal Mariyaadhai kaarargalukku vittu vittu, sandhippu, rishimoolam, amarakaaviyam patri vivaadhikka thani veedu sendraal, andha veettil ippodhu lock thongugirathu.

poottai thirandhu vittaal sivaji nadiththa 'mosamaana (??)' padangalai thookkikkondu ange poyiduvom.

anjaam class thaandaatha engalukku andha thread, Phd kaarargalukku indha thread endru vasathiyaaga poyidum.
நல்ல கேள்வி சார்.
ஆஸ்கார் தானே வீட்டுக்கு வராது. lobbying அவசியம்.
life time oscar ஒரு படத்தை மட்டும் காட்டி வராது.
அவருடைய credentials ,அவருக்கு பிரகாசமான வாய்ப்பை அளிக்கிறது.(Cairo ,chevalier போன்றவை)
நாம் தேர்ந்தெடுத்த சில படங்கள் ,clippings இவற்றோடு, அவரின் நடிப்பின் சிறப்புகள் பற்றிய write -up கொண்டு செல்ல வேண்டும்.
நமது cultural background ,movie making style இப்போது உலகத்துக்கு பரிச்சயம் ஆகி விட்டதால் ,அனாவசிய கேள்வி எழாது.
ஆனால், In -appropriate acting என்று சொல்லும் ,உலக அளவில் ஏற்புடையவல்லவற்றை , நமது ரசனைக்கு ஒத்ததாக இருந்தாலும் ,நிராகரித்து, objective ஆக தேர்வு செய்ய வேண்டும்.
100 சதவிகித வாய்ப்புள்ள project இது.

RAGHAVENDRA
27th February 2013, 02:43 PM
Hearty welcome to Sumithaa
As Adiram said, happy to find your first posting immediately after registration, in the Nadigar Thilagam thread. And a very good video to begin with.
I hope yours will be a valued contribution here as others.

RAGHAVENDRA
27th February 2013, 03:02 PM
விருதுகளுக்கு படங்களை அனுப்பும் போது ஒரு படைப்பில் உள்ள சில பகுதிகளை நீக்கி விட்டு அனுப்புவது உலகெங்கும் உள்ள நடைமுறை தான். இதற்கு எந்தக் கலையும் விதிவிலக்கல்ல, சினிமா உள்பட. அதே போல் எந்த குப்பைப் படமாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு அம்சம் அல்லது பங்களிப்பு விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டு விருது பெறுவதும் நடைமுறையில் உள்ளது தான். இதில் ஆஸ்கார் பரிசும் அடங்கும். எத்தனையோ முறை மோசமான படம் கூட ஏதாவது ஒரு துறைக்கு விருது பெற்றுள்ளது. எனவே படங்களைத் தேர்ந்தெடுத்து ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு சமர்ப்பிப்பது ஒன்றும் எதிர்க்கக் கூடிய விஷயமல்ல,சொல்லப் போனால் அப்படித் தான் செய்ய வேண்டும். உதாரணம் செவாலியே விருது. செவாலியே விருதிற்கு அவர் நடித்த அத்தனை படங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் பார்த்து தான் விருதுக்கு consider பண்ண வேண்டும் என்றால் குறைந்தது இதற்கே ஒரு வருடமாவது ஆயிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே தேர்ந்தெடுத்து படங்களை அனுப்புவது தான் நடைமுறை.

ஆஸ்கார் குழுவின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை நடிகர் திலகத்திற்கு வழங்க வேண்டுமென்றால் அதற்கு PREPARATION செய்ய வேண்டும். அவர் திரையுலக காலம் 50 ஆண்டுகள் என்றால் அந்த 50 ஆண்டு காலம் முழுதும் அவருடைய சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அது மட்டுமின்றி அவற்றில் பல மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றிருந்ததையும் ஆதாரத்துடன் நிரூபித்து, அவர் வாங்கிய விருதுகள், அவருடைய திரைப்படங்கள் மூலம் சமுதாயத்தின் மேன்மைக்கு அவருடைய பங்களிப்பு போன்றவையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

அவருடைய முதல் படம் தொடங்கி இறுதிப் படம் வரை [கௌரவ வேடத்தையும் சேர்த்து]யிலான 300க்கும் மேலான படங்களில் தேர்ந்தெடுத்த காட்சிகளைத் தொகுத்து அனுப்புவதே சிறந்தது. இதில் கால கட்டத்தை நிர்ணயிப்பது நிச்சயமாக நியாயமாக இருக்காது. தேர்ந்தெடுக்கும் குழு அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்து அவற்றிலிருந்து காட்சிகளைத் தொகுப்பதே முறை.

Gopal.s
27th February 2013, 03:08 PM
எப்படியோ சார்,
என் தெய்வத்திற்கு, life time oscar கிடைத்து, அதை கொண்டாட நான் ஊர் வந்து, உங்க எல்லோருடனும் விருந்துண்டு களிக்க ,கடவுள் அருள வேண்டும். கடவுளுக்கு, விருது கிடைக்க கடவுள் அருளா ?(அவனருளாலே, அவன் தாள் வணங்கி என்று சொல்வது போல் இல்லை?) but உங்கள் treat ஆக இருக்க வேண்டும் ராகவேந்திரா சார்.

RAGHAVENDRA
27th February 2013, 03:18 PM
டியர் கோபால் சார்,
தங்களுடைய ஆதங்கம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. என்ன தான் விருதைப் பற்றி கவலையில்லை என்று சொன்னாலும் அது கிடைக்கும் போது நாம் நிச்சயமாக சந்தோஷப் படத்தான் செய்வோம். அது தான் யதார்த்தம். அப்படி இருக்கும் போது ஆஸ்கார் விருது நிச்சயம் ரசிகர்களுக்கு நீண்ட நாள் கனவு. தாங்கள் கூறுவது போல் நடிகர் திலகத்திற்கு அவ் விருதிற்குரிய தகுதிகள் மற்ற எல்லாரையும் விட பற்பல மடங்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் அதனை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை. அதை lobbying என்று சொல்லலாம். இந்த இடத்தில் லாபியிங் என்பதை நம் நாட்டு அரசியல் வாதிகளின் லாபியை நினைக்க வேண்டாம். ஆஸ்காருக்கான லாபியிங் என்பது அதற்கான ஆவணங்களைத் தயாரித்து அதை யாரிடம் சேர்க்க வேண்டும் எப்போது சேர்க்க வேண்டும் எப்படி சேர்க்க வேண்டும் என்பன போன்ற நடைமுறைகளைக் குறிப்பதாகும். இதை நிச்சயம் செய்ய வேண்டும்.

தாங்கள் சொல்ல வந்த கருத்தை சரியான முறையில் சொல்லாததினால் தான் வாதங்கள் வருகின்றன. நான் பல முறை கூறி வந்துள்ளது போல் அவர் நடித்த படங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் அவருடைய பங்களிப்பு ஒரு படத்தில் கூட ஒரு சதம் கூட குறைந்ததில்லை, தாங்கள் வெறுக்கும் சந்திப்பு, அமர காவியம் போன்ற படங்கள் உட்பட. தோல்விப் படங்களை அவர் எல்லா காலத்திலும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கான காரணம் நிச்சயம் அவரல்ல.

என்னைப் பொறுத்த வரை அவருடைய படங்களை விட அவருடைய நடிப்பிற்காகவே அத்தனை படங்களையும் பார்ப்பவன் விரும்புபவன், அது எப்படிப் பட்ட குப்பைப் படமாயிருந்தாலும் கூட.

JamesFague
27th February 2013, 03:34 PM
Mr Raghavendra Sir,

Well said Sir. Here I would like to mentioned the words
of Mr Joe that Sivaji Padam Thorkalam Sivaji Thorpathillai.

adiram
27th February 2013, 03:41 PM
//life time oscar கிடைத்து, அதை கொண்டாட நான் ஊர் வந்து, உங்க எல்லோருடனும் விருந்துண்டு களிக்க ,கடவுள் அருள வேண்டும்//

Mr. Gopal sir,

same like this I will give a grant treat to all of the hubbers here, specially for you on the inaguration day of 'Shivaji Ninaivu Illam'.

(enna oru vishayamnaa, indha irandu virundhugalume ungalukku kidaikkap povathillai endru ninaikkumpodhuthaan varuththammaga irukku)

Joannnem
27th February 2013, 03:58 PM
My sincere thanks to mr.adiram and mr. Raghavendran for your welcome note.

Being a nadigar thilagam fan i want to give some suggestion to the hubbers who are highly educated & settled in well position .

When we are accepting nadigar thilagam as greatest actor eversen before ,why should we worry about other awards.

Each and every movie of nt [parasakthi to poo parikkavarugirom] he did his best level . May be some secenes are not performed .

He gave excellent - best - very good - good and fair movies.

Avoid unwanted discussions like chatting . It will not help in any way .

Avoid personal attacks .

Please comment in proper method .

Every one should involve and writeup about nt's different movies , post your valuable comments,

no need to appreciate every postings to ever one .

Forget the superiority complex.

All are in one shelter . That is nadigar thilagam .

Hope you all will understand .

Let us travel with nt movies in new dimension .

Remember-- all nadigar thilagam movies are vaira surangam .

If any one want to comment in negative form about nt ,let them start a new thread , not here.

This is humble request from nt fan .

Gopal.s
27th February 2013, 04:02 PM
//life time oscar கிடைத்து, அதை கொண்டாட நான் ஊர் வந்து, உங்க எல்லோருடனும் விருந்துண்டு களிக்க ,கடவுள் அருள வேண்டும்//

Mr. Gopal sir,

same like this I will give a grant treat to all of the hubbers here, specially for you on the inaguration day of 'Shivaji Ninaivu Illam'.

(enna oru vishayamnaa, indha irandu virundhugalume ungalukku kidaikkap povathillai endru ninaikkumpodhuthaan varuththammaga irukku)
ஏன் சார்,
நான் வாழ்க்கையில் நினைச்செதெல்லாம் நடந்துருக்கு. இதுவும் நடக்கும். பணத்தை தயாராய் வச்சிக்குங்க.

Gopal.s
27th February 2013, 04:08 PM
My sincere thanks to mr.adiram and mr. Raghavendran for your welcome note.

Being a nadigar thilagam fan i want to give some suggestion to the hubbers who are highly educated & settled in well position .

When we are accepting nadigar thilagam as greatest actor eversen before ,why should we worry about other awards.

Each and every movie of nt [parasakthi to poo parikkavarugirom] he did his best level . May be some secenes are not performed .

He gave excellent - best - very good - good and fair movies.

Avoid unwanted discussions like chatting . It will not help in any way .

Avoid personal attacks .

Please comment in proper method .

Every one should involve and writeup about nt's different movies , post your valuable comments,

no need to appreciate every postings to ever one .

Forget the superiority complex.

All are in one shelter . That is nadigar thilagam .

Hope you all will understand .

Let us travel with nt movies in new dimension .

Remember-- all nadigar thilagam movies are vaira surangam .

If any one want to comment in negative form about nt ,let them start a new thread , not here.

This is humble request from nt fan .
வாங்கம்மா சுமிதா,
உங்க advise ஒண்ணுதான் பாக்கி. ஆனாலும், ரொம்பத்தான்.இரு heavy -weight வரவேற்பு கொடுத்ததுமே......
பிடியுங்கள் என் வரவேற்பையும்.
வருக.வருக.(பொம்பிளே பேரிலே வந்தாலே மவுசுதான்யா)

IliFiSRurdy
27th February 2013, 04:10 PM
முதலில் அந்த lobbying ஐ இந்திய அரசாங்கத்திடமே ஆரம்பித்திருக்கலாமே, 20 வருடங்களுக்கு முன்னர்?

இந்திய அரசாங்கமா! அப்படின்னா?

அவருக்கு ஆஸ்கர் விருது வாங்க பல வழிகள் இருக்கலாம்..
ஆனால் நிச்சயமாக அது கிடைக்காமல் இருக்க ஒரே வழிதான் உள்ளது..

அது....இந்திய அரசின் உதவியை நாடுவது.

Joannnem
27th February 2013, 04:19 PM
Thanks gopal sir


i gave only suggestion . Not advise gopal . Thanks for your welcome . Let us go for healthy discussions .sorry for jokes.

adiram
27th February 2013, 04:21 PM
Gopal sir,

myself and Raghvendra sir mentioned just as 'welcome sumithaa' (without mentioning gendour).

neengadhaan "vaangammaa" endru azaiththu, avarukku penn uruvam koduththeergal.

idhula, kadaisiyil oru kindal note veru.

any how, if your desire attain the goal, I dont bother about expense of the treat.

Joannnem
27th February 2013, 04:34 PM
http://youtu.be/RABmwdzsOYw

RAGHAVENDRA
27th February 2013, 04:37 PM
Rare Images அபூர்வ நிழற்படங்கள்

As a welcome gesture to Sumithaa

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/rare06_zps714dac11.jpg

without watermark. A very rare photo of NT not much seen in magazines.

Joannnem
27th February 2013, 04:40 PM
http://youtu.be/VqA0Rqe60YA

thanks sir

Joannnem
27th February 2013, 04:46 PM
my all time sweet song foreverhttp://youtu.be/VUMI0rUtZ0s

IliFiSRurdy
27th February 2013, 05:05 PM
My sincere thanks to mr.adiram and mr. Raghavendran for your welcome note.
.........................
...........................
..........................

If any one want to comment in negative form about nt ,let them start a new thread , not here.

This is humble request from nt fan .


Welcome aboard the Hub ,Ms.Sumithaa..

It took more than 70 years for Moses to come out with ten commandments and 12 years for our Thalaivar to come out with six commandments,whereas on the very first day of your entry you have given us nine commandments, all gems!

I do hope that at least from now on, the members will follow these very strictly and bring fame to the thread.

I also see that you have posted some video songs of Thalaivar (all thaththuva paadalkal) and appreciate it.

BTW pl. be kind enough to excuse me for disobeying your 5th commandment namely..

no need to appreciate every postings to ever one .

Wishing you a happy time here here..

IliFiSRurdy
27th February 2013, 05:16 PM
அன்புள்ள கண்பட் அவர்களே,

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் தாங்கள் வந்தாலும், அதிரடியாய் நுழைந்திருக்கிறீர்கள்.

ரசிக்கத்தகுந்த பதிவுகள். தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

மிக்க நன்றி நண்பர் பார்த்தசாரதி அவர்களே..

நீங்களும் இந்த திரியை பொறுத்தவரை
இரா. பார்த்தசாரதி யாக இல்லாமல்,
இருக்கும் பார்த்தசாரதி யாகவே இருந்தது,

உங்கள் அற்புத பதிவுகளை அடிக்கடி வாரி வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்,
கண்பட்.

parthasarathy
27th February 2013, 05:23 PM
நல்ல கேள்வி சார்.
ஆஸ்கார் தானே வீட்டுக்கு வராது. lobbying அவசியம்.
life time oscar ஒரு படத்தை மட்டும் காட்டி வராது.
அவருடைய credentials ,அவருக்கு பிரகாசமான வாய்ப்பை அளிக்கிறது.(Cairo ,chevalier போன்றவை)
நாம் தேர்ந்தெடுத்த சில படங்கள் ,clippings இவற்றோடு, அவரின் நடிப்பின் சிறப்புகள் பற்றிய write -up கொண்டு செல்ல வேண்டும்.
நமது cultural background ,movie making style இப்போது உலகத்துக்கு பரிச்சயம் ஆகி விட்டதால் ,அனாவசிய கேள்வி எழாது.
ஆனால், In -appropriate acting என்று சொல்லும் ,உலக அளவில் ஏற்புடையவல்லவற்றை , நமது ரசனைக்கு ஒத்ததாக இருந்தாலும் ,நிராகரித்து, objective ஆக தேர்வு செய்ய வேண்டும்.
100 சதவிகித வாய்ப்புள்ள project இது.

அன்புள்ள கோபால் அவர்களே,

இந்த நேரத்தில், "இருவர் உள்ளம்" படத்தில் (இதற்கும் நடிகர் திலகம் படம் தான் தேவைப்படுகிறது) சரோஜா தேவி பாடுவது நினைவுக்கு வருகிறது. "யாசகம் பெறுவதல்ல காதல்....". என்னைப் பொருத்தவரை, ஆஸ்கர் விருதுகளும், கிட்டத்தட்ட அப்படி யாசகம்/லாபி செய்து தான் பெறப்படுகிறது.

அப்படி லாபி செய்து தான் தீர வேண்டும் என்றால், அந்த யுகக் கலைஞனுக்கு, அந்த விருதே வேண்டாமய்யா! கலைமகளின் மறு அவதாரம் என்று பெரும்பாலோர் ஒத்துக் கொண்டவருக்கு இது போன்று லாபி செய்து விருது கிடைத்து என்ன ஆகப்போகிறது?

இன்னொரு வேண்டுகோள். அவருடைய திறமையை, பங்களிப்பை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், அவருடைய நல்ல படங்களை எடுத்துச் செல்வோம் என்று எழுதலாம். எதை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எழுத வேண்டிய அவசியம் இல்லை - குறிப்பாக, அவற்றை மோசமாக விமர்சனம் செய்வது தேவையில்லாத ஒன்று. எதை எழுதினால்/விமர்சித்தால், சிலருக்கு கோபம் வருமோ, அதை இந்த திரியில், நாம் எழுதுவதை தவிர்த்தல் எல்லோருக்கும் நலம் பயக்கும்.

தாங்கள் "முதல் மரியாதை" படத்தை ஆய்வு செய்த விதம் அற்புதமாக இருந்தது. அதிலும், அந்த முதல் பாராவில், அவரது திறமையை பல்வேறு உலகப் பள்ளிகள்/கலைஞர்களுடன் ஒப்பிட்டு, அவர்தான் உலகின் முதல் கலைஞன் என்று கூறியதைப் பார்த்தவுடன் எனக்கு உடனே தோன்றியது - "இந்த ஒரு பாராவை மட்டும் உலகில் உள்ள அத்தனை சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் ஒரு முறை பார்க்க வேண்டும்" என்பது தான்! எப்படி, தங்கப்பதக்கம் படத்தைப் பார்த்து விட்டு, அன்றிருந்த காவல் துறை தலைமை அதிகாரி திரு. அருள் சொன்னாரோ (I want all the Police Officers of Tamil Nadu to see this movie !) அதைப் போல!! தாங்கள் வேறு நாட்டில் இருப்பதால் என்னால் உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால், உடனடியாக பாராட்டுப் பதிவிட்டு, ஆவலை அடக்க முடியாமல் உடனே திரு முரளி அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களது பதிவைப் பற்றிக் கூறி சந்தோஷமடைந்தேன்.

இப்படி ஒரு சந்தோஷமான ஒரு தருணத்தை உடனே, தங்களது வார்த்தைகள் சிதைத்து விடுகின்றன. உங்கள் ஒருவரால் தான் அற்புதப் பதிவுகளை இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உடனே, அவர்களை பெரிய அளவில் கோபப்பட வைக்கவும் முடிகிறது! எங்கே இதற்கு சிறப்பு பயிற்சி பெற்றீர்கள்?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

IliFiSRurdy
27th February 2013, 05:25 PM
Gopal sir,

myself and Raghvendra sir mentioned just as 'welcome sumithaa' (without mentioning gendour).

neengadhaan "vaangammaa" endru azaiththu, avarukku penn uruvam koduththeergal.

idhula, kadaisiyil oru kindal note veru.

any how, if your desire attain the goal, I dont bother about expense of the treat.

நண்பரே,

பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்.. :-)

RAGHAVENDRA
27th February 2013, 05:30 PM
My Choiceஎன் விருப்பம்

இப்பாடல் ராஜா ராணி திரைப்படத்தில் இடம் பெற்றது. தான் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி நடிகர் திலகத்துடன் பழகுகிறார் பத்மினி. உண்மையைத் தெரிந்து கொண்ட நடிகர் திலகம் பத்மினியை கலாய்க்கிறார். இது தான் சூழ்நிலை. இந்த இடத்தில் இடம் பெறும் இப்பாடலின் சிறப்பு மிகவும் அபூர்வமாக திரு எஸ். சி. கிருஷ்ணன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடியுள்ளார்

http://mio.to/i/art/2/000001/4777/1_175.jpg

இப் பாடலில் நடுவில் அங்கங்கே சிறிய வசனம் இடம் பெறும். இதையும் அவரே பேசி யிருக்கிறார். அப்படிப் பார்க்கும் பொழுது ஒரு பாடலில் நடிகர் திலகத்திற்கு பாடலும் வசனமும் பின்னணியில் ஒரே குரலில் ஒலித்தது இது தான் முதல் முறை. நடிகர் திலகத்தின் வாயசைப்பு மட்டும் இன்றி facial language முகமொழியும் கூட பாடகரின் குரலுக்கேற்ற வாறு செய்திருப்பது கவனிக்கத் தக்கது. அதுவும் அந்த வெள்ளுடையில் அவருடைய ஸ்டைலும் நடுவில் அந்த சிறு பாலத்திலிருந்து குதிக்கும் லாவகமும் அட்டகாசமாயிருக்கும். பாடல் முடிந்த பிறகு இரு கால்களாலும் தரையில் மாறி மாறி உதைத்த வாறே மிகவும் casual நடை போடுவார். பார்க்கப் பார்க்கத் திகட்டாத பாடல் காட்சி.


http://youtu.be/bb5yBwbKe3o

இரு தோள்களையும் மாறி மாறி குலுக்குவதாகட்டும், ஆங்... என்று ஹம்மிங் வரும் போது கையை பின்னால் கொண்டு சென்று ஸ்டைலாக சுழற்றுவதாகட்டும் .. பாருங்கள் பாருங்கள் ... இணையத்தில் முதல் முதலாக ....

IliFiSRurdy
27th February 2013, 05:30 PM
அன்புள்ள கோபால் அவர்களே,

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' ''''''''''''''''''''''''''''''''''''''
இப்படி ஒரு சந்தோஷமான ஒரு தருணத்தை உடனே, தங்களது வார்த்தைகள் சிதைத்து விடுகின்றன. உங்கள் ஒருவரால் தான் அற்புதப் பதிவுகளை இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உடனே, அவர்களை பெரிய அளவில் கோபப்பட வைக்கவும் முடிகிறது! எங்கே இதற்கு சிறப்பு பயிற்சி பெற்றீர்கள்?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Dear Shri.Parthasarathy,

சொன்னவுடன்(5.16pm) நிறைவேற்றியதற்கு(5.23pm) நன்றிகள் கோடி..

JamesFague
27th February 2013, 05:52 PM
Welcome Sumithaa Mam,

Thanks for uploading the En Magan Song which is favourite
not only to me but all the fans of our NT.

adiram
27th February 2013, 06:02 PM
//நண்பரே,

பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்..//

idhu engalukku theriyaadhaakkum..

noval writer Sujathavai, avar photovaip paarkkumvarai penn endre ninaiththavargal 95 % readers. theriyumaa?.

JamesFague
27th February 2013, 06:05 PM
Mr Parthasarathy Sir,

Try to post in your own style on NT's songs.

Gopal.s
27th February 2013, 06:06 PM
//நண்பரே,

பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்..//

idhu engalukku theriyaadhaakkum..

noval writer Sujathavai, avar photovaip paarkkumvarai penn endre ninaiththavargal 95 % readers. theriyumaa?.
நம் திரியிலுள்ள அசல் பெண்களை, சுஜாதா மாதிரி ஆணாக இருக்க வாய்ப்புண்டு என்று பதிவிட்டு ,அவமதிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Gopal.s
27th February 2013, 06:10 PM
Dear Shri.Parthasarathy,

சொன்னவுடன்(5.16pm) நிறைவேற்றியதற்கு(5.23pm) நன்றிகள் கோடி..
அட ,
பேசி வச்சிக்கிட்டுத்தான், இவ்வளவும் நடக்குதா? ஆஹா ,I dont make any efforts to make enemies என்பது என் வாழ்க்கையில்தான் எவ்வளவு உண்மை!!!???

Joannnem
27th February 2013, 06:17 PM
http://youtu.be/GSupVVrB5t8

one of my sweet song

P_R
27th February 2013, 08:30 PM
பிரபு, எனக்கு மிக ஆசை. அதில் ஒவ்வொரு பகுதியாக எடுத்து விளக்க வேண்டும் என்று. Will I not sail over the head of these people ? ஏனென்றால், அதை பற்றி ஒருவர் கூட ஒரு கேள்வி கூட எழுப்பவில்லையே? உங்களையும், கண்பட் சாரையும் தவிர?

I differ with you on multiple points.

1) எந்த ஒரு இடுகைக்கும் வரும் எதிர்வினை அதன் மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அல்ல. ரசித்துப் படிக்கும் இடுகைகள் ஆகட்டும், தகவல் அறிந்துகொள்ள உதவிகரமாக இருந்த இடுகைகள் ஆகட்டும் - எல்லாவறிற்கும் எல்லாரும் பதில் எழுதுவதில்லை. மேலே சொல்ல எனக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் 'படித்தேன், பிடித்தது' என்பதுபோல இடுகை இட நானே தயங்குவேன். என்போல பலர் இருக்கலாம்.

2) முன்பே பலமுறை பேசியதுபோல, பலவகை ரசிகர்களுக்கான பலவகை இடுகைகள் உள்ள திரி இது. நீங்கள் எப்படி எல்லாவற்றையும் படிப்பதில்லையோ, அதுபோல தான் உங்கள் எழுத்தும். விருப்பம் உள்ளவர்களை சென்றடையும். அதற்கான வாசகர் வட்டம் நீங்கள் நினைப்பதுபோல குறுகலானது அல்ல என்று ஓரளவு நிச்சயமாகவே சொல்வேன். You should not hold back.

3) மேற்கோள் காட்டப்பட்ட இடுகையில் உள்ள condescensionஐ சற்றே திருப்பிப் போடுகிறேன். எனக்கும் கண்பட்டுக்கும் (துணைக்கு அவரையும் சேர்த்துக்கொள்கிறேன்) புரியும்படி இருந்துவிடும் என்பது என்ன நிச்சயம்? உங்கள் நன்மதிப்பை ஏற்கமறுக்கும் அவையடக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது :-) 'முனைப்புடன் வாசிக்கவேண்டிய ஆர்வம் எவ்வாறு எங்களுடையதோ, அதே போல 'தெளிவாக எழுதவேண்டிய பொறுப்பு உங்களுடையது'. Meet us half-way என்கிறேன் :-)

4) Jokes apart, ஒரு criticism: அந்த முதல் பத்தியில் நீங்கள் குறிப்பிட்ட பெயர்கள் அனேகம் (எனக்குப்) புதிது. அவற்றைப் பற்றி விரிவாக விளக்கப்படாத பட்சத்தில் அது ஒரு பெயர்த்தோரணமாக மட்டுமே வாசகருக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு முதல்பத்தி, படிக்க முனைபவருக்கு படாடோபமாகப் பட்டு, ஆயாசத்தினால் மேற்கொண்டு படிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். Particularly when you know most of us do not know those names.

மாறாக எங்களுக்குத் தெரியாத அவர்களைப் பற்றி, எங்களுக்குத் தெரிந்த சிவாஜியுடன் தொடர்பு படுத்திப் நீங்கள் எழுதும் பட்சத்தில், பலர் ஆர்வமாக படிக்கவும், அதன் மூலம் சிலருக்கு புது திறப்புகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. அவற்றை உங்கள் முன்முடிவுகளால் முடக்கவேண்டாம், என்பதே என் வேண்டுகோள்.

Murali Srinivas
28th February 2013, 01:01 AM
கோபால்,

முதல் மரியாதை. ஏனோ அப்படி ஆகிவிட்டது. என்னவென்றால் மிக பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கும், எதார்த்த சினிமா பற்றி பேசுபவர்களுக்கும் மிக மிக பிடித்த இந்த திரைப்படம் பெருவாரியான நடிகர் திலகத்தின் ரசிகர்களின் டாப் 10-ல் இடம் பெறுவதில்லை.அதிலும் குறிப்பாக 60-களிலும் 70-களிலும் நடிகர் திலகத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களுக்கு இது அவரின் மேலும் ஒரு நல்ல படம் என்ற கருத்தே இருந்தது. அதற்காக அவர்கள் அந்தப் படத்தை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றோ அவர்களின் ரசனையில் ஏதோ குறை இருக்கிறது என்றோ அர்த்தம் இல்லை.

எனக்கு தோன்றிய காரணமெல்லாம் அவர் எத்தனை எத்தனையோ நல்ல பாத்திரங்களையும் படங்களையும் அளித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இதில்தான் அவர் நடிப்பு பரிமளித்தது என்றும் இதுதான் அவரின் மிக சிறந்த நடிப்பை உள்ளடக்கிய படம் என்றெல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட, அதுவே ஒரு சிவாஜி ரசிகனுக்கு இந்தப் படத்தை உச்சி முகந்து பாராட்ட ஒரு mental block-ஐ ஏற்படுத்தியது என சொல்லலாம். இதை ஏற்கனவே நமது திரியில் நானும் சாரதா போன்றவர்களும் எழுதியிருக்கிறோம். நண்பர்கள் பிரபு ராம் மற்றும் Maddy போன்றவர்களிடமும் நேரில் சந்தித்தபோது இதை சொல்லியிருக்கிறேன்.

குறிப்பாக நடிகர் திலகம் ராதாவின் குடிசையில் மீன் சாப்பிடும் காட்சியை மிகவும் சிலாகித்து சொல்பவர்களிடம் அதையெல்லாம் அதற்கு 17 வருடங்களுக்கு முன்பே உயர்ந்த மனிதன் படத்தில் செய்து விட்டார் எனபதை சொல்லுவேன். அன்றைய தினத்தில் இப்படி சின்ன சின்ன நகாசுகளை highlight செய்ய மீடியாக்கள் இல்லை என்ற காரணத்தினால் அவை இது போன்ற spot light-ல் வரவில்லை என்ற விஷயத்தையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது போன்ற காட்சி விவரணைகளில் இறங்காது படத்தையும் நாயக பாத்திரத்தையும் ஒரு மனவியல் ஆய்வாக நீங்கள் செதுக்கியிருக்கும் விதம் அருமை.

ரசிகர்களின் மனப்பாங்கைப் பற்றி சொன்னேன். அதற்கு பின்னால் வேறு ஒரு காரணமும் இருந்ததாக தோன்றுகிறது. அன்றைய கால கட்டத்தில் [1985 -ன் முற்பகுதி] வெளியான நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு தேக்க நிலையை பிரதிபலித்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தது. வெளியாகும் வரை படத்தை பற்றிய எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை. மிக மிக அதிசயமாக சுமார் மூன்றரை மாதங்கள் இடைவெளி இருந்தது. மே மாதம் வெளியான நேர்மை-க்கு பிறகு 1985 ஆகஸ்ட் 15-ல் இந்த படம் வெளியானது.

இந்த நேரத்தில் மதுரை சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தையும் கூற வேண்டும். [நான் இப்படி எழுதினாலே கிண்டலடிக்க கூடிய கோபால் இம்முறை அதை செய்ய மாட்டார்]. முதல் மரியாதை வெளியான அதே நேரம். மதுரையில் தங்கசுரங்கம் வெளியாகிறது. அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக மறு வெளியீடு காணாமல் இருந்த அந்தப் படம் புதிய பிரதி எடுக்கப்பட்டு ஆகஸ்ட் 16 அன்று சிந்தாமணியில் வெளியானது. ஒரு மாமாங்கத்திற்கு பின் வரும் ராஜனை வரவேற்க வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிய ரசிகர் படை மலைச்சாமி தேவரை சற்று cold shoulder செய்தது நிஜம். அதிலும் முதல் மூன்று நாட்கள் சிந்தாமணி திரையரங்கு அமைந்துள்ள கீழ வெளி வீதி அல்லலோகோலப்பட்டது என்று நண்பர்களும் சிவாஜி அன்பர்களும் எப்போதும் சொல்வார்கள். இதன் காரணமாக கூட முதல் மரியாதை முதலில் சரியாக கவனிக்கப்படாமல் பின் wom மூலமாக நற்பெயர் பெற்று பிறகு கோலோச்சியது. அந்த காலகட்டத்தில் நான் மதுரையில் இல்லை. கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நான் முதல் மரியாதை வெளியான 15 நாட்களில் ஒரு அவசர அலுவல் நிமித்தம் சென்னை வர வேண்டிய தேவை.

ஆகஸ்ட் 30 என்று நினைவு. சென்னை வரும் ரயிலில் உறங்கி கொண்டிருந்த நானும் சக பயணிகளும் அதிகாலை நேரத்தில் காட்பாடி நிறுத்தத்தில் எழுப்பபட்டோம். அன்றைய தினம் ஒரு ஹர்த்தால் அல்லது ரயில் மறியல் [இலங்கை பிரச்னை என நினைவு] என்றும் ஆகவே ரயில்கள் மேலும் இயக்குவதில்லை என அறிவித்து விட்டு பயணிகள் அனைவரையும் ரயில் நிறுத்தத்திற்கு வெளியே நின்றிந்த பஸ்களில் ஏற்றி அனுப்பினார்கள். சென்னை வந்து சேரும் போது காலை 10 மணியாகி விட்டது. வந்த வேலை முடிவதற்கு மதியம் மூன்று நான்கு மணி ஆகிவிட்டது. மதிய உணவை துறந்து விட்டு மவுண்ட் ரோடிற்கு விரைந்தேன். சாந்தி திரையரங்கிற்கு வந்து பார்த்தால் பால்கனி டிக்கெட்கள் எல்லாம் புல். கீழே உள்ள டிக்கெட்கள் ஒரு சிறியளவில் மட்டும் current booking-ல் கொடுக்கப்படும் என சொன்னதும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். ரசிகர்களை விட 90% பொது மக்களே வந்திருந்த ஷோ அது. மிகவும் ரசித்தேன். அந்த நாளுக்கு முன்பு வரை எத்தனையோ முறை அரங்க வளாகத்திற்கு வந்திருந்த போதிலும் அன்றுதான் முதன் முதலாக அரங்கினில் படம் பார்த்தேன். ஆக சாந்தி திரையரங்கம் எனக்களித்த முதல் மரியாதை இந்த முதல் மரியாதை திரைப்படம்.

இனி படத்திற்கு அலல்து உங்கள் விமர்சனத்திற்கு வருகிறேன்.

(தொடரும்)

Murali Srinivas
28th February 2013, 01:06 AM
முதல் மரியாதை படத்தைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பும் பெரும்பாலானோர் நான் முன்னர் குறிப்பிட்ட மீன் சாப்பிடும் காட்சியையும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மற்றும் முதல் நாள் நடிகர் திலகம் விக் வைத்து வந்ததையும் அதை விரும்பாத பாரதிராஜா அதை நேரிடையாக சொல்லாமல் முகம் காட்டியதையும் பிறகு நடிகர் திலகத்தின் ஒரிஜினல் முடியே இடம் பெற்றதையும் பெரிய அளவில் விவரிப்பார்கள். அந்த template-ஐ எல்லாம் ஒதுக்கி விட்டு உங்கள் தனித்துவமான நடையிலே படத்தை அணுகியிருக்கும் முறை ரசிக்கதக்கதாக அமைந்திருக்கிறது.

நடிகர் திலகத்தின் பல படங்களைப் பற்றிய உங்கள் ஆய்வுகளை படிக்கின்ற போதெல்லாம் அதன் அடிநாதமாய் தெரிவது கதாபாத்திரங்களைப் உளவியல் பாணியில் அணுகும் நடைமுறை. அது இதிலும் தவறாமல் தொடர்ந்திருக்கிறது. பரந்துபட்ட ஆழமான வாசிப்பு, அலுவல் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு [60?] பயணப்பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மொழி படங்களுடான பரிச்சயம் இவை உங்கள் விமர்சன பார்வையை கூர்மைப்படுத்த உதவியிருக்கின்றன என்பதுடன் உங்கள் எழுத்திற்கு ஒரு பலத்தையும் வசீகரத்தையும் கொடுக்கிறது.

மலைச்சாமி தேவரை பெரும்பாலானோர் ஒரு silent sufferer ஆக பார்க்கும்போது அவர் தன்னை ஒரு அய்யோ பாவம் போல் வெளியே காண்பித்துக் கொண்டு உள்ளூர மனைவியை மானசீகமாக வதைப்பவர், physical புறக்கணிப்பின் மூலம் தன வாழ்க்கையின் சந்தோஷம் தொலைய காரணமாக இருந்தவளுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பவர் என்ற ஒரு முகத்தை வரைந்திருக்கிறீர்கள். அதை அடிப்படையாக கொண்டு சென்று அவருக்கு அந்த ஓடக்கார பெண்ணிடம் ஏற்படும் பரிச்சயம், அது நட்பாக மாறுதல் அதன் மூலம் வரும் கரிசனம் அதன் காரணமாக எடுத்துக் கொள்ளும் உரிமை, முடிவில் அது மரியாதை, நட்பு கரிசனத்தையும் தாண்டி வேறு ஒரு தளத்திற்குள் பிரவேசிப்பது போன்றவற்றை அலசி விட்டீர்கள்.

ஆனால் செல்வராஜ் அவர்களும் பாரதிராஜா அவர்களும் கூட இந்த பாத்திரத்திற்கு இத்தனை dimensions யோசித்திருப்பார்களா என்பதே சந்தேகம் என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்கள் எத்தனை அழகு பாடலைப் பற்றி எழுதும்போது கூட நாயகி அணிந்திருக்க கூடிய உடைகளின் வர்ணம் [Rose மற்றும் Red] எப்படி அந்த mood-ஐ பிரதிபலிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினீர்கள். With due respect to CVR, என்னால் அந்த credit-ஐ அவர் account-ல் சேர்க்க முடியவில்லை.

இது போன்றே சுமதி என் சுந்தரி-யிலும் வரும். இதை நான் முன்பே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தன்னுடன் வாழ்பவள் சுந்தரி அல்ல சினிமா நடிகை சுமதி என்று தெரிந்தவுடன் அந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு மது வீட்டிற்கு வர அங்கே சுமதி கல்யாண சந்தையிலே பெண் பார்க்கும் நேரமிது என்று பாடிக் கொண்டிருக்க மதுவான சிவாஜி படியிறங்கி வந்து அங்கே flower vase-ல் வைக்கப்பட்டிருக்கும் காகிதப் பூவை முகர்ந்து பார்ப்பார். அவருக்கு தெரியும் அது மணமில்லா காகிதப் பூ என்று. ஆனாலும் மணமுள்ள நிஜ ஜாதி மல்லி என்று நினைத்தோமே அது உண்மையிலே ஒரிஜினல் மல்லியாக இருந்துவிடக் கூடாதா என்ற ஆதங்கத்தையும் அனால் அப்படி இல்லையே என்ற கசப்பான உண்மையையும் முகத்தில் வெளிப்படுத்தி அதை தான் விரும்பும் பெண்ணிற்கு உவமைப்படுத்திக் கொள்வதை பார்வையாளனுக்கு புரிய வைப்பார். இங்கேயும் CVR தான்.இங்கேயும் என்னை பொறுத்தவரை அவருக்கு credit இல்லை என்றே சொல்லுவேன்.

நடிகர் திலகம் சுயமாக செய்த பல விஷயங்களினால் இயக்குனர்களும் வசனகர்தாகளும் பெயர் தட்டி சென்றனர் எனபதே நடைமுறை உண்மை.

ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னது போல் ஒரு படைப்பு உன்னத நிலையை அடைவதே இது போன்ற பல்வேறு interpretation-களுக்கு உள்ளாகும் போதுதான் என்ற வாதம் சரி என்றே தோன்றுகிறது.

இது நாள் வரை மலைச்சாமி தேவர் பாத்திரத்தைப் செக்கானூரணி உசிலம்பட்டி கமுதி போன்ற பகுதிகளில் அன்றாடம் சந்திக்க கூடிய ஒரு கிராமத்து பெரிய மனிதன், பஞ்சாயத்து தலைவர் போன்றவர்களுடனே பொருத்தி பார்க்க தோன்றியிருக்கிறது. ஆனால் அதை தாண்டிய ஒரு பார்வையை அதிலும் குறிப்பாக கணவனால் இத்தனை உதாசீனப்படுத்தப்பட்டாலும் பொன்னாத்தாளுக்கு இருக்கும் தன் கணவன் என்ற possessiveness மலைசாமியிடம் இல்லை என்ற புதிய கோணத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள் பல.

நீங்களே விருந்து பரிமாறி விட்டர்கள் அதற்கும் மேலாக double dessert போன்று கணேஷ் அவர்கள் அற்புதமான் பாயசத்தை படைத்தது விட்டார். ஆக வாசித்தவர்களுக்கு double whammy.

மற்றப்படி நீங்கள் உலகளவில் சினிமா சம்மந்தப்பட்டு எழுதிய பெயர்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு பிரபுராம் போன்றவர்களுக்கே google ஆண்டவர் உதவி தேவைப்படும்போது lesser mortals நாங்கள் எங்கே? நண்பர் கணேஷ் சொன்னது போல் பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்லி கடந்து விட வேண்டியதுதான்.[கணேஷ் சார், sorry for the nit picking. அது க.கல்யாணம் இல்லை, ஊட்டி வரை உறவு]

மீண்டும் நன்றி கோபால்!


அன்புடன்

கணேஷ் சார்,

நாற்பதுகளில் வரும் காதல் பற்றிய உங்கள் பதிவிற்கு தனியே சின்னதாகவேனும் ஒரு பதிவு போட வேண்டும்.பார்ப்போம். [ஆமாம், நீங்கள் தஞ்சை குடந்தை பகுதியை பூர்விகமாக கொண்டவரா?]

Gopal.s
28th February 2013, 07:00 AM
முரளி சார் ,

இதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன். மு.வ. நமது NT நடிப்பை புலவர்களுக்கும், பாமரர்களுக்குமான இணைப்பு பாலம் என்று குறிப்பிட்டார். அதை போல் திரியில் பல்வேறு முகம் கொண்டவர்களின் இணைப்பு பாலம் நீங்களே. அதனால்தான் உங்களை வம்புக்கிழுத்தாவது உங்கள் பங்களிப்பை பெற விழைகிறேன்.வழக்கம் போலவே உங்கள் பின் ஆய்வு (இதிலும் பின் தானா என்று வனஜா முணு முணுப்பது காதில் கேட்கிறது)எழுதுபவர்களை உற்சாக படுத்துவதோடு, வழி நடத்தவும் செய்கிறது.

வழக்கம் போலவே ,ஒரு விஷயத்தை மறுக்கிறேன். C .V .Rajendran . underestimate செய்ய படுவதை மறுக்கிறேன். குமுதத்தில் 1972 இல் என்று நினைவு. தான் சுமதி என் சுந்தரி படத்தில் colour psychology உபயோகித்ததாகவும் ,அதை எந்த விமரிசகரும் கண்டு கொள்ளவில்லை என்றும் வருந்தி இருந்தார்.

Gopal.s
28th February 2013, 07:07 AM
பிரபு,

தாங்கள் சொல்வது எனக்கு உடன்பாடே. நான் ஒரு முழு கட்டுரை தொடர் எழுத விழைகிறேன் எனக்கும் vital few தான் target . trivial many அல்ல. (வியாபாரம்,கலை அனைத்திலும்)

நீங்கள் சொன்ன மாதிரி கோடி காட்டி விட்டு ,கடந்து செல்வது ஒருவித பொறுப்பின்மையே.

ஆனால் எனது எழுத்தில் வாசகனின் இட்டு நிரப்பும் ஆற்றலுக்கு தீனி போடும் விழைவு அதிகம். அதனால் வந்த ஆர்வ கோளாறு.

RAGHAVENDRA
28th February 2013, 07:20 AM
நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் விஷயத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது சி.வி.ஆர். அவர்களே. இந்த விஷயத்தில் கோபால் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். அவரிடம் நேரிலேயே கேட்டிருக்கிறேன். தங்கள் படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் தோற்றம் வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி இளமையாகவும் தோன்றுகிறதே என்று கேட்டோம். சொல்லப் போனால் அவர் இதை ஊட்டி வரை உறவு படத்திலேயே செயல் படுத்தத் தொடங்கி விட்டதாக கூறினார். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருப்பதாக அவர் கூறினார். இதற்கென்றே அந்தக் காலத்தில் பல டிசைனர் புத்தகங்களை வாங்கிப் படித்ததாகவும் கூறினார். இதை விட பெரிய விஷயம், அனுபவம் புதுமை படத்தை நடிகர் திலகம் பார்த்து சி.வி.ஆர் அவர்களைப் பாராட்டியது தெரிந்த விஷயம். ஆனால் அவர் முதலில் பாராட்டியது அப்படத்தில் சி.வி.ஆர். பயன் படுத்திய காஸ்ட்யூம் தான். குறிப்பாக கனவில் நடந்ததோ பாடலில் முத்துராமன் அணிந்திருந்த உடைகளை நடிகர் திலகம் மிகவும் ரசித்ததாகவும் கூறியுள்ளார். அதே போல் ஊட்டி வரை உறவு படத்தில் எங்கெங்கு half sleeve எங்கெங்கு full sleeve போன்றவற்றையும் பார்த்து பார்த்து செய்ததாகவும் அதை நடிகர் திலகம் மிகவும் பாராட்டியதாகவும் கூறினார். இதனுடைய உச்சம் தான் சுமதி என் சுந்தரி. இப்படம் ஓடியதில் பெரும் பங்கு நாயக நாயகியரின் உடையலங்காரம். அதிலும் ஒரு காட்சியில் நான் ஒரு சந்தேகம் கேட்டேன். ஆலயமாகும் பாடல் இரண்டாம் முறை வரும் போது அலுவலகத்திற்கு நாயகன் கிளம்புவதாக வரும் போது முழுக்கையாகவும் வரும் போது அரைக்கையாகவும் இருக்கும். இதைக் கேட்ட போது சிவிஆர் சிரித்தார். தாங்கள் கேட்டது சரிதான். ஆனால் அதை நான் ஒரு சிம்பாலிக்காகத் தான் வைத்துள்ளேன். அது ஒரே நாளாக எடுத்துக் கொண்டால் தவறாகத் தோன்றும். ஆனால் பொதுவாகத் தான் அந்த இடத்தில் வைத்துள்ளேன் என்றார்.

இந்த கலர் கான்செப்டைத்தான் சி.செ. படத்தில் எத்தனை அழகு பாடலிலும் கடைப் பிடித்துள்ளார். அப்படிப் பார்க்கும் போது சிவிஆருக்கு முன்பிருந்த இயக்குநர்கள் இந்த கலர் கான்செப்ப்டைப் பயன் படுத்தியிருந்தால் இன்னமும் கூட அழகான தோற்றங்களில் நாம் நடிகர் திலகத்தை ரசித்திருப்போம்.

கோபால் சார், தங்களுடைய பதிவுகளை எல்லோரும் ரசிக்கிறார்கள் பார்க்கிறார்கள். எனவே தாங்கள் அதற்காக பிரத்யேக முயற்சி எடுக்க வேண்டாம். வம்பிற்கிழுக்கும் பதிவுகளைப் போட வேண்டாம்.

இந்த முதல் மரியாதை அமர்க்களத்தில் ராகுலின் அம்பிகாபதி, தில்லானா மோகனாம்பாள் பதிவுகள் கவனிக்கப் படாமல் போய் விட்டன. சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. அவ்வாறு இல்லை என்று நிரூபித்து அனைவரின் பதிவுகளையும் ஒரு சேர மதித்து அனைத்திற்கும் தங்கள் பதில் கருத்துக்களை எழுதுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

கிட்டத் தட்ட மூன்று நான்கு பக்கங்கள் கோபால் ஒருவருக்கே கோட்டா வாகி விட்டது.

சந்தோஷம் தானே கோபால்

RAGHAVENDRA
28th February 2013, 07:27 AM
சிவிஆர் கலர் கான்செப்ட் ... தொடர்ச்சி

ஆனால் சி.வி.ஆர். அவர்கள் கோட்டை விட்டது என் மகன் படத்தின் விக் விஷயத்தில். சாதாரணமான விக் வைத்திருந்தால் அப்படத்தின் உடைகள் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கும். குறிப்பாக பொண்ணுக்கென்ன அழகு பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் உடைகள் மிகவும் பிரமாதமாக இருக்கும், ஆனால் அவற்றை ரசிக்க விடாதபடி அந்த விக் வந்து கெடுக்கும். மஞ்சுளாவின் காஸ்ட்யூம் அப்படத்தில் times ahead ஆக இருக்கும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் அது ஆபாசமாயிருந்தது உண்மை. இன்றைக்கும் பெரியவர்கள் அந்தப் பாட்டை தொலைக் காட்சியில் போட்டால் சேனலை மாற்றி விடுவார்கள். இது போன்ற சிற்சில விஷயங்களில் இன்னும் சற்று கவனம் எடுத்து செய்திருந்தால் என் மகன் இன்னும் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கும்.

சி.வி.ஆர். அவர்களின் ஒவ்வொரு படத்தின் காஸ்ட்யூமைப் பற்றி எழுதவே தனியாக திரி தேவைப் படுகிறது

Gopal.s
28th February 2013, 07:37 AM
பழைய பதிவு(ஆனால் இன்றைய உரையாடலோடு தொடர்புள்ளதால்)

சுமதி என் சுந்தரி-1971

எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)

நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்)
அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.

ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)
பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.

நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.

விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின்
லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)

இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.

RAGHAVENDRA
28th February 2013, 08:04 AM
சிவிஆர் கலர் கான்செப்ட் தொடர்ச்சி

என் மகன் படத்தில் பொண்ணுக்கென்ன அழகு பாடலைப் பாருங்கள்


http://youtu.be/dKh8Q-yDlZU

பல்லவி தொடங்கி முதல் சரணம் வரை cream வண்ணத்தில் டிசைன் போட்ட சட்டையும் அதன் மேலே பிங்க் வண்ணத்தில் மேலங்கியும் நடிகர் திலகத்திற்கும், செவ்வண்ணத்தில் மஞ்சுளாவிற்கு நவீன உடையும் அவ்வளவு அழகாய்த் தோன்றுகின்றன. அதே போல் முதல் சரணத்தில் டார்க் சேண்டல் நிறத்தில் கால் சட்டையும் அதே வண்ணமும் க்ரீம் வண்ணமும் இணைந்த டிசைன் சட்டையும் நடிகர் திலகத்திற்கும் ஊதா நிறத்தில் மஞ்சுளாவின் உடையும் மிக அருமையாய் உள்ளன. அதுவும் அந்த தோட்டத்தில் கீழேயிருந்து மேலே படிக்கட்டில் ஓடிவரும் ஸ்டைலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு இடையூறாக இருப்பது அந்த விக். இப்பாடல் முழுவதுமே நடிகர் திலகத்தின் உடைகள் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால் எடுபடாமல் போனதற்கு தலைமுடி ஸ்டைலே காரணம்.

ஓரிடத்தில் கருநீல பூக்கள் திரையின் வலது பக்கம் மேல் மூலையில் தெரிய பின்னணியில் லாங் ஷாட்டில் அவர்களின் போஸைக் காண்பிக்கும் போது கேமிரா கம்போஸிங்கின் அருமையும் வண்ணங்களை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதும் புலப்படுகிறது.

அதே போல் இன்னோரிடத்தில் டாப் கோணத்தில், நடிகர் திலகம் அமர்ந்திருக்க மஞ்சுளா நின்றிருக்க, அந்த ஊதா நிறம் வானத்தின் நீல நிற பின்னணியில் அந்த காதலர்களின் உணர்வை அப்படியே சித்தரிப்பது அந்த கோணத்தையே கவிதையாக்கி விடும்.

பாடலின் உச்சக் கட்ட சிறப்பு அந்த ஆசையெனும் பந்து சரணத்தில் நடிகர் திலகம் அணிந்திருந்த உடையின் வண்ணம். டார்க் டேன் கலரில் நடிகர் திலகமும், அதே க்ரீம் கலரில் மஞ்சுளாவின் உடையும்.

இவையெல்லாவற்றையும் நமக்கு உணர்வு பூர்வமாக அளித்தது மெல்லிசை மன்னரின் மெட்டும் அதற்கான இசையும் கவியரசரின் வரிகளும் சுசீலா சௌந்தர் ராஜன் குரல்களும் என்றால் அதற்கு ஜீவன் அளித்தவர் நடிகர் திலகம். ஒரு நிமிடம் இப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தெய்வ மகன் அல்லது சுமதி என் சுந்தரி விக்கை வைத்துப் பாருங்கள். தாங்களே உணர்வீர்கள்...

RAGHAVENDRA
28th February 2013, 09:35 AM
அடுத்து தேவர் மகன் படத்திற்கு சில பக்கங்கள் போன பிறகு மீதி யிருந்தால் நடிகர் திலகத்தின் மற்ற படங்களைப் பற்றிப் பேசலாம் என எண்ணுகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்தைக் கூறவும். ஏனென்றால் ஆதி ராம் கூறியது போல் நமக்கு வேறு திரியும் இல்லை. எனவே இவர்களெல்லாம் தங்கள் படங்களை அலசியது போக மிச்சம் மீதி நமக்கு அளித்த பிறகு நாம் மற்றவற்றைப் பற்றிப் பேசலாம். சி.வி.ஆர். பற்றிய பதிவுகள் ஒரு sample ஆகத் தான் இங்கு பதியப் பட்டன. இனி இப்போதைக்கு தொடராது. பயப்படவேண்டாம்.

Gopal.s
28th February 2013, 10:21 AM
பிரபு/முரளி/சாரதி ,
இப்போது என்ன செய்ய சொல்கிறீர்கள்? நான் சும்மா இருந்தாலும் விடாது இப்படி தொந்தரவு தருகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் போட்ட போதெல்லாம் இனித்த பாராட்டுகள் இப்போது கசக்கின்றன. இத்தனைக்கும்,பாராட்டல்ல. தொடர் பதிவுகள். open ஆக போதும்,மற்றவரை கவனியுங்கள் என்கிறார். political ஆக இப்படி நடந்தால், எப்படி நமக்கும் interest வரும்? ஆட்டு மந்தை போலத்தான் சிந்திக்க வேண்டும் , இந்த திரியின் தரம் உயர்வதில், இவ்வளவு, insecurity இருந்தால், எங்கே போய் முட்டி கொள்ள? நான் சிவாஜி செந்திலுக்கு பதிலளித்தால், இவர் வந்து ஆள் சேர்த்து மோதுகிறார். நான் விமரிசனம் எழுதினால் cut paste செய்து திரிக்கிறார். இத்தனைக்கும், இவருடைய பல பதிவுகள் சுவாரஸ்யமானவை. விஷயம் தெரிந்த மனிதர். இவரே இப்படியென்றால், எங்கே சந்திக்க?(சந்திப்பிலா).நான் இவர் வழிக்கே போகாத போதும், mental torture . ஆனால் என்னிடம் சுவாதீனம் எடுத்து advise பண்ணும் ஆட்கள், இவரை கண்டிப்பதே இல்லை.(நானும் ஆள்
சேர்ப்பேனாக்கும் )

Gopal.s
28th February 2013, 10:43 AM
Mr Raghavendra Sir,

Well said Sir. Here I would like to mentioned the words
of Mr Joe that Sivaji Padam Thorkalam Sivaji Thorpathillai.
சிவாஜி தோற்ற படங்கள் உண்டு.
தர்மராஜா ,இரு துருவம், வாழ்விலே ஒரு நாள், புனர் ஜென்மம், சந்திப்பு,அமர காவியம்,என் மகன் ,உனக்காக நான்..-to name a few .

parthasarathy
28th February 2013, 11:04 AM
இந்த முதல் மரியாதை அமர்க்களத்தில் ராகுலின் அம்பிகாபதி, தில்லானா மோகனாம்பாள் பதிவுகள் கவனிக்கப் படாமல் போய் விட்டன. சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. அவ்வாறு இல்லை என்று நிரூபித்து அனைவரின் பதிவுகளையும் ஒரு சேர மதித்து அனைத்திற்கும் தங்கள் பதில் கருத்துக்களை எழுதுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.



அன்புள்ள திரு. ராகுல் ராம் அவர்களே,

தங்களின் "அம்பிகாபதி" மற்றும் "தில்லானா மோகனாம்பாள்" படக் கட்டுரைகள் பெரிய அளவில் இங்கு விவாதிக்கப்படவில்லை என்று தோன்றலாம்.

எனக்குத் தெரிந்து முக்கியமான காரணம், ஒரே சமயத்தில், வேறு சில படங்களைப் பற்றிய கட்டுரைகளும் அதையொட்டி வழக்கம் போல் சர்ச்சைகளும் துவங்கி, சில நல்ல ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன என்பது தான் உண்மை.

நண்பர்கள் பலர் என்னுடைய பாடல் ஆய்வுகளை தொடருங்கள் என்று கூறினாலும், நான் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ள பல காரணங்கள் உண்டு. முதற்கண் அலுவலக வேலைகள் மற்றும் சொந்த வேலைகள். இன்னோர் காரணம் இங்கு அடிக்கடி எழும் சர்ச்சை என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. இது போன்ற தருணங்களில், என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும், இது போன்ற சர்ச்சைகள், சில சிறந்த ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து விடுகிறது என்பது கசப்பான உண்மை. என்னதான் சொந்த திருப்திக்கு எழுதினாலும் இது போன்ற தருணங்கள் பயணத் தடைகளாகி விடுகிறது. இது பற்றி மேலும் எழுதினால், புது சர்ச்சைகள் துவங்கி விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இருப்பினும், தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். ஏனென்றால், இப்பூவுலகு எல்லோருக்கும் சொந்தம்! - திரு. ராகவேந்திரன் சார் - இது உங்களுக்கும் தான்! தங்களுடைய "என் விருப்பம்" - அற்புதம் தயை கூர்ந்து தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Gopal.s
28th February 2013, 11:07 AM
என் பெயரை ஏனையா இழுக்கிறீர்கள்? நான் பாட்டுக்கு பொம்பளையா லட்சணமா 'தேமேன்னு' இருக்கிறேன். அதுதான் 'அழிச்சாட்டியம் பண்ணி' 'பெரியவரிடமிருந்து பாராட்டு வாங்கியாச்சே, அடங்கவேண்டியதுதானே!
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை. இங்கிலீசு படிச்சாலும் இந்த திரி கூட்டிலே.....

Joannnem
28th February 2013, 11:33 AM
அதிகம் படித்திருந்தாலும் - அதிகம் பேசியிருந்தாலும் - அதிகம் ஊர் சுற்றியிருந்தாலும் -மேலைநாடுகள் மற்றும் அந்த நாடுகள் பற்றிய தகவல்கள் அறிந்து வைத்திருந்தாலும் - நம் தமிழ் நாட்டில் கிடைத்த வைர பெட்டகம் நடிகர் திலகத்தின் நடிப்பினை குறை கூற முடியுமா ?

நமது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன் உலகளவு பேசப்படும் நாவல்கள் - பல்வேறு உலக மொழி நடிகர்கள் - மற்றும் படங்கள் எம்மாத்திரம்

நடிகர் திலகத்தின் அனைத்து படங்களும் பேசப்படவேண்டும் . பாகுபாடு வேண்டாம் .

தனிப்பட்ட வெறுப்பு விமர்சனங்கள் தவிர்க்கலாம் .

மறைமுக தாக்குதல்கள் - கிண்டல்கள் - எச்சரிக்கை - போன்றவை உயர்ந்த மனிதனின் கௌரவம் பாதிக்கப்படும் என்று உத்தமன் புகழ் பாடும் உங்களுக்கு தெரியாதா ?

தவறு செய்கிறீர்கள் நண்பர்களே

இனியாவது நடிகர் திலகம் அவர்கள் அவன்தான் மனிதன் என்று அவன் ஒரு சரித்திரம் - வெற்றிக்கு ஒருவன் -
என்று புகழ் பாடுங்கள் .

பாவ மன்னிப்பு உண்டு பாசமலர்களே .

நெஞ்சிருக்கும் வரை ... இந்த புண்ணிய பூமியில் சிவகாமியின் செல்வனாம் - நிறைகுடமாம் -அன்னை இல்லத்தின் பெருமைகளை கூறி , எங்கள் தங்க ராஜா வின் சாதனைகளை தொடருங்கள் .

adiram
28th February 2013, 11:48 AM
Ayyyo... ayyo... Murali sir,

enna oru arumaiyaana post. kannil oththikkollanum pola irukku.

solla vandha karuththai miga nutpamaaga, miga aazhamaaga padippavargal manadhil padhiya vaikkum thanmai. But at the same time, ezhuththil medhaaviththanam kaattaamal miga eliya nadaiyil vivarikkum paangu. arumai sir arumai.

Openly saying, Indian Express padippavargalukku mattume puriyumbadi ezhudhaamal, ennaippondra 'Dhina thandhi' padippavanukkum puriyum vannam ezhuthum thangal method of wrting simply superb.

(enakku tamil fontil ezudha theriyaamaikku romba varuththappadukiren. therindhaal unggalai paaraattu mazaiyil nanaiththu pacific kadadil muzhugadiththiruppen).

Mudhal mariyadhai patriya ungal ennam appadiye en ennaththaip piradhipalikkirathu. You wrote, what I want to write. Yes, "mudhal mariyaadhaiyum devarmaganum illennaa shivaji endra artist illaamale poyiruppaar" enbadhu pola pulambithiriyum arivu jeevigalukku nalla soodu.

silar avvirandu padangalai thalaiyil thookki vaiththu aadi, aadiye appadanggal ennaip pondra paamara (Dhinathandhi) rasigargalukku pidikkaamal ponadhu. aanaal padanggalukku banner katti, kodi katti, palamurai paarththu oda vaippavan Dhinathandhi rasiganthaan. Express rasigargal perumbaalor (ellorum alla, perumbaalor) o c passil padam paarppavargal.

ungal padhivaippadiththu vaanmazai kanda mayil pola manam thullukirathu. adikkadi ezudhungal sir, please.

a Royal Salute to your excellent memory power. arivu jeevigalukkum paamarargalukkum idaiye arumaiyaana inaippu paalam neengal. vaazhga... vaazhga...

(If anybody ask me 'are you Raghavendar group or Gopal group?' I will proudly say, "I am Murali group").

joe
28th February 2013, 11:59 AM
''உங்களுக்கு 'மெல்லிசை மன்னர்’கிற பட்டம் கொடுத்தது யார்?''
''1963-ம் வருஷம்னு நினைக்கிறேன்... திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி எங்க கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. என்.கே.டி. கலா மண்டபத்துல நிகழ்ச்சி நடந்தது. ஏகப்பட்ட கூட்டம். அந்த மேடையில்தான் ரசிகர்கள் மத்தியில் எனக்கும் ராமமூர்த்திக்கும் சிவாஜி கணேசன் 'மெல்லிசை மன்னர்’ங்கிற பட்டத்தைக் கொடுத்தார். அது காலாகாலத்துக்கும் நிலைச்சது ஆண்டவன் அனுக்கிரஹம்!''

Gopal.s
28th February 2013, 12:02 PM
Joe,
Yes. They are ones deserve this title from the most deserving hand to give it inthe world.

Gopal.s
28th February 2013, 12:03 PM
Adiram,
Pl.note that I am a loner. I dont belong to any group nor forming any group here. I am also Dhinathanthi viewer. If the same material is given to me in Tamil and English,I prefer to read it in my mother tongue ,Tamil. I dont intend to creat any misunderstanding or groupism and I mean it. I just spoke my heart and enjoyed with you guys. You have right to boycott me or criticise my writing style and you are welcome.I relish it. But dont mention gopal group,that is insulting. I dont need a sub-group in miniature homogenious group . I will never trouble you here after with medhaviththanam. But you express your animosity openly and I am thankful for the same.I appreciate your honesty. Again,I instate here that no groups here. Naanum, pammalar, vasu, ragavendhar rasiganthaan.

Gopal.s
28th February 2013, 12:10 PM
சுமிதாம்மா,
உங்கள் பதிவு ok . என்னுடைய ஆட்சேபணை ,அவன் ஒரு சரித்திரம்,புண்ணிய பூமி, வெற்றிக்கு ஒருவன் போன்ற தவறான பிரயோகங்கள்.

adiram
28th February 2013, 12:23 PM
Friends,

arguments and counter arguments are healthy for the growth of a thread.

healthy arguments should get welcome, otherwise thread will become dull again.

( I have visited some other threads. thread endra peyaril 'photo album' nadaththik kondu irukkiraargal)

Gopal.s
28th February 2013, 12:33 PM
Friends,

arguments and counter arguments are healthy for the growth of a thread.

healthy arguments should get welcome, otherwise thread will become dull again.


( I have visited some other threads. thread endra peyaril 'photo album' nadaththik kondu irukkiraargal)
திருவிளையாடல் பாணியில்-
புலமையையும் சர்ச்சையையும் பிரிக்க முடியாது.

Joannnem
28th February 2013, 12:35 PM
you are correctly told mr. adiram. the other thread what you have mentioned mgr thread is currently going steadily with united postings and praising their actor like anything . no criticism. no arguements - no warnings . we have to learn the good things ,

Joannnem
28th February 2013, 12:38 PM
சுமிதாம்மா,
உங்கள் பதிவு ok . என்னுடைய ஆட்சேபணை ,அவன் ஒரு சரித்திரம்,புண்ணிய பூமி, வெற்றிக்கு ஒருவன் போன்ற தவறான பிரயோகங்கள்.

you are not a true fan if you don't likethis movies .

KCSHEKAR
28th February 2013, 12:45 PM
1992 ஆம் வருடம், நடிகர்திலகத்தை, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் சந்தித்த புகைப்படம் இந்த வார ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்புகைப்படத்தில் நானும் இடம்பெற்றிருப்பது, எனக்கும் பெருமை அளிக்கக்கூடிய பொக்கிஷப் புகைப்படமாக அமைந்துள்ளது. இத்தகைய வாய்ப்பை எனக்களித்த இறைவனுக்கு நன்றி.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AnandaVikatanPokkisham_zps84544b41.jpg

adiram
28th February 2013, 12:50 PM
//dig..

Gopal sir,

Please dont mistake me. I want to show me as nutral and for that I have to use the word 'group'. But it is well known you are the one told first about groups, like 'aal serkiraar', 'politics panraar' like that. But it seems there are two groups here (I dont want to mention names) one is 'talking about all movies' and the other one is 'talking about very selective movies'.

ok... leave it, we are all in Shivaji Group.

and regarding the 'medhaavithanam', why you take that word is for you, as I didnot mention your name or some other?. It will apply to all who are all writing in that nature, sometimes me too.
thanks again.

dig ends//

adiram
28th February 2013, 12:57 PM
you are not a true fan if you don't likethis movies .


Sumithaa,
It seems too much.

No one has the right to categorise any one whether he is a true fan or not.
Please reconsider your post.

adiram
28th February 2013, 01:51 PM
Mr. Chandrasekhar sir,

Nice to see the photo from Ananda Vikatam pokkisham. NT with V.P.Singh and others.

You also there in that picture makes it a very special one (I think the one who is standing behind NT).

It would be better if you round-up your face in that snap, sothat everyone here can identify you.

RAGHAVENDRA
28th February 2013, 02:25 PM
நமது நண்பர் கே.சந்திரசேகர் அவர்கள் நடிகர் திலகத்தின் பின்னால் நிற்கிறார். சிவப்பு நிறத்தில் அம்புக்குறி இட்டு காட்டப் பட்டுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KCWNTVPS_zpsfc9f965e.jpg

[தினத்தந்தி வாசகன் என்பதை நிரூபித்து விட்டேனாக்கும்]

KCSHEKAR
28th February 2013, 02:34 PM
திரு. ஆதிராம் அவர்களே,

தங்கள் அன்புக்கு நன்றி.

அம்புக்குறியிட்டுக் காட்டி அசத்திய திரு.ராகவேந்திரன் அவ்ர்களுக்கு நன்றி.

RAGHAVENDRA
28th February 2013, 02:38 PM
டியர் ஜோ சார்,
மெல்லிசை மன்னர்களுக்கு அந்தப் பட்டம் வழங்கிய நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் அடியேனும் ஒருவன் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் கூற விரும்புகிறேன். அந்த விழாவை நடத்தியது திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி. அந்த சபா இன்னும் இயங்கி வருகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர் திரு என்.கே.டி. முத்து அவர்கள். அவர் தனியாக திருவட்டீஸ்வரன் பேட்டை சபா நடத்தி வந்தவர். இந்த விழாவிற்கு சில நாட்கள் முன்னர் அந்த அகாடெமி உறுப்பினர்களிடம் பல்வேறு பெயர்களை தரச் சொல்லி அதிலிருந்து தேர்ந்தெடுத்து தந்த பட்டம். சிவாஜி கணேசன் அவர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் யார் கொடுத்தாலும் எப்படி ஒரு ரசிகர் தந்த நடிகர் திலகம் என்ற பெயர் சாஸ்வதமானதோ அதே போல் விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு யார் எந்த பட்டம் கொடுத்தாலும் ஒரு ரசிகர் தந்த மெல்லிசை மன்னர்கள் என்ற பெயர் தான் அவர்களுக்கு நிலையான புகழைத் தந்துள்ளது. உள்ளன்போடு ஒரு ரசிகன் தரும் ஆதரவே நிலையானது என்பதற்கு இவ்விரண்டும் சரியான உதாரணங்கள். செவாலியே, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எவ்வளவோ அடைமொழி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயரை உச்சரிக்கும் போது ஏற்படும் புல்லரிப்பு மற்றவற்றில் இல்லை.

அந்த நிகழ்ச்சி சென்னை என்.கே.டி. கலாமண்டபத்தில் நடைபெற்றது. அது open air theatre. அரங்கத்திற்கும் கேலரிக்கும் நடுவில் மிகப்பெரிய மைதானம். அந்த மைதானத்தில் சேர்கள் போடப் பட்டிருக்கும் . கிட்டத் தட்ட 1000 நாற்காலிகள் கொள்ளும். அது அன்றி கேலரியில் கிட்டத் தட்ட 500 பேருக்கு மேல் அமரலாம். அவையனைத்தும் நிரம்பி மைதானத்தில் நாற்காலி இடத்தை சுற்றிலும் நின்று கொண்டே பார்த்த மக்கள் மட்டுமின்றி போகும் வழியிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒலி பெருக்கி நெடுஞ்சாலை முகப்பிலும் வைக்கப் பட்டிருந்ததால் மக்கள் அங்கும் நின்று கொண்டிருந்தனர். நான் பள்ளி மாணவன்ஆகையால் நண்பர்களுடன் சிவாஜியைப் பார்க்கும் ஆசையில் முதலிலேயே போய் கேலரியில் அமரந்து விட்டோம். நாற்காலிகளில் உறுப்பினர்களுக்குத் தான் முன்னுரிமை.

நடிகர் திலகம் உள்ளே நுழையும் போது அந்த அரங்கில் எழுந்த அளப்பரை சொல்லி மாளாது. என் பங்கிற்கு நானும் எழுந்து குதிக்கிறேன். கை தட்டுகிறேன். அப்போதே எப்படியோ மனதில் நுழைந்து விட்டிருந்தார். அன்று தொடங்கிய ரசிகத் தன்மை இன்று வரை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றி.

joe
28th February 2013, 02:41 PM
ராகவேந்திரா சார்.
மெல்லிசை மன்னர் விழா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி . நேரடியாக பங்கு பெற்ற உங்கள் குதூகலம் உணரமுடிகிறது .

adiram
28th February 2013, 02:54 PM
//செவாலியே, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எவ்வளவோ அடைமொழி இருந்தாலும் நடிகர் திலகம் என்ற பெயரை உச்சரிக்கும் போது ஏற்படும் புல்லரிப்பு மற்றவற்றில் இல்லை.//

Because, there will be many Chevaliers, many Padhmashrees, many Padhmabooshans...... but....

ONLY ONE NADIGAR THILAGAM in the world.

RAGHAVENDRA
28th February 2013, 02:55 PM
நண்பர்களே,
ஆதிராம் சொன்னது போல் நாம் அனைவரும் சிவாஜி என்ற குரூப் தான். ரத்தத்தில் ஏ, பி, ஏ பாசிடிவ், பி பாசிடிவ், என்பது போன்று பல்வேறு குரூப்கள் இருப்பது போல் நம்முடையது சிவாஜி குரூப் ரத்தம், கோபால் உள்பட.

சுமிதா அவர்களே,
கோபால் சாரும் தீவிரமான சிவாஜி ரசிகர் தான், நடிகர் திலகத்தை கடவுளாக மதிப்பவர். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற ரசிகர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின் படங்களை சகட்டு மேனிக்கு விமர்சிப்பது தான் நம்மால் தாங்க முடிவதில்லை. ஒரு வட்டத்துக்குள் அவரை அடக்க முற்படுவதை நான் எதிர்த்துக் கொண்டே தான் இருப்பேன். அவர் படங்களை கோபால் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது உரிமை. அதற்காக நடிகர் திலகத்தின் பங்களிப்பை அந்த படங்களில் consider பண்ண மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போது தான் மனம் மிகவும் கஷ்டப் படுகிறது. சொல்லப் போனால் இவர் நடிகர் திலகத்தை சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் போது நமக்குத் தான் MENTAL TORTURE. நடிகர் திலகத்தின் பங்களிப்பை எந்த ஒரு படத்தினின்றும் ஒதுக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாத்திரத்திலும் மிக நுண்ணியமான நுட்பமான விஷயத்தை செய்திருக்கிறார். அது வெற்றிக்கு ஒருவனாகட்டும் தர்மராஜா வாகட்டும், அவருடைய பங்களிப்பு 100 சதவீதத்திற்கு 0.1 சதவீதம் கூட குறைவில்லாமல் முழுமையாக தன் பங்கை அளித்திருக்கிறார்.

அவருடைய 50 வருட திரையுலக பங்களிப்பை வெறுமனே குறிப்பிட்ட சில படங்களுக்குள் அடக்க முயல்வதை நம்மால் ஜீரணிக்க முடியாது. அப்படிப் பட்ட போக்கு இருக்கும் வரை என்னுடைய எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

மற்ற படி அவருடைய எழுத்து நடையிலோ அல்லது அவர் சொல்லும் பாணியிலோ குறை சொல்ல ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சிவகாமியின் செல்வன் பாடல் அவருடைய சிறந்த ஆய்வினை எடுத்துக் காட்டியதாகும். ஆனால் சொல்லும் போது சில சமயம் எழுத்து வேகத்தில் சில சொற்கள் அவரை மீறி வந்து விட்டாலும் கூட ஆய்வு சிறந்த முறையில் இருப்பதை மறக்க முடியாது.

கோபால் தாங்கள் சிவாஜி ரசிகர் தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, அது தெரிந்த ஒன்று தான்.

தங்களுக்கு பிடித்த படங்களை எழுதுங்கள். ஆனால் தங்களுக்கு பிடிக்காதவை மற்றவர்களுக்கு பிடிக்கலாம் என்பதை மனதில் வைத்து எழுதுங்கள். அந்தப் படங்களைக் கிண்டல் கேலியை விட்டு விட்டு அவற்றில் நடிகர் திலகம் என்ன செய்திருக்கிறார் என்பதை ஆராயுங்கள். உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஏதேனும் ஒரு SPARK அவர் தருவார். அதிலிருந்து எங்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்கும்.

தாங்கள் வெறுக்கும் படங்களை மீண்டும் ஒரு முறை பொறுமையாக பாருங்கள். படம் எப்படி என்பதை விட்டு விட்டு bias இல்லாமல் பார்க்கும் போது புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பை உணர்வீர்கள். அது கூட எங்களை விட உங்களுக்குத் தான் அதிகம் புலப் படும்.

RAGHAVENDRA
28th February 2013, 03:30 PM
you are correctly told mr. adiram. the other thread what you have mentioned mgr thread is currently going steadily with united postings and praising their actor like anything . no criticism. no arguements - no warnings . we have to learn the good things ,

well said